<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 08 Aug 2026 11:47:11 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026#comments</comments><guid isPermaLink="false">b54f04e3-e267-4cba-9339-bc533284a1e5</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:51:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:24:39.210Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-custodial-death-in-palani-land-scam-case">காவல்நிலையம், சிறையில் குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது: நயினார் நாகேந்திரன்</a></p><p>* பழனி நிலமோசடி வழக்கில் தொடரும் மர்மங்கள்!</p><p>* அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக்காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/why-india-opposes-chinas-new-map">சீனா வெளியிட்ட புதிய வரைபடம் – இந்தியா ஏன் எதிர்ப்பு?</a></p><p>* சீனா அருணாச்சலத்தை ஸாங்னான் என பெயரிட்டு வரைபடம் வெளியிட்டது.</p><p>* லாங்ஜூ தக்லா போர் நினைவிடங்கள் வரைபடத்தில் முக்கியமாக சேர்கப்பட்டன</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/womens-team-star-ashleigh-gardners-ex-wife-blasts-cricket-australia-over-cheating-scandal">சக வீராங்கனையுடன் தொடர்பு: ஆஸ்திரேலிய மகளிர் அணி துணை கேப்டன்மீது முன்னாள் மனைவி புகார்</a></p><p>* ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணை கேப்டனாக இருந்து வருபவர் ஆஷ்லே கார்ட்னர்</p><p>* மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணி கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-new-rules-for-swiggy-zomato-zepto-electric-vehicles-compulsory">ஸ்விகி, சொமேட்டோ, செப்டோ டெலிவரி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு - மின்சார வாகனம் கட்டாயம்!</a></p><p>* மகாராஷ்டிரா டெலிவரி நிறுவனங்களுக்கு மின்சார பைக் பயன்படுத்த கட்டாயமாக்கியது.</p><p>* ஒவ்வொரு ஆர்டரிலும் 2% ஓட்டுநர் நல நிதிக்கு செல்லும், ஜிபிஎஸ் காப்பீடு உரிமம் கட்டாயம் கட்டண உச்சவரம்பு விதிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/from-goat-herder-to-district-collector-vanmathis-inspiring-journey">ஈரோட்டில் ஆடு மேய்த்த பெண்... இன்று மாவட்ட கலெக்டர்!</a></p><p>* ஈரோட்டில் ஆடு மேய்த்து படித்து தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மகாராட்டிராவில் பணியாற்றுகிறார்.</p><p>* வறுமையிலும் பெற்றோர் ஆதரவுடன் கணினி முதுகலை பட்டம் முடித்து 2015 UPSC தேர்வில் அகில இந்திய 152-வது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-message-to-gen-zs-at-iit-event-have-courage-to-seek-solutions">கேள்வி மட்டும் கேட்காதீர்கள், விடையைக் கண்டறியுங்கள்: ஐ.ஐ.டி. விழாவில் பிரதமர் பேச்சு</a></p><p>* இந்தியாவின் ஸ்டார்ட்அப் (தொடக்கநிலை நிறுவனங்கள்) புரட்சியை வடிவமைத்து, அதற்கு வலுசேர்த்தவர்கள் உங்களைப் போன்ற, இதே தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.</p><p>* சவால்களைப் பார்த்து அஞ்சாமல், அவற்றை வாய்ப்புகளாக மாற்றி, புதிய பாதைகளை உருவாக்குவதே Gen-Z இளைஞர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/delimitation-issue-meeting-of-mps-from-all-parties-led-by-chief-minister-vijay-has-begun">தொகுதி மறுவரையறை- முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது</a></p><p>* த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். </p><p>* ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/indian-woman-guinness-record-for-longest-hair">மிக நீண்ட கூந்தலுடன் கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்</a></p><p>* ரேணுவின் கூந்தல் ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக அளவிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>* இந்திய கலாச்சாரத்தில், நீண்ட கூந்தல் என்பது பாரம்பரியத்தின் அடையாளமாகவும், மிகுந்த அழகாகவும் கருதப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rain-continue-in-kerala-orange-alert-for-7-districts"> கேரளத்தில் தொடரும் கனமழை - 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை </a></p><p>* கேரளத்தில் பெய்து வரும் கனமழையினால் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டன.</p><p>*  மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/land-grab-case-charges-framed-against-former-minister-ma-subramanian">நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு</a></p><p>* மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுசதி, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.</p><p> * மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் மறுப்பதாகவும் இது முற்றிலும் தவறு எனவும் தெரிவித்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/sai-sudharsan-has-been-ruled-out-of-the-test-series-against-sri-lanka">இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முன்னணி வீரர் திடீர் விலகல்</a></p><p>* முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலே நகரில் தொடங்குகிறது.</p><p>* ஏற்கனவே காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா விலகினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/education-allocation-reduced-to-one-third-in-25-years-anbumani-ramadoss">கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 3-ல் ஒரு பங்காக குறைப்பு: அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? அன்புமணி ராமதாஸ்</a></p><p>* 2000-01-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு பார்த்தால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது. </p><p>* 2000-01 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய இரு அமைச்சகங்களும் ஒன்றாக இருந்தன. அப்போது கல்வித்துறைக்கு ரூ.4,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது அன்றைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.1,26,099 கோடியில் 3.92% ஆகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-math-curriculum-storytelling-rajmohan">கணக்கு பாடங்களின் தலைப்புகள் மாற்றம்: இனி கதைகள் வழியே கணித பாடம்!- அமைச்சர் ராஜ்மோகன்... </a></p><p>*மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், ஆர்வம் தூண்டும் வகையிலும் கணித பாடப்புத்தகங்களிலுள்ள சிக்கலான தலைப்புகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.</p><p>*உலர்வான சூத்திரங்களாக இல்லாமல், கதைகளின் ஊடே கணிதக் கருத்துகளை விவரிக்கும் புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-builds-safe-access-on-55-feet-palm-tree-for-palm-industry">55 அடி உயர மரத்தில் ரூ.60,000 செலவில் இரும்புப் படிக்கட்டு அமைத்த தூத்துக்குடி இளைஞர்!</a></p> <p>* தூத்துக்குடி இளைஞர் தினகர் 55 அடி பனை மரத்தில் இரும்பு படிக்கட்டு அமைத்தார்.</p><p>* பாதுகாப்பான பதநீர் இறக்க ரூ.60,000 செலவில் வளைவு படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-new-judges-may-your-work-excel-in-ensuring-equal-justice-and-social-justice">சமநீதியும், சமூகநீதியும் கிடைக்க செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்! - புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் வாழ்த்து</a></p><p>* சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>* மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-beat-ireland-in-second-odi">2வது ஒருநாள் போட்டி: ரஷித் கான் அசத்தலான பந்துவீச்சில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்</a></p><p>* முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 299 ரன்கள் குவித்தது.</p><p>* 6 விக்கெட் வீழ்த்திய ரஷித் கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-enter-final-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அஷ்மிதா சலிஹா</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* இறுதிப்போட்டியில் அஷ்மிதா சலிஹா, சீன வீராங்கனை உடன் மோதுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/who-will-pay-upi-transaction-fees-nirmala-sitharaman-clarifies">யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்?-குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்மலா சீதாராமன்!... </a></p><p>*மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. </p><p>*சாதாரணக் நுகர்வோர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக மேற்கொள்ளும் நபர்-நபர் மற்றும் வணிகர்களுக்கானக் கட்டணங்கள்  போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/land-guideline-value-in-tamil-nadu-hiked-by-up-to-60-percent">தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 60% வரை உயர்வு: அரசு அதிரடி நடவடிக்கை!</a></p><p>* ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பதிவாளர் தலைமையில், மண்டல வாரியாகக் கிராமங்களின் நில விவரங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>* சொத்துப் பதிவு மூலம் கிடைக்கும் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் அதிகரிக்கும் என்பதால், அரசின் வருவாய் கணிசமாக உயரும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-demands-withdrawal-of-fcra-bill-to-protect-minorities" rel="nofollow">சிறுபான்மையினர் நலன் காக்க FCRA மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!- மு.க.ஸ்டாலின்</a></p><p>* நாடாளுமன்ற பருவகாலக் கூட்டத்தொடரில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><p>* நாடாளுமன்ற கூட்டுகுழுவிற்குப் பரிந்துரைக்குமாறு அமைச்சரிடம் வலியுறுத்தல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/mojtaba-khameneis-health-raises-concerns-in-iran" rel="nofollow">ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி உடல்நிலை கவலைக்கிடம்?</a></p><p>* மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று இஸ்ரேலிய ஊடகம் தகவல்.</p><p>* எந்த நேரத்திலும் அவர் இறக்கக்கூடும் என்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே தகவல்கள் பரவி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-all-party-mps-meeting-government-not-send-any-letter-to-dmk-leadership">அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் -  திமுக தலைமைக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என தகவல்</a></p><p>* முதலமைச்சர் விஜய் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. </p><p>* மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue">எம்பிக்கள் கூட்டம்: காவிரி பிரச்சனையை திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம் - கனிமொழி</a></p><p>* தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். </p><p>* த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out">தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் வெளியீடு!... </a></p><p>*தமிழ்நாட்டின் தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*இத்திட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-devotees-carrying-mobile-phones-into-temples">கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை: 1-ந்தேதி முதல் பாதுகாப்பு பெட்டகம் அமைக்க உத்தரவு</a></p><p>* தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.</p><p>* ஒலி பெருக்கி மூலமும் இந்த தகவலை அறிவிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india">ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி: அமெரிக்க செனட் சபை மசோதா ஒப்புதல்-இந்தியாவிற்குப் பெரும் சவாலா?... </a></p><p>*ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கும் அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>*உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur" rel="nofollow">எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர்- மாணிக்கம் தாகூர்</a></p><p>* தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>* சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்: நகை வாங்குவோர் கலக்கம்!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral" rel="nofollow">உனது தந்தைக்கு அடுத்து நீதான்.. ஜீஷான் சித்திக் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்</a></p><p>*  மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை என்ன? </p><p>* கொலை மிரட்டல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today">2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா</a></p><p>* அமித்ஷா மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார்.</p><p>* அமித்ஷா திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk">தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு</a></p><p>* தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p>* மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>காங்கோவில் கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா: உலக சுகாதார அமைப்பு கவலை! ஓர் சிறப்புப் பார்வை</title><link>https://www.maalaimalar.com/news/world/ebola-outbreak-in-congo-spirals-who-raises-alarm-special-report</link><comments>https://www.maalaimalar.com/news/world/ebola-outbreak-in-congo-spirals-who-raises-alarm-special-report#comments</comments><guid isPermaLink="false">153a2532-2f76-460d-a963-016e41731a74</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:45:56 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:45:56.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கோ,Ebola,DR Congo,எபோலா,Bandapukyo virus,பண்டாபுக்யோ வைரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3ayvfo4z/ebola.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  DR Congo Ebola ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3ayvfo4z/ebola.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கோ மக்களாட்சிக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா நோய்த்தொற்று, வரலாற்றிலேயே மிகவும் அதிவேகமாகப் பரவும் தொற்றாக உருவெடுத்துள்ளது. மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்தத் தொற்று, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் 1,850-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் கடந்துள்ளது. முந்தைய எபோலா பரவல்களை விட இது மிக வேகமாகப் பரவுவதற்கான முக்கியக் காரணங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.</p><h2>வைரஸின் <strong>அபூர்வ வகை மற்</strong>றும் தடுப்பூசி இன்மை</h2><p>வழக்கமாக பரவும் 'ஜாயர்' வகை எபோலா வைரஸைக் காட்டிலும் இந்த பரவலுக்கு 'பண்டாபுக்யோ' எனும் அபூர்வ வகை வைரஸே காரணமாகும். ஜாயர் வகை வைரஸுக்கு தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், பண்டாபுக்யோ வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ, உறுதியான சிகிச்சைகளோ இல்லை.</p><h2>மாதக்கண<strong>க்கில் பரவிய</strong> தொற்று</h2><p>இந்த நோய் மே மாதத்தில் முறைப்படி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஜனவரி மாதத்திலிருந்தே மகாங்வாலு பகுதியில் பரவத் தொடங்கியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்பகட்ட பாதிப்புகள் 'பெரிட்டோனிடிஸ்' எனக் தவறாகக் கணிக்கப்பட்டதாலும், தவறான வைரஸ் சோதனை கருவிகளைப் பயன்படுத்தியதாலும் நோய் பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியாமல் போனது.</p><h2>கண்கா<strong>ணிப்பு அமைப்பு</strong>களின் முடக்கம்</h2><p>புதிய நோயாளிகளில் சுமார் 80% பேர் ஏற்கனவே கண்டறியப்பட்ட தொடர்புகளுக்கு வெளியே இருந்து வருவதால், வைரஸ் சமூகத்தில் தீவிரமாகப் பரவியுள்ளது. நோயாளிகளின் தொடர்பைக் கண்டறியும் சுகாதாரக் குழுவினர் போதிய வசதிகள் இல்லாமல் திணறி வருகின்றனர்.</p><h2>நி<strong>தி பற்றாக்கு</strong>றை</h2><p>* உலக சுகாதார அமைப்பிற்கு (WHO) தேவையான நிதியில் பாதிகூட இன்னும் கிடைக்கவில்லை.</p><p>* அமெரிக்க உதவி நிறுவனமான USAID உட்பட சர்வதேச அமைப்புகளின் நிதி வெட்டுக்களால், கண்காணிப்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் ஊதியம் பாதிக்கப்பட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p><h2>உள்<strong>நாட்டுப்</strong> போர்</h2><p>* காங்கோவின் கிழக்குப் பகுதியில் பல ஆண்டுகளாகத் தொடரும் ஆயுதமேந்திய ராணுவ மோதல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக, மருத்துவக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.</p><p>* மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களும், மக்கள் மத்தியில் மருத்துவ அமைப்புகள் மீது உள்ள நம்பிக்கையின்மையும் தடுப்பு நடவடிக்கைகளைப் பாதிக்கின்றன.</p><h2>மக்க<strong>ளின் இடப்பெயர்வு</strong> </h2><p>* இட்டூரி மாகாணம் வர்த்தக பாதையில் அமைந்திருப்பதாலும், அகதிகள் முகாம்களில் மக்கள் அடர்த்தியாக வாழ்வதாலும் வைரஸ் எளிதில் பரவுகிறது.</p><p>* பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத உள்ளூர் இறுதிச்சடங்கு முறைகளும் நோய் பரவலை மேலும் அதிகரித்துள்ளன.</p><p>காங்கோவில் ஏற்பட்டுள்ள இந்த தீவிர சூழ்நிலை, உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய பொது சுகாதார எச்சரிக்கையாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நடிகையை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/charlie-chauhan-marries-cricketer-ramandeep-singh</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/charlie-chauhan-marries-cricketer-ramandeep-singh#comments</comments><guid isPermaLink="false">e0b6bda0-e253-4813-ba2f-cfaab7f5aba1</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:25:33 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:25:33.257Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ramandeep singh,charlie chauhan,ரமண் தீப் சிங்,சார்லி சவுகான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/7tjxpq6n/ramandeep.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ramandeep singh, Charlie Chauhan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/7tjxpq6n/ramandeep.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அணி வீரரான ரமண் தீப் சிங் தனது நீண்டநாள் காதலியான சார்லி சவுகானை திருமணம் செய்தார்.</p><p>இந்திய கிரிக்கெட் அணி வீரரும், ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான ரமண் தீப் சிங், பஞ்சாப் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.</p><h2>இந்திய அணி ஆல்-ரவுண்டர்</h2><p>இந்திய அணிக்காக 2 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரமண் தீப் சிங், அதிரடி பேட்டிங், அபாரமான பீல்டிங்கிற்குப் பெயர் பெற்ற வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்.</p><p>2024 ஐபிஎல் தொடரில் கே.கே.ஆர். அணி கோப்பையை வென்ற போட்டியில் ரமண் தீப் சிங் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்நிலையில், ரமண் தீப் சிங்குக்கும், இவரது நீண்டகால காதலியும், நடிகையுமான சார்லி சவுகானுக்கும் பஞ்சாபில் உள்ள குருத்வாராவில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்.</p><p>இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் வீரர் நமன் தீர், மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அஷ்வினி குமார் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் வீரர் ஜசிந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>சார்லி சவுகானும், ரமண் தீப்பும் கடந்த 8 ஆண்டாகக் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.</p><h2>புதிய இன்னிங்ஸ்</h2><p>புதிய இன்னிங்சை தொடங்கியுள்ள இவர்கள் இருவருக்கும் சுப்மன் கில் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காவல்நிலையம், சிறையில் குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-custodial-death-in-palani-land-scam-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-custodial-death-in-palani-land-scam-case#comments</comments><guid isPermaLink="false">6f9cf4fb-3eb4-4a34-8833-c8e33d6bf1ce</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:22:32 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:22:32.376Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,pazhani,பழனி நில மோசடி,வழக்கறிஞர் அன்வர்தீன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vr4sj5x0/NainarNagendran0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்வர்தீன்- நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vr4sj5x0/NainarNagendran0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பழனி நிலமோசடி வழக்கில் தொடரும் மர்மங்கள்!</p><p>பழனியில் ₹100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் என்பவர் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென உயிரிழந்துவிட்டதாகவும், சார்பதிவாளர் மணிகண்டன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுகின்றன.</p><p>முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில், தவெக அரசின் மிகப்பெரும் ஊழலை அம்பலப்படுத்திய இவ்வழக்கின் குற்றவாளிக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி வரும்? அதிலும் இவ்வழக்கின் முக்கிய சாட்சியங்களாக கருதப்படும் இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி உடல்நலக்குறைவு ஏற்படும்?</p><p>த.வெ.க. தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் இருக்கும் குற்றவாளிகள் எல்லாம் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த மரணத்தை இயற்கையான நிகழ்வு என்று கடந்து போக முடியவில்லை.</p><p>எனவே, அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக்காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும். இம்மரணத்தின் உண்மையான பின்னணி குறித்த முறையான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார்பதிவாளர் மணிகண்டனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி, அவரை அரசு பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மோசடி வழக்கு கடந்து வந்த பாதை</h2><p>பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்</h2><p>அதேநேரம் இந்த வழக்கில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.</p><p>இதனால் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுச்சென்றார்.</p><p>திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதனிடையே ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>அன்வர்தீன் உயிரிழப்பு</h2><p>இந்நிலையில், பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்துள்ளார். சர்க்கரை நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அமித் ஷா வருகை: மதுக்கடைகளை மூட உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-visit-order-to-close-liquor-shops-in-puducherry</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-visit-order-to-close-liquor-shops-in-puducherry#comments</comments><guid isPermaLink="false">5d985bc9-4db6-47ef-8b1d-5f257ba68f32</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:01:04 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:01:04.419Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Puducherry,புதுச்சேரி,Amit Shah,அமித் ஷா,Wine shop</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/4z9qb6ok/Amitshah0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா- மதுபானக்கடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/4z9qb6ok/Amitshah0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் புதுவையில் இன்று (சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி மராட்டிய மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு இன்று மாலை 4.20 மணியளவில் செல்கிறார்.</p><h2>சாமி தரிசனம்</h2><p>ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும் அமித்ஷா காரில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அவர் பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதைத்தொடர்ந்து அமித் ஷா மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுவை வருகிறார்.</p><p>இன்று இரவு 8 மணிக்கு புதுவை கவர்னர் மாளிகைக்கு வரும் அவரை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர் மக்கள் மாளிகையில் அவர் தங்குகிறார். நாளை காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கோரிமேடு போலீஸ் மைதானத்துக்கு 8.10 மணிக்கு வருகிறார். அங்கு போலீஸ்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருது வழங்கி உரையாற்றுகிறார்.</p><h2>சந்திப்பு</h2><p>பின்னர் காலை 10.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 10.25 மணிக்கு ஓட்டல் அக்கார்டு வருகிறார். அங்கு காலை உணவை முடித்து விட்டு, கவர்னர், முதல்-அமைச்சர், பா.ஜனதா மாநில தலை வருடன் உரையாடுகிறார். பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை கட்சியின் முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களை சந்திக்கிறார்.</p><h2>தேசிய கொடி பேரணி</h2><p>பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முருகா திரையரங்கு சந்திப்பில் 1.40 மணிக்கு ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற பேரணியை தொடங்கி வைக்கிறார். மதியம் 2 மணிக்கு அங்கிருந்து கிளம்பி புதுவை விமான நிலையம் சென்று சென்னை புறப்பட்டு செல்கிறார். அவரை கவர்னர், முதல்-அமைச்சர் வழியனுப்பி வைக்கின்றனர்.</p><h2>தீவிர பாதுகாப்பு</h2><p>மத்திய மந்திரி அமித் ஷா வருகையையொட்டி புதுவை நகர பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 8 கம்பெனி ரிசர்வ் பட்டாலியன் படையினர் புதுவைக்கு வந்துள்ளனர். அவர்கள் புதுவை போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>மத்திய மந்திரி தங்கும் கவர்னர் மாளிகை, கடற்கரை சாலை, கோரிமேடு மைதானம், மத்திய மந்திரி செல்லும் வழிகள், ஓட்டல் அக்கார்டு, விமான நிலையம் பகுதி களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><p>போலீசார், ரிசர்வ் பட்டாலியன் படையினர், ஐ.ஆர்.பி.என். உட்பட ஆயிரத்து 500-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில் மத்திய மந்திரி வருகையையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிஜேபி-யின் அடுத்த சீர்திருத்தம் மாநிலங்களில் நடைபெறும் தேர்வு முறைகேடுகள்: அபிஜீத் தீப்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-next-reform-exam-scams-in-states-abhijeet-dipke</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-next-reform-exam-scams-in-states-abhijeet-dipke#comments</comments><guid isPermaLink="false">0960d40d-47a6-4301-84d3-68ec1429f669</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:50:08 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:50:08.256Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>upsc,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,சிஜேபி,CJP,யுபிஎஸ்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/sogurrxs/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாநில அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடு: சிஜேபி கவனம் பொது சேவை ஆணைய ஊழல், இளைஞர் எதிர்ப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ Abhijeet dipke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/sogurrxs/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்த பிறகு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, பல்வேறு மாநிலங்களில் பொது சேவை ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் அரசுத் தேர்வு முறைகேடுகள் குறித்து தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது, நீட் முறைகேடுக்கு எதிராக மட்டுமல்ல பலவேறு மாநிலங்களில் நடைபெற்ற பொதுப்பணி ஆணையத் தேர்வுகளில் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்தான் என்று அபிஜீத் கூறினார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே பேட்டி</strong></h3><p>மகாராஷ்டிராவில் சிஜேபி நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான அபிஜீத் திப்கே கூறுகையில், “நாங்கள் பீகாருக்குச் செல்வதற்குக் காரணம் என்னவென்றால், ஜந்தர் மந்தரில் கூடியிருந்த கூட்டத்தில் பெரும்பாலானோர் பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதால்தான்.</p><p>இந்த மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் தங்களின் சமூக முன்னேற்றத்திற்காக பொது சேவைகள் என்ற மாநில அரசு தேர்வுகளை சார்ந்துள்ளனர்.</p><h3><strong>அரசு பணியாளர் தேர்வு சீர்திருத்தம்</strong></h3><p>இந்த மாணவர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர். நாங்கள் ஏன் நீட் தேர்வைப் பற்றி மட்டும் பேசுகிறோம், அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளைப் பற்றி பேசவில்லை என்று அவர்கள் எங்களிடம் கேட்டார்கள்.</p><p>இது இந்தியா முழுவதும் ஒரு பெரும் கவலையாக உள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் மற்றும் அரசுப் பணியிட நியமனங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்த புகார்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ளது.</p><p>தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கில், சி.ஜே.பி. அமைப்பு ‘க்யா போல்டி பப்ளிக்’ என்ற அகில இந்திய மக்கள் தொடர்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட குடிமக்களின் குறைகளைக் கேட்பதற்காக அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்வார்கள்.</p><p>மக்களின் கருத்துக்களைக் கேட்கும் கலாச்சாரத்திற்குப் புத்துயிர் அளிப்பதே இதன் நோக்கமாக இருக்கும்.</p><p>பொதுப்பணித் தேர்வுகள் தொடர்பான கவலைகளைக் களைவதற்காக, பீகார் மாணவர்கள் தலைமை நீதிபதியைத் தங்கள் மாநிலத்திற்கு அழைத்திருந்தனர்.</p><p>மேலும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) ஆட்சேர்ப்பு விதிமுறைகள் சுமார் 2012-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டதால், அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில மொழிப் பின்னணியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் சேர்க்கப்படுகின்றனர்.</p><p>இது மானுடவியல் மற்றும் வட்டார மொழிக் கல்வி பயின்றவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி மையங்களில் UPSC தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், நகரங்களில் உள்ள மோசமான அறைகளில் தங்க வேண்டியிருப்பதாலும், வீட்டு உரிமையாளர்களிடமிருந்து துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாலும், தங்குமிடச் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.</p><p>சமூகம் மேம்படுவதால், கிக் வேலை என்ற கருத்து மேற்கத்திய நாடுகளுக்கு நல்லது. இந்தியாவில், கிக் வேலை என்பது தொழிலாளர் சுரண்டலைத் தவிர வேறொன்றுமில்லை. அவர்களுக்கு ஒரு பெரிய கொள்கை சீர்திருத்தமும், ஒரு பாதுகாப்பு வலையும் தேவை.</p><p>ஒரு சிறிய ஊக்கத்தொகைக்காக அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். நாங்கள் அரசியல் உரையாடலை மாற்ற விரும்புகிறோம். சமூகத்தில் பரிவும் இரக்கமும் குறைந்து வருகின்றன. நாம் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் மனநோயாளிகளாக மாறத் தொடங்கிவிட்டோம்.</p><p>ஒரு காலத்தில் நமது சமூகம் லட்சியம் நிறைந்ததாக இருந்தது. ஊழலுக்கு எதிரான இந்தியா போன்ற இயக்கங்கள் ஒரு சிறந்த தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.</p><p>அந்த இந்தியா முன்னேற விரும்பியது, ஆனால் இன்றைய இந்தியா, தான் தப்பி பிழைப்பதிலேயே திருப்தி அடைகிறது. இப்போது, குடிமக்களுக்கு அவ்வளவாக லட்சியம் இல்லை. இந்த மனநிலை இந்தியாவைப் பல ஆண்டுகளுக்கு பின்தங்க செய்கிறது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-and-tomorrow-rain-chance-to-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-and-tomorrow-rain-chance-to-chennai#comments</comments><guid isPermaLink="false">57bc842d-8eca-4461-b081-dac377f22058</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:43:27 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:43:27.822Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,Chennai Rain,சென்னை மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/8fknetyg/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/8fknetyg/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">சென்னை வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p>10-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p>11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று மற்றும் நாளை குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>ஸ்விகி, சொமேட்டோ, செப்டோ டெலிவரி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு - மின்சார வாகனம் கட்டாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-new-rules-for-swiggy-zomato-zepto-electric-vehicles-compulsory</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-new-rules-for-swiggy-zomato-zepto-electric-vehicles-compulsory#comments</comments><guid isPermaLink="false">bdbbc1a2-4f25-48a9-91d8-70be0aa6be07</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:43:09 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:43:09.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Swiggy,Zomato,Zepto,ElectricVehicles,மின்சாரவாகனம்,DriverWelfareFund,2PercentContribution</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/05dv2932/Electric-Vehicles" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Electric Vehicles ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/05dv2932/Electric-Vehicles?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆன்லைன் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமாட்டோ மற்றும் செப்டோ போன்ற தளங்களை ஒழுங்குமுறைப்படுத்த மகாராஷ்டிரா அரசு புதிய விதிகளைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. </p><p>மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் தலைமையிலான குழு, இதற்கான 'பைக் டாக்ஸி விதிகள் 2025' திருத்த வரைவைச் சட்டத்துறையின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.</p><p>இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, டெலிவரி நிறுவனங்கள் தங்களது வாகனக் கூட்டமைப்பை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆர்டர் கட்டணத்திலிருந்தும் 2% தொகையை ஓட்டுநர்களின் நல நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்படவுள்ளன.</p><h2>டெலிவரி சேவை வழங்குநர்:</h2><p>இதுவரை ஓலா, உபெர், ராபிடோ போன்ற பயணியர் பைக் டாக்ஸி சேவைகளுக்கு மட்டுமே மகாராஷ்டிராவில் தனி விதிமுறைகள் இருந்தன. </p><p>இனிமேல் பார்சல்கள், உணவுப் பொருட்கள் அல்லது இதர பேக்கேஜ்களை விநியோகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் 'டெலிவரி சேவை வழங்குநர்' என்ற புதிய வரம்பிற்குள் கொண்டு வரப்படும். </p><p>இதன் மூலம் ஸ்விக்கி, பிளின்கிட், செப்டோ போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களை மாநில அரசின் போக்குவரத்துத் துறை நேரடியாகக் கண்காணிக்க வழிவகை ஏற்படும்.</p><h2>புதிய முக்கிய நிபந்தனைகள் என்னென்ன?</h2><p>இந்த வரைவுச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின், டெலிவரி நிறுவனங்கள் சில விதிகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். </p><p>டெலிவரிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பைக்குகளும் மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும். அனைத்து டெலிவரி வாகனங்களிலும் ஜிபிஎஸ் டிராக்கர்கள் பொருத்தப்பட வேண்டும்.</p><p>வாகனங்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் முறையான காப்பீடு இருக்க வேண்டும். பிராந்திய போக்குவரத்து ஆணையம் நிர்ணயிக்கும் கட்டண உச்சவரம்பைப் பின்பற்றியே டெலிவரி கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும். </p><p>ஒவ்வொரு நிறுவனமும் மாநில அரசிடம் பிரத்யேக உரிம அடையாளச் சான்றைப் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.</p><h2>2% ஓட்டுநர் நல நிதி:</h2><p>இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக, ஒவ்வொரு டெலிவரி கட்டணத்திலிருந்தும் 2% பங்களிப்புத் தொகை ஓட்டுநர்களின் நல வாரியத்திற்குச் செல்லும். </p><p>இந்த நிதியானது ஓட்டுநர்களின் ஓய்வூதியம், விபத்துக் காப்பீடு, மின்சார வாகனக் கடன்கள், குழந்தைகளின் கல்வி உதவித்தொகை போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.</p><h2>உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை:</h2><p>அமைச்சர் பிரதாப் சர்நாயக் முன்னதாக சட்டப்பேரவையில் தெரிவித்தபடி, பைக் டாக்ஸி மற்றும் டெலிவரி ஓட்டுநர்கள் அனைவரும் இருப்பிடச் சான்றிதழ் மற்றும் பொது சேவை வாகன பேட்ஜ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும். </p><p>இந்த நடவடிக்கை மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று அரசு நம்புகிறது.</p><p>தற்போது இந்த நிறுவனங்கள் மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு குறியீட்டின் கீழ் மட்டுமே இயங்கி வருவதால், ஏதேனும் புகார்கள் எழும்போது மாநில அரசால் தலையிட முடியாமல் இருந்தது. </p><p>இந்தப் புதிய கொள்கை ஒப்புதல் பெற்றவுடன், 15 கிலோமீட்டர் வரையிலான அனைத்து பைக் டெலிவரி பயணங்களுக்கும் இந்த விதிகள் முழுமையாகப் பொருந்தும்.</p>]]></content:encoded></item><item><title>பிரான்ஸ் தலைமையிலான 6-ஆம் தலைமுறை போர் விமானத் திட்டத்தில் இணைய இந்தியா தீவிர முயற்சி!</title><link>https://www.maalaimalar.com/news/world/india-seeks-role-in-france-led-future-combat-air-system-fcas</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-seeks-role-in-france-led-future-combat-air-system-fcas#comments</comments><guid isPermaLink="false">007c70fe-fa9f-4ebb-ada7-8afcf52d14e1</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:37:33 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:37:33.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,பிரான்ஸ்,Modi,France,President Emmanuel Macron,இம்மானுவேல் மாக்ரான்,மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/63mc10el/france.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Emmanuel Macron - Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/63mc10el/france.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியப் பாதுகாப்புத் துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பிரான்ஸ் அரசு முன்னெடுக்கும் 6-ஆம் தலைமுறை போர் விமானக் கூட்டு உருவாக்கத் திட்டமான 'Future Combat Air System' (FCAS) திட்டத்தில் இணைவதற்கு இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.</p><h2><strong>மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்</strong></h2><p>நாடாளுமன்றப் பாதுகாப்புச் நிலைக்குழுவிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில், பிரான்ஸ் தலைமையிலான 6-ஆம் தலைமுறை போர் விமானத் திட்டத்தில் இணைவதற்கான செயல்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது <a href="https://www.maalaimalar.com/news/world/direct-rail-route-to-india-via-pakistan-russias-new-land-trade-proposal">இந்தியா</a>வில் 4.5 தலைமுறை போர் விமானங்கள் (ரஃபேல், தேஜாஸ் போன்றவை) பயன்பாட்டில் உள்ளன. </p><p>உள்நாட்டிலேயே 5-ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் 'AMCA' திட்டம் தயாரிப்பு நிலையில் உள்ள நிலையில், சர்வதேச நாடுகளுடன் இணைந்து 6-ஆம் தலைமுறை தொழில்நுட்பத்தில் தடம் பதிப்பது நாட்டின் வான்வழிப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்.</p><p>6-ஆம் தலைமுறை போர் விமானங்கள் வெறும் மனிதரால் இயக்கும் விமானமாக மட்டும் இல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI), ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் கிளவுட் தகவல்தொடர்பு பிணையம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படும்.</p><h2>காலக்கெடு <strong>மற்றும் வரை</strong>படம்</h2><p>நவீன போர்மறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்திய விமானப்படை இத்தகைய தொழில்நுட்பங்களில் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக, புதிய 6-ஆம் தலைமுறை போர் விமானங்களை கையகப்படுத்துவதற்கான தெளிவான வரைபடம் மற்றும் காலக்கெடுவை வரையறுக்குமாறு நாடாளுமன்றக் குழு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>சர்வதேச அளவிலான உயர் தொழில்நுட்ப கூட்டுத் திட்டங்களில் பங்கெடுப்பது, 'ஆத்மநிர்பார் பாரத்' கொள்கையின் கீழ் உள்நாட்டு பாதுகாப்பு தயாரிப்புத் திறனையும், தொழில்நுட்பப் பகிர்வையும் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சீனா வெளியிட்ட புதிய வரைபடம் – இந்தியா ஏன் எதிர்ப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/national/why-india-opposes-chinas-new-map</link><comments>https://www.maalaimalar.com/news/national/why-india-opposes-chinas-new-map#comments</comments><guid isPermaLink="false">67b4fe1e-d689-4126-959e-cea235044d7a</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:32:10 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:32:10.087Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>arunachala pradesh,IndiaChinaBorder,இந்தியாசீனா,MapWar,வரைபடப்போர்,SurveyOfIndia,அருணாச்சலபிரதேசம்,இந்தியராணுவம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/l8g75ox6/India-China" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India - China]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/l8g75ox6/India-China?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அருணாச்சலப் பிரதேசத்தின் மீது உரிமை கோரும் வகையில் சீனா தொடர்ந்து இந்தியப் பகுதிகளுக்குச் சொந்தமாகப் பெயரிட்டு வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்களுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டுப் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.</p><p>'இந்திய நில அளவைத் துறை' வெளியிட்டுள்ள இந்த வரைபடத்தில், எல்லையோரப் பகுதிகளின் புவியியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை மக்கள் துல்லியமாக அறியும் வகையில் இந்தப் பெயர்கள் முறையாகப் பதியப்பட்டுள்ளன.</p><p>"அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, சீனாவின் இத்தகைய வீண் முயற்சிகள் கள யதார்த்தத்தை மாற்றிவிட முடியாது" என்று இந்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><h2>எல்லையோரப் போர் நினைவிடங்கள் மற்றும் முக்கிய இடங்கள்:</h2><p>சீனாவுடன் நேரடியாக மோதல் ஏற்பட்ட மற்றும் ராணுவ ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 27 இடங்கள் இந்த வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p>லாங்ஜூ 1962 போருக்கு முன்பாகவே, அதாவது 1959-லேயே இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே முதன்முதலில் மோதல் வெடித்த மிக முக்கியமான எல்லைப் பகுதி மேஜா கிராமம். மேல் சுபன்சிரி மாவட்டத்தில், லாங்ஜூ பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள எல்லையோரக் கிராமம்.</p><p>தக் லா கணவாய் 1962 இந்திய-சீனப் போரின் தொடக்கக் கட்டத்தில் மிகக் கடுமையான போர்கள் நடைபெற்ற உயரமான மலைப் பகுதி. ஜெய்ராம்பூர் சாங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம், இந்தியப் படைகள் கிழக்கு அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மர் எல்லைக்கு விரைந்து செல்ல உதவும் முக்கிய ராணுவத் தளவாட மையமாகும்.</p><p>ராணுவ வீரர்களின் நினைவிடங்கள் 1962 போரின் நாயகர்களான ஜஸ்வந்த் சிங் ராவத்தை கௌரவிக்கும் 'ஜஸ்வந்த் கர்' மற்றும் த்ரிலோக் சிங் தாப்பாவை கௌரவிக்கும் 'ஷேர்-இ-தாப்பா நினைவிடம்' ஆகியவையும் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.</p><p>வரைபடத்தில் சேர்க்கப்பட்ட மற்ற இடங்களில் உயரமான ஏரியான சம்போ சரோவர், பாரா குண்டுன், சோட்டா குண்டுன், தன் பாரி, பிரித்நகர், டெரிட்நகர், ராம்நகர், சாகர், பத்மா, ஜோதிநகர், பைசாகி, சோட்டா ரோபுக், பரா ரோபுக், சன்புரா, ஷிவாஜி நகர், சன்புரா ஆகியவை அடங்கும்.</p><h2>சீனாவின் 'வரைபட அரசியல்' பின்னணி!</h2><p>அருணாச்சலப் பிரதேசத்தை 'ஸாங்னான்' என்று அழைத்து வரும் சீனா, கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள பகுதிகளுக்குத் தன்னிச்சையாகச் சீனப் பெயர்களைச் சூட்டி வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.</p><p>தரப்படுத்தப்பட்ட ஆறு பெயர்களைக் கொண்ட பட்டியலை 2017-ல் முதன்முதலில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, 2021-ல் 15 இடங்களை உள்ளடக்கிய இரண்டாவது பட்டியலையும். 2023-ல் 11 இடங்களைக் கொண்ட மற்றொரு பட்டியலையும் வெளியிட்டது.</p><h2>இந்தியாவின் எச்சரிக்கை:</h2><p>சீனாவின் இத்தகைய கற்பனையான பெயரிடும் முறைகள் இரு நாடுகளுக்கு இடையேயான சுமுக உறவை மேலும் பாதிக்கும் என்றும், இந்தியாவின் இறையாண்மையை யாராலும் அசைக்க முடியாது என்றும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.</p><p>சீனா, அருணாச்சலப் பிரதேசத்தைக் குறிப்பிட 'ஸாங்னான்' என்ற பெயரைப் பயன்படுத்துகிறது. இந்தக் கூற்றை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான் வழியே இந்தியாவுக்கு நேரடி ரெயில் பாதை: ரஷிய அரசின் புதிய தரைவழி வர்த்தக முன்மொழிவு!</title><link>https://www.maalaimalar.com/news/world/direct-rail-route-to-india-via-pakistan-russias-new-land-trade-proposal</link><comments>https://www.maalaimalar.com/news/world/direct-rail-route-to-india-via-pakistan-russias-new-land-trade-proposal#comments</comments><guid isPermaLink="false">6ea19d05-3b6b-4a23-a9dc-d44a07134577</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:17:44 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:17:44.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Russia,Pakistan,Modi,Vladimir Putin,விளாடிமிர் புடின்,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/owvom7jt/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vladimir Putin-modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/owvom7jt/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடல்வழி வர்த்தகப் பாதைகளில் அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பில் ஏற்படும் தடைகளுக்கு மாற்றாக, பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியே இந்தியப் பெருங்கடலையும் இந்தியாவையும் இணைக்கும் புதிய ரெயில் பாதையை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை ரஷியா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.</p><h2><strong>துணை பிரதமர் அறிவிப்பு</strong></h2><p>ரஷிய துணை பிரதமர் மராத் குஸ்னுலின் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கடல்வழி போக்குவரத்து ஸ்தம்பிக்கும் சூழலை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலை அடையும் புதிய தரைவழி பாதைகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><h2>திட்ட<strong>மிடப்பட்டுள்</strong>ள பாதைகள்</h2><p>பாஸ்பரஸ் ஜலசந்தி மற்றும் உலகின் மிக முக்கியமான எரிபொருள் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றங்கள், கடல்சார் போக்குவரத்து அச்சுறுத்தல்கள் காரணமாக தரைவழி மாற்றுப் பாதைகளின் தேவையை விரைவுபடுத்தியுள்ளன. துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வழியாக இந்த ரெயில் இணைப்பைச் சாத்தியமாக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்கு நேரடி அணுகலை வழங்கும் எந்தவொரு பாதையையும் ரஷிய அரசு ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வர்த்தக <strong>வரம்பு</strong> &amp; இலக்கு</h2><p>ரஷியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் பெருமளவில் அதிகரித்து வரும் நிலையில், 2030-ஆம் ஆண்டிற்குள் $100 பில்லியன் இலக்கை எட்ட இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. அதற்கு பாதுகாப்பான, தடையில்லாத சரக்கு போக்குவரத்து மிகவும் அத்தியாவசியமாகும்.</p><h2>அரசியல் <strong>சவால்கள்</strong></h2><p>இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சுமுகமற்ற உறவுகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல்கள் இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதில் முக்கிய முட்டுக்கட்டைகளாகக் கருதப்படுகின்றன. முன்னாள் சோவியத் நாடுகள் மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கு இடையே உள்ள தண்டவாள அகலப் பிரமாணங்களின் வேறுபாடு சரக்கு பரிமாற்றத்தின் போது கூடுதல் நேரத்தை எடுக்கக்கூடும். சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து மண்டலத்தை விரிவுபடுத்தி, கடல்சார் அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் நோக்கிலேயே இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சக வீராங்கனையுடன் தொடர்பு: ஆஸ்திரேலிய மகளிர் அணி துணை கேப்டன்மீது முன்னாள் மனைவி புகார்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-team-star-ashleigh-gardners-ex-wife-blasts-cricket-australia-over-cheating-scandal</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-team-star-ashleigh-gardners-ex-wife-blasts-cricket-australia-over-cheating-scandal#comments</comments><guid isPermaLink="false">f4122548-ee01-4aef-9b6d-8491b3ccf12b</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:16:36.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ashleigh gardner,monica wright,georgia voll,ஆஷ்லே கார்ட்னர்,மோனிகா ரைட்,ஜார்ஜியா வோல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/0gj4fon5/monica.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ashleigh Gardner, Monica Wright]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/0gj4fon5/monica.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணை கேப்டனான ஆஷ்லே கார்ட்னர், தனது சக வீராங்கனையுடன் தவறான தொடர்பு வைத்திருந்தார் என அவரது மனைவி மோனிகா ரைட் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருந்து வருபவர் ஆஷ்லே கார்ட்னர். இவரும், இவரது தோழியான மோனிகா ரைட்டும் காதலித்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2025, ஏப்ரல் மாதம் இருவரும் முறைப்படி தன்பாலின திருமணம் செய்து கொண்டனர்.</p><p>திருமணம் நடந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகத் தகவல்கள் வெளியானது.</p><p>இந்நிலையில், ஆஷ்லே கார்ட்னர் தன்னை ஏமாற்றிவிட்டு சக வீராங்கனையான ஜார்ஜியா வோல் உடன் தொடர்பு வைத்துள்ளார் என மோனிகா ரைட் குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2>சக வீராங்கனையுடன் தொடர்பு</h2><p>இதுகுறித்து மோனிகா ரைட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜார்ஜியா வோலின் புகைப்படத்தை பகிர்ந்து, என் மனைவி என்னை ஏமாற்றிவிட்டு இவருடன்தான் தொடர்பு வைத்திருந்தார் என பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:</p><p>ஒருவர் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் முன்மாதிரியாகத் திகழும் சிறப்பைப் பெற்றிருக்கும்போது, ​​உயர்ந்த தார்மீக நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது என நான் கருதுகிறேன்.</p><p>கிரிக்கெட் ஆஸ்திரேலியா இது குறித்து ஏன் பொதுவெளியில் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதுதான் எனக்குப் புரியவில்லை.</p><h2>கிரிக்கெட் ஆஸ்திரேலியா மவுனம் ஏன்?</h2><p>அவர்களின் இந்த மவுனம் ஆஷ்லே மற்றும் ஜார்ஜியா ஆகியோரின் செயல்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறதா? </p><p>குறிப்பாக அதிகார ஏற்றத்தாழ்வு நிலவும் சூழலில், ஒரு ஜூனியர் ஊழியருடன் முறையற்ற உறவு வைத்துக்கொண்டு, அதே சமயம் தலைமைப் பொறுப்பிலும் தொடர்ந்து நீடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>அணி கேப்டன்கள் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இத்தகைய நடத்தை அந்த எதிர்பார்ப்பிலிருந்து வெகுவாகக் கீழே உள்ளது என காட்டமாகத் தெரிவித்தார்.</p><p>கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 2025 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின்போதே இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.</p><p>ஆஷ்லே கார்ட்னர் மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோட்டில் ஆடு மேய்த்த பெண்... இன்று மாவட்ட கலெக்டர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-goat-herder-to-district-collector-vanmathis-inspiring-journey</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-goat-herder-to-district-collector-vanmathis-inspiring-journey#comments</comments><guid isPermaLink="false">01c82450-180a-4021-a2e3-4ef5298bdd0f</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:12:05 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:12:05.048Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>women empowerment,VanmathiIAS,வான்மதிஐஏஎஸ்,Wardha Collector,UPSC SuccessStory,ஈரோடு சாதனைப்பெண்,Inspirational Story</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2rj5220y/Vanmathi-IAS" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanmathi IAS ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2rj5220y/Vanmathi-IAS?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வறுமை மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறு வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டே படித்து, இன்று தனது கடுமையான உழைப்பால் மகாராஷ்டிர மாநிலத்தின் மாவட்ட ஆட்சியராக உயர்ந்து சாதனை படைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி வான்மதி ஐ.ஏ.எஸ். </p><p>வறுமையைக் காரணம் காட்டிப் படிப்பைப் பாதியில் கைவிடும் பலருக்கு, இவரது இந்தச் சாதனைப் பயணம் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.</p><h2>ஆடு மேய்த்துக் கொண்டே தொடர்ந்த பள்ளிப் படிப்பு!</h2><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வான்மதியின் தந்தை ஒரு சாதாரண ஓட்டுநர். அவர்களது குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக, வான்மதிக்குச் சிறு வயதிலேயே கூடுதல் பொறுப்புகள் சேர்ந்தன. </p><p>தினமும் காலையில் பள்ளிக்குச் சென்று நன்றாகப் படிக்கும் வான்மதி, மாலை பள்ளி முடிந்ததும் மற்ற குழந்தைகளைப் போல விளையாடச் செல்ல மாட்டார். மாறாக, தனது குடும்பத்தின் ஆடு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிடுவார். </p><p>அந்தப் பகுதியிலேயே ஆடுகளை மேய்த்துக் கொண்டே, கையில் புத்தகத்தை வைத்துத் தனது பள்ளிப் படிப்பைத் தீவிரமாகப் படித்து முடித்தார்.</p><h2>திருமணப் பேச்சுகளுக்கு நடுவே முதுகலை பட்டம்!</h2><p>பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வான்மதியின் குடும்பத்தினர் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். </p><p>ஆனால், தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற வான்மதியின் ஆசையை உணர்ந்த அவரது பெற்றோர், அவருக்கு உறுதுணையாக நின்றனர். </p><p>இவ்வளவு வறுமைக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியால் கணினி பயன்பாட்டியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று அசத்தினார்.</p><h2>தோல்விகளைத் தாண்டிய UPSC சாதனை!</h2><p>முதுகலை பட்டம் பெற்ற பிறகும் வான்மதியின் கனவு ஓயவில்லை. உயரிய பதவியான மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற இலக்கோடு யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார்.</p><p>பல மணிநேர உழைப்பு, ஆரம்பக்கட்ட தோல்விகள் எதற்கும் அவர் தொய்வடையவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில், வான்மதி அகில இந்திய அளவில் 152-ஆவது இடத்தைப் பிடித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தேர்வானார்.</p><h2>மகாராஷ்டிராவில் மாவட்ட கலெக்டர்!</h2><p>தேர்ச்சி பெற்ற பின் மகாராஷ்டிர மாநிலப் பிரிவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அவர், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தின் வர்தா மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுச் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றி வருகிறார்.</p><p>சாதாரண கிராமத்தில் ஆடு மேய்த்த சிறுமி, இன்று நாட்டின் மிக உயரிய பதவியில் அமர்ந்திருக்கும் வான்மதியின் இந்த வெற்றிக் கதை, தடைகளை உடைத்துச் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகச்சிறந்த வழிகாட்டியாகும்.</p>]]></content:encoded></item><item><title>அதிக அளவில் சீனி சேர்ப்பு: உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ரூ.38 கோடி அபராதம்..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/excess-sugar-mixing-udangudi-karupatti-traders-fined-rs-38-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/excess-sugar-mixing-udangudi-karupatti-traders-fined-rs-38-crore#comments</comments><guid isPermaLink="false">173753bf-7da9-4f95-b98e-0c2ec9e3cad9</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:01:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:01:19.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udangudi Karupatti,உடன்குடி கருப்பட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/a4b32by2/Karupatti.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உடன்குடி கருப்பட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/a4b32by2/Karupatti.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"கற்பகத்தரு" என்று அழைக்கப்படும் பனையில் இருந்து கிடைக்கப்பெறும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கின்றனர். பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் உடன்குடி பகுதியில் பலரும் பனைத்தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு கருப்பட்டி தயாரித்து விற்கின்றனர்.</p><p>பனை தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்துள்ளது. எனினும் அவற்றை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.</p><h2>சீனி மூட்டைகள் விற்பனை அதிகம்</h2><p>ஆனால் பதநீரில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக சீனி கலந்து கருப்பட்டி, கற்கண்டு போன்றவை தயாரித்தால், அவற்றுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பனை பொருட்களை சில்லறையில் விற்பனை செய்தால் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் சீனி மூட்டைகளை வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்ததாக நெல்லை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் உடன்குடி பகுதியில் ஆய்வு செய்தனர்.</p><h2>ஜி.எஸ்.டி. மோசடி</h2><p>இதில், உடன்குடி பகுதியில் கடந்த சில வாரங்களில் ரூ.5 கோடிக்கு சீனி மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்ததும், பதநீரில் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி என்று கூறி ரூ.6 கோடி வரை விற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.</p><p>மேலும் சீனி கலந்து தயாரித்த கருப்பட்டிகளை அசல் கருப்பட்டி என்று கூறி கடைகளில் விற்றதால் 5 சதவீத ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள், பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரையிலும் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து விற்றுள்ளனர். இதன் மூலம் சீனி கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படாமல், 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளது.</p><h2>ரூ.38 கோடி அபராதம்</h2><p>இவ்வாறு கடந்த 6 ஆண்டுகளில் கருப்பட்டி வியாபாரிகள் சிலர் பல்வேறு முறைகேடுகள் செய்தது கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக உடன்குடி பகுதியைச் சேர்ந்த 5 கருப்பட்டி வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கேள்வி மட்டும் கேட்காதீர்கள், விடையைக் கண்டறியுங்கள்: ஐ.ஐ.டி. விழாவில் பிரதமர் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-message-to-gen-zs-at-iit-event-have-courage-to-seek-solutions</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-message-to-gen-zs-at-iit-event-have-courage-to-seek-solutions#comments</comments><guid isPermaLink="false">b9a2ce6a-c5c7-4228-9b48-4905ad44e3c2</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:44:14 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:44:14.428Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gen z,pm modi,IIT Delhi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/r1zqvvtd/PMModi0808.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/r1zqvvtd/PMModi0808.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி IIT-யின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>இன்றைய இளைஞர்கள் சவால்களைக் கண்டு பின்வாங்காமல், அவற்றுக்கான தீர்வுகளைத் தேடும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும் இளைஞர்களின் புதுமையான சிந்தனையும் தொழில்நுட்ப அறிவும் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானவை.</p><h2>இளைஞர்கள் கேள்விகளை எழுப்ப வேண்டும்</h2><p>சிக்கல்கள் வரும்போது, இது முடியாது என்று கூறுவதற்குப் பதிலாக, இதை எப்படிச் செய்ய முடியும்? என்ற கேள்வியை இளைஞர்கள் எழுப்ப வேண்டும். தோல்வி குறித்த பயத்தைத் தாண்டி புதிய முயற்சிகளை மேற்கொள்வதும், தேவையான இடங்களில் ஆபத்தை ஏற்றுக்கொள்வதும் வெற்றிக்கான முக்கியப் பாதைகள் என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>இன்றைய Gen-Z தலைமுறை செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, செமிகண்டக்டர், பசுமை எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும். குறிப்பாக, சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பம் மற்றும் புதுமை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் வளர்க்க வேண்டும்.</p><h2>Gen Z இளைஞர்கள் சவால்களைப் பார்த்து அஞ்சக்கூடாது</h2><p>கல்வி என்பது வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான கருவியாக மட்டும் இருக்கக் கூடாது. புதிய சிந்தனைகளை உருவாக்கி, நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனை வளர்க்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். இந்தியாவின் இளம் தலைமுறையிடம் நம்பிக்கை இருப்பதாகக் கூறிய பிரதமர், அவர்களின் துணிச்சல், நம்பிக்கை மற்றும் புதுமை ஆகியவை நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p>எனவே, சவால்களைப் பார்த்து அஞ்சாமல், அவற்றை வாய்ப்புகளாக மாற்றி, புதிய பாதைகளை உருவாக்குவதே Gen-Z இளைஞர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.</p><p>கேள்வி மட்டும் கேட்காதீர்கள், விடையைக் கண்டறியுங்கள். இந்தியாவின் ஸ்டார்ட்அப் (தொடக்கநிலை நிறுவனங்கள்) புரட்சியை வடிவமைத்து, அதற்கு வலுசேர்த்தவர்கள் உங்களைப் போன்ற, இதே தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.</p><h2>சிப்கள் முதல் கப்பல்கள் வரை</h2><p>ஒரு தனி நிறுவனமே இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடியுமென்றால், நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வரும் அந்த மாபெரும் சக்தியைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள்.</p><p>சிப்புகள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் உங்கள் கைகளால் இங்கேயே தயாரிக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை- முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/delimitation-issue-meeting-of-mps-from-all-parties-led-by-chief-minister-vijay-has-begun</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/delimitation-issue-meeting-of-mps-from-all-parties-led-by-chief-minister-vijay-has-begun#comments</comments><guid isPermaLink="false">02f9f9eb-dbe4-40ff-bd6b-75cf2a72d199</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:40:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:40:25.378Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தொகுதி மறுவரையறை,Delimitation,MPs Meeting,எம்பிக்கள் கூட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c82yj883/Vijay06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c82yj883/Vijay06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மதியம் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.</strong></em></p><p>நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியிலும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out">தொகுதி மறுவரையறையின்</a> போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன.</p><h2><strong>முதலமைச்சர் விஜய் தலைமையில்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்பது பற்றி நேற்று சட்டமன்றத்தில் த.வெ.க. அமைச்சர்களும் கேள்வி எழுப்பினார்கள். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/q94c6j9k/vijay.jpg" /></figure><h2><strong>புறக்கணிப்பு</strong></h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. </p><h2><strong>கூட்டம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மதியம் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது</p><h2><strong>பங்கேற்பு</strong></h2><p>த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து  கொண்டனர்.</p><h2><strong>ம.தி.மு.க.</strong></h2><p>ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் மூலம் த.வெ.க. ஆதரவு எம்.பி.க்கள் 20 பேர் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.</p><p>தமிழகத்தில் மொத்தம் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளையும் சேர்த்து 57 பேர் உள்ளனர்.  இவர்களில் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.</p><p>தி.மு.க.வில் 8 மேல் சபை எம்.பி.க்களும், 20 மக்களவை எம்.பி.க்களும் உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 4 மேல் சபை எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மிக நீண்ட கூந்தலுடன் கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்
</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-woman-guinness-record-for-longest-hair</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-woman-guinness-record-for-longest-hair#comments</comments><guid isPermaLink="false">5e6fa39f-8dd6-4b71-97ec-44073964f853</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:28:08 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:28:08.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கின்னஸ் சாதனை,Guinness record,Renu Dhariyal,Long Hair,ரேணு தரியல்,நீண்ட கூந்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/m6hbgou1/renu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Renu Dhariyal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/m6hbgou1/renu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உலகிலேயே மிக நீண்ட கூந்தலை கொண்டவர் என்கிற கின்னஸ் சாதனைக்கு உத்தரகாண்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படைத்துள்ளார்.</strong></em> </p> <h2>கின்னஸ் சாதனை</h2><p>சமீப காலமாக சிறுவர்கள் முதல் இளைஞர்கள், பெண்கள், முதியோர் என பலதரப்பினரும் பல்வேறு வகைகளில் தங்கள் திறமைகளை நிரூபித்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">கின்னஸ் சாதனை</a> படைத்து வருகின்றனர். </p><h2>ரேணு தரியல்</h2><p>அந்தவகையில் உலகிலேயே மிக நீண்ட கூந்தலை கொண்டவர் என்கிற கின்னஸ் சாதனைக்கு உத்தரகாண்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படைத்துள்ளார். அவரது பெயர் ரேணு தரியல். யூட்யூபரான இவர் சமீபத்தில் உலகிலேயே மிக நீண்ட கூந்தலை கொண்டவர் என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரரானார். இவருடைய கூந்தலின் நீளம் 271.50 செ.மீ (8 அடி 10 அங்குலம்) ஆகும். </p> <p>ரேணுவின் கூந்தல் ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக அளவிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் அலீயா நசிரோவாவை பின்னுக்குத் தள்ளி அவர் இந்த கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். </p><p>அலீயா நசிரோவாவின் கூந்தலின் நீளம் 257.33 செ.மீ (8 அடி 5.3 அங்குலம்) ஆகும். ரேணு 2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தனது முடியை வளர்த்து வருகிறார். இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. </p> <p>தனது சாதனை குறித்து ரேணு தரியல் கூறுகையில், நான் 2015 முதல் தொடர்ந்து என் முடியை வளர்த்து வருகிறேன். இந்திய கலாச்சாரத்தில், நீண்ட கூந்தல் என்பது பாரம்பரியத்தின் அடையாளமாகவும், மிகுந்த அழகாகவும் கருதப்படுகிறது. இதுவே எனது முடியை இவ்வளவு நீளமாக வளர்க்க எனக்கு ஊக்கமளித்தது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முன்னணி வீரர் திடீர் விலகல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/sai-sudharsan-has-been-ruled-out-of-the-test-series-against-sri-lanka</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/sai-sudharsan-has-been-ruled-out-of-the-test-series-against-sri-lanka#comments</comments><guid isPermaLink="false">673ba364-dc72-4d19-b6bd-dc28bb5f0579</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:27:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:27:43.701Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாய் சுதர்சன்,sai sudharsan,SLvIND,இலங்கை இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ye3xi3tn/sai-sudarsan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sai sudharsan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ye3xi3tn/sai-sudarsan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்தியாவின் சாய் சுதர்சன் காயத்தால் விலகியுள்ளார்.</p><p>இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>இரு அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலே நகரில் தொடங்குகிறது.</p><h2>ஆகிப் நபி அறிமுகம்</h2><p>இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரபல பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக விலகினார். அவருக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் வீரர் என்ற பெருமையை ஆகிப் நபி பெறுகிறார்.</p><h2>இந்திய அணியின் விவரம்</h2><p>சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சாரான்ஷ் ஜெயின், ஆகிப் நபி.</p><p>இதற்கிடையே, இந்தியா-இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்தது.</p><p>இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக சாய் சுதர்சன் விலகியுள்ளார் என தகவல் வெளியானது. இதனால் நம்பர் 3 இடத்துக்கான போட்டியில் யாரை களமிறக்குவது என இந்திய அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: போர்ச்சுக்கல் மதுபான கடையில் விற்கப்பட்ட மும்பை பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/job-scam-woman-sold-to-liquor-shop-in-portugal</link><comments>https://www.maalaimalar.com/news/national/job-scam-woman-sold-to-liquor-shop-in-portugal#comments</comments><guid isPermaLink="false">477944e2-1a29-4b59-8265-02c4368578e0</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:26:32 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:26:32.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,வேலை மோசடி,job scam,job consultancy,ஆள் சேர்ப்பு நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/sfjucql0/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வெளிநாட்டு வேலை மோசடி: மும்பை பெண் போர்ச்சுக்கல் மதுபான கடையில் விற்கப்பட்ட அதிர்ச்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ Job Scam Abroad]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/sfjucql0/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புனேவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், நாக்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி, போர்ச்சுகலில் உள்ள ஒரு பீர் கடை உரிமையாளரிடம் விற்றுள்ளது.</p><h3><strong>ஆள் சேர்ப்பு நிறுவனம்</strong></h3><p>மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம், இன்ஸ்டாகிராம் மூலம் ‘வி மைக்ரேட்’ என்ற ஆலோசனை நிறுவனம் வெளிநாட்டில் சேலை வாங்கி தருவதாக ஆள் சேர்ப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.</p><p>அப்போது அந்த நிறுவனத்தை 28 வயது பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைக்காக தொடர்பு கொண்டபோது, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அவருக்கு மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் போர்ச்சுக்கல் நாட்டில், காசாளர் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளனர்.</p><p>மேலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் அந்த பெண்ணிடம் அவர்கள் கூறியுள்ளனர்.</p><p>இதையடுத்து விசா மற்றும் இதர ஆவணங்கள் என்ற பெயரில், அந்த பெண்ணிடுமிருந்து மொத்தம் 11 லட்சம் ரூபாயை தவணை முறையில் பறித்துள்ளனர்.</p><h3><strong>மதுபான கடையில் வேலை</strong></h3><p>பின்னர் அந்த பெண் போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்றபோது, அங்குள்ள ஏஜென்டுகள் அந்த பெண்ணின் பாஸ்போர்ட்டை பறித்து கொண்டு, இரண்டு நாட்கள் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை ஒரு மதுபான கடை உரிமையாளரிடம் விற்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணை வேலை செய்ய கட்டாயப்படுத்தி கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் ரீதியான சித்திரவதைகளுக்கும் ஆளாக்கியுள்ளனர்.</p><p>ஒரு கட்டத்தில் அந்த பெண் மோசடிக்காரர்களிடம் தனது பாஸ்போர்ட்டை திருப்பி தருமாறு கேட்டுள்ளார், ஆனால் அவர்கள் அதற்கு மேலும் பணம் கேட்டுள்ளனர்.</p><p>இதையடுத்து அந்த பெண் லிஸ்பன் நாட்டிற்கு தப்பிச் சென்று, பின்னர் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகருக்கு தப்பி சென்றுள்ளார்.</p><p>அங்கிருந்து அவர் கத்தார் வழியாக இந்தியாவிற்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் புனே காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.</p><h3><strong>காவல்துறை விசாரணை</strong></h3><p>அப்போது வி மைக்ரேட் நிறுவனத்தின் மேனேஜர் உள்பட எட்டு பேர் மீது ஆட்கடத்தல், மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், புனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கோவிலில் கண் கண்ணாடி ரகசிய கேமராவில் படம் பிடித்த வாலிபர்கள்- போலீசார் தீவிர விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-men-filmed-using-a-secret-camera-hidden-in-eyeglasses-at-the-tiruvannamalai-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-men-filmed-using-a-secret-camera-hidden-in-eyeglasses-at-the-tiruvannamalai-temple#comments</comments><guid isPermaLink="false">d452c51b-d0f1-45e0-90ba-8fe83c01cdba</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:22:32 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:22:32.105Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,திருவண்ணாமலை கோவில்,Tiruvannamalai temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vwlrq7l8/Tiruvannamalai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கண் கண்ணாடி ரகசிய கேமராவில் படம் பிடித்த வாலிபர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கண் கண்ணாடி ரகசிய கேமராவில் படம் பிடித்த வாலிபர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vwlrq7l8/Tiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வாலிபர்கள் அணிந்திருந்த கண் கண்ணாடியில் ரகசிய கேமரா பொருத்தி இருந்தது தெரிந்தது. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது பாதுகாப்பு பணிகளை மீறி கோவிலில் படம் பிடித்தது தெரியவந்தது.</strong></em> </p><h2><strong>அமித்ஷா வருகை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/திருவண்ணாமலை-கோவில்">திருவண்ணாமலை</a> அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா இன்று மாலை வருகை தர உள்ளார். இதனால் திருவண்ணாமலை மாநகர் மற்றும் கோவில் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. </p><h2><strong>பாதுகாப்பு பணி</strong></h2><p>இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறை என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த பவுனிஷ், மகேஷ் என்ற வாலிபர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கோவிலில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தனர். மேலும் சாமி சன்னதி முன்பு சந்தேகப்படும் படியாக நின்றனர். கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபர்கள் மீது சந்தேகம் அடைந்தனர். </p><p>வாலிபர்கள் அருகே சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபர்களை சோதனை செய்தனர். </p><p>அவர்கள் அணிந்திருந்த கண் கண்ணாடியில் ரகசிய கேமரா பொருத்தி இருந்தது தெரிந்தது. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது பாதுகாப்பு பணிகளை மீறி கோவிலில் படம் பிடித்தது தெரியவந்தது.  பின்னர் அந்த கேமரா பொருத்திய கண் கண்ணாடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.</p><p>இந்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் தொடரும் கனமழை - 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/heavy-rain-continue-in-kerala-orange-alert-for-7-districts</link><comments>https://www.maalaimalar.com/news/national/heavy-rain-continue-in-kerala-orange-alert-for-7-districts#comments</comments><guid isPermaLink="false">e69b3604-3d90-4686-b596-6604ec2cf9cb</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:13:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:13:19.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,orange alert,ஆரஞ்சு எச்சரிக்கை,கேரளம்,Keralam,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/oyopoj5g/Rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/oyopoj5g/Rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கேரளத்தில் தொடரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>கேரளம் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">கனமழை</a> பெய்து வருகிறது. இந்த மழையினால் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக மாநிலத்தில் 28 பேர் உயிரிழந்து உள்ளனர். ஏராளமானோர் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 440 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 41 ஆயிரத்து 773 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>ஆரஞ்சு எச்சரிக்கை</h2><p>இந்த நிலையில் மழையின் தாக்கம் இன்றும் தொடர்கிறது. மழையின்போது பலத்த காற்றும் வீசியது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.</p> <h2>கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை</h2><p>தொடர் மழை மற்றும் நிலச்சரிவு, வெள்ள அபாயம் நிலவி வருவதால், திருச்சூர், பத்தனம்திட்டா, கோழிக்கோடு, கோட்டயம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாட்டில் உள்ள பாய்ஸ் டவுன்–பாலசுரம் சாலையில் இரவு நேர போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 3-ல் ஒரு பங்காக குறைப்பு: அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/education-allocation-reduced-to-one-third-in-25-years-anbumani-ramadoss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/education-allocation-reduced-to-one-third-in-25-years-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">478d859b-cee7-4151-9df2-11b381faa1c9</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:08:13 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:08:13.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/78u35kap/AnbumaniRamadosss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/78u35kap/AnbumaniRamadosss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறதா, உயர்த்தப்பட்டுள்ளதா? என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தக் கல்வித்துறைக்கும் ஒதுக்கப்படும் நிதியின் அளவு கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் பங்காக குறைக்கப்பட்டிருக்கிறது. அரசின் தேவையற்ற செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் நிலையில், கல்வித்துறைக்கான நிதி தொடர்ந்து குறைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.</p><p>இந்தியாவில் கல்வித்துறை சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட தவுலத் சிங் கோத்தாரி தலைமையில் 1964-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஆணையம், 1966-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியாவில் கல்விக்கான அரசின் செலவு அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6% என்ற அளவை எட்ட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போது இந்தியாவில் கல்விக்கான அரசின் செலவு சுமார் 3% என்ற அளவிலும், தமிழ்நாட்டில் அதை விட சற்றுக் கூடுதலாகவும் இருந்தது.</p><p>கோத்தாரி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், கல்விக்கான அரசின் செலவுகள் குறித்த இலக்கு இன்று வரை எட்டப்படவில்லை. மாறாக, கல்விக்கான அரசின் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றன. கல்வியில் சிறந்த மாநிலம் என போற்றப்படும் தமிழ்நாட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது.</p><p>புத்தாயிரமாண்டின் தொடக்கமான 2000-01-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு பார்த்தால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது. 2000-01 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய இரு அமைச்சகங்களும் ஒன்றாக இருந்தன. அப்போது கல்வித்துறைக்கு ரூ.4,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது அன்றைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.1,26,099 கோடியில் 3.92% ஆகும்.</p><h2>2010-11-ம் ஆண்டுகளில் எவ்வளவு ஒதுக்கீடு</h2><p>அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2010-11ஆம் ஆண்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் இரு பங்காக குறைக்கப்பட்டு விட்டது. 2010-ஆம் ஆண்டில் கல்வித்துறை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றுக்கு முறையே ரூ.10,148 கோடி, ரூ.1751 கோடி என மொத்தம் ரூ.11,899 கோடி ஒதுக்கப்பட்டது. இது அந்த ஆண்டின் மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.4,50,474 கோடியில் 2.64% ஆகும்.</p><h2>2020-21-ம் ஆண்டுகளில் எவ்வளவு ஒதுக்கீடு</h2><p>மேலும் 10 ஆண்டுகள் கழித்து 2020-21ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.34,181.73 கோடி, உயர்கல்விக்கு ரூ.5052.84 கோடி என மொத்தம் ரூ.39,233 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ரூ.17,88,074 கோடியாக தமிழகத்தின் பொருளாதாரம் அப்போது வளர்ச்சியடைந்திருந்த நிலையில், அதில் கல்விக்கு 2.19% மட்டுமே ஒதுக்கப்பட்டது.</p><p>புத்தாயிரமாண்டின் கால் நூற்றாண்டு முடிவடைந்து விட்ட நிலையில், 2026-27ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.44,527 கோடி, உயர்கல்விக்கு ரூ.8393 கோடி என மொத்தம் ரூ.52,920 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>நடப்பாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார உற்பத்தி ரூ.40,67,312 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பள்ளிக்கல்விக்கு 1.09%, உயர்கல்விக்கு 0.21% என மொத்தம் 1.30% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இந்த ஒதுக்கீடு மிக மிகக் குறைவு ஆகும்.</p><h2>3.92 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு 1.30 சதவீதமாக குறைப்பு</h2><p>2000-ஆம் ஆண்டில் 3.92% ஆக இருந்த கல்விக்கான ஒதுக்கீடு இப்போது 1.30% ஆக, அதாவது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 3.92% அளவுக்கு நடப்பாண்டில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தால், கல்வித்துறைக்கு மட்டும் ரூ.1,59,439 கோடி நிதி கிடைத்திருக்கும். ஆனால், இப்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அதை விட ரூ.1,06,519 கோடி குறைவு ஆகும்.</p><p>பரிந்துரை வழங்கிய கோத்தாரியோ, ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனோ இப்போது இருந்திருந்தால், இந்த நிலையைக் கண்டு வெட்கித் தலைகுனிந்திருப்பார்கள். இந்த அவல நிலைக்கு தமிழ்நாட்டை கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த, ஆட்சி செய்யும் அனைத்துக் கட்சிகளும்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.</p><p>ஓர் அரசோ, ஒரு சமூகமோ அதன் முதல் கடமை குழந்தைகளுக்கு தரமான, இலவசக் கல்வியை வழங்குவதுதான். அதற்காகத்தான் காமராசர் காலத்தில் அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். அதற்கேற்ற வகையில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால் அரசு பள்ளிகள் அறிவுத் திருக்கோயில்களாக திகழ்ந்தன.</p><h2>அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறைவு</h2><p>ஆனால், காலப்போக்கில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டதன் வாயிலாக, அரசாங்க பள்ளிகளில் ஆசிரியர்களும், அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை ஏற்பட்டது. அதனால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது. மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 2015-16 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது, 11 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 32 லட்சத்து 49 ஆயிரம் குறைந்திருக்கிறது.</p><p>கல்வித்துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கும், அரசு பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதை இந்த புள்ளி விவரங்களின் மூலம் அறிய முடியும். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அதனால் கல்வித்தரம் உயரும்; அதன் காரணமாக மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். ஆனால், கல்விக்கான நிதி குறைக்கப்படுவதால் தான் அரசு பள்ளிகள் மிக வேகமாக சீரழிந்து வருகின்றன.</p><h2>தனியார் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு</h2><p>இதே காலகட்டத்தில் பார்த்தால், தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் 36.56 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இப்போது 62.03 லட்சமாக அதிகரித்து விட்டது. அரசு பள்ளிகளின் வீழ்ச்சியில் தான் தனியார் பள்ளிகள் வளருகின்றன. தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவே அரசு பள்ளிகளின் வீழ்ச்சி உருவாக்கப்படுகிறதோ, அதற்காகத் தான் கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்படுகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.</p><p>அரசு பள்ளிகள் தான் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கான கருவிகள். அவற்றை வீழ விடாமல், வளர்த்தெடுக்க வேண்டும்; அரசு பள்ளிகளில் குறைந்தது வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.  இதற்காக கலவித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்தது 3% என்ற அளவுக்காவது அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கணக்கு பாடங்களின் தலைப்புகள் மாற்றம்: இனி கதைகள் வழியே கணித பாடம்!- அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-math-curriculum-storytelling-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-math-curriculum-storytelling-rajmohan#comments</comments><guid isPermaLink="false">9f81d42c-e9aa-4a14-b835-f4154137958e</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:07:33 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:07:33.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mathematics lesson,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,Mathematic Stories,கணித பாடம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/lmnqxytq/RAJMOHAN.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/lmnqxytq/RAJMOHAN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பள்ளி மாணவர்களுக்குக் கணித பாடத்தின் மீதான அச்சத்தைப் போக்கி, சுலபமாகக் கற்றுக் கொடுக்கும் வகையில் கணித பாடங்களின் தலைப்புகளை மாற்றவும், கதைகள் வழியே கணிதத்தைக் கற்பிக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.</p><h2>த<strong>லைப்புகள் மாற்றம்</strong></h2><p>மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், ஆர்வம் தூண்டும் வகையிலும் கணித பாடப்புத்தகங்களிலுள்ள சிக்கலான தலைப்புகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.</p><h2><strong>கதைகள்</strong> வழியே கணக்கு</h2><p>உலர்வான சூத்திரங்களாக இல்லாமல், கதைகளின் ஊடே கணிதக் கருத்துகளை விவரிக்கும் (Story-based Learning) புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><h2><strong>ஆசிரியர்களுக்கான</strong> புதிய வழிகாட்டுதல்</h2><p> புதிய புத்தகங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்கத் தேவையான பயிற்சிகளும் மாற்றங்களும் மேற்கொள்ளப்படும்.</p><h2>கற்றல் திறன் <strong>மேம்பாடு</strong></h2><p>தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களிடையே கணக்குப் பாடத்தைப் பற்றிய பயத்தை நீக்கி, அவர்களின் பகுப்பாய்வு மற்றும் சிந்தனைத் திறனை இயல்பாகவே வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.</p><p>மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையோடு கணிதத் கருத்துகளைப் பிணைத்துப் புரிந்து கொள்ளவும், மகிழ்ச்சியான சூழலில் பாடங்களைக் கற்கவும் இந்த புதிய பாடத்திட்ட மாற்றம் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>55 அடி உயர பனை மரத்திற்கு படிக்கட்டு அமைத்த தூத்துக்குடி இளைஞர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-builds-safe-access-on-55-feet-palm-tree-for-palm-industry</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-builds-safe-access-on-55-feet-palm-tree-for-palm-industry#comments</comments><guid isPermaLink="false">94da7efc-976b-44b8-ac80-539dd32679b9</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:03:03 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:03:03.159Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Thoothukudi,PalmTree,பனைமரம்,இரும்புபடிக்கட்டு,YouthInnovation,PalmTree Innovation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/gh7a9n4c/PalmTree-YouthInnovation" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PalmTree Innovation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/gh7a9n4c/PalmTree-YouthInnovation?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பனைத் தொழில் செய்யும் இளைஞர் ஒருவர் 55 அடி உயர பனை மரத்திற்கு ரூ. 60000 செலவில் இரும்பு படிக்கட்டு அமைத்து அசத்தியுள்ளார்.</p><p>பனைத் தொழிலைப் பாதுகாக்கவும், ஆபத்துகளைக் குறைக்கவும் அந்த இளைஞர் மேற்கொண்டுள்ள இந்த நூதன முயற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.</p><h2><strong>ரூ.60,000 செலவில் இரும்பு வளைவு படிக்கட்டு!</strong></h2><p>தனது வீட்டின் அருகே உள்ள 55 அடி உயரமுள்ள பிரம்மாண்ட பனை மரத்தைத் தேர்ந்தெடுத்த தினகர், அதற்குப் பிரத்யேகமாக இரும்பு படிக்கட்டுகளை வடிவமைத்துள்ளார்.</p><p>இரும்பு கம்பிகளைக் கொண்டு, மரத்தைச் சுற்றிலும் வளைவு வடிவில் பாதுகாப்பான முறையில் இந்த படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த படிக்கட்டுகளின் வழியாக மிகவும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பனை மரத்தின் உச்சிக்குச் சென்று பதநீர் இறக்க முடியும்.</p><p>இதற்காக அந்த இளைஞர் தனது சொந்தப் பணத்திலிருந்து சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.</p><h2><strong>குவியும் பாராட்டுகள்!</strong></h2><p>நவீனத் தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்திலும், அழியாமல் இருக்கும் தங்களது பாரம்பரியப் பனைத் தொழிலைக் கைவிடாமல், அதனைப் பாதுகாக்கும் நோக்கில் இளைஞர் தினகர் செய்துள்ள இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் பரவிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.</p><p> "அறிவியல் வசதிகளைப் பயன்படுத்திப் பாரம்பரியத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதற்கு இந்த இளைஞரின் முயற்சியே சாட்சி" என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை திடீரென ஏன் இப்படி உயருது?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/why-is-the-price-of-gold-suddenly-rising-like-this</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/why-is-the-price-of-gold-suddenly-rising-like-this#comments</comments><guid isPermaLink="false">07fcfdce-d802-40d1-80ae-af04e7469ff4</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:00:22 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:00:22.013Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/4pjzk3rb/gold06.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/4pjzk3rb/gold06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நகை வாங்குவோருக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சுப காரியங்களுக்கான தேவைகள் மற்றும் திட்டமிட்ட நகைக் கொள்முதலுக்கு இதுவே ஏற்ற சூழலாகப் பார்க்கப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a>... என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொடுகிறது. இருப்பினும் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமின்றி விற்பனையானது. </p><p>இதனிடையே, நேற்று காலை விலையில் மாற்றமின்றி விற்பனையான தங்கம், மாலையில் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900-க்கும் சவரனுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><p>அதனை தொடர்ந்து இன்று காலையும் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,965-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 720-க்கும் விற்பனையாகிறது. </p><p>ஆபரணத் <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026">தங்கம்</a> கடந்த 7 தினங்களில் ரூ.6,000 அளவில் அதிகரித்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.12 லட்சத்தை நெருங்கிவிட்டது. </p><h2><strong>காரணம்</strong></h2><p>சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.14 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் சற்று தணிந்துள்ளதும், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.</p><p>நகை வாங்குவோருக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சுப காரியங்களுக்கான தேவைகள் மற்றும் திட்டமிட்ட நகைக் கொள்முதலுக்கு இதுவே ஏற்ற சூழலாகப் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/land-grab-case-charges-framed-against-former-minister-ma-subramanian</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/land-grab-case-charges-framed-against-former-minister-ma-subramanian#comments</comments><guid isPermaLink="false">02af5f8c-602f-4300-b637-9863fb95bcd4</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:58:16 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:58:16.532Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras High Court,சென்னை ஐகோர்ட்,Ma Subramanian,மா சுப்பிரமணியன்,நில அபகரிப்பு வழக்கு,land grab case</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/17/14409678-masu1706.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ma Subramanian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/17/14409678-masu1706.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மா.சுப்ரமணியன்</h2><p>சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">நிலத்தை</a>, முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்து உள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">ஐகோர்ட்டில்</a> வழக்கு தொடர்ந்திருந்தார்.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>வழக்கை விசாரித்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுசதி, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.</p><p>இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக தள்ளி வைக்கப்பட்டது.</p> <p>இந்த நிலையில் சிறப்பு கோர்ட்டு நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்து கூறினார்.</p><p>இதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் மறுப்பதாகவும் இது முற்றிலும் தவறு எனவும் தெரிவித்தனர்.</p><p>இதனையடுத்து இருவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி வழக்கின் சாட்சி விசாரணை வருகிற 31-ந்தேதிக்கு நடைபெறும் என்று கூறி வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி முருகன் கோவிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய ரோஜா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/actress-roja-kavadi-at-thiruttani-murugan-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/actress-roja-kavadi-at-thiruttani-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">df359d8f-1997-418d-87e5-34abccacfefc</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:40:02 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:40:02.076Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruttani Murugan Temple,திருத்தணி முருகன் கோவில்,roja,kavadi,ரோஜா,காவடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1npfqz7e/roja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Roja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1npfqz7e/roja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகையும், அரசியல்வாதியுமான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE">ரோஜா</a> முருகனின் தீவிர பக்தை ஆவார்.</p><h2>நேர்த்திக்கடன்</h2><p>அடிக்கடி திருத்தணி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆடி கிருத்திகையின் போது ஒவ்வொரு ஆண்டும் காவடி சுமந்து சாமியை வழிபடுவார். கடந்த 14 வருடங்களாக காவடி எடுத்து வந்து ரோஜா நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.</p> <h2>காவடி</h2><p>அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு நடிகை ரோஜா காவடி எடுத்து வந்தார். பக்தி பரவசத்துடன் ‘முருகனுக்கு அரோகரா அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் காவடியை சுமந்தபடி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. </p> <h2>திருத்தணி முருகன் கோவில்</h2><p>ரோஜா காவடி எடுத்து வந்த காட்சிகளை கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் செல்போனில் படம் பிடித்தனர். ரோஜா காவடி எடுத்தது குறித்து அவரது கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி கூறுகையில், ரோஜா முருகனின் தீவிர பக்தர் ஆவார். கடந்த 14 ஆண்டுகளாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருத்தணி முருகன் கோவிலில் </a>காவடி எடுத்து தரிசனம் செய்து வருகிறார். அதுபோல் இந்த ஆண்டும் திருத்தணி முருகன் கோவிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>TNEA : இன்ஜினியரிங் கவுன்சிலிங் ரவுண்ட் 2 ரிசல்ட்! அடுத்து மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tnea-2026-engineering-admission-round-2-results-and-next-steps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tnea-2026-engineering-admission-round-2-results-and-next-steps#comments</comments><guid isPermaLink="false">4a4d9975-f3f1-4cce-9409-0a3fc14b6577</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:38:47 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:38:47.811Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Engineering Counseling,tnea,TNEA 2026,இன்ஜினியரிங் சேர்க்கை,இன்ஜினியரிங் கவுன்சிலிங்,டிஎன்இஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pnwpabxw/engineering.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Engineering Counseling  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pnwpabxw/engineering.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இரண்டாம் சுற்று கலந்தாய்வின் தற்காலிக ஒதுக்கீட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்ய மாணவர்களுக்கு 5 வெவ்வேறு தேர்வுகள் வழக்கம் போல் வழங்கப்பட்டுள்ளன. கல்வி ஆலோசகர்களின் கூற்றுப்படி, 'Accept and Upward' (ஏற்றுக்கொண்டு மேல்நோக்கி நகர்தல்) ஆப்ஷனைத் தேர்வு செய்வதற்கு முன் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்கள்:</p><h2>யார் 'அக்செப்ட் அண்ட் <strong>அப்வர்ட்' தேர்வு செய்யக் கூடாது?</strong></h2><p>உங்களின் சாய்ஸ் ஃபில்லிங் பட்டியலில், தற்போது கிடைத்த கல்லூரிக்கு மேலே உள்ள கல்லூரிகளில் உங்களுக்குப் படிக்க விருப்பமில்லை என்றால் அப்வர்ட் தேர்வு செய்யக் கூடாது. அப்வர்ட் தேர்வில் மேல்வரிசையில் உள்ள கல்லூரிகளில் ஏதேனும் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டால், தற்போது கிடைத்துள்ள சீட் தானாகவே ரத்தாகிவிடும்.</p><h2>கட் ஆ<strong>ஃப் சாத்தியக்கூறு இல்லாதபோ</strong>து</h2><p>உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணிற்கு மேலே நீங்கள் குறிப்பிட்ட கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என உறுதியாகத் தெரிந்தால் அப்வர்ட் கொடுப்பதைத் தவிர்க்கலாம். தற்போது ஒதுக்கப்பட்ட கல்லூரியின் கட்டண விவரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை உங்களுக்கு முழு திருப்தியளித்தால், அதை அப்படியே 'Accept and Join' செய்து உறுதிப்படுத்துவதே பாதுகாப்பானது.</p><h2>Ac<strong>cept &amp; Upward தேர்வு செய்தவர்களுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள்</strong></h2><p>1. தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்து, '5 நாட்களுக்குள்' அருகிலுள்ள TNEA உதவி மையத்திற்குச் சென்று நேரில் சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். தவறினால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.</p><p>2.TFC மையத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதுடன் ரூ. 25,000 முன்பணக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.</p><p>3. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, 5 நாட்களுக்குள் உங்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் வெளியிடப்படும்.</p><p>4. இறுதி ஒதுக்கீட்டு ஆணை கிடைத்த 7 நாட்களுக்குள் குறிப்பிட்ட கல்லூரிக்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும்.</p><h2>TFC <strong>மையத்தில் சமர்</strong>ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்</h2><p>* TNEA தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை (Tentative Allotment Order)</p><p>* 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Sheets)</p><p>* மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate -TC)</p><p>* சாதிச் சான்றிதழ் (Community Certificate)</p><p>* முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate - பொருந்துமாயின்)</p><p>* வருமானச் சான்றிதழ் (Income Certificate)</p><p>* மாணவரின் வங்கி கணக்கு புத்தக நகல் (Bank Passbook)</p><p>* பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்</p><p>* சேர்க்கைக் கட்டணம் (ரூ. 25,000)</p><p>மாணவர்கள் தங்களது சாய்ஸ் லிஸ்ட்டை மீண்டும் ஒருமுறை கவனமாக ஆய்வு செய்த பிறகே முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கும் த.வெ.க. ஆதரவு எம்.பி.க்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/twenty-allied-mps-attend-vijay-delimitation-consultation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/twenty-allied-mps-attend-vijay-delimitation-consultation#comments</comments><guid isPermaLink="false">a7ec8c39-dea5-4ba5-905e-2f9011978499</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:31:05 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:31:05.682Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN MPs,tvk,தமிழக எம்பிக்கள் கூட்டம்,தவெக ஆதரவு எம்பிக்கள்,TVK support</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/qw611etl/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/qw611etl/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் தொகுதி  மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.</p><p>கடந்த தி.மு.க. ஆட்சியிலும் தொகுதி மறுவரையறையின்போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப் டக் கூடாது என்று அனைத்து அரசியல் கட்சி களும் குரல் கொடுத்தன.</p><h2>முதலமைச்சர் விஜய் தலைமையில்..</h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று  மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. </p><p>இதன்படி இந்த கூட்டம் இன்று நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையால் தமிழக எம்.பி. தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது.</p><p>இந்த கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்பது பற்றி நேற்று சட்டமன்றத்தில் த.வெ.க. அமைச்சர்களும் கேள்வி எழுப்பினார்கள். </p><h2>புறக்கணிப்பு</h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன.</p><p>தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>அ.தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளது. அதேபோன்று பா.ம.க.வும் விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி உள்ளது.</p><p>தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல்சபை எம்.பி. வழங்கப்பட்டு உள்ளது. எல்.கே.சுதீஷ் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இன்று டெல்லியில் இருப்பதாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். அதனால் அவரும் பங்கேற்கவில்லை. </p><h2>பங்கேற்பு</h2><p>அதே நேரத்தில் த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூ னிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.</p><h2>ம.தி.மு.க.</h2><p>ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல்சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதன் மூலம் த.வெ.க. ஆதரவு எம்.பி.க்கள் 20 பேர் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.</p><p>தமிழகத்தில் மொத்தம் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளையும் சேர்த்து 57 பேர் உள்ளனர்.  இவர்களில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.</p><p>தி.மு.க.வில் 8 மேல் சபை எம்.பி.க்களும், 20 மக்களவை எம்.பி.க்களும் உள்ளனர்.</p><p>அ.தி.மு.க.வுக்கு 4 மேல்சபை எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… எந்தெந்த ரெயில்கள் ரத்து?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/changes-in-rapid-suburban-train-services-for-renovation-work-at-chennai-egmore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/changes-in-rapid-suburban-train-services-for-renovation-work-at-chennai-egmore#comments</comments><guid isPermaLink="false">001622d1-319d-42e8-b1e8-72dde41a5e5e</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:26:39 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:26:39.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,electric train,மின்சார ரெயில்,ரெயில் சேவை,train service,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/23r9a3bi/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/23r9a3bi/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் இரவு நேர புறநகர் ரெயில்களை நம்பி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. புதிய இரும்பு நடைமேம்பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பாதுகாப்பு மற்றும் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக புறநகர் மற்றும் விரைவு ரெயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இந்நிலையில், சென்னையில் இரவு நேர புறநகர் ரெயில்களை நம்பி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளால் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சில ரெயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. </p><h2>இரவு நேர ரெயில்கள் ரத்து</h2><p>சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 22, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் (வார நாட்களில்) இரவு 11:20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.</p><p>சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே பகுதிநேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11.20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.</p><p>சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23. 30 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>இந்த மாற்றங்கள் இரவு நேர பணிகளை முடித்து வீடு திரும்புவோர், தாம்பரம் வழித்தட பயணிகள் மற்றும் அதிகாலை ரெயில்களை பயன்படுத்துவோரை பாதிக்கக்கூடும் என்பதால், மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>எழும்பூர் ரெயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்காக இந்த தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இமாச்சல் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 7 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/himachal-pradesh-mountain-road-bus-accident-7-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/himachal-pradesh-mountain-road-bus-accident-7-killed#comments</comments><guid isPermaLink="false">a395039a-0153-410c-a28f-c1edc7b14e3e</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:00:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:00:00.441Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,bus accident,dead,Himachal Pradesh,தனியார் பேருந்து விபத்து,இமாச்சல் பிரதேசம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2djbhjt0/bus.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bus accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2djbhjt0/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.</p><h2>பேருந்து கவிழ்ந்து விபத்து</h2><p>குறுகிய பாதை மற்றும் செங்குத்தான சரிவுகளுக்கு பெயர் பெற்ற சுரா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சலூச்மோர் வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்து கவிழ்ந்தது. காலை 7.15 மணியளவில் இந்த விபத்து நடந்தது.</p><p>பேருந்தில் இருந்த பயணிகள் அலறினார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் உதவிக்கு ஓடி வந்தார்கள். தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை, ஊர்க் காவல் படை, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.</p><h2>7 பேர் பலி</h2><p>பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர். பலத்த காயம் அடைந்த 6 பேர் சம்பாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>அந்த பேருந்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. பேருந்து இடிபாடுகளுக்கு அடியில் பயணிகள் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். </p><h2>இதுவரை 78 பேர் பலி</h2><p>விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜூன் 30-ந்தேதி முதல் நேற்று வரை பருவ மழைக்காலத்தில் சாலை விபத்தில் 78 பேர் பலியாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.</p><h2>பிரதமர் மோடி இரங்கல்</h2><p>இமாச்சல் பேருந்து விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பேருந்து விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்பைடர்-மேன்: டாம் ஹாலண்ட் - ஜெண்டாயா ஜோடியின் ரகசிய திருமணம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tom-holland-zendaya-secret-wedding-in-england</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/tom-holland-zendaya-secret-wedding-in-england#comments</comments><guid isPermaLink="false">f9feddfa-dbeb-4ee0-a322-0ef21e4559d0</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:41:53 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:41:53.551Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஸ்பைடர்மேன்,Spiderman,Zendaya,TomHolland,டாம்ஹாலண்ட்,ஜெண்டாயா,TomHollandZendaya Wedding</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/tgvj1au1/TomHolland-Zendaya-Wedding" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  TomHolland Zendaya Wedding  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/tgvj1au1/TomHolland-Zendaya-Wedding?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹாலிவுட் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D">ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே</a>' திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வரும் வேளையில், படத்தின் முன்னணி நட்சத்திரங்களான <a href="https://www.maalaimalar.com/topic/tom-holland">டாம் ஹாலண்ட்</a> மற்றும் ஜெண்டாயா ஜோடி தங்களது ரகசியத் திருமணக் கொண்டாட்டத்தை இங்கிலாந்தில் நடத்தியுள்ளனர். </p><p>இச்செய்தி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இரட்டைக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.</p><h2><strong>7 நாட்களில் ரூ.11,750 கோடி வசூல்!</strong></h2><p>கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியான இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. படம் திரைக்கு வந்த 7 நாட்களில் ரூ.11,750 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் இமாலய சாதனை படைத்துள்ளது. </p><p>இந்தியாவிலும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிவரும் இத்திரைப்படம், இதுவரை ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.</p><h2><strong>ரூ.6.4 கோடி செலவில் 3 நாட்கள் நடந்த ரகசிய திருமணம்!</strong></h2><p>இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா ஜோடி தங்களது நீண்ட நாள் காதலைத் திருமண பந்தமாக மாற்றியுள்ளனர். </p><p>இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள ஆடம்பரமான பீவர்புரூக் ஹோட்டல் தோட்டத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. தோராயமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.4 கோடி செலவில் 3 நாட்கள் இந்தத் திருமணக் கொண்டாட்டங்கள் அரங்கேறியுள்ளன. </p><p>திரைப்பிரபலங்கள் பலரும் ராபர்ட் டவுனி ஜூனியர், திமோதி சாலமேட், கைலி ஜென்னர் உள்ளிட்ட ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 250 பேர் மட்டுமே இதில் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். மணமகனின் தோழனாக டாம் ஹாலண்டின் தம்பி சாம் உடனிருந்தார்.</p> <h2><strong>செல்போன்களுக்குத் தடை!</strong></h2><p>தகவல்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் கசியக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்ததால், திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் யாரும் செல்போன்களைப் பயன்படுத்தக் கடும் தடை விதிக்கப்பட்டிருந்தது. </p><p>மேலும், இவர்களது திருமண மேடை மற்றும் அலங்காரங்கள் 'ஸ்பைடர்-மேன்' கருப்பொருளைக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p><h2><strong>2017 முதல் நீடித்த காதல்!</strong></h2><p>டாம்ஹாலண்டும், ஜெண்டாயாவும் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஸ்பைடர்மேன் ஹோம்கமிங் படத்தில் இணைந்து பணியாற்றிய போது முதன் முதலில் சந்தித்தனர். </p><p>2021-ல் இருவருக்கும் நெருங்கி இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. ஆனாலும் இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் தனிப்பட்ட ரகசியமாகவே வைத்திருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அஷ்மிதா சலிஹா</title><link>https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-enter-final-in-korea-mastesr-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-enter-final-in-korea-mastesr-badminton#comments</comments><guid isPermaLink="false">61ab4bb1-1ca4-49b9-9aa3-9c27f6ed4f57</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:39:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:39:49.226Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொரியா ஓபன் பேட்மிண்டன்,Korea Open Bamdinton,ashmita chaliha,அஷ்மிதா சலிஹா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1hkqyj4w/ashmita.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ashmita chaliha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1hkqyj4w/ashmita.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சலிஹா, சகநாட்டு வீராங்கனை ரக்‌ஷிதா ராம்ராஜ் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய அஷ்மித சலிஹா முதல் செட்டை 21-13 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ரக்‌ஷிதா ராம்ராஜ் அதிரடியாக ஆடி 2வது செட்டை 21-16 என கைப்பற்றினார்.</p><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை அஷ்மிதா சலிஹா 21-13 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.</p><p>நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அஷ்மிதா சலிஹா, சீன வீராங்கனையான ஹான் குயான்சி உடன் மோதுகிறார்.</p><p>சமீபத்தில் நடைபெற்ற தைபே ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்?-குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்மலா சீதாராமன்!</title><link>https://www.maalaimalar.com/news/national/who-will-pay-upi-transaction-fees-nirmala-sitharaman-clarifies</link><comments>https://www.maalaimalar.com/news/national/who-will-pay-upi-transaction-fees-nirmala-sitharaman-clarifies#comments</comments><guid isPermaLink="false">e5b8e549-dd82-4c4e-954d-dbee67d3a6eb</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:34:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:34:57.717Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மலா சீதாராமன்,ஜெய்ராம் ரமேஷ்,Jairam Ramesh,nirmala Sitharaman,UPI Transaction,யுபிஐ பணப்பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/unkfdyqj/nirmala.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Nirmala Sitharaman  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/unkfdyqj/nirmala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்களின் அன்றாட யுபிஐ (UPI) டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமானக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும், இது முற்றிலும் இலவசமாகவே தொடரும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, 'பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு நடைமுறைகள் சட்டம் 2007'-இன் பிரிவு 10A-இல் உள்ள 'பூஜ்யக் கட்டணம்' (Zero MDR) விதிகளைத் திருத்துவதற்கு வழிவகை செய்கிறது. இதையடுத்து, "யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது; இது பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும்" என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.</p><h2><strong>பொதுமக்களுக்கு முற்றிலும் இல</strong>வசம்</h2><p>சாதாரணக் நுகர்வோர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக மேற்கொள்ளும் நபர்-நபர் மற்றும் வணிகர்களுக்கானக் கட்டணங்கள்  போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது.</p><h2>வணி<strong>கர்களுக்கு மட்டுமே</strong> </h2><p>எம்டிஆர் (MDR) என்பது நுகர்வோருக்கானது அல்ல. ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாகப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பெரிய அளவிலான வணிகர்களிடம் மட்டுமே குறிப்பிட்ட குறைந்தபட்சக் கட்டணம் (0.05% முதல் 0.5% வரை) விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.</p><h2>நிதிக் கட்டமைப்பை <strong>மேம்படுத்த</strong> நடவடிக்கை</h2><p>சாலையோர வியாபாரிகள், சிறு வணிகர்கள் மற்றும் பெட்டிக் கடைக்காரர்களுக்கு இந்த MDR கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். பெரிய வணிகர்களிடமிருந்து திரட்டப்படும் இந்தச் சேவைக் கட்டணம், வங்கி அமைப்புகள் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் டிஜிட்டல் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சைபர் மோசடித் தடுப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்யப் பயன்படும். </p><p>நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா முழுமையாக நிறைவேறிய பிறகே, இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் (NPCI) தலைமையிலான யுபிஐ வழிகாட்டுதல் குழு இதுகுறித்த இறுதி முடிவை எடுக்கும்.</p><h2>சீதாராமன் <strong>பதிலடி</strong></h2><p>காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "வணிகர்கள் மீது விதிக்கப்படும் கட்டணச் சுமை இறுதியில் பொருட்களின் விலை உயர்வு மூலம் பொதுமக்கள் மீதே சுமத்தப்படும்" எனக் குற்றம் சாட்டினார்.  இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், வதந்திகளை பரப்பும் முன் காங்கிரஸ் தலைவர்கள் சில உண்மைகளை புரிந்துகொண்டு ஆக்கப் பூர்வமாக விவாதிக்க முன்வர வேண்டும். இது தவறான வதந்தி என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவே இத்தகைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 60% வரை உயரும் நில வழிகாட்டி மதிப்பு: அரசு அதிரடி நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/land-guideline-value-in-tamil-nadu-hiked-by-up-to-60-percent</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/land-guideline-value-in-tamil-nadu-hiked-by-up-to-60-percent#comments</comments><guid isPermaLink="false">75eca9f8-3ac5-4b67-acbd-c74b15b3a7eb</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:33:21 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:33:21.492Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,நில வழிகாட்டி மதிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/jtxf0pbw/TNGovt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/jtxf0pbw/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வருவாய்க் கிராமங்கள், நகரப் பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைப் பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற சொத்துப் பதிவுகள் மற்றும் சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.</strong></em></p><p>தமிழகத்தில் மனைப் பிரிவுகள், விவசாய நிலங்கள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், பல பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-அரசு">அரசு</a> பதிவுத் துறையின் நில வழிகாட்டி மதிப்பு தற்போதைய சந்தை விலையை விட மிகவும் குறைவாகவே உள்ளது.</p><p>இந்த இடைவெளியைச் சரிசெய்யும் வகையில், தமிழக அரசு சார்பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக மாநிலம் முழுவதிலும் உள்ள நிலங்களின் வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>கிராமவாரியாக பட்டியல் தயாரிப்பு</strong></h2><p>வருவாய்க் கிராமங்கள், நகரப் பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைப் பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற சொத்துப் பதிவுகள் மற்றும் சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.</p><p>ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பதிவாளர் தலைமையில், மண்டல வாரியாகக் கிராமங்களின் நில விவரங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>உள்கட்டமைப்பு வளர்ச்சி அடைந்த பகுதிகள், புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் மெட்ரோ/தொழில்நுட்பப் பூங்காக்கள் அருகில் உள்ள கிராமங்களில் நில மதிப்பு அதிகபட்சமாக 60 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.</p><h2><strong>இந்த உயர்வால் ஏற்படும் மாற்றங்கள்</strong></h2><p>சொத்துப் பதிவு மூலம் கிடைக்கும் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் அதிகரிக்கும் என்பதால், அரசின் வருவாய் கணிசமாக உயரும்.</p><p>நிலத்தின் உண்மையான சந்தை மதிப்புக்கும் பதிவு மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு குறைவதால், சொத்து வாங்குவதில் நிலவும் முறையற்றப் பணப் பரிவர்த்தனைகள் குறையும்.</p><p> அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வதால், வங்கிகளில் நிலத்தை அடமானம் வைத்துப் பெறப்படும் கடன் தொகையின் வரம்பு அதிகரிக்கும்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி உடல்நிலை கவலைக்கிடம்?</title><link>https://www.maalaimalar.com/news/world/mojtaba-khameneis-health-raises-concerns-in-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/mojtaba-khameneis-health-raises-concerns-in-iran#comments</comments><guid isPermaLink="false">21c399bc-dee9-4aac-9113-51897fb76101</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:31:39 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:31:39.331Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,கவலைக்கிடம்,Health issue,Mojtaba Khamenei,மொஜ்தபா கமெனி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1ki75pzr/khameni.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mohtaba khamenei]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1ki75pzr/khameni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார்.</p><p>இதையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமெனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதுவரை அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. </p><p>அமெரிக்காவின் தாக்குதலில் காயம் அடைந்த மொஜ்தபா கமெனி சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.</p><p>அதன்பின் மொஜ்தபா கமெனி பெயரில் அறிக்கைகள் வெளியானது. இதில் அமெரிக்கா-இஸ்ரேலுக்கு அவர் எச்சரிக்கைகளை விடுத்து இருந்தார்.</p><p>இந்த நிலையில் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது. மொஜ்தபா கமெனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் அவர் இறக்கக்கூடும் என்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே தகவல்கள் பரவி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.</p><p>அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. ஈரான் அதிபர் பெசெஷ்கியனின் அமைச்சரவைக்கு நெருக்கமான ஒரு வட்டாரம்,"மொஜ்தபா கமெனி விரைவில் மரணம் அடைந்ததற்கான செய்தியைக் கேட்டால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை"  என்று கூறியதாக இஸ்ரேல் ஊடகம் தெரிவித்து உள்ளது.</p><p>கடந்த 2 நாட்களுக்கு முன்பு உச்ச தலைவர் மொஜ்தபாவுடன் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சமநீதியும், சமூகநீதியும் கிடைக்க செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்! - புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-new-judges-may-your-work-excel-in-ensuring-equal-justice-and-social-justice</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-new-judges-may-your-work-excel-in-ensuring-equal-justice-and-social-justice#comments</comments><guid isPermaLink="false">b8da7410-2d9c-4af9-bc69-81ece2bf0759</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:28:27.480Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Madras High Court,சென்னை ஐகோர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3swxby2k/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3swxby2k/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் மாண்பமை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை உயர்நீதிமன்றத்திற்குப்</a> புதிதாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவீக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், டாக்டர் பி. முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, என்.குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p> <p>நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறுபான்மையினர் நலன் காக்க FCRA மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-demands-withdrawal-of-fcra-bill-to-protect-minorities</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-demands-withdrawal-of-fcra-bill-to-protect-minorities#comments</comments><guid isPermaLink="false">1aee2b18-194f-4f59-b241-c1ce431998cf</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:08:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:08:45.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/e8rbnfl8/mks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/e8rbnfl8/mks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>FCRA (வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை))சட்ட மசோதாவை திரும்பப் பெற, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நடவடிக்கை தேவை என்றும் சிறுபான்மையினருக்கு எதிரான மசோதாவை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-  </p><p>நமது நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தலைமையிலான சிறுபான்மையினர் மீதான கூட்டு நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதிகள் குழுவும், இந்தியாவில் உள்ள பல்வேறு மதப்பிரிவுகளைச் சேர்ந்த உயர்மட்ட மதத் தலைவர்களும், 6.8.2026 அன்று  உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.</p><p>மார்ச் 2026-ல் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை திரும்பப் பெறவும், FCRA-வின் பிரிவு 15-ஐ ரத்து செய்ய வேண்டும் அல்லது வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-ன் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வுடன்  நாடாளுமன்ற கூட்டுகுழுவிற்குப் பரிந்துரைக்குமாறும் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.</p><p>முன்மொழியப்பட்ட இந்த மசோதாவின் நீண்டகால விளைவுகள் காரணமாக, அதன் விதிகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வரும் திமுக, இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறது.</p><p>சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, இந்த மன்றத்தின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பருவகாலக் கூட்டத்தொடரில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out#comments</comments><guid isPermaLink="false">c0ae8cb2-08ff-454b-8bda-eec9e8cdf26a</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:04:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:04:19.481Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தொகுதி மறுவரையறை,Delimitation,முதலமைச்சர் விஜய்,TamilNadu LokSabha,தமிழக மக்களவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/m9b2qu52/tamiklnadu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delimitation TamilNadu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/m9b2qu52/tamiklnadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற தொகுதி எல்லைகளை மக்கள் தொகை அடிப்படையில் மாற்றி அமைக்கும் தொகுதி மறுவரையறை (Delimitation) செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>தொகுதி மறுவரையறை</strong></h2><p>நடைபெற்று வரும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட இருப்பதால், மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><h2><strong>நாடு தழுவிய இடங்கள் உயர்வு</strong></h2><p>தற்போதைய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. மறுவரையறைக்குப் பிறகு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 850 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p><h2><strong>தமிழகம் எதிர்ப்பு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-all-party-mps-meeting-government-not-send-any-letter-to-dmk-leadership">தொகுதி மறுவரையறை</a> சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறினால், நாடு முழுவதும் தற்போதுள்ள 543 தொகுதிகள் 850 ஆக உயரும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், 59 ஆக உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு இதைவிட அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பதால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><h2>மக்கள் <strong>தொகை</strong> கட்டுப்பாடு</h2><p>தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடந்த சில தசாப்தங்களாக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியுள்ளன.</p><h2>அரசியல் <strong>கட்சிகளின்</strong> நிலைப்பாடு</h2><p>இத்திட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><h2>எம்பிக்கள் <strong>ஆலோசனை</strong> கூட்டம்</h2><p>இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க தமிழக எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று மாலை 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டியுள்ளார். ஆனால், இந்த கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நிறைவேறினால், தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் 59 ஆக உயரும். அவ்வாறு உயர்ந்தால் என்னென்ன பெயர்களில் மக்களவை தொகுதிகள் இருக்கும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.</p><h2><strong>உத்தேச 59 மக்களவை தொகுதிக</strong>ளின் பட்டியல்</h2><p>புதிய மறுவரையறை திட்ட வரைவின்படி அமையக்கூடிய உத்தேச 59 தொகுதிகள் இதோ:</p><p>1. திருத்தணி</p><p>2. திருவள்ளூர்</p><p>3. சென்னை வடக்கு</p><p>4. சென்னை கிழக்கு</p><p>5. சென்னை மத்திய</p><p>6. சென்னை தெற்கு</p><p>7. சென்னை மேற்கு</p><p>8. தாம்பரம்</p><p>9. செங்கல்பட்டு</p><p>10. காஞ்சிபுரம்</p><p>11. வேலூர்</p><p>12. திருப்பத்தூர்</p><p>13. ராணிப்பேட்டை</p><p>14. திருவண்ணாமலை</p><p>15. வந்தவாசி / ஆரணி</p><p>16. திண்டிவனம்</p><p>17. விழுப்புரம்</p><p>18. கள்ளக்குறிச்சி</p><p>19. கடலூர்</p><p>20. சிதம்பரம்</p><p>21. ஓசூர்</p><p>22. கிருஷ்ணகிரி</p><p>23. தர்மபுரி</p><p>24. சேலம்</p><p>25. மேட்டூர்</p><p>26. ராசிபுரம்</p><p>27. நாமக்கல்</p><p>28. ஈரோடு</p><p>29. கோபிசெட்டிபாளையம்</p><p>30. திருப்பூர்</p><p>31. தாராபுரம் / பழனி</p><p>32. பொள்ளாச்சி</p><p>33. கோவை கிழக்கு</p><p>34. கோவை மேற்கு</p><p>35. நீலகிரி</p><p>36. கரூர்</p><p>37. பெரம்பலூர்</p><p>38. அரியலூர் / லால்குடி</p><p>39. திருச்சிராப்பள்ளி</p><p>40. தஞ்சாவூர்</p><p>41. கும்பகோணம்</p><p>42. மயிலாடுதுறை</p><p>43. நாகபட்டினம்</p><p>44. திருவாரூர்</p><p>45. புதுக்கோட்டை</p><p>46. சிவகங்கை</p><p>47. ராமநாதபுரம்</p><p>48. தூத்துக்குடி</p><p>49. திருச்செந்தூர்</p><p>50. திருநெல்வேலி</p><p>51. நாங்குநேரி / கன்னியாகுமரி</p><p>52. கன்னியாகுமரி / நாகர்கோவில்</p><p>53. தென்காசி</p><p>54. சிவகாசி</p><p>55. விருதுநகர்</p><p>56. தேனி</p><p>57. மதுரை கிழக்கு</p><p>58. மதுரை மேற்கு</p><p>59. திண்டுக்கல்</p><p>மறுவரையறை ஆணையத்தின் இறுதி முடிவுகள் நாடாளுமன்ற ஒப்புதலுக்கு பின்னரே இறுதி வடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>லிப்ட் வசதி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?- கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய பணிகள் தாமதத்தால் மக்கள் அவதி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/public-inconvenienced-by-delays-in-gummidipoondi-railway-station-works</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/public-inconvenienced-by-delays-in-gummidipoondi-railway-station-works#comments</comments><guid isPermaLink="false">9b292d33-8d23-4e71-bea6-1b475d303d87</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:57:04 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:57:04.253Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம்,மறுசீரமைப்பு பணி,Gummidipoondi Railway Station</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/k2blz18l/gummidipoondi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/k2blz18l/gummidipoondi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக சுமார் ரூ.25 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. </p><h2><strong>மேம்பாட்டு பணிகள்</strong></h2><p>அவ்வாறு புதுப்பிக்கப்படும் போது ரெயில் நிலையத்தில் 4 நடைமேடைகளை இணைத்தப்படி பஜார் பகுதியில் இருந்து சிப்காட் பகுதியான பைபாஸ் சாலைக்கு லிப்ட் வசதியுடன் கூடிய புதிய நடைமேம்பாலம், பிரமாண்டமான நுழைவு வாயில் கட்டிடங்கள், எக்ஸ்லேட்டர் மற்றும் 4 வாகன நிறுத்துமிடங்கள் என பல்வேறு அடிப்படை வசதிகள்  அமைய உள்ளது.</p><p>இந்த திட்டத்திற்கான  பூமி பூஜை கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய வளாகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அதன் பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதி  பிரதமர் மோடி இந்த திட்டத்திற்கான அடிக்கல்லை காணொலி வாயிலாக நாட்டினார். </p><p>இதில்  ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். அந்த நிகழ்வின் போது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில்  <a href="https://www.maalaimalar.com/topic/கும்மிடிப்பூண்டி-ரெயில்-நிலையம்">கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம்</a> புதுப்பிக்கும் பணி முழுமையாக நிறைவடைந்து சேவைகள் அனைத்தும் பயன்பாட்டிற்கு வரும் என மண்டல ரெயில்வே நிர்வாகம் சார்பில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.</p><h2><strong>75 சதவீத பணிகள்</strong></h2><p>ஆனால் அந்த பணியில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் இந்த திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் எனவும் திட்டவட்டமாக  தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை 75 சதவீத பணிகள் கூட நிறைவு பெறாத நிலையே தொடர்கிறது.</p><p>மேலும், கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வந்தால் செங்குத்தான படிகளில் ஏறி தான் 1, 2, 3, 4 ஆகிய பிளாட்பரங்களுக்கு செல்லவேண்டிய சூழல் உள்ளது. டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுக்கும் வயதான பயணிகள் கால்கடுக்க படிகளில் ஏறி இறங்க வேண்டிய அவல நிலை உள்ளது. </p><p>கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரெயில் நிலையத்திற்குள் வருகிற பயணிகள் வசதிக்காகவும்,  ரெயில் நிலையத்திற்குள் நுழைய ஏதுவாக எந்த ஒரு லிப்ட் வசதியும் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையம் மேம்படுத்தும் இந்த சமயத்தில் லிப்ட் வசதியை ரெயில்வே நிர்வாகம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p><h2><strong>ஆமை வேகத்தில்</strong></h2><p>ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆமை வேகத்தில் பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் தினமும் புறநகர் மின்சார ரெயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அம்ரித் பாரத் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பணிகளையும், உடனடியாக நிறைவேற்றி தாம்பரம் ரெயில் நிலையம் போல கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் ஆந்திர மற்றும் வடமாநிலங்களுக்கான எக்ஸ்பிரஸ் ரெயில்களை நின்று செல்லவும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கும்மிடிப்பூண்டி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>