<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 07 Aug 2026 06:35:08 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி தனித்தீர்மானம் - சட்டசபையில் நிறைவேற்றம் - 7 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-7-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-7-august-2026#comments</comments><guid isPermaLink="false">9e161214-bae4-4b21-8ad3-fb9c9fa000ef</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:49:59 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:33:51.515Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/lt2l5fku/speaker.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/lt2l5fku/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா- அமைச்சர் ஆதவ்</p><p>திமுக உறுப்பினர் ரகுபதி அரசியல் மேடை போல் பேசி கொண்டிருக்கிறார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>விபி ஜி ராம் ஜி சட்டத்தை திமுக எதிர்த்த நிலையில் தற்போது நடைமுறை படுத்தி உள்ளனர் - ரகுபதி</p><p>ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>விபத்து காப்பீடு திட்டம் குறித்த செய்திகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை - ரகுபதி</p><p>விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதா? என ரகுபதி கேள்வி எழுப்பினார்.</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>கசிவு பற்றி ஆய்வு செய்து அதன் அறிக்கை முதல்வரின் டேபிளில் உள்ளது, அவர் சரியான நேரத்தில் வெளியிடுவார்.</p><p>ஆடிட்டிங் முடிந்துவிட்டது, கசிவு என்றால் என்ன என்பது குறித்து சரியான நேரத்தில் முதலமைச்சர் பேசுவார்.</p><p>முதல்வரிடம் நாங்கள் அளித்த அறிக்கையை படிக்கவே உங்களுக்கு 100 நாட்கள் தேவை என ரகுபதிக்கு அமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்தார்.</p><p>நீங்கள் தந்த பட்ஜெட்டை வைத்து தான் பேசுகிறேன், அப்படி பேசக்கூடாது என்றால் வேறு ஒரு  நிதிநிலை அறிக்கை தாருங்கள் - ரகுபதி</p><p>பழக்க தோஷத்தில் பேசாதீர்கள், ஆதாரத்துடன் பேசுங்கள் என ரகுபதிக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்.</p><p>நீர்வளத்துறையில் பில்களை கிளியர் செய்ய கமிஷன் வாங்கியது கடந்த ஆட்சிக்காலம் - அமைச்சர் ஆனந்த்</p><p>நீர்வளத்துறையில் ஒரு பில் பெற 2 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள் - ரகுபதி</p><p>முன்னாள் அமைச்சர் ரகுபதியின் கேள்விக்கு அமைச்சர் விஸ்வநாதன் பதில் அளித்தார்.</p><p>அவையில் இல்லாதவர் ஒருவரை பற்றி பேசுவது அவையை மீறிய செயல் என அமைச்சர் விஸ்வநாதன் காட்டம்</p><p>திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்.</p><p>திமுக திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தியவர் ஸ்டாலின்.</p><p>தகவல் அறியும் உரிமை கமிஷனில் உறுப்பினர் நியமிக்காததால் தகவல்களை மக்கள் அறிய முடியவில்லை என்று  ரகுபதி கூறினார்.</p><p>பிரவின் சக்ரவர்த்தி தமிழகத்தின் கொள்கை வடிவமைப்பாளர் என்ற செய்தி உண்மையா? என்று திமுக கேள்வி எழுப்பியது.</p><p>தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம்</p><p>சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானத்தை நிதியமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார்.</p><p>இதையடுத்து நியாயமான வரிப்பகிர்வு கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.</p><p>தவெக அரசு கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக வரவேற்பு.</p><p>தனிநபர் தீர்மானத்தின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>வளர்ச்சி அடைந்த மாநிலங்களை பாதிக்காத அளவிற்கு நிதி பகிர்வு இருக்க வேண்டும் என்று கூறினார்.</p><p>மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப்பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என திமுக சார்பில் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். </p><h2>தங்கம் தென்னரசு</h2><p>நிதி பங்களிப்பு குறைவதால் தமிழகத்தில் நிதி சுமை அதிகரித்துள்ளது. </p><p>தமிழ்நாடு வரியாக செலுத்தும் 1 ரூபாய்க்கு 21 காசுகள் மட்டுமே திரும்ப கிடைக்கிறது. உ.பி.க்கு ரூ.2-க்கு மேல் தரப்படுகிறது. </p><p>தமிழ்நாடு அளிக்கும் பங்களிப்புக்கு ஏற்றவகையில் மத்திய அரசு நிதியை நமக்கு தருவதேயில்லை.</p><p>நிதி பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.</p><p>ஒட்டுமொத்த வருவாய் அதிகாரமும் மத்திய அரசிடம் உள்ளது. செலவினம் மட்டும் மாநில அரசின் கையில் உள்ளது - தங்கம் தென்னரசு</p><p>நிதிப்பகிர்வு தொடர்பான தனித்தீர்மானத்தின் மீது திருத்தம்கோரி முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப்பகிர்வை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.</p><p>மாநில வருவாய்க்கான ஆதாரம் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப்பகிர்வு கோரி தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.</p><p>தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வை உறுதி செய்ய வலியுறுத்தி நிதியமைச்சர் மரிய வில்சன் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.</p><h2>அமைச்சர் வினோத்</h2><p>அனைத்து விவசாயிகளையும் பயிர் காப்பீட்டிற்குள் கொண்டு வர முயற்சி.</p><p>பயிர் காப்பீடு கடந்தாண்டை வி நடப்பாண்டில் 44% கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெறுவது பல ஆண்டுகளாக சவாலாகவே உள்ளது.</p><p>சூழலை கருத்தில்கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த சமரசமும் செய்யாது.</p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நிர்வாக, சட்டரீதியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் ஆனந்த்</p><p>காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெறுவது பல ஆண்டுகளாக சவாலாகவே உள்ளது.</p><p>காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா நீர் திறக்கவில்லை - அமைச்சர் ஆனந்த்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/7f456r52/anand.jpg" /></figure><p>காவிரி விவகாரத்தில் உறுப்பினர்களின் கருத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் கேட்டு கொள்ளப்பட்டது.</p><p>கர்நாடக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம் என கூறினார்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/rwllwdmz/sowmiya.jpg" /></figure><p>காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி பேசுகையில்,</p><p>கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை.</p><p>காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது கர்நாடகா திறந்து விட்டது உபரிநீரை மட்டும்தான்.</p><p>பேச்சுவார்த்தை முயற்சியே தேவையில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாமகவும் வலியுறுத்துகிறது என்று கூறினார்.</p><p>உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கவில்லை - அமைச்சர் ஆதவ்</p><p>திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் மனுக்களை 3 முறை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏன்?</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவைக்கு தவறான தகவலை அளித்துள்ளார் - அமைச்சர் ஆதவ்</p><p>இங்கேயே அனைத்துக்கட்சியினரும் உள்ள நிலையில் இங்கேயே தீர்மானம் நிறைவேற்றலாம் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சம்பந்தம் இல்லாத பிரச்சனையை பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டம்</p><p>அமைச்சர் நிர்மல்குமார் காவிரி பிரச்சனையை திசை திருப்ப முயல்கிறார் - உதயநிதி</p><p>முதலமைச்சர் 3 ஆண்டுகளாக யாருக்கும் பயந்தது இல்லை. எம்பிக்கள் கூட்டத்தில் திமுகவினர் பங்கேற்பார்களா? - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>காவிரி பிரச்சனை என்பது தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனை. காவிரி விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வது தான் தீர்வு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு சென்று தீர்வு எட்டப்படவில்லை - சிபிஐ ராமசந்திரன்</p><p>காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்  - செல்லசுவாமி</p><p>முதலமைச்சருக்கு அவமானம் ஏற்பட்டால் அது தமிழ்நாட்டிற்கான அவமானம் - செல்லசுவாமி</p><p>காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் மண்டியிட தேவையில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தவெக கூட்டணியினரே கூறுகின்றனர். </p><p>கர்நாடக அணையிலே போதிய நீர் இருந்தும் திறக்கப்படவில்லை - இபிஎஸ்</p><p>பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். மேகதாது அணை தொடர்பான திருத்தத்தை நாங்கள் ஏற்கவில்லை -  இபிஎஸ்</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>காவிரி விவகார பேச்சுவார்த்தையில் அவமானம் ஏற்பட்டால் அதனையும் தமிழக மக்களுக்காக தாங்குவேன்.</p><p>காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் தருவார்.</p><p>அரசியலே நாங்கள் தான் எனக்கூறுவோருக்கு குறுவை தொகுப்பு தந்தது குறித்து தெரியாமல் போனது எப்படி?</p><p>தினசரி செய்தித்தாள் வாசித்திருந்தால் தெரிந்திருக்கும்.</p><p>கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக நாம் அனைவரும் சேர்ந்து தான் தீர்மானம் நிறைவேற்றினோம். </p><p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>கர்நாடக பயணம் குறித்து யோசித்தது நான் தான், அதற்கு பல விமர்சன கருத்துகள் வந்தன. </p><p>நேர்மறையான விளைவு வரும் என்பதால் தான் பேசித் தீர்க்கும் முடிவு முயற்சி செய்தேன்.</p><p>பகை நாடுகளே பிரச்சனையை பேசி தீர்க்கப் பார்க்கிறோம். பக்கத்து மாநிலத்திடம் பேசி பார்க்க நினைத்தோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.</p> <p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது - முதலமைச்சர் விஜய்</p><p>மேகதாது தொடர்பாக அனுமதி அளிக்க கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் - முதலமைச்சர்</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/q3vadxbg/vijay2.jpg" /></figure><p>காவிரி நமக்கு உயிர் ஆதாரம், அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இல்லை - முதலமைச்சர் விஜய்</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.</p><p>முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிக்கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன் என அரசு பதில் அளிக்க வேண்டும்.</p><p>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்.</p><p>தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது விவகாரத்தில் அதிக வேகம் காட்டும் கர்நாடகா.</p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன என்று கூறினார்.</p> <p>மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டசபை உறுப்பினர் சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p> <p>தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.</p><p>சட்டசபை கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly" rel="nofollow">தமிழக சட்டமன்றத்தில் மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்</a></p><p>* மறைந்த பின்னணி பாடகி ஜானகிக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்.</p><p>* எழுத்தாளர் பூமணிக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/centre-says-tamil-nadu-has-not-sought-changes-to-parandur-green-airport-plan">பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!</a></p><p>* தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்தது.</p><p>* தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் வரப்பெற்றதா? என கேள்வி எழுப்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-pass-resolution-on-just-tax-distribution" rel="nofollow">தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் இன்று தீர்மானம்</a></p><p>* மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>* தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today">முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணை</a></p><p>* சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>* விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-5-layer-security-at-chennai-airport"> 80-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு</a></p><p>* நாட்டின் 80-வது&nbsp;சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.</p><p>* விமான நிலையம் வரும் வாகனங்கள் மற்றும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.&nbsp;</p> ]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எவ்வித சமரசமும் செய்யாது: நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-will-not-compromise-on-cauvery-issue-says-water-resources-minister-anand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-will-not-compromise-on-cauvery-issue-says-water-resources-minister-anand#comments</comments><guid isPermaLink="false">3d224981-7bc0-4f1b-9852-ebd62e53b534</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:25:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:25:49.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக சட்டப்பேரவை,Cauvery Issue,tvk,அமைச்சர் ஆனந்த்,MInister N Anand,TM CM Vijay,காவேரி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/79mr9m1r/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Cauvery Issue Stance: Tamil Nadu asserts rights, presses for due water allocation]]></media:title><media:description type="html"><![CDATA[ Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/79mr9m1r/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">தமிழ்நாடு சட்டப்பேரவை</a>யில் இன்று பட்ஜெட் மீதான விவாத உரை நடைபெறுகிறது. அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கான மூலமாகவும் உள்ளது.  காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் ஒழுங்காற்று ஆணையம் மூலம் தமிழ்நாடு உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது.</p><p>இருந்தாலும், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நதிநீர்</a> பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது.   </p><p>அதற்கிடையில் கர்நாடக முதலமைச்சர் அந்த நாளை பேச்சுவார்த்தைக்கு உகந்த நாள் அல்ல என்றும், வேறு ஒரு நாளில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறியதால், குறிப்பிட்ட நாளில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.</p><p>ஜூலை 28 அன்று நடைபெற்ற 139வது காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழுவில், தமிழ் நாடு தனது உரிமையை வலியுறுத்தியது.  </p><h3><strong>தமிழகத்திற்கு 3500 கனஅடி நீர்</strong></h3><p>இதன்மூலம், 29.07.2026 முதல் 12.087.206 வரை வினாடிக்கு 3500 கன அடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் காவிரி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி, காவிரி ஒழுங்காற்று ஆணையம் வலியுறுத்தியது.</p><p>ஆனால் கர்நாடகா அறிவுறுத்தலின் பேரில் நீரை அளித்தாலும், பற்றாக்குறை காரணமாக விகிதாசார பங்கீட்டில் 5.379 டி.எம்.சி பற்றாக்குறை இருக்கும் என தமிழ்நாடு சுட்டிக்காட்டியது.</p><p>இருப்பினும் 30.07.2026 அன்று நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54ஆவது கூட்டத்தில், குழுவின் முடிவை ஆணையம் உறுதி செய்தது.</p><p>எனினும் கர்நாடக அரசு இதனை முழுமையாக செயல்படுத்தவில்லை. 3500 கன அடி கிடைக்க வேண்டிய இடத்தில், 144 முதல் 619 கன அடி மட்டுமே கிடைத்தது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருந்த பற்றாக்குறை மேலும் அதிகரித்தது.</p><p>எனவே 12.08.2026-க்குள் நீர் வந்து சேருமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடவும், 01.06.2026 முதல் 28.07.205 வரை உள்ள நிலுவை நீரை உடனடியாக திறந்து விடவும், பற்றாக்குறை விகிதாசார அளவை ஈடுசெய்யவும் தமிழ்நாடு அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தியது.</p><p>தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, 03.08.2056 அன்று உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>கர்நாடகாவில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ள போதிலும், 06.08.2026 நிலவரப்படி தமிழ்நாடு பெற்றுள்ள மொத்த நீர் 4.947 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் 41.412 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.</p><p><strong>காவிரி விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது</strong></p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நிர்வாக, சட்டரீதியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சூழலை கருத்தில்கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும்.</p><p>தமிழ் நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, காவிரி விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி தமிழ்நாட்டின் உரிமையை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.</p><p>இவ்வாறு அமைச்சர் என். ஆனந்த் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நிதி பகிர்வு தீர்மானம்.. திமுக, அதிமுக ஆதரவு - சட்டசபையில் நிறைவேற்றம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution#comments</comments><guid isPermaLink="false">2de1b385-8055-4520-8ea1-bfa9aaf5decb</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:11:36 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:11:36.277Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Budget session,மரிய வில்சன்,பட்ஜெட் தொடர்,நிதி பகிர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f21kan6g/tn-40.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f21kan6g/tn-40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><h2>காவிரி விவகாரம் </h2><p>அதன் தொடர்ச்சியாக இன்று  கூடிய அவையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-row-udhayanidhi-stalin-demands-all-party-meet-in-tamil-nadu-over-karnatakas-fast-tracked-moves">மேகதாது அணை </a>குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார். </p><p>இதன் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்ற, அவருக்கு முதல்வர் விஜய் பதில் அளித்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆளும் தரப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு பதிலளித்து பேசினர். </p> <h2>வரி பகிர்வு தீர்மானம்</h2><p>இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசினர் தனித் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார்.</p><p>அப்போது பேசிய அவர், "மாநிலங்கள் தங்களது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது.</p> <p>தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு நடைபெறும்" என தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து நிதி பகிர்வு தொடர்பாக தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு அளித்ததன் மூலம் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த அரசு பயப்படுவது ஏன்? - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-row-udhayanidhi-stalin-demands-all-party-meet-in-tamil-nadu-over-karnatakas-fast-tracked-moves</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-row-udhayanidhi-stalin-demands-all-party-meet-in-tamil-nadu-over-karnatakas-fast-tracked-moves#comments</comments><guid isPermaLink="false">6aa45be1-4ad4-413f-8b63-a00bed4f9d62</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:51:56 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:51:56.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/u6o8empb/tn-39.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/u6o8empb/tn-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண்மை பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. </p><p>இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.</p><p>சட்டசபை கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.</p><p>மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டசபை உறுப்பினர் சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர்,</p><p>"விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.</p><p>முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிக்கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன் என அரசு பதில் அளிக்க வேண்டும்.</p><p>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்.</p><p>மேகதாது விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அவைக்கு விளக்க வேண்டும்.</p><h2>கர்நாடகா அதிக வேகம்</h2><p>தவெக அரசு அமைந்த பின்னர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">மேகதாது விவகாரத்தில்</a> அதிக வேகம் காட்டுகிறது கர்நாடகா.</p> <p>மேகதாது அணை கட்ட வேண்டும் என கர்நாடக தரப்பில் நிதியமைச்சர் நிர்மலா சந்தித்து நிதி கேட்டுள்ளனர். ஆக.2-ல் பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார் கர்நாடக முதல்வர்.</p><p>கர்நாடகம் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 முன்னாள் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாவில் அணை கட்ட நிதி உதவி கோரியிருந்தார். ஜல்சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து மேகதாது அணைக்கட்ட ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்தார்.</p><p>இப்படி கடந்த ஒரு மாதத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு பணிகளை கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுகிறது.</p> <h2>அனைத்துக்கட்சி கூட்டம்</h2><p>எனவே தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன.</p><p>அனைத்து கட்சிகளும் இணைந்து மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட நாம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏன் பயப்படுகிறீர்கள் அல்லது ஏன் தயங்குகிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார். </p>]]></content:encoded></item><item><title>பேச ஒன்றுமில்லை.. அணை கட்ட கூடாது அவ்வளவுதான் - சௌமியா அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-tamil-nadu-mlas-demand-all-party-meet-over-mekedatu-dam-and-kuruvai-crop-loss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-tamil-nadu-mlas-demand-all-party-meet-over-mekedatu-dam-and-kuruvai-crop-loss#comments</comments><guid isPermaLink="false">1b70709c-e61d-4fce-8557-0d4e619fb7ce</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:39:46 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:39:46.934Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,Soumya Anbumani,Cauvery Issue,காவிரி விவகாரம்,சௌமியா அன்புமணி</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/af1s2aw2/maalai-malar2026-08-07rwllwdmzsowmiya.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ சௌமியா அன்புமணி]]></media:title><media:description type="html"><![CDATA[ சௌமியா அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/af1s2aw2/maalai-malar2026-08-07rwllwdmzsowmiya.avif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">கவன ஈர்ப்பு தீர்மானம் </a>தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.</p><h2>சவுமியா அன்புமணி </h2><p>காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசுகையில், </p><p>கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை. காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகா திறந்து விட்டது உபரிநீரை மட்டும்தான்.</p><p>அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சட்ட முன்னெடுப்புகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். </p><p>தமிழ்நாட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்று தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். </p><p>இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும்.  அணை கட்ட வேண்டும், அல்லது கூடாது. அவ்வளவு தான்.   </p><p>நடுவில் என்ன முயற்சி என்ன இருக்கு? நடுவில் முயற்சி செய்வது எல்லாம் தேவையில்லை" என்று தெரிவித்தார். </p> <h2>விஜய்</h2><p>முன்னதாக முதல்வர் விஜய் பேசுகையில், இந்த விவகாரத்தில் பேசுகையில், "பக்கத்துக்கு நாட்டுகிட்டயே பிரச்னையை பேசி தீர்க்க முடியுது. பக்கத்துக்கு ஸ்டேட்டு கிட்ட பேசி பார்க்கலாம்னு நினைச்சேன். </p><p>ஒரு முயற்சியா இதை பண்ணலாம்னு நினைச்சேன்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-surplus-water-released-to-tamilnadu-edappadi-palanisamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-surplus-water-released-to-tamilnadu-edappadi-palanisamy#comments</comments><guid isPermaLink="false">e4c8bf7d-e2a7-469b-8e3f-1d50e12a1ec6</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:36:25 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:36:25.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Cauvery,TN budget,தமிழ்நாடு சட்டப்பேரவை,எடப்பாடி பழனிசமி,Edappadi K Palanisamy,காவேரி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/repzqxna/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Kaveri Water Dispute: Karnataka releases only surplus water to Tamil Nadu despite full reservoirs]]></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/repzqxna/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும், இறுதியில் உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/எடப்பாடி-பழனிசாமி">எடப்பாடி பழனிசாமி</a> தெரிவித்தார். </p><p>சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத உரை நடைபெறுகிறது. அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  </p><p><strong>அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்</strong></p><p>அவர் பேசியதாவது, "மேகதாது விவகாரம் குறித்து கர்நாடகாவில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகத்திலும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, அவர்களின் கருத்தை கேட்க வேண்டும்.</p><p>அதுனுடன் காவேரி பிரச்சனை வருகின்ற போது, அதை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பதற்காக, டெல்டா மாவட்ட பிரதிநிதிகள் அனைவரையும் அழைத்து அவர்களின் கருத்துகளையும் கேட்டு, அதை சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து பிறகு அரசு அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இதுதான் கடந்த காலத்தில் இருந்து பின்பற்றப்படும் வரலாறாக உள்ளது".</p><p><strong>உபரி நீர் மட்டுமே வருகிறது</strong></p><p>"கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் போது, பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தால் தண்ணீர் பெற வேண்டிய நிலை இருக்கின்றது.</p><p>ஆனால் இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் போதிய அளவில் தண்ணீர் இருந்தும், தண்ணீர் திறக்க மறுக்கப்பட்டது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையின் படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம் பதினைந்து நாட்களுக்கு தினந்தோறும் 3,500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், தண்ணீர் திறக்கப்படவில்லை.</p><p>அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தால் டெல்டா மாவட்டத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருப்பார்கள்.</p><p>இப்பொழுது கபினி அணை மற்றும் கர்நாடகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அனைகளும் நிரம்பிவிட்டன. அதனால் தற்போது உபரி நீர் மட்டும்தான் வந்து கொண்டு இருக்கிறது".</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: தி.மு.க ஆட்சியில் மூன்று முறை மனுக்கள் தள்ளுபடி குறித்து ஆதவ் கேள்வி - கே.என். நேரு பதில் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-cauvery-dispute-three-pleas-rejected-in-supreme-court-heated-assembly-clash-over-stalin-governments-legal-strategy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-cauvery-dispute-three-pleas-rejected-in-supreme-court-heated-assembly-clash-over-stalin-governments-legal-strategy#comments</comments><guid isPermaLink="false">3ab39143-24fd-488e-b97a-6aea2f1566bf</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:22:42 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:22:42.793Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Cauvery Issue,காவிரி விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/dfewyd2d/tn-38.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ், நேரு ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ், நேரு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/dfewyd2d/tn-38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">கவன ஈர்ப்பு தீர்மானம்</a> தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.</p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், </p><p>"எதிர்க்கட்சி தலைவர் அவரின் உரையில் ஒரு தவறான தகவலை கொடுத்தார். </p><p>பிரதமருக்கு ஒரு முறை மட்டும் தான் கடிதம் எழுதியதாக கூற, எதிர் தரப்பினர், இரண்டு முறை கூறினார் என கூச்சலிட திருத்திக்கொண்ட ஆதவ், முதல் முறை ஒரு முறை என்று சொல்லிவிட்டு பின்னர் இரண்டு முறை என்று எதிர்க்கட்சி தலைவர் கூறியதாக தெரிவித்தார். </p><p>அதுமட்டுமில்லாமல் மற்றொரு தவறான தகவல் என்னவென்றால் விவசாயிகளை முதல்வர் விஜய் சந்திக்கவில்லை என கூறினார். </p><p>அவைக்கு ஒரு கூடுதல் தகவலாக இன்று மதியம் டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகளை மூத்த அமைச்சர்களை முதலில் சந்திக்க சொல்லி பின்னர் 3.30 மணியளவில் அவர்களை முதல்வர் சந்திக்க போன வாரமே அறிவுறுத்தலை வாங்கிவிட்டார். அது ஒரு பாயிண்ட். </p><p>எதிர்க்கட்சி தலைவரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கான விளக்கத்தை அவர் கொடுக்க வேண்டும். </p><p>முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக ஆட்சியில் மேகதாது அணையை கட்டும் திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்த நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்தது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து திமுக அரசு மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த சீராய்வு மனுவும் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>அந்த மனு மீது கவனமாக வலுவாக ஸ்டாலினின் திமுக அரசு தரப்பு வாதிடவில்லை. அதனால் அதுவும் தலைமை நீதிபதி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. </p><p>மூன்று முறை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை எதிர்கட்சி தலைவர் வழங்க வேண்டும். நாங்க இப்ப தான் வந்திருக்கோம். அவர்கள் ஏன் மூன்று முறை தோற்றார்கள் என கூற வேண்டும்" என கேட்டுக்கொண்டார். </p> <h2>கே.என் நேரு</h2><p>இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கே.என் நேரு, "மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை. நீங்கள் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றுதான் சொன்னார்கள். </p><p>அமைச்சர்கள் முதல்வரை புகழ்ந்து பேசுவது இயல்பு. நீங்கள் நல்லபடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டுமே ஒழிய சண்டை வளர்க்க கூடாது. மேகதாது விவகாரம் குறித்து ஒற்றுமையை பற்றி பேசும்போது நீங்கள் வேறுபாட்டை பற்றி பேசுகிறீரர்கள்.</p><p>மேகதாது விவகாரத்தில் தலைவர் ஸ்டாலின் எப்போதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது வரலாறு" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. உதயநிதி  கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka#comments</comments><guid isPermaLink="false">7f2a4b52-f422-4151-bdeb-5a11f9807017</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:53:28 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:53:28.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Udhayanidhi,உதயநிதி,Budget session,பட்ஜெட் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/8zeaqoyt/tn-37.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய், உதயநிதி  ]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய், உதயநிதி  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/8zeaqoyt/tn-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly">சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் </a>இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார். </p><p>தீர்மானத்தின் மீது பேசிய உதயநிதி, காவிரி நீர் பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் எனவும் பேச்சுவார்த்தை நடத்த விஜய் கர்நாடகா செல்ல இருந்தது உண்மையா என கேள்வி எழுப்பினார். </p> <h2>விஜய் பதில் </h2><p>இதற்கு முதல்வர் விஜய் பதிலளித்து பேசுகையில்,</p><p>"மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் இணைந்து தான் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பினோம்.</p><p>நாடாளுமன்ற விவகாரத்தில் மத்திய அமைச்சர் முழு விவரங்களை கூறவில்லை என்பதால் மேகதாதுவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அடுத்த நாளே பிரதமருக்கு கடிதம் எழுதினோம்.</p><p>காவிரி பிரச்னையை தீர்க்க ஒரு முயற்சியாக கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமே என நான் நினைத்தேன்.</p><p>காவிரி பிரச்சனையில் பெங்களூரு செல்ல விரும்பியது நான் தான். பக்கத்து நாட்டுடன் உள்ள பிரச்சனையே பேசி தீர்க்கும் போது பக்கத்து மாநிலக்காரர்களிடம் பேசி பார்க்கலாம் என்று தான் இந்த முடிவை எடுத்தேன்.</p><p>அதில் ஒருவேளை அவமானம் நடந்தால் தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க தயாராக தான் இருக்கேன் என தெரிவித்தேன்.</p><p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது.</p><p>காவிரி விவகாரம் பற்றி நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்குது என்பது தெரிந்திருக்கும்" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்: நத்திங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தள்ளுபடி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/flipkart-freedom-sale-nothing-phone-discounts-offers-announced</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/flipkart-freedom-sale-nothing-phone-discounts-offers-announced#comments</comments><guid isPermaLink="false">23ae0a0e-a71c-44fa-9e23-aad010b878ce</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nothing,நத்திங்,Offers,Flipkart,சலுகைகள்,ப்ளிப்கார்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/astgmic4/Flipkart-Nothing-Offers.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Flipkart Offers
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/astgmic4/Flipkart-Nothing-Offers.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/flipkart">ப்ளிப்கார்ட்</a> ஃப்ரீடம் சேல் இந்தியாவில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட் மற்றும் லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகின்றன. இருப்பினும், ப்ளிப்காரட் நிறுவனம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் இந்த சலுகைகளுக்கான முன்கூட்டிய அணுகலை வழங்கும். </p><p>முன்கூட்டிய சலுகைகள் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, இங்கிலாந்தை சேர்ந்த நத்திங் <a href="https://www.maalaimalar.com/topic/flipkart">ஸ்மார்ட்போன்</a> நிறுவனம், நத்திங் போன் (4a), போன் (4a) ப்ரோ மற்றும் சமீபத்திய போன் (4b) ஆகியவை இந்த விற்பனை நிகழ்வின் போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. </p><h2>ரூ. 6000 சேமிப்பு:</h2><p>வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பை அதிகரிக்க வழிவகுக்கும். வாங்குபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் வங்கி தள்ளுபடி மற்றும் எக்சேஞ்ச் போனஸ்களை பெற முடியும், இதன் மூலம் அவர்கள் ரூ. 6,000 வரை சேமிக்கலாம்.</p><p>கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம், ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேலின் போது நத்திங் ஃபோன் (4a), ஃபோன் (4a) ப்ரோ மற்றும் ஃபோன் (4b) ஆகியவை தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று அறிவித்தது. மேலும், அந்நிறுவனம் தள்ளுபடி மற்றும் சலுகை விவரங்களை வெளியிட்டுள்ளது.</p><p>சமீபத்திய நத்திங் ஃபோன் (4b), கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் ரூ. 3,000 வரையிலான வங்கி தள்ளுபடியுடன் கிடைக்கும். மாற்றாக, வாங்குபவர்கள் வழக்கமான கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2,625 வரையிலான வங்கி தள்ளுபடி பெற முடியும்.</p><h2>ரூ. 4,000 தள்ளுபடி:</h2><p>ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் மூலம் ரூ. 1,000 வரையிலான எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படும், இது நத்திங் போன் (4b)-இன் விலையை ரூ. 30,999 ஆக குறைக்கிறது. நத்திங் போன் (4a) ரூ. 37,999 என்ற விலையில் கிடைக்கும், இதில் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ. 4,000 வரையிலான வங்கித் தள்ளுபடியும், ரூ. 1,000 வரையிலான எக்சேஞ்ச் போனஸ் அடங்கும். </p><p>ஒரு வாடிக்கையாளர் கிரெடிட் கார்டு மூலம் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்தினால், அவர்களுக்கு ரூ. 3,225 வரையிலான வங்கி தள்ளுபடி வழங்கப்படும்.</p><p>கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகள் மூலம் நத்திங் போன் (4a) ப்ரோ வாங்கும் போது ரூ. 4,500 வரை வங்கி தள்ளுபடி வழங்கப்படும். </p><p>வாங்குபவர் முழு தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்த விரும்பினால், வரவிருக்கும் ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேலின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் அவர்களுக்கு ரூ. 3,750 வரை வங்கி தள்ளுபடி வழங்கப்படும். மேலும், போன் (4a) ப்ரோவை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 1,500 வரையிலான எக்சேஞ்ச் போனஸ் பெறலாம்.</p>]]></content:encoded></item><item><title>செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ்  போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா</title><link>https://www.maalaimalar.com/sports/st-louis-rapid-blitz-title-win-boosts-gct-2026-ranking</link><comments>https://www.maalaimalar.com/sports/st-louis-rapid-blitz-title-win-boosts-gct-2026-ranking#comments</comments><guid isPermaLink="false">ede84486-cf7f-447e-a438-031ea4d5d016</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:33:30 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:33:30.016Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PragGnanandhaa,பிரக்ஞானந்தா,செஸ் தொடர்,Chess series,கிராண்ட்மாஸ்டர்,Grandmaster</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bih395zl/tn-36.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரக்ஞானந்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரக்ஞானந்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bih395zl/tn-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் <a href="https://www.maalaimalar.com/topic/praggnanadhaa">பிரக்ஞானந்தா </a>சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். </p><p>அமெரிக்காவில் 5 நாட்கள் நடைபெற்ற இந்தத் தொடரில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.  </p><p>இந்தியாவின் 20 வயது இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா இத்தொடரின் கடைசிக்கு முந்தைய சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவை எதிர்கொண்டார். </p><p>பிரக்ஞானந்தா 23 புள்ளிகளுடனும், ஜவோகிர் 21.5 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களில் பிடித்த நிலையில், இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் இருவரும் மோதிக் கொண்டனர்.</p><p>இருவரும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. எனவே ஒரு சுற்று எஞ்சியிருந்த போதே, மொத்தம் 35 புள்ளிகளில் 23.5 புள்ளிகளைப் பெற்ற பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.</p><p>பிரக்ஞானந்தா வெல்லும் முதல் ராபிட் அண்ட் பிளிட்ஸ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஜவோகிர் சிண்டாரோவ் 2ஆம் இடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு சுமார் ரூ.47 லட்சம் பரிசுத் தொகையையும், 13 ஜிசிடி புள்ளிகளையும் வென்றுள்ளார்.</p><p>இதன் மூலம் 2026ஆம் ஆண்டிற்கான ஜிசிடி சீசன் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.</p><p>அடுத்ததக வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி துவங்கும் ஜிசிடி சீசனின் இறுதித் தொடரான சின்க்பீல்ட் கோப்பை தொடரில் பிரக்ஞானந்தா பங்கேற்க உள்ளார்.  </p><p>கடந்த ஜூன் மாதம் ஓஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரின் 10வது மற்றும் இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, தொடர்ச்சியாக 4 கிளாசிக்கல் வெற்றிகளைப் பதிவு செய்து நார்வே செஸ் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டமன்றத்தில் மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">4ea24cd6-39d6-495c-9ca0-399ba44c1f1d</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:22:06 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:22:06.565Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,இரங்கல் தீர்மானம்,தமிழக சட்டமன்ற கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/4490egos/JCD.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JCD Prabhakar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/4490egos/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது.</p><p>தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கிய நிலையில் மறைந்த பிரபலங்களுக்கு சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.</p><p>அதன்படி, மறைந்த திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.</p><p>முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுருளிவேல் மறைவுக்கு சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.</p><p>மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணிக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.</p><p>பின்னர் மறைந்த பிரபலங்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>விபத்தில் எலும்பு முறிவு.. அட்டைப் பெட்டியில் கட்டுப் போட்டு பீகார் அரசு மருத்துவமனை நூதன வைத்தியம் </title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-hospital-row-cardboard-used-instead-of-plaster-for-fractured-leg-sparks-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-hospital-row-cardboard-used-instead-of-plaster-for-fractured-leg-sparks-probe#comments</comments><guid isPermaLink="false">dfea8937-59e8-4621-8c84-14e8e6341bf7</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:13:36 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:13:36.679Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospital,பீகார்,Bihar,வைரல்,viral</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/duo9ub4e/tn-35.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பீகார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பீகார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/duo9ub4e/tn-35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் அரசு மருத்துவமனையில் முறிந்த காலிற்கு பிளாஸ்டருக்குப் பதிலாக அட்டைப் பெட்டி வைத்துக் கட்டுப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>விபத்து </h2><p>பீகார் மாநிலம் பெகுசராய்  மாவட்டத்தில் நவ்கோதி காவல் எல்லைக்குட்பட்ட மகேஷ்வரா கிராமத்தைச் சேர்ந்த குணால் குமார் என்பவர், ஆகஸ்ட் 3 மாலை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்தார். </p><p>அவரது கால் முறிந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மஞ்சவுல்<a href="https://www.maalaimalar.com/topic/government-hospital"> அரசு மருத்துவமனையில்</a> சேர்த்தனர்.</p> <h2>சிகிச்சை</h2><p>மருத்துவமனை ஊழியர்கள் அவரது முறிந்த காலின் இருபுறமும் மருந்துப் பொட்டலங்களை வைக்க பயன்படுத்தப்படும் அட்டைப் பெட்டித் துண்டுகளை வைத்து, கயிறு மற்றும் பேண்டேஜ் துணியால் இறுக்கமாகக் கட்டினர்.</p><p>பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை பெகுசராய் சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>விளக்கம்</h2><p>இச்சம்பவம் குறித்துப் பேசிய மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரி டாக்டர் அபினவ் பிரியதர்ஷி, ஊழியர்களின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார்.</p><p>எலும்பு முறியும்போது அப்பகுதி அசையாமல் இருக்க வேண்டியது அவசியம் என்றும், அன்றைய தினம் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரோ அல்லது பிளாஸ்டர் போடும் வசதியோ இல்லாததால், நோயாளிக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு அனுப்பவே அங்கு கிடைத்த அட்டைப் பெட்டியைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.</p> <h2>விசாரணை</h2><p>பெகுசராய் சிவில் சர்ஜன் டாக்டர் அசோக் குமார் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>எந்தச் சூழலில் அட்டைப் பெட்டி பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>8-வது நினைவு தினம்: கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-death-anniversary-mk-stalin-pays-floral-tributes-at-karunanidhi-memorial</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-death-anniversary-mk-stalin-pays-floral-tributes-at-karunanidhi-memorial#comments</comments><guid isPermaLink="false">8fc1b3f7-6334-4353-92ee-fe46084b307d</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:09:39 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:09:39.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Karunanidhi,கருணாநிதி நினைவு தினம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/3jkdcqs5/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/3jkdcqs5/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவுநாளையொட்டி, தி.மு.க. தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.</p><p>தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது</p> <h2>கலைஞர் கருணாநிதி</h2><p>திருவாரூர் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ந்தேதி பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. 1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 40 ஆண்டுகள் <a href="https://www.maalaimalar.com/topic/dmk">தி.மு.க.</a> தலைவர், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சர் என்று அசைக்க முடியாத ஆட்சி புரிந்தவர். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந்தேதி கலைஞர் கருணாநிதி காலமானார். கருணாநிதியின் 8-வது நினைவுநாளையொட்டி, திமுக தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.</p> <h2>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</h2><p>இந்நிலையில் கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டி தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-agriculture-budget-2026-budget-is-merely-another-instance-of-a-name-change">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ள அமைதிப் பேரணி, இன்று காலை சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது. இதனைத்தொடர்ந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.</p> <p>இந்த அமைதிப் பேரணியில், முன்னாள் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>8000mAh பேட்டரியுடன் புது ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/redmi-note-17-with-8000mah-battery-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/redmi-note-17-with-8000mah-battery-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">0e65814e-99f3-4eb6-bc58-ad845a48556c</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:39:00 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:39:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Xiaomi,smartphone,ஸ்மார்ட்போன்,சியோமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/34n1t00r/Redmi-Note-17-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Redmi Note 17]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/34n1t00r/Redmi-Note-17-1.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/xiaomi">சியோமி</a> நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பெரிய ஸ்கிரீன் மற்றும் அளவில் பெரிய பேட்டரியுடன் இந்த ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட டாப் எண்ட் மாடல் போன்ற அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p><p>புதிய ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன் 6.99 இன்ச் OLED 2396x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. </p><p>இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட் மூலம் இயங்குகிறது. இத்துடன் 8000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. </p><h2>ரெட்மி நோட் 17 அம்சங்கள்:</h2><p>6.99 இன்ச் 2396x1080 பிக்சல் FHD+OLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்</p><p>ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 பிராசஸர்</p><p>அட்ரினோ 613 GPU</p><p>6 ஜிபி, 8 ஜிபி ரேம்</p><p>அதிகபட்சம் 128 ஜிபி மெமரி</p><p>மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி</p><p>ஆண்ட்ராய்டு 16 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓ.எஸ். 3</p><p>டூயல் சிம் ஸ்லாட்</p><p>50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ்</p><p>இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்</p><p>டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட் (IP65)</p><p>5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1</p><p>யு.எஸ்.பி. டைப் சி</p><p>8000mAh பேட்டரி</p><p>45வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 22.5 வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 1228 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 30,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. </p><p>எனினும், வங்கி சலுகைகளை சேர்க்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ. 24,999 முதல் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் வலைதளத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>GDN- திரை விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gdn-movie-review</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gdn-movie-review#comments</comments><guid isPermaLink="false">6f3857ba-c5a0-4ade-8544-94fe3b6c5f90</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:36:46 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:36:46.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Movie review,மாதவன்,Actor Madhavan,திரை விமர்சனம்,GDN,ஜிடிஎன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/h8h88khm/GDN2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GDN Movie]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/h8h88khm/GDN2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கதை</h2><p>'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்படும் புகழ்பெற்ற விஞ்ஞானியும், தொழில் அதிபருமான ஜி.டி.என்.நாயுடுவின் வாழ்க்கைப்படம்.</p><p>ஜி.டி.நாயுடுவான மாதவன், இளமைப்பருவம் முதல் விவசாயிகள் மீது பாசம் கொண்டுள்ளார். விவசாயிகளுக்காக சின்னச் சின்ன கருவிகளையும் கண்டுபிடித்து தொழில் புரட்சியையும் சத்தமில்லாமல் அரங்கேற்றுகிறார்.</p><p>இன்னொருபுறம் கடின உழைப்பால் தனது பஸ் தொழிலை விரிவுபடுத்தி மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறார். மாதவனின் வளர்ச்சியைப் பிடிக்காத ஆங்கிலேயர்கள், வருமான வரித்துறை அதிகாரி ஜெயராம் மூலமாக அவருக்கு குடைச்சல் தருகிறார்கள்.</p><p>போலி ஆவணங்கள் மூலமாக அதிக வரியை மாதவனுக்கு விதிக்கிறார்கள். வரி செலுத்தாதவர் என்ற முத்திரையை உருவாக்கி, அவரது சொத்தை அபகரிக்கவும் சூழ்ச்சி செய்கிறார்கள்.</p><p>இந்தச் சூழ்ச்சியில் இருந்து மாதவன் தப்பினாரா, இல்லையா? என்பதே மீதிக்கதை.</p><h2>நடிகர்கள்</h2><p>ஜி.டி.நாயுடுவாக மாதவன் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். உடல்மொழியில் அப்படியே ஜி.டி.நாயுடுவை பிரதிபலித்துள்ள மாதவன் சந்தோஷம், சோகம், வெறுப்பு, அவமானம் என எல்லா பரிமாணங்களையும் காட்டி நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.</p><p>சத்யராஜ், ஜெயராமின் அனுபவ நடிப்பு படத்தை தாங்கிப் பிடித்துள்ளது. பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, அதிதி பாலன், பிரிகிடா, ஷீலா ராஜ்குமார் என அனைவரது நடிப்பும் சிறப்பு.</p><p>இதுவரை காமெடியில் கலக்கி வந்த கருணாகரன் இந்தப் படத்தில் எடுத்திருக்கும் புதிய பரிமாணம் ரசிக்க வைக்கிறது. நிச்சயம் இனி படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் அவர் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கலாம்.</p><h2>இயக்கம்</h2><p>உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்துக்கு பலம். சில இடங்களில் காட்சிகளுக்கு இடையேயான பிணைப்பு இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். கணவருக்கு 2-ம் திருமணம் செய்து வைக்கும் பிரியாமணியின் போக்கு புரியவில்லை.</p><p>சில இடங்களில் ஆவணப்படமாக காட்சிகள் நகருகின்றன. ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையையும், அவரது சாதனைகளையும் இப்போதைய தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்தப் படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம குமார்.</p><h2>ஒளிப்பதிவு &amp; இசை</h2><p>அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் அந்தக் காலகட்டத்தை கண்முன் நிறுத்துகின்றன.</p>]]></content:encoded></item><item><title>இந்திய சினிமாவில் முதல் முறை... 100 கோடி பார்வைகளைக் கடந்த ராமாயணா டிரெய்லர் </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-hits-1-billion-views-epic-film-with-ranbir-kapoor-and-sai-pallavi-sets-new-record</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-hits-1-billion-views-epic-film-with-ranbir-kapoor-and-sai-pallavi-sets-new-record#comments</comments><guid isPermaLink="false">86c11fa2-bdd8-48c5-8866-33c14285c38e</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:16:14 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:16:14.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yash,Ramayana,ரன்பீர் கபூர்,Ranbir Kapoor,ராமாயணா,யாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f0xnf1lw/tn-33.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராமாயணா]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமாயணா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f0xnf1lw/tn-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BE">ராமாயணா </a>திரைப்படத்தின் டிரைலர் 100 கோடி பார்வைகளைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார்.</p><p>ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை.30ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது.</p><p>இப்படம் அடுத்த தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <h2>டிரெய்லர்</h2><p>4.09 நிமிடங்கள் நீளமுள்ள இந்த டிரெய்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக உள்ளது.</p><p>மூன்று உலகங்களுக்கும் தானே அரசன் என்று பெருமையுடன் அறிவித்துக்கொள்ளும் ராவணனின் (யாஷ்) உரையாடலுடன் டிரெய்லர் தொடங்குகிறது.</p><p>ராமரின் (ரன்பீர்) குழந்தைப் பருவம், அசுரர்களுடனான போர்கள் மற்றும் சீதையுடனான திருமணம் போன்ற காட்சிகள் இதில் காட்டப்பட்டுள்ளன.</p><p>அதன்பிறகு, 14 வருட வனவாசம், சீதாராமன் லட்சுமணனுடன் வனத்திற்குச் செல்வது, மற்றும் ராவணன் சீதையைக் கடத்துவது போன்ற முக்கியக் காட்சிகளுடன் இந்த டிரெய்லர் கதையின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.</p><p>குறிப்பாக, விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.</p><h2>சாதனை</h2><p>இந்த நிலையில், இந்த டிரெய்லர் யூடியூப் உள்பட அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாக 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>இதில், ஹிந்தி டிரெய்லர் மட்டும் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.</p><p>இதன் மூலம் ராமாயணா இந்திய சினிமாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் என்கிற சாதனையைப் புரிந்துள்ளது. இப்படம் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/K7zjRJ_0sgk"></iframe></figure>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today#comments</comments><guid isPermaLink="false">454ae348-88a9-4963-ade3-1cab68ef905d</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:05:07 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:05:07.833Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Divorce case,Sangeetha,சங்கீதா,விவாகரத்து வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/wt7yisno/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay - Sangeetha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/wt7yisno/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.</strong></em></p> <h2>விவாகரத்து கோரி மனு</h2><p>த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">விவாகரத்து கோரி</a> கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.</p> <p>இந்த மனு கடந்த பிப்​ர​வரி 26-ந்தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றப்பட்டது. அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. </p> <figure><img alt="Vijay - Sangeetha" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/7ncd5hlv/vijay.jpg" /></figure> <h2>நீதிபதி விசாரணை</h2><p>இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன்? வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.</p> <h2>மெயில் ஐ.டி.</h2><p>மேலும் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் மனுவில் மெயில் ஐ.டி. ஏன் குறிப்பிடவில்லை எனவும், விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்டு 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.</p><p>இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/centre-says-tamil-nadu-has-not-sought-changes-to-parandur-green-airport-plan</link><comments>https://www.maalaimalar.com/news/national/centre-says-tamil-nadu-has-not-sought-changes-to-parandur-green-airport-plan#comments</comments><guid isPermaLink="false">8ba3612d-d12a-4920-84d3-bceedb473d4a</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:00:52 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:00:52.628Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Union Minister,நாடாளுமன்றம்,Parandhur Airport,parliament,பரந்தூர் விமான நிலைய திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/prpsr9a9/Dhayanithi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhayanithi maran- Murlidhar Mohol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/prpsr9a9/Dhayanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூர் விமான நிலையத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை என விமான நிலையம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.</p><h2>பரந்தூர் விமான நிலையம்</h2><p>நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், பரந்தூர் பசுமை விமான நிலையத்தை தொடர்வது, அதில் மாற்றங்கள் செய்வது அல்லது அதை திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் வரப்பெற்றதா? என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதில் அளித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் முரளிதர் மோகல் கூறியதாவது:-</p><h2>கடிதம் வரவில்லை</h2><p>'<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">பரந்தூர்</a> பசுமை விமான நிலையத்தை மாற்றியமைப்பது அல்லது திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் வரவில்லை.</p><p>7.4.2025 அன்று பரந்தூரில் பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்தது.</p><p>இந்த கொள்கையின்படி, விமான நிலைய திட்டங்களை செயல்படுத்துவதற்கான பொறுப்பு (மாநில அரசு திட்டத்தை முன்மொழிந்தவராக இருக்கும் பட்சத்தில்) சம்பந்தப்பட்ட மாநில அரசு உள்பட சம்பந்தப்பட்ட விமான நிலைய அமைப்பாளரையே சாரும்.</p><p>விமான நிலைய கட்டுமானத்துக்கான காலக்கெடு நிலம் கையகப்படுத்துதல். கட்டாய அனுமதிகள் பெறுதல், நிதி ஒருங்கிணைப்பு போன்ற பல காரணிகளைச் சார்ந்தே அமையும்' என பதில் அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>80-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-5-layer-security-at-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-5-layer-security-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">bd4a888a-7924-4116-8918-441971e7a88e</guid><pubDate>Fri, 07 Aug 2026 02:29:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T02:29:49.168Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,Independence Day,சுதந்திர தினம்,chennai airport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v8l19o07/chennaiairport.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Airport]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v8l19o07/chennaiairport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் முன்கூட்டியே வரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</strong></em></p> <h2>5 அடுக்கு பாதுகாப்பு</h2><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தின விழா</a> வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மீனம்பாக்கம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">விமான நிலையத்தில்</a> இன்று முதல் வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் இருந்த 3 அடுக்கு பாதுகாப்பு, தற்போது 5 அடுக்காக பலப்படுத்தி, விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.</p>  <p>இதையொட்டி பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் உடைமைகளில் திரவப்பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய், எண்ணெய் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>துப்பாக்கி ஏந்திய போலீஸ்</h2><p>மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் விமான நிலைய நுழைவாயில், விமானங்கள் நிறுத்தும் பகுதிகள் என விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து ரோந்து வருகின்றனர்.</p><p>பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் 20-ந் தேதி வரையில் விடுமுறை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் வெளி பகுதியில் சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.</p> <p>விமான நிலையம் வரும் வாகனங்கள் மற்றும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பார்வையாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக தடை அமுலில் உள்ளது. முக்கிய பிரமுகர்களை வரவேற்க, வழி அனுப்ப வருபவர்களுக்கு சிறப்பு பாஸ்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p> <h2>முன்கூட்டியே வர அறிவுறுத்தல்</h2><p>கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் காரணமாக உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1½ மணி நேரத்துக்கு முன்னதாகவும், பன்னாட்டு பயணிகள் 35 மணி நேரத்துக்கும் முன்பாகவும் விமான நிலையத்துக்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>  <h2>டிரோன்கள் பறக்க தடை</h2><p>மேலும் விமான நிலைய வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டிரோன்கள் பறக்க விடுதல், அதிக சக்தி கொண்ட லேசர் விளக்குகளை பயன்படுத்துதல், கியாஸ் நிரப்பிய பலூன்களை பறக்க விடுதல் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், இதனால் பயணிகள் அச்சப்பட வேண்டாம். பாதுகாப்பு சோதனைகளுக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் இன்று தீர்மானம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-pass-resolution-on-just-tax-distribution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-pass-resolution-on-just-tax-distribution#comments</comments><guid isPermaLink="false">1947f1f5-f6a1-452a-a983-575a52820009</guid><pubDate>Fri, 07 Aug 2026 02:26:21 +0000</pubDate><atom:updated>2026-08-07T02:26:21.573Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,தனித்தீர்மானம்,தமிழக சட்டமன்றம்,Tax allocation,resloution</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/sukaud4w/Vijay1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/sukaud4w/Vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் இன்று அரசு தீர்மானம் கொண்டு வருகிறது.</p><h2>சிறந்த தமிழகம்</h2><p>தமிழக சட்டசபையில் இன்று (வெள்ளிக்கிழமை) அரசினர் தனித் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிய உள்ளார்.</p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>மாநிலங்கள் தங்களது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாததாகும்.</p><p>தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.</p><p>மேலும், மத்திய வரிகளின் பகிர்வு என்பது சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற் றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், எந்த வித பாதகமான நிலையிலும் வைக்கப்படக்கூடாது.</p><h2>உரிய நிதிப்பகிர்வு</h2><p>இந்த அம்சங்களையெல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை இந்த அவை கொண்டு வந்துள்ளது.</p><p>அதன்படி, மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும். மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான, சமமான நடைமுறையை பின்பற்ற வேண்டும். </p><p>மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வளமேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக, மத்திய வரிகளின் பகிர்விற்கான அளவுகோல்கள், எந்த மாநிலத்தையும் பாதகமான நிலையில் வைக்காதவாறு அமைக்கப்பட வேண்டும். மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>குரல் வாக்கெடுப்பு</h2><p>இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் விவாதிப்பார்கள். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்படும். அதிக வாக்கு கிடைக்கும்பட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>5 ஆண்டுகளில் 262 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலை.. பணியின்போது மட்டும் 202 பேர் - காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/crpf-suicides-surge-262-personnel-die-by-suicide-in-5-years-majority-constables</link><comments>https://www.maalaimalar.com/news/national/crpf-suicides-surge-262-personnel-die-by-suicide-in-5-years-majority-constables#comments</comments><guid isPermaLink="false">148b30ee-0b8b-4ad3-87ee-abe7a9588826</guid><pubDate>Fri, 07 Aug 2026 02:17:37 +0000</pubDate><atom:updated>2026-08-07T02:17:37.214Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,crpf,சிஆர்பிஎப்,சிஆர்பிஎப் வீரர்கள்,CRPF personnel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zusgshc0/tn-32.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிஆர்பிஎப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிஆர்பிஎப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zusgshc0/tn-32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதக் காவல் படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்  (<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D">சிஆர்பிஎப்</a>) கடந்த  5 ஆண்டுகளில் 262 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. </p><p>இவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் கான்ஸ்டபிள் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் நிலைகளில் உள்ள கீழ்நிலை வீரர்கள் ஆவர்.</p><p>இதில் 2025ஆம் ஆண்டில் மட்டும் 59 அதிகபட்சமாக வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.</p><h2>புள்ளிவிவரங்கள்</h2><p>அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் படி, 2021 முதல் 2025 வரை மொத்தம் 262 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.</p><p>இதில் 202 வீரர்கள் (77%-க்கும் மேல்) பணியில் இருந்த போதே உயிரிழந்துள்ளனர். எஞ்சியவர்கள் விடுமுறையில் சென்றிருந்த போது தற்கொலை செய்துள்ளனர்.</p><p>2021 இல் 57 வீரர்கள், 2022 இல் 43 வீரர்கள், 2023 இல் 57 வீரர்கள், 2024 இல் 46 வீரர்கள், 2025 இல் 59 வீரர்கள், 2026 ஜூலை வரையிலான 19 சம்பவங்களையும் சேர்த்துக் கொண்டால்  281 பேர் தற்கொலை மூலம் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. </p><p>உயிரிழந்த 281 வீரர்களில் 237 பேர் (84%) , கான்ஸ்டபிள், ஹெட்கான்ஸ்டபிள் உள்ளிட்ட கீழ்நிலை வீரர்கள் 43 பேர் எஸ்ஐ, ஏஎஸ்ஐ உள்ளிட்ட உதவி அதிகாரிகள், ஒருவர் உயர் அதிகாரி</p><h2>தற்கொலைக்கான காரணங்கள்</h2><p>பெரும்பாலான தற்கொலை வழக்குகள் குடும்பப் பிரச்சினைகளுடன் தொடர்புடையவை என்றும், கடுமையான பணிச்சுமை மற்றும் ஓய்வில்லாத கடினமான காவல் பணிகளும் இதற்கு முதன்மை காரணங்களாக அமைகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>சுமார் 3.25 லட்சம் வீரர்களைக் கொண்ட சிஆர்பிஎப் படையில், எந்த நேரத்திலும் 95% முதல் 97% வரையிலான வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாத ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.</p><p>வீரர்களின் உடல் மற்றும் மன நலனை உறுதி செய்யப் பல சிறப்பு நடவடிக்கைகளை CRPF நிர்வாகம் தொடங்கித் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒரே ஆண்டில் 23 நாடுகளுக்கு பயணம்..! பிரதமர் மோடியின் பயணச்செலவு எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-foreign-visits-cost-details</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-foreign-visits-cost-details#comments</comments><guid isPermaLink="false">178aeb7e-6925-4102-8409-3b2368ae35e2</guid><pubDate>Fri, 07 Aug 2026 02:11:08 +0000</pubDate><atom:updated>2026-08-07T02:11:08.873Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,நாடாளுமன்றம்,pm modi,central government,parliament,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/vjyd54yf/modi1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/vjyd54yf/modi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பிரதமர் மோடி கடந்த 2025-ம் ஆண்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்த பயணச்செலவு ரூ.187 கோடி என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-asks-people-to-buy-handloom-products-share-get-ready-with-me-videos">பிரதமர் மோடியின்</a> வெளிநாட்டு பயணச்செலவினம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர்.</p> <h2>வெளிநாட்டு பயணங்கள்</h2><p>குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அவற்றுக்கான ஆண்டு செலவின விவரங்களை சஞ்சய் சிங், சிவதாசன் ஆகிய எம்.பி.க்கள் கேட்டிருந்தனர்.</p><p>உறுப்பினர்களின் இந்த கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கரீட்டா எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் பிரதமரின் வெளிநாட்டு பயனா விவரங்கள் மற்றும் அவற்றுக்கான செலவினங்களை குறிப்பிட்டு இருந்தார்.</p> <h2>அமெரிக்கா, சீனா, பிரான்ஸ்</h2><p>அதன்படி, பிரதமர் மோடி கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் உள்பட 23 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கு ஆன மொத்த செலவு ரூ.187 கோடி ஆகும்.</p><p>இதில் முக்கிய நாடுகளுக்கான தனித்தனி செலவுகளை பொறுத்தவரை பிரான்ஸ் (ரூ.25.59 கோடி), அமெரிக்கா (ரூ.16.54 கோடி), சவுதி அரேபியா (ரூ.15.54 கோடி), பிரேசில் (ரூ.17.72 கோடி), சீனா (ரூ.10.59 கோடி), இங்கிலாந்து (ரூ.9.91 கோடி) ஆகும்.</p> <p>மேலும் இந்த ஆண்டு இதுவரை பிரதமர் மோடியின் பயணச்செலவு ரூ.74.58 கோடி என மந்திரி அளித்த பதிலில் கூறியுள்ளார். இது கடந்த மாதம் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணத்துக்கான செலவும் சேர்க்கப்பட்டு உள்ளது என கூறப்பட்டு உள்ளது.</p><h2>4 ஆண்டுகளில் ரூ.295 கோடி</h2><p>முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதேபோன்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடியின் (2021-2024) வெளிநாட்டு பயணச் செலவுகளை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசு</a> வெளியிட்டு இருந்தது.</p> <p>அதன்படி கடந்த 2021-2024 வரையிலான 4 ஆண்டு காலத்துக்கான பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.295 கோடி என குறிப்பிடப்பட்டு இருந்தது.</p><p>இதில் 2021-ம் ஆண்டு செலவு ரூ.36 கோடி, 2022-ம் ஆண்டு செலவு ரூ.55.82 கோடி, 2023-ம் ஆண்டு செலவு ரூ.93 கோடி, 2024-ம் ஆண்டு செலவு ரூ.109 கோடி என ஆண்டு வாரியான செலவு விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றையும் மந்திரி சுட்டிக்காட்டினார்.</p> <h2>இருதரப்பு ஒப்பந்தங்கள்</h2><p>பிரதமரின் வெளிநாட்டு பயணச்செலவு மட்டுமின்றி இந்த பயணங்களின்போது ஏற்படுத்தப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பலன் விவரங்கள் குறித்தும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.</p><p>எனவே அது தொடர்பான பட்டியல்களையும் தனது 35 பக்க எழுத்துப்பூர்வ பதிலில் வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கரீட்டா இணைத்து இருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 7.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கடன் சுமை குறையப் புதிய வழி பிறக்கும்... </title><link>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasipalan-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-782026-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasipalan-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-782026-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">7c475d33-1bdd-4839-a372-61345c6e3235</guid><pubDate>Fri, 07 Aug 2026 01:53:56 +0000</pubDate><atom:updated>2026-08-07T01:53:56.679Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Daily Rasipalan,rasi palan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-31/6pltfgvu/New-Project-2026-05-25T070202.454.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய ராசிபலன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-31/6pltfgvu/New-Project-2026-05-25T070202.454.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்துவருவர். கடன் சுமை குறையப் புதிய வழி பிறக்கும். பயணங்களால் பலன் உண்டு.</p><h2>ரிஷபம்</h2><p>சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். திருமண முயற்சி வெற்றி பெறும்.</p><h2>மிதுனம்</h2><p>துன்பங்கள் தூர ஓடும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். அரசு வழியில் ஆதாயம் உண்டு.</p><h2>கடகம்</h2><p>வெற்றிச் செய்திகள் வீடு வந்து வந்து சேரும் நாள். பணத்தேவைகள் பூர்த்தி யாகும். உத்தியோகத்தில் பிற நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.</p><h2>சிம்மம்</h2><p>நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். செல்வாக்கு மேலோங்கும். வரன்கள் முடிவாகும்.</p><h2>கன்னி</h2><p>விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.</p><h2>துலாம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பணவரவில் தாமதங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு குறையும்.</p><h2>விருச்சிகம்</h2><p>வியக்கும் செய்தி வீடு தேடி வந்து சேரும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p><h2>தனுசு</h2><p>பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பழகிய நண்பர்களால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.</p><h2>மகரம்</h2><p>மதியத்திற்குமேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். விரயம் கூடும். நண்பர்களை நம்பிச் செயல்பட இயலாது.</p><h2>கும்பம்</h2><p>எண்ணங்கள் நிறைவேறும் நாள். யாரிடமும் பகை பாராட்டாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் துணைபுரிவர்.</p><h2>மீனம்</h2><p>வரவு திருப்தி தரும் நாள். நல்லவர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/crude-oil-price-surge-iran-conflict-and-hormuz-tension-push-up-chennai-petrol-and-diesel-rates</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/crude-oil-price-surge-iran-conflict-and-hormuz-tension-push-up-chennai-petrol-and-diesel-rates#comments</comments><guid isPermaLink="false">e243aef3-def3-42fd-86ec-8251bcefa33b</guid><pubDate>Fri, 07 Aug 2026 01:39:59 +0000</pubDate><atom:updated>2026-08-07T01:39:59.472Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/d9lkl9l7/tn-31.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/d9lkl9l7/tn-31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-said-wars-got-to-end-pretty-soon">ஈரான் போரினால் </a>மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (07.08.2026 - வெள்ளிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 83.44 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 7 ஆகஸ்ட் 2026:  திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-7-august-2026-tiruttani-murugan</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-7-august-2026-tiruttani-murugan#comments</comments><guid isPermaLink="false">707b49fa-5506-4cc0-bc4c-92c60eeb7f3e</guid><pubDate>Fri, 07 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-07T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/29/25562822-murugar.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/29/25562822-murugar.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-22 (வெள்ளிக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  நவமி நண்பகல் 1.56 மணி வரை பிறகு தசமி</p><p>நட்சத்திரம் :  கார்த்திகை மாலை 4.51 வரை பிறகு ரோகிணி</p> <p>யோகம் :  சித்த / மரணயோகம்</p><p>ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்</h2><p>படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் ரதோற்சவம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் உற்சவாரம்பம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. </p> <p>திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - கீர்த்தி</p><p>ரிஷபம் - மாற்றம்</p><p>மிதுனம் - உழைப்பு</p><p>கடகம் - மேன்மை</p><p>சிம்மம் - சாதனை</p><p>கன்னி - ஓய்வு</p> <p>துலாம் - நட்பு</p><p>விருச்சிகம் - அனுகூலம்</p><p>தனுசு - சிந்தனை</p><p>மகரம் - பாராட்டு</p><p>கும்பம் - புகழ்</p><p>மீனம் - ஜெயம்</p> ]]></content:encoded></item><item><title>தேசிய கைத்தறி நாள்: நெசவாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-message-on-national-handloom-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-message-on-national-handloom-day#comments</comments><guid isPermaLink="false">523b808f-2c82-4ae6-8c03-04d125bf7c62</guid><pubDate>Fri, 07 Aug 2026 01:21:10 +0000</pubDate><atom:updated>2026-08-07T01:21:10.303Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நெசவாளர்கள்,handloom weavers,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தேசிய கைத்தறி நாள்,National handloom day</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/1pkd4eu6/vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/1pkd4eu6/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய கைத்தறி நாளை ஒட்டி தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>12வது தேசிய கைத்தறி நாளை ஒட்டி முதலமைச்சர் விஜய் வெற்றித்தறி விற்பனை நிலையம், மின் வணிகத்தளத்தை தொடங்கி வைக்கிறார்.</p><p>சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் இன்று பிற்பகல் 4 மணிக்கு வெற்றித்தறி விற்பனை நிலையத்தை தொடங்கி வைக்கிறார்.</p><p>மின் வணிகத்தளத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய் கைத்தறி பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட உள்ளார்.</p><p>மாநில அளவில் சிறந்த நெசவாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் விஜய் வழங்கி கவுரவிக்க உள்ளார்.</p><h2>தேசிய கைத்தறி நாள்</h2><p>தேசிய கைத்தறி நாளை ஒட்டி, முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் நாளன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக, கைத்தறித் தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வருவாயை அதிகரிக்கவும், நெசவாளர்களுக்கென உயரிய கௌரவத்தை ஏற்படுத்தவும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுச் சிறப்பையும் உலகறியச் செய்யும் கைத்தறித் தொழிலின் பெருமையைப் போற்றும் வகையிலும், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ஆம் நாள் தேசிய கைத்தறி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் கைத்தறி நெசவாளர்களைப் போற்றும் வகையில், 7.08.2026 அன்று 12-வது தேசிய கைத்தறி நாள் கொண்டாடப்படுகிறது.</p><p>கைத்தறி நெசவாளர்கள் தமிழ்நாட்டின் தலைமுறை தலைமுறையாகப் பேணிக்காத்துவரும் நெசவுக்கலை, நமது மாநிலத்தின் வளமான பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்க்கிறது. பட்டு மற்றும் பருத்தி இழைகளால் உருவாக்கப்படும் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கைத்தறி இரகங்கள், நமது நெசவாளர்களின் திறமைக்கும், கைவினை நுட்பத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.</p><p>எண்ணிக்கையில் இத்தொழில் மூலம் மகளிர் அதிக வேலைவாய்ப்பைப் பெறுவதால், மகளிர் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு கைத்தறித் துறை பெரும்பங்கு வகிக்கிறது. மேலும், தமிழ்நாடு அரசு, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யவும், கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.</p><p>நெசவாளர்களின் உழைப்பிற்குரிய அங்கீகாரமும், அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான சந்தை வாய்ப்பும் கிடைப்பதற்கு அரசு தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>விலையில்லா மின்சாரம், தள்ளுபடி மானியம், தொடர் வேலைவாய்ப்புத் திட்டம், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், முதியோர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், வீட்டுவசதி திட்டம், கைத்தறி ஆதரவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நெசவாளர் நலத்திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>மேலும், தமிழ்நாடு நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் நேரடியாக விற்பனை செய்வதற்காக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள "வெற்றித் தறி" விற்பனை நிலையங்களை இத்தேசிய கைத்தறி நாளில் தொடங்கி வைக்கிறேன். இவற்றை நாட்டின் முக்கிய நகரங்களில் விரிவுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இத்திட்டமானது, தமிழக நெசவாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட பிரீமியம் தர நிலை, சிறந்த கைவினைத் திறன் மற்றும் நவீன வண்ணங்களுடன் நேர்த்தியாக ஆடை நெய்து, இளம் தலைமுறையினரைக் கவரக்கூடிய வகையில் நவீன காட்சிப்படுத்துதல் வழியே சிறந்த விற்பனை அனுபவத்தை வழங்கிடும்.</p><p>இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இந்த அரசு, கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுவரும் இளம்தலைமுறை நெசவாளர்களுக்கு இருக்கும் என உறுதி அளிக்கிறேன்.</p><p>உறுதுணையாக "கைத்தறி நெசவாளர்களின் உழைப்பை மதிப்போம்; கைத்தறிப் பொருட்களை வாங்கி ஆதரிப்போம்" என்ற உணர்வுடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கைத்தறிப் பொருட்களைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய நெசவுக் கலையைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இந்த இனிய நாளில், தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>கைத்தறித் தொழில் மேலும் வளர்ச்சியடைந்து, நமது நெசவாளர்களின் வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பெருகிடவும், தமிழ்நாட்டின் பாரம்பரிய கைத்தறி இரகங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மேலும் புகழ்பெறவும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இனி இலவசம் கிடையாது.. UPI பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம்  - மக்களவையில் மசோதா நிறைவேற்றம் </title><link>https://www.maalaimalar.com/news/national/upi-mdr-charges-lok-sabha-passes-bill-empowering-centre-to-levy-fees-on-digital-payments</link><comments>https://www.maalaimalar.com/news/national/upi-mdr-charges-lok-sabha-passes-bill-empowering-centre-to-levy-fees-on-digital-payments#comments</comments><guid isPermaLink="false">82e9269e-9118-45cc-982c-907bd6bce35b</guid><pubDate>Fri, 07 Aug 2026 01:01:09 +0000</pubDate><atom:updated>2026-08-07T01:01:09.655Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bill,UPI,யுபிஐ,மசோதா,ஆன்லைன் பணப்பரிவர்த்தனை,Online money transaction</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/wsr1q2j6/tn-30.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/wsr1q2j6/tn-30.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் <a href="https://www.maalaimalar.com/topic/upi">UPI </a>பணப்பரிவர்த்தனைகளுக்கு MDR எனும் சேவைக்கட்டணத்தை விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் 'வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா' மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.</p><p>2007ஆம் ஆண்டின் 'Payment and Settlement Systems Act' சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த இம்மசோதா விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. </p> <h2>புதிய சேவைக் கட்டணம்</h2><p>டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்புகளைப் பராமரிப்பதற்காக, வங்கிகள் அல்லது கட்டண சேவை நிறுவனங்கள் வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கும் கட்டணமே Merchant Discount Rate (MDR) ஆகும்.</p><p>2020 ஜனவரி முதல் யு.பி.ஐ மற்றும் RuPay கார்டு பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் முழுமையாக விலக்களிக்கப்பட்டிருந்தது.</p><p>இலவச சேவை முறையை நிதி ரீதியாகத் தொடர்ந்து நடத்துவது கடினம் என இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது.</p><p>மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், தேவையான கட்டங்களில் வங்கிகள் மற்றும் சேவை நிறுவனங்கள் MDR கட்டணத்தைச் சேகரிக்க அனுமதி அளிக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் இனி மத்திய அரசிடம் இருக்கும்.</p> <h2>வாடிக்கையாளர்களுக்கு நிதிச்சுமை</h2><p>அதிகத் தொகை கொண்ட யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கோ அல்லது வணிகர்களின் வருடாந்திர வருவாயை அடிப்படையாகக் கொண்டோ எதிர்காலத்தில் சேவைக்கட்டணம் விதிக்கப்படலாம்.</p><p>தற்போது வணிகர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றாலும், MDR அறிமுகப்படுத்தப்பட்டால் இந்த நிதிச்சுமை சிறுகச் சிறுகக் கடைசியில் வாடிக்கையாளர்களைச் சென்றடைய வாய்ப்புள்ளது.</p><h2>MDR</h2><p>தற்போது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு சராசரியாக 1.5% மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 0.9% MDR கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><p>மேலும், RTGS மற்றும் NEFT போன்ற பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஏற்கனவே சேவைக்கட்டணம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் - அதிபர் டிரம்ப் நம்பிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-said-wars-got-to-end-pretty-soon</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-said-wars-got-to-end-pretty-soon#comments</comments><guid isPermaLink="false">0c0fea37-29d6-4da0-b38a-0ededb99493e</guid><pubDate>Fri, 07 Aug 2026 00:24:02 +0000</pubDate><atom:updated>2026-08-07T00:24:02.067Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,போர்,ஈரான்,Iran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/n6vmgou5/Donald-Trump.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/n6vmgou5/Donald-Trump.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> தொடர்பான மோதல் "மிக விரைவில்" முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்; அந்த இஸ்லாமியக் குடியரசால் "இனி நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது" என்றும் அவர் கூறினார். ஹார்முஸ் நீரிணை தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்தும் நம்பிக்கை தெரிவித்த அவர், ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதில் உள்ள உறுதியையும் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப்</a>, "ஈரான் விவகாரத்தில் நான் மிக முக்கியமான நடவடிக்கையை தொடங்கியபோது, ​​அது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது; ஏனெனில் அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது, இல்லையெனில் உலகம் முழுவதும் அழிந்துபோகும். அதை நாங்கள் அனுமதிக்க போவதில்லை. நாங்களோ அல்லது மத்திய கிழக்கோ மட்டுமல்ல, உலகம் முழுவதுமே. அது ஒரு பேரழிவாக இருந்திருக்கும். எங்களுக்கு வேறு வழியில்லை.</p><h2>விரைவில் முடிவு:</h2><p>போர் முடிந்ததும், நான் காணும் சூழலின் அடிப்படையில், அந்த நல்ல நாட்களை நாம் விரைவில் மீண்டும் காண்போம். போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன். அவர்களால் இனி நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை," என்று கூறினார்.</p><p>எண்ணெய் போக்குவரத்திற்கான உலகின் மிக முக்கியமான கடல்வழி பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்தும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.</p><p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஒப்பந்தம் குறித்துப் பேசிய டிரம்ப், "அது முடிந்துவிட்டது என்று நான் சொல்ல விரும்பவில்லை. அது தற்போது ஒரு திறந்த நிலையில் உள்ளது. அமெரிக்க கடற்படையின் தலைமையிலான முற்றுகை நடவடிக்கை ஒன்று உள்ளது, அதை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.</p><h2>சிக்கிக்கொள்ள விரும்பமாட்டார்கள்:</h2><p>ஆனால் அவர்கள் எதையாவது சுடலாம் அல்லது கண்ணிவெடியை (mine) வீசலாம்... அங்கே ஒரு கண்ணிவெடி இருந்தால் கூட நிலைமை சிக்கலாகிவிடும்; ஏனெனில் மக்கள் தங்கள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கப்பல்களை எடுத்துச் சென்று, எதிர்பாராத விதமாக கண்ணிவெடியில் சிக்கிக்கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம் என்று நினைக்கிறேன். பேச்சுவார்த்தைகளில் நானும் ஈடுபட்டுள்ளேன். நாங்கள் நன்றாக செயல்படுகிறோம் என்று கருதுகிறேன். இது விரைவில் நடக்கலாம்," என்று கூறினார்.</p><p>இருப்பினும், புதன்கிழமையன்று, ஈரானின் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் சையத் மஜித் இப்ன் ரெசா நாட்டின் தற்காப்பு திறன்கள் மீது நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் இருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் "கடுமையான மற்றும் தீர்க்கமான பதிலடி" கொடுக்க "எந்த முயற்சியையும் கைவிடாமல்" செயல்பட தயாராக இருப்பதாக அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிறப்புரிமை குடியுரிமையை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-signs-2-immigration-actions-to-limit-birthright-citizenship</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-signs-2-immigration-actions-to-limit-birthright-citizenship#comments</comments><guid isPermaLink="false">0843d17e-4e6f-4f23-9043-2b0748a7ea6d</guid><pubDate>Thu, 06 Aug 2026 23:43:02 +0000</pubDate><atom:updated>2026-08-06T23:43:02.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,குடியுரிமை,immigration</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிபர் டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்தவும் 'பிறப்புச் சுற்றுலா'வை (birth tourism) தடுக்கவும் குடியேற்றம் தொடர்பான இரண்டு நடவடிக்கைகளில் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப்</a> கையெழுத்திட்டார்</p><p>அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை கிடைக்கும் உரிமையை (பிறப்புரிமை குடியுரிமை) கட்டுப்படுத்துவதற்கான தனது முதல் முயற்சியை உச்ச நீதிமன்றம் நிராகரித்த பின்னரும், மீண்டும் ஒருமுறை அதை செயல்படுத்த அதிபர் டொனால்டு டிரம்ப் தயாராகி வருகிறார். இதற்கான நடவடிக்கைகளை அவர் அறிவித்தார்.</p><h2>இரண்டு உத்தரவுகள்:</h2><p>குடியேற்றம் தொடர்பான இரண்டு நிர்வாக உத்தரவுகளில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று, அமெரிக்காவில் பிறந்த பிறகு அந்நாட்டுக்குக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் என்று அவர் கூறினார்.</p><p>இரண்டாவது உத்தரவானது, அமெரிக்காவிற்கு வந்து அங்கு குழந்தையை பெற்றெடுக்கும் நோக்கத்துடன் விசா கோரும் சுற்றுலா பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரிப்பதன் மூலம், டிரம்ப் "பிறப்பு சுற்றுலா" என்று அழைக்கும் நடைமுறையைக் கட்டுப்படுத்த முயல்கிறது.</p><h2>டிரம்ப் கருத்து:</h2><p>இதுகுறித்து ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அதிபர் டிரம்ப், "குடியுரிமை தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு தீர்ப்பு கிடைத்தது. அதனால் நாங்கள் சில மாற்றங்களை செய்து வருகிறோம்.</p><p>நாங்கள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். இது எங்களை இன்னும் வலுவான முறையில் செயல்பட அனுமதிக்கும். அவர்கள் பிறப்புரிமை குடியுரிமை முறையை ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிட்டார்கள்," என்று குறிப்பிட்டார்.</p><h2>அரசியலமைப்புக்கு உட்பட்டவை:</h2><p>இது குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், தனது இந்த சமீபத்திய நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.</p><p>அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அமெரிக்க குடிமக்கள் அல்ல என்று அறிவிக்க டிரம்ப் மேற்கொண்ட முந்தைய முயற்சிகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதேவேளையில், பிறப்புரிமை குடியுரிமை குறித்த பரந்த கண்ணோட்டத்தை ஜூன் மாதத்தில் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் போராட்டம்: அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 11 பேர் குழு அமைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-stir-enters-13th-day-6-on-fast</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-stir-enters-13th-day-6-on-fast#comments</comments><guid isPermaLink="false">2ee8fd8c-78d9-4fd6-b522-7b33ae9d8082</guid><pubDate>Thu, 06 Aug 2026 23:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-06T23:10:18.946Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/uzdf4rbd/Jharkhand-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protest

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/uzdf4rbd/Jharkhand-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> மாநிலத்தில் ஆள்சேர்ப்பு தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிரான <a href="https://www.maalaimalar.com/topic/protest">போராட்டம்</a> 13-வது நாளை எட்டியது. </p><p>இதில் ஆறு போராட்டக்காரர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்; அதேவேளையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் 11 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். </p><p>மாலை வரை அரசிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்று மாணவர் தலைவர்கள் கூறியதால், இந்தப் போராட்டம் தொடர்பான இழுபறி நிலை நீடிக்கிறது. </p><h2>11-பேர் குழு:</h2><p>ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் 'JPSC-JSSC சீர்திருத்த மன்றம்' (JPSC-JSSC Reforms Manch) என்ற அமைப்பின் கீழ் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம், சமீப காலங்களில் மாநிலத்தில் மாணவர்கள் முன்னெடுத்த மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.</p><p>"போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு விடுத்த அழைப்பை ஏற்று, எட்டு மாணவர்கள், இரண்டு நிபுணர்கள் மற்றும் ஒரு வழக்கறிஞர் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவை நாங்கள் அமைத்துள்ளோம்," என்று JPSC-JSSC சீர்திருத்த மன்றத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.</p><p>போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என்று முதல்வர் ஹேமந்த் சோரன் கூறிய மறுநாளே, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><h2>சந்திப்பு:</h2><p>அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் சுதிவ்யா குமார் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அரசு குழுவினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>ராஞ்சி துணைப் பிரிவு அதிகாரி குமார் ரஜத் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் (சட்டம்-ஒழுங்கு) தனஞ்சய் குமார் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) இரவு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்தனர்.</p><p>"எங்கள் தம்பிமார்களுடன் உரையாடுவதற்கும், அவர்களின் நலம் விசாரிப்பதற்கும் நாங்கள் இங்கு வந்தோம்," என்று துணைப் பிரிவு அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார். மாணவர் குழுவுடன் ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்று கேட்டதற்கு, "இல்லை" என்பதே அவரது பதிலாக இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்கா மின் நிலையங்களை தாக்கினால் வளைகுடா நாடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் - ஈரான் அச்சுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-threatened-to-black-out-gulf-nations-if-us-hit-power-plants</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-threatened-to-black-out-gulf-nations-if-us-hit-power-plants#comments</comments><guid isPermaLink="false">17cc42bf-4de2-4497-86d7-79483c812473</guid><pubDate>Thu, 06 Aug 2026 22:26:22 +0000</pubDate><atom:updated>2026-08-06T22:26:22.378Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,power plant,gulf nations,வளைகுடா நாடுகள்,மின் நிலையங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/j3x4twn5/Iran-Missiles.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran Missiles]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/j3x4twn5/Iran-Missiles.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/US">அமெரிக்கா</a> தனது மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், முழு பிராந்தியத்தையும் இருளில் மூழ்கடித்து விடுவோம் என்ற செய்தியை தெரிவித்து, குறிப்பிட்ட இலக்குகளின் பட்டியலையும் வெளியிட்டு, <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> கடந்த வாரம் வளைகுடாவில் உள்ள தனது அண்டை நாடுகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்தியது என்று இரண்டு அதிகாரிகள் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.</p><p>ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கோரிக்கைகளையும், பேச்சுவார்த்தைகளில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கையையும் காரணம் காட்டி, அவர் வார இறுதியில் தனது அச்சுறுத்தலை திரும்ப பெற்றுக்கொண்டார்.</p><h2>ஈரான் அச்சுறுத்தல்:</h2><p>"டிரம்ப் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்கினால், வளைகுடா பகுதியில் ஒவ்வொரு நாடாக மின்சாரத்தை முடக்கிவிடுவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளது," என்று வளைகுடா பகுதி அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இதனை மற்றொரு பிராந்திய அதிகாரியும் உறுதிப்படுத்தினார்.</p><p>முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக, இருவரும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.</p><p>திட்டமிடப்பட்ட இந்த தாக்குதல்கள் "இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய தாக்குதலாக" இருந்திருக்கும் என்று டிரம்ப் கூறிய நிலையில், அவர் பலமுறை அச்சுறுத்தியது போலவே எரிசக்தி உள்கட்டமைப்பை தாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>நீண்ட பட்டியல்:</h2><p>தனது மின் உற்பத்தி நிலையங்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், வளைகுடாவில் உள்ள அதே இலக்குகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரான் இடைத்தரகர்கள் மூலம் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.</p><p>அது இதற்கு முன்பும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை பகிரங்கமாக விடுத்திருந்தது, ஆனால் இந்த புதிய அச்சுறுத்தல் "மிகவும் தீவிரமானது" என்று கூறிய வளைகுடா அதிகாரி, அதில் "தாங்கள் தாக்கவிருக்கும் இலக்குகளின் நீண்ட பட்டியல்" இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p>ஜூலை மாத மத்தியில், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஈடாக ஒரு ஈரானிய பாலம் அல்லது மின் நிலையத்தை அழிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தினார், இதற்கு பதிலடியாக 'கண்ணுக்கு கண்' என தெஹ்ரான் எச்சரித்தது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் கோரிக்கையை அரசுகள் கேட்டறிய வேண்டும் - ராஞ்சி போராட்டக்காரர்களுக்கு ராகுல் காந்தி ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-backs-ranchi-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-backs-ranchi-protesters#comments</comments><guid isPermaLink="false">3d4628c1-7990-4f44-bb37-03f45a5b3dcb</guid><pubDate>Thu, 06 Aug 2026 20:17:40 +0000</pubDate><atom:updated>2026-08-06T20:17:40.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,protest,Students,மாணவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ol4pqkuq/Rahul-Gandhi-3.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ol4pqkuq/Rahul-Gandhi-3.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக ராஞ்சியில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்குத் துணை நிற்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. மேலும், ஒவ்வொரு அரசும் மாணவர்கள் கூறுவதை கேட்டு, கல்வி முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.</p><p>ஜார்க்கண்டில் ஜே.எம்.எம். தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், அவர்களுக்கு நீதி கிடைக்க உதவவும் தொடர்ந்து போராடும் என்று கூறியுள்ளது.</p><p>இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் நடைபெற்ற 'என்னிடம் எதையும் கேளுங்கள்' அமர்வின்போது, ​​ஜார்க்கண்டில் நடக்கும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு காந்தியிடம் கூறப்பட்டது.</p><p>ராகுல் காந்தி வலியுறுத்தல்:</p><p>இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "நாட்டில் நடைபெறும் மாணவர் போராட்டங்கள் கல்வி முறைக்கு எதிரானவை. இதை நான் கோட்டாவிலும் டேராடூனிலும் தெளிவாக கூறியுள்ளேன், அலகாபாத்திலும் கூறுவேன்: நமது கல்வி முறை சீர்குலைந்துவிட்டது; அது கட்டுப்படியாகாததாகவும், ஒடுக்குமுறையானதாகவும் உள்ளது.</p><p>மத்திய அரசாக இருந்தாலும் சரி, ஜார்க்கண்ட் அரசாக இருந்தாலும் சரி, அல்லது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு அரசும் மாணவர்கள் கூறுவதைக் கேட்டு, கல்வி முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறினார்.</p><p>கட்சி துணை நிற்கும்:</p><p>கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் சரி, ஆட்சியில் இருக்கும் போட்டியாளராக இருந்தாலும் சரி, மாணவர்களின் நலனுக்காகத் தங்கள் கட்சி துணை நிற்கும் என்றும், மாநில அரசுக்குக் கடிதம் எழுதும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.</p><p>"ஜார்க்கண்ட், பஞ்சாப், டெல்லி அல்லது வேறு எங்கு இருந்தாலும், நாங்களும் மாணவர்களுடன் இருக்கிறோம். நாங்கள் தவறு செய்துவிட்டோமா என்றும், அது ஏன் நடந்தது என்றும் கேட்போம். நாங்கள் அரசுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறோம்," என்று அவர் கூறினார்.</p><p>முன்னதாக இன்று, ஜார்க்கண்ட் மாநில அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் கே. ராஜு, தானும் மாநில கட்சி தலைவர்களும் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை சந்தித்து, மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுவை அவரிடம் அளித்ததாக கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>செவிலியர்கள் முன்கள பணியாளர்களின் கஷ்டங்களை பேசும் புதிய படத்தில் ஹெச். ராஜா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/h-raja-new-movie-talks-about-challenge-faced-by-nurses</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/h-raja-new-movie-talks-about-challenge-faced-by-nurses#comments</comments><guid isPermaLink="false">b2a86055-6137-48d0-a7f0-a79625e8481f</guid><pubDate>Thu, 06 Aug 2026 19:19:48 +0000</pubDate><atom:updated>2026-08-06T19:19:48.727Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>H raja,Sei Seiyathae,ஹெச் ராஜா,செய் செய்யாதே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/swjo2yuv/H-Raja.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ H Raja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/swjo2yuv/H-Raja.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.</p><p>விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.</p><h2>ஹெச் ராஜா உருக்கம்:</h2><p>இந்நிகழ்வினில் ஹெச் ராஜா பேசும் போது, "எனது உடல்நல குறைவின் போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் என் அருகில் இருந்து அளித்த ஆதரவு மிக முக்கியமானது. எந்த ஒரு விஷயத்தையும் நாம் இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன்.</p><p>இறைவன் அருளால் அறுவை சிகிச்சை முடிந்து வெறும் ஆறு மாதங்களிலேயே உங்கள் அனைவரின் மத்தியிலும் மீண்டும் வந்து பேசும் அளவிற்கு உடல்நலம் பெற்றுள்ளேன். இதற்காக இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் ராஜா அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட மறந்துவிட்டார். இந்த படத்தில் நடிகர்களுக்கு எந்தவித மேக்கப்பும் போடப்படவில்லை. முற்றிலும் இயல்பான தோற்றத்திலும், எளிய உடைகளிலும்தான் நடித்துள்ளோம். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கூறியபடி நடித்து கொடுத்துவிட்டு வந்தோம்.</p><p>இந்தப் படம் மருத்துவ துறையில் பணியாற்றும் செவிலியர்கள் முன்கள பணியாளர்களின் கஷ்டங்களை பேசுகிறது. இப்படம் கண்டிப்பாக பெரிய வரவேற்பைப் பெறும், அனைவருக்கும் என் நன்றிகள்," என்று தெரிவித்தார்.</p><h2>சிறப்பு தோற்றம்:</h2><p>இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், தவறான மருத்துவ தகவல்கள், குடும்ப உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பொறுப்பான வாழ்க்கைத் தேர்வுகள் போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுகிறது. அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூகத்தின் கூட்டு பொறுப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.</p><p>மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) சான்றிதழ் பெற்றுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம், 2026 செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கைத்தறித் தயாரிப்புகளை வாங்கவும், &apos;Get Ready With Me&apos; வீடியோ பகிருங்கள் - பிரதமர் மோடி கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-asks-people-to-buy-handloom-products-share-get-ready-with-me-videos</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-asks-people-to-buy-handloom-products-share-get-ready-with-me-videos#comments</comments><guid isPermaLink="false">a0e4d061-0ddd-4467-a025-d6d278c3a3b1</guid><pubDate>Thu, 06 Aug 2026 18:30:01 +0000</pubDate><atom:updated>2026-08-06T18:30:01.503Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,Handloom,பிரதமர் மோடி,கைத்தறித் தயாரிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/09alvqpy/PM-Modi-18.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/09alvqpy/PM-Modi-18.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கைத்தறித் தயாரிப்புகளை வாங்கவும், அவற்றின் மீது உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் வகையில் வீடியோக்களை உருவாக்கவும் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.</p><p>கைத்தறி தினத்தை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, இத்தினத்தைக் கொண்டாடுவது நாட்டின் நெசவாளர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் ஒரு கைகொடுக்கும் செயலாக அமையும் என்று கூறினார்.</p><h2>பிரதமர் வேண்டுகோள்:</h2><p>"ஆகஸ்ட் 7; அன்று நாம் தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்தியாவின் கைத்தறித் துறையின் பன்முகத்தன்மையை நாம் பிரபலப்படுத்துவோம். உங்களுக்கு பிடித்தமான கைத்தறி தயாரிப்புகளைக் கொண்டு, 'Get Ready With Me' போன்ற வீடியோக்களை உருவாக்கி, அவற்றை சமூக ஊடகங்களில் பகிருங்கள்," என்று அவர் கூறினார்.</p><p>ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதும், நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்ததும் 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதியில்தான் என்பதை பிரதமர் மக்களுக்கு நினைவூட்டினார்.</p><p>"கடந்த வாரம்தான் நீங்கள் அனைவரும் நண்பர்கள் தினத்தை கொண்டாடினீர்கள். ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரும் கைத்தறி தினத்தையும் அதே உற்சாகத்துடன் கொண்டாடுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.</p><h2>நோக்கம்:</h2><p>உலகெங்கிலும் உள்ள மக்களை கைத்தறி தயாரிப்புகளின் பக்கம் ஈர்க்கும் வகையில் அனைவரும் குறும் வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பகிருமாறு வலியுறுத்திய மோடி, இந்தியாவின் சுயசார்பை உறுதி செய்வதும், நெசவாளர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி ரீதியாக உதவுவதும் இதன் நோக்கம் என்று கூறினார்.</p><p>"நெசவாளர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் உதவும் வகையில் கைத்தறி தயாரிப்புகளை வாங்குவோம் மற்றும் வீடியோக்களை உருவாக்குவோம்," என்று அவர் கூறினார்.</p><p>"தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்கு. அதற்காக, மிகச்சிறிய மற்றும் ஏழ்மையான குடும்பங்கள் கூட பொருளாதார ரீதியாக வளம் பெற வேண்டும்," என்று கூறிய பிரதமர், ஒவ்வொரு கைத்தறி பொருள் வாங்குதலும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், கைவினை கலைஞர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும் பங்களிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>ரொம்ப வேதனையா இருக்கு! அசாம் வெள்ள பாதிப்புக்கு ரூ. 3 கோடி வழங்கிய ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-contributed-rs-3-cr-to-cm-relief-fund-in-ne-state-hemant-soren</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-contributed-rs-3-cr-to-cm-relief-fund-in-ne-state-hemant-soren#comments</comments><guid isPermaLink="false">90551296-88d5-4482-80ca-3403b4f2c2ce</guid><pubDate>Thu, 06 Aug 2026 17:49:16 +0000</pubDate><atom:updated>2026-08-06T17:49:16.917Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜார்கண்ட்,Jharkhand,Hemant Soren,ஹேமந்த் சோரன்,அசாம் வெள்ளம்,Assam Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/mdwhsaud/Assam-Floods-and-Hemant-Soren.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods and Hemant Soren]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/mdwhsaud/Assam-Floods-and-Hemant-Soren.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாமில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தால் வேதனை தெரிவித்த ஜார்க்கண்ட் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/hemant-soren">ஹேமந்த் சோரன்</a>, அம்மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனது அரசு ரூ. 3 கோடி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். </p><p>இந்த நெருக்கடியான நேரத்தில் தனது அரசும் ஜார்க்கண்ட் மக்களும் அசாம் மாநிலத்திற்கு உறுதுணையாக நிற்பதாக கூறி, <a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">அசாம்</a> முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு அவர் கடிதம் எழுதினார். </p><h2>சோரென் வேண்டுகோள்:</h2><p>அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு தனது மாநில குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் சோரன் வேண்டுகோள் விடுத்தார்.</p><p>"இந்த நெருக்கடியான நேரத்தில், ஜார்க்கண்ட் அரசும் மாநில மக்களும் அசாமிற்கு உறுதுணையாக நிற்கிறோம். நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளில் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அசாம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஜார்க்கண்ட் அரசு ரூ. 3 கோடி வழங்கியுள்ளது," என்று சோரன் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.</p><p>"அசாமில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தால் உருவான இக்கட்டான சூழலை கண்டு நான் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இந்த பேரிடரில் ஈடுசெய்ய முடியாத உயிர் மற்றும் உடைமை இழப்புகளை சந்தித்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஜார்க்கண்ட் மக்களின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்," என்று முதலமைச்சர் கூறினார்.</p><h2>அதிகரிக்கும் உயிரிழப்புகள்:</h2><p>அசாம் வெள்ளத்தில் மேலும் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது. மேலும் 15 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.68 லட்சமாக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>"ஜார்க்கண்டின் வசதி படைத்த குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் அனைவரும் முன்வந்து, அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றவரை உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் ஒருவருக்கொருவர் கைகொடுத்து உதவுவதே நமது மிகப்பெரிய கடமையாகும்," என்று சோரன் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டார்.</p><p>அசாம் மக்களின் பொறுமை, தைரியம் மற்றும் சேவை மனப்பான்மையையும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் பாராட்டினார்.</p><p>"அசாம் இந்த இயற்கை பேரிடரிலிருந்து விரைவாக மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று மா காமாக்யாவிடம் பிரார்த்திக்கிறேன்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில் ஏமன் அரசு படைகளை சேர்ந்த 30 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/houthi-rebel-attacks-kill-at-least-30-yemeni-govt-forces</link><comments>https://www.maalaimalar.com/news/world/houthi-rebel-attacks-kill-at-least-30-yemeni-govt-forces#comments</comments><guid isPermaLink="false">f2343013-b295-465d-9362-8eab44de3f5d</guid><pubDate>Thu, 06 Aug 2026 17:07:51 +0000</pubDate><atom:updated>2026-08-06T17:07:51.787Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,Houthi,ஏமன்,தாக்குதல்,ஹவுதி,rebel attack</media:keywords><media:content height="399" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/g5vo3i6b/Houthi-Attacks.jpg" width="599"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Houthi Attacks]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/g5vo3i6b/Houthi-Attacks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமனின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில், குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஏமன் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்கள் அரசுப் படையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>சவுதி ஆதரவு பெற்ற படைகளை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் "நூற்றுக்கணக்கானோர்" கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்றும் ஹவுதி தலைவர் ஒருவர் கூறினார்.</p><h2>தீவிர தாக்குதல்:</h2><p>மாரிப் மற்றும் ஹத்ரமவுத் மாகாணங்களில் உள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளின் முகாம்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஏமன் அதிகாரிகள் தெரிவித்தனர். ஊடகங்களிடம் பேச அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாததால், அவர்கள் தங்கள் பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் இத்தகவலை தெரிவித்தனர்.</p><p>ஏமனில் ஹவுதிகளுக்கும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசை ஆதரிக்கும் சவுதி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நடைபெற்ற பெரும் சண்டையை நிறுத்திய ஏப்ரல் 2022-இன் நடைமுறை போர்நிறுத்தத்திற்கு பிறகு, இந்த தாக்குதல்கள் மோதலின் தீவிரத்தை வெகுவாக அதிகரித்துள்ளன.</p><p>ஹவுதிகளின் தாக்குதல்களால் தங்கள் படையில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டதாக மட்டுமே ஏமன் ராணுவம் பொதுவெளியில் தெரிவித்தது; ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அது குறிப்பிடவில்லை.</p><h2>பதிலடி நடவடிக்கை:</h2><p>மாரிப் மற்றும் ஹத்ரமவுத் மாகாணங்களில் உள்ள முகாம்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், கிழக்கு ஏமனில் சவுதி ஆதரவு படைகள் குவிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே இவை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஹவுதி பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சரீ தெரிவித்தார்.</p><p>இந்தத் தாக்குதல்களில் "சவுதி தரப்பு கூலிப்படையினர் நூற்றுக்கணக்கானோர்" கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என்றும், முகாம்கள், கிடங்குகள், ராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டன என்றும் ஹவுதி தலைவர் கூறினார்.</p><p>"எங்கள் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், சவுதியின் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளுமாறும், சவுதி படைகள் எங்கு குவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று சரீ தனது உரையில் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>7 ஆண்டுகளில் மலக்கழிவு தொட்டிகளை சுத்தம் செய்த 498 தொழிலாளர்கள் உயிரிழப்பு: ராகுல் காந்தியின் கேள்விக்கு ராம்தாஸ் அதாவலே பதில்</title><link>https://www.maalaimalar.com/news/national/498-sanitation-workers-deaths-india-ramdas-athawale</link><comments>https://www.maalaimalar.com/news/national/498-sanitation-workers-deaths-india-ramdas-athawale#comments</comments><guid isPermaLink="false">8b664573-12a1-4281-87fd-60ca7eb98612</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:40:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:40:43.334Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Ramdas Athawale,septic tank cleaning,தூய்மை பணியாளர்கள்,ராம்தாஸ் அத்வாலே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/wo6hjcm0/Untitled-design-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Rahul Gandhi - Ramdas Athawale]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி - ராம்தாஸ் அத்வாலே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/wo6hjcm0/Untitled-design-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் கழிவுநீர் கால்வாய்களையும் மலக்கழிவுத் தொட்டிகளையும் சுத்தம் செய்தபோது சுமார் 500 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>2019 ஜனவரி 1 முதல் 2026 ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில், கழிவுநீர் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளின்போது 498 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்க தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p><p>காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.</p><h3><strong>அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%87">ராம்தாஸ் அதாவலே</a> அறிக்கை</strong></h3><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “2019-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 132 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். </p><p>2020-ல் மேலும் 34 இறப்புகளும், அதனைத் தொடர்ந்து 2021-ல் 62 இறப்புகளும், 2022-ல் 88 இறப்புகளும் பதிவாகியுள்ளன.</p><p>2023-ல் இந்த எண்ணிக்கை 65 ஆகவும், 2024-ல் 54 ஆகவும், 2025-ல் 47 ஆகவும் இருந்தது. 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதினாறு இறப்புகள் பதிவாகி, மொத்த இறப்பு எண்ணிக்கை 498-ஆக உயர்ந்தது.</p><p>மேலும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எந்த மரணமும் பதிவாகவில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது”.</p><h3><strong>மனிதக் கழிவு அகற்றுதல்</strong></h3><p>மனிதக் கழிவு அகற்றுதல் குறித்து அரசாங்கம் மேற்கோள் காட்டிய வரையறையில், மனிதக் கழிவுகள் முழுமையாக மட்குவதற்கு முன்னர், சுகாதாரமற்ற கழிப்பறைகள், திறந்த வடிகால்கள், குழிகள், ரெயில் தண்டவாளங்கள் அல்லது அறிவிக்கப்பட்ட பிற இடங்களிலிருந்து அவற்றை கையால் சுத்தம் செய்வதைக் குறிக்கிறது.</p><p>அதே சமயம், அபாயகரமான சுத்தம் செய்தல் என்பது, பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சுத்தம் செய்யும் கருவிகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாமல், ஒரு கழிவுநீர்க் குழாய் அல்லது மலத் தொட்டியை கைமுறையாக சுத்தம் செய்வதைக் குறிக்கிறது.</p><p>எனவே அந்த அறிக்கையில், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியால் ஏற்பட்ட மரணங்களாக அல்லாமல், அபாயகரமான கழிவுநீர் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட மரணங்களாக அந்த 498 உயிரிழப்புகளையும் குறிப்பிட்டுள்ளது.</p><p>2024-25 ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஒருவர்கூட மனிதக் கழிவுகளை அகற்றுபவர் என அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.</p><h3><strong>உத்தரப் பிரதேசத்தில் தூய்மை பணியாளர்கள்</strong></h3><p>இந்த பணியில் ஈடுபட்டு வரும் பாதிக்கும் மேற்பட்டோர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் மொத்தம் 32,473 பேர் இருந்ததாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>மகாராஷ்டிராவில் 6,325, உத்தரகாண்டில் 4,988 மற்றும் அசாமில் 3,921 பேர் இருந்தனர்.</p><p>மேலும், கழிவுநீர் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் போது நிகழ்ந்த 498 மரண வழக்குகளில் வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த விவரங்களையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.</p><h3><strong>நிவாரணம்</strong></h3><p>2023 அக்டோபரில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டதாக அது தெரிவித்தது.</p><p>அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 345 வழக்குகள் ரூ. 10 லட்சம் செலுத்தும் பிரிவிலும், 75 வழக்குகள் ரூ. 30 லட்சம் செலுத்தும் பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>22 வழக்குகளில் பகுதி இழப்பீடு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேசமயம் 56 வழக்குகளில் பணம் செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்த முடியவில்லை.</p><p>2025-ல் பதிவான 47 மரணங்களில் 20-க்கான இழப்பீடு உறுதிசெய்யப்படவில்லை. ஜூன் 30 வரை பதிவான 16 வழக்குகளில், 2026-ஆம் ஆண்டிற்கான ரூ. 30 லட்சம் தொகையும் ஆறு வழக்குகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>மீதமுள்ள 10 வழக்குகளின் இழப்பீட்டு நிலை குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதாரச் சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (NAMASTE) திட்டத்தின் கீழ் 89,915 தூய்மை பணியாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>இத்திட்டம், இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார இயந்திரங்களுக்காகப் பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சி, மருத்துவக் காப்பீடு மற்றும் நிதி உதவியை வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>கீழடி அகழாய்வு முடிவுகளில் இலங்கைத் தமிழ் வம்சாவளியினருக்கு தொடர்பு: மரபியல் துறைத் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-excavation-links-sri-lankan-tamils-genetics-head</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-excavation-links-sri-lankan-tamils-genetics-head#comments</comments><guid isPermaLink="false">fe79bd08-91bf-455f-a44a-5aa9c9314e74</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:38:03 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:38:03.724Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Excavation,அகழ்வாராய்ச்சி,keezhadi,Sivagalai excavation,கீழடி,சிவகலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/8pmh7fi9/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Keeladi-Adichanallur DNA Analysis: South Asian and Sri Lankan Tamil ancestry connection revealed]]></media:title><media:description type="html"><![CDATA[ Keeladi-Adichanallur excavation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/8pmh7fi9/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF">கீழடி</a> மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">ஆதிச்சநல்லூர்</a> பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மனித டி.என்.ஏ பகுப்பாய்வில், அங்கு வசித்தவர்கள் தென்னிந்திய, இலங்கைத் தமிழ் மற்றும் தெற்காசிய வம்சாவளியினருடன் நெருங்கிய மரபணுத் தொடர்பைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p>மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறையில் உள்ள பண்டைய டிஎன்ஏ ஆய்வகம், முக்கிய தொல்பொருள் தளங்களிலிருந்து சிதைந்த டிஎன்ஏ மாதிரிகளிலிருந்து 75,000-க்கும் மேற்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னரே இந்த கண்டுபிடிப்புகளை எட்டியுள்ளது.</p><h3>மரபியல் துறைத்தலைவர் பேட்டி </h3><p>இதுகுறித்து மரபியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி. குமரேசன் கூறுகையில், “கீழடி மக்கள் பயன்படுத்தி வந்த  சுடுகாடான கொந்தகையிலிருந்து சுமார் 75,000 தரவுகளும், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகலையில் உள்ள டி.என்.ஏ மாதிரிகளிலிருந்து முறையே சுமார் 9,000 மற்றும் 6,000 தரவுகளையும் நாங்கள் பிரித்தெடுத்துள்ளோம். </p><p>இந்த தரவுகள் தென்னிந்தியர்கள், இலங்கையர்கள் மற்றும் தெற்காசியர்களுடன் நெருங்கிய தொடர்புடைய அல்லீல் அதிர்வெண்களைக் (allele frequencies) காட்டுகின்றன.</p><p>நாங்கள் மேலும் பல தரவுகளை பிரித்தெடுத்து பதப்படுத்த விரும்புகிறோம். மேலும் சில மாதிரிகளிலிருந்தே அதைச் சாதித்துவிடுவோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். </p><p>பல்வேறு முறைகளை பயன்படுத்தி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதைச் சாதித்துவிடுவோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.</p><p>நாங்கள் மேலும் இரண்டு சுற்றுகளுக்கு செல்வோம், தரவுகள் உறுதியானவுடன், அதன் கண்டுபிடிப்புகளை சர்வதேச இதழ்களில் வெளியிடுவோம். </p><p>ஆராய்ச்சியை முன்னோக்கி எடுத்து செல்வதற்காக, அதன் கண்டுபிடிப்புகளையும் தரவுகளையும் பொதுமக்களுக்கு வெளியிட விரும்புகிறோம்.</p><p>சங்க இலக்கியம் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. அதன் குறிப்புகளைப் பயன்படுத்தி பல விஷயங்களில் எங்களால் ஒரு முடிவுக்கு வர முடிகிறது. அது இல்லாமல், இந்தப் பணி மிகவும் கடினமாக இருந்திருக்கும்,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>கீழடி மற்றும் சிவகலை அகழாய்வுகள்</strong></h3><p>கீழடி என்பது இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையைச் (ASI) சேர்ந்த கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவால் 2014-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சங்க கால தளமாகும். இது கார்பன் காலக்கணிப்பின்படி 2,600 ஆண்டுகள் பழமையானது எனத் தேதியிடப்பட்டுள்ளது.</p><p>சிவகலையில் கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கருவிகள் கி.மு. 3345-ஆம் ஆண்டைச் சேர்ந்தவை எனத் தேதியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், உருக்கப்பட்ட இரும்பிற்கான அறியப்பட்ட மிகப்பழமையான தேதிகளில் ஒன்றாக இது திகழ்கிறது.</p><p>டிஎன்ஏ பகுப்பாய்வுக்கு இணையாக, மனித இடம்பெயர்வைத் தவிர, வளர்ப்பு விலங்குகள் மற்றும் கால்நடைகளின் இனங்களையும், அதன் மூலம் அவற்றின் இடம்பெயர்வு முறையையும் அடையாளம் காண்பதற்காக, அந்த ஆய்வகம் புரதங்களையும் வரிசைப்படுத்தியுள்ளது. </p><p>பயன்படுத்தப்பட்ட பானைகளில் கொலஸ்ட்ரால் இருப்பது, அங்கு வசித்த மக்கள் இறைச்சியை உட்கொண்டனர் என்பதற்கு சான்றாக அமைகிறது.</p><p>புதிய உயிர்வேதியியல் பகுப்பாய்வுகள், பண்டைய தமிழர்கள் பல்வேறு வகையான அரிசி மற்றும் தினையைப் பயிரிட்டு, குறைந்தது 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நுட்பமான சமையல் மரபுகள் தோன்றியதைக் காட்டி, பண்டைய விவசாயப் பழக்கவழக்கங்களை வெளியே கொண்டுவந்துள்ளது.</p><p>தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகலை ஆகிய இடங்களிலிருந்து பெறப்பட்ட அரிசி மாதிரிகளிலும், கொடுமணலில் இருந்து பெறப்பட்ட தினையிலும் கண்டறியப்பட்ட கரிம மூலக்கூறுகள், நெய், பீன்ஸ், கீரை, பால், வெள்ளரிக்காய், நிலக்கடலை மற்றும் தேங்காய் ஆகியவற்றுடன் அரிசி உட்கொள்ளும் ஒரு உணவுமுறையை வெளிப்படுத்துகின்றன.</p><p>குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு, பொருநராற்றுப்படை உள்ளிட்ட சங்க இலக்கிய மேற்கோள்களை பயன்படுத்தி இந்தக் கருத்துக்கள் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 4 முதல் கூகுள் அசிஸ்டன்ட் நிறுத்தப்படும் - மாற்று செயலியை அறிவித்த கூகுள்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/google-assistant-service-to-end-from-september-4-says-google</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/google-assistant-service-to-end-from-september-4-says-google#comments</comments><guid isPermaLink="false">d3b10dd6-581e-4e83-925a-c75cb692f5c0</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:34:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:34:09.568Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Google,Google Assistant,கூகுள்,Gemini AI,கூகுள் அசிஸ்டன்ட்,கூகுள் ஜெமினி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/g4j2zt2x/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Google Assistant Shutdown: Access to Assistant to end on Android devices from September 4]]></media:title><media:description type="html"><![CDATA[ Google Assistant Shutdown]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/g4j2zt2x/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூகுள் நிறுவனம் தனது முதன்மை செயற்கை நுண்ணறிவு உதவியாளராக ஜெமினிக்கு மாற உள்ள நிலையில், வரும் செப்டம்பர் 4 முதல் ஆன்ட்ராய்டு சாதனங்களில், கூகுள் அசிஸ்டன்ட்டை படிப்படியாக நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>இந்த மாற்றம் ஒரு சாதனத்தில் அறிமுகம் செய்யப்படவுடன், பயனர்கள் தங்கள் ஆன்ட்ராய்டு தொலைபேசி, டேப்லட் அல்லது இணைக்கப்பட்ட சாதனங்களில் கூகுள் அசிஸ்டன்ட்டை பயன்படுத்தவோ அல்லது அதற்கு மீண்டும் மாறவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>கூகுள் அசிஸ்டன்ட்டுக்கு மாற்றாக கூகுள் ஜெமினி</strong></h3><p>இதுகுறித்து கூகுள் வெளியிட்ட அறிவிப்பில், “செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் கூகுள் அசிஸ்டன்ட்டிற்கான அணுகலை நாங்கள் நீக்க தொடங்குவோம்.</p><p>இந்த செயல்முறை அனைவரையும் சென்றடைய சில வாரங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கிறோம். அணுகல் நீக்கப்பட்டவுடன், பயனர்கள் தங்கள் தொலைபேசி, டேப்லெட் அல்லது இணைக்கப்பட்ட சாதனங்களில் கூகுள் அசிஸ்டன்ட்டை இனிமேல் பயன்படுத்தவோ அல்லது மீண்டும் அதை தொடரவோ முடியாது” என்று தெரிவித்துள்ளது.</p><p>இந்த நடவடிக்கை இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மூலம் ஆன்ட்ராய்டு ஆட்டோவை பயன்படுத்தும் wear OS ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் வாகனங்களிலும் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதுகுறித்து கூகுள் நிறுவனம் மேலும் கூறுகையில், “கடந்த ஆண்டு முதலே லட்சக்கணக்கான பயனர்கள் அசிஸ்டன்டில் இருந்து ஜெமினிக்கு மாற தொடங்கினர்.</p><p>குறிப்பாக கடந்த ஆண்டில் ஜெமினி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தனர். இதையடுத்து இரண்டாவது காலாண்டில், ஜெமினி செயலி 950 மில்லியன் மாதாந்திர பயனாளர்களை எட்டியது.</p><p>மேலும் கூகுள் ஜெமினி செயலி, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 450 மில்லியனை விட இரண்டு மடங்கு பயனர்களை பெற்று அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இதன் தினசரி பயன்பாடு மூன்று மடங்காக அதிகரித்து காணப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.</p><p>தற்போது இந்த புதிய மாற்றம் நடைபெற்று வருவதால், கூகுள் பாட்காஸ்ட்ஸ், ஹேங்அவுட்ஸ், கூகுள் டொமைன்ஸ் மற்றும் ஸ்டேடியா போன்ற சேவைகளுடன், கூகுள் அசிஸ்டன்ட் சேவையும், கூகுளின் நிறுத்தப்பட்ட தயாரிப்புகள் பட்டியலில் இணைய உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கச்சா எண்ணெய்க்கு மாற்றாக உயிரி எரிவாயு - ரூ.23,731 கோடி கோபர்தன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/biogas-alternative-to-crude-oil-rs-23731-crore-gobardhan-scheme-gets-cabinet-nod</link><comments>https://www.maalaimalar.com/news/national/biogas-alternative-to-crude-oil-rs-23731-crore-gobardhan-scheme-gets-cabinet-nod#comments</comments><guid isPermaLink="false">87dcc139-1ecd-4410-88a9-af4e332e2ffa</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:22:10 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:22:10.494Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>LNG,gobardhan scheme,bio gas,கோபர்தன் திட்டம்,திரவ இயற்கை எரிவாயு,உயிரி எரிவாயு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/3capvi6x/Untitled-design-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Gobardhan scheme]]></media:title><media:description type="html"><![CDATA[ Bio Gas Energy Push: Cabinet clears ₹23,731 crore Gobardhan scheme to boost CBG production]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/3capvi6x/Untitled-design-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டில் உயிரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூ.23,731 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த உயிரி எரிசக்தித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மற்றும் பொருளாதார அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உள்நாட்டு சிபிஜி உற்பத்தியை கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரிக்கும் நோக்கத்துடன், கோபர்தன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.</p><p>ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து நீடித்து வரும் போர் பதற்றம் மற்றும் இடையூறு காரணமாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதியில் 55 முதல் 60 சதவீதம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.</p><p>இதன் காரணமாக அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை ஒரு உள்நாட்டுத் தீர்வாக மத்திய அரசாங்கம் கருதுகிறது.</p><h3><strong>கோபர்தன் திட்டம் குறித்து அமைச்சர் அஸ்வினி  வைஷ்ணவ்</strong></h3><p>இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ”கோபர்தன் திட்டம் 2026-27 முதல் 2035-36 வரை செயல்படுத்தப்பட்டு, அழுத்தப்பட்ட உயிரிவாயுவை இந்தியாவின் எதிர்கால எரிசக்தி கலவையின் ஒரு முக்கிய தூணாக நிலைநிறுத்தும்.</p><p>மேலும் இந்த திட்டம், நாட்டில் உள்ள விவசாயக் கழிவுகள், கால்நடைச் சாணம், சர்க்கரை ஆலை கழிவு, நகராட்சி கரிமக் கழிவுகள் மற்றும் பிற உயிரிவள ஆதாரங்களை தூய்மையான எரிபொருள், இயற்கை உரம், கிராமப்புற வருமானம் மற்றும் தேசியப் பொருளாதார மதிப்பாக மாற்றுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>உறுதிசெய்யப்பட்ட தேவை, லாபகரமான மற்றும் நிலையான விலை நிர்ணயம், மூலதன உதவி, குழாய்வழி உள்கட்டமைப்பு, கடன் ஆதரவு மற்றும் தொழில்நுட்ப புதியம்பாடு ஆகியவற்றின் மூலம், </p><p>இந்தியாவின் அழுத்தப்பட்ட உயிரிவாயு (CBG) துறையை தேசிய அளவில் கொண்டு செல்வதற்கு தேவையான வலுவான கட்டமைப்பை கோபர்தன் திட்டம் வழங்கும்” என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>