<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 08 Aug 2026 03:22:49 +0000</lastBuildDate><item><title>சென்னையில் நாளை முதல் தொடங்குகிறது தமிழ் ஆக்கி லீக் போட்டி</title><link>https://www.maalaimalar.com/sports/tamil-hockey-league-begins-in-chennai-from-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/sports/tamil-hockey-league-begins-in-chennai-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">7d41c9cd-b82b-4a8b-ba62-e189ed6711c9</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:21:53 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:21:53.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hockey,லீக் போட்டி,League,ஹாக்கி,தமிழ் ஆக்கி லீக் போட்டி,Tamil hockey league</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/95pprbs8/hockey1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Hockey League]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/95pprbs8/hockey1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆக்கி திருவள்ளூர் சார்பில் தமிழ் ஆக்கி லீக் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் செப்டம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது.</p><p>ரேலா மருத்துவமனை ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் இந்தியன் வங்கி, வருமான வரி, தெற்கு ரெயில்வே, எஸ்.எம்.நகர், ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி, எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணியும், 'பி' பிரிவில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, ஏ.ஜி.அலுவலகம், தயாந்த் வீரன்ஸ், பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ், இந்திய உணவு கழகம், ஐ.சி.எப். அணியும் இடம் பெற்றுள்ளன.</p><p>லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-3' இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்குள் நுழையும். சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.</p><p>இந்த போட் டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயி ரமும் பரிசாக வழங்கப்படும்.</p><p>தொடக்க நாளில் நடைபெறும் ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. -எஸ்.டி.ஏ.டி அணிகள் (பிற்பகல் 2.30 மணி) மோதுகின்றன.</p><p>இது தவிர பெண்களுக்கு மினி லீக் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது. இதில் 4 அணிகள் கலந்து கொள்கின்றன.</p><p>இந்த தகவலை போட்டி அமைப்பு குழு தலைவர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது போட்டி இயக்குனரும், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனுமான வி.பாஸ்கரன், டெக்னிக்கல் அதிகாரி முனீர் சேட்.</p><p>இந்திய அணியின் முன்னாள் வீரர் திரு மால்வளவன், சென்னை ஆக்கி சங்க செயலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியில், போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-special-train-between-tambaram-to-thiruvananthapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-special-train-between-tambaram-to-thiruvananthapuram#comments</comments><guid isPermaLink="false">7134b44e-716c-4ada-a2d2-fe4a18fe10ce</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:20:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:20:45.184Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,special train,சிறப்பு ரெயில்,ஓணம்,onam festival,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/hf3lirs7/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/hf3lirs7/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>56 சிறப்பு ரெயில்கள்</strong></h2><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி முதல் அடுத்த மாதம் 6-ந்தேதி வரை தெற்கு ரெயில்வே சார்பில் 56 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும்) கேரளம் மாநிலம் கொல்லத்திற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06119) இயக்கப்படுகிறது. அதே போல, கொல்லத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06120) இயக்கப்படுகிறது.</p><h2><strong>தாம்பரம்-திருவனந்தபுரம்</strong></h2><p>திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும்) தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் (06110) இயக்கப்படுகிறது.</p><p>அதே போல, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam">தாம்பரத்தில்</a> இருந்து வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06109) இயக்கப்படுகிறது.</p><p>மங்களூரு சென்ட்ரலில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (06126) இயக்கப்படுகிறது.</p><p>அதே போல, சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 18-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரை (செவ்வாய்க்கிழமை மட்டும்) மங்களூரு சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06125) இயக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today#comments</comments><guid isPermaLink="false">99c6bdd2-2d47-4c55-bfd7-ba6c22d4463c</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:12:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:12:43.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,Amit Shah,அமித்ஷா,Tiruvannamalai,திருவண்ணாமலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26372197-amit.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26372197-amit.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.</strong></em> </p><p>மத்திய உள்துறை மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE">அமித்ஷா</a> மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4.20 மணியளவில் திருவண்ணாமலைக்கு வருகிறார்.</p> <h2>அருணாசலேஸ்வரர் கோவில்</h2><p>ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும் அமித்ஷா காரில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">திருவண்ணாமலை</a> கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அவர் பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். </p> <h2>அமித்ஷா</h2><p>இதைத்தொடர்ந்து அமித்ஷா மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார். இதையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஹெலிபேடு தயார் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஜனநாயகன்&apos; திரைப்படத்தால் வெளிச்சத்திற்கு வந்த கொடுமை: போக்சோ சட்டத்தில் சிக்கிய முதியவர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/jananayagan-movie-awareness-elderly-man-arrested-under-pocso-act</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/jananayagan-movie-awareness-elderly-man-arrested-under-pocso-act#comments</comments><guid isPermaLink="false">869cca78-822f-44c5-9294-a117bce5c856</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:46:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:46:45.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrested,போக்சோ சட்டம்,pocso act,JanaNayagan,ஜனநாயகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/byko4mnv/girlmolested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Girl harassment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/byko4mnv/girlmolested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தாய் வேலை செய்து வந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.</strong></em></p><h2>வீட்டு வேலை</h2><p>சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வசித்து வருகின்றனர். இவர்களது 11 வயது மகனும், 8 வயது மகளும் தந்தையுடன் வசித்து வருகின்றனர்.</p><p>குழந்தைகளின் தாய், கோடம்பாக்கத்தில் உள்ள சண்முகப்பிரியன் (வயது 50) என்பவரது வீட்டில் வேலை செய்து வருகிறார். அவர் அவ்வப்போது தனது குழந்தைகளை அந்த வீட்டுக்கு அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்ததாக கூறப்படுகிறது.</p> <h2>சிறுமிக்கு பாலியல் சீண்டல்</h2><p>இந்த நிலையில், சிறுமியை அவரது தந்தை, முதலமைச்சர் விஜய் நடித்த '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jananayagan-success-due-to-vijays-magic-producer-k-venkat-narayana-interview">ஜனநாயகன்</a>' திரைப்படத்தை பார்க்க அழைத்துச் சென்றார். அந்த படத்தில் குழந்தைகளுக்கு 'நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்' குறித்து விஜய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.</p><p>அந்த காட்சியை பார்த்த சிறுமி, தனது தந்தையிடம், "நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என்னை திட்டக்கூடாது" என்று கூறிவிட்டு, தாய் வேலை செய்யும் வீட்டில் தங்கியிருந்தபோது. அந்த வீட்டின் உரிமையாளர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.</p> <h2>உரிமையாளர் கைது</h2><p>இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால் சண்முகப்பிரியனை போலீசார் கைது செய்தனர்.</p><p>அவர் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போக்சோ சட்டத்தின்</a> கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p> <h2>ஜனநாயகன்</h2><p>'ஜனநாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு காட்சியால் சிறுமி தைரியமாக நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு வெளிச்சத்துக்கு வந்து, போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் பயோமெட்ரிக் முறை விரைவில் அறிமுகம்- சபாநாயகர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-introduce-biometric-system-soon-says-speaker</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-introduce-biometric-system-soon-says-speaker#comments</comments><guid isPermaLink="false">d8667789-ee6b-46da-83b1-e56969033e3b</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:36:10 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:36:10.885Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,Biometric system,TN Assembly speaker,சபாநாயகர்,பயோமெட்ரிக்,தமிழக சட்டமன்ற கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/arxooeh3/JCD.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Speaker JCD Prabhakarar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/arxooeh3/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தற்போது பதிவேடுகளில் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட வேண்டியதுள்ளது. அதை பயோமெட்ரிக் முறையில் நவீனப்படுத்த வேண்டும் என்று கேட்டார்.</p><p>அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், பயோமெட்ரிக் முறை ஆய்வில் உள்ளது. விரைவில் அது அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.</p><p>பின்னர் பேசிய பிரேமலதா, அவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் தரப்படுகிறது.</p><p>பாதுகாப்பான நீரை பெறுவதற்காக அனைவருக்கும் பாட்டிலில் தண்ணீர் தர வேண்டும் என்று ஏற்கனவே கேட்டேன். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் (தி.மு.க. எம்.எல்.ஏ.) தடை போடுகிறார் என்று கூறினார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், நான் தடை போடவில்லை. அவர் கேட்பதை கொடுத்து விடுங்கள் என்று சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவையில் சிரிப்பொலி எழுந்தது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk#comments</comments><guid isPermaLink="false">f09c8c03-4204-4315-9056-02823619e130</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:13:34 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:13:34.843Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,ADMK,அதிமுக,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ltw459cl/thirumavalavan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ltw459cl/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.</strong></em></p><p>மத்திய பா.ஜ.க. அரசு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams">விஜய்</a> தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p>இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p><p>இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.</p> <h2>தொகுதி மறுவரையறை</h2><p>இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கும் நிலையில், திமுக, அதிமுகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>திமுக - அதிமுக</h2><p>பாஜக அரசின் சட்டத்தை எதிர்க்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation#comments</comments><guid isPermaLink="false">777b0964-b7ca-4297-9f0b-95d11eb7e561</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:35:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:35:19.055Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN MPs,Constituency Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தமிழக எம்பிக்கள் கூட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.</p><h2>முதலமைச்சர் அழைப்பு</h2><p>தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.</p><p>இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.</p><p>நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.</p><p>இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p>இந்நிலையில் இந்த மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாட்டின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அனைவருக்கும் அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்</h2><p>சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.</p><p>இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றனர். பாமக பங்கேற்பது குறித்து அன்புமணி இன்று காலை 10 மணியளவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h2>புறக்கணிப்பு?</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக எம்பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 ஆகஸ்ட் 2026:  குச்சனூர் சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம் 
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-8-august-2026-kuchanur-saneeswaran</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-8-august-2026-kuchanur-saneeswaran#comments</comments><guid isPermaLink="false">ad522e54-dfab-49e1-8740-813c52af54d4</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25616771-sanibagavan1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kuchanur sani bhagavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/30/25616771-sanibagavan1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-23 (சனிக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  தசமி காலை 11.34 மணி வரை பிறகு ஏகாதசி</p><p>நட்சத்திரம் :  ரோகிணி பிற்பகல் 3.16 வரை பிறகு மிருகசீர்ஷம்</p><p>யோகம் :  அமிர்த / சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை</h2><p>குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தந்தப்பரங்கி நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் அனுமன் வாகனத்திலும் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்பம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - சுகம்</p><p>ரிஷபம் - வரவு</p><p>மிதுனம் - நன்மை</p><p>கடகம் - தாமதம்</p><p>சிம்மம் - அனுகூலம்</p><p>கன்னி - மகிழ்ச்சி</p> <p>துலாம் - தெளிவு</p><p>விருச்சிகம் - பாராட்டு</p><p>தனுசு - வெற்றி</p><p>மகரம் - நன்மை</p><p>கும்பம் - பாராட்டு</p><p>மீனம் - விருத்தி</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 8.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி மேலோங்கும்... </title><link>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-39</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-39#comments</comments><guid isPermaLink="false">7ec7c596-2da6-41b2-8762-c76ead3648b7</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:26:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:26:45.323Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-18/fbpverq5/rasipalan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Todays Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-18/fbpverq5/rasipalan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>சந்தோஷம் அதிகரிக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்படவைக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>நல்லவர்களின் தொடர்பால் நலம் காண வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.</p><h2>மிதுனம்</h2><p>உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.</p><h2>கடகம்</h2><p>யோகமான நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.</p><h2>சிம்மம்</h2><p>சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.</p><h2>கன்னி</h2><p>தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.</p><h2>துலாம்</h2><p>யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்கு தாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. பிறருக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.</p><h2>விருச்சிகம்</h2><p>பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். புதிய தொழில் தொடங்கும் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.</p><h2>தனுசு</h2><p>புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். வியாபாரம் சூடுபிடிக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும்.</p><h2>மகரம்</h2><p>பெருமைப்படத்தக்க செய்தி வந்து சேரும் நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். வருங்கால நலன் கருதி திட்டங்களைத் தீட்டுவீர்கள்.</p><h2>கும்பம்</h2><p>வரன்கள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் உயரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>உற்சாகத்துடன் செயல்படும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் புதிய பங்கு தாரர்கள் வந்திணைவர் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-prices-today-petrol-diesel</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-prices-today-petrol-diesel#comments</comments><guid isPermaLink="false">90126871-ffc8-4842-b98a-0f12905643e3</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:15:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:15:43.670Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் டீசல் விலை,Petrol Diesel Price,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,வணிகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/eyp4pp4l/petrol.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol- Diesel price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/eyp4pp4l/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (08.08.2026 - சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 82.27 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>யூட்டாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து</title><link>https://www.maalaimalar.com/news/world/helicopter-battling-utah-wildfire-crashes-with-no-word-on-2-people-aboard</link><comments>https://www.maalaimalar.com/news/world/helicopter-battling-utah-wildfire-crashes-with-no-word-on-2-people-aboard#comments</comments><guid isPermaLink="false">00d50d5c-3b9f-49aa-b814-08e57a183fb1</guid><pubDate>Sat, 08 Aug 2026 00:27:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T00:27:19.590Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>helicopter,ஹெலிகாப்டர் விபத்து,ஹெலிகாப்டர்,chopper crash,Utah wildfire,யூட்டா காட்டுத்தீ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/g3xo1vtz/widemouth-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யூட்டாவில் காட்டுத்தீ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/g3xo1vtz/widemouth-2.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யூட்டாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க உதவிய கனரக <a href="https://www.maalaimalar.com/topic/helicopter">ஹெலிகாப்டர்</a> ஒன்று விபத்துக்குள்ளானதாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இருவரின் உடல்நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை.</p><p>ஜூலை 27-ஆம் தேதியன்று மின்னலால் மத்திய யூட்டாவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்றாகும்.</p><h2>விபத்து உறுதி:</h2><p>யூட்டாவின் ரிச்ஃபீல்டில் சிகோர்ஸ்கி S64 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் உறுதிப்படுத்தியது.</p><p>விபத்து குறித்த கேள்விகளுக்கு செவியர் கவுண்டி ஷெரிஃப் உடனடியாக பதிலளிக்கவில்லை. மேலும், FAA மற்றும் காட்டுத்தீ அதிகாரிகளிடம், ஹெலிகாப்டரில் இருந்த இருவரின் உடல்நிலை குறித்த தகவல்கள் இல்லை.</p><p>தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் (NTSB) FAA-வும் இந்த விபத்து குறித்து விசாரிக்கும். ஆனால், அருகிலேயே காட்டுத்தீ எரிந்து கொண்டிருந்தால், அவர்களால் உடனடியாக சம்பவ இடத்திற்கு பாதுகாப்பாக சென்றடைய முடியாமல் போகலாம்.</p><h2>வானிலை எச்சரிக்கை:</h2><p>வெள்ளிக்கிழமை நிலவரப்படி, தீ 165 சதுர மைல்கள் (427 சதுர கிலோமீட்டர்கள்) பரப்பளவிற்கு பரவி இருந்ததுடன், 19 சதவீதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும்.</p><p>நிலையற்ற காற்று, வறண்ட எரிபொருட்கள் மற்றும் கடும் வெப்பநிலை நிலவக்கூடும் என்றும், அத்துடன் வறண்ட இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மீட்புக் குழுவினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 'ரெட் ஃபிளாக்' எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்தன.</p><h2>தீவிர விசாரணை:</h2><p>ஹெலிகாப்டர் விபத்து குறித்து செவியர் கவுண்டி ஷெரிஃப் ஃபேஸ்புக் பக்கத்தில் விபத்து நடந்த பகுதிக்குள் எப்போது செல்ல முடியும் என்பதை பொர்க்க வேண்டும். இது தொடர்பான விசாரணை நடத்தப்படும். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இது குறித்த விசாரணையை நடத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா - இஸ்ரேல் உறவை மேலும் வலுப்படுத்துவோம் - பெஞ்சமின் நெதன்யாகு</title><link>https://www.maalaimalar.com/news/world/israeli-pm-benjamin-netanyahu-says-continue-to-strengthen-bond-between-israel-and-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/israeli-pm-benjamin-netanyahu-says-continue-to-strengthen-bond-between-israel-and-india#comments</comments><guid isPermaLink="false">081ce5e6-8fe4-49cb-8ff5-af83919b9a9e</guid><pubDate>Fri, 07 Aug 2026 23:54:16 +0000</pubDate><atom:updated>2026-08-07T23:54:16.097Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரேல்,Israel,Benjamin Netanyahu,பெஞ்சமின் நெதன்யாகு,pm modi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f6dwzgdl/PM-Modi-and-Netabyahu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi & Benjamin Netanyahu



]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f6dwzgdl/PM-Modi-and-Netabyahu.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/india">இந்தியா</a> மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவோம் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.</p><p>இரு தலைவர்களுக்கும் இடையே வியாழக்கிழமையன்று நடைபெற்ற உரையாடல் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தள பதிவை பகிர்ந்துகொண்டபோது <a href="https://www.maalaimalar.com/topic/benjamin-netanyahu">நெதன்யாகு</a> இவ்வாறு குறிப்பிட்டார். </p><p>அந்த உரையாடலில் 'சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை' (Special Strategic Partnership) மேலும் வலுப்படுத்துவது மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><h2>உறவை வலுப்படுத்துவோம்:</h2><p>"எனது நண்பரும் இந்திய பிரதமருமான நரேந்திர மோடிக்கு நன்றி. இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையிலான உறவை நாங்கள் இணைந்து தொடர்ந்து வலுப்படுத்துவோம்," என்று அவர் கூறினார்.</p><p>இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்யவும் விரிவுபடுத்தவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வியாழக்கிழமையன்று தொலைபேசி வாயிலாக உரையாடினர். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது மற்றும் பிராந்திய நிகழ்வுகள் குறித்து விவாதிப்பது ஆகியவை இந்த உரையாடலின் மையமாக இருந்தன.</p><p>டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ​​வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்த உரையாடல் குறித்த விவரங்களை வெளியிட்டார். இஸ்ரேல் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், பிரதமர் மோடி அதை ஏற்றுப் பேசியதாகவும் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.</p><h2>வலுவான கட்டமைப்பு:</h2><p>"இஸ்ரேலுடனான நமது நட்பையும் உறவையும் பல்வேறு துறைகளில் எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது என்பது குறித்து இந்த உரையாடலின்போது விவாதிக்கப்பட்டது," என்று கூறிய ஜெய்ஸ்வால், இந்தியா-இஸ்ரேல் இடையிலான சிறப்பு உத்திசார் கூட்டாண்மையின் வலுவான கட்டமைப்பை வலியுறுத்தினார்.</p><p>பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றங்களை ஆய்வு செய்ததுடன், பரஸ்பர நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். மேற்கு ஆசியாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன; மேலும், தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/upi-payments-to-remain-free-for-consumers-says-pci</link><comments>https://www.maalaimalar.com/news/national/upi-payments-to-remain-free-for-consumers-says-pci#comments</comments><guid isPermaLink="false">4b2f29f2-4bb5-49de-aaf4-6458c6908c72</guid><pubDate>Fri, 07 Aug 2026 23:29:24 +0000</pubDate><atom:updated>2026-08-07T23:29:24.864Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,UPI Payments,யுபிஐ பரிவர்த்தனை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/04/18/11813782-upi.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UPI ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/04/18/11813782-upi.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/upi">யு.பி.ஐ.</a> (UPI) பரிவர்த்தனைகளில் வணிகர்களுக்கான கட்டணங்களின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், நுகர்வோர் தொடர்ந்து யு.பி.ஐ. சேவையை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும், இந்த தளம் மூலம் பணம் பெறுவதற்கு சிறு வணிகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் இந்திய பேமன்ட் கார்ப்பரேஷன் (PCI) தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>யு.பி.ஐ. கட்டணங்கள் குறித்து இந்திய பேமன்ட் கார்ப்பரேஷன் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்த எக்ஸ் தள பதவில், 2016-இல் தொடங்கப்பட்டதில் இருந்து யு.பி.ஐ. நுகர்வோருக்கு இலவசமாகவே இருந்து வருவதாகவும், இந்த தளத்தை பயன்படுத்தும் தனிநபர்களிடம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><h2>அதிகாரப்பூர்வ விளக்கம்:</h2><p>சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக யு.பி.ஐ. வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை சூழலமைப்பில் அது தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது என்று இந்திய பேமன்ட் கார்ப்பரேஷன் மேலும் கூறியது.</p><p>"2016-ல் தொடங்கப்பட்டதில் இருந்து யு.பி.ஐ. நுகர்வோருக்கு எப்போதும் இலவசமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் எந்தவித பரிவர்த்தனை கட்டணமும் செலுத்தாமல் உடனடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம்," என்று அது கூறியது.</p><p>நாட்டின் அதிவேகமாக விரிவடைந்து வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பை இயக்குவதன் நிலைத்தன்மை குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>பில்லியன் பரிவர்த்தனை:</h2><p>இந்த விவாதம் நுகர்வோரிடம் கட்டணம் வசூலிப்பது பற்றியது அல்ல, மாறாக ஒவ்வொரு மாதமும் பில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளை செயலாக்கும் ஒரு சூழல் அமைப்புக்கு நீண்டகால ஆதரவை உறுதி செய்வது பற்றியது என்று பி.சி.ஐ. கூறியது.</p><p>யு.பி.ஐ. பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு சிறு வணிகர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. அத்தகைய வணிகங்களை பாதுகாப்பது அந்த தளத்தின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உத்தியின் மையமாக தொடர்கிறது.</p>]]></content:encoded></item><item><title>வசூலில் புது சாதனைகளை படைக்கும் Spider-Man Brand New Day</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-box-office-collection-day-9</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-box-office-collection-day-9#comments</comments><guid isPermaLink="false">46e2ddc3-e268-481d-8531-0a26d6aee0c8</guid><pubDate>Fri, 07 Aug 2026 22:59:28 +0000</pubDate><atom:updated>2026-08-07T22:59:28.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tom Holland,Spider Man Brand New Day,டாம் ஹாலண்ட்,ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/hpd9ekm8/spider-man-brand-new-day.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ spider man brand new day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/hpd9ekm8/spider-man-brand-new-day.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாவது வாரத்தில் நுழைந்த போதிலும், 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' இந்திய பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த திரைப்படம், பல்வேறு மொழிகளில் ரசிகர்களின் தொடர் ஆதரவுடன் திரையரங்குகளில் வலுவான ஓட்டத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது.</p><p>இதன் காரணமாக இந்தியாவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடுகளில் ஒன்றாக தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே இந்திய வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, வசூலில் புது சாதனைகளையும் படைத்து வருகிறது.</p><h2>பாக்ஸ் ஆபிஸ் வசூல்:</h2><p>வர்த்தக கண்காணிப்பு நிறுவனமான சாக்னில்க் தகவலின்படி, 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் 9-ஆவது நாளில் இதுவரை ரூ. 2.13 கோடி வசூலித்துள்ளது. இப்படம் தற்போது 7,513 காட்சிகளில் 39.3% இருக்கைகள் நிரம்பிய நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சமீபத்திய வசூலுடன், இப்படத்தின் மொத்த இந்திய நிகர வசூல் ரூ. 336.83 கோடியை எட்டியுள்ளது, அதே நேரத்தில் அதன் மொத்த இந்திய வசூல் ரூ. 402.73 கோடியாக உள்ளது.</p><p>அதன் முதல் வாரத்துடன் ஒப்பிடும்போது காட்சிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தபோதிலும், வலுவான வாய்மொழி பிரசாரம் மற்றும் முக்கிய சந்தைகளில் நிலவும் தொடர்ச்சியான தேவை ஆகியவற்றின் ஆதரவுடன், இந்தத் திரைப்படம் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.</p><h2>வாராந்திர பாக்ஸ் ஆபிஸ்:</h2><p>சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களின்படி, 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் அதன் முதல் வாரத்தில் ரூ. 334.70 கோடி வசூலித்துள்ளது. </p><p>இப்படம் முதல் நாளில் ரூ. 60.60 கோடியும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் ரூ. 49.35 கோடியும், மூன்றாம் நாளில் ரூ. 70.25 கோடியும், நான்காம் நாளில் ரூ. 77.75 கோடியும், ஐந்தாம் நாளில் ரூ. 23.80 கோடியும், ஆறாம் நாளில் ரூ. 21.75 கோடியும், ஏழாம் நாளில் ரூ. 17 கோடியும், மற்றும் எட்டாம் நாளில் ரூ. 14.20 கோடியும் வசூலித்துள்ளது.</p><p>9-வது நாளான (இரண்டாவது வெள்ளிக்கிழமை) அன்று இதுவரையில் ரூ. 2.13 கோடி வசூலித்துள்ள இப்படம், இந்தியாவின் ஒட்டுமொத்த நிகர வசூலை ரூ. 336.83 கோடியாக உயர்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-nellai-royal-kings-beat-dindigul-dragons-by-6-wickets</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-nellai-royal-kings-beat-dindigul-dragons-by-6-wickets#comments</comments><guid isPermaLink="false">11e95847-066b-4539-8589-e16a24ba15ef</guid><pubDate>Fri, 07 Aug 2026 20:23:26 +0000</pubDate><atom:updated>2026-08-07T20:23:26.769Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Nellai Royal Kings,நெல்லை ராயல் கிங்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bph1ry20/Nellai-Royal-Kings.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nellai Royal Kings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bph1ry20/Nellai-Royal-Kings.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-வது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், <a href="https://www.maalaimalar.com/topic/chepauk-super-gillies">சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</a>, கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. </p><p>ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.</p><h2>டாஸ்:</h2><p>திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற லீக் சுற்று போட்டியில், டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><p>தொடக்க வீரர் அனுராக் ராஜேஷ் 35 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷிவம் சிங் 7 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஜெயந்த் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து களமிறங்கிய விமல் குமார் மற்றும் ஹன்னி சய்லி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.</p><h2>171 ரன்கள் இலக்கு:</h2><p>ஹன்னி சய்லி 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் பாபா இந்திரஜித் 9 ரன்களிலும், கார்த்தி சரண் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். ஒரு முனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விமல் குமார் அரைசதம் விளாசி, 63 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.</p><p>இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. விமல்குமார் 63 ரன்களும், அனுராக் 35 ரன்களும் விளாசினர். வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><h2>நெல்லை அபாரம்:</h2><p>கடின இலக்கை துரத்திய நெல்லை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய சந்தோஷ்குமார் 44 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய அதிஷ் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குருசாமி அஜிதேஷ் 46 ரன்களையும், முகிலேஷ் 43 ரன்களையும் குவித்தனர்.</p><p>இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் வெறும் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 98-ஆக உயர்வு; 13 மாவட்டங்களில் 1.55 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-floods-toll-rises-to-98-over-155-lakh-people-affected-across-13-districts</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-floods-toll-rises-to-98-over-155-lakh-people-affected-across-13-districts#comments</comments><guid isPermaLink="false">9f74ca36-82cf-4a2b-9efd-d061998161cb</guid><pubDate>Fri, 07 Aug 2026 19:59:07 +0000</pubDate><atom:updated>2026-08-07T19:59:07.457Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death toll,அசாம் வெள்ளம்,Assam Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jd1nit23/assam-floods-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ assam floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jd1nit23/assam-floods-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாமில் வெள்ள சூழல் மோசமாகவே நீடித்தது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பலி எண்ணிக்கை 98-ஐ எட்டியுள்ளது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 13-ஆகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1.55 லட்சமாகவும் குறைந்துள்ளது.</p><p>சாரைடியோ (Charaideo) மாவட்டத்தில் உள்ள மஹ்மோரா வருவாய் வட்டத்தில்தான் இந்த சமீபத்திய உயிரிழப்பு பதிவாகி இருப்பதாக <a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">அசாம்</a> மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கை தெரிவிக்கிறது.</p><h2>33 வட்டங்களில் பாதிப்பு:</h2><p>சிவசாகர், கோலாகாட், நாகான், ஹோஜாய், சோனித்பூர், தேமாஜி, தர்ராங், பிஸ்வநாத், காம்ரூப் (மெட்ரோ), லக்கிம்பூர், உதல்குரி, ஜோர்ஹாட் மற்றும் சாரைடியோ ஆகிய 13 மாவட்டங்கள் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன; இதனால் 33 வருவாய் வட்டங்களும் 464 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>மாநிலத்தில் மொத்தம் 1,55,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோலாகாட் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சிவசாகர் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்கள் உள்ளன. கடந்த வியாழக்கிழமையன்று 15 மாவட்டங்களும், 1.68 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.</p><h2>சேத விவரம்:</h2><p>நிர்வாகம் 55 நிவாரண முகாம்களை நடத்தி வருகிறது; இவற்றில் இடம்பெயர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 நிவாரண பொருட்கள் விநியோக மையங்களும் செயல்பட்டு வருகின்றன.</p><p>கோலாகாட் மாவட்டத்தில் உள்ள கோலாகாட் நகரம் மற்றும் நுமாலிகர் ஆகிய இடங்களில் தன்சிரி ஆறும், ஸ்ரீபூமி மாவட்டத்தில் குஷியாரா ஆறும் அபாய அளவைத் தாண்டி ஓடுகின்றன.</p><p>10,748.64 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன; அதேவேளையில் 47,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>நகைச்சுவை, ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’: ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் ஃபர்ஸ்ட் லுக்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/master-plan-movie-first-look-gains-attraction</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/master-plan-movie-first-look-gains-attraction#comments</comments><guid isPermaLink="false">5bae1162-d4bc-439a-8a87-08ba151399c7</guid><pubDate>Fri, 07 Aug 2026 19:04:35 +0000</pubDate><atom:updated>2026-08-07T19:04:35.023Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மாஸ்டர் பிளான்,தருண் விஜய்,அக்‌ஷரா ரெட்டி,Master Plan,Tharun Vijay,Akshara Reddy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/z5z5mgq1/Master-Plan-First-Look.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Master Plan First Look]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/z5z5mgq1/Master-Plan-First-Look.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்ரா புரொடக்ஷன்ஸ், டி.ஜே. இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. </p><p>பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த கதையாக உருவாகி வரும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் மேலும் அதிகரித்துள்ளது.</p><h2>ஃபர்ஸ்ட் லுக்:</h2><p>தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்ம பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டி மற்றும் சிறுவன் நிற்கிறார்கள். சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்த பெட்டியை நோக்கி நிற்கும் காட்சி, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது.</p><p>பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட காட்சிகள், திரில் நிறைந்த குடும்ப கதைக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான காட்சியமைப்பால் சமூக வலைதளங்களிலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்த்து வருகிறது.</p><h2>சுவாரஸ்ய கதை:</h2><p>தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ விரும்பும் ஒரு நடுத்தர குடும்பம், அதனால் உருவாகும் பிரச்சனைகளில் இருந்து, ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கலந்து எப்படி மீண்டு வருகிறது என்பதையே இப்படம் சுவாரஸ்யமாக சொல்லவுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களின் பாணியில் பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.</p><p>தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் புகழ அக்‌ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>தற்போது தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் அரசுடன் பேச்சுவார்த்தை நிறைவு: கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர மாணவர்கள் முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/students-to-continue-agitation-despite-talks-with-jharkhand-govt</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-to-continue-agitation-despite-talks-with-jharkhand-govt#comments</comments><guid isPermaLink="false">038701dc-5e0f-439f-b596-8c8bb64c4a6a</guid><pubDate>Fri, 07 Aug 2026 18:20:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T18:20:05.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்,Students,மாணவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kfwgmmh7/Ranchi-Students-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ranchi Students Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kfwgmmh7/Ranchi-Students-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் தங்கள் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/student-protest">மாணவர்கள்</a> தெரிவித்தனர். </p><p>14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர்கள் கூறினர். ஞாயிற்றுக்கிழமைக்குள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாநில சட்டமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p><h2>போராட்டம் தொடரும்:</h2><p>அரசுக்கும், 'JPSC/JSSC சீர்திருத்த மன்றத்தின்' 10 பேர் கொண்ட குழுவுக்கும் இடையிலான முதல் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.</p><p>"ஜார்க்கண்ட் அரசுடனான கூட்டம் சுமூகமான சூழலில் நடைபெற்றது. எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு உறுதியளித்தது. இருப்பினும், 14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்," என்று கூட்டத்திற்குப் பிறகு 'JPSC/JSSC சீர்திருத்த மன்றத்தின்' தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><h2>விரைவில் தீர்வு:</h2><p>மாணவர்களின் கவலைகள் குறித்து அரசு உணர்வுப்பூர்வமாக செயல்படுவதாக மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி துறை அமைச்சர் சுதிவ்யா குமார் தெரிவித்தார்.</p><p>"போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் குழுவை நாங்கள் சந்தித்தோம். அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு உணர்வுப்பூர்வமாக உள்ளது மற்றும் அவற்றை அனுதாபத்துடன் பரிசீலிக்க தயாராக உள்ளது. இதற்கான தீர்வு விரைவில் தெரியவரும்," என்று குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p>மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் குழுவினர் எடுத்துரைத்துள்ளதாக அமைச்சர் தீபிகா பாண்டே சிங் தெரிவித்தார்.</p><h2>சுதந்திர விசாரணை:</h2><p>"முதலமைச்சர் மாணவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளார், விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும்," என்று அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில், கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேவேந்திர மஹ்தோ தலைமையிலான மற்றொரு போராட்ட குழு, பேச்சுவார்த்தைக்காக அரசிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்தது.</p><p>பேச்சுவார்த்தைக்காக எட்டு பேர் கொண்ட குழுவின் பெயர்களை அரசுக்கு அளித்துள்ளதாக மஹ்தோ தலைமையிலான குழு கூறியது. 14-ஆவது JPSC தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. அல்லது மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.</p><p>ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையத்தின் (JPSC) பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான போராட்டம் வெள்ளிக்கிழமையுடன் 14-வது நாளை எட்டியது; இதில் ஆறு போராட்டக்காரர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>துருக்கி, பாகிஸ்தான் உடனான &quot;காகித ஒப்பந்தம்&quot; சவுதிக்கு பாதுகாப்பை வழங்காது - ஈரான் அதிரடி!</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-said-paper-agreement-with-turkey-pak-will-not-bring-security-to-saudi</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-said-paper-agreement-with-turkey-pak-will-not-bring-security-to-saudi#comments</comments><guid isPermaLink="false">66588ac7-7268-4b82-88e7-674e718325fc</guid><pubDate>Fri, 07 Aug 2026 17:20:04 +0000</pubDate><atom:updated>2026-08-07T17:20:04.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Saudi,சவுதி,பாதுகாப்பு ஒப்பந்தம்,defence pact</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ql2gbktd/Mohammed-Bin-Salman-and-Ebrahim-Rezaei.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mohammed Bin Salman and Ebrahim Rezaei]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ql2gbktd/Mohammed-Bin-Salman-and-Ebrahim-Rezaei.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> நாடாளுமன்றம், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர், பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கிக்கு இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தாலும், அது ரியாத்துக்கு நீடித்த பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இப்ராஹிம் ரெசாயி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "பல ஆண்டுகளாக அமெரிக்கர்களுக்கு ஒருதலைப்பட்சமாக ஆதரவளித்தது அவர்களுக்கு பாதுகாப்பை தராதது போலவே, துருக்கி மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/pakistan">பாகிஸ்தான்</a> உடனான ஒரு காகித ஒப்பந்தம் அவர்களுக்கு பாதுகாப்பை தராது என்பதை சவுதியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பாதுகாப்பு ஒப்பந்தம்:</h2><p>சவுதி அரேபியா தனது கொள்கைகளை சீர்திருத்தினால், பாதுகாப்புக்காக மற்றவர்களிடம் 'யாசிக்க' வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் கூறினார்.</p><p>முன்னதாக இன்று, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்துவரும் போரின் பின்னணியில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மூன்று நாடுகளும் "மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்" என்றழைக்கப்படும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.</p><p>இந்தப் போரானது, விருப்பமில்லாத வளைகுடா நாடுகளையும் உள்ளிழுத்து, ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பாகிஸ்தான் அறிக்கை:</h2><p>இஸ்லாத்தின் புனித நகரமும், நபிகள் நாயகம் முஹம்மது அவர்கள் பிறந்த இடமுமான மெக்காவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் ஒன்றின் மீதான தாக்குதல், அவை அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும்.</p><p>"எந்தவொரு ஆக்கிரமிப்பு செயலுக்கும் எதிரான கூட்டு தடுப்பாற்றலை வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். மேலும், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான எந்தவொரு ஆயுத தாக்குதலும், அவை அனைத்தின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்றும் இது குறிப்பிடுகிறது. அதுமட்டுமின்றி, மூன்று நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கும் இது வழிவகை செய்கிறது," என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-praggnanandhaa-on-winning-the-gct-st-louis-rapid-blitz-chess-tournament</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-praggnanandhaa-on-winning-the-gct-st-louis-rapid-blitz-chess-tournament#comments</comments><guid isPermaLink="false">0f390911-f79f-4801-a45c-6b12b288d17d</guid><pubDate>Fri, 07 Aug 2026 16:20:38 +0000</pubDate><atom:updated>2026-08-07T16:20:38.273Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>PragGnanandhaa,பிரக்ஞானந்தா,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/vop0o1ke/New-Project-2026-08-07T215011.147.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/vop0o1ke/New-Project-2026-08-07T215011.147.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செஸ் தலைநகரமான செயின்ட் லூயிஸில் நடைபெற்ற 2026 கிராண்ட் செஸ் டூர் செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் சர்வதேச செஸ் தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். </p><p>இந்நிலையில் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்.,</p><p>“அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். </p><p>உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், பிரக்ஞானந்தா தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடி சாதனை படைத்துள்ளார். </p><p>சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.   </p><p>இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையான ஆதரவையும், வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருகிறது. ELITE திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் செஸ் வீரர்  பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 பைசா உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/rupee-settles-with-5-paise-gain-at-95-point-17-against-us-dollar</link><comments>https://www.maalaimalar.com/news/national/rupee-settles-with-5-paise-gain-at-95-point-17-against-us-dollar#comments</comments><guid isPermaLink="false">34411ebc-11cc-4d9e-8c1a-0038a48c6b6f</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:49:57 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:49:57.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்க டாலர்,இந்திய ரூபாய் மதிப்பு,Indian Rupee Value,US dollar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2ekev7bv/IndianRupee001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய ரூபாயின் மதிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2ekev7bv/IndianRupee001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறை வர்த்தக சூழல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு வரவு ஆகியவற்றின் ஆதரவால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர்ந்து, ஒரு டாலருக்கு ₹95.17 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.</p><p>அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் சற்று வலுவான நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. நாள் முழுவதும் டாலருக்கு எதிராக ரூபாய் குறுகிய வரம்பில் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்தாலும், இறுதியில் முந்தைய வர்த்தக நாளை விட 5 பைசா உயர்வுடன் முடிவடைந்தது.</p><h2>ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மாற்றம், அமெரிக்க டாலரின் வலிமை, உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக மனநிலை ஆகியவை ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன. அதே நேரத்தில், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட உற்சாகமான வர்த்தகம் மற்றும் சில வெளிநாட்டு முதலீட்டு வரவுகள் ரூபாயின் மதிப்பை ஆதரித்ததாக நாணய சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.</p><p>இருப்பினும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் கொள்கை குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளின் போக்கு ஆகியவை வரும் நாட்களில் ரூபாயின் நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/felix-gerald-appointed-as-chairman-of-the-minorities-welfare-commission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/felix-gerald-appointed-as-chairman-of-the-minorities-welfare-commission#comments</comments><guid isPermaLink="false">be362906-aecc-4a6e-947d-c6e450e5009a</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:40:17 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:40:17.107Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Felix Gerald,தவெக அரசு,tvk government,Minorities Welfare Commission,ஃபெலிக்ஸ் ஜெரால்டு,சிறுபான்மையினர் நல ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zgi3i5n1/New-Project-2026-08-07T205553.833.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zgi3i5n1/New-Project-2026-08-07T205553.833.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக தவெக செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணி நியமனத்திற்கான ஆணையை பெற்றநிலையில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் ஃபெலிக்ஸ். </p><p>இவர் இந்தப் பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்டு வந்தவர். </p><h2>ஆணையத் தலைவரின் பணிகள்</h2><ul><li><p>சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல். </p></li><li><p>அரசின் நலத்திட்டங்கள் சிறுபான்மையினரைச் சென்றடைவதைக் கண்காணித்தல். </p></li><li><p>அவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்குதல். </p></li></ul><p>தவெக செய்தித் தொடர்பாளர்களுக்கு அரசுத் துறைகளில் பதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வறட்சி, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-allocation-of-rs-28897-crore-to-tackle-drought-and-drinking-water-shortage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-allocation-of-rs-28897-crore-to-tackle-drought-and-drinking-water-shortage#comments</comments><guid isPermaLink="false">348a8223-e60e-4211-84b6-5c55a70b1f99</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:19:57 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:19:57.929Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,drought relief,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,வறட்சி நிவாரணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ebz1l2xy/New-Project-2026-08-07T204934.233.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வறட்சி, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ebz1l2xy/New-Project-2026-08-07T204934.233.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பாதிப்புகளை சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>எல் நினோ தாக்கம் மற்றும் பருவமழை பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இந்த அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>கிராமப்புறங்களில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், வறட்சி நிவாரணப் பணிகளுக்காகவும் நிதி பிரிக்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி பேரூராட்சிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ரூ.96.41 கோடியும், குடிநீர் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.58.55 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.36.65 கோடியும், நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.97.36 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவும், வறண்ட பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரிப் புதுப்பிக்கவும்,  வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களைச் சேமித்து தட்டுப்பாடின்றி வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சிகளை குறிவைத்து ரிஜிஜு பேசிய கருத்துகள் மக்களவைக் குறிப்பில் இருந்து நீக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/remarks-made-by-rijiju-in-ls-targeting-opposition-expunged</link><comments>https://www.maalaimalar.com/news/national/remarks-made-by-rijiju-in-ls-targeting-opposition-expunged#comments</comments><guid isPermaLink="false">855700a4-39e1-49b2-8223-a3b5423bccfe</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:09:24 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:09:24.785Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,Amit Shah,அமித் ஷா,Kiren Rijiju,கிரண் ரிஜிஜு,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/9fo0reur/KirenRijiju0708.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரண் ரிஜிஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/9fo0reur/KirenRijiju0708.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவையில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியபோது, எதிர்க்கட்சிகளை விமர்சித்து தெரிவித்த சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவை நடவடிக்கைகளின் போது, அரசின் செயல்பாடுகள் மற்றும் மசோதாக்கள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ரிஜிஜு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து, ரிஜிஜுவின் சில கருத்துகள் அவை விதிமுறைகளுக்கு முரணானவை என்றும், அவை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மக்களவைத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவை மரபுகளுக்கும் விதிகளுக்கும் ஒவ்வாத சில வார்த்தைகள் மற்றும் குறிப்புகளை அதிகாரப்பூர்வ பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.</p><h2>அவைக்கு வராத அமித் ஷா</h2><p>நாடாளுமன்ற நடைமுறைகளின்படி, அவையில் பேசப்படும் கருத்துகள் அவதூறாகவோ, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகவோ அல்லது அவையின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலோ இருந்தால், அவற்றை பதிவிலிருந்து நீக்குவதற்கு மக்களவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. நீக்கப்பட்ட கருத்துகள் அதிகாரப்பூர்வ அவைக் குறிப்பில் இடம்பெறாது.</p><p>இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நாடாளுமன்ற விவாதங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என்பதையும், அவை மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டியது அவசியம் என்பதையும் இந்த நடவடிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p><h2>தகாத வார்த்தையை பயன்படுத்திய கிரண் ரிஜிஜு</h2><p>உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை மற்றும் மாநிலங்களைவக்கு வராதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு நாடளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் ரிஜிஜு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், எந்த அமைச்சர் அவைக்கு வர வேண்டும் என்பதை எதிர்க்கட்சியால் தீர்மானிக்க முடியாது என்று ரிஜிஜு என்றார். அப்போது சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.</p><p>அமித் ஷா தினந்தோறும் நாடாளுமன்றத்திற்கு வருகை தருகிறார். நள்ளிரவு வரை அங்கேயே இருக்கிறார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>விஷாலின் ‘மகுடம்’ டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vishals-magudam-trailer-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vishals-magudam-trailer-released#comments</comments><guid isPermaLink="false">7538facf-6c2f-4673-9244-3a86e19efd3c</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:54:55 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:54:55.424Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vishal,Magudam,மகுடம்,விஷால்,Super Good Films,சூப்பர் குட் ஃபிலிம்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/h4bcbd1u/New-Project-2026-08-07T202432.617.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஷாலின் ‘மகுடம்’ டிரெய்லர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/h4bcbd1u/New-Project-2026-08-07T202432.617.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விஷால் இயக்கி, நடித்துள்ள புதியப் படம் மகுடம். இப்படம் மூலம் விஷால் தமிழ் திரையுலகில் இயக்குநராகவும் கால்பதிக்கிறார்.</p><p>ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஷால் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.</p><p>தனது 99வது படமாக இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் மோதுகிறது. </p><p>இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/jEAQp6jjmQA"></iframe></figure>]]></content:encoded></item><item><title>கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது, இரவு நேரத்தில் போனில் அழைக்கக் கூடாது: வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-threats-no-late-night-calls-rbi-issues-new-rules-for-loan-recovery</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-threats-no-late-night-calls-rbi-issues-new-rules-for-loan-recovery#comments</comments><guid isPermaLink="false">e1143381-cfe8-4b80-8081-bd8eea8152cf</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:44:37 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:44:37.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,வங்கி கடன்,Bank loan,ஆர்பிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/yq6wplxz/RBI0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RBI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/yq6wplxz/RBI0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடன் வசூல் நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. கடன் வசூல் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், மனிதநேயத்துடனும் நடைபெற வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><h2>இரவு நேரங்களில் போனில் அழைக்கக் கூடாது</h2><p>புதிய விதிகளின்படி, கடன் வசூல் முகவர்கள் கடன் வாங்கியவர்களை மிரட்டவோ, அவமதிக்கவோ, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தவோ கூடாது. அதிகாலை அல்லது இரவு நேரங்களில் தொடர்ந்து அழைத்து தொந்தரவு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வசூல் அழைப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், வசூல் முகவர்கள் தங்களது அடையாளத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும். அவர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கடன் வாங்கியவரின் தனியுரிமையை மதித்து, தொழில்முறை முறையில் மட்டுமே நடந்து கொள்ள வேண்டும் என RBI வலியுறுத்தியுள்ளது. அடமானச் சொத்துகளை கைப்பற்றுவதற்கும் தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.</p><h2>கடன் வசூல் நடவடிக்கைகள் நியாயமானதாக இருக்க வேண்டும்</h2><p>இந்த புதிய விதிகள் மூலம் கடன் வாங்கியவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் நடைமுறைகளும் ஒழுங்குபடுத்தப்படும் என்று RBI தெரிவித்துள்ளது. இதனால் கடன் வசூல் நடவடிக்கைகள் நியாயமான, வெளிப்படையான மற்றும் மரியாதையான முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஏன் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடக்கூடாது? - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆலோசனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/why-shouldnt-the-jantar-mantar-protest-site-be-closed-delhi-high-court-suggests-to-the-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/national/why-shouldnt-the-jantar-mantar-protest-site-be-closed-delhi-high-court-suggests-to-the-central-government#comments</comments><guid isPermaLink="false">377c946f-a425-497d-84ff-7664e43b0e0d</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:40:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:40:49.746Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Centre,Delhi High Court,Jantar Mantar,டெல்லி உயர் நீதிமன்றம்,ஜந்தர் மந்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/a9ua8oyk/New-Project-2026-08-07T201024.121.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏன் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடக்கூடாது? - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆலோசனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/a9ua8oyk/New-Project-2026-08-07T201024.121.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை ஏன் மூடக்கூடாது எனவும், அதனை ஏன் பரிசீலிக்கவில்லை எனவும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி, கேள்வியும் எழுப்பியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.</p><p>போராட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த தேசிய தலைநகரையும் “முன்னெச்சரிக்கையின்றி முடக்குவது அல்லது பணயக்கைதியாக மாற்றுவது” ஏன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி அமித் மகாஜன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><h2>வழக்கு</h2><p>ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது டெல்லி காவல்துறை பதிலளிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய தலித் கிறிஸ்தவ உரிமைகள் பாதுகாப்புக் குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது நீதிபதி மகாஜன் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் கோஸ் , காவல்துறை தங்கள் மனுவை நிராகரிக்கவும் இல்லை, போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவும் இல்லை, கிடப்பில் போட்டுள்ளது என தெரிவித்தார். </p><p>இதற்கு,“என் கருத்துப்படி, நீங்கள் ஏன் இதை மூடிவிடக் கூடாது? இது டெல்லிக்குள் நடக்கக் கூடாது” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். </p><p>அதற்கு, டெல்லியில் எந்தவிதமான போராட்டங்களும் நடைபெறக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடா என்று கோஸ் கேள்வி எழுப்பினார்.</p><p>அதற்கு பதிலளித்த நீதிபதி மகாஜன், “அதை காவல்துறையினர்தான் முடிவு செய்ய வேண்டும். நகரத்திற்குள் போராட்டங்களை நடத்த அனுமதிக்கும் வசதி அல்லது சூழல் அவர்களுக்கு இல்லை என்றால் முடிவு அவர்களுடையது” என்றார்.</p><p>உடனே, “சரி, டெல்லியில் ஜனநாயகப்பூர்வமான, அமைதியான போராட்டங்கள் நடத்தப்படாது என்று அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கட்டும். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.” என கோஸ் பதிலளித்தார்.  </p><p>இந்தப் போராட்டங்கள் ஜனநாயகமானவையா அல்லது ஜனநாயகமற்றவையா என்பதைப் பற்றித் தாம் பேசவில்லை என்றும், மாறாக "நகரம் ஏன் பணயக் கைதியாக வைக்கப்பட வேண்டும்?" என்பதைப் பற்றியே பேசுவதாகவும் நீதிபதி மகாஜன் கூறினார்.</p><p>இதற்கிடையில், அப்பகுதியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 அமலில் உள்ளதாகவும், ஆகஸ்ட் 15 நெருங்கி வருவதாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சர்மா தெரிவித்தார்.</p><p>“பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. 75 பேர் எப்போது 75,000 பேராக மாறுவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது” என்றும் ஷர்மா கூறினார்.</p><p>தொடர்ந்து “தனிப்பட்ட முறையில் நீங்கள் என்னிடம் கேட்டால், எனக்கு வேறுபட்ட கருத்து உள்ளது. ஆம்புலன்ஸ்கள் ஆகட்டும் அல்லது வேறு எதுவாகட்டும், நகரம் முழுவதும் முடங்கிக் கிடக்கும்போது, ​​போராட்டம் ஏன் நகரத்தில் நடக்க வேண்டும்?” என்று நீதிபதி மகாஜன் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>இறுதியாக, மனுமீது நாளைக்குள் (ஆக.8) முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தாய்லாந்தில் சோகம்: பள்ளியில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/seven-killed-by-teen-in-thailand-mass-shooting</link><comments>https://www.maalaimalar.com/news/world/seven-killed-by-teen-in-thailand-mass-shooting#comments</comments><guid isPermaLink="false">c2e211d6-da8c-404c-9ea4-8aaf23d6cafa</guid><pubDate>Fri, 07 Aug 2026 14:39:35 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:39:35.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தாய்லாந்து,thailand,துப்பாக்கிச்சூடு,shooting</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bcsa20v9/shoot.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ police]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bcsa20v9/shoot.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொந்தபுரி மாகாணம் பாங் க்ருவாய் மாவட்டத்தில் டெப்சிரின் என்ற உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.</p><p>இன்று காலை பள்ளிக்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளிக்குள் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். பலர் பள்ளி அறைகளின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு அங்கு பதுங்கினர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு நிலவியது.</p><p>துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பள்ளிக்குள் சென்று மாணவ-மாணவிகளை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.</p><p>இந்தத் துப்பாக்கி சூட்டில் ஆசிரியர்கள் உள்பட 7 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.</p><p>துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பள்ளிக்குள் இருந்த ஒரு மாணவரே என்பதை உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் 2026: துஷார் ரஹேஜா அதிரடி சதத்தால் சேப்பாக்கத்தை வீழ்த்தியது திருப்பூர்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-beat-chepauk-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-beat-chepauk-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">dd434bd1-b0fc-4079-9fcf-2ea6cb119353</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:40:47 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:40:47.876Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,IDream Tiruppur Tamizhans,tushar raheja,துஷார் ரஹேஜா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ufpfd1c6/tushar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tushar raheja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ufpfd1c6/tushar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. வரும் 28-ம் தேதி வரை இரு கட்டமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.</p><p>மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17-ம் தேதி ஓய்வு தினமாகும்.</p><p>முதல் கட்ட போட்டிகள் வரும் 15-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடக்கின்றன.</p><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. </p><p>டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><h2>சதத்தை தவறவிட்ட ஆஷிக்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. </p><p>ஆஷிக் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஷிக் 56 பந்தில் 7 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 98 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெகதீசன் 27 ரன்னில் அவுட்டானார். </p><p>திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் மோகன் பிரசாத், சிலம்பரசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><h2>சதமடித்த துஷார் ரஹேஜா</h2><p>இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே திருப்பூர் அணி அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா சிக்சர், பவுண்டரிகளாக விளாசி சதமடித்து அசத்தினார். அவர் 52 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 102 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.</p><p>அவருக்கு பிரதோஷ் ரஞ்சன் பால் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 41 பந்தில் ச் சிக்சர், 9 பவுண்டரி உள்பட 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>இறுதியில், திருப்பூர் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து வென்றதுடன், நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.</p><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது 2வது தோல்வி ஆகும்.</p>]]></content:encoded></item><item><title>மிகவும் மோசமான முதலமைச்சர்: இது அம்மா ஆட்சியல்ல &quot;சும்மா ஆட்சி&quot;: ஓ.எஸ். மணியன் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams#comments</comments><guid isPermaLink="false">500283ec-475c-4bc9-9a97-edf29a2c0b56</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:28:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:28:05.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OS Manian,TN assembly,தமிழக சட்டசபை |,ஓஎஸ் மணியன்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/k44wwc25/TNCMVIjayOSManian0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- ஓ.எஸ். மணியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/k44wwc25/TNCMVIjayOSManian0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் பேசினார். அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். அதற்கு, அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly">ஆதவ் அர்ஜூனா</a> "தற்போது நடைபெறுவது அம்மாவின் ஆட்சிதான்" அதற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மா ஆட்சி என்கிறீர்கள். ஏன் அம்மா பெயரில் திட்டங்களை வழங்கிடக்கூடாது? என்றார்.</p><p>இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இது அம்மாவின் ஆட்சிதான் என்று கூறினாரே? என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.</p><h2>அதற்கு ஓ.எஸ். மணியன் பதில் அளித்து கூறியதாவது:-</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி "சும்மா ஆட்சி". சும்மா ஆட்சியை மறைப்பதற்காக அம்மா ஆட்சி என்று சொல்கிறார்கள். அம்மா உடைய மாண்பை, அம்மா உடைய சிறப்பை., அம்மா அவர்கள் இந்த தமிழகத்திற்காக,, குறிப்பாக ஜீவாதார உரிமைகளுக்காக ஆட்சியில் இருந்தபோதிலும் சரி, ஆட்சியில் இல்லாதபோதிலும் சரி காவிரி நீர் பிரச்சனைக்காக, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்காக, வீராணம் தண்ணீரை கொண்டு வருவதாக இருந்தாலும் சரி அனைத்தையும் சாதித்து காட்டியவர், சட்டம் போராட்டம் நடத்தி வெற்றிப் பெற்று காண்பித்தவர் புரட்சித் தலைவி அம்மா.</p><h2>அம்மா ஆட்சியுடன் ஒப்பிடக் கூடாது</h2><p>பெண்ணினத்தை உயர்த்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதில் வெற்றிக் கண்டவர் புரட்சித் தலைவர் அம்மா. அம்மாவின் ஆட்சிக்காலம் இந்தியாவுக்கு மட்டுமல்ல துணைக் கண்டத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. மாறுதலை ஏற்படுத்தி தந்திருக்கின்ற ஒரு உன்னதமான ஆட்சிதான் அம்மா உடைய ஆட்சி. அம்மா உடைய ஆட்சியை விஜய் உடைய ஆட்சியுடன் ஒப்பிடக் கூடாது.</p><p>வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னரே, அதேபோல விவசாயிகளாக இருந்தாலும், நெசவாளராக இருந்தாலும், வணிகராக இருந்தாலும், மீனவராக இருந்தாலும் அவர்கள் எங்கேயோ, வெளிநாட்டில் கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் கூட, தானே பாதித்தவர் போல நடவடிக்கைகள் எடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.</p><h2>கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகள்</h2><p>ஆனால், விவசாயிகள் இன்று கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இருந்த முதலமைச்சர்களில் மிகவும் மோசமான முதலமைச்சர் என்றால் அது விஜய்தான். விவசாயிகள் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைத்தான் கேட்கிறோம் தவிர, அவர் கூடியதாக கேட்கவில்லை. மாறுதலாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை.</p><p>சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் தள்ளுபடி சென்று சொன்னீர்கள். சொன்னதை செய்தீர்களா?. இதைப் பற்றி பேசியிருக்கிறீர்களா?. அல்லது கஜானாவில் பணம் இல்லை. என்னால் இயலவில்லை, என்னால் செய்ய இயலவில்லை சொல்லியிருக்கிறீர்களா? வாய் திறக்காமல் மவுனமாக இருந்து சாதிப்பது என்பது மோசமான நிலை. இதனால்தான் விஜய் ஆட்சி சும்மா ஆட்சி. தலையில் முக்காடுபோடும் விதமாக அம்மா ஆட்சி என்று அவர்கள் பேசுகிறார்கள்.</p><p>இவ்வாறு ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘பாகிஸ்தானை தாக்கினால் துருக்கி, சவுதி அரேபியா வரும்’ - 3 நாடுகள் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!</title><link>https://www.maalaimalar.com/news/world/if-pakistan-is-attacked-turkey-and-saudi-arabia-will-step-in-joint-defense-pact-signed-between-the-three-nations</link><comments>https://www.maalaimalar.com/news/world/if-pakistan-is-attacked-turkey-and-saudi-arabia-will-step-in-joint-defense-pact-signed-between-the-three-nations#comments</comments><guid isPermaLink="false">2606b40e-d279-449b-8c95-a1e6f50dd91c</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:27:51 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:27:51.422Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,துருக்கி,Turkey,Saudi Arabia,சவுதி அரேபியா,Joint Defense Pact,கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/z3forlj3/New-Project-2026-08-07T183830.687.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பாகிஸ்தானை தாக்கினால் துருக்கி, சவுதி அரேபியா வரும்’ - 3 நாடுகள் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/z3forlj3/New-Project-2026-08-07T183830.687.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா - ஈரான் இடையேயான தொடர் மோதலால், மத்திய கிழக்கில் பதற்றம் நிலவிவரும் நிலையில், சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. </p><p>மெக்காவில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் கூட்டாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.</p><h2>ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்</h2><p>இதன்மூலம் மூன்று நாடுகளில் எந்த நாடுமீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவை மூன்று நாடுகள்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>ஒரு நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், மற்ற நாடுகள் தங்களின் கூட்டுப் பாதுகாப்பு பலத்தைப் பயன்படுத்தி அதற்குப் பதிலடி கொடுக்கவோ அல்லது உதவவோ முன்வரும்.</p><h2>கூட்டணி பலம்</h2><p>பாகிஸ்தான், இஸ்லாமிய நாடுகளில் அணுஆயுத வல்லமை கொண்ட ஒரே நாடு. துருக்கி நேட்டோ அமைப்பில் இரண்டாவது பெரிய ராணுவப் படையைக் கொண்ட மற்றும் மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடு.</p><p>பலமான பொருளாதார நிதி ஆதாரங்கள் மற்றும் பிராந்திய செல்வாக்கைக் கொண்ட நாடு சவுதி அரேபியா. </p><h2>இந்தியா பதில் </h2><p>இந்த ஒப்பந்தம் “முற்றிலும் தற்காப்பு நோக்கமுடையது” என்றும், இது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைக்கவில்லை என்றும், மற்ற பிராந்திய நாடுகளுக்கும் இது பொருந்தும் என்றும் ஒரு துருக்கி தெரிவிக்க, அனைத்தையும் உற்றுநோக்கி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. </p><p>கடந்தாண்டு சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்  கையெழுத்தான நிலையில், தற்போது துருக்கியும் இணைந்து இது ஒரு முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 28-ல் வெளியாகிறது கவின், நயன்தாராவின் ‘ஹாய்’!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hi-releases-on-august-28</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hi-releases-on-august-28#comments</comments><guid isPermaLink="false">5e8cc7fa-ad8b-4995-9271-2efc51afec3a</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:02:24 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:02:24.040Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயன்தாரா,Nayanthara,kavin,கவின்,HI,ஹாய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zubw9zce/New-Project-2026-08-07T175916.292.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆகஸ்ட் 28-ல் வெளியாகிறது கவின், நயன்தாராவின் ‘ஹாய்’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zubw9zce/New-Project-2026-08-07T175916.292.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் திரைப்படம் ஹாய், ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p><p>படத்தைத் தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், கவின், நயன்தாரா இணைந்து ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரிலீஸை உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>இப்படம் முதலில் ஆக.14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ், விஷாலின் மகுடம் உள்ளிட்ட படங்களின் வெளியீட்டைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. </p><p>அதனைத்தொடர்ந்து தற்போது ஆகஸ்ட் 28 அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.</p><p>ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். </p><p>படத்தில் கவின், நயன்தாராவுடன் இணைந்து மறைந்த இயக்குநர் பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர் மற்றும் குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். </p><p>இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் விஷ்ணு எடவன், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'கைதி', 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' உள்ளிட்ட பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ChatGPT-யில் இனிமேல் பணம் செலுத்த வேண்டாம்: வரம்புகள் இல்லாமல் பயன்படுத்தலாம் என அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/no-more-payment-for-chatgpt-unlimited-use-announced</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/no-more-payment-for-chatgpt-unlimited-use-announced#comments</comments><guid isPermaLink="false">68af81ce-4a00-485a-9016-dfd8edd22fee</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:29:40 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:29:40.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாட்ஜிபிடி,ஓபன் ஏஐ,ChatGPT,OpenAI,இலவச சேவை,free version</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/p40fxiqx/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ChatGPT Free Now Offers Unlimited Text Conversations: GPT-5.6 Luna Becomes Default for Free and Go Users]]></media:title><media:description type="html"><![CDATA[ ChatGPT]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/p40fxiqx/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>OpenAl நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ChatGPT-யின் இலவசப் பதிப்பை பயன்படுத்தும் பயனர்கள், இனிமேல் வரம்பற்ற உரைவழி உரையாடல்களைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், மூன்று GPT-5.6 மாடல்களில் மிகச் சிறியதான GPT-5.6 Luna, இலவச மற்றும் Go பயனர்களுக்கு இயல்புநிலையாக மாற உள்ளதாக தெரிவித்துள்ளத்து.</p><h3><strong>ChatGPT-யில் இலவச பயன்பாடு</strong></h3><p>GPT-5.6 லூனா பதிப்பிற்கு மாறும் பணி இந்த வாரத்தில் நடைபெறும் என்றும் அதே சமயம், வரம்பற்ற உரை வழி உரையாடல்கள் அடுத்த வாரம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>OpenAl, Plus அல்லது Pro திட்டங்களுக்குப் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அதன் முதன்மை GPT-5.6 Sol மாடலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>இந்த மேம்படுத்தல்கள், “பயனர்களுக்கு மிகவும் நேரடியான பதில்களை அளிக்கவும், சரியான வடிவமைப்பை பயன்படுத்தவும், கூடுதல் விவரங்களைத் தவிர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்று அந்நிறுவனம் கூறுகிறது.</p><p>மேலும், “பயனர்களுக்கு தேவையான சூழலுடன் கூடிய நேரடியான பதில் கிடைக்கும்” என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>புதிய GPT-5.6 Sol, குறிப்பாக எண்கள், தேதிகள், ஆதாரங்கள், விதிகள் அல்லது அனுமானங்கள் போன்றவற்றில், குறைவான தவறுகளைச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>உண்மை விவரங்கள் தேவைப்படும் நிதி, மருத்துவம் மற்றும் சட்டரீதியான கேள்விகள் குறித்த ஒரு உள் மதிப்பீட்டில் GPT-5.5 Instant உடன் ஒப்பிடும்போது, புதிய GPT-5.6 Sol-இல் பிழைகள் குறைவாக இருந்ததாக OpenAl கூறுகிறது.</p><p>பிளஸ் மற்றும் ப்ரோ சந்தாதாரர்கள் தங்களின் அன்றாடக் கேள்விகளுக்கு இதை விரைவாக வைத்துக்கொள்ளலாம் என்றும், திட்டமிடல், ஆராய்ச்சி, எழுதுதல், கோடிங் அல்லது அதிக சிந்தனை தேவைப்படும் முடிவுகளுக்கு அடுத்த நிலைக்கு நகர்த்தலாம் என்றும் OpenAl கூறுகிறது.</p><h3><strong>நிபந்தனைகள்</strong></h3><p>ChatGPT யில் உரைவழி உரையாடல்களுக்கு இனி வரம்புகள் இருக்காது என்றாலும், இலவச மற்றும் கோ பயனர்கள் கோப்பு பதிவேற்றங்கள் மற்றும் பட உருவாக்கத்தில் தொடர்ந்து வரம்புகளை எதிர்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக்கில் கூடுதல் வசூல்: புகார் அளித்தால் வழக்கு பதிய வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-order-tasmac-administration-overpricing-liquor-sales</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-order-tasmac-administration-overpricing-liquor-sales#comments</comments><guid isPermaLink="false">d3aa5c8a-87d9-4c42-9ef7-fc2bbc799d9c</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:29:13 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:29:13.609Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai High court,சென்னை ஐகோர்ட்,Tasmac,டாஸ்மாக்,over price,கூடுதல் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kmkczjdp/court.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kmkczjdp/court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் போலீசில் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p>இதுபோல, 2022ம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.</p><h2>இனி ரசீது கட்டாயம்</h2><p>இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.</p><p>இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்கவேண்டும் என மதுபான கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மது வாங்குவோரின் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரசீது வழங்குவதில் சிரமங்கள் இருக்கிறது என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>ஆனாலும், நேற்று கூட மது வாங்கியபோது ரசீது வழங்கப்படவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என மனுதாரர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.</p><h2>நுகர்வோர் புகார் அளிக்கலாம்</h2><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சூப்பர் மார்க்கெட்களில் டூத் பேஸ்ட் வாங்கினால் கூட ரசீது கொடுக்கும் நிலையில், மாநிலத்துக்கு பெரும் வருவாயை தரும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது? கூட்டத்தை முறைப்படுத்த ஏன் காவலர்களை பணியமர்த்தக் கூடாது என கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் நுகர்வோர் புகார் அளிக்கலாம். அப்படி புகார் வந்தால், அந்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.</p><p>அரசு சுற்றறிக்கையைப் பின்பற்றாமல், கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீசிடம் புகார் அளிக்க வேண்டும். மனுதாரர் புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய - சீன எல்லைப் பிரச்னைகள்: தூதரக மற்றும் ராணுவ பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளும் ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-china-border-issues-both-nations-agree-to-seek-a-resolution-through-diplomatic-and-military-talks</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-china-border-issues-both-nations-agree-to-seek-a-resolution-through-diplomatic-and-military-talks#comments</comments><guid isPermaLink="false">64484378-c931-45ef-8502-f5fcca7ab39e</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:23:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:23:05.616Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,border issues,எல்லைப் பிரச்னைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/xewecfl0/New-Project-2026-08-07T171716.651.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய - சீன எல்லைப் பிரச்னைகள்: தூதரக மற்றும் ராணுவ பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளும் ஒப்புதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/xewecfl0/New-Project-2026-08-07T171716.651.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே இருக்கும் தீர்க்கமுடியாத எல்லைப் பிரச்னைகளை களைய தூதரக மற்றும் ராணுவ ரீதியிலான வழிமுறைகளை தொடர்ந்து மேற்கொள்ள இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. </p><p>டெல்லியில் நேற்று (ஆக.6) நடைபெற்ற இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் குறித்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்குழுவின் 36வது கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. </p><p>கூட்டத்தில் எல்லை நிர்ணயம், எல்லை மேலாண்மை, எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தியக் குழுவிற்கு வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜித் கோஷ் தலைமை தாங்கினார். அதே சமயம் சீனத் தரப்பிற்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சார் விவகாரங்கள் துறையின் தலைமை இயக்குநர் ஹூ யான்சி தலைமை தாங்கினார்.</p><p>எல்லை தாண்டிய ஆறுகள் தொடர்பான நிபுணர் மட்டக் குழுவின் கூட்டம் விரைவில் நடைபெற வேண்டியதன் அவசியமும், மேல்நிலைத் திட்டங்கள் தொடர்பான தொழில்நுட்ப விவரங்களைப் பகிர்ந்துகொள்ளவும் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. </p><h2>35வது WMCC சந்திப்பு</h2><p>முன்னதாக 35வது மேற்கு ஆசிய ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் மே 27 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், இரு தரப்பினரும் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்ததுடன், எல்லைப் பகுதிகளில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மூன்று நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்: காங்கிரஸ் கொறடா உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12#comments</comments><guid isPermaLink="false">2cd471a7-7ac9-42e9-998f-89e8bf4735c3</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:17:48 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:17:48.945Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,நாடாளுமன்றம்,parliament,தொகுதி மறுவரையறை மசோதா,Delimitation Bill</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/aq0aoqma/Parliament0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாடாளுமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/aq0aoqma/Parliament0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மிக முக்கியமான விவகாரங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதால், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள தங்கள் கட்சி உறுப்பினர்கள் ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இந்த மூன்று நாட்களிலும் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அவையில் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்தியா (INDIA) கூட்டணியில் உள்ள அனைத்துக் கூட்டணி கட்சிகளிடமும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>தொகுதி வரையறை மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு</h2><p>சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 (FCRA Bill) அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கும் நிறைவேற்றத்திற்கும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்ற தகவல்களுக்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவையும் அரசு பரிசீலித்து வருவதாகப் பேசப்படுகிறது.</p><p>மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா (Chief Whip) ஜெய்ராம் ரமேஷ் பிறப்பித்த three-line உத்தரவில், "திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (அதாவது ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 தேதிகளில்) மாநிலங்களவையில் மிக முக்கியமான விவகாரங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p><p>மாநிலங்களவையில் உள்ள காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும், ஆகஸ்ட் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய் மற்றும் புதன்) காலை 11 மணி முதல் அவை ஒத்திவைக்கப்படும் வரை தவறாமல் அவையில் இருக்கவும், கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்பட வேண்டும்," என்று ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதேபோன்றதொரு உத்தரவை மக்களவையில் உள்ள கட்சி உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கே. சுரேஷ் பிறப்பித்தார்.</p><h2>தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 3-ல் 2 பங்கு ஆதரவு தேவை</h2><p>அடுத்த வாரத்திற்கான அரசின் தற்காலிக அலுவல் பட்டியலை குறிப்பிடும்போது, ​​பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், FCRA மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.</p><p>FCRA மசோதாவை நிறைவேற்ற எளிய பெரும்பான்மை போதுமானது. ஆனால் அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை இந்தக் கூட்டத்தொடரில் கொண்டுவராவிட்டால் அடுத்த கூட்டத்தொடரில் கொண்டுவரலாம் என்றும், அப்படியிருந்தாலும் 2029 மக்களவைத் தேர்தலுக்குள் அதைச் செயல்படுத்தப் போதுமான நேரம் இருக்கும் என்றும் அரசாங்கத் தரப்பில் ஒரு கருத்து நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trailer-for-suriyas-viswanath-and-sons-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trailer-for-suriyas-viswanath-and-sons-released#comments</comments><guid isPermaLink="false">3f1cec38-2d86-4a5b-8044-c4271fa90c7f</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:04:44 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:04:44.947Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,mamitha baiju,மமிதா பைஜூ,vishwanath and sons,விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jrlze6p1/New-Project-2026-08-07T173422.835.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/jrlze6p1/New-Project-2026-08-07T173422.835.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். </p><p>சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் டீசர், பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளன. </p><p>குறிப்பாக மமிதாவிற்கும், அவரைவிட 20 வயது அதிகமாக இருக்கும் சூர்யாவுக்கும் இடையே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள காதல் காட்சிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. </p><p>இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/jZHoM2YhFCY"></iframe></figure>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் 2026: சதத்தை தவறவிட்ட ஆஷிக்: 205 ரன்களைக் குவித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-need-206-runs-against-chepauk-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-need-206-runs-against-chepauk-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">406ce830-4402-4e10-8707-f86a69e20102</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:50:11 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:50:11.063Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி,aashiq,ஆஷிக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ltq9os4r/aashiq.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aashiq]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ltq9os4r/aashiq.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. வரும் 28-ம் தேதி வரை இரு கட்டமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.</p><p>மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17-ம் தேதி ஓய்வு தினமாகும்.</p><p>முதல் கட்ட போட்டிகள் வரும் 15-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடக்கின்றன.</p><h2>டாஸ் வென்ற திருப்பூர்</h2><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் வாசீம் அகமது 16 ரன்னில் அவுட்டானார். </p><p>2வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஜெகதீசன்-ஆஷிக் ஜோடி 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜெகதீசன் 27 ரன்னில் அவுட்டானார். </p><h2>சதத்தை தவறவிட்ட ஆஷிக்</h2><p>பொறுப்புடன் ஆடிய ஆஷிக் அரை சதம் கடந்தார். அதன்பின் அதிரடியாக ஆடினார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஷிக் 56 பந்தில் 7 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 98 ரன்னில் ஆட்டமிழந்தார். </p><h2>205 ரன்கள் குவிப்பு</h2><p>இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்துள்ளது. </p><p>திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் மோகன் பிரசாத், சிலம்பரசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்... முடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு: விஜய் - சங்கீதா எதிர்காலம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-puts-an-end-to-rumors-divorce-case-concluded-what-does-the-future-hold-for-vijay-and-sangeetha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-puts-an-end-to-rumors-divorce-case-concluded-what-does-the-future-hold-for-vijay-and-sangeetha#comments</comments><guid isPermaLink="false">33ba657d-0626-425e-b2b4-7ba7ded9818e</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:42:55 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:42:55.672Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sangeetha,ஜோசப் விஜய்,joseph vijay,சங்கீதா,Divorce Petition,விவாகரத்து மனு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v5d51v91/New-Project-2026-08-07T171220.708.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்... முடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு: விஜய் - சங்கீதா எதிர்காலம் என்ன?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v5d51v91/New-Project-2026-08-07T171220.708.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரி அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளார். </p><p>மனுவை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து வழக்கை முடித்துவைப்பதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நீண்டநாட்களாக தமிழ்நாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்த வழக்கு முடிவுப் பெற்றுள்ளது. </p><p>வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், லண்டனில் இருக்கும் சங்கீதா காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதியிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசியதாகவும், அப்போது மனப்பூர்வமாக மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. </p><p>இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த விவாகரத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.</p><h2>மனைவியான ரசிகை </h2><p>வெவ்வெறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி சென்னையில் இந்து முறைப்படி விஜய்யும், சங்கீதாவும் திருமணம் செய்துகொண்டனர்.  விஜய் கிறிஸ்தவர், சங்கீதா இந்து. விஜய்யின் ரசிகையாக இருந்தப் பெண்ணை, அவரது மணப்பெண்ணாக மாற்றியது விஜய்யின் தந்தை இயக்குநர் சந்திரசேகர்தான்.</p><p>இந்தத் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணமான மறுஆண்டே மகன் ஜேசன் சஞ்சயும், 2005-ல் மகள் திவ்யா சாஷாவும் பிறந்தனர். </p><p>இவ்வாறு இப்பந்தம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நீடித்தநிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்து விஜய்யின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ரசிகர்களை தாண்டி இந்தச் செய்தி அப்போது மட்டுமின்றி இன்றுவரை தமிழ் சினிமாத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக இருந்தது.</p><h2>விவாகரத்து மனுவில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள்</h2><p>சங்கீதா சொர்ணலிங்கம் தனது விவாகரத்துக் கோரிய மனுவில், விஜய் நீண்டநாட்களாக மூன்றெழுத்துப் பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்து வருவதாகவும், இது தனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாக குறிப்பிட்டிருந்தார்.</p><p>விஜய் உடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தது தனக்கு மட்டுமின்றி, தனது பிள்ளைகளுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.</p><p>மேலும் இருவருக்கும் இடையே நீண்டநாட்களாகவே இந்த பிரச்னை நிலவிவந்ததாகவும், முன்னரே சங்கீதா விவாகரத்து கோரியதாகவும், இதனால் அவரை விஜய் வீட்டுச்சிறையில் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். </p><p>மேலும் இந்த திருமண உறவை ரத்து செய்யக்கோரியதுடன், நிரந்தர ஜீவனாம்சமும், திருமண வீட்டில் தொடர்ந்து வசிக்கும் உரிமையையும் கோரியிருந்தார். </p><h2>மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு</h2><p>விஜய்யின் அரசியல் பிரவேசத்தினாலும், சங்கீதா லண்டனில் இருப்பதாலும், மனுதாரர்கள் ஆஜராகாமல் இந்த விவாகரத்து வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முந்தைய விசாரணையின்போது, ​​இரு தரப்பினரும் ஆஜராகவில்லை. அவர்களுக்காக அவரவர் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.</p><p>இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்நிலையில் விஜய் தரப்பில் இருந்து ஆஜராவதில் இருந்து விலக்கு கோரப்பட்டது. ஆனால் சட்டசபை முடிந்தபின் ஆஜராகுமாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.</p><p>மறுபுறம் சங்கீதா காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதி அவரிடம் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்போது, வழக்கை தொடர தான் விரும்பவில்லை எனவும், முழு சுயநினைவுடன் விவாகரத்து வழக்கை திரும்பப் பெறுவதாகவும் சங்கீதா தெரிவித்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் இந்த வழக்கை முறைப்படி முடித்து வைத்துள்ளது.</p><h2>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்</h2><p>விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக தனியார் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் குறித்துப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். </p><p>இந்த நேர்காணல் வெளியான சில நாட்களிலேயே, விவாகரத்து மனுவும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. </p><h2>எதிர்காலம் என்ன?</h2><p>சங்கீதா சொர்ணலிங்கம் விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றதால், சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தபோதிலும், தம்பதியினர் முறைப்படி சமரசம் செய்துகொண்டனரா அல்லது தொடர்ந்து சேர்ந்து வாழ்வார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.</p><p>இருதரப்பினரும் இதுதொடர்பாக இதுவரை அறிக்கை எதையும் வெளியிடவும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டதா?: அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">8a465eb2-fb70-4b57-8bdc-30cf42426622</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:29:47 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:29:47.137Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/n46vnn99/EPSRajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/n46vnn99/EPSRajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அதிமுக கொண்டு வந்த பெரும்பாலான திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக தெரிவித்தார். அப்போது ஸ்டிக்கர் என்பதை குறிப்பிட வேண்டும். அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் வலியுறுத்தினார்.</p><h2>எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிப்பு எனக் குற்றச்சாட்டு</h2><p>பின்னர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது எனக் குற்றம்சாட்டின்னார்.</p><p>இது தொடர்பாக ராஜ்மோகன் பதில் அளிக்கையில் "எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது என்று அதிமுக உறுப்பினர் வேதனைப்பட்டு கூறினார். உடனே, நான் ஓடோடி சென்று, அதிகாரிகளை அழைத்து அதை காட்டச் சொல்லி கண்களால் பார்த்து வந்து பேரவைத் தலைவர் மூலம் தெரிவிக்கிறேன். ஒரு நொடி கூட நேரலையில் துண்டிக்கப்படவில்லை. நேரலையில் சென்று கொண்டிருக்கிறது. உங்களுடைய சிரித்த முகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்." என்றார்.</p><p>மீண்டும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெளியே மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது நேரலை துண்டிக்கப்பட்டதாக எங்களிடம் சொன்னார்கள். இங்கு பதிவு செய்யப்பட்டது. வெளியில் ஒளிப்பரப்பு செய்யப்படவில்லை என்பதுதான் நிதர்சமான உண்மை. இதை மறுக்கக் கூடாது" என்றார்.</p><h2>சபாநாயகர் பதில்</h2><p>இதற்கு சபாநாயகர் "நான் அவையில் இருந்து வெளியே சென்றபோது, இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டேன். ஒரு நிமிடம் கூட தடையில்லாமல் நேரலையாக சென்றது என்ற தகவலை எனக்கு தெரிவித்து இருக்கிறார்கள். சில வீடுகளில் பார்க்கும்போது தடை ஏற்பட்டிருக்கலாம். இங்கு இருந்து எந்தவொரு உத்தரவோ, தடையும் செய்யும் எண்ணமோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.</p>]]></content:encoded></item></channel></rss>