<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 23 Aug 2026 07:17:27 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 23 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-august-2026#comments</comments><guid isPermaLink="false">6d7f3163-989e-430c-80b7-807a84f93590</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:56:09 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:52:29.145Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ykyip0uq/TodayLiveNews001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கியச் செய்திகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ykyip0uq/TodayLiveNews001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/likelihood-of-20-dmk-district-secretaries-losing-their-posts">வயது மற்றும் ஆண்டு வரம்பு எதிரொலி: தி.மு.க.வில் 20 மாவட்ட செயலாளர்கள் பதவி இழக்க வாய்ப்பு?</a></p><p>* தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.</p><p>* இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-playoff-madurai-panthers-trichy-grand-cholas-to-meet-today">டிஎன்பிஎல் பிளே ஆப்: முதல் தகுதிச்சுற்றில் மதுரை, திருச்சி அணிகள் இன்று மோதல்</a></p><p>* புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடம்பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.</p><p>* டிஎன்பிஎல் தொடரில் இன்று முதல் பிளே ஆப் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/australia-beat-bangladesh-in-second-test">2வது டெஸ்டில் அபார வெற்றி: வங்கதேசத்தை நசுக்கி பழி தீர்த்தது ஆஸ்திரேலியா</a></p><p>* வங்கதேசம் 2வது இன்னிங்சில் 95 ரன்னுக்கு சுருண்டது.</p><p>* ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மிட்செல் ஸ்டார்க் வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-alert-deadline-for-lpg-e-kyc-ends-today">மக்களே உஷார்! இன்றோடு முடிகிறது அவகாசம்- உடனே செய்யாவிட்டால் கேஸ் புக் பண்ண முடியாது!... </a></p><p>*வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளுக்கு மின்னணு முறையில் வாடிக்கையாளர் விவரங்களைச் சரிபார்க்கும் e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 23) நிறைவடைகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ops-speech-in-dmk-district-secretary-meeting">தி.மு.க.வில் நான் எல்.கே.ஜி.: செயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு</a></p><p>* தி.மு.க.வில் 70 வயதுக்கு மேல் பதவி கிடையாது என்பது கட்சி தலைமைக்கு மட்டும் விதிவிலக்கு.</p><p>* ஓபிஎஸ் பேசுகையில் பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு கட்சியில் எனது செயல்பாடுகள் இருக்கும் என்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-sekar-babu-spying-what-is-happening-in-hindu-religious-charitable-endowments">இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்று வேவு பார்க்கும் சேகர்பாபு: அமைச்சர் ரமேஷ்</a></p><p>* கோவில்களில் நடைபெறும் தவறுகளை களைவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p><p>* 100 நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. தலைகீழாக மாற்றுவதற்கு அரசு ஒன்றும் சினிமா கிடையாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/daring-robbery-near-vandalur-railway-station-7-sovereigns-gold-chain-snatched-from-teacher-on-census-duty">வண்டலூர் ரெயில் நிலையம் அருகே துணிகரம்: மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறிப்பு!... </a></p><p>*செல்வி தனியாக நடந்து வந்ததைப் பயன்படுத்திக் கொண்ட முகமூடி அணிந்த வாலிபர் ஒருவன், அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளான். </p><p>*கொள்ளையன் சங்கிலியைப் பலமாக இழுத்துப் பறித்ததில், சங்கிலி அறுந்து அதிலிருந்த 2 பவுன் மாங்கல்யம் மட்டும் தனியாகக் கீழே விழுந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ticket-checker-praised-for-returning-rs-25000-and-documents-left-on-train">ரெயிலில் தவறவிட்ட ரூ.25,000 பணம் மற்றும் ஆவணங்களை பயணியிடம் பத்திரமாக ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு!... </a></p><p>*கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று ஸ்ரீ மாதா வைஷ்ணவோ தேவி கத்ரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் எண் 26402-ல் இந்தச் சம்பவம் நடைபெற்றது.</p><p>*தனது உடைமைகளும் பணமும் எவ்வித சேதமுமின்றி திரும்பக் கிடைத்ததால், அந்தப் பயணி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-minister-says-vijay-as-future-pm-manickam-thakur-sharp-reply">வருங்கால பிரதமர் விஜய்: அமைச்சரின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் அளித்த பதில்..!</a></p><p>* தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் விஜய், வருங்கால பிரதமர்- அமைச்ரச் ஜெகதீஸ்வரி</p><p>* காங்கிரஸ் ஆதரவால்தான் விஜய் முதலமைச்சர்... அது த.வெ.க அமைச்சர்களுக்கும் தெரியும்</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி, திருப்போரூர், குன்றத்தூர் முருகன் கோவிலில் 200 திருமணம்: பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rush-in-murugan-temples-for-muhurtham-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rush-in-murugan-temples-for-muhurtham-day#comments</comments><guid isPermaLink="false">529f9f86-5b0b-44de-b5e0-abb9f181d34b</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:14:48 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:14:48.515Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கூட்ட நெரிசல்,Murugan temples,சுபமுகூர்த்தம்,முருகன் கோவில்கள்,Muhurtham,heavy rush</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/h0lpm35p/rush.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rush]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/h0lpm35p/rush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆவணி மாத முதல் முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடை பெற்றது. </p><p>திருப்போரூர், திருத்தணி, குன்றத்தூர் முருகன் கோவில்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஜோடிகளின் திருமணத்தால் கோவில் வளாகங்களில் கூட்டம் அலைமோதியது. இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் வருகையும் அதிகமாக இருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.</p><p>திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ  நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காலை முதலே  ஏராளமானோர் சென்றதால் பஸ், மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.</p><h2>திருப்போரூர்</h2><p>திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசாமி கோவில் வளாகத்தில் இன்று 75 திருமணங்கள் நடந்தன. கோயிலையொட்டி பதிவு செய்யப்படாத திருமணங்களும் நடைபெற்றன. இதனால் திருமணத்துக்கு வருகை தந்த உறவினர்கள், நண்பர்கள் குவிந்ததால்  கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. </p><p>கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல முடியாமல் திருமணத்துக்கு வந்தவர்கள் பக்தர்கள் திணறினர். கோயில் வெளிப்புற வளாகம் முழுவதும் திருமணங்கள் நடைபெற்றதால் சுற்றி வரக் கூட முடியாத சூழ்நிலை நிலவியது.</p><p>இதேபோல், கோவில் மாடவீதியைச் சுற்றி உள்ள 15-க்கும் மேற்பட்ட  மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெற்றது. போலீசார் காலை முதல் மாட வீதிகளில் நான்கு சக்கர வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல் கோயில் வாகன நிறுத்தும் இடங்களுக்கு அனுப்பியதால் மாட வீதிகளில் ஓரளவு நெரிசல் குறைந்து காணப்பட்டது.</p><h2>திருத்தணி</h2><p>திருத்தணி முருகன் கோவிலில் இன்று 75-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. மணமக்களின் உறவினர்கள் மற்றும் விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர் கள் மலைக்கோயிலில் குவிந்தனர்.</p><figure><img alt="heavy rush" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/egkfqr28/rush-2.jpg" /></figure><p>அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வீதியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். மேலும் திருத்தணி நகரம் முழுவதும் உள்ள தனியார் திருமண மண்டபங்களிலும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றதால் மலைப்பாதை, அரக்கோணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.</p><h2>குன்றத்தூர்</h2><p>குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மட்டும் 60-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசலாகக் காணப்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. </p><p>இதுகுறித்து திருமணத்திற்கு வந்தவர்கள் கூறும்போது, கோவில் நிர்வாகம் சார்பில் போதிய ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோவிலில் திருமணம் முடிந்த புதுமண ஜோடிகள் கூட்ட நெரிசல் காரணமாக வெளியே செல்லவே திணறினர் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ராக்கெட் செலுத்துவதற்கு உலகிலேயே அதிகமாக செலவு செய்யும் இந்தியா: ஆய்வில் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-spends-most-on-rocket-launches-cambridge-university</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-spends-most-on-rocket-launches-cambridge-university#comments</comments><guid isPermaLink="false">276af2a6-66fa-4a1c-8f23-beaac4a3384b</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:14:21 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:14:21.326Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சந்திராயன்,Cambridge university,Chandraayan,national space day,தேசிய விண்வெளி தினம்,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9urjosya/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India Tops Rocket Launch Costs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9urjosya/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வில் விண்வெளிக்கு ராக்கெட் செலுத்துவதில் அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமான தொகையை உலகிலேயே இந்தியாதான் செலவழித்து வருவதாக தெரிவித்துள்ளது.</p><h3><strong>தேசிய விண்வெளி தினம்</strong></h3><p>இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 3 என்ற திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்திற்கு கடந்த 2023 ஆகஸ்ட் 23 அன்று ராக்கெட்டை வெற்றிகரகமாக செலுத்தியது. மேலும் இதன் வெற்றியை தொடர்ந்து, இந்தியா தனது மூன்றாவது தேசிய விண்வெளி தினத்தை இன்று கொண்டாடி வருகிறது.</p><p>இந்த நிலையில் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் அலெசியோ டெர்சி மற்றும் இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கோ நிக்கோலி ஆகியோர் எகனாமிக் லெட்டர்ஸ் என்ற மதிப்பாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.</p><h3><strong>கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்</strong></h3><p>இந்த ஆய்வில், “இந்தியா 1960 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் 6,740-க்கும் மேற்பட்ட ராக்கெட் செலுத்தியுள்ளதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>இதன்மூலம் 2025-ல் ஒரு கிலோ எடைகொண்ட சுமையை புவியின் தாழ் சுற்றுப்பாதைக்கு ஏவுவதற்கான இந்தியாவின் சராசரி செலவு ஒரு கிலோ கிராமுக்கு சுமார் $13,302 ஆக இருந்தது.</p><p>ஆனால் அமெரிக்கா ஒரு கிலோவுக்கு $3,225 என்ற மிகக் குறைந்த செலவையே பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் ஒரு கிலோ கிராம் சுமையை ஏவுதல்களுக்கான செலவு, அமெரிக்காவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.</p><p>கேம்பிரிட்ஜ் மற்றும் டுரின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 2025-ல் உலகளாவிய சராசரி ஏவுதல் செலவு ஒரு கிலோ கிராமுக்கு $3,868 ஆக இருந்த நிலையில், அமெரிக்காவில் சராசரியாக ஒரு கிலோ கிராமுக்கு $3,225, ஜப்பானில் $5,287, சீனாவில் $5,809, ரஷியாவில் $6,682 மற்றும் ஐரோப்பாவில் $9,897 என இருந்தது. இந்தியா ஒரு கிலோ கிராமுக்கு சுமார் பதின்மூன்று லட்சம் ரூபாய் ($13,302) செலவுடன் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தது என்று அவர்கள் கூறினர்.</p><p>இந்தியாவின் ராக்கெட்டுகள் பொதுவாக சிறிய அளவிலான சுமைகளையே சுமந்து செல்கின்றன. அதாவது நிலையான செலவுகள் குறைவான கிலோகிராம் எடையிலேயே பரப்பப்படுகின்றன. </p><p>இதன் விளைவாக, திட்டத்தின் மொத்த செலவுகள் குறைவாக இருக்கக்கூடும் என்றபோதிலும், ஒரு கிலோ கிராமுக்கான வெளிப்படையான செலவு கணிசமாக அதிகமாவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.</p><h3><strong>இஸ்ரோ கருத்து</strong></h3><p>இந்த ஆய்வு குறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் கூறுகையில், தவறான தரவுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தி உள்ளதாக கூறினார்.</p><p>இஸ்ரோவின் முன்னாள் தலைவரான டாக்டர் எஸ். சோம்நாத் கூறுகையில், அமெரிக்காவை சேர்ந்த ஃபால்கன் 9-க்கான ஒரு கிலோ கிராம் செலவு இந்தியாவை விடக் குறைவாக உள்ளது.</p><p>ஆனால் அவர்கள் அந்தப் பலன்களை யாருக்கும் வழங்காமல், தங்கள் சொந்த ஏவுதல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுவதாக அவர் கூறினார்.</p><p>இதையடுத்து இந்தியாவின் விண்வெளி ஒழுங்குமுறை மற்றும் ஊக்குவிப்பு அமைப்பான இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (இன்ஸ்பேஸ்) மற்றும் இந்திய விண்வெளி சங்கம் (ஐஎஸ்பிஏ) ஆகிய இரண்டும், இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.</p><h3><strong>நாடாளுமன்றத்தில் அறிக்கை</strong></h3><p>இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 2018-ல் அரசு அளித்த பதில் அறிக்கையில், ஒரு பிஎஸ்எல்வி திட்டத்திற்கு சுமார் ரூ. 204 கோடியும், அதே சமயம் ஒரு லான்ச் வெஹிக்கிள் மார்க்-3 (முன்னர் ஜிஎஸ்எல்வி மார்க் III என அழைக்கப்பட்டது) திட்டத்திற்கு ஏறக்குறைய ரூ. 434 கோடியும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்தியா உலகளவில் தலைசிறந்த நாடாக உருவெடுக்கும் என்று கடந்த 2014-இல் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “அகமதாபாத்தில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்கு 10 ரூபாய் ஆகிறது, ஆனால் மங்கள்யான் திட்டத்தின் மூலம் இந்தியா ஒரு கிலோமீட்டருக்கு 7 ரூபாய் செலவில் செவ்வாய் கிரகத்தை அடைந்தது, இது உண்மையிலேயே ஆச்சரியமானது,” என்று கூறினார்.</p><p>மேலும் சமீபத்தில் ஆகஸ்ட் 21 அன்று, பிரதமர் நரேந்திர மோடி 20 இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிறுவனர்களுடன் கலந்துரையாடினார்.</p><p>அப்போது, உலகம் விண்வெளியைப் பற்றி நினைக்கும்போது இந்தியாவை நோக்கிய ஒரு சூழலையும், அதற்கான ஒரு அமைப்பையும் உருவாக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.</p><p>இந்தியாவின் விண்வெளித் துறை, உலகளாவிய திறமையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை நாட்டிற்கு ஈர்க்கும் ஒரு காந்தமாகச் செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.</p><h3><strong>காரணம்</strong></h3><p>இந்த நிலையில் அமெரிக்காவின் குறைந்த அளவிலான செலவு அனுகூலத்திற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம் மறுபயன்பாட்டு அமைப்புகளே என ஆய்வாளர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>இந்தியா, மறுபயன்பாட்டு ஏவுகணை வாகன (RLV) தொழில்நுட்பங்களுடன் பரிசோதனை செய்து, தொழில்நுட்ப செயல்விளக்கங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.</p><p>இருப்பினும், இந்தியா இன்னும் ஒரு சுற்றுப்பாதை மறுபயன்பாட்டு ராக்கெட்டை சேவையில் ஈடுபடுத்தவில்லை. ஒரு மறுபயன்பாட்டு அமைப்பாகக் கருதப்படும், திட்டமிடப்பட்ட அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனம், இன்னும் உருவாக்க நிலையில் தான் உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐதராபாத்தில் பரபரப்பு: நடிகர் யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்பட நிகழ்ச்சியில் ஸ்பீக்கர் ஸ்டாண்ட் சரிந்து மாணவர்கள் காயம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/yashs-toxic-event-in-hyderabad-speaker-stand-collapse-leaves-students-injured</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/yashs-toxic-event-in-hyderabad-speaker-stand-collapse-leaves-students-injured#comments</comments><guid isPermaLink="false">e1b0f419-8870-4e16-9e36-b8415579311c</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:07:25 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:07:25.028Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,Yash,டாக்ஸிக்,ஐதராபாத்,Toxic pre release,நடிகர் யாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/a7havza2/yash.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Toxic pre release/Hyderabad  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/a7havza2/yash.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்வின் போது, எதிர்பாராதவிதமாக ஸ்பீக்கர் ஸ்டாண்ட் சரிந்து விழுந்ததில் மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழக வளாகத்தில் '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-movie-yash-double-action-global-release-in-12000-screens-online-booking-opens-today">டாக்ஸிக்</a>' படத்தின் பிரமாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'கே.ஜி.எஃப்' படப் புகழ் நடிகர் யாஷைக் காண்பதற்காகப் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களும், ரசிகர்களும் ஒரே நேரத்தில் திரண்டதால் அப்பகுதியே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் முயற்சி செய்தபோதிலும், ரசிகர்கள் மேடையின் அருகே வரத் தொடங்கினர்.</p><h2>ஸ்பீக்<strong>கர் ஸ்டாண்ட் சரி</strong>ந்து விழுந்து விபத்து</h2><p>நிகழ்ச்சியின் போது நடிகர் யாஷ் மேடையில் ரசிகர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, மேடைக்கு அருகில் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்த சில மாணவர்கள், ஒலிபெருக்கி மற்றும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட இரும்பு ஸ்டாண்ட் மீது ஏற முயன்றதாகக் கூறப்படுகிறது. பாரம் தாங்காமல் அந்த கட்டமைப்பு திடீரெனச் சரிந்து கூட்டத்தினர் மீது விழுந்தது.</p><p>இந்த விபத்தில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர், மேலும் ஒரு கல்லூரி மாணவி அதிர்ச்சியில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக மீட்டெடுக்கப்பட்ட காயமடைந்த மாணவர்கள், அம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.</p><h2>பேச்சை பா<strong>தியில் நிறுத்</strong>திய நடிகர் யாஷ்</h2><p>மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே இந்தச் அசம்பாவிதம் நடந்ததைக் கண்ட நடிகர் யாஷ், உடனடியாகத் தனது பேச்சை நிறுத்திவிட்டு, "அங்கே அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? தயவுசெய்து கவனமாக இருங்கள், மாணவர்களுக்கு எதுவும் ஆகவில்லையே?" என அமைப்பாளர்களிடம் பதற்றத்துடன் விசாரித்தார். நிலைமை கட்டுக்குள் வந்ததை உறுதி செய்த பிறகே அவர் தனது உரையைத் தொடர்ந்தார். </p><p>திரைப்பட விழாக்களில் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ள இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மக்களே உஷார்! இன்றோடு முடிகிறது அவகாசம்- உடனே செய்யாவிட்டால் கேஸ் புக் பண்ண முடியாது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-alert-deadline-for-lpg-e-kyc-ends-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-alert-deadline-for-lpg-e-kyc-ends-today#comments</comments><guid isPermaLink="false">02db3332-fcd3-4c7d-94f5-878b4c6aa393</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:37:36 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:37:36.446Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியன் ஆயில்,LPG gas cylinder,Oil companies,சமையல் எரிவாயு சிலிண்டர்,e-KYC,e-KYC நடைமுறை,எண்ணெய் நிறுவனங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/hi7i8rx3/lpg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ LPG Gas cylinder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/hi7i8rx3/lpg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளுக்கு மின்னணு முறையில் வாடிக்கையாளர் விவரங்களைச் சரிபார்க்கும் e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 23) நிறைவடைகிறது. இந்தச் சரிபார்ப்பை உடனடியாக முடிக்காவிட்டால் சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்படுவதோடு, சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும் சிக்கல்கள் ஏற்படும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.</p><h2><strong>இன்றே கடைசி நாள்</strong></h2><p>இந்தியன் ஆயில், <a href="https://www.maalaimalar.com/news/topnews/indias-russian-crude-oil-imports-hit-record-50-8-percent-in-july">பாரத் பெட்ரோலியம்</a> மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்கள் அனைவரும் e-KYC நடைமுறையை உடனடியாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன. முறைகேடான எரிவாயு இணைப்புகளைக் கண்டறியவும், தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைய வேண்டிய மானியம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் இந்தச் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இதனைச் செய்யாத பட்சத்தில், வீட்டு உபயோக விலையில் சிலிண்டர்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு, வர்த்தக ரீதியிலான அதிகக் கட்டணம் செலுத்த நேரிடும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.</p><h2>மானி<strong>யம் நிறுத்தப்படும் அ</strong>பாயம்</h2><p>மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சமையல் எரிவாயு மானியத் தொகையானது பயனாளி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. e-KYC நடைமுறை முடிவடையாவிட்டால், இந்த மானியத் தொகை ரத்து செய்யப்படும். மேலும், புதிய சிலிண்டர் முன்பதிவு செய்ய முயலும் போது, கணக்கு முடக்கப்பட்டதாகக் காட்டி முன்பதிவு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.</p><h2>சரி<strong>பார்ப்பை எளிதாக நிறை</strong>வு செய்வது எப்படி?</h2><p>வாடிக்கையாளர்கள் தங்களின் எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, தங்களின் ஆதார் அட்டை மற்றும் எரிவாயு இணைப்பு அட்டையைக் காண்பித்து கைரேகை அல்லது விழித்திரை பதிவு மூலம் e-KYC சரிபார்ப்பை உடனடியாக முடித்துக் கொள்ளலாம்.</p><p>இதுதவிர, அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கைப்பேசி செயலி மூலமாகவும், ஆதார் முக அடையாளச் சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே ஆன்லைனிலும் சில நிமிடங்களில் இச்சேவையை நிறைவு செய்ய முடியும்.</p><p>கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கவும், சமையல் எரிவாயு சேவையில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருக்கவும் பொதுமக்கள் உடனடியாகத் தங்களின் e-KYC நடைமுறையை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வில் நான் எல்.கே.ஜி.: செயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ops-speech-in-dmk-district-secretary-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ops-speech-in-dmk-district-secretary-meeting#comments</comments><guid isPermaLink="false">49ae8816-3c1b-468f-bf53-a5740f94112d</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:31:25 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:31:25.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,OPaneerselvam,மாவட்ட செயலாளர்,District Secretary,ஓபன்னீர்செல்வம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/51a6u2d9/OPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ o panneerselvam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/51a6u2d9/OPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%93.%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">ஓ.பன்னீர்செல்வம்</a> பேசுகையில், பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு கட்சியில் எனது செயல்பாடுகள் இருக்கும் என தெரிவித்தார்.</p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் முக்கிய பிரமுகர்கள் 8 பேர் வரை பேசினார்கள். இதில் தலைமையை  கேள்வி கேட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.</p><p>முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் மற்றும் பூந்தமல்லி முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி பேசுகையில், எல்லா</p><p>பதவிகளுக்கும் 2 முறை மட்டுமே பதவியில் இருக்கமுடியும் என்று விதிகளை கொண்டு வரும்போது மாவட்டச் செயலாளருக்கு மட்டும் 3 முறை பதவி கொடுக்கப்படுவது ஏன்? அதையும் பரிசீலியுங்கள் என கேட்டுள்ளனர்.</p><p>திருவிடைமருதூர் ராமலிங்கம், ஈரோடு கனிமொழி, பிரபு, கஜேந்திரன், திருத்துறைப்பூண்டி இளையராஜா, முகமது சசி உள்ளிட்டோரும் கட்சி எடுத்த முடிவுகள் பற்றி பேசினார்கள்.</p><p>அப்போது சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நன்றாக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார். ஆனால் முன்னாள் அமைச்சர்கள் பேசுவது அந்த அளவுக்கு இல்லை. ஒரு எம்.எல்.ஏ. ஆளும் கட்சியைப் பார்த்து மாமன், மச்சான் என்றெல்லாம் பேசுகிறார். இப்படியெல்லாம் பேசலாமா? ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பேசச் சொல்லுங்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.</p><h2>ஓ.பன்னீர்செல்வம்</h2><p>முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், நான் சமீபத்தில்தான் புதிதாக கட்சியில் சேர்ந்தேன். தி.மு.க.வில் நான் எல்.கே.ஜி.தான். இனி பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு கட்சியில் எனது செயல்பாடுகள் இருக்கும் என கலகலப்பாக தெரிவித்தார்.</p><h2>தலைமைக்கு விதிவிலக்கு</h2><p>தி.மு.க.வில் 70 வயதுக்கு மேல் பதவி கிடையாது என்பது கட்சி தலைமைக்கு மட்டும் விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வயது நிர்ணயம்: மாவட்ட செயலாளர்கள் பதவி குறித்து ஆர்.எஸ். பாரதி விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-age-limit-explained-by-rs-bharathi-on-district-secretary-posts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-age-limit-explained-by-rs-bharathi-on-district-secretary-posts#comments</comments><guid isPermaLink="false">da945873-7041-464f-8368-40d3b4617acc</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:28:54 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:28:54.924Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ஆர்எஸ் பாரதி,RS Bharati</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/jmcrso7s/RSBharati001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்எஸ் பாரதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/jmcrso7s/RSBharati001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ள தி.மு.க. இப்போது கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.</p><p>இதற்காக தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக்குவதுடன், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மாவட்டச் செயலாளராகும் ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். கிளை கழகம் முதல் ஒன்றியம் வரை 2 முறை மட்டுமே அந்த பொறுப்பில் இருக்க முடியும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p><p>கிளை செயலாளர் வயது வரம்பு 45, வட்டச்செயலாளர் வயது வரம்பு 50, பேரூர், பகுதி, நகர, ஒன்றிய செயலாளர் வயது 60-க்குள் இருக்க வேண்டும் என்றும் விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>இதுமட்டுமின்றி 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய கழகம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒன்றிய செயலாளர்களின் குறிப்பிட்ட வார்டு எல்கையும் குறுகிவிடும்.</p><p>கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட கிளை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு கிளைச் செயலாளர் பதவியும் உருவாக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><h2>சிலருக்கு கசப்பானதாக இருக்கும்</h2><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செயற்குழுவில் இதுபற்றி பேசுகையில், கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களை செய்ய இருக்கிறோம். இது கடுமையானதாகத்தான் இருக்கும். சிலருக்கு கசப்பானதாக இருக்கும் என்றும் கூறிய அவர் நீங்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.</p><p>இது தி.மு.க.வில் சாதக-பாதகங்களை ஏற்படுத்தும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், தி.மு.க.வில் பேரூர் கழகம், பகுதி கழகம், நகர ஒன்றிய செயலாளர் பதவியில் இருப்பவர்களில் பெரும்பாலும் 60 வயதை தாண்டியவர்கள்தான் உள்ளனர்.</p><p>அப்படி இருக்கையில் பலருக்கு அந்த பதவி இனி கிடைக்காது என்பதால் அவர்கள் சோர்வடைந்து விடுவார்கள். அதே சமயத்தில் இந்த பதவிகளுக்கு புதியவர்கள் வரும்போது கட்சிக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புது ரத்தம் பாய்ச்சப்படுவது போல் வேகமாக பணியாற்றுவார்கள். அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும் என்று கூறுகின்றனர்.</p><h2>இதுபற்றி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்து வருமாறு:-</h2><p>தி.மு.க.வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாற்றங்களை கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் கட்சியில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 110 மாவட்டச் செயலாளர்கள் பதவி உருவாக்கப்படுகிறது.</p><p>இதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு கட்சியில் பல்வேறு பதவிகள் கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் புதிய 110 மாவட்டங்களுக்கான அறிவிப்பை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பார். வருவாய் கோட்ட அளவில் இந்த மாவட்டங்கள் இடம்பெறும். அதன் பிறகு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயற்குழு கூட்டப்படும்.</p><p>தலைமை கழகக்தின் வழி காட்டுதலின்படி 15 நாட்கள் என்ற கால வரையறைக்குள் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை கழக அமைப்புகள் உருவாக்கப்படும். அதன் பிறகு தலைமை கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டப்பட்டு ஒப்புதல் பெறப்படும். இந்த பட்டியல் தலைமை கழகத்துக்கு வந்ததும் தேர்தல் நடைமுறை தொடங்கும். </p><p>முதலில் கிளை கழகத்துக்கு தேர்தல் நடத்தப்படும். அதன் பிறகு வட்டம், பேரூர், பகுதி, நகரம், ஒன்றிய செயலாளர் பதவிக்கு தேர்தல் நடக்கும். அதன் பிறகு மாவட்டச் செயலாளர், கட்சித் தலைவர் தேர்தல் என படிப்படியாக நடக்கும்.</p><p>உட்கட்சி தேர்தல் நடந்து முடியும் வரை மாவட்டச் செயலாளர்கள் அந்த பதவியில் நீடிப்பார்கள். மாவட்டச் செயலாளர் தேர்தல் வரும்போது 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 3 முறை பதவி வகித்தவர்கள் அந்த பகுதிக்கு போட்டியிடமாட்டார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்று வேவு பார்க்கும் சேகர்பாபு: அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-sekar-babu-spying-what-is-happening-in-hindu-religious-charitable-endowments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-sekar-babu-spying-what-is-happening-in-hindu-religious-charitable-endowments#comments</comments><guid isPermaLink="false">1c05b944-c56a-41c7-b384-50cb33944379</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:14:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:14:20.932Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PK Sekar Babu,சேகர்பாபு,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9in4ymng/MinisterRamesh001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9in4ymng/MinisterRamesh001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மீது எந்த தவறும் இல்லை என தொடர்ச்சியாக கூறி வருகிறார். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்பதை அவர் வேவு பார்த்து வருகிறார். அவர் பயத்தின் காரணமாகத்தான் அவ்வாறு செய்கிறார் என்று அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்  திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>ஜனநாயகம் </h2><p>சட்டசபையில் ஜனநாயகம் இருப்பதால் அனைவரின் குரல்களுக்கும் இடம் அளித்து வருகிறோம். அதில் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபுதான். ஜனநாயகம் கடந்த ஆட்சியில் இல்லை. அதனால் அது போன்ற வார்த்தைகளை மக்கள் கேட்டிருக்க முடியாது. எங்கள் ஆட்சியில் ஜனநாயகம் இருப்பதால் அதைக் கேட்க முடிகிறது.</p><p>சட்டசபையில் சில முன்னாள் அமைச்சர்கள் தகாத வார்த்தைகள் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா? நாங்கள் எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை.</p><p>எங்கள் அரசின் மீதும் முதல்-அமைச்சரை நோக்கியும் கேள்வி வரும்போது அதற்கு மற்ற அமைச்சர்கள் பதில் கூறுவதில் என்ன தவறு?</p><h2>முன்னாள் அமைச்சருக்கு பயம்</h2><p>முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மீது எந்த தவறும் இல்லை என தொடர்ச்சியாக கூறி வருகிறார். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்பதை அவர் வேவு பார்த்து வருகிறார். அவர் பயத்தின் காரணமாகத்தான் அவ்வாறு செய்கிறார்.</p><p>தவறை கண்டுபிடித்து விடுவார்கள் என்கிற பயத்தின் காரணமாகத்தான் அரசு என்ன செய்கிறது என்பதை வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பயமே எங்கள் ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி.</p><p>கடந்த ஆட்சியில் விளம்பரத்திற்காக இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து விட்டார்கள். அதில் தொடங்கப்படாத பல பணிகள் உள்ளது. அதை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் பன்னெடுக்கு கார் நிறுத்துமிடம், பக்தர்கள் தங்குவதற்கு சொகுசு விடுதி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார்கள். எந்த பக்தர்கள் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள் என தெரியவில்லை. அதனால் அந்த திட்டங்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.</p><h2>சினிமா கிடையாது</h2><p>கோவில்களில் நடைபெறும் தவறுகளை களைவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். 100 நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. தலைகீழாக மாற்றுவதற்கு அரசு ஒன்றும் சினிமா கிடையாது.</p><p>தமிழ்நாட்டில் உள்ள 50 முதுநிலை கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்கிற நடைமுறையை அறிவித்து பின்பற்றி வருகிறோம். கோவில்களுக்கு வெளியே செல்போனை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பணம் வசூலிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். மக்கள் அதனை சரியாக பின்பற்ற வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வண்டலூர் ரெயில் நிலையம் அருகே துணிகரம்: மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/daring-robbery-near-vandalur-railway-station-7-sovereigns-gold-chain-snatched-from-teacher-on-census-duty</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/daring-robbery-near-vandalur-railway-station-7-sovereigns-gold-chain-snatched-from-teacher-on-census-duty#comments</comments><guid isPermaLink="false">63250c71-e2b2-48cc-9686-3064deccf72a</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:10:52 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:10:52.480Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்கள்தொகை கணக்கெடுப்பு,Government School Teacher,jewelry snatched,Vandalur railway station,நகை பறிப்பு,வண்டலூர் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9z1v3b0u/snatching.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  jewelry snatched]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9z1v3b0u/snatching.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை வண்டலூர் அருகே விடுமுறை நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியைத் தாக்கி, அவரது கழுத்திலிருந்த 7 சவரன் தங்கத் தாலிச் சங்கிலியை முகமூடி அணிந்த மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (49). இவர் ஊனமாஞ்சேரியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். விடுமுறை நாளான நேற்று, ஊனமாஞ்சேரி பகுதியில் அரசு உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்காகச் சென்றுள்ளார். மாலை வேளையில் பணி அனைத்தையும் முடித்துக் கொண்டு, மீண்டும் தன் வீட்டிற்குச் செல்வதற்காக <a href="https://www.maalaimalar.com/news/national/ticket-checker-praised-for-returning-rs-25000-and-documents-left-on-train">வண்டலூர் ரெயில் நிலையம் </a>அருகே அமைந்துள்ள மேம்பாலத்தில் ஏறி, படிக்கட்டு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.</p><h2>துணிகரத் <strong>தாக்குதல்</strong> </h2><p>செல்வி தனியாக நடந்து வந்ததைப் பயன்படுத்திக் கொண்ட முகமூடி அணிந்த வாலிபர் ஒருவன், அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளான். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், திடீரென ஆசிரியை செல்வியைக் கீழே தள்ளித் தாக்கியுள்ளான். தாக்குதலால் நிலைதடுமாறிய ஆசிரியையின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளான்.</p><p>இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை செல்வி, சங்கிலியைக் கைகளால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டவாறே கொள்ளையனுடன் கடுமையாகப் போராடினார். இருப்பினும், அந்த மர்ம நபர் பலவந்தமாகச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, தண்டவாளம் வழியாக ஓடித் தப்பித்துவிட்டான். கொள்ளையன் சங்கிலியைப் பலமாக இழுத்துப் பறித்ததில், சங்கிலி அறுந்து அதிலிருந்த 2 பவுன் மாங்கல்யம் மட்டும் தனியாகக் கீழே விழுந்தது.</p><h2>காவல்துறை <strong>விசாரணை</strong></h2><p>சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், ஒட்டேரி காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கீழே கிடந்த 2 பவுன் மாங்கல்யம் மீட்கப்பட்டு ஆசிரியையிடம் ஒப்படைக்கப்பட்டது. பட்டப்பகலில் அரசுப் பணிக்கு வந்த இடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி ஆசிரியை செல்வி காவல்துறையினரிடம் கதறி அழுதது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.</p><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஒட்டேரி காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா  காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். முகமூடி அணிந்து தப்பிய அந்த வாலிபரைக் கைது செய்யத் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2வது டெஸ்டில் அபார வெற்றி: வங்கதேசத்தை நசுக்கி பழி தீர்த்தது ஆஸ்திரேலியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/australia-beat-bangladesh-in-second-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/australia-beat-bangladesh-in-second-test#comments</comments><guid isPermaLink="false">1f066901-a004-4ea9-aba1-5684dc5046dd</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:01:12 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:01:12.070Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மிட்செல் ஸ்டார்க்,Mitchell Starc,AUSvBAN,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/kqr6t0sl/mitchell.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mitchell starc]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/kqr6t0sl/mitchell.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெற்றது.</p><p>டார்வினில் நடந்த முதல் டெஸ்டில் வங்கதேசம் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.</p><h2>ஆஸ்திரேலியா அசத்தல்</h2><p>அதன்படி, முதலில் வங்கதேசம் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்து வீசினர்.</p><p>குறிப்பாக, மிட்செல் ஸ்டார்க் அனல்பறக்க வீசினார். </p><p>21 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><p>கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தைஜுல் இஸ்லாம், ஷோரிபுல் இஸ்லாம் ஜோடி 25 ரன் சேர்த்தது.</p><p>இறுதியில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 34 ஓவரில் 64 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. </p><h2>ஸ்டார்க் 6 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணியும் 41 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.</p><p>4வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்டீவ் ஸ்மித்-கேமரூன் கிரீன் ஜோடி 77 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 42 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><h2>கேமரூன் கிரீன் அரைசதம்</h2><p>இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரீன் அரை சதம் கடந்து 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கேமரூன் கிரீன் 67 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்கதேசத்தை விட 146 ரன்கள் முன்னிலை பெற்றது.</p><h2>ஷோரிபுல் இஸ்லாம் 7 விக்கெட்</h2><p>வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 7 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இதையடுத்து 146 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் முன்னணி வீரர்கள் வெளியேறினர். அதிகபட்சமாக கேப்டன் ஷான்டோ 31 ரன் எடுத்தார். </p><p>மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.</p><p>கடைசி கட்டத்தில் முஷ்பிகுர் ரஹிம் போராடினார். அவர் 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>இறுதியில், வங்கதேசம் 2வது இன்னிங்சில் 95 ரன்னுக்கு சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது.</p><h2>ஸ்டார்க் 4 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும், கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மிட்செல் ஸ்டார்க் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>மறைமுகமாக செயல்பட்டு வந்த பான் மசாலா உற்பத்தி நிறுவனம்: ரூ.160 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/rs160-crore-tax-evasion-through-pan-masala-production-factory-owner-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs160-crore-tax-evasion-through-pan-masala-production-factory-owner-arrested#comments</comments><guid isPermaLink="false">95fd4d85-caa4-43a8-aa38-a1c7b9aa197e</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:56:04 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:56:04.054Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,Pan masala,வரி ஏய்ப்பு,tax evasion,ஹைதராபாத்,பான் மசாலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/k51wysnb/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hyderabad Pan Masala Scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/k51wysnb/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐதராபாத்தில் ஒரு தகரக் கொட்டகையில் ரகசியமாக பான் மசாலா மற்றும் புகையிலை உற்பத்தி செய்து, அதன்மூலம் ரூ.160 கோடி மதிப்பிலான வரி ஏய்ப்பு செய்து வந்ததை மண்டல அளவிலான மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்தனர். </p><p>இதையடுத்து அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்காக இருந்த புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.</p><p><strong>ஹைதராபாத் புகையிலை உற்பத்தி</strong></p><p>ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் பான் மசாலா மற்றும் புகையிலை உற்பத்தி செய்து வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த வளாகத்தில் சிஜிஏஸ்டி அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.</p><p>அப்போது, ரகசியமாக புகையிலை உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 40 FFS (ஃபார்ம்-ஃபில்-சீல்) பேக்கிங் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அந்த சோதனையில், 56 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.</p><p>அந்த ஆலையில், பான் மசாலா மற்றும் நறுமண ஜர்தா ஆகியவற்றின் பல பிராண்டட் தயாரிப்புகள் தயாரிக்கப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.</p><p><strong>பறிமுதல்</strong></p><p>இந்த நடவடிக்கையில், சுமார் 5,500 கிலோ எடையுள்ள பொட்டலங்களும், ரூ. 76 லட்சம் மதிப்புள்ள சரக்குகளும், 2,015 கிலோ பான் மசாலா மற்றும் 810 கிலோ புகையிலை அடங்கிய மூலப்பொருட்களும், சட்டவிரோதப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>மேலும், பொட்டலமிடும் பொருட்கள், 40 FFS இயந்திரங்கள் மற்றும் பிற ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.</p><p>இதுகுறித்து மத்திய வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், “கையிருப்பு, இயந்திரங்களின் அளவு, மனிதவளம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், கண்டறியப்பட்ட மொத்த சுங்க வரி மற்றும் செஸ் வரி ஏய்ப்பு சுமார் ரூ. 160 கோடி ஆகும்” என்று தெரிவித்தனர்.</p><p><strong>செஸ் வரி சட்டம்</strong></p><p>பான் மசாலா மற்றும் புகையிலைத் துறையில், 2026 பிப்ரவரி 1 முதல் கொள்ளளவு அடிப்படையிலான செஸ் மற்றும் வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.</p><p>2025-ஆம் ஆண்டின் HSNS செஸ் சட்டத்தின் கீழ், நிறுவப்பட்ட பேக்கிங் இயந்திரங்களின் எண்ணிக்கை, வகை மற்றும் கொள்ளளவின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, பான் மசாலா மீது கொள்ளளவு அடிப்படையிலான மாதாந்திர செஸ் விதிக்கப்பட்டு வருகிறது.</p><p>1944 ஆம் ஆண்டு மத்திய கலால் சட்டத்தின் கீழ், மெல்லும் புகையிலை, ஜர்தா மற்றும் குட்கா ஆகியவற்றின் மீதும் இதேபோன்று கொள்ளளவு அடிப்படையிலான மத்திய கலால் வரி விதிக்கப்படுகிறது.</p><p><strong>கைது</strong></p><p>இந்த நிலையில் ரூ.160 கோடி மதிப்பிலான சுங்க வரி மற்றும் செஸ் வரி ஏய்ப்பு செய்து, ஆலையை நிர்வகித்து வந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.</p><p>இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள பொருளாதாரக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அதிகாரிகள் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய கலாச்சாரத்தை மதிக்காமல் இருந்திருந்தால் நிக் ஜோனஸை காதலித்திருக்க மாட்டேன்: பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/priyanka-chopra-says-respect-for-indian-culture-key-to-her-love-for-nick-jonas</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/priyanka-chopra-says-respect-for-indian-culture-key-to-her-love-for-nick-jonas#comments</comments><guid isPermaLink="false">f99c8fb0-5185-4698-b2ed-5ff0e84849fd</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:48:02 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:48:02.571Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரியங்கா சோப்ரா,Priyanka Chopra,Nick Jonas,நிக் ஜோனஸ்,Cycle of Love,சைக்கிள் ஆஃப் லவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/r0n2v57q/priyanka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ priyanka chopra-Nick Jonas]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/r0n2v57q/priyanka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தனது கணவரும் அமெரிக்க பாடகருமான நிக் ஜோனஸ் உடனான திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வெவ்வேறு பண்பாட்டு பின்னணியைக் கொண்டவர்கள் இணையும் போது பரஸ்பர மரியாதை எவ்வளவு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>பண்பாட்டு <strong>மரியாதையும் கா</strong>தலும்</h2><p>நடிகை <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/european-le-mans-crash-what-happened-to-actor-ajith">பிரியங்கா சோப்ரா </a>சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், நிக் ஜோனஸ் இந்திய பாரம்பரியத்தை மனதார ஏற்றுக்கொண்டதே தங்களது பிணைப்பிற்கு முக்கிய காரணம் என்று கூறிய அவர், ஒருவேளை நிக் தனது இந்திய கலாச்சாரத்தை நேசித்து மதிக்காமல் இருந்திருந்தால், தம்மால் அவரை காதலித்திருக்க முடியாது என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த இருவர் இணையும் போது, துணைவரின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்திற்கு மரியாதை அளிப்பது மிக முக்கியமான அம்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>உறவை ப<strong>லப்படுத்தும் அ</strong>ன்பு </h2><p>வாழ்க்கை பயணத்தில் இருவருமே ஒருவருக்கொருவர் மிகப்பெரிய ஆதரவாக இருந்து வருவதாகத் தெரிவித்துள்ள பிரியங்கா, கலாச்சார பாரம்பரியங்களை பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், துணையிடம் அன்பாகவும் கருணையோடும் நடந்து கொள்வதே உறவை நீண்டகாலம் பலமாக வைத்திருக்க உதவும் என்றும் கூறியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ‘சைக்கிள் ஆஃப் லவ்’ என்ற ஆவணப்படத்தின் திரையிடலின் போது பிரியங்கா இந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த ஆவணப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பிரியங்கா பணியாற்றியுள்ளார்.</p><p>திரைத்துறையில் மிகவும் பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் நடிக்கும் 'வாரணாசி' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். மேலும், ஹாலிவுட்டில் ‘சிட்டாடல்’ சீசன் 2 தொடரிலும், ரசல் குரோவுடன் இணைந்து ‘ப்ளூஃப்ளை’ என்ற அறிவியல் புனைகதை படத்திலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>ஐரோப்பிய லீமேன்ஸ் ரேஸில் விபத்து: நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/european-le-mans-crash-what-happened-to-actor-ajith</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/european-le-mans-crash-what-happened-to-actor-ajith#comments</comments><guid isPermaLink="false">38fa205c-fabc-4634-83d6-d6b02874e936</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:30:39 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:30:39.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ajith kumar,Actor Ajith,ஐரோப்பா,நடிகர் அஜித்,European Le Mans race,லீமேன்ஸ் சாம்பியன்ஷிப் பந்தயம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/l26adokv/ajith.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajith Kumar Racing]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/l26adokv/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார், மோட்டார் வாகனப் பந்தயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். சர்வதேச அளவில் நடைபெறும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் அவர், சமீபத்தில் 'அஜித் குமார் ரேசிங்' என்ற சொந்தப் பந்தய அணியை உருவாக்கி, பல்வேறு சர்வதேசப் தொடர்களில் களம் இறக்கி வருகிறார்.</p><h2>தி<strong>டீர் விப</strong>த்து</h2><p>தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் லீமேன்ஸ் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் அஜித்தின் அணி தீவிரமாகப் போட்டியிட்டது. பந்தயம் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/walking-side-by-side-like-a-shadow-ajith-kumar-to-act-in-a-film-produced-by-his-wife">அஜித்தின் ரேஸ் கார்</a> திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாடற்ற கார், களத்தில் இருந்த மற்றொரு காரின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலைத் தொடர்ந்து, காரில் சக்கரங்கள் செயலிழந்ததுடன் அடுத்தடுத்து தீவிர தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்பட்டன</p><h2>பாதுகாப்பு சா<strong>தனங்களால்</strong> தப்பிய உயிர்</h2><p>காரின் முன்பகுதி சேதமடைந்தபோதிலும், நவீன ரேசிங் கார்களில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் அஜித்தைக் காப்பாற்றின. மேலும், பல ஆண்டுகால பந்தய அனுபவமும் தொழில்முறை திறனும் கொண்ட அஜித், எவ்வித காயமும் இன்றி காரில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார்.</p><h2>ரசிகர்<strong>கள் நிம்</strong>மதி</h2><p>அஜித் விபத்தில் சிக்கிய செய்தி பரவியதும் உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். ஆனால், அவர் காயம் எதுவும் இன்றி நலமாக திரும்பியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியான பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.</p><h2>தொ<strong>டரும் பந்</strong>தயப் பயணம்</h2><p>நடிகர் அஜித் கார் பந்தயங்களில் விபத்தைச் சந்திப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இத்தாலி, ஸ்பெயின், மலேசியா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பந்தயங்கள் மற்றும் பயிற்சிகளின் போது அவர் விபத்துகளை எதிர்கொண்டு, லேசான காயங்களுடன் மீண்டுள்ளார். அபாயங்கள் நிறைந்த விளையாட்டாக இருந்தாலும், சவால்களை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் பந்தயக் களத்தில் சாதனை படைத்து வருகிறார் அஜித்.</p>]]></content:encoded></item><item><title>ரெயிலில் தவறவிட்ட ரூ.25,000 பணம் மற்றும் ஆவணங்களை பயணியிடம் பத்திரமாக ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/ticket-checker-praised-for-returning-rs-25000-and-documents-left-on-train</link><comments>https://www.maalaimalar.com/news/national/ticket-checker-praised-for-returning-rs-25000-and-documents-left-on-train#comments</comments><guid isPermaLink="false">7e948b85-6aab-4d0b-b577-76e50b290209</guid><pubDate>Sun, 23 Aug 2026 05:10:36 +0000</pubDate><atom:updated>2026-08-23T05:10:36.208Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian Railway,Ticket inspector,டிக்கெட் பரிசோதகர்,Jammu Railway,ஜம்மு ரெயில்வே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/td32uzsn/trans.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jammu Railway ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/td32uzsn/trans.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு ரெயில்வே கோட்டத்தில் பணிபுரியும் ரெயில் பயணி ஒருவர் தவறுதலாக விட்டுச் சென்ற 25,000 ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை, டிக்கெட் பரிசோதனை ஊழியர் சுதாரிப்புடன் செயல்பட்டு மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று ஸ்ரீ மாதா வைஷ்ணவோ தேவி கத்ரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் எண் 26402-ல் இந்தச் சம்பவம் நடைபெற்றது. பயணி ஒருவர் கத்ரா நிலையத்தில் இறங்கியபோது, தான் பயணித்த C-11 பெட்டியின் இருக்கை எண்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றில் தனது பயணப்பையை தவறுதலாக விட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே கட்டுப்பாட்டு அறை, உடனடியாக ரெயிலில் பணியில் இருந்த ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தது.</p><h2>பரிசோதகரின் <strong>விரைவான</strong> நடவடிக்கை</h2><p>கட்டுப்பாட்டு அறையின் தகவலைத் தொடர்ந்து, அன்றைய தினம் பணியில் இருந்த <a href="https://www.maalaimalar.com/news/national/bihar-student-credit-card-scheme-rs-4-lakh-loan-not-reduced-state-government-clarification">டிக்கெட் பரிசோதகர்</a> தினேஷ் குமார் உடனடியாக C-11 பெட்டிக்கு விரைந்தார். அங்கு யாருமின்றி தனியாக இருந்த பையைப் பத்திரமாகக் கைப்பற்றினார். பின்னர், தன்னிடம் இருந்த ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல் மூலம் பயணச்சீட்டு விவரங்களைச் சரிபார்த்து, சம்பந்தப்பட்ட பயணியின் தொடர்பெண்ணைக் கண்டறிந்து அவரைத் தொடர்புகொண்டார். தான் விட்டுச் சென்ற பையில் பணம் மற்றும் முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகப் பயணி உறுதிப்படுத்தினார்.</p><h2>பத்திரமா<strong>க ஒப்படைக்க</strong>ப்பட்ட பணம் </h2><p>பையைச் சரிபார்த்தபோது அதில் ரூ.24,980 ரொக்கப் பணம், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற அடையாள அட்டைகள் ஆகியவை பத்திரமாக இருந்தது தெரியவந்தது. ரெயில்வே விதிமுறைகளின்படி, அனைத்துப் பொருட்களும் சரிபார்க்கப்பட்டு ரெயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் உரிய பயணியிடம் பாதுகாப்பாக வழங்கி வைக்கப்பட்டது. தனது உடைமைகளும் பணமும் எவ்வித சேதமுமின்றி திரும்பக் கிடைத்ததால், அந்தப் பயணி ஜம்மு ரெயில்வே கோட்டத்திற்கும் நேர்மையுடன் செயல்பட்ட ஊழியர் தினேஷ் குமாருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.</p><h2>ரெயில்வே <strong>அதிகாரி</strong>களின் பாராட்டு</h2><p>டிக்கெட் பரிசோதகரின் இந்தச் சிறப்பான சேவையைப் பாராட்டிய ஜம்மு கோட்ட முதுநிலை வணிக மேலாளர், ஊழியர்களின் நேர்மையும் விரைவான செயல்பாடும் பாராட்டுக்குரியது என்றும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் அவர்களின் உடைமைகளுக்கும் ரெயில்வே நிர்வாகம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்றும் கூறினார். மேலும் பயணிகள் தங்களின் உடைமைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், ஏதேனும் அவசர உதவிக்கு 139 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>பீகார் மாணவர் கடன் அட்டை திட்டம்: ரூ. 4 லட்சம் கடன் தொகை குறைக்கப்படவில்லை- மாநில அரசு விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-student-credit-card-scheme-rs-4-lakh-loan-not-reduced-state-government-clarification</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-student-credit-card-scheme-rs-4-lakh-loan-not-reduced-state-government-clarification#comments</comments><guid isPermaLink="false">fccb8a45-74f1-43b0-a808-f5a729e7c820</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:51:26 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:51:26.221Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Educationloan,BiharGovernment,BiharStudentCreditCard,PMVidyaLakshmi,மாணவர் கடன் அட்டை திட்டம்,வணிக வங்கிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/eely5qik/bihar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Student CreditCard]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/eely5qik/bihar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநில அரசு செயல்படுத்தி வரும் மிகவும் பிரபலமான 'மாணவர் கடன் அட்டை திட்டத்தில்' கடன் நிதி உதவிக்கான வரம்பு ரூ. 4 லட்சத்தில் இருந்து குறைக்கப்பட்டுள்ளதாக பரவி வந்த தகவல்களை அம்மாநில உயர்கல்வித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான நிதி ஆதாரங்களை விரிவுபடுத்தவே புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளனவே தவிர, கடன் தொகை குறைக்கப்படவில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2>புதிய <strong>நிதிப் பகிர்வு முறை</strong> </h2><p>முந்தைய விதிகளின்படி, மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 4 லட்சம் வரையிலான முழு கடன் தொகையும் '<a href="https://www.maalaimalar.com/news/national/tragedy-in-mumbai-22-foot-ganesha-idol-collapses-2-dead-5-injured">பீகார் மாநில கல்வி நிதிக் கழகம்</a>'  மூலமாக மட்டுமே நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின் கீழ், பீகார் மாநில கல்வி நிதிக் கழகம் மூலமாக நேரடியாக மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். </p><p>வணிக வங்கிகள் மூலமாக மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். வங்கிகளை இத்திட்டத்தில் இணைப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் கடன் வசதி சென்று சேரும் என கல்வித் துறை செயலர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>மத்திய <strong>அரசு திட்டங்கள்</strong></h2><p>மாணவர்கள் எளிதாகக் கல்விக்கடன் பெறும் வகையில் இத்திட்டம் 'பிரதமரின் வித்யாலக்ஷ்மி திட்டம்' மற்றும் வணிக வங்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ரூ. 10 லட்சம் வரை கல்விக்கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>மேலும், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை பீகார் அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. 2025-26 நிதியாண்டில் ரூ.886 கோடியாக இருந்த ஒதுக்கீடு, 2026-27 நிதியாண்டிற்கு ரூ.950 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ. 64 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டிருப்பது, அரசு இத்திட்டத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.</p> ]]></content:encoded></item><item><title>வருங்கால பிரதமர் விஜய்: அமைச்சரின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் அளித்த பதில்..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-minister-says-vijay-as-future-pm-manickam-thakur-sharp-reply</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-minister-says-vijay-as-future-pm-manickam-thakur-sharp-reply#comments</comments><guid isPermaLink="false">23641bb3-2b09-470d-b8e9-431128ebfdb8</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:46:05 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:46:05.350Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,தவெக,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,tvk,​​Congress</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/uw5zw0nx/ManickamTagore001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/uw5zw0nx/ManickamTagore001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>எடப்பாடி பழனிசாமி வயதுக்கு மரியாதை கொடுத்து அன்பாக சொல்கிறேன், அவர் முதலமைச்சராக இருக்கும்போதுதான் நீட் வந்தது. அவர் முதலமைச்சராக இருக்கும்போதுதான் ஒரு மாணவியின் தற்கொலை நடைபெற்றது. நீட் நடத்தப்படக் கூடாது என்று அப்போதே சொல்லியிருக்கலாம்.</p><h2>ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகத்தில் நீட் நடைபெறாது</h2><p>2019 தேர்தலுக்கு முன்னதாக நீட் நடத்தக் கூடாது என்று பிரதமர் மோடியிடமும், அமித் ஷாவிடமும் கண்டிசன் போட்டிருந்தால் அவர்கள் நீட்டை ரத்து செய்து இருப்பார்கள். அந்த தைரியம் கிடையாது. பழியை மட்டும் காங்கிரஸ் மீது போடுவது. இப்போதும் சொல்கிறோம், ராகுல் காந்தி பிரதமாக பதவி ஏற்றவுடன் போடப்போகும் முதல் கையெழுத்துகளில் ஒன்று தமிழகத்தில் நீட் நடைபெறாது என்பதுதான்.</p><p>விஜய் பிரதமராக வேண்டும் என்று த.வெ.க. அமைச்சர்கள் சிலர் சொல்கிறார்கள். அவர்கள் இன்னும் ரசிகர் மன்ற Mode-ல் உள்ளனர். அதை மாற்ற முடியாது.</p><p>இந்தியாவின் சூழ்நிலை எப்படி உள்ளது என்று இந்தியாவுக்கே தெரியும். பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஒவ்வொரு எதிர்க்கட்சிகளின் அதிகாரங்களை பிடுங்குவதிலும், அமலாக்கததுறை மற்றும் சி.பி.ஐ. பயன்படுத்திவதிலும், கட்சிகளை உடைப்பதிலும், ஜனநாயத்தை இல்லாமல் ஆக்குவதும், தொகுதி மறுவரையறையை கொண்டு வந்து எங்கெல்லாம் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் விழுந்ததோ, அதையெல்லாம் தொகுதியாக்க முயற்சிக்கிறது பாஜக.</p><h2>எங்களுடைய Mode வேற</h2><p>அதற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். அவர்களுடைய Mode வேற. எங்களுடைய Mode வேற. ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் இடையிலான தண்ணீர் பிரச்சினை, ஒரு மாவட்டம் மற்றொரு மாவட்டத்துக்கும் இடையிலான தண்ணீர் பிரச்சனைக்கே நீதிமன்றத்திற்கு செல்கிறோம்.</p><p>காவிரி ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்குமான பிரச்சினை. எங்களை பொறுத்தமட்டில் நாங்கள் தமிழ்நாடு காங்கிரசை சேர்ந்தவர்கள். எங்களுடைய நிலை மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்கக் கூடாது. நாங்கள் இருக்கும் வரைக்கும் வைக்க விடமாட்டோம். இதுதான் எங்களுடைய நிலை.</p><h2>மேகதாது தமிழகத்திற்கு விரோதமானது</h2><p>கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல்வர்கள் முதல் தற்போதைய முதல்வர்கள் வரை அவர்களுடைய எண்ணம் மேகதாது கட்டுவது. இதற்கு முக்கிய பொறுப்பு மத்திய அரசு கையில் உள்ளது. அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றால் மேகதாது கட்ட முடியாது. மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம். டி.கே. சிவக்குமார் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வந்து விடும் என்று சொல்வது எல்லாம் கதை. அதை நம்பக்கூடாது. மேகதாது தமிழகத்திற்கு விரோதமானது. தமிழக காங்கிரஸ் அதை எதிர்ப்போம்.</p><p>இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.</p><p>மேலும், தவெக-வின் 100 நாட்கள் ஆட்சி சாதனை விளக்கம் கூட்டத்தில் அமைச்ரச் ஜெகதீஸ்வரி பேசும்போது "தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் விஜய், வருங்கால பிரதமர்" எனக் கூறியிருந்தார்.</p><p>இது குறித்து மாணிக்கம் தாகூரிடம் கேட்கப்பட்டதற்கு "காங்கிரஸ் ஆதரவால்தான் விஜய் முதலமைச்சர்... அது த.வெ.க அமைச்சர்களுக்கும் தெரியும். த.வெ.க.வினர் இன்னும் ரசிகர் மன்ற Mode-ல் உள்ளனர்.</p><p>டெல்லிக்கு போனாலும் தளபதி விஜய் பத்திதான் பேச்சு. ஏன் நாளைக்கு அந்த டெல்லியே அவரோடதா கூட ஆகலாம் என்று அமைச்சர் ஸ்ரீநாத் பேசியிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஆர்தர் பில்ஸ், தியாபே</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/arthur-fils-frances-tiafoe-enter-final-round-in-cincinnati-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/arthur-fils-frances-tiafoe-enter-final-round-in-cincinnati-open-tennis#comments</comments><guid isPermaLink="false">ebb24a55-fb26-40e7-9ab1-de7e976cda9a</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:44:13 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:44:13.563Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cincinnati Open Tennis,arthur fils,ஆர்தர் பில்ஸ்,frances tiafoe,சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்,பிரான்சிஸ் தியாபே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/wet0gipd/fils.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ arthur fils, frances tiafoe]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/wet0gipd/fils.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்</a> தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. நேற்று அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.</p><p>இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இத்தாலியின் பிளேவியோ கோபாலி, பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய ஆர்தர் பில்ஸ் 6-3, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே, சக நாட்டு வீரரான பிராண்டன் நகஷிமா உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய தியாபே 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>நாளை நடைபெற உள்ள இறுதிச்சுற்றில் பிரான்சின் ஆர்தர் பில்ஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே உடன் மோதுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த ரோபோ - 100 மீட்டரை 9.39 வினாடிகளில் கடந்து புதிய மைல்கல்</title><link>https://www.maalaimalar.com/sports/robot-breaks-usain-bolt-record-100m-9-39-seconds</link><comments>https://www.maalaimalar.com/sports/robot-breaks-usain-bolt-record-100m-9-39-seconds#comments</comments><guid isPermaLink="false">1c0691c0-8c6c-4bac-aa7e-1e6ca49cfba0</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:24:30 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:24:30.384Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Usain Bolt,உசைன் போல்ட்,Humanoid Robot,மனித உருவ ரோபோ,Tiangong Ultra,தியாங்காங் அல்ட்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/im3w0klh/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Humanoid Robot Breaks Usain Bolt Record]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/im3w0klh/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவில் நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ போட்டிகளில், மனித உருவ ரோபோ ஒன்று 100 மீட்டர் தூரத்தை வெறும் 9.39 வினாடிகளில் கடந்து உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்துள்ளது.</p><p><strong>மனித உருவ ரோபோ விளையாட்டு போட்டிகள்</strong></p><p>பெய்ஜிங்க் நகரில் இரண்டாவது மனித உருவ ரோபோ விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த ரோபோ போட்டியில் 16 நாடுகளை சேர்ந்த 2,056 மனித உருவ ரோபோக்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன.</p><p>பெய்ஜிங்கின் தேசிய வேகப் பனிச்சறுக்கு மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில், ஓட்டப்பந்தயம், கால்பந்து, நடனம், தொழிற்பயிற்சிப் போட்டிகள் என 51 நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.</p><p>ஹியூமனாய்டு ரோபோட் இன்னோவேஷன் அமைப்பால் உருவாக்கப்பட்ட தியாங்காங் அல்ட்ரா (Tiangong Ultra) என்ற மனித உருவ ரோபோ நேற்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டது.</p><p>இந்த ரோபோவிற்கு போட்டியாக ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஹானர் உருவாக்கிய லைட்னிங் என்ற மனித உருவ ரோபோ கலந்துகொண்டது.</p><p>இதை தொடர்ந்து நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் அட்ரா ரோபோ 100 மீட்டர் தூரத்தை 9.39 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தது. ஹானர் நிறுவனத்தின் லைட்னிங் ரோபோ, 9.47 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தது.</p><h3><strong>உசைன் போல்ட்</strong></h3><p>இதன்மூலம் ஜெர்மனியில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தடகள போட்டியில், ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட்டின் 9.58 வினாடி என்ற உலக சாதனையை, இரண்டு ரோபோக்களும் முறியடித்துள்ளது.</p><p>கடந்த ஆண்டு நடைபெற்ற மனித உருவ ரோபோ போட்டியில், அல்ட்ரா ரோபோ 100 மீட்டர் தூரத்தை 21.50 வினாடிகளில் கடந்திருந்தது.</p><p>இந்த நிலையில், தற்போது 12 வினாடிகள் வேகவாக ஓடி புதிய சாதனையை அல்ட்ரா என்ற மனித உருவ ரோபோ படைத்துள்ளது.</p><p>இந்த மனித உருவ ரோபோவின் சாதனை குறித்து சீன ஊடகம் வெளியிட்ட செய்தியில், முன்னதாக நடந்த சோதனை ஓட்டத்தின் (trial run) போது அது 9.32 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்ததாகவும், வினாடிக்கு 14.5 மீட்டர் என்ற உச்சபட்ச வேகத்தை எட்டியதாகவும் தெரிவித்துள்ளது.</p><p>மேலும், அரை மாரத்தானின் போது அந்த ரோபோ 169 செ.மீ உயரமும், 95 செ.மீ நீளமுள்ள கால்களையும் கொண்டிருந்ததாகவும், விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக ஆராய்ச்சியாளர்கள் அதன் கால்களை மேலும் 10 செ.மீ நீளமாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-opt-to-bat-first-against-srilanka-second-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-opt-to-bat-first-against-srilanka-second-test#comments</comments><guid isPermaLink="false">525bb106-9a28-4c50-846b-c5743296b429</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:20:54 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:20:54.257Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDvSL,இந்தியா இலங்கை தொடர்,saransh jain,சரண்ஷ் ஜெயின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/lxdv8fk4/toss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ toss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/lxdv8fk4/toss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 15-ம் தேதி நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.</p><h2>கடைசி டெஸ்ட்</h2><p>இந்நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் தொடங்குகிறது.</p><p>டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. </p><p>குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சரண்ஷ் ஜெயின் அறிமுகம் ஆகிறார். </p><h2>இந்திய அணி விவரம்:</h2><p>ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், துருவ் ஜுரல், ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சரண்ஷ் ஜெயின்.</p><p>இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற இந்தியாவும், தொடரை சமன்செய்ய இலங்கையும் போராடும் என்பதால் இந்த டெஸ்ட்டில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.</p>]]></content:encoded></item><item><title>மும்பையில் சோகம்: 22 அடி உயர விநாயகர் சிலை சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/tragedy-in-mumbai-22-foot-ganesha-idol-collapses-2-dead-5-injured</link><comments>https://www.maalaimalar.com/news/national/tragedy-in-mumbai-22-foot-ganesha-idol-collapses-2-dead-5-injured#comments</comments><guid isPermaLink="false">21128e92-4984-4394-a0b3-429cdf0a3cf3</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:13:11 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:13:11.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மும்பை,விநாயகர்சதுர்த்தி,MumbaiTragedy,GaneshFestival,Bhuleshwar,மும்பைசெய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/5iml6vs8/mumbai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Tragedy Death]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/5iml6vs8/mumbai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு மும்பையின் பூலேஷ்வர் பகுதியில் அமைந்திருக்கும் 'பூலேஷ்வராச்சா ராஜா' விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற போது  நேற்று இரவு சுமார் 10 மணியளவில் எதிர்பாராத துயரம் நேரிட்டது. </p><p>பலராம் மெர்ச்சன்ட் சாலையில் உள்ள கபூதர்கானா அருகே ஜெய் அம்பே சௌக் வழியே ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது, 22 அடி உயரமுள்ள பிரம்மாண்ட <a href="https://www.maalaimalar.com/news/national/husband-kills-wife-after-dispute-arrests-made">விநாயகர் சிலை </a>தாங்கி நிற்கும் இரும்புச் சட்டகத்தில் இருந்த போல்ட்டுகள் மற்றும் நட்டுகள் தளர்ந்ததால் சிலை அப்படியே நிலைகுலைந்து பக்தர்கள் கூட்டத்தின் மீது சரிந்தது.</p><h2>இருவர் உயிரிழப்பு</h2><p>இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சங்கேத் நெவ்சே (33) மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி (30) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், வைபவ் கெனந்த் (38), பவன் சௌராசியா (25), குணால் காஷித் (26) மற்றும் லாவண்யா (5), திவ்யா (7) ஆகிய இரு சிறுமிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் நிலை தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வழ<strong>க்குப் பதிவு</strong> </h2><p>தகவல் அறிந்ததும் மும்பை தீயணைப்புத் துறை, காவல்துறை, போக்குவரத்து காவலர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வி.பி.ரோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விநாயகர் சிலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இரும்பு சட்டகத்தின் தரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் பிளே ஆப்: முதல் தகுதிச்சுற்றில் மதுரை, திருச்சி அணிகள் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-playoff-madurai-panthers-trichy-grand-cholas-to-meet-today</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-playoff-madurai-panthers-trichy-grand-cholas-to-meet-today#comments</comments><guid isPermaLink="false">c18f2703-3d22-452b-a529-e2a01baeedb1</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:34:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:34:32.505Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PlayOff,டிஎன்பிஎல்,tnpl,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோழாஸ்,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்,பிளே ஆப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/a053h23m/tnpl.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/a053h23m/tnpl.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டி.என்.பி.எல். தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் இன்று மோதுகின்றன.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுகள் நிறைவடைந்தன.</p><h2>பிளே ஆப் சுற்று</h2><p>புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த மதுரை பாந்தர்ஸ், 10 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த திருச்சி கிராண்ட் சோழாஸ், 8 புள்ளிகளுடன் 3வது இடம்பிடித்த கோவை கிங்ஸ், 8 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்த திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.</p><h2>வெளியேறிய அணிகள்</h2><p>நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.</p><p>முதல் தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெறுகிறது. எலிமினேட்டர் சுற்று போட்டி நாளை நடைபெறுகிறது. இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி 26ம் தேதி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடைபெற உள்ளது.</p><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரில் இன்று முதல் பிளே ஆப் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.</p><h2>முதல் தகுதிச்சுற்று</h2><p>இன்று நடக்கும் முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.</p><p>நாளை நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் கோவை கிங்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோத உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கோகோ காப், பெகுலா</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/coco-gauff-jessica-pegula-enter-final-round-in-cincinnati-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/coco-gauff-jessica-pegula-enter-final-round-in-cincinnati-open-tennis#comments</comments><guid isPermaLink="false">45fc84c1-2bc5-417e-9d4b-cdb524be1ba6</guid><pubDate>Sun, 23 Aug 2026 03:09:01 +0000</pubDate><atom:updated>2026-08-23T03:09:01.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jessica Pegula,ஜெசிகா பெகுலா,கோகோ காப்,Cincinnati Open Tennis,Coco gauff,சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/rfo8fqbw/gauff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ coco gauff, jessica pegula]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/rfo8fqbw/gauff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்</a> தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நள்ளிரவு அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.</p><p>இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், செக் குடியரசின் சாரா பெஜ்லக் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா முதல் செட்டை 7-5 என வென்றார். இதற்கு பதிலடியாக அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 2வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.</p><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சிறப்பாக செயல்பட்ட ஜெசிகா பெகுலா 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>நாளை அதிகாலை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலா உடன் மோதுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>கொலை வழக்கில் 40 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த தனிப்படை போலீசார்</title><link>https://www.maalaimalar.com/news/national/special-squad-arrests-man-missing-40-years-in-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/special-squad-arrests-man-missing-40-years-in-murder-case#comments</comments><guid isPermaLink="false">1cfaef94-c5e0-4b0a-8291-dfa010e75a2b</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:51:08 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:51:08.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uttarpradesh,abscond,உத்தரப் பிரதேசம்,natthulal,நத்துலால்,தலைமறைவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/nd4y5fjd/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi 1984 murder case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/nd4y5fjd/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கடந்த 1984-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த 65 வயது நபரை, உத்தரப் பிரதேச குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது.</p><h3><strong>1984 கொலை வழக்கு</strong></h3><p>உத்தரப் பிரதேச மாநிலம் விகாஸ்புரியில் உள்ள ஒரு பூங்காவில் கடந்த 1984 ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி இரவு அசோக் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.</p><p>இந்த கொலையை அடுத்து ஹர்தோய் பகுதியை சேர்ந்த நத்து என்ற 23 வயது நத்துலால் என்பவரை ஜனக்புரி காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.</p><p>அசோக் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், சீதாபூரை சேர்ந்த பாபூதி பிரசாத் என்பருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.</p><p>மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம், கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்தனர். இருப்பினும் நத்து என்ற நத்துலாலை கைது செய்ய முடியாமல் காவல்துறை திணறி வந்தது.</p><h3><strong>தனிப்படை அமைப்பு</strong></h3><p>இதையடுத்து நத்துலாலை கண்டுபிடிக்கும் பணியை குற்றப்பிரிவு தீவிரப்படுத்தியது. ஒரு குழு அமைக்கப்பட்டு, பழைய வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்து, சீதாபூர் மற்றும் ஹர்தோய் மாவட்டங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் நடமாட்டம் இருப்பதாக காவல்துறை உறுதி செய்தது.</p><p>ஹர்தோயின் பாலி பகுதியில் நடத்திய சோதனையின்போது, நத்துலால் உயிருடன் இருப்பதாகவும், அவ்வப்போது தனது சொந்த கிராமத்திற்குச் சென்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் அறிந்துகொண்டனர்.</p><p>ஆகஸ்ட் 17 அன்று, அவரது அடையாளங்களுடன் பொருந்தக்கூடிய ஒருவர் கிராமத்தில் தென்பட்டதை அடுத்து, அந்த கிராமத்தை சுற்றிவளைத்து காவல்துறை நத்துலாலை கைது செய்தது.</p><h3><strong>கைது நடவடிக்கை</strong></h3><p>இதுகுறித்து காவல்துறை கூறுகையில், “நத்துலாலும் பிரசாத்தும் நண்பர்கள், மேலும் இறந்தவரும் பிரசாத்தும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். </p><p>பிரசாத்தின் மனைவியிடம் கொலை செய்யப்பட்ட அசோக் குமார் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்கு காரணமாக உள்ளது.</p><p>சம்பவம் நடந்த அன்று இரவு, நத்துலாலும் பிரசாத்தும் ஒரு பூங்காவில் ஒன்றாக மது அருந்தி, பின்னர் அசோக்கை கொலை செய்யும் நோக்கில், அவரை பிந்தொடர்ந்து கொலை செய்துள்ளனர்.</p><p>நத்துலால் தலைமறைவாக இருந்தபோது, உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மொத்த காய்கறிச் சந்தைகளில் பணிபுரிந்து வந்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்துள்ளார். மேலும், அவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்தார்.</p><p>2005-ஆம் ஆண்டு ஃபரூக்காபாத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது” என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வயது மற்றும் ஆண்டு வரம்பு எதிரொலி: தி.மு.க.வில் 20 மாவட்ட செயலாளர்கள் பதவி இழக்க வாய்ப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/likelihood-of-20-dmk-district-secretaries-losing-their-posts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/likelihood-of-20-dmk-district-secretaries-losing-their-posts#comments</comments><guid isPermaLink="false">789f3856-658d-4548-a356-1846ff326113</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:48:20.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,மாவட்ட செயலாளர்,District Secretary,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ehlxgdm6/DMK.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ehlxgdm6/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சுமார் 20  மாவட்ட செயலாளர்கள் பதவி இழக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுக்வர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.</p><p>இந்த விறுவிறுப்பான சூழ்நிலையில் தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><h2>பதவி இழக்க வாய்ப்பு</h2><p>குறிப்பாக, கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை பதவி வகிப்போருக்கு வயது வரம்பு விதிக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயது என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்த்தால் 13 தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் பதவி பறிபோகும் என தெரிகிறது. ஏனென்றால் இவர்கள் 13 பேரும் 70 வயதை கடந்தவர்கள் ஆவார்கள். </p><p>இதேபோல், மாவட்ட செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக 3 முறைக்கு மேல் அந்தப் பதவியில் இருக்கமுடியாது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>20 பேர் யார்?</h2><p>செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடுத்த 15 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில், தற்போது தி.மு.க.வில் 70 வயதிற்கு மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் 15 ஆண்டுகள் பதவி வகித்தவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன.</p><p>காஞ்சிபுரம் வடக்கு: தா.மோ.அன்பரசன்-66 வயது, 25 ஆண்டு</p><p>காஞ்சிபுரம் தெற்கு: சுந்தர்-71 வயது</p><p>தூத்துக்குடி தெற்கு: அனிதா ராதாகிருஷ்ணன் - 74 வயது</p><p>நெல்லை மேற்கு: ஆவுடையப்பன்-81 வயது, 28 ஆண்டு</p><p>மதுரை மாநகர்: கோ.தளபதி-70 வயது, 18 ஆண்டு</p><p>மதுரை வடக்கு: மூர்த்தி-67 வயது, 27 ஆண்டு</p><p>சிவகங்கை: பெரியகருப்பன்-66 வயது, 27 ஆண்டு</p><p>விருதுநகர் தெற்கு: சாத்தூர் ராமச்சந்திரன்-77 வயது, 26 ஆண்டு</p><p>அரியலூர்: எஸ்.எஸ்.சிவசங்கர்-55 வயது, 20 ஆண்டு</p><p>புதுக்கோட்டை தெற்கு: ரகுபதி - 72 வயது </p><p>திருவாரூர்: பூண்டி கலைவாணன்-62 வயது, 19 ஆண்டு</p><p>தஞ்சை வடக்கு: அன்பழகன் - 72 வயது</p><p>தேனி தெற்கு: கம்பம் ராமகிருஷ்ணன் - 77 வயது</p><p>திருப்பூர் மத்தியம்: செல்வராஜ் - 70 வயது</p><p>ஈரோடு தெற்கு: முத்துசாமி - 77 வயது</p><p>சேலம் கிழக்கு: எஸ்.ஆர்.சிவலிங்கம் - 75 வயது</p><p>கடலுர் கிழக்கு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்-68 வயது, 34 ஆண்டு</p><p>விழுப்புரம் வடக்கு: செஞ்சி மஸ்தான் - 71 வயது</p><p>திருவண்ணாமலை தெற்கு: ஏ.வ.வேலு - 75 வயது</p><p>ராணிப்பேட்டை: ஆர்.காந்தி-80 வயது, 30 ஆண்டு</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 23.8.2026 -  சிம்மம் ராசிக்காரர்களே உஷார்..!</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-in-tamil-august-23</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-in-tamil-august-23#comments</comments><guid isPermaLink="false">551e5a72-540c-4391-afe8-f6594d204862</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:36:01 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:36:01.685Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-19/cju5lvaa/rasi-1.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ராசிபலன்]]></media:title><media:description type="html"><![CDATA[ Today Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-19/cju5lvaa/rasi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். உதிரி வருமானங்கள் பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். திடீரெனச் செலவுகள் அதிகரிக்கலாம். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.</p><h2>மிதுனம்</h2><p>புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்ற சிந்தனை அதிகரிக்கும்.</p><h2>கடகம்</h2><p>நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கும் திட்டங்களைத் தீட்டுவீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.</p><h2>சிம்மம்</h2><p>மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் பிரச்சினை ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளால் மனஅமைதி குறையும்.</p><h2>கன்னி</h2><p>இடமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். உறவினர் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தேகநலன் கருதி தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.</p><h2>துலாம்</h2><p>வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.</p><h2>விருச்சிகம்</h2><p>பாராட்டும், புகழும் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.</p><h2>தனுசு</h2><p>விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.</p><h2>மகரம்</h2><p>சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.</p><h2>கும்பம்</h2><p>சந்தோஷம் அதிகரிக்கும் நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர்.</p><h2>மீனம்</h2><p>வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். பிரச்சினைகளைச் சமாளிக்கப் பிறரிடம் ஆலோசனை கேட்பீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>தொலைக்காட்சி சேனல்களுக்கு விளம்பர கால அளவு நீக்கம்: மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/removal-of-tv-ad-duration-cap-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/removal-of-tv-ad-duration-cap-central-government#comments</comments><guid isPermaLink="false">e36cba4b-0e50-4d51-b833-ec24018ab206</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:04:44 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:04:44.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,advertisements,television channel,தொலைக்காட்சி சேனல்,விளம்பரங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/mjz53owe/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TV]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/mjz53owe/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொலைக்காட்சி சேனல்களில் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிட நேரம் விளம்பரம் ஒளிபரப்பப்படும் விதிகளை நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p><h3><strong>தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்</strong></h3><p>தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ‘கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (திருத்தம்) விதிகள், 2026-ஐ திருத்தம் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>அந்த அறிவிப்பில், “1994-ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் விதிகளில், விதி 7-இல் உள்ள துணை விதி (11) நீக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.</p><p>இந்த துணை விதி ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் என தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு வரம்பு விதித்திருந்தது.</p><p>1994 ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி வலையமைப்பு விதிகளின் கீழ், 2026 ஆம் ஆண்டில் விளம்பர கால வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p>அதன் பின்னர், தொலைக்காட்சி ஒளிபரப்பு துறையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் அடைந்துள்ளதாக அமைக்ககம் தெரிவித்துள்ளது.</p><p>தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செய்தி குறிப்பில், 2006-ஆம் ஆண்டில் 62 தொலைக்காட்சி அலைவரிசைகள் மட்டுமே இருந்தன எனவும், ஆனால் தற்போது 900-க்கும் மேற்பட்ட அலைவரிசைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><p>கேபிள் டிவி துறையின் முழுமையான டிஜிட்டல் மயமாக்கலை தொடர்ந்து, DTH, கேபிள் டிவி, HITS மற்றும் IPTV உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சி விநியோக தளங்களும், தற்போது 300 முதல் 500 க்கும் மேற்பட்ட அலைவரிசைகளை கொண்டுள்ளன.</p><p>இந்த வகையான தொலைக்காட்சி ஒளிபரப்பு துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்து, விளம்பர கால அளவு தொடர்பான விதிமுறைகளை மறுபரீசிலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.</p><p>இந்தியாவில் ஒரு சேனல் கட்டண சேனலாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அது பெருமளவில் விளம்பரங்களை சார்ந்துள்ளது.</p><p>தொலைக்காட்சி துறைக்கும் டிஜிட்டல் ஊடகங்களுக்கும் இடையே சந்தையில் போதுமான போட்டி நிலவுவதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கருதுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் சந்தையில் நியாயமான போட்டியை ஏற்படுத்தவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும் விளம்பர கால வரம்பை நீக்கி மத்திய அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-in-chennai-today</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">56fcc488-6d52-4259-bd75-049170fbddbf</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:58:46 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:58:46.730Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,கச்சா எண்ணெய்,Crude oil,diesel,டீசல்</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1g366y0c/maalai-malar2026-08-06wi7y6invmaalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif" width="1024"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1g366y0c/maalai-malar2026-08-06wi7y6invmaalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (23.08.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>2வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/australia-210-all-out-in-first-innings-against-bangladesh-second-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/australia-210-all-out-in-first-innings-against-bangladesh-second-test#comments</comments><guid isPermaLink="false">e90d6548-85c0-4476-822c-a9ff067305e0</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:51:16 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:51:16.660Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மிட்செல் ஸ்டார்க்,Starc,Shoriful Islam,AUSvBAN,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்,ஷோரிபுல் இஸ்லாம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ds3ku11u/islam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shoriful islam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ds3ku11u/islam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.</p><p>டார்வினில் நடந்த முதல் டெஸ்டில் வங்கதேசம் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.</p><h2>ஆஸ்திரேலியா அசத்தல்</h2><p>அதன்படி, முதலில் வங்கதேசம் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்து வீசினர்.</p><p>குறிப்பாக, மிட்செல் ஸ்டார்க் அனல்பறக்க வீசினார். </p><p>21 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><p>கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தைஜுல் இஸ்லாம், ஷோரிபுல் இஸ்லாம் ஜோடி 25 ரன் சேர்த்தது.</p><p>இறுதியில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 34 ஓவரில் 64 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. </p><h2>ஸ்டார்க் 6 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணியும் 41 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.</p><p>ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணியும் 41 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.</p><p>4வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்டீவ் ஸ்மித்-கேமரூன் கிரீன் ஜோடி 77 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 42 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><h2>கேமரூன் கிரீன் அரைசதம்</h2><p>இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரீன் அரை சதம் கடந்து 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கேமரூன் கிரீன் 67 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்கதேசத்தை விட 146 ரன்கள் முன்னிலை பெற்றது.</p><h2>ஷோரிபுல் இஸ்லாம் 7 விக்கெட்</h2><p>வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 7 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இதையடுத்து 146 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 23 ஆகஸ்ட் 2026: அனுமனுக்கு திருமஞ்சனம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-23-august-2026-hanuman-thirumanjanam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-23-august-2026-hanuman-thirumanjanam#comments</comments><guid isPermaLink="false">e5655e3e-a19a-4a9e-9150-a28a13425484</guid><pubDate>Sun, 23 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-23T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-29/7mi40ucx/narasimmar1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ hanuman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-29/7mi40ucx/narasimmar1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-6 (ஞாயிற்றுக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  ஏகாதசி மறுநாள் 5.33 மணி வரை பிறகு துவாதசி</p><p>நட்சத்திரம் : மூலம் இரவு 7.48 வரை பிறகு பூராடம்</p> <p>யோகம் :  அமிர்த / சித்தயோகம்</p><p>ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>சுபமுகூர்த்த தினம், ஏகாதசி, வாஸ்து நாள் </h2><p>சுபமுகூர்த்த தினம். ஏகாதசி, மதுரை ஸ்ரீ சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல். வாஸ்துநாள் காலை 7.23க்கு மேல் 7.59 வரை வாஸ்து பூஜை செய்ய நன்று. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியுலா. திருத்தணி, திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் கோவில்களில் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஜெயம்</p><p>ரிஷபம் - மகிழ்ச்சி</p><p>மிதுனம் - உழைப்பு</p><p>கடகம் - பக்தி</p><p>சிம்மம் - பரிசு</p><p>கன்னி - நன்மை</p> <p>துலாம் - உதவி</p><p>விருச்சிகம் - தாமதம்</p><p>தனுசு - ஆரோக்கியம்</p><p>மகரம் - லாபம்</p><p>கும்பம் - திறமை</p><p>மீனம் - சாதனை</p> ]]></content:encoded></item><item><title>விமான பயணிகள் கவனத்திற்கு.. செப்டம்பர் 1 முதல் வருகிறது சூப்பர் மாற்றம்! </title><link>https://www.maalaimalar.com/news/national/india-immigration-boarding-pass-stamping-scrapped-at-international-airports-digital-process-from-september-1</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-immigration-boarding-pass-stamping-scrapped-at-international-airports-digital-process-from-september-1#comments</comments><guid isPermaLink="false">0772e7df-42df-4772-8e7a-0629b884b504</guid><pubDate>Sun, 23 Aug 2026 00:12:35 +0000</pubDate><atom:updated>2026-08-23T00:12:35.284Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>airport,விமான நிலையம்,சர்வதேச விமான நிலையம்,international airport,Air passengers,விமான பயணிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/9uponci6/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விமான பயணிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ விமான பயணிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/9uponci6/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றத்தின் மூலம், இந்தியாவின் சர்வதேச <a href="https://www.maalaimalar.com/topic/airport">விமான நிலையங்களில்</a> போர்டிங் பாஸ்களில் முத்திரை குத்தும் முறை முழுமையாகக் கைவிடப்படுகிறது.</p><p>மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவு பணியகமான BOI இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.,</p> <h2>காரணம்</h2><p>இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பயணிகள் Immigration சோதனையின் போது தங்கள் காகித போர்டிங் பாஸ்களில் முத்திரை குத்திக் கொள்ளும் நடைமுறை தலைவலியாக இருந்து வந்தது.</p><p>சில போர்டிங் பாஸ்களில் தவறான அல்லது தெளிவற்ற முறையில் முத்திரை குத்தப்படுவதால், பார்கோடு போன்ற விவரங்களைப் படிப்பதில் இயந்திரங்களுக்கு பிழைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்பட்டன</p><p>இதனால் பயணிகள் அசௌகரியத்தை சந்தித்து வந்ததாலும் சீல் வைப்பதால் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தவறுகளைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p> <h2>விளக்கம்</h2><p>பயணிகள் இனி காகித போர்டிங் பாஸ் மட்டுமல்லாது தங்கள் ஸ்மார்ட்போன்களில் மின்னணு முறையிலான போர்டிங் பாஸ்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் விமான நிலையப் பயணம் எளிதாகும்.</p><p>ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தற்போது இ போர்டிங் பாஸ்களை வழங்குவதால், ஒட்டுமொத்தப் பயணத்தையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றுவது எளிதாகிறது.</p> <p>அப்படி, செப்டம்பர் 1 முதல் காகித போர்டிங் பாஸ்களைப் பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தினாலும், அதில் குடியேற்றத் துறை அதிகாரிகளால் இனி எந்த முத்திரையும் குத்தப்படாது.</p><p>தனிநபர் உடற்பரிசோதனையின் போதும் போர்டிங் பாஸ்களில் சீல் வைக்கும் நடைமுறை ஏற்கனவே கைவிடப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.</p> <h2>பாஸ்போர்ட்</h2><p>போர்டிங் பாஸ் சீல் ரத்து செய்யப்படுவதைத் தொடர்ந்து, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பாஸ்போர்ட்டில் வைக்கப்படும் Immigration Entry மற்றும் Exit முத்திரையையும் முழுமையாக நீக்குவதற்கான சோதனை முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>போரில் ஈரானின் வெற்றியை உலகமே ஒப்புக்கொண்டுள்ளது -  ஈரான் அதிபர் </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-victory-in-us-conflict-president-masoud-pezeshkian-says-world-recognizes-irans-win-and-us-is-globally-hated</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-victory-in-us-conflict-president-masoud-pezeshkian-says-world-recognizes-irans-win-and-us-is-globally-hated#comments</comments><guid isPermaLink="false">f1d59167-c7bd-4169-933d-a5342dac00dd</guid><pubDate>Sat, 22 Aug 2026 23:23:35 +0000</pubDate><atom:updated>2026-08-22T23:23:35.440Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/oe8dbn56/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப், மசூத் பெசெஷ்கியான்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப், மசூத் பெசெஷ்கியான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/oe8dbn56/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவுடனான போரில் ஈரானின் வெற்றியை உலகமே ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><h2>மசூத் பெசெஷ்கியான்</h2><p>நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆற்றிய உரையில், </p><p>"ஈரானின் வெற்றியை உலக நாடுகள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டன. நமது பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, உலகளவில் வெறுக்கப்படும் ஒரு நாடாக மாறியுள்ளது. </p> <p>நமது பலத்தையும் சுயமரியாதையையும் தக்கவைத்துக்கொண்டுள்ள இந்தச் சரியான தருணத்திலேயே போரை முடிவுக்குக் கொண்டுவருவது நல்லது" என்று தெரிவித்துள்ளார்.</p><p>ஹார்முஸில் நிலவும் சர்வதேச நெருக்கடியைச் சமாளிக்கப் பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் சொந்தமாக மாற்றுத் திட்டங்களுடன் முன்னகர்ந்து வருகின்றன. இது ஈரானின் ராணுவ வெற்றிக்கு சான்றாக சர்வதேச ஊடகங்களால் பார்க்கப்படுகிறது.</p> <h2>பொருளாதார தடை</h2><p>இதனிடையே ஈரான் மீதும் ஈரானுக்கு உதவும் நாடுகள் மீதும் பொருளாதார டி-டே, அதாவது மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக <a href="https://www.maalaimalar.com/news/world/historic-crisis-in-us-economy-us-national-debt-hits-40-trillion">டிரம்ப் </a>மிரட்டியுள்ளார்.</p><p>அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசென்ட், இந்த <a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-economic-war-trump-announces-unprecedented-sanctions-and-warns-allied-nations">பொருளாதார அழுத்தம்</a> மூலம் ஈரான் அரசை முழுமையாக முடக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.</p> <h2>ஈரான் போர் பின்னணி </h2><p>ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை எதிர்த்து இஸ்ரேலுடன் இணைந்து கடந்த பிப்ரவரி கடைசியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. முதல் நாள் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார்.</p> <h2>அழுத்தம்</h2><p>இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை ஈரான் தாக்கியது. மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய், எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்தியது. இதனால் உலகளவில் நெருக்கடி ஏற்பட்டதால் போரை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் அமெரிக்காவுக்கு அதிகரித்தது.</p><p>இருப்பினும் ஈரான் உடன்பாட்டுக்கு வர மறுப்பதால் போர் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இடையில் ஏற்பட்ட போர் நிறுத்தமும் தோல்வியில் முடிந்தது.</p><p>இரு தரப்பு இடையே மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.</p> <p>ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு பல்வேறு அழுத்தங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்து வருகிறார்.</p><p>இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை ஈரான் தாக்கியது. மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய், எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்தியது. இதனால் உலகளவில் நெருக்கடி ஏற்பட்டதால் போரை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் அமெரிக்காவுக்கு அதிகரித்தது.</p><p>இருப்பினும் ஈரான் உடன்பாட்டுக்கு வர மறுப்பதால் போர் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இடையில் ஏற்பட்ட போர் நிறுத்தமும் தோல்வியில் முடிந்தது.</p><p>இரு தரப்பு இடையே மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.</p><p>ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு பல்வேறு அழுத்தங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வழக்கை மறைக்க ரூ.5 கோடி லஞ்சம்.. தன் மீது குற்றம்சுமத்திய முன்னாள் நீதிபதிக்கு பஞ்சாப் முதலமைச்சரின் மனைவி நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/punjab-cms-wife-sends-legal-notice-to-ex-judge-over-bribery-allegation-in-sexual-abuse-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/punjab-cms-wife-sends-legal-notice-to-ex-judge-over-bribery-allegation-in-sexual-abuse-case#comments</comments><guid isPermaLink="false">d0475189-c7b6-4d60-86dd-bc8c9c18ecbf</guid><pubDate>Sat, 22 Aug 2026 22:39:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T22:39:18.754Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பஞ்சாப்,Punjab,ஆம் ஆத்மி,பகவந்த் மான்,Bhagwant Mann,Aam Aadmi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/a34rmre7/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பஞ்சாப் முதலமைச்சர், மனைவி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பஞ்சாப் முதலமைச்சர், மனைவி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/a34rmre7/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை மூடி மறைப்பதற்காக பஞ்சாப் முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">பகவந்த் மானின் </a>மனைவி குர்ப்ரீத் கவுர் ரூ. 5 கோடி லஞ்சம் கேட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சித் சிங் என்பவர் குற்றம்சாட்டியிருந்தார். </p><p>இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஞ்சித் சிங்கிற்கு குர்ப்ரீத் கவுர் சட்டப்பூர்வ நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.</p> <h2>நோட்டீஸ்</h2><p>நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் அவர் பதில் அளிக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்கத் தவறினால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும், சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைராவின் மைத்துனரே ரஞ்சித் சிங் ஆவார். எனவே அவரின் இந்த குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என ஆளும் <a href="https://www.maalaimalar.com/topic/aam-aadmi">ஆம் ஆத்மி </a>தெரிவித்துள்ளது.</p> <h2>மனித உரிமைகள் ஆணையம் </h2><p>முன்னதாக, இக்குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்து, பஞ்சாப் மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது.</p><p>புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியது.</p><p>இந்நிலையில் குர்ப்ரீத் கவுர், தன் மீது குற்றம்சாட்டிய முன்னாள் நீதிபதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்.. பள்ளி மாணவி 5 மாத கர்ப்பம் - கருக்கலைப்பு முயற்சியில் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-school-horror-teacher-rapes-minor-student-for-months-illegal-abortion-attempt-leads-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-school-horror-teacher-rapes-minor-student-for-months-illegal-abortion-attempt-leads-to-death#comments</comments><guid isPermaLink="false">6a38cc81-39df-4094-844f-6ddb212e0ba5</guid><pubDate>Sat, 22 Aug 2026 21:51:15 +0000</pubDate><atom:updated>2026-08-22T21:51:15.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Sexual assault,government school,ஜம்மு காஷ்மீர்,அரசுப் பள்ளி,Jammu &amp; Kashmir</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/47ezu93y/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை]]></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/47ezu93y/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரில் அரசுப் பள்ளி மாணவி  உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் பல மாதங்களாக அந்த மாணவியை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை </a>செய்து கர்ப்பமாக்கிய அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. </p> <h2>பாலியல் வன்கொடுமை</h2><p>ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ பகுதியிலுள்ள பமல்போரா அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் பொறுப்புத் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வந்த காலித் உசேன் என்ற ஆசிரியர், அதே பள்ளியில் படித்த மாணவியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.</p><p>இதனால் மாணவி 5 மாத கர்ப்பமானார். இதையறிந்த ஆசிரியர், தனது சகோதரர் தாரிக் என்பவரின் உதவியுடன் சட்டவிரோதமாக சில மாத்திரைகளைக் கொடுத்து மாணவிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.</p><p>இதனால் மாணவியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கிஷ்த்வார் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார்.</p> <h2>பிரேதப் பரிசோதனை</h2><p>மாணவி சுமார் 5 மாத கர்ப்பமாக இருந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து சத்ரூ மற்றும் கிஷ்த்வார் பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு நீதி வேண்டி போராட்டங்களில் ஈடுபட்டனர்.</p><p>பிரதான குற்றவாளியான ஆசிரியர் காலித் உசேன் மற்றும் அவரது சகோதரர் தாரிக் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>  <h2>கைது</h2><p>குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் காலித் உசேன் உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்தச் சட்டவிரோதக் கருக்கலைப்பு முயற்சியில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p><p>போலி மாத்திரைகளை வழங்கிய மருந்தக உரிமையாளர் மற்றும் சில உறவினர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசுப் பள்ளியில் அத்துமீறி ஆய்வு.. அபிஜித் தீப்கே மீது வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school#comments</comments><guid isPermaLink="false">bf1f2c53-619b-4e6f-8987-650cfa965fbc</guid><pubDate>Sat, 22 Aug 2026 21:01:29 +0000</pubDate><atom:updated>2026-08-22T21:01:29.547Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிஜேபி,CJP Protest,CJP,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/wigo3xz1/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/wigo3xz1/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளிக்குள் அனுமதியின்றி நுழைந்து, மாணவர்களிடம் கேள்வி கேட்டு இடையூறு ஏற்படுத்திய புகாரின் பேரில் கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur">அபிஜித் திப்கே</a> மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><h2>புகார்</h2><p> புகாரின்படி, ஆகஸ்ட் 20 அன்று பிற்பகல் 1 மணியளவில் அபிஜித் திப்கே மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டம் ஔசா பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர்.  அனுமதியின்றி வகுப்பறைகளுக்குள் சென்ற அவர்கள், மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை அங்கே நேரத்தைச் செலவிட்டுள்ளனர். மேலும் வகுப்பறை நிகழ்வுகளைப் புகைப்படமும் எடுத்துள்ளனர்.</p><h2>வாக்குவாதம்</h2><p>பள்ளியில் முழுமையான வருகைப்பதிவு மற்றும் சிறப்பான சூழல் இருப்பது போலக் காட்டுவதற்காக வேறொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை இந்த பள்ளியின் வகுப்பறையில் அமர வைத்தது தொடர்பாக ஆசிரியர்களுக்கும் சிஜேபினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அப்போது ஆசிரியர்களை அவதூறாகப் பேசி, அவர்களைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய வைப்பதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. </p><p>பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஔசா காவல் நிலையப் போலிஸார் அபிஜித் திப்கே உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.  </p><h2>நாய்களுக்கு நல்ல வசதி</h2><p>முன்னதாக பள்ளியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை. மக்கள் பிரதிநிதிகள் மாணவர்களுக்காக எதுவுமே செய்யப்போவதில்லை என்றால், அவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?</p><p>ஹெலிகாப்டரில் மட்டுமே பறப்பதற்காகவா மக்கள் வாக்களிக்கிறார்கள்? மக்கள் தங்கள் குழந்தைகள் எந்தச் சூழ்நிலையில் படிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.</p><p>இந்த அமைச்சர்களின் நாய்களுக்குக்கூட மாணவர்களை விட சிறந்த வசதிகள் கிடைக்கின்றன.</p><p>சில பள்ளிகளில் மாணவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்.</p><p>போதிய வகுப்பறைகள், பெஞ்சுகள், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான சாலை வசதிகள் இல்லாத பள்ளிகளின் அவலநிலைக்கு மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.</p><p>கல்விக்காகப் பணியாற்றாத வரை எங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்க வர வேண்டாம் என்று அவர்களிடம் கூறுங்கள்.</p><p>அரசியலுக்காக சாதி, சமூகக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு நாம் வெளியே வருகிறோம்.</p><p>அதேபோல் நமது குழந்தைகளின் பள்ளிகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.</p> <h2>ஆபத்தில் மதம்</h2><p>அரசியல் தலைவர்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று தொடர்ச்சியாக கூறுவதை குறிப்பிட்ட அவர், "இத்தனை ஆண்டுகளாக அழியாத மதம், உங்கள் ஆட்சிக் காலத்திலா அழியப் போகிறது? மதம் எங்கும் போய்விடாது.</p><p>ஆனால் நமது குழந்தைகளின் எதிர்காலம் கண்டிப்பாகப் பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.</p> <h2>ராஜினாமா செய்</h2><p>தாதா பூசே பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தொடர வேண்டுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "பள்ளிகளின் அவலநிலையைப் பார்த்தால், கல்வி அமைச்சர் அந்தப் பதவியில் தொடரக்கூடாது என்றே தோன்றுகிறது.</p><p>அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்தால்தான் அங்குள்ள உண்மையான பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடியும்" என தீப்கே பதிலளித்தார்.</p> <p>பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஆளும் அரசு, அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரத் தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.</p><p>School Thik Karo (பள்ளிகளைச் சரிசெய்) என்ற பெயரில் சிஜேபி கடந்த வாரம் பிரசார இயக்கம் ஒன்றை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாஜக புதிய நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.. ஜென் இசட் இளைஞர்களை கவர தனி குழு அமைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-launches-gen-z-outreach-new-high-level-team-formed-under-modi-and-nitin-naveen-to-woo-youth</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-launches-gen-z-outreach-new-high-level-team-formed-under-modi-and-nitin-naveen-to-woo-youth#comments</comments><guid isPermaLink="false">42c7d364-9939-4954-bdf6-0972b6be2744</guid><pubDate>Sat, 22 Aug 2026 20:20:33 +0000</pubDate><atom:updated>2026-08-22T20:20:33.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Prime Minister Modi,ஜென் இசட்,Gen z,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bu9nwjxm/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bu9nwjxm/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற <a href="https://www.maalaimalar.com/news/national/modi-govt-campus-outreach-ministers-to-visit-universities-daily-under-one-day-one-university-campaign-to-engage-gen-z-students">பிரதமர் மோடி</a>, கட்சியின் தலைவர் நிதின் நபின் தலைமையிலான புதிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.</p><h2>புதிய நிர்வாகிகள் </h2><p>பாஜகவின் 65 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகி பட்டியல் ஆகஸ்ட் 17 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் 51 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p>ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் புதிய அமைப்பில் முக்கியப் பங்காற்ற உள்ளனர். </p> <h2>இளைஞர்களை கவர குழு</h2><p>14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்களை சென்றடையும் வகையில் பெரிய அளவிலான இயக்கத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.</p><p>அந்த வகையில் ஜென் இசட் தலைமுறையினரை சென்றடைவதற்காக சிறப்பு 'ஜென் ஜி அவுட்ரீச் திட்டத்தை' பாஜக கையில் எடுத்துள்ளது.</p><p>இதற்காக தனித்துவமான உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், தேசியப் பொதுச்செயலாளர்களான ஸ்மிருதி இரானி மற்றும் வினோத் தாவ்டே ஆகியோருக்கு இந்த குழுவில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>மேலும், குஜராத் மாநில அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, சத்தீஸ்கர் மாநில அமைச்சர் ஓ.பி. சவுத்ரி உள்ளிட்ட பல முக்கிய இளம் தலைவர்களும் இந்த குழுவில் பணியாற்றவுள்ளனர்.</p> <h2>பாடம் கற்ற பாஜக </h2><p>தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டம், தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது.</p><p>இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி, இன்ஸ்டாகிராமில் மாணவர்களை கவரும் வேலையில் இறங்கியுள்ளார். கட்சியினரையும் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.</p><p>அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிப்பதில் ஜென் இசட் முக்கிய காரணியாக மாறும் சூழலில், அவர்களை கவர பல்வேறு விஷயங்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. பாஜகவின் சிந்தாந்த தலைமையாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜென் இசட் சந்திப்புகளை நடத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசா அருகே வங்கக்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - 2 மாலுமிகள் மீட்பு - 22 பேரை தேடும் பணி தீவிரம்
</title><link>https://www.maalaimalar.com/news/national/cargo-ship-sinks-near-odisha-mv-ocean-winner-goes-down-in-bay-of-bengal-search-on-for-22-missing-crew</link><comments>https://www.maalaimalar.com/news/national/cargo-ship-sinks-near-odisha-mv-ocean-winner-goes-down-in-bay-of-bengal-search-on-for-22-missing-crew#comments</comments><guid isPermaLink="false">5f847ce9-cae5-4c9d-a07a-b17016f322f7</guid><pubDate>Sat, 22 Aug 2026 19:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-22T19:36:29.824Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒடிசா,Odisha,Indian Navy,இந்திய கடற்படை,cargo ship,சரக்கு கப்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/53c50an7/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கப்பல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/53c50an7/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒடிசா அருகே <a href="https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed">சரக்குக் கப்பல்</a> மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மூழ்கிய கப்பல்</h2><p>நேற்று முன் தினம் ஒடிசா கடற்கரையிலிருந்து சிங்கப்பூருக்கு இரும்புத் தாதை சுமந்து கொண்டு பனாமா நாட்டு கொடியுடன் எம்.வி. ஓஷன் வின்னர் என்ற சரக்கு கப்பல் புறப்பட்டது.</p><p>நேற்று, ஒடிசாவின் பாரதீப் கடற்கரையிலிருந்து சுமார் 240 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது வங்கக்கடலில் கப்பல் மூழ்கியது.</p><p>தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.</p> <h2>பணியாளர்கள்</h2><p>இக்கப்பலில் 20 சீனா, 3 மியான்மர் மற்றும் 1 வங்கதேசத்தைச் சேர்ந்த மாலுமி என மொத்தம் 24 பணியாளர்கள் இருந்தனர். கடலில் மிதந்த 2 மாலுமிகள் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>எஞ்சிய 22 பணியாளர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் செல்லும் பிற கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தேடுதல் பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>TNPL: நெல்லையை வீழ்த்தி மதுரை வெற்றி </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-cricket-madurai-panthers-crush-nellai-royal-kings-by-72-runs-to-go-top-of-points-table</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-cricket-madurai-panthers-crush-nellai-royal-kings-by-72-runs-to-go-top-of-points-table#comments</comments><guid isPermaLink="false">a9bf3634-6c7e-49a1-9126-a6ba8e29d0dc</guid><pubDate>Sat, 22 Aug 2026 19:05:40 +0000</pubDate><atom:updated>2026-08-22T19:05:40.428Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,madurai panthers,Nellai Royal Kings,நெல்லை ராயல் கிங்ஸ்,மதுரை பேந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/mt51ww10/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிஎன்பிஎல்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிஎன்பிஎல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/mt51ww10/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/sports/cricket/salem-spartans-beat-tirupur-tamizhans-in-tnpl-2026">தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் </a>நெல்லை கிங்ஸை மதுரை  72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. </p> <h2>டிஎன்பிஎல்</h2><p>டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-ம் கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடி யத்தில் நடைபெற்று வருகின்றன.</p><p>இன்று நடைபெற்ற 28 வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின.</p><p>முதலில் பேட்டிங் செய்த மதுரை பேந்தர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. </p><p>199 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 126 ரன்களுக்கு சுருண்டது.</p><p>இதன்மூலம் மதுரை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p> <h2>முதலிடம்</h2><p>மதுரை அணியின் ஒட்டுமொத்த ரன் ரேட்டும் இப்போட்டி மூலம் கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p>இந்த வெற்றியின் மூலம் மதுரை அணி லீக் சுற்றில் 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது.</p> <p>முன்னதாக மதுரை பேந்தர்ஸ் அணி, திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தியிருந்தது.</p><p>சென்னை சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளிடம் மட்டுமே தோல்வியடைந்திருந்தது.</p><p>தற்போதைய வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 5 வெற்றிகளுடன் மதுரை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.</p> <h2>சேலம் அணி ஆறுதல் வெற்றி</h2><p>முன்னதாக நேற்று மதியம் திருப்பூருக்கு எதிரான போட்டியில் 45 ரன் வித்தியாசத்தில் வென்ற சேலம் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.</p><p>அந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கார்த்திக் மணிகண்டன் அரை சதமடித்தார். அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பூபதிகுமார் 27 ரன்னிலும், அபிஷேக் 29 ரன்னில் ஆட்டமிழந்தனர்.</p> <p>திருப்பூர் அணி சார்பில் மதிவண்ணன் 3 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.</p><p>தொடக்க ஆட்டக்காரரான துஷார் ரஹேஜா மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 43 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 75 ரன்கள் குவித்தார்.</p><p>அமித் சாத்விக், முகமது அலி ஆகியோர் இரட்டை இலக்கங்களை எட்டினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><p>இறுதியில், திருப்பூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேலம் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>சேலம் சார்பில் ரஹில் ஷா 3 விக்கெட்டும், பொய்யாமொழி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய சேலம் ஒரு வெற்றி, 6 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.</p><p>திருப்பூர் அணி தான் ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கடத்தப்பட்ட 2 வணிகக் கப்பல்கள்.. 22 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed#comments</comments><guid isPermaLink="false">6c872f7f-a3a5-4e19-bd7b-1d3a223fee11</guid><pubDate>Sat, 22 Aug 2026 18:19:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T18:19:53.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,ஏமன்,கடற்கொள்ளையர்கள்,சோமாலியா,Somalia,Pirates</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/85v512tz/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கப்பல்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/85v512tz/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் அடுத்தடுத்து <a href="https://www.maalaimalar.com/news/world/indian-crew-hostage-two-merchant-ships-hijacked-off-yemen-and-somalia-22-indians-in-peril">கடற்கொள்ளையர்கள் </a>கடத்திய  2 வணிகக் கப்பல்களில் சிக்கியுள்ள 22 இந்திய மாலுமிகளும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p> <h2>கடத்தல்</h2><p>எரித்திரியா நாட்டுக்கு கொடியுடன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற எம்டி ஷிபு 1 என்ற வணிக கப்பல் 20 பணியாளர்களுடன் ஏமன் கடற்கரைக்கு 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதமேந்திய 6 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கடற்கொள்ளையர்களால் </a>கடத்தப்பட்டுள்ளது. அதிலிருந்த 20 பணியாளர்களில் 16 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>முன்னதாக எம்வி லுடிப் என்ற கேமரூன் கொடியுடன் கூடிய வணிக கப்பல் சோமாலியாவின் பன்ட்லேண்ட் கடற்கரைக்கு அருகே கடந்த திங்களன்று கடத்தப்பட்டுள்ளது.</p> <p>அதில் இருந்த மொத்தம் 10 பணியாளர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர். சோமாலிய அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி அசோசியேட் பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த கப்பலானது பண்ட்லேண்ட்டில் உள்ள Eyl மாவட்டத்தில் உள்ள மராரையாவுக்கு 3.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து வடக்கு சோமாலியாவில் உள்ள Nugaal கடற்கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p> <p>இந்த கப்பல் போலார் மூவ்மென்ட் ஷிப்பிங் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் சோமாலியாவில் உள்ள துருக்கி ராணுவ பயிற்சி மையத்திற்கு ஆயுதங்கள், பயிற்சி உபகரணங்கள், சேட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு சென்று கொண்டிருந்தது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>கப்பலை 8 கடற்கொள்ளையர்கள் சேர்ந்து கடத்தியதாக நம்பப்படுகிறது. இவர்கள் முன்னதாக கடந்த ஏப்ரலில் எம்வி ஸ்வார்ட் என்ற கப்பலை கடத்தியர்வர்கள் என்று அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p> <h2>விளக்கம்</h2><p>இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், "கடத்தப்பட்ட கப்பல்களில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் காயங்களின்றி பாதுகாப்பாக உள்ளனர். </p><p>அவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று உறுதியளித்துள்ளார்.</p> <p>சோமாலிய அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து மாலுமிகளை மீட்பதற்கான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நைரோபியில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது.</p><p>கடத்தப்பட்ட கப்பல்களின் நடமாட்டத்தை சர்வதேச கடற்படைக் கப்பல்களும், டிரோன்களும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மியான்மர்: புத்த மடாலயம் மீது ராணுவம்  வான்வழி தாக்குதல் - 14 பொதுமக்கள் பலி, 20 பேர் காயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/myanmar-military-airstrike-14-civilians-killed-20-injured-in-strike-on-buddhist-monastery</link><comments>https://www.maalaimalar.com/news/world/myanmar-military-airstrike-14-civilians-killed-20-injured-in-strike-on-buddhist-monastery#comments</comments><guid isPermaLink="false">0f97eadb-f7a8-44ba-bf0a-9615751a11c4</guid><pubDate>Sat, 22 Aug 2026 17:43:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:43:53.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Myanmar,Aung San Suu Kyi,civil war,உள்நாட்டுப் போர்,மியான்மர்,ஆங் சான்  சூச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ljn1vmct/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மியான்மர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மியான்மர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ljn1vmct/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya">மியான்மரில்</a> புத்த மடாலயம் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். 20 பேர் காயமுற்றனர். </p><h2>ராணுவ ஆதிக்கம் </h2><p>பிப்ரவரி 2021இல்<a href="https://www.maalaimalar.com/topic/aung-san-suu-kyi"> ஆங் சான் சூச்சி</a>யின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.</p><p>ராணுவத்துக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் மியான்மரில் செயல்பட்டு வருகின்றன. </p><p>அதில் குறிப்பிடத்தக்கது ஜனநாயக ஆதரவுப் படை. கிளர்ச்சியார்களை குறிவைத்து ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. </p><p>2025-இல் மியான்மரில் தேர்தல் நடத்தப்பட்டு ராணுவ ஆதரவு பெற்ற USDP கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேய்ங் அதிபராகபொறுப்பேற்றுக்கொண்டார். </p><p>இது வெளியுலகிற்கு ராணுவம் நடத்திய கண்துடைப்பு நாடகமாக பார்க்கப்படுகிறது. </p> <h2>தாக்குதல்</h2><p>இந்த நிலையில் தான் மத்திய மியான்மரில் உள்ள மியாவ்ங் பகுதியில் உள்ள ஸ்வெல் லே ஓ என்ற கிராமத்தில் நேற்று ராணுவம் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>ராணுவப் போர் விமானம் ஒன்று 15 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகளை வீசியுள்ளது. இதில் இரண்டாவது குண்டு அருகில் இருந்த வீடு ஒன்றையும் சேதப்படுத்தியது.</p><p>தகவலின்படி, இத்தாக்குதலில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.</p> <h2>வழிபாட்டு நிகழ்வு</h2><p>பௌத்தர்களின் புனித காலத்தை குறிக்கும் வகையில் மடாலயத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வார கால தியானப் பயிற்சியில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>"இது தவறாக இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் அல்ல; அவர்கள் வேண்டுமென்றே பௌத்த விகாரையை இலக்கு வைத்துத் தாக்கியுள்ளனர்" என்று ஜனநாயக ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p> <h2>கண்டனம்</h2><p>மியான்மரில் பொதுமக்களுக்கு எதிராக ராணுவம் திட்டமிட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.</p><p>திருமணங்கள் மற்றும் மத விழாக்களில் பொதுமக்கள் கூடும் இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதை ராணுவம் ஒரு பயங்கரவாத உத்தியாகப் பயன்படுத்தி வருவதாக சர்வதேச மோதல் கண்காணிப்பு அமைப்பான ACLED தெரிவித்துள்ளது.</p> <h2>ராணுவ விளக்கம்</h2><p>எனினும், பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகவே தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு கட்டுப்பாட்டுடன் செயல்படுவதாகவும் மியான்மர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>உள்நாட்டு போர்</h2><p>நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஆயுதமேந்திய உள்நாட்டுப் போருக்குள் தள்ளப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் 1,00,000க்கும் அதிகமானோர் இதில் உயிரிழந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 22 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-august-2026#comments</comments><guid isPermaLink="false">e2a2597d-07a4-4e47-9c79-e9f341ff896c</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:03:13 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:24:52.577Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7a7fqmxz/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7a7fqmxz/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-tender-2-famous-jewellery-companies">தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டரை கைப்பற்றிய 2 பிரபல நகை நிறுவனங்கள்</a></p><p>* &nbsp;ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>* ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டதில் 11 நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/public-pays-tribute-to-sowcar-janaki-funeral-this-evening">சௌகார் ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி - இன்று மாலை இறுதிச்சடங்கு</a></p><p>* சௌகார் ஜானகியின் வாழ்க்கையில் வானொலிக்கும் முக்கிய இடம் உண்டு.</p><p>* 2020-ம் ஆண்டு வெளியான 'பிஸ்கோத்' திரைப்படம் அவரது 400-வது படமாகக் குறிப்பிடப்படுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-flight-fares-from-chennai-to-kerala-surge-multiple-times">ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி... </a></p><p>*ரெயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் ஏற்கனவே முழுமையாக நிரம்பிவிட்டதால், கடைசி நேரப் பயணத்திற்கு மக்கள் பெருமளவில் விமான சேவையை நாடத் தொடங்கியுள்ளனர். </p><p>*இதைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-cherish-and-preserve-chennai-history">சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் - கனிமொழி</a></p><p>* எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த  மெட்ராஸ் மாநகரம்</p><p>* இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-8-2026">GOLD PRICE TODAY: நகை பிரியர்களுக்கு ஷாக்... ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-canada-trade-talks-fail-canada-to-impose-retaliatory-tariffs">அமெரிக்கா-கனடா வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: 50% வரிகளுக்கு பதிலடியாக சமமான வரி விதிக்க கனடா பிரதமர் முடிவு!... </a></p><p>*வாஷிங்டனில் 3 நாட்கள் நீடித்த பேச்சுவார்த்தை முறிந்ததால் நள்ளிரவு முதல் அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்</p><p>*தூதுக்குழுவை உடனடியாக ஒட்டாவாவிற்கு திரும்ப அழைத்தது கனடா.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-imposes-charges-on-the-savings-accounts-of-the-poor-and-the-common-people">ஏழை எளிய மக்களின் சேமிப்பு கணக்கிற்கு கட்டணம் விதிக்கும் மோடி அரசு- மாணிக்கம் தாகூர் கண்டனம்</a></p><p>*  ஏழை எளிய மக்களிடம் கட்டண கொள்ளை அடிக்கும் இந்த வங்கிகள் தான் கடந்த 10 ஆண்டுகளில் பெரு முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது.</p><p>* மோடி அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-day-anbumani-ramadoss-wishes">சென்னையின் வரங்களை பாதுகாக்க சென்னை நாளில் உறுதியேற்போம்! - அன்புமணி</a></p><p>* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான்.</p><p>* ஏரிகளையும் அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கி வருகிறோம். இதை விட மோசமாக இயற்கையை சூறையாட முடியாது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-teachers-selected-for-national-teachers-award">தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தேசிய நல்லாசிரியர் விருதிற்கு  தேர்வான ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>* தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly">சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்- திருமாவளவன்</a></p><p>* மாநில சுயாட்சி என்ற கோரிக்கை முழக்கத்தை உரக்க பேசவே இந்த மாநாடு நடைபெற்றது. </p><p>* மாநில சுயாட்சி என்பது தி.மு.க.வால் முன் நிறுத்தப்பட்ட ஒரு மகத்தான கோட்பாடு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-steps-into-387th-year-our-pledge-to-protect-the-foster-mother">387-ல் அடியெடுத்து வைக்கும் நம்ம சென்னை: வளர்ப்பு அன்னையைக் காக்க நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி!... </a></p><p>*வாழ்வு தேடி வந்த கோடிக்கணக்கான மக்களைத் தன் மடியில் ஏந்தி, வாழ்வாதாரம் அளித்து பேணிக்காக்கும் தாயாகத் திகழ்கிறது சென்னை மாநகரம். </p><p>*அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாத்துச் சென்னையின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur">டெல்லி ஜந்தர் மந்தர் பாணியில் ஜெய்ப்பூரில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அபிஜீத் திப்கே எச்சரிக்கை!</a></p><p>* மாட்டுத் தொழுவத்தில் இயங்கும் அரசுப்பள்ளியை ஆய்வு செய்ய சென்ற சி.ஜே.பி தொண்டர்கள் மீது தாக்குதல்.</p><p>* தாக்குதலை பா.ஜ.க குண்டர்கள் நடத்தியதாகவும், பெண் தொண்டர் உட்பட பலர் காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டு.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/lausanne-diamond-league-rumesh-pathirage-hattrick">லோசான் டைமண்ட் லீக்: 9 செ.மீ இடைவெளியில் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி ருமேஷ் பத்திரகே ஹாட்ரிக் சாதனை! </a></p><p>*இரண்டாவது சுற்றில் நீரஜ் சோப்ரா அபாரமாகச் செயல்பட்டு 88.05 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தற்காலிகமாகப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். </p><p>*மூன்றாவது சுற்றில், இலங்கை வீரர் ருமேஷ் பத்திரகே 88.14 மீட்டர் தூரம் எறிந்து மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-before-vigilance-and-anti-corruption-police">செந்தில்பாலாஜி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜர் - டாஸ்மாக் முறைகேடு பற்றி விசாரணை</a></p><p>* டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.</p><p>* 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk"> திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் - செயற்குழுவில் தீர்மானம்</a></p><p>* தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பாக அதிரடி முடிவுகள் தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped">வீ த லீடர்ஸ் அமைப்பின் இணைய தளம் மாற்றி அமைப்பு - அண்ணாமலை அறிவிப்பு</a></p><p>* இதுவரை உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்களுடன் இருந்த இந்த பக்கத்தை இப்போது மாற்றி அமைத்துள்ளார்.</p><p>* பொதுமக்கள் அவற்றை பார்த்து பணிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/australia-165-for-8-wickets-in-first-day-against-bangladesh-second-test">2வது டெஸ்ட்: 64 ரன்னில் சுருண்ட வங்கதேசம்: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 165/8</a></p><p>* ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>* 2வது டெஸ்டின் முதல் நாளில் மொத்தம் 18 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikhs-protest-outside-rahul-gandhis-residence-against-cong-leaders-calling-sajjan-kumar-hero">ராகுல் காந்தி வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்: காரணம் என்ன?</a></p><p>* சஜ்ஜன் குமாரின் மறைவுக்குப் பிறகு, அவர் தங்கள் நாயகன் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் ஆட்சேபனைக்குரியவை.</p><p>* சஜ்ஜன் குமார் தங்கள் நாயகனா என்பது குறித்து ராகுல் காந்தி இன்று தெளிவுபடுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/former-cm-pinarayi-vijayan-says-his-hands-clean-denies-hawala-dealings">என் கைகள் சுத்தமானவை..! ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டை மறுத்த பினராயி விஜயன்</a></p><p>* வீணா என்னுடைய மகள் என்பதனால் ஏராளமான விசயங்கள் எழுப்பப்பட்டன.</p><p>* ஏராளமான சொத்துகளுக்கு வீணா உரிமையாளர் கிடையாது. பேசப்படும் பணத்தின் அளவும் பெரியதல்ல.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-srilanka-in-second-test-for-colombo">நாளை கடைசி டெஸ்ட்: இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்தியா?</a></p><p>* முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.</p><p>* காயமடைந்த தினேஷ் சண்டிமால் இலங்கை அணியில் சேர்க்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/japanese-father-leaves-7-year-old-alone-on-mount-fuji">7 வயது மகன் ஃபூஜி மலை ஏறும்போது சோர்வடைந்ததால் தனியாகத்தவிக்கவிட்டுச் சென்ற ஜப்பானியத் தந்தை!</a></p><p>* புஜி மலையில் 2490 மீட்டர் உயரத்தில் சோர்வடைந்த 7 வயது மகனை தந்தை தனியே விட்டுச் சென்றார்.</p><p>* தவறான முடிவுக்கு வருந்துவதாக தந்தை மன்னிப்பு கேட்டார், பாதுகாப்பு விதிகளை போலீசார் வலியுறுத்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/russia-double-drone-attack-on-ukraine-mall-kills-16">உக்ரைனின் வணிக வளாகம் மீது தாக்குதல்: ரஷியாவிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!</a></p><p>* ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ் வணிக வளாகம் மீது ரஷ்யா இரட்டை ட்ரோன் தாக்குதல்.</p><p>* இது மனிதாபிமானமற்ற பயங்கரவாதம் என ஜெலன்ஸ்கி கண்டனம், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/indian-pair-get-bronze-in-world-championship-badminton-womens-doubles">உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: வெண்கலம் வென்றது திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி</a></p><p>* இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் 2-வது இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.</p><p>* 2011-ல் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி இந்தத் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/salem-spartans-beat-tirupur-tamizhans-in-tnpl-2026">டிஎன்பிஎல்: திருப்பூரை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது சேலம்</a></p><p>* சேலம் அணி 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 6 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. </p><p>* திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-has-moved-past-dale-steyn-in-the-test-wickets-tally">டெஸ்டில் 441 விக்கெட்: ஸ்டெயின் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்</a></p><p>* டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் 10-வது இடம் பிடித்தார் ஸ்டார்க்.</p><p>* டேல் ஸ்டெயின் 93 டெஸ்டில் விளையாடி 439 விக்கெட் எடுத்து 11-வது இடத்தில் உள்ளார். </p> ]]></content:encoded></item></channel></rss>