<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 28 Jul 2026 05:35:28 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-july-2026#comments</comments><guid isPermaLink="false">1e79a0a3-1015-4103-952c-60d74fc8dee8</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:26:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:29:42.977Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wjfprp8x/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wjfprp8x/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses">பயணிகளே கவனம்..! அரசுப் பேருந்துகளில் இனி 'நோ சவுண்ட்'!... </a></p><p>*அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவோ, வீடியோ ரீல்ஸ் பார்க்கவோ தடை விதித்து போக்குவரத்துத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.</p><p>•கட்டாயம் இயர்போன் (Earphones) ஹெட்போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-mechanized-and-traditional-boat-fishermen-are-barred-from-venturing-out-to-sea-today">ராமேசுவரம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை</a></p><p>* ஒரு படகு மற்றொரு படகுடன் மோதி சேதமடையாமல் இருப்பதற்காக நாட்டுப்படகுகள் கரைக்கு இழுத்து வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>* பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. </p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt">சட்டத்தின் பாதையில் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்</a></strong></p><p>* டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது.</p><p>* கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sc-status-cancelled-on-conversion-supreme-court-upholds-ap-hc-ruling-on-reservation-and-certificates">மதம் மாறிய மறு கணமே பட்டியலின அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும் - உச்சநீதிமன்றம்</a></p><p>*பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒரு நபர் மதம் மாறிய மறு கணமே, அவரின் எஸ்சி அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும்</p><p>* இந்து, சீக்கியர் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ்சி அந்தஸ்திற்குத் தகுதியானவர்கள் என்று தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">மீண்டும் போராடுவோம் என எச்சரித்த CJP.. பீகார், அசாம், ராஜஸ்தானில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!</a></p><p>*எந்தவொரு இளைஞரையும் தனித்து விடமாட்டோம்</p><p>*பீகாரில் ஜூலை 25 அன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 694 பேர் உட்பட அனைவர் மீதான வழக்கு ரத்து </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/over-1000-attacks-in-6-months-surge-in-violence-by-israeli-settlers-in-the-west-bank-un">6 மாதத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்.. மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறை அதிகரிப்பு - ஐநா</a></p><p>*மேற்குக் கரை முழுவதும் உள்ள 230க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சமூகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>*இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடத்தினர்.</p><p><a href="https://alaimalar.com/news/world/greta-thunberg-hails-indian-students-protest-victory-over-neet-exam-scam">இந்திய மாணவர்களின் வீரமிக்க போராட்டம் உலகம் முழுமைக்கும் நம்பிக்கை அளித்துள்ளது - கிரேட்டா துன்பெர்க்</a></p><p>*நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் உயிரிழந்த 21 மாணவர்களுக்கு அஞ்சலி.</p><p>* பிரபல இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-election-boycott-empty-polling-stations-protests-and-violence-rock-pok">POK: தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் வன்முறை - பலர் காயம்</a></p><p>*பல பகுதிகளில் மொபைல் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.</p><p>*பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-telugu-character-actress-dies-pavala-shyamala-passes-away-in-hyderabad-after-health-issues-and-viral-kokku-scene-fame">வைரல் தெலுங்கு நடிகை ஸ்யாமலா மறைவு</a></p><p>*போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர்.</p><p>*நள்ளிரவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</a></p><p>* பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார். </p><p>*  முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/tatkal-booking-new-rules-process-coming-august-1st">ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய டோக்கன்- நெரிசலை குறைக்க ரெயில்வே நடவடிக்கை</a></p><p>* ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.</p><p>* ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university">மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும்  53  பேரும்  50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும்  சென்று வேலை தேட முடியாது.</p><p>* தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-famous-model-files-complaint-mumbai-police">CJP PROTEST: போலீஸ் வேனை மறித்த புகழ்பெற்ற மாடல் அழகி மும்பை போலீசில் புகார்!... </a></p><p>*சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகத் தொடர் அவதூறுகளையும் மனரீதியான தாக்குதல்களையும் தொடுக்கத் தொடங்கினர்.</p><p>*"இந்த அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளேன்" </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-28-07-2026">GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக சரிந்த தங்கம் விலை</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august">வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி- அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டம்</a></p><p>*&nbsp;பழைய வைப்பு நிதி கணக்குகளில் இருந்த தரவுகள் புதிய தளத்தில் விடுபட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்</p><p>* அனைத்து முக்கிய தொழில்நுட்ப கோளாறுகளும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே தற்போதைய நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money">மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்; பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை- தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்</a></p><p>* லஞ்சத்திற்கு எதிராக தாசில்தார் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>* தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் பணத்துடன் வருவதை தவிர்த்து, கோரிக்கை மனுக்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல 3 மாதத் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-3month-ban-on-transporting-minerals-to-other-states-is-welcome</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-3month-ban-on-transporting-minerals-to-other-states-is-welcome#comments</comments><guid isPermaLink="false">658ce874-710f-48e2-a290-2fd6e5b921bf</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:34:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:34:49.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/xj4dsft9/anbumaniramadoss.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/xj4dsft9/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இப்போது 3 மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வரவேற்பு</strong></h2><p>தமிழ்நாட்டிலிருந்து  கருங்கல் பாறைகள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்  வகையில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தற்காலிகமானதாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது.</p><p>தமிழ்நாட்டின்  நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு மிகப்பெரிய அளவில் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. முந்தைய திமுக ஆட்சியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதரின் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் உச்சக்கட்டத்தை அடைந்தது.  இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று தவெக அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே  வலியுறுத்தியிருந்தேன். அதைத்  தொடர்ந்து சில குவாரிகளுக்கு  கனிமவளத்துறை அமைச்சரே நேரில் சென்று ஆய்வு நடத்தினாலும்  கனிமக் கொள்ளையும், கடத்தலும் குறையவில்லை.</p><p>தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்கு செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் காரணமாக அந்த சாலையில் கனிம வளங்களை கொண்டு செல்லத் தடை விதித்த போதிலும் கடத்தல் குறையவில்லை. மாறாக மாற்றுப்பாதையில் கடத்தல் தொடர்ந்தது. அதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை; அதனால் உடனடியாக கனிமக் கடத்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன்.</p><h2><strong>சிபிஐ விசாரணை</strong></h2><p>அதன் தொடர்ச்சியாகத் தான் வெளி மாநிலங்களுக்கு கனிமங்களைக் கடத்திச் செல்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தத் தடை முழு அளவில் செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தி கனிமவளங்கள் கடத்தப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.</p><p>அதுமட்டுமின்றி, இப்போது 3  மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக  மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பயணிகளே கவனம்..! அரசுப் பேருந்துகளில் இனி &apos;நோ சவுண்ட்&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses#comments</comments><guid isPermaLink="false">73f8a45a-6f0b-4ed2-9e36-2e8cb2d6fdcd</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:25:56 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:25:56.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,government buses,Tamilnadu Government,tnstc,போக்குவரத்து கழகம்,அரசுப் பேருந்துகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hqh9kncr/tnstc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Government Buses ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hqh9kncr/tnstc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகக் (TNSTC) பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள், மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செல்போன் ஸ்பீக்கர் மூலம் சத்தமாகப் பேசுவதையோ அல்லது இயர்போன் இல்லாமல் பாடல்கள், ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் பார்ப்பதையோ தவிர்க்க வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை புதிய சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>ஸ்பீக்கர் ஒலிக்குத் தடை:</strong></h2><p>அரசுப் பேருந்துகளில் பயணத்தின்போது கைபேசியின் ஸ்பீக்கரை ஆன் செய்து அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள்/ரீல்ஸ் பார்ப்பது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், கட்டாயம் இயர்போன் (Earphones) ஹெட்போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.</p><h2><strong>சத்தமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்</strong>:</h2><p>பேருந்தினுள் செல்போனில் அழைப்புகளைப் பேசிச் செல்லும்போது உரத்த குரலில் பேசுவதைத் தவிர்த்து, மற்றவர்களின் அமைதியான பயணத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.</p><h2><strong>விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்:</strong></h2><p>பேருந்தினுள் பயணிகள் எளிதில் பார்க்கும் வகையில் 'கைபேசியில் 'ஸ்பீக்கர் ஒலி' வேண்டாம் - அமைதியான பயணம், பாதுகாப்பான பயணம்" என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களைப் பேருந்துகளில் ஒட்டுமாறு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><h2><strong>ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான அறிவுறுத்தல்:</strong></h2><p>பேருந்தைக் கிளப்பும் முன்பும், பயணத்தின்போதும் பயணிகள் இந்த நடைமுறையைக் கண்டிப்புடன் பின்பற்றுவதை ஓட்டுநர்களும் நடத்துநர்களும் உறுதி செய்து அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சமீபகாலமாக பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் பலர், தங்கள் கைபேசியில் சத்தமாக ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பதும், உரத்த குரலில் பேசுவதும் அதிகரித்துள்ளதாகக் கடலூர், சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து போக்குவரத்துத் துறைக்குத் தொடர் புகார்கள் வந்தன. அமைதியான மற்றும் அசவுகரியமில்லாத பயண அனுபவத்தை உறுதிசெய்யும் பொருட்டு போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போராடிய மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்த கபில் சிபல்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-legal-aid-kapil-sibal-pledges-1-crore-to-cjp-fund-for-students-facing-cases</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-legal-aid-kapil-sibal-pledges-1-crore-to-cjp-fund-for-students-facing-cases#comments</comments><guid isPermaLink="false">fd513a3d-0b28-47cc-9d9a-1bb0e0e8b49c</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:20:17 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:20:17.877Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்கு,Case,கபில் சிபில்,Kapil Sibal,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/t7bnwzxr/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கபில் சிபல், சௌரவ் தாஸ்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ கபில் சிபல், சௌரவ் தாஸ்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/t7bnwzxr/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ரூ. 1 கோடி</h2><p> கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி)  அமைத்துள்ள மாணவர் சட்ட உதவி நிதியத்திற்குத் தனது பங்களிப்பாக ரூ.1 கோடி வழங்குவதாக மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் அறிவித்துள்ளார்.</p><p>போராட்டங்களில் பங்கேற்று சட்டரீதியான வழக்குகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவ சிஜேபி, இந்த நிதியத்தை உருவாக்கியுள்ளது.</p><p>நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இந்த நிதியத்திற்குப் பங்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p> <h2>சட்ட உதவிக்கு சிறப்பு இணையதளம்</h2><p>டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிஜேபி தலைவர்கள் அசுதோஷ் ரான்கா, சௌரவ் தாஸ் மற்றும் வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p>அதில், பீகார், அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா என அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவ உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் இணைந்து ஒரு சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">எப்.ஐ.ஆர் </a>பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் தங்கள் வழக்கு விவரங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில்புதிய போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது.</p><p>இலவசமாகச் சேவை செய்ய விரும்பும் வழக்கறிஞர்களும் இந்த இணையதளம் மூலம் இணையலாம் என தெரிவிக்கப்பட்டது.</p> <h2>மீண்டும் போராட்டம்</h2><p>மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்படாமலும், காவல்துறை நடவடிக்கைகள் நிறுத்தப்படாமலும் இருந்தால் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவோம் என சிஜேபி எச்சரித்துள்ளது.</p><p>அரசு தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டதாகவும், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சௌரவ் தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>அதேவேளையில், ஜூலை 26 மாலை 6 மணிக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பீகார் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p> <h2>சிஜேபி போராட்டம் </h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி.) சார்பில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டம் நாடு முழுக்க பல மாநிலங்கள் வரை மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.</p><p>அந்த வரிசையில் பீகார் மாநிலத்திலும் மாணவர்கள், மாணவர் அமைப்புகள் சார்பில் போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மாநிலம் முழுக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டத்தின் பாதையில் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">df8285ae-a575-486a-81f8-c4959b161654</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:10:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:10:12.838Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,RB Udhayakumar,ஆர்பி உதயகுமார்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/0s4fu4e1/RBUdhayakumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆர்.பி.உதயகுமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.பி.உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/0s4fu4e1/RBUdhayakumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.</aside><p>முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ஆர்.பி.உதயகுமார் </a>இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>டெல்டா பகுதி வறட்சி பகுதியாக நாம் பார்க்கிற போது நம் நெஞ்சம் பதறுகிறது. கர்நாடகா தண்ணீரை திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஜூன், ஜூலை மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கொடுக்காமல் பயிர்கள் காய்வதை பார்த்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நாம் பெற வேண்டிய உரிமை பறிபோய் கொண்டே இருக்கிறது. மேல்முறையீடு செய்ய த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா? மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்ற அதிரடி பதிலை மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்து இருப்பதால் அதிர்ச்சியிலே உறைந்து போய் இருக்கிறது தமிழகம்.</p><h2><strong>நீதியரசர்களின் தீர்ப்பே சாட்சி</strong></h2><p>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled">சென்னை ஐகோர்ட் மதுரை கிளை</a> அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. தன்னை பார்க்க வந்தவர்கள் இறந்து போனார்கள் என்பதற்காக அரசு நிர்வாகத்தை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், என்கிற கோமாளித்தனத்தை தலையில் கொட்டு வைத்து, சட்டத்தை புரிய வைத்து, சட்டத்தின் ஆட்சிதான் என்றைக்கும் மேலோங்கி இருக்கும் என்பதை நீதியரசர்கள் இந்த நாட்டிற்கு உணர்த்தியுள்ளார்கள்.</p><p>கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால், கோட்டையிலே ஓட்டை விழுந்து விடுகிறது என்பதற்கு தான் இன்றைக்கு ஐகோர்ட் தீர்ப்பு உச்சந்தலையில் ஆணி அடித்தது போல, மக்களின் பக்கம், சட்டத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம், தர்மத்தின் பக்கம் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டுமே தவிர, த.வெ‌.க. கட்சியை வளர்ப்பதற்கு அரசு எந்திரத்தை பயன்படுத்தினால் இப்படித்தான் சம்பட்டி அடி கிடைக்கும் என்பதற்கு இந்த நீதியரசர்களின் தீர்ப்பே சாட்சியாக இருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மிருணாள் தாகூர்-யஷஸ்வி ஜெய்ஸ்வால் காதல் வதந்தி: மும்பை கஃபே வீடியோவால் இணையத்தில் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mrunal-thakur-yashasvi-jaiswal-relationship-bandra-buji-cafe-viral</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mrunal-thakur-yashasvi-jaiswal-relationship-bandra-buji-cafe-viral#comments</comments><guid isPermaLink="false">2046815b-e7da-4437-a820-d8ac2052ec2e</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:04:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:04:01.515Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yashasvi Jaiswal,யஷஸ்வி ஜெய்ஸ்வால்,mrunal thakur,நடிகர் தனுஷ்,actor Dhanush,மிருணாள் தாகூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/1wgcz129/MUR.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mrunal Thakur-Yashasvi Jaiswal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/1wgcz129/MUR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் (33), இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் (24) காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் புதிய வதந்தி ஒன்று காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மும்பை பாந்த்ரா மேற் பகுதியில் உள்ள 'பூஜி கஃபே'  உணவகத்தில் இருவரும் இருந்த வீடியோ இணையத்தில் வைரலானதே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.</p><h2><strong>வைரல் வீடியோ:</strong></h2><p>சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புன்னகையுடன் கஃபேவை விட்டுவெளியேறி தனது காரை நோக்கிச் செல்கிறார். அதே வேளையில் நடிகை மிருணாள் தாகூர் அந்த கஃபேவின் உள்ளேயே அமர்ந்திருக்கிறார்.</p><p>ஆனால், வீடியோவில் இருவரும் ஒன்றாகப் பேசுவதோ அல்லது நெருக்கமாக அமர்ந்திருப்பதோ போன்ற எந்தவொரு காட்சியும் இடம் பெறவில்லை. இருப்பினும், இரு பிரபலங்களும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் காணப்பட்டதால், 'இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்களா?' என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளனர்.</p><p>மிருணாள் தாகூரோ அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வாலோ இந்த வீடியோ அல்லது காதல் வதந்திகள் குறித்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இரு ரசிகர் பட்டாளங்களைச் சேர்ந்த சிலர், இது ஏதேனும் ஒரு விளம்பரப் படப்பிடிப்புக்காக அல்லது தொழில்முறை சந்திப்புக்காக நடந்த சந்திப்பாக இருக்கலாம் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>மிருணாள் தாகூருக்கு 33 வயதும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 24 வயதும் ஆகிறது. இவர்களுக்கு இடையே உள்ள 9 ஆண்டுகள் வயது வித்தியாசம் குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.</p><h2><strong>ரசிகர்களின் ஆதரவு:</strong></h2><p>மிருணாள் தாகூரின் ரசிகர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். "சில நாட்களுக்கு முன் தனுஷுடன் இணைத்துப் பேசினார்கள், பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இப்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் என யாராவது ஒருவருடன் மிருணாளைத் தேவையின்றி இணைத்துப் பேசுவதை நிறுத்துங்கள்" என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.</p><p>தற்போது, மிருணாள் தாகூர் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணி விளையாடவுள்ள அடுத்தடுத்த தொடர்களுக்குத் தயாராகி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>வைரல் தெலுங்கு நடிகை ஸ்யாமலா மறைவு </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-telugu-character-actress-dies-pavala-shyamala-passes-away-in-hyderabad-after-health-issues-and-viral-kokku-scene-fame</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-telugu-character-actress-dies-pavala-shyamala-passes-away-in-hyderabad-after-health-issues-and-viral-kokku-scene-fame#comments</comments><guid isPermaLink="false">32081606-f261-4919-9ef2-be9e231f71b2</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:02:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:02:01.790Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Actress,dil raju,தில் ராஜு,தெலுங்கு நடிகை,நடிகை மறைவு,Telugu actress</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/39orq3nf/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஸ்யாமலா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்யாமலா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/39orq3nf/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மூத்த <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/s-janakis-body-cremated-with-state-honors-amid-30-gunshots">தெலுங்கு </a>குணச்சித்திர நடிகை பாவாலா ஷியாமலா (75) காலமானார். </p><p>கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனையில் நள்ளிரவில் மாரடைப்பால்  உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். </p><p>முன்னதாக அவரிடம் போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர். பின்னர் போலீசார் அவரை மீட்டனர். ஸ்யாமலா சாலையில் ஆதரவின்றி கிடந்த வீடியோ வைரலாகி பின்னர் தயாரிப்பாளர் தில் ராஜு முன்வந்து அவரின் மருத்துவ செலவுக்கு உதவினார். </p><h2>ஷியாமலா</h2><p>ஷியாமலா, 1951ல் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம், அமராவதியில் பிறந்தார். நடிப்பில் ஆர்வம் கொண்ட அவர், முதலில் மேடை நடிகையாகவும் வானொலிக் கலைஞராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.</p><p>40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வரும் பாவாலா ஷியாமலா, 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.</p><p>தனது இயல்பான நடிப்பு மற்றும் நகைச்சுவை உணர்வுக்கு பெயர் போனவர் ஸ்யாமளா. </p><p>குறிப்பாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கோபிசந்த் (ஜெயம் பட வில்லன்) நாயகனாக நடித்து 2010 இல் வெளியான கோலிமார் படத்தில் ஸ்யாமளா இடம்பெற்ற நகைச்சுவை காட்சி தெலுங்கு சினிமா ரசிகர்கள் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரசித்தம்.</p> <figure><img alt="ஸ்யாமலா " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/eb6wa7fn/tn-8.jpg" /><figcaption>ஸ்யாமலா </figcaption></figure><h2>கொக்கு - வைரல் காட்சி</h2><p>தமிழ் டப்பிங்கில் 'கொக்கு' என்ற பெயரில் வெளியான இப்படத்தில் கோபிசந்த் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக இருப்பார். பிரியாமணி அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். வெளிநாட்டில் உள்ள வில்லன், ஒரு காட்சியில் தனக்கு பணம் தர வேண்டும் என ஐதராபாத்தில் ஒரு பெரும் புள்ளியை மிரட்டுவதற்காக போன் செய்வார்.</p><p>வீட்டில் அவரின் வேலைக்காரி அந்த போன் காலை எடுப்பார். இது தான் ஸ்யாமலா நடித்த பாத்திரம். வில்லன் மிடுக்குடன் மிரட்டலாக பேச, வேலைக்காரியாக நடித்த ஸ்யாமலா, எதிர்புறம் பேசுவது பெரிய டான் எனத் தெரியாமல் பல எதிர்கேள்விகளை அடுக்கிக்கொண்டே போவார். ஒரு கட்டத்தில் வில்லன் கடுப்பாகி, தன் மீது யாருக்கும் பயம் இல்லை என உணர்ந்து, அந்த பெரும் புள்ளியையும், வேலைக்காரியையும், ஆள் அனுப்பி கொல்ல சொல்வார்.</p><p>பெரும் புள்ளி சுட்டுக்கொல்லப்பட, வேலைக்காரி ஸ்யாமளா தப்பித்துக்கொள்வார். நாயகன் கோபிசந்த் கொலை நடந்த வீட்டுக்கு வந்து, விசாரிக்க, தான் போனில் பேசிய விஷயத்தை ஸ்யாமளா கூற, "உன்னால தான் உன் முதலாளி செத்துட்டான்" என கூறுவார். இந்த சீன் பின்னாட்களில் சமூக ஊடகங்களில் அதிகம் உலா வந்த ஒன்று. அவரின் தற்போதைய மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய டோக்கன்- நெரிசலை குறைக்க ரெயில்வே நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/tatkal-booking-new-rules-process-coming-august-1st</link><comments>https://www.maalaimalar.com/news/national/tatkal-booking-new-rules-process-coming-august-1st#comments</comments><guid isPermaLink="false">b994f996-dad7-4b66-b206-f7ca61bea8ad</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:57:33 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:57:33.692Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian Railway,இந்திய ரெயில்வே,Tatkal,தட்கல்,தட்கல் ரெயில் டிக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rl2qzk4i/tatkal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rl2qzk4i/tatkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் முன்பதிவு மையத்திற்குச் சென்றால், ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.</aside><p>ரெயில் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு மையங்களில் எளிதாகவும், நெரிசலின்றியும் பெறுவதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/இந்திய-ரெயில்வே">இந்திய ரெயில்வே</a> ஒரு புதிய டோக்கன் முறையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மேற்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய நடைமுறை, வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.</p><h2><strong>கூட்ட நெரிசல்</strong></h2><p>வழக்கமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நேரங்களில், ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வரும் பயணிகளுக்கு முதலில் ஒரு டோக்கன் வழங்கப்படும். பின்னர், அந்த டோக்கன் வரிசை எண்களின் அடிப்படையில் அவர்களின் முறை ஒதுக்கப்பட்டு, பயணச்சீட்டுகள் தடையின்றி முன்பதிவு செய்யப்படும்.</p><p>இதனால், கவுண்டரில் ஏற்படும் தள்ளுமுள்ளு மற்றும் நீண்ட வரிசைகளால் ஏற்படும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>ஆவணங்கள்</strong></h2><p>தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் முன்பதிவு மையத்திற்குச் சென்றால், ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். </p><p>மேலும், பயணிகளின் பெயர்கள், வயதுகள் மற்றும் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும். இது டிக்கெட் முன்பதிவு செயல்முறையை விரைவுபடுத்த உதவும்.</p><p>புதிய நடைமுறை வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event#comments</comments><guid isPermaLink="false">0ceb1613-c7e5-4002-9b5c-53c3f3ae5d55</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:52:04 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:52:04.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,Convocation Ceremony,அமைச்சர் விஸ்வநாதன்,minister viswanathan,nellai manonmaniam sundaranar university</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/klrv4ivc/univeersity.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/klrv4ivc/univeersity.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.</p><h2>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார். </p> <h2>அமைச்சர் விஸ்வநாதன்</h2><p>இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">பட்டமளிப்பு விழா</a>வை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து அவர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார்.</p> <h2>டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்</h2><p>மதுரையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தற்போது வரை நெல்லைக்கு புறப்படவில்லை. இன்று முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதாக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக நெல்லை தவெக எம்எல்ஏ முருகன் அறிவித்துள்ளார். பட்டமளிப்பு விழாவில் இன்று நடைபெறும் நிலையில் ஆளுநரை கண்டித்து புறக்கணிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.</p><p>பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் அறிவித்த நிலையில் நெல்லை எம்எல்ஏ முருகனும் அறிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மேக்புக் மாடல்களுக்கு ரூ. 15,000 கேஷ்பேக் வழங்கும் ஆப்பிள்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-offering-up-to-rs-15000-cashback-on-macbook-pro-macbook-air</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-offering-up-to-rs-15000-cashback-on-macbook-pro-macbook-air#comments</comments><guid isPermaLink="false">cd61f62f-6cdf-40d8-97c7-c64002bc7b1a</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:42:00 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,சலுகை,Offers</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/0bwji739/Macbook-Pro.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Macbook Pro]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/0bwji739/Macbook-Pro.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்திய விலை உயர்வால் அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது மேக்புக் ப்ரோ (MacBook Pro) மற்றும் மேக்புக் ஏர் (MacBook Air) மாடல்களுக்கு வங்கி சார்ந்த தள்ளுபடி சலுகைகளை வழங்க தொடங்கியுள்ளது. </p><p>நேரடி விலை குறைப்புக்கு பதிலாக, குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும் என்பதால், இவை பயனுள்ளவையாக இருந்தாலும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாக இல்லை.</p><p>சலுகை விவரங்கள்:</p><p>M5 சிப் கொண்ட 14-இன்ச் மேக்புக் ப்ரோ மாடலுக்கு ரூ. 15,000 வரையிலும், M5 சிப் கொண்ட 13-இன்ச் மேக்புக் ஏர் மாடலுக்கு ரூ. 9,000 வரையிலும் குறிப்பிட்ட வங்கி கார்டுகள் மூலம் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.</p><p>மேலும், மேக்புக் ஏர் மாடலுக்கு 'கல்விக்கான சிறப்பு விலை' சலுகையையும் ஆப்பிள் நீட்டித்துள்ளது; இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இதன் விலை இன்னும் சற்று குறைகிறது.</p><p>விலையை உயர்வாகவே வைத்துக்கொண்டு, பின்னர் வங்கி கார்டு சார்ந்த சலுகைகள் மூலம் அந்த சுமையைக் குறைப்பது என்பது ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கமான உத்தியாகும். இதில் தள்ளுபடிகள் வழங்கப்பட்டாலும், அடிப்படை விலைகள் மிக அதிகமாக இருப்பதால், இந்த சலுகைகள் ஒரு சிறந்த லாபகரமான ஒப்பந்தமாக தெரிவதை விட, விலை உயர்வால் ஏற்பட்ட அதிருப்தியை சரிசெய்யும் முயற்சியாகவே தோன்றுகின்றன.</p><h2>இந்திய விலை:</h2><p>M5 சிப்செட் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் 13-இன்ச் மாடலின் விலை ரூ. 1,37,900 என்றும் 15-இன்ச் மாடலின் விலை ரூ. 1,67,900 முதல் துவங்குகிறது.</p><p>இதேபோல் M5 ப்ரோ சிப்செட் கொண்ட 14-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் ரூ. 2,27,900 என்றும் M5 ப்ரோ சிப்செட் கொண்ட 16-இன்ச் மேக்புக் ப்ரோ விலை ரூ. 3,35,900 முதல் தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university#comments</comments><guid isPermaLink="false">3ddf92d1-7dde-4bed-a8bb-a3ea89fbab72</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:41:00.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Manonmaniam Sundaranar University,நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/icxnmrh1/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/icxnmrh1/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அறமும், மனிதநேயமும் மீறல்</strong></h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தினக்கூலி பணியாளர்களாகவும், தொகுப்பூதிய பணியாளர்களாகவும் பணியாற்றி வரும்  53  தொழிலாளர்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிலைப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பதாக  குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன. அறத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பல்கலைக்கழகத்திலேயே அறமும், மனிதநேயமும் மீறப்படுவது கண்டிக்கத்தக்கது.</p><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தூய்மைப் பணியாளர்கள், இரவுக் காவலர்கள், பாதுகாவலர்கள், மின்னியலாளர்கள்,  அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளில்  தொகுப்பூதிய பணியாளர்களாக 53 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அதே பல்கலைக்கழகத்தில்  17 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை  பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணிச் செயல்பாடுகள் குறித்து  எந்தப் புகாரும் இதுவரை  எழவில்லை.</p><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விதிகளின்படி தினக்கூலி பணியாளராக சேரும் ஒருவர் ஐந்தாண்டுகள் பணி செய்த பின்னர் தொகுப்பூதிய பணியாளராக மாற்றப்படுவார். அடுத்த பத்தாண்டுகள்  தொகுப்பூதிய பணியாளராக பணி செய்த பின்னர் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த 53 பணியாளர்கள் விஷயத்தில் மட்டும் இந்த விதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் கடைபிடிக்க மறுக்கிறது.</p><h2><strong>பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்</strong></h2><p>தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும்  53  பேரும்  50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும்  சென்று வேலை தேட முடியாது. பணி நிலைப்பு என்பது அவர்களின் உரிமை. இந்த உரிமையை பெறுவதற்காக தகுதியை அவர்கள்  2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெற்று விட்டனர். அதனடிப்படையில் பணி நிலைப்பு வழங்குங்கள் என முந்தைய துணை வேந்தரிடம் 3 முறையும், இப்போதைய துணை வேந்தரிடம் இரு முறையும் மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் நீதி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுக்கிறது.</p><p>பணி நிலைப்பு கிடைக்காத மன உளைச்சலில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்;  ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பணி செய்ய முடியாத அளவுக்கு படுக்கையில் வீழ்ந்துள்ளார்.  இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதே நிலை பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது.</p><p>தொகுப்பூதிய பணியாளர்களின் தேவைகளும், மனித உரிமைகளும்  மதிக்கப்பட வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 17 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும்  தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி நிலைப்பு  வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும். தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>CJP PROTEST: போலீஸ் வேனை மறித்த புகழ்பெற்ற மாடல் அழகி மும்பை போலீசில் புகார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-famous-model-files-complaint-mumbai-police</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-famous-model-files-complaint-mumbai-police#comments</comments><guid isPermaLink="false">463bdfea-8d1a-458e-879b-ac5fdee5c8da</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:27:19 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:27:19.190Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட் ஊழல்,CJP Protest,காக்ரோச் ஜனதா கட்சி,Rhiya Yadav,ரியா யாதவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/urgf3nlq/rhiya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rhiya Yadav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/urgf3nlq/rhiya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏற்றிச் சென்ற காவல் துறை வாகனத்தை மறித்து சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்த 27 வயதான மாடல் அழகி 'ரியா யாதவ்', தனக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இணையவழி அவதூறு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக மும்பை எம்பிடிசி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.</p><h2><strong>சம்பவத்தின் பின்புலம்:</strong></h2><p>கடந்த ஜூலை 22 அன்று, மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நீட் தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட இளைஞர்களை ஏற்றிச் சென்ற போலிஸ் வேனை ரியா யாதவ் தனது கைகளை விரித்து நின்று மறித்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அவருக்குப் பரவலான ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது.</p><h2><strong>இணையவழித் தாக்குதல்:</strong></h2><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகத் தொடர் அவதூறுகளையும் மனரீதியான தாக்குதல்களையும் தொடுக்கத் தொடங்கினர். அதில், ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ஆபாச உள்ளடக்கங்களை விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகச் சிலர் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டனர்.</p><p>மேலும், அவரது புகைப்படங்களை மங்கலாக்கி வீடியோக்களாக வெளியிட்டு, தவறானத் தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது பெற்றோர் இதனால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இந்த அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதற்காகவும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.</p><h2><strong>காவல் துறை நடவடிக்கை:</strong></h2><p>கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிரா சைபர் செல்லில் ஆன்லைன் மூலம் புகார் அளித்த ரியா, நேற்று MIDC காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சாட்சியங்களைச் சமர்ப்பித்தார். காவல் நிலையத்தில் திரையிடப்பட்ட வீடியோ ஆதாரங்கள், டிஜிட்டல் சான்றுகள் மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங்குகளை அதிகாரிகளிடம் வழங்கினார். </p><p>இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "காவல் துறையினர் மிகவும் ஒத்துழைப்புடனும் விரைவாகவும் செயல்பட்டனர். நடைமுறைகளை அவர்கள் துரிதப்படுத்தியதால், திட்டமிட்டபடி மூத்த சைபர் செல் அதிகாரியைச் சந்திக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை" எனக் குறிப்பிட்டார்.</p><p>இப்புகார் தொடர்பாக ரியா யாதவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்த பின் விரைவில் FIR பதிவு செய்யப்படும் என்றும் MIDC காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக சரிந்த தங்கம் விலை</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-28-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-28-07-2026#comments</comments><guid isPermaLink="false">2d7182dd-77e1-4996-9d3e-aa66c7847008</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:21:55 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:21:55.298Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-01/nglnbkdf/gold.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-01/nglnbkdf/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.13,300-க்கும், சவரன் ரூ.1,06,400-க்கும் விற்கப்பட்டது. நேற்று ரூ.70 உயர்ந்து கிராம் ரூ.13,370-க்கும், ரூ.560 அதிகரித்து சவரன் ரூ.1,06,960-க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை குறைவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு  ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>27-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960</p><p>26-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><p>25-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><p>24-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840</p><p>23-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,000</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>27-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>26-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>25-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>24-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>23-07-2026- ஒரு கிராம் ரூ.245</p> ]]></content:encoded></item><item><title>மீண்டும் போராடுவோம் என எச்சரித்த CJP.. பீகார், அசாம், ராஜஸ்தானில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்! </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators#comments</comments><guid isPermaLink="false">63342384-47df-4c51-8348-953a93f15516</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:17:35 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:17:35.704Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,student protest,வழக்கு,Case,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uj30euq1/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uj30euq1/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகளை பெறப்போவதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.</p><h2>அசாம் </h2><p>அசாம் அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, </p><p>ஜூலை 26 மாலை 6 மணிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் மற்றும் கைது செய்யப்பட்ட 13 பேர் மீதான சட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும். </p><p>இந்த விவகாரம் தொடர்பான எந்தவொரு எதிர்கால சட்ட நடவடிக்கையும் இல்லாமல் வழக்குகள் முடித்து வைக்கப்படும்.</p><p>கைது செய்யப்பட்டவர்களை விரைவாக விடுதலை செய்யும் பணிகளும், வழக்குகளைத் திரும்பப் பெறும் சட்ட நடைமுறைகளும் உடனடியாகத் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>பீகார் - ராஜஸ்தான்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/bihar-govt-to-withdraw-cases-lodged-against-protesters-over-neet-paper-leak">பீகாரில் </a>ஜூலை 25 அன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 694 பேர் உட்பட அனைவர் மீதான வழக்குகளையும் ரத்து செய்து பீகார் அரசு ஏற்கனவே முழுமையான பொதுமன்னிப்பு அறிவித்திருந்தது.</p><p>ராஜஸ்தானிலும் போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்தவொரு எப்ஐஆரும்பதிவு செய்யப்படாது என்றும், போராட்டக்காரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.</p> <h2>சௌரவ் தாஸ்</h2><p>அரசுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு சௌரவ் தாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,</p><p>"மத்திய அரசு மற்றும் பிற என்டிஏ ஆளும் மாநிலங்கள் சார்பிலும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது மற்றும் வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்த உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு இளைஞரையும் தனித்து விடமாட்டோம்."</p><p>முன்னதாக, தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை 25 அன்று போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.</p><h2>சிஜேபி நிபந்தனை</h2><p>சிஜேபி மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆகியோருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், வழக்குகளைத் திரும்பப் பெறவும், வினாத்தாள் கசிவு எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவரவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.</p><p>போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுவது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என சிஜேபி எச்சரித்திருந்த நிலையில் பீகார், அசாம், ராஜஸ்தான் அரசின் முடிவுகள் வந்துள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>மதம் மாறிய மறு கணமே பட்டியலின அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும் - உச்சநீதிமன்றம் </title><link>https://www.maalaimalar.com/news/national/sc-status-cancelled-on-conversion-supreme-court-upholds-ap-hc-ruling-on-reservation-and-certificates</link><comments>https://www.maalaimalar.com/news/national/sc-status-cancelled-on-conversion-supreme-court-upholds-ap-hc-ruling-on-reservation-and-certificates#comments</comments><guid isPermaLink="false">00e3847c-73f6-40b6-bf30-ee48c4248a1f</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:00:38 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:00:38.401Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,மதமாற்றம்,Religious Conversion,உச்சநீதிமன்றம்,பட்டியலின அந்தஸ்து,Scheduled Caste status</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rn4p3zwe/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rn4p3zwe/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டியலின  வகுப்பைச் சேர்ந்த ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலின  (SC) அந்தஸ்து உடனடியாக ரத்து செய்யப்படும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்றம்</a> தெரிவித்துள்ளது.</p><p>இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களை தவிர்த்து, கிறித்தவம் அல்லது பிற மதங்களைத் தழுவிய நபர்களுக்கு எஸ்சி இடஒதுக்கீடு மற்றும் சான்றிதழ்கள் செல்லாது என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் முன்பு அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது. </p>  <h2>விசாரணை</h2><p>நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது விசாரணையில்,</p><p>பட்டியலின வகுப்பினர் குறித்த 1950ஆம் ஆண்டின் அரசியலமைப்புஉத்தரவின்படி, இந்து, சீக்கியர் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ்சி அந்தஸ்திற்குத் தகுதியானவர்கள் என்று தெரிவித்தது.</p><p>பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒரு நபர் மதம் மாறிய மறு கணமே, அவரின் எஸ்சி அந்தஸ்தும் அதன் அடிப்படையிலான சலுகைகளும் முடிவுக்கு வந்துவிடும். உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தத் தவறும் இல்லை.</p> <h2>3 நிபந்தனைகள்</h2><p>மதம் மாறிய ஒருவர் மீண்டும் தனது பழைய எஸ்சி அந்தஸ்தைப் பெற வேண்டுமென்றால், பிறப்பால் அவர் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். </p><p>சுயவிருப்பத்தின் பேரில் மீண்டும் தனது சொந்த மதத்திற்கு (இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம்) திரும்ப வேண்டும். அவரது மூல சாதி சமூகம் அவரை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.</p><p>அரசியலமைப்பு நிர்ணயித்துள்ள இந்த 3 முக்கிய நிபந்தனைகளுக்கு உட்பட்டால் மட்டுமே அவருக்கு மீண்டும் எஸ்சி அந்தஸ்து கிடைக்கும்" என தெரிவித்த அமர்வு, மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்:  28-7-2026 முதல் 3-8-2026 வரை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-28-7-2026-to-3-8-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-28-7-2026-to-3-8-2026#comments</comments><guid isPermaLink="false">c6689fcf-939e-49d4-84e5-fe53a523a624</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:49:30 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:49:30.005Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uq97f43q/amman2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uq97f43q/amman2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>28-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம்.</p><p>* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.</p><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய்த்தாழி சேவை.</p><p>* வடமதுரை சவுந்திர ராஜப்பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p>  <h2>29-ந் தேதி (புதன்)</h2><p>* பவுர்ணமி.</p><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர், வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் தலங்களில் ரத உற்சவம்.</p><p>* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.</p> <h2>30-ந் தேதி (வியாழன்)</h2><p>* சிரவண விரதம்.</p><p>* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.</p><p>* உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள், திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>31-ந் தேதி (வெள்ளி)</h2><p>* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம்.</p><p>* படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.</p><p>* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>1-ந் தேதி (சனி)</h2><p>* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பக விமானத்தில் பவனி.</p><p>* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.</p><p>* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>2-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* சங்கடகர சதுர்த்தி.</p><p>* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் நூதன மின்விளக்கு அலங்கார விருட்சப வாகனத்தில் பவனி.</p><p>* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>3-ந் தேதி (திங்கள்)</h2><p>* ஆடிப் பெருக்கு.</p><p>* திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> ]]></content:encoded></item><item><title>மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்; பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை- தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money#comments</comments><guid isPermaLink="false">759c7085-57f0-4762-b6cc-7e8540acf0b5</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:44:37 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:44:37.710Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,bribery,petitions,taluk office,தாலுகா அலுவலகம்,மனுக்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jg6w6sra/manamadurai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீசை படத்தில் காணலாம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீசை படத்தில் காணலாம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jg6w6sra/manamadurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்: பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை என மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் ஓட்டிய நோட்டீசால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</aside><h2><strong>தாலுகா அலுவலகம்</strong></h2><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறிவித்ததாக கூறி நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டது. அதில் "தாலுகா அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வரவேண்டும். பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை" என்று கூறப்பட்டிருந்தது.</p><p>பொதுவாக அரசு அலுவலகங்களில் பட்டாமாறுதல், சான்றிதழ்கள் பெறுதல், நிலஅளவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் சிலர் லஞ்சம் எதிர்பார்ப்பதாகவும், இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனை தடுக்கும் விதமாகவும், அரசு பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய இந்த வினோத கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2><strong>வலைதளங்களில் வைரல்</strong></h2><p>தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் பணத்துடன் வருவதை தவிர்த்து, கோரிக்கை மனுக்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை தாசில்தாரின் இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லஞ்சத்திற்கு எதிராக தாசில்தார் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>சாமானிய மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், தாலுகா அலுவலகத்தில் இப்படி ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரியுடன் புது ஒப்போ ஸ்மார்ட்போன் - அசத்தல் டீசர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-a7-pro-max-officially-teased-with-massive-10000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-a7-pro-max-officially-teased-with-massive-10000mah-battery#comments</comments><guid isPermaLink="false">8caca3ff-46da-403b-b68e-991c14fdfaa8</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:34:00 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>OPPO,ஒப்போ,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/f6405ars/Oppo-A7-Pro-Max.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Oppo A7 Pro Max]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/f6405ars/Oppo-A7-Pro-Max.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே <a href="https://www.maalaimalar.com/topic/oppo">ஒப்போ</a> A7 ப்ரோ மேக்ஸ் மாடலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது; மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 10,000mAh பேட்டரி இடம்பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>இந்நிறுவனம் ஸ்மார்ட்போனின் முதல் அதிகாரப்பூர்வ படத்தையும் பகிர்ந்துள்ளது, இதன் மூலம் அதன் பின்புற வடிவமைப்பை காண முடிகிறது. அறிமுக தேதி அல்லது விரிவான அம்சங்களை ஒப்போ இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், முந்தைய தகவல்கள் மற்றும் கசிவுகளின் படி இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட், 120Hz OLED டிஸ்ப்ளே, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் இரட்டை பின்புற கேமராக்களுடன் வரக்கூடும் என்று தெரிவித்தன.</p><h2>10,000mAh பேட்டரி:</h2><p>ஒப்போ நிறுவனம் வெய்போ தளத்தில் ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கான முதல் டீசரை பகிர்ந்துள்ளது, இதன் மூலம் அறிமுகத்திற்கு முன்பே இதில் 10,000mAh பேட்டரி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டீசர் படத்துடன் உள்ள குறிப்பில், ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் மாடலில் 10,000mAh வழக்கமான திறன் மற்றும் 9,700mAh மதிப்பிடப்பட்ட திறன் கொண்ட சிங்கிள்-செல் பேட்டரியைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>டீசரின் படி, ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் வெளிர் நீல நிறத்திலும், சற்று உயர்த்தப்பட்ட செவ்வக வடிவ கேமரா மாட்யூல் கொண்டிருக்கிறது. கேமரா மாட்யூலின் இடது பக்கத்தில் செங்குத்தாக இரண்டு பெரிய கேமரா வளையங்களும், அவற்றின் அருகே இரண்டு சிறிய வட்ட வடிவ அமைப்புகளும் உள்ளன.</p><h2>முன்பதிவு:</h2><p>வலதுபுறத்தில் "Power Flash" என்ற குறியீட்டுடன் கூடிய LED பிளாஷ் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் வலதுபுற ஓரத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன.</p><p>ஒப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை இன்னும் அறிவிக்கவில்லை; இருப்பினும், சீனாவில் ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.</p><h2>லீக் ஆன அம்சங்கள்:</h2><p>முந்தைய தகவல்களின்படி, ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் மாமடலில் 1.5K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட 6.78 இன்ச் ஃபிளாட் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16-ஐ சார்ந்த கலர்ஓ.எஸ். 16 உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>ஒப்போ A7 ப்ரோ மேகஸ் சமீபத்தில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட் விவரங்களுடன் Geekbench தளத்தில் காணப்பட்டது. பெஞ்ச்மார்க் தளத்தில் 12 ஜிபி ரேம் கொண்ட ஒரு வகையைக் குறிப்பிடுகிறது; அதேவேளையில், இந்தத் தொலைபேசி அதிகபட்சமாக 12GB ரேம் மற்றும் 512GB சேமிப்புத் திறனுடன் கிடைக்கக்கூடும் என்று முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஆனந்த வாழ்வளிக்கும் ஆடித்தபசு </title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-thabasu</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-thabasu#comments</comments><guid isPermaLink="false">d099c040-ccae-4375-ae95-f077ab81d31e</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:19:58 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:19:58.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,Aadi Thabasu,ஆடித்தபசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/yddj9e4u/sivan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிவன் - பெருமாள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/yddj9e4u/sivan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஆடித்தபசு</h2><p>ஆடி மாதம் என்பது அம்மன்  மாதமாகவே கருதப்படுகிறது. காரணம், அம்பிகையை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதம் ஆடி மாதமாகும். இந்த மாதத்தில் முக்கியமான பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில், மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் உன்னத விழாதான், ஆடித் தபசு. இது, அம்பிகையை வழிபடுவதற்கு உரிய நாள் மட்டுமின்றி, சைவ-வைணவ ஒற்றுமையை உணர்த்தும் நாளாகவும் உள்ளது.</p>  <h2>சங்கன், பதுமன் வாக்குவாதம்</h2><p>முன்னொரு காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரண்டு நாக அரசர்கள் வாழ்ந்து வந்தனர். அதில் சங்கன் என்பவர் சிவ பெருமான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பதுமன், மகாவிஷ்ணுவின் மீது அதிக பக்தி கொண்டவர். ஒரு சமயம் இருவருக்கும் 'சிவன் பெரியவரா அல்லது மகாவிஷ்ணு பெரியவரா' என்ற வாதம் எழுந்தது. இருவரும் மாறிமாறி 'நான் வணங்கும் இறைவன்தான் மேலானவர்' என்று வாக்குவாதம் செய்தனர்.</p><h2>சிவன் - விஷ்ணு</h2><p>இறுதியில், இதற்கு சரியான பதில் வேண்டி இருவரும் பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் - விஷ்ணு இருவரும் ஒன்றுதான் என்றார். ஆனால், நாக அரசர்கள் இருவரும் அதை ஏற்க மறுத்தனர். இதையடுத்து பார்வதி தேவி, “உரிய காலம் வரும்போது அறிந்து கொள்வீர்கள்” என்று கூறிவிட்டு சென்றார்.</p> <h2>பார்வதி தேவி தவம்</h2><p>பின்னர், நடந்தவற்றை சிவபெருமானிடம் கூறிய பார்வதி தேவி, “நாக அரசர்கள் மட்டுமின்றி உலக உயிர்கள் அனைத்திற்கும் சிவனும், அரியும் ஒன்றுதான் என்பதை உணர்த்த வேண்டும்" என கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான், “அது அவ்வளவு எளிதானதல்ல. இதற்காக கடுமையான தவம் இருக்க வேண்டும்” என்றார். உலக நன்மைக்காக, தான் தவம் இருப்பதாக பார்வதி தேவி கூறினார். </p><p>சிவபெருமான், “பொதிகை மலை பகுதியில் புன்னை மரங்கள் நிறைந்த வனத்தில் முனிவர்கள் பலர் என்னை நோக்கி தவம் இயற்றி கொண்டிருப்பார்கள். அவர்களுடன் நீயும் தவம் இயற்று. உரிய காலத்தில் நாங்கள் உனக்கு காட்சி அளிப்போம்" என்றார்.</p> <p>அதன்படி, அன்னை தவக்கோலத்தில் பூலோகம் புறப்பட்டார். அப்போது தேவலோக பெண்கள் அனைவரும் பசு வடிவில் அன்னையுடன் புன்னை மர வனத்திற்கு வந்தனர். பார்வதி தேவி, ஊசி முனையின் மீது ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் புரிந்தார்.</p><h2>சங்கர நாராயணராக காட்சி</h2><p>பார்வதியின் தவத்தில் மகிழ்ந்து சிவனும், மகாவிஷ்ணுவும் ஒரே ரூபமாக காட்சி தந்தனர். சிவன் ஒரு பாதியாகவும், மகாவிஷ்ணு மறு பாதியாகவும் தோன்றினர். இவ்வாறு அரியும், சிவனும் ஒன்றாக இணைந்து சங்கர நாராயணராக (சங்கரன் - சிவன், நாராயணன் - மகாவிஷ்ணு) காட்சி தந்த நன்னாள்தான் 'ஆடித் தபசு' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.</p> <h2>கோமதி அம்மன்</h2><p>'கோ' அல்லது 'ஆ' என்றால் பசு என்றும், 'மதி' என்றால் 'நிலா' என்றும் பொருள். பசுக் கூட்டத்துடன், மதி போன்ற அழகான முகத்துடன் தவம் இயற்றியதால் அன்னை 'கோமதி அம்மன்' என்றும், 'ஆவுடை நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார். அன்னை தவம் இயற்றிய இடம் தான், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் தலம்.</p> <h2>சங்கரன்கோவில் திருத்தலம்</h2><p>ஆடித் தபசு உருவாக காரணமாக இருந்த தலம் என்பதால் சங்கரன்கோவில் திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஆடித் தபசு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள். </p><p>சங்கரன்கோவில் சிவ தலமாக இருந்தாலும், இங்கு கோமதியம்மனே பிரதானம். ஆடித் தபசு அன்று, தவக்கோலத்தில் இருக்கும் கோமதியம்மனையும், சங்கரநாராயணரையும் தரிசித்தால் அனைத்துவிதமான நலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.</p>  <p>ஆடித் தபசு திருநாளான இன்றைய தினம் சங்கரன்கோவில் சென்று வழிபடுவது மிகவும் விசேஷம். முடியாதவர்கள் அருகில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடலாம். இன்றைய தினம் அம்பிகையை வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கைகூடும், வேண்டிய வரங்கள் கிடைக்கும், கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும், மங்கலகரமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.</p>]]></content:encoded></item><item><title>வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி- அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august#comments</comments><guid isPermaLink="false">8d6a229e-c132-444e-b854-6ab8084e9a65</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:19:30 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:19:30.606Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,EPFO,வருங்கால வைப்பு நிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/re530xwl/UPI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/re530xwl/UPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமான வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</aside><h2><strong>கோளாறு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF">தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி</a> நிறுவனம் (இ.பி.எப்.ஓ.) தனது சேவைகளில் யு.பி.ஐ. மூலம் பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை (சைட்ஸ் 2.01) நடைமுறைப்படுத்தியது. இந்த தளத்தை அறிமுகப்படுத்திய பிறகு, அதில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்தாக உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறிப்பாக, பழைய வைப்பு நிதி கணக்குகளில் இருந்த தரவுகள் புதிய தளத்தில் விடுபட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இணையதளத்தில் உள்ளே நுழைவதில் சிக்கல், வருங்கால் வைப்பு நிதி இணையதளம் மெதுவாக இயங்குகிறது. கோரிக்கைகளை பரிசீலிப்பதில் தாமதம் போன்ற புகார்களும் எழுந்துள்ளன.</p><h2><strong>குற்றச்சாட்டு</strong></h2><p>வழக்கமாக விண்ணப்பித்த 3 நாட்களில் (குறைந்தபட்சம்) <a href="https://www.maalaimalar.com/news/national/labour-ministry-makes-epf-contributions-beyond-rs-1800-voluntary">சந்தாதாரர்களுக்கு</a> பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இது அவர்களுடைய அவசர தேவையை பூர்த்தி செய்ய உதவிக்கரமாக இருந்தது. ஆனால் சமீப நாட்களில் விண்ணப்பித்து 1% மாதம் ஆகியும் சந்தாதாரர்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இந்தநிலையில், தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்யும் பணியில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.</p><p>அனைத்து முக்கிய தொழில்நுட்ப கோளாறுகளும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே தற்போதைய நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்திற்குள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.</p><h2><strong>நோக்கம்</strong></h2><p>வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி 'பீம்' செயலி மூலம் இணைக்கப்பட உள்ளது. இதன்மூலம் வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை, வங்கி கணக்குகளுடன் இணைத்து, தகுதியான கோரிக்கைகளுக்கான பணத்தை உடனடியாக பெறமுடியும். பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தேசிய பண பரிவர்த்தனை கழகத்துடன் இணைந்து இதற்கான ஏ.பி.ஐ. கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் சேவைகளை நவீனப்படுத்தி, சந்தாதாரர்களின் கோரிக்கைகளை விரைவாக தீர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>6 மாதத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்.. மேற்கு கரையில்  இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறை அதிகரிப்பு - ஐநா</title><link>https://www.maalaimalar.com/news/world/over-1000-attacks-in-6-months-surge-in-violence-by-israeli-settlers-in-the-west-bank-un</link><comments>https://www.maalaimalar.com/news/world/over-1000-attacks-in-6-months-surge-in-violence-by-israeli-settlers-in-the-west-bank-un#comments</comments><guid isPermaLink="false">0e56ca17-a819-41e9-a099-8fe08cae9691</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:51:03 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:51:03.589Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>palestine,காசா,இஸ்ரேல்,gaza,Israel,மேற்கு கரை,West Bank,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/udpdsoaz/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  மேற்கு கரை]]></media:title><media:description type="html"><![CDATA[  மேற்கு கரை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/udpdsoaz/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேற்கு கரை</h2><p>பாலஸ்தீனத்தின் <a href="https://www.maalaimalar.com/news/world/west-bank-violence-israeli-settlers-torch-mosques-kill-palestinians">மேற்கு கரையில் </a>கடந்த ஜூலை 24ஆம் தேதி நப்லஸ் நகருக்கு அருகே பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடத்தினர்.</p><p>கிராம மக்கள் எதிர்த்துப் போராடியபோது குடியேற்றவாசிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாலஸ்தீனர்கள் திருப்பித் தாக்கிய நிலையில், இஸ்ரேலிய ராணுவம் நுழைந்து நடத்திய தாக்குதலில் 4 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர். மோதலில் 2 இஸ்ரேல் வீரர்களும் கொல்லப்பட்டனர். </p><p>இந்த சம்பவத்திற்கு பழிவாங்க, நேற்றுமுன் தினம் அதிகாலைஇஸ்ரேலியர்கள் ஆயுதங்களுடன் பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்தனர்.</p><p>அங்கு வெறித்தனமாக தாக்குதல் நடத்திய அவர்கள், குஸ்ரா மற்றும் கூர் ஆகிய கிராமங்களில் உள்ள 2 மசூதிகளுக்கு தீ வைத்தனர். அங்கிருந்த பாலஸ்தீனியர்களின் கார்கள் மற்றும் விவசாய நிலங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.</p><p>சுவர்களில் ஹீப்ரு மொழியில் "பழிவாங்குதல்" என்று எழுதி வைத்துவிட்டு தப்பியோடினர்.</p> <h2>ஐநா</h2><p>இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலிய குடியேறிகள் நடத்தும் வன்முறை தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.</p><p>முந்தைய ஆண்டுகளை விட நடப்பாண்டில் வன்முறை தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதற்கான தரவுகளை ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) வெளியிட்டுள்ளது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uoxq5rfe/tn-4.jpg" /></figure><h2>தரவுகள்</h2><p>2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், இஸ்ரேலிய குடியேறிகள் 1,000க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனால் உயிரிழப்புகளும், உடைமைகளுக்குக் கடுமையான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p>இந்த வன்முறைகளால் மேற்குக் கரை முழுவதும் உள்ள 230க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சமூகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>குடியேறிகளின் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக நடப்பாண்டில் மட்டும் 2,200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயரும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.</p> <h2>இஸ்ரேல் அரசு</h2><p>கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் 4 பாலஸ்தீனர்களும், 2 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நேதன்யாகு, மேற்கு கரை முழுவதும் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.</p><p>மேற்குக் கரைப் பகுதிகளில் கூடுதல் இஸ்ரேலியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுப் பல பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>பாலஸ்தீனர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் பல புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>2023இல் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை மேற்கு கரையில் 1,182 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 13,000 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>24,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கைது செய்து சிறையிலடைத்துள்ளது என பாலஸ்தீன அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்</title><link>https://www.maalaimalar.com/news/national/mother-killed-daughter-for-refusing-to-give-up-her-love</link><comments>https://www.maalaimalar.com/news/national/mother-killed-daughter-for-refusing-to-give-up-her-love#comments</comments><guid isPermaLink="false">aa5f9dd9-33e2-40e5-8dd2-107bf048d6ca</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:46:20 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:46:20.973Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மகாராஷ்டிரா,Maharastra,தாய் கைது,காதல் விவகாரம்,Mother arrested,மகள் கொலை,Daughter Murder,Love issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fblrc1i2/death.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fblrc1i2/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உல்லாஸ்நகரில் காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.</p><h2>காதலுக்கு எதிர்ப்பு</h2><p>மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பையாசாகேப் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தத்தா காவத். இவருடைய மனைவி ஆஷா (வயது40). இவர்களது மகள் அம்ருதா (19). அம்ருதா அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்த காதலுக்கு அவரது தாய் ஆஷா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். </p> <h2>தாய் - மகள் வாக்குவாதம்</h2><p>இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்த அம்ருதாவிடம், அவரது தாய் ஆஷா காதலை மீண்டும் கண்டித்துள்ளார். அந்த வாலிபருடனான தொடர்பை உடனடியாக துண்டித்து கொள்ளுமாறு மகளை வற்புறுத்தினார். ஆனால், அம்ருதா தனது காதலை கைவிட மறுத்து தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><h2>மகள் உயிரிழப்பு</h2><p>இதனால் ஆத்திரமடைந்த ஆஷா, மகளின் கழுத்தில் கிடந்த துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி அம்ருதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p> <h2>தந்தை புகார்</h2><p>இதுகுறித்து அம்ருதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், உல்லாஸ்நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தாய் ஆஷாவை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>மகள் என்றும் பாராமல் பெற்ற தாயே அவளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய மாணவர்களின் வீரமிக்க போராட்டம் உலகம் முழுமைக்கும் நம்பிக்கை அளித்துள்ளது - கிரேட்டா துன்பெர்க் </title><link>https://www.maalaimalar.com/news/world/greta-thunberg-hails-indian-students-protest-victory-over-neet-exam-scam</link><comments>https://www.maalaimalar.com/news/world/greta-thunberg-hails-indian-students-protest-victory-over-neet-exam-scam#comments</comments><guid isPermaLink="false">876ff886-0f53-4ea0-9bc1-b7c277a74479</guid><pubDate>Tue, 28 Jul 2026 02:30:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T02:30:01.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Greta Thunberg,CJP Protest,சிஜேபி போராட்டம்,கிரேட்டா துன்பெர்க்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a5i6rlfw/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிரேட்டா துன்பெர்க் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கிரேட்டா துன்பெர்க் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a5i6rlfw/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் பெற்ற வெற்றிக்கு பிரபல இளம்  சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><h2>போராட்டம் வெற்றி </h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/karappanpoochi-protest-victory-youth-led-cjp-movement-forces-education-minister-to-resign-over-neet-scandal">சிஜேபி </a>தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் போராட்டம் நடந்து வந்த நிலையில் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை கடந்த வாரம் நிறைவேறியது. </p><p>மேலும் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து மௌனம் களைத்த பிரதமர் மோடி, தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா, விரைவு நீதிமன்றங்கள், உயர்மட்ட குழு அமைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டார். தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. </p> <h2>லண்டன்</h2><p>போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இங்கிலாந்தின் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிரெட்டா துன்பெர்க் பங்கேற்றார்.</p><p>இடதுசாரி மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ யுகே அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் உயிரிழந்த 21 மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்திய எஸ்எப்ஐ, போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய வன்முறையைக் கடுமையாகக் கண்டித்தது.</p> <h2>துன்பெர்க்</h2><p>ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய கிரெட்டா துன்பெர்க்,</p><p>"இந்திய மாணவர்களின் இந்த வீரமிக்க போராட்டம் உலகம் முழுவதிலும் உள்ள செயல்பாட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் பெருமையையும் அளித்துள்ளது.</p><p>மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு நின்றால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தப் போராட்டம் நிரூபித்துள்ளது.</p><p>ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்காக இந்திய மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம் உலகளாவிய தேவையாக இருந்தது." என தெரிவித்தார்.</p><p>எஸ்எப்ஐ அகில இந்தியத் தலைவர் வி.பி. சானு உட்படப் பல தலைவர்கள், கிரெட்டா துன்பெர்க் பங்கேற்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/crude-oil-impact-hormuz-tensions-push-brent-to-8754-chennai-petrol-and-diesel-rates-updated</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/crude-oil-impact-hormuz-tensions-push-brent-to-8754-chennai-petrol-and-diesel-rates-updated#comments</comments><guid isPermaLink="false">c31ba4a1-239b-4892-9268-5250214f9b65</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:42:56 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:42:56.608Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zqvhuwkk/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zqvhuwkk/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><p>அண்மை நாட்களாக பரஸ்பர தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோதோலும் ஹார்முஸ் பதற்றம் தொடர்ந்து வருகிறது.</p> <h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p> <h2>பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</h2><p>அந்த வகையில் இன்று (28.07.2026 - செவ்வாய்க்கிழமை)க்கான பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல்ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேவேளை, இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 87.54 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p><p>ஈரான் விஷயத்தில் நல்லது நடக்க வாய்ப்பு உள்ளது என அமெரிக்க <a href="https://www.maalaimalar.com/news/world/trump-says-good-chance-of-progress-in-iran-talks-as-both-hold-fire">அதிபர் டிரம்ப் </a>நேற்று பேசியது நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.</p><p>மத்திய அரசு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 28.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-28-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-28-july-2026#comments</comments><guid isPermaLink="false">94cbfc18-4b33-4899-9d38-21c771299a93</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:42:03 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:42:03.197Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/10/27281868-rasipalan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/10/27281868-rasipalan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சனைகள் ஏற்படும் நாள். வீண் வம்பு வீடு தேடி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்காது.</p> <h2>மிதுனம்</h2><p>துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர்.</p><h2>கடகம்</h2><p>நன்மைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.</p> <h2>சிம்மம்</h2><p>பற்றாக்குறை அகலும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள்.</p><h2>கன்னி</h2><p>வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.</p> <h2>துலாம்</h2><p>வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். தொழில் ரீதியாகச் செய்த முயற்சி வெற்றி பெறும்.</p><h2>விருச்சிகம்</h2><p>யோகமான நாள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழில் முயற்சியில் வெற்றி கிட்டும்.</p> <h2>தனுசு</h2><p>செய்தொழிலில் சீரான லாபம் கிடைக்கும் நாள். திருமண முயற்சி கைகூடும். திட்டமிட்ட பயணம் வெற்றிகரமாக அமையும். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.</p><h2>மகரம்</h2><p>எதிரிகள் விலகும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.</p> <h2>கும்பம்</h2><p>விரக்தி நிலை மாறி விடிவு காலம் பிறக்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய பங்குதாரர்களால் பொருளாதாரநிலை உயரும்.</p><h2>மீனம்</h2><p>விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 28 ஜூலை 2026: முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-28-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-28-july-2026#comments</comments><guid isPermaLink="false">c5771f3f-151b-45c1-b346-b69709c6a792</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/10/26211445-muruga5.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/10/26211445-muruga5.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-12 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   சதுர்த்தசி இரவு 7.32 வரை பிறகு பவுர்ணமி </p><p>நட்சத்திரம் : பூராடம் பிற்பகல் 3 வரை பிறகு உத்திராடம்</p><p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை</h2><p>சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் விருஷப சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், முருகர் கோவில்களில் அபிஷேகம், கந்தகோட்டம், வல்லக்கோட்டை அலங்காரம். </p> <p>திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி புறப்பாடு. குரங்கனி ஸ்ரீ முத்துமாலையப்பன் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் ஆறுகைமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் ஸ்ரீ விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உயர்வு</p><p>ரிஷபம் - போட்டி</p><p>மிதுனம் - புகழ்</p><p>கடகம் - நட்பு</p><p>சிம்மம் - அனுகூலம்</p><p>கன்னி - சிறப்பு</p> <p>துலாம் - திடம்</p><p>விருச்சிகம் - கடமை</p><p>தனுசு - மகிழ்ச்சி</p><p>மகரம் - லாபம்</p><p>கும்பம் - அமைதி</p><p>மீனம் - பயணம்</p> ]]></content:encoded></item><item><title>POK: தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் வன்முறை - பலர் காயம்  </title><link>https://www.maalaimalar.com/news/world/pok-election-boycott-empty-polling-stations-protests-and-violence-rock-pok</link><comments>https://www.maalaimalar.com/news/world/pok-election-boycott-empty-polling-stations-protests-and-violence-rock-pok#comments</comments><guid isPermaLink="false">23a8a950-1ad1-4224-81cb-c081139b0150</guid><pubDate>Tue, 28 Jul 2026 01:16:10 +0000</pubDate><atom:updated>2026-07-28T01:16:10.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,PoK,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்,Violence,வன்முறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7qbr8von/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ POK]]></media:title><media:description type="html"><![CDATA[ POK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7qbr8von/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas">பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்</a> (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.</p><h2>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்</h2><p>ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத நிலம் பாகிஸ்தான் வசம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தனி ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது.</p><p>இங்கு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை, உரிமைகள் மறுப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.</p><h2>தேர்தல் </h2><p>பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. பல பகுதிகளில் பொதுமக்கள் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளனர்.   </p><p>வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களோ அல்லது பாதுகாப்புப் பணியாளர்களோ இல்லாத வெறிச்சோடிய காட்சிகளே காணப்படுகின்றன.</p><p>மிகக் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>பாக்கிஸ்தான் அரசு இதுவரை வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடவில்லை.</p> <h2>முசாபராபாத் பேரணி</h2><p>இதற்கிடையில், பாக்கிஸ்தான் அரசின் கொள்கைகளுக்கும் தேர்தல் நடைமுறைக்கும் எதிராக ஆயிரக்கணக்கான மக்கள், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகர் முசாபராபாத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>வன்முறை</p><p>ராவ்லாகோட் பகுதியில் பேரணியாக சென்ற போராட்டக்காரர்களுக்கும் பாக்கிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயமடைந்தனர்.</p><p>ராவ்லாகோட்டின் ஈத்கா மைதானத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பாக்கிஸ்தான் அரசுக்கு எதிராகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>  <h2>பின்னணி</h2><p>தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் கோரி இந்தப் போராட்டங்களை ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்சன் கமிட்டி (JAAC) என்ற அமைப்பு முன்னெடுத்து வருகிறது.</p><p>அரசு ஜூன் 5 அன்று இந்த அமைப்பிற்கு தடை விதித்ததுடன், அதன் முக்கியத் தலைவர்களையும் கைது செய்தது.</p><h2>பாதிப்பு</h2><p>இதுவரை பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>பல பகுதிகளில் மொபைல் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் தொடர்ந்து இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளன.</p><p>இந்திய எல்லைக்கு அருகிலுள்ள பூஞ்ச் பகுதி முழுமையாக மூடி சீல் வைக்கப்பட்டதால், உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p> <h2>தேர்தல்</h2><p>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்தமுள்ள 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் முதலில் ஜூலை 27 அன்று ஒரே கட்டமாக நடக்கவிருந்தது.</p><p>ஆனால், நிலவும் பதற்றமான சூழல் காரணமாக 3 கட்டங்களாக மாற்றப்பட்டது. அதன்படி நேற்று (ஜூலை 27) மீர்பூர் பகுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது.</p><p>ஆகஸ்ட் 2 அன்று இரண்டாம் கட்டமாக முசாபராபாத் பகுதி மற்றும் அகதிகளுக்கான 12 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். கடும் பதற்றம் நிலவும் பூஞ்ச் பகுதியில் கடைசி கட்டமாக ஆகஸ்ட் 10 அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.</p> <h2>அரசியல் களம்</h2><p>PoK சட்டசபையில் உள்ள 45 தொகுதிகளில், 12 தொகுதிகள் இந்தியப் நிர்வாகத்திலுள்ள ஜம்மு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானிற்கு இடம்பெயர்ந்த அகதிகளுக்காக ஒதுக்கப்பட்டவை ஆகும். அங்குள்ள மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதில் தொடர்ந்து அரசியல் சர்ச்சை நீடித்து வருகிறது.</p><p>தற்போது போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்சன் கமிட்டி (JAAC)யின் பிரதான கோரிக்கை, இந்த 12 தொகுதிகளில் உள்ள அகதிகளுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்பதே. ஆனால் அரசு அதை ஏற்க தொடர்ந்து மறுத்து வருகிறது.</p> <h2>அரசு</h2><p>2021இல் இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சி 25 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.</p><p>ஆனால், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் காரணமாகத் தற்போது PPP கட்சியின் பைசல் மும்தாஜ் ரத்தோர் பிரதமராகப் பொறுப்பில் உள்ளார்.</p><p>நவாஸ் ஷெரீப்பின் PML-N மற்றும் பிலாவல் பூட்டோவின் PPP ஆகிய இரு கட்சிகளும் நடப்பு தேர்தலில் வெற்றி பெற தீவிரம் காட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.</p><p>நேற்றைய கலவரத்தின்போது பாகிஸ்தான் PML-N ஆதரவாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்களது தொண்டர் முக்தார் யூனுஸ் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரண்டு தொண்டர்கள் காயமடைந்ததாகவும் PPP கூறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் விஷயத்தில் நல்லது நடக்க வாய்ப்பு: டிரம்ப் நம்பிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-says-good-chance-of-progress-in-iran-talks-as-both-hold-fire</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-says-good-chance-of-progress-in-iran-talks-as-both-hold-fire#comments</comments><guid isPermaLink="false">9f9a9f5f-2797-42d2-8afc-5feb5379a679</guid><pubDate>Tue, 28 Jul 2026 00:28:54 +0000</pubDate><atom:updated>2026-07-28T00:28:54.173Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஈரான்,Iran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/emhqfugn/trump-7.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/emhqfugn/trump-7.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தில் இருந்த நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தை மூலம் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனல்டு டிரம்ப்</a> நம்பிக்கை தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிட்டது தொடர்பாக ஏற்பட்ட ராஜதந்திர முறிவு காரணமாக, இஸ்லாமிய குடியரசு மீது 13 இரவுகளாக அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, நீண்டகால பகைவர்களுக்கிடையேயான சண்டை கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.</p><h2>டிரம்ப் நம்பிக்கை:</h2><p>ஆனால், பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க-இஸ்ரேலிய தொடர் தாக்குதல்களுடன் தொடங்கி, பிராந்தியத்தையும் உலக பொருளாதாரத்தையும் உலுக்கிய இந்த போரை, புதுப்பிக்கப்பட்ட ராஜதந்திர முயற்சிகள் முடிவுக்கு கொண்டுவரக்கூடும் என்று அமெரிக்க தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p><p>"ஏதாவது நடப்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். எனக்கு மிகுந்த பொறுமை இருக்கிறது... என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று அவர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் கூறினார்.</p><h2>ஈரான் மறுப்பு:</h2><p>மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் எந்த நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெஹ்ரான் முன்னதாக மறுத்திருந்தது.</p><p>"பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய நிகழ்வுகள் குறித்து அமெரிக்க தரப்பில் இருந்து மத்தியஸ்தர்கள் எங்களுக்கு தகவல்களை தெரிவிக்கலாம். ஆனால், தற்சமயம் நாங்கள் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை," என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறினார்.</p><p>ராஜதந்திரத்திற்கு ஒரு வாய்ப்பு அளிப்பதற்காக, மத்தியஸ்த நாடுகள் தன்னை நிலைமையை சற்று நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டதாக டிரம்ப், அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸிடம் கூறினார். மேலும், "நாங்கள் ஈரானுடன் மிக ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>மீண்டும் செய்வோம்:</h2><p>ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த அவர், புதிய முயற்சிகள் தோல்வியுற்றால், சண்டை இடைநிறுத்தப்படுவதற்கு முன்பு "நாம் என்ன செய்து கொண்டிருந்தோமோ அதையே மீண்டும் செய்வோம்" என்று கூறினார்.</p><p>அந்த விஷயம் தொடர்பாக, போர் தொடங்கி கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு அமெரிக்காவின் வெடிமருந்து கையிருப்பு குறைந்து வருகிறது என்ற கவலைகளை அவர் நிராகரித்தார்.</p><p>"எங்களிடம் ஏராளமான வெடிமருந்துகள் உள்ளன. நடுத்தர ரக ஆயுதங்களும் எங்களிடம் ஏராளமாக உள்ளன; என்ன நடந்தாலும் எங்களால் பயன்படுத்தக்கூடியதை விட அதிகமாகவே அவை இருக்கின்றன," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதல் பிரவில் வெள்ளி வென்றார் அஜய பாபு</title><link>https://www.maalaimalar.com/sports/ajaya-babu-wins-silver-medal-in-mens-79kg-weightlifting</link><comments>https://www.maalaimalar.com/sports/ajaya-babu-wins-silver-medal-in-mens-79kg-weightlifting#comments</comments><guid isPermaLink="false">428b56df-a3f2-4304-aedc-da2b50b4eaff</guid><pubDate>Mon, 27 Jul 2026 23:48:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T23:48:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Ajaya Babu,அஜய பாாபு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/yg6gkrpl/Ajaya-Babu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அஜய பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/yg6gkrpl/Ajaya-Babu.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில், வேகமாக முன்னேறி வரும் இந்திய பளுதூக்குதல் வீரரான வல்லூரி அஜய பாபு, ஆண்களுக்கான 79 கிலோ பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்றார்; இதன் மூலம் இப்போட்டியில் இந்தியாவின் வெற்றிகரமான பயணத்தை அவர் தொடர்ந்தார்.</p><p> ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான இவர், 'ஸ்னாட்ச்' (snatch) பிரிவில் 149 கிலோவையும் (இது ஒரு போட்டி சாதனையாகும்), 'கிளீன் அண்ட் ஜெர்க்' (clean and jerk) பிரிவில் 181 கிலோவையும் தூக்கி, மொத்தம் 330 கிலோ எடையுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார். </p><h2>விறுவிறுப்பான போட்டி:</h2><p>நேற்று (திங்கள்கிழமை) இரவு நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், மலேசியாவின் எரி ஹிதாயத் முகமது மொத்தம் 331 கிலோ (147 + 184 - இதுவும் ஒரு போட்டி சாதனையாகும்) எடையை தூக்கி தங்க பதக்கத்தை வென்ற நிலையில், அஜய பாபு மிகக் குறைந்த வித்தியாசத்தில் தங்கத்தை நழுவவிட்டார்.</p><p>நடப்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதலில் இந்தியா வென்ற ஆறாவது பதக்கம் இதுவாகும்.</p><p>இங்கிலாந்தின் கிறிஸ் முர்ரே மொத்தம் 325 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.</p><p>முதலில், ஹிதாயத் 181 கிலோ எடையைத் தூக்கி போட்டி சாதனையை முறியடித்தார்; ஆனால் சில நொடிகளிலேயே இந்திய வீரரான அஜய பாபு தனது கடைசி முயற்சியில் அதே 181 கிலோ எடையைத் தூக்கி, மொத்த எடையில் 330 கிலோ என்ற புதிய சாதனையை படைத்து முந்தினார்.</p><p>எனினும், ஹிதாயத் தனது கடைசி முயற்சியில் 184 கிலோ எடையை தூக்கி மீண்டும் சாதனையை முறியடித்து தங்க பதக்கத்தை வென்றார்.</p><h2>கடைசி முயற்சி:</h2><p>முன்னதாக, 'ஸ்னாட்ச்' பிரிவில் 149 கிலோ எடையைத் தூக்கும் இரண்டாவது முயற்சியில் தோல்வியடைந்த அஜய பாபு, தனது கடைசி முயற்சியில் அந்த எடையைத் தூக்கி சிறப்பான ரீ-என்ட்ரியை வெளிப்படுத்தினார். இதன் மூலம் புதிய போட்டி சாதனையை படைத்த அவர், இங்கிலாந்தின் கிறிஸ் முர்ரே (148 கிலோ) மற்றும் மலேசியாவின் எரி ஹிதாயத் முகமது (147 கிலோ) ஆகியோரை முந்தி அப்பிரிவில் முதலிடம் பிடித்தார்.</p><p>தனது முதல் முயற்சியாக 145 கிலோ எடையைத் தேர்ந்தெடுத்த அவர், அதை மிக எளிதாக வெற்றிகரமாக தூக்கினார்.</p><p>மிகுந்த நம்பிக்கையுடன் 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் நுழைந்த அஜய பாபு தங்க பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலேசிய வீரர் இறுதியில் அவரை முந்தி சென்றார்.</p><p>இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பளுதூக்கும் வீரர்களில் ஒருவராக கருதப்படும் அஜய் பாபு, அகமதாபாத்தில் நடைபெற்ற 2025 காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் 79 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 335 கிலோ (ஸ்னாட்ச் பிரிவில் 152 கிலோ + கிளீன் &amp; ஜெர்க் பிரிவில் 183 கிலோ) எடையை தூக்கி தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை பதிவு செய்ததோடு, சாம்பியன்ஷிப் சாதனைகளையும் முறியடித்து தங்கப்பதக்கம் வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: பாரா தடகள பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் ஷர்மிளா தன்கர்</title><link>https://www.maalaimalar.com/sports/sharmila-dhankar-clinches-indias-para-athletics-gold-in-cwg</link><comments>https://www.maalaimalar.com/sports/sharmila-dhankar-clinches-indias-para-athletics-gold-in-cwg#comments</comments><guid isPermaLink="false">16b21a1a-bcba-41c3-98d9-21dab86e54e7</guid><pubDate>Mon, 27 Jul 2026 23:11:39 +0000</pubDate><atom:updated>2026-07-27T23:11:39.803Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Sharmila Dhankar,ஷர்மிளா தன்கர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/yrqwl47p/Sharmila-Dhankar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஷர்மிளா தன்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/yrqwl47p/Sharmila-Dhankar.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில் பாரா தடகள பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை வென்று ஷர்மிளா தன்கர் வரலாறு படைத்தார்; அவர் இங்கு நடைபெற்ற பெண்களுக்கான 'ஷாட் புட்' (குண்டு எறிதல்) F57 பிரிவில் முதலிடத்தை பிடித்தார். </p><p>40 வயதான இவர், 9.81 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து இந்த சீசனிலேயே தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினார்; இதன் மூலம் காமன்வெல்த் போட்டிகளில் பாரா தடகள பிரிவில் பதக்கம் வெல்ல இந்தியாவின்  20 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.</p><h2>அதிகாரப்பூர்வ மறுஆய்வு:</h2><p>சர்ச்சைக்குரிய சூழலில் இந்தியா தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, மற்றொரு இந்திய வீராங்கனையான ஷில்பா ஷைலாவுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. ஷைலா 7.26 மீட்டர் தூரம் எறிந்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை பதிவு செய்திருந்தார்.</p><p>தொடக்கத்தில் நைஜீரியாவின் யூச்சாரியா ஐயாசி வெண்கல பதக்கம் வென்றிருந்தார்; ஆனால், இந்திய தரப்பு புகாரளித்து அதிகாரப்பூர்வ மறுஆய்வு செய்யப்பட்ட பிறகு, அவரது ஒரே செல்லுபடியாகும் முயற்சி 'ஃபவுல்' (விதிமீறல்) என அறிவிக்கப்பட்டது. </p><p>இதனால், நான்காவது இடத்தில் இருந்த ஷைலாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இருப்பினும், நைஜீரியா தரப்பில் இருந்தும் இதற்கு எதிராகப் புகார் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><h2>இரண்டு பதக்கங்கள்:</h2><p>வெண்கல பதக்கம் கிடைத்த அந்த திருப்பமான தருணத்திற்கு பிறகு, கண்ணீர் மல்க ஷைலா, ஷர்மிளாவுடன் இணைந்து கொண்டாடினார்; இதன் மூலம் இப்பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன.</p><p>F57 வகைப்பாடு என்பது கீழ் உடல் உறுப்பு குறைபாடுகள், உறுப்பு இழப்புகள் அல்லது தசை வலிமை குறைவு உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பிரிவாகும்.</p><p>இரண்டு வயதில் இடது காலில் போலியோ பாதிப்புக்குள்ளான ஷர்மிளா, இந்த ஆண்டு நடைபெற்ற 'ஃபாஸ்ஸா' (Fazza) சர்வதேச பாரா தடகள சாம்பியன்ஷி போட்டியில் தங்க பதக்கம் வென்றார். அவர் 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்று நான்காவது இடத்தை பிடித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: ஆடவர் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியரானார் சர்வேஷ் குஷாரே</title><link>https://www.maalaimalar.com/sports/kushare-becomes-first-indian-to-win-silver-in-mens-high-jump-in-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/sports/kushare-becomes-first-indian-to-win-silver-in-mens-high-jump-in-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">99f6e2bc-9296-4791-8648-8f003bb06f36</guid><pubDate>Mon, 27 Jul 2026 22:44:41 +0000</pubDate><atom:updated>2026-07-27T22:44:41.322Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சர்வேஷ் குஷாரே,காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Sarvesh Kushare</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/nwjx2nfq/SARVESH-KUSHARE.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சர்வேஷ் குஷாரே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/nwjx2nfq/SARVESH-KUSHARE.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய சாதனையாளரான சர்வேஷ் குஷாரே, <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளின் ஆடவர் உயரத் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.</p><p>31 வயது இந்தியரான இவர் 2.25 மீட்டர் உயரத்தை தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார்; ஜமைக்காவின் ரோமைன் பெக்ஃபோர்ட் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். 2.25 மீட்டர் உயரத்தைத் தாண்டிய பிறகு, குஷாரே மற்றும் பெக்ஃபோர்ட் ஆகிய இருவராலும் 2.28 மீட்டர் உயரத்தைத் தாண்ட முடியவில்லை. </p><h2>வெற்றியாளர்கள்:</h2><p>ஆனால், 'கவுண்ட்பேக்' (countback) விதிமுறைப்படி ஜமைக்கா வீரர் தங்க பதக்கம் வென்றவராக அறிவிக்கப்பட்டார்; குஷாரே வெள்ளி பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டியிருந்தது. இங்கிலாந்தின் ஜாக் கிமானி (2.20 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.</p><p>இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான ஆதர்ஷ் ராம், 2.15 மீட்டர் உயரத்தை கடந்து ஐந்தாவது இடத்தை பிடித்தார்.</p><p>திங்கள்கிழமைக்கு முன்பு வரை, தேஜஸ்வின் சங்கர் மட்டுமே உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற (2022 பர்மிங்காம் போட்டிகளில் வெண்கலம்) ஒரே இந்தியராக இருந்தார். ஆனால் குஷாரே தனது வெள்ளி பதக்கத்தின் மூலம் அந்த சாதனையை முறியடித்தார்.</p><h2>தேஜஸ்வின் விலகல்:</h2><p>தேஜஸ்வினும் திங்கள்கிழமை போட்டியிட்டார்; ஆனால் தனது முதல் முயற்சியில் 2.05 மீட்டர் உயரத்தை தாண்டத் தவறிய பிறகு போட்டியில் இருந்து விலகினார். வியாழக்கிழமை தொடங்கவுள்ள ஆடவர் டெகாத்லான் (பத்து வகையான தடகளப் போட்டிகள் கொண்ட தொடர்) போட்டியில் பங்கேற்க இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் இந்த முடிவை எடுத்தார்.</p><p>2.29 மீட்டர் என்ற தனது சிறந்த தனிப்பட்ட சாதனையை (personal best) கொண்டுள்ள 27 வயதான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக டெகாத்லான் போட்டியில் கவனம் செலுத்தி வருவதால், தனிப்பட்ட உயரம் தாண்டுதல் போட்டிகளில் அதிகம் பங்கேற்கவில்லை.</p><h2>விவசாயி மகன்:</h2><p>மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள தேவர்காவ் கிராமத்தைச் சேர்ந்த வெங்காய விவசாயியின் மகனான குஷாரே, தனது தந்தை மற்றும் சிறுவயது பயிற்சியாளர் அமைத்துக்கொடுத்த சோளத் தாள்கள், பருத்தி மற்றும் விவசாயக் கழிவுகளைக் கொண்ட தற்காலிகத் தரையிறங்கும் குழிகளை பயன்படுத்தி உயரம் தாண்டுதலுக்கு பயிற்சி செய்து வந்தார்.</p><p>இந்த மாத தொடக்கத்தில், மொனாக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் அறிமுகமான குஷாரே, மூன்றாம் இடத்தை பிடித்து பதக்க மேடை ஏறிய முதல் இந்திய உயரம் தாண்டுதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்; இதன் மூலம் சாதனை படைத்த நான்கு இந்தியர்கள் கொண்ட பிரத்யேக குழுவிலும் இணைந்தார்.</p>]]></content:encoded></item><item><title>இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-soundararaja-awards-to-organic-farmers</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-soundararaja-awards-to-organic-farmers#comments</comments><guid isPermaLink="false">3da9ce8b-b426-4909-a246-11a2037f1980</guid><pubDate>Mon, 27 Jul 2026 22:07:16 +0000</pubDate><atom:updated>2026-07-27T22:07:16.830Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>soundararaja,சௌந்தரராஜா</media:keywords><media:content height="853" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r74dkixh/2c0d4ff1-8c85-40b0-ad32-a1a287ee0add.jpg" width="1280"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Soundararaja giving cheque]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r74dkixh/2c0d4ff1-8c85-40b0-ad32-a1a287ee0add.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகரும் சமூக ஆர்வலருமான <a href="https://www.maalaimalar.com/topic/soundararaja">சௌந்தரராஜா</a>, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். </p><p>அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">நம்மாழ்வார்</a> விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.</p><h2>ரொக்கப் பரிசு:</h2><p>இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் விருதும் ரொக்கப் பரிசும் வழங்கி, அவர்களுக்கான எனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளேன். இதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாக கருதுகிறேன்.</p><p>கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 விவசாயிகளுக்கு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கினோம். அப்போது கிடைத்த வரவேற்பும், விவசாயிகளின் மகிழ்ச்சியும் இந்த ஆண்டும் இந்நிகழ்வை நடத்துவதற்கு ஊக்கமாக அமைந்தது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.</p><p>இன்றைய இளைஞர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். உணவை உருவாக்கும் விவசாயிகளை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும். இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாய முறை மட்டுமல்ல; அது மண்ணையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையாகும்.</p><h2>மிகப்பெரிய நம்பிக்கை:</h2><p>தற்போதைய "முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் அடுத்த ஜென்மம் என்று இருந்தால் நான் விவசாய மகனாக பிறப்பேன்" என்று கூறியிருந்தார். அதனால் கண்டிப்பான முறையில் விவசாயிகளுக்கு அவர் நல்லது செய்வார் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.</p><p>விவசாயிகளைப் பாதுகாப்பதும், இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதும் நமது கடமையாகும். அதிகளவில் மரங்களை நட வேண்டும், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும், நடப்பட்ட மரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்கும் பணிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.</p><p>எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் வருங்காலங்களிலும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: 6 மாவட்டங்களில் 4.4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-over-44-lakh-people-affected-in-6-districts-toll-remains-at-68</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-over-44-lakh-people-affected-in-6-districts-toll-remains-at-68#comments</comments><guid isPermaLink="false">4746f381-0b0b-4f24-8d66-1a6778a01cd9</guid><pubDate>Mon, 27 Jul 2026 19:49:27 +0000</pubDate><atom:updated>2026-07-27T19:49:27.666Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death toll,Assam Flood,அசாம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vn7eovdp/Assam-Floods.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/vn7eovdp/Assam-Floods.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் வெள்ள சூழல் சற்று சீரடைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், ஆறு மாவட்டங்களில் 4.45 லட்சம் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. </p><p>அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) தகவலின்படி, சிவசாகர், கோலாகாட், சாரைடியோ, ஜோர்ஹாட், நாகான் மற்றும் காம்ரூப் (பெருநகரம்) ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 4,45,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை வரை மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் 5.24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.</p><h2>வெள்ள பாதிப்பு:</h2><p>கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை; இதனால் இந்த ஆண்டு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆகவே நீடிக்கிறது என்று ASDMA அறிக்கை கூறியது. சாரைடியோ மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது; அங்கு 1,88,404 பேர் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து சிவசாகர் (1,44,461) மற்றும் ஜோர்ஹாட் (74,458) மாவட்டங்கள் உள்ளன.</p><p>மொத்தம் 90 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன; அவற்றில் இடம்பெயர்ந்த 28,695 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 94 நிவாரணப் பொருட்கள் விநியோக மையங்களும் செயல்படுகின்றன.</p><h2>நிவாரண பணிகள்:</h2><p>கோலாகாட் மாவட்டத்தின் நுமாலிகர் பகுதியில் தன்சிரி (தெற்கு) ஆறு அபாயக் குறியீட்டிற்கு மேல் பாய்ந்து வருவதாக ASDMA தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 67 படகுகள் பயன்படுத்தப்பட்டு, NDRF, SDRF மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>37,139.52 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன; அதேவேளையில் 26,679 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வீடுகள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அது மேலும் கூறியது.</p>]]></content:encoded></item><item><title> தடை செய்யப்பட்ட குர்திஷ் குழுவை சேர்ந்த 4 பேரை கொன்றுகுவித்த ஈரான்</title><link>https://www.maalaimalar.com/news/world/iranian-forces-kill-4-members-of-banned-kurdish-group</link><comments>https://www.maalaimalar.com/news/world/iranian-forces-kill-4-members-of-banned-kurdish-group#comments</comments><guid isPermaLink="false">2d07e344-b0eb-40e4-b229-39843e413d0f</guid><pubDate>Mon, 27 Jul 2026 18:52:01 +0000</pubDate><atom:updated>2026-07-27T18:52:01.983Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Kurdish Group,குர்திஷ் குழு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/urviagm3/iran-flg.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran Flag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/urviagm3/iran-flg.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/iraq">ஈராக்</a> அருகிலுள்ள நாட்டின் மேற்கு பகுதியில், தடைசெய்யப்பட்ட குர்திஷ் குழுவை சேர்ந்த நான்கு பேரை ஈரானிய பாதுகாப்பு படைகள் கொன்றதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.</p><p>"துணிச்சலான எல்லை காவலர்களுக்கும் இந்த ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் இடையே நடந்த ஆயுத மோதலை தொடர்ந்து, பி.ஜே.ஏ.கே. குழுவை சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர்," என அரசு தொலைக்காட்சியில் வெளியான ஒரு அறிக்கையில் <a href="https://www.maalaimalar.com/topic/police">காவல்துறை</a> தெரிவித்துள்ளது.</p><h2>தடை செய்யப்பட்ட அமைப்பு:</h2><p>குர்திஸ்தான் சுதந்திர வாழ்வு கட்சி (PJAK) ஈரான், துருக்கி மற்றும் அமெரிக்காவால் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>குர்திஸ்தான் மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள பனே நகருக்கு அருகே, அவர்களுடைய வாகனத்தில் இருந்து பல கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கூடுகள், தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் உள்ளிட்ட கணிசமான அளவு ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கண்டெடுக்கப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.</p><h2>கைது நடவடிக்கை:</h2><p>குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) ஒரு கிளை அமைப்பான PJAK, 2004-இல் நிறுவப்பட்டதில் இருந்து ஈரானிய இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கைகளை நடத்தி வருகிறது.</p><p>பிப்ரவரி மாதம், நாசவேலைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் அக்குழுவை சேர்ந்த 11 உறுப்பினர்களை ஈரான் அதிகாரிகள் கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற பீகார் அரசு முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-to-withdraw-cases-lodged-against-protesters-over-neet-paper-leak</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-govt-to-withdraw-cases-lodged-against-protesters-over-neet-paper-leak#comments</comments><guid isPermaLink="false">92a5f44f-9a49-4f2e-a2ca-2066218e3127</guid><pubDate>Mon, 27 Jul 2026 18:06:59 +0000</pubDate><atom:updated>2026-07-27T18:06:59.978Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,neet protest,வினாத்தாள் கசிவு,NEET Paper Leak,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/a60opxu8/bihar-neet-protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Neet Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/a60opxu8/bihar-neet-protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் (NEET) <a href="https://www.maalaimalar.com/topic/paper-leaks">வினாத்தாள் கசிவு</a> விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும், சிறையில் உள்ளவர்களை விடுவிக்கவும் பீகார் அரசு முடிவு செய்துள்ளது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் <a href="https://www.maalaimalar.com/topic/bihar">பீகார் அரசு</a> முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.</p><h2>அதிகாரப்பூர்வ அறிவிப்பு:</h2><p>மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "ஜூலை 26-ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு முன்னதாக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகள் (FIR), புகார்கள் மற்றும் விளக்கம் கோரும் அறிவிப்புகள் (show-cause notices) ஆகியவை திரும்பப் பெறப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.</p><h2>சி.ஜே.பி. போராட்டம்:</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) சார்பில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டம் நாடு முழுக்க பல மாநிலங்கள் வரை மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.</p><p>அந்த வரிசையில் பீகார் மாநிலத்திலும் மாணவர்கள், மாணவர் அமைப்புகள் சார்பில் போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மாநிலம் முழுக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்கும் போட்டியில் பிந்த்யாராணி தேவி வெண்கலப் பதக்கம் வென்றார்!</title><link>https://www.maalaimalar.com/sports/weightlifter-bindyarani-devi-wins-bronze-medal-in-women-58kg-category</link><comments>https://www.maalaimalar.com/sports/weightlifter-bindyarani-devi-wins-bronze-medal-in-women-58kg-category#comments</comments><guid isPermaLink="false">c7beed00-d76c-4ea2-af36-1ea88e956c71</guid><pubDate>Mon, 27 Jul 2026 17:09:14 +0000</pubDate><atom:updated>2026-07-27T17:09:14.912Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Bindyarani Devi,பிந்த்யாராணி தேவி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r7knna3i/Bindyarani-Devi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bindyarani Devi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r7knna3i/Bindyarani-Devi.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில், இந்தியா தனது ஆறாவது பதக்கத்தை வென்றது. </p><p>இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற மகளிர் 58 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் அனுபவம் வாய்ந்த இந்திய பளுதூக்கும் வீராங்கனை பிந்த்யாராணி தேவி வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.</p><h2>மூன்றாவது இடம்:</h2><p>பிந்த்யாராணி 'ஸ்னாட்ச்' (snatch) பிரிவில் 87 கிலோவையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' (clean and jerk) பிரிவில் 112 கிலோவையும் தூக்கி, மொத்தம் 199 கிலோ எடையை உயர்த்தினார்.</p><p>ஸ்னாட்ச் பிரிவில் 83 கிலோவுடன் தனது முயற்சியை தொடங்கிய பிந்த்யாராணி, இரண்டாவது முயற்சியில் 85 கிலோவையும், மூன்றாவது முயற்சியில் 87 கிலோவையும் வெற்றிகரமாக உயர்த்தினார்.</p><p>நைஜீரியாவின் ரஃபியாத்து ஃபோலாஷாடே மொத்தம் 229 கிலோ எடையை உயர்த்தி (இது ஒரு போட்டி சாதனையாகும்) தங்க பதக்கத்தை வென்றார். கனடாவின் ஆன் சோஃபி டாஷெரோ மொத்தம் 215 கிலோ எடையை உயர்த்தி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.</p><h2>ஆறாவது பதக்கம்:</h2><p>பிந்த்யாராணி ஏற்கனவே 2022-இல் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். மேலும் கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்திருந்தார்.</p><p>நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், பளுதூக்குதலில் இந்தியா வென்ற ஐந்தாவது பதக்கமும், ஒட்டுமொத்தமாக ஆறாவது பதக்கமும் இதுவாகும்.</p>]]></content:encoded></item><item><title>Honda | QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 145 கிலோமீட்டர் பயணம் செய்யலாம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/honda-qc3-electric-scooter-145km-range-2-hour-charge</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/honda-qc3-electric-scooter-145km-range-2-hour-charge#comments</comments><guid isPermaLink="false">f4e6be4d-832a-4948-84f8-e0ea310c70aa</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:32:41 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:32:41.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Electric Scooter,Honda Scooter,Honda QC3,ஹோண்டா QC3,மின்சார ஸ்கூட்டர்,ஹோண்டா ஸ்கூட்டர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7nbpfguu/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Honda QC3 Electric Scooter]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7nbpfguu/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>ஹோண்டா ஸ்கூட்டர் QC3:</strong></h3><p>ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. </p><p>இந்த புதிய மாடல், ஆக்டிவா இ மற்றும் QC1 ஆகியவற்றுக்குப் பிறகு இந்திய சந்தையில் மூன்றாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாகியுள்ளது.</p><h3><strong>மைலேஜ்:</strong></h3><p>ஹோண்டா QC3 ஹப்-இல் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட 3 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. </p><p>ஒரு முழு சார்ஜில் அதிகபட்சமாக 145 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும் என அந்நிறுவனம் கூறுகிறது.</p><p>பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 2 மணி 40 நிமிடங்கள் ஆகும். அதே சமயம் முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் நான்கு மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் முன்பக்க ஏப்ரனில் ஹெட்லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் LED DRL-களும் உள்ளன. இது ஒரு தட்டையான ஃப்ளோர் போர்டு மற்றும் நீளமான ஒற்றை இருக்கையையும் கொண்டுள்ளது.</p><p>இந்த ஸ்கூட்டரில், ஹோண்டா ரோட்சின்க் இணைப்பு மற்றும் படிப்படியான வழிசெலுத்தலை ஆதரிக்கும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த QC3 ஸ்கூட்டர் அலாய் வீல்களில் இயங்குகிறது. மேலும் இதில் டெலஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க்குகள், இரட்டைப் பின்பக்க ஷாக் அப்சார்பர்கள் மற்றும் முன்பக்க டிஸ்க் பிரேக் ஆகியவை இடம்பெற்றுள்ளன.</p><h3><strong>விலை மற்றும் விற்பனை:</strong></h3><p>ஹோண்டா நிறுவனம் தனது சந்தை அறிமுகத்திற்கு நெருங்கிய நேரத்தில், வெளியீட்டு கால அட்டவணை மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் அறை இடம் மாற்றம் - நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-government-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-government-announcement#comments</comments><guid isPermaLink="false">ac67d8d3-82b5-4b9e-b829-ec119b8621f3</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:16:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:16:03.271Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>vijay,முதலமைச்சர் விஜய்,St George building,Namakkal Kavignar Maligai,நாமக்கல் கவிஞர் மாளிகை,புனித ஜார்ஜ் கோட்டை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/6kuaiels/New-Project-2026-07-27T214533.749.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதலமைச்சர் அறை - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/6kuaiels/New-Project-2026-07-27T214533.749.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற உள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறை 10வது மாடிக்கு மாறுகிறது என்றும், 10வது மாடியில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய பிரதான கட்டிடத்தில் நிலவும் கடுமையான இடப் பற்றாக்குறை காரணமாக இந்த மாறுதல் நடைபெறுகிறது. </p><p>ஆனால் அரசியல் வட்டாரத்தில், தற்போதைய அறை வாஸ்துபடி இல்லை என்றும், ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க உயரமான இடத்தில் அமர வேண்டும் என்ற ஜோதிடரின் ஆலோசனையும் இதற்குக் காரணம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வருவாயை பெருக்க தமிழக அரசு குழு அமைப்பு: 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/montek-singh-led-committee-to-identify-new-revenue-sources-for-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/montek-singh-led-committee-to-identify-new-revenue-sources-for-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">7964c801-77f7-432c-8b4e-30b00670d610</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:10:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:10:18.875Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திட்டக்குழு,montek singh ahluwalia,தமிழ்நாடு வருவாய்,Planning commission,tamilnadu income,மான்டேக் சிங் அலுவாலியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/oghofcx9/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Govt forms Montague Singh Ahluwalia panel to identify new income sources]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/oghofcx9/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் மாநில வருவாயை பெருக்குவதற்காக, மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>பொருளாதார நிபுணரான மான்டேக் சிங் அலுவாலியா, மத்திய திட்டக்குழுவின் முன்னாள் தலைவராக செயல்பட்டு வந்தார். </p><p>தமிழ்நாடு பட்ஜெட்டின் நிதி நிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.</p><p>இதையடுத்து தமிழ்நாடு அரசின் வருவாயை பெருக்கும் குழுவின் தலைவராக மான்டேக் சிங் நியமிக்கட்டுள்ளார். </p><p>இவர் தலைமையிலான குழுவினர்கள், மாநிலத்தில் வருவாய் ஆதாரங்களை பெருக்க, வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மான்டேக் சிங் தலைமையிலான குழு, வரி மற்றும் வரியில்லா வருவாயை அதிகரிக்க கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை அரசுக்கு வழங்க உள்ளது.</p><p>மேலும் மாநிலத்திற்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த குழு, தமிழ்நாடு அரசிடம் மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026#comments</comments><guid isPermaLink="false">8b4780d9-1157-4420-b1d3-5493e3a0aec3</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:28:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:06:26.523Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-mariya-wilson-says-a-list-of-dmks-acts-of-corruption-will-be-released-during-the-upcoming-budget-session">நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும்- அமைச்சர் மரிய வில்சன்</a></p><p>* முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போதே, ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசாக இருக்கும் என்று உறுதியளித்தார்.</p><p>* '100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக த.வெ.க. அரசின் பட்ஜெட் இருக்கும்' என்று தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/plans-for-womens-premier-league-cricket-in-tamil-nadu" rel="nofollow">தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் 'பெண்கள் பிரீமியர் லீக்' போட்டி?</a></p><p>* தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது.</p><p>* போட்டியுடன் பெண்களுக்கான இரண்டு கண்காட்சி போட்டி நடத்தப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/seattle-food-festival-shooting-two-killed-five-injured-at-space-needle-event">அமெரிக்கா: உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி - ஐவர் காயம்</a></p><p>*தப்பிக்கும் முயற்சியில், மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டபடி சென்றதால் பலர் கீழே விழுந்தது பதிவாகியுள்ளது.</p><p>*இருவர் கைது என சியாட்டில் நகர மேயர் கேட்டி வில்சன் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament">நீட் தேர்வு தடை, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க தி.மு.க நோட்டீஸ்</a></p><p>*தொடர்ச்சியான தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும்</p><p>* கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-27-07-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்திலேயே தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி: அதிரடியாக உயர்ந்த விலை!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kavin-first-death-anniversary-minister-vanni-arasu-meets-family">கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - குடும்பத்தினரை சந்தித்து  அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்</a></p><p>* காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். </p><p>* கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/abdul-kalam-memorial-day-11th-death-anniversary-collector-and-annamalai-pay-tribute">11-ம் ஆண்டு நினைவு நாள் - அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர், அண்ணாமலை மரியாதை</a></p><p>* ஏபிஜே அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது. </p><p>* பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டு வந்து  அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/hattrick-gold-for-india-brings-immense-joy-mirabai-chanu" rel="nofollow">இந்தியாவுக்காக ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி- மீராபாய் சானு</a></p><p>* நான் 48 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் போது அதில் கடினமாக இருக்கிறது. </p><p>* நான் 3 நாட்களாக தண்ணீர் கூட குடிக்கவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/what-events-will-india-participate-in-at-the-commonwealth-games-today" rel="nofollow">காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எவை?</a></p><p>* ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் முதல் சுற்று - குரிந்தர்விர் சிங். </p><p>* ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று, (பி பிரிவு)-லோகேஷ் சத்யநாதன். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault">தர்மேந்திர பிரதானுக்கு ராஜ வரவேற்பு.. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி - அவைகள் ஒத்திவைப்பு</a></p><p>*கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மக்களவை எம்.பி.யாக இன்று அவைக்கு வருகை புரிந்தார்.</p><p>*அவையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam">"மக்கள் ஜனாதிபதி" டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி!</a></p><p>* இராமேஸ்வரத்தில் பிறந்த எளிய செய்தித்தாள் விற்பனையாளர் மகன்</p><p>* மக்களின் ஜனாதிபதி, மாணவர்களுக்கு கனவு காண கற்றுக்கொடுத்தவர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal" rel="nofollow">காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்: தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.</p><p>* ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">போராட்டம் நடத்தினாலே தடியடியா? மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்</a><br><br>*போராட்டம் என்பது வன்முறை என்று அர்த்தமாகாது.</p><p>*தாக்குதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india" rel="nofollow">இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்..!- யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?</a></p><p>* ராஜா தனது பள்ளி காலத்தில் இருந்தே பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று வந்துள்ளார்.</p><p>* 2018-ம் ஆண்டில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 6-வது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online">இணையத்தில் 'ஜன நாயகன்' பார்த்தவருக்கு முன்ஜாமின்</a></p><p>* படம் கசிந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட 8 முதல் 21 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்</p><p>* வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/desilting-of-water-bodies-minister-anand-conducts-field-inspection-after-arriving-on-a-motorcycle">நீர்நிலைகள் தூர்வாரும் பணி - மோட்டார் சைக்கிளில் வந்து கள ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த் </a></p><p>* கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஆனந்த் தனது காரில் சென்றார்.</p><p>* கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery"> சுங்கக் கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் - மாணிக்கம் தாகூர்</a></p><p>* கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கட்டணம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.</p><p>* தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது மோடி அரசு. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon">ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் - அமைச்சர் வன்னி அரசு</a></p><p>* சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.</p><p>* பிரதமர் மோடி அமைத்துள்ள உயர்மட்ட குழுவே ஒரு ஏமாற்ற வேலைதான். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament">கடும் அமளிக்கு மத்தியில் 'தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா' மக்களவையில் தாக்கல்.. அம்சங்கள் என்ன? </a></p><p>பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' அவையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>*சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dr-apj-abdul-kalam-11th-death-anniversary-leaders-pay-tribute">"ஏவுகணை நாயகனின் கனவுகள் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகின்றன" - கலாமுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!</a></p><p>* தலைவர்கள் கலாமின் எளிமை, தேசபக்தி, அறிவியல் பங்களிப்பை புகழ்ந்தனர்</p><p>* இளைஞர்களுக்கு கனவு, புதுமை வழிகாட்டியாக கலாம் இன்றும் வாழ்கிறார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/e20-ethanol-row-nitin-gadkari-moves-bombay-high-court">E20 எத்தனால் விவகாரம்: பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி வழக்கு!... </a></p><p>*சமீபகாலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் E20 பெட்ரோல் பயன்பாட்டினால் வாகனங்களின் என்ஜின் பழுதடைவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. </p><p>*தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-mk-stalin-for-allegedly-concealing-information-in-election-nomination-papers-hearing-adjourned">தேர்தல் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு</a></p><p>* வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை என மு.க.ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.</p><p>* ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு  ஐகோர்ட் உத்தரவு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-shooting-bihar-cop-suspended-for-firing-ak-47-at-students">VIDEO: பீகாரில் போராடிய மாணவர்களை ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்டு!</a></p><p>*குறைந்தபட்சம் 4 முதல் 5 சுற்றுகள் வரை சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>*15 வயது சிறுவன் முகமது ஆரிப் கழுத்தில் குண்டடிபட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-feature-key-announcements-minister-vinod" rel="nofollow">வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும்- அமைச்சர் வினோத்</a></p><p>* விவசாயிகள்   கருத்துகளின்  அடிப்படையில்  வேளாண் பட்ஜெட்  தயாரிக்கப்பட உள்ளது.</p><p>* குளிர்சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-comfort-young-woman-sobs-and-wails-against-reels-culture">‘ரீல்ஸ்’ கலாச்சாரத்திற்கு எதிராக கண்ணீர் விட்டு கதறி அழுத இளம்பெண்- அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்</a></p><p>* தமிழ் சங்கங்கள் தாங்கிப்பிடித்த நமது பாரம்பரிய தமிழ் சமூகம், வெறும் 'ரீல்ஸ்' மோகத்திற்காக இப்படி தரம் தாழ்ந்து போகலாமா?" என  உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். </p><p>* சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான் என்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments">முதலமைச்சர் கர்நாடகா பயணம்: உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் கெஞ்ச வேண்டும் - துரைமுருகன்</a></p><p>* எம்ஜிஆர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம்.</p><p>* மேகதாது, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd">தமிழகத்தில் வருகிற 2-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-never-fears-sofa-government-arrests" rel="nofollow">சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.</p><p>* ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-on-fetal-gender-reveal-health-officials-to-requestion-youtuber-irfan">கருவின் பாலினம் அறிவித்த வழக்கு: யூடியூபர் இர்ஃபானை மீண்டும் விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு!...</a></p><p>*கடந்த திமுக ஆட்சியில் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. </p><p>*மருத்துவப் பயிற்சி பெறாத ஒருவர் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்து மருத்துவ நடைமுறையைச் செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled">கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-urges-vaibhav-sooryavanshi-to-improve-fitness-after-first-player-of-the-series-win">வைபவ் சூர்யவன்ஷி இதை கண்டிப்பாக செய்யனும்: லக்ஷ்மண் அட்வைஸ்</a></p><p>* வைபவ் சூர்யவன்ஷி மிகவும் இளம் வயதுடையவர். விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள அவரே விரும்புகிறார்.</p><p>* டீப் ஸ்கொயர் லெக் (deep square leg) பகுதியிலிருந்து ஓடிவந்து டைவிங் கேட்ச் (diving catch) பிடிக்க முயன்றபோது அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும், அவர் தொடர்ந்து களத்தில் இருக்கவே விரும்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-urges-immediate-approval-for-coimbatore-madurai-metro-projects">கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு CPI வலியுறுத்தல்!...</a> </p><p>*தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களுக்கு இந்த அனுமதி மறுத்திருப்பது என்பது ஒன்றிய அரசின் பாரபட்ச போக்காகும்.</p><p>*தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/devotee-death-issue-key-guidelines-for-thiruvannamalai-idukku-temple-visit">பக்தர் உயிரிழந்த விவகாரம்: திருவண்ணாமலை இடுக்கு கோயிலுக்கு செல்ல முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!... </a></p><p>*பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.</p><p>*பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/if-cases-not-withdrawn-protests-will-return-cockroach-janata-party-deadline-to-centre">வழக்குகள் வாபஸ் பெறப்படாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு 'காக்ரோச் ஜனதா கட்சி' கெடு!... </a></p><p>*டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்</p><p>*போராட்டத்தைக் கைவிட்ட போதிலும், மத்திய அரசு மற்றும் காவல்துறை அளித்த வாக்குறுதிகளை மீறி வருவதாக CJP குற்றம் சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லை - மத்திய அரசு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/gyaneshwari-yadav-won-silver-weightlifting-women-53-kg-commonwealth-games">காமன்வெல்த் போட்டி: இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்</a></p><p>* நைஜீரியா வீராங்கனை Snatch முறையில் 93 கிலோவும், Clean and Jerk முறையில் 113 கிலோவும் என மொத்தமாக 206 கிலோ பளு தூக்கி முதல் இடம் பிடித்தார்.</p><p>* கனடா வீராங்கனை 178 (83+95) கிலோ தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.</p> ]]></content:encoded></item></channel></rss>