<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 21 Jul 2026 11:29:45 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026#comments</comments><guid isPermaLink="false">e1a983bf-6930-4a96-8d7d-aee2f254884f</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:01:21 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:20:40.951Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/bengal-cm-blames-previous-tmc-govt-for-loss-of-europe-air-links-mounting-debt-on-state-economy">ரூ. 8 லட்சம் கோடி கடன்: முந்தைய மம்தாவின் திரிணாமுல் அரசு மீது சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/food-delivery-worker-wins-chinas-top-literary-prize">சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/hs-prannoy-and-devika-sihag-exit-early-at-china-open">சீனா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியர்கள் ஏமாற்றம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/opposition-parties-disrupt-parliament-both-houses-adjourned-all-day">எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-do-not-drag-us-into-it-delhi-high-court-on-plea-alleging-use-of-force-on-students">மாணவர்கள் போராட்டம் விவகாரத்தில் எங்களை இழுக்காதீர்கள்: டெல்லி உயர்நீதிமன்றம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/77516b2d-5a97-484d-ab57-83028e4f9e4e">நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் - பாடகர் அறிவு கைது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-allows-sonam-wangchuk-to-choose-hospital">விருப்பப்பட்ட மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி: சோனம் வாங்சுக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/uttarakhand-downpour-dabkeshwar-mahadev-temple-flooded">உத்தரகாண்டில் கனமழை: டப்கேஷ்வர் மகாசிவன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/number-1-in-rankings-arina-sabalenkas-new-record">தரவரிசையில் நம்பர் 1: அரினா சபலென்காவின் மற்றொரு சாதனை</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/both-teams-have-equal-chance-to-win-t20-series-sikandar-raza">இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்பு: டி20 தொடர் குறித்து சிக்கந்தர் ராசா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/this-country-is-not-your-fathers-property-pm-modi-arvind-kejriwal-slams">"இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல, பிரதமர் மோடி!"-அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/be4bfd4a-1099-42c1-a508-04536354f321">பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை - மல்லிகார்ஜூன கார்கே</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/03334d6b-6bde-42fe-a82d-3764dba7b6c9">பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/36d83f67-0602-4ab4-b0b3-77cfbae2bbb4">துணை ஜனாதிபதி வருகை - திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a4d618d4-266a-4a6e-b6c1-6738d4a795b5">கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம் - வீடுகள் விலை குறைகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-slaps-50-tariffs-new-duties-on-key-canadian-imports-under-uscanada-trade-dispute">இது நியாயமே இல்ல.. கனடா மீது 50% வரியை தீட்டிய டிரம்ப் -கார்னி கொந்தளிப்பு<br></a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/c06bac6b-6b04-4642-9bd5-8b4c9398b0d7">மக்களே ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! - மு.க.ஸ்டாலின்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive">கயானா படகு விபத்து: 27 உடல்கள் மீட்பு; போதைப்பொருள் பரிசோதனையில் மாலுமிகள் சிக்கியதால் பரபரப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award">தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு 'லோக்மான்ய திலகர் விருது'!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed">ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப்பெருக்கு: 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ca9c7d59-6f3b-4f07-939f-20fe3e86130f">நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874">அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35">கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a">நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0462a245-3b74-4003-834b-ab1c2c54d599">ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/cce69c86-57c0-4546-a672-e41cbf604cc5">வறட்சியால் வாடும் கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">NEET-UG 2026: போலியான OMR விடைத்தாள்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை-NTA எச்சரிக்கை!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a">ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/spain-second-world-cup-triumph-madrid-fans-historic-celebration">ஸ்பெயின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டம்: மேட்ரிட் நகரில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title">விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4">நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears">'மீண்டும் என்னை தேசவிரோதி என்பார்கள்': மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித் தோசாஞ்ச்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27">தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations">Sikkim: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு - மீத்தேன் வாயு கசிவால் மீட்பதில் சிக்கல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge">இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் - CJP அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6718ca4f-394f-4ce0-8f4d-f2a524f402dc">இங்கிலாந்து புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ce5bfe19-8180-4674-acf1-75b69c84a40e">வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்- ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3">கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f86052c-a139-4221-a893-68b35a1821b8">சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/74493a2e-1175-4349-bd50-436bf3bd4bc3">போலி மருந்து தயாரிப்பு வழக்கில் 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு</a></p> ]]></content:encoded></item><item><title>ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா?</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/lose-5-kilos-in-one-week-with-horse-gram</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/lose-5-kilos-in-one-week-with-horse-gram#comments</comments><guid isPermaLink="false">bb1d6a54-7f55-494e-9c83-e8e0fef22e6f</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:28:47 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:28:47.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,health benefits,கொள்ளு,horse gram,உடல்நலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/v8om9nxw/ell.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ weight loss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/v8om9nxw/ell.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உடல் எடையைக் எளிதாகவும், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கை முறையில் குரைக்க கொள்ளு பருப்பு உகந்தவை. அதன் அற்புத பயன்களையும் எப்படி உட்கொள்ளவேண்டும் என்பதையும் இங்கே காணலாம்.</p><p>1) கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச்சதை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும், இதில் அதிகளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.</p><figure><img alt="horse gram" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/kq2yht32/sdf.jpg" /></figure><p>2) கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.</p><p>3) தினமும் கொள்ளினை உணவில் சேர்த்து வருபவர்களின் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும்.</p><p>4) கொள்ளு பருப்பை வறுத்து பொடி செய்துகொண்டு, ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் ஒரு டீஸ்பூன் கொள்ளு பவுடர் மற்றும் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து மறுநாள் காலை பருகி வர ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைவதை உணரமுடியும்.</p><p>‘இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் கொள்ளுவில் அதிக சக்தி உள்ளது....</p> ]]></content:encoded></item><item><title>சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்</title><link>https://www.maalaimalar.com/news/world/food-delivery-worker-wins-chinas-top-literary-prize</link><comments>https://www.maalaimalar.com/news/world/food-delivery-worker-wins-chinas-top-literary-prize#comments</comments><guid isPermaLink="false">5f8b7459-cbd9-4736-9779-1a0b65bfceae</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:16:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:16:51.642Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,Literary Awards,wang jibing,வாங் ஜிபிங்,இலக்கிய விருது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/69jysaxv/wang.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ wang jibing]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/69jysaxv/wang.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி பணியாளரும், கவிஞருமான வாங் ஜிபிங், கவிதைப் பிரிவில் சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.</p><p>நவீன சீன இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் லு சூனின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, சீனாவின் மிக உயர்ந்த இலக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாகும்.</p><h2>லோ பிளைட்</h2><p>சீனாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் அன்றாடப் போராட்டங்கள், விரக்திகள் மற்றும் சவால்களை மையமாக வைத்து 'லோ பிளைட்' (Low Flight) எனும் கவிதைத் தொகுப்பு நூலை எழுதியுள்ளார்.</p><p>இந்த நூலுக்காக சுமார் 200 சக டெலிவரி ஊழியர்களிடம் அவர் உரையாடியுள்ளார்.</p><h2>6,000 கவிதைகள்</h2><p>பகலில் உணவு டெலிவரி செய்யும் இவர், கடந்த 8 ஆண்டுகளில் தனது ஸ்கூட்டரில் சுமார் 1,50,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்து, ஓய்வு நேரங்களில் 6,000-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.</p><p>களப்பணியாளர்களின் யதார்த்தமான வாழ்க்கையை எழுத்தாக்கிய இவரது வெற்றி, சீனாவில் தொழிலாளர்களின் இலக்கிய படைப்புகளுக்குக் கிடைத்துவரும் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.</p><p>ஜியாங்சு மாகாணத்தில் பிறந்த வாங் ஜிபிங், வீட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இளமையிலேயே பள்ளியிலிருந்து விலகினார். அவர் உணவு டெலிவரி ஊழியராக மாறுவதற்கு முன் கட்டுமானம், குப்பை சேகரிப்பு மற்றும் தெருவோர வியாபாரம் என பல்வேறு வேலைகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ரூ. 8 லட்சம் கோடி கடன்: முந்தைய மம்தாவின் திரிணாமுல் அரசு மீது சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/bengal-cm-blames-previous-tmc-govt-for-loss-of-europe-air-links-mounting-debt-on-state-economy</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengal-cm-blames-previous-tmc-govt-for-loss-of-europe-air-links-mounting-debt-on-state-economy#comments</comments><guid isPermaLink="false">1baf92e4-6b4f-484b-b08d-bce0f5e0dc1d</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:14:53 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:14:53.446Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,Mamata Banerjee,சுவேந்து அதிகாரி,Suvendu Adhikari,TMC,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/6udk6xah/SuvenduAdhikari001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suvendu Adhikari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/6udk6xah/SuvenduAdhikari001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி பரிபஹன் பவன்-IIல் இருந்து 50 ஏ.சி. பேருந்தகள் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.</p><h2>சுவேந்து அதிகாரி பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:-</h2><p>கொல்கத்தாவில் வாட்டர் மெட்ரோவை அறிமுகம் செய்யும் திட்டமிட்டுள்ளது. மற்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரெயில் சேவையை இணைக்கும் திட்டமும் உள்ளது. மின்சார பேருந்துகளுக்கு சார்ஜிங் ஏற்றும் சார்ஜிங் நிலையங்கள், கல்யாணியின் க்ரீன்பீல்டு விமான நிலையம் போன்ற திட்டங்களும் அரசிடம் உள்ளது என்றார்.</p><h2>ஐரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கான விமான போக்குவரத்து நிறுத்தம்</h2><p>நாம் ஐரோப்பியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்ள நகரங்களுக்கு விமான போக்குவரத்தை தொடர்பை கொண்டிருந்தோம். முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ், பெரும்பாலான நகரங்களுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளன. லண்டன் உள்பட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களுக்கு கொல்கத்தாவில் இருந்து விமான சேவை இல்லை.</p><p>கொல்கத்தா அருகே 2-வது விமான நிலையத்திற்கான முன்மொழிவையும் முன்னெடுக்கவில்லை. கொல்கத்தா அருகே மற்றொரு விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, நிலம் கேட்டு கடிதம் எழுந்தியிருந்தார். பங்கர் பகுதியில் இருந்து நிலத்தை கையகப்படுத்த முடியாது என்று முந்தைய மம்தா அரசு கடிதம் எழுதியது. அது பலவீனமான அரசு.</p><h2>8 லட்சம் கோடி ரூபாய் கடன்</h2><p>மேற்கு வங்க மாநிலத்தை ஆண்ட இடதுசாரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுகள் மாநிலத்தை கடனில் ஆழ்த்தியுள்ளன.சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் சுமையை தற்போதைய அரசு மீது சுமத்தியுள்ளனர்.</p><p>சிறந்த வருவாயை கொண்டு வருவதற்கான முக்கியம்சமாக போக்குவரத்துத்துறை இருக்க முடியும். கடனில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கான வாய்ப்பாகவும் இருக்கும். 8 லட்சம் ரூபாய் கடன் மாநில அரசு மீது உள்ளது.</p><p>ஒரு மாநிலத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பு நவீனமாக இருக்கும்போது, ​​அதன் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைப் பெற முடியும். உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டால், அதிகமான தொழில்முனைவோர்கள் அம்மாநிலத்தில் முதலீடு செய்வார்கள். இதன் விளைவாக வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.</p><h2>மத்திய அரசு உதவியுடன் கூடுதல் மின்சார பேருந்துகள்</h2><p>கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிஎன்ஜி (CNG) மற்றும் மின்சார வாகனங்களை அதிகளவில் அறிமுகப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்... 60:40 என்ற நிதிப் பகிர்வு முறையின் கீழ், மத்திய அரசின் உதவியுடன் கூடுதல் மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.</p><p>இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி: பிரதமர் மோடி, அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-congress-members-led-by-rahul-gandhi-protest-demanding-the-resignation-of-prime-minister-modi-and-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-congress-members-led-by-rahul-gandhi-protest-demanding-the-resignation-of-prime-minister-modi-and-amit-shah#comments</comments><guid isPermaLink="false">edafb30c-514b-4fb4-993b-065662790b1d</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:46:00 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:46:00.730Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,protest,போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/b4ztamvu/New-Project-2026-07-21T160048.085.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி: பிரதமர் மோடி, அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் போராட்டம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/b4ztamvu/New-Project-2026-07-21T160048.085.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. </p><p>இப்போராட்டம் நேற்று தீவிரமடைந்த நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார், ராணுவப் படையினர் தடியடி நடத்தினர். இதில் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீதான காவல்துறையின் அப்பட்டமான அத்துமீறலுக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் காங்கிரஸ் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.</p><p>நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாகவும் செல்ல முற்பட்டவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>இந்தப் போராட்டத்தில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனே கார்கே, வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>4 இந்திய மாலுமிகள் பலி: ரஷிய தூதரை அழைத்து கண்டித்த இந்தியா..!</title><link>https://www.maalaimalar.com/news/national/unacceptable-india-protests-deaths-of-4-indian-sailors-in-russian-attack-near-ukraine</link><comments>https://www.maalaimalar.com/news/national/unacceptable-india-protests-deaths-of-4-indian-sailors-in-russian-attack-near-ukraine#comments</comments><guid isPermaLink="false">d975d1d3-50b8-4a95-aacb-0a3e6c34f476</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:26:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:26:05.333Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,கப்பல்,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war,vessel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gtzw2loc/RussiaAttack.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Russian Charge d'Affaires Vladimir Ladanov]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gtzw2loc/RussiaAttack.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட வணிக கப்பல் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. 10 மாலுமிகள் உயிரிழந்தனர். இதில் நான்கு பேர் இந்தியர்கள் ஆவார்கள். இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இந்தியாவுக்கான ரஷிய தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியா சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளது.</p><p>தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில், இந்தியாவுக்கான ரஷிய தூதரக பொறுப்பாளர் விளாடிமிர் டேலனவ்-க்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அவர் இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சகத்திற்கு வந்து ஆஜரானார். அப்போது அவரிடம் இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.</p><p>இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதது</h2><p>ஞாயிற்றுக்கிழமையன்று எம்.வி. கோல்டன் லியோ (MV Golden Leo) என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து, இந்தியா தனது கடுமையான கவலையையும் தெளிவான கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச கடல்வழி வர்த்தகத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கின்றன என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>வணிகக் கப்பல்களை குறிவைப்பதும், அதனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் தீவிர கவலைகளைத் தங்கள் நாட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு ரஷ்யத் தூதரகப் பொறுப்பாளர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.</p><p>இவ்வாறு அறிக்கையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.</p><h2>ஒடெசா துறைமுகம்</h2><p>உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில் பயணித்த நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர். எம்.வி. கோல்டன் லியோ (MV Golden Leo) என்ற அந்தக் கப்பலில் ஐந்து இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 4 இந்தியர்கள், 5 சிரியாவைச் சேர்ந்தவர்கள் பலியானார்கள். ஒரு இந்தியர் மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷியா, உக்ரைனின் கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை கடற்பகுதியில் நடத்தியது. அதில் ஒன்றுதான் வணிக கப்பல் மீதான தாக்குதல். ரஷியா- உக்ரைன் இடையிலான 4 வருடத்திற்கு மேலான போரில், கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர்கள் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.</p>]]></content:encoded></item><item><title>மோசடி செய்து பழனி கோயில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/vellathurai-who-purchased-palani-temple-land-through-fraud-files-a-petition-seeking-anticipatory-bail</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/vellathurai-who-purchased-palani-temple-land-through-fraud-files-a-petition-seeking-anticipatory-bail#comments</comments><guid isPermaLink="false">22ca4b6f-e21d-490c-97b1-21986fa09622</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:22:43 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:22:43.432Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,Anticipatory bail,சிபிசிஐடி,முன்ஜாமின்,பழனி கோயில்,Palani temple land fraud,Madurai Bench of HC,CB-CID</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/c5zi5shc/New-Project-2026-07-21T155215.452.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி செய்து பழனி கோயில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/c5zi5shc/New-Project-2026-07-21T155215.452.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி கோயில் நில மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். </p><p>இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த மனுவில் சிபிசிஐடி போலீசாரைப் பதில் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு  விசாரணையை நாளைக்கு (ஜூலை.22) ஒத்திவைத்துள்ளது. </p><h2>வழக்கின் பின்னணி </h2><p>பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலை அடிவாரத்தில், கோயில் மடத்திற்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம் தற்போது பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.</p><p>இதனை வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் வாங்கியுள்ளார். </p><p>சட்டப்படி கோயிலுக்கு சொந்தமான நிலத்தைத் தனியாருக்கு விற்கவோ, கைமாற்றவோ தடை உள்ளது. ஆனால் இதனை மீறியும் மடத்தின் வாரிசு என்று போலியாகக் கூறிக்கொண்ட விழுப்புரம் முருகதாஸ் என்பவரிடமிருந்து, வெள்ளத்துரை மற்றும் பழனியைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவரும் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றியுள்ளனர். </p><p>இந்தக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதில் சம்பந்தப்பட்ட, இந்த நிலப் பதிவை மேற்கொண்ட பழனி சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். </p><p>மேலும் இந்த மோசடிப் பதிவு செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. மேலும் பத்திரப்பதிவுத்துறை சார்பிலும் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. </p><p>இந்நிலையில் தலைமறைவாக உள்ள வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>&apos;ஓபன்ஹைமர்&apos; நிர்வாண காட்சி ஷூட்டிங்கில் ரிப்பேர் ஆன கேமரா-நடிகை சொன்ன அதிர்ச்சி தகவல்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/oppenheimer-nude-scene-camera-repair-actress-reveals-shocking-detail</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/oppenheimer-nude-scene-camera-repair-actress-reveals-shocking-detail#comments</comments><guid isPermaLink="false">1b45220b-2251-470e-bcfe-8c2a98ec20d7</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:11:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:11:54.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிறிஸ்டோபர் நோலன்,Florence Pugh,christopher nolan,oppenheimer,Cillian Murphy,ஓபன்ஹைமர்,ஃப்ளோரன்ஸ் பியூ,சிலியன் மரஃபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/qsj6nk0l/nolan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Florence Pugh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/qsj6nk0l/nolan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹாலிவுட் திரையுலகின் பிரம்மாண்ட இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான 'ஓபன்ஹைமர்'  திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு சங்கடமான, அதேவேளையில் சுவாரசியமான அனுபவத்தை பிரபல நடிகை 'ஃப்ளோரன்ஸ் பியூ' பகிர்ந்துள்ளார்.</p><p>இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், சிலியன் மரஃபி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்தில், ஜீன் டாட்லாக் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஃப்ளோரன்ஸ் பியூ நடித்திருந்தார்.</p><h2><strong>'நாங்கள் இருவரும் ஆடைகள் இன்றி இருந்தபோது...'</strong></h2><p>லண்டனில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் ஃப்ளோரன்ஸ் பியூ பேசுகையில், "எங்களுக்கும் இதுவரை யாரும் அறியாத ஒரு சுவாரசிய சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் நடந்தது. சிலியன் மரஃபி மற்றும் நான் பங்குபெற்ற நிர்வாண காட்சியைப் படமாக்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென கேமரா பழுதாகிவிட்டது. </p><p>நாங்கள் இருவரும் ஆடைகள் எதுவும் இன்றி இருந்த அந்த தருணத்தில் கேமரா பழுதானது மிகவும் சங்கடமான ஒரு சூழலை உருவாக்கியது."</p><h2><strong>மூடிய அறை மற்றும் 'கேமரா சர்ஜன்:</strong></h2><p>அந்த காட்சி ஒரு 'Closed Set' என்பதால், மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை இரு நடிகர்களும் தங்கள் உடலைக் கைகளால் மறைத்தபடி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.</p><h2><strong>மாற்று கேமரா இல்லை:</strong></h2><p>படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட மற்றொரு கேமராவும் ஏற்கனவே பழுதுபார்க்கும் மையத்தில் இருந்ததால், உடனடியாக வேறு கேமராவைப் பயன்படுத்த இயலவில்லை. இதன்பின், பழுதைச் சரிசெய்ய ஒரு கேமரா தொழில்நுட்ப வல்லுநர் அந்த அறைக்குள் வரவழைக்கப்பட்டார்.</p><h2><strong>ஃப்ளோரன்ஸ் பியூ செய்த செயல்:</strong></h2><p>இந்த அசௌகரியமான அமைதியைத் தவிர்க்க எண்ணிய ஃப்ளோரன்ஸ் பியூ, அந்த நேரத்தை ஒரு கற்றல் வாய்ப்பாக மாற்றிக் கொண்டார். அவர் தொழில்நுட்ப வல்லுநரிடம், "சரி நண்பரே, இந்த கேமராவின் ஷட்டரில் என்ன பிரச்சனை? என்ன ஆனது?"* என்று ஆர்வம் பொங்க கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். </p><p>பின்னர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனும் அங்கு வந்து, கேமராவிற்குள் வெளிச்சம் தவறான வழியில் ஊடுருவியதால் தான் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பதை விளக்கியுள்ளார்.</p><h2><strong>படக்குழுவின் மீதான பாராட்டு:</strong></h2><p>இந்த சம்பவத்தைக் குறிப்பிட்ட ஃப்ளோரன்ஸ் பியூ, 'ஓபன்ஹைமர்' படக்குழுவின் தொழில்முறை திறமையைப் வெகுவாகப் பாராட்டினார். "படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒவ்வொரு நபரும் சினிமா தொழில்நுட்பத்தைப் பற்றி மிகவும் ஆழமான அறிவு படைத்தவர்களாக இருந்தனர்.</p><p>இத்தகைய அர்ப்பணிப்புள்ள குழுவுடன் பணியாற்றிய ஒவ்வொரு நொடியும் எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்" என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-till-july-27th-across-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-till-july-27th-across-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">bf9f4b4c-3e24-4d3e-9ce0-a9d94db7a6f4</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:46:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:46:05.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/n37k2se7/rain005.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/n37k2se7/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <p>23-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>24-ந்தேதி வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>25-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>27-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 23-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/opposition-parties-disrupt-parliament-both-houses-adjourned-all-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/opposition-parties-disrupt-parliament-both-houses-adjourned-all-day#comments</comments><guid isPermaLink="false">80f983fe-dfb4-40b9-9d41-a984964f3efe</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:42:12 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:42:12.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,நாடாளுமன்றம்,parliment,மழைக்கால கூட்டத்தொடர்,adjourned,ஒத்திவைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/r2vnzj7e/loksabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ loksabha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/r2vnzj7e/loksabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.</p><h2>முக்கிய மசோதாக்கள்</h2><p>இந்தக் கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட் (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>எனினும், நேற்றைய கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.</p><h2>எதிர்க்கட்சிகள் அமளி</h2><p>இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று 2-வது நாளாக கூடியது. அப்போது, எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்டன. டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது.</p><p>இதனைக் கண்டிக்கும் வகையில், அவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.</p><p>இதன்பின்னர், 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது, டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.</p><h2>ஒத்திவைப்பு</h2><p>இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டம் விவகாரத்தில் எங்களை இழுக்காதீர்கள்: டெல்லி உயர்நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-do-not-drag-us-into-it-delhi-high-court-on-plea-alleging-use-of-force-on-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-do-not-drag-us-into-it-delhi-high-court-on-plea-alleging-use-of-force-on-students#comments</comments><guid isPermaLink="false">0f043efb-862c-4dd8-bd9a-c3d180fbbc09</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:41:53 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:41:53.631Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,டெல்லி உயர்நீதிமன்றம்,delhi highcourt,parliament,CJP Protest,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/iavasin7/CJPProtestDelhiHighcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/iavasin7/CJPProtestDelhiHighcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வி தொடர்பான விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தினர்.</p><h2>நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்</h2><p>நேற்று இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்றது. அதேவேளையில் நாடாளுமன்றம் முற்றுகையிடப்படும் என<a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested"> கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</a> அறிவித்தது. அதன்படி ஜந்தர் மந்தரில் நேற்று காலை சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூடினர்.</p><p>அவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணியாக சென்றனர். நாடாளுமன்றம் அருகே சென்றபோது, டெல்லி போலீசார் மற்றும் இந்திய துணை ராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியது. தடுப்புகளையும் தாண்டி அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர். இதனால் மாணவர்களுக்கு எதிரான போலீசார் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை விரட்டியடித்தனர்.</p><h2>போலீசார் மற்றும் மாணவர்கள் காயம்</h2><p>இந்த அசாதாரண சூழ்நிலையில் 100-க்கும் அதிகமான போலீசார் மற்றும் மாணவர்கள் காயம் அடைந்தனர். மாணவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான வகையில் தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.</p><p>இதற்கிடையே மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறையை கண்டிக்க வேண்டும். போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.</p><h2>அவசர மனுவாக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு</h2><p>இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அவசர மனுவாக விசாரிக்க மறுத்து விட்டது. மேலும், இதில் தங்களை இழுக்க நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.</p><p>நீதிபதிகள் டி.கே. உபத்யாயா மற்றும் தேஜாஸ் கரியா அடங்கிய பெஞ்ச் இவ்வாறு தெரிவித்துள்ளது. இது விவகாரம் தொடர்பாக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பட்டியலிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் டெல்லி போலீசார், மாணவர்களுக்கு எதிராக மிக அதிகமான அடக்குமுறையை கையாண்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.</p><p>நேற்று மாலை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு செய்தி தொடர்பாளர்கள் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து பேசினர். அப்போது தர்மேந்திர பிரதானை நீக்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்தனர். 3 கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார் போராட்டத்தை கைவிட தயார் என்றனர்.</p><p>இன்று காலையும் பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்வோம் என கரப்பான் பூச்சி ஜனதா தளம் தெரிவித்திருந்தது.</p>]]></content:encoded></item><item><title>‘பரந்தூருக்கு பதில் விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தற்போதுவரை தமிழ்நாடு அரசு கோரவில்லை’ - மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/second-airport-for-chennai-the-tamil-nadu-government-has-not-yet-requested-an-alternative-site-to-parandur-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/second-airport-for-chennai-the-tamil-nadu-government-has-not-yet-requested-an-alternative-site-to-parandur-central-government#comments</comments><guid isPermaLink="false">097edde7-d8b9-48ea-8efd-1c2ab8e4098a</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:30:24 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:30:24.758Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,பரந்தூர் விமான நிலையம்,Parandur,Civil Aviation,T.N. govt,airport site,மத்திய விமான போக்குவரத்துத் துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ab8sq356/New-Project-2026-07-21T143402.771.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ "The Tamil Nadu government has not yet requested an alternative site for the airport in place of Parandur" – Central Government.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ab8sq356/New-Project-2026-07-21T143402.771.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னைக்காக முன்மொழியப்பட்ட இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, தமிழ்நாடு அரசு இதுவரையிலும் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என மத்திய விமானப் போக்குவரத்துத்துறையின் இணை அமைச்சர் முரளிதர் கிசான் மொஹோல் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.</p><p>திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், ‘முன்மொழியப்பட்ட விமான நிலையத்தை இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசு எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை’ என்று எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.</p><p>“காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஒரு சர்வதேச புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு தொழிற்கல்வி கழகத்திற்கு (டிட்கோ) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2025 ஏப்ரல் 7 அன்று கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. </p><p>2024 செப்டம்பரில் டிட்கோ சமர்ப்பித்த கொள்கை ரீதியான விண்ணப்பத்தின்படி, திட்டத்தின் முதல் கட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ. 10,500 கோடி ஆகும்.” என தெரிவித்தார். </p><h2>பரந்தூர் விமான நிலையத் திட்டம்</h2><p>மத்திய அரசால் சென்னையில் முன் மொழியப்பட்ட இந்த இரண்டாவது விமான நிலையம், நகரத்திலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள பரந்தூரில் 5,746 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவைப்படும் மொத்த நிலத்தில், சுமார் 2,500 ஏக்கர் தனியார் நிலமாகவும் (பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுடையது), மீதமுள்ள நிலம் அரசுக்குச் சொந்தமானதாகவும் உள்ளது.</p><p>பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, இடப்பெயர்வு மற்றும் விவசாய நில இழப்பு குறித்த கவலைகள் காரணமாக ஏகனாபுரம் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நாட்கள் இம்மக்களின் போராட்டம் தொடர்ந்தாலும், யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை.</p><p>இச்சூழலில், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, ​​தவெக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ஜோசப் விஜய், கடந்தாண்டு ஜனவரி அப்பகுதிக்குச் சென்று, அம்மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். </p><p>போராட்டக் களத்திற்கு செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி, தனியார் மண்டபம் ஒன்றில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் முக்கிய பிரதிநிதிகளை அழைத்து, இந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு துணை நிற்பதாக உறுதியளித்தார்.</p><p>மேலும் வளர்ச்சியை தடுக்கவில்லை என்றும், மாற்று இடத்தையே தேர்வு செய்ய வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போதுவரை அவர் தலைமையிலான அரசு அமைந்தபிறகும் இந்த இடமாற்றம் தொடர்பாக பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>விருப்பப்பட்ட மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி: சோனம் வாங்சுக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-allows-sonam-wangchuk-to-choose-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-allows-sonam-wangchuk-to-choose-hospital#comments</comments><guid isPermaLink="false">34e3718a-3779-4513-b170-7f9786486191</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:23:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:23:54.089Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi High Court,Sonam Wangchuk,டெல்லி உயர் நீதிமன்றம்,சோனம் வாங்சுக்,Medanta,மெதாந்தா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/cf31ixy2/sonam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/cf31ixy2/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பினர் (CJP) நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக 24 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரபல பருவநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், டெல்லி சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையிலிருந்து குருகிராமில் உள்ள மெதாந்தா தனியார் மருத்துவமனைக்கு மாற டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p><p>தனக்கு விருப்பமான மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><h2><strong>சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றம்:</strong></h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்ததால், காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக அகற்றி சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p>சஃப்தர்ஜங் மருத்துவமனையின் பரிசோதனை அறிக்கைகளில் முரண்பாடுகள் இருப்பதாகக் குற்றம்சாட்டிய அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தை நாடினார்.</p><h2><strong>வழக்கறிஞர்களின் காரசார வாதம்:</strong></h2><p>சோனம் வாங்சுக் கைது செய்யப்படவோ அல்லது எவ்விதக் குற்றச்சாட்டின்கீழ் சிறையில் அடைக்கப்படவோ இல்லை என சுட்டிக்காட்டிய சிரேஷ்ட வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அகில் சிபல், ஒரு குடிமகனுக்குத் தனக்குப் பிடித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற முழு உரிமை உண்டு என வாதிட்டனர்.</p><h2><strong>மத்திய அரசின் சம்மதம்:</strong></h2><p>மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சோனம் வாங்சுக்கை மெதாந்தா மருத்துவமனைக்கு மாற்றுவதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.</p><p>சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இதுவரை சோனம் வாங்சுக்கிற்கு அளிக்கப்பட்ட அனைத்து மருத்துவச் சான்றுகளும் அறிக்கைகளும் உடனடியாக மெதாந்தா மருத்துவமனைக்கு வழங்கப்பட வேண்டும்.மெதாந்தா மருத்துவமனை இயக்குநர் தலைமையில் சோனம் வாங்சுக்கிற்கு சிகிச்சை அளிக்கத் தனியாக மருத்துவர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். மெதாந்தா மருத்துவர்களின் ஆலோசனையின்றி அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படக் கூடாது.</p><h2><strong>சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை:</strong></h2><p>24 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கும் சோனம் வாங்சுக்கின் ரத்தத்தில் பொட்டாசியம் அளவுகள் குறைந்துள்ளதாகவும், யூரிக் அமிலம் அதிகரித்து உள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. உடலில் சர்க்கரை அளவு குறைந்துள்ள போதிலும், அவர் உணவு மற்றும் குளுக்கோஸ் எடுத்துக்கொள்ள மறுத்து வருவதால், தொடர்ந்து தீவிர கண்காணிப்பு தேவை என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் - பாடகர் அறிவு கைது
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/slogans-raised-against-neet-exam-singer-arivu-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/slogans-raised-against-neet-exam-singer-arivu-arrested#comments</comments><guid isPermaLink="false">77516b2d-5a97-484d-ab57-83028e4f9e4e</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:15:55 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:15:55.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrested,நீட் தேர்வு,Neet exam,Singer Arivu,பாடகர் அறிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ovva776v/arivu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Singer Arivu arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ovva776v/arivu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.</p><p>சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து <a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">நீட் தேர்வை</a> ரத்து செய்யுமாறு கோஷமிட்ட பாடகர் அறிவை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்றனர்.</p><p>பாடகர் அறிவு (அறிவரசு கலைநேசன்) ஒரு இந்திய சொல்லிசை, பாடலாசிரியர், மற்றும் பின்னணிப் பாடகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகின்றார். அனிருத்தின் இசையமைப்பில் மாசுடர் (2021) படத்திற்காக இவர் எழுதிய "வாத்தி இரைடு" பாடலுக்காகவும், தீ உடன் இணைந்து இவர் பாடிய "எஞ்சாய் எஞ்சாமி" என்ற பாடலாலும் புகழ் பெற்றார். பாடகர் அறிவு தவெகவின் கொடிப்பாடலை பாடி உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>உத்தரகாண்டில் கனமழை: டப்கேஷ்வர் மகாசிவன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/uttarakhand-downpour-dabkeshwar-mahadev-temple-flooded</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttarakhand-downpour-dabkeshwar-mahadev-temple-flooded#comments</comments><guid isPermaLink="false">6cbb8e1e-ff39-445e-8e3f-1d52e8ddc9e7</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:15:25 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:15:25.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sdrf,FlashFloods,TapkeshwarMahadev,DehradunRain,UttarakhandFloods,TamsaRiver</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/pt3gtf0j/Tapkeshwar-Shiva-temple-Floods" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tapkeshwar Shiva temple Floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/pt3gtf0j/Tapkeshwar-Shiva-temple-Floods?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/uttarakhand">உத்தரகண்ட் </a>மாநிலத்தின் தலைநகரான டேராடூண் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இதன் விளைவாக, அங்குள்ள முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் கிடுகிடுகென உயர்ந்து தரைத்தளம் அனைத்தும் வெள்ளக்கிடங்காய் ஓடியது.</p><h2><strong>கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்:</strong></h2><p>டேராடூணில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பழமையான 'டப்கேஷ்வர் மகாசிவன் கோவில்' வளாகத்திற்குள் தம்சா நதியின் காட்டாற்று வெள்ளம் புகுந்துள்ளது. </p><p>நதியில் ஏற்பட்டுள்ள ராட்சத வெள்ளப்பெருக்கு காரணமாக, வெள்ள நீரானது கோவிலின் தரைத்தளம் மற்றும் படிக்கட்டுகளை முழுமையாக மூழ்கடித்தபடி ஓடியது.</p><p>கோவிலின் உள்ளே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பிரதான கட்டமைப்புகள் மற்றும் சிலைகளைச் சுற்றிலும் தம்சா நதி வெள்ளம் அதிவேகத்தில் பாய்கிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Uttarakhand: Tamsa River in spate following incessant heavy rainfall in Dehradun and its surrounding areas. The river is flowing through the historic Tapkeshwar Mahadev Temple. <a href="https://t.co/l1XumQQMR9">pic.twitter.com/l1XumQQMR9</a></p>&mdash; ANI UP/Uttarakhand (@ANINewsUP) <a href="https://x.com/ANINewsUP/status/2079421037440278806?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>பாதுகாப்பு எச்சரிக்கை:</strong></h2><p>தொடர் மழையினால் ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நதிக்கரையோரப் பகுதிகளுக்கோ அல்லது டப்கேஷ்வர் கோவில் வளாகத்திற்கோ செல்ல வேண்டாம் என உள்ளூர் நிர்வாகமும் பாதுகாப்புப் படையினரும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கண்ணுக்குக் கண் பதிலடி: மத்திய கிழக்கில் புதிய பதற்றம்... சவுதி அரேபியாவிற்கு எதிராக கடல்வழி முற்றுகையை அமல்படுத்துவதாக ஹூதி அமைப்பு அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/tit-for-tat-retaliation-tensions-in-the-middle-east-reach-a-new-peak-houthi-group-announces-a-maritime-blockade-against-saudi-arabia</link><comments>https://www.maalaimalar.com/news/world/tit-for-tat-retaliation-tensions-in-the-middle-east-reach-a-new-peak-houthi-group-announces-a-maritime-blockade-against-saudi-arabia#comments</comments><guid isPermaLink="false">886c7ebc-d2b2-445c-9f58-bfe745766033</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:59:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:59:42.429Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,சவுதி அரேபியா,செங்கடல்,Red Sea,houthis,ஹூதி அமைப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/we6ttne1/New-Project-2026-07-21T142917.713.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கண்ணுக்குக் கண் பதிலடி: மத்திய கிழக்கில் புதிய உச்சக்கட்ட பதற்றம்... சவுதி அரேபியாவிற்கு எதிராக கடல்வழி முற்றுகையை அமல்படுத்துவதாக ஹூதி அமைப்பு அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/we6ttne1/New-Project-2026-07-21T142917.713.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானின் ஆதரவுப்பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பு, சவுதி அரேபியாவுக்கு எதிராக உடனடி கடற்படை முற்றுகையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஏமன் மக்கள் அனைவரும் போருக்கு ஆயத்த நிலையில் இருக்குமாறும், ஆயுதமேந்தி போரிடத் தயாராகுமாறும் அழைப்பு விடுத்துள்ளது. </p><p>கடந்த வாரம் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தை சவூதி அரேபியா தாக்கியதாக ஹூதிகள் குற்றம் சாட்டினர். இதற்குப் பதிலடியாக, சவூதியின் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹூதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாகவே இந்த கடல்வழி முற்றுகை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே தங்களின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடலை மறிக்குமாறு ஹூதிகளுக்கு ஈரான் அழைப்பு விடுத்திருந்தது.</p><p>ஏமனின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ வெளியிட்ட வீடியோவில், பல ஆண்டுகளாக ஏமன் மக்கள் மீது சவூதி விதித்துள்ள தடைகளுக்குப் பதிலடியாக, "கண்ணுக்குக் கண்" என்ற அடிப்படையில் இந்த முற்றுகை உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் தீவிரப் போர்ச் சூழலுக்கு மத்தியில், சவுதி அரேபியாவின் வணிகக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை இலக்கு வைத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஹார்முஸ் வழியாக செல்லமுடியாத கப்பல்களுக்கு, பாப் அல்-மண்டேப் ஜலசந்தி ஒரு மாற்றுப் பாதையாக இருந்து வருகிறது. </p><p>செங்கடலின் தென்முனைக்குள் செல்லும் பாப் அல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஏமன் பகுதியை ஹூதிகள் கட்டுப்படுத்துகின்றனர். இந்த ஜலசந்தியை மூடுவதால் உலகின் எண்ணெய் விநியோகம் 7 ​​சதவீதம் குறையும் என்றும், சவூதியின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதிகள் மத்திய கிழக்கிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>ஹார்மூஸ்க்கு இணையாக இருந்த மற்றொரு வர்த்தகப் பாதையையும் மூடுவது உலகப் பொருளாதாரத்தின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>&apos;இது முதலமைச்சர் விஜய் ஆட்சி&apos; என்று சொன்ன பிறகும் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை!- டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-farmers-distressed-that-bribes-are-being-demanded-even-after-declaration-that-this-is-cm-vijays-regime</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-farmers-distressed-that-bribes-are-being-demanded-even-after-declaration-that-this-is-cm-vijays-regime#comments</comments><guid isPermaLink="false">f481c958-8a93-499e-9153-ccc98004e726</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:51:17 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:51:17.559Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,நெல் கொள்முதல்,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7qykdquq/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7qykdquq/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>விவசாயிகள் எந்தவித இடையூறும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விலையுடனும் தங்களது நெல்லை விற்பனை செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யும் வகையில் நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</aside><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>புகார்</strong></h2><p>தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> செய்யும் பெயரில் ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ கூடுதல் எடை கேட்பது, "தூற்றுகிறோம்" என்ற பெயரில் மேலும் ஒன்றரை கிலோ நெல்லை பிடித்தம் செய்வது, அதோடு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருக்கும் விவசாயிகள், லஞ்சம் வழங்க மறுத்தால் "நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது" என்ற காரணத்தைக் கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><h2><strong>அலட்சியம்</strong></h2><p>சில தினங்களுக்கு முன்னர், கடலூர் மாவட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் மேற்கொண்ட ஆய்விலேயே ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.50 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal">லஞ்சம்</a> வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>ஏற்கனவே, தேர்தலுக்கு முன் தவெக அளித்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி, இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் ஏற்பட்டுள்ள வறட்சி, விதை நெல் மற்றும் உரங்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல்லை விற்பனை செய்யவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, தவெக அரசின் விவசாயிகள் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.</p><p>"லஞ்சம் கேட்டால், 'இது முதலமைச்சர் விஜய் ஆட்சி' என்று கூறுங்கள்" என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்ததை நம்பி, அதிகாரிகளிடம் முறையிட்ட விவசாயிகளுக்கு, "நீங்கள் கொடுக்கும் லஞ்சம் எங்களுக்கு மட்டும் அல்ல; மேலிடம் வரை செல்கிறது" என்ற பதிலே கிடைப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுவே முதலமைச்சர் விஜய் கூறிய 'வெளிப்படையான ஆட்சி' என்பதன் உண்மையான பொருளா? என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புகின்றனர்.</p><h2><strong>வேதனை</strong></h2><p>தமிழகத்தில் விவசாயம் செய்வதே சாத்தியமற்றதாக மாறியுள்ளதாகவும், இந்த நெருக்கடி நிலை தொடர்ந்தால், தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும், அதோடு கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எப்படி ரூ.30 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கினார்களோ அதைப்போலவே எங்களுக்கு பின் எங்கள் குடும்பத்திற்கும் கொடுங்கள் என விரக்தியான மனநிலையில் விவசாயிகள் எழுப்பும் கேள்வி அரசின் செயல்பாடுகள் மீதான அவர்களின் விரக்தியையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறது.</p><p>எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, லஞ்சம் மற்றும் எடை முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகள் எந்தவித இடையூறும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விலையுடனும் தங்களது நெல்லை விற்பனை செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யும் வகையில் நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>&quot;இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல, பிரதமர் மோடி!&quot;-அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/this-country-is-not-your-fathers-property-pm-modi-arvind-kejriwal-slams</link><comments>https://www.maalaimalar.com/news/national/this-country-is-not-your-fathers-property-pm-modi-arvind-kejriwal-slams#comments</comments><guid isPermaLink="false">bb6e8b41-1b67-4a55-a856-90a72e3cd6a4</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:44:32 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:44:32.435Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,delhi,பிரதமர் மோடி.,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/33g1tsxf/MODI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modi-Arvind Kejriwal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/33g1tsxf/MODI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு மற்றும் ஆளும் பாஜகவின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி அக்னி கணைகளை வீசியுள்ளார். </p><p>டெல்லியில் நடைபெற்ற முக்கிய அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார்.</p><h2><strong>அதிகார துஷ்பிரயோகம் குறித்த சாடல்:</strong></h2><p>மத்திய அரசின் அடக்குமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய கெஜ்ரிவால், "இந்த ஜனநாயக நாடு மக்களுக்கே சொந்தமானது. இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல Mr.மோடி!" என்று மிக ஆவேசமாகக் கூறினார்.</p><h2><strong>ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்:</strong></h2><p>மத்திய அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தவறான வழிகளில் ஆட்சி நடத்துவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் குரல்களையும் நசுக்கப் பார்ப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.</p><h2><strong>நாடு தழுவிய கொந்தளிப்பு:</strong></h2><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை முடக்க நினைக்கும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.</p><h2><strong>அரசியல் களத்தில் நிலவும் அதிர்வலைகள்:</strong></h2><p>அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அதிரடியான கருத்து, தேசிய அரசியலிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆம் ஆத்மி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இக்கருத்தைப் பரப்பி வரும் நிலையில், பாஜக தரப்பில் இருந்து இதற்குக் கடுமையான எதிர்ப்புகளும் பதிலடிகளும் வரத் தொடங்கியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை - மல்லிகார்ஜூன கார்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-decided-not-celebrate-birthday-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-decided-not-celebrate-birthday-today#comments</comments><guid isPermaLink="false">be4bfd4a-1099-42c1-a508-04536354f321</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:40:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:40:26.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,mallikarjun kharge,மல்லிகார்ஜூன கார்கே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/09/30/1769804-mallikarjunkharge.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மல்லிகார்ஜூன கார்கே]]></media:title><media:description type="html"><![CDATA[ Mallikarjun Kharge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/09/30/1769804-mallikarjunkharge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் மூத்த தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87">மல்லிகார்ஜூன கார்கே</a>வுக்கு இன்று 84-வது பிறந்தநாள். ஆனால் தான் பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை என்று அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-</p><p>நீட் தேர்வுக்காக காலவரையின்றி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் வாங்சுக் வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கரப்பான்பூச்சி கட்சி சார்பில் நடத்தப்பட்ட அமைதியான ஜனநாயக போராட்டத்தை அரசு ஒடுக்கியதையும், தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டு வீச்சுகளையும் நாடு நேற்று கண்டது. நீதி கோரிய <a href="https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears">மாணவர்கள்</a> குரலுக்கு வன்முறைதான் பதிலாக கிடைத்தது. இத்தகைய வேதனையான சூழ்நிலையில் இன்று எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.</p><p>இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் முழுமையாக விவாதிக்க வேண்டும். மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தானாக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும். மாணவர்களுக்கு தேவை நீதிதான். ஒடுக்குமுறை அல்ல.</p><p>இவ்வாறு கார்கே அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் அடுத்த பிரம்மாண்டம்: துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/work-on-the-harbour-to-maduravoyal-double-decker-flyover-intensifies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/work-on-the-harbour-to-maduravoyal-double-decker-flyover-intensifies#comments</comments><guid isPermaLink="false">b24dc60f-7284-47c4-a0e2-c96083aced2a</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:39:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:39:54.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை,மேம்பால பணிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oey5mtne/maduravoyoal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் அடுக்குக்கான கார்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம். ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் அடுக்குக்கான கார்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oey5mtne/maduravoyoal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>நகரின் மையப்பகுதியில் இருந்து கோயம்பேடு அல்லது மதுரவாயல் நோக்கிச் செல்லும் உள்ளூர் வாகனங்கள் சிக்னல்கள் இல்லாத கீழ் தளத்தைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் இலக்கை அடையலாம்.</aside><p>சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான ஈரடுக்கு மேம்பாலம் ரூ.3,570 கோடி முதல் ரூ.5,770 கோடி வரையிலான மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த 21 கி.மீ. நீளமுள்ள திட்டம், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 2 தளங்களைக் கொண்டுள்ளது.</p><h2><strong>6 வழிச்சாலை</strong></h2><p>மேல்தளம் துறைமுக சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்படும் 6 வழிச்சாலை. இது துறைமுகம் வரை தொடர்கிறது. கீழ்த்தளம் சாதாரண உள்ளூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படும் 4 வழிச்சாலை.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">மதுரவாயல்</a> முதல் கோயம்பேடு வரை ஒற்றைத் தளம் மட்டுமே இருக்கும். உள்ளூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, முதல் அடுக்கில் மொத்தம் 13 இடங்களில் சாய்தளங்கள் (7 ஏறும் வழிகள் மற்றும் 6 இறங்கும் வழிகள்) அமைக்கப்படுகின்றன.</p><p>கோயம்பேடு, சிவானந்தா சாலை, ஸ்பர்டேங்க் சாலை மற்றும் கல்லூரி சாலை வாகனங்கள் ஏறி இறங்குவதற்கான சாய்தளங்கள் அமைக்கப்படுகின்றன. சிவானந்தா சாலை மற்றும் கல்லூரி சாலை ஆகிய 2 இடங்களில் இந்த மேம்பாலத்தில் நுழைவதற்கும், காமராஜர் சாலை, ஸ்பர்டேங்க் சாலை உட்பட 2 இடங்களில் வெளியேறுவதற்கும் பிரத்தியேகப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.</p><figure><img alt="ஈரடுக்கு மேம்பாலத்தின் மாதிரி தோற்றம்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/cxyuzk8r/maduravoyal0.jpg" /><figcaption>ஈரடுக்கு மேம்பாலத்தின் மாதிரி தோற்றம்</figcaption></figure><h2><strong>போக்குவரத்து நெரிசல் குறையும்</strong></h2><p>இந்த மேம்பாலம் சென்னை துறைமுகம் கதவு எண் 10 (நேப்பியர் பாலம் அருகில்) தொடங்கி, கூவம் ஆற்றின் கரையோரமாக பயணித்து, கோயம்பேடு வழியாகச் சென்று மதுரவாயல் சந்திப்பில் முடிவடைகிறது. துறைமுகம் முதல் கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் போக்கைப் பின்பற்றி ஈரடுக்கு பாலமாக அமைகிறது.</p><p>கோயம்பேடு முதல் மதுரவாயல் வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் ஒற்றை அடுக்கு பாலமாகத் தொடர்கிறது. சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மேல் தளத்தில் நேரடியாகச் செல்வதால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும்.</p><p>நகரின் மையப்பகுதியில் இருந்து கோயம்பேடு அல்லது மதுரவாயல் நோக்கிச் செல்லும் உள்ளூர் வாகனங்கள் சிக்னல்கள் இல்லாத கீழ் தளத்தைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் இலக்கை அடையலாம்.</p><p>செம்பரம்பாக்கம் அருகே உள்ள 64 ஏக்கர் பரப்பளவிலான யார்டில், மேம்பாலத்திற்கான பிரம்மாண்ட கான்கிரீட் தூண்கள் மற்றும் ‘பாக்ஸ் கார்டர்’ தயாரிக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.  </p><h2><strong>கார்டர்கள் பொருத்தும் பணி</strong></h2><p>கடந்த மே மாதம் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இப்பணிகள், பருவமழை உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் சற்றே தாமதமானது. தற்போது, தினமும் பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என மொத்தம் 11 மணி நேரங்கள் தீவிரமாகப் பணிகள் நடந்து வந்தன. தற்போது நாள் ஒன்றுக்கு  16 மணி நேரமாக உயர்த்தி பணிகளை விரைவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.  முதல் அடுக்குக்கான கார்டர்களைப் பொருத்தும் பணி தற்போது தொடங்கி உள்ளது. </p> <p>மொத்தம் 21 கி.மீ. நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தின் 15 கி.மீ. பகுதி கூவம் ஆற்றின் வழியே செல்கிறது. இந்த மேம்பாலத்தின் பணிகள் அனைத்தும் நவம்பர் 2027-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், தினசரி சுமார் 20 ஆயிரம் உள்ளூர் வாகனங்களும், 5,500 கனரக வாகனங்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரின் உட்புறச் சாலைகளில் நிலவும் நெரிசலை பெருமளவு குறைக்கும்.</p><h2><strong>சென்னைக்கு வரப்பிரசாதம்</strong></h2><p>வரும் காலங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டிற்குள் இந்த உயர்மட்டச் சாலையில் பயணிக்கும் உள்ளூர் வாகனங்களின் எண்ணிக்கை தினசரி 52,080 ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p><p>2047-ம் ஆண்டுக்குள் சென்னை துறைமுகத்தின் சரக்குக் கையாளுதல் திறன் ஆண்டுக்கு 200 மில்லியன் டன்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஈரடுக்கு மேம்பால சாலை சென்னைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.</p>]]></content:encoded></item><item><title>ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல் ஹய்யா தேர்வு.. யார் இவர்?</title><link>https://www.maalaimalar.com/news/world/hamas-appoints-khalil-al-hayya-as-new-leader-amid-gaza-government-dissolution-and-genocide-allegations</link><comments>https://www.maalaimalar.com/news/world/hamas-appoints-khalil-al-hayya-as-new-leader-amid-gaza-government-dissolution-and-genocide-allegations#comments</comments><guid isPermaLink="false">a740404d-cf01-4752-9cac-6232bc41a6de</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:32:18 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:32:18.585Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காசா,இஸ்ரேல்,gaza,Israel,Hamas,ஹமாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/isml521y/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கலீல் அல் ஹய்யா]]></media:title><media:description type="html"><![CDATA[ கலீல் அல் ஹய்யா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/isml521y/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலஸ்தீனத்தின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">காசா</a>வில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல் ஹய்யா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். </p><p>2024 அக்டோபரில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் பின் தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டுள்ளார். </p><h2> கலீல் அல் ஹய்யா </h2><p>ஹமாஸின் அரசியல் தலைமையின் நீண்டகால உறுப்பினரான கலீல் அல் ஹய்யா, அந்த அமைப்பின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராவார்.</p><p>காசாவின் ஷஜாய்யா மாவட்டத்தைச் சேர்ந்த அல் ஹய்யா, ஹமாஸை உருவாக்கிய தலைவர்களின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். </p><p>அவர் ஹமாஸின் அரசியல் குழுவில் நீண்டகால உறுப்பினராக இருந்ததுடன், அக்குழுவின் கொள்கையை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.</p><p>காசாவிலும் சர்வதேச அளவிலும் நடந்த பேச்சுவார்த்தைகளில் அந்த அமைப்பின் பிரதான குரலாக விளங்கினார். </p><p>இஸ்ரேலின் 'மிகவும் தேடப்படும்' பட்டியலில் உள்ள தலைவர்களில் அல் ஹய்யாவும் ஒருவர்.  கடந்த பல ஆண்டுகளாக கத்தாரின் தோஹாவில் தங்கியிருந்தார்.</p><p>இஸ்ரேலுடனான மோதல்களின் போது, ​​அவரது வீடுகளும் அலுவலகங்களும் இஸ்ரேலிய படைகளால் பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டு நடந்த ஒரு தாக்குதலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.</p><p>யஹ்யா சின்வாரின் மரணத்தைத் தொடர்ந்து ஹமாஸ் சந்தித்து வரும் உலகளாவிய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அல் ஹய்யாவின் நியமனம் வந்துள்ளது. </p><figure><img alt="மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உடன் அல் ஹயா" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/jjpim213/tn-15.jpg" /><figcaption>மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உடன் அல் ஹய்யா</figcaption></figure><h2>ஹமாஸ் அரசு கலைப்பு</h2><p>புதிய தலைமையின் கீழ் ஹமாஸின் இராஜதந்திர மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மாறுமா என்பதை சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்து வருகிறது.</p><p>ஏற்கனவே காசாவில் இருந்த தங்கள் அரசு நிர்வாகத்தை ஹமாஸ் கலைத்தது. அமெரிக்கா தலைமையில் கடந்த அக்டோபரில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தங்கள் அரசை ஹமாஸ் கலைத்தது.</p><p>போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்கி வருவதாலும், காசாவுக்குள் மக்களுக்கு தேவையான உணவு, மருந்து மற்றும் நிவாரண பொருட்களை உள்ளே வர விடாமல் இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளதாலும் அங்கு மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.</p><p>எனவே ஒப்பந்தபடி தங்கள் அரசை கலைத்து, சர்வதேச சமூகத்தின் மூலமும் அமெரிக்கா மூலமும் இஸ்ரேலுக்கு நெருக்கடி அளிக்கவே ஹமாஸ் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காசாவை நிர்வகித்து வந்த தங்கள் அரசை கலைத்ததாக கூறபடுகிறது. ஆனால் ஒப்பந்தத்தில் உள்ள மற்றொரு நிபந்தனையான ஆயுதங்களை கைவிடும் நிபந்தனைக்கு ஹமாஸ் உடன்பட தொடர்ந்து மறுத்து வருகிறது.</p><h2> காசா இனப்படுகொலை </h2><p>காசாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அதன் உரிமைகளை பறிப்பதாக கூறி, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.</p><p>பழிவாங்கவும், பணய கைதிகளை மீட்கவும் காசா மீது <a href="https://www.maalaimalar.com/topic/israel">இஸ்ரேல் </a>நடத்தி வந்த தாக்குதல் கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்காவின் தலையீட்டில் பெயரளவில் முடிவுக்கு வந்தது.</p><p>ஆனால் ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,000 த்தை கடந்துள்ளது. இதில் பாதி பேர் காசாவை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p>ஹமாஸ் மீதான தாக்குதல் போர்வையில் மக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியும், செயற்கையான பஞ்சத்தை உருவாக்கியும், கட்டாய இடப்பெயர்வு செய்ய வைத்தும் இன அழித்தொழிப்பில் ஈடுபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. காசாவில் இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்களை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அந்நாட்டு பிரதமர் நேதன்யாகுவை போர் குற்றவாளி என அறிவித்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. </p> ]]></content:encoded></item><item><title>பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">03334d6b-6bde-42fe-a82d-3764dba7b6c9</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:24:57 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:24:57.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Madras High Court,சென்னை ஐகோர்ட்,பெரம்பூர் தொகுதி,Perambur constituency,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-07/t4hvg0wz/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Madras high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-07/t4hvg0wz/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.</p><h2>பெரம்பூர் தொகுதி</h2><p>சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice">விஜய்</a> 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதலமைச்சர் விஜய் மொத்தம் 1,20,365 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66 ஆயிரத்து 650 வாக்கு பெற்றிருந்தார். </p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து தி.மு.க.  வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p> தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கில், வேட்புமனுவில்  முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி இருப்பதாகவும், சொத்து விவரங்கள் மற்றும் வழக்குகள் விவரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை என்பதால் விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>ஐகோர்ட் நோட்டீஸ்</h2><p>இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என, ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து, முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- பயணிகள் எதிர்பார்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/when-will-the-new-tiruvallur-bus-station-come-into-use-expectations-of-passengers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/when-will-the-new-tiruvallur-bus-station-come-into-use-expectations-of-passengers#comments</comments><guid isPermaLink="false">4da0550b-2a0b-4307-b3f5-df19987c73b0</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:17:11 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:17:11.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruvallur Bus Stand,பயணிகள்,திருவள்ளூர் பஸ் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/e83st0to/tiruvallur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தை படத்தில் காணலாம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தை படத்தில் காணலாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/e83st0to/tiruvallur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>திருவள்ளூரில் கடும் இட நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பஸ்நிலைய பயணிகள் புதிய பஸ்நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.</aside><h2><strong>கடும் நெரிசல்</strong></h2><p>திருவள்ளூர் ராஜாஜி சாலையில் பஸ் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த நிலையம் அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் உள்ளது. இங்கிருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.</p><p>தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படும் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 பஸ்களை மட்டுமே நிறுத்த முடியும்.  மேலும் பஸ் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழி குறுகலாக இருப்பதால் பஸ்கள் உள்ளே சென்று விட்டு வெளியே வரவும் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினந்தோறும் பஸ்நிலைய பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. </p><h2><strong>மாவட்ட நிர்வாகம்</strong></h2><p>இதைத்தொடர்ந்து  2019-ம் ஆண்டு திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லுாரில் ரூ.36 கோடி  மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற்றது. </p><p>பஸ் நிலைய பணி இறுதி கட்டத்தில் இருந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கடந்த மார்ச் 4-ந் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டது.  பின்னர் மீதம் உள்ள கட்டுமான பணிகளையும் முடித்து மார்ச் 30-ந் தேதி முதல் அனைத்து பஸ்களும் வேடங்கிநல்லுார் புதிய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. </p><h2><strong>தாமதம்</strong></h2><p>ஆனால் இன்னும் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை.  கட்டுமான பணிகள் இன்னும் முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. பஸ் நிலையத்தின் முன் சாலையை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. </p><p>இதன் காரணமாக புதிய பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.</p><p>திருவள்ளூரில் கடும் இட நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பஸ்நிலைய பயணிகள் புதிய பஸ்நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். </p><p>புதிய பஸ்நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. பஸ்நிலையத்தில் இறுதி கட்ட பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>video-&apos;டாக்ஸிக்&apos; படத்தின் &apos;தடுமாறுதே&apos; பாடல் வெளியீடு: யஷ்-தாரா சுதாரியா கெமிஸ்ட்ரியால் தூள் பறக்கும் இணையதளம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/thadumaaruthey-romantic-track-from-toxic-yash-tara-sutaria-sets-internet-abuzz</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/thadumaaruthey-romantic-track-from-toxic-yash-tara-sutaria-sets-internet-abuzz#comments</comments><guid isPermaLink="false">cd83cadf-d4de-4f90-a4d5-84e226a80a42</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:10:39 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:10:39.706Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>யஷ்,Yash,Toxic,டாக்ஸிக்,Tara Sutaria,தாரா சுதாரியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/w0dgo5w5/yash.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Yash-Tara Sutaria]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/w0dgo5w5/yash.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'கே.ஜி.எஃப்' திரைப்பட வரிசைகளின் உலகளாவிய பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, கன்னடத் திரையுலகின் 'ராக்ஸ்டார்' யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள 'டாக்ஸிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' திரைப்படத்தின் இரண்டாவது ரொமாண்டிக் பாடலான 'தடுமாறுதே' லிரிக்கல் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/B08hVmMTmNc"></iframe></figure><p>கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் முந்தைய 'தபாகி' ஆக்ஷன் பாடல் தந்த அதிரடியான வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள இந்த இரண்டாவது பாடலில் யஷ் மற்றும் தாரா சுதாரியா இடையே உள்ள ஆழமான காதல் உணர்வுகளும், வசீகரமான திரைக் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது.</p><p>இப்பாடலுக்குத் தனிஷ்க் பாக்சி, அர்ஸ்லான் நிஜாமி மற்றும் ஃபஹீம் அப்துல்லா ஆகிய மூவர் கூட்டணி மனதை மயக்கும் வகையில் இசையமைத்துள்ளது. பாடகர் சித்தார்த் பஸ்ரூர் தனது வசீகரக் குரலால் தமிழ்ப் பதிப்பைப் பாடியுள்ளார். இப்பாடலின் தமிழ்ப் பதிப்பிற்குப் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகளை எழுதியுள்ளார்.</p><p>"பெரும் புயலும் என்னை தீண்டாதே... புவி ஈர்க்கும் விசை என்னை தள்ளாதே... இவை எல்லாமே இன்று என்னை கைவிட்டதே..." எனத் தொடங்கும் காதல் வரிகள் இப்பாடலுக்கு கூடுதல் அழகைச் சேர்த்துள்ளன.</p><p>திரைப்படத்தில் 'ராயா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் யஷ் மற்றும் 'ரெபெக்கா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் தாரா சுதாரியா ஆகியோரின் காதல் தருணங்களை அழகாகப் படம்பிடித்துள்ள இப்பாடல் வீடியோவில், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மற்றும் தென்னிந்தியத் திரை உலகின் முன்னணி நடிகை நயன்தாரா ஆகியோரின் முக்கியக் காட்சிகளும் இடம்பெற்று கதையின் மீதான சுவாரசியத்தை அதிகரித்துள்ளன.</p><p>கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தில் யஷ், தாரா சுதாரியா, நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். </p><p>ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைக்கும் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26, 2026 அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்பு: டி20 தொடர் குறித்து சிக்கந்தர் ராசா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/both-teams-have-equal-chance-to-win-t20-series-sikandar-raza</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/both-teams-have-equal-chance-to-win-t20-series-sikandar-raza#comments</comments><guid isPermaLink="false">588753c5-f162-44ff-aa2a-13602fd16006</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:09:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:09:51.673Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிக்கந்தர் ராசா,Sikandar Raza,ZIMvIND,ஜிம்பாப்வே இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/44uoroid/raza.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sikandar raza]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/44uoroid/raza.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய ஆணி ஹராரே சென்றடைந்துள்ளது.</p><h2>டி20 தொடர்</h2><p>இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது போட்டி 25-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளது.</p><p>இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரவி பிஷ்னோய் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><h2>சிக்கந்தர் ராசா</h2><p>இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் குறித்து ஜிம்பாப்வே டி20 அணி கேப்டன் சிக்கந்தர் ராசா கூறியதாவது:</p><p>வரவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், இரு அணிகளுக்கும் வெற்றி பெற சம வாய்ப்புள்ள, மிகவும் விறுவிறுப்பான போட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியா வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படும் பேச்சுகளை சிகந்தர் ராசா நிராகரித்துள்ளார்.</p><p>முன்னதாக, புதிய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையில் பெல்பாஸ்டில் அயர்லாந்திடம் 0-2 என்ற கணக்கிலும் டி20 தொடரில் இந்தியா தோல்வி அடைந்தது.</p><p>அதன்பின், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.</p><p>சுப்மன் கில் தலைமையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது</p>]]></content:encoded></item><item><title>இது நியாயமே இல்ல.. கனடா மீது 50% வரியை தீட்டிய டிரம்ப் - கார்னி கொந்தளிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/trump-slaps-50-tariffs-new-duties-on-key-canadian-imports-under-uscanada-trade-dispute</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-slaps-50-tariffs-new-duties-on-key-canadian-imports-under-uscanada-trade-dispute#comments</comments><guid isPermaLink="false">7e76ed43-6ffe-49fa-938c-8b1edc504460</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:07:45 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:07:45.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,taxation,கனடா,canada,வரிவிதிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0ajrnumk/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப், கார்னி ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப், கார்னி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0ajrnumk/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு  கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>கையெழுத்திட்டுள்ளார்.  </p><p>அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், வாகனங்கள் மற்றும் பால் பொருட்கள் மீது கனடா பாகுபாடு காட்டுவதாகக் குற்றம் சாட்டியே டிரம்பின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. </p><h2>புதிய வரி</h2><p>டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவின்படி, இந்த புதிய வரி விகிதங்கள் அடுத்த 30 நாட்களுக்குள் அமலுக்கு வரும். </p><p> வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, இந்தப் புதிய வரியானது, ஒயின், ஐஸ் ஹாக்கி மட்டைகள் மற்றும் சிமெண்ட் போன்ற கனடாவின் முக்கிய சந்தைப் பொருட்களை நேரடியாகப் பாதிக்கும். </p><p>இருப்பினும், எரிசக்திப் பொருட்கள், பொட்டாஷ் மற்றும் ஏற்கனவே சிறப்பு வரிகள் அமலில் பொருட்களுக்கு இந்தப் புதிய 50 சதவீத வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ஆனால் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (USMCA) கீழ் வரும் பொருட்களுக்கும் இந்தப் புதிய வரி பொருந்தும். எனவே இது கனடாவுக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. </p><h2>புதிய சட்டப் பாதை</h2><p>முன்னதாக டிரம்ப் விதித்த பல வரிகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இந்த முறை நீதிமன்றங்களில் எளிதில் ரத்து செய்ய முடியாத புதிய சட்டப் பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p>1930 ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டத்தின் 338 ஆம் பிரிவு எனப்படும், அரிதாகப் பயன்படுத்தப்படும் சட்ட வழிமுறையைப் பயன்படுத்தி டிரம்ப் இந்தப் புதிய வரியை விதித்துள்ளார். </p><p>டிரம்ப் தொடர்ந்து வரிகளை விதித்து வந்தாலும், இதற்கு முன்னர் வட அமெரிக்க ஒப்பந்தங்களின் கீழ் வரும் பொருட்களுக்கு அவர் விலக்கு அளித்திருந்தார். </p><p>ஆனால் இந்த முறை, அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியான கனடாவிற்கு எதிராக கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. </p><p>கனடாவின் பெரும்பாலான மாகாணங்கள் அமெரிக்க மதுபானங்களைப் புறக்கணித்து, அவற்றை கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளன. </p><p> கனடா, அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற வேண்டும் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனடாவின் இந்த நடவடிக்கை அமைந்தது. இந்த சூழலில் இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. </p><p>"கனடா தனது சந்தையிலிருந்து அமெரிக்க மதுபானங்களை விலக்கியுள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பால் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது, மேலும் அமெரிக்காவிலிருந்து தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரம்புகளை விதித்துள்ளது" என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்தார். </p><p>கனடாவின் இந்த பாகுபாட்டிற்குப் பதிலடியாகவே இந்தப் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார். </p><p>அதேபோல சில நாட்களுக்கு முன்பு, கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து பரவிய புகை அமெரிக்காவிற்கும் பரவியதால், கனடா மீது வரிகளை விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தினார். இந்த சூழலில் புதிய வரியானது விதிக்கப்பட்டுள்ளது. </p> <h2>மார்க் கார்னி</h2><p>டிரம்பின் அறிவிப்புக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள கனடா பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF">மார்க் கார்னி</a>, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை USMCA வர்த்தக ஒப்பந்தத்தின் நேரடி மீறல் என்று குற்றம் சாட்டினார்.</p><p>இருப்பினும், சர்ச்சைகளைத் தீர்க்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கனடா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தர்: &quot;இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல, இது மனிதாபிமானம் சார்ந்தது&quot; - நடிகை வரலட்சுமி கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jantar-mantar-not-a-political-issue-a-humanitarian-one-says-actress-varalaxmi</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jantar-mantar-not-a-political-issue-a-humanitarian-one-says-actress-varalaxmi#comments</comments><guid isPermaLink="false">9298c009-b0c8-4586-a57a-757f7e261ca2</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:52:39 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:52:39.374Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DelhiProtest,JantarMantar,VaralaxmiSarathkumar,HumanityFirst,StopViolence,வரலட்சுமிசரத்குமார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/qjskgudw/VaralaxmiSarathkumarSupportDelhiProtest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VaralaxmiSarathkumarSupportDelhiProtest   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/qjskgudw/VaralaxmiSarathkumarSupportDelhiProtest?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கல்வி சீர்திருத்தம் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>இது குறித்து தனது எக்ஸ் தளத்தின் பதிவில் கூறியிருப்பதாவது, 'சில நேரங்களில், நாம் நம் சொந்த வாழ்க்கையில் மூழ்கிப்போய், மேலோட்டமான தகவல்களைக் கேட்டு, பிரச்சினைகள் தானாகவே சரியாகிவிடும் என்று நினைத்துவிடுகிறோம். ஆனால், சமீபத்தில் நாம் கண்ட காட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பரவி வரும் காணொளிகள் மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன.</p><p>நம் சமூகம் இன்னும் எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்பதை அவை காட்டுகின்றன. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீதான வன்முறை எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. நம்மைப் பாதுகாக்க வேண்டியவர்களே நமக்குத் தீங்கு விளைவித்தால், நாம் யாரிடம் செல்வது? அடுத்த தலைமுறையினருக்காகக் கல்வி முறையை மேம்படுத்த ஒரு பேச்சுவார்த்தையை மட்டுமே அவர்கள் கோருகிறார்கள். யாருமே குரல் கொடுக்காத நிலையில், தமக்காகத் தாங்களே குரல் கொடுக்கும் நம் நாட்டின் இளைஞர்களுடன் நான் துணை நிற்கிறேன்.</p><p>உயிர்கள் பறிபோவதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; நடப்பவை எதுவும் சரியல்ல! நமக்கு வெவ்வேறு அரசியல் கருத்துகள் இருக்கலாம்; சில நேரங்களில் மௌனம் பலனளிக்காது, நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. தாமதமாகக் குரல் கொடுப்பதற்கு வருந்துகிறேன். நமக்கு வெவ்வேறு அரசியல் கருத்துகள் இருக்கலாம்; ஆனால் இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல, இது மனிதாபிமானம் சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="qme" dir="ltr"><a href="https://x.com/hashtag/jantarmantar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#jantarmantar</a> <a href="https://t.co/dTeThu2UfY">pic.twitter.com/dTeThu2UfY</a></p>&mdash;   (@varusarath5) <a href="https://x.com/varusarath5/status/2079430114417471707?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி வருகை - திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-visit-ban-on-drone-in-tiruppur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-visit-ban-on-drone-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">36d83f67-0602-4ab4-b0b3-77cfbae2bbb4</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:43:03 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:43:03.195Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,துணை ஜனாதிபதி,சிபி ராதாகிருஷ்ணன்,CP Radhakrishnan,Vice president,Drones Ban,டிரோன் பறக்க தடை,திருப்பூர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/29/23909409-cpradhakrishnan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CP Radhakrishnan - Drones ban]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/29/23909409-cpradhakrishnan.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சிபி.ராதாகிருஷ்ணன்</h2><p>​இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருப்பூரில் தங்குகிறார்.</p><h2>அவினாசி லிங்கேஸ்வரர்</h2><p>​டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை கோவை வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மாலை 5½ மணிக்கு அவினாசியில் உள்ள அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருகை தருகிறார். அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் அருகில் சுந்தரமூர்த்தி நாயனார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கட்டிட புனரமைப்பு பணியில் ‘சிஜிரானை வரிசைக்கல்’ தொடக்க விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.</p><p>​அதன்பிறகு இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள டாலர் இல்லத்துக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். பின்னர் நாளை மறுநாள் காலை 5 மணிக்கு கார் மூலமாக புறப்பட்டு அவர் கோவை செல்கிறார்.</p> <p>​<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">துணை ஜனாதிபதி</a> வருகையை முன்னிட்டு அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நாளை மதியம் 1 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு இரவு நடை சாத்தும் வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை. மறுநாள் காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>டிரோன்கள் பறக்க தடை</h2><p>​துணை ஜனாதிபதி வருகையையொட்டி அவர் செல்லும் வழிகள் மற்றும் வருகைபுரியும் இடங்களில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனீஷ் நாரணவரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மக்களே ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-2#comments</comments><guid isPermaLink="false">c06bac6b-6b04-4642-9bd5-8b4c9398b0d7</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:32:28 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:32:28.292Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0yn34vyy/MKstalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0yn34vyy/MKstalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஆங்கில நாளிதழில் வெளியான தலையங்கத்தை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.</aside><p>தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>தலையங்கம்</strong></h2><p>ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது The Hindu நாளேட்டின் இன்றைய தலையங்கம்.</p><p>நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது.</p><p>ஆட்சியின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt">அலங்கோலங்களை</a> எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது <a href="https://x.com/the_hindu?ref_src=twsrc%5Etfw">@The_Hindu</a> நாளேட்டின் இன்றைய தலையங்கம்.<br><br>நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும்… <a href="https://t.co/MDtwEdbL8J">https://t.co/MDtwEdbL8J</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2079459769883222427?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு.. டெல்லி நோக்கி வந்த பஞ்சாப் விவசாயிகள் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-us-trade-deal-protest-punjab-farmers-stopped-at-shambhu-border-on-way-to-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-us-trade-deal-protest-punjab-farmers-stopped-at-shambhu-border-on-way-to-delhi#comments</comments><guid isPermaLink="false">96ee06e9-2fb8-4d9b-a00c-50e35c16785d</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:17:03 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:17:03.090Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>farmers,விவசாயிகள்,Shambhu Border,மகாபஞ்சாயத்து,ஷம்பு எல்லை,Mahapanchayat</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/84qa21so/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஷம்பு எல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஷம்பு எல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/84qa21so/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இறுதிக்கட்டத்தில் இருக்கும் <a href="https://www.maalaimalar.com/news/world/india-us-trade-deal-soon-trump-cites-close-ties-with-modi-for-smooth-agreement">இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு</a> எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று விவசாயிகளின் மகாபஞ்சாயத்து கூட்டப்பட்டது. </p><p>தேஷ் பச்சாவ் மோட்சா என்ற அமைப்பின் கீழ் பஞ்சாப், அரியானா மற்றும் இமாச்சல பிரதேச விவசாய அமைப்புகள் ஒன்று திரண்டு இந்த மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்தன. </p><h2>தடுத்து நிறுத்தம்</h2><p>இதில் பங்கேற்க, பஞ்சாபில் இருந்து ஆயிரக்கணக்கான விவாசாயிகள் தலைநகர் நோக்கி வந்துகொண்டிருந்த நிலையில் பஞ்சாப், அரியானா எல்லையான ஷம்புவில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். </p><p>எல்லையில் இரும்பு முற்கள், பேரிக்கேட்கள் உள்ளிட்டவற்றால் தடுப்பு அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  </p><p>டெல்லி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கோபமடைந்த விவசாயிகள் ஷம்பு எல்லையையே போராட்டக் களமாக மாற்றியுள்ளனர்.</p><p>பஞ்சாப் அணிவகுப்பு தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அரியானாவின் அம்பாலா, குருக்ஷேத்ரா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லி நோக்கிப் பயணித்து வருகின்றனர்.</p> <p>கடந்த ஆண்டு பிப்ரவரியில் இதேபோல டெல்லி நோக்கி செல்ல முற்பட்ட விவசாயிகள் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் அந்த இடத்தையே போராட்டக்களமாக மாற்றினர். இந்த போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. அதேபோல இம்முறையும் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>டெல்லியில் CJP</h2><p>ஏற்கனவே டெல்லியில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதன் பின்னணியில் அவர்கள் நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றபோது போலீசாரால் தாக்கப்பட்டனர். </p><p>தடியடி, கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தி அவர்களை போலீசார் கலைத்தனர். இதன்போது ஏற்பட்ட வன்முறையில் 118 போலீசார், 70 போராட்டக்காரர்கள் காயமுற்றனர். 70 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் என சிஜேபி அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.</p><p>இந்த சூழலில் டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.</p> <h2>அமெரிக்கா -  இந்தியா ஒப்பந்தம்</h2><p>இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் ஆரம்பம் முதலே இந்த ஒப்பந்தத்தின் அம்சங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க வேளாண் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இது அமெரிக்க விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என அந்நாட்டு தலைவர்கள் பேசியதும் வைரலானது.</p><p>அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு வெளிப்படையாக அழுத்தம் கொடுத்து வருகிறது.</p><h2>வாழ்வாதார இழப்பு  </h2><p>சோயாபீன், சோளம், பருத்தி, ஆப்பிள், பாதாம் மற்றும் பால் பொருட்கள் மீதான வரிகள் குறைந்தால், மானியம் பெறும் அமெரிக்கப் பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கும். இதனால் இந்தியச் சிறு விவசாயிகள் அமெரிக்கப் பொருட்களுடன் போட்டியிட முடியாமல் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். </p><p>இந்தியாவில் சுமார் 8 கோடி கிராமப்புற குடும்பங்கள் பால் பண்ணைத் தொழிலையே நம்பியுள்ளன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் கிராமப்புற பொருளாதாரம் முற்றிலுமாகச் சீர்குலையும் என்று விவசாய அமைப்புகள் எச்சரிக்கின்றனர்.</p><p>இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு உடனடியாகக் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களிடம் விரிவான கலந்தாய்வு நடத்தாமல் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கயானா படகு விபத்து: 27 உடல்கள் மீட்பு; போதைப்பொருள் பரிசோதனையில் மாலுமிகள் சிக்கியதால் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive</link><comments>https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive#comments</comments><guid isPermaLink="false">a68f669c-aea6-46ea-bc1d-b6056f56c2b9</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:08:23 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:08:23.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Guyana Ferry Disaster,MVBarima,Mark Phillips,கயானா படகு விபத்து,எம்.வி. பாரிமா,மார்க் பிலிப்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/g966ww04/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guyana Ferry Disaster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/g966ww04/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் அமெரிக்க நாடான கயானாவில் அண்மையில் நிகழ்ந்த மிக மோசமான கடல் விபத்தில், நீரில் மூழ்கிய படகில் இருந்து இதுவரை 27 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 'எம்.வி. பாரிமா' என்ற அந்தப் படகின் கேப்டன் உட்பட ஊழியர்கள் போதைப்பொருள் (கஞ்சா) பயன்படுத்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2><strong>விபத்தின் பின்னணி மற்றும் மீட்புப் பணிகள்:</strong></h2><p>கயானாவின் தலைநகர் ஜார்ஜ்டவுனில் இருந்து வடமேற்குப் பகுதியில் உள்ள போர்ட் கைடூமா நோக்கிச் சென்று கொண்டிருந்த 'எம்.வி. பாரிமா' என்ற பயணிகள் படகு கடந்த சனிக்கிழமை இரவு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகின் உத்தியோகபூர்வ பதிவேட்டில் 116 பயணிகளும் 17 ஊழியர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தனர். </p><p>ஆனால், மீட்புப் பணியின் போது பட்டியலில் பெயரில்லாத 32 பேர் மீட்கப்பட்டதால், படகில் மொத்தம் 179 பேர் வரை பயணித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை '69 பேர்' உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 83 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><h2><strong>போதைப்பொருள் சோதனை:</strong></h2><p>விபத்தைத் தொடர்ந்து படகின் கேப்டன் மற்றும் ஊழியர்களைக் காவலில் எடுத்துப் பரிசோதித்ததில், அவர்கள் கஞ்சா பயன்படுத்தியிருந்தது உறுதியானது."பணியில் இருக்கும்போது ஊழியர்கள் மது அருந்துவதையோ அல்லது போதைப்பொருள் பயன்படுத்துவதையோ எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது" என பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் தெரிவித்துள்ளார்.</p><p>படகு முனையங்களில் உள்ள அதிகாரிகள் பயணிகளிடம் ரொக்கப் பணம் பெற்றுக்கொண்டு, பயணிகளின் உண்மையான எண்ணிக்கையைப் பதிவேட்டில் எழுதாமல் முறைகேடு செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஊழியர்களின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மார்க் பிலிப்ஸ் உத்தரவிட்டுள்ளார்.</p><h2><strong>அதிபர் ஆறுதல்:</strong></h2><p>கயானா அதிபர் இர்ஃபான் அலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உயிர்தப்பியவர்களையும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். கடந்த பல தசாப்தங்களில் கயானா கண்ட மிக மோசமான கடல் பேரிடராக இது பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு &apos;லோக்மான்ய திலகர் விருது&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award</link><comments>https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award#comments</comments><guid isPermaLink="false">3852d399-dfe6-4174-9752-84583c57eb55</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:53:40 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:53:40.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,Ajit Doval,அஜித் தோவல்,Lokmanya Tilak National Award,லோக்மான்ய திலகர் விருது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s6w0j5v9/ajith.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajit Doval]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s6w0j5v9/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஆற்றிய மிகச் சிறந்த பங்களிப்பிற்காக, நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் 'அஜித் தோவல்' இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க 'லோக்மான்ய திலகர் தேசிய விருது' வழங்கப்படவுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பைத் திலக் ஸ்மாரக் டிரஸ்ட் தலைவரான டாக்டர் ரோஹித் திலக் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.</p><h2><em><strong>விருது வழங்கப்படும் நாள்:</strong></em></h2><p>ஆகஸ்ட் 1 (விடுதலைப் போராட்ட வீரர் லோக்மான்ய பால் கங்காதர திலகரின் 106-வது நினைவு நாள்) அன்று மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கடாரியா உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விருதை அஜித் தோவலுக்கு வழங்குகிறார். இதில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுனேத்ரா பவார் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.</p><h2><em><strong>நீண்ட காலம் பணியாற்றிய பாதுகாப்பு ஆலோசகர்:</strong></em></h2><p>இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பெருமை 81 வயதான அஜித் தோவலையே சேரும். 2014-ஆம் ஆண்டு முதல் இவர் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.</p><p>இந்தியா-சீனா எல்லைப் பேச்சுவார்த்தைக்கான இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதியாகச் செயல்பட்ட தோவல், 2017-இல் இந்தியா-சீனா இடையே நிலவிய டோக்லாம் எல்லைப் பிரச்சனையை தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான முறையில் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார்.</p><h2><em><strong>உளவுத்துறை &amp; முக்கிய ராணுவ நடவடிக்கைகள்:</strong></em></h2><p>1968-ஆம் ஆண்டு கேரளா கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், உளவுத்துறையில் 3 தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றி அதன் இயக்குநராக ஓய்வு பெற்றார். மிசோரம், பஞ்சாப் (ஆபரேஷன் பிளாக் தண்டர்), சிக்கிம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற பதற்றமான பகுதிகளில் உளவுப் பணிகளையும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் திறம்பட கையாண்டுள்ளார்.</p><p>பாலகோட் வான்வழித் தாக்குதல், எல்லைத் தாண்டிய தாக்குதல்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கியமான பாதுகாப்பு வியூகங்களை வகுப்பதில் முதன்மை பங்காற்றியுள்ளார்.</p><h2><em><strong>லோக்மான்ய திலகர் விருதின் வரலாறு:</strong></em></h2><p>சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் நினைவாக 1983-இல் திலக் ஸ்மாரக் டிரஸ்ட்டால் இந்த விருது தொடங்கப்பட்டது. நாட்டின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அபார பங்களிப்பை அளித்த தலைவர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி இது வழங்கப்படுகிறது.</p><p>சோசலிசத் தலைவர் 'எஸ்.எம். ஜோஷி'க்கு முதன்முதலில் இந்த விருது வழங்கப்பட்டது. இதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி (2023), முன்னாள் பிரதமர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங், இந்திரா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மூத்த அரசியல்வாதி சரத் பவார் மற்றும் நிதின் கட்கரி (2025) போன்ற பல பிரபலங்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம் - வீடுகள் விலை குறைகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/collection-party-funds-construction-permits-halted-housing-prices-to-drop</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/collection-party-funds-construction-permits-halted-housing-prices-to-drop#comments</comments><guid isPermaLink="false">a4d618d4-266a-4a6e-b6c1-6738d4a795b5</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:51:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:51:51.890Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Building permit,party funds,House prices,கட்சி நிதி,வீடுகள் விலை,கட்டிட அனுமதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lgp703kf/house.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ House]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lgp703kf/house.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கட்டுமான அனுமதி வழங்க வசூலிக்கப்பட்ட கட்சி நிதி நிறுத்தப்பட்டதால் வீடுகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.</p><h2>கட்சி நிதி</h2><p>சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பிலும், நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. சார்பிலும், கட்டுமான திட்ட அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இதில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது சதுர அடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை கட்சி நிதி என்ற பெயரில், கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.</p><p>கட்டிட அனுமதிக்கான கோப்புகள் அதிகாரிகள் வசம் இருந்தாலும், அதில் உள்ள விபரங்களை பெறும் அரசியல் புள்ளிகள் கட்டுமான நிறுவனங்களை அணுகி கட்சி நிதி கேட்பது உண்டு. இதற்கு உடன்படாத நிறுவனங்களுக்கு, கட்டிட அனுமதி நிறுத்தி வைக்கப்படும். இதில் கட்சிநிதி கொடுப்பதற்கான செலவையும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டின் விலையில் சேர்த்து, மக்களிடம் வசூலித்து வந்தன. இதனால், வீடுகளின் விலைகள் வெகுவாக உயர்ந்தன.</p> <h2>தமிழக அரசு</h2><p>இந்த நிலையில், கட்டிட அனுமதி வழங்க கட்சி நிதி வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் முடிவை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம் ஆகியவை வரவேற்றுள்ளன.</p><h2>வீடுகள் விலை</h2><p>இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:</p><p>கட்சி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டதால், கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு மிச்சமாகி உள்ளது. இதன் பயனை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. புதிதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில், வீடுகள் விலையை சதுரடிக்கு 100 ரூபாய் வரை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/madurai-alagar-kovil-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/madurai-alagar-kovil-worship#comments</comments><guid isPermaLink="false">e4a3a1da-0258-4012-9d5a-8c69c8c90709</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:45:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:45:51.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,madurai,வழிபாடு,worship,அழகர்கோவில்,Alagar kovil</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxcznp49/AlagarKovil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Alagar Kovil ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxcznp49/AlagarKovil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் எனப்படும் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆடிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான விழா இன்று (21-ந்தேதி) காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மங்கள இசை முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். </p><h2><strong>சிறப்பு யாகங்கள்</strong></h2><p>முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க, பட்டாச்சாரியார்கள் தலைமையில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் தோரணங்கள், வண்ண மலர் அலங்காரங்கள், தூப நறுமணம் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.</p><h2><strong>ஆடித் திருவிழா</strong></h2><p>ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றதன் மூலம் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கின. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், பூஜைகள், வாகன சேவைகள், மண்டகப்படி உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற உள்ளன. </p><p>இன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. அதன்படி, நாளை (22-ந்தேதி) காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் பெருமாள் புறப்பாடு நடைபெறும். 23-ந்தேதி இரவு அனுமார் வாகனத்திலும், 24-ந்தேதி இரவு கருட வாகனத்திலும் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளுகிறார்.</p><p>26-ந்தேதி மோகினி அவதாரத்தில் சுந்தரராஜ பெருமாள் இரவு யானை வாகனத்திலும், 27-ந்தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 28-ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.</p><h2><strong>தேரோட்டம்</strong></h2><p>திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 29-ந்தேதி காலை கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்று காலை 7.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். இதனைத் தொடர்ந்து 30-ந் தேதி தீர்த்தவாரியும், 31-ந் தேதி உற்சவ சாந்தியும் நடைபெறும்.</p><h2><strong>பக்தர்கள்</strong></h2><p>ஆடிப்பெருந்திருவிழாவையொட்டி மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அழகர்கோவிலுக்கு வருகை தந்தனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ உதவி, பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்கள் மீது தாக்குதல், தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க  சபாநாயகரிடம்  ராகுல் கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-police-crackdown-rahul-urges-parliament-debate-on-student-assault</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-police-crackdown-rahul-urges-parliament-debate-on-student-assault#comments</comments><guid isPermaLink="false">8e3a5f8f-69f8-4a16-aada-390d8c2b9561</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:41:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:41:51.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s39nyher/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஓம் பிர்லா, ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஓம் பிர்லா, ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s39nyher/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நேற்று பாராளுமன்றம் நோக்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணியின் போது <a href="https://www.maalaimalar.com/news/national/will-the-cockroach-partys-protest-succeed-is-dharmendra-pradhan-set-to-resign">இளைஞர்கள் </a>மீது காவல்துறையால் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள் இன்றும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. </p><p>விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) கடும் அமளியில் ஈடுபட்டன. </p><h2>மாநிலங்களவையில் கார்கே பேச்சு </h2><p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, </p><p> "லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, அரசு அவர்களின் குரலை ஒடுக்க முயல்கிறது" என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p>கார்கே பேசத் தொடங்கியதும் ஆளுங்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். அதற்குப் பதிலடியாக காங்கிரஸ் எம்பிக்களும் முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, அவையை நடத்த முடியாத சூழல் உருவானது.   </p><p>இதனால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் அமளியால் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><h2>ராகுல் காந்தி - சபாநாயகர் சந்திப்பு</h2><p>மறுபுறம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி எம்பிக்களுடன் சென்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்துப் பேசினார்.</p><p>சிஜேபி போராட்டத்தின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் மற்றும் நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.</p><p>சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:</p><p>"நேற்று தங்கள் எதிர்காலம் குறித்து நியாயமான கேள்விகளை எழுப்பியதற்காக மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p>தேர்வு முறைகேடுகள் குறித்து எந்தப் அக்கறையும் இல்லாத அரசைக் கண்டித்தும், மாணவர் நலன் குறித்தும் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்ற எளிமையான கோரிக்கையைத்தான் நாங்கள் முன்வைத்துள்ளோம்.</p><p>இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களின் பிரச்சனைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியவில்லை என்றால், இந்த நாடாளுமன்றம் வேறு எதற்காக இயங்குகிறது?</p><p>இந்த விவகாரத்தை சும்மா விட்டுவிடாது. மாணவர்களின் குரல் வீதிகளிலும் ஒலிக்கும், நாடாளுமன்றத்திலும் ஒலிக்கும் என்பதை நாங்கள் உறுதிசெய்வோம்." என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-police-personnel-must-not-compromise-their-dignity</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-police-personnel-must-not-compromise-their-dignity#comments</comments><guid isPermaLink="false">92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:36:39 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:36:39.598Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,காவல்துறை,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rea5olea/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rea5olea/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>காவல் துறை கண்ணியம் தவறக்கூடாது; தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரின் நாகரிகமற்ற செயலுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</aside><p>பா.ஜ.க. மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/நயினார்-நாகேந்திரன்">நயினார் நாகேந்திரன்</a> எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>கண்டனம்</strong></h2><p>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிகையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை “வாடா, போடா” என ஒருமையில் சாடியுள்ள, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திபு அவர்களின் நாகரிகமற்ற செயல் கண்டனத்திற்குரியது. </p><p>காக்கிச் சட்டைக்கென்று ஒரு தனி மரியாதையும், கண்ணியமும் உண்டு என்பதை மறந்து விட்டு, காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரியே “பேட்டை ரவுடி” போல இப்படி பொதுவெளியில் சண்டைக்கு நிற்பது ஒட்டுமொத்த காவல்துறையின் பிம்பத்தையும் சிதைத்து விடும். </p><h2><strong>அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்</strong></h2><p>ஏற்கனவே தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களால், காவல்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும், பாதுகாப்புணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வரும் நிலையில், காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் தங்களது “Decorum”-மை கடைபிடிக்க வேண்டும். </p><p>மேலும், காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வர் விஜய் அவர்கள், காவல்துறையை வெறும் “ஏவல்துறை”யாக மட்டும் பயன்படுத்தக் கூடாது எனவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது! <br><br>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிக்கையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை… <a href="https://t.co/jkyp77jzq5">pic.twitter.com/jkyp77jzq5</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2079447132038439274?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப்பெருக்கு: 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed#comments</comments><guid isPermaLink="false">d207f0e8-9382-44fe-91de-e02740810c00</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:28:19 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:28:19.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெள்ளப்பெருக்கு,Flash Flood,Afghanistan Floods,Parun,ஆஃப்கானிஸ்தான் வெள்ளப்பெருக்கு,பாரூன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/b5x3mrdh/flood.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Afghanistan Floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/b5x3mrdh/flood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நூரிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கரத் திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தபட்சம் '20 பேர்' உயிரிழந்துள்ளனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><h2><strong>பாரூன் நகரில் பேரழிவு:</strong></h2><p>நூரிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான பாரூன் நகரமே இந்த வெள்ளத்தினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகம், உணவகங்கள், நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் உருக்குலைந்துள்ளன.</p><h2><strong>முக்கிய அதிகாரிகள் மாயம்:</strong></h2><p>பாரூன் நகர மேயர் மற்றும் பல அரசு ஊழியர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளதாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><h2><strong>சிக்கலான மீட்புப்பணி:</strong></h2><p>வெள்ள நீருடன் பெரிய பாறைகளும் இடிபாடுகளும் அடித்து வரப்பட்டுள்ளதால், போதிய நவீன உபகரணங்கள் இல்லாத நிலையிலும் உள்ளூர் மக்களும் பேரிடர் மீட்புக் குழுவினரும் இடிபாடுகளுக்கிடையே மனித உயிர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2><strong>வெள்ளப் பெருக்குக்கான முக்கியக் காரணங்கள்:</strong></h2><p> புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய உலக நாடுகளில் ஆஃப்கானிஸ்தானும் ஒன்று. தெற்காசியாவில் தீவிரமடைந்துள்ள பருவமழைப் பொழிவு இங்கு திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>காடழிப்பு:</strong></h2><p>நூரிஸ்தான் பகுதி அடர்ந்த காடுகளுக்கும் இயற்கை எழிலுக்கும் பெயர் பெற்றது. இருப்பினும், சமீபகாலமாக நடைபெற்று வரும் சட்டவிரோத மரம் வெட்டுதல் மற்றும் காடழிப்பு காரணமாக, நிலத்தின் மழைநீரை உறிஞ்சும் இயற்கைத்தன்மை குறைந்து வெள்ளத்தின் வீரியம் அதிகரித்துள்ளது.</p><h2><strong>அரசு எச்சரிக்கை:</strong></h2><p>தாலிபன் அரசாங்கத்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், நாட்டின் 34 மாகாணங்களில் 10 மாகாணங்களில் தொடர்ந்து கனமழை, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. நதிக்கரைகள் மற்றும் ஆபத்தான தாழ்வான பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-pm-modi-breaks-silence-13-arrested-as-youth-protests-intensify</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-pm-modi-breaks-silence-13-arrested-as-youth-protests-intensify#comments</comments><guid isPermaLink="false">ca9c7d59-6f3b-4f07-939f-20fe3e86130f</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:14:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:14:42.105Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Sonam Wangchuk,பிரதமர் மோடி,சோனம் வாங்சுக்,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak,சிஜேபி,CJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vfcblpeg/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vfcblpeg/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் 2 ஆம் நாள் கூட்டம் தொடங்கும் முன்னர் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணி பாராளுமன்ற எம்.பிக்கள் கூட்டத்தை நடத்தினார். </p><p>இந்த கூட்டத்தில்,  கடந்த மே 3 நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி முதல் முறையாக வாய்திறந்துள்ளார். </p><p>ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சியின் தொடர் போராட்டம் இன்றுடன் 23வது நாளை எட்டும் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march">சோனம் வாங்சுக் </a>உண்ணாவிரதம், நேற்றைய சிஜேபி பேரணியில் ஏற்பட்ட வன்முறை உள்ளிட்ட தொடர் அழுத்தங்களை தொடர்ந்து மோடி மௌனம் கலைத்துள்ளார். </p><h2>மோடி</h2><p>கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக பாராளுமன்ற விவகாரங்கள் குழு அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது,</p><p>வினாத்தாள் கசிவு ஒரு கொடிய பாவச் செயல். இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். தவறான பாதையில் செல்வது எளிது. ஆனால் அதிலிருந்து மீண்டும் சரியான பாதைக்கு திரும்புவது மிகவும் கடினம். அவர்களை தூண்டுவிடாமல், சரியான நாம் அவர்களை சரியான பாதைக்கு கொண்டு வர வேண்டும். அது நமது பொறுப்பு. இளைஞர்களின் எதிர்காலமே முக்கியம். இதில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என பேசியுள்ளார்.</p><p>இது அரசுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராடும் இளைஞர்களை குறிப்பிட்டு மோடி பேசியதாக புரிந்துகொள்ளப்படுகிறது.</p> <h2>ரிஜிஜூ</h2><p> தொடர்ந்து கிரண் ரிஜிஜூ பேசுகையில், நீட் வினாத்தாள் கசிவு தெரியவந்ததும் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தேர்வர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அரசு, மறுதேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு, குறித்த நேரத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும், எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதமர் மோடியின் கறார் உத்தரவிட்டுள்ளார் என கிரண் ரிஜிஜூ மேலும் தெரிவித்தார்.</p> <h2>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</h2><p>நேற்று <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-leaders-meet-union-minister-jp-nadda-submit-letter-of-demands">கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்</a> பிரதிநிதிகள் இருவர், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.</p><p>அதில், நிர்வாக தோல்விக்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவிநீக்கம் செய்ய வேண்டும், மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கை விடுவிக்க வேண்டும், நீட் குளறுபடிகளால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட 20 மாணவர்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice#comments</comments><guid isPermaLink="false">ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:13:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:13:26.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தலைமை செயலகம்,Astrologer,Secretariat,ஜோதிடர்,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vzzz7g2d/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vzzz7g2d/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யின் அறை இடம் மாறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>முதலமைச்சர் அறை, அலுவலகம்</h2><p>சென்னை காமராஜர் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச்செயலகம் இயங்கி வருகிறது. கோட்டை கட்டிடத்தின் முதல் தளத்தில், முதலமைச்சர் அறை, அலுவலகம் உள்ளது. இதேபோல், அமைச்சர்கள் அலுவலகம், சட்டசபை கூட்ட அரங்கம், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த செயலாளர்களின் அலுவலகங்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறை, நூலகம் உள்ளிட்டவை அந்தக் கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன.</p><h2>இட நெருக்கடி</h2><p>இந்த நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes">முதலமைச்சர் விஜயை</a> சந்திக்க நாள்தோறும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் வந்து செல்கின்றனர்.</p><p>தற்போதுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இட நெருக்கடி ஏற்படுவதால், அவரை சந்திக்க வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகத்தை, கோட்டை கட்டிடத்திற்கு அருகே உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p> <h2>ஆஸ்தான ஜோதிடர்</h2><p>தற்போது, 10-வது மாடியில் கருத்தரங்க கூடமும், ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான உணவருந்தும் கூடமும் உள்ளது. அவற்றை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, 10-வது மாடி முழுவதுமே முதலமைச்சர் அறை மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இடநெருக்கடியால், முதலமைச்சர் அறை மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டாலும், வாஸ்துபடி தற்போதைய அறை சரியில்லை என்று அவருடைய ஆஸ்தான ஜோதிடர் கூறியதாகவும், தொடர்ந்து உச்சத்தில் இருக்க உயரமான கட்டிடத்தில் முதலமைச்சர் அலுவலகம் செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும், அதுவும் கடலை பார்த்தபடி முதலமைச்சர் அறை இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. </p><p>அதன்படியே, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகம் மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p> ]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-on-august-5th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-on-august-5th#comments</comments><guid isPermaLink="false">0462a245-3b74-4003-834b-ab1c2c54d599</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:13:07 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:13:07.679Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vgdr7ezj/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vgdr7ezj/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</aside><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்ற பிறகு முதல் சட்டசபை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p><h2><strong>தமிழக பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பொது பட்ஜெட்</a> மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.</p><p>இதனிடையே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-likely-chance-august-first-week">ஆகஸ்ட்</a> முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.</p><h2><strong>ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:-</p><p>ஆகஸ்ட் 5-ந்தேதி காலை 10 மணிக்கு 2026-27-ம் ஆண்டுக்கான  நிதி நிலை அறிக்கை சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 6-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். </p><h2><strong>நேரலை</strong></h2><p>மேலும் அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட்டாக இருக்கும். கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடத்தப்படும் என்பது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரை முழு நேரலை செய்ய வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். எம்எல்ஏக்களை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவையில்லை என்றார். </p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>