<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 20 Aug 2026 17:50:11 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 20 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-august-2026#comments</comments><guid isPermaLink="false">93b3f2e7-5044-4111-8cf3-3a4d554048e3</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:51:46 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:03:03.871Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/99wd9z5p/Adhav.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EV Velu-MInister Adhav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/99wd9z5p/Adhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vignesh-releases-list-of-717-closed-tasmac-shops">மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் விக்னேஷ்!</a></p><p>* 717 கடைகள் மூடல்: பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, அதன் முகவரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.</p><p>* 10 ரூபாய் கூடுதல் கட்டண எச்சரிக்கை: டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதல் 10 ரூபாய் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார்.</p><p>மகளிரை தொழில் முனைவோராக்க சிங்கப்பெண்கள் கடன் திட்டம் ரூ.7,015 கோடியில் உருவாக்கப்படும்- அமைச்சர் காந்திராஜ்</p><p>அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் 5 சேவைகள் வழங்கும் சங்கங்களாக தரம் உயர்த்தப்படும்- அமைச்சர் காந்திராஜ்.</p><p>தன்னிறைவு பெற்ற பொருளாதார நிறுவனங்களாக கூட்டுறவு அமைப்புகளை மாற்ற மாநில கூட்டுறவு கொள்கை உருவாக்கப்படும்- அமைச்சர் காந்திராஜ்.</p><p>விவசாயிகளுக்கு ரூ.5000 கோடியில் ஊரக தொழில் கடன் 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும்- - அமைச்சர் காந்திராஜ்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>நேற்று ரூ.1 லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</p><p>விவசாயிகளுக்காக உயிரை கொடுப்பதுபோல் பேசுகின்றனர். ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டனர்.</p><h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் நாங்கள் பேசவில்லை, நிறைய சொல்லியுள்ளீர்கள் நிறைவேற்றுவீர்களா? என தான் கேட்டேன். மக்கள் எங்களை கேள்வி கேட்கும்போது நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் நாங்கள் கேட்கிறோம்.</p><p>மக்கள் எங்களை கேள்வி கேட்கும்போது நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் நாங்கள் கேட்கிறோம்.</p><h2>அமைச்சர் ஆதவ்</h2><p>தவெக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றும், அதில் கருத்து வேறுபாடே இல்லை. தவெக தேர்தல் அறிக்கையில் கூறியதை படிப்படியாக நிறைவேற்றுவோம்.</p><p>அரசியல் மேடையில் இருப்பதை போன்றே தற்போது வரை பேரவையில் பேசுகிறார் எ.வ.வேலு.</p><p>பயிர் கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு வருமா என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"விவசாயிகளுக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா?</p><p>5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுவீர்களா?</p><p>ஈரமான நெல்லை சேமித்து பாலிசுக்கு அனுப்பும் முன்னரே நிறம் மாற வாய்ப்பு உள்ளது. அதனால் முறையாக ட்ரை செய்து வாங்கப்படும்.</p><p>பெரும்பாலும் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் ரேஷன் அரிசியை வருங்காலத்தில் சோறுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை.</p><p>இம்முறை தமிழக அரிசி போதுமானதாக இல்லை என்றால் மட்டுமே பிற மாநில அரிசு ரேஷனுக்கு வாங்கப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><h2>அமைச்சர் வெங்கட்ரமணன் உரை</h2><p>டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள்ளாக ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்கும்.</p><p>வரும் காலங்களில் சோறுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் அரிசி வழங்கப்படும்.</p><p>தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லை பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப நடவடிக்கை. கையில் உள்ள 7 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விரைந்து பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.</p><p>தவெக அரசு ரேஷன் கடை மூலம் தரமான மக்கள் பயன்படுத்தும் சன்னரக அரிசி கொடுக்க முயற்சிக்கிறது.</p><p>ஈரமான நெல்லாக இருந்தால் கொள்முதல் நிலையங்களிலேயே ஹீட்டர் வைத்து காய வைத்து எடைபோட்டு வாங்க நடவடிக்கை.</p><p>நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பினால் கருப்பு அரிசி வராது.</p><p>ஆந்திராவில் அருமையான அரிசி தயாரிக்கின்றனர். நமது தமிழகத்திலும் பாலீஷ் செய்த பின் கொடுக்க கூடுதல் செலவு ஆகும்.</p><p>தமிழ்நாட்டில் உள்ள அரிசியை மட்டுமே ரேஷன் கடைகளில் கொடுத்தால் கூடுதலாக பல கோடி ரூபாய் செலவாகும் - எடப்பாடி பழனிசாமி</p><p>ரேஷன் அரிசி சாப்பிடுபவர்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் எதையும் பேசவில்லை, உண்மை நிலையை கூறுகிறோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ரேஷன் அரிசியை அனைவரும் சாப்பிடுகிறார்கள் - அதிமுக எம்எல்ஏ காமராஜ்</p><p>திமுக அரசின் ரேஷன் அரிசி திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதியே பாராட்டியுள்ளார்.</p><p>எதிர்க்கட்சியாக இருந்தபோது ரேஷன் அரிசி பற்றி பேசியுள்ளாரா செங்கோட்டையன்?</p><p>ஏழைகள் சாப்பிடும் ரேஷன் அரிசியை ஆடு, கோழி சாப்பிடுவது என கொச்சைப்படுத்தி செங்கோட்டையன் பேசலாமா? - எ.வ.வேலு</p><p>சத்தீஸ்கர், ஆந்திராவில் இருந்து மத்திய தொகுப்பின் மூலம் கிடைக்கும் அரிசி தான் ரேஷன் கடைகளில் தரப்படுகிறது.</p><p>சத்தீஸ்கரில் இருந்து வரப்படும் அரிசி தான் நிறம் மாறி இருக்கும், அதனால் வேண்டாம் என கூறிவிட்டோம்.</p><p>தமிழ்நாட்டில் விளையும் அரிசி சற்று என்னை போல் நிறம் குறைந்து தான் இருக்கும், ஆதவை போல் நிறமாக இருக்காது.</p><p>அவை முன்னவரே ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா - எ.வ.வேலு</p><p>சன்னரக நெல்லை ரேஷன் அரிசியாக தருவது சாத்தியம் இல்லை - கே.என்.நேரு திட்டவட்டம்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>இலவச மருத்துவமனை, இலவச கல்விமுறையை எந்த எம்எல்ஏவும் எந்த அமைச்சரும் பயன்படுத்துவதில்லை.</p><p>எந்த அமைச்சருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனை செல்வாரா?</p><p>எம்எல்ஏவுக்க உடல்நிலை சரியில்லை என்றால் கூட  சிங்கப்பூர் செல்கின்றனர்.</p><p>இலவசங்கள் என்ற வார்த்தையே தவறு, மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு நிலையங்களை அனைவரும் பயன்படுத்தும் நிலைவர வேண்டும்.</p><p>மற்ற ஆட்சியை விட்டுவிடுங்கள், நமது ஆட்சியில் ரேஷன் கடையில் சன்னரக அரிசியை கொடுங்கள் என முதல்வர் கூறினார்.</p><p>எனது அம்மாவும் அக்காவும் ரேஷன் கடையில் வாங்கி சாப்பிடும் அரிசி தரமாக இருக்க வேண்டும் என முதல்வர் நினைத்தார்.</p><p>ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசியை மக்கள் சாப்பிடும் நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>ரேஷன் கடைகளில் வழங்க தரமான சன்னரக அரிசி தேவை, அதனால் தான் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காகத்தான் சன்னரக அரிசிக்கான ஊக்கத்தொகை முதல்வர் அதிகரித்து அறிவித்துள்ளார் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>நெல் பயிரிட்டு சாப்பிடும் அண்ணன் கே.என்.நேரு, ரேஷன் அரிசி சாப்பிடுவதாகவும் பரமஏழை போன்றும் பேசுகிறார். நான் சிறுவயதில் இருக்கும்போது ரேஷன் அரிசியை தான் சாப்பிட்டேன், அப்போது பெரிய அளவில் நிறம் மாறிய அரிசி தான் கிடைக்கும்.</p><p>இந்த ஆட்சி அந்த ஆட்சி என பேசவில்லை, அவரவர் மனசாட்சிக்கு தெரியும் ரேஷனில் கிடைக்கும் அரிசியை பற்றி. பேரவையில் பெரும்பான்மையானோர் ரேஷன் அரிசி சாப்பிடவில்லை, மனசாட்சிப்படி உண்மையை பேச வேண்டும்.</p><p>சுகர் குறைவதற்காக ரேஷன் அரிசியை கஞ்சி வைத்து குடிக்கும் கே.என்.நேருவை வாழ்த்துகிறோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ரேஷன் அரிசியை எல்லா மக்களும் உண்கின்றனர், சர்க்கரை அளவு குறைவதால் சாப்பிடுகின்றனர் - கே.என்.நேரு</p><p>ஆட்டுக்கும் கோழிக்கும் ரேஷன் அரிசி என அமைச்சர் செங்கோட்டையன் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு</p><p>தூய்மையான வெள்ளையான அரிசி ரேஷன் கடையில் தரும் வகையில் நெல் கொள்முதல் நிலையத்தில் திமுக நடவடிக்கை.</p><p>கே.என்.நேரு உள்ளிட்டோர் சுகர் குறையும் என்பதால் ரேஷன் அரிசி தான் உண்கின்றார் - எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p>திமுக ஆட்சியில் ரேஷன் கடையில் வாங்கிய அரிசியை ஆட்டுக்கும் கோழிக்கும் தான் மக்கள் பயன்படுத்தினர்.</p><p>சன்னரக நெல்லுக்கு உற்பத்தி உயர செய்யும் நோக்கில் ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதல்வர் விஜய் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>இந்தியாவிலேயே முதல்முறையாக நுகர்பொருள் வாணிப கழகம் தொடங்கியது திமுக அரசு தான்.</p><p>தவெக ஆட்சியில் அதிகமாக நெல் திறந்தவெளியில் தான் உள்ளது. திமுக குடோனில் வைத்து நெல்லை முளைக்கவிடாமல் பாதுகாத்தது - எம்எல்ஏ சக்கரபாணி</p><p>திமுக ஆட்சியில் எந்த கொள்முதல் நிலையங்களிலும் அதிகாரிகளின் செல்போன் எண், புகார் பெட்டி இல்லை.</p><p>நெல் கொள்முதல் நிலையத்தின் வெளியே உள்ள நெல்லையும் உரிய முறையில் பயன்படுத்த தவெக அரசு நடவடிக்கை - அமைச்சர் வெங்கடரமணன்</p> <p>நேரடி கொள்முதல் நிலையத்தில் அதிகமாக கொள்முதல் செய்ததாக திமுக மார்தட்டி கொள்கிறது. ஆனால் சாலையில் உள்ளது நெல் - உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன்</p><p>தமிழகத்தில் 717 மதுக்கடைகள் மூடல், எங்கெங்கு மூடல் என்பதை முகவரியுடன் பட்டியலாக தரவும் அரசு தயார் - அமைச்சர் விக்னேஷ்</p><p>பட்டாசு ஆலை உள்ளிட்ட விவகாரத்தில் பிரச்சனை முடிந்தும் போராட்டம் நடத்துவதால் தான் அரசியல் என்கிறோம் - அமைச்சர் கீர்த்தனா</p><h2>பட்டாசு ஆலை விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் - திமுக எல்எல்ஏ தங்கம் தென்னரசு</h2><p>பட்டாசு ஆலை உரிமம் ரத்து, சீல் விவகாரத்தில் திமுக மட்டுமல்ல பொது அமைப்புகளும் போராட்டம் நடத்துகிறது.</p><p>விதிமுறை மீறி ஆலைகளை ஆய்வு செய்வதை யாரும் தடுக்கவில்லை, ஆனால் சிறு ஆலையையும் ஆய்வு செய்வதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.</p><p>முந்தைய காலத்தில் ஆண்டு கணக்கில் பதில் இல்லா கேள்விகளுக்கு உள்ளது, முந்தைய காலம் என்றதும் பயப்பட வேண்டாம் - சபாநாயகர்</p><p>மின்கட்டண உயர்வு, மின் கணக்கீடு முறையில் குழப்பம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி</p><p>கொள்கை விளக்க குறிப்பு நள்ளிரவில் வருகிறது. 3 நாட்களுக்கு முன் கொடுத்தால் படித்துவிட்டு பேசலாம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>கேள்விகள் கொடுத்து பல நாட்கள் ஆகிறது, அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம்.</p><p>குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காத அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்.</p><p>உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீண்ட நாட்களாக பதிலளிக்காமல் தாமதப்படுத்துவது அவையை அவமதிக்கும் செயல் - திமுக எம்எல்ஏ ஆஸ்டின்</p> <p>விவசாயிகளுக்கு எப்போதும் தவெக அரசு துணை நிற்கும். என்எல்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி, நிலம் கொடுத்த விவசாயிகள் பிள்ளைகளுக்குக்கூட பணி வழங்கவில்லை.</p><p>நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளை பணியில் சேர்த்துக்கொள்ள எந்த என்எல்சி தேர்வு வைக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>மயிலம் தொகுதியில் மூடப்பட்ட மதுக்கடையை எந்தவித அறிவிப்பும் இன்று மீண்டும் திறந்துள்ளனர்.</p><p>செஞ்சியில் மூடிவிட்டு தற்போது கிராம பகுதியில் திறந்துள்ள டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை தேவை - எம்எல்ஏ சிவி சண்முகம்</p><p>சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 மாதமாக ஆந்திராவில் உள்ளதால் அவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குங்கள். </p><p>ஆந்திராவில் மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட 7 விசைப்படகுகளையும் ஆந்திர அரசு விடுவிக்கவில்லை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>ஆந்திரா - தமிழக மீனவர்கள் மோதல் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சட்டசபையில் விளக்கம்</p><p>ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை.</p><p>திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு. தவெக ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு.</p><p>தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கம் வழங்க நடவடிக்கை.</p><p>வெளிநாடுகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் - அமைச்சர் வன்னி அரசு</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>மாணவனுக்கு நிதி கொடுத்தது திமுக ஆட்சியில் என்பது ஒத்துக்கொள்கிறேன்.</p><p>கடந்த ஆட்சியில் தான் மாணவனுக்கு நிதி வழங்கப்பட்டது என சரியாக குறிப்பிட்டு தான் பேசி உள்ளேன்.</p><p>தான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னர் தான் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 3 மடங்கு உயர்வு.</p><p>500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் குறைந்த நபர்களுக்கு தான் திமுக வழங்கியது. நான் துறைக்கு வந்த பின் 3 மடங்கு உயர்வு.</p> <p>மற்ற மாணவர்களுக்கு வந்து விட்டது, தனக்கு நிலுவை தொகை வரவில்லை என்றே மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.</p><p>திமுக ஆட்சியில் நிதி தரப்பட்டதை தான் அமைச்சர் தேதி வாரியாக வாசித்தார், குற்றச்சாட்டுக்கு பதில் தரவில்லை  - கோவி செழியன்</p> <p>இதுவரை மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்நாண்டு உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்பிக்காமல் மாணவர் குற்றச்சாட்டு.</p><p>தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் ரூ.135 கோடி வழங்கப்பட்டுள்ளது.</p><p>முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை - அமைச்சர் வன்னி அரசு</p><p>10 மாதங்கள் ஆகியும் மாணவர் தனது ஆவணங்களை பதிவு செய்யவில்லை.</p><p>அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.</p><p>மாணவருக்கு அரசு வழங்கி உள்ள நிதியை தேதி வாரியாக குறிப்பிட்டு வன்னி அரசு பதில்</p><p>அம்பேத்கர் அயலக உதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு.</p><p>மலேசியாவில் பயின்று வரும் மாணவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் வன்னி அரசு பதில்</p> <p>ஒழுங்கு அமைதி பராமரிப்பது குறித்து உயர்கல்வித்துறை மூலம் கல்லூரி கல்வி இயக்கத்திற்கு சுற்றறிக்கை.</p><p>அனைத்து கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தவறுதலாக குறிப்பிடப்பட்ட வார்த்தை அறிந்ததும் வாபஸ்.</p><p>மாணவர்களின் நியாயமாக போராடும் உரிமைகளை காக்கும் அரசாக தவெக அரசு செயல்படும் - அமைச்சர் விஸ்வநாதன்</p> <h2>உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்</h2><p>மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை கண்காணிக்க  சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.</p><p>சுற்றறிக்கையில் தவறுதலாக சில வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.</p><p>மாணவர்களின் உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசிற்கு இல்லை.</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியரை சர்வே செய்வதற்காக அனுப்பப்பட்டவர். வட்டாட்சியர் தேவையில்லாமல் கடிதம் எழுதி உள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>இடதுசாரி அமைப்புகளுடன் செயல்பட்டு போராடுவோர் தொடர்பாக கணக்கெடுப்பு எடுக்க சொல்லி உள்ளனர் - மாரிமுத்து</p><p>மாணவர்கள் போராடுவதை கண்காணிக்க கடிதம் அனுப்பப்பட்டது தொடர்பாகவும் கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>உயர்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை தொடர்பாக கம்யூ. எம்எல்ஏ மாரிமுத்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>அண்ணா பல்கலை. உள்ளிட்ட 9 கல்லூரிகளுக்கு டீன் இல்லை, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -  அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம்</p><h2>மீனவர் பலி - அமைச்சர் ஆதவ் விளக்கம்</h2><p>சவுதி அரேபியாவில் 10-ந்தேதி ஈரானிய கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் தமிழக மீனவர் பலி.</p><p>புலன் விசாரணை நடைபெறுவதால் தான் உயிரிழந்த மீனவர் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம்.</p><p>மீனவர் உடலை தாயகம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p> <p>சவுதி தாக்குதலில் ஒரு மீனவர் பலி, 3 பேர் படுகாயம், இலங்கை கடற்படையும் மீனவர் மீது தாக்குதல்.</p><p>மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் - சிபிஐ ராமச்சந்திரன்</p><p>மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் ஈரான் துப்பாக்கிச்சூட்டில் பலி, அரசு நடவடிக்கை எடுத்து மானியம் தர வேண்டும் - சிவக்குமார்</p><p>சிறப்பு கவன ஈர்ப்பு தந்தாலும் அமைச்சர் தரப்பில் பதில் வந்தால் தான் விவாதம்.</p><p>சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பதிவு செய்ய மட்டும் அனுமதி தருகிறேன், பதில் வந்த பின் விவாதம் நடத்தலாம் - சபாநாயகர்</p> <p>அவசரம் என்பதால் தான் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறோம் - எ.வ.வேலு</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>சவுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்.</p><p>நேரமில்லா நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதை பதிவு செய்வது வழக்கம் தான்.</p><p>காசிமேடு மீனவர்கள் 80 பேர் சிறையில் அடைப்பு, அவர்களின் படகுகளை ஆந்திர அரசு பறிமுதல் செய்துள்ளது - எடப்பாடி பழனிசாமி</p><p>சட்டசபை கூடியது - அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>5 நாட்களுக்கு பிறகு மீனவர் உயிரிழப்பு தொடர்பாக பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது. </p><p>இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>போலீஸ் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சென்ற ஜே.சி.பி. - கடைசியில் நடந்த டுவிஸ்ட்</title><link>https://www.maalaimalar.com/news/national/man-drives-stolen-jcb-through-police-barricades-in-dramatic-chase</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-drives-stolen-jcb-through-police-barricades-in-dramatic-chase#comments</comments><guid isPermaLink="false">a032d825-bde0-48d3-b76c-8e33ec1febcd</guid><pubDate>Thu, 20 Aug 2026 17:18:28 +0000</pubDate><atom:updated>2026-08-20T17:18:28.169Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>police,காவல் துறை,ஜேசிபி,JCB</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/c8g3r1wp/JCB-in-action.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JCB in action]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/c8g3r1wp/JCB-in-action.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ஒடிசா</a> மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் திருடப்பட்ட ஜே.சி.பி. இயந்திரம் காவல்துறை தடுப்புகள் மற்றும் நான்கு காவல் நிலைய எல்லைகளைக் கடந்து நீடித்த ஒரு சேசிங் சம்பவம் அரங்கேறியது.</p><p>ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று கல்லிக்கோட் காவல் நிலைய பகுதியில் ஒரு ஜே.சி.பி. திருடு போனதாக காவல்துறைக்கு முதலில் தகவல் கிடைத்தது. </p><p>அதனை தொடர்ந்து, திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில், கல்லிக்கோட், ரம்பா, புருஷோத்தம்பூர் மற்றும் கபிசூர்யநகர் ஆகிய நான்கு வெவ்வேறு காவல் நிலையங்களை சேர்ந்த குழுக்கள் ஒன்றிணைந்து ஒரு நீண்ட தேடுதல் வேட்டையை நடத்தின.</p><h2>மர்ம நபர் அட்டூழிம்:</h2><p>இதனிடையே காணாமல் போன ஜே.சி.பி. இயந்திரத்தை மர்ம நபர் ஓட்டி செல்வதை காவல் துறையினர் கண்டறிந்தனர். ஜே.சி.பி. இயந்திரங்கள் வேகமாக செல்வதற்காக உருவாக்கப்படவில்லை. </p><p>எனினும், அது வாகனத்தை ஓட்டிய சந்தேக நபரை தடுக்கவில்லை. வாகனத்தை நிறுத்தும் முயற்சியில், அதிகாரிகள் வழி நெடுகிலும் பல இடங்களில் தடுப்புகளை அமைத்தனர்.</p><p>ஆனாலும் அந்த நபர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி சென்று, ஒன்றன்பின் ஒன்றாக அந்த தடைகளை உடைத்துக்கொண்டு, அவரை வழிமறிக்க முயன்ற காவல்துறையினரின் முயற்சிகளை மீண்டும் மீண்டும் மீறி தப்பி சென்றார்.</p><p>ஜே.சி.பி. வாகனம் தடுப்புகளை கடந்து அதிவேகமாக செல்லும் காணொளிகள், சமூக ஊடகங்களில் வெளியாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. </p><p>கபிசூர்யநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியாலியில் அந்த சேசிங் அடைந்தது. அங்கு, சந்தேக நபர் ஒரு விவசாய நிலத்தில் ஜேசிபி இயந்திரத்தை விட்டுவிட்டு, கால்நடையாக அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றார்.</p><h2>தொடரும் விசாரணை:</h2><p>பின்னர் காவல்துறையினர் கைவிடப்பட்ட வாகனத்தை மீட்டு, சந்தேக நபரைத் தேடும் நடவடிக்கையைத் தொடங்கினர். இந்தத் திருட்டு எப்படி நடந்தது என்பது குறித்தும், துரத்தலின் போது நடந்த நிகழ்வுகளின் சரியான வரிசைமுறை குறித்தும் விசாரணை நடைபெற்று வருறது.</p><p>சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக இருப்பதாக புருஷோத்தம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நாயக் உறுதிப்படுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>வீட்டுப் பாடம் செய்யாததால் கன்னத்தில் அறைந்த ஆசிரியர்.. மயங்கி விழுந்து உயிரிழந்த 6 வயது சிறுவன்</title><link>https://www.maalaimalar.com/news/national/teacher-beats-6-year-old-boy-for-not-doing-homework-dies</link><comments>https://www.maalaimalar.com/news/national/teacher-beats-6-year-old-boy-for-not-doing-homework-dies#comments</comments><guid isPermaLink="false">5ca5f5cf-76a7-477e-b453-fc41b6608af7</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:14:54 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:14:54.384Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>school boy,teacher,பள்ளி சிறுவன் பலி,vishakapatnam,விசாகப்பட்டினம்,ஆசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jufbai8j/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 6-year-old dies]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jufbai8j/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆறு வயது சிறுவனை ஆசிரியர் அறைந்தபோது, அந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தான். ஆசிரியர் அவனை தாக்கியதால் தான் சிறுவன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><h3><strong>ஆந்திர பிரதேசம் தனியார் பள்ளி</strong></h3><p>ஆந்திர பிரதேசத்தில் லிட்டில் கார்டன் தனியார் பள்ளியில் 6 வயதான பிரணய் தேஜா என்ற மாணவன் படித்து வந்துள்ளான். இதையடுத்து வழக்கல்போல் பள்ளிக்கு வந்த சிறுவனை வீட்டுப்பாடத்தை செய்யாததற்காக ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ளார். </p><p>அப்போது மயங்கி விழுந்த சிறுவனை, பள்ளி ஊழியர்கள் அருகிலுள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.</p><h3>6 வயது சிறுவனின் தந்தை</h3><p>இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை கூறும்போது, “காலை சுமார் 8 மணியளவில், என் மகன் எழுந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கூறினான். காலை நல்ல உடல் நலத்துடன் வீட்டிலிருந்து புறப்பட்டான், அவன் பள்ளிக்குச் சென்றே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான்.</p><p>குழந்தை வீட்டை விட்டு வெளியேறியபோது அவனிடம் எந்த அசாதாரணமும் இல்லை. ஆரம்பத்தில் நாங்கள் அவனை பள்ளிக்கு உடனடியாக அனுப்பவில்லை, ஆனால் தேர்வுகள் நெருங்கியதால், இறுதியில் நாங்கள் சம்மதித்தோம்.</p><p>சரி, விரைவில் தேர்வுகள் வரப்போகின்றன, அதனால் அவனைப் போக விடலாம் என்று நாங்கள் நினைத்தோம். அவனோ, சரி அப்பா, நான் போகிறேன்' என்று சொல்லிவிட்டுப் பள்ளிக்குச் சென்றான்.</p><p>பள்ளியிலிருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. என் மைத்துனரின் இடத்திற்கு அருகில் வேலை செய்யும் உள்ளூர் சமையல்காரர்கள்தான் அழைத்து எனக்குத் தகவல் தெரிவித்தனர்.</p><p>குழந்தையை கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.</p><p>நாங்கள் பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்தபோது, ​​ஆசிரியை அவனை பயமுறுத்தியது அதில் தெரிந்தது. அவர் அவனை கன்னத்தில் அறைந்ததில், அதிர்ச்சி மற்றும் பயத்தின் காரணமாக அவன் அங்கேயே சரிந்து விழுந்தான்.</p><p>மருத்துவமனைக்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் எங்களிடம் கூறினார்.</p><p>என் மகனுக்கு வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் என எந்தப் பிரச்சினையும் இல்லை. நேற்று இரவு அவன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தான், இன்று காலையும் நலமாகவே எழுந்தான்.</p><p>அவனுக்கு வைரஸ் காய்ச்சலோ அல்லது வேறு எந்த உடல்நலப் பிரச்சினைகளோ இருக்கவில்லை” என்று அவர் கூறினார்.</p> <figure><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=315&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1627304149048485%2F&show_text=false&width=560&t=0" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></figure> <h3><strong>கோரிக்கை</strong></h3><p>மரணச் செய்தியை அறிந்ததும் குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனையில் கூடி, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இது ஒரு தனிப்பட்ட உடல்ரீதியான தண்டனைச் செயல் அல்ல என்றும், மற்ற குழந்தைகளும் தாக்கப்பட்டதாகவும் அக்குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.</p><p>சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், வருவாய் கோட்ட அதிகாரி திலீப் சக்கரவர்த்தி மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மஹிந்திரா மின்சார வாகனம் - BaaS வசதியுடன் BE 6 SPORTEQ கார் ஓணம் பண்டிகையில் விற்பனை</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/mahindra-electric-vehicle-baas-feature-be-6-sporteq-car-onam-festival-sale</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/mahindra-electric-vehicle-baas-feature-be-6-sporteq-car-onam-festival-sale#comments</comments><guid isPermaLink="false">92a47f1b-abc4-4244-a51f-ae91b8b08e17</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:11:18 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:11:18.419Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mahindra,மஹிந்திரா,Electric Car,மின்சார வாகனம்,BE6 SPORTEQ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ylbg9yuk/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மஹிந்திரா BE 6 SPORTEQ]]></media:title><media:description type="html"><![CDATA[ Mahindra Electric BE 6 SPORTEQ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ylbg9yuk/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மஹிந்திரா</a> நிறுவனம் தனது புதிய வகை மின்சார ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனமான (eSUV) BE 6 SPORTEQ- ஐ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.</p><h3><strong>மஹிந்திரா BE 6 SPORTEQ</strong></h3><p>மஹிந்திரா நிறுவனம், புதிய ஸ்போர்டெக் சீரிஸ் மூலம் BE 6 வரிசையில் மறுவடிவமைக்கப்பட்ட கேபின் மற்றும் பேட்டரியை ஒரு சேவையாக (BaaS) வாங்கும் வசதி ஆகியவை அறிமுகம் செய்யவுள்ளது.</p><p>BaaS என்பது, வாடிக்கையாளர் பேட்டரி இல்லாமல் காரை வாங்கி, அதை தனியாக வாடகைக்கு எடுக்கும் ஒரு மாதிரி ஆகும். இது காரின் ஆரம்ப விலையைக் குறைக்கிறது.</p><p>BE 6 SPORTEQ, டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆகிய இரண்டையும் கொண்ட இந்தியாவின் முதல் மின்சார வாகனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு உயர்தர பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.</p><p>இந்த வாகனத்தின் மூன்று திரைகளை கொண்ட முழுமையான காக்பிட், கூகுள் ஜெமினி மற்றும் ஓட்டுதலை மேலும் இணைக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமமில்லாமல் பயன்படுத்தும் வகையில் தனது முந்தைய வடிவத்தை மாற்றி அமைத்துள்ளது.</p><p>இது, ஒரு மின்சார SUV-யிடம் இருந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் எல்லைகளை தொடர்ந்து விரிவுபடுத்தும் ஒரு உரிமையாளர் அனுபவத்தை வழங்குகிறது.</p><p>SPORTEQ தொடரில் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து புதிய தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் அம்சங்களும், தற்போதுள்ள BE 6, XEV 9e மற்றும் XEV 9S வாடிக்கையாளர்களுக்கு, ஜனவரி 2027 முதல் கட்டங்களாக வெளியிடப்பட உள்ளது.</p><h3><strong>மஹிந்திரா நிர்வாக இயக்குநர்</strong></h3><p>இந்த வாகனம் குறித்து மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான வேலுசாமி கூறுகையில், “தங்கள் உரிமையாளர்களுடன் சேர்ந்து வளரும் வாகனங்களுக்கே எதிர்காலம் சொந்தமானது. SPORTEQ அதைச் செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் BE 6 SPORTEQ சீரிஸ் வாகனங்களின் விநியோகம் தொடங்க இருக்கிறது,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>விலை</strong></h3><p>BaaS மற்றும் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3.75 செலவாகும் 59 kWh பேட்டரியுடன் இதன் ஆரம்ப விலை ரூ. 11.45 லட்சமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. BaaS இல்லாமல் இதன் விலை ரூ. 19.45 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நிலவில் மோதி பள்ளத்தை ஏற்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் - புகைப்படங்களை வெளியிட்ட நாசா</title><link>https://www.maalaimalar.com/news/world/spacex-rocket-crater-moon-photos-released-by-nasa</link><comments>https://www.maalaimalar.com/news/world/spacex-rocket-crater-moon-photos-released-by-nasa#comments</comments><guid isPermaLink="false">c35dfe2a-3b97-4446-b81c-2551d3319776</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:09:56 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:09:56.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Moon,நிலவு,SpaceX,நாசா,ஸ்பேஸ் எக்ஸ்,nasa</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8wktdruo/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிலவு மோதல் பள்ளம்]]></media:title><media:description type="html"><![CDATA[ SpaceX Rocket Impact Crater]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8wktdruo/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பூமியில் இருந்து நிலவுக்கு செலுத்தப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/ஸ்பேஸ்-எக்ஸ்">ஸ்பேஸ் எக்ஸ்</a> ராக்கெட், நிலவின் மேற்பரப்பில் மோதி ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளின் புகைப்படங்களை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">நாசா</a> வெளியிட்டுள்ளது.</p><h3><strong>நிலவின் மேற்பரப்பில் பள்ளம்</strong></h3><p>நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக தனியார் திட்டமான ஃபால்கன் 9 ராக்கெட் 2025 ஜனவரி மாதத்தில் ஏவப்பட்டது. இது ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸை சேர்ந்த ப்ளூ கோஸ்ட் 1  நிலவு லேண்டரை சுமந்துகொண்டு நிலவுக்கு சென்றது.</p><p>இதையடுத்து இந்த மாதம் 5 அன்று ஸ்பேஸெக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் நிலவின் மேற்பரப்பில் எதிர்பாரா விதமாக மோதியது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் லூனார் செகனைசஸ் ஆர்பிட்டர் நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை படம் பிடித்தது.</p><p>இந்த புகைப்படங்கள் நிலவின் மேற்பரப்பில் 60 அடி (18 மீட்டர்) அகலம் மற்றும் 10 அடிக்கும் குறைவான ஆழத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.</p><h3><strong>கொரிய விண்வெளி நிறுவனம்</strong></h3><p>நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான புகைப்படங்கள் முன்னதாகவே டானூரி என்று அழைக்கப்படும் கொரியா பாத்ஃபைண்டர் லூனார் ஆர்பிட்டர் (KPLO) எடுத்த படங்களை, கொரிய விண்வெளி நிறுவனம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியிட்டது.</p><p>2009 முதல் சேவையில் உள்ள LRO, சந்திரன் தனக்குக் கீழே சுழலும்போது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை சந்திரனை துருவத்திலிருந்து துருவத்திற்கு சுற்றி வருகிறது.</p><h3><strong>நாசா அறிக்கை</strong></h3><p>இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், “அந்த படத்தை பிடிப்பது சவாலாக இருந்தது. நிலவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தைப் புகைப்படம் எடுக்க, அந்த இடம் பார்வைக்குத் தெரியும் வரை விண்கலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிகழ்விற்காக ஆறு நாட்கள் ஆனது.</p><p>மேலும், விண்கலம் 60 மைல் உயரத்திற்கு மேலே கடந்து செல்லும்போது, அதன் கேமரா பள்ளத்தை நோக்கியவாறு இருக்குமாறு மிகச் சரியாகச் சாய்க்கப்பட வேண்டியிருந்தது.</p><p>மற்றொரு சவாலாக நேரம் தான் இருந்தது. கேமரா 10 வினாடிகள் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ படம் எடுத்தால்கூட, இலக்கு மையத்திலிருந்து 10 மைல்கள் விலகிச் சென்றுவிடும்.</p><p>மேற்பரப்பிலிருந்து 1.5 அடி ஆழத்தில் ஏற்பட்ட மோதலின்போது, சூரியக் காற்று, விண்மீன் மண்டல அண்ட கதிர்கள் மற்றும் நுண் விண்கல் மோதல்களால் நீண்ட காலமாக உருமாற்றம் அடைந்த மேற்பரப்புத் தூசி மற்றும் பாறைகளால் அந்த கருமையான கோடுகள் உருவாகியுள்ளன.</p><p>எரிமலையின் பள்ளம் இருந்த இடத்தைக் கண்டறிவது, முன்னணி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் ஒன்றிணைத்த ஒரு உலகளாவிய முயற்சியாக இருந்தது.</p><p>நாசாவின் புவிக்கு அருகிலுள்ள விண்வெளிப் பொருட்கள் ஆய்வு மையம், மோதல் நிகழ்ந்த இடத்தைக் கண்டறியும் வரை அதன் பயணப்பாதையை படிப்படியாக செம்மைப்படுத்தி, பின்னர் அந்த தகவலை கொரியாவுக்கு வழங்கியது.</p><p>பதிலுக்கு கொரியாவை சேர்ந்த டானூரி குழுவினர் தங்களின் தொடர் படமெடுக்கும் வரிசையை செம்மைப்படுத்த உதவும் வகையில், தங்களின் ஆட்களை நாசாவின் LRO குழுவிற்கு அனுப்பினர்,” என்று நாசா தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாதி வார்த்தைகளை பயன்படுத்துவது SC/ST சட்டத்தின் கீழ் குற்றமாகாது: அலகாபாத் உயர் நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/using-caste-words-not-offence-under-sc-st-act-allahabad-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/using-caste-words-not-offence-under-sc-st-act-allahabad-high-court#comments</comments><guid isPermaLink="false">a3934d35-88b7-4ce8-a6af-5d42f68000fc</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:08:43 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:08:43.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Allahabad High Court,SC ST ACT,பட்டியல் மற்றும் பழங்குடியினர்,அலாகாபாத் உயர்நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/leis3q0w/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SC/ST Act - Allahabad High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/leis3q0w/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாதிய வசை சொற்களை பயன்படுத்துவது மட்டுமே பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் (SC/ST Act) கீழ் குற்றமாகாது என்று அலகாபாத் <a href="https://www.maalaimalar.com/topic/உயர்-நீதிமன்றம்">உயர் நீதிமன்றம்</a> கூறியுள்ளது.</p><p>பாதிக்கப்பட்டவரை அவமதிக்கும் நோக்கத்திற்காக அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன என்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமன்றி, ஒருவரை அவரது சாதியை குறிப்பிட்டு அழைப்பது மட்டும் இந்த சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.</p><h3><strong>அலகாபாத் உயர் நீதிமன்றம்</strong></h3><p>அலாகாபாத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழான ஒரு வழக்கு பரேலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ராய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது பாதிக்கப்பட்ட நபரை குறிப்பிடுவதற்கு ‘சாமர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக வெக்ராஜ் மற்றும் தெளலத் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p>மேலும், அவர்கள் தன்னை திட்டியதாகவும், சாமர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் கூறினார்.</p><h3><strong>நீதிபதி அமர்வு</strong></h3><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சாமர் என்ற வார்த்தையை வெறுமனே பயன்படுத்தியதன் அடிப்படையில் மட்டுமே, மேல்முறையீட்டாளர்கள், பாதிக்கப்பட்டவரை பட்டியல் சாதி அல்லது பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அவமதிக்கும் நோக்கத்தில், அந்த வார்த்தையை பயன்படுத்தினார்கள் என்று அர்த்தமாகாது,” என்று கூறினர்.</p><p>மேலும், துஷ்பிரயோகம் மற்றும் குற்றவியல் மிரட்டல் குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை, மனுதாரர்கள் இருவருக்கும் குறிப்பிட்ட பங்கு என எதுவும் கூறப்படவில்லை.</p><p>பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான முக்கிய குற்றச்சாட்டுகள் வெக்ரஜ் என்பவரின் மகனான மற்றொரு குற்றவாளியான ஹிம்மத் சிங்கு மீது ஏற்கனவே உள்ளன.</p><p>எனவே, பதிவில் உள்ள ஆதாரங்கள் தற்போதைய மேல்முறையீட்டாளர்களான வெக்ராஜ் மற்றும் தெளலத் ஆகியோருக்கு எதிராக எந்தவொரு குறிப்பிட்ட போதுமான பங்கையும் வெளிப்படுத்தவில்லை,” என்று நீதிமன்றம் கூறியது.</p>]]></content:encoded></item><item><title>கொரோனா பெருந்தொற்று பதிவுகளை மறைக்க சதி செய்த நபர்.. அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்</title><link>https://www.maalaimalar.com/news/world/man-who-plotted-to-hide-covid-pandemic-records-appears-in-us-court</link><comments>https://www.maalaimalar.com/news/world/man-who-plotted-to-hide-covid-pandemic-records-appears-in-us-court#comments</comments><guid isPermaLink="false">f612f6af-9af6-4ee3-bdaa-b016301f0003</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:51:53 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:51:53.530Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவிட் 19,Corona,Covid 19,Wuhan lab,கொரோனா,வுஹான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3sawszci/Untitled-design-15.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Covid Records Conspiracy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3sawszci/Untitled-design-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவை சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் அந்தோனி ஃபாசியின் முன்னாள் ஆலோசகர் ஒருவர், ஆராய்ச்சி நிதி மானியங்களை பெறுவதற்காக கொரோனா பெருந்தொற்று தொடர்பான அரசாங்க ஆவணங்களை மறைத்து சதித்திட்டம் தீட்டிய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.</p><h3><strong>கொரோனா ஆராய்ச்சி</strong></h3><p>கொரோனா பெருந்தொற்று காலத்தில் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தில் (Niaid) ஃபாசி என்பவரின் கீழ் மூத்த அதிகாரியாக டேவிட் மோரன்ஸ் என்பவர் பணியாற்றினார்.</p><p>78 வயதான டேவிட், கொரோனா ஆராய்ச்சி மானியங்கள் தொடர்பாக ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வந்த பொது ஆவண கோரிக்கைகளை முறியடிக்கும் ஒரு திட்டத்தை தீட்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.</p><h3><strong>நீதிமன்றத்தில் ஆஜர்</strong></h3><p>இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டேவிட் என்பவருக்கு ஆதரவாக வழக்கறிஞர் திமோதி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர், இன்று தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம், டேவிட் தான் செய்த செயலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறினார்.</p><p>இதையடுத்து பெருந்தொற்று நடவடிக்கைகளின் முகமாக திகழ்ந்த ஃபாசி, செனட் குழுவின் முன் ஆஜரானார்.</p><p>அப்போது ஃபாசி, தன்னை சிறையில் அடைப்பதற்காக கென்டக்கியைச் சேர்ந்த தனது நீண்டகால எதிரியான குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் ராண்ட் பால் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார்.</p><h3><strong>FBI குற்றச்சாட்டு</strong></h3><p>கொரோனா நோயின் தோற்றம் குறித்த மர்மம் இன்னும் நீங்காத நிலையில், சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவே இந்த பெருந்தொற்றுக்கு காரணமாக இருக்கலாம் என்று 2023-ஆம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த உள்நாட்டு உளவு மற்றும் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) கூறியது.</p><p>அமெரிக்காவின் இந்த கூற்றில் எந்தவிதமான நம்பகத்தன்மையும் இல்லை என்று கூறி சீனா தொடர்ந்து மறுத்து வந்தது.</p><p>ஜனவரி 2025-ல், சீன ஆய்வகத்தில் கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த வெளிநாட்டு உளவு அமைப்பான சி.ஐ.ஏ (CIA) கூறியது.</p><p>அதே நேரத்தில், மற்ற நான்கு அமெரிக்க உளவு நிறுவனங்களும் தேசிய புலனாய்வு மன்றமும், இந்த வைரஸ் பெரும்பாலும் ஏதேனும் ஒரு விலங்கின் மூலம் இயற்கையாக பரவியிருக்கலாம் என்று கூறியது.</p><p>சீனாவில் உள்ள வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா தோன்றியது என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், வெளவால் இனத்தின் மீது கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சி மானியத்தை ரத்து செய்ய தேசிய சுகாதார நிறுவனங்கள் முடிவு எடுத்தது.</p><p>இந்த முடிவு குறித்து டேவிட் மனு தாக்கல் செய்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் செனட் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p>மேலும், வௌவால் இனத்தின் மீது கொரோனா வைரஸ் மானியத்தை மீட்டெடுக்க தான் உதவுவதாகவும், ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா பரவல் ஏற்பட்டது என்ற வதந்தியை, நான் முறியடிப்பதாகவும் டேவிட் உறுதியளித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.</p><p>தகவல் அறியும் உரிமை சட்ட கோரிக்கைகள் மூலம் தங்களது தகவல்தொடர்புகள் அரசாங்கத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும் என்பதை அறிந்து, டேவிட் அவரது அரசு மின்னஞ்சல் கணக்கிற்கு பதிலாக தனது தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்தி தொடர்புகொண்டனர் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.</p><p>இந்த நிலையில் டேவிட் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நவம்பர் 12 அன்று அவருக்கு தண்டனை விதிக்கப்படும் போது, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 100-ஐ கடந்தது</title><link>https://www.maalaimalar.com/news/world/more-than-100-killed-in-gold-mine-collapse-in-central-african-republic</link><comments>https://www.maalaimalar.com/news/world/more-than-100-killed-in-gold-mine-collapse-in-central-african-republic#comments</comments><guid isPermaLink="false">0fde620e-a04e-4a0f-9a20-20aa56efe56e</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:21:47 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:21:47.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold Mine,Central African Republic,மத்திய ஆப்பிரிக்க குடியரசு,தங்கச் சுரங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/4zw3iegg/africa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gold mine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/4zw3iegg/africa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.</p><h2>சுரங்க விபத்து</h2><p>மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் 30 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் உள்ளே சிக்கி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இந்நிலையில், சுரங்க விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐயும் தாண்டியுள்ளது. பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. </p><h2>மீட்புப்பணிகள்</h2><p>நானா-மாம்பெரே மாகாணத்தின் அப்பா பகுதியில் நடந்த சுரங்க விபத்து குறித்து பேசிய மாகாணத்தின் துணை மேயர், சுலைமான், மீட்புக்குழுவினரும் அப்பகுதி மக்களும் பல மணி நேரம் போராடி இடிந்து விழுந்த சுரங்கத்தில் இருந்து உடல்களை மீட்டனர். காயம் அடைந்த சுரங்க தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.</p><p>பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அரசு செய்தித் தொடர்பாளர் எவரிஸ்ட் என்கமானா, பாதிப்பு அடைந்தவர்களுக்கு நிவாரணமும் உதவியும் வழங்க அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர் என்றார்.</p><h2>போதுமான பாதுகாப்பு இல்லை</h2><p>மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பல ஆயிரம் மக்கள் சிறு அளவிலான கனிம அகழ்வு சுரங்க தொழிலில் செய்வதால், அங்கு பாரம்பரிய சுரங்கங்கள் இடிந்து விழுவது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. சுரங்க தொழிலாளர்களுக்கு பொதுவாக போதுமான பாதுகாப்பு இல்லாததாலும், இந்த விபத்துகள் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்துவதாலும் இப்பணி அபாயகரமானது.</p>]]></content:encoded></item><item><title>Video: கவின் - நயன்தாரா இணையும் ‘ஹாய்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hai-movie-trailer-release-kavin-nayanthara</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hai-movie-trailer-release-kavin-nayanthara#comments</comments><guid isPermaLink="false">8f1b54b5-ece4-4ad0-adbd-7bb985b2cfa1</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:03:46 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:03:46.357Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயன்தாரா,Nayanthara,kavin,கவின்,RowdyPictures,Hi Movie,Hi Trailer,ஹாய் டிரெய்லர்,JenMartin,7ScreenStudio</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jplbi4c8/Hi-Movie" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hi Movie ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jplbi4c8/Hi-Movie?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'லேடி சூப்பர்ஸ்டார்' <a href="https://www.maalaimalar.com/topic/nayanthara">நயன்தாரா</a> மற்றும் இளம் முன்னணி நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/kavin">கவின் </a>முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்தத் திரைப்படம் ஒரு முழுமையான காதல் மற்றும் குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ளது. </p><p>ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த '<a href="https://www.maalaimalar.com/topic/himovie">ஹாய்</a>' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><h2>நட்சத்திரப் பட்டாளம்</h2><p>இப்படத்தில் கவின் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான பிரபு, ராதிகா சரத்குமார், கே. பாக்யராஜ், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி, எஃப்.இ.எஃப்.எஸ்.ஐ விஜயன் மற்றும் காவியா அறிவுமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.</p><h2>பாடல்கள் தந்த பலம்</h2><p>ஜென் மார்ட்டின் இசையில் ஏற்கனவே <a href="https://www.maalaimalar.com/topic/gv-prakash-kumar">ஜி.வி. பிரகாஷ் குமார் </a>பாடிய <strong>"கண்ணக்குழியா"</strong> உள்ளிட்ட மூன்று பாடல்கள்  ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/WKq3S2vvVEM"></iframe></figure><h2>படக்குழு</h2><p>இத்திரைப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார்.</p><p>இத்திரைப்படத்திற்கு சி.யு. முத்துச்செல்வன் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்க, ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். </p><p>விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் 'ரவுடி பிக்சர்ஸ்', லலித் குமாரின் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் 'ஜீ ஸ்டுடியோஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன.</p><p>தணிக்கைக் குழுவால் 'U/A' சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமத்தை பிரபல 'ஜீ5' நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>ரிலீஸ் தேதி </h2><p>இத்திரைப்படம் முதலில் <strong>ஆகஸ்ட் 14</strong> அன்று சுதந்திர தின வார இறுதியில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>ஆனால், அதே தேதியில் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மற்றும் விஷாலின் 'மகுடம்' போன்ற பெரிய படங்கள் மோதவிருந்ததாலும், படத்தின் இறுதிப் பணிகள் மற்றும் புரொமோஷன் காரணங்களினாலும் இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. </p><p>தற்போது, <strong>ஆகஸ்ட் 28</strong> அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகிறது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: மதுரையை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது திருப்பூர்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-tamilans-beat-madurai-panthers-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-tamilans-beat-madurai-panthers-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">61295ea0-c243-4784-b0ee-1da6dba24625</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:01:43 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:01:43.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்,tirupur tamizhans</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zw4u3g3b/tirupur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tirupur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zw4u3g3b/tirupur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை அணிக்கு எதிரான போட்டியில் திருப்பூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது கட்டம் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>திருப்பூர் தமிழன்ஸ்</h2><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி பவுலிங் தேர்வு செய்தது. </p><p>அதன்படி, முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அடிக் உர் ரகுமான் 30 பந்தில் 43 ரன்கள் குவித்தார். ரோகன் பத்ரா 22 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார்.</p><p>திருப்பூர் அணி சார்பில் மதிவாணன் 3 விக்கெட்டும், நடராஜன், மோகன் பிரசாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா அதிரடியாக ஆடி 17 பந்தில் 7 சிக்சர் உள்பட 48 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.</p><h2>பிரதோஷ் ரஞ்சன் பால் பொறுப்பான ஆட்டம்</h2><p>கடைசி கட்டத்தில் பிரதோஷ் ரஞ்சன் பால் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.</p><p>இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 17.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் திருப்பூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.</p><p>மதுரை அணி தான் ஆடிய 6 போட்டிகளில் 2வது தோல்வி அடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் விக்னேஷ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vignesh-releases-list-of-717-closed-tasmac-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vignesh-releases-list-of-717-closed-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">d706d07d-3f97-41b8-b7c5-54547fe5f1bd</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:30:27 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:30:27.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்கடை,tasmac closure,cm vijay,முதலமைச்சர் விஜய்,tvk government,அமைச்சர் விக்னேஷ்,Minister Vignesh,717 Tasmac Closed</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/pqgx982q/Minister-Vignesh" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vignesh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/pqgx982q/Minister-Vignesh?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் மதுக்கடைகள்</a> முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் முகவரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் விக்னேஷ்</a> இந்த விவரங்களைச் செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.</p><p>தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், முதற்கட்டமாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களின் அருகே இயங்கி வரும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். </p><p>அந்த அறிவிப்பின்படி, தற்போது 717 கடைகளும் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் எண்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் சமூக ஊடகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.</p><h2>இது குறித்து அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,</h2><p>"முதலமைச்சரின் உத்தரவின்படி 717 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் கடை</a>களும் மூடப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாகக் கோயம்பத்தூர் மாவட்டத்தில் தான் மிக அதிகமான கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மக்கள் நலனே முக்கியம் என்பதால், அதிக வருவாய் ஈட்டித் தந்த முக்கியமான கடைகளும் இதில் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p>கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், எஞ்சிய சில கடைகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. எனினும், பொதுமக்கள் மற்றும் குடும்பங்களின் நலனே நமது முதலமைச்சரின் ஒரே நோக்கம். </p><p>இந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட நினைப்பவர்கள் அல்லது அரசுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.</p><p>மேலும், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதைத் தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பணியில் சேர்ந்த நபர் 6 மணி நேரத்தில் ராஜினாமா.. சமூக வலைதளத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய மேலாளர்</title><link>https://www.maalaimalar.com/news/national/new-employee-resigns-in-6-hours-manager-linkedin-post</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-employee-resigns-in-6-hours-manager-linkedin-post#comments</comments><guid isPermaLink="false">7c2e6711-af29-4b17-b665-3d165a0a9c7e</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:28:44 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:28:44.810Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>manager,Resignation,Employee,ராஜினாமா,ஊழியர்,மேலாளர்,job frustration</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/eggcysrn/Untitled-design-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ லிங்க்ட்இன் பதிவு]]></media:title><media:description type="html"><![CDATA[ LinkedIn hiring story]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/eggcysrn/Untitled-design-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளர், தனது ஊழியர் பணியை விட்டு விலகுவதாக தெரிவித்ததையடுத்து, அவருக்கு பதிலாக புதிய பணியாளரை நியமித்துவிட்டு செல்லுமாறு தெரிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h3><strong>டெல்லி நிறுவனம்</strong></h3><p>டெல்லியில் ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா என்பவர் ஹையரிங் இன்சைடர் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அவரிடம் பணிபுரிந்த ஒரு ஊழியர், தான் பணியை விட்டு செல்வதாக கூறியுள்ளார்.</p><p>அப்போது நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/topic/ஊழியர்">ஊழியரிடம்</a>, தங்களின் பதவிக்கு வேறொரு பணியாளரை நியமித்துவிட்டு செல்லுமாறு மேலாளர் கூறியுள்ளார். </p><p>இதையடுத்து அந்த நபர், தான் வேலை பார்த்த பணிக்கு வேறு நபரை தேர்வு செய்து, அவரை நிறுவனத்திற்கு அழைத்து வந்து பணிக்கு தேவையான அனைத்தையும் கற்றுகொடுத்துள்ளார்.</p><p>மேலும் தான் புதியதாக தேர்ந்தெடுத்த நபருக்கு, நிறுவனத்தின் பணிச்சுமை, காலக்கெடு மற்றும் நிறுவனத்தின் கொள்கைகள் ஆகிய அனைத்தையும் முதல் நாளே கற்றுக் கொடுத்துள்ளார்.</p><h3><strong>பணி குறித்து விளக்கம்</strong></h3><p>புதியதாக வேலையில் சேர்ந்த நபரிடம், நேர்காணல் முடிந்த பிறகு, உண்மையில் பணி எப்படி இருக்கும் என்பதை அவர் பல மணி நேரமாகவும் விளக்கியுள்ளார்.</p><p>பணி குறித்து மிகைப்படுத்தாமல், உண்மையான பணி குறித்து தெளிவாக கூறியுள்ளார். இதையடுத்து புதியதாக பணியில் சேர்ந்தவர் மேல், பலவிதமான பொறுப்புகள் திடீரென திணிக்கப்பட்டதால், அந்த நபர் பதற்றமடைந்துள்ளார்.</p><h3><strong>ராஜினாமா</strong></h3><p>இதைத்தொடர்ந்து புதிதாக வேலைக்கு சேர்ந்த நபர் 6 மணி நேரம் கழித்து நிறுவனத்தின் மேலாளரிடம் சென்று தான் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.</p><p>இதைக்கேட்ட மேலாளர் கோபமடைந்து, பழைய ஊழியரை அழைத்து, அவரிடம் என்ன சொன்னாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர், நீங்கள் அவருக்கு கற்றுக் கொடுக்க சொன்ன அனைத்தையும் சென்னேன் என்று கூறியுள்ளார்.</p><p>ஒரு வேலையின் யதார்த்தத்தை பார்த்த பிறகும், புதிதாக இணைந்தவர் ஏன் பணியை விட்டு விலகினார் என்பதை நிறுவனத்தின் மேலாளரால் புரிந்து கொள்ள முடியவில்லை.</p><h3><strong>சமூக வலைதள பதிவு</strong></h3><p>இந்த சம்பவத்தை லிங்க்ட்இன் வலைதளத்தில் பதிவிட்ட நிறுவனத்தின் மேலாளர் ஸ்ரீவஸ்தவா, அந்த புதிய பணியாளரிடம் நிறுவனம் முதலில் வைத்த எதிர்பார்ப்புகளும், உண்மையில் அவர் செய்ய வேண்டிய வேலையும் முற்றிலும் மாறுபட்டிருந்ததாக பதிவிட்டார்.</p><p>சமூக வலைதளத்தில் நிறுவனத்தின் மேலாளர் வெளியிட்ட இந்த பதிவுக்கு, பல்வேறு பயனர்கள் பதிலளித்து கருத்து தெரிவித்தனர். </p><h3><strong>கருத்துக்களை பதிவிட்ட பயனர்கள்</strong></h3><p>இந்த பதிவிற்கு ஒரு பயனர், ஆட்சேர்ப்பில் வெளிப்படைத்தன்மை ஏன் முக்கியம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு வலிமையான நினைவூட்டலாகும் என பதிவிட்டார்.</p><p>மேலும், நேர்த்தியான நேர்காணல் ஒரு புதிய ஊழியரை கவரலாம், ஆனால் அந்த பணியின் உண்மைத் தன்மை தான் அவரை வேலையில் தக்க வைப்பதாக கூறினார்.</p><p>மற்றொரு நபர், ஆட்சேர்ப்பில் சொல்லப்படும் ஒரு விலை உயர்ந்த பொய் என்னவென்றால், உண்மைக்கு புறம்பான வேலை குறித்து வாக்குறுதி அளிப்பதுதான் என்று கூறினார்.</p><p>மேலும், புதிய ஊழியர் பணியில் சேரும்போது உண்மையான வேலையை குறித்து தெரிந்துகொண்டு, பணியின் செயல்முறை தோல்வியில் முடிகிறது என்று பதிவிட்டார்.</p><p>நிறுவன மேலாளர் பகிர்ந்த இந்த பதிவிற்கு, சமூக வலைதளத்தின் பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் தகுதி நீக்க நடவடிக்கை - மனுவை தள்ளுபடி செய்த  உயர்நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-mlas-disqualification-case-dismissed-by-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-mlas-disqualification-case-dismissed-by-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">eedf42e4-a28d-40d3-bee0-50fe10b60f5d</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:17:12 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:17:12.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt,ADMK MLA,floor test,அதிமுக எம்.எல்.ஏ.க்கள்,நம்பிக்கை தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jn7u2tal/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AIADMK MLA]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jn7u2tal/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக</a> எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சென்னை உயர் நீதிமன்றத்தில்</a> தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><h3><strong>நம்பிக்கை கோரும் தீர்மானம்</strong></h3><p>தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13 அன்று தமிழக வெற்றி கழகம் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தபோது அதற்கு ஆதவராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.</p><p>தவெக-விற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து அதிமுக-வில் இருந்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.</p><h3><strong>அதிமுக எம்.எல்.ஏ.க்கள்</strong></h3><p>இதற்கிடையே மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி, சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்.</p><p>இந்த மனுவை ஏற்று, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.</p><p>அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செல்வகுமார் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கு நீதிபதிகள் தர்மதிகாரி மற்றும் அருள் முருகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது நீதிபதிகள் அமர்வு, கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கையை திரும்ப பெறுவதாக அதிமுக பொதுச் செயலாளர் மனு அளித்திருப்பதால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை தொடர வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று கூறினர்.</p><p>மேலும், சட்டப்படி 15 நாட்களுக்குள் எம்.எல்.ஏ.க்களை மன்னித்து கடிதம் அளித்து விட்டால், தகுதி நீக்கம் என்ற கேள்வியே எழாது என்றும் நீதிபதிகள் கூறினர்.</p><p>இதைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மூளைத்தண்டு இறப்பு: என்ன? எப்படி உறுதி செய்யப்படுகிறது? உறுப்பு தானத்தில் அதன் முக்கியத்துவம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/brainstem-death-what-how-confirmed-importance-organ-donation</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/brainstem-death-what-how-confirmed-importance-organ-donation#comments</comments><guid isPermaLink="false">e2159ee8-1121-44d3-b40c-674c78c5813b</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:30:41 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:30:41.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,HealthTips,organ donation,கோமா,Brainstem death,மூளைத்தண்டு இறப்பு,மூளைச்சாவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/4b1vhdv3/brai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Brainstem death ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/4b1vhdv3/brai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனித உடலின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று மூளை. அதில் மூளைத்தண்டு என்பது சுவாசம், இதயத் துடிப்பு, விழுங்குதல், இருமல் போன்ற உயிருக்கு அத்தியாவசியமான பல செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் முக்கியப் பகுதியாகும். இந்த மூளைத்தண்டு செயல்பாடுகள் முழுமையாகவும், நிரந்தரமாகவும், மீள முடியாத வகையிலும் நின்றுவிடும் நிலையே மூளைத்தண்டு இறப்பு எனப்படுகிறது. இந்தியாவில் இது மருத்துவ ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மரணமாகக் கருதப்படுகிறது.</p><h2>மூளை<strong>த்தண்டு இறப்பு எதனா</strong>ல் ஏற்படுகிறது?</h2><p>கடுமையான தலைக்காயம், மூளையில் ரத்தக்கசிவு, பக்கவாதம், மூளைக்கு நீண்ட நேரம் ஆக்சிஜன் கிடைக்காத நிலை, சில மூளைக் கட்டிகள் உள்ளிட்ட காரணங்களால் மூளைத்தண்டு நிரந்தரமாக பாதிக்கப்படலாம். இதன் விளைவாக ஒருவர் சுயமாக சுவாசிக்க முடியாத நிலைக்கு செல்கிறார்.</p><h2><strong>கோமாவுக்கும் மூளைத்தண்டு இறப்புக்கு</strong>ம் வித்தியாசம்</h2><p>கோமா நிலையில் இருக்கும் ஒருவர் உயிருடன் இருக்கிறார்; சில சூழல்களில் சிகிச்சையின் மூலம் அவருடைய நிலை மேம்பட வாய்ப்பு இருக்கலாம். ஆனால் மூளைத்தண்டு இறப்பு என்பது அதற்கு முற்றிலும் மாறுபட்டது. மூளைத்தண்டு செயல்பாடுகள் நிரந்தரமாகவும் மீள முடியாத வகையிலும் நின்றுவிட்டால், அந்த நபர் மீண்டும் சுயநினைவு பெறவோ, தானாக சுவாசிக்கவோ முடியாது.</p><h2>இதயத்<strong>துடிப்பு எப்படி தொடர்கிறது?</strong></h2><p>மூளைத்தண்டு இறப்பு ஏற்பட்ட பிறகும், வென்டிலேட்டர் போன்ற செயற்கை சுவாச உதவி மூலம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்கப்படலாம். இதனால் சில காலம் இதயத்துடிப்பும், உடலில் ரத்த ஓட்டமும் தொடரலாம். இதனால் வெளிப்படையாக அந்த நபர் உயிருடன் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படலாம். ஆனால் இது மூளைத்தண்டு இறப்பு ஏற்பட்டுள்ள உண்மையை மாற்றாது.</p><h2>மூளைத்தண்டு <strong>இறப்பு எப்படி</strong> உறுதி செய்யப்படுகிறது?</h2><p>மூளைத்தண்டு இறப்பை உறுதி செய்வது மிகவும் கவனமாகவும் மருத்துவ விதிமுறைகளின்படியும் நடைபெறும். முதலில் மீளக்கூடிய காரணங்களால் ஏற்பட்ட மயக்கம் அல்லது மூளை செயலிழப்பை மருத்துவர்கள் நீக்கிப் பார்க்க வேண்டும். </p><figure><img alt="coma-brain death" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/j2ipolk8/brain.jpg" /></figure><p>பின்னர் கண்களின் ஒளி எதிர்வினை, கருவிழி எதிர்வினை, இருமல் மற்றும் பிற மூளைத்தண்டு பிரதிசெயல்கள் உள்ளிட்ட பல மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தன்னிச்சையான சுவாசம் இல்லாததை மதிப்பிடுவதற்கும் சிறப்பு பரிசோதனை செய்யப்படுகிறது.</p><p>இந்தியாவில் மூளைத்தண்டு இறப்பு அறிவிக்க, அரசு விதிமுறைகளின்படி மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு பரிசோதனை மேற்கொள்கிறது. பொதுவாக பரிசோதனைகள் இரண்டு முறை செய்யப்படுகின்றன. பெரியவர்களுக்கான நடைமுறையில் இரண்டு பரிசோதனைகளுக்கும் இடையில் குறைந்தது 6 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். அதன் பின்னரே மூளைத்தண்டு இறப்பு அதிகாரப்பூர்வமாகச் சான்றளிக்கப்படுகிறது.</p><h2>உறு<strong>ப்பு தானத்தில் முக்கிய</strong> பங்கு</h2><p>மூளைத்தண்டு இறப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, குடும்பத்தினர் சம்மதித்தால், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட தானத்திற்கு ஏற்ற உறுப்புகளை தேவையான மருத்துவ மற்றும் சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு மற்ற நோயாளிகளுக்கு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பயன்படுத்த முடியும். வென்டிலேட்டர் மூலம் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டம் சில காலம் பராமரிக்கப்படுவதால், அவை மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்ற நிலையில் இருக்க உதவுகிறது.</p><h2>உயிரிழப்பிலும் <strong>ஒரு உயிரைக் காப்</strong>பாற்றும் வாய்ப்பு</h2><p>மூளைத்தண்டு இறப்பு என்பது ஒரு குடும்பத்திற்கு மிகுந்த துயரமான தருணம். அதே நேரத்தில், உறுப்பு தானம் மூலம் ஒருவரின் வாழ்க்கை முடிந்த பிறகும் பலரின் வாழ்க்கையைத் தொடரச் செய்யும் வாய்ப்பு உருவாகிறது. எனவே, மூளைத்தண்டு இறப்பு குறித்த சரியான விழிப்புணர்வும், உறுப்பு தானம் குறித்த அறிவும் சமூகத்தில் அதிகரிக்க வேண்டியது அவசியம்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் நலனுக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது: முதல் மந்திரி சிவக்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-interview-in-kovalam-after-summit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-interview-in-kovalam-after-summit#comments</comments><guid isPermaLink="false">198ebf7d-c1b2-4c82-8e55-e4614f536f4e</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:15:00 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:15:00.151Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,DK Shivakumar,டிகே சிவக்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/q6lorf31/DKS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/q6lorf31/DKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் நலனுக்காகத்தான் மேகதாது அணை கட்டப்படுகிறது என கர்நாடகா முதல் மந்திரி சிவக்குமார் கூறியுள்ளார்.</p><p>தென் மாநில முதல் மந்திரிகள் மாநாடு முடிந்து கர்நாடக முதல்மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அனைத்து தென்னிந்திய மாநிலங்களின் நலன் கருதி நாங்கள் பல்வேறு விஷயங்களை முன்வைத்துள்ளோம்.</p><h2>முக்கிய கோரிக்கை</h2><p>1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பையே அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்றும், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதுவே முக்கிய கோரிக்கையாக இருந்தது.</p><p>தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அனைத்தும் இதில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என நான் கருதுகிறேன். அதனால்தான் நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தோம்.</p><p>எங்களின் பல்வேறு நீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்து, தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி சுமூகமாகத் தீர்வு காண அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p>மேகதாது அணை விவகாரத்தைப் பொறுத்தவரை குடிநீருக்கான 5 டி.எம்.சி நீரைத் தவிர, அணையில் உள்ள மற்ற அனைத்து நீரும் — ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் — தமிழ்நாட்டிற்கே திறந்துவிடப்படும் என உள்துறை அமைச்சரின் முன்னிலையில் நான் உறுதி அளித்துள்ளேன்.</p><p>எனவே, தமிழ்நாடும் புதுச்சேரியும் இதுகுறித்து முழு நம்பிக்கையுடன் இருக்கலாம். இந்த அணை எங்களுக்காக அல்ல, உங்களுக்காக மட்டுமே கட்டப்படவுள்ளது என தெரிவித்தார்.</p><p>முன்னதாக, மேகதாது அணை குறித்து பேசிய கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:</p><h2>மேகதாது அணையால் தமிழகத்துக்கே  பலன்</h2><p>மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாடுக்குத்தான் அதிக பலன்.</p><p>நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும். ஆந்திரா எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடகா முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை.</p><p>கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. நதிநீர்ப் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகரவேண்டிய நேரம்.</p><p>தண்ணீர் நம்மை ஒன்றுசேர்க்க வேண்டும், பிரித்து விடக்கூடாது. மாநிலங்களுக்கு நியாயமான வரிப்பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடகா முன்வைத்தது என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டெஸ்ட் டிரைவுக்காக தலைமை செயலகத்திற்கு வந்த மகேந்திரா கார்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-cars-for-mlas-mahindra-test-drive-at-secretariat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-cars-for-mlas-mahindra-test-drive-at-secretariat#comments</comments><guid isPermaLink="false">c09bea12-8f24-49f0-9bf4-77924a1887d5</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:11:57 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:11:57.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Test Drive,Bolero Neo,XUV700,CMVIJAY,முதலமைச்சர் விஜய்,MLA Cars,புதிய கார் அறிவிப்பு,Mahindra Cars,மகேந்திரா கார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/hfq63r5f/Mahindra-Cars-Test-Drive" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Mahindra Cars - Test Drive]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/hfq63r5f/Mahindra-Cars-Test-Drive?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">தமிழ்நாடு சட்ட</a>சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மகேந்திரா நிறுவனத்தின் சொகுசு கார்கள் சோதனை ஓட்டத்திற்காக சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.</p><h2><strong>முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</strong></h2><p>தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், மாநிலத்தின் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்காக அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டார்.</p><p>கார்கள் மட்டுமின்றி, அவற்றை முறையாகப் பராமரிப்பதற்காக மாதந்தோறும் ரூ. 75,000 பராமரிப்புப் படி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.</p><h2><strong>சட்டசபையில் எழுந்த கோரிக்கை</strong></h2><p>முதலமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று பேரவையில் பேசிய சில உறுப்பினர்கள், "கார்கள் வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், மக்கள் பிரதிநிதிகளின் நீண்டதூரப் பயணங்களுக்கும், பாதுகாப்பு வசதிகளுக்கும் ஏதுவாக 'டொயோட்டா இன்னோவா' ரக கார்களை வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்" என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><h2><strong>தலைமைச் செயலகத்தில் குவிந்த கார்கள்</strong></h2><p>உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு கார் நிறுவனங்களின் மாடல்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா நிறுவனத்தின் கார்கள் தலைமைச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. </p><p>அங்கு மகிந்திரா நிறுவனத்தின் பிரபலமான மாடல்களான XUV, 7XO, பொலிரோ நியோ ஆகிய கார்களை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பார்வைக்காகவும், டெஸ்ட் டிரைவ் செய்வதற்காகவும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>அடுத்தகட்ட நடவடிக்கை</strong></h2><p>இந்தக் கார்களின் மைலேஜ், பாதுகாப்பு வசதிகள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சொகுசுப் பயணம் ஆகியவற்றைக் கணக்கிட்டு, எந்த கார் இறுதி செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவின் நீண்ட கால கைதி 101 வயதில் காலமானார்: 8 முறை மரண தண்டனையிலிருந்து தப்பிய விசித்திர மனிதர்!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-prisoners-extraordinary-life-101-year-old-who-escaped-death-row-8-times-dies-after-69-years-in-jail</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-prisoners-extraordinary-life-101-year-old-who-escaped-death-row-8-times-dies-after-69-years-in-jail#comments</comments><guid isPermaLink="false">14ea3366-97d8-498d-b014-1a951727341e</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:58:57 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:58:57.506Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,FrancisCliffordSmith,பிரான்சிஸ்கிளிஃபோர்ட்ஸ்மித்,DeathRowSurvivor,Prison History,சிறைவாழ்க்கை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/i5z7uo5e/Francis-Clifford-Smith" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Francis Clifford Smith]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/i5z7uo5e/Francis-Clifford-Smith?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்க </a>வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்த கைதியான பிரான்சிஸ் கிளிஃபோர்ட் ஸ்மித், தனது 101-வது வயதில் காலமானார். </p><p>சுமார் 69 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை கம்பிகளுக்கு பின்னால் வாழ்ந்த இவர், கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் பரோலில் இருந்தபோது உயிர் பிரிந்தது.</p><h2><strong>கொலை வழக்கும் ஆயுள் தண்டனையும்</strong></h2><p>ஜூலை 1949 ஆம் ஆண்டு கனெக்டிகட்டின் கிரீன்விச் நகரில் உள்ள 'இந்தியன் ஹார்பர் யாட்ச் கிளப்'- ல் நடந்த கொள்ளைச் சம்பவம். </p><p>இந்த சம்பவத்தின் போது 68 வயதான இரவுக்காவலர் குரோவர் ஹார்ட் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். </p><p>1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்மித் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, மின்சார நாற்காலியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.</p><h2><strong>8 முறை தப்பிய மரண வீச்சு</strong></h2><p>ஸ்மித்தின் சிறை வாழ்க்கை பல அதிரடி திருப்பங்களைக் கொண்டது. அவர் தன் வாழ்நாளில் 8 முறை மரண தண்டனையிலிருந்து நூலிழையில் தப்பினார். </p><p>ஒவ்வொரு முறையும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, கடைசி நிமிடத்தில் தடை உத்தரவு கிடைத்தது.</p><p>இதனால், கைதிகளுக்கான இறுதி ஆசையாக வழங்கப்படும் "கடைசி உணவு" முறையை 8 தனித்தனி சந்தர்ப்பங்களில் அவர் சாப்பிட்டது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.</p><p>1951-ல் அவருக்கு எதிராக சாட்சி சொன்ன முக்கிய நபர், தனது வாக்குமூலத்தை திடீரென மாற்றிக்கொண்டார். 1954-ல் அவர் மரண அறைக்குள் நுழைய இன்னும் இரண்டு மணி நேரமே இருந்த நிலையில், அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.</p><h2><strong>60 ஆண்டு கால சிறைவாசம்</strong></h2><p>தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக கனெக்டிகட் சிறையிலேயே ஸ்மித் அடைக்கப்பட்டார். 1967-ல் வெறும் 12 நாட்கள் சிறையிலிருந்து தப்பியது மற்றும் 1975-ல் கிடைத்த குறுகிய கால பரோல் ஆகியவற்றைத் தவிர, அவரது ஒட்டுமொத்த இளமை மற்றும் முதுமைப் பருவம் சிறையிலேயே கழிந்தது. </p><p>தான் அந்த கொலைக் களத்தில் இருக்கவே இல்லை என இறுதிவரை அவர் தனது குற்றமற்ற நிலையை வாதிட்டு வந்தார்.</p><h2><strong>இறுதி நாட்கள்</strong></h2><p>69 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஸ்மித்துக்கு, 2020 ஜூலை மாதம் அவரது நலிவடைந்த உடல்நிலை மற்றும் முதிர்ந்த வயதைக் கருத்தில் கொண்டு மாநில பரோல் வாரியம் பரோல் வழங்கியது. </p><p>அதன்பின்னர் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர், தற்போது இயற்கை எய்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேகாலயா பைக் பேரணியில் வன்முறை- காசி மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/violence-at-meghalaya-bike-rally-three-student-leaders-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/violence-at-meghalaya-bike-rally-three-student-leaders-arrested#comments</comments><guid isPermaLink="false">a2035356-40e9-4d52-acf1-995b1ea581d0</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:39:32 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:39:32.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Meghalaya,மேகாலயா,shillong,khasi students union,ஷில்லாங்,காசி மாணவர் சங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wjyad7a8/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மேகாலயா காசி மாணவர் சங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ Meghalaya Khasi Students’ Union]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wjyad7a8/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE">மேகாலயாவில்</a> காசி மாணவர் சங்கம் (KSU) நடத்திய கருப்புக் கொடி இருசக்கர வாகன பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, மாணவர் சங்கத்தை சேர்ந்த மூன்று மூத்த தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>மேகாலயா அரசுக்கு காசி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மாணவர் சங்கம்</a> விடுத்திருந்த 15 நாள் காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து, ஷில்லாங் முழுவதும் கருப்புக் கொடி ஏந்தி இருசக்கர வாகனப் பேரணியில் மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.</p><h3><strong>வாகனப் பேரணி</strong></h3><p>இந்த பேரணி ஜெயா பகுதியில் உள்ள கே.எஸ்.யு அலுவலகத்தில் இருந்து தொடங்கி பல பகுதிகளில் நடத்தப்பட்டது.</p><p>மாணவர் சங்கம் வைத்த கோரிக்கையில், “கிழக்கு ஜெயிண்டியா மலைப்பகுதியில் முன்மொழியப்பட்ட புதிய தனியார் சிமெண்ட் ஆலை திட்டத்திற்கான ஜூலை 31 பொது விசாரணையை ரத்து செய்ய வேண்டும் எனவும்,</p><p>அந்த விசாரணையை நடத்தியதற்கு பொறுப்பானவர்கள் எனக் கூறப்படும் கிழக்கு ஜெயிண்டியா துணை ஆணையர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் மேகாலயா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் பேரணி நடத்தப்பட்டது.</p><h3><strong>கோரிக்கைகள்</strong></h3><p>மேலும், மேகாலயா குடியிருப்போர் பாதுகாப்பு சட்டம் (MRSSA), 2016-ஐ அமல்படுத்துதல், புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான திருத்தங்களை அமல்படுத்துதல், கிரேடு சி மற்றும் டி பதவிகளுக்கான நேர்காணல்களை நீக்குதல் உள்ளிட்ட அரசு பணி நியமன மாற்றங்கள் மற்றும் மேகாலாயாவில் வசிப்பவர்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு ஆகியவற்றையும் மாணவர் சங்கம் வலியுறுத்தியது.</p><h3><strong>வன்முறை</strong></h3><p>இந்த பேரணியின் போது, வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதேவேளையில் போராட்டங்களுக்கு மத்தியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.</p><h3><strong>மூவர் கைது</strong></h3><p>இதையடுத்து KSU தலைவர் ரேமண்ட் கர்ஜனா, ரூபன் நஜியார் மற்றும் பிங்க்மென்லாங் சான்மியட் ஆகியோர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மூவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.</p><p>இந்த கைது நடவடிக்கை குறித்து மாணவர் சங்கம் கூறுகையில், எதிர்மறை சக்திகளால் வன்முறை ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிறையில் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/ex-congress-mp-sajjan-kumar-convicted-in-1984-anti-sikh-riots-case-dies-sajjan</link><comments>https://www.maalaimalar.com/news/national/ex-congress-mp-sajjan-kumar-convicted-in-1984-anti-sikh-riots-case-dies-sajjan#comments</comments><guid isPermaLink="false">c0ff4249-fabe-4ac5-b554-fe36e8bb570a</guid><pubDate>Thu, 20 Aug 2026 11:26:59 +0000</pubDate><atom:updated>2026-08-20T11:26:59.354Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Sajjan Kumar,சஜ்ஜன் குமார்,anti sikh riot case,சீக்கியர் கலவரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/sbhzjc86/sajjan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sajjan kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/sbhzjc86/sajjan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் மரணம் அடைந்தார். </p><p>முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தின்போது டெல்லி பாலம் காலனி பகுதியில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு டெல்லி ஐகோர்ட் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர் திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.</p><p>இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. மேலும், 1984-ம் ஆண்டு கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கிலும், 2025-ம் ஆண்டு சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி சரஸ்வதி விஹார் பகுதியில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக இந்த தண்டனை வழங்கப்பட்டது.</p><p>இந்நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஜ்ஜன் குமார் உடல்நிலை இன்று திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவர் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பயிர் கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு வருமா? எ.வ.வேலுவின் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-notification-on-farm-loan-waiver-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-notification-on-farm-loan-waiver-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">f125b0fb-a7c5-459e-98c5-1fbb4fd103c5</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:53:04 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:53:04.212Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ev velu,எவ வேலு,தள்ளுபடி,Farm Loan Waiver,பயிற்கடன்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/gyssw59w/EV-velu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Adhav arjuna- EV Velu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/gyssw59w/EV-velu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பயிர் கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு வருமா என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"விவசாயிகளுக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா?</p><p>5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுவீர்களா?</p><h2>அமைச்சர் ஆதவ்</h2><p>தவெக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றும், அதில் கருத்து வேறுபாடே இல்லை. தவெக தேர்தல் அறிக்கையில் கூறியதை படிப்படியாக நிறைவேற்றுவோம்.</p><p>அரசியல் மேடையில் இருப்பதை போன்றே தற்போது வரை பேரவையில் பேசுகிறார் எ.வ.வேலு.</p><h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் நாங்கள் பேசவில்லை, நிறைய சொல்லியுள்ளீர்கள் நிறைவேற்றுவீர்களா? என தான் கேட்டேன். 4வது முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்று தான் கேட்கிறோம். </p><p>மக்கள் எங்களை கேள்வி கேட்கும்போது நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் நாங்கள் கேட்கிறோம்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>நேற்று ரூ.1 லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</p><p>விவசாயிகளுக்காக உயிரை கொடுப்பதுபோல் பேசுகின்றனர். ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சீனாவின் பிரபல எவர்கிராண்ட் நிறுவனத் தலைவருக்கு ஆயுள் தண்டனை: நிதி மோசடி வழக்கில் தீர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/china-evergrande-tycoon-hui-ka-yan-jailed-for-life</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-evergrande-tycoon-hui-ka-yan-jailed-for-life#comments</comments><guid isPermaLink="false">c538abae-d929-4271-a0d6-742da016c65f</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:51:48 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:51:48.899Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,HuiKaYan,Evergrande,எவர்கிராண்ட்,ஹுயிகாயான்,நிதிமோசடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ies6u5tn/china.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ HuiKaYan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ies6u5tn/china.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ஹுய் கா யான் என்பவருக்கு சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p>ஷென்சென் இடைநிலை மக்கள் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பில், ஹுய் கா யான் மீது நிதி மோசடி, சொத்துகளை தவறாகப் பயன்படுத்துதல், கார்ப்பரேட் லஞ்சம், மற்றும் போலியான கணக்கு அறிக்கைகளை உருவாக்கி கடன்களை மறைத்தது ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனைதொடர்ந்து, ஹுய் கா யானின் அனைத்துத் தனிப்பட்ட சொத்துகளையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவர்கிராண்ட் குழுமத்திற்கு 15.82 பில்லியன் யுவான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் இணைந்து செயல்பட்ட அவரது இரு மகன்கள் உட்பட 56 உயர் அதிகாரிகளுக்கும் 22 மாதங்கள் முதல் 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>எவர்<strong>கிராண்ட் வீழ்ச்சி</strong></h2><p>ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஹுய் கா யான், கடன்களைக் கொண்டு தனது ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யத்தைப் பிரம்மாண்டமாக உருவாக்கினார். எனினும், சீனா 2020-இல் ரியல் எஸ்டேட் கடன்களுக்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியபோது, எவர்கிராண்ட் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி 2021-இல் சரிவைச் சந்தித்தது.</p><p>சுமார் $300 பில்லியன் டாலர் வரை கடனில் மூழ்கிய இந்நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் வீடுகளுக்காகப் பெற்ற கோடிக்கணக்கான தொகையை புதிய திட்டங்களுக்குத் திசைதிருப்பியதால் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதியிலேயே நின்றன. இந்த வீழ்ச்சி சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தையை மட்டுமல்லாமல் முழுப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்தது.</p> ]]></content:encoded></item><item><title>அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ரூ.10,000 வழங்கிட பீகார் அரசு ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-government-approves-rs-10000-for-social-media-creators-promoting-welfare-schemes</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-government-approves-rs-10000-for-social-media-creators-promoting-welfare-schemes#comments</comments><guid isPermaLink="false">16bcb9a9-fcf8-44b7-94d4-4f80fe932467</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:18:42 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:18:42.594Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாம்ராட் சவுத்ரி,SamratChoudhary,SocialMediaIncentive,ContentCreators,BiharGovernment,பீகார்அரசு,டிஜிட்டல்செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1myj2cp3/samrat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samrat Choudhary  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1myj2cp3/samrat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநில அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதனை வீடியோக்களைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/world/historic-crisis-in-us-economy-us-national-debt-hits-40-trillion">சாம்ராட் சவுத்ரி</a> தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் "பீகார் சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஆன்லைன் ஊடக (திருத்த) விதிகள் 2026"-ன் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><h2>தொ<strong>கைக் க</strong>ணக்கீடு</h2><p>அரசின் அதிகாரப்பூர்வ பட்டியலின் கீழ் பதிவு செய்துள்ள கிரியேட்டர்களுக்கு, அவர்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவிற்கும் பெறப்படும் 1 லட்சம் வியூஸ்களுக்கு ரூ.10,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒரு தனிப்பட்ட வீடியோவிற்கு அளிக்கப்படும் அதிகபட்ச ஊக்கத்தொகை ரூ.1,00,000 வரை வரம்பு செய்யப்பட்டுள்ளது.</p><p>அதாவது, 10 லட்சம் வியூஸ்கள் அல்லது அதற்கு மேல் பெறும் வீடியோக்களுக்கு முழு தொகையான ரூ.1 லட்சம் கிடைக்கும். வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் நிறைவடைந்த பின்னரே அதற்கான வியூஸ்கள் சரிபார்க்கப்பட்டு தொகைக் கணக்கிடப்படும்.</p><h2>பதிவு <strong>செய்தல் அவசி</strong>யம்</h2><p>இத்திட்டம் அனைத்து சோஷியல் மீடியா பயனர்களுக்கும் நேரடியாகப் பொருந்தாது. கிரியேட்டர்கள், பக்கங்கள் மற்றும் சேனல்கள் பீகார் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் முறையாகப் பதிவு செய்து எம்பேனல் செய்யப்பட்டிருக்க வேண்டும். போலி கணக்குகள், பாட் கணக்குகள் மற்றும் செயற்கையான வியூஸ்களைத் தடுப்பதற்காகக் கிரியேட்டர்களின் சேனல் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை அரசுத் துறை குறிப்பிட்ட இடைவெளியில் தணிக்கை செய்து சரிபார்க்கும். இதற்கான விரிவான தகுதி வரம்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை விரைவில் வெளியிடும்.</p>]]></content:encoded></item><item><title>முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாடே அணையைக் கட்டலாம்; கேரளம் முழு செலவையும் ஏற்கும் - முதலமைச்சர் சதீசன்!</title><link>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-itself-can-build-the-dam-across-the-mullaperiyar-river-kerala-will-bear-the-entire-cost-chief-minister-saseeshan</link><comments>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-itself-can-build-the-dam-across-the-mullaperiyar-river-kerala-will-bear-the-entire-cost-chief-minister-saseeshan#comments</comments><guid isPermaLink="false">634856fc-d462-48b1-af0c-8fbe11b098b9</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:17:40 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:17:40.117Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Mullaperiyar Dam,முல்லைப் பெரியாறு அணை,CM Satheesan,முதலமைச்சர் சதீசன்,SOUTHERN ZONAL COUNCIL,தென்மண்டல கவுன்சில் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/4wd1381t/New-Project-2026-08-20T152301.193.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாடே அணையைக் கட்டலாம்; கேரளம் முழு செலவையும் ஏற்கும் - முதலமைச்சர் சதீசன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/4wd1381t/New-Project-2026-08-20T152301.193.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சிலின் 31வது கூட்டம் இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை தவிர்த்து மற்ற தென்மாநில  முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.</p><p>இக்கூட்டத்திற்கு துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் செயல்பட்டார். கூட்டத்தில் காவிரி விவகாரம் முதல் நீட், தொகுதி மறுவரையறை என பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசினார். </p><p>அந்தவகையில் தங்கள் தரப்புப் பிரச்னைகளை முன்வைத்து கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் பேசினார். அதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரமும் அடங்கும். முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக பேசியுள்ள சதீஷன் அணையின் அமைவிடம், வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடே மேற்கொள்ளலாம் என்றும், அதற்கான செலவுகளை கேரளா ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் அணைக்கட்டியப் பிறகு தமிழ்நாட்டிற்கு உரிய முழுப்பங்கு நீரையும் கேரளம் திறக்கும் என்றும் தெரிவித்துள்ளார். </p><p>பழைய அணையின் பாதுகாப்பு குறித்த கேரள மக்களின் அச்சத்தைப் போக்க, இரு மாநிலங்களும் இணைந்து கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னை வடபழனி முருகன் கோவிலில் செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு முழு தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/complete-ban-on-mobile-phones-at-chennai-vadapalani-murugan-temple-from-september-1</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/complete-ban-on-mobile-phones-at-chennai-vadapalani-murugan-temple-from-september-1#comments</comments><guid isPermaLink="false">e48428f5-7d5a-4182-a92e-46c4a8da8668</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:15:55 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:15:55.460Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வடபழனி முருகன் கோவில்,vadapalani,HRCE Department,VadapalaniMuruganTemple,MobilePhone Ban,செல்போன்தடை,இந்து சமயஅறநிலையத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jrfv6rj5/Vadapalani-Murugan-Temple" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vadapalani Murugan Temple ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jrfv6rj5/Vadapalani-Murugan-Temple?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF">வடபழனி</a> அருள்மிகு ஆண்டவர் முருகன் திருக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் முழுமையாக தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">இந்து சமய அறநிலையத்துறை</a>யின் புதிய வழிகாட்டுதலின்படி, கோவிலின் புனிதத்தன்மையைக் காக்கவும், ஆன்மீக அமைதியை நிலைநாட்டவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?</strong></h2><p>கோவிலின் கருவறை, பிரகாரங்கள் மற்றும் சன்னதிகளுக்குள் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது மற்றும் சமூக வலைத்தளங்களுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-devotees-carrying-mobile-phones-into-temples">ரீல்ஸ் செய்வது</a> முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>கோவிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் அல்லது திரைத்துறையினரை கோவில் வளாகத்திற்குள் வைத்து வீடியோ எடுக்கவோ அல்லது பதிவு செய்யவோ அனுமதி இல்லை.</p><p>தடையை மீறி ரகசியமாக செல்போன்களை கோவிலுக்குள் எடுத்துச் சென்றால், அவை பாதுகாப்பு ஊழியர்களால் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>பக்தர்கள் போன்களை எங்கு ஒப்படைக்க வேண்டும்?</strong></h2><p>கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.<strong> பக்தர்களின்</strong> வசதிக்காக தெற்கு கோபுரம் அருகில் ஏற்கனவே இருந்த காலணி பாதுகாப்பு இடம் தற்போது செல்போன் பாதுகாப்பு மையமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>இங்கு ரூ.5 கட்டணம் செலுத்தி பக்தர்கள் தங்களது செல்போனை ஒப்படைத்து டோக்கன் பெற்று செல்லலாம். சாமி தரிசனம் முடித்து திரும்பும்போது மீண்டும் டோக்கனை காண்பித்து செல்போனை பெற்று செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. </p><p>கோவில் முன்புற பகுதியில் இடது மற்றும் வலது புறத்தில் 2 இடங்களில் காலணி வைக்கும் இடம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உலக கோப்பை ஹாக்கி:  இந்திய அணி நாளை மறுநாள் நெதர்லாந்துடன் மோத வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/world-cup-hockey-india-may-face-netherlands-on-22nd</link><comments>https://www.maalaimalar.com/sports/world-cup-hockey-india-may-face-netherlands-on-22nd#comments</comments><guid isPermaLink="false">9ac0f3b6-f194-4ec8-b8b4-b6ad4df5a543</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:08:17 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:08:17.821Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய அணி,Indian team,Netherland,நெதர்லாந்து,World cup Hockey,உலக கோப்பை ஆக்கி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/o4ybjr3x/IND.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ INDIA]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/o4ybjr3x/IND.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>16-வது உலக கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியத்தில் உள்ள  வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல் வீன் ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது.</p><h2>2-வது சுற்றில் </h2><p>இந்திய அணி இந்த போட்டியில் விளையாடும் 16 நாடுகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ‘டி’ பிரிவில் இருக்கிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான், வேல்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வேல்சை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.</p><p>2-வது போட்டி யில் 2-4 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோற்றது. நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை  5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன்  இரண்டாவது இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.</p><p>இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்  (5 மற்றும் 21-வது நிமிடங்கள்), அபிஷேக் (11 மற்றும் 24), தலா 2 கோலும், ஹர்திக் (35) ஒரு கோலும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹன்னன் ஷாஹித் 2 கோலும் (22 மற்றும் 46-வது நிமிடங்கள்) சுப்யான் கான் ஒரு கோலும் (24) பதிவு செய்தனர்.</p><h2>நெதர்லாந்துடன்  மோதல் </h2><p>இந்த பிரிவில் இங்கிலாந்து 9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. பாகிஸ்தான், வேல்ஸ் தலா 1 புள்ளிகளுடன்  வாய்ப்பை இழந்தன. 9 முதல் 16- இடங்களுக்கான  போட்டியில் அவைகள் விளையாடும்.</p><p>2-வது சுற்றில் இந்திய அணி ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதேபோல இங்கிலாந்தும் அந்த  பிரிவில் உள்ளது. ஏ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளும் அதில் இடம் பெறும்.</p><p>‘ஏ ’ பிரிவில் நெதர்லாந்து 6 புள்ளிகளுடன் 2-வது சுற்றுக்கு  ஏற்கனவே தகுதி பெற்றது. 2-வது அணியாக நுழைவது யார்? என்பதில் அர்ஜென்டினா,  நியூசிலாந்து (தலா 3 புள்ளிகள்) இடையே போட்டி நிலவுகிறது.  இரு அணிகள்  இடையே  இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி முன்னேறும்.</p><p>நெதர்லாந்து  கடைசி ஆட்டத்தில்  வாய்ப்பை இழந்த ஜப்பானை சந்திக்கிறது. இதில் வெற்றி  பெற்று முதல் இடத்தை பிடிக்கும். எதிர்பாராத விதமாக தோற்றாலும் முதல் இடத்துக்கு பாதிப்பு இருக்காது. ஏனென்றால் கோல்கள் வித்தியாசத்தில் வலுவாக இருக்கிறது.</p><p>இந்திய அணி 2-வது சுற்றில் முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. வருகிற 22-ந் தேதி  இந்த போட்டி நடக்கிறது. 24-ந் தேதி அர்ஜென்டினா அல்லது நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.</p><h2>அரை இறுதி </h2><p>2-வது சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் லீக் சுற்றில் பெற்ற வெற்றியால்  3 புள்ளிகளுடன் 2-வது ரவுண்டில் விளையாடும்.</p>]]></content:encoded></item><item><title>பொருளாதாரத்தில் வரலாறு காணாத நெருக்கடி: $40 டிரில்லியன் தொட்ட அமெரிக்க தேசிய கடன்!</title><link>https://www.maalaimalar.com/news/world/historic-crisis-in-us-economy-us-national-debt-hits-40-trillion</link><comments>https://www.maalaimalar.com/news/world/historic-crisis-in-us-economy-us-national-debt-hits-40-trillion#comments</comments><guid isPermaLink="false">50cfd150-3bdf-48ff-866c-2456f1ed10aa</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:00:21 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:00:21.917Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DonaldTrump,டொனால்ட் டிரம்ப்,பொருளாதாரம்,USNationalDebt,USEconomy,FinancialCrisis,அமெரிக்ககடன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/yt2vuys5/trump.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/yt2vuys5/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அந்நாட்டின் தேசிய கடன் வரலாறு காணாத வகையில் முதன்முறையாக 40 டிரில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் <a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-economic-war-trump-announces-unprecedented-sanctions-and-warns-allied-nations">டொனால்ட் டிரம்ப் </a>முதன்முதலில் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபோது இந்த கடன் தொகை $19.95 டிரில்லியனாக இருந்தது. ஆனால், தற்போது அது இரட்டிப்பாகி $40.047 டிரில்லியன் ஆக உயர்ந்துள்ளது.</p><h2>வேகமாக அ<strong>திகரிக்கும் கடன்</strong> சுமை</h2><p>கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் கடன் வளர்ச்சி விகிதம் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளது.  2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் $39 டிரில்லியனாக இருந்த கடன், அடுத்த 5 மாதங்களுக்குள்ளாகவே மேலும் ஒரு டிரில்லியன் டாலர் உயர்ந்து $40 டிரில்லியன் என்ற ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.  நாட்டின் ஒட்டுமொத்த கடன் தொகையில் $32.266 டிரில்லியன் பொதுக் கடனாகவும், $7.782 டிரில்லியன் அரசாங்கங்களுக்கு இடையேயான கடனாகவும் பிரிந்துள்ளது.</p><h2>கடன் உயர்<strong>விற்கான முக்கி</strong>ய காரணங்கள்</h2><p>அமெரிக்க அரசு செலவழிக்கும் தொகை, அதற்கு வரும் வருவாயை விட அதிகமாக இருப்பதால் ஆண்டுதோறும் நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் கொரோனா கால நிவாரணங்களுக்காக பெருமளவில் கடன் வாங்கப்பட்டது. ராணுவ செலவுகள், மூத்த குடிமக்களுக்கான சோஷியல் செக்யூரிட்டி மற்றும் மெடிகேர் திட்டங்களுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வாங்கிய கடனுக்காக அரசு செலுத்தும் வட்டித் தொகையே தற்போது Medicare திட்டத்திற்கான செலவை விட அதிகரித்து, நாட்டின் இரண்டாவது பெரிய செலவினமாக மாறியுள்ளது.</p><p>இந்த $40 டிரில்லியன் கடன் சுமையானது அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தோராயமாக $117,000 கடன் இருப்பதற்கு சமமாகும்.  தொடர் கடன்கள் காரணமாக அமெரிக்க சந்தையில் வட்டி விகிதங்களும் பணவீக்கமும் உயர்ந்து, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் வீட்டு வாடகை, கார் கடன்கள் போன்ற அன்றாட செலவுகளையும் கடுமையாக பாதித்து வருகிறது.</p><h2>வருங்கால <strong>ஆபத்து</strong></h2><p>அமெரிக்க கடன்களுக்கான உச்சவரம்பு எல்லை $41.1 டிரில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் கடன் அதிகரித்தால் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த வரம்பை எட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் பொருளாதார முட்டுக்கட்டை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>சூரியின் மண்டாடி படத்திற்கு  U/A 16+ சான்றிதழ்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sooris-mandadi-gets-a-ua-16-censor-certificate</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sooris-mandadi-gets-a-ua-16-censor-certificate#comments</comments><guid isPermaLink="false">b2fc2d83-f1e2-451a-8376-493d7d1754b1</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:40:25 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:40:25.874Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் சூரி,மண்டாடி,Soori,Mandaadi,தணிக்கை சான்றிதழ்,censorship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/yd3j3iko/New-Project-2026-08-20T144255.520.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சூரியின் மண்டாடி படத்திற்கு  U/A 16+ தணிக்கை சான்றிதழ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/yd3j3iko/New-Project-2026-08-20T144255.520.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யு/ஏ16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் கால அளவு 154 நிமிடங்கள் மற்றும் 51 வினாடிகள் ஆகும். </p><p>செப்டம்பர் 10ம் தேதி படம் வெளியாக உள்ளநிலையில், இன்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக படம் செப்.4ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின் ஒத்திவைக்கப்பட்டது. </p><p>மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் பதாகையின் கீழ் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.</p><p>கடைசியாக சூரி நடிப்பில் வெளியானப் படம் மாமன். அதனைத்தொடர்ந்து மண்டாடி வெளிவருகிறது. அதன்பின் ராமின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை வெளியாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-26th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-26th#comments</comments><guid isPermaLink="false">2a59159a-4b28-4039-b251-1f93360488b2</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:35:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:35:05.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tgd3jzmc/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tgd3jzmc/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.</p><p>இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>21-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>22-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>23-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>24 மற்றும் 25-ந்தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>20-ந்தேதி முதல் 24-ந்தேதிகளில் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>‘உங்களையும், அப்பாவையும் கடைசியாக ஒன்றாகப் பார்த்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது’ - தாய் சோனியா குறித்து ராகுல் காந்தி உருக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/it-has-been-35-years-since-i-last-saw-you-and-father-together-rahul-gandhis-emotional-words-about-his-mother-sonia</link><comments>https://www.maalaimalar.com/news/national/it-has-been-35-years-since-i-last-saw-you-and-father-together-rahul-gandhis-emotional-words-about-his-mother-sonia#comments</comments><guid isPermaLink="false">bdafe733-7602-4a06-9f69-bf8de78e6b18</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:10:20 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:10:20.838Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,ராஜீவ் காந்தி,sonia gandhi,சோனியா காந்தி,Belonging: A Journey of Love</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/lj9snx1b/New-Project-2026-08-20T143952.649.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உங்களையும், அப்பாவையும் கடைசியாக ஒன்றாகப் பார்த்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது’ - தாய் சோனியா குறித்து ராகுல் காந்தி உருக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/lj9snx1b/New-Project-2026-08-20T143952.649.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை விவரித்து உருவாகியுள்ள சுயசரிதைப் புத்தகம் “பிலாங்கிங்: தி ஜர்னி ஆஃப் லவ்” (Belonging: A Journey of Love).</p><p>சோனியா காந்தி இத்தாலியின் ஒரு சிறிய நகரில் கழித்த தனது குழந்தைப் பருவம் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை நினைவுகள், ராஜீவ் காந்தி உடனான திருமணம், அவரது இழப்பு என தனது வாழ்வின் முக்கிய அங்கங்களை இதில் பகிர்ந்துள்ளார். </p><p>இப்புத்தக்கம் நவம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் புத்தகம் தொடர்பாகவும், தனது தந்தையின் பிறந்தநாளான இன்று தனது தாய் சோனியா குறித்து உருக்கமானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.</p><p>தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்.,</p><p>“அம்மா,</p><p>உங்களையும், அப்பாவையும் ஒன்றாக நான் கடைசியாகப் பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அப்பா நம்மை விட்டுச் சென்ற நாளிலிருந்து, வாழ்க்கை உங்கள் முன் நிறுத்திய சவால்கள் அனைத்தையும் நீங்கள் எத்தகைய அளப்பரிய துணிச்சலுடனும், கண்ணியத்துடனும் எதிர்கொண்டீர்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். </p><p>நீங்கள் எத்தகைய சூழல்களைக் கடந்து வந்தீர்கள் என்பதையும், அப்பாவுக்குப் பிந்தைய உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் பிரியங்காவும் நானும் மட்டுமே முழுமையாக அறிவோம்.</p><p>உங்களை நேசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், உங்கள் கதையான "Belonging: A Journey of Love"-ஐ வாசிக்கப்போகிறார்கள் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். </p><p>இயல்பிலேயே தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பாத ஒருவரான நீங்கள், உங்கள் அழகான கதையை உலகிற்குச் சொல்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்.</p><p>இன்று, அவருடைய பிறந்தநாளில், அப்பா புன்னகைத்தபடியே, பெருமையுடன் தன் அழகான சோனியாவைப் பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது.</p><p>அன்புடன்,</p><p>ராகுல்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>6 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் மீண்டும் குடியேறும் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி!</title><link>https://www.maalaimalar.com/news/world/harry-and-meghan-plan-permanent-return-to-england</link><comments>https://www.maalaimalar.com/news/world/harry-and-meghan-plan-permanent-return-to-england#comments</comments><guid isPermaLink="false">82cc38e2-fd8e-4f3c-9c9c-f2805f0008f1</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:57:58 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:57:58.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>America,london,இளவரசர் ஹாரி,Meghan Markle,PrinceHarry,மேகன் மார்க்கல்,UKRelocation,Prince Archie,Princess Lilibet,British RoyalFamily</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/axdz0ga1/Untitled-design-2026-08-20T141048.867.png" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Prince Harry - Meghan Markle ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/axdz0ga1/Untitled-design-2026-08-20T141048.867.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">பிரிட்டன் </a>அரச குடும்பத்தின் வாரிசான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">இளவரசர் ஹாரி</a> மற்றும் அவரது மனைவி மேகன் தம்பதியினர், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்தில் நிரந்திரமாகக் குடியேற முடிவு செய்துள்ளனர். </p><p>இந்த மாத இறுதிக்குள் இவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேறி பிரிட்டன் திரும்புவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.</p><h2><strong>அரச குடும்பப் பிரிவு பின்னணி:</strong></h2><p>பிரிட்டன் மன்னர் சார்லஸின் இளைய மகனான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF">இளவரசர் ஹாரி</a>, பிரபல அமெரிக்க மேகன் இருவரும் காதலித்து கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். </p><p>எனினும், பிரிட்டன் ஊடகங்களின் அதீத தலையீடு மற்றும் அரச குடும்பத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு தங்களது அரச பதவிகளையும் பொறுப்புகளையும் துறப்பதாக அதிரடியான முடிவு ஒன்றை அறிவித்திருந்தனர்.</p><p>அதனைத் தொடர்ந்து பிரிட்டனை விட்டு வெளியேறிய அவர்கள், அமெரிக்காவில் குடியேறினர். அமெரிக்காவில் வசித்தபோது, ஓப்ரா வின்ஃப்ரேயுடனான நேர்காணல் மற்றும் ஹாரியின் 'ஸ்பேர்' சுயசரிதை நூல் ஆகியவற்றின் மூலம் தங்களுக்குள் இருந்த குடும்ப முரண்பாடுகளை அவர்கள் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2><strong>தொடரும் சாதாரண குடிமக்கள் அந்தஸ்து</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">இங்கிலாந்து</a>க்கு மீண்டும் திரும்பினாலும், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி தங்களது பழைய அரச குடும்பப் பணிகளையோ அல்லது அதிகாரபூர்வப் பொறுப்புகளையோ மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். அவர்கள் அங்கிருக்கும் சாதாரணத் தனிநபர்களாகவே பிரிட்டனில் வாசிக்க உள்ளனர்.</p><p>அதே நேரத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்கா</a>வின் கலிபோர்னியாவில் உள்ள தங்கள் வீட்டையும், போர்ச்சுகலில் உள்ள தங்களது தனிப்பட்ட சொத்துக்களையும் அவர்கள் தொடர்ந்து தங்கள் வசம் வைத்திருப்பார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>6 வருடங்களுக்குப் பிறகு ஹாரி தனது குடும்பத்துடன் பிரிட்டன் திரும்புவது, அரச குடும்பத்தினருடன் உள்ள சுமுகமற்ற உறவில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என சர்வதேச ஊடகங்கள் கருதுகின்றன.</p><figure><img alt="Prince Harry - Meghan Markle " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/9aksjolt/Prince-Harry-Meghan-Markle" /></figure>]]></content:encoded></item><item><title>Khalifa - திரைவிமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/cinema/movie-review/khalifa-review-gold-smuggling-action-saga-shines-with-prithviraj-and-mohanlal-cameo</link><comments>https://www.maalaimalar.com/cinema/movie-review/khalifa-review-gold-smuggling-action-saga-shines-with-prithviraj-and-mohanlal-cameo#comments</comments><guid isPermaLink="false">618a616f-a7c9-4fd0-bb99-570a2d8747e0</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:53:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:53:24.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prithviraj Sukumaran,Mohanlal,திரைவிமர்சனம்,Khalifa</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bsfyfj8e/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Khalifa - திரைவிமர்சனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ Khalifa - திரைவிமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bsfyfj8e/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தரவரிசை (Movie Review)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மலையாள இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள 'கலிபா' திரைப்படம் ஓணம் பண்டிகையை ஒட்டி இன்று மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.</p><p>இப்படத்தில் பிருத்விராஜ் 'மம்பரக்கல் அமீர் அலி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். </p><p>அவரின் தாத்தாவாக சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் 'மம்பரக்கல் அகமது அலி' பாத்திரத்தில் நடித்துள்ளார்.</p><p>பிருத்ராஜ்க்கு ஜோடியாக மாளவிகா ஷர்மா, ஃபிசா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். </p><p>மோகினி, இந்திரன்ஸ், பாலிவுட் நட்சத்திரங்களான நீல் நிதின் முகேஷ் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.</p><p>திரைக்கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார். அவரே ஜினு இன்னோவேஷன்ஸ் பதாகையின் கீழ் இப்படத்தை தயாரித்துள்ளார்.</p> <p>ஜோமன் டி ஜான் ஒளிப்பதிவாளராகவும் சாமன் சாக்கோ படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.</p><h2>கதை</h2><p>ஒரு தங்கக் கடத்தல் கும்பலின் பின்னணியில் கதை நகர்கிறது.</p><p>பிருத்விராஜ் தனது குடும்ப தொழிலான தங்கக் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார். அவரது தாத்தா (மோகன்லால்) இதில் கில்லாடியாக இருந்துள்ளார்.</p><p>ஸ்டைல், ஆக்ஷன், நட்சத்திர பட்டாளம் என பல் ஈர்ப்பம்சங்கள் இப்படத்தில் உள்ளன.</p> <p>படத்தின் முதல் பாதியின் பெரும்பகுதி, நாயகன் அமீர் அலியின் பின்னணி மற்றும் அவரைத் தங்கம் கடத்தலுக்குள் இழுக்கும் சூழ்நிலைகளை உருவாக்குவதில் கழிகிறது.</p><p>இரண்டாம் பாதியில், கலிபா படம் அமீர் அலிக்கும் அவரது எதிரிகளுக்கும் இடையிலான தங்கம் கடத்தல் போராக மாறுகிறது.</p> <p>இதில் அவரது காதல் வாழ்க்கை மற்றும் குடும்பச் சூழல் ஆகிய அம்சங்களும் ஊடாடுகின்றன.</p><p>கேரளாவில் தங்கம் கடத்தலை சுற்றி நடக்கும் அரசியல் நகர்வுகளையும் படம் தொட்டுச் செல்ல முயல்கிறது.</p><p>தங்கம் கடத்தப்படும் முறைகளே படத்திற்கு அதிக சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.</p> <h2>நடிப்பு மற்றும் இயக்கம்</h2><p>கலிபாவின் மிகப்பெரிய பலம் பிருத்விராஜ் தான். கம்பீரமான தோற்றத்தாலும் ஸ்டைலாலும் அமீர் அலி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். </p><p>சண்டைக் காட்சிகளிலும் அவரின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் பிரமிக்க வைத்துள்ளது.</p><p>சண்டைக் காட்சிகள் நேர்த்தியாக கோரியோகிராப் செய்யப்பட்டுள்ளன. ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை அதற்கு வலு சேர்க்கிறது.</p> <p>ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் படத்தின் தங்கக் கடத்தல் உலகின் பிரம்மாண்டத்தை தக்கவைக்கின்றன.</p><p>துணை கதாபாத்திரங்களும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/khalifa-announcement-actress-all-set-for-mollywood-return-after-15-years">மோகினி </a>குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார்.</p><p>படத்தில் மோகன்லால் என்ட்ரி தனி ரகம். அவர் வரும் போர்ஷனில் படத்தின் நாயகனாக பிருத்விராஜ் நிறுவிய ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.</p><h2>முதல் பாகம்</h2><p>கலிபா தனி சினிமாட்டிக் வேர்ல்டு ஆக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலின் கீழேயே இது முதல் பாகம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்த முதல் பாகம் அந்த உலகத்தையும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும் ஒரு தொடக்கமாகவே அமைந்துள்ளது.</p> <h2>முடிவு</h2><p>அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கப் போதுமான விஷயங்கள் இதில் இருந்தாலும் முழுமையான திரை அனுபவத்தை முதல் பாகம் வழங்கத் தவறி உள்ளது.</p><p>படம் முடிந்து வெளியே வரும்போது நினைவில் நிற்கும் காட்சிகள் என்று பார்த்தால் மிகக் குறைவே.</p><p>பிருத்விராஜின் ஸ்டைலான நடிப்பு, சண்டைக் காட்சிகள் மற்றும் மோகன்லாலின் சிறப்புத் தோற்றம் ஆகிய தருணங்களில் பிரகாசிக்கும் படம் கதையம்சத்தில் சற்று சறுக்கியுள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/8NiMCt2o-uQ"></iframe></figure>]]></content:encoded></item><item><title>ஏற்காடு பண்பலை வானொலியில் வேளாண்மை, காலநிலை சார்ந்த உள்ளூர் நிகழ்ச்சிகளை  ஒலிபரப்ப வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-local-programs-related-to-agriculture-and-the-weather-should-be-broadcast-on-the-yercaud-fm-radio-station</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-local-programs-related-to-agriculture-and-the-weather-should-be-broadcast-on-the-yercaud-fm-radio-station#comments</comments><guid isPermaLink="false">ac149770-fa3b-425f-ac22-5cc64dd36f63</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:40:36 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:40:36.223Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/mt5ylna6/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/mt5ylna6/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது  உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>நோக்கத்தை நிறைவேற்ற உதவாது</strong></h2><p>சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  உள்ள பண்பலை வானொலி நிலையம் (அலைவரிசை: 103.7 மெகா ஹெர்ட்ஸ் ) தரம் உயர்த்தப்பட்டு, கடந்த  மார்ச் ஒன்றாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில்,  அதில் இன்னும் உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படவில்லை. மாறாக,  தேசிய அளவிலும், மாநில அளவிலும் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே ரிலே ஒலிபரப்பாக செய்யப்படுகின்றன. இது ஏற்காடு பண்பலை வானொலி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடும்.</p><p>பண்பலை வானொலிகள் மேம்படுத்தப்பட்ட சமூக வானொலிகள் தான். சமூகத்திற்கு தேவையான தகவல்களை வழங்குவது தான் அவற்றின் நோக்கம். ஏற்காட்டில் பண்பலை வானொலி தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதைச் சுற்றியுள்ள  சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின்  வேளாண்மை, கல்வி, வானிலை உள்ளிட்ட காலநிலை ஆகியவை சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவது தான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும்.  அதிலும் குறிப்பாக  சென்னை மற்றும்  டெல்லியில் இருந்து ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்புவது அந்த வானொலி நிலையங்களின் வருவாயைப் பெருக்க உதவுமே தவிர, பண்பலை வானொலி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற உதவாது.</p><p>அதிலும் குறிப்பாக  ஏற்காடு தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அங்கு நிலவும் காலநிலை, போக்குவரத்து நெரிசல், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட விவரங்கள் பண்பலை வானொலி மூலம் தெரிவிக்கப்பட்டால், அது அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக இருக்கும்.</p><p>எனவே, ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது  உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும்.  சேலம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் கல்வி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சுற்றுலா சார்ந்த தகவல்களையும்,  கலை, இலக்கியச் செழுமையையும் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>&apos;வரங்களை அருளும் லட்சுமி&apos; வரலட்சுமி 108 போற்றி</title><link>https://www.maalaimalar.com/spirituality/varalakshmi-vratam-108-potri</link><comments>https://www.maalaimalar.com/spirituality/varalakshmi-vratam-108-potri#comments</comments><guid isPermaLink="false">2db6ba65-be85-4bd6-bded-9e68489ff328</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:39:17 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:39:17.885Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,வரலட்சுமி விரதம்,Varalakshmi Vratam,Varalakshmi 108 Potri,வரலட்சுமி 108 போற்றி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bgpg300o/varalakshmi4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Varalakshmi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bgpg300o/varalakshmi4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரலட்சுமி என்றால் 'வரங்களை அருளும் லட்சுமி' என்று பொருள். இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் நாளை வருகிறது. அன்றைய தினம் வரலட்சுமி விரதம் இருக்க விரும்பும் பெண்கள், இல்லம் தேடி வரும் மகாலட்சுமியை மனம் குளிர வரவேற்று, பூஜை செய்து சிறப்பிக்க வேண்டும்.</p> <p>இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதால் வேண்டிய வரங்களை பெறுவதுடன், அஷ்டலட்சுமிகளான ஆதி லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி ஆகியோரின் அருளையும் பெறலாம். சுமங்கலி பெண்கள், தங்கள் கணவன் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கும், செல்வ வளம் பெருகுவதற்கும், லட்சுமியின் பரிபூரண அருளை பெறுவதற்கும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.</p><p>கீழே <a href="https://www.maalaimalar.com/spirituality/varalakshmi-vratam">வரலட்சுமி</a> 108 போற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இதை பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.</p><p>ஓம் அகில லட்சுமியே போற்றி</p><p>ஓம் அன்ன லட்சுமியே போற்றி</p><p>ஓம் அலங்கார லட்சுமியே போற்றி</p><p>ஓம் அமிர்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் அமர லட்சுமியே போற்றி</p><p>ஓம் அம்ச லட்சுமியே போற்றி</p><p>ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி</p><p>ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் அனந்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி</p> <p>ஓம் ஆதி லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி</p><p>ஓம் இன்ப லட்சுமியே போற்றி</p><p>ஓம் இதய லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஈகை லட்சுமியே போற்றி</p><p>ஓம் உதய லட்சுமியே போற்றி</p><p>ஓம் உத்தம லட்சுமியே போற்றி</p><p>ஓம் உபாசன லட்சுமியே போற்றி</p> <p>ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி</p><p>ஓம் கருணா லட்சுமியே போற்றி</p><p>ஓம் கனக லட்சுமியே போற்றி</p><p>ஓம் கபில லட்சுமியே போற்றி</p><p>ஓம் கமல லட்சுமியே போற்றி</p><p>ஓம் கற்பக லட்சுமியே போற்றி</p><p>ஓம் கஜ லட்சுமியே போற்றி</p><p>ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி</p> <p>ஓம் காருண்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் குண லட்சுமியே போற்றி</p><p>ஓம் குரு லட்சுமியே போற்றி</p><p>ஓம் கோமள லட்சுமியே போற்றி</p><p>ஓம் கோமேதக லட்சுமியே போற்றி</p><p>ஓம் சந்தான லட்சுமியே போற்றி</p><p>ஓம் சங்கு லட்சுமியே போற்றி</p><p>ஓம் சக்கர லட்சுமியே போற்றி</p><p>ஓம் சர்வ லட்சுமியே போற்றி</p><p>ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி</p>  <p>ஓம் சகல லட்சுமியே போற்றி</p><p>ஓம் சாந்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் சிங்கார லட்சுமியே போற்றி</p><p>ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி</p><p>ஓம் சீதா லட்சுமியே போற்றி</p><p>ஓம் செல்வ லட்சுமியே போற்றி</p><p>ஓம் சொர்ண லட்சுமியே போற்றி</p><p>ஓம் சுந்தர லட்சுமியே போற்றி</p><p>ஓம் சுப லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஜெய லட்சுமியே போற்றி</p> <p>ஓம் ஜோதி லட்சுமியே போற்றி</p><p>ஓம் ஞான லட்சுமியே போற்றி</p><p>ஓம் தங்க லட்சுமியே போற்றி</p><p>ஓம் தயா லட்சுமியே போற்றி</p><p>ஓம் தர்ம லட்சுமியே போற்றி</p><p>ஓம் தன லட்சுமியே போற்றி</p><p>ஓம் தவ லட்சுமியே போற்றி</p><p>ஓம் தான லட்சுமியே போற்றி</p><p>ஓம் தான்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் தாமரை லட்சுமியே போற்றி</p> <p>ஓம் தெய்வ லட்சுமியே போற்றி</p><p>ஓம் தீப லட்சுமியே போற்றி</p><p>ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் திவ்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் நாக லட்சுமியே போற்றி</p><p>ஓம் நித்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் நிர்மல லட்சுமியே போற்றி</p><p>ஓம் நீல லட்சுமியே போற்றி</p><p>ஓம் பதும ராக லட்சுமியே போற்றி</p><p>ஓம் பவள லட்சுமியே போற்றி</p> <p>ஓம் பக்த லட்சுமியே போற்றி</p><p>ஓம் பத்ம லட்சுமியே போற்றி</p><p>ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி</p><p>ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி</p><p>ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி</p><p>ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி</p><p>ஓம் பால லட்சுமியே போற்றி</p><p>ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி</p><p>ஓம் புவன லட்சுமியே போற்றி</p><p>ஓம் புனித லட்சுமியே போற்றி</p> <p>ஓம் பொன் லட்சுமியே போற்றி</p><p>ஓம் போக லட்சுமியே போற்றி</p><p>ஓம் மகா லட்சுமியே போற்றி</p><p>ஓம் மதன லட்சுமியே போற்றி</p><p>ஓம் மதுர லட்சுமியே போற்றி</p><p>ஓம் மங்கள லட்சுமியே போற்றி</p><p>ஓம் மாதவ லட்சுமியே போற்றி</p><p>ஓம் மகா லட்சுமியே போற்றி</p><p>ஓம் மகுட லட்சுமியே போற்றி</p><p>ஓம் மரகத லட்சுமியே போற்றி</p> <p>ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி</p><p>ஓம் மாதா லட்சுமியே போற்றி</p><p>ஓம் முத்து லட்சுமியே போற்றி</p><p>ஓம் மோட்ச லட்சுமியே போற்றி</p><p>ஓம் யோக லட்சுமியே போற்றி</p><p>ஓம் ரத்தின லட்சுமியே போற்றி</p><p>ஓம் ராம லட்சுமியே போற்றி</p><p>ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் வரலட்சுமியே போற்றி</p><p>ஓம் வித்யா லட்சுமியே போற்றி</p> <p>ஓம் விஜய லட்சுமியே போற்றி</p><p>ஓம் விமல லட்சுமியே போற்றி</p><p>ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி</p><p>ஓம் வீர லட்சுமியே போற்றி</p><p>ஓம் வேங்கட லட்சுமியே போற்றி</p><p>ஓம் வேணு லட்சுமியே போற்றி</p><p>ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி</p><p>ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!</p>]]></content:encoded></item><item><title>தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு- இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/if-dhanush-enters-politics-my-support-is-always-there-gv-prakash-kumar</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/if-dhanush-enters-politics-my-support-is-always-there-gv-prakash-kumar#comments</comments><guid isPermaLink="false">0dd61a25-2882-4065-8f0f-d291db649384</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:33:30 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:33:30.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தனுஷ்,Dhanush,தமிழக அரசியல்,ஜி.வி.பிரகாஷ் குமார்,TNPolitics,G.V.Prakash Kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/i8rvb7zz/dhanush.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhanush-G.V.Prakash Kumar  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/i8rvb7zz/dhanush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மன்றங்கள் ஏற்பாடு செய்திருந்த ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் அவர் பேசிய கருத்துகள் மற்றும் அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள், அவர் விரைவில் அரசியலில் களமிறங்கக்கூடும் என்ற ஊகங்களை அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் ஏற்படுத்தியிருந்தது.</p><h2>ஒற்றுமை<strong>க்கு ஒரு நோக்கம்</strong> தேவை</h2><p>அந்த நிகழ்வில் உரையாற்றிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vs-dhanush-the-new-arena-of-tamil-nadu-politics-and-stalins-future">நடிகர் தனுஷ்</a>, ரசிகர்கள் ஒரே இடத்தில் திரளுவது வெறும் சினிமா படங்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள் அல்லது கட்-அவுட் கொண்டாட்டங்களோடு நின்றுவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். "இவ்வளவு மக்கள் ஒரே இடத்தில் கூடும் போது ஒரு மிகப்பெரிய சக்தி உருவாகிறது. அந்த ஒற்றுமைக்கு சமூகப் பயனுள்ள ஒரு நோக்கம் இருக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>ரசிகர்கள் தங்கள் பகுதி மக்களின் தேவைகளையும், தங்களைச் சுற்றியுள்ள குடும்பங்களின் நிலைமையையும் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த விழாவில் ரசிகர் மன்றத்திற்கான புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.</p><h2>ஜி.வி<strong>.பிரகாஷ் ஆ</strong>தரவு</h2><p>இந்நிலையில், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் அவருக்கு தனது முழு ஆதரவும் இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில், "நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு அளிப்பீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜி.வி. பிரகாஷ், "தனுஷ் என்னுடைய மிகச்சிறந்த நண்பர். ஒரு நண்பராக அவர் எந்த முடிவு எடுத்தாலும், அரசியலுக்கு வந்தால் அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் கண்டிப்பாக இருக்கும்" என்று கூறினார்.</p><p>சமீபகாலமாக நடிகர் தனுஷ் தன் ரசிகர் மன்றங்களை மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக வலுப்படுத்தி வருவதும், பொது மேடைகளில் சமூகக் கருத்துகளைப் பேசி வருவதும் அவர் அரசியலுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. இதனிடையே, அவரது நெருங்கிய நண்பரான ஜி.வி.பிரகாஷின் இந்த கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2>அரசிய<strong>ல் திட்டமா</strong>?</h2><p>அரசியல் வருகை குறித்த ஊகங்கள் வலுத்து வரும் அதே வேளையில், தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை கட்சி தொடங்குவது குறித்தோ அல்லது தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. தனுஷ் தரப்பு வட்டாரங்கள் இது முற்றிலும் சமூக நலப் பணிகள் மற்றும் தொண்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதி மட்டுமே என்றும், இதற்குப் பின்னால் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.</p><p>இருப்பினும், சமீபத்தில் தனது பள்ளிக் கட்டிடத்திற்கு புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுத்தது, தாய்மொழி சார்ந்த விழிப்புணர்வு பேச்சுக்கள் மற்றும் ரசிகர் மன்ற சீரமைப்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தனுஷின் அரசியல் நகர்வுகள் குறித்த விவாதத்தை மேலும் சூடேற்றியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல். கிரிக்கெட் பிளேஆப் சுற்று ஆர்வத்தில்.. மதுரை- திருப்பூர் அணிகள் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-in-expecting-playoff-round-madurai-tiruppur-teams-clash-today</link><comments>https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-in-expecting-playoff-round-madurai-tiruppur-teams-clash-today#comments</comments><guid isPermaLink="false">74508809-6f49-48ee-b393-6545b9d86921</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:27:32 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:27:32.538Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Playoff match,கிரிக்கெட் பிளேஆப்,மதுரை அணி,திருப்பூர் அணி,MaduraiVS Tirupur</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3vjh5l9s/TNPL.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3vjh5l9s/TNPL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-ம் கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம்  எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடி யத்தில் நடைபெற்று வருகிறது.</p><h2>இன்று 2 ஆட்டங்கள்</h2><p>நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் திருச்சி கிரான்ட் சோழாஸ் 28 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது. திருச்சி அணி பெற்ற 4-வது வெற்றியாகும். திண்டுக்கல் அணி 4-வது தோல்வியை தழுவியது. </p><p>இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்- சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.</p><h2>பிளேஆப் ஆர்வத்தில் மதுரை</h2><p>மதுரை அணி 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி திருப்பூரை வீழ்த்தி 5-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.</p><p>மதுரை அணி, திருச்சி (2 விக்கெட்), கோவை (6 விக்கெட்), சேலம் (36 ரன்), திண்டுக்கல் (21 ரன்) ஆகியவற்றை வீழ்த்தியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் 39 ரன் வித்தியாசத்தில் தோற்றது.</p><p>திருப்பூர் அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளி யுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மதுரையை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. </p><p>அந்த அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (7 விக்கெட்),  நெல்லை (8 விக்கெட்), கோவை (4 விக்கெட்) ஆகியவற்றை தோற்கடித்தது. திண்டுக்கல் (7 விக்கெட்), திருச்சி (17 ரன்) ஆகியவற்றிடம் தோற்றது.</p><h2>நெல்லை-சேலம்</h2><p>இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சோனு யாதவ் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- அபிஷேக்  தலைமையிலான சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.</p><p>நெல்லை அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி பலவீனமான சேலத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. </p><p>சேலம் அணிதான் விளையாடிய 5 ஆட்டத்திலும் தோற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்து இருந்தது. நெல்லை அணிக்கு அதிர்ச்சியை கொடுத்து முதல் வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/sabalenka-lose-4th-round-in-cincinnati-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/sabalenka-lose-4th-round-in-cincinnati-open-tennis#comments</comments><guid isPermaLink="false">8efabdf3-3a5f-4afc-aa83-3ebf05fbdbd5</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:11:48 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:11:48.647Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aryna Sabalenka,அரினா சபலென்கா,Cincinnati Open Tennis,சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-10/q68nf97p/sabaa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sabalenka]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-10/q68nf97p/sabaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.</p><p>இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, செக் குடியரசின் சாரா பெஜ்லக் உடன் மோதினார்.</p><p>இதில் அதிரடியாக ஆடிய சாரா பெஜ்லக் 7-6 (9-7), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">சபலென்கா</a> 4வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p>கடந்த மாதம் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர், இம்மாதத்தின் தொடக்கத்தில் நடந்த கனடா ஓபன் டென்னிஸ் தொடரிலும் அரினா சபலென்கா 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.</p><p>நடப்பு ஆண்டில் பிரிஸ்பேன் ஓபன், இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்களில் மட்டுமே சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>நாளை நடைபெறவுள்ள காலிறுதி சுற்றில் செக் குடியரசின் சாரா பெஜ்லக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>கிரிஷ் இயக்கத்தில் கௌரி கிஷன் நடிப்பில் &quot;தாரகை&quot; படத்தின் First Look வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/thaaragai-first-look-poster-introduces-emotional-journey-of-women</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/thaaragai-first-look-poster-introduces-emotional-journey-of-women#comments</comments><guid isPermaLink="false">73e0f801-67a4-483a-b1cd-438c6c234d20</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:06:22 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:06:22.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gouri kishan,கௌரி கிஷன்,Tharagai,தாரகை,Tharagai FirstLook,Dir.Krish,இயக்குனர் க்ரிஷ்,Speed Reels Studio</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tlo3uhl0/GouriKishan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tlo3uhl0/GouriKishan?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'96' திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடித்த இளம் நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/gouri-kishan">கௌரி கிஷன்</a>, தற்போது முற்றிலும் ஒரு அழுத்தமான பெண் மையக் கதாபாத்திரத்தில் களம் இறங்கியுள்ளார்.</p><p>ஸ்பீடு ரீல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இத்திரைப்படத்திற்கு 'தாரகை' எனப் பெயரிடப்பட்டு, அதன் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. </p><h2>பெண்களின் உலகமும் மாறுபட்ட பயணங்களும்</h2><p>வெளியாகியிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போஸ்டரின் மையத்தில் தீவிரமான, எமோஷனல் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவனையுடன் கௌரி கிஷன் காட்சியளிக்கிறார்.</p><p>அவரைச் சுற்றி பல்வேறு வயது மற்றும் பின்னணிகளைக் கொண்ட பெண்கள் பல திசைகளில் பயணிப்பது போல் இந்த போஸ்டர் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>பெண்களின் வாழ்க்கை தேடல், தனிப்பட்ட தேர்வுகள், உறவுகள் மற்றும் அவர்களின் சுதந்திரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதைக்களம் நகர்வதை இந்த போஸ்டர் உணர்த்துகிறது.</p><h2>இயக்கம் மற்றும் தொழில்நுட்பக் குழு:</h2><p>இந்த திரைப்படத்தை கிரிஷ் இயக்குகிறார். கிரிஸுடன் சேர்ந்து துஹிரன் இணைந்து கதை எழுதியுள்ளனர். நாகராஜ் வசனங்களை எழுதியுள்ளார்.'தாரகை' திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்கிறார். </p><p>கார்த்திக் நேதா, விக்னேஷ் ராமகிருஷ்ணா மற்றும் மு.வி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.</p><p>சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்ய, ஆலன் பி ஜான் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குனராக அருண்ஷங்கர் துரை பொறுப்பேற்றுள்ளார். </p><p>தனித்துவமான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள கௌரி கிஷன், இந்த ஆழமான எமோஷனல் பயணத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>படத்தின் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">She is not walking alone.<br><br>There are stories around her.<br>There are journeys behind her.<br>And there is a story waiting to be told.<br><br>Presenting the First Look Poster of <a href="https://x.com/hashtag/Tharagai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tharagai</a>.<a href="https://x.com/Gourayy?ref_src=twsrc%5Etfw">@Gourayy</a> <a href="https://x.com/krish_director?ref_src=twsrc%5Etfw">@krish_director</a> <a href="https://x.com/Music_Siddhu?ref_src=twsrc%5Etfw">@Music_Siddhu</a> <a href="https://x.com/speed_reels?ref_src=twsrc%5Etfw">@speed_reels</a> <a href="https://x.com/prosathish?ref_src=twsrc%5Etfw">@prosathish</a> <a href="https://x.com/hashtag/digitallypowerful?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#digitallypowerful</a><a href="https://x.com/hashtag/SpeedReelsStudio?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SpeedReelsStudio</a>… <a href="https://t.co/xoZWtexEFh">pic.twitter.com/xoZWtexEFh</a></p>&mdash; Speed Reels Studio (@speed_reels) <a href="https://x.com/speed_reels/status/2090023867867918696?ref_src=twsrc%5Etfw">August 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>நாளை திரைக்கு வருகிறது &quot;பெத்லகேம் குடும்ப யூனிட்&quot;: நிவின் பாலி - மமிதா பைஜூ கூட்டணியில் புதிய கொண்டாட்டம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bethlehem-family-unit-film-releases-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bethlehem-family-unit-film-releases-tomorrow#comments</comments><guid isPermaLink="false">b488434f-3b36-40aa-86af-edfce2d7013a</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:05:09 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:05:09.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Girish A.D,Mamitha Baiju,Nivin Pauly,மமிதா பைஜூ,நிவின் பாலி,Onam2026,Bethlehem Kudumba Unit,பெத்லகேம் குடும்ப யூனிட்,Bhavana Studios</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wdej49fw/Bethlehem-Kudumba-Unit" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bethlehem Kudumba Unit ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wdej49fw/Bethlehem-Kudumba-Unit?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் <a href="https://www.maalaimalar.com/topic/nivinpauly">நிவின் பாலி</a> மற்றும் திரையுலகின் இளம் நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/mamitha-baiju">மமிதா பைஜூ</a> இணைந்து நடித்துள்ள "<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D">பெத்லகேம் குடும்ப யூனிட்</a>" திரைப்படம் நாளை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">ஓணம் பண்டிகை</a>யை முன்னிட்டு வெளியாகும் இந்தத் திரைப்படம் தற்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நட்சத்திரப் பட்டாளம்:</h2><p>முன்னணி கதாபாத்திரங்களில் நிவின் பாலி (ஜஸ்டின்) மற்றும் மமிதா பைஜூ (ஆஷ்லி) இவர்களுடன் துணைக் கதாபாத்திரங்களில் சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, பிந்து பணிக்கர், ஸ்ரிந்தா மற்றும் மீனாட்சி ரவீந்திரன் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.</p><h2>தொழில்நுட்பக் குழு</h2><p>'<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81">பிரேமலு</a>' திரைப்படத்தின் மெகா வெற்றிக்குக் காரணமான அதே தொழில்நுட்பக் கூட்டணி மறுபடியும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது. கிரிஷ் ஏ.டி-யுடன் இணைந்து கிரண் ஜோசி இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். </p><p>அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்ய, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். விஷ்ணு விஜய் இசையமைப்பில் வெளியான 'மாந்திரீகம்' மற்றும் 'இல்லே இல்லா' ஆகிய பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><p>பவானா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இந்தத் திரைப்படம், அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி தணிக்கைக் குழுவால் 'UA 13+' சான்றிதழ் பெற்றுள்ளது.</p><p>நாளை வெளியாகும் இத்திரைப்படத்திற்கான முன்பதிவுகள் BookMyShow தளத்தில் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>காவிரி முதல் நீட் வரை... தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-urges-cauvery-water-to-neet-issues-till</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-urges-cauvery-water-to-neet-issues-till#comments</comments><guid isPermaLink="false">63efacc9-c1ff-4979-989f-ca6c7dcd95fc</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:57:11 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:57:11.596Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,நீட் தேர்வு,Neet exam,காவிரி நீர்,Cauvery water,தென் மாநில முதல்-மந்திரிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/f5ox0wxt/vijay0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/f5ox0wxt/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>12-ம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் <a href="https://www.maalaimalar.com/topic/தென்-மாநில-முதல்-மந்திரிகள்">தென் மாநில முதல்-மந்திரிகள்</a> மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. </p><p>இந்த மாநாட்டில், வலுவான மாநிலங்கள்- வலுவான இந்தியா என கூட்டாட்சி தத்துவத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், </p><p>* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் மாநிலங்கள் தான் முக்கிய பங்களிப்பு தரும் இயந்திரம். </p><p>* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்கள் மட்டும் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. </p><p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-speech-mekedatu-dam-in-south-states-chief-ministers-conference">காவிரி</a> விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும். </p><p>* காவிரி மேலாண்மை ஆணைய முடிவுகளை செயல்படுத்த வேண்டும். </p><p>* மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்காக தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது. </p><p>* தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்காது என்ற சட்டபூர்வ உறுதிமொழி தேவை.</p><p>* கடல்வழிப் போக்குவரத்து, மீன்பிடித்தலில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம். </p><p>* மாநிலங்களுக்கு இடையேயான உளவுத் தகவல்களை பகிர்வதன் மூலம் போதைப்பொருளை ஒழிப்போம். </p><p>* போதைப்பொருள்களின் ஆன்லைன் விற்பனையை தடுக்க சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும். </p><p>* போதைப்பொருள் தடுப்பில் மாநிலங்கள்  இணைந்த வலையமைப்பை உருவாக்க வேண்டும். </p><p>* 12-ம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.  மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். </p><p>* முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நீதித்துறை உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>* பரஸ்பர நம்பிக்கை, அறிவியல் ஆதாரங்கள், சட்டத்தின் மீதான மதிப்போடு நதிநீர் பிரச்சனையை அணுக வேண்டும். </p><p>* கர்நாடகாவின் பொம்மசந்திரா முதல் தமிழ்நாட்டின் ஓசூர் வரை மெட்ரோ ரெயில் நீட்டிக்க வேண்டும். </p><p>* வரி விகித நிர்ணயத்தில் மாநிலங்களுக்கான நெகிழ்வுத்தன்மையை  மீட்டெடுக்க வேண்டும். </p><p>* சிறப்பு சலுகை கேட்கவில்லை, நியாயமான மற்றும் சமமான அணுகுமுறையையே கேட்கிறோம் என்று பேசியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கடன் வாங்கி எம்.எல்.ஏ-க்களுக்கு இலவச கார் எதற்கு?- சீமான் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-slams-tamil-nadu-govt-over-free-cars-for-mlas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-slams-tamil-nadu-govt-over-free-cars-for-mlas#comments</comments><guid isPermaLink="false">08709dd9-c6e8-457f-874e-fee99c48d782</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:51:06 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:51:06.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,TN Govt,தமிழக அரசு,சீமான்,தவெக அரசு,TVK Govt,எம்எல்ஏக்களுக்கு கார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3qorkqz3/seeman.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3qorkqz3/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிறைவேற்ற வேண்டிய மக்கள் நல திட்டங்கள் நிறைய உள்ள நிலையில் கடன்வாங்கி அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு?</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு லட்சம் ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?  </p><p>ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?</p><p>ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?</p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்?</p><p>அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா? </p><p>விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் 10 கோடிக்கு தார்ப்பாய்களை தரும் தவெக அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டமன்ற  உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா? </p><p>மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா?</p><p>தேர்தல் பரப்புரையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு?</p><p>அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் சனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா?</p><p>மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item></channel></rss>