<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 19 Jul 2026 02:45:19 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-july-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-july-2026-2#comments</comments><guid isPermaLink="false">e2e450c1-256f-496a-b860-25faf5d7b70f</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:32:13 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:33:05.462Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-launches-new-airstrikes-to-swiftly-punish-iran-for-deaths-of-us-troops">இரண்டு வீரர்கள் பலி: ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்திய அமெரிக்கா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-dk-shivakumar-said-pressure-to-release-water-to-tamil-nadu">தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க அதிக அழுத்தம்: கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார்</a></p>]]></content:encoded></item><item><title>பெரியபாளையம் பவானி அம்மன்- தல வரலாறு</title><link>https://www.maalaimalar.com/spirituality/periyapalaiyam-bhavani-amman-temple-history</link><comments>https://www.maalaimalar.com/spirituality/periyapalaiyam-bhavani-amman-temple-history#comments</comments><guid isPermaLink="false">382912b8-51e8-4e1d-a572-0b1ee2541a12</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:44:16 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:44:16.828Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெரியபாளையம்,தல வரலாறு,Bhavani Amman Temple,temple history,Periyapalaiyam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/dfl9ia3j/news-2.png" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரியபாளையம் தல வரலாறு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/dfl9ia3j/news-2.png?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் கோவில், கம்சனிடமிருந்து தப்பிய கண்ணனின் சகோதரியான யோகமாயா வாசம் செய்யும் தலம் ஆகும்.</p><h2>தல வரலாறு</h2><p>துவாபர யுகத்தில், தேவகி மற்றும் வசுதேவருக்கு எட்டாவதாகப் பிறக்கும் குழந்தையால் தனக்கு மரணம் நிகழும் என்பதை அறிந்த கம்சன், அவர்களைச் சிறைவைத்தான். எட்டாவது குழந்தையாகக் கிருஷ்ணர் அவதரித்தபோது, அவர் யசோதையிடமும், யசோதைக்குப் பிறந்த யோகமாயா சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டனர்.</p><p>சிறையில் இருந்த பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் முயன்றபோது, அக்குழந்தை அன்னை ஆதிசக்தியாக மிகுந்த உக்கிரத்துடன் ஆகாயத்தில் எழும்பி, "உன்னைக் கொல்லப் போகும் கிருஷ்ணன் பிறந்துவிட்டான்" என்று எச்சரித்து மறைந்தது.  </p><p>துர்க்கையாக அவதரித்த ஆதிசக்தி, உக்கிரம் தணிய தென்புலத்திற்கு வந்து உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் ஸ்ரீ பவானி என்ற பெயரில் அமர்ந்தாள். அவளோடு பரசுராமரின் தாயான ரேணுகாதேவியும் இங்கு வந்து அமர்ந்ததாகத் தல புராணம் கூறுகிறது.</p><p>'பாளையம்' என்றால் படை வீடு என்று பொருள். அன்னை பவானி தீமைகளை அழிக்க இங்கு ஒரு பெரிய படைவீடு அமைத்துத் தங்கியதால், இவ்வூர் பெரியபாளையம்<strong> </strong>என்று பெயர் பெற்றது.</p><p>மூலவரான பவானி அம்மன் தனது மேல் கரங்களில் சங்கு மற்றும் சக்கரத்தையும், கீழ் கரங்களில் கத்தி மற்றும் அமுத கலசத்தையும் ஏந்தி வைஷ்ணவி தேவியாகக் கம்பீரமாகக் காட்சி தருகிறாள். அவளது மடியருகே தலை மட்டுமே கொண்ட சுயம்புவாக ரேணுகாதேவி அம்சமும் வீற்றிருக்கிறது</p><p>ஆதி காலத்தில் இப்பகுதி அடர்ந்த வனமாகவும், பெரிய புற்று மேடாகவும் இருந்தது. அன்னை நீண்ட காலம் புற்றினுள்ளேயே மறைந்திருந்தாள். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதிக்கு வளையல் விற்க வந்த வியாபாரி ஒருவரின் கனவில் அன்னை தோன்றி, தான் இப்புற்றில் வசிப்பதை உலகிற்கு உணர்த்துமாறு கட்டளையிட்டாள்.</p><p>அன்னையின் ஆணைப்படி ஊர்மக்கள் அந்தப் புற்றை அகழ்ந்து பார்க்க முயன்றபோது, கடப்பாரை பட்டு அங்கிருந்து ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. அங்கே அன்னை சுயம்புவாகக் காட்சி தந்தார். இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால், சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம்.</p><h2>சிறப்பு</h2><p>பக்தர்கள் வேப்ப இலைகளை ஆடையாக உடுத்தி, அங்கப்பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும். இங்கு வழங்கப்படும் குங்குமம் மற்றும் தீர்த்தப் பிரசாதம் மனித உடலில் உள்ள பல நோய்களைக் குணமாக்கும் உடற்பிணி தீர்க்கும் மருந்தாக நம்பப்படுகிறது. தமிழ் மாதங்களான ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் இக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.</p><h2>நடைதிறந்திருக்கும் நேரம்</h2><p>காலை 5 மணி முதல் 12.30 மணி வரை</p><p>மாலை 2 மணி முதல் இரவு 9 மணி வரை</p>]]></content:encoded></item><item><title>அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: காரணம் இதுதான்</title><link>https://www.maalaimalar.com/news/national/amarnath-pilgrimage-halted-due-to-bad-weather</link><comments>https://www.maalaimalar.com/news/national/amarnath-pilgrimage-halted-due-to-bad-weather#comments</comments><guid isPermaLink="false">168ce73a-ea02-4021-9b91-7ff143054031</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:33:55 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:33:55.020Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amarnath yatra,அமர்நாத் யாத்திரை,Ice lingam,பனிலிங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/9d02anms/yatra.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ amarnath yatra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/9d02anms/yatra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை ஆகஸ்டு 28-ம் தேதி நிறைவடையும்.</p><h2>3.77 லட்சம் பேர் தரிசனம்</h2><p>இதற்கிடையே, அமர்நாத் குகைக் கோவிலை இதுவரை 3.77 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், வருடாந்திர அமர்நாத் யாத்திரைக்காக 4,640 பக்தர்களைக் கொண்ட புதிய குழு நேற்று அதிகாலை பகவதி நகர் யாத்ரி நிவாஸிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>171 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் பயணிக்கும் 16-வது குழுவில், மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய பால்டால் வழித்தடத்தில் 1,626 பக்தர்களும், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய பஹல்காம் வழித்தடத்தில் இருந்து 3,014 பக்தர்களும் அடங்குவர்.</p><p>அதிகாரிகளின் தகவலின்படி, பால்டால் செல்லும் வாகன அணிவகுப்பு அதிகாலை 2:42 மணிக்கும், அதைத் தொடர்ந்து பஹல்காம் செல்லும் அணிவகுப்பு அதிகாலை 3:11 மணிக்கு முகாமிலிருந்து புறப்பட்டன.</p><p>இந்த யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. நபர் ஒருவர் ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மருத்துவ சான்றிதழ் ஒன்றையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.</p><h2>உருகிய பனிலிங்கம்</h2><p>நடப்பு ஆண்டில் 5 நாட்களில் 90 சதவீதம் அளவுக்கு பனிலிங்கம் உருகியது என்றாலும், பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து வருகிறது.</p><p>இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.</p><p>பக்தர்களின் பாதுகாப்பு கருதி யாத்திரை நிறுத்தப்படுகிறது. அதிகாரிகளுடன் ஒத்துழைத்து அடுத்த உத்தரவு வரும் வரை பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள வேண்டாம்.</p><p>யாத்திரை எப்போது தொடங்கும் என்பதை வானிலை குறித்த விரிவான மதிப்பீடு, வழித்தடத்தில் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>மாதா வைஷ்ணவி தேவி யாத்திரை</h2><p>இதேபோல், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இரண்டு வீரர்கள் பலி: ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்திய அமெரிக்கா</title><link>https://www.maalaimalar.com/news/world/us-military-launches-new-airstrikes-to-swiftly-punish-iran-for-deaths-of-us-troops</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-military-launches-new-airstrikes-to-swiftly-punish-iran-for-deaths-of-us-troops#comments</comments><guid isPermaLink="false">1c834caa-787b-46a6-bed9-1057a2df4b81</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:23:57 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:23:57.219Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jordan,US troops,அமெரிக்க படை வீரர்கள்,US Iran war,அமெரிக்கா ஈரான் போர்,ஜோர்டான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/mfec02pp/USAttack0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US Attack On Iran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/mfec02pp/USAttack0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், ராணுவ தளம், கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற இடங்களில் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.</p><p>இதற்கிடையே பாகிஸ்தான் தலைமையில் கடந்த மாதம் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தமான <a href="https://www.maalaimalar.com/news/world/iran-quits-islamabad-pact-us-strikes-hit-hormozgan-desalination-power-and-key-infrastructure">இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்</a> இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><h2>ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்திய ஈரான்</h2><p>நேற்று ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் உடனான போரில் ஜோர்டான் தளத்தில் வீரர்கள் மரணம் அடைந்த தகவலை முதல் முறையாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>இரண்டு வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒரு வீரரை காணவில்லை என்றும் நான்கு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><h2>வீரர்கள் மரணத்திற்கு பதிலடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா</h2><p>இதற்கு விரைவாக பதிலடி கொடுக்கும் வகையில் ஜலசந்தியை நிர்வகிக்கும் திறன் கொண்ட பகுதிகள் மீது அமெரிக்கா அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியின் சிரிக் அருகில் உள்ள பகுதி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. </p><p>ஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 16 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 430-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.</p><p>ராணுவ வீரர்கள் உயிரழந்ததாக அறிவிப்பதற்கு முன்னதாக, எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் என்று ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.</p><h2>பிப்ரவரி மாதம் தொடங்கிய போர்</h2><p>கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடும் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதனால் கோபம் அடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி, வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது. அப்போது துபாய், கத்தார், பஹ்ரைன், குவைத் பொது இடங்களையும் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மீதும் தாக்குதல் நடத்தியது.</p><p>சமீபகாலமாக ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-shoot-and-arrest-rowdy-who-attacked-officer</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-shoot-and-arrest-rowdy-who-attacked-officer#comments</comments><guid isPermaLink="false">57029fa3-44b6-44e4-bc7f-ad95197b690f</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:55:50 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:55:50.323Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,Gun Fire,rowdy,ரவுடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t9o6vkbe/gun.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gun]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t9o6vkbe/gun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.</p><p>தலைமை காவலரை கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற கருப்பு என்ற ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.</p><p>போலீசார் சுட்டதில் படுகாயம் அடைந்த ரவுடி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க அதிக அழுத்தம்: கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-dk-shivakumar-said-pressure-to-release-water-to-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-dk-shivakumar-said-pressure-to-release-water-to-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">9826222d-a7ab-4ab8-b32c-bf9ead5b0263</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:53:03 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:53:03.451Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DK Shivakumar,டிகே சிவக்குமார்,காவிரி அணை,cauvery dam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரு விதானசவுதாவில் நேற்று மாலையில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-</p><h2>அவசர மந்திரிசபை கூட்டம்</h2><p>கர்நாடக மந்திரிசபை கூட்டம் கடந்த 16-ந்தேதி நடைபெற இருந்தது. அன்றைய தினம் நான் டெல்லியில் இருந்ததால் மந்திரிசபை கூட்டம் நடைபெறவில்லை. இதனால் நாளை (அதாவது இன்று) மதியம் 3 மணிக்கு அவசர மந்திரிசபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மந்திரிசபை கூட்டத்தில் மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்தும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்க உள்ளோம்.</p><p>வறட்சி குறித்து மந்திரிசபை மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசிக்கப்படும். மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தப்படும். அதன்பிறகு, மத்திய அரசுடன், மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து தெரிவிக்கப்படும். மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து மத்திய அரசுக்கு இதுவரை எந்த கடிதமும் எழுதவில்லை. மாநிலத்தில் எந்தெந்த மாவட்டங்களில் வறட்சி உள்ளது. வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்.</p><p>தற்போது மாநிலத்தில் உள்ள அணைகளில் இருப்பு இருக்கும் தண்ணீரை, குடிநீருக்கு மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும், குடிநீர் தேவைக்காக மட்டுமே ஆகும். இப்போதும் சொல்கிறேன், விவசாயத்துக்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். விவசாய தேவைக்காக அணைகளில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.</p><h2>தமிழ்நாட்டுக்கு உதவி</h2><p>அதற்கு முன்பாக அரசுக்கு விவசாயிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். குடிநீருக்காக தான் அணைகளில் தண்ணீர் திறந்து வருகிறோம். காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி அதிக அழுத்தம் இருக்கிறது. துங்க பத்ரா அணையில் இருந்து தண்ணீர் திறக்க அழுத்தம் இருக்கிறது. அணைகள் நிரம்பினால் தண்ணீர் கொடுப்போம். அப்போது எந்த தொந்தரவும் ஏற்படாது.</p><p>காவிரி நதிநீர் விவகாரம்பற்றி பேச விரும்பவில்லை. அதுபற்றி நிறைய பிரச்சினை இருக்கிறது. அதனால் காவிரி நதிநீர் குறித்து விவாதிக்க விரும்பவில்லை. காவிரி நீர் நமது உரிமை. மேகதாது விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கூட தீர்ப்பு கூறியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்குதான் உதவியாக இருக்கும் என்பதை மீண்டும் சொல்லி கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">c341d0b6-b98a-47eb-a7c6-a63dec183b21</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:40:37 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:40:37.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Petrol,Crude oil,CNG,Petrol Diesel Price,diesel,பெட்ரோல், டீசல் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கச்சா எண்ணெய்</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் மற்றும் போர் பதற்றம் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.</p><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (19.07.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஒருநாள் தொடரை கைப்பற்றப் போவது யார்?: 3வது போட்டியில் இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/who-will-clinch-odi-series-india-vs-england-third-odi-today</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/who-will-clinch-odi-series-india-vs-england-third-odi-today#comments</comments><guid isPermaLink="false">be865954-2206-46ce-baf0-143a033fc4a4</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:34:27 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:34:27.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்மன் கில்,Shubman Gill,ENGvIND,இங்கிலாந்து இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/0ktaj6v4/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ team india]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/0ktaj6v4/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>விளையாட்டு (Sports)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடைபெறுகிறது.</p><p>இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.</p><p>முதலில் நடந்த டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-0 என வென்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.</p><h2>கடைசி ஒருநாள் போட்டி</h2><p>இந்நிலையில், தொடரில் வெற்றி பெறப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.</p><p>இந்திய அணியில் ரோகித் சர்மா கடந்த இரு போட்டிகளில் முறையே 11, 26 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். தடுமாற்றத்தைச் சந்தித்து வரும் அவரது ஆட்டம் அதிக எதிர்பார்ப்புக்கு ஆளாகி இருக்கிறது.</p><p>மற்றொரு மூத்த வீரரான விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இரண்டாவது போட்டியில் 65 ரன் எடுத்த இவர் மீண்டும் கைகொடுக்கலாம். ஷ்ரேயஸ் ஐயர் (101) நம்பிக்கை தருகிறார். மிடில் ஆர்டர் சரிவை தடுத்து நிறுத்தினால் இங்கிலாந்து அணிக்கு இமாலய ஸ்கோரை நிர்ணயிக்கலாம். </p><p>இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் அனுபவ வீரர் ஜோ ரூட் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறார் அவர் இதுவரை 2 போட்டியில் 175 ரன் எடுத்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.</p><h2>ஹர்ஷ் துபே</h2><p>காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷ் துபே சேர்க்கப்பட உள்ளார்.</p><p>இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 4, 5 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.</p><p>தொடரை வெல்ல சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும், ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மல்லுக் கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 19.7.2026 - இல்லம் தேடி நல்ல தகவல் வரும் நாள்.</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-19-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-19-july-2026#comments</comments><guid isPermaLink="false">2fa65ffc-5a65-4a48-a687-e4f61898969d</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:07:58 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:07:58.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/11/21436547-rasipalan3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/11/11/21436547-rasipalan3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>கனவுகள் நனவாகும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>செல்வாக்கு உயரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில் புதிய பணியாளர்களை சேர்த்துக் கொள்வீர்கள்.</p><h2>மிதுனம்</h2><p>மனக்குழப்பம் ஏற்படும் நாள். சேமித்த தொகையில் சிறிது கரையலாம். புதிய முயற்சியில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உத்தியோக மாற்றம் உண்டு.</p><h2>கடகம்</h2><p>இல்லம் தேடி நல்ல தகவல் வரும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.</p><h2>சிம்மம்</h2><p>வேகத்துடனும் விவேகத்துட னும் செயல்படும் நாள். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டம் வெற்றி பெறும். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும்.</p><h2>கன்னி</h2><p>மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.</p><h2>துலாம்</h2><p>வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.</p><h2>விருச்சிகம்</h2><p>வருமானம் உயரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.</p> <h2>தனுசு  </h2><p>மனக்ககலக்கம் ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேறவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.  </p><h2>மகரம்  </h2><p>பிரச்சினையில் இருந்து விடுபடும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அனுபவ அறிவால் அற்புதமான பலனைக் காண்பீர்கள்.  </p><h2>கும்பம் </h2><p>காரிய வெற்றிக்கு கவனம் தேவைப்படும் நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும்.</p><h2>மீனம்</h2><p>தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும், செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைப்பொறுப்புகள் தானே தேடி வரும்.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-all-party-meeting-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-all-party-meeting-today#comments</comments><guid isPermaLink="false">9b267779-50c3-4d8f-9bc4-9642363e0541</guid><pubDate>Sun, 19 Jul 2026 00:50:20 +0000</pubDate><atom:updated>2026-07-19T00:50:20.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,நாடாளுமன்றம்,parliment,All Party Meeting,அனைத்து கட்சி கூட்டம்,மழைக்கால கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-12/t1to0308/parliment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ parliment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-12/t1to0308/parliment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை தெரிவித்துள்ளது.</p><p>5 மாநில சட்டசபைத் தேர்தல்களுக்குப் பிறகு தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பரபரப்பான இந்த அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடர் கூட இருப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p>காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கட்சி இரண்டாக உடைந்தது உள்ளிட்ட பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் கூட்டத்தொடர் கூட உள்ளது.</p><p>இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.</p><p>இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு பல்வேறு விஷயங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, நேற்று ஜந்தர்மந்தரில் இருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வெளியேற்றிய விவகாரம் பற்றி அனைத்து எதிர்கட்சியினரும் பேச இருக்கிறார்கள்.</p><p>மேலும், அயோத்தி ராமர் கோவில் நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரமும் இன்றைய கூட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>முன்னதாக, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் தானாகவே முதல் மந்திரி, பிரதமர் பதவி பறிபோகும் மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.</p><p>இந்த மசோதாக்கள் அரசியல் அமைப்பு மசோதாக்கள் என்பதால் இவற்றில் திருத்தம் மேற்கொள்ள மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். எனவே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது. </p>]]></content:encoded></item><item><title>ரத்தத்துக்கு ரத்தம்.. சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்  - ஈரான் வைக்கப்பட்ட விளம்பர பலகையால் பரபரப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-us-tensions-tehran-billboard-shows-trump-family-on-coffins</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-us-tensions-tehran-billboard-shows-trump-family-on-coffins#comments</comments><guid isPermaLink="false">67073852-2474-4c0e-ab4c-1fd44f24065a</guid><pubDate>Sun, 19 Jul 2026 00:22:46 +0000</pubDate><atom:updated>2026-07-19T00:22:46.441Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Tehran,Iran War,ஈரான் போர்,தெஹ்ரான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/541vx30a/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தெஹ்ரான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தெஹ்ரான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/541vx30a/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானில் அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி மேல் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட  விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், "ரத்தத்திற்கு ரத்தம்" என அடைமொழியிடப்பட்டு தலைநகர் தெஹ்ரானில் இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது. </p><h2>விளம்பர பலகை </h2><p>டெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விளம்பர பலகையில், டிரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் அவர்களின் ஐந்து பிள்ளைகளான இவான்கா, டொனால்ட் டிரம்ப் ஜூனியர், எரிக், டிஃப்பனி மற்றும் பாரோன் ஆகியோர் வெள்ளை மாளிகையின் பின்னணியில் சவப்பெட்டிகளின் மேல் இருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. </p><p>தெஹ்ரானில் உள்ள மிகப்பெரிய சுவரோவியங்கள் அனைத்தும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஓவ்ஜ் கலை மற்றும் ஊடக அமைப்பு மூலம் வடிவமைக்கப்படுகின்றன.</p> <h2>பழிக்கு பழி</h2><p>கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் அவரது மகள், மருமகன், மருமகள், பேத்தி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.</p><p>அவர்களின் இறுதிச்சடங்கு இந்த மாத தொடக்கத்தில் நடந்து முடிந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அங்கும் டிரம்ப்புக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. பதாகைகளை சுமந்து மக்கள் ஊர்வலம் வந்தனர். இறுதிச்சடங்கு முடிந்து உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே வேளையில் ஈரான் - அமெரிக்கா இடையேயான தற்காலிக புரிந்துணர்வு முறிந்து மீண்டும் முழு அளவிலான <a href="https://www.maalaimalar.com/news/world/iran-blames-us-as-two-tankers-hit-mines-in-hormuz">போர் </a>வெடித்துள்ளது.</p><p>ஈரானின் பாலங்கள், மற்றும் பிற உள்கட்டமைப்புகளை அமெரிக்கா 7வது நாளாக குறிவைத்து தாக்கி வருகிறது. அதேநேரம், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.</p> <h2>டிரம்பைக் கொல்வோம்</h2><p>சில நாட்களுக்கு முன்புதான், தெஹ்ரானின் ஏங்கெலாப் சதுக்கத்தில் மற்றொரு பிரம்மாண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது.</p><p>அதில், டிரம்ப் ஒரு திறந்த கருப்பு சவப்பெட்டிக்குள் படுத்திருப்பது போலவும், அதற்கு மேலே பாரசீக மற்றும் ஆங்கில மொழிகளில் "நாங்கள் டிரம்பைக் கொல்வோம்" என்ற வார்த்தைகளும் எழுதப்பட்டிருந்தன.</p><p>அந்த சவப்பெட்டியின் மேல், "மினாப் குழந்தைகளின் நினைவாக" என்று எழுதப்பட்டிருந்தது.</p><p>பிப்ரவரி 28 அன்று தெற்கு ஈரான் நகரமான மினாப்பில் உள்ள பெண் குழந்தைகள் ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 170 சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த வான்வழித் தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டதாக கருதப்பட்ட நிலையில் இது அமெரிக்காவால் நடத்தப்பட்ட தாக்குதல் என பின்னர் தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>உலக்கோப்பை கால்பந்து: 6-4  கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி.. தொடரில் மூன்றாம் இடம்</title><link>https://www.maalaimalar.com/sports/football/world-cup-football-england-beat-france-6-4-in-thriller-to-clinch-third-place</link><comments>https://www.maalaimalar.com/sports/football/world-cup-football-england-beat-france-6-4-in-thriller-to-clinch-third-place#comments</comments><guid isPermaLink="false">c4f6b745-c8ac-4bbc-9d2d-5a1bb8f3e926</guid><pubDate>Sun, 19 Jul 2026 00:16:50 +0000</pubDate><atom:updated>2026-07-19T00:16:50.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரான்ஸ்,France,FIFA World Cup,Football World Cup,கால்பந்து உலகக்கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5kibb5dd/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உலக்கோப்பை கால்பந்து]]></media:title><media:description type="html"><![CDATA[ உலக்கோப்பை கால்பந்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5kibb5dd/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகக் கோப்பை கால்பந்தில் <a href="https://www.maalaimalar.com/sports/football/it-is-impossible-to-completely-shut-down-messi-do-not-fear-him-spanish-coach-advises">இறுதிப்போட்டி </a>நாளை அர்ஜென்டினா - ஸ்பெயின் இடையே நடைபெற உள்ளது.</p><p>இதனிடையே வெண்கலப் பதக்கம் யாருக்கு என தீமானிக்கும்  3வது இடத்துக்கான ஆட்டம் இங்கிலாந்து - பிரான்ஸ் இடையே இன்று நடைபெற்றது. </p><h2>முதல் பாதி </h2><p>ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து ஆக்ரோஷமான ஆடியது. கேப்டன் டெக்லான் ரைஸ் மூன்றாவது நிமிடத்தில் நீண்ட தூர கோல் அடித்தார். </p><p>18வது நிமிடத்தில், எஸ்ரி கோன்சா தலையால் முட்டி கோல் அடித்து, கோல் கணக்கை 2-0 என மாற்றினார். </p><p>பின்னர், புகாயோ சாகா 37வது மற்றும் 43வது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை அடித்து, 4-0 என்ற முன்னிலைக்கு இங்கிலாந்தை இட்டுச் சென்றனர். </p> <h2>இரண்டாம் பாதி</h2><p>இடைவேளைக்குப் பிறகு உஸ்மான் டெம்பலே மற்றும் பிராட்லி பார்கோலாவின் வருகை பிரான்சுக்கு புத்துயிர் அளித்தது.</p><p>பிரான்ஸ் கேப்டன் கைலியன் எம்பாப்பே 48வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து பிரான்சின் கணக்கை தொடங்கினார்.</p><p>10 நிமிடங்கள் கழித்து, பார்கோலா ஒரு கோல் அடித்து, கோல் வித்தியாசத்தை 4-2 என உயர்த்தினார்.</p><p>67வது நிமிடத்தில், எம்பாப்பே தனது இரண்டாவது கோலை அடிக்க, ஆட்டத்தின் ஸ்கோர் 4-3 ஆனது.</p><p>87வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் புகாயோ சாகா தனது 3 வது கோலையும் அணியின் 5வது கோலையும் பதிவு செய்தார்.</p><p>இதையடுத்து 90 நிமிடங்கள் முடிவில் இங்கிலாந்து 5-3 என முன்னிலையில் இருந்த நிலையில், கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டன.</p><h2>வெற்றி </h2><p>அப்போது 94 வது நிமிடத்தில் பிரான்ஸின் உஸ்மான் டெம்பலே கோல் அடிக்க முன்னிலை 5-4 ஆக குறைந்தது.</p><p>இருப்பினும் 98 வது நிமிடத்தில் ஜுட் பெல்லிங்ஹாம் கோல் அடிக்க 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து 3 வது இடத்தை பிடித்தது.</p><h2>சாதனை</h2><p>இந்த போட்டி 1982க்குப் பிறகு ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிக கோல்களுக்கான சாதனையையும் படைத்தது</p><p>இந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் 22வது கோல்களை பதிவு செய்து லியோனல் மெஸ்ஸியின் 21 கோல்கள் என்ற சாதனையை பிரான்ஸ் கேப்டன் எம்பாப்வே முறியடித்தார்.</p><p>மேலும், இந்தத் தொடரில் 10 கோல்களுடன் கோல்டன் பூட் விருதிற்கான போட்டியில் முதலிடத்தையும் அவர் அடைந்தார்.</p>]]></content:encoded></item><item><title>தேசியவாத காங்கிரஸ் ஒன்றிணைவதற்கு சுனேத்ரா பவார் எதிர்ப்பு..  பாஜகவிடம் கறார் கண்டிஷன்?</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-ncp-merger-push-bjp-moves-to-unite-sharad-pawar-and-sunetra-pawar-factions-to-boost-nda-strength</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-ncp-merger-push-bjp-moves-to-unite-sharad-pawar-and-sunetra-pawar-factions-to-boost-nda-strength#comments</comments><guid isPermaLink="false">3bf89fb2-a3e9-435e-96d0-f807af64d8a7</guid><pubDate>Sat, 18 Jul 2026 23:55:56 +0000</pubDate><atom:updated>2026-07-18T23:55:56.908Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Sharad Pawar,சரத் பவார்,Sunetra Pawar,சுனேத்ரா பவார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/2dt81pen/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுனேத்ரா பவார்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுனேத்ரா பவார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/2dt81pen/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகராஷ்டிராவில் <a href="https://www.maalaimalar.com/news/national/will-sharad-pawars-nationalist-congress-party-support-the-constituency-delimitation-bill">சரத் பவார் </a>தேசியவாத காங்கிரஸ் மற்றும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ்  பிரிவுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. </p><p> பராமத்தி விமான விபத்தில் அஜித் பவார் மறைவுக்கு பின் அந்த அணி  தற்போது அவரின் மனைவியும் மகாரஷ்டிர துணை முதல்வருமான சுனேத்ரா பவார் தலைமையில் இயங்கி வருகிறது. </p> <h2>சரத் பவார்</h2><p>அஜித் பவார் அணி தற்போது என்டிஏ கூட்டணியில் உள்ள நிலையில் 8 எம்.பி.க்களை வைத்துள்ள சரத் பவார் அணியை அதனுடன் இணைத்து நாடாளுமன்றத்தில் என்டிஏ கூட்டணி பலத்தை அதிகரிப்பதே பாஜகவின் இந்த அவசர நகர்வுக்கு முக்கியக் காரணமாகும்.</p><p>இந்த இணைப்புக்கு சரத் பவார் இசைவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அண்மையில் என்டிஏவில் உள்ள சிவன்சேனா தலைவரும் மகாராஷ்டிராவின் மற்றொரு துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே உடன் சரத் பவார் சந்திப்பு இந்த ஊகங்களை வலுப்படுத்தியது.</p><p>இரு பிரிவுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக, இரு தரப்பிற்கும் மத்திய அமைச்சரவையில் தலா ஒரு அமைச்சர் பதவியை வழங்க பாஜக முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.</p><h2>சுனேத்ரா பவார்</h2><p>இரு பிரிவுகளையும் இணைக்கும் இந்த முயற்சிக்கு சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகனும் மாநிலங்களவை எம்பியுமான பார்த் பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்த இணைப்பு நடந்தால், கட்சியின் அதிகாரம் மீண்டும் மூத்த தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/national/political-opponents-not-enemies-eknath-shinde-on-meeting-sharad-pawar">சரத் பவார் </a>மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோரின் கைக்குச் சென்றுவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.</p><p>இந்த இணைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், பார்த் பவார் கடந்த வியாழன் இரவு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்துப் பேசியுள்ளார்.</p><p>ஒருவேளை இணைப்பு தவிர்க்க முடியாததாக மாறினால், சுனேத்ரா பவாரே தொடர்ந்து துணை முதலமைச்சராகவும், கட்சியின் தேசியத் தலைவராகவும் நீடிக்க வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>இருப்பினும், தற்போதைக்கு அதிகாரப்பூர்வமாக இரு கட்சிகளுமே இந்த இணைப்புப் பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளன.</p> <h2>பாஜக அவசரம்</h2><p>கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, போதிய பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசாங்கத்தின் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்தது.</p><p>இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற பா ஜ க திட்டமிட்டுள்ளது.</p><p>மக்களவையின் மொத்த பலம் 540 ஆகும். அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (360 வாக்குகள்) தேவை.</p> <p>தற்போது என்டிஏ கூட்டணியின் பலம் 319 ஆக உயர்ந்துள்ளது. இதில் அண்மையில் உத்தவ் சிவசேனாவின் இருந்து ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவிய 6 எம்.பிக்களும் அடங்குவர்.</p><p>சரத் பவாரின் பிரிவு  இணைந்தால் என்டிஏவின் வாக்கு எண்ணிக்கை 327 ஆக உயரும்.</p><p>இருப்பினும், 360 என்ற இலக்கை எட்ட இன்னும் 33 வாக்குகள் குறைவாக இருக்கும் என்பதால், சில எதிர்க்கட்சிகளை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகச் செய்ய முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கட்சியை விட்டுச் சென்றவர்கள் திரும்பி வந்தால் 1 மணி நேரத்தில் பதவி விலக தயார் - அபிஷேக் பானர்ஜி சவால் </title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">8b45f936-8243-4489-96e6-4c5e02a17810</guid><pubDate>Sat, 18 Jul 2026 22:58:00 +0000</pubDate><atom:updated>2026-07-18T22:58:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,trinamool congress,Abhishek Banerjee,அபிஷேக் பானர்ஜி,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dob9ulx7/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஷேக் பானர்ஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஷேக் பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dob9ulx7/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கட்சியை விட்டு விலகிய தலைவர்கள் மீண்டும் மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ் கட்சிக்குத் திரும்பினால் தான் ஒரே மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/abhishek-banerjee">அபிஷேக் பானர்ஜி</a>  சவால் விடுத்துள்ளார். </p><h2>அதிருப்தி </h2><p>மம்தாவின் மருமகன் என்பதால் கட்சியில் அபிஷேக் பானர்ஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும், அவரின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. </p><p>குறிப்பாக கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் அனுவ்ரதா மொண்டல் மற்றும் எம்.எல்.ஏ மதன் மித்ரா போன்றவர்கள், அபிஷேக் பானர்ஜியின் அணுகுமுறை தான் தங்களது அதிருப்திக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தனர். </p><p>மமதா பானர்ஜி தங்களது புகார்களைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். </p> <h2>பதிலடி</h2><p>இதற்கு பதிலடி கொடுத்துள்ள அபிஷேக் பானர்ஜி,</p><p>"என் மீதுதான் உங்களுக்குப் பிரச்சினை என்றால், மம்தா பானர்ஜியின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">தலைமை </a>மீது உங்களுக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், நீங்கள் முதலில் அவரிடம் திரும்பி வாருங்கள்.</p><p>நீங்கள் மதியம் 3 மணிக்குக் கட்சிக்குத் திரும்பினால், நான் மாலை 4 மணிக்குள் எனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்.</p><p>நீங்கள் வரமாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் டெல்லியில் இருப்பவர்களுடன் டீல் பேசியிருக்கிறீர்கள்" என்று சாடியுள்ளார்.</p> <p>அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றின் நோட்டீஸ் வந்தவுடனேயே பயந்துபோய் தலைவர்கள் கட்சி மாறுவதாகக் குற்றம் சாட்டினார்.</p><p>மேலும் அவர், "நோட்டீஸ் வந்ததும் நான் ஓடிவிடவில்லை. அமலாக்கத்துறை என்னை 10 முறைக்கும் மேலாக அழைத்து விசாரித்துள்ளது. சிபிஐ மற்றும் காவல்துறையினரும் விசாரித்துள்ளனர். என் மீது 20 முதல் 30 எப்.ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் துல்லியமான எண்ணிக்கை எனக்கே தெரியாது.</p><p>பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயந்து டி.எம்.சி தலைவர்கள் 'வாஷிங் மெஷின்' பாணியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே கட்சி மாறுகிறார்கள் என்றும், மக்கள் ஆதரவு மட்டுமே தங்களுக்கு பாதுகாப்பு என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>50 பேர் பலி.. &apos;இஸ்லாமாபாத்&apos; ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ஈரான் - குவைத் மீது தாக்குதல் - ஜோர்டானில் 2 அமெரிக்க வீரர்கள் மரணம்</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-quits-islamabad-pact-us-strikes-hit-hormozgan-desalination-power-and-key-infrastructure</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-quits-islamabad-pact-us-strikes-hit-hormozgan-desalination-power-and-key-infrastructure#comments</comments><guid isPermaLink="false">077ab087-be25-4dd8-8953-c56fa5cd4914</guid><pubDate>Sat, 18 Jul 2026 21:55:44 +0000</pubDate><atom:updated>2026-07-18T21:55:44.611Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kuwait,jordan,Iran War,ஈரான் போர்,குவைத்,ஜோர்டான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/mvfqenhj/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குவைத் மீதான ஈரானின் முந்தைய தாக்குதல் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ குவைத் மீதான ஈரானின் முந்தைய தாக்குதல் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/mvfqenhj/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் தலைமையில் கடந்த மாதம் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தமான 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்'  இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக <a href="https://www.maalaimalar.com/topic/iran-war">ஈரான் </a>அறிவித்துள்ளது.</p><p>ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி கூறுகையில்,</p><p>"அமெரிக்கா 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' விதிகளை அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே, இந்த ஒப்பந்தத்தை ஈரான் தொடர்ந்து பின்பற்றுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்களும் இதன் செயல்பாடுகளை நிறுத்துகிறோம். தற்போதைய சூழலில், ஈரானின் முழுக் கவனமும் நாட்டின் பாதுகாப்பில் மட்டுமே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.</p> <h2>அமெரிக்க தாக்குதல்</h2><p>ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையை அமெரிக்கப் படைகள் குண்டுவீசித் தகர்த்துள்ளன.</p><p>இந்தத் தாக்குதலால் சுமார் 20 கிராமங்களுக்கான குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு 10,000க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.</p><p>இதுதவிர, மின் உற்பத்தி நிலையங்கள், இரண்டு முக்கிய சுரங்கப்பாதைகள் மற்றும் ஒரு பாலம் ஆகியவை சேதமடைந்துள்ளதால், முக்கியத் துறைமுக நகரான பந்தர் அப்பாஸை இணைக்கும் முதன்மை சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.</p><p>ஈரான் சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, ஜூலை 6 முதல் தொடங்கி நடைபெற்று வரும் அமெரிக்க <a href="https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed">தாக்குதல்களில் </a>இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.</p> <h2>ஈரான் பதிலடி</h2><p>அமெரிக்க படை தளங்களை கொண்டுள்ள நட்பு நாடான குவைத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குவைத்தின் 90 சதவீதக் குடிநீர் இந்த ஆலைகளிலிருந்தே பெறப்படுகிறது.</p><p>ஈரானின் இந்தத் தாக்குதலால் குடியிருப்புப் பகுதிகளில் ஏவுகணைத் துண்டுகள் விழுந்தபோதிலும், பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை என விளக்கம் அளித்த குவைத் வெளியுறவு அமைச்சகம் சர்வதேச சட்டங்களை மீறிச் செயல்படுவதாக ஈரானை கண்டித்துள்ளது.</p><p>மேலும் ஈரானின் இந்தத் தாக்குதலால் ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சேதமடைந்து பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>ஜோர்டான் மீது தாக்குதல்</h2><p>ஜோர்டானில் ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.</p><p>மத்திய கிழக்குக்கான அமெரிக்க பாதுகாப்பு துறை கட்டளை பிரிவான சென்ட்காம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,</p><p>ஜூலை 17 அன்று ஈரானிய படைகளால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்கொலைப்படை டிரோன்களை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாட்டுப் படைகள் வானிலேயே சுட்டு வீழ்த்தித் தடுத்துக் கொண்டிருந்தன.</p> <p>இந்த நடவடிக்கையின்போது, துரதிர்ஷ்டவசமாக இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.</p><p>மேலும், மற்றொரு அமெரிக்க வீரர் தற்போது வரை மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது" பென்டகன் தெரிவித்துள்ளது.</p><p>இந்த தாக்குதலின் போது அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உத்தவ் சிவசேனாவின் 6 எம்.பி.க்கள் கட்சித் தாவலை அங்கீகரித்த சபாநாயகர்.. திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.களுக்கும் தனி இருக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/speaker-recognizes-the-defection-of-six-uddhav-shiv-sena-mps-separate-seating-allotted-for-dissident-trinamool-congress-mps-as-well</link><comments>https://www.maalaimalar.com/news/national/speaker-recognizes-the-defection-of-six-uddhav-shiv-sena-mps-separate-seating-allotted-for-dissident-trinamool-congress-mps-as-well#comments</comments><guid isPermaLink="false">7b262e7d-7af9-472f-82fc-90e250beb44a</guid><pubDate>Sat, 18 Jul 2026 21:06:42 +0000</pubDate><atom:updated>2026-07-18T21:06:42.235Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uddhav Thackeray,உத்தவ் தாக்கரே,Eknath Shinde,ஏக்நாத் ஷிண்டே,Shiv Sena,சிவசேனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/cfxx1pvv/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உத்தவ் சிவசேனா]]></media:title><media:description type="html"><![CDATA[ உத்தவ் சிவசேனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/cfxx1pvv/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/udhav-thackeray">உத்தவ் தாக்கரே</a>வின் சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற 6 அதிருப்தி மக்களவை உறுப்பினர்கள் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டே சிவசேனாவுடன் இணைந்ததை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார். </p><p>சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக், சஞ்சய் ஹரிபாவ் ஜாதவ், பாவ்சாகேப் ராஜாராம் வக்காசவ்ரே, ஓம்பிரகாஷ் பூபால்சிங் நிம்பால்கர், சஞ்சய் தினா பாட்டீல் மற்றும் நாகேஷ் பாபுராவ் பாட்டீல் அஷ்டிகர் ஆகிய 6 எம்பிக்களின் கட்சி மாற்றம் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது.</p><p>இதன்மூலம் மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பலம் 7லிருந்து 13 ஆக உயர்ந்துள்ளது. </p><p>இதன் மூலம் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், 16 எம்பிக்களை கொண்ட தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கூட்டணி கட்சியாக ஷிண்டேவின் சிவசேனா உருவெடுத்துள்ளது.  </p><p>மறுபுறம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் பலம் வெறும் 3 எம்பிக்களாகக் குறைந்துள்ளது. </p><p>உத்தவ் அணியில் இருந்த 9 எம்பிக்களில் 6 பேர் (மூன்றில் இரண்டு பங்கு) பிரிந்து சென்றதால், இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என்று சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.  </p> <h2>ஆபரேஷன் டைகர்</h2><p>பண பலத்தைக் காட்டி எம்பிக்கள் விலைக்கு வாங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87">ஏக்நாத் ஷிண்டே</a>,</p><p>"தங்களது தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், அரசியல் காரணங்களுக்காகவுமே அவர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான வளர்ச்சி நிதியை நாங்கள் வழங்குவோம்.</p><p>அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கவும் நாங்கள் வழிவகை செய்துள்ளோம். ஒரு தலைவர் கட்சியில் இருக்கும் வரை நல்லவராகவும், வெளியேறியவுடன் கெட்டவராகவும் மாறுவது உத்தவ் அணியின் வழக்கமான ஒன்றுதான். அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.</p> <h2>திரிணாமுல் காங்கிரஸ்</h2><p>மறுபுறம் மேற்கு வங்க எதிர்க்கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி தேசியவாத குடிமக்கள் கட்சியில் (NCPI) இணைந்த 20 அதிருப்தி எம்.பிக்களுக்கும் மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா, தனியிடம் ஒதுக்க சம்மதித்துள்ளார்.</p><h2>பலம்</h2><p>தற்போது பாஜகவின் என்டிஏ கூட்டணியின் பலம் 319 ஆக உள்ளது. இந்தியா கூட்டணியின் பலம் 181 ஆகவும், இதர கட்சிகள் பலம் 41 ஆகவும் உள்ளது.</p><p>மக்களவையின் மொத்த பலம் 540 ஆக உள்ள நிலையில் பாராளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (360 வாக்குகள்) தேவைப்படுகிறது.</p> <h2>பாஜக திட்டம்</h2><p>திங்களன்று மழைக்கால கூட்டத்தொடர் கூடும் நிலையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்தும் 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற தனது கூட்டணியின் பலத்தை 360க்கு நெருக்கமாக கொண்டுவர பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.</p><p>மகாராஷ்டிராவில் தனது கூட்டணியில் இருக்கும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் 8 எம்.பிக்களை கொண்ட சரத் பவார் தேசியவாத காங்கிரசையும் இணைக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு சரத் பவார் சம்மதம் தெரிவிக்கலாம் என்றும் ஆனால் மறைந்த அஜித் பவரின் மனைவியும் அவ்வணியின் தலைவியுமான சுனேத்ரா பவார் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இணைப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>சரத் பவாரின் பிரிவு இணைந்தால் என்டிஏவின் வாக்கு எண்ணிக்கை 327 ஆக உயரும்.</p><p>இருப்பினும், 360 என்ற இலக்கை எட்ட இன்னும் 33 வாக்குகள் குறைவாக இருக்கும் என்பதால், சில எதிர்க்கட்சிகளை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகச் செய்ய முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title> மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜி அலுவலகம் இடிப்பு.. திரிணாமுல் காங்கிரஸ் கொந்தளிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/abhishek-banerjee-office-demolished-district-says-office-built-without-approval-bulldozers-raze-structure</link><comments>https://www.maalaimalar.com/news/national/abhishek-banerjee-office-demolished-district-says-office-built-without-approval-bulldozers-raze-structure#comments</comments><guid isPermaLink="false">45e6662d-7a95-47cf-a644-79dec00d4006</guid><pubDate>Sat, 18 Jul 2026 20:18:56 +0000</pubDate><atom:updated>2026-07-18T20:18:56.935Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,trinamool congress,Abhishek Banerjee,அபிஷேக் பானர்ஜி,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/77t1xhoa/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஷேக் பானர்ஜி அலுவலகம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஷேக் பானர்ஜி அலுவலகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/77t1xhoa/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான <a href="https://www.maalaimalar.com/topic/abhishek-banerjee">அபிஷேக் பானர்ஜி</a>யின் அலுவலகம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2> மாவட்ட நிர்வாகம் </h2><p>மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பரகனா மாவட்டத்தின் அம்டலா பகுதியில் இயங்கி வந்த அபிஷேக் பானர்ஜியின் அப்பகுதியின் அலுவலகம் முறையான கட்டிட அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. </p><p>இது தொடர்பாக ஜூன் 30 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து ஜூலை 7 அன்று இரண்டாவது நோட்டீஸும் அனுப்பப்பட்டு, ஜூலை 15க்குள் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவகாசம் வழங்கப்பட்டது.</p> <h2>அபிஷேக் பானர்ஜி தரப்பு</h2><p>வழங்கப்பட்ட இரண்டு நோட்டீஸ்களுக்கும் அபிஷேக் பானர்ஜி தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அவரும் நேரில் ஆஜராகவில்லை. இதன் காரணமாகவே சட்டப்பூர்வமாக இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு இந்த அலுவலகம் இடிக்கப்பட்டது.</p> <h2>திரிணாமுல் காங்கிரஸ் கொந்தளிப்பு</h2><p>அபிஷேக் பானர்ஜி அலுவலகம் இடிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p>திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,</p><p>"இந்தக் கட்டிட விவகாரம் தொடர்பான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது. பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததிலிருந்து வங்காளத்தில் ஒரு புதிய மோசமான கலாச்சாரத்தைப் புகுத்தி வருகிறது. அதுதான் 'புல்டோசர் கலாச்சாரம்'.</p> <p>இன்று நாம் பார்த்தது பாஜகவின் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை. அருவருப்பான, வன்முறை அரசியல் இது. மாநிலத்தில் பாஜகவின் ரவுடி ராஜ்ஜியம் முழுமையாக அரங்கேறி வருகிறது" என்று சாடியுள்ளது.</p><h2>திரிணாமுல் காங்கிரஸ் பூசல்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜி </a>தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்க தேர்தலில் பாஜவிடம் தோற்றது. </p><p>அதன் 80 எம்எல்ஏகளில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்து கட்சியை தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல எம்.பிக்களும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.</p><p>கட்சியில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீது கட்சியில் அதிருப்தி நிலவுகிறது. இந்த சூழலில் அவரின் அலுவலகம் மாவட்ட நிர்வாகத்தால் இடித்து தரைமட்டக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரஷியாவில் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்.. 8 பேர் பலி -  60க்கும் மேற்பட்டோர் படுகாயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/ukraine-drone-strikes-8-killed-and-over-60-injured-as-russian-warehouses-and-oil-depot-hit</link><comments>https://www.maalaimalar.com/news/world/ukraine-drone-strikes-8-killed-and-over-60-injured-as-russian-warehouses-and-oil-depot-hit#comments</comments><guid isPermaLink="false">ef227e75-a597-4c65-b146-899ed12fe8c0</guid><pubDate>Sat, 18 Jul 2026 19:32:12 +0000</pubDate><atom:updated>2026-07-18T19:32:12.335Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,டிரோன் தாக்குதல்,drone attack,Russia-Ukraine war,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hbznf2rv/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  
மாஸ்கோ அருகே சேமிப்பு கிடங்கில் புகை எழும் காட்சி ]]></media:title><media:description type="html"><![CDATA[  
மாஸ்கோ அருகே சேமிப்பு கிடங்கில் புகை எழும் காட்சி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hbznf2rv/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">உக்ரைன் - ரஷியா போர்</a> 5வது ஆண்டாக நீடித்து வரும் நிலையில் ரஷிய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய  டிரோன் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். </p><h2>தாக்குதல் </h2><p>ரஷியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Wildberries நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு சேமிப்புக் கிடங்குகளை உக்ரைன் டிரோன்கள் தாக்கியுள்ளன.</p><p>உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோடோவ்ஸ்க் நகரில் அமைந்திருந்த கிடங்கில் நைட்  ஷிப்ட் வேலை செய்துகொண்டிருந்த 7 தொழிலாளர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.</p><p>மாஸ்கோவிற்கு கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிடங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். அங்கு 24 பேர் காயமடைந்தனர். </p><p>இந்தத் தாக்குதலின் போது சிதறிய டிரோன் பாகங்கள் அருகில் இருந்த ஒரு மழலையர் பள்ளி கட்டிடத்திலும் விழுந்து தீ விபத்தை ஏற்படுத்தியது.</p><p>எலெக்ட்ரோஸ்டல் நகருக்கு வடக்கே உள்ள நோகின்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய எண்ணெய் கிடங்கையும் உக்ரைன் டிரோன்கள் தகர்த்தன. </p><p>அங்கு ஏற்பட்ட பயங்கர தீ மற்றும் நச்சுப் புகை காரணமாக, அதற்கு மிக அருகில் இருந்த மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.</p><p>மேலும், மாஸ்கோவிற்கு கிழக்கே 180 கி.மீ தொலைவில் உள்ள விளாடிமிர் நகரிலும் ஒரு குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அங்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.</p> <h2>ஜெலென்ஸ்கி விளக்கம்</h2><p>இந்தத் தாக்குதல்கள் குறித்துத் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests">ஜெலென்ஸ்கி</a>,</p><p>"மாஸ்கோ மற்றும் தம்போவ் பிராந்தியங்களில் உள்ள ரஷியாவின் இரண்டு மிக முக்கியமான தளவாட மையங்களை எங்களது நீண்ட தூர ஏவுகணைகள் வெற்றிகரமாகத் தாக்கியுள்ளன.</p><p>இந்த இடங்களை ரஷியா வெறும் வணிகக் கிடங்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக, சர்வதேச தடைகளை மீறி ராணுவ டிரோன்கள் மற்றும் நேவிகேஷன் கருவிகளை தயாரிப்பதற்கான உதிரிபாகங்களை விநியோகிக்கும் மையங்களாகவே பயன்படுத்தி வந்தது. அதனாலேயே இவை அழிக்கப்பட்டன" என்று தெரிவித்துள்ளார்.</p><p>ரஷியாவின் 19 பிராந்தியங்கள் மற்றும் கிரிமியா, அசோவ் கடல் மற்றும் கருங்கடல் பகுதிகளில் உக்ரைனின் 379 டிரோன்களை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சோனம் வாங்சுக்-ஐ வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றது தவறு - ராகுல் காந்தி 
 </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-rahul-gandhi-condemns-forced-removal-of-sonam-wangchuk</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-crackdown-rahul-gandhi-condemns-forced-removal-of-sonam-wangchuk#comments</comments><guid isPermaLink="false">8305960d-2a34-43bc-9f68-9df481d32ff6</guid><pubDate>Sat, 18 Jul 2026 18:55:16 +0000</pubDate><atom:updated>2026-07-18T18:55:16.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,hunger strike,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hvjolzhq/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hvjolzhq/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி போலீசார் சோனம் வாங்சுக்கை போராட்டக் களத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியதற்கு  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்  தெரிவித்துள்ளார். </p><h2>போராட்டம் </h2><p> நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் அபிஜித் தீப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p> <h2>சோனம் வாங்சுக்</h2><p>இதில் கடந்த 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised">சோனம் வாங்சுக் </a>உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் வலுக்கட்டாயமாக டெல்லி போலீசாரால் சப்தர்ஜங்மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.</p><p>சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.</p> <h2>ராகுல் காந்தி</h2><p>சோனம் வாங்சுக் 20 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த போதிலும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி</a> எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.</p><p>இந்நிலையில் ராகுல் காந்தி முதல் முறையாக இவ்விவகாரத்தில் பொதுவெளியில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.</p> <p>அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,</p><p>"நாட்டில் கல்விக் கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கும், போட்டித் தேர்வுகளை நடத்துவதில் அரங்கேறி வரும் முறைகேடுகளுக்கும் எதிராக நடக்கும் இந்தப் போராட்டம், இந்தியாவின் ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது.</p><p>அமைதியான முறையில் நடந்த போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு, சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றியிருப்பது, உண்மை மற்றும் அகிம்சையின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது.</p><p>அநாகரிகமும் வன்முறையும்தான் இந்த மோடி அரசின் முதன்மையான கொள்கைகளாக மாறிவிட்டன.</p><p>ஆனால், எந்தவிதமான அதிகார பலத்தாலும் இந்திய மாணவர்களின் மன உறுதியை நசுக்கிவிட முடியாது. மாணவர்களின் உரிமைக்காகப் போராடுபவர்களையோ அல்லது அவர்களின் மேல் நம்பிக்கை கொண்டு ஆதரவளிக்கும் எங்களைப் போன்றவர்களையோ இத்தகைய மிரட்டல்களால் பின்வாங்கச் செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>VIDEO: நீலம் எனது நிறம்..ஜெய் பீம்!.. பெண் தன் மீது மை வீசியது குறித்து அபிஜித் தீப்கே கருத்து  
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-ink-attack-woman-throws-black-ink-at-abhijit-deepke-during-jantar-mantar-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-ink-attack-woman-throws-black-ink-at-abhijit-deepke-during-jantar-mantar-agitation#comments</comments><guid isPermaLink="false">790ce7f0-acae-488c-9098-ce54794f0859</guid><pubDate>Sat, 18 Jul 2026 18:05:31 +0000</pubDate><atom:updated>2026-07-18T18:05:31.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP,அபிஜித் தீப்கே,Abhijit Dipke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/osdcjcjo/abijith-deepke.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Abhijit Deepke]]></media:title><media:description type="html"><![CDATA[ Abhijit Deepke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/osdcjcjo/abijith-deepke.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது பெண் ஒருவர் மை வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>போராட்டம் </h2><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் அபிஜித் தீப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p> <h2>வாங்சுக் நிலைமை</h2><p>இதில் கடந்த 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised">சோனம் வாங்சுக்</a> உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் வலுக்கட்டாயமாக டெல்லி போலீசாரால் சப்தர்ஜங்மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.</p><p>இதனால் போராட்டக் களத்தில் இன்று முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. தானும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக தீப்கே அறிவித்தார்.</p> <h2>மை வீச்சு</h2><p>இதனையே தீப்கே போராட்டக்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து வந்த பெண் ஒருவர் திடீரென மேடைக்கு அருகில் வந்து, தான் வைத்திருந்த கருப்பு மையை அபிஜித் தீப்கே மீது வீசினார்.</p><p>இதனால் அதிர்ச்சியடைந்த தீப்கேவின் ஆதரவாளர்கள் உடனடியாக அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தினர்.</p><p>அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சிறிது நேரம் தடைபட்ட போராட்டம், பின்னர் மீண்டும் தொடர்ந்தது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">STORY | Chaos at Jantar Mantar as woman throws ink-like liquid at CJP founder Abhijeet Dipke<br><br>Chaos erupted at Jantar Mantar on Saturday after a woman threw an ink-like liquid at Cockroach Janata Party (CJP) founder Abhijeet Dipke while he was addressing a gathering at the… <a href="https://t.co/KW2forKlnx">https://t.co/KW2forKlnx</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2078394809807741435?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>வைரலாகும் வீடியோ</h2><p>மை வீசப்பட்ட இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.</p><p>ஒரு பெண் திடீரென மேடையில் ஏறி மையை வீசுவதும், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.</p> <h2>தீப்கே பதிலடி</h2><p>இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்த அபிஜித் தீப்கே, 'நீலம் எனது நிறம்... ஜெய் பீம்!' என்று பதிவிட்டுள்ளார்.</p><p>இதனிடையே சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அகமதாபாத் பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 தொழிலாளர்கள் பலி, 12 பேர் காயம் </title><link>https://www.maalaimalar.com/news/national/ahmedabad-fireworks-factory-blast-8-workers-killed-12-injured-in-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/ahmedabad-fireworks-factory-blast-8-workers-killed-12-injured-in-gujarat#comments</comments><guid isPermaLink="false">7e6c3696-b636-4944-9cde-2f23af8c0b79</guid><pubDate>Sat, 18 Jul 2026 17:02:56 +0000</pubDate><atom:updated>2026-07-18T17:02:56.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ahmedabad,தொழிலாளர்கள்,பட்டாசு ஆலை விபத்து,Workers,Firecracker Factory Accident,அகமதாபாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/siye69wq/Ahmedabad-firecracker-factory-accident.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Ahmedabad firecracker factory accident]]></media:title><media:description type="html"><![CDATA[ Ahmedabad firecracker factory accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/siye69wq/Ahmedabad-firecracker-factory-accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பட்டாசு ஆலையில்</a> ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி  8 தொழிலாளர்கள் பரிதாபகமாக உயிரிழந்தனர்.  12 பேர் காயமடைந்தனர். </p><h2>விபத்து </h2><p>குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மஹ்மூத்புரா  பகுதியில் இயங்கி வந்த மெஹுல் தோடியா என்பவருக்கு சொந்தமான டேலண்ட் பயர்ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில்  இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. </p><p>தொழிலாளர்கள் இன்று பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் தப்பிக்க முடியாமல் ஆலைக்குள்ளேயே சிக்கினர். </p><p> விபத்து குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். </p><p>காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.</p><h2>மேயர்</h2><p>விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட அகமதாபாத் மேயர் ஹிதேஷ் பாரோட் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த பட்டாசு தொழிற்சாலை ஒரு தற்காலிக குடிசை போன்ற இடத்தில் இயங்கி வந்துள்ளது. அதுவே தீ மிக வேகமாகப் பரவக் காரணமாக அமைந்துள்ளது" என்று தெரிவித்தார்.</p> <h2>மோடி இரங்கல்</h2><p>அகமதாபாத் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,</p><p>"குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மக்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் யாவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடனேயே உள்ளன.</p><p>காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.</p><p>இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000-மும் நிவாரண தொகையாக வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-july-2026#comments</comments><guid isPermaLink="false">326d3728-e557-46b7-b4d5-7103447d079d</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:01:41 +0000</pubDate><atom:updated>2026-07-18T16:38:53.081Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-delhi-travel-on-august-4th">வைகோவின் புத்தக வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 4-ல் முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f04f11ed-9f6a-4154-9bc9-00e3cdf82551">உலகக் கோப்பை கால்பந்து: 3ம் இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்- இங்கிலாந்து நாளை மோதல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/8a8f042c-3464-4915-b85c-75f85f017832">உலகக் கோப்பை போட்டி: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/318ca44a-4f38-4c04-a47c-3f4e8ce7c27b">"தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்"- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-removed-from-jantar-mantar-taken-to-hospital">21 நாளாக உண்ணாவிரதம்: மோசமடைந்த உடல்நிலை - சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/212b730d-ea3e-4a1c-8952-40f3d28b929b">விசுவாசத்தின் உச்சம் - எஜமானியை காப்பாற்ற பாம்பிடம் போராடி உயிரை மாய்த்த நாய்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/eee1b286-2e36-4f14-bc4e-280d83d03343">"தமிழ்த் தாயின் ஏக்கம் தீரப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள்"- மு.க.ஸ்டாலின் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b4109ef3-619f-4627-a14f-04da6a8ab601">அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி த.வெ.க-வில் இருந்து நீக்கம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project">‘மேகாலயா புராஜெக்ட்’ என்ற பெயரில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/97077370-3769-42aa-bed7-5394eb95d5ed">பழனி கோவில் நில மோசடியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம்- தி.மு.க. பிரமுகர் வீடுகளில் அதிரடி சோதனை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/17b67fab-0203-48b8-a4ee-a828e7849f47">ஊதியம் வழங்குவதற்கு கூட பணமின்றி சிஎம்டிஏ திவாலானது ஏன்?: வெள்ளை அறிக்கை வேண்டும்!- அன்புமணி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/453aaabb-a60c-4c23-b7e8-5a5b9dab6b35">GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/28a7888e-529f-477f-b5ba-75e342b4fb10">“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்! - கனிமொழி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f48dea31-2cc2-475e-93ea-d7d9b8d81dc0">தொழில்நுட்ப கோளாறு - தனியார் ராக்கெட் விக்ரம்-1 புறப்பாடு தாமதம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/36b5d85b-9ebf-4a4d-8f31-ca6fa859566e">இன்று பிறந்தநாள்: தமிழக அமைச்சர் என்.ஆனந்துக்கு வாழ்த்து தெரிவிக்க குவிந்த தவெக தொண்டர்கள்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b7908e4e-b021-4e94-8d2b-4b33d250653c">வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/65bbec77-2ae2-44ec-98ec-8372cc7edcc5">"என்னை நீக்க அதிகாரம் இல்லை"- தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பேட்டி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/981434e0-9e28-4646-8907-cfe4006ccd91">மக்கள் தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுயமாக விவரங்கள் பதிவு செய்யும் வழிமுறைகள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised">சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி: சப்தர்ஜங் ஊழியர்களுடன் அவரது மனைவி வாக்குவாதம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4811dc25-2c86-4bfd-b81e-5b7fa9d437f0">"தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது"- பிரதமர் மோடி பெருமிதம்!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/fbcc60cb-9c96-4736-a8a0-73f9a9f2cd82">அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tnpsc-group-1-prelims-exam-date-changed">குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்.. எப்போது தெரியுமா? TNPSC அறிவிப்பு!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1b7987f5-57c1-4c96-8c20-0e991acefc96">பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 7 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வியூகம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shashi-tharoor-stuck-in-lift-rescued-by-kerala-fire-force">லிஃப்டில் சிக்கிய சசி தரூர் எம்பி: ஹைட்ராலிக் கருவி மூலம் பத்திரமாக மீட்ட கேரள தீயணைப்புத்துறை!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4547580d-f3aa-4b70-94e7-298a4f75e60a">ஆகஸ்டு முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்- முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/abd1ce03-d51e-4923-9fc7-6a37271f030c">சமூக நீதி விடுதிகளில் முதலமைச்சர் விஜய் நேற்று ஆய்வு- இன்று அதிரடி உத்தரவுகள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-in-india-no-more-torn-or-wet-money">பணம் இனி கிழியாது நனையாது:இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a1905b8b-554c-48bf-aca2-8242011846d7">கோவில் நில விவகாரத்தில் என் பெயரை இழுப்பதா?- அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/147-girls-hospitalised-after-hostel-meal-in-gujarat">குஜராத் அரசு பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி சாப்பிட்ட 147 மாணவிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/3e8b7f29-d0cd-48a9-b2ad-05756d3c3644">"மின் வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்"- பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sir-activities-supreme-court">வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படுவதற்கும் குடியுரிமை இழப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை-உச்ச நீதிமன்றம்...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/engvsind-lords-washington-out-of-indias-third-odi-against-england">லார்ட்ஸ் ஒருநாள் போட்டி: வாஷிங்டன் சுந்தர் விளையாடமாட்டார் என அறிவிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-blames-us-as-two-tankers-hit-mines-in-hormuz">அமெரிக்கா காட்டிய வழித்தடம்; கண்ணிவெடியில் சிக்கிய 2 கப்பல்கள்: ஈரான் குற்றச்சாட்டு!...</a></p><p>திரைப்படை துறையில் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு தேசிய விருது வழங்ககி கவுரவிக்கும். அந்த வகையில் 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருது இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/embassy-warning-over-marriage-scams">சீனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தூதரகம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-order-online-registration-of-students-aadhaar-and-caste-details">மாணவர்களின் ஆதார், சாதி விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவு!-பள்ளிக் கல்வித்துறை...</a></p><p>சிறந்த இயக்குநர் (திரைப்படம் அல்லாத படங்கள்):</p><p>Ekta Ka Prateek ஏக்தா கா பிரதீக் என்ற இந்தி படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய்</p><p>சிறந்த குறும்படம் (திரைப்படம் அல்லாத படங்கள்):</p><p>மராத்தி படம் ஹம்சஃபார் (Hamsafar)</p><p>சிறந்த அனிமேசன் (திரைப்படம் அல்லாத படங்கள்):</p><p>ஜோஷி பெனிடிக் இயக்கிய Touched as Water.</p><h2>சிறந்த பாராட்டுக்குரிய படம் (Special Mention): மெய்யழகன்</h2><h2>சிறந்த தமிழ் படம்: தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன்</h2><h2>சிறந்த மலையாள படம்: பாசில் முகமதுவின் ஃபெமினிச்சி ஃபாத்திமா</h2><h2>சிறந்த சண்டை பயிற்சியாளர்: மகாராஜா படம்- அனல் அரசு</h2><h2>சிறந்த எடிட்டர்:</h2><p>அமரன் படத்திற்கு சிறந்த எடிட்டிங்- ஆர். கலைவண்ணன்</p><h2>பின்னணி இசை:</h2><p>அமரன் படத்திற்கு ஜி.பி. பிரகாஷ் குமார்</p><h2>சிறந்த இயக்குநர்:</h2><p>அமரன் படம்: ராஜ்குமார் பெரியசாமி</p><h2>சிறந்த நடிகர்:</h2><p>மம்மூட்டி- பிரம்மயுகம்</p><p>கார்த்திக் ஆர்யன்- சந்து சாம்பியன்</p><h2>சிறந்த நடிகை</h2><p>யமி கவுதம்- ஆர்ட்டிக்கிள் 370</p><h2>சிறந்த துணை நடிகை:-</h2><p>சாசனா நமிதாஸ்- மகாராஜா</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/maharaja-film-wins-two-national-awards">‘மகாராஜா’ திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள்..</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/amaran-wins-three-national-film-awards">3 தேசிய விருதுகளுடன் மகுடம் சூடிய 'அமரன்'!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhanush-wins-best-actor-72nd-national-film-awards-meiyazhagan-special-mention">72-வது தேசிய திரைப்பட விருதுகள்: தனுஷிற்கு சிறப்பு அங்கீகாரம்; 'மெய்யழகன்' படத்திற்குப் பாராட்டு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/72nd-national-awards-mammootty-crowned-best-actor">72-வது தேசிய விருதுகள்: சிறந்த நடிகராக மகுடம் சூடினார் மம்மூட்டி!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/pushpa-2-bags-two-national-film-awards">2 தேசிய விருதுகளைத் தன்வசமாக்கிய 'புஷ்பா 2' திரைப்படம்!... </a></p>]]></content:encoded></item><item><title>மெஸ்சியை கண்டு அஞ்சாதீர்கள்.. அவரை முற்றிலுமாக முடக்குவது சாத்தியமற்றது: பயிற்சியாளர் அறிவுரை</title><link>https://www.maalaimalar.com/sports/football/it-is-impossible-to-completely-shut-down-messi-do-not-fear-him-spanish-coach-advises</link><comments>https://www.maalaimalar.com/sports/football/it-is-impossible-to-completely-shut-down-messi-do-not-fear-him-spanish-coach-advises#comments</comments><guid isPermaLink="false">2bf558bc-1f86-477e-8646-1a857d131252</guid><pubDate>Sat, 18 Jul 2026 16:17:14 +0000</pubDate><atom:updated>2026-07-18T16:17:14.589Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Messi,மெஸ்சி,ஃபிஃபா உலகக் கோப்பை,FIFA 2026,argentina vs spain</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/393je2pm/Untitled-design-32.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iniesta says Spain’s own game matters more than marking Messi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/393je2pm/Untitled-design-32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் நாளை நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், அர்ஜென்டினா வீரர் மெஸ்சியை முற்றிலுமாகத் தடுக்க முயற்சி செய்து உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள் என்று பயிற்சியாளர் ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா ஸ்பேயின் அணிக்கு ஒரு தெளிவான அறிவுரையை வழங்கினார்.</p><p>ஸ்பெயினின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் திறவுகோல் மெஸ்சியை செயலிழக்க செய்வதில் இல்லை என்றும், மாறாக ஸ்பெயினின் தனித்துவமான அடையாளத்தைக் கடைப்பிடித்து, பந்தை அதிக நேரம் தன்வசம் வைத்திருப்பதிலும்தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.</p><p>நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, இத்தொடரில் அதிக கோல் அடித்த அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. </p><p>மேலும், மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை போட்டியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மீண்டும் ஒருமுறை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் ஆவலாக உள்ளார்.</p><p>39 வயதான அவர் ஏற்கனவே எட்டு கோல்களை அடித்துள்ளார். அதே சமயம், ஸ்பெயின் அணி ஏழு போட்டிகளில் தோல்வியடையாமல், ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது.</p><p>இந்நிலையில் ஸ்பெயின் அணியின் முன்னாள் வீரர் இனியெஸ்டா அளித்த பேட்டியில், மெஸ்சியை முற்றிலுமாக அமைதியாக்குவது எந்தவொரு அணிக்கும் ஒரு யதார்த்தமற்றது என்று கூறினார்.</p><p>இதுகுறித்து மேலும் கூறிய அவர், “அவரை முற்றிலுமாக முடக்குவது சாத்தியமற்றது. ஸ்பெயின் தங்களது ஆட்டத்தின் மூலம், வாய்ப்புகளை உருவாக்கி கிடைக்கும் நேரத்தில் துல்லியமாகச் செயல்பட வேண்டும்.</p><p>ஒவ்வொரு போட்டியிலும் மெஸ்சி காட்டும் உறுதி, விடாமுயற்சி மற்றும் அவர் செய்யும் எல்லாவற்றையும் நாம் தலைவணங்கித்தான் ஆக வேண்டும்.</p><p>மெஸ்சியை கட்டுப்படுத்துவதை மட்டுமே ஒரு வியூகமாக பார்க்காமல் இருக்க வேண்டும். தங்களை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற கால்பந்து பாணியை ஸ்பெயின் நம்ப வேண்டும்.</p><p>உங்கள் ஆட்டத்தை நம்புங்கள், மெஸ்சியைக் கண்டு அஞ்சாதீர்கள். ஸ்பெயின் அணியை பொறுத்தவரை யார் கோல் அடித்தாலும் எனக்குக் கவலையில்லை. முன்பை போலவே நாம் சாம்பியன்களாக வெளியேறுவதுதான் முக்கியம்.</p><p>வெற்றி கோலாக அது அமைந்தால் மட்டும் போதும், யார் கோல் அடிக்கிறார்கள் என்பது இரண்டாம் பட்சம்தான்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘சூர்யா 47’ படப்பிடிப்பு நிறைவு... வீடியோ வெளியிட்டது படக்குழு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/surya-47-shoot-wraps-production-company-releases-footage-online</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/surya-47-shoot-wraps-production-company-releases-footage-online#comments</comments><guid isPermaLink="false">6abb43b8-ffdc-4642-9825-7b1f5cd2f539</guid><pubDate>Sat, 18 Jul 2026 15:45:56 +0000</pubDate><atom:updated>2026-07-18T15:45:56.506Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jithu madhavan,ஜித்து மாதவன்,நடிகர் சூர்யா,actor surya,சூர்யா 47,Surya 47</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ue2cu3fn/Untitled-design-31.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Surya 47 Shoot Wrapped]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ue2cu3fn/Untitled-design-31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>சூர்யா 47:</strong></h3><p>மலையாளத்தில் ஆவேஷம் படத்தை இயக்கிய ஜித்து மாதவனுடன் நடிகர் சூர்யா இணைந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 47 எனப் பெயிரிடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட்டான கருப்பு திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் சூர்யா நடித்துள்ள படப்பிடிப்பின் சில காட்சியை படக்குழுவினர் வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.</p><p>இதுகுறித்து ழகரம் தயாரிப்பு நிறுவம், தனது இன்ஸ்டா பக்கத்தில், #சூர்யா47 படப்பிடிப்பு நிறைவு என்று குறிப்பிட்டு, ‘தி ஒன்’ சூர்யாவுடன் திரையரங்குகளில் சந்திப்போம் என்று பதிவிட்டுள்ளது.</p><p>நடிகர் சூர்யாவுடன் மலையாளத்தில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த ‘ரோமன்சம்’ மற்றும் ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய, இயக்குநர் ஜித்து மாதவன் முதல்முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.</p> <figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Da2pRpMBMkc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Da2pRpMBMkc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Da2pRpMBMkc/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Zhagaram Studios (@zhagaramoffl)</a></p></div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script></figure> <p>இயக்குநர் ஜித்துவின் தனித்துவமான நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் கச்சிதமான பொழுதுபோக்கு மசாலா கலந்த, ஒரு மாஸ் என்டர்டெய்னர் படமாக இப்படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>சூர்யா வழக்கத்திற்கு மாறான, வித்தியாசமான ஒரு காவல்துறை அதிகாரியாக ஒரு குழுவை வழிநடத்துவார் என்றும் கூறப்படுகிகிறது.</p><p>‘சூர்யா 47' படத்தில், முன்னணி கதாநாயகியான நஸ்ரியா நசிம் மற்றும் அஸ்லென் கே. கஃபூர் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களுடன் ஜான் விஜய் மற்றும் ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டிரம்பின் பதிவுகளை விரைவாக பெற ரூ. 1 கோடி கட்டணம்: ட்ரூத் சோசியல் நிறுவனம் முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/world/truth-social-monthly-1-crore-fee-speeds-up-posts</link><comments>https://www.maalaimalar.com/news/world/truth-social-monthly-1-crore-fee-speeds-up-posts#comments</comments><guid isPermaLink="false">27e8d58c-4be9-4efe-840f-c71a2a7bebce</guid><pubDate>Sat, 18 Jul 2026 14:49:08 +0000</pubDate><atom:updated>2026-07-18T14:49:08.377Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TRUTH Social,Truth API,Wall Street,ட்ரூத் சோஷியல்,ட்ரூத் ஏபிஐ,வால் ஸ்ட்ரீட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/pezb0a0n/Untitled-design-30.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Wall Street resists paying ₹1 crore for Truth Social]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/pezb0a0n/Untitled-design-30.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>ட்ரூத் சோஷியல் பதிவுகளை விரைவாக பெற கட்டணம்:</strong></h3><p>அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதிவுகளை விரைவாக பெற ஒரு கோடி ரூபாய் வரை வசூலிக்க அவரின் ட்ரூத் சோசியல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.</p><p>அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக விதிமுறைகளை மீறியதாக எக்ஸ் தளம் (அப்போது டுவிட்டர்) டொனால்டு டிரம்பை பிளாக் செய்தது. இதனால் அவர் சொந்தமாக ட்ரூத் சோசியல் என்ற செயலியை உருவாக்கி அதில் செய்திகளை பதிவிட்டு வருகிறார்.</p><p>அவர் வெளியிடும் சில பதிவுகள் அமெரிக்கா மற்றும் உலகளவில் உள்ள பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, மற்ற நாடுகள் மீது விதித்த வரிகளை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு செய்தது. </p><p>அப்போது வர்த்தகத்தில் பங்குகளை வாங்குவதற்கு சிறந்த நேரம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் அந்த நேரத்தில் பங்குகளை வாங்கியவர்கள் மிகப்பெரிய அளவில் பயனடைந்தனர்.</p><p>பின்னர், ஈரான் உடன் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஈரானுடன் மிகவும் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் நடந்தன என்று பதிவிட்டார். </p><p>இதனால் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தன. மற்ற நிறுவனங்களின் பங்குகள் வளர்ச்சியை நோக்கி சென்றன.</p><p>இதனால் டிரம்பின் ஒவ்வொரு பதிவும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மிகமிக முக்கியமானதாக அமைகிறது. </p><p>அவருடைய பதிவு மில்லி விநாடிகளில் கிடைத்தால், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பங்கு சந்தையில் சிறப்பாக செயல்பட முடியும். இல்லையென்றால் பணத்தை இலக்க நேரிடும்.</p><p>ட்ரூத் சோசியல் மீடியாவில் இருந்து மற்றவர்களுக்கு டிரம்பின் பதிவை விரைவாக ட்ரூத் ஏபிஐ தரவு சேவை வழங்கி வருகிகிறது.</p><p>ட்ரூத் ஏபிஐ மூலம் டிரம்பின் பதிவை மில்லி விநாடிகளில் பெற முடியும். இதனால் பெரும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்த ட்ரூத் ஏபிஐ வாங்குவது அவசியமாகிறது.</p><p>இதனால் இதற்கு மாதத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை வசூலிக்க டிரம்ப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.</p><p>மேலும் மூன்றாண்டுத் திட்டத்தில் இணைந்தால், மாதத்திற்கு சுமார் ரூ.60 லட்சம் வரை தள்ளுபடி எனவும் முன்மொழியப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>2 தேசிய விருதுகளைத் தன்வசமாக்கிய &apos;புஷ்பா 2&apos; திரைப்படம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/pushpa-2-bags-two-national-film-awards</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/pushpa-2-bags-two-national-film-awards#comments</comments><guid isPermaLink="false">49dafb1a-1e60-45cb-ac44-783e8e5f4d6b</guid><pubDate>Sat, 18 Jul 2026 14:16:03 +0000</pubDate><atom:updated>2026-07-18T14:16:03.759Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அல்லு அர்ஜுன்,allu arjun,National Awards,தேசிய விருதுகள்,புஷ்பா 2,sukumar,Pushpa2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/cq2bvsy4/pusba.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pushpa-2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/cq2bvsy4/pusba.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் புதுடெல்லியில் 72-வது தேசிய திரைப்பட விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'புஷ்பா 2: தி ரூல்'திரைப்படம் இரண்டு முக்கிய பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.</p><h2><strong>சிறந்த ஆடை வடிவமைப்பு:</strong></h2><p>படத்தில் நடித்த கதாபாத்திரங்களின் தோற்றங்களையும், ஆடை வடிவமைப்புகளையும் நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் உருவாக்கியதற்காக ஆடை வடிவமைப்பாளர்கள் 'ஷீத்தல் சர்மா' மற்றும் 'தீபாலி நூர்'  ஆகியோருக்கு 'சிறந்த ஆடைவடிவமைப்பாளர்'க்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சிறந்த அசல் திரைக்கதை:</strong></h2><p>ஆடை வடிவமைப்பு மட்டுமின்றி, இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுகுமாருக்கு, 'புஷ்பா 2' படத்தின் சிறந்த திரைக்கதைக்காக 'சிறந்த அசல் திரைக்கதை' (Best Original Screenplay) விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாக்களுக்கு இந்த 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>72-வது தேசிய விருதுகள்: சிறந்த நடிகராக மகுடம் சூடினார் மம்மூட்டி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/72nd-national-awards-mammootty-crowned-best-actor</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/72nd-national-awards-mammootty-crowned-best-actor#comments</comments><guid isPermaLink="false">e0bf1a02-b39a-4d49-97a9-c92aa2d3d7b5</guid><pubDate>Sat, 18 Jul 2026 13:54:17 +0000</pubDate><atom:updated>2026-07-18T13:54:17.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்மூட்டி,Mammootty,National Awards,தேசிய விருதுகள்,Bramayugam,பிரம்மயுகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/3qjdy0kz/prammayuga.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ prammayugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/3qjdy0kz/prammayuga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று புதுடெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுப் பட்டியலில் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகினர் பல முக்கியப் பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.</p><h2><strong>சிறந்த நடிகர்- மம்மூட்டி:</strong></h2><p> 'பிரம்மயுகம்'  திரைப்படத்தில் ஆற்றிய அசாத்தியமான மற்றும் மிரட்டலான நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மம்மூட்டி வென்றுள்ளார்.</p><h2><strong>சிறந்த நடிகை-யாமி கௌதம்</strong></h2><p>'ஆர்ட்டிகள் 370' படத்திற்காக பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகை யாமி கௌதம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.</p><h2><strong>சிறந்த திரைக்கதை வசனம்-வெங்கி அட்லூரி:</strong></h2><p>வெங்கி அட்லூரி- துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் வசனத்திற்காக இவ்விருதை வென்றுள்ளார்.</p><h2><strong>கல்கி 2898 AD:</strong> </h2><p>சிறந்த பொழுதுபோக்கு திரைப்படப் பிரிவில் (தெலுங்கு) பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 AD' படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சிறந்த பின்னணிப் பாடகி:</strong></h2><p>மலையாளத் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக பிரபல பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><h2><strong>சிறந்த மலையாளத் திரைப்படம்:</strong> </h2><p>இயக்குநர் ஃபாசில் முகமதுவின் 'பெமினிச்சி பாத்திமா' என்ற படத்திற்கு சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘மகாராஜா’ திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள்..</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/maharaja-film-wins-two-national-awards</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/maharaja-film-wins-two-national-awards#comments</comments><guid isPermaLink="false">bac9875b-76d4-409f-863a-ac6a08652b87</guid><pubDate>Sat, 18 Jul 2026 13:51:44 +0000</pubDate><atom:updated>2026-07-18T13:51:44.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>maharaja,தேசிய திரைப்பட விருது விழா,SachanaNamidass,AnalArasu,NationalAwards</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/h4shdnxv/Maharaja-Movie-NationalAwards" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharaja  Movie NationalAwards]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/h4shdnxv/Maharaja-Movie-NationalAwards?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் 2024 ஆண்டு வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் ₹100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த ‘மகாராஜா’ திரைப்படம், தற்போது தேசிய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது</p><p>இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று புதுடெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. </p><p>சிறந்த திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.</p><h2>சிறந்த குணச்சித்திரை நடிகை</h2><p>சிறந்த குணச்சித்திரை நடிகைக்கான தேசிய விருது 'மகாராஜா' திரைப்படத்திற்காக 'சாச்சனா நமிதாஸுக்கு' வழங்கப்பட்டது.</p> <h2>சிறந்த சண்டை பயிற்சியாளர்</h2><p>சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான தேசிய விருதை 'மகாராஜா' திரைப்படத்திற்காக அனல் அரசுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>3 தேசிய விருதுகளுடன் மகுடம் சூடிய &apos;அமரன்&apos;!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/amaran-wins-three-national-film-awards</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/amaran-wins-three-national-film-awards#comments</comments><guid isPermaLink="false">543247b9-dd67-49d2-a4e2-b9ed0be89def</guid><pubDate>Sat, 18 Jul 2026 13:13:07 +0000</pubDate><atom:updated>2026-07-18T13:13:07.884Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய திரைப்பட விருது விழா,அமரன்,Amaran,தமிழ் சினிமா,Tamil Cinema,National Awards</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ynpr954p/amaran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ amaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ynpr954p/amaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று புதுடெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.</p><p>இந்த விருதுப் பட்டியலில் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகினர் பல முக்கியப் பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். இதில், கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற அமரன் திரைப்படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.</p><h2><strong>சிறந்த இயக்குநர்-ராஜ்குமார் பெரியசாமி:</strong></h2><p>மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கிய 'அமரன்' திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை ராஜ்குமார் பெரியசாமி தட்டிச் சென்றுள்ளார்.</p><h2><strong>சிறந்த பின்னணி இசை-ஜி.வி.பிரகாஷ் குமார்:</strong></h2><p> 'அமரன்' திரைப்படத்திற்கு ஆக்ரோஷமும் காதலும் கலந்த உலகத்தரம் வாய்ந்த பின்னணி இசையை வழங்கியதற்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.</p><h2><strong>சிறந்த எடிட்டிங்-ஆர்.கலைவாணன்:</strong></h2><p>'அமரன்' திரைப்படத்தின் நேர்த்தியான படத்தொகுப்பிற்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதைப் பெறுகிறார் ஆர்.கலைவாணன்.</p>]]></content:encoded></item><item><title>72-வது தேசிய திரைப்பட விருதுகள்: தனுஷிற்கு சிறப்பு அங்கீகாரம்; &apos;மெய்யழகன்&apos; படத்திற்குப் பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhanush-wins-best-actor-72nd-national-film-awards-meiyazhagan-special-mention</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhanush-wins-best-actor-72nd-national-film-awards-meiyazhagan-special-mention#comments</comments><guid isPermaLink="false">069f27ac-77ab-43f6-94fd-9daba8a58d7b</guid><pubDate>Sat, 18 Jul 2026 12:53:24 +0000</pubDate><atom:updated>2026-07-18T12:53:24.036Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய திரைப்பட விருது விழா,Dhanush,National Awards,மெய்யழகன்,meiyazhagan,Naren</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ces9llok/rayan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ meiyazhagan-dhanush
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ces9llok/rayan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று புதுடெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.</p><p>2024 ஆம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் இதில் வழங்கப்படுகின்றன. அதில், மகாராஜா, மெய்யழகன், அமரன் போன்ற திரைப்படங்களும், மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ், பிரம்யுகம், மற்றும் தெலுங்கில் கல்கி போன்ற படங்களும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வெல்லும் கடுமையான போட்டியில் முன்னிலையில் இருந்து வந்தன.</p><h2><strong>சிறப்பு விருது (ஒலிக்கலவை):</strong></h2><p>இந்நிலையில் தமிழ் திரைப்படமான 'மெய்யழகன்' (special mention) படத்திற்காக 'சுரேன்'க்கு சிறப்பு விருது (Sound Design) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட மத்திய நடுவர் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் படங்களை மதிப்பீடு செய்து இந்த விருதுகளைத் தேர்வு செய்துள்ளனர்.</p><h2><strong>சிறந்த நடிகர் தனுஷ்:(</strong>கேப்டன் மில்லர்<strong>)</strong></h2><p>2024 ம் ஆண்டு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான(special mention) தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சிறந்த தமிழ் படம்:(</strong>ராயன்<strong>)</strong></h2><p>தமிழில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்திற்கு சிறந்த  தமிழ் படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தூதரகம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/embassy-warning-over-marriage-scams</link><comments>https://www.maalaimalar.com/news/world/embassy-warning-over-marriage-scams#comments</comments><guid isPermaLink="false">efc00e92-672f-41e4-9ccf-22f6a1d179c0</guid><pubDate>Sat, 18 Jul 2026 12:35:04 +0000</pubDate><atom:updated>2026-07-18T12:35:04.197Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ChineseEmbassy,சீன தூதரகம்,WomenTrafficking,ChinaGenderImbalance,MarriageScam,DeathPenaltyWarning</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/5j1tp6lp/ChineseEmbassy" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ChineseEmbassy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/5j1tp6lp/ChineseEmbassy?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவில் நிலவும் மக்கள் தொகை சமமின்மை காரணமாக, அந்நாட்டு ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களைப் பணம் கொடுத்துத் திருமணம் செய்யும் சட்டவிரோத மேட்ரிமோனி மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. </p><p>இதனைக் கட்டுப்படுத்த வங்கதேசத்தில் உள்ள சீனத் தூதரகம் தற்போது தனது நாட்டு குடிமக்களுக்கு அதிரடியான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.</p><h2>ஏன் இந்தத் திருமண மோசடிகள்?</h2><p>சீனாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெண்களை விட திருமண வயதில் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை சுமார் 1.75 கோடி அதிகமாக உள்ளது. இதனால் சீன ஆண்களுக்குத் தகுந்த வரன் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. </p><p>இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சில போலி மேட்ரிமோனி ஏஜென்சிகள் மற்றும் தரகர்கள், வங்கதேசம், வியட்நாம், மியான்மர், நேபாளம் போன்ற ஏழை நாடுகளில் இருந்து பெண்களைக் கடத்தி வந்து சீன ஆண்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாகத் திருமணம் செய்து வைக்கின்றனர்.</p><h2>ஏமாறும் சீன ஆண்கள்; பாதிக்கப்படும் பெண்கள்..</h2><p>இந்த சர்வதேசத் திருமண மோசடிச் சந்தையில் இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. </p><p>இடைத்தரகர்களிடம் பல லட்ச ரூபாயைக் கொடுத்து வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்யும் சீன ஆண்கள், சில நாட்களிலேயே அந்தப் பெண்கள் பணத்துடன் மாயமாவதைக் கண்டு ஏமாந்து போகின்றனர். </p><p>பல ஏழைப் பெண்கள் ஏமாற்றப்பட்டு, கட்டாயக் கடத்தல் மூலம் சீனாவுக்குக் கொண்டு வரப்பட்டு வற்புறுத்தித் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.</p><h2>தூதரகத்தின் அதிரடி எச்சரிக்கை மற்றும் தண்டனைகள்</h2><p>சீனாவில் இதுபோன்ற சர்வதேசத் திருமணத் தரகு வேலைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கதேசத்திற்கு வந்து போலி ஏஜென்சிகள் மூலம் பெண்களைப் பணம் கொடுத்துத் திருமணம் செய்ய முயலும் சீன ஆண்கள் 'மனிதக் கடத்தல்' பிரிவின் கீழ் கைது செய்யப்படுவார்கள் எனத் தூதரகம் எச்சரித்துள்ளது.</p><p>குறைந்த பட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சுமார் 4,100 அமெரிக்க டாலர் அபராதமும். அதிகபட்ச தண்டனையாக குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><p>உடந்தையாக இருப்பவர்களுக்கும் இந்த மாதிரியான குற்றங்களுக்குத் தூண்டுதலாகவோ அல்லது உடந்தையாகவோ இருப்பவர்களுக்கும் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.</p><h2>சீன அரசின் நடவடிக்கை..</h2><p>கடந்த 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில் மட்டும், இதுபோன்ற மனிதக் கடத்தல் மற்றும் போலி மேட்ரிமோனி மோசடிகளில் ஈடுபட்ட 1,546 பேரைச் சீனப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். </p><p>முறையான பரஸ்பர அன்பு மற்றும் சம்மதம் இல்லாமல், பணத்தைக் கொடுத்துப் பெண்களை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றும், அது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் சீனத் தூதரகம் எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் ஆதார், சாதி விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவு!-பள்ளிக் கல்வித்துறை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-order-online-registration-of-students-aadhaar-and-caste-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-order-online-registration-of-students-aadhaar-and-caste-details#comments</comments><guid isPermaLink="false">05c30d6a-f037-479a-be6d-d32e1a810c39</guid><pubDate>Sat, 18 Jul 2026 12:13:15 +0000</pubDate><atom:updated>2026-07-18T12:13:15.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தனியார் பள்ளிகள்,அரசு பள்ளிகள்,government schools,private schools,Education Department,பள்ளிக் கல்வித்துறை,dpi,டிபிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/gc4irtr2/dpi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ dpi office]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/gc4irtr2/dpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களின் சாதிச் சான்றிதழ் விவரங்களை, பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><h2><strong>EMIS இணையதளத்தில் பதிவு:</strong></h2><p>தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் பயிலும் அனைத்து மாணவர்களின் சமூகப் பிரிவு மற்றும் சாதி சான்றிதழ் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தில் துல்லியமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.</p><h2><strong>ஆவணங்கள் சரிபார்ப்பு:</strong></h2><p>மாணவர்கள் சேர்க்கையின் போது சமர்ப்பித்த சாதிச் சான்றிதழ்களைக் கொண்டு, இந்த விவரங்கள் ஆன்லைனில் உள்ளீடு செய்யப்பட வேண்டும். தவறுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாகத் திருத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்க:</strong></h2><p>மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச மிதிவண்டிகள், மடிக்கணினிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்கள் தகுதியான மாணவர்களுக்குச் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்யவே இந்த ஆன்லைன் பதிவு முறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>டிஜிட்டல் மயமாக்கல்:</strong></h2><p>வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ் மற்றும் இதர விவரங்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, பள்ளிப் பதிவேடுகளுடன் இணைப்பதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் மேல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்படும்.</p><h2><strong>பின்னணி:</strong></h2><p>சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள ஸ்மார்ட் அடையாள அட்டைகளில் சாதி விவரங்கள் இடம்பெறப் போவதாகச் சில தகவல்கள் வெளியாகி விவாதத்தைக் கிளப்பிய நிலையில், "மாணவர்களின் அடையாள அட்டைகளில் எக்காரணம் கொண்டும் சாதி விவரங்கள் அச்சிடப்படாது. அது மாணவர்களிடையே பாகுபாட்டை உருவாக்கும்" என்று தமிழக அமைச்சர்கள் ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்து, அது வெறும் தரவு நெறிப்படுத்துதல் மட்டுமே என விளக்கியிருந்தனர்.</p><p>தற்போது கல்வித்துறையின் உள்நிர்வாகப் பயன்பாட்டிற்காகவும், அரசு நலத்திட்டங்களின் வெளிப்படைத்தன்மைக்காகவும் மட்டுமே இந்த ஆன்லைன் சாதி விவரப் பதிவுப் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026#comments</comments><guid isPermaLink="false">1ef20ff1-dcd7-484e-81a8-ef47dfdd988e</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:57:41.458Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore">பராமரிப்பு பணி: நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றம்!</a></strong></p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow">நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!</a></strong></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today">சென்னை பூங்கா, குன்னூர் உள்பட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court">மகப்பேறு விடுப்பு - கோர்ட்டுக்கு சென்று உரிமையை நிலைநாட்டிய பேராசிரியை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day">தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கங்கள்- முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21">விலகிய எம்.பி.க்கு மிக்க நன்றி.. போகிறவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள் - கெடு விதித்த மம்தா</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-election-data-theft-claim-trump-alleges-china-stole-data-of-220-million-voters">மாபெரும் தேர்தல் மோசடி.. 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளை திருடிய சீனா - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed">ஈரானில் பாலங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 7 பேர் பலி.. பஹ்ரைன், கத்தார், குவைத் மீது ஈரான் பதில் தாக்குதல்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests">உக்ரைன் ராணுவத்தில் டிரோன் போர்முறையை அறிமுகம் செய்த பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக மக்கள் போராட்டம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/rohingya-boat-tragedy-over-500-feared-dead-after-two-refugee-boats-vanish-off-myanmar-coast">மியான்மரில் இருந்து தப்பி ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகுகள் விபத்து.. 500-க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs" rel="nofollow">ECR உயர்மட்ட சாலைத் திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்பக் குழு அமைப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track">மேற்கு வங்கம்: பள்ளிக் குழந்தைகள் சென்ற வாகனம் மீது ரெயில் மோதி விபத்து - 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required">கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்: உடனடியாக அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks" rel="nofollow">எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?- மாணிக்கம் தாகூர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement">50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent">Day 20: மரணப் படுக்கையில் சோனம் வாங்சுக்.. உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train" rel="nofollow">இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/rohit-sharma-no-more-automatic-selection-after-lord-odi">ஒருநாள் போட்டி அணியில் இனி இடம்பெறமாட்டார்- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் ரோகித் சர்மா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lawyer-paranthaman-slams-vijay-regime-over-palani-land-fraud" rel="nofollow">பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி- திமுக வழக்கறிஞர் பரந்தாமன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-sf-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-backs-hafiz-saeed-indias-nia-issues-non-bailable-warrant-over-pahalgam-terror-attack">அவரை ஒன்னும் சொல்லாதீங்க.. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு எதிராக என்ஐஏ பிடிவாரண்ட் - பொங்கிய பாகிஸ்தான்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coonoor-railway-station-revamped-pm-modi-to-inaugurate-it-today">கண்கவர் ஓவியங்களுடன் புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரெயில் நிலையம் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/international-justice-day-icc-rome-statute-and-global-justice-contradictions">சர்வதேச நீதி தினம்.. கடந்து வந்த பாதையும், கடக்க வேண்டிய தூரமும்..</a><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-to-watch-argentina-spain-world-cup-final-live" rel="nofollow">உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: அர்ஜென்டினா- ஸ்பெயின் ஆட்டத்தை நேரில் பார்க்கிறார் அதிபர் டிரம்ப்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-rajendra-vishwanath-arlekar-request-to-tn-people">மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/weather-department-warns-of-5-day-heat-spell-in-tamil-nadu" rel="nofollow">தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்..!- வானிலை ஆய்வு மையம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-urgent-hearing-case-against-election-freebies">தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-made-two-major-mistakes-in-life">வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் - வைகோ வேதனை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation">மலையடிப்பட்டி அகழாய்வு - தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும்: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi" rel="nofollow">நீட் தேர்வு முடிவு: கட்-ஆப் மதிப்பெண் உயர்வதால் கடும் போட்டி நிலவும்..! கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-ponrajs-petitions-seeking-the-quashing-of-cases">வழக்குகளை ரத்து செய்யக்கோரிய பொன்ராஜின் மனுக்கள் தள்ளுபடி- ஐகோர்ட் உத்தரவு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt">பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!- நயினார் நாகேந்திரன் சாடல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/worried-about-neet-results-tamil-nadu-government-mental-health-helpline" rel="nofollow">நீட் தேர்வு முடிவால் பதற்றமா? மாணவர்களின் மனநலம் காக்க தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/58d7359e-20b7-4415-bda3-26c811047319">தமிழகம் உள்பட.. மறுசீரமைக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1f7c43a8-6ddf-4372-a49a-2818290d5d6d">தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? - திருமாவளவன் கேள்வி</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/second-t20-match-bangladesh-set-187-target-for-zimbabwe">2வது டி20 போட்டி: ஜிம்பாப்வே வெற்றிபெற 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/83fb8bd8-9a16-4296-9d74-9fa9c6d8a750">மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுய விவரங்களை பதிவு செய்த முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/andy-burnham-elected-new-labour-party-leader-uk-pm-designate">தொழிலாளர் கட்சி தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jairam-ramesh-explains-dmk-bjp-alliance-claims">திமுக-பாஜக கூட்டணி உண்மையா?: ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-crush-zimbabwe-second-t20-match">அசத்தல் பந்துவீச்சு: 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்கதேசம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-criticises-tamil-nadu-over-police-exam-delay">காவலர் தேர்வை தள்ளி வைப்பதா? தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/gyanesh-kumar-a-weapon-of-mass-destruction-for-electoral-rolls-congress-jairam-ramesh">வாக்காளர் பட்டியலுக்கான பேரழிவு ஆயுதம் ஞானேஷ் குமார்: ஜெய்ராம் ரமேஷ் விளாசல்..!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/legendary-west-indies-cricketer-sir-garfield-sobers-no-more">வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் காலமானார்</a></p>]]></content:encoded></item><item><title>கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் மீராபாய் சானு</title><link>https://www.maalaimalar.com/sports/mirabai-chanu-and-lovlina-borgohain-confirmed-as-india-flag-and-baton-bearer-for-commonwealth-games-opening-ceremony</link><comments>https://www.maalaimalar.com/sports/mirabai-chanu-and-lovlina-borgohain-confirmed-as-india-flag-and-baton-bearer-for-commonwealth-games-opening-ceremony#comments</comments><guid isPermaLink="false">158397de-ff0c-44d2-8197-32cb562f90f3</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:52:47 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:52:47.623Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Mirabai Chanu,மீராபாய் சானு,Lovlina Borgohain,லவ்லினா போர்கோஹெய்ன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/poj6t33u/MirabaiChanu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mirabai Chanu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/poj6t33u/MirabaiChanu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோவில் 2026 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டி அதிகாரப்பூர்வமாக ஜூலை 23-ந்தேதி OVO Hydro மைதானத்தில் நடக்கிறது. இந்த தொடக்க போட்டியின்போது ஒவ்வொரு நாட்டின் வீரர்களும் அணிவகுத்து செல்வார்கள். ஒருவர் நாட்டின் தேசியக் கொடியையும், மற்றொருவர் Baton-யையும் ஏந்திச் செல்வார்கள்.</p><h2>மீராபாய் சானு</h2><p>இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு இந்தியாவின் தேசிக் கொடியை ஏந்திச் செல்வார். லவ்லினா போர்கோஹெய்ன் Baton-ஐ ஏந்திச் செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) தெரிவித்துள்ளது.</p><p>இதை இந்திய ஒலிம்பிக் சங்கம் தலைவர் பி.டி உஷா உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இரு ஒலிம்பிக் வீரர்களின் நியமனம் இந்திய விளையாட்டுத் துறைக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது. என்று தெரிவித்த அவர், போட்டிகளில் பங்கேற்கும் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><h2>இந்தியா சார்பில் 126 பேர் பங்கேற்பு</h2><p>இந்தியாவைச் சேர்ந்த 126 வீரர்கள்- வீராங்கனைகள் காமன்வெல்த் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறார்கள்.</p><p>வெய்ட்லிஃப்்டிங் பிரிவில் மீராபாய் சானு பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள முக்கிய வீராங்கனையாக திகழ்கிறார். இவர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். அதில் இருந்து இந்தியாவின் முக்கிய நட்சத்திர வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார்.</p><p>2024-ம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போட்டியில் நூழிலையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். அதன்பின் தீவிர பயிற்சி மேற்கொண்டு தற்போது காமன்வெல்த் போட்டியில் சாதனைப் படைக்க களம் இறங்கியுள்ளார்.</p><p>இவர் 2022-ம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>லவ்லினா போர்கோஹெய்ன்</h2><p>லவ்லினா போர்கோஹெய்ன் குத்துச் சண்டை வீராங்கனை ஆவார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார். கிளாஸ்கோவில் சிறப்பாக செயல்பட்டு முதல் காமன்வெல்த் பதக்கத்தை வெல்ல ஆர்வமாக உள்ளார்.</p><figure><img alt="Lovlina Borgohain" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/6l0mm0qy/LovlinaBorgohain.jpg" /></figure><p>2023 உலக பாக்சிங் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்றார். 2023 ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இருவரும் தற்போது இங்கிலாந்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தாக்குதலுக்கு சதி: குஜராத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/five-arrested-over-links-to-jaish-e-mohammed-terror-outfit</link><comments>https://www.maalaimalar.com/news/national/five-arrested-over-links-to-jaish-e-mohammed-terror-outfit#comments</comments><guid isPermaLink="false">dd4a5ee1-c7c0-45c0-8a8c-f60d0681ee68</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:24:09 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:24:09.496Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gujarat ATS,Jaish-e-Mohammed,குஜராத் ஏடிஎஸ்,ஜெய்ஷ்-இ-முகமது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/xdq8blq3/Untitled-design-29.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat ATS Arrests Five linked to Jaish-e-Mohammed]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/xdq8blq3/Untitled-design-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவின் மூலம் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாக ஐந்து பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை (ATS) கைது செய்தது.</p><p>குஜராத்தில் அகமதாபாத் மற்றும் சித்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிலால் அபித் ஷேரா, முகமது அய்யூப் கடிவாலா, முகமது ஷஃபி முகி, முகமது ஹசன் கரடியா மற்றும் முகமது அய்யூப் சுனசரா ஆகிய ஐந்து பேர்களை சந்தேகத்தின் பேரில் ஏடிஎஸ் அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் சிலர் மதராஸாவில் படித்து வந்துள்ளனர்.</p><p>இவர்களில் குறைந்தது இருவராவது ஏகே-47 ரக துப்பாக்கிகளை கையாளுவதற்கான பயிற்சியை பெறுவதற்காக காஷ்மீருக்கு பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>மேலும் இவர்கள் வெடிகுண்டுகள் மற்றும் நச்சுவாயு தயாரிக்க கற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்த மாத தொடக்கத்தில் சதி வேலைக்கு திட்டமிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு, சதிதிட்டம் முறியடிக்கப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அந்த 8 பேருடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>2023 முதல் 2026 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், சந்தேக நபர்கள் வெவ்வேறு இடங்களில் டைமர் (timer) செயல்முறையை பயன்படுத்தி வெடிகுண்டு முறைகளை ஆராய்ந்து, அவற்றை செயல்படுத்த தீவிரமாக முயன்றதாகவும் ஏடிஎஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கொடி, பயங்கரவாதி மசூத் அசார் எழுதிய புத்தகங்களின் முழு அச்சுப் பிரதி மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதியால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.1.30 லட்சம் பணத்தையும் போலீசார் மீட்டனர்.</p><p>மேலும் இதுகுறித்து காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் சுனில் ஜோஷி கூறுகையில், “ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனரான மசூத் அசாரின் புத்தகங்கள் மற்றும் பேச்சுகளாலும், இவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். </p><p>கைது செய்யப்பட்டவர்கள் புத்தகத்தின் உள்ளடக்கத்தை படித்துவிட்டு, மற்ற மதராஸா மாணவர்களையும் அமைப்பில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;தி ஒடிசி&apos; முதல் நாளிலேயே ரூ.20.76 கோடி வசூல் சாதனை! பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/christopher-nolans-monster-hunt-at-box-office-the-odyssey-rs-20-76-crore-day-one-record</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/christopher-nolans-monster-hunt-at-box-office-the-odyssey-rs-20-76-crore-day-one-record#comments</comments><guid isPermaLink="false">5b2e1c90-4314-4abb-8127-2bbf818eb8eb</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:19:11 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:19:11.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BoxOfficeCollection,கிறிஸ்டோபர் நோலன்,ChristopherNolan,TomHolland,தி ஒடிசி,TheOdyssey,HollywoodInIndia,MattDamon</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ay2cblq0/TheOdyssey-BoxOfficeCollection" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TheOdyssey BoxOfficeCollection   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ay2cblq0/TheOdyssey-BoxOfficeCollection?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் நேற்று வெளியான ' <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF">தி ஒடிசி</a>' திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளிலேயே வரலாறு காணாத வசூல் சாதனை படைத்துள்ளது. </p><p>மேட் டாமன் மற்றும் டாம் ஹாலண்ட் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><h2><strong>அசுரத்தனமான பாக்ஸ் ஆபீஸ் ஓப்பனிங்..</strong></h2><p>பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'தி ஒடிசி' திரைப்படம், இந்தியாவில் முதல் நாளில் மட்டும் ரூ.20.76 கோடி மொத்த வசூலையும், ரூ.17.40 கோடி நிகர வசூலையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது. </p><p>ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் இருக்கும் அசுரத்தனமான வரவேற்பை இந்த வசூல் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.</p><h2><strong>திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்..</strong></h2><p>இந்திய அளவில் இந்தத் திரைப்படம் நேற்று சராசரியாக 48.7% திரையரங்கு ஆக்குபென்சியுடன் இயங்கியது. குறிப்பாக, கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படங்களைப் போலவே, இதற்கும் ஐமேக்ஸ் மற்றும் முப்பரிமாண திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் விற்று வருகின்றன.</p><h2><strong>தமிழகத்தில் மிரட்டலான வரவேற்பு..</strong></h2><p>இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நோலனின் படங்களுக்கு எப்போதும் தனி இடமுண்டு. அதற்கேற்ப, நேற்று தமிழ்நாட்டில் இத்திரைப்படம் 25.9% ஆக்குபென்சியுடன் மிரட்டலான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது. </p><p>ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்தத் திரைப்படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது.</p><h2><strong>வார இறுதியில் பல நூறு கோடி இலக்கு..</strong></h2><p>உலகம் முழுவதும் 8,413-க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டுள்ள 'தி ஒடிசி', ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. </p><p>இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான இந்த வார இறுதியில் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என்றும், மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவில் 100 கோடி கிளப்பில் இணையும் என்றும் சினிமா வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலையில் மாணவிகளுடன் உடற்பயிற்சி செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-exercises-with-girl-students-in-tiruvannamalai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-exercises-with-girl-students-in-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">4824026b-c21c-4330-af79-58d161e3f7db</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:15:32 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:15:32.119Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruvannamalai District,sportsminister,AadhavArjuna,ஆதவ்அர்ஜுனா,விளையாட்டுத்துறைஅமைச்சர்,HockeyGround,FitnessMotivation,SportsDevelopment</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/413pnip3/SportsMinister-AadhavArjuna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SportsMinister AadhavArjuna   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/413pnip3/SportsMinister-AadhavArjuna?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். </p><p>ஆய்வின் போது, அங்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவிகளுடன் இணைந்து அவரும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டார்.</p><h2>புதிய ஹாக்கி மைதானம் திறப்பு..</h2><p>திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று முதல் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். </p><p>மைதானத்தை திறந்து வைத்ததுடன் நேரடியாக களத்தில் இறங்கி அங்கு இருந்த மாணவிகளுடன் மகிழ்ச்சியுடன் ஹாக்கி விளையாடி மகிழ்ந்தார்.</p><h2><strong>மாணவிகளுடன் உடற்பயிற்சி..</strong></h2><p>மைதானத்தில் தடகளம் மற்றும் இதர விளையாட்டுகளுக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த மாணவிகளைச் சந்தித்த அமைச்சர், அவர்களின் பயிற்சி முறைகள் பற்றி கேட்டறிந்தார். </p><p>தொடர்ந்து, மாணவிகளிடம் பேசிக்கொண்டே ஒரு பயிற்சியாளரைப் போல அவர்களுடன் சேர்ந்து மைதானத்தில் ஓட்டப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். அமைச்சரின் இந்த எளிமையான அணுகுமுறை மற்றும் சுறுசுறுப்பான செயல்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2><strong>குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்..</strong></h2><p>மைதான ஆய்விற்குப் பிறகு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தடகளம், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் அமைச்சர் நேரடியாகக் கலந்துரையாடினார். </p><p>அவர்களுக்குத் தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள், முறையான தங்கும் விடுதி வசதிகள் மற்றும் சத்தான உணவு முறைகள் தங்கு தடையின்றிக் கிடைக்கிறதா என்று கேட்டறிந்து, வீரர்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் விரிவாகப் பெற்றுக் கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>அர்ஜென்டினா- ஸ்பெயின் மோதும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/sports/football/arg-vs-spa-fifa-world-cup-2026-final-rs-27-lakh-for-one-ticket-shatters-all-records</link><comments>https://www.maalaimalar.com/sports/football/arg-vs-spa-fifa-world-cup-2026-final-rs-27-lakh-for-one-ticket-shatters-all-records#comments</comments><guid isPermaLink="false">26798c4b-9450-4538-a949-a306c3dd4745</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:04:51 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:04:51.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>argentina,அர்ஜென்டினா,Spain,ஸ்பெயின்,பிபா உலக கோப்பை,FIFA World Cup 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/jva78y2y/FIFAworldCupFinal0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FIFA World Cup Final 2026]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/jva78y2y/FIFAworldCupFinal0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் இதுவரை நடைபெற்ற போட்டிகளை பார்ப்பதற்கான டிக்கெட் விலையை, அர்ஜென்டினா- ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கான ஒரு டிக்கெட்டின் சராசரி விலை முறியடித்துள்ளது.</p><h2>ஒரு டிக்கெட்டின் விலை 6943 டாலர்</h2><p>பிபா உலக கோப்பையின் இறுதிப் போட்டி நாளை நள்ளிரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனும், பிபா உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் (MetLife Stadium) நடக்கிறது.</p><p>இந்த போட்டியை பார்க்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகை தர இருக்கிறார். இந்த போட்டியை நேரில் காண ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த போட்டியை பார்ப்பதற்கான ஒரு டிக்கெட் விலை 6943 டாலராம். இதில் என்ன வேடிக்கை என்றால் அர்ஜென்டினா- இங்கிலாந்து இடையிலான போட்டியை பார்ப்பதற்கு 7200 டாலராக இருந்தது. அதைவிட இறுதிப் போட்டியை பார்க்க சற்று குறைவாகும்.</p><p>மெட்லைஃப் ஸ்டேடியத்தின் செக்சன் 115ஏ-ல் உள்ள ஸ்டேண்ட்சில் உள்ள டிக்கெட் விலை 28,479 டாலர் ஆகும். ஒட்டுமொத்தமாக சராசரியாக ஒரு டிக்கெட்டின் நிலை 11,327 டாலர் ஆகும். இந்த விலை அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒரு போட்டியை காண்பதற்கான அதிகபட்ச டிக்கெட் விலை ஆகும்.</p><p>2024-ம் ஆண்டு சூப்பர் பவுல் <a href="https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-final-argentina-vs-spain-tomorrow-at-midnight-showdown">இறுதிப் போட்டி</a> சான் பிரான்சிஸ்கோ 49ers மற்றும் கன்சாஸ் சிட் சீஃப்ஸ் அணிகளுக்கு எதிராக நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை 9,411 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><h2>அர்ஜென்டினா அணி</h2><p>தென் அமெரிக்காவின் வலிமையான அணிகளில் ஒன்றான அர்ஜென்–டினா. இதற்கு முன்பு 1930, 1978, 1986, 1990, 2014, 2022 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது. இதில் 3 முறை (1978, 1986, 2022) உலக கோப்பையை கைப்பற்றியது. 3 தடவை பட்டத்தை இழந்தது. தற்போது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து 4-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.</p><figure><img alt="Argentina Team" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/4lo5wwfx/ArgentinaTeam0001.jpg" /></figure><p>தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அர்ஜென்டினா இந்த போட்டி தொடரில் தான் மோதிய அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. 2-வது சுற்றில் கேப் வெர்டேயை போராடி தோற்கடித்தது. எகிப்து (3-வது ரவுண்டு), இங்கிலாந்து (அரைஇறுதி) ஆகியவற்றுக்கு எதிராக முதலில் கோல் வாங்கி பின்–தங்கி முன்னேறி வீழ்த்தி இருந்தது.</p><h2>மெஸ்சி</h2><p>அர்ஜென்–டினா அணி இறுதிப் போட்டியில் நுழைய முக்கிய பங்கு வகித்தவர் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி. கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரருமான அவர் இந்த போட்டி தொடரில் 8 கோல் அடித்து முன்னிலையில் உள்ளார். மேலும் 4 கோல் அடிக்க உதவியாக இருந்துள்ளார்.</p><p>மேஜிக்மேன் இன்னும் ஒரு ஆட்டத்தில் இதே திறமையை வெளிப்படுத்தினால் அர்ஜென்டினாவுக்கு கோப்பை கிடைக்கும். 39 வயதான அவர் உடல் தகுதியில் சற்று பின்தங்கி இருந்தாலும் நுணுக்கம், புத்திசாலித்தனம், அனுபவம் ஆகியவற்றால்  எதிர் அணியை தடுமாற வைக்கிறார். பெரும்பாலும் களத்தில் நடந்து கொண்டே இருக்கும் அவர் பந்து கிடைக்கும் போது ஆக்ரோஷத்தை வெளிப்–படுத்துகிறார். வீரர்களை ஒருங்கிணைத்து களப் பயிற்சியாளர் போல் செயல்படுகிறார்.</p><h2>பின்களம் பலவீனம்</h2><p>மேலும் லவுடரோ பெர்னாண்டஸ் (3 கோல்), என்சோ பெர்னாண்டஸ் (2), லிசாண்டரோ மார்ட்டினஸ், அலெக்ஸ் மேக்அலிஸ்டர், ஜிவோனி லோ செல்சோ, ஜூலியன் அல்வாரெஸ், கிறிஸ்டியன், ரோமிரோ (தலா ஒரு கோல்) போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.</p><p>பின்–களத்தில் அர்ஜென்டினா பலவீனமாக இருக்கிறது. இதை சரி செய்–வது அவசியமாகும். ஸ்பெயின் வீரர்கள் பந்தை கடத்தி சென்று கோல் அடிப்பதில் வல்ல–வர்கள். இதனால் அவர்களது தாக்குதல் ஆட்டம் அர்ஜென்டினாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.</p><p>அர்ஜென்டினா அதிக கோல்களை அடித்த அணியாக திகழ்கிறது. அந்த அணி 19 கோல்கள் அடித்து உள்ளது. அதே நேரத்தில் 7 கோல் வாங்கி உள்ளது. இதனால் ஸ்பெயினுக்கு எதிராக அர்ஜென்டினா முழு திறமையை  வெளிப்–படுத்த வேண்டும்.</p><h2>ஸ்பெயின் அணி</h2><p>ஸ்பெயின் அணி இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு தென்–ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் விளையாடியது. தனது முதல் இறுதிப் போட்டியிலேயே உலக கோப்பையை வென்று சாதித்தது. தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.</p><p>அர்ஜென்டி–னாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் இந்தப் போட்டித் தொடரில் தோல்வியை தழுவவில்லை. கேப்வார்டே அணியுடன் மட்டுமே </p><p>கோலின்றி ‘டிரா’ செய்தது. மற்ற அணிகளை எளிதில் வீழ்த்தியது. அரை இறுதியில் பிரான்சை 2 கோல் போட்டு தோற்கடித்ததன் மூலம் ஸ்பெயின் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது.</p><h2>லமின் யமால்</h2><p>ஸ்பெயின் அணி–யின் நட்சத்திர வீரர் லமின் யமால் அர்ஜென்டினாவுக்கு கடும் சவாலாக இருப்பார். அவர் ஒரு கோல் மட்டும்தான் அடித்துள்ளார். ஆனால் பந்தை கடத்தி சென்று முன்னேறுவதில் 19 வயதான லமின் யமால் திறமைசாலி ஆவார். 2024-ம் ஆண்டு ஸ்பெயின் அணி, ஐரோப்பிய கோப்பையை வெல்ல அவர் முக்கிய பங்கு வகித்தார். பிரான்சுக்கு எதிரான அரைஇறுதியில் ஒரு கோல் அடித்தார்.</p><figure><img alt="Spain Team" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/kuozwxzk/SpainTeam0001.jpg" /></figure> <p>இந்த உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஸ்பெயின் வீரராக மைக்கேல் ஒயர்சபால் இருக்கிறார். அவர் 5 கோல்களை பதிவு செய்துள்ளார். மெரினோ, பெட்ரோ போரோ (தலா 2 கோல்கள்), அலெக்ஸ் பயெனா, பேபியன் ரூயிஸ் (தலா 1 கோல்) போன்ற சிறந்த வீரர்களும் ஸ்பெயின் அணியில் உள்ளனர்.</p><h2>கோல் கீப்பர்</h2><p>ஸ்பெயின் அணி வீரர்கள் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் நீண்ட நேரம் வைத்து எதிர் அணியின் வளையத்தை உடைத்து முன்னேறி சென்று கோல் அடிப்பதில் வல்லவர்கள். முதல் நிலை அணியான பிரான்சுக்கு எதிராக அவர்கள் அற்புதமாக ஆடினார்கள். இதனால் உலக கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அந்த அணி இருக்கிறது.</p><p>மேலும் பின்களமும், கோல் கீப்பரும் ஸ்பெயின் அணியின் பலமாக இருக்கிறது. அந்த அணி இதுவரை ஒரு கோல் மட்டுமே வாங்கி உள்ளது. பந்துகளை தடுப்பதில் கோல் கீப்பர் சைமன் அபாரமாக செயல்படுகிறார். பெல்ஜியத்துக்கு எதிராக மட்டுமே அவர் ஒரு கோலை விட்டார். அர்ஜென்–டினா வீரர்களுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார்.</p><p>இரு அணிகளும் உலக கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கால்பந்து ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். </p><p>முன்ன தாக இன்று நள்ளிரவு 2.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்து க்கான ஆட்டத்தில் பிரான்ஸ்-இங்கி–லாந்து அணிகள் மோதுகின்றன.</p><h2>60 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையில் மோதல்</h2><p>அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் 60 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன. இரு அணிகளும் உலக கோப்பையில் ஒரே ஒரு தடவைதான் நேருக்கு நேர் சந்தித்தன. 1966-ம் ஆண்டு நடந்த அந்த போட்டியின் லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணிக்காக  லூயிஸ் ஆர்டைம் (65 மற்றும் 79-வது நிமிடங்கள்) 2 கோலும், ஸ்பெயின் தரப்பில் பிர்ரியும் கோல் (71-வது நிமிடம்) அடித்தனர்.</p><p>சர்வதேச போட்டி மற்றும் நட்பு ஆட்டம் என இரு அணிகளும் 14 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி டிரா ஆனது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ஸ்பெயின் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்கா காட்டிய வழித்தடம்; கண்ணிவெடியில் சிக்கிய 2 கப்பல்கள்: ஈரான் குற்றச்சாட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-blames-us-as-two-tankers-hit-mines-in-hormuz</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-blames-us-as-two-tankers-hit-mines-in-hormuz#comments</comments><guid isPermaLink="false">33d30678-6f65-43b5-bfa6-657ac4a9c696</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:03:48 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:03:48.708Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,ஈரான்,Iran,கண்ணிவெடி,landmines</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/szyzvfsc/iran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 ships caught in landmines]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/szyzvfsc/iran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா-ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரில் கடந்த மாதம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருந்த நிலையில் மீண்டும் மோதல் வெடித்து உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து விட்டதாக இரு நாடுகளும் அறிவித்துள்ள தால் பதற்றம் அதிகரித்து வருகிறது.</p><p>அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் முக்கிய காரணமாக உள்ளது. அந்த ஜலசந்தியை தாங்கள்தான் கட்டுப்படுத்துவோம் என்றும் தாங்கள் அறிவித்துள்ள பாதையில்தான் கப்பல்கள் செல்ல வேண்டும் என்றும் ஈரான் தெரிவித்து உள்ளது. </p><p>இதற்கிடையே ஓமன் கடற்கரைக்கு அருகே பயணித்த கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க கடற்படையின் வழிகாட்டுதலின்படி கப்பல்கள் ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்தியதால் தாக்கியதாக ஈரான் தெரிவித்தது.</p><p>இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்கி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய சில நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணி வெடிகளை புதைத்தது. தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்தின்போது அந்த கண்ணி வெடிகள் அகற்றப்படும் என்று தெரிவித்தது. ஆனால் இன்னும் பல கண்ணி வெடிகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் வகுத்துள்ள பாதையில் செல்ல வேண்டும் என்று ஈரான் தெரிவித்தது.</p><p>இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க உளவுத்துறையினரால் தவறாக வழிநடத்தப் பட்டதாலேயே அந்த கப்பல்கள் அப்பகுதி வழியாக செல்ல முயன்றதாக ஈரான் தெரிவித்து உள்ளது.</p><h3><strong>இதுதொடர்பாக ஈரான் புரட்சிகர காவல்படை கூறியதாவது:-</strong></h3><p>அமெரிக்க உளவுத்துறையினரின் ஏமாற்று நடவடிக்கையால், ஹார்முஸ் ஜலசந்திக்கு தெற்கே உள்ள கண்ணிவெடிகள் நிறைந்த பகுதி வழியாகச் செல்ல முயன்ற 2 எண்ணை கப்பல்கள் கண்ணிவெடிகளில் மோதி வெடித்துத் தீப்பிடித்தன. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மிகவும் பாதுகாப்பற்றதாகவும் முழுமையாக மூடப்பட்டதாகவும் இருக்கும். </p><p>தங்கள் சொத்துகளையும், மிக முக்கியமாகத் தங்கள் உயிர்களையும் பாதுகாத்துக்கொள்ள கண்ணி வெடிகள் நிறைந்த பகுதிக்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்தது. அதேபோல் கண்ணிவெடிகள் உள்ள பாதையில் நுழைவதற்கு முன்பு ஈரான் கடற்படையின் எச்சரிக்கைகளை 2 கப்பல்களும் புறக்கணித்ததாகவும், அதனால் வெடிப்புகளும், பெரிய தீ விபத்துகளும் ஏற்பட்டதாகவும் ஈரானின் அரசு ஒலிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி தெரிவித்தது. கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்களின் நிலைமை குறித்து தகவலை ஈரான் வெளியிடவில்லை.</p><h2><strong>அமெரிக்கா மறுப்பு:</strong></h2><p>கண்ணிவெடியில் கப் பல்கள் சிக்கியதாக ஈரான் கூறிய குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை பிரிவு கூறும்போது, ஈரானின் குற்றச்சாட்டு பொய்யானது. இது சரிபார்க்கப்படாத ஈரான் ராணுவத்தின் வழக்கமான தகவல்களில் ஒன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில் ஈரானில் உள்ள ராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்து 7-வது நாளாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. தலைநகர் தெக்ரான் உள்பட பல்வேறு நகரங்களில் குண்டுகள் வீசப்பட்டன. லாரக் தீவில் உள்ள கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் கோபுரம் தகர்க்கப்பட்டது. அதேபோல் ஈரானின் கார்க் தீவிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 3 பேர் பலியானார்கள்.</p><p>இதற்கிடையே வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பக்ரைன், குவைத், ஜோர்டா னில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள்-டிரோன்கள் வீசப்பட்டன. அதேபோல் சவுதி அரேபி யாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. அங்கு அமெரிக்க எரி பொருள் நிரப்பும் விமானங்களை நிறுத்த சவுதி அரேபியா இடமளித்திருந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீரை குடிக்க தயங்கும் மக்கள்- சென்னை குடிநீர் வாரியம் பராமரிக்குமா?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-hesitant-to-drink-purified-free-drinking-water</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-hesitant-to-drink-purified-free-drinking-water#comments</comments><guid isPermaLink="false">ba874e62-af87-4e6b-9859-feda466e4809</guid><pubDate>Sat, 18 Jul 2026 10:17:19 +0000</pubDate><atom:updated>2026-07-18T10:17:19.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை குடிநீர் வாரியம்,இலவச குடிநீர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/uiwfsfxz/water.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோசமான நிலையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானியங்கி மையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/uiwfsfxz/water.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பஸ், ரெயில் நிலையங்கள், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை  உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொது மக்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானியங்கி மையம் அமைக்கப்பட்டது. </p><p>மக்கள் அதிகம் கூட கூடிய இடங்களில் இந்த மையம் செயல்படுகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் 55 இடங்களில் தானியங்கி குடிநீர் எந்திரத்தை முன்னாள் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். </p><h2><strong>மோசமான நிலை</strong></h2><p>கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் பாட்டில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள்.     தானியங்கி குடிநீர் மையத்தை  சென்னை குடிநீர் வாரியம் பராமரித்து வருகிறது. தானாகவே தண்ணீரை நிரப்பிக் கொள்ளும் வசதியும் அங்கு செய்யப்பட்டுள்ளது.    </p><p>மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய பொதுமக்கள் இந்த குடிநீரை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல எழும்பூர் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள மையமும் மிகுந்த பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் இந்த குடிநீர் மையம் களை இழந்து காணப்படுகிறது. </p><p>பெரம்பூர் ஜமாலியா போக்குவரத்து சிக்னல் அருகில் உள்ள குடிநீர் மையம், பெரம்பூர் பஸ்  நிலையத்தில் உள்ள மையம் ஆகியவை மிக மோசமான நிலையில் உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கூடிய அந்த மையத்தின் அருகிலேயே குப்பைகளும், தண்ணீரும் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்த தயங்குகிறார்கள். </p><h2><strong>பயன்படுத்த முடியாத நிலை</strong></h2><p>குடிநீர் சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது, அதனை வழங்கக்கூடிய சுற்று பகுதியும் தூய்மையாக இருக்க வேண்டும் . குடிநீரை பருகக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். </p><p>அரசு செய்கின்ற நல்ல திட்டங்கள் பொது மக்களுக்கு முறையாக சென்று பயனடைய வேண்டுமென்றால் அதனை கண்காணிக்க வேண்டும், பராமரிக்க வேண்டும்.  ஏதோ திட்டம் செயல்படுகிறது, தண்ணீர் வழங்குகிறோம் என்று நினைத்து கவனிக்காமல் போனதால்  ஒரு சில சுத்திகரிப்பு மையங்கள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-குடிநீர்-வாரியம்">குடிநீர்</a> சுத்திகரிப்பு மையத்தை சுற்றிலும் பராமரிக்காமல் போனதால் மக்கள் அந்த இடத்திற்கு செல்லவே முகம் சுளிக்கிறார்கள். பல கோடி செலவு செய்து மக்கள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் கட்டணம் இல்லாமல் சுத்தமான பாதுகாப்பான குடிநீரை வழங்கினால் அதனை துறை அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.  பெரும்பாலான குடிநீர் மையங்களில் சில்வர் டம்ளர் இல்லை,  அங்கு நின்று குடிநீர் குடிக்கக் கூடிய சூழல் இல்லை, அருவருக்கத்தக்க நிலையில் தான் இந்த மையம் மாறி போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் காட்சி பொருளாக மாறிவிடும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>