<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 05 Sep 2026 08:27:28 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 5 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-5-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-5-september-2026#comments</comments><guid isPermaLink="false">a50194c3-ec3d-4c7a-b287-9e0350ac3ac4</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:38:36 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:21:41.864Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1ky145b1/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1ky145b1/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip">செப்டம்பர் 9-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. ஆலோசனைக் கூட்டம்: கம்யூனிஸ்டு கட்சிகள் புறக்கணிப்பு?</a></p><p>* த.வெ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் சார்பில் எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது</p><p>* சென்னை அண்ணாநகரில் உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-will-never-fear-bjp-govt-actions-says-mp-kanimozhi" rel="nofollow">தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது- கனிமொழி எம்பி</a></p><p>* தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளது.</p><p>* மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-people-in-tn-safeonly-corrupt-are-not">தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது... ஊழல்வாதிகளுக்கு தான் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்ளும்.</p><p>* நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் சட்டசபை நடைபெறுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-caste-wise-census-must-be-conducted-by-incorporating-the-list-of-castes">சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* காகா கலேல்கர் தலைமையிலான முதலாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 2399 சாதிகள் இடம் பெற்றிருந்தன. </p><p>* ஒரு காலத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்த தாசரி, ஜங்கம் போன்ற வகுப்பினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி தான், 1993-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-5-9-2026">GOLD PRICE TODAY: நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day">ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!</p><p>* ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-3">தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.</p><p>* இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-greetings-to-teachers-who-shape-students-into-good-human-beings" rel="nofollow">மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!</p><p>* சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar" rel="nofollow">தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார்..!- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து</a></p><p>* வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>* வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-near-sattur-worker-dies">சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - தொழிலாளி உயிரிழப்பு</a></p><p>* சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னதம்பி பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.</p><p>* அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்பதாலும் வெடித்து சிதறுவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</a></p><p>* அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. </p><p>* மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-is-the-pm-candidate-says-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-is-the-pm-candidate-says-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">30d82500-29f9-470b-9b37-889072c9fc08</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:22:13 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:22:13.449Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Prime Minister,Manickam Tagore,பிரதமர் வேட்பாளர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1xqa91xr/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1xqa91xr/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் முடிந்து போன கதை: பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை.</p><p>பிரதமர் வேட்பாளர் விஜய் என அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><p>தவெக தோழமை கட்சி கூட்டத்துக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்த நிலையில், சென்னையில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது;</p><p>முதலமைச்சர் தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்.</p><p>வரும் 9-ந்தேதி கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் குறித்து முடிவு செய்யப்படும்.</p><p>பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் முடிந்துபோன கதை. முடிந்துபோன விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம். <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">ராகுல்காந்தி</a>தான் பிரதமர் வேட்பாளர் என்பதை தவிர, சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.”</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 9-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. ஆலோசனைக் கூட்டம்: கம்யூனிஸ்டு கட்சிகள் புறக்கணிப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip#comments</comments><guid isPermaLink="false">fdb2fe14-9df5-4379-9139-1870c7e48483</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:18:23 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:18:23.550Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,கூட்டணி கட்சிகள்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/bprcq3tq/allinace.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. நடத்திய முதல் ஆலோசனைக் கூட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. நடத்திய முதல் ஆலோசனைக் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/bprcq3tq/allinace.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் சொன்னதாக அமைச்சர்கள் கூறிய கருத்தையும் அதில் விவாதிப்போம். அப்போதுள்ள சூழலை பத்திரிகை, ஊடகத்தினருக்கு தெரிவிப்போம் என்றார்.</strong></em></p><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தல், தமிழ்நாட்டில் அரசியல் களத்தையே புரட்டி போட்டது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தி.மு.க.வுக்கு ஏமாற்றத்தையும், கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்த <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.</a>வுக்கு இன்ப அதிர்ச்சியையும், அ.தி.மு.க.வுக்கு சற்று பின்னடைவையும் இந்த தேர்தல் கொடுத்தது.</p><h2><strong>கூட்டணி கட்சிகள் ஆதரவுக்கரம்</strong></h2><p>இதுமட்டுமா? தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இருந்த கட்சிகள், தேர்தலுக்கு பிறகு இன்னொரு கூட்டணிக்கு தாவி பயணித்த நிகழ்வும் அரங்கேறின. அந்த வகையில் ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருக்க த.வெ.க.வுடன், தி.மு.க.வில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டின.</p><p>இதை தற்போது அமைந்திருக்கும் ஆட்சிக்கான கூட்டணியாக மட்டுமல்லாமல், அடுத்து வர இருக்கும் தேர்தல்களை சந்திக்க இருக்கும் அரசியல் கூட்டணியாகவும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி த.வெ.க. ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்தனர்.</p><h2><strong>கூட்டணிக்கு பெயர்</strong></h2><p>சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்த இந்த கூட்டத்தில், முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முதல் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்கவில்லை.</p><p>அந்த கூட்டத்தில், கூட்டணிக்கு ஒரு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. </p><p>இந்த சூழ்நிலையில் த.வெ.க. மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேற்று தங்கள் கூட்டணி கட்சி தலைவர்களையும், நிர்வாகிகளையும் நேரில் சந்தித்தனர்.</p><p>அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று மாநில செயலாளர்கள் வீரபாண்டியன் மற்றும் சண்முகத்தை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். அப்போது நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.</p><p>அதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணாநகரில் உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.</p><h2><strong>2-வது ஆலோசனை கூட்டம்</strong></h2><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளரை சந்தித்து விட்டு வெளியே வந்த அமைச்சர் நிர்மல்குமார், "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு " என்றும், வைகோவை சந்தித்துவிட்டு வெளியே வந்த போது, "முதலமைச்சருக்கு உற்ற துணையாக இருக்கும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். 9-ந்தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சரும் பங்கேற்கிறார்" என்றும் கூறினார்.</p><p>இதனைத்தொடர்ந்து "த.வெ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் சார்பில் எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவசியம் பங்கேற்போம்" என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 9-ந் தேதி நடைபெறும் த.வெ.க. ஆதரவு கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்த பெயர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.</p><p>கூட்டம் புறக்கணிப்பா?</p><p>த.வெ.க. ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்காத நிலையில், 2-வது கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதா? என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-</p><p>இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் குழு நாளை (இன்று) கூடுகிறது. அதன் பிறகு எங்கள் நிர்வாக, செயல், மாநிலக்குழு கூட இருக்கிறது. முதலமைச்சர் சொன்னதாக அமைச்சர்கள் கூறிய கருத்தையும் அதில் விவாதிப்போம். அப்போதுள்ள சூழலை பத்திரிகை, ஊடகத்தினருக்கு தெரிவிப்போம்.</p><p>இடதுசாரிகள் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளித்து த.வெ.க.வை ஆதரித்தோம். அதேபோல் மக்கள் அதிகாரத்தில் கவர்னர் அமர்ந்துவிடக்கூடாது என்பதற்காக த.வெ.க.வை வெளியில் இருந்து ஆதரித்தோம். கூட்டணி, அமைச்சரவையில் இல்லை. வெளியில் இருந்து ஆதரிப்பதால், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்காக சமரசம் இல்லாமல் குரல் எழுப்புகிறோம்.</p><p>அரசு நல்ல திட்டங்கள், அரசியல் திசையில் நகரும்போது ஆதரிப்போம். முதல் கூட்டம் விருந்து. கூட்டணி குறித்து அதில் பேசுவது உடன்பாடு அல்ல. நாங்கள் சென்றால் அந்த கூட்டணியில் பங்கேற்க இயலாது. விருந்தின் தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதால் முதலமைச்சரிடம் அதுபற்றி தெரிவித்து பங்கேற்கவில்லை. இப்போது கூட்டணி தொடர்பான அழைப்பு வந்திருக்கிறது. அதுபற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது. கட்சிதான் முடிவு செய்யும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>VIDEO- &apos;TN07 CM&apos; கணிப்பு நிஜமானது-விஜய் ரசிகர்களை நெகிழ வைத்த வெங்கட் பிரபு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/video-tn07-cm-prediction-comes-true-venkat-prabhu-moves-vijay-fans</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/video-tn07-cm-prediction-comes-true-venkat-prabhu-moves-vijay-fans#comments</comments><guid isPermaLink="false">482a502f-2184-4af1-9ad0-982d9c89c7d7</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:16:07 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:16:07.601Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெங்கட் பிரபு,Venkat Prabhu,goat,தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்,CMVIJAY,முதலமைச்சர் விஜய்,TN07 CM</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/wfbrysrj/VJ.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMVijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/wfbrysrj/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விஜய் முதலமைச்சராவதை முன்கூட்டியே சரியாகக் கணித்தது போல் அமைந்ததாக வெங்கட் பிரபு பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். </p><p>இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை முன்னிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு சிறப்பு வீடியோவை பகிர்ந்துள்ளார். விஜய் திரையுலகில் பெற்ற மகத்தான வெற்றியையும், அவரது தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் அரசியல் பயணத்தையும் ஒரே நேர்கோட்டில் இணைத்துக் காட்டும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Thanks for the memories which we will cherish for a lifetime <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a> na❤️❤️❤️<a href="https://x.com/hashtag/2YearsOfTheGOAT?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#2YearsOfTheGOAT</a> <a href="https://x.com/hashtag/TheGreatestOfAllTime?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TheGreatestOfAllTime</a> <a href="https://x.com/archanakalpathi?ref_src=twsrc%5Etfw">@archanakalpathi</a> <a href="https://x.com/aishkalpathi?ref_src=twsrc%5Etfw">@aishkalpathi</a> <a href="https://x.com/thisisysr?ref_src=twsrc%5Etfw">@thisisysr</a> <a href="https://x.com/Jagadishbliss?ref_src=twsrc%5Etfw">@Jagadishbliss</a> <a href="https://t.co/AxZYtqbnhe">pic.twitter.com/AxZYtqbnhe</a></p>&mdash; venkat prabhu (@vp_offl) <a href="https://x.com/vp_offl/status/2095945503909552627?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>வெளியாகியுள்ள அந்த நினைவலை வீடியோ, 'கோட்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் திரையரங்குகளில் எழுப்பிய அதிரடி ஆரவாரத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, படத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/sundeep-kishan-sharing-inform-for-from-director-to-lead-actor-jason-sanjay">விஜய்</a> நடித்த முக்கியக் காட்சிகளையும், நிஜ வாழ்க்கையில் அவர் முதலமைச்சராகப் பதவியேற்றுப் பொறுப்புகளை வகிக்கும் காட்சிகளையும் அருகருகே ஒப்பீடு செய்து நெகிழ்ச்சியாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.</p><h2>திரையி<strong>ல் கணித்த நிஜ அரசியல்</strong> வெற்றி</h2><p>இந்த வீடியோவில் மிகவும் சுவாரஸ்யமான அம்சமாக, 'கோட்' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட "TN07 CM 2026" என்ற புகழ்பெற்ற வாகனப் பெயர் பலகை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெற்ற இந்தக் காட்சி, விஜய் முதலமைச்சராவதை முன்கூட்டியே சரியாகக் கணித்தது போல் அமைந்ததாக வெங்கட் பிரபு பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், வீடியோவின் இறுதியில் படத்தில் வரும் இளைய விஜய் கதாபாத்திரம் பேசும் "என்னை தடுத்து நிறுத்திட முடியும்னு நினைக்கிறியா?" என்ற மாஸ் வசனத்தைத் தொடர்ந்து, விஜய் முதலமைச்சராக இருக்கும் நிஜக் காட்சிகள் வருவது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.</p><p>2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று திரைக்கு வந்த 'கோட்' திரைப்படம், விஜய்யின் முழு நேர அரசியல் வருகைக்கு முந்தைய முக்கிய திரைப்படமாக அமைந்தது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் உலகளவில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனையைப் படைத்தது. "வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத இனிய நினைவுகளுக்கு நன்றி விஜய் அண்ணா" என்ற உருக்கமான வரிகளுடன் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது- கனிமொழி எம்பி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-will-never-fear-bjp-govt-actions-says-mp-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-will-never-fear-bjp-govt-actions-says-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">989e47d5-2a3d-41f3-a737-96c46aa32235</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:44:31 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:44:31.448Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi MP,தவெக அரசு,TVK Govt,கனிமெழி எம்பி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/98d2wm6g/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/98d2wm6g/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனைக்கு தி.மு.க. எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2>காழ்ப்புணர்ச்சி</h2><p>சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேரு அவர்களைப் பழிவாங்கப் பார்க்கிறது. </p><h2>ஜனநாயக விரோதம்</h2><p>மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சாது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நைஜீரியாவில் கச்சா எண்ணெய் குழாயில் திருட முயற்சி: விஷவாயு தாக்கி 37 பேர் மூச்சுத்திணறி பரிதாப பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/nigeria-illegal-crude-oil-theft-toxic-gas-kills-37</link><comments>https://www.maalaimalar.com/news/world/nigeria-illegal-crude-oil-theft-toxic-gas-kills-37#comments</comments><guid isPermaLink="false">8be4ccd1-ab16-4312-809f-6ed30ad1e1af</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:39:32 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:39:32.353Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஷவாயு,கச்சா எண்ணெய்,Crude oil,Nigeria,Toxic Gas,நைஜீரியா,Okrika</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/s6wvr2qn/nygeria.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  crude oil from pipeline in Nigeria]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/s6wvr2qn/nygeria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழாயில் இருந்து மிக அதிக அழுத்தத்துடன் எரிபொருள் பாயும்போது "இண்டோராமா கெமிக்கல்" என்ற நச்சு வாயு காற்றில் பலமாக பரவியது.</p><p>நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க ரிவர்ஸ் மாநிலத்தில் உள்ள ஒக்ரிகா பகுதிக்கு உட்பட்ட ஒகாரி ஜெட்டி அருகே, சட்டவிரோதமாக எரிபொருள் திருடும் முயற்சியின் போது ஏற்பட்ட நச்சு வாயு கசிவால் 37 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.</p><h2>நள்ளி<strong>ரவில் நடந்த திருட்டு முயற்சி</strong></h2><p>நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறிய படகுகளில் ஒகாரி ஜெட்டி பகுதியில் ஒன்று திரண்டனர். இந்திரமா எலமே <a href="https://www.maalaimalar.com/news/world/russia-strike-on-who-medical-warehouse-in-ukraine">பெட்ரோ கெமிக்கல் </a>நிறுவனத்திலிருந்து போர்ட் ஹார்கோர்ட் சுத்திகரிப்பு நிலையம் வழியாக ஏற்றுமதிக்கு கொண்டு செல்லப்படும் பிரதான எரிபொருள் குழாயில் சட்டவிரோதமாக துளையிட்டு எரிபொருளை திருட முயன்றுள்ளனர்.</p><p>குழாயில் இருந்து மிக அதிக அழுத்தத்துடன் எரிபொருள் பாயும்போது "இண்டோராமா கெமிக்கல்" என்ற நச்சு வாயு காற்றில் பலமாக பரவியது. இதனால் அங்கிருந்த இளைஞர்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.</p><h2>ஆற்றில் <strong>மூழ்கிய உடல்கள்</strong></h2><p>மயக்கமடைந்த பல இளைஞர்கள் போனி நதியில் விழுந்தனர். இதுவரை 37 பேரின் உடல்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பலரின் உடல்கள் ஆற்றில் மிதந்து கொண்டு இருப்பதாகவும், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் குறித்து ரிவர்ஸ் மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நைஜீரியாவில் நிலவும் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக இது போன்ற சட்டவிரோத எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது... ஊழல்வாதிகளுக்கு தான் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-people-in-tn-safeonly-corrupt-are-not</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-people-in-tn-safeonly-corrupt-are-not#comments</comments><guid isPermaLink="false">7063b894-9df5-40ab-865a-bfdb1050395f</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:38:15 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:38:15.775Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>kn nehru,கேஎன் நேரு,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/sth8p819/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/sth8p819/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடும் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p> <p>திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் மதுரையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல்குமார்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p>  <p>திமுக முன்னாள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">அமைச்சர் கே.என்.நேரு</a> வீட்டில் ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை, ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது.</p><p>பெண்களை பற்றி அவதூறாக பொதுமேடையில் பேசியதற்காக தான் உதயநிதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.</p><p>திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்ளும்.</p>  <p>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடும்.</p><p>பிரதமர் வேட்பாளர் குறித்த பேசுவதற்கு காலம் உள்ளது.</p><p>தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது, ஊழல்வாதிகளுக்கு தான் பாதுகாப்பில்லை.</p><p>நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் சட்டசபை நடைபெறுகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு தடுப்பு நடவடிக்கை: பள்ளி மாணவிகள் பாவாடைக்கு பதிலாக சுடிதார் அணிய மேற்கு வங்க அரசு பரிந்துரை!</title><link>https://www.maalaimalar.com/news/national/dengue-prevention-west-bengal-govt-urges-salwar-kameez</link><comments>https://www.maalaimalar.com/news/national/dengue-prevention-west-bengal-govt-urges-salwar-kameez#comments</comments><guid isPermaLink="false">dcbb3a1e-fc11-4923-8cd6-7dffcdb23532</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:17:14 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:17:14.266Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,Dengue,West Bengal Government,டெங்கு,Sarathwat Mukherjee,மேற்கு வங்க அரசு,சரத்வத் முகர்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/73a8g8v6/benga.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sarathwat Mukherjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/73a8g8v6/benga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலத்தில் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது.</p><p>மேற்கு வங்க மாநிலத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/2-crore-children-face-online-sexual-abuse-in-a-year">டெங்கு காய்ச்சல் </a>பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சீருடை பாவாடைக்கு பதிலாக உடலை முழுமையாக மூடும் சல்வார் கமீஸ் அல்லது சுடிதார் ஆடைகளை அணிய அனுமதிக்குமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2>கொசுக்க<strong>டியைத் தவிர்க்க புதிய</strong> நடவடிக்கை</h2><p>மாநிலத்தில் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், ஸ்வஸ்த்ய பவன் தலைமையகத்தில் உயர்நில ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி, கொசுக்கடியிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டார்.</p><p>அடுத்த மூன்று மாதங்களுக்கு பள்ளி மாணவர்கள் அனைவரும் முழுக்கை சட்டைகள் மற்றும் முழு நீள பேண்ட் அணிய பள்ளிகள் அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வழக்கமாக பாவாடை (ஸ்கர்ட்) சீருடை அணியும் மாணவிகள், தங்கள் கால்களை முழுமையாக மூடும் வகையில் சல்வார் சூட்களுக்கு மாற தற்காலிகமாக விலக்கு அளிக்குமாறு பள்ளி நிர்வாகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><h2>பள்ளிகளுக்கு விடுக்கப்<strong>பட்ட வேண்டு</strong>கோள்</h2><p>டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் பகல் நேரத்திலேயே அதிகளவில் கடிக்கும் தன்மையுடையவை என்பதால், பள்ளி நேரங்களில் மாணவர்களின் கை மற்றும் கால்கள் மூடப்பட்டிருப்பது நோய்த்தொற்று அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். எனவே, அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் இந்தத் தற்காலிக மாற்றத்தை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;செக்கிழுத்த செம்மல்&quot; வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்!- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pays-tribute-to-vo-chidambaranar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pays-tribute-to-vo-chidambaranar#comments</comments><guid isPermaLink="false">fd6ed02a-18f7-49c6-9a86-37d61bd488fb</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:02:30 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:02:30.293Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,பிறந்தநாள் வாழ்த்து,Birthday,வ.உ.சிதம்பரனார்,VO Chidambaram,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/4gvruaw7/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VOC-TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/4gvruaw7/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரத்துடனும், தியாக உணர்வுடனும் போராடி, மக்கள் மனங்களில் சுதேசி உணர்வை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை மட்டுமின்றி, பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள்.</p><p>தாய்நாட்டின் விடுதலை, சுதேசி உணர்வு, உழைப்பாளர்களின் உரிமை ஆகியவற்றிற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த “செக்கிழுத்த செம்மல்”வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-caste-wise-census-must-be-conducted-by-incorporating-the-list-of-castes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-caste-wise-census-must-be-conducted-by-incorporating-the-list-of-castes#comments</comments><guid isPermaLink="false">bdbc6512-251f-4a09-b208-447ddba06edb</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:02:06 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:02:06.081Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Central govt,சாதிவாரி கணக்கெடுப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ttmjjsoj/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ttmjjsoj/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு, பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, அதற்கு பதிலாக கணக்கெடுப்புக்கான செயலியில் ஓபிசி சாதிகளின்  பட்டியலை இணைத்து அதிலிருந்து சாதியின் பெயரையும் எண்ணையும் தேர்வு செய்யும் முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தேசிய அளவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஓபிசி எனப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாதி மக்களின் எண்ணிக்கையை கணக்கிட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் கடைபிடிக்கப்படும் ஓபிசி சாதிகள் பட்டியலை இணைத்து பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டதாகவும்,  ஆனால், அந்தப் பட்டியலில் இருப்பவை வகுப்புகள் தானே தவிர, சாதிகள் இல்லை என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மத்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கான கூறப்படும் பலவீனமான காரணம் தானே தவிர ஏற்றுக்கொள்ளத்தக்க வாதம் அல்ல.</p><h2><strong>பிப்ரவரியில் பணி தொடக்கம்</strong></h2><p>இந்தியாவில் கடைசியாக 1931-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட சமூகநீதி அமைப்புகளின் வலியுறுத்தல் காரணமாக 95 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக நாடு முழுவதும் வீட்டுப் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் சாதி விவரத்துடன் மக்கள்தொகையை கணக்கெடுக்கும் பணி கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் வரும் பிப்ரவரி மாதத்தில் இப்பணி தொடங்கவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்</a> போது, சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் ஒதுக்கப்பட்டு,  அதில் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை எழுதும் முறை பின்பற்றப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த முறைக்கு பதிலாக சாதிவாரி கணக்கெடுப்புக்காக பயன்படுத்தப்படும் செயலியில், மத்திய அல்லது மாநில அரசுகளின் சாதிகளை பட்டியலை இணைத்து, அதிலிருந்து மக்களை அவர்களின் சாதியை தேர்ந்தெடுக்கச் செய்து, பதிவு செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் கடிதமும் எழுதினேன். அதைத் தொடர்ந்து காங்கிரசும் இப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது.</p><h2><strong>ஏற்க முடியாதது</strong></h2><p>இந்த சர்ச்சை தொடர்பாக பதிலளித்திருக்கும் மத்திய அரசு அதிகாரிகள்,‘‘சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடங்குவதற்கு முன்பாக, சாதிகள் பட்டியலில் இருந்து சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தான் மத்திய அரசின் ஓபிசி பட்டியலில் இருப்பவை சாதிகள் அல்ல... வகுப்புகள் எனத் தெரியவந்தது. பிச்சை எடுப்பவர்கள், உள்ளூரில் பிறந்தவர்கள் என்பன உள்ளிட்ட பிரிவுகள் ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவை சாதிகள் அல்ல, வகுப்புகள். இதனால் எந்த குழப்பமும் வந்து விடக் கூடாது என்பதால் தான் பட்டியலை இணைப்பதற்கு பதிலாக, சாதியின் பெயரை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கேட்டு எழுதும் முறை பின்பற்றப்படுகிறது’’ என்று தெரிவித்ததாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகளின் இந்த வாதம் ஏற்க முடியாதது.</p><p>இந்தியாவின் முதல் ஓபிசி பட்டியல் 1995-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. காகா கலேல்கர் தலைமையிலான முதலாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 2399 சாதிகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் 837 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்டவையாக  வகைப்படுத்தப்பட்டிருந்தன. காகா கலேல்கர் உருவாக்கிய பட்டியலில் முழுக்க முழுக்க சமூகங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. அதன்பின் 1980-ஆம் ஆண்டு திசம்பர் 31-ஆம் தேதி மண்டல் தலைமையிலான இரண்டாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஓபிசி பட்டியலில் இந்த எண்ணிக்கை முறையே 3743, 1937 என உயர்த்தப்பட்டிருந்தது. அதற்கு காரணம், சாதியின் அடிப்படையில் மட்டுமின்றி சில தொழில் பிரிவினரையும், நாடோடிக் குழுக்களையும் அவர்களின் சமூக பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஓபிசி பட்டியலில் மண்டல் ஆணையம் இணைத்தது தான்.</p><p>ஒரு காலத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்த தாசரி, ஜங்கம் போன்ற வகுப்பினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி தான், 1993-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மத்திய அரசால் சுட்டிக்காட்டப்பட்ட உள்ளூரில் பிறந்தவர்கள் என்ற வகுப்பினர் அந்தமான் தீவுகளுக்கான ஓபிசி பட்டியலில் 2011-ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டனர்.  தமிழ்நாட்டிலும் இதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டு. திருநங்கையர் என்பது சாதியின் பெயர் அல்ல. அது மூன்றாம் பாலினம் ஆகும். ஆனால், அவர்களின் சமூக, பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதால்  அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று 2012ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>வலிமை சேர்க்காது</strong></h2><p>இந்த நடவடிக்கைகளின் நோக்கம் சாதிகளைக் கடந்தும் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு சமூகநீதி வழங்குவது தான். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கமும் சமூகநீதி வழங்குவது தான். அவ்வாறு இருக்கும் போது, சில வகுப்புகளை சாதிகளாக  பட்டியலிட்டு பதிவு செய்வதால் எந்த குழப்பமும் ஏற்பட்டு விடாது. அந்த வகுப்புகள் ஓபிசி பட்டியலில் சேர்க்கப் பட்டதன் நோக்கம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி பயன்களை வழங்குவதற்காகத் தான் என்பதால், அவர்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள அவர்களை சாதிகளாகவே பதிவு செய்வதில் தவறு இல்லை. அவ்வாறு செய்வதால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கம் சிதைந்து விடாது.</p><p>அதே நேரத்தில் சில வகுப்புகளை சாதிகளாக பதிவு செய்யக் கூடாது என்பதற்காக, சாதியின் பெயரை மக்களிடமே கேட்டு பதிவு செய்யும் முறை பின்பற்றப்பட்டால், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 4147 சாதிகள் மட்டுமே உள்ள நிலையில், 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவரும். இது தான் சாதிவாரி மக்கள்தொகையின் நோக்கத்தையே சிதைத்து விடும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதாக அமைந்து விடும். இது சமூகநீதிக்கு வலிமை சேர்க்காது.</p><p>எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு, பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, அதற்கு பதிலாக கணக்கெடுப்புக்கான செயலியில் ஓபிசி சாதிகளின்  பட்டியலை இணைத்து அதிலிருந்து சாதியின் பெயரையும் எண்ணையும் தேர்வு செய்யும் முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்; இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 14&amp;ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ ஆணை S.O. 4505(E) -ஐ ரத்து செய்து விட்டு, புதிய ஆணையை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-5-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-5-9-2026#comments</comments><guid isPermaLink="false">f1e8c56f-4eeb-4425-9589-89ed5af23aaa</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:55:48 +0000</pubDate><atom:updated>2026-09-05T06:55:48.389Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/05/25935896-gold.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/05/25935896-gold.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p> <p>தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்டு) தொடக்கத்தில் குறைந்து இருந்து, பின்னர் 'கிடுகிடு'வென அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது.</p><p>பிறகு கடந்த மாதம் 27-ந்தேதியில் இருந்து குறையத் தொடங்கிய நிலையில், இப்போது ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 1, 2-ந்தேதிகளில் விலை குறைந்து, நேற்று முன்தினம் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் விலை அதிகரித்து இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 240-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.120-ம், பவுனுக்கு ரூ.960-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 360-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை சரிவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.1,360 குறைந்து ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>04-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880</p><p>03-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,920</p><p>02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><p>01-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,400</p><p>31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>04-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>01-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>31-08-2026- ஒரு கிராம் ரூ.260</p> ]]></content:encoded></item><item><title>தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்- மு.க.ஸ்டாலின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-3#comments</comments><guid isPermaLink="false">1b1128df-bb56-4c9f-a87a-d93a224d56a2</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:46:04 +0000</pubDate><atom:updated>2026-09-05T06:46:04.787Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,தவெக,kn nehru,கேஎன் நேரு,tvk,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/fty8o0me/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/fty8o0me/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கே.என்.நேருவும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்! என்று கூறியுள்ளார்.</strong></em></p><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்...</strong></h2><p>உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.</p><p>இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81">கே.என். நேரு</a> மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.</p><p>ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர். </p><p>இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">கே.என்.நேரு</a> அவர்களும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்! என்று கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.<br><br>இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.<br><br>ஆட்சி அமைக்க…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2096100963321065902?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஜிடிஏ 6 வெளியீட்டை ஒட்டி பிரத்யேக டூயல்சென்ஸ் பி.எஸ். 5 கண்ட்ரோலர்கள் அறிமுகம் - என்ன ஸ்பெஷல்?</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/gta-6-gets-special-dualsense-ps5-controllers-from-sony</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/gta-6-gets-special-dualsense-ps5-controllers-from-sony#comments</comments><guid isPermaLink="false">86cfc5bb-42df-4117-acdd-998dcc1c64a9</guid><pubDate>Sat, 05 Sep 2026 04:34:00 +0000</pubDate><atom:updated>2026-09-05T04:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sony,சோனி,GTA 6,ஜிடிஏ 6</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/zx7jhp4h/GTA-VI-Limited-Edition-DualSense-Wireless-Controllers.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GTA VI Limited-Edition DualSense Wireless Controllers]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/zx7jhp4h/GTA-VI-Limited-Edition-DualSense-Wireless-Controllers.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/sony">சோனி</a> நிறுவனம், பிளே ஸ்டேஷன் 5 (PS5)-க்கான GTA 6 கேமின் பிரத்யேக டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்களை அறிவித்துள்ளது. ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் GTA 6-க்கான முன்பதிவுகளை அறிவித்துள்ளது. </p><p>சமீபத்திய ஸ்டேட் ஆஃப் பிளே நிகழ்வில், சோனி பல விளையாட்டுகளை அறிவித்துள்ளது. இத்துடன், GTA 6 விளையாட்டின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்களும் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>இதில் கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வகைகள் இருக்கும். இந்த இரண்டு டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்களும் நவம்பர் 19, 2026 முதல் கிடைக்கும். இவற்றின் விலை 12,480 யென் (இந்திய மதிப்பில் ரூ. 7547) என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் PS5-க்கான கூடுதல் பொத்தான்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.</p><h2>குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும்:</h2><p>இந்த புதிய டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்கள் சேகரிப்பாளர்களை இலக்காக கொண்டவை, மேலும் இவை குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கக்கூடும்.</p><p>புதிய சோனி டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்கள் செப்டம்பர் 10, 2026 முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. இது பிளே ஸ்டேஷன் டைரக்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கும், ஆனால் இதன் ஸ்டாக் குறைவாகவே இருக்கும். இரண்டு கன்ட்ரோலர்களும் வண்ண வடிவமைப்பில் மிகவும் அழகாக தெரிகின்றன. இதன் அடிப்பகுதியில் ஊதா நிற சாயல்களும், ரிமோட்டின் மேற்புறத்தில் VI பிராண்டிங்கும் இடம்பெற்றுள்ளன.</p><h2>வருவாயை அதிகரிக்கும் வாய்ப்பு:</h2><p>இந்த வடிவமைப்பு வைஸ் சிட்டியை பெரிதும் தழுவி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. GTA VI விளையாட்டில் DualSense-இன் அடாப்டிவ் ட்ரிக்கர்களும் ஹேப்டிக் ஃபீட்பேக்கும் முக்கிய பங்கு வகிக்கும் என்று சோனி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சுடுதலாக, வாகனம் ஓட்டுதல் போன்ற அனுபவங்களில் இந்த அம்சங்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.</p><p>இந்த விளையாட்டை சுற்றியுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க, சோனி மற்றும் ராக்ஸ்டார் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன என்பதை இது காட்டுகிறது. </p><p>மேலும், இது சோனிக்கு அதிக PS5 கன்சோல்களையும், DualSense கன்ட்ரோலர்களையும் விற்பனை செய்து, அதன் வருவாயை அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-near-sattur-worker-dies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-near-sattur-worker-dies#comments</comments><guid isPermaLink="false">62959912-832b-4bbd-91d9-a28a22d1dbe6</guid><pubDate>Sat, 05 Sep 2026 04:06:56 +0000</pubDate><atom:updated>2026-09-05T04:06:56.976Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>worker death,பட்டாசு ஆலை வெடிவிபத்து,தொழிலாளி உயிரிழப்பு,Firecracker Factory Explosion,சாத்தூர்,Sattur</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/9ra6ixd1/fireworks.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Firecracker factory explosion]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/9ra6ixd1/fireworks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.</p> <p>விருதுநகர் மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">சாத்தூர்</a> அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னதம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பட்டாசு ஆலை</a>யில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.</p> <p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்பதாலும் வெடித்து சிதறுவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p> <p>இந்த வெடிவிபத்தில் தொழிலாளி மாடசாமி என்பவர் உயிரிழந்தார்.</p><p>கடந்த 3-ந்தேதி பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லெவல் 2 ADAS, இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் கியா சொரென்டோ இந்தியாவில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/kia-sorento-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/kia-sorento-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">c9cc1228-86b3-46f2-878e-25291a8002d9</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:57:00 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:57:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Kia India,கியா இந்தியா,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ggemkdcm/Kia-Sorento.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kia Sorento]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ggemkdcm/Kia-Sorento.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/kia-india">கியா இந்தியா</a> நிறுவனம் கேரன்ஸ் கிளாவிஸ் மாடலின் மேல் ஒரு பெரிய ஏழு இருக்கைகள் கொண்ட புதிய எஸ்.யூ.வி. மாடல்- கியா சொரென்டோவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கியா சொரென்டோ மாடல் ரூ. 27.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>புதிய சோரென்டோ <a href="https://www.maalaimalar.com/topic/car">கார்</a> 4.8 மீட்டருக்கும் அதிகமான நீளத்தையும், 2.8 மீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. மேலும், இது 19-இன்ச் அலாய் வீல்கள், செங்குத்தாக அடுக்கப்பட்ட LED DRL-கள் மற்றும் டெயில் லேம்ப்கள், மற்றும் ஹிடென் வைப்பர் கொண்ட பின்புற ஸ்பாய்லர் ஆகியவற்றை கொண்டுள்ளது. </p><h2>சோரென்டோ சிறப்பு அம்சங்கள்:</h2><p>கியா வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்ச பட்டியல் சொரெண்டோவில் வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு உட்புற தீம் ஆப்ஷன்கள் மற்றும் லம்பார் சப்போர்ட் உடன் கூடிய பவர் டிரைவர் இருக்கை ஆகியவை அடங்கும். 12-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் இந்த தொகுப்பின் ஒரு பகுதியாகும்.</p><p>அதே நேரத்தில், ஒரு ஹெட்-அப் டிஸ்ப்ளே, வளைந்த இரட்டைத் திரை அமைப்பில் 12.3-இன்ச் தொடுதிரை மற்றும் 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இரண்டாவது வரிசையில், ஸ்லைடு மற்றும் சாய்வு வசதியுடன் கூடிய வென்டிலேட்டெட் கேப்டன் இருக்கைகள் உள்ளன. மூன்றாவது வரிசையை ரிமோட் மூலம் மடக்கும் வசதி உள்ளது.</p><p>பாதுகாப்பை பொறுத்தவரை, சோரென்டோவில் 10 ஏர்பேக்குகள், லெவல் 2 ADAS, ஹில் டிசென்ட் கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா மற்றும் டிஜிட்டல் ரியர்வியூ மிரர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.</p><h2>என்ஜின் விவரங்கள்:</h2><p>பவர்டிரெய்ன் தேர்வுகளில், 177 ஹெச்.பி. பவர் மற்றும் 265 நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்யும் 1.6-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினுடன், 64 ஹெச்.பி. பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்ட ஒரு ஹைப்ரிட் சிஸ்டம் உள்ளது.</p><p>டீசலை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, 8-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 2.2-லிட்டர் டீசல் என்ஜின் உள்ளது. இந்த இரண்டு பவர்டிரெய்ன்களும் 3 டிரைவ் மற்றும் டெரெய்ன் மோட்களின் தேர்வுகளுடன் வருகின்றன.</p><p>ஏழு இருக்கைகள் கொண்ட எஸ்.யூ.வி. பிரிவில், கியா சொரெண்டோ எம்.ஜி. ஹெக்டார் டோமஹாக் , டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் மஹிந்திரா XUV 7XO ஆகியவற்றுடன் போட்டியிடும்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-greetings-to-teachers-who-shape-students-into-good-human-beings</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-greetings-to-teachers-who-shape-students-into-good-human-beings#comments</comments><guid isPermaLink="false">b899d9ba-f415-4a3a-a365-fa9f25bb7048</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:32:03 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:32:03.503Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,teachers day,ஆசிரியர் தினம்,Doctor Radhakrishnan,டாக்டர் ராதாகிருஷ்ணன்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c9pr1o58/MKS1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c9pr1o58/MKS1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.</p><p>இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இந்நாளில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">ஆசிரியர் தினம்</a> கொண்டாடப்படுகிறது.</p><p>சமுதாயத்திற்கு வழிகாட்டும் ஆசிரியர்களின் சேவையைப் போற்றும் வகையில் இந்நாள் அமைகிறது.</p><p>இந்நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துப் பதிவை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!</p><p>நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் AI காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!</p><p>அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க ஆசிரியர் தினத்தில் உறுதிகொள்வோம்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day#comments</comments><guid isPermaLink="false">b245a60e-783f-48c0-af5e-7d6f853a099f</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:10:03 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:10:03.757Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,teachers day,ஆசிரியர் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cmhttp0z/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cmhttp0z/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/ஆசிரியர்-தினம்">ஆசிரியர் தினம்</a> கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில், இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். </p><p>இதுதொடர்பாக, முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தன்னலமற்ற அர்ப்பணிப்பு</strong></h2><p>இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/7uuoslsr/vijay0.jpg" /></figure><p>மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்!</p><p>ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது… <a href="https://t.co/Gvx0TCnzPg">pic.twitter.com/Gvx0TCnzPg</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2096067257973780903?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru#comments</comments><guid isPermaLink="false">ca35662d-58f7-43da-9ef5-b8eb94a59b15</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:05:53 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:05:53.193Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,kn nehru,கேஎன் நேரு,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-05/mf5kmsvt/KN-Nehru.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KN Nehru]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-05/mf5kmsvt/KN-Nehru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p> <h2>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar">திமுக</a> முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81">கே.என்.நேரு</a> மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  </p> <h2>கே.என்.நேரு</h2><p>திருச்சி தில்லைநகரில் உள்ள கே.என்.நேரு வீட்டிலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.</p> <p>பார்ட்டி ஃபண்ட் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை என தகவல் வெளியாகி உள்ளது.</p><p>பல்வேறு நிறுவனங்களை மிரட்டி, சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார்..!- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar#comments</comments><guid isPermaLink="false">c7c76065-ae1e-4a6e-b591-e46fc4ac7da5</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:01:32 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:01:32.423Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,பிறந்தநாள் வாழ்த்து,Birthday,வஉ சிதம்பரனார்,VO Chidambaram,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/z4ncqs4p/MKS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/z4ncqs4p/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளர்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>தியாகத் திருவுளம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5.%E0%AE%89.%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">வ.உ. சிதம்பரனார்</a> பிறந்தநாள்</p><p>நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார், ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல் விட்டார். இது மட்டுமா வ.உ.சி.?</p><p>திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார், தொல்காப்பிய உரையைப் பதிப்பித்துள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார், அந்நாளிலேயே தொழிலாளர் உரிமைக்காகப் போராடியுள்ளார்.</p><p>இத்தகைய பன்முக ஆளுமையான வ.உ. சிதம்பரனாரின் வாழ்வும் பணிகளும் எல்லோரையும் சென்றடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு செக்கிழுத்த செம்மலுக்குச் சிறப்பு சேர்த்தோம்.</p><p>அவற்றுடன், 1908 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tirunelveli-halwa-price-hike" rel="nofollow">திருநெல்வேலி</a> எழுச்சிக்கான நினைவுச் சின்னத்தையும் அறிவித்தோம். தற்போதைய அரசும் அதனைக் கைவிடாமல், நிறைவேற்றிட வேண்டும் எனத் தமிழர்தம் சிந்தையில் இருந்து என்றும் அகலாத சிதம்பரனாரின் பிறந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது - ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-madurai-bench-order-educational-institutions-must-not-ask-for-caste-or-religious-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-madurai-bench-order-educational-institutions-must-not-ask-for-caste-or-religious-details#comments</comments><guid isPermaLink="false">233116aa-1b50-49c3-a8f9-c7b054794e2b</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:36:08 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:36:08.097Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court Madurai Bench,caste,கல்வி நிறுவனங்கள்,Educational Institutions,ஐகோர்ட் மதுரை கிளை,சாதி மதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/17/20212967-maduraihc.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ High Court Madurai Bench]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/17/20212967-maduraihc.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.</p><p>விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விக்ரமன், <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88">ஐகோர்ட் மதுரை கிளையில்</a> தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் சாதி விவரங்களை சேகரிக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது சாதி, மத விவரங்கள் கேட்கப்படுகின்றன.</p> <p>இதுபோன்ற நடைமுறைகள் மாணவர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குகின்றன. இதற்கு தடை 3 விதித்து, உரிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். </p> <p>நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தும் என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் - மருத்துவர்கள் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/increase-in-dengue-and-swine-flu-cases-in-tn-compared-to-last-year</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/increase-in-dengue-and-swine-flu-cases-in-tn-compared-to-last-year#comments</comments><guid isPermaLink="false">d85e6190-69fd-4c34-8b7e-e97146206ce1</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:23:48 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:23:48.592Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,dengue fever,swine flu,தமிழ்நாடு,டெங்கு காய்ச்சல்,பன்றிக்காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1vaan2ap/denguefever.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dengue Fever]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1vaan2ap/denguefever.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மழைக்காலம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.</p> <h2>வைரஸ் தொற்றுகள்</h2><p>மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் கொடிய வைரஸ் தொற்றுகளில் டெங்கு மற்றும் பன்றிக் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/viral-fever-spread-in-chennai">காய்ச்சல்</a> முதன்மையான இடத்தை சமீப ஆண்டுகளாக பெற்றுள்ளன. அந்தவகையில் இந்த இரு நோய்களின் தாக்கம் இந்தியாவில் நடப்பாண்டில் சற்று அதிகமாகவே இருக்கிறது.</p><p>அதிலும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதை பொது சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.</p> <h2>அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்</h2><p>அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி வரையிலான நிலவரப்படி, 13 ஆயிரத்து 573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டவர்களில் 0.06 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்தனர். இது சற்று ஆறுதல் தரும் செய்தி என்றாலும், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.</p> <p>கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாதவாரியாக எவ்வளவு பாதிப்புகள் என்ற விவரமும் கிடைத்திருக்கிறது. அதில் ஜனவரியில் 1,722 பேரும், பிப்ரவரியில் 1,322 பேரும், மார்ச்சில் 1,228 பேரும், ஏப்ரலில் 1,201 பேரும், மே மாதத்தில் 1,062 பேரும், ஜூனில் 1,384 பேரும், ஜூலையில் 2,339 பேரும், ஆகஸ்டில் 3,315 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>சென்னை, கோவையில்...</h2><p>அதாவது ஜனவரியில் பாதிப்பின் தாக்கம் ஏற்றம் கண்டு பிறகு குறைந்து வந்து ஜூனில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் பாதிப்புகள் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.</p> <p>கடந்த ஆண்டு ஜூலையில் 1,880 பேர் என்றிருந்த பாதிப்பு இந்த ஆண்டில் 2,339 பேராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 1,832 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை, இந்த ஆண்டில் 3,315 ஆக எகிறியுள்ளது.</p><p>இதில் அதிகம் சென்னை மாவட்டத்தில்தான் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்டு வரையிலான தமிழ்நாடு மொத்த டெங்கு பாதிப்பான 13.573-ல் சென்னையில் மட்டும் 2.584 ஆக உள்ளது. அதற்கடுத்தபடியாக கோவையில் 1,999 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>மழைக்காலம்</h2><p>ஆண்டுவாரியான பாதிப்பில் கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு வெகுவாக குறைந்து. ஆண்டு பாதிப்பு 25,533 ஆக இருந்தது.</p><p>இந்த நிலையில் நடப்பாண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான எண்ணிக்கையில் 13,573 ஆக உள்ளது. இன்னும் மழைக்காலம் வேற தொடங்க இருக்கிறது. எனவே நோய் பாதிப்பு எப்படி இருக்கும்? என்பதை கணிக்க முடியாது.</p> <h2>பன்றிக் காய்ச்சல்</h2><p>இதேபோல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">பன்றிக் காய்ச்சல்</a> பாதிப்பைப் பொறுத்தவரையில், இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1,558 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் பாதிப்புப் பட்டியல்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.</p><p>2010-ம் ஆண்டில் இருந்து பன்றிக் காய்ச்சல் பாதிப்பை ஒப்பிடும்போது, 2024, 2025-ம் ஆண்டை விட நடப்பாண்டில் பாதிப்பு அதிகரித்து இருப்பது புள்ளிவிவரத்தில் தெரிகிறது.</p> <p>2024-ல் 1,777 பேரும், 2025-ல் 1,288 பேரும் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் இந்த ஆண்டில் 1,791 ஆக உள்ளது.</p><p>மாதம் வாரியான பாதிப்பில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்டில் பல மடங்கு பாதிப்பு உயர்ந்திருக்கிறது. உதாரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் 46 ஆக இருந்த பன்றிக் காய்ச்சல் பாதிப்பு, இந்த ஆண்டில் 645 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>கவனம் வேண்டும்</h2><p>இவ்விரு நோய்களும் தனிமனிதனின் உடல்நலத்தைப் பாதிப்பதோடு மட்டுமின்றி, சமூகத்தில் ஒரு சுகாதார நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றன.</p><p>எனவே, உரிய விழிப்புணர்வு, சுற்றுப்புறத் தூய்மை, கொசு ஒழிப்பு மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகளே இவற்றின் பிடியிலிருந்து மக்களைக் காப்பதற்கான அத்தியாவசிய தேவைகளாக உள்ளன. மேலும், தனிமனித நடவடிக்கை, சுகாதார பாதுகாப்பு போன்ற முன்னெச்சரிக்கை முன்னெடுப்புகளை மிகுந்த கவனத்தோடு மக்கள் பின்பற்ற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.</p> <h2>சென்னையில் பாதிப்பு ஏன் அதிகம்?</h2><p>சென்னையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவுவது குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:-</p><p>சென்னையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக இருக்க முக்கிய காரணம் பொது சுகாதாரத்துறையின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாதது தான். மக்கள்தொகை அடர்த்தியாக இருப்பதால், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று எளிதில் பரவுகிறது. பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காணப்படும் நபர்கள் 5 நாட்களாவது தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.</p><p>ஆனால், காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்கள் முகக்கவசம் கூட அணியாமல் பொது இடங்களுக்கு சென்று நோய் பரவலை அதிகப்படுத்துகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு தென்பட்டால் அவர்கள் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பரவும் தன்மை கொண்ட காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. மேலும், பொதுமக்கள் காய்ச்சல் தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p> ]]></content:encoded></item><item><title>கேரளாவில் கோர விபத்து-  தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-accident-8-tamil-nadu-students-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-accident-8-tamil-nadu-students-killed#comments</comments><guid isPermaLink="false">465d9349-7c0a-49da-b9ee-b11b33e8767b</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:18:39 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:18:39.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,சாலை விபத்து,road accident,student death,கேரளா,மாணவர்கள் உயிரிழப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ixbjjnez/accident.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Road Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ixbjjnez/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>கைப்பமங்கலத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>விபத்தில் உயிரிழந்த 8 பேரில் திண்டுக்கல் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>இதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வா, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D" rel="nofollow">திண்டுக்கல்</a> மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ், யுவசஞ்சித், மதுரையைச் சேர்ந்த பிரசன்னா ஆகிய 5 பேர் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்சென்றனர்.</p><p>மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>விபத்துக்கான காரணம் என்ன?</h2><p>கேரளம் மாநிலத்தின் பனம்பிக்குன்னு என்ற இடத்தில் சாலை பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>மாற்றுப்பாதையில் வாகனம் திருப்பிவிடப்படுவது குறித்த எச்சரிக்கை பலகை சரியான இடத்தில் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>500 மீட்டருக்கு முன்னரே தடுப்பு, எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் விபத்து நேர்ந்திருக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 5.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்...</title><link>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-43</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-43#comments</comments><guid isPermaLink="false">354c3b77-e805-4da5-be77-a3b668411fcb</guid><pubDate>Sat, 05 Sep 2026 01:40:01 +0000</pubDate><atom:updated>2026-09-05T01:40:01.270Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/03/25820381-rasipalan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/03/25820381-rasipalan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>செல்வாக்கு உயரும் நாள். சேமிக்கும் எண்ணம் செயல்படும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். பெற்றோர் வழிப் பிரச்சினைகள் தீரும்.</p><h2>ரிஷபம்</h2><p>வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள், நல்ல மனிதர்களின் கிடைக்கும். தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p><h2>மிதுனம்</h2><p>இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.</p><h2>கடகம்</h2><p>நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகப் பிரச்சினை அகலும்.</p><h2>சிம்மம்</h2><p>தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும் நாள். வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.</p><h2>கன்னி</h2><p>யோகமான நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்பு வரலாம்.</p><h2>துலாம்</h2><p>விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். அலைச்சலுக் கேற்ற ஆதாயம் கிடைக்காது. விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் விழிப்புணர்ச்சி தேவை.</p><h2>விருச்சிகம்</h2><p>மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும் நாள். வரவை எதிர்பார்த்துச் செய்த காரிய மொன்றில் செலவுகள் ஏற்படும். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.</p><h2>தனுசு</h2><p>விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோக முயற்சி கைகூடும்.</p><h2>மகரம்</h2><p>பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பாதியில் நின்ற கட்டிடப்பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு.</p><h2>கும்பம்</h2><p>தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் ரீதியான அலைச்சல் உண்டு. குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.</p><h2>மீனம்</h2><p>நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வர்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 5 செப்டம்பர் 2026: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் உற்சவாரம்பம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-5-september-2026-pillayarpatti-karpaga-vinayagar</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-5-september-2026-pillayarpatti-karpaga-vinayagar#comments</comments><guid isPermaLink="false">425b12b1-50ce-4a1d-b34d-246072886af0</guid><pubDate>Sat, 05 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-05T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/20/26791735-vinayagar4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/20/26791735-vinayagar4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-19 (சனிக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   நவமி இரவு 9.21 மணி வரை பிறகு தசமி</p><p>நட்சத்திரம் : மிருகசீர்ஷம் இரவு 9.44 மணி வரை பிறகு திருவாதிரை</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் உற்சவாரம்பம்</h2><p>பாஞ்ச ராத்திர ஸ்ரீ ஜெயந்தி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் உற்சவாரம்பம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் உற்சவாரம்பம் இரவு மூஷிக வாகனத்தில் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். </p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - தெளிவு</p><p>ரிஷபம் - புகழ்</p><p>மிதுனம் - ஆக்கம்</p><p>கடகம் - விவேகம்</p><p>சிம்மம் - உயர்வு</p><p>கன்னி - போட்டி</p> <p>துலாம் - உண்மை</p><p>விருச்சிகம் - தெளிவு</p><p>தனுசு - நலம்</p><p>மகரம் - வரவு</p><p>கும்பம் - மேன்மை</p><p>மீனம் - உண்மை</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-prices-in-chennai-today</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-prices-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">4aceb899-938b-48db-ba1d-aa3575fa30e4</guid><pubDate>Sat, 05 Sep 2026 01:28:00 +0000</pubDate><atom:updated>2026-09-05T01:28:00.875Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய பெட்ரோல் விலை,Todays petrol price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (05.09.2026 - சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>கச்சா எண்ணெய் விலை</p><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 95.90 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் போர் எங்களுக்கு சின்ன விஷயம் - அதிபர் டிரம்ப் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-calls-iran-conflict-small-potatoes</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-calls-iran-conflict-small-potatoes#comments</comments><guid isPermaLink="false">ad2c8042-64c1-4337-ad36-5d7016cbd310</guid><pubDate>Sat, 05 Sep 2026 00:31:42 +0000</pubDate><atom:updated>2026-09-05T00:31:42.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஈரான்,Iran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/x2iia7t6/Donald-Trump.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/x2iia7t6/Donald-Trump.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கிழக்குப் பகுதியில் பல மாதங்களாக அவ்வப்போது நடைபெறும் தாக்குதல்கள் 'போர்' அல்ல என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியதை ஆதரித்து அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a>, ஈரான் போர் போன்ற மோதல் 'சின்ன விஷயம்' என்று குறிப்பிட்டார். </p><p>ஜே.டி. வான்ஸ் தெரிவித்த கருத்துகள் குறித்து ஓவல் அலுவலகத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், <a href="https://www.maalaimalar.com/news/world">ஈரான்</a> மீதான அமெரிக்க தாக்குதல்கள் தற்போது "அவ்வப்போது" மட்டுமே நடைபெறுவதாக குறிப்பிட்டார். </p><p>மேலும், அமெரிக்க வரி செலுத்துவோருக்கு 37.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான செலவை ஏற்படுத்தியதும், 18 அமெரிக்க ராணுவ வீரர்களின் உயிரைப் பறித்ததுமான இந்த மோதலின் தீவிரத்தை அவர் குறைத்து மதிப்பிடுவது போல் பேசினார்.</p><h2>ஈரான் போர் சின்ன விஷயம்:</h2><p>"அவர் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் இதை ஒரு ராணுவ மோதல் என்றுதான் அழைப்பேன்; ஏனெனில் இது எங்களுக்கு ஒரு சிறிய விஷயம் (சின்ன விஷயம்) மட்டுமே. இது பெரிய விஷயமல்ல," என்றும் அதிபர் டிரம்ப் கூறினார்.</p><p>ஈரான் உடனான அமெரிக்காவின் மோதலை விவரிக்க 'போர்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் வான்ஸ் வியாழக்கிழமை நிராகரித்தார். அதேவேளையில், ஆறு மாதங்களாக நீடிக்கும் இந்த மோதல் நவம்பர் இடைக்கால தேர்தலுக்குள் முடிவுக்கு வருமா என்பது குறித்த கணிப்புகளை தவிர்க்கவும் அவர் முயன்றார்.</p><h2>போர் என்று அழைக்கமாட்டேன்:</h2><p>குறிப்பிடத்தக்க வகையில், இந்த தேர்தலில் குடியரசு கட்சியினர் நாடாளுமன்றத்தில் தங்கள் வசமுள்ள மிக குறைந்த அளவிலான பெரும்பான்மையை தக்கவைக்க முயற்சித்து வருகின்றனர்.</p><p>நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்பாகவே இந்த மோதல் முடிவுக்கு வருமா என்று வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டபோது, ​​"நான் இதை போர் என்று அழைக்கமாட்டேன். தற்போதைய நிலையில், தீவிரமான துப்பாக்கிச் சண்டை எதுவும் நடைபெறவில்லை," என்று வான்ஸ் கூறினார்.</p><p>வாரத்தின் தொடக்கத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் கூட்டாளியான குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையிலேயே வான்ஸின் இந்தக் கருத்து வெளியானது.</p>]]></content:encoded></item><item><title>ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் ஷூட்டிங் அப்டேட் - புது வீடியோ வெளியிட்ட படக்குழு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rajinikanth-starrer-dharman-2nd-schedule-shooting-wrapped</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rajinikanth-starrer-dharman-2nd-schedule-shooting-wrapped#comments</comments><guid isPermaLink="false">7be0bdd2-4c1e-4047-b117-df80d5c13bb5</guid><pubDate>Sat, 05 Sep 2026 00:01:15 +0000</pubDate><atom:updated>2026-09-05T00:01:15.016Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,ரஜினிகாந்த்,Ashwath Marimuthu,அஷ்வத் மாரிமுத்து,Dharman,தர்மன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/5t82ymet/Dharman.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dharman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/5t82ymet/Dharman.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/rajinikanth">ரஜினிகாந்த்</a> நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.</p><p>கடந்த ஆகஸ்ட் மாதம் <a href="https://www.maalaimalar.com/topic/dharman">தர்மன்</a> படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த வீடியோவில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்த் தனது வழக்கமான ஸ்டைலுடனும் கம்பீரத்துடனும் நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><h2>தர்மன் நடிகர்கள் குழு:</h2><p>‘தர்மன்’ படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர், ' பேட்ட ' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் உடனும், 'பஞ்சதந்திரம்' மற்றும் 'பம்மல் கே சம்பந்தம்' படங்களுக்குப் பிறகு கமல்ஹாசனுடனும் மீண்டும் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.</p><p>மிஷ்கின் மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதனை இதுவரை படக்குழு உறுதி செய்யவில்லை. படத்தின் மற்ற விவரங்கள் தற்போதைக்கு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.</p><h2>தர்மன் தொழில்நுட்ப குழு:</h2><p>‘தர்மன்’ படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நிகேத் பொம்மியும் படத்தொகுப்பை பிரதீப் இ ராகவ் கையாள்கிறார். புகழ்பெற்ற சண்டைக் கலை இயக்குநர்களான அன்பரிவ் சகோதரர்கள் இந்தப்படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர்.</p><p>கடந்த ஆண்டு நவம்பரில் சுந்தர் சி இப்படத்தின் இயக்குநராக முதலில் அறிவிக்கப்பட்டார், ஆனால் அவர் திடீரென இப்படத்தில் இருந்து விலகினார். பின்னர் , 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' திரைப்படங்களை இயக்கிய இயக்குநனர் அஷ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குவதாக தயாரிப்பாளர்களால் உறுதி செய்யப்பட்டது.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Eb0_I0z9YWc"></iframe></figure>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: திரிசூலி பஜார் பகுதியில் 5 வயது சிறுவன் உட்பட 3 இந்தியர்கள் மீட்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-5-year-old-among-3-indians-rescued-from-trishuli-bazaar-area</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-5-year-old-among-3-indians-rescued-from-trishuli-bazaar-area#comments</comments><guid isPermaLink="false">09bf58f9-e500-4d9c-af10-5d8c72c6448d</guid><pubDate>Fri, 04 Sep 2026 21:59:12 +0000</pubDate><atom:updated>2026-09-04T21:59:12.825Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>indians,Nepal Floods,இந்தியர்கள்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/whpr3qmf/Nepal-site.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/whpr3qmf/Nepal-site.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">நேபாள</a> வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரிசூலி பஜார் பகுதியிலிருந்து மேலும் மூன்று இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 வயது சிறுவனும் அடங்குவார். </p><p>இதன் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 169-ஆக உயர்ந்துள்ளது; அதேவேளையில் 275 <a href="https://www.maalaimalar.com/topic/indians">இந்தியர்கள்</a> இன்னும் காணாமல் போயுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.</p><p>இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கூடுதல் தகவல்களை பகிர்ந்துகொண்ட வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், 1,907 இந்தியர்கள் சீனாவில் இருந்து நேபாளத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.</p><h2>மூன்று பேர் மீட்பு:</h2><p>திரிசூலி பஜார் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அந்த மூவர் அபிஜித் சுரேஷ் பவார், தீபிகா அபிஜித் பவார் மற்றும் 5 வயது சமர்த் அபிஜித் பவார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய ஜெய்ஸ்வால், அவர்கள் தாயகம் திரும்புவதற்கான விமான பயண ஏற்பாடுகளை காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.</p><p>ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து, அந்நாட்டிற்கு இந்தியா சுமார் 95 டன் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் மேலும் சில உடல்களை மீட்டதை தொடர்ந்து, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,295-ஆக உயர்ந்துள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>5000 பேர் மாயம்:</h2><p>அவசரகால மீட்புக் குழுக்கள் 12,000-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டிருந்தாலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுமார் 5,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><p>"எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, 275 இந்தியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளனர். நாங்கள் நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். இது தொடர்பாக நேபாள அதிகாரிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்," என்று ஜெய்ஸ்வால் தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.</p><p>தொடர்ந்து பேசும் போது, "சீனாவின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, சீனாவின் திபெத் பகுதியில் இந்திய பயணிகள் யாரும் இல்லை. நேபாள அரசாங்கம் கோரியுள்ள கூடுதல் தடயவியல் உபகரணங்கள், பெய்லி பாலங்கள் மற்றும் பிற பொருட்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்," என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அசாம் ரெயில் தண்டவாளத்தில் நிலச்சரிவு: மிசோரம் செல்லும் ரெயில் சேவைகள் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/train-services-to-mizoram-suspended-after-landslide-hits-rail-track-in-assam</link><comments>https://www.maalaimalar.com/news/national/train-services-to-mizoram-suspended-after-landslide-hits-rail-track-in-assam#comments</comments><guid isPermaLink="false">9f983ab0-776a-4951-9fd5-bb6800cb6d93</guid><pubDate>Fri, 04 Sep 2026 21:11:59 +0000</pubDate><atom:updated>2026-09-04T21:11:59.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>landslide,ரெயில் சேவை,train service,mizoram,நிலச்சரிவு,மிசோரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/yn335tlp/Landslide-Hits-Rail-Track.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Landslide Hits Rail Track]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/yn335tlp/Landslide-Hits-Rail-Track.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">அசாம்</a> மாநிலத்தின் ஹைலாகண்டி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரெயில் தண்டவாள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மிசோரம் மாநிலம் பைராபிக்கு செல்லும் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>வியாழக்கிழமை மாலை பெய்த இடைவிடாத மழையை தொடர்ந்து, அசாம்-<a href="https://www.maalaimalar.com/topic/mizoram">மிசோரம்</a> எல்லை பகுதியில் உள்ள ஜமீரா மற்றும் பைராபிக்கு இடையேயான ரெயில் தண்டவாளத்தின் சுமார் 50 மீட்டர் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.</p><h2>சீரமைப்பு பணிகள் தொடக்கம்:</h2><p>பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பகுதி வழியாக ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. </p><p>தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் தொழிலாளர்களுடன் பாதிக்கப்பட்ட இடத்திற்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.</p><p>ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளனர், மேலும் தண்டவாளத்தை விரைவில் சீரமைப்பதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.</p><h2>ரெயில் சேவை ரத்து:</h2><p>வியாழக்கிழமை இயக்கப்பட்ட சில்சார்-பைராபி பயணிகள் ரெயில், ஜமீராவில் தனது பயணத்தை நிறைவு செய்தது. அந்த ரெயில் இன்று ஜமீராவில் இருந்து தனது திரும்பும் பயணத்தை தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. பைராபி நோக்கி பயணிக்கும் பயணிகளுக்காக மாற்று சாலை போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>கவுகாத்தி-சைராங் ரெயில் ஹைலாகண்டியில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது. மேலும், ஹைலாகண்டிக்கும் சைராங்கிற்கும் இடையிலான அதன் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இயக்கப்பட இருந்த பைராபி-சில்சார், சைராங்-கொல்கத்தா மற்றும் சில்சார்-சைராங் ரெயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><h2>சிறப்பு உதவி மையங்கள்:</h2><p>சிக்கித் தவிக்கும் பயணிகளுக்காக, வடகிழக்கு ரெயில்வே ஜமீரா, பைராபி மற்றும் சாய்ரங் நிலையங்களில் குடிநீர் மற்றும் சிற்றுண்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், பயணிகளுக்கு ரெயில் சேவைகள் குறித்த தகவல்கள், பயணச்சீட்டு தொடர்பான உதவிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஆதரவை வழங்குவதற்காக கவுகாத்தி, லும்டிங், நஹர்லாகுன், படர்பூர் மற்றும் சாய்ரங் நிலையங்களில் சிறப்பு உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.</p><p>வடகிழக்கு ரெயில்வே நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஹைலாகண்டி மாவட்டத்தின் ஜமீரா-பைராபி பிரிவில் சேதமடைந்த ரெயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. ரெயில் சேவைகளை விரைவில் மீட்டெடுக்க ரெயில்வே துறை செயல்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் பயன்படுத்திய விமானியை பணிநீக்கம் செய்தது ஏர் இந்தியா</title><link>https://www.maalaimalar.com/news/national/phuket-flight-pilot-who-failed-drug-test-sacked-by-air-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/phuket-flight-pilot-who-failed-drug-test-sacked-by-air-india#comments</comments><guid isPermaLink="false">1ef19e33-8fe5-4f59-b50b-2b24565fea09</guid><pubDate>Fri, 04 Sep 2026 20:24:28 +0000</pubDate><atom:updated>2026-09-04T20:24:28.190Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏர் இந்தியா,Air India,Phuket,Flight Pilot,புக்கெட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-02/2mt2aa30/tn-21.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-02/2mt2aa30/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி, தாய்லாந்தின் <a href="https://www.maalaimalar.com/news/world">புக்கெட்</a> நகரில் இருந்து இன்று இந்தியாவின் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.</p><p>நடுவானில் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென <a href="https://www.maalaimalar.com/topic/flight">விமானம்</a> சுமார் 300 அடி கீழே சரிந்தது. இதனால் சில பயணிகள் முன்னால் உள்ள இருக்கைகள் மீது மோதினர். </p><p>மேலும், பயணிகள் பலரும் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். பின்னர் விமானம் சமநிலைக்கு வந்து, பத்திரமாக டெல்லியில் தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் 24 பயணிகள் காயமடைந்தனர்.</p><h2>பணிநீக்க நடவடிக்கை:</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை நடத்தியது. இதன்படி முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தின்போது தலைமை விமானி சுதீப் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. </p><p>இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இந்த நிலையில், விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையை ஏற்று, தலைமை விமானி சுதீப்பை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"பூக்கெட்-டெல்லி விமானத்தின் தலைமை விமானிக்கு மனநிலையை மாற்றும் பொருள் ஒன்று இருந்தது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. பாதுகாப்பு, உடற்தகுதி அல்லது ஒழுங்குமுறை தேவைகளை மீறுவதில் ஏர் இந்தியாவின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறைக்கு இணங்க, அந்த விமானியின் பணி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது," என்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>விமான விபத்து புலனாய்வு பணியகம், தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையில், 145 பயணிகளை ஏற்றி சென்ற ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானம் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ​​அதன் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் செயலிழந்ததாக குறிப்பிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் பாதுகாப்பு சேவை தலைமையகத்தை தாக்கிய ரஷிய டிரோன்</title><link>https://www.maalaimalar.com/news/world/russian-drone-hits-ukraines-intelligence-service-headquarters-in-kyiv</link><comments>https://www.maalaimalar.com/news/world/russian-drone-hits-ukraines-intelligence-service-headquarters-in-kyiv#comments</comments><guid isPermaLink="false">bfaa64ea-0777-4c7b-905a-943269966093</guid><pubDate>Fri, 04 Sep 2026 19:42:50 +0000</pubDate><atom:updated>2026-09-04T19:42:50.643Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,கீவ்,Kyiv,ரஷியா,உக்ரைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/7z3aabwq/Kyiv-Attacked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kyiv Attacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/7z3aabwq/Kyiv-Attacked.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கீவ் நகரில் உள்ள உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவைகளின் தலைமையகத்தை ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியதாக <a href="https://www.maalaimalar.com/news/world">உக்ரைன்</a> அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அதேவேளையில், சம்பவ இடத்திற்கு அருகில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்ததை ஏ.எஃப்.பி. செய்தியாளர் ஒருவர் கண்டார்.</p><p>உக்ரைன்ஸ்கா பிரவ்தா செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், கட்டிடத்தின் முன்புறத்தில் உள்ள குறைந்தது இரண்டு ஜன்னல்களில் இருந்து கருப்பு புகை வெளியேறுவது போல தெரிந்தது, அதே நேரத்தில் வெளியே ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.</p><h2>தீவிரமடையும் தாக்குதல்:</h2><p>நகர மையத்தின் மீதான தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்தனர் என கீவ் நகர மேயர் விட்டாலி கிளிச்கோ தெரிவித்தார். சமீபத்திய வாரங்களில் ரஷியா, உக்ரைன் மீதான தனது பகல் நேர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. சில சமயங்களில், வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்க கடினமான ஜெட் விமானங்களையும் அது பயன்படுத்துகிறது.</p><p>தாக்குதலுக்கு பிறகு "SBU-வின் தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாடுடன்" பேசியதாக ஜெலென்ஸ்கி கூறினார். "துரதிர்ஷ்டவசமாக, கீவ் நகரின் வோலோடிமிர்ஸ்கா தெருவில், புனித சோபியா பேராலயத்திற்கு எதிரே உள்ள SBU-வின் மைய கட்டிடத்தின் மீது ஒரு ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியுள்ளது," என்று ஜெலென்ஸ்கி டெலிகிராமில் தெரிவித்தார்.</p><h2>ஜெலன்ஸ்கி அறிவுறுத்தல்:</h2><p>"அந்தக் கட்டிடத்தில் உள்ள பாதுகாப்பு சேவை தலைவரின் அலுவலகத்தை ஆளில்லா விமானம் நேரடியாகs குறிவைத்தது," என்று அவர் மேலும் கூறினார்.</p><p>"எல்லாம் தயாரானதும், ரஷியர்களுக்கு பொருத்தமான, உறுதியான பதிலடியை கொடுக்குமாறும், முடிந்தால் இந்த தாக்குதலை பிரதிபலிக்கும் வகையிலான பதிலடியை கொடுக்குமாறும்" SBU தலைவருக்கு அறிவுறுத்தியதாக ஜெலன்ஸ்கி கூறினார்.</p><h2>அமெரிக்கா பேச்சுவார்த்தை:</h2><p>ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மருமகனான ரஷியா பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், ரஷிய டிரோன் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கற்பித்தலில் ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு</title><link>https://www.maalaimalar.com/news/national/president-droupadi-murmu-urges-teachers-to-use-technology-in-education</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-droupadi-murmu-urges-teachers-to-use-technology-in-education#comments</comments><guid isPermaLink="false">58c11c88-acaa-4ac2-921a-0f47155bf5f1</guid><pubDate>Fri, 04 Sep 2026 18:54:33 +0000</pubDate><atom:updated>2026-09-04T18:54:33.737Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>திரவுபதி முர்மு,teachers day,ஆசிரியர் தினம்,குடியரசு தலைவர்,President,Droupadi Murmu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/eetnsyuq/Prez-droupadi-murmu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Droupadi Murmu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/eetnsyuq/Prez-droupadi-murmu.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/droupadi-murmu">திரவுபதி முர்மு</a> நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.</p><p>தனது செய்தியில், ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படும் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை <a href="https://www.maalaimalar.com/news/national">குடியரசு தலைவர்</a> நினைவு கூர்ந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திய அவர், ஒரு அறிஞராக, தத்துவஞானியாக மற்றும் ஆசிரியராக ஆற்றிய பங்களிப்பை பாராட்டினார்.</p><h2>ஆசிரியர்களுக்கு வாழ்த்து:</h2><p>"ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள நமது ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் தினம், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த எழுத்தாளரும் தத்துவஞானியுமான டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.</p><p>அவர் ஒரு மிகச்சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தார். இந்த நன்னாள் வேளையில், அவருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். ஆசிரியர்கள், தங்கள் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் மூலம், திறமைகளை வளர்ப்பதிலும் குணநலன்களை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.</p><h2>குடியரசு தலைவர் வலியுறுத்தல்:</h2><p>மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவது அவர்களின் கடமையாகும். அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட ஒரு ஆசிரியர், மாணவர்களின் தனித்துவமான ஆற்றலை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாக திகழ்ந்து, சிறந்து விளங்க அவர்களை ஊக்குவிப்பார்.</p><p>ஆசிரியர்கள் தங்கள் அறிவை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, புதுமையான கற்பித்தல் முறைகளைக் கையாள வேண்டும். அவர்கள் மாணவர்களிடையே சுயசிந்தனையை ஊக்குவித்து, ஆராயும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்," என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.</p><h2>ஆசிரியர்களுக்கு நன்றி:</h2><p>கல்வியாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தேசத்தின் முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய எதிர்காலத் தலைமுறைகளை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளது என்று கூறினார்.</p><p>"தங்கள் பங்களிப்பிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் அறிவொளி பெற்ற தலைமுறைகளை அனைத்து ஆசிரியர்களும் உருவாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்," என்று ஜனாதிபதி முர்மு கூறினார்.</p><p>ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, ஜனாதிபதி 25 ஆசிரியர்களையும் கௌரவிக்க உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆழ்கடலில் அதிரடி ஆக்ஷன்: நடிகர் சூரியின் &quot;மண்டாடி&quot; டிரெய்லர் வெளியானது</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-soori-starrer-mandaadi-trailer-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-soori-starrer-mandaadi-trailer-released#comments</comments><guid isPermaLink="false">b1e4d013-8565-4757-9d76-a43e84c01273</guid><pubDate>Fri, 04 Sep 2026 18:06:22 +0000</pubDate><atom:updated>2026-09-04T18:06:22.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Soori,Mandaadi,சூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/c90q6b7m/Mandaadi-Trailer-Poster.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mandaadi Trailer Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/c90q6b7m/Mandaadi-Trailer-Poster.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் நடிகர் சூரி கூட்டணியில் உருவாகி இருக்கும் <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> "மண்டாடி". இந்தப் படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்துடன் நடிகர்கள் சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.</p><p>மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகு போட்டி அடிப்படையில் <a href="https://www.maalaimalar.com/topic/mandaadi">மண்டாடி</a> படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>இசை வெளியீடு:</h2><p>முன்னதாக இந்தப் படத்தில் இருந்து ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ என அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. </p><p>குறிப்பாக ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் நடிகர் சூரியின் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.</p><h2>டிரெய்லர் வெளியீடு:</h2><p>மண்டாடி திரைப்படத்தில் முத்துக்காளி எனும் கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும், படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படத்தின் வெளியீடு ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது.</p><p>இந்த நிலையில், மண்டாடி திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் படகுப் போட்டி, ஆக்ஷன் என மண்டாடி உலகிற்கு ரசிகர்களை அழைத்து செல்லும் வகையில் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. </p><p>இந்தப் படத்திற்கு யு/ஏ 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/VOHaf-0DV-U"></iframe></figure>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை: இந்தோனேசியாவை எளிதில் வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம் - 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-uae-w-beat-idn-w-by-6-wickets</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-uae-w-beat-idn-w-by-6-wickets#comments</comments><guid isPermaLink="false">68679fcd-34f1-449f-bf3a-f31bc53b1e43</guid><pubDate>Fri, 04 Sep 2026 17:19:01 +0000</pubDate><atom:updated>2026-09-04T17:19:01.988Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/adeubtz8/UAE-W-Won.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UAE W Won]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/adeubtz8/UAE-W-Won.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துபாயில் நடைபெற்று வரும் மகளிர் <a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup-2026">ஆசிய கோப்பை</a> டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடரின் இன்றைய ஆட்டத்தில் க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தோனேசியா மகளிர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிகள் மோதின. </p><p>இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்தோனேசிய மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. </p><p>அந்த அணிக்கு துவக்கம் கொடுத்த மரியா கோரசோன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீராங்கனையான ரஹமாவதி பங்கெஸ்துதி 2 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார்.</p><h2>இந்தோனேசியா ஏமாற்றம்:</h2><p>தொடர்ந்து களமிறங்கிய நி லூ தேவி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நந்தா சகரினி பொறுப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். நிதானமாக ஆடிய இவர் 52 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களை (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். பின்னர் களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.</p><p>இதனால் இந்தோனேசிய மகளிர் அணி 19.4 ஓவர்களில் வெறும் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுரக்ஷா கோடீ 3 விக்கெட்டுகளையும், இஷா ஓஸா, ஹீனா, வைஷ்ணவி தலா 2 விக்கெட்டுகளையும், சமைரா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.</p><h2>யுஏஇ அபாரம்:</h2><p>74 எனும் எளிய இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த தீர்த்தா சதிஷ் 11 ரன்கள் எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் இஷா 29 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். </p><p>பின்னர் களமிறங்கிய ரினிதா 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே ரன் குவிப்பில் கவனம் செலுத்திய ஐக்கிய அரபு அமீரகம் கடைசியில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.</p><p>இறுதியில் ஐக்கிய அரபு அமரீகம் மகளிர் அணி 13.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்களை எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தோனேசியா மகளிர் அணி சார்பில் சோஃபியா 2 விக்கெட்டுகளையும், அரியானி மற்றும் சங் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 - இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமானது </title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/royal-enfield-himalayan-440-launched-at-budget-price-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/royal-enfield-himalayan-440-launched-at-budget-price-in-india#comments</comments><guid isPermaLink="false">301bced4-274e-4f91-8a23-18374cdd4e88</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:39:17 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:39:17.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Royal Enfield,ராயல் என்ஃபீல்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/qla1n03o/Untitled-design-18.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Royal Enfield Himalayan 440]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/qla1n03o/Untitled-design-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய மேம்படுத்தப்பட்ட அட்வென்ச்சர் பைக்கான ஹிமாலயன் 440 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. </p><p>இந்த புதிய மாடல், ஹிமாலயன் பெயர் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடுவதோடு, பெரிய 443சிசி என்ஜின் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபிரேமையும் கொண்டுள்ளது.</p><p>ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் 440 மாடலின் முதல் யூனிட்களில் உள்ள எரிபொருள் டேங்கில் 10-ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் சிறப்பு பேட்ஜ் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த மோட்டார்சைக்கிள் சேலா பிளாக், மஸ்டாங் பிரவுன் மற்றும் நெலாங் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. ராயல் என்ஃபீல்டு டீலர்ஷிப்கள் மற்றும் நிறுவனத்தின் இணையதளம் வழியாக செப்டம்பர் 4 அன்று முன்பதிவுகள் தொடங்கின.</p><p>443சிசி, ஒற்றை-சிலிண்டர், லாங்-ஸ்ட்ரோக் என்ஜின் மூலம் இந்த பைக் இயக்கப்படுகிறது. இது 6,250 ஆர்.பி.எம்.மில் 25.4 பி.எச்.பி சக்தியையும், 4,000 ஆர்.பி.எம்.மில் 34 என்.எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.</p><p>இந்த மோட்டார், அசல் ஹிமாலயனில் இருந்த ஐந்து-வேக கியர்பாக்ஸ் அமைப்புக்கு பதிலாக, ஆறு-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. </p><p>சத்தம், அதிர்வு மற்றும் கடினத்தன்மை அளவுகள் உட்பட, மென்மையை மேம்படுத்தும் நோக்கில் என்ஜினிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ராயல் என்ஃபீல்ட் கூறுகிறது.</p><p>ஹிமாலயன் 440, ஹாஃப்-டூப்ளெக்ஸ் ஸ்ப்ளிட்-கிரேடில் ஃபிரேமைப் பயன்படுத்துகிறது. இதன் சஸ்பென்ஷனில், 200 மிமீ பயண தூரம் கொண்ட 41 மிமீ டெலஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க்குகளும், 180 மிமீ பயண தூரம் வழங்கும் லிங்கேஜ்-வகை பின்பக்க மோனோ ஷாக்கும் அடங்கும்.</p><p>இந்த மோட்டார் சைக்கிள், கரடுமுரடான சாலைகள் மற்றும் கரடுமுரடான பாதைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு 21-அங்குல முன்பக்க மற்றும் 17-அங்குல பின்பக்க வயர்-ஸ்போக் சக்கரங்களைக் கொண்டுள்ளது.</p><p>இது 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 800 மிமீ இருக்கை உயரத்தைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இரண்டு-பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிப்பருடன் கூடிய 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் மூலம் பிரேக்கிங் கையாளப்படுகிறது.</p><p>ஹிமாலயன் 440 மாடலில் புதிய LED முகப்பு விளக்கு, டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிரிப்பர் நேவிகேஷன் மற்றும் USB டைப்-c சார்ஜிங் போர்ட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.</p><p>15 லிட்டர் எரிபொருள் தொட்டி மற்றும் மேம்படுத்தப்பட்ட லக்கேஜ் ஏற்றிச் செல்லும் திறன் ஆகியவை இதன் சுற்றுலா நோக்குக்கு வலு சேர்க்கின்றன.</p><p>ராயல் என்ஃபீல்டு, கடினமான பக்கவாட்டுப் பெட்டிகள், டாப் பாக்ஸ், டூரிங் இருக்கைகள், கைக்காப்புகள், என்ஜின் கார்டுகள், ஸ்லைடர்கள் மற்றும் கூம்பு வடிவக் கண்ணாடிகள் உள்ளிட்ட துணைக்கருவிகளை வழங்குகிறது.</p><h3><strong>விலை</strong></h3><p>இவை, உரிமையாளர்கள் தங்களது மோட்டார்சைக்கிளை அன்றாடப் பயணங்கள், வார இறுதிப் பயணங்கள் அல்லது நீண்ட சாகசப் பயணங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள உதவுகின்றன.</p><p>இந்த புதிய மாடலின் விலை ரூ. 2.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்று விலை நிர்ணயம் செய்யட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஃபுல் சார்ஜில் 535கி.மீ. செல்லும் ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/range-rover-electric-unveiled-bookings-open</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/range-rover-electric-unveiled-bookings-open#comments</comments><guid isPermaLink="false">aaf8c6fc-0c46-44e4-8c73-f8f3ecad5640</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:39:00 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:39:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எலெக்ட்ரிக் கார்,Electric Car,Range Rover Electric,ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/qucv4boo/Range-Rover-Electric.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Range Rover Electric]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/qucv4boo/Range-Rover-Electric.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது முதல் முழுமையான மின்சார மாடலான <a href="https://www.maalaimalar.com/topic/range-rover">ரேன்ஜ் ரோவர்</a> எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. முந்தைய உலகளாவிய அறிமுகங்களைப் போல் சர்வதேச வெளியீட்டுக்கு பிறகு சில மாதங்கள் வரை தாமதம் செய்யாமல், புதிய மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவிலும் தொடங்கியுள்ளன. </p><p>இந்த எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர், இங்கிலாந்தில் உள்ள அந்த நிறுவனத்தின் சோலிஹல் ஆலையில் தயாரிக்கப்படுகிறது. 1970 முதல் ரேன்ஜ் ரோவரை உற்பத்தி செய்து வரும் அதே ஆலையில்தான் இது தயாரிக்கப்படுகிறது, மேலும் இது அந்த நிறுவனத்தின் முதன்மை மாடலாகவும் விளங்குகிறது.</p><h2>மோட்டார் மற்றும் பவர்:</h2><p>புதிய எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடலில் 349hp பவர் வெளிப்படுத்தும் டூயல் நிரந்தர-காந்த மோட்டார்களில் இருந்து பெறப்படுகிறது. இவை ஒருங்கிணைந்து 543hp வரையிலான பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது, இதற்கு முந்தைய எந்த ரேன்ஜ் ரோவர மாடலையும் விட இந்த எஸ்யூவி-க்கு அதிக டார்க் மற்றும் சத்தமில்லாத செயல்திறனையும் அளிப்பதாக ரேன்ஜ் ரோவர் கூறுகிறது.</p><p>இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள், 800-வோல்ட் கட்டமைப்பில் இயங்கும் இரட்டை அடுக்கு 118.5kWh பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது சுமார் 22 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங் செய்ய உதவுகிறது, அல்லது 350kW சார்ஜரில் வெறும் 10 நிமிடங்களில் சுமார் 220 கிலோமீட்டர்கள் பயண தூரத்தை சேர்க்கிறது.</p><h2>வேரியண்ட் விவரங்கள்:</h2><p>மின்சார சக்திக்கு மாறிய போதிலும், ரேன்ஜ் ரோவர் இந்த மாடலின் பாரம்பரிய ஆஃப்-ரோடு திறனை பாதுகாக்க ஒருங்கிணைந்த டிராக்‌ஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம், மாறும் பரப்புகளுக்கு 50 மில்லி விநாடிகளுக்குள் எதிர்வினையாற்றுகிறது. மேலும் ஒற்றை பெடல் டிரைவிங் மோட் இந்த SUV-ஐ 45 டிகிரி வரையிலான சரிவுகளில் ஏற அனுமதிக்கிறது. ரேன்ஜ் ரோவரின் வழக்கமான அனைத்து நிலப்பரப்பு அளவுகோல்களுக்கு இணங்க, நீரில் செல்லும் ஆழம் 900 மில்லிமீட்டர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>புதிய ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக், ஸ்டாண்டர்ட்-வீல்பேஸ் ஆட்டோபயோகிராஃபி டிரிம் அல்லது லாங்-வீல்பேஸ் SV, SV அல்ட்ரா மற்றும் SV பிளாக் வேரியண்ட்டுகளுக்கு இடையே தேர்வு செய்யலாம். இவற்றுடன், பெல்கிரேவியா கிரீன், சாண்டோரினி பிளாக் அல்லது வரேசைன் ப்ளூ நிறங்களில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இன்டீரியர் டிரிம்முடன் கூடிய ஃபர்ஸ்ட் எடிஷன் மாடலும் உள்ளது. ரேஞ்ச் ரோவர் தனது WLTP-மதிப்பிடப்பட்ட 600 கிலோமீட்டர் அளவிற்கு பதிலாக, இந்த எஸ்யூவி நிஜ உலகில் 535 கிலோமீட்டர் வரை பயணிக்கும் என உறுதியளிக்கிறது.</p><p>இந்தியாவில் ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக் மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்த எஸ்யூவி, இந்தப் பிரிவில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்யூவி, வால்வோ EX90 மற்றும் பிஎம்டபிள்யூ iX போன்ற முழுமையான மின்சார சொகுசு எஸ்.யூ.வி.க்களுடன் போட்டியிடும்.</p>]]></content:encoded></item><item><title>நான் 9 நாட்களாக ‘ஹரே கிருஷ்ணா’ என்று உச்சரித்து கொண்டிருந்தேன்: கிருஷ்ண ஜெயந்தியில் சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளி</title><link>https://www.maalaimalar.com/news/world/i-was-chanting-hare-krishna-for-9-days-worker-rescued-from-tunnel</link><comments>https://www.maalaimalar.com/news/world/i-was-chanting-hare-krishna-for-9-days-worker-rescued-from-tunnel#comments</comments><guid isPermaLink="false">bd60e86c-5a2a-4bcf-8342-3d94e55736d7</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:38:35 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:38:35.005Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாள்,nepal,கிருஷ்ண ஜெயந்தி,Janmashtami,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/9ec5kau6/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Tunnel Rescue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/9ec5kau6/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பேரிடரில் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 30 வயதான தொழிலாளி மீட்கப்பட்டபோது, தான் கடந்த ஒன்பது நாட்களாக ‘ஹரே கிருஷ்ணா’ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்ததாக கூறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில்</a> ஆகஸ்ட் 26 அன்று நேபாள-திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவினால், வடக்கு மற்றும் மத்திய நேபாள பகுதிகளில் உள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.</p><h3><strong>சுரங்கத்தில் சிக்கிய ஊழியர்கள்</strong></h3><p>அப்போது திரிசூலி ஆற்றங்கரையில் உள்ள நீர்மின் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சுரங்கங்களில் மின் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். </p><p>இந்த பேரிடரின் போது மின் மேற்பார்வை ஊழியரான சஞ்சய் சா, கட்டுப்பாட்டு அறையில் மற்ற ஊழியர்களுடன் பணிபுரிந்து கொண்டிருந்தார்.</p><p>அப்போது ஆற்றின் மேல்பகுதியில் ஏற்பட்ட பெருவள்ளம் குறித்த தகவல் கிடைத்ததும், அவருடன் பணியாற்றிய மற்ற தொழிலாளர்களை அங்கிருந்து தப்பி செல்லுமாறு ஷா கூறியுள்ளார்.</p><p>இதையடுத்து சுரங்கத்தில் இருந்து கடைசியாக தப்ப முயன்ற அவரால், பெருவெள்ள இடர்பாடுகளில் சிக்கி தப்பிக்க முடியாமல் போனது.</p><h3><strong>மின் ஊழியர்கள் மீட்பு</strong></h3><p>இதன் காரணமாக அவர் கடந்த ஒன்பது நாட்களாக சுரங்கப்பாதைக்குள் இருளில் சிக்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.</p><p>இந்த நிலையில் கடந்த 9 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த சஞ்சய் ஷா மற்றும் 45 வயதான கபீர் மஹர்ஜன் ஆகிய மின் ஊழியர்களை நேபாள மீட்பு படை வீரர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று உயிருடன் பத்திரமாக மீட்டனர்.</p><p>இதையடுத்து மீட்கப்பட்ட மின் ஊழியர்களை மேல் சிகிச்சைக்காக செளனியில் உள்ள நேபாள ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு சென்றனர்.</p><h3><strong>ஹரே கிருஷ்ணா மந்திரம்</strong></h3><p>இந்த நிலையில் சுரங்கப்பாதையில் மீட்கப்பட்ட மின் ஊழியரான சஞ்சய் ஷா கூறுகையில், “நான் கடந்த ஒன்பது நாட்களாக ஹரே கிருஷ்ணா என்ற மகா மந்திரத்தை உச்சரித்து வந்தேன்.</p><p>வெள்ளம் வந்தபோது நான் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என்னுடன் பணிபுரிந்த அனைவரின் உயிரையும் காப்பாற்றுவது எனது பொறுப்பாக இருந்தது.</p><p>இந்த விபத்தில் மற்ற சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களுடன் என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது.</p><p>ஆனால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த அனைவராலும் தப்பித்திருக்க முடியாது. ஏனென்றால் அந்த சுரங்கப்பாதை மிகவும் நீளமானது” என்று அவர் கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">VIDEO | Nepal: A person identified as Sanjay Shah rescued alive today from the tunnel of Trishuli–3 &#39;A&#39; Hydropower Project. Visuals of the rescued person.<br><br>(Source: Third Party)<br><br>(Full video available on PTI Videos - <a href="https://t.co/d8jp61yd2p">https://t.co/d8jp61yd2p</a>) <a href="https://t.co/kM7nRYZN9p">pic.twitter.com/kM7nRYZN9p</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2095738631638143446?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதையடுத்து நேபாள ராணுவம் தலைமையிலான பாதுகாப்பு பிரிவு வீரர்கள், மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி சுரங்கத்தில் சிக்கி காணாமல் போன மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.</p><p>மேலும் திரிசூலி ஆற்றங்கரையில் உள்ள 6 நீர்மின் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சுரங்கங்களில் குறைந்தது 900 பேர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சனி கோளின் தென் துருவத்தில் 10 பக்க அலை வடிவிலான காட்சி: விஞ்ஞானிகள் </title><link>https://www.maalaimalar.com/news/world/ten-sided-wave-pattern-discovered-at-saturns-south-pole</link><comments>https://www.maalaimalar.com/news/world/ten-sided-wave-pattern-discovered-at-saturns-south-pole#comments</comments><guid isPermaLink="false">3c1c6d91-9387-45a0-b57f-938e799b696b</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:36:54 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:36:54.708Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாசா,Solar system,nasa,Saturn,சனி கோள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3vtxoaib/Untitled-design-13.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Saturn South Pole Decagon Wave]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3vtxoaib/Untitled-design-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சனி கோளின் தென் துருவத்தில் 10 பக்க (decagon) அலை வடிவத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>சனி கோளின் தென் துருவத்தில் 10 பக்க (decagon) அலை வடிவத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். </p><p>இந்த வடிவம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">நாசாவின்</a> இரட்டை வாயேஜர் விண்கலங்களால் 1980களில் பிரபஞ்சத்தை ஆய்வு செய்ய உளவு பார்க்கப்பட்ட, சனி கோளின் வட துருவத்தை சுற்றியுள்ள மேகங்களின் ஆறு பக்கங்கள் கொண்ட (hexagon) கோணத்தை விட பெரியதாக இருந்தாக கண்டறிந்துள்ளனர்.</p><p>மேலும் சுழலும் இதன் தசமகோணம் (10 பக்க கோணம்) இன்னும் பெரியதாகவும், மேலும் நிலையற்றதாகவும் தோன்றுவதாக ஸ்பெயின் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>சனி கோள்</strong></h3><p>சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய கோளாகவும், சூரியனில் இருந்து ஆறாவது பெரிய கோளாகவும் சனி (saturn) கோள் உள்ளது.</p><p>இந்த கோளானது சூரிய மண்டலத்தில் மிக குறைந்த அடர்த்தி கொண்டதாகவும், இதன் அடர்த்தி நீரை விட குறைவாகவும் உள்ளது. இதன் காரணமாக சூரிய மண்டலத்தில் மிதந்து கொண்டு வருகிறது.</p><p>சனி கோளின் தென் துருவத்தில் காணப்படும் இந்த புதிய ஜெட் நீரோட்ட அமைப்பு 2023-ஆம் ஆண்டில் மிகப்பெரிய தொலைநோக்கியான, ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் பார்வையில் தென்பட்டது.</p><p>இதையடுத்து 2017 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சனி கோளின் தென் துருவம் பூமியில் இருந்து சற்று விலகி சாய்ந்திருந்ததால், இந்த விசித்திரமான வளிமண்டல நிகழ்வு உருவாகி இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>நாசா முதன்மை ஆய்வாளர்</strong></h3><p>இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து நாசாவின் கோடார்ட் விண்வெளி பறப்பு மையத்தின் ஓபால் (OPAL) முதன்மை ஆய்வாளரான ஏமி சைமன் கூறுகையில், சனி கிரகத்தின் தென் அரைக்கோளத்தில் இது போன்ற ஒன்றை தாங்கள் இதுவரை கண்டதில்லை என தெரிவித்தார்.</p><p>மேலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் பார்த்த ஒவ்வொரு முறையும், அந்த வட அரைக்கோளம் அங்கேயே இருந்ததாகவும், இந்த வடிவம் வித்தியாசமான முறையில் வலுப்பெற்றது போல் தோற்றமளிப்பதாகவும் அவர் கூறினார்.</p><p>இந்த புதிய வடிவம் இன்னும் உருவாகி கொண்டிருக்க வாய்ப்புள்ளதாகவும், ஏனென்றால் பத்து பக்கங்கள் கொண்ட ஒரு பக்கம் மட்டும் ஏற்கனவே சுமார் 16,000 கிலோ மீட்டரை தாண்டி விட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளி நிலையத்திற்கு  கொண்டு செல்லப்பட்ட 30 ஜப்பானிய காடை முட்டைகள்: நாசா சோதனை</title><link>https://www.maalaimalar.com/news/world/nasa-takes-30-japanese-quail-eggs-to-space-station</link><comments>https://www.maalaimalar.com/news/world/nasa-takes-30-japanese-quail-eggs-to-space-station#comments</comments><guid isPermaLink="false">47c9fcf7-e5da-4566-9cec-46058f1f65bc</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:35:26 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:35:26.618Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Scientists,நாசா,விஞ்ஞானிகள்,nasa,காடை,quail</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/4mmzgsxp/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NASA Quail Egg Experiment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/4mmzgsxp/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கருவுற்ற 30 ஜப்பானிய காடை முட்டைகளை ஆய்வுக்காக விண்வெளி மையத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து விண்வெளி நிலையத்தில் 16 நாட்கள் அடைக்காக்கப்பட்ட முட்டைகள், மறுபடியும் ஆய்விற்காக பூமிக்கு கொண்டு வரப்பட்டன.</p><h3>30 ஜப்பானிய காடை முட்டைகள்</h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்க</a> நாசா விண்வெளி வீரரான ஷானன் லூசிட் என்பவர் கடந்த 1995-ஆம் ஆண்டு,  30 ஜப்பானிய கருவுற்ற முட்டைகளை எடுத்துக் கொண்டு, ‘மிர்’ என்ற விண்வெளி நிலையத்திற்கு ஆய்வுக்காக சென்றார்.</p><p>மைக்ரோ விசை ஈர்ப்பு (Micro gravity) இல்லாமல் விண்வெளி நிலையத்தில், உயிரினங்கள் எவ்வாறு உயிர் வாழ்கின்றது என்பதை கண்டறியும் சோதனை முயற்சியாக, இந்த 16 நாட்கள் பயணம் அமைந்தது. </p><h3><strong>பாதுகாப்பான முறையில் அடைகாப்பு</strong></h3><p>இதையடுத்து விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட காடை முட்டைகள், அங்குள்ள ஓர் அடைகாப்பானில் பாதுகாப்பாக 16 நாட்களுக்கு அடை வைக்கப்பட்டது. </p><p>இதுகுறித்து நாசா கூறுகையில், காடை முட்டைகளை பாதுகாப்பாக அடைகாப்பதற்கு பல அடுக்குகள் கொண்ட தடுப்புகள் தேவைப்பட்டதாக தெரிவித்தது.</p><p>ஏனெனில் முட்டையில் இருந்து தவறுதலாக கசியும் ஒரு துளி, விண்கலம் முழுவதும் மிதந்து சென்று, விண்கலத்தில் பயணிக்கும் விஞ்ஞானிகளுக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தது.</p><p>இதன் காரணமாக, நாசா விஞ்ஞானிகள் கருவுற்ற முட்டைகளை பாதுகாப்பாக கையாளுவதற்காக, அதற்கென வடிவமைக்கப்பட்ட கையுறைகளை வடிவமைத்து பயன்படுத்தினர்.</p><h3><strong>பூமிக்கு கொண்டுவரப்பட்ட முட்டைகள்</strong></h3><p>இதையடுத்து 16 நாட்கள் விண்வெளி சோதனைக்கு பிறகு, பூமிக்கு கொண்டுவரப்பட்ட கரு முட்டைகள், எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை பெற்றிருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.</p><p>இருப்பினும் விண்வெளியில் வளர்ந்த கருக்களின் உடல் எடையில் லேசான அளவில் வளர்ச்சியில் தாமதங்கள் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். </p><p>மேலும் வழக்கத்திற்கு மாறாக சிறிய குறைபாடுள்ள கண்கள் மற்றும் விரல்கள் காணப்பட்டதாக்வும் நாசா தெரிவித்தது.</p><h3><strong>நாசா விஞ்ஞானி ஷானன் லூசிட்</strong></h3><p>இந்த சோதனை குறித்து விண்வெளிக்கு பயணம் சென்ற ஷானன் லூசிட் கூறுகையில், மிர் விண்வெளி நிலையத்தில் அடைகாக்கப்பட்ட கருக்களில் 13 சதவீதம் அசாதாரண விகிதத்தை கொண்டிருந்தது. </p><p>இது பூமியில் உள்ள கருக்களில் காணப்பட்ட விகிதத்தை விட நான்கு மடங்குக்கும் அதிகமாக இருந்தது.</p><p>இந்த அசாதாரண நிகழ்விற்கு, அடைகாப்பானுக்குள் இருந்த சற்றே உயர்ந்த வெப்ப நிலையும், விண்வெளி நிலையத்தில் கணிசமாக உயர்ந்த கதிர்வீச்சின் வெளிப்பாடுகளும் காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>இந்த மாதிரியான ஆய்வுகள், எதிர்காலத்தில் பூமிக்கு அப்பால் உள்ள உயிர்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதற்கான ஆய்வின் வெளிப்பாடாக இருந்ததாக நாசா தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் பயங்கரம்: போராட்டத்தின்போது கல்வீச்சு தாக்குதல் - ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/horror-in-nellai-stone-pelting-attack-during-protest-panchayat-president-dies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/horror-in-nellai-stone-pelting-attack-during-protest-panchayat-president-dies#comments</comments><guid isPermaLink="false">1d843c77-7ba7-4ad1-b583-69523dd9481f</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:26:44 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:26:44.106Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Stone Pelting,கல்வீச்சு,Panchayat president,Kannanallur,ஊராட்சி மன்றத் தலைவர்,கண்ணநல்லூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dpfl9mci/New-Project-2026-09-04T215556.963.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லையில் பயங்கரம் - போராட்டத்தின்போது கல்வீச்சு தாக்குதல் - ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dpfl9mci/New-Project-2026-09-04T215556.963.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட கல் தலையில் பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் (54) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>கண்ணநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை என அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்த ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் சென்றுள்ளார்.</p><p>அப்போது கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் செங்கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மகாராஜன் நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார்.</p><p>அப்போது பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். இருப்பினும், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>இச்சம்பவம் குறித்து வள்ளியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் நெல்லை எஸ்.பி. விஷ்வேஷ் சாஸ்திரி தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>