<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 09 Aug 2026 13:57:39 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 9 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-august-2026#comments</comments><guid isPermaLink="false">76352f68-a6e0-4f69-bc17-bafdc013c0fd</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:12:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:09:18.585Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/omtx1at6/TodayNews0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Today News Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/omtx1at6/TodayNews0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://maalai-malar.quintype.com/story/2baa2ab1-aecf-417a-8fb7-db9d11f2fb15">சென்னை: கனமழையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த அமித் ஷாவின் ஹெலிகாப்டர்.. தாம்பரத்தில் தரையிறக்கம்</a></p><p>*தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.</p> <p>* இன்று காலை புதுக்சேரி வந்தார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a2f56612-4c22-429f-bad4-eac4a1479e70">என் தலையே பிளந்திருக்கும்.. மம்தா பானர்ஜியின் கார் மீது தாக்குதல் - மேற்கு வங்கத்தில் பரபரப்பு</a></p><p>*போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த கட்சித் ஊழியரின் குடும்பத்தினரை மம்தா சந்திக்க சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.</p><p>*திருடி என்றும் கொள்ளையர்களின் தலைவி என்றும் முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/7204c776-3f5f-47f3-a66a-e1c9aded98c8">சீனாவை சுத்துப் போட்ட 'டால்பின்' புயல்.. 10 லட்சம் மக்கள் முகாம்களுக்கு மாற்றம் - 1,400 விமானங்கள் ரத்து</a></p><p>*சீனாவுக்கு வருவதற்கு முன், ஜப்பானின் ஒகினாவா தீவுகளை டால்பின் புயல் தாக்கியது.</p><p>*ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து மிகக் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் இருக்கும் என சீன வானிலை மையம் எச்சரித்துள்ளது.</p><h3> </h3><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rank-list-for-mbbs-and-bds-courses-in-tamil-nadu-to-be-released-tomorrow">தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு-அமைச்சர் அருண்ராஜ்... </a></p><p>*நாளை மதியம் 3 மணியளவில் அமைச்சர் தரவரிசை வெளியிட்ட பின்னர், மாணவர்கள் தங்களது தரவரிசையை tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விண்ணப்ப எண் மற்றும் விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/698d0cc7-b3f4-4343-b134-726625ea4077">ஏர் இந்தியா விமான பயணிகள் காயமடைந்த சம்பவத்தில் திருப்பம் - போதைப்பொருள் பயன்படுத்தினாரா விமானி? - சோதனையில் ஷாக்</a></p><p>*விமானி மருத்துவக் காரணங்களுக்கான உட்கொண்ட வழக்கமான மருந்துகள் இந்த முடிவுக்குக் காரணமா?</p><p>*விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட விமானிகள் பணி செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/suresh-gopi-travels-by-auto-as-official-car-delayed-in-alappuzha-event">கார் வர தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த மத்திய மந்திரி சுரேஷ்கோபி!</a></p><p>* கார் தாமதமானதால் மந்திரி சுரேஷ்கோபி ஆட்டோவில் பயணம் செய்தார்</p><p>* கூட்டம் காரணமாக கார் தொலைவில் நிறுத்தப்பட்டதாக போலீசார் விளக்கம் அளித்தனர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/spain-to-replace-ambassador-to-india">இந்தியாவுக்கான தூதரை மாற்ற ஸ்பெயின் முடிவு!</a></p><p>* நிதி முறைகேடு புகாரால் ஜுவான் அன்டோனியோவை மாற்ற ஸ்பெயின் முடிவு</p><p>* கனடா தூதர் ஆல்பிரடோவை இந்தியாவுக்கு நியமிக்க ஸ்பெயின் இந்தியாவிடம் ஒப்புதல் கேட்டது</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-supreme-leader-mojtaba-khamenei-alive-new-video-ends-health-rumours">வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் வீடியோ வெளியீடு!</a></p><p>*"மொஜ்தபா காமெனியின் மரணம் குறித்து விரைவில் செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" - தி ஜெருசலேம் போஸ்ட்</p><p>*ரகசிய இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court">சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்!... </a></p><p>*சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.  </p><p>*15 நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 9-ஆக குறைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rajasthan-village-celebrates-first-government-bus-like-festival" rel="nofollow">சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அரசு பேருந்து வசதி..! திருவிழா போல் கொண்டாடிய கிராம மக்கள்!</a></p><p>* சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அரசு பஸ் வசதி கிடைக்கவில்லை.</p><p>*  மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு நடந்தே பயணித்துள்ளார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-says-modis-goal-is-stronger-union-territories" rel="nofollow">யூனியன் பிரதேசங்களை பலப்படுத்துவதே பிரதமர் மோடியின் இலக்கு- அமித்ஷா</a></p><p>* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்தார்.</p><p>* மத்திய அமைச்சர் அமித்ஷா இரவு கவர்னர் மாளிகையிலேயே தங்கி  ஓய்வு எடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sarathkumar-urges-supporters-nattamai-family-tattoos">'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்திக் கொள்ள ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் வேண்டுகோள்!... </a></p><p>*தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கவும் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.</p><p>*எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் இந்த பச்சை குத்தும் எண்ணம். 'நாட்டாமை குடும்பம் என கையில் பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் என தோன்றியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/houthi-group-attacks-saudi-arabia-israeli-media-report">சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எரிவாயு நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி</a></p><p>* சவுதி அராம்கோவில் ஏற்பட்ட தீ விபத்தை தொழில்துறை பாதுகாப்பு தீயணைப்புக் குழுக்கள் பாதிப்பின்றி அணைத்தனர்.</p><p>* சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bcci-secretary-to-meet-vvs-laxman-over-player-injuries">முன்னணி வீரர்களின் காயத்தால் திணறி வரும் இந்திய அணி</a></p><p>* இந்திய அணி இலங்கையில் பயணம்செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>* வீரர்களின் காயம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ns-chaturved-says-this-is-my-best-game-in-my-life">எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த போட்டி: சதமடித்த மதுரை வீரர் சதுர்வேத் பேட்டி</a></p><p>* மதுரை பாந்தர்ஸ் அணி கோவை அணிக்கு எதிராக 240 ரன் இலக்கை எடுத்து சாதனை வெற்றி பெற்றது.</p><p>* ஆட்ட  நாயகன் விருதை குடும்பத்தினருக்கும், முக்கியமாக எனது  தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/brett-lee-admits-vaibhav-sooryavanshis-age-still-doubted-outside-india-is-he-15">எங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கு: சூர்யவன்ஷி வயது குறித்து பிரெட் லீ</a></p><p>* நடப்பு ஐபிஎல் தொடரில் 776 ரன்களை குவித்த சூர்யவன்ஷி 4 முக்கிய விருதுகளை கைப்பற்றினார்.</p><p>* வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து வெளிநாடுகளில் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-bjp-tries-to-bring-back-delimitation-bill-with-50-percent-hike">50% உயர்வு என ஆசை காட்டி மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர முயற்சி: மாணிக்கம் தாகூர்</a></p><p>* மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி.</p><p>* சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-8-month-delay-in-power-connections-for-60000-farmers" rel="nofollow">தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா?- அன்புமணி </a></p><p>*  தவெக அரசு பதவியேற்ற நிலையில், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும்.</p><p>* 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைபை வழங்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/10-police-officers-faint-at-amit-shah-event-in-puducherry" rel="nofollow">அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்- 10 பேர் மருத்துவமனையில் அனுமதி</a></p><p>* அமைச்சர் அமித்ஷாவுக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.</p><p>* வெளியால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-15-new-judges-sworn-in-today" rel="nofollow">சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு </a></p><p>*  15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.</p><p>* 15 நீதிபதிகள் பதவியேற்கும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்வு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-inside-temples-from-september-1-minister-ramesh">செப்டம்பர் 1 முதல் கோவில்களுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை: அமைச்சர் ரமேஷ்</a></p><p>* திமுக ஆட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் பெயர் மாற்றம் செய்தனர்.</p><p>* செப்டம்பர் 1-க்குள் முதல் நிலை கோவில்கள் அனைத்திலும், மொபைல் கவுண்டர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-pays-tribute-to-quit-india-movement-heroes">வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்: போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி</a></p><p>* ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற செய் அல்லது செத்து மடி என்ற உறுதியை இந்தியர்களுக்கு வழங்கியது.</p><p>* 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கம் 1942-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row">பள்ளி வினாடி வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி: கேரளாவில் வெடித்தது அரசியல் சர்ச்சை</a></p><p>* பொதுக் கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>* சாவர்க்கரின் "உண்மையான வரலாற்றை" மறைத்து அவரைப் பெருமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக பினராயி விஜயன் விமர்சனம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-receives-warm-reception-in-puducherry" rel="nofollow">பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை.. புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு உற்சாக வரவேற்பு!</a></p><p>* புதுச்சேரியில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.</p><p>* விழாவில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை அமித்ஷா வழங்கி கவுரவிக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-makes-new-strait-demands-uae-says-ship-was-targeted">ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நிபந்தனை..!</a></p><p>* அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக்கூடாது.</p><p>* போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு முழுமையான இழப்பீடு" வழங்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-won-the-title-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அஷ்மிதா சலிஹா</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* இந்திய வீராங்கனைகள் பேட்மிண்டன் தொடரில் சிறந்து விளங்குவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/turkiye-says-defence-pact-with-saudi-arabia-and-pak-is-not-aimed-at-iran-or-any-other-country">சவுதி அரேபியா, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஈரானை குறிவைத்தது அல்ல: துருக்கி சொல்கிறது</a></p><p>* பொதுவான அச்சுறுத்தல் என்று வரையறுக்கும் வகையில் நாங்கள் எதையும் எழுதவோ அல்லது அதில் கையெழுத்திடவோ இல்லை. </p><p>* எங்களைத் தாக்காத எந்தவொரு நாடும் எங்களுக்கு இலக்கு அல்ல.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் JPSC தேர்வு ரத்து-மாணவர்கள் CBI விசாரணைக்கு தீவிர கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-jpsc-exam-cancelled-students-demand-cbi-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-jpsc-exam-cancelled-students-demand-cbi-probe#comments</comments><guid isPermaLink="false">20856042-e794-4010-9cc2-584a0928f80b</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:55:28 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:55:28.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,ஜார்க்கண்ட்,Jharkhand JPSC exam,JPSC exam cancelled,JPSC தேர்வு ரத்து,JPSC தேர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wrjtwvse/jarkand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand JPSC exam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wrjtwvse/jarkand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் அரசு தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அம்மாநில மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாணவர் பிரதிநிதிகளுடன் ஜார்க்கண்ட் அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.</p><h2>14-வது JPSC தே<strong>ர்வு ரத்து</strong></h2><p>சர்ச்சைக்குரிய 14-வது JPSC சிவில் சர்வீஸ் தேர்வை ரத்து செய்ய அரசு அதிகாரப்பூர்வமாக சம்மதித்துள்ளது. முறைகேட்டின் குற்றவியல் அம்சங்களை மாநில குற்றப்புலனாய்வுத் துறையும், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்புகளை அமலாக்கத்துறையும் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. </p><p>குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. எதிர்காலத் தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த IIT-ISM, IIM ராஞ்சி மற்றும் XLRI அமைப்புகளின் நிபுணர்களைக் கொண்ட சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மாணவர்கள் <strong>போராட்டத்தை கை</strong>விட மறுப்பது ஏன்?</h2><p>அரசு தங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த போதிலும், மாணவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டனர். மாநில அமைப்புகளின் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும், மத்திய புலனாய்வு அமைப்பு மூலமே சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் உறுதியாக உள்ளனர். JSSC-CGL தேர்வில் நடந்த முறைகேடுகளையும் கண்டித்து, அந்தத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.</p><h2>அரசின் <strong>விளக்க</strong>ம்</h2><p>CGL தேர்வு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகிப் பணியமர்த்தலும் முடிந்துவிட்டதால், அதைத் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இதற்கு மாற்றாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்க அரசு முன்வந்ததை மாணவர்கள் நிராகரித்தனர்.</p><h2>சட்டமன்<strong>ற முற்று</strong>கை</h2><p>தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என அறிவித்துள்ள மாணவர்கள், நாளை ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். இத்தேர்வு முறைகேடுகள் தொடர்பாக CBI விசாரணை நடத்தக் கோரியும், தேர்வை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி டெல்டா கொள்முதல் நிலையங்களில் ரூ.10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: உடனடி கொள்முதல் அவசியம் - அன்புமணி வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-tn-govt-on-cauvery-delta-paddy-crisis</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-tn-govt-on-cauvery-delta-paddy-crisis#comments</comments><guid isPermaLink="false">8c3d3d5b-9418-4dd8-85f7-c4ae17c13563</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:15:11 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:15:11.378Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,டெல்டா விவசாயிகள்,நெல்கொள்முதல்,DeltaFarmers,CauveryDelta,DPCIssues,PaddyProcurement</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/lbe7wodg/Anbumani-Ramadoss" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி டெல்டா கொள்முதல் நிலையங்களில் ரூ.10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: உடனடி கொள்முதல் அவசியம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/lbe7wodg/Anbumani-Ramadoss?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் &nbsp;நெல் கொள்முதல் செய்யப்பட்டாமல், மூட்டை மூட்டைகளாக மழைக்காலத்தில் தேங்கி கிடப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.,</p><h2>டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு</h2><p>தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. </p><p>உழவர்கள் அரும்பாடுபட்டு அறுவடை செய்த நெல்லை குறித்த காலத்தில் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யாதது கண்டிக்கத்தக்கது. </p><p>தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, குடவாசல், நன்னிலம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைந்துள்ள கொள்முதல் நிலையங்களில் தான் இந்த அவல நிலை நிலவுகிறது. </p><p>ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல சரக்குந்துகள் வராததால் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு அனுப்ப முடியாதது தான் புதிதாக வரும் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. </p><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். </p><p>ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. </p><p>இதற்கு காரணம் அரசின் அலட்சியமும். திட்டமிடல் இல்லாமையும் தான். காவிரி பாசன மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாவிட்டால் அவை முழுமையாக வீணாகி விடும். </p><p>வறட்சி காரணமாக குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நடப்பாண்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளன. </p><p>இத்தகைய சூழலில் அரும்பாடு பட்டு விளைவிக்கப்பட்ட நெல் மூட்டைகள் வீணாவதை அரசு அனுமதிக்கக் கூடாது.கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய பாக்ஸ் ஆபீஸில் வரலாற்றுச் சாதனை: ரூ.400 கோடியைக் கடந்தது &apos;SPIDER-MAN: BRAND NEW DAY&apos;</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-sets-historic-rs-400-crore-record-in-india</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-sets-historic-rs-400-crore-record-in-india#comments</comments><guid isPermaLink="false">cfeb9af1-7d17-4a7f-a44c-cf3749064b7a</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:11:45 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:11:45.345Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tom Holland,Zendaya,டாம் ஹாலண்ட்,Spider-Man: Brand New Day,ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே,ஜெண்டாயா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/cfwofy1z/spider.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SPIDER-MAN: BRAND NEW DAY]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/cfwofy1z/spider.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’  திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபீஸில்  ரூ.400 கோடி வசூல் சாதனையை அதிகாரப்பூர்வமாகக் கடந்துள்ளது. இதன் மூலம், இந்திய வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்ற புதிய மைல்கல்லை இத்திரைப்படம் எட்டியுள்ளது. &nbsp; </p><h2>இந்தி<strong>யாவில் வசூல்</strong> மழை </h2><p>முன்னதாக ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்'  மற்றும் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' ஆகிய படங்கள் வைத்திருந்த அனைத்து கால சாதனைகளையும் 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' தகர்த்தெறிந்துள்ளது. வெளியான வெறும் 8-9 நாட்களுக்குள் இந்திய பாக்ஸ் ஆபீஸில் ரூ.400 கோடி மொத்த வசூலையும், ரூ.330 கோடியை விட அதிகமான நிகர வசூலையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது. </p><p>ஆங்கிலத்தில் ரூ.182 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளின் டப்பிங் பதிப்புகளும் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி மாபெரும் வசூலை ஈட்டித் தந்துள்ளன. &nbsp;</p><h2>இந்தியாவில் அதிக வசூல் <strong>செய்த டாப் ஹா</strong>லிவுட் திரைப்படங்கள்</h2><p>ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே-ரூ.400+ கோடி</p><p>அவதார்: தி வே ஆஃப் வாட்டர்-ரூ.378.22 கோடி</p><p>3. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்-ரூ.373.22 கோடி</p><p>4. அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்-ரூ.227.43 கோடி</p><h2>உலகளா<strong>விய சாதனை</strong>கள் </h2><p>இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவிலும் இத்திரைப்படம் $1.188 பில்லியன் (சுமார் ₹10,000 கோடிக்கும் மேல்) வசூலித்து 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்குப் பிறகு உலகளவில் அதிவேகமாக 1 பில்லியன் டாலர் வசூலை எட்டிய 2-வது படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. &nbsp; </p><p>டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கத்தில், மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 38-வது திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், இரண்டாம் வாரத்திலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இந்தியாவில் ரூ.500 கோடி வசூல் என்ற புதிய இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கி தனித்தீர்மானம் - நாளை சட்டப்பேரவையில் முன்மொழிகிறார் முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-to-make-the-tamil-thai-vazhthu-mandatory-chief-minister-vijay-to-move-the-motion-in-the-legislative-assembly-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-to-make-the-tamil-thai-vazhthu-mandatory-chief-minister-vijay-to-move-the-motion-in-the-legislative-assembly-tomorrow#comments</comments><guid isPermaLink="false">2605e40f-db5d-4958-b68b-477f2637dfbb</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:08:39 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:08:39.918Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்த்தாய் வாழ்த்து,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Govt,Tamizh Thai Vazhthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/6bn864oa/New-Project-2026-08-09T183817.665.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கி தனித்தீர்மானம் - நாளை சட்டப்பேரவையில் முன்மொழிகிறார் முதலமைச்சர் விஜய்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/6bn864oa/New-Project-2026-08-09T183817.665.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், நாளை (ஆக.10) தமிழ்த்தாய் வாழ்த்திற்கென தனித்தீர்மானம் கொண்டுவருகிறார் முதலமைச்சர் விஜய். </p><p>அதாவது மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும் என சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. </p><p>முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் தொடங்கி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவரை மாநிலத்தின் பாடல் முதலில் பாடப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. </p><p>இதனையொட்டி சமீபத்தில் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கும் தமிழ்நாடு எம்.பி.க்கள் 21 பேர் கூட்டாக இதுதொடர்பாக கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்த தனித்தீர்மானத்தை முன்மொழிய உள்ளது. தீர்மானம் முன்மொழியப்பட்ட பின் அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் குறித்து பேசுவர். </p><p>பின்னர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதனிடையே கடந்த 2021ம் ஆண்டிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: கனமழையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த அமித் ஷாவின் ஹெலிகாப்டர்.. தாம்பரத்தில் தரையிறக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-helicopter-diverted-heavy-rain-forces-landing-at-tambaram-air-force-station-instead-of-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-helicopter-diverted-heavy-rain-forces-landing-at-tambaram-air-force-station-instead-of-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">2baa2ab1-aecf-417a-8fb7-db9d11f2fb15</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:04:48 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:04:48.400Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,அமித் ஷா,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/5fu4ow17/tn-64.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமித் ஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/5fu4ow17/tn-64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-says-modis-goal-is-stronger-union-territories">அமித் ஷா</a> பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தாம்பரம் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>புதுச்சேரி காவல் துறையின் சேவையை பாராட்டும் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி வழங்கும் விழாவில் கலந்துகொள்ள இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுக்சேரி வந்தார். </p> <h2>விழா</h2><p>புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர், திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.</p><p>விழாவில், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய முறைப்படி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட பின்னர், குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடியினை காவல் துறை இயக்குநர் ஷாலினி சிங்கிடம் அமித் ஷா வழங்கி கவுரவித்தார்.</p> <h2>சென்னை வருகை</h2><p>இதையடுத்து புதுக்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் இன்று மதியம் 3 மணியளவில் சென்னை வந்துகொண்டிருந்தார் அமித் ஷா. ஆனால் சென்னையில் திடீரென கனமழை பெய்ததால் அவரின் ஹெலிகாப்டர் திட்டமிட்டபடி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது.</p><p>இதனால் சில நேரம் வானிலேயே வட்டமடித்த அமித் ஷாவின் ஹெலிகாப்டர்,தாம்பரம் விமானப் படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டது.</p><p>அங்கிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.</p> <h2>மழை</h2><p>அமித் ஷாவின் ஹெலிகாப்ட்டர் மட்டுமின்றி ல்வேறு நகரங்களில் இருந்து வந்த பயணிகள் விமானங்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தது குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த சில தினங்களாகவே சென்னையில் கனமழை பெய்து வருகிறது. </p><p>நேற்று மாலை துவங்கிய மழை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, சேப்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, பூந்தமல்லி உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என் தலையே பிளந்திருக்கும்.. மம்தா பானர்ஜியின் கார் மீது தாக்குதல் - மேற்கு வங்கத்தில் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-violence-mamata-banerjee-convoy-attacked-with-mud-and-stones</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-violence-mamata-banerjee-convoy-attacked-with-mud-and-stones#comments</comments><guid isPermaLink="false">a2f56612-4c22-429f-bad4-eac4a1479e70</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:35:28 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:35:28.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,trinamool congress,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ie8n1yue/tn-63.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ie8n1yue/tn-63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜி</a>யின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஹல்சிஹாஹர் என்ற ஊரில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த பிர்ஜு கியோட் என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழியரின் குடும்பத்தினரை மம்தா இன்று சந்திக்க சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.  </p><p>தகவலின்படி, மம்தா வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய சிலர், அவரின் கான்வாய் காரை மறித்துள்ளனர். காரின் மீது சேற்றை வாரி இறைத்தும், கற்கள், தண்ணீர் பாட்டில்கள், காலணிகளை வீசியும் தாக்கியுள்ளனர். </p><p>மேலும் மம்தாவை வசைபாடி கோஷமிட்ட கும்பல், அவரை, திருடி என்றும் கொள்ளையர்களின் தலைவி என்றும் முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. </p> <h2>திரிணாமுல் ஊழியர் கஸ்டடி மரணம்</h2><p>திரிணாமுல் கட்சி ஊழியர் பிர்ஜு கியோட், முறைகேடு, பணம் பறிப்பு ஆகிய குற்றசாட்டுகளில் கைதாகி கஸ்டடியில் இருந்தார்.</p><p>அப்போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழநதார்.</p><p>அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்தபோதும் கஸ்டடியில் போலீசாரால் தாக்கப்பட்டு பிர்ஜு கியோட் கொல்லப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் போராட்டங்கள் வெடித்துள்ளன.</p> <h2>தலை பிளந்திருக்கும்</h2><p>இந்த சூழலில்தான் மம்தா இன்று ஹாலிஸ்ஹாஹருக்கு, உயிரிழந்த தொண்டரின் குடும்பத்தை சந்திக்க வருகை தந்துள்ளார்.</p><p>ஆனால் தொண்டரின் வீட்டை அடையும் முன் கும்பலால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவரின் வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p>போலீசார் நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்து மம்தாவை பத்திரமாக அவ்விடத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.</p><p>இதுகுறித்து குற்றம்சாட்டியுள்ள மம்தா, " போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட கட்சித் தொண்டரை சந்திக்க சென்றபோது என் வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p>ஒரு வேளை கார் கண்ணாடி திறந்திருந்தால், என் தலையே பிளந்திருக்கும். காவல்துறையினர் கண் முன்னே இது நடந்தது. அவர்கள் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தனர். பாஜகவினருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்குகின்றனர்" என தெரிவித்தார்.</p> <h2>பாஜக விளக்கம்</h2><p>இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யா, தங்கள் கட்சித் தொண்டர்கள் இதில் ஈடுபடவில்லை என மறுத்துள்ளார். பாஜக கல்வீச்சு, சேறு, செருப்பு வீச்சை ஊக்குவிக்காது என்றும் அது மேற்கு வங்கத்தின் இமேஜுக்கு களங்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>பாஜக பெயரை சொல்லி அப்படி யாராவது செய்திருந்தால் அது தவறு என்று தெரிவித்தார்.</p><p>மம்தா பானர்ஜியின் ஆட்சி காலத்தின்தான் அரசியல் எதிரிகள் மீது அரசு ஆதரவுடன் இதுபோன்ற சேறு, மை, செருப்பு வீச்சுகள் அரங்கேறியதாக அவர் விமர்சித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காசா அமைதித் திட்டம்: &apos;நான் பிரதமராக இருக்கும் வரை பாலஸ்தீன நாடு அமையாது&apos;-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி!</title><link>https://www.maalaimalar.com/news/world/gaza-peace-plan-no-palestinian-state-under-my-rule-netanyahu</link><comments>https://www.maalaimalar.com/news/world/gaza-peace-plan-no-palestinian-state-under-my-rule-netanyahu#comments</comments><guid isPermaLink="false">15d23bc1-cccd-4dac-9bfe-ba15be2e1cad</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:33:13 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:33:13.929Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,காசா,இஸ்ரேல்,gaza,Israel,Benjamin Netanyahu,பெஞ்சமின் நெதன்யாகு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/143r15bt/NETHAYAGU.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Benjamin Netanyahu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/143r15bt/NETHAYAGU.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்ட 15 அம்ச காசா அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளார். அத்துடன், காசாவிலோ அல்லது மேற்குக் கரையிலோ பாலஸ்தீன தனி நாடு அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். </p><p>நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய நெதன்யாகு, "நான் இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகிக்கும் வரை, காசாவிலோ அல்லது மேற்குக் கரையிலோ பாலஸ்தீன தனி நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>15 அம்<strong>சத் திட்டம் நிராகரிப்பு</strong></h2><p>டிரம்ப் நிர்வாகத்தின் 'அமைதி வாரியம்' தயாரித்த 15 அம்ச வரைவுத் திட்டத்தை இஸ்ரேல் ஏற்காது என நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு தங்களின் ஆயுதங்களை முழுமையாகவும் உண்மையாகவும் கைவிடும் வரை, காசாவில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அங்குள்ள தங்களின் தற்போதைய நிலைகளில் இருந்து பின்வாங்காது. இஸ்ரேலியப் படைகளுக்கும் குடிமக்களுக்கும் எதிராக வரும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து முறியடிக்கும் பணிகளில் ராணுவம் ஈடுபடும் என உறுதியளித்துள்ளார்.</p><h2>டிரம்பின் 1<strong>5 அம்ச</strong> அமைதித் திட்டம்-ஒரு பார்வை</h2><p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் முன்வைக்கப்பட்ட இந்த வரைவுத் திட்டம், காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கட்டமைப்புப் பாதையை வழங்குகிறது:</p><p>*ஹமாஸ் அமைப்பு காசாவின் சிவில் நிர்வாகப் பொறுப்புகளைப் பாலஸ்தீனத் தொழில்முறைப் பிரதிநிதிகள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.</p><p>*ஹமாஸ் அமைப்பின் சுரங்கப் பாதைகள், கனரக ஆயுதங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் கண்டறியப்பட்டு, அந்த நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.</p><p>*இஸ்ரேலியப் படைகளுக்கும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கும் இடையே கண்காணிப்புப் பணிகளைச் செய்ய சர்வதேச அமைதிப் படை நிறுத்தப்படும்.</p><p>*ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, இஸ்ரேலியப் படைகள் படிப்படியாகக் காசாவில் இருந்து வெளியேற வேண்டும்.</p><h2>ஹமாஸ் அ<strong>மைப்பின் நிபந்த</strong>னை</h2><p>அமெரிக்காவின் இந்த வரைவுத் திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்திருந்த போதிலும், ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க மறுத்துள்ளது.</p><p>* இஸ்ரேல் முதலில் தன் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.</p><p>* ஷார்ம் எல்-ஷேக்கில் எட்டப்பட்ட முந்தைய ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் படைகளை பின்வாங்கி, காசாவிற்குள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்க வேண்டும்.</p><p>* இதன் பின்னரே ஆயுதங்களைக் ஒப்படைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என ஹமாஸ் மூத்த அதிகாரி காசி ஹமாத் தெரிவித்துள்ளார்.</p><h2>8 முஸ்<strong>லிம் நாடுகளின் கூ</strong>ட்டு எச்சரிக்கை</h2><p>அமெரிக்காவின் அமைதி முயற்சியை சீர்குலைக்கும் வகையில் இஸ்ரேல் செயல்படுவதாகக் கூறி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஜோர்டான், துருக்கி, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய 8 முஸ்லிம் நாடுகள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் தொடர் ராணுவத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் மீண்டும் போர்ச் சூழலைத் தீவிரப்படுத்தும் என்றும் அவை எச்சரித்துள்ளன.</p><p>அமெரிக்க அதிபர் டிரம்ப் இத்திட்டத்தைப் பெரிய திருப்புமுனை என வர்ணித்த போதிலும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரண்டு தரப்புகளும் முன்வைக்கும் முரண்பாடான நிபந்தனைகளால் அமைதித் திட்டம் பெரும் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: &apos;வாரணாசி&apos; படத்தின் &apos;ருத்ரா&apos; லுக் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mahesh-babu-birthday-special-varanasi-film-rudra-look-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mahesh-babu-birthday-special-varanasi-film-rudra-look-release#comments</comments><guid isPermaLink="false">db9246db-6da8-450b-828f-fa4c6e9c921e</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:25:08 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:25:08.446Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரித்விராஜ்,வாரணாசி,varanasi,Priyanka Chopra,MaheshBabu,SSRajamouli,ராஜமௌலி,மகேஷ்பாபு,Varanasi Movie</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2p1e2tws/MaheshBabu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mahesh Babu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2p1e2tws/MaheshBabu?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF">ராஜமௌலி</a> இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81">மகேஷ் பாபு</a> நடித்து வரும் பிரம்மாண்ட  திரைப்படத்தின் மிரட்டலான 'பர்ஸ்ட் லுக்' புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.</p><p>இத்திரைப்படத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு நீண்ட தலைமுடி மற்றும் அடர்ந்த தாடியுடன் முற்றிலும் மாறுபட்ட முரட்டுத் தோற்றத்தில் காட்சியளிக்கும் மகேஷ் பாபு, இதில் 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>ராஜமௌலி - மகேஷ் பாபு பிரம்மாண்ட கூட்டணி</strong></h2><p>'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' போன்ற உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து இயக்கி வரும் இந்த திரைப்படத்திற்கு ‘<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">வாரணாசி</a>’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. </p><p>சர்வதேசத் தரத்தில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் பாணியில் இப்படம் உருவாகி வருக்கிறது.</p><h2><strong>அடர்ந்த காடுகளில் ‘ருத்ரா’</strong></h2><p>தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுப் பகுதியில், பின்னணியில் ஒட்டகச்சிவிங்கிகள் நிற்க, மகேஷ் பாபு மிகவும் கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். </p><p>காடுகளுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் ஒரு ஆராய்ச்சியாளராக அவர் இப்படத்தில் வலம் வரவுள்ளார் என்பதையும் இந்தத் தோற்றம் உறுதிப்படுத்துகிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Fierce isn’t his only shade…<br><br>RUDHRA in <a href="https://x.com/hashtag/Varanasi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Varanasi</a>. <a href="https://x.com/urstrulyMahesh?ref_src=twsrc%5Etfw">@urstrulyMahesh</a> <a href="https://t.co/j6SdSKBrEJ">pic.twitter.com/j6SdSKBrEJ</a></p>&mdash; rajamouli ss (@ssrajamouli) <a href="https://x.com/ssrajamouli/status/2086262300328218742?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>நட்சத்திரப் பட்டாளம் மற்றும் ரிலீஸ் தேதி</strong></h2><p>இத்திரைப்படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து முன்னணி பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். </p><p>ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.</p><p>இப்படத்தை புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.எல். நாராயணா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.</p><p>முழுக்க முழுக்க ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் 3D வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படம், வரும் 2027 ஏப்ரல் 7 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீனாவை சுத்துப் போட்ட &apos;டால்பின்&apos; புயல்.. 10 லட்சம் மக்கள் முகாம்களுக்கு மாற்றம்  -  1,400 விமானங்கள் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/world/china-typhoon-alert-typhoon-dolphin-hits-zhejiang-cancels-flights-and-displaces-over-a-million</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-typhoon-alert-typhoon-dolphin-hits-zhejiang-cancels-flights-and-displaces-over-a-million#comments</comments><guid isPermaLink="false">7204c776-3f5f-47f3-a66a-e1c9aded98c8</guid><pubDate>Sun, 09 Aug 2026 12:09:30 +0000</pubDate><atom:updated>2026-08-09T12:09:30.766Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சீனா,ஜப்பான்,புயல்,தைவான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dem6hygy/tn-61.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 'டால்பின்' புயல்]]></media:title><media:description type="html"><![CDATA[ 'டால்பின்' புயல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dem6hygy/tn-61.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'டால்பின்' புயலால் சீனாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இன்று மாலை சீனாவின் கிழக்கே ஜெஜியாங் மாகாணத்தின் யுஹுவான் அருகே மணிக்கு 151 கி.மீ வேகத்தில் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/cyclone">புயல் </a>கரையை கடந்தது.</p><h2>தாக்கம் </h2><p>புயலின் தீவிரத்தால் ஷாங்காய் நகரிலுள்ள முக்கிய விமான நிலையங்களில் 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. </p><p>ஹாங்சோ விமான நிலையத்திலும் 270க்கும் மேற்பட்ட விமானங்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>கடலோரப் பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>ஷாங்காய், ஜெஜியாங் மற்றும் புஜியான் மாகாணங்களில் 200க்கும் மேற்பட்ட படகு போக்குவரத்து பாதைகள் முடக்கப்பட்டுள்ளன. பல ரெயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>இரண்டு வாரங்களுக்கு முன் சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தைத்   'நௌல்'  என்ற புயல் தாக்கி சேதகங்களை ஏற்படுத்திய நிலையில் தற்போது 'டால்பின்' புயல் தாக்கியுள்ளது. </p><p>மத்திய மற்றும் கிழக்கு ஜெஜியாங், ஷாங்காய், அன்ஹுய் மற்றும் ஜியாங்சு ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து மிகக் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் இருக்கும் என சீன வானிலை மையம் எச்சரித்துள்ளது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/d2t8o1ap/tn-62.jpg" /></figure><h2>ஜப்பான், தைவானில் பாதிப்பு</h2><p>சீனாவுக்கு வருவதற்கு முன், ஜப்பானின் ஒகினாவா தீவுகளை டால்பின் புயல் தாக்கியது.</p><p>அங்கு மணிக்கு 216 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றினால் 6க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் 50,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.</p><p>இந்த புயலால் தைவானின் வடக்குப் பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதால் 180க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>“இ.பி.எஸ்.க்கும், எங்களுக்கும் இருப்பது ஆரோக்கியமான மோதல்தான்” - எஸ்.பி.வேலுமணி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-conflict-between-eps-and-us-is-a-healthy-one-sp-velumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-conflict-between-eps-and-us-is-a-healthy-one-sp-velumani#comments</comments><guid isPermaLink="false">e289da25-74c9-435a-a7fe-f792ae61a336</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:58:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:58:36.823Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,EPS,இபிஎஸ்,AIADMK,எஸ்.பி.வேலுமணி,S.P. Velumani</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xm2wpzg8/New-Project-2026-08-09T172817.730.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இ.பி.எஸ்.க்கும், எங்களுக்கும் இருப்பது ஆரோக்கியமான மோதல்தான்” - எஸ்.பி.வேலுமணி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xm2wpzg8/New-Project-2026-08-09T172817.730.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவை தொண்டாமுத்தூரில் இன்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி.,</p><p>“எங்களைப் பொறுத்தவரையில் அதிமுக நன்றாக இருக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஜெயலலிதா இருந்தவரை ஒரு ஐந்து வருடம் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தால், அடுத்து ஆளும் கட்சியாக வரும். ஆனால், தற்போது ஏன் ஆளுங்கட்சியாக வரவில்லை என விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே பொதுக்குழு கூட்டச் சொல்லி கேட்டோம். </p><p>எடப்பாடி பழனிசாமியும் கூட்டுவதாகத்தான் சொன்னார். அதேபோல தற்போது பிரச்னை வருவது ஏன்? திமுகவுடன் அதிமுக செல்லப்போகிறது என்றபோதுதான் பிரச்னை வந்தது. தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு எங்களை துரோகிகள் என்கிறார்கள். ஆனால், திமுக எதிர்ப்பின் காரணமாகவே தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தோம்.</p><p>அதன்பிறகு அதிமுக பொதுச் செயலாளருடன் சமாதானமாகிவிட்டோம். அதன்பிறகு கட்சி பொறுப்புகள் வழங்கியதில்தான் முரண்பட்டு இருக்கிறோம். மற்றப்படி எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. உரிமையோடு தலைமையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். பொள்ளாச்சி ஜெயராமன் சில தவறான வேலைகளை செய்துவருகிறார். </p><p>பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு பிரச்சனை வரும்போது நான் தான் 25 ஆயிரம் பெண்களை அழைத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினேன். நாங்கள் இப்போது திமுக எதிர்ப்பில் வலுவாக இருக்கிறோம். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது? </p><p>நாங்கள் நியாயமாக இருக்கிறோம். வயது முதிர்வு இல்லாமல் தேவை இல்லாமல் செய்துக் கொண்டிருக்கிறார் பொள்ளாட்சி ஜெயராமன். அவர் தொடர்பான யாரும் எந்தப்பதிவும் போடாதீர்கள். இபிஎஸ்க்கும், எங்களுக்கும் ஆரோக்கியமான மோதல்தான் இருந்துவருகிறது. எல்லோருமே அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள்தான்.</p><p>எடப்பாடி முதலமைச்சராக வேண்டும் என நாங்கள் பணியாற்றினோம். இப்போதும் அவர்தான் பொதுச்செயலாளர்தான்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு-அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rank-list-for-mbbs-and-bds-courses-in-tamil-nadu-to-be-released-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rank-list-for-mbbs-and-bds-courses-in-tamil-nadu-to-be-released-tomorrow#comments</comments><guid isPermaLink="false">c82d5205-55f7-477e-8024-1e7960c77764</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:26:12 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:26:12.986Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MBBS,பிடிஎஸ்,MEdical Counselling,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj,எம்பிபிஎஸ் கலந்தாய்வு,MBBS  BDS course</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/eld52l2b/medico.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MBBS-BDS course ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/eld52l2b/medico.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நாளை (ஆகஸ்ட் 10) வெளியாகும் என சுகாதாரம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளின் சேர்க்கை இளநிலை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது.</p><p>அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2026-2027ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 23ஆம் தேதி வரை பெறப்பட்டது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 26 முதல் 27 வரை ஒரு நாள் மட்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, இந்த கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற 16,199 இடங்களுக்கு 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர்.</p><h2><strong>நாளை வெளியாகிறது</strong></h2><p>மாணவர்கள் விண்ணப்பித்தபோது பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் சரிபார்க்கப்பட்டது. மேலும், சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு ஆகஸ்ட் 7 வரை மீண்டும் ஒரு அவகாசம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, தரவரிசை பட்டியல் எப்போது வெளியாகும் என மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். </p><p>இந்நிலையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்க்கை பெற விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாகும் என சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.</p><h2>சரிபார்க்கு<strong>ம் முறைக</strong>ள்:</h2><p>நாளை மதியம் 3 மணியளவில் அமைச்சர் தரவரிசை வெளியிட்ட பின்னர், மாணவர்கள் தங்களது தரவரிசையை tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விண்ணப்ப எண் மற்றும் விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><h2>கலந்தாய்வு ந<strong>டைபெ</strong>றும் நாட்கள் </h2><p>தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு (எம்.சி.சி) வெளியிட்டுள்ள கால அட்டவணைப்படி, வரும் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை முதல் சுற்றுக் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. அதில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வு இம்மாதம் 31 முதல் செப்டம்பர் 8 வரையும், மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வு செப்டம்பர் 16 முதல் 26 வரையும் நடைபெறும்.</p><h2>வகுப்புகள் தொடக்கம் <strong>எப்போது</strong>?</h2><p>தொடர்ந்து, நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கு அக்டோபர் 3 முதல் 5 வரை மேலும் ஒரு சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்பப்படவுள்ளது. இதனையடுத்து, இந்தாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 4 முதல் தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், மாநிலங்கள் அளவில் உள்ள 80 சதவீத அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஏர் இந்தியா விமான பயணிகள் காயமடைந்த சம்பவத்தில் திருப்பம்  - போதைப்பொருள் பயன்படுத்தினாரா  விமானி? - சோதனையில் ஷாக்</title><link>https://www.maalaimalar.com/news/national/air-india-turbulence-phuket-delhi-flight-drops-300-feet-17-injured-and-captain-faces-psychoactive-substance-test-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-india-turbulence-phuket-delhi-flight-drops-300-feet-17-injured-and-captain-faces-psychoactive-substance-test-row#comments</comments><guid isPermaLink="false">698d0cc7-b3f4-4343-b134-726625ea4077</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:22:56 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:22:56.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏர் இந்தியா,விமானி,Air India,Pilot,போதைப்பொருள்,Drugs</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2rum5ne1/tn-60.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏர் இந்தியா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏர் இந்தியா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2rum5ne1/tn-60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த <a href="https://www.maalaimalar.com/news/national/air-india-flight-ai2379-turbulence-incident-15-injured">ஏர் இந்தியா விமானம்</a>, வந்துகொண்டிருந்தபோது நடுவானில் திடீரென டர்புலன்ஸ் காரணமாக சுமார் 300 அடி கீழே இறங்கியது. </p><h2>காயம்</h2><p>விமானம் குலுங்கியதில் அதிலிருந்த  137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது. </p><p>தகவலின்படி, 13 பயணிகள் மற்றும் 4 கேபின் க்ரூ உறுப்பினர்கள் உட்பட 17 பேர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்பட்டனர். சீட் பெல்ட் அணியாததே அவர்களுக்கு காயம் ஏற்பட காரணம். </p><p>டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிறகு, விமானத்தை இயக்கிய விமானிகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பிரீத் அனலைசர் பரிசோதனையில் மது அருந்தவில்லை என முடிவு வந்தது.</p><h2>போதைப்பொருள் பரிசோதனை</h2><p>இருப்பினும் சந்தேகம் தீராத நிலையில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு 'சைக்கோஆக்டிவ் சப்ஸ்டன்ஸ்' எனும் போதைப்பொருள் பயன்பாடு பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.</p><p>இந்நிலையில் விமானத்தை ஓட்டிய 30 வயதுடைய கேப்டனுக்கு நடத்தப்பட்ட இந்த போதைப்பொருள் பரிசோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இருப்பினும் Confirmatory Test எனும் இறுதி பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே கேப்டன் மீதான குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும்.</p><p>விமானி மருத்துவக் காரணங்களுக்கான உட்கொண்ட வழக்கமான மருந்துகள் இந்த முடிவுக்குக் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>ஏர் இந்தியா விளக்கம்</h2><p>இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், "விமானிகளுக்கு வழக்கமான போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது உண்மைதான்.</p><p>ஆனால், அந்தப் பரிசோதனையின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் ஏர் இந்தியாவிடம் பகிரப்படவில்லை. எனவே, இது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், விசாரணை நிலுவையில் உள்ளதால், விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட விமானிகள் பணி செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பலத்த மழை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">1e15d250-efca-414a-99ad-4b23ee1043f6</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:23:39.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,Chennai Rain,சென்னையில் மழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ry25lrui/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ry25lrui/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>வானிலை ஆய்வு மையம்</strong></h2><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><h2><strong>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டம்</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது, முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.</p><h2><strong>மழை</strong></h2><p>இந்நிலையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, வேப்பேரி, அசோக் நகர், பெரியமேடு, கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.</p><h2><strong>மக்கள் மகிழ்ச்சி</strong></h2><p>கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பெய்த இந்த மழையால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஐதராபாத் நால்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: தலைமை நீதிபதி வருகைக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/hyderabad-nalsar-convocation-students-protest-chief-justice</link><comments>https://www.maalaimalar.com/news/national/hyderabad-nalsar-convocation-students-protest-chief-justice#comments</comments><guid isPermaLink="false">a5d84e88-39b8-407c-8930-705323b2cef5</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:22:49 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:22:49.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad University,ஐதராபாத்,NALSAR University,Surya Kanth,நால்சார் பல்கலைக்கழகம்,சூர்யா காந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/9t8kphcq/naalsar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NALSAR University -Surya Kanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/9t8kphcq/naalsar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் (NALSAR) 2026-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு, இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்தை முதன்மை விருந்தினராக அழைத்துள்ளதற்கு 450-க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு மாணவர்கள் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் எழுதியுள்ள கூட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்,</p><h2>ஜந்தர் மந்தர் <strong>போராட்டம் மீதான</strong> விசாரணை</h2><p>ஜூலை 20, 2026 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதல் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி சூர்யா காந்த் கையாண்ட விதம் தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2>நீதிமன்றத்தி<strong>ன் அணுகுமு</strong>றை</h2><p>விசாரணையின் போது காவல்துறை வன்முறை தொடர்பான வீடியோ ஆதாரங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுத்தது மற்றும் அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் தார்மீக ரீதியாக ஏற்புடையதல்ல என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>பட்டங்களைப் <strong>பெற மறுப்பு</strong></h2><p>அரசமைப்புச் சட்ட மதிப்புகள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட நீதிபதியிடமிருந்து பட்டங்களைப் பெறத் தங்களுக்கு விருப்பமில்லை என்றும், விருந்தினர் முடிவை நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>தற்போதைய <strong>நிலை</strong></h2><p>சட்டக் கல்வியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் நால்சார் பல்கலைக்கழக மாணவர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கை, கல்வி மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், இக்கோரிக்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>தனியாரிடம் ஒப்படைக்கப்படும் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் - கிளம்பும் எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/indias-second-rocket-launch-site-to-be-handed-over-to-the-private-sector-opposition-mounts</link><comments>https://www.maalaimalar.com/news/national/indias-second-rocket-launch-site-to-be-handed-over-to-the-private-sector-opposition-mounts#comments</comments><guid isPermaLink="false">6fcdec84-8801-4e25-8981-2ed883500973</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:18:26 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:18:26.203Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,குலசேகரப்பட்டினம்,SLC,IN-SPACe,இன்-ஸ்பேஸ்,சிறிய செயற்கைக்கோள் ஏவுதளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/djfrs2qy/New-Project-2026-08-09T154424.565.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தனியாரிடம் ஒப்படைக்கப்படும் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் - கிளம்பும் எதிர்ப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/djfrs2qy/New-Project-2026-08-09T154424.565.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவால் கட்டமைக்கப்பட்டு வரும், இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகளை இன்-ஸ்பேஸ் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.</p><p>சிறிய ஏவுகணைகளை, ராக்கெட்டுகளை ஏவுவதற்கென அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய ஏவுதளத்தை இயக்கவும், நிர்வகிக்கவும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சுமார் 2,233 ஏக்கர் பரப்பளவில், ரூ.986 கோடியில் உருவாகி வரும் இந்த ஏவுதளம் செயல்பாட்டுக்கு வந்தப்பிறகு, ராக்கெட்டுகளை ஏவுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளவுள்ளன. </p><p>இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு தேவையான ஆரம்பகால தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆதரவை இஸ்ரோ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>2027-ல் செயல்பாட்டுக்கு வரும் ஏவுதளம்</h2><p>தற்போதுவரை இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவுதளக் கட்டிடம், பராமரிப்புப் பணிமனை மற்றும் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கக்கூடிய ஹெலிபேட் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. வரும் 2027 மார்ச் மாதத்திற்குள் இந்த ஏவுதளம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தூத்துக்குடியிலிருந்து சுமார் 55 கி.மீ தொலைவில், கடற்கரையில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் தளம், நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கிருந்து ஏவப்படும் சிறிய ராக்கெட்டுகள் இலங்கை வான்பரப்பைச் சுற்றி வளைக்காமல், நேரடியாகத் தெற்கு நோக்கி இந்தியப் பெருங்கடல் மேல் பாய முடியும். </p><p>இதனால் ராக்கெட்டுகளின் எரிபொருள் பெருமளவு சேமிக்கப்பட்டு, கூடுதல் எடையைச் சுமந்து செல்ல முடியும்.</p><h2>எதிர்ப்பு </h2><p>முழுக்க முழுக்க நாட்டின் பொதுத்துறை நிதியிலும், இஸ்ரோவின் தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்டு வரும் இந்த விண்வெளி உள்கட்டமைப்பைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் இந்த திடீர் முடிவிற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியும், பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கனடாவில் இந்திய வம்சாவளி பெண் கொலை: 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த காதலன் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-origin-woman-murdered-in-canada-boyfriend-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-origin-woman-murdered-in-canada-boyfriend-arrested#comments</comments><guid isPermaLink="false">ceb03a0d-647e-43fc-8bb1-5412026eae1d</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:12:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:12:36.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,கனடா,canada,டொராண்டோ,HimanshiKhurana,இந்தியபெண்கொலை,TorontoPolice,AbdulGafuri</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/nwrto5up/Canada-Crime" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Canada Crime ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/nwrto5up/Canada-Crime?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/canada">கனடா</a>வில் இந்திய வம்சாவளி பெண் ஹிமான்ஷி குரானா கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 மாதங்களாக சர்வதேச அளவில் தலைமறைவாக இருந்த அவரது காதலன் அப்துல் கபூரியை டொராண்டோ போலீசார் அதிரடியாகக் கைது செய்து கனடாவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.</p><h2>இந்தியப் பெண் பிணமாக மீட்பு:</h2><p>கனடா டொராண்டோ நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா (வயது 30) கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார். </p><p>போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தை நெருங்கிய இணையரால் நிகழ்த்தப்பட்ட வன்முறை என்று போலீசார் குறிப்பிட்டிருந்தனர்.</p><h2><strong>காதலன் மீது கொலைக் குற்றச்சாட்டு:</strong></h2><p>இந்தக் கொலை வழக்கில் ஹிமான்ஷி குரானாவின் காதலனான டொராண்டோவைச் சேர்ந்த அப்துல் கபூரி மீது முதன்மைக் குற்றவாளியாக முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. </p><p>ஆனால், கொலை நடந்த உடனே அவர் போலீசில் சிக்காமல் தப்பி ஓடி தலைமறைவானார்.</p><h2><strong>புகைப்படம் வெளியீடு மற்றும் தேடுதல் வேட்டை:</strong></h2><p>தலைமறைவான அப்துல் கபூரியை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். </p><p>அவசரமாக அவரது புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட டொராண்டோ போலீசார், குற்றவாளி பற்றிய தகவல்களை உடனடியாக வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.</p><h2><strong>7 மாதங்களுக்குப் பின் கைது:</strong></h2><p>இந்த நிலையில் தலை மறைவான 7 மாதங்களுக்கு பிறகு அப்துல் கபூரியை போலீசார் கைது செய்தனர். வேறு நாட்டுக்கு தப்பி சென்ற அவரை போலீசார் கைது செய்து கனடாவுக்கு அழைத்து வந்தனர். </p><p>அவர் எந்த நாட்டில் இருந்தார் என்பதைத் குறிப்பிடாமல், டொராண்டோ காவல்துறையின் தலைமறைவுக் குற்றவாளிகளைப் பிடிக்கும் பிரிவு மற்றும் கொலை வழக்குகளை விசாரிக்கும் பிரிவு அதிகாரிகள், அவரை கனடாவுக்குக் கொண்டுவர தேசிய, சர்வதேச காவல் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. </p><p>மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மிருணாள் தாகூர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mrunal-thakur-slams-rumours-of-romance-with-young-cricketer-yashasvi-jaiswal</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mrunal-thakur-slams-rumours-of-romance-with-young-cricketer-yashasvi-jaiswal#comments</comments><guid isPermaLink="false">ba785ba6-a637-41be-ad64-b881d283393a</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:57:10 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:57:10.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yashasvi Jaiswal,யஷஸ்வி ஜெய்ஸ்வால்,ராக்கா,Actress Mrunal Thakur,Rakka,நடிகை மிருணாள் தாகூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/vygk1yft/mrunal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Mrunal Thakur-Yashasvi Jaiswal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/vygk1yft/mrunal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'சீதா ராமம்' மற்றும் 'ஹாய் நானா' போன்ற வெற்றிப் படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலில் இருப்பதாகச் பரவிய வதந்திகளுக்கு காட்டமாகப் பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.</p><p>சமீபத்தில் மும்பை பாந்த்ராவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு மிருணாள் தாகூர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (24) ஆகிய இருவரும் தனித்தனியாக வந்து சென்றனர். இருவரின் வீடியோக்களும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, 34 வயதான மிருணாள் தாகூரும், அவரை விட 10 வயது குறைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் காதலித்து வருவதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாகப் பரவின.</p><h2>மிருணாள் <strong>தாகூரின் காட்டமான</strong> விளக்கம்</h2><p>இந்த வதந்தி தொடர்பாக இணையத்தில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றின் கமெண்ட் பகுதியில் நேரடியாகப் பதிலளித்த நடிகை மிருணாள் தாகூர், தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அதில், </p><p>"ப்ரோ.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள்! நாங்கள் எங்கே ஒன்றாக இருக்கிறோம் என்று காட்டுங்கள்? படித்தவர்கள் கூட இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை எப்படி உண்மையென நம்புகிறீர்கள்? நாட்டில் பேச வேண்டிய எவ்வளவோ முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. Gen Z தலைமுறையினரிடம் இருந்து கற்றுக் கொண்டு, பயனுள்ள நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தி வீடியோக்களை உருவாக்குங்கள், அப்போது தான் நிறைய வியூஸ் கிடைக்கும்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.</p><h2>திரைத்து<strong>றைப் பய</strong>ணம்</h2><p>தென்னிந்திய மற்றும் ஹிந்தி சினிமாக்களில் பரபரப்பாக நடித்து வரும் மிருணாள் தாகூர், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'ராக்கா' படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே கடந்த காலங்களில் நடிகர் தனுஷுடன் இவரை இணைத்து பரப்பப்பட்ட வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது கிரிக்கெட் வீரருடனான இந்த வதந்தியையும் அவர் நேரடியாக மறுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் திரையில் த்ரிஷா - விஜய் ஜோடி: திருப்பாச்சி மறுவெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trisha-vijay-pairing-back-on-screen-thirupaachi-re-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trisha-vijay-pairing-back-on-screen-thirupaachi-re-release#comments</comments><guid isPermaLink="false">236a3e15-9756-4661-8769-4299530ec7bc</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:47:04 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:47:04.536Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,trisha,த்ரிஷா,Thirupaachi,திருப்பாச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/vyf3ww3q/New-Project-2026-08-09T151457.469.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீண்டும் திரையில் த்ரிஷா - விஜய் ஜோடி - திருப்பாச்சி மறுவெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/vyf3ww3q/New-Project-2026-08-09T151457.469.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் பேரரசு இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பசுபதி, மல்லிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2005ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றப் படம் திருப்பாச்சி. தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தார் இயக்குநர் பேரரசு.</p><p>விஜய் மற்றும் நடிகை த்ரிஷா கெரியரிலும் இது முக்கிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் இப்படம் அக்.1ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட்ட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னரே இதன் மறுவெளியீடு தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்மூலம் நடிகர்கள் விஜய் மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மானிய விலை அரிசியில் ரூ.22,000 கோடி ஊழல்.. டெல்லி பாஜக அரசு மீது ஆம் ஆத்மி பரபரப்பு குற்றசாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-bjp-govt-accused-of-diverting-subsidised-rice-to-private-firm-in-22000-crore-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-bjp-govt-accused-of-diverting-subsidised-rice-to-private-firm-in-22000-crore-scam#comments</comments><guid isPermaLink="false">a6308916-fed0-4250-a671-bebd8e8ed15a</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:40:17 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:40:17.759Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆம் ஆத்மி,Saurabh Bharadwaj,delhi,Aam Aadmi,Corruption,டெல்லி,ஊழல்,சௌரப் பரத்வாஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ey0o1gpb/tn-59.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரேகா குப்தா, சௌரப் பரத்வாஜ்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரேகா குப்தா, சௌரப் பரத்வாஜ்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ey0o1gpb/tn-59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏழைகளுக்கு வழங்க வேண்டிய மானிய விலையிலான அரிசியை தனியார் நிறுவனத்திற்கு விற்று ரூ.22,000 கோடி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D">ஊழல் </a>செய்ய ரேகா குப்தா தலைமையிலான டெல்லி பாஜக அரசு திட்டமிட்டதாக ஆம் ஆத்மி டெல்லி மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சௌரப் பரத்வாஜ்  குற்றச்சாட்டியுள்ளார். </p><p>எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய சௌரப், </p> <h2>மானிய விலை அரிசி</h2><p>டெல்லி அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா தலைமையிலான உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மற்றும் பாஜக ஆளும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கார்ப்பரேஷன் இணைந்து இந்திய உணவுக் கழகத்திடம் மானிய விலையிலான அரிசியைக் கோரியுள்ளன.</p><p>டெல்லியில் உள்ள ரேஷன் கார்டு இல்லாத ஏழை மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதற்காக வாரத்திற்கு 31,000 மெட்ரிக் டன் அரிசி வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் இந்திய உணவுக் கழகம் மூலம் பல வாரங்களாக அரிசி அனுப்பப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், இந்த மானிய விலை அரிசி டெல்லியில் உள்ள எந்தவொரு ஏழை மக்களுக்கும் சென்றடையவில்லை.</p> <h2>ரூ.22,000 கோடி ஊழல்</h2><p>இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து பெறப்பட்ட அரிசி முழுவதும் அசாமுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அரியானாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு அதிக லாபத்திற்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம் அந்த அசாம் கார்ப்பரேஷன் வாரத்திற்கு ரூ.70 கோடி கமிஷன் ஈட்டியுள்ளது.</p><p>வாரத்திற்கு ரூ.143 கோடி வீதம், 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.22,000 கோடிக்கு லாபம் ஈட்ட திட்டமிடப்பட்டு இந்த ஊழல் நடத்தப்பட்டு வந்துள்ளது.</p> <h2>அம்பலம் </h2><p>மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை இதை கண்டறிந்து பிடித்த பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும், இதன் பேரில் சில அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சௌரப் பரத்வாஜ் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>எனினும் அசாமை சேர்ந்த அந்த கார்ப்பரேஷன் என்னவென்று அவர் விளக்கவில்லை.</p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அல்லது டெல்லி அரசிடமிருந்து பதில்கள் எதுவும் இன்னும் வரவில்லை.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்கா துணை இல்லாமல் Q9 ஆடி காரை உற்பத்தி செய்திருக்க முடியாது: Audi CEO</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/audi-plans-gradual-electrification-and-india-ev-push</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/audi-plans-gradual-electrification-and-india-ev-push#comments</comments><guid isPermaLink="false">154d92db-de49-432d-92b4-ffb8356f61b4</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:39:23 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:39:23.044Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Audi,ஆடி கார்,ஆட்டோமொபைல்,Automobile</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/f2ss9cki/Untitled-design-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Bigger bet on battery cars with balanced mix of hybrids and combustion engines]]></media:title><media:description type="html"><![CDATA[ Audi Q9]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/f2ss9cki/Untitled-design-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஆடி நிறுவனம், தற்போது பேட்டரி-மின்சார வாகனங்கள், பிளக்-இன் ஹைப்ரிட்கள் மற்றும் எரிபொருள் என்ஜின்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான பவர்டிரெய்ன் அம்சங்களுடன் கூடிய ஒரு வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது.</p><h3><strong>ஆடி தலைமை செயல் அதிகாரி</strong></h3><p>இதுகுறித்து அதன் தலைமைச் செயல் அதிகாரி ஜெர்னோட் டோல்னர் கூறுகையில், “சந்தைகள் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டு வேகம் மாறுபடுவதால், நிறுவனத்திற்கு மிகவும் சமநிலையான தயாரிப்பு மற்றும் பவர்டிரெய்ன் கலவை தேவைப்படுகிறது.</p><p>நான் ஆடியில் சேர்ந்தபோது முற்றிலும் மின்சார வாகனங்களுக்கான ஒரு திட்டம் நடைமுறையில் இருந்தது. நான் முதலில் ஆய்வு செய்த விஷயங்களில் அதுவும் ஒன்று.</p><p>குறிப்பாக ஐரோப்பாவிற்கு முக்கியமான பிளக்-இன் ஹைப்ரிட்கள், எரிபொருள் எஞ்சின் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு இடையே மிகவும் சமநிலையான ஒரு திட்டத்தை நாங்கள் கண்டறிந்தோம்.</p><p>நிச்சயமாக, எங்கள் முதலீட்டின் பெரும்பகுதி பேட்டரி மின்சாரத்தில்தான் இருக்கும், அது உறுதியானது.</p><p>எரிபொருள் இயந்திரம் ஓரளவு முதிர்ச்சியடைந்துள்ளது. அது 100 ஆண்டு கால புத்தாக்கச் சுழற்சியின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஆனால், உண்மையைச் சொல்லப்போனால், பேட்டரி மின்சாரத் துறை இன்னும் அதன் தொடக்க நிலையில்தான் உள்ளது.</p><p>எங்களின் முதலீட்டின் பெரும்பகுதி நிச்சயமாக பேட்டரி மின்சாரத் துறையிலேயே இருக்கும்.</p><p>ஆடியைப் பொறுத்தவரை முன்னணித் தொழில்நுட்பமாக உள்ளது. படிப்படியாக மேலும் மின்சாரமயமாக்குவதே எங்களின் முன்னுரிமையாக இருக்கும்.</p><p>எனக்குத் தெரிந்தவரை நாங்களும் இந்தியாவில் மின்சார வாகனப் பிரிவில் புதிய தயாரிப்புகளுடன் நுழைய முடிவு செய்துள்ளோம்.</p><p>ஆடி நிறுவனம் இன்னும் பிராந்திய அளவில் செயல்பட வேண்டும். முன்பு அனைவருக்கும் பொருந்தும் ஒரே மாதிரியான காரை உருவாக்கி, அதை சீனாவிற்குக் கொண்டு வந்து, வீல்பேஸை மட்டும் நீட்டித்து அதே காரைத் தயாரித்தோம்.</p><p>அது இப்போது எடுபடாது. நாம் சந்தைகளின் தேவைகளைக் கவனமாகக் கேட்க வேண்டும்.</p><h3><strong>Q9 கார்</strong></h3><p>Q9 ஒரு காரின் மிகச்சிறந்த சான்றாகும். நாங்கள் இதுவரை உருவாக்கிய ஆடி கார்களிலேயே இதுதான் மிகப்பெரியது. அமெரிக்க சந்தை இல்லாமல் அந்தக் கார் இருந்திருக்காது.</p><h3><strong>கார் உற்பத்தியில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது</strong></h3><p>இந்தியாவும் ஒரு சிறந்த சான்றாக விளங்குகிறது. இந்தியாவில் கார் தொழில் அடைந்துள்ள வளர்ச்சியும், வழங்கப்படும் தயாரிப்புகளின் நேர்த்தியும் தொழில்நுட்பமும் உண்மையிலேயே நம்ப முடியாதவை.</p><p>நாம் போதுமான வேகத்தில் மாற்றங்களைச் செய்ய முடியுமா என்பதுதான் என் தூக்கத்தைக் கெடுக்கிறது; நாம் வேகத்தை அதிகரிக்க வேண்டும்" என்று டோல்னர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-tomorrow-says-chennai-weather-centre</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-tomorrow-says-chennai-weather-centre#comments</comments><guid isPermaLink="false">ab9f22ed-569e-4f90-bb5c-27819abd00d3</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:35:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:35:58.643Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி,தமிழகம்,சென்னை வானிலை ஆய்வு மையம்,Meteorological Department,rain alert,tamilnadu rain</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/lam4d7i0/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilnadu rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/lam4d7i0/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெயில் தாக்கம் காரணங்களால், நாளை (ஆகஸ்ட் 10) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை <strong>வாய்ப்புள்ள</strong> பகுதிகள்</h2><p>மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்கள் (கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி) மற்றும் வட கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><h2>சென்<strong>னை ம</strong>ற்றும் புறநகர் வானிலை</h2><p>சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலையிலோ அல்லது இரவிலோ இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>வெப்<strong>பநிலை நிலவர</strong>ம்</h2><p>மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் நிலவி வந்த உக்கிரமான வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து, இதமான சூழ்நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>மீனவர்களுக்<strong>கான எச்சரி</strong>க்கை</h2><p>தெற்கு மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், குறிப்பிட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொடர்ச்சியாக இந்திய வீரர்கள் காயம்: &apos;Blame&apos; என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்- விவிஎஸ் லக்ஷ்மண்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-counters-criticism-of-team-indias-growing-injury-crisis</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-counters-criticism-of-team-indias-growing-injury-crisis#comments</comments><guid isPermaLink="false">6dc0bc59-751f-4606-bd6f-a00ec7320d81</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:31:24 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:31:24.126Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாய் சுதர்சன்,Bumrah,பும்ரா,sai sudharsan,vvs laxman,விவிஎஸ் லக்ஷ்மண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/02lk23hs/VVSLaxman0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவிஎஸ் லக்ஷ்மண்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/02lk23hs/VVSLaxman0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இந்திய அணியில் பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர. இருவரும் தற்போது காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளனர். மேலும், பயிற்சி ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாடவில்லை. ஒவ்வொரு வீரராக காயம் அடைந்து வருவதால், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையம் மீது குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர்.</p><p>பிசிசிஐ-யின் சிறப்பு மையம் எவ்வாறு செயல்படுகிறது. உடற்தகுதி பெறாத வீரர்களை தேசிய அணியில் விளையாட அனுமதி அளிக்கிறது என பழி போடுகின்றனர். இந்த நிலையில் சிறப்பு அமையம் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண், இந்திய கிரிக்கெட்டின் மருத்துவ மற்றும் தேர்வு கட்டமைப்பில் பொறுப்பேற்பது குறித்த குறைபாடுகள் இருப்பதாக எழுந்த கருத்துகளை லட்சுமண் நிராகரித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக விவிஎஸ் லக்ஷ்மண் கூறியதாவது:-</h2><p>குற்றம் சாட்டுதல்' (blame) என்ற வார்த்தையைப் பயன்படுத்த நாம் விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில், அவ்வாறு கூறும்போது யாரையாவது ஒரு பலிக்கடாவாக ஆக்குவது போன்ற சூழல் உருவாகிறது. நீங்கள் எதை உணர்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டத் தொடங்கலாம்.</p><h2>பிசிசிஐ சிறப்பு பயிற்சி மையம்</h2><p>ஆனால், COE (சிறப்புப் பயிற்சி மையம்), அணி நிர்வாகம் ஆகிய இரண்டிற்கும் இடையில் சிறந்த ஒத்துழைப்பு இருந்து வருகிறது. அதேபோல் SSM (விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவம் ஸ்டாஃப் மற்றும் தேர்வுக்குழுவுக்கும் இடையில் சிறந்த ஒத்துழைப்பு நிலவுகிறது.</p><p>உடல் தகுதி குறித்த அறிக்கையை நாங்கள் அனுப்பும்போது, ​​தேர்வு செய்பவர் (selector) அந்த அறிக்கையைக் கேட்டு COE-ஐத் தொடர்புகொள்வார். நாங்கள் தற்போதைய உடல் தகுதி நிலையைச் சேகரித்து, தேர்வுத் குழுத் தலைவரிடம் (ஆண்கள் அல்லது பெண்கள் அணியின் தேர்வுத் குழு) அந்த அறிக்கையைச் சமர்ப்பிப்போம்; அத்துடன் இரு அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் மற்றும் பிசிசிஐ (BCCI) ஆகியோருக்கும் அதன் நகலை அனுப்புவோம்.</p> <h2>பும்ரா மற்றும் சாய் சுதர்சன்</h2><p>இப்போது, ​​பும்ரா மற்றும் <a href="https://www.maalaimalar.com/sports/cricket/sai-sudharsan-has-been-ruled-out-of-the-test-series-against-sri-lanka">சாய் சுதர்சன்</a> விஷயத்தில் பார்த்தால், எப்போதும் ஒரு 'நட்சத்திரக் குறியீடு' (asterisk) இடம்பெற்றிருக்கும். பிசிசிஐ-யிடமிருந்து ஊடக அறிக்கை வரும்போது, ​​ஒரு வீரரின் தேர்வு விவரத்துடன் அக்குறியீடு இணைக்கப்பட்டிருக்கும். அந்த நட்சத்திரக் குறியீடு எதைக் குறிக்கிறது? அது உடல் தகுதிக்கு உட்பட்டது (subject to fitness) என்பதைக் குறிக்கிறது.</p><p>ஒரு வீரர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டார் என்று கூறுவது டெக்னிக்கலாக சரியல்ல என்று ஏனெனில், அந்த வீரர் தனது முழுமையான உடற்தகுதியை இன்னும் நிரூபிக்க வேண்டியுள்ளது என்ற நிபந்தனையுடனேயே அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.</p><p>அதாவது, பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் உடற்தகுதி அனுமதிக்கு உட்பட்டே தேர்ந்தெடுக்கப்படவிருந்தனர். அவர்களைப் பரிசோதித்து, ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறச் செய்வோம். ஒருவேளை முன்னேற்றம் மெதுவாக இருந்தால், அது குறித்துத் தேர்வுக்குழுத் தலைவர் மற்றும் தலைமைப் பயிற்சியாளரிடம் தகவல் தெரிவிக்கப்படும். இந்த நடைமுறை மிகச் சீராக நடைபெற்று வருகிறது. சர்வதேசத் தொடரில் பங்கேற்க அவர்கள் இன்னும் தயாராக இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இச்செயல்முறைகள் எப்போதும் வீரர் மற்றும் அணியின் நலனையே மையமாகக் கொண்டவை.</p><h2>உடற்தகுதிக்கு உட்பட்டது</h2><p>உடற்தகுதிக்கு உட்பட்டது (subject to fitness) என்ற விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்தவொரு பத்திரிகைச் செய்தியிலும் சரி, உடற்தகுதி அறிக்கைகள் மற்றும் வீரர் தேர்வு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை உள்ளது. இந்த வீரர்கள் உடற்தகுதிக்கு உட்பட்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் இங்கு உடற்தகுதிச் சோதனையில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்குப் பதிலாக எந்த வீரர்கள் செல்வார்கள் என்பது தேர்வாளர்களுக்குத் தெரியும். இது ஒரு அடிப்படைப் புரிதல்.</p><p>இவ்வாறு விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்கான தூதரை மாற்ற ஸ்பெயின் முடிவு!</title><link>https://www.maalaimalar.com/news/world/spain-to-replace-ambassador-to-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/spain-to-replace-ambassador-to-india#comments</comments><guid isPermaLink="false">4f9d1fcd-9f06-44a3-91bc-b024bb27cafd</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:59:12 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:59:12.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SpainAmbassador,ஸ்பெயின் தூதர்,JuanAntonioMarch,ஜுவான் அன்டோனியோ,DiplomaticScam,IndiaSpainRelations,இந்தியவெளியுறவுத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/l4j9drcp/SpainAmbassador-JuanAntonioMarch" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SpainAmbassador JuanAntonioMarch ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/l4j9drcp/SpainAmbassador-JuanAntonioMarch?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிதி முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகப் புகாரில் சிக்கிய இந்தியாவுக்கான ஸ்பெயின் தூதர் ஜுவான் அன்டோனியோவை மாற்றும் நடவடிக்கையை ஸ்பெயின் அரசாங்கம் தொடங்கியுள்ளது.</p><p>வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின்றி கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்திய குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக கனடாவில் பணியாற்றும் ஆல்பிரடோ மார்டினெஸ் செரானோவை புதிய தூதராக நியமிக்க அந்நாடு முடிவு செய்து, இந்திய அரசிடம் ஒப்புதல் கோரியுள்ளது.</p><h2><strong>ஊழல் புகாரில் விசாரணை:</strong></h2><p>இந்தியாவுக்கான ஸ்பெயின் தூதராக ஜுவான் அன்டோனியோ உள்ளார். இவர் கடந்த 2024-ம் செப்டம்பர் மாதம் இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டார். </p><p>இதற்கிடையே ஜுவான் அன்டோனியோ மீது பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சந்தேகத்திற்குரிய நிதி நடவடிக்கைகள் தொடர்பாக புகார்கள் எழுந்தன.</p><p>இதுதொடர்பாக ஸ்பெயினின் ஊழல் தடுப்பு அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிக்கையை சமர்ப்பித்து இருந்தது.</p><h2><strong>நிதி முறைகேடு புகார்:</strong></h2><p>கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு, இந்தியாவில் செயல்படும் ஸ்பெயின் நிறுவனங்களையும் ராஜஸ்தான் அரசையும் ஜுவான் அன்டோனியோ அணுகியதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>ஸ்பெயினைச் சாராத கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன என்றும் இது குறித்து அமைச்சகத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை. </p><p>தூதரகத்தால் அதிகாரப்பூர்வ நிதிப் பதிவுகள் எதுவும் பராமரிக்கப்படவில்லை என்றும் புகார்கள் தெரி விக்கபட்டிருந்தது.</p><h2><strong>இந்திய தூதர் மாற்றம்:</strong></h2><p>இந்த நிலையில் வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின்றி அதிக செலவில் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து இந்தியாவில் உள்ள தனது தூதர் ஜுவான் அன்டோனியோயை மாற்றும் செயல் முறையை ஸ்பெயின் அரசாங்கம் தொடங்கியுள்ளது.</p><p>அவர் விரைவில் மாற்றப்பட்டு இந்தியாவுக்கான புதிய தூதர் நியமிக்கப்பட உள்ளார். தற்போது கனடாவில் தூதராகப் பணியாற்றும் ஆல்பிரடோ மார்டினெஸ் செரானோவை இந்தியாவின் புதிய தூதராக நியமிப்பதற்கான முறையான ஒப்புதலைப் இந்தியாவிடம் ஸ்பெயின் அரசாங்கம் கேட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் வீடியோ வெளியீடு! </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-supreme-leader-mojtaba-khamenei-alive-new-video-ends-health-rumours</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-supreme-leader-mojtaba-khamenei-alive-new-video-ends-health-rumours#comments</comments><guid isPermaLink="false">eba7d847-6e36-4b11-8ca9-0d26cad04a82</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:59:09 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:59:09.841Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Iran War,ஈரான் போர்,Mojtaba Khamenei,மொஜ்தபா காமேனி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/rznyix6q/tn-58.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மொஜ்தபா காமேனியின் வீடியோ]]></media:title><media:description type="html"><![CDATA[ மொஜ்தபா காமேனியின் வீடியோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/rznyix6q/tn-58.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் உச்ச தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/world/mojtaba-khameneis-health-raises-concerns-in-iran">மொஜ்தபா காமேனி</a>யின் புதிய வீடியோ வெளியிடப்பட்டு அவரின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. </p><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய கூட்டுத் தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததை அடுத்து அவரது மகன் மொஜ்தபா காமேனி மார்ச்சில் நாட்டின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். </p><p>ஆனால் பிப்ரவரி 28 அன்று நடந்த தாக்குதலுக்கு பிறகு அவர் பொதுவெளியில் தோன்றவே இல்லை. அன்றைய தாக்குதலில் அவரும் படுகாயமடைந்ததாவும் ரகசிய இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. </p> <h2>வதந்தி</h2><p>அவர் வெளியிட்டதாக நம்பப்படும் ஊடக மற்றும் சமூக வலைதள அறிக்கைகளே பொதுவெளிக்கு வந்தன. மற்றபடி காமேனி இருக்குமிடம் ரகசியமாகவே வைக்கப்பட்டது. பிப்ரவரி 28 தாக்குதலில் மொஜ்தபா முகம் சிதைந்துவிட்டதாகவும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் மேற்கத்திய ஊடகங்கள் கூறி வந்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இதே பாட்டை பாடி வந்தார்.</p><p>கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடந்த தந்தை அயத்துல்லா இறுதிச்சடங்கிலும் அவர் பங்கேற்காதது இந்த சந்தேகங்களை வலுப்படுத்தியது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அவர் அதில் கலந்துகொள்ளவில்லை என ஈரான் விளக்கம் அளித்தது.</p><p>இதனிடையே மொஜ்தபா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகச் சில இஸ்ரேலிய ஊடகங்கள் தொடர்ச்சியாகச் செய்திகளை வெளியிட்டு வந்தன.</p><p>குறிப்பாக, தி ஜெருசலேம் போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "மொஜ்தபா காமெனியின் மரணம் குறித்து விரைவில் செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று குறிப்பிட்டிருந்தது.</p> <h2>வீடியோ</h2><p>இந்நிலையில் இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மொஜ்தபா காமேனியின் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p>ஈரான் அரசு செய்தி நிறுவனமான மெஹர் நியூஸ், இந்த வீடியோவை வெளியிட்டு அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p>வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், மொஜ்தபா காமெனி ஒரு குழுவினருக்கு முன்னால் அமர்ந்து அவர்களுடன் உரையாடி கொண்டிருக்கிறார். அங்கிருப்பவர்கள் அனைவரும் அவர் பேசுவதை மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.</p><p>இருப்பினும் இந்த வீடியோவில் அது எடுக்கப்பட்ட தேதி எதுவுமில்லை.</p><p>உச்சத் தலைவரின் இத்தகைய வீடியோ காட்சிகள் வெளியாவது இதுவே முதன்முறை என மெஹர் நியூஸ் தெரிவித்துள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Iran’s Mehr RELEASES VIDEO of Supreme Leader Mojtaba Khamenei for ‘FIRST TIME’ <a href="https://t.co/v3Rp81VfLH">pic.twitter.com/v3Rp81VfLH</a></p>&mdash; RT (@RT_com) <a href="https://x.com/RT_com/status/2086198246121042165?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பெண்களை பற்றி யார் தவறாக பேசினாலும் கைது செய்ய வேண்டும்: விஷால்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-who-speaks-wrongly-about-women-should-be-arrested-vishal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-who-speaks-wrongly-about-women-should-be-arrested-vishal#comments</comments><guid isPermaLink="false">869327c3-5d2c-467c-af12-f669a48d3c2d</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:58:23 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:58:23.992Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,Vishal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/q04yf7gr/Untitled-design-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Equal Action for All Who Misbehave with Women: Vishal Backs Udhayanidhi Arrest]]></media:title><media:description type="html"><![CDATA[ Vishal Backs Udhayanidhi Arrest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/q04yf7gr/Untitled-design-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விவசாய போராட்டத்தின்போது இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டின் பேரில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கைது நடவடிக்கையை நடிகர் விஷால் நியாயப்படுத்தியுள்ளார்.</p><p>திரையுலகில் உள்ள பெண்களைப் பற்றி தகாத கருத்துக்களைத் தெரிவிக்கும் அனைவர் மீதும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஷால் வலியுறுத்தியுள்ளார்.</p><h3><strong>நடிகர் விஷால் பேட்டி</strong></h3><p>இதுகுறித்து நடிகர் விஷால் அளித்த பேட்டியில், “அரசியல் சூழல்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, உதயநிதிக்கு என்ன நடந்ததோ அதே போன்ற தண்டனை, நமது அரசியல் களத்தில் பெண்களைப் பற்றி தவறாகப் பேசும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.</p><p>யூடியூபில் இன்னும் பலர் இருக்கிறார்கள்; நமது பெண் சமூகத்தைப் பற்றி வெளிப்படையாக பேசி, தரம் தாழ்ந்த முறையில் தாக்கி பேசும் இன்னும் பலரும் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் அதே போன்ற அணுகுமுறை இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.</p><h3><strong>கைது நடவடிக்கை</strong></h3><p>முன்னதாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்று உரிமைப் போராட்டத்தின் போது சில இரட்டை அர்த்தங்கள் கொண்ட கருத்தை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார்.</p><p>இந்த கைது நடவடிக்கைக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அவை எந்தவொரு தனிநபரையும் குறிவைக்காமல் அரசின் செயல்பாடுகளை நோக்கியே இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">e1b0e042-8fa4-425d-a184-1d1f81d54d6f</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:49:05 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:49:05.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,நீதிபதிகள் பதவியேற்பு,judges assumed,Aravind Dharmadhikari,அரவிந்த் தர்மாதிகாரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/bpqggp7m/high.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ judges assumed ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/bpqggp7m/high.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.  சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்றனர். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.</p><p>சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த பட்டியலில் இருந்து 15 பேரை நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக இந்த பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது.15 நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 9-ஆக குறைந்துள்ளது. </p><h2>புதிய <strong>நீதிபதிகளின் விவரம்</strong></h2><p>நியமிக்கப்பட்டுள்ள 15 பேரில், கே.கோவிந்தராஜன், ரஜனீஷ் பத்தியால், என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ஆர். விவேகானந்தன், எஸ்.ரவிக்குமார், என்.திலீப்குமார், ஏ.மனோகரன் ஆகிய 8 வழக்கறிஞர்களும், பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகர், எஸ். கார்த்திகேயன், பி. முருகேசன், என்.குணசேகரன் ஆகிய 7 மாவட்ட நீதிபதிகளும் அடங்குவர்.</p><h2>வரலா<strong>ற்று நிகழ்வு</strong></h2><p>சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் கடந்த 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு (10 ஆண்டுகளுக்குப் பின்), ஒரே நேரத்தில் 15 நீதிபதிகள் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும். புதிய நீதிபதிகளின் வருகையால் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை வேகம் பெறும் என்றும், நீதித்துறை கட்டமைப்பு மேலும் வலுவடையும் என்றும் வழக்கறிஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.</p><p>புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நீதிபதிகளுக்குத்  மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். "நீதியின் மாண்பையும், அரசமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சம நீதியும் சமூக நீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் அவர்களின் பணி சிறக்கட்டும்" என அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அரசு பேருந்து வசதி..! திருவிழா போல் கொண்டாடிய கிராம மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/rajasthan-village-celebrates-first-government-bus-like-festival</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajasthan-village-celebrates-first-government-bus-like-festival#comments</comments><guid isPermaLink="false">6d1881f3-5638-4e5b-9677-edecd1b3b65a</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:38:57 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:38:57.469Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,கிராம மக்கள்,village people,ராஜஸ்தான்,அரசு பேருந்து வசதி,Govt bus facility</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/zaa979ad/bus.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ First Govt Bus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/zaa979ad/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் ஆகிவிட்டது. பஸ்களில் இலவச பயணம், கட்டண சலுகை என்று விதவிதமான அறிவிப்புகளை ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் அறிவித்து வருவது இனிப்பான தகவல்களாக இருக்கிறது.</p><p>அதேநேரம் இன்னும் பஸ் வசதிகளையே பார்த்திராத கிராமங்களும் இருக்கத்தான் செய்கிறது என்பதை கேள்விப்படும்போது அந்த கிராம மக்களின் நிலைமை எப்படி இருக்கும்?</p><p>அப்படித்தான் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள குர்தால் கிராமத்திற்கு சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அரசு பஸ் வசதி கிடைக்கவில்லை.</p><p>இந்தகிராமத்து மக்கள் அருகில் உள்ள நகரங்கள், சந்தைகள், மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு நடந்தே பயணித்துள்ளார்கள்.</p><p>இப்போதுதான் முதல் முறையாக அரசு பஸ் அந்த கிராமத்துக்கு சென்றுள்ளது. தங்கள் கிராமத்திற்கு பஸ் வந்ததை பார்த்ததும் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. அந்த பஸ் குர்தால் கிராமத்திற்குள் நுழைந்தபோது மழை கொட்டிக் கொண்டு இருந்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் சின்னஞ்சிறுசுகள் முதல் பெரியவர்கள் வரை திரண்டு வந்து பஸ்சை வரவேற்று சுற்றி நின்று ஆடிப்பாடி ஆரவாரம் செய்தனர்.</p><p>சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோக்களாக பதிவு செய்துக் கொண்டார்கள். மேளதாளங்கள் முழங்க அந்த கிராமத்தில் திருவிழா நடந்தது போல் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர். பஸ் வசதி கிடைத்ததை தொடர்ந்து இனி அருகில் உள்ள நகரங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தங்கள் பயணம் எளிதாகிவிடும் என்று அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p><p>இதுவரை நடந்தும், ஒரு சில தனியார் வாகனங்கள் மூலமும் அதிக கட்டணங்கள் கொடுத்து தங்கள் தேவைகளுக்காக நகரங்களுக்கு சென்று வந்ததாகவும் தெரிவித்தார்கள்.</p><p>சுதந்திர இந்தியாவில் 79 ஆண்டுகள் வரை ஒரு கிராமம் பஸ் வசதியே இல்லாமல் இருந்திருப்பது அதிர்ச்சியான விஷயம். இதேபோல் நாடு முழுவதும் அடிப்படை தேவைகளான சாலை, போக்குவரத்து, மின்விளக்கு, குடிநீர் வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி படத்தை வைத்து நள்ளிரவில் சடங்கு செய்த நபர்: சத்தீஸ்கரில் விநோதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/man-uses-chhattisgarh-chief-justice-photo-in-ritual-to-get-relative-bail</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-uses-chhattisgarh-chief-justice-photo-in-ritual-to-get-relative-bail#comments</comments><guid isPermaLink="false">0b080231-b413-45b7-ada1-86b6afa9e5b6</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:32:16 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:32:16.145Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சத்தீஸ்கர்,chattisgarh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wmenza9d/Chhattisgarh0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சத்தீஸ்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/wmenza9d/Chhattisgarh0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள தேவ்ரி கிராமத்தில் உள்ள உடல் தகனம் செய்யும் இடத்தில் 4 பேர் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தனர். அந்த இடத்தில் வசிக்கும் கிராம மக்களுக்கு இது சந்தேகத்தை எழுப்பியது. இதனால் என்ன நடக்கிறது என்று பார்க்க, அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களில் 3 பேர் தப்பித்தால் போதும் என ஓடிவிட்டனர். ரிஷிகேஷ் குமார் என்பவர் மட்டும் சிக்கிக் கொண்டார்.</p><h2>விநோத சடங்கு</h2><p>கிராம மக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது விநோதமான பதில் கிடைத்துள்ளது.</p><p>ரிஷிகேஷ் குமாரின் உறவினர் ஒருவர் கத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மற்றவர்களின் ஜாமின் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.</p><p>இந்த நிலையில்தான் தனது நண்பருக்கு ஜாமின் கிடைக்க வேண்டும் என்றால் மயானத்தில் சடங்கு செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளனர்.</p><h2>உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போட்டோ</h2><p>இதனால் கத்திக்குத்தில் பாதிக்கப்பட்டவர், சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 பேர் படத்தை வைத்து, அத்துடன் மீன், எலுமிச்சை பழம், குங்குமம் வைத்து சடங்கு செய்துள்ளனர். போலீசார் சடங்குக்கான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.</p><p>மேலும், இதுபோன்ற சடங்குகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இப்படி சடங்கு நடத்தினால் ஜாமின் கிடைத்துவிடாது. குற்றவாளிகள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>விசா தாமதம்: சிட்னியில் நடைபெற இருந்த மோகன்லால் கலை நிகழ்ச்சி ரத்து -
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/visa-delay-mohanlal-sydney-show-cancelled-apology-to-fans</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/visa-delay-mohanlal-sydney-show-cancelled-apology-to-fans#comments</comments><guid isPermaLink="false">886a40bb-15f9-4fd4-b07a-e63a5fae09af</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:18:27 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:18:27.468Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மோகன்லால்,mohanlal,MohanlalShowCancelled,SydneyStageShow,KayalEvents,SydneyMalayalees</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/3y8jx2s1/Mohanlal" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mohanlal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/3y8jx2s1/Mohanlal?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய மற்றும் மலையாளி ரசிகர்களை மகிழ்விப்பதற்காக, இசை, நடனம் மற்றும் நகைச்சுவை நிறைந்த ஒரு பிரம்மாண்ட கலை விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D">மோகன்லால் </a>தனது 50 ஆண்டுக்கால திரைப்பயணத்தை முன்னிட்டு, அமெரிக்கா, லண்டன் போன்ற உலக நாடுகளைத் தொடர்ந்து இந்த ஆஸ்திரேலியப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். 'காயல் ஈவென்ட்ஸ்' நிறுவனம் மூலம் சிட்னியின் புகழ்பெற்ற 'நார்வெஸ்ட் கன்வென்ஷன் சென்டர்' அரங்கில், நேற்று இந்த நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. </p><p>ஆனால், நடிகர் மோகன்லாலுக்கு உரிய நேரத்தில் விசா கிடைக்காத காரணத்தால், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கலை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>ரசிகர்கள் ஏமாற்றம்:</strong></h2><p>ஆஸ்திரேலியா சிட்னி நகரில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிக்கு பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மோகன்லாலின் வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.</p><p>இந்த நிகழ்ச்சிக்காக பாடகி சித்ரா, மனோஜ் கே.ஜெயன் மற்றும் பிற கலைஞர்கள் ஆஸ்திரேலியாவிற்குப் பாதுகாப்பாகச் சென்றடைந்தனர். ஆனால், மோகன்லாலுக்கு உரிய நேரத்தில் விசா கிடைக்காததால் ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>சிங்கப்பூரிலிருந்து மோகன்லால் வீடியோ:</strong></h2><p>நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது குறித்து சிங்கப்பூரில் இருந்து மோகன்லால் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் கவலையை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. நான் சோகமான சூழ்நிலையில் இருக்கிறேன். </p><p>திரை உலகிற்கு வந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவிலிருந்து அதிக வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகர் நானாகத்தான் இருப்பேன். ஆனால், என் வாழ்க்கையில் முதல்முறையாக எனக்கு விசா கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbwxWPJRu8e/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbwxWPJRu8e/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><h2>முழு பழியையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்<strong>:</strong></h2><p>மேலும் தனது விசா சிக்கல் குறித்துப் பேசிய அவர், "இது தொழில்நுட்பத்தினாலோ, எழுத்து பிழையாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவினாலோ ஏற்பட்ட சிக்கலாக இருக்கலாம். இந்த சூழ்நிலையில் யாரையும் நான் குறை கூற விரும்பவில்லை.</p><p>முழு பழியையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். இது என் தவறு. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்" என்று உருக்கமாகப் பேசியுள்ளார். இந்தச் சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>யூனியன் பிரதேசங்களை பலப்படுத்துவதே
பிரதமர் மோடியின் இலக்கு- அமித்ஷா</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-says-modis-goal-is-stronger-union-territories</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-says-modis-goal-is-stronger-union-territories#comments</comments><guid isPermaLink="false">c342cedc-0041-4216-b35c-43177c524f18</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:17:45 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:17:45.230Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி,அமித்ஷா,Amitshah,pm modi,பிரதமர் மோடி,Pondycherry</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/yezbpa8u/Amitshah1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Union Minister Amitsha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/yezbpa8u/Amitshah1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் உயர் விருதான வண்ண கொடி விருது அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மார்ச் மாதம் இந்த விருது புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து  அந்த விருதை கடந்த மாதம் புதுச்சேரி காவல்துறைக்கு மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா  வழங்குவதற்கான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்  அந்த நிகழ்ச்சி  திடீரென ரத்து செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் அந்த விழா மீண்டும் இன்று நடைபெறுவதாக அறிவிக்கட்டது. இதைதொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்தார்.</p><h2>திருவண்ணாமலை பயணம் </h2><p>டெல்லியில் இருந்து நேற்று மாலை சென்னை வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை சென்றார். அங்கு அருணாசலேஸ்வரர் கோவில், ரமணா ஆசிரமத்திற்கு சென்று வழிபட்டார்.</p><p>அதைதொடர்ந்து  இரவு திருவண்ணாமலையில் இருந்து சாலை மார்க்கமாக புதுச்சேரி வந்தார். இரவு 8.30 மணிக்கு புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வந்தடைந்த அவரை கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மற்றும் அமைச்சர்கள், பா.ஜ.க மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.</p><p>இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷாக்கு கவர்னர் கைலாஷ்நாதன் இரவு விருந்து அளித்தார். பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷா இரவு கவர்னர் மாளிகையிலேயே தங்கி  ஓய்வு எடுத்தார்.</p><h2>வண்ண கொடி விருது வழங்கினார்</h2><p>இன்று காலை 8.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா காரில் புறப்பட்டு   விழா நடைபெறும் கோரி மேடு போலீஸ் மைதானத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு புதுச்சேரி காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.</p><p>புதுச்சேரி காவல்துறையின் பேண்ட்குழு அணிவகுப்பு இசை மற்றும் தேசிய கீதம் உள்ளிட்டவை இசைத்தனர்.  தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்த ஜீப்பில்  சென்று புதுச்சேரி காவல்துறையின் அணி வகுப்பை பார்வையிட்டார்.</p><p>அதைத்தொடர்ந்து  புதுச்சேரி காவல் துறைக்கு ஜனாதிபதியின் வண்ண கொடி விருதை வழங்கினார். அதனை போலீஸ் டி.ஜி.பி. ஷாலினி சிங் பெற்றுக் கொண்டார்.</p><p>இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா விழாவில்  பேசியதாவது:-</p><h2>ஆன்மீக பூமி</h2><p>ஜனாதிபதியின் பெருமை மிக்க வண்ணக்கொடி விருது பெறும் புதுச்சேரி  மக்களுக்கும், போலீஸ் துறையினருக்கும் வாழ்த்துகள். தமிழர்களின் உயிர்ப்புடைய கலாச்சாரம், பாரம்பரிய அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது.</p><p>230 ஆண்டுக்கு மேலான பிரெஞ்சு ஆட்சியை தாண்டியும் புதுச்சேரி தனது சுயத்தை, தனித்தன்மையை இழந்து விடவில்லை, ஆன்மிக வேர்களை விட்டு விடவில்லை. 1963-ல் டி.ஐ.ஜி. பதவி அமைக்கப் பட்டது முதல், புதுச்சேரி போலீஸ் துறை உள்நாட்டு, எல்லை பாதுகாப்பில் புதுச்சேரி போலீஸ்  துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.</p><p>பிரதமர் மோடி, ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த குற்றவியல் சட்டங்களை மாற்றி 3 புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்திய தண்டனை சட்டம், நீதி சட்டமாக  மாற்றப்பட்டது. குறிப்பிட்ட காலத்தில் நியாயம் வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டது.</p><p>இந்த குற்றவியல் சட்டங்கள் தொழில்நுட்பம், குறித்த காலக்கெடு, நம்பிக்கை என்ற 3 தூண்களின் மேல் அமைக்கப்பட்டு உள்ளது. </p><h2>யூனியன் பிரதேசங்கள் </h2><p>யூனியன் பிரதேசங்களை பலப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் 12 ஆண்டு தொலைநோக்கு பார்வை. புதுச்சேரியை பொறுத்த வரை மோடியின் அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.</p><p>ரூ.2 ஆயிரத்து 500 கோடியில் சாலை விரிவாக்க திட்டம், ரூ.2 ஆயிரத்து 200 கோடியில் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், புதுவை விமான நிலையம் 34 மீட்டர் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. </p><p>1950 முதல் 2014 வரை புதுச்சேரிக்கு ரூ.35 ஆயிரம் கோடி மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2014 முதல் 2026 வரை பிரதமர் மோடி அரசு, ரூ.13 ஆயிரத்து 762 கோடி வழங்கியுள்ளது. 12 ஆண்டில் 4 மடங்கு நிதியை பிரதமர் மோடி அரசு புதுச்சேரிக்கு வழங்கியுள்ளது. கடந்த 9 ஆண்டில் ரூ.39 ஆயிரம் கோடிக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>உறுதுணை</h2><p>மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் புதுச்சேரியில் 7.7 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். பிரதமர் மோடி அரசு உங்களின் தோளோடு தோள் நின்று புதுவை மாநில வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். </p><p>இவ்வாறு அவர் பேசினார். </p><p>விழா முடிந்ததும் மத்திய அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள தனியார் ஒட்டலுக்கு சென்றார். அங்கு புதுச்சேரி பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டல் எதிரே ராஜீவ்காந்தி சிலை சந்திப்பில் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி என்ற ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் 2500 வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>&apos;நாட்டாமை குடும்பம்&apos; என பச்சை குத்திக் கொள்ள ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் வேண்டுகோள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sarathkumar-urges-supporters-nattamai-family-tattoos</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sarathkumar-urges-supporters-nattamai-family-tattoos#comments</comments><guid isPermaLink="false">2bb74ea7-352c-4928-8cd0-86f6a1b42072</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:09:34 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:09:34.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Actor Sarathkumar,நடிகர் சரத்குமார்,Nattamai Family,Nattamaitattoo,சரத்குமார் பிறந்தநாள்,நாட்டாமை குடும்பம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/jm81g5wg/nattamai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Sarathkumar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/jm81g5wg/nattamai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், தனது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைகளில் "நாட்டாமை குடும்பம்" என்று பச்சை குத்திக் கொள்ளுமாறு கூறியுள்ள கருத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது.</p><p>நடிகர் சரத்குமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கவும் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.</p><h2>திடீ<strong>ர் யோசனை</strong></h2><p>பேச்சுவார்த்தையின் போது பேசிய அவர், "எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் இந்த பச்சை குத்தும் எண்ணம். 'நாட்டாமை குடும்பம்' என கையில் பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் என தோன்றியது; இது நமது குடும்ப அடையாளமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.</p><h2>அடையாள <strong>அட்டை</strong> போல பயன்பாடு</h2><p>என்னைச் சந்திக்க வர விரும்புபவர்களுக்கு கிரீன் கார்டு போல, கையில் இந்த பச்சை குத்திய அடையாளத்தைக் காட்டினால் எளிதாக என்னை அணுக முடியும். விருப்பமுள்ள ஆதரவாளர்கள் கையில் பச்சை குத்திக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>நாட்டா<strong>மை பிம்ப</strong>ம்</h2><p> சரத்குமாரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த 'நாட்டாமை' திரைப்படத்தின் பெயரை, தனது ஆதரவாளர்களுக்கான குடும்ப அடையாளப் பெயராக அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p>நடிகர் சரத்குமாரின் இந்த பேச்சு வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. ரசிகர்கள் மற்றும் தொண்டர்களைக் கவர அவர் கையாண்டுள்ள இந்த பச்சை குத்தும் பிரசார உத்தி பெரும் கவனிப்பைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எரிவாயு நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி</title><link>https://www.maalaimalar.com/news/world/houthi-group-attacks-saudi-arabia-israeli-media-report</link><comments>https://www.maalaimalar.com/news/world/houthi-group-attacks-saudi-arabia-israeli-media-report#comments</comments><guid isPermaLink="false">134542f0-2f68-4e37-84db-d8b212a8b3e4</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:02:48 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:02:48.058Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,சவுதி அரேபியா,Saudi Aramco,houthis,ஹூதி அமைப்பு,சவுதி அராம்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xna28g20/Untitled-design-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சவுதி அராம்கோ எரிவாயு நிலையம் மீது ஹூதி ஏவுகணை-ட்ரோன் தாக்குதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ Houthis target gas and refineries in saudi arabia]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xna28g20/Untitled-design-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் ஜுபைல் பகுதியில் உள்ள எரிவாயு நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ஹவுதி அமைப்பினரே காரணம் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இருப்பினும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கும், ஹவுதிக்கும் தொடர்பு இருப்பதாக சவுதி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.</p><p><strong>சவுதி அரேபியா மீது தாக்குதல்</strong></p><p>சவுதி அரேபியாவின் செங்கடல் கடற்கரையில், ஏமனுக்கு அருகில் அமைந்துள்ள ஜஸான் நகரம், ஒரு பெரிய அராம்கோ சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகத்தைக் கொண்டிருப்பதுடன், அந்நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகவும் திகழ்கிறது.</p><p>சவுதி அரேபியாவின் அல் ஜுபைலில் அமைந்துள்ள சவுதி அராம்கோ எரிவாயு நிலையத்தை ஹவுதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.</p><p>இதற்கிடையில், சவுதி அராம்கோ நிறுவனத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சவுதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>மேலும் இதுகுறித்து எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், “சவுதி அராம்கோவுடன் இணைந்த தொழில்துறை பாதுகாப்பு தீயணைப்புக் குழுக்கள், ஜஸானில் உள்ள சவுதி அரம்கோ சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சொந்தமான ஒரு வளாகத்தில், இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைத்தனர். </p><p>சம்பவம் தொடர்பாக உயரிய அதிகாரிகள் தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.</p><p><strong>ஹூதி ராணுவ செய்தி தொடர்பாளர்</strong></p><p>இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ கூறுகையில், “தங்கள் குழு ஜசானில் உள்ள அராம்கோ நிறுவனங்களை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகவும், யான்புவில் உள்ள நிறுவனங்களை பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகவும் குறிவைத்து தாக்கியது” என்று தெரிவித்துள்ளனர்.</p><p>மேற்கு ஆசியா முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் “மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்” கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பிறகு, சவுதி எரிசக்தி உள்கட்டமைப்பு மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்படாது: காங்கிரஸ் எம்.பி. உன்னிதன்</title><link>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-will-not-be-sung-in-full-in-kerala-in-this-lifetime-cong-mp-unnithan</link><comments>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-will-not-be-sung-in-full-in-kerala-in-this-lifetime-cong-mp-unnithan#comments</comments><guid isPermaLink="false">4ccc9c73-0b3a-4d48-b004-0b820bdb1c56</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:44:52 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:44:52.070Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aevxgrxx/CongressMpRajmohanUnnithan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் எம்.பி. உன்னிதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aevxgrxx/CongressMpRajmohanUnnithan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியப் பாடலான வந்தே மாதரம் முழுமையாகப் பாடுவது குறித்து தலைமைச் செயலாளர் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தாரா என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய உன்னிதன், "நரேந்திர மோடி எங்களைச் சுட்டுக் கொல்வதாக மிரட்டினாலும்" முழுமையாகப் பாடப்படாது என்று கூறினார். இதுவரை பாடப்பட்டு வந்த முறையிலேயே அது பாடப்படும். அதற்கு மேல் எதுவும் பாடப்படாது என்று அவர் உறுதியாகக் கூறினார்.</p><h2>லோக் பவன்கள் தரங்கெட்ட அரசியலின் மையங்களாக மாறிவிட்டது</h2><p>மேலும், லோக் பவன்கள் (கவர்னர் மாளிகை) தரங்கெட்ட அரசியலின் மையங்களாக மாறிவிட்டதாகவும், ஆளுநர்கள் இப்போது பண பலத்தைக் கொண்டு ஜனநாயகத்தைச் சீர்குலைக்க செயல்படுகிறது. அப்படியிருக்க, ஆளுநர்களிடமிருந்து நாம் என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் அனைவரும் மத்திய அரசின் அடிவருடிகளாக மாறிவிட்டனர். வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வாழ்நாளில் அது நடக்காது. என்றார்.</p><p>2022-ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை போற்றும் வகையில் ஆசாதி கா அமரித் மஹோத்சவ் என்ற பிரசாரம் தொடங்கப்பட்டது. இந்த பிரசாத்தின்நோக்கம், ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பதுதான். தேசியக்கொடி ஏற்றி அதன் வீடியோவை பதவிடலாம் என மத்திய அரசு தெரிவித்தது.</p><h2>வந்தே மாதரம் பாடல் உருவாகி 150 வருடம்</h2><p>இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடல் உருவாகி 150 வருடம் ஆகிறது. இதை சிறப்பிக்கும் வகையில் கொடி ஏற்றுவதுடன் வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கேரள மாநில தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>இதன் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கிடையே தேசியப் பாடலை முழுமையாகப் பாடுமாறு உத்தரவிட்டு வெளியிடப்பட்ட இந்தக் கடிதத்தை எதிர்க்கட்சியான சிபிஐ (எம்) விமர்சித்துள்ளதுடன், அதைத் திரும்பப் பெறுமாறும் கோரியுள்ளது. அத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிப்பதன் மூலம் மாநில அரசு ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்து வருவதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கார் வர தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த மத்திய மந்திரி சுரேஷ்கோபி! </title><link>https://www.maalaimalar.com/news/national/suresh-gopi-travels-by-auto-as-official-car-delayed-in-alappuzha-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/suresh-gopi-travels-by-auto-as-official-car-delayed-in-alappuzha-event#comments</comments><guid isPermaLink="false">43580e86-7864-4f2f-9773-2107fe6c83f6</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:38:29 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:38:29.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alappuzha,Sureshgopi,சுரேஷ்கோபி,Vandebharat,CentralMinister,AutoRide,ஆட்டோபயணம்,TrichurMP</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/nx724bos/Suresh-Gopi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suresh Gopi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/nx724bos/Suresh-Gopi?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் திருச்சூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், மத்திய மந்திரியுமான சுரேஷ்கோபி, மிக எளிமையான தனது செயல்பாட்டால் பலரையும் ஈர்த்து வருகிறார். </p><p>அதனை நிரூபிக்கும் வகையில் ஆலப்புழாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><h2><strong>ஆலப்புழா நிகழ்ச்சியில் என்ன நடந்தது?</strong></h2><p>ஆலப்புழாவில் நடைபெற்ற ஒரு தனியார் நிறுவன திறப்பு விழாவில் மத்திய மந்திரி சுரேஷ்கோபி பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர், தனது கார் வராததால் சிறிது நேரம் காத்திருந்தார். இருப்பினும் அவருக்கான அதிகாரபூர்வ வாகனம் வரவில்லை.</p><h2>ஆட்டோவில் பயணம் - பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி:</h2><p>இதனால் சிறிதும் கவலை கொள்ளாத அவர், அந்த வழியாக வந்த ஆட்டோவை அழைத்து அதில் ஏறி பயணம் செய்தார். இதனை கண்ட அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்சி அடைந்தனர். "கார் விரைவில் வந்து விடும்" என அவர்கள் கூறினர். இருப்பினும் மத்திய மந்திரி சுரேஷ்கோபி ஆட்டோவில் தனது பயணத்தை தொடர்ந்தார்.</p><h2><strong>பாதுகாப்பு வாகனங்கள் - டிரைவருக்கு ரூ.1000:</strong></h2><p>இதனை தொடர்ந்து அந்த ஆட்டோவிற்கு பாதுகாப்பு அளித்து பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. இதனை கவனித்த உள்ளூர் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். </p><p>ஆட்டோவில் முன்னாள் எம்.பி. ஆரிப் வீட்டிற்கு சென்ற மத்திய மந்திரி சுரேஷ்கோபி, ஆட்டோவில் இருந்து இறங்கியதும், டிரைவருக்கு ரூ. 1000 கொடுத்துச் சென்றார்.</p><h2><strong>திருவனந்தபுரம் பயணம்:</strong></h2><p>பின்னர் அவர் முன்னாள் எம்.பி.ஆரிப்பை சந்தித்து பேசினார். அப்போது அவரது அதிகாரப்பூர்வ வாகனம் வந்தது. பின்னர் அதில் ஏறி அவர் ஆலப்புழா ரெயில் நிலையம் சென்றார். அங்கிருந்து வந்தேபாரத் ரெயில் மூலம் திருவனந்தபுரம் சென்றார்.</p><h2><strong>இதற்கு முன்பும் இதே போன்ற அனுபவம்:</strong></h2><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோவில் அருகிலும், ஹரிப்பாட்டில் உள்ள மன்னாரசாலை கோவிலில் பங்கு கொண்ட நிகழ்ச்சிகளிலும் மத்திய மந்திரி சுரேஷ்கோபிக்கு இது போன்ற அனுபவம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>போலீசார் விளக்கம்:</strong></h2><p>இதற்கிடையில் மத்திய மந்திரிக்கான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதா? என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை. மராரியில் உள்ள ஓட்டலில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அவர் பயணம் செய்வதற்காக, ஒரு வழிகாட்டி வாகனமும் ஒரு துணையாளரும் வழங்கப்பட்டிருந்தனர். </p><p>ஆனால் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அதிகாரப்பூர்வ கார் ஜவுளிக் கடையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. </p><p>கடையிலிருந்து வெளியே வந்த மத்திய மந்திரி கார் அருகில் இல்லாததால் ஒரு ஆட்டோவில் சென்றார்" என தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சந்தோஷ் நாராயணன் - மன்னர் முத்து கூட்டணியில் உருவான “மன்னாரு” பாடல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mannaru-song-release-by-santhanam-narayanan-and-mannar-muthu</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mannaru-song-release-by-santhanam-narayanan-and-mannar-muthu#comments</comments><guid isPermaLink="false">f10b78e7-cf49-443e-ae25-797135df5c24</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:30:47 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:30:47.042Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சந்தோஷ் நாராயணன்,santhosh narayanan,மன்னாரு பாடல்,மன்னர் முத்து,Mannaru,Mannar Muthu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/w9fnxubt/Rakida.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Santhosh Narayanan- Mannar Muthu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/w9fnxubt/Rakida.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் இசை உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், 'ரகிட' என்டர்டெயின்மென்ட் சார்பாக மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடான ‘மன்னாரு’ பாடலை ரசிகர்களுக்கு வழங்குகின்றனர். இந்த பாடல், நேற்று (ஆகஸ்ட் 8) முதல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியானது.</p><p>தனது தனித்துவமான குரலால் மன்னர் முத்து இந்தப் பாடலை பாடியுள்ளார். கென் ராய்சன் இயக்கியுள்ள இந்தப் பாடல், விறுவிறுப்பான காட்சிகளும், உற்சாகமான இசையும் இணைந்த ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது.</p><p>இப்பாடலை பாடலாசிரியர்கள் கே.காட்டியன், கானா பிரான்சிஸ் ஆகியோர் எழுதியுள்ளனர். </p><p>இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மன்னாரு’ பாடல், புதிய இசைப் பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமையும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/cNpa7v88KFE"></iframe></figure>]]></content:encoded></item><item><title>&quot;யஷ் உண்மையிலேயே ஒரு மான்ஸ்டர்!&quot;-&apos;டாக்ஸிக்&apos; பட விழாவில் நயன்தாரா நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nayanthara-praises-yash-as-real-monster-at-toxic-audio-launch</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nayanthara-praises-yash-as-real-monster-at-toxic-audio-launch#comments</comments><guid isPermaLink="false">8264a0b0-0f7d-47e6-9f83-e440039cf167</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:59:03 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:59:03.806Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yash,Toxic,டாக்ஸிக்,நயன்தாரா,Nayanthara,யஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/7yrthoig/Nayanthara.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nayanthara]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/7yrthoig/Nayanthara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்ஸிக். படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹீமாகுரேசி, தாராசுதாரியா உள்பட பலர் நடித்துள்ளனர். </p><p>வருகிற 26-ந் தேதி சர்வதேச அளவில் படம் திரைக்கு வர இருக்கிறது. கே.வி.என். புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று மாலை நடந்தது.</p><p>விழாவில் நயன்தாரா பேசியதாவது:-</p><p>நிறைய நடிகர்-நடிகைகள் நடிக்கும் படங்களை நான் ஏற்றுக் கொள்வதில்லை. அதுபோன்ற படங்களில் நடிப்பதற்கு நான் சற்று தயங்குவேன். கீது மோகன்தாஸ் இந்த படத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்தபோது நான் நடிக்க மறுத்தேன்.</p><p>ஆனால் கீது என்னிடம் 10 மில்லியன் கேள்விகளை கேட்டார். ஒரு வழியாக நான் அவரிடம் "சரி வந்து கதை சொல்" என்றேன். வந்து கதையை சொன்னதும் அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.</p><p>உடனடியாக அந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன். இது ஒரு சாதாரண படம் அல்ல. படங்களின் விளம்பர விழாக்களுக்கு செல்வதும் உரையாற்றுவதும் எனக்கு கடினமாக இருப்பதால் நான் செல்வதில்லை. ஆனால் யஷிக்காக மட்டுமே இங்கு வந்தேன்.</p><p>பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். அவர்கள் அனைவரில் இருந்தும் வேறுபட்டவர் யஷ். அவரைப் போல கடினமாக உழைக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. யஷ் உண்மையிலேயே ஒரு மான்ஸ்டர்.</p><p> இவ்வாறு அவர் கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Nayanthara?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Nayanthara</a> about not Attending Promotions:<br><br>&quot;It&#39;s not that I don&#39;t want to attend Promotional events.. It&#39;s just that I&#39;m not good very good at it.. So I stay away from it.. But this was special because so many reasons.. But i think it&#39;s just Yash.. He just made a call and It…</p>&mdash; Laxmi Kanth (@iammoviebuff007) <a href="https://x.com/iammoviebuff007/status/2086114571685953808?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பணியிடத்தில் மனரீதியாக துன்புறுத்திய மேனேஜர்  - விஷம் குடித்த பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/woman-drinks-poison-after-workplace-harassment-by-manager-in-mysuru</link><comments>https://www.maalaimalar.com/news/national/woman-drinks-poison-after-workplace-harassment-by-manager-in-mysuru#comments</comments><guid isPermaLink="false">9c5e0152-7834-413f-9d61-cd3dd0931d11</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:41:53 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:41:53.405Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தற்கொலை,suicide,Mysuru,மைசுர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/evbtb7c5/Untitled-design-22.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/evbtb7c5/Untitled-design-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மைசூரில் 45 வயது பெண் ஒருவர், தான் வேலை செய்த இடத்தில் மேற்பார்வையாளர் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.</p><p>கர்நாடகா மாநில மைசூரில் நகேஸ்வரி என்பவர் பல ஆண்டுகளாக ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு மேற்பார்வையாளர் தான் வாராந்திர விடுப்புகள் கேட்டபோது அதை மறுத்துவந்ததாக கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><h3><strong>பணியிடத்தில் மன உளைச்சல்</strong></h3><p>மேலும் ஆரம்பத்தில் இருந்தே தன் மீது தவறுகள் இல்லாதபோதிலும், தவறுகளை ஒப்புக்கொள்ளும்படி வருபுறுத்தியதாகவும், உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு மூன்று நாட்கள் பணிக்கு வராததால், திடீரென தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் நாகேஸ்வரி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.    </p><p>பணியிடத்தில் தனக்கு அளிக்கப்பட்ட மன உளைச்சலால், இந்த விபரீத முடிவை எடுக்க தான் நிர்பந்திக்கப்பட்டதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><h3>கணவர் புகார்</h3><p>முன்னதாக இதுகுறித்து நாகேஸ்வரியின் கணவர் அசோக் கூறுகையில், “நான் மதியம் முழுவதும் அவளிடம் பேச பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அப்போது எந்தவிதமான பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.</p><p>இதனால் நான் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தேன். அப்பொழுது அவள், தரையில் மயங்கிய நிலையில் கிடந்தார். நான் உடனே எனது மனைவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.</p><p>அங்கு என் மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் இறந்துவிட்டதாக கூறினார்கள். இதையடுத்து என் மனைவி வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்” என்று கூறினார்.</p><p>இந்த நிலையில் அசோக் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வலைவிரித்து கோடிகளில் புரண்ட இளம்பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/cheating-case-police-inquiry-woman</link><comments>https://www.maalaimalar.com/news/national/cheating-case-police-inquiry-woman#comments</comments><guid isPermaLink="false">eeda8bf9-f65c-46e2-9632-e11834d60f0b</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:30:57 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:30:57.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்கு,மோசடி,money,Case,உல்லாசம்,cheating,பணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2oogxp7q/moeny.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cheating]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2oogxp7q/moeny.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>ஆன்லைன்</strong></h2><p>ஆன்லைன் மூலமாக இன்று அத்தனையையும் பெற்று விட முடிகிறது. இதனால் இளைஞர்களும், இளம் பெண்களும் வேறு விதமாகவும் சிந்திக்கிறார்கள். சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்கள் பல்வேறு தவறான வழிகளிலும் திசைமாறி சென்றுக் கொண்டு இருக்கிறார்கள். </p><h2><strong>கலாசார சீரழிவு</strong></h2><p>ஒரு ஆண்ணும், பெண்ணும் பேசி பழகி தான் வெளியில் செல்ல வேண்டும் என்கிற நிலை எல்லாம் இப்போது இல்லை. வெளியில் ஒன்றாக சுற்றுவதற்கு இளம்பெண்களை ஆன்லைனிலேயே தேர்வு செய்யும் அளவுக்கு கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>உல்லாசம்</strong></h2><p>பல்வேறு செயலிகள் இதற்காக தொடங்கப்பட்டு ஆண்களுக்கும், பெண்களுக்கும் வலைவிரித்து கொண்டுள்ளன. குறிப்பாக செயலிகள் மூலமாக பெண்களை தேர்வு செய்து அவர்களுடன் வெளியில் தங்கி உல்லாசமாக வாழ்வதையும் இளைஞர்கள் வழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.</p><h2><strong>மாநிலம்</strong></h2><p>தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே ஆபாச செயலிகள் மூலமாக பலரும் பணத்தை இழந்து வருகிறார்கள். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வலைவிரித்து கோடிகளில் புரண்டுள்ளார்.</p><h2><strong>சாட்டிங்</strong></h2><p>உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற அந்த இளம்பெண் பல்வேறு பெயர்களில் சமூக வலைதள கணக்குகளை தொடங்கி அதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு உள்ளார். முகம் தெரியாத ஆண்களிடம் ஆரம்பத்தில் சாட்டிங்கில் பேசத் தொடங்கும் இவர் நாளடைவில் ஆபாசமான பேச்சுக்களையும் அள்ளி வீசியுள்ளார்.</p><h2>புகைப்படம்</h2><p>பல்லவி சிங்கின் இந்த மயக்கும் பேச்சில் வாலிபர்கள் பலர் கிறங்கி போய் கிடந்துள்ளனர். அதனை பயன்படுத்தி அவர்களோடு வெளியில் சென்று தனியறையில் தங்கியுள்ள பல்லவி சிங் அரைகுறை ஆடைகளோடு இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.</p><h2><strong>பணம்</strong></h2><p>இதுபோன்ற ஆபாச வீடியோக்களை பயன்படுத்தி இதற்கு முன்னரும் பெண்கள் பலர் மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவங்கள் அரங்கேறியுள்ள போதிலும் பல்லவி சிங் அதன் மூலமாக பல கோடிகளை ரூபாயை பறித்து இருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.</p><h2><strong>வீடியோக்கள்</strong></h2><p>வசதிப் படைத்தவர்கள் வலையில் விழுந்ததும் பல்லவி சிங் தனது வேலையை காட்டத் தொடங்கிவிடுவார். உன்னுடைய ஆபாச வீடியோக்கள் என்னிடம் நிறைய உள்ளது. அதையெல்லாம் வெளியில் விட்டால் மானம் போய்விடும் என்று தன்னிடம் சிக்கும் வாலிபர்களிடம் பேசி அவர்களிடம் இருந்து அதிகளவில் பணத்தை கறப்பதே வாடிக்கையாக வைத்திருந்த பல்லவி சிங் ரூ.6 கோடி வரையில் சுருட்டி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை வீட்டில் ஒரு அறையில் அடுக்கி அதனை மெத்தையாகவும் மாற்றி இருக்கிறார்.</p><h2><strong>துப்பாக்கி</strong></h2><p>பின்னர் அந்த பண மெத்தையில் படுத்து புரளுவது போன்ற வீடியோக்களையும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த படி பல்லவி சிங் எடுத்த புகைப்படமும் அவரது பண மெத்தை வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது மிரட்டலுக்கு பணியாத ஆண்களை பல்லவி சிங் சிறையிலும் தள்ளி இருக்கிறார்.</p><h2><strong>பாலியல் வன்கொடுமை</strong></h2><p>பணம் தர மறுத்து அடம்பிடிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்து உள்ளார். இதுபோன்று 5 பேர் வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றசாட்டுகள் கூறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சிறை</strong></h2><p>பணம் தர மறுத்த பலரிடம் ஒழுங்காக தான் சொல்வதை கேட்காவிட்டால் சிறைக்கு தான் செல்ல வேண்டும். ஏற்கனவே 5 பேரை சிறையில் அடைத்துள்ளேன் என்று மிரட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் பல்லவி சிங்குடன் தொடர்பில் இருந்த பெரிய மனிதர்கள் பலர் எங்கே தங்கள் மானம் போய்விடுமோ என்கிற பயத்தில் கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள்.</p><h2><strong>மோசடி</strong></h2><p>சுவீட்டி திவாரி என்கிற பெயரிலும் தனியாக சமூக வலைதள கணக்கை தொடங்கி அதன் மூலமாகவும் பல வாலிபர்களை பல்லவி சிங் தனது வலையில் வீழ்த்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரது இந்த மோசடிக்கு மேலும் தோழிகள் இருவரும், ஆண் நண்பர்கள் 2 பேரும் பெரிய அளவில் உதவிகளை செய்து வந்துள்ளனர்.</p><h2><strong>கருத்து</strong></h2><p>இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பல்லவி சிங்கின் இந்த செயல் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமுக வலைதளங்களில் அவரது இந்த செயலை பலரும் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர் இப்படி எல்லாம் ஏமாற்ற முடியுமா? வாழ்ந்தா இப்படி வாழனும் என்பது போன்ற கருத்துக்களையும் கிண்டலுடன் பதிவிட்டு உள்ளனர்.</p><h2><strong>போலீசார்</strong></h2><p>இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உத்தரபிரதேச மாநில போலீசார் சமூக வலைதளங்களை பயன் படுத்துபவர்கள் தேவையில்லாமல், அறிமுகமில்லாம் நபர்களோடு பழகினால் இதுபோன்ற ஆபத்துகளில் சிக்க நேரிடும் என்றும் எனவே முன்பின் அறிமுகம் இல்லாதவர்களோடு ஆன்லைன் மூலமாக எந்த தொடர்பும் வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளனர். ஆபாச டேட்டிங் செயலியில் யாருடனாவது தொடர்பில் இருக்கிறீர்களா?... உஷார்.</p>]]></content:encoded></item><item><title>போதை இல்லா தமிழகம்: சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்கிறார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wide-anti-drug-pledge-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wide-anti-drug-pledge-campaign#comments</comments><guid isPermaLink="false">b82a3e9d-10e3-4b2d-bb7f-0aac0b17701f</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:23:44.180Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>college students,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,போதை இல்லா தமிழகம்,மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்பு,Anti drug campaign</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/7j49oz6s/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/7j49oz6s/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கவும், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.</p><h2>உறுதிமொழி</h2><p>அந்த வகையில் போதைப் பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார்.</p><p>தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.</p><p>இதை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.</p><p>சென்னை மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கல்லூரி மாணவ-மாணவியர் ஏராளமானோர் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.</p><p>இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யுடன் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் சிறப்பாக பணியாற்றிய மதுவிலக்கு போலீசாருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார்.</p><p>சென்னையில் நிகழ்ச்சி நடைபெறுவதை போன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.</p><h2>மாரத்தான் ஓட்டம்</h2><p>கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி நடைபெற்ற சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மெரீனாவில் தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் விஜய் அதில் பொதுமக்களுடன் இணைந்து ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item></channel></rss>