<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 10 Sep 2026 08:15:48 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 10 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-september-2026#comments</comments><guid isPermaLink="false">cd1c0430-b0bb-4648-93d3-063900150d82</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:09:14 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:37:17.536Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sjr5yp31/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sjr5yp31/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-first-sit-in-existing-legislative-assembly-and-serve-people">இருக்கின்ற சட்டசபையில் அமர்ந்து முதலில் மக்கள் பணியாற்றுங்கள் - கனிமொழி</a></p><p>* சட்டம் ஒழுங்கு பற்றி பதில் அளிக்காத முதலமைச்சர் விஜய் பஞ்ச் டயலாக்கையும் பழைய கதைகளையும் பேசுகிறார்.</p><p>* தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் என்பது தேவையில்லாத ஒன்று.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-recognized-state-political-party-for-tvk">அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது த.வெ.க.: உறுதி செய்தது தேர்தல் ஆணையம்</a></p><p>* தமிழகத்தில் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7-ஆக உயர்ந்துள்ளது.</p><p>* திமுக, அதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தேமுதிக ஆகிய 6 கட்சிகள் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆகும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-elections-admk-and-naam-tamilar-katchi-candidates-to-be-announced-soon">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு</a></p><p>* அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.</p><p>* நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது மதுரையில் சேயோன் படப்பிடிப்பில் உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/duraimurugan-says-history-will-repeat-itself-through-by-election">இடைத்தேர்தல் மூலம் வரலாறு திரும்பும் - துரைமுருகன்</a></p><p>* 2 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.&nbsp;</p><p>* எம்.ஜி.ஆர். ஆளுங்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்ணாநகர், மயிலாடுதுறை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-promises-5000-per-person-to-the-public-if-they-vote-for-the-republican-party-in-the-midterm-elections">இடைக்கால தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் ஆளுக்கு 5000 டாலர் - நாட்டு மக்களுக்கு டிரம்ப் வாக்குறுதி</a></p><p>*அதிபர் பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடையும் போது இடைக் காலத் தேர்தல் (Midterm Election) நடக்கிறது.</p><p>*,000 டாலர் ( 4.4 லட்சம் ரூபாய்) வழங்கப்போவதாக அதிரடி வாக்குறுதியை அளித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-ask-question-to-tn-govt">கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன?- அரசுக்கு அன்புமணி கேள்வி</a></p><p>* ஆளும் கட்சியான திமுக, இதில் திமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்ததுடன், என் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தனர். </p><p>* தமிழ்நாட்டில் இப்போதுள்ள 4038 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized">வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதி</a></p><p>* சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ்.பாபு.</p><p>* மார்பு சளி பாதிப்பு காரணமாக வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/announcement-of-candidates-for-the-secular-social-justice-victory-alliance">மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்- மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு</a></p><p>* மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>* நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/fire-on-passenger-boat-in-the-philippines-5-dead-87-missing">பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ விபத்து.. 5 பேர் பலி - 87 பேர் மாயம்</a></p><p>*இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>*87 பேரைக் காணவில்லை என அந்நாட்டுக் கடலோரக் காவல் படை இன்று தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations">பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா வரும் புதின்.. முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 3 ரஷிய ராணுவ விமானங்கள் வருகை<br></a><br>*இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.</p> <p>*ரஷிய அதிபர் புதின், பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-10-9-2026">GOLD PRICE TODAY: மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை! - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-another-brutal-murder-in-chennai">சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை- என்ன பதில் வைத்திருக்கிறார் முதலமைச்சர்?: உதயநிதி</a></p><p>* காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.</p><p>* தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/46482b36-cf18-4d8f-b85e-6d948c78e90a">கணவன் மனைவியுடன் கட்டாய உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமா? - உச்சநீதிமன்றம் சொன்னது இதுதான்</a></p><p>*கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே </p><p>*நாங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/c0a6b263-0dad-4f60-b584-9621b723bb3d">பாகிஸ்தானில் ஆப்கான் மாணவர்கள் மருத்துவம் பயில தடை.. ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு</a></p><p>*படிப்பை நிறைவு செய்யும் தருவாயில் இருக்கும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>*உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/5be92010-e19b-4447-a4f9-35ec13094301">VIDEO: வங்கதேசத்தில் ராணுவ பயிற்சின்போது சீன தயாரிப்பு பீரங்கி வெடித்து விபத்து - 2 வீரர்கள் பலி</a></p><p>*வங்கதேச ராணுவம் இதனை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறது.</p><p>*2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/97d84f96-1449-43af-89c9-086e404098d1">SIR: பாரத ரத்னா பெற்றவருக்கே இந்த நிலைமையா?.. தேர்தல் ஆணையத்தின் கிடுக்குபிடியில் 92 வயது விஞ்ஞானி</a></p><p>*16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.</p><p>*நன்கறியப்பட்ட பிரபலங்களும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/af314040-a47a-4091-8eea-f052c3a066e1">சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</a></p><p>*சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><p>*இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9b814c8d-4771-4bd0-b5f0-cf843398997d">குஜராத்: கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த சாரம்.. சிக்கித் தவித்த 13 பேர் மீட்பு</a></p><p>*மீட்கும் பணி நள்ளிரவையும் தாண்டி தீவிரமாக நடைபெற்றது.</p><p>* அங்கிருந்த பெரிய கிரேன் ஒன்றும் இடிபாடுகளின் மீது சாய்ந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-another-murder-in-chennai-cm-vijay-planning-hero-style-stunt">சென்னையில் மீண்டும் ஒரு கொலை! - முதலமைச்சர் விஜய் ஹீரோ சாகசம் காட்ட திட்டமா?: கனிமொழி</a></p><p>* தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை!</p><p>* நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities">வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - 'மிசா' கொடுமைகள் குறித்து மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு</a></p><p>* யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.</p><p>* விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது த.வெ.க.: உறுதி செய்தது தேர்தல் ஆணையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-recognized-state-political-party-for-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-recognized-state-political-party-for-tvk#comments</comments><guid isPermaLink="false">d2bf1c36-5aa3-4759-85f2-0b901f4c8dbf</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:59:13 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:59:13.096Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Election Commission of India,tvk,இந்திய தேர்தல் ஆணையம்,விசில் சின்னம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/bqrnkhin/TVK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  தவெக]]></media:title><media:description type="html"><![CDATA[  தவெக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/bqrnkhin/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக தமிழக வெற்றி கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்தது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தவெக">தமிழக வெற்றிக்கழகம்</a> சந்தித்த முதல் தேர்தலிலேயே அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார். </p><p>இந்த நிலையில், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக்கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. மேலும்,  தமிழக வெற்றிக்கழக தேர்தல் சின்னமான விசில் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. </p><p>இதன் காரணமாக தமிழகத்தில் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7-ஆக உயர்ந்துள்ளது.</p><p>திமுக, அதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தேமுதிக ஆகிய 6 கட்சிகள் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆகும். அந்த பட்டியலில் த.வெ.க.கட்சியும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.</p><p>எனவே இந்த இடைத்தேர்தலில் த.வெ. க. வேட்பாளர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரவி மோகன் பிறந்தநாள் சிறப்பு: &apos;An Ordinary Man&apos; படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ravi-mohan-birthday-special-an-ordinary-man-first-look-poster-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ravi-mohan-birthday-special-an-ordinary-man-first-look-poster-release#comments</comments><guid isPermaLink="false">2f73f805-f0ff-4229-b46e-5f2a0c582e0f</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:13:51 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:13:51.820Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Yogi-Babu,Ravi Mohan,ரவி மோகன்,நடிகர் யோகி பாபு,An Ordinary Man,Ravi Mohan&apos;s Birthday,ரவி மோகன் பிறந்தநாள்,அன் ஆர்டினரி மேன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/6ks1df1u/jay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ An Ordinary Man ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/6ks1df1u/jay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடலான 'Higher' ப்ரொமோ பாடல் இன்று மாலை 5.05 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. </p><p>நடிகரும் இயக்குனருமான ரவி மோகன் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவர் இயக்கும் '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-journey-with-ajith-elevated-me-editor-vijay-velukkutti">An Ordinary Man</a>' திரைப்படத்தின் படக்குழுவினர் அவருக்குச் சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். </p><figure><img alt="Ravi Mohan&apos;s Birthday" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/zvo5mbdl/ravu.jpg" /></figure><p>இதனை முன்னிட்டு, திரைப்படத்தின் சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியீடு செய்து படக்குழுவினர் தங்களது அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.</p><h2>யோகி பா<strong>பு கதாநாயகன்</strong></h2><p>முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். 'கோமாளி' படப்பிடிப்பின் போதே யோகி பாபுவிடம், தான் இயக்கும் முதல் படத்தில் அவரையே கதாநாயகனாக்குவதாக ரவி மோகன் உறுதியளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  </p><h2>இன்று மாலை <strong>வெளியாகிற</strong>து Higher ப்ரொமோ பாடல்</h2><p>பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடலான 'Higher' ப்ரொமோ பாடல் இன்று மாலை 5.05 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. கெனிஷா பிரான்சிஸ் இசையமைத்துள்ள இந்த ப்ரொமோ பாடல், ரசிகர்களுக்குப் பிறந்தநாள் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  திரையுலகில் இயக்குநராகப் புதிய பயணத்தைத் தொடங்கும் ரவி மோகனுக்கு, 'An Ordinary Man' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியளிக்கும் எனத் திரை வட்டாரங்கள் வாழ்த்தி வருகின்றன.  </p> ]]></content:encoded></item><item><title>7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் சீன அதிபர் - பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/national/chance-to-hold-bilateral-talks-with-chinese-president-prime-minister-modi-who-is-coming-to-india-to-attend-the-brics-conference</link><comments>https://www.maalaimalar.com/news/national/chance-to-hold-bilateral-talks-with-chinese-president-prime-minister-modi-who-is-coming-to-india-to-attend-the-brics-conference#comments</comments><guid isPermaLink="false">991873f3-8c99-47c6-b1f1-0dc8785d5281</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:09:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:09:58.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Xi Jinping,ஜி ஜின்பிங்,India-China,BRICS Summit,பிரிக்ஸ் மாநாடு,இந்தியா-சீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ey9b7x7f/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ey9b7x7f/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தரும் சீன அதிபருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p> <p>இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations">ரஷிய அதிபர் புதின்</a>, சீன அதிபர் ஜி ஜின் பிங், பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரில் பங்கேற்கின்றனர்.</p><p>இந்த ஆண்டின் மாநாட்டு மையக்கருத்து "Building for Resilience, Innovation, Cooperation and Sustainability" என்பதாகும்.  </p> <h2>சீன அதிபருடன் பேச்சுவார்த்தை</h2><p>இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தரும் சீன அதிபருடன் பிரதமர் மோடி, இரு நாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>2020ல் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீன அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.</p><p>கடைசியாக கடந்த 2019 அக்டோபரில் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 2nd India-China Informal Summit மாநாட்டிற்கு ஜி ஜின் பிங் வந்திருந்தார்</p> <p>சீன அதிபர் வரும் சனிக்கிழமை பிற்பகலில் டெல்லி வந்தடைவார் என்றும், மாநாட்டின் முதல் நாளான அன்றைய தினமே பிரதமர் மோடியுடன் இருதரப்பு சந்திப்பு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>கல்வான் தாக்குதல் </h2><p>கடந்த 2019 இல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் புகுந்து நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.</p><p>இதையடுத்து <a href="https://www.maalaimalar.com/news/world/ajit-doval-in-china-agreement-on-demarcation-of-india-china-border">சீனாவுடனான இந்தியாவின் உறவு</a> பின்னடைவை சந்தித்த நிலையில் அந்த கசப்புகளை மறந்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பு 2025 ஷாங்காய் உச்சிமாநாட்டில் நடைபெற்றது.</p><p>முன்னதாக எல்லைக் கோட்டில் இரு நாட்டு வீரர்களும் இதன்முன் தாங்கள் இருந்த நிலைகளுக்கு திரும்புவதாக 2024 இல் ஒப்புக்கொள்ளப்பட்டது.</p><p>இருந்தபோதும் லடாக் உள்ளிட்ட எல்லைகளில் சீனா, தனது ராணுவ இருப்பை தொடர்ந்து அதிகப்படுத்தியும், ராணுவ கட்டமைப்புகளை மேற்கொண்டும், இமாச்சல பிரதேசத்தின் பகுதிகளை தங்களின் நாட்டு பகுதிகளாக வரைபடம் வெளியிட்டும் இந்தியாவுக்கு அச்சறுத்தலாக இருந்து வருகிறது. </p><p> இந்நிலையில் எல்லையில் அமைதியை மீட்டெடுப்பது மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மீண்டும் சீரமைப்பது<sup> </sup>தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த சந்திப்பு ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ் பார்த்ததால் நேர்ந்த கொடூரம்: காதல் மனைவியை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/bengaluru-man-kills-wife-over-reels-addiction-and-dies-by-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengaluru-man-kills-wife-over-reels-addiction-and-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">321d1a2e-c5d6-4cd0-837a-20c7e1c5b407</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:05:38 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:05:38.868Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பெங்களூரு,Bangalore,Domestic Violence,கொலைவழக்கு,HALPolice,MurderAndSuicide,Reels Addiction</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0wddadl8/MurderAndSuicide" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MurderAndSuicide  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0wddadl8/MurderAndSuicide?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செல்போனில் எந்நேரமும் ரீல்ஸ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், 15 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த காதல் மனைவியைப் பீர் பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்குப்போட்டு தற்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>15 ஆண்டுக்கால காதல் வாழ்க்கை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநிலம் பெங்களூரு எச்.ஏ.எல். காவல் எல்லைக்கு உட்பட்ட விபூதிபுரா பகுதியில் வசித்து வந்தவர் ராகவேந்திரா (38). ஆட்டோ ஓட்டுநரான இவரும், சுருதி (34) என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.</p><p>இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் தாவணகெரேயில் உள்ள தங்களது பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வருகின்றனர். சுருதி விபூதிபுராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.</p><h2><strong>கொலையில் முடிந்த ரீல்ஸ் விவகாரம்</strong></h2><p>ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், சமீபகாலமாகப் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுருதி எந்நேரமும் தனது செல்போனில் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்ப்பதையும், அதில் மூழ்கிக் கிடப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>இதனால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்களும், குடும்பத் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.</p><h2><strong>நள்ளிரவில் நடந்த கொடூரம்</strong></h2><p>வழக்கம்போல நேற்று முன்தினம் நள்ளிரவிலும் சுருதி செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததால், ராகவேந்திராவுக்கும் அவருக்கும் இடையே மீண்டும் கடுமையான தகராறு வெடித்தது. இதில் பெரும் ஆத்திரமடைந்த ராகவேந்திரா, சுருதியைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.</p><p>கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ராகவேந்திரா, வீட்டில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து சுருதியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சுருதி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.</p><h2><strong>கணவன் தற்கொலை</strong></h2><p>ஆத்திரத்தில் தனது காதல் மனைவியைக் கொலை செய்துவிட்டதை உணர்ந்த ராகவேந்திரா, அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்தார். </p><p>சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதாலும், குற்ற உணர்ச்சியாலும் அவரும் அதே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">போலீசார் விசாரணை</a></strong></h2><p>அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், எச்.ஏ.எல். காவல் நிலைய போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.</p><p>முதற்கட்ட விசாரணையில், செல்போன் ரீல்ஸ் வீடியோ பார்ப்பது தொடர்பான தொடர் தகராறே இந்த இரட்டை மரணத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>சமூக வலைத்தள மோகத்தால் இரு உயிர்கள் பலியாகி, இரண்டு குழந்தைகள் அனாதையாக நின்றுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு 3,520 அரசு சிறப்பு பஸ்கள்- இன்று முதல் இயக்கப்படுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/3520-special-government-buses-to-operate-from-kilambakkam-to-outstation-destinations-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/3520-special-government-buses-to-operate-from-kilambakkam-to-outstation-destinations-starting-today#comments</comments><guid isPermaLink="false">1e8486b6-67cf-487f-a0a8-d017ace75aba</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:02:30 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:02:30.418Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,special bus,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/wcg2o8hr/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/wcg2o8hr/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</strong></em> </p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகையான 14-ந்தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறையாகும். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களோடு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை  கிடைக்கிறது.</p><p>இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பஸ்கள்</a> இயக்கப்படுகிறது. </p><h2><strong>கிளாம்பாக்கம்</strong></h2><p>சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று வியாழக்கிழமை 585 சிறப்பு பஸ்களும் நாளை (வெள்ளிக்கிழமை) 1,255 பஸ்களும் 12-ந் தேதி (சனிக்கிழமை) 1,030 பஸ்களும், 13-ந் தேதி  650 பஸ்களும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மேற்கண்ட இந்த நாட்களில் 585 பஸ்களும் இயக்கப்படுகிறது.</p><p>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து  கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தலா 110 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. </p><p>மேலும் 14-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 765 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.</p><p>இன்று முதல் திங்கள்கிழமை வரை பயணம் செய்வதற்கு 95 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>எளிமை மாறாதவர்..! கார்த்தி குறித்து சர்தார் 2 கதாநாயகி ஆஷிகா நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ashika-rangnath-on-karthis-humility-and-sardar-2-experience</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ashika-rangnath-on-karthis-humility-and-sardar-2-experience#comments</comments><guid isPermaLink="false">a8c399dd-6387-41ea-8247-681825aa1e18</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:57:26 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:57:26.616Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthi,கார்த்தி,சர்தார் 2,Ashika Ranganath,ஆஷிகா ரங்கநாத்,sardhar 2</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/36zwu88d/karthi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Karthi- Ashika Ranganath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/36zwu88d/karthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கன்னட திரை உலகில் அறிமுகமான ஆஷிகா ரங்கநாத் தற்போது தமிழ், தெலுங்கு திரை உலக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.</p><p>சர்தார் 2 படத்தில் கார்த்தி ஜோடியாகவும், விஸ்வம்பரா படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>கார்த்திக்கு சினிமா மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அவர் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கட்சிதமாக செய்ய விரும்பக் கூடியவர். அவர் இவ்வளவு பெரிய நடிகராக இருந்த போதிலும் மிகவும் எளிமையாகவும் பணிவாகவும் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF" rel="nofollow">சிரஞ்சீவி</a> உடன் நடித்தது அற்புதமான அனுபவம். சிறுவயதிலிருந்தே அவரது பாடல்களை கேட்டு அவரது நடனங்களை பார்த்து வளர்ந்தேன் இப்போது அவருடன் நடிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.</p><p>அவர் படப்பிடிப்பு தளத்தில் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் மிகவும் உத்வேகம் அளிக்கின்றன. விஸ்வம்பரா படப்பிடிப்பு தளத்தில் திரிஷாவையும் சந்தித்தேன் அவர் மிகவும் அழகாக இருக்கிறார். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது- எடிட்டர் விஜய் வேலுக்குட்டி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-journey-with-ajith-elevated-me-editor-vijay-velukkutti</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-journey-with-ajith-elevated-me-editor-vijay-velukkutti#comments</comments><guid isPermaLink="false">a0a62633-18a3-48b3-928f-b754f35f4a01</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:50:01 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:50:01.424Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay velukutty,Ajith Kumar,குட் பேட் அக்லி,சர்தார் 2,அஜித்,Sardar2,PSMithran,விஜய் வேலுக்குட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/13rxh0m9/good.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajith Kumar -Vijay Velukutty]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/13rxh0m9/good.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சினிமா துறைக்கு வர விரும்புபவர்கள் எடிட்டிங் மேசையை வேறு துறைகளுக்கான நுழைவுவாயிலாகக் கருதக் கூடாது என்று விஜய் வேலுக்குட்டி அறிவுறுத்துகிறார். </p><p>தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-movie-review-karthi-ps-mithran-collaboration">சர்தார் 2</a>’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து தனது திரைப் பயணம் மற்றும் எடிட்டிங் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ‘துணிவு’, ‘மார்க் ஆண்டனி’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பிரம்மாண்டப் படங்களில் பணியாற்றியுள்ள இவர், நடிகர் அஜித் குமாருடனான கூட்டணி தான் தனது தொழில் வாழ்க்கையிலும் பொருளாதார ரீதியாகவும் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.</p><h2>படத்<strong>தொகுப்பு கலை</strong></h2><p>சினிமா துறைக்கு வர விரும்புபவர்கள் எடிட்டிங் மேசையை வேறு துறைகளுக்கான நுழைவுவாயிலாகக் கருதக் கூடாது என்று விஜய் வேலுக்குட்டி அறிவுறுத்துகிறார். கல்லூரி படிப்புக்காலத்தில் உருவான ஆர்வமே தம்மை முழுநேர எடிட்டராக மாற்றியதாகக் குறிப்பிடும் அவர், ரஜினிகாந்தின் ‘ஜானி’ படம் தான் திரைப்பட உருவாக்கத்தில் உள்ள பல்வேறு துறைகளின் பங்களிப்பைப் பற்றித் தாம் புரிந்துகொள்ள உதவிய முதல் படம் என்று கூறினார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கல்லூரி குறும்படங்களின் போது, கைவசம் உள்ள காட்சிகளைக் கொண்டே கதையை சுவாரஸ்யமாக உருவாக்க முடியும் என்பதை உணர்ந்ததே எடிட்டிங் மீதான காதலை அதிகரித்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.</p><h2>‘சர்தார் 2’ படத்தி<strong>ன் தனித்துவமா</strong>ன படத்தொகுப்பு</h2><p>இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் இணைந்து பணியாற்றிய ‘சர்தார் 2’ திரைப்படம் பற்றிப் பேசிய விஜய் வேலுக்குட்டி, முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகம் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முதல் பாகத்தில் தகவல்கள் மற்றும் தரவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், இதில் கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான பயணத்திற்கு அதிக இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நடுவே உணர்ச்சிகளை பார்வையாளர்கள் உள்வாங்குவதற்காகக் காட்சிகளின் நீளத்தில் சில நொடிகள் கூடுதல் இடைவெளி விட்டுத் தொகுத்துள்ளதாக அவர் விளக்கினார்.</p><p>எச்.வினோத், ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற வேறுபட்ட பாணி கொண்ட இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்த அவர், அஜித் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் 'குட் பேட் அக்லி' உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்களின் அடுத்த படைப்பான 'டேர்டெவில்' அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். மேலும் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களை மட்டுமே செய்யாமல், ‘96’ போன்ற கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மென்மையான திரைப்படங்களிலும் பணியாற்ற வேண்டும் என்பதே தனது தற்போதைய விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இருக்கின்ற சட்டசபையில் அமர்ந்து முதலில் மக்கள் பணியாற்றுங்கள் - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-first-sit-in-existing-legislative-assembly-and-serve-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-first-sit-in-existing-legislative-assembly-and-serve-people#comments</comments><guid isPermaLink="false">a5ddbb54-7261-44b6-aaaf-4b56e459abfd</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:32:23 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:32:23.641Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,Kanimozhi,கனிமொழி,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/nl57b5fy/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/nl57b5fy/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் என்பது தேவையில்லாத ஒன்று என்று கனிமொழி கூறி உள்ளார்.</p> <p>சென்னையில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* மறுதேர்தல் நடைபெறக்கூடிய நிலையை உருவாக்கிய தவெக அரசு எப்படி நேர்மையான அரசியல் செய்ய முடியும்?</p><p>* ஏற்கனவே ஒருகட்சியின் பெயரில் நின்று வெற்றி பெற்றவர்கள் தற்போது மறுபடியும் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.</p> <p>* சட்டம் ஒழுங்கு பற்றி பதில் அளிக்காத முதலமைச்சர் விஜய் பஞ்ச் டயலாக்கையும் பழைய கதைகளையும் பேசுகிறார்.</p><p>* ஏற்கனவே உள்ள சட்டசபையில் இருந்து ஆட்சியை ஒழுங்காக நடத்துவது பற்றி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized">தவெக </a>அரசு சிந்திக்க வேண்டும்.</p><p>* சட்டசபைக்காகவே கலைஞர் கட்டிய ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்று இடத்திற்கு மாற்றி அதையே பயன்படுத்தலாம்.</p> <p>* நிதியில்லை நிதியில்லை என சொல்லும் தவெக அரசு மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்ய அனைத்து வகையிலும் முயற்சி செய்கிறது.</p><p>* இருக்கின்ற <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில்</a> அமர்ந்து முதலில் மக்கள் பணியாற்றுங்கள்.</p><p>* தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் என்பது தேவையில்லாத ஒன்று.</p> <p>* தவெக ஆட்சியில் தினந்தோறும் சட்டம் ஒழுங்கு சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>கார்த்தி-பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் ‘சர்தார்-2&apos;- திரை விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-movie-review-karthi-ps-mithran-collaboration</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-movie-review-karthi-ps-mithran-collaboration#comments</comments><guid isPermaLink="false">298b25b8-62e1-49ed-b5c9-57823535c0cc</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:30:51 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:30:51.842Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthi,கார்த்தி,Sardar 2,பி.எஸ்.மித்ரன்,P.S.Mithran,Sardar 2 Movie Review,சர்தார்-2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/nyiq0a2c/sadrdar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sardar 2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/nyiq0a2c/sadrdar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கார்த்தியின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தாலும், சுவாரஸ்யம் குறைந்த திரைக்கதையால் ‘சர்தார் 2’ தடுமாறுகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து, பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthi-starrer-sardar-2-sensor-update">சர்தார் 2</a>’ திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் புதிதாக இணைந்துள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் காட்சி முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் தங்கள் கலவையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.</p><p>முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், இந்திய உளவு அமைப்பின் முன்னாள் உளவாளியான ‘சர்தார்’ சந்திர போஸ் மற்றும் அவரது மகனான காவல் அதிகாரி விஜய் பிரகாஷ் என இரு வேறு கதாபாத்திரங்களில் கார்த்தி மீண்டும் நடித்துள்ளார். தனது முதிர்ச்சியான நடிப்பாலும், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளாலும் கார்த்தி படத்தை முழுமையாகத் தாங்கிப் பிடிக்கிறார். மேலும், முக்கியத் திருப்புமுனையாக நுழைந்துள்ள எஸ்.ஜே.சூர்யாவின் ‘பிளாக் டேக்கர்’ வில்லன் கதாபாத்திரம் மற்றும் யோகி பாபு - நிழல்கள் ரவி காம்போ ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.</p><p>படத்தின் முதல் பாதி விறுவிறுப்பான இடைவேளைக் காட்சியுடன் நேர்த்தியாக நகர்ந்த போதிலும், இரண்டாம் பாதியில் படத்தின் வேகம் கணிசமாகக் குறைந்துள்ளது. சமூகத்திற்குத் தேவையான ஆண்டிபயாடிக் எதிர்ப்பு தொடர்பான நல்ல கருத்தை மையமாகக் கொண்டு கதை நகர்ந்தாலும், அது பிரசாரத் தொனியில் அமைந்துள்ளதாகக் விமர்சிக்கப்படுகிறது. மேலும், சாம் சி.எஸ் வழங்கியுள்ள பின்னணி இசை கதையின் சுவாரஸ்யத்திற்கு உதவவில்லை என்றும், சிஜிஐ பணிகள் மற்றும் தருக்கமற்ற சில காட்சிகள் படத்தின் வேகத்தைத் தடைசெய்வதாகவும் கருத்துகள் எழுந்துள்ளன.</p><h2>ஒட்டுமொ<strong>த்த திரை அனுபவ</strong>ம்</h2><p>எந்தவொரு காதல் காட்சிகளோ அல்லது பாடல்களோ இன்றி, படம் நேரடியாக உளவாளி கதைக் களத்திற்குள் செல்வது வரவேற்கத்தக்க அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், முந்தைய பாகத்தில் இருந்த அளவுக்கு இறுக்கமான திரைக்கதை இல்லாதது மற்றும் பலவீனமான பின்னணி இசை காரணமாக ‘சர்தார் 2’ திரைப்படம் சராசரிக்கும் மேலான ஒரு திரையரங்க அனுபவமாக மட்டுமே அமைந்திருப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் கருதுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச் சென்ற 8 பேர் மாயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/eight-people-who-went-to-film-a-volcanic-eruption-in-indonesia-are-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/eight-people-who-went-to-film-a-volcanic-eruption-in-indonesia-are-missing#comments</comments><guid isPermaLink="false">531d852e-697d-4e3a-9a7a-06547e2a43f4</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:25:20 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:25:20.290Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தோனேசியா,எரிமலை வெடிப்பு,Volcano,Volcanic Eruption,indonesia,எரிமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/y9e4itog/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அனக் கிரகடாவ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அனக் கிரகடாவ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/y9e4itog/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 5 புகைப்படப் பத்திரிகையாளர்கள், 2 ஊழியர்கள் மற்றும் வழிகாட்டி உள்பட 8 பேர் நடுக்கடலில் மாயமாகியுள்ளனர்.</p><h2></h2> <p><a href="https://www.maalaimalar.com/news/world/volcanic-eruption-rocks-indonesia-flight-services-cancelled">இந்தோனேசியாவில் </a>ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா ஜலசந்தி பகுதியில் 'அனக் கிரகடாவ்' என்ற எரிமலை அமைந்துள்ளது.</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:53 மணிக்கு எரிமலை வெடித்து சிதறியது.</p> <p>செயற்கைக்கோள் படங்களின்படி, <a href="https://www.maalaimalar.com/topic/volcanic-eruption">எரிமலையிலிருந்து </a>20,000 அடி மற்றும் 50,000 அடி உயரத்திற்கு இரு மாபெரும் சாம்பல் மேகங்கள் எழும்பி, ஜகார்த்தா, லம்பங் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்குப் பரவின.</p><p>குடியிருப்பு பகுதிகள் எரிமலையிலிருந்து 16 கி.மீ தொலைவில் இருந்ததால் உடனடி உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.</p><p>தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.</p><h2>8 பேர் மாயம்</h2><p>இந்நிலையில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்புச் சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 5 புகைப்படப் பத்திரிகையாளர்கள், 2 ஊழியர்கள் மற்றும் வழிகாட்டி உள்பட 8 பேர் நடுக்கடலில் மாயமாகியுள்ளனர்.</p><p>கடந்த திங்கட்கிழமை மாலை எரிமலைப் பகுதியை அடைந்துவிட்டதாக அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திக்குப் பிறகு, இதுவரை அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை.</p><p>காணாமல் போனவர்கள் முன்னணி செய்தி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆவர். நடுக் கடலில் மாயமான பத்திரிகையாளர்களைத் தேடும் பணியில் இந்தோனேசிய கட லோரப் பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p> <h2>அனக் கிரகடாவ் எரிமலை</h2><p>'கிரகடாவ்வின் குழந்தை' என்று அழைக்கப்படும் அனக் கிரகடாவ் எரிமலை, 1883 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய 'கிரகடாவ்' எரிமலை வெடிப்பிற்குப் பிறகு, 1927 ஆம் ஆண்டில் கடலுக்கு அடியில் இருந்து புதிதாக உருவாகத் தொடங்கியது.</p><p>2018ஆம் ஆண்டில் இந்த அனக் கிரகடாவ் எரிமலை வெடித்தபோது, அதன் ஒரு பகுதி கடலுக்குள் சரிந்து விழுந்து ஏற்பட்ட நிலச்சரிவால் பயங்கரச் சுனாமி உருவானது. இதில் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் 430க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.</p><p>அன்றிலிருந்து இன்றுவரை இந்த எரிமலை நாட்டின் 2வது மிக ஆபத்தான பகுதி என்ற நிலையிலேயே உள்ளது.</p><p>கடந்த காலங்களிலும் தற்போதும் ஏற்பட்ட இந்த தொடர் வெடிப்புகளால் எரிமலையின் அளவு அதன் ஆரம்ப அளவிலிருந்து கால் பங்காக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>காவல் ஆய்வாளர் மிரட்டியதாகப் புகார் கூறிய வாலிபர் வெட்டிக் கொலை- டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-murdered-after-complaint-against-police-inspector-ttv-dhinakaran-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-murdered-after-complaint-against-police-inspector-ttv-dhinakaran-condemns#comments</comments><guid isPermaLink="false">7a705187-b68e-4823-8dee-0bf6d60fb3df</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:16:18 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:16:18.028Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>AMMK,அமமுக,டிடிவி தினகரன்,TTV Dinakaran,youth murder,காவல் ஆய்வாளர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/pt5185d1/TTV1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TTV Dinakaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/pt5185d1/TTV1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புகார் அளிக்க வந்த இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர்; புகார் அளித்த மறுநாளே படுகொலை செய்யப்பட்ட இளைஞர் – ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இக்கொலைக்கு சொல்லப்போகும் காரணம் என்ன? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>புகார் அளிக்க வந்த இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர்; புகார் அளித்த மறுநாளே <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">படுகொலை</a> செய்யப்பட்ட இளைஞர் – ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இக்கொலைக்கு சொல்லப்போகும் காரணம் என்ன?</p><p>சென்னை, திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொய் வழக்குப் பதிவு செய்து தன்னை கைது செய்யவுள்ளதாகவும் இளைஞர் பிரதீப் ராஜ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மறுநாளே அவர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</p><p>“சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும், சட்டத்தை மீறுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் காவல்துறை இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறையைப் பாராட்டிப் பேசிய இரண்டு நாட்கள்கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மிரட்டியதாகப் புகார் தெரிவித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டிருப்பது, காவல்துறை முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா என்ற கேள்வியையும், காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.</p><p>குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை என தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நிகழும் ஒவ்வொரு குற்றச்சம்பவத்திற்கும் வெவ்வேறு காரணங்களைக் கூறி, அவை சட்டம் ஒழுங்குடன் தொடர்பில்லாதவை என்பது போல் சித்தரிக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இளைஞர் பிரதீப் ராஜ் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்திற்கும் சொல்லப்போகும் காரணம் என்ன?</p><p>எனவே, தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்குப் பின்னரும் புதுப்புது காரணங்களைத் தேடாமல், குற்றச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே அவற்றைத் தடுக்கும் வகையில் காவல்துறையைச் செயல்படச் செய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக் காத்து, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட முன்வர வேண்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>72 வயது மலேசிய கால்பந்து ஜாம்பவான் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம்!</title><link>https://www.maalaimalar.com/sports/72-year-old-malaysian-football-legend-marries-20-year-old-woman</link><comments>https://www.maalaimalar.com/sports/72-year-old-malaysian-football-legend-marries-20-year-old-woman#comments</comments><guid isPermaLink="false">712407fa-194a-4bf8-b7f6-bcb49800bd97</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:10:14 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:10:14.305Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Abda Alif Wedding,Datuk Abdah Alif,Malaysian football legend,Datuk Yunus,அப்தா அலிப்,டத்தோக் அப்தா அலிப்,டத்தோக் யூனுஸ் அலிப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/oqr7pahm/kilava.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abda Alif Wedding]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/oqr7pahm/kilava.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் தேசிய வீரரும் அப்தா அலிப்பின் தம்பியுமான டத்தோக் யூனுஸ் அலிப் இந்தத் திருமணச் செய்தியை ஊடகங்களிடம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>மலேசிய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான<a href="https://www.maalaimalar.com/news/world/rajnath-singh-meets-sri-lankan-president-discusses-regional-security"> டத்தோக் அப்தா அலிப்</a> தனது 72-வது வயதில் 20 வயது நிறைந்த இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். 1970-களின் பிற்பகுதியிலும் 1980-களின் தொடக்கத்திலும் மலேசிய அணியின் முன்னணி வீரராகத் திகழ்ந்த இவர், 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இவர்களது திருமணம் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி கோலா திராங்கானுவில் இரு வீட்டாரின் பூரண சம்மதத்துடனும் ஆசிகளுடனும் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் முடிந்து தம்பதியினர் தேனிலவு சென்றுள்ளதால், இந்த நிகழ்வு குறித்து அப்தா அலிப்பைத் தொலைபேசியில் உடனடியாகத் தொடர்புகொள்ள இயலவில்லை.</p><p>முன்னாள் தேசிய வீரரும் அப்தா அலிப்பின் தம்பியுமான டத்தோக் யூனுஸ் அலிப் இந்தத் திருமணச் செய்தியை ஊடகங்களிடம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். "இரு குடும்பங்களின் ஆசியுடன் திருமணம் இனிதே முடிந்துள்ளது. அவர்கள் இருவரும் தங்களின் வாழ்க்கைப் பயணத்தில் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>தீ<strong>யாய் பரவும் புகைப்படம்</strong></h2><p>இளம் பெண்ணை கரம்பிடித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, 52 ஆண்டுகள் வயது வித்தியாசம் கொண்ட இந்தத் திருமணம் மலேசியக் கால்பந்து ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளை மாளிகை பெண் உதவியாளர்களுக்கு தலா ரூ.45 லட்சம் பரிசாக வழங்கிய டிரம்ப்</title><link>https://www.maalaimalar.com/news/world/controversy-erupts-over-trumps-lavish-gifts-to-white-house-female-aides</link><comments>https://www.maalaimalar.com/news/world/controversy-erupts-over-trumps-lavish-gifts-to-white-house-female-aides#comments</comments><guid isPermaLink="false">45f3494f-410a-4a6a-bd82-4a30c58f1e50</guid><pubDate>Thu, 10 Sep 2026 07:04:32 +0000</pubDate><atom:updated>2026-09-10T07:04:32.693Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Christmas,trump,டிரம்ப்,வெள்ளை மாளிகை,White House,கிறிஸ்துமஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/5rt60k81/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/5rt60k81/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் தனது 3 பெண் உதவியாளர்களுக்கு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாகப் பெருந்தொகையை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது</p> <p>வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்துள்ள ஆண்டு சொத்து விவர அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. </p><p>வெள்ளை மாளிகையின் சிறப்பு மற்றும் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றும் நட்டாலி ஹார்ப், ஊடக ஆலோசகர் மார்கோ மார்ட்டின் மற்றும் ஓவல் அலுவலக துணை இயக்குனர் சேம்பர் லெய்ன் ஹாரிஸ் ஆகிய மூவருக்கும் இந்திய மதிப்பில்  தலா ரூ.45 லட்சத்தை <a href="https://www.maalaimalar.com/news/world/trump-promises-5000-per-person-to-the-public-if-they-vote-for-the-republican-party-in-the-midterm-elections">டிரம்ப் </a>ரொக்கமாக வழங்கியுள்ளார்</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">வெள்ளை மாளிகை</a>யின் அறிக்கையின்படி இவர்கள் மூவரும் ஆண்டுக்கு தலா ரூ.1.35 கோடி சம்பளமாக பெற்று வருகின்றனர். ரூ.45 லட்சம் பரிசுத்தொகை  அவர்களின் ஆண்டுச் சம்பளத்தில் சுமார் 30 சதவீதத்திற்கு சமமாகும்.</p> <h2>விமர்சனம்</h2><p>அமெரிக்கக் கூட்டாட்சி சட்டத்தின்படி, அரசு ஊழியர்கள் அரசு வழங்கும் சம்பளத்தை தவிர்த்து பிற வழிகளில் தனியாகப் பண பலன்களை பெறத் தடை உள்ளது.</p><p>முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தில் பணியாற்றிய சட்ட ஆலோசகர் ரிச்சர்ட் பெயிண்டர், அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையைப் பரிசாக வழங்குவது விதிமீறலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>எனினும், இது தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட பரிசு என்பதால் நேரடியாகச் சட்ட மீறல் என்று சொல்ல முடியாது என்றும், ஆனால் அரசு ஊழியர்கள் இவ்வளவு பெரிய தொகையை பரிசாகப் பெறுவது அசாதாரணமானது என்றும் பிற சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>விளக்கம்</h2><p>பரிசுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.</p><p>டிரம்ப் தொழில் அதிபராக இருந்த காலத்திலிருந்தே, தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் காலத்தில் சொந்தப் பணத்திலிருந்து பரிசுகளை வழங்குவது அவரது வழக்கமான ஒன்றாகும்.</p><p>இந்தப் பரிசுகள் முழுமையாகவும் அவரது சொந்த நிதியிலிருந்தே வழங்கப்பட்டுள்ளன. அரசுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-elections-admk-and-naam-tamilar-katchi-candidates-to-be-announced-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-elections-admk-and-naam-tamilar-katchi-candidates-to-be-announced-soon#comments</comments><guid isPermaLink="false">5a801725-4d29-43c5-aa55-3601d84e2f35</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:57:10 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:57:10.878Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,naam tamilar katchi,by election,தாராபுரம்,மதுராந்தகம்,நாம் தமிழர் கட்சி,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/lyz9ihsr/admk1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ADMK - Naam Tamilar Katchi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/lyz9ihsr/admk1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி  சார்பில் களம் காணும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.</p> <p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-ammk-campaign-aiadmk-bypoll-victory">அ.தி.மு.க.</a>, நாம் தமிழர் கட்சி  சார்பில் களம் காணும் வேட்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.</p> <h2>12-ந்தேதிக்கு பிறகு</h2><p>இந்த 2 கட்சிகளின் சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் விவரங்கள் வருகிற 12-ந்தேதிக்கு பிறகு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. இதற்கு இன்று கடைசி நாளாகும்.</p> <p>இதை தொடர்ந்து போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களில் ஒருவரை தேர்வு செய்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட உள்ளார்.</p><p>நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> தற்போது மதுரையில் சேயோன் படப்பிடிப்பில் உள்ளார். 12-ந் தேதி தான் சென்னைக்கு வருகிறார். சென்னைக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சி சார்பில் 2 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு அமமுக பாடுபடும்- டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-ammk-campaign-aiadmk-bypoll-victory</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-ammk-campaign-aiadmk-bypoll-victory#comments</comments><guid isPermaLink="false">8069aa3b-223f-4b14-b053-2794bdf1a663</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:43:49 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:43:49.540Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,டிடிவி தினகரன்,TTV Dinakaran,ByElection,tvk,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ojkl6o4l/TTV-Dinakaran.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TTV Dinakaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ojkl6o4l/TTV-Dinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம்  சட்டமன்ற இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக்கழகத்திற்கு எதிராக  பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது நல்ல யோசனை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  தெரிவித்துள்ளார்.</p><p>திருச்சியில் டிடிவி தினகரன் இன்று நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். </p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>பொது வேட்பாளர்</h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">விஜய்</a> திரைப்படங்களில் கதாநாயகனாக  தோன்றினாலும், நிஜத்தில் அவர் ஒரு வில்லன் தான்.</p><p>மதுராந்தகம், தாராபுரம்  சட்டமன்ற இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக்கழகத்திற்கு எதிராக  பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது நல்ல யோசனை.</p><p>இதனை கூட்டணி கட்சிகளுடன் விரிவாக  கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். தற்போதைய சூழலில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு  அ.ம.மு.க., பாடுபடும்.</p><h2>புதிய சட்டமன்றம் </h2><p>மீனவர்களின் வாழ்வா தாரத்தைப் பாதிக்கக்கூடிய மற்றும் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக்கூடிய பட்டினப்பாக்கத்தில்  புதிய சட்டமன்றத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.</p><p>தமிழக முதலமைச்சரின் வீட்டிற்கு அருகிலேயே சட்டமன்றத்தைக் கொண்டுவரத் திட்டமிடுகிறார்களோ என்ற பலத்த சந்தேகம் எழுகிறது . </p><p>அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தற்போது விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.</p><h2>அ.தி.மு.க.வுடன் இணைப்பா?</h2><p>அ.தி.மு.க., கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், 2 கட்சிகளும் ஒன்றாக இணைக்கப்படப்போகிறது என்று வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மரகதம் குமரவேல்-சத்தியபாமா வாழ்க்கை குறிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/biographical-sketch-of-maragatham-kumaravel-and-sathyabhama</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/biographical-sketch-of-maragatham-kumaravel-and-sathyabhama#comments</comments><guid isPermaLink="false">8d154f9f-063f-430e-902e-f1c93d4f220e</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:41:06 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:41:06.453Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/s2u3zxd7/byelection.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மரகதம் குமரவேல்- சத்தியபாமா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/s2u3zxd7/byelection.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1975-ம் ஆண்டு பிறந்த இவர் முதலில் அ.தி.மு.க. கட்சியில் தீவிரமாக செயல்பட்டு  பின்னர் 2026 மே மாதத்தில் த.வெ.க. கட்சியில் இணைந்தார்.</strong></em></p><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-</p><h2><strong>மரகதம் குமரவேல்</strong></h2><p>மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல், அ.தி.மு.க.வில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஒன்றிய தலைவராக இருந்தார். 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் மதுராந்தகம் தொகுதியில் அ.திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><p>கடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க.வில் அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டது. இதையடுத்து மதுராந்தகம் தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2026 தேர்தலில் அவர் 69,284 வாக்குகள் பெற்று, த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரீனை 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.</p><p>கடந்த மே மாதம் 25-ந்தேதி அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். தற்போது மதுராந்தகம் சட்டசபை தொகுதி <a href="https://www.maalaimalar.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தலில்</a> போட்டியிட அவருக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>சத்தியபாமா</strong></h2><p>​திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சத்தியபாமா. இவர் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திருப்பூர் மாவட்ட ஊராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தார். உள்ளாட்சியில் சிறப்பான களப்பணியாற்றிய இவருக்கு, கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தீவிர பிரசாரத்திற்குப் பிறகு, 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-வாகத் தேர்வானார்.</p><p>சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க.வில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமை மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிருப்தி அடைந்தார்.</p><h2><strong>விலகினார்</strong></h2><p>​இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியதோடு, தனது சட்டமன்ற உறுப்பினர்  பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) அதிகாரப்பூர்வமாகத் தன்னை இணைத்துக் கொண்டார்.</p><p>​தற்போது காலியாக உள்ள தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிட சத்தியபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><h2><strong>மீண்டும் வாய்ப்பு</strong></h2><p>​மாவட்ட ஊராட்சித் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அப்பகுதியில் பணியாற்றிய அனுபவமும் செல்வாக்கும் அவருக்கு இருப்பதால், த.வெ.க. தலைமை அவரை மீண்டும் தாராபுரம் தொகுதியில் களமிறக்கத் திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தாராபுரம் தொகுதியின் தேர்தல் களம் தற்போதே பெரும் பரபரப்பை அடைந்துள்ளது.</p><p>வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் சத்யபாமாவின்  தந்தை பெயர் பொன்னுசாமி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1975-ம் ஆண்டு பிறந்த இவர் முதலில் அ.தி.மு.க. கட்சியில் தீவிரமாக செயல்பட்டு  பின்னர் 2026 மே மாதத்தில் த.வெ.க. கட்சியில் இணைந்தார்.</p><p>2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். தேர்தலில் 81,100 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டி.இந்திராணியை 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளப் பேரழிவு: காணாமல் போனவர்களை அடையாளம் காணும் இணைய தன்னார்வலர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-online-volunteers-identify-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-online-volunteers-identify-missing#comments</comments><guid isPermaLink="false">3cf60612-8c1c-4b71-88e8-37128f275782</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:38:52 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:38:52.625Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆஸ்திரேலியா,Facebook,nepal flood,நேபாள வெள்ளம்,நேபாள வெள்ளப் பேரழிவு,Nepal flood disaster,Sonia Patil,திபெத் எல்லைப் பகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/4xxi4m57/SONIA.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonia Patil]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/4xxi4m57/SONIA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சோனியா பாட்டீல் என்ற பெண், தனது ஓய்வு நேரத்தில் பலியானவர்களின் புகைப்படங்களை ஆராய்ந்து குடும்பத்தினருக்கு உதவி செய்து வருகிறார்.</p><p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து, பெரும் வெள்ளமும் சேறும் சகதியும் கிராமப் பகுதிகளைத் தாக்கியது. இந்த பேரழிவில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் 5,500-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.</p><p>இந்த சூழலில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது அவர்களின் குடும்பத்தினருக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கும் பணியாக மாறியுள்ளது. <a href="https://www.maalaimalar.com/news/world/sudden-flood-disaster-raises-questions-over-kathmandu-tibet-railway-bri-dream-project">நேபாள காவல் துறை </a>சார்பில் பலியானவர்களின் உடல்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றைத் நேரடியாகப் பார்த்து அடையாளம் காண முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவும் வகையில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இணையம் வழியே ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.</p><p>ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சமையல்காரராகப் பணியாற்றும் சோனியா பாட்டீல், தினசரி 12 மணி நேர வேலைக்கு பிறகும் இரவு நேரங்களில் இந்த சேவைப் பணியில் ஈடுபட்டு வருகிறார். காவல் துறை இணையதளத்தில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை கவனமாக ஆராய்ந்து, அதில் காணப்படும் பச்சை குத்தப்பட்ட அடையாளங்கள், ஆடைகள் மற்றும் நகைகள் போன்ற தனித்துவமான குறிப்புகளைப் பட்டியலிடுகிறார்.</p><p>இவ்வாறு தொகுக்கப்படும் தகவல்கள் முகநூல் குழுக்களில் பகிரப்பட்டு, காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. இதில் ஏதேனும் சாத்தியமான அடையாளங்கள் கண்டறியப்பட்டால், நேபாளத்தில் உள்ள ஆய்வகங்களில் மரபணு பரிசோதனை செய்து உறுதிப்படுத்துமாறு அக்குடும்பத்தினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>அமெரிக்கா, ஐரோப்பா, நியூசிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பலரும் இக்குழுவில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அழுகிய நிலையில் உள்ள உடல்களைத் தொடர்ந்து பார்த்து அடையாளம் காண்பது கடினமான பணியாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தைக் குறைக்கும் நோக்கில் இச்சேவையைத் தொடர்ந்து செய்து வருவதாக சோனியா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் மூலம் வரலாறு திரும்பும் - துரைமுருகன்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/duraimurugan-says-history-will-repeat-itself-through-by-election</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/duraimurugan-says-history-will-repeat-itself-through-by-election#comments</comments><guid isPermaLink="false">2c3be28b-f5cc-4baf-9ffe-a12d92af5335</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:30:52 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:30:52.473Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,by election,Durai Murugan,துரைமுருகன்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/3alrv3c7/Duraimurugan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Durai Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/3alrv3c7/Duraimurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்.ஜி.ஆர். ஆளுங்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்ணாநகர், மயிலாடுதுறை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். மீண்டும் வரலாறு திரும்பும் என்று துரைமுருகன் கூறினார்.</p> <p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/has-the-fake-image-of-prison-martyr-shattered-and-sparked-panic-thavek"> தி.மு.க. </a>வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.</p><p>தொகுதிகளில் தேர்தல் பணிகளையும் தி.மு.க. தொடங்கி உள்ளது. இதுகுறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">துரைமுருகன்</a> அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p> <p>2 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. போன முறையும் நின்றோம். இந்த முறையும் நிற்கிறோம். தேர்தல் காலத்தில் வந்து பாருங்கள். தி.மு.க.வின் வியூகத்தை இப்போதே சொல்லி விட்டால் கேள்வித்தாள் அவுட்டான  மாதிரி ஆகிவிடும். எம்.ஜி.ஆர். ஆளுங்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்ணாநகர், மயிலாடுதுறை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.  </p> <p>மீண்டும் வரலாறு திரும்பும். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பது இலக்கணம் கிடையாது. </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடைக்கால தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் ஆளுக்கு 5000 டாலர் - நாட்டு மக்களுக்கு டிரம்ப் வாக்குறுதி
</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-promises-5000-per-person-to-the-public-if-they-vote-for-the-republican-party-in-the-midterm-elections</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-promises-5000-per-person-to-the-public-if-they-vote-for-the-republican-party-in-the-midterm-elections#comments</comments><guid isPermaLink="false">d2485c70-3e6b-4886-b3be-f4b100f91952</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:13:25 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:13:25.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,டிரம்ப்,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/lr2d7u6x/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/lr2d7u6x/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இடைகால தேர்தலில் குடியரசு கட்சி வென்றால் நாட்டின் வயது வந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் 5,000 டாலர் வழங்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.</p><h2>இடைகால தேர்தல்</h2><p>வரும் 2026 நவம்பர் 3 அன்று, அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து 50 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.  </p><p>அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என்றாலும், நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் மட்டுமே. </p><p>எனவே, அதிபர் பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடையும் போது இடைக் காலத் தேர்தல் (Midterm Election) நடக்கிறது.</p><p>டிரம்ப்  குடியரசு கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்கிறதா அல்லது எதிர்க்கட்சிக்கு கிடைக்கிறதா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும். </p><p>அமெரிக்கவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சபையின் மொத்தம் 435 இடங்களுக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. மேலும் அமெரிக்காவின் 39 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது. </p><p>ஆளும் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்தால், டிரம்ப் தனது மீதமுள்ள 2 ஆண்டு பதவிக்காலத்தில் புதிய சட்டங்களை  கொண்டு வருவதிலும், திட்டங்களுக்கு நிதி ஒப்புதல் பெறுவதிலும் பெரும் சவால்களை  சந்திக்க நேரிடும்.</p><p>இந்நிலையில் அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்ட் டிரம்ப்</a>, வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைகால தேர்தலில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனேட் ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைத் தக்கவைத்து கொண்டால், நாட்டின் ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் 5,000 டாலர் ( 4.4 லட்சம் ரூபாய்) வழங்கப்போவதாக அதிரடி வாக்குறுதியை அளித்துள்ளார்.</p><p>டல்லாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் பேசிய டிரம்ப், இந்தத் தொகையை "Trump Dividend" என்று குறிப்பிட்டார்.</p><p>"குடியரசுக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், நீங்களும் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு 5,000 டாலர் கிடைக்கும்" என்று டிரம்ப் தனது உரையில் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த இடைகால தேர்தலில் தான் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றாலும், வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் இடத்தில் தனது பெயர் இருப்பதைப்போல கருதி குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.</p><h2>திட்டம்</h2><p>அமெரிக்காவில் உள்ள சுமார் 24.5 கோடி வயது வந்த குடிமக்களுக்கு தலா 5,000 டாலர் வழங்க வேண்டுமானால், அதற்குச் சுமார் 1 டிரில்லியன் டாலர் நிதி தேவைப்படும்.</p><p>தனது நிர்வாகம் விதித்துள்ள இறக்குமதி வரிகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூலமாகவே இது சாத்தியப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>குறைந்துவரும் ஆதரவு</h2><p>பணவீக்கம் மற்றும் ஈரான் உடனான போர் காரணமாக மக்களிடையே டிரம்ப் மீது அதிருப்தி நிலவுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் நாட்டில் டிரம்பை ஆதரிப்போம் எண்ணிக்கை 30% ஆக சரிந்துள்ளது.</p> <h2>விமர்சனம்</h2><p>எதிர் தரப்பில் உள்ள ஜனநாயக கட்சியினர் இந்த அறிவிப்பை தேர்தலில் தோல்வியடைவோம் என்ற பயத்தில் டிரம்ப் அளித்துள்ள நம்பகத்தன்மையற்ற வாக்குறுதி என்று விமர்சித்து வருகின்றனர்.</p><p>இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கக் காங்கிரஸின் ஒப்புதல் அவசியமாகும். எனினும், நாட்டின் கடன் 40 டிரில்லியன் டாலரை தாண்டியுள்ள நிலையில் இது பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றது என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p> <h2>ஈரான் விவகாரம்</h2><p>தனது உரையின் போது ஈரான் மீதான போரைப் பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் நிலைக்கு மிக அருகில் சென்றுவிட்டதாலேயே ராணுவ நடவடிக்கை தேவைப்பட்டது என்றும் இந்த பிரச்சனை இடைத்தேர்தலுக்கு பின் முடிவுக்கு வந்து கச்சா எண்ணெய் விலைகள் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.</p><p>மேலும், ஹார்முஸ் ஜலசந்திக்கு தனது பெயரை சூட்டப் போவதாகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன?- அரசுக்கு அன்புமணி கேள்வி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-ask-question-to-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-ask-question-to-tn-govt#comments</comments><guid isPermaLink="false">e014a44d-7f72-44c7-80b6-0214068a95e2</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:10:04 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:10:04.031Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0bdx8hhn/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0bdx8hhn/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுவிலக்கு உள்ளிட்ட கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளை  செயல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? </p><p>கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாம்ராஜ்யம் குறித்த உண்மைகள் அம்பலமாகியுள்ளன. திமுக ஆட்சியில் நிகழ்ந்த இந்தக் கொடூரம் குறித்த விசாரணை ஆணைய பரிந்துரைகள் மீது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது தான் இப்போது எழுந்துள்ள வினாவாகும்.</p><p>கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள கருணாபுரம் பகுதியில் 2024-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலக்கப்பட்ட நச்சு சாராயத்தை குடித்தவர்களில் 70 பேர் அடுத்த சில நாள்களில் உயிரிழந்தனர்; மேலும் 161 பேர் கடுமையான உடல்நல பாதிப்புகளுடன் பிழைத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட  ஆணையத்தின் அறிக்கை, 18 மாதங்களுக்குப் பிறகு  சட்டப்பேரவையில் நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது.</p><p>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் அரசின் தோல்வி என்று குற்றஞ்சாட்டியுள்ள ஆணையம், ‘‘கள்ளச்சாராய வணிகர்களுடன் அதிகாரிகள் கூட்டணி வைத்திருந்தனர். அவர்களின் துணையின்றி, சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நச்சு சாராயம் வந்திருக்க முடியாது. இந்தக் கூட்டணி தகர்க்கப்பட வேண்டும். கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. பல ஊர்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் உரிமை ரூ.5 லட்சம் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.</p><h2><strong>குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை</strong></h2><p>கள்ளச்சாராய சாவுகள் நடைபெற்ற ஒரு சில மணி நேரங்களிலேயே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழும் கள்ளச்சாராய வணிகத்திற்கு திமுகவைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முழு ஆதரவாக இருந்தனர் என்றும், திமுகவைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்பவரும், அவரது கூட்டாளிகளும் தான் நச்சு சாராயத்தை விற்பனை செய்துள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தேன். அப்போதைய ஆளும் கட்சியான திமுக, இதில் திமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்ததுடன், என் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தனர். ஆனால், அப்போது நானும், பாமகவும் முன்வைத்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு வழங்குதல், இனிவரும் காலங்களில் கள்ளச்சாராய விற்பனை நடக்காமல் தடுத்தல் ஆகிய 3 வகைகளில் பல்வேறு பரிந்துரைகளையும் நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் அளித்திருந்தது. கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு இருந்திருந்தால், ஆணையத்தின் அறிக்கையை  உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் 15 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் கூட, அதை  வெளியிடாமல் கிடப்பில் போட்டு வைத்ததிலிருந்தே திமுக அரசின் உண்மை முகம் அம்பலமாகி விட்டது.</p><p>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்கத் தவறியது மட்டுமின்றி, அது தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கும், அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் திமுக அரசு தவறி விட்டது. 18 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை இப்போது வெளியிட்டிருக்கும் தவெக அரசு, அதன் பரிந்துரைகள் மீது என்ன நடவடிக்கை  எடுக்கப் போகிறது? என்பது தான் இப்போது எழுந்துள்ள வினா. அதற்கு அரசு விடையளிக்க வேண்டும்.</p><p>கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதைத் தடுக்க தனியாக ஒரு மதுவிலக்குப் படையை  உருவாக்க வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சாவுகளில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உணவு, உறைவிடம், கல்வி ஆகிய உதவிகளை வழங்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை தவெக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.  </p><p>இவை அனைத்தையும் விட நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் தெரிவித்துள்ள ஒரு கருத்தும், அதைச் சார்ந்து அளித்துள்ள பரிந்துரையும் மிகவும் முக்கியமானவை. தமிழ்நாட்டில் 1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டு, தாராளமாக மது கிடைக்க வசதி செய்யப்பட்டதால், பெரும்பாலான மக்கள் குடிகாரர்களாக மாறி விட்டனர் என்று கவலை தெரிவித்திருக்கும் ஆணையத்தின் அறிக்கை, ‘‘மதுவிலக்கு சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் அரசு கடுமையாக செயல்படுத்தினால் கள்ளச்சாராயத்தையும், பிற போதைப் பொருள்களையும் முற்றிலுமாக ஒழித்து விட முடியும். தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவணிகத்தைக் குறைத்து   குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்’’ என்றும் பரிந்துரைத்துள்ளது.</p><p>இது தான் தமிழ்நாட்டுக்கு இன்றைய நிலையில் மிகவும் தேவையான பரிந்துரை ஆகும். எனவே, தமிழ்நாட்டில் இப்போதுள்ள 4038 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். இதற்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.  மதுவிலக்கு உள்ளிட்ட கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளை  செயல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். </p>]]></content:encoded></item><item><title>வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized#comments</comments><guid isPermaLink="false">3e59b482-120b-4e7a-9659-a252ce646d5f</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:54:45 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:54:45.870Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,விஎஸ் பாபு,VS Babu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/h6kpvq5u/vsbabu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வி.எஸ்.பாபு]]></media:title><media:description type="html"><![CDATA[ வி.எஸ்.பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/h6kpvq5u/vsbabu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மார்பு சளி பாதிப்பு காரணமாக வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.</strong></em> </p><h2><strong>மூச்சு திணறல்</strong></h2><p>சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/விஎஸ்-பாபு">வி.எஸ்.பாபு</a> எம்.எல்.ஏ. திடீர் மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>கடந்த ஒரு மாதமாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அவருக்கு மார்பு சளி பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். </p><p>அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  சளியின் காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று அல்லது நாளை அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சிறை சென்ற தியாகி&apos; என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?- தவெக</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/has-the-fake-image-of-prison-martyr-shattered-and-sparked-panic-thavek</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/has-the-fake-image-of-prison-martyr-shattered-and-sparked-panic-thavek#comments</comments><guid isPermaLink="false">a7e7bccd-4225-464c-9ce1-7c3377cc03ba</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:47:44 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:47:44.166Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,MKStalin,tvk,முக ஸ்டாலின்,MISA,மிசா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rs9mi960/TVK-IT.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin- TVK Flag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rs9mi960/TVK-IT.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவை விமர்சித்து தவெக ஐடி விங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><h2>மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு</h2><p>திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities" rel="nofollow">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தளத்தில், வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? என்று பதிவிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில்,</p><p>மிசா காலத்தில் கைது செய்யப்பட்டபோது சிறையில் எங்களுக்கு பல கொடுமைகள் நடந்தது.</p><p>காவலர்கள் தாக்கியதில் எனது அருமை அண்ணன் சிட்டிபாபு இறந்தார். அவர்கள் தாக்கியதில் எனது தாடை எலும்பு உடைந்தது.</p><p>எதிர்த்து போராடுவதும் அதன் விளைவுகளை சந்திப்பதும் எங்களுக்கு புதியது அல்ல.</p><p>யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.</p><p>உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சட்டசபையில் உள்ள நூலகத்திற்கு சென்று எனது போராட்ட வரலாற்றை படித்து பாருங்கள்.</p><p>சர்காரியாக கமிஷன் பற்றியும் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலை முதலமைச்சர் விஜய் கூறி உள்ளார்.</p><p>அரசியலுக்காக காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையும் முதலமைச்சர் விஜயும் கூறி உள்ளார்.</p><p>அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95% வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் குற்றம்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.</p><p>பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுவது இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும்.</p><p>தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்ததற்கு சாரி என்று என்னிடம் கூறினீர்களே?</p><p>பரவாயில்லை தம்பி. நீங்க இப்போ மாநிலத்தின் முதலமைச்சர். யாரைப்பற்றியும் பேசும்போது கண்ணியத்தோடு பேசுங்கள் என்று சொன்னேன். அதையெல்லாம் மறந்துட்டீங்களே.</p><p>தமிழ்நாடு சட்டசபைக்கென ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது. முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டசபையில் தேவையில்லாத சர்ச்சைகளை பேச வேண்டாம்.</p><p>தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது. வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?</p><p>தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்? விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.</p><p>வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை திமுகவினர் கைவிட்டு விடக்கூடாது.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p><h2>தவெக பதிலடி</h2><p>தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?</p><p>எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.</p><p>உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது.</p><p>பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.</p><p>கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/announcement-of-candidates-for-the-secular-social-justice-victory-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/announcement-of-candidates-for-the-secular-social-justice-victory-alliance#comments</comments><guid isPermaLink="false">cff4361e-4fad-4ed6-a8c2-b1fdcb64ed90</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:45:34 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:45:34.131Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/xk97vmdj/TVK.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சத்தியபாமா- மரகதம் குமரவேல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/xk97vmdj/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.</strong></em> </p><p>தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த இரு தொகுதி <a href="https://www.maalaimalar.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தலுக்கான</a> வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.</p><p>இதனிடையே தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். </p><p>இதுதொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>அனைவருக்கும் வணக்கம்.</p><p>வருகிற 06.10.2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாகக் கீழ்க்காண்பவர்கள் போட்டியிடுவார்கள்.</p><p>1. 35-மதுராந்தகம் (தனி) - திருமதி K.மரகதம் குமரவேல், Ex.M.LA.. கழகத் துணைப் பொதுச் செயலாளர்</p><p>2. 101-தாராபுரம் (தனி) திருமதி.சத்தியபாமா. Ex.MLA.. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்</p><p>கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/nEH9s9t231">pic.twitter.com/nEH9s9t231</a></p>&mdash; TVK Vijay (@TVKVijayHQ) <a href="https://x.com/TVKVijayHQ/status/2097920532931031366?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா வரும் புதின்.. முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 3 ரஷிய ராணுவ விமானங்கள் வருகை</title><link>https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations</link><comments>https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations#comments</comments><guid isPermaLink="false">3dd955a6-1040-4fe6-98d1-f279f9915051</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:23:40 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:23:40.590Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Putin,புதின்,BRICS Summit,ரஷியா,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/tewu3mqf/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரஷிய ராணுவ விமானங்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரஷிய ராணுவ விமானங்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/tewu3mqf/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிபர் புதின் வருகைக்கு முன்னதாக 3 ரஷிய ராணுவ விமானங்கள் இந்தியா வருகை தந்துள்ளன.</p> <p>இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லியில் </a>உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.  </p><p>ரஷிய அதிபர்  புதின், பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரில் பங்கேற்கின்றனர்.  </p><p>இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் வருகைக்கு முன்னரே அவரது பாதுகாப்பை இங்கு உறுதி செய்ய மூன்று ரஷிய ராணுவ விமானங்களில் உயர் அதிகாரிகள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். </p>  <h2>விமானங்கள்</h2><p>நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுமார் 5:30 மணியளவில், <a href="https://www.maalaimalar.com/topic/russia">ரஷியாவின் </a>அதிநவீன 'IL-76' போர் தளவாட போக்குவரத்து விமானம் உட்பட 3 ராணுவ விமானங்கள் நோய்டா விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கின.</p><p>இந்த விமானங்களில் ரஷியாவின் உயர் மட்டப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் தந்துள்ளனர்.</p> <p>பொதுவாகவே ரஷிய அதிபர் புதினின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு அவர் செல்லும்போது அவரின் மலத்தை சேமித்து வைக்க கூட உடன் பெட்டி ஒன்று எடுத்துச் செல்லப்படும். </p><p>அதன் மூலம் அவரின் உடல்நலன் குறித்து வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.</p> <p>இந்த சூழலில் அதிபர் புதின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விவிஐபி வாகன போக்குவரத்து வசதிகள் குறித்து இந்திய மற்றும் ரஷிய அதிகாரிகள் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>புதின் வருகை தரும் விமானம் டெல்லியில் தரையிறங்குமா அல்லது நொய்டாவில் தரையிறங்குமா என்பது குறித்து உறுதிசெய்யப்படவில்லை.</p> <h2>நொய்டா விமான நிலையம்</h2><p>கடந்த ஜூன் 15 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த புத்தம் புது விமான நிலையத்தில் ஒரு வெளிநாட்டு ராணுவ விமானம் தரையிறங்குவது இதுவே முதன்முறையாகும்.</p><p>இதுவரை இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு ராணுவ விமானங்கள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தையே பயன்படுத்தி வந்தன.</p><p>முதல்முறையாக நோய்டா விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டு, ரஷிய விமானங்கள் அங்கு வந்துள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா- வங்காளதேசம் அணிகள் இன்று அரையிறுதியில் மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/womens-asia-cup-india-bangladesh-clash-in-semifinal</link><comments>https://www.maalaimalar.com/sports/womens-asia-cup-india-bangladesh-clash-in-semifinal#comments</comments><guid isPermaLink="false">1c1b60e4-7031-4b23-9d9d-c85bbc79350d</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:06:43 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:06:43.144Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,இந்திய அணி,Indian team,பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்,வங்காளதேசம் அணி,world asian cup cricket</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/fx0940qq/indian-team.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND vs BNG]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/fx0940qq/indian-team.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன.</p><h2>பெண்கள் ஆசிய கிரிக்கெட்</h2><p>10-வது பெண்கள் ஆசிய கோப்பை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D" rel="nofollow">கிரிக்கெட்</a> போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா (3 வெற்றியுடன் 6 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி), 'பி' பிரிவில் முதல் இரு இடங்களை பெற்ற நடப்பு சாம் பியன் இலங்கை (6 புள்ளி), வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.</p><p>தாய்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகள் வெளியேறின.</p><p>இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் முதலாவது அரை இறுதியில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, 2018-ம் ஆண்டு சாம்பியனான வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.</p><p>தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது.</p><p>லீக்கில் பாகிஸ்தானை 55 ரன்னில் சுருட்டியது ஆகச்சிறந்த செயல்பா டாக பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா (ஒரு சதம் உள்பட 152 ரன்), ஷபாலி வர்மாவும், (104 ரன்), பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா (8 விக்கெட்) ஸ்ரீசரனி (7), பிரேமா ரவாத் தும் (5) மிரட்டுகிறார்கள். மிடில் வரிசை தான் சற்று தடுமாறுகிறது. பிரதிகா ரவால், பார்தி புல்மாலி, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் ஆகியோரும் கைகொடுத்தால் இந்தியா மேலும் வலுவடையும்.</p><h2>வங்காளதேசம் எப்படி?</h2><p>நிகார் சுல்தானா தலைமையிலான வங்காளதேச அணி லீக்கில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது. இந்தோனேசியா, அமீரகம் ஆகிய அணிகளை தோற்கடித்து அரைஇறுதியை எட்டியது. பந்து வீச்சில் மருமா அக்தர் (7 விக்கெட்), ரபேயா கான், நஹிதா அக்தரும், பேட்டிங்கில் சோபனா மோஸ்டாரி, ஷர்மின் அக்தர், ஷோர்னா அக்தரும் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர்.</p><p>சுல்தானா கூறுகையில், 'இந்தியா மிகவும் வலிமையான அணி. அதனால் எங்களது மிக உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளோம். முடிவு எதுவாக இருந்தாலும் சரி. எங்களது முழு திறமையை வெளிப்படுத்தி, திட்டமிடலை களத்தில் கச்சிதமாக செயல்படுத்த விரும்புகிறோம்' என்றார்.</p><p>வரலாற்றை புரட்டிப்பார்த்தால் இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால் அண்மை காலமாக வங்காளதேசம், இந்தியாவுக்கு எதிராக பகைமை உணர்வை காட்டுவதால் வரிந்துகட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.</p><p>சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி யுள்ளன. இதில் 21-ல் இந்தியாவும், 3-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.</p><h2>இரவு 8 மணிக்கு...</h2><p>வெப்பம் மற்றும் காற்றில் அதிக ஈரப்பதம் நிலவும் இங்குள்ள சூழலில் ரன் குவிப்பது சவாலாக உள் ளது. அத்துடன் ஆடுகளம் மிகவும் மெதுவாக காணப்படுவதால், சுழற்பந்து வீச்சாளர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். பந்து முட்டிக்கு மேல் எழும்புவதே பெரிய விஷயமாக தெரிகிறது. </p><p>அதனால் தான் பெரும்பாலான பேட்டர்கள் தகிடுதத்தம் போடுகிறார்கள். 100 ரன்களுக்கு மேலான ஸ்கோரை 'சேசிங்' செய்வதே கடினமாகி விடுகிறது. எனவே 140-150 ரன்கள் எடுத்தாலே அது வெற்றிக்குரிய பாதுகாப்பான ஸ்கோராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>நடப்பு தொடரில் இதுவரை நடந்துள்ள 12 ஆட்டங்களில் 8-ல் முதலில் பேட் செய்த அணியே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1, 3, 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ விபத்து.. 5 பேர் பலி - 87 பேர் மாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/fire-on-passenger-boat-in-the-philippines-5-dead-87-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/fire-on-passenger-boat-in-the-philippines-5-dead-87-missing#comments</comments><guid isPermaLink="false">f5c445af-a7d0-4130-981e-8f5f8b2f6f8a</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:45:04 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:45:04.902Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,படகு விபத்து,Philippines,பிலிப்பைன்ஸ்,Boat Accident,தீவிபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/27h2sy8h/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/27h2sy8h/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/two-killed-in-school-shooting-in-southern-philippines">பிலிப்பைன்ஸின் </a>மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலாவன் மாகாணத்தின் கோரோன்  தீவு அருகே, பயணிகள் படகு ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர <a href="https://www.maalaimalar.com/news/national/infant-dies-after-fire-in-madhya-pradesh-govt-hospital-nicu-cradle-warmer-short-circuit-sparks-blaze-dozens-of-babies-evacuated-safely">தீவிபத்தில் </a>5 பேர் உயிரிழந்துள்ளனர்.  87 பேரைக் காணவில்லை என அந்நாட்டுக் கடலோரக் காவல் படை இன்று தெரிவித்துள்ளது.</p><h2>விபத்து </h2><p>MV June Aster என்ற பயணிகள் படகு தலைநகர் மணிலாவிலிருந்து புறப்பட்டுப் பலாவன் மாகாணத்தின் கோரோன் பகுதியை நெருங்கியபோது, நேற்று (புதன்கிழமை) இரவில் எதிர்பாராத விதமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.</p><p>படகில் மொத்தம் 134 பேர் பயணித்தனர். இதில் 117 பயணிகளும் 17 படகு ஊழியர்களும் அடங்குவர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில்  இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். </p> <p>5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மாயமான எஞ்சிய 87 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p> <h2>தீவுகள் நிறைந்த நாடு</h2><p>சுமார் 7,100 தீவுகளை கொண்ட பிலிப்பைன்ஸில், தீவுகளுக்கிடையே மக்கள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்ல குறைந்த கட்டணப் படகுகளே முதன்மைப் போக்குவரத்தாகப் பயன்படுகின்றன.</p><p>எனவே பிலிப்பைன்ஸில் படகு விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது. முன்னதாக 2023 இல் ஜம்போங்கா நகரிலிருந்து பாசிலன் தீவுக்குச் சென்ற படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போதைய விபத்தில் 87 பேரைக் காணவில்லை என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.</p> <p>ஆண்டிற்கு சராசரியாக 20 புயல்களை எதிர்கொள்ளும் இந்நாட்டில், பருவமழை மற்றும் கடல் கொந்தளிப்பு ஆகியவை பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.</p><p>படகுகளின் குறைந்த பராமரிப்பு, போதிய பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாதது இத்தகைய தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை- என்ன பதில் வைத்திருக்கிறார் முதலமைச்சர்?: உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-another-brutal-murder-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-another-brutal-murder-in-chennai#comments</comments><guid isPermaLink="false">26561c22-5a44-4c59-905d-e6331b88a301</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:24:33 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:24:33.716Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சென்னையில் கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/kr98i2am/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/kr98i2am/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.</p><p>‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.</p><p>காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா? </p><p>காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.</p><p>சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.</p><p>இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். </p><p>தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.<br><br>‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2097900236282703980?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை! - இன்றைய நிலவரம் 
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-10-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-10-9-2026#comments</comments><guid isPermaLink="false">bd1903d9-e5aa-4647-a83e-bdbb500d8163</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:23:11 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:23:11.933Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/16/23226806-gold.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/16/23226806-gold.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. </p> <p>அதனை தொடர்ந்து 3-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">தங்கம் விலை</a> குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது. </p> <p>அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.14,190-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.</p> <p>7-ந்தேதி ஒரு சிகராம் ரூ.14 ஆயிரத்து 130-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 8-ந்தேதி கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது.நேற்று சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும் விற்பனையானது.</p> <p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.800 உயர்ந்து ரூ.1,14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>09-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,160</p><p>08-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,160</p><p>07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040</p><p>06-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p><p>05-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>09-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>08-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>07-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>05-08-2026- ஒரு கிராம் ரூ.255</p> ]]></content:encoded></item><item><title>கணவன் மனைவியுடன் கட்டாய உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமா? - உச்சநீதிமன்றம் சொன்னது இதுதான்</title><link>https://www.maalaimalar.com/news/national/does-a-husband-forcing-sexual-relations-on-his-wife-amount-to-sexual-assault-here-is-what-the-supreme-court-said</link><comments>https://www.maalaimalar.com/news/national/does-a-husband-forcing-sexual-relations-on-his-wife-amount-to-sexual-assault-here-is-what-the-supreme-court-said#comments</comments><guid isPermaLink="false">46482b36-cf18-4d8f-b85e-6d948c78e90a</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:21:34 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:21:34.575Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,பாலியல் வன்கொடுமை,Sexual assault,Supreme Court,marriage,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/cvjmmxp3/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/cvjmmxp3/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே என்றும் ஆனால் அதை குற்றமாக கருத சட்டத்தில் இடமில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>பழைய இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 மற்றும் தற்போதைய பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ், திருமணத்திற்குப் பிந்தைய கட்டாய பாலியல் உறவு குற்றமாகப் கருதப்படுவதில்லை.</p><p>இந்நிலையில் வழக்கு ஒன்றில் கர்நாடக உயர் நீதிமன்றம், மனைவியைப் பாலியல் அடிமை போல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.</p> <h2>உச்சநீதிமன்றம் </h2><p>இந்தத் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை நேற்று <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்ற</a> தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.</p><p>இதன்போது, "நாங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம். கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே.</p><p>ஆனால், பிரிவு 375ன் கீழ் நேரடியாக திருமணத்துக்கு பிந்தைய கட்டாய உறவு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a> ஆகாது என விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் போது ஒரு நபரை இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகச் சேர்த்து விசாரணை நடத்துவது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறதா?</p><p>நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தில், குறிப்பிட்ட செயல் குற்றமல்ல என்று நேரடியாகக் கூறப்பட்டுள்ள போது, அதை நீதிமன்றங்கள் தனது நீதித்துறை மறுஆய்வு மூலம் குற்றமாக்க முடியுமா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.</p> <p>பாதிக்கப்பட்ட மனைவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ஒரு பெண் பாலியல் அடிமையாக நடத்தப்படும் அதீத சூழலில் இந்த முடிவை உயர் நீதிமன்றம் எடுத்ததாக சுட்டிக்காட்டினார்.</p><p>மூத்த வழக்கறிஞர் கருணா நந்தி கூறுகையில், அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு ஏற்ப இந்தச் சட்ட விலக்கை மறுவாசிப்பு செய்யவோ அல்லது மாற்றி விளக்கவோ நீதிமன்றம் முன்வர வேண்டும் என்றார்.</p> <h2>முடிவெடுக்க வேண்டியது மக்கள் தான்</h2><p>தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "இந்த வழக்கு வெறும் சமூக ஒழுக்கம் சார்ந்த விஷயம் அல்ல; மாறாக இது முழுக்க முழுக்க அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த பிரச்சனை.</p><p>சமூக ஒழுக்கம் என்றால் என்ன? மக்கள் தங்கள் பிரதிநிதிகள் (நாடாளுமன்றம்) மூலம் பேசுவதை, நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் பரிசோதிக்கிறோம்.</p><p>முடிவெடுக்க வேண்டியது மக்கள் தான். நீதிமன்றம் தனது அரசியலமைப்பு மொழியில் மட்டுமே பேச முடியும்." என தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>புது ஐபோன் வெளியிட்டதும் ஐபோன்17 விலையை உயர்த்திய ஆப்பிள்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/iphone-17-just-got-more-expensive-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/iphone-17-just-got-more-expensive-in-india#comments</comments><guid isPermaLink="false">9d4857f3-a081-4fd0-80be-4c4841655877</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:01:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:01:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,Iphone,ஐபோன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/0gtklkmw/iPhone-17.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iPhone 17]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/0gtklkmw/iPhone-17.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனம், 'சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்' நிகழ்வின்போது, ​​ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் மற்றும் அதன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஐபோன் டுயோ ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து, ஐபோன் 17, ஐபோன் 17e மற்றும் ஐபோன் ஏர் உள்ளிட்ட தனது பழைய <a href="https://www.maalaimalar.com/topic/iphone">ஐபோன்</a> மாடல்களின் விலைகளை இந்தியாவில் உயர்த்தியது. </p><p>குபெர்டினோவை தலைமையிடமாக கொண்ட ஆப்பிள் நிறுவனம், பல சாதனங்களின் விலைகளை உயர்த்திய சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>ஆப்பிளின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், தற்போது நிலவும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் நெருக்கடியால் எதிர்கால விலை உயர்வுகள் தவிர்க்க முடியாததாகிவிட்டதாக குறிப்பிட்டதாக தெரிகிறது.</p><h2>ஐபோன் 17 புதிய விலை:</h2><p>ஐபோன் 17 மற்றும் ஐபோன் ஏர் ஆகியவை கடந்த ஆண்டு, அவற்றின் புதிய விலையை விடக் கணிசமாகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன.</p><p>இந்தியாவில் ஐபோன் 17, ஐபோன் 17e மற்றும் ஐபோன் ஏர் ஆகியவற்றின் புதிய விலைகள்</p><p>ஐபோன் 17, ஐபோன் 17e மற்றும் ஐபோன் ஏர் ஆகியவற்றின் புதிய விலைகளை பிரதிபலிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள தனது ஆன்லைன் ஸ்டோரை புதுப்பித்துள்ளது . ஐபோன் 17 256 ஜிபி விலை இப்போது ரூ. 99,900-இல் இருந்து தொடங்குகிறது. அதே சமயம், டாப் எண்ட் 512 ஜிபி மாடலின் விலை இப்போது ரூ. 1,24,900 ஆக உள்ளது.</p><p>இது, அந்த போனின் அறிமுக விலையில் இருந்து ரூ. 17,000 விலை உயர்வாகும். முன்னதாக, ஐபோன் 17 கடந்த ஆண்டு ரூ. 82,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.</p><h2>ஐபோன் ஏர் புதிய விலை:</h2><p>ஐபோன் ஏர் 256 ஜிபி வேரியன்ட் இப்போது இந்தியாவில் ரூ. 1,49,900 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அதே சமயம், 512 ஜிபி மற்றும் 1 டிபி மாடல்களின் விலை முறையே ரூ. 1,74,900 மற்றும் ரூ. 2,24,900 ஆகும். முன்னதாக இந்த மெல்லிய ஐபோன் மாடல் கடந்த ஆண்டு முறையே ரூ. 1,19,900, ரூ. 1,39,900 மற்றும் ரூ. 1,59,900 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p>இது, அந்த போனின் அறிமுக விலையில் இருந்து ரூ. 17,000 விலை அதிகம் ஆகும். முன்னதாக, ஐபோன் 17 கடந்த ஆண்டு ரூ. 82,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p>ஐபோன் ஏர் 256 ஜிபி வேரியண்ட் இப்போது இந்தியாவில் ரூ. 1,49,900 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அதே சமயம், 512ஜிபி மற்றும் 1 டிபி மாடல்களின் விலை முறையே ரூ. 1,74,900 மற்றும் ரூ. 2,24,900 ஆகும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மீண்டும் ஒரு கொலை! - முதலமைச்சர் விஜய் ஹீரோ சாகசம் காட்ட திட்டமா?: கனிமொழி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-another-murder-in-chennai-cm-vijay-planning-hero-style-stunt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-another-murder-in-chennai-cm-vijay-planning-hero-style-stunt#comments</comments><guid isPermaLink="false">e660e01d-6065-4976-9be7-868ab0060b55</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:53:47 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:53:47.756Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,Kanimozhi,கனிமொழி,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/o9cgc28u/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/o9cgc28u/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் ஜோசப் விஜய், ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பமும் மக்களிடையே எழுகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities">திமுக</a> எம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை! இப்படி நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight">முதலமைச்சர் ஜோசப் விஜய்</a>, தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பமும் மக்களிடையே எழுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புது ஆப்பிள் CEO அறிமுகப்படுத்திய 2026 ஐபோன் மாடல்கள் - இந்திய விலை, முழு விவரம்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/new-apple-ceo-unveils-latest-iphone-lineup</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/new-apple-ceo-unveils-latest-iphone-lineup#comments</comments><guid isPermaLink="false">de1aad8a-d58c-46f2-ae57-95ecb5f3d88e</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:34:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,Iphone,ஐபோன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/zmcdm05e/iPhone-18-Pro-Max.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iPhone 18 Pro Max]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/zmcdm05e/iPhone-18-Pro-Max.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனம் நேற்று (புதன்கிழமை) இரவு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'டுயோ' எனப்படும் மடிக்கக்கூடிய ஐபோன் உட்பட, தனது புதிய தலைமுறை ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்தது.</p><p>செப்டம்பர் 1 அன்று டிம் குக்கிற்குப் பிறகு பொறுப்பேற்ற நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி ஜான் டெர்னஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் இந்த சமீபத்திய <a href="https://www.maalaimalar.com/topic/iphone">ஐபோன்</a> சீரிசை அறிமுகம் செய்தார்.</p><h2>ஆப்பிளின் புதிய அறிவிப்புகள்:</h2><p>ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்ஸ் ஆகியவற்றில் உள்ள மற்ற மேம்படுத்தல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு முன்னேற்றங்கள் குறித்து விளக்கிய பிறகு, டெர்னஸ் பார்வையாளர்களிடம், "உண்மையில் இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது," என்று கூறினார். இது, 1970-களில் வந்த 'கொலம்போ' என்ற துப்பறியும் நிகழ்ச்சியில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் கூறிய அவரது வர்த்தக முத்திரை சொற்றொடரை குறிப்பிடும் விதமாக இருந்தது.</p><p>'டுயோ' என்று அழைக்கப்படும் இந்த தொலைபேசியில், "ஐபோன்களிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய திரை உள்ளது, ஆனாலும் அது உங்கள் பாக்கெட்டில் பொருந்துகிறது," என்று டெர்னஸ் கூறினார்.</p><p>இந்த போன், சமீபத்திய ஐபோன் 18 ப்ரோவை விட 80% பெரியதான 7.6 இன்ச் திரையை கொண்டுள்ளது. இது, முன்பு ஐபேட் பயனர்களுக்கு மட்டுமே இருந்த ஆப்பிள் பென்சிலை போனில் பயன்படுத்த அனுமதிக்கிறது.</p><p>"மடிக்கக்கூடிய போனை பயன்படுத்தும் அனுபவத்தை டியோ மறுவரையறை செய்யும்" என்று டெர்னஸ் கூறினார்.</p><h2>ஐபோன் 18 சீரிஸ் மாடல்கள்:</h2><p>நேற்றைய நிகழ்வில் ஆப்பிள் தனது ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய புது ஐபோன்களை அறிமுகம் செய்தது. இவை பேட்டரி, கேமரா மற்றும் செயல்திறனில் மேம்பாடுகளை கொண்டு வருகின்றன என்று டெர்னஸ் கூறினார்.</p><p>புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளன. </p><p>மேலும், ஆப்பிள் தனது புதிய ஐபோன்களில் சிரியின் புதிய AI திறன்களிலும் கவனம் செலுத்துகிறது. AI-ஐ இணைப்பதில் தங்களை விட முன்னேறியுள்ள போட்டியாளர்களிடம் இருந்து தனித்து நிற்பதற்காக, தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.</p><h2>இந்திய விலை விவரம்:</h2><p>ஐபோன் 18 ப்ரோ 256 ஜிபி ரூ. 1,64,900</p><p>ஐபோன் 18 ப்ரோ 512 ஜிபி ரூ. 1,89,900</p><p>ஐபோன் 18 ப்ரோ 1டிபி ரூ. 2,39,900</p><p>ஐபோன் 18 ப்ரோ 2டிபி ரூ. 3,14,900</p><p>ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி ரூ. 1,79,900</p><p>ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் 512 ஜிபி ரூ. 2,04,900</p><p>ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்1 டிபி ரூ. 2,54,900</p><p>ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் 2 டிபி ரூ. 3,29,900</p><p>புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் மொத்தம் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (11.09.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-41</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-41#comments</comments><guid isPermaLink="false">b9f02553-3ed4-4f07-82ed-4483c432d422</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:22:21 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:22:21.791Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/87cafzrb/powercut0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/87cafzrb/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (11.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>கிண்டி</strong></h2><p>முனுசாமி தெரு, அச்சுதன் நகர் 1வது, 2வது, 3வது மற்றும் 4வது தெருக்கள், தனகோட்டி ராஜா தெரு, ஜீ தமிழ், CIPET, SS பிளாக், பூந்தமல்லி உயர் சாலை, தெற்கு கட்டம், படவட்டம்மன் கோவில் தெரு, லாசர் தெரு, ராஜ்பவன் கன்னிகாபுரம், குல்மோஹர் அவென்யூ, 1வது ஃபூர்லாங் தெரு, 5வது ஃபர்லாங் தெரு மாந்தோப்பு 1-3வது தெருக்கள், சக்கரபாணி ரோடு, லிங்க் ரோடு, நரசிங்கபுரம் ஒரு பகுதி, பிள்ளையார் கோவில் தெரு.</p><h2><strong>நந்தம்பாக்கம்</strong></h2><p>மகாலட்சுமி நகர், எம்.ஜி.ரோடு, கொளப்பாக்கம், பஜனை கோவில் தெரு, விஐபி அனுகிரஹா, ஆர்விலா, ராமச்சந்திரா நகர், பொழிச்சலூர், பல்லாவரம் மெயின் ரோடு, மாதா டவுன்.</p><h2><strong>நங்கநல்லூர்</strong></h2><p>செங்கழினி அம்மன் கோவில் தெரு, பகத்சிங் தெரு, முத்து முகமது தெரு, புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகம், புழுதிவாக்கம் மெயின் ரோடு, ராஜேஸ்வரி நகர், செங்கல்வராயன் தெரு, தங்கவேல் தெரு, யூனியன் கார்பைடு காலனி, வேலாயுதம் தெரு, உள்ளகரம், புழுதிவாக்கம்.</p><h2><strong>ஆதம்பாக்கம்</strong></h2><p>மோகனபுரி 1-5வது தெருக்கள், இபி காலனி 1-5வது தெருக்கள் மற்றும் குறுக்குத் தெருக்கள், இபி காலனி மெயின் ரோடு, ஜோசப் காலனி, கணேஷ் நகர், எல்எச் நகர், வேல் நகர்.</p><h2><strong>மடிப்பாக்கம்</strong></h2><p>கக்கன் தெரு, எம்ஜிஆர் 1வது மற்றும் 2வது தெருக்கள், குளக்கரை தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, செங்கழனி அம்மன் கோவில் தெரு, தங்கல் சாலை, சதாசிவம் நகர் 4வது, 5வது மற்றும் 6வது தெருக்கள், ராகவேந்திரா 1வது மற்றும் 2வது தெருக்கள், பஜனை 1வது மற்றும் 2வது தெருக்கள், பஜனை 1வது மற்றும் 2வது தெரு, சதாசிவம் நகர் 1வது மற்றும் 2வது இணைப்பு தெருக்கள், மற்றும் சதாசிவம் நகர் 3வது, 4வது மற்றும் 5வது குறுக்கு தெருக்கள்.</p><h2><strong>செம்பரம்பாக்கம்</strong></h2><p>பனிமலர் மருத்துவக் கல்லூரி, வரதராஜபுரம், யமுனா நகர், கோலப்பஞ்சேரி, சொக்கநல்லூர், பிடரேத்தேங்கல், நசரத்பேட்டை மேப்பூர், பெங்களூரு டிரங்க் ரோடு, திருமழிசை, மலையம்பாக்கம், அகரம்மேல்.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>இரும்புலியூர் இந்திய விமானப்படை, பாரதமாதா தெரு, வால்மீகி தெரு, ஏரிக்கரை தெரு, திருவள்ளுவர் தெரு, கந்தசாமி காலனி, எல்.ஐ.சி. காலனி, குலசேகரன் தெரு, காசியப்பர் தெரு, சுந்தரம் காலனி, சந்தானபாரதி தெரு, மோதிலால் நகர், லட்சுமி நகர், சர்மா தெரு, மா.நகர், லட்சுமி நகர், பரலைன்சேரப் தெரு, பரலைன்சேர்ப் தெரு, கணபதி தெரு ரோடு, அந்தோணி தெரு, ராஜேந்திரா நகர், சாலமன் தெரு, கிளப் ரோடு, கல்பனாநகர், ஆஞ்சநேயர் கோவில் தெரு, காளமேகம் தெரு, அகத்தியர் தெரு, நால்வர் தெரு, மோகன் தெரு, பரத்வாஜ் தெரு, கம்பர் தெரு, போரூர் தெரு, மணிமேகலை தெரு, சக்கரவர்த்தி தெரு, கற்பகவிநாயகர் தெரு, செல்லியம்மன் கோவில் தெரு, திரு. தெரு, கேகே நகர், ஏரிக்கரை தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், பேராசிரியர் காலனி, ஆனந்தபுரம், ஆதிநகர், வினோபா நகர், ஐஏஎப் சாலை.</p><h2><strong>வேளச்சேரி</strong></h2><p>வேளச்சேரி மெயின் ரோடு, மேட்டு தெரு, ஓரண்டி அம்மன் கோவில் தெரு, ஜெகநாதன் புரம், ராம்ஸ் அண்ட் சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பு, தண்டீஸ்வரம்.</p><h2><strong>திருமங்கலம்</strong></h2><p>அண்ணாநகர் மேற்கு, டபிள்யூ-பிளாக், பி, சி&amp;டி செக்டார், 11 முதல் 20வது மெயின் ரோடு, திருவள்ளீஸ்வரர் நகர், பேஸ் பில்டர்ஸ் பிளாட்ஸ், மெட்ரோஜோன் பிளாட்ஸ், என்விஎன் நகர், சிபிடபிள்யூடி குவார்ட்டர்ஸ், படிக்குப்பம் ரோடு பென் ஃபவுண்டேஷன்ஸ் வரை, எமரால்டு நகர் பிளாட்கள், கோலோன் 1 பிளாட், கிளாசிக் ஏ, கிளாசிக் ஏ. 49A, TV நகர், JN சாலை, ஏசியாட், ரோகினி &amp; பயனியர் காலனி, சிந்து அபார்ட்மென்ட், மங்கலம் காலனி, ஜவஹர் காலனி, சக்தி காலனி, பழைய L பிளாக், பழைய Z பிளாக், AL பிளாக், 4வது அவென்யூ, பழைய திருமங்கலம், 12வது மெயின் ரோடு, AF பிளாக், மாத்ரு பிளாக், 2வது சாலை 11வது பிரதான சாலை, AE பிளாக்.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் ஆப்கான் மாணவர்கள் மருத்துவம் பயில தடை.. ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/world/afghan-students-banned-from-studying-medicine-in-pakistan-students-who-are-already-studying-are-ordered-to-leave-the-country</link><comments>https://www.maalaimalar.com/news/world/afghan-students-banned-from-studying-medicine-in-pakistan-students-who-are-already-studying-are-ordered-to-leave-the-country#comments</comments><guid isPermaLink="false">c0a6b263-0dad-4f60-b584-9621b723bb3d</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:10:38 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:10:38.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Afghanistan,மருத்துவக் கல்வி,medical education,ஆப்கானிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/x7wcnitr/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாகிஸ்தான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/x7wcnitr/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானில் மருத்துவ கல்லூரிகளில் புதிதாக ஆப்கான் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்தும், ஏற்கனவே படித்து வரும் ஆப்கனிஸ்தான் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசு கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/pakistan">பாகிஸ்தான் </a>மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான உறவுகளில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் தற்போது கல்வியிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. </p><p>பாகிஸ்தானில் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/afghanistan">ஆப்கானிஸ்தான் </a>மாணவர்களுக்குப் புதிய சேர்க்கை வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே படித்து வரும் மாணவர்களும் உடனடியாகத் தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.  </p> <h2>உத்தரவு</h2><p>பாகிஸ்தான் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கவுன்சில், நடப்பு கல்வியாண்டில் ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்குப் புதிய சேர்க்கை அல்லது இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p>ஏற்கனவே மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து பயின்று வரும் ஆப்கான் மாணவர்களும் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.</p> <p>இதனால் குறிப்பாக, படிப்பை நிறைவு செய்யும் தருவாயில் இருக்கும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பிற வெளிநாட்டு மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் பாகிஸ்தான் சுகாதார அமைச்சக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>லாகூர் பல்கலைக்கழகம் நடவடிக்கை</h2><p>லாகூரில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தியுள்ளது.</p><p>அங்கு பயிலும் 22 ஆப்கான் மாணவர்களுக்கு தேவையான நிர்வாக நடைமுறைகளை முடித்து வெளியேற 24 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>வெளியுறவுத் துறை விளக்கம்</h2><p>இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், முறையான பாஸ்போர்ட் மற்றும் தங்குவதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களை வைத்திருக்கும் ஆப்கான் மாணவர்கள், நடைமுறையில் உள்ள விதிகளின்படி  விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர் கான் தெரிவித்துள்ளார்.</p><p>செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியிருப்பவர்கள் சட்டவிரோதமானவர்கள் என கருதப்பட்டு, 'சட்டவிரோத வெளிநாட்டவர் வெளியேற்றத் திட்டத்தின்' கீழ் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p> <h2>பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் </h2><p>பாகிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் '<a href="https://www.maalaimalar.com/news/world/suicide-attack-in-pakistan-15-killed-including-12-soldiers">தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான்</a>' பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் த புகலிடம் அளிப்பதாக இஸ்லாமாபாத் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறது.</p><p>ஆனால், ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசு இக்க குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து வருகிறது.</p> <p>பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ராணுவ மோதல்கள் ஒருபுறமிருக்க கடந்த ஓராண்டில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான ஆப்கான் குடிமக்கள் பாகிஸ்தானில் இருந்து கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>மருத்துவ மாணவர்களுக்கு எதிரான தற்போதைய புதிய உத்தரவு, பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கான் குடிமக்கள் மற்றும் மாணவர்கள் மீதான நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: வங்கதேசத்தில் ராணுவ பயிற்சியின்போது சீன தயாரிப்பு பீரங்கி வெடித்து விபத்து - 2 வீரர்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/chinese-made-cannon-explodes-during-military-exercise-in-bangladesh-2-soldiers-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/chinese-made-cannon-explodes-during-military-exercise-in-bangladesh-2-soldiers-killed#comments</comments><guid isPermaLink="false">5be92010-e19b-4447-a4f9-35ec13094301</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:37:26 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:37:26.252Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,accident,artillery,விபத்து,பீரங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/v29j18sd/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பீரங்கி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பீரங்கி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/v29j18sd/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்தில் பயிற்சியின்போது சீன தயாரிப்பு பீரங்கி வெடித்துச் சிதறியதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/indian-high-commissioner-meets-bangladesh-president">வங்கதேச </a>ராணுவ வீரர்கள் பீரங்கிக்குள் இருந்து துப்பாக்கிச் சூடு பயிற்சி நடத்திக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/bangaladesh">வங்கதேசத்தின் </a>சட்டோகிராம் பகுதியில் அமைந்துள்ள ஹதாசாரி துப்பாக்கிச் சூடு பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்ற ராணுவப் பயிற்சியின் போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.</p> <p>இந்த விபத்தில் பீரங்கிக்குள் இருந்த 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ராணுவ அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்தார்.</p><p>படுகாயமடைந்த அதிகாரி உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் டாக்காவில் உள்ள கூட்டு ராணுவ மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Bangladesh Army’s Chinese-origin Type 59 tank reportedly exploded during a firing exercise, killing 2 crew members and injuring an officer.

Made in China. Used in Bangladesh. Deadly outcome. https://t.co/Gn0FRx5ul4</p>&mdash; Shadow IND (@ShadowIND_IN) <a href="https://x.com/ShadowIND_IN/status/2097611763437252952?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
</figure><h2>ராணுவத்தின் விளக்கம்</h2><p>விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணையை ராணுவம் தொடங்கியுள்ளது.</p><p>தொழில்நுட்பக் கோளாறா, துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஏற்பட்ட பிழையா அல்லது வெடிமருந்து கோளாறா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என ராணுவம் தெரிவித்துள்ளது.</p> <h2>சீன பீரங்கி </h2><p>விபத்துக்குள்ளான Type 59 டேங்க், சீனாவினால் வடிவமைக்கப்பட்ட பழமையான முதன்மைப் போர் பீரங்கியாகும். வங்கதேச ராணுவம் இதனை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறது.</p><p>இதில் பெரும்பாலான பீரங்கிகள் சீனாவின் உதவியுடன் 'Type 59G Durjoy' என்ற புதிய தரத்திற்கு மேம்படுத்தப்பட்டடு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>துப்பாக்கித் திறன் மற்றும் கவசப் பாதுகாப்புகள் மேம்படுத்தப்பட்ட போதிலும், இதன் அடிப்படை கட்டமைப்பு பழமையான தொழில்நுட்பத்தை சார்ந்ததே என்பதால், பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 10.9.2026 - இந்த ராசிக்காரர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-10-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-10-september-2026#comments</comments><guid isPermaLink="false">3f0a5169-77a8-41d7-869c-cddfb802cecb</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:20:33 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:20:33.047Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/omjpkisa/New-Project-2026-09-06T043703.323.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/omjpkisa/New-Project-2026-09-06T043703.323.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>யோகமான நாள். ஊதிய உயர்வு பற்றிய தகவல் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தி வந்து சேரும். உத்தியோக நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.</p> <h2>மிதுனம்</h2><p>உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். வியாபார விருத்திக்குப் புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள்.</p><h2>கடகம்</h2><p>வரவு திருப்தி தரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். வரவு திருப்தி தரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p> <h2>சிம்மம்</h2><p>சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும்.</p><h2>கன்னி</h2><p>அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். திடீர் இடமாற்றம் ஒருசிலருக்கு ஏற்படலாம். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சனை இன்றும் தொடரும்.</p> <h2>துலாம்</h2><p>சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும்.</p> <h2>தனுசு</h2><p>யோகமான நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.</p><h2>மகரம்</h2><p>கடமையில் தொய்வு ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும். வாங்கல், கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. முன்கோபத்தை தவிர்க்கவும்.</p> <h2>கும்பம்</h2><p>மனக்கலக்கம் அகலும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.</p><h2>மீனம்</h2><p>புகழ் கூடும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.</p> ]]></content:encoded></item><item><title>SIR: பாரத ரத்னா பெற்றவருக்கே இந்த நிலைமையா?.. தேர்தல் ஆணையத்தின் கிடுக்குபிடியில் 92 வயது விஞ்ஞானி</title><link>https://www.maalaimalar.com/news/national/sir-is-this-the-plight-of-even-a-bharat-ratna-awardee-92-year-old-scientist-faces-the-election-commissions-strict-measures</link><comments>https://www.maalaimalar.com/news/national/sir-is-this-the-plight-of-even-a-bharat-ratna-awardee-92-year-old-scientist-faces-the-election-commissions-strict-measures#comments</comments><guid isPermaLink="false">97d84f96-1449-43af-89c9-086e404098d1</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:13:58 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:13:58.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Election Commission,Sir,தேர்தல் ஆணையம்,எஸ்ஐஆர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/1wyq9nde/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  சி.என்.ஆர். ராவ் ]]></media:title><media:description type="html"><![CDATA[  சி.என்.ஆர். ராவ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/1wyq9nde/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/sir">வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த</a> 3 ஆம் கட்டம் நாடு முழுவதிலும் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது. </p><p>இதில் பல குளறுபடிகள் பதிவாகி வரும் நிலையில் சாமானியர்கள் மட்டுமின்றி, நன்கறியப்பட்ட பிரபலங்களும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். </p><h2>நோட்டீஸ்</h2><p>அந்த வகையில், <a href="https://www.maalaimalar.com/topic/karnataka">கர்நாடகாவில் </a>நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் , நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' பெற்ற மூத்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பெயரில் பிழை இருப்பதாகக் கூறி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக வெளியான செய்தி விவாதத்தை கிளப்பியுள்ளது.</p><p>பழைய வாக்காளர் பதிவேட்டில் இவரது பெயர் 'Prof CNR Rao' என்று பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய புதிய கணினி அமைப்பில் ஆங்கிலத்தில் கூடுதல் 'f' சேர்க்கப்பட்டு 'Proff CNR Rao' எனத் தவறாகப் பதிவாகியுள்ளது.</p> <p>கணினி அமைப்பில் உள்ள இந்த  பெயர் முரண்பாடு காரணமாக, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அவருக்கு ஆன்லைனில் நோட்டீஸ் அனுப்பட்டதாக தகவல் வெளியானது.</p><h2>விளக்கம்</h2><p>ஆனால் தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த நோட்டீஸும் நேரில் வந்து சேரவில்லை என்று சி.என்.ஆர். ராவின் அலுவலகம் தெரிவித்தது.</p><p>சர்ச்சையை தொடர்ந்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம், 92 வயதான விஞ்ஞானியின் மூப்பையும் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு அவருக்கு நேரில் ஆஜராகும் நோட்டீஸ் எதுவுமே அனுப்பப்படவில்லை என்றும், தேர்தல் அதிகாரிகளே நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று விவரங்களை சரிசெய்து இறுதி வாக்காளர் பட்டியலில் பெயரை தொடர நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், நடிகர் பிரகாஷ் ராஜ், ராம் ஜெத்மலானி, ராகவ் சதா உள்ளிட்டோரும் இதுபோன்ற சிக்கலை சந்தித்துள்ளனர்.</p> <h2>3 ஆம் கட்ட எஸ்ஐஆர்</h2><p>டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த மே 14 அன்று இந்திய தேர்தல் ஆணையம் 3 ஆம் கட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தைஅறிவித்தது.</p><p>மே 30 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் இந்தப் நடவடிக்கையின் மூலம் சுமார் 36.73 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.</p><p>எஸ்ஐஆர் நடைபெறும் மாநிலங்களில் பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டும், எஞ்சிய 13 மாநிலங்களில் 2028 மற்றும் 2029ஆம் ஆண்டுகளிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.</p><p>முன்னதாக, முதல் மற்றும் இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் பணிகள் 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2>சி.என்.ஆர். ரவ்</h2><p>பெங்களூரை சேர்ந்த சி.என்.ஆர். ராவ், நாட்டின் முன்னணி வேதியியல் விஞ்ஞானிகளில் ஒருவர் ஆவார்.</p><p>1976இல் இந்திய அறிவியல் கழகத்தில் (IISc), 'Solid state and Structural chemistry' பிரிவை நிறுவிய இவர், 1984 முதல் 1994 வரை அதன் இயக்குநராகப் பணியாற்றினார்.</p><p>1,600க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவருக்கு, நாட்டின் உயரிய 'பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவரை போன்றோரே எஸ்ஐஆர் பணியின்கீழ் சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில் சாமானிய மக்கள் இப்பணியால் அதிக சிரமங்களை சந்திக்க நேர்ந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - &apos;மிசா&apos; கொடுமைகள் குறித்து மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities#comments</comments><guid isPermaLink="false">47935573-4dbd-40f1-a5f5-9b3eb546f8f6</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:04:13 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:04:13.289Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,விஜய்,vijay,முக ஸ்டாலின்,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2qnphw2z/mkstalin2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin - Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2qnphw2z/mkstalin2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எமர்ஜென்சி காலத்தில் மிசாவில், தான் கைது செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார்.</p><p>திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தளத்தில், வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight">விஜய்</a>? என்று பதிவிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், </p><p>* மிசா காலத்தில் கைது செய்யப்பட்டபோது சிறையில் எங்களுக்கு பல கொடுமைகள் நடந்தது.</p><p> * காவலர்கள் தாக்கியதில் எனது அருமை அண்ணன் சிட்டிபாபு இறந்தார். அவர்கள் தாக்கியதில் எனது தாடை எலும்பு உடைந்தது.</p> <p>* எதிர்த்து போராடுவதும் அதன் விளைவுகளை சந்திப்பதும் எங்களுக்கு புதியது அல்ல.</p><p>* யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.</p><p>* உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சட்டசபையில் உள்ள நூலகத்திற்கு சென்று எனது போராட்ட வரலாற்றை படித்து பாருங்கள்.</p> <p>* சர்காரியாக கமிஷன் பற்றியும் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலை முதலமைச்சர் விஜய் கூறி உள்ளார்.</p><p>* அரசியலுக்காக காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையும் முதலமைச்சர் விஜயும் கூறி உள்ளார்.</p><p>* அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95% வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் குற்றம்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.</p> <p>* பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுவது இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும்.</p><p>* தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்ததற்கு சாரி என்று என்னிடம் கூறினீர்களே?</p><p>* பரவாயில்லை தம்பி. நீங்க இப்போ மாநிலத்தின் முதலமைச்சர். யாரைப்பற்றியும் பேசும்போது கண்ணியத்தோடு பேசுங்கள் என்று சொன்னேன். அதையெல்லாம் மறந்துட்டீங்களே.</p> <p>* தமிழ்நாடு சட்டசபைக்கென ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது.</p><p>* முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டசபையில் தேவையில்லாத சர்ச்சைகளை பேச வேண்டாம்.</p><p>* தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது.</p><p>* வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?</p>  <p>* தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?</p><p>* விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.</p><p>* வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை திமுகவினர் கைவிட்டு விடக்கூடாது.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? <a href="https://t.co/kzpwXi14L8">pic.twitter.com/kzpwXi14L8</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2097857590516445226?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 செப்டம்பர் 2026: சர்வ அமாவாசை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-10-september-2026-sarva-amavasai</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-10-september-2026-sarva-amavasai#comments</comments><guid isPermaLink="false">1c8c8c1c-acfd-483a-86c3-4701f9067926</guid><pubDate>Thu, 10 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/yxc5m2ic/amavasai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amavasai tharpanam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/yxc5m2ic/amavasai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-24 (வியாழக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   சதுர்த்தசி காலை 10.56 மணி வரை பிறகு அமாவாசை</p><p>நட்சத்திரம் : மகம் பிற்பகல் 3.14 மணி வரை பிறகு பூரம்</p> <p>யோகம் :  அமிர்த / சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை</p><p>சூலம் : தெற்கு</p><p>நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்</h2><p>சர்வ அமாவாசை. இளையான்குடி மாற நாயனார் குருபூஜை. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ  ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் வெள்ளிக் கேடயத்திலும், மாலை கஜமுக சூரசம்ஹர லீலை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதைப்பதி திலதர்ப்பணபுரி கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரி ராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.</p> <p>ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்: திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்திய மூர்த்தி புறப்பாடு, ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - கண்ணியம்</p><p>ரிஷபம் - உதவி</p><p>மிதுனம் - ஒற்றுமை</p><p>கடகம் - உறுதி</p><p>சிம்மம் - நிம்மதி</p><p>கன்னி - லாபம்</p> <p>துலாம் - தெளிவு</p><p>விருச்சிகம் - திடம்</p><p>தனுசு - மேன்மை</p><p>மகரம் - நற்செயல்</p><p>கும்பம் - ஆக்கம்</p><p>மீனம் - அன்பு</p> ]]></content:encoded></item></channel></rss>