<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 05 Aug 2026 04:35:20 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை கூடியது- த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்- 05 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-05-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-05-august-2026#comments</comments><guid isPermaLink="false">26a830e4-6e1c-496e-877c-f6d4a71ea964</guid><pubDate>Wed, 05 Aug 2026 04:04:45 +0000</pubDate><atom:updated>2026-08-05T04:33:57.883Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7e49t1zq/maria.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிதி அமைச்சர் மரிய வில்சன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நிதி அமைச்சர் மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7e49t1zq/maria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் மரிய வில்சன்.</p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை கூடியது.</p><p>பட்ஜெட் கூட்டத்தொடர் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், தி.மு.க. எம்எல்ஏக்களுடன் உதயநிதி ஆலோசனை.</p><p>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முண்டகக்கண்ணி ம்மன் கோவிலில் அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் பாலாஜி ஆகியோர் சாமி தரிசனம்.</p><p>முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>அதிமுக எம்எல்ஏக்கள் அறையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கவில்லை.</p><p>எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வருகை</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வருகை</p><p>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்- முதலமைச்சர் விஜய் சட்டசபைக்கு வருகை</p><p>சட்டசபைக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை</p><p>2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கூடியது சட்டசபை - த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-finance-minister-presents-tvk-government-first-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-finance-minister-presents-tvk-government-first-budget#comments</comments><guid isPermaLink="false">452b46af-87d4-4264-b3c5-9ea383c9d39b</guid><pubDate>Wed, 05 Aug 2026 04:32:32 +0000</pubDate><atom:updated>2026-08-05T04:32:32.308Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/5nfbqyvt/budget.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/5nfbqyvt/budget.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.</strong></em> </p><p>2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-is-chief-minister-vijay-showing-such-urgency-regarding-the-arrest-when-he-failed-to-show-similar-speed-in-the-cauvery-river-water-dispute-seeman-asks">விஜய்</a> உத்தரவிட்டிருந்தார்.</p> <p>அதோடு, கடந்த ஜூலை மாதத்தில், அரசின் அனைத்துத் துறை அமைச்சர்கள், செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.</p><p>பின்னர், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், துறை ரீதியாக த.வெ.க. அறிவித்துள்ள வாக்குறுதிகள் போன்றவற்றை அந்தந்த துறை அமைச்சர்கள் தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு இருந்தார்.</p> <p>அதன் பின்னர் அதுபற்றி ஆய்வு மேற்கொண்டும், தமிழக அரசின் நிதி நிலைமையையும் கருத்தில் கொண்டும், பட்ஜெட்டில் அறிவிப்பதற்கான முக்கிய திட்டங்களை முதலமைச்சர் முடிவு செய்துள்ளார்.</p><p>அதில் ஒரு சிறப்பம்சமாக, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையில் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம் என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.</p> <p>மேலும், ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் என தேர்தலுக்கு முன்பு த.வெ.க. தரப்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் எவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளன? என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.</p> <p>இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்</a> இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக சட்டசபை பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.</p><p>இதனையடுத்து, 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். </p> ]]></content:encoded></item><item><title>முருகன் அருள் நிறைந்த ஆடிக் கார்த்திகை</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-krithigai-murugan-worship-3</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-krithigai-murugan-worship-3#comments</comments><guid isPermaLink="false">328979b1-136d-462a-871a-b56db0e92fed</guid><pubDate>Wed, 05 Aug 2026 04:09:53 +0000</pubDate><atom:updated>2026-08-05T04:09:53.369Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,aadi krithigai,ஆடி கிருத்திகை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zxijzh13/muruga1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zxijzh13/muruga1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஆடி மாதம்</h2><p>ஆடி மாதம் என்பது இறைவனை வழிபடுவதற்கு ஒதுக்கப்பட்ட மாதமாகவே கருதப்படுகிறது. அதனால்தான், ஆடி மாதத்தில் எந்தவித சுபகாரியங்களும் நடத்தப்படுவதில்லை. ஆடி மாதம் முழுவதும் திருவிழா, சிறப்பு வழிபாடு என அம்மன் வழிபாடே அதிகமாக காணப்படும். அதே நேரம், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை வழிபட வேண்டிய சிறப்புமிக்க நாளாக ஆடிக் கார்த்திகை திகழ்கிறது.</p> <h2>ஆடிக் கார்த்திகை</h2><p>முருகப்பெருமானுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி விரதம், தை கார்த்திகை போன்ற நாட்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த விதத்தில் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் 'ஆடிக் கார்த்திகை' என சிறப்பிக்கப்பட்டு, வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p> <h2>கார்த்திகை நட்சத்திரம்</h2><p>முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாக கார்த்திகை கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதுடன், பார்வதி தேவி, தனது சக்தி அனைத்தையும் திரட்டி முருகனுக்கு வேல் கொடுத்ததன் காரணமாக, ஆடிக் கார்த்திகை அன்று, வடிவேல் முருகனை வழிபட்டால் முருகன் அருளோடு அம்மன் அருளும் சேர்ந்து கிடைக்கும் என்பது ஐதீகம்.</p> <h2>கார்த்திகை பெண்கள்</h2><p>சிவபெருமான் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு அக்னிகள், சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருபெற்றன. பின்னர், அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகை பெண்கள் தாலாட்டி, சீராட்டி வளர்த்தனர். அந்த கார்த்திகை பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். இதன் காரணமாகவே, கார்த்திகை நட்சத்திர நாள் முருகப் பெருமானுக்கு மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.</p> <h2>கார்த்திகை விரதம்</h2><p>மேலும், கார்த்திகை சூரிய பகவானுக்குரிய நட்சத்திரமாகவும் உள்ளது. ஆரோக்கியத்திற்கு அதிபதியாக சூரியன் விளங்குவதால், கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் ஆரோக்கியத்துடன் வாழ்வதோடு, நீண்ட ஆயுளையும் பெறலாம். கார்த்திகை நட்சத்திர நாளன்று, விரதம் இருந்து வழிபட்டால் அழகும், அறிவும் பெருகும் என்பது நம்பிக்கை.</p> <h2>நேர்த்திக்கடன்</h2><p>அதிலும் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று, அனைத்து முருகன் கோவில்களும் களைகட்டிவிடும். குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் என வெகுவிமரிசையாக ஆடிக் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.</p> <h2>விரதம்</h2><p>இந்த ஆண்டு ஆடிக் கார்த்திகை நட்சத்திரம், 6-ந் தேதி மாலை தொடங்கி 7-ந் தேதி மாலை வரை இருக்கிறது. விரதம் இருப்பவர்கள், இந்த நேரத்தில் ஆதித்ய ஹிருதயம் பாடலை படித்து விரதத்தை தொடங்கலாம். விரத நேரத்தில் உணவு அருந்தாமல் உபவாசம் இருப்பது சிறந்தது. முடியாதவர்கள், பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.</p> <h2>முருகன் கோவில்</h2><p>பூஜையறையில் ஆறு அகல் விளக்கு தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபட வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த புராணம், சண்முக கவசம், முருகன் பாடல்களை பாராயணம் செய்தும், முருகன் மந்திரத்தை ஜெபித்தும் வழிபடலாம். ஆடிக் கார்த்திகை தினத்தன்று, காலையிலும், மாலையிலும் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லலாம்.</p> <h2>தொழில் வளர்ச்சி அடையும்</h2><p>ஆடிக் கார்த்திகை அன்று, முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் திருமணத் தடைகள் விலகும், தொழில் வளர்ச்சி அடையும், கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், ஆரோக்கியமான, ஆனந்த வாழ்வு அமையும். தொடர்ந்து 12 ஆண்டுகள் ஆடிக் கார்த்திகையில் விரதம் கடைப்பிடிப்பவர்கள், வாழ்வில் பெரும் வெற்றியை அடைவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>&apos;Swadeshi&apos;, &apos;Make in India&apos; என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்!- மாணிக்கம் தாகூர் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-swadeshi-and-make-in-india-are-merely-modi-publicity-stunts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-swadeshi-and-make-in-india-are-merely-modi-publicity-stunts#comments</comments><guid isPermaLink="false">84cf9d8f-4d6a-402c-a23a-8a012f9e2b11</guid><pubDate>Wed, 05 Aug 2026 03:51:16 +0000</pubDate><atom:updated>2026-08-05T03:51:16.936Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர் </a>எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>September 19, 2025 அன்று DGTR பரிந்துரைத்தும், 11 மாதங்களாக Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிப்பு.</p><p>China-வில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Heavy Cranes மீது Anti-Dumping Duty விதிக்க DGTR பரிந்துரைத்தும், Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிக்கிறது.</p> <p>இதன் விளைவு? </p><p>5 முன்னணி உள்நாட்டு Crane உற்பத்தியாளர்கள் தொழிலை மூடும் அவலநிலை!</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kharge-says-pm-modi-shah-scared-insulting-parliament-by-evading-answers-on-donation-theft-students-issue">மோடி</a> அரசாங்கம் யாருக்காக செயல்படுகிறது? </p><p>இந்திய உற்பத்தியாளர்களுக்காகவா அல்லது Chinese நிறுவனங்களுக்காகவா?</p><p>அனைத்து துறைகளிலும் BJP-யின் இந்த போலித்தனம் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது! என்று கூறியுள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Swadeshi&#39;, &#39;Make in India&#39; என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்!<br><br>September 19, 2025 அன்று DGTR பரிந்துரைத்தும், 11 மாதங்களாக Customs Notification தராமல் நிதி அமைச்சகம் இழுத்தடிப்பு.<br><br>China-வில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Heavy Cranes மீது Anti-Dumping Duty விதிக்க… <a href="https://t.co/hhzs1UQSaf">pic.twitter.com/hhzs1UQSaf</a></p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2084843862229737973?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-first-budget-to-be-presented-in-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-first-budget-to-be-presented-in-assembly-today#comments</comments><guid isPermaLink="false">51ee100e-38db-4470-827e-328b46014fd7</guid><pubDate>Wed, 05 Aug 2026 02:26:19 +0000</pubDate><atom:updated>2026-08-05T02:26:19.254Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN budget,தமிழக பட்ஜெட்,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/sqn1n5dw/tnassembly.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Assembly -  Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/sqn1n5dw/tnassembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அரசியல் பரபரப்புக்கு இடையே தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.</strong></em></p> <h2>பட்ஜெட் தாக்கல்</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">த.வெ.க. </a>அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.</p><p>2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>அதோடு, கடந்த ஜூலை மாதத்தில், அரசின் அனைத்துத் துறை அமைச்சர்கள், செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.</p><p>பின்னர், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், துறை ரீதியாக த.வெ.க. அறிவித்துள்ள வாக்குறுதிகள் போன்றவற்றை அந்தந்த துறை அமைச்சர்கள் தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-is-chief-minister-vijay-showing-such-urgency-regarding-the-arrest-when-he-failed-to-show-similar-speed-in-the-cauvery-river-water-dispute-seeman-asks">விஜய்</a> உத்தரவிட்டு இருந்தார்.</p> <h2>என்னென்ன திட்டம்?</h2><p>அதன் பின்னர் அதுபற்றி ஆய்வு மேற்கொண்டும், தமிழக அரசின் நிதி நிலைமையையும் கருத்தில் கொண்டும், பட்ஜெட்டில் அறிவிப்பதற்கான முக்கிய திட்டங்களை முதலமைச்சர் முடிவு செய்துள்ளார்.</p><p>அதில் ஒரு சிறப்பம்சமாக, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையில் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம் என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.</p> <h2>முக்கிய அறிவிப்புகள்</h2><p>மேலும், ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் என தேர்தலுக்கு முன்பு த.வெ.க. தரப்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் எவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளன? என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.</p> <h2>தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்</h2><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்று தெரிகிறது.</p><p>எனவே பட்ஜெட்டை கூட்டத்தை தி.மு.க. புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் நிகழ்வு முடிந்தவுடன் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவெடுத்து அறிவிக்கப்படும்.</p><h2>வேளாண்மை பட்ஜெட்</h2><p>தமிழக சட்டசபையில் நாளை வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 5.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு உயரும் நாள்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-5-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-5-august-2026#comments</comments><guid isPermaLink="false">f69482b1-f58d-4d7a-96f3-11215beb22e6</guid><pubDate>Wed, 05 Aug 2026 02:02:35 +0000</pubDate><atom:updated>2026-08-05T02:02:35.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/08/22809610-rasipalan3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/08/22809610-rasipalan3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>தொழில் வளர்ச்சி திருப்தி தரும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். நேற்று வரை நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.</p> <h2>மிதுனம்</h2><p>சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். தொழிலில் மற்றவர்களின் குறுக்கீடுகள் அகலும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். விரதங்களில் நம்பிக்கை கூடும்.</p><h2>கடகம்</h2><p>வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு வழியில் சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழி என்ன என்று யோசிப்பீர்கள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.</p><h2>கன்னி</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வளர்ச்சிப் பாதையில் சில இடையூறுகள் வந்து சேரும். புது முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது.</p> <h2>துலாம்</h2><p>வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். சுபவிரயங்கள் ஏற்படும். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் பிரச்சனை இன்றும் நீடிக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பயணம் பலன் தரும்.</p> <h2>தனுசு</h2><p>தடைகள் அகலும் நாள். தாராளமாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். இளைய சகோதர வழியில் இனிய தகவல் வந்து சேரும். உத்தியோக முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர்.</p><h2>மகரம்</h2><p>செல்வாக்கு உயரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.</p> <h2>கும்பம்</h2><p>பக்கபலமாக இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். அலைபேசி வழிச்செய்தி அனுகூலம் தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் சாதித்துக் கொள்வீர்கள். பேசிக் காரியங்களைச் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் விரோதம் விலகும்.</p> ]]></content:encoded></item><item><title>பெண் வெறுப்பும் பாலினப் பாகுபாடும் திமுகவின் பாரம்பரியத்தின் ஒரு பகுதி: குஷ்பு சுந்தர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/those-clapping-and-whistling-for-udayanidhi-are-not-public-but-sycophants-khushbu-sundar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/those-clapping-and-whistling-for-udayanidhi-are-not-public-but-sycophants-khushbu-sundar#comments</comments><guid isPermaLink="false">c840deab-a4fb-48bc-bd3b-fbfb9227c859</guid><pubDate>Wed, 05 Aug 2026 02:00:12 +0000</pubDate><atom:updated>2026-08-05T02:00:12.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Kushboo,குஷ்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9lopmr6s/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் - குஷ்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi stalin- Khushbu sundhar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9lopmr6s/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன்னைத் தலைவர் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட வேண்டும் என்று நடிகையும் பாஜக-வை சேர்ந்த அரசியல்வாதியுமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D">குஷ்பு சுந்தர்</a> கூறியுள்ளார்.</p><h3><strong>திமுக ஆர்ப்பாட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a></strong></h3><p>தஞ்சாவூரில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம் கொண்டதாக கூறப்படும் வார்த்தை ஒன்றை குறிப்பிட்டார். </p><p>இது, சமூகத்தில் உள்ள பெண்களை மிகவும் இழிவான கண்ணோட்டத்தில் குறிப்பிடுவதாக சமூக வலைதளத்தில் சர்ச்சையானது.</p><p>இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் மீது பெண்கள் மீது மானபங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இதைத்தொடர்ந்து நேற்று காலை உதயநிதி ஸ்டாலினை, அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் கைது தஞ்சை அழைத்துச்சென்றனர். பின்னர் இரவு 8 மணியளவில் விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்தனர்.</p><h3><strong>உதயநிதி குறித்து கருத்து தெரிவித்த குஷ்பு</strong> </h3><p>இந்நிலையில் இதுகுறித்து தமிழக பாஜகவின் துணைத் தலைவரான குஷ்பு சுந்தர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ நான் பலமுறை பாலினப் பாகுபாடு நிறைந்த கருத்துக்களுக்கு ஆளாகியிருக்கிறேன்.</p><p>பெண் வெறுப்பும் பாலினப் பாகுபாடும் திமுகவின் பாரம்பரியத்தின் ஒரு பகுதி. எனக்கு இதில் துளியும் ஆச்சரியமில்லை. இது போன்ற பெண் வெறுப்பு மற்றும் பாலினப் பாகுபாடு நிறைந்த கருத்துக்களை நான் பார்த்திருக்கிறேன்.</p><p>மேலும், திமுகவில் பெண்கள் அவமானப்படுத்தப்படுவதையும் நான் பார்த்திருக்கிறேன். எனவே, இது இறுதியாக நீங்கள் முன்னெடுத்துச் செல்லும் ஒரு மரபு.</p><p>உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் அவர் இளைஞர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்று நினைத்தேன்.</p><p>அவர் முன்னாள் துணை முதல்வர் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தவர், அதனால் இந்த மனிதர் வித்தியாசமாக இருப்பார் என்று நினைத்தேன்.</p><p>ஆனால், உதயநிதி ஸ்டாலின் இது போன்ற மிகவும் அநாகரிகமான, தரம் தாழ்ந்து பேசி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், அவரிடம் ஒரு துளி வருத்தம் இருந்ததாக கூட தெரியவில்லை.</p><p>ஒரு பொது மேடையில் ஒரு பெண்ணை இழிவாகப் பேச உங்களுக்கு யார் பிறப்புரிமை கொடுத்தது? இது உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் அல்ல, எல்லா அரசியல் கட்சிகளிலும் இதுதான் நிலை.</p><p>உங்கள் கருத்தை நிரூபிக்க இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஒரு பெண்ணை இழிவாகப் பேசப் போகிறீர்கள்?</p><p>ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு மரியாதைக் குறைவாகப் பேசவும், ஒரு பெண்ணின் தோளில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, ‘நான்தான் பலமானவன், நான்தான் தலைவர்’ என்று சொல்லவும் ஒரு ஆண் எவ்வளவு பலவீனமாக இருக்க வேண்டும்?</p><p>இங்கே உங்களை நீங்களே தலைவர் என்று அழைத்துக்கொள்வதற்கு வெட்கமாக இல்லையா?</p><p><strong>சட்டமன்ற தேர்தல்</strong></p><p>மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக உறுப்பினர்களே கட்சிக்கு வாக்களிக்கவில்லை. அவர்களது சொந்தக் குடும்ப உறுப்பினர்களே திமுகவுக்கு வாக்களிக்கவில்லை.</p><p>எனவே, இங்கே கைதட்டுவது பொதுமக்கள் அல்ல. இங்கே விசில் அடிப்பது பொதுமக்கள் அல்ல. கூச்சலிட்டு, கைதட்டி, விசில் அடித்து, ஒரு பெண் நிந்திக்கப்படுவதைப் பார்த்து இந்த விதமான இன்பம் காணும் உங்கள் சொந்த சம்சாக்கள் (முகஸ்துதி செய்பவர்கள்)தான் இதைச் செய்கிறார்கள்.</p><p>இது அவர்களுடைய பெண் வெறுப்பு மற்றும் அசிங்கமான மனப்பான்மையைத்தான் காட்டுகிறது.</p><p>திமுக ஒரு கற்பனை பலூனில் வாழ்ந்து வந்தது. தங்களை யாரும் தொட முடியாது என்று அவர்கள் நினைத்திருந்த அந்த பலூன் உடைந்துவிட்டது என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது,” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள் - 5 ஆகஸ்ட் 2026: பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-5-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-5-august-2026#comments</comments><guid isPermaLink="false">93a6c253-d6ee-486a-bba1-402b17353713</guid><pubDate>Wed, 05 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-05T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/10/26217560-krishna2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ krishna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/10/26217560-krishna2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-20 (புதன்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  சப்தமி இரவு 6.09 மணி வரை பிறகு அஷ்டமி</p><p>நட்சத்திரம் :  அசுவினி இரவு 7.32 வரை பிறகு பரணி</p> <p>யோகம் :  மரண / சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி</h2><p>சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் பெரு விழா, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் உற்சவாரம்பம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் உற்சவாரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலை அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. </p> <p>விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு வழிபாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஆக்கம்</p><p>ரிஷபம் - நன்மை</p><p>மிதுனம் - வரவு</p><p>கடகம் - உதவி</p><p>சிம்மம் - சுபம்</p><p>கன்னி - வாழ்வு</p> <p>துலாம் - கவனம்</p><p>விருச்சிகம் - நலம்</p><p>தனுசு - முயற்சி</p><p>மகரம் - லாபம்</p><p>கும்பம் - ஜெயம்</p><p>மீனம் - புகழ்</p> ]]></content:encoded></item><item><title>POK தேர்தல் வெறும் நாடகம்.. 90 பேர் இறந்திருக்கிறார்கள்.. மனித உரிமை மீறலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் - இந்தியா</title><link>https://www.maalaimalar.com/news/national/pok-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE</link><comments>https://www.maalaimalar.com/news/national/pok-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE#comments</comments><guid isPermaLink="false">20c029f7-66ee-4f4f-97aa-0732396e7237</guid><pubDate>Wed, 05 Aug 2026 00:26:10 +0000</pubDate><atom:updated>2026-08-05T00:26:10.618Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்,Ministry of External Affairs,வெளியறவு அமைச்சகம்,Pakistan-occupied Kashmir</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/aduy5uif/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ POK ]]></media:title><media:description type="html"><![CDATA[ POK ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/aduy5uif/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing">பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்</a> நடைபெற்று வரும் தேர்தல் மற்றும் போராட்டங்களால் நிலவும் அசாதாரண சூழல் குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. </p><h2>நாடகம் </h2><p>நேற்று செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்படும் சட்டப்பேரவைத் தேர்தல் முழுக்க முழுக்க ஒரு போலி நாடகம்.</p><p>கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களில் குறைந்தது 90 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.  </p><p>மக்களின் நியாயமான எதிர்ப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு துப்பாக்கிச் சூடு, இணைய சேவை முடக்கம், மிரட்டல் மற்றும் வன்முறை மூலமே பதிலளித்து வருகிறது.  </p> <p>பாகிஸ்தானின் மனித உரிமைப் போதனைகளின் போலித்தனத்தை சர்வதேச சமூகம் உணர்ந்து, அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தானைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.</p> <h2>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்</h2><p>ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத நிலம் பாகிஸ்தான் வசம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தனி ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது.</p><p>இங்கு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை, உரிமைகள் மறுப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.</p><h2>தேர்தல்</h2><p>பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜூலை 27 முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) என்ற அமைப்பு மக்களை தேர்தலை புறக்கணிக்கச் செய்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.</p><p>மூன்று கட்டங்களாக நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவை பெருமபாலான மக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 5, ஷேக் ஹசீனா பத்திரிகையாளர் சந்திப்பு.. வங்கதேசம் எதிர்ப்பு - &quot;தொடர்பில்லை&quot; என இந்தியா மறுப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/sheikh-hasinas-first-delhi-press-meet-india-distances-itself-as-ex-pm-to-outline-return-plan-to-bangladesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/sheikh-hasinas-first-delhi-press-meet-india-distances-itself-as-ex-pm-to-outline-return-plan-to-bangladesh#comments</comments><guid isPermaLink="false">87e2ad8b-24cb-4044-81cb-f33335526ba8</guid><pubDate>Wed, 05 Aug 2026 00:12:15 +0000</pubDate><atom:updated>2026-08-05T00:12:15.462Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,Sheikh Hasina,ஷேக் ஹசீனா,தாரிக் ரகுமான்,Tarique Rahman</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s5sgrlry/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஷேக் ஹசீனா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஷேக் ஹசீனா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s5sgrlry/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/sheikh-hasina">ஷேக் ஹசீனா</a>, டெல்லியில் உள்ள 'வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கத்தில்' (FCC) இணைய வழியில் வரும் ஆகஸ்ட் 5 பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். </p><h2>2 ஆண்டுகள் நிறைவு </h2><p>2023 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் வங்கதேசத்தில் அவரின் தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்ந்தது. பிரதமர் மாளிகையை போராட்டாக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்தார். </p><p>அதுமுதல் மத்திய அரசின் அடையாளத்தில் இருக்கும் அவரின் இருப்பிடம் குறித்த தகவல் பொதுவெளியில் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் பதிவுகள் மூலம் மட்டுமே அவர் வெளியுலக தொடர்பு கொண்டிருந்தார். </p><p>இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்து, அதாவது இந்தியாவுக்கு தப்பி வந்து ஆகஸ்ட் 5 உடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அன்றைய தினம் ஹசீனா முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். </p> <h2>வங்கதேசம் எதிர்ப்பு</h2><p>அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தடுத்து நிறுத்தும்படி, வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ள தார்பிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி அரசு இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.</p><p>டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையர் தினேஷ் திரிவேதியை சந்தித்த வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் வெளியுறவு ஆலோசகர் ஹுமாயூன் கபீர், இந்திய மண்ணைப் பயன்படுத்தி வங்கதேசத்தில்பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது அரசியல் கருத்துக்களைக் கூறும் வகையிலோ ஷேக் ஹசீனாவோ அல்லது பிறரோ செயல்பட அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.</p><p>மேலும் கடந்த ஆண்டு வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா மாணவர் போராட்டத்தை ஒடுக்க எடுத்த நடவடிக்கைகளுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனவே தண்டனையை நிறைவேற்ற அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேச அரசு இந்தியாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.</p> <h2>மத்திய அரசு விளக்கம்</h2><p>இந்நிலையில் ஷேக் ஹசீனா நடத்த திட்டமிட்டுள்ள பத்திரிகையாளர் சந்திப்புடன் இந்திய அரசாங்கத்திற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், அதில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை இந்தியா ஆதரிக்கவில்லை என்றும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "நீங்கள் குறிப்பிடும் இந்தச் சந்திப்பு ஒரு தனியார் ஊடக அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசுக்கு எந்தப் பங்கோ தொடர்போ இல்லை. அதில் தெரிவிக்கப்படும் எந்தவொரு கருத்தையும் இந்திய அரசு ஆதரிக்கவோ ஏற்கவோ செய்யாது" என்று தெரிவித்துள்ளார்.</p> <h2>நாடு திரும்புதல்</h2><p>மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் வங்கதேசம் திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக ஹசீனா தெரிவித்திருந்தார்.</p><p>எனவே தனது நாடு திரும்பும் திட்டம் மற்றும் எதிர்காலம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஹசீனா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>முதல் முறையாக கடலை பார்த்த 80 வயது தந்தை.. அழைத்து வந்த மகன் பகிர்ந்த வீடியோ  - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி  </title><link>https://www.maalaimalar.com/news/national/odisha-viral-video-emotional-moment-as-80-year-old-father-sees-the-sea-for-the-first-time</link><comments>https://www.maalaimalar.com/news/national/odisha-viral-video-emotional-moment-as-80-year-old-father-sees-the-sea-for-the-first-time#comments</comments><guid isPermaLink="false">2d88c257-e164-4a12-a1f4-81cf9380dacd</guid><pubDate>Wed, 05 Aug 2026 00:01:39 +0000</pubDate><atom:updated>2026-08-05T00:01:39.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,வைரல் வீடியோ,viral video,Father-son,தந்தை-மகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/iug6ctu4/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீடியோ  ]]></media:title><media:description type="html"><![CDATA[ வீடியோ  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/iug6ctu4/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசாவில் கடற்கரைக்கு தனது 80 வயது தந்தையை அழைத்து வந்த மகன் ஒருவர், அவருக்குக் கடலை முதன்முறையாக காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B">வைரலாகி</a> வருகிறது. </p><h2>ஒடிசா</h2><p>ஒடிசா மாநிலம் கோணார்க்கில் புகழ்பெற்ற சந்திரபாகா கடற்கரை அமைந்துள்ளது. </p><p>இங்கு ஸ்ரீகாந்த் என்ற நபர், வாழ்நாள் முழுவதும் கடலையே பார்த்திராத தனது 80 வயது தந்தையை அழைத்துச் சென்றுள்ளார். கடலை முதல் முறை பார்க்கும் தந்தையை படம்பிடித்து அந்த வீடியோவை ஸ்ரீகாந்த் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். </p><h2>வீடியோ</h2><p>அந்த வீடியோவில், 80 வயதில் முதன்முறையாக கடலைப் பார்த்த அந்தப் பெரியவர், சிறு குழந்தையின் மகிழ்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் அலைகளை பார்த்த வண்ணம் இருக்கிறார். </p><p>மேலும், கடலைத் தொட்டு வணங்கித் தனது மரியாதையைச் செலுத்திய தருணம் காண்போரைக் நெகிழ்ச்சி செய்துள்ளது.</p><p>"இது எனது வாழ்க்கையின் பொன்னான தருணம். 80 வயதில் என் தந்தையின் முகத்தில் இந்தச் சிரிப்பைக் காண்பதே எங்கள் மிகப்பெரிய பொக்கிஷம்" என மகன் ஸ்ரீகாந்த் பதிவிட்டுள்ளார்.</p> <h2>நெட்டிசன்கள் நெகிழ்ச்சி  </h2><p>இந்த வீடியோ 4.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது.</p><p>"கடல் கூட இன்று மகிழ்ச்சியடைந்திருக்கும், முதல்முறையாக ஒருவர் காலால் மிதிக்காமல், கைகளால் தொட்டு வணங்கி அதற்கு மரியாதை செலுத்தியுள்ளார்" என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>"இயற்கையைத் தெய்வமாக மதித்து வணங்கும் அந்தப் பெரியவரின் செயல் இயற்கையின் மதிப்பை உணர்த்துகிறது" என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.</p><p>இவ்வளவு அன்பைப் பொழியும் மக்களின் கருத்துக்களை தனது தந்தைக்கு படித்துக் காண்பித்து அவரையும் மகிழ்ச்சியடைய செய்வதாக ஸ்ரீகாந்த் நன்றியுடன் தெரிவித்துள்ளார்.</p> <figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbiHmeaM6k4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbiHmeaM6k4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>பதக்கங்கள் வெல்வது அரியானா... பயன்பெறுவது குஜராத்.. 2030 காமன்வெல்த் போட்டி குறித்து காங்கிரஸ் எம்.பி கருத்து </title><link>https://www.maalaimalar.com/sports/haryana-mps-demand-hosting-commonwealth-games-2030-in-medal-winning-state</link><comments>https://www.maalaimalar.com/sports/haryana-mps-demand-hosting-commonwealth-games-2030-in-medal-winning-state#comments</comments><guid isPermaLink="false">0335ad3a-8a56-4444-9620-2d6995d282e1</guid><pubDate>Tue, 04 Aug 2026 22:10:59 +0000</pubDate><atom:updated>2026-08-04T22:10:59.412Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,அரியானா,குஜராத்,gujarat,Commonwealth games,காமன்வெல்த் போட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qsdpb1bt/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காமன்வெல்த் போட்டி ]]></media:title><media:description type="html"><![CDATA[ காமன்வெல்த் போட்டி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qsdpb1bt/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடப்பாண்டின் <a href="https://www.maalaimalar.com/sports/commonwealth-games-medal-tally-india-finishes-fourth-with-39-medals-in-glasgow">காமென்வெல்த் போட்டிகள் </a>கடந்த ஆஜிஸ்ட் 2 அன்று முடிந்தன. இதில் 39 பதக்கங்களுடன் இந்தியா 4 ஆம் இடம் பிடித்தது. </p><p>இந்தியா வென்ற 39 பதக்கங்களில் 10 பதக்கங்களை (13 தங்கங்களில் 7 தங்கம் உட்பட) அரியானா வீரர்கள் பெற்று தந்தனர்.</p><p>இதனிடையே, 2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்க உள்ளன. </p><h2>போராட்டம் </h2><p>இந்நிலையில் இந்திய விளையாட்டுத் துறையில் அதிக பங்களிக்கும் அரியானாவில் காமன்வெல்த் போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று பாராளுமன்ற வளாகத்தில் அம்மாநில காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p> எம்.பி தீபேந்தர் சிங் ஹூடாவுடன், அரியானாவை சேர்ந்த பிற காங்கிரஸ் எம்பிக்களான ஜெய் பிரகாஷ், வருண் முல்லானா, சத்பால் பிரம்மச்சாரி மற்றும் கர்மபீர் பௌத் ஆகியோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.  </p><p>பதக்கங்களை அரியானா தருகிறது, ஆனால் போட்டிகளை நடத்த குஜராத் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்று தீபேந்திர சிங் ஹூடா குற்றம்சாட்டினார். </p> <h2>தீபேந்தர் சிங் ஹூடா</h2><p>இதுகுறித்து தீபேந்தர் சிங் ஹூடா பேசுகையில், "நாட்டின் மொத்த மக்கள்தொகையில் அரியானா சிறிய பங்கைக் கொண்டிருந்தாலும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களைப் பெற்றுத் தரும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.</p><p>மல்யுத்தம், பாக்ஸிங், தடகளம், துப்பாக்கிச் சூடு மற்றும் ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் ஒலிம்பிக், ஆசியப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் அரியானா வீரர்கள் தொடர்ந்து வரலாற்றுச் சாதனைகளை படைத்து வருகின்றனர்.</p> <p>அரியானா வீரர்களின் இணையற்ற பங்களிப்பையும், மாநிலத்தின் விளையாட்டுத் திறனையும் அங்கீகரிக்கும் வகையில், 2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் முதன்மை மாநிலமாக அல்லது இணை மாநிலமாக அரியானாவை அறிவிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>இருப்பினும், நாட்டின் விளையாட்டு மையமாகத் திகழும் அரியானாவிற்கு இப்போட்டியை நடத்தும் வாய்ப்பு வழங்குவதே தகுதியான முடிவாக இருக்கும் என அரியானா காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>மோகன்லால் மகளின் முதல் படம்.. துடக்கம் டிரெய்லர் வெளியீடு  </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/malayalam-debut-trailer-mohanlals-daughter-vismaya-makes-acting-debut-in-thudakkam</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/malayalam-debut-trailer-mohanlals-daughter-vismaya-makes-acting-debut-in-thudakkam#comments</comments><guid isPermaLink="false">aa2b037a-9c84-4953-b60d-2f609358ff12</guid><pubDate>Tue, 04 Aug 2026 21:21:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T21:21:43.192Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஸ்மயா,மோகன்லால்,துடக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/r6x7rinh/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ துடக்கம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ துடக்கம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/r6x7rinh/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/mohanlaal">மோகன்லாலின் </a>மகள் விஸ்மயா நாயகியாக அறிமுகமாகும்‘துடக்கம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.</p><h2>விஸ்மயா</h2><p>மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் வளர்த்து வரும் நடிகராக உள்ளார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 'டைஸ் ஐரே' என்ற பேய் படம் நல்ல வரவேற்பை பெற்றது.</p><p>இந்நிலையில் மோகன்லால் தனது மகள் விஸ்மயா-வை மோகன்லால் சினிமாவில் களம் இறக்கி உள்ளார்.</p> <h2>துடக்கம்</h2><p>ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் விஸ்மயா நடித்துள்ள முதல் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு, 'துடக்கம்' எனப் பெயரிடப்பட்டது.</p><p>பிளாக்பஸ்டர் திரைப்படமான '2018' ஐ இயக்கியவர் இந்த ஜூட் ஆண்டனி. </p> <p>இந்த படத்தில் விஸ்மயா மோகன்லாலுடன் ஆஷிஷ் ஜோ ஆண்டனி, சாய்குமார், சித்திக், மனோஜ் கே. ஜெயன் மற்றும் ஜாபர் இடுக்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.</p><p>தாமஸ் ஸ்காரியா என்ற ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பிரபல பின்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.</p><p>ஜோமோன் டி. ஜான் ஒளிப்பதிவு செய்ய, சாமன் சாக்கோ படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.</p><p>மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற விஸ்மயா, இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் சொந்தமாக நடித்துள்ளார்.</p><p>பெங்களூரு, குட்டிக்கானம் மற்றும் கொச்சி ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது</p><p>‘துடக்கம்’ படம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், துடக்கம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/ivZ2c69D69E"></iframe></figure>]]></content:encoded></item><item><title>அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டில் துறவிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை -  யோகி ஆதித்யநாத் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/ayodhya-donation-scam-probe-finds-no-involvement-of-monks-says-yogi-adityanath</link><comments>https://www.maalaimalar.com/news/national/ayodhya-donation-scam-probe-finds-no-involvement-of-monks-says-yogi-adityanath#comments</comments><guid isPermaLink="false">43c21fd8-5e45-44c7-ae7a-d59045a4ba4a</guid><pubDate>Tue, 04 Aug 2026 20:33:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T20:33:56.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yogi Adityanath,Ayodhya Ram Temple,யோகி ஆதித்யநாத்,அயோத்தி ராமர் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/miqbhzbk/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  யோகி ஆதித்யநாத் ]]></media:title><media:description type="html"><![CDATA[  யோகி ஆதித்யநாத் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/miqbhzbk/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/pappu-yadav-stages-unique-protest-in-parliament-over-ram-temple-donation-row">அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு</a> முறைகேட்டில் எந்த ஒரு துறவிக்கும் தொடர்பில்லை என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் வழங்கிய நன்கொடை திருடப்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>கோவிலை நிர்வகித்து வரும் ராம ஜென்மபூமி அறக்கட்டளையை சேர்ந்த ஊழியர்கள் உட்பட 8 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டை எழுந்த புகாரை  சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது. </p><p>இதில் தொடர்புடைய கூடுதல் நபர்கள் மற்றும் சொத்துக்களை கண்டறிய முழு நிதிப் பரிவர்த்தனைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.</p> <h2>யோகி ஆதித்யநாத்</h2><p>இந்நிலையில் சிறப்பு விசாரணை குழுவின் முதற்கட்ட அறிக்கையில் இந்த முறைகேட்டில் எந்த ஒரு துறவிக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகி உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "சிறப்பு விசாரணை குழுவின் முதற்கட்ட அறிக்கையின்படி, நன்கொடை முறைகேட்டில் எந்தவொரு சாதுவுக்கோ அல்லது துறவிக்கோ தொடர்பிருப்பது கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்தார்</p><p>மேலும், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உத்தரபிரதேசத்தின் பிம்பத்தை சீர்குலைக்க முயல்வதாக யோகி குற்றம் சாட்டினார்.</p><p>"எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புக்கும் எதிரானது. இது  அம்பேத்கர் மற்றும் சனாதன உணர்வுகளை இழிவுபடுத்தும் செயலாகும்."</p><p>ஒரு காலத்தில் ஸ்ரீ ராமர் மற்றும் கிருஷ்ணரின் இருப்பையே கேள்வி கேட்டவர்கள், இன்று நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறார்கள். அயோத்தியின் வீதிகளையும் சரயு நதியையும் ரத்தத்தால் கறைபடுத்திய பாவத்தை செய்தது சமாஜ்வாதி அரசுதான்" என்று சாடினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு.. 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி 17 அகதிகள் உயிரிழப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/north-african-migrants-die-after-15-days-adrift-without-food-or-water</link><comments>https://www.maalaimalar.com/news/world/north-african-migrants-die-after-15-days-adrift-without-food-or-water#comments</comments><guid isPermaLink="false">18e778ad-047f-4d62-b24a-317dca16de62</guid><pubDate>Tue, 04 Aug 2026 20:02:04 +0000</pubDate><atom:updated>2026-08-04T20:02:04.355Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அகதிகள்,refugees,படகு விபத்து,Spain,ஸ்பெயின்,Boat Accident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pbdv7n9l/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pbdv7n9l/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு சென்றுகொண்டிருந்த படகு நடுவழியில் பழுதானதில் அதிலிருந்த 17 அகதிகள் 15 நாட்கள் கடலில் உணவு மற்றும் தண்ணீரின்றி தத்தளித்து உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><p>ஸ்பெயின் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><h2>இருவர் மீட்பு </h2><p>ஸ்பெயினின் மல்லோர்கா  தீவுக்கு தென்மேற்கே 12.7 நாட்டிக்கல் மைல் தொலைவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் படகு ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரை ஸ்பெயின் கடற்படை  மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  </p><p>தாங்கள் பயணித்த படகில் மொத்தம் 19 பேர் இருந்ததாகவும், இன்ஜின் பழுதாகி 15 நாட்களாகக் கடலில் தத்தளித்ததால் உணவு மற்றும் தண்ணீரின்றி மற்ற 17 பேரும் இறந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  </p><p>மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.  </p> <h2>அகதிகள் நெருக்கடி</h2><p>மறுபுறம், ஸ்பெயினின் இபிஸா தீவுக்கு தென்மேற்கே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் 15 வட ஆப்பிரிக்க அகதிகளுடன் வந்த மற்றொரு படகை மீட்புக் குழுவினர் மீட்டனர்.</p><p>இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 3,935 அகதிகளுடன் 211 படகுகள்ஸ் பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.</p><p>ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்பிரிக்க எல்லைப் பகுதியான செவுடாவில் அகதிகள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.</p><p>கடந்த வாரம் மொராக்கோவில் இருந்து சுமார் 72,000 அகதிகள் செவுடாவிற்குள் நுழைந்தனர்.</p><p>இதில் இதுவரை 70,000 பேர் செவுடாவிலிருந்து வெளியேறியுள்ள நிலையில்,<a href="https://www.maalaimalar.com/news/world/60000-refugees-entered-spain-from-morocco-41-tragically-lost-their-lives"> எல்லையைக் கடக்கும் முயற்சியில் </a>உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.</p><p>மனித கடத்தல் கும்பல்களின் சட்டவிரோத நடவடிக்கைகளே இந்த மனித உரிமை நெருக்கடிக்குக் காரணம் என ஸ்பெயின் அரசு குற்றம்சாட்டியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சக வீரர்கள் இருவரை சுட்டுக் கொன்று சிஆர்பிஎப் வீரர் தற்கொலை.. அசாமில் பயங்கரம் </title><link>https://www.maalaimalar.com/news/national/assam-crpf-camp-shooting-officer-kills-two-colleagues-and-then-himself</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-crpf-camp-shooting-officer-kills-two-colleagues-and-then-himself#comments</comments><guid isPermaLink="false">217028bc-b8b8-4ca4-92a3-2bb08cc1a71f</guid><pubDate>Tue, 04 Aug 2026 19:24:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T19:24:40.573Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,சிஆர்பிஎப்,சிஆர்பிஎப் வீரர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g9rzo6wt/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிஆர்பிஎப் வீரர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிஆர்பிஎப் வீரர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g9rzo6wt/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D">சிஆர்பிஎப் </a>முகாமில், அதிகாரி  ஒருவர் சக வீரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>சம்பவம் </h2><p>நேற்று காலை 7 மணியளவில், அசாமின் நகோன் மாவட்டம் கதிமாரி பகுதியில் உள்ள சிஆர்பிஎப் 34-வது பட்டாலியன் முகாமின் வாயிலில் இச்சம்பவம் நடந்துள்ளது.</p><p>ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பல்லானி பிரேமாம்பரம் என்பவர், பணியில் இருந்த சக வீரர்கள் மீது திடீரெனத் தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார்.</p><p>இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு வீரர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> சக வீரர்களைச் சுட்ட பிறகு, அதிகாரி பிரேமாம்பரம் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.</p> <h2>விசாரணை</h2><p>இச் சம்பவத்தை தொடர்ந்து முகாமில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. தகவலறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தொடங்கினர்.</p><p>அதிகாரி மன அழுத்தத்தால் இவ்வாறு செய்தாரா அல்லது வீரர்களுக்கு இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <p>மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட,</p><p>சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)</p><p>மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)</p><p>சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019</p>]]></content:encoded></item><item><title>மூத்த நடிகர் பிரதீப் ராவத் ரத்தப் புற்றுநோயால் மறைவு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-actor-pradeep-rawat-passes-away-senior-star-dies-in-mumbai-after-battle-with-blood-cancer</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-actor-pradeep-rawat-passes-away-senior-star-dies-in-mumbai-after-battle-with-blood-cancer#comments</comments><guid isPermaLink="false">4bc36186-4282-41b1-988e-64e467302d46</guid><pubDate>Tue, 04 Aug 2026 18:46:17 +0000</pubDate><atom:updated>2026-08-04T18:46:17.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Bollywood actor,Pradeep Rawat,பாலிவுட் நடிகர்,பிரதீப் ராவத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/4s3vivt0/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதீப் ராவத்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதீப் ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/4s3vivt0/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மூத்த நடிகர்  பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று  மாலை மும்பையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-offers-condolences-on-iuml-president-kader-mohideen-sons-death">காலமானார்</a>.</p><p>நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயிலிருந்து மீண்ட அவருக்கு, கடந்த ஒன்றரை மாதங்களாக நோய் மீண்டும் தீவிரமடைந்தது. </p><p>மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து அவர் நேற்று காலமானார். </p><p>அவருக்குக் கல்யாணி என்ற மனைவியும், விக்ரமாதித்யா என்ற மகனும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை மும்பையில் நடைபெறவுள்ளது.  </p> <h2>திரைப்பயணம்</h2><p>பி.ஆர்.சோப்ராவின் புகழ்பெற்ற 'மகாபாரதம்' தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.</p><p>இந்தியில் அமீர் கான் நடித்த 'லகான்' மூலம் பிரபலமான பிரதீப் ராவத் தமிழில் சூர்யாவின் கஜினியில் இரட்டை வேடத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். அமீர் கான் நடிப்பில் அதன் இந்தி ரீமேக்கிலும் அவர் வில்லன் பாத்திரத்தில் நடித்திருந்தார்.</p> <p>இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் வில்லன் வேடங்களில் அவர் நடித்திருக்கிறார். தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தில் ஒரு போர்ஷனில் அவர் தோன்றியிருப்பார்.</p><p>இந்தி, தெலுங்கு, தமிழ் தவிர கன்னடம், மலையாளம், போஜ்புரி மற்றும் நேபாளி மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.</p><p>பிரதீப் ராவத்தின் மறைவுக்கு இந்தியா முழுவதும் உள்ள பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>TNPL முதல் ஆட்டம்: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-cricket-dindigul-dragons-win-opener-tiruppur-tamizhans-all-out-for-107-as-dindigul-chase-with-7-wicket-margin</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-cricket-dindigul-dragons-win-opener-tiruppur-tamizhans-all-out-for-107-as-dindigul-chase-with-7-wicket-margin#comments</comments><guid isPermaLink="false">d96949a1-0e9b-45b4-9388-67729cf1ea1a</guid><pubDate>Tue, 04 Aug 2026 17:49:45 +0000</pubDate><atom:updated>2026-08-04T17:49:45.380Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரிக்கெட் போட்டி,tnpl,டிஎன்பிஎல் கிரிக்கெட்,Tiruppur Tamizhans,Dindugul draganos</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/lb5gy4uq/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திண்டுக்கல் டிரகன்ஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ திண்டுக்கல் டிரகன்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/lb5gy4uq/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது <a href="https://www.maalaimalar.com/sports/eight-teams-participating-tnpl-20-over-cricket-tournament-begins-tomorrow">டி.என்.பி.எல்</a>. 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை 2 கட்டமாக இந்த போட்டி நடத்தப்படுகிறது.</p><h2>போட்டிகள் </h2><p>மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17- ந் தேதி ஓய்வு தினமாகும்.</p><p>முதல் கட்ட போட்டிகள் இன்று முதல் 15ந்தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கின்றன. </p><p>இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் , நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.</p> <h2>இன்றைய ஆட்டம்</h2><p>இன்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.</p><p>டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.</p><p>திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய திருப்பூர் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக அமித் சாத்விக் 20 ரன்கள் எடுத்தார்.</p> <p>இறுதியில் 15.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு திருப்பூர் தமிழன்ஸ் ஆல் அவுட் ஆனது.</p><p>திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் புவனேஷ்வரன் மற்றும் நிரங்கர் சர்மா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.</p><p>108 ரன்கள் என்ற எளிய இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களமிறஙகியது. அதிகபட்சமாக அனுராக் ராஜேஷ் குமார் 39 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். விமல் குமார் 40 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க ஹன்னி சைனி 17 ரன்கள் சேர்க்க, இறுதியில் 9 பந்துகள் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் குவித்தது திண்டுக்கல்.</p><p>இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூரை எளிதில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது திண்டுக்கல்.</p>]]></content:encoded></item><item><title> குஜராத்தை மிரட்டும் சண்டிபுரா வைரஸ் தொற்று.. 22 குழந்தைகள் பலி!
</title><link>https://www.maalaimalar.com/news/national/gujarat-sandipura-virus-outbreak-22-children-dead-as-encephalitis-spreads-across-multiple-districts</link><comments>https://www.maalaimalar.com/news/national/gujarat-sandipura-virus-outbreak-22-children-dead-as-encephalitis-spreads-across-multiple-districts#comments</comments><guid isPermaLink="false">3208b623-864b-4ea9-b29b-1b8360e8c8af</guid><pubDate>Tue, 04 Aug 2026 17:06:45 +0000</pubDate><atom:updated>2026-08-04T17:06:45.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Children,குஜராத்,gujarat,Viral infection,குழந்தைகள்,வைரஸ் தொற்று</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/80tfxqdx/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சண்டிபுரா வைரஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சண்டிபுரா வைரஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/80tfxqdx/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா <a href="https://www.maalaimalar.com/topic/virus">வைரஸ் </a>தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுல் பனஷேரியா தெரிவித்துள்ளார்.</p><h2>பாதிப்பு </h2><p>ஜூலை முதல் வாரத்தில் இருந்து  இந்த வைரஸ் குஜராத்தில் பரவி வருகிறது. </p><p>தரவுகளின்படி, குஜராத்தில் இதுவரை 184 பேருக்குச் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் 35 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>தொற்று உறுதியானவர்களில் 7 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  6 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகஸ்ட் 3 நிலவரப்படி மேலும் 11 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளன.</p><p>பாதிக்கப்பட்ட அனைவரும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்தத் தொற்று குறிப்பிட்ட ஒரு கிராமத்திற்கோ அல்லது பகுதிக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது.</p> <h2>சண்டிபுரா வைரஸ்</h2><p>'சண்டிபுரா என்செபாலிடிஸ்' என்று அழைக்கப்படும் சண்டிபுரா வைரஸ் என்பது மூளையைத் தாக்கி அழற்சியை உண்டாக்கும் ஒரு ஆபத்தான வைரஸ் தொற்றாகும்.</p><p>ஈக்கள் மற்றும் டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உள்ளிட்ட பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.</p><p>காய்ச்சல், வாந்தி, மயக்கம், வலிப்பு, வயிற்றுப்போக்கு, நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் மூளை வீக்கம் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.</p> <h2>அரசு கோரிக்கை</h2><p>சண்டிபுரா வைரஸ் தொற்றைத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ தற்போது பிரத்யேக தடுப்பூசியோ அல்லது மருந்தோ இல்லை.</p><p>எனவே, குழந்தைகளுக்குக் காய்ச்சல், வாந்தி, வலிப்பு அல்லது நரம்பியல் சார்ந்த உடல்நலக்குறைவு அறிகுறிகள் தென்பட்டால், பெற்றோர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அர்ஜுன் தாஸ், அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-date-announced-for-arjun-das-and-aditi-shankars-once-more</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-date-announced-for-arjun-das-and-aditi-shankars-once-more#comments</comments><guid isPermaLink="false">42e4f795-7239-4cc1-ab19-779e474fbe85</guid><pubDate>Tue, 04 Aug 2026 16:24:01 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:24:01.406Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>arjun das,அர்ஜுன் தாஸ்,aditi shankar,Once More,அதிதி சங்கர்,ஒன்ஸ் மோர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/51tp6c92/New-Project-2026-08-04T215258.210.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அர்ஜுன் தாஸ், அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/51tp6c92/New-Project-2026-08-04T215258.210.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத்து மற்றும் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’. </p><p>மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு புகழ்பெற்ற மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். </p><p>இப்படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி உள்ள நிலையில், தற்போது ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஆக.28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி - 04 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-04-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-04-august-2026#comments</comments><guid isPermaLink="false">d97691eb-fde2-4478-81b0-8c01330a1625</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:17:36 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:20:21.357Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/fdlup75f/udayaa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ udhayanidhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/fdlup75f/udayaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-bjp-president-to-be-changed-soon">சட்டசபை தேர்தலில் தோல்வி: தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம்</a></p><p>* புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. </p><p>* 2029-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thanjavur-police-visit-udhayanidhi-stalin-house-in-nilangarai">உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சை போலீசார் வருகை?- பரபரப்பில் நீலாங்கரை</a></p><p>* சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். </p><p>*  உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-governments-first-budget-to-be-presented-tomorrow">த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிருக்கு ரூ.2,500 அறிவிப்பு வெளியாகுமா?</a></p><p>* அனல்பறக்கும் விவாதங்கள், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-released-from-kabini-dam-reached-hogenakkal">கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது</a></p><p>* கேரளம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.&nbsp;</p><p>* &nbsp;திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்தது.</p><p>10 நிமிடம், 10 நிமிடம் என எவ்வளவு நேரம் கூறுவீர்கள்? சட்டப்பூர்வ கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்- இணை ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தல்</p><p>காவல்துறைக்கு எதிராக கண்டன தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.</p><p>உதயநிதி குளித்து முடித்த பிறகு தான் வருவார்- மா.சுப்பிரமணியன்</p><p>உதயநிதி ஸ்டாலின் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>உதயநிதி கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு- இன்று பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி தகவல்</p><p>இது உச்சக்கட்ட அடக்குமுறை, அராஜகம்- உதயநிதியை கைது செய்ய நீலாங்கரை வீட்டில் குவிக்கப்பட்ட போலீசார்:  கே.என். நேரு </p><p>தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு அதிர்ச்சியளிக்கிறது - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி</p><p>உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய நடவடிக்கை- சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வருகை</p><p>கைது நடவடிக்கை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை</p><p>நண்பகல் 12 மணிவரை உதயநிதியை கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல். </p><p>காவல்துறையிடம் தெரிவிக்க அரசு வழக்கறிஞர் மூலம் நீதிபதி அறிவுறுத்தல். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். </p><p>காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது</p><p>தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீசார் கைது செய்துள்ளனர். </p><p>என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்</p><p>திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது- உதயநிதி ஸ்டாலின்</p><p>பேசாததை ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுகிறார். </p><p>கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல... உதயநிதி </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>உதயநிதியை கைது செய்து அழைத்துச் செல்லப்படும் வாகனத்தை மறித்து தி.மு.க.வினர் போராட்டம்</p><p>அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் பேட்டி</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது</p><p>ஆங்கிலேயரின் வாய்ப்பூட்டு சட்டத்துக்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலுக்கு கண்டனம்- பிரேமலதா</p><p>உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை: ஆளுங்கட்சியும்,  எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்!- அன்புமணி</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- தமிழகம் முழுவதும் சாலை போராட்டத்தில் ஈடுபடும் தி.மு.க.வினர்</p><p>உதயநிதி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்- தங்கம் தென்னரசு</p><p>சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம் -கனிமொழி</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- பரபரப்பான சூழ்நிலையில் அறிவாலயம் வந்தார் மு.க.ஸ்டாலின்</p><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்த பாசிச த.வெ.க அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்- திமுக</p><p>உதயநிதி ஸ்டாலினை அழைத்து சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற தி.மு.க. நிர்வாகிகளின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.</p><p> நாளை சட்டப்பேரவை கூடவிருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது என்பது  ஜனநாயக விரோத செயல் - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி</p><p>உதயநிதி கைது - தூத்துக்குடியில் கீதாஜீவன் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம் </p><h3>சட்டம் தனது கடமையைச் செய்யும்- ஜி.கே.வாசன்</h3><p>தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசக்கூடாது.</p><p>பொதுவாழ்வில் பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்போடு பேசுவதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.</p><p>மகளிர் குறித்து பொது இடத்தில்  பேசும்போது,  அநாகரிகமாகப் பேசக்கூடாது.</p><p>சட்டத்தின் முன் எல்லோரும் சமம்.</p><p>சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசக்கூடாது.<br><br>பொதுவாழ்வில் பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்போடு பேசுவதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.<br><br>மகளிர் குறித்து பொது இடத்தில்  பேசும்போது,  அநாகரிகமாகப் பேசக்கூடாது.<br><br>சட்டத்தின் முன் எல்லோரும் சமம்.<br>சட்டம் தனது கடமையைச் செய்யும்.</p>&mdash; G.K.Vasan (@GK__Vasan) <a href="https://x.com/GK__Vasan/status/2084531754493174137?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>எதிர்க்கட்சியினர் மீது த.வெ.க. அரசு அடக்குமுறை செய்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை- கே.பி.முனுசாமி</p><h3>உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வரவேற்பு</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I wholeheartedly welcome the arrest of Udayanidhi Stalin today. It is definitely a bold step by the Tamil Nadu police and the <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a>  and I hope this arrest would be lesson to others who is not bothered about the dignity of women.  Now it is for the courts to…</p>&mdash; Narayanan Thirupathy (@narayanantbjp) <a href="https://x.com/narayanantbjp/status/2084521915126091843?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>உதயநிதி ஸ்டாலின் கைது- த.வெ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்</p><p><strong>உதயநிதி ஸ்டாலின் கைது..நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட திருக்குறள்</strong></p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்<br>அறங்கூறும் ஆக்கம் தரும்.<br><br>- திருக்குறள் 183</p>&mdash; Nivetha Pethuraj (@Nivetha_Tweets) <a href="https://x.com/Nivetha_Tweets/status/2084510185549418820?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h3>உதயநிதி ஸ்டாலின் கைது, பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் பாடம் - வானதி ஸ்ரீனிவாசன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம்.  சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.<br><br>அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியாகத்…</p>&mdash; Vanathi Srinivasan (@VanathiBJP) <a href="https://x.com/VanathiBJP/status/2084526048126054735?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>தஞ்சையில் காலணிகளை வீசி தி.மு.க. மற்றும் த.வெ.க.வினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.</p><p>உதயநிதி ஸ்டாலினை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது- நெல்லை முபாரக்</p><p>புதுச்சேரி: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் போராட்டம்</p><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தேனாம்பேட்டை சிக்னலில் திமுகவினர் போராட்டம்</p><h3>உதயநிதி பேச்சுக்கும், கைதுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய <br>திரு. <a href="https://x.com/Udhaystalin?ref_src=twsrc%5Etfw">@Udhaystalin</a> அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது<br><br>திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக…</p>&mdash; Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&amp;AIADMK (@EPSTamilNadu) <a href="https://x.com/EPSTamilNadu/status/2084544938986148016?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>உதயநிதி கைதுக்கு தடை கோரிய வழக்கு- விசாரணை தாமதம்</p><h3>பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! சட்டம் தன் கடமையை செய்யும்! - அமைச்சர் ராஜ்மோகன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! <br><br>மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது! <br><br>அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில்… <a href="https://t.co/xArFYrpZMk">pic.twitter.com/xArFYrpZMk</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2084544751865668025?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>காவல்துறைக்கு என்ன புகார் வந்திருக்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கு எதற்கு? உதயநிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்- கிருஷ்ணசாமி</p><p>கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும்- சிபிஎம்</p><p>பெண்கள் குறித்து இழிவாக பேசிய உதயநிதி சட்டசபைக்குள் வர தகுதியில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தவறு- கம்யூனிஸ்டுகள்</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்- திவ்யா சத்யராஜ்</p><h3>உதயநிதி பேச்சு: நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல- திருமாவளவன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,  &#39;இரட்டுற மொழிதல்&#39; என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.<br><br>எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே…</p>&mdash; Thol. Thirumavalavan (@thirumaofficial) <a href="https://x.com/thirumaofficial/status/2084553115643084985?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>கைது செய்யப்பட்டவருக்கு வெளி உணவை கொடுக்கக்கூடாது- காவல்துறை</p><p>விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல்நிலையத்தில் மதிய உணவுக்காக உதயநிதி ஸ்டாலின் அழைத்து செல்லப்பட்டார். </p><p>உதயநிதி கைதுக்கு எதிரான மனு- உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது</p><p>விசாரணைக்கு பிறகு உதயநிதி விடுவிக்கப்படுவார்- உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல்</p><p>இன்றைக்குள் விசாரணையை முடித்து இன்றே உதயநிதியை விடுவிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் </p><p>உதயநிதி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-arrogance-leads-to-ruin-persistent-arrogance-accelerates-that-ruin">ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!- மு.க.ஸ்டாலின்</a></p><p>* ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார்.</p><p>* தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! </p><p>தஞ்சாவூர் திமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.</p><p>தஞ்சை தெற்கு காவல் நிலைய சாலை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டது.</p><p>தஞ்சைக்கு அதிவிரைவுப்படை வரவழைக்கப்பட்டது. அதிவிரைவுப் படையுடன் நாகை எஸ்.பி. தஞ்சைக்கு வருகை </p><p>தஞ்சை தெற்கு காவல் நிலையத்தை சுற்றி பேரிகார்டுகள் வைத்து தடுப்புகளை அமைத்தது காவல்துறை</p><p>உதயநிதி அழைத்து வரப்படும் தஞ்சை தெற்கு காவல் நிலையம் அருகே ஏராளமான திமுகவினர் குவிந்து வருகின்றனர்.</p><p>தஞ்சை தெற்கு காவல்நிலைய எல்லையைச் சுற்றியுள்ள 4 பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.</p><p>தஞ்சையில் முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்த திமுகவினர்</p><p>தஞ்சை தெற்கு காவல்நிலையத்துக்கு பதிலாக செங்கப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் உதயநிதி</p><p>போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்க உதயநிதி மறுப்பு</p><p>முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகி்யோர் செங்கிப்பட்டி காவல்நிலையம் வருகை</p><p>செங்கிப்பட்டி காவல் நிலையம் அருகே பதற்றமான சூழல் நிலவுகிறது.</p><p>முன்னாள் அமைச்சர்களின் ஆலோசனைக்கு பிறகு செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் இறங்கி விசாரணைக்கு சென்றார் உதயநிதி</p><p>காவல்துறை வேனில் இருந்து இறங்கிய உதயநிதி தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.</p><p>8 மணி நேர பயணத்திற்கு பிறகு தஞ்சை கிழக்கு நிலைய ஆய்வாளர் உதயநிதியிடம் விசாரணை</p><p>உதயநிதியிடம் அரை மணி நேரம் கடந்து போலீசார் விசாரணை</p><p>ஒரு மணி நேரம் கடந்து உதயநிதியிடம் போலீசார் விசாரணை</p><p>விசாரணை நிறைவு: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விடுவிப்பு</p><p>உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு: தொண்டர்கள் ஆரவாரம்</p> <p>காவல் நிலையத்தில் இருந்து கார் மூலமாக சென்னை புறப்பட்டார் உதயநிதி</p><p>உதயநிதி விடுதலை: பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்</p>]]></content:encoded></item><item><title>‘குறிப்பிட்ட பெண்ணை தவறாக பேசவேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட இல்லை... இது ஆட்சியல்ல சர்க்கஸ்கூடம்’ - உதயநிதி ஸ்டாலின்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/there-wasnt-even-the-slightest-intention-to-speak-ill-of-a-particular-woman-this-isnt-a-government-its-a-circus-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/there-wasnt-even-the-slightest-intention-to-speak-ill-of-a-particular-woman-this-isnt-a-government-its-a-circus-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">b530e373-e43a-4e1a-985f-ffe80f9e3595</guid><pubDate>Tue, 04 Aug 2026 16:05:48 +0000</pubDate><atom:updated>2026-08-04T16:05:48.253Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,tvk,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/07aiiugk/New-Project-2026-08-04T213526.236.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘குறிப்பிட்ட பெண்ணை தவறாக பேசவேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட இல்லை... இது ஆட்சியல்ல சர்க்கஸ்கூடம்’ - உதயநிதி ஸ்டாலின்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/07aiiugk/New-Project-2026-08-04T213526.236.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூரில் நேற்று காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ஒருவர் குறித்து இரட்டை அர்த்த கருத்தைப் பேசியதாக அவர்மீது வழக்குப் பதியப்பட்டு இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டார்.</p><p>சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார். செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணையை முடித்த அவர் சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர்.,</p><p>“நேற்று தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை குறித்துதான் பேசினேன். ஒவ்வொரு ஆண்டும் ஜூன்.12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை.</p><p>தண்ணீரை கேட்டுப்பெற, கர்நாடகாவை எதிர்த்துப் பேச இந்த அரசுக்கு தைரியம் இல்லை. மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட சொல்லினோம். அதனை செய்யவில்லை. அமைச்சர்களின் தவறுகள் குறித்து ஆதாரமாகப் பேசினேன். அதற்கு பதில் சொல்லத் தைரியம் இல்லாமல், என் பேச்சை தவறாக திரித்துப் பரப்புகின்றனர்.</p><p>மாநிலத்தில் ஏதேனும் பிரச்னை எழுந்தால் அதை மடைமாற்ற ஏதாவது ஒன்றை செய்வது. தவெக எம்.எல்.ஏக்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது. எல்லாவற்றிற்கும் மடைமாற்று. நேற்று என் பேச்சு விவசாயிகளிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நாளை சட்டசடையில் இதுகுறித்து பேசுவேன் என இந்த கைது நடவடிக்கை.</p><p>கைதுக்கு முழு ஒத்துழைப்பு தந்தேன். இன்று காலை அரசு வழக்கறிஞர் கூறுகிறார் என்னை கைது செய்யும் நோக்கமே கிடையாது. விசாரணைக்காகத்தான் அழைத்து செல்கிறோம் என்று. ஒரு தீவிரவாதியை கூட்டி செல்வதுபோல 3000 காவலர்கள் பாதுகாப்போடு சென்னையில் இருந்து சாலைவழியாக 400 கி.மீ. தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.</p><p>இதை சட்டப்படியாக சந்திப்போம். நான் எந்த தவறான எண்ணத்திலும் நேற்றுப் பேசவில்லை. குறிப்பிட்டுக் கூறிய பெண்ணை தாழ்த்திப் பேசவேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட இல்லை. என் குடும்பம் என்னை அப்படி வளர்க்கவில்லை. என் மனைவியுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். மனைவி, தங்கை, மகள் என பெண்களோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.</p><p>பொய் வழக்குக்கு அஞ்சும் ஆள் நான் இல்லை. என்னுடன் இந்நேரத்தில் இருந்த பொதுச்செயலாளர்கள், தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. சிலத் தலைவர்கள் நான் பேசியதை முழுதாக பார்க்காமல், நான் தவறாகப் பேசியதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அது எனக்கு வருத்தமாக இருக்கிறது. </p><p>விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதால் இந்த தரங்கெட்ட அரசு என்னை கைது செய்துள்ளது. நான் எந்த இரட்டை அர்த்தத்திலும் பேசவில்லை, ஒரு அர்த்ததில்தான் பேசினேன். காவிரி தண்ணீர் வரவேண்டும் என்றுதான் பேசினேன், மீண்டும் பேசுவேன். இது ஆட்சியாகவே நான் பார்க்கவில்லை. இது ஒரு சர்க்கஸ் கூடம்.</p><p>திமுகவை பார்த்தால் கைது செய்யத் தோன்றும், அதிமுகவைப் பார்த்தால் சோபா அனுப்பத் தோன்றும். முதலமைச்சருக்கு திமுகவின், தமிழ்நாட்டின் வரலாறு தெரியவில்லை. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தகுந்த பதிலை தருவார்கள். தலைவர் மு.க.ஸ்டாலினை பார்க்க இருக்கிறோம். அவர் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான தகுந்த அறிவுரையை தருவார்.” எனத் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>விசாரணை முடிந்தது: காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்- திமுக தொண்டர்கள் ஆரவாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/interrogation-completed-udayanidhi-stalin-leaves-police-station-amid-supporters-cheers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/interrogation-completed-udayanidhi-stalin-leaves-police-station-amid-supporters-cheers#comments</comments><guid isPermaLink="false">ec9702dd-cc14-4625-9791-7254aa194d9a</guid><pubDate>Tue, 04 Aug 2026 15:01:46 +0000</pubDate><atom:updated>2026-08-04T15:01:46.003Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pp9lp2pl/UdhayanidhiStalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pp9lp2pl/UdhayanidhiStalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் தஞ்சாவூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்த உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்காக போலீசார் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.</p><p>இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பிற்பகல் விசாரணைக்கு வந்தது. விசாரணைியன்போது அரசு தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில் "எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார். உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை. உதயநிதி விசாரணைக்கு பின் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார்" என்று தெரிவித்தார்.</p><h2>தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டார்</h2><p>இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-alights-at-sengipatti-and-waves-to-cadres-inquiry-begins">உதயநிதி</a>யை இன்றே விடுவிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும், காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.</p><p>மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் அருகே சென்றபோது, திடீரென தஞ்சாவூர் செல்லாமல், தஞ்சை எல்லையில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முதலில் இங்கு வைத்து விசாரணை நடத்தக்கூடாது என்று உதயநிதி கூறினார். பின்னர், திமுக தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.</p><h2>ஒன்றரை மணி நேரம் விசாரணை</h2><p>இதனையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு போலீசார் இவரிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் 8.15 மணிக்கு காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து காவில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.</p><p>அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடினர். அவர்களுக்கு கையசைத்த படி உதயநிதி ஸ்டாலின் திருச்சி நோக்கி புறப்பட்டார். திருச்சியில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் சென்னை விரைகிறார்.</p>]]></content:encoded></item><item><title>பொதுமக்களை தாக்கும் திமுக-வினர்: வீடியோ வெளியிட்டு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-arrest-dmk-supporter-attack-on-public-minister-rajmohan-attack</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-arrest-dmk-supporter-attack-on-public-minister-rajmohan-attack#comments</comments><guid isPermaLink="false">7fbe81df-3fb5-4a47-b5f2-6ff27149d4cd</guid><pubDate>Tue, 04 Aug 2026 14:46:46 +0000</pubDate><atom:updated>2026-08-04T14:46:46.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/mlnjyr0m/MinisterRajmohan0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/mlnjyr0m/MinisterRajmohan0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். அது மட்டுமல்லாமல் த.வெ.க. அமைச்சர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.</p><p>நடிகைக்கு எதிராக இரட்டை அர்த்தத்தில் பேசிய நிலையில், தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.</p><h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>இதன் அடிப்படையில் இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-alights-at-sengipatti-and-waves-to-cadres-inquiry-begins">உதயநிதி </a>கைதை எதிர்த்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் கடைகளை மூடவும், சாலையில் செல்லும் வாகனத்தை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>வாகன ஓட்டி மீது தாக்குதல்</h2><p>இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை தாக்கி, வாகனத்தை கீழே தள்ளி திமுக-வினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியானது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! <br><br>மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது! <br><br>அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில்… <a href="https://t.co/xArFYrpZMk">pic.twitter.com/xArFYrpZMk</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2084544751865668025?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இந்த நிலையில், அது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அமைச்சர் ராஜ்மோகன், அதில் பதிவிட்டிருப்பதாவது:-</p><p>மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுக-வினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுக-வினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.</p><p>இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்.. சட்டம் தன் கடமையை செய்யும்.</p><p>இவ்வாறு ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளா: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-red-alert-for-8-districts-holiday-declared-for-schools-and-colleges-in-5-districts</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-red-alert-for-8-districts-holiday-declared-for-schools-and-colleges-in-5-districts#comments</comments><guid isPermaLink="false">f9e4b174-ffc2-40e8-b7f5-dc76c6bcbc11</guid><pubDate>Tue, 04 Aug 2026 14:42:11 +0000</pubDate><atom:updated>2026-08-04T14:42:11.991Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,Red Alert,ரெட் அலர்ட்,இந்திய வானிலை ஆய்வு மையம்,India Meteorological Department,கேரளா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/59l55ta4/New-Project-2026-08-04T195137.824.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கேரளா: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/59l55ta4/New-Project-2026-08-04T195137.824.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. </p><p>அதன்படி, பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>மலப்புறம், பாலக்காடு, திருச்சூர் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இதனிடையே கடந்த மூன்று நாட்களில் மழை மற்றும் நிலச்சரிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. </p><p>மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நாளை (ஆக.4) 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, காசர்கோடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திமுகவிற்கு பாடம் எடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-says-cm-vijay-has-taught-dmk-a-lesson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-says-cm-vijay-has-taught-dmk-a-lesson#comments</comments><guid isPermaLink="false">aef02936-23ef-49ab-90dd-e370b5035806</guid><pubDate>Tue, 04 Aug 2026 14:38:57 +0000</pubDate><atom:updated>2026-08-04T14:38:57.948Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,CMVIJAY,முதலமைச்சர் விஜய்,BussyAnand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a7t727mo/Aadhav-Arjuna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a7t727mo/Aadhav-Arjuna?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை தவெக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் முதலமைச்சர் விஜய், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><h2><strong>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </strong>இந்த கூட்டத்தில்<strong> பேசியதாவது;</strong></h2><p>"தவெக ஆட்சி அமைந்த 80 நாட்களில் திமுகவின் ஒரே கொள்கையே, தவெக ஆட்சியை எப்படி கவிழ்ப்பது என்பது தான். தவெக எம்எல்ஏ க்களிடம் ரூ.50 கோடி, ரூ 100 கோடி தருவதாக செந்தில் பாலாஜி தரப்பு விலை பேசியது. கொளத்தூர் மக்கள் ஏன் தன்னை தூக்கி எறிந்தார்கள் என்பதை முக ஸ்டாலின் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. கொளத்தூர் சென்ற முதலமைச்சர் விஜய்யால் அன்று சேப்பாக்கம் செல்ல முடியாமல் போனது. அதனால் சேப்பாக்கம் மிஸ் ஆகிவிட்டது.</p><p>சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச தொடங்கி பார்ட்டி பண்ட் எனக் கூறியவுடன் திமுகவினர் ஓடி விட்டனர். சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அமைதியாக இருந்தார், திமுகவினர் அம்பலப்பட்டுவிட்டனர். எதிர்காலமே இல்லாத திமுக கட்சி, எங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலை பேச முயற்சித்து மாட்டிக்கொண்டது. திமுகவின் சாம்ராஜ்யம் முடிந்து விட்டது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு 6 மாதம் எடுத்துக்கொண்டனர். </p><p>ஆட்சியில் இருந்தபோது துணை முதலமைச்சர் என உதயநிதி க்கு பட்டாபிஷேகம், தற்போது எதிர்க்கட்சி தலைவர் என்று பட்டாபிஷேகம். ஒருமுறை கூட முதலமைச்சர் விஜய் ஒருமையில் பேசியதில்லை, முக ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதற்கு முதலமைச்சர் வருந்தினார். பெண்களை கொச்சமாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் கருணாநிதி பெண்களை சக மனுஷியாக கூட நினைக்கவில்லை உதயநிதி" என்று கடுமையாக சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;சாதி, மதம் எல்லாம் பிறப்பால் வந்தவை&quot;: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகை மீனாவின் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-meenas-humanitarian-message-goes-viral-on-social-media</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-meenas-humanitarian-message-goes-viral-on-social-media#comments</comments><guid isPermaLink="false">35a5217f-2c08-4d2f-8190-8b823163d7ac</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:58:07 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:58:07.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Meena,Humanity,மீனா,InstagramStory,மனிதநேயம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/8cdhk8lv/Actress-Meena" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Meena ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/8cdhk8lv/Actress-Meena?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/meena">மீனா</a> தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து அடங்கிய ஸ்டோரி தற்பொழுது இணையதளங்களில் மிக வேகமாகப் பரவி, பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.</p><h2><strong>மீனாவின் பதிவு:</strong></h2><p>இதுகுறித்து நடிகை மீனா தனது பதிவில், "உங்கள் சாதி, மதம், பிறந்த இடம் மற்றும் பாலினம் ஆகியவை அனைத்தும் பிறப்பால் அமைந்தவை. அவற்றைப் பெறுவதற்கு நீங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை; எனவே, அவற்றைக் குறித்துப் பெருமைப்படுவதை நிறுத்துங்கள். உங்கள் குணம், உங்கள் செயல்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மனிதாபிமானம் ஆகியவற்றைக் குறித்துப் பெருமை கொள்ளுங்கள்" என்ற செய்தியை வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.</p><h2><strong>ஆதரவு:</strong></h2><p>சாதி மற்றும் மதப் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டுச் சிந்திக்கும் அவரது இந்த மனிதநேயப் பண்பிற்குப் பல்வேறு தரப்பு ரசிகர்களும் இணையவாசிகளும் தங்களின் பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி தற்போது இணையத்தளத்தில் பரவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் ஜீவாவின் &apos;தகப்பன்&apos; ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு: டிசம்பரில் வெளியாகிறது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-jiiva-s-thagappan-first-look-poster-release-film-to-hit-theatres-in-december</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-jiiva-s-thagappan-first-look-poster-release-film-to-hit-theatres-in-december#comments</comments><guid isPermaLink="false">2d468d19-e3a1-4edf-99ff-e6037d2b9543</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:29:28 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:29:28.763Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lakshmi ramakrishnan,ஜீவா,Jiiva,rajisha vijayan,think music,Thagappan,தகப்பன்,Lark Studios,Thagappan FirstLook</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/ewqeom34/Thagappan-FirstLook" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thagappan FirstLook  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/ewqeom34/Thagappan-FirstLook?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பிரபல தமிழ் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE">ஜீவா </a>முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான 'தகப்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. </p><p>'கிடா' திரைப்படத்தின் மூலம் உணர்வுப்பூர்வமான கதையைத் தந்து ரசிகர்களின் மனதை வென்ற இயக்குநர் ரா. வெங்கட் இத்திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார்.</p><h2><strong>தந்தை - மகன் பாசம்</strong></h2><p>இத்திரைப்படம் மதுரையைச் சுற்றியுள்ள கிராமத்துப் பகுதிகளை மையமாகக் கொண்டு, தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான ஆழமான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உணர்வுப்பூர்வமான டிராமா பாணியில் உருவாக்கப்பட்டு வருகிறது.</p><p>தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் ஜீவா மற்றும் ஒரு சிறுவன் படிக்கட்டில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.</p><p>ஜீவாவின் முந்தைய நகைச்சுவைத் திரைப்படமான 'தலைவர் தம்பி தலைமையில்' படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் போஸ்டரில் 'கருப்பசாமி' திருவிழா பின்னணி காட்டப்பட்டிருப்பது கதைக்களத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.</p><h2><strong>படப்பிடிப்பு</strong></h2><p>திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். </p><p>படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில உணர்வுப்பூர்வமான காட்சிகளைக் கண்ட உள்ளூர் மக்கள், படக்குழுவினரை நேரில் பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம் மற்றும் ரிலீஸ் தேதி</strong></h2><p>இத்திரைப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து பிரபல மலையாள நடிகை<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D"> ரஜிஷா விஜயன்</a> கதாநாயகியாக நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். </p><p>கே. குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவையும், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர். மார்ஷல் ராபின்சன் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.</p><p>இத்திரைப்படம் வரும் டிசம்பர் 2026 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Everything is fair in a father’s love❤️‍<br><br>Presenting the world <a href="https://x.com/hashtag/Thagappan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Thagappan</a> !<br><br>In Cinemas December 2026.<a href="https://x.com/larkstudios1?ref_src=twsrc%5Etfw">@larkstudios1</a> <a href="https://x.com/JiivaOfficial?ref_src=twsrc%5Etfw">@JiivaOfficial</a> <a href="https://x.com/rajisha_vijayan?ref_src=twsrc%5Etfw">@rajisha_vijayan</a> <a href="https://x.com/LakshmyRamki?ref_src=twsrc%5Etfw">@LakshmyRamki</a> <a href="https://x.com/ravenkatdir83?ref_src=twsrc%5Etfw">@ravenkatdir83</a> <a href="https://x.com/dopmsukumar?ref_src=twsrc%5Etfw">@dopmsukumar</a> <a href="https://x.com/Inagseditor?ref_src=twsrc%5Etfw">@Inagseditor</a> <a href="https://x.com/MaheshMathewMMS?ref_src=twsrc%5Etfw">@MaheshMathewMMS</a> <a href="https://x.com/hashtag/BalaKumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BalaKumar</a> <a href="https://x.com/dineshashok_13?ref_src=twsrc%5Etfw">@dineshashok_13</a> <a href="https://x.com/Udaykumar_Mix?ref_src=twsrc%5Etfw">@Udaykumar_Mix</a> <a href="https://x.com/prithivipradeep?ref_src=twsrc%5Etfw">@prithivipradeep</a>… <a href="https://t.co/HPRBvQCxH6">pic.twitter.com/HPRBvQCxH6</a></p>&mdash; Jiiva (@JiivaOfficial) <a href="https://x.com/JiivaOfficial/status/2084233805880320386?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>செங்கிப்பட்டியில் இறங்கி தொண்டர்களுக்கு கையசைத்த உதயநிதி ஸ்டாலின் - விசாரணை தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-alights-at-sengipatti-and-waves-to-cadres-inquiry-begins</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-alights-at-sengipatti-and-waves-to-cadres-inquiry-begins#comments</comments><guid isPermaLink="false">c648030c-ac8b-473e-b159-bbf551432b2f</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:28:28 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:28:28.818Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Thanjavur,தஞ்சாவூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/w7587wui/New-Project-2026-08-04T185556.153.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செங்கிப்பட்டியில் இறங்கி தொண்டர்களுக்கு கையசைத்த உதயநிதி ஸ்டாலின் - விசாரணை தொடக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/w7587wui/New-Project-2026-08-04T185556.153.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நீர் விவகாரம் தொடர்பாகத் தஞ்சாவூரில் நேற்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில், நடிகை ஒருவரை தவறாகப் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்மீது புகார் எழுந்தது. </p><p>இதுதொடர்பாக தவெகவினர் அளித்தப் புகாரின்பேரில், தஞ்சை காவல்துறையினரால் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார்.  சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதி தஞ்சாவூருக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். </p><p>முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு உதயநிதியை அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டிருந்தனர். </p><p>ஆனால், அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு போலீசார் திடீரென வாகனத்தைத் திருப்பி திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.</p><p>ஆனால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல்நிலையத்தில்தான் இறங்குவேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின், செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.</p><p>விசாரணைக்காக காவல் வாகனத்தில் இறங்கிய உதயநிதி, அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே கையசைத்தார். தொடர்ந்து விசாரணைக்காக காவல்நிலையம் உள்ளே சென்றுள்ளார். விசாரணை முடிந்து மீண்டும் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>2019-ல் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய குற்றவாளிகள் 274 பேர் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளனர்- மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/274-fugitives-36-countries-how-india-is-bringing-its-most-wanted-criminals-back-home</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/274-fugitives-36-countries-how-india-is-bringing-its-most-wanted-criminals-back-home#comments</comments><guid isPermaLink="false">c0a5dce5-f8ba-4020-ab18-71d9ce8b52d7</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:17:28 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:17:28.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bag0gl0h/MEA0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bag0gl0h/MEA0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பயங்கரவாதிகள், கேங்ஸ்டர்ஸ், பொருளாதார குற்றவாளிகள், குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமை குற்றவாளிகள் என பல்வேறு குற்ற வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களில், 2019-ல் இருந்து 274 பேர் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>இந்தியாவில் இருந்து வெளியே சென்றுவிட்டால், இந்திய சட்டத்தின் மூலம் தங்களை பிடிக்க முடியாது என்றும் அவர்களில் சிலர் நினைத்துள்ளனர். சிலர் தங்களுடைய பெயர்களை மாற்றியுள்ளனர். புதிய அடையாளங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். தாங்கள் நீதியிலிருந்து தப்பித்துவிட்டதாக நம்பி, பலர் பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்தனர்.</p><p>ஆனால், இந்தியாவில் குற்றம் செய்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடியவர்களை கைது செய்ய மத்திய அரசு வெளிநாட்டு அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சட்டத்தில் திருத்தங்கள் செய்து நடவடிக்கையை மேற்கொண்டது.</p><p>இதன்மூலம் 2019-ல் இருந்து 36 நாடுகளில் இருந்து 274 பேரை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>62 பேர் கொலை, திருட்டு போன்ற சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள். 53 பேர் பாலியல் வன்கொடுமை, பாலியல் தாக்குதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.</p><h2>ஒவ்வொரு வருடமும் எவ்வளவு பேர்?</h2><p>2 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், குண்டர் வலையமைப்புகள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள். அதே சமயம் 17 பேர் பயங்கரவாதம், தேசவிரோத நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதம் ஆகியவற்றுக்காக தேடப்பட்டவர்கள். இந்தப் பட்டியலில் ஆட்கடத்தல், கடத்தல், போதைப்பொருள் குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள், கடத்தல், கள்ள நோட்டு மோசடி மற்றும் நிதி மோசடி ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்ட தப்பியோடியவர்களும் அடங்குவர்.</p><p>இந்தியா 2019-ல் ஒன்பது தலைமறைவுக் குற்றவாளிகளையும், 2020-ல் ஏழு பேரையும் அழைத்து வந்தது.  அதன்பின்னர் இவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, 2021-ல் 23 ஆகவும், 2022-ல் 40 ஆகவும், 2023-ல் 37 ஆகவும், 2024-ல் 43 ஆகவும், 2025-ல் 70 ஆகவும் உயர்ந்தது. 2026-ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள், மேலும் 45 தலைமறைவு குற்றவாளிகள் மீண்டும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நதிநீர்ச் சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதலமைச்சர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-is-chief-minister-vijay-showing-such-urgency-regarding-the-arrest-when-he-failed-to-show-similar-speed-in-the-cauvery-river-water-dispute-seeman-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-is-chief-minister-vijay-showing-such-urgency-regarding-the-arrest-when-he-failed-to-show-similar-speed-in-the-cauvery-river-water-dispute-seeman-asks#comments</comments><guid isPermaLink="false">8bc31b38-1013-4e40-be7f-c15dc2f32fca</guid><pubDate>Tue, 04 Aug 2026 13:08:05 +0000</pubDate><atom:updated>2026-08-04T13:08:05.042Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சீமான்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/ohospajr/New-Project-2026-08-04T183744.257.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி நதிநீர்ச் சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதலமைச்சர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/ohospajr/New-Project-2026-08-04T183744.257.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கைக்கு முதலமைச்சர் விஜய் காட்டுவது ஏன்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்.,</p><p>“காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சம்பெற்று, மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்போடு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஒருமித்துச் செயல்பட்டு, முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. </p><p>ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் எனும் அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கல் செய்வதும்தான் ஆட்சி நிர்வாகமா? மக்களுக்கான அரசியலா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைகுனிவாகும். </p><p>காவிரி நதிநீர் சிக்கல் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த சில கருத்துகள் தேவையற்றவை; எதிர்க்கட்சித்தலைவர் எனும் பதவிக்குரிய மாண்பை மறந்து, கண்ணியக்குறைவான கருத்துக்களை பொதுஅவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. </p><p>அதேசமயம், இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, கைதுநடவடிக்கை எனும் பெயரில் தவெக அரசு இறங்குவதும் ஏற்புடையதல்ல. </p><p>அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம், தவெக அரசு கைது நடவடிக்கை எடுக்குமென்றால், என் மீதும், என் தம்பி, தங்கைகள் மீதும் தனிநபர் விமர்சனமும், அவதூறும், ஆபாசத்தாக்குதலும் நாள்தோறும் தொடுக்கும் தவெகவினர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? </p><p>அவ்வாறு அவதூறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதியரசரே, சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்துவிட்டப் பிறகும், கைது செய்யாது விட்டிருப்பதேன்? அவர்கள் தவெகவின் ஆதரவாளர்கள் என்பதாலா? </p><p>இன்று காலை 9 மணிக்குப் புகார் கொடுத்து, இரண்டு மணி நேரத்தில் முற்பகல் 11 மணிக்கெல்லாம் உதயநிதியைக் கைதுசெய்கிற காவல்துறையினர், என்னைப் பற்றி அவதூறுப் பரப்பியவர்களை இத்தனை நாட்களாகியும் கைதுசெய்யாது, காப்பாற்றுவது ஏன்? </p><p>என்னைப் பற்றி மேடையில் ‘சீமான் பழைய சாமான்’ என்று தரம்தாழ்ந்து பேசிய லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக  பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு பெயரென்ன முதல்வர் அவர்களே? இதுதான் உங்களின் நாகரீக அரசியலா? </p><p>என் மீதும், என் தம்பிகள் மீதும் கடந்தகாலத்தில் முந்தைய திமுக அரசு பாய்ச்சாத வழக்குகள் இல்லை; ஏவிவிடாத கைது நடவடிக்கைகள் இல்லை. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுகவின் ஆட்சியிலேயேதான் பெற்றிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் கைது என்று முந்தைய திமுக அரசு, கடைப்பிடித்த அதிகார அடக்குமுறையையே தவெக அரசும் கடைப்பிடிக்குமென்றால், இதுதான் சனநாயக ஆட்சியா? </p><p>இதுதான் மக்களுக்கான மாற்று அரசியலா? மக்களுக்குத் துளியும் நலன்பயக்காத, தரம்தாழ்ந்த அரசியல் நடைபெற்று வருவதைப் பார்க்கிறபோது மனவலியைத் தருகிறது. முந்தைய திமுகவின் ஆட்சிபோலவே, எல்லாவற்றிற்கும் கைது என தவெகவின் அரசு கிளம்புவது துளியும் சகிப்புத்தன்மையற்ற போக்காகும். </p><p>மேடைதோறும் திமுகவை தீயசக்தியென விமர்சித்துவிட்டு, திமுக கடந்த காலத்தில் செய்த கொடுங்கோன்மையை நிகழ்காலத்தில் தவெக அரசு கட்டவிழ்த்துவிடுவது எந்தவிதத்தில் மாற்று அரசியலாகும்? </p><p>திருவைகுண்டம் தொகுதியின் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும், இன்னபிற தவெகவின் நிர்வாகிகள் மீதும் பாலியல் புகார்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு, இதுவரை விசாரணை செய்யக்கூடாத நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவதேன்? காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை, கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?</p><p>காவிரிப்படுகையில் குறுவை சாகுபடிப் பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியிருக்கும் நேரத்தில், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நதிநீர் விவகாரத்தில் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளைச் செய்யாது, தவெக அரசு தான்மையுடன் வறட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் திசைதிருப்பி இருப்பது வெட்கக்கேடானது. </p><p>காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு ஆளுங்கட்சி காட்டுவதும், காவிரிக்காக தீவிரமாக போராட வேண்டிய சமயத்தில் எதிர்க்கட்சியான திமுக கைதுக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதுமான தமிழ்நாட்டின் அரசியல் நிலை சாபக்கேடானதாகும்.</p><p>சகிப்புத்தன்மையே சனநாயகத்திற்குத் தேவையான அடிப்படை என்பதை மறந்து, அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது; மேடைகளில் தவறாகப் பேசினால், அவதூறு வழக்கு தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதென இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தகத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி!</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-released-the-book-vaiko-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-released-the-book-vaiko-in-parliament#comments</comments><guid isPermaLink="false">e95baf03-70e8-4391-adb7-a0af397c7280</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:55:13 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:55:13.866Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Vaiko in Parliament,MDMK chief Vaiko,மதிமுக தலைவர் வைகோ,நாடாளுமன்றத்தில் வைகோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5c11ckc/New-Project-2026-08-04T182201.797.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தகத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5c11ckc/New-Project-2026-08-04T182201.797.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய, ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தகத்தை வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. </p><p>டெல்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில், ராகுல் காந்தி வெளியிட்ட முதல் பிரதியை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார். </p><p>30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் வைகோ ஆற்றிய உரைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் தவெக சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டார். </p><p>புத்தகத்தை வெளியிட்டு நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி,</p><p>“வைகோ அவர்களை, அவரது உரைகள் அல்லது அவர் எழுதிய நூலுக்காக மட்டும் நான் பாராட்டவில்லை. அவரது பொதுவாழ்வுப் பயணம் முழுவதும் அவர் வெளிப்படுத்திய மன உறுதிக்காகவும் நான் பாராட்ட விரும்புகிறேன். ஒரு அரசியல்வாதியை நான் மதிப்பிடும்போதெல்லாம், நான் உற்றுநோக்கும் முதல் மற்றும் மிக முக்கியமான அம்சம் 'நிலைத்தன்மை. அதில் அவர் எப்போதும் உள்ளார்.” என வைகோவை பாராட்டினார்.</p><p>தொடர்ந்து பிரதமர் மோடி தொடர்பாக பேசிய ராகுல் காந்தி.,</p><p>“நமது நாடு ஒரு விசித்திரமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் வீதிகளில் இறங்கி, கடும் வேதனையுடன், தேர்வுகளில் நியாயத்தையும், முறையாகச் செயல்படும் ஒரு கல்வி முறையையும் கோரி வருகின்றனர். </p><p>மறுபுறம், அவர்களை 'மன்னிக்க' முற்படும் பிரதமரை நாம் காண்கிறோம். அவர்களை மன்னிப்பதற்கு அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவின் எதிர்காலத்தையே மன்னிக்கும் உரிமை தனக்கு இருப்பதாக அவர் எந்த அடிப்படையில் கருதுகிறார் என்பதும் எனக்குப் புரியவில்லை. </p><p>ஆனால், அவர் அதைத்தான் செய்யத் துணிகிறார். பிரதமரின் சிந்தனைக்கும், அவரது சகாக்களின் - குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்-இன் - சிந்தனைக்கும் பின்னால் மிகவும் ஆபத்தான மற்றும் விஷத்தன்மை வாய்ந்த ஒரு கருத்து ஒளிந்திருக்கிறது. அதாவது, இந்த நாடு பன்முகத்தன்மையின் வெளிப்பாடு அல்ல.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>நேதாஜியையும் அவரது பாரம்பரியத்தையும் அவமதிக்கும் பாஜக-வுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: மம்தா பானர்ஜி</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-insulting-netaji-and-his-legacy-mamata-banerjee-urge-people-to-protest-against</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-insulting-netaji-and-his-legacy-mamata-banerjee-urge-people-to-protest-against#comments</comments><guid isPermaLink="false">081ac366-f986-4d8b-abf3-fe910ab4059c</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:32:14 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:32:14.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,மம்தா பானர்ஜி,Mamata Banerjee,TMC,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g0nqr179/Mamata0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g0nqr179/Mamata0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது பாரம்பரியத்தை அவமதித்ததற்காக பாஜக-வை கடுமையாகச் சாடிய திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தலைவர் மம்தா பானர்ஜி, இத்தகைய கருத்துகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>நேதாஜி கொள்ளுப் பேரன் சந்திர குமார் போஸ்</h2><p>திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நேதாஜியின் கொள்ளுப் பேரனான சந்திர குமார் போஸ், முக்கிய அரசியல் கட்சிகள் மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், ஆளும் பாஜக மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி ஆகியவற்றின் அரசியல் செயல்பாடுகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p>இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த பாஜக-வின் மேற்கு வங்க தலைவர் கருத்துக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக மம்தா பானர்ஜி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:-</h2><p>நமது தேசிய நாயகனான நேதாஜி குறித்து பாஜக தலைவர்கள் பேசிய விதம் என்னைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேதாஜி சுபாஷ் போஸ் அவமதிக்கப்படும் விதம் குறித்து நான் மிகுந்த ஏமாற்றமும் மனவேதனையும் அடைகிறேன். இது வங்காளத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.</p><h2>மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்</h2><p>நேதாஜிக்கு இழைக்கப்படும் அவமதிப்புக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா சமீபத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜிக்கும் சங் பரிவாரின் கொள்கை வழிகாட்டியான சியாமா பிரசாத் முகர்ஜிக்கும் இடையிலான அரசியல் கருத்து வேறுபாடுகள் குறித்த சூழலில், நேதாஜியால் உருவாக்கப்பட்ட ஃபார்வர்ட் பிளாக் (Forward Bloc) கட்சியின் உறுப்பினர்களை குண்டர்கள் என்று விமர்சித்திருந்தார்.</p><p>இக்கருத்து எதிர்க்கட்சிகள் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரிடையே விமர்சனங்களை எழுப்பியது. அவர்கள் இதனை மரியாதையற்ற செயல் என்று வர்ணித்தனர்.</p><p>நேதாஜி மீது எந்தவிதமான அவமரியாதையும் காட்டப்படவில்லை என்று பாஜக மறுத்துள்ளது.</p><h2>தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படும் Gen-Z</h2><p>தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய இளம் தலைமுறையினர் (Gen-Z) தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களின் குடும்பங்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டிய மம்தா, அந்த இயக்கத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.</p><p>தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வங்காளத்தில் ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஒரு மிகப்பெரிய சிறைச்சாலையாக மாற்றிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>வெளியான 4 நாட்களில் ரூ.8,800 கோடி வசூலித்து சாதனைப் படைத்த ஸ்பைடர்மேன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-sets-a-record-by-grossing-8800-crore-in-just-four-days-of-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-sets-a-record-by-grossing-8800-crore-in-just-four-days-of-release#comments</comments><guid isPermaLink="false">ecb248a6-7866-4480-bc2e-a99cab0580e9</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:03:21 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:03:21.930Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>box office collection,ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே,SpiderMan Brand New Day,திரையரங்க வசூல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qf5wzsox/New-Project-2026-08-04T173253.055.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெளியான 4 நாட்களில் ரூ.8,800 கோடி வசூலித்து சாதனைப் படைத்த ஸ்பைடர்மேன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qf5wzsox/New-Project-2026-08-04T173253.055.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ திரைப்படம் வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.8,846 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் சினிமா வரலாற்றிலேயே வெளியான முதல் வாரத்திலேயே அதிக வசூல்பெற்ற இரண்டாவது படம் என்ற சாதனையை படைத்துள்ளது. </p><p>அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக 2-வது மிகப்பெரிய உலகளாவிய ஓப்பனிங் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. </p><p>இந்தியாவில் ஜூலை.30ம் தேதி வெளியானநிலையில், நேற்றுவரை மட்டும் ரூ.306.37 கோடி வசூல் செய்துள்ளது. இங்கு ஆங்கில பதிப்பு முதலிடத்தில் இருந்தாலும், இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. </p><p>மேலும் வேறு படங்கள் எதுவும் பெரிதாக வெளியாக நிலையில், விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) நல்ல வசூலை குவித்துள்ளது. </p><h2>ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே</h2><p>டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில், டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தின் தொடர்ச்சியாக, தனது அடையாளத்தை அனைவரும் மறந்த பிறகு பீட்டர் பார்க்கர் எதிர்கொள்ளும் புதிய சவால்களை இக்கதை விவரிக்கிறது.</p><p>ஸ்பைடர்மேன் திரைப்படங்களுக்கு எப்போதும் இந்திய ரசிகர்களிடம் இருக்கும் தனி வரவேற்பே இந்த பிரம்மாண்ட வசூலுக்கு முக்கியக் காரணம் எனத் திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு எதிரான பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமினில் விடுவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/remarks-against-chief-minister-vijay-vilathikulam-dmk-mla-markandeyan-released-on-bail</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/remarks-against-chief-minister-vijay-vilathikulam-dmk-mla-markandeyan-released-on-bail#comments</comments><guid isPermaLink="false">80a5a32c-d9fd-4e67-b5c4-9729a7638c8b</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:31:09 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:31:09.637Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Markandayan,மார்க்கண்டேயன்,Vilathikulam DMK MLA,விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dbkea1xi/New-Project-2026-08-04T165827.705.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்க்கு எதிரான பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமினில் விடுவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dbkea1xi/New-Project-2026-08-04T165827.705.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியநிலையில், இன்று விடுதலையானார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஜூலை 20 அன்று மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். </p><p>இனிவரும் காலங்களில் முதலமைச்சர் குறித்து அவதூறாகவோ அல்லது ஆபாசமாகவோ பேசமாட்டேன் என்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். </p><p>அடுத்த இரண்டு வாரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளோடு ஜாமின் வழங்கப்பட்டது. </p><p>நாளை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும்நிலையில், கூட்டத்தொடரில் பங்கேற்கும் நாட்களுக்கு மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராமர் கோவில் நன்கொடை திருட்டு, மாணவர்கள் விவகாரம்: விவாதிக்க பயப்படும் பிரதமர், அமித் ஷா- கார்கே குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/kharge-says-pm-modi-shah-scared-insulting-parliament-by-evading-answers-on-donation-theft-students-issue</link><comments>https://www.maalaimalar.com/news/national/kharge-says-pm-modi-shah-scared-insulting-parliament-by-evading-answers-on-donation-theft-students-issue#comments</comments><guid isPermaLink="false">3b21ade8-252f-45e6-a711-3086322f9269</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:25:55 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:25:55.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,கார்கே,Kharge,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l5m6hztf/Kharge0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அமித் ஷா- கார்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l5m6hztf/Kharge0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை குறித்து பதிலளிக்காமல் தவிர்ப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் "பயத்தில்" உள்ளனர் அல்லது நாடாளுமன்றத்தை அவமதிக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்தி வருவதோடு, நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளனர்.</p><p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள கார்கே, அவையில் இந்த விஷயத்தை எழுப்ப முயன்றாலும் அவருக்குப் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை எழுப்பிய அவர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகம், நிலம் வாங்குதல், பண நன்கொடைகள் மற்றும் மதிப்புமிக்க காணிக்கைகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><h2>மேலும், இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>ராமர் கோவில் நன்கொடை திருட்டு விவகாரம் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம்.  ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. பிரதமர் மோடியே நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட முறையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.</p><p>மத்திய அரசு 70 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை இந்த அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார். பூமி பூஜை முதல் கும்பாபிஷேக விழா வரையிலான ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் மோடி பங்கேற்றார்.</p><h2>பிரதமர் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது</h2><p>இத்தகைய சூழலில், காணிக்கைகள் திருடப்பட்டது உள்ளிட்ட தீவிரமான குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. அமலாக்கத்துறை (ED), சிபிஐ (CBI), வருமான வரித்துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் எங்கே உள்ளன என்பதை அவர் அவையில் விளக்க வேண்டும்.</p><p>ராமர் பெயரில் கொள்ளையடிப்பவர்கள் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் நாட்டைத் தவறாக வழி நடத்துவதை நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு கார்கே தெரிவித்திருந்தார்.</p><h2>பயப்படும் பிரதமர் மோடி, அமித் ஷா</h2><p>பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட மோடியும் ஷாவும் அவைக்கு வர வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று கூறினார்.</p><p>நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். இரு அவைகளிலும் விவாதம் நடத்த அவைத் தலைவரும் (மாநிலங்களவை) சபாநாயகரும் (மக்களவை) அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ராமர் கோயில் நன்கொடை திருட்டு மற்றும் மாணவர்கள் மீதான வன்முறை குறித்து விவாதம் நடந்தால் உண்மை தானாகவே வெளிவரும். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அரசு பீதியடைந்திருப்பதாகத் தெரிகிறது.</p><p>அதோடு மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவைக்கு வரவில்லை. அவர்கள் பயப்படுகிறார்கள் அல்லது இங்கு வராததன் மூலம் நாடாளுமன்றத்தை அவமதிக்க விரும்புகிறார்கள்" என்றார்.</p><p>காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் பதிலளிக்கக் கோரி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பின.</p>]]></content:encoded></item><item><title>E20 போராட்டம் மூலம் அரசியல் தோல்வியை உயிர்ப்பிக்க முயற்சிக்கும் கெஜ்ரிவால்: பாஜக விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/kejriwal-trying-to-revive-his-failed-politics-through-e20-protest-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/kejriwal-trying-to-revive-his-failed-politics-through-e20-protest-bjp#comments</comments><guid isPermaLink="false">acbedea6-eebc-4bef-aa12-972ee18fd759</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:56:12 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:56:12.659Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,எத்தனால் கலந்த எரிபொருள்,E20 fuel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/f3mzdjxm/KejriwalTarun0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கெஜ்ரிவால்- தருண் சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/f3mzdjxm/KejriwalTarun0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>E20 எரிபொருளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணி நடத்த முயன்ற ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/aap-agitation-against-e20-fuel-to-continue-people-must-join-protest-kejriwal">அரவிந்த் கெஜ்ரிவாலை</a> பாஜக கடுமையாக கடுமையாக சாடியுள்ளது. கெஜ்ரிவால் இந்திய விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், தனது தோல்வியடைந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>கெஜ்ரிவால் பேரணி</h2><p>தொடர்பான 2.30 லட்சத்திற்கும் அதிகமான மனுக்களைச் சமர்ப்பிப்பதற்காக கெஜ்ரிவால் சுமார் 100 பேருடன் இந்தப் பேரணியை மேற்கொண்டிருந்தார். பிரதமரின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற கெஜ்ரிவால் மற்றும் அவருடன் சென்றவர்களை டெல்லி காவல்துறை ஃபெரோஸ் ஷா சாலையில் தடுத்து நிறுத்தியது.</p><h2>இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் கூறியதாவது:-</h2><p>அரவிந்த் கெஜ்ரிவாலின் பேரணி அபத்தமானது, பொறுப்பற்றது மற்றும் அர்த்தமற்றது. அனைத்தும் அறிவியல் பூர்வமான முறையிலேயே செய்யப்பட்டுள்ளன. இச்செயல்முறை முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யாரும் எந்தப் புகாரையும் எழுப்பவில்லை.</p><p>கெஜ்ரிவாலின் பிரசாரம் இந்தியாவின் விவசாயிகளுக்கு எதிரானது. கெஜ்ரிவால் அவர்களே, நீங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பறிக்க முயற்சிக்கிறீர்கள். மக்காச்சோளம், கரும்பு மற்றும் பிற விவசாய விளைபொருட்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.</p><p>உலகம் முழுவதும் பல நாடுகளில் பல தசாப்தங்களாக எத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதன் பயன்பாடு அறிவியல் பூர்வமான முறையிலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>சர்ச்சையை உருவாக்க முயலும் கெஜ்ரிவால்</h2><p>ஆனால் கெஜ்ரிவால் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கவே விரும்புகிறார். எப்படியாவது அரசியல் செய்யவே அவர் விரும்புகிறார். தேசமோ, வாகனங்களோ அல்லது மக்களின் பிரச்சினைகளோ அவருக்கு முக்கியமல்ல. அவர் தனது தோல்வியடைந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்கவே முயற்சிக்கிறார். அவரது வாதங்களுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.</p><p>பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது.</p><p>இவ்வாறு தருண் சுக் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இரட்டை அர்த்தத்தில் பேசுவதை உதயநிதி தவிர்த்திருக்க வேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-should-have-avoided-speaking-with-double-meanings-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-should-have-avoided-speaking-with-double-meanings-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">08b65950-9703-49a6-b2bc-edd94f688166</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:53:03 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:53:03.049Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,thirumavalavan,திருமாவளவன்,Udhayanidhi Stalin,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/yeetbcgm/New-Project-2026-08-04T162239.045.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இரட்டை அர்த்தத்தில் பேசுவதை உதயநிதி தவிர்த்திருக்க வேண்டும் - திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/yeetbcgm/New-Project-2026-08-04T162239.045.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><p>“அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,  'இரட்டுற மொழிதல்' என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.</p><p>எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே  முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது,  ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர்.</p><p>அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு - கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது. </p><p>எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் 'எள்ளல் நடையில்' பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.</p><p>சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட -  தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும். </p><p>நாளை ( ஆக-05) சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில்,  எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும். </p><p>தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-arrogance-leads-to-ruin-persistent-arrogance-accelerates-that-ruin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-arrogance-leads-to-ruin-persistent-arrogance-accelerates-that-ruin#comments</comments><guid isPermaLink="false">389a5892-6935-487c-927f-f77a46e38258</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:22:23 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:22:23.624Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dzhxw5z4/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dzhxw5z4/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கொந்தளிப்பை உணர்த்துவதாக அமைந்திருந்தது.</p><p>கழக உடன்பிறப்புகளோடு உழவர் பெருமக்களும் பொதுமக்களும் பங்கெடுத்து தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை மிகக்கடுமையாக அம்பலப்படுத்தி விமர்சித்தார்.</p><p>"நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவுமில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அமைச்சர்களோ முதலமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை.</p><p>காவிரி பிரச்சனையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்துவிட்டதை மறைக்கும் வகையில், பிரச்சனையையே திசை திருப்பும் வகையில் இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை அவரை அராஜகமாக கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது த.வெ.க. அரசு. பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலமாக <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதியை</a> மிரட்டப் பார்க்கிறார்கள்.</p><p>நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினெட் தகுதி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும். ஆனால் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.</p><p>நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, 'கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்' என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமினில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்?  மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கியது தெரியாமல் பூசி மெழுகுகிறது அரசு. 'உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!</p><p>ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார். ட்வீட் போட்டால், வீடியோ பேசினால் கைது செய்து வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்தது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களைப் போராட விடவில்லை. போராட்டம் நடத்தியவர்கள் மீது அராஜகமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையே பூட்டி வைக்கப்பட்டது பாசிசத்தின் உச்சம். விவசாயிகள் தன்னெழுச்சியாகப் போராடியதை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் போராடியதாகச் சொல்லப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை செய்யச் சென்ற திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய, அதில் பங்கெடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது கைது நடவடிக்கையைப் பாய்ச்சியது த.வெ.க. அரசு.</p><p>இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில தலைவர்கள், உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது. உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சனையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.</p><p>ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்.</p><p>தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!</p><p>ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்! என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு: நெகிழ்ந்த தொகுப்பாளர் DD!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjays-sigma-interview-surprise-dd-receives-bouquet-and-heartfelt-thanks</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjays-sigma-interview-surprise-dd-receives-bouquet-and-heartfelt-thanks#comments</comments><guid isPermaLink="false">4141eb58-2d7a-451b-8f41-3d7540a3cf0b</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:17:06 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:17:06.910Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jason sanjay,DD,திவ்யதர்ஷினி,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma,Divya Dharshini,LycaProductions,ThalapathyVijaySon</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/2v262crf/DD-Jason-Sanjay" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DD - Jason Sanjay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/2v262crf/DD-Jason-Sanjay?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஜேசன் சஞ்சய் அனுப்பிய பரிசு!</h2> <p>லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தின் நேர்காணல் சமீபத்தில் நடைபெற்றது. </p><p>இந்த நேர்காணலை பிரபல தொகுப்பாளர் DD தொகுத்து வாங்கினார். நேர்காணல் மிகவும் சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய், DD-க்கு மலர்க்கொத்து மற்றும் வாழ்த்துச் செய்தி அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.</p><h2>ஜேசன் சஞ்சய் வாழ்த்து!</h2><p>ஜேசன் சஞ்சய் அனுப்பிய வாழ்த்துக் குறிப்பில், "இந்த சிறப்பான நேர்காணலுக்கு மிக்க நன்றி DD MAM " என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p> இந்த அன்பான பரிசைக் கண்டு நெகிழ்ந்துபோன தொகுப்பாளர் DD, அந்த மலர்க்கொத்துடன் இருக்கும் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DblQcDtFOS_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DblQcDtFOS_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><h2>லைகா தயாரிப்பாளரின் பாராட்டு:</h2><p>இந்த நேர்காணல் குறித்து லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் தனது எக்ஸ் பக்கத்தில், "உங்களுடன் பணிபுரிவது எப்போதும் ஒரு அற்புதமான அனுபவம் DD! இதேபோல் நாம் இணைந்து இன்னும் பல வெற்றிகரமான திட்டங்களை உருவாக்க வாழ்த்துகள்" என DD -யைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.</p><h2>இயக்குநராக ஜேசன் சஞ்சய்:</h2><p>தமிழக முதல்வர் விஜய் அரசியல் பணிகளில் தீவிரமாக இருக்கும் நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் திரைத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராகக் கால் பதித்துள்ளார். </p><p>இவரது முதல் பட நேர்காணல் மற்றும் டிடி-யின் இந்த சமூக வலைதளப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>