<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 29 Aug 2026 14:46:31 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 29 ஆகஸ்ட் 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-august-2026#comments</comments><guid isPermaLink="false">18607955-3bbe-49aa-abf1-a6d73cdd86bd</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:04:14 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:38:50.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/om47bexj/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/om47bexj/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-will-not-complete-five-years-eddappadi-palaniswami">த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் இருக்கப்போவது இல்லை: எடப்பாடி பழனிசாமி</a></p><p>* சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சொந்த பிரச்சினையைத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களுடைய பிரச்சனையை பேசுவது கிடையாது.</p><p>* மக்களுடைய பிரச்சினையை பேசும் ஒரே கட்சி அதிமுகதான். வேறு யாரும் பேசுவது இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-4th">தமிழகத்தில் வருகிற 4-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p>* புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-govt-govt-for-neet-exam">மோடி அரசும், பிரகலாத் ஜோஷியும் மாணவர் எதிர்காலத்தோடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்!- மாணிக்கம் தாகூர்</a></p><p>* நீட் தேர்வு என்ற கொடூரமான முறை தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் தொடர்ந்து பறிப்பது எப்போது முடிவுக்கு வரும்?</p><p>* நீட் கொடுமையால் இனி எந்தவொரு மாணவரின் உயிரும் பறிபோகக் கூடாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-let-us-grow-through-sports-let-us-shine-in-victory">விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் !- முதலமைச்சர் விஜய்</a></p><p>* இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.</p><p>* இந்தியாவின் மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்திட இந்நாளில் வாழ்த்துகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/gas-cylinder-subsidy-to-be-increased-by-rs-50-in-puducherry-cm-rangasamy-announces"> புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் மானியம் ரூ.50 உயர்த்தப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு</a></p><p>* புதுவையின் அனைத்து துறைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>* பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 93 முதல் 96 சதவீத நிதி செலவிடப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/7-tn-fishermen-released-from-a-sri-lankan-prison-arrived-in-chennai">இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்</a></p><p>* இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி,6 மீனவர்களையும் கைது செய்தனர்.</p><p>* கடந்த 22-ந் தேதி 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-started-morning-breakfast-extension-in-govt-schools">அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 17-ந்தேதி விருதுநகரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்</a></p><p>* கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கே.வி.எஸ். பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். </p><p>* கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கே.வி.எஸ். பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes">இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டை போற்றுவோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</a></p><p>* விளையாட்டு விளையாடுபவர்கள் அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கிறது.</p><p>* விளையாட்டு என்பது ஒவ்வொரு மனிதர்க்கும் அவர்கள் யார் என்கிற சிறப்பை அடையாளம் காட்டுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-government-information-another-39-tamils-stranded-in-tibet-are-safe">திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு தகவல்</a></p><p>* 21 தமிழர்கள் தமிழகம் திரும்பிய நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. </p><p>* திபெத்தில் சிக்கி உள்ள 39 தமிழர்களும் நலமாக உள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/7-arrested-case-of-murder-vck-functionary-near-pallavaram">பல்லாவரம் அருகே விசிக நிர்வாகி கொலையில் 7 பேர் கைது</a></p><p>* கடந்த 2021-ம் வருடம் பம்மல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அன்பழகன் மற்றும் வீனஸ் சிறையில் இருந்துள்ளனர்.</p><p>* இருவருக்கும் இடையே அவ்வப்போது தொழில் போட்டிகள் நடந்துள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a2602fc-afa0-4738-abe3-981f6935c2f9">626 பேர் பலி.. நிறம் மாறிய புதிய ஏரி - நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை</a></p><p>*2,500 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>*திபெத்திலும் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-says-members-of-the-public-can-even-stop-us-to-voice-their-issues">எங்களை வழிமறித்து கூட பொதுமக்கள் பிரச்சினைகளை சொல்லலாம்: அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* போதை பொருள் விற்பனை தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தால், எந்த பயமுமின்றி ஆசிரியர்களிடம் கூறுங்கள்.</p><p>* குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலமைச்சர் விஜய்யின் முதல் முன்னுரிமை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale">சட்டசபையில் என் அருகில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்- அமைச்சர் செங்கோட்டையன்</a></p><p>* எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>*  நேபாளத்தில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-let-us-make-sports-a-part-of-life-and-build-a-strong-india">விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! - நயினார் நாகேந்திரன்</a></p><p>* விளையாட்டு என்பது வெற்றிக்கான பாதை மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை வளர்க்கும் சிறந்த களம்.</p><p>* ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இருக்கும் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-left-for-uzbekistan-and-kyrgyzstan-on-a-4-day-trip">4 நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!</a></p><p>* பயணத்தின் போது முதலாவதாக அவர் உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.</p><p>*உச்சிமாநாட்டில் ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள்</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-8-2026"> GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/38db2f44-0d69-4039-8e5d-b660bab57679">அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து</a></p><p>*அமெரிக்காவுடன் இந்திய ராணுவம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>*ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a6819e51-84ba-49d1-9c0f-574b54b98586">நேபாள வெள்ளம்: அதிர்ச்சியில் உறைந்த பெண்.. அதிசயமாக உயிர்தப்பிய குடும்பம் - அதிரவைக்கும் வீடியோக்கள்</a></p><p>*சீறிப் பாயும் நீரால் சூழப்பட்ட போதிலும் ஒரு பச்சை வீடு எவ்விதச் சேதமும் இன்றி அப்படியே நின்றது.</p><p>*மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e0806bf7-ac8b-4e79-a62c-a0d782ba38dc">உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்.. அமெரிக்கா கட்டுப்பாட்டுக்கு வரும் வெனிசுலா எண்ணெய் - டிரம்ப் அறிவிப்பு</a></p><p>*வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பை அமெரிக்கா, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்</p><p>*, ஈரான் போர் தொடங்கி ஆறு மாதங்களைக் கடந்துள்ளது</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a38d2012-cf1b-4f8b-b29d-45b7bcf362f9">600-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை.. U டர்ன் அடித்த நேபாள அரசு - வெளிநாட்டு மீட்பு குழுக்களுக்கு அனுமதி</a></p><p>* சுமார் 1,500 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர்.</p><p>*சுமார் 400 இந்தியர்கள் சீனப் பகுதியில் மாட்டிக்கொண்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death">மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து - 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு</a></p><p>* ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. </p><p>* இந்த விபத்தில் மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title> 626 பேர் பலி.. நிறம் மாறிய புதிய ஏரி - நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/world/626-people-died-new-lake-changed-color-china-warns-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/world/626-people-died-new-lake-changed-color-china-warns-nepal#comments</comments><guid isPermaLink="false">0a2602fc-afa0-4738-abe3-981f6935c2f9</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:06:24 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:06:24.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,நேபாளம்,nepal,வெள்ளம்,floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/abbivs8d/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாளம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளம்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/abbivs8d/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமயமலை அருகே சீனா <a href="https://www.maalaimalar.com/news/world/broken-dam-in-tibet-risk-of-flooding-again-in-nepal-warning-to-people">திபெத் </a>எல்லையில் உருவாகி ஓடும் லெண்டே கோலா நதி, நேபாளத்தில் கோஷி நதியாக பெயர் பெற்று, இந்தியாவுக்குள் கங்கையில் கலக்கிறது. </p><p>இந்த லெண்டே கோலா  நதியில் கடந்த புதன்கிழமை இமயமலை பனிப்பாறைகள் விழுந்து நீரோட்டத்தை அடைத்ததால் அணை உடைந்தது. </p><p>போக வழியின்றி தேங்கியிருந்த தண்ணீர் அணை உடைந்ததால் வேகமாக கீழ் நோக்கி பாய்ந்தது. இதனால் நதியானது கோஷியாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் நுழையும்போது வெள்ளப்பெருக்குக்கு உள்ளானது. </p> <p>இந்த திடீர் வெள்ளபெருக்கு காரணமாக ரசுவா மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதுவரை இந்த பேரிடரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளது. </p><p>2,500 பேர் மாயமாகியுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திபெத்திலும் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.</p><h2>புதிய ஏரி</h2><p>இந்நிலையில் திபெத்தில் லெண்டே கொலோ நதி அமைப்பின் மேல் பகுதியில் தற்காலிக ஏரி ஒன்று உருவாகி உள்ளது. அந்த ஏரியில் உள்ள நீரின் நிறம் மாறியுள்ளதை சுட்டிக்காட்டி, அது எந்நேரத்திலும் கரைபுரண்டு பாயக்கூடும் என சீனா எச்சரித்துள்ளது.</p><p>கடந்த புதனன்று ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து பனிப்பாறை சரிவு இடிபாடுகளால் நதி நீர் தடைபட்டு இந்த ஏரி உருவாகக் காரணமாக அமைந்தது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/stv972r7/tn-7.jpg" /></figure><p>சீனப் பகுதியில் உள்ள 'சோசென்' நதியும், நேபாளப் பகுதியில் உள்ள 'புரேபு' நதியும் இணையும் இடத்திற்கு அருகில் இந்த ஏரி உருவாகியுள்ளது.</p><p>இந்த ஏரியின் நிறம் தொடர்ந்து கருமையாக மாறி வருவதாக நேபாள வெளியுறவு அமைச்சகத்துடன் பகிர்ந்த செய்தியில் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஏரி எந்நேரத்திலும் தடுப்பை உடைத்து பாயக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். </p> <p>சீன நீர் வள அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.</p><p>நேற்றைய நிலவரப்படி, இந்த ஏரியில் சுமார் 25 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளது.</p><p>தண்ணீரின் அளவு மிக அதிகமாக இல்லாததால், கீழ்நோக்கிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து சற்று அதிகரிக்கக்கூடும் என்றும், ஆனால் மிகப்பெரிய அளவில் நீர்மட்டம் உயர வாய்ப்பில்லை என்பதையும் சீனா தெரிவித்துள்ளது.</p><p>இருப்பினும் கீழ்நோக்கிய பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சீன அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பொறுப்பான கார் உரிமையில் நிதித் திட்டமிடல் வகிக்கும் பங்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-does-used-car-maintainance-cost-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-does-used-car-maintainance-cost-in-india#comments</comments><guid isPermaLink="false">5b355145-0b89-4b4d-8653-908e2eb43cb4</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:33:12 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:33:12.775Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,கார்,கார் பராமரிப்பு,car maintainance</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1bpese07/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ car]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1bpese07/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரும்பாலான மக்கள் ஒரு காரை வாங்குவதற்கு முன் பல வாரங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில் செலவிடுகிறார்கள். ஆனால் அந்தக் காரை வைத்திருப்பதற்கு உண்மையில் எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றி சிந்திக்க அதே அளவு நேரம் செலவிடுபவர்கள் மிகச் சிலரே.</p><p>வாங்குதல் என்பது வெறும் தொடக்கம் மட்டுமே. எரிபொருள், சர்வீஸிங், இன்சூரன்ஸ், பழுதுபார்ப்பு, தேய்மானம் ஆகியவை ஒவ்வொரு மாதமும் அமைதியாக, தொடர்ச்சியாக பின்தொடர்கின்றன. ஒரு திட்டமில்லாமல், இவை ஒருபோதும் அத்தகைய செலவுகளைத் தாங்குவதற்கு உருவாக்கப்படாத ஒரு குடும்ப பட்ஜெட்டின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.</p><h2>ஒரு காரை வாங்குவது ஒருமுறை மட்டும் செய்யும் செலவு அல்ல ஏன்?</h2><p>ஆன்-ரோடு விலையும் EMI-யும் தான் பெரும்பாலான வாங்குபவர்கள் கவனம் செலுத்தும் எண்கள். ஆனால் இரண்டுமே முழு கதையையும் சொல்வதில்லை. உரிமையின் இரண்டாம் ஆண்டு முதல், ஒரு காரை ஓட்டுவதற்கான செலவில் எரிபொருள், இன்சூரன்ஸ், சர்வீஸிங், பார்க்கிங், டோல், அவ்வப்போது தேவைப்படும் பழுதுபார்ப்பு ஆகியவை அடங்கும். இந்த செலவுகள் EMI-க்கு அப்பால் மொத்த மாதாந்திர கடமையைக் கணிசமாக அதிகரிக்கக்கூடும்.</p><p>அந்த இடைவெளியில்தான் உரிமை பட்ஜெட்டுகள் அமைதியாக சிதைந்துவிடுகின்றன. பெரும்பாலான இந்திய குடும்பங்கள் ஒரு காரை ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை வைத்திருக்கின்றன. நிதி கடமை கடன் காலத்தில் மட்டுமல்ல, முழு காலத்திலும் தொடர்கிறது. எதையும் கையெழுத்திடுவதற்கு முன் இதைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெறுவது தான் கார் உரிமையை மன அழுத்தமாக இல்லாமல் நிர்வகிக்கக் கூடியதாக ஆக்குகிறது.</p><h2>காரை வாங்கிய விலைக்கு அப்பால் அதை வைத்திருப்பதற்கான உண்மையான செலவுகள் என்ன?</h2><p>பெரும்பாலான கார் உரிமையாளர்களுக்கு வாங்குதல் முடிந்த பின்னரும் ஒட்டுச் செலவுகள் தொடர்கின்றன. எரிபொருள், சர்வீஸிங், இன்சூரன்ஸ் புதுப்பித்தல்கள், பார்க்கிங் கட்டணங்கள், டோல், எதிர்பாராத பழுதுபார்ப்புகள் ஆகிய அனைத்தும் மொத்த உரிமை செலவில் பங்களிக்கின்றன. இந்த செலவுகளில் அடங்குவன: </p><p><strong>எரிபொருள்:</strong> இது எந்த விதிவிலக்கும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் செலவு. காரை எவ்வளவு தூரம் ஓட்டுகிறோம், என்ன பாதைகளில் செல்கிறோம், இன்ஜின் எவ்வளவு திறமையாக இயங்குகிறது என்பதைப் பொறுத்து இது மாறுபடும்.</p><p><strong>இன்சூரன்ஸ் புதுப்பித்தல்:</strong> முதல் ஆண்டில் ஆன்-ரோடு விலையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் ஆண்டு முதல் இது ஒரு தனி வருடாந்திர செலவாக மாறும். இதற்கு பல வாங்குபவர்கள் பட்ஜெட் ஒதுக்கியிருக்க மாட்டார்கள்.</p><p><strong>சர்வீஸிங்:</strong> உரிமையாளர் திட்டமிடட்டும் இல்லையோ, காருக்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் கவனிப்பு தேவை. ஒரு சர்வீஸை தவிர்ப்பது சேமிப்பாகத் தோன்றலாம். ஆனால் பின்னர் அதை சரிசெய்ய அதிக செலவாகும்.</p><p><strong>டயர்களும் பிரேக்குகளும்:</strong> இவை பயன்பாட்டால் தேய்ந்து, அவ்வப்போது மாற்றப்பட வேண்டும். வருடத்திற்கு சுமார் 15,000 கி.மீ. ஓடும் ஒரு கார், பொதுவாக மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை டயர் செட் மாற்றப்பட வேண்டியிருக்கும்.</p><p><strong>பேட்டரி:</strong> பெரும்பாலான கார் பேட்டரிகள் 4-5 ஆண்டுகள் நீடிக்கும். மாற்றுவது ஒருமுறை மட்டுமே ஏற்படும், ஆனால் தவிர்க்க முடியாத செலவு.</p><p><strong>பார்க்கிங்கும் டோலும்:</strong> தினசரி செலவுகள், இவை படிப்படியாக ஒரு காரை வைத்திருப்பதன் மற்றும் பயன்படுத்துவதன் மொத்த செலவை அதிகரிக்கக் கூடும்.</p><p><strong>தேய்மானம்:</strong> எரிபொருள் அல்லது சர்வீஸிங் போலல்லாமல் இது நேரடி செலவு அல்ல. ஆனால் காலப்போக்கில் வாகனத்தின் மறுவிற்பனை மதிப்பை பாதிக்கிறது.</p><p><strong>திட்டமிடப்படாத பழுதுபார்ப்புகள்:</strong> வாரண்டி முடிந்தவுடன் ஒவ்வொரு பழுதுபார்ப்பும் உரிமையாளரின் சொந்த பணத்தில் இருந்து தான். எதிர்பாராத பழுதுபார்ப்புகளுக்கு ஒரு அவசர நிதியை ஒதுக்கி வைப்பது, பராமரிப்பு தேவைகள் ஏற்படும்போது திடீர் நிதி நெருக்கடியைத் தவிர்க்க உதவும்.</p><h2>ஒரு நிலையான கார் உரிமை பட்ஜெட்டை உருவாக்க நிதி திட்டமிடல் எவ்வாறு உதவுகிறது?</h2><p>எந்தவொரு கார் உரிமை பட்ஜெட்டின் தொடக்க புள்ளியும், வெறும் EMI அல்ல, மாதாந்திர முழு எண்ணிக்கை. அனைத்தும் மீண்டும் நிகழும் மற்றும் அவ்வப்போது ஏற்படும் உரிமை செலவுகளும், பின்னர் எதிர்பாராத செலவுகளாக கருதப்படுவதற்குப் பதிலாக, ஆரம்பத்திலிருந்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.</p><p>கார் தொடர்பான செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பது, சர்வீஸிங், டயர் மாற்றங்கள், சிறிய பழுதுபார்ப்புகள் ஆகியவற்றை மற்ற நிதி இலக்குகளை பாதிக்காமல் ஈடுகட்ட உதவும்.</p><h2>ஒவ்வொரு கார் உரிமையாளரின் நிதி திட்டத்திலும் இன்சூரன்ஸ் ஏன் சேர்க்கப்பட வேண்டும்?</h2><p>இன்சூரன்ஸ் தான் புதுப்பித்தல் மாதம் வரும் வரை பெரும்பாலான வாங்குபவர்கள் குறைத்து மதிப்பிடும் செலவு. முதல் ஆண்டு இன்சூரன்ஸ் ஆன்-ரோடு விலையில் அமைதியாக இணைக்கப்பட்டிருக்கும். 13வது மாதம் அதை மாற்றிவிடும். ₹18,000 புதுப்பித்தல் அறிவிப்பு வந்திறங்குகிறது, ஆனால் பட்ஜெட்டில் அதற்காக எதுவும் ஒதுக்கப்படவில்லை.</p><p>பிரீமியத்தைத் தாண்டி, சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கார் இன்சூரன்ஸ் பாலிசி தான், முன்கூட்டியே கணிக்க முடியாதவற்றை உள்வாங்கும் நிதி வழிமுறையாக செயல்படுகிறது. ஒரு விபத்து, ஒரு திருட்டு, ஒரு வெள்ளம், ஒரு மூன்றாம் தரப்பு பொறுப்புக் கோரிக்கை. உரிமையின் முதல் மாதத்திலிருந்தே வருடாந்திர புதுப்பித்தலுக்காக பட்ஜெட் ஒதுக்குவது, 13வது மாதத்தில் தொகையைத் தேடி அலைவதற்குப் பதிலாக, கார் உரிமையில் மிகவும் பொதுவான நிதி அதிர்ச்சிகளில் ஒன்றை நீக்கும் ஒரு எளிய பழக்கமாகும்.</p><h2>சாலையில் எதிர்பாராத நிதி அபாயங்களுக்கு கார் உரிமையாளர்கள் எவ்வாறு தயாராகலாம்?</h2><p>எதிர்பாராத நிதி அபாயங்களுக்குத் தயாராவது, அந்த அபாயங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் தொடங்குகிறது. பெரும்பாலான கார் உரிமையாளர்களுக்கு, இவை பொதுவாக மூன்று வகைகளில் அடங்கும்: வாகனத்திற்கு ஏற்படும் சேதம், மற்றொருவருக்கு ஏற்படும் பொறுப்பு, மற்றும் வாகனம் பழுதுபார்க்கப்படும்போது ஏற்படும் தற்காலிக இடையூறு.</p><p>வாகனத்திற்கு ஏற்படும் சேதம்தான் மிகவும் தெரியும் ஒன்று. எலக்ட்ரானிக்ஸ் நிறைந்த நவீன காரின் பழுதுபார்ப்பு பில், மிதமான சேதத்திற்குக் கூட லட்சக்கணக்கில் செல்லலாம். திருட்டு அல்லது முழுமையான இழப்பு, கடன் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே வாகனத்தையே முழுமையாக அகற்றிவிடும்.</p><p>மூன்றாம் தரப்பு பொறுப்பு என்பது குறைவாகத் தெரியக்கூடிய, ஆனால் பெரியதாக இருக்கக்கூடிய அபாயம். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், மற்றொருவருக்கு ஏற்படும் மரணம் அல்லது நிரந்தர ஊனத்திற்கான இழப்பீட்டிற்கு மேல் வரம்பு இல்லை. போதுமான இன்சூரன்ஸ் இல்லாத பட்சத்தில், அந்தப் பொறுப்பு நேரடியாக வாகன உரிமையாளர் மீது விழும்.</p><p>மூன்றுக்கும் தயாராவது ஒரே சில படிகளில் தொடங்குகிறது. காரின் இன்றைய உண்மையான மதிப்பை பிரதிபலிக்கும் ஒரு பாலிசியைத் தேர்ந்தெடுக்கவும். இடைவெளியில்லாமல் அதை செயலில் வைத்திருக்கவும். இன்சூரன்ஸ் தீர்க்கும் தொகைக்கும் உண்மையான பழுதுபார்ப்பு செலவுக்கும் இடையே விழும் தொகைகளுக்கு சில பணத்தை ஒதுக்கி வைக்கவும். இவை சிக்கலான படிகள் அல்ல, ஆனால் இவை அனைத்தும் சேர்ந்துதான், ஒரு சம்பவம் ஒரு நீடித்த நிதிப் பிரச்சினையாக மாறுவதைத் தடுக்கின்றன.</p><h2>நீண்டகால உரிமை செலவுகளை நிர்வகிப்பதில் காம்ப்ரிஹென்சிவ் பாதுகாப்பு என்ன பங்கு வகிக்கிறது?</h2><p>அடிப்படை மூன்றாம் தரப்பு பாலிசி மற்றவர்கள் மீதான பொறுப்பை மட்டுமே உள்வாங்குகிறது. இது காரையே முற்றிலும் பாதுகாப்பின்றி விட்டுவிடுகிறது. காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் விபத்துகள், திருட்டு, தீ, இயற்கை பேரிடர்கள் ஆகியவற்றால் ஏற்படும் சொந்த-வாகன சேதத்தை, மூன்றாம் தரப்பு பொறுப்புடன் சேர்த்து உள்வாங்குகிறது.</p><p>இங்கு ஆட்-ஆன்கள் முக்கியமானவை. ஜீரோ டெப்ரிசியேஷன் கவர் என்பது பாகங்கள் தேய்மான மதிப்பில் அல்ல, முழு மாற்று செலவில் தீர்க்கப்படுவதைக் குறிக்கிறது. இது ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கார்களுக்கு உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. என்ஜின் பாதுகாப்பு, நீர் உட்புகுதல் அல்லது எண்ணெய் கசிவால் ஏற்படும் சேதத்தை உள்வாங்குகிறது, இது நிலையான பாலிசிகளில் விலக்கப்பட்டுள்ளது. ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கவர், முழுமையான இழப்பு தீர்வு, தேய்மானத்திற்குப் பின் காரின் மதிப்பை அல்ல, அசல் வாங்கிய விலையை பிரதிபலிக்கிறது என்பதை உறுதி செய்கிறது.</p><p>இந்த ஆட்-ஆன்கள் ஒவ்வொன்றும், அவை உள்வாங்குவதன் ஒரு சிறு பகுதியே செலவாகும். உரிமைக் காலம் முழுவதும், இவை பழுதுபார்ப்பு மற்றும் கோரிக்கைகளின் சொந்த பண செலவை கணிசமாகக் குறைக்கின்றன. இதுதான் இன்சூரன்ஸ் வெறும் ஒரு சட்ட முறைமையாக இல்லாமல் ஒரு நிதி திட்டத்தின் பகுதியாக மாறும் விதம்.</p><h2>ஸ்மார்ட் நிதி முடிவுகள் ஒரு காரின் ஆயுள் மற்றும் மதிப்பை எவ்வாறு நீட்டிக்க முடியும்?</h2><p>நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு கார் ஓட்ட செலவு குறைவாக இருக்கும். இறுதியில் விற்கும்போது அதன் மதிப்பையும் சிறப்பாக தக்க வைத்திருக்கும். ஒழுங்குபடுத்தப்பட்ட பராமரிப்பின் நிதி பலன் இரண்டு முனைகளிலும் தெரியும், அதாவது உரிமைக் காலத்தில் குறைந்த ஓட்ட செலவுகள் மற்றும் முடிவில் சிறந்த மறுவிற்பனை விலை.</p><p>உற்பத்தியாளரின் சர்வீஸ் அட்டவணையைப் பின்பற்றுவது, சிறிய பிரச்சினைகள் விலையுயர்ந்தவையாக மாறுவதைத் தடுக்கிறது. சர்வீஸ் பதிவுகளை முழுமையாக வைத்திருப்பது மறுவிற்பனையின் போது உண்மையான மதிப்பைச் சேர்க்கிறது. வாங்குபவர்கள் ஒரு முழுமையான ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றைப் பார்க்கும்போது தொடர்ந்து அதிக விலை கொடுக்கிறார்கள். ஏனெனில் இது தாங்கள் வாங்குவது என்ன என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கிறது.</p><p>நோ கிளைம் போனஸை (NCB) புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதும் உரிமை செலவுகளைக் குறைக்க முடியும். காலப்போக்கில், அதிக NCB இன்சூரன்ஸ் புதுப்பித்தல் பிரீமியங்களில் கணிசமான சேமிப்பை ஏற்படுத்தலாம்.</p><h2>ஒரு நிதிரீதியாக பொறுப்புள்ள கார் உரிமையாளரை வரையறுக்கும் பழக்கங்கள் என்ன?</h2><p>ஒரு நிதிரீதியாக பொறுப்புள்ள கார் உரிமையாளர், வாகனத்தை ஒருமுறை மட்டும் எடுக்கும் முடிவாக அல்லாமல், தொடர்ந்து சுறுசுறுப்பான மேலாண்மை தேவைப்படும் ஒன்றாகக் கருதுகிறார்.</p><p>நடைமுறையில் இதன் பொருள், முதல் நாளிலிருந்தே முழு மாதாந்திர உரிமை செலவிற்காக பட்ஜெட் ஒதுக்குவது. காப்பீட்டை சரியான நேரத்தில் புதுப்பித்து, புதுப்பிக்கும்போது கவரேஜை மறுஆய்வு செய்வது, சாம் இன்சூர்டு இன்னும் காரின் மதிப்பையும் உரிமையாளரின் உண்மையான ஆபத்தையும் பிரதிபலிக்கிறதா என்பதை சரிபார்ப்பது. பதிவு, இன்சூரன்ஸ், PUC ஆவணங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது, ஏனெனில் காலாவதி ஆவது சட்ட மற்றும் நிதி ரீதியான ஆபத்தை ஒரே நேரத்தில் உருவாக்குகிறது.</p><p>சில முடிவுகள் அவ்வப்போது வரும். காரை எங்கு சர்வீஸ் செய்வது, ஒரு பழுதுபார்ப்புக்கு கோரிக்கை வைப்பது நல்லதா அல்லது நேரடியாக செலுத்துவது நல்லதா, மற்றும் ஒரு கட்டத்தில், காரை தொடர்ந்து ஓட்டுவது இன்னும் நிதி ரீதியாக அர்த்தமுள்ளதா அல்லது புதிதாக ஒன்றுக்கு மாறுவது புத்திசாலித்தனமான நகர்வா என்பது. இவை எதுவும் சிக்கலானவை அல்ல. இவை வெறுமனே இயல்பாக இல்லாமல் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட வேண்டும்.</p><h2>முடிவுரை</h2><p>பொறுப்புள்ள கார் உரிமை என்பது சரியான வாகனத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தாண்டியது. வருடங்களாக அதைப் பயன்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வரும் செலவுகளுக்கு திட்டமிடுவதும் இதில் அடங்கும். சர்வீஸிங், இன்சூரன்ஸ் புதுப்பித்தல்கள், பழுதுபார்ப்புகள், தேய்மானம் போன்ற செலவுகள் முன்கூட்டியே எதிர்பார்க்கப்படும்போது, கார் உரிமை மேலும் கணிக்கக்கூடியதாகவும் நிதி ரீதியாக நிலையானதாகவும் மாறுகிறது. ஒரு கவனமான நிதி திட்டம், உரிமையாளர்கள் தங்கள் நீண்டகால நிதி நிலைமையின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தாமல் தங்கள் வாகனத்தின் பலன்களை அனுபவிக்க உதவுகிறது.</p><h2>Reference Links:</h2><p>https://fintoolbaba.com/blog/hidden-cost-owning-car-india</p><p>https://fintoolbaba.com/blog/used-car-maintenance-cost-india</p><p>https://tukkbook.in/car-ownership-cost-calculator/</p><p>https://www.godigit.com/motor-insurance/car-insurance/ncb-in-car-insurance </p>]]></content:encoded></item><item><title>&quot;மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை யாரும் சிந்திக்கக் கூட முடியாது!&quot; - தமிழிசை சவுந்தரராஜன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilisai-soundararajan-says-no-other-prime-minister-can-match-modi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilisai-soundararajan-says-no-other-prime-minister-can-match-modi#comments</comments><guid isPermaLink="false">e3f9e81b-5262-48c8-b103-1347e6294957</guid><pubDate>Sat, 29 Aug 2026 14:04:17 +0000</pubDate><atom:updated>2026-08-29T14:04:17.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilisai Soundararajan,pm modi,தமிழிசை சவுந்தரராஜன்,மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/mne24hqg/Tamilisai-Soundararajan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilisai Soundararajan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/mne24hqg/Tamilisai-Soundararajan?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் நரேந்திர மோடிக்கு</a> இணையாக நாட்டின் பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை தற்போது யாராலும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது" என்று தமிழக பாஜக மூத்த தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/tamizhisai-soundararajan">தமிழிசை சவுந்தரராஜன்</a> திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.</p><p>சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடியின் அரசியல் அனுபவம் மற்றும் மாநில வளர்ச்சி குறித்து பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.</p><h2><strong>25 ஆண்டுகால அரசியல் அனுபவம்</strong></h2><p>இதுகுறித்து <a href="https://www.maalaimalar.com/topic/tamizhisai-soundararajan">தமிழிசை சவுந்தரராஜன்</a> பேசுகையில், "நரேந்திர மோடி தொடர்ந்து மூன்று முறை நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கு முன்பு 12 ஆண்டுகள் மாநில முதல்-மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். </p><p>இதன் மூலம் <strong>25 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அரசியல் அனுபவத்தை</strong> அவர் பெற்றுள்ளார். எனவே, அவரது ஆளுமைக்கும் அனுபவத்துக்கும் இணையாக வேறு யாரையும் ஒப்பிட முடியாது" என்று குறிப்பிட்டார்.</p><h2><strong>பாகுபாடற்ற வளர்ச்சி &amp; தமிழ் மீதான பற்று</strong></h2><p>மேலும், ஜனநாயக நாட்டில் அனைவரும் தங்களது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க உரிமை இருந்தாலும், பிரதமர் மோடிக்கு இணையாகச் செயல்படுவது எளிதான விஷயம் அல்ல என்று அவர் கூறினார்.</p><p> "<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை. குறிப்பாகத் <strong>தென் மாநிலங்களின் வளர்ச்சியில் அவர் அதிக அக்கறை</strong> செலுத்தி வருகிறார். </p><p>தமிழர்களின் பெருமையான திருக்குறளை உலக அளவில் பிரதமர் மோடி கொண்டு சென்ற அளவுக்கு வேறு யாரும் செயல்பட்டதில்லை" என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரசிகரின் அம்மாவிடம் வீடியோ காலில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-speaks-to-fans-mother-on-video-call</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-speaks-to-fans-mother-on-video-call#comments</comments><guid isPermaLink="false">23a826d2-2f10-4753-9514-f9a2e0fe8e9e</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:48:10 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:48:10.590Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sivakarthikeyan,நடிகர்,Actor,சிவகார்த்திகேயன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j702ergf/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிவகார்த்திகேயன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j702ergf/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்றம் கும்பகோணம் நகர தலைவர் இல்ல திருமண விழாவிற்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.</p><p>அப்போது வெளிநாட்டில் இருந்த சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களின் குடும்பத்தோடு வீடியோ கால் மூலம் பேசினார். மேலும் வீட்டில் இருந்த அவரின் ரசிகரின் அம்மாவிடம் நலம் விசாரித்து நீண்ட நேரமாக அவர் உரையாடினார்.</p><p>நடிகர் சிவகார்த்திகேயனிடம் ரசிகரின் அம்மா கூறுகையில், தங்களை நேரில் சந்தித்து பத்திரிக்கை கொடுப்பதற்கு ஆர்வமாக இருந்தோம் என கூறினார்.</p><p>மேலும் நீங்கள் எங்களை தொடர்பு கொண்டது, மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றும் அந்த தாயார் கூறினார்.</p><p>இதற்கு சிவகார்த்திக்கேயன் பேசும்போது, தான் அந்த சமயத்தில் சென்னையில் இல்லாத காரணத்தால், உங்கள் அழைப்பிதளை ஏற்க முடியவில்லை என்று கூறினார்.</p><p>மேலும் தான் சென்னை வந்தபிறகு, தங்களை நேரில் சந்திப்பதாகவும் சிவகார்த்திகேயன் கூறினார். என்னுடைய ரசிகர்களாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், தனக்கு பெருமையாக இருப்பதாக அவர் கூறினார். மேலும் என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள் தான் எனக்கு ஆதரவாக இருப்பதாகவும் சிவகார்த்திக்கேயன் கூறினார்.</p><p>இதையடுத்து சிவாகார்த்திகேயனிடம் அவரின் ரசிகர் பேசுகையில், தங்களது ரசிகராக இருப்பது தனக்கு பெருமையாக உள்ளதாக கூறினார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcnzLkZiE0f/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcnzLkZiE0f/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcnzLkZiE0f/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by MaalaiMalar News (@maalaimalar)</a></p></div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script></figure>]]></content:encoded></item><item><title>&quot;குழந்தைகளின் உடல் பருமனுக்கு செக்!&quot; - பாக்கெட் உணவுகளில் இனி &apos;சிவப்பு எச்சரிக்கை லேபிள்&apos; கட்டாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-moves-to-tackle-child-obesity-with-red-warning-labels-on-junk-food</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-moves-to-tackle-child-obesity-with-red-warning-labels-on-junk-food#comments</comments><guid isPermaLink="false">f1b5af0c-5780-4371-9630-3f85248018ad</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:39:19 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:39:19.193Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Food,FSSAI,பாக்கெட்,உணவு,சிவப்பு எச்சரிக்கை,Snakcs,Packets,red label,ரெட் லேபிள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/fzw9t0ts/Packets-Red-label" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Packets Red label ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/fzw9t0ts/Packets-Red-label?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளிடையே வேகமாக அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளில் கட்டாயமாக 'சிவப்பு எச்சரிக்கை லேபிள்' இடம்பெற வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/fssai">இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்</a> அதிரடி உத்தரவை முன்மொழிந்துள்ளது.</p><p>மாறிவரும் இன்றைய உணவுப் பழக்கவழக்கங்களால் சிறுவர்கள் மத்தியில் உடல் பருமன் ஆபத்தான அளவில் உயர்ந்து வருகிறது. நுகர்வோர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சிவப்பு நிற அறுங்கோண எச்சரிக்கை</strong></h2><p>இந்த புதிய திட்டத்தின் படி, அதிக சர்க்கரை, அதிக உப்பு அல்லது அதிக கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்திலேயே பொதுமக்கள் எளிதாக பார்த்து உடனடியாகத் தெரிந்துகொள்ளும் வகையில், பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்ட சிவப்பு <strong>நிற அறுகோண வடிவ எச்சரிக்கை லேபிள் கட்டாயமாக ஒட்டப்பட வேண்டும்</strong>.</p><h2><strong>FSSAI-ன் அதிரடி</strong></h2><p>இந்தியாவில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகள் குறித்து சமீபத்தில் <strong>உச்சநீதிமன்றம் கடுமையான கவலையை</strong> எழுப்பியிருந்தது.</p><p>இதனைத் தொடர்ந்தே, <a href="https://www.maalaimalar.com/topic/fssai">இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் </a>இந்த எச்சரிக்கை லேபிள் திட்டத்தை மிகத் தீவிரமாக ஆலோசித்து, தற்போது நடைமுறைப்படுத்தப் பெரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் இருக்கப்போவது இல்லை: எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-will-not-complete-five-years-eddappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-will-not-complete-five-years-eddappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">bc9d3b6e-8bdb-44c2-b768-5e8e3f754b09</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:36:30 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:36:30.435Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/h7rmpmue/EPS0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/h7rmpmue/EPS0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. ஆட்சி விபத்தில் வந்துவிட்டது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கொள்கையும் கிடையாது. ஒன்னும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.</p><p>மாற்று கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி தர்மபுரியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-</p><p>சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சொந்த பிரச்சினையைத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களுடைய பிரச்சனையை பேசுவது கிடையாது. மக்களுடைய பிரச்சினையை பேசும் ஒரே கட்சி அதிமுகதான். வேறு யாரும் பேசுவது இல்லை.</p><p>இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவது இல்லை. இந்த ஆட்சியில் கடன்தான் அதிகரிக்கும். தமிழகத்தில் ஒரு வலுவான இயக்கம் என்றால் அது அதிமுகதான். ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் மக்களுடைய பிரச்சினையை முதன்முதலாக கொண்டு செல்லும் கட்சி அதிமுக.</p><h2>கரண்ட் இப்படிதான் போய்க் கொண்டே இருக்கும்</h2><p>எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும் போது கரண்ட் கட் ஆனது. இதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, இந்த ஆட்சியின் லட்சணம் இதுதான். கரண்ட் இப்படிதான் போய்க் கொண்டே இருக்கும். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பம்புசெட்டிற்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கினோம். </p><p>த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் இருக்கப்போவது இல்லை. அப்படி இருந்தால் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் 20 லட்சம் கோடி ரூபாயாக மாறிவிடும். இப்படிப்பட்ட ஆட்சி விபத்தில் வந்துவிட்டது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கொள்கையும் கிடையாது. ஒன்னும் கிடையாது.</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;4.6 கிலோ எடை... ஆச்சரியப்படுத்திய சுகப்பிரசவம்!&quot; ஆந்திராவில் பிறந்த &apos;பாலபீமன்&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/national/4-6-kg-baby-surprises-doctors-in-andhra</link><comments>https://www.maalaimalar.com/news/national/4-6-kg-baby-surprises-doctors-in-andhra#comments</comments><guid isPermaLink="false">0d986714-dc0a-4c3d-b283-b2cb6f066d85</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:23:32 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:23:32.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆண் குழந்தை,Andhra Pradesh,delivery,ஆந்திரா,New born baby,கர்ப்பிணி சுகப்பிரசவம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/gnzu4zkb/New-born-baby" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ New born baby ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/gnzu4zkb/New-born-baby?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/andhra-pradesh">ஆந்திர மாநிலத்தில்</a> 4.6 கிலோவுக்கும் அதிக எடையுடன் ஆண் குழந்தை ஒன்று சுகப்பிரசவத்தில் பிறந்துள்ள அபூர்வ நிகழ்வு மருத்துவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பொதுவாக 3.5 கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலமே பிரசவிக்க முடியும் என்ற மருத்துவ விதியை உடைத்து, இந்த சுகப்பிரசவம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.</p><h2><strong>அரசு மருத்துவமனையில் நடந்த அதிசயம்</strong></h2><p>ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் துனி நகர அரசு மருத்துவமனைக்கு, சீதாராம்புரம் பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.</p><p>அவருக்குப்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D"> பிரசவ வலி</a> ஏற்பட்டபோது, குழந்தையின் எடை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். </p><p>இருப்பினும், அறுவை சிகிச்சைக்கு அவசரப்படாமல், சிறப்பு மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு இயல்பான பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டது.</p><h2><strong>துணிச்சலான பிரசவம்... 'பாலபீமன்' வருகை!</strong></h2><p>மருத்துவர்களின் தீவிர முயற்சிக்குப் பின், அனிதாவிற்கு <strong>4.615 கிலோ கிராம்</strong> எடையில் ஆரோக்கியமான ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது.</p><p>சாதாரண <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">பிரசவ </a>எடை வரம்பை விட இரண்டு மடங்கு எடையுடன் பிறந்த இந்தக் குழந்தையை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆச்சரியத்துடன் <strong>'பாலபீமன்'</strong> என்று அன்போடு பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.</p><h2><strong>மருத்துவமனை வரலாற்றில் புதிய சாதனை</strong></h2><p>இதுகுறித்து துனி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">அரசு மருத்துவமனை</a> மருத்துவர்கள் கூறுகையில், "எங்கள் மருத்துவமனையின் வரலாற்றிலேயே இவ்வளவு அதிக எடையுடன், அதுவும் சுகப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறப்பது இதுவே முதல் முறை" எனப் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.</p><p>தற்போது தாயும் சேயும் நலமாக உள்ள நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குழந்தை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளம் வெள்ளத்தின் போது மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: திகில் அனுபவத்தை பகிர்ந்த தாய்..!</title><link>https://www.maalaimalar.com/news/world/climbed-trees-to-escape-nepal-floods-airlifted-later-how-8-year-old-boy-was-reunited-with-mother-in-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/world/climbed-trees-to-escape-nepal-floods-airlifted-later-how-8-year-old-boy-was-reunited-with-mother-in-nepal#comments</comments><guid isPermaLink="false">8e26c94a-37c1-4b84-b264-bc06863d8238</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:06:08 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:06:08.383Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாளம் வெள்ளம்,Rasuwa,ரசுவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ozpthx7u/8YearOldNepalFlood.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிர் பிழைத்த சிறுவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ozpthx7u/8YearOldNepalFlood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய 8 வயது சிறுவன் மரத்தில் ஏறி உயிர் தப்பித்து, பின்னர் வான்வழியாக மீட்கப்பட்டு தாயிடம் சேர்க்கப்பட்டுள்ளான்.</p><h2>பெரு வெள்ளம்</h2><p>நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டநாளன்று ரசுவா மாவட்டத்தைச் சேர்ந்த சோயல் என்ற சிறுவனும், அவனது சகோதரனும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர். வீட்டில் நெசவு வேலை செய்து கொண்டிருந்த சிறுவனின் தாய் மாட்டி மாயா தமாங் திடீரென பூகம்பம் போன்ற சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டார்.</p><h2>மரங்களில் ஏறி தப்பிய சிறுவன்</h2><p>லாங்டாங்லிருங் மலையின் அருகே பனிப்பாறை சரிந்து பெரும் வெள்ளம் ஏற்படத்தில் பள்ளத்தாக்கு பகுதி முழுமையாக அடித்துச் சென்றன. பள்ளியை நோக்கி ஓடிய தமாங், அந்தப் பகுதி முழுவதும் தண்ணீர், கற்கள், சேறு மட்டுமே இருந்தை கண்டு அதிர்ந்து போனார்.</p><p>வெள்ளம் பள்ளியை சூழ்ந்தபோது, சோயல் தனது நன்பனுடன் அருகிலிருந்த காட்டுக்கள் ஓடிச் சென்று மரங்களில் ஏறி வெள்ள நீரில் இருந்து தப்பி உள்ளான். வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபொது சிறுவனின் காலில் எலும்பு முறிவு மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டது. இதற்கிடையே சோயலின் 28 வயதான தாய் தமாங், தனது இரு மகன்களையும் காணாமல் பல்வேறு தங்குமிடங்கள் மற்றும் மீட்பு மையங்களில் தேடி அலைந்தார்.</p><p>இருவரும் உயிரிழந்திருக்கலாம் என ஒரு கட்டத்தில் அவர் நினைத்து கவலைப்பட்டார். இந்நிலையில் பல மணி நேர தேடுதலுக்கு பிறகு மரத்தில் இருந்த சிறுவன் மீட்கப்பட்டான்.</p><h2>தாயை கண்ட மகன்</h2><p>ஹெலிகாப்டர் மூலம் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்து செல்லப்பட்டான். சிறுவனிடம் பயந்து விட்டாயா என்று கேட்டபோது இல்லை என்று தலை அசைத்து பதில் கூறினார். சோயல் உயிர் பிழைத்ததை அவரது தாயாரிடம் தெரிவித்தனர். அதை அறிந்த பிறகு போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்ததாக தமாங் கூறியுள்ளார்.</p><h2>மேலும் மகன் உயிர் பிழைத்தது குறித்து தாய் தமாங் கூறியதாவது:-</h2><p>என் இரு குழந்தைகளும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டேன். என்னால் அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. பல மணி நேரம் தேடி இளைய மகனை கண்டு பிடித்தேன். மூத்த மகனையும் கண்டுபிடித்த பிறகு என் உயிரே திரும்பி வந்தது போல் உணர்ந்தேன்.</p><p>இவ்வாறு தமாங் தெரிவித்துள்ளார்.</p><p>நேபாள பேரழிவில் வடக்கு நேபாளத்தின் ரசுவா, நுவாகோட், தாதிங் உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்தது 17 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் குடும்பத்தினரை பிரிந்த குழந்தைகளை கண்டறிந்து, பதிவு செய்து, அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் பணியில் இணைக்கும் நேபாள அரசுடன் ஈடுபட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சாக்கடல் ஏன் தொடர்ந்து உப்பாக மாறுகிறது? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த விசித்திர ரகசியம்! </title><link>https://www.maalaimalar.com/news/world/why-does-the-dead-sea-keep-turning-saltier</link><comments>https://www.maalaimalar.com/news/world/why-does-the-dead-sea-keep-turning-saltier#comments</comments><guid isPermaLink="false">eaca0e5a-5ba2-4515-b67e-090b628040f9</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:05:18 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:05:18.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dead Sea,சாக்கடல்,Science Discovery,Salt Fingering</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/7hmohif5/Dead-Sea" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dead Sea  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/7hmohif5/Dead-Sea?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>Dead Sea எனப்படும் சாக்கடலின் அடிப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 சென்டிமீட்டர் அளவிற்கு உப்புப் படிமங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதற்கான உண்மையான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p>மறைந்திருந்த இந்த விசித்திரமான இயற்கை நிகழ்வை 'டபுள் டிஃப்யூஷன்' மற்றும் 'சால்ட் ஃபிங்கரிங்' என்ற கோட்பாடுகள் மூலம் 2016 மற்றும் 2019-ஆம் ஆண்டு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><h2>இது உண்மையா?</h2><p>ஆம். பொதுவாக வெயில் காலத்தில் கடலின் மேல்பகுதி நீர் ஆவியாவதால், மேலடுக்கு நீர் மட்டுமே அதிக உப்பாக மாறும்.</p><p> ஆனால், சாக்கடலில் தலைகீழாக, மேலடுக்கு நீர் உப்பை இழப்பதும், ஆழமான அடிப்பகுதி தொடர்ந்து புதிய உப்பைப் பெற்றுக்கொண்டே இருப்பதும் விஞ்ஞானிகளுக்குப் பெரிய புதிராக இருந்தது.</p><h2>'சால்ட் ஃபிங்கரிங்' என்றால் என்ன?</h2><p>கடலின் மேல் பகுதியில் சூரிய வெப்பத்தால் சூடான, அதிக உப்புத்தன்மை கொண்ட நீர் இருக்கும். கீழே குளிர்ந்த, குறைந்த உப்புத்தன்மை கொண்ட நீர் இருக்கும். </p><p>இந்த இரண்டு அடுக்குகளும் சந்திக்கும் எல்லையில், விரல் போன்ற வடிவத்தில் நீர் துளிகள் மிகக் குறுகிய பாதையில் கீழ்நோக்கியும் மேல்நோக்கியும் நகரத் தொடங்குகின்றன.</p><p>மேலிருந்து கீழே இறங்கும் சூடான உப்பு நீர், கீழ் அடுக்கின் குளிர்ச்சியால் தன் வெப்பத்தை வேகமாக இழக்கிறது. ஆனால், அதன் உப்புத்தன்மை அப்படியே நீடிப்பதால், அது மிக அதிகப்படியான உப்பைக் கொண்டதாக மாறி, படிமங்களாக கடலின் அடிப்பகுதியில் படிந்து விடுகிறது.</p><p>கீழிருந்து மேலே செல்லும் குளிர்ந்த நீர், மேல் அடுக்கின் வெப்பத்தை வேகமாகப் பெறுகிறது. இதனால் அது உப்பைக் கரைக்கும் தன்மையைப் பெறுகிறது.</p><h2>கணினி உருவகப்படுத்துதல் மூலம் உறுதி</h2><p>2016-ல் 'அர்னான்' மற்றும் அவரது குழுவினர் இந்த 'டபுள் டிஃப்யூஷன்' கோட்பாட்டை முதன்முதலில் முன்வைத்தனர். பின்னர் 2019-ல் 'ஒய்லான்', 'லென்ஸ்கி' ஆகியோர் அடங்கிய மற்றொரு குழு, அதிநவீன கணினி மாடலிங் மூலம் ஆய்வகத்தில் இதைச் சோதித்துப் பார்த்தனர்.</p><p>இந்த சோதனையில், விஞ்ஞானிகள் கணித்தபடியே நீர் விரல்கள் போன்ற வடிவத்தில் உப்பு கீழே கடத்தப்படுவதும், அதுவே ஆண்டுக்கு 10 செமீ அளவிற்கு உப்பை அடிப்பகுதியில் சேர்க்கிறது என்பதும் 100% உறுதியானது.</p><h2>வரலாற்று முக்கியத்துவம்</h2><p>இந்தச் சிறிய அளவிலான நீர் சுழற்சி செயல்முறையானது, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய தரைக்கடல் பகுதியில் எப்படி பிரம்மாண்டமான உப்புப் பாறைகள் உருவாகின என்பதைப் புரிந்துகொள்ளவும் தற்போதைய புவியியலாளர்களுக்குப் பெரிதும் உதவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இடஒதுக்கீடு விவகாரம்: இரண்டு மத்திய அமைச்சர்களுக்கு இடையில் வெடித்த மோதல்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/minister-vs-minister-chirag-paswan-asks-jitan-manjhi-to-resign-amid-quota-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/minister-vs-minister-chirag-paswan-asks-jitan-manjhi-to-resign-amid-quota-row#comments</comments><guid isPermaLink="false">f625ce3a-465b-4689-b3ec-eb04ca605cbb</guid><pubDate>Sat, 29 Aug 2026 12:49:27 +0000</pubDate><atom:updated>2026-08-29T12:49:27.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிராக் பஸ்வான்,Chirag Paswan,Manjhi,ஜித்தன் ராம் மான்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/vifylxdy/ChiragPaswan0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜித்தன் ராம் மான்ஜி- சிராக் பஸ்வான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/vifylxdy/ChiragPaswan0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இடஒதுக்கீடு தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிராக் பஸ்வான்- ஜித்தன் ராம் மான்ஜி இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், உள்ஒதுக்கீடு கேட்டால் மான்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிராக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.</p><p>பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பீகாரைச் சேர்ந்த சிராக் பஸ்வான் மற்றும் ஜித்தன் ராம் மான்ஜி ஆகியோர் அமைச்சராக உள்ளனர். சிராக் பஸ்வான் LJP (ராம் விலாஸ்) கட்சித் தலைவர் ஆவார். ஜித்தன் ராம் மான்ஜி HAM(S) கட்சித் தலைவர் ஆவார்.</p><p>இடஒதுக்கீட்டிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஜித்தன் ராம் மான்ஜி வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில் உள்ஒதுக்கீட்டிற்கு சிராக் பஸ்வான் எதிர்ப்பாக உள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>உள்ஒதுக்கீடு கேட்கும் ஜித்தன் ராம் மான்ஜி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவரது மகன் பீகார் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேபண்டுமு் என்று சிராக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>HAM (S) கோரிக்கை என்ன?</h2><p>பீகாரைச் சேர்ந்த இந்த இரு தலைவர்களுக்கும் இடையிலான மோதல் இந்த வாரத் தொடக்கத்தில் தொடங்கியது. அப்போது, ​​தற்போதுள்ள இடஒதுக்கீட்டு முறைக்குள் SC மற்றும் ST பிரிவினருக்கான உள்-இடஒதுக்கீடு (sub-quota) முறைக்கு ஜித்தம் ராம் மான்ஜியின் HAM (S) கட்சி ஆதரவு தெரிவித்தது. இடஒதுக்கீட்டின் பலன்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் வரலாற்று ரீதியாக விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட சமூகங்களைச் சென்றடைவதை உறுதி செய்ய மறுபரிசீலனை அவசியம் என்று மான்ஜியின் மகனும் பீகார் அமைச்சருமான சந்தோஷ் குமார் சுமன் கூறினார்.</p><p>நாங்கள் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றிப் பேசவில்லை. இடஒதுக்கீட்டை இன்னும் நியாயமானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவது குறித்தும், அது உண்மையில் உரிமையற்றவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வது குறித்தும் தான் பேசுகிறோம், என்றார்.</p><h2>இந்த சர்ச்சை எதைப் பற்றியது?</h2><p>பாஸ்வானின் LJP (ராம் விலாஸ்) மற்றும் HAM (S) ஆகிய இரு கட்சிகளும் பீகாரிலும் மத்தியிலும் NDA கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. மான்ஜி, மிகவும் பின்தங்கிய தலித் பிரிவுகளில் ஒன்றான முஷாஹர் சமூகத்தைச் சேர்ந்தவர்.</p><p>தலித் இடஒதுக்கீட்டின் பலன்கள் பஸ்வான் மற்றும் ரவிதாஸ் உள்ளிட்ட சில சமூகங்களிடமே குவிந்துள்ளதாகவும், அதே வேளையில் பல சமூகங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றும் HAM கட்சி கூறியுள்ளது. தனது முஷாஹர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இதுவரை IAS அதிகாரியாகவில்லை என்பதை சுமன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>இந்த சர்ச்சையின் பின்னணியில் 2024-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உள்ளது. அந்த ஆண்டில் வழங்கப்பட்ட ஒரு முக்கிய தீர்ப்பில், SC மற்றும் ST பிரிவுகளில் உள்ள மிகவும் பின்தங்கிய சாதிகளுக்கு இடஒதுக்கீட்டு பலன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அந்தப் பிரிவுகளை உட்பிரிவுகளாகப் பிரிக்க (sub-classify) மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.</p><p>கடந்த மாதம், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய தனிநபர்களை இடஒதுக்கீட்டுப் பலன்களிலிருந்து விலக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. SC மற்றும் ST பிரிவுகளுக்குள் உள்ள வசதி படைத்த குடும்பங்கள் இடஒதுக்கீட்டுப் பலன்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. 2024-ம் ஆண்டு தீர்ப்பை மேற்கோள் காட்டி, அரசியலமைப்பு அமர்வில் உள்ள ஏழு நீதிபதிகளில் நான்கு பேர் இந்த குழுக்களுக்கும் 'கிரீமி லேயர்' கொள்கையை விரிவுபடுத்த பரிந்துரைத்ததாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கிரீமிலேயர் என்ற கருத்தை பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினருக்கு (ST) விரிவுபடுத்த முடியாது என்று கூறியுள்ளது. இந்தக் கொள்கை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><h2>ஜிதன் ராம் மன்ஜி முதலில் ராஜினாமா செய்ய வேண்டும்</h2><p>HAM (S) கட்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் துணை ஒதுக்கீடுகளையும் 'கிரீமி லேயரையும்' அக்கட்சி விரும்பினால், அமைச்சர்களாக இருக்கும் மான்ஜியும் அவரது மகன் சுமனும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிராக் பாஸ்வான் வலியுறுத்தினார்.</p><p>ஏன் கிரீமிலேயர் இருக்கக்கூடாது என்று கேட்பவர்கள், முதலில் இட ஒதுக்கீட்டின் பலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும். ஜித்தன் ராம் மான்ஜி 'கிரீமி லேயர்' கருத்தை நம்பினால், அவர் முதலில் ராஜினாமா செய்ய வேண்டும். அவருடைய மகனும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.</p><p>மேலும், துணை இட ஒதுக்கீட்டை எப்போதும் எதிர்த்து வரும் பஸ்வான், பட்டியல் சாதியினருக்குள் உள்ள அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக இருந்து வருகிறது. பொருளாதார அடிப்படையில் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்யவில்லை. பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் துணை இட ஒதுக்கீட்டையோ அல்லது ஒரு 'கிரீமிலேயரை'யோ அறிமுகப்படுத்துவது சமூக நீதியின் நோக்கத்தையே சிதைத்துவிடும்.</p><p>சமூகம் பிளவுபடும் விதத்தால், சமூக நீதிக்கான போராட்டம் அதன் அர்த்தத்தை இழந்துவிடும். தலித்துகள் தொடர்ந்து பாகுபாட்டை எதிர்கொள்வார்கள். பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் ஒரு கிரீமிலேயரை அவர்கள் இன்னும் விரும்பினால், அவர் (மன்ஜி) தான் முதலில் விலக வேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு வேலைதான் வேண்டும் - பீகார் இளைஞர்களின் பிடிவாதத்துக்கு என்ன காரணம்?</title><link>https://www.maalaimalar.com/news/national/why-bihar-youth-insist-on-government-jobs</link><comments>https://www.maalaimalar.com/news/national/why-bihar-youth-insist-on-government-jobs#comments</comments><guid isPermaLink="false">38db3e44-d066-4ad8-85a5-e2967e142764</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:48:53 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:48:53.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,unemployment rate,government jobs,BPSC Exams,Labour Force LFPR,Job Market Trends</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/uwndsxxg/Job-Market-Trends" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BiharJob Market Trends ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/uwndsxxg/Job-Market-Trends?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகாரில் </a>பிபிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் குளறுபடிகள், காலிப்பணியிடங்கள் மற்றும் தேர்வு செயல்முறைகளுக்கு எதிராக இளைஞர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்த போராட்டங்கள், பீகார் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">இளைஞர்கள் </a>மத்தியில் அரசு வேலைகளுக்கான தேவை எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை உணர்த்தும் அதே வேளையில், அம்மாநிலத்தின் வேலைவாய்ப்புச் சந்தையில் மற்றொரு அதிர்ச்சிகரமான உண்மையும் வெளிவந்துள்ளது.</p><h2>பிபிஎஸ்சி தேர்வுகளில் கடுமையான போட்டி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகாரில் </a>அரசுப் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டாலும், அதற்காகப் போட்டியிடும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறையவில்லை.</p><p>இதற்குச் சான்றாக, 67-வது BPSC தேர்வில் 802 பணியிடங்களுக்கு சுமார் 4.8 லட்சம் பேரும், 68-வது BPSC தேர்வில் 324 பணியிடங்களுக்கு சுமார் 2.6 லட்சம் பேரும், 69-வது BPSC தேர்வில் 475 பணியிடங்களுக்கு சுமார் 1.9 லட்சம் பேரும், 70-வது BPSC தேர்வில் 2,035 பணியிடங்களுக்கு சுமார் 3.3 லட்சம் பேரும், 71-வது BPSC தேர்வில் 1,298 பணியிடங்களுக்கு சுமார் 3.2 லட்சம் பேரும் என லட்சக்கணக்கானோர் கடுமையான போட்டியில் பங்கேற்றுள்ளனர்.</p><h2>வேலை தேடாத இளைஞர்கள்</h2><p>பீகாரின் வேலைவாய்ப்புப் பிரச்சனை என்பது வெறும் வேலையில்லாத் திண்டாட்டம் மட்டுமே சார்ந்தது அல்ல. </p><p>சமீபத்திய காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் பீகாரின் இளைஞர் வேலையின்மை விகிதம் 12.1% ஆக இருந்தது.</p><p>ஆனால், அதைவிட கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், பீகாரின் தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. </p><p>2025 தரவுகளின்படி, இந்தியாவில் 15-29 வயதுக்குட்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">இளைஞர்களின் </a>ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கை 46% ஆக உள்ள நிலையில், பீகாரில் வெறும் 34.3% இளைஞர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இது தேசிய சராசரியை விட 11.7% குறைவாகும்.</p><h2>ஆண்டுவாரி பணியாளர் விகிதம்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகாரின் </a>ஆண்டுவாரி பணியாளர் விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 24.4% ஆகவும், 2018-19 இல் 27.6% ஆகவும் இருந்த நிலையில், 2020-21 இல் 25.7% ஆகச் சரிவடைந்து, பின்னர் 2023-24 இல் 34.6% ஆக உயர்ந்ததுடன், தற்போது 2025 ஆம் ஆண்டில் 34.3% ஆகத் தொடர்கிறது.</p><p>இதன் மூலம், பீகாரில் பல இளைஞர்கள் புதிய வேலைகளைத் தேடவோ அல்லது வேலைவாய்ப்புச் சந்தைக்குள் நுழையவோ ஆர்வம் காட்டாமல், தங்களை முழுமையாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதும் தெளிவாக இருக்கிறது. </p><p>அரசுப் பணிகள் மட்டுமே நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், பீகாரில் பரந்த அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் இதர தொழில் வாய்ப்புகள் இளைஞர்களைக் கவராததே அவர்கள் வேலைச் சந்தையை விட்டு ஒதுங்கியிருக்க முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது என்றும் கூறி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>44 வயது ஆணை &apos;மிகவும் வயதானவர்&apos; என 40 வயது பெண் நிராகரித்த விவகாரம்: இணையத்தில் வெடித்த விவாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/44-year-old-man-rejected-as-too-old-by-40-year-old-woman-sparks-online-debate</link><comments>https://www.maalaimalar.com/news/national/44-year-old-man-rejected-as-too-old-by-40-year-old-woman-sparks-online-debate#comments</comments><guid isPermaLink="false">4ea63332-7a67-4fd7-b7ff-738ef49ea2eb</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:35:33 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:35:33.823Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Match making,மேட்ச்மேக்கிங்,Age Gap Debate,வயது வித்தியாசம்,Modern Dating,Women Independence,Internet Divided,இணைய விவாதம்,Relationship Goals</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/b9ykbdl2/Age-Gap-Debate" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Age Gap Debate ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/b9ykbdl2/Age-Gap-Debate?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நவீன திருமணத் தேடல்களில் வயது என்பது ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்பட்டாலும், அதுவே தகுதியான வாழ்க்கைத்துணை அமைவதைத் தடுக்கும் முட்டுக் கட்டையாகவும் மாறிவிடுகிறது என்ற விவாதம் தற்போது இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.</p><p>பிரபல மேட்ச்மேக்கரும் நிறுவனருமான ஓந்த்ரிலா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு உண்மைச் சம்பவம், நெட்டிசன்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கலந்த பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.</p><h2>மேட்ச்மேக்கர் பகிர்ந்த உண்மைச் சம்பவம்</h2><p>தனது 6 ஆண்டுகால மேட்ச்மேக்கிங் அனுபவத்தை முன்வைத்து ஓந்த்ரிலா கபூர் பகிர்ந்துள்ளார்.</p><p>ஓந்த்ரிலாவிடம் வரன் தேடி வந்த 40 வயது பெண் ஒருவர் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார். ஆனால், வரன் தேடும்போது வயது விஷியத்தில் மிகவும் பிடிவாதமாக உள்ளார். </p><p>தனக்கு வரும் வரன் 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். அண்மையில் வந்த 44 வயது வரன் ஒருவரை, "அவர் மிகவும் வயதானவர்; எங்களுக்குள் தலைமுறை இடைவெளி இருக்கும்" எனக் கூறி நிராகரித்துள்ளார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcQVMGAocsP/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcQVMGAocsP/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><h2>திருமணச் சந்தையின் முரண்பாடு</h2><p>இந்த பிடிவாதத்தில் உள்ள ஒரு முக்கிய முரண்பாட்டை ஓந்த்ரிலா சுட்டிக்காட்டியுள்ளார். 38 முதல் 42 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெரும்பாலும் 35 வயதிற்குட்பட்ட பெண்களையே தங்களுக்குத் துணையாகத் தேடுகிறார்கள். </p><p>அதே நேரத்தில், 35 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள் தங்களை விட மிகவும் மூத்த வயதுடைய ஆண்களைத் திருமணம் செய்ய விரும்புவதில்லை. </p><p>இதனால், திருமணச் சந்தையில் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஒருவரை நோக்கி விரல் நீட்டுகிறார்கள், ஆனால் அவர்கள் தேடும் நபர் இவர்களைத் தேடுவதில்லை. இது ஒரு வட்டத்திற்குள் ஒருவரையொருவர் துரத்தும் முடிவற்ற கதையாக முடிகிறது.</p><p>வயது என்பது வாழ்க்கை முறை, ஆரோக்கியம், குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டமிடல் ஆகியவற்றிற்கு முக்கியமாக இருந்தாலும், இருவருக்கிடையேயான புரிதலுக்கு வயது மட்டுமே தகுதி கிடையாது என்று ஓந்த்ரிலா கூறுகிறார்.</p><h2>இணையவாசிகள் கருத்து</h2><p>இந்தப் பதிவு வெளியானதில் இருந்து சமூக வலைத்தளங்களில் விவாதம் இரு பிரிவாகப் பிரிந்துள்ளது.</p><h2><strong>பெண்களுக்கு ஆதரவான குரல்கள்: </strong></h2><p>"ஆண்கள் தங்களுக்கு வரன் தேடும்போது அதை 'விருப்பம்' என்கிறார்கள், ஆனால் பெண்கள் தங்களுக்குப் பிடித்ததைத் தேடினால் மட்டும் அதை 'பிடிவாதம்' என்று முத்திரை குத்துகிறார்கள். ஏன்?".</p><p> "பெண்கள் இப்போது பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைந்துவிட்டனர். தங்களுக்குப் பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்து சமரசம் செய்துகொள்வதற்குப் பதிலாக, அவர்கள் வாழ்நாள் முழுக்க தனிமையாக வாழவே விரும்புகிறார்கள். </p><p>இதில் எந்தத் தவறும் இல்லை" என்று பலர் ஆதரவளித்துள்ளனர்.</p><h2>மாற்று கருத்துக்கள்: </h2><p>"40 வயதிற்கு மேற்பட்ட பல பெண்கள் 35 வயதிற்குட்பட்ட பெண்களை விட மிகவும் ஃபிட்டாகவும் அழகாகவும் இருக்கிறார்கள். ஆண்கள் எப்போதுமே வெளிப்புறத் தோற்றத்திற்கே முக்கியத்துவம் தருகிறார்கள்", "வயது என்பது வெறும் வடிகட்டி அல்ல; அது ஒருவருடைய பாதுகாப்பிற்கான எல்லையா அல்லது வாய்ப்புகளைக் குறைக்கும் பிடிவாதமா என்பதைத் தேடுபவர்கள் சிந்திக்க வேண்டும்" எனப் பலதரப்பட்ட கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>பேட்டர்களுக்கு 50 ஓவர் கிரிக்கெட் மிகவும் கடினமானது: சூர்யகுமார் யாதவ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/suryakumar-yadav-says-odi-cricket-is-the-most-difficult-format-for-a-batter</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/suryakumar-yadav-says-odi-cricket-is-the-most-difficult-format-for-a-batter#comments</comments><guid isPermaLink="false">1a6c8889-d99b-4b7c-872e-b0ad30d5b78d</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:06:13 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:06:13.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Suryakumar Yadav,Team India,டீம் இந்தியா,சூர்யகுமார் யாதவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/p29r6mx3/SKY0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சூர்யகுமார் யாதவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/p29r6mx3/SKY0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் செய்வது என்பது மனரீதியாக நுணுக்கமான மற்றும் பல நிலைகளைக் கொண்ட ஒரு விஷயம். ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப ஒரு பேட்ஸ்மேன் தனது ஆட்ட வேகத்தை (gears) தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.</p><p>இந்திய டி20 அணி கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவுக்கு தற்போது அணியில் இடம் கிடைக்கவில்லை. இவரது தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றது. உலக கோப்பையை வென்ற அடுத்த தொடரில் சேர்க்கப்படவில்லை.</p><h2>2021 முதல் 2023 வரை ஒருநாள் போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ்</h2><p>35 வயதாகும் இவர் கடந்த 2021-ம் ஆண்டு தனது 30 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இதுவரை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு 113 போட்டிகளில் 4 சதம், 25 அரைசதங்களுடன் 3272 ரன்கள் குவித்துள்ளார்.</p><p>ஆனால் ஒருநாள் போட்டியை பொறுத்தவரையில் 2021 முதல் 2023 வரை மட்டுமே விளையாடினார். 37 போட்டிகளில் 773 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 அரைசதங்கள் அடங்கும்.</p><p>இவர் கிரிக்கெட் போட்டிகள் குறித்து பல்வேறு சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, ஒருநாள் போட்டிதான் பேட்டர்களுக்கு மிகவும் கடினமானது எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-</h2><p>ஊகத்தின் அடிப்படையில் நாம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். நான் 2016-லேயே அணிக்கு வந்திருந்தால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பேன், ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டிருப்பேன் என்று சொல்லலாம். ஆனால் யதார்த்தத்தைப் பார்த்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் ஒரே ஒரு போட்டியிலும் ஒரே ஒரு இன்னிங்ஸிலும் மட்டுமே விளையாடினேன். அதற்குள் மற்ற வீரர்கள் அணிக்கு திரும்பிவிட்டதால், எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.</p><p>ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, என் மீது எனக்கு நிச்சயம் ஏமாற்றம் இருக்கிறது. இது டி20-யைப் போலவே வெள்ளைப்பந்து (white-ball) வடிவிலான ஆட்டம்தான். ஆனால் உண்மையைச் சொல்லப்போனால், அந்த ஆட்டமுறைக்கு தேவையான கடின உழைப்பை நான் அளிக்கவில்லை என்றே தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.</p><p>ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் செய்வது என்பது மனரீதியாக நுணுக்கமான மற்றும் பல நிலைகளைக் கொண்ட ஒரு விஷயம். ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப ஒரு பேட்ஸ்மேன் தனது ஆட்ட வேகத்தை (gears) தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.</p> <h2>சவாலான வடிவம்</h2><p>என் பார்வையில், ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகவும் சவாலான வடிவம் ஒருநாள் கிரிக்கெட்தான். நீங்கள் வரிசையில் கீழே இறங்கினாலும் சரி, அல்லது வேறு எந்த இடத்தில் இறங்கினாலும் சரி, இது பொருந்தும்.</p><p>நீங்கள் நான்காவது இடத்தில் இறங்கினால், அணி 0 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்க வேண்டியிருக்கலாம். ஆறாவது இடத்தில் இறங்கினால், 24 ரன்னுக்கு 4 விக்கெட்டுகள் விழுந்திருக்கலாம். நீங்கள் கிட்டத்தட்ட ஒரு டெஸ்ட் போட்டியைப் போலவே ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.</p><p>பந்து வீச்சாளர்களின் திறனை மதித்து, ஆரம்பக்கட்ட நெருக்கடியைச் சமாளித்து, 50 அல்லது 75 ஸ்ட்ரைக் ரேட்டில் இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும். பிறகு 100 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு வேகத்தை அதிகரிக்க வேண்டும். இறுதியாக, டி20 போட்டிகளைப் போல 130-140 ஸ்ட்ரைக் ரேட்டை எட்டும் வகையில் அதிரடியாக ஆட வேண்டும்.</p><p>இவ்வாறு சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 4-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-4th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-4th#comments</comments><guid isPermaLink="false">819d25ab-d26b-4810-896e-0272414a56fc</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:28:27.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/qyfk0ngx/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/qyfk0ngx/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வருகிற 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>31-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>1-ந்தேதி மற்றும் 02ந்தேதிகளில் வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>03-ந்தேதி வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>04-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே, இன்று முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்...</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 ° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 02-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>கவின் - நயன்தாரா நடித்த &apos;HI&apos; படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nayanthara-kavin-hi-film-first-day-collection</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nayanthara-kavin-hi-film-first-day-collection#comments</comments><guid isPermaLink="false">733bf4ee-9b5b-4bda-a65d-0ba3a977c008</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:25:15 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:25:15.201Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயன்தாரா,Nayanthara,box office collection,kavin,கவின்,Hi Movie,பாக்ஸ் ஆபீஸ்,HiDay1Collection</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/wod7hdv3/Kavin-Nayanthara" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kavin - Nayanthara]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/wod7hdv3/Kavin-Nayanthara?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லேடி சூப்பர்ஸ்டார் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE">நயன்தாரா </a>மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">கவின் </a>கூட்டணியில் உருவான 'Hi' திரைப்படம், தனது முதல் நாளில் இந்தியாவில் ரூ.1.23 கோடி நிகர வசூலை ஈட்டி சாதனைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. </p><p>வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><h2><strong>பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்</strong></h2><p>'Hi' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.</p><p>இந்திய நிகர வசூல் ரூ.1.23 கோடியும், இந்திய மொத்த வசூல் ரூ.1.38 கோடியும் மற்றும் உலகளாவிய மொத்த வசூல் ரூ.1.38 கோடியையும் பெற்றுள்ளது. </p><p>முதல் நாளில் திரையிடப்பட்ட மொத்தம் <strong>786 காட்சிகளில் சராசரியாக 33% பார்வையாளர்கள்</strong> வருகை தந்துள்ளனர். </p><p>வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>தமிழ் &amp; தெலுங்கு வசூல்</strong></h2><p>'Hi' திரைப்படத்தின் முதல் நாள் வசூலில், தெலுங்கு பதிப்பு ரூ.9 லட்சம் மட்டுமே ஈட்டிய நிலையில், தமிழ் பதிப்பு மட்டும் ரூ. 1.14 கோடி நிகர வசூல் செய்து, படத்தின் ஒட்டுமொத்த இந்திய வசூலான ரூ.1.23 கோடியும் பெற்று வருகிறது.</p><h2><strong>நட்சத்திர பட்டாளம்</strong></h2><p>'Hi' திரைப்படத்தில் கவின் (மயில்சாமி), லேடி சூப்பர்ஸ்டார் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE">நயன்தாரா </a>(தேவயானி), பிரபு (இந்திரன்), ராதிகா சரத்குமார் (பரிமளா) மற்றும் மறைந்த மூத்த நடிகர் கே. பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><h2>'ஹாய்' திரைப்படம்</h2><p>இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE">நயன்தாரா</a>, கவின், பிரபு மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ராதிகா சரத்குமார் </a>உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள 'Hi' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபீஸில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது.</p><p>காதலில் தோற்கும் இளைஞன் ஒருவன், கட்டாயத் திருமணத்தைத் தவிர்க்கப் போராடும் பெண்ணிற்கு உதவப் போய் பொய்களின் வலையில் சிக்குவதைக் கலகலப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கும் இத்திரைப்படத்தில், கவினின் அசாத்திய டைமிங் காமெடியும், நயன்தாராவின் ஸ்டார் அந்தஸ்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>டெலிவரி செய்த நபருக்கு ராக்கி கயிறு கட்டி, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய இளம்பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/young-woman-ties-rakhi-to-delivery-man-seeks-blessings</link><comments>https://www.maalaimalar.com/news/national/young-woman-ties-rakhi-to-delivery-man-seeks-blessings#comments</comments><guid isPermaLink="false">0626894b-1d94-4982-9461-fa7bc7a49a83</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:19:31 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:19:31.636Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rakhi,ரக்‌ஷா பந்தன்,ராக்கி கயிறு,Raksha Bhandan,delivery boy,டெலிவரி ஊழியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/239711rp/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat Raksha Bandhan viral video]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/239711rp/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத்தில் டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்வதற்காக ஒரு வீட்டிற்கு சென்றபோது, அந்த வீட்டில் இருந்த இளம்பெண் ஒருவர், அந்த இளைஞரின் கையில் ராக்கி கயிறு கட்டிவிட்டு பின் அவரின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கி கொண்டார். </p><p>இதையடுத்து இளைஞர் அந்த பெண்ணுக்கு ரூ.50 தருவதும், அந்த பணத்தை அந்த பெண் வாங்கி கொள்வதுமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது.</p><h3><strong>ரக்‌ஷா பந்தன்</strong></h3><p>இந்தியாவில் சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட போது, குஜராத் வதோதரா நகரில் உள்ள ஒரு இளம்பெண் வீட்டிற்கு ஒரு இளைஞர் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்வதற்காக சென்றார்.</p><p>அப்போது அந்த நபர் கதவை தட்டியபோது, ஒரு இளம்பெண் கதவை திறந்து அவரை வரவேற்று கையில் ராக்கி கயிறு கட்டினார். இதையடுத்து அந்த பெண், இளைஞரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டார்.</p><p>இதை சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர், தனது பாக்கெட்டில் இருந்து ரூ.50 எடுத்து அந்த இளம்பெண்ணிடம் கொடுத்தார். மேலும் அந்த இளம்பெண்ணிடம் பணத்தை கொடுக்கும்போது, நான் உன்னை சகோதரி என்று அழைத்தேன், எனவே பணத்தை வாங்கிகொள்ளும்படி கூறினார்.</p><p>இந்த அழகிய நிகழ்வு பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ரக்‌ஷா பந்தன் அன்று நடந்த இந்த நிகழ்வு குறித்து, பயனர்கள் பல்வேறு கருத்துகளை வலைதளத்தில் பதிவிட்டனர்.</p><h3><strong>சமூக வலைதளத்தில் வைரல்</strong></h3><p>அதில் ஒரு பயனர், சில பரிசுகள் வெறும் 50 ரூபாயாக இருந்தாலும், அவை விலைமதிப்பற்றவை என பதிவிட்டார். மேலும் இந்த 50 ரூபாய் ஒரு நினைவு, ஒரு ஆசீர்வாதம், மேலும் சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்த ஒருவரிடமிருந்து கிடைத்த தூய்மையான அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு என்றும் அவர் பதிவிட்டார்.</p><p>இதையடுத்து மற்றொரு பயனர், டெலிவரி வேலையில் 30 ரூபாய் சம்பாதிப்பதே எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும், ஆனால் அவர் உங்களுக்கு 50 ரூபாய் கொடுத்திருக்கிறார். அது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது என்று பதிவிட்டார்.</p><p>மேலும், இதை பார்க்கும்போது நான் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன். இது பணத்தைப் பற்றியது அல்ல; நீங்கள் ராக்கி கட்டும்போது அவரது முகத்தில் தெரியும் அன்பும் மகிழ்ச்சியுமே முக்கியம். இது ஒரு நிறைவான மற்றும் மனதைத் தொடும் தருணம் என்று அவர் பதிவிட்டார்.</p><p>மற்றொரு பயனர், உனக்கு எது தேவைப்பட்டாலும் என்னை அணுகு, நான் இப்போது உன் சகோதரன் என்று அவன் அழகாக சொன்னதை கேட்டதும் தனக்கு கண்ணீர் வந்துவிட்டதாகவும், அந்த இளைஞரின் வார்த்தை, அவரின் இதயம் எவ்வளவு பெரியது என்பதைக் காட்டியதாகவும் ஒரு பயனர் பதிவிட்டார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DckquRBo8uN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DckquRBo8uN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DckquRBo8uN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Akanksha singh. (@kan.shhha)</a></p></div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script></figure>]]></content:encoded></item><item><title>மோடி அரசும், பிரகலாத் ஜோஷியும் மாணவர் எதிர்காலத்தோடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்!- மாணிக்கம் தாகூர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-govt-govt-for-neet-exam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-govt-govt-for-neet-exam#comments</comments><guid isPermaLink="false">2dbe83cb-b9ea-45f1-ac59-a598445860a6</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:08:52 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:08:52.063Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,நீட் தேர்வு,மாணிக்கம் தாகூர்,Neet exam,மாணவி தற்கொலை,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/n8y1nn2a/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/n8y1nn2a/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை மோடி அரசும், ஒன்றிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் உடனடியாக நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்! என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/மாணிக்கம்-தாகூர்">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி நெஞ்சை உலுக்குகிறது. மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு கடினமாக உழைத்த ஒரு இளம் மகளை நாம் இழந்திருப்பது தாங்க முடியாத வேதனையளிக்கிறது. </p><p>மாணவி ஸ்ருதிலயாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் அவர்களும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவர்.</p><h2><strong>எப்போது முடிவுக்கு வரும்?</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்; அதில் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கனவோடு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட்</a> தேர்வெழுதுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மொத்த மருத்துவ இடங்களோ வெறும் 13,999 மட்டுமே. தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 2025-இல் 76,181 ஆக இருந்து, 2026-இல் 61,306 ஆகக் குறைந்து 19.5% கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சுமார் 15,000 தகுதியுடைய மாணவர்கள் குறைந்து போயிருப்பது, இந்த முறைகேடான தேர்வு முறையின் மீது மாணவர்களுக்குத் துளியும் நம்பிக்கையற்றுப் போய்விட்டதையே காட்டுகிறது.</p><p>நீட் தேர்வு என்ற கொடூரமான முறை தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் தொடர்ந்து பறிப்பது எப்போது முடிவுக்கு வரும் ?</p><p>நீட் கொடுமையால் இனி எந்தவொரு மாணவரின் உயிரும் பறிபோகக் கூடாது. தமிழ்நாடு தொடர்ந்து போராடியும் மாணவர்களின் மரணங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் நரேந்திர மோடி அரசின் கல் நெஞ்சமும், பிடிவாதமுமே இந்த தொடர் துயரங்களுக்குக் காரணம். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை மோடி அரசும், ஒன்றிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் உடனடியாக நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய போட்டியில் இருந்து விலகினார் நீரஜ் சோப்ரா</title><link>https://www.maalaimalar.com/sports/neeraj-chopra-out-of-asian-games-after-ligament-injury</link><comments>https://www.maalaimalar.com/sports/neeraj-chopra-out-of-asian-games-after-ligament-injury#comments</comments><guid isPermaLink="false">62be9828-b7f7-4530-91bf-c717e60faa35</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:04:21 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:04:21.612Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Neeraj Chopra,நீரஜ் சோப்ரா,Asian Games,ஆசிய போட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/3kdm9ou6/NeerajChopra001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீரஜ் சோப்ரா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/3kdm9ou6/NeerajChopra001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டைமண்ட் லீக் இறுதிப் போட்டி மற்றும் புத்தாபெஸ்டில் முதல்முறையாக நடைபெற இருக்கும் உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றையும் தவற விடுகிறார். இதற்கு தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.</p><p>நீரஜ் சோப்ரா உள்பட 492 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கொண்ட <a href="https://www.maalaimalar.com/sports/cricket/g-kamalini-picked-in-asian-games-squad">இந்திய அணி</a>யை விளையாட்டு அமைச்சகம் இந்த மாதம் தொடக்கத்தில் அறிவித்தது. இதில் நீரஜ் சோப்ரா இடம் பிடித்திருந்தார்.</p><p>இந்த நிலையில் நீரஜ் சோப்ரா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>ஒரு காலகட்ட கடின உழைப்பிற்குப் பிறகு, லோசானில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் மூலும், நான் எதிர்பார்த்திருந்த உத்வேகத்தை இறுதியாகப் பெறுவதாக உணர்ந்தேன்.</p><p>கணுக்காலில் தசைநார் கிழிவு</p><p>துரதிர்ஷ்டவசமாக, சிறிது காலத்திற்குப் பிறகு பயிற்சியின் போது எனது கணுக்காலில் தசைநார் கிழிவு (ligament tear) ஏற்பட்டது. எனது மருத்துவர் மற்றும் அணியினருடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளில் நான் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.</p><p>இது ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக, எனது ஆட்டத்தின் சீரான ரிதத்தை கண்டறியும் நிலைக்கு நான் நெருங்கியிருந்த நிலையில் இது நிகழ்ந்திருப்பது வருத்தமளிக்கிறது. இருப்பினும், சொல்வது போல, தடைகளும் பின்னடைவுகளும் பயணத்தின் ஒரு பகுதிதான். இப்போது நான் முழுமையாகக் குணமடைந்து, இன்னும் வலிமையுடன் மீண்டு வருவதிலேயே கவனம் செலுத்தி வருகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் அனைவருக்கும் நன்றி.</p><p>இவ்வாறு நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.69 லட்சம் கோடியாக உயர்ந்த அந்நிய செலவாணி கையிருப்பு: இந்திய ரிசர்வ் வங்கி</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/foreign-exchange-reserves-rise-to-rs-6-9-million-crore-rbi</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/foreign-exchange-reserves-rise-to-rs-6-9-million-crore-rbi#comments</comments><guid isPermaLink="false">4f4abc10-2911-4721-b7b2-c6ad18be2674</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:58:19 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:58:19.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>reserve bank of india,Foreign Currency,வெளிநாட்டு நாணயம்,இந்திய ரிசர்வ் வங்கி,foreign exchange reserves,அந்நிய செலவாணி கையிருப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/de9zctae/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India Forex Reserves]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/de9zctae/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு கடந்த மூன்று மாதங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து சுமார் ரூ.6,200 கோடி (65 பில்லியன் டாலர்) வரை பெறப்பட்டு, அதன்மூலம் இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு சுமார் ரூ.69 லட்சம் கோடியாக (729.33 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.</p><h3><strong>அந்நிய செலாவணி கையிருப்பு</strong></h3><p>அந்நிய செலாவணி கையிருப்பு என்பது, ஒரு நாட்டின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வெளிநாட்டு நாணயங்களில் வைத்திருக்கப்படும், நெருக்கடியான காலங்களுக்கான சொத்துக்கள் ஆகும்.</p><p>இந்த கையிருப்பை எண்ணெய் போன்ற இறக்குமதிகளுக்கு பணமாக செலுத்தவும், வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்தவும், உலகளாவிய நிதி நெருக்கடிகளின் போது இந்திய ரூபாயை நிலையாக வைத்திருக்கவும் நாட்டிற்கு உதவும் வகையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கையிருப்பு தொகையாகும்.</p><h3><strong>இந்திய ரிசர்வ் வங்கி</strong></h3><p>இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 21-ஆம் தேதியுடன் இந்திய செலவாணி கையிருப்பு 12.4 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>வெளிநாட்டு நாணயத்தை ஈர்ப்பதற்காக ஜூன் மாதத்தில் வங்கி அமைப்புக்குள் அதிக டாலர்களைக் கொண்டு வருவதையும், இந்தியாவின் செலுத்துச் சமநிலையை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான சலுகைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.</p><h3><strong>வெளிநாடு வாழ் இந்தியர்கள்</strong></h3><p>ஜூன் 5 முதல் ஆகஸ்ட் 21 வரை இந்த திட்டங்கள் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட 73 பில்லியன் டாலரைப் பெற்றது, இதில் சுமார் 65 பில்லியன் டாலர் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத்தொகையிலிருந்து மட்டுமே பெறப்பட்டுள்ளது.</p><p>கையிருப்பில் ஏற்பட்ட சமீபத்திய அதிகரிப்புக்கு வெளிநாட்டு நாணய சொத்துக்களே (Foreign currency assets) முக்கிய காரணமாக இருந்தன. அவை இந்த வாரத்தில் 9.5 பில்லியன் டாலர் அதிகரித்து, 581.85 பில்லியன் டாலரிலிருந்து 591,33 பில்லியன் டாலராக உயர்ந்தன.</p><p>தங்க இருப்புகள் (Gold reserves) ஒரு வாரத்திற்கு முன்பு இருந்த $111.42 பில்லியனிலிருந்து, $2.8 பில்லியன் அதிகரித்து $114.22 பில்லியனாக உயர்ந்தது.</p><p>சர்வதேச நாணய நிதியத்தில் (International Monetary Fund) இந்தியாவின் சிறப்பு வரைதல் உரிமைகள் (Special Drawing Rights) கையிருப்பு 18.85 பில்லியன் டாலராக உயர்ந்தது, அதே நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கையிருப்பு நிலை 4.93 பில்லியன் டாலராக அதிகரித்தது.</p><p>இந்தியாவை பொறுத்தவரை, இந்த அதிகமான அந்நிய செலாவணி கையிருப்பு, ரூபாயின் மதிப்பில் ஏற்படும் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சீர்செய்யவும், வெளிப்புற அதிர்ச்சிகளிலிருந்து பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் ஆற்றலை அளிக்கிறது.</p><p>குறிப்பாக, வலுவான டாலர், உலகளாவிய மூலதன வெளியேற்றம் அல்லது அதிக இறக்குமதிச் செலவுகள் ஆகியவற்றால் ரூபாய் மீது அழுத்தம் ஏற்படும் சமயங்களில், மத்திய வங்கி அந்நிய செலாவணி சந்தையில் அடிக்கடி பங்கேற்று வருகிறது.</p><p>எனவே, கையிருப்பு அதிகரிப்பது என்பது வெளிநாட்டு மூலதனம் உயர்வதால் மட்டும் ஏற்பட்டதல்ல. நிதி வரவு வலுவாக இருக்கும்போது வெளிநாட்டு நாணயத்தைக் குவித்து, அதன் மூலம் நிலைமைகள் தலைகீழாக மாறும் போது தலையிடுவதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும் மத்திய வங்கியின் உத்தியையும் இது பிரதிபலிக்கிறது.</p><p>சமீபத்திய தரவுகளின்படி, இந்தத் திட்டங்கள் அந்நியச் செலாவணியை ஈர்ப்பதில் மிகவும் திறம்பட செயல்பட்டுள்ளன. இத்திட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வரவுகளில் பெரும்பகுதி வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத்தொகைகளாகும்.</p><p>729.33 பில்லியன் டாலர் மதிப்பிலான நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, நாணய மதிப்பின் ஏற்ற இறக்கம் மற்றும் உலகளாவிய நிதி அழுத்தத்திற்கு எதிராக ஒரு கணிசமான பாதுகாப்பு அரணை வழங்குகிறது.</p><p>இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்நிய செலாவணி தலையீடு மற்றும் பலவீனமான மூலதன வரவு ஆகியவற்றால் இந்தியாவின் கையிருப்பு அழுத்தத்திற்கு உள்ளான நிலையில், தற்போது இந்த சாதனை ஒரு மாற்றத்தை குறிப்பதாக அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் !- முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-let-us-grow-through-sports-let-us-shine-in-victory</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-let-us-grow-through-sports-let-us-shine-in-victory#comments</comments><guid isPermaLink="false">4e5b9e79-21f9-42d7-b034-7dd8783bacf0</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:55:35 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:55:35.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,National Sports Day,தேசிய விளையாட்டு தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/3levmrdn/Vijay05.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/3levmrdn/Vijay05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/தேசிய-விளையாட்டு-தினம்">தேசிய விளையாட்டு தினம்</a> (National Sports Day) கொண்டாடப்படுகிறது. </p><p>அந்த வகையில் இன்று கொண்டாடப்படும் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனை படைத்தவருமான மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடும் இந்நாளில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes">விளையாட்டு வீரர்கள்</a>, வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.</p><p>விளையாட்டு, பதக்கங்களை வெல்வதற்கு மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, குழு உணர்வு, ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த களமாகவும் திகழ்கிறது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு உடல்தகுதி மிக அவசியம். இளம்தலைமுறையினர் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வளர்த்துக் கொள்ளவேண்டும்.  </p><p>சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி, வெற்றிகளைக் குவித்து, இந்தியாவின் மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்திட இந்நாளில் வாழ்த்துகிறேன்.</p><p>விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் ! என கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனை படைத்தவருமான மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடும் இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.<br> <br>விளையாட்டு, பதக்கங்களை வெல்வதற்கு… <a href="https://t.co/2PDvmOIngQ">pic.twitter.com/2PDvmOIngQ</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2093612370937663954?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு: தான் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-karuppaiah-clarifies-remarks-on-jallikattu-and-youth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-karuppaiah-clarifies-remarks-on-jallikattu-and-youth#comments</comments><guid isPermaLink="false">703e276b-5b7e-4a2a-ab46-6fb62c248e83</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:44:55 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:44:55.194Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,jallikattu,ஜல்லிக்கட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j60fd4y4/Karuppaiahmla001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கருப்பையா எம்.எல்.ஏ.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j60fd4y4/Karuppaiahmla001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ. கருப்பையா நேற்று சட்டசபையில் பேசும்போது, இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு என்று பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-condemns-tvk-mla-speech">அதிமுக </a>உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p>இந்த நிலையில் கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கருப்பையா எம்.எல்.ஏ. கூறியதாவது:-</p><p>இளைஞர் சமூதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம். அவர்கள் தவறான வழிக்கு போகக் கூடாது. அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஒரு பில்டிங்கிற்குள் அடைக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியம் மிக்கது. வரலாறு மிக்கது. தொன்மை வாய்ந்தது. எத்தனை ஆண்டுகளுக்கு முன் நம்முடைய சமூகம் கொண்டு வந்தது என்பது தெரியும்.</p><p>ஜல்லிக்கட்டு மறையாமல், மங்காமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நானும் ஒருவன். 2008 முதல் 2011 வரை நான்கு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு தடைபட்டது. நான் சட்டமன்ற உறுப்பினரான பின், அம்மாவிடம் கடிதம் கொடுத்து உயர்நீதிமன்றத்தை நாடி 84 நிபந்தனைகளுடன் மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்தியவன் நான்தான். அப்போது இருந்து மாவட்ட ஆட்சியர் உதவி புரிந்தார்.</p><p>இளைஞர் சமூதாயத்தை நல்வழிப்படுத்தனும், ஒரு கூண்டுக்குள் அடைக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் தான் சொன்னனே தவிர, தவறான உள்நோக்கம் கிடையாது.</p><h2>84 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்தியவன் நான்</h2><p>நான் சொன்னது அம்மா அரசு நடக்கும்போது. 4 வருடம் தடைபட்டிருக்கும்போது 84 நிபந்தனைகளுடன் நடத்தியது சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான்தான். தடை போடுவதற்கு என்ன இருக்கு? தடையே கிடையாது. ஜல்லிக்கட்டு நடைபெறும். </p><p>இளைஞர்கள் அவர்களுடைய வீரத்தை சந்தோசமான பறைசாற்றுவார்கள். சர்க்கரை ஆலை 10 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. நான் எம்.எல்.ஏ.-வாக இருந்தபோது சர்க்கரை ஆலை நன்றாக செயல்பட்டது. அங்கு (ஜல்லிக்கட்டு அரங்கம்) செலவழிக்கப்பட்ட பணம் சர்க்கரை ஆலைக்கு செலவு செய்யப்பட்டிருந்தால், 5 மாவட்ட விவசாயிகள், அவர்களுடைய வாழ்வாதாரம், மில் நன்றாக ஓடியிருக்கும். அவர்களுடைய குடும்பத்தின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.</p><p>கலைஞர் நூற்றாண்டு விழா என்று பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை செய்தது. அது மேச்சல் தரிசு நிலம். இந்த பகுதியில் எந்தவொரு கல்லூரியும் கிடையாது. 90 ஏக்கர் நிலத்தில் கால்நடை பல்கலைக்கழகம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது நான். அப்போது அரசு தரப்பில் இது தொடர்பாக பதிலும் அளிக்கப்பட்டது.</p><p>அந்த மேச்சல் நிலத்தை சுற்றுலாத் துறைக்கு கொடுத்து, சுற்றுலாத்துறைக்கு நிலம் இல்லாமல் உள்ளது. சுற்றுலாத்துறை வேறொரு இடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.</p><h2>இளைஞர்கள் வீரத்தை காட்ட வேண்டும்</h2><p>இளைஞர்களை ஒரு கூண்டுக்குள் அடைக்கக் கூடாது. இளைஞர்கள் வீரத்தை காட்ட வேண்டும். ஒரு மாடு வந்தது என்றால் திமிலை இழுத்து பிடிக்க வேண்டும். ஸ்பெயின் போன்ற ஐரோப்பா நாடுகள் மாதிரி ஒரு கட்டடத்திற்குள் விட்டு அதை ஒருவர் பிடிக்கிற மாதிரி ஜல்லிக்கட்டு விளையாட்டு அல்ல. இது நம்முடைய பாரம்பரியம். கலாசாரம். நம் முன்னோர்கள் வளர்த்து வைத்துள்ள பாரம்பரியம், பண்பாடு, தமிழர்களின் உணர்வு. அதை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.</p><p>தவெக-வின் தலைவர் இளைஞர்களை நம்பி இருக்கிறார். அவர்களை கொச்சை படுத்துவோமா?. அவர்களை சுதந்திரமாக விடுங்கள் என்று சொல்கிறோம்.</p><p>இவ்வாறு சோழவந்தான் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பெண்ணை கொன்று பிரியாணி அண்டாவில் சமைத்தார்களா?- கைதான தம்பதி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/did-they-kill-a-woman-and-cook-her-in-a-biryani-cauldron-shocking-confession-by-the-arrested-couple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/did-they-kill-a-woman-and-cook-her-in-a-biryani-cauldron-shocking-confession-by-the-arrested-couple#comments</comments><guid isPermaLink="false">973b3ff0-ae63-42c4-899f-9d01849323d1</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:14:51 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:14:51.218Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,பிரியாணி அண்டா,Guduvancherry Woman Murder,Northstate Couple,கூடுவாஞ்சேரி பெண் கொலை,வடமாநில தம்பதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/253grnax/guduvancherry.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/253grnax/guduvancherry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கைதான மொனிரு தின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகியோரிடம் கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது.</strong></em> </p><p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவப்பு நிற சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>ஆக்ராவில் போலீசார் அதனை கண்டுபிடித்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. </p><h2><strong>கூடுவாஞ்சேரியில்</strong></h2><p>இதை தொடர்ந்து ஆக்ரா போலீசார் சென்னைக்கு வந்து அதிரடி விசாரணையில் இறங்கினார்கள். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-police-investigation">சென்னை சென்ட்ரல் ரெயில்</a> நிலைய போலீசாருடன் இணைந்து விசாரித்த ஆக்ரா போலீசார் வீடியோ காட்சிகளை வைத்து  நடத்திய விசாரணையில் கொலையுண்ட பெண் அடையாளம் தெரிந்தது.</p><p>அவரது பெயர் ஹயாத் நிஷா என்பதும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவரை கூடுவாஞ்சேரியில் வைத்து வடமாநில வாலிபரும், அவரது மனைவியும் கொடூரமாக கொலை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. </p><p>தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு சென்று விசாரித்தார்கள்.</p><p>கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் பெண்ணின் உடல் பாகங்களை பெரிய பிரியாணி அண்டாவில் போட்டு வாலிபரும், அவருடன் இருந்த பெண்ணும் சமைத்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டதால் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.</p><p>இதையடுத்து பெண்ணை கொலை செய்த மொனிரு தின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தேடினார்கள். ஆனால் இருவரும் சென்னையில் இருந்து தப்பியோடி தலைமறைவானது தெரியவந்தது.</p><p>இருப்பினும் அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அசாம் மற்றும் ஒடிசாவுக்கு சென்ற 2 தனிப்படை போலீசார் அங்கு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இதில் கொலையாளியான மொனிருதின் லஸ்கர் மணிப்பூர் மாநிலத்திற்கு தப்பிச்சென்று அங்கு பதுங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.</p><h2><strong>கைது</strong></h2><p>இந்த நிலையில் நேற்று மொனிருதின் லஸ்கரை கூடுவாஞ்சேரி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அசாம் மாநிலத்தில் கிருஷ்ணாபூரில் வசித்து வந்ததை கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் முதலில் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தான் மணிப்பூருக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு வைத்து மொனிருதின் லஸ்கரை பிடித்துள்ளனர். </p><p>மொனிருதின் லஸ்கர் கைதான நிலையில் அவரது மனைவி பகவதி மாஜியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதனால் ஒடிசாவில் உள்ள அவரது உறவினர்கள்  மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி பதுங்கி இருந்த பகவதி மாஜியை போலீசார் கைது செய்தனர். </p><p>இதை தொடர்ந்து கைதான மொனிரு தின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகியோரிடம் கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. </p><p>ஒரே இடத்தில் வேலை செய்த மொனிரு தின் லஸ்கர்- நிஷா இடையே பழக்கம் ஏற்பட்டு நிஷா கர்ப்பம் ஆகி உள்ளார். மொனிரு தின் லஸ்கரிடம் திருமணம் செய்யுமாறு நிஷா கூறிய போது தனக்கு முன்பே திருமணம் நடந்ததாகவும் கர்ப்பத்தை கலைக்குமாறு கூறியுள்ளார். </p><p>இதனால் தனது மனைவியுடன் மொனிரு தின் லஸ்கர் நிஷா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மொனிரு தின் லஸ்கர் தனது இளம் மனைவியுடன் சென்று நிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வாக்குவாதமாக மாறி அடித்து கொன்றனர். நிஷாவின் தலையை வெட்டிய தம்பதி ரத்தம் வெளியில் செல்லாதவாறு பிரியாணி அண்டாவில் பிடித்துள்ளனர். </p><p>இதனையடுத்து உடலில் உள்ள சதையை வெட்டி பிரியாணி அண்டாவில் வைத்து எலும்பை மட்டும் சூட்கேசில் அடைத்து ஆக்ரா ரெயிலில் நிலையத்தில் சூட்கேசை விட்டுவிட்டு இருவரும் மணிப்பூர் தப்பிய நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்கா ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம் - அல்காரஸ் மீண்டும் பட்டம் பெறுவாரா?  </title><link>https://www.maalaimalar.com/sports/tennis/us-open-tennis-starts-tomorrow-can-alcaraz-win-again</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/us-open-tennis-starts-tomorrow-can-alcaraz-win-again#comments</comments><guid isPermaLink="false">84323dd2-4872-4ed8-a164-d78af0f9cfad</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:42:30 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:42:30.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Carlos Alcaraz,கார்லோஸ் அல்காரஸ்,Aryna Sabalenka,டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம்,USOpen2026,அமெரிக்கஓபன்,அரீனா சபலென்கா,TennisGrandSlam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/y203d0ko/Carlos-Alcaraz" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Carlos Alcaraz ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/y203d0ko/Carlos-Alcaraz?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டென்னிஸ் போட்டிகளில் பிரசித்தி பெற்றது கிராண்ட்சிலாம் போட்டியாகும். ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் போட்டிகள் நடைபெறும்.</p><h2>அமெரிக்க ஓபன் டென்னிஸ்</h2><p>இந்த ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D">ஆஸ்திரேலிய ஓபன்</a>, பிரெஞ்சு ஓபன், விம்பிள் டன் ஆகிய போட்டிகள் முடிந்து இருந்தன. </p><p>இதில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை அல்காரசும் (ஸ்பெயின்), பிரெஞ்சு ஓபன் பட்டத்தை அலெக் சாண்டர் சுவரேவ் (ஜெர் மனி), விம்பிள்டன் பட் டத்தை சின்னரும் (இத்தாலி) கைப்பற்றி இருந்தனர்.</p><p>பெண்கள் பிரிவில் எலினா ரைபகினா (கஜகஸ் தான்-ஆஸ்திரேலிய ஓபன்), மிரா ஆந்த்ரேவா (ரஷியா-பிரெஞ்சு ஓபன்), லிண்டா நோஸ்கோவா (செக் குடியரசு- விம்பிள்டன்) ஆகியோர் வெற்றி பெற்று இருந்தனர்.</p><p>ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D">அமெரிக்க ஓபன் டென்னிஸ்</a> போட்டி நியூயார்க் நகரில் நாளை தொடங்குகிறது. செப்டம்பர் 13-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.</p><h2>அல்காரஸ்</h2><p>நடப்பு சாம்பியனான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">அல்காரஸ் </a>மீண்டும் பட்டம் வெல்வாரா? என்று ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக அவர் கடந்த சில மாதங்களாக விளையாட வில்லை. இந்த போட்டி தொடரில் அவர் 2-வது வரிசையில் இருக்கிறார்.</p><p>முதல்நிலை வீரராக சுவரேவ் இருக்கிறார். 24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனை யாளரான ஜோேகாவிச் (செர்பியா) நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டம் வென்று சாதிப்பாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>கடைசியாக அவர் 2023-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். அதன் பிறகு அவர் கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றது இல்லை.</p><figure><img alt="Aryna Sabalenka " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/6ppndsvr/Aryna-Sabalenka" /></figure><h2>சபலென்கா</h2><p>பெண்கள் பிரிவில் கடந்த ஆண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">சபலென்கா </a>(பெலாரஸ்) சாம்பியன் பட்டம் பெற்றார். </p><p>இந்த முறை பெண்கள் பிரிவில் பட்டம் பெற கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/7-tn-fishermen-released-from-a-sri-lankan-prison-arrived-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/7-tn-fishermen-released-from-a-sri-lankan-prison-arrived-in-chennai#comments</comments><guid isPermaLink="false">3df9cd1b-b985-4f92-8996-a34f0d55e92d</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:23:39.127Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,TN fishermen,தமிழக மீனவர்கள்,இலங்கை சிறை,SriLanka Jail</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/4u44u0x4/fishermen.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fishermen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/4u44u0x4/fishermen.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். </p> <h2>தமிழக மீனவர்கள்</h2><p>ஒரு மாதத்திற்குப் பின்பு, இலங்கை நீதிமன்றம் அவர்களில் 3 மீனவர்களை, விடுதலை செய்தது. ஒரு மீனவர் 2-வது முறையாக, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்ய ப்பட்டிருந்ததால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். </p><p>இந்த நிலையில் அந்த மீனவர் கடந்த 17-ந் தேதி விடுதலை செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த மே மாதம் 10-ந் தேதி, ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் கடலில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். </p> <h2>சென்னை வந்தனர்</h2><p>அப்போது இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி,6 <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீனவர்களையும் கைது</a> செய்தனர். அவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்திய அரசின் அறிவுறுத்தறையின் பெயரில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். </p><p>அதன் பின்பு கடந்த 22-ந் தேதி 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் விமானம் மூலம், 7 மீனவர்களையும், நேற்று இரவு விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் 7 மீனவர்களையும் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.25 கோடி சுருட்டிய முக்கிய குற்றவாளி 5 மாதங்களுக்குப் பின் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-gold-jewellery-pledged-key-conspirator-held-in-rs-25-crore-bank-fraud</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-gold-jewellery-pledged-key-conspirator-held-in-rs-25-crore-bank-fraud#comments</comments><guid isPermaLink="false">012d3481-d71b-4055-9871-ac353b5c5a78</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:12:47 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:12:47.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nagpur,EOW raids,நாக்பூர்,Nagpur Scam,Gold Loan Fraud,தங்கநகைமோசடி,Sachin Raut Arrested,Economic Offences Wing,பொருளாதாரகுற்றப்பிரிவு,FakeGoldLoan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t82mjkm4/Nagpu-Gold-Loan-Fraud" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Nagpu -  Gold Loan Fraud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t82mjkm4/Nagpu-Gold-Loan-Fraud?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர மாநிலம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">நாக்பூரில் </a>உள்ள ஒரு பிரபல தனியார் வங்கியில், போலி தங்க நகைகளை அசல் தங்கம் எனக் கூறி அடகு வைத்து ரூ.25 கோடி வரை சுருட்டிய மோசடி வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சச்சின் ராவத் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். </p><p>கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் பிடிபட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.</p><h2><strong>ஆடிட்டிங்கில் அம்பலமான உண்மை</strong></h2><p>கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி வங்கியின் மனிஷ் நகர் கிளையில் வழக்கமான தங்கக் கடன் தணிக்கை நடைபெற்றது. </p><p>அப்போது ஒரு குறிப்பிட்ட கணக்கில் வைக்கப்பட்ட நகைகளின் எடை மற்றும் தங்கத்தின் தரம் குறித்து தணிக்கையாளர்கள் சந்தேகம் எழுப்பினர். </p><p>இதைத் தொடர்ந்து, தந்தோலி காவல் நிலையத்தில் மார்ச் 30 அன்று அதிகாரப்பூர்வமாகப் புகார் பதிவு செய்யப்பட்டது.</p><p>விசாரணையைத் தீவிரப்படுத்திய வங்கி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">நாக்பூரின் </a>9 வெவ்வேறு கிளைகளில் உள்ள 152 தங்கக் கடன் கணக்குகளை மறுஆய்வு செய்தபோது, மொத்தம் ரூ.23.31 கோடி முதல் ரூ.25 கோடி வரை மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2><strong>ஒரே நெட்வொர்க்: லஞ்சம் வாங்கி சான்றிதழ் தந்த அதிகாரிகள்</strong></h2><p>டிசிபி தீபக் அகர்வால் தலைமையிலான<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81"> பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் </a>நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த மோசடி நால்வர் கூட்டணியால் சாத்தியமாகியது தெரியவந்தது.</p><p>முக்கிய குற்றவாளியான சச்சின் ராவத், ஆரம்பத்தில் (2018-19) தனது சொந்த பெயரில் முறையாகக் கடன் பெற்று வங்கியின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளார்.</p><p>பின்னர், தனது பழைய இரும்பு வியாபாரத்தில் பணிபுரியும் ஏழைத் தொழிலாளர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் போலி நகைகள் மூலம் பல கோடி கடன் வாங்கியுள்ளார். </p><p>இது தவிர, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் 38 போலி கடன்கள் பெறப்பட்டுள்ளன.</p><h2><strong>நகை மோசடி</strong></h2><p>வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர், ஒரு போலி சான்றிதழுக்கு தலா ரூ.5,000 லஞ்சம் வாங்கிக்கொண்டு, மொத்தம் 155 போலி நகை மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயார் செய்து கொடுத்துள்ளார்.</p><p>வங்கியின் கிளை மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர் ஆகியோர் சச்சின் ராவத்தின் இந்த மோசடித் திட்டங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்துள்ளனர். </p><p>3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் தணிக்கையின் போது, <a href="https://www.maalaimalar.com/topic/fake-jewelry">போலி நகைகளை</a> அசல் தங்கம் தான் என்று சான்றளிக்க தணிக்கையாளர்களுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>போலீசாரின் அதிரடி நடவடிக்கை</strong></h2><p>குற்றவாளிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் லேப்டாப்கள், மொபைல் போன்கள், சொகுசு வாகனங்கள் மற்றும் போலி கடன் வாங்கியவர்களின் பட்டியல் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. </p><p>பணப் பரிமாற்றப் பாதைகளை ஆய்வு செய்த போலீசார், தற்போது இந்த நெட்வொர்க்கின் தலைவரான சச்சின் ராவத்தை சிறையில் அடைத்துள்ளனர்.</p><p>"கைதுகளோடு இந்த வழக்கு முடிந்துவிடவில்லை; மோசடி செய்யப்பட்ட ஒட்டுமொத்தப் பணத்தை மீட்பதும், இதில் தொடர்புடைய மற்ற போலி வாடிக்கையாளர்களைக் கண்டறிவதுமே எங்களின் அடுத்தகட்ட இலக்கு" எனப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாட்டு பிரிவினைவாத கும்பலிடம் இருந்து நாட்டை பிரதமர் மோடி பாதுகாத்து வருகிறார் - ஆந்திர மந்திரி சத்தியகுமார் யாதவ் பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/pm-modi-protecting-india-from-separatist-forces-satya-kumar-yadav</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/pm-modi-protecting-india-from-separatist-forces-satya-kumar-yadav#comments</comments><guid isPermaLink="false">d92f0cf6-4376-4d64-aaf3-26c95e151cc2</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:04:36 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:04:36.077Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,pm modi,பிரதமர் மோடி,Sathya Kumar Yadav,சத்தியகுமார் யாதவ்,Viksit Bharat 2047</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/tf6rc4pb/SathyaKumar-Yadav-PM-Modi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SathyaKumar Yadav - PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/tf6rc4pb/SathyaKumar-Yadav-PM-Modi?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரிவினைவாத சக்திகளிடமிருந்து நாட்டை பிரதமர் நரேந்திர மோடி மிக உறுதியாகப் பாதுகாத்து வருகிறார்" என்று ஆந்திர மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்தியகுமார் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடியின்</a> 25 ஆண்டுகால மக்கள் சேவையை முன்னிட்டு, “சேவை உறுதிமொழி இயக்கம்” முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><h2>25 ஆண்டுகால அர்ப்பணிப்பு</h2><p>அக்டோபர் 7-ம் தேதியோடு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">நரேந்திர மோடி</a> பொதுவாழ்வில் மிக உயரிய பொறுப்புகளை ஏற்று 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத் </a>மாநிலத்தின் முதலமைச்சராக 12½ ஆண்டுகளும், நாட்டின் பிரதமராக 12½ ஆண்டுகளும் அவர் தொடர்ச்சியாகப் பணியாற்றியுள்ளார். </p><p>எந்தவித சுயநலமும் இன்றி, முழு அர்ப்பணிப்புடன் அவர் நாட்டுக்குச் சேவை செய்து வருகிறார்.</p><h2><strong>பிரிவினைவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி</strong></h2><p>இந்தியா வலிமையான மற்றும் வளமான நாடாக மாறுவதையே தனது முதல் நோக்கமாகக் கொண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் </a>செயல்பட்டு வருகிறார்.</p><p>குறிப்பாக, இந்தியாவைத் துண்டாட நினைக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரிவினைவாத கும்பல்களின் சதித்திட்டங்களை முறியடித்து, நாட்டின் பாதுகாப்பை அவர் உறுதி செய்துள்ளார்.</p><p>2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் முதன்மை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும் நோக்கில் பல்வேறு தொலைநோக்கு நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.</p><h2><strong>ஒரு மாதம் தொடரும் "சேவை திருவிழா"</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடியின்</a> பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி முதல் அக்டோபர் 17-ந் தேதி வரை ஒரு மாதம் முழுவதும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் 13 வகையான சேவை நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.</p><p>இதையொட்டி நாடு முழுவதும் பா.ஜனதா தொண்டர்கள் தீவிரமாக களப்பணியாற்ற உள்ளனர் என்று ஆந்திர மந்திரி சத்தியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 17-ந்தேதி விருதுநகரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-started-morning-breakfast-extension-in-govt-schools</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-started-morning-breakfast-extension-in-govt-schools#comments</comments><guid isPermaLink="false">fd6ee79d-a9c7-4780-8540-f11f5350f467</guid><pubDate>Sat, 29 Aug 2026 07:49:29 +0000</pubDate><atom:updated>2026-08-29T07:49:29.584Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,govt schools,அரசு பள்ளிகள்,காலை உணவு திட்டம்,Morning Breakfast</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/49xr7wuo/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/49xr7wuo/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வருகிற செப்டம்பர் 17-ந்தேதி பெரியார் பிறந்தநாளன்று மதிய உணவு திட்டத்தை தந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில் இந்த திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</strong></em> </p><p>தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டம் அடுத்தடுத்து வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.</p><h2><strong>விரிவாக்கம்</strong></h2><p>இந்த நிலையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காலை உணவு திட்டத்தை</a> அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் வாரத்தின் 5 நாட்களும் மாணவ, மாணவிகளுக்கு ரவா உப்புமா, ரவா கிச்சடி, வெண் பொங்கல், சேமியா கிச்சடி, ரவா கேசரி மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை தி.மு.க. அரசு விரிவாக்கம் செய்தது. </p><p>இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced">காலை உணவு திட்டத்தை</a> ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.268 கோடி நிதி நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. </p><p>வருகிற செப்டம்பர் 17-ந்தேதி பெரியார் பிறந்தநாளன்று மதிய உணவு திட்டத்தை தந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில் இந்த திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த கே.வி.எஸ். (காமராஜ் வித்யாசலா) நடுநிலைப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது வரை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. எனினும் விழா நடைபெறுவதாக கூறப்படும் கே.வி.எஸ். பள்ளியில் தற்போது இருந்தே முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. </p><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கே.வி.எஸ். பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முதலமைச்சர் வரும் வழித்தடங்கள், விழா நடைபெறும் இடம், மாணவ, மாணவிகளை சந்திப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.</p><p>விருதுநகர் கே.வி.எஸ். (காமராஜ் வித்யாசலா) பள்ளியில் ஒருபுறம் இதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சரின் வருகை குறித்து தற்போது வரை அரசு சார்பில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டை போற்றுவோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes#comments</comments><guid isPermaLink="false">5b71f544-0823-4dbc-b365-d74c5cdeafdf</guid><pubDate>Sat, 29 Aug 2026 07:26:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T07:26:05.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,National Sports Day,தேசிய விளையாட்டு தினம்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/x4he97gx/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna - National Sports Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/x4he97gx/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில் விரைவில் ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) கொண்டாடப்படுகிறது.</p><p>இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. </p> <p>மேஜர் தியான் சந்த் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தது.</p><p>இந்தியாவில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கும், ஆரோக்கியமான உடல் உறுதியைப் பேணுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தேசிய விளையாட்டு தினம் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.  </p> <p>இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அல்லது சிறப்பு விழாக்களில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்கும் தலைசிறந்த வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, மற்றும் துரோணாச்சார்யா விருது போன்ற உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.</p><p>இந்நிலையில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-candidates-voters-to-respond-in-court-on-cm-vijay-adhav-arjuna-election-cases">ஆதவ் அர்ஜுனா</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>விளையாட்டு என்பது ஒருவருக்கு வெற்றியையோ, தோல்வியையோ தருவதில்லை. மாறாக, விளையாடுபவர்கள் அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கிறது; உடல் வலிமையை உறுதிப்படுத்துகிறது; மகிழ்வான பொழுதுகளை வழங்குகிறது; போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீங்கான வழிகளிலிருந்து பாதுகாக்கிறது; இறுதியாக, ஒவ்வொரு மனிதர்க்கும் அவர்கள் யார் என்கிற சிறப்பை அடையாளம் காட்டுகிறது.</p> <p>ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டிற்குத் தொடர் தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மேஜர். தியான் சந்த் பிறந்தநாள், தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டைப் போற்றுவோம்.</p> <p>தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விளையாட்டைச் சென்றடையச் செய்வதும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதுமே தமிழ்நாடு அரசின் முதன்மை நோக்கமாகும்; இதற்காக 8-18 திட்டம், 10 ஒலிம்பிக் சிறப்புப் பயிற்சி மையங்கள், வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள், குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவித்துள்ளோம். தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale">முதலமைச்சர் விஜய்</a> அவர்களின் வழிகாட்டுதலில் விரைவில் ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்ப்போம்.</p><p>அனைவருக்கும் தேசிய விளையாட்டு நாள் நல்வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-government-information-another-39-tamils-stranded-in-tibet-are-safe</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-government-information-another-39-tamils-stranded-in-tibet-are-safe#comments</comments><guid isPermaLink="false">7f565151-e836-4f82-a3a7-913a082b07e4</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:59:24 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:59:24.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,தமிழர்கள்,Tamil people,TN Government,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/6pfaph48/tibet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/6pfaph48/tibet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> <em><strong>திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.</strong></em></p> <h2>நேபாள பெருவெள்ளம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/nepal-flash-floods-320-indians-missing">நேபாளத்தில்</a> கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானார் மாயமாகி உள்ளனர்.</p><p>நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பேரிடரில் சிக்கியவர்களை தேடி மீட்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.</p> <h2>சுற்றுலா சென்ற தமிழர்கள்</h2><p>நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-21-tamil-people-return-chennai-safely">தமிழர்களும்</a> இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கினார்கள். அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.</p><p>இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க தமிழக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.</p> <h2>21 தமிழர்கள் மீட்பு</h2><p>21 தமிழர்கள் தமிழகம் திரும்பிய நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்கள் பலரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மத்திய அரசுடன் இணைந்து தொடர் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அமைச்சர்கள் குழு ஈடுபட்டுள்ளது.</p><p>இந்நிலையில் திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.</p> <h2> 39 தமிழர்கள் பாதுகாப்பு</h2><p>திபெத்தில் சிக்கி உள்ள 39 தமிழர்களும் நலமாக உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில் நாளை நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டு டெல்லி அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.</p><p>நேபாளத்திலிருந்து டெல்லி வந்தடைந்ததும் 33 பேர் கோவைக்கும், 6 பேர் சென்னைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் சோகம்: 3 வயது குழந்தையை பாலத்தின் மீது தவிக்கவிட்டு கோதாவரி ஆற்றில் குதித்த தம்பதி!</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-couple-dies-by-suicide-in-godavari-leaving-toddler-on-bridge</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-couple-dies-by-suicide-in-godavari-leaving-toddler-on-bridge#comments</comments><guid isPermaLink="false">50be2d14-6129-4fb0-9d17-c08e29dea3b8</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:57:10 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:57:10.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆந்திரபிரதேசம்,Godavari river,கோதாவரி ஆறு,AndraPradesh,Family Tragedy,Financial Distress,Child Rescuedce</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/lf0mju7h/Family-Tragedy" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Family Tragedy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/lf0mju7h/Family-Tragedy?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">ஆந்திரப் பிரதேச</a>த்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், வியாழக்கிழமை இரவு தங்களின் 3 வயது ஆண் குழந்தையை பாலத்தின் மீது தனியாக தவிக்கவிட்டு, பெற்றோர் இருவரும் கோதாவரி ஆற்றில் குதித்த செய்தி நெஞ்சை உலுக்கும் சம்பவமாக அரங்கேறியுள்ளது.</p><h2><strong>நள்ளிரவில் நடந்த பயங்கரம்</strong></h2><p>வேல்புரூ கிராமத்தைச் சேர்ந்த <strong>தொட்டா சாய் (29)</strong> மற்றும் அவரது மனைவி <strong>சிரீஷா (28)</strong> ஆகிய இருவரும், வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் தங்களது 3 வயது குழந்தையுடன் ஸ்கூட்டரில் சின்சினாடா பாலத்திற்கு வந்துள்ளனர்.</p><p>அங்கு யாரும் எதிர்பாராத விதமாக, குழந்தையை ஸ்கூட்டரிலேயே அமரவைத்துவிட்டு, இருவரும் ஆற்றில் குதித்துள்ளனர்.</p><h2>"அம்மா... அப்பா..." - கதறிய குழந்தை</h2><p>இருள் சூழ்ந்த, கடுமையான குளிரில் அந்தப் பிஞ்சு குழந்தை பாலத்தின் மீது தனியாக நின்றுகொண்டிருந்தது.</p><p>தெலுங்கில் "அம்மா... அப்பா " என்று அழுதுகொண்டே கத்தியுள்ளது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், குழந்தை தனியாக அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். </p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையை மீட்டு அவர்களது உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.</p><h2><strong>தீவிர தேடுதல் வேட்டை</strong></h2><p>அண்மையில் பெய்த மழையால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">கோதாவரி ஆற்றில்</a> வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. </p><p>இதனால், ஆற்றில் குதித்த தம்பதியை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டாலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நீச்சல் வீரர்கள் மற்றும் படகு குழுவினர் இணைந்து ஆற்றில் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><h2>காரணம் என்ன?</h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநராக பணிபுரிந்து வந்த தொட்டா சாய், வளைகுடா நாட்டிற்குச் சென்றுவிட்டு சமீபத்தில்தான் ஆந்திரா திரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p>அவர் கடன் சுமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அவர்கள் தங்களது வீட்டை விற்க முடிவெடுத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.</p><p>எனினும், தற்கொலை முயற்சிக்கான முழுமையான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. </p><p>சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/velankanni-matha-temple-church-festival</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/velankanni-matha-temple-church-festival#comments</comments><guid isPermaLink="false">85075069-30a3-4542-8323-29da931d2534</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:40:57 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:40:57.213Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Velankanni Mata,Velankanni Festival,Velankanni,வேளாங்கண்ணி பேராலயம்,வேளாங்கண்ணி,வேளாங்கண்ணி திருவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/bhkxazdm/velankannic.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/bhkxazdm/velankannic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.</p><h2><strong>‘கீழ்​திசை நாடுகளின் லூர்து நகரம்’</strong></h2><p>‘கீழ்​திசை நாடுகளின் லூர்து நகரம்’ என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.</p><h2><strong>ஆண்டு பெருவிழா கொடியேற்றம்</strong></h2><p>முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்​வலம் புறப்படும். பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து, திருத்தல கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்​கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் ஆகியவை நடைபெறுகிறது.</p><h2><strong>சிலுவைப்பாதை</strong></h2><p>தொடர்ந்து, நாளை (30-ந்தேதி) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை பேராலயம், விண்​மீன் ஆலயம், மாதாகுளம், மேல்​கோயில், கீழ்​கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது. இதனிடையே வருகிற 1-ந்தேதி சிலுவைப்பாதை ஊர்வலம் நடக்கிறது.</p><h2><strong>பெரிய தேர்பவனி</strong></h2><p>விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்பவனியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தொடர்ந்து, 8-ந்தேதி விண்​மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்று காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாய​ராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுப்​பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கொடி இறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவடைகிறது.</p><h2><strong>ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்</strong></h2><p>ஆண்டு பெருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதேப்போல், சிறு, சிறு குழுக்களாக பிரிந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த படி உள்ளனர். இவ்வாறு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வசதிக்காக நாகை மற்றும் வேளாங்கண்ணி பகுதிகளில் ஆங்காங்கே அன்னதானம், குடிநீர், தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்கள், தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளை அரவணைத்த வீராங்கனைகள் 
- நம்பிக்கையை விதைக்கும்
வீடியோ </title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-twin-babies-rescued-a-heartwarming-video-that-sowed-hope</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-twin-babies-rescued-a-heartwarming-video-that-sowed-hope#comments</comments><guid isPermaLink="false">418f12f8-74cb-4f27-bfe2-ebaef20a7020</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:39:43 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:39:43.242Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வைரல் வீடியோ,வெள்ளம்,floods,viral video</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/a4xxgm1z/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/a4xxgm1z/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளத்தில் </a>கடந்த புதன்கிழமை ரசுவா மாவட்டத்தில் கோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி இதுவரை 626 பேர் பலியாகியுள்ளனர். 2500க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். </p><p>நேபாள ராணுவத்துடன் இணைந்து மீட்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. முதலில் வெளிநாட்டு மீட்பு குழுக்களின் உதவியை மறுத்த நேபாள் தற்போது உதவியை ஏற்பதாக அறிவித்துள்ளது. </p><p>இதனிடையே மீட்பு பணிகள் தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. </p><p>பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். இருந்தபோதும் பலர் உயிருடன் மீட்கப்படுவது மக்களையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>குழந்தைகள் மீட்பு</h2><p>இந்த சூழலில் நேபாள வெள்ளத்தில் சிக்கிய இரட்டை குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட குழநதைகளை நேபாள ராணுவப் பெண் வீராங்கனைகள் தங்கள் கையில் ஏந்தியுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>எங்கும் மரண ஓலம் ஒலிக்கும் நம்பிக்கையற்ற சூழலுக்கு மத்தியில் இந்த நிகழ்வு அழிவில் இருந்து மீளும் நம்பிக்கையை வழங்கி இருக்கிறது.</p><p>மேலும் தங்கள் உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபடும் வீரர் வீராங்கனைகளின் துணிச்சலையும் பறைசாற்றும் வண்ணம் அமைந்துள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Amid the devastating floods in Nepal, two little lives found the most beautiful support.<br><br>The way the women soldiers held the rescued twin babies in their arms and comforted them with such warmth and care is truly heart touching.<br><br>In the middle of a disaster, this beautiful…</p>&mdash; Ajit Doval ᴾᵃʳᵒᵈʸ (@IAjitDoval_IND) <a href="https://x.com/IAjitDoval_IND/status/2093201619534184845?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>தொடரும் மீட்பு பணிகள்</h2><p>நேபாள ராணுவம் ரசுவா மாவட்டத்தில் இதுவரை 883 பேரைக் காப்பற்றியுள்ளது.</p><p>இதில் மேல் திரிசூலி நீர்மின் திட்டத் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளும் அடங்குவர்.</p> <h2>சிக்கல்</h2><p>வெள்ளபெருக்கில் வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் மின் உள்கட்டமைப்புகளை அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பள்ளத்தாக்கு கிராமங்கள் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு உதவி சென்று சேருவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.</p><p>இதனிடையே சீனா - திபெத் எல்லையில் மேலும் ஒரு <a href="https://www.maalaimalar.com/news/world/626-people-died-new-lake-changed-color-china-warns-nepal">புதிய செயற்கை ஏரி</a> உருவாகி உள்ளதும் அதனை தடுத்து நிறுத்தியிருக்கும் பனிப்பாறைகள் உடைந்து நீர் வேகமாக கீழ்நோக்கி வரும் ஆபத்து என்பதால் நேபாளத்தில் மீண்டும் வெள்ளைப்பருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எங்களை வழிமறித்து கூட பொதுமக்கள் பிரச்சனைகளை சொல்லலாம்: அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-says-members-of-the-public-can-even-stop-us-to-voice-their-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-says-members-of-the-public-can-even-stop-us-to-voice-their-issues#comments</comments><guid isPermaLink="false">04b342cc-ee31-4e82-8d0b-7ee881f16f91</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:04:19 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:04:19.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Drugs,போதை பொருள்,tvk,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/grmkemng/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/grmkemng/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் செல்லும்போது எங்களை வழி மறித்து கூட சொல்லுங்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.</strong></em></p><p>மதுரை காந்தி மியூசியத்தில்  தனியார் பள்ளி சார்பில் இன்று போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை சட்டத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-நிர்மல்குமார்">அமைச்சர் நிர்மல்குமார்</a> கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>உரிமை உள்ளது</strong></h2><p>போதை பொருட்கள் சாக்லெட் உள்ளிட்ட எல்லா வடிவிலும் கிடைக்கிறது. இதுகுறித்து தெரிந்தால் மாணவர்கள் உடனே ஆசிரியரிடம் சொல்ல வேண்டும். இது உங்கள் அண்ணனோட அரசு. நீங்கள் எல்லாம் சேர்ந்து உருவாக்கிய அரசு தான் இது. 100 சதவீத உரிமை உங்களுக்கு உள்ளது.</p><p>மாணவ-மாணவிகளாகிய நீங்கள் பள்ளிக்கு செல்லும்போது இடையூறு வந்தாலோ, போதை பொருள் விற்பனை தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தால், எந்த பயமுமின்றி ஆசிரியர்களிடம் கூறுங்கள். உங்களுக்கு வேலை பார்க்க தான் த.வெ.க. அரசு உள்ளது. போதை பொருள் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக நீங்கள் மற்றவர்களிடம் எடுத்து கூற வேண்டும். காவல்துறை முன்புபோல இல்லை.</p><p>குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலமைச்சர் விஜய்யின் முதல் முன்னுரிமை. பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் செல்லும்போது எங்களை வழி மறித்து கூட சொல்லுங்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கோபிசன், மதார் பதூருதின் என்ற முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  </p><h2><strong>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடம்</strong></h2><p>அண்மையில் தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாவில் முதலாவதாக பாட வேண்டும் என அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால் இன்று மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்ற போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி தொடக்க விழாவில் முதலாவதாக பள்ளியின் பாடலும், அதனை தொடர்ந்து கடவுள் வாழ்த்தும் பாடப்பட்டது. 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த நடைமுறை விழாவில் பங்கேற்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் என் அருகில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்- அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale#comments</comments><guid isPermaLink="false">33881fcd-38d3-430f-8930-cb3c56fc5034</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:52:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:52:05.058Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t5lv3hva/sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t5lv3hva/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் என் அருகில் அமர்ந்து இருந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாக தமிழக வெற்றிக் கழக அரசு  செயல்பட்டு வருகிறது என்றார்.</strong></em> </p><p>தமிழக வருவாய்த்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">அமைச்சர் செங்கோட்டையன்</a> கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்தியாவுக்கே வழிகாட்டும் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதே இலக்கு என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், ஒவ்வொரு துறையாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.</p><h2><strong>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</strong></h2><p>இதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தும், சென்னை புழல் சிறைக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்டார். சென்னை குடிநீர் திட்டப்பணிகளையும் நேரில் ஆய்வு செய்து, மக்களின் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். நேபாள துயர சம்பவம் தொடர்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அங்கு நடைபெற்று வரும் கள நிலவரங்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வருகிறோம். நேபாளத்தில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 4 அமைச்சர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் மத்திய அரசுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>சட்டசபையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> என் அருகில் அமர்ந்து இருந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாக தமிழக வெற்றிக் கழக அரசு  செயல்பட்டு வருகிறது என்றார். </p>]]></content:encoded></item><item><title>விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-let-us-make-sports-a-part-of-life-and-build-a-strong-india</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-let-us-make-sports-a-part-of-life-and-build-a-strong-india#comments</comments><guid isPermaLink="false">e4871e37-a5e7-41cf-9246-a3f248e1fbe5</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:41:55 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:41:55.648Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,National Sports Day,தேசிய விளையாட்டு தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/zvfxphmz/nainarnagendran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/zvfxphmz/nainarnagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தேசிய விளையாட்டு தினம்</h2><p>இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) கொண்டாடப்படுகிறது.</p><h2>மேஜர் தியான் சந்த்</h2><p>இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. </p> <p>மேஜர் தியான் சந்த் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தது.</p><p>இந்தியாவில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கும், ஆரோக்கியமான உடல் உறுதியைப் பேணுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தேசிய விளையாட்டு தினம் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.  </p> <h2>துரோணாச்சார்யா விருது</h2><p>இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அல்லது சிறப்பு விழாக்களில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்கும் தலைசிறந்த வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, மற்றும் துரோணாச்சார்யா விருது போன்ற உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.</p><p>விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது நம் வாழ்வில் ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் உடல்நலத்தை வளர்க்கும் ஒரு அத்தியாவசியக் கலை என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதே இந்நாட்டின் முக்கிய நோக்கமாகும்.</p> <p>பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை ஒரு வாழ்வியலாக மாற்றும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாரத்தான் போட்டிகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன.</p><h2>நயினார் நாகேந்திரன்</h2><p>இந்நிலையில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பா.ஜ.க.</a> மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்</p> <p>அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின நல்வாழ்த்துகள்!</p><p>விளையாட்டு என்பது வெற்றிக்கான பாதை மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை வளர்க்கும் சிறந்த களம்.</p> <p>பாரத இளைஞர்கள் அனைவரும் விளையாட்டில் ஆர்வம் கொண்டு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணி, தங்கள் திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இருக்கும் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.</p> <p>விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி, ஆரோக்கியமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>4 நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-left-for-uzbekistan-and-kyrgyzstan-on-a-4-day-trip</link><comments>https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-left-for-uzbekistan-and-kyrgyzstan-on-a-4-day-trip#comments</comments><guid isPermaLink="false">c1e56c42-2fa8-434b-9d7d-021a3fbf207a</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:15:14 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:15:14.303Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,uzbekistan,பிரதமர் மோடி,உஸ்பெகிஸ்தான்,கிர்கிஸ்தான்,Kyrgyzstan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/z9jeprlk/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/z9jeprlk/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி </a>உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாகச் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டார். </p><p>இந்தப் பயணத்தின் போது முதலாவதாக அவர் உஸ்பெகிஸ்தான் செல்கிறார். </p><p>உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத்  மிர்சியோயேவுடன் பிரதமர் மோடி, இந்தியா-உஸ்பெகிஸ்தான் மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.</p><p>அங்கு இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் செல்கிறார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: Prime Minister Narendra Modi leaves for Tashkent, Uzbekistan<br><br>During the visit, the Prime Minister will hold delegation-level talks with President Mirziyoyev to further strengthen the strategic partnership between the two countries. The two leaders will review… <a href="https://t.co/PG3DnIXHoU">https://t.co/PG3DnIXHoU</a> <a href="https://t.co/uS1Lr8ZqDr">pic.twitter.com/uS1Lr8ZqDr</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2093549407895703611?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>மோடி பதிவு</h2><p>புறப்படுவதற்கு முன்னதாகப் பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மத்திய ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மூலோபாயப் பங்களிப்பை வலுப்படுத்துவதிலும், அப்பகுதியுடனான உறவுகளை ஆழப்படுத்துவதிலும் இந்தப் பயணம் கவனம் செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.</p><p>"வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு, எரிசக்தி ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்தும், நமது 'வளர்ச்சியடைந்த இந்தியா' மற்றும் 'புதிய உஸ்பெகிஸ்தான்' என்ற பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வைகளை முன்னோக்கி எடுத்துச் செல்வது குறித்தும் அதிபர் மிர்சியோயேவுடனான எனது பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.</p> <p>பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் செல்வது இது நான்காவது முறையாகும். தாஷ்கண்ட் மாநிலக் கிழக்கத்திய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி நினைவிடம் மற்றும் மகாத்மா காந்தி மையத்திற்கும் பிரதமர் செல்லத் திட்டமிட்டுள்ளார்.</p> <h2>உச்சிமாநாடு</h2><p>தாஷ்கண்டில் இருந்து, கிர்கிஸ்தான் அதிபர் சாதிர் ஜபரோவின் அழைப்பின் பேரில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் </a>அமைப்பின் 25 ஆண்டுகளைக் குறிக்கும் 26வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி பிஷ்கேக் செல்வார்.</p><p>இந்தியா 2017 முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு மற்றும் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறது.</p><p>பிஷ்கேக்கில் நடைபெறும் இந்த இரண்டு நாள் உச்சிமாநாட்டில் ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ட்வென்டி எடிஷன் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம் - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/range-rover-sport-twenty-edition-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/range-rover-sport-twenty-edition-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">a958e67d-a090-498e-855e-3d4e5d57a9c2</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:14:00 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:14:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Range Rover,ரேன்ஜ் ரோவர்,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ozxpb1sq/Range-Rover-Sport-Twenty-Edition.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Range Rover Sport Twenty Edition]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ozxpb1sq/Range-Rover-Sport-Twenty-Edition.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/range-rover">ரேன்ஜ் ரோவர்</a> ஸ்போர்ட் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், அதன் சிறப்புப் பதிப்பு ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. </p><p>'தி ட்வென்டி எடிஷன்' என்று அழைக்கப்படும் இந்த மாடலில், ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SV சீரிசில் இருந்து பெறப்பட்ட பிரத்யேக 'ட்வென்டி' விவரங்கள், முதன்மை பவர்டிரெய்ன்கள் மற்றும் செயல்திறன் மிக்க இருக்கைகள் இடம்பெற்றுள்ளன.</p><p>இது மேம்படுத்தப்பட்ட வெளிப்புற விவரங்கள், செம்மைப்படுத்தப்பட்ட உட்புற அம்சங்கள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட பவர்டிரெய்ன் தேர்வுகளை அறிமுகப்படுத்துகிறது. </p><p>அசல் 'ஸ்டார்மர்' ஆரஞ்சு ரேன்ஜ் ஸ்டார்மர் கான்செப்ட் மற்றும் வெசுவியஸ் ஆரஞ்சு ஃபர்ஸ்ட் எடிஷன் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஆகியவற்றில் இருந்து உத்வேகம் பெற்று இந்த ட்வென்டி எடிஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. </p><h2>பலவித வண்ண விருப்பங்கள்:</h2><p>sபுதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் சான்டோரினி பிளாக் மற்றும் ஒஸ்டுனி ஒயிட் உள்ளிட்ட பரந்த வண்ண தேர்வுகளுடன், ஒரு துணிச்சலான, அதி-உலோக தன்மையுள்ள சங்குனெல்லோ ஆரஞ்சு ஃபினிஷில் கிடைக்கிறது.</p><p>இவற்றை தவிர்த்து மேலும் நுட்பமான மாடலை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளாக் எக்ஸ்டீரியர் பேக் உள்ளது. இந்த வெர்ஷனில் 'TWENTY' என்ற பொறிப்பு மற்றும் 23-இன்ச் ஸ்பார்க்கிள் சில்வர் வீல்களை கொண்டிருக்கிறது. இதன் உள்புறத்தில், ஒளிரும் 'TWENTY' ட்ரெட்பிளேட்டுகள் மற்றும் 'TWENTY' சென்டர் கன்சோல் எழுத்துக்கள் வழங்கப்படுகின்றன.</p><p>ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராஃபி வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு, பிரேக்கிங் மூலம் டார்க் வெக்டரிங் செய்யும் எலக்ட்ரானிக் ஆக்டிவ் டிஃபரன்ஷியல், ஆல்-வீல் ஸ்டீயரிங், டெரெய்ன் ரெஸ்பான்ஸ் புரோகிராம்கள் மற்றும் டைனமிக் ஏர் சஸ்பென்ஷன் ஆகியவை வழங்கப்படுகின்றன.</p><h2>சக்திவாய்ந்த என்ஜின்:</h2><p>இதன் உள்புறம், செயல்திறன் மிக்க முதன்மை மாடலான ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SV-இல் இருந்து பெறப்பட்ட எபோனி வின்ட்சர் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. எடை குறைந்த, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மற்றும் மோட்டார் பந்தயத்தால் ஈர்க்கப்பட்ட இந்த இருக்கைகள், துல்லியமாக வடிவமைக்கப்பட்ட பயன்பாட்டு வசதியை ஆடம்பர கைவினைத்திறனுடன் இணைக்கின்றன.</p><p>புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் 4.4-லிட்டர் ட்வின் டர்போ V8 மைல்ட் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது, இது 529bhp பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிககு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும்.</p> ]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டை இழிவுப்படுத்தி பேசுவதா?- தவெக எம்எல்ஏவுக்கு அதிமுக கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-condemns-tvk-mla-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-condemns-tvk-mla-speech#comments</comments><guid isPermaLink="false">5098c24c-62db-49a4-8add-42a34cfd63d4</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:49:00 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:49:00.065Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,tvk,jallikattu,ஜல்லிக்கட்டு,தவெக எம்எல்ஏ,TVK MLA</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/m1e0rd4a/ADMKOffic.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிமுக]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/m1e0rd4a/ADMKOffic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக தெரிவித்துள்ளது.</strong></em> </p><p><a href="http://www.maalaimalar.com/topic/அதிமுக">அ.தி.மு.க. </a>தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.</p><h2><strong>சந்தேகம்</strong></h2><p>சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்?</p><p>மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?</p><h2><strong>மன்னிப்பு கேட்க வேண்டும்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-urges-tvk-mla-karuppaiya-must-apologize">ஜல்லிக்கட்டிற்கு</a> தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது MLA-வை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது.</p> <p>தனது MLA பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்!</p><p>(பி.கு. : Incase you have forgotten, 2017-ல் “இதுக்கு காரணமான அமைப்பை வெளியே அனுப்’பீட்டா’ ” என்று நீங்கள் வெளியிட்ட வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்க்கவும்)</p><p>இவ்வாறு கூறப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழரின் பாரம்பரியமான <a href="https://x.com/hashtag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ஜல்லிக்கட்டு</a> விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.<br><br>ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி…</p>&mdash; AIADMK (@AIADMKOfficial) <a href="https://x.com/AIADMKOfficial/status/2093554912043085899?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இந்திய சந்தையில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் கார்பன் - லீக் ஆன புது ஸ்மார்ட்போன் விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/karbonn-making-a-comeback-with-zen-z-pro-smartphone</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/karbonn-making-a-comeback-with-zen-z-pro-smartphone#comments</comments><guid isPermaLink="false">e70f9bd8-5a49-4f0c-bf08-b00c90a2b98c</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>smartphone,கார்பன்,Karbonn,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ezac91nc/File-Pic-karbonn-Mobile.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic: karbonn Mobile]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ezac91nc/File-Pic-karbonn-Mobile.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/karbonn">கார்பன்</a> நிறுவனம் இந்திய ஸ்மார்ட்பன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறது. உள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்டான கார்பன், தனது ரீ-என்ட்ரி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனினும், கார்பன் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றுள்ளன.</p><p>கீக்பென்ச் தகவல்களின் படி இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> பல்வேறு ஸ்கோர்களை பெற்றுள்ளது. எனினும், இதன் சிறப்பம்சங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகவே உள்ளன. புதிய ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், ஆக்டா கோர் மீடியாடெக் சிப்செட் உடன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.</p><h2>கீக்பென்ச் தளத்தில் கார்பன் ZenZ ப்ரோ:</h2><p>கார்பன் நிறுவனத்தின் புதிய ZenZ ப்ரோ ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றுள்ளது. டெஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோரில் 422 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டிங்கில் 1,525 புள்ளிகளையும் பெற்றுள்ளது.</p><p>மற்றப்படி புதிய ZenZ ப்ரோ மாடல் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். உடன் வரும் என்றும் அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியீட்டின் போது இந்த ஸ்மார்ட்போன் மேலும் சில வெர்ஷன்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது கீக்பென்ச் தகவல்களின் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் MT6769V/CB ஆக்டா-கோர் சிப்செட் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அந்த வகையில் வெளியீட்டின் போது இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G70 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகிறது. இத்துடன் மாலி-G52 MC2 GPU கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது.</p><h2>ஸ்மார்ட்போன் சந்தையில் ரீ-எண்ட்ரி:</h2><p>கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், கார்பன் ZenZ ப்ரோ மூலம் இந்திய சந்தையில் கார்பன் பிராண்டு மீண்டும் களமிறங்குவது உறுதியாகிறது. எனினும், இதுபற்றி கார்பன் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு இதுவரை உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது.</p><p>கார்பன் பிரான்டு முன்னதாக என்ட்ரி லெவல் ஃபீச்சர் போன், ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் டிவி மற்றும் மொபைல் போன் அக்சஸரீக்களை விற்பனை செய்து வந்தது. 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கார்பன் மொபைல் நிறுவனம் புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்தது.</p>]]></content:encoded></item></channel></rss>