<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 26 Jul 2026 12:29:55 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-july-2026#comments</comments><guid isPermaLink="false">31ef8afe-34cc-49f3-ad59-6c3bec2d6756</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:48:25 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:57:07.654Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/sgf9d9gb/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/sgf9d9gb/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/india-democratic-space-shrinking-justice-ujjal-bhuyan-warns-of-curbs-on-dissent">கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா?.. இந்தியாவில் சுதந்திரம் சுருங்கி வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை</a></p><p>*காசாவுக்காக போராடுவது தேசபக்தி அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியதையும் உஜ்ஜல் புயான் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.</p><p>*விவாதமும், மாற்றுக்கருத்தும் தான் ஜனநாயகத்தின் சாரம். துரதிஷ்டவசமாக அது குற்றமாக மாற்றப்பட்டு வருகிறது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/hindutva-leader-satyam-pandit-caught-on-video-assaulting-neet-protest-students">Video: ஜந்தர் மாந்தர் போராட்டத்தில் இந்துத்துவா தேசியவாத தலைவர் மாணவர்களைத் திட்டி, தாக்கும் காட்சி வைரல்!</a></p><p>* மாணவர்களைத் தாக்கிய சத்யம் பண்டிட்டை கைது செய்ய அரசியல் தலைவர்கள் கடும் வலியுறுத்தல்</p><p>* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போராட்டத்தால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-35-crore-bribery-case-questioning-of-senthil-balaji-completed" rel="nofollow">ரூ.35 கோடி பேரம் வழக்கு- செந்தில் பாலாஜியிடம் இன்று 2ம் நாள் விசாரணை நிறைவு</a></p><p>*  திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.</p><p>*  இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது என உத்தரவு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்த உத்தரவிட்டது நீங்களா? - அமித் ஷாவுக்கு ராகுல் கடிதம்</a></p><p>*சீருடையின்றி சாதாரண உடையில் மாணவர்களை லத்திகளால் தாக்கியவர்கள் போலீஸ்காரர்களாஅல்லது தன்னார்வலர்களா</p><p>*சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/ukraine-odesa-port-attack-on-indian-sailors-cargo-ship-mv-agl-hit-2-indians-safe-2-missing">உக்ரைன் துறைமுகத்தில் வணிக கப்பல் மீது தாக்குதல்.. 2 இந்தியர்கள் மாயம் - கருங்கடலில் தொடரும் பதற்றம்</a><br></p><p>*எம்வி ஏஜிஎன் என்ற அந்த கப்பல் நேற்று ஒடெசா துறைமுகத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p>*நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக இந்திய தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/india-defence-new-peak-mann-ki-baat-modi-pride" rel="nofollow">பாதுகாப்பு துறையில் இந்தியா புதிய உச்சம்- 'மன்கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்</a></p><p>* இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது.</p><p>* இந்தியாவின் விண்வெளி துறையில் நிகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் இதுவாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-kannada-protest-halts-tamil-nadu-government-buses-in-hosur">கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம் : அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்</a></p><p>* தமிழக அரசைக் கண்டித்து கர்நாடக எல்லையில் இன்று அதிரடி போராட்டம்.</p><p>* அத்திப்பள்ளி எல்லையில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் மறியல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-koniamman-temple-donation-box-theft-action-on-seven">கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு: அதிகாரிகள் உள்பட 7 பேர் அதிரடி சஸ்பெண்ட்!... </a></p><p>*திருவிழாவிற்கு வைத்திருந்த உண்டியலை மறைத்து அதில் இருந்த பணத்தை திருடியது அம்பலமாகியுள்ளது.</p><p>*7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பதில் புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/protesters-besiege-governor-house-in-chennai-over-neet">தடுப்பு வேலியை தாண்டி ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி - நீட் தேர்வை ரத்து செய்ய மாணவர் அமைப்பு போராட்டம்</a></p><p>* அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>* தடுப்பு வேலிகளை தாண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/zomato-delivery-agent-on-horse-rides-through-chennai-ecr">சென்னை ஈசிஆர் சாலையில் குதிரை மூலம் உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்..</a></p><p>* இருசக்கர வாகனத்திற்குப் பதிலாக குதிரையில் உணவு டெலிவரி</p><p>* வெள்ளை நிற குதிரையில் உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas">ஆக்கிரமிப்பு காஷ்மீரை தவிர பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ராஜ்நாத் சிங்</a></p><p>* இந்தியா செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புகிறது.</p><p>* ​​பாகிஸ்தான் எல்லை தாண்டி பயங்கரவாதிகளை அனுப்புவதில் ஈடுபட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/tirupati-temple-devotees-wait-for-18-hours-for-darshan">திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்</a></p><p>* உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.</p><p>* திருப்பதியில் நேற்று 70,216 பேர் தரிசனம் செய்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-govt-defends-tamil-nadu-rights-in-mekadadu-dispute-minister-athav-arjuna-explains">மேகதாது விவகாரம்: தமிழகத்தின் உரிமைகளை தவெக அரசு காக்கும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!... </a></p><p>*காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அமைதி காப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் உண்மைகளுக்குப் புறம்பானது.</p><p>*ஜூன் 19 அன்று முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-government-rejects-metro-again-coimbatore-madurai-dreams-shattered">மீண்டும் நோ சொன்ன மத்திய அரசு: கோவை, மதுரை மக்களின் மெட்ரோ ரெயில் கனவு மீண்டும் கலைந்தது!... </a></p><p>*சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி மே மாதத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் கோரிக்கை அனுப்பியிருந்தது.</p><p>*தமிழ்நாட்டின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-warns-uk-says-armed-forces-ready-to-defend-country-over-us-bombers">ஈரானின் திடீர் எச்சரிக்கை: இங்கிலாந்தின் அளித்த தரமான பதில்..!</a></p><p>* ஈரானின் எந்தவொரு தாக்குதலில் இருந்தும் நாட்டை பாதுகாக்க ஆயுதப்படைகள் தயாராக உள்ளன.</p><p>* சொந்த மண் அல்லது வெளிநாட்டு மண்ணிலும் இருந்து பாதுகாத்துக் கொள்வோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke">எங்களை சந்தேகித்து விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி, இது வெறும் தொடக்கம்தான்: அபிஜீத் தீப்கே... </a></p><p>* ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் காத்திருந்த மக்கள்   ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>* எங்களைச் சந்தேகித்து, விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/students-demand-end-to-exam-paper-leaks-from-new-education-minister-pralhad-joshi">இனி வினாத்தாள் கசிவு இருக்கக் கூடாது: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாணவர்கள் கோரிக்கை!... </a></p><p>*அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வி வழங்கிட புதிய கல்வி அமைச்சருக்கு மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p> •வினாத்தாள் கசிவில் ஈடுபடும் 'தேர்வு மாஃபியாக்கள்' மீதுகடுமையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-lays-wreath-at-the-kargil-war-memorial-to-pay-tribute-to-bravehearts-who-laid-down-their-lives-in-kargil-war-in-1999">கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை</a></p><p>* போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.</p><p>* கார்கில் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-cjp-protest-failure-of-central-govt-opposition">ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விதான் இளைஞர்களின் போராட்டம்: ஜனநாயகத்திற்கான ஆக்சிஜன்- உத்தவ் தாக்கரே</a></p><p>* டெல்லி முதல் மும்பை வரை, மக்கள் அச்சத்தைத் தாண்டி வந்துவிட்டதை நான் உணர்ந்துள்ளேன். இதுவரை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த மக்கள், இப்போது தங்கள் உயிருக்கு அஞ்சும் நிலையை உதறிவிட்டு வீதிகளில் இறங்கியுள்ளனர்.</p><p>* மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் நாட்டை முற்றிலுமாகச் சீரழித்துவிட்டனர். இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/noul-typhoon-prompts-red-alert-in-guangdong-flights-and-trains-suspended">சீனாவை அச்சுறுத்தும் 'நவுல்' புயல்: குவாங்டாங் கடலோரப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை; விமானங்கள், ரயில்கள் ரத்து!...</a> </p><p>* சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வரும் 'நவுல் புயல் காரணமாக, நாட்டின் தேசிய வானிலை மையம் மிக உயர்ந்த அபாய எச்சரிக்கையான 'சிவப்பு எச்சரிக்கையை' விடுத்துள்ளது. </p><p>* நடப்பு ஆண்டின் 12-வது புயலான இது, குவாங்டாங் மாகாணத்தின் கடலோரப் பகுதியில் தீவிரமாகத் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/shock-in-germany-car-attack-at-berlin-pride-parade">ஜெர்மனியில் பேரதிர்ச்சி: பெர்லின் 'ப்ரைட்' பேரணியில் காரை ஏற்றித் தாக்குதல்-ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்!... </a></p><p>* வெள்ளை நிற கார் ஒன்று கூட்டத்திற்குள் அதிவேகமாகப் புகுந்தது.</p><p>* 16 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt">டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிகள் தளர்வு: தமிழக அரசு புதிய நடவடிக்கை!... </a></p><p>தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களைத் தொடங்குவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாகப் புதிய தளர்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar">ஜந்தர் மந்தரில் அமைதி திரும்பியது: குப்பைகளை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர்</a></p><p>* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>* இதன்மூலம் கரப்பான் பூச்சி இளைஞர்களின் 36 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/anahat-singh-scripts-history-becomes-1st-indian-to-win-junior-world-championship">உலக ஜூனியர் ஸ்குவாஷ்: முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த அனாஹத் சிங்</a></p><p>* இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.</p><p>* இந்த மோதலில் அனாஹத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21">தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானாவில் தீர்மானம் நிறைவேற்ற ரேவந்த் ரெட்டி முடிவு</a></p><p>* ராகுல் காந்தி பிரதமரானால், Gen Z தலைவர் மத்திய அமைச்சர் ஆக முடியும் என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும்.</p><p>* நான் இந்தியா பிளாக்கிடம் பேசுவேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்திப்பேன். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kandararu-brahmadathan-to-be-new-sabarimala-tantri">சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தன் தேர்வு</a></p><p>* புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.</p><p>* தீர்மான அறிக்கையை கேரள ஐகோர்ட்டின் தனி அமர்வுக்கு அனுப்பி வைத்து அதற்கான ஆணை பெறப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கங்கையில் பிரியாணி சாப்பிடுவது ஒன்றும் குற்றமல்ல - மாற்று கருத்தைக் குற்றமாக்குபவர்களுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்ற நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/eating-biryani-on-the-banks-of-the-ganges-is-not-a-crime-supreme-court-judge-reprimands-those-who-criminalize-dissenting-views</link><comments>https://www.maalaimalar.com/news/national/eating-biryani-on-the-banks-of-the-ganges-is-not-a-crime-supreme-court-judge-reprimands-those-who-criminalize-dissenting-views#comments</comments><guid isPermaLink="false">c7633ba9-d20e-4894-a332-56ebaf20ac01</guid><pubDate>Sun, 26 Jul 2026 12:29:44 +0000</pubDate><atom:updated>2026-07-26T12:29:44.996Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கங்கை நதி,Ganga,Justice Bhuyan,Alternative views,நீதிபதி உஜ்ஜால் புயான்,மாற்றுக் கருத்துக்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/q1sspthp/New-Project-2026-07-26T175920.322.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கங்கையில் பிரியாணி சாப்பிடுவது ஒன்றும் குற்றமல்ல - மாற்று கருத்தைக் குற்றமாக்குபவர்களுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்ற நீதிபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/q1sspthp/New-Project-2026-07-26T175920.322.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதற்கான சுதந்திரம் குறைந்து வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை தெரிவித்துள்ளார். போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உஜ்ஜல் புயான் கலந்துகொண்டு பேசினார். </p><p>இந்நிகழ்ச்சியில் இரண்டு சம்பவங்களை முன்வைத்து இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். </p><h2>காசா போராட்ட வழக்கு</h2><p>காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைகளுக்கு எதிராக, ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்தாண்டு ஜூலையில் அனுமதி கோரியது. ஆனால் இப்போராட்டத்திற்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்தது. </p><h2>பிரியாணி சாப்பிட்டதற்கு கைது</h2><p>கடந்த மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில், கங்கை நதியில் படகு சவாரி செய்தபோது சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக முஸ்லிம் மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் குறிப்பிட்டுப் பேசினார்.</p><p>“சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஒரு குற்றம் அல்ல என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். கங்கை நதியில் அமர்ந்து கோழி இறைச்சி சாப்பிடுவதை தடை செய்ய இந்தியாவில் சட்டம் எதுவும் இல்லை. ஆனால், அந்த ஒரு காரணத்திற்காகத்தான் 14 பேர் கைது செய்யப்பட்டு, மூன்று மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது.</p><p>இதுபோன்ற ஒரு செயலுக்காக மக்களைக் கைது செய்து, மூன்று மாதங்களுக்கு ஜாமின் தராமல் இருக்கலாமா? மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.</p><p>இந்த இரண்டு சம்பவங்களையும் குறிப்பிட்டு, இந்தியாவில் மாற்று கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான பொதுவெளிகள் சுருங்கி வருகின்றன. அமைதியான போராட்டங்களும், அரசை விமர்சிப்பதும் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளாகும். சாதாரண விஷயங்களைக் கூட குற்றமாக மாற்றுவது கவலைக்குரிய போக்கு என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>நீதிமன்றங்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்</h2><p>பொது ஆர்ப்பாட்டங்கள், சமூக ஊடகப் பதிவுகள், மீம்ஸ்கள் போன்ற காரணங்களுக்காக கைது செய்யப்படும் போக்கு தற்போது அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த அவர், இத்தகைய நடைமுறைகள் தனிநபர் சுதந்திரத்தைப் பலவீனப்படுத்துவதாக தெரிவித்தார். </p><p>மேலும் நீதிமன்றங்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்திய அவர், நீதிமன்றங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல என்றும் தெரிவித்தார். </p><p>பொதுமக்கள் நீதித்துறையின் மீது வைத்துள்ள நம்பிக்கை, வெறும் தற்பெருமை பேசுவதிலில்லை. மாறாக, அரசியலமைப்பு விழுமியங்களுக்கும், நியாயமான விமர்சனங்களுக்கும் பொறுப்புக்கூற தயாராக இருப்பதில்தான் உள்ளது என்றுக் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>நான் யானை இல்ல; குதிரை!.. திரைப்படமாக உருவாகும் ரஜினியின் வாழ்க்கை? </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rajinikanth-biopic-superstars-life-story-to-be-made-into-a-film</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rajinikanth-biopic-superstars-life-story-to-be-made-into-a-film#comments</comments><guid isPermaLink="false">231a356a-f1e8-4566-a86d-a772f9d6662b</guid><pubDate>Sun, 26 Jul 2026 12:29:39 +0000</pubDate><atom:updated>2026-07-26T12:29:39.578Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,ரஜினிகாந்த்,biopic,பயோபிக்,autobiography,சுயசரிதை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/zjnl989x/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரஜினி]]></media:title><media:description type="html"><![CDATA[ ரஜினி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/zjnl989x/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சூப்பர் ஸ்டார் <a href="https://www.maalaimalar.com/topic/rajinikanth">ரஜினிகாந்த் </a>உடைய வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக உருவாக உள்ளதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. </p><p>பெங்களூருவில் ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கி தன் உழைப்பால் இந்திய சினிமாவின் உச்சநட்சத்திரமாக உயர்ந்து இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் சம்பாதித்துள்ள ரஜினியின் வாழ்க்கை ஒரு விறுவிறுப்பான திரைப்படத்திற்கு கச்சிதமான கதையாகும்.  </p> <h2>நான் யானை இல்ல; குதிரை</h2><p>குறிப்பாக நடிகராக தொடங்கி, நட்சத்திரமாக உயர்ந்த பின்னும் இடைப்பட்ட காலத்தில் அவர் சந்தித்த சவால்களும், ஒவ்வொரு முறையும் அதை அவர் கடந்து வந்த விதமும் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த ஒன்றே.</p><p>2002 தான் இயக்கிய பாபா பட தோல்விக்கு பின்னர் 3 ஆண்டுகள் திரையில் இருந்து விலகியிருந்த ரஜினி, 2005 இல் சந்திரமுகி மூலம் அதிரடியான ரீ என்ட்ரி கொடுத்தார்.</p><p>சந்திரமுகி இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, "நான் யானை இல்ல; குதிரை. டக்குனு எழுதிருச்சிடுவேன்" என கூறியது இதற்கு சிறந்த உதாரணம்.</p> <figure><img alt="ரஜினி" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/evfytkqn/tn-16.jpg" /><figcaption>ரஜினி </figcaption></figure><h2>சுயசரிதை டூ பயோபிக்</h2><p>கடந்த சில காலமாகவே ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.</p><p>தற்போது, அந்தச் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பது குறித்து தனது நெருங்கிய வட்டாரங்களுடன் அவர் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>அதில் அவரது வாழ்க்கையின் முக்கியக் கட்டங்கள், சந்தித்த சவால்கள், திரையுலக வெற்றிகள் மற்றும் மறக்க முடியாத தருணங்கள் இதில் இடம்பெறவுள்ளன.</p><p>இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.</p> <h2>மகள் சௌந்தர்யா</h2><p>முன்னதாக, ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா அளித்த ஒரு பேட்டியில், தனது தந்தை சுயசரிதை எழுதி வருவதை உறுதிப்படுத்தியிருந்தார்.</p><h2>திரைப்பயணம்</h2><p>50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.</p><p>பத்மபூஷன், பத்மவிபூஷன் மற்றும் திரையுலகின் உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே' விருதுகளை அவர் பெற்றுள்ளார்.</p><p>வரிசைகட்டும் படங்கள்</p><p>தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அக்டோபர் 15 அன்று வெளியாகவுள்ளது.</p><p>இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'தர்மன்' என்ற புதிய படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அசாம், குஜராத் உள்பட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை- 939 கிராமங்கள் மூழ்கின</title><link>https://www.maalaimalar.com/news/national/heavy-rains-flood-939-villages-in-assam-and-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/heavy-rains-flood-939-villages-in-assam-and-gujarat#comments</comments><guid isPermaLink="false">ebb8aa8e-ee6b-47d2-be4c-41c6007d3f53</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:57:23 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:57:23.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,அசாம்,கனமழை,வடமாநிலங்களில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ckg33ftk/rain1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heavy rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ckg33ftk/rain1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்குப் பருவமழை காரணமாக வட மாநிலங்க ளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.  கன மழை யால் அசாமில் வெள்ளப் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு 14 பேர் உயிரிழந்தனர்.</p><h2>61 பேர் பலி</h2><p>அசாம் மாநிலத்தில் இதுவரை மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 12 மாவட்டங்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வீடுகள், சாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளன. நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>சிவசாகர், சராதியோ, கோலாகாட் மற்றும் ஜோர் ஹாட் ஆகிய மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. </p><h2>939 கிராமங்கள் மூழ்கின</h2><p>இந்த மாவட்டங்களில் உள்ள 939 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 24 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் வெள் ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அசாமின் சிவ சாகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திக்கோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p>பெருக்கெடுத்து ஓடிய  வெள்ள நீரில் கார்கள்  அடித்து செல்லப் பட்டன. அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து, தற்போதைய வெள்ள நிலவரம் குறித்து விசாரித்தார்.</p><p>இது தொடர்பாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் அசாம் மக்களுக்கு உறுதியளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>குஜராத்தில் கனமழையால் ஆறுகள், நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை 40,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். </p><p>கனமழைக்கு குஜராத் மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அகமதாபாத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. வாவ்த்ராட் மாவட்டத்தில் உள்ள பாபர் பகுதியில் 287 மி.மீ மழை பதிவாகியுள்ளது. </p><p>பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 18 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்களும், 32 மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்களும் அனுப்பப் பட்டுள்ளன. பல இடங்களில் துணை ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. குஜராத்தின் பல பகுதிகளில் இன்று 204.5 மி.மீ-க்கு மேல் மழை பெய்யக்கூடும் என எச்சரித்து, வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>ஆறுகளில் வெள்ளம்</h2><p>இமாச்சலப் பிரதேசத்தில், தொடர் கனமழை, நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 134 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பீகாரில் 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. </p><p>உத்தரப் பிரதேசத்தில் கங்கை மற்றும் யமுனா உட்பட 10 ஆறுகளில் பெருக் டுத்து ஓடுகிறது. காக்ரா மற்றும் ஷார்தா உட்பட 4 ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்லியாவில், சரயு ஆற்றில் ஒரு அரசுப் பள்ளியும் ஒரு வீடும் அடித்துச் செல்லப்பட்டன. அதேசமயம் கோண்டாவில் 100 ஏக்கருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கின.</p>]]></content:encoded></item><item><title>கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா?.. இந்தியாவில் சுதந்திரம் சுருங்கி வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை  </title><link>https://www.maalaimalar.com/news/national/india-democratic-space-shrinking-justice-ujjal-bhuyan-warns-of-curbs-on-dissent</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-democratic-space-shrinking-justice-ujjal-bhuyan-warns-of-curbs-on-dissent#comments</comments><guid isPermaLink="false">d0e900a1-a3e9-4f78-b4c3-33ce577d9531</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:53:38 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:53:38.451Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர்நீதிமன்றம்,High Court,Supreme Court Judge,உச்சநீதிமன்றம்,உச்சநீதிமன்ற நீதிபதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mnwtgymx/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உஜ்ஜல் புயான்]]></media:title><media:description type="html"><![CDATA[ உஜ்ஜல் புயான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mnwtgymx/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கவலை தெரிவித்துள்ளார். </p><p>போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார். </p><p>முதலாவதாக, "கங்கை நதியில் படகில் வைத்து அசைவம் சாப்பிடுவது சட்டப்படி குற்றமில்லை. ஆனால் மத்தியப் பிரதேச பாஜக அரசின் காவல்துறை, புனித நதியை அசுத்தம் செய்வதாக கூறி 14 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு  3 மாதம் சிறையில் கழித்தனர்.  </p><p>இந்த சம்பவம் தேசத்தின் குடிமக்கள் அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கிய சட்டபூர்வ உரிமையின் கீழ் செயல்படும்போதும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் தொடர்ச்சியான ஒரு போக்கை காட்டுகிறது. </p><p> இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவரின் பார்வையை பகிர்ந்து கொள்ளவும், அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தற்கான சுதந்திரம் உள்ளது. விவாதமும், மாற்றுக்கருத்தும் தான் ஜனநாயகத்தின் சாரம். துரதிஷ்டவசமாக அது குற்றமாக மாற்றப்பட்டு வருகிறது. " என தெரிவித்தார். </p><h2>மும்பை உயர் நீதிமன்றம் மீது விமர்சனம் </h2><p>மும்பையில் காசா மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த அனுமதி கோரியபோது, "இந்தியாவில் உங்களுக்குப் பிரச்சனைகளே இல்லையா? காசாவுக்காக போராடுவது தேசபக்தி அல்ல" என்று மும்பை <a href="https://www.maalaimalar.com/topic/high-court">உயர் நீதிமன்றம்</a> கூறியதையும்   உஜ்ஜல் புயான் சுட்டிக்காட்டி விமர்சித்தார். </p><p>அமைதியான முறையில் மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதும் ஜனநாயக உரிமையே என்றும், நீதிமன்றங்கள் இதுபோன்ற கருத்துச் சுதந்திரத்தைக் முடக்கும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.</p> <h2>ஜாமீன் தாமதம்</h2><p>சாதாரணப் போராட்டங்கள், சமூக வலைத்தளப் பதிவுகள் மற்றும் மீம்களுக்குக்கூட கடுமையான குற்றவியல் சட்டங்களைப் பயன்படுத்துவது தனிநபர் சுதந்திரத்தைப் பறிப்பதாகும்.</p><p>நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கினாலும், அது நீண்டகாலச் சிறைவாசத்திற்கு பிறகே கிடைக்கிறது.</p><p>மேலும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக் கூடாது என்ற ஜாமீன் நிபந்தனைகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மறைமுகமாக முடக்குகின்றன.</p><p>நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் போக்கை வழக்கறிஞர்களும் சட்ட மாணவர்களும் நடுநிலையோடு விமர்சன கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்.</p><p>நம்மை நாமே புகழ்ந்துகொள்வதை விட அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்புகளைக் காப்பாற்றுவதே நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை உயர்த்தும்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-6-districts-of-tamil-nadu-till-7-pm</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-6-districts-of-tamil-nadu-till-7-pm#comments</comments><guid isPermaLink="false">f3666553-0e54-4c03-b39b-529d3156fb26</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:37:04 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:37:04.059Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,TN weather,தமிழக வானிலை,சென்னை வானிலை,chennai Meteorological Centre,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/a2c5s9ek/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/a2c5s9ek/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. </p><p>இதன் எதிரொலியால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எந்தெந்த மாவட்டங்களில் மழை?</h2><p>தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Video: ஜந்தர் மாந்தர் போராட்டத்தில் இந்துத்துவா தேசியவாத தலைவர் மாணவர்களைத் திட்டி, தாக்கும் காட்சி வைரல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/hindutva-leader-satyam-pandit-caught-on-video-assaulting-neet-protest-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/hindutva-leader-satyam-pandit-caught-on-video-assaulting-neet-protest-students#comments</comments><guid isPermaLink="false">59a43b94-3f35-4ce9-986a-9a976341847d</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:17:18 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:17:18.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DharmendraPradhan,NEETProtest,SatyamPandit,சத்யம்பண்டிட்,MahuaMoitra,மஹுவாமொய்த்ரா,PralhadJoshi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/pj7b1o8x/SatyamPandit" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SatyamPandit ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/pj7b1o8x/SatyamPandit?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது சத்யம் பண்டிட் என்ற இந்துத்துவா தலைவர் வன்முறைத் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>காவி துண்டு அணிந்த நபர் மாணவர்களைத் தாக்கி, மிரட்டி, கேமரா முன்னிலையில் மன்னிப்புக் கேட்க வைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயை பரவி வருகிறது.</p><h2><strong>மாணவர்களிடம் மிரட்டல்</strong></h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி,'காக்ரோச் ஜனதா கட்சி' ஜன்தர் மந்தரில் 36 நாட்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தியது. </p><p>இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்ட மறுநாளில் இந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் வெள்ளை குர்தா மட்டும் காவித் துண்டு அணிந்த சத்யம் பண்டிட், இரண்டு மாணவர்களை வழிமறித்து அவர்களின் பெயர் மற்றும் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்புகிறார்.</p><h2><strong>தாக்குதல் மற்றும் கேமரா முன் மன்னிப்பு</strong></h2><p>மாணவர்கள் தாங்கள் 'இந்துக்கள்' என்று பதிலளித்த போதும், 'அப்படியென்றால் தேசவிரோத மாணவர்களை உருவாக்கும் இந்தத் தரப்புக்கு ஏன் ஆதரவு தருகிறீர்கள்?' என்று கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டுயுள்ளார். </p><p>அதோடு நிறுத்தாமல், ஒரு மாணவனின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொடூரமாகக் தாக்கியுள்ளார். </p><p>மேலும், அந்த மாணவனைப் பலவந்தமாக கேமராவைப் பார்க்க வைத்து மன்னிப்புக் கேட்கச் செய்ததோடு, 'இனிமேல் இந்த பக்கம் உன்னைப் பார்த்தால் அவ்வளவுதான், அடித்துத் துவம்சம் செய்துவிடுவேன்' என்று கொடூரமாக மிரட்டியுள்ளார்.</p><p>இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">इसका नाम Satyam Pandit है ... <br><br>जंतर मंतर पर आंदोलन में आए छात्रों को मारपीटकर गाली गलौज देकर, उन्हें हिन्दू मुस्लिम मतभेद करके, डरा धमकाके भगा रहा है !<br><br>खुद वीडियो रील बनाकर व्यूज से डॉलर कमा रहा है ! <a href="https://t.co/mnBAt5c0UR">pic.twitter.com/mnBAt5c0UR</a></p>&mdash; pk मौर्यवंश की बेटी ⛩️☸️ (@speak000000) <a href="https://x.com/speak000000/status/2081027442953912513?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்</strong></h2><p>இந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 'பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளின் அநாகரிகமான வன்முறைக்கு இதே சாட்சி. </p><p>இளைஞர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை பாஜகவினர் மீண்டும் ஒருமுறை துரோகம் மூலம் உடைத்தெறிந்துள்ளனர்' என்று சாடியுள்ளார். </p><p>இதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, "சத்யம் பண்டிட் என்ற இந்த வன்முறை நபரை டெல்லி போலீசார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் நாங்களே எப்ஐஆர் பதிவு செய்வோம்" என்று எச்சரித்துள்ளார்.</p><h2><strong>தர்மேந்திர பிரதான் ராஜினாமா</strong></h2><p>நீட்-யுஜி வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் 36 நாட்கள் நடத்தப்பட்ட போராட்டத்திற்குப் பின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். </p><p>மாணவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த மாதம் தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-to-visit-tamil-nadu-next-month</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-to-visit-tamil-nadu-next-month#comments</comments><guid isPermaLink="false">0f0b452c-93d4-4820-acd3-26abd92fc732</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:14:41 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:14:41.572Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/yoqqr1wq/New-Project-2026-07-26T164421.034.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அடுத்த மாதம் தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/yoqqr1wq/New-Project-2026-07-26T164421.034.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆக.1ம் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். </p><p>அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு ஒன்றில் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;</p><p>“ஆகஸ்ட் 1 அன்று தமிழ்நாடு எங்கள் அன்புத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது. </p><p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்தபடி, ராகுல் காந்தி ஆகஸ்ட் 1 அன்று தமிழ்நாடு வருகிறார்.</p><p>அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதி நிலைநாட்டுவது, இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்ற இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தியின் இந்த வருகை, தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும். </p><p>தமிழ்நாடு மக்கள் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் குடும்பம் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2029-ல் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20: தொடரை கைப்பற்றிய இந்தியா முதலில் பேட்டிங்!</title><link>https://www.maalaimalar.com/sports/3rd-t20-against-zimbabwe-india-to-bat-first</link><comments>https://www.maalaimalar.com/sports/3rd-t20-against-zimbabwe-india-to-bat-first#comments</comments><guid isPermaLink="false">9cf0e5b2-896d-410a-bfc8-359cddce10b0</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:00:34 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:00:34.629Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,ஜிம்பாப்வே,3rd T20I,டி20 தொடர்,India vs Zimbabwe,IND vs ZIM</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/15uznkwa/New-Project-2026-07-26T162822.476.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20: முதலில் பேட்டிங் செய்யும் இந்தியா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/15uznkwa/New-Project-2026-07-26T162822.476.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா.</p><p>இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி ஹராரேவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி பேட்டிங்களை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுகிறது. </p><h2>இந்தியா பிளேயிங் லெவன்:</h2><p>வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், சூர்யான்ஷ் ஷெட்கே, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், மயங்க் யாதவ், அசோக் சர்மா. </p><p>ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், பென் கர்ரன், தியோன் மியர்ஸ், சிக்கந்தர் ராசா (கேப்டன்), ரையான் பர்ல், வெஸ்லி மாதேவேரே, தடிவானாஷே மருமானி (விக்கெட் கீப்பர்), பிராட் எவன்ஸ், நியூமேன் ந்யாமூரி, வெல்லிங்டன் மசகட்சா, பிளெஸ்ஸிங் முசரபானி.</p>]]></content:encoded></item><item><title>வரத்து அதிகரிப்பு- முருங்கைக்காய் விலை சரிவு</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/drumstick-price-drops-to-rs-30-per-kg</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/drumstick-price-drops-to-rs-30-per-kg#comments</comments><guid isPermaLink="false">e55cdc6a-5b71-4a31-9a38-7336e751a4e9</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:45:49 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:45:49.636Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முருங்கைக்காய்,விலை குறைவு,காய்கறி விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/qp4duf9n/brinjal.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Brinjal price down]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/qp4duf9n/brinjal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு வருகிறது.</p><p>இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி குவிந்தன. வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்ற முருங்கைக்காய் தற்போது ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30வரை  விற்பனை ஆகிறது.</p><p>இதேபோல் கத்தரிக்காய், பீன்ஸ், வெண்டைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் மொத்த விற்பனையில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20வரை குறைந்து உள்ளது.</p><p>தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் ஊட்டி கேரட் இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.75க்கு விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ கேரட் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை விபரம் (கிலோ வில்) வருமாறு:-</p><p> தக்காளி-ரூ.10 முதல் ரூ.20வரை, நாசிக் வெங்காயம்- ரூ.25 முதல் ரூ.35 வரை, சின்ன வெங்காயம்-ரூ.50 முதல் ரூ.70 வரை, கத்தரிக்காய் -ரூ.30, பீன்ஸ் -ரூ.60, வெண்டைக்காய்-ரூ.20, அவரைக்காய் -ரூ.40, ஊட்டி கேரட்-ரூ.75,பீட்ரூட்-ரூ.30, பீ ர்க்கங்காய்-ரூ.40, பன்னீர் பாகற்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.35, கொத்தவரங்காய்- ரூ.25, முட்டை கோஸ்-ரூ.25, சவ்சவ்- ரூ.25, வெள்ளரிக்காய்- ரூ.35, பச்சை மிளகாய்-ரூ‌.30, இஞ்சி-ரூ.150.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் அரசியல்: 2028 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - சித்தராமையா அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/corrupt-politics-wont-contest-the-2028-assembly-election-siddaramaiah-announces</link><comments>https://www.maalaimalar.com/news/national/corrupt-politics-wont-contest-the-2028-assembly-election-siddaramaiah-announces#comments</comments><guid isPermaLink="false">738d1a05-23c0-4db4-b1c9-cb1789abc1a7</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:43:35 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:43:35.793Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சித்தராமையா,Siddaramaiah,2028 Assembly elections,2028 சட்டமன்ற தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/bre10qeu/New-Project-2026-07-26T161311.564.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊழல் அரசியல்: 2028 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - சித்தராமையா அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/bre10qeu/New-Project-2026-07-26T161311.564.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் 2028-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக பேசிய சித்தராமையா கூறியிருப்பதாவது;</p><p>“இன்று அரசியல் களம் சீர்கெட்டுவிட்டதால், 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. இருப்பினும், அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு, மக்களின் துயரங்கள் மற்றும் மகிழ்ச்சிக்கான குரலாக நான் தொடர்ந்து ஒலிப்பேன்.</p><p>வருணா தொகுதி மக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்று நான் முடிவு செய்துவிட்டேன். கடந்த காலங்களில் நான் தேர்தலில் போட்டியிட்டபோது, ​​தொகுதி மக்களே எங்களுக்குத் தேவையான நிதியை வழங்கி எங்கள் வெற்றியை உறுதி செய்தனர்; ஆனால் இன்று அத்தகைய சூழல் இல்லை.</p><p>எனக்கு இப்போது 79 வயதாகிறது. காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது; அதற்குள் எனக்கு 81 அல்லது 82 வயதாகிவிடும். எனது உடல்நிலை முன்பு இருந்ததைப் போல வலுவாக இல்லை. முன்பிருந்த அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவது இனி சாத்தியமில்லை.</p><p>2028-ஆம் ஆண்டில் எனக்கு 82 வயது நிரம்பும். அது எனது அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் தருணமாக அமையும். 1978-இல் தாலுகா வாரிய உறுப்பினராக எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். நான் வெற்றிகளையும் தோல்விகளையும் கண்டுள்ளேன். </p><p>ஆனால், நான் நம்பிய கொள்கைகளுக்கு முரணாகச் செயல்படாமலும், எனது மனசாட்சிக்குத் துரோகம் இழைக்காமலும் இருந்ததில் எனக்கு மனநிறைவு உண்டு.</p><p>தேர்தலில் போட்டியிடுவதானால் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது. இன்றைய அரசியல் முற்றிலும் ஊழல் மயமாகிவிட்டது. நேர்மையான அரசியலுக்கு இன்று இடமில்லாத நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழலில், இனிவரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை நான் எடுத்துள்ளேன்.</p><p>ஐந்து தசாப்தங்களாக, கர்நாடக மக்கள் என்னை தங்களில் ஒருவராகக் கருதி அன்புடன் வழிநடத்தி வந்துள்ளனர். அந்த நன்றிக்கடன் என்மீது உள்ளது. எனவே, எனது எதிர்கால வாழ்க்கையும் பொதுச் சேவைக்கே அர்ப்பணிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>உயிருக்கு ஆபத்தாகும் டெங்கு வைரஸ்! தொடக்கத்திலேயே கண்டறிவது எப்படி?</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/dengue-virus-risks-and-early-detection</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/dengue-virus-risks-and-early-detection#comments</comments><guid isPermaLink="false">bf56ad2d-f1bd-468b-a162-873e0960bbf4</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:37:52 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:37:52.158Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,Dengue virus,உடல்நலம்,டெங்கு நோய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/galjt4yh/dengue.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dengue Virus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/galjt4yh/dengue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். இந்த நோய், ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) எனப்படும் கொசுக்களின் கடியின் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல நாடுகளில் டெங்கு பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. </p><p>இந்தியாவிலும் குறிப்பாக மழைக்காலம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் மாதங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. முறையான விழிப்புணர்வு மற்றும் கொசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் இந்த நோயின் பரவலைக் கணிசமாகக் குறைக்க முடியும்.</p><h2><strong>டெங்கு நோய் எவ்வாறு பரவுகிறது?</strong></h2><p>டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை ஒரு ஏடிஸ் கொசு கடிக்கும்போது, அந்தக் கொசுவின் உடலில் டெங்கு வைரஸ் நுழைகிறது. பின்னர் அதே கொசு மற்றொரு ஆரோக்கியமான நபரைக் கடிக்கும்போது, வைரஸ் அவரது உடலுக்குள் பரவி நோயை ஏற்படுத்துகிறது. </p><p>இந்த நோய் காற்றின் மூலமாகவோ, உணவு அல்லது தண்ணீர் மூலமாகவோ, அல்லது ஒருவரை ஒருவர் தொடுவதன் மூலமாகவோ பரவுவதில்லை. டெங்கு பரவுவதற்கு கொசுவே முக்கிய இடைத்தரகராக செயல்படுகிறது.</p><h2><strong>டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:</strong></h2><p>டெங்கு வைரஸ் உடலுக்குள் நுழைந்த நான்கு முதல் பத்து நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன. ஆரம்பத்தில் திடீரென அதிக காய்ச்சல் ஏற்படும். அதனுடன் கடுமையான தலைவலி, கண்களின் பின்புறத்தில் வலி, தசை மற்றும் மூட்டுவலி, உடல் சோர்வு, குமட்டல், வாந்தி மற்றும் தோலில் சிவப்பு நிறப் புள்ளிகள் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம். சிலருக்கு பசியின்மை மற்றும் கடுமையான பலவீனமும் ஏற்படலாம்.</p><h2><strong>கடுமையான டெங்குவின் அறிகுறிகள்:</strong></h2><p>சில நோயாளிகளில் டெங்கு மிகவும் ஆபத்தான நிலைக்கு மாறக்கூடும். கடுமையான வயிற்றுவலி, தொடர்ந்து வாந்தி எடுப்பது, மூக்கு அல்லது ஈறுகளில் ரத்தப்போக்கு, சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம் கலந்திருப்பது, அதிக சோர்வு, மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இத்தகைய நிலை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால் தாமதிக்கக் கூடாது.</p><h2><strong>டெங்கு நோயைக் கண்டறியும் முறைகள்:</strong></h2><p>டெங்கு நோயை உறுதிப்படுத்த மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். நோயின் ஆரம்ப நிலையில் NS1 ஆன்டிஜன் பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் IgM மற்றும் IgG ஆன்டிபாடி பரிசோதனைகள் மூலம் நோய்த்தொற்றின் நிலை மதிப்பிடப்படுகிறது. மேலும், முழு ரத்தப் பரிசோதனை, பிளேட்லெட் எண்ணிக்கை மற்றும் ஹீமடோகிரிட் அளவுகளும் நோயின் தீவிரத்தை அறிய உதவுகின்றன.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/lhjei1h7/degu.jpg" /></figure><h2><strong>டெங்கு நோய்க்கான சிகிச்சை:</strong></h2><p>டெங்கு நோயை முற்றிலும் குணப்படுத்தும் தனிப்பட்ட வைரஸ் எதிர்ப்பு மருந்து தற்போது இல்லை. இருப்பினும், சரியான மருத்துவ கண்காணிப்பு மற்றும் உடலுக்குத் தேவையான திரவச்சத்து வழங்கப்படுவதன் மூலம் பெரும்பாலான நோயாளிகள் முழுமையாக குணமடைகின்றனர். </p><p>நோயாளிகள் போதுமான ஓய்வு எடுக்க வேண்டும், அதிகளவில் தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை அருந்த வேண்டும், மேலும் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுயமாக மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் சில மருந்துகள் ரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.</p><h2><strong>டெங்கு நோயைத் தடுக்கும் வழிமுறைகள்:</strong></h2><p>டெங்குவைத் தடுப்பதற்கான சிறந்த வழி கொசுக்கள் பெருகுவதைத் தடுப்பதாகும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைப்பது, பயன்படுத்தப்படாத டயர்கள், பூந்தொட்டிகள் மற்றும் பிற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். </p><p>மேலும், முழு உடலையும் மூடும் ஆடைகளை அணிவது, கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது மற்றும் ஜன்னல்களில் கொசு வலை பொருத்துவது போன்ற நடவடிக்கைகள் டெங்கு பரவலைத் தடுக்க உதவுகின்றன.</p><h2><strong>டெங்கு நோயின்போது உணவுமுறை:</strong></h2><p>டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகளவில் தண்ணீர், இளநீர், பழச்சாறுகள், ORS போன்ற திரவங்களை அருந்துவது நல்லது. கஞ்சி, சூப், பழங்கள் மற்றும் எளிதில் செரிக்கும் உணவுகளைச் சாப்பிடுவது உடலுக்கு வலிமை அளிக்கும். அதே நேரத்தில் அதிக எண்ணெய், காரம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.</p><p>டெங்கு காய்ச்சல் என்பது சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பெரும்பாலும் குணப்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும். இருப்பினும், நோயின் தீவிரத்தை அலட்சியப்படுத்தினால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகலாம். </p><p>எனவே, காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுகுவது, தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வது மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. </p><p>தனிநபர் சுகாதாரத்துடன் சுற்றுப்புறத் தூய்மையையும் பேணுவதன் மூலம் டெங்கு பரவலைத் தடுக்க முடியும். பொதுமக்களின் விழிப்புணர்வும், சமூகத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளும் டெங்குவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ரூ.35 கோடி பேரம் வழக்கு- செந்தில் பாலாஜியிடம் இன்று 2ம் நாள் விசாரணை நிறைவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-35-crore-bribery-case-questioning-of-senthil-balaji-completed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-35-crore-bribery-case-questioning-of-senthil-balaji-completed#comments</comments><guid isPermaLink="false">07186606-982e-4657-99d7-2795cdf16df7</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:26:39 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:26:39.496Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,bribery case,Investigation by police,பேரம் வழக்கு,விசாரணை நிறைவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/kteuq8rz/senthil-balaji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/kteuq8rz/senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் பெற்றுள்ளார். தினமும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதன்படி நேற்று செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அப்போது 2 மணி நேரத்திற்கும் மேலாக ரூ.35 கோடி பேர வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் இருவரிடமும் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.</p><p>இந்த நிலையில் இன்று 2-வது நாளாக செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி போலீசில் ஆஜரானார். அவரிடம் இன்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் விசாரணை நிறைவடைந்தது</p><h2>கலைக்க கூடாது</h2><p>செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது.</p><p>வழக்கு தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.</p><p>நிபந்தனைகளை மீறினால் விசாரணை நீதிமன்றம் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும்  கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.</p>]]></content:encoded></item><item><title>16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-social-media-use-for-those-under-16-must-be-imposed-anbumani-ramadoss-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-social-media-use-for-those-under-16-must-be-imposed-anbumani-ramadoss-urges#comments</comments><guid isPermaLink="false">29e936d4-0501-4a2d-a710-d0b1e1d1a353</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:14:56 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:14:56.612Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,social media,teenagers,சமூக வலைதளங்கள்,பதின் பருவத்தினர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/h6uvy4dd/New-Project-2026-07-26T154436.459.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/h6uvy4dd/New-Project-2026-07-26T154436.459.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்.,</p><p>“15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்கும் போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். </p><p>சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் ஒன்றான இந்தியாவும் இத்தகைய தடையை முன்னெடுக்க வேண்டும்.</p><p>பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் தடை வரும்  ஜனவரி மாதம் முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும். </p><p>இந்த சட்டத்தின்படி வரும் செப்டம்பர் மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்குகளைத் தொடங்க முடியாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகள் ஜனவரி முதல் முடக்கப்படும். ஐரோப்பிய யூனியனில் இத்தகைய தடையை கொண்டு வந்துள்ள முதல் நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.</p><p>குழந்தைகளில் நலன் கருதி அவர் சமூக ஊடகங்களை பயன்படுத்த முதன்முதலில் தடை விதித்த நாடு  ஆஸ்திரேலியா தான். கடந்த 2025ஆம் ஆண்டு திசம்பர் மாதம் அந்நாட்டில் இந்தத் தடை நடைமுறைக்கு வந்த பிறகு கனடா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன. </p><p>இங்கிலாந்து, ஸ்பெயின், கிரீஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட 50&amp;க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இதே போன்ற தடையை கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்தியாவில் கர்நாடகம் மற்றும் ஆந்திர அரசுகள் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளன.</p><p>இந்தியாவிலும் சமூக ஊடகங்களை தடை செய்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. சமூக ஊடகங்களின் வாயிலாக ஆபாச உள்ளடக்கங்கள் குழந்தைகளுக்கு செல்வதாகவும், அதனால் கவனச் சிதறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். </p><p>நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2025&amp;26ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், சமூக ஊடகங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல, உடல்நல பாதிப்புகள் குறித்து விரிவான விளக்கப்பட்டிருந்தது.</p><p>குழந்தைகளின் பதட்டம், மன அழுத்தம், சுயமரியாதைக் குறைவு, இணையவழி சீண்டல்களால் ஏற்படும் &nbsp;பாதிப்புகள் ஆகியவற்றுக்கு சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பது தான் காரணம் என்றும், 16 முதல் 24 வயது பிரிவினர் தான் இத்தகைய பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. </p><p>இவற்றைத் தடுக்க குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்; ஆன்லைன் வகுப்பு கூட குழந்தைகளுக்கு கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.<br><br>அண்மையில் நடத்தப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில், சமூக ஊடகங்களின் பயன்பாடு காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் குறைவதாகவும், கவனச் சிதறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. </p><p>சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை தங்களுடன் மாணவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவும், அதனால், அவர்களின் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் குறைவதாகவும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.</p><p>இவை அனைத்துக்கும் மேலாக புத்தகங்களையும், கட்டுரைகளையும் படிக்கும் வழக்கம் வீழ்ச்சியடைந்து வருகிறது. சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் &amp; மாணவர்கள், ஏதேனும் காணொலியைப் பார்க்கும் போது 8 வினாடிகளுக்குள் அது தங்களை கவரவில்லை என்றால், அவர்கள் அதை தவிர்த்து விட்டு அடுத்த காணொலியைப் பார்க்கச் சென்று விடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. </p><p>பெரியவர்களுக்கே இந்த பிரச்சினை இருக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சொல்லத் தேவையில்லை.</p><p>சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அடிமையான பிறகு விளையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளை குழந்தைகள் மறந்து விட்டனர். ஆன்லைன் விளையாட்டுகளை மட்டுமே அவர்கள் விளையாட்டாக கருதுகின்றனர். </p><p>இதனால் உடல் பருமன், விட்டமின்&amp; டி குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்த பாதிப்புகளிலிருந்து &nbsp;குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால் சமூக ஊடகங்களுக்கு தடை விதிப்பது தான் தீர்வாகும்.</p><p>கர்நாடகம், ஆந்திரம், கோவா ஆகிய மாநிலங்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை தடை செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. ஆனால், அதை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை எந்த மாநில அரசும் மேற்கொள்ளவில்லை. </p><p>இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை. </p><p>இந்தியாவில் &nbsp;தொலைத்தொடர்பு (Communication) என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மத்தியப் பட்டியலில் 31&amp;ஆம் &nbsp;பொருளாக இடம் பெற்றுள்ளது. </p><p>அதனால், மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரம், குழந்தைகள் நலன் ஆகிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு மாநில அரசுகள் தடை விதித்தாலும் அவை சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும் வாய்ப்புள்ளது.</p><p>குழந்தைகளின் உடல் நலன், மன நலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களை சமூக ஊடங்களின் பிடியில் இருந்து மீட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை பின்பற்றி இந்தியாவில் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் துறைமுகத்தில் வணிக கப்பல் மீது தாக்குதல்.. 2 இந்தியர்கள் மாயம் - கருங்கடலில் தொடரும் பதற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/world/ukraine-odesa-port-attack-on-indian-sailors-cargo-ship-mv-agl-hit-2-indians-safe-2-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/ukraine-odesa-port-attack-on-indian-sailors-cargo-ship-mv-agl-hit-2-indians-safe-2-missing#comments</comments><guid isPermaLink="false">1efb0217-46f6-4784-9abc-044827a90e4d</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:07:31 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:07:31.804Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,Ukraine War,indians,இந்தியர்கள்,Merchant ship,வர்த்தக கப்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/tt6nl67o/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ representational image]]></media:title><media:description type="html"><![CDATA[ representational image]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/tt6nl67o/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் 4 இந்திய மாலுமிகள் இருந்த வர்த்தக கப்பல் மீது  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><h2>கீவ் </h2><p>உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்கப்பட்ட கப்பலில் இருந்தும் 4 இந்தியர்களில் இருவர் பத்திரமாக உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமிருவர் மாயமாகியுள்ளதாகவும் அவர்கள் குறித்து இன்னும் தகவல் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. </p><p>இன்று வெளியிடப்பட்ட தூதரகத்தின் அறிக்கையின்படி, எம்வி ஏஜிஎன் என்ற அந்த கப்பல் நேற்று ஒடெசா துறைமுகத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. </p><p>நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக இந்திய தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. </p> <h2>தொடர் தாக்குதல்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/4-indians-killed-in-attack-on-ship-leaving-ukraine-said-mea">கருங்கடலில் </a>உள்ள உக்ரைனின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக ஒடெசா துறைமுகம் விளங்குகிறது.</p><p>2022 முதல் ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில் அண்மையில் ஒடெசா துறைமுகத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.</p><p>4 இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு, இந்தியாவில் உள்ள ரஷிய தூதருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த சூழலில் சில நாட்கள் இடைவெளியில் மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>  <h2>எச்சரிக்கை</h2><p>தொடரும் தாக்குதல்களை அடுத்து, மத்திய அரசு, கருங்கடல் வெளியே செல்லும் கப்பல்களில் பணியாற்றும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த கடற்பகுதியில் மிஸைல், டிரோன் தாக்குதல் உள்ளிட்டவற்றில் கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>அங்கு வர்த்தக கப்பல்களுக்கு அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவ்வழியே செல்லும் கப்பல்களில் பணியாற்றும் இந்தியர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். </p><p>கப்பலில் பணியமர்த்தியவர்களிடமும், வேலைவாய்ப்பு ஏஜன்சிகளிடமும், கப்பல்களை இயக்குபவர்களிடமும் இருந்து கப்பல் செல்லும் பாதை குறித்தும், சென்றடையும் துறைமுகங்கள், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்சூரன்ஸ் கவரேஜ், அவசரகால நடைமுறைகள் என அனைத்தையும் குறித்து தெளிவான தகவலை கேட்டறிந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளது</p><h2>உதவி எண்</h2><p>மேலும் உதவி தேவைப்படும் இந்தியர்கள், ரஷியாவில் உள்ள இந்திய தூதரக எண்: +7 9652773414 மற்றும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரக எண் +38 0933559958 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கூகுளுக்கு அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன்மீது பதில் வரி விதிக்கப்படும் - ட்ரம்ப் மிரட்டல்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-threatens-retaliatory-tariffs-against-the-european-union-for-fining-google</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-threatens-retaliatory-tariffs-against-the-european-union-for-fining-google#comments</comments><guid isPermaLink="false">7ca9f780-f50a-45bf-858d-166cdff237dc</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:52:44 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:52:44.317Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Google,European Union,ஐரோப்பிய யூனியன்,President Donald Trump,கூகுள்,அதிபர் டொனால்ட் ட்ரம்ப்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/v9mweo0f/New-Project-2026-07-26T145636.964.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கூகுளுக்கு அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன்மீது பதில் வரி விதிக்கப்படும் - ட்ரம்ப் மிரட்டல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/v9mweo0f/New-Project-2026-07-26T145636.964.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டவிரோத வர்த்தக நடைமுறைகளுக்காக கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின்மீது மீது பதில் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். </p><p>அபராதங்கள்மூலம் அமெரிக்க நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றியம் கொள்ளையடிப்பதாக குறிப்பிட்டு, இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார். </p><p>தங்களது டிஜிட்டல் சந்தைச் சட்டங்களை மீறியதாகக் கூறி, கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் 890 மில்லியன் யூரோ (சுமார் 1 பில்லியன் டாலர்) அபராதம் விதித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்;</p><p>ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தனது வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளது; வழக்கம் போலவே, அது சிறந்த அமெரிக்க நிறுவனங்களை நேரடியாகக் குறிவைக்கிறது. </p><p>ஆப்பிள் நிறுவனத்திற்கு 15 பில்லியன் டாலர்கள், மெட்டாவிற்கு 3 பில்லியன் டாலர்கள், அமேசானுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு எவ்வித நியாயமான காரணமும் இன்றி அபராதம் விதித்ததைத் தொடர்ந்து, தற்போது கூகுள் நிறுவனத்திற்கும் எவ்வித விளக்கமும் இன்றி மேலும் 1 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.</p><p>இதன் மூலம் கூகுள் நிறுவனத்தின் மீதான மொத்த அபராதத் தொகை 18 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. சட்டவிரோதமான மற்றும் மிகவும் பாரபட்சமான இந்த நடைமுறை, 'தூங்கும் ஜோ பைடன்' நிர்வாகத்தின் முதல் ஆண்டில் உச்சத்தை எட்டியது; ஆனால் டிரம்ப் ஆட்சியில் இது தொடராது.</p><p>அமெரிக்கா என்பது ஐரோப்பாவிற்கான ஒரு "பணப் பெட்டி" அல்ல; அதை அவ்வாறு இருக்கவும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அமெரிக்க நிறுவனங்களையும், அதன் மூலம் அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தையும் "கொள்ளையடிக்கும்" இந்த நடைமுறைக்கு எதிராக, நாங்கள் உடனடியாக '301 விசாரணை'யைத் தொடங்கவுள்ளோம்.</p><p>சட்டவிரோதமான மற்றும் அறநெறிக்கு முற்றிலும் புறம்பான இந்தச் செயலுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும்; இது குறித்து நான் அவர்களுக்குத் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன். </p><p>விதிக்கப்பட்ட அபராதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்; அத்துடன், கூடிய விரைவில் அவர்கள் மீது கணிசமான இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து பாருங்கள்!.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>எதற்காக ஐரோப்பிய ஆணையம் கூகுளுக்கு அபராதம் விதித்தது?</h2><p>கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி (Search engine) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் போன்றவற்றில், தனது சொந்த சேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>இதன்மூலம் பிற செயலி உருவாக்குநர்கள், பயனர்களைக் குறைந்த விலையிலான மாற்றுச் சேவைகளுக்கு வழிநடத்துவதை கூகுள் தடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. </p><p>இந்த இரண்டு விதிமீறல்களுக்கும் அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், கூகுள் தனது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள 60 நாட்கள் அவகாசம் அளித்ததுள்ளது. இல்லையெனில் அதன் சராசரி தினசரி வருவாயில் 5 சதவீதம் வரையிலான  அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நட்சத்திர ஹோட்டல், பார்களுக்கான FL3 உரிமம் புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு: தமிழக அரசு தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-to-renew-fl3-licence-for-star-hotels-and-bars-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-to-renew-fl3-licence-for-star-hotels-and-bars-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">37a47e8a-a235-44d2-b6f7-de5bdd08755d</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:46:56 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:46:56.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>star hotels,FL 3 License,club bars,FL 3 உரிமம்,நட்சத்திர ஹோட்டல்,கிளப் பார்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/m2647eay/bar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FL 3 License  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/m2647eay/bar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் இயங்கும் பார்களில் மதுபான விற்பனை செய்வதற்கான 'FL 3 உரிமத்தைப்' புதுப்பிக்கத் தவறவிட்ட உரிமையாளர்களுக்குத் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது.</p><p>தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் விதிமுறைகளின்படி, நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்ய அளிக்கப்படும் FL 3 உரிமங்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. 2026-2027-ஆம் நிதியாண்டிற்காக இந்த உரிமத்தை ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாகப் புதுப்பிக்க வேண்டும்.</p><h2><strong>கால அவகாசம் நீட்டிப்பு:</strong></h2><p>நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கத் தவறிய நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களுக்கு, உரிய அபராதக் கட்டணத்துடன் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள அரசு வாய்ப்பளித்துள்ளது.</p><h2><strong>ஆன்லைன் மூலம் விண்ணப்பம்:</strong></h2><p>தகுதியுள்ள உரிமையாளர்கள் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://renew-fl-license.cpe.tn.gov.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பம் மற்றும் கட்டணத்தைச் செலுத்திப் புதுப்பித்துக் கொள்ளலாம். நட்சத்திர அந்தஸ்து பெற்ற தனியார் ஹோட்டல்கள், சுற்றுலா வளர்ச்சி கழக விடுதிகள் மற்றும் அனுமதி பெற்ற கிளப் பார்கள் ஆகியவற்றிற்கு இது பொருந்தும்.</p><h2><strong>சட்ட நடைமுறைகள்:</strong></h2><p>ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை உதவி ஆணையர் மூலம் நேரடி கள ஆய்வு நடத்தப்படும். அனைத்து தீயணைப்புத் துறை சான்றிதழ், உள்ளாட்சி அமைப்புகளின் தடையில்லாச் சான்றிதழ் மற்றும் கட்டிட அனுமதி ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், கணினி வழியே டிஜிட்டல் கையொப்பமிட்ட புதுப்பித்தல் சான்றிதழ் வழங்கப்படும்.</p><h2><strong>சுற்றுலாத் துறை வளர்ச்சி:</strong></h2><p>தமிழ்நாட்டிற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும், சுற்றுலாத் துறையின் வருவாயை மேம்படுத்தும் நோக்கிலும், நிலுவையில் உள்ள உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ள இந்த கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாதுகாப்பு துறையில் இந்தியா புதிய உச்சம்- &apos;மன்கி பாத்&apos; நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-defence-new-peak-mann-ki-baat-modi-pride</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-defence-new-peak-mann-ki-baat-modi-pride#comments</comments><guid isPermaLink="false">2307e9f6-f01e-4e06-89f3-e07b9a0aac3a</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:44:35 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:44:35.213Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,மனதின் குரல்,pm modi,Maan Ki Baat,மன்கி பாத்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vjx1b140/maan-ki-baat.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi in Maan ki baat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vjx1b140/maan-ki-baat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன்கிபாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.</p><p>இன்று தனது 136-வது பதிவில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF" rel="nofollow">பிரதமர் மோடி</a> பேசியதாவது:-</p><p>பாதுகாப்பில் புதிய உச்சம் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு ஏற்றுமதி அல்லது நட்பு நாடுகளுடனான அரசியல் ஒத்துழைப்பு என எதுவாக இருந்தாலும்  இந்தியா தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.</p><p>இந்தியா ஒரு நம்பகரமான உலகளாவிய பாதுகாப்புத் துறை கூட்டாளியாக உருவெடுத்து வருகிறது. மேலும் தனது பாதுகாப்பு திறன்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் நான் இந்தோனேசியாவில் இருந்தேன்.</p><p>அங்கு பிரம்மோஸ் மற்றும் அஸ்தரா ஏவுகணைகள் தொடர்பான  ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது.</p><h2><a href="https://www.maalaimalar.com/news/world/10-killed-around-100-injured-in-russian-strike-in-ukraines-kyiv" rel="nofollow">ஏவுகணை</a></h2><p>சில நாட்களுக்கு முன்பு ஐ.என்.எஸ். மகேந்திரகிரி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த நவீன போர்க்கப்பல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 75 சதவீதத்திற்கு அதிகமானவை உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டது.</p><p>இந்த மாதத்தில் நீண்ட தூரம் சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ‘பினாகா’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) வெற்றிக்கரமாக சோதித்தது.</p><p>இந்த வெற்றிக்கு பின்னால் நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டு உழைப்பு உள்ளது. 2 அல்லது 3 நாட்களுக்கு முன்புதான் டி.ஆர்.டி.ஓ. குஷா ஏவுகணையையும் வெற்றிக்கரமாக சோதித்தது.  </p><h2>சிறப்பான தருணம்</h2><p>கடந்த வாரம்  ‘<a href="https://www.maalaimalar.com/news/national/india-first-private-rocket-vikram-1-successfully-launched" rel="nofollow">விக்ரம் 1</a>’ வெற்றிக்கரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் அடைந்தனர். இந்தியாவின் விண்வெளி துறையில் நிகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் இதுவாகும்.</p><p>தனியார் துறையால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் இதுவாகும். ஒரு காலத்தில் கற்பனை செய்வதற்கே கடினமாக இருந்த ஒன்றை இன்று சாதித்து உள்ளனர்.</p><p>கார்கில் வெற்றி தினம் நம்மை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. நமது துணிச்சலான வீரர்களின் அசாதாரண வீரத்தை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.</p><h2>மூவர்ண கொடி</h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந் தேதிக்கு முன்னதாக நீங்கள் எனக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளை அனுப்புகிறீர்கள். இந்த ஆண்டும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.</p><p>கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் <a href="https://www.maalaimalar.com/news/world/burj-khalifa-illuminated-in-colours-of-the-tricolour-on-independence-day-650270" rel="nofollow">மூவர்ண கொடி</a>  இயக்கம் ஒட்டுமொத்த தேசத்தையும் உணர்வுடன் ஒன்றிணைத்தது. ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும் மூவர்ண கொடியை கொண்டாடும் சூழல் காணப்படுகிறது.</p><p>இந்த ஆண்டும் வீடுகளில் மூவர்ண கொடியை மிகுந்த மரியாதையுடன் ஏற்ற வேண்டும். பாரத ரத்னா அப்துல் கலாமின் நினைவுநாள் நாளையாகும். பெரிய கனவுகளை காணுமாறு அவர் இளைஞர்களையும், குழந்தைகளையும் ஊக்குவித்தார்.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்த உத்தரவிட்டது நீங்களா?  - அமித் ஷாவுக்கு ராகுல் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah#comments</comments><guid isPermaLink="false">26b3ff64-eba7-4350-b371-0028b91c9dea</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:37:20 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:37:20.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Amit Shah,அமித் ஷா,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/qkiouv1c/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல், சாஹில், அமித் ஷா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல், சாஹில், அமித் ஷா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/qkiouv1c/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூலை 20 அன்று பாராளுமன்றம் நோக்கி இளைஞர்கள் அமைதியான முறையில் நடத்திய பேரணியில் டெல்லி போலீசாரும், ஆர்ஏஎப் படையினரும் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தினர். தடியடி நடத்தியும், கண்ணர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். </p><p>சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக பலரின் உடலில் பெல்லட் துப்பாக்கி குண்டுகள் துளைத்த புள்ளி புள்ளியான காயம் இருந்தது கண்டறியப்பட்டது. </p><p>இவ்வகை துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில் இவை சில நேரங்களில் பார்வை, கேட்கும் திறனை இழக்கச் செய்யும். முக்கிய உடல் பாகங்களில் பட்டால் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். </p><p>இதுமட்டுமின்றி, சீருடையற்ற நபர்கள் அன்றைய தினம் இளைஞர்களை லத்திகளால் தாக்கிய வீடியோக்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. நச்சுத்தன்மை வாய்ந்த காலாவதியான கண்ணீர் புகை குண்டுகள், ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>ஜூலை 20 அன்று இளைஞர்கள் மீதான இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. </p><p>மாணவர்களின் பிரதான கோரிக்கையான, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ராஜினாமா செய்துவிட்டபோதிலும், ஜூலை 20 அன்று மாணவர்களை கொடூரமான முறையில் தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. </p> <h2>ராகுல் கடிதம்</h2><p>இந்த சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இவ்விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர்<a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-made-excellent-arrangements-to-conduct-exams-in-mother-tongue-amit-shah"> அமித் ஷாவுக்கு</a> கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.</p><p>எக்ஸ் தளத்தில் ராகுல் பகிர்ந்துள்ள கடிதத்தின் நகலில், அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது உயிருக்கே ஆபத்து நேரும் அளவுக்குபெல்லட் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்த ஒப்புதல் கொடுத்தவர் யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>அமைதியான போராட்டம் என்பது எந்த ஒரு ஜனநாயகத்துக்கும் இன்றியமையாதது. போராடுபவர்களை பாதுகாத்து அவர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் கேட்டறிந்து அதற்கான தீர்வை காண்பது அரசின் கடமை.</p><p>ஆனால் இந்த கொடூரமான வன்முறை எல்லா நெறிகளையும் உடைத்து நாட்டை கொந்தளிக்க செய்துள்ளது. பதில்களையும், பொறுப்புகூறலையும் கேட்கும் இளைஞர்களும், மாணவர்களும் நாட்டின் எதிர்காலம். அவர்களின் குரல் கேட்கப்பட்டே தீரும்.</p><p>ஜூலை 20 அன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கொலை ஆயுதங்கள் மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தி காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.</p><h2>ஒப்புதல் வழங்கியது யார்?</h2><p>நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். பெண்களும் காவல்துறையினால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அந்தரங்க உறுப்புகளும் திட்டமிட்டு தாக்குதலின்போது குறிவைக்கப்பட்டுள்ளது.</p><p>ஊடக மற்றும் சமூக வலைதள அறிக்கைகள், ஒரு செய்தியாளர் உட்பட மாணவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. சாஹில் என்ற 19 வயது மாணவர்களை நான் சந்தித்தேன். பெல்லட் குண்டுகளால் அவர் தன் ஒரு பக்க கண்பார்வையை இழந்து மிகுந்த வலியில் உள்ளார்.</p> <p>டெல்லியில் போராட்டத்தை அடக்க அனுப்பட்ட பாதுகாப்பு படைகள் நேரிடியாக உங்களின் கீழ் தான் வருகிறது. உள்துறை அமைச்சர் என்ற முறையில் பெல்லட் துப்பாக்கிகள் உட்பட மாணவர்கள் மீது உயிரை பறிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த நீங்கள் தான் ஒப்புதல் வழங்கினீர்களா? அல்லது வேறு யார் வழங்கினார்கள்?</p><p>சீருடையின்றி சாதாரண உடையில் மாணவர்களை லத்திகளால் தாக்கியவர்கள் போலீஸ்காரர்களாஅல்லது தன்னார்வலர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது காவலாளியை அடித்து, சட்டையைக் கிழித்த இளம்பெண்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-tears-shirt-slaps-elderly-security-tambaram-theatre</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-tears-shirt-slaps-elderly-security-tambaram-theatre#comments</comments><guid isPermaLink="false">8d897152-61d8-4d68-bf18-d6300bac2bce</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:12:55 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:12:55.717Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tambaram,CCTVFootage,ViralVideo,JusticeForSridhar,பெண்அராஜகம்,WomanAttacksGuard,TheatreFight,காவலாளிமீதுதாக்குதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7qupw6xf/WomanAttacksGuard" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WomanAttacksGuard  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7qupw6xf/WomanAttacksGuard?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில், கார் பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட மோதலில் முதிய காவலாளியை இளம்பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கி, சட்டையைக் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.</p><h2><strong>கார் பார்க்கிங்கில் வெடித்த வாக்குவாதம்</strong></h2><p>மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள திரையரங்கில் தற்போது “ஜனநாயகன்” திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. </p><p>நேற்று முன்தினம் காரில் ஒரு குடும்பத்தினர் படம் பார்க்க வந்துள்ளனர். </p><p>அப்போது, அங்கிருந்த முதிய காவலாளி ஸ்ரீதர், காரை பார்க்கிங் பகுதியில் சரியாக நிறுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். இதில் காவலாளிக்கும் காரில் வந்த குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>முதியோரை கண்ணத்தில் அறைந்த இளம்பெண்</strong></h2><p>இந்த நிலையில் படம் முடிந்து அந்த குடும்பத்தினர் காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அதே நேரத்தில் மற்றொரு காட்சிக்கு ஒரு கார் உள்ளே வந்தது. </p><p>அதனால் வெளியே செல்லும் காரை நிறுத்திவிட்டு, உள்ளே வந்த காரை அனுமதித்த காவலாளி ஸ்ரீதர், பின்னர் அவர்களை வெளியே செல்லும்படி கூறினார். </p><p>இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்த இளம்பெண் ஒருவர் கீழே இறங்கி வந்து, வயதான காவலாளி ஸ்ரீதரின் சட்டையை பிடித்து கிழித்ததுடன், கன்னத்தில் தாக்கினார். இதில் காவலாளியின் சட்டை கிழிந்ததுள்ளது. </p><p>தியேட்டருக்கு வந்தவர்கள் இதை பார்த்து அதிர்சியடைந்தனர். சுற்றியிருந்தவர்கள் தலையிட்டு அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டு சென்றார்.</p><h2><strong>போலீசார் அதிரடி விசாரணை</strong></h2><p>இந்த சம்பவத்தை அங்கு வந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. </p><p>வீடியோ வைரலானதை அடுத்து தாம்பரம் போலீசார், பாதிக்கப்பட்ட காவலாளி ஸ்ரீதரிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். </p><p>தியேட்டரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>தாக்குதலில் ஈடுபட்ட இளம்பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இணையத்தில் கசிந்த &apos;ராமாயணம்&apos; பட டிரைலர்: அதிர்ச்சியில் படக்குழு; உடனே வெளியிட ரசிகர்கள் கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-leaks-online-film-team-in-shock</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-leaks-online-film-team-in-shock#comments</comments><guid isPermaLink="false">fe9e3e26-da31-4e50-814e-233b20f42611</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:12:41 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:12:41.113Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sai Pallavi,ரன்பீர் கபூர்,Ranbir Kapoor,நடிகை சாய் பல்லவி,ராமாயணம்,RamayanaTrailerASAP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/yuu4u8g4/ramayana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ramyana movie]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/yuu4u8g4/ramayana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட்டின் பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், மிகம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் காவியத் திரைப்படம் 'ராமாயணம்'. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக கே.ஜி.எஃப் புகழ் யாஷ் மற்றும் அனுமனாக சன்னி தியோல் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.</p><p>இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலரை கடந்த 24ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சர்வதேச அளவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததையடுத்து, டிரைலர் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா திடீரென அறிவித்தார்.</p><h2><strong>டிரைலர் காட்சிகள் கசிவு:</strong></h2><p>சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த 'பிரதம் சங்கல்ப்' நிகழ்ச்சி மற்றும் அமெரிக்காவின் சான் டியாகோ காமிக்-கான் நிகழ்வுகளில் திரையிடப்பட்ட டிரைலரின் சில முக்கிய காட்சிகள், செல்போனில் ரகசியமாக படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன.</p><p>சுமார் 1 நிமிடம் முதல் 2 நிமிடங்கள் வரையிலான இந்த லீக் செய்யப்பட்ட வீடியோக்களில், ரன்பீர் கபூரின் ராமர் தோற்றம் மற்றும் பிரம்மாண்ட காட்சி அமைப்பு, சீதையாக நடித்துள்ள சாய் பல்லவியின் எமோஷனல் காட்சிகள், ராவணனாக வரும் நடிகர் யாஷின் கம்பீரமான தோற்றம், உயர்தர VFX மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><h2><strong>ரசிகர்கள் கொந்தளிப்பு:</strong></h2><p>டிரைலர் லீக்கான தகவல் காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து, எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில்  இதுவே பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. பல மாத உழைப்பில் உருவான காட்சிகளை இப்படி திருட்டுத்தனமாக வெளியிடுவது தவறானது என்று ஒருதரப்பினர் படக்குழுவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>அதேசமயம், ஏற்கனவே காட்சிகள் இணையத்தில் பரவிவிட்டதால், தயவுசெய்து எச்டி தரத்திலான அதிகாரப்பூர்வ டிரைலரை உடனடியாக யூடியூபில் வெளியிடுங்கள் என #RamayanaTrailerASAP என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><h2><strong>படக்குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கை:</strong></h2><p>வீடியோக்கள் இணையத்தில் பரவுவதைத் தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும், 'காப்பிரைட் ஸ்டிரைக்' மூலம் லீக் செய்யப்பட்ட வீடியோக்களை அகற்றும் பணிகளையும் படக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் 'ராமாயணம்' படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>யுனஸ்கோ பாரம்பரிய தலங்கள் பட்டியலில் உ.பி.யின் ‘சாரநாத்’ சேர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/ups-sarnath-included-in-unescos-list-of-heritage-sites</link><comments>https://www.maalaimalar.com/news/national/ups-sarnath-included-in-unescos-list-of-heritage-sites#comments</comments><guid isPermaLink="false">9c34cbb5-2b84-4967-ab38-96ab694e5df6</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:11:07 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:11:07.206Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>UNESCO,Sarnath,Buddhist Site,சாரநாத்,புத்த தலம்,யுனஸ்கோ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/gu0c31u6/New-Project-2026-07-26T144048.932.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யுனஸ்கோ பாரம்பரிய தலங்கள் பட்டியலில் உ.பி.யின் ‘சாரநாத்’ சேர்ப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/gu0c31u6/New-Project-2026-07-26T144048.932.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யுனஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில், இந்தியாவின் பழமையான பௌத்த தலமான, உத்தரப் பிரதேசத்தின் சாரநாத் சேர்க்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் இந்தப் பட்டியலில் இணையும் இந்தியாவின் 45வது தலம் இதுவாகும். </p><h2>புத்தரின் முதல் போதனை தலம்</h2><p>கி.மு.6ம் நூற்றாண்டில் இந்த தலத்தில்தான் புத்தர் தனது முதல் போதனையை வழங்கியதாகவும், அவரது ஆரம்பகால சீடர்களைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>புத்தராலேயே நான்கு முக்கிய பௌத்த யாத்திரை தலங்களில் ஒன்றாக அடையாளம் காட்டப்பட்ட சாரநாத், அரச குடும்பத்தினர், மடாலயங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவால் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்தது. இதன் விளைவாக ஏராளமான தூபிகள், கோயில்கள் மற்றும் விகாரங்கள் கட்டப்பட்டன.</p><p>ஒரு முக்கிய பௌத்த மையமாக செழித்தோங்கிய சாரநாத், கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்து, 18-ஆம் நூற்றாண்டில் மீண்டும் கண்டறியப்படும் வரை மறைந்து கிடந்தது.</p><p>இன்று இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் இத்தலம், ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகவும், உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கான யாத்திரை தலமாகவும் விளங்குகிறது. </p><h2>மத்திய அரசின் பரிந்துரை</h2><p>"2025-26 ஆம் ஆண்டிற்கான உலக பாரம்பரியக் குழுவின் பரிந்துரையில், 'சாரநாத், பழமையான பௌத்த தளம்' என்ற தலைப்பிலான ஆவணக் கோப்பை யுனெஸ்கோவிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளதாக, 2025 ஆகஸ்டில் மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>ஹர்திக் பாண்ட்யாவுக்கு சி.எஸ்.கே.யின் ஆஃபர்: மும்பை இந்தியன்ஸ் கேட்பது என்ன?</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/ipl-hardik-pandya-csk-mi-brevis-shivam-dube-sensation-offer</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/ipl-hardik-pandya-csk-mi-brevis-shivam-dube-sensation-offer#comments</comments><guid isPermaLink="false">c874f0c3-cf2a-4ae0-bf0f-7ebf76aa6eb0</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:02:38 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:02:38.175Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CSK,Hardik Pandya,Mumbai Indians</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ca47vyi4/HardikPandya0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hardik Pandya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ca47vyi4/HardikPandya0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ளார். இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்று, பின்னர் 2024 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். அப்போது கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை அணியில் அவருக்கு சக வீரர்களால் சரியான மரியாதை கிடைக்கவில்லை. அதைவிட அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை. வீரர்கள் அறையில் அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டது.</p><h2>கடந்த 3 சீசனில் மும்பை இந்தியன்ஸ் ஏமாற்றம்</h2><p>2024-ல் 10-வது இடத்தை பிடித்தது. 2025-ல் பிளேஆஃப் வரை சென்றது. 2026 சீசனில் மிகவும் மோசமான நிலையை எட்டியது. இதனால் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற முயன்றார். அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் அவரை விடுவிடுக்க முடிவு செய்தது.</p><h2>ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி</h2><p>ஹர்திக் பாண்ட்யாவை வாங்க (Trade) பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பேசி வருதாக தகவல் கசிந்துள்ளது.</p><p>ஹர்திக் பாண்ட்யாவின் மதிப்பு ஏறக்குறை 20 கோடி ரூபாய் ஆகும். இதனால் ஹர்திக் பாண்ட்யாவை வாங்க வேண்டும் என்றால் அதற்கு மதிப்பான Trade-ஐ மும்பை இந்தியன்ஸ் எதிர்பார்க்கிறது.</p><p>மும்பை இந்தியன்ஸ் ஆயுஷ் மாத்ரேவை தாருங்கள். அதனுடன் பணமும் தாருங்கள் எனக் கூறுவதாக தெரிகிறது. ஆயுஷ் மாத்ரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வளர்ந்து வரும் தலைசிறந்த இளம் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். ஸ்டிரைக் ரேட் 180-க்கும் மேல் வைத்துள்ளார்.</p><h2>ஆயுஷ் மாத்ரே</h2><p>இதனால் ஆயுஷ் மாத்ரேவை கொடுக்க சி.எஸ்.கே. விரும்பவில்லை. அதேவேளையில் டெவால்டு பிரேவிஸ் மற்றும் ஷிவம் துபே ஆகியோரை வழங்குகிறோம். அத்துடன் பணமும் தருகிறோம் எனத் தெரிவித்ததாக தெரிகிறது.</p><p>ஒருவேளை சிஎஸ்கே ஆஃபரை மும்பை இந்தியன்ஸ் ஒப்புக் கொண்டால், ஹர்திக் பாண்ட்யாவுக்குப் பதிலாக சிஎஸ்கே 20 கோடி ரூபாய்க்கு மேலான Trade பணத்தை இழக்க நேரிடும்.</p><p>இருந்த போதிலும் இரண்டு அணிகளும் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.</p>]]></content:encoded></item><item><title>தென்மண்டல குழு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nirmalkumar-rajmohan-named-to-southern-zonal-council</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nirmalkumar-rajmohan-named-to-southern-zonal-council#comments</comments><guid isPermaLink="false">41ed62a2-61ff-471f-bc84-261d0f92bc9e</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:53:55 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:53:55.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rajmohan,சிடிஆர் நிர்மல் குமார்,ராஜ்மோகன்,ctr nirmal kumar,southzone</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/zxp8c8ha/Untitled-design-84.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Ministers Nirmalkumar and Rajmohan appointed as South Zonal Council members]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/zxp8c8ha/Untitled-design-84.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில், ஒருங்கிணைப்பை எளிதாக்கும் மத்திய அரசின் உயர்மட்ட மாநிலங்களுக்கு இடையேயான அமைப்பான தென்மண்டலக் குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது.</p><h3><strong>தென்மண்டல குழு உறுப்பினர்கள் நியமனம்:</strong></h3><p>முதலமைச்சர் சி. ஜோசப் விஜயுடன் இணைந்து, எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் மற்றும் பள்ளிக் கல்வி, தமிழ் அபிவிருத்தி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் சபையில் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என அரசிதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>ஆலோசகர் நியமனம்:</strong></h3><p>தலைமைச் செயலாளர் எம். சாய்குமாருடன் கூடுதலாக, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசனையும் கவுன்சிலின் இரண்டாவது ஆலோசகராக அரசாங்கம் நியமித்துள்ளது.</p><p>2021 ஆம் ஆண்டு அரசாணை ஒன்றின் கீழ் செய்யப்பட்ட நியமனங்களுக்குப் பதிலாக, 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், 2026 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதியிட்ட அரசாணை எண் 461 மூலம் இந்த நியமனங்கள் அறிவிக்கப்பட்டன.</p><h3><strong>தென்மண்டலங்கள்:</strong></h3><p>மத்திய அரசால் அவ்வப்போது கூட்டப்படும் தெற்கு மண்டல குழு, மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கு தேவைப்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களை ஒன்றிணைக்கிறது.</p><p>இந்த மன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் பொதுவாக உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு, எல்லை தொடர்பான விஷயங்கள், சமூக நலன், சிறுபான்மையினர் நலன், ஆற்று நீர் பிரச்சனைகள் மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிற விஷயங்களில் கவனம் செலுத்துகின்றன.</p><p>மே மாதம் பதவியேற்ற தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் முதல் பிரதிநிதித்துவம் இந்த அவையில் இடம்பெற்றுள்ளது.</p><h3><strong>முன்னாள் தென்மண்டல குழு பிரதிநிதிகள்:</strong></h3><p>முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இந்த குழுவில் தமிழக பிரதிநிதிகளாக செயல்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம் :  அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-kannada-protest-halts-tamil-nadu-government-buses-in-hosur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-kannada-protest-halts-tamil-nadu-government-buses-in-hosur#comments</comments><guid isPermaLink="false">ad9fcaea-a96f-4fe8-860a-746687af7d4d</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:37:10 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:37:10.798Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hosur,மேகதாது விவகாரம்,mekedatu,அத்திப்பள்ளி,KarnatakaBorder,Buses Cancelled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ype5lzu3/KarnatakaBorder" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TamilNaduBorderBusesCancelled]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ype5lzu3/KarnatakaBorder?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி ஆற்றின் குறுக்கே <a href="https://www.maalaimalar.com/topic/mekedatu">மேகதாது</a>வில் அணை கட்ட வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம்</strong></h2><p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து, கர்நாடகா - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் இன்று மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.</p><p>அதன்படி, கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் மாநில தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் இன்று காலை அத்திப்பள்ளி சாலையில் மறியல் நடைபெற்றது.</p><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.</p><h2><strong>தமிழக அரசு பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்</strong></h2><p>இன்று அதிகாலை முதல் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கர்நாடகாவுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>கர்நாடகா செல்லும் அனைத்து பஸ்களும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.</p><p>தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் அரசு பஸ்களும் ஓசூர் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிச் செல்கின்றன.</p><p>கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரின் அறிவுறுத்தலின்படி, தர்மபுரி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், "மறு உத்தரவு வரும் வரை பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படாது" என அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2><strong>ஓசூர் - அத்திப்பள்ளி பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்</strong></h2><p>அதே சமயம், ஓசூரில் இருந்து அத்திப்பள்ளி வரை இயக்கப்படும் 16 மாநகர பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றின் சேவையில் மாற்றம் செய்யவும் போக்குவரத்து துறை தயாராக உள்ளது.</p><p>தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், கர்நாடக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால், பெரும்பாலான பயணிகள் அவற்றின் மூலம் பெங்களூரு நோக்கிப் பயணம் மேற்கொண்டனர்.</p><h2><strong>எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு</strong></h2><p>இந்த மறியல் போராட்டத்தையொட்டி ஜூஜூவாடி, அத்திப்பள்ளி உள்ளிட்ட தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் இரு மாநில போலீசாரும் ஏராளமாகக் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க எல்லையில் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஈசிஆர் சாலையில் குதிரை மூலம் உணவு டெலிவரி செய்த சொமேட்டோ ஊழியர்..</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/zomato-delivery-agent-on-horse-rides-through-chennai-ecr</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/zomato-delivery-agent-on-horse-rides-through-chennai-ecr#comments</comments><guid isPermaLink="false">ec1dd7f9-ec03-4b8b-9066-018f001769f5</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:34:44 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:34:44.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Zomato,ECR,ZomatoDelivery,HorseDelivery,ViralVideo,Palavakkam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/exsp3ecu/ZomatoHorseDelivery" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ZomatoHorseDelivery]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/exsp3ecu/ZomatoHorseDelivery?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இருசக்கர வாகனத்திற்குப் பதிலாக குதிரை மீது ஏறி <a href="https://www.maalaimalar.com/topic/zomato">சொமேட்டோ</a> ஊழியர் ஒருவர் உணவு டெலிவரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.</p><h2><strong>குதிரையில் செல்லும் உணவு</strong></h2><p>சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பலவாக்கம் பகுதியில் ஜொமாட்டோ ஊழியர் ஒருவர் உணவை டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். </p><p>இரு சக்கர வாகனங்களில் செல்வது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த ஊழியர் உணவு பார்சல்களுடன் வெள்ளை நிறக்குதிரை மீது கம்பீரமாகச் சென்றுள்ளார். </p><p>அதிகப்படியான போக்குவரத்துக்கு நெரிசலைக் கடந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையையும் குறைக்கும் வகையிலும், சரியான நேரத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு உணவை விநியோகிக்க இந்த மாறுபட்ட முறையை அவர் கையாண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2><strong>பொதுமக்கள் வரவேற்பு</strong></h2><p>குதிரை மீது சென்ற இந்த ஊழியரை, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துத் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். </p><p>நெட்டிசன்கள் பலரும் "சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான டெலிவரி முறை" என்றும், "டிராஃபிக் ஜாமுக்குச் சரியான தீர்வு" என்றும் இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தடுப்பு வேலியை தாண்டி ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி - நீட் தேர்வை ரத்து செய்ய மாணவர் அமைப்பு போராட்டம்  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/protesters-besiege-governor-house-in-chennai-over-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/protesters-besiege-governor-house-in-chennai-over-neet#comments</comments><guid isPermaLink="false">dbc81e04-0599-4f80-b7da-2dcfcf819e2e</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:29:06 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:29:06.483Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆளுநர் மாளிகை,Raj Bhavan,neet protest,நீட் போராட்டம்,AISF,அகில இந்திய மாணவர் அமைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/y6tbsnjm/Untitled-design-82.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai NEET Raj Bhavan protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/y6tbsnjm/Untitled-design-82.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பனகல் மாளிகை அருகே நீட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த காக்ரோச் ஜனதா கட்சியினர், தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.</p><p>சென்னை பாலன் இல்லத்தில் கடந்த ஒரு வார காலமாக, நீட் தேர்விற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h3><strong>ஆளுநர் மாளிகை முற்றுகை:</strong></h3><p>அப்போது பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய அமைப்பினருடன் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் இணைந்து, நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>நீட் தேர்வால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சீர்குலைப்பதாகவும் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.</p><p>அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.</p><p>இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி, காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்றனர்.</p><p>இதன்காரணமாக அந்த பகுதியில் சிறிதி நேரம் போக்குவரத்து இடஞ்சல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு கண்காணிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: தமிழகத்தின் உரிமைகளை தவெக அரசு காக்கும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-govt-defends-tamil-nadu-rights-in-mekadadu-dispute-minister-athav-arjuna-explains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-govt-defends-tamil-nadu-rights-in-mekadadu-dispute-minister-athav-arjuna-explains#comments</comments><guid isPermaLink="false">685fdf78-dd79-40e6-920b-7b2f5212440d</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:22:10 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:22:10.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>M.K.Stalin,மேகதாது விவகாரம்,மு.க.ஸ்டாலின்,mekedatu,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/tccv0pv5/adhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Aadhav Arjuna -M.K.Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/tccv0pv5/adhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் விஜய் தலைமையிலான தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.</p><h2><strong>உண்மைகளுக்குப் புறம்பான குற்றச்சாட்டு:</strong></h2><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அமைதி காப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் உண்மைகளுக்குப் புறம்பானது.</p><p>டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழக மக்களின் குடிநீர் உரிமையையும் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சட்டப்பூர்வமாகவும், நிர்வாக ரீதியாகவும் தொடர்ந்து பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.</p><h2><strong>மேகதாது அணைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:</strong></h2><h2>பி<strong>ரதமரிடம் நேரடியாக வலியுறுத்தல்:</strong></h2><p>கடந்த மே 27 அன்று முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 2018-ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வித ஒப்புதலும் அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.</p><h2><strong>பிரதமருக்கு விரிவான கடிதம்:</strong></h2><p>கர்நாடகா அரசு மேகதாது அணைக் கட்டுமானத்திற்கு 'பூமி பூஜை' செய்ய முயன்ற தகவலைத் தொடர்ந்து, ஜூன் 19 அன்று முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். கீழ்மடை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் இன்றி மேகதாது திட்டத்தை அமல்படுத்த முடியாது என்பதை சுட்டிக்காட்டி, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் மத்திய நீர் ஆணையத்திற்கும் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கோரினார்.</p><h2><strong>சட்டமன்ற தீர்மானம்:</strong></h2><p>மேகதாது திட்டத்திற்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டங்களில் தமிழகத்திற்கான உரிய நீரைப் பெறவும், கர்நாடகாவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைத் தடுக்கவும் தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.</p><h2><strong>கடந்த கால தவறுகளே காரணம்:</strong></h2><p>திமுக அரசை விமர்சித்துப் பேசிய அமைச்சர், "கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பின்னடைவுகளின் போது அப்போதைய திமுக அரசு சரியான முறையில் வழக்கை நடத்தத் தவறிவிட்டது. கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட சட்டப்பூர்வத் தவறுகளே, இன்று காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன" என்று சாடினார்.</p><p>மேலும், "காவிரி விவகாரம் என்பது அரசியல் லாபத்திற்கான விஷயம் அல்ல; அது தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமை. தமிழகத்தின் நீர் உரிமையை முழுமையாக மீட்கும் வரை விஜய் அரசு அனைத்து அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ வழிகளிலும் தொடர்ந்து போராடும். </p><p>மாநில நலனுக்கு உதவும் வகையில் யார் அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தாலும் அதை ஏற்க அரசு தயங்காது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆக்கிரமிப்பு காஷ்மீரை தவிர பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ராஜ்நாத் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas#comments</comments><guid isPermaLink="false">af56b7ea-d3b9-4c8c-9f28-749c6e39f4cc</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:18:26 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:18:26.039Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,Kargil Vijay Diwas,கார்கில் வெற்றி தினம்,ராஜ்நாத் சிங்,kargil war memorial,கார்கில் போர் நினைவு சின்னம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vfqnycm1/singh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rajnath singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vfqnycm1/singh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வென்றது. இப்போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீராகளை நினைவு கூரும் வகையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">கார்கில் வெற்றி தினம்</a> ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  இன்று கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடந்தது.</p><h2>கார்கில் போர் நினைவிடம்</h2><p>லடாக்கின் டிராசில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அவர் கார்கில் போர் நினைவிடத்திற்கான இணைய வழித்தளத்தை தொடங்கி வைத்தார். அதன்பின், நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:</p><h2>வீரம்-தைரியம்</h2><p>27-வது கார்கில் வெற்றி தினத்தில் நமது வீரர்களுக்கும், அவர்களின் வீரத்திற்கும் தலை வணங்குகிறேன். கார்கில் வெற்றி என்பது வெறும் ராணுவ மற்றும் ராஜதந்திர வெற்றி மட்டுமல்ல, நமது வீரர்கள் அசைக்கமுடியாத தைரியத்தையும், வீரத்தையும் ஒட்டுமொத்த உலகமும் கண்ட தருணம் ஆகும். கார்கில் வெற்றி, பாரத மாதாவின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரத்தைப் போன்றது.</p><p>பாகிஸ்தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு தவறான நடவடிக்கைக்கும், அவர்கள் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்குக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.</p><p>இந்தியா தரவு மையங்களை உருவாக்குகிறது. பாகிஸ்தான் பயங்கரவாத மையங்களை உருவாக்குகிறது. இந்தியா புதுமைகளைப் பின்தொடர்கிறது. பாகிஸ்தான் ஊடுருவலுக்கான புதிய வழிகளைத் தேடுகிறது. </p><p>இந்தியா கப்பல்களை வடிவமைக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்தியா ஒரு ஸ்டார்ட்அப் சூழலை உருவாக்கும்போது, ​​பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத சூழலை உருவாக்குகிறது. </p><h2>எல்லை தாண்டி</h2><p>இந்தியா செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும்போது, ​​பாகிஸ்தான் எல்லை தாண்டி பயங்கரவாதிகளை அனுப்புவதில் ஈடுபட்டுள்ளது.</p><p>தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தனது அரசு கொள்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளது. அங்கு ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு முற்றிலும் மறைந்துவிட்டது. அந்நாட்டு ராணுவம் பயங்கரவாத அமைப்புகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் அவர்களுடன் நெருக்கமாகவும் செயல்படுகிறது. </p><p>எனவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசுகளையும் இந்தியா இனி தனித்தனியாகப் பார்க்காது என்பதை நாங்கள் உணர்த்தினோம்.  </p><h2>பேச்சுவார்த்தை கிடையாது</h2><p>எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறாது. ஒருவேளை பேச்சுவார்த்தை என்று ஒன்று நடந்தால், அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும். </p><p>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர பாகிஸ்தானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தையிலும் இந்தியா ஈடுபடாது என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மார்வெலின் அடுத்த மெகா ஹிட் ரெடி-&apos;பிளாக் பேந்தர் 3&apos; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/marvel-next-mega-hit-ready-black-panther-3-official-announcement</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/marvel-next-mega-hit-ready-black-panther-3-official-announcement#comments</comments><guid isPermaLink="false">1bf3acfc-62ec-4572-aa55-402e51e54096</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:52:07 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:52:07.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Black Panther 3,Marvel Studios,David Jonsson,பிளாக் பேந்தர் 3,மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ்,டேவிட் ஜான்சன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3qeeecgh/black.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Black Panther 3]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3qeeecgh/black.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பிளாக் பேந்தர் 3' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது சான் டியாகோ காமிக்-கான் ஹால்-ஹெச் நிகழ்வில் வெளியிட்டுள்ளது.</p><h2><strong>புதிய பிளாக் பேந்தர்:</strong></h2><p>இத்திரைப்படம் வருகிற '2028-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி' உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. மறைந்த முன்னணி நடிகர் சாட்விக் போஸ்மேன் நடித்த 'டீ-சாலா' கதாபாத்திரத்தின் வளர்ந்த மகனாக பிரபல ஆங்கில நடிகர் 'டேவிட் ஜான்சன்' நடிக்கவுள்ளார். இதன் மூலம் அவரே அடுத்த தலைமுறை பிளாக் பேந்தராகப் பொறுப்பேற்கிறார்.</p><p>முந்தைய இரு பாகங்களை இயக்கிய 'ராயன் கூக்ளர்' மீண்டும் இத்திரைப்படத்தை இயக்குகிறார். லெட்டிஷியா ரைட் மற்றும் வின்ஸ்டன் டியூக் ஆகியோர் மீண்டும் தங்களது முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் முழுமையாக '70mm IMAX' கேமரா வடிவில் உருவாக்கப்பட உள்ளது.</p><h2><strong>வகாண்டாவின் அடுத்த வாரிசு:</strong></h2><p>2022-இல் வெளியான 'பிளாக் பேந்தரில், வகாண்டா ஃபாரெவர்' திரைப்படத்தின் இறுதிக்காட்சியில், டீ-சாலா மற்றும் நகியாவிற்கு பிறந்த இளம் மகன் அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது 3-ஆம் பாகத்தில் அவர் வளர்ந்து, வகாண்டாவின் புதிய பிளாக் பேந்தராக உருவெடுக்கும் கதையாக இது அமையும்.</p><h2><strong>அவெஞ்சர்ஸ் தொடர்புகள்:</strong></h2><p> 2027-இல் வெளியாகவுள்ள 'அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ்' திரைப்படத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சாதனை வரலாறு:</strong></h2><p>கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பிளாக் பேந்தர் முதல் பாகம் உலகளவில் சுமார் ரூ.10,000+ கோடி வசூல் செய்து, சிறந்த படத்திற்கான ஆஸ்கர் பரிந்துரையைப் பெற்ற முதல் சூப்பர்ஹீரோ திரைப்படமாக வரலாறு படைத்தது. தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு வெளியான 'வகாண்டா ஃபாரெவர்' உலகளவில் $859 மில்லியன் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>கோஷ்டிகள் இருந்தால்தான் காங்கிரஸ் கட்சி வளரும்: திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-congress-manickam-tagore-thirunavukkarasar-koshdi-mothal-issuses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-congress-manickam-tagore-thirunavukkarasar-koshdi-mothal-issuses#comments</comments><guid isPermaLink="false">9600aed7-012a-4e21-a6a7-845278cf0479</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:46:08 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:46:08.798Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,Manickam Tagore</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3lqdod0r/Thirunavukkarasar001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருநாவுக்கரசர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3lqdod0r/Thirunavukkarasar001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எல்லா அரசியல் கட்சிகளிலும் கோஷ்டிகள் இருக்கும். இதில் கோஷ்டி பூசலுக்கு பெயர் பெற்ற கட்சி காங்கிரஸ். இதற்கு புதிய தலைவர்கள் வரும்போது கோஷ்டி அரசியலுக்கு இடமில்லை என்பார்கள். ஆனாலும் அது இருந்து கொண்டே இருக்கும்.</p><h2>மாணிக்கம் தாகூர்</h2><p>தற்போது புதிய மாநில தலைவராக பொறுப்பேற்று உள்ள மாணிக்கம் தாகூரும் இனி கோஷ்டி அரசியல் இருக்காது என்று கூறி உள்ளார். மேலும் போஸ்டர்களில் படங்களை போடுவதால் பிரச்சினை வருவதால் ராகுல் படத்தை மட்டும் பெரிதாக போட வேண்டும் என்பது உள்பட சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில் மூத்த தலைவரான திருநாவுக்கரசர் ‘எல்லோரும் தங்கள் படங்களையும், தங்களுக்கு பிடித்தமான நிர்வாகிகள் படங்களையும் போட்டுக் கொள்வதில் தவறில்லை. கட்சியில் கோஷ்டி இருப்பது நல்லதுதான். அதனால்தான் கட்சியும் வளருகிறது என்று மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று திருநாவுக்கரசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட தலைவர்கள் மத்தியில் உரையாடி இருக்கிறார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் இருக்கத்தான் செய்யும்.</p><h2>கோஷ்டி தவிர்க்க முடியாது</h2><p>யார் யாருக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களை போய் பார்ப்பார்கள். அவர்கள் மூலம் கல்லூரியில் ஒரு அட்மிஷன், போலீஸ் நிலைய விவகாரம், அரசு அலுவலகங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்று வேலைகள் நடக்கும். இதன் மூலம் கட்சியும் வளரும்.</p><p>யாரும் யாரையும் பார்க்க கூடாது. யாருடனும் பேசக்கூடாது. இந்த படங்களை போடக்கூடாது என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியப்படாது.</p><p>காங்கிரசில் காந்தி காலத்திலும் கோஷ்டி இருந்து இருக்கிறது. காமராஜர் காலத்திலும் இருந்து இருக்கிறது. இது தவிர்க்க முடியாதது. அப்படி ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஆதரவு கூட்டம் பெருக பெருகதான் கட்சியும் வளர்ந்து இருக்கிறது.</p><p>போஸ்டர்களில் படங்கள் போடுவது பற்றி எம்.ஜி.ஆர். சொல்வார் ‘என்னை எல்லோருக்கும் தெரியும். உங்கள் படங்களையும் போட்டு அச்சிடுங்கள். அப்போதுதான் நீங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள். உங்களை மக்கள் அறிந்து கொள்வார்கள்’ என்பார்.</p><h2>பேனர்களில் படங்கள்</h2><p>நீங்களும் ராகுல் படத்தை எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் போட்டு கொள்ளுங்கள். மாநில தலைவர் படத்துடன், மாவட்ட தலைவர்கள் படம் முதல் ஒன்றிய தலைவர்கள் படங்கள் வரை போடுங்கள். அப்போதுதான் மக்கள் மத்தியிலும் நீங்கள் அறி முகம் ஆவீர்கள். அதிகாரிகள் மத்தியிலும் அறிமுகம் ஆவீர்கள்.</p><p>அவ்வாறு அறிமுகம் ஆகி இருந்தால்தான் மக்கள் பிரச்சினைகளுக்காக நீங்கள் அதிகாரிகளை சந்தித்து பேச முடியும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இப்படி மக்களுக்கு ஏதாவது செய்து கொடுத்தால்தான் மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள். கட்சியும் வளரும்.</p><p>பூத் லெவலில் இருக்கும் கடை நிலை நிர்வாகிகள் வரை கட்சியை வளர்ப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். இப்படி கட்டமைப்பை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அனைத்து மட்டங்களிலும் பலமாக வைத்துள்ளது. அதே போல் நீங்களும் கட்டமைப்பை பலப்படுத் துங்கள்’ என்றார்.</p><p>காங்கிரஸ் மாநில கமிட்டி கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில் திருநாவுக்கர சர் இவ்வாறு பேசியது மாவட்ட தலைவர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/tirupati-temple-devotees-wait-for-18-hours-for-darshan</link><comments>https://www.maalaimalar.com/spirituality/tirupati-temple-devotees-wait-for-18-hours-for-darshan#comments</comments><guid isPermaLink="false">72464dd5-325b-432e-bd0a-2f572d933efc</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:34:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:34:17.016Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>devotees,Tirupati temple,திருப்பதி கோவில்,பக்தர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/cv0bcjlb/temple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tirupati]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/cv0bcjlb/temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.</p><h2>திருப்பதி கோவில்</h2><p>நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p><h2>பக்தர்கள் தரிசனம்</h2><p>நேற்று முன்தினம் மாலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. </p><p>நேற்று அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் தரிசன வரிசையில் இருந்து ஷீலா தோரணம் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.</p><p>பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி, பால் உள்ளிட்டவைகளை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.</p><p>திருப்பதியில் நேற்று 70,216 பேர் தரிசனம் செய்தனர். 27,606 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.77 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.08 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் நோ சொன்ன மத்திய அரசு: கோவை, மதுரை மக்களின் மெட்ரோ ரெயில் கனவு மீண்டும் கலைந்தது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-government-rejects-metro-again-coimbatore-madurai-dreams-shattered</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-government-rejects-metro-again-coimbatore-madurai-dreams-shattered#comments</comments><guid isPermaLink="false">bacda4a7-ec1e-4870-b721-ef477cdba72f</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:24:37 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:24:37.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,Coimbatore Metro,Madurai Metro,கோவை மெட்ரோ,மதுரை மெட்ரோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mfk6gxtt/covai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Coimbatore-Madurai Metro]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mfk6gxtt/covai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமான 'கோயம்புத்தூர்' மற்றும் ஆன்மீக பண்பாட்டு மையமான 'மதுரை' ஆகிய இரு முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இரண்டாவது முறையாக நிராகரித்துத் திருப்பி அனுப்பியுள்ளது.</p><h2><strong>மக்கள்தொகை அளவுகோல் குறைவு:</strong></h2><p>தேசிய மெட்ரோ ரெயில் கொள்கை (2017)-இன் படி, ஒரு நகரில் மெட்ரோ திட்டம் தொடங்க குறைந்தபட்சம் '20 லட்சம் மக்கள்தொகை' இருக்க வேண்டும். 2011 கணக்கெடுப்பின்படி கோவையில் 15.84 லட்சமும், மதுரையில் 15 லட்சமும் மட்டுமே மக்கள்தொகை உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2><strong>பயண நேரச் சேமிப்பு போதாமை:</strong></h2><p>இவ்விரு நகரங்களிலும் மெட்ரோ அமைப்பதால் எதிர்பார்த்த அளவு பயண நேரம் குறையாது என்றும், அதிக அளவிலான பயணிகள் பயன்பாடு  இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><h2><strong>மாற்றுப் போக்குவரத்து பரிந்துரை:</strong></h2><p>மெட்ரோ போன்ற பிரம்மாண்ட செலவினத் திட்டங்களுக்குப் பதிலாக, அதிவேகப் பேருந்து போக்குவரத்துச் சேவையை மற்றும் நகர்ப்புற பேருந்து எண்ணிக்கையை அதிகரிப்பதே சிறந்தது என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.</p><h2><strong>கோவை மெட்ரோ:</strong></h2><p>கோவை மெட்ரோ திட்டம் 39 கிலோமீட்டர் நீளத்தில், அவிநாசி சாலை வழியாக கருமத்தம்பட்டி வரை மற்றும் உக்கடம்-சத்தியமங்கலம் சாலை வழியாக வலியம்பாளையம் பிரிவு வரை செல்லும். இதில் 32 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் அமைக்க ரூ.10,740 கோடி மதிப்பிடப்பட்டது.</p><h2><strong>மதுரை மெட்ரோ:</strong></h2><p>அதேபோல், மதுரை மெட்ரோ திட்டம் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31.9 கிலோமீட்டர் நீளத்தில், 26 நிலையங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் 23 உயர்மட்ட பாதையிலும், 3 நிலத்தடி பாதையிலும் அமைக்க ரூ.11,360  என கணிக்கப்பட்டது.</p><h2><strong>முந்தைய நிராகரிப்பு:</strong></h2><p>கடந்த ஆண்டு (நவம்பர்) முதன்முறையாகத் திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கூடுதல் தரவுகள், மிதக்கும் மக்கள்தொகை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி மே மாதத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் கோரிக்கை அனுப்பியிருந்தது.</p><h2><strong>அரசியல் முரண்பாடுகள்:</strong></h2><p>ஆக்ரா, போபால், பாட்னா போன்ற நகரங்களில் குறைவான மக்கள்தொகை இருந்தபோதிலும் மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் ஆளுங்கட்சியும் ஏனைய அமைப்புகளும் விமர்சித்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஈரானின் திடீர் எச்சரிக்கை: இங்கிலாந்தின் அளித்த தரமான பதில்..!</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-warns-uk-says-armed-forces-ready-to-defend-country-over-us-bombers</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-warns-uk-says-armed-forces-ready-to-defend-country-over-us-bombers#comments</comments><guid isPermaLink="false">2b7cf229-f9ef-4f19-9a52-8237c33a410a</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:13:37 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:13:37.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>US Iran war,அமெரிக்கா ஈரான் போர்,மேற்கு ஆசியா போர்,West Asia crisis</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/nd0g6pwf/USIranWar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இங்கிலாந்து ராணுவம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/nd0g6pwf/USIranWar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான்- அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த நிலையில் இருதரப்பும் மீண்டும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.</p><p>ஈரான் மீது கடந்த 13 நாள் இரவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்க ராணுவம் நேற்று நள்ளிரவில் எந்த தாக்குதல்களையும் நடத்திவில்லை. கடந்த 2 வாரங்களில் முதல் முறையாக அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தி உள்ளது.</p><p>மத்திய கிழக்கு போரில் அமெரிக்காவுக்கு வளைகுடா நாடுகள் உதவக்கூடாது என்று ஈரான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.</p><h2>இங்கிலாந்துக்கு எச்சரிக்கை</h2><p>இந்த நிலையில் இங்கிலாந்துக்கு ஈரான் நேரடியாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் இங்கிலாந்தின் விமானத் தளங்களைப் பயன்படுத்தியதாக தகவல் வெளியான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.</p><p>இதுதொடர்பாக ஈரானின் புரட்சிகர காவல் படையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக ஈரானின் அரசு ஒலிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஈரானுடனான எந்தவொரு போரிலும் அமெரிக்காவை ஆதரித்தால் இங்கிலாந்து நிச்சயமான மற்றும் முறையான இலக்காக கருதப்படும். இது வளைகுடா நாடுகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இங்கிலாந்து பதில்</h2><p>ஈரானின் எந்தவொரு தாக்குதலில் இருந்தும் நாட்டை பாதுகாக்க ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. மேலும், சொந்த மண் அல்லது வெளிநாட்டு மண்ணிலும் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.</p><h2>அணு ஆயுதம்</h2><p>ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது அமெரிக்கா போரை தொடங்கியது. ஆனால் தாங்கள் அணு ஆயுதத்தை தயாரிக்கவில்லை என்று ஈரான் தெரிவித்தது. இந்த நிலையில் ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி, அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்று அமெரிக்க உளவுத்துறை கருதுவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உளவுத் தகவல்கள் மற்றும் இடைமறிக்கப்பட்ட உரையாடல்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனியுடன் ஒப்பிடும்போது அணு ஆயுதங்களை உருவாக்குவதில் அவரது மகனான மொஜ்தபா கமேனி குறைவான தயக்கமே கொண்டிருப்பதாக அந்த உளவுத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>சவுதி அரேபியாவுக்கும், ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே செங்கடல் உடன்கையில் உள்ள சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.</p><h2>ஹவுதி- சவுதி அரேபியா இடையே மோதல்</h2><p>இதற்கிடையே யான்பு வில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து ஏமனில் இருந்து ஏவப்பட்ட 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடை மறித்ததாக சவுதி அரேபியா தெரிவித்து உள்ளது.</p><p>மத்திய கிழக்கில் ஏற்பட்டு உள்ள பதற்றமான சூழலுக்கு மத்தியில் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. கப்ர்ட்பெனிட், மிஸ்ரா, பெய்ட் யஹுன், குனின் ஆகிய கிராமங்கள் மீது பிரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டன. மேலும் மார்க்கபா நகரம் மற்றும் அலி அல்-தாஹெர் மலைப்பகுதிகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு முறைகேட்டில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/new-bill-to-be-tabled-in-parliament-tomorrow-10-year-jail-rs-10-crore-fine</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-bill-to-be-tabled-in-parliament-tomorrow-10-year-jail-rs-10-crore-fine#comments</comments><guid isPermaLink="false">a255ebb1-1216-47ba-bd2a-7d9bd69f9b11</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:07:00 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:07:00.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>paper leak,neet protest,வினாத்தாள் கசிவு,நீட் போராட்டம்,public examinations bill,பொதுத் தேர்வுகள் மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7nnj8q9f/Untitled-design-77.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ New amendment bill proposes 10-year jail and ₹10 crore fine to curb public exam malpractice]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7nnj8q9f/Untitled-design-77.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவிலான அரசு போட்டித்தேர்வுகளில் வினாத்தாள் கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தாக்கல் செய்ய உள்ளார்.</p><p>கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில் பழைய சட்டம் திருத்தங்கள் செய்யப்பட உள்ளது.</p><p>இதன்மூலம் பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட உள்ளது.</p><p>டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில், பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் ‘2026 சட்டத்திருத்த மசோதா’ என்ற வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.</p><h3><strong>2026 பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா:</strong></h3><p>இந்த மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு எம்.பி.க்களுக்கு மசோதாவின் நகல் நேற்று விநியோகிக்கப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-</p><p>வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.</p><p>தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படும். தனி நபர் குற்றங்க ளுக்கான அபராத தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>வினாத்தாள் கசிவை தொடர்ந்து செய்யும் கும்பல்களுக்கு குறைந்தபட்ச தண்டனை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும். இவர்களுக்கான குறைந்தபட்ச அபராதம் ரூ.1 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.</p><p>தேர்வு நடத்துதல், வினாத்தாள் அச்சிடுதல், கணினி தொழில்நுட்ப ஆதரவு போன்ற பணிகளில் ஈடுபடும் தனியார் ஏஜென்சிகளுக்கு ரூ.5 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.</p><p>அந்நிறுவனம் பொதுத் தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடைக்காலம் இரட்டிப்பாக்கப்படும். அதாவது 8 ஆண்டுகள் வரை பொதுத் தேர்வு நடத்த தடை விதிக்கப்படும்.</p><p>நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதியானால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 கோடி அபராதமும் விதிக்கப்படும்.</p><p>வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகள் 2 மாதங்களில் வழக்கை முடிக்க கால வரையறை நிர்ணயிக்கப்படும்.</p><p>வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து மேற்கொள்ள வசதியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.</p><h3><strong>விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை:</strong></h3><p>இந்த விரைவு நீதிமன்றங்களில் வழக்கின் மீது உடனடியாக விசாரணையை தொடங்கி, தினசரி அடிப்படையில் மேற்கொள்வதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.</p><p>வினாத்தாள் கசிவு தேர்வு முறைகேடு குற்றங்களை விரைந்து விசாரிப்பதற்காக எந்தவொரு அமர்வு நீதிமன்றத்தையும் சிறப்பு விரைவு நீதிமன்றமாக மாற்றியமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்த சட்டத்திருத்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.</p><p>விரைவு நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து, ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல் முறையீடு செய்யலாம். அந்த மேல்முறையீட்டு மனுக்களும் 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேற்கண்ட சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு அந்த மசோதா நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாஜகவிற்கு பதவியை விட நாடும், இளைஞர்களுமே முக்கியமானவர்கள்: அமித்ஷா</title><link>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-made-excellent-arrangements-to-conduct-exams-in-mother-tongue-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-made-excellent-arrangements-to-conduct-exams-in-mother-tongue-amit-shah#comments</comments><guid isPermaLink="false">28ac5ac0-73a0-46b8-b0e8-d1ca9feeab13</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:02:10 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:02:10.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித்ஷா,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,neet protest,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/85jw4pmk/Untitled-design-80.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah says BJP values nation and youth above posts]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/85jw4pmk/Untitled-design-80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். </p><p>இந்த ராஜினாமா குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-</p><h3><strong>பாஜகவிற்கு நாடும், இளைஞர்களுமே முக்கியம்:</strong></h3><p>பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை எந்தவொரு பதவியையும் விட நாடும், நமது இளைஞர்களும், மாணவர்களுமே முக்கியமானவர்கள். </p><p>மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, இந்த கொள்கைக்கு சிறந்த உதாரணமாகும்.</p><p>மோடி அரசு, இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மோடி எடுத்துள்ள முடிவுகள் பாராட்டுக்குரியவை. </p><p>நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இத்தகைய நடவடிக்கைகள் முழுமையான நீதியை உறுதி செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><h3><strong>தர்மேந்திர பிரதான் செய்த சீர்திருத்தங்கள்:</strong></h3><p>தர்மேந்திர பிரதான் தனது பதவிக்காலத்தில், தேசியக் கல்விக் கொள்கையை  திறம்படச் செயல்படுத்துதல், தாய்மொழியில் தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள், பிஎம் ஸ்ரீ  பள்ளிகளின் விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டார்.</p><p>மேலும் டிஜிட்டல் கல்வியை ஊக்குவித்தல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறைக்கும், கல்வித்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அவர் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். </p><p>தேர்வு முறை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மாணவர் நலனை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கான அவரது முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. </p><p>இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் லட்சியத்தின் மீதான அவரது அர்ப்பணிப்புக்கு, அவரது பதவிக்காலம் ஒரு சான்றாகத் திகழ்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;உன் மச்சங்களை பார்க்க வேண்டும்&apos;-பாலிவுட் நடிகர் அனுப்பிய மெசேஜை அம்பலப்படுத்திய ஜான்வி கபூர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/janhvi-kapoor-reveals-bollywood-actors-flirty-message-about-moles</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/janhvi-kapoor-reveals-bollywood-actors-flirty-message-about-moles#comments</comments><guid isPermaLink="false">56f31052-078a-4b70-ac5d-132a2677985b</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:53:18 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:53:18.676Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Janhvi Kapoor,பாலிவுட்,Bollywood,நடிகை ஜான்வி கபூர்,Koffee With Karan,காபி வித் கரண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/r4kr5qgl/jhanvi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Janhvi Kapoor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/r4kr5qgl/jhanvi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து, தற்போது தென்னிந்திய திரைப்படங்களிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகை ஜான்வி கபூர். சமீபத்தில் தனது சகோதரி குஷி கபூருடன் சேர்ந்து, கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் பிரபல 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட பல சுவாரசியமான மற்றும் தனிப்பட்ட கேள்விகளுக்கு ஜான்வி கபூர் ஓபனாக பதிலளித்தார்.</p><h2><strong>அரங்கத்தையே அதிர வைத்த கேள்வி:</strong></h2><p>நிகழ்ச்சியின் 'ரேபிட் பயர்' சுற்றின் போது கரண் ஜோஹர், உங்களுக்கு இதுவரை வந்த குறுஞ்செய்திகளிலேயே மிகவும் ஃபிளர்ட்டியான  மெசேஜ் எது? என்று கேட்டார். இதற்கு பதிலளிப்பதற்கு முன் தன் சகோதரி குஷியைப் பார்த்து, நான் இதைச் சொன்னால் நீ என் மீது கோபப்படுவாய் என நினைக்கிறேன் என்று கூறி சிரித்தார். </p><p>பின்னர் கரண் ஜோஹரிடம், பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தனக்கு அனுப்பிய மெசேஜை வெளிப்படையாகக் கூறினார். "உன் உடலில் இருக்கும் எல்லா மச்சங்களையும் நான் பார்க்கலாமா?" என்று அந்த நடிகர் தனக்கு மெசேஜ் அனுப்பியதாக ஜான்வி கபூர் கூறினார்.</p><h2><strong>சிரிப்பலையில் ஆழ்ந்த அரங்கம்:</strong></h2><p>ஜான்வியின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கரண் ஜோஹர், தனது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல், அப்படியா! உனக்கு அவ்வளவு மச்சங்களா இருக்கின்றன? என வேடிக்கையாகக் கேட்டார். அதற்கு ஜான்வி கபூர், ஆமாம், எனக்கு நிறையவே இருக்கின்றன என்று வெட்கத்துடன் சிரித்தபடியே பதிலளித்தார். இவர்களின் இந்த கலகலப்பான உரையாடல் அங்கிருந்த அனைவரையும் பெரும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.</p><h2><strong>யார் அந்த நடிகர்?</strong> </h2><p>இருப்பினும், அந்த மெசேஜை அனுப்பிய பாலிவுட் நடிகர் யார் என்பதை ஜான்வி கபூர் வெளியில் சொல்லவில்லை. இதனால், ஜான்வி கபூருக்கு அப்படி ஒரு மெசேஜ் அனுப்பிய அந்த குறும்புக்கார நடிகர் யாராக இருக்கும் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் தீவிரமாக விவாதித்தும் தேடியும் வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் விவகாரம்: நெட்டிசன்களின் வாயை அடைத்த ஜோதிகா!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/neet-issue-jyothika-shuts-trolls</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/neet-issue-jyothika-shuts-trolls#comments</comments><guid isPermaLink="false">be875d50-4670-4cb3-939a-1172a277115a</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:28:58 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:28:58.036Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜோதிகா,Jyothika,நீட் விவகாரம்,CJP Protest,காக்ரோச் ஜனதா கட்சி,NEET Controversy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/eo0zncl6/jyothika.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jyothika  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/eo0zncl6/jyothika.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். மேலும், இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன. குறிப்பாக சிலர் ஜோதிகாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்த நிலையில், அவர்களுக்கு அவர் நேரடியாகவும் காரசாரமாகவும் அளித்த பதிலடிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><h2><strong>கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டீங்க மேடம்:</strong></h2><p>கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டீங்க மேடம் என்று கிண்டலடித்த நபருக்கு, எதுவுமே தாமதம் இல்லை. முதலில் சமூகத்திற்கு உங்களுடைய பங்களிப்பு என்ன என்பதை பற்றி யோசியுங்கள் என்றார்.</p><h2><strong>மும்பைக்கு போயிடுவீங்க:</strong></h2><p>என்ன வேணாலும் பேசிட்டு மும்பைக்கு போயிடுவீங்க என்ற விமர்சனத்திற்கு, நான் எங்கே போவேன்? இந்தியாவில்தான் வாழ்கிறேன். இன்னும் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றார்.</p><h2><strong>அரசியல் தான் நடக்கிறது:</strong></h2><p>மாணவர்கள் தாக்கப்படுவதை விட அரசியல் தான் நடக்கிறது என்ற கருத்துக்கு, அரசாங்கம் மாணவர்களின் மண்டையையும் உடலையும் அடித்து உடைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? என கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும், இந்த பதிவுகளுக்காக உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு, அப்படியானால் நீங்களும் எதிர்க்கட்சியிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் பேசுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா என சரவெடியாய் பதிலளித்துள்ளார். </p><p>ஜோதிகாவின் இந்த தைரியமான பதிலடிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மாப்பிள்ளை சீமான்.., 2 மாதத்துக்கு முன்பு சேர்ந்திருந்தால்., அழைப்பு விடுத்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ntk-seeman-nainar-nagendran-bjp-sarath-kumar-birthday-party</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ntk-seeman-nainar-nagendran-bjp-sarath-kumar-birthday-party#comments</comments><guid isPermaLink="false">1f575132-0495-4d73-a3b1-a619f143f52d</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:18:25 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:18:25.735Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sarath kumar,BJP,பாஜக,Seeman,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,சரத் குமார்,சீமான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/9jng6jkq/SarathKumar0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சரத்குமார் பிறந்த நாள் விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/9jng6jkq/SarathKumar0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகில இந்திய சரத்குமார் ரசிகர் நற்பணி மன்றம், நாட்டாமை குடும்பத்தினர் சார்பில் முன்னாள் எம்.பி.யும், பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் பிறந்த நாள் விழா நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரில் நடைபெற்றது.</p><p>இந்த விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><h2>சீமானுக்கு அழைப்பு</h2><p>பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தங்களது கூட்டணியில் சேருவதற்கு விழா மேடையிலேயே நேரடியாக அழைப்பு விடுத்தார்.    </p><h2>நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-</h2><p>சரத்குமாருக்கு 72 வயதானாலும் அவர் எண்ணத்தாலும், செயலாலும் அவரது வயது 27-தான். இந்த மேடையில் மாப்பிள்ளை சீமான் உள்பட அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்து இருப்பதை பார்க்கும்போது அழகாகத்தான் உள்ளது. இதுபோன்று மேடை 2 மாதங்களுக்கு முன்பு சேர்ந்திருந்தால் தமிழகத்தின் அரசியல் நிலைமை என்னவாகி இருக்கும். பார்ப்போம். இனிமேல் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.</p><figure><img alt="சரத்குமார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்கள்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/lle51vn9/SarathKumar0003.jpg" /></figure> <p>தமிழகத்தில் சிலர் எடுத்த எடுப்பிலேயே முதல்-அமைச்சராக வந்து விடுகிறார்கள். ஆனால் முதல்-அமைச்சருக்கான முழு தகுதியும் சரத்குமாரிடம் உள்ளது. சரத்குமார் தேசிய உணர்வோடு அவரது கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்து கொண்டார். நிச்சயமாக அவருக்கு பதவி தேடிவரும்.</p><p>இவ்வாறு நயினார் நாககேந்திரன் பேசினார்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து உள்ளனர். இந்த 6 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.</p><p>இவற்றில் அம்பாசமுத்திரம் சட்டம்ன்ற தொகுதியில் சீமான் பொதுவேட்பாளராக களம் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து சீமானுக்கு இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சி ஆதரவு அளிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</p><p>பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p><h2>விழாவில் நடிகர் சரத்குமார் பேசியதாவது:-</h2><p>நான் சினிமாவில் இருந்து திடீரென அரசியலுக்கு வந்தவன் அல்ல. எனது குடும்பமே அரசியல் பின்னணி கொண்ட குடும்பம்தான். உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பவர்களை யாராலும் எப்போதும் தோற்கடிக்க முடியாது. உடல் வலிமையும், கடின உழைப்பும் இருந்தால் இளைஞர்கள் சாதனையாளராக முடியும்.</p><p>எதையும் சாதிப்பதற்கு உடல் வலிமையும் மன வலிமையும் இருக்க வேண்டும். என்னால் 150 ஆண்டுகள் வரையிலும் வாழ முடியும். சீனர்கள் 150 ஆண்டுகளுக்கும் மேல் தாண்டி வாழ்கிறார்கள். அதற்கு உடல் வலிமையும் மன வலிமையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.</p><p>சீமான் இந்த மண்ணில் தேர்தலில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது காலத்தின் கட்டாயமாக இருக்கும். சாதி, மத வேறுபாடற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>எங்களை சந்தேகித்து விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி, இது வெறும் தொடக்கம்தான்: அபிஜீத் தீப்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke</link><comments>https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke#comments</comments><guid isPermaLink="false">eee9ce31-86e4-492c-84c3-f06b118c0d02</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:07:47 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:07:47.455Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>abhijeet dipke,அபிஜீத் தீப்கே,சிஜேபி,CJP Protest,CJP,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/inapr828/Untitled-design-76.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET Protest Leader Abhijit Deepke thanks critics]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/inapr828/Untitled-design-76.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்விற்கு எதிராக 37 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவடைந்ததை அடுத்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று ஒரு வீடியோ வெளியிட்டார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே வீடியோ பதிவு:</strong></h3><p>அந்த வீடியோவில் அபிஜீத் தீப்கே கூறியிருப்பதாவது:-</p><p>உங்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. உடல்நலக் குறைபாடுகளை காரணம் காட்டி, ஜந்தர் மந்தரில் கூடியிருந்த ஆதரவாளர்களை நேரில் சந்திக்க இயலவில்லை, அதற்காக மன்னித்து கொள்ளுங்கள்.</p><p>நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஜந்தர் மந்தரில் காத்திருந்த அனைவரையும் என்னால் சந்திக்கவோ, அவர்களுக்கு நன்றி சொல்லவோ முடியவில்லை.</p><p>ஏனென்றால், உங்களுக்குத் தெரியும், எனக்கு டைபாய்டு காய்ச்சல் இருந்தது. எனது உடல் வெப்பநிலை 101 டிகிரியாக இருந்தது. அதனால்தான் நான் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது.</p><p>உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும். ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் காத்திருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>இந்த நாட்டிற்காக நீங்கள் செய்ததை நான் மனதாரப் பாராட்டுகிறேன் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் சல்யூட்.</p><p>எங்களைச் சந்தேகித்தும், விமர்சித்தும், உங்களுக்கு போராடத் தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பியவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>நீங்கள் எங்களை விமர்சிக்காமலும், கேள்வி எழுப்பாமலும் இருந்திருந்தால், எங்களால் முன்னேறியிருக்க முடியாது.</p><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக நாங்கள் நீண்ட தூரம் பயணிப்போம். இது வெறும் தொடக்கம்தான். ஜெய் ஹிந்த்” என்று கூறியுள்ளார்.</p><h3><strong>நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்:</strong></h3><p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ-யின் கணினி வழியில் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், காக்ரோச் ஜனதா கட்சியினர், ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.</p><p>இந்த இயக்கம் நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களின் ஆதரவைப் பெற்றதுடன், பல எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற்றது.</p><p>ஜூன் 28 முதல் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு ஜூலை 18 அன்று காவல்துறையினரால் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.</p><p>இதையடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஜூலை 20 அன்று ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றபோது, இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் காவல்துறையினருடன் மோதல்கள் ஏற்பட்டன.</p><h3>தர்மேந்திர பிரதான் ராஜினாமா:</h3><p>அவர்கள் போராட்டக்காரர்களைக் கலைக்கத் தடியடியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் பயன்படுத்தினர். </p><p>அன்றைய தினம் பிற்பகலில், நட்டா தனது இல்லத்தில் சிஜேபி தலைவர்களுடன் முதல் முறையாக சந்திப்பு ஒன்றை நடத்தினார். இது இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தை குறித்தது.</p><p>இதைத்தொடர்ந்து நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து சிஜேபி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.</p><h3><strong>சிஜேபி கோரிக்கை:</strong></h3><p>இந்த நிலையில் நீட் பிரச்சினை தொடர்பாக ஜந்தர் மந்தரில் 36 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நேற்று கைவிட்டது.</p><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதாக சிஜேபி தெரிவித்தது.</p><p>அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக சிஜேபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.</p><p>ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள், ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடனும் புரிதலுடனும் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என அவர் கூறினார்.</p><h3><strong>மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை:</strong></h3><p>தங்களது கோரிக்கைகள் அடங்கிய வரைவை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாகவும் செளரவ் தாஸ் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நட்டா, போராட்டத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும், தங்களின் எஞ்சிய கோரிக்கைகளையும் கோடிட்டு காட்டும் எழுத்துப்பூர்வ வரைவை சிஜேபி-யினர் சமர்ப்பித்ததாகக் கூறினார்.</p><p>போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் கட்சி உறுதிமொழி கோரியுள்ளதாகவும் நட்டா கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>