<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 26 Jul 2026 08:42:37 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-july-2026#comments</comments><guid isPermaLink="false">31ef8afe-34cc-49f3-ad59-6c3bec2d6756</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:48:25 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:41:16.036Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/sgf9d9gb/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/sgf9d9gb/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-kannada-protest-halts-tamil-nadu-government-buses-in-hosur">கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம் : அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்</a></p><p>* தமிழக அரசைக் கண்டித்து கர்நாடக எல்லையில் இன்று அதிரடி போராட்டம்.</p><p>* அத்திப்பள்ளி எல்லையில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் மறியல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-koniamman-temple-donation-box-theft-action-on-seven">கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு: அதிகாரிகள் உள்பட 7 பேர் அதிரடி சஸ்பெண்ட்!... </a></p><p>*திருவிழாவிற்கு வைத்திருந்த உண்டியலை மறைத்து அதில் இருந்த பணத்தை திருடியது அம்பலமாகியுள்ளது.</p><p>*7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பதில் புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/protesters-besiege-governor-house-in-chennai-over-neet">தடுப்பு வேலியை தாண்டி ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி - நீட் தேர்வை ரத்து செய்ய மாணவர் அமைப்பு போராட்டம்</a></p><p>* அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>* தடுப்பு வேலிகளை தாண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/zomato-delivery-agent-on-horse-rides-through-chennai-ecr">சென்னை ஈசிஆர் சாலையில் குதிரை மூலம் உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்..</a></p><p>* இருசக்கர வாகனத்திற்குப் பதிலாக குதிரையில் உணவு டெலிவரி</p><p>* வெள்ளை நிற குதிரையில் உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas">ஆக்கிரமிப்பு காஷ்மீரை தவிர பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ராஜ்நாத் சிங்</a></p><p>* இந்தியா செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புகிறது.</p><p>* ​​பாகிஸ்தான் எல்லை தாண்டி பயங்கரவாதிகளை அனுப்புவதில் ஈடுபட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/tirupati-temple-devotees-wait-for-18-hours-for-darshan">திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்</a></p><p>* உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.</p><p>* திருப்பதியில் நேற்று 70,216 பேர் தரிசனம் செய்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-govt-defends-tamil-nadu-rights-in-mekadadu-dispute-minister-athav-arjuna-explains">மேகதாது விவகாரம்: தமிழகத்தின் உரிமைகளை தவெக அரசு காக்கும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!... </a></p><p>*காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அமைதி காப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் உண்மைகளுக்குப் புறம்பானது.</p><p>*ஜூன் 19 அன்று முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-government-rejects-metro-again-coimbatore-madurai-dreams-shattered">மீண்டும் நோ சொன்ன மத்திய அரசு: கோவை, மதுரை மக்களின் மெட்ரோ ரெயில் கனவு மீண்டும் கலைந்தது!... </a></p><p>*சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி மே மாதத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் கோரிக்கை அனுப்பியிருந்தது.</p><p>*தமிழ்நாட்டின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-warns-uk-says-armed-forces-ready-to-defend-country-over-us-bombers">ஈரானின் திடீர் எச்சரிக்கை: இங்கிலாந்தின் அளித்த தரமான பதில்..!</a></p><p>* ஈரானின் எந்தவொரு தாக்குதலில் இருந்தும் நாட்டை பாதுகாக்க ஆயுதப்படைகள் தயாராக உள்ளன.</p><p>* சொந்த மண் அல்லது வெளிநாட்டு மண்ணிலும் இருந்து பாதுகாத்துக் கொள்வோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke">எங்களை சந்தேகித்து விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி, இது வெறும் தொடக்கம்தான்: அபிஜீத் தீப்கே... </a></p><p>* ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் காத்திருந்த மக்கள்   ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>* எங்களைச் சந்தேகித்து, விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/students-demand-end-to-exam-paper-leaks-from-new-education-minister-pralhad-joshi">இனி வினாத்தாள் கசிவு இருக்கக் கூடாது: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாணவர்கள் கோரிக்கை!... </a></p><p>*அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வி வழங்கிட புதிய கல்வி அமைச்சருக்கு மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p> •வினாத்தாள் கசிவில் ஈடுபடும் 'தேர்வு மாஃபியாக்கள்' மீதுகடுமையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-lays-wreath-at-the-kargil-war-memorial-to-pay-tribute-to-bravehearts-who-laid-down-their-lives-in-kargil-war-in-1999">கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை</a></p><p>* போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.</p><p>* கார்கில் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-cjp-protest-failure-of-central-govt-opposition">ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விதான் இளைஞர்களின் போராட்டம்: ஜனநாயகத்திற்கான ஆக்சிஜன்- உத்தவ் தாக்கரே</a></p><p>* டெல்லி முதல் மும்பை வரை, மக்கள் அச்சத்தைத் தாண்டி வந்துவிட்டதை நான் உணர்ந்துள்ளேன். இதுவரை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த மக்கள், இப்போது தங்கள் உயிருக்கு அஞ்சும் நிலையை உதறிவிட்டு வீதிகளில் இறங்கியுள்ளனர்.</p><p>* மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் நாட்டை முற்றிலுமாகச் சீரழித்துவிட்டனர். இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/noul-typhoon-prompts-red-alert-in-guangdong-flights-and-trains-suspended">சீனாவை அச்சுறுத்தும் 'நவுல்' புயல்: குவாங்டாங் கடலோரப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை; விமானங்கள், ரயில்கள் ரத்து!...</a> </p><p>* சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வரும் 'நவுல் புயல் காரணமாக, நாட்டின் தேசிய வானிலை மையம் மிக உயர்ந்த அபாய எச்சரிக்கையான 'சிவப்பு எச்சரிக்கையை' விடுத்துள்ளது. </p><p>* நடப்பு ஆண்டின் 12-வது புயலான இது, குவாங்டாங் மாகாணத்தின் கடலோரப் பகுதியில் தீவிரமாகத் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/shock-in-germany-car-attack-at-berlin-pride-parade">ஜெர்மனியில் பேரதிர்ச்சி: பெர்லின் 'ப்ரைட்' பேரணியில் காரை ஏற்றித் தாக்குதல்-ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்!... </a></p><p>* வெள்ளை நிற கார் ஒன்று கூட்டத்திற்குள் அதிவேகமாகப் புகுந்தது.</p><p>* 16 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt">டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிகள் தளர்வு: தமிழக அரசு புதிய நடவடிக்கை!... </a></p><p>தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களைத் தொடங்குவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாகப் புதிய தளர்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar">ஜந்தர் மந்தரில் அமைதி திரும்பியது: குப்பைகளை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர்</a></p><p>* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>* இதன்மூலம் கரப்பான் பூச்சி இளைஞர்களின் 36 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/anahat-singh-scripts-history-becomes-1st-indian-to-win-junior-world-championship">உலக ஜூனியர் ஸ்குவாஷ்: முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த அனாஹத் சிங்</a></p><p>* இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.</p><p>* இந்த மோதலில் அனாஹத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21">தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானாவில் தீர்மானம் நிறைவேற்ற ரேவந்த் ரெட்டி முடிவு</a></p><p>* ராகுல் காந்தி பிரதமரானால், Gen Z தலைவர் மத்திய அமைச்சர் ஆக முடியும் என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும்.</p><p>* நான் இந்தியா பிளாக்கிடம் பேசுவேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்திப்பேன். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kandararu-brahmadathan-to-be-new-sabarimala-tantri">சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தன் தேர்வு</a></p><p>* புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.</p><p>* தீர்மான அறிக்கையை கேரள ஐகோர்ட்டின் தனி அமர்வுக்கு அனுப்பி வைத்து அதற்கான ஆணை பெறப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம் :  அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-kannada-protest-halts-tamil-nadu-government-buses-in-hosur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-kannada-protest-halts-tamil-nadu-government-buses-in-hosur#comments</comments><guid isPermaLink="false">ad9fcaea-a96f-4fe8-860a-746687af7d4d</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:37:10 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:37:10.798Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hosur,மேகதாது விவகாரம்,mekedatu,அத்திப்பள்ளி,KarnatakaBorder,Buses Cancelled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ype5lzu3/KarnatakaBorder" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TamilNaduBorderBusesCancelled]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ype5lzu3/KarnatakaBorder?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி ஆற்றின் குறுக்கே <a href="https://www.maalaimalar.com/topic/mekedatu">மேகதாது</a>வில் அணை கட்ட வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம்</strong></h2><p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து, கர்நாடகா - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் இன்று மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.</p><p>அதன்படி, கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் மாநில தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் இன்று காலை அத்திப்பள்ளி சாலையில் மறியல் நடைபெற்றது.</p><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.</p><h2><strong>தமிழக அரசு பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்</strong></h2><p>இன்று அதிகாலை முதல் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கர்நாடகாவுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>கர்நாடகா செல்லும் அனைத்து பஸ்களும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.</p><p>தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் அரசு பஸ்களும் ஓசூர் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிச் செல்கின்றன.</p><p>கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரின் அறிவுறுத்தலின்படி, தர்மபுரி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், "மறு உத்தரவு வரும் வரை பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படாது" என அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2><strong>ஓசூர் - அத்திப்பள்ளி பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்</strong></h2><p>அதே சமயம், ஓசூரில் இருந்து அத்திப்பள்ளி வரை இயக்கப்படும் 16 மாநகர பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றின் சேவையில் மாற்றம் செய்யவும் போக்குவரத்து துறை தயாராக உள்ளது.</p><p>தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், கர்நாடக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால், பெரும்பாலான பயணிகள் அவற்றின் மூலம் பெங்களூரு நோக்கிப் பயணம் மேற்கொண்டனர்.</p><h2><strong>எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு</strong></h2><p>இந்த மறியல் போராட்டத்தையொட்டி ஜூஜூவாடி, அத்திப்பள்ளி உள்ளிட்ட தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் இரு மாநில போலீசாரும் ஏராளமாகக் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க எல்லையில் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ஈசிஆர் சாலையில் குதிரை மூலம் உணவு டெலிவரி செய்த சொமேட்டோ ஊழியர்..</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/zomato-delivery-agent-on-horse-rides-through-chennai-ecr</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/zomato-delivery-agent-on-horse-rides-through-chennai-ecr#comments</comments><guid isPermaLink="false">ec1dd7f9-ec03-4b8b-9066-018f001769f5</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:34:44 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:34:44.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Zomato,ECR,ZomatoDelivery,HorseDelivery,ViralVideo,Palavakkam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/exsp3ecu/ZomatoHorseDelivery" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ZomatoHorseDelivery]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/exsp3ecu/ZomatoHorseDelivery?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இருசக்கர வாகனத்திற்குப் பதிலாக குதிரை மீது ஏறி <a href="https://www.maalaimalar.com/topic/zomato">சொமேட்டோ</a> ஊழியர் ஒருவர் உணவு டெலிவரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.</p><h2><strong>குதிரையில் செல்லும் உணவு</strong></h2><p>சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பலவாக்கம் பகுதியில் ஜொமாட்டோ ஊழியர் ஒருவர் உணவை டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். </p><p>இரு சக்கர வாகனங்களில் செல்வது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த ஊழியர் உணவு பார்சல்களுடன் வெள்ளை நிறக்குதிரை மீது கம்பீரமாகச் சென்றுள்ளார். </p><p>அதிகப்படியான போக்குவரத்துக்கு நெரிசலைக் கடந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையையும் குறைக்கும் வகையிலும், சரியான நேரத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு உணவை விநியோகிக்க இந்த மாறுபட்ட முறையை அவர் கையாண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2><strong>பொதுமக்கள் வரவேற்பு</strong></h2><p>குதிரை மீது சென்ற இந்த ஊழியரை, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துத் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். </p><p>நெட்டிசன்கள் பலரும் "சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான டெலிவரி முறை" என்றும், "டிராஃபிக் ஜாமுக்குச் சரியான தீர்வு" என்றும் இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தடுப்பு வேலியை தாண்டி ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி - நீட் தேர்வை ரத்து செய்ய மாணவர் அமைப்பு போராட்டம்  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/protesters-besiege-governor-house-in-chennai-over-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/protesters-besiege-governor-house-in-chennai-over-neet#comments</comments><guid isPermaLink="false">dbc81e04-0599-4f80-b7da-2dcfcf819e2e</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:29:06 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:29:06.483Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆளுநர் மாளிகை,Raj Bhavan,neet protest,நீட் போராட்டம்,AISF,அகில இந்திய மாணவர் அமைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/y6tbsnjm/Untitled-design-82.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai NEET Raj Bhavan protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/y6tbsnjm/Untitled-design-82.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பனகல் மாளிகை அருகே நீட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த காக்ரோச் ஜனதா கட்சியினர், தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.</p><p>சென்னை பாலன் இல்லத்தில் கடந்த ஒரு வார காலமாக, நீட் தேர்விற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h3><strong>ஆளுநர் மாளிகை முற்றுகை:</strong></h3><p>அப்போது பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய அமைப்பினருடன் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் இணைந்து, நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>நீட் தேர்வால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சீர்குலைப்பதாகவும் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.</p><p>அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.</p><p>இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி, காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்றனர்.</p><p>இதன்காரணமாக அந்த பகுதியில் சிறிதி நேரம் போக்குவரத்து இடஞ்சல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு கண்காணிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: தமிழகத்தின் உரிமைகளை தவெக அரசு காக்கும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-govt-defends-tamil-nadu-rights-in-mekadadu-dispute-minister-athav-arjuna-explains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-govt-defends-tamil-nadu-rights-in-mekadadu-dispute-minister-athav-arjuna-explains#comments</comments><guid isPermaLink="false">685fdf78-dd79-40e6-920b-7b2f5212440d</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:22:10 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:22:10.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>M.K.Stalin,மேகதாது விவகாரம்,மு.க.ஸ்டாலின்,mekedatu,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/tccv0pv5/adhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Aadhav Arjuna -M.K.Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/tccv0pv5/adhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் விஜய் தலைமையிலான தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.</p><h2><strong>உண்மைகளுக்குப் புறம்பான குற்றச்சாட்டு:</strong></h2><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அமைதி காப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் உண்மைகளுக்குப் புறம்பானது.</p><p>டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழக மக்களின் குடிநீர் உரிமையையும் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சட்டப்பூர்வமாகவும், நிர்வாக ரீதியாகவும் தொடர்ந்து பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.</p><h2><strong>மேகதாது அணைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:</strong></h2><h2>பி<strong>ரதமரிடம் நேரடியாக வலியுறுத்தல்:</strong></h2><p>கடந்த மே 27 அன்று முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 2018-ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வித ஒப்புதலும் அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.</p><h2><strong>பிரதமருக்கு விரிவான கடிதம்:</strong></h2><p>கர்நாடகா அரசு மேகதாது அணைக் கட்டுமானத்திற்கு 'பூமி பூஜை' செய்ய முயன்ற தகவலைத் தொடர்ந்து, ஜூன் 19 அன்று முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். கீழ்மடை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் இன்றி மேகதாது திட்டத்தை அமல்படுத்த முடியாது என்பதை சுட்டிக்காட்டி, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் மத்திய நீர் ஆணையத்திற்கும் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கோரினார்.</p><h2><strong>சட்டமன்ற தீர்மானம்:</strong></h2><p>மேகதாது திட்டத்திற்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டங்களில் தமிழகத்திற்கான உரிய நீரைப் பெறவும், கர்நாடகாவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைத் தடுக்கவும் தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.</p><h2><strong>கடந்த கால தவறுகளே காரணம்:</strong></h2><p>திமுக அரசை விமர்சித்துப் பேசிய அமைச்சர், "கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பின்னடைவுகளின் போது அப்போதைய திமுக அரசு சரியான முறையில் வழக்கை நடத்தத் தவறிவிட்டது. கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட சட்டப்பூர்வத் தவறுகளே, இன்று காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன" என்று சாடினார்.</p><p>மேலும், "காவிரி விவகாரம் என்பது அரசியல் லாபத்திற்கான விஷயம் அல்ல; அது தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமை. தமிழகத்தின் நீர் உரிமையை முழுமையாக மீட்கும் வரை விஜய் அரசு அனைத்து அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ வழிகளிலும் தொடர்ந்து போராடும். </p><p>மாநில நலனுக்கு உதவும் வகையில் யார் அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தாலும் அதை ஏற்க அரசு தயங்காது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆக்கிரமிப்பு காஷ்மீரை தவிர பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ராஜ்நாத் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas#comments</comments><guid isPermaLink="false">af56b7ea-d3b9-4c8c-9f28-749c6e39f4cc</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:18:26 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:18:26.039Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,Kargil Vijay Diwas,கார்கில் வெற்றி தினம்,ராஜ்நாத் சிங்,kargil war memorial,கார்கில் போர் நினைவு சின்னம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vfqnycm1/singh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rajnath singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vfqnycm1/singh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வென்றது. இப்போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீராகளை நினைவு கூரும் வகையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">கார்கில் வெற்றி தினம்</a> ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  இன்று கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடந்தது.</p><h2>கார்கில் போர் நினைவிடம்</h2><p>லடாக்கின் டிராசில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அவர் கார்கில் போர் நினைவிடத்திற்கான இணைய வழித்தளத்தை தொடங்கி வைத்தார். அதன்பின், நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:</p><h2>வீரம்-தைரியம்</h2><p>27-வது கார்கில் வெற்றி தினத்தில் நமது வீரர்களுக்கும், அவர்களின் வீரத்திற்கும் தலை வணங்குகிறேன். கார்கில் வெற்றி என்பது வெறும் ராணுவ மற்றும் ராஜதந்திர வெற்றி மட்டுமல்ல, நமது வீரர்கள் அசைக்கமுடியாத தைரியத்தையும், வீரத்தையும் ஒட்டுமொத்த உலகமும் கண்ட தருணம் ஆகும். கார்கில் வெற்றி, பாரத மாதாவின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரத்தைப் போன்றது.</p><p>பாகிஸ்தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு தவறான நடவடிக்கைக்கும், அவர்கள் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்குக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.</p><p>இந்தியா தரவு மையங்களை உருவாக்குகிறது. பாகிஸ்தான் பயங்கரவாத மையங்களை உருவாக்குகிறது. இந்தியா புதுமைகளைப் பின்தொடர்கிறது. பாகிஸ்தான் ஊடுருவலுக்கான புதிய வழிகளைத் தேடுகிறது. </p><p>இந்தியா கப்பல்களை வடிவமைக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்தியா ஒரு ஸ்டார்ட்அப் சூழலை உருவாக்கும்போது, ​​பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத சூழலை உருவாக்குகிறது. </p><h2>எல்லை தாண்டி</h2><p>இந்தியா செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும்போது, ​​பாகிஸ்தான் எல்லை தாண்டி பயங்கரவாதிகளை அனுப்புவதில் ஈடுபட்டுள்ளது.</p><p>தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தனது அரசு கொள்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளது. அங்கு ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு முற்றிலும் மறைந்துவிட்டது. அந்நாட்டு ராணுவம் பயங்கரவாத அமைப்புகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் அவர்களுடன் நெருக்கமாகவும் செயல்படுகிறது. </p><p>எனவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசுகளையும் இந்தியா இனி தனித்தனியாகப் பார்க்காது என்பதை நாங்கள் உணர்த்தினோம்.  </p><h2>பேச்சுவார்த்தை கிடையாது</h2><p>எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறாது. ஒருவேளை பேச்சுவார்த்தை என்று ஒன்று நடந்தால், அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும். </p><p>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர பாகிஸ்தானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தையிலும் இந்தியா ஈடுபடாது என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மார்வெலின் அடுத்த மெகா ஹிட் ரெடி-&apos;பிளாக் பேந்தர் 3&apos; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/marvel-next-mega-hit-ready-black-panther-3-official-announcement</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/marvel-next-mega-hit-ready-black-panther-3-official-announcement#comments</comments><guid isPermaLink="false">1bf3acfc-62ec-4572-aa55-402e51e54096</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:52:07 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:52:07.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Black Panther 3,Marvel Studios,David Jonsson,பிளாக் பேந்தர் 3,மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ்,டேவிட் ஜான்சன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3qeeecgh/black.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Black Panther 3]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3qeeecgh/black.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பிளாக் பேந்தர் 3' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது சான் டியாகோ காமிக்-கான் ஹால்-ஹெச் நிகழ்வில் வெளியிட்டுள்ளது.</p><h2><strong>புதிய பிளாக் பேந்தர்:</strong></h2><p>இத்திரைப்படம் வருகிற '2028-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி' உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. மறைந்த முன்னணி நடிகர் சாட்விக் போஸ்மேன் நடித்த 'டீ-சாலா' கதாபாத்திரத்தின் வளர்ந்த மகனாக பிரபல ஆங்கில நடிகர் 'டேவிட் ஜான்சன்' நடிக்கவுள்ளார். இதன் மூலம் அவரே அடுத்த தலைமுறை பிளாக் பேந்தராகப் பொறுப்பேற்கிறார்.</p><p>முந்தைய இரு பாகங்களை இயக்கிய 'ராயன் கூக்ளர்' மீண்டும் இத்திரைப்படத்தை இயக்குகிறார். லெட்டிஷியா ரைட் மற்றும் வின்ஸ்டன் டியூக் ஆகியோர் மீண்டும் தங்களது முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் முழுமையாக '70mm IMAX' கேமரா வடிவில் உருவாக்கப்பட உள்ளது.</p><h2><strong>வகாண்டாவின் அடுத்த வாரிசு:</strong></h2><p>2022-இல் வெளியான 'பிளாக் பேந்தரில், வகாண்டா ஃபாரெவர்' திரைப்படத்தின் இறுதிக்காட்சியில், டீ-சாலா மற்றும் நகியாவிற்கு பிறந்த இளம் மகன் அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது 3-ஆம் பாகத்தில் அவர் வளர்ந்து, வகாண்டாவின் புதிய பிளாக் பேந்தராக உருவெடுக்கும் கதையாக இது அமையும்.</p><h2><strong>அவெஞ்சர்ஸ் தொடர்புகள்:</strong></h2><p> 2027-இல் வெளியாகவுள்ள 'அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ்' திரைப்படத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சாதனை வரலாறு:</strong></h2><p>கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பிளாக் பேந்தர் முதல் பாகம் உலகளவில் சுமார் ரூ.10,000+ கோடி வசூல் செய்து, சிறந்த படத்திற்கான ஆஸ்கர் பரிந்துரையைப் பெற்ற முதல் சூப்பர்ஹீரோ திரைப்படமாக வரலாறு படைத்தது. தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு வெளியான 'வகாண்டா ஃபாரெவர்' உலகளவில் $859 மில்லியன் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>கோஷ்டிகள் இருந்தால்தான் காங்கிரஸ் கட்சி வளரும்: திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-congress-manickam-tagore-thirunavukkarasar-koshdi-mothal-issuses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-congress-manickam-tagore-thirunavukkarasar-koshdi-mothal-issuses#comments</comments><guid isPermaLink="false">9600aed7-012a-4e21-a6a7-845278cf0479</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:46:08 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:46:08.798Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,Manickam Tagore</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3lqdod0r/Thirunavukkarasar001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருநாவுக்கரசர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3lqdod0r/Thirunavukkarasar001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எல்லா அரசியல் கட்சிகளிலும் கோஷ்டிகள் இருக்கும். இதில் கோஷ்டி பூசலுக்கு பெயர் பெற்ற கட்சி காங்கிரஸ். இதற்கு புதிய தலைவர்கள் வரும்போது கோஷ்டி அரசியலுக்கு இடமில்லை என்பார்கள். ஆனாலும் அது இருந்து கொண்டே இருக்கும்.</p><h2>மாணிக்கம் தாகூர்</h2><p>தற்போது புதிய மாநில தலைவராக பொறுப்பேற்று உள்ள மாணிக்கம் தாகூரும் இனி கோஷ்டி அரசியல் இருக்காது என்று கூறி உள்ளார். மேலும் போஸ்டர்களில் படங்களை போடுவதால் பிரச்சினை வருவதால் ராகுல் படத்தை மட்டும் பெரிதாக போட வேண்டும் என்பது உள்பட சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில் மூத்த தலைவரான திருநாவுக்கரசர் ‘எல்லோரும் தங்கள் படங்களையும், தங்களுக்கு பிடித்தமான நிர்வாகிகள் படங்களையும் போட்டுக் கொள்வதில் தவறில்லை. கட்சியில் கோஷ்டி இருப்பது நல்லதுதான். அதனால்தான் கட்சியும் வளருகிறது என்று மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று திருநாவுக்கரசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட தலைவர்கள் மத்தியில் உரையாடி இருக்கிறார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் இருக்கத்தான் செய்யும்.</p><h2>கோஷ்டி தவிர்க்க முடியாது</h2><p>யார் யாருக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களை போய் பார்ப்பார்கள். அவர்கள் மூலம் கல்லூரியில் ஒரு அட்மிஷன், போலீஸ் நிலைய விவகாரம், அரசு அலுவலகங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்று வேலைகள் நடக்கும். இதன் மூலம் கட்சியும் வளரும்.</p><p>யாரும் யாரையும் பார்க்க கூடாது. யாருடனும் பேசக்கூடாது. இந்த படங்களை போடக்கூடாது என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியப்படாது.</p><p>காங்கிரசில் காந்தி காலத்திலும் கோஷ்டி இருந்து இருக்கிறது. காமராஜர் காலத்திலும் இருந்து இருக்கிறது. இது தவிர்க்க முடியாதது. அப்படி ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஆதரவு கூட்டம் பெருக பெருகதான் கட்சியும் வளர்ந்து இருக்கிறது.</p><p>போஸ்டர்களில் படங்கள் போடுவது பற்றி எம்.ஜி.ஆர். சொல்வார் ‘என்னை எல்லோருக்கும் தெரியும். உங்கள் படங்களையும் போட்டு அச்சிடுங்கள். அப்போதுதான் நீங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள். உங்களை மக்கள் அறிந்து கொள்வார்கள்’ என்பார்.</p><h2>பேனர்களில் படங்கள்</h2><p>நீங்களும் ராகுல் படத்தை எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் போட்டு கொள்ளுங்கள். மாநில தலைவர் படத்துடன், மாவட்ட தலைவர்கள் படம் முதல் ஒன்றிய தலைவர்கள் படங்கள் வரை போடுங்கள். அப்போதுதான் மக்கள் மத்தியிலும் நீங்கள் அறி முகம் ஆவீர்கள். அதிகாரிகள் மத்தியிலும் அறிமுகம் ஆவீர்கள்.</p><p>அவ்வாறு அறிமுகம் ஆகி இருந்தால்தான் மக்கள் பிரச்சினைகளுக்காக நீங்கள் அதிகாரிகளை சந்தித்து பேச முடியும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இப்படி மக்களுக்கு ஏதாவது செய்து கொடுத்தால்தான் மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள். கட்சியும் வளரும்.</p><p>பூத் லெவலில் இருக்கும் கடை நிலை நிர்வாகிகள் வரை கட்சியை வளர்ப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். இப்படி கட்டமைப்பை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அனைத்து மட்டங்களிலும் பலமாக வைத்துள்ளது. அதே போல் நீங்களும் கட்டமைப்பை பலப்படுத் துங்கள்’ என்றார்.</p><p>காங்கிரஸ் மாநில கமிட்டி கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில் திருநாவுக்கர சர் இவ்வாறு பேசியது மாவட்ட தலைவர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/tirupati-temple-devotees-wait-for-18-hours-for-darshan</link><comments>https://www.maalaimalar.com/spirituality/tirupati-temple-devotees-wait-for-18-hours-for-darshan#comments</comments><guid isPermaLink="false">72464dd5-325b-432e-bd0a-2f572d933efc</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:34:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:34:17.016Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>devotees,Tirupati temple,திருப்பதி கோவில்,பக்தர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/cv0bcjlb/temple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tirupati]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/cv0bcjlb/temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.</p><h2>திருப்பதி கோவில்</h2><p>நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p><h2>பக்தர்கள் தரிசனம்</h2><p>நேற்று முன்தினம் மாலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. </p><p>நேற்று அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் தரிசன வரிசையில் இருந்து ஷீலா தோரணம் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.</p><p>பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி, பால் உள்ளிட்டவைகளை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.</p><p>திருப்பதியில் நேற்று 70,216 பேர் தரிசனம் செய்தனர். 27,606 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.77 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.08 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் நோ சொன்ன மத்திய அரசு: கோவை, மதுரை மக்களின் மெட்ரோ ரெயில் கனவு மீண்டும் கலைந்தது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-government-rejects-metro-again-coimbatore-madurai-dreams-shattered</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-government-rejects-metro-again-coimbatore-madurai-dreams-shattered#comments</comments><guid isPermaLink="false">bacda4a7-ec1e-4870-b721-ef477cdba72f</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:24:37 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:24:37.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,Coimbatore Metro,Madurai Metro,கோவை மெட்ரோ,மதுரை மெட்ரோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mfk6gxtt/covai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Coimbatore-Madurai Metro]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mfk6gxtt/covai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமான 'கோயம்புத்தூர்' மற்றும் ஆன்மீக பண்பாட்டு மையமான 'மதுரை' ஆகிய இரு முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இரண்டாவது முறையாக நிராகரித்துத் திருப்பி அனுப்பியுள்ளது.</p><h2><strong>மக்கள்தொகை அளவுகோல் குறைவு:</strong></h2><p>தேசிய மெட்ரோ ரெயில் கொள்கை (2017)-இன் படி, ஒரு நகரில் மெட்ரோ திட்டம் தொடங்க குறைந்தபட்சம் '20 லட்சம் மக்கள்தொகை' இருக்க வேண்டும். 2011 கணக்கெடுப்பின்படி கோவையில் 15.84 லட்சமும், மதுரையில் 15 லட்சமும் மட்டுமே மக்கள்தொகை உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2><strong>பயண நேரச் சேமிப்பு போதாமை:</strong></h2><p>இவ்விரு நகரங்களிலும் மெட்ரோ அமைப்பதால் எதிர்பார்த்த அளவு பயண நேரம் குறையாது என்றும், அதிக அளவிலான பயணிகள் பயன்பாடு  இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><h2><strong>மாற்றுப் போக்குவரத்து பரிந்துரை:</strong></h2><p>மெட்ரோ போன்ற பிரம்மாண்ட செலவினத் திட்டங்களுக்குப் பதிலாக, அதிவேகப் பேருந்து போக்குவரத்துச் சேவையை மற்றும் நகர்ப்புற பேருந்து எண்ணிக்கையை அதிகரிப்பதே சிறந்தது என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.</p><h2><strong>கோவை மெட்ரோ:</strong></h2><p>கோவை மெட்ரோ திட்டம் 39 கிலோமீட்டர் நீளத்தில், அவிநாசி சாலை வழியாக கருமத்தம்பட்டி வரை மற்றும் உக்கடம்-சத்தியமங்கலம் சாலை வழியாக வலியம்பாளையம் பிரிவு வரை செல்லும். இதில் 32 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் அமைக்க ரூ.10,740 கோடி மதிப்பிடப்பட்டது.</p><h2><strong>மதுரை மெட்ரோ:</strong></h2><p>அதேபோல், மதுரை மெட்ரோ திட்டம் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31.9 கிலோமீட்டர் நீளத்தில், 26 நிலையங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் 23 உயர்மட்ட பாதையிலும், 3 நிலத்தடி பாதையிலும் அமைக்க ரூ.11,360  என கணிக்கப்பட்டது.</p><h2><strong>முந்தைய நிராகரிப்பு:</strong></h2><p>கடந்த ஆண்டு (நவம்பர்) முதன்முறையாகத் திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கூடுதல் தரவுகள், மிதக்கும் மக்கள்தொகை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி மே மாதத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் கோரிக்கை அனுப்பியிருந்தது.</p><h2><strong>அரசியல் முரண்பாடுகள்:</strong></h2><p>ஆக்ரா, போபால், பாட்னா போன்ற நகரங்களில் குறைவான மக்கள்தொகை இருந்தபோதிலும் மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் ஆளுங்கட்சியும் ஏனைய அமைப்புகளும் விமர்சித்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஈரானின் திடீர் எச்சரிக்கை: இங்கிலாந்தின் அளித்த தரமான பதில்..!</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-warns-uk-says-armed-forces-ready-to-defend-country-over-us-bombers</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-warns-uk-says-armed-forces-ready-to-defend-country-over-us-bombers#comments</comments><guid isPermaLink="false">2b7cf229-f9ef-4f19-9a52-8237c33a410a</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:13:37 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:13:37.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>US Iran war,அமெரிக்கா ஈரான் போர்,மேற்கு ஆசியா போர்,West Asia crisis</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/nd0g6pwf/USIranWar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இங்கிலாந்து ராணுவம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/nd0g6pwf/USIranWar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான்- அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த நிலையில் இருதரப்பும் மீண்டும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.</p><p>ஈரான் மீது கடந்த 13 நாள் இரவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்க ராணுவம் நேற்று நள்ளிரவில் எந்த தாக்குதல்களையும் நடத்திவில்லை. கடந்த 2 வாரங்களில் முதல் முறையாக அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தி உள்ளது.</p><p>மத்திய கிழக்கு போரில் அமெரிக்காவுக்கு வளைகுடா நாடுகள் உதவக்கூடாது என்று ஈரான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.</p><h2>இங்கிலாந்துக்கு எச்சரிக்கை</h2><p>இந்த நிலையில் இங்கிலாந்துக்கு ஈரான் நேரடியாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் இங்கிலாந்தின் விமானத் தளங்களைப் பயன்படுத்தியதாக தகவல் வெளியான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.</p><p>இதுதொடர்பாக ஈரானின் புரட்சிகர காவல் படையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக ஈரானின் அரசு ஒலிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஈரானுடனான எந்தவொரு போரிலும் அமெரிக்காவை ஆதரித்தால் இங்கிலாந்து நிச்சயமான மற்றும் முறையான இலக்காக கருதப்படும். இது வளைகுடா நாடுகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இங்கிலாந்து பதில்</h2><p>ஈரானின் எந்தவொரு தாக்குதலில் இருந்தும் நாட்டை பாதுகாக்க ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. மேலும், சொந்த மண் அல்லது வெளிநாட்டு மண்ணிலும் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.</p><h2>அணு ஆயுதம்</h2><p>ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது அமெரிக்கா போரை தொடங்கியது. ஆனால் தாங்கள் அணு ஆயுதத்தை தயாரிக்கவில்லை என்று ஈரான் தெரிவித்தது. இந்த நிலையில் ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி, அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்று அமெரிக்க உளவுத்துறை கருதுவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உளவுத் தகவல்கள் மற்றும் இடைமறிக்கப்பட்ட உரையாடல்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனியுடன் ஒப்பிடும்போது அணு ஆயுதங்களை உருவாக்குவதில் அவரது மகனான மொஜ்தபா கமேனி குறைவான தயக்கமே கொண்டிருப்பதாக அந்த உளவுத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>சவுதி அரேபியாவுக்கும், ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே செங்கடல் உடன்கையில் உள்ள சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.</p><h2>ஹவுதி- சவுதி அரேபியா இடையே மோதல்</h2><p>இதற்கிடையே யான்பு வில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து ஏமனில் இருந்து ஏவப்பட்ட 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடை மறித்ததாக சவுதி அரேபியா தெரிவித்து உள்ளது.</p><p>மத்திய கிழக்கில் ஏற்பட்டு உள்ள பதற்றமான சூழலுக்கு மத்தியில் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. கப்ர்ட்பெனிட், மிஸ்ரா, பெய்ட் யஹுன், குனின் ஆகிய கிராமங்கள் மீது பிரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டன. மேலும் மார்க்கபா நகரம் மற்றும் அலி அல்-தாஹெர் மலைப்பகுதிகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு முறைகேட்டில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/new-bill-to-be-tabled-in-parliament-tomorrow-10-year-jail-rs-10-crore-fine</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-bill-to-be-tabled-in-parliament-tomorrow-10-year-jail-rs-10-crore-fine#comments</comments><guid isPermaLink="false">a255ebb1-1216-47ba-bd2a-7d9bd69f9b11</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:07:00 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:07:00.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>paper leak,neet protest,வினாத்தாள் கசிவு,நீட் போராட்டம்,public examinations bill,பொதுத் தேர்வுகள் மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7nnj8q9f/Untitled-design-77.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ New amendment bill proposes 10-year jail and ₹10 crore fine to curb public exam malpractice]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7nnj8q9f/Untitled-design-77.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவிலான அரசு போட்டித்தேர்வுகளில் வினாத்தாள் கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தாக்கல் செய்ய உள்ளார்.</p><p>கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில் பழைய சட்டம் திருத்தங்கள் செய்யப்பட உள்ளது.</p><p>இதன்மூலம் பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட உள்ளது.</p><p>டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில், பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் ‘2026 சட்டத்திருத்த மசோதா’ என்ற வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.</p><h3><strong>2026 பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா:</strong></h3><p>இந்த மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு எம்.பி.க்களுக்கு மசோதாவின் நகல் நேற்று விநியோகிக்கப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-</p><p>வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.</p><p>தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படும். தனி நபர் குற்றங்க ளுக்கான அபராத தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>வினாத்தாள் கசிவை தொடர்ந்து செய்யும் கும்பல்களுக்கு குறைந்தபட்ச தண்டனை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும். இவர்களுக்கான குறைந்தபட்ச அபராதம் ரூ.1 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.</p><p>தேர்வு நடத்துதல், வினாத்தாள் அச்சிடுதல், கணினி தொழில்நுட்ப ஆதரவு போன்ற பணிகளில் ஈடுபடும் தனியார் ஏஜென்சிகளுக்கு ரூ.5 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.</p><p>அந்நிறுவனம் பொதுத் தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடைக்காலம் இரட்டிப்பாக்கப்படும். அதாவது 8 ஆண்டுகள் வரை பொதுத் தேர்வு நடத்த தடை விதிக்கப்படும்.</p><p>நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதியானால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 கோடி அபராதமும் விதிக்கப்படும்.</p><p>வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகள் 2 மாதங்களில் வழக்கை முடிக்க கால வரையறை நிர்ணயிக்கப்படும்.</p><p>வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து மேற்கொள்ள வசதியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.</p><h3><strong>விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை:</strong></h3><p>இந்த விரைவு நீதிமன்றங்களில் வழக்கின் மீது உடனடியாக விசாரணையை தொடங்கி, தினசரி அடிப்படையில் மேற்கொள்வதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.</p><p>வினாத்தாள் கசிவு தேர்வு முறைகேடு குற்றங்களை விரைந்து விசாரிப்பதற்காக எந்தவொரு அமர்வு நீதிமன்றத்தையும் சிறப்பு விரைவு நீதிமன்றமாக மாற்றியமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்த சட்டத்திருத்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.</p><p>விரைவு நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து, ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல் முறையீடு செய்யலாம். அந்த மேல்முறையீட்டு மனுக்களும் 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேற்கண்ட சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு அந்த மசோதா நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாஜகவிற்கு பதவியை விட நாடும், இளைஞர்களுமே முக்கியமானவர்கள்: அமித்ஷா</title><link>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-made-excellent-arrangements-to-conduct-exams-in-mother-tongue-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-made-excellent-arrangements-to-conduct-exams-in-mother-tongue-amit-shah#comments</comments><guid isPermaLink="false">28ac5ac0-73a0-46b8-b0e8-d1ca9feeab13</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:02:10 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:02:10.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித்ஷா,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,neet protest,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/85jw4pmk/Untitled-design-80.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah says BJP values nation and youth above posts]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/85jw4pmk/Untitled-design-80.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். </p><p>இந்த ராஜினாமா குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-</p><h3><strong>பாஜகவிற்கு நாடும், இளைஞர்களுமே முக்கியம்:</strong></h3><p>பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை எந்தவொரு பதவியையும் விட நாடும், நமது இளைஞர்களும், மாணவர்களுமே முக்கியமானவர்கள். </p><p>மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, இந்த கொள்கைக்கு சிறந்த உதாரணமாகும்.</p><p>மோடி அரசு, இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மோடி எடுத்துள்ள முடிவுகள் பாராட்டுக்குரியவை. </p><p>நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இத்தகைய நடவடிக்கைகள் முழுமையான நீதியை உறுதி செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><h3><strong>தர்மேந்திர பிரதான் செய்த சீர்திருத்தங்கள்:</strong></h3><p>தர்மேந்திர பிரதான் தனது பதவிக்காலத்தில், தேசியக் கல்விக் கொள்கையை  திறம்படச் செயல்படுத்துதல், தாய்மொழியில் தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள், பிஎம் ஸ்ரீ  பள்ளிகளின் விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டார்.</p><p>மேலும் டிஜிட்டல் கல்வியை ஊக்குவித்தல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறைக்கும், கல்வித்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அவர் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். </p><p>தேர்வு முறை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மாணவர் நலனை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கான அவரது முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. </p><p>இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் லட்சியத்தின் மீதான அவரது அர்ப்பணிப்புக்கு, அவரது பதவிக்காலம் ஒரு சான்றாகத் திகழ்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;உன் மச்சங்களை பார்க்க வேண்டும்&apos;-பாலிவுட் நடிகர் அனுப்பிய மெசேஜை அம்பலப்படுத்திய ஜான்வி கபூர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/janhvi-kapoor-reveals-bollywood-actors-flirty-message-about-moles</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/janhvi-kapoor-reveals-bollywood-actors-flirty-message-about-moles#comments</comments><guid isPermaLink="false">56f31052-078a-4b70-ac5d-132a2677985b</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:53:18 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:53:18.676Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Janhvi Kapoor,பாலிவுட்,Bollywood,நடிகை ஜான்வி கபூர்,Koffee With Karan,காபி வித் கரண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/r4kr5qgl/jhanvi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Janhvi Kapoor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/r4kr5qgl/jhanvi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து, தற்போது தென்னிந்திய திரைப்படங்களிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகை ஜான்வி கபூர். சமீபத்தில் தனது சகோதரி குஷி கபூருடன் சேர்ந்து, கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் பிரபல 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட பல சுவாரசியமான மற்றும் தனிப்பட்ட கேள்விகளுக்கு ஜான்வி கபூர் ஓபனாக பதிலளித்தார்.</p><h2><strong>அரங்கத்தையே அதிர வைத்த கேள்வி:</strong></h2><p>நிகழ்ச்சியின் 'ரேபிட் பயர்' சுற்றின் போது கரண் ஜோஹர், உங்களுக்கு இதுவரை வந்த குறுஞ்செய்திகளிலேயே மிகவும் ஃபிளர்ட்டியான  மெசேஜ் எது? என்று கேட்டார். இதற்கு பதிலளிப்பதற்கு முன் தன் சகோதரி குஷியைப் பார்த்து, நான் இதைச் சொன்னால் நீ என் மீது கோபப்படுவாய் என நினைக்கிறேன் என்று கூறி சிரித்தார். </p><p>பின்னர் கரண் ஜோஹரிடம், பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தனக்கு அனுப்பிய மெசேஜை வெளிப்படையாகக் கூறினார். "உன் உடலில் இருக்கும் எல்லா மச்சங்களையும் நான் பார்க்கலாமா?" என்று அந்த நடிகர் தனக்கு மெசேஜ் அனுப்பியதாக ஜான்வி கபூர் கூறினார்.</p><h2><strong>சிரிப்பலையில் ஆழ்ந்த அரங்கம்:</strong></h2><p>ஜான்வியின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கரண் ஜோஹர், தனது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல், அப்படியா! உனக்கு அவ்வளவு மச்சங்களா இருக்கின்றன? என வேடிக்கையாகக் கேட்டார். அதற்கு ஜான்வி கபூர், ஆமாம், எனக்கு நிறையவே இருக்கின்றன என்று வெட்கத்துடன் சிரித்தபடியே பதிலளித்தார். இவர்களின் இந்த கலகலப்பான உரையாடல் அங்கிருந்த அனைவரையும் பெரும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.</p><h2><strong>யார் அந்த நடிகர்?</strong> </h2><p>இருப்பினும், அந்த மெசேஜை அனுப்பிய பாலிவுட் நடிகர் யார் என்பதை ஜான்வி கபூர் வெளியில் சொல்லவில்லை. இதனால், ஜான்வி கபூருக்கு அப்படி ஒரு மெசேஜ் அனுப்பிய அந்த குறும்புக்கார நடிகர் யாராக இருக்கும் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் தீவிரமாக விவாதித்தும் தேடியும் வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் விவகாரம்: நெட்டிசன்களின் வாயை அடைத்த ஜோதிகா!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/neet-issue-jyothika-shuts-trolls</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/neet-issue-jyothika-shuts-trolls#comments</comments><guid isPermaLink="false">be875d50-4670-4cb3-939a-1172a277115a</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:28:58 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:28:58.036Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜோதிகா,Jyothika,நீட் விவகாரம்,CJP Protest,காக்ரோச் ஜனதா கட்சி,NEET Controversy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/eo0zncl6/jyothika.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jyothika  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/eo0zncl6/jyothika.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். மேலும், இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன. குறிப்பாக சிலர் ஜோதிகாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்த நிலையில், அவர்களுக்கு அவர் நேரடியாகவும் காரசாரமாகவும் அளித்த பதிலடிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><h2><strong>கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டீங்க மேடம்:</strong></h2><p>கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டீங்க மேடம் என்று கிண்டலடித்த நபருக்கு, எதுவுமே தாமதம் இல்லை. முதலில் சமூகத்திற்கு உங்களுடைய பங்களிப்பு என்ன என்பதை பற்றி யோசியுங்கள் என்றார்.</p><h2><strong>மும்பைக்கு போயிடுவீங்க:</strong></h2><p>என்ன வேணாலும் பேசிட்டு மும்பைக்கு போயிடுவீங்க என்ற விமர்சனத்திற்கு, நான் எங்கே போவேன்? இந்தியாவில்தான் வாழ்கிறேன். இன்னும் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றார்.</p><h2><strong>அரசியல் தான் நடக்கிறது:</strong></h2><p>மாணவர்கள் தாக்கப்படுவதை விட அரசியல் தான் நடக்கிறது என்ற கருத்துக்கு, அரசாங்கம் மாணவர்களின் மண்டையையும் உடலையும் அடித்து உடைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? என கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும், இந்த பதிவுகளுக்காக உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு, அப்படியானால் நீங்களும் எதிர்க்கட்சியிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் பேசுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா என சரவெடியாய் பதிலளித்துள்ளார். </p><p>ஜோதிகாவின் இந்த தைரியமான பதிலடிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மாப்பிள்ளை சீமான்.., 2 மாதத்துக்கு முன்பு சேர்ந்திருந்தால்., அழைப்பு விடுத்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ntk-seeman-nainar-nagendran-bjp-sarath-kumar-birthday-party</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ntk-seeman-nainar-nagendran-bjp-sarath-kumar-birthday-party#comments</comments><guid isPermaLink="false">1f575132-0495-4d73-a3b1-a619f143f52d</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:18:25 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:18:25.735Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sarath kumar,BJP,பாஜக,Seeman,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,சரத் குமார்,சீமான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/9jng6jkq/SarathKumar0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சரத்குமார் பிறந்த நாள் விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/9jng6jkq/SarathKumar0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகில இந்திய சரத்குமார் ரசிகர் நற்பணி மன்றம், நாட்டாமை குடும்பத்தினர் சார்பில் முன்னாள் எம்.பி.யும், பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் பிறந்த நாள் விழா நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரில் நடைபெற்றது.</p><p>இந்த விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><h2>சீமானுக்கு அழைப்பு</h2><p>பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தங்களது கூட்டணியில் சேருவதற்கு விழா மேடையிலேயே நேரடியாக அழைப்பு விடுத்தார்.    </p><h2>நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-</h2><p>சரத்குமாருக்கு 72 வயதானாலும் அவர் எண்ணத்தாலும், செயலாலும் அவரது வயது 27-தான். இந்த மேடையில் மாப்பிள்ளை சீமான் உள்பட அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்து இருப்பதை பார்க்கும்போது அழகாகத்தான் உள்ளது. இதுபோன்று மேடை 2 மாதங்களுக்கு முன்பு சேர்ந்திருந்தால் தமிழகத்தின் அரசியல் நிலைமை என்னவாகி இருக்கும். பார்ப்போம். இனிமேல் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.</p><figure><img alt="சரத்குமார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்கள்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/lle51vn9/SarathKumar0003.jpg" /></figure> <p>தமிழகத்தில் சிலர் எடுத்த எடுப்பிலேயே முதல்-அமைச்சராக வந்து விடுகிறார்கள். ஆனால் முதல்-அமைச்சருக்கான முழு தகுதியும் சரத்குமாரிடம் உள்ளது. சரத்குமார் தேசிய உணர்வோடு அவரது கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்து கொண்டார். நிச்சயமாக அவருக்கு பதவி தேடிவரும்.</p><p>இவ்வாறு நயினார் நாககேந்திரன் பேசினார்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து உள்ளனர். இந்த 6 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.</p><p>இவற்றில் அம்பாசமுத்திரம் சட்டம்ன்ற தொகுதியில் சீமான் பொதுவேட்பாளராக களம் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து சீமானுக்கு இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சி ஆதரவு அளிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</p><p>பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p><h2>விழாவில் நடிகர் சரத்குமார் பேசியதாவது:-</h2><p>நான் சினிமாவில் இருந்து திடீரென அரசியலுக்கு வந்தவன் அல்ல. எனது குடும்பமே அரசியல் பின்னணி கொண்ட குடும்பம்தான். உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பவர்களை யாராலும் எப்போதும் தோற்கடிக்க முடியாது. உடல் வலிமையும், கடின உழைப்பும் இருந்தால் இளைஞர்கள் சாதனையாளராக முடியும்.</p><p>எதையும் சாதிப்பதற்கு உடல் வலிமையும் மன வலிமையும் இருக்க வேண்டும். என்னால் 150 ஆண்டுகள் வரையிலும் வாழ முடியும். சீனர்கள் 150 ஆண்டுகளுக்கும் மேல் தாண்டி வாழ்கிறார்கள். அதற்கு உடல் வலிமையும் மன வலிமையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.</p><p>சீமான் இந்த மண்ணில் தேர்தலில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது காலத்தின் கட்டாயமாக இருக்கும். சாதி, மத வேறுபாடற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>எங்களை சந்தேகித்து விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி, இது வெறும் தொடக்கம்தான்: அபிஜீத் தீப்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke</link><comments>https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke#comments</comments><guid isPermaLink="false">eee9ce31-86e4-492c-84c3-f06b118c0d02</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:07:47 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:07:47.455Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>abhijeet dipke,அபிஜீத் தீப்கே,சிஜேபி,CJP Protest,CJP,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/inapr828/Untitled-design-76.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET Protest Leader Abhijit Deepke thanks critics]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/inapr828/Untitled-design-76.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்விற்கு எதிராக 37 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவடைந்ததை அடுத்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று ஒரு வீடியோ வெளியிட்டார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே வீடியோ பதிவு:</strong></h3><p>அந்த வீடியோவில் அபிஜீத் தீப்கே கூறியிருப்பதாவது:-</p><p>உங்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. உடல்நலக் குறைபாடுகளை காரணம் காட்டி, ஜந்தர் மந்தரில் கூடியிருந்த ஆதரவாளர்களை நேரில் சந்திக்க இயலவில்லை, அதற்காக மன்னித்து கொள்ளுங்கள்.</p><p>நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஜந்தர் மந்தரில் காத்திருந்த அனைவரையும் என்னால் சந்திக்கவோ, அவர்களுக்கு நன்றி சொல்லவோ முடியவில்லை.</p><p>ஏனென்றால், உங்களுக்குத் தெரியும், எனக்கு டைபாய்டு காய்ச்சல் இருந்தது. எனது உடல் வெப்பநிலை 101 டிகிரியாக இருந்தது. அதனால்தான் நான் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது.</p><p>உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும். ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் காத்திருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>இந்த நாட்டிற்காக நீங்கள் செய்ததை நான் மனதாரப் பாராட்டுகிறேன் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் சல்யூட்.</p><p>எங்களைச் சந்தேகித்தும், விமர்சித்தும், உங்களுக்கு போராடத் தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பியவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>நீங்கள் எங்களை விமர்சிக்காமலும், கேள்வி எழுப்பாமலும் இருந்திருந்தால், எங்களால் முன்னேறியிருக்க முடியாது.</p><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக நாங்கள் நீண்ட தூரம் பயணிப்போம். இது வெறும் தொடக்கம்தான். ஜெய் ஹிந்த்” என்று கூறியுள்ளார்.</p><h3><strong>நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்:</strong></h3><p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ-யின் கணினி வழியில் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், காக்ரோச் ஜனதா கட்சியினர், ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.</p><p>இந்த இயக்கம் நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களின் ஆதரவைப் பெற்றதுடன், பல எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற்றது.</p><p>ஜூன் 28 முதல் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு ஜூலை 18 அன்று காவல்துறையினரால் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.</p><p>இதையடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஜூலை 20 அன்று ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றபோது, இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் காவல்துறையினருடன் மோதல்கள் ஏற்பட்டன.</p><h3>தர்மேந்திர பிரதான் ராஜினாமா:</h3><p>அவர்கள் போராட்டக்காரர்களைக் கலைக்கத் தடியடியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் பயன்படுத்தினர். </p><p>அன்றைய தினம் பிற்பகலில், நட்டா தனது இல்லத்தில் சிஜேபி தலைவர்களுடன் முதல் முறையாக சந்திப்பு ஒன்றை நடத்தினார். இது இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தை குறித்தது.</p><p>இதைத்தொடர்ந்து நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து சிஜேபி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.</p><h3><strong>சிஜேபி கோரிக்கை:</strong></h3><p>இந்த நிலையில் நீட் பிரச்சினை தொடர்பாக ஜந்தர் மந்தரில் 36 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நேற்று கைவிட்டது.</p><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதாக சிஜேபி தெரிவித்தது.</p><p>அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக சிஜேபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.</p><p>ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள், ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடனும் புரிதலுடனும் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என அவர் கூறினார்.</p><h3><strong>மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை:</strong></h3><p>தங்களது கோரிக்கைகள் அடங்கிய வரைவை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாகவும் செளரவ் தாஸ் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நட்டா, போராட்டத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும், தங்களின் எஞ்சிய கோரிக்கைகளையும் கோடிட்டு காட்டும் எழுத்துப்பூர்வ வரைவை சிஜேபி-யினர் சமர்ப்பித்ததாகக் கூறினார்.</p><p>போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் கட்சி உறுதிமொழி கோரியுள்ளதாகவும் நட்டா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இனி வினாத்தாள் கசிவு இருக்கக் கூடாது: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாணவர்கள் கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/students-demand-end-to-exam-paper-leaks-from-new-education-minister-pralhad-joshi</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-demand-end-to-exam-paper-leaks-from-new-education-minister-pralhad-joshi#comments</comments><guid isPermaLink="false">94ecf578-0dec-4718-b958-6f3bf02bb806</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:59:49 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:59:49.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,பிரகலாத் ஜோஷி,Pralhad Joshi,CJP,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/0w0v5ym5/prahalad.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pralhad Joshi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/0w0v5ym5/prahalad.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக உள்ள 'பிரகலாத் ஜோஷி'க்கு கல்வித் துறையின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில்தான், புதிய கல்வி அமைச்சர் வினாத்தாள் கசிவுகளை முற்றிலுமாகத் தடுத்து, அனைவருக்கும் கட்டுப்படியாகும் வகையில் கல்வியை முறைப்படுத்த வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2><strong>தொடர் போராட்டம்:</strong></h2><p>நீட் மற்றும் யு.ஜி.சி-நெட்  தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் தலைமையிலான மாணவ அமைப்பினரும் லட்சக்கணக்கான மாணவர்களும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். </p><p>போராட்டத்தின் உச்சகட்டமாக, வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்றுத் தர்மேந்திர பிரதான் தனது பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.</p><h2><strong>புதிய கல்வி அமைச்சர் நியமனம்:</strong></h2><p>தர்மேந்திர பிரதானின் விலகலைத் தொடர்ந்து, கர்நாடகாவின் தார்வாடு தொகுதியில் இருந்து 5 முறை எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த பாஜக தலைவரும், நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. "மிகுந்த கடமையுணர்வோடும் பணிவோடும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்" என ஜோஷி அறிவித்துள்ளார்.</p><h2><strong>மாணவர்களின் கோரிக்கைகள்:</strong></h2><p>சி.ஜே.பி போராட்டத்தில் ஈடுபட்ட பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் சார்பில் புதிய அமைச்சருக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி:</strong></h2><p>இனிவரும் எந்தவொரு தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளிலும் வினாத்தாள் கசியாத வண்ணம் 'தேசிய தேர்வுகள் முகமையை' முற்றிலும் சீரமைக்க வேண்டும்.</p><h2><strong>கட்டுப்படியாகும் கல்வி:</strong></h2><p>ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை உறுதிசெய்யும் வகையில் கல்வி அமைப்பைக் குறைந்த செலவில் கிடைக்கச் செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவில் ஈடுபடும் 'தேர்வு மாஃபியாக்கள்' மீது புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.</p><p>தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் மாணவர்களுக்கான இழப்பீடு, போராட்ட வழக்குகள் வாபஸ் போன்ற மத்திய அரசின் உறுதிமொழிகளைத் தொடர்ந்து, 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த மாணவர் போராட்டம் தற்காலிகமாகக் திரும்பப் பெறப்பட்டுள்ளது. </p><p>எனினும், புதிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையிலான கல்வித் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் மாணவர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-lays-wreath-at-the-kargil-war-memorial-to-pay-tribute-to-bravehearts-who-laid-down-their-lives-in-kargil-war-in-1999</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-lays-wreath-at-the-kargil-war-memorial-to-pay-tribute-to-bravehearts-who-laid-down-their-lives-in-kargil-war-in-1999#comments</comments><guid isPermaLink="false">1f64be70-bf3f-4295-af0e-cbc30c3d944e</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:45:47 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:45:47.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajnath Singh,Kargil Vijay Diwas,கார்கில் வெற்றி தினம்,ராஜ்நாத் சிங்,kargil war memorial,கார்கில் போர் நினைவு சின்னம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vxq2twiq/rajnath.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rajnath singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/vxq2twiq/rajnath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.</p><h2>கார்கில் வெற்றி தினம்</h2><p>போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த கார்கில் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 27-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.</p><p>இன்றைய தினத்தில் போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.</p><p>கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டின. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.</p><p>இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 27வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் லடாக்கில் உள்ள டிராஸ் பகுதிக்குச் சென்றார்.</p><h2>ராஜ்நாத் சிங் மரியாதை</h2><p>அங்குள்ள போர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.</p><p>முன்னதாக, லடாக் யூனியனில் உள்ள கார்கில் பகுதியில் குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 48 டிகிரி செல்சியஸ். 1999 ஏப்ரலில் பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுடன் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 'ஆபரேஷன் விஜய்' பெயரில் இந்திய ராணுவம் போரிட்டு பாகிஸ்தானை வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விதான் இளைஞர்களின் போராட்டம்: ஜனநாயகத்திற்கான ஆக்சிஜன்- உத்தவ் தாக்கரே</title><link>https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-cjp-protest-failure-of-central-govt-opposition</link><comments>https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-cjp-protest-failure-of-central-govt-opposition#comments</comments><guid isPermaLink="false">a8c844e1-cfdb-43f1-86ad-c770437d4c21</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:39:34 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:39:34.877Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தவ் தாக்கரே,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Uddav thackeray,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mjafyy7g/UddhavThackeray0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uddhav Thackeray]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mjafyy7g/UddhavThackeray0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்படும் போதெல்லாம் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள். பின்னர் அந்த பிரச்சினை அப்படியே அடங்கிவிடும்.</p><p>2026-2027-ம் ஆண்டுக்கான UG மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது வினாத்தாள் லீக் ஆனது. இதனைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.</p><p>இந்த முறை <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> நீட் கசிவு பிரச்சினையை கையில் எடுத்தது. தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜூன் 20-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் தொடர்பாக நேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வெற்றியாக கருதப்படுகிறது.</p><p>இந்த நிலையில், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, மாணவர்களின் போராட்டம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விகளை வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-</p><p>மக்களுக்குச் சிறை அல்லது துப்பாக்கிகளைக் கண்டு அச்சம் இல்லாதிருப்பது பாராட்டுக்குரியது. அதேவேளையில், இது ஆளும் கட்சிக்கு ஆபத்தான ஒன்றாகவும் உள்ளது.</p><h2>ஆளும் கட்சியின் தோல்விகள்</h2><p>இப்போராட்டங்கள், ஏறக்குறைய அழிவின் விளிம்பில் இருந்த ஜனநாயகத்திற்குப் புத்துயிர் அளித்துள்ளன.</p><p>CJP-யின் போராட்டம் என்பது ஆளும் கட்சியின் தோல்வி மட்டுமல்ல, எதிர்க்கட்சியின் தோல்வியும்கூட. இதை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை நாடு இழந்துவிட்டது.</p><p>டெல்லி முதல் மும்பை வரை, மக்கள் அச்சத்தைத் தாண்டி வந்துவிட்டதை நான் உணர்ந்துள்ளேன். இதுவரை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த மக்கள், இப்போது தங்கள் உயிருக்கு அஞ்சும் நிலையை உதறிவிட்டு வீதிகளில் இறங்கியுள்ளனர்.</p><p>மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் நாட்டை முற்றிலுமாகச் சீரழித்துவிட்டனர். இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதியக் கூடாது. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசு முன் வைக்கப்பட்டது. இதில் வழக்கு பதியப்படாது என்ற கோரிக்கை ஏறு்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிகள் தளர்வு: தமிழக அரசு புதிய நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt#comments</comments><guid isPermaLink="false">d3d12106-0d5e-48f6-bd7a-4bb4b5f25288</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:06:53 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:06:53.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu government,டாஸ்மாக் பார்,Tasmac Bar,தமிழக அரசு.,wineshop,மதுக்கடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/1anuumb4/tasmac.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TASMAC Bar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/1anuumb4/tasmac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களைத் தொடங்குவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாகப் புதிய தளர்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2><strong>100 மீட்டர் சுற்றளவில் பார் அமைக்க அனுமதி:</strong></h2><p>இதுவரை டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டியே (இணைந்தே) பார் தொடங்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி மதுக்கடையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பார்களைத் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட உள்ளது.</p><h2><strong>பார் பரப்பளவு அதிகரிப்பு:</strong></h2><p>பார் அமைப்பதற்கான குறைந்தபட்ச இடத்தின் பரப்பளவு '15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக' உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்களில் கூடுதல் இடவசதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>ஏ<strong>கபோக உரிம நடைமுறைக்குச் முடிவு:</strong></h2><p>புதிய டெண்டர் மற்றும் தளர்வு விதிமுறைகளின் மூலம் குறிப்பிட்ட நபர்கள் அல்லது குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே தொடர்ந்து பார் நடத்தும் பழைய நடைமுறை மாற்றப்பட்டு, புதிய நபர்களுக்கும் ஏலம்/டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு உருவாகும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>டெண்டர் புதுப்பித்தல்:</strong></h2><p>டாஸ்மாக் பார்களுக்கான பழைய உரிமக் காலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், புதிய டெண்டர் விதிமுறைகளை இறுதி செய்யும் வரை தற்காலிகமாக பார்களின் இயக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது.</p><h2><strong>கட்டுப்பாடுகள் தீவிரமாக்கம்:</strong></h2><p>பார் அமைப்பதற்கான இட அமைப்பில் தளர்வுகள் தரப்பட்டாலும், பார்களில் பீடி-சிகரெட் விற்பனைக்கான தடை, சிற்றுண்டி மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்கக் கூடாது போன்ற இதர கட்டுப்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - 2 பேர் பலி என தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-in-sivakasi-2-killed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-in-sivakasi-2-killed#comments</comments><guid isPermaLink="false">88d03f9b-3963-4196-bacd-db6fdee53653</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:02:44 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:02:44.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,Sivakasi accident,சிவசாசி வெடி விபத்து,சிவசாசி பட்டாசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/l9zs7bw9/Untitled-design-75.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivakasi Fire Accident: Two killed, several injured in fireworks warehouse blast]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/l9zs7bw9/Untitled-design-75.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது.</p><p>இதையடுத்து அந்த இடம் கரும்புகை மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை கொண்டு பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். </p><p>இந்த விபத்தில் இரண்டு பேர் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த விபத்தில் மேலும் பல பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானாவில் தீர்மானம் நிறைவேற்ற ரேவந்த் ரெட்டி முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21</link><comments>https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21#comments</comments><guid isPermaLink="false">b33059e7-c7c0-4323-a5cc-9a9992a9e7e9</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:39:38 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:39:38.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/po1qdyhg/RevanthReddy001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Revanth Reddy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/po1qdyhg/RevanthReddy001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக தெலுங்கானா மாநிலத்தில் மெழுகுவர்த்தி ஏந்திச் செல்லும் பேரணி நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-</p><p>ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாங்கள் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட இருக்கிறோம். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் பதவிக்கு போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆக குறைக்கும் வகையில் அரசியலமைப்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக  விவாதம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றுவோம்.</p><h2>Gen Z போராட்டம்</h2><p>Gen Z போராட்டம் 56 இன்ஞ் மார்பு கொண்ட பிரதமர் மோடியை வீழ்த்தியுள்ளது. தர்மேந்திர பிரதானை அவரது பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கச் செய்துள்ளது.</p><p>இந்தியாவில் Gen z-ன் மக்கள் தொகை 30 சதவீதம் ஆகும். ஆனால் மக்களவையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நபர்களே இருக்கிறார்கள். 21 வயதிற்கு மேற்பட்டோர் அமைச்சராக இருக்கும் நிலை ஏற்பட்டால், நாட்டின் எதிர்காலம் கட்டாயம் மாற்றம் அடையும்.</p><p>அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் 18 வயது இளைஞர்களால் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக ஆக முடியும். சிங்கப்பூரில் கூட 21 வயதுடையோர் பிரதமராக முடியும்.</p><h2>Gen z குரல் உலகம் முழுவதும் கேட்க வேண்டும்</h2><p>ராகுல் காந்தி பிரதமரானால், Gen Z தலைவர் மத்திய அமைச்சர் ஆக முடியும் என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும். நான் இந்தியா பிளாக்கிடம் பேசுவேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்திப்பேன். தெருக்களில் குரல் எழுப்பிய பிறகு, வெறுமனே வீட்டிற்கு அவர்கள் திரும்பக்கூடாது. இந்த இளைஞர்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். Gen z குரல் உலகம் முழுவதும் கேட்க வேண்டும்.</p> <h2>ராஜீவ் காந்தி கொண்டு வந்த மாற்றம்</h2><p>21 வயதுடையோர் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், மேயர் பதவிகளுக்கு தகுதிடையவர்கள் ஆவார்கள். ராஜீவ் காந்தி வாக்காளர்களின் வயது வரம்பை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். நரசிம்ம ராவ், மேயர் மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடுபவர்களின் வயதை 21 ஆக நிர்ணயித்தார். மாணவர்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பும்.</p><p>இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தரில் அமைதி திரும்பியது: குப்பைகளை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர்</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">3552fd91-3792-4067-98de-dd7db5892ca5</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:38:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:38:17.861Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,நீட் தேர்வு,Neet exam,CJP Protest,ஜந்தர் மந்தர்,jandar mandar,கரப்பான் பூச்சி கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ouoqznj8/cjp1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP cleaning]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ouoqznj8/cjp1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஜூன் மாதத் தொடக்கத்தில் அபிஜீத் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தார். சிஜேபி கட்சி ஜூன் 20 அன்று காலவரையற்ற போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கியது. </p><h2>தீவிரமடைந்த போராட்டம்</h2><p>கரப்பான்பூச்சி கட்சி இளைஞர்களின் போராட்டம் காரணமாக கடந்த மாதம் 20-ம் தேதியிலிருந்து டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு நிலவியது.</p><p>குறிப்பாக, கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் வன்முறை ஏற்பட்ட பிறகு அவ்வப்போது இரவு நேரங்களில் கல் வீச்சு, தடியடி சம்பவங்கள் நடந்தன. இதனால், ஜந்தர் மந்தர் பகுதியே பதற்ற பூமியாக காணப்பட்டது. ஒருபுறம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிய, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இணைய சேவை துண்டிப்பு, மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் என அப்பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டன.</p><h2>தர்மேந்திர பிரதான் ராஜினாமா</h2><p>இதையடுத்து, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். </p><p>மேலும், நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் மற்றும் மாணவர்களை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.</p><p>இதன் அடிப்படையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களின் போராட்டம் வாபஸ் பெறுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கரப்பான் பூச்சி இளைஞர்களின் 36 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.</p><h2>ஜந்தர் மந்தரில் மீண்டும் அமைதி</h2><p>இந்நிலையில், சுமார் ஒரு மாத காலத்துக்குப் பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வீடு திரும்பியதால் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் அமைதி திரும்பியது.</p><p>இரவோடு இரவாக பந்தல்களை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர் அப்பகுதியில் சேர்ந்திருந்த குப்பைகளை எல்லாம் தாங்களே அகற்றினர். மீண்டும் அங்கு கூட்டம் கூடாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜெர்மனியில் பேரதிர்ச்சி: பெர்லின் &apos;ப்ரைட்&apos; பேரணியில் காரை ஏற்றித் தாக்குதல்-ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/shock-in-germany-car-attack-at-berlin-pride-parade</link><comments>https://www.maalaimalar.com/news/world/shock-in-germany-car-attack-at-berlin-pride-parade#comments</comments><guid isPermaLink="false">07e58e52-8065-475d-881c-c161973718cf</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:34:51 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:34:51.016Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெர்லின்,ஜெர்மனி,Germany,Berlin,Pride parade,ப்ரைட் பேரணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3eefbhvu/nerlin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Berlin Pride parade ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3eefbhvu/nerlin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற ஆசிய-ஐரோப்பிய அளவிலான மிகப்பெரிய 'கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே' 'ப்ரைட்' பேரணியின் நிறைவுப் பகுதியில், வெள்ளை நிற கார் ஒன்று கூட்டத்திற்குள் அதிவேகமாகப் புகுந்து நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 16 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று இரவு சுமார் 10:00 மணியளவில், பெர்லினின் பிராண்டன்பெர்க் கேட் அருகே அமைந்துள்ள 'டீர்கார்ட்டன்' பூங்கா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மக்கள் அமைதியான முறையில் இசைக் கச்சேரியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்திற்குள் அதிவேகமாக நுழைந்த வெள்ளை நிற கார், மக்கள் மீது மோதியதுடன் மரத்தின் மீதும் மோதி நின்றது. வாகனத்தை ஓட்டி வந்த நபர் உடனடியாக தப்பி ஓடிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.</p><p>இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 16 பேரில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள் பெர்லினின் பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.</p><h2><strong>சந்தேக நபர்:</strong></h2><p>தாக்குதல் நடத்திய நபர் பெர்லினின் இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பெர்லின் காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஃபுளோரியன் நாத் தெரிவித்துள்ளார். குற்றவாளியைப் பிடிக்க நகரம் முழுவதும் 2,200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2><strong>நிகழ்ச்சி ரத்து:</strong></h2><p>தாக்குதலைத் தொடர்ந்து, நள்ளிரவு வரை நடைபெறவிருந்த அனைத்துப் பேரணிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, மக்களைப் பாதுகாப்பான வழிகளில் வீடுகளுக்குச் செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.</p><h2><strong>அரசியல் தலைவர்களின் கண்டனம்:</strong></h2><p>இக்கொடூரத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சான்சலர் மெர்ஸ், "இந்த வன்முறைச் செயல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்" என உறுதி அளித்துள்ளார். இவரை தொடர்ந்து, பெர்லின் மேயர் காய் வேக்னர் "நமது சுதந்திரமான மற்றும் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் இது. நமது வாழ்வியலையும் சுதந்திரத்தையும் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சீனாவை அச்சுறுத்தும் &apos;நவுல்&apos; புயல்: குவாங்டாங் கடலோரப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை; விமானங்கள், ரயில்கள் ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/world/noul-typhoon-prompts-red-alert-in-guangdong-flights-and-trains-suspended</link><comments>https://www.maalaimalar.com/news/world/noul-typhoon-prompts-red-alert-in-guangdong-flights-and-trains-suspended#comments</comments><guid isPermaLink="false">cded5d1e-8ebd-49a2-8e2e-832ccc2851bf</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:04:59 +0000</pubDate><atom:updated>2026-07-26T03:04:59.986Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,Red Alert,Typhoon Noul,நவுல் புயல்,சிவப்பு எச்சரிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/aarso1dd/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China Typhoon Noul ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/aarso1dd/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வரும் 'நவுல்' (Typhoon Noul) புயல் காரணமாக, நாட்டின் தேசிய வானிலை மையம் மிக உயர்ந்த அபாய எச்சரிக்கையான 'சிவப்பு எச்சரிக்கையை' விடுத்துள்ளது. நடப்பு ஆண்டின் 12-வது புயலான இது, குவாங்டாங் மாகாணத்தின் கடலோரப் பகுதியில் தீவிரமாகத் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>புயலின் மையம் :</strong></h2><p>சீன தேசிய வானிலை மையத்தின் (NMC) தகவல்படி, புயலின் மையம் குவாங்டாங் மாகாணத்தின் ஹுய்ஜோ நகருக்கு உட்பட்ட ஹுய்ஜோங் பகுதிக்கு தென்கிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் கடலில் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.</p><h2><strong>காற்றின் வேகம்:</strong></h2><p>புயல் மையத்திற்கு அருகே சுழன்றடிக்கும் காற்றின் வேகம் 'ஃபோர்ஸ் 14' (Force 14-சுமார் மணிக்கு 150 கி.மீ-க்கும் மேல்) என்ற அளவில் மிகத் தீவிரமாக உள்ளது. கரையை நெருங்க நெருங்க இதன் வீரியம் மேலும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>ஹாங்காங்கில் அவசரநிலை:</strong></h2><p>புயல் நெருங்குவதை அடுத்து, ஹாங்காங் அரசு உடனடியாக அவசரகால நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக 410-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட அதிவேக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்துறை நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்காக 28 அவசரகால நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:</strong></h2><p>சீனாவின் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண தலைமையகம், குவாங்டாங் மாகாணத்திற்கான அவசரகாலப் பாதுகாப்பு நிலையை 'லெவல் III' ஆக உயர்த்தியுள்ளது. மேலும், அருகில் உள்ள ஜியாங்சி மற்றும் ஹுனான் மாகாணங்களுக்கு 'லெவல் IV' வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>வானிலை நிலவரம்:</strong></h2><p>நவுல் புயல் குவாங்டாங் கடலோரப் பகுதியில் கரையைக்கடந்த பிறகு, வடமேற்கு மற்றும் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் தாக்கத்தால் ஃபூஜியான், ஜியாங்சி, ஹெனான், ஹுபெய், ஹுனான், குவாங்டாங் மற்றும் குவாங்சி ஆகிய தென் மற்றும் மத்திய சீன மாகாணங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உலக ஜூனியர் ஸ்குவாஷ்: முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த அனாஹத் சிங்</title><link>https://www.maalaimalar.com/sports/anahat-singh-scripts-history-becomes-1st-indian-to-win-junior-world-championship</link><comments>https://www.maalaimalar.com/sports/anahat-singh-scripts-history-becomes-1st-indian-to-win-junior-world-championship#comments</comments><guid isPermaLink="false">c73111df-116f-47f8-8b81-830142b1e8b0</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:49:03 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:49:03.378Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>anahat singh,அனாஹத் சிங்,World Junior Squash,உலக ஜூனியர் ஸ்குவாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/v4e6s01i/anahat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anahat singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/v4e6s01i/anahat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>க​ன​டா​வின் ஆன்​டாரியோ நகரில் உலக ஸ்கு​வாஷ் ஜூனியர் தனி​நபர் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்றது.</p><p>இதில் பெண்கள் பிரிவு இறுதிச்சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனாஹத் சிங், எகிப்​தின் ருகையா சலேம் உடன் மோதி​னார்.</p><h2>சாதனை படைத்த அனாஹத் சிங்</h2><p>இந்த மோதலில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D">அனாஹத் சிங்</a> 11-3, 11-7, 11-9 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார்.</p><p>முன்னதாக, இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.</p><p>கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் அனாஹத் சின் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கணவன்- மனைவி தகராறுக்கு பழிவாங்க குடும்பத்தினர் மீது வழக்கு போடுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கவலை</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-expresses-concern-over-filing-cases-against-family-members-to-exact-revenge-in-husband-wife-disputes</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-expresses-concern-over-filing-cases-against-family-members-to-exact-revenge-in-husband-wife-disputes#comments</comments><guid isPermaLink="false">5b43e4b4-b52c-4f94-9599-fb9b33257ec4</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:27:32 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:27:32.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Divorce case,உச்சநீதிமன்றம்,விவாகரத்து வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/z9uasz4c/SupremeCourt0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/z9uasz4c/SupremeCourt0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கணவன்- மனைவி இடையேயான தகராறுகளுக்கு பழிவாங்க குடும்பத்தினர் மீது வழக்கு போடுவது குறித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/excluding-married-women-from-their-natal-families-is-unfair-supreme-court">சுப்ரீம் கோர்ட்டு</a> கவலை தெரிவித்து உள்ளது.</p><h2>விவாகரத்து பெற்ற தம்பதி</h2><p>மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 2023-ம் ஆண்டு பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர். அவர்களை பராமரிப்பது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே எழுந்த தகராறு காரணமாக இருவரும் அடுத்தவரின் குடும்பத்தினரை வழக்கில் சிக்க வைத்து உள்ளனர்.</p><p>அந்த வகையில் இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தாய் மாமன் மீது அந்த கணவன் புகார் அளித்து உள்ளார். அதற்கு பதிலடியாக மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவரின் சகோதரி மீது அந்த மனைவி புகார் அளித்தார். இந்த புகார்களின்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><h2>போக்சோ வழக்கு தள்ளுபடி</h2><p>இந்த நிலையில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யுமாறு சிறுவனின் அத்தை மும்பை ஐகோர்ட்டை நாடினார். ஆனால் அதை விசாரித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தனர். இதை எதிர்த்து அவர் சுப்ரிம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை நீதிபதிகள் பர்திவாலா, வினோத் சந்திரன் அமர்வு விசாரித்தது. பின்னர் சிறுவனின் அத்தை மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது நீதிபதிகள் பல்வேறு கவலைகளையும் வெளியிட்டனர்.</p><p>அவர்கள் கூறியதாவது:-</p><p>பொதுவாக திருமண வாழ்வில் கணவன்- மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் எழும் வழக்குகளில், பழி வாங்குவதற்காக மாமியார்- மாமனாரை இழுத்து வருவது சர்வ சாதாரணம். மேலும், ஒருவரையொருவர் பழிசுமத்துவதற்காகப் பிள்ளைகளும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறார்கள்.</p><h2>அதிர்ச்சி அடைந்தோம்</h2><p>ஆனால் இங்கு, தனது மகன் அவனது தந்தை வழி அத்தையால் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறான் என்று விவாகரத்து பெற்ற தாய் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.</p><h2>பழிவாங்கும் பதிலடி</h2><p>சிறுவனின் இரட்டை சகோதரிக்கு எதிராக தாய்மாமா மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்த தந்தையால் பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு பதிலடியாக இந்த வழக்கானது பதியப்பட்டு உள்ளது. தாய்வழி உறவினர்களுக்கு எதிராக தந்தை வழக்கு பதிவு செய்த பின்னரே இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. இது குழந்தைகளுக்கு எதிரான உண்மையான குற்றச்சாட்டாக இல்லாமல், குழந்தை பராமரிப்பு உரிமை போராட்டத்தில் இருந்து பிறந்த ஒரு கசப்பான பழிவாங்கும் பதிலடி என்பது அம்பலமாகிறது.</p><p>இவ்வாறு நீதிபதிகள் அதிர்ச்சி மற்றும் கவலையுடன் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தன் தேர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/kandararu-brahmadathan-to-be-new-sabarimala-tantri</link><comments>https://www.maalaimalar.com/news/national/kandararu-brahmadathan-to-be-new-sabarimala-tantri#comments</comments><guid isPermaLink="false">ba44acd4-ab02-4d5b-87df-039682b5c0ff</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:14:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:14:17.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sabarimalai,சபரிமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/5eafj6qi/KandararuBrahmadathan0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kandararu Brahmadathan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/5eafj6qi/KandararuBrahmadathan0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/sabarimala-ayyappa-temple-to-be-opened-this-evening">சபரிமலை</a> அய்யப்பன் கோவிலில் தற்போது தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரு உள்ளார். இவரது பணிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து செங்கன்னூர் தாளமண் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை புதிய தந்திரியாக தேர்வு செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.</p><p>இந்த நிலையில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரரு மீதான வழக்கு காரணமாகவும், உடல்நிலையை கருத்தில் கொண்டும் அவர் தந்திரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த போது அவரது மகன் கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க முன் மொழிந்து இருந்தார். இதையடுத்து தந்திரிக்கான அவரது தகுதியை உறுதி செய்ய காளிதாஸ் பட்டதிரிப்பாடு, சர்மன் வாசுவேன் பட்டதிலப்பாடு மற்றும் சுப்ரமணியன் நம் பூதிரி ஆகியோர் அடங்கிய ஆன்மிக பண்டிதர் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.</p><p>அவர்களின் சிபாரிசின் பேரில் சபரிமலை புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தீர்மான அறிக்கையை கேரள ஐகோர்ட்டின் தனி அமர்வுக்கு அனுப்பி வைத்து அதற்கான ஆணை பெறப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.</p><p>புதிய தந்திரி அடுத்த மாதம் 18-ந்தேதி முதல் ஓராண்டு காலத்திற்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் தந்திரியாக பணியாற்றுவார்.</p><p>சபரிமலையில் உள்ள காவல் தெய்வம் மற்றும் கதவுகளுக்கு தங்க தகடு பதிக்கப்பட்டபோது தங்கம் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பலர் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>கேரள ஐயப்பன் கோவில் நெய் விற்பனை முறைகேடு</h2><p>கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோவிலில் விற்பனை செய்யப்படும் அபிஷேக நெய்யில், கடந்த நவம்பர் 17, 2025 முதல் டிசம்பர் 27, 2025 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.</p><p>இந்த கால கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 16,628 பாக்கெட் நெய்யில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் 43 பேர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. நெய் பாக்கெட்டின் விற்பனைத் தொகை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செலுத்தப்படவில்லை என்றும், இதனால் ரூ.17 லட்சத்திற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.</p><p>இதையடுத்து திருவிதாங்கூர் தேவசம் போர்டின் ஊழல் தடுப்புத் துறை அளித்த புகாரின் அடிப்படையில், கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து உடனடி குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டது.</p><h2>நீதிபதிகள் விசாரணை</h2><p>இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் அமர்வு, “இது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா ஆகியவற்றின் கீழ் குற்றங்களாக பதிவுசெய்யப்படும்.</p><p>குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், தண்டனைக்குரிய குற்றங்கள் ஏதேனும் நிரூபிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து, அந்த அறிக்கையை நான்கு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளில் இந்த விவகாரத்தை வெறும் நிர்வாக அலட்சியம் அல்லது குறைபாடுள்ள பதிவேடு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க முடியாது" என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 12 ஆண்டுகளில்  மருத்துவக் கல்லூரிகள், படிப்பு எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகரிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/medical-colleges-and-seats-more-than-doubled-in-12-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/medical-colleges-and-seats-more-than-doubled-in-12-years#comments</comments><guid isPermaLink="false">351e2f80-284f-4a2f-a269-8e85672576c0</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:03:14 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:03:14.833Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,MBBS,மருத்துவ படிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/r36vjfyh/MedicalCollege0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவக் கல்லூரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/r36vjfyh/MedicalCollege0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருத்துவக் கல்வித்துறை கடந்த 12 ஆண்டுகளில் வரலாறு காணாத வளர்ச்சி கண்டிருக்கிறது. கல்லூரிகள், படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.</p><h2>மருத்துவ கல்வித்துறை</h2><p>ஒரு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்குவது அதன் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs">மருத்துவ கல்வித்துறை</a> ஆகும். வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் புதிய நோய்களின் சவால்களை எதிர்கொள்ள போதுமான எண்ணிக்கையில் டாக்டர்களும், மருத்துவ வல்லுனர்களும் இருப்பது இன்றியமையாதது.</p><p>2014-க்கு முந்தைய காலக்கட்டத்தில், இந்தியாவில் எம்.பி.பி.எஸ். (இளங்கலை) மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களின் பற்றாக்குறை மிகத்தீவிரமாக இருந்தது.</p><p>இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளை நாடுகின்ற கட்டாயச் சூழல் நிலவியது. மேலும், உள்நாட்டில் டாக்டர்-மக்கள் விகிதமும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட தரத்தைவிட குறைவாகவே இருந்தது.</p><h2>12 ஆண்டுகளில்...</h2><p>இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் (2014 முதல் 2026 வரையில்) மருத்துவ கல்வித்துறையில் கட்டமைப்பு ரீதியான அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.</p><p>இதன் விளைவாக, புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவதுடன், மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் பெருமளவில் உயர்த்தப்பட்டு மருத்துவக்கல்வி அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாக மாறி வருகிறது.</p><p>அந்த வகையில் 2014-ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387 ஆக இருந்த நிலையில், 2026-ல் 844 ஆக அதிகரித்திருக்கிறது. இது 118.1 சதவீதம் அதிகம்.</p><h2>இருமடங்குக்கு மேல் அதிகரிப்பு</h2><p>இளங்கலை எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் 2014-ல் 51 ஆயிரத்து 348 இடங்கள் இருந்த சூழலில், 2026-ல் 1 லட்சத்து 39 ஆயிரத்து 489 ஆக உயர்ந்திருக்கிறது. முதுகலை மருத்துவ படிப்பு இடங்கள் 2014-ல் 31 ஆயிரத்து 185 ஆக இருந்து, இப்போது 86 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் 12 ஆண்டுகளில் 2 மடங்குக்கு மேல் மருத்துவக் கல்லூரிகள், படிப்புகளுக்கான இடங்கள் அதிகரித்திருக்கின்றன.</p><p>மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கல்வி இடங்களின் இந்த கணிசமான உயர்வு, பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவை உள்நாட்டிலேயே நனவாக்குவதுடன், வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைத்துள்ளது. எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான மற் றும் தரமான மருத்துவ சேவைகள் தடையின்றி கிடைப்பதை இந்த துணிச்சலான கல்வி விரிவாக்கம் உறுதி செய்யும் என்பகில் சந்தேகம் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 ஜூலை 2026: பிரதோஷம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-26-july-pradosham</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-26-july-pradosham#comments</comments><guid isPermaLink="false">29874de9-2fe5-48d5-a13d-92c4065474d5</guid><pubDate>Sun, 26 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-26T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/02/27178598-sivan9.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/02/27178598-sivan9.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம் </h2><p>பராபவ ஆண்டு ஆடி-10 (ஞாயிற்றுக்கிழமை) </p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி : துவாதசி பிற்பகல் 3.51 வரை பிறகு திரயோதசி</p><p>நட்சத்திரம் : கேட்டை காலை 10.01 வரை பிறகு மூலம்</p> <p>யோகம் : மரண / அமிர்தயோகம்</p><p>ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை</h2><p>பிரதோஷம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காளிங்க நர்த்தனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை அலங்கார திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.</p><p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம்-ஆர்வம்</p><p>ரிஷபம்-முயற்சி</p><p>மிதுனம்-பெருமை</p><p>கடகம்-இன்பம்</p><p>சிம்மம்-உற்சாகம்</p><p>கன்னி-உதவி</p> <p>துலாம்-யோகம்</p><p>விருச்சிகம்-சாதனை</p><p>தனுசு-ஆக்கம்</p><p>மகரம்-பரிசு</p><p>கும்பம்-நன்மை</p><p>மீனம்-உண்மை</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-status-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-status-in-chennai#comments</comments><guid isPermaLink="false">9c3baff7-8e28-4520-9b5e-74edac8fd10b</guid><pubDate>Sun, 26 Jul 2026 01:26:54 +0000</pubDate><atom:updated>2026-07-26T01:26:54.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,Crude oil,deisel,கச்சா எண்ணெய்,,டீசல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-10/cf7voyax/Petrol-diesel-price.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-10/cf7voyax/Petrol-diesel-price.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (26.07.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan | இன்றைய ராசிபலன் 26.7.2026: இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள் </title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-2672026-in-tamil</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-2672026-in-tamil#comments</comments><guid isPermaLink="false">dac9dd94-c8c1-4278-9b73-0fff5dc50e2e</guid><pubDate>Sun, 26 Jul 2026 00:55:17 +0000</pubDate><atom:updated>2026-07-26T00:55:17.564Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/11/19903158-raasi.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/11/19903158-raasi.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். மதியத்திற்கு மேல் பணநெருக்கடி அகலும்.</p><h2>ரிஷபம்</h2><p>திட்டமிட்ட காரியம் திசை மாறிச் செல்லும் நாள். வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.</p><h2>மிதுனம்</h2><p>வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். சுபச்செலவுகள் உண்டு. பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள்.</p><h2>கடகம்</h2><p>யோகமான நாள். பயணத்தால் பால்ய நண்பர்கள் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.</p><h2>சிம்மம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளை வழங்குவர்.</p><h2>கன்னி</h2><p>புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.</p><h2>துலாம்</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோகத்தில் இழந்த வேலை மீண்டும் கிடைக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நட்பு பலப்படும்.</p><h2>தனுசு</h2><p>கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாணப் பேச்சுகள் முடிவாகும்.</p><h2>மகரம்</h2><p>தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.</p><h2>கும்பம்</h2><p>தெய்வ நம்பிக்கை கூடும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.</p><h2>மீனம்</h2><p>திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன பராமரிப்புச் செலவு உண்டு. உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும்.</p>]]></content:encoded></item><item><title>இந்த ஆண்டின் மிகக் குறுகிய நாள் இன்று!.. </title><link>https://www.maalaimalar.com/news/world/shortest-day-recorded-earth-spins-065-milliseconds-faster-impacting-satellite-timing</link><comments>https://www.maalaimalar.com/news/world/shortest-day-recorded-earth-spins-065-milliseconds-faster-impacting-satellite-timing#comments</comments><guid isPermaLink="false">4ea95182-58f9-43e5-9859-cdb4b0b338dc</guid><pubDate>Sun, 26 Jul 2026 00:08:00 +0000</pubDate><atom:updated>2026-07-26T00:08:00.806Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல்,viral,earth,பூமி,Science,அறிவியல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jz3rrale/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பூமி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பூமி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/jz3rrale/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று (ஜூலை 26 - ஞாயிற்றுக்கிழமை), இந்த ஆண்டின் மிகக் குறுகிய நாளாக பதிவாக உள்ளது. </p><h2>பூமியின் சுழற்சி</h2><p>பூமியின் சுழற்சி வேகம் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை.</p><p>நிலவின் ஈர்ப்பு விசை, பூமியின் உட்பகுதியில் உள்ள திரவங்களின் இயக்கம் மற்றும் வளிமண்டல மாற்றங்கள் ஆகியவை பூமியின் வேகத்தை தீர்மானிக்கின்றன.</p><p>2020ஆம் ஆண்டிலிருந்து பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகப் பலமுறை மிகவும் குறுகிய நாட்கள் பதிவாகியுள்ளன. </p><p>கடந்த 2025 ஜூலை 10 அன்று வழக்கத்தை விட 1.37 மில்லி வினாடிகள் குறைவாக பதிவானது.</p> <h2>இன்று</h2><p>இந்நிலையில் இன்று (ஜூலை 26 - 2026) வழக்கமான 24 மணி நேரத்தை விட பூமி தனது அச்சில் ஒரு முழு சுழற்சியை சுமார் 0.65 மில்லி வினாடிகள் அதிவேகமாக நிறைவு செய்யவுள்ளது என Timeanddate.com அறிக்கை தெரிவித்துள்ளது. </p><p>சர்வதேச புவி சுழற்சி மற்றும் குறிப்பு அமைப்பு (IERS) இதை கணித்துள்ளது. </p><p>கண் சிமிட்டும் நேரத்தை விட மிகக் குறைவான இந்த நேர மாற்றத்தை மனிதர்களால் உணர முடியாது.</p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த முறை சுழற்சி வேகம் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>ஏன் முக்கியம்?</h2><p>இந்த மில்லி வினாடி நேர வித்தியாசங்கள் உலகளாவிய <a href="https://www.maalaimalar.com/news/world/spacex-starship-13th-test-flight-marks-new-space-history-milestone">செயற்கைக்கோள் </a>அமைப்புகளுக்கு மிகவும் முக்கியமானவை.</p><p>ஜி.பி.எஸ் மற்றும் செயற்கைக்கோள்கள் பூமியின் துல்லியமான சுழற்சி நிலையையே அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.</p><p>நேரத்திலும் வேகத்திலும் ஏற்படும் மிகச்சிறிய மாறுபாடுகள்கூட, செயற்கைக்கோள் செலுத்தலில் இருப்பிடத்தைக் துல்லியமாகக் கணிப்பதில் பிழைகளை ஏற்படுத்தக்கூடும்.</p> <h2>குறையும் நீண்டகால சுழற்சி வேகம்</h2><p>குறுகிய காலத்தில் பூமி வேகமாகச் சுழன்றாலும், நீண்டகால நோக்கில் அதன் சுழற்சி வேகம் படிப்படியாகக் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p>புவி வெப்பமயமாதல் காரணமாக துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி, அந்த நீர் பூமத்திய ரேகையை நோக்கி நகர்வதே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.</p><p>வியன்னா மற்றும் சூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, இந்த மாறுபாடு நூற்றாண்டிற்கு 1.33 மில்லி வினாடிகள் என்ற வீதத்தில் நிகழ்கிறது. இது கடந்த 3.6 மில்லியன் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிவேகமானது.</p> ]]></content:encoded></item><item><title>ஆர்.எஸ்.எஸ் பின்புலம்.. கல்வித் துறைக்கு பொறுப்பேற்கும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி யார்? கல்வித் தகுதி என்ன? </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-row-pralhad-joshi-with-rss-background-given-additional-charge-of-education-ministry</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-row-pralhad-joshi-with-rss-background-given-additional-charge-of-education-ministry#comments</comments><guid isPermaLink="false">2d662af2-a3e3-4ea4-86cb-0d1aa2124ce4</guid><pubDate>Sat, 25 Jul 2026 23:54:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T23:54:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/j6sxeoe1/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரகலாத் ஜோஷி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரகலாத் ஜோஷி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/j6sxeoe1/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-rahul-gandhi-says-time-to-oust-government">தர்மேந்திர பிரதான்</a> தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். </p><p>அவருக்கு பதில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். </p><p>தற்போதைய அமைச்சகப் பொறுப்புகளுடன் சேர்த்து இனி கல்வித் துறையையும் ஜோஷி கவனிப்பார்.</p>  <h2>பிரகலாத் ஜோஷி</h2><p>1962ஆம் ஆண்டு கர்நாடகாவின் விஜய்புரா பகுதியில் பிறந்த இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றி பின்னர் பாஜக வழியாக அரசியலுக்கு வந்தவர்.</p><p>கர்நாடகாவின் தார்வாட் மக்களவைத் தொகுதியிலிருந்து 2004ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.</p><h2>கல்வித் தகுதி</h2><p>இவர் கர்நாடகா பல்கலைக்கழகத்தின் கீழ் ஹூப்ளியில் இயங்கி வரும் கே.எஸ். ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றவர்.</p> <h2>முக்கியப் பொறுப்புகள்</h2><p>2019இல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.</p><p>2024இல் 3வது முறையாக ஆட்சி அமைத்த மோடி அமைச்சரவையில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.</p> <h2>நிர்வாகம்</h2><p>போட்டித் தேர்வுகள், நீட் வினாத்தாள் கசிவு வழக்குகள் மற்றும் கல்வித் துறைச் சீர்திருத்த கோரிக்கைகள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள சூழலில், மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவரான பிரகலாத் ஜோஷிக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீராக நடத்துவதிலும், எதிர்க்கட்சிகளுடன் சுமுகமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதிலும் திறமை வாய்ந்த நிர்வாகியாக அறியப்படும் ஜோஷி, கல்வித் துறையில் நிர்வாகச் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவாரா என்பதற்கு காலமே பதில் சொல்ல வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சர்வாதிகார ஆட்சியைக்கூட மண்டியிட வைக்க முடியும் என நிரூபித்துவிட்டீர்கள் - &apos;கரப்பான்பூச்சிகளுக்கு&apos; பிரகாஷ் ராஜ் வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">cde01987-ac05-4ea6-ac5a-9cd1b68f5314</guid><pubDate>Sat, 25 Jul 2026 23:24:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T23:24:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,prakash raj,பிரகாஷ் ராஜ்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/do8j8hw6/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரகாஷ் ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரகாஷ் ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/do8j8hw6/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை <a href="https://www.maalaimalar.com/news/national/youth-have-reclaimed-our-country-priyanka-gandhi-elated">ராஜினாமா </a>செய்துள்ளார்.</p><p>தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை  நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் வரவேற்றுள்ளார்.</p><p> இந்த வெற்றி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   </p><h2> பதிவு </h2><p>அதில், எனது அன்பான 'கரப்பான்பூச்சிகளுக்கு'  எனது வாழ்த்துகள்! அன்பிற்குரிய சோனம் வாங்சுக் சார் மற்றும் இளைஞர்களின் பக்கம் நின்ற ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். </p><p>ஒரு சர்வாதிகார ஆட்சியைக்கூட உங்களால் மண்டியிட வைக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள் என பதவிவிட்டுள்ளார். </p>  <h2>ஜந்தர் மந்தரில் பிரகாஷ் ராஜ்</h2><p>நடிகர் பிரகாஷ் ராஜ், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கெடுத்து குறிப்பிடத்தக்கது. 23 நாட்களாக உண்ணவிரிதம் இருந்த இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 3 மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடச் செய்ய நேரில் சென்று சமாதானம் கூறியவர்களில்  இவரும் ஒருவர். இவருடன் பாலிவுட் மூத்த நடிகை ஷாபனா அஸ்மியும் அம்மாணவர்களை உண்ணாவிரதத்தை கைவிட செய்தார்.</p> <h2>சிஜேபி நிலைப்பாடு</h2><p>இதனிடையே மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை தங்கள் பிரதான கோரிக்கையாக கொண்டு போராடிய நிலையில், தர்மேந்திர பிரதானின் விலகலை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் வர்ணித்துள்ளனர்.</p><p>அதேநேரம், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு அழுத்தத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சிஜேபி வலியுறுத்தியுள்ளது.</p><h2>ராகுல் சொன்னது என்ன?</h2><p>முன்னதாக தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் பிரியங்கா காந்தியின் சகோதரருமான ராகுல் காந்தி, இன்னும் இரண்டு கோரிக்கைகள் மிச்சம் இருப்பதாக தெரிவித்தார்.</p><p>அதாவது, குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட லட்சோபலட்சம் இளைஞர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர் போராட்டத்தில் வன்முறையை பிரயோகித்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரான்ஸ், ஸ்பெயினை வாட்டும் காட்டுத் தீ.. 2.20 லட்சம் மக்கள் பாதிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/europe-wildfires-crisis-heat-fuelled-forest-fires-in-france-and-spain-affect-220000-people</link><comments>https://www.maalaimalar.com/news/world/europe-wildfires-crisis-heat-fuelled-forest-fires-in-france-and-spain-affect-220000-people#comments</comments><guid isPermaLink="false">3df24ea2-e41f-4eb0-9ff6-8d132da604fc</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:52:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:52:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரான்ஸ்,France,Spain,ஸ்பெயின்,காட்டுத் தீ,wildfires</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/r26jxc0c/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காட்டுத் தீ]]></media:title><media:description type="html"><![CDATA[ காட்டுத் தீ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/r26jxc0c/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடும் வெயில் காரணமாக <a href="https://www.maalaimalar.com/news/world/wildfire-intensifies-in-the-us">காட்டுத்தீ </a>ஏற்பட்டுள்ளது. </p><h2>பிரான்ஸ் </h2><p> பிரான்ஸின் Bordeaux பகுதியில் பரவிய காட்டுத்தீயால் இதுவரை 19,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு பாதித்துள்ளது. </p> <p>தீ பரவலின் வேகம் காரணமாக, பல பகுதிகளில் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.  பல வீடுகள் சேதமடைந்துள்ளன.</p><p>புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான Cap Ferret பகுதி காலி செய்யப்பட்டது. </p> <h2>ஸ்பெயின்</h2><p>ஸ்பெயினின் மாட்ரிட் நகரின் மேற்குப் பகுதியில் தனித்தனியாக இரு காடுகளில் பற்றிய காட்டுத் தீ பரவி தற்போது ஒன்றிணைந்து எரிந்து வருகிறது. இதனால் அதன் தாக்கம் பல மடங்காக அதிகரித்தது.</p><p>நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.</p><p>ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பல பகுதிகளில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><h2>பாதிப்பு - மீட்பு </h2><p>இரு நாடுகளிலும் சேர்த்து சுமார் 2.20 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>தீயை அணைக்க ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், ராணுவம், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரத்யேக விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. </p><p>ஐரோப்பிய யூனியனின் ஆதரவுடன் கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் அவசரகால உதவிகளை அனுப்பி வைத்துள்ளன.</p><p>வீசும் கடுமையான காற்று, வறண்ட நிலப்பரப்பு மற்றும் காற்றில் குறைந்த ஈரப்பதம் ஆகியவை தீயை விரைவாகப் பரவச் செய்வதால், தணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p><p>வானிலை முக்கியக் காரணமாகக் கருதப்பட்டாலும், திட்டமிட்டு நாசவேலையில் ஈடுபட தீ வைக்கப்பட்டதா அல்லது மனிதத் தவறுகளால் தீ வைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.  </p>]]></content:encoded></item><item><title>&apos;கரப்பான்பூச்சிகள்&apos; என அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்திற்கு நன்றி தெரிவித்த அபிஜித் தீப்கே!</title><link>https://www.maalaimalar.com/news/national/karappanpoochi-protest-victory-youth-led-cjp-movement-forces-education-minister-to-resign-over-neet-scandal</link><comments>https://www.maalaimalar.com/news/national/karappanpoochi-protest-victory-youth-led-cjp-movement-forces-education-minister-to-resign-over-neet-scandal#comments</comments><guid isPermaLink="false">2f6430f0-b391-40f2-8294-0492ceed5a45</guid><pubDate>Sat, 25 Jul 2026 22:12:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T22:12:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யகாந்த்,Suryakant,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ztvoe8cf/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீப்கே, சூர்யகாந்த் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, சூர்யகாந்த் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ztvoe8cf/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய <a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">CJP </a>நிறுவனர் அபிஜித் தீப்கே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தை குறிப்பிட்டுப் பேசிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><p> தீப்கே பேசுகையில், </p><p>"தலைமை நீதிபதி சூரியகாந்த் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எங்களை 'கரப்பான்பூச்சிகள்'  என்று அழைக்காமல் இருந்திருந்தால், நான் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியிருக்க மாட்டேன். இந்த மாபெரும் மக்கள் போராட்டமும் தொடங்கியிருக்காது!" என்று தெரிவித்தார். </p>  <h2>'கரப்பான்பூச்சி' சர்ச்சை</h2><p>மே 15 அன்று வழக்கறிஞர் ஒருவரின் மனு மீதான விசாரணையின்போது, "பணியோ அல்லது வாழ்க்கையில் சரியான இடமோ இல்லாமல் சுற்றித் திரியும் 'கரப்பான்பூச்சிகள்' போன்ற இளைஞர்கள் பலர் உள்ளனர்" என்று தலைமை நீதிபதி சூரியகாந்த் கூறிய கருத்து சர்ச்சையானது.</p><p>அடுத்த நாளே மே 16 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உதயமானது. அமெரிக்காவின் போஸ்டனில் படித்து வந்த அபிஜித் தீப்கே, இக்கருத்தை எதிர்த்து எக்ஸ் தளத்தில் 'ரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் நையாண்டியாக ஒரு இயக்கத்தை அறிவித்தார்.</p><p>சர்ச்சை வலுத்த நிலையில் , தாம் போலி சட்டப் பட்டம் பெற்றவர்களை மட்டுமே அவ்வாறு குறிப்பிட்டதாக சூர்யகாந்த் விளக்கமளித்தார்.</p><h2>சிஜேபி</h2><p>ஆனால் அதற்குள் சிஜேபி கட்சிக்கு இணையத்தில் பாலோயர்கள் குவிந்தனர். இன்ஸ்டா உள்ளிட்ட தளங்களிலும் சிஜேபி கணக்கு உருவாகி குறுகிய காலத்தில் பாஜகவின் அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கத்துக்கு இருந்த பாலோயர்களை கடந்து அதிக பாலோயர்களை பெற்றது சிஜேபி.</p> <h2>காலவரையற்ற போராட்டம்</h2><p>தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், ஜூன் மாதத் தொடக்கத்தில் இந்தியா திரும்பிய அபிஜீத் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தார். பின்னர் அவரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் நடத்தினார். களத்திற்கு பல இளைஞர்கள் ஆர்வமுடன் வந்தனர்.</p><p>தொடர்ந்து சிஜேபி கட்சி ஜூன் 20 அன்று முறையே காலவற்றையற்ற போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கியது. அவர்களின் பிரதான கோரிக்கை, தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதாகும்.</p><p>இப்போராட்டத்திற்கு ஆதரவாக ஜூன் 28 அன்று பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.</p> <h2>பெருகிய ஆதரவு</h2><p>ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியில் போலீஸ் மற்றும் மத்திய படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மேலும் போராட்டத்திற்கு ஆதரவு பன்மடங்கு பெருகியது. பிற மாநிலங்களிலும் போராட்டம் பரவியது.</p><h2>வெற்றி</h2><p>தொடர்ந்து மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து, 26 நாட்களாக நீடித்த தனது உண்ணாவிரதப் போராட்டத்தைச் சோனம் வாங்சுக் நிறைவு செய்தார். ஆனால் பிரதான் பதவி விலகும்வரை தங்கள் போராட்டம் தொடரும் என சிஜேபி அறிவித்தது. அவர்களுடனான 3 கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு முன்னெடுத்த நிலையில் நேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்தார்.</p><p>தலைமை நீதிபதியின் ஒரு சர்ச்சை வார்த்தையில் தொடங்கி, நாட்டின் கல்வி அமைச்சரின் ராஜினாமா வரை கொண்டு சென்ற இந்த கரப்பான்பூச்சி இயக்கத்தின் வெற்றி, இந்திய வரலாற்றில் ஒரு முக்கியப் போராட்டமாகப் பதிவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூரு: அரசுப் பேருந்தில் பெண்ணை சீண்டிய நபருக்கு ஓட்டுநர், சக பயணிகள் தர்ம அடி - வைரல் வீடியோ 
</title><link>https://www.maalaimalar.com/news/national/bengaluru-bmtc-bus-incident-woman-confronts-molester-driver-and-passengers-thrash-accused</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengaluru-bmtc-bus-incident-woman-confronts-molester-driver-and-passengers-thrash-accused#comments</comments><guid isPermaLink="false">a1c58230-dcd7-4dfa-bb0d-713a369efa5e</guid><pubDate>Sat, 25 Jul 2026 21:04:28 +0000</pubDate><atom:updated>2026-07-25T21:04:28.393Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual assault,வைரல் வீடியோ,பெங்களூரு,bengaluru,பாலியல் அத்துமீறல்,viral video</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ctnlq51w/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 
பாலியல் அத்துமீறல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ 
பாலியல் அத்துமீறல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ctnlq51w/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசுப் பேருந்தில் பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற நபரை பேருந்து ஓட்டுநரும் சக பயணிகளும் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>அத்துமீறல் </h2><p>ஐடி காரிடார் பகுதியில் உள்ள மான்யதா டெக் பார்க் அருகே வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தபோது, அருகே இருந்த நபர் ஒருவர் அவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டு தவறான முறையில் தொட்டுள்ளார்.</p><p>இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், உடனடியாக அந்த நபரை தைரியமாகத் தட்டிக்கேட்டு, அவரது கன்னத்தில் பளார் அறை விட்டுள்ளார்.</p> <h2>ஓட முயற்சி </h2><p>பயத்தில் அந்த நபர் உடனடியாகப் பேருந்தில் இருந்து இறங்கித் தப்பி ஓட முயன்றார்.</p><p>நிலமையை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தின் கதவுகளை மூடி, அந்த நபர் தப்பிச் செல்வதைத் தடுத்தார்.</p><h2>தர்ம அடி </h2><p>பேருந்து ஓட்டுநர் மற்றும் சக பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த நபரைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர். சமூக வலைத்தளங்களில் இச்சம்பவத்தின் வீடியோ வேகமாக பரவி வருகிறது.</p><p>அந்த நபர் பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துச் சம்பிகேஹள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A woman was allegedly sexually harrassed by another passenger on a bus in Bengaluru. The incident happened on July 23. She confronted the accused, the driver intervened and stopped the man from fleeing. <a href="https://t.co/eryo4zAiLq">pic.twitter.com/eryo4zAiLq</a></p>&mdash; Vani Mehrotra (@vani_mehrotra) <a href="https://x.com/vani_mehrotra/status/2080887577532596689?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>பல இரவுகள் தூக்கமின்றி தவித்தேன்.. மகன் அபிஜித் தீப்கே வெற்றி குறித்து கண்ணீருடன் தாய் சொன்ன விஷயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-after-exam-leak-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-victory-education-minister-dharmendra-pradhan-resigns-after-exam-leak-row#comments</comments><guid isPermaLink="false">6d38d937-643a-4749-a275-af715b5901aa</guid><pubDate>Sat, 25 Jul 2026 20:18:25 +0000</pubDate><atom:updated>2026-07-25T20:18:25.802Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,CJP Protest,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/d1xdql9l/tn-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/d1xdql9l/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p>தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த செய்தி வெளியானதும், போராட்ட்டதை முன்னின்று நடத்திய மகாராஷ்டிராவை சேர்ந்த சிஜேபி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">அபிஜீத் தீப்கே</a>வின் தாயார் அனிதா திப்கே கேமராக்களின் முன் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் சிந்தினார்.</p> <h2>தாய் பேட்டி</h2><p>அபிஜீத் திப்கேவின் தாயார் அனிதா தீப்கே கூறுகையில்,</p><p>"அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக அவன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியதிலிருந்து நான் பல இரவுகள் தூக்கமின்றித் தவித்தேன்.</p><p>முன்பு ஜெய்ப்பூரில் அவன் மீது நடந்த தாக்குதல்களும், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது அவன் மீது மை வீசப்பட்ட சம்பவமும் எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியது.</p><p>தினமும் காலையில் போனை பார்க்கவே பயமாக இருக்கும்; அவனது நண்பர்களை அழைத்து அவன் பாதுகாப்பாக இருக்கிறானா என்று விசாரித்துக் கொண்டே இருப்பேன்.</p><p>என் மகன் டெல்லி கொசுக்களுக்கு இடையே இரவுகளை கழித்தான். போராட்டத்தின் போது அவனுக்குத் டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டது.</p><p>இருப்பினும் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டான். அவனது உழைப்பிற்கும் மன உறுதிக்கும் கிடைத்த வெற்றி இது. " என்று தெரிவித்தார்.</p><p>மேலும் போராட்டத்தின் இனி இனிப்புகள் வழங்கித் தனது மகனை வரவேற்கப்போவதாகவும், இது தனது மகனின் வெற்றி மட்டுமல்ல, போராடிய அத்தனை மாணவர்களின் வெற்றி என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.</p> <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chhatrapati Sambhajinagar, Maharashtra | Parents of Cockroach Janta Party&#39;s Founding President Abhijeet Dipke get emotional after Union Minister Dharmendra Pradhan resigns. <a href="https://t.co/LkxTiKmLf6">pic.twitter.com/LkxTiKmLf6</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2080959156841038327?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>தந்தை பேட்டி</h2><p>அபிஜீத்தின் தந்தை பகவான்ராவ் தீப்கே பேசுகையில்,</p><p>"எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசியல் பின்னணி கிடையாது. அவன் எனது விருப்பத்திற்கு மாறாகவே இதில் இறங்கினான்.</p><p>அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்ப வேண்டாம் என்றும், கைது செய்யப்படலாம் என்றும் கெஞ்சினோம்.</p><p>அவன் மீது இருமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மகன் உயிருடன் இருக்க மாட்டானோ என்று பயந்தோம். கடவுள் புண்ணியத்தில் அவன் பாதுகாப்பாக இருக்கிறான்." என்றார்.</p> <h2>பிரதானுக்கு பாராட்டு</h2><p>மேலும், "கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து, மாணவர்களைப் படிப்பில் கவனத்தை வைக்குமாறு கேட்டுக்கொண்டது அவரது பெரிய மனதை காட்டுகிறது.</p><p>இதை யாருடைய வெற்றியோ அல்லது தோல்வியோ பார்க்கத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.</p><p>தர்மேந்திர பிரதானுக்குப் பாராட்டு: என்றும், என்றும் அவர் குறிப்பிட்டதுடன், மகன் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவன் ம் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>