<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 21 Aug 2026 04:34:50 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: எண்ணூர் கழிமுகம்: சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் - 21 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-august-2026#comments</comments><guid isPermaLink="false">ac47dc11-4fb4-4fd1-9107-7bf9bddc91e2</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:54:46 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:31:40.797Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/zhlas2v8/vinoth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/zhlas2v8/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், நினைவு நாளில் சிலை அலங்கரிக்கப்பட்டு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது. </p><p>லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை முறையாக தான் பராமரிக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் விஸ்வநாதன்</p><p>சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா மாளிகை வளாகத்தில் உள்ள சிலை முறையாக பராமரிக்கப்படவில்லை. பிறந்தநாள் அன்று மட்டுமே மாலை போடப்படுகிறது. ஜெயலலிதா சிலையை தினமும் பராமரித்து மாலை அணிவிக்க வேண்டும், செலவை கூட நாங்கள் ஏற்க தயார்.</p><p>ஜெயலலிதா பலகலைக்கழகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் - சி.வி.சண்முகம்</p><p>தவறு செய்வது எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்போம்.</p><p>மணலி, எண்ணூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை, சரி செய்யும் பணி நடக்கிறது. </p><p>மனித கழிவு கலந்தால் தான் நீரில் ஆக்சிஜன் தன்மை குறையும், ஆலை கழிவு தற்போது வரை கலக்கவில்லை என தகவல் - அமைச்சர் ராஜீவ் </p><p>ரசாயனம் கலக்கவில்லை என அமைச்சர் சொல்கிறார் ஆனால் ரசாயனம் கலந்தால் தான் நீர் தரம் மாறும், அதனை மறுபரிசீலனை செய்க - பாமக</p><h2>அமைச்சர் ராஜீவ் விளக்கம்</h2><p>ஆற்றில் மீன்கள் செத்து கிடந்தது தொடர்பாக 5 இடங்களில் ஆய்வு நடத்தினோம்.</p><p>ஆய்வு செய்ததில் 2 இடங்களில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது கண்டறியப்பட்டது.</p><p>இறந்த மீன்களும் ஆய்வுக்காக மீனவளத்துறைக்கு அனுப்பு வைப்பு, ஆய்வு முடிவுக்கு பின் நடவடிக்கை.</p><p>முகத்துவார பகுதியில் எந்த ரசாயனமும் இல்லை. கழிவு நீர் கலப்பும் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p>மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாக ஆய்வு செய்து உண்மை கண்டறிவதற்கு 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>கொசஸ்தலை ஆற்றில் பல நிறுவனத்தின் கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கின்றன.</p><p>விசாரணை ஆணையம் அமைத்து சுற்றுச்சூழலை பாதிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை தேவை - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை தேவை.</p><p>எண்ணூர் கழிமுகத்தில் கொத்து கொத்தாக மீன்கள் இறப்பு.</p><p>முகத்துவாரத்தில் ரசாயனம் கலப்பால் மீன்கள் இறப்பு  - எடப்படி பழனிசாமி</p> <p>எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் - எடப்படி பழனிசாமி</p><p>எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிமுகம் தொடர்பாக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.</p><p>தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>தமிழக சட்டசபையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை (வணிக வரிகள், பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை) ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.</p><p>இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடித்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். </p><p>நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். இதில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதலமைச்சர் விஜய்யிடம் உள்ளது. அவர் அல்லது அவரது சார்பில் அமைச்சர்கள் யாரேனும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : தொடர் உயர்வில் தங்கம், வெள்ளி விலை- எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-21-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-21-08-2026#comments</comments><guid isPermaLink="false">ae6dbf4a-9224-4250-a511-67a5037b79ab</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:34:27 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:34:27.200Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/peze1y95/gold04.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/peze1y95/gold04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</strong></em></p><p>சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாள்தோறும் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கத்தின்</a> விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 10-ந்தேதி கிராம் ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர், தங்கம் விலை ஏற்றத்துடனே பதிவாகி வந்தது. </p><p>இதற்கிடையே, கடந்த 18-ந்தேதி கிராம் ரூ.14 ஆயிரத்து 290-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செயப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14 ஆயிரத்து 205 எனவும், சவரனுக்கு ரூ.680 சரிந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது. காலையில் குறைந்த தங்கம் விலை மாலை திடீரென உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 400-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று  கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.</p><h2><strong>தொடர் உயர்வு</strong></h2><p>இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,710-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 680-க்கு விற்பனையாகிறது.</p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800</p><p>19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200</p><p>18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320</p><p>17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160</p><p>16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>20-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>19-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>18-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>17-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>16-08-2026- ஒரு கிராம் ரூ.255</p>]]></content:encoded></item><item><title>மேலிட அழைப்பு - டெல்லி விரைந்தார் நயினார் நாகேந்திரன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-tn-chief-nainar-nagendran-rushes-to-delhi-for-talks-on-new-office-bearers-and-reinducting-annamalai-loyalists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-tn-chief-nainar-nagendran-rushes-to-delhi-for-talks-on-new-office-bearers-and-reinducting-annamalai-loyalists#comments</comments><guid isPermaLink="false">0e8d945e-dc45-4c17-a9b4-1b097bbbd11e</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:27:59 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:27:59.099Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,டெல்லி பயணம்,Delhi visit,annamalai</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/ycgxj5ra/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/ycgxj5ra/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜக மேலிடம் அழைப்பு விடுத்த நிலையில்,<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark"> நயினார் நாகேந்திரன்</a> டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். </p><p>புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து பேசவும், பாஜகவில் இருந்து பிரிந்த சென்ற அண்ணாமலை ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்தும் தலைமையிடம் நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p> <h2>அண்ணாமலை</h2><p>கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இருந்து விலகிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a>, வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்திற்கு அதிக ஆதரவு குவிந்து வருகிறது.</p><p>ஒரு காலத்தில் தமிழகத்தின் பாஜகவின் முகமாக இருந்த அண்ணாமலையின் விலகல் மற்றும் அவர் தொடங்கியுள்ள இயக்கம் பாஜகவுக்கு தமிழகத்தில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.</p> <h2>நயினார் நாகேந்திரன்</h2><p>இதனிடையே தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த சில காலமாக சர்ச்சையின் மையப்புள்ளியாக மாறியுள்ளார். </p> <p>அண்மையில் முதலமைச்சர் விஜய் குறித்து அவர் தெரிவித்த கருத்து சொந்த கட்சியினரியிடையேயும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூவும் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.</p><p>இந்த சூழலில் அவரின் டெல்லி பயணத்தில் இதுகுறித்த விளக்கம் ஏதும் கேட்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.</p><p>முன்னதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தென் மாநில முதல்வர்கள் மாநாட்டுக்கு சென்னை வந்த நிலையில் அவரை நயினார் நாகேந்திரன் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>எண்ணூர் கழிமுகம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்... உறுப்பினர்கள் விவாதமும், அமைச்சரின் விளக்கமும்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-calling-attention-motion-regarding-the-ennore-estuary-debate-by-members-and-the-ministers-explanation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-calling-attention-motion-regarding-the-ennore-estuary-debate-by-members-and-the-ministers-explanation#comments</comments><guid isPermaLink="false">7c9eae03-598f-4a4d-a81f-af9673207315</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:25:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:25:06.618Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/mtqm62ma/rajiv.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜீவ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜீவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/mtqm62ma/rajiv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆற்றில் மீன்கள் செத்து கிடந்தது தொடர்பாக 5 இடங்களில் ஆய்வு நடத்தினோம். ஆய்வு செய்ததில் 2 இடங்களில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது கண்டறியப்பட்டது என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை, சட்டத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாத்தில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை அளிக்க உள்ளனர். </p><p>முன்னதாக, எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிமுகம் தொடர்பாக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி முதலில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>எண்ணூர்  முகத்துவாரத்தில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆலை கழிவு ஆற்றில் கலப்பதால் நீர் நிறம் மாறியுள்ளது, மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது நடவடிக்கை தேவை என கூறினார். </p><h2><strong>பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</strong> </h2><p>கொசஸ்தலை ஆற்றில் பல நிறுவனத்தின் கழிவுகள் கலப்பத்தால் மீன்கள் செத்து மிதக்கின்றது. சுற்றுச்சூழல் பாதிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் அமைத்து கடும் நடவடிக்கை தேவை என்றார். </p><h2><strong>திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு</strong></h2><p>சென்னை மற்றம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகள் வாழ்வாதாரம் மட்டுமல்ல பல உயிர்களுக்கும் தேவையான ஒன்று. சென்னையின் சுற்றுவட்டார பகுதிகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம். எண்ணூர் பகுதியில் தொடர் நடவடிக்கை இது நடக்கிறது, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். </p><h2><strong>அமைச்சர் ராஜீவ்</strong></h2><p>ஆற்றில் மீன்கள் செத்து கிடந்தது தொடர்பாக 5 இடங்களில் ஆய்வு நடத்தினோம். ஆய்வு செய்ததில் 2 இடங்களில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது கண்டறியப்பட்டது. இறந்த மீன்களும் ஆய்வுக்காக மீன்வளத்துறைக்கு அனுப்பிவைப்பு, ஆய்வு முடிவுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகத்துவார பகுதியில் எந்த ரசாயனமும் இல்லை, கழிவு நீர் கலப்பும் இதுவரை கண்டறியப்படவில்லை. மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாக ஆய்வு செய்து உண்மை கண்டறிவதற்கு 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். </p><p>இதனிடையே பா.ம.க. எம்எல்ஏ கூறுகையில், ரசாயனம் கலக்கவில்லை என அமைச்சர் சொல்கிறார். ஆனால் ரசாயனம் கலந்தால் தான் நீர் தரம் மாறும், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் வலியுறுத்தினார். </p>]]></content:encoded></item><item><title>அசிம் முனீருக்கு ஏகபோக அதிகாரம்.. புதிய ராணுவ சட்டங்களை நிறைவேற்றிய பாகிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-field-marshal-asim-munir-gains-sweeping-control-over-all-three-forces-under-new-military-laws</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-field-marshal-asim-munir-gains-sweeping-control-over-all-three-forces-under-new-military-laws#comments</comments><guid isPermaLink="false">13db54cf-7951-4602-82ef-befe55d1d093</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:07:13 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:07:13.528Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,பாகிஸ்தான் ராணுவம்,pakistan army,Asim Munir,அசிம் முனீர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/h5ftbscl/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஷெபாஸ் ஷெரீப், அசிம் முனீர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஷெபாஸ் ஷெரீப், அசிம் முனீர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/h5ftbscl/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் ராணுவத்தின் உச்சபட்ச பதவியான பீல்டு மார்ஷல் பதவியில் உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D">அசிம் முனீருக்கு</a> புதிய ராணுவ சட்டங்கள் மூலம் மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக இருந்த அவருக்கு கடந்த ஆண்டு இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் இந்த பீல்டு மார்ஷல் பதவி வழங்கப்பட்டது. </p><p>பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தில் அசிம் முனீரின் ஆதிக்கம் இருப்பதாக நம்பப்பட்டு வரும் நிலையில் அவரின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. </p><p>ராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது மூத்த அதிகாரிகள், வீரர்கள் மற்றும் பணியாளர்கள் விவகாரங்கள் மீதான முழுமையான கட்டுப்பாடு ஆகியவை அசிம் முனீர் கைக்கு நேரடியாக சென்றுள்ளது.</p><h2>ராணுவ சட்டம்</h2><p>முப்படைகள் மீதும் முனீருக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கும் இந்தப் புதிய ராணுவ சட்டங்கள் எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பிற்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன.</p><p>‘பாதுகாப்புப் படைகள் சட்டம், 2026’, 'தேசிய கட்டளை ஆணைய திருத்தச் சட்டம்' ஆகிய இந்த சட்டங்கள் மூலம் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளும் பீல்டு மார்ஷல் முனீரின் ஒற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.</p> <h2>ஏகபோக அதிகாரம்</h2><p>இந்த புதிய சட்டங்கள் மூலம் பாதுகாப்புப் படைகளின் தலைமையகம் உருவாக்கப்பட்டு, அதன் சுப்ரீம் கமாண்டராக அசிம் முனீர் செயல்படுவார்.</p><p>நாட்டின் பாதுகாப்பு, ராணுவம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் பிரதமரின் முதன்மை ராணுவ ஆலோசகராக அசிம் முனீர் செயல்படுவார்.</p><p>ராணுவ ஆட்சேர்ப்பு, குறைப்பு, பணியாளர்களின் ஓய்வு, பணிவிடுவிப்பு, பணிநீட்டிப்பு மற்றும் ஓய்வூதிய சேவை வரம்புகளை மாற்றி அமைக்கும் முழு அதிகாரமும் அவருக்கு கிடைத்துள்ளது.</p><p>இப்புதிய நடைமுறைகளை செயல்படுத்துவதில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது சிக்கல்கள் எழுந்தால், அதைத் தீர்க்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>வரலாற்று ரீதியாகப் பலமுறை ராணுவ ஆட்சியைக் கண்டுள்ள பாகிஸ்தானில், ஒரே ஒரு ராணுவ தளபதியின் கைகளில் இவ்வளவு அதிகாரங்கள் குவிக்கப்படுவது நாட்டின் ஜனநாயக சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>புகைப்பட கலைஞர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/photography-day-cm-vijay-enjoyed-filming-photographers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/photography-day-cm-vijay-enjoyed-filming-photographers#comments</comments><guid isPermaLink="false">a5bbd275-e70f-4ee0-9e0e-b3de740fa525</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:04:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:04:06.655Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,உலக புகைப்பட தினம்,photographers,புகைப்பட கலைஞர்கள்,Photography day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/fqjqebjd/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/fqjqebjd/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக புகைப்பட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ந்தேதி கொண்டாடப்படுகிறது.</p><p>புகைப்படக் கலையின் வரலாறு, அறிவியல் மற்றும் அதன் தாக்கத்தை போற்றும் வகையிலும், இக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை கவுரவிக்கும் விதமாகவும் உலகெங்கிலும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/6twbgpks/vijay3.jpg" /></figure> <p>1839-ம் ஆண்டு பிரான்சின் லூயிஸ் டேகுயர் மற்றும் ஜோசப் நைபோர் ஆகியோர் இணைந்து 'டேகுயரோடைப்' என்ற புகைப்பட முறையைக் கண்டுபிடித்தனர். பிரெஞ்சு அரசு இதற்கான காப்புரிமையை வாங்கியதுடன், இந்த நாளைப் புகைப்படக் கலையின் தொடக்கமாக அறிவித்தது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/xnt2ytic/vijay3.jpg" /></figure><p>முதன்முதலில் 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று உலகளாவிய அளவில் ஆன்லைன் கேலரி மற்றும் கண்காட்சிகள் மூலம் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது.</p><p>நேற்று முன்தினம் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/south-india-cm-conference-amit-shah-led-kovalam-meet-seeks-delimitation-based-on-1971-census">முதலமைச்சர் விஜய்</a> புகைப்படக் கலைஞர்களுக்கு தனது மனமார்த்த வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/kgpa7eti/vijay4.jpg" /></figure><p>இந்நிலையில்  புகைப்பட கலைஞர்களை முதலமைச்சர் விஜய்  சந்தித்தார். புகைப்பட கலைஞர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.</p> ]]></content:encoded></item><item><title>பட்ஜெட் விலையில் புது இயர்பட்ஸ் அறிமுகம் செய்த ஐகூ</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/iqoo-buds-launched-in-india-with-up-to-50-hours-battery-life</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/iqoo-buds-launched-in-india-with-up-to-50-hours-battery-life#comments</comments><guid isPermaLink="false">19bbd7d6-81cf-4594-95ab-8190d6fcbb3c</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:51:00 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:51:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>iQOO,Earbuds,ஐகூ,இயர்பட்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/an0e3pl2/iQOO-Buds.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iQOO Buds]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/an0e3pl2/iQOO-Buds.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐகூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய <a href="https://www.maalaimalar.com/topic/earbuds">இயர்பட்ஸ்</a> இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயர்பட்ஸ் ஐகூ Z11 ஸ்மாரட்போனுடன் அறிமுகமானது. </p><p>புதிய இயர்பட்ஸ் பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த மாடல் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.</p><p>புதிய <a href="https://www.maalaimalar.com/topic/iqoo">ஐகூ</a> இயர்பட்ஸ் சிலிகான் டிப்களுடன் கிடைக்கிறது. இத்துடன் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடல் ஒற்றை நிறத்தில் மட்டுமே அறிமுகமாகி இருக்கிறது.</p><h2>அம்சங்கள்:</h2><p>ஐகூ பட்ஸ் இன்-இயர் ஸ்டைல் மாடல் ஆகும். இதில் 10 மில்லிமீட்டர் அளவில் கால் டிரைவ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இயர்பட்ஸ் AAC மற்றும் SBC கோடெக் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் டீப்-எக்ஸ் 4.0 சவுண்ட் எஃபெக்ட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ அம்சங்களுடன் வருகிறது. இத்துடன் டூயல் மைக்ரோபோன் யூனிட், ஏ.ஐ. கால் நாய்ஸ் ரிடக்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>கனெக்டிவிட்டிக்கு ஐகூ பட்ஸ் மாடலில் ப்ளூடூத் 6.1, டூயல் சேனல் டிரான்ஸ்மிஷன் 2.0, 10-மீட்டர்கள் வரை ஓபன்-ஏரியா கனெக்ஷன் ரேஞ்ச், 42ms கேமிங் லேடென்சி கொண்டிருக்கிறது. இத்துடன் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டும் குயிக் பேரிங் வசதி கொண்டுள்ளது. இந்த மாடல் டபுள்-டேப், ட்ரிபில் டேப மற்றும் டச் அண்ட் ஹோல்டு ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல்களுடன் வருகிறது.</p><p>ஐகூ பட்ஸ்-இன் இயர்பட்ஸ் ஒவ்வொன்றிலும் 53mAh பேட்டரி, சார்ஜிங் கேசில் 525mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்படஸ் மொத்தத்தில் 50 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்று ஐகூ தெரிவித்துள்ளது. இதன் இயர்போன்கள் அதிகபட்சம் 12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த இயர்பட்ஸ்-ஐ 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய ஐகூ பட்ஸ் விலை ரூ. 1,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் வாங்குவோர் எந்த வங்கி கார்டுகளை பயன்படுத்தினாலும் ரூ. 200 உடனடி கேஷ்பேக் பெற முடியும். </p><p>இதனால், இந்த இயர்பட்ஸ்-ஐ பயனர்கள் ரூ. 1,699 விலையிலேயே வாங்கிட முடியும்.</p><p>இந்த இயர்பட்ஸ் ஃபிளேம் எல்லை என ஒற்றை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இதன் விற்பனை ஆகஸ்ட் 24-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசன் வலைதளத்தில் தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து தேதியில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-in-dates-for-the-cancellation-of-chennai-beachtambaram-night-time-electric-trains-southern-railway-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-in-dates-for-the-cancellation-of-chennai-beachtambaram-night-time-electric-trains-southern-railway-announces#comments</comments><guid isPermaLink="false">b51a4694-0abb-456b-9f15-693e19680789</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:33:49 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:33:49.157Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,electric train,மின்சார ரெயில்,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1p9iowxz/electrictrain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார ரெயில்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1p9iowxz/electrictrain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>பராமரிப்பு பணி</strong></h2><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் காரணமாக நாளை (22-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.</p><h2><strong>வாரநாட்களில்...</strong></h2><p>அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரையில் (வாரநாட்களில் மட்டும்) ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படும் ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.</p><p>* திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்">மின்சார ரெயிலும்</a>, கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும். மேலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும்.</p><h2><strong>26-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை</strong></h2><p>* சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 26-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரையில் (வாரநாட்களில்) அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><h2><strong>ஞாயிற்றுக்கிழமை</strong></h2><p>இதேபோல, வருகிற 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படும் மின்சார ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், தாம்பரத்தில் இருந்து இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும். இதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும். மேலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரத்திற்கு 3 சிறப்பு ரெயில்கள்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-3-special-trains-for-onam-festival</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-3-special-trains-for-onam-festival#comments</comments><guid isPermaLink="false">c7a43bc8-0c11-4770-a0e1-9e0dedea61ed</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:19:43 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:19:43.872Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,special train,சிறப்பு ரெயில்,ஓணம் பண்டிகை,onam festival,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/tcohlp08/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/tcohlp08/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரத்திற்கு 3 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>* கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து இன்று (21-ந்தேதி) இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06573), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (22-ந்தேதி) மாலை 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06574), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும்.</p><p>* பெங்களூருவில் இருந்து நாளை (22-ந்தேதி) மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06575), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் (23-ந்தேதி) மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06576), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.</p><p>* பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து வருகிற 28-ந்தேதி மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06579), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06580), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 கப்பல்கள் கடத்தல்.. 22 இந்தியர்கள் நிலை என்ன?.. - ஏமன், சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-crew-hostage-two-merchant-ships-hijacked-off-yemen-and-somalia-22-indians-in-peril</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-crew-hostage-two-merchant-ships-hijacked-off-yemen-and-somalia-22-indians-in-peril#comments</comments><guid isPermaLink="false">d905da11-d672-45f0-bbd4-a5d784a7532d</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:07:59 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:07:59.485Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,ஏமன்,கடற்கொள்ளையர்கள்,சோமாலியா,Somalia,Pirates</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1hespdvy/tn-30.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1hespdvy/tn-30.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதியில் 2 வணிக கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. இரண்டு கப்பல்களிலும் மொத்தம் 22 இந்தியர்கள் இருந்துள்ளனர்.  </p> <h2>ஏமனில் கடத்தல்</h2><p>எரித்திரியா நாட்டுக்கு கொடியுடன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற எம்டி ஷிபு 1 என்ற வணிக கப்பல் 20 பணியாளர்களுடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">ஏமன் </a>கடற்கரைக்கு 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதமேந்திய 6 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கடற்கொள்ளையர்களால் </a>கடத்தப்பட்டுள்ளது. அதிலிருந்த 20 பணியாளர்களில் 16 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>நேற்று இந்த சம்பவம் நடந்த நிலையில் கப்பல் தற்போதுள்ள இடம் குறித்த தகவல் இல்லாதபோதும் 16 இந்தியர்களுடன் சேர்த்து மொத்தம் உள்ள 20 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக இந்தியாவின் கடல்சார் நிர்வாக தலைமை இயக்குநரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p> <h2>சோமாலியாவில் கடத்தல்</h2><p>எம்வி லுடிப் என்ற கேமரூன் கொடியுடன் கூடிய வணிக கப்பல் <a href="https://www.maalaimalar.com/topic/somalia">சோமாலியாவின் </a>பன்ட்லேண்ட் கடற்கரைக்கு அருகே கடந்த திங்களன்று கடத்தப்பட்டுள்ளது. </p><p>அதில் இருந்த மொத்தம் 10 பணியாளர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர். சோமாலிய அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி அசோசியேட் பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.</p> <p>இந்த கப்பலானது பண்ட்லேண்ட்டில் உள்ள Eyl மாவட்டத்தில் உள்ள மராரையாவுக்கு 3.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து வடக்கு சோமாலியாவில் உள்ள Nugaal கடற்கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>இந்த கப்பல் போலார் மூவ்மென்ட் ஷிப்பிங் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் சோமாலியாவில் உள்ள துருக்கி ராணுவ பயிற்சி மையத்திற்கு ஆயுதங்கள், பயிற்சி உபகரணங்கள், சேட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு சென்று கொண்டிருந்தது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.</p> <p>கப்பலை 8 கடற்கொள்ளையர்கள் சேர்ந்து கடத்தியதாக நம்பப்படுகிறது. இவர்கள் முன்னதாக கடந்த ஏப்ரலில் எம்வி ஸ்வார்ட் என்ற கப்பலை கடத்தியர்வர்கள் என்று அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>இந்த கப்பல் மற்றும் அதில் உள்ள பணியாளர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் இன்னும் தெளிவாக தெரியவில்லை. துருக்கி அதிகாரிகளும் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கப்பவில்லை.</p><p>இரு கப்பல்களையும் சேர்த்து மொத்தம் 22 இந்தியர்களின் நிலை குறித்த  இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்பங்கள் பதற்றத்தில் உள்ளனர் </p> ]]></content:encoded></item><item><title>வரலட்சுமி விரதம் பூஜை முறை</title><link>https://www.maalaimalar.com/spirituality/varalakshmi-vratam-worship-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/varalakshmi-vratam-worship-2#comments</comments><guid isPermaLink="false">884d2b95-d52e-4a05-b715-f768db9ae822</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:05:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:05:57.180Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,வரலட்சுமி விரதம்,Varalakshmi Vratam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/9m6cmqvs/varalakshmi8.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Varalakshmi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/9m6cmqvs/varalakshmi8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆவணி மாத பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான இந்நாளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">வரலட்சுமி நோன்பு</a> கடைப்பிடிக்கப்படுகிறது.</p><p>பராபவ வருடம், ஆவணி மாதம் 5-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை), வளர்பிறை நவமி திதி மற்றும் அனுஷம்/கேட்டை நட்சத்திரம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/spirituality/varalakshmi-vratam-108-potri">வரலட்சுமி விரதம்</a> என்பது அன்னை மகாலட்சுமியின் அருள் வேண்டி, குடும்பத்தின் நலம், செல்வம் மற்றும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்திற்காகப் பெண்களால் பக்தியுடன் அனுசரிக்கப்படும் ஒரு புனிதமான விரதமாகும்.</p><p>செல்வத்தின் அதிபதியான வரலட்சுமியை (வரங்களை அள்ளித் தரும் லட்சுமி) இல்லத்திற்கு முறைப்படி வரவேற்று பூஜிப்பது இதன் சிறப்பாகும்.</p> <p>பூஜையறையில் கலசத்தில் அரிசி அல்லது நீர், நவதானியங்கள், நாணயம் நிரப்பி, மாவிலை மற்றும் மஞ்சள் பூசிய தேங்காய் வைத்து அம்மன் முகத்தை அலங்கரித்து லட்சுமியாக பாவித்து எழுந்தருளச் செய்வர்.</p><p>ஒன்பது முடிச்சுகள் கொண்ட மஞ்சள் சரடை (நோன்புச் சரடு) அம்மனுக்கு சாத்தி, அர்ச்சனை செய்து பூஜைக்குப் பின் பெண்கள் தங்கள் வலது கையில் கட்டிக் கொள்வர்.</p> <p>கொழுக்கட்டை, பாயாசம், வடை மற்றும் சுண்டல் போன்ற பிரசாதங்களைப் படைத்து லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் பாடி வழிபடுவர்.</p><p>அக்கம் பக்கத்து சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் மற்றும் பிரசாதம் வழங்கி வாழ்த்தும் பெறுவர்.</p> <p>விரத பலன்களாக குடும்பத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களும், வறுமை நீங்கி அமைதியும் நிலவும். தாலி பாக்கியம் நிலைத்து, கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் கூடும். இல்லத்தில் மங்கள காரியங்கள் தடையின்றி இனிதே நிறைவேறும் என்பதும் ஐதீகம்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/suger-price-hike-in-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/suger-price-hike-in-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">d5161aee-2331-473b-b660-b22a984a90dc</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:00:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:00:06.364Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sugar,சர்க்கரை,sugar price,சர்க்கரை விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/z52kzi6z/sugar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சர்க்கரை]]></media:title><media:description type="html"><![CDATA[ சர்க்கரை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/z52kzi6z/sugar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து ஒரு கிலோ சர்க்கரை 67 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">சர்க்கரை</a> விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது இது குறித்து சென்னை கோயம்பேட்டை சேர்ந்த மளிகை பொருட்கள் மொத்த வியாபாரி சாமுவேல் ராஜ் கூறியதாவது:-</p><h2><strong>சர்க்கரை பதுக்கல்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-announces-ban-on-sugar-exports">சர்க்கரை</a> விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதற்கு முக்கியக் காரணமாக தமிழ்நாட்டிற்கு சர்க்கரை அனுப்பும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள சர்க்கரை உற்பத்தி ஆலைகள் சர்க்கரையை பதுக்கி வைப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் முறையற்ற பருவமழை காரணமாக கரும்பு உற்பத்தி பெருமளவு குறைந்து உள்ளது.</p><h2><strong>இ-20 பெட்ரோல்</strong></h2><p>இந்தநிலையில், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வர இருப்பதால் இனிப்பு பண்டங்கள் தயாரிக்க சர்க்கரை தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு சர்க்கரை ஆலைகள் பதுக்கலில் ஈடுபடுகின்றனர்.</p><p>மேலும் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இ-20 பெட்ரோல் தயாரிப்புக்கு கரும்பில் இருந்து எத்தனால் எடுக்கப்படுவதால் அதிக அளவில் கரும்பு தேவைப்பாடு அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த மாதம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை விலை படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ சர்க்கரை ரூ.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து சர்க்கரை பதுக்கலில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் இந்தியாவில் சர்க்கரை இருப்பு குறைவாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதியை செய்தால் தான் சர்க்கரை விலை கட்டுப்பாட்டுக்குள் வரும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வங்கதேச புதிய ஜனாதிபதியாக மிர்சா பக்ருல் தேர்வு - யார் இவர்?</title><link>https://www.maalaimalar.com/news/world/mirza-fakhrul-selected-as-bangladeshs-new-president-who-is-he</link><comments>https://www.maalaimalar.com/news/world/mirza-fakhrul-selected-as-bangladeshs-new-president-who-is-he#comments</comments><guid isPermaLink="false">a6c640c6-dc63-42c3-a9eb-8f4d5eb9cc75</guid><pubDate>Fri, 21 Aug 2026 02:28:31 +0000</pubDate><atom:updated>2026-08-21T02:28:31.917Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,Presidential election,ஜனாதிபதி தேர்தல்,Tarique Rahman,தாரிக் ரஹ்மான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/e85a91em/tn-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/e85a91em/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்தின் புதிய ஜனாதிபதியாக ஆளும் பிஎன்பி கட்சியை சேர்ந்த  மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><h2>வீழ்ச்சி</h2><p>மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் <a href="https://www.maalaimalar.com/topic/sheikh-hasina">ஷேக் ஹசீனாவின்</a> அவாமி லீக் அரசு வீழ்ச்சியடைந்தது. </p><p>அதன்பின் இந்த ஆண்டு பிப்ரவரி 12 நடைபெற்ற  பொதுத் தேர்தலில் பிஎன்பி கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.  தாரிக் ரஹ்மான் பிரதமராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  </p> <h2>ஷஹாபுதீன் வெளியேற்றம்</h2><p>2023இல் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு இருந்தபோது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷஹாபுதீன் (76 வயது) தனக்கு கடுமையான உடல்நலக்குறைவு இருப்பதாக அறிவித்து கடந்த ஜூலை 24 அன்று ராஜினாமா செய்தார்.</p><p>ஆனால் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான அவர், கடும் அரசியல் அழுத்தத்திற்கு மத்தியிலேயே ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.</p> <h2>புதிய ஜனாதிபதி</h2><p>வங்கதேச அரசியலமைப்புச் சட்டப்படி 90 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் நேற்று <a href="https://www.maalaimalar.com/news/world/presidential-election-in-bangladesh-tomorrow-after-35-years">வாக்கெடுப்பு </a>நடைபெற்றது.</p><p>வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில் 255க்கு 88 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆளும் பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் நாட்டின் 23வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளனர்.</p><p>எதிர்த்து போட்டியிட்ட ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையிலான 11 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளரும், LDP கட்சியின் தலைவருமான ஓய்வுபெற்ற கர்னல் ஒலி அகமதுவை (84) தோல்வியை தழுவினார்.</p><h2>மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர்</h2><p>டாக்கா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றபோது அரசியலில் நுழைந்த ஆலம்கீர், பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியை எதிர்த்து 1969இல் நடந்த மாணவர் எழுச்சியில் முக்கிய தலைவராகச் செயல்பட்டார்.</p><p>பின்னர் 1990களின் தொடக்கத்தில் பிஎன்பி கட்சியில் இணைந்தார்.</p><p>ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய எதிரணி தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். அக்காலகட்டத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் பலமுறை கைது செய்யப்பட்டார்.</p><p>அண்மையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றிய அவர், 2001 முதல் 2006 வரை மறைந்த பிஎன்பி தலைவர் கலீதா ஜியா ஆட்சியில் வேளாண்மை, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல அமைச்சரவைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.</p> <h2>ஷேக் ஹசீனா</h2><p>2024 ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு வங்கதேசத்தை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.</p><p>மாணவர் போராட்டத்தின்போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததாக வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால்</p><p>இருப்பினும், என்ன ஆயினும் வரும் டிசம்பர் மாதம் மீண்டும் வங்கதேசம் திரும்ப விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 21.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு அயல்நாடு செல்லும் முயற்சி கைகூடும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-21-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-21-august-2026#comments</comments><guid isPermaLink="false">ba2861f7-3f09-4411-8283-b73b01851ee5</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:52:31 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:52:31.300Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/01/19461778-rasipalan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/01/19461778-rasipalan.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தொல்லை உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். கடினமான வேலைகளைக்கூட சுலபமாகச் செய்துமுடிப்பீர்கள். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.</p> <h2>மிதுனம்</h2><p>மனக்குழப்பம் அகலும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். தந்தை வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் கொடுப்பர்.</p><h2>கடகம்</h2><p>பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். சந்தித்த நண்பர்கள் சந்தோஷமான செய்தியைத் தருவர்.</p> <h2>சிம்மம்</h2><p>யோகமான நாள். சொத்துகள் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.</p><h2>கன்னி</h2><p>கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி முடிவெடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.</p> <h2>துலாம்</h2><p>மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறும் நாள். சகோதர வழியில் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும்.</p><h2>விருச்சிகம்</h2><p>தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். நேற்றையப் பணியை இன்று செய்து முடிப்பீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.</p> <h2>தனுசு</h2><p>காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும்.</p><h2>மகரம்</h2><p>நம்பிக்கைகள் நடைபெறும் நாள். பற்றாக்குறைகள் அகலும். வாக்குவாதம் செய்தவர்கள் மனம் மாறுவர். கல்யாண முயற்சிகள் கைகூடும்.</p> <h2>கும்பம்</h2><p>இன்பங்கள் கூடும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். அயல்நாடு செல்லும் முயற்சி கைகூடும். வீடு மாற்றங்கள் நன்மை தரும்.</p><h2>மீனம்</h2><p>தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வருமானத்தை உயர்த்த திட்டம் தீட்டுவீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/today-fuel-prices-iran-war-tensions-in-hormuz-push-up-chennai-petrol-diesel-and-cng-rates-2</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/today-fuel-prices-iran-war-tensions-in-hormuz-push-up-chennai-petrol-diesel-and-cng-rates-2#comments</comments><guid isPermaLink="false">0d6c829a-f212-4e6d-8050-4d11ae797162</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:42:16 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:42:16.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>வணிகம் (Business)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-economic-war-trump-announces-unprecedented-sanctions-and-warns-allied-nations">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (21.08.2026 - வெள்ளிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 93.74 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விஜய் பிரதமர் வேட்பாளரா?.. டி.கே. சிவகுமார் சொன்ன பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/south-india-cm-conference-amit-shah-led-kovalam-meet-seeks-delimitation-based-on-1971-census</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/south-india-cm-conference-amit-shah-led-kovalam-meet-seeks-delimitation-based-on-1971-census#comments</comments><guid isPermaLink="false">31a2a489-fd15-4d69-b2e5-06bb0e02488d</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:33:51 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:33:51.321Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,டிகே சிவகுமார்,D.K. Shivakumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/aizixx3x/tn-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டி.கே. சிவகுமார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.கே. சிவகுமார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/aizixx3x/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அருகே கோவளம் தனியார் ஓட்டலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. </p><p>இதில் தமிழக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய்</a>, கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரளா முதலமைச்சர் விடி சதீசன், தெலுங்கானா சார்பில் துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா, புதுச்சேரி சார்பில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். </p> <p>மாநாடு நிறைவடைந்தபின் கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமார் ராஜிவ் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.</p><p>இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/dk-shivakumar">டிகே சிவகுமார் </a>பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.</p> <p>விஜய் பிரதமரா?</p><p>அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய் தற்போது முதலமைச்சராக உள்ள நிலையில் அவரை பிரதமர் வேட்பாளராக சிலர் முன்னிறுத்துவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ? எனக் கேட்டார்.</p><p>இதற்கு பதிலளித்த சிவகுமார், 'அது எனக்கு தெரியாது. நான் எது பற்றியும் பேச விரும்பவில்லை. அரசியல்வாதிகள் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுவதற்கு பதில் நாட்டை கட்டி எழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்.</p> <p>தென்னிந்திய முதலமைச்சர்கள் மீட்டிங்கில் முக்கிய விஷயம் பேசப்பட்டது. 1971 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்'' என்று கூறி நழுவினார்.</p><p>முன்னதாக அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/aadhav-arjuna">ஆதவ் அர்ஜுனா</a>, தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வரவேண்டும் என்று சட்டசபையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 21 ஆகஸ்ட் 2026: வரலட்சுமி விரதம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-21-august-2026-varalakshmi-vratam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-21-august-2026-varalakshmi-vratam#comments</comments><guid isPermaLink="false">d0314115-292e-40dc-b360-ebb0461d3619</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/0tf4ptqt/varalakshmi2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Varalakshmi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/0tf4ptqt/varalakshmi2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-4 (வெள்ளிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  நவமி நள்ளிரவு 1.37 மணி வரை பிறகு தசமி</p><p>நட்சத்திரம் :  அனுஷம் பிற்பகல் 2.45 வரை பிறகு கேட்டை</p> <p>யோகம் :  சித்த / மரணயோகம்</p><p>ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>வரலட்சுமி விரதம்</h2><p>வரலட்சுமி விரதம். குலைச்சிறை நாயனார் குரு பூஜை. மதுரை ஸ்ரீ சொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, விருஷபாரூட தரிசனம், சைவ சமயஸ்தா பித வரலாற்று லீலை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படை வீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. </p><p>லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம் அலங்காரம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - அனுகூலம்</p><p>ரிஷபம் - வெற்றி</p><p>மிதுனம் - பணிவு</p><p>கடகம் - புகழ்</p><p>சிம்மம் - மகிழ்ச்சி</p><p>கன்னி - பாராட்டு</p> <p>துலாம் - மேன்மை</p><p>விருச்சிகம் - ஆர்வம்</p><p>தனுசு - இன்பம்</p><p>மகரம் - தேர்ச்சி</p><p>கும்பம் - நன்மை</p><p>மீனம் - முயற்சி</p> ]]></content:encoded></item><item><title>அமைச்சர்களின் நாய்களுக்கு கூட நல்ல வசதி உள்ளது.. அரசுப் பள்ளிகளின் அவல நிலை - மகாராஷ்டிர கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் - அபிஜித் தீப்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-minister-urged-to-resign-over-poor-government-school-infrastructure-and-student-conditions</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-minister-urged-to-resign-over-poor-government-school-infrastructure-and-student-conditions#comments</comments><guid isPermaLink="false">e04b7ab1-bf31-4f56-84a4-555ca2a8d320</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:15:29 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:15:29.722Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,அரசுப் பள்ளிகள்,government schools,CJP Protest,அபிஜித் தீப்கே,Abhijit Dipke,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1sxh9i8c/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1sxh9i8c/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைவுக்கு பொறுப்பேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தாதா பூசே பதவி விலக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87">அபிஜித் தீப்கே </a>வலியுறுத்தியுள்ளார். </p><p>மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் உள்ள அவுசா தாலுகாவில் உஜானி என்ற கிராமம் அமைந்துள்ளது. </p><p>இங்குள்ள அரசுப் பள்ளியை நேற்று பார்வையிட்ட பிறகு தீப்கே செய்தியாளர்களை சந்தித்தார். </p> <h2>நாய்களுக்கு நல்ல வசதி </h2><p>அப்போது பேசிய அவர், "இது மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை. மக்கள் பிரதிநிதிகள் மாணவர்களுக்காக எதுவுமே செய்யப்போவதில்லை என்றால், அவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?</p><p>ஹெலிகாப்டரில் மட்டுமே பறப்பதற்காகவா மக்கள் வாக்களிக்கிறார்கள்? மக்கள் தங்கள் குழந்தைகள் எந்தச் சூழ்நிலையில் படிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.</p><p>இந்த அமைச்சர்களின் நாய்களுக்குக்கூட மாணவர்களை விட சிறந்த வசதிகள் கிடைக்கின்றன.</p> <p>சில பள்ளிகளில் மாணவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்.</p><p>போதிய வகுப்பறைகள், பெஞ்சுகள், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான சாலை வசதிகள் இல்லாத பள்ளிகளின் அவலநிலைக்கு மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.</p><p>கல்விக்காகப் பணியாற்றாத வரை எங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்க வர வேண்டாம் என்று அவர்களிடம் கூறுங்கள். </p><p>அரசியலுக்காக சாதி, சமூகக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு நாம் வெளியே வருகிறோம். </p><p>அதேபோல் நமது குழந்தைகளின் பள்ளிகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.</p> <h2>ஆபத்தில் மதம்</h2><p>அரசியல் தலைவர்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று தொடர்ச்சியாக கூறுவதை குறிப்பிட்ட அவர், "இத்தனை ஆண்டுகளாக அழியாத மதம், உங்கள் ஆட்சிக் காலத்திலா அழியப் போகிறது? மதம் எங்கும் போய்விடாது. </p><p>ஆனால் நமது குழந்தைகளின் எதிர்காலம் கண்டிப்பாகப் பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.</p> <h2>ராஜினாமா செய்</h2><p>தாதா பூசே பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தொடர வேண்டுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "பள்ளிகளின் அவலநிலையைப் பார்த்தால், கல்வி அமைச்சர் அந்தப் பதவியில் தொடரக்கூடாது என்றே தோன்றுகிறது.</p><p>அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்தால்தான் அங்குள்ள உண்மையான பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடியும்" என தீப்கே பதிலளித்தார்.</p> <p>பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஆளும் அரசு, அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரத் தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.</p><p>School Thik Karo (பள்ளிகளைச் சரிசெய்) என்ற பெயரில்<a href="https://www.maalaimalar.com/topic/cjp-protest"> சிஜேபி </a>கடந்த வாரம் பிரசார இயக்கம் ஒன்றை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட முன்னாள் பாக். பிரதமர்</title><link>https://www.maalaimalar.com/news/world/jailed-pak-ex-pm-imran-khan-taken-to-hospital-after-court-order</link><comments>https://www.maalaimalar.com/news/world/jailed-pak-ex-pm-imran-khan-taken-to-hospital-after-court-order#comments</comments><guid isPermaLink="false">054cd534-cd64-44c8-9d6f-35b3ac6c972f</guid><pubDate>Fri, 21 Aug 2026 00:27:43 +0000</pubDate><atom:updated>2026-08-21T00:27:43.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Imran Khan,இம்ரான் கான்,Hospital,மருத்துவமனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/yfodxzk3/Shifa-hospital-entrance.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shifa hospital entrance]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/yfodxzk3/Shifa-hospital-entrance.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிறையில் உள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/imran-khan">இம்ரான் கான்</a>, நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக தலைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக அவரது கட்சி தெரிவித்தது. அவரது சிகிச்சை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதாக ஒரு மூத்த அமைச்சரவை அமைச்சர் உறுதியளித்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த நிகழ்வு நடந்தது.</p><p>அரசு வசதிகளில் போதுமான கவனிப்பு கிடைக்காத பட்சத்தில், வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்கக்கூடும் என்றும் அமைச்சர் கூறினார்.</p><h2>சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றம்:</h2><p>இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி (பிடிஐ), இந்த வார தொடக்கத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவர் அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>மருத்துவ சிகிச்சைக்கு பிறகு இம்ரான் கான் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவாரா அல்லது மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே தங்க அனுமதிக்கப்படுவாரா என்பது தெளிவாக தெரியவில்லை. இம்ரான் கானின் கட்சியும் குடும்பத்தினரும் அவரை மருத்துவமனையில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட மருத்துவ நிவாரணம் முன்னாள் பிரதமருக்கு மட்டுமானதா அல்லது மற்ற கைதிகளுக்கும் நீட்டிக்கப்படலாமா என்பது குறித்து தெளிவு பெற அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தாரிக் ஃபசல் சௌத்ரி கூறிய சில மணிநேரங்களுக்கு பிறகு இந்த சமீபத்திய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.</p><h2>உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு:</h2><p>கானின் உடல்நிலை மற்றும் மருத்துவ வசதி கிடைப்பது குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் தனிப்பட்ட மருத்துவர்கள் பல மாதங்களாக கவலை தெரிவித்ததை தொடர்ந்து, அவரை மருத்துவ பரிசோதனைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு சௌத்ரியின் கருத்துக்கள் வெளிவந்தன.</p><p>சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அவரது தனிப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான ஃபைசல் சுல்தான் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவால் அவர் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>அதிவேகமாக வந்த கார் மோதி பெண் பலி- எம்.பி. மகன் மீது வழக்கு பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/speeding-aston-martin-rams-kills-woman-in-hyderabad-mps-son-charged</link><comments>https://www.maalaimalar.com/news/national/speeding-aston-martin-rams-kills-woman-in-hyderabad-mps-son-charged#comments</comments><guid isPermaLink="false">63366c81-1f8c-4109-9399-2e2400d1e955</guid><pubDate>Thu, 20 Aug 2026 23:44:53 +0000</pubDate><atom:updated>2026-08-20T23:44:53.613Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கார் விபத்து,Hyderabad,accident,ஐதராபாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/fqqydtpa/Aston-martin-Rams.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aston Martin Rams]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/fqqydtpa/Aston-martin-Rams.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐதராபாத்தில் ஆஸ்டன் மார்ட்டின் கார் மோதியதில் 26 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மாநிலங்களவை உறுப்பினர் லிங்கமனேனி ரமேஷின் மகனான 21 வயது லிங்கமனேனி சஞ்சுஷ், காரை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று, மாதப்பூர் பகுதியில் உள்ள தனது பணியிடத்திற்கு அருகே சாலையை கடக்கும்போது கார் மோதியதில், இன்ஆர்பிட் மாலில் உள்ள லைஃப்ஸ்டைல் ​​ஆடைக்கடையில் பணிபுரிந்து வந்த பாரதி முகி உயிரிழந்தார்.</p><h2>கைது செய்யப்படவில்லை:</h2><p>ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை சேர்ந்த தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனான 21 வயது சஞ்சுஷ்தான் காரை ஓட்டி சென்றவர் என சைபராபாத் பகுதி போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.</p><p>குற்றம் சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாதப்பூர் உதவி காவல் ஆணையர் சி. ஸ்ரீதர் உறுதிப்படுத்தினார். இக்குற்றம் பிணை வழங்கக்கூடியது என்பதாலும், இதற்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனையே விதிக்கப்படலாம் என்பதாலும் அவர் கைது செய்யப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.</p><h2>விபத்துக்கு பிறகு நடந்தது என்ன?</h2><p>முதல் தகவல் அறிக்கையின்படி, பாரதியும் அவரது சக ஊழியரான 26 வயது பூஜா அசோக் அலோனும், ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 3 மணியளவில் மதிய உணவுக்காக அருகில் உள்ள ஐடிசி கோஹினூர் பகுதிக்கு சென்றிருந்தனர். அவர்கள் பணி இடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​பாரதி மாலுக்கு முன்னால் சாலையை கடக்க முயன்றபோது, ​​ஆஸ்டன் மார்ட்டின் (TG-09-G-0666) வாகனம் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.</p><p>இதில் பாரதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, மேலும் அவருக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. அவர் அதே காரில் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.</p><h2>வழக்கு பதிவு:</h2><p>பின்னர் அவரது தோழி பூஜா, கடை மேலாளர் அஷ்வின் குமாருக்கு தகவல் தெரிவிக்க, அவர் காவல்துறையை அழைத்தார். பாரதி மீது மோதியபோது, ​​கார் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும், பொறுப்பற்ற முறையிலும் ஓட்டப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>குற்றவியல் கொலைக்கு நிகராகாத, பொறுப்பற்ற அல்லது அலட்சியமான செயலால் மரணத்தை ஏற்படுத்துவது தொடர்பான பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 106(1)-ன் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உலக வசூலில் புது சாதனை படைத்தது கிறிஸ்டோபர் நோலனின் &apos;தி ஒடிசி&apos;</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-odyssey-becomes-highest-grossing-r-rated-film-of-all-time</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-odyssey-becomes-highest-grossing-r-rated-film-of-all-time#comments</comments><guid isPermaLink="false">b18be719-8251-4a4c-91b6-f8ffacb58c10</guid><pubDate>Thu, 20 Aug 2026 23:04:21 +0000</pubDate><atom:updated>2026-08-20T23:04:21.083Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>christopher nolan,கிறிஸ்டோபர் நோலன்,The Odyssey,தி ஒடிசி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ay2cblq0/TheOdyssey-BoxOfficeCollection" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ The Odyssey]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ay2cblq0/TheOdyssey-BoxOfficeCollection?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்டமான திரைப்படமான '<a href="https://www.maalaimalar.com/topic/the-odyssey">தி ஒடிசி</a>' (The Odyssey), வெற்றிகர திரையரங்க பயணத்தில் மற்றொரு சாதனை படைத்துள்ளது.</p><p>'வெரைட்டி' இதழின் தகவலின்படி, இப்படம் உலகம் முழுவதும் 1.352 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்து, இதுவரை வெளியான 'ஆர்-ரேட்டட்' (R-rated - பெரியவர்களுக்கானது) திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது. </p><p>இதன் மூலம், 2024-இல் வெளியான 'டெட் பூல் &amp; வோல்வரின்' திரைப்படம் ஈட்டிய 1.338 பில்லியன் டாலர் என்ற சாதனையை இது முறியடித்துள்ளது.</p><h2>அதிக வசூல் செய்த படம்:</h2><p>ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியான 'தி ஒடிஸி', தனது உள்நாட்டு தொடக்க வெளியீட்டிலேயே 123 மில்லியன் டாலர் வசூலித்து அசத்தியது. அதன்பிறகு, இப்படம் உள்நாட்டில் 516 மில்லியன் டாலரும், சர்வதேச அளவில் 835 மில்லியன் டாலரும் வசூலித்துள்ளது.</p><p>'டெட் பூல்' நட்சத்திரமான ரியான் ரெனால்ட்ஸ் இந்த மைல்கல்லை சமூக ஊடகங்களில் கொண்டாடினார். அவர், "எக்காலத்திலும் அதிக வசூல் செய்த 'ஆர்-ரேட்டட்' திரைப்படமாக மாறியுள்ள 'தி ஒடிசி' படத்தின் ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இது ஒரு மிகச்சிறப்பான சாதனை," என்று பதிவிட்டார்.</p><p>நோலனின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படமாக 'தி ஒடிசி' மாறிய சில நாட்களிலேயே இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. மேலும், மேட் டாமன், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோரின் தனிப்பட்ட திரைப்பயணங்களிலும் அதிக வசூல் செய்த படமாக இது அமைந்துள்ளது.</p><h2>ஒடிசி கதைக்களம்:</h2><p>ஹோமரின் பண்டைய கிரேக்க காவியத்தை அடிப்படையாக கொண்ட இப்படம், ட்ரோஜன் போருக்கு பிறகு மன்னர் ஒடிசியஸ் (மேட் டாமன்) தனது மனைவி பெனிலோப் (ஆன் ஹாத்வே) மற்றும் மகன் டெலிமாக்கஸ் (டாம் ஹாலண்ட்) ஆகியோருடன் மீண்டும் இணைய மேற்கொள்ளும் ஆபத்தான பயணத்தை விவரிக்கிறது; இப்பயணத்தில் அவர் புராண காலத்து உயிரினங்களுடன் மோதும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.</p><p>இந்தப் படத்தில் ஜெண்டயா, ராபர்ட் பாட்டின்சன், சார்லிஸ் தெரான், லுபிடா நியாங்கோ, ஜான் லெகுயிசாமோ, எலியட் பேஜ், மியா கோத், கோரி ஹாக்கின்ஸ், ஜான் பெர்ன்தால், சமந்தா மார்டன், டிராவிஸ் ஸ்காட் மற்றும் பென்னி சாஃப்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>குஜராத் கள்ளச்சாராய விவகாரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 8-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/death-count-rises-to-8-in-gujarat-toxic-liquor-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/death-count-rises-to-8-in-gujarat-toxic-liquor-case#comments</comments><guid isPermaLink="false">701f49c7-0f51-4b60-b025-078e3427ea55</guid><pubDate>Thu, 20 Aug 2026 20:53:10 +0000</pubDate><atom:updated>2026-08-20T20:53:10.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat,கள்ளச்சாராய வழக்கு,Death Count,Toxic Liquor Case</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/gjbztdyr/Liquor.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/gjbztdyr/Liquor.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">குஜராத்</a> மாநிலத்தின் பவநகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது. மேலும் 39 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13 <a href="https://www.maalaimalar.com/topic/illicit-liquor">கள்ளச்சாராய</a> வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 31 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>போலி பாட்டில்களில் கள்ளச்சாராயம்:</h2><p>"கள்ளச்சாராய வழக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. மேலும், நகரில் உள்ள அரசின் சர் டி மருத்துவமனை மற்றும் பிற தனியார் மருத்துவமனைகளில் 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்," என துணை கோட்ட நீதிபதி அக்சர் வியாஸ் தெரிவித்தார்.</p><p>குஜராத் ஒரு "மதுவிலக்கு" மாநிலம், அங்கு மதுபானம் தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் அருந்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் பிரபலமான இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான (IMFL) பிராண்டின் போலி பாட்டில்களில் அடைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயத்தை அருந்தியுள்ளனர்.</p><p>கள்ளச்சாராய வழக்கின் முக்கிய சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்ட ரயீஸ் என்பவர், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று மாநில கண்காணிப்பு பிரிவின் (எஸ்.எம்.சி.) காவல் கண்காணிப்பாளர் மயூர்சிங் சாவ்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><h2>வழக்கு விசாரணை:</h2><p>இந்த வழக்கின் விசாரணை எஸ்.எம்.சி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான நரேந்திர யாதவ், தான் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதே கள்ளச்சாராயத்தைக் குடித்ததால் உயிரிழந்தார் என்று அவர் கூறினார்.</p><p>வர்தேஜ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரக்காடி கிராமத்தில், நச்சுத்தன்மையும் இரசாயனம் கலந்த மதுபானத்தை அருந்தியதால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து, 21 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று சாவ்தா கூறினார்.</p><p>கைது செய்யப்பட்ட குற்றவாளியான கௌதம் சோலங்கி என்பவரின் வீட்டில், உயிரிழந்த நபர்களின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில், கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனால், எத்தனால் மற்றும் பிற வேதிப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் அரசு ஏமாற்றிவிட்டது - நீதிமன்ற உத்தரவு குறித்து மாணவர்கள் குமுறல்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-students-said-government-deceived-them-after-court-stays-exam-cancellation</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-students-said-government-deceived-them-after-court-stays-exam-cancellation#comments</comments><guid isPermaLink="false">b9d5ade5-664d-4acc-b5f8-896d35d1252e</guid><pubDate>Thu, 20 Aug 2026 20:11:13 +0000</pubDate><atom:updated>2026-08-20T20:11:13.609Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நீதிமன்றம்,Students,மாணவர்கள்,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jmuczyt5/Jharkhand-Students.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Students]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jmuczyt5/Jharkhand-Students.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>11-ஆவது மற்றும் 13-ஆவது ஜே.பி.எஸ்.சி. தேர்வுகள் மூலம் நடத்தப்பட்ட நியமனங்களை ரத்து செய்யும் அறிவிப்புகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்தக் குழுவின் கீழ் உள்ள மாணவர் தலைவர்கள், <a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> அரசு வேலை தேடுபவர்களை "ஏமாற்றுவதாக" குற்றம் சாட்டினர்.</p><p>ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தனது முடிவை அரசு திறம்பட நியாயப்படுத்த தவறிவிட்டது என்று மாணவர் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.</p><h2>வேலை தேடுபவர்களை ஏமாற்றியுள்ளது:</h2><p>"ஆட்சேர்ப்பு தேர்வுகளை ரத்து செய்த அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த, தலைமை வழக்கறிஞரோ அல்லது எந்தவொரு மூத்த வழக்கறிஞரோ வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆஜராகியிருந்த வழக்கறிஞர்களும் தற்காத்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு பொறி என்பதை தெளிவாக காட்டுகிறது," என்று மன்ச் தலைவர் குணால் பிரதாப் சிங் குற்றம் சாட்டினார்.</p><p>22 ஆட்சேர்ப்புத் தேர்வுகளை ரத்து செய்வதற்கான அரசின் முடிவை தொடர்ந்து, தேர்வர்கள் ராஞ்சியின் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் 26 நாட்கள் போராட்டம் நடத்தி, பின்னர் இரண்டு மாதங்களுக்கு போராட்டத்தை நிறுத்தினர்.</p><p>"ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை கடுமையாக ஒடுக்க அரசு விரும்புகிறது என்று நாங்கள் அதன் நோக்கத்தை நம்பினோம், ஆனால் நாங்கள் தவறாக நினைத்துவிட்டோம். அரசு ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்களை ஏமாற்றியுள்ளது," என்று மன்ச் தலைவர் ரவீந்திர பாஸ்வான் கூறினார்.</p><p>வெள்ளிக்கிழமை அன்று அனைத்து 24 மாவட்டங்களிலும் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உருவ பொம்மைகளை அந்த அமைப்பு எரிக்கும் என்று அவர் அறிவித்தார்.</p><h2>உயர் நீதிமன்றம் தடை:</h2><p>11-ஆவது மற்றும் 13-ஆவது ஜார்க்கண்ட் பொது சேவை ஆணைய (JPSC) தேர்வுகள் மூலம் அரசு ஊழியர்களின் நியமனங்களை ரத்து செய்யும் அறிவிப்புகளின் செயல்பாட்டிற்கு உயர் நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) தடை விதித்தது. </p><p>மேலும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் நியமனங்களை ரத்து செய்யும் உத்தரவின் செயல்பாட்டிற்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.</p><p>அரசு அறிவிப்புகளுக்கு எதிரான பல மனுக்களை விசாரித்த நீதிபதி தீபக் ரோஷன், அடுத்த விசாரணை தேதியான செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மாநில அரசு தனது பதிலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.</p><p>16 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட ஜேஎல்கேஎம் தலைவர் தேவேந்திர நாத் மாத்தோ, 11 முதல் 13 வரையிலான ஜே.பி.எஸ்.சி. குடிமை பணி தேர்வுகளை ரத்து செய்த மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் நியமனத்தை நிறுத்திய அரசின் உத்தரவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதித்த நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாக கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெருவின் தெற்கு ஆண்டிஸ் மலைப்பகுதியில் நிலநடுக்கம்  - ரிக்டரில் 6.7-ஆக பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/world/magnitude-67-earthquake-shakes-perus-southern-andes</link><comments>https://www.maalaimalar.com/news/world/magnitude-67-earthquake-shakes-perus-southern-andes#comments</comments><guid isPermaLink="false">691590a2-4007-4e02-a886-1089666e5adf</guid><pubDate>Thu, 20 Aug 2026 19:29:49 +0000</pubDate><atom:updated>2026-08-20T19:29:49.909Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,பெரு,Peru,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/2wwauzfa/Peru-Quake-on-Map.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Peru Quake on Map]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/2wwauzfa/Peru-Quake-on-Map.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெருவின் தெற்கு ஆண்டிஸ் மலைப்பகுதியில் சக்திவாய்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கம்</a> ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.7 ஆக பதிவானது. </p><p>நிலநடுக்கம் ஏற்பட்டதை <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> புவியியல் ஆய்வு மையம் (USGS) உறுதிப்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் உடனடி சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.</p><h2>66 கிலோமீட்டர் ஆழம்:</h2><p>உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அயகுச்சோ பிராந்தியத்தின் பரினகோச்சாஸ் மாகாணத்தில் உள்ள உபாஹுவாச்சோ நகரத்திற்கு வடமேற்கே 38 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக USGS கூறியது. </p><p>இந்த நிலநடுக்கம் 66.7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இக்கா மற்றும் அரேகிபாஉள்ளிட்ட பெருவின் தெற்கு பகுதிகள் பலவற்றில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. </p><h2>நெருப்பு வளையத்தின் பகுதி:</h2><p>அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும் பகுதியான பசிபிக் பெருங்கடலின் "நெருப்பு வளையத்தின்" (Ring of Fire) ஒரு பகுதியாக பெரு இருப்பதால், அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.</p><p>2007-ஆம் ஆண்டில், இக்கா பிராந்தியத்தின் மாகாணம் ஒன்றில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 600 பேர் உயிரிழந்தனர்.</p><h2>இந்தோனேசியா நிலநடுக்கம்:</h2><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் குறித்த அச்சத்தால் பலர் இரவு முழுவதும் திறந்தவெளியில் தங்கினர்.</p><p>முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த நாட்டின் கத்தோலிக்கர்கள் அதிகம் வசிக்கும் 'ஃப்ளோரஸ்' தீவில் உள்ள ஆறு மாவட்டங்களில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை தேடி மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றினர்.</p><p>நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மங்கராய், கிழக்கு மங்கராய் மற்றும் நாகேகியோ ஆகிய மூன்று மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன; ஏனெனில் இப்பகுதிகளைச் சென்றடைவது கடினமாக இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>இமாச்சல் அரசு பள்ளி: ஒரே அறையில் 5 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/national/himachal-5-classes-take-turns-in-one-room</link><comments>https://www.maalaimalar.com/news/national/himachal-5-classes-take-turns-in-one-room#comments</comments><guid isPermaLink="false">921ede14-4a1e-43b4-b7a7-f7a3956d6ef6</guid><pubDate>Thu, 20 Aug 2026 19:00:18 +0000</pubDate><atom:updated>2026-08-20T19:00:18.713Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இமாச்சல பிரதேசம்,Himachal Pradesh,govt school,அரசு பள்ளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/imalb3z3/Classroom.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic: Classroom]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/imalb3z3/Classroom.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">இமாச்சல பிரதேசம்</a> மாநிலத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் கட்டிடம் பருவமழை காலத்தில் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து வகுப்புகளை சேர்ந்த 33 மாணவர்களுக்கான பாடங்கள் ஒரே ஒரு "பாதுகாப்பான அறையில்" நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>உள்ளூர் மக்கள் கவலை:</h2><p>நூர்பூர் துணைப்பிரிவில் உள்ள கைரியான் அரசு ஆரம்ப பள்ளியில் இடப்பற்றாக்குறை காரணமாக, இரண்டு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் அனைத்து வகுப்புகளையும் நடத்தி வருகின்றனர் என்று அவர்கள் கூறினர். பஞ்சாயத்து பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் கட்டிடத்தின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>பாதுகாப்பான அறையில் ஐந்து வகுப்புகளுக்கும் முறைப்படி பாடங்கள் நடத்தப்படுவதாக தலைமை ஆசிரியர் கேவல் சிங் தெரிவித்தார். குழந்தைகளின் பாதுகாப்பே முதன்மையான கவலை என்று பள்ளி முதல்வர் அஜய் குப்தா கூறினார். கல்வித் துறையை பலமுறை அணுகியும், இதுவரை வெறும் உறுதிமொழிகள் மட்டுமே கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>பள்ளி கட்டிடம் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டு, அது குறித்த அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வட்டாரத் தொடக்கக் கல்வி அதிகாரி வீணா சர்மா தெரிவித்தார். "நிதி கிடைத்தவுடன், பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்," என்று அவர் கூறினார்.</p><h2>பழைய பள்ளி கட்டிடம்:</h2><p>இந்த பள்ளி கட்டிடம் 1954-55 காலகட்டத்தில் கட்டப்பட்டது; காலப்போக்கில் அது பழுதடைந்துள்ளது. தற்போது பாதுகாப்பானதாக கருதப்படும் ஒரே அறையில் ஒரு ஜன்னல் மட்டுமே உள்ளதால், ஐந்து வகுப்புகளை சேர்ந்த மாணவர்களையும் அங்கு அமர வைப்பது கடினமாக இருப்பதாக பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>பள்ளி அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பான சிக்கலும் மற்றொரு தடையாக இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறினர். அந்த நிலம் கல்வித் துறைக்கு பதிலாக வனத் துறையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், புதிய பள்ளி கட்டிடத்திற்கான நிதியை அனுமதிக்கும் வகையில் அந்த நிலத்தை கல்வி துறைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>வலிப்பு வந்ததை போல் செயல்பட்ட மனித உருவ ரோபோ - சீன கண்காட்சியில் அரங்கேறிய சம்பவம்</title><link>https://www.maalaimalar.com/news/world/robot-malfunctions-and-suffers-seizure-at-china-conference</link><comments>https://www.maalaimalar.com/news/world/robot-malfunctions-and-suffers-seizure-at-china-conference#comments</comments><guid isPermaLink="false">8bc68420-ae72-4a51-9cfe-1f0be78637a6</guid><pubDate>Thu, 20 Aug 2026 17:53:52 +0000</pubDate><atom:updated>2026-08-20T17:53:52.948Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,ரோபோட்,robot</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zr3nwkkv/Robot-Malfunctions.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Robot Malfunctions]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zr3nwkkv/Robot-Malfunctions.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெய்ஜிங்கில் நடைபெற்ற 2026 <a href="https://www.maalaimalar.com/news/world">உலக</a> ரோபோ மாநாட்டில், ரோபோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டது. </p><p>மாநாட்டில் பங்கேற்ற <a href="https://www.maalaimalar.com/topic/robot">ரோபோ</a> அதன் தானியங்கி கட்டுப்பாட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விசித்திரமான மற்றும் குழப்பமான காட்சியை வெளிப்படுத்தியது. இந்த சம்பவம் அங்கு பேசுபொருளானது. </p><p>நவீன மனித உருவ இயந்திரங்களின் திறன்களை வெளிக்காட்டும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு செயல்விளக்கத்தில் அந்த ரோபோ பங்கேற்றபோது, ​​திடீரென அதன் கட்டுப்பாட்டை இழந்தது. </p><p>அதன் ரிமோட் கண்ட்ரோல் இணைப்பு செயலிழந்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து, அந்த ரோபோ மல்லாக்க விழுந்து, தனது கைகளையும் கால்களையும் மூர்க்கமாக அசைக்கத் தொடங்கியது.</p><h2>அடம்பிடிக்கும் குழந்தை:</h2><p>அதன் பதட்டமான அசைவுகள், மனிதர்களுக்கு ஏற்படும் வலிப்பு அல்லது ஒரு குழந்தை அடம்பிடிப்பது போல இருந்ததால், பார்வையாளர்கள் திகைத்துப்போயும் வேடிக்கையாகவும் உணர்ந்தனர். ரோபோவின் மனித இயக்குநர்கள் தலையிட விரைந்தனர். </p><p>இருந்தும், நிலைமை மேலும் அசாதாரணமானது. பல பொறியாளர்கள் அந்த ரோபோவை கட்டுப்படுத்தி, மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற முயற்சிப்பதை காண முடிந்தது, ஆனால் அதை உடனடியாக கட்டுப்படுத்த அவர்கள் சிரமப்படுவதாகத் தோன்றியது.</p><p>அருகில் இருந்த மக்கள் அந்த எதிர்பாராத காட்சியை பார்த்துக் கொண்டிருக்க, அந்த ரோபோ- கண்காட்சி தளத்தில் மீண்டும் மீண்டும் தவிப்பதை அந்த சம்பவத்தின் வீடியோக்கள் காட்டுகின்றன. </p><p>அந்த சம்பவம், ரோபோ முதலில் காட்சிப்படுத்த நோக்கமாக கொண்டிருந்த தொழில்நுட்பத்தையே மறைத்து, அந்த நிகழ்வின் அதிகம் பேசப்பட்ட தருணங்களில் ஒன்றாக மாறியது.</p><h2>சமூக வலைதள கருத்துக்கள்:</h2><p>இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிிரப்பட்டத. இது குறித்து ஒரு பயனர், "அதை அழுத்தி பிடிப்பதுதான் அவர்களின் தீர்வா? அதை தடுத்து நிறுத்த அவர்களிடம் ஒரு பொத்தான் கூட இல்லையா?? சரி... அது கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை," என்று எழுதியிருந்தார்.</p><p>மற்றொருவர், "இது அடம்பிடிக்கும் ஒரு சிறு குழந்தையை போலத் தெரிகிறது" என்றார்.</p><p>மூன்றாவது நபர், "மேலும், அவர்களால் அதை உடனடியாக ஆஃப் செய்ய முடியாது போலத் தெரிகிறது. அது என்ன விஷயம்? இது மிகவும், மிகவும் மோசமான அறிகுறி," என்று கருத்து தெரிவித்தார்.</p> <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"> A robot lost control in front of everyone at Beijing’s 2026 World Robot Conference, footage shows the machine thrashing hard on the floor after its remote reportedly died.<br><br>Operators rushed in and it still struggled to power down.<br><br>One moment it was a polished showcase, the…</p>&mdash; Mario Nawfal (@MarioNawfal) <a href="https://x.com/MarioNawfal/status/2090295854510838213?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>போலீஸ் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சென்ற ஜே.சி.பி. - கடைசியில் நடந்த டுவிஸ்ட்</title><link>https://www.maalaimalar.com/news/national/man-drives-stolen-jcb-through-police-barricades-in-dramatic-chase</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-drives-stolen-jcb-through-police-barricades-in-dramatic-chase#comments</comments><guid isPermaLink="false">a032d825-bde0-48d3-b76c-8e33ec1febcd</guid><pubDate>Thu, 20 Aug 2026 17:18:28 +0000</pubDate><atom:updated>2026-08-20T17:18:28.169Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>police,காவல் துறை,ஜேசிபி,JCB</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/c8g3r1wp/JCB-in-action.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JCB in action]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/c8g3r1wp/JCB-in-action.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ஒடிசா</a> மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் திருடப்பட்ட ஜே.சி.பி. இயந்திரம் காவல்துறை தடுப்புகள் மற்றும் நான்கு காவல் நிலைய எல்லைகளைக் கடந்து நீடித்த ஒரு சேசிங் சம்பவம் அரங்கேறியது.</p><p>ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று கல்லிக்கோட் காவல் நிலைய பகுதியில் ஒரு ஜே.சி.பி. திருடு போனதாக காவல்துறைக்கு முதலில் தகவல் கிடைத்தது. </p><p>அதனை தொடர்ந்து, திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில், கல்லிக்கோட், ரம்பா, புருஷோத்தம்பூர் மற்றும் கபிசூர்யநகர் ஆகிய நான்கு வெவ்வேறு காவல் நிலையங்களை சேர்ந்த குழுக்கள் ஒன்றிணைந்து ஒரு நீண்ட தேடுதல் வேட்டையை நடத்தின.</p><h2>மர்ம நபர் அட்டூழிம்:</h2><p>இதனிடையே காணாமல் போன ஜே.சி.பி. இயந்திரத்தை மர்ம நபர் ஓட்டி செல்வதை காவல் துறையினர் கண்டறிந்தனர். ஜே.சி.பி. இயந்திரங்கள் வேகமாக செல்வதற்காக உருவாக்கப்படவில்லை. </p><p>எனினும், அது வாகனத்தை ஓட்டிய சந்தேக நபரை தடுக்கவில்லை. வாகனத்தை நிறுத்தும் முயற்சியில், அதிகாரிகள் வழி நெடுகிலும் பல இடங்களில் தடுப்புகளை அமைத்தனர்.</p><p>ஆனாலும் அந்த நபர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி சென்று, ஒன்றன்பின் ஒன்றாக அந்த தடைகளை உடைத்துக்கொண்டு, அவரை வழிமறிக்க முயன்ற காவல்துறையினரின் முயற்சிகளை மீண்டும் மீண்டும் மீறி தப்பி சென்றார்.</p><p>ஜே.சி.பி. வாகனம் தடுப்புகளை கடந்து அதிவேகமாக செல்லும் காணொளிகள், சமூக ஊடகங்களில் வெளியாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. </p><p>கபிசூர்யநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியாலியில் அந்த சேசிங் அடைந்தது. அங்கு, சந்தேக நபர் ஒரு விவசாய நிலத்தில் ஜேசிபி இயந்திரத்தை விட்டுவிட்டு, கால்நடையாக அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றார்.</p><h2>தொடரும் விசாரணை:</h2><p>பின்னர் காவல்துறையினர் கைவிடப்பட்ட வாகனத்தை மீட்டு, சந்தேக நபரைத் தேடும் நடவடிக்கையைத் தொடங்கினர். இந்தத் திருட்டு எப்படி நடந்தது என்பது குறித்தும், துரத்தலின் போது நடந்த நிகழ்வுகளின் சரியான வரிசைமுறை குறித்தும் விசாரணை நடைபெற்று வருறது.</p><p>சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக இருப்பதாக புருஷோத்தம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நாயக் உறுதிப்படுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>வீட்டுப் பாடம் செய்யாததால் கன்னத்தில் அறைந்த ஆசிரியர்.. மயங்கி விழுந்து உயிரிழந்த 6 வயது சிறுவன்</title><link>https://www.maalaimalar.com/news/national/teacher-beats-6-year-old-boy-for-not-doing-homework-dies</link><comments>https://www.maalaimalar.com/news/national/teacher-beats-6-year-old-boy-for-not-doing-homework-dies#comments</comments><guid isPermaLink="false">5ca5f5cf-76a7-477e-b453-fc41b6608af7</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:14:54 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:14:54.384Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>school boy,teacher,பள்ளி சிறுவன் பலி,vishakapatnam,விசாகப்பட்டினம்,ஆசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jufbai8j/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 6-year-old dies]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jufbai8j/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆறு வயது சிறுவனை ஆசிரியர் அறைந்தபோது, அந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தான். ஆசிரியர் அவனை தாக்கியதால் தான் சிறுவன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><h3><strong>ஆந்திர பிரதேசம் தனியார் பள்ளி</strong></h3><p>ஆந்திர பிரதேசத்தில் உள்ள லிட்டில் கார்டன் தனியார் பள்ளியில் 6 வயதான பிரணய் தேஜா என்ற மாணவன் படித்து வந்துள்ளான். இதையடுத்து வழக்கம்போல பள்ளிக்கு வந்த சிறுவனை வீட்டுப்பாடத்தை செய்யாததற்காக ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ளார். </p><p>அப்போது மயங்கி விழுந்த சிறுவனை, பள்ளி ஊழியர்கள் அருகிலுள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><h3>6 வயது சிறுவனின் தந்தை</h3><p>இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை கூறும்போது, “காலை சுமார் 8 மணியளவில், என் மகன் எழுந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கூறினான். காலை நல்ல உடல் நலத்துடன் வீட்டிலிருந்து புறப்பட்டான், அவன் பள்ளிக்குச் சென்றே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான்.</p><p>குழந்தை வீட்டை விட்டு வெளியேறியபோது அவனிடம் எந்த அசாதாரணமும் இல்லை. ஆரம்பத்தில் நாங்கள் அவனை பள்ளிக்கு உடனடியாக அனுப்பவில்லை, ஆனால் தேர்வுகள் நெருங்கியதால், இறுதியில் நாங்கள் சம்மதித்தோம்.</p><p>சரி, விரைவில் தேர்வுகள் வரப்போகின்றன, அதனால் அவனைப் போக விடலாம் என்று நாங்கள் நினைத்தோம். அவனோ, சரி அப்பா, நான் போகிறேன்' என்று சொல்லிவிட்டுப் பள்ளிக்குச் சென்றான்.</p><p>பள்ளியிலிருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. என் மைத்துனரின் இடத்திற்கு அருகில் வேலை செய்யும் உள்ளூர் சமையல்காரர்கள்தான் அழைத்து எனக்குத் தகவல் தெரிவித்தனர்.</p><p>குழந்தையை கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.</p><p>நாங்கள் பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்தபோது, ​​ஆசிரியை அவனை பயமுறுத்தியது அதில் தெரிந்தது. அவர் அவனை கன்னத்தில் அறைந்ததில், அதிர்ச்சி மற்றும் பயத்தின் காரணமாக அவன் அங்கேயே சரிந்து விழுந்தான்.</p><p>மருத்துவமனைக்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே அவன் இறந்துவிட்டதாக மருத்துவர் எங்களிடம் கூறினார்.</p><p>என் மகனுக்கு வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் என எந்தப் பிரச்சினையும் இல்லை. நேற்று இரவு அவன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தான், இன்று காலையும் நலமாகவே எழுந்தான்.</p><p>அவனுக்கு வைரஸ் காய்ச்சலோ அல்லது வேறு எந்த உடல்நலப் பிரச்சினைகளோ இருக்கவில்லை” என்று அவர் கூறினார்.</p> <figure><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=315&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1627304149048485%2F&show_text=false&width=560&t=0" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></figure> <h3><strong>கோரிக்கை</strong></h3><p>குழந்தையின் மரணச் செய்தியை அறிந்ததும் குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனையில் கூடி, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இது ஒரு தனிப்பட்ட உடல்ரீதியான தண்டனைச் செயல் அல்ல என்றும், மற்ற குழந்தைகளும் தாக்கப்பட்டதாகவும் அக்குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், வருவாய் கோட்ட அதிகாரி திலீப் சக்கரவர்த்தி மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மஹிந்திரா மின்சார வாகனம் - BaaS வசதியுடன் BE 6 SPORTEQ கார் ஓணம் பண்டிகையில் விற்பனை</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/mahindra-electric-vehicle-baas-feature-be-6-sporteq-car-onam-festival-sale</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/mahindra-electric-vehicle-baas-feature-be-6-sporteq-car-onam-festival-sale#comments</comments><guid isPermaLink="false">92a47f1b-abc4-4244-a51f-ae91b8b08e17</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:11:18 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:11:18.419Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mahindra,மஹிந்திரா,Electric Car,மின்சார வாகனம்,BE6 SPORTEQ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ylbg9yuk/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மஹிந்திரா BE 6 SPORTEQ]]></media:title><media:description type="html"><![CDATA[ Mahindra Electric BE 6 SPORTEQ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ylbg9yuk/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மஹிந்திரா</a> நிறுவனம் தனது புதிய வகை மின்சார ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனமான (eSUV) BE 6 SPORTEQ- ஐ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.</p><h3><strong>மஹிந்திரா BE 6 SPORTEQ</strong></h3><p>மஹிந்திரா நிறுவனம், புதிய ஸ்போர்டெக் சீரிஸ் மூலம் BE 6 வரிசையில் மறுவடிவமைக்கப்பட்ட கேபின் மற்றும் பேட்டரியை ஒரு சேவையாக (BaaS) வாங்கும் வசதி ஆகியவை அறிமுகம் செய்யவுள்ளது.</p><p>BaaS என்பது, வாடிக்கையாளர் பேட்டரி இல்லாமல் காரை வாங்கி, அதை தனியாக வாடகைக்கு எடுக்கும் ஒரு மாதிரி ஆகும். இது காரின் ஆரம்ப விலையைக் குறைக்கிறது.</p><p>BE 6 SPORTEQ, டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆகிய இரண்டையும் கொண்ட இந்தியாவின் முதல் மின்சார வாகனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு உயர்தர பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.</p><p>இந்த வாகனத்தின் மூன்று திரைகளை கொண்ட முழுமையான காக்பிட், கூகுள் ஜெமினி மற்றும் ஓட்டுதலை மேலும் இணைக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமமில்லாமல் பயன்படுத்தும் வகையில் தனது முந்தைய வடிவத்தை மாற்றி அமைத்துள்ளது.</p><p>இது, ஒரு மின்சார SUV-யிடம் இருந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் எல்லைகளை தொடர்ந்து விரிவுபடுத்தும் ஒரு உரிமையாளர் அனுபவத்தை வழங்குகிறது.</p><p>SPORTEQ தொடரில் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து புதிய தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் அம்சங்களும், தற்போதுள்ள BE 6, XEV 9e மற்றும் XEV 9S வாடிக்கையாளர்களுக்கு, ஜனவரி 2027 முதல் கட்டங்களாக வெளியிடப்பட உள்ளது.</p><h3><strong>மஹிந்திரா நிர்வாக இயக்குநர்</strong></h3><p>இந்த வாகனம் குறித்து மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான வேலுசாமி கூறுகையில், “தங்கள் உரிமையாளர்களுடன் சேர்ந்து வளரும் வாகனங்களுக்கே எதிர்காலம் சொந்தமானது. SPORTEQ அதைச் செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் BE 6 SPORTEQ சீரிஸ் வாகனங்களின் விநியோகம் தொடங்க இருக்கிறது,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>விலை</strong></h3><p>BaaS மற்றும் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3.75 செலவாகும் 59 kWh பேட்டரியுடன் இதன் ஆரம்ப விலை ரூ. 11.45 லட்சமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. BaaS இல்லாமல் இதன் விலை ரூ. 19.45 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நிலவில் மோதி பள்ளத்தை ஏற்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் - புகைப்படங்களை வெளியிட்ட நாசா</title><link>https://www.maalaimalar.com/news/world/spacex-rocket-crater-moon-photos-released-by-nasa</link><comments>https://www.maalaimalar.com/news/world/spacex-rocket-crater-moon-photos-released-by-nasa#comments</comments><guid isPermaLink="false">c35dfe2a-3b97-4446-b81c-2551d3319776</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:09:56 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:09:56.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Moon,நிலவு,SpaceX,நாசா,ஸ்பேஸ் எக்ஸ்,nasa</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8wktdruo/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிலவு மோதல் பள்ளம்]]></media:title><media:description type="html"><![CDATA[ SpaceX Rocket Impact Crater]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8wktdruo/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பூமியில் இருந்து நிலவுக்கு செலுத்தப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/ஸ்பேஸ்-எக்ஸ்">ஸ்பேஸ் எக்ஸ்</a> ராக்கெட், நிலவின் மேற்பரப்பில் மோதி ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளின் புகைப்படங்களை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">நாசா</a> வெளியிட்டுள்ளது.</p><h3><strong>நிலவின் மேற்பரப்பில் பள்ளம்</strong></h3><p>நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக தனியார் திட்டமான ஃபால்கன் 9 ராக்கெட் 2025 ஜனவரி மாதத்தில் ஏவப்பட்டது. இது ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸை சேர்ந்த ப்ளூ கோஸ்ட் 1  நிலவு லேண்டரை சுமந்துகொண்டு நிலவுக்கு சென்றது.</p><p>இதையடுத்து இந்த மாதம் 5 அன்று ஸ்பேஸெக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் நிலவின் மேற்பரப்பில் எதிர்பாரா விதமாக மோதியது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் லூனார் செகனைசஸ் ஆர்பிட்டர் நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை படம் பிடித்தது.</p><p>இந்த புகைப்படங்கள் நிலவின் மேற்பரப்பில் 60 அடி (18 மீட்டர்) அகலம் மற்றும் 10 அடிக்கும் குறைவான ஆழத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.</p><h3><strong>கொரிய விண்வெளி நிறுவனம்</strong></h3><p>நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான புகைப்படங்கள் முன்னதாகவே டானூரி என்று அழைக்கப்படும் கொரியா பாத்ஃபைண்டர் லூனார் ஆர்பிட்டர் (KPLO) எடுத்த படங்களை, கொரிய விண்வெளி நிறுவனம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியிட்டது.</p><p>2009 முதல் சேவையில் உள்ள LRO, சந்திரன் தனக்குக் கீழே சுழலும்போது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை சந்திரனை துருவத்திலிருந்து துருவத்திற்கு சுற்றி வருகிறது.</p><h3><strong>நாசா அறிக்கை</strong></h3><p>இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், “அந்த படத்தை பிடிப்பது சவாலாக இருந்தது. நிலவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தைப் புகைப்படம் எடுக்க, அந்த இடம் பார்வைக்குத் தெரியும் வரை விண்கலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிகழ்விற்காக ஆறு நாட்கள் ஆனது.</p><p>மேலும், விண்கலம் 60 மைல் உயரத்திற்கு மேலே கடந்து செல்லும்போது, அதன் கேமரா பள்ளத்தை நோக்கியவாறு இருக்குமாறு மிகச் சரியாகச் சாய்க்கப்பட வேண்டியிருந்தது.</p><p>மற்றொரு சவாலாக நேரம் தான் இருந்தது. கேமரா 10 வினாடிகள் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ படம் எடுத்தால்கூட, இலக்கு மையத்திலிருந்து 10 மைல்கள் விலகிச் சென்றுவிடும்.</p><p>மேற்பரப்பிலிருந்து 1.5 அடி ஆழத்தில் ஏற்பட்ட மோதலின்போது, சூரியக் காற்று, விண்மீன் மண்டல அண்ட கதிர்கள் மற்றும் நுண் விண்கல் மோதல்களால் நீண்ட காலமாக உருமாற்றம் அடைந்த மேற்பரப்புத் தூசி மற்றும் பாறைகளால் அந்த கருமையான கோடுகள் உருவாகியுள்ளன.</p><p>எரிமலையின் பள்ளம் இருந்த இடத்தைக் கண்டறிவது, முன்னணி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் ஒன்றிணைத்த ஒரு உலகளாவிய முயற்சியாக இருந்தது.</p><p>நாசாவின் புவிக்கு அருகிலுள்ள விண்வெளிப் பொருட்கள் ஆய்வு மையம், மோதல் நிகழ்ந்த இடத்தைக் கண்டறியும் வரை அதன் பயணப்பாதையை படிப்படியாக செம்மைப்படுத்தி, பின்னர் அந்த தகவலை கொரியாவுக்கு வழங்கியது.</p><p>பதிலுக்கு கொரியாவை சேர்ந்த டானூரி குழுவினர் தங்களின் தொடர் படமெடுக்கும் வரிசையை செம்மைப்படுத்த உதவும் வகையில், தங்களின் ஆட்களை நாசாவின் LRO குழுவிற்கு அனுப்பினர்,” என்று நாசா தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாதி வார்த்தைகளை பயன்படுத்துவது SC/ST சட்டத்தின் கீழ் குற்றமாகாது: அலகாபாத் உயர் நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/using-caste-words-not-offence-under-sc-st-act-allahabad-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/using-caste-words-not-offence-under-sc-st-act-allahabad-high-court#comments</comments><guid isPermaLink="false">a3934d35-88b7-4ce8-a6af-5d42f68000fc</guid><pubDate>Thu, 20 Aug 2026 16:08:43 +0000</pubDate><atom:updated>2026-08-20T16:08:43.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Allahabad High Court,SC ST ACT,பட்டியல் மற்றும் பழங்குடியினர்,அலாகாபாத் உயர்நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/leis3q0w/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SC/ST Act - Allahabad High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/leis3q0w/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாதிய வசை சொற்களை பயன்படுத்துவது மட்டுமே பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் (SC/ST Act) கீழ் குற்றமாகாது என்று அலகாபாத் <a href="https://www.maalaimalar.com/topic/உயர்-நீதிமன்றம்">உயர் நீதிமன்றம்</a> கூறியுள்ளது.</p><p>பாதிக்கப்பட்டவரை அவமதிக்கும் நோக்கத்திற்காக அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன என்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமன்றி, ஒருவரை அவரது சாதியை குறிப்பிட்டு அழைப்பது மட்டும் இந்த சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.</p><h3><strong>அலகாபாத் உயர் நீதிமன்றம்</strong></h3><p>அலாகாபாத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழான ஒரு வழக்கு பரேலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ராய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது பாதிக்கப்பட்ட நபரை குறிப்பிடுவதற்கு ‘சாமர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக வெக்ராஜ் மற்றும் தெளலத் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p>மேலும், அவர்கள் தன்னை திட்டியதாகவும், சாமர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் கூறினார்.</p><h3><strong>நீதிபதி அமர்வு</strong></h3><p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சாமர் என்ற வார்த்தையை வெறுமனே பயன்படுத்தியதன் அடிப்படையில் மட்டுமே, மேல்முறையீட்டாளர்கள், பாதிக்கப்பட்டவரை பட்டியல் சாதி அல்லது பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அவமதிக்கும் நோக்கத்தில், அந்த வார்த்தையை பயன்படுத்தினார்கள் என்று அர்த்தமாகாது,” என்று கூறினர்.</p><p>மேலும், துஷ்பிரயோகம் மற்றும் குற்றவியல் மிரட்டல் குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை, மனுதாரர்கள் இருவருக்கும் குறிப்பிட்ட பங்கு என எதுவும் கூறப்படவில்லை.</p><p>பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான முக்கிய குற்றச்சாட்டுகள் வெக்ரஜ் என்பவரின் மகனான மற்றொரு குற்றவாளியான ஹிம்மத் சிங்கு மீது ஏற்கனவே உள்ளன.</p><p>எனவே, பதிவில் உள்ள ஆதாரங்கள் தற்போதைய மேல்முறையீட்டாளர்களான வெக்ராஜ் மற்றும் தெளலத் ஆகியோருக்கு எதிராக எந்தவொரு குறிப்பிட்ட போதுமான பங்கையும் வெளிப்படுத்தவில்லை,” என்று நீதிமன்றம் கூறியது.</p>]]></content:encoded></item><item><title>கொரோனா பெருந்தொற்று பதிவுகளை மறைக்க சதி செய்த நபர்.. அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்</title><link>https://www.maalaimalar.com/news/world/man-who-plotted-to-hide-covid-pandemic-records-appears-in-us-court</link><comments>https://www.maalaimalar.com/news/world/man-who-plotted-to-hide-covid-pandemic-records-appears-in-us-court#comments</comments><guid isPermaLink="false">f612f6af-9af6-4ee3-bdaa-b016301f0003</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:51:53 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:51:53.530Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவிட் 19,Corona,Covid 19,Wuhan lab,கொரோனா,வுஹான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3sawszci/Untitled-design-15.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Covid Records Conspiracy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3sawszci/Untitled-design-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவை சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் அந்தோனி ஃபாசியின் முன்னாள் ஆலோசகர் ஒருவர், ஆராய்ச்சி நிதி மானியங்களை பெறுவதற்காக கொரோனா பெருந்தொற்று தொடர்பான அரசாங்க ஆவணங்களை மறைத்து சதித்திட்டம் தீட்டிய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.</p><h3><strong>கொரோனா ஆராய்ச்சி</strong></h3><p>கொரோனா பெருந்தொற்று காலத்தில் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தில் (Niaid) ஃபாசி என்பவரின் கீழ் மூத்த அதிகாரியாக டேவிட் மோரன்ஸ் என்பவர் பணியாற்றினார்.</p><p>78 வயதான டேவிட், கொரோனா ஆராய்ச்சி மானியங்கள் தொடர்பாக ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வந்த பொது ஆவண கோரிக்கைகளை முறியடிக்கும் ஒரு திட்டத்தை தீட்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.</p><h3><strong>நீதிமன்றத்தில் ஆஜர்</strong></h3><p>இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டேவிட் என்பவருக்கு ஆதரவாக வழக்கறிஞர் திமோதி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர், இன்று தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம், டேவிட் தான் செய்த செயலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறினார்.</p><p>இதையடுத்து பெருந்தொற்று நடவடிக்கைகளின் முகமாக திகழ்ந்த ஃபாசி, செனட் குழுவின் முன் ஆஜரானார்.</p><p>அப்போது ஃபாசி, தன்னை சிறையில் அடைப்பதற்காக கென்டக்கியைச் சேர்ந்த தனது நீண்டகால எதிரியான குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் ராண்ட் பால் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார்.</p><h3><strong>FBI குற்றச்சாட்டு</strong></h3><p>கொரோனா நோயின் தோற்றம் குறித்த மர்மம் இன்னும் நீங்காத நிலையில், சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவே இந்த பெருந்தொற்றுக்கு காரணமாக இருக்கலாம் என்று 2023-ஆம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த உள்நாட்டு உளவு மற்றும் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) கூறியது.</p><p>அமெரிக்காவின் இந்த கூற்றில் எந்தவிதமான நம்பகத்தன்மையும் இல்லை என்று கூறி சீனா தொடர்ந்து மறுத்து வந்தது.</p><p>ஜனவரி 2025-ல், சீன ஆய்வகத்தில் கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த வெளிநாட்டு உளவு அமைப்பான சி.ஐ.ஏ (CIA) கூறியது.</p><p>அதே நேரத்தில், மற்ற நான்கு அமெரிக்க உளவு நிறுவனங்களும் தேசிய புலனாய்வு மன்றமும், இந்த வைரஸ் பெரும்பாலும் ஏதேனும் ஒரு விலங்கின் மூலம் இயற்கையாக பரவியிருக்கலாம் என்று கூறியது.</p><p>சீனாவில் உள்ள வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா தோன்றியது என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், வெளவால் இனத்தின் மீது கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சி மானியத்தை ரத்து செய்ய தேசிய சுகாதார நிறுவனங்கள் முடிவு எடுத்தது.</p><p>இந்த முடிவு குறித்து டேவிட் மனு தாக்கல் செய்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் செனட் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p>மேலும், வௌவால் இனத்தின் மீது கொரோனா வைரஸ் மானியத்தை மீட்டெடுக்க தான் உதவுவதாகவும், ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா பரவல் ஏற்பட்டது என்ற வதந்தியை, நான் முறியடிப்பதாகவும் டேவிட் உறுதியளித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.</p><p>தகவல் அறியும் உரிமை சட்ட கோரிக்கைகள் மூலம் தங்களது தகவல்தொடர்புகள் அரசாங்கத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும் என்பதை அறிந்து, டேவிட் அவரது அரசு மின்னஞ்சல் கணக்கிற்கு பதிலாக தனது தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்தி தொடர்புகொண்டனர் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.</p><p>இந்த நிலையில் டேவிட் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நவம்பர் 12 அன்று அவருக்கு தண்டனை விதிக்கப்படும் போது, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 100-ஐ கடந்தது</title><link>https://www.maalaimalar.com/news/world/more-than-100-killed-in-gold-mine-collapse-in-central-african-republic</link><comments>https://www.maalaimalar.com/news/world/more-than-100-killed-in-gold-mine-collapse-in-central-african-republic#comments</comments><guid isPermaLink="false">0fde620e-a04e-4a0f-9a20-20aa56efe56e</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:21:47 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:21:47.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold Mine,Central African Republic,மத்திய ஆப்பிரிக்க குடியரசு,தங்கச் சுரங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/4zw3iegg/africa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gold mine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/4zw3iegg/africa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.</p><h2>சுரங்க விபத்து</h2><p>மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் 30 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் உள்ளே சிக்கி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இந்நிலையில், சுரங்க விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐயும் தாண்டியுள்ளது. பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. </p><h2>மீட்புப்பணிகள்</h2><p>நானா-மாம்பெரே மாகாணத்தின் அப்பா பகுதியில் நடந்த சுரங்க விபத்து குறித்து பேசிய மாகாணத்தின் துணை மேயர், சுலைமான், மீட்புக்குழுவினரும் அப்பகுதி மக்களும் பல மணி நேரம் போராடி இடிந்து விழுந்த சுரங்கத்தில் இருந்து உடல்களை மீட்டனர். காயம் அடைந்த சுரங்க தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.</p><p>பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அரசு செய்தித் தொடர்பாளர் எவரிஸ்ட் என்கமானா, பாதிப்பு அடைந்தவர்களுக்கு நிவாரணமும் உதவியும் வழங்க அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர் என்றார்.</p><h2>போதுமான பாதுகாப்பு இல்லை</h2><p>மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பல ஆயிரம் மக்கள் சிறு அளவிலான கனிம அகழ்வு சுரங்க தொழிலில் செய்வதால், அங்கு பாரம்பரிய சுரங்கங்கள் இடிந்து விழுவது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. சுரங்க தொழிலாளர்களுக்கு பொதுவாக போதுமான பாதுகாப்பு இல்லாததாலும், இந்த விபத்துகள் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்துவதாலும் இப்பணி அபாயகரமானது.</p>]]></content:encoded></item><item><title>Video: கவின் - நயன்தாரா இணையும் ‘ஹாய்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hai-movie-trailer-release-kavin-nayanthara</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hai-movie-trailer-release-kavin-nayanthara#comments</comments><guid isPermaLink="false">8f1b54b5-ece4-4ad0-adbd-7bb985b2cfa1</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:03:46 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:03:46.357Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயன்தாரா,Nayanthara,kavin,கவின்,RowdyPictures,Hi Movie,Hi Trailer,ஹாய் டிரெய்லர்,JenMartin,7ScreenStudio</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jplbi4c8/Hi-Movie" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hi Movie ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jplbi4c8/Hi-Movie?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'லேடி சூப்பர்ஸ்டார்' <a href="https://www.maalaimalar.com/topic/nayanthara">நயன்தாரா</a> மற்றும் இளம் முன்னணி நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/kavin">கவின் </a>முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்தத் திரைப்படம் ஒரு முழுமையான காதல் மற்றும் குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ளது. </p><p>ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த '<a href="https://www.maalaimalar.com/topic/himovie">ஹாய்</a>' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><h2>நட்சத்திரப் பட்டாளம்</h2><p>இப்படத்தில் கவின் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான பிரபு, ராதிகா சரத்குமார், கே. பாக்யராஜ், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி, எஃப்.இ.எஃப்.எஸ்.ஐ விஜயன் மற்றும் காவியா அறிவுமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.</p><h2>பாடல்கள் தந்த பலம்</h2><p>ஜென் மார்ட்டின் இசையில் ஏற்கனவே <a href="https://www.maalaimalar.com/topic/gv-prakash-kumar">ஜி.வி. பிரகாஷ் குமார் </a>பாடிய <strong>"கண்ணக்குழியா"</strong> உள்ளிட்ட மூன்று பாடல்கள்  ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/WKq3S2vvVEM"></iframe></figure><h2>படக்குழு</h2><p>இத்திரைப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார்.</p><p>இத்திரைப்படத்திற்கு சி.யு. முத்துச்செல்வன் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்க, ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். </p><p>விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் 'ரவுடி பிக்சர்ஸ்', லலித் குமாரின் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் 'ஜீ ஸ்டுடியோஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன.</p><p>தணிக்கைக் குழுவால் 'U/A' சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமத்தை பிரபல 'ஜீ5' நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>ரிலீஸ் தேதி </h2><p>இத்திரைப்படம் முதலில் <strong>ஆகஸ்ட் 14</strong> அன்று சுதந்திர தின வார இறுதியில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>ஆனால், அதே தேதியில் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மற்றும் விஷாலின் 'மகுடம்' போன்ற பெரிய படங்கள் மோதவிருந்ததாலும், படத்தின் இறுதிப் பணிகள் மற்றும் புரொமோஷன் காரணங்களினாலும் இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. </p><p>தற்போது, <strong>ஆகஸ்ட் 28</strong> அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகிறது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: மதுரையை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது திருப்பூர்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-tamilans-beat-madurai-panthers-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-tamilans-beat-madurai-panthers-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">61295ea0-c243-4784-b0ee-1da6dba24625</guid><pubDate>Thu, 20 Aug 2026 14:01:43 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:01:43.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்,tirupur tamizhans</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zw4u3g3b/tirupur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tirupur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zw4u3g3b/tirupur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை அணிக்கு எதிரான போட்டியில் திருப்பூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது கட்டம் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>திருப்பூர் தமிழன்ஸ்</h2><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி பவுலிங் தேர்வு செய்தது. </p><p>அதன்படி, முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அடிக் உர் ரகுமான் 30 பந்தில் 43 ரன்கள் குவித்தார். ரோகன் பத்ரா 22 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார்.</p><p>திருப்பூர் அணி சார்பில் மதிவாணன் 3 விக்கெட்டும், நடராஜன், மோகன் பிரசாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா அதிரடியாக ஆடி 17 பந்தில் 7 சிக்சர் உள்பட 48 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.</p><h2>பிரதோஷ் ரஞ்சன் பால் பொறுப்பான ஆட்டம்</h2><p>கடைசி கட்டத்தில் பிரதோஷ் ரஞ்சன் பால் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.</p><p>இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 17.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் திருப்பூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.</p><p>மதுரை அணி தான் ஆடிய 6 போட்டிகளில் 2வது தோல்வி அடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் விக்னேஷ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vignesh-releases-list-of-717-closed-tasmac-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vignesh-releases-list-of-717-closed-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">d706d07d-3f97-41b8-b7c5-54547fe5f1bd</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:30:27 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:30:27.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்கடை,tasmac closure,cm vijay,முதலமைச்சர் விஜய்,tvk government,அமைச்சர் விக்னேஷ்,Minister Vignesh,717 Tasmac Closed</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/pqgx982q/Minister-Vignesh" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vignesh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/pqgx982q/Minister-Vignesh?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் மதுக்கடைகள்</a> முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் முகவரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் விக்னேஷ்</a> இந்த விவரங்களைச் செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.</p><p>தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், முதற்கட்டமாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களின் அருகே இயங்கி வரும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். </p><p>அந்த அறிவிப்பின்படி, தற்போது 717 கடைகளும் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் எண்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் சமூக ஊடகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.</p><h2>இது குறித்து அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,</h2><p>"முதலமைச்சரின் உத்தரவின்படி 717 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் கடை</a>களும் மூடப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாகக் கோயம்பத்தூர் மாவட்டத்தில் தான் மிக அதிகமான கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மக்கள் நலனே முக்கியம் என்பதால், அதிக வருவாய் ஈட்டித் தந்த முக்கியமான கடைகளும் இதில் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p>கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், எஞ்சிய சில கடைகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. எனினும், பொதுமக்கள் மற்றும் குடும்பங்களின் நலனே நமது முதலமைச்சரின் ஒரே நோக்கம். </p><p>இந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட நினைப்பவர்கள் அல்லது அரசுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.</p><p>மேலும், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதைத் தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பணியில் சேர்ந்த நபர் 6 மணி நேரத்தில் ராஜினாமா.. சமூக வலைதளத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய மேலாளர்</title><link>https://www.maalaimalar.com/news/national/new-employee-resigns-in-6-hours-manager-linkedin-post</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-employee-resigns-in-6-hours-manager-linkedin-post#comments</comments><guid isPermaLink="false">7c2e6711-af29-4b17-b665-3d165a0a9c7e</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:28:44 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:28:44.810Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>manager,Resignation,Employee,ராஜினாமா,ஊழியர்,மேலாளர்,job frustration</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/eggcysrn/Untitled-design-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ லிங்க்ட்இன் பதிவு]]></media:title><media:description type="html"><![CDATA[ LinkedIn hiring story]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/eggcysrn/Untitled-design-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளர், தனது ஊழியர் பணியை விட்டு விலகுவதாக தெரிவித்ததையடுத்து, அவருக்கு பதிலாக புதிய பணியாளரை நியமித்துவிட்டு செல்லுமாறு தெரிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h3><strong>டெல்லி நிறுவனம்</strong></h3><p>டெல்லியில் ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா என்பவர் ஹையரிங் இன்சைடர் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அவரிடம் பணிபுரிந்த ஒரு ஊழியர், தான் பணியை விட்டு செல்வதாக கூறியுள்ளார்.</p><p>அப்போது நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/topic/ஊழியர்">ஊழியரிடம்</a>, தங்களின் பதவிக்கு வேறொரு பணியாளரை நியமித்துவிட்டு செல்லுமாறு மேலாளர் கூறியுள்ளார். </p><p>இதையடுத்து அந்த நபர், தான் வேலை பார்த்த பணிக்கு வேறு நபரை தேர்வு செய்து, அவரை நிறுவனத்திற்கு அழைத்து வந்து பணிக்கு தேவையான அனைத்தையும் கற்றுகொடுத்துள்ளார்.</p><p>மேலும் தான் புதியதாக தேர்ந்தெடுத்த நபருக்கு, நிறுவனத்தின் பணிச்சுமை, காலக்கெடு மற்றும் நிறுவனத்தின் கொள்கைகள் ஆகிய அனைத்தையும் முதல் நாளே கற்றுக் கொடுத்துள்ளார்.</p><h3><strong>பணி குறித்து விளக்கம்</strong></h3><p>புதியதாக வேலையில் சேர்ந்த நபரிடம், நேர்காணல் முடிந்த பிறகு, உண்மையில் பணி எப்படி இருக்கும் என்பதை அவர் பல மணி நேரமாகவும் விளக்கியுள்ளார்.</p><p>பணி குறித்து மிகைப்படுத்தாமல், உண்மையான பணி குறித்து தெளிவாக கூறியுள்ளார். இதையடுத்து புதியதாக பணியில் சேர்ந்தவர் மேல், பலவிதமான பொறுப்புகள் திடீரென திணிக்கப்பட்டதால், அந்த நபர் பதற்றமடைந்துள்ளார்.</p><h3><strong>ராஜினாமா</strong></h3><p>இதைத்தொடர்ந்து புதிதாக வேலைக்கு சேர்ந்த நபர் 6 மணி நேரம் கழித்து நிறுவனத்தின் மேலாளரிடம் சென்று தான் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.</p><p>இதைக்கேட்ட மேலாளர் கோபமடைந்து, பழைய ஊழியரை அழைத்து, அவரிடம் என்ன சொன்னாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர், நீங்கள் அவருக்கு கற்றுக் கொடுக்க சொன்ன அனைத்தையும் சென்னேன் என்று கூறியுள்ளார்.</p><p>ஒரு வேலையின் யதார்த்தத்தை பார்த்த பிறகும், புதிதாக இணைந்தவர் ஏன் பணியை விட்டு விலகினார் என்பதை நிறுவனத்தின் மேலாளரால் புரிந்து கொள்ள முடியவில்லை.</p><h3><strong>சமூக வலைதள பதிவு</strong></h3><p>இந்த சம்பவத்தை லிங்க்ட்இன் வலைதளத்தில் பதிவிட்ட நிறுவனத்தின் மேலாளர் ஸ்ரீவஸ்தவா, அந்த புதிய பணியாளரிடம் நிறுவனம் முதலில் வைத்த எதிர்பார்ப்புகளும், உண்மையில் அவர் செய்ய வேண்டிய வேலையும் முற்றிலும் மாறுபட்டிருந்ததாக பதிவிட்டார்.</p><p>சமூக வலைதளத்தில் நிறுவனத்தின் மேலாளர் வெளியிட்ட இந்த பதிவுக்கு, பல்வேறு பயனர்கள் பதிலளித்து கருத்து தெரிவித்தனர். </p><h3><strong>கருத்துக்களை பதிவிட்ட பயனர்கள்</strong></h3><p>இந்த பதிவிற்கு ஒரு பயனர், ஆட்சேர்ப்பில் வெளிப்படைத்தன்மை ஏன் முக்கியம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு வலிமையான நினைவூட்டலாகும் என பதிவிட்டார்.</p><p>மேலும், நேர்த்தியான நேர்காணல் ஒரு புதிய ஊழியரை கவரலாம், ஆனால் அந்த பணியின் உண்மைத் தன்மை தான் அவரை வேலையில் தக்க வைப்பதாக கூறினார்.</p><p>மற்றொரு நபர், ஆட்சேர்ப்பில் சொல்லப்படும் ஒரு விலை உயர்ந்த பொய் என்னவென்றால், உண்மைக்கு புறம்பான வேலை குறித்து வாக்குறுதி அளிப்பதுதான் என்று கூறினார்.</p><p>மேலும், புதிய ஊழியர் பணியில் சேரும்போது உண்மையான வேலையை குறித்து தெரிந்துகொண்டு, பணியின் செயல்முறை தோல்வியில் முடிகிறது என்று பதிவிட்டார்.</p><p>நிறுவன மேலாளர் பகிர்ந்த இந்த பதிவிற்கு, சமூக வலைதளத்தின் பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் தகுதி நீக்க நடவடிக்கை - மனுவை தள்ளுபடி செய்த  உயர்நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-mlas-disqualification-case-dismissed-by-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-mlas-disqualification-case-dismissed-by-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">eedf42e4-a28d-40d3-bee0-50fe10b60f5d</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:17:12 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:17:12.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt,ADMK MLA,floor test,அதிமுக எம்.எல்.ஏ.க்கள்,நம்பிக்கை தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jn7u2tal/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AIADMK MLA]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jn7u2tal/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக</a> எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சென்னை உயர் நீதிமன்றத்தில்</a> தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><h3><strong>நம்பிக்கை கோரும் தீர்மானம்</strong></h3><p>தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13 அன்று தமிழக வெற்றி கழகம் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தபோது அதற்கு ஆதவராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.</p><p>தவெக-விற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து அதிமுக-வில் இருந்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.</p><h3><strong>அதிமுக எம்.எல்.ஏ.க்கள்</strong></h3><p>இதற்கிடையே மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி, சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்.</p><p>இந்த மனுவை ஏற்று, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.</p><p>அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செல்வகுமார் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கு நீதிபதிகள் தர்மதிகாரி மற்றும் அருள் முருகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது நீதிபதிகள் அமர்வு, கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கையை திரும்ப பெறுவதாக அதிமுக பொதுச் செயலாளர் மனு அளித்திருப்பதால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை தொடர வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று கூறினர்.</p><p>மேலும், சட்டப்படி 15 நாட்களுக்குள் எம்.எல்.ஏ.க்களை மன்னித்து கடிதம் அளித்து விட்டால், தகுதி நீக்கம் என்ற கேள்வியே எழாது என்றும் நீதிபதிகள் கூறினர்.</p><p>இதைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மூளைத்தண்டு இறப்பு: என்ன? எப்படி உறுதி செய்யப்படுகிறது? உறுப்பு தானத்தில் அதன் முக்கியத்துவம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/brainstem-death-what-how-confirmed-importance-organ-donation</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/brainstem-death-what-how-confirmed-importance-organ-donation#comments</comments><guid isPermaLink="false">e2159ee8-1121-44d3-b40c-674c78c5813b</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:30:41 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:30:41.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,HealthTips,organ donation,கோமா,Brainstem death,மூளைத்தண்டு இறப்பு,மூளைச்சாவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/4b1vhdv3/brai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Brainstem death ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/4b1vhdv3/brai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனித உடலின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று மூளை. அதில் மூளைத்தண்டு என்பது சுவாசம், இதயத் துடிப்பு, விழுங்குதல், இருமல் போன்ற உயிருக்கு அத்தியாவசியமான பல செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் முக்கியப் பகுதியாகும். இந்த மூளைத்தண்டு செயல்பாடுகள் முழுமையாகவும், நிரந்தரமாகவும், மீள முடியாத வகையிலும் நின்றுவிடும் நிலையே மூளைத்தண்டு இறப்பு எனப்படுகிறது. இந்தியாவில் இது மருத்துவ ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மரணமாகக் கருதப்படுகிறது.</p><h2>மூளை<strong>த்தண்டு இறப்பு எதனா</strong>ல் ஏற்படுகிறது?</h2><p>கடுமையான தலைக்காயம், மூளையில் ரத்தக்கசிவு, பக்கவாதம், மூளைக்கு நீண்ட நேரம் ஆக்சிஜன் கிடைக்காத நிலை, சில மூளைக் கட்டிகள் உள்ளிட்ட காரணங்களால் மூளைத்தண்டு நிரந்தரமாக பாதிக்கப்படலாம். இதன் விளைவாக ஒருவர் சுயமாக சுவாசிக்க முடியாத நிலைக்கு செல்கிறார்.</p><h2><strong>கோமாவுக்கும் மூளைத்தண்டு இறப்புக்கு</strong>ம் வித்தியாசம்</h2><p>கோமா நிலையில் இருக்கும் ஒருவர் உயிருடன் இருக்கிறார்; சில சூழல்களில் சிகிச்சையின் மூலம் அவருடைய நிலை மேம்பட வாய்ப்பு இருக்கலாம். ஆனால் மூளைத்தண்டு இறப்பு என்பது அதற்கு முற்றிலும் மாறுபட்டது. மூளைத்தண்டு செயல்பாடுகள் நிரந்தரமாகவும் மீள முடியாத வகையிலும் நின்றுவிட்டால், அந்த நபர் மீண்டும் சுயநினைவு பெறவோ, தானாக சுவாசிக்கவோ முடியாது.</p><h2>இதயத்<strong>துடிப்பு எப்படி தொடர்கிறது?</strong></h2><p>மூளைத்தண்டு இறப்பு ஏற்பட்ட பிறகும், வென்டிலேட்டர் போன்ற செயற்கை சுவாச உதவி மூலம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்கப்படலாம். இதனால் சில காலம் இதயத்துடிப்பும், உடலில் ரத்த ஓட்டமும் தொடரலாம். இதனால் வெளிப்படையாக அந்த நபர் உயிருடன் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படலாம். ஆனால் இது மூளைத்தண்டு இறப்பு ஏற்பட்டுள்ள உண்மையை மாற்றாது.</p><h2>மூளைத்தண்டு <strong>இறப்பு எப்படி</strong> உறுதி செய்யப்படுகிறது?</h2><p>மூளைத்தண்டு இறப்பை உறுதி செய்வது மிகவும் கவனமாகவும் மருத்துவ விதிமுறைகளின்படியும் நடைபெறும். முதலில் மீளக்கூடிய காரணங்களால் ஏற்பட்ட மயக்கம் அல்லது மூளை செயலிழப்பை மருத்துவர்கள் நீக்கிப் பார்க்க வேண்டும். </p><figure><img alt="coma-brain death" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/j2ipolk8/brain.jpg" /></figure><p>பின்னர் கண்களின் ஒளி எதிர்வினை, கருவிழி எதிர்வினை, இருமல் மற்றும் பிற மூளைத்தண்டு பிரதிசெயல்கள் உள்ளிட்ட பல மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தன்னிச்சையான சுவாசம் இல்லாததை மதிப்பிடுவதற்கும் சிறப்பு பரிசோதனை செய்யப்படுகிறது.</p><p>இந்தியாவில் மூளைத்தண்டு இறப்பு அறிவிக்க, அரசு விதிமுறைகளின்படி மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு பரிசோதனை மேற்கொள்கிறது. பொதுவாக பரிசோதனைகள் இரண்டு முறை செய்யப்படுகின்றன. பெரியவர்களுக்கான நடைமுறையில் இரண்டு பரிசோதனைகளுக்கும் இடையில் குறைந்தது 6 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். அதன் பின்னரே மூளைத்தண்டு இறப்பு அதிகாரப்பூர்வமாகச் சான்றளிக்கப்படுகிறது.</p><h2>உறு<strong>ப்பு தானத்தில் முக்கிய</strong> பங்கு</h2><p>மூளைத்தண்டு இறப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, குடும்பத்தினர் சம்மதித்தால், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட தானத்திற்கு ஏற்ற உறுப்புகளை தேவையான மருத்துவ மற்றும் சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு மற்ற நோயாளிகளுக்கு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பயன்படுத்த முடியும். வென்டிலேட்டர் மூலம் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டம் சில காலம் பராமரிக்கப்படுவதால், அவை மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்ற நிலையில் இருக்க உதவுகிறது.</p><h2>உயிரிழப்பிலும் <strong>ஒரு உயிரைக் காப்</strong>பாற்றும் வாய்ப்பு</h2><p>மூளைத்தண்டு இறப்பு என்பது ஒரு குடும்பத்திற்கு மிகுந்த துயரமான தருணம். அதே நேரத்தில், உறுப்பு தானம் மூலம் ஒருவரின் வாழ்க்கை முடிந்த பிறகும் பலரின் வாழ்க்கையைத் தொடரச் செய்யும் வாய்ப்பு உருவாகிறது. எனவே, மூளைத்தண்டு இறப்பு குறித்த சரியான விழிப்புணர்வும், உறுப்பு தானம் குறித்த அறிவும் சமூகத்தில் அதிகரிக்க வேண்டியது அவசியம்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் நலனுக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது: முதல் மந்திரி சிவக்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-interview-in-kovalam-after-summit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-interview-in-kovalam-after-summit#comments</comments><guid isPermaLink="false">198ebf7d-c1b2-4c82-8e55-e4614f536f4e</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:15:00 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:15:00.151Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,DK Shivakumar,டிகே சிவக்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/q6lorf31/DKS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/q6lorf31/DKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் நலனுக்காகத்தான் மேகதாது அணை கட்டப்படுகிறது என கர்நாடகா முதல் மந்திரி சிவக்குமார் கூறியுள்ளார்.</p><p>தென் மாநில முதல் மந்திரிகள் மாநாடு முடிந்து கர்நாடக முதல்மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அனைத்து தென்னிந்திய மாநிலங்களின் நலன் கருதி நாங்கள் பல்வேறு விஷயங்களை முன்வைத்துள்ளோம்.</p><h2>முக்கிய கோரிக்கை</h2><p>1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பையே அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்றும், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதுவே முக்கிய கோரிக்கையாக இருந்தது.</p><p>தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அனைத்தும் இதில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என நான் கருதுகிறேன். அதனால்தான் நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தோம்.</p><p>எங்களின் பல்வேறு நீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்து, தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி சுமூகமாகத் தீர்வு காண அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p>மேகதாது அணை விவகாரத்தைப் பொறுத்தவரை குடிநீருக்கான 5 டி.எம்.சி நீரைத் தவிர, அணையில் உள்ள மற்ற அனைத்து நீரும் — ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் — தமிழ்நாட்டிற்கே திறந்துவிடப்படும் என உள்துறை அமைச்சரின் முன்னிலையில் நான் உறுதி அளித்துள்ளேன்.</p><p>எனவே, தமிழ்நாடும் புதுச்சேரியும் இதுகுறித்து முழு நம்பிக்கையுடன் இருக்கலாம். இந்த அணை எங்களுக்காக அல்ல, உங்களுக்காக மட்டுமே கட்டப்படவுள்ளது என தெரிவித்தார்.</p><p>முன்னதாக, மேகதாது அணை குறித்து பேசிய கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:</p><h2>மேகதாது அணையால் தமிழகத்துக்கே  பலன்</h2><p>மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாடுக்குத்தான் அதிக பலன்.</p><p>நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும். ஆந்திரா எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடகா முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை.</p><p>கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. நதிநீர்ப் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகரவேண்டிய நேரம்.</p><p>தண்ணீர் நம்மை ஒன்றுசேர்க்க வேண்டும், பிரித்து விடக்கூடாது. மாநிலங்களுக்கு நியாயமான வரிப்பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடகா முன்வைத்தது என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>