<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 01 Sep 2026 16:17:38 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை: அமைச்சர் வெங்கட்ரமணன் - 1 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026#comments</comments><guid isPermaLink="false">3665960b-ee31-49d1-bea4-c46614cb472a</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:55:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:32:51.679Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/b48fqijv/venkatramanan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/b48fqijv/venkatramanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழைய ரக சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கைத்தறி நெசவிற்கு அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் - பிரேமலதா</p><p>விருத்தாச்சலம் தொகுதியில் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தை தரம் உயர்த்த வேண்டும் - பிரேமலதா</p><p>முதலீட்டு மானியம் கோரியவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>செயற்கை நுண்ணறிவு, சென்சார் தொழில்நுட்பங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான மானியம் ரூ.30 கோடி ஒதுக்கீடு.</p><p>குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான விளிம்புத்தொகை உதவித்தொகை திட்டம் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் மதன்ராஜா </p><p>மாநிலம் முழுவதும் உள்ள கதர் அங்காடிகள் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.</p><p>கதர், பட்டு உற்பத்தியில் ஈடுபடும் நூற்பாளர், நெசவாளருக்கான நலநிதி பங்குத்தொகை 12-ல் இருந்து 16% ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>முதலீட்டு மானியம் கோரியவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - அமைச்சர் மதன்ராஜா </p><p>உயர்தர பட்டு ரகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காஞ்சிபுரத்தில் ரூ.2 கோடியில் பட்டு ஏற்றுமதி வர்த்தக மையம்.</p><p>கைத்தறி நெசவாளர் மின்செலவை குறைக்க 1,000 தனிநபர் கூடங்களில் 100% மானியத்தில் சூரிய ஒளி மின் தகடு அமைக்கப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>நெசவாளர்கள் நலனை கருத்தில் கொண்டு கூலி மற்றும் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு செய்தபோது அதிக கட்டணம் வசூல் குறித்தஎந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.</p><p>அதிக கட்டணம் வசூலிக்கும் எந்த கல்லூரியாக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்</p><p>தனியார் மருத்துவ கல்லூரிகளில் நான்கரை ஆண்டுக்கு பதிலாக ஜந்தரை ஆண்டுக்கான கட்டணம் வசூல்.</p><p>பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது - அக்ரி கிருஷ்ணமூர்த்தி புகார்</p> <p>ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்க ஒரு கிலோ வீதம் வெங்காயம் விற்பனை செய்யப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களுடன் தமிழ்நாடு அரசு உடன் நிற்கும் - அமைச்சர் ஆதவ் உறுதி</p><p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி</p><p>1,535 வீடுகள் அகற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசித்து வரும் 1,535 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>வேறு இடம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள், இன்று ஒருநாளாவது அரசியல் செய்யாமல் இருங்கள் - அமைச்சர் ஆதவ் வேண்டுகோள்</p> <p>தமிழ்நாடு இளைஞர் கூட்டமைப்பினர் ஆக.22-ந்தேதி அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்தார்கள்.</p><p>செப்.8 வரை பெசன்ட் நகர் மாதா கோவில் விழா இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என அனுமதி மறுப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>பெசன்ட் நகர் தேவாலய கொடியேற்ற விழா முடிந்த நிலையில் அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பது ஏன்? - உதயநிதி</p><p>அமைதியாக நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்காதது ஏன்? - உதயநிதி </p><p>சென்னை பெசன்ட் நகரில் நடத்தப்படவிருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு தவெக அரசு அனுமதி மறுத்துள்ளது - உதயநிதி</p> <p>தங்கை அனிதா கண்ட கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்.</p><p>அனைத்து மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நம் பக்கம் வரும் - அமைச்சர் ஆதவ்</p> <p>நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி உயிர்நீத்த தங்கை அனிதாவின் நினைவு நாள் இன்று.</p><p>எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், எங்கள் முதல்வர் விஜய் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை.</p><p>2029 தேர்தல் சூழ்நிலை நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் தூக்கி எறியப்படும் நாளாக மாறும் -  அமைச்சர் ஆதவ்</p> <p>தமிழ்நாடு முழுவதும் உள்ள 54,481 அங்கன்வாடி மையங்களில் 42,223 சொந்த கட்டிடங்களில் செயல்படுகின்றன.</p><p>எஞ்சிய அங்கன்வாடிகளுக்கும் அரசு இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p><p>தருமபுரி தொகுதியில் உள்ள பல அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டிடத்தில இயங்கி வருகிறது. புதிய அரசு கட்டிடம் தேவை - சவுமியா அன்புமணி</p><p>மதுரையில் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்பட உள்ளது - எம்எல்ஏ கார்த்திகேயன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>எல்லா மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி கூடம், ஓடுதளம், நீச்சல் குளம் அமைக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p> <p>மாவட்டத்திற்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் காயமடையாத வகையில் மேட் அமைத்து விளையாட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>சிவகங்கை, நெல்லை மாவட்டங்களில் பாரம்பரிய விளையாட்டு தொடர்பான சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது - அமைச்சர் ஆதவ் </p><p>வேலவன் ஊராட்சியில் விளையாட்டு உபகரணம் வைப்பதற்காக புதிய கட்டடம் கட்டப்படும் என எம்எல்ஏ நாராயணன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரம் தொடங்கியது.</p><p>மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி Ban NEET வாசகம் கொண்ட கருப்பு டீ சர்ட் அணிந்து சட்டசபைக்கு வருகை.</p><p>நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்த அனிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கருப்பு உடையில் வருகை.</p><p>சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கைத்தறி, துணிநூல், கதர் கிராமத் தொழில்கள், தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு, குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது.</p><p>மேலும் தமிழ்நாடு நகர் மற்றம் ஊரமைப்பு (திருத்தச்) சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>தாயாரின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும் - புதுச்சேரி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/caste-certificates-must-be-issued-based-on-the-mothers-lineage-high-court-orders-puducherry-government</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/caste-certificates-must-be-issued-based-on-the-mothers-lineage-high-court-orders-puducherry-government#comments</comments><guid isPermaLink="false">5198b4f2-53e1-4d25-95f0-b38c9f22fc6a</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:17:17 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:17:17.641Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Puducherry government,சாதி சான்றிதழ்,caste certificate,புதுச்சேரி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/07hj6b22/New-Project-2026-09-01T214658.186.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாயாரின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும் - புதுச்சேரி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/07hj6b22/New-Project-2026-09-01T214658.186.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாயாரின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/what-authority-does-the-dgp-have-to-ban-cockfighting-madras-high-court-asks">சென்னை உயர் நீதிமன்றம் </a>உத்தரவிட்டுள்ளது.</p><h2>சாதி சான்றிதழ்</h2><p>புதுச்சேரியில் பிறந்து, வளர்ந்த குழந்தைகளின் தாயார் புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும், அவர்களது தந்தை வெளிமாநிலத்தைச் சேர்ந்தராக இருந்தால், தாயாரின் சாதி அடிப்படையில் சாதி சான்றிதழ் மறுக்கப்பட்டது. </p><p>சிலருக்கு புலம்பெயர்ந்தோர் என சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் தங்களுக்கான புதுச்சேரி அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு பலன்களை பெற முடியவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட 28 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்தனர்.</p><p>இந்த வழக்குகள் விசாரணை நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட தாயாரின், பூர்வீக சாதியை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால், புதுச்சேரி அரசு வழங்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. </p><p>அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15 மற்றும் 16 அனைவருக்குமான சமத்துவத்தை உறுதி செய்கின்றன.</p><h2>தந்தையின் சமூக அந்தஸ்து</h2><p>எனவே, சமூக அந்தஸ்தை தந்தையின் மூலம் மட்டுமே தீர்மானிக்கும் பாரம்பரியக் கருத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாது. </p><p>எனவே, தாயாரின் பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சட்டவிரோதமானது” என்று வாதிட்டனர்.</p><p>புதுச்சேரி அரசு தரப்பில், ‘‘ஒரு மாநிலத்தில் கிடைக்கும் சமூக அந்தஸ்து மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு பலன்களை புலம் பெயர்ந்தவர்கள் அப்படியே கேட்கமுடியாது. </p><p>சமூக அந்தஸ்து தந்தையின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. தாயாரின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கக்கோருவது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன” என்று வாதிடப்பட்டது.</p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-</p><h2>ஏற்புடையதல்ல</h2><p>புதுச்சேரியைச் சேர்ந்த ஆண் ஒருவர் வெளிமாநில பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், அவர்களது குழந்தைகளுக்கு புதுச்சேரி பூர்வீகத்தின் அடிப்படையில் சாதி சான்றிதழ் மற்றும் இடஒதுக்கீட்டுப் பலன்கள் வழங்கப்படுகின்றன. </p><p>அதேநேரம், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அவர்களது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ், இடஒதுக்கீடு வங்குவது இல்லை. இது பாலினம் அடிப்படையிலான வேறுபாடாக கருதப்படுகிறது.</p><p>இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கமே சமூகத்தில் பின்தங்கிய நிலையை சரிசெய்வதுதான். அந்த சமூக அந்தஸ்து தந்தை வழியில் வந்ததா அல்லது தாய் வழியில் வந்ததா? என்பதை தீர்மானி்ப்பது அல்ல. எனவே, புதுச்சேரியில் பாலின அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்க புதுச்சேரி அரசு மறுப்பது ஏற்புடையதல்ல.</p><p>இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருப்பதால் தந்தை வழியாக மட்டுமே சமூக அந்தஸ்தை தீர்மானிக்க முடியும் என்ற கூற்றையும் ஏற்க முடியாது.</p><h2>தடை இல்லை</h2><p>ஒரு பெண்ணின் அடையாளம் திருமணத்துக்குப் பிறகு கணவரின் அடையாளத்துடன் கரைந்து போய்விடக்கூடாது. பெண்களுக்கான சம உரிமையை அரசியலமைப்பு சட்டம் தந்துள்ளது. </p><p>எனவே, தந்தையின் பூர்வீக அடிப்படையில் மட்டுமே சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு அவர்களின் தாயாரின் பூர்வீகத்தின் அடிப்படையில் உரிய சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும். </p><p>அந்த சாதி சான்றிதழின் அடிப்படையில் புதுச்சேரி அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து உரிமைகளையும், இடஒதுக்கீட்டு பலன்களையும் வழங்கவேண்டும். </p><p>அதேநேரம் தவறான கோரிக்கை முன்வைக்கப்பட்டாலோ அல்லது தாயாரின் பூர்வீகம் நிரூபிக்கப்படாவிட்டாலோ சாதி சான்றிதழ் வழங்க முடியாது என அரசு மறுப்பதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது.”</p><p>என நீதிபதி உத்தரவில் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-authority-does-the-dgp-have-to-ban-cockfighting-madras-high-court-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-authority-does-the-dgp-have-to-ban-cockfighting-madras-high-court-asks#comments</comments><guid isPermaLink="false">05f4f282-9fcc-41fb-8e6f-3908ed72e18f</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:01:34 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:01:34.133Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,தமிழ்நாடு காவல்துறை,Tamil Nadu Police,சேவல் சண்டை,Cockfighting</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/49bjg7m4/New-Project-2026-09-01T213111.641.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/49bjg7m4/New-Project-2026-09-01T213111.641.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேவல் சண்டைக்கு தடை விதிக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.</p><h2>சேவல் சண்டை</h2><p>தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பித்தார். </p><p>இந்தநிலையில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோடைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>அந்த மனுவில், “கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயங்கள் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். </p><p>போலீசார் விதிக்கும் நிபந்தனைகளப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்டம் இல்லை. விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. </p><p>எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.</p><h2>என்ன அதிகாரம்?</h2><p>இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், மிருக வதை தடை சட்டம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.</p><p>இதை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது? </p><p>போலீசுக்கு எத்தனையோ பணிகள் இருக்கும்போது, ஆடு சண்டை எங்கே நடக்கிறது? சேவல் சண்டை எங்கே நடக்கிறது? என கண்காணிப்பதுதான் வேலையா? என கேள்வி எழுப்பினார். </p><p>இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்.7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/sports/t20-series-against-afghanistan-indian-squad-led-by-shreyas-iyer-announced</link><comments>https://www.maalaimalar.com/sports/t20-series-against-afghanistan-indian-squad-led-by-shreyas-iyer-announced#comments</comments><guid isPermaLink="false">f5985d3f-0547-4da5-b640-d84e6e528b15</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:44:38 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:44:38.160Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Afghanistan,ஸ்ரேயாஸ் ஐயர்,T20I series,ஆப்கானிஸ்தான்,டி20 தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/oczaezo7/New-Project-2026-09-01T210110.447.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/oczaezo7/New-Project-2026-09-01T210110.447.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இத்தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும், துணை கேப்டனாக திலக் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>இந்திய டி20 அணி விவரம்</h2><p>ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா  ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.</p><h2>உடற்தகுதி சோதனை</h2><p>ஜஸ்பிரீத் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், தங்களது உடற்தகுதி சான்றிதழைப் பெறுவதைப் பொறுத்தே விளையாடுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. </p><p>இந்த மாத இறுதியில் ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காகப் பயணம் மேற்கொள்ளும் அதே அணிதான் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், இலங்கை தொடரை முழங்கால் காயம் காரணமாக தவறவிட்ட பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இருப்பினும் உடற்தகுதியை வைத்தே விளையாடுவாரா, இல்லையா என்பது தெரியவரும்.</p><p>இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் செப்டம்பர் 13 முதல் 17 வரை, தேசிய தலைநகரில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளன. </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் இரண்டாம் கருவறை: அமைச்சர் பர்வேஸ் உருக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-parvez-calls-cm-vijay-second-womb</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-parvez-calls-cm-vijay-second-womb#comments</comments><guid isPermaLink="false">97ea5aa1-07db-4f52-a1e2-a60d0554cdb5</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:40:47 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:40:47.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் பர்வேஸ்,TN Minister Parvesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/7x5wqjtf/MinisterPravesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் பர்வேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/7x5wqjtf/MinisterPravesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் சட்டமன்ற கூட்டத்தில் தொழிலாளர்கள் நலன் குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசிய பின்னர், பதிலுரை அளித்தார். அப்போது அவர் முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசினார்.</p><h2>அமைச்சர் பர்வேஸ் பேசியதாவது:-</h2><p>புதுக்கோட்டையைச் சேர்ந்த இஸ்லாமியர் ஆன இந்த எளியவனை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர வைத்த இரண்டாம் கருவறையாம் தளபதிக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்.</p><p>எல்லோரும் உயிலை எழுதி தருவார்கள். நான் அவருக்கு என் உயிரையே எழுதி தருகிறேன். விஜய்தான் எனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம்</p><p>Ever Rest இல்லாமல் உழைக்கும் Everest ஆக உயர்ந்து நிற்கிறார் முதல்வர்.</p><p>காலத்தை குறிப்பிட கி.மு., கி.பி. சொல்வார்கள். அரசியலில் இனி விஜய்க்கு முன், விஜய்க்கு பின்  (வி.மு., வி.பி.,) என்றுதான் குறிப்பிட வேண்டும். ஊழலும், லஞ்சமும் விஜயின் சாட்டை அடிக்கு பயந்து தலை தெறித்து ஓடிவிட்டது.</p><p>இவ்வாறு அமைச்சர் பர்வேஸ் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை... இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு - இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-provision-to-withdraw-resignation-by-election-is-the-only-solution-high-court-refuses-to-accept-isakki-subbiahs-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-provision-to-withdraw-resignation-by-election-is-the-only-solution-high-court-refuses-to-accept-isakki-subbiahs-petition#comments</comments><guid isPermaLink="false">88802761-962c-4915-8f45-ac358650a2b6</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:27:13 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:27:13.084Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Resignation,Ambasamudram,அம்பாசமுத்திரம்,இசக்கி சுப்பையா,ராஜினாமா,Esakki Subaya</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suasbgy7/New-Project-2026-09-01T205359.421.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை... இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு - இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suasbgy7/New-Project-2026-09-01T205359.421.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றப் பேரவை விதிகளின்படி, ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட ராஜினாமா கடிதத்தை  திரும்பப் பெறுவதற்கு எந்தவொரு விதியும் இல்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் அலுவலகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><p>முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா, தனது ராஜினாமா கடிதத்தை ஏற்க வேண்டாம் என்றும், மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தொடர விரும்புவதாகவும் பேரவைச் செயலரிடம் கடிதம் அளித்திருந்த நிலையில் இந்த விளக்கமும், அறிவிப்பும் வெளியாகியுள்ளது.</p><h2>இடைத்தேர்தலே தீர்வு</h2><p>இசக்கி சுப்பையா பிரதிநிதித்துவப்படுத்திய அம்பாசமுத்திரம் தொகுதி ஏற்கனவே காலியானதாக அறிவிக்கப்பட்டுவிட்டதால், தற்போது அங்கு இடைத்தேர்தல் நடத்துவது மட்டுமே சட்டப்படியான ஒரே தீர்வு எனச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.</p><h2><strong>சபாநாயகரின் பதில்</strong></h2><p>இந்த விவகாரம் தொடர்பாகச் சபாநாயகர் தரப்பிலிருந்து இசக்கி சுப்பையாவிற்கு அதிகாரப்பூர்வப் பதில் கடிதம் அனுப்பப்பட உள்ளது.</p><h2>இசக்கி சுப்பையாவின் மறுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு</h2><p>இதற்கிடையே, அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. </p><p>அப்போது தனது ராஜினாமா மனுவை திரும்பப் பெறுவதாகவும், இடைத்தேர்தல் வரும்வரை தனது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் இசக்கி சுப்பையா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. </p><p>இதுதொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர்.</p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>தொடர்ந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மலைவாழ் மக்களுக்கு நீங்கள் செய்த வேலை எந்த லட்சணத்துல இருக்கு... திமுக, அதிமுகவை வெளுத்துவிட்ட அமைச்சர் வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-lashes-out-at-dmk-and-aiadmk-hill-tribes-welfare-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-lashes-out-at-dmk-and-aiadmk-hill-tribes-welfare-issues#comments</comments><guid isPermaLink="false">cd2cb305-f51f-42b3-8196-4d6166ffbeae</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:08:55 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:08:55.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,தமிழக சட்டசபை,TN assembly,vanni arasu,வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/p601onpi/VanniArasu001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/p601onpi/VanniArasu001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thangam-thennarasu-clarifies-congress-allegation-land-not-provided-for-kamarajar-memorial-at-marina">தமிழக சட்டசபை</a>யில் இன்றைய மானியக் கோரிக்கையின்போது மலைவாழ் மக்கள் குறித்த விவாதம் எழுந்தது. அப்போது முன்னாள் அமைச்சரும், திமுக கொறடாவும் ஆன எ.வ. வேலு பேசும்போது "மலைவாழ் பகுதி என்பது நீண்ட நெடிய ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. அதன்பின் அரசு வந்தபோதுதான் அப்பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.</p><h2>திமுக-தான் அதிகமாக செய்தது</h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமுனாமரத்தூர் என்ற மலை உள்ளது. அங்கு 200 கிராமங்கள் உள்ளன. கல்வராயன் மலையிலும் அதுபோன்ற எண்ணிக்கையில் கிராமங்கள் உள்ளன. சில நேரங்களில் போக்குவரத்திற்குக் கூட வசதி இல்லை. ஒத்தையடி பாதை கூட இல்லாத ஏராளமான கிராமங்கள் உண்டு.</p><p>அந்தந்த ஆட்சிகள் வந்தபோதுதான் பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இவர்கள் சொல்கிற பகுதி முழுமை அடைந்து விட்டது என்று சொல்ல முடியாது. அங்கு காலம் காலமாக இருந்தார்கள். உழுதார்கள். ஆனால் நிலம் அவர்களுக்கு சொந்தம் கிடையாது. இப்படிப்பட்ட நிலைதான்.</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக தொடங்கப்பட்டபோது, நான் நேரடியாக சென்று 13 ஆயிரம் பேருக்கு நில உரிமை பட்டா கொடுத்திருக்கிறேன். அதனால் முழுமை அடைந்ததாக அர்த்தம் அல்ல. ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்று செய்ய வேண்டியுள்ளது. நாங்களும் ஜாதி சான்றிதழ் கொடுத்திருக்கிறோம். நாங்கள் கொடுத்தோம். தேவை இருக்கிறது. நீங்களும் முடிக்க முடியாது. மலைப்பகுதியில் அவ்வளவு கிராமங்கள் இருக்கிறது. திமுக ஆட்சியில் முடிந்த அளவிற்கு சொய்திருக்கிறோம். அதிகம் செய்த ஆட்சி திமுக ஆட்சிதான்" என்றார்.</p><p>அதன்பின் "மலைாவாழ் மக்கள் எண்ணிக்கை சுமார் 8 லட்சம் பேர்தான். 5 வருடத்திற்குள் கொடுக்க முடியும். திரும்ப திரும்ப சொல்கிறேன். நான் குறைகளை சொல்லவில்லை. போதாமைகளை சொல்கிறேன்" என்று அமைச்சர் வன்னி அரசு பேசினார்.</p><h2>அதிமுக அமைச்சர் கால் படாத இடமே இல்லை</h2><p>பின்னர் அதிமுக உறுப்பினர் எழுந்து "2011 முதல் 2016 வரை அதிமுக அமைச்சர் காலடி படாத இடமே மலையில் கிடையாது. மலைக்கு தேவையான அனைத்தையும் அதிமுக செய்து கொடுத்தது. இந்த அளவிற்காவது இருப்பதற்கு அம்மாவின் அதிமுகதான் காரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா பீல்டிங்கிலும் அம்மா பெயரும், அதிமுக முன்னாள் அமைச்சர் மோகன் பெயரும் இருந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.</p><h2>அமைச்சர் வன்னி அரசு</h2><p>உடனே வன்னி அரசு "செய்தியை திரித்தி திருப்பு வாதம் செய்ய முயற்சி செய்கிறார்கள். கீழ் தீவனூர், மேல் தீவனூரில் இப்போதும் நீங்கள் சென்று பார்க்கலாம்., 10 கி.மீ. சாலைகள் இல்லை. நாங்கள் நடந்து சென்றோம். ஆட்சியர் உள்ளிட்டோர் வந்தார்கள். இன்றும் சாலை இல்லாத கிராமம் இருக்கு.</p><p>இப்படிப்பட்ட ஒரு கிராமத்தைதான் நீங்கள் தத்தெடுத்திருக்கீங்க, நீங்கள் வேலை பார்த்திருக்கீங்க, அப்படின்னா, என்ன லட்சணத்தில் இருக்குன்னு இந்த இடத்தில் நான் சொல்கிறேன். நான் வெளிப்படையாக பேசுகிறேன். நாங்கள் செய்தோம், நீங்கள் செய்தோம் என்பதல்ல, தேவைப் பற்றி சொல்கிறோம். கோரிக்கைகள் பற்றி சொல்கிறோம். மக்கள் வலியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். வலியை பற்றி பேசாமல், செய்தோம் என்று சொன்னால், சாவல் விடுகிறேன். நீங்க வாங்க, மேல் தூவனூர், கீழ் தூவனூரில் சாலை இல்லை. நாங்கள் போட சொல்லியிருக்கிறோம். தொடங்கியிருக்கிறோம்." என்றார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-death-toll-crosses-1000-rescuers-reach-remote-areas</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-death-toll-crosses-1000-rescuers-reach-remote-areas#comments</comments><guid isPermaLink="false">74945ec5-28f1-4a96-8733-5af503a55e02</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:28:04 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:28:04.097Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,flood,Death toll,பலி எண்ணிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/x737y5gw/nepal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ nepal flood]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/x737y5gw/nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.</strong></em></p><h2>நேபாளத்தில் வெள்ளம்</h2><p>சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. நேபாள எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த 26-ம் தேதி திடீர் வெள்ளம் ஏற்பட்டது.</p><p>இமயமலையில் பனிப்பாறை உடைந்து திபெத் வழியாக நேபாளத்தில் பாயும் போடேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. </p><p>இந்த வெள்ளத்தால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.</p><p>வெள்ளத்தில் உள்நாட்டு மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சாலைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. </p><p>வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்ததால் பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டது.</p><h2>பலி எண்ணிக்கை 1000</h2><p>இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1003 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.</p><p>வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4,000 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பில் சிக்கிய 11,000 பேர் மீட்கப்பட்டனர்.</p><p>மீட்புப் பணிகளில் நேபாளம், இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தான்: ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/rajasthan-boy-who-accidentally-fell-into-a-borewell-rescued-safely-after-a-5-hour-operation</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajasthan-boy-who-accidentally-fell-into-a-borewell-rescued-safely-after-a-5-hour-operation#comments</comments><guid isPermaLink="false">d21a0bc2-738e-4a39-9260-815690840e85</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:21:15 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:21:15.953Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,Borewell,ராஜஸ்தான்,ஆழ்துளைக் கிணறு</media:keywords><media:content height="1913" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/x96s0jkj/New-Project-2026-09-01T184337.668.jpg" width="3402"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராஜஸ்தான்: ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/x96s0jkj/New-Project-2026-09-01T184337.668.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் 300 அடி ஆழமுள்ள திறந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவன், 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். </p><p>அல்வார் மாவட்டத்தின் ராம்நகர் பகுதியிலுள்ள புடோலி கிராமத்தில் பானு குர்ஜார் என்ற சிறுவன் நேற்று (ஆக.31) மாலை பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்துள்ளான். பட்டத்தை பிடிக்க முயன்று கீழே பார்க்காமல், மேலே பார்த்தவாறு ஓடியுள்ளான். </p><p>அப்போது அப்பகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றை மூடியிருந்த கல்லின் மீது சிறுவன் கால் வைத்து, தவறி உள்ளே விழுந்துள்ளான். சுமார் 50 முதல் 55 அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்க அப்பகுதி மக்கள் முயற்சித்துள்ளனர்.</p><p>தொடர்ந்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.</p><p>சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 11.30 மணிக்கு மீட்கப்பட்டுள்ளார். உடனே மருத்துவ பரிசோதனைக்காக அருகில் இருந்த அல்வார் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: காலையில் உயர்ந்து மாலையில் கணிசமாக குறைந்த தங்கம் - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-decrease-in-evening-today</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-decrease-in-evening-today#comments</comments><guid isPermaLink="false">59ba7d5c-5145-4f61-85d6-d6c20e96c9c7</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:38:19 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:38:19.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/guqydvrd/Gold" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/guqydvrd/Gold?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காலையில் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் 1680 ரூபாய் குறைந்துள்ளது.</strong></em></p><p>தங்கம் என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது.</p><p>ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால், இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதற்கிடையே, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.</p><p>தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14 ஆயிரத்து 370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 960-க்கும் விற்றது.</p><h2>சற்று உயர்வு</h2><p>மாத தொடக்க நாளான இன்று காலையில் தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>வெள்ளி விலை குறைவு</h2><p>கடந்த 3 நாளாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது.</p><h2>கணிசமாக குறைந்த தங்கம்</h2><p>இந்நிலையில், இன்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு 210 ரூபாயும், சவரனுக்கு 1,680 ரூபாயும் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 14,175 ரூபாய்க்கு, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையும் மாலையில் குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையானது.</p><p>காலையில் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் 1680 ரூபாய் குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிரான வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-acceptance-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-acceptance-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date#comments</comments><guid isPermaLink="false">0a5355db-679c-415a-b4db-154c0f053cea</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:24:27 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:24:27.820Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/r93dftkk/ChennaiHighcourt001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை உயர்நீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/r93dftkk/ChennaiHighcourt001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அதிமுக-வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.</p><p>த.வெ.க. தலைவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது கொறடா உத்தரவை மீறி, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் எஸ்.ஆர். ராஜகோபால் ஆகியோர், இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஆனால், இந்த விசாரணை என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல. அரசியல் சாசன கடமை. அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டனர்.</p><p>ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெக-வில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்.</p><h2>அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை</h2><p>ராஜினாமாவை ஏற்கும் முன், தகுதி நீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டினர்.</p><p>சபாநாயகர் தரப்பில் ஆஜரான சி.எஸ். வைத்தியநாதன் ராஜினாமா ஏற்றுக் கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகிவிடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும் எனக் குறிப்பிட்டார்.</p><h2>சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை</h2><p>சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா என்பதை மட்டும்தான் விசாரிக்க முடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா, குதிரைபேரம் நடந்ததா என்பதை தகுதி நீக்க நடவடிக்கையில்தான் விசாரிக்க முடியும். ராஜினாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜினாமாவை ஏற்கும்போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.</p><p>இருதரப்பு வாக்குவாதம் மற்றும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. தரப்பிலான வாக்குவாதம் ஆகியவற்றிக்குப் பிறகு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதல்: இந்தியர் உள்பட 12 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/kyiv-attack-kills-12-including-indian-citizen-in-russias-straight-strike</link><comments>https://www.maalaimalar.com/news/world/kyiv-attack-kills-12-including-indian-citizen-in-russias-straight-strike#comments</comments><guid isPermaLink="false">b2a6bc32-203a-4bd1-9541-33f89f678a0e</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:09:12 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:09:12.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிபர் ஜெலன்ஸ்கி,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war,Indian killed,Volodymr Zelensky,இந்தியர் பலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/a0dg1ddk/zelensky.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ zelensky]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/a0dg1ddk/zelensky.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் பலியாகினர் என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது 5-வது ஆண்டாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.</p><p>ரஷியாவுக்கு நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது. போரால் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகியும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர்.</p><h2>டிரோன் தாக்குதல்</h2><p>உக்ரைன் ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் சமாதான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.</p><p>இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட செய்தியில், ஒடேசா மற்றும் அப்பகுதியைச் சுற்றி நேற்று மாலை முதல் வான்வழி வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் டிரோன் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.</p><h2>இந்தியர் பலி</h2><p>ரஷியா நடத்திய இந்த தாக்குதலில் மொத்தம் 12 பேர் பலியாகினர். அவர்களில், ஒருவர் இந்தியர். தவிர 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை - சிபிஎம் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sterlite-shooting-firm-action-needed-against-officials-responsible-for-the-killings-cpm-insists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sterlite-shooting-firm-action-needed-against-officials-responsible-for-the-killings-cpm-insists#comments</comments><guid isPermaLink="false">e5dde014-c9c2-4814-8800-5dffb8bc7850</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:02:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:02:00.936Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழ்நாடு அரசு,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,சிபிஎம்,Thoothukudi Sterlite firing case,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/v19it82n/New-Project-2026-09-01T182841.257.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை - சிபிஎம் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/v19it82n/New-Project-2026-09-01T182841.257.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவ வழக்கில் காவல்துறை அதிகாரிகள்மீதான நடவடிக்கை கைவிடப்பட்டதாக தமிழ்நாடு அரசு நேற்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. </p><p>இந்நிலையில் கொலைக்கு காரணமான அதிகாரிகள்மீது உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்டை எதிர்த்தப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக கொல்லப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். </p><p>இதற்கென அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி தனது பரிந்துரையை அரசுக்கு அளித்தது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் இதற்கு காரணமானவர்கள் என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். </p><p>அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கையும், குற்ற வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. </p><p>31.08.2026 அன்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள் கொலைக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது. இவர்களில் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நேற்றைய நீதிமன்ற நிகழ்வின் வெளிப்பாடாகும்.</p><p>இது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாக அரசு அமைப்புகள் செயல்படும் என்பதற்கான மிக வெளிப்படையான நிகழ்வாகும். அந்த வகையில் திமுகவும், தவெகவும் அதிகாரிகளுக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்துள்ளன. </p><p>சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து மக்கள் சுட்டிக்காட்டியபோதே, ஸ்டெர்லைட் நிர்வாகமோ அல்லது அரசு அமைப்புகளோ நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. </p><p>பன்னாட்டு முதலாளி ஒருவரின் நலனை பாதுகாப்பதற்காகவே ஆளும் வர்க்கத்தின் அடியாளாக செயல்பட்ட இந்த அதிகாரிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. </p><p>இத்தகைய நிலைமை நீடிப்பது நிர்வாகத்தாலும், நீதித்துறையாலும், அரசாங்கத்தாலும் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது என்று குடிமக்களை நிராதரவாக நிற்க வைக்கும். ஜனநாயக நாட்டில் இத்தகைய நிலையை அரசாங்கம் எடுத்திருப்பது முற்றிலும் ஏற்கத் தக்கதல்ல. </p><p>எனவே, தமிழ்நாடு அரசு முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, 13 பேர் கொலைக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்து  சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், </p><p>உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் அதிரடி நீக்கம்:  மிஸ்பா-உல்-ஹக் எடுத்த அதிரடி முடிவு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-cricket-turmoil-deepens-as-ex-captain-quits-day-after-mass-sackings</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-cricket-turmoil-deepens-as-ex-captain-quits-day-after-mass-sackings#comments</comments><guid isPermaLink="false">4aeeb06f-38f1-4913-8052-7d12484344f6</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:51:40 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:51:40.837Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PCB,பாகிஸ்தான் கிரிக்கெட்,Misbah ul Haq,மிஸ்பா உல்-ஹக்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ypnw6kzy/MisbahUlHaq.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மிஸ்பா உல் ஹக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ypnw6kzy/MisbahUlHaq.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். முதல் டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. 2-வது டெஸ்டில் 150 ரன்களுக்கும் மேல் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.</p><h2>இமாம்-உல்-ஹக்</h2><p>இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோரை உடனடியாக நாடு திரும்ப கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் சல்மான் ஆகா, அலி உஸ்மான், ஆமீர் ஜமால், அவைஸ் ஜாஃபர், குர்ரம் ஷேசாத் ஆகியோரை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>ஐந்து அறிமுக வீரர்களை 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்த்துள்ளது. இதில் சிலர் விசா கிடைத்தால்தான் இங்கிலாந்துக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளனர்.</p><p>வீரர்களை தவிர்த்து தலைமை பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சாளர் பயிற்சியாளர்களான சர்பராஸ் அகமது மற்றும் உமர் குல் ஆகியோரையும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு கமிட்டி பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி முற்றிலுமாக சீரமைக்கப்பட இருக்கிறது.</p><h2>ஹர்சா போக்லே</h2><p>இதற்கிடையே இந்தியாவின் கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்சா போக்லே, நம்ப முடியாததைச் செய்வதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை நம்பலாம் என்று தெரிவித்துள்ளார். ஒரு தொடர் முடிவடைவதற்கு முன்னதாகவே பயிற்சியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதை இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/keir-starmer-announces-resignation-as-member-of-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/world/keir-starmer-announces-resignation-as-member-of-parliament#comments</comments><guid isPermaLink="false">fca6d52c-14f9-43bb-b317-70c131be82ef</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:27:51 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:27:51.108Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,கெய்ர் ஸ்டார்மர்,Keir Starmer,இடைத்தேர்தல்,மத்திய லண்டன் தொகுதி,central London constituency</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/v9x6322o/New-Project-2026-09-01T174045.767.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/v9x6322o/New-Project-2026-09-01T174045.767.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்தில் பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கெய்ர் ஸ்டார்மர், தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். </p><p>நாடாளுமன்றப் பணிகளில் இருந்து விலகி, இனிவரும் காலங்களில் பாதுகாப்பு, அமைதி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் தனது கவனத்தைச் செலுத்தப் போவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார். </p><p>கெய்ர் ஸ்டார்மரின் இந்த திடீர் விலகல் முடிவைத் தொடர்ந்து, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மத்திய லண்டன் நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்  நடத்தப்படவுள்ளது.</p><p>கட்சிக்குள் ஏற்பட்ட கடுமையான அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் காரணமாக <a href="https://www.maalaimalar.com/news/topnews/keir-starmer-announced-his-resignation-as-prime-minister-of-britain">ஸ்டார்மர்</a> பதவி விலகியதைத் தொடர்ந்து ஆண்டி பர்ன்ஹாம் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார். </p><p>பிரதமர் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தல் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வதாக அறிவித்திருந்தார். ஆனால் திடீரென்று அப்பதவியையும் ராஜினாமா செய்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>கிரிப்டோகரன்சி மோசடி: முதலீட்டாளர்கள் நெருக்கடியால் திண்டுக்கலில் 25 வயது வாலிபர் தற்கொலை; பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cryptocurrency-fraud-investor-crisis-25-year-old-man-suicide-dindigul-case-moved-to-economic-offences-wing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cryptocurrency-fraud-investor-crisis-25-year-old-man-suicide-dindigul-case-moved-to-economic-offences-wing#comments</comments><guid isPermaLink="false">4900ec49-ef34-4636-ad7f-9d64f29b72c9</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:26:49 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:26:49.657Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,cryptocurrency scam,கிரிப்டோகரன்சி மோசடி,Multi-Level Marketing,FQL Investment Trading,பொருளாதார குற்றப்பிரிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/78lo14gr/raja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cryptocurrency scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/78lo14gr/raja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் பல அடுக்கு சந்தைப்படுத்தல் பெயரில் நடைபெற்ற பல கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில், முதலீடு செய்தவர்களின் கடுமையான நெருக்கடிக்கு ஆளான ராஜா என்ற 25 வயது வாலிபர் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>40 நா<strong>ட்களில் பண</strong>ம் இரட்டிப்பாகும் என ஆசைவார்த்தை</h2><p>மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 7 மாதங்களாக 'எஃப்.க்யூ.எல் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-rs-1000-crore-financial-company-fraud-youth-commits-suicide-the-police-having-failed-to-prevent-it-must-bear-responsibility">இன்வெஸ்ட்மென்ட் டிரேடிங்</a>', 'எஃப்.க்யூ.எல் எக்ஸ்சேஞ்ச் செயலி' மற்றும் 'வி.ஜி இன்வெஸ்ட்மென்ட் குரூப் சிண்டிகேட்' ஆகிய அமைப்புகள் இயங்கி வந்துள்ளன. இதில் முதலீடு செய்தால் தினமும் அதிகபட்ச லாபம் கிடைக்கும் என்றும், 40 முதல் 45 நாட்களுக்குள் முதலீட்டுத் தொகை அப்படியே இரட்டிப்பாகும் என்றும் உள்ளூர் முகவர்கள் மூலம் மக்களுக்கு ஆசைவார்த்தை காட்டப்பட்டுள்ளது.</p><h2>கிரிப்டோ <strong>வாலட்க</strong>ளுக்கு மாற்றப்பட்ட பணம்</h2><p>பொதுமக்களிடம் இருந்து ரொக்கம், கூகுள் பே மற்றும் யுபிஐ மூலமாகப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட நிதியில் ஒரு பகுதி 'டெதர்'  எனப்படும் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு, சந்தேகத்திற்குரிய எஃப்.க்யூ.எல் டிஜிட்டல் வாலட்களில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற முயன்றபோது, செயலி மூலம் பணத்தை எடுக்க முடியாமல் முடங்கியது. கூடுதல் பணம் செலுத்தினால்தான் கணக்கை இயக்க முடியும் எனக் கூறிய நிறுவனத்தினர், திடீரென செயலியை முற்றிலுமாக முடக்கிவிட்டு தலைமறைவாகினர்.</p><h2>பணத்தை இ<strong>ழந்தவர்கள் முற்</strong>றுகை</h2><p>இந்தத் திட்டத்தை நம்பி தனது பகுதி மக்களை பெருமளவில் முதலீடு செய்ய தூண்டியவர்  ராஜா நிதி நிறுவனம் ஏமாற்றியதை அறிந்த முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு ராஜாவின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். முதலீட்டாளர்களின் தொந்தரவைத் தாங்க முடியாமலும், பணத்தைத் திரும்பத் தர வழியில்லாமலும் மன உலைச்சலுக்கு ஆளான ராஜா, தனது வீட்டிலேயே உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட பிறகும், அவரிடம் கொடுத்த பணம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவரது வீட்டின் முன் திரண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>பொருளா<strong>தார குற்றப்பிரிவு</strong>க்கு விசாரணை மாற்றம்</h2><p>பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் திரண்டு புகார்களை அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் ரூ.25 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், 'பைனான்ஸ்' வாலட்கள் மற்றும் சர்வதேச அளவிலான தொடர்புகள் இந்த மோசடியில் இருப்பதால், வழக்கு விசாரணையை தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைவர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.</p><h2><strong>21 பேர் கைது</strong></h2><p>இவ்வழக்கு தொடர்பாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, முதன்மை அமைப்பாளர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட முக்கிய நபர் அமெரிக்காவில் இருந்து அண்மையில் இந்தியா திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதோடு, கிரிப்டோ வாலட்களை முடக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தனிமைச் சிறைவாசம் கூடாது: இம்ரான் கான், அவரது மனைவிக்கு நிவாரணம் வழங்கிய நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/world/pak-court-big-relief-for-imran-khan-bushra-bibi-no-solitary-confinement</link><comments>https://www.maalaimalar.com/news/world/pak-court-big-relief-for-imran-khan-bushra-bibi-no-solitary-confinement#comments</comments><guid isPermaLink="false">8aa90231-139e-4f9e-a959-dd69dea68340</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:02:59 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:02:59.997Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Imran Khan,இம்ரான் கான்,BushraBibi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/2gpcmxa8/ImranKhan0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இம்ரான் கான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/2gpcmxa8/ImranKhan0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, அவரது உறவினர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான், தேர்லில் களம் இறங்கி பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இனசாப் (PTI) என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, இம்ரான் கான் பிரதமர் ஆனார்.</p><p>2022-ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறையில் இருந்து வருகுிறார். இவருடைய மனைவி புஷ்ரா பிபியும் சிறையில் உள்ளார்.</p><p>இருவரும் ஒரே ஜெயிலில் அடைக்கப்பட்டாலும் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். யாரும் அவர்களை சந்திக்க முடியாது. இம்ரான் கான் கூட, தனது மனைவியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.</p><h2>இம்ரான் கான் உடல்நிலை பாதிப்பு எனப் புகார்</h2><p>இதனைத் தொடர்ந்து சிறைச்சாலையில் இம்ரான் கான் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியானது. குறிப்பாக அவர் கண் பார்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் கண் பரிசோனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>இதற்கிடையே இம்ரான் கானின் சகோதரி அலீமா கான், புஷ்ரா பிபியின் மகள் முபாஷரா கவார் மனேகா தனிமைச் சிறைவாசத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.</p><h2>இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு</h2><p>இந்த வழக்கு விசாரணை முடிவில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் "சிறைச்சாலை விதிப்படி இம்ரான் கானின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்த அனுமதிக்க வேண்டும். இம்ரான் கான் மற்றும் அவரது மகன் டெலிபோனில் பேச அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.</p><p>இம்ரான் கானுக்கு படிக்க செய்தித்தாள்கள் வழங்கப்பட வேண்டும். தினந்தோறும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். சிறைச்சாலை விதிப்படி அவருக்கு மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.</p><p>மேலும், இம்ரான் கான்- புஷாரா பிபி நேருக்கு நேர் சந்தித்து பேசவும் அனுமதி வழங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெயரில் நூதன மோசடி: மத்திய பிரதேசத்தில் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த பொதுமக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-chief-minister-vijay-name-used-in-sophisticated-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-chief-minister-vijay-name-used-in-sophisticated-scam#comments</comments><guid isPermaLink="false">297f8d9a-ee2e-4fe6-a433-c81a6921faec</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:49:20 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:49:20.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,Cyber Crime,இந்தூர்,மோசடி கும்பல்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,மத்திய பிரதேச மாநிலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/uwfmr9l0/cm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/uwfmr9l0/cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதல்வர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். </p><p>மத்திய பிரதேச மாநிலத்தில் தமிழ்நாடு  முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, ஏழை எளிய மக்களிடம் நிதியுதவி மற்றும் கடன் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   </p><h2>முதல்வர் விஜய் <strong>பெயரில் போலி</strong> அறக்கட்டளை   </h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/digital-payments-without-internet-phonepe-launches-upi-123pay-for-feature-phones">மத்திய பிரதேச மாநிலம் </a>இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதல்வர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். தமிழக முதல்வர் விஜய் மூலம் சிறு தொழில் தொடங்குவதற்கான மானியக் கடன், இலவச நிதியுதவி, கல்வி நிதியுதவி மற்றும் வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக ஆசை வார்த்தைகள் கூறி மக்களை நம்ப வைத்துள்ளனர்.  </p><h2>நூதன <strong>முறையிலான பண</strong>ப்பறிப்பு   </h2><p>இந்த போலி அறக்கட்டளை மூலமாக ரூ.10 லட்சம் வரை மானியம் மற்றும் நிதி உதவி பெற முடியும் எனக் கூறி மக்களைத் தொடர்புகொண்ட அந்த கும்பல், அதற்கான நடைமுறைகளுக்காக பணம் பறித்துள்ளது. விண்ணப்பப் பதிவு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கான கட்டணம் என்ற பெயரில் தலா ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.   </p><h2>காவல்துறையி<strong>ல் குவிந்த</strong> புகார்கள்   </h2><p>பணம் செலுத்திய பிறகு குறிப்பிட்ட நபர்களைத் தொடர்புகொள்ள முடியாமலும், எவ்வித நிதியுதவியும் கிடைக்காமலும் போனதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்தை நாடினர். கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவில் இந்த மோசடி தொடர்பாக 6 அதிகாரப்பூர்வ புகார்கள் பதிவாகியுள்ளன.   </p><h2>சைபர் கிரைம் <strong>போலீஸ் தீவிர</strong> விசாரணை   </h2><p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சைபர் குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அடையாளம் தெரியாத போலி நபர்கள் மற்றும் அறக்கட்டளைகளின் பெயரில் வரும் அழைப்புகளை நம்பி முன்பணம் செலுத்த வேண்டாம் என மக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘ட்ரம்புக்கு பதில் விஜய் அமெரிக்க அதிபராகலாம்’ - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-could-become-us-president-instead-of-trump-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-could-become-us-president-instead-of-trump-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">1f4f14f3-8c6b-4bf7-a382-3415522374d1</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:44:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:44:35.109Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,President Donald Trump,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,அதிபர் டொனால்ட் ட்ரம்ப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/z05srh8o/New-Project-2026-09-01T165005.394.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ட்ரம்புக்கு பதில் விஜய் அமெரிக்க அதிபராகலாம்’ - எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/z05srh8o/New-Project-2026-09-01T165005.394.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர்.,</p><p>“அனல்மின் நிலையத் திட்டத்தை அறிவித்துதானே உள்ளனர், உடனே செயல்பாட்டிற்கு வராது. தவெக ஆட்சிக்கு வந்த இரண்டு அறிவிப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றும் திமுக ஆட்சியில் (மகளிருக்கு இலவசப் பேருந்து) கொண்டுவரப்பட்டது. </p><h2>ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான்</h2><p>திட்டமில்லாத செயல்பாடுதான் தவெக ஆட்சி. கட்சி நிதி உண்மையா, பொய்யா என்பதை தவெகவிடம்தான் கேட்கவேண்டும். எதையாவது சொல்லி காலத்தை ஓட்டவேண்டும். ஊழல் என்றால் ஆதாரத்தை காட்டி நிருபீக்க வேண்டும். தவெக ஆட்சி அமைந்தபின்தான் ஊழல் அதிகரித்துள்ளது என மக்கள் பேசுகிறார்கள்.</p><p>ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான். லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றியுள்ளனர். அப்போது ஊழல் நடந்துகொண்டுதானே இருக்கிறது? இதனை எப்படி தூய்மையான ஆட்சி எனக்கூற முடியும்?</p><h2>தமிழ்நாட்டில் ரீல்விடலாம், அமெரிக்காவில் முடியாது</h2><p>இந்த ஆட்சியில் எங்காவது சோதனை நடந்தால், உடனே ரீல்ஸ். ஊடகங்கள் அதற்கு மெருகூட்டுகிறார்கள். ரீல்ஸ் (வீடியோ) போட்டே வண்டியை ஓட்டுகிறார்கள், ரியல் (உண்மை) எதுவும் இல்லை. </p><p>அமெரிக்க நாட்டிற்கு கூட அவர் ஜனாதிபதி ஆகலாம், தவறில்லை. ட்ரம்புக்கு பதில் அவரே அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகலாம், அதில் தவறில்லை. அது அவருடைய விருப்பம். இங்கு ரீல் விடலாம், அங்கு அது நடக்காது.</p><p>தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம். தவெக ஆட்சி செல்லும்போக்கை பார்த்தாலே ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்பது தெரிகிறது. விளையும் பயிர் முளையிலே தெரியும். எவ்வளவு போராட்டங்கள்? அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்ந்துள்ளது. </p><p>விலை உயர்வை கட்டுபடுத்த அரசு என்ன செய்தது? ஆக்கப்பூர்வமான திட்டம் எதுவும் கையில் இல்லை? கடன் மட்டுமே வாங்குகிறது, வருவாய்க்கு வழி இல்லை.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு: இருவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/grand-canyon-flash-flood-two-dead-one-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/grand-canyon-flash-flood-two-dead-one-missing#comments</comments><guid isPermaLink="false">bae1730f-345c-4e1e-b629-d2a10831cf95</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:35:03 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:35:03.008Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,Grand Canyon,கிராண்ட் கேன்யன்,Canyon  Flash floods,கேன்யன் வெள்ளப்பெருக்கு,அரிசோனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zkjw5zt9/can.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Canyon  Flash floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zkjw5zt9/can.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கிராண்ட் கேன்யன் தேசிய பூங்காவில் வீசிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.</p><p>அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கிராண்ட் கேன்யன் தேசிய பூங்கா பகுதியில் திடீரென வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பிரைட் ஏஞ்சல் என்ற இடத்தில் கடுமையான <a href="https://www.maalaimalar.com/news/world/green-house-stands-strong-amid-disaster-in-nepal-floods">வெள்ளப்பெருக்கு</a> ஏற்பட்டது. நீர்வரத்து மிக வேகமாக அதிகரித்ததால், ஆற்றின் கரையோரங்களில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.</p><h2>டெ<strong>க்சாஸ் மருத்துவர் பலி</strong></h2><p>இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 46 வயதான பிரபல உடலியக்க பிசியோதெரபி மருத்துவர் ஜான் ஜியுஸ்டி என்பவரும் அடங்குவார். இவர் தனது நண்பர்களுடன் மீன்பிடித்தல் மற்றும் மலையேற்றப் பயிற்சிக்காக இங்கு வந்திருந்தபோது, வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். மேலும் மற்றொரு ஆண் சுற்றுலாப் பயணியின் உடலும் கொலராடோ ஆற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>80 <strong>பயணிகள் மீட்</strong>பு</h2><p>வெள்ளப்பெருக்கு குறித்துத் தகவல் அறிந்ததும், தேசிய பூங்கா மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன மீட்புக் கருவிகள் மூலம் களத்தில் இறங்கினர். இரவு நேரத்திலும் சிறப்புப் பார்வை சாதனங்களைப் பயன்படுத்தி தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்ட அவர்கள், வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 80 சுற்றுலாப் பயணிகளைப் பத்திரமாக மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். இருப்பினும், இன்னமும் ஒரு நபர் மாயமாகியுள்ளதால் அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><h2>முக்கிய கு<strong>டிநீர் குழாய் சே</strong>தம்</h2><p>திடீர் வெள்ளத்தின் காரணமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த பல மரப் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுத் துண்டிக்கப்பட்டன. பூங்காவின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் குடிநீர் விநியோகக் குழாய்கள் மிகக் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கும் குடிநீர் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை குறிப்பிட்ட பாதைகள் மற்றும் முகாம்களை பூங்கா நிர்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஹர்திக் பாண்ட்யாவின் நிறைவடையாத டீல்: மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்?</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/hardik-pandya-told-trade-might-not-happen-rohit-sharma-to-pick-next-mi-captain</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/hardik-pandya-told-trade-might-not-happen-rohit-sharma-to-pick-next-mi-captain#comments</comments><guid isPermaLink="false">2f0cc45e-ecfc-4872-8b70-c9bdf29de201</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:30:39 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:30:39.515Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rohit sharma,ரோகித் சர்மா,Hardik Pandya,ஹர்திக் பாண்ட்யா,Mumbai Indians,மும்பை இந்தியன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/e9lfp4dv/HardikPandya001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹர்திக் பாண்ட்யா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/e9lfp4dv/HardikPandya001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரோகித் சர்மா, பும்ரா, திலக் வர்மா ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.</p><p>ஐ.பி.எல். லீக்கில் முன்னணி அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா உள்ளார். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்த ரோகித் சர்மாவுக்குப் பதிலாக இவரை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமித்தது.</p><p>அதில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அணிக்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இறுதியாக ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.</p><p>சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட பல அணிகள் இவரை வாங்க முயற்சி மேற்கொண்டு இருக்கின்றன. ஆனால், ஹர்திக் பாண்ட்யா வேண்டுமென்றால் பெரும்தொகையுடன் சில வீரர்களும் வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் கோரிக்கை வைக்கிறது.</p><p>இதனால் டீல் இன்னும் நிறைவடையவில்லை. நிறைவடையாமல் போகலாம் என்ற செய்தியும் வெளியாகியுள்ளன. ஆகவே, மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடிக்க வாய்ப்புள்ளது.</p><p>அப்படி நீடித்தால், ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் இருக்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி என்றால் யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><h2>ரோகித் சர்மா</h2><p>ரோகித் சர்மா இந்தியாவுக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவில் மட்டுமே விளையாடி வருகிறார். இவர் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேவேளையில் பும்ராவும் போட்டியில் இருக்கிறார்.</p><p>இருவரையும் தவிர்த்து நீண்ட பலனை கருத்தில் கொண்டால், திலக் வர்மாவை கேப்டனாக்கலாம் என்ற வாய்ப்பும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்திய டி20 அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்கிறார். பகுதி நேர கேப்டனாகவும் செயல்படும் நிலையில் உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆப்பிள் புதிய சிஇஓ- ஆக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பு - பதவி விலகிய டிம் குக்விற்கு எலான் மஸ்க் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/world/apple-appoints-new-ceo-john-ternus-elon-musk-congratulates-tim-cook</link><comments>https://www.maalaimalar.com/news/world/apple-appoints-new-ceo-john-ternus-elon-musk-congratulates-tim-cook#comments</comments><guid isPermaLink="false">f84ebade-1941-4ada-a6c9-03dc2a487343</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:28:18 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:28:18.204Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Elon Musk,எலான் மஸ்க்,Apple CEO,Apple TimCook,டிம்குக்,New Apple CEO,Tim Cook Farewell</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/n7wlx5q2/John-Ternus-Tim-Cook" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ John Ternus - Tim Cook ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/n7wlx5q2/John-Ternus-Tim-Cook?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D">டிம் குக்</a> அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். </p><p>கடந்த 15 ஆண்டுகளாக நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வந்த அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ-ஆக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D">ஜான் டெர்னஸ்</a> பொறுப்பேற்றுள்ளார்.</p><p>டிம் குக் சிஇஓ பதவியிலிருந்து விலகினாலும், அவர் நிறுவனத்தை விட்டு வெளியேறவில்லை; மாறாக, ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் என்ற புதிய பொறுப்பை ஏற்கிறார்.</p><h2>டிம் குக்-ன் கடிதம்</h2><p>தன்னுடைய கடைசி நாளன்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D">ஆப்பிள் </a>ஊழியர்களுக்கு டிம் குக் உணர்ச்சிப்பூர்வமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: </p><p>இந்தச் சிறந்த நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் தலைவராகச் செயல்பட்டது எனது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமையாகும்.</p><p>ஆப்பிள் நிறுவனத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு ஊழியர்களாகிய நீங்கள்தான் காரணம். உங்களின் அர்ப்பணிப்பும் அன்பும் என்னை எப்போதும் வியக்க வைக்கிறது.</p><p>உங்களது உழைப்பு என் வாழ்நாளில் நான் கண்ட மிகச்சிறந்த குழுப் பணியாகும். 2011-இல் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜோப்ஸிடமிருந்து பொறுப்பேற்றதை நினைவு கூர்ந்த அவர், "உலகில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஜோப்ஸின் கனவை நாம் அனைவரும் இணைந்து நிஜமாக்கியுள்ளோம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.</p><p>மேலும், புதிய சிஇஓ ஜான் டெர்னஸ் குறித்துப் பேசிய டிம் குக், "உலகை மாற்றக்கூடிய தயாரிப்புகளை எப்படி உருவாக்குவது என்பது ஜானுக்குத் தெரிந்த அளவு வேறு யாருக்கும் தெரியாது. அவரது தலைமையில் ஆப்பிள் அடுத்தக்கட்டத்திற்குச் செல்வதைக் காண ஆவலாக உள்ளேன்," என்று பாராட்டியுள்ளார்.</p><h2>'எனது கடைசி நாள்' - டிம் குக்கின் எக்ஸ் பதிவு</h2><p>டிம் குக் தனது எக்ஸ் பக்கத்தில், 'தலைமைச் செயல் அதிகாரியாக எனது கடைசி நாளில், ஆப்பிள் சமூகத்தினருக்கு எனது அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>நாளை எனது பதவி மாறலாம், ஆனால் ஆப்பிள் சமூகத்தின் மீதான எனது அன்பு ஒருபோதும் மாறாது. நீங்கள் தொடர்ந்து எனக்கு உத்வேகம் அளித்து வந்தமைக்கு நன்றி. </p><p>என் நன்றியுணர்வு எல்லையற்றது; அடுத்தகட்டப் பயணத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.</p><h2>டிம் குக்கின் சாதனைகள் மற்றும் புதிய சகாப்தம்</h2><p>2011-இல் டிம் குக் பொறுப்பேற்கும்போது ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.33,21,752 கோடி இருந்தது. </p><p>தற்போது அவரது 15 ஆண்டுகால உழைப்பால் அது ரூ. 3,79,62,880 கோடி டாலருக்கும் மேல் உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. </p><p>இவரது காலத்தில்தான் ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ், ஆப்பிள் சிலிகான் சிப்கள் போன்ற தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன.</p><p>புதிய சிஇஓ ஜான் டெர்னஸ், முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்தார். </p><p>அவரது தலைமையில் ஆப்பிள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>எலான் மஸ்கின் வாழ்த்து</h2><p>டிம் குக்கின் இந்த உணர்ச்சிப்பூர்வமான எக்ஸ் பதிவிற்குப் பதிலளிக்கும் விதமாக, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D">எலான் மஸ்க்</a> தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் தனது பதிவில், "ஆப்பிளில் ஒரு மகத்தான பணி வாழ்க்கைக்கு வாழ்த்துகள்!" என்று டிம் குக்கிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேற்குவங்கம்: மம்தா பானர்ஜியின் மருமகள், வீட்டில் இருந்து சடலமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-mamata-banerjees-daughter-in-law-found-dead-at-her-home</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-mamata-banerjees-daughter-in-law-found-dead-at-her-home#comments</comments><guid isPermaLink="false">cbf9494f-2b14-49d7-82e2-45df2f17769d</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:48:30 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:48:30.071Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்குவங்கம்,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/2j9510id/New-Project-2026-09-01T161529.092.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேற்குவங்கம்: மம்தா பானர்ஜியின் மருமகள் வீட்டில் இருந்து சடலமாக மீட்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/2j9510id/New-Project-2026-09-01T161529.092.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் தாய்வழியிலான ஒன்றுவிட்ட சகோதரரின் மகள் பிரிஷ்டி முகர்ஜி, இன்று அவரது வீட்டில் இருந்து தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். </p><p>பீர்பூம் மாவட்டம், ராம்பூர்ஹாட்டின் குசும்பா கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்து 31 வயதான பிரிஷ்டி முகர்ஜி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். </p><p>கடந்த சில ஆண்டுகளாகவே பிரிஷ்டி மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிரிஷ்டி முகர்ஜி தனது வேலையை இழந்திருந்தாகவும், மேலும், அவருக்கு விவாகரத்து வழக்கு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>தொடர்ந்து காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராம்பூர்ஹாட் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். </p><p>இது தற்கொலையாக இருக்கலாம் என்றும், எனினும் மரணத்திற்கான முழுமையான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-today-and-tomorrow-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-today-and-tomorrow-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a1141394-d3c2-450a-8717-e6dc577da6c7</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:25:53 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:25:53.020Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/q6mn1lo5/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/q6mn1lo5/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>3-ந்தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>4-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 5-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 3-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-question-paper-leak-protest-supreme-court-issues-a-bold-order-quashing-cases-against-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-question-paper-leak-protest-supreme-court-issues-a-bold-order-quashing-cases-against-protesters#comments</comments><guid isPermaLink="false">bdfeef31-629f-4b31-91a4-7e1b03ec42ad</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:24:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:24:08.391Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,FIR,Protesters,போராட்டக்காரர்கள்,NEET Paper Leak,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு,முதல் தகவல் அறிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hrt7fddv/New-Project-2026-09-01T155057.462.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hrt7fddv/New-Project-2026-09-01T155057.462.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-ன்கீழ் தங்களுக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><h2>வழக்குகள் ரத்து</h2><p>ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>இருப்பினும் போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும், மேலும் முன்னரே வழக்குகளை கொண்டுள்ள 2,873 நபர்களுக்கு இந்த ரத்து உத்தரவு பொருந்தாது, அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>மனுத்தாக்கல்</h2><p>இந்தியா முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><h2>போராட்டம் வாபஸ்</h2><p>மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற மனு அளித்து, நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 5-ஆம் தேதி டெல்லியில் நடத்தத் திட்டமிட்டிருந்த மாபெரும் <a href="https://www.maalaimalar.com/news/national/cockroach-janata-party-withdraws-announcement-for-september-5-rally">போராட்டப் பேரணி</a>யை வாபஸ் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பரில் குறையும் மழை: 1901-க்குப் பிறகு மிக வெப்பமான ஆகஸ்ட் மாதத்தைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/rainfall-to-decrease-in-september</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/rainfall-to-decrease-in-september#comments</comments><guid isPermaLink="false">4e1294b6-4f30-4d69-9e34-ef9bf459d7fb</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:17:37 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:17:37.666Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,Meteorological Department,மழைப்பொழிவு,rainfall,எல் நினோ,El Nino</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/1pbpyxb1/el-nino.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ El Nino]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/1pbpyxb1/el-nino.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிக வெப்பமண்டல மாதமாக மாறியுள்ள நிலையில், வரவிருக்கும் செப்டம்பர் மாதத்திலும் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது</p><h2>செப்<strong>டம்பர் மாத மழைப்</strong>பொழிவு கணிப்பு</h2><p>இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாதாந்திர அறிக்கையின்படி, செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பெய்யும் மழையின் அளவு நீண்டகால சராசரியில் 91 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. 1971 முதல் 2020 வரையிலான தரவுகளின் அடிப்படையில், செப்டம்பர் மாதத்திற்கான நீண்டகால சராசரி மழைப்பொழிவு 167.9 மி.மீ ஆகும். மேலும், நாடு முழுவதும் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பநிலையும் தொடர வாய்ப்புள்ளது.</p><h2><strong>எல் நினோ தாக்க</strong>ம்</h2><p>பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் எல் நினோ நிலவரம் பலமடைந்து வருவதே இந்த மழைப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. எல் நினோ வலுவடைந்து வருவதால், தென்மேற்கு பருவமழையின் இறுதிப் பகுதியிலும் மழைப்பொழிவு பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்ஜய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.</p><h2>வரலா<strong>ற்றுச் சாதனை</strong> </h2><p>கடந்த ஆகஸ்ட் மாதத்தின் சராசரி வெப்பநிலை 28.01 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது வழக்கமான சராசரி வெப்பநிலையான 27.34 டிகிரி செல்சியஸை விட அதிகம். அதேபோல, இரவிலும் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 24.36 டிகிரி செல்சியஸாக உயர்ந்து, 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச வெப்பமண்டல ஆகஸ்ட் மாதமாக இது அமைந்துள்ளது.</p><h2>மழைப் <strong>பற்றாக்குறையின் தற்போதை</strong>ய நிலை</h2><p>ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 213.3 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது 2001-க்குப் பிறகு பதிவான ஏழாவது குறைந்தபட்ச மழைப்பொழிவாகும். இம்மாதத்தில் நான்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி, சுமார் 26 நாட்கள் நீடித்தபோதிலும், அவற்றின் தாக்கம் பெரும்பாலும் இந்தோ-கங்கை சமவெளிப் பகுதிகளில் மட்டுமே மையம் கொண்டிருந்தது. இதனால் நாட்டின் பிற பகுதிகள் கடுமையான மழைப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஒற்றை கையால் அசால்டாக பிடித்த கேட்ச்: வைரலாகும் கிளென் பிலிப்ஸ் போஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/cpl-2026-glenn-phillips-stuns-everyone-with-uncanny-one-handed-catch</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/cpl-2026-glenn-phillips-stuns-everyone-with-uncanny-one-handed-catch#comments</comments><guid isPermaLink="false">f54d1f8d-06ce-4b66-84cc-d697a042be16</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:10:11.933Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Glenn Phillips,கிளென் பிலிப்ஸ்,CPL,catch,கரீபியன் லீக் தொடர்,கேட்ச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/l9kt9poe/glenn.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ glenn phillips]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/l9kt9poe/glenn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் ஒற்றை கையில் பிடித்த அசத்தலான கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</strong></em></p><p>கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 22வது லீக் போட்டியில் டிரினிடாட் அண்ட் டொபாகோ நைட்ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.</p><p>மழை பெய்ததால் இந்தப் போட்டி 16 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ்  வென்ற டிரிபாகோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><h2>சதமடித்த ஹெட்மயர்</h2><p>அதன்படி, முதலில் பேட் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது. ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடியாக ஆடி 40 பந்தில் சதம் விளாசி அசத்தினார். அவர் 43 பந்தில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நடப்பு தொடரில் இது அவரது 2-வது சதமாகும். ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியாக ஆடி 27 ரன்கள் எடுத்தார்.</p><p>இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி டிரினிடாட் அணிக்கு 16 ஓவரில் 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.</p><p>அப்போது கடினமான இலக்கை நோக்கி விளையாடிய டிரினிடாட் அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன், டுவைன் பிரிட்டோரியஸ் வீசிய பந்தை லெக் சைடில் தூக்கி அடித்தார்.</p><h2>பிலிப்ஸ் அசத்தல் கேட்ச்</h2><p>அப்போது பவுண்டரி எல்லையில் நின்றிருந்த கிளென் பிலிப்ஸ் வேகமாக ஓடிவந்து, பாய்ந்து ஒற்றை கையால் கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த கேட்ச்சை நம்பமுடியாமல் அவர் சிரித்தபடி நின்றார். இதனால் சுனில் நரைன் 1 ரன்னில் வெளியேறினார்.</p><h2>கயானா அணி வெற்றி</h2><p>தொடர்ந்து ஆடிய டிரினிடாட் அணி 16 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>அலெக்ஸ் ஹேல்ஸ் 24 பந்தில் 55 ரன்னும், நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 16 பந்தில் 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>கயானா அணி சார்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். </p><p>சமீப காலமாக கிளென் பிலிப்ஸ் சூப்பர்மேனாக பாய்ந்து பந்தை தடுப்பது, கேட்ச் பிடிப்பது என தொடர்ந்து அசாத்தியமாக பீல்டிங் செய்துவருகிறார். கிளென் பிலிப்சின் அபார கேட்ச் கயானா அணியின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது.</p>]]></content:encoded></item><item><title>செப். 5 பேரணி அறிவிப்பை திரும்பப் பெற்றது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!</title><link>https://www.maalaimalar.com/news/national/cockroach-janata-party-withdraws-announcement-for-september-5-rally</link><comments>https://www.maalaimalar.com/news/national/cockroach-janata-party-withdraws-announcement-for-september-5-rally#comments</comments><guid isPermaLink="false">9b29b21e-26bf-416a-b32c-04d034b74566</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:05:59 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:05:59.320Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJP,அமைதிப் பேரணி,India Gate march</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4zbjx1ve/New-Project-2026-09-01T145945.505.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செப். 5 பேரணி அறிவிப்பை திரும்பப் பெற்றது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4zbjx1ve/New-Project-2026-09-01T145945.505.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தவிருந்த டெல்லி போராட்டப் பேரணி அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. </p><p>டெல்லியில் உள்ள இந்தியா நுழைவாயிலில் இருந்து மாநில காவல் தலைமையகம் வரை இந்தப் பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது.</p><h2>எதற்காக பேரணி?</h2><p>கரப்பான்பூச்சி கட்சியினரால் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கைவிட மத்திய அரசு மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தது. </p><p>தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி, போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதியளித்தது. </p><h2>நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்</h2><p>மத்திய அரசு அளித்த மூன்று வாக்குறுதிகளில் ஒன்று மட்டுமே, அதாவது தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரிக்கை மட்டுமே நிறைவேற்றப்பட்டது. மற்ற இரண்டு வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனைக் கண்டித்து செப்.5ம் தேதி போராட்டப் பேரணியை அறிவித்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.</p><h2>உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு</h2><p>இதனிடையே இந்தப் பேரணிக்கு தடைவிதிக்க அல்ல பேரணியை ஒத்திவைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-to-intervene-in-the-cockroach-partys-delhi-rally-issue">விவகாரத்தில் தலையிட மறுத்தது. </a></p><p>மத்திய மற்றும் மாநில அரசுகளே இதில் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி செப்.10ம் தேதி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது. </p><h2>மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்</h2><p>மேற்குறிப்பிட்டிருந்த மனு விசாரணையைத் தொடர்ந்து மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில்<a href="https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters"> நீட் தேர்வு குளறுபடி</a>க்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியிருந்தது. </p><p>இந்த மனுத்தாக்கலைத் தொடர்ந்து, நீட் போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளை இனியும் தொடர விரும்பவில்லை என டெல்லி காவல்துறை திங்கள்கிழமை (ஆக.31) மாலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p>இந்நிலையில் இன்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உயிரை மாய்த்துக்கொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார். </p><p>இந்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து பேரணி அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்: ரசிகரின் கேள்விக்கு  கயாடு லோஹர் ஓபன் டாக்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhanush-is-my-only-favourite-kayadu-lohar-open-talk</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhanush-is-my-only-favourite-kayadu-lohar-open-talk#comments</comments><guid isPermaLink="false">ce7ebb4b-3b28-4608-9c42-12988f922b5e</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:55:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:55:14.337Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Dhanush,Kayadu Lohar,கயாடு லோஹர்,காரா,தனுஷ்,Immortal,Kaara</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/bv02l18u/kaydu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhanush-Kayadu Lohar  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/bv02l18u/kaydu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் கயாடு லோஹர் தோன்றி நடனமாடிய 'பவழ மல்லி' என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றார்.</p> <p>தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடினார். அப்போது தமிழ் சினிமாவில் அவருக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் யார் என்ற கேள்விக்கு, எந்தவித தயக்கமுமின்றி நடிகர் தனுஷின் பெயரை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.</p><h2>தனுஷை<strong>த் தவிர வேறு</strong> யாருக்கும் இடமில்லை</h2><p>இந்த உரையாடலின் போது, "தமிழ் சினிமாவில் உங்களின் ஃபேவரிட் ஹீரோ யார்?" என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, புன்னகையுடன் பதிலளித்த  கயாடு லோஹர், "தனுஷ், தனுஷ், தனுஷ் மட்டும்தான்! தமிழ் சினிமாவில் அவரைத் தவிர வேறு யாருக்கும் அந்த இடத்தில் வாய்ப்பே இல்லை," என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.</p><h2><strong>கைநழுவிய வாய்ப்</strong>பு</h2><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/kayadu-lohar-box-office-double-dhamaka-i-am-game-immortal">கயாடு லோஹர்</a> இதுவரை தனுஷுடன் இணைந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான தனுஷின் 'காரா' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், பிற படங்களின் படப்பிடிப்பு தேதிகளுடன் ஏற்பட்ட கால்ஷீட் குழப்பம் காரணமாக அந்த வாய்ப்பை அவர் தவறவிட நேரிட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>பிரதீப் ரங்கநாதனுடன் நடித்த 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான  கயாடு லோஹர், அதன்பின் அதர்வாவுடன் 'இதயம் முரளி' படத்தில் நடித்திருந்தார். மேலும், இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் அவர் தோன்றி நடனமாடிய 'பவழ மல்லி' என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றார்.</p><p>தற்போது ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள 'இம்மார்ட்டல்' திரைப்படம் மற்றும் துல்கர் சல்மானுடன் நடித்த 'ஐ அம் கேம்' ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டிற்காக அவர் காத்திருக்கிறார். இவை தவிர, சூர்யாவின் 48-வது திரைப்படம், சிவகார்த்திகேயன் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் 'மஞ்சநெத்தி' உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களிலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கருத்துச் சுதந்திரம் முதல் நீதித்துறை வரை முடக்கம்: வி-டெம் அறிக்கையைச் சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-bjp-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-bjp-govt#comments</comments><guid isPermaLink="false">37ea99b8-76d6-4718-be31-3591494b3d47</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:35:27 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:35:27.101Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/smi3n5o5/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/smi3n5o5/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஸ்வீடனின் கோத்தன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச ஆய்வு நிறுவனமான ‘வி-டெம்’ (V-Dem Institute) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஜனநாயக அறிக்கையில், இந்தியாவில் மக்களாட்சி நெறிமுறைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதை அம்பலப்படுத்தியுள்ளது; பா.ஜ.க. அரசின் இந்த ஜனநாயக விரோத, அடக்குமுறைப் போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிக வன்மையாகக் கண்டிக்கிறது!</strong></em></p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/மாணிக்கம்-தாகூர்">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>அண்ணல் அம்பேத்கரும், பண்டித ஜவஹர்லால் நேருவும் தொலைநோக்குப் பார்வையோடு கட்டமைத்த இந்திய ஜனநாயகத்தை, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் திட்டமிட்டுச் சிதைத்து, இன்று சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒரு ‘தேர்தல் சர்வாதிகார நாடாக’ சீரழிய வைத்து தலைகுனியச் செய்துள்ளது.</p><p>சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இனப்பாகுபாடு ஒழிப்புக்கான குழுவும் (UN CERD) வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவது குறித்தும், சட்ட அமலாக்க அமைப்புகளின் முறைகேடுகள் குறித்தும் சுட்டிக்காட்டி கடும் கவலையைத் தெரிவித்துள்ளது.</p><p>வி-டெம் அறிக்கையின்படி, தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா 179 நாடுகளில் 106- வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. சுதந்திர ஜனநாயகக் குறியீட்டில் 105-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. 2009-ஆம் ஆண்டிலிருந்து இந்திய ஜனநாயகத்தை நோக்கித் தொடங்கிய சரிவு, மோடி ஆட்சிக் காலத்தில் உச்சகட்ட சர்வாதிகாரமாக உருவெடுத்து, 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வரலாற்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக இந்த அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>வி-டெம் அறிக்கையில் அம்பலமாகியுள்ள பா.ஜ.க. அரசின் முக்கிய ஜனநாயகப் படுகொலைகள் :</strong></h2><h2><strong>1. கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரப் படுகொலை</strong></h2><p>ஆளும் பா.ஜ.க. அரசின் தவறுகளையும் தோல்விகளையும் சுட்டிக்காட்டும் சுயேச்சையான பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் தணிக்கைகளும் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. உலகளவில் பத்திரிகைத் தணிக்கை மற்றும் ஊடக ஒருதலைப்பட்சப் போக்கு மோசமடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது.</p><h2><strong>2. கல்வி மற்றும் கருத்துப் பரிமாற்றச் சுதந்திரம் முடக்கம்</strong> </h2><p>பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வகங்களின் தன்னாட்சி சிதைக்கப்பட்டு, கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் சுதந்திரமான ஆய்வு மற்றும் கருத்துப் பகிர்வுக்கான உரிமை திட்டமிட்டு நசுக்கப்படுகிறது. சர்வதேச அளவில் கல்வி மற்றும் கலாச்சார வெளிப்பாட்டுச் சுதந்திரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ள 41 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.</p><h2><strong>3. அரசியலமைப்பு நிறுவனங்களின் தன்னாட்சி பறிப்பு</strong></h2><p>மக்களாட்சியின் தூண்களாக விளங்கும் தேர்தல் ஆணையம், புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட சுதந்திரமான தன்னாட்சி அமைப்புகள் அத்தனையும் ஆளும் கட்சியின் அரசியல் பழிவாங்கும் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் தன்னாட்சி உலகளவில் வீழ்ச்சியடைந்துள்ள 28 நாடுகளில் இந்தியாவும் தீவிரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. </p><h2><strong>4. நீதித்துறை சுதந்திரம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் முடக்கம்</strong></h2><p>நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் தீர்ப்புகளைப் புறந்தள்ளுவதுடன், மக்கள் பிரச்சினைகளைப் பேசும் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பும் விவாதங்களும் திட்டமிட்டு முடக்கப்பட்டு வருகின்றன. அரசின் அத்துமீறல்களை நாடாளுமன்றம் விசாரித்துத் தட்டிக்கேட்கும் அதிகாரம் வீழ்ச்சியடைந்துள்ள 20 முன்னணி நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது.</p><h2><strong>5. தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகள் மீதான ஒடுக்குமுறை</strong></h2><p>சமூக நீதிக்காகவும், சாமானிய மக்களின் உரிமைகளுக்காகவும் களத்தில் நிற்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளின் குரல்வளை நெரிக்கப்பட்டு முடக்கப்படுகிறது. மக்கள் உரிமை அமைப்புகளை ஒடுக்குதல் மற்றும் அவற்றின் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ள நாடுகளில் இந்தியா முக்கியக் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளது.</p><h2><strong>6. தேர்தல் சர்வாதிகாரப் போக்கு</strong></h2><p>பெயரளவில் தேர்தல்களை நடத்திக் கொண்டு, மறுபுறம் உண்மையான கருத்துச் சுதந்திரம், அமைப்புகள் கூடும் உரிமை, குடிமை உரிமைகள் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் ஆகியவற்றை அடியோடு வேரறுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்தியா ‘தேர்தல் சர்வாதிகார நாடாகவே’ வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2008 முதல் தாராளவாத ஜனநாயகக் குறியீட்டில் (LDI) -0.309 புள்ளிகள் வரை சரிந்து, உலகளவில் அதிக மக்களாட்சிச் சரிவைச் சந்தித்த டாப்-3 நாடுகளில் ஒன்றாக இந்தியா பதிவாகியுள்ளது.</p><p>‘இந்தியா ஜனநாயகத்தின் தாய்’ என்று உலக நாடுகளின் மத்தியில் வெற்று முழக்கமிடும் பிரதமர் நரேந்திர மோடி, உலக அரங்கில் நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த அவப்பெயருக்கும் தலைகுனிவிற்கும் என்ன பதில் சொல்லப் போகிறார்?</p><p>இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் மக்களாட்சி மாண்புகளையும் காக்க தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கம் சமரசமின்றி களத்தில் நின்று போராடும்! சர்வாதிகார மோடி அரசின் அதிகாரக் குவிப்புக்கு எதிராக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்! என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது மனித உரிமை மீறல் அல்ல - சிஆர்பிஎஃப்!</title><link>https://www.maalaimalar.com/news/national/use-of-pellet-guns-on-protesters-is-not-a-human-rights-violation-crpf</link><comments>https://www.maalaimalar.com/news/national/use-of-pellet-guns-on-protesters-is-not-a-human-rights-violation-crpf#comments</comments><guid isPermaLink="false">99e04a67-1c88-4f90-bab0-36daab99dc53</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:27:24 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:27:24.220Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>crpf,DELHI PROTEST,சிஆர்பிஎஃப்,டெல்லி போராட்டம்,pellet gun,பெல்லட் துப்பாக்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/j2abjb6y/New-Project-2026-09-01T145609.736.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது மனித உரிமை மீறல் அல்ல - சிஆர்பிஎஃப்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/j2abjb6y/New-Project-2026-09-01T145609.736.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது மனித உரிமை மீறல் அல்ல என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய ரிசர்வ் காவல்படை பதிலளித்துள்ளது. </p><h2>டெல்லி போராட்டம்</h2><p>கடந்த ஜூலை 20 அன்று, டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் ஒருபகுதியாக, நாடாளுமன்றம் நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டது. </p><p>அப்போது போராட்டக்காரர்கள்மீது பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தியது குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே தகவல் கோரியிருந்தார். </p><p>அவர் எழுப்பியிருந்த கேள்விக்கு சிஆர்பிஎஃப் இந்தப் பதிலை அளித்துள்ளது. </p><h2>விலக்கு</h2><p>சிஆர்பிஎஃப் அமைப்பிற்கு பொதுவாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஊழல் அல்லது மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களுக்கு மட்டுமே விதிவிலக்கு உண்டு. </p><p>ஆனால், இச்சம்பவத்தில் மனித உரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை என்று கூறி அதுகுறித்த விரிவான தகவல்களைத் தர சிஆர்பிஎஃப் மறுத்துள்ளது.</p><p>இந்த விவகாரத்தில் முதலில் டெல்லி காவல்துறையும், அரசும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என மறுத்தது. பின்னர் பெல்லட் துப்பாகி பயன்பாடு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானதும், மருத்துவமனை தரவுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றதும் உறுதியானது. </p><p>தொடர்ந்து பெல்லட் குண்டால் பாதிக்கப்பட்டு, வலது கண்பார்வையை இழந்த சாகில் லோச்சாப் இதுதொடர்பாக டெல்லி காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். </p> <p>ஆனால் பெயர் குறிப்பிடாமல் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, அதுவும்<a href="https://www.maalaimalar.com/news/national/delhi-police-register-case-over-pellet-gun-attack-on-rahul-gandhi-during-sit-in-protest"> ராகுல் காந்தி</a>யின் தலையீட்டால்.</p><p>இந்நிலையில் சாகேட் கோகலே எழுப்பிய கேள்விக்கு சிஆர்பிஎஃப் இந்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">SHOCKING:<br><br>CRPF claims use of pellet guns on protestors in Delhi is NOT a human rights violation <br><br>I’d filed an RTI with Rapid Action Force (which is a part of CRPF) asking for information related to the use of pellet guns on unarmed protestors on 20th July during the Jantar… <a href="https://t.co/0Xv0laN4tA">pic.twitter.com/0Xv0laN4tA</a></p>&mdash; Saket Gokhale (@SaketGokhale) <a href="https://x.com/SaketGokhale/status/2094263102225465648?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மேட்டூரில் விவசாயி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-surprise-visit-farmer-house-in-mettur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-surprise-visit-farmer-house-in-mettur#comments</comments><guid isPermaLink="false">e180d857-19e4-43fd-84cc-3d7c802feffd</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:21:05 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:21:05.869Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மேட்டூர் அணை,Mettur Dam,விவசாயி,Farmer</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/lcvs4t7t/vijay5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/lcvs4t7t/vijay5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation">மேட்டூர் அணை</a> மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர்  ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.</p> <p>மேலும் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த காலக்கட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடைபெறும்.</p> <h2>மழை குறைவு</h2><p>மேட்டூர்அணையில் தண்ணீர் இருப்பை தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் குடிநீருக்காக திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது.</p> <p>இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 4-ந் தேதி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.</p> <h2>90 அடியை தாண்டிய நீர்மட்டம்</h2><p>இதன்காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது. இதன் காரணமாக காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் இன்று தண்ணீர் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.</p> <p>அதன்படி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சேலம் ஓமலூர் விமான நிலையத்துக்கு   காலை 9.30 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன், எம்.எல்.ஏக்கள் மற்றும் கலெக்டர் இளம்பகவத் மற்றும்  போலீஸ் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். </p> <p>வரவேற்பை பெற்றுக்கொண்ட <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து வேன் மூலம் மேட்டூர் புறப்பட்டார். அப்போது வழி நெடுகிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பொதுமக்களை பார்த்த முதலமைச்சர் விஜய் வணக்கம் தெரிவித்தப்படி சென்றார்.</p><p>மேலும் விஜய்யை வரவேற்று சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டு மேட்டூர் அணை பகுதிக்கு வந்தடைந்தார். </p><h2>தண்ணீர் திறப்பு</h2><p>பின்னர் முதலமைச்சர் விஜய் அணையின் வலது கரையில் மேல்மட்ட மதகு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மின்விசையை 11.40 மணிக்கு இயக்கி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் பூக்கள், நெல் மணிகளை தூவி வணங்கி வரவேற்றார். </p> <h2>புகைப்பட கண்காட்சி</h2><p>தொடர்ந்து நீர்வளத்துறை சார்பில் மேட்டூர் அணை குறித்த விளக்க புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். மேலும் அணையின் இதய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீராய்வு நிலவறையை பார்வையிட்டார். மேலும் மேட்டூர் அணையின்  இடது புறமுள்ள  மின்நிலையத்தையும் முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு நின்ற கட்சி நிர்வாகிகள், விவசாயிகளை பார்த்து கையசைத்தபடி சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகளுக்கு முதலமைச்சர் நெல் மணியை கொடுத்தார். விவசாயிகள் அவருக்கு பச்சை துண்டை அணிவித்தனர். அப்போது அவர்களுடன் நின்று புகைப்படமும் எடுத்து கொண்டார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/buls44qh/vijay4.jpg" /></figure><h2>முதல் முறையாக</h2><p>முதலமைச்சராக பதவி ஏற்ற விஜய், முதல்முறையாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். </p><p>இன்று மேட்டூர் அணையில் இருந்து முதலில் 3ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்து  விடப்பட்ட நிலையில் பின்னர் நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் நீர்திறப்பு 12ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இதனால் அணையின் மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம் மின்உற்பத்தி தொடங்கப்படும். </p> <h2>விவசாயி வீட்டில் முதலமைச்சர்</h2><p>இந்நிலையில் மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். சேலம் மாவட்டம் சின்னக்காவூரில் உள்ள விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்றார். அங்கிருந்த மூதாட்டி முதலமைச்சர் விஜயின் கையை பிடித்து அழைத்து சென்றார்.</p><p>அப்போது முதலமைச்சர் விஜய், வேளாண் பணிகள் குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தார். சின்னக்காவூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார். </p><p>இதுதொடர்பாக விவசாயி கூறுகையில், முதலமைச்சர் திடீரென எங்களது வீட்டிற்கு வந்தார். அவர் வந்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>கோவில்களில் இன்று முதல் செல்போன்களுக்குத் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-in-temples-from-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-in-temples-from-today#comments</comments><guid isPermaLink="false">4a0cac46-804b-4f42-b26d-303c3c832c2e</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:48:29 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:48:29.379Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>செல்போன் தடை,இந்து சமய அறநிலையத்துறை,HRCE Department,Mobile Ban,Devotees Notice,TN Temple Mobile Ban</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ob2vhtnh/Mobile-Ban" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mobile Ban ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ob2vhtnh/Mobile-Ban?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி, ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை தடுப்ப தற்காக கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">இந்துசமய அறநிலையத்துறை</a> இன்று முதல் தடை விதித்துள்ளது.</p><h2>தொடரும் தடை உத்தரவு</h2><p>ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் செல்போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை. </p><p>இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள 52 பெரிய கோவில்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">செல்போன் தடை </a>விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>இன்று முதல் தடை அமல்</h2><p>சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று காலையில் செல்போன் பாதுகாப்பு மையத்தில் செல்போன்களை வைக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். </p><p>அவர்கள் செல்போன்களை கொடுத்து ரூ.5 கட்டணம் செலுத்தி ரசீது பெற்று சென்றனர்.</p><h2>சென்னையில் தடை அமல்</h2><p>இதேபோல் சென்னை வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீர ராகவர் கோவில், திருத்தணி முருகன் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு பெட்டகத்தில் கொடுத்து விட்டு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.</p><h2>தமிழகம் முழுவதும் தடை</h2><p>பழனி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களிலும் செல் போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட தால் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு பெட்டகத்தில் பக்தர்கள் செல்போன்களை கொடுத்து விட்டு கோவிலுக்குள் சென்றனர்.</p><p>உள்ளூர் பக்தர்கள் வீடுகளிலும், வெளியூர் பக்தர்கள் தாங்கள் சென்ற வாகனத்திலும் செல்போன்களை வைத்து விட்டு சென்றதை காணமுடிந்தது.</p>]]></content:encoded></item><item><title>முழுநேர தலைவர், உறுப்பினர்-செயலாளரையும் நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்ட மசோதா: அமைச்சர் தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/legislative-bill-providing-for-the-appointment-of-a-full-time-chairperson-and-a-member-secretary</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/legislative-bill-providing-for-the-appointment-of-a-full-time-chairperson-and-a-member-secretary#comments</comments><guid isPermaLink="false">9b0c5edc-babf-4404-aa55-ca659061c339</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:45:51 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:45:51.850Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/69plcop6/rajkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/69plcop6/rajkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நகர்ப்புற மேம்பாட்டு குழுமங்களின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முழுநேரத் தலைவரையும் முழுநேர உறுப்பினர்-செயலாளரையும் நியமிப்பது அவசியமெனக் கருதப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது,</p><p>1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 9-எப்  பிரிவின்கீழ், நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களானது, நகரத் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு, நில மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், ஒருங்கிணைக்கவும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p>நகர்ப்புற வளர்ச்சியின் அளவும் அதன் சிக்கல் தன்மைகளும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இப்பணிகளுக்குத் தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புள்ள கவனம் செலுத்துவதும், உரிய நேரத்தில் முடிவுகளை எடுப்பதும் அவசியமாகிறன.</p><p>எனவே, நகர்ப்புற மேம்பாட்டு குழுமங்களின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முழுநேரத் தலைவரையும் முழுநேர உறுப்பினர்-செயலாளரையும் நியமிப்பது அவசியமெனக் கருதப்படுகிறது.</p><p>இதன் மூலம், அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் செயல்பணிகளில் அதிக கவனம், தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை உறுதிசெய்ய இயலும். அதேவேளையில், மாவட்ட நிர்வாகத்துடன் பயனுள்ள ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் ஆணையத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து செயல்படுவார்.</p><p>திட்டப் பரப்பிடம் அல்லாத பிற, பரப்பிடத்தில் உள்ள நில மேம்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதற்கு முன்னதாக, உள்ளாட்சி அதிகார அமைப்பானது, இயக்குநரின் முன் அனுமதிப் பெறுதலை கட்டாயப்படுத்துகிறது. மேலும், நன்செய் நிலங்களைப் பொறுத்தவரை, தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலையும் பெறவேண்டியது அவசியமாகும்.</p><p>இந்த நடைமுறையின் காரணமாக, திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து அவற்றை முடிவு செய்வதில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்பட்டன. நில மேம்பாட்டிற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும்,</p><p>நடைமுறை சார்ந்த காலதாமதங்களைக் குறைக்கவும், அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கவும், அதன்படி திட்டப்பரப்பிடமாக அல்லாத பகுதிகளில் நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கு தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற தேவையை நீக்கவும், நன்செய் நிலங்களைப் பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்பிற்கு முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை இயக்குநருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.</p><p>அதற்கு ஏற்ப சட்ட  திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்துள்ளது.</p><p>இவ்வாறு  கூறப்பட்டுள்ளது </p>]]></content:encoded></item><item><title>டெல்லி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: &apos;மீண்டும் மீண்டும் இதைப் பார்ப்பதா?&apos;- கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/delhi-minor-gang-rape-bus-incident-bhumi-pednekar-reacts</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/delhi-minor-gang-rape-bus-incident-bhumi-pednekar-reacts#comments</comments><guid isPermaLink="false">fded0e39-9c08-4749-a6ed-37e07c49d4ba</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:44:49 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:44:49.545Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>கூட்டுப் பாலியல் வன்கொடுமை,டெல்லி சிறுமி,Delhi rape,Bhumi Pednekar,Delhi girl gangrape,நடிகை பூமி பெட்னேகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/trw8e18e/delf.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bhumi Pednekar 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/trw8e18e/delf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுமார் 43 கிலோமீட்டர் தூரம் ஓடிய பேருந்திலேயே இந்த கொடூரம் அரங்கேறிய பிறகு, வடக்கு டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதி அருகே சிறுமியை அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.</p><p>தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில்<a href="https://www.maalaimalar.com/news/national/16-year-old-schoolgirl-gang-raped-on-a-sleeper-bus-in-delhi"> கூட்டுப் பாலியல் வன்கொடுமை</a> செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பாலிவுட் பிரபல நடிகை பூமி பெட்னேகர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கடும் கண்டனத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>கிரேட்டர் நொய்டாவில் உள்ள பரி சௌக் பகுதியில் இருந்து நொய்டா செக்டர் 63-க்கு செல்வதற்காக கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு 16 வயது சிறுமி ஒருவர் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, அதன் ஓட்டுநரும் நடத்துநரும் இணைந்து அச்சிறுமியை ஓடும் பேருந்திலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சுமார் 43 கிலோமீட்டர் தூரம் ஓடிய பேருந்திலேயே இந்த கொடூரம் அரங்கேறிய பிறகு, வடக்கு டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதி அருகே சிறுமியை அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.</p><p>இச்சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையின் காஷ்மீரி கேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையை முடுக்கிவிட்ட காவல்துறை, கான்பூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் குல்தீப் (39) மற்றும் நடத்துநர் சந்தீப் (26) ஆகிய இருவரையும் சில மணி நேரங்களிலேயே திமார்பூர் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்து கைது செய்தது.</p><h2>இன்ஸ்டாகிராமில் கொ<strong>ந்தளித்த ந</strong>டிகை</h2><p>இந்தச் சம்பவம் தொடர்பான செய்தியைப் பகிர்ந்த நடிகை பூமி பெட்னேகர், "மீண்டும் மீண்டும் மீண்டும் இதே கொடூரம் நடப்பதை நாம் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்? வெட்கக்கேடு!" என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து நாடு தொடர்ந்து பேசி வரும் வேளையில், தலைநகரிலேயே இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பது குறித்து அவர் தனது  கவலையைத் தெரிவித்துள்ளார்.</p><h2>பாதுகாப்<strong>பு ஏற்பாடுகள்</strong> குறித்து ஆய்வு</h2><p>பேருந்து பயணித்த 43 கிலோமீட்டர் தூர பாதையில் காவல்துறையின் சோதனைச் சாவடிகள், தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் செயல்படும் நிலையில் இருந்தனவா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1000 கோடி நிதி நிறுவன மோசடி- இளைஞர் தற்கொலை: தடுக்கத் தவறிய காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-rs-1000-crore-financial-company-fraud-youth-commits-suicide-the-police-having-failed-to-prevent-it-must-bear-responsibility</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-rs-1000-crore-financial-company-fraud-youth-commits-suicide-the-police-having-failed-to-prevent-it-must-bear-responsibility#comments</comments><guid isPermaLink="false">0883208d-4789-4919-aebc-7bd3fd793273</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:29:32 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:29:32.784Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,காவல்துறை,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,நிதி நிறுவன மோசடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4ckj2y7k/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4ckj2y7k/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களுக்கு அவர்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர தமிழக அரசும், காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசைகாட்டி ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞர் இராசு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் அரங்கேற்றப்படும் நிலையில், அதை காவல்துறையினர் தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>முதலீட்டாளர்கள் குற்றச்சாட்டு</strong></h2><p>மதுரை மாவட்டம் மேலூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எப்.க்யூ.எல் நிதி நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் அந்தப் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை காட்டி விளம்பரங்கள் செய்தது. இதற்காக தனிச் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின்படி மக்களிடம் சென்று முதலீடுகளைத் திரட்டுவதற்காக பெருமளவில் முகவர்களும் நியமிக்கப்பட்டனர். எப்.க்யூ.எல் நிதி நிறுவனத்தின் விளம்பரங்களை நம்பிய மக்களும் தங்களிடமிருந்த பணத்தை இலட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். பலர் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தங்களின் நிலம் உள்ளிட்ட உடமைகளை விற்றும், அடகு வைத்தும் முதலீடு செய்தனர். ஆனால், உறுதியளித்த காலத்தில் முதலீட்டைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்த நிறுவனம் சில நாள்களுக்கு முன் மூடப்பட்டு விட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாக முதலீட்டாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இராசு என்ற இளைஞர் இந்த நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ததுடன், முகவராகவும் செயல்பட்டு லட்சக்கணக்கில் முதலீடு திரட்டிக் கொடுத்து உள்ளார். மோசடி நிதி நிறுவனம் மூடப்பட்டு விட்ட நிலையில், பணத்தை திருப்பிக் கேட்ட முதலீட்டாளர்களுக்கு பதில் கூற முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு நீதி கேட்டு அவரது உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. பணம் கட்டி ஏமாந்த மக்களும் மதுரை மாவட்ட காவல்துறையில் கூட்டம், கூட்டமாக வந்து புகார் அளித்து வருகின்றன. மோசடியின் தன்மை மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு இந்த மோசடி வழக்கின் விசாரணையை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனால், பணம் கட்டி ஏமாந்த மக்களுக்கு எப்போது பணமும், நீதியும் கிடைக்கும் என்பது மட்டும் தெரியவில்லை.</p><h2><strong>மோசடி</strong></h2><p>தமிழ்நாட்டில் திடீர், திடீரென மோசடி நிதிநிறுவனங்கள் தொடங்கப்படுவதும், அவை மக்களிடம் கோடிக் கணக்கில் பணத்தை மோசடி செய்து விட்டு மூடப்படுவதும் புதிதல்ல. சராசரியாக ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஆரூத்ரா, வேலூரில் எல்.என்.எஸ். சர்வதேச நிதிச்சேவை நிறுவனம், திருச்சியில் எல்பின்ஸ் ஆகிய  3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்தன. கோவையைச் சேர்ந்த மை வி 3 ஆட்ஸ் (MY V3 Ads) நிறுவனம் பொதுமக்களிடம்  ரூ.2000 கோடி மோசடி செய்ததுடன், அதை அம்பலப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்ட போதிலும், ஏமாற்றப்பட்ட பொதுமக்களுக்கு இன்னும் ஒரு ரூபாய் கூட மீட்டுத் தரப்படவில்லை.</p><p>ஒன்றரை ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், ஆண்டுக்கு 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகவும் மோசடி நிதி நிறுவனங்கள் கூறியதை மக்கள் அப்படியே நம்பியது தான் இந்த மோசடிக்கு காரணம் ஆகும். அதிக வட்டி, நட்சத்திர விடுதிகளில் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்துதல், முதலீடு செய்வதவர்களில் ஒரு சிலருக்கு அதிக வட்டியை வழங்கி, அவர்கள் மூலம் மக்களிடம் வாய்மொழி பிரச்சாரம் செய்ய வைத்தல் போன்றவற்றின் மூலம் தான் மோசடி நிறுவனங்கள் கவர்ந்திழுத்து ஏமாற்றுகின்றன.</p><p>ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மோசடிகளால் ஏராளமானமானோர் பாதிக்கப்படுகிறார்கள் என்ற போதிலும், அதனால் விழிப்புணர்வு பெறாத பொதுமக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மீண்டும், மீண்டும் முதலீடு செய்து ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான். முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டப்படும் போது அதை நம்பி பொதுமக்கள் ஏமாறுவது இயல்பு தான். நேர்மையான நிதி நிறுவனங்களையும், மோசடி நிறுவனங்களையும் பகுத்துப் பார்த்து முதலீடு செய்யும்  அளவுக்கு ஊரக, கல்வியறிவற்ற மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை.</p><h2><strong>பொறுப்பேற்பு</strong></h2><p>இத்தகைய சூழலில், மோசடி நிறுவனங்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையாவது பொருளாதாரக் குற்றப்பிரிவு செய்திருக்க வேண்டும். அதிக வட்டி தருவதாகவும், பரிசுகளை அள்ளி வழங்குவதாகவும் அந்த நிறுவனங்கள் துண்டறிக்கைகள் மூலமாகவும், முழுபக்க விளம்பரங்கள் மூலமாகவும் தொடர் விளம்பரங்களை செய்து தான் முதலீடு திரட்டுகின்றன. இவை எதுவும் தமிழக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருக்கும் போது, இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு தடுத்திருக்க வேண்டும். அதுதான் அவற்றின் முதன்மைக் கடமையும் கூட. அதைச் செய்யத் தவறிய காவல்துறை தான் இந்த மோசடிக்கும், உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும்.</p><p>கடந்த காலங்களிலும், இப்போதும் மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 420 போன்ற சாதாரண பிரிவுகளில் தான் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அந்நிறுவன உரிமையாளர்கள் எளிதாக தப்பிவிடக் கூடும். இதைத் தடுப்பதற்காக மோசடியாளர்கள் மீது இன்னும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட வேண்டும். மோசடியாளர்களின் பெயர்களில் மட்டுமின்றி, அவர்களைச் சார்ந்தவர்கள், நெருக்கமானவர்கள் பெயர்களில், மோசடி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திற்கு பின்னர் வாங்கப்பட்ட சொத்துகளையும் முடக்க வேண்டும்; மேலும், நிதி நிறுவனங்கள் தொடங்குவதற்கு பொருளாதாரக் குற்றப்பிரிவில் தடையின்மைச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.</p><p>மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களுக்கு அவர்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர தமிழக அரசும், காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: பிரபல வீரரை அதிரடியாக நீக்கிய ஆஸ்திரேலியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/marnus-labuschagne-dropped-from-australias-odi-squads</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/marnus-labuschagne-dropped-from-australias-odi-squads#comments</comments><guid isPermaLink="false">cfb4bfb7-306a-44ef-bfb1-b2598732552a</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:15:44 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:15:44.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Australia,ஆஸ்திரேலியா,லபுசேன்,Marnus  Labuschagne,odi team,ஒருநாள் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vse9fbya/labushane.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ marnus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vse9fbya/labushane.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மார்னஸ் லபுஷேன் நீக்கப்பட்டுள்ளார்.</strong></em></p><p>ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதத்தில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.</p><p>இதில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 15-ம் தேதியும், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 24-ம் தேதியும் தொடங்குகின்றன.</p><p>இந்நிலையில், ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிக்கப்பட்டது.</p><p>எதிர்வரும் உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கியத் தொடர்களைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணியில் சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>இன்று அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஒருநாள் போட்டிகளில் அவரது சுமாரான பார்ம் மற்றும் குறைவான ஸ்டிரைக் ரேட் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><p>மேலும், அவருடன் மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான மேத்யூ ஷார்ட்டும் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரு நாளில் உயிர் தப்பினோம் - நேபாள வெள்ளத்தில் இருந்து மீண்ட கோவை பக்தர்களின் பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/narrow-escape-coimbatore-pilgrims-recount-nepal-flood-ordeal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/narrow-escape-coimbatore-pilgrims-recount-nepal-flood-ordeal#comments</comments><guid isPermaLink="false">8e2eec39-afe8-4d81-b71a-6aba84714d4f</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:15:13 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:15:13.676Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>rescue,nepal flood,நேபாள பெருவெள்ளம்,தமிழர்கள் மீட்பு,Coimbatore Devotees,கோவை பக்தர்கள்,Kailash Yatra</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/frel71dw/Nepal-Flood" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Flood ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/frel71dw/Nepal-Flood?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nepal-flood">நேபாளத்தில்</a> கடந்த மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர்.</p><h2>தமிழர்கள் மீட்பு</h2><p>வெள்ள பாதிப்பில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழகத்தில்</a> இருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற பலரும் சிக்கி நேபாளம், திபெத் போன்ற இடங்களில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். </p><p>அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பலனாக ஒவ்வொரு குழுவினராக மீட்கப்பட்டு சொந்த ஊர் திரும்பிய வண்ணம் உள்ளனர்.</p><p>அந்த வகையில் கோவை, திருப்பூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த 28 பேர் விமானம் மூலமாக இன்று கோவை வந்தனர்.</p><h2>கோவை விமான நிலையம்</h2><p>கோவை விமான நிலையத்தில் அவர்களுக்கு உறவினர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். </p><p>ரோஜா பூக்களை கொடுத்தும், இனிப்புகளை வழங்கியும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் நேபாளத்தில் இருந்து திரும்பியவர்களை உறவினர்கள் கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.</p><p>சொந்த ஊர் திரும்பியவர்கள் பதட்டத்துடனேயே இருந்தனர். அவர்கள் நேபாளத்தில் அவர்கள் சந்தித்த பெரும் துயரம் குறித்து கண்கலங்கியபடி பேசினர்.</p><h2>பிரேமா (திருப்பூர் கணியம்பூண்டி)</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து அறிந்து பெரும் துயரம் அடைந்தோம். நாங்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை பாதிப்புக்கு முன்னதாக ஒரு நாளைக்கு முன்பு தான் கடந்திருந்தோம். </p><p>அதனால் உயிர் தப்பினோம். பாதிப்பு நடந்த மறுநாள் தான் எங்களுக்கு விவரமே தெரியவந்தது. இதைக் கேட்டதும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்.</p><p>ஆனால் நாங்கள் இருந்த பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது பத்திரமாக அனைவரும் ஊருக்கு திரும்பி விட்டோம்.</p><h2>தனசேகரன் (புஞ்சை புளியம்பட்டி, ஈரோடு)</h2><p>நேபாளத்தில் வெள்ளம் பாதித்த இடத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தோம். நாங்கள் வாட்ஸ்அப் குழு அமைத்து அதன் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்ட படி கைலாஷ் யாத்திரை மேற்கொண்டோம். </p><p>தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் போது தான் இந்த தகவல் கிடைத்தது. உடனே அனைவரும் பதட்டம் அடைந்தோம்.</p><p>எங்கள் உறவினர்கள் எங்களை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தனர். அதன் பிறகு எங்கள் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகு நாங்கள் பயணத்தை தொடர்ந்தோம். </p><p>நேற்று காலை தான் நேபாளத்திலிருந்து புறப்பட்டு டெல்லி வந்து சேர்ந்தோம். இதற்காக நடவடிக்கை மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>மோகனா (திருப்பூர் ஊத்துக்குளி)</h2><p>நாங்கள் அனைவரும் 18-ந் தேதி இங்கிருந்து புறப்பட்டு நேபாளம் சென்றோம். நாங்கள் சுற்றுப் பயணத்தில் இருந்தபோது இந்த தகவல் எங்களது உறவினர்கள் மூலமாக எங்களுக்கு கிடைத்தது.</p><p>உடனே அனைவரும் பதட்டம் அடைந்தோம். சம்பவம் நடந்த வெள்ள பகுதியை நாங்கள் அதற்கு முன்பு 3 நாட்களுக்கு முன்புதான் கடந்து வந்து இருந்தோம். அதன் பிறகு சாலைகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்து விட்டன.</p><p>ஆனாலும் நாங்கள் திட்டமிட்டபடி பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம். இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உதவியாக இருந்தன. இதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>சரோஜா, ரதி (சத்திய மங்கலம்)</h2><p>நாங்கள் கைலாஷ் யாத்திரைக்கு சென்று இருந்தோம். எங்களுக்கு உதவியாக நேபாளத்தைச் சேர்ந்த 7 வழிகாட்டிகள் வந்தனர்.</p><p>இந்த வெள்ள சம்பவத்தில் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த உதவியாளர் ஒருவரின் உடன் பிறந்த அண்ணன் ஒருவரும் வெள்ளத்தில் சிக்கி இறந்து விட்டதாக சுற்றுப்பயணத்தில் இருந்த போது தகவல் கிடைத்தது. </p><p>அந்த உதவியாளர் அவரது அண்ணனை இழந்தாலும் கடைசி வரை எங்களுடன் இருந்து வந்தார்.</p><p>நாங்கள் இருந்த பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததால் நைலம் வழியாக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளோம். எங்களை சீன ராணுவம் 2 வாகனத்தில் வந்து பத்திரமாக கொண்டு வந்து விட்டனர்.</p><p>இந்த சம்பவத்தில் எவ்வளவு பேர் இறந்தனர், மாயமானார்கள் என்பது குறித்து அங்குள்ள மக்கள் பதட்டத்துடன் பேசிக் கொண்டனர். மொழி தெரியாததால் எங்களுக்கு புரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>நேபாளத்தில் இருந்து திரும்பிய பெற்றோரை வரவேற்க வந்த திருப்பூரைச் சேர்ந்த அஜய் என்பவர் கூறியதாவது:-</h2><p>நாங்கள் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் வசித்து வருகிறோம். எனது பெற்றோர் மோகனா (47), சந்திரகுமார் (57) கடந்த 18-ந் தேதி திருப்பூரில் இருந்து 39 பேருடன் நேபாள் கைலாஷ் யாத்திரைக்கு சென்றனர்.</p><p> 2 வாரம் அவர்கள் அங்கு சுற்றுப்ப யணம் செய்து ஆன்மீக தரிசனம் மேற்கொண்டிருந்தனர்.</p><p>26-ந் தேதி நேபாளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதை அறிந்து பதட்டம் அடைந்து பெற்றோரை தொடர்பு கொண்டோம். அவர்களுடன் செல்போனை எடுத்து பேசினர். </p><p>அதன்பிறகே நாங்கள் சற்று நிதானம் ஆனோம். அவர்கள் மானசரோவர் என்ற இடத்தில் பாதுகாப்புடன் இருப்பதாகவும், சம்பவம் நடந்த போது ஏதோ நிலச்ச ரிவு ஏற்பட்டது போன்ற உணர்வை சந்தித்ததாகவும் கூறினர்.</p><p>சீனா எல்லையில் இருந்த தால் எனது பெற்றோர் உள்ளிட்ட குழுவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதன் பிறகு சாலைகள் பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் திட்டமிட்ட படி திரும்ப முடியவில்லை. சீன ராணுவம் எல்லையை கடக்க உதவியுள்ளனர். </p><p>அதன் பிறகு எனது பெற்றோர் மற்றும் குழுவி னர் டெல்லி வந்து கோவைக்கு விமானத்தில் வந்தனர். இன்று காலை அவர்களை நேரில் பார்த்தபிறகு தான் நிம்மதி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பேரிடருக்கு நடுவே வீறுகொண்டு நின்ற &apos;பச்சை வீடு&apos;: நேபாள வெள்ளத்தில் தப்பிய வீட்டின் உரிமையாளர் பகிர்ந்த திக்திக் நிமிஷங்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/green-house-stands-strong-amid-disaster-in-nepal-floods</link><comments>https://www.maalaimalar.com/news/world/green-house-stands-strong-amid-disaster-in-nepal-floods#comments</comments><guid isPermaLink="false">309e3213-bfbe-47d4-98fd-f70070b64259</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:15:09 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:15:09.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Baby Rescued,Nepal Floods,நேபாள நிலச்சரிவு,Rasuwa,ரசுவா,Nepal disaster,நேபாள வெள்ளம்,Nepal  Pets</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/xhzyczbe/ne.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Nepal floods-Green House]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/xhzyczbe/ne.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரம்மாண்டமான நவீனக் கட்டடங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல தசாப்த கால பழமையான இந்த சிறிய கட்டடம் எப்படித் தப்பியது என்பது குறித்துக் கட்டிடக் கலை வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். </p><p>நேபாள நாட்டின் நுவாகோட் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த வெள்ள நீர், சுற்றியிருந்த பல அடுக்குக் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் மக்களின் உடைமைகளை நொடிப் பொழுதில் அடித்துச் சென்றது. </p><p>பேரழிவின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில், 'பிரகாஷ்' என்பவருக்குச் சொந்தமான 40 ஆண்டுகள் பழமையான <a href="https://www.maalaimalar.com/news/world/a-house-standing-like-a-pillar-amidst-the-surrounding-floodwaters-who-on-earth-is-that-engineer-a-question-sweeping-across-the-internet">பச்சை நிறச் சிறிய வீடு</a> மட்டும் சிறிதும் சேதமடையாமல் அசைக்க முடியாமல் உறுதியுடன் நின்றது. இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வாழ்வி<strong>ன் கடைசி நொ</strong>டி என நினைத்தோம்</h2><p>வெள்ளம் சூழ்ந்த அச்சமூட்டும் தருணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய வீட்டின் உரிமையாளர் பிரகாஷ், "வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வீட்டின் கீழ் தளத்தை மூழ்கடித்தபோது, இதுதான் நமது வாழ்வின் கடைசி தருணம் என்று எண்ணினோம். இனி நாம் உயிரோடு பிழைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது" என்று கண்ணீர்மல்கக் கூறினார். நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்த குடும்பத்தினர் உடனடியாக வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று, சுற்றிலும் நீர் சூழ்ந்த நிலையில் உயிருக்குப் போராடியபடி மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருந்தனர்.</p><h2>அழிவுக்கு நடுவே <strong>அசைக்க மு</strong>டியாத வலிமை</h2><p>சுற்றியுள்ள பிரம்மாண்டமான நவீனக் கட்டடங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல தசாப்த கால பழமையான இந்த சிறிய கட்டடம் எப்படித் தப்பியது என்பது குறித்துக் கட்டிடக் கலை வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். கட்டடத்தின் உறுதியான கட்டுமானம், அதன் வடிவம் மற்றும் வெள்ள நீரின் பிரதான ஓட்டப் பாதையில் இருந்து சற்று விலகி அமைந்திருந்த புவியியல் அமைப்பு ஆகியவையே இந்த வீடு இடிந்து விழாமல் தப்பித்ததற்குக் காரணம் என அவர்கள் கணிக்கின்றனர்.</p><h2>மீட்புக் குழுவி<strong>னரின்</strong> துரித நடவடிக்கை </h2><p>வெள்ளத்தின் வேகம் சற்று குறைந்ததைத் தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் வீட்டின் மேல் தளத்தில் தவித்துக் கொண்டிருந்த பிரகாஷின் குடும்பத்தினரை பாதுகாப்பாக மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். பேரழிவுக்கு இடையே ஒரு குடும்பம் அசாத்தியமான முறையில் உயிர்தப்பிய செய்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல்  மலிவு விலையில் வெங்காயம் விற்பனை: அமைச்சர் வெங்கட்ரமணன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-venkatramanan-says-onions-to-be-sold-at-subsidized-prices-in-ration-shops-starting-from-the-3rd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-venkatramanan-says-onions-to-be-sold-at-subsidized-prices-in-ration-shops-starting-from-the-3rd#comments</comments><guid isPermaLink="false">8166eb79-70c7-48ae-b34a-ee81a6677170</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:54:26 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:54:26.514Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Onion,வெங்காயம்,ரேஷன் கடை,TN assembly,onion price,வெங்காயம் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ko6qixyq/venkatramanan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வெங்கட்ரமணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வெங்கட்ரமணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ko6qixyq/venkatramanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 8739 நியாய விலை கடைகளில், வரும் 3ஆம் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.</strong></em> </p><p>அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உணவு பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமனன்  <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில்</a> பேசியதாவது, </p><p>கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்படுத்தும் வகையில், ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் தொடர் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தபப்பட்டுள்ளது. </p><p>ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை ஏற்றதால் போக்குவரத்து செலவு உயர்வு, அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், <a href="https://www.maalaimalar.com/topic/வெங்காயம்">வெங்காயங்கள்</a> போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதிக வெங்காய உற்பத்தியை கொண்ட மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் வரத்து குறைந்ததன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ 56 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நியாயமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p> <p>முதற்கட்டமாக நகர்ப்பகுதியில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் பிரதான விற்பனை பண்டகசாலைகள் உறுப்பினர் அவர்களுக்கு அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாய விலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 8739 நியாய விலை கடைகளில், வரும் 3ஆம் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item></channel></rss>