<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 20 Sep 2026 07:23:16 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 20 செப்டம்பர் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-september-2026#comments</comments><guid isPermaLink="false">5c5795cf-d6d8-471d-b522-37ad52a569a3</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:45:35 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:48:14.496Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/jup0i7ew/TodayLives2009.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/jup0i7ew/TodayLives2009.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/daughter-of-maharashtra-minister-nila-wighe-patil-wins-swedish-parliament-election">மகாராஷ்டிரா அமைச்சரின் உறவினர்"நிலா விகே பாட்டீல்" சுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி.!.</a></p><p>மறைந்த மத்திய அமைச்சர் பாலாசாகேப் விகே பாட்டிலின் பேத்தி.</p><p>சுவீடனில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/elavenil-valarivan-clinches-silver-in-the-womens-10m-air-rifle-individual-final-at-the-asian-games">ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்றார் இளவேனில்</a></p><p>* ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>* தனிநபர் பிரிவில் இந்தியாவின் சோனம் மாஸ்கர் 6வது இடம் பிடித்து வெளியேறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-campaigns-for-tharapuram-naam-tamilar-candidate-tomorrow">தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை தேர்தல் பரப்புரை: சீமான்...</a> </p><p>*  தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவுக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்ய உள்ளார்.</p><p>* தமிழகத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நா.த.க சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/you-paid-for-the-ticket-not-for-us-salman-khan">டிக்கெட்டை தான் விலை கொடுத்து வாங்கினீர்கள், எங்களை அல்ல: பிக்பாஸில் சட்டையை கழற்றிய சல்மான் கான்...</a> </p><p>* பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான் கான், உடல் எடை தொடர்பான விமர்சனத்திற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><p>* தியேட்டரில் படம் பார்ப்பதற்கு தான் டிக்கெட்டை விலை கொடுத்து வாங்கினீர்கள், எங்களை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-sets-7-conditions-for-negotiations-with-us-says-message-is-clear">எங்களுடைய செய்தி தெளிவானது: பேச்சுவார்த்தைக்கு 7 நிபந்தனைகள் விதித்த ஈரான்- அமெரிக்கா ஏற்குமா?</a></p><p>* அமெரிக்காவுக்கு ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.</p><p>* எங்களுடைய செய்தி தெளிவானது. சந்தேகத்திற்கு இடமற்றது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/indias-womens-10m-air-rifle-team-has-won">ஆசிய விளையாட்டு: முதல் பதக்கம் வென்ற இந்தியா - துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி </a></p><p>* ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>* தனிநபர் பிரிவிலும் இந்தியாவின் இளவேனில், சோனம் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-consultation-with-officials-tomorrow">பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் விஜய்.</a></p><p>சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்..</p><p>காவிரி படுகை, கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக ஆலோசனையில் பங்கேற்கவுள்ளனர்..</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-revenue-expenditure-and-borrowings-last-five-months-data-released">கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய், செலவு, வாங்கிய கடன் எவ்வளவு?- புள்ளி விவரம் வெளியீடு</a></p><p>* அரசின் செலவுக்கணக்கில், கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டியின் பங்கு ரூ. 25,991 கோடி.</p><p>* ஓய்வூதியத்தின் பங்கு ரூ. 21,008 கோடி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-once-again-proved-that-he-is-a-careless-politician-mp-cm-mohan-yadav">ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்: ம.பி. முதல்வர் சாடல்</a></p><p>* அமித் ஷா மகன் எப்படி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் என்று மாணவர் ஒருவர் கேள்வி கேட்கிறார்- ராகுல் காந்தி</p><p>* நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட விவகாரம் குறித்து காந்தி உண்மையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்- ம.பி. முதல்வர்</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச் செயலகம் அமைக்க முதலமைச்சர் இன்னும் முடிவு செய்யவில்லை- ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-has-not-yet-decided-on-constructing-a-new-secretariat-aadhav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-has-not-yet-decided-on-constructing-a-new-secretariat-aadhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">870d39ac-90e7-4e09-9002-e23576ba4fa2</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:18:09 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:18:09.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,தலைமைச் செயலகம்,New Secretariat,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/pw37vtdl/adhavarjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/pw37vtdl/adhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மீனவ சகோதரர்களே, சகோதரிகளே தலைமைச் செயலகம் விஷயத்தில் இன்னும் முதலமைச்சர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமைச் செயலகமா? மீனவ மக்களின் வாழ்க்கையா? என்றால் கண்டிப்பாக மீனவ மக்கள் பக்கம்தான் எங்கள் முதலமைச்சர் நிற்பார்.</p><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கம்யூனிஸ்டு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p><h2><strong>அமைச்சர் </strong>ஆதவ் அர்ஜுனா</h2><p>இந்த நிலையில் இடைத்தேர்தலையொட்டி மதுராந்தகம் தொகுதியில் நடந்தபாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, புதிய தலைமைச் செயலகம் திட்டம் குறித்து பேசியதாவது:-</p><h2><strong>தலைமைச் செயலகம்</strong></h2><p>தலைமைச் செயலகம், செக்ரடரியேட் அதை எல்லோரும் அரசியல் ஆக்குகிறார்கள். நாம் அதை செய்துவிடுவோம், இதை செய்துவிடுவோம் என்று பேசுகிறார்கள். பொதுவாக ஒரு திட்டம் அறிவிக்கும் போது அதற்கான இடம்குறித்து விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) பெறுவது வழக்கம். அதன் பிறகுதான் இடத்தை தேர்ந்தெடுப்போம். எனவே அந்த ரிப்போர்ட் வந்த பிறகுதான் அதை அங்கு கட்டலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வார் முதலமைச்சர்.</p><h2><strong>முதலமைச்சர்</strong></h2><p>எனவே மீனவ சகோதரர்களே, சகோதரிகளே தலைமைச் செயலகம் விஷயத்தில் இன்னும் முதலமைச்சர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமைச் செயலகமா? மீனவ மக்களின் வாழ்க்கையா? என்றால் கண்டிப்பாக மீனவ மக்கள் பக்கம்தான் எங்கள் முதலமைச்சர் நிற்பார்.</p><h2><strong>சட்டசபை</strong></h2><p>இன்னொன்று சொல்கிறேன். ஜெயித்து முடித்த பிறகு அவர் தி.மு.க., அ.தி.மு.க. என்று பார்ப்பது கிடையாது. எல்லோருக்கும் நல்லது செய்யுங்கள் என்கிறார். சட்டசபையில் தி.மு.க.வினர் அன்றைக்கு திடீரென சபாநாயகர் முன்பு தர்ணா செய்ததை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். தர்ணாவில் ஈடுபட்ட ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ.வால் தரையில் இருந்து எழுந்திருக்க முடியவில்லை. அவர் பாவம் என்று முதலமைச்சர் விஜய் கை கொடுத்து தூக்கி விட்டார்.</p><h2><strong>தி.மு.க. போராட்டம்</strong></h2><p>நமது முதலமைச்சரை எதிர்த்து தி.மு.க. போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் நம்முடைய முதலமைச்சர் அவர்களை கைதூக்கி விடுகிறார். இதுதான் எங்கள் அண்ணன். இவ்வளவு தான் எங்கள் அரசியல். பழி வாங்கும் அரசியல் எங்களுக்கு இல்லை. கம்யூனிஸ்டுகள் நம்மைப் பற்றி பேசுவது வருத்தமாக உள்ளது.</p><h2><strong>தி.மு.க. ஆட்சி</strong></h2><p>தி.மு.க. ஆட்சி நடந்த போது தி.மு.க.வினர் கமிஷன் வாங்கினார்களா? இல்லையா? என்பதை கம்யூனிஸ்டு கட்சியினர் மனசாட்சியோடு சொல்ல வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>சவுதிக்கு ஆதரவாக பாகிஸ்தான், துருக்கி செயல்பட்டால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: ஹவுதி எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/houthis-threaten-iron-fist-if-pakistan-turkey-back-saudi</link><comments>https://www.maalaimalar.com/news/world/houthis-threaten-iron-fist-if-pakistan-turkey-back-saudi#comments</comments><guid isPermaLink="false">be84bf11-c3a4-4d85-8410-5f39c130fc67</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:55:42 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:55:42.918Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துருக்கி,Turkey,Houthi,ஹவுதி,மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்,Mecca Defense Pact</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/zj1mwsgd/Untitled-design-25.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Houthis threaten Pakistan-Turkey military support]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/zj1mwsgd/Untitled-design-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் துருக்கி ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><h3><strong>மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்</strong></h3><p>சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 2026-ஆம் ஆண்டு மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் கையெழுத்திட்டது. </p><p>இந்த ஒப்பந்தத்தின்படி, அந்நிய நாடுகள் ஏதாவது ஒரு உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் போது, மற்ற உறுப்பு நாடுகள் தாக்குதல் நடத்தும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.</p><p>இதையடுத்து ஏமன் நாட்டில் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">ஹவுதிகள்</a> தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஏமனுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சவுதி அரேபியா மீது ஹவுதி தாக்குதல் நடத்தி வருகிறது.</p><h3><strong>சவுதி விமான நிலையத்தை தாக்கிய ஹவுதிகள்</strong></h3><p>இந்த தாக்குதலில் நேற்று சவுதியின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில், ஹவுதிகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சவுதிக்கு ஆதரவாக ராணுவ உதவிகளை வழங்குவதாக துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் மெக்கா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராணுவ கடமைகளை நிறைவேற்றுவதில் துருக்கி நாட்டிற்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்தார்.</p><h3><strong>ஹவுதி எச்சரிக்கை</strong></h3><p>இந்த நிலையில் மூத்த ஹவுதி அதிகாரி முகமது அல்-புகைதி பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மற்றும் துருக்கி மேற்கொள்ளும் நேரடி ராணுவ தலையீடு, கடுமையான ராணுவ நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார்.</p><p>சவுதி தலைமையிலான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார தடைகளுக்கு எதிராக தாங்கள் தற்காப்பு நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.</p><h3><strong>இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்</strong></h3><p>இருப்பினும், சவுதிக்கு ஆதரவாக பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்தால், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு இரும்புக்கரம் கொண்டு பதிலடி கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.</p><p>பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ராணுவ செயல்பாடுகளை தவிர்த்து, இரு நாட்டினரும், இந்த போரில் தலையிடாமல் இருக்கும்படியும் அவர் எச்சரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிரா அமைச்சரின் உறவினர் சுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி.! </title><link>https://www.maalaimalar.com/news/world/daughter-of-maharashtra-minister-nila-wighe-patil-wins-swedish-parliament-election</link><comments>https://www.maalaimalar.com/news/world/daughter-of-maharashtra-minister-nila-wighe-patil-wins-swedish-parliament-election#comments</comments><guid isPermaLink="false">784c6a53-3ba9-4243-a657-60d4dfdf5259</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:46:23 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:46:23.874Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்ற தேர்தல்,ஸ்வீடன்,நிலா  விகே பாட்டில்,Nila Vikhe Patil,Swedish Parliament</media:keywords><media:content height="225" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/4aiiv9xb/nila-vikhe-patil.avif" width="400"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Swedish Parliament]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/4aiiv9xb/nila-vikhe-patil.avif?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மகாராஷ்டிராவுடன் தொடர்பு</h2><p>நிலா விகே படேல் சுவீடனில் பிறந்தவர். எனினும், தனது சிறு வயதின் பெரும்பகுதியை மகாராஷ்டிராவின் அகமதுநகரில் கழித்துள்ளார்.</p><p>அவர் மகாராஷ்டிராவை சேர்ந்த கல்வியாளர் அசோக் விகே படேலின் மகளும்  மறைந்த முன்னாள் மத்திய மந்திரி பாலாசாகேப் விகே படேலின் பேத்தியும், மகாராஷ்டிரா மந்திரி ராதாகிருஷ்ண விகே படேலின் சகோதரி மகளும் ஆவார்.</p><p>ஆசியாவின் முதல் கூட்டுறவு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-sugarcane-cultivation-must-be-increased-to-ensure-the-continued-operation-of-the-padalam-cooperative-sugar-mill">சர்க்கரை</a> ஆலையின் நிறுவனரான வித்தல்ராவ் விகே பாட்டிலின் கொள்ளுப் பேத்தி.</p><h2>நிலா விகே</h2><p> நிலா  விகே பாட்டில் சுவீடனில் பிறந்தவர் ஆவார். கோதென்பர்க் வணிகப் பள்ளியில் பொருளாதாரம் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும், எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். மேலும், மாட்ரிட்டில் உள்ள கம்ப்ளூட்டென்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார்.</p><p>2020 முதல், அவர் ஒரு உலகளாவிய சேவை வலையமைப்பான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு அவர் உத்தி, மேலாண்மை, தொழில்நுட்பம் மற்றும் இடர் ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறார்.</p><h2>தேர்தலில் வெற்றி</h2><p>மகாராஷ்டிராவை சேர்ந்த நிலா விகே படேல் சுவீடன் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுவீடனில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.</p><p>41 வயதான நிலா விகே படேல், சுவீடன் நாட்டின் 349 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் கிரீன் கட்சி சார்பில் எம்.பி.யாக செயல்பட உள்ளார்.</p><h2>குழந்தைகள் நலன்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-sweden-agree-to-elevate-ties-to-strategic-partnership-as-pm-modi-holds-talks-with-swedish-counterpart">சுவீடன் </a>நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பேசிய நிலா, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.</p><p>வாக்களிக்க முடியாதவர்களின் குரலாக இருக்க விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல எதிர்காலத்துக்கான வாய்ப்பு கிடைக்கும் சமூகத்தை உருவாக்க பங்களிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.</p><p>தொடர்ந்து பேசிய நிலா இயற்கையை பாதுகாத்தலில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் . தூய்மையான குடிநீர், <a href="https://www.maalaimalar.com/news/world/natural-underground-museum-to-rise-in-europe-by-2027">இயற்கை</a> வளங்களை பாதுகாத்தல் மற்றும் மனிதர்களால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளை குறைத்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று  கூறியுள்ளார்</p><h2>இந்தியாவை  நேசிக்கிறேன்</h2><p>சுவீடனில் வாழ்ந்து வந்தாலும் இந்தியாவுடனான தனது தொடர்பு தொடர்ந்து இருப்பதாக நிலா கூறியுள்ளார்.</p><p>இந்தியாவில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் நிறைபேர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.எனது தாத்தாவை மிகவும் நினைத்துக் கொள்கிறேன். அவர் எனக்கு 15 வயதாக இருந்தபோது மாநில பட்ஜெட்டை படிக்கச் சொன்னார். அவரை பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன்" என நிலா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாட்டு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- காளியம்மாள் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/white-paper-on-foreign-investment-must-be-released-kaliyammal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/white-paper-on-foreign-investment-must-be-released-kaliyammal#comments</comments><guid isPermaLink="false">2370796c-dd35-4194-ba5d-ae7152b321fb</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:43:21 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:43:21.298Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,காளியம்மாள்,வெள்ளை அறிக்கை,White paper,Kaliyammal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/6oc0s0es/kali.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kaliyammal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/6oc0s0es/kali.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெளிநாடு செல்லும்போது தொழில்துறை அமைச்சரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய லண்டன் செல்ல வேண்டிய அவசியம் என்ன? மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யாமல், இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.</p><p>புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் காளியம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>சட்டம்-ஒழுங்கு சீர்கேடு</strong></h2><p>தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடக்கும் அளவுக்குச் சட்டம்-ஒழுங்கு மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. வெறுமனே சினிமாவில் செய்வது போல ஆக்‌ஷன் காட்டுவதோ, ரீல்ஸ் பண்ணுவதோ ஆட்சியை வெற்றிகரமாக நடத்திவிட முடியாது. இதற்கு போதிய அனுபவம் தேவை.</p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் வெளிநாட்டுக்கு சென்று வெறும் 12,300 கோடி ரூபாய் மட்டுமே முதலீட்டை ஈர்த்துள்ளார். ஆனால் தொழில்துறை அமைச்சரோ இங்கேயே ரூ.1 லட்சம் கோடி ஈர்த்துள்ளதாகக் கூறுகிறார். வெளிநாடு செல்லும்போது தொழில்துறை அமைச்சரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய லண்டன் செல்ல வேண்டிய அவசியம் என்ன? மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யாமல், இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.</p><h2><strong>மக்கள் ஏமாற்றம்</strong></h2><p>தி.மு.க.வும் நாங்களும் தான் போட்டியாளர்கள் என்ற கட்டமைப்பை நிறுவ த.வெ.க. நினைக்கிறது. ஆனால் அ.தி.மு.க. 1.30 கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட இயக்கம். சுறா படத்தில் மீனவர்களுக்காகப் பேசிய விஜய், இன்று நொச்சிக்குப்பம் மக்களை காலி செய்ய பார்க்கிறார். த.வெ.க.வுக்கு வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.</p><h2><strong>இடைத்தேர்தல்</strong></h2><p>பா.ம.க.வின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அவர்கள் எங்களோடு வந்தால் பலம், வரவில்லை என்றாலும் அவர்களின் முடிவை ஏற்கிறோம். அ.தி.மு.க. மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது. இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்றார் இளவேனில்</title><link>https://www.maalaimalar.com/sports/elavenil-valarivan-clinches-silver-in-the-womens-10m-air-rifle-individual-final-at-the-asian-games</link><comments>https://www.maalaimalar.com/sports/elavenil-valarivan-clinches-silver-in-the-womens-10m-air-rifle-individual-final-at-the-asian-games#comments</comments><guid isPermaLink="false">5a145e76-ac79-41b9-8172-f26bc8602efa</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:32:42 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:32:42.665Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>shooting,துப்பாக்கிச்சுடுதல்,Elavenil Valarivan,இளவேனில் வாலறிவன்,Asian Games,ஆசிய விளையாட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/hm9lz30t/elavenil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ elevenil]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/hm9lz30t/elavenil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.</strong></em></p><p>ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது.</p><p>இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">இளவேனில் வாலறிவன்</a> இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.</p><p>தனிநபர் இறுதிப்போட்டியில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் 252.4 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கான 2வது பதக்கம் ஆகும்.</p><p>ஒரே நாளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம் ஆகும். சீன வீராங்கனை முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.</p><p>ஏற்கனவே, இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதர்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.</p><p>தனிநபர் பிரிவில் இந்தியாவின் சோனம் மாஸ்கர் 6வது இடம் பிடித்து வெளியேறினார்.</p>]]></content:encoded></item><item><title>சோதனை ஓட்டம் முடிந்து பழனியில் 22-ம் தேதி முதல் மீண்டும் ரோப் கார் இயக்கம்: கோவில் நிர்வாகம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-rope-car-to-restart-from-22nd-following-successful-test-run</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-rope-car-to-restart-from-22nd-following-successful-test-run#comments</comments><guid isPermaLink="false">ef840141-b43e-442c-970f-ce019f3177b7</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:03:05 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:03:05.483Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி கோவில்,பழனி கோவில் ரோப் கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/qwlzi3bm/RopeCar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோவில் ரோப் கார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/qwlzi3bm/RopeCar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் யானைப்பாதை, படிப்பாதை வழியாக நடந்து மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதுதவிர குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் சிரமமின்றி சென்று வர மின் இழுவை ரெயில், ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு 3 நிமிடத்தில் சென்று விடலாம் என்பதாலும், இயற்கை எழில் கொஞ்சும் பழனி மலையை கண்டு ரசிக்கலாம் என்பதாலும் ரோப்காரில் செல்ல சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p><p>பக்தர்கள் பாதுகாப்புக்காக ரோப்கார் மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 1 மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.</p><h2>பராமரிப்பு பணிகள்</h2><p>அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜூலை 20-ம்தேதி முதல் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி ரோப்கார் தொடர்பான அனைத்து எந்திரங்களும் என்.டி.டி. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் கொல்கத்தாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு சாப்ட் பொருத்தப்பட்டு, கியர் பாக்ஸ் பராமரிப்பு பணியும் நடந்தது. மேலும் கடந்த 16-ம் தேதி புதிய பெட்டிகளை பொருத்தி, மணல் மூட்டைகள், கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.</p><p>ரோப்கார் கீழ்நிலைய பெருந்திட்ட பணிகளில் எந்திரங்கள் உள்ள பகுதிகளில் புதிய மேற்கூரை, பால்சீலிங், பக்கவாட்டு சுவர்களில் கிரானைட் பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. மராமத்து பணிகள் முடிவடைந்த நிலையில் வல்லுனர்குழு ஆய்வும் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (22ம் தேதி) முதல் மீண்டும் ரோப்கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கும் என பழனி கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.</p><h2>அலைமோதிய பக்தர்கள்</h2><p>வார விடுமுறையான இன்று கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழனி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.</p><p>இதனால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாைத, படிப்பாதை, மின் இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது. பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் நிறுத்தப்பட்டுள்ளதால் மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் யானைப்பாதை, படிப்பாதை வழியாக சென்ற பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக 25 மதுபான வகைகள் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/25-new-liquor-varieties-introduced-at-tasmac-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/25-new-liquor-varieties-introduced-at-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">ef7b4da3-3b00-4d76-b02c-7d3a18c95903</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:21:17 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:21:17.998Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக் கடை,டாஸ்மாக்,மதுபான வகைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/unm9hk88/tasmac.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tasmac shop]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/unm9hk88/tasmac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>“டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் புதிய வகை மதுபானம், பீர் விற்பது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், 25 புதிய மது வகைகள் தேர்வு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது. டாஸ்மாக் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, மதுக்கடைகளில் புதிய வகை மதுபானங்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.</p><h2><strong>டாஸ்மாக் கடை</strong></h2><p>தமிழகத்தில் 4,000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு  தமிழகத்தில் தயாரிக்கப்படும் 174 மது வகைகள், 40 பீர் வகைகள், 4 ஒயின் வகைகள் மற்றும் பிற மாநில மது​பானங்களில் 6 மது வகைகள், 5 பீர், 5 ஒயின் வகைகள் விற்கப்படுகின்றன. 538 வெளிநாட்டு ரக மது வகைகளை டாஸ்மாக் நிறுவனம் இறக்குமதி செய்து, வணிக வளாகங்களில் உள்ள மதுக்கடைகளில் விற்பனை செய்கிறது.</p><h2><strong>டாஸ்மாக் அதிகாரிகள்</strong></h2><p>டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது புதிய மது வகைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், புதிய மது வகைகளை அறிமுகம் செய்வது தொடர்பாக மதுபான உற்பத்தியாளர்களுடன் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 25 புதிய மது வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.</p><h2><strong>புதிய மது வகைகள்</strong></h2><p>இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், “டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் புதிய வகை மதுபானம், பீர் விற்பது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், 25 புதிய மது வகைகள் தேர்வு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது. டாஸ்மாக் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, மதுக்கடைகளில் புதிய வகை மதுபானங்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.</p><h2><strong>டாஸ்மாக் சில்லறை விற்பனை</strong></h2><p>டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு சரக்கு அனுப்பும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல், ஒவ்வொரு கடையின் உண்மையான தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே சரக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து சப்ளையர்களின் சரக்குகளையும் சமமாகப் பிரித்து வழங்கும் முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் விற்பனையாகாமல் தேங்கும் சரக்குகள் குறைவதுடன், அதிகம் விற்பனையாகும் பிராண்டுகள் தேவைக்கேற்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஹவுதி தாக்குதல்: சவுதிக்கு உதவிக்கரம் நீட்ட துருக்கி முடிவு- காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/turkey-ready-to-provide-military-aid-to-saudi-arabia-under-mecca-agreement-says-foreign-minister</link><comments>https://www.maalaimalar.com/news/world/turkey-ready-to-provide-military-aid-to-saudi-arabia-under-mecca-agreement-says-foreign-minister#comments</comments><guid isPermaLink="false">23cc44e2-ecc8-401f-8ce3-5177ef5bc137</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:21:09 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:21:09.731Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துருக்கி,Turkey,Saudi Arabia,சவுதி அரேபியா,Houthi,ஹவுதி,மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்,Mecca Defense Pact</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/0wixqhv4/Untitled-design-24.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Turkey offers military support to Saudi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/0wixqhv4/Untitled-design-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சவுதி அரேபியாவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் நேற்று ஹவுதிகள் ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலை அடுத்து, மெக்கா ஒப்பந்தத்தின் கீழ் சவுதிக்கு ராணுவ உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.</p><p>ஏமன் நாட்டில் முக்கிய கடல் போக்குவரத்து வழித்தடமான பால்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</a> தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹவுதிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை சமாளிக்க முடியாமல் சவுதி அரேபியா திணறி வருகிறது. </p><h3><strong>சவுதி அரேபியா திணறல்</strong></h3><p>மேலும் சவுதி அரேபியாவுக்கு எந்தவொரு நாடும் போர் நடவடிக்கைகளில் ஆதரவளிக்காத சூழலில், அதன் முக்கிய நகரங்கள் ஹவுதிகளின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றன.</p><p>சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஹவுதிகள் நேற்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.</p><h3><strong>சவுதி அரேபியா கண்டனம்</strong></h3><p>இதையடுத்து ஹவுதிகளின் தாக்குதல் சம்பவத்திற்கு சவுதி அரேபியாவின் செய்தி தொடர்பாளர் துர்கி அல்-மாலிகி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சனிக்கிழமை அதிகாலையில் ஹவுதி குழுவால் ரியாத் நகரை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை சவுதி அரேபியாவின் விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.</p><p>பிஷா, தாயிஃப், ஃபராசான் மற்றும் யான்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஹூதிகள் தாக்குதலை நடத்த முயன்றனர். </p><p>ஆனால் அந்த தாக்குதல்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன” என்று அவர் பதிவிட்டார்.</p><h3><strong>ஹவுதி விளக்கம்</strong></h3><p>சவுதி மீதான தாக்குதல் குறித்து ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ கூறுகையில், சமீபத்திய சவுதி தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே அதிக எண்ணிக்கையிலான பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.</p><p>இந்த நிலையில் ‘மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின்’ கீழ், சவுதி அரேபியாவிற்கு ராணுவ உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.</p><h3><strong>துருக்கி ஆதரவு</strong></h3><p>இதுகுறித்து துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் கூறுகையில், “சவுதி அரேபியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுவதை நாங்கள் காண்கிறோம். எங்கள் கூட்டணியில் ஒரு ஒப்பந்தம் உள்ளது.</p><p>அவர்களுக்கு சில ராணுவத் தேவைகள், குறிப்பாக சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருக்கலாம். </p><p>அவற்றை நிறைவேற்றுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.</p><p>மேலும் சவுதி மற்றும் ஹவுதி, இரு தரப்பினரும் சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.</p><p>இந்த மோதல் போக்கால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை சமாளிப்பது நாளுக்கு நாள் கடினமாகி வருவதாகவும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>”வெல்கம் பேபி கேர்ள்” : ரன்வீர் சிங்- தீபிகா படுகோன் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை..! </title><link>https://www.maalaimalar.com/cinema/welcome-baby-girl-ranveer-singh-deepika-padukone-second-daughter</link><comments>https://www.maalaimalar.com/cinema/welcome-baby-girl-ranveer-singh-deepika-padukone-second-daughter#comments</comments><guid isPermaLink="false">5a65b638-43e0-4031-bb6d-2a8e575a652e</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:01:32 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:01:32.887Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bad Girl,Deepika Padukone,ரன்வீர் சிங்,தீபிகா படுகோனே,Ranveer Singh,பெண் குழந்தை</media:keywords><media:content height="225" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/u4zfy3t0/FotoJet-20-2026-09-3f6ce405f74331cfdb4421d8fdb62c6d-1200x675.avif" width="400"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Deepika Padukone and Ranveer Singh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/u4zfy3t0/FotoJet-20-2026-09-3f6ce405f74331cfdb4421d8fdb62c6d-1200x675.avif?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா (Cinema)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பேபி கேர்ள்</h2><p>நட்சத்திர தம்பதிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.</p><p>இதனை <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/dua-padukone-singh-to-become-a-big-sister-deepika-and-ranveer-announce-the-new-arrival">தீபிகா படுகோன்</a> தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து  இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். 'வெல்கம் பேபி கேர்ள்' என்று எழுதப்பட்ட ஒரு கால்பாதத்தின் புகைப்படத்தை தீபிகா படுகோன் பகிர்ந்துள்ளார்.</p><h2>பெற்றோர் </h2><p> கடந்த 2018 ல் திருமணம் செய்துகொண்ட   தீபிகா படுகோன்  <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/kantara-controversy-ranveer-singh-offers-prayers-at-mysores-chamundeshwari-temple-following-high-court-order">ரன்வீர் சிங் </a>தம்பதியினர் 2024-ஆம் ஆண்டுமுதல் பெண் குழந்தையான துவாவை வரவேற்று பெற்றோர் ஆகியிருந்தனர்.</p><p>இதற்கு முன்னர் மூத்த மகள் துவா பிறந்ததையும் இருவரும் சமூக வலைத்தளத்தில் ஒன்றாக அறிவித்து மகிழ்ச்சியை தெரிவித்திருந்தனர்.</p><h2>இரண்டாவது குழந்தை</h2><p> தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், தங்களது இரண்டாவது கர்ப்பம் குறித்த செய்தியை ஏப்ரல் 19, 2026 அன்று , ஒன்றாக  இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்தனர்.அந்த அறிவிப்பில், அவர்களது மகள் துவாபடுகோன் சிங், கர்ப்பப் பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்ததை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.</p><p> தற்போது தங்களின் இரண்டாவது <a href="https://www.maalaimalar.com/news/national/husband-brutally-assaults-wife-right-at-the-hospital-after-she-gives-birth-to-a-baby-girl">குழந்தை </a>பிறப்பை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.குழந்தையின்பிறப்பிற்கு திரை நட்சத்திரங்கள் ,ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். துவா இப்போது ஒரு சின்ன தங்கைக்கு அக்கா ஆகியிருக்கிறாள், என்று நடிகை கீர்த்தி சனோன் வாழ்த்துகளை தெரவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>எங்களுடைய செய்தி தெளிவானது: பேச்சுவார்த்தைக்கு 7 நிபந்தனைகள் விதித்த ஈரான்- அமெரிக்கா ஏற்குமா?</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-sets-7-conditions-for-negotiations-with-us-says-message-is-clear</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-sets-7-conditions-for-negotiations-with-us-says-message-is-clear#comments</comments><guid isPermaLink="false">00eb30b6-f115-4312-bed3-dce5a6b4f455</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:50:31 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:50:31.414Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>US Iran war,அமெரிக்கா ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/dj0xqad6/Iran0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்கா- ஈரான் போர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/dj0xqad6/Iran0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை தொடர 7 நிபந்தனைகள் வைக்கிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்கா- ஈரான் இடையிலான கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டன. இதன் விளைவாக இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பதில் உடன்பாடு எட்டப்படாததால், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.</p><h2>சவுதி மீது தாக்குதல் நடத்தும் ஹவுதி</h2><p>அதன்பின் அமெரிக்கா மற்றும் ஈரான் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிக்குழு சவுதி அரேபியாவை தாக்க தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு பகுதி முழுவதும் ஹவுதி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.</p><p>அமெரிக்கா- ஈரான் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டால்தான் மத்திய கிழக்கு பகுதியில நிலவும் பதற்றம் முடிவுக்கு வரும் என்ற நிலை உள்ளது.</p><p>இந்த நிலையில் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்கு ஈரான் 7 நிபந்தனைகளை விதித்துள்ளது.</p><h2>7 நிபந்தனைகள்- எங்களுடைய செய்தி தெளிவானது</h2><p>இது தொடர்பாக ஈரானின் உயரிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிப்பதாவது:-</p><p>எங்களுடைய செய்தி தெளிவானது. சந்தேகத்திற்கு இடமற்றது. அமெரிக்கா தான் உருவாக்கியுள்ள இக்கட்டான சூழலிலிருந்து விடுபடவும், அதில் மேலும் சிக்கிக் கொள்வதை தவிர்க்கவும் விரும்பினால், ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றாலும் நாங்கள்  நிபந்தனைகள் முன்வைக்கிறோம்.</p><p>இவ்வாறு மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.</p><p>அதேவேளையில் 7 நிபந்தனைகள் என்ன? என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அதேவேளையில் ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்குமா? என்று தெரியவில்லை.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-womens-team-enter-final-asian-games-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-womens-team-enter-final-asian-games-cricket#comments</comments><guid isPermaLink="false">24b2a0c0-c3d9-4760-be9f-f723f8c22d45</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:48:58 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:48:58.009Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இலங்கை,srilanka,பாகிஸ்தான்,Pakistan,Asian Games,ஆசிய விளையாட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/lkbwssm0/chamari.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ chamari athapaththu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/lkbwssm0/chamari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இலங்கை.</strong></em></p><p>ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகின்றன.</p><h2>முதல் அரையிறுதி</h2><p>ஜப்பானின் நிஷின் நகரில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் வீராங்கனைகள் மோதினர். டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது. </p><p>அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. ஆயிஷா ஜபார் 71 ரன்னும், ஷபார் ஜுல்பிகர் 54 ரன்னும் எடுத்தனர்.</p><p>3வது விக்கெட்டுக்கு ஆயிஷா ஜபார் - ஷபார் ஜுல்பிகர் ஜோடி 115 ரன்கள் சேர்த்தது.</p><p>இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை கேப்டன் சமாரி அடப்பட்டு ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.</p><h2>சமாரி அடப்பட்டு அதிரடி</h2><p>சமாரி அடப்பட்டு அரை சதம் கடந்து 50 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார்.</p><p>ஹாசினி பெரேரா அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 42 ரன்னில் அவுட்டானார்.</p><p>இறுதியில், இலங்கை அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.</p><p>மற்றொரு அரையிறுதியில் இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>டாடா சியரா லெஜண்ட் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் - முழு விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/tata-sierra-legend-series-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/tata-sierra-legend-series-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">0aef381f-5927-4efb-a350-9c945f3634ed</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:25:00 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:25:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,டாடா மோட்டார்ஸ்,Tata Motors,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/uc52fidy/Tata-Sierra.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tata Sierra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/uc52fidy/Tata-Sierra.png?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாடா சியராவில் ஏராளமான மாடல்கள் வழங்கப்பட்டாலும், தற்போது அந்நிறுவனம் ஒரு படி மேலே சென்று, குறைந்த விலை மாடல்களில் கூடுதல் அம்சங்களை சேர்த்துள்ளது. ஸ்டான்டர்டு ஸ்மார்ட்+ மாடலின் விலை ரூ. 11.49 லட்சமாக இருக்கும் நிலையில், இந்த மாடல்களின் விலை ரூ. 11.99 லட்சமாக உள்ளது. </p><p>இது போன்ற கூடுதல் விலையே இந்த மாடல்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதுள்ள மாடல்கள், லெஜண்ட் சீரிஸ் மாடல்களுடன் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். அனைத்து லெஜண்ட் சீரிஸ் மாடல்களிலும் 'L' என்ற பின்னொட்டு இடம்பெறும்.</p><h2>லெஜன்ட் சீரிஸ் அம்சங்கள்:</h2><p>டாடா சியரா லெஜண்ட் சீரிஸ்: ஸ்மார்ட்+ எல் – ப்யூர் எல் – ப்யூர் எல் (ஓ) – ப்யூர்+ எல் – அட்வென்ச்சர்+ எல். ஸ்மார்ட்+ எல் இந்த வேரியன்ட் வரிசையைக் கொண்டுள்ளது. இந்த வேரியன்ட்டிற்கான அம்சங்களில் இப்போது ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கண்ட்ரோல்கள், தானாக மடியும் ORVM-கள் மற்றும் லெதரெட் கேபின் மெட்டீரியல்கள் ஆகியவை அடங்கும்.</p><p>பியூர் எல் வேரியன்ட், 10.25-இன்ச் சென்டர் ஸ்கிரீன், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, கைடெட் லைன்ஸ் கொண்ட ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டிரைவ் மோட்கள், TPMS மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை போன்ற கூடுதல் அம்சங்களுடன் ஒரு படி மேலே செல்கிறது. பியூர் எல் (ஓ) வேரியன்ட்டின் அடிப்படையில், வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் ரெயின் சென்சிங் வைப்பர்கள் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.</p><h2>ப்யூர் + எல் அம்சங்கள்:</h2><p>ப்யூர் + எல் மாடலில் முழுமையான லெதரெட் இன்டீரியர், வென்டிலேட்டெட் முன்பக்க இருக்கைகள், ஆறு விதங்களில் சரிசெய்யக்கூடிய பவர் டிரைவர் இருக்கை, பாஸ் மோடு, டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஒன்-டச் ஆன்டி-பிஞ்ச் விண்டோ (டிரைவர்), 65W USB-C சார்ஜர்கள், பூட் லேம்ப் மற்றும் பின்புற டிஃபாகர் ஆகியவை உள்ளன.</p><p>முந்தைய மாடலின் அம்சங்களுடன், அட்வென்ச்சர்+ எல் மாடலானது 360° கேமராக்கள், பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங், பார்க்கிங் சென்சார்கள், LED ஃபாக் லைட்கள், FSD, டெரெய்ன் மோட்கள், 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட், 10.25-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆம்பியன்ட் மூட் லைட்கள், வயர்லெஸ் சார்ஜிங், ஆர்ம்ரெஸ்டுடன் கூடிய பின் இருக்கை வரிசை, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள், 60:40 ஸ்ப்ளிட்-ஃபோல்ட் மற்றும் ரெக்லைன், மற்றும் குளிரூட்டப்பட்ட க்ளோவ்பாக்ஸ் ஆகிய கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது.</p><p>டாடா சியரா லெஜண்ட் சீரிஸ் இயந்திர ரீதியாக மாற்றமின்றி தொடர்கிறது. இதில் 1.5-லிட்டர் ரெவோட்ரான் (105bhp/145Nm), டர்போ TGDi (158bhp/255Nm) மற்றும் டீசல் (116bhp/260Nm) என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அட்வென்ச்சர்+ வேரியண்ட்டில் புதிய 7DCT ஆப்ஷனும் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு: முதல் பதக்கம் வென்ற இந்தியா - துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி </title><link>https://www.maalaimalar.com/sports/indias-womens-10m-air-rifle-team-has-won</link><comments>https://www.maalaimalar.com/sports/indias-womens-10m-air-rifle-team-has-won#comments</comments><guid isPermaLink="false">410bf864-130c-4a23-9835-579fabb7395e</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:22:39 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:22:39.410Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>shooting,இந்திய மகளிர் அணி,துப்பாக்கிச்சுடுதல்,Asian Games,Indian womens,ஆசிய விளையாட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/lim0mdia/sonam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shooting]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/lim0mdia/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.</strong></em></p><p>ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது.</p><p>இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளி வென்று அசத்தியது.</p><p>இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதர்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது.</p><p>இது இந்தியாவுக்கான முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>துப்பாக்கிச் சுடுதலில் சீனா தங்கப் பதக்கமும், ஜப்பான் வெண்கலப் பதக்கமும் வென்றது.</p><p>தனிநபர் பிரிவிலும் இந்தியாவின் இளவேனில், சோனம் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-consultation-with-officials-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-consultation-with-officials-tomorrow#comments</comments><guid isPermaLink="false">9983140e-4790-4f9c-84d9-55392dc22302</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:19:03 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:19:03.279Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,வடகிழக்கு பருவமழை,டெல்டா,Delta,monsoon</media:keywords><media:content height="415" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/8aufkj4w/images-17.jfif" width="739"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/8aufkj4w/images-17.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>வடகிழக்கு பருவமழை </h2><p>பொதுவாக தமிழகத்தில்  அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில்  வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைகிறது.</p><p>தமிழகத்தின் மொத்த ஆண்டு மழையளவில் பெரும்பகுதி இந்த வடகிழக்கு  பருவமழையில் தான் கிடைக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation">டெல்டா</a> மற்றும் இதர மாவட்டங்களின் சாகுபடிப் பணிகளுக்கு இப்பருவமழை மிகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர் ஆதரமாக இந்த பருவமழை இருக்கிறது.</p><h2>முன்னெச்சரிக்கை </h2><p>இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையானது தொடங்க உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுக்காப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது </p><h2>முதல்வர் ஆலோசனை </h2><p>வடகிழக்கு பருவழையானது தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்வர் விஜய்</a>.</p><p>காவிரி படுகை, கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக ஆலோசனையில் பங்கேற்கவுள்ளனர்.</p><p> துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல். </p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்: ம.பி. முதல்வர் சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-once-again-proved-that-he-is-a-careless-politician-mp-cm-mohan-yadav</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-once-again-proved-that-he-is-a-careless-politician-mp-cm-mohan-yadav#comments</comments><guid isPermaLink="false">634f152a-2a66-4112-a6cb-16d6dd52f36a</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:37:20 +0000</pubDate><atom:updated>2026-09-20T03:37:20.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,மோகன் யாதவ்,Mohan Yadav</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/kqzwxjno/RahulGandhiMohanYadav001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி- மோகன் யாதவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/kqzwxjno/RahulGandhiMohanYadav001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி Chhatron ki Goonj என்ற பெயரில் நாடுமுழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாணவர்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் நேற்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மாணவர்களை சந்தித்தார்.</p><h2>அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-</h2><p>அமித் ஷா மகன் எப்படி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் என்று மாணவர் ஒருவர் கேள்வி கேட்கிறார். மற்றொரு மாணவர் இந்தியாவின் ஒட்டுமொத்த வணிகச் சூழலையும் இரண்டு தனிநபர்கள் எவ்வாறு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் என்று ஒரு மாணவர் கேட்கிறார். மேலும், நீதித்துறை மற்றும் மற்ற அமைப்புகள், அவர்களுடைய வேலையை செய்வதில் ஏன் தோல்வியடைந்து விட்டன அல்லது தேர்தல் ஆணையம் அதன் வேலையை செய்யவில்லை என்று கேள்வி கேட்கின்றனர்.</p><h2>சிஸ்டத்திற்கு மாணவர்கள் தேவையில்லை</h2><p>அதனால்தான் இந்த அமைப்புக்கு மாணவர்கள் தேவையில்லை. அதற்குத் தேவை குருட்டு விசுவாசிகள். ஒரு குருட்டு விசுவாசி என்பவன் மாணவனுக்கு நேர் எதிரானவன். ஒரு மாணவர் கேள்விகளை எழுப்பி ஆர்வத்துடன் இருக்கும் வேளையில், ஒரு குருட்டு விசுவாசி தனக்கே உரிய ஒரு மாய உலகில் வாழ்கிறார். அமைப்பு ஒட்டுமொத்த நாட்டையும் தன்வசப்படுத்தியுள்ளது.</p><p>அமைப்பு (System) முறை மாணவர்களை கண்டு அச்சுறுத்தலை உணர்கிறது. ஏன்? ஏனெனில் மாணவர்கள் கேள்விகளைக் கேட்கிறார்கள்.</p><p>இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.</p> <p>ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய பிரதேச முதல்வர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது:-</p><p>அந்த நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட விவகாரம் குறித்து காந்தி உண்மையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும். போதுமான தயாரிப்பு ஏதுமின்றி மத்திய பிரதேசத்திற்கு வந்து அவர் தனது நிகழ்ச்சிகளை நடத்திய விதம், அவர் ஒரு பொறுப்பற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இது அவரது இயல்புக்கு ஏற்றதாகவே உள்ளது.</p><h2>ராகுல் காந்தி கேள்விக்கு காங்கிரசிடம் பதில் இருக்க வேண்டும்</h2><p>காங்கிரஸின் அரசியல் வரலாற்றில், அக்கட்சியின் அரசுகள் நான்கு முதல் ஐந்து தலைமுறைகளாக நாட்டையும் மாநிலங்களையும் ஆட்சி செய்துள்ளன. இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அவரிடம் பதில்கள் இருக்க வேண்டும்.</p><p>உதாரணமாக, அவர் கல்வி முறையைப் பற்றிப் பேசினால், இந்திய மருத்துவக் கவுன்சிலின் (MCI) படி மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் நிலை என்னவாக இருந்தது? மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஒரு விமான நிலையத்தை கூட கட்டவில்லை.</p><p>இவ்வாறு மோகன் யாதவ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் ஒன்பிளஸ் 13s புது வேரியண்ட் அறிமுகம் - விலை மற்றும் என்ன ஸ்பெஷல் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/oneplus-13s-16gb-variant-launched-in-india-price-availability</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/oneplus-13s-16gb-variant-launched-in-india-price-availability#comments</comments><guid isPermaLink="false">fa986deb-dcaa-42b0-8198-29cdc536d39d</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:37:00 +0000</pubDate><atom:updated>2026-09-20T03:37:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OnePlus,ஒன்பிளஸ்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/h8ypjlwy/OnePlus-13s.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ OnePlus 13s]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/h8ypjlwy/OnePlus-13s.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/oneplus">ஒன்பிளஸ்</a> 13s ஸ்மார்ட்போன் தற்போது இந்திய சந்தையில் ஒரு புதிய மெமரி வேரியண்டில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன், ஃபிளாக்ஷிப் சீரிசின் ஒரு பகுதியாக கச்சிதமான ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p>இது தனது சிறிய வடிவமைப்பு மற்றும், ஃபிளாக்ஷிப் ஹார்டுவேர் உள்ளிட்டவைகளை சற்றே குறைந்த விலையில் வழங்கியதற்காகவும் தனித்து நின்றது. 16 ஜிபி வேரியன்ட் சேர்க்கப்பட்ட பிறகு, ஒன்பிளஸ் 13s <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> இப்போது மூன்று மெமரி ஆப்ஷன்களில் வருகிறது.</p><p>மற்ற ஹார்டுவேர் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியேதான் இருக்கின்றன, ஆனால் கூடுதல் ரேம் மற்ற மாடல்களை காட்டிலும் சிறந்த செயல்திறன் வழங்கும். சந்தையில் 13s மாடலை தக்கவைத்து கொள்வதற்கு, இப்போது 16 ஜிபி மாடலை அறிமுகப்படுத்துவது ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒரு வியூகமாக இருக்கலாம்.</p><h2>ஒன்பிளஸ் 13s 16ஜிபி + 512ஜிபி விலை:</h2><p>ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம், 512ஜிபி மெமரி வேரியண்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 68,999 ஆகும். இதை அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோர் தளங்களில் வாங்கலாம். இந்த வேரியண்ட் பிளாக் வெல்வெட் மற்றும் கிரீன் சில்க் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.</p><p>இது 13s வரிசையிலேயே மிகவும் விலையுயர்ந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் மேலும் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 54,999 என்றும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 59,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>ஒன்பிளஸ் 13s சிறப்பு அம்சங்கள்:</h2><p>ஒன்பிளஸ் 13s மாடலில் 6.32-இன்ச் 1.5K 1216×2640 பிக்சல் LTPO ProXDR AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது அடாப்டிவ் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1,600 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. சிறிய போன்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு கச்சிதமான டிஸ்ப்ளே ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.</p><p>புகைப்படம் எடுக்க ஒன்பிளஸ் 13s மாடலில் 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா ஆகியவை உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இதில் 32MP கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,850mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.</p><p>ஒன்பிளஸ் 13s மாடல் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஆக்சிஜன்ஓஎஸ் 15 உடன் வெளியானது. இது நான்கு ஓஎஸ் அப்டேட்களையும் ஆறு ஆண்டுகள் செக்யூரிட்டி பேட்ச்களை பெறுவதால், இந்த ஸ்மார்ட்போன் நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பானது.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவில் பங்கேற்காத மாணவருக்கு அபராதமா?- காங்கிரஸ் ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-slams-iim-jammu-for-fining-students-absent-from-pms-birthday-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-slams-iim-jammu-for-fining-students-absent-from-pms-birthday-event#comments</comments><guid isPermaLink="false">e9e8f91a-bfe5-4b9c-bc7c-bbf642ad0edb</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:35:19 +0000</pubDate><atom:updated>2026-09-20T03:35:19.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,pm modi,பிரதமர் மோடி,iim jammu,ஐஐஎம் ஜம்மு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/b35njfsn/pm-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/b35njfsn/pm-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சியைப் புறக்கணித்த மாணவருக்கு அபராதம் விதிப்பதா என காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.</strong></em></p><p>பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கடந்த 17-ம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. </p><p>இந்நிலையில், ஜம்முவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.</p><h2>500 ரூபாய் அபராதம்</h2><p>இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளில் விளக்கேற்றும் நிகழ்ச்சியைப் புறக்கணித்த மாணவர்களிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும், தவறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் மாணவர் பேரவை நோட்டீஸ் அனுப்பி உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சையத் நசீர் உசேன் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்தப்பட வேண்டும்?</p><p>இது ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் ஒரு கல்விசார் கடமையா அல்லது பிரதமர் மோடிக்கான விளம்பர நடவடிக்கையை வளாகத்திற்குள் கட்டாயமான ஒன்றாகக் கொண்டு வந்துள்ளார்களா?</p><p>கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் சுதந்திரமான சிந்தனையை வளர்க்க வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்களின் கொண்டாட்டங்களில் பங்கேற்க அவர்களைக் கட்டாயப்படுத்தவோ அல்லது தண்டனை வழங்குவதாக மிரட்டவோ கூடாது.</p><p>பா.ஜ.க.வின் விளம்பர உத்திகள் நமது உயர்தரக் கல்வி நிறுவனங்களுக்கு வெளியே வைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.</p><h2>குற்றச்சாட்டை மறுத்த ஐஐஎம்</h2><p>இந்தக் குற்றச்சாட்டை ஐ.ஐ.எம். நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து ஜம்மு ஐ.ஐ.எம். மாணவர் நலத்துறை தலைவர் பிரிகேடியர் நீரஜ் சோனி கூறுகையில், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் மாணவர்களின் பங்கேற்பை உறுதி செய்யவே இதுபோன்ற இயல்பானநடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. எந்த ஒரு மாணவருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என விளக்கம் அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து  நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை தேர்தல் பரப்புரை: சீமான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-campaigns-for-tharapuram-naam-tamilar-candidate-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-campaigns-for-tharapuram-naam-tamilar-candidate-tomorrow#comments</comments><guid isPermaLink="false">bd33f446-a9f5-4b85-b162-af48180e8b55</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:34:20 +0000</pubDate><atom:updated>2026-09-20T03:34:20.188Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,NTK,மதுராந்தகம்,தமிழக இடைத் தேர்தல்,bye election,சீமான்,நாம் தமிழர் கட்சி,Madhuranthakam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/hkvylmtx/Untitled-design-22.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NTK campaigns in Dharapuram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/hkvylmtx/Untitled-design-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை செய்ய உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p>தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தனித்தொகுதிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.   </p><h3><strong>தாராபுரம் வேட்பாளர்கள்</strong></h3><p>தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ப. சத்தியபாமா, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் எஸ். சுகன்யா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கே. பானுமதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் (சிபிஐ) சார்பில் பி. லட்சுமணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும் தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எம். கார்த்திகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><h3><strong>நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரை</strong></h3><p>இந்த நிலையில் தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து ந.த.க ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முதற்கட்ட தேர்தல் பரப்புரை செய்ய உள்ளதாக, அக்கட்சியின் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p>தாராபுரம் முருகன் கோவில் அருகில் நாளை (21.09.26) மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டிக்கெட்டை தான் விலை கொடுத்து வாங்கினீர்கள், எங்களை அல்ல: பிக்பாஸில் சட்டையை கழற்றிய சல்மான் கான்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/you-paid-for-the-ticket-not-for-us-salman-khan</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/you-paid-for-the-ticket-not-for-us-salman-khan#comments</comments><guid isPermaLink="false">97cd571d-7eaf-423f-b935-e6a9e24622d9</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:01:45 +0000</pubDate><atom:updated>2026-09-20T03:01:45.308Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கத்ரீனா கைஃப்,பிக்பாஸ்,katrina kaif,சல்மான் கான்,salman khan,bigboss</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/s9hminya/Untitled-design-20.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Salman Khan Bigg Boss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/s9hminya/Untitled-design-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட் நடிகரான சல்மான் கான் சமீபத்தில் இந்தி மொழியில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, இணையத்தில் உடல் எடை தொடர்பாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது சட்டையை கழற்றி உடல் எடை குறித்து கேலி செய்வதற்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>பாலிவுட் நடிகையான கத்ரினா கைஃப் தனது கணவருடன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது, திருமணத்திற்கு பிறகான அவரது உடல் எடை குறித்து சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தது. </p><p>இதையடுத்து கத்ரினா-வுக்கு ஆதரவாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். மேலும் திரைப்பிரபலங்களும் நடிகைக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்தனர். </p><p>இந்த நிலையில் இந்தி மொழியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக <a href="https://www.maalaimalar.com/topic/சல்மான்-கான்">நடிகர் சல்மான் கான்</a> கலந்து கொண்டார். அப்போது நடந்த ‘வீக் எண்ட் கா வார்’ நிகழ்ச்சியில் அவர் தனது ஆவேசமான கருத்துகளை தெரிவித்தார்.</p><p>அப்போது அவர், “ஒரு பெண் உடல் எடை கூடினால், அவர் குண்டாகிவிட்டதாக வலைதளத்தில் மோசமான விமர்சனங்கள் எழுகிறதை பார்க்க முடிகிறது.</p><p>ஒரு வயதான நடிகர், அவர் வயதாகிவிட்டார் என்ற காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறார். இந்த வகையான விமர்சனங்கள் பொதுவாக பார்க்கப்படுகிறது, ஆனால் அவை உண்மையில் சம்பந்தப்பட்ட நபர்களை மிகவும் அதிகமாக பாதிக்கிறது.</p><p>ஒருவர் கர்ப்பமானார் என்பதற்காக, அவரை ஏன் சமூக வலைதளத்தில் மிகவும் கீழ்த்தரமாக கிண்டல் செய்கிறீர்கள்?</p><p>கர்ப்பத்திற்கு பிறகு மீண்டும் பொதுவெளிக்கு வரும் பெண்கள், தங்களின் முந்தைய இயல்பான தோற்றத்திற்கு திரும்புவார்கள். மேலும், அவர்கள் விரும்பினால் மீண்டும் தங்களின் உடலை ஃபிட்டாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பார்கள்.</p><p>நிச்சயமாக எனக்கு 60 வயது ஆகிவிட்டது. என்னால் எனது இளமை காலத்தில் நடித்த ‘மைனே பியார் கியா’ படத்தின் உடலைப் போல் என்றென்றும் இருக்க முடியாது” என்று அவர் கூறினார்.</p><p>இதையடுத்து மற்றவர்களை விமர்சனம் செய்வபர்கள் முதலில் உங்களை பாருங்கள், என்று கூறிய சல்மான் கான் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று தனது சட்டையை கழற்றினார்.</p><p>அப்போது அவர் மேடையில் தனது கவ்பாய் தொப்பி, ஜாக்கெட் மற்றும் டி-ஷர்ட்டை கழற்றி தனது உடலை கேமராவில் காண்பித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து அவர், உங்கள் படம் நன்றாக இல்லை என்றாலும், நாங்கள் நடித்த படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சொல்லுங்கள். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.</p><p>நீங்கள் தியேட்டரில் திரைப்படத்தை பார்ப்பதற்கு தான் விலை கொடுத்து டிக்கெட் வாங்கினீர்கள்; ஆனால் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கவில்லை என்றும் அவர் கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">SALMAN KHAN took his T-shirt off on live telecast of <a href="https://x.com/hashtag/BiggBoss20?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BiggBoss20</a> and silenced the so called trollers in his own style. <br>60 yrs old and still carrying a physique most can only dream of.<br><br>The OG Fitness Icon for a reason.<a href="https://x.com/hashtag/SalmanKhan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SalmanKhan</a>  <a href="https://t.co/E84uGCJrdR">pic.twitter.com/E84uGCJrdR</a></p>&mdash; Pαѕнα (@ibeingxpasha_) <a href="https://x.com/ibeingxpasha_/status/2101378530173231242?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இறுதியில் அவர், பொதுவெளிகளில் சாதாரன உடையில் வரும் நடிகைகளை, அவர்களின் அனுமதியின்றி தங்கள் கேமராக்களில் புகைப்படம் எடுப்பவர்களையும் கடுமையாக விமர்சித்தார்.</p><p>மேலும், பெண்களின் இடுப்பு, தொடைகள் மற்றும் முதுகு பகுதிகளை வேண்டுமென்றே கேமராக்களில் புகைப்படம் எடுப்பவர்களை சம்லான் விமர்சனம் செய்தார். இதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு, ஒரு பொழுதுபோக்கு செய்திகளாக பார்க்கப்படுவதாகவும் சல்மான் கான் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ம் தேதி கிராமசபை கூட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gram-sabha-meeting-held-in-october-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gram-sabha-meeting-held-in-october-2#comments</comments><guid isPermaLink="false">77b459e8-e6f2-4abe-ad2f-8f143679250d</guid><pubDate>Sun, 20 Sep 2026 02:12:04 +0000</pubDate><atom:updated>2026-09-20T02:12:04.399Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Gram Sabha meetings,காந்தி ஜெயந்தி,Gandhi Jayanthi,கிராமசபை கூட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/tgr52xl8/meeting.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ meeting]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/tgr52xl8/meeting.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்தவேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.</strong></em></p><p>ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:</p><p>காந்தி ஜெயந்தியான அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கிராமசபை கூட்டம்</a> நடத்தவேண்டும்.</p><p>கிராம ஊராட்சியின் நிர்வாகம், நிதிநிலை, வளர்ச்சிப் பணிகள், குடிநீர், தூய்மை, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.</p><p>கிராமசபை கூட்டம் காலை 11 மணியளவில் நடத்தவேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், நேரம் மற்றும் விவாதிக்கப்படும் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.</p><p>கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.</p><p>அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.</p><p>கிராமசபையின் ஒப்புதலுடன் பிற முக்கிய பொருட்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.</p><p>கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முறையாக பதிவுசெய்து, அவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திரைப்படங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/new-film-certification-guidelines-india</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/new-film-certification-guidelines-india#comments</comments><guid isPermaLink="false">9fc7f86d-4fd6-427b-8115-1c1730db37ab</guid><pubDate>Sun, 20 Sep 2026 02:05:17 +0000</pubDate><atom:updated>2026-09-20T02:05:17.178Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cinema,CBFC,திரைப்படங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/yf02kmav/Cinema0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cinema]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/yf02kmav/Cinema0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களைத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 1991-ம் ஆண்டின் விதிகளை திருத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><h2>எச்சரிக்கை வாசகம்</h2><p>போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் காட்சிகளுக்கு சட்டப்பூர்வ எச்சரிக்கை வாசகம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மது, புகையிலை அல்லது போதைப்பொருள் பழக்கத்தை நியாயப்படுத்தும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.</p><p>திரைப்படங்களின் தலைப்புகள் ஆத்திரமூட்டும் வகையிலோ, ஆபாசமாகவோ அல்லது யாரையும் புண்படுத்தும் வகையிலோ இருக்கக்கூடாது. இதை திரைப்படச் சான்றிதழ் வாரியம் நன்றாக ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.</p><p>வன்முறை மற்றும் சமூக விரோதச் செயல்கள் போற்றப்படவோ, நியாயப்படுத்தப்படவோ கூடாது. பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.</p><p>நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலான காட்சிகளை காட்டக்கூடாது.</p><p>7 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய, பெற்றோரின் வழிகாட்டுதலில் இருக்கும் குழந்தைகள் பார்க்கக்கூடிய பட மாக இருந்தால் 'யு/ஏ 7+' பிரிவில் வகைப்படுத்த வேண்டும்.</p><p>13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பொருத்தமான படங்கள் 'யு/ஏ 13+' என வகைப்படுத்தப்பட வேண்டும். 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பொருத்தமான படங்கள் 'யு/ஏ 16+' என வகைப்படுத்தப்பட வேண்டும்.</p><p>குழந்தைகளை குற்றவாளிகளாகவோ அல்லது வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவர்களாகவோ சித்தரிக்கக்கூடாது. மேலும், உடல் மற்றும் மனநலம் குன்றியவர்களைத் துன்புறுத்துவது மற்றும் விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதைக் காட்டக் கூடாது.</p><p>இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு களங்கம் விளைவிக்காத வகையில் திரைப்படங்கள் இருக்க வேண் டும் என்பதை வாரியம் உறுதி செய்ய வேண்டும் என இந்த வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய், செலவு, வாங்கிய கடன் எவ்வளவு?- புள்ளி விவரம் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-revenue-expenditure-and-borrowings-last-five-months-data-released</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-revenue-expenditure-and-borrowings-last-five-months-data-released#comments</comments><guid isPermaLink="false">8016e719-f3ab-485b-bfd0-3a59c84e992d</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:51:39 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:51:39.069Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/12/23/1996694-tngovt.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Govt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/12/23/1996694-tngovt.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடியாக உள்ளது. இந்த 5 மாத காலகட்டத்தில் அரசின் செலவு ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 140 கோடியாக உயர்ந்துள்ளதால், அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ. 20,349 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கி வருகிறது. அதோடு வரி வருவாயையும், வரியல்லாத வரி யையும் வசூலிக்கும் நடவடிக்கைகளை நவீனப்படுத்தி வருகிறது.</p><p>அந்த வகையில் தமிழக அரசுக்கு மாநில ஜி.எஸ்.டி. வரி, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம், ஆயத்தீர்வை மற்றும் மத்திய அரசின் வரி பங்கு ஆகியவற்றின் மூலமாக வரி வருவாய் வந்து சேர்கிறது. அதுபோல் சேவை கட்டணங்கள், அபராதம் போன்றவற்றின் வாயிலாக வரி அல்லாத வருவாயும் கிடைத்து வருகிறது.</p><p>வருவாய் ஒரு பக்கம் வந்த போதிலும் திட்டப்பணிகள், சம்பளங்கள் வாயிலாக பல்வேறு செலவுகளையும் அரசு செய்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், இலவச திட்டங்கள், அரசு வழங்கும் மானியங்கள் போன்றவை அரசுக்கு செலவை ஏற்படுத்துகின்றன. இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான கடந்த 5 மாதங்களில் தமிழக அரசுக்கு வந்துள்ள வருவாய் வரவுகள் மற்றும் செலவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.</p><h2>வருவாய் பற்றாக்குறை</h2><p>அந்த வகையில், வரி வருவாய், வரி அல்லாத வருவாய், மத்திய அரசின் மானியம் வாயிலாக வந்த வருவாய் என தமிழக அரசுக்கு ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதே 5 மாதங்களில் அரசுக்கு ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 140 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வருவாய் மற்றும் செலவை கணக்கிட்டால் வருவாயைவிட செலவு கூடுதலாகி ரூ. 20,349 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.</p><h2>கடன்களுக்கான வட்டியின் பங்கு ரூ. 25,991 கோடி</h2><p>அரசின் செலவுக்கணக்கில், கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டியின் பங்கு ரூ. 25,991 கோடியாகவும், ஓய்வூதியத்தின் பங்கு ரூ. 21,008 கோடியாகவும் உள்ளது. மேலும், கடந்த 5 மாதங்களில் தமிழக அரசு ரூ. 30,021 கோடி கடன் வாங்கியுள்ளது.</p><p>தமிழக அரசுக்கு வந்துள்ள வருவாய் அளவை தனித்தனியாக கணக்கிட்டால் மாநில சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ரூ. 34,144.06 கோடி. முத்திரைத்தாள், பதிவு கட்டணம் மூலம் ரூ.10,493.30 கோடி. நிலம் விற்பனை மூலம் ரூ.57.16 கோடி. வர்த்தகம் மீதான வரி மூலம் ரூ. 28,164.79 கோடி. மாநில ஆயத்தீர்வை மூலம் ரூ.5,214 கோடி. மத்திய அரசின் வரி பங்கு மூலம் ரூ.24,188 கோடி. இதர வரிகள் மற்றும் தீர்வைகள் மூலம் ரூ. 6,843 கோடி. வரி அல்லாத வருவாய் மூலம் ரூ.5,149 கோடி. மத்திய அரசின் மானியங்கள் மூலம் ரூ.3,537 கோடியாகும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-in-chennai-4</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-in-chennai-4#comments</comments><guid isPermaLink="false">d1c69066-b55b-460e-90a1-44122f2624c9</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:44:45 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:44:45.965Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,diesel,டீசல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/m97y2pjq/tn.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/m97y2pjq/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (20.9.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 20.9.2026- வாய்ப்புகள் வாயில் தேடிவரும் நாள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-in-tamil-september-20</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-in-tamil-september-20#comments</comments><guid isPermaLink="false">0845153c-4013-4467-b4bd-0ee25204d78c</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:39:18 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:39:18.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/omjpkisa/New-Project-2026-09-06T043703.323.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/omjpkisa/New-Project-2026-09-06T043703.323.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும்.</p><h2>ரிஷபம்</h2><p>இன்னல்கள் தீர இறைவனைப் பணிய வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.</p><h2>மிதுனம்</h2><p>வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். தொழில் தொடர்பாக புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஊக்கத் தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.</p><h2>கடகம்</h2><p>நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது.</p><h2>சிம்மம்</h2><p>தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பு உண்டு. பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரலாம்.</p><h2>கன்னி</h2><p>பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பண வரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.</p><h2>துலாம்</h2><p>புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>போட்டிகளைச் சமாளித்து வெற்றி காணும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி லாபம் தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை ஏற்படும்.</p><h2>தனுசு</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். மங்கலச் செய்தி வந்துசேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களும் ஒத்துழைப்புத் தருவர்.</p><h2>மகரம்</h2><p>புதிய பாதை புலப்படும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட உதவி கிடைக்கும்.</p><h2>கும்பம்</h2><p>சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். பணப் பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வு வந்து சேரும்.</p><h2>மீனம்</h2><p>வாய்ப்புகள் வாயில் தேடிவரும் நாள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களைப் பிரமிக்க வைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 20 செப்டம்பர் 2026: மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-20-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-20-september-2026#comments</comments><guid isPermaLink="false">64e10b09-1b67-4e37-be1e-9b12aba4bac1</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/zh03s3ls/amman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/zh03s3ls/amman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, புரட்டாசி-3 (ஞாயிற்றுக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி : நவமி மாலை 5.56 மணி வரை பிறகு தசமி</p><p>நட்சத்திரம் : பூராடம் மறுநாள் விடியற்காலை 5.22 மணி வரை பிறகு உத்திராடம்</p> <p>யோகம் : அமிர்த / சித்தயோகம்</p><p>ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு</h2><p>உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் வெள்ளிப் பல்லக்கில் திருவீதியுலா. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி, சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. </p> <p>கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர், தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் காலை அபிஷேகம், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி, தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - துணிவு</p><p>ரிஷபம் - பக்தி</p><p>மிதுனம் - நட்பு</p><p>கடகம் - நலம்</p><p>சிம்மம் - தனம்</p><p>கன்னி - இன்பம்</p> <p>துலாம் - போட்டி</p><p>விருச்சிகம் - பொறுப்பு</p><p>தனுசு - கடமை</p><p>மகரம் - உறுதி</p><p>கும்பம் - சுகம்</p><p>மீனம் - ஆக்கம்</p> ]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் காரணமாக அக்டோபர் 6-ஆம் தேதி பொது விடுமுறை: தலைமை செயலாளர் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-in-two-constituencies-public-holiday-declared-on-oct-6th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-in-two-constituencies-public-holiday-declared-on-oct-6th#comments</comments><guid isPermaLink="false">784edd7a-8724-433c-b756-85018e3c2160</guid><pubDate>Sun, 20 Sep 2026 00:15:53 +0000</pubDate><atom:updated>2026-09-20T00:15:53.992Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/0gy86cke/madurantakam-and-dharapuram.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ madurantakam and dharapuram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/0gy86cke/madurantakam-and-dharapuram.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/by-election">இடைத்தேர்தல்</a> அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. </p><p>இடைத்தேர்தலை ஒட்டி இரு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விடுமுறை அறிவித்து அரசாணை:</h2><p>இது குறித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> அரசின் தலைமைச்செயலாளர் எம்.சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், "செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.</p><p>இதையொட்டி, இந்த 2 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் அக்டோபர் 6-ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.</p><p>மேலும், செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தாலும், மதுராந்தகம் (தனி) அல்லது தாராபுரம் (தனி) தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.</p><p>இந்த 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் மூடப்பட்டு இருக்கும்," என கூறப்பட்டுள்ளது.</p><h2>இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு:</h2><p>இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27 ஆனது. தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.</p><p>முன்னதாக மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.</p><p>அதேபோல் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ரஞ்சி கோப்பை தொடர்:  ஐதராபாத் கேப்டனாக களமிறங்கும் முகமது சிராஜ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/siraj-to-lead-hyderabad-in-first-two-ranji-trophy-matches</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/siraj-to-lead-hyderabad-in-first-two-ranji-trophy-matches#comments</comments><guid isPermaLink="false">4e9293dd-4483-444f-81b5-8db8d982b204</guid><pubDate>Sat, 19 Sep 2026 23:40:05 +0000</pubDate><atom:updated>2026-09-19T23:40:05.444Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,முகமது சிராஜ்,Ranji Trophy,ரஞ்சி கோப்பை,Siraj,ஐதராபாத்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/15/24818855-siraj15012026.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Siraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/15/24818855-siraj15012026.webp?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/ranji-trophy">ரஞ்சி கோப்பை</a> சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் ஐதராபாத் அணியை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வழிநடத்துவார் என்றும், அவருக்கு துணையாக சி.வி. மிலிந்த் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் ஐதராபாத் <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெ</a>ட் சங்கம் அறிவித்தது. </p><p>இந்த அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களான தன்மய் அகர்வால், ராகுல் சிங் மற்றும் விக்கெட் கீப்பர்கள் ராகுல் ரதேஷ், சாய் பிரக்னய் ரெட்டி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 15 பேர் கொண்ட இந்த அணியில் தனய் தியாகராஜன், அனிகத் ரெட்டி மற்றும் அஜய் தேவ் கௌட் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.</p><h2>இந்திய அணியில் சிராஜ்:</h2><p>நியூ சண்டிகரில் அக்டோபர் 3-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம்பெற்றுள்ளார்.</p><p>திரிபுரா அணிக்கு எதிரான ஐதராபாத் அணியின் முதல் ரஞ்சிக் கோப்பை போட்டி அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது; இதற்கான மைதானம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதனை தொடர்ந்து, அக்டோபர் 18-ஆம் தேதி முதல் விஜயநகரத்தில் ஆந்திர அணியுடன் அவர்கள் மோதுவார்கள்.</p><p>இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் அக்டோபர் 22-ஆம் தேதி தொடங்குகிறது; இத்தொடர் டி20 போட்டிகளுடன் தொடங்கவுள்ளது. இப்போட்டி வடிவில் சிராஜ் கடைசியாக பிப்ரவரி மாதத்தில் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார்.</p><h2>ஐதராபாத் அணி விவரம்:</h2><p>முகமது சிராஜ் (கேப்டன்), சி.வி. மிலிந்த் (துணை கேப்டன்), தன்மய் அகர்வால், எம். அபிரத் ரெட்டி, ராகுல் சிங், கே. ஹிமா தேஜா, ராகுல் ரதேஷ் (விக்கெட் கீப்பர்), சாய் பிரக்னய் ரெட்டி (விக்கெட் கீப்பர்), வருண் கௌட், தனய் தியாகராஜன், அனிகத் ரெட்டி, ரக்ஷன் ரெட்டி, அஜய் தேவ் கௌட், ருத்திக் யாதவ் மெண்டே, சாய் விகாஸ் ரெட்டி</p><p><strong>மாற்று வீரர்கள்:</strong> பாவேஷ் சேத் (விக்கெட் கீப்பர்), எச்.கே. சிம்ஹா, டி. ரவி தேஜா, ஷௌனக் குல்கர்னி, முதாசர் ஹுசைன், கார்த்திகேய காக், ஏ. ப்ருத்வி ரெட்டி.</p>]]></content:encoded></item><item><title>&apos;யாரோ ஒருவரை&apos; இந்தியாவுக்காக விளையாட அனுமதிப்பதா? ஷ்ரேயஸ் அய்யரை கடுமையாக சாடிய ஸ்ரீகாந்த்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/kris-srikkanth-slams-shreyas-iyer-for-letting-random-guy-play-for-india</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/kris-srikkanth-slams-shreyas-iyer-for-letting-random-guy-play-for-india#comments</comments><guid isPermaLink="false">ca1cc0a0-60e5-4f9a-a12c-75bb1356b177</guid><pubDate>Sat, 19 Sep 2026 22:32:28 +0000</pubDate><atom:updated>2026-09-19T22:32:28.951Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shreyas Iyer,ஸ்ரீகாந்த்,ஷ்ரேயஸ் அய்யர்,kris Srikkanth</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/46ylq2cj/srikanth-and-IND-Players.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ srikanth and IND Players]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/46ylq2cj/srikanth-and-IND-Players.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வியாழக்கிழமை டெல்லியில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய <a href="https://www.maalaimalar.com/topic/indvsafg">இந்தியா</a>, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. </p><p>இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் <a href="https://www.maalaimalar.com/topic/abhishek-sharma">அபிஷேக் சர்மா</a> வெறும் 34 பந்துகளில் 108 ரன்கள் விளாசினார். </p><h2>ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்:</h2><p>இதைத் தொடர்ந்து கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தானை 94 ரன்களுக்குள் இந்திய அணி சுருட்டியது. இதில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னோய் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். </p><p>தொடரை முழுமையாக வென்ற போதிலும், அர்ஷ்தீப் சிங்கை பெஞ்சில் அமர வைத்து, அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூரை களமிறக்கிய இந்தியாவின் முடிவு, முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகாந்தின் விமர்சனத்திற்கு உள்ளானது.</p><p>மூன்றாவது டி20 போட்டியில், தாக்கூர் இரண்டு ஓவர்களில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 17 ரன்களை விட்டுக்கொடுத்தார். மோசமான புள்ளிவிவரங்கள் இருந்தபோதிலும் அவருக்கு ஆதரவளித்ததற்காக அணி நிர்வாகத்தை ஸ்ரீகாந்த் விமர்சித்தார்.</p><h2>யூடியூப் சேனலில் பேச்சு:</h2><p>"அவரை போன்ற ஒரு சாதாரண வீரர் எப்படி இந்திய தொப்பியை அணிய முடியும்? யஷ் தாக்கூருக்கே இந்திய தொப்பி கிடைக்கிறது என்றால், நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்திய தொப்பியை மிக எளிதாகக் கொடுக்கிறீர்கள் என்ற சமிக்ஞையை அது அனுப்புகிறது. அது ஒரு நல்ல அறிகுறி அல்ல. இந்தியாவுக்காக விளையாட, உங்களுக்கு நம்பகத்தன்மை, திறமை மற்றும் வலுவான உள்ளூர் போட்டி செயல்திறன் தேவை," என்று ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் கூறினார் .</p><p>யஷ் தாக்கூர் இந்திய அணிக்காக விளையாடுவது ஒரு அநீதி. இது நியாயமானதோ சரியானதோ அல்ல. புவனேஷ்வர் குமார் போன்றவர்களுக்கு இது நியாயமில்லை. யஷ் தாக்கூர் மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற வீரர்கள் தங்களது ஐ.பி.எல். அணிகளில் நிரந்தர வீரர்களாக கூட இருப்பதில்லை," என்று அவர் மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அக்டோபர் முதல் மானிய விலையில் எல்பிஜி நிரப்ப ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் கட்டாயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/aadhaar-biometric-authentication-must-for-subsidised-lpg-refills-from-october</link><comments>https://www.maalaimalar.com/news/national/aadhaar-biometric-authentication-must-for-subsidised-lpg-refills-from-october#comments</comments><guid isPermaLink="false">93d9cedf-37ea-4f52-a559-df1961b840a8</guid><pubDate>Sat, 19 Sep 2026 21:58:38 +0000</pubDate><atom:updated>2026-09-19T21:58:38.913Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதார்,Aadhaar,எல்பிஜி,Biometric Authentication,LPG Refills</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/01nczh5n/LPG.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ LPG]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/01nczh5n/LPG.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மானிய விலை <a href="https://www.maalaimalar.com/topic/lpg">சமையல் எரிவாயு</a> தகுதியுள்ள வீடுகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதிசெய்யும் நோக்கில், அக்டோபர் 1 முதல், வீட்டு உபயோக சமையல் எரிவாயு நுகர்வோர், பொருந்தக்கூடிய மானியத்துடன் நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விற்பனை விலையில் எரிவாயுவை முன்பதிவு செய்ய, பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்தது.</p><p>ஏற்கனவே சரிபார்ப்பை முடித்த பயனர்கள் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்படி, செப்டம்பர் 19 நிலவரப்படி, 27.43 கோடி செயலில் உள்ள வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோர், அதாவது மொத்தத்தில் 89.9 சதவீதம் பேர், பயோமெட்ரிக் <a href="https://www.maalaimalar.com/topic/aadhar">ஆதார்</a> சரிபார்ப்பை முடித்திருந்தனர்.</p><h2>அரசு விளக்கம்:</h2><p>இன்னும் செயல்முறையை முடிக்காதவர்களுக்கு, சரிபார்ப்பு முடிந்தவுடன் மானிய விலையில் நிரப்புதல் முன்பதிவு செயல்படுத்தப்படும் என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள், வணிக மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கு திசை திருப்பப்படுவதை தடுப்பதையும், நகல் மற்றும் தகுதியற்ற இணைப்புகளை அகற்றுவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாக கொண்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>நுகர்வோர் எல்பிஜி விநியோகத்தின் போது, ​​தங்களது விநியோகஸ்தரின் ஷோரூமில் அல்லது மூன்று அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான இன்டேனுக்கான இந்தியன்ஆயில் ஒன், பாரத்கேஸுக்கான ஹலோபி.பி.சி.எல். மற்றும் ஹெச்.பி. கேஸுக்கான ஹெச்.பி. பே ஆகியவற்றின் மொபைல் செயலிகள் மூலம் அங்கீகாரத்தை நிறைவு செய்யலாம்.</p><p>பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க விரும்பாதவர்கள் அல்லது இயலாதவர்கள், மானியம் இன்றி பொருந்தக்கூடிய சந்தை விலையில் எல்பிஜியை பெறலாம்.</p><h2>உள்ளூரில் கிடைக்கும் சிலிண்டர்களை பெறலாம்:</h2><p>அத்தகைய நுகர்வோர், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் (OMC) இணையதளங்கள், மொபைல் செயலிகள், வாட்ஸ்அப் சாட்பாட் மற்றும் IVRS உள்ளிட்ட டிஜிட்டல் வழிகள் மூலம் தங்கள் விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும். உள்ளூரில் கிடைக்கும் தன்மையை பொறுத்து, அவர்கள் 5 கிலோ அல்லது 10 கிலோ சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அது தெரிவித்தது.</p><p>அரசாங்கம் ஆரம்பத்தில் நுகர்வோரை ஜூன் 30-க்குள் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை முடிக்குமாறு கேட்டுக் கொண்டது, ஆனால் பின்னர் அந்தக் காலக்கெடுவை ஜூலை 31, ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 15, ஆகஸ்ட் 23, ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 மற்றும் இறுதியாக செப்டம்பர் 14 என பலமுறை நீட்டித்தது.</p>]]></content:encoded></item><item><title>ரியாத் விமான நிலைய தீவிபத்து: &quot;முக்கியமான இடங்களையே&quot; குறிவைத்தோம்: ஹவுதிக்கள் பரபரப்பு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/after-fire-near-riyadh-airport-houthis-say-they-targeted-sensitive-sites</link><comments>https://www.maalaimalar.com/news/world/after-fire-near-riyadh-airport-houthis-say-they-targeted-sensitive-sites#comments</comments><guid isPermaLink="false">cc15dc77-9e75-4357-a536-c6e794adde9b</guid><pubDate>Sat, 19 Sep 2026 20:45:19 +0000</pubDate><atom:updated>2026-09-19T20:45:19.978Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Houthi,riyadh,ரியாத்,ஹவுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ibfjvn6i/Fire-Near-Riyadh-Airport.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fire Near Riyadh Airport]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ibfjvn6i/Fire-Near-Riyadh-Airport.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சவூதி தலைநகரில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்த சில மணிநேரங்களுக்கு பிறகு, சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள "முக்கியமான இடங்களையும்", அந்நாட்டின் துறைமுக நகரமான யான்புவில் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக <a href="https://www.maalaimalar.com/news/world">ஏமனின்</a> ஹவுதிகள் தெரிவித்தனர்.</p><p>"தலைநகர் சனாவை தாக்க சவுதி எதிரி மேற்கொண்ட குற்ற முயற்சிகளுக்கு பதிலடியாக... ஏமன் ஆயுத படைகள், பெருமளவிலான பாலிஸ்டிக் மற்றும் குரூயிஸ் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பயன்படுத்தி இரண்டு வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன," என்று <a href="https://www.maalaimalar.com/topic/houthi">ஹவுதி</a> ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ, டெலிகிராமில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.</p><h2>பெரும் தீ விபத்து:</h2><p>முதலாவது சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கிய இடங்களையும், இரண்டாவதாக யான்புவில் உள்ள அராம்கோ நிறுவனங்களையும் குறிவைத்தன.</p><p>ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் கிடங்கில், சவுதி எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் சின்னம் பொறிக்கப்பட்ட எரிபொருள் தொட்டியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்ததை தொடர்ந்து ஹவுதிக்களின் அறிக்கை வெளியானதாக ஏ.எஃப்.பி. செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.</p><p>போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முன்பு, ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் "பெரும் பிரச்சனைகள்" ஏற்பட்டதாக FlightRadar24 கண்காணிப்பு இணையதளம் தெரிவித்தது.</p><h2>வான்வழி தாக்குதல் எச்சரிக்கை:</h2><p>ஏமனின் ஹவுதிக்கள் மின்னல் வேக தாக்குதலை நடத்தி, பெரும் நிலப்பரப்புகளை கைப்பற்றியுள்ளதால், சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் பதிலடி கொடுக்க திணறி வருகிறது.</p><p>நேற்று (சனிக்கிழமை) ஏற்பட்ட இந்த இடையூறு, சவுதி அதிகாரிகள் இரவில் விடுத்த வான்வழி தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து நிகழ்ந்தது. இந்த மாதம் அண்டை நாடான ஏமனில் சண்டை தீவிரமடைந்த பின்னர் விடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கை இதுவாகும்.</p>]]></content:encoded></item><item><title>கேத்தன் அகர்வால் கொலை வழக்கில் 5,053 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/national/5053-page-chargesheet-filed-in-ketan-agarwal-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/5053-page-chargesheet-filed-in-ketan-agarwal-murder-case#comments</comments><guid isPermaLink="false">3daaa9c3-9fce-4b98-9cce-ca600851ed78</guid><pubDate>Sat, 19 Sep 2026 19:29:21 +0000</pubDate><atom:updated>2026-09-19T19:29:21.596Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>குற்றப்பத்திரிகை,chargesheet,Ketan Agarwal,கேத்தன் அகர்வால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/qtx6yjdf/Ketan-Agarwal-murder-case.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ketan Agarwal murder case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/qtx6yjdf/Ketan-Agarwal-murder-case.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரபரப்பான கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், 5053 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை புனே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக <a href="https://www.maalaimalar.com/topic/police">காவல்துறை</a> அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national">புனேவை</a> சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அகர்வால், ஜூன் 18-ஆம் தேதியன்று லோகட் கோட்டையில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதில் உயிரிழந்தார். </p><p>இதைத் தொடர்ந்து, அவரது வருங்கால மனைவி சியா கோயல், அவரது காதலன் என்று கூறப்படும் சேத்தன் சௌத்ரி மற்றும் ரித்தேஷ் ஹங்கே என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>குற்றப்பத்திரிகை தாக்கல்:</h2><p>வட்காவ்ன் மாவல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், கைபேசி தரவுகள், அழைப்பு விவர பதிவுகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு சான்றிதழ்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன என்று புனே ஊரக காவல் அதிகாரி தெரிவித்தார்.</p><p>குற்றப்பத்திரிகையின்படி, கடந்த ஆண்டு லோகாட்டில் ஒரு பெண் உயிரிழந்த இதேபோன்ற சம்பவம் குறித்து சியா கோயல் இணையத்தில் தேடியுள்ளார்.</p><h2>ராஜா ரகுவன்ஷி கொலை:</h2><p>சோனம் ரகுவன்ஷி வழக்கை ஆய்வு செய்வதற்காக பல தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதும் தெரியவந்துள்ளது என்று அது கூறியது. கடந்த ஆண்டு மே மாதம் மேகாலயாவில் தம்பதியரின் தேனிலவின் போது, ​​இந்தூரை சேர்ந்த அவரது கணவர் ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்டதை அடுத்து சோனம் கைது செய்யப்பட்டார்.</p><p>ராஜா கடந்த ஆண்டு மே 23 அன்று காணாமல் போயிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு, ஜூன் 2 அன்று வடகிழக்கு மாநிலத்தின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு அருகில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஜெயிலர் 2&apos; படத்தில் எஸ்.ஜே. சூர்யா - சூப்பர் வீடியோ வெளியிட்ட படக்குழு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sj-suryah-in-jailer-2-new-update-video-out-now</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sj-suryah-in-jailer-2-new-update-video-out-now#comments</comments><guid isPermaLink="false">b70ba9f1-9bce-411e-9c03-3eab94443c2c</guid><pubDate>Sat, 19 Sep 2026 18:48:38 +0000</pubDate><atom:updated>2026-09-19T18:48:38.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,ரஜினிகாந்த்,Jailer 2,ஜெயிலர் 2,எஸ்ஜே சூர்யா,SJ Suryah</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/kvjvteob/SJ-Suryah.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SJ Suryah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/kvjvteob/SJ-Suryah.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘ஜெயிலர் 2’ படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/sj-suryah">எஸ்.ஜே.சூர்யா</a> நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா 'போதி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.</p><p>இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/rajinikanth">ரஜினிகாந்த்</a> நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.</p><h2>ஜெயிலர் 2 உச்சக்கட்ட எதிர்பார்ப்பு:</h2><p>அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்தது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமாக ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.</p><p>மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்:</h2><p>மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜெயிலர் 2 திரைப்படம் ரூ.350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி ஜெயிலர் 2 உலகளவில் வெளியாகவுள்ளது.</p><p>இந்த நிலையில்,ஜெயிலர் 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘அல்ல போலேலோ’ சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியிருந்தார் ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் ‘காவாலா’ பாடலைப் போல ‘அல்ல போலேலோ’ பாடலும் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்று வைரலானது.</p><h2>'போதி'யாக எஸ்.ஜே. சூர்யா:</h2><p>ஜெயிலர் 2 ஃபர்ஸ்ட் சிங்கிளை தொடர்ந்து படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் 2 திரைப்படத்தில் போதி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.</p><p>முன்னதாக ஜெயிலர் 2 திரைபபடத்தில் சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தில் திலீப் என்ற கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Introducing SJ Suryah as Bodhi from the world of <a href="https://x.com/hashtag/Jailer2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jailer2</a> <a href="https://x.com/rajinikanth?ref_src=twsrc%5Etfw">@rajinikanth</a> <a href="https://x.com/Nelsondilpkumar?ref_src=twsrc%5Etfw">@Nelsondilpkumar</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/iam_SJSuryah?ref_src=twsrc%5Etfw">@iam_SJSuryah</a> <a href="https://x.com/hashtag/SurajVenjaramoodu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SurajVenjaramoodu</a> <a href="https://x.com/vijaykartikdop?ref_src=twsrc%5Etfw">@vijaykartikdop</a> <a href="https://x.com/Nirmalcuts?ref_src=twsrc%5Etfw">@Nirmalcuts</a> <a href="https://x.com/ChethanDsouza?ref_src=twsrc%5Etfw">@ChethanDsouza</a> <a href="https://x.com/AlwaysJani?ref_src=twsrc%5Etfw">@AlwaysJani</a> <a href="https://x.com/KiranDrk?ref_src=twsrc%5Etfw">@KiranDrk</a> <a href="https://x.com/hashtag/PallaviSingh?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PallaviSingh</a> <a href="https://x.com/valentino_suren?ref_src=twsrc%5Etfw">@valentino_suren</a> <a href="https://x.com/alagiakoothan?ref_src=twsrc%5Etfw">@Alagiakoothan</a> <a href="https://x.com/hashtag/SantoshRaju?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SantoshRaju</a>… <a href="https://t.co/FKVlMlc0rM">pic.twitter.com/FKVlMlc0rM</a></p>&mdash; Sun Pictures (@sunpictures) <a href="https://x.com/sunpictures/status/2101323851393372325?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>3வது டி20 போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/eng-beat-sl-sweep-t20-series</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/eng-beat-sl-sweep-t20-series#comments</comments><guid isPermaLink="false">47594d0a-ef5f-41ff-968b-8446d96c0b8b</guid><pubDate>Sat, 19 Sep 2026 17:19:58 +0000</pubDate><atom:updated>2026-09-19T17:19:58.962Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ENGvSL,இங்கிலாந்து இலங்கை தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/3hux7ig2/ENG-Win-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ England Players]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/3hux7ig2/ENG-Win-2.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கை <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெ</a>ட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இவற்றில் நடந்த டி20 தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றி விட்டது.</p><p>முதல் இரு போட்டிகளில் வென்ற <a href="https://www.maalaimalar.com/topic/engvsl">இங்கிலாந்து அணி</a> 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்தது.</p><h2>டாஸ் வென்ற இங்கிலாந்து:</h2><p>இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அதிரடியாக ஆடினார். இவர் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><p>கமிந்து மெண்டிஸ் மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து 35 ரன்களை சேர்த்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் யாரும் இரட்டை இலக்க ரன்களை கூட அடிக்கவில்லை. இதன் காரணமாக இலங்கை அணி 18.5 ஓவர்களில் வெறும் 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.</p><p>இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், வில் ஜாக்ஸ், சோனி பேக்கர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். லியம் டாசன் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.</p><h2>இங்கிலாந்து அதிரடி பேட்டிங்:</h2><p>சற்றே எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் களமிறங்கிய டொனால்டு 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். </p><p>பிறகு களமிறங்கிய ஹாரி புரூக் 33 ரன்களை விளாசினார். 9.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.</p><p>இதனால் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.</p>]]></content:encoded></item><item><title>பாலஸ்தீன குழந்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பெண் செயல்பாட்டாளர் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை.. சிக்கியது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/mumbai-police-raid-the-home-of-a-female-activist-who-spoke-up-for-palestinian-childrenwhat-was-found</link><comments>https://www.maalaimalar.com/news/national/mumbai-police-raid-the-home-of-a-female-activist-who-spoke-up-for-palestinian-childrenwhat-was-found#comments</comments><guid isPermaLink="false">12d940ba-b08b-449d-866f-326731cac1cb</guid><pubDate>Sat, 19 Sep 2026 16:23:39 +0000</pubDate><atom:updated>2026-09-19T16:23:39.557Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>palestine,காசா,gaza,மும்பை போலீஸ்,Mumbai Police,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/6ngvl4bt/tn-29.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாலஸதீன குழந்தை, மும்பை போலீஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/6ngvl4bt/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையில் பாலஸ்தீனத்திற்கும் அங்கு அல்லலுறும் குழந்தைகளுக்கும் ஆதரவாக பட்டம் விடும் விழாவில் பங்காற்றிய சமூக செயல்பாட்டாளர் ஹர்ஷதா போரடே என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">பாலஸ்தீனதிற்கு </a>ஆதரவு குரல் நல்கும் IPSP என்ற அமைப்பில் இயங்கி வரும் ஹர்ஷதா மாணவியும், கலைஞரும் ஆவார். பாலஸ்தீன குழந்தைகளுக்கு ஆதரவாக ஒரு வார சர்வதேச பட்டம் விடும் விழாவில்  ஹர்சதா பங்காற்றினார். </p><h2>சோதனை </h2><p>இந்நிலையில் நேற்று மாலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 6-7 போலீசார் நுழைந்தனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>அவர் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் அவர்கள் அனைத்து பொருட்களையும் களைத்து சோதனையிட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஹர்சதா அவர்கள் தன் மீது உடல் ரீதியான பலத்தை பிரயோகித்தாகவும் தெரிவித்துள்ளார். </p> <h2>சிக்கியது என்ன?</h2><p>இன்று அதிகாலை 2.30 மணி வரை அவர்கள் சோதனையிட்டுள்ளனர். ஆனால் இக்கிய புத்தகங்களும், புகைப்படங்களும் போஸ்டர்களும் மட்டுமே அவர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் வீட்டில் பகத் சிங், சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பொன்மொழிகளும் எழுதப்பட்டிருந்தது.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிடுவதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் கடந்த செப்டம்பர் 15 அன்று நடந்த பட்டம் விடும் விழாவை போராட்டம் என வரையறுத்து அதில் பங்காற்றியதற்காக இதுபோன்ற அத்துமீறலில் போலீசார் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>மேலும் இந்த பட்டம் விடும் திருவிழாவில் தொடர்புடையவர்களை மும்பை போலீஸ் குறிவைப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. ஹர்சதா வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை மீறியுள்ள மும்பை போலீஸ் மும்பையை பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாற்றியுள்ளதாக அவ்வமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3 முறை முதலமைச்சராக இருந்தவருக்கே இந்த கதியா?.. கெஜ்ரிவாலுக்கு SIR நோட்டீஸ் அனுப்பப்பட்டதை விமர்சித்த ஆம் ஆத்மி </title><link>https://www.maalaimalar.com/news/national/sir-aadmi-party-criticizes-the-notice-sent-to-kejriwal</link><comments>https://www.maalaimalar.com/news/national/sir-aadmi-party-criticizes-the-notice-sent-to-kejriwal#comments</comments><guid isPermaLink="false">67c8cbaf-ed79-4fef-a666-664f8ebc9f9b</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:50:53 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:50:53.616Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sir,எஸ்ஐஆர்,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,delhi,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/nolvoaqs/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கெஜ்ரிவால்]]></media:title><media:description type="html"><![CDATA[ கெஜ்ரிவால்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/nolvoaqs/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.</p> <p>மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பட்டியல் நடைமுறை டெல்லியிலும் நடந்து வருகிறது. </p><p>அங்கு<a href="https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-chairman-officially-accepted-merger-of-seven-aap-members-with-bjp"> ஆம்ஆத்மியின்</a> தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தார் 5 பேரின் பெயர் மற்றும் விவரங்கள் பழைய வாக்காளர் பட்டியலுடன் பொருந்தவில்லை (unmapped category) என விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், மகன் புல்கித் கெஜ்ரிவால் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் தந்தை கோபிந்த் ராம் கெஜ்ரிவால், தாய் கீதா தேவி ஆகியோருக்கு நோட்டீஸ் வந்துள்ளது. </p><p>நியூ டெல்லி-40 சட்டமன்ற தொகுதியில் கெஜ்ரிவால் வாக்காளராக உள்ளார். டெல்லி தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி, கெஜ்ரிவால் மற்றும் அவரின் குடும்பத்தார் 5 பேர் புது டெல்லி-40 தொகுதியில் உள்ள 'பார்ட்-51, கேஜி மார்க்' இல் வாக்களித்து வருகின்றனர். </p> <h2>ஆம் ஆத்மி விமர்சனம்</h2><p>இதை விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, " இந்த நாட்டில் நடக்கும் எல்லாமே விஸ்வகுருவை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க மட்டும் தானா? மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த்கெஜ்ரிவால் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் டெல்லி வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டது எப்படி" என தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>மறுபுறம், டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் கொண்டோர் பட்டியலில் வந்துள்ளதால் அவருக்கும் கூட நோட்டீஸ் வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p> <p>கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியான டெல்லியின் வரைவு வாக்களர் பட்டியலில் 47.6 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். 1.45 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 97.5 லட்சமாக சுருங்கியுள்ளது.</p><p>அவர்களில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆட்சேபனை தெரிவிப்போரின் புகார்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பூரண மதுவிலக்கினால் ஏற்படும் 5 தீமைகள் - குஜராத்தை சுட்டிக்காட்டி பட்டியலிட்ட உச்சநீதிமன்றம் </title><link>https://www.maalaimalar.com/news/national/5-adverse-effects-of-total-alcohol-prohibition-supreme-court-lists-them-citing-gujarat-as-an-example</link><comments>https://www.maalaimalar.com/news/national/5-adverse-effects-of-total-alcohol-prohibition-supreme-court-lists-them-citing-gujarat-as-an-example#comments</comments><guid isPermaLink="false">efaf5aaf-5b2a-44d5-8625-b6458c949902</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:17:31 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:17:31.304Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,prohibition,மதுவிலக்கு,Illicit liquor,உச்சநீதிமன்றம்,கள்ளச்சாராயம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/08x70g1j/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/08x70g1j/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுவிலக்குடன் இணைந்துள்ள 5 தீமைகளை உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">உச்சநீதிமன்ற </a>நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, மகாராஷ்டிராவில் மெத்தனால் வாங்குவதற்கும் அதை விற்பதற்கும் கட்டுப்பாடுகளை விதிக்கும் மகாராஷ்டிர அரசின் விதிகளுக்கு எதிராக ரசாயன நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்தது.</p><p>மும்பையில் 1991 இல் கள்ளச்சாராயம் குடித்து 93 பேர் உயிரிழந்ததன் விளைவாக மகாராஷ்டிரா விஷப் பொருட்கள் விதி 18A, 18B கொண்டுவரப்பட்டது. </p> <p>இந்த விதி மெத்தனால் வாங்குவதற்கும் நிறுவனங்களுக்கு விற்பதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. மெத்தனாலில் செயற்கை நிறமூட்டி உள்ளிட்டவற்றை சேர்த்த பின்னே மருந்து மற்றும் பிற நிறுவனங்களுக்கு விற்க வேண்டும் என்றும் அந்த விதியில் உள்ளது.</p><p>இதை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணையில் அந்த விதிகளை ரத்து செய்த நீதிபதிகள், மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் வேறு வழிகளில் புரையோடியுள்ள அதனுடனிணைந்த தீமைகள் குறித்து பேசினர்.</p><p>மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தின் பாவ்நகரில் 13 பேர், மத்திய பிரதேசத்தின் சாகர் பகுதியில் 15 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் விழித்துக்கொண்டு செயல்பட வலியுறுத்தினர்.</p> <h2>கருத்து</h2><p>"மது விலக்கோடு வருவாய் இழப்பு, தடையை அமல்படுத்துவதற்காக செலவிடப்படும் பணம், காவல்துறையில் ஊழல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மற்ற போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் ஆகியவை இணைந்துள்ளன.</p><p>பூரண மதுவிலக்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்றவற்றுக்கு அதிகம் வழிவகுப்பதற்கு பல உதாரணங்களும் உள்ளன. கடுமையான மதுவிலக்கு விதிகள் கொள்கையை கொண்டுள்ள குஜராத்தில் 10 பெரிய அளவிலான கள்ளச்சாராய மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இவற்றில் 600 பேர் உயிரிழந்துள்ளனர்" என தெரிவித்தனர்.</p> <p>இந்த வழக்கில், "மகாராஷ்டிர அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், அரசின் மெத்தனால் குறித்த விதிகள் கள்ளசாராய மரணங்களை தடுத்துள்ளன என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. </p><p>அரசின் நோக்கம் மீது எங்களுக்கு சந்தேகமில்லை. ஆனால் ஆனால் நல்ல நோக்கம் மட்டுமே இவ்வாறான விதிகளை பொருத்தமுடையதாக்கிடாது.</p><p>இந்த விதிகள் மெத்தனால் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நிறுத்துகிறது என்றோ, அதன் வேதி தன்மையை மாற்றுவதன் மூலம் அது சட்டவிரோத மது தயாரிக்க பயன்படுத்த முடியாது என்பதையோ நிரூபிக்க அரசு தவறிவிட்டது. </p><p>அதுமட்டுமின்றி மெத்தனாலில் வேறு சில மூலங்களை சேர்ப்பதால் அது மரணத்தை தடுத்துவிடும் என்பதையும் அரசு நிரூபிக்கவில்லை. </p><p>சட்டவிரோத மது, மெத்தனால் அன்றி வேறு மூலங்களை வைத்து தயாரிக்கப்படுவதை தடுக்க அரசு தவறிவிட்டது" என தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. கட்சியின் மூலதனமே ரீல்ஸ்.., ரீல்.., இத வெச்சிக்கிட்டு ஆட்சிக்கு வந்துட்டாங்க: இ.பி.எஸ். விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-party-s-capital-is-reels-reel-they-came-to-power-using-this-says-eps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-party-s-capital-is-reels-reel-they-came-to-power-using-this-says-eps#comments</comments><guid isPermaLink="false">aacd25b3-64d2-4235-bf80-52ed7441eb37</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:07:16 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:07:16.506Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,EPS,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3py41gbi/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3py41gbi/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* இன்றைக்கு ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். விபத்துல ஆட்சிக்கு வந்துட்டாங்க.</p><p>* ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைகால் புரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.</p><h2>திட்டத்திற்கு பெயர் மாற்றம்</h2><p>* ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்த திட்டத்திற்கு பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதிமுக திட்டத்திற்கு வெற்றி என பெயரை சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக.</p><h2>மூலதனமே ரீல்ஸ்.. ரீல்..</h2><p>* அம்மா சிந்தனையில் உதித்த அருமையான திட்டம் தாலிக்கு தங்கம் திட்டம். இந்த திட்டத்தை பெயர் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் தொடங்கப்படல.</p><p>* தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். பாவம், பிறந்த குழந்தையை ஏமாற்றும் அளவிற்கு ஆயிட்டாங்க. ஒரு கிராம். ஏழைகளுக்கு போடுவதில் தவறு இல்லை. அந்த திட்டத்திற்கு எவ்வளவு வடிவமைப்பு கொடுக்கிறார்கள் பாருங்க.</p><p>* ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்றாங்க.</p><p>* த.வெ.க. கட்சியின் மூலதனமே ரீல்ஸ்.., ரீல்.., இதை வைச்சிக்கிட்டு ஆட்சிக்கு வந்துட்டாங்க. </p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 19 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-september-2026#comments</comments><guid isPermaLink="false">879b7072-039f-46f2-9fb1-c5b930ad6945</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:03:44 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:38:10.731Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/4sus048d/LIVE.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/4sus048d/LIVE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-byelection-cm-vijay-campaign-dates-announced">இடைத்தேர்தல்: முதல்வர் விஜய்யின் பரப்புரை தேதி அறிவிப்பு.!</a></p><p> மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல்.</p><p>செப்.25ல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும். அக்.2 ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் மேற்கொள்கிறார்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-do-not-proof-misa-arrest-issue">மிசா கைதை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை: மு.க.ஸ்டாலின் ஆவேசம்</a></p><p>* த.வெ.க.வின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.</p><p>* கையில் வைத்த மை காய்வதற்கு முன்னமே ராஜினாமா செய்ய வைத்துள்ளார்கள்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-university-students-union-election-abvp-the-rss-student-wing-wins">டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்.. ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி வெற்றி!<br></a><br>*துணைத் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட தீபான்சு வெற்றி பெற்றுள்ளார்.</p><p>*கடந்த ஆண்டும் தலைவர், செயலாளர், துணை செயலாளர் பதவிகளை ஏபிவிபி கைப்பற்றியிருந்தது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-speech-in-madurantakam">மதுராந்தகத்தில் தி.மு.க. டெபாசிட் இழக்கும்: ஆதவ் அர்ஜுனா பேச்சு</a></p><p>* இடைத்தேர்தலிலும் வாக்கிற்கு பணம் கொடுக்க மாட்டோம் என்றார்.</p><p>* மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் 2 நாள் பிரசாரம் செய்ய உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/explanation-needed-on-letter-about-chennai-airport-management-change-vanathi-srinivasan">சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்.</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/explanation-needed-on-letter-about-chennai-airport-management-change-vanathi-srinivasan"> </a>சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு விளக்கம் தேவை என்று பாஜக தலைவர் வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.</p><p>சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றுவது, அதனை தனியாருக்கு ஒப்படைப்பது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/on-this-day-yuvraj-singh-hits-six-sixes-in-an-over">வரலாற்றில் இன்று: ஓரே ஓவரில் ஆறு சிக்ஸ்ர்கள் அடித்து சாதனை படைத்த யுவராஜ் சிங்.!.</a></p><p> யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த அதிரடியான ஆல் ரவுண்டர்களில் திகழ்ந்தவர்களில் ஒருவர் ஆவார்.</p><p>இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதே தினத்தில் யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை ப்டைத்தார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/new-cat-species-found-in-bolivia-after-100-years">பொலியாவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்..!</a></p><p> பொலிவியாவின் அடர்ந்த யுங்காஸ் மேகமூட்டக் காடுகளில் மறைந்திருந்த புதிய சிறிய காட்டுப்பூனையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p>வீட்டுப் பூனைகளை விடச் சிறியதுமான அந்த காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த விலங்கிற்கு லியோபார்டஸ் டில்காயோ என பெயரிடப்பட்டுள்ளது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/sports/manu-bhaker-pawan-sehrawat-lead-indian-contingent-in-asian-games-opening-ceremony">கோலாகலமாக தொடங்கியது ஆசிய விளையாட்டு: தேசியக்கொடி ஏந்தி வந்த மனு பாக்கர், பவன் ஷெராவத்</a></p><p>* கடந்த ஆசிய போட்டியில் இந்தியா 107 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடம் பிடித்தது.</p><p>* இதில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் அடங்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/incompetent-government-fails-to-stop-murders-in-tamil-nadu">தமிழகத்தில் தொடரும் கொலைகளை தடுக்காமல் இருக்கும் வக்கற்ற அரசு, நீதி கேட்டால் ஒடுக்குவதா? - கனிமொழி கண்டனம்.</a></p><p>ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. </p><p>கொலைகளுக்கு நீதி கேட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வது கண்டனத்திற்குரியது.</p> <p><a href="https://www.maalaimalar.com/technology/techfacts/humanity-could-be-wiped-out-by-ai-technology-by-2030-what-does-nvidia-ceo-jensen-say">"2030-க்குள் ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலமே அழியும்" - NVIDIA சி.இ.ஓ ஜென்சன் சொல்வது என்ன?</a></p><p>*செயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொள்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான முயற்சிகளை, அதன் வளர்ச்சி வேகம் மிஞ்சிவிடக்கூடும் </p><p>*முழுமையாகத் தயாராகாத மற்றும் பாதுகாப்பற்ற ஏஐ மாடல்கள் சந்தைக்குக் கொண்டுவரப்படக்கூடாது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-urges-withdraw-the-government-orders-that-undermine-tamil-nadus-medical-infrastructure">தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக!- சிபிஐ(எம்) வலியுறுத்தல்</a></p><p>* அரசு பணியில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் நிரந்தரம் செய்வோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானதாகும். </p><p>* சாதாரண ஏழை எளிய மக்களின் அரசு மருத்துவமனை பயன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-released">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</a></p><p>* த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>* புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-chief-minister-to-launch-it-in-thiruvanmiyur-on-the-22nd">காலை உணவு திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் திருவான்மியூரில் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்</a></p><p> * காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது.</p><p>* திருவான்மியூரில் உள்ள பள்ளியில் முதலமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைப்பது உறுதி ஆகி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-dmk-office-situated-on-srirangam-temple-land-who-is-behind-this-fraud">திமுக அலுவலகம் ஸ்ரீரங்கம் கோவில் நிலமே... மோசடி பின்னால் இருப்பவர்கள் யார்? - அமைச்சர் ரமேஷ்</a></p><p>* போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளனர்.</p><p>* திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படியொரு மோசடி நடத்தியிருக்க வாய்ப்பில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-awareness-must-be-created-regarding-the-measures-to-be-taken-to-prevent-and-recover-from-dengue">டெங்குவை தடுக்கவும், குணமடையவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!- அன்புமணி</a></p><p>* டெங்கு காய்ச்சல் குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதற்கான சிகிச்சை வசதிகளும், மருந்துகளும்  அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் உள்ளன.  </p><p>* டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தினால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/a-shock-for-mamata-announcement-that-the-second-candidate-is-also-withdrawing-from-the-by-election-and-the-twist-that-followed">சோதனை மேல் சோதனை.. மம்தா அறிவித்த மற்றொரு வேட்பாளரும் வாபஸ் வாங்குவதாக அறிவிப்பு - அடுத்த நடந்த டுவிஸ்ட் </a></p><p>* கிளர்ச்சி அணியின் ரிதர்பா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/a-shock-for-mamata-announcement-that-the-second-candidate-is-also-withdrawing-from-the-by-election-and-the-twist-that-followed"><br></a>*மம்தா தரப்பினர் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மிரட்டப்படுகிறார்கள்</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-tvk-star-speakers-to-campaign">இடைத்தேர்தல் பிரசாரம்: த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 பேருக்கு அனுமதி வழங்கியது தேர்தல் ஆணையம்</a></p><p>*  தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.</p><p>* 2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-accusation-dmk-playing-politics-over-bharathidasan-issue">பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்கிறது திமுக - அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு</a></p><p>* திமுக ஆட்சியில் தலித் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர்.</p><p>* வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-writes-to-prime-minister-regarding-chennai-airport">சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்- வலுக்கும் கண்டனம்</a></p><p>* தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>* மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-governor-arlekar-says-keeping-surroundings-clean-should-be-a-natural-habit">சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது இயல்பான பழக்கமாகவே இருக்க வேண்டும் -  ஆளுநர் அர்லேகர்</a></p><p>* இன்று நாங்கள் அனைவரும் உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் கூடியுள்ளோம். </p><p>* தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-plan-to-set-up-a-garbage-incinerator-must-be-abandoned-immediately">குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன.</p><p>* திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்த தவெக அரசு, இந்த பேரழிவுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தத் துடிப்பது ஏன்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-low-pressure-area-forming-over-andaman-sea">அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு </a></p><p>* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.</p><p>* குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/iit-student-dies-by-suicide-after-using-chatgpt-in-exam">தேர்வில் ChatGPT பயன்படுத்திய IIT மாணவர் தற்கொலை - சக மாணவர்கள் போராட்டம்!</a></p><p>* ஐஐடி பாம்பேயில் ChatGPT பயன்படுத்திய மாணவர் தற்கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>* நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறது, மாணவர்கள் மிரட்டல் தான் காரணம் என போராட்டம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-white-house-ban-on-cnn-denounced-as-assault-on-press-freedom">வெள்ளை மாளிகையில் சில செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்த டிரம்ப்...</a> </p><p>* அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் மூன்று செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளார்.</p><p>* இந்த நிறுவனங்கள் போலி செய்திகளை வெளியிட்டு வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-19-9-2026">GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா? </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல்: முதல்வர் விஜய்யின் பரப்புரை தேதி அறிவிப்பு.! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-byelection-cm-vijay-campaign-dates-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-byelection-cm-vijay-campaign-dates-announced#comments</comments><guid isPermaLink="false">9f2fdaab-142c-42ed-b470-644753db5bdb</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:35:57 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:35:57.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Campaign,தாராபுரம்,மதுராந்தகம்,வேட்பாளர்கள் அறிவிப்பு,by elections,இடைத்தேர்தல்,பரப்புரை</media:keywords><media:content height="288" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/6ihc9xt6/images-16.jfif" width="479"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/6ihc9xt6/images-16.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இடைத்தேர்தல் </h2><p>தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெககட்சியில் இணைந்தனர்.</p><p>இவ்வாறாக தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு  தவெகவில் இணைந்த காரணத்தினால் 6 தொகுதிகள் உள்பட சட்டமன்ற தொகுதிகள் காலியான தொகுதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>தற்போது இதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்.6-ம் தேதி  இடைத்தேர்தலானது நடை்பெற இருக்கிறது. </p><h2>இறுதி வேட்பாளர்கள்</h2><p>இடைத்தேர்தல் நடைப்பெறும் தொகுதிகளுக்காக இறுதி வேட்பாளர் பட்டியலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.</p><p> சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்ற காரணத்தினால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27 ஆகவும் தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்களும் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>பிரச்சாரம் </h2><p>இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இறுதி வேட்பாளர்களின் பட்டியலானது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் , போட்டியிடும் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.</p><h2>முதல்வர் பரப்புரை</h2><p>இந்த நிலையில் தவெக சார்பாக போட்டியிடும்  மரகதம் குமரவேலை  ஆதரித்து  முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும்  தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விஜய் மதுராந்தகத்தில் செப்.25 மற்றும் அக்.2 ஆம் தேதிகளில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.</p><p>செப்.25ல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும். அக்.2 ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் சென்று வேனில் பரப்புரை செய்ய இருக்கிறார் </p><h2>விறுவிறுப்பான தேர்தல் களம் </h2><p>இடைத்தேர்தல் நடைப்பெறும் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை  அடுத்து தேர்தல் களமானது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.  </p> ]]></content:encoded></item></channel></rss>