<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 20 Jul 2026 12:27:13 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026#comments</comments><guid isPermaLink="false">a891028b-8923-40ff-9440-b41df422083d</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:31:44 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:18:35.582Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cockroach-janata-party-chief-held">கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-leaders-meet-union-minister-jp-nadda-submit-letter-of-demands">மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்த CJP தலைவர்கள்: முன்வைத்த முக்கிய 3 கோரிக்கைகள்</a></p><figure><img alt="CJP Leaders Meets JP Nadda" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/c99mr7jp/CJPProtest001.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-parliament-siege-protest-section-163-restrictions">டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தால் 163 தடை உத்தரவு அமல்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/venizula-earthquake-death-toll-passes-5000">வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/75b67448-3134-400e-9b4c-161914f5ca29">சென்னையில் மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/kolkata-court-orders-the-arrest-of-delhi-capitals-player-abishek-porel">டெல்லி கேப்பிட்டல்ஸ வீரர் அபிஷேக் போரலை கைது செய்ய கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ec5f7594-ab41-4837-8f1f-0a4aa280ff83">துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்- உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறந்தது</a></p><p>எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2.30 மணி வரை ஒத்திவைப்பு</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1cb43aff-8acd-465e-b970-b406ec103fb1">மாநிலங்களவையில் எதிரொலித்த CJP போராட்டம்.. போராட்டக் களத்தில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு</a> </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4cdbf461-721a-437e-a832-36244f78c95f">விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/06fdd6cb-ef0d-4c7b-a9b8-bfad79c1d376">நலமாக உள்ளேன்.. பேரணியில் பங்கேற்க என்னை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் - மருத்துவ அறிக்கைக்கு இடையில் வாங்சுக் வேண்டுகோள்</a></p><p>எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/454180a1-952a-429d-9307-925bdaf59cb4">பா.ம.க.வின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt">தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?- மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கிய நிலையில் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <p>நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>மேகதாது விவகாரம் குறித்து 'போராடுவோம் போராடுவோம்' என திமுக எம்பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p> <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டம் குறித்து கார்கே பேச ஆரம்பித்ததும் மாநிலங்களவையை ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தார்.</p><p>நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திமுக எம்பிக்கள் புறக்கணித்தனர்.</p> <p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச ஆரம்பித்ததும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/04774660-0332-4384-b7fe-ffffc97c38d6">நீட், ராமர் கோவில் முறைகேடு.. எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f2396a00-20a1-4788-a8ef-47068797740b">திருவள்ளூர் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் கவிதா அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/cb17767b-2d99-40a0-950c-c4a779e423bc">சோழிங்கநல்லூர் அருகே சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பேருந்து- 6 பேர் படுகாயம்</a></p><p>எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக மக்களவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.</p> <p>மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.</p>  <p>மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து  திமுக எம்பிக்கள் பச்சை துண்டு அணிந்து சென்றுள்ளனர்.</p> <p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p>கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/d29a6d2a-ac90-492f-96b9-936f1e06b538">தோல்வியால் விரக்தி.. மைதானத்தில் ஸ்பெயின் வீரர்கள் மீது அர்ஜென்டினா வீரர் சரமாரி தாக்குதல் - வைரல் வீடியோ</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7128e287-4e58-4a06-b295-7271896099ab">VIDEO: பாராளுமன்றம் நோக்கி பேரணிக்கு ஆயத்தம்.. ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி</a></p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/86db5eea-b71a-48ff-b13e-a8cb62e6892e">விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது - பிரதமர் மோடி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f8312ac4-143d-4ef2-afbf-5c142d2fee6f">சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e5ab64bf-f201-41ca-8550-d9577780d25d">மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.261 கோடி செலவு: RTI-யில் தகவல்!</a></p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7hsdt38x/modi.jpg" /></figure><p>சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரெயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. உலகின் எந்த போர்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது - பிரதமர் மோடி</p> <p>விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது. விக்ரம் 1 ராக்கெட் வெற்றியை அடுத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் - பிரதமர் மோடி</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hnb3g8hj/modi1.jpg" /></figure><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புகிறேன் - பிரதமர் மோடி</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/76bc8537-d996-44b1-8933-1f9769709c7b">என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/dc277594-7acd-4341-9e39-17e9e465efe2">அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்!- அன்புமணி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/baa765ee-bf4b-47d5-8399-db6be4615c04">விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e987724e-e437-406b-93b4-a72b467fd1fb">விளாத்திகுளம் எம்எல்ஏ கைது: தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7824cb9d-6d11-4fb8-8b69-3182b2e561f0">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/aa19a0cc-e556-4402-8eb8-f9e0a9087dc3">முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. கைது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-sonam-wangchuk-hunger-strike-at-jantar-mantar-with-three-key-demands">இன்றே உண்ணாவிரதத்தை கைவிட தயார்.. மூன்று நிபந்தனைகள் விதித்த சோனம் வாங்சுக்!</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-spain-clinch-second-title-as-trump-hands-trophy-after-1-0-win-over-argentina">FIFA Worldcup: ஸ்பெயின் அணிக்கு உலகக்கோப்பையை வழங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-spain-beat-argentina-in-extra-time-to-claim-second-title-as-messi-bids-farewell-in-tears">நேசிக்கிறோம் லியோ.. மைதானத்திலேயே உடைந்து அழுத மெஸ்ஸி - அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு சமாதானம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/football-world-cup-full-details-on-prize-money-and-golden-and-silver-awards">உலகக்கோப்பை கால்பந்து.. பரிசுத்தொகை, கோல்டன், சில்வர் விருதுகள் முழு விவரம்</a></p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/44c7459f-2679-4b16-a8a1-ec3118c9c686">மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல் - இன்று சட்டமன்றத்தில் தாக்கல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e1474dd3-bd53-4fc3-92e3-55391f386b53">GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6bd77b89-90ea-4147-9ccc-2530e0701e29">பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்- ஜி.கே.வாசன்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/52b8a0d4-0cab-43aa-a5dd-05f76c447996">அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி ஸ்டாலின்</a></p>]]></content:encoded></item><item><title>‘ஜன நாயகன்’ புதிய ப்ரோமோவை வெளியிட்ட விஜய்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-releases-the-new-jana-nayagan-promo</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-releases-the-new-jana-nayagan-promo#comments</comments><guid isPermaLink="false">e6dfc8be-94d8-4bcc-b2a6-bcd3c1c8419b</guid><pubDate>Mon, 20 Jul 2026 12:18:49 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:18:49.221Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜன நாயகன்,விஜய்,vijay,Jana Nayakan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/l10g7dxc/New-Project-2026-07-20T174830.615.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஜன நாயகன்’ புதிய ப்ரோமோவை வெளியிட்ட விஜய்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/l10g7dxc/New-Project-2026-07-20T174830.615.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ஜன நாயகன். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ளப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.</p><p>பொங்கலையொட்டி வெளியாக இருந்த இப்படம், பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக ஜூலை.23 அன்று வெளியாக உள்ளது. </p><p>இந்நிலையில் நடிகரும், முதலமைச்சருமான விஜய் இப்படத்தின் புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="qme" dir="ltr"><a href="https://x.com/hashtag/JanaNayaganFromJuly23?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JanaNayaganFromJuly23</a> <a href="https://t.co/BuABOOi9mK">pic.twitter.com/BuABOOi9mK</a></p>&mdash; Vijay (@actorvijay) <a href="https://x.com/actorvijay/status/2079169299546259538?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது?</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-cockroach-janata-party-chief-held</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-cockroach-janata-party-chief-held#comments</comments><guid isPermaLink="false">e90098e3-46ca-41a6-8404-c15f86b73ba2</guid><pubDate>Mon, 20 Jul 2026 12:07:04 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:07:04.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DelhiProtest,AbhijeetDipke,அபிஜித்தீப்கே,CockroachJantaParty,NEETProtest,டெல்லிபோராட்டம்,ChaloSansad</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1w9lsa16/DelhiProtestAbhijeetDipke" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DelhiProtestAbhijeetDipke ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1w9lsa16/DelhiProtestAbhijeetDipke?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அபிஜித் தீப்கேவை இன்று டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>போராட்டக் களத்தில் தடியடி:</strong></h2><p>நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி கட்சி சார்பில் இன்று 'சலோ சன்சாத்' என்ற பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>டெல்லி போலீசார் விதித்திருந்த 163 தடை உத்தரவையும் மீறி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் ஜன்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி முன்னேற முயன்றனர்.</p><p>போலீசார் அமைத்திருந்த பல அடுக்கு இரும்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் முன்னேறியதால், அங்கு நிலைமை மோசமடைந்தது. மேலும் கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடியையும் நடத்தினர்.</p><h2><strong>சிஜேபி கட்சியின் குற்றச்சாட்டு:</strong></h2><p>இந்த தடியடியின் போது, உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் இருந்த தங்களது கட்சித் தலைவர் அபிஜித் தீப்கேவை போலீசார் கைது செய்துள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். </p><p>போலீசார் தங்களது மாணவர்களை வெறியோடு தாக்கியதாகவும் இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் சிஜேபி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இருப்பினும், போலீசார் தரப்பில் வன்முறைக் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளதோடு, தடையை மீறியதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ திரைப்படம் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/netflix-to-stream-arjun-das-khan-city-from-july-24</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/netflix-to-stream-arjun-das-khan-city-from-july-24#comments</comments><guid isPermaLink="false">519b6411-130e-4f6d-8f37-42cbbef8ec12</guid><pubDate>Mon, 20 Jul 2026 12:03:15 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:03:15.884Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நெட்ஃப்ளிக்ஸ்,arjundas,கான்சிட்டி,ConCity,AnnaBen,ConCityOnNetflix,ConCityOTT,அர்ஜுன்தாஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4m4a3z5y/ConCityOnNetflix" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ConCityOnNetflix ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4m4a3z5y/ConCityOnNetflix?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஜூன் 26 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற 'கான் சிட்டி' திரைப்படம், வரும் ஜூலை 24-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிஜிட்டல் முறையில் நேரடியாக வெளியாகிறது.</p><h2>விறுவிறுப்பான கதைக்களம்:</h2><p>அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், ‘ஏமாற்றாதே... ஏமாறாதே!’ என்ற சுவாரசியமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>தற்காலத்தில் சமூகத்தில் நடக்கும் பண ஏமாற்று வேலைகள் மற்றும் கிரைம் சம்பவங்களை, சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் மற்றும் காமெடி பாணியில் இயக்குனர் விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.</p><h2>நடிகர்களின் பங்களிப்பு:</h2><p>'கைதி', 'மாஸ்டர்' மற்றும் 'அநீதி' ஆகிய திரைப்படங்கள் மூலம் தனது அசாத்தியமான கம்பீரக் குரலாலும், தனித்துவமான நடிப்புத் திறனாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அர்ஜுன் தாஸ். </p><p>அதேபோல் தமிழில் வெளியான 'கொட்டுக்காளி' திரைப்படங்கள் மூலம் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திப் பாராட்டுக்களைப் பெற்றவர் அன்னா பென். </p><p>இவர்கள் இருவரது மாறுபட்ட கூட்டணியில் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளதால், சினிமா வட்டாரத்தில் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.</p><h2>ரசிகர்கள் எதிர்பார்ப்பு:</h2><p>இத்திரைப்படம், தியேட்டர்களில் நல்ல வசூலையும் விமர்சனங்களையும் பெற்றது. </p><p>ஜூன் 26 தியேட்டர் ரிலீஸின் போது இப்படத்தைக் காணத் தவறியவர்களுக்காகவும், சினிமா பிரியர்களுக்காகவும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த ஓடிடி வெளியீட்டை ஜூலை 24 அன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்த CJP தலைவர்கள்: முன்வைத்த முக்கிய 3 கோரிக்கைகள்</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-leaders-meet-union-minister-jp-nadda-submit-letter-of-demands</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-leaders-meet-union-minister-jp-nadda-submit-letter-of-demands#comments</comments><guid isPermaLink="false">75e74841-cde1-481d-b1a3-734922df4772</guid><pubDate>Mon, 20 Jul 2026 11:30:49 +0000</pubDate><atom:updated>2026-07-20T11:30:49.281Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,JP Nadda,parliament,CJP Protest,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/c99mr7jp/CJPProtest001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Leaders Meets JP Nadda]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/c99mr7jp/CJPProtest001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போராட்டத்தை கைவிட வேண்டுமென்றால் எங்களின் 3 முக்கிய கோரிக்கைகளை கைவிட வேண்டும் என்று கராப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) செய்தி தொடர்பாளர்கள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் தெரிவித்துள்ளனர்.</p><p>நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரியும், கல்வி முறையில் சீர்திருத்தம் செய்யக்கோரியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (CJP) டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><h2>முற்றுகை போராட்டம்</h2><p>பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் பாராளுமன்றத்தை நோக்கி இன்று பேரணியாக சென்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்து இருந்தனர். இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து 20 ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்தனர்.</p><h2>பிரகாஷ்ராஜ் ஆதரவு</h2><p>இந்த போராட்டத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.</p><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் பேரணிக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. டெல்லிக்கு வெளியில் இருந்து வருவோரை தடுக்கும் வகையில் முக்கிய நுழைவு வாயில்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.</p><h2>துணை ராணுவம்</h2><p>ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க விரைவு அதிரடிப்படையினரும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டனர். ஜந்தர் மந்தரில் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு இருந்தனர். டெல்லியில் இணைய தள சேவையும் துண்டிக்கப்பட்டது.</p><p>இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே கூறுகையில், "அமைதியான முறையில், பாராளுமன்றம் நோக்கி நாங்கள் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளோம். ஆனால், எங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது என்று தெரியவில்லை. ஜந்தர் மந்தர் அருகே கற்கள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது" என்று தெரிவித் துள்ளார்.</p><h2>தடியடி</h2><p>இந்த நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று காலையில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அவர்கள் தடுப்புகளை மீறி செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>ஆனாலும் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் கரப்பான் பூச்சி கட்சி தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் கலைந்து ஓடினார்கள். சிலர் தடியடியையும் மீறி அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். சிலரை கைது செய்தனர்.</p><p>இதற்கிடையே பேரணியில் ஈடுபட்ட சிலர் பாராளுமன்றம் அருகே வந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். மேலும் அவர்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முடியாமல் தடுக்க பாராளுமன்றத்தின் வடக்கு நுழைவு வாயிலை மூடினார்கள். மேலும் பாராளுமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.</p><h2>ஜே.பி. நட்டாவை சந்தித்த CJP செய்தி தொடர்பாளர்கள்</h2><p>இந்த நிலையில் கராப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அஷுடோஷ் ரங்கா ஆகியோர் மத்திய அமைச்சரை சந்தித்தனர்.</p><p>அப்போது அமைச்சர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அதற்கு இவர்கள் எங்களுடைய 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிட தயார் என்று தெரிவித்துள்ளனர்.</p><p>நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும். நீட் தேர்வால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும். சீரழிந்த உயர் கல்வித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கைகள் என்று அவர்கள் நட்டாவிடம் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>CJP போராட்டம்: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-slams-centre-over-cjp-protest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-slams-centre-over-cjp-protest#comments</comments><guid isPermaLink="false">c2e40369-de04-4732-99ec-728d3aaf3c77</guid><pubDate>Mon, 20 Jul 2026 11:17:56 +0000</pubDate><atom:updated>2026-07-20T11:17:56.655Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,DMK,திமுக,Union Ministry,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/25szpkql/DMK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Anna Arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/25szpkql/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பு, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் இன்று ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி 'சலோ சன்சாத்' என்ற பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது.</p><p>காவல் துறை அனுமதி மீறி, போராட்டம் நீடித்த நிலையில் இளைஞர்களின் போராட்டத்தை கலைக்க கண்ணீர்ப் புகை வீச்சு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p>இந்நிலையில், “தலைநகரில் மிகப் பெரிய போராட்டமாக மாறியிருக்கும் இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் என முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு.</p><p>கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும். மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும். அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை அடக்குமுறையால் என்றும் ஒடுக்கிவிட முடியாது” என திமுக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.</p><p>இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு திமுக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.</p><p>நீட் தோ்வு உள்படப் பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஒரு மாதக் காலமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றவர்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டிருக்கிறது. கண்மூடித்தனமான தாக்குதலைக் காவல்துறை மூலம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.</p><p>அமைதியான அறவழியில் போராடியவர்கள் மீது அதிகாரத் துஷ்பிரயோகத்தை ஏவி விட்டிருக்கிறார்கள். உரிமைகளுக்காக அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை அடக்குமுறையால் என்றும் ஒடுக்கிவிட முடியாது.</p><p>தலைநகரில் மிகப் பெரிய போராட்டமாக மாறியிருக்கும் இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் ஆகியவற்றால் முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும்! </p><p>மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும்!</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு திமுக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.<br><br>நீட் தோ்வு உள்படப் பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்… <a href="https://t.co/jsOdVDS2Te">pic.twitter.com/jsOdVDS2Te</a></p>&mdash; DMK (@arivalayam) <a href="https://x.com/arivalayam/status/2079123740814901485?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தண்ணீர் திறக்காத கர்நாடகா: முதலமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு இபிஎஸ் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-fails-to-release-water-eps-condemns-chief-minister-dk-shivakumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-fails-to-release-water-eps-condemns-chief-minister-dk-shivakumar#comments</comments><guid isPermaLink="false">e504d393-6838-4a10-960f-d473afe9296d</guid><pubDate>Mon, 20 Jul 2026 11:15:25 +0000</pubDate><atom:updated>2026-07-20T11:15:25.601Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,கர்நாடகா,Karnataka,டி.கே.சிவகுமார்,D.K. Shivakumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/914jktud/New-Project-2026-07-20T164444.744.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தண்ணீர் திறக்காத கர்நாடகா: முதலமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு இபிஎஸ் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/914jktud/New-Project-2026-07-20T164444.744.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசியல் சாசன சட்டம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை இன்னும் திறக்கவில்லை. இதற்காக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்காக காவிரி தண்ணீரை நம்பித்தான் உள்ளனர். உச்ச நீதிமன்றமும் காவிரியில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை நிலைநாட்டி பல தீர்ப்புகளை வழங்கிய பின்பும், கர்நாடக ஆட்சியாளர்கள் காவிரியில் தமிழ்நாட்டிற்க்குரிய பங்கு நீரை வழங்குவதில்லை. வெள்ள உபரிநீர் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p>கர்நாடக அரசு, காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய பங்கு நீரை முழுமையாக விடுவிக்கிறதா என்பதை கண்காணிப்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் மற்றும் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பணியாகும்.</p><p>சென்ற மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரைத் தரும்படி கர்நாடக அரசிற்கு அறிவுறுத்திய பிறகும், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் தண்ணீரைத் திறக்க உத்தரவிடவில்லை; </p><p>தமிழ்நாடு அரசும் தண்ணீரைத் திறக்கும்படி கேட்கவில்லை; எனவே, தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீரை தரமுடியாது என்று 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக அமைச்சர் உண்மைக்கு மாறாகக் கூறியிருந்தார். </p><p>உடனடியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க த.வெ.க. அரசையும் வலியுறுத்தினோம். ஆனால், த.வெ.க. அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p>தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். </p><p>ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர், கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. </p><p>இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள்.</p><p>ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. </p><p>பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழ்நாடு மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர், கர்நாடக அரசுடன் தொடர்புகொண்டு காவிரியில் ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைப் பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.</p><p>ஏற்கெனவே, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் பரப்புரையின்போது த.வெ.க. தலைவர், சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்றும், பெரு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடனில் 50 சதவீதம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தார். </p><p>ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000/- வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்கு மேல் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார். </p><p>இதனால், தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள், குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் கொதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் த.வெ.க. அரசு, டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்விழந்து நிற்கிறார்கள். </p><p>மேலும், விவசாயத் தொழிலையே நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பின்றி, அவர்களின் வாழ்வாதாரமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சி.ஜே.பி போராட்டம், பாராளுமன்றத்தில் அமளி: அமித் ஷாவை சந்தித்த தர்மேந்திர பிரதான்</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-porattam-parliament-tension-dharmendra-pradhan-amit-shah-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-porattam-parliament-tension-dharmendra-pradhan-amit-shah-meeting#comments</comments><guid isPermaLink="false">cb25e034-77a8-4317-b0a4-1090672d329a</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:50:06 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:50:06.660Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித் ஷா,தர்மேந்திர பிரதான்,parliment session,சி.ஜே.பி போராட்டம்</media:keywords><media:content height="720" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/u59z4x7u/Dharmendra-Pradhan-meet-Amit-Shah.webp" width="1280"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  தர்மேந்திர பிரதான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/u59z4x7u/Dharmendra-Pradhan-meet-Amit-Shah.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><h2>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்</h2><p>இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா). சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.</p><h2>தீவிரமடைந்த போராட்டம்</h2><p>இந்நிலையில் நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவியத் தொடங்கியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவியது. ஜந்தர் மந்தரை தவிர டெல்லியின் மற்ற இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடைவிதிக்கப்பட்டது. பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படடுத்தப்பட்டது.</p><p>முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்ற வடக்கு வாயில் மூடப்பட்ட‌து. நாடாளுமன்ற வளாகத்தில் துணை ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களின் பேரணி தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி வந்தனர். அப்போது நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். மேலும் பலத்த பாதுகாப்பு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டது.</p><h2>அமைச்சர்களின் சந்திப்பு</h2><p>இந்நிலையில், புது டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இருப்பினும் நாடாளுமன்றத்தில் நிலவி வரும் தீவிர அரசியல் நடவடிக்கைகள், போராட்டங்கள் மற்றும் பல்வேறு தேசிய பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்ற நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-weather-update-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-weather-update-details#comments</comments><guid isPermaLink="false">75b67448-3134-400e-9b4c-161914f5ca29</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:34:13 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:34:13.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1b8qv1a4/rain007.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1b8qv1a4/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>22 மற்றும் 23-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>24-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>25 மற்றும் 26-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை</h2><p>இன்று முதல் 24-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் தாய்-மகன் கொலை வழக்கு: முதியவருக்கு மரண தண்டனை விதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-mother-son-murder-case-elderly-man-sentenced-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-mother-son-murder-case-elderly-man-sentenced-to-death#comments</comments><guid isPermaLink="false">b2b1699c-1640-483f-97d9-7887f5314b14</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:27:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:27:05.728Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,kerala,மரண தண்டனை,death sentence,கேரளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/855lw4ea/Death.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Double Murder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/855lw4ea/Death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்னமாரா அருகே உள்ள பொத்துண்டியைச் சேர்ந்தவர் சுதாகரன். இவரது தாயார் லட்சுமி. இவர்கள் இருவரும் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.</p><p>இந்த கொலைகள் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செந்தாமரை (வயது 61) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், சுதாகரனின் மனைவி சஜீதாவை கொலை செய்தவர் என்பதும், அதற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற அவர், ஜாமீனில் வெளிவந்தபோது தான் சுதாகரன் மற்றும் லட்சுமியை கொலை செய்தி ருப்பதும் உறுதியானது.</p><p>இதுதொடர்பான வழக்கு பாலக்காடு கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அப்போது திட்டமிட்ட பழிவாங்கும் செயலாக கொலைகள் நடந்திருப்பதாக அரசு தரப்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது.</p><p>கடந்த 2026-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி முதல் விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த வாரம் நிறைவடைந்தன. அதன்பிறகு செந்தாமரை குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட செந்தாமரைக்கு மரண தண்டதை விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p><p>மேலும் அவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி, அதனை இறந்த சுதாகரனின் குழந்தை களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். கொலை நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.</p><p>பிஎன்எஸ் சட்டத்தின் 103(1) மற்றும் 126(2) பிரிவுகளின் கீழ் செந்தாமரா குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது. குற்றம் சாட்டபபட்டவர் சமூகத்திற்குப் பிரச்சனையாக இருந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று பல்வேறு உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. அதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>ஸ்பெயின், மொராக்கோ, போர்ச்சுக்கல் நாடுகளில் அடுத்த உலக கோப்பை போட்டி..!</title><link>https://www.maalaimalar.com/sports/football/fifa-next-world-cup-held-spain-morocco-and-portugal</link><comments>https://www.maalaimalar.com/sports/football/fifa-next-world-cup-held-spain-morocco-and-portugal#comments</comments><guid isPermaLink="false">df1945a6-3959-4d40-b9e5-5a8787aead1a</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:13:21 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:13:21.151Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மொராக்கோ,Morocco,Portugal,Spain,ஸ்பெயின்,பிபா உலக கோப்பை,FIFA World Cup 2026,போர்ச்சுக்கல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/19m3tzky/FIFAWorldCup2007.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2030 FIFA WORLD CUP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/19m3tzky/FIFAWorldCup2007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான <a href="https://www.maalaimalar.com/sports/football/football-world-cup-full-details-on-prize-money-and-golden-and-silver-awards">உலக கோப்பை கால்பந்து போட்டி</a> 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அடுத்த உலக கோப்பையான 24-வது போட்டி தொடர் மொராக்கோ, போர்ச்சுக்கல், ஸ்பெயினில் 2030-ம் ஆண்டு ஜூன் 8-ந்தேதி முதல் ஜூலை 21-ந்தேதி வரை நடக்கிறது.</p><p>1930-ம் ஆண்டு உலக கோப்பை உருகுவேயில் அறிமுகம் செய்யப்பட்டது. 100-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, 1930 இறுதிப் போட்டி நடைபெற்ற உருகுவேயின் மான்டிவீடியோவில் உள்ள எஸ்டாடியோ சென்டனா ரியோ மைதானம், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் உள்ள எஸ்டாடியோ மானுமென்டல், பராகுவேயின் அசுன்சியோனில் உள்ள எஸ்டாடியோ ஒஸ்வால்டோ டொமிங்கஸ் டிப் ஆகிய மைதானங்களில் தலா ஒரு ஆட்டம் என ஒரு சிறப்புப் போட்டியும், கொண்டாட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் போட்டி</h2><p>ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். மொராக்கோ, பராகுவே, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் முதல் தடவையாகவும், உருகுவே (1930-க்கு பிறகு), அர்ஜென்டினா (1978-க்கு பிறகு) ஸ்பெயின் (1982-க்குபிறகு) ஆகிய நாடுகளில் 2-வது முறையாகவும் நடைபெற உள்ளது.</p><h2>ஸ்பெயின் நாட்டில் கொண்டாட்டம்</h2><p>ஐரேப்பிய கால்பந்து போட்டியின் சாம்பியனான ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பைபை கைப்பற்றியது. ஸ்பெயின் அணியின் இந்த வெற்றியை அந்நாட்டு மக்கள் திருவிழாபோல் கொண்டாடினார்கள். தலைநகர் மாட்ரிட் உள்பட பல்வேறு நகரங்களின் கால்பந்து ரசிகர்கள் நடனமாடி வெற்றியை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டனர். மாட்ரிட் நகரில் உள்ள பிளாசா டிகெலான் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.</p><p>நேற்று நள்ளிரவு உடன் முடிவடைந்த 23-வது உலக கோப்பை கோப்பை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடைபெற்றது. இதில் 48 அணிகள் பங்கேற்றன. குரூப் சுற்று, ரவுண்ட் ஆஃப் 32, ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஸ்பெயின் 1-0 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தால் 163 தடை உத்தரவு அமல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-parliament-siege-protest-section-163-restrictions</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-parliament-siege-protest-section-163-restrictions#comments</comments><guid isPermaLink="false">a6876ac9-2aa7-4b16-be14-903a6fa0cdca</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:04:27 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:04:27.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DelhiProtest,SonamWangchuk,Section163,NEETControversy,CJPProtest,நீட்தேர்வுமுறைகேடு,சோனம்வாங்சுக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/p5kp2whg/DelhiProtest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DelhiProtest  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/p5kp2whg/DelhiProtest?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், டெல்லியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக ‘பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ பிரிவு 163 ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>போராட்டத்திற்கான காரணம்..</strong></h2><p>'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பு, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் இன்று ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி</p><p>'சலோ சன்சாத்' என்ற பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.</p><h2>அனுமதி மறுப்பு &amp; கட்டுப்பாடுகள்:</h2><p>இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சச்சின் சர்மா தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த போராட்டத்திற்கு எந்த அனுமதியும் கோரப்படவும் இல்லை, வழங்கப்படவும் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>கட்டுப்பாடுகள்..</strong></h2><p>உதவி போலீஸ் கமிஷனர் அஜய் சர்மா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, நாடாளுமன்ற வீதிக்கு உட்பட்ட பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>ஜந்தர் மந்தர் தவிர மற்ற பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடவோ, பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தவோ அனுமதி இல்லை என்று தெரிவித்தது.</p><p>போராட்டக்காரர்கள் லத்திகள், கம்புகள், பதாகைகள் அல்லது எந்த விதமான ஆயுதங்களையும் எடுத்துச் செல்ல கூடாது என்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கோஷங்களை எழுப்பவோ, உரையாற்றவோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது 'பாரதிய நியாய சன்ஹிதா' பிரிவு 223-ன் கீழ் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>குவியும் மக்கள் - பலத்த பாதுகாப்பு:</strong></h2><p>மறுபுறம், நீட் விவகாரத்திற்காக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவிக்க ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளனர்.</p><p>இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க டெல்லி போலீசார், துணை ராணுவப் படையினர் மற்றும் அதிரடிப்படையினர் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அபிஷேக் போரலை கைது செய்ய கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/sports/kolkata-court-orders-the-arrest-of-delhi-capitals-player-abishek-porel</link><comments>https://www.maalaimalar.com/sports/kolkata-court-orders-the-arrest-of-delhi-capitals-player-abishek-porel#comments</comments><guid isPermaLink="false">84000f2f-2659-4628-b12d-86adf18e5331</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:01:56 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:01:56.101Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி கேப்பிட்டல்ஸ்,Calcutta HC,Cricketer Abhishek Porel,அபிஷேக் பொரேல்,கல்கத்தா உயர் நீதிமன்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/8k37dm8u/New-Project-2026-07-20T153140.185.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி கேப்பிட்டல்ஸ வீரர் அபிஷேக் போரலை கைது செய்ய கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/8k37dm8u/New-Project-2026-07-20T153140.185.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி கேப்பிட்டல்ஸ் கிரிக்கெட் அணி வீரர் அபிஷேக் போரலை, பாலியல் வன்கொடுமை வழக்கில் உடனடியாக கைது செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p>நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வு, ஹூக்ளியில் உள்ள மக்ரா காவல் நிலையத்திற்கு அபிஷேக்கைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும் அவரிடம் உள்ள மின்னணு சாதனங்களையும் கைப்பற்ற உத்தரவிட்டுள்ளது.</p><h2>வழக்கு</h2><p>காதல் என்ற பெயரில் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் இருவரும் தனியாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து தன்னை மிரட்டியதாகவும் கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், மக்ரா காவல்நிலையத்தில் அபிஷேக் போரல்மீது புகார் அளித்துள்ளார். </p><p>இதனடிப்படையில் அபிஷேக் உட்பட இருவர்மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், மாணவி தரப்பு வழக்கறிஞர், அந்த இரு நபர்களும் தங்களது கட்சிக்காரரை மட்டுமல்லாமல், வேறு பல பெண்களையும் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி, அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து அவர்களையும் மிரட்டியதாக தெரிவித்தனர். </p><p>இதனையடுத்து கைது உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், கைது நடவடிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆக.11ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பிபா உலக கோப்பையை தவறவிட்ட பின் கண்ணீர் மல்க மெஸ்சி கூறியது என்ன?</title><link>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-2026-arg-vs-spa-messi-moved-to-tears-after-world-cup-defeat-admits-spain-better-team-in-final</link><comments>https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-2026-arg-vs-spa-messi-moved-to-tears-after-world-cup-defeat-admits-spain-better-team-in-final#comments</comments><guid isPermaLink="false">2a5d97a4-3ff3-4e80-9cd0-b3f8b39bf8de</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:55:10 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:55:10.804Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lionel Messi,argentina,அர்ஜென்டினா,மெஸ்சி,பிபா உலக கோப்பை,FIFA World Cup 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/nnwefdnw/Messi200702.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Messi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/nnwefdnw/Messi200702.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி தொடர்ச்சியாக 2-வது முறை உலக கோப்பையை வென்று சாதிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வீரர்களின் ஆட்டம் மிகுந்த ஏமாற்றம் அளித்தது. ஸ்பெயின் அணிக்கு எந்த கட்டத்திலும் அந்த அணியால் சவாலாக விளங்க முடியவில்லை.</p><h2>மெஸ்சி கண்ணீர்</h2><p>இறுதிப் போட்டியில் தோற்றதால் <a href="https://www.maalaimalar.com/sports/football/argentina-shock-defeat-leandro-paredes-sent-off-after-attacking-spain-players-in-fifa-world-cup-2026-final">அர்ஜென்டினா</a> அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான மெஸ்சி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். சோகத்தில் அவர் கண்ணீர் சிந்தினார். உலக கோப்பையை மீண்டும் கைப்பற்ற முடியாமல் போனது அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.</p><p>இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மெஸ்சி நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>தோல்வியால் நான் மிகவும் வருத்தமாக உணர்கிறேன். ஆனால் எங்களால் முடிந்த வரை சிறப்பாக விளையாடினோம் என்பதை நான் அறிவேன். உண்மையை சொல்லப் போனால் அவர்கள் (ஸ்பெயின்) சிறப்–பாக விளையாடினார்கள்.</p><h2>தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன்</h2><p>ஸ்பெயின் மிக சிறந்த அணியாகும். நாங்கள் ஆட்டத்தில் தோற்றோம். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்காக நாங்கள் இதுவரை செய்த அனைத்தையும் மறந்து விடுவோம் என்று அர்த்தமில்லை. எனவே எனது மக்களுக்கும், சக வீரர்களுக்கும், என் நாட்டு மக்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.</p><p>இவ்வாறு மெஸ்சி கூறியுள்ளார்.</p><h2>உலக கோப்பையில் சிறந்த நிலையில் மெஸ்சி</h2><p>மெஸ்சி விளையாடிய 6-வது உலக கோப்பை இதுவாகும். அதிக உலக கோப்பையில் விளையாடிய வீரர்களில் ரொனால்டோவுடன் இணைந்து அவர் சாதனை புரிந்தார். அவர் மொத்தம் 21 கோல்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். இந்த உலக கோப்பையில் அவர் 8 கோல்கள் அடித்து 4 கோல்கள் அடிக்க சக வீரர்களுக்கு உதவியாக இருந்தார். </p><figure><img alt="Messi" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/tr13ue4l/Messi200701.jpg" /></figure><p>அர்ஜென்டினா அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு வந்து சிறந்த நிலை அடைய காரணமாக இருந்தவர் மெஸ்சி என்பது குறிப்பிடத்தக்கது. 39 வயதிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தி இருந்தார்.</p><p>மெஸ்சி தனது ஓய்வு முடிவை எந்த நேரத்திலும் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>மெஸ்சி மிகச்சிறந்த வீரர்</h2><p>இதற்கிடையே மெஸ்சியின் பங்களிப்பை அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி பாராட்டினார். இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அவர் கூறியதாவது:-</p><p>மெஸ்சி மீது அனைவரும் பெருமை ெகாள்வார்கள் என்று நம்புகிறேன். அவர் சாதித்ததற்காக பெருமை கொள்வார்கள். ஏனெனில் கால்பந்தில் காலடி வைத்தவர்களில் அவர்தான் மிகச் சிறந்த வீரர்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>308 கோல்கள்</h2><p>48 நாடுகள் பங்கேற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 308 கோல்கள் (104 ஆட்டம் ) அடிக்கப்–பட்டது. இது ஒரு போட்டியி் அடிக்கப்பட்ட கோல்களின் சராசரி 2.96 ஆகும். பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அதிகபட்சமாக 10 கோல்கள் அடித்து முதல் இடத்தை பிடித்தார். அதற்கு அடுத்தப்படியாக மெஸ்சி (அர்ஜென்டினா) 8 கோல்களை பதிவு செய்தார். பெலலிங்கம் (இங்கிலாந்து), எர்லிங் ஹாலண்ட் (நார்வே) தலா 7 கோலும், ஹாரி கேன் (இங்கிலாந்து), உஸ்மான் டெம்பலே (பிரான்ஸ்) தலா 6 கோலும், மைக்கேல் ஒயர்சபால் (ஸ்பெயின்) 5 கோலும் அடித்தனர்.</p><p>நாடுகளை பொறுத்தவரை இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் தலா 20 கோல்கள் அடித்தன. அர்ஜென்டினா 19 கோல்களை பதிவு செய்தது. உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் மொத்தம் 14 கோல்கள் அடித்தது.</p>]]></content:encoded></item><item><title>பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/dog-saves-family-from-snake-treatment-at-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/dog-saves-family-from-snake-treatment-at-hospital#comments</comments><guid isPermaLink="false">8afaeafc-f03c-48d7-b701-f6a3c6062e0e</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:37:38 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:37:38.027Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dog,snake,ஆந்திர பிரதேசம்,AP,பாம்பு,நாய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mdh5c8im/dog.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dog - Snake]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mdh5c8im/dog.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்த நாயை  பாம்பு கடித்ததால் உடலில் விஷம் ஏறியது.</p><p>ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பிதாபுரம் அடுத்த கோத்த பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் பாக்சர் இன நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.</p><p>நேற்று முன்தினம் மாலை பக்கத்து காலி மனையில் இருந்து நாகப்பாம்பு ஒன்று ஸ்ரீனிவாஸ் வீட்டிற்குள் வந்தது. இதனைக் கண்ட ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் அலறினர். அப்போது பாம்பை கண்ட நாய் உடனடியாக உஷார் ஆனது. பாம்பை மேலும் வீட்டிற்கு நுழைய விடாமல் தடுத்தது.</p><h2>நாய் - பாம்பு சண்டை</h2><p>அப்போது நாய்க்கும், பாம்புக்கும் இடையே சிறிது நேரம் சண்டை ஏற்பட்டது. பாம்பு ஆக்ரோஷத்துடன் படம் எடுத்து நாயை கடிக்க முயன்றது. ஆனால் நாய் எதிர்பாராத விதமாக பாம்பின் தலையை கவ்வி கடித்தது. இதில் பாம்பு பரிதாபமாக இறந்தது. </p><p>பாம்பின் தலையை கடித்ததால் நாயின் உடலில் விஷம் ஏறி நிலைகுலைந்தது. செல்ல நாயை காக்கிநாடாவில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>திரிபுரா டிஜிபி மர்ம மரணம்... காவல்துறை விசாரணை!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/mysterious-death-of-tripura-dgp-police-investigation-underway</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/mysterious-death-of-tripura-dgp-police-investigation-underway#comments</comments><guid isPermaLink="false">cd31fccb-a62b-4f29-8f98-93883be413dc</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:29:50 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:29:50.882Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anurag Dhankar,Tripura DGP,அனுராக் தங்கர்,திரிபுரா டிஜிபி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/zbqqbo6l/New-Project-2026-07-20T144520.209.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திரிபுரா டிஜிபி மர்ம மரணம்... காவல்துறை விசாரணை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/zbqqbo6l/New-Project-2026-07-20T144520.209.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>திரிபுரா மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் அனுராக் தங்கர், காவல்துறை தலைமையகத்தில் உள்ள தனது அலுவலக குளியலறையில் இருந்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். </p><p>உடனே போலீசார் அவரை அகர்தலா கோவிந்த் பல்லப் பந்த் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனைத்தொடர்ந்து அனுராக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். மேலும் போலீசாரும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். </p><p>இந்தச் செய்தியைத் தொடர்ந்து, முதலமைச்சரும் மற்ற மூத்த அரசு அதிகாரிகளும் டிஜிபி அலுவலகத்திற்கு விரைந்தனர். மாநிலத்தின் உயர்மட்ட காவல் அதிகாரியின் மரணம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>அனுராக் தங்கர்</h2><p>1994-ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த இவர், திரிபுரா காவல்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். கடந்தாண்டு மே மாதம் காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் மாநிலத்தின் புலனாய்வுத் துறை தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>மேலும் சிபிஐ, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் மற்றும் கொசோவோவில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையிலும் பணியாற்றியுள்ளார். சிபிஐ-யில் பணியாற்றிய காலத்தில், மோசடிக் குற்றவாளியான நீரவ் மோடி தொடர்பான விசாரணையை  வழிநடத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட டெங்கு காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசி: இந்தியா ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-approves-first-dengue-vaccine-qdenga</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-approves-first-dengue-vaccine-qdenga#comments</comments><guid isPermaLink="false">c844a166-94f0-497e-b207-dee752da00a1</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:29:30 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:29:30.682Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>dengue vaccine,டெங்கு தடுப்பூசி,Qdenga,DCGI,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/uyrr8k5a/Untitled-design-38.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Drug regulator clears India's first Dengue Vaccine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/uyrr8k5a/Untitled-design-38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>டெங்கு தடுப்பூசிக்கு இந்தியா அங்கீகாரம்:</strong></h3><p>இந்தியாவில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது.</p><p>டகேடா பயோ பார்மசூட்கல்ஸ் என்ற இந்திய நிறுவனம் டெங்கு காய்ச்சலுக்கான க்யூடெங்கா என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.</p><p>இந்த தடுப்பூசி 4 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு செலுத்தும் வகையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது.</p><p>மேலும் கடந்த காலங்களில் டெங்கு நோய்த் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும், இந்த தடுப்பூசியை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சில டெங்கு தடுப்பூசிகளை போல் அல்லாமல், தற்போது உருவாக்கப்பட்டுள்ள கியூடெங்கா தடுப்பூசிக்கு, முன் பரிசோதனை தேவையில்லை.</p><p>இதன்மூலம் தகுதியுள்ள நபர்கள், தங்களுக்கு முன்பு டெங்கு தொற்று இருந்ததா என முதலில் பரிசோதிப்பதற்கு முன்பு, இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.</p><h3><strong>டெங்கு பரிசோதனை:</strong></h3><p>இதுகுறித்து மருந்து சந்தைகளின் தலைவர் மகேந்தர் நாயக் கூறுகையில், “க்யூடெங்கா தடுப்பூசி 2022-இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு, உலகளவில் 32 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. </p><p>இந்த அங்கீகாரம் இந்தியாவில் டெங்கு தடுப்பை வலுப்படுத்துவதில், ஒரு முக்கிய முன்னேற்றத்தை குறிக்கிறது.</p><p>ஏழு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட நீண்டகால தரவுகளின்படி, இந்த தடுப்பூசியானது நான்கு டெங்கு வைரஸ் வகைகளால் ஏற்படும் டெங்கு தொற்றால் பாதிக்கப்படாதவாறு பாதுகாக்கிறது.</p><p>டெங்கு பரவலாக உள்ள நாடுகள் மற்றும் மற்ற பிராந்தியங்களில், 28,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 19 முதற்கட்ட, இரண்டாம் மற்றும் மூன்றாம் மருத்துவ பசிசோதனைகளுக்கு பின்பு, இந்தியாவில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.</p><p>4 முதல் 60 வயது வரையிலான மக்களிடம் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மதிப்பீடு செய்வதற்காக, இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட DEN-302 மருத்துவ பரிசோதனையின் முடிவுகளும் இந்த முடிவை ஆதரித்துள்ளன.</p><h3><strong>உலக சுகாதார அமைப்பு அனுமதி:</strong></h3><p>டெங்கு காய்ச்சலுக்கு எதிரான இந்த தடுப்பூசியானது, மூன்று மாத இடைவெளியில் தோலுக்கு கீழே 0.5 மில்லி லிட்டர் அளவுள்ள இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட உள்ளது.</p><p>QDENGA தடுப்பூசியானது, உலக சுகாதார அமைப்பின் (WHO) முன் தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளது.</p><p>மேலும் UNICEF மற்றும் பான் அமெரிக்க சுகாதார அமைப்பு (PAHO) போன்ற உலகளாவிய முகமைகளில் இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!</title><link>https://www.maalaimalar.com/news/world/venizula-earthquake-death-toll-passes-5000</link><comments>https://www.maalaimalar.com/news/world/venizula-earthquake-death-toll-passes-5000#comments</comments><guid isPermaLink="false">18c152bb-3e44-462c-b125-3358de48fc8d</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:26:43 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:26:43.816Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>venezuelacrisis,VenezuelaEarthquake,வெனிசுலாநிலநடுக்கம்,NaturalDisaster,JorgeRodriguez,இரட்டைநிலநடுக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/8m8eibw2/VenizulaEarthquake" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Venizula Earthquake]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/8m8eibw2/VenizulaEarthquake?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெனிசுலா நாட்டை உலுக்கிய விபரீதமான இரட்டை நிலநடுக்கப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இது வெனிசுலா வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத மிக மோசமான இயற்கை அழிவாகக் கருதப்படுகிறது.</p><h2><strong>39 வினாடிகளில் நிகழ்ந்த கோரம்:</strong></h2><p>கடந்த 24 ஆம் தேதி வெனிசுலாவில் அடுத்தடுத்து 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. </p><p>வெறும் 39 வினாடிகள் என்ற மிகக் குறுகிய கால இடைவெளியில் பூமிக்கு அடியில் ஏற்பட்ட இந்த பயங்கர அதிர்வுகள், ஒட்டுமொத்த நகரங்களையும் நிலைகுலையச் செய்தன.</p><h2><strong>சீட்டுக்கட்டாய் சரிந்த கட்டிடங்கள்:</strong></h2><p>நிலநடுக்கத்தின் வீரியம் தாங்காமல் பல அடுக்கு வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அனைத்தும் சீட்டுக்கட்டுபோல மொத்தமாகச் சரிந்து தரைமட்டமாகின. </p><p>நில அதிர்வின் கோரத்தால் பிரதான நெடுஞ்சாலைகள் அனைத்தும் இரண்டு, மூன்று துண்டுகளாகப் பிளந்து உள்வாங்கின. இதனால் அத்தியாவசியப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. </p><p>மேலும், மலைப்பகுதிகளில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டு, ஒட்டுமொத்த கிராமங்களும் மண்ணுக்குள் புதைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின.</p><h2><strong>உயிரிழப்பு 5 ஆயிரத்தைக் கடந்தது:</strong></h2><p>பாதிக்கப்பட்ட நகரங்களில் ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். </p><p>ராட்சத இயந்திரங்கள் மூலம் சிதைந்த கட்டிடங்களை அகற்றி வரும் நிலையில், துரதிர்ஷ்டவசமாக அடுத்தடுத்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற சபாநாயகர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நிலநடுக்கத்திற்குப் பலியானோரின் எண்ணிக்கை 5,119 ஆக உயர்ந்துள்ளது.</p><p>தற்போது இடிபாடுகளுக்கு இடையே காயங்களுடன் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும், தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணிகளும் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/b-tech-gold-medallist-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/national/b-tech-gold-medallist-suicide#comments</comments><guid isPermaLink="false">ac9077f0-4b73-4f46-bb2f-8469dc418ed4</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:06:57 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:06:57.766Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,இளைஞர் தற்கொலை,youngman suicide</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/jquxnzvn/suicide.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/jquxnzvn/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.</p><p>பீகார் மாநிலம், பக்ஸாரைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார், 2024-ம் ஆண்டு கான்பூரில் உள்ள ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் தனது பி.டெக் பட்டப்படிப்பை முடித்தார். </p><h2>தற்கொலை</h2><p>ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, அவர் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். 50-க்கும் மேற்பட்ட அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் எழுதியும், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், குஜ்ரன்வாலாவில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.</p><h2>மன்னிப்பு கடிதம்</h2><p>போலீசார் அவரது உடலை கைப்பற்றினர். அப்போது அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தனது தந்தையிடம் பலமுறை மன்னிப்புக் கோரியுள்ள அந்தக் கடிதத்தில், “மன்னிக்கவும், அப்பா... நான் ஒரு அரசு வேலைக்காக 50 முறை முயற்சி செய்தேன். ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. தயவு செய்து என்னை மன்னியுங்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்- உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறந்தது</title><link>https://www.maalaimalar.com/news/world/jd-vance-usha-fourth-baby-born-historic-moment</link><comments>https://www.maalaimalar.com/news/world/jd-vance-usha-fourth-baby-born-historic-moment#comments</comments><guid isPermaLink="false">ec5f7594-ab41-4837-8f1f-0a4aa280ff83</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:05:51 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:05:51.098Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>JD Vance,ஜேடி வான்ஸ்,baby born,அமெரிக்க துணை அதிபர்,America deputy president,குழந்தை பிறந்தது</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/jg9e0d9n/JD-Vance.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ America Deputy President JD Vance- Usha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/jg9e0d9n/JD-Vance.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் - உஷா தம்பதிக்கு 4-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அலெக் நீல் வான்ஸ் என்று பெயரிட்டு இருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.</p><p>வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் தனக்கு 4-வது குழந்தை பிறந்திருப்பது பற்றி ஜே.டி.வான்ஸ் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p>'உஷாவும், குழந்தையும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளனர். எங்களது 3 குழந்தைகளும் தங்களுடைய சிறிய சகோதரனை உற்சாகத்தோடு வரவேற்றனர்' என்று பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும், சிகிச்சையளித்த வால்டர் ரீட் மருத்துவமனை மருத்துவர்களுக்கும், வெள்ளை மாளிகை மருத்துவ குழுவுக்கும் ஜே.டி.வான்சும், அவரது மனைவியும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து உள்ளனர்.</p><h2>அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக..</h2><p>ஜே.டி.வான்ஸ் - உஷா தம்பதிக்கு குழந்தை பிறந்திருப்பது, அமெரிக்க வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 150 ஆண்டுகளில் அமெரிக்க துணை அதிபராக பதவியில் இருந்தபோது யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை. தற்போது ஜே.டி.வான்ஸ் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.</p><p>ஜே.டி.வான்ஸ் - உஷா தம்பதிக்கு ஏற்கனவே எவான், விவேக் ஆகிய மகன்களும், மிரபெல் என்ற மகளும் உள்ளனர். தற்போது அலெக் இந்த குடும்பத்தின் புதிய உறுப்பினராக இணைந்து உள்ளார்.</p><p>இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தை சேர்ந்தவர் உஷா. வான்ஸ் - உஷா இருவரும்யாலே சட்டப் பள்ளியில் படித்தபோது நட்பாக பழகினர். 2013-ம் ஆண்டு பட்டம் பெற்று அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் இந்து முறைப்படியும், கத்தோலிக்க முறைப்படியும் நடந்தது.</p><p>இரண்டுமே கிடைத்தது..</p><p>குழந்தை பிறந்தது பற்றி வெள்ளை மாளிகையில் பேசிய ஜே.டி.வான்ஸ், 'துணை அதிபர் ஆவதற்கு முன்பே, நான் உஷாவிடம், அன்பே, எனக்கு உண்மையிலேயே 4-வதாக ஒரு குழந்தை வேண்டும் என்று சொன்னேன்.</p><p>அதற்கு அவர் சரி, ஆனால் நீங்கள் அமெரிக்காவின் துணை அதிபராகலாம் அல்லது நான்காவது குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்று பதில் அளித்தார். நல்ல வேளை எனக்கு இந்த இரண்டுமே கிடைத்து இருக்கிறது' என்று சிரித்தபடியே கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் இரவும் பகலுமாக தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijays-exclusive-t-shirt-is-being-produced-in-tiruppur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijays-exclusive-t-shirt-is-being-produced-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">7cdbf3a7-f253-4c3a-ae00-20d3e1640ec5</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:45:29 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:45:29.922Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,விஜய்,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/feeaifes/Jananayagan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/feeaifes/Jananayagan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய்யின் கம்பீரமான புகைப்படங்கள் மற்றும் கட்சியின் இலச்சினைகள் தாங்கிய வண்ணமயமான ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</aside><h2><strong>ஜனநாயகன்</strong></h2><p>தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பாக, அவர் நடிப்பில் உருவாகியுள்ள கடைசித் திரைப்படமான ‘<a href="https://www.maalaimalar.com/topic/ஜன-நாயகன்">ஜனநாயகன்</a>’ வருகிற 23 -ந்தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் திருவிழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், திருப்பூரின் ஜவுளித்துறை புதிய வர்த்தக உச்சத்தைத் தொட்டுள்ளது.</p><h2><strong>அசுர வேகம்</strong></h2><p>​திரைத்துறையில் இருந்து அரசியல் உலகிற்குள் நுழைந்து, தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய்யின் தற்போதைய அதிகாரப்பூர்வ கடைசித் திரைப்படம் என்பதால் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ரசிகர்களிடமும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தொண்டர்களிடமும் விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்திரைப்படத்தைக் கொண்டாடும் விதமாக, முதல் நாள் முதல் காட்சியைக் காண வரும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அணிவதற்காகப் பிரத்தியேக டி-ஷர்ட்கள் தயாரிக்கும் பணி திருப்பூரில் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ளதால், மிகக்குறுகிய காலக்கட்டமே இருப்பதால், தமிழகத்தின் முன்னணி ஜவுளி மையமான திருப்பூரில் உள்ள 700-க்கும் மேற்பட்ட பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் முழு வீச்சில் டி-ஷர்ட் தயாரிப்பில் இறங்கியுள்ளன. முதலமைச்சர் விஜய்யின் கம்பீரமான புகைப்படங்கள் மற்றும் கட்சியின் இலச்சினைகள் தாங்கிய வண்ணமயமான ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</p><figure><img alt="ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன." src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mr4eq1f5/tirupur.jpg" /><figcaption>ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</figcaption></figure> <h2><strong>குவியும் ஆர்டர்கள்</strong></h2><p>​இந்த அவசரத் தேவையை எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், தயாரிக்கப்படும் ஆடைகளை உடனடியாகக் கொண்டு சேர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் அதிவேக கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.</p><p>​இதுகுறித்து திருப்பூர் ஜவுளி ஆலைகள் சங்கத்தின் உறுப்பினர் கே. பிரபாகரன் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, இங்குள்ள திருப்பூர் ஜவுளி ஆலைகள் அனைத்தும், இந்த பிரத்தியேக ‘ஜனநாயகன்’ டி-ஷர்ட்களைத் தயாரிப்பதற்காகக் கூடுதல் நேரம்  ஒதுக்கி, தொழிலாளர்கள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.</p><p>முதலமைச்சர் விஜய்யின் இந்த இறுதித் திரைப்படத்திற்கான வரவேற்பு தமிழக எல்லையைத் தாண்டியும் எதிரொலித்து வருகிறது. கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர் மன்ற அமைப்புகளிடமிருந்தும் லட்சக்கணக்கான ஆடைகளுக்கான ஆர்டர்கள் திருப்பூரை நோக்கி வந்தவண்ணம் உள்ளன என்று கூறினார்.</p><figure><img alt="திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/w3pplyvb/Jana02.jpg" /><figcaption>திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்</figcaption></figure> <p>அரசியல் மாற்றத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் முதலமைச்சரைக் காணப்போகும் ஆவலில், ரசிகர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த டி-ஷர்ட் கலாச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலுக்கும் இது ஒரு மிகப்பெரிய பொருளாதார ஊக்கத்தைத் தந்துள்ளதாகத் தொழில்துறையினர் பெருமிதம் கொள்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் இல்லாத த.வெ.க.வின் காமராஜர் ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டும் - ப.சிதம்பரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-chidambaram-says-tvk-corruption-free-kamaraj-style-rule-must-continue-for-five-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-chidambaram-says-tvk-corruption-free-kamaraj-style-rule-must-continue-for-five-years#comments</comments><guid isPermaLink="false">249e1dfe-24f8-4c3c-aef3-bc827fa75546</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:42:13 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:42:13.270Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தவெக,P Chidambaram,ப சிதம்பரம்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/y26gg40e/chidambaram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ P Chidambaram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/y26gg40e/chidambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் ஊழல் இல்லாத இந்த காமராஜர் ஆட்சி, 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.</p><h2>காமராஜர் பிறந்தநாள் விழா</h2><p>மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற பிரசாரத்தின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-</p><h2>காங்கிரஸ் ஆட்சி</h2><p>தமிழ்நாட்டில் நடைபெற்ற காமராஜரின் 9 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சமே கிடையாது. காமராஜரின் ஆட்சிக்காலம் அரசாங்கக் கட்டுப்பாடு மற்றும் சிறந்த நிர்வாகத்தின் மூலம் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியது. </p><p>அந்த ஒன்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சம் என்ற பேச்சே இல்லை. எந்தவொரு அமைச்சருக்கு எதிராகவும், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் எழவில்லை. அதேபோல் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் மாத செயல்பாடுகள், காமராஜரின் ஒன்பது ஆண்டுகால ஆட்சிக் காலத்தைப் போன்றது.</p> <h2>த.வெ.க. ஆட்சி</h2><p>புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. ஆட்சியில் பத்திரப் பதிவு அலுவலகம் முதல் தனியார் உதவி பள்ளி பெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், இடமாறுதல் வரை லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. இன்னும் பல துறைகளில் லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வருகிறார். </p><p>நிச்சயம் முதலமைச்சர் விஜய்யின் அரசு அதனையும் சாதிக்கும் என்று தான் நம்புகிறோம். தமிழகத்தில் ஊழல் இல்லாத இந்த காமராஜர் ஆட்சி, 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்றார். காங்கிரசின் ஆதரவும், அரசுடனான அதன் உறவும், தமிழகத்தில் லஞ்சமில்லாத ஐந்து ஆண்டு கால நிர்வாகத்தைப் பெற உதவும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><h2>மாணிக்கம் தாகூர்</h2><p>நிகழ்ச்சியில் தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/new-office-bearers-for-the-tamil-nadu-congress-soon">காங்கிரஸ்</a> கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், காமராஜர் வாழ்நாள் முழுவதும் மாணவர்களின் கல்விக்காக உழைத்தார். ‘காமராஜர் மாடல்’ அரசை யாராலும் கொண்டு வர இயலாத நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது, என்றார்.</p>]]></content:encoded></item><item><title>திருடு போன அம்மனின் 10 சவரன் நகை- சாமியாடி கண்டுபிடித்த பூசாரியின் மனைவி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/amman-jewelry-theft-priests-wife-acting-as-a-trance-medium-locates-it</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/amman-jewelry-theft-priests-wife-acting-as-a-trance-medium-locates-it#comments</comments><guid isPermaLink="false">3303220c-f05a-4073-a86a-b8c6ffa25071</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:31:26 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:31:26.133Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அம்மன் நகை திருட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7zfqndj3/tiruvallur0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருடு போன நகையை சாமியாடி கண்டுபிடித்த பெண்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7zfqndj3/tiruvallur0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி கிராமத்தில் திரவுபதி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. </p><h2><strong>நகை திருட்டு</strong></h2><p>இதையொட்டி கடந்த 2 நாட்களாக திரவுபதி அம்மன் மற்றும் அம்மன் சிலைகள் அனைத்தையும் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்து இருந்தனர். இதனால் திரளான பக்தர்கள் வந்து வழிபட்டு சென்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் கோவில் நிர்வாகத்தினர் சென்று பார்த்தபோது அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்க செயின் மாயமாகி இருந்தது. கோவிலில் பல இடங்களில் தேடியும் செயினை கண்டு பிடிக்க முடியவில்லை. அம்மனை வழிபட வந்ததுபோல் நடித்த மர்மநபர் செயினை திருடி சென்று இருப்பது தெரிந்தது. </p><p>இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் தங்க செயினை கண்டு பிடிக்க முடியவில்லை.</p><h2><strong>அருள்வாக்கு</strong></h2><p>இந்த நிலையில் நேற்று மாலை கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதற்காக கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்து இருந்தார்கள். </p><p>அப்போது கோவில் பூசாரியின் மனைவியான மகேஸ்வரிக்கு திடீரென அருள்வந்து சாமியாடினார். மேலும்  அருள்வாக்கும் கூறினார்.</p><p>அவர் சாமியாடியபடி “எனது நகை எங்கும் போகவில்லை, இங்குதான் உள்ளது” என்று கூறியபடி கோவிலை சுற்றி வந்தார். பின்னர் அவர் கருவறைக்குள் சென்று விட்டு திரும்பி வந்தபோது அவரது கையில் திருடுபோனதாக கூறப்பட்ட அம்மன் நகை இருந்தது.  “என் நகை திருடு போல... இங்க தான் இருக்கு...” என்று சொல்லிய படி பக்தர்களிடம் காண்பித்தார். இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2><strong>பக்தர்கள் பரவசம்</strong></h2><p>அம்மன் சிலையில் இருந்து திருடப்பட்ட நகை மீண்டும் கிடைத்ததால் பொதுமக்களும், பக்தர்களும் நிம்மதி அடைந்தனர். சாமி சிலையில் இருந்த நகையை திருடியதால் ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என்ற பயத்தில் மர்மநபர்கள் திருடிய நகையை எடுத்துவந்து போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர். </p><p>மேலும் சிலர் சாமியாடிய பெண் மாயமான நகையை எப்படி கண்டுபிடித்தார்? என்ற பதில் தெரியாமலும் கேள்விகள் எழுப்பினர். எது எப்படியோ? கோவிலில் திருடுபோன நகை கிடைத்ததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். </p><p>பின்னர் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருடு போன அம்மன் நகையை சாமியாடிய பெண் கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாநிலங்களவையில் எதிரொலித்த CJP போராட்டம்.. போராட்டக் களத்தில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protests-police-lathicharge-and-tear-gas-on-students-at-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-protests-police-lathicharge-and-tear-gas-on-students-at-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">1cb43aff-8acd-465e-b970-b406ec103fb1</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:25:42 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:25:42.556Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rally,பேரணி,மாநிலங்களவை,rajya sabha,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mev746gb/tn-26.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ CJP PROTEST]]></media:title><media:description type="html"><![CDATA[ CJP PROTEST]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mev746gb/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த கல்வியாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march">சோனம் வாங்சுக்</a> நேற்று முன் தினம் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். </p> <h2>பேரணி</h2><p>இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். பேரணிக்கு தடை விதித்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>இன்று காலை தடுப்புகளை தாண்ட முயன்றவர்கள் மீது போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.</p> <h2>பலத்த பாதுகாப்பு</h2><p>போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவியத் தொடங்கியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.</p><p>ஜந்தர் மந்தரை தவிர டெல்லியின் மற்ற இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படடுத்தப்பட்டுள்ளது.</p><p>முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்ற வடக்கு வாயில் மூடப்பட்ட‌து. நாடாளுமன்ற வளாகத்தில் துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். </p><h2>கண்ணீர் புகைகுண்டு</h2><p>இதனிடையே ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி அவர்களை கலைக்க முயன்றனர்.</p> <h2>உண்ணாவிரதம்</h2><p>இந்த போராட்டத்தில் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வந்த இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த இரு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர். நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த பாலிவுட் நடிகை ஷாபனா அஸ்மி உள்ளிட்டோர் அடைய குழு நேரில் சென்று மேற்கொண்ட சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும் பேரணி தொடங்க உள்ள நிலையில் சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கேயும் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.</p><p>சோனம் வாங்சுக், தன் கோரிக்கைகள் நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தை நிறுத்த மாட்டேன் என மருத்துவனையில் இருந்து கடிதம் எழுதியுள்ளார். மேலும் தான் நலமாக உள்ளதாகவும், பேரணியில் பங்கேற்க தன்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யுமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>பேச்சுவார்த்தை சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் காவல்துறையினரால் துணை ஆணையர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.</p><h2>மாநிலங்களவை</h2><p>சிஜேபி போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களவை தலைவர் ஜேபி நாட்டவை தனியே சந்திக்க திட்டமிட்டுள்ளனர். சிஜேபி போராட்டம் குறித்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி முழக்கமிட்டதால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>அவையில் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான மல்லிகார்ஜுன கார்கே தங்களுக்கு ஆதரவாக பேசியதற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இங்கிலாந்தின் புதிய பிரதமராக இன்று பதவியேற்கிறார் ஆண்டி பர்ன்ஹாம்</title><link>https://www.maalaimalar.com/news/world/uk-s-new-prime-minister-andy-burnham-to-be-sworn-in-today</link><comments>https://www.maalaimalar.com/news/world/uk-s-new-prime-minister-andy-burnham-to-be-sworn-in-today#comments</comments><guid isPermaLink="false">e8d35bc5-d8c2-4a82-bc17-1a90b319336d</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:08:32 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:08:32.517Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>England,england PM,இங்கிலாந்து,Andy Burnham,ஆண்டி பர்ன்ஹாம்,இங்கிலாந்து பிரதமர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/p30p46c8/Andy.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Andy burnham]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/p30p46c8/Andy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (திங்கட்கிழமை) ராஜினாமா செய்கிறார். 2016-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதில் இருந்து 6 பிரதமர்களும், 2022-ம் ஆண்டு தொடங்கி 4 பிரதமர்களும் ராஜினாமா செய்தனர்.</p><p>தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று மன்னர் சார்லசை சந்தித்துத் தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை வழங்குகிறார். </p><p>அதைத் தொடர்ந்து, ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவரான ஆண்டி பர்ன்ஹாமை மன்னர் சந்திக்கிறார். புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு அவருக்கு மன்னர் முறைப்படி அழைப்பு விடுப்பார்.</p><p>புதிய பிரதமர் மன்னரின் கையை முத்தமிட்டுத் தனது விசுவாசத்தை உறுதிப்படுத்துவதை தொடர்ந்து அதிகாரப்பூர்வமாகப் பிரதமராக அறிவிக்கப்படுவார்.</p><p>அரண்மனையிலிருந்து வெளியேறியவு டன், புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் லண்டனில் உள்ள அதிகாரப் பூர்வ பிரதமர் இல்ல (10 டவுனிங் தெரு) வாசலில் நாட்டு மக்களுக்குத் தனது முதல் உரையை நிகழ்த்துகிறார்.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/1000-supporters-of-cve-shanmugam-in-villupuram-district-resign-en-masse</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/1000-supporters-of-cve-shanmugam-in-villupuram-district-resign-en-masse#comments</comments><guid isPermaLink="false">4cdbf461-721a-437e-a832-36244f78c95f</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:05:09 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:05:09.008Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,சிவி சண்முகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ccp87hfa/villupuram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கட்சி பதவிகளை ராஜினாமா செய்வதற்காக சென்னை செல்ல திண்டிவனத்தில் திரண்டிருந்த சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ccp87hfa/villupuram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் இன்றைய சென்னை பயணம் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</aside><p>சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த கட்சியில் உள்கட்சி பூசல் வெடித்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சி.வி.சண்முகம்</a> தலைமையில் எம்.எல். ஏ.க்கள் அணி திரண்டனர்.</p><p>இவர்களில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் பின்னர் மனம் மாறி எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து விட்டனர். </p><h2><strong>கட்சி பதவிகள் பறிப்பு</strong></h2><p>இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.</p><p>தொடர்ந்து மோதல் போக்கு நீடித்த நிலையில் கடந்த 16-ந்தேதி சி.வி. சண்முகத்தின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped">ஆதரவாளர்கள்</a> 11 பேரின் கட்சி பதவிகளை பறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். </p><h2><strong>கூண்டோடு ராஜினாமா</strong></h2><p>இந்த நிலையில், திண்டிவனம் முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமையில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என 1000-த்திற்கும் மேற்பட்ட சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். தங்களது ராஜினாமா கடிதத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சென்று கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.</p><p>அதன்படி இன்று காலை முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமையில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000-த்திற்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திரண்டனர். </p><p>பின்னர் அவர்கள் 5 வேன்கள், 50-க்கும் மேற்பட்ட கார்களில் சென்னை நோக்கி புறப்பட்டனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு செல்லும் அவர்கள் அங்கு தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர். </p><p>முன்னதாக அவர்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிக்கு நேரில் சென்றும் முறையிட இருக்கிறார்கள். சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் இன்றைய சென்னை பயணம் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>எலும்புகள் எல்லோருக்கும் உண்டு - வன்னி அரசு பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-speech-vanni-arasu-condemned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-speech-vanni-arasu-condemned#comments</comments><guid isPermaLink="false">1f8bbfc9-0341-4360-9d1e-5d91ca03e89e</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:38:34 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:38:34.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,vanni arasu,வன்னி அரசு,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1nwatcxx/vanniyarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1nwatcxx/vanniyarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.</p><h2>அனிதா ராதாகிருஷ்ணன்</h2><p>ஏற்கனவே மேனாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.</p><p>மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.</p> <p>சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர் மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p>எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான்  நினைவுபடுத்த விரும்புகிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>திமுக பொதுக்கூட்டம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-vilathikulam-dmk-mla-under-three-sections">மார்க்கண்டேயன்</a> முதலமைச்சர் விஜய்யை குறித்து விமர்சித்து பேசி இருந்தார்.</p><p>கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியதாவது, விஜய் போன்ற ஒருவரை இதற்கு முன்பு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பெற்றது கிடையாது. இனி வரும் தேர்தல்களில் 5 சதவீத வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்று போகும்.</p> <h2>எலும்பை உடைப்போம்</h2><p>சட்டமன்றத்தை கூட்டும் போது உங்கள் எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம். சட்டமன்றத்தை கூட்டிப் பாருங்கள். யார் ஓடியது? என்பது தெரியும்.</p><p>கரூரில் கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கேரவனில் யாரை வைத்துக் கொண்டு ஓடுனீர்கள். பேய் அடிச்சது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்களே.</p><p>கொத்து பரோட்டா போட போறாராம். உங்களை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம். இன்றைக்கு தமிழகத்தில் அந்த அன்பு மகளை போன்று, 3 வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை யாரும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை. இன்று தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று பேசினார்.</p><p>முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதையடுத்து முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது தூத்துக்குடி போலீசார் கொலை மிரட்டல், அவமதிப்பு பேச்சு, தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>
நலமாக உள்ளேன்.. பேரணியில் பங்கேற்க என்னை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் - மருத்துவ அறிக்கைக்கு இடையில் வாங்சுக் வேண்டுகோள் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march#comments</comments><guid isPermaLink="false">06fdd6cb-ef0d-4c7b-a9b8-bfad79c1d376</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:34:05 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:34:05.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/vzg6xcfu/tn-25.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/vzg6xcfu/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்டவற்றால் நாட்டின் கல்வித் துறையை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்ற நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன.</p><p>இதனை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அமைப்புகளாகவும், தன்னிச்சையாகவும் வந்து கலந்துகொண்டு 1 மாத காலமாக போராடி வருகின்றனர்.</p><p>குறிப்பாக இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.</p><h2>பேரணி</h2><p>இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.</p><p>ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார் மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.</p><p>பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டி  டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றதால், கூட்டத்தைக் கலைக்க போலீசார் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-youth-march-to-parliament-stopped-with-lathicharge-in-delhi">தடியடி </a>நடத்தினர்.</p><p>டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரைத் தவிர பிற பகுதிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதித்து, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. </p><p>மேலும் நகரின் 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் வேலைகளுக்கு செல்வோர் ரெயில் கிடைக்காமல் அவதியுற்றனர். </p><p>தடைகள் இருந்தபோதிலும் ஜந்தர் மந்தரில் அதிகளவில் கூடியுள்ள இளைஞர்கள் பேரணியை தொடங்க மும்முரம் காட்டி வருகின்றனர்.</p> <h2>சோனம் வாங்சுக் உடல்நிலை</h2><p>இன்று காலை 10 மணிக்கு சப்தர்ஜங் அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், <a href="https://www.maalaimalar.com/topic/sonam-wangchuk">சோனம் வாங்சுக் </a>உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலை சிறப்பு மருத்தவ நிபுணர் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.</p><h2>சோனம் வாங்சுக் ஆர்வம்</h2><p>தான் நலமாக உள்ளதாகவும் நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் தான் பங்கேற்க ஏதுவாக தன்னை டிஸ்சார்ஜ் செய்ய சோனம் வாங்சுக் கோரியுள்ளார்.</p><p>அவர் தன் எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில்,</p><p>"இன்று எனது உடல்நிலை மிகவும் சீராக, நலமாக உள்ளது. எனவே, இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் நான் கலந்துகொள்ளும் வகையில், தற்காலிகமாகவாவது என்னை மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>போராட்டத்திற்கு இடையே, சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் காவல்துறையினரால் துணை ஆணையர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>இது குறித்துப் பேசிய சௌரவ் தாஸ், "கல்வித் துறை சீர்திருத்தங்கள் குறித்த எங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.</p><p>நிர்வாகத் தரப்பிலிருந்து இந்த அழைப்பு மிகவும் தாமதமாக வந்திருந்தாலும், கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளை தடுக்க நாங்கள் விவாதத்திற்குத் தயாராக உள்ளோம்" என்று கூறினார்.</p><h2>உண்ணாவிரதம் தொடரும்</h2><p>இதனிடையே மத்திய அரசு தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்கும் வரையோ, அல்லது இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வித் துறை குறித்து விவாதிப்போம் என்று உறுதியளிக்கும் வரையோ தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று சோனம் வாங்சுக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>குறுங்காலீஸ்வரர் கோவில் தல வரலாறு</title><link>https://www.maalaimalar.com/spirituality/kurungaleeswarar-temple-history</link><comments>https://www.maalaimalar.com/spirituality/kurungaleeswarar-temple-history#comments</comments><guid isPermaLink="false">64f6cf1b-0e18-4d6e-b7d0-055e22353911</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:32:07 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:32:07.947Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Spirituality,worship,தல வரலாறு,கோயம்பேடு,devotional</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/r56u5xy7/news-3.png" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குறுங்காலீஸ்வரர் கோவில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/r56u5xy7/news-3.png?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் குறுங்காலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. குச மற்றும் லவர்கள் ராமரின் அஸ்வமேத யாகக் குதிரையைக் கட்டி, அதை அம்புகளால் வேலியிட்டு (அம்பு-வேலி-பேடு) தடுத்த இடமே 'கோயம்பேடு' என்று மருவியதாக கூறப்படுகிறது.</p><p>இறைவன்: குறுங்காலீஸ்வர்</p><p>இறைவி: தர்மசம்வர்த்தினி</p><p>தலவிருட்சம்: மகிழ மரம்</p><h2>தல வரலாறு</h2><p>சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். </p><p>தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக குள்ளமாக காட்சி தருகிறார். </p><p>இதனால் சுவாமிக்கு குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் உண்டானது. குசலவம் என்றால் குள்ளம் என்றும் பொருள் உண்டு. இந்த ஆலயம் பிற்கால சோழர்கள் காலத்தில், குறிப்பாக முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டுள்ளது.</p><p>வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இக்கோவில் விளங்கி வருகிறது. அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பற்ற பின்பு, சீதையன் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். </p><p>சீதையின் கற்பை நிருபிக்க ராமர் சீதையை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய சீதை, லவன், குசன் என்னும் இரு மகன்களை பெற்றெடுத்தாள் . ராமர் தனது தந்தை என தெரியாமலேயே, லவகுசர் வளர்ந்தனர். </p><p>இந்நேரத்தில் ராமபிரான், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற லவகுசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவை காட்டுக்கு அனுப்பிவிட்டதை அறிந்தும் ராமபிரான் மீது கோபம்மடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர்.</p><p>அப்போது ஒரு யாகக் குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிபோட்டுவிட்டனர். குதிரையுடன் வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்சுமணருடனும் போரிட்டு வென்றனர். இவர்களைத் தேடி ராமனும் இங்கு வந்தார்.</p><p>இதையறிந்த வால்மீகி லவகுசர்களிடம், ராமனே அவர்களது தந்தை என்பதையும், அவர்களது அன்னையே சீதா என்பதையும், எந்தச் சுழ்நிலையில் சீதாதேவியை ராமபிரான் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார்.</p><p>இருப்பினும், தந்தையை எதிர்த்ததால் லவகுசருக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டது. வால்மீகியின் ஆலசோனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து தோஷம் நீங்கப்பெற்றனர். சுவாமிக்கு குசலவபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது.</p><h2>சிறப்பு</h2><p>பித்ரு தோஷம் உள்ளவர்கள், மகாளய அமாவாசை போன்ற நாட்களில் இங்குள்ள குசலவ தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டால் முன்னோர்களின் சாபம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.</p><p>ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் ஆலிங்கண சரபேஸ்வரர் பெருமானுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகிறது.</p><h2>நடை திறந்திருக்கும் நேரம்</h2><p>காலை 5.30 மணி முதல் 12 மணி வரை</p><p>மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை</p>]]></content:encoded></item><item><title>பா.ம.க.வின்  19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-release-pmk-19th-agricultural-shadow-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-release-pmk-19th-agricultural-shadow-budget#comments</comments><guid isPermaLink="false">454180a1-952a-429d-9307-925bdaf59cb4</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:13:18 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:13:18.889Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,வேளான் நிழல் நிதிநிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/3lqolaap/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க.சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/3lqolaap/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று வெளியிட்டார்.</aside><p>பின்னர் நிருபர்களிடம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அவர்</a> கூறியதாவது:-</p><p>2026 மற்றும் 27ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை மொத்தம் ரூ.93,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.68,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத் திட்டங்களுக்காக நீர்வளத்துறை மூலம் ரூ.25,000 கோடி செலவிடப்படும்.</p><h2><strong>வேளாண் துறை</strong></h2><p>2025 மற்றும் 26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் (தி.மு‌.க) நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.15,230.30 கோடியுடன் ஒப்பிடும் போது, இது 446 சதவீதம் அதிகம்.</p><p>வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.13,000 கோடி உழவர்கள் இடுபொருள் மானியத்திற்கு செலவிடப்படும்.</p><p>வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி செலவிடப்படும்.</p><p>பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.</p><p>பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.</p><p>தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25 சதவீதம் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதன்படி, நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பான ரூ.6 லட்சம் கோடியில் ரூ.1.5 லட்சம் கோடி வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>வேளாண்மை, நீர்வளத்துறைக்கு மட்டும் ரூ.93,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வேளாண்மை சார்ந்த கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றில் வேளாண்மை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் ரூ.57,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலையில், பாசனத் தேவைகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.5,000 சிறப்பு மானியம் வழங்கப்படும்.</p><p>நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால் ஏற்படும் இழப்பைக் கருத்தில் கொண்டு, உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும்.</p><h2><strong>பாமக தேர்தல் அறிக்கை</strong></h2><p>கூட்டுறவு வங்கிகளில் இருந்து உழவர்கள் வாங்கிய பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இதற்கான தொகையை அரசே வெளிச் சந்தையில் இருந்து கடனாக வாங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தும்.</p><p>பொதுத்துறை வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களில் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை அரசே ஏற்றுக் கொண்டு நேரடியாக செலுத்தும்.</p><p>கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெறும் குறுகியகால கடன்களுக்கு 10 சதவீதம் மானியம் வழங்கப்படும். ரூ.1 லட்சம் கடன் வாங்கினால், ரூ.90,000 திருப்பி செலுத்தினால் போதுமானது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/பாமக">பாமக</a> தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் வகையில், வேளாண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இது 3 தவணைகளில் வழங்கப்படும். </p><p>உழவர்களின் வாரிசுகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இக்கட்டணத்தை அரசே செலுத்தும்.</p><p>நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.</p><h2><strong>நெல் கொள்முதல்</strong></h2><p>வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்தப்படும்.</p><p>நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய 6,000 நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>கொள்முதல் பணிகளை மேற்கொள்ள 38,866 பருவகாலப் பணியாளர்கள் பணிநிலைப்பு செய்யப்படுவார்கள். 12,000 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.</p><p>தமிழ்நாட்டில் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாகும் வகையில், வேளாண் விளைபொருள்கள் சட்டம் 2026 இயற்றப்படும்.</p><p>கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதைத் தடுக்கும் வகையில், உழவர்கள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் அதே நாளில் கொள்முதல் செய்யப்படும்.</p><p>கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாத்து வைப்பதற்காக, அரசு கிடங்குகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 302-லிருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 1000ஆக உயர்த்தப்படும்.</p><p>காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.</p><p>அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.</p><p>நெல் கொள்முதல் அளவு ரூ.70 லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும்.</p><p>தமிழ்நாட்டில் துவரம்பருப்பு சாகுபடி செய்யப்படும் பரப்பு இப்போதுள்ள 1.25 இலட்சம் ஏக்கரில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.</p><p>துவரம் பருப்பு சாகுபடி செய்யும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p><p>எண்ணெய் வித்துப் பயிர்களான எள் சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 50 ஆயிரம் ஏக்கர் வீதமும், சூரியகாந்தி சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 25 ஆயிரம் வீதமும் அதிகரிக்கப்படும்.</p><p>நிலக்கடலை சாகுபடி பரப்பு 5.62 லட்சம் ஏக்கரில் இருந்து 7 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.</p><p>எண்ணெய் வித்துப் பயிர்களை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p><p>மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உழவர்களிடம் இருந்து நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு, மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.</p><p>நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவையும் நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும்.</p><p>நீர்ப்பாசனம் திட்டம் மற்றும் கொள்முதல் செய்த உணவுப் பொருட்களை திமுக, அரசால் பாதுக்காக்க முடியவில்லை.  தமிழ்நாட்டில் ஒருநாளைக்கு 2 விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரானின் அணு உலை மீது அமெரிக்கா தாக்குதல்.. &apos;மறக்க முடியாத பாடம் கற்பிப்போம்&apos; என மொஜ்தபா சூளுரை</title><link>https://www.maalaimalar.com/news/world/us-airstrikes-on-iran-nuclear-site-darkhovin-reactor-and-key-southern-infrastructure-hit</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-airstrikes-on-iran-nuclear-site-darkhovin-reactor-and-key-southern-infrastructure-hit#comments</comments><guid isPermaLink="false">bc1f044f-c945-46f4-9810-3a9da47bf469</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:10:16 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:10:16.003Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,அணுஉலை,Nuclear Reactor,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xbk0399f/iran-war.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மொஜ்தபா ]]></media:title><media:description type="html"><![CDATA[ மொஜ்தபா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xbk0399f/iran-war.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானின் தென்மேற்குப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மிக முக்கியத்துவம் வாய்ந்த 'தர்கோவின்' (Darkhovin) அணு உலை மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஈரான் அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-says-it-has-begun-new-round-of-airstrikes-targeting-iran">ஈரானின் </a>தெற்கு மாகாணங்களை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கும் நோக்கத்துடன், தெற்கு ஈரானில் உள்ள முக்கிய பாலங்கள், ரெயில் பாதைகள், மின் நிலையங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகளை அமெரிக்க விமானப்படை தாக்கி வருகிறது. </p><p>இதனால் அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மருத்துவமனைகள் காலி செய்யப்பட்டு, பள்ளித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.</p> <h2>குவைத், பஹ்ரைனில் தாக்குதல்</h2><p>இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.</p><p>பஹ்ரைனிலும் இதேபோன்ற தாக்குதல்கள் நடந்ததையடுத்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>ஈரான் ஏவிய பல ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு அழித்துவிட்டதாக பஹ்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.</p> <h2>ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடு</h2><p>இதற்கிடையே, சர்வதேச வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை ஈரான் முழுமையாகத் தன்வசப்படுத்தியுள்ளதுடன், வர்த்தகக் கப்பல்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது.</p><p>எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்கள் ஓமன் கடற்கரை வழியாகச் செல்வதற்குப் பதிலாக ஈரானின் கடற்கரையை ஒட்டிய பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தங்களது முன் அனுமதியின்றிப் பயணித்தால் மீண்டும் ஆபத்தை சந்திக்க நேரிடும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.</p> <h2>எச்சரிக்கை</h2><p>அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தால், அமெரிக்காவிற்கு ‘மறக்க முடியாத பாடத்தை’ கற்பிப்போம் என்று ஈரானின் உச்சத் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/world/irans-new-supreme-leader-to-appear-publicly-at-tehran-memorial-for-ayatollah-ali-khamenei">மொஜ்தபா காமெனி</a> அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p> <h2>அமெரிக்க வீரர்கள்</h2><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவரைக் காணவில்லை</p><p>இதன் மூலம் இந்தப் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 430க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.</p><p>அமெரிக்க வீரர்களின் மரணம் மிகவும் துயரமளிப்பதாக தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எந்தவொரு சூழ்நிலையிலும் ஈரான் அணு ஆயுதங்களை பெற அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தேசிய விருது வென்றவர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-surya-congratulates-national-award-winners</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-surya-congratulates-national-award-winners#comments</comments><guid isPermaLink="false">1a00fd30-fb7c-4fe7-8d43-a2a03c0be358</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:01:14 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:01:14.345Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய விருது,national award,நடிகர் சூர்யா,Actor Suriya</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/kh77yr04/Surya.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Surya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/kh77yr04/Surya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சினிமாவில் உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.</p><h2>தேசிய விருது</h2><p>அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் திரை உலகம் 10 தேசிய விருதுகளை வென்றுள்ளது.   </p><p>தொடர்ந்து தேசிய விருது வென்றவர்களுக்கு முதலமைச்சர் விஜய், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், நடிகர் சூர்யா தேசிய விருது வென்றவரகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>நடிகர் சூர்யா நெகிழ்ச்சி</p><p>இதுகுறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>72-வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைத்துக் வெற்றியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். எனது மூத்தக் கலைஞர்களுக்கும் நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். சிறந்த படைப்புகளைத் தருவதற்கான உங்களின் இந்த தொடர் முயற்சி இந்தியச் சினிமா உலகை மேலும் செழுமைப்படுத்துகிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Many congratulations to all the winners of the <a href="https://x.com/hashtag/72ndNationalFilmAwards?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#72ndNationalFilmAwards</a>.<br>Heartfelt wishes to my seniors and friends. Your pursuit of excellence enriches the world of Indian cinema.</p>&mdash; Suriya Sivakumar (@Suriya_offl) <a href="https://x.com/Suriya_offl/status/2079044667501682817?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?- மு.க.ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">38fac6f0-6cb4-47b4-af57-e554afb49bb7</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:42:54 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:42:54.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,TN Govt,தமிழக அரசு,முக ஸ்டாலின்,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gjfb9us9/MKstalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gjfb9us9/MKstalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.</aside><h2><strong>கண்டனம்</strong></h2><p>தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F">மார்க்கண்டேயன்</a> அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>மனித உரிமைகளும் கூட மறுக்கப்பட்டுள்ளன</strong></h2><p>ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.</p><p>"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?</p><p>கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>கைது செய்வது ஏன்?</strong></h2><p> தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?</p><p>மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?</p><p>ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br><br>ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்,…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2079089859294310618?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நீட், ராமர் கோவில் முறைகேடு.. எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-lok-sabha-adjourned-amid-opposition-protests-over-neet-and-ayodhya-ram-temple-trust-funds</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-lok-sabha-adjourned-amid-opposition-protests-over-neet-and-ayodhya-ram-temple-trust-funds#comments</comments><guid isPermaLink="false">04774660-0332-4384-b7fe-ffffc97c38d6</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:14:25 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:14:25.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,பாராளுமன்ற கூட்டத்தொடர்,சபாநாயகர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/j5rgjnq7/tn-24.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ நாடாளுமன்றம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நாடாளுமன்றம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/j5rgjnq7/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-begin-today">நாடாளுமன்ற மழைக்காக கூட்டத்தொடர்</a> இன்று தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவை கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. </p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்னிருத்தி போர்க்கோலம் பூண்டது. </p><p>இன்று அவை கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கங்கள் மற்றும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை  நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><h2>ஒத்திவைப்பு</h2><p>நீட் தேர்வு சர்ச்சை மற்றும் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிதி முறைகேடு புகார் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இந்தச் சலசலப்பில் ஈடுபட்டன.</p><p>மக்களவை தொடங்கியதும், சபாநாயகர் ஓம் பிர்லா முன்னாள் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.</p><p>இரங்கல் குறிப்புகள் வாசித்து முடிக்கப்பட்ட உடனே, நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அயோத்தி ராம ஜன்மபூமி அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.</p><p>அவையின் அமளிக்கு இடையே, சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்களை அமைதி காக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார்.</p><p>எனினும், முழக்கங்கள் தொடர்ந்ததால் சபாநாயகர் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதேபோல மாநிலங்களவையும்  ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>காங்கிரஸ் குற்றச்சாட்டு</h2><p>இது குறித்துசெய்திலாயர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய், "மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இல்லை என்பது கடந்த சில நாட்களாகவே தெளிவாக புலப்படுகிறது.</p><p>ராமர் கோவில் விவகாரமோ அல்லது நீட் விவகாரமோ நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பதை அவர்களால் இதுவரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.</p><p>இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முக்கியப் பிரச்சினைகள் இவைதான் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும், ஆனால் அரசிடம் முறையான திட்டம் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.</p><p>முன்னதாக, காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், ராமர் கோவில் அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியிருந்தார்.</p><p>அதேபோல், பல எதிர்க்கட்சித் தலைவர்களும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் குறித்து விவாதிக்கக் கோரி நோட்டீஸ் அளித்திருந்தனர்.</p><h2>ஜந்தர் மந்தரில் குழப்பம்</h2><p>இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.</p><p>ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார் மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.</p><p>இந்த சூழலில் பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டிய டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>உலக சதுரங்க நாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/world-chess-day-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/world-chess-day-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">e93913c8-1048-4b2b-9e4f-a8c2845ee326</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:12:51 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:12:51.336Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,World Chess Day,உலக சதுரங்க நாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4gyzaz9h/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay -  Praggnanandhaa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4gyzaz9h/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>உலக சதுரங்க நாளான இன்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested">விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்</h2><p>இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, செல்வி வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகள். </p><p>உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறி வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு நமது அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <h2>சர்வதேச சதுரங்க தினம்</h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று சர்வதேச சதுரங்க தினம் (International Chess Day) கொண்டாடப்படுகிறது. 1924 ஆம் ஆண்டு இதே நாளில் உலக சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்டது. இந்த நாளை சதுரங்க விளையாட்டுக்கான சர்வதேச ஒத்துழைப்பை ஆதரிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.</p><h2>பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு</h2><p>1924-ம் ஆண்டு ஜூலை 20 பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் 'பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு' (FIDE) தொடங்கப்பட்டது.</p><p>'பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில், 1966-ம் ஆண்டு முதல் ஜூலை 20-ஐ சர்வதேச சதுரங்க நாளாகக் கொண்டாட யுனெஸ்கோ (UNESCO) முன்மொழிந்தது.</p><p>2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) இந்த நாளை அதிகாரப்பூர்வமாக உலக சதுரங்க நாளாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது.</p><h2>சதுரங்கம்</h2><p>சதுரங்கம் வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. இது வியூகங்களை வகுத்தல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் மூளையின் உடற்பயிற்சிக் கூடமாகும்.</p><p>மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்கவும், முடிவெடுக்கும் திறனை வளர்க்கவும் பள்ளிகளில் சதுரங்கத்தை ஒரு கல்விச் கருவியாக மாற்றுவதை இந்நாள் ஊக்குவிக்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் கவிதா அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/local-holiday-for-thiruvallur-district-on-aug-6th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/local-holiday-for-thiruvallur-district-on-aug-6th#comments</comments><guid isPermaLink="false">f2396a00-20a1-4788-a8ef-47068797740b</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:01:53 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:01:53.535Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உள்ளூர் விடுமுறை,aadi krithigai,Tiruttani Murugan Temple,திருத்தணி முருகன் கோவில்,ஆடிக்கிருத்திகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/n8lh46fh/tiruvallur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருவள்ளூர் மாவட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர் மாவட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/n8lh46fh/tiruvallur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</aside><h2><strong>ஆடிக்கிருத்திகை</strong></h2><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திருத்தணி முருகன் கோவில் திகழ்கிறது.</p><p>கோவிலில் ஆண்டு தோறும் <a href="https://www.maalaimalar.com/topic/ஆடிக்கிருத்திகை">ஆடிக்கிருத்திகை</a> விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா அடுத்த மாதம் 6-ந்தேதி (வியாழக்கிழமை) வருகிறது.</p><p>இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திருத்தணி முருகன் கோவிலுக்கு திரளாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>உள்ளூர் விடுமுறை</strong></h2><p>இதையடுத்து ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.</p><p>இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-</p><p>திருத்தணியில் உள்ள முருகப்பெருமானின் 5-ம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் நடைபெற இருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.</p><p>இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச் சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் சார் நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு 6.8.2026 அன்று செயல்பட வேண்டும். </p><p>இந்த விடுமுறைநாளை ஈடுசெய்யும் பொருட்டு 8.8.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சோழிங்கநல்லூர் அருகே சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பேருந்து- 6 பேர் படுகாயம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/municipal-bus-overturns-in-marshland-near-sholinganallur-6-injured</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/municipal-bus-overturns-in-marshland-near-sholinganallur-6-injured#comments</comments><guid isPermaLink="false">cb17767b-2d99-40a0-950c-c4a779e423bc</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:58:40 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:58:40.559Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bus accident,சாலை விபத்து,road accident,பேருந்து விபத்து,சோழிங்கநல்லூர்,sozhinganallur</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/9jesai93/bus2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bus accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/9jesai93/bus2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் லாரிக்கு வழிவிட இடது புறம் திருப்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பஸ், சதுப்பு நிலத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.</p><p>மாநகர பேருந்து</p><p>சென்னை அடையாறில் இருந்து மேற்கு தாம்பரம் நோக்கி நேற்று பகல் சுமார் 1.30 மணியளவில் மாநகர பஸ்(தடம் எண் 99) சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சாமிதாஸ்(வயது 50) ஓட்டினார். கண்டக்டராக ராமச்சந்திரன் பணியில் இருந்தார். பஸ்சில் சுமார் 20 பேர் பயணம் செய்தனர்.</p><p>பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக வந்த பஸ், பின்னர் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் வழியாக மேடவாக்கம் செல்லும் செம்மொழி பூங்கா சாலையில் சென்று கொண்டிருந்தது.</p><p>பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. மேலும், சதுப்பு நிலத்தில் இருந்து மழைநீர் செல்ல சாலையின் நடுவே தரைப்பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இதனால் சாலையின் ஒரு பகுதியில் வாகனங்கள் ஒருவழி பாதையாக சென்று வருகின்றன.</p><h2>சதுப்பு நிலத்தில் கவிழ்ந்தது</h2><p>அப்போது, எதிரே லாரி ஒன்று வந்தது. அந்த லாரிக்கு வழிவிடுவதற்காக டிரைவர் சாமிதாஸ், பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் இடதுபுறம் உள்ள சதுப்பு நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.</p><p>உடனடியாக அந்த சாலையில் சென்றவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களின் உதவியுடன் பஸ்சில் இருந்த சுமார் 20 பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டரை மீட்டனர்.</p><h2>6 பேர் காயம்</h2><p>இந்த விபத்தில் டிரைவர் சாமிதாஸ் காயம் அடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், லேசான காயம் அடைந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கண்டக்டர் மற்றும் இதர 15 பயணிகள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.</p><p>விபத்து காரணமாக அந்த சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், சரவணன், பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ் பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.</p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>மாநகர போக்குவரத்து அதிகாரிகள், பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், செம்மஞ்சேரி போலீசார் ஆகியோர் 2 ராட்சத கிரேன்களை வரவழைத்து சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பஸ்சை மீட்டனர். இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி நொறுங்கியதுடன், முன்பகுதி சேதமடைந்தது.</p><p>இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: பாராளுமன்றம் நோக்கி பேரணிக்கு ஆயத்தம்.. ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மீது தடியடி </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-youth-march-to-parliament-stopped-with-lathicharge-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-youth-march-to-parliament-stopped-with-lathicharge-in-delhi#comments</comments><guid isPermaLink="false">7128e287-4e58-4a06-b295-7271896099ab</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:32:41 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:32:41.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,உண்ணாவிரதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/bxq4zjpf/tn-23.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஜந்தர் மந்தரில் தடியடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜந்தர் மந்தரில் தடியடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/bxq4zjpf/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்டவற்றால் நாட்டின் கல்வித் துறையை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்ற நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன. </p><p>இதனை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அமைப்புகளாகவும், தன்னிச்சையாகவும் வந்து கலந்துகொண்டு 1 மாத காலமாக போராடி வருகின்றனர். </p><p>குறிப்பாக இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். </p><h2>போலீஸ் குவிப்பு</h2><p>இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.</p><p>ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார்  மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.</p><p>சற்று நேரத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி, தொடரின் முன் பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம், தொடரை ஆக்கபூர்வமாக நடத்த எதிர்கட்சியினரை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.</p><p>இந்த சூழலில் பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டிய டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியுள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">LATEST: as feared, lathi charge, instances of stone pelting and total chaos at Jantar Mantar. In a democracy, the streets should never become a battlefield! Dialogue is being defeated by disorder sadly. Or is this designed to discredit what was a remarkably peaceful and organic… <a href="https://t.co/mpZs5RZTnU">pic.twitter.com/mpZs5RZTnU</a></p>&mdash; Rajdeep Sardesai (@sardesairajdeep) <a href="https://x.com/sardesairajdeep/status/2079070975715606732?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பேரணிக்கு பெருகும் ஆதரவு</h2><p>தடைகள் இருந்தபோதிலும் ஜந்தர் மந்தரில் அதிகளவில் கூடியுள்ள இளைஞர்கள் பேரணியை தொடங்க மும்முரம் காட்டி வருகின்றனர்.</p><p>எதனாலும் கரப்பான்பூச்சிகளை தடுக்க முடியாது என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>பேரணிக்காக மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் தனது வாழ்த்துக்களை தெரிவித்தனுப்பியுள்ளார்.</p><p>இந்த பேரணியில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ஜந்தர் மந்தர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>இதனிடையே பேரணியை அமைதியான முறையில் நடத்துமாறு சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ அழைப்பு விடுத்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Delhi: Protesters were stopped near Kerala House while attempting to proceed towards the designated protest site at Jantar Mantar <a href="https://t.co/FIkcw8aqjC">pic.twitter.com/FIkcw8aqjC</a></p>&mdash; IANS (@ians_india) <a href="https://x.com/ians_india/status/2079070558990590267?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4l9rfjwx/janthar-manthar.jpg" /></figure><h2>உண்ணாவிரதம் நிறைவு</h2><p>சோனம் வாங்சுகை போல இந்த போராட்டத்தில் கடந்த 23 நாட்களாக அகில இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 3 மாணவ செயல்பாட்டார்கள் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இன்று தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.</p><p>அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்த நிலையில் இன்று போராட்ட களத்திற்கு வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், பாலிவுட் மூத்த நடிகை ஷாபனா அஸ்மி, எம்.பி. மனோஜ் ஜா, அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் நீண்ட அறிவுறுத்தலின் பேரில் அம்மாணவர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.</p><p>தனது நிபந்தனைகளை ஏற்றால் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக சோனம் வாங்சுக் முன்னதாக மருத்துவமனையில் இருந்து செய்தி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-to-hold-further-consultations-for-five-days-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-to-hold-further-consultations-for-five-days-starting-today#comments</comments><guid isPermaLink="false">f8312ac4-143d-4ef2-afbf-5c142d2fee6f</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:27:36 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:27:36.373Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,அதிமுக நிர்வாகிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gb12uu4u/EdappadiPalaniswami004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gb12uu4u/EdappadiPalaniswami004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</aside><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.</p><p>கடந்த 15-ந்தேதி முதல் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் திருவள்ளூர், புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இடையில் சில நாட்கள் ஆலோசனை நடைபெறாமல் இருந்தது.</p> <h2><strong>மீண்டும் ஆலோசனை</strong></h2><p>இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped">எடப்பாடி பழனிசாமி</a> இன்று முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் மீண்டும்  ஆலோசனை மேற்கொள்கிறார். இன்றைய கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். </p><h2><strong>தென்காசி</strong></h2><p>நாளை தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனும், 22-ந்தேதி திருப்பூர், நாமக்கல், வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் 23-ந்தேதி கோவை, திண்டுக்கல், வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.</p><p>24-ந்தேதி விழுப்புரம், திருவாரூர், சேலம் மாவட்ட நிர்வாகிகளும் 25-ந்தேதி கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை, திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். </p><h2><strong>அதிரடி மாற்றங்கள்</strong></h2><p>சென்னையில் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. </p><p>சட்டமன்ற தேர்தலில் தலைநகரில் தொடர்ந்து தோல்வியை தழுவுவது ஏன்? என்பது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் அவர் விளக்கங்களை கேட்டு அதற்கான காரணத்தை கண்டறியவும் உத்தரவிட இருக்கிறார்.</p><p>எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.261 கோடி செலவு: RTI-யில் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/261-crore-spent-on-rajya-sabha-mps-in-two-years-rti-reply</link><comments>https://www.maalaimalar.com/news/national/261-crore-spent-on-rajya-sabha-mps-in-two-years-rti-reply#comments</comments><guid isPermaLink="false">e5ab64bf-f201-41ca-8550-d9577780d25d</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:22:45 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:22:45.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநிலங்களவை எம்பி,ஆர்டிஐ,rti,rajyasabha mp,செலவினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/l9alwnys/Rajyasabha-MP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajyasabha MPs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/l9alwnys/Rajyasabha-MP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலங்களவை எம்.பி.க்களின் சம்பளம், படிகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக கடந்த 2 நிதியாண்டுகளில் ரூ.261 கோடிக்கும் அதிகமாக அரசு செலவிட்டு உள்ளது.</p><h2>தகவல் அறியும் உரிமை சட்டம்</h2><p>மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்தர் சேகர் கவுர் என்பவர் நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் மாநிலங்களவையில் எம்.பி.க்களுக்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்த தகவல்களை கேட்டிருந்தார். அவருக்கு கிடைத்த பதில்களில் தெரியவந்த விவரங்கள் வருமாறு:-</p><h2>ரூ.261 கோடி</h2><p>2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக ரூ.261 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டு உள்ளது.</p><p>படி மற்றும் வசதிகளுக்காக 2024-25 நிதியாண்டில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக ரூ.98 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை 2025-26 நிதியாண்டில் கணிசமாக உயர்ந்து ரூ.163 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.65 கோடி கூடுதலாகும்.</p><h2>சம்பள செலவு</h2><p>2024-25-ல் எம்.பி.க்களின் சம்பளத்துக்காக ரூ.25.71 கோடிக்கும் அதிகமாகவும், மருத்துவச் செலவுகளுக்கு ரூ.8.2 கோடியும், சுற்றுப்பயணச் செலவுகளுக்கு ரூ.24.99 கோடியும், படிகளுக்காக ரூ.33.33 கோடிக்கும் அதிகமாகவும் செலவிடப்பட்டு உள்ளது.</p><p>அதேபோல், 2025-26-ல் சம்பளச் செலவு ரூ.44.6 கோடியாகவும். மருத்துவச் செலவு ரூ.9.6 கோடியாகவும், பயணச் செலவு ரூ.36 கோடியாகவும். படிகள் ரூ.58.78 கோடிக்கும் அதிகமாகவும் இருந்துள்ளது.</p><h2>என்னென்ன வசதிகளுக்கு அனுமதி</h2><p>மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சம்பளம். படிகள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணம். மருத்துவ வசதி. அலுவலக செலவுகள் உள்ளிட்ட 21 வகை யான செலவுத் தலைப்புகளின் கீழ் அரசு வசதிகளை வழங்குகிறது. அச்சிடுதல், டிஜிட்டல் சாதனங்கள், எரிபொருள், பராமரிப்பு மற்றும் பிற நிர்வாகச் செலவு களும் இதில் அடங்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>