<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 17 Jul 2026 10:38:08 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026#comments</comments><guid isPermaLink="false">1ef20ff1-dcd7-484e-81a8-ef47dfdd988e</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:17:50.172Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt">பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!- நயினார் நாகேந்திரன் சாடல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-ponrajs-petitions-seeking-the-quashing-of-cases">வழக்குகளை ரத்து செய்யக்கோரிய பொன்ராஜின் மனுக்கள் தள்ளுபடி- ஐகோர்ட் உத்தரவு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi" rel="nofollow">நீட் தேர்வு முடிவு: கட்-ஆப் மதிப்பெண் உயர்வதால் கடும் போட்டி நிலவும்..! கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation">மலையடிப்பட்டி அகழாய்வு - தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும்: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-made-two-major-mistakes-in-life">வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் - வைகோ வேதனை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-urgent-hearing-case-against-election-freebies">தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/weather-department-warns-of-5-day-heat-spell-in-tamil-nadu" rel="nofollow">தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்..!- வானிலை ஆய்வு மையம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-rajendra-vishwanath-arlekar-request-to-tn-people">மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-to-watch-argentina-spain-world-cup-final-live" rel="nofollow">உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: அர்ஜென்டினா- ஸ்பெயின் ஆட்டத்தை நேரில் பார்க்கிறார் அதிபர் டிரம்ப்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/international-justice-day-icc-rome-statute-and-global-justice-contradictions">சர்வதேச நீதி தினம்.. கடந்து வந்த பாதையும், கடக்க வேண்டிய தூரமும்..</a><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coonoor-railway-station-revamped-pm-modi-to-inaugurate-it-today">கண்கவர் ஓவியங்களுடன் புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரெயில் நிலையம் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-backs-hafiz-saeed-indias-nia-issues-non-bailable-warrant-over-pahalgam-terror-attack">அவரை ஒன்னும் சொல்லாதீங்க.. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு எதிராக என்ஐஏ பிடிவாரண்ட் - பொங்கிய பாகிஸ்தான்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-sf-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lawyer-paranthaman-slams-vijay-regime-over-palani-land-fraud" rel="nofollow">பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி- திமுக வழக்கறிஞர் பரந்தாமன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/rohit-sharma-no-more-automatic-selection-after-lord-odi">ஒருநாள் போட்டி அணியில் இனி இடம்பெறமாட்டார்- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் ரோகித் சர்மா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train" rel="nofollow">இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent">Day 20: மரணப் படுக்கையில் சோனம் வாங்சுக்.. உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement">50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks" rel="nofollow">எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?- மாணிக்கம் தாகூர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required">கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்: உடனடியாக அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track">மேற்கு வங்கம்: பள்ளிக் குழந்தைகள் சென்ற வாகனம் மீது ரெயில் மோதி விபத்து - 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs" rel="nofollow">ECR உயர்மட்ட சாலைத் திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்பக் குழு அமைப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/rohingya-boat-tragedy-over-500-feared-dead-after-two-refugee-boats-vanish-off-myanmar-coast">மியான்மரில் இருந்து தப்பி ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகுகள் விபத்து.. 500-க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests">உக்ரைன் ராணுவத்தில் டிரோன் போர்முறையை அறிமுகம் செய்த பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக மக்கள் போராட்டம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed">ஈரானில் பாலங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 7 பேர் பலி.. பஹ்ரைன், கத்தார், குவைத் மீது ஈரான் பதில் தாக்குதல்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-election-data-theft-claim-trump-alleges-china-stole-data-of-220-million-voters">மாபெரும் தேர்தல் மோசடி.. 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளை திருடிய சீனா - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21">விலகிய எம்.பி.க்கு மிக்க நன்றி.. போகிறவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள் - கெடு விதித்த மம்தா</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day">தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கங்கள்- முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court">மகப்பேறு விடுப்பு - கோர்ட்டுக்கு சென்று உரிமையை நிலைநாட்டிய பேராசிரியை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today">சென்னை பூங்கா, குன்னூர் உள்பட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்</a></p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow">நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!</a></strong></p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore">பராமரிப்பு பணி: நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றம்!</a></strong></p>]]></content:encoded></item><item><title>நாளை முதல் 24-ந்தேதி வரை சென்னை-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-mumbai-express-trains-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-mumbai-express-trains-cancelled#comments</comments><guid isPermaLink="false">5c889a44-f678-482a-a3dd-19bf43dc564d</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:37:08 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:37:08.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Trains cancelled,ரெயில்கள் ரத்து,Mumbai rain,மும்பையில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/xl3ywcxd/train01.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/xl3ywcxd/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> 9 <a href="https://www.maalaimalar.com/topic/எக்ஸ்பிரஸ்-ரெயில்கள்">எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</a> மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் பெய்து வரும்  கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் காரணமாக சென்னை சென்ட்ரல்-மும்பை இடையே இயக்கப்படும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><h2><strong>ரெயில்கள் ரத்து</strong></h2><p>மும்பை ஜி.எஸ்.டி.-சென்னை சென்ட்ரல்  இடையே இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் மெயில் (எண்-22157) நாளை முதல் 24-ந்தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. </p><p>இதே போல சென்ட்ரலில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் ஜி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் 24-ந்தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>மேலும் 9 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.</p><p>திருச்சி-அகமதாபாத், மதுரை-லோக் மணியா, காரைக்கால்-லோக் மணியா, இக்டா நகர்- சென்னை சென்ட்ரல், அகமதாபாத்-திருச்சி, லோக் மணியா திலக்-மதுரை, ராஜ் கோட்-கோவை உள்ளிட்ட 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லங்கா பிரீமியர் லீக்: வீரருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இந்தியாவைச் சேர்ந்த அணி உரிமையாளர் கைது</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/indian-co-owner-of-lpl-franchise-arrested-in-sri-lanka-in-player-bribery-case</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/indian-co-owner-of-lpl-franchise-arrested-in-sri-lanka-in-player-bribery-case#comments</comments><guid isPermaLink="false">f06c75f1-ff4b-48f2-b9ff-1c11d10a126a</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:19:59 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:19:59.936Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>lanka premier league,லங்கா பிரீமியர் லீக்,Manjot kalra,மன்ஜோத் கல்ரா,Jaffna Kings,ஜாஃப்னா கிங்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/ejiicdg1/ManjotKalra0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மன்ஜோத் கல்ரா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/ejiicdg1/ManjotKalra0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஐ.பி.எல். டி20 நடைபெறுவதுபோல், இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 5 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. 2026 சீசன் வருகிற ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 24 போட்டிகளில் அடங்கும்.</p><h2>மன்ஜோத் கல்ரா</h2><p>இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்று ஜாஃப்னா கிங்ஸ். இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த 27 வயதாக மன்ஜோத் கல்ரா உள்ளார். இவர் 2018-ம் ஆண்டும் இந்தியா U19 அணி சாம்பியன் பட்டம் வென்றபோது, இறுதிப் போட்டியில் சதம் அடித்தவர். இவர் வீரருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இலங்கையின் விளையாட்டுத் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். </p><figure><img alt="ஜாஃப்னா கிங்ஸ்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/y37cn64d/JaffnaKings.jpg" /></figure> <p>10 நாட்களுக்கு முன்னதாக கல்ரா, ஒரு வீரரை அணுகியுள்ளார். இந்த வீரர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் இன்று கல்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ஜாஃப்னா கிங்ஸ்</h2><p>ஜாஃப்னா கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இலங்கை வீரர்கள் பனுகா ராஜபக்சே, அவிஷ்கா பெர்னாண்டோ, துனித் வெலலாகே ஆகியோர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வீரரைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயன்றதையும், பந்தய நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய முயன்றதையும் ஒப்புக்கொண்ட LPL அணி உரிமையாளர் ஒருவருக்கு, இலங்கை நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை விதித்தது. அத்துடன் அவருக்கு 24 மில்லியன் இலங்கை ரூபாய்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.</p><blockquote>அணி உரிமையாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், தொடர் எந்த வித இடையூறு இன்றி நடத்தப்படும் என்று கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.</blockquote><p>நான்கு ஆண்டு கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை என்பது, நீதிபதி நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தாலும் அதை உடனடியாகச் செயல்படுத்தாமல் ஒத்திவைத்து, குற்றவாளியை நன்னடத்தைக் கண்காணிப்பின் (probation) கீழ் சுதந்திரமாக இருக்க அனுமதிப்பதைக் குறிக்கிறது. அக்குற்றவாளி நீதிமன்றம் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றி, அக்காலகட்டத்தில் வேறு எந்தக் குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்தால், அவர் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்காது.</p>]]></content:encoded></item><item><title>பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!- நயினார் நாகேந்திரன் சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt#comments</comments><guid isPermaLink="false">413070be-154d-4ec3-8c64-11c2a39a32c1</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:15:47 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:15:47.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,TN Govt,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,தமிழக அரசு</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/jiijhsdg/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/jiijhsdg/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முடிந்தவரையில் டாஸ்மாக் கடைகளைக் குறைத்து தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்! என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>கடும் அதிர்ச்சி</strong></h2><p>“டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம்” என பக்கத்திற்கு பக்கம் சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும், முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands">மதுபான வகைகளை</a> அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. </p><p>கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்களின் பின்னணியில், பெரும்பாலும் போதைப் பழக்கமே ஒளிந்திருக்கையில், மது உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அதை விட்டு விட்டு, மதுபான வகைகளைக் கூட்டி, மக்களை போதைக்கு அடிமையாக்குவது அல்ல. </p><h2><strong>அரசு உணர வேண்டும்</strong></h2><p>எப்போவாவது வெளியூர்களுக்கு டூர் சென்றால் மட்டும் தான் குறிப்பிட்ட வகை மதுபானம் கிடைக்கும் என்றிருக்கும் நிலையை மாற்றி, கைக்கு எட்டும் தூரத்திலேயே எல்லா வகை மதுபானங்களையும் கொண்டு வருவது, இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்கும் என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். “More Choices, More chances”</p><p>எனவே, ஒருவேளை முதல்வர் விஜய் அவர்களுக்கு, அதிகளவிலான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தால் அதை உடனடியாகக் கைவிட வேண்டும்! முடிந்தவரையில் டாஸ்மாக் கடைகளைக் குறைத்து தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்!</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு! <br><br>“டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம்” என பக்கத்திற்கு பக்கம் சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும், முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் மதுபான வகைகளை… <a href="https://t.co/JYRKje19Oq">pic.twitter.com/JYRKje19Oq</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2078053807179870419?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு முடிவு: கட்-ஆப் மதிப்பெண் உயர்வதால் கடும் போட்டி நிலவும்..! கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi#comments</comments><guid isPermaLink="false">adf4f21b-471e-4ac5-98a1-77da6fb5417a</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:59:58 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:59:58.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட் தேர்வு,neet exam results,நீட் தேர்வு முடிவு,கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி,நீட் கட்-ஆப்,Jayaprakash gandhi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wwswywzh/jayaprakash.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Educationist Jayaprakash Gandhi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wwswywzh/jayaprakash.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மே மாதம்  நடந்தது. தேர்வு நடப்பதற்கு முன்பே  வினாத்தாள் வெளியாகி  நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் முறைகேடு நடந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. </p><p>அதைத்தொடர்ந்து ஜூன் 21-ந்தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 20 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். </p><p>இதில் 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆரியன் குப்தா மற்றும் அரியானாவைச் சேர்ந்த  பான்சூல்  பன்சால் ஆகிய இருவரும் 720 மதிப்பெண்ணுக்கு 715 பெற்று முதலிடத்தை பிடித்தனர். </p><p>கடந்தாண்டை ஒப்பிடும்போது நீட் தேர்வு முடிவில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.</p><p>இதனால் நீட் கட்-ஆப்  மதிப்பெண் உயர வாய்ப்பு உள்ளது  என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார். </p><p>இதுகுறித்து அவர் மேலும்  கூறியதாவது:- </p><p>கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு நீட்  தேர்வில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் காரணமாக கட்-ஆப் மதிப்பெண் 30 முதல் 36 வரை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.</p><p>நீட் தேர்வில் 690-க்கு மேல் கடந்த ஆண்டு ஒருவரும் பெறவில்லை. ஆனால் இந்த வருடம் 85 பேர்   இடம் பெற்றுள்ளனர். அதேபோல 600 மதிப்பெண்ணுக்கு மேல் 1367 பேர் கடந்தாண்டு பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 9,080 பேர் வாங்கியுள்ளனர்.</p><p>550 மதிப்பெண்ணுக்கு மேல் இந்த ஆண்டு 38 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு 12,280- ஆக இருந்தது. 500 மதிப்பெண்ணுக்குமேல் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பெற்றுள்ளனர். இது கடந்த வருடம் 52,217 ஆக இருந்தது.</p><p>இந்த மறு தேர்வு முடிவை வைத்துப் பார்க்கும்போது நீட் கட்-ஆப் மதிப்பெண் உயர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கடுமையான போட்டி ஏற்படக்கூடும்.</p><p>நீட் மறு தேர்வு கடினமாக இருந்தாலும் கூட கடந்த ஆண்டு தேர்வை விட இந்த வருடம் மாணவ, மாணவிகள் அதிக அளவில் மதிப்பெண்களை குவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின்         மருத்துவமனைகளில்  மட்டுமன்றி மாநில அரசு களின் மருத்துவுமனைகளிலும் சேர்ந்து படிப்பதற்கு கடுமையான போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது.</p><p>எய்ம்ஸ், ஜிப்மர், ராணுவ மருத்துவ கல்லூரிகளில்  சேர்வதற்கு 680-க்கும் மேல் மதிப்பெண் பெற வேண்டும். நாட்டின் தலை சிறந்த  மருத்துவமனைகளில் சேர்வதற்கு உயர் மதிப்பெண் அவசியமாகும்.</p><p>தமிழகத்தைப் பொறுத்த வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு கட் ஆப் மதிப்பெண் 30 முதல் 36 வரை  அதிகரிக்ககூடும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>E20 பெட்ரோலால் கார் பழுது? நுகர்வோர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாருதி சுசுகி மேல்முறையீடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/car-damage-due-to-e20-petrol-maruti-suzuki-appeals-against-consumer-court-order</link><comments>https://www.maalaimalar.com/news/national/car-damage-due-to-e20-petrol-maruti-suzuki-appeals-against-consumer-court-order#comments</comments><guid isPermaLink="false">7ff65f24-431a-41a6-966c-bc1abcfc9d8f</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:51:31 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:51:31.419Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Maruti Suzuki,மாருதி சுசுகி,Consumer Court,நுகர்வோர் நீதிமன்றம்,எத்தனால் பெட்ரோல்,E20 fuel</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8h50kh1d/New-Project-2026-07-17T151800.513.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ E20 பெட்ரோலால் கார் பழுது? நுகர்வோர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாருதி சுசுகி மேல்முறையீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8h50kh1d/New-Project-2026-07-17T151800.513.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எத்தனால் பெட்ரோலால் பழுதடைந்த காருக்குப் பதிலாக புதுக்காரை வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்க உத்தரவிட்ட ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மாருதி சுசுகி நிறுவனம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. </p><p>கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.20 லட்சத்திற்கு, ராய்ப்பூரைச் சேர்ந்த  சிறுநீரக மருத்துவர் ஒருவர் மாருதி கிராண்ட் விட்டாரா ஆல்ஃபா இன்டெலிஜென்ட் எலக்ட்ரிக் ஸ்ட்ராங் ஹைப்ரிட் காரை வாங்கியுள்ளார். </p><p>சுமார் 21,913 கி.மீ. ஓடியபிறகு, நவம்பர் மாதமே, இன்ஜின் கோளாறாகி ஓடாமல் பாதியிலேயே நின்றுள்ளது. இதனையடுத்து ஷோரூம் சர்வீஸ்க்கு காரை விட்டுள்ளார். அங்கு கலப்பட பெட்ரோலே காரணம் எனக்கூறி, பெட்ரோல் டேங்கை சுத்தம் செய்து தந்துள்ளனர். இருப்பினும் அடுத்தடுத்து தொடர்ந்து கார் பழுதாகி வந்துள்ளது.</p><p>மாருதி நிறுவனமும் வாரண்டி காலம் முடியும்வரை பழுதுபார்த்துள்ளது. ஆனால் பழுதுபார்க்கும் செலவு ரூ.5 லட்சத்தை எட்டியநிலையில், இதற்கு மேல் சர்வீஸ் செய்யமுடியாது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஆனால் காருக்கு 2029 ஆம் ஆண்டு வரை அல்லது 1 லட்சம் கி.மீ. ஓடும் வரை சர்வீஸ் செய்து தரப்படும் என கார் நிறுவனம் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டதாக மருத்துவர், நிறுவனத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்படி சர்வீஸ் செய்யமுடியாதெனில் காரை மாற்றித் தரவேண்டும் அல்லது முழுப் பணத்தையும் தருமாறும், அதற்கு நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். </p><p>இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக மருத்துவர் ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர, நீதிமன்றம் அவருக்கு புதுக்காரையும், கூடுதலாக நஷ்ட ஈடும் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h2>மாருதிக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்?</h2><p>கார் என்ஜின் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு ஏற்றதல்ல என்பதை நிறுவனம் தெளிவுப்படுத்த தவறியது என்றும், 2023ல் தயாரிக்கப்பட்ட கார், 2024ல் அதே நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. அதாவது, 17 மாதங்கள் பழமையான காரை புதிய வாகனத்தின் விலைக்கே விற்றது, உத்தரவாதம் அளித்தவாறு காரை மாற்றித் தராமல் இருந்தது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு நீதிமன்றம் புதுகாரை வழங்க உத்தரவிட்டது. </p><h2>உத்தரவில் நீதிமன்றம் கூறியது என்ன?</h2><p>கிராண்ட் விட்டாரா காரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதே மாடலில் E20 எரிபொருளை தாங்கும் திறன் கொண்ட புதிய வாகனத்தை 45 நாட்களுக்குள் வழங்குமாறு மாருதி சுசுகிக்கு உத்தரவிட்டது.</p><p>அவ்வாறு செய்யத் தவறினால் கார் வாங்க அவர் செய்த மொத்த செலவான ரூ.20,50,494-ஐ திருப்பி செலுத்த வேண்டும். மேலும் மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ. 1 லட்சமும், வழக்குச் செலவாக ரூ. 10,000-மும் செலுத்த வேண்டும். அதுவும் 45 நாட்களுக்குகள் இந்த தொகை செலுத்தப்படாவிட்டால், ஆண்டுக்கு 7% வட்டி விதிக்கப்படும் என தெரிவித்தது.</p><h2>மேல்முறையீடு செய்யும் மாருதி</h2><p>இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது மாருதி நிறுவனம். அந்த வாகனம் எத்தனால் பெட்ரோலுக்கு உகந்ததுதான் என்றும், பெட்ரோலில்தான் கலப்படம் இருந்தது என்றும், அதற்கான ஆதாரமும் உள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>சட்டப்படி, ஆட்சேபிக்கப்பட்ட இந்த உத்தரவை உரிய உயர் மன்றத்தில் எதிர்த்து மாருதி சுசுகி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை அளிக்கும் மசோதாவை எதிர்ப்பதா? காங்கிரசை சாடிய பாஜக</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-slams-cong-for-opposing-bill-giving-statutory-protection-to-vande-mataram</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-slams-cong-for-opposing-bill-giving-statutory-protection-to-vande-mataram#comments</comments><guid isPermaLink="false">22e4c9e0-751f-468c-8753-9896ad053ed3</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:42:59 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:42:59.227Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mqm7ophc/CongressandBJP0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வந்தே மாதரம் பாடல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mqm7ophc/CongressandBJP0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய பாரளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது. இதில் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கும் வகையில், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>காங்கிரஸ் எதிர்ப்பு</h2><p>இதற்கு காங்கிரஸ் கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாகப் பாடுவதை அவமதிப்பவர்களுக்கோ அல்லது அதற்குத் தடையை ஏற்படுத்துபவர்களுக்கோ தண்டனை வழங்கும் மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது.</p><p>இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டு அதன்பின் நிறைவேற்றப்பட்ட பின், ஜனாதிபதி ஒப்புதலுக்குப்பின் சட்டமானால், வந்தே மாதரம் பாடலை உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைப்படி படிக்கவில்லை என்றால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். குறிப்பாக அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும். இதில் 6 பத்திகள் உள்ளன. அதில் இரண்டு பத்திகளுக்குப் பின் இந்து மத கடவுகளை போற்றி வருவதாக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவிக்கின்றன.</p><p>இந்த நிலையில் வந்தே மாதரம் மசோதாவை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியை பாஜக சாடியுள்ளது. </p><h2>இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-</h2><p>காங்கிரசும் அதன் ஆதரவு வட்டாரமும் வந்தே மாதரம் பாடலை வெறுக்கின்றன. தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு அளிக்கப்படும் அதே மரியாதையை தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலுக்கும் அளிக்கும் வகையில், தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்பு சட்டத்தில் (Prevention of Insults to National Honour Act) அரசு திருத்தம் கொண்டு வருகிறது. ஆனால், இதை வரவேற்பதற்குப் பதிலாகவும், வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்குப் பதிலாகவும், காங்கிரஸ் இதில் அதிருப்தி கொண்டுள்ளது.</p><h2>வந்தே பாரதம் பாடலை இரண்டு பகுதிகளாக பிரித்தார் நேரு</h2><p>நேருஜி வந்தே பாரதம் பாடலை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார். முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே இருந்தபோதே, காங்கிரஸும் அதன் பல தலைவர்களும் வந்தே மாதரம் பாடலை இசைக்க மறுத்துவிட்டனர்.</p><figure><img alt="ஷேசாத் பூனவாலா" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/vp27sqve/ShehzadPoonawalla.jpg" /></figure><p>சித்தராமையாவாக இருக்கட்டும், மத்தியப் பிரதேச காங்கிரஸாக இருக்கட்டும் அல்லது சோனியா காந்தியாக இருக்கட்டும். வந்தே மாதரம் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்புணர்வு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.</p><h2>INC இல்ல ANC</h2><p>இப்போதும் கூட அவர்கள் வந்தே மாதரம் பாடலை வெறுக்கிறார்கள். இது அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. அவர்களால் ஹித்மாவை (Hidma) புகழ்ந்து பேசவும், நக்ஸல்கள் தியாகிகள் என்று கூறவும் முடிகிறது. அஃப்சல் மற்றும் யாகூப் போன்ற பயங்கரவாதிகள் மீது மென்மையான போக்கைக் கொண்டிருக்கவும் அவர்களால் முடிகிறது. </p><blockquote>அக்காலத்தில், முஸ்லிம் லீக்கின் அழுத்தத்திற்குப் பணிந்து வந்தே மாதரம் பாடலை எதிர்த்தனர். இன்றும் கூட, கேரளாவில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்துள்ள காரணத்தாலேயே வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ்காரர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்</blockquote> <p>ஆனால் பாரத மாதா மற்றும் வந்தே மாதரம் என்று வரும்போது மட்டும் அவர்களுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது. இது INC (இந்திய தேசிய காங்கிரஸ்) அல்ல, மாறாக ANC (தேச எதிர்ப்புக் காங்கிரஸ்) என்பதைத்தான் காட்டுகிறது.</p><p>இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.</p><p>தற்போது மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய கீதத்திற்கு முன் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். ஒருவேளை மாநில பாடல்கள் இருந்தால், அது இசைக்கப்பட்ட பின், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் என இருக்க வேண்டும். வந்தே மாதரம் பாடலின் 6 வரிகளையும் முழுமையாக பாடப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.</p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவில் குதிரை பேரம் - அ.தி.மு.க. சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/horse-trading-admk-complaint-at-dgps-office</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/horse-trading-admk-complaint-at-dgps-office#comments</comments><guid isPermaLink="false">f7a1b243-ba3d-4595-ad7f-0cd37320beaf</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:33:56 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:33:56.202Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,tvk,Horse Trading,குதிரை பேரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/timrhpnw/admk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/timrhpnw/admk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அ.தி.மு.க.</a> எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். </p><p>இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்து எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. சார்பில் புகார் மனுக்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>சென்னை ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.</p><p>அந்தக் கட்சியின் கொறடாவும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஐ.எஸ். இன்பதுரை எம்.பி. ஆகியோர் இன்று டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து மனு அளித்தனர்.</p> <p>பின்னர் அக்ரிகிருஷ்ண மூர்த்தி அளித்த பேட்டி வருமாறு:-</p><p>குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டி.ஜி.பி.யிடம் இன்று மனு அளித்து உள்ளோம். குதிரை பேர நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம்.</p><p>தமிழகத்தினுடைய தலைமைச் செயலகத்திலேயே பேரவைத் தலைவரிடம் 11 மணியளவில் ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார்கள். அன்றைய தினமே 11.15 மணியளவில் மேலே சென்று அமைச்சருடைய அறையிலேயே அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. அதன் பிறகு பேரவை தலைவர் அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது. தமிழக சட்டப்பேரவை மரபுகளுக்கும் முரணானதாகும்.</p><p>இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இன்று மனு அளித்திருக்கிறோம். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p><p>இன்பதுரை எம்.பி. கூறும்போது, ‘இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் செல்போன்களை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மலையடிப்பட்டி அகழாய்வு - தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும்: அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation#comments</comments><guid isPermaLink="false">4e557384-0f37-4163-83db-faca1ae68939</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:11:14 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:11:14.560Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Excavation,அகழாய்வு,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/at4oj3nf/rajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்கள் -  அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/at4oj3nf/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி மாவட்டம், கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில் அகழாய்வில்  நூற்றுக்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தென்காசி மாவட்டம், கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில் அமைந்துள்ள தொல்லியல் தளத்தில் அகழாய்வு கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அகழாய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் நுண்கற்கால கற்கருவிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் ஆன தக்களிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் மணிகள், சூதுபவள மணிகள், ஆடி மணிகள், தங்கத்திலான மணி, செவ்வக பகடைக்காய், இரும்பு பொருட்கள் மற்றும் செப்பு நாணயங்கள் ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளன. </p><p>இவை தவிர சங்க கால சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம், முழுமையான பானைகள், மூடியுடன் கூடிய கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், துளையிடப்பட்ட கிண்ணங்கள் போன்றவைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. </p><p>சங்க காலத்தில் இரும்புக் கருவிகள், ஆடி மணிகள், சங்கு வளையல்கள் மற்றும் நெசவு தொழிற்கூடங்கள் சிறப்புற செயல்பட்டதற்கான கட்டமைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன‌. தொடர் தொல்லியல் பணிகளும், அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளும் தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும் என நம்புகிறோம். </p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“நான் CM ஆகும்போது நீ புடவை கட்டி வரணும்”: நவ்யா நாயரை கிண்டலடித்த தியான் ஸ்ரீனிவாசன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/you-must-come-wearing-a-saree-when-i-become-cm-dhyan-sreenivasan-teases-navya-nair</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/you-must-come-wearing-a-saree-when-i-become-cm-dhyan-sreenivasan-teases-navya-nair#comments</comments><guid isPermaLink="false">db10d1a4-ce13-4428-93b7-55e4cfbe28be</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:11:03 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:11:03.459Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,trisha,த்ரிஷா,Actor Dhyan Sreenivasan,நடிகர் தியான் ஸ்ரீனிவாசன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/qukgglaz/New-Project-2026-07-17T142049.464.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “நான் CM ஆகும்போது நீ புடவை கட்டி வரணும்”: நவ்யா நாயரை கிண்டலடித்த தியான் ஸ்ரீனிவாசன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/qukgglaz/New-Project-2026-07-17T142049.464.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன், நடிகை நவ்யா நாயரை நோக்கி நகைச்சுவையாகப் பேசியது தற்போது இணையத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. </p><p>நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் தான் நடித்துள்ள விசிட்டர் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அப்படி சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தியான் ஸ்ரீனிவாசன்,</p><p>“நாங்கள் (நவ்யா நாயர்) நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு படத்திற்காக இணைகிறோம். நவ்யாவுக்கு இப்போது திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். அப்படியிருந்தும், நான் முதலமைச்சராகப் பதவியேற்கும்போது, ​​நவ்யா கண்ணீருடன் புடவை அணிந்து முதல் வரிசையில் அமர்ந்திருப்பார் என்று நம்புகிறேன்” எனப் பேசியிருந்தார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The day I take the oath as CM... I think Navya will be there in the front row wearing a saree...!!<br><br>- Dhyan Sreenivasan  <a href="https://t.co/UT5GvyK8Fq">pic.twitter.com/UT5GvyK8Fq</a></p>&mdash; Trollywood  (@TrollywoodX) <a href="https://x.com/TrollywoodX/status/2077569953096728747?ref_src=twsrc%5Etfw">July 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>இவரது பேச்சைக் கேட்டு அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சிரித்தனர். தொடர்ந்து பேசிய நவ்யா நாயரும்,</p><p>“கவலைப்படாதே, தியான். நீ விரும்பியபடியே முதலமைச்சர் ஆகும்போது, ​​நான் பச்சை நிற பார்டர் கொண்ட வெள்ளைச் சேலையையும் வைர மாலையையும் அணிந்து, கண்ணீருடன் முதல் வரிசையில் அமர்ந்து, வெற்றி முழக்கமிட்டு உன்னை உற்சாகப்படுத்துவேன். முதல் வரிசையில் எனக்கும் ஓர் இருக்கை ஏற்பாடு செய்ய மாட்டாயா?” என நகைச்சுவையாகப் பேசினார்.</p><p>தற்போது இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது.</p><p>தியான் பேச்சு கவனம் ஈர்த்தது ஏன்?</p><p>தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றப்போது, நடிகை த்ரிஷா விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவுடன் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். விஜய் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபோது அவர் உணர்ச்சிவசப்படுவது போன்ற வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகின. </p><p>இதனை வைத்து விஜய்யையும், நடிகை த்ரிஷாவையும் நடிகர் தியான் கிண்டல் செய்ததாக பேசப்பட்டு வருகிறது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Trisha emotions were on high during Vijay oath ceremony. An emotional moment ❤️ <a href="https://t.co/GrJcW88bwg">pic.twitter.com/GrJcW88bwg</a></p>&mdash; Devanshu Mani Tripathi (@devanshu_mani) <a href="https://x.com/devanshu_mani/status/2053491265040536005?ref_src=twsrc%5Etfw">May 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் - வைகோ வேதனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-made-two-major-mistakes-in-life</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-made-two-major-mistakes-in-life#comments</comments><guid isPermaLink="false">8331f636-dc97-4adf-9dce-af7fe3c3110f</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:51:23 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:51:23.782Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,வைகோ,vaiko,MDMK,மதிமுக</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/y6pl4rqh/vaiko.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vaiko]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/y6pl4rqh/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் என்று தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.</p><p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><h2>2 பெரிய தவறுகள்</h2><p>நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 4 இடங்கள்தான் உங்கள் கட்சிக்கு. மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தித் திணித்தார்கள்.</p><h2>திமுக</h2><p>கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, தி.மு.க.வையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியில் இருந்து அவர்களே விலக்கியிருப்பார்கள்.</p><h2>அதிமுக</h2><p>என் வாழ்க்கையில் 2 பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006-ல் அ.தி.மு.க.வுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">ம.தி.மு.க.</a> தலைமை நிர்வாகிகள், முன்னணியினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளரை சந்திக்க வைத்தார்களே, நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், அ.தி.மு.க.வுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் இயக்கம் வலிவும் பொலிவும் பெற்றிருக்கும்.</p> <h2>திமுக</h2><p>2017-ம் ஆண்டில் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக தி.மு.க.வுடன் உடன்பாடு வைத்தது 2-வது பெரும் பிழையாகும். பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது.</p><p>வைரம் பாய்ந்த வஜ்ரம் போன்ற கண்மணிகளே நீங்கள் லட்சோப லட்சம் பேர் இருக்கிறீர்கள். கிரேக்க புராணத்தில் பீனிக்ஸ் பறவை என்று குறிப்பிடப்பட்டது கற்பனைதான். நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு, ஓங்கி உயர்ந்து தலைநிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. </p><h2>ஒளிமயமான எதிர்காலம்</h2><p>இனி நமக்குத் தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிமயமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது.</p><p>உங்களுக்கு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த விளக்கம் அல்ல, நடுநிலையாளர்களும், பொது வாழ்வில் இருப்போரும், பொதுமக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மடலாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நிறைந்த நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்வோம்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்..!- வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/weather-department-warns-of-5-day-heat-spell-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/weather-department-warns-of-5-day-heat-spell-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">402b10a0-8008-42a8-a4ac-71028c029bb0</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:38:11 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:38:11.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN weather,heatwave,Chennai Meteorological Center,தமிழகத்தில் வெப்பம்,வெப்பம் அதிகரிப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9evjipxt/heat-wave.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heat wave in Tamilnadu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9evjipxt/heat-wave.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2- 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும்.</p><p>வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிக அளவில் இருக்கும். சென்னையில் அதிகபட்ச வெயில் 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அதன்படி, வரும் 21ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும்.</p><p>அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அசவுகரியம் ஏற்படலாம்.</p><p>சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், மாலை, இரவு நேரத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கும் கடலோர மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அன்று கைக்குழந்தை.. இன்று எதிரணி வீரர் - மெஸ்ஸி மோதப்போகும் ஸ்பெயின் வீரர் உடன் இளமையில் இருந்த புகைப்படம் வைரல்</title><link>https://www.maalaimalar.com/sports/football/messi-vs-yamal-argentina-spain-world-cup-final-as-star-faces-player-he-once-held-as-a-baby</link><comments>https://www.maalaimalar.com/sports/football/messi-vs-yamal-argentina-spain-world-cup-final-as-star-faces-player-he-once-held-as-a-baby#comments</comments><guid isPermaLink="false">147339c1-6708-4c2c-a6ea-3ca170798e60</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:36:15 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:36:15.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lionel Messi,லியோனல் மெஸ்ஸி,உலகக்கோப்பை கால்பந்து,Lamine Yamal,Football World Cup,லாமின் யமால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/dfkgyjql/MESSI.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ லாமின் யமால், மெஸ்ஸி ]]></media:title><media:description type="html"><![CDATA[ லாமின் யமால், மெஸ்ஸி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/dfkgyjql/MESSI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:30 மணிக்கு பிபா உலகக்கோப்பை <a href="https://www.maalaimalar.com/news/world/trump-to-watch-argentina-spain-world-cup-final-live">இறுதிப்போட்டியில் </a>அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன. </p><p>அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸியின் ஆக்ரோஷமான ஆட்டமே அவ்வணியை இறுதிப்போட்டி வரை இட்டு வந்துள்ளது எனலாம். </p><p>சுவாரஸ்யமாக இறுதிப்போட்டியில் மெஸ்ஸி மோதப்போவது ஒரு காலத்தில் தன் கைகளில் குழந்தையாக ஏந்தியிருந்த ஒரு வீரருடன். ஸ்பெயின் அணியை சேர்ந்த அந்த இளம் வீரர் பெயர் லாமின் யமால் (19 வயது). </p> <h2>பின்னணி</h2><p>அப்போது மெஸ்ஸிக்கு 20 வயது. உலகின் இளம் கால்பந்து நட்சத்திரமாக வளம் வந்த காலம்.</p><p>2007 இல் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யுனிசெப் அமைப்புக்காக தொண்டுப் பணியாக ஒரு காலெண்டர் போட்டோஷூட்டில் மெஸ்ஸி பங்கெடுத்தார்.</p><p>பார்சிலோனாவில் உள்ள கேம்ப் நௌ மைதானத்தில், உடை மாற்றும் அறைக்கு அருகிலுள்ள ஒரு அறையில், ஒரு சிறிய பிளாஸ்டிக் தொட்டியில் ஒரு குழந்தை வைக்கப்பட்டு, அந்தக் குழந்தையுடன் மெஸ்ஸியின் புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த குழந்தை யமால்.</p> <h2>லாமின் யமால்</h2><p>யமாலின் தாய் ஷீலா எபானாவுக்கு அப்போது 16 வயதுதான். கினியாவை சேர்ந்த ஷீலா, ஸ்பெயனின் கட்டலோனியாவில் உணவு பரிமாறுபவராகப் பணிபுரிந்தார்.</p><p>அங்கு அவர், மொராக்கோவை சேர்ந்த முனீர் நஸ்ராவியை  மணந்தார். இருவரும் தங்கள் மகன் யமாலை ஸ்பெயினின் மட்டாரோ நகரில் வளர்த்தனர்.</p><p>யமாலின் பெற்றோர் யுனிசெப் நடத்திய குலுக்கலில் பங்கேற்றனர். பரிசை வென்றதன் மூலம், பார்சிலோனா வீரர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. விதி அவர்களை மெஸ்ஸியை சந்திக்க வைத்தது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/y85fvy8e/tn-56.jpg" /></figure><p>இந்தப் போட்டோஷூட் அசோசியேட்டட் பிரஸ் புகைப்படக் கலைஞர் ஜான் மான்போர்ட் என்பாரால் மேற்கொள்ளப்பட்டது.</p><p>ஏபிசி அறிக்கை ஒன்றில், மெஸ்ஸி மிகவும் கூச்ச சுபாவம் உடையவர் என்றும், ஆரம்பத்தில் அந்தச் குழந்தையை எப்படிப் பிடிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை என்றும் ஜான் மான்போர்ட் விவரிக்கிறார்.</p><p>இந்தப் புகைப்படங்கள் பல ஆண்டுகளாகப் பொதுப் பார்வைக்கு வராமல் இருந்தன. பின்னர், 2024ல், லமின் யமாலின் தந்தை முனீர் நஸ்ராவி, அவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.</p><p>ஸ்பெயின் அணியின் மிகப்பெரிய நம்பிக்கை லமின் யமால் ஆவார். வெறும் 19 வயதிலேயே, கால்பந்து உலகில் அதிகம் பேசப்படும் வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-rajendra-vishwanath-arlekar-request-to-tn-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-rajendra-vishwanath-arlekar-request-to-tn-people#comments</comments><guid isPermaLink="false">c0e966b7-6f9f-4713-9c42-8c5469adfe02</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:34:53 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:34:53.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Governor,Census,மக்கள் தொகை கணக்கெடுப்பு,தமிழக கவர்னர்,Governor Rajendra Vishwanath Arlekar,கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/plchwg5i/governor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/plchwg5i/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.</aside><p>மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், திறமையான ஆளுகை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில் விரிவான, துல்லியமான மற்றும் நம்பகமான மக்கள்தொகை, சமூக, பொருளாதார மற்றும் வீட்டுவசதித் தரவுகளை உருவாக்கும் நோக்கில், நாட்டின் மிக முக்கியமான தேசிய தரவு சேகரிப்புப் பணிகளில் ஒன்றான 2027-ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத்</a> தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.  சுயவிவரக் கணக்கெடுப்புப் பணிகள் 17 ஜூலை 2026 முதல் 31 ஜூலை 2026 வரையிலும், அதனைத் தொடர்ந்து வீட்டுப் பட்டியல் பதிவுகள் 1 ஆகஸ்ட் 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரையிலும் நடைபெறும்.</p><h2><strong>முழு ஒத்துழைப்பு</strong></h2><p>இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வரலாற்றில் முதன்முறையாக, குடிமக்களுக்குப் பாதுகாப்பான இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சுயவிவரக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களின் <a href="https://maalaimalar.com/news/tamilnadu/census-operations-government-orders-a-ban-on-the-transfer-of-officials-until-august-31">கணக்கெடுப்புத்</a> தகவல்களை இணையவழியில் எளிதாகப் பூர்த்தி செய்ய இயலும். இந்நிகழ்வில்,  தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இந்த வசதியை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் சுயவிவரக் கணக்கெடுப்பை நிறைவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், திறமையான நிர்வாகம் மற்றும் வளர்ச்சித் திட்டமிடலுக்கு நம்பகமான தரவுகளை வழங்கும் ஒரு முக்கிய தேசியப் பணியே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்காக, ஒவ்வொரு குடும்பமும் முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை அளித்து, கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2><strong>நம்பிக்கை</strong></h2><p>சுயவிவரக் கணக்கெடுப்பைத் தேர்வு செய்யாத குடும்பங்கள், 1 ஆகஸ்ட் 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரை நடைபெறும் </p><p>வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பின் போது, ​​மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்களால் கணக்கெடுக்கப்படுவார்கள்.</p><p>ஆளுநர் அவர்கள், 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒரு பகிரப்பட்ட தேசியப் பொறுப்பாகக் கருதி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணியில் ஒவ்வொரு குடிமகனும் முழு மனதுடன் பங்கேற்க வேண்டும் என்று மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டு மக்களின் செயல்மிகு ஒத்துழைப்பு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கும், மாநில மற்றும் நாட்டின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான தரவுத்தளத்தை வலுப்படுத்துவதற்கும் கணிசமாகப் பங்களிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-urgent-hearing-case-against-election-freebies</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-urgent-hearing-case-against-election-freebies#comments</comments><guid isPermaLink="false">aea3111f-55be-412e-81f6-728062303055</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:28:10 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:28:10.147Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்,தேர்தல் இலவசங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/06/10/1895651-supreme-court.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/06/10/1895651-supreme-court.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகியும் வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2022-ம் ஆண்டு தொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்த கோரி, மனுதாரர் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு முறையிட்டார். குறிப்பாக, இந்த வழக்கு நீண்ட நாளாக நிலுவையில் இருக்கிறது. </p><p>எனவே வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். மேலும் இலவசங்கள் அறிவிப்பு குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிடுவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். அதற்கு எதிர் மனுதாரர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார்.</p><p>அப்போது பல்வேறு கட்சிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், ‘குழு அமைத்து ஆய்வு செய்யும் விவகாரத்தில் எதிர்ப்பு இல்லை’ என்று கூறினார். ஆனால் தலைமை நீதிபதி, முக்கியமான வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. எனவே இந்த வழக்கை விசாரிப்பது தொடர்பாக பின்னர் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் போர் முடிவின்றி தொடர வேண்டும் என சதி.. இஸ்ரேல் மீது அமெரிக்க துணை அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/world/jd-vance-accuses-israeli-factions-of-undermining-usiran-peace-talks</link><comments>https://www.maalaimalar.com/news/world/jd-vance-accuses-israeli-factions-of-undermining-usiran-peace-talks#comments</comments><guid isPermaLink="false">a968a2a7-093f-41c8-b800-4d134798936c</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:20:00 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:20:00.775Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரேல்,Israel,ஜே.டி. வான்ஸ்,Iran War,ஈரான் போர்,J.D. Vance</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/uw3hrf8o/jd-vance.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமெரிக்க துணை அதிபர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்க துணை அதிபர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/uw3hrf8o/jd-vance.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-expands-attacks-on-iran">ஈரானுடன் அமெரிக்கா</a> மேற்கொண்டு வரும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளையும் அமைதி முயற்சிகளையும் முடக்க இஸ்ரேல் அரசாங்கத்திற்குள் இருக்கும் சில சக்திகள் தீவிரமாக முயன்று வருவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>மத்திய கிழக்கு பகுதியில் போர் எப்போதும் தடையின்றி  தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றே இந்த இஸ்ரேலிய சக்திகள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>பாட்காஸ்ட் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜே.டி. வேன்ஸ்,  ஈரானுடனான சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து அமெரிக்காவை எப்படியாவது விலக்கி வைக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் அரசாங்கத்திற்குள் இருக்கும் சில நபர்கள் தொடர்ந்து பின்னணியில் வேலை செய்து வருகிறார்கள் என்று தனக்கு உறுதியாக  தெரியும் என தெரிவித்தார். </p><h2>வெளிநாட்டு சக்திகள்</h2><p>மேலும், "வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்களது சொந்த லாபத்திற்காகவும் நலன்களுக்காகவும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க முயல்வது உலக அரசியலில் சாதாரணமான ஒன்றுதான்.</p><p>ஆனால், அமெரிக்காவை வழிநடத்தும் தலைவர்கள் இத்தகைய வெளிப்புற அழுத்தங்களுக்கும் சதிகளுக்கும் எளிதாக அடிபணிந்து, நாட்டின் உரிமையை இழக்கும்போதுதான் பிரச்சனை ஆரம்பமாகிறது.</p><p>அமெரிக்கா எப்போதும் தனது சொந்த நலன்களின் அடிப்படையிலேயே தனித்து முடிவெடுக்க வேண்டும்" என்று பேசினார்.</p><h2>தெளிவு</h2><p>ஒட்டுமொத்த இஸ்ரேல் அரசாங்கமே பேச்சுவார்த்தைகளையும் அமைதியையும் எதிர்க்கிறது என்று தான் கூறவில்லை என்றும், அந்த அரசுக்குள் இருக்கும் சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே இத்தகைய முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துகிறார்கள் என்று வான்ஸ் தனது குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தார்.</p><p>மேலும், கடந்த காலங்களில் ஈரானுக்கு எதிராகக் கடுமையான ராணுவக் கட்டுப்பாடுகளையும் பொருளாதாரத் தடைகளையும் டிரம்ப் விதித்ததற்கு இஸ்ரேல் காரணம் அல்ல என்றும், அது முற்றிலும் அமெரிக்காவின் சொந்த முடிவு என்றும் வான்ஸ் அந்த போட்காஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>போர் - தாக்குதல் </h2><p>வான்ஸ் கருத்து ஒருபுறமிருக்க, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>நேற்று ஈரானில் புற்றுநோய் பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெரும் <a href="https://www.maalaimalar.com/news/world/us-airstrike-near-iran-cancer-hospital-211-child-patients-evacuated-after-attack">மருத்துவமனை </a>அருகே அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. </p><p>மருத்துவமனையில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இதனிடையே ஹார்முஸ் வழியே ஈரான் நோக்கி சென்ற கப்பலை அமெரிக்கா தாக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை சிவப்பு கோடாக ஈரான் அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: அர்ஜென்டினா- ஸ்பெயின் ஆட்டத்தை நேரில் பார்க்கிறார் அதிபர் டிரம்ப்!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-to-watch-argentina-spain-world-cup-final-live</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-to-watch-argentina-spain-world-cup-final-live#comments</comments><guid isPermaLink="false">e954210b-c514-48fe-8d7a-66440ba725cb</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:02:34 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:02:34.177Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>argentina,அர்ஜென்டினா,World Cup football,Spain,ஸ்பெயின்,உலகக்கோப்பை கால்பந்து,FIFA World Cup,ஃபிப்பா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8xpuitje/Trump.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ America president Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/8xpuitje/Trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் மோதும் உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பார்க்கிறார். நியூஜெர்சியில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அவர் பங்கேற்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>இது குறித்து பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் நிருபர்களிடம் கூறியதாவது:- </p><p>அமெரிக்க வரலாற்றில் மிகவும் அதிகமாக பார்க்கப்பட்ட, மிகவும் பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான உலகக் கோப்பையாக இது திகழ்கிறது. இறுதிப் போட்டியை அதிபர் டிரம்ப் பார்க்கிறார். அவரது வருகை இந்த போட்டிக்கு மேலும் மகுடம் சூட்டும்.</p><p>நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவரில் உலக கால்பந்து அமைப்பான பிபா இன்று நடத்தும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் டிரம்ப் கலந்துகொள்வார் </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இறுதிப் போட்டியில் டிரம்ப் கலந்துகொண்டு வெற்றி பெறும் அணிக்கு உலக கோப்பையை வழங்குவார் என சர்வதேச கால்பந்து அமைப்பின் தலைவர் கியானி இன்பான்டினோ கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.</p><p>ஆனால் அது அப்போது உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது டிரம்ப் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.  </p><p>48 நாடுகள் கலந்து கொண்ட 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் கடந்த மாதம் 11-ந் தேதி முதல் இணைந்து நடத்தின. கால் இறுதியில் இருந்து அமெரிக்காவில் மட்டும் போட்டிகள் நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சர்வதேச நீதி தினம்.. 
 கடந்து வந்த பாதையும், கடக்க வேண்டிய தூரமும்.. </title><link>https://www.maalaimalar.com/news/world/international-justice-day-icc-rome-statute-and-global-justice-contradictions</link><comments>https://www.maalaimalar.com/news/world/international-justice-day-icc-rome-statute-and-global-justice-contradictions#comments</comments><guid isPermaLink="false">6ae482fa-b307-4bfd-96f0-a50c129c4ee1</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:48:42 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:48:42.216Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>war crime,இனப்படுகொலை,Genocide,சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்,International Criminal Court,சர்வதேச நீதி தினம்,போர்க் குற்றம்,International Justice Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/jeq96g8e/icc.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ icc]]></media:title><media:description type="html"><![CDATA[ icc]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/jeq96g8e/icc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகில் இரண்டு சர்வதேச நீதி அமைப்புகள் உள்ளன. ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தின் கீழ் வரும் சர்வதேச நீதிமன்றம். இதன் கீழ் ஐநா உறுப்பு நாடுகள் அனைத்தும் வரும். மற்றொன்று சர்வ்தேச குற்றவியல் நீதிமன்றம். </p><h2>சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்</h2><p>அந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடிப்படையாக அமைந்த ரோம் ஒப்பந்தம் 1998 ஜூலை 17ல் கையெழுத்தானது.  இந்த ஒப்பந்தத்தில் 123 உறுப்பு நாடுகள் உள்ளன. </p><p>இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">இனப் படுகொலை</a>, மனிதக்குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள்,  தேசிய ராணுவத்தைப் பயன்படுத்தி தேவையற்ற தாக்குதலில் ஈடுபடுதல் ஆகிய 4 குற்றங்களை விசாரிக்க இந்த நீதிமன்றம் இயங்கி வருகிறது.    </p><p>2010ஆம் ஆண்டு உறுப்பு நாடுகளின் கூட்டத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடித்தளமிட்ட, ரோம் ஒப்பந்தம் கையெழுத்தான ஜூலை 17 ஆம் தேதியை சர்வதேச நீதி தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. </p><p>சர்வதேச நீதிமன்றத்துக்கான தேவையை உணர்த்தவும், சர்வதேச நீதி என்பது என்ன என்ற புரிதலை உருவாக்கவும் இந்த தினம் உலகின் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஏற்காத நாடுகள் இத்தினத்தை அங்கீகரிக்கவில்லை. </p><h2>இந்தியா இல்லை</h2><p>ரோம் ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட 40 நாடுகள் கையெழுத்திடவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல், சூடான், ரஷியா ஆகிய நாடுகள் முதலில் கையெழுத்திட்டாலும் பிற்காலங்களில் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டன. </p><p>எனவே இந்த நாடுகள் எதுவும் தற்போது இதில் உறுப்பினர்களாக இல்லை.</p><h2>சர்வதேச நீதி</h2><p>இனம், மொழி, மதம், தேசம், வர்க்க வேறுபாடுகள் கடந்து நீதி என்பது அனைவரையும் சமானமாக புள்ளியில் நிறுத்தும் பதம் நீதி. மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி அது.</p><p>ஆனால் அது பெயரளவிலான விளக்கம். நடைமுறையில் நீதியை வழங்குவதில் இத்தனை தெளிவு உலகில் எங்கும் இல்லை.</p><p>நீதி நேர்மை, நியாயம் என ஒலிக்காத அரசியல் மேடைகள் இல்லை. ஆனால் அது பெயரளவிலாகவன்றி, உண்மையில் உள்ளத்தில் இருந்து பேசப்பட்டிருந்தால் இன்று உலகம் அனைவருக்குமான இடமாக இருந்திருக்கும்.</p><p>ஆனால் யார் எங்கு இருக்க வேண்டும் என சொல்லும் மனு நீதியைப் போல, இன்று சட்டத்தின் நீதியும் அதை இயக்கும் மனிதர்களால் பாரபட்சமாக்கப்பட்டுள்ளது.</p><p>சட்டத்தின் நீதியின் வரையறைகள், விளக்கத்தில் பிரச்சனை இல்லை. அது அனைவருக்குமான நீதியை வலியுறுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை செயல்படுத்துவதற்கும் அதற்கும் இருக்கும் தூரம் சாலப் பெரிது.</p><p>நீதி வழங்கும் மன்றங்களும் நீதிமான்களும் நாடுதோறும் வேறுபடலாம். ஆனால் நீதியிலும் வேறுபாடு என்பது ஆபத்தானது.</p><p>ஒரு நாட்டின் நீதி மற்றொன்றை வஞ்சிக்கிறது. இதை களைய உருவானது சர்வதேச நீதி. </p><p>சம உலகு படைக்க சான்றோரால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச நீதிமன்றம்  இன்று தன் செயல்பாட்டில் தொய்வை கண்டு வருகிறது.</p><p>பாலஸ்தீனத்தின் காசாவில் 72,000-க்கும் அதிகமானோரை கொன்று குவித்ததும் தற்போது சத்தமின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்பும், உணவுப்பொருட்கள் செல்வதை தடுத்து மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சமும் இனப்படுகொலைக்கான திட்டமிட்ட நகர்வு என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம்சாட்டுகிறது.  </p><p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த போர் குற்றவாளி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு. </p><p>ஆனால் அவரை பொறுத்தவரை இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் வலிமைமிக்க தேசத் தலைவர். இதுவே  தேசங்களுக்கிடையிலான நீதிக்கும் சர்வதேச  நீதிக்கும் இடையில் இருக்கும் முரண். </p>]]></content:encoded></item><item><title>கண்கவர் ஓவியங்களுடன் புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரெயில் நிலையம் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/coonoor-railway-station-revamped-pm-modi-to-inaugurate-it-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/coonoor-railway-station-revamped-pm-modi-to-inaugurate-it-today#comments</comments><guid isPermaLink="false">d13a151c-63b4-4634-a4bb-9a8305aced12</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:43:03 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:43:03.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,Coonoor railway station,குன்னூர் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wv31m43f/coonoor1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Coonoor railway station]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wv31m43f/coonoor1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான நீலகிரி மலை ரெயில் பாதை கடந்த 1899-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ரெயில் நிலையம் அங்கு வரும் பயணிகளின் ஈர்ப்பு மையமாக உள்ளது.</p><h2>குன்னூர் ரெயில் நிலையம்</h2><p>இந்த நிலையில் குன்னூர் ரெயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் பழமை மாறாமல் புதுப்பிப்பது என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக அரசின் சார்பில் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>தொடர்ந்து குன்னூர் ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் ஆர்ச்,  செல்பி ஸ்பாட், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது.</p> <figure><img alt="Coonoor railway station" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/pxx3me0w/coonoor.jpg" /></figure> <p>மேலும் இந்த ரெயில் நிலைய வளாக சுவர்களில் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சூழலை பிரதிபலிக்கும் வகையில், பறவைகள், வன விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்பட்டு, ஒட்டுமொத்த ரெயில் நிலையமும் தற்போது வனவிலங்குகள் சரணாலயம் போன்று ரம்மியமாக காட்சி அளிக்கிறது.</p> <h2>பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்</h2><p>குன்னூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு நவீன அம்சங்களுடன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ள இந்த ரெயில் நிலையத்தை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> இன்று மாலை காணொளி காட்சி மூலம்  திறந்து வைக்கிறார்.</p><figure><img alt="PM Modi" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/zwaindm1/modi1.jpg" /></figure> <p>இந்த நிகழ்ச்சியில் கோட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அவரை ஒன்னும் சொல்லாதீங்க.. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு எதிராக என்ஐஏ பிடிவாரண்ட் - பொங்கிய பாகிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-backs-hafiz-saeed-indias-nia-issues-non-bailable-warrant-over-pahalgam-terror-attack</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-backs-hafiz-saeed-indias-nia-issues-non-bailable-warrant-over-pahalgam-terror-attack#comments</comments><guid isPermaLink="false">7852fdda-40f1-4395-b610-577816c730bb</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:36:57 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:36:57.882Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,பஹல்காம் தாக்குதல்,Pahalgam attack,Lashkar-e-Taiba,லஷ்கர் இ தொய்பா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/k5zzyfpo/habees-sayeed.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹபீஸ் சயீத்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹபீஸ் சயீத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/k5zzyfpo/habees-sayeed.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீதுக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் அரசு களமிறங்கியுள்ளது. </p><h2>பஹல்காம் தாக்குதல் -  பிடிவாரண்ட் </h2><p>கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹ்லகாமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக ஹபீஸ் சயீதுக்கு எதிராக இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அண்மையில் <a href="https://www.maalaimalar.com/news/national/pahalgam-terror-attack-chargesheet-nia-details-hafiz-saeed-role-and-pakistan-plot">குற்றப்பத்திரிகை</a> தாக்கல் செய்தது. </p><p>இந்த வழக்கின் அடிப்படையில் ஹபீஸ் சயீதை தேடப்படும் குற்றவாளி என அறிவித்த என்ஐஏ நீதிமன்றம், அவனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.</p><p>ஹபீஸ் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிலையில் அவனுக்கு எதிரான நடவடிக்கைக்கு சர்வதேச அரங்கை நாட இந்தியா திட்டமிட்டுள்ளது. </p><h2>பாகிஸ்தான் சப்போர்ட்</h2><p>இந்தியாவின் சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு இந்தியாவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.</p><p>பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்திராபி நடத்திய செய்தியாளர் சந்திப்பில்,</p><p>"இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ள இந்தக் குற்றப்பத்திரிகை முற்றிலும் போலியானது.</p><p>காஷ்மீரின் அரசியல் தலைமைகளைக் குறிவைப்பதற்காக, போலி சட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தும் இந்தியாவின் தொடர்ச்சியான அரசியல் உத்தியின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் புகார்களை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான், தற்போது மீண்டும் ஒரு சர்வதேசபயங்கரவாதியை பாதுகாக்க தூதரக ரீதியாக முன்வந்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</title><link>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-sf-round-in-japan-open-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-sf-round-in-japan-open-badminton#comments</comments><guid isPermaLink="false">fc9b8664-5d4e-4206-9869-3192f2d0e723</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:36:00 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:36:00.707Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>pv sindhu,பிவி சிந்து,Japan Open Badminton,ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/nsq3ojj1/PVS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pv sindhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/nsq3ojj1/PVS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.</p><p>இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து, உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கிரெட்டி ஜோடி, தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><p>இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பி.வி.சிந்து</a>, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொள்ள இருந்தார். </p><p>இதில் ஜப்பான் வீராங்கனை போட்டியில் இருந்து திடீரென விலகினார். இதையடுத்து, பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். </p><p>நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யூ பே உடன் மோதுகிறார்.</p><p>முன்னதாக, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டியும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.</p><p>ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காயத்தால் முதல் சுற்றோடு வெளியேறியது. கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி 2வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர்.</p>]]></content:encoded></item><item><title>ஆடி மாதம் பிறந்தது: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-month-special-worship-at-amman-temples</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-month-special-worship-at-amman-temples#comments</comments><guid isPermaLink="false">e78bc7b1-7cda-4f73-828d-b23072fae795</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:28:16 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:28:16.287Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,ஆடி மாதம்,Aadi Month</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/z6mttqkw/temple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/z6mttqkw/temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஆடி மாதம்</h2><p>அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் இன்று தொடங்கி உள்ளது. மேலும் இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டனர். இதனால் அனைத்து அம்மன் கோவில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.</p><h2>புட்லூர்</h2><p>திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திரளான பெண்கள் அதிகாலை முதலே பொங்கல் வைத்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். </p><p>பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். ஏராளமான கர்ப்பிணி பெண்களுக்கு கோவில் வளாகத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.</p><h2>பெரியபாளையம்</h2><p>பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா தொடங்கி 14 வாரம் விமரிசையாக நடைபெறும். ஆடித்திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோ பூஜை, விநாயகர், மாதங்கி அம்மன், முருகர், பெருமாள், நாகர் உள்ளிட்ட பிரகார மூர்த்திகளுக்கும், மூலவருக்கும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.</p><p>இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பெண் பக்தர்கள் மஞ்சள் ஆடை மற்றும் சிகப்பு ஆடை அணிந்து கொண்டு கையில் வேப்பிலையுடன் நடைபயணமாக கோவிலுக்கு வந்து இருந்தனர். </p> <p>முதல் வார வெள்ளிக்கிழமை என்பதாலும்   கோவிலை பூக்களாலும், வேப்பிலையாலும் அலங்கரித்தனர். வெங்கல் அருகே அணைக்கட்டு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற செண்பகாதேவி கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.</p><h2>திருவேற்காடு</h2><p>திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வாரம் ஆரம்பிக்கும் திருவிழா புரட்டாசி மாதம் வரை 12 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மஞ்சள், சந்தனம், வெள்ளி, தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்படும் 108 சிறப்பு சங்காபிஷேகம் என்று ஆடி மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இன்று அதிகாலை கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் 108 பெண் பக்தர்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 5 வாரம் ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.‌ </p><h2>ஆடி முதல் வெள்ளிக்கிழமை</h2><p>ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் இன்று காலை ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.‌ ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டனர். தண்ணீர், மோர், கூழ், பானகம் போன்றவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர். </p><p>தேவி கருமாரியம்மனை தரிசனம் செய்ய திருவேற்காடு, பூந்தமல்லி, போரூர், மதுரவாயல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி- திமுக வழக்கறிஞர் பரந்தாமன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lawyer-paranthaman-slams-vijay-regime-over-palani-land-fraud</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lawyer-paranthaman-slams-vijay-regime-over-palani-land-fraud#comments</comments><guid isPermaLink="false">c5ad2760-c7dc-4316-9316-171961cb87fe</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:05:06 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:05:06.114Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,pazhani,தவெக விஜய்,Palani,பழனி,பழனி நில மோசடி,பரந்தாமன்,Parandhaman</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/cfjq32cw/parandhaman1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Lawyer Parandhaman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/cfjq32cw/parandhaman1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி நில மோசடி விவகாரத்தில், குற்றவாளிகளை காப்பாற்ற அறநிலையத்துறை அமைச்சர் முயற்சி என்று திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-</p><p>பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடியில் அமைச்சர் ரமேஷ் விளக்கம் ஏற்புடையதல்ல.</p><p>பழனிக்கு அருகே உள்ள சார்பதிவாளரை அழைக்காமல் 67 கி.மீ. தொலைவில் உள்ள சார்பதிவாளரை வரவழைத்து முறைகேடு செய்துள்ளனர்.</p><p>தனிநபர்கள் இருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்திருப்பதன் பின்னணியில் சதி உள்ளது. அமைச்சர் ஒரு தகவலை கூறுகிறார். நீதிமன்றத்தில் வேறு தகவல் கூறப்படுகிறது.</p><p>பழனி நிலம் பத்திரப்பதிவு விவகாரத்தில் அமைச்சர்கள் ரமேஷ், லோகேஷ் ஊடகத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர்.</p><p>தனிநபர்களை காப்பாற்ற, குற்றவாளிகளை மறைக்கும் வகையில் அமைச்சர் பேசுவதன் நோக்கம் என்ன?</p><p>பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>பழனி நிலம் விவகாரத்தில் குற்றவாளியை மறைக்க தவெக அரசு துணை போகிறது.</p><p>பழனியில் மொட்டை போடுவது வழக்கம்; ஆனால் பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரெஸ்டோ பார் திட்டம் தேவையில்லை: கைவிடாவிட்டால் பாமக போராட்டம் நடத்தும்!- அன்புமணி எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-a-resto-bar-plan-is-not-needed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-a-resto-bar-plan-is-not-needed#comments</comments><guid isPermaLink="false">323364f9-0979-4712-8c95-ddc75583610b</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:54:39 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:54:39.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,ரெஸ்டோ பார் திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/e6d3x9s3/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/e6d3x9s3/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சமூகக் கேடுகளையும், புதிய குடிகாரர்களையும் உருவாக்கும் ரெஸ்டொபார்களை அமைப்பதற்கு உரிமம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்</p><h2><strong>பிற்போக்குத்தனமான செயல்</strong></h2><p>ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று தமிழ்நாட்டிலும் உணவங்களுடன் குடிப்பகங்களும் இணைக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை அமைக்க உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெரும் கேட்டை விளைவிக்கும் திட்டம் குறித்த இந்த செய்திகள் உண்மையா? என்பதை அரசு விளக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் தற்போது 3 நிலைகளில் மது குடிப்பகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் HL 1 என்ற உரிமத்துடனும், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரிலான குடிப்பகங்கள் HL2 என்ற உரிமத்துடனும், நட்சத்திர விடுதிகளில் உள்ள குடிப்பகங்கள்HL3 என்ற உரிமத்துடனும் இயங்கி வருகின்றன. இவை அனைத்திலும் கடுமையான விதிமீறல்களும், சட்டவிரோத மது விற்பனையும் நடைபெற்று வருவதால் அவற்றை மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், நலவாழ்வு ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கூடுதலாக ரெஸ்டோ பார்களை அனுமதிக்கவும்,  அவற்றுக்காக HL3A என்ற உரிமத்தை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதும் பிற்போக்குத்தனமான செயல்களாகும்.</p><h2><strong>அரசு செய்யக் கூடாது</strong></h2><p>ரெஸ்டோ பார்களை திறப்பதற்காக அரசுத் தரப்பின் வாதங்களாக கூறப்படுபவை ஏற்றுக்கொள்ளவே முடியாதவை ஆகும். அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் சுகாதாரமானவையாக இல்லை;  மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் மது வழங்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி அனைவருக்கும் மது மற்றும் உணவு வகைகள் வழங்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது; இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகத் தான் ரெஸ்டோ பார்கள் திறக்கப்படவுள்ளதாக அரசு  அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வாதங்கள் அபத்தமானவையாகும்.</p><p>மது மிகவும் கேடானது; மது சாத்தானுக்கு ஒப்பானது. அதன் வணிகம் தடை செய்யப்பட வேண்டுமே தவிர, அதை ஒழுங்குபடுத்தத் தேவையில்லை. அதையும் மீறி படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் அரசின் கொள்கை முடிவு என்றால் சட்டவிரோதமாக செயல்படும் குடிப்பகங்கள் எந்த வகையை சேர்ந்தவையாக இருந்தாலும் கருணை காட்டாமல் அவற்றை மூட ஆணையிடுவது தான் சரியான, மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை ஆகும். அதற்கு மாறாக புதிய வகை குடிப்பகங்களை திறக்க முனைவது மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும். இந்த வரலாற்றுத் தவறை த.வெ.க அரசு செய்யக் கூடாது.</p><p>அரசு மதுக்கடைகளுடன் கூடிய குடிப்பகங்கள், மனமகிழ்மன்ற குடிப்பகங்கள் ஆகியவற்றுக்கு எதிரான மனநிலை எப்போதும் மக்களிடம் உண்டு. அங்கு சென்று வந்தால், தங்களை சமூகத்தில் தவறாக நினைப்பார்கள் என்று அஞ்சுவார்கள். அந்த அச்சமே அவர்களை அவற்றின் பக்கம் செல்லாமல் தடுத்து விடும். ஆனால், ரெஸ்டோபார்கள் உணவகங்களாகவும் கருதப்படும் என்பதால், அவற்றின் மீது அந்த தவறான முத்திரை இருக்காது. அதனால், மாணவர்கள், இளம்பெண்கள் போன்றவர்களும் ரெஸ்டோபார்களுக்கு தயக்கமின்றி செல்லும் நிலை ஏற்பட்டு விடும். இது மிகவும் ஆபத்தானதும், சமூகக் கேடானதும் ஆகும்.</p><p>அதுமட்டுமின்றி, ரெஸ்டோ பார்களை திறப்பதற்காக கூறப்படும்  காரணங்கள் என்னவாக இருந்தாலும், அதன் முதன்மை நோக்கம் அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டுவது தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வருவாய்க்காக மதுவணிகம் செய்வது மக்கள் நல அரசுக்கு அழகல்ல. கடந்த ஆட்சியில் மது வணிகத்தைப் பெருக்குவதற்காக வணிக வளாகங்களில் தானியங்கி மது வழங்கும் எந்திரங்களை  அமைத்தல், 90 மி.லி காகிதக் குடுவையில் (டெட்ரா பேக்) மது வணிகம் செய்தல், விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், திருமணம் போன்ற சமூக ஒன்று கூடல்கள்  ஆகியவற்றில் மது வினியோகம் செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவை அனைத்தையும் சட்டப் போராட்டம் நடத்தியும், அரசியல் அழுத்தங்களின் வாயிலாகவும் பாட்டாளி மக்கள் கட்சி முறியடித்தது. அதன்பின் தங்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்தது. கடந்த ஆட்சியில் மட்டும் 1200&amp;க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டன.</p><p>ஆட்சியாளர்களின் நோக்கம் மதுவை ஒழிப்பதாகத் தான் இருக்க வேண்டும். மதுவிலக்குத் துறையில் செய்யப்படும் சீர்திருத்தங்களும் அவற்றை நோக்கியதாகவே இருக்க வேண்டும். மாறாக, அதிக வசதிகளுடன் ரெஸ்டொ பார்களை திறப்பது, வெளிமாநிலங்களில் இருந்து புதிய மது வகைகளை வாங்கி வினியோகம் செய்வது தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.</p><p>ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தந்தை  பெரியார், பெருந்தலைவர் காமராசர், தென்னாட்டு ஜான்சி ராணி கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோர் மதுவை கடுமையாக எதிர்த்தார்கள். தந்தை பெரியார் கள்ளுக்கடைகள் தேவையில்லை என்பதற்காக தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்; காமராசர் அவரது ஆட்சியில் மதுவிலக்கை தீவிரமாக கடைபிடித்தார். அவர்களின் வழியில் வந்ததாக பெருமிதப்பட்டுக் கொள்ளும் தவெக அரசு ரெஸ்டோபார் எனும் புதிய வகை மதுக்குடிப்பங்களை அறிமுகம் செய்தால் அது அரசுக்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்தி விடும்.</p><p>ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டு, அதன் காரணமாக மதுப்புழக்கம் அதிகரித்தால் சட்டம் &amp; ஒழுங்கு மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்; பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்.  முந்தைய திமுக அரசு மக்களால் தூக்கி எறியப்பட்டதற்கு காரணமே மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும், அதனால் பெருகிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் கட்டுப்படுத்தத் தவறியது தான். திமுக அரசு செய்த அதே தவறை த.வெ.க. அரசும் செய்யக் கூடாது.</p><p>சமூகக் கேடுகளையும், புதிய குடிகாரர்களையும் உருவாக்கும் ரெஸ்டொபார்களை அமைப்பதற்கு உரிமம்  வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மக்களுக்கு கேடான இந்தத் திட்டத்திற்கு எதிராக சட்ட மற்றும் அரசியல் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும்.</p> ]]></content:encoded></item><item><title>தாய்ப்பாலின் மகத்துவம்...ஏன் அவசியம் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/topnews/the-greatness-of-breast-milk</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/the-greatness-of-breast-milk#comments</comments><guid isPermaLink="false">299a5d1d-3f52-4c26-95be-ebc497011ca0</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:45:00 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:45:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,தாய்ப்பால்,Breast Milk,உடல்நலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/gyk0ivcq/jjj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ breast milk]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/gyk0ivcq/jjj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>பெண்கள் மருத்துவம் (Women Medicine)</category><content:encoded><![CDATA[ <p>தாய்ப்பால் என்பது குழந்தைக்கு இயற்கை அளித்த முதல் மற்றும் சிறந்த உணவாகும். குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்குவது மிகவும் முக்கியமானது. முதல் ஆறு மாதங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.</p><h2><strong>தாய்ப்பாலின் நன்மைகள்</strong></h2><h2><strong>1.முழுமையான சத்துகள் நிறைந்தது:</strong></h2><p>குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நீர்ச்சத்து ஆகிய அனைத்தும் சரியான அளவில் தாய்ப்பாலில் உள்ளன.</p><h2><strong>2.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:</strong></h2><p>தாய்ப்பாலில் உள்ள ஆன்டிபாடிகள் குழந்தையை சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்ற தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.</p><h2><strong>3.எளிதில் ஜீரணமாகும்:</strong></h2><p>தாய்ப்பால் குழந்தையின் மென்மையான செரிமான அமைப்பிற்கு ஏற்றதாக இருப்பதால், வயிற்று உபாதைகள் குறைவாக இருக்கும்.</p><h2><strong>4. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது:</strong></h2><p>தாய்ப்பாலில் உள்ள DHA போன்ற சத்துகள் குழந்தையின் மூளை மற்றும் பார்வை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><h2><strong>5. தாய்-சேய் பாசப்பிணைப்பை வலுப்படுத்துகிறது:</strong></h2><p>தாய்ப்பால் கொடுக்கும் போது தாய் மற்றும் குழந்தைக்கு இடையேயான உணர்வுப் பிணைப்பு அதிகரிக்கிறது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/3gad0l0a/fff.jpg" /></figure><h2><strong>தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்:</strong></h2><p>*பிரசவத்திற்குப் பிறகு கருப்பை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகிறது.</p><p>*அதிகப்படியான ரத்தப்போக்கைக் குறைக்கிறது.</p><p>*மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை முட்டைப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.</p><p>*உடல் எடையை இயற்கையாகக் குறைக்க உதவுகிறது.</p><p>*மனஅழுத்தத்தைக் குறைத்து தாயின் மனநலத்தை மேம்படுத்துகிறது.</p><h2><strong>முதல் ஆறு மாதங்கள் ஏன் தாய்ப்பால் மட்டும்?</strong></h2><p>முதல் ஆறு மாதங்கள் குழந்தைக்கு தண்ணீர், தேன், கஞ்சி அல்லது வேறு எந்த உணவையும் கொடுக்காமல் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, கூடுதல் திட உணவுகளுடன் தாய்ப்பாலை இரண்டு வயது அல்லது அதற்கு மேலும் தொடரலாம்.</p><h2><strong>தாய்ப்பால் கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை:</strong></h2><p>*குழந்தை பசிக்கும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.</p><p>*தாய் சத்தான உணவுகளை உட்கொண்டு போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.</p><p>*மார்பக சுத்தத்தைப் பராமரிக்க வேண்டும்.</p><p>*குழந்தை சரியான நிலையில் பால் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>தாய்ப்பால் என்பது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கான அடித்தளமாகும். இது குழந்தைக்கு தேவையான முழுமையான ஊட்டச்சத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குவதோடு, தாயின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. எனவே, ஒவ்வொரு தாயும் முடிந்தவரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பது மிகவும் அவசியம்.</p>]]></content:encoded></item><item><title>ஒருநாள் போட்டி அணியில் இனி இடம்பெறமாட்டார்- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் ரோகித் சர்மா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/rohit-sharma-no-more-automatic-selection-after-lord-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/rohit-sharma-no-more-automatic-selection-after-lord-odi#comments</comments><guid isPermaLink="false">f479b74a-996b-4d41-bf44-3de28c5a4929</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:29:47 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:29:47.438Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rohit sharma,ரோகித் சர்மா,இந்திய அணி,ஒருநாள் போட்டி,ODI</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/xhwpyfg2/rohit.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரோகித் சர்மா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/xhwpyfg2/rohit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் <a href="https://www.maalaimalar.com/topic/ரோகித்-சர்மா">ரோகித் சர்மா</a>. இந்தியாவுக்கு  2 ஐ.சி.சி. கோப்பையை வென்று கொடுத்த அவர் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் ஆட்டங்களில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டியில் மட்டும் ஆடி வருகிறார்.</p><h2><strong>ரோகித் சர்மா</strong> </h2><p>இந்த நிலையில் ஒருநாள் போட்டியிலும்  ரோகித் சர்மாவின் எதிர்காலம் முடிவுக்கு வருகிறது.  இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டியிலும் அவரது ஆட்டம் ஏமாற்றம் அளித்தது. முதல் ஆட்டத்தில் 11 ரன்னும், நேற்று நடந்த 2- வது போட்டியில்  26 ரன்னும் எடுத்தார். </p><aside><cite></cite>2027 உலக கோப்பைக்கான அணியை உருவாக்கும் வகையில் இனிவரும் போட்டிகளில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்காது. இதை அவரிடம் தேர்வு குழு தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.</aside><p>ரோகித் சர்மா இடத்தில் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படுவார். அவர் நீண்ட காலமாக காத்திருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான 3- வது ஒருநாள் போட்டி  ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேச ஆட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அவர் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>39 வயதான ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அவர் 287 ஒருநாள் போட்டியில் விளையாடி 11,757 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.58 ஆகும். 33 சதமும்,  62 அரை சதமும் பதிவு செய்துள்ளார். அதிகபட்சமாக 264 ரன் குவித்துள்ளார்.</p><h2><strong>விராட் கோலி</strong> </h2><p>மற்றொரு சீனியர்  வீரரான விராட் கோலி தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதால் உலக கோப்பை வரை விளையாடுவார் என்று கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train#comments</comments><guid isPermaLink="false">7b67659d-b49c-4591-a252-ecfe44f1785d</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:10:16 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:10:16.434Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hydrogen train,pm modi,பிரதமர் மோடி,ஹைட்ரஜன் ரெயில்,ஹைட்ரஜன்,Hydrogen</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/t6qgu16w/PM-Modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/t6qgu16w/PM-Modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் முதலாவது, உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் எரிபொருள் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அவர் சுமார் ரூ.26 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.</p><h2>ஹைட்ரஜன் ரெயில்</h2><p>இதில் முதல் நிகழ்ச்சியாக இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் பயணிகள் ரெயிலை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்தார்.</p><p>இந்​தி​யா​வில் ஹைட்​ரஜன் எரிபொருளில் இயங்​கும் ரெயில் என்​ஜினை தயாரிப்பதற்காக கடந்த 2021-ம் ஆண்டு முயற்​சிகள் தொடங்​கின. ரூ.136 கோடி மதிப்​பீட்​டில் வடக்கு மண்டல ரெயில்வே இந்த திட்​டத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் தொடங்கியது. இந்த திட்​டத்​துக்​கான டெண்​டர் ஐத​ரா​பாத்​தை சேர்ந்த மேதா நிறுவனத்துக்கு வழங்​கப்​பட்​டது. இந்த ​நிறு​வனம் ​தான் எரிபொருட்​களை சப்ளை செய்​கிறது.</p><h2>தொடங்கி வைத்தார்</h2><p>ஹைட்​ரஜன் ரெயிலை வடிவ​மைக்​கும் பணி​கள் சென்னை பெரம்​பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்​சாலை​யில் நடைபெற்றது. ரெயில் வடிவமைப்பு பணி​கள் முடிவடைந்ததை தொடர்ந்து சோதனை ஓட்​டங்​களும் நடை​பெற்​றன. இதையடுத்​து, ஹைட்ரஜன் பயணிகள் ரெயிலை அறி​முகப்படுத்த கடந்த மே 22-ந்தேதி ரெயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்தது.</p><p>இந்த நிலையில் அரியானா மாநிலம் ஜிந்த் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் இந்தியாவின் முதலாவது ஹைட்​ரஜன் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் தூய எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் லட்சிய பயணம் மற்றும் நிலையான - பசுமையான ரெயில் போக்குவரத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது.</p><h2>ஐ.சி.எப். தொழிற்​சாலை</h2><p>ஜெர்​மனி​யில் முதன்​முதலாக உலகின் முதல் ஹைட்​ரஜன் பயணி​கள் ரெயில் கடந்த 2018-ம் ஆண்​டு இயக்​கப்​பட்​டது. பின்னர் ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்​கள் நாடு​களில் தயாரிக்​கப்பட்ட ஹைட்ரஜன் ரெயிலை இயக்​கின. தமிழகத்துக்கு பெருமை சேர்க்​கும் வித​மாக, இந்த வரலாற்​று சிறப்​புமிக்க முதல் ஹைட்​ரஜன் ரெயில், சென்னை பெரம்​பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்​சாலை​யில் முழு​மை​யாக வடிவமைக்​கப்​பட்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.</p><p>இந்த ரெயில் சுற்​றுச்​சூழலுக்கு கேடு விளைவிக்​காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை கொண்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியும் குறையும்.</p><h2>குறைந்த கட்டணம்</h2><p>பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ரெயில் அரியானா மாநிலத்தில் மின்​மய​மாக்​கப்​ப​டாத 89 கி.மீ. நீள​முள்ள ஜிந்த் - சோனிபட் வழித்​தடத்​தில் உள்ள 12 ரெயில் நிலை​யங்​களை இணைக்கும் வகை​யில் இயக்​கப்​படுகிறது. இந்த ரெயில், உலகின் மிக நீளமான, அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரெயில் திட்டங்களில் ஒன்றாகும்.</p><p>இந்த ரெயில் தின​மும் 2 முறை இரு​மார்க்​கங்​களி​லும் இயக்​கப்படும். ஏழை, நடுத்தர மக்​கள் பயன்​பெறும் வகை​யில் இதன் பயண கட்​ட​ணம் மிக குறை​வாக ரூ.5 முதல் அதி​கபட்​ச​மாக ரூ.25 வரை நிர்​ண​யம் செய்யப்​பட்​டுள்​ளது.</p><h2>நவீன தொழில்நுட்பம்</h2><p>மேல்நிலை கம்பிகளில் இருந்து மின்சாரத்தை பெறும் வழக்கமான மின்சார ரெயில்களை போல் அல்லாமல் ஹைட்ரஜன் ரெயிலானது ஹைட்ரஜன் - ஆக்சிஜன் வேதிவினை மூலம் ரெயிலுக்கு உள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தும். </p><p>1200 கிலோ​வாட் திறன்கொண்ட ஹைட்​ரஜன் எரிபொருள் மின்கல உந்து விசை அமைப்பின் நவீன தொழில்நுட்பத்தில் இந்த ரெயில் இயங்​கு​கிறது. ரெயில் வேகம் எடுக்​கும்​போது உந்​துதலை தர லித்​தி​யம் பெரோ பாஸ்பேட் பேட்டரி​களும், ரெயில் வேகம் குறை​யும் போது பேட்​டரியை தானாகவே ரீசார்ஜ் செய்​யும் மறு உரு​வாக்க தொழில்​நுட்​ப​மும் இணைக்கப்​பட்​டுள்​ளன.</p><h2>10 பெட்டிகள்</h2><p>பிரதமர் மோடிதொடங்கி வைத்துள்ள ஹைட்ரஜன் ரெயில் 2 டிரைவர் பெட்​டிகள், 8 பயணி​யர் பெட்​டிகள் என 10 பெட்​டிகளை கொண்​டது. ஒரே நேரத்​தில் 2,600-க்​கும் மேற்பட்ட பயணி​களை ஏற்​றி செல்​லும் திறன் கொண்​டது.</p><p>சோதனை​யின்போது இந்த ரெயில் அதிகபட்​ச​மாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தை தொட்​டது. ஆனாலும், பாது​காப்​பான, வழக்கமான இயக்​கத்துக்​காக மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் மட்​டுமே இயக்​கப்​பட உள்​ளது. இந்த ரெயில் ஜிந்த் - சோனிபட் நகரங்களுக்கு இடையிலான 89 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்கும்.</p><h2>பாதுகாப்பு அமைப்பு</h2><p>ஹைட்ரஜன் கசிவுகள், வெப்பம், தீப்பிழம்புகள், புகையை முன்கூட்டியே கண்டறியும் பன்முக பாதுகாப்பு அமைப்புகளுடன் பாதுகாப்பான ரெயில் என்ற சிறப்பையும் ஹைட்ரஜன் ரெயில் கொண்டுள்ளது.</p><p>இந்தியாவில் தற்போது 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட அகல ரெயில் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாசில்லா ரெயில் இயக்கத்துக்கான அடுத்த கட்ட பாய்ச்சலை இந்திய ரெயில்வே முன்னெடுத்து உள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Jind, Haryana: Prime Minister Narendra Modi flags off the country&#39;s first hydrogen-powered train from Jind to Sonipat<br><br>(Video source: DD) <a href="https://t.co/kMQv2nBhOZ">pic.twitter.com/kMQv2nBhOZ</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2077995283028595080?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Day 20: மரணப் படுக்கையில் சோனம் வாங்சுக்.. உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent#comments</comments><guid isPermaLink="false">faabdadf-17be-43be-941c-360941049953</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:10:11 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:10:11.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/fkmoxg4y/sonam-wangchuk.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/fkmoxg4y/sonam-wangchuk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த போராட்டத்தில் ஜூன் 28 இல் வந்து இணைந்த லடாக் மாநில உரிமை செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர், விஞ்ஞானி என பன்முகம் கொண்ட சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். </p><h2>மரணப் படுக்கை</h2><p>இந்த உண்ணாவிரதம் இன்று (ஜூலை 17) 20வது நாளை எட்டியுள்ளது. 59 வயதான சோனம் வாங்சுக் இந்த உண்ணாவிரததால் ஏற்கனவே  9 கிலோவுக்கு மேல் குறைந்துள்ளார். அவரின் எடை தற்போது  56.9 கிலோவாக உள்ளது. </p><p>அவரின் உடலின் நீரேற்றம், ரத்த சர்க்கரை அளவு, ஆக்சிஜன் அளவு தொடர்ந்து சீரற்றதாகி வருகிறது. </p><p>"நான் இதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் சோனம் வாங்சுக் தன் மரணப் படுக்கையில் உள்ளார்" என சிஜேபி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே உருக்கமாக தெரிவித்துள்ளார். </p><p>முன்னதாக நேற்று வெளியான வீடியோவில் சோனம் வாங்சுக் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்க்க முடிந்தது. நேற்று மட்டும் கழிவறை செல்லும்போது 2 முறை அவர் கீழே விழப் பார்த்தார் என தீப்கே தெரிவித்துள்ளார். அந்த அளவு அவரின் உடல் பலவீனமடைந்துள்ளது. </p><p>நேற்றைய அந்த வீடியோவில், தன் தளர்ந்த நடையில் வாங்சுக் ஆதரவாளர்களின் உதவியுடன் கழிவறை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்து நடந்து சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2>மெல்லிய புன்னகை</h2><p>இத்தகு சூழலிலும் அவரின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையையும், பெரும்பாலும் மாணவர்களை உள்ளடக்கிய ஆதரவாளர்களை நோக்கி அவர் கையசைத்தார். அந்த மாணவர்களில் பலர் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் அவரது போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி வந்தவர்கள் ஆவர்.</p><p>நேற்றும் தீப்கே, வாங்சுகை உண்ணாவிரதத்தை கைவிட சொல்லி வலியுறுத்தினார். ஆனால் வாங்சுக் ஒருவித தீர்க்கத்துடன் அதை மறுத்திவிட்டார்.</p><p>சிஜேபியின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் "நீ பேசாம இரு. என்னை உண்ணாவிரதத்தை கைவிட சொல்லி கேக்காத. அரசாங்கம் ஏன் நம்ம சொல்றதை கவனிக்க மாட்டேங்குதுன்னு கேளு" என வாங்சுக் தீப்கேயை கண்டிப்பது இடம்பெற்றுள்ளது.</p><h2>மருத்துவர்கள் எச்சரிக்கை</h2><p>வாங்சுக் தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தால் அவரின் உடல் உறுப்புக்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு நேற்று விசாரணைக்கு வந்தது.</p><h2><a href="https://www.maalaimalar.com/amp/story/news/national/neet-ugc-protest-sonam-wangchuk-on-19th-day-of-fast-with-deteriorating-health">தேவைப்பட்டால்</a></h2><p>அப்போது நீதிபதிகள், ஒவ்வொரு குடிமகனின் உயிரும் முக்கியம், வாங்சுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மத்திய அரசும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, <a href="https://www.maalaimalar.com/amp/story/news/national/neet-ugc-protest-sonam-wangchuk-on-19th-day-of-fast-with-deteriorating-health">தேவைப்பட்டால் </a>தாங்கள் தலையிடுவோம் என தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுவரை மத்திய அரசு தரப்பில் இருந்து ஒரு துரும்பும் அசையவில்லை.</p><h2>ஜூலை 20 அழைப்பு</h2><p>இதனிடையே, வரும் 20 ஆம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரின்போது பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல நாடு முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கு வாங்சுக் தன் தளர்ந்த குரலில் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று ஆம் ஆத்மி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-fears-sonam-wangchuk-kejriwals-criticism">அரவிந்த் கெஜ்ரிவால் சோனம் வாங்சுக்கை சென்று சந்தித்ததும் </a>குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: மேலும் 54 நிறுவன மதுபானங்களை அறிமுகப்படுத்த டாஸ்மாக் முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands#comments</comments><guid isPermaLink="false">14763f1b-b7ed-431b-a3f3-509159b8a35d</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:00:31 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:00:31.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுபானம்,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/g1zfc3jn/Liquor.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/g1zfc3jn/Liquor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>டாஸ்மாக் நிர்வாகம் மேலும் 54 நிறுவன மதுபானங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது மதுப்பிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</aside><h2><strong>ஏக்கம்</strong></h2><p>தமிழகத்தில் இயங்கி வரும் <a href="https://www.maalaimalar.com/topic/டாஸ்மாக்">டாஸ்மாக்</a> கடைகளில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விஸ்கி, பிராந்தி, ரம், ஒட்கா, பீர் உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மதுபானங்களே மதுப்பிரியர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளன. மீதம் உள்ள நிறுவன மதுபான வகைகள் போதுமான வரவேற்பை பெறவில்லை.</p><p>பண்டிகை காலங்கள் உள்ளிட்ட தேவை அதிகமாக உள்ள நேரத்தில் மட்டும் அவை விற்பனையாகின்றன. இதுபோல புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விற்பனையாகும் பிரபல நிறுவனங்களின் மதுபான வகைகள் தமிழகத்தில் கிடைப்பதில்லையே என்ற ஏக்கம் மதுப்பிரியர்களிடம் இருந்து வருகிறது.</p><h2><strong>மகிழ்ச்சி</strong></h2><p>இந்த சூழலில், மதுப்பிரியர்களின் தாகத்தை தணிக்க மேலும் 54 நிறுவனங்களின் பிராந்தி, விஸ்கி, பீர் உள்ளிட்ட மதுபான வகைகளை டாஸ்மாக் பல்வேறு கட்டங்களாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மதுபானங்கள் விரைவில் மதுக்கடைகளுக்கு வந்துவிடும். தேர்வு செய்து மதுபானங்களை வாங்க முடியும் என்பதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.</p><p>இதுகுறித்து டாஸ்மாக் மூத்த அதிகாரிகள் கூறுகையில், "வாடிக்கையாளர்களின் விருப்பம் கடந்த சில ஆண்டுகளில் மாற்றம் அடைந்திருக்கிறது. பிரீமியம் மற்றும் வரவேற்பு அதிகம் உள்ள பிராண்டு மதுபானங்களை கேட்கிறார்கள். அவர்களின் தேவையை அறிந்து, நாங்கள் விரிவான ஆலோசனை நடத்தி புது மதுபான வகைகளை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளோம் " என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement#comments</comments><guid isPermaLink="false">b35ae71b-e7cf-4f71-b228-cc506d367c81</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:55:34 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:55:34.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Municipality,tenders,நகராட்சி,டெண்டர்கள் ரத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/nsgs8mqx/tngovernment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Government]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/nsgs8mqx/tngovernment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விதிமீறல்கள் மற்றும் நிர்வாகக் காரணங்களால், ஒட்டுமொத்தமாக 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day">முதலமைச்சர் விஜயின்</a> வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>டெண்டர்களை சமர்பிக்க குறுகிய நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்கள், செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்கள், உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்கள், மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>டெண்டர் கோரி டெண்டர் சமர்ப்பிப்பதற்கு ஒன்று முதல் 4 நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.</p><p>நிர்வாக காரணங்களுக்காக 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் நகராட்சி நிர்வாகத்துறையால் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பணி, வாரச்சந்தை கடைகள், புதிய போர்வெல் அமைக்கும் பணி தொடர்புடைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>ஆடி 1- தேங்காய் சுடும் திருவிழா...</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-1-coconut-roasting-festival</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-1-coconut-roasting-festival#comments</comments><guid isPermaLink="false">bcfa0bea-e758-491a-896b-705442c1f947</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:51:57 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:51:57.051Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,வழிபாடு,worship,devotional,தேங்காய் சுடும் திருவிழா,அரவான் பலி,ஆடி  திருவிழா</media:keywords><media:content height="188" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/pakb6nxn/images.jpg" width="335"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/pakb6nxn/images.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆடி ஒன்று தேங்காய் சுடும் திருவிழா என்பது தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தில், குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஆடி மாதத்தின் முதல் நாளில் மிகவும் பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஒரு தனித்துவமான திருவிழாவாகும். </p><p>இந்த நாளில் மக்கள் தங்கள் குடும்ப நலன், விவசாய செழிப்பு மற்றும் நல்ல தொடக்கத்திற்காக இறைவனை வேண்டி தேங்காயைச் சுட்டு பிரசாதமாகப் படைக்கிறார்கள்.</p><p>அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்றது. இந்த போர் ஆடி 18 (ஆடிப்பெருக்கு) அன்று முடிவுக்கு வந்ததாக ஒரு ஐதீகம் உள்ளது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/dnl8iqe4/aadi_festivalthumb5.webp" /></figure> <h2>அரவான் பலியும் தேங்காய் சுடும் திருவிழாவும்!</h2><p>மகாபாரதக் கதையின்படி, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான குருக்ஷேத்திரப் போர் ஆடி மாதம் 1-ஆம் தேதி தொடங்கியதாக நம்பப்படுகிறது.</p><p>அப்போது, போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், 32 சாமுத்ரிகா லட்சணங்களும் பொருந்திய ஒரு உன்னதமான வீரனை காளி தேவிக்கு 'களப்பலி' கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது அர்ஜுனனுக்கும் நாககன்னி உலுப்பிக்கும் பிறந்த மகனான அரவான், பாண்டவர்களின் வெற்றிக்காகத் தன்னைத்தானே களப்பலியாகத் தர முன்வந்தான். </p><p>மேலும் தான் போரில் நேரடியாகப் பங்கேற்க முடியாவிட்டாலும், முழுப் போரையும் பார்க்க வேண்டும் என்று அரவான் விரும்பினான். அவனது தியாகத்தைப் பாராட்டி, கிருஷ்ணர் அவனது தலை மட்டும் போர்க்களம் முழுவதையும் பார்க்கும் வரம் அளித்தார். அரவானின் தியாகத்தை குறிக்கும் வகையில் ஆடி முதல் நாள் அன்று தேங்காய் சுடும் திருவிழா தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wcjk57v4/sddefault.jpg" /></figure><p><em><strong>தேங்காய்:</strong></em></p><p>சுடுவதற்காகத் தயார் செய்யப்படும் தேங்காய் அரவானின் தலையைக் குறிப்பதாககும். தேங்காயில் உள்ள மூன்று கண்கள் அரவானின் முக அமைப்பாகக் கருதப்படுகிறது.</p> <p><em><strong>அழிஞ்சி மரக்குச்சி</strong>:</em> </p><p>தேங்காயில் செருகப்படும் அழிஞ்சி மரக்குச்சி, போரில் பயன்படுத்தப்பட்ட ஈட்டியின் குறியீடாகும்.</p><p><em><strong>நெருப்பில் சுடுதல்:</strong></em> </p><p>பாண்டவர்கள் போரில் வெற்றி பெற வேண்டி அக்னி வளர்த்து வழிபாடு செய்ததன் அடையாளமாகவே, இன்றும் மக்கள் வீட்டின் வாசலில் நெருப்பு மூட்டி தேங்காயைச் சுடுகிறார்கள். </p><p>தேங்காய் வெந்து ஓடு லேசாக உடையும் போது, அது அரவானின் பலியையும், அதன்பின் கிடைத்த தர்மத்தின் வெற்றியையும் குறிக்கிறது.</p><h2>தேங்காய் சுடும் முறை:</h2><p>நன்கு முற்றிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை முழுமையாக அகற்றிவிட்டு, ஓடு மெலிதாகும் அளவுக்குத் தரையில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.</p><p>தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு, உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்றி, தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு, உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்றுவார்கள். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/znx7uoc0/Aadi13.jpg" /></figure> <p>பின்னர் அந்தத் துளையின் வழியாக பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், அவல், எள், பொட்டுக்கடலை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைத் தேங்காய் தண்ணீருடன் கலந்து உள்ளே நிரப்ப வேண்டும். </p><p>பின் நிரப்பப்பட்ட தேங்காயில் கூராகச் சீவப்பட்ட அழிஞ்சி மரக்குச்சியை சொருகவேண்டும். சித்த மருத்துவத்தில் இந்த குச்சி நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. பின்னர் தேங்காயின் மேல் மஞ்சள் பூச வேண்டும்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/dflbggv6/hqdefault.jpg" /></figure> <p>மாலை நேரத்தில் வீட்டின் வாசலில் சிறு நெருப்பு மூட்டி, குச்சியில் உள்ள தேங்காயை நெருப்பில் காட்டி மெதுவாகச் சுட வேண்டும். அப்போது ஓடு வெடிக்கும். </p><p>இது நம் வாழ்வில் உள்ள தீமைகள் எல்லாம் வெடித்து சிதறி விலகுவதாக நம்பப்படுகிறது. சுட்டத்தேங்காயை விநாயகர் கோவிலுக்கு எடுத்து சென்று உடைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/hllwh3wt/images.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks#comments</comments><guid isPermaLink="false">ad4833b4-83f0-4337-9719-fb0f28b97742</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:47:11 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:47:11.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,pm modi,parliament,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mq52kz1g/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mq52kz1g/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>"நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தக்கூடாது, முழக்கமிடக் கூடாது, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி கூட அணியக்கூடாது. அடுத்ததாக எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா? நாடாளுமன்றத்தை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவிட்டால் எந்தக் கேள்வியும் எழாது என்று மோடி அரசு கணக்கு போடுகிறது; மக்கள் மன்றத்தில் உங்களின் சர்வாதிகாரம் தவிடுபொடியாவது உறுதி" என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவு வெளியிட்டுள்ளார்.</aside><p>மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தக்கூடாது, முழக்கமிடக் கூடாது, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி கூட அணியக்கூடாது! </p><p>அடுத்ததாக எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?</p><p>​போராடத் தடை, பேசத் தடை, பார்க்கத் தடை... நாடாளுமன்றத்தை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவிட்டால் எந்தக் கேள்வியும் எழாது என்று மோடி அரசு கணக்கு போடுகிறது!</p><h2>​பாசிச பாஜக அரசின் கோழைத்தனம்:</h2><p>- நாடாளுமன்றத்தில் அதானி பற்றி கேள்வி கேட்டால் உடனே மைக் கட் செய்யப்படும்!</p><p>- நீட் தேர்வு முறைகேடு, மணிப்பூர் வன்முறை போன்ற மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைப் பேசினாலே அவையில் எதிர்க்கட்சிகளின் மைக் அணைக்கப்படுவது தான் இந்த 'புதிய இந்தியா'வின் லட்சணமா?</p><p>- மக்களின் நியாயமான குரலை எழுப்பினால் எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்!</p><p>​இத்தகைய தடையுத்தரவுகள் மற்றும் தணிக்கைகள் மூலம் மக்களின் குரலை உங்களால் ஒருபோதும் நசுக்கிவிட முடியாது. </p><p>மக்கள் மன்றத்தில் உங்களின் சர்வாதிகாரம் தவிடுபொடியாவது உறுதி!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்: உடனடியாக அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required#comments</comments><guid isPermaLink="false">5648f024-8af0-453d-8706-59c5b84f42d6</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:26:55 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:26:55.398Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,Anbumani ramadoss</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/me8p63bd/anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/me8p63bd/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>கொள்முதல் பணி முடக்கம்</strong></h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் கோடைப்பருவ நெல் அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் குவிந்து கிடப்பது தான் இதற்கு காரணம். இதில் அரசின் அலட்சியம் கவலையளிக்கிறது.</p><p>தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்  உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில்  ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடை பருவ நெல் சாகுபடி தொடங்கப்பட்டது. நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்களை அறுவடை செய்யும் பணி ஜூன் இறுதியில்  தொடங்கியது. பாதிக்கும் மேற்பட்ட பரப்பில் அறுவடை முடிவடைந்து விட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் வரை இந்தப் பணி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய காவிரி பாசன மாவட்டங்கள் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் பணி முடங்கிக் கிடக்கிறது.</p><h2><strong>ஏமாற்றம்</strong></h2><p>இதற்கு காரணம் அரசு நிர்வாகத்தின் சரியான திட்டமிடல் இல்லாமை தான் என்று உழவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும்  நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும்,  கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. போதிய இடவசதி இல்லாததைக் காரணம் காட்டி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உழவர்கள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளன.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பெரும்பாலானவை  திறந்த வெளியில் அமைக்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத வகையில் தென்மேற்கு பருவமழை காவிரி பாசன மாவட்டங்களில் தீவிரமடைந்தால் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் முழுமையும்  வீணாகி விடும். ஆனால், இது குறித்த கவலை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.</p> <h2><strong>கொள்முதல் செய்யமுடியாத நிலை</strong> </h2><p>கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்காதது ஏன்? என்பது குறித்து அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளில் மலை போல குவிந்து கிடப்பதாகவும், அரவை ஆலைகளும் அளவுக்கு அதிகமான நெல் மூட்டைகளை கையாள முடியாத நிலையில் இருப்பதும் தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் உழவர் அமைப்புகள் கூறுகின்றன.</p><p>ஒருவேளை இது தான் உண்மை என்றால், உழவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டதால் கிடங்குகள் நிரம்பி விட்டன என்றால், கோடைப்பருவ கொள்முதல் மூலம் கிடைக்கும் நெல் மூட்டைகளை எவ்வாறு கையாள்வது? அவற்றை எங்கு அடுக்கி வைப்பது என்பதற்கான திட்டங்களை அரசு வகுத்திருக்க வேண்டும். ஆடி மாதம் பிறந்து விட்ட நிலையில், திருமண அரங்குகள் போன்றவற்றையாவது வாடகைக்கு எடுத்து தற்காலிக கிடங்குகளாக மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாததால் தான் உழவர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.</p><h2><strong>உறுதி செய்ய வேண்டும்</strong></h2><p>கடந்த ஆண்டு குறுவைப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சரியான தருணத்தில்  கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடந்ததையும்,   கொள்முதல் நடக்காததால் உழவர்களும் தங்களின் நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு அருகில் திறந்த வெளிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்ததையும், அவை அனைத்தும் வடகிழக்கு பருவ மழையில் நனைந்து வீணானதையும் எவரும் மறந்திருக்க முடியாது. அதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்தே காவிரி பாசன மாவட்ட உழவர்கள் இன்னும் மீளாத நிலையில், மீண்டும் அதே போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது.</p><p>எனவே, கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் தடையின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கம்: பள்ளிக் குழந்தைகள் சென்ற வாகனம் மீது ரெயில் மோதி விபத்து - 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track</link><comments>https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track#comments</comments><guid isPermaLink="false">831a3c6d-3d61-47fb-960b-ad9b9dcfa0d2</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:26:49 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:26:49.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>train accident,ரெயில் விபத்து,மேற்கு வங்கம்,School Children,west bengal,பள்ளிக் குழந்தைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/b35mdk1h/west-bengal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில் விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/b35mdk1h/west-bengal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.</p><p>முர்ஷிதாபாத்தில் உள்ள கோவிந்த்பூர் ரெயில்வே கிராசிங்கில், இன்று காலை 7 மணியளவில் பலர் அமரும் காரில் குழந்தைகள் பள்ளி சென்று கொண்டிருந்தனர். </p><p>திறந்திருந்த ரெயில் தண்டவாளத்தை வாகனம் கடக்க முயன்றபோது புறநகர் ரெயில் மோதியதில் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/train-accident">விபத்து </a>நிகழ்ந்தது. </p><h2>உயிரிழப்பு - காயம்</h2><p>இதில் உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் அடங்குவர்.</p><p>மேலும் வாகனத்தில் இருந்த மற்ற பல குழந்தைகளும் பலத்த காயமடைந்தனர். ஒரு சைக்கிள் ஓட்டுநரும் மோதப்பட்டு காயமடைந்தார்.</p><p>உள்ளூர் மக்கள் உடனடியாக செயல்பட்டு, காயமடைந்த குழந்தைகளையும், நபரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.</p><p>காயமடைந்த குழந்தைகள் பெர்ஹாம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><h2>விசாரணை</h2><p>விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், ரெயில்வே காவல்துறையினரும் உள்ளூர் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>ரெயில்வே கிராசிங்கைக் கடக்கும்போது விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை காவல்துறையினர் கண்டறிய முயன்று வருகின்றனர்.</p> <p>10 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து ரெயில்வே டிவிஷனல் மானேஜர் உத்தரவிட்டுள்ளார். அலட்சியமாக செயல்பட்டதாக கேட்மேன் மற்றும் சூப்பர்வைசர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அவர்கள் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.</p><p>பள்ளிக்குழந்தைகள் விபத்தில் சிக்கியுள்ளது பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ECR உயர்மட்ட சாலைத் திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்பக் குழு அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs#comments</comments><guid isPermaLink="false">febd8fdd-0ca4-404a-92b2-2e482f9bdd2b</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:07:57 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:07:57.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,ECR,ஈசிஆர்,திருவான்மியூர்-உத்தண்டி,உயர்மட்ட சாலை,Thiruvanmiyur- uthandi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/0oxlfwgv/ECR-Road.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ECR Road]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/0oxlfwgv/ECR-Road.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ஈசிஆர்-ல் திட்டமிடப்பட்ட 13.3 கி.மீ நீளமுடைய 4 வழிச்சாலை உயர்மட்ட பாதை திட்டச் செலவை குறைக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>திருவான்மியூர்-உத்தண்டி உயர்மட்ட சாலை திட்டச் செலவில் இருந்து 600 கோடி ரூபாய் குறைக்க தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>ஈசிஆர் உயர்மட்ட சாலைக்கு ரூ.2,100 கோடியாக இருந்த திட்ட மதிப்பை ரூ.1500 கோடியாக குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.</p><p>தூண் அமைப்பு, அடித்தளம், சாலை அகலம், கட்டுமான பொருள் போன்றவை தேவைக்கு மீறி உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>தேவைக்கு அதிகமாக உள்ள விவரக்குறிப்புகளை மாற்றி அமைத்தால் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை செலவு குறைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>புதிய மாற்றங்களை ஏற்க மறுத்தால் திட்டத்திலிருந்து ஒப்பந்ததாரர் விலகும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கங்கள்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day#comments</comments><guid isPermaLink="false">3bc451da-ca1b-4955-8dcf-65319100f906</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:51:13 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:51:13.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-06/gav3hyx1/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-06/gav3hyx1/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள் என்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> தெரிவித்துள்ளார். </p><h2><strong>வீரவணக்கங்கள்</strong></h2><p>தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள்.</p><h2><strong>தன்னலமற்ற தியாகம்</strong></h2><p>ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தொடர் உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனார், ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்து, இந்திய விடுதலைக்காக சர்வதேச ஆதரவைத் திரட்டிய, வீரத்தியாகி செண்பகராமன் ஆகியோரின் அயராத உழைப்பும் தன்னலமற்ற தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கது.</p><p>இத்தகைய தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள்.<br><br>ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2077973465156702497?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அம்மனுக்கு உகந்த ஆடி - குமரி பகவதி அம்மன்</title><link>https://www.maalaimalar.com/spirituality/kanyakumari-bhagavathi-amman-temple-14</link><comments>https://www.maalaimalar.com/spirituality/kanyakumari-bhagavathi-amman-temple-14#comments</comments><guid isPermaLink="false">cb75a30b-c620-4e09-80bc-6f7dde863845</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:48:58 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:48:58.191Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,kanyakumari,worship,ஆடி மாதம்,Aadi Month,Bhagavathi Amman Temple,கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்,பகவதி அம்மன்,கன்னியாகுமரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/o0t4x9fk/bhagavathiamman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் -  பகவதி அம்மன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/o0t4x9fk/bhagavathiamman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஆடி மாதம்</h2><p>ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது. ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்தவகையில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்.</p><p>இந்தியாவின் தென்கோடியில் முக்கடல் சங்கமிக்கும் புனித தலத்தில் அமைந்துள்ள இக்கோவில் புகழ் பெற்ற சக்தி தலம் ஆகும். இத்தலத்தின் பெயராலேயே இப்பகுதிக்கு கன்னியாகுமரி என்ற பெயர் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.</p><h2>பாணாசுரன்</h2><p>பாணாசுரன் மக்களை துன்புறுத்தி வந்தான். கன்னிப்பெண்ணால் மட்டுமே தன்னை அழிக்க முடியும் என்ற வரத்தை பெற்ற அசுரனை அழிக்க ஆதிபராசக்தி கன்னி பகவதி வடிவில் கன்னியாகுமரியில் அவதரித்து தவம் செய்தாள். அப்போது சிவபெருமானை திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. ஆனால் உலக நன்மைக்காக நாரதர் திருமணம் நடைபெறாமல் தடுத்ததாகவும், அதனால் அம்மன் நித்திய கன்னியாகவே இருந்து பாணாசுரனை வதம் செய்து உலகை காத்ததாகவும் தல புராணம்.</p> <h2>அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்</h2><p>இத்தகைய சிறப்புவாய்ந்த கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் சிறப்பாக விழாக்கள் நடத்தப்படுகிறது. ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி செவ்வாய்கிழமைகள், ஆடி களப பூஜை, ஆடி நிறை புத்தரிசி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளின் போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு கூழ் படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும். ஆடி அமாவாசை தினத்தன்று வாகன பவனி நடைபெறும். களப பூஜை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.</p><h2>கோவில் நடை திறக்கப்படும் நேரம்</h2><p>பகவதி அம்மன் கோவிலின் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும். 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சகால பூஜை, பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை, இரவு 8.15 மணிக்கு ஸ்ரீபலி, 8.25 மணிக்கு ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடைபெற்று இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>மாபெரும் தேர்தல் மோசடி.. 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளை திருடிய சீனா - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/world/us-election-data-theft-claim-trump-alleges-china-stole-data-of-220-million-voters</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-election-data-theft-claim-trump-alleges-china-stole-data-of-220-million-voters#comments</comments><guid isPermaLink="false">c9456dc0-919d-45ac-b499-547c006d9ffe</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:41:23 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:41:23.836Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,trump,டிரம்ப்,US Presidential Election,அமெரிக்க அதிபர் தேர்தல்,தேர்தல் மோசடி,election fraud</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/yhf12o4h/trump.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/yhf12o4h/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க தேர்தல் அமைப்பில் சீனா தலையிட்டு 22 கோடி வாக்காளர்களின் தரவுகளைத் திருடியுள்ளதாக அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். </p><h2>பின்னணி </h2><p>2020 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வென்றார். அப்போது தேர்தலில் முறைகேடு நடந்ததாக தோல்வியை தழுவிய குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் குற்றம்சாட்டினார். தேர்தல் முடிவுக்கு பின்னர், தனது ஆதரவாளர்களை வைத்து அதிபர் மாளிகையை முற்றுகையிட செய்தார். இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. </p><p>இதன்பின்னர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் தரப்பு நீதிமன்றங்களில் பல வழக்குகளை போட்டது. ஆனால் எதற்கும் போதிய ஆதாரம் இல்லை என அவரின் கட்சியில் இருந்தே குரல்கள் வந்தன. </p><p>இந்த சர்ச்சை அடங்காமல் புகைந்துகொண்டே இருந்தது. இதனிடையே 2024 தேர்தலில் 2 கொலை முயற்சிகளில் இருந்து தப்பி, உலகபெரும்பபணக்காரார் எலான் மஸ்கின் ஏகபோக ஆதரவு மற்றும் அளவற்ற நிதியின்மூலம் டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார். </p><p>இதன் பின்னர் தற்போது புகைந்துகொண்டிருந்த 2020 தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டை டிரம்ப் ஊதிப் பற்ற வைத்துள்ளார். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">ஈரான் போர் </a>நஷ்டங்களால் உள்நாட்டில் சொந்த கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் டிரம்ப் செல்வாக்கை இழந்து வருவதை சர்வேக்கள் காட்டி வருகின்ற இந்த சூழலில் டிரம்ப் தன் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டை கையில் எடுத்துள்ளார். </p> <h2>'வெள்ளை' மாளிகை உரை</h2><p>இன்று வெள்ளை மாளிகையில் இருந்தபடி டிரம்ப் நாட்டு மக்களுக்கு 24 நிமிடம் உரையாற்றினார்.</p><p>அப்போது பேசிய அவர், சீனா, அமெரிக்க தேர்தல் அமைப்பில் ஊடுருவி 22 கோடி வாக்காளர்களின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">தரவுகளை திருடி </a>வைத்துள்ளதாவும் இது அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகப்பெரிய தேர்தல் தரவுத் திருட்டு என்றும் குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், "இந்த தரவு கசிவு அமெரிக்க தேர்தல் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.</p><p>சீனாவின் இந்தத் தரவு மோசடியை மூடிமறைக்க, அப்போதைய அரசின் சில உறுப்பினர்கள் முயன்றனர்.</p><p>இப்போதும் நமது நாட்டின் தேர்தல் அமைப்பு வெளிப்படைத்தன்மையற்றதாகவும் துல்லியமற்றதாகவும் உள்ளது.</p><p>ஒவ்வொரு அமெரிக்கரும் தங்களின் வாக்கு சரியான முறையில் சென்று சேர்கிறது என்ற நம்பிக்கையை பெற வேண்டும். ஆனால் இன்றைய தேர்தல் அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஹேக்கிங் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு ஆபத்தான அளவுக்கு உள்ளது.</p><p>மோசடி மற்றும் தலையீடுகள் இல்லாத ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது." என தெரிவித்தார்.</p><p>இதற்கு தீர்வாக அமெரிக்க வாக்காளர் தகுதிப் பாதுகாப்புச் சட்டத்தை (SAVE சட்டம்) நிறைவேற்றுமாறு காங்கிரஸை அவர் வலியுறுத்தினார்.</p><p>இந்தச் SAVE சட்டத்தின் கீழ், வாக்களிக்கப் பதிவு செய்யும் ஒவ்வொருவரும் தங்கள் அமெரிக்கக் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>ஆனால் இந்த விதிமுறையில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அபாயம் உள்ளதென மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.</p> <h2>ஊடகங்கள் மீது காட்டம்</h2><p>இன்றைய தனது உரையை ஒளிபரப்பாத ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிரம்ப் கடுமையான மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p>தனது உரையை நேரலையில் ஒளிபரப்ப மறுத்த ஏபிசி மற்றும் என்பிசி போன்ற ஊடகங்களின் உரிமங்களை ரத்து செய்வேன் எனவும் அந்த ஊடகங்கள் தேர்தலில் முறைகேடு செய்யும் சதித்திட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p> <h2>சீனா மறுப்பு</h2><p>டிரம்ப் குற்றச்சாட்டுகளை அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p>சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் லியு சாங் பேசுகையில், "அமெரிக்கத் தேர்தல்கள் அவர்களின் சொந்த விவகாரம். அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் அதன் முடிவை தீர்மானிப்பார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா ஒருபோதும் தலையிட்டதில்லை, இனியும் அவ்வாறு செய்யாது" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேக்புக் மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் ஆப்பிள்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-back-to-school-sale-now-live-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-back-to-school-sale-now-live-in-india#comments</comments><guid isPermaLink="false">d4f445bc-2b2b-458a-9d68-d0ec7913e31f</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,Offers,Back to School,சலுகைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/dfg9fzjw/apple.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/dfg9fzjw/apple.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் M5 பிராசஸர் கொண்ட புதிய மேக்புக் ஏர், M5, M5 Pro மற்றும் M5 Max சிப்செட்கள் கொண்ட மேக்புக் ப்ரோ, ஐபேட் (2024), ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ உள்ளிட்ட பல சாதனங்களின் விலையை உயர்த்தியது. </p><p>குறிப்பிடப்பட்ட இந்த சாதனங்கள் இப்போது கணிசமாக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், புதிய மேக்புக் அல்லது ஐபேட் மாடலை வாங்க விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக, ஆப்பிள் தனது வருடாந்திர 'Back to School' சலுகைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்த சலுகைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. நிறுவனத்தின் ஆண்டு முழுவதும் வழங்கப்படும் மாணவர் தள்ளுபடி திட்டத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் புதிய சாதனத்தை தள்ளுபடி விலையில் வாங்கலாம். அத்துடன் ஏர்பாட்ஸ் 4, ஆப்பிள் பென்சில் அல்லது ஏர்டேக் போன்ற அக்சசரிக்களில் ஒன்றை இலவசமாக பெறலாம்.</p><p><strong>இந்திய சலுகைகள்:</strong></p><p>இந்தியாவில் இந்த ஆண்டிற்கான ஆப்பிள் 'Back to School' விற்பனை தற்போது தொடங்கியுள்ளதாகவும், இது ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையின் போது, ​​மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு மேக்புக் மற்றும் ஐபேட் மாடல்களைக் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் ஏர்பாட்ஸ் 4, ஆப்பிள் பென்சில் மற்றும் ஏர்டேக்ஸ் போன்ற அக்சசரிக்களை இலவசமாக பெறலாம்.</p><p>M5 பிராசஸர் கொண்ட மேக்புக் ஏர் (2026) மாடலை, மாணவர்களுக்கான சிறப்பு தள்ளுபடியுடன் சேர்த்து ரூ. 1,37,900 என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் ஏர்பாட்ஸ் 4 அல்லது நான்கு ஏர்டேக்ஸ் கொண்ட பன்டிலை (bundle) இலவசமாக தேர்வு செய்யலாம்.</p><p>இதுதவிர ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி கொண்ட ஏர்பாட்ஸ் 4-ஐ ரூ. 5,000-க்கும் அல்லது ஏர்பாட்ஸ் ப்ரோ 3 மாடலை ரூ. 13,000-க்கும் பெறும் விருப்பத்தையும் அவர்கள் தேர்வு செய்யலாம்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026#comments</comments><guid isPermaLink="false">6c0cc3c8-73f7-48ae-8b2f-9b1940e87443</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:17:53 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:17:53.296Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/jledb4zm/gold05.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/jledb4zm/gold05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </p><p>தங்கம் விலையானது நேற்று முன்தினம் சவரனுக்கு  ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு  ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையானது.</p><h2>தங்கம் விலை சரிவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <figure><img alt="Silver" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/fanjnwfj/silver.jpg" /></figure> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440</p><p>14-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>13-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600</p><p>12-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>16-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>15-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>14-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>13-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>12-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item></channel></rss>