<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 05 Sep 2026 03:23:12 +0000</lastBuildDate><item><title>ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day#comments</comments><guid isPermaLink="false">b245a60e-783f-48c0-af5e-7d6f853a099f</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:10:03 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:10:03.757Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,teachers day,ஆசிரியர் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cmhttp0z/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cmhttp0z/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/ஆசிரியர்-தினம்">ஆசிரியர் தினம்</a> கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில், இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். </p><p>இதுதொடர்பாக, முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தன்னலமற்ற அர்ப்பணிப்பு</strong></h2><p>இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/7uuoslsr/vijay0.jpg" /></figure><p>மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்!</p><p>ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது… <a href="https://t.co/Gvx0TCnzPg">pic.twitter.com/Gvx0TCnzPg</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2096067257973780903?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru#comments</comments><guid isPermaLink="false">ca35662d-58f7-43da-9ef5-b8eb94a59b15</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:05:53 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:05:53.193Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,kn nehru,கேஎன் நேரு,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-05/mf5kmsvt/KN-Nehru.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KN Nehru]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-05/mf5kmsvt/KN-Nehru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p> <h2>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar">திமுக</a> முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81">கே.என்.நேரு</a> மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  </p> <h2>கே.என்.நேரு</h2><p>திருச்சி தில்லைநகரில் உள்ள கே.என்.நேரு வீட்டிலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.</p> <p>பார்ட்டி ஃபண்ட் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை என தகவல் வெளியாகி உள்ளது.</p><p>பல்வேறு நிறுவனங்களை மிரட்டி, சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார்..!- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar#comments</comments><guid isPermaLink="false">c7c76065-ae1e-4a6e-b591-e46fc4ac7da5</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:01:32 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:01:32.423Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,பிறந்தநாள் வாழ்த்து,Birthday,வஉ சிதம்பரனார்,VO Chidambaram,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/z4ncqs4p/MKS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/z4ncqs4p/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளர்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>தியாகத் திருவுளம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5.%E0%AE%89.%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">வ.உ. சிதம்பரனார்</a> பிறந்தநாள்</p><p>நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார், ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல் விட்டார். இது மட்டுமா வ.உ.சி.?</p><p>திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார், தொல்காப்பிய உரையைப் பதிப்பித்துள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார், அந்நாளிலேயே தொழிலாளர் உரிமைக்காகப் போராடியுள்ளார்.</p><p>இத்தகைய பன்முக ஆளுமையான வ.உ. சிதம்பரனாரின் வாழ்வும் பணிகளும் எல்லோரையும் சென்றடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு செக்கிழுத்த செம்மலுக்குச் சிறப்பு சேர்த்தோம்.</p><p>அவற்றுடன், 1908 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tirunelveli-halwa-price-hike" rel="nofollow">திருநெல்வேலி</a> எழுச்சிக்கான நினைவுச் சின்னத்தையும் அறிவித்தோம். தற்போதைய அரசும் அதனைக் கைவிடாமல், நிறைவேற்றிட வேண்டும் எனத் தமிழர்தம் சிந்தையில் இருந்து என்றும் அகலாத சிதம்பரனாரின் பிறந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது - ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-madurai-bench-order-educational-institutions-must-not-ask-for-caste-or-religious-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-madurai-bench-order-educational-institutions-must-not-ask-for-caste-or-religious-details#comments</comments><guid isPermaLink="false">233116aa-1b50-49c3-a8f9-c7b054794e2b</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:36:08 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:36:08.097Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court Madurai Bench,caste,கல்வி நிறுவனங்கள்,Educational Institutions,ஐகோர்ட் மதுரை கிளை,சாதி மதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/17/20212967-maduraihc.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ High Court Madurai Bench]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/17/20212967-maduraihc.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.</p><p>விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விக்ரமன், <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88">ஐகோர்ட் மதுரை கிளையில்</a> தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் சாதி விவரங்களை சேகரிக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது சாதி, மத விவரங்கள் கேட்கப்படுகின்றன.</p> <p>இதுபோன்ற நடைமுறைகள் மாணவர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குகின்றன. இதற்கு தடை 3 விதித்து, உரிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். </p> <p>நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தும் என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் - மருத்துவர்கள் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/increase-in-dengue-and-swine-flu-cases-in-tn-compared-to-last-year</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/increase-in-dengue-and-swine-flu-cases-in-tn-compared-to-last-year#comments</comments><guid isPermaLink="false">d85e6190-69fd-4c34-8b7e-e97146206ce1</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:23:48 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:23:48.592Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,dengue fever,swine flu,தமிழ்நாடு,டெங்கு காய்ச்சல்,பன்றிக்காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1vaan2ap/denguefever.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dengue Fever]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1vaan2ap/denguefever.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மழைக்காலம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.</p> <h2>வைரஸ் தொற்றுகள்</h2><p>மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் கொடிய வைரஸ் தொற்றுகளில் டெங்கு மற்றும் பன்றிக் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/viral-fever-spread-in-chennai">காய்ச்சல்</a> முதன்மையான இடத்தை சமீப ஆண்டுகளாக பெற்றுள்ளன. அந்தவகையில் இந்த இரு நோய்களின் தாக்கம் இந்தியாவில் நடப்பாண்டில் சற்று அதிகமாகவே இருக்கிறது.</p><p>அதிலும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதை பொது சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.</p> <h2>அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்</h2><p>அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி வரையிலான நிலவரப்படி, 13 ஆயிரத்து 573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டவர்களில் 0.06 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்தனர். இது சற்று ஆறுதல் தரும் செய்தி என்றாலும், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.</p> <p>கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாதவாரியாக எவ்வளவு பாதிப்புகள் என்ற விவரமும் கிடைத்திருக்கிறது. அதில் ஜனவரியில் 1,722 பேரும், பிப்ரவரியில் 1,322 பேரும், மார்ச்சில் 1,228 பேரும், ஏப்ரலில் 1,201 பேரும், மே மாதத்தில் 1,062 பேரும், ஜூனில் 1,384 பேரும், ஜூலையில் 2,339 பேரும், ஆகஸ்டில் 3,315 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>சென்னை, கோவையில்...</h2><p>அதாவது ஜனவரியில் பாதிப்பின் தாக்கம் ஏற்றம் கண்டு பிறகு குறைந்து வந்து ஜூனில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் பாதிப்புகள் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.</p> <p>கடந்த ஆண்டு ஜூலையில் 1,880 பேர் என்றிருந்த பாதிப்பு இந்த ஆண்டில் 2,339 பேராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 1,832 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை, இந்த ஆண்டில் 3,315 ஆக எகிறியுள்ளது.</p><p>இதில் அதிகம் சென்னை மாவட்டத்தில்தான் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்டு வரையிலான தமிழ்நாடு மொத்த டெங்கு பாதிப்பான 13.573-ல் சென்னையில் மட்டும் 2.584 ஆக உள்ளது. அதற்கடுத்தபடியாக கோவையில் 1,999 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>மழைக்காலம்</h2><p>ஆண்டுவாரியான பாதிப்பில் கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு வெகுவாக குறைந்து. ஆண்டு பாதிப்பு 25,533 ஆக இருந்தது.</p><p>இந்த நிலையில் நடப்பாண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான எண்ணிக்கையில் 13,573 ஆக உள்ளது. இன்னும் மழைக்காலம் வேற தொடங்க இருக்கிறது. எனவே நோய் பாதிப்பு எப்படி இருக்கும்? என்பதை கணிக்க முடியாது.</p> <h2>பன்றிக் காய்ச்சல்</h2><p>இதேபோல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">பன்றிக் காய்ச்சல்</a> பாதிப்பைப் பொறுத்தவரையில், இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1,558 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் பாதிப்புப் பட்டியல்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.</p><p>2010-ம் ஆண்டில் இருந்து பன்றிக் காய்ச்சல் பாதிப்பை ஒப்பிடும்போது, 2024, 2025-ம் ஆண்டை விட நடப்பாண்டில் பாதிப்பு அதிகரித்து இருப்பது புள்ளிவிவரத்தில் தெரிகிறது.</p> <p>2024-ல் 1,777 பேரும், 2025-ல் 1,288 பேரும் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் இந்த ஆண்டில் 1,791 ஆக உள்ளது.</p><p>மாதம் வாரியான பாதிப்பில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்டில் பல மடங்கு பாதிப்பு உயர்ந்திருக்கிறது. உதாரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் 46 ஆக இருந்த பன்றிக் காய்ச்சல் பாதிப்பு, இந்த ஆண்டில் 645 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>கவனம் வேண்டும்</h2><p>இவ்விரு நோய்களும் தனிமனிதனின் உடல்நலத்தைப் பாதிப்பதோடு மட்டுமின்றி, சமூகத்தில் ஒரு சுகாதார நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றன.</p><p>எனவே, உரிய விழிப்புணர்வு, சுற்றுப்புறத் தூய்மை, கொசு ஒழிப்பு மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகளே இவற்றின் பிடியிலிருந்து மக்களைக் காப்பதற்கான அத்தியாவசிய தேவைகளாக உள்ளன. மேலும், தனிமனித நடவடிக்கை, சுகாதார பாதுகாப்பு போன்ற முன்னெச்சரிக்கை முன்னெடுப்புகளை மிகுந்த கவனத்தோடு மக்கள் பின்பற்ற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.</p> <h2>சென்னையில் பாதிப்பு ஏன் அதிகம்?</h2><p>சென்னையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவுவது குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:-</p><p>சென்னையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக இருக்க முக்கிய காரணம் பொது சுகாதாரத்துறையின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாதது தான். மக்கள்தொகை அடர்த்தியாக இருப்பதால், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று எளிதில் பரவுகிறது. பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காணப்படும் நபர்கள் 5 நாட்களாவது தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.</p><p>ஆனால், காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்கள் முகக்கவசம் கூட அணியாமல் பொது இடங்களுக்கு சென்று நோய் பரவலை அதிகப்படுத்துகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு தென்பட்டால் அவர்கள் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பரவும் தன்மை கொண்ட காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. மேலும், பொதுமக்கள் காய்ச்சல் தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p> ]]></content:encoded></item><item><title>கேரளாவில் கோர விபத்து-  தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-accident-8-tamil-nadu-students-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-accident-8-tamil-nadu-students-killed#comments</comments><guid isPermaLink="false">465d9349-7c0a-49da-b9ee-b11b33e8767b</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:18:39 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:18:39.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,சாலை விபத்து,road accident,student death,கேரளா,மாணவர்கள் உயிரிழப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ixbjjnez/accident.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Road Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ixbjjnez/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>கைப்பமங்கலத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>விபத்தில் உயிரிழந்த 8 பேரில் திண்டுக்கல் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>இதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வா, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D" rel="nofollow">திண்டுக்கல்</a> மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ், யுவசஞ்சித், மதுரையைச் சேர்ந்த பிரசன்னா ஆகிய 5 பேர் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்சென்றனர்.</p><p>மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>விபத்துக்கான காரணம் என்ன?</h2><p>கேரளம் மாநிலத்தின் பனம்பிக்குன்னு என்ற இடத்தில் சாலை பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>மாற்றுப்பாதையில் வாகனம் திருப்பிவிடப்படுவது குறித்த எச்சரிக்கை பலகை சரியான இடத்தில் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>500 மீட்டருக்கு முன்னரே தடுப்பு, எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் விபத்து நேர்ந்திருக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 5.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்...</title><link>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-43</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-43#comments</comments><guid isPermaLink="false">354c3b77-e805-4da5-be77-a3b668411fcb</guid><pubDate>Sat, 05 Sep 2026 01:40:01 +0000</pubDate><atom:updated>2026-09-05T01:40:01.270Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/03/25820381-rasipalan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/03/25820381-rasipalan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>செல்வாக்கு உயரும் நாள். சேமிக்கும் எண்ணம் செயல்படும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். பெற்றோர் வழிப் பிரச்சினைகள் தீரும்.</p><h2>ரிஷபம்</h2><p>வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள், நல்ல மனிதர்களின் கிடைக்கும். தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p><h2>மிதுனம்</h2><p>இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.</p><h2>கடகம்</h2><p>நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகப் பிரச்சினை அகலும்.</p><h2>சிம்மம்</h2><p>தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும் நாள். வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.</p><h2>கன்னி</h2><p>யோகமான நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்பு வரலாம்.</p><h2>துலாம்</h2><p>விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். அலைச்சலுக் கேற்ற ஆதாயம் கிடைக்காது. விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் விழிப்புணர்ச்சி தேவை.</p><h2>விருச்சிகம்</h2><p>மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும் நாள். வரவை எதிர்பார்த்துச் செய்த காரிய மொன்றில் செலவுகள் ஏற்படும். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.</p><h2>தனுசு</h2><p>விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோக முயற்சி கைகூடும்.</p><h2>மகரம்</h2><p>பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பாதியில் நின்ற கட்டிடப்பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு.</p><h2>கும்பம்</h2><p>தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் ரீதியான அலைச்சல் உண்டு. குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.</p><h2>மீனம்</h2><p>நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வர்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 5 செப்டம்பர் 2026: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் உற்சவாரம்பம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-5-september-2026-pillayarpatti-karpaga-vinayagar</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-5-september-2026-pillayarpatti-karpaga-vinayagar#comments</comments><guid isPermaLink="false">425b12b1-50ce-4a1d-b34d-246072886af0</guid><pubDate>Sat, 05 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-05T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/20/26791735-vinayagar4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/20/26791735-vinayagar4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-19 (சனிக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   நவமி இரவு 9.21 மணி வரை பிறகு தசமி</p><p>நட்சத்திரம் : மிருகசீர்ஷம் இரவு 9.44 மணி வரை பிறகு திருவாதிரை</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் உற்சவாரம்பம்</h2><p>பாஞ்ச ராத்திர ஸ்ரீ ஜெயந்தி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் உற்சவாரம்பம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் உற்சவாரம்பம் இரவு மூஷிக வாகனத்தில் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். </p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - தெளிவு</p><p>ரிஷபம் - புகழ்</p><p>மிதுனம் - ஆக்கம்</p><p>கடகம் - விவேகம்</p><p>சிம்மம் - உயர்வு</p><p>கன்னி - போட்டி</p> <p>துலாம் - உண்மை</p><p>விருச்சிகம் - தெளிவு</p><p>தனுசு - நலம்</p><p>மகரம் - வரவு</p><p>கும்பம் - மேன்மை</p><p>மீனம் - உண்மை</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-prices-in-chennai-today</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-prices-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">4aceb899-938b-48db-ba1d-aa3575fa30e4</guid><pubDate>Sat, 05 Sep 2026 01:28:00 +0000</pubDate><atom:updated>2026-09-05T01:28:00.875Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய பெட்ரோல் விலை,Todays petrol price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (05.09.2026 - சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>கச்சா எண்ணெய் விலை</p><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 95.90 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் போர் எங்களுக்கு சின்ன விஷயம் - அதிபர் டிரம்ப் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-calls-iran-conflict-small-potatoes</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-calls-iran-conflict-small-potatoes#comments</comments><guid isPermaLink="false">ad2c8042-64c1-4337-ad36-5d7016cbd310</guid><pubDate>Sat, 05 Sep 2026 00:31:42 +0000</pubDate><atom:updated>2026-09-05T00:31:42.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஈரான்,Iran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/x2iia7t6/Donald-Trump.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/x2iia7t6/Donald-Trump.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கிழக்குப் பகுதியில் பல மாதங்களாக அவ்வப்போது நடைபெறும் தாக்குதல்கள் 'போர்' அல்ல என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியதை ஆதரித்து அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a>, ஈரான் போர் போன்ற மோதல் 'சின்ன விஷயம்' என்று குறிப்பிட்டார். </p><p>ஜே.டி. வான்ஸ் தெரிவித்த கருத்துகள் குறித்து ஓவல் அலுவலகத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், <a href="https://www.maalaimalar.com/news/world">ஈரான்</a> மீதான அமெரிக்க தாக்குதல்கள் தற்போது "அவ்வப்போது" மட்டுமே நடைபெறுவதாக குறிப்பிட்டார். </p><p>மேலும், அமெரிக்க வரி செலுத்துவோருக்கு 37.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான செலவை ஏற்படுத்தியதும், 18 அமெரிக்க ராணுவ வீரர்களின் உயிரைப் பறித்ததுமான இந்த மோதலின் தீவிரத்தை அவர் குறைத்து மதிப்பிடுவது போல் பேசினார்.</p><h2>ஈரான் போர் சின்ன விஷயம்:</h2><p>"அவர் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் இதை ஒரு ராணுவ மோதல் என்றுதான் அழைப்பேன்; ஏனெனில் இது எங்களுக்கு ஒரு சிறிய விஷயம் (சின்ன விஷயம்) மட்டுமே. இது பெரிய விஷயமல்ல," என்றும் அதிபர் டிரம்ப் கூறினார்.</p><p>ஈரான் உடனான அமெரிக்காவின் மோதலை விவரிக்க 'போர்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் வான்ஸ் வியாழக்கிழமை நிராகரித்தார். அதேவேளையில், ஆறு மாதங்களாக நீடிக்கும் இந்த மோதல் நவம்பர் இடைக்கால தேர்தலுக்குள் முடிவுக்கு வருமா என்பது குறித்த கணிப்புகளை தவிர்க்கவும் அவர் முயன்றார்.</p><h2>போர் என்று அழைக்கமாட்டேன்:</h2><p>குறிப்பிடத்தக்க வகையில், இந்த தேர்தலில் குடியரசு கட்சியினர் நாடாளுமன்றத்தில் தங்கள் வசமுள்ள மிக குறைந்த அளவிலான பெரும்பான்மையை தக்கவைக்க முயற்சித்து வருகின்றனர்.</p><p>நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்பாகவே இந்த மோதல் முடிவுக்கு வருமா என்று வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டபோது, ​​"நான் இதை போர் என்று அழைக்கமாட்டேன். தற்போதைய நிலையில், தீவிரமான துப்பாக்கிச் சண்டை எதுவும் நடைபெறவில்லை," என்று வான்ஸ் கூறினார்.</p><p>வாரத்தின் தொடக்கத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் கூட்டாளியான குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையிலேயே வான்ஸின் இந்தக் கருத்து வெளியானது.</p>]]></content:encoded></item><item><title>ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் ஷூட்டிங் அப்டேட் - புது வீடியோ வெளியிட்ட படக்குழு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rajinikanth-starrer-dharman-2nd-schedule-shooting-wrapped</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rajinikanth-starrer-dharman-2nd-schedule-shooting-wrapped#comments</comments><guid isPermaLink="false">7be0bdd2-4c1e-4047-b117-df80d5c13bb5</guid><pubDate>Sat, 05 Sep 2026 00:01:15 +0000</pubDate><atom:updated>2026-09-05T00:01:15.016Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,ரஜினிகாந்த்,Ashwath Marimuthu,அஷ்வத் மாரிமுத்து,Dharman,தர்மன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/5t82ymet/Dharman.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dharman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/5t82ymet/Dharman.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/rajinikanth">ரஜினிகாந்த்</a> நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.</p><p>கடந்த ஆகஸ்ட் மாதம் <a href="https://www.maalaimalar.com/topic/dharman">தர்மன்</a> படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த வீடியோவில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்த் தனது வழக்கமான ஸ்டைலுடனும் கம்பீரத்துடனும் நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><h2>தர்மன் நடிகர்கள் குழு:</h2><p>‘தர்மன்’ படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர், ' பேட்ட ' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் உடனும், 'பஞ்சதந்திரம்' மற்றும் 'பம்மல் கே சம்பந்தம்' படங்களுக்குப் பிறகு கமல்ஹாசனுடனும் மீண்டும் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.</p><p>மிஷ்கின் மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதனை இதுவரை படக்குழு உறுதி செய்யவில்லை. படத்தின் மற்ற விவரங்கள் தற்போதைக்கு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.</p><h2>தர்மன் தொழில்நுட்ப குழு:</h2><p>‘தர்மன்’ படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நிகேத் பொம்மியும் படத்தொகுப்பை பிரதீப் இ ராகவ் கையாள்கிறார். புகழ்பெற்ற சண்டைக் கலை இயக்குநர்களான அன்பரிவ் சகோதரர்கள் இந்தப்படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர்.</p><p>கடந்த ஆண்டு நவம்பரில் சுந்தர் சி இப்படத்தின் இயக்குநராக முதலில் அறிவிக்கப்பட்டார், ஆனால் அவர் திடீரென இப்படத்தில் இருந்து விலகினார். பின்னர் , 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' திரைப்படங்களை இயக்கிய இயக்குநனர் அஷ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குவதாக தயாரிப்பாளர்களால் உறுதி செய்யப்பட்டது.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Eb0_I0z9YWc"></iframe></figure>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: திரிசூலி பஜார் பகுதியில் 5 வயது சிறுவன் உட்பட 3 இந்தியர்கள் மீட்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-5-year-old-among-3-indians-rescued-from-trishuli-bazaar-area</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-5-year-old-among-3-indians-rescued-from-trishuli-bazaar-area#comments</comments><guid isPermaLink="false">09bf58f9-e500-4d9c-af10-5d8c72c6448d</guid><pubDate>Fri, 04 Sep 2026 21:59:12 +0000</pubDate><atom:updated>2026-09-04T21:59:12.825Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>indians,Nepal Floods,இந்தியர்கள்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/whpr3qmf/Nepal-site.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/whpr3qmf/Nepal-site.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">நேபாள</a> வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரிசூலி பஜார் பகுதியிலிருந்து மேலும் மூன்று இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 வயது சிறுவனும் அடங்குவார். </p><p>இதன் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 169-ஆக உயர்ந்துள்ளது; அதேவேளையில் 275 <a href="https://www.maalaimalar.com/topic/indians">இந்தியர்கள்</a> இன்னும் காணாமல் போயுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.</p><p>இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கூடுதல் தகவல்களை பகிர்ந்துகொண்ட வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், 1,907 இந்தியர்கள் சீனாவில் இருந்து நேபாளத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.</p><h2>மூன்று பேர் மீட்பு:</h2><p>திரிசூலி பஜார் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அந்த மூவர் அபிஜித் சுரேஷ் பவார், தீபிகா அபிஜித் பவார் மற்றும் 5 வயது சமர்த் அபிஜித் பவார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய ஜெய்ஸ்வால், அவர்கள் தாயகம் திரும்புவதற்கான விமான பயண ஏற்பாடுகளை காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.</p><p>ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து, அந்நாட்டிற்கு இந்தியா சுமார் 95 டன் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் மேலும் சில உடல்களை மீட்டதை தொடர்ந்து, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,295-ஆக உயர்ந்துள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>5000 பேர் மாயம்:</h2><p>அவசரகால மீட்புக் குழுக்கள் 12,000-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டிருந்தாலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுமார் 5,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><p>"எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, 275 இந்தியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளனர். நாங்கள் நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். இது தொடர்பாக நேபாள அதிகாரிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்," என்று ஜெய்ஸ்வால் தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.</p><p>தொடர்ந்து பேசும் போது, "சீனாவின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, சீனாவின் திபெத் பகுதியில் இந்திய பயணிகள் யாரும் இல்லை. நேபாள அரசாங்கம் கோரியுள்ள கூடுதல் தடயவியல் உபகரணங்கள், பெய்லி பாலங்கள் மற்றும் பிற பொருட்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்," என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அசாம் ரெயில் தண்டவாளத்தில் நிலச்சரிவு: மிசோரம் செல்லும் ரெயில் சேவைகள் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/train-services-to-mizoram-suspended-after-landslide-hits-rail-track-in-assam</link><comments>https://www.maalaimalar.com/news/national/train-services-to-mizoram-suspended-after-landslide-hits-rail-track-in-assam#comments</comments><guid isPermaLink="false">9f983ab0-776a-4951-9fd5-bb6800cb6d93</guid><pubDate>Fri, 04 Sep 2026 21:11:59 +0000</pubDate><atom:updated>2026-09-04T21:11:59.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>landslide,ரெயில் சேவை,train service,mizoram,நிலச்சரிவு,மிசோரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/yn335tlp/Landslide-Hits-Rail-Track.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Landslide Hits Rail Track]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/yn335tlp/Landslide-Hits-Rail-Track.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">அசாம்</a> மாநிலத்தின் ஹைலாகண்டி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரெயில் தண்டவாள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மிசோரம் மாநிலம் பைராபிக்கு செல்லும் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>வியாழக்கிழமை மாலை பெய்த இடைவிடாத மழையை தொடர்ந்து, அசாம்-<a href="https://www.maalaimalar.com/topic/mizoram">மிசோரம்</a> எல்லை பகுதியில் உள்ள ஜமீரா மற்றும் பைராபிக்கு இடையேயான ரெயில் தண்டவாளத்தின் சுமார் 50 மீட்டர் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.</p><h2>சீரமைப்பு பணிகள் தொடக்கம்:</h2><p>பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பகுதி வழியாக ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. </p><p>தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் தொழிலாளர்களுடன் பாதிக்கப்பட்ட இடத்திற்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.</p><p>ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளனர், மேலும் தண்டவாளத்தை விரைவில் சீரமைப்பதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.</p><h2>ரெயில் சேவை ரத்து:</h2><p>வியாழக்கிழமை இயக்கப்பட்ட சில்சார்-பைராபி பயணிகள் ரெயில், ஜமீராவில் தனது பயணத்தை நிறைவு செய்தது. அந்த ரெயில் இன்று ஜமீராவில் இருந்து தனது திரும்பும் பயணத்தை தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. பைராபி நோக்கி பயணிக்கும் பயணிகளுக்காக மாற்று சாலை போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>கவுகாத்தி-சைராங் ரெயில் ஹைலாகண்டியில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது. மேலும், ஹைலாகண்டிக்கும் சைராங்கிற்கும் இடையிலான அதன் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இயக்கப்பட இருந்த பைராபி-சில்சார், சைராங்-கொல்கத்தா மற்றும் சில்சார்-சைராங் ரெயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><h2>சிறப்பு உதவி மையங்கள்:</h2><p>சிக்கித் தவிக்கும் பயணிகளுக்காக, வடகிழக்கு ரெயில்வே ஜமீரா, பைராபி மற்றும் சாய்ரங் நிலையங்களில் குடிநீர் மற்றும் சிற்றுண்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், பயணிகளுக்கு ரெயில் சேவைகள் குறித்த தகவல்கள், பயணச்சீட்டு தொடர்பான உதவிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஆதரவை வழங்குவதற்காக கவுகாத்தி, லும்டிங், நஹர்லாகுன், படர்பூர் மற்றும் சாய்ரங் நிலையங்களில் சிறப்பு உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.</p><p>வடகிழக்கு ரெயில்வே நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஹைலாகண்டி மாவட்டத்தின் ஜமீரா-பைராபி பிரிவில் சேதமடைந்த ரெயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. ரெயில் சேவைகளை விரைவில் மீட்டெடுக்க ரெயில்வே துறை செயல்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் பயன்படுத்திய விமானியை பணிநீக்கம் செய்தது ஏர் இந்தியா</title><link>https://www.maalaimalar.com/news/national/phuket-flight-pilot-who-failed-drug-test-sacked-by-air-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/phuket-flight-pilot-who-failed-drug-test-sacked-by-air-india#comments</comments><guid isPermaLink="false">1ef19e33-8fe5-4f59-b50b-2b24565fea09</guid><pubDate>Fri, 04 Sep 2026 20:24:28 +0000</pubDate><atom:updated>2026-09-04T20:24:28.190Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏர் இந்தியா,Air India,Phuket,Flight Pilot,புக்கெட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-02/2mt2aa30/tn-21.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-02/2mt2aa30/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி, தாய்லாந்தின் <a href="https://www.maalaimalar.com/news/world">புக்கெட்</a> நகரில் இருந்து இன்று இந்தியாவின் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.</p><p>நடுவானில் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென <a href="https://www.maalaimalar.com/topic/flight">விமானம்</a> சுமார் 300 அடி கீழே சரிந்தது. இதனால் சில பயணிகள் முன்னால் உள்ள இருக்கைகள் மீது மோதினர். </p><p>மேலும், பயணிகள் பலரும் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். பின்னர் விமானம் சமநிலைக்கு வந்து, பத்திரமாக டெல்லியில் தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் 24 பயணிகள் காயமடைந்தனர்.</p><h2>பணிநீக்க நடவடிக்கை:</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை நடத்தியது. இதன்படி முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தின்போது தலைமை விமானி சுதீப் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. </p><p>இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இந்த நிலையில், விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையை ஏற்று, தலைமை விமானி சுதீப்பை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"பூக்கெட்-டெல்லி விமானத்தின் தலைமை விமானிக்கு மனநிலையை மாற்றும் பொருள் ஒன்று இருந்தது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. பாதுகாப்பு, உடற்தகுதி அல்லது ஒழுங்குமுறை தேவைகளை மீறுவதில் ஏர் இந்தியாவின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறைக்கு இணங்க, அந்த விமானியின் பணி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது," என்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>விமான விபத்து புலனாய்வு பணியகம், தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையில், 145 பயணிகளை ஏற்றி சென்ற ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானம் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ​​அதன் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் செயலிழந்ததாக குறிப்பிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் பாதுகாப்பு சேவை தலைமையகத்தை தாக்கிய ரஷிய டிரோன்</title><link>https://www.maalaimalar.com/news/world/russian-drone-hits-ukraines-intelligence-service-headquarters-in-kyiv</link><comments>https://www.maalaimalar.com/news/world/russian-drone-hits-ukraines-intelligence-service-headquarters-in-kyiv#comments</comments><guid isPermaLink="false">bfaa64ea-0777-4c7b-905a-943269966093</guid><pubDate>Fri, 04 Sep 2026 19:42:50 +0000</pubDate><atom:updated>2026-09-04T19:42:50.643Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,கீவ்,Kyiv,ரஷியா,உக்ரைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/7z3aabwq/Kyiv-Attacked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kyiv Attacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/7z3aabwq/Kyiv-Attacked.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கீவ் நகரில் உள்ள உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவைகளின் தலைமையகத்தை ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியதாக <a href="https://www.maalaimalar.com/news/world">உக்ரைன்</a> அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அதேவேளையில், சம்பவ இடத்திற்கு அருகில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்ததை ஏ.எஃப்.பி. செய்தியாளர் ஒருவர் கண்டார்.</p><p>உக்ரைன்ஸ்கா பிரவ்தா செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், கட்டிடத்தின் முன்புறத்தில் உள்ள குறைந்தது இரண்டு ஜன்னல்களில் இருந்து கருப்பு புகை வெளியேறுவது போல தெரிந்தது, அதே நேரத்தில் வெளியே ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.</p><h2>தீவிரமடையும் தாக்குதல்:</h2><p>நகர மையத்தின் மீதான தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்தனர் என கீவ் நகர மேயர் விட்டாலி கிளிச்கோ தெரிவித்தார். சமீபத்திய வாரங்களில் ரஷியா, உக்ரைன் மீதான தனது பகல் நேர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. சில சமயங்களில், வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்க கடினமான ஜெட் விமானங்களையும் அது பயன்படுத்துகிறது.</p><p>தாக்குதலுக்கு பிறகு "SBU-வின் தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாடுடன்" பேசியதாக ஜெலென்ஸ்கி கூறினார். "துரதிர்ஷ்டவசமாக, கீவ் நகரின் வோலோடிமிர்ஸ்கா தெருவில், புனித சோபியா பேராலயத்திற்கு எதிரே உள்ள SBU-வின் மைய கட்டிடத்தின் மீது ஒரு ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியுள்ளது," என்று ஜெலென்ஸ்கி டெலிகிராமில் தெரிவித்தார்.</p><h2>ஜெலன்ஸ்கி அறிவுறுத்தல்:</h2><p>"அந்தக் கட்டிடத்தில் உள்ள பாதுகாப்பு சேவை தலைவரின் அலுவலகத்தை ஆளில்லா விமானம் நேரடியாகs குறிவைத்தது," என்று அவர் மேலும் கூறினார்.</p><p>"எல்லாம் தயாரானதும், ரஷியர்களுக்கு பொருத்தமான, உறுதியான பதிலடியை கொடுக்குமாறும், முடிந்தால் இந்த தாக்குதலை பிரதிபலிக்கும் வகையிலான பதிலடியை கொடுக்குமாறும்" SBU தலைவருக்கு அறிவுறுத்தியதாக ஜெலன்ஸ்கி கூறினார்.</p><h2>அமெரிக்கா பேச்சுவார்த்தை:</h2><p>ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மருமகனான ரஷியா பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், ரஷிய டிரோன் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கற்பித்தலில் ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு</title><link>https://www.maalaimalar.com/news/national/president-droupadi-murmu-urges-teachers-to-use-technology-in-education</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-droupadi-murmu-urges-teachers-to-use-technology-in-education#comments</comments><guid isPermaLink="false">58c11c88-acaa-4ac2-921a-0f47155bf5f1</guid><pubDate>Fri, 04 Sep 2026 18:54:33 +0000</pubDate><atom:updated>2026-09-04T18:54:33.737Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>திரவுபதி முர்மு,teachers day,ஆசிரியர் தினம்,குடியரசு தலைவர்,President,Droupadi Murmu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/eetnsyuq/Prez-droupadi-murmu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Droupadi Murmu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/eetnsyuq/Prez-droupadi-murmu.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/droupadi-murmu">திரவுபதி முர்மு</a> நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.</p><p>தனது செய்தியில், ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படும் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை <a href="https://www.maalaimalar.com/news/national">குடியரசு தலைவர்</a> நினைவு கூர்ந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திய அவர், ஒரு அறிஞராக, தத்துவஞானியாக மற்றும் ஆசிரியராக ஆற்றிய பங்களிப்பை பாராட்டினார்.</p><h2>ஆசிரியர்களுக்கு வாழ்த்து:</h2><p>"ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள நமது ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் தினம், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த எழுத்தாளரும் தத்துவஞானியுமான டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.</p><p>அவர் ஒரு மிகச்சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தார். இந்த நன்னாள் வேளையில், அவருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். ஆசிரியர்கள், தங்கள் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் மூலம், திறமைகளை வளர்ப்பதிலும் குணநலன்களை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.</p><h2>குடியரசு தலைவர் வலியுறுத்தல்:</h2><p>மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவது அவர்களின் கடமையாகும். அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட ஒரு ஆசிரியர், மாணவர்களின் தனித்துவமான ஆற்றலை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாக திகழ்ந்து, சிறந்து விளங்க அவர்களை ஊக்குவிப்பார்.</p><p>ஆசிரியர்கள் தங்கள் அறிவை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, புதுமையான கற்பித்தல் முறைகளைக் கையாள வேண்டும். அவர்கள் மாணவர்களிடையே சுயசிந்தனையை ஊக்குவித்து, ஆராயும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்," என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.</p><h2>ஆசிரியர்களுக்கு நன்றி:</h2><p>கல்வியாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தேசத்தின் முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய எதிர்காலத் தலைமுறைகளை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளது என்று கூறினார்.</p><p>"தங்கள் பங்களிப்பிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் அறிவொளி பெற்ற தலைமுறைகளை அனைத்து ஆசிரியர்களும் உருவாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்," என்று ஜனாதிபதி முர்மு கூறினார்.</p><p>ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, ஜனாதிபதி 25 ஆசிரியர்களையும் கௌரவிக்க உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆழ்கடலில் அதிரடி ஆக்ஷன்: நடிகர் சூரியின் &quot;மண்டாடி&quot; டிரெய்லர் வெளியானது</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-soori-starrer-mandaadi-trailer-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-soori-starrer-mandaadi-trailer-released#comments</comments><guid isPermaLink="false">b1e4d013-8565-4757-9d76-a43e84c01273</guid><pubDate>Fri, 04 Sep 2026 18:06:22 +0000</pubDate><atom:updated>2026-09-04T18:06:22.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Soori,Mandaadi,சூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/c90q6b7m/Mandaadi-Trailer-Poster.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mandaadi Trailer Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/c90q6b7m/Mandaadi-Trailer-Poster.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் நடிகர் சூரி கூட்டணியில் உருவாகி இருக்கும் <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> "மண்டாடி". இந்தப் படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்துடன் நடிகர்கள் சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.</p><p>மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகு போட்டி அடிப்படையில் <a href="https://www.maalaimalar.com/topic/mandaadi">மண்டாடி</a> படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>இசை வெளியீடு:</h2><p>முன்னதாக இந்தப் படத்தில் இருந்து ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ என அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. </p><p>குறிப்பாக ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் நடிகர் சூரியின் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.</p><h2>டிரெய்லர் வெளியீடு:</h2><p>மண்டாடி திரைப்படத்தில் முத்துக்காளி எனும் கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும், படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படத்தின் வெளியீடு ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது.</p><p>இந்த நிலையில், மண்டாடி திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் படகுப் போட்டி, ஆக்ஷன் என மண்டாடி உலகிற்கு ரசிகர்களை அழைத்து செல்லும் வகையில் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. </p><p>இந்தப் படத்திற்கு யு/ஏ 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/VOHaf-0DV-U"></iframe></figure>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை: இந்தோனேசியாவை எளிதில் வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம் - 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-uae-w-beat-idn-w-by-6-wickets</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-uae-w-beat-idn-w-by-6-wickets#comments</comments><guid isPermaLink="false">68679fcd-34f1-449f-bf3a-f31bc53b1e43</guid><pubDate>Fri, 04 Sep 2026 17:19:01 +0000</pubDate><atom:updated>2026-09-04T17:19:01.988Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/adeubtz8/UAE-W-Won.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UAE W Won]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/adeubtz8/UAE-W-Won.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துபாயில் நடைபெற்று வரும் மகளிர் <a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup-2026">ஆசிய கோப்பை</a> டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடரின் இன்றைய ஆட்டத்தில் க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தோனேசியா மகளிர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிகள் மோதின. </p><p>இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்தோனேசிய மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. </p><p>அந்த அணிக்கு துவக்கம் கொடுத்த மரியா கோரசோன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீராங்கனையான ரஹமாவதி பங்கெஸ்துதி 2 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார்.</p><h2>இந்தோனேசியா ஏமாற்றம்:</h2><p>தொடர்ந்து களமிறங்கிய நி லூ தேவி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நந்தா சகரினி பொறுப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். நிதானமாக ஆடிய இவர் 52 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களை (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். பின்னர் களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.</p><p>இதனால் இந்தோனேசிய மகளிர் அணி 19.4 ஓவர்களில் வெறும் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுரக்ஷா கோடீ 3 விக்கெட்டுகளையும், இஷா ஓஸா, ஹீனா, வைஷ்ணவி தலா 2 விக்கெட்டுகளையும், சமைரா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.</p><h2>யுஏஇ அபாரம்:</h2><p>74 எனும் எளிய இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த தீர்த்தா சதிஷ் 11 ரன்கள் எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் இஷா 29 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். </p><p>பின்னர் களமிறங்கிய ரினிதா 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே ரன் குவிப்பில் கவனம் செலுத்திய ஐக்கிய அரபு அமீரகம் கடைசியில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.</p><p>இறுதியில் ஐக்கிய அரபு அமரீகம் மகளிர் அணி 13.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்களை எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தோனேசியா மகளிர் அணி சார்பில் சோஃபியா 2 விக்கெட்டுகளையும், அரியானி மற்றும் சங் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 - இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமானது </title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/royal-enfield-himalayan-440-launched-at-budget-price-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/royal-enfield-himalayan-440-launched-at-budget-price-in-india#comments</comments><guid isPermaLink="false">301bced4-274e-4f91-8a23-18374cdd4e88</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:39:17 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:39:17.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Royal Enfield,ராயல் என்ஃபீல்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/qla1n03o/Untitled-design-18.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Royal Enfield Himalayan 440]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/qla1n03o/Untitled-design-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய மேம்படுத்தப்பட்ட அட்வென்ச்சர் பைக்கான ஹிமாலயன் 440 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. </p><p>இந்த புதிய மாடல், ஹிமாலயன் பெயர் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடுவதோடு, பெரிய 443சிசி என்ஜின் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபிரேமையும் கொண்டுள்ளது.</p><p>ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் 440 மாடலின் முதல் யூனிட்களில் உள்ள எரிபொருள் டேங்கில் 10-ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் சிறப்பு பேட்ஜ் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த மோட்டார்சைக்கிள் சேலா பிளாக், மஸ்டாங் பிரவுன் மற்றும் நெலாங் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. ராயல் என்ஃபீல்டு டீலர்ஷிப்கள் மற்றும் நிறுவனத்தின் இணையதளம் வழியாக செப்டம்பர் 4 அன்று முன்பதிவுகள் தொடங்கின.</p><p>443சிசி, ஒற்றை-சிலிண்டர், லாங்-ஸ்ட்ரோக் என்ஜின் மூலம் இந்த பைக் இயக்கப்படுகிறது. இது 6,250 ஆர்.பி.எம்.மில் 25.4 பி.எச்.பி சக்தியையும், 4,000 ஆர்.பி.எம்.மில் 34 என்.எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.</p><p>இந்த மோட்டார், அசல் ஹிமாலயனில் இருந்த ஐந்து-வேக கியர்பாக்ஸ் அமைப்புக்கு பதிலாக, ஆறு-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. </p><p>சத்தம், அதிர்வு மற்றும் கடினத்தன்மை அளவுகள் உட்பட, மென்மையை மேம்படுத்தும் நோக்கில் என்ஜினிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ராயல் என்ஃபீல்ட் கூறுகிறது.</p><p>ஹிமாலயன் 440, ஹாஃப்-டூப்ளெக்ஸ் ஸ்ப்ளிட்-கிரேடில் ஃபிரேமைப் பயன்படுத்துகிறது. இதன் சஸ்பென்ஷனில், 200 மிமீ பயண தூரம் கொண்ட 41 மிமீ டெலஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க்குகளும், 180 மிமீ பயண தூரம் வழங்கும் லிங்கேஜ்-வகை பின்பக்க மோனோ ஷாக்கும் அடங்கும்.</p><p>இந்த மோட்டார் சைக்கிள், கரடுமுரடான சாலைகள் மற்றும் கரடுமுரடான பாதைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு 21-அங்குல முன்பக்க மற்றும் 17-அங்குல பின்பக்க வயர்-ஸ்போக் சக்கரங்களைக் கொண்டுள்ளது.</p><p>இது 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 800 மிமீ இருக்கை உயரத்தைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இரண்டு-பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிப்பருடன் கூடிய 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் மூலம் பிரேக்கிங் கையாளப்படுகிறது.</p><p>ஹிமாலயன் 440 மாடலில் புதிய LED முகப்பு விளக்கு, டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிரிப்பர் நேவிகேஷன் மற்றும் USB டைப்-c சார்ஜிங் போர்ட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.</p><p>15 லிட்டர் எரிபொருள் தொட்டி மற்றும் மேம்படுத்தப்பட்ட லக்கேஜ் ஏற்றிச் செல்லும் திறன் ஆகியவை இதன் சுற்றுலா நோக்குக்கு வலு சேர்க்கின்றன.</p><p>ராயல் என்ஃபீல்டு, கடினமான பக்கவாட்டுப் பெட்டிகள், டாப் பாக்ஸ், டூரிங் இருக்கைகள், கைக்காப்புகள், என்ஜின் கார்டுகள், ஸ்லைடர்கள் மற்றும் கூம்பு வடிவக் கண்ணாடிகள் உள்ளிட்ட துணைக்கருவிகளை வழங்குகிறது.</p><h3><strong>விலை</strong></h3><p>இவை, உரிமையாளர்கள் தங்களது மோட்டார்சைக்கிளை அன்றாடப் பயணங்கள், வார இறுதிப் பயணங்கள் அல்லது நீண்ட சாகசப் பயணங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள உதவுகின்றன.</p><p>இந்த புதிய மாடலின் விலை ரூ. 2.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்று விலை நிர்ணயம் செய்யட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஃபுல் சார்ஜில் 535கி.மீ. செல்லும் ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/range-rover-electric-unveiled-bookings-open</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/range-rover-electric-unveiled-bookings-open#comments</comments><guid isPermaLink="false">aaf8c6fc-0c46-44e4-8c73-f8f3ecad5640</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:39:00 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:39:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எலெக்ட்ரிக் கார்,Electric Car,Range Rover Electric,ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/qucv4boo/Range-Rover-Electric.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Range Rover Electric]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/qucv4boo/Range-Rover-Electric.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது முதல் முழுமையான மின்சார மாடலான <a href="https://www.maalaimalar.com/topic/range-rover">ரேன்ஜ் ரோவர்</a> எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. முந்தைய உலகளாவிய அறிமுகங்களைப் போல் சர்வதேச வெளியீட்டுக்கு பிறகு சில மாதங்கள் வரை தாமதம் செய்யாமல், புதிய மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவிலும் தொடங்கியுள்ளன. </p><p>இந்த எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர், இங்கிலாந்தில் உள்ள அந்த நிறுவனத்தின் சோலிஹல் ஆலையில் தயாரிக்கப்படுகிறது. 1970 முதல் ரேன்ஜ் ரோவரை உற்பத்தி செய்து வரும் அதே ஆலையில்தான் இது தயாரிக்கப்படுகிறது, மேலும் இது அந்த நிறுவனத்தின் முதன்மை மாடலாகவும் விளங்குகிறது.</p><h2>மோட்டார் மற்றும் பவர்:</h2><p>புதிய எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடலில் 349hp பவர் வெளிப்படுத்தும் டூயல் நிரந்தர-காந்த மோட்டார்களில் இருந்து பெறப்படுகிறது. இவை ஒருங்கிணைந்து 543hp வரையிலான பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது, இதற்கு முந்தைய எந்த ரேன்ஜ் ரோவர மாடலையும் விட இந்த எஸ்யூவி-க்கு அதிக டார்க் மற்றும் சத்தமில்லாத செயல்திறனையும் அளிப்பதாக ரேன்ஜ் ரோவர் கூறுகிறது.</p><p>இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள், 800-வோல்ட் கட்டமைப்பில் இயங்கும் இரட்டை அடுக்கு 118.5kWh பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது சுமார் 22 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங் செய்ய உதவுகிறது, அல்லது 350kW சார்ஜரில் வெறும் 10 நிமிடங்களில் சுமார் 220 கிலோமீட்டர்கள் பயண தூரத்தை சேர்க்கிறது.</p><h2>வேரியண்ட் விவரங்கள்:</h2><p>மின்சார சக்திக்கு மாறிய போதிலும், ரேன்ஜ் ரோவர் இந்த மாடலின் பாரம்பரிய ஆஃப்-ரோடு திறனை பாதுகாக்க ஒருங்கிணைந்த டிராக்‌ஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம், மாறும் பரப்புகளுக்கு 50 மில்லி விநாடிகளுக்குள் எதிர்வினையாற்றுகிறது. மேலும் ஒற்றை பெடல் டிரைவிங் மோட் இந்த SUV-ஐ 45 டிகிரி வரையிலான சரிவுகளில் ஏற அனுமதிக்கிறது. ரேன்ஜ் ரோவரின் வழக்கமான அனைத்து நிலப்பரப்பு அளவுகோல்களுக்கு இணங்க, நீரில் செல்லும் ஆழம் 900 மில்லிமீட்டர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>புதிய ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக், ஸ்டாண்டர்ட்-வீல்பேஸ் ஆட்டோபயோகிராஃபி டிரிம் அல்லது லாங்-வீல்பேஸ் SV, SV அல்ட்ரா மற்றும் SV பிளாக் வேரியண்ட்டுகளுக்கு இடையே தேர்வு செய்யலாம். இவற்றுடன், பெல்கிரேவியா கிரீன், சாண்டோரினி பிளாக் அல்லது வரேசைன் ப்ளூ நிறங்களில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இன்டீரியர் டிரிம்முடன் கூடிய ஃபர்ஸ்ட் எடிஷன் மாடலும் உள்ளது. ரேஞ்ச் ரோவர் தனது WLTP-மதிப்பிடப்பட்ட 600 கிலோமீட்டர் அளவிற்கு பதிலாக, இந்த எஸ்யூவி நிஜ உலகில் 535 கிலோமீட்டர் வரை பயணிக்கும் என உறுதியளிக்கிறது.</p><p>இந்தியாவில் ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக் மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்த எஸ்யூவி, இந்தப் பிரிவில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்யூவி, வால்வோ EX90 மற்றும் பிஎம்டபிள்யூ iX போன்ற முழுமையான மின்சார சொகுசு எஸ்.யூ.வி.க்களுடன் போட்டியிடும்.</p>]]></content:encoded></item><item><title>நான் 9 நாட்களாக ‘ஹரே கிருஷ்ணா’ என்று உச்சரித்து கொண்டிருந்தேன்: கிருஷ்ண ஜெயந்தியில் சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளி</title><link>https://www.maalaimalar.com/news/world/i-was-chanting-hare-krishna-for-9-days-worker-rescued-from-tunnel</link><comments>https://www.maalaimalar.com/news/world/i-was-chanting-hare-krishna-for-9-days-worker-rescued-from-tunnel#comments</comments><guid isPermaLink="false">bd60e86c-5a2a-4bcf-8342-3d94e55736d7</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:38:35 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:38:35.005Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாள்,nepal,கிருஷ்ண ஜெயந்தி,Janmashtami,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/9ec5kau6/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Tunnel Rescue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/9ec5kau6/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பேரிடரில் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 30 வயதான தொழிலாளி மீட்கப்பட்டபோது, தான் கடந்த ஒன்பது நாட்களாக ‘ஹரே கிருஷ்ணா’ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்ததாக கூறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில்</a> ஆகஸ்ட் 26 அன்று நேபாள-திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவினால், வடக்கு மற்றும் மத்திய நேபாள பகுதிகளில் உள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.</p><h3><strong>சுரங்கத்தில் சிக்கிய ஊழியர்கள்</strong></h3><p>அப்போது திரிசூலி ஆற்றங்கரையில் உள்ள நீர்மின் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சுரங்கங்களில் மின் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். </p><p>இந்த பேரிடரின் போது மின் மேற்பார்வை ஊழியரான சஞ்சய் சா, கட்டுப்பாட்டு அறையில் மற்ற ஊழியர்களுடன் பணிபுரிந்து கொண்டிருந்தார்.</p><p>அப்போது ஆற்றின் மேல்பகுதியில் ஏற்பட்ட பெருவள்ளம் குறித்த தகவல் கிடைத்ததும், அவருடன் பணியாற்றிய மற்ற தொழிலாளர்களை அங்கிருந்து தப்பி செல்லுமாறு ஷா கூறியுள்ளார்.</p><p>இதையடுத்து சுரங்கத்தில் இருந்து கடைசியாக தப்ப முயன்ற அவரால், பெருவெள்ள இடர்பாடுகளில் சிக்கி தப்பிக்க முடியாமல் போனது.</p><h3><strong>மின் ஊழியர்கள் மீட்பு</strong></h3><p>இதன் காரணமாக அவர் கடந்த ஒன்பது நாட்களாக சுரங்கப்பாதைக்குள் இருளில் சிக்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.</p><p>இந்த நிலையில் கடந்த 9 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த சஞ்சய் ஷா மற்றும் 45 வயதான கபீர் மஹர்ஜன் ஆகிய மின் ஊழியர்களை நேபாள மீட்பு படை வீரர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று உயிருடன் பத்திரமாக மீட்டனர்.</p><p>இதையடுத்து மீட்கப்பட்ட மின் ஊழியர்களை மேல் சிகிச்சைக்காக செளனியில் உள்ள நேபாள ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு சென்றனர்.</p><h3><strong>ஹரே கிருஷ்ணா மந்திரம்</strong></h3><p>இந்த நிலையில் சுரங்கப்பாதையில் மீட்கப்பட்ட மின் ஊழியரான சஞ்சய் ஷா கூறுகையில், “நான் கடந்த ஒன்பது நாட்களாக ஹரே கிருஷ்ணா என்ற மகா மந்திரத்தை உச்சரித்து வந்தேன்.</p><p>வெள்ளம் வந்தபோது நான் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என்னுடன் பணிபுரிந்த அனைவரின் உயிரையும் காப்பாற்றுவது எனது பொறுப்பாக இருந்தது.</p><p>இந்த விபத்தில் மற்ற சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களுடன் என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது.</p><p>ஆனால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த அனைவராலும் தப்பித்திருக்க முடியாது. ஏனென்றால் அந்த சுரங்கப்பாதை மிகவும் நீளமானது” என்று அவர் கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">VIDEO | Nepal: A person identified as Sanjay Shah rescued alive today from the tunnel of Trishuli–3 &#39;A&#39; Hydropower Project. Visuals of the rescued person.<br><br>(Source: Third Party)<br><br>(Full video available on PTI Videos - <a href="https://t.co/d8jp61yd2p">https://t.co/d8jp61yd2p</a>) <a href="https://t.co/kM7nRYZN9p">pic.twitter.com/kM7nRYZN9p</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2095738631638143446?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதையடுத்து நேபாள ராணுவம் தலைமையிலான பாதுகாப்பு பிரிவு வீரர்கள், மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி சுரங்கத்தில் சிக்கி காணாமல் போன மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.</p><p>மேலும் திரிசூலி ஆற்றங்கரையில் உள்ள 6 நீர்மின் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சுரங்கங்களில் குறைந்தது 900 பேர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சனி கோளின் தென் துருவத்தில் 10 பக்க அலை வடிவிலான காட்சி: விஞ்ஞானிகள் </title><link>https://www.maalaimalar.com/news/world/ten-sided-wave-pattern-discovered-at-saturns-south-pole</link><comments>https://www.maalaimalar.com/news/world/ten-sided-wave-pattern-discovered-at-saturns-south-pole#comments</comments><guid isPermaLink="false">3c1c6d91-9387-45a0-b57f-938e799b696b</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:36:54 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:36:54.708Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாசா,Solar system,nasa,Saturn,சனி கோள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3vtxoaib/Untitled-design-13.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Saturn South Pole Decagon Wave]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3vtxoaib/Untitled-design-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சனி கோளின் தென் துருவத்தில் 10 பக்க (decagon) அலை வடிவத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>சனி கோளின் தென் துருவத்தில் 10 பக்க (decagon) அலை வடிவத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். </p><p>இந்த வடிவம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">நாசாவின்</a> இரட்டை வாயேஜர் விண்கலங்களால் 1980களில் பிரபஞ்சத்தை ஆய்வு செய்ய உளவு பார்க்கப்பட்ட, சனி கோளின் வட துருவத்தை சுற்றியுள்ள மேகங்களின் ஆறு பக்கங்கள் கொண்ட (hexagon) கோணத்தை விட பெரியதாக இருந்தாக கண்டறிந்துள்ளனர்.</p><p>மேலும் சுழலும் இதன் தசமகோணம் (10 பக்க கோணம்) இன்னும் பெரியதாகவும், மேலும் நிலையற்றதாகவும் தோன்றுவதாக ஸ்பெயின் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>சனி கோள்</strong></h3><p>சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய கோளாகவும், சூரியனில் இருந்து ஆறாவது பெரிய கோளாகவும் சனி (saturn) கோள் உள்ளது.</p><p>இந்த கோளானது சூரிய மண்டலத்தில் மிக குறைந்த அடர்த்தி கொண்டதாகவும், இதன் அடர்த்தி நீரை விட குறைவாகவும் உள்ளது. இதன் காரணமாக சூரிய மண்டலத்தில் மிதந்து கொண்டு வருகிறது.</p><p>சனி கோளின் தென் துருவத்தில் காணப்படும் இந்த புதிய ஜெட் நீரோட்ட அமைப்பு 2023-ஆம் ஆண்டில் மிகப்பெரிய தொலைநோக்கியான, ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் பார்வையில் தென்பட்டது.</p><p>இதையடுத்து 2017 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சனி கோளின் தென் துருவம் பூமியில் இருந்து சற்று விலகி சாய்ந்திருந்ததால், இந்த விசித்திரமான வளிமண்டல நிகழ்வு உருவாகி இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>நாசா முதன்மை ஆய்வாளர்</strong></h3><p>இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து நாசாவின் கோடார்ட் விண்வெளி பறப்பு மையத்தின் ஓபால் (OPAL) முதன்மை ஆய்வாளரான ஏமி சைமன் கூறுகையில், சனி கிரகத்தின் தென் அரைக்கோளத்தில் இது போன்ற ஒன்றை தாங்கள் இதுவரை கண்டதில்லை என தெரிவித்தார்.</p><p>மேலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் பார்த்த ஒவ்வொரு முறையும், அந்த வட அரைக்கோளம் அங்கேயே இருந்ததாகவும், இந்த வடிவம் வித்தியாசமான முறையில் வலுப்பெற்றது போல் தோற்றமளிப்பதாகவும் அவர் கூறினார்.</p><p>இந்த புதிய வடிவம் இன்னும் உருவாகி கொண்டிருக்க வாய்ப்புள்ளதாகவும், ஏனென்றால் பத்து பக்கங்கள் கொண்ட ஒரு பக்கம் மட்டும் ஏற்கனவே சுமார் 16,000 கிலோ மீட்டரை தாண்டி விட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளி நிலையத்திற்கு  கொண்டு செல்லப்பட்ட 30 ஜப்பானிய காடை முட்டைகள்: நாசா சோதனை</title><link>https://www.maalaimalar.com/news/world/nasa-takes-30-japanese-quail-eggs-to-space-station</link><comments>https://www.maalaimalar.com/news/world/nasa-takes-30-japanese-quail-eggs-to-space-station#comments</comments><guid isPermaLink="false">47c9fcf7-e5da-4566-9cec-46058f1f65bc</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:35:26 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:35:26.618Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Scientists,நாசா,விஞ்ஞானிகள்,nasa,காடை,quail</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/4mmzgsxp/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NASA Quail Egg Experiment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/4mmzgsxp/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கருவுற்ற 30 ஜப்பானிய காடை முட்டைகளை ஆய்வுக்காக விண்வெளி மையத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து விண்வெளி நிலையத்தில் 16 நாட்கள் அடைக்காக்கப்பட்ட முட்டைகள், மறுபடியும் ஆய்விற்காக பூமிக்கு கொண்டு வரப்பட்டன.</p><h3>30 ஜப்பானிய காடை முட்டைகள்</h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்க</a> நாசா விண்வெளி வீரரான ஷானன் லூசிட் என்பவர் கடந்த 1995-ஆம் ஆண்டு,  30 ஜப்பானிய கருவுற்ற முட்டைகளை எடுத்துக் கொண்டு, ‘மிர்’ என்ற விண்வெளி நிலையத்திற்கு ஆய்வுக்காக சென்றார்.</p><p>மைக்ரோ விசை ஈர்ப்பு (Micro gravity) இல்லாமல் விண்வெளி நிலையத்தில், உயிரினங்கள் எவ்வாறு உயிர் வாழ்கின்றது என்பதை கண்டறியும் சோதனை முயற்சியாக, இந்த 16 நாட்கள் பயணம் அமைந்தது. </p><h3><strong>பாதுகாப்பான முறையில் அடைகாப்பு</strong></h3><p>இதையடுத்து விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட காடை முட்டைகள், அங்குள்ள ஓர் அடைகாப்பானில் பாதுகாப்பாக 16 நாட்களுக்கு அடை வைக்கப்பட்டது. </p><p>இதுகுறித்து நாசா கூறுகையில், காடை முட்டைகளை பாதுகாப்பாக அடைகாப்பதற்கு பல அடுக்குகள் கொண்ட தடுப்புகள் தேவைப்பட்டதாக தெரிவித்தது.</p><p>ஏனெனில் முட்டையில் இருந்து தவறுதலாக கசியும் ஒரு துளி, விண்கலம் முழுவதும் மிதந்து சென்று, விண்கலத்தில் பயணிக்கும் விஞ்ஞானிகளுக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தது.</p><p>இதன் காரணமாக, நாசா விஞ்ஞானிகள் கருவுற்ற முட்டைகளை பாதுகாப்பாக கையாளுவதற்காக, அதற்கென வடிவமைக்கப்பட்ட கையுறைகளை வடிவமைத்து பயன்படுத்தினர்.</p><h3><strong>பூமிக்கு கொண்டுவரப்பட்ட முட்டைகள்</strong></h3><p>இதையடுத்து 16 நாட்கள் விண்வெளி சோதனைக்கு பிறகு, பூமிக்கு கொண்டுவரப்பட்ட கரு முட்டைகள், எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை பெற்றிருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.</p><p>இருப்பினும் விண்வெளியில் வளர்ந்த கருக்களின் உடல் எடையில் லேசான அளவில் வளர்ச்சியில் தாமதங்கள் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். </p><p>மேலும் வழக்கத்திற்கு மாறாக சிறிய குறைபாடுள்ள கண்கள் மற்றும் விரல்கள் காணப்பட்டதாக்வும் நாசா தெரிவித்தது.</p><h3><strong>நாசா விஞ்ஞானி ஷானன் லூசிட்</strong></h3><p>இந்த சோதனை குறித்து விண்வெளிக்கு பயணம் சென்ற ஷானன் லூசிட் கூறுகையில், மிர் விண்வெளி நிலையத்தில் அடைகாக்கப்பட்ட கருக்களில் 13 சதவீதம் அசாதாரண விகிதத்தை கொண்டிருந்தது. </p><p>இது பூமியில் உள்ள கருக்களில் காணப்பட்ட விகிதத்தை விட நான்கு மடங்குக்கும் அதிகமாக இருந்தது.</p><p>இந்த அசாதாரண நிகழ்விற்கு, அடைகாப்பானுக்குள் இருந்த சற்றே உயர்ந்த வெப்ப நிலையும், விண்வெளி நிலையத்தில் கணிசமாக உயர்ந்த கதிர்வீச்சின் வெளிப்பாடுகளும் காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>இந்த மாதிரியான ஆய்வுகள், எதிர்காலத்தில் பூமிக்கு அப்பால் உள்ள உயிர்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதற்கான ஆய்வின் வெளிப்பாடாக இருந்ததாக நாசா தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் பயங்கரம்: போராட்டத்தின்போது கல்வீச்சு தாக்குதல் - ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/horror-in-nellai-stone-pelting-attack-during-protest-panchayat-president-dies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/horror-in-nellai-stone-pelting-attack-during-protest-panchayat-president-dies#comments</comments><guid isPermaLink="false">1d843c77-7ba7-4ad1-b583-69523dd9481f</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:26:44 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:26:44.106Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Stone Pelting,கல்வீச்சு,Panchayat president,Kannanallur,ஊராட்சி மன்றத் தலைவர்,கண்ணநல்லூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dpfl9mci/New-Project-2026-09-04T215556.963.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லையில் பயங்கரம் - போராட்டத்தின்போது கல்வீச்சு தாக்குதல் - ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dpfl9mci/New-Project-2026-09-04T215556.963.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட கல் தலையில் பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் (54) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>கண்ணநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை என அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்த ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் சென்றுள்ளார்.</p><p>அப்போது கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் செங்கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மகாராஜன் நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார்.</p><p>அப்போது பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். இருப்பினும், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>இச்சம்பவம் குறித்து வள்ளியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் நெல்லை எஸ்.பி. விஷ்வேஷ் சாஸ்திரி தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக கூட்டணியில் இல்லை’ - மு. வீரபாண்டியன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-is-not-part-of-the-tvk-alliance-m-veerapandian</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-is-not-part-of-the-tvk-alliance-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">b532ad59-32ce-469e-91f4-b9bf77d1822e</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:08:23 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:08:23.645Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,tvk,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3d2xtgdp/New-Project-2026-09-04T213738.785.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக கூட்டணியில் இல்லை’ - மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3d2xtgdp/New-Project-2026-09-04T213738.785.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக அமைச்சர்கள் இன்று அதன் கூட்டணி மற்றும் ஆதரவு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினர்.</p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில், வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி தவெக கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு விடுக்க இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. </p><h2>இடதுசாரித் தலைவர்கள்</h2><p>சென்னை தி.நகரில் உள்ள சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><h2>வைகோ </h2><p>மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோவை அமைச்சர்கள் குழு நேரில் சந்தித்தனர். அப்போது கூட்டத்திற்கான அழைப்பிதை வழங்கியதாக கூறப்படுகிறது.</p><h2>திருமாவளவன்  </h2><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அமைச்சர்கள் குழு விரைவில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது. </p><h2>இடதுசாரிகள் மறுப்பு</h2><p>இந்த சந்திப்புகள் கூட்டணி குறித்த அழைப்பு என தகவல்கள் வெளியாகி வரும்நிலையில் இடதுசாரி கட்சிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் இடதுசாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவிக்கவே அமைச்சர்கள் தன்னை சந்தித்தாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/oversight-escaped-the-governments-notice-tvk-functionaries-express-regret-over-the-actions-of-the-guziliyamparai-tahsildar">பெ.சண்முகம் </a>தெரிவித்துள்ளார்.</p><h2>கூட்டணியில் இல்லை</h2><p>அதுபோல தவெகவின் கூட்டணியில் நாங்கள் இல்லை என்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும் தெரிவித்துள்ளார்.  </p><p>தவெக அரசை சிபிஐ கட்சி வெளியில் இருந்து மட்டுமே ஆதரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகாரத்தில் ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்தும் மட்டுமே இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. </p><p>தவெக அமைச்சர்கள் தங்களை வந்து சந்தித்தபோது அரசியல் குறித்துப் பேசினோம் என்றும், அவர்கள் தங்களை அமைச்சர்களாக அல்லாமல் தவெக நிர்வாகிகளாகவே சந்தித்தனர் என்றும் வீரபாண்டியன் விளக்கமளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்காவிடம் போராடி வீழ்ந்த நமீபியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/south-africa-beat-namibia-in-triseries</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/south-africa-beat-namibia-in-triseries#comments</comments><guid isPermaLink="false">bfa89de5-a986-4342-bbca-33745d4c7655</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:34:07 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:34:07.227Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தென் ஆப்பிரிக்கா,Triseries,முத்தரப்பு தொடர்,நமீபியா,SAvNAM</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3h66g4xp/pretorius.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pretorius]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3h66g4xp/pretorius.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நமீபியா அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி போராடி வென்றது.</strong></em></p><p>நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.</p><p>முதல் லீக் போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை நமீபியாவும், 2வது லீக்  போட்டியில் ஜிம்பாப்வே அணியை தென் ஆப்பிரிக்காவும் வீழ்த்தியது. 3-வது லீக் ஆட்டத்தில் நமீபியாவை ஜிம்பாப்வே அணியும் வீழ்த்தின.</p><p>4வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை தென் ஆப்பிரிக்கா அணியும், 5வது லீக் ஆட்டத்தில் நமீபியாவை ஜிம்பாப்வே அணியும் வீழ்த்தியது.</p><h2>நமீபியா-தென் ஆப்பிரிக்கா</h2><p>இந்நிலையில், நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் நமீபியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><h2>தென் ஆப்பிரிக்கா ரன் குவிப்பு</h2><p>அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பிரிடோரியஸ் 53 பந்தில் சதமடித்து 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கனூர் எஸ்டர்ஹுய்சென் 40 பந்தில் 88 ரன் குவித்தார்.</p><p>ஆரம்பம் முதலே அதிரடியாக இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது.</p><p>நமீபியா சார்பில் ஜேன் பால்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ஜான் பிரைலிங்க் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். அவர் 36 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 72 ரன்கள் குவித்தார்.</p><p>மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான லூரன் ஸ்டீன்காம்ப் தன் பங்குக்கு சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார். அவர் 66 ரன்னில் ரிடயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.</p><p>இறுதியில், நமீபியா அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.</p><p>இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>பாஜக ஆளாத மாநிலங்கள் - அதானி குழுமம் ரூ.5 லட்சம் கோடி முதலீடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/adani-group-rs-5-lakh-crore-investment-in-non-bjp-ruled-states</link><comments>https://www.maalaimalar.com/news/national/adani-group-rs-5-lakh-crore-investment-in-non-bjp-ruled-states#comments</comments><guid isPermaLink="false">eaa9e14c-15c8-49cd-ab1a-c066545e85ae</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:23:30 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:23:30.868Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,அதானி,adani group,அதானி நிறுவனம்,அதானி குழுமம்,முதலீடு</media:keywords><media:content height="225" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/95quzt8f/sm8ocnl8adani-group-logo-on-wall625x30025November24.webp" width="400"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாஜக ஆளாத மாநிலங்கள் - அதானி குழுமம் ரூ.5 லட்சம் கோடி முதலீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/95quzt8f/sm8ocnl8adani-group-logo-on-wall625x30025November24.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>அதானி முதலீடு</h2><p>தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான  முதலீடுகளை <a href="https://www.maalaimalar.com/news/national/gujarat-court-sentences-senior-journalist-to-1-year-in-prison-for-defamation-of-adani-group-808910">அதானி குழுமம்</a> மேற்கொண்டுள்ளது. </p><h2>பாஜகவின் ஆதரவு கரம் </h2><p>மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பாஜகவிற்கு அதானி குழுமம் பல வகைகளில் ஆதரவு கரம் நீட்டி வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்கட்சிகள் தொடர் எதிர்ப்பினைவும், அதானி குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டும் தவறுகளை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றன.</p><p>இந்த சூழலில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அதானி குழுமம் முதலீடுகளை விரிவுப்படுத்தி உள்ளது கவனம் ஈர்த்துள்ளது. </p><h2>கேரளம் - கர்நாடகம் </h2><p>அதன்படி பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க  16.75 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படவுள்ள வடக்கு-தெற்கு சுரங்கப் பாதை பணிகளுக்கு ரூ.22,267 கோடிக்கான டெண்டா் உரிமத்தையும், மேலும் கேரளத்தில் விழிஞ்ஞம் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மற்றும் விரிவுப்படுத்தல் ஆகிய செயல்பாடுகளுக்காக  ரூ.16,000 கோடி என மொத்தமாக ரூ.30,000  முதலீட்டை அதானி குழுமம் செய்துள்ளது.</p><h2>தெலங்கானா , தமிழ்நாடு </h2><p>அதானி குழுமம் ஏற்கனவே தெலங்கானாவில் 4 புரிந்துணர்வு  ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டிருக்கும் நிலையில் , புதிதாக தரவு மையங்கள், எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் புதிதாக முதலீடுகளை செய்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் அதானி குழுமத்திற்கு வலுவான எதிர்ப்புகள் இருந்தாலும் , கணிசமான முதலீடுகளை அதானி குழுமம் ஈர்துள்ளது. </p><p>குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் தரவு மையங்கள், சிமெண்ட் ஆலைகள் உள்ளிட்டவற்றை அமைக்க ரூ.42,000 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக அதானி குழுமம் அறிவித்திருந்து குறிப்பிடத்தக்கது. </p><h2>தவெக ஆட்சியிலும் நீடிப்பு </h2><p>முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் , சாலை மேம்பாட்டு  பணிகளுக்காக ரூ.2,511 கோடியில் ஒப்பந்தத்தை அதானி குழுமம் கோரியிருந்தது, இந்த வெளிப்படையான அறிவிப்பின் மூலம் தற்போதைய ஆட்சியிலும் நீடிக்கிறது என்பது தெரிகிறது.</p><h2>மொத்தம்  ரூ.5 லட்சம் கோடி</h2><p>ஒட்டுமொத்தமாக பாஜக ஆளாத மாநிலங்களையும் சேர்த்து இந்தியா முழுவதும் ரூ.5 லட்சம் கோடி முதலீடுகளை அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர்கள் சந்திப்பு - தூய்மைப் பணியாளர் போராட்டம் தற்காலிக வாபஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-protest-temporarily-withdrawn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-protest-temporarily-withdrawn#comments</comments><guid isPermaLink="false">486857ce-4262-4c78-b056-a70c4f48a4e7</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:16:42 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:16:42.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Sanitary workers,தூய்மை பணியாளர்கள் போராட்டம்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,தூய்மை பணியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2zfqv7px/1200-675-27556290-thumbnail-16x9-sdew22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தூய்மைப் பணியாளர்கள் அமைச்சர்கள் சந்தித்தபோது]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர்கள் சந்திப்பு - தூய்மைப் பணியாளர் போராட்டம் தற்காலிக வாபஸ்!
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2zfqv7px/1200-675-27556290-thumbnail-16x9-sdew22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தொடர் போராட்டம் </h2><p>சென்னையில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு , தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 15 நாட்களாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan">தூய்மைப் பணியாளர்கள்</a> தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.</p><p>முதலில் மண்டலவாரியான பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், கடந்த ஒருவாரமாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>அமைச்சர்கள் சந்திப்பு </h2><p>தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அரசுத்தரப்பில் சந்திக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட  பலதரப்பினரும் கேள்வி எழுப்பினர். </p><p>சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். </p><p>இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து  பேசினர். அப்போது பேசிய அமைச்சர்கள் கூறியதாவது; </p><p>பழைய ஆட்கள் <a href="https://www.maalaimalar.com/news/national/aap-national-convenor-arvind-kejriwal-and-punjab-cm-bhagwant-mann-hold-a-roadshow-in-madhya-pradesh-683442">கஜானாவை காலி </a>செய்துள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் சேர்த்து கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்தனர். </p><p>மேலும் யாருக்கும் தொந்தரவுமின்றி போராடிய மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும், இது ஒரு போராட்டம் இனறி மாநாடு போல் இருக்கிறது , ஆட்சி அமைத்து நூறு நாள் தான் ஆகிறது, அப்படியே யாரையும் விட்டுவிட மாட்டோம், எங்களுக்கு அவகாசம் வேண்டும் தெரிவித்தனர். </p><h2>உறுதியளிப்பு </h2><p>மேலும் அடுத்த மாதம் முதல் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.50 தருவதாகவும், கடந்த காலத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-forcibly-arrested-while-attempting-to-lay-siege-to-the-chief-ministers-mla-office">தூய்மைப் பணியாளர்கள்</a> மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனவும் உறுதி அளித்தனர். </p><p>மேலும் மண்டலம் 4,7,8-ல் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்றும், பணியாளர்களுக்கு தேவையான அனைத்து கால் , கை உறைகளும் வழங்கப்படும் என்றும், மகப்பேறு விடுப்பு, வார விடுப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாகவும் தெரிவித்தனர்.  </p><p>அரசின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>கனமழையால் ஸ்தம்பிக்கும் டெல்லி - இயல்பு வாழ்க்கை முடக்கம்! </title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-life-paralyzed-by-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-life-paralyzed-by-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">b85ffa44-16a9-4dd9-9af5-b7df3f75c0e6</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:14:40 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:14:40.681Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,வெள்ளப்பெருக்கு,Red Alert,ரெட் அலர்ட்,rain alert,டெல்லி கனமழை,delhi,டெல்லி</media:keywords><media:content height="452" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6uvla8lc/images-3.jfif" width="678"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனமழையால் ஸ்தம்பிக்கும் டெல்லி - இயல்பு வாழ்க்கை முடக்கம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6uvla8lc/images-3.jfif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம் </h2><p>டெல்லியில் தொடர்ந்து பெய்தும் வரும் கனமழை காரணமாக தலைநகரின் முக்கிய இடங்களில்  <a href="https://www.maalaimalar.com/news/topnews/nepal-flash-floods-death-toll-rises-to-734">வெள்ளப்பெருக்கு</a> ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையானது முடங்கியுள்ளது.</p><h2>போக்குவரத்து சேவை பாதிப்பு </h2><p>டெல்லியின் கிழக்கு மற்றும் வடகிழக்கும் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.</p><p>குறிப்பாக ஆனந்த் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றிய சாலைகளில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/puzhal-lake-appears-at-a-critically-low-level">மழைநீர்</a> பெருக்கெடுத்து ஓடியது, இதனால்  முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><h2>ரெட் அலர்ட் </h2><p>டெல்லியில் பெய்து வரும் கனழையால் நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லியின் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனடி '<a href="https://www.maalaimalar.com/news/national/kerala-red-alert-for-8-districts-holiday-declared-for-schools-and-colleges-in-5-districts">ரெட் அலர்ட்</a>' எச்சரிக்கையை விடுத்துள்ளது. </p> <h2>விமான சேவை பாதிப்பு </h2><p>மோசமான வானிலை மற்றும், தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல விமானங்கள் மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டும் , சில விமானங்கள் தாமதமாகவும் புறப்பட்டன.</p> <h2>தேவையற்ற பயணம் வேண்டாம் </h2><p> பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரக்கூடும் என்பதால், பொதுமக்கள் யாரும்<a href="https://www.maalaimalar.com/news/puducherry/orange-alert-for-puducherry-public-should-not-come-out-unnecessarily-797726"> வெளியே வர வேண்டாம்</a> என்றும் ,தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பள்ளிக்கூடம் செல்ல கலெக்டரிடம் சைக்கிள் கேட்ட சிறுமி: வைரலான வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/buy-me-a-bicycle-7-year-old-girl-with-amputated-leg-pleads-to-district-collector</link><comments>https://www.maalaimalar.com/news/national/buy-me-a-bicycle-7-year-old-girl-with-amputated-leg-pleads-to-district-collector#comments</comments><guid isPermaLink="false">62ff41fb-d3b3-4b78-ab64-9819f9c48bff</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:58:13 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:58:13.273Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uttarpradesh,District Collector,மாவட்ட ஆட்சியர்,ஊனமுற்ற பெண்,physically disabled,உத்தரப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/q4k6hd71/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ragini Disabled Girl]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/q4k6hd71/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராணிபூர் என்ற கிராமத்தில் கால் ஊனமாக உள்ள சிறுமி ஒருவர், தனது வறுமையின் நிலையிலும், உடல் குறைகளை பொருட்படுத்தாமல், அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கு ஒரு காலில் நடந்து சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேசம்</a> மாநிலம் பலியாவில் உள்ள ராணிபூர் என்ற கிராமத்தில் ராகினி என்ற ஏழு வயது சிறுமி பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போல உடல் ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளார். </p><h3><strong>7 வயது சிறுமி ராகினி</strong></h3><p>அந்த சிறுமி ஆறு மாத குழந்தையாக இருக்கும்போது, ஒரு விபத்தில் சிறுமியின் கால் கடுமையாக சேதமடைந்து நடக்க முடியாமல் போனது. அந்த சிறுமியின் குடும்பத்தினர், அவரை பல இடங்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். </p><p>ஆனால் ராகினியின் தந்தை தினக்கூலியாக வேலை பார்த்து வருவதாலும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும் சிறுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சையை அவரின் பெற்றோர்களால் வழங்க முடியாமல் போனது.</p><p>ராகினி தனது கிராமத்தில் உள்ள மற்ற குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை பார்த்து, தானும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று விரும்பியுள்ளார். தனது உடலில் குறைபாடுகள் இருந்தபோதிலும், திகோடா தொடக்கப் பள்ளியில் அந்த சிறுமி சேர்ந்து படிக்க தொடங்கினார்.</p><p>தனது வீட்டில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு, ராகினியால் ஒரு காலில் நடந்து செல்வது மிகவும் சவாலனதாக இருந்தது. </p><p>பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருந்ததால், அந்த சிறுமியால் ஒரு காலில் நடந்து செல்வது மேலும் கடினமானதாக இருந்தது.</p><h3><strong>மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை</strong></h3><p>இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் தனக்கு ஒரு மிதிவண்டி தருமாறு ராகினி வீடியோ காட்சி மூலம் கோரிக்கை வைத்தார். சிறுமி வெளியிட்ட அந்த வீடியோவில், ”மாவட்ட ஆட்சியர் மாமா, என் கால்களில் ஒன்று மிகவும் சேதமடைந்துள்ளது.</p><p>தயவுசெய்து எனக்கு ஒரு மிதிவண்டியை வாங்கி தாருங்கள். நான் தினமும் பள்ளிக்கு படிக்க வருவேன்” என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். </p><p>இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி கவனம் பெற்றதை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 26,500 நிதியுதவி வழங்கினார்.</p><p>இதையடுத்து உள்ளூர் கட்சியினரும் சிறுமிக்கு ஒரு மூன்றுசக்கர மிதிவண்டியை வாங்கி கொடுத்தனர். இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் ராகினியின் வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.</p><figure><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1037443005730852%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></figure><p>இதைத்தொடர்ந்து சிறுமிக்கு புத்தகங்கள், பள்ளி பை, பொம்மை மற்றும் சாக்லேட்டுகளை ஆட்சியர் வழங்கினார். மேலும் ராகினிக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் ஏற்பாடு செய்து தருவதாக, ஆட்சியர் உறுதியளித்தார்.</p><p>மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறுமியின் கிராமத்திற்கு தேவையான சாலை வசதியும் சீரமைக்கப்பட்டது. மேலும் சிறுமியின் வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்டுவதற்கு, அரசு நலத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>அரசின் கவனத்திற்கு வராமல் தவறு: தலைமைச் செயலாளர், குஜிலியம்பாறை வட்டாட்சியர் செயலுக்கு வருத்தம் தெரிவித்த தவெக அமைச்சர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/oversight-escaped-the-governments-notice-tvk-functionaries-express-regret-over-the-actions-of-the-guziliyamparai-tahsildar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/oversight-escaped-the-governments-notice-tvk-functionaries-express-regret-over-the-actions-of-the-guziliyamparai-tahsildar#comments</comments><guid isPermaLink="false">841fd341-2cb4-4657-974c-72ed15970b32</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:47:08 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:47:08.981Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>CPIM,P. Shanmugam,பெ.சண்முகம்,சிபிஎம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/7yml0k4m/New-Project-2026-09-04T195814.697.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரசின் கவனத்திற்கு வராமல் தவறு: தலைமைச் செயலாளர், குஜிலியம்பாறை வட்டாட்சியர் செயலுக்கு வருத்தம் தெரிவித்த தவெக அமைச்சர்கள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/7yml0k4m/New-Project-2026-09-04T195814.697.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகள், தவெக அரசின் கவனத்திற்கு வராமல் அதிகாரிகள் செய்த தவறு என்று தமிழ்நாடு அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.</p><p>இந்த தன்னிச்சையான செயலுக்காக அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்து மாநிலச் செயலாளர் சண்முகத்திடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.<br><br>தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஆகியோரின் நடவடிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு வராமல்… <a href="https://t.co/t4qRBz16Dw">pic.twitter.com/t4qRBz16Dw</a></p>&mdash; Shanmugam P (@Shanmugamcpim) <a href="https://x.com/Shanmugamcpim/status/2095848193854734665?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>இந்த சந்திப்பு தொடர்பான செய்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-chief-secretary-unfit-to-continue-in-the-post-p-shanmugam">பெ.சண்முகம் </a>வெளியிட்டுள்ளார்.</p> <h2>வட்டாட்சியர் சுற்றறிக்கை</h2><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்தப் பகுதியில் உள்ள இடதுசாரி (சிபிஎம் மற்றும் சிபிஐ) கட்சி உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரிக்குமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.</p><h2>மாணவர் போராட்டக் கட்டுப்பாடு </h2><p>இதேபோல், இடதுசாரி அமைப்புகளின் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதைக் கண்காணிக்க உயர் கல்வித்துறையின் மூலம் ஒரு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.</p><p>இடதுசாரிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து சுற்றறிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.</p><p>இந்நிலையில் அமைச்சர்கள் சிபிஎம் அலுவலகம் சென்று விளக்கம் அளித்து, இனி இதுபோன்று நடக்காது என உறுதியளித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக்-சிராக் ஜோடி</title><link>https://www.maalaimalar.com/sports/satwik-chirag-pair-enter-sf-round-in-china-masters-super-750</link><comments>https://www.maalaimalar.com/sports/satwik-chirag-pair-enter-sf-round-in-china-masters-super-750#comments</comments><guid isPermaLink="false">15c0c65e-f79f-4405-a64e-328481487609</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:17:38 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:17:38.046Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Satwik Chirag Pair,சாத்விக் சிராக் ஜோடி,China Masters Badminton,சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/xm12m61n/sadwik.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sadwik chirag pair]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/xm12m61n/sadwik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியது.</strong></em></p><p>சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் தேதியுடன்  இந்தத் தொடர் முடிவடைகிறது.</p><p>இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, டென்மார்க்கின் கிம் ஆஸ்ட்ரப்-ஆண்டர்ஸ் ஸ்காரப் ஜோடி உடன் மோதியது.</p><p>இதில் சிறப்பாக ஆடிய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">சாத்விக் சிராக் ஜோடி</a> 21-13, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.</p><p>அரையிறுதியில் சாதவிக் சிராக் ஜோடி மலேசிய அல்லது இந்தோனேசிய ஜோடியை எதிர்கொள்கிறது.</p><p>ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றிலும், லக்‌ஷயா சென் முதல் சுற்றிலும் தோல்வி அடைந்தனர். </p><p>இதேபோல், பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா ஆகியோரும் தோல்வி அடைந்து வெளியேறினர்.</p>]]></content:encoded></item><item><title>பின்வாங்கிய பென்குயின் இந்தியா... சோனியா காந்தி சுயசரிதையை வெளியிடும் ஹார்பர் காலின்ஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/national/penguin-india-backs-out-harpercollins-to-publish-sonia-gandhis-autobiography</link><comments>https://www.maalaimalar.com/news/national/penguin-india-backs-out-harpercollins-to-publish-sonia-gandhis-autobiography#comments</comments><guid isPermaLink="false">2b1b002a-84da-49d0-9577-049a482f28ce</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:04:08 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:04:08.748Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sonia gandhi,சோனியா காந்தி,Belonging A Journey of Love,Penguin India,பென்குயின் இந்தியா,HarperCollins,ஹார்பர் காலின்ஸ்,பிலாங்கிங் எ ஜர்னி ஆஃப் லவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h741bnc3/New-Project-2026-09-04T191136.458.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பின்வாங்கிய பென்குயின் இந்தியா... சோனியா காந்தி சுயசரிதையை வெளியிடும் ஹார்பர் காலின்ஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h741bnc3/New-Project-2026-09-04T191136.458.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான 'பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்' புத்தகத்தை இந்தியாவில் வெளியிடும் உரிமத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.</p><p>முதலில் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் வெளியிட இருந்தநிலையில் பின் விலகியது. இந்நிலையில் ஹார்பர் காலின்ஸ் உரிமத்தை பெற்றுள்ளது.</p><h2>பென்குயின் நிறுவனம் விலகியதற்கான காரணம்</h2><p>புத்தகத்தின் சில பகுதிகளில் “எழுத்துப்பூர்வ மாற்றங்கள் மற்றும் நீக்கங்களை” மேற்கொள்ளுமாறு <a href="https://www.maalaimalar.com/news/national/sonia-gandhis-autobiography-penguin-withdrew-after-refusing-to-remove-remarks-about-modi-and-the-rss">பென்குயின் இந்தியா </a>நிறுவனம் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. </p><p>அதாவது பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்த சோனியாவின் பகிர்வுகளை நீக்க பென்குயின் இந்தியா கேட்டுள்ளது. இதற்கு சோனியா காந்தி மறுப்பு தெரிவிக்க இந்த ஒப்பந்தத்திலிருந்து பென்குயின் இந்தியா விலகியதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. </p><p>ஆனால் இதற்கு பென்குயின் இந்தியா நிறுவனம் மறுப்பு தெரிவித்து, இது உண்மைக்கு மாறான தகவல் என தெரிவித்தது. </p><h2>ஒப்பந்தத்தை பெற்ற ஹார்பர் காலின்ஸ்</h2><p>பென்குயின் நிறுவனம் விலகியதைத் தொடர்ந்து, ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் இப்புத்தகத்தை வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. </p><p>இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி இப்புத்தகம் 2026 நவம்பர் 10 அன்று இந்தியாவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்</h2><p>இப்புதக்கத்தில் சோனியா காந்தி தனது சிறுவயது வாழ்க்கை, ராஜீவ் காந்தி உடனான திருமண வாழ்க்கை, அதன் பின்னராக அரசியல் வருகை உள்ளிட்ட தனது வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை பகிர்ந்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>உக்ரைனில் உள்ள உலக சுகாதார அமைப்பின் மருத்துவ கிடங்கு மீது ரஷியா தாக்குதல்</title><link>https://www.maalaimalar.com/news/world/russia-strike-on-who-medical-warehouse-in-ukraine</link><comments>https://www.maalaimalar.com/news/world/russia-strike-on-who-medical-warehouse-in-ukraine#comments</comments><guid isPermaLink="false">6c94ee87-5231-4ebf-883b-576f43d64e04</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:47:25 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:47:25.764Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,WHO,உலக சுகாதார அமைப்பு,ரஷியா,உக்ரைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ltkcua7q/Untitled-design-15.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WHO Medical Warehouse]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ltkcua7q/Untitled-design-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D">உக்ரைனின்</a> கீவ் மாகாணத்தில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பிற்கு சொந்தமான கிடங்கு மீது, ரஷிய படைகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது.</p><p>போரினால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், உக்ரைன் நாட்டின் போரிஸ்பில் மாவட்டத்தில் உலக சுகாதார அமைப்பிற்கு சொந்தமான மருத்துவ கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது.</p><h3><strong>உலக சுகாதார அமைப்பின் மருத்துவ கிடங்கு</strong></h3><p>இந்த கிடங்கின் மீது ரஷியா நடத்திய இந்த தாக்குதலில் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த மருத்துவ பொருட்கள் சேதமடைந்தது. </p><p>இதையடுத்து சேதமடைந்த மருத்துவ பொருட்களின் இழப்பீடு குறித்து மதிப்பீடு செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>உக்ரைனில் உள்ள மருத்துவ உள்கட்டமைப்புகள் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைய்ன் நாட்டின் மிகப்பெரிய மருந்து கிடங்குகளில் ஒன்றான, போரிஸ்பில் மாவட்டத்தில் உள்ள பயோகான் தளவாட வளாகத்தையும் ரஷிய ஏவுகணைகள் தாக்கியது.</p><h3><strong>உலக சுகாதார அமைப்பு</strong></h3><p>இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் கூறுகையில், ”உக்ரைன் முழுவதும் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவிகள் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.</p><p>பாதுகாப்பு சூழல் காரணமாக, மருத்துவ பொருட்களை குறைந்த அளவிலேயே சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.</p><p>இந்த தாக்குதல் சம்பவத்துக்கு முன்பு சேமிப்பு கிடங்கில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். மேலும் ஊழியர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘உக்ரைனில் அமைக்கப்படும் எந்தவொரு ஆயுத உற்பத்தி ஆலையும் தாக்கி அழிக்கப்படும்’ - ரஷியா மிரட்டல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/any-weapons-manufacturing-plant-set-up-in-ukraine-will-be-attacked-and-destroyed-russia-threatens</link><comments>https://www.maalaimalar.com/news/world/any-weapons-manufacturing-plant-set-up-in-ukraine-will-be-attacked-and-destroyed-russia-threatens#comments</comments><guid isPermaLink="false">5886f063-0100-4b35-a3ae-1cd0dd6c0761</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:35:14 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:35:14.063Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,ரஷியா,உக்ரைன்,Western weapons plants,மேற்கத்திய ஆயுதத் தொழிற்சாலைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/boamoeaf/New-Project-2026-09-04T181258.951.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உக்ரைனில் அமைக்கப்படும் எந்தவொரு ஆயுத உற்பத்தி ஆலையும் தாக்கி அழிக்கப்படும்’ - ரஷியா மிரட்டல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/boamoeaf/New-Project-2026-09-04T181258.951.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கத்திய நாடுகளால் உக்ரைனில் அமைக்கப்படும் எந்தவொரு ஆயுத உற்பத்தி ஆலையும் தாக்கி அழிக்கப்படும் என <a href="https://www.maalaimalar.com/news/world/case-filed-by-ukraine-russia-appoints-dy-chandrachud-as-its-arbitrator">ரஷியா</a> எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>உக்ரைனில் நீண்ட தூர ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான  திட்டங்கள் குறித்து வெளியான செய்திகளை தொடர்ந்து ரஷியாவின் இந்த மிரட்டல் வந்துள்ளது. </p><p>“உக்ரைன் மண்ணில் உள்ள அத்தகைய எந்தவொரு வசதிகளும் ரஷிய ஆயுதப் படைகளின் முறையான இலக்குகளாக மாறும்” என ரஷிய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். </p><h2>ஜெர்மனி மீதான தாக்குதலுக்கு மறுப்பு!</h2><p>உக்ரைனில் ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான மேற்கத்திய நாடுகளின் மேலதிக முயற்சிகள், அந்நாட்டிற்குதான் இன்னும் சிக்கல்களை உருவாக்கும் என்றும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், தங்களது இலக்கை அடைய அமைதியான முறையில் தீர்வைக் காண மாஸ்கோ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் ஆகஸ்ட் 4 அன்று லைப்சிக் விமான நிலையத்தைக் குறிவைத்து, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சிக்குப் பின்னால் ரஷ்யா இருப்பதாகக் கூறப்படும் ஜெர்மனியின் குற்றச்சாட்டுகளையும் பெஸ்கோவ் நிராகரித்தார். </p>]]></content:encoded></item><item><title>வரலாற்றில் முதல் முறை: இந்தியா, ஜப்பான் மோதும் டி20 போட்டி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-japan-to-play-historic-one-off-t20i</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-japan-to-play-historic-one-off-t20i#comments</comments><guid isPermaLink="false">996b0444-d01b-4c1f-b3fa-486d456b2b45</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:11:19 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:11:19.956Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,japan,ஜப்பான்,டி20 கிரிக்கெட்,T20 Cricekt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/w0ci3lnq/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ india]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/w0ci3lnq/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தியா, ஜப்பான் இடையிலான தூதரக உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் முதல் முறையாக டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.</strong></em></p><h2>75 ஆண்டு தூதரக உறவு</h2><p>இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான 75 ஆண்டுகால தூதரக உறவைக் குறிக்கும் வகையில், இரு நாடுகளின் ஆண்கள் கிரிக்கெட் அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன.</p><p>ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.</p><h2>சுசூகி கோப்பை</h2><p>செப்டம்பர் 22ம் தேதி அன்று ஜப்பானில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இந்தப் போட்டிக்கு 'சுசூகி கோப்பை' என பெயரிடப்பட்டுள்ளது.</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான 75 ஆண்டுகால தூதரக உறவுகளின் கொண்டாட்டத்தின் முதல் படியாக இந்தப் போட்டியை பிசிசிஐ அறிவித்துள்ளது.</p><p>ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான உலக சாம்பியன் இந்திய அணி ஜப்பானில் முதல் முறையாக விளையாட உள்ளதால், இது ஜப்பான் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.</p><p>இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற சில வீரர்கள் 2020-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வரைபடக் காலனித்துவம்: ‘ஈக்வல் எர்த்’ வரைபடத்தை ஏற்க கோரிக்கை -  ஐ.நா.-வில் இன்று வாக்கெடுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/cartographic-colonialism-call-to-adopt-the-equal-earth-map-vote-at-the-un-today</link><comments>https://www.maalaimalar.com/news/world/cartographic-colonialism-call-to-adopt-the-equal-earth-map-vote-at-the-un-today#comments</comments><guid isPermaLink="false">f785d394-6b9d-4fbf-b38a-549c72fad97a</guid><pubDate>Fri, 04 Sep 2026 12:27:26 +0000</pubDate><atom:updated>2026-09-04T12:27:26.084Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>UN,ஐநா சபை,Africa,ஆப்பிரிக்கா,new world map,புதிய உலக வரைப்படம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/xucdkoqx/New-Project-2026-09-04T171550.844.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வரைபடக் காலனித்துவம்: ‘ஈக்வல் எர்த்’ வரைபடத்தை ஏற்க கோரிக்கை -  ஐ.நா.-வில் இன்று வாக்கெடுப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/xucdkoqx/New-Project-2026-09-04T171550.844.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான நிலப்பரப்பு அளவை துல்லியமாகக்  காட்டும் 'ஈக்வல் எர்த்' (சமமான புவி வரைப்பட திட்டம்) உலக வரைபடத்தை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்வதற்கான வரைவுத் தீர்மானம் மீது <a href="https://www.maalaimalar.com/news/world/iran-must-pay-compensation-for-war-damages-qatar-appeals-to-un">ஐக்கிய நாடுகள் பொதுச் சபை</a>யில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.</p><p>இந்தத் தீர்மானம் டோகோவால் முன்மொழியப்பட்டதாகவும், ஆப்பிரிக்க ஒன்றியம் உட்பட மற்ற உலக நாடுகள் பலவும் இந்த வரைவு தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக டோகோவின் வெளியுறவு அமைச்சர் ராபர்ட் டஸ்ஸி தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>“இந்த விவாதம் ஒரு அரசியல் விவாதம் அல்ல, மாறாக ஒரு அறிவியல் விவாதம். ஏனெனில், அறிவியல் சான்றுகள் உள்ளன. எனவே, நாம் அனைவரும் அந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார். </p><h2>1569-ம் ஆண்டு உலக வரைபடம் </h2><p>மாலுமிகள் கடல் வழி பயணம் மேற்கொள்வதற்கு உதவும் வகையில், தற்போது இருக்கும் உலக வரைபட அமைப்பு, 1569-ஆம் ஆண்டில் ஃபிளெமிஷ் நிலப்படவியலாளரான ஜெரார்டஸ் மெர்கேட்டரால் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p>ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகும், இதுவே உலகளாவிய தரநிலையாகத் தொடர்கிறது.</p><p>இந்த வரைபடத்தில் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பகுதிகள் அதன் உண்மையான அளவைவிட கணிசமாகச் சிறியதாகத் தோன்றுகின்றன, அதேசமயம் உயர் அட்சரேகைப் பகுதிகள் மிகவும் பெரியதாகக் காட்சியளிக்கின்றன. </p><p>உதாரணத்திற்கு, வரைபடத்தில் கிரீன்லாந்தும் ஆப்பிரிக்காவும் ஒரே அளவில் இருப்பது போல் தோன்றும்; ஆனால், உண்மையில் ஆப்பிரிக்கா கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியது ஆகும்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fj1x4jjm/New-Project-2026-09-04T180042.565.jpg" /><figcaption>Equal Earth map</figcaption></figure> <h2>ஈக்வல் எர்த் (சமமான புவி)</h2><p>2018 இல் வரைபடவியலாளர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட ‘ஈக்வல் எர்த்’ என்ற புதிய வரைபடம், அனைத்து நாடுகளின் நிலப்பரப்பையும் அதன் உண்மையான ஒப்பீட்டு அளவில் துல்லியமாகக் காட்டுகிறது.</p><h2>காலனித்துவம்</h2><p>பலரும் இதனை காலனித்துவ மனப்பான்மை என்றும் விமர்சிக்கின்றனர். மெர்கேட்டர் வரைபட முறை, மேற்கத்திய நாடுகள் சார்ந்த ஒரே மாதிரியான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது என்று வரலாற்றாசிரியர்களும் புவியியலாளர்களும் பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர். </p><p>சமூக ஆர்வலர்களும் இதையே வழிமொழிந்துள்ளதுடன், சிலர் இதற்கு 'வரைபட ரீதியிலான காலனித்துவம்' (Cartographic colonialism) என்றும் பெயரிட்டுள்ளனர்.</p><h2>எதற்காக திருத்தம்?</h2><p>ஆப்பிரிக்கத் தலைவர்களின் கருத்துப்படி, இது வெறும் வரைபடம் சார்ந்த விவாதம் மட்டுமல்ல. பல  நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்காவின் உலகளாவிய நிலையைச் சுருக்கிக் காட்டுகிறது. அதாவது சர்வதேச அதிகார இயக்கவியலை நுட்பமாக வடிவமைத்துள்ளது.</p><p>இது, சர்வதேச வர்த்தகம், வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் கல்வி கட்டமைப்புகளில் உள்ள அமைப்பு ரீதியான சார்புகளை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.</p><p>இப்போது ‘சமமான பூமி’ வரைபடத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆப்பிரிக்கா குறித்த கண்ணோட்டங்கள் மாறும் என வாதிடுகின்றனர்.</p><h2>எதற்காக ஐ.நா. தீர்மானம்?</h2><p>உலகளவில் ஐ.நா. தீர்மானங்கள் அமல்படுத்த முடியாதவை என்றாலும், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆளுகை ஆகியவற்றில் மெர்கேட்டர் வரைபடம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, இந்த வாக்கெடுப்பு நிறைவேறினால் அது வகுப்பறைப் பாடத்திட்டங்களையும் அன்றாடத் தொழில்நுட்பத்தையும் புதுப்பிக்க வழிவகுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>GPT 6 Astra.. உலகின் அதிபுத்திசாலியான ஏஐ மாடலை அறிமுகம் செய்த Open AI - சிறப்பம்சம் என்ன? </title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/openai-introduces-gpt-6-astra-an-ultra-powerful-ai-modelwhat-are-its-key-features</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/openai-introduces-gpt-6-astra-an-ultra-powerful-ai-modelwhat-are-its-key-features#comments</comments><guid isPermaLink="false">a4580608-020b-421a-a938-5363ac385f55</guid><pubDate>Fri, 04 Sep 2026 12:18:26 +0000</pubDate><atom:updated>2026-09-04T12:18:26.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஓபன் ஏஐ,செயற்கை நுண்ணறிவு,ஏஐ மாடல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/rtmc5511/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ GPT 6 Astra]]></media:title><media:description type="html"><![CDATA[ GPT 6 Astra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/rtmc5511/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓபன்ஏஐ நிறுவனம், GPT-6 Astra (ஜிபிடி-6 அஸ்ட்ரா) எனும் புதிய ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது.</p> <p>GPT-6 Astra (ஜிபிடி-6 அஸ்ட்ரா) எனும் தனது அதிநவீன  ஏஐ மாடலை ஓபன்ஏஐ நிறுவனம்  அறிமுகம் செய்துள்ளது.</p><p>இதுவரை உருவாக்கப்பட்ட ஏஐ மாடல்களிலேயே GPT-6 Astra மிகவும் சக்திவாய்ந்தது என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%90">ஓபன்ஏஐ </a>தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.</p><p>வணிகங்களுக்கும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் இந்த ஏஐ மாடல் பெரும் பக்கபலமாக இருக்கும் என்று சாம் ஆல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த புதிய மாடல் குறித்து ஓபன்ஏஐ தலைவர் கிரெக் புராட்மேன் பேசுகையில், "நாம் இப்போது AGI எனும் Artificial General Intelligence யுகத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளோம்.</p><p>எதிர்காலத்தில் ஏஐ வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது, ‘Astra'வின் வெளியீடு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும்" எனக் கூறியுள்ளார். </p><h2>சிறப்பம்சம்</h2><p>கோடிங் மற்றும் சிக்கலான கணிதப் புதிர்களைத் தீர்ப்பதில் Astra முந்தைய மாடல்களை விடப் பல மடங்கு சிறந்து விளங்குகிறது.</p><p>ஓபன்ஏஐ நடத்திய சோதனைகளில், இது GPT 5.6 Sol மற்றும் ஆந்திராபிக் நிறுவனத்தின் Claude Fable மாடல்களை விட அதிக புள்ளிகளை பெற்றுள்ளது.</p><p>ஏஐ மாடல் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதோடு மட்டுமின்றி, மனிதர்களைப் போலவே தானாகவே இயங்கி பல சிக்கலான பணிகளை செய்யும் திறன் Astraவுக்கு உண்டு.</p><p>ஆன்லைன் படிவங்களை நிரப்புதல், அட்டவணைகளை நிர்வகித்தல், தரவுகளை பகுப்பாய்வு செய்தல், வெப் டிசைன், சாப்ட்வேர் இன்ஸ்டால், 3D மாடல் க்ரியேஷன், Presentation, சட்ட ஆவணங்கள் மற்றும் Tax Returnகளை தயாரிப்பது முதற்கொண்டு பல விஷயங்களை Astra செய்து முடிக்கும் வல்லமை கொண்டது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This is GPT-6 Astra.<br><br>Anything you can do on a computer, Astra can do for you. Fast. <a href="https://t.co/gDd0IsewJw">pic.twitter.com/gDd0IsewJw</a></p>&mdash; OpenAI (@OpenAI) <a href="https://x.com/OpenAI/status/2095595741528125780?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>சைபர் பாதுகாப்பு</h2><p>கடைசியாக ஆந்தோரோபிக் நிறுவனத்தின் கிளாட் மிதோஸ் மாடல் குறித்த தகவல்கள் கசிந்தபோது அது சைபர் பாதுகாப்பை ஊடுருவும் திறன் கொண்டது என்று கூறப்பட்டது.</p><p>இந்நிலையில் ஓபன் ஏஐயின் இந்த Astra மாடல் அதே அளவு திறன் கொண்டதால் கூடுதல் கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பு வளையங்களையும் ஓபன்ஏஐ நிறுவியுள்ளது.</p><p>ஏஐ மாடல்களின் சைபர் பாதுகாப்பு தன்மையை சோதனை செய்யும் ExploitBench அமைப்பு Astra மாடலுக்கு சைபர் பாதுகாப்பில் 100 சதவீத மதிப்பெண் வழங்கியுள்ளது.</p><h2>எப்போது பயன்பாட்டிற்கு வரும்?</h2><p>சைபர் பாதுகாப்பிற்கான ஓபன்ஏஐ நிறுவனத்தின் சைபர் செக்யூரிட்டி தளமான OpenAI Daybreak பயனர்களுக்கு மட்டும் Astra ஏஐ மாடல் தற்போது பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது</p><p>அடுத்த வாரம் முதல் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் சாட்ஜிபிடி சந்தாதாரர்களுக்கு இது படிப்படியாகக் கிடைக்கும் என கூறப்படுகிறது.</p><p>மேலும், ஓபன்ஏஐ API, AWS மற்றும் Amazon Bedrock ஆகிய தளங்களிலும் இதைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் சொகுசு கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த ‘இ-குழு வருகை விசா’ அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/cruise-tourism-gets-a-boost-as-govt-clears-e-group-visa</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/cruise-tourism-gets-a-boost-as-govt-clears-e-group-visa#comments</comments><guid isPermaLink="false">73033bf3-2d9a-44e2-abc6-61a6182a84e3</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:23:48 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:23:48.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விசா,visa,சுற்றுலா,Tourism,சொகுசு கப்பல்,Luxury Cruise Ship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dw0n9pj9/ship.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dw0n9pj9/ship.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவை உலகின் முன்னணி சொகுசுக் கப்பல் சுற்றுலாத்தலமாக மாற்றும் நோக்கில், நிர்ணயிக்கப்பட்ட பயணத்திட்டத்துடன் சொகுசு  கப்பல்களில் வரும் வெளி நாட்டு சுற்றுலா  பயணிகளுக்காக ‘இ-குழு வருகை விசா’ எனும் புதிய வசதியை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h2><strong>மின்னணு விசா</strong></h2><p>தற்போது மின்னணு சுற்றுலா விசா பெறத் தகுதியுள்ள 172 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் இந்தத் பிரத்யேக விசா வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விசாவைப் பெறும் வெளிநாட்டுப் பயணிகள், மின்னணு விசா வசதி கொண்ட நாட்டின் 38 குறிப்பிட்ட துறைமுகங்கள் வழியாக இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். 30 நாட்கள் செல்லுபடியாகும் இந்த விசா மூலம் பலமுறை இந்தியாவிற்குள் வந்து செல்லும் வசதியும் வழங்கப்படுகிறது.</p><h2><strong>சொகுசுக் கப்பல்</strong></h2><p>சொகுசுக் கப்பல் இந்திய துறைமுகத்திற்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே, கப்பல் நிறுவனம் அல்லது அதன் முகவர் இதற்கான விண்ணப்பங்களை குறிப்பிட்ட இணையதளம் அல்லது செயலி வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><h2><strong>கியூ.ஆர் குறியீடு</strong></h2><p>இந்த காலக்கெடுவிற்குப் பிறகு புதிய விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஒரு குழு விசாவில் எத்தனை சுற்றுலா பயணிகள் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்பதால் இதற்கு எவ்வித உச்சவரம்பும் இல்லை.</p><h2><strong>இணைய தளம்</strong></h2><p>வெளிநாட்டுப் பயணிகளின் விவரங்கள் அனைத்தும் மொத்தமாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த விசா சான்றிதழில் கியூ.ஆர் குறியீடு இடம்பெற்றிருக்கும். இதைப் பயன்படுத்தி பயணிகள் குடிவரவு, சோதனைச்சாவடிகள் மற்றும் பயணத் திட்டத்தின் படியான உள்நாட்டுப் பயணங்களை மேற்கொள்ளலாம்.</p><h2><strong>பொருளாதார நன்மைகள்</strong></h2><p>எளிதாக்கப்பட்ட விசா மற்றும் குடிவரவு நடைமுறைகள் சர்வதேச சொகுசு கப்பல் நிறுவனங்கள் தங்களது பயணத்திட்டத்தில் இந்திய துறைமுகங்களைச் சேர்க்க ஊக்குவிக்கும் என்றும், இதன் மூலம் துறைமுகங்கள், விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து மற்றும் உள்ளூர் சமூகங்களுக்குப் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>கப்பல் சுற்றுலா</strong></h2><p>இந்தியாவின் 7,500 கி.மீ நீளமுள்ள கடற்கரை மற்றும் 400 நதிகளை இணைக்கும் உள்நாட்டு நீர்வழிகளைப் பயன்படுத்தி சொகுசு கப்பல் சுற்றுலாவை உயர்த்த அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p><h2><strong>சுற்றுலாத் துறை</strong></h2><p>குறிப்பாக, 2029-க்குள் சொகுசு கப்பல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் நோக்கில் ‘க்ரூஸ் பாரத் மிஷன்’ மற்றும் கடல்சார் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கிலான திட்டங்கள் மூலம் இந்தியாவின் சுற்றுலாத் துறை புதிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான்: பலுசிஸ்தானில்
ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் - 25 வீரர்கள் பலி!</title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-attack-on-army-vehicles-in-balochistan-25-soldiers-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-attack-on-army-vehicles-in-balochistan-25-soldiers-killed#comments</comments><guid isPermaLink="false">60e57d58-5b3a-4b3a-a6eb-99b1359f70f5</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:00:59 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:00:59.262Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,ராணுவ வீரர்கள்,Soldiers,Baloch Liberation Army,பலூச் விடுதலைப் படை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/4qhvhtdg/New-Project-2026-09-04T162943.848.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தான்: பலுசிஸ்தானில்
ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் - 25 வீரர்கள் பலி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/4qhvhtdg/New-Project-2026-09-04T162943.848.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட இரு வேறு தாக்குதல்களில் <strong>25 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்</strong>. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.</p><p>இந்த தாக்குதல்களுக்கு பலுசிஸ்தான் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளது. பலுசிஸ்தானின் ஜியாரத் மற்றும் சுரப் மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.</p><p>இந்த தாக்குதல்கள் தொடர்பான வீடியோவையும் பலுசிஸ்தான் விடுதலைப் படை வெளியிட்டு உள்ளது. </p><p>ஒரு நிமிடம் 11 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் தீப்பிடித்து எரிவதும், அதன் அருகே ஆயுதம் ஏந்திய <a href="https://www.maalaimalar.com/news/world/soldiers-in-balochistan-are-physically-weak-pakistani-minister-807973">பலுசிஸ்தான் விடுதலை படை </a>அமைப்பினர் இருப்பதும், உடல்கள் சாலையில் கிடப்பதும் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><p>சமீப நாட்களாக பலுசிஸ்தான் முழுவதும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் காவல் படைகளை குறிவைத்து பலுசி ஆயுதக் குழுக்கள் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்து, பெரும் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. </p><p>கடந்த மாதம், பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட 36 நடவடிக்கைகளுக்கு பலுசிஸ்தான் விடுதலைப் படை பொறுப்பேற்றது. இதில் 33 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அது கூறியது.</p><p>பலூசிஸ்தானின் “தேசிய விடுதலை இலக்கு” அடையப்படும் வரை பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான தங்களது தாக்குதல் நடவடிக்கை தொடரும் எனவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item></channel></rss>