<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 25 Aug 2026 14:52:25 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: பரந்தூரில் விமான நிலையம் வந்தால் சென்னையில் வெள்ளம் ஏற்படும்: அமைச்சர் கீர்த்தனா - 25 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026#comments</comments><guid isPermaLink="false">11be16ef-2d9c-4bff-90aa-9f30801d224f</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:42:39.167Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s5ar4m7s/keerthana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s5ar4m7s/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனிம வளத்துறை அமைச்சர் TK பிரபு பதிலுரை</p><p>* காணாமல் போன மலைகள். பட்டியலிட்ட அமைச்சர்</p><p>* 320 கோடி ஆண்டுகளுக்கு முன்னதான குன்றுகள், மலைகள் காணாமல் போகின.</p><p>* கழிவு கற்களை மறுசுழற்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்.</p><p>* 198 சட்டவிரோத குவாரிகளில் கண்டறியப்பட்ட FIR போடப்பட்டுள்ளது.</p><p>* ஆளில்லா விமானம், செயற்கைக்கோள் மூலம் கனிம சுரங்கம் கண்காணிப்பு</p><p>* ஆளில்லா விமானம், செயற்கைக்கோள் மூலம் கனிம சுரங்கம் கண்காணிப்பு</p><p>* குறைதீர்க்கும் மையம் அமைக்கப்படும்.</p><p>தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலுரை</p><p>* குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி மக்களுக்கு நன்றி</p><p>* 104 நிறுவனங்களுடன் MOU ஏற்பட்டுள்ளது.</p><p>* 25 புதிய நிறுவனங்கள் வந்துள்ளன.</p><p>* தற்போதுள்ள ஒப்பந்தங்கள் எல்லாம் டிரைலர்தான்.</p><p>* முதலீட்டார்கள் வருவதற்கு காரணம் லஞ்சம் இல்லை என்பதுதான்.</p><p>* அந்நிய முதலீடு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.</p><p>* வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>* ஜவுளித்துறையில் 16 திட்டங்கள்</p><p>* 58 சிப்காட் பூங்காவில் 8-ல் தண்ணீர் வசதி இல்லை.</p><p>* ஓசூரில் விமான நிலையம் அமைக்க முயற்சி.</p><p>* கங்கை கொண்டான் சிப்காட்டில் 2500 பேர் தங்கும் வகையில் தங்குமிடம்</p><p>* கங்கை கொண்டான் சிப்காட்டில் 2500 பேர் தங்கும் வகையில் தங்குமிடம்</p><p>* மனைகள் தொடர்பாக டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்</p><p>* விபத்துகளை தடுக்க டிஜிட்டல் கண்காணிப்பு</p><p>* செமிகண்டக்டர் துறையில் ஊக்கத்தொகை திட்டம்</p><p>* வெற்றி மகளிர் மேம்பாட்டுத் திட்டம்</p><p>*  உப்பள தொழிலாளர்களின் மழைக்கால நிவாரணம் 7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.</p> <p>அரசு கேபிள் டி.வி. மற்றும் நிர்வாகம் தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.</p><p>செயற்கை நுண்ணறிவு மூலம் முதலமைச்சர் DashBoard 2.0 உருவாக்கப்படும்</p><p>புத்தாக்க வாய்ப்பு மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும்- ஏ.ஐ. அமைச்சர் குமார்.</p><p>கடைசியில் இருக்கும் கிராமம் வரை டிஜிட்டல்</p><p>300 புதிய ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படும்</p><p>ஐஐடி உடன் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி</p><p>தரவு தள கட்டமைப்புகள் அமைக்கப்படும்</p><p>வெற்றித் தமிழ் இணையதளம்</p><p>ஏ.ஐ. ஆலோசனைக்குழு அமைத்தல்- ஏ.ஐ. அமைச்சர் குமார்</p><p>குடிநீர், மின்சாரம், சாலை என எந்த பிரச்சினையாக இருந்தாலும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல சிரமம் தேவையில்லை. தமிழ், ஆங்கிலம் படிக்க, எழுத முடியாமல் இருந்தாலும் சரி. வாய்ஸ் இருந்தால் போதும். ஏ.ஐ. புகாரை அறிந்து தானாகவே துறைக்கு கொண்டு சென்றுவிடும்- ஏ.ஐ. அமைச்சர் குமார்</p><p>சென்னையை நோக்கி வரும் ஏராளமான இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்பு பூமி வேளச்சேரி- ஏ.ஐ. அமைச்சர் குமார்</p><p>1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை கொண்டு வர செயற்கை நுண்ணறிவு முக்கிய காரணியாக இருக்கும்: ஏ.ஐ. அமைச்சர் குமார்</p><p>கரூரில் விமான நிலையம் கொண்டு வர கேட்டுக்கொள்கிறேன்- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>எனது தொகுதியில் சிட்கோ ஒன்று அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன்- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>அமராவதி ஆற்றில் ஆழ்துறை கிணறு அமைத்தால் தண்ணீர் தட்டுப்பாடு வராது- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>இல்லை இல்லை இல்லை என்றுதான் எனது தொகுதி உள்ளது- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>நாங்கள் தற்குறி கூட்டம் அல்ல, வெற்றிக் கூட்டம்., இன்னும் இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி. அது TVKவுக்கும் TVK-வுக்கும் இடையில்தான் போட்டி கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>பரமக்குடியில் ஒலிம்பிக் மைதானம் உருவாக உள்ளது- பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>வணடல் மண் எடுக்கும் நடவடிக்கையை எளிமையாக்க வேண்டும். மூன்று துறை நடைமுறை சிக்கலை தீர்க்க வேண்டும்- பரமக்குடி எம்.எல்.ஏ.</p><p>கனிம வளத்துரையாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் மாநில அரசின் வருவாய் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு த.வெ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?- பரமக்குடி எம்.எல்.ஏ.</p><p>இந்தியாவிலேயே நம்பர் ஒன் ரப்பர் என்றால் அது கன்னியாகுமரி ரப்பர்தான் - தளவாய் சுந்தரம்</p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>கன்னியாகுமரி மாவட்ட வாழை, பலா, மிளகிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>மத்திய பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் என்எல்சி பிரச்சனைகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துக்கூற வேண்டும் - அமைச்சர் கீர்த்தனா</p> <p>பரந்தூர் மக்களைப்போல் என்எல்சியால் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாப்போம் - அமைச்சர் கீர்த்தனா</p> <p>வடமாநிலங்களில் கட்டமைப்பு மேற்கொள்ள சிஎஸ்ஆர் நிதியை என்எல்சி பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தடுப்பணைகள் கட்ட எல்எல்சியின் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்த வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி மதுரையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். </p><p>மதுரையில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் - முஸ்தபா கோரிக்கை</p><p>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு முதலமைச்சர் விஜய் வர வேண்டும் - முஸ்தபா</p><p>சட்டசபை மாண்பு கருதி முஸ்தபா காட்டிய ஆதாரத்தை வெளியிட விரும்பவில்லை - சபாநாயகர்</p><p>எம்எல்ஏக்கள் பேச்சு பேரவைக்கு வெளியே சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது - தமிமுன் அன்சாரி</p><p>பேசியதற்கு ஆதாரத்தை கொடுத்தார் தவெக எம்எல்ஏ முஸ்தபா</p><p>தவெக எம்எல்ஏ கூறிய ஒரு கருத்துக்கு ஆட்சேபம் தான் தெரிவித்தோம் - கோவி செழியன்</p><p>சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று பூண்டி கலைவாணன் வாக்குவாதம்</p><p>உருட்டல் மிரட்டல்களுக்கு தவெக எப்போதும் பயப்படாது. சபாநாயகருக்கான கண்ணியத்தை மதியுங்கள் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>தவெக எம்எல்ஏ முஸ்தபா பேச்சிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.</p><p>அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.</p><p>திமுக கொண்டுவந்த பரந்தூர விமான நிலைய திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது -  சிவி. சண்முகம்</p> <p>அரசியல் நடந்தால் தமிழ்நாட்டிற்கு எந்த நல்ல திட்டமும் வராது. </p><p>எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் நிலையில் இப்படியே போனால் ஒரு டிரில்லியனும் வராது, ஒன்றரை டிரில்லியனும் வராது - சிவி. சண்முகம்</p><p>பரந்தூர் விமான நிலையத்துக்காக கையப்படுத்தப்பட்ட நிலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படுமா? </p><p>மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? - காங்கிரஸ்</p><p>பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் வன்னி அரசு</p><p>திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடினோம் - அமைச்சர் வன்னி அரசு</p><p>பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.</p><p>பரந்தூர் கால்வாயை அழித்தால் கேரளத்தில் ஏர்போர்ட்டுக்குள் வெள்ளம் வந்ததை போன்ற நிலை தான் ஏற்படும்.</p><p>1500 நீர்நிலை, 1000 குடும்பம் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை ஏர்போர்ட்டுக்கு தேர்வு செய்தது தவறு</p><p>மக்கள் பாதிக்காதவாறு 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.</p><p> நிலம் எடுப்பது தொடர்பாக திமுக ஆட்சியில் அமைத்த குழுவின் அறிக்கையை தற்போது வரை வெளியிடாதது ஏன்? - அமைச்சர் கீர்த்தனா</p>  <p>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும். </p><p>வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் தொழில்கள் தொடங்கப்படும். </p><p>மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து - அமைச்சர் கீர்த்தனா</p><p>1000 ஆண்டு கால பொக்கிஷமான கம்பன் கால்வாய் பரந்தூர் பகுதிகளில் ஓடுகிறது-  அமைச்சர் ராஜ்மோகன்</p><p>உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு தற்போது வரை கையகப்படுத்தவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? - எடப்பாடி பழனிசாமி </p><p>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எதிர்ப்பு</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர்  - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கூட வாங்கப்படவில்லை. பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கி குவித்தவர்கள், கறுப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே திட்டத்தை எதிர்க்கின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொகையை மக்களிடம் இருந்து திரும்ப பெற முடியாது, என்ன செய்வீர்கள்? - இபிஎஸ்</p><p>90% நிலம் கையகப்படுத்தப்படவில்லை 48% நிலம் மட்டும் தான் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 1,202 ஏக்கர் நிலம் மட்டுமே கையப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஊழல் இல்லா ஆட்சியை முதல்வர் கொடுப்பதால் அனைத்து நிறுவனங்களும் முதலீடு செய்யும் தொழில்துறை வளரும். திமுக ஈர்த்ததைவிட 10 மடங்கு அதிக தொழில் முதலீடுகளை தவெக அரசு ஈர்க்கும் - அமைச்சர் ஆதவ்</p><p>60 நாட்களுக்குள் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை முதலமைச்சர் விஜய் உருவாக்கி காட்டுவார் - அமைச்சர் ஆதவ்</p> <p>தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கிய காரணமான சிங்கிள் விண்டோ சிஸ்டம் தான். அதை முதல்வர் உருவாக்குவார் - அமைச்சர் ஆதவ்</p><p>பரந்தூர் ஏர்போர்ட்டா அல்லது விவசாயிகள் கண்ணீரா என்றால் முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார் - அமைச்சர் ஆதவ்</p> <p>பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்துள்ளீர், முதலீட்டாளர்களை பாதிக்கும் - ஆஸ்டின் </p><p>நான் குறிப்பிட்ட பத்திரிகை ஒரு பத்திரிகை கூட கிடையாது. அது ஒரு வெப்சைட். பிரைவேட் வெப்சைட். </p><p>அதே பத்திரிகையாளர்கள் தான் தினத்தந்தியில் நம்மை பற்றி, நம்முடைய தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்தார்கள். </p><p>அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து இங்கே பேசி பெருமைப்பட்டு இருந்தால், தமிழ்நாடு முன்னேறுகிறது என்று பேசி இருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>தமிழ்நாட்டில் தொழில் முதலீடு மாநாட்டை முதலில் நடத்தியது ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி</p><p>அமைச்சர் கீர்த்தனா ஒரு சில பத்திரிகைகளை தான் கூறி உள்ளார் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>காசு கொடுத்தால் பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவார்கள் என கூறக்கூடாது - எ.வ.வேலு</p><p>நாகர்கோவில் மிகவும் சிரமப்பட்டு இடம் தேர்வு செய்தோம். அடிக்கல் நாட்டி 6 மாதமாகியும் பணி தொடங்கப்படவில்லை. தொழில்துறை வளர்ச்சி தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சியில் தொழில்துறை முதலிடத்தில் இருந்தது. </p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் முந்தைய காலாண்டை விட 74.48% சரிவு, மற்ற மாநிலங்கள் 200% அதிகரித்துள்ளது - ஆஸ்டின்</p><h2>அமைச்சர் கீர்த்தனா உரை</h2><p>தொழில் முதலீடுகள் குறைந்துள்ளதாக ஆஸ்டின் பேசியது தவறான தகவல்.</p><p>100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். </p><p>காசு கொடுத்தால் எதையும் எழுதும் பத்திரிகை - அமைச்சர் கீர்த்தனா</p> <p>மக்கள் பிரச்சனை கேட்டு நிறைவேற்றவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - அமைச்சர் ஆதவ்</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது - எம்எல்ஏ ஆஸ்டின்</p><p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது - சபாநாயகர்</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? - ஆஸ்டின்</p> <p>எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் - சபாநாயகர்</p><p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது - எடப்பாடி பழனிசாமி</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? - அமைச்சர் செங்கோட்டையன்</p> <p>காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? - இபிஎஸ்</p><p>எம்எல்ஏ இல்லாமல் காலியாக உள்ள தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர் - அமைச்சர் செங்கோட்டையன்</p> <p>எம்எல்ஏக்கள் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள தொகுதிகளில் யார் மக்கள் பணி செய்வது? - எடப்பாடி பழனிசாமி</p><p>விளக்கம் கூற வருகிறார் என நினைத்து தான் தளவாய் சுந்தரம் பேச அனுமதித்தேன் - சபாநாயகர் விளக்கம்</p><p>எம்எல்ஏ ஆஸ்டின் பேசியபோது அமைச்சர் பேசலாம், அவை முன்னவர் பேசலாம் தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார்? - கேஎன். நேரு</p><p>திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பல கட்சிகளில் இருந்தவர் என தளவாய் சுந்தரம் பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளி</p><p>சிறுபான்மை ஆணைய தலைவர் தனிப்பட்ட விவாதம், பொதுமேடையில் பேசவே கூடாது என்றெல்லாம் கிடையாது. கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் அரசியல் விவாதங்களில் பேசி உள்ளனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>சிறுபான்மை ஆணைய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்க கூடாது - எம்எல்ஏ ஆஸ்டின்</p> <p>பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பதை தடுக்க சதி நடந்தது. சதியை முறியடித்து அவையில் வீற்றிருக்கிறார் உதயநிதி - திமுக உறுப்பினர் ஆஸ்டின்</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள். உறுப்பினர்களின் கேள்விகள் &amp; கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள்.</p><p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள்.</p><p>மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் - நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்</p> <p>காவிரி டெல்டா பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது, குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ளது - எம்எல்ஏ மாரிமுத்து</p><p>மேட்டூர் நீர் திறப்பு எப்போது என கூறினார் தான் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய முடியும் - எடப்பாடி பழனிசாமி</p><p>சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் பலியாகி உள்ளார்.</p><p>மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்  - திமுக எம்எல்ஏ சேகர்பாபு</p><p>மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? - திமுக எம்எல்ஏ கோவி செழியன்.</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்.</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு.</p><p>ஆசிரியர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் - எ.வ.வேலு உறுதி</p><p>ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையிலான தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - ராமச்சந்திரன்</p><p>அரசின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு, கல்வியை பொதுப்பட்டியலை இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் - பாமக</p><p>அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசினர் தனித்தீர்மானம்</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.</p><p>3.28 லட்சம் ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி என்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>பழுதான கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை, 50 மாணவிகள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>திண்டுக்கல் ஆயக்குடியில் ரூ.3.70 கோடியில் மாணவியர் விடுதி - அமைச்சர் வன்னி அரசு</p><p>பழனி ஆயக்குடி அரசு மாநில விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் - எம்எல்ஏ ரவி மனோகரன் கோரிக்கை</p><p>அத்தியாவசிய மருந்து பட்டியலில் சேர்க்கப்படாத நிலையிலும் எமிசிஜுமாப் மருந்தை வழங்க வேண்டும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>ஹீமோபிலியா மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எமிசிஜுமாப் மருந்தை விலையின்றி வழங்க வேண்டும் - எம்எல்ஏ ரவி</p><p>3 தமிழர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு செய்ய வேண்டும் - உதயநிதி</p> <p>சட்டத்துறை, வனத்துறை அமைச்சர்கள் இதுதொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளனர் - சபாநாயகர்</p><h2>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் கொலை - உதயநிதி ஸ்டாலின் உரை</h2><p>கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.</p><p>தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?</p><p>3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன?</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். </p> ]]></content:encoded></item><item><title>நடிகை குறித்து சர்ச்சை பேச்சு - உதயநிதிமீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-remarks-about-an-actress-national-commission-for-women-recommends-action-against-udhayanidhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-remarks-about-an-actress-national-commission-for-women-recommends-action-against-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">8283cad4-3206-4683-88d3-1fe0ca58eacc</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:49:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:49:39.393Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,National Commission for Women,தேசிய மகளிர் ஆணையம்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/1imcasnd/New-Project-2026-08-25T200443.139.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகை குறித்து சர்ச்சை பேச்சு - உதயநிதிமீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/1imcasnd/New-Project-2026-08-25T200443.139.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூரில் ஆக.3ம் தேதி நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது நடிகை ஒருவர் குறித்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.</p><p>இதுதொடர்பாக பல்வேறு பிரிவுகளின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தஞ்சாவூர் காவல்துறை அவரை கைதும் செய்து, பின்னர் விடுவித்தது. </p><p>இதனைத்தொடர்ந்து தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் செல்வகுமார் இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்தார். </p><p>அந்த புகார் மனுவில் நடிகை குறித்தப் பேச்சுக்கு உதயநிதி விளக்கம் மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்புகோர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். </p><p>மேலும் அவர்மீது உரிய சட்ட நடவடிக்கைகளை தொடங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்நிலையில் உதயநிதிமீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைந்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>“ஏஐத் துறை ஒன்றை வைத்தே நாங்கள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம்” - அமைச்சர் குமார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-reach-a-15-trillion-economy-driven-by-the-ai-sector-alone-minister-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-reach-a-15-trillion-economy-driven-by-the-ai-sector-alone-minister-kumar#comments</comments><guid isPermaLink="false">18644742-be20-4f1a-9740-d723e7befaf1</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:24:23 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:24:23.283Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,minister kumar,அமைச்சர் குமார்,AI Department,ஏஐத் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/yikj5obj/New-Project-2026-08-25T195354.811.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “ஏஐத் துறை ஒன்றை வைத்தே நாங்கள் நாங்கள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம்” - அமைச்சர் குமார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/yikj5obj/New-Project-2026-08-25T195354.811.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரைவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஏஐ மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார்.,</p><p>“1.5 மில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய எங்களுக்கு இந்த ஒருத்துறை போதும். 54 துறைகளிலும் இந்த ஒரு துறைதான் மிக முக்கியமானது. செயற்கை நுண்ணறிவுதான் மிக முக்கியமானது. </p><p>உங்களுடைய அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் கொண்டுவரவேண்டுமா செயற்கை நுண்ணறிவுதான் முக்கியம். என்னைத் தேர்ந்தெடுத்த வேளச்சேரி மக்கள் இனி சாலை, மின்சாரம், குடிநீர் என எந்தப் பிரச்னை என்றாலும் அதை அரசிடம் கொண்டுசெல்ல இனி சிரமப்பட வேண்டாம். ஆங்கிலம் படிக்கவோ, எழுதவோ தெரிந்திருக்க தேவையில்லை. வேளச்சேரி தொகுதிக்கு தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>அதில் பிரச்னைகளை தாய்மொழியில் வாக்குமூலமாக கொடுத்தாலே ஏஐ மூலமாக சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் தானாக சென்றுவிடும். இப்போது வேளச்சேரிக்கு இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.</p><p>வெகுவிரைவாக அரசு கேபிள்டிவி கார்ப்பரேஷன் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தமிழ்நாடு ஏஐ விஷன் என்ற புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும். சி.எம்.2.0 டேஷ்போர்டு ஏஐ உதவியுடன் உருவாக்கப்படும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பட்டப்பகலில் தொழிலதிபர் சுட்டுக் கொலை.. ஜார்க்கண்டில் துணிகரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">6ae726e4-6af6-4bcf-ad08-74220d72b60e</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:22:58 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:22:58.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,துப்பாக்கிச்சூடு,ஜார்க்கண்ட்,shooting,தொழிலதிபர்,businessman</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/sz5ri06x/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தொழிலதிபர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலதிபர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/sz5ri06x/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்டில் நடுரோட்டில் தொழிலதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/indian-businessman-shot-dead-tennessee-liquor-store-robbery-turns-fatal">சுட்டுக்கொல்லப்பட்ட </a>பயங்கரம் அரங்கேறியுள்ளது. </p><p>ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா கர்சவான் மாவட்டத்தில் சண்டில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த கொலை நேற்று பிற்பகலில் அரங்கேறியுள்ளது. </p><h2>தாக்குதல் </h2><p>ஜாம்சத்பூரை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ஹோட்டல் உரிமையாளருமான நிகர் சப்லோக் (33) நெற்று பிற்பகல் 3:00 முதல் 3:30 மணியளவில் அவ்வழியே சொந்த வெளியாக வாகனத்தில் சென்றுகொண்டிருந்ததார்.</p><p>அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>தலை மற்றும் உடலில் 4 தோட்டாக்கள் பாய்ந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.</p><p> அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.</p><h2>விசாரணை</h2><p>சம்பவ இடத்திலிருந்து சுடப்பட்ட 8 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.</p><p>கொலைக்கான காரணம் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதமா, தனிப்பட்ட பகையா அல்லது ரவுடி கும்பல்களின் பணப் பறிப்பு முயற்சியா என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. சில சந்தேக நபர்களையும் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.</p><p>கடந்த ஜனவரி 13 அன்று இதே பகுதியிலிருந்து தேவாங் காந்தி என்ற தொழிலதிபரின் மகன் கைரவ் காந்தி கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.</p><p>தற்போது தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஜாம்ஷெட்பூர் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது? ஓசூரா? ராமேஸ்வரமா? - அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-airports-in-tamil-nadu-hosur-and-rameswaram-options-explained-by-minister-keerthana</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-airports-in-tamil-nadu-hosur-and-rameswaram-options-explained-by-minister-keerthana#comments</comments><guid isPermaLink="false">a6028c36-76cd-4b6e-8d01-963c3cafddd0</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:11:24 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:11:24.887Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rameswaram,Parandur Airport,Hosur,tamilnadu assembly,சட்டசபை,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xmd1tnpk/Minister-Keerthana" width="1500"><media:title type="html"><![CDATA[ Keerthana ]]></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keerthana ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xmd1tnpk/Minister-Keerthana?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டப்பேரவையில்</a> இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, புதிய விமான நிலையங்கள் அமைப்பது குறித்து தொழில்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE">அமைச்சர் கீர்த்தனா</a> முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.</p><h2><strong>ஓசூரா? ராமேஸ்வரமா?</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர் திட்டம்</a> கைவிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் மற்ற பகுதிகளான ஓசூர் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரண்டு இடங்களிலுமே புதிய விமான நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இடத் தேர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.</p><p>ராமேஸ்வரம் அருகே புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைப்பதற்காக உச்சிப்புளி அல்லது கீழக்கரை ஆகிய இரண்டு உத்தேச இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. </p><p>ஓசூரிலும் புதிய உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் பரிசீலனையில் உள்ளன என்று சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.</p><h2>மாற்றுத் தொழில் திட்டங்கள்</h2><p>பரந்தூரில் முன்மொழியப்பட்ட சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகக் குறிப்பிட்டார். </p><p>பரந்தூரில் அதிகளவில் நீர்நிலைகள் உள்ளதால், அங்கு விமான நிலையம் அமைத்தால் சென்னைக்கு கடுமையான வெள்ள அபாயம் ஏற்படும் என்ற காரணத்தினால் இத்திட்டம் ரத்தாகியுள்ளதாக அவர் விளக்கமளித்தார். </p><p>ஏற்கனவே மக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வீணாக்காமல், அங்குள்ள மக்களுக்கும் மண்ணுக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுத் தொழில் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திரும்ப விவசாயிகளுக்கு அளிக்கப்படாது  என்றும் சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா அறிவித்தார்.</p><h2><strong>இறுதி முடிவு என்ன?</strong></h2><p>சட்டசபையில் இன்று தொழில்துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றதால், அதற்குப் பதிலளித்துப் பேசுவதற்காக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இந்த விமான நிலையத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல புதிய முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்ட போதே, சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டது குறித்தும், அதற்கு மாற்றாக ஓசூர் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் புதிய விமான நிலையங்களுக்கான இடத் தேர்வுகள் தீவிரமாக நடந்து வருவது குறித்தும் அமைச்சர் விரிவாக விளக்கமளித்துப் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;கலாச்சாரம் உடையில் இல்லை, உணர்வில் உள்ளது..&quot; கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதில்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kriti-sanon-defends-raksha-bandhan-ad-outfit-amid-cultural-criticism</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kriti-sanon-defends-raksha-bandhan-ad-outfit-amid-cultural-criticism#comments</comments><guid isPermaLink="false">3ad4fe6a-075c-43d1-bddb-94e8db08d869</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:17:47 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:17:47.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kriti Sanon,Kangana Ranaut,கங்கனா ரனாவத்,பாலிவுட் நடிகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mj4rib8s/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கங்கனா, கிருத்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ கங்கனா, கிருத்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mj4rib8s/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கிருத்தி&nbsp;சனோன். தன் ஆடைத் தேர்வு மீதான விமர்சனத்துக்கு அவர் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><h2>விமர்சனம் </h2><p>சமீபத்தில் நகை கடையின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் கிருத்தி&nbsp;சனோன் அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது.</p><p>இந்தியப் பாரம்பரியப் பண்டிகைக்கான ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் இதுபோன்ற ஆடைகள் உகந்தவை அல்ல என 'கலாச்சார காவலர்கள்' பலர் விமர்சித்தனர். </p> <p>குறிப்பாக பாலிவுட் நடிகை மற்றும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், "சகோதரனுக்கு ராக்கி அணியும்போது இப்படிப்பட்ட உடையை அணிவார்களா?.</p><p>பெண்களுக்குத் தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அணியும் சுதந்திரம் இருந்தாலும், சில எல்லைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" என விமர்சித்திருந்தார்.</p><h2>பதில்</h2><p>இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிருத்தி&nbsp;சனோன் பதிலளித்துள்ளார்.</p><p>அவரது பதிவில்,</p><p>"பண்டிகையின் சாரம்சம் என்பது நாம் உடுத்தும் உடையில் இல்லை.  அந்த பாரம்பரியத்துக்கு நாம் அளிக்கும் அர்த்தம் மற்றும் உணர்வுகளில் தான் எல்லாமே அடங்கியிருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/rare-blood-moon-96-partial-lunar-eclipse-not-visible-from-india-on-august-28">ரக்ஷா பந்தன்</a> என்பது பாதுகாப்பைப் பற்றிய ஒரு பிணைப்பு. நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொள்கிறோம். ஒரு சகோதரன் இருப்பதால் ஏற்படும் பாதுகாப்பு போலவே எங்களால் ஒருவரை ஒருவர் பாதுகாத்து கொள்ள முடியும் என நம்புகிறோம்.</p><p>பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான மரியாதையைக் கணிப்பது சரியல்ல. பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்த போகிறோம்..?</p><p>காலத்திற்கு ஏற்ப பாரம்பரிய உடைகளின் பாணியிலும் மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால், இன்றும் கலாச்சாரத்தின் மீதான மரியாதை என்பது பெண்ணின் ஆடையை வைத்தே அளவிடப்படுகிறது.</p><p>பண்பாடும், பாரம்பரியமும் ஒரு பெண்ணின் மனதில் தான் இருக்கிறதே தவிர, அவளுடைய கழுத்துப் பகுதியில்" என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர்: காவலரை அடித்த இளைஞர்... பறிபோன வேலை - அரசுக்கு கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-who-hit-a-police-officer-during-a-vck-road-blockade-loses-his-job-appeal-made-to-the-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-who-hit-a-police-officer-during-a-vck-road-blockade-loses-his-job-appeal-made-to-the-government#comments</comments><guid isPermaLink="false">7dcd4af3-fde6-4fb8-997b-9705ec65be97</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:00:41 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:00:41.488Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விசிக,vck,Thanjavur,Akash,தஞ்சாவூர்,இளைஞர் ஆகாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/x2taho8v/New-Project-2026-08-25T182354.105.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர்: காவலரை அடித்த இளைஞர்... பறிபோன வேலை - அரசுக்கு கோரிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/x2taho8v/New-Project-2026-08-25T182354.105.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த வாரம் பேனர் அகற்றப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விசிகவினர் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>அப்போது அவசர வேலை காரணமாக அந்த வழியே பைக்கில் சென்ற இளைஞர் ஆகாஷ் என்பவர் வழிவிடுவாறு அங்கு இருந்த விசிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். </p><p>இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அப்துல் ரகீம் என்பவர் இளைஞரிடம் சென்றுப் பேசியுள்ளார்.</p><p>அப்போது காவலர் இளைஞரின் கன்னத்தில் அடிக்க, உடனே சற்றும் தாமதிக்காமல் இளைஞரும் காவலர் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. உடனே காவலர்கள் இணைந்து அந்த இளைஞரை வலுகட்டாயமாக அழைத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்று காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.</p><p>தொடர்ந்து அவர்மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ஒருநாள் சிறைக்கு பின் அவரை விடுவித்திருந்தனர். இந்நிலையில் காவலரை அறைந்ததால் தனது பணி போய்விட்டதாக இளைஞர் வேதனை தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>“ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பதால் ஒரு பிறந்தநாள் பேனரை அகற்றியதற்காக விசிகவினர் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் நாங்கள் இருவரும் (போலீசார்) பாதிக்கப்பட்டுள்ளோம். </p><p>என்மீதான வழக்கை போலீசார் ரத்துசெய்யவேண்டும், காவலர் ரகீம் மீதான வழக்கையும் ரத்துசெய்யவேண்டும். போலீசாரை அடித்ததால் என் வேலை போய்விட்டது. எனக்கு குடும்பம் இருக்கிறது. எனக்கு உடல்நலப் பிரச்னைகளும் இருக்கின்றன. எனக்கு ஏதேனும் வேலை வேண்டும். ஏதாவது வேலை கொடுத்தால் உதவியாக இருக்கும். மாற்றம் வேண்டும் என்பதற்காக நானும் தவெகவிற்குதான் வாக்களித்தேன்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பிரகாஷ் ராஜ், டார்லிங் கிருஷ்ணா நடிக்கும் &apos;ஃபாதர்&apos; திரைப்படத்தின் டீசர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/father-movie-teaser-featuring-prakash-raj-and-darling-krishna</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/father-movie-teaser-featuring-prakash-raj-and-darling-krishna#comments</comments><guid isPermaLink="false">40608bee-3655-4ae8-b171-b2ed96cd2095</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:53:45 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:53:45.807Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரகாஷ் ராஜ்,prakash raj,Father Movie,Father Teaser,Darling Krishna,டார்லிங் கிருஷ்ணா,RC Studios</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/fatzw4rv/Father-Movie-Teaser" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Father Movie Teaser ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/fatzw4rv/Father-Movie-Teaser?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரையுலகில் தந்தை-மகன் பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், தந்தையின் தியாகத்தையும் அன்பையும் புதிய கோணத்தில் கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள 'ஃபாதர்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><h2><strong>குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் இயக்குனர்</strong></h2><p><br>'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ராஜா மோகன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். </p><p>அம்மா என்ற உன்னத உறவைக் கொண்டாடும் நம் சமூகத்தில், ஒரு தந்தையின் தியாகத்தையும் உழைப்பையும் பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான குடும்பக் கதையாக இத்திரைப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார்.</p><h2><strong>கூட்டணி மற்றும் தயாரிப்பு</strong></h2><p>ஆர்சி ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் தயாரிப்பாளர் ஆர். சந்துரு இத்திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். பன்மொழி நடிகரான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">பிரகாஷ் ராஜ் </a>மற்றும் 'லவ் மாக்டெய்ல்' புகழ் டார்லிங் கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்முறையாக இணைந்து தந்தை-மகனாக முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>இவர்களுடன் அம்ருதா ஐயங்கார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/taPTp_psBeY"></iframe></figure><h2><strong>தொழில்நுட்பக் குழு</strong></h2><p>இத்திரைப்படத்திற்கு நகுல் அபியங்கர் இசையமைத்துள்ளார். சுகுணான் ஒளிப்பதிவு செய்ய, ரகுநாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.</p><p>பாசப் போராட்டத்தையும், எமோஷனல் காட்சிகளையும் உள்ளடக்கிய இந்த 'ஃபாதர்' படத்தின் டீசர், வெளியானது முதலே சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை.. பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-rape-conviction-supreme-court-orders-surrender-within-two-weeks</link><comments>https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-rape-conviction-supreme-court-orders-surrender-within-two-weeks#comments</comments><guid isPermaLink="false">09289345-756e-429c-98c5-75a0fb2ab0ee</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:38:59 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:38:59.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Sexual assault,Supreme Court,பத்திரிகையாளர்,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/svbdgcmy/maalai-malar2026-08-06z010yyr6tn-29.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ தருண் தேஜ்பால் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தருண் தேஜ்பால் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/svbdgcmy/maalai-malar2026-08-06z010yyr6tn-29.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a> வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில், அவர் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>வழக்கு</h2><p>மூத்த பத்திரிகையாளருமான தருண் தேஜ்பால் 'தெஹல்கா' என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். இதன் ஆசிரியராகவும் அவர் இருந்தார்.</p><p>2013 நவம்பர் 7 அன்று நிகழ்வொன்றின்போது கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் லிப்டில் வைத்து தன்னை தருண் தேஜ்பால் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெஹல்கா பத்திரிகையில் பணியாற்றிய இளம் பெண் பத்திரிகையாளர் புகார் அளித்தார்.</p><p>ஆனால் போதிய சான்றுகள் இல்லை எனக் கூறி, சந்தேகத்தின் பலனைத் தருண் தேஜ்பாலுக்கு வழங்கி 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.</p><p>பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.</p> <h2>மேல்முறையீடு</h2><p>இத்தீர்ப்பை எதிர்த்து கோவா காவல் துறையும் அரசுத் தரப்பும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.</p><p>கோவாவுக்கு என்று தனி உயர்நீதிமன்றம் கிடையாது. பம்பாய் உய்ரநீதிமன்றத்தின் கோவா அமர்வு இந்த மேல்முறையீட்டை விசாரித்து வந்தது.</p><h2>தீர்ப்பு</h2><p>இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் தவறாகக் கையாண்டதாகவும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார்.</p><p>கடந்த ஆகஸ்ட் 6 அன்று விசாரணை முடிவில், 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை ரத்து செய்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு தருண் தேஜ்பால் குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது.</p><p>மேல்முறையீட்டுக்கு ஏதுவாக தீர்ப்புக்கு தடை விதிக்க தேஜ்பாலின் வழக்கறிஞர் கோரினார்.</p> <h2>உச்சநீதிமன்றம்</h2><p>இதைத்தொடர்ந்து தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது கோவா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உச்சநீதிமன்ற விதிகளின்படி ஒரு குற்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட நபர் சரணடைய வேண்டும்” என வாதிட்டார்.</p><p>தருண் தேஜ்பால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “தருண் தேஜ்பாலுக்கு எதிரான தீர்ப்புக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. எனவே, அவரை சரணடையுமாறு கோருவது பொருத்தமானதாக இருக்காது” என்றார்.</p><p>மேலும், தேஜ்பாலுக்கு விவாரணம் அளிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தால், அவர் சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும் கபில் சிபல் தெரிவித்தார்.</p><p>இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், “தருண் தேஜ்பால் முதலில் சரணடைய வேண்டும். அவர் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்” என்று உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>தூரிகையால் போர் செய்த விடுதலை வீரன்.. புகழ்பெற்ற பாலஸ்தீன ஓவியர் சுலைமான் மன்சூர் மறைவு</title><link>https://www.maalaimalar.com/news/world/palestinian-artist-dies-suleiman-mansour-symbol-of-palestinian-resistance-art-passes-away-at-79</link><comments>https://www.maalaimalar.com/news/world/palestinian-artist-dies-suleiman-mansour-symbol-of-palestinian-resistance-art-passes-away-at-79#comments</comments><guid isPermaLink="false">c0b51a8b-1c34-437f-bf3d-149060e27527</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:16:17 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:16:17.447Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>palestine,காசா,gaza,artist,ஓவியர்,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/qd61quhb/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுலைமான் மன்சூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுலைமான் மன்சூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/qd61quhb/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/gaza-blockade-worsens-sanitation-crisis-as-toilets-become-unaffordable-and-disease-spreads">பாலஸ்தீனத்தின் </a>அடையாளத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற புகழ்பெற்ற ஓவியரும் சிற்பியுமான சுலைமான் மன்சூர் காலமானார். அவருக்கு வயது 79.</p><p>கிழக்கு ஜெருசலேமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது. </p><p>"கடைசி அத்தியாயமும் எழுதப்பட்டுவிட்டது. உலகுக்கு அவர் நினைவுகளையும் அழகையும் விட்டுச் சென்றுள்ளார்" என அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.</p><h2>விடுதலை வேட்கையின் ஓவியம்</h2><p>1947 இல் மேற்கு கரையின் பிர்செய்ட் பகுதியில் பிறந்த சுலைமான் மன்சூர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனர்களின் பாடுகளையும் எதிர்க் குரலையும் தன் தூரிகையில் தாங்கி, ஓவியங்களாக தீட்டினார்.</p><p>1973 இல் அவர் வரைந்த 'ஜமால் அல் மஹாமில்' (Camel of Burdens) என்ற புகழ்பெற்ற ஓவியம், உலகெங்கிலும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறியது.</p><p>ஒரு முதிய பாலஸ்தீனர் தனது முதுகில் ஜெருசலேம் நகரத்தைச் சுமந்து செல்லும் இந்த ஓவியம், பாலஸ்தீன மக்களின் இடம்பெயர்வு துயரத்தையும், சொந்த மண்ணுடனான அவர்களின் ஆழமான பிணைப்பையும் பிரதிபலித்தது.</p><p>பாரம்பரிய தையல் வேலைப்பாடுகள், ஆலிவ் மரங்கள், ஆரஞ்சு தோட்டங்கள் மற்றும் பாலஸ்தீன கிராமப்புறப் பெண்கள் ஆகியவை இவரது ஓவியங்களில் தொடர்ந்து இடம்பெற்ற முதன்மைப் பொருள்களாகும்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/0jyylclf/tn-7.jpg" /></figure><p>பாலஸ்தீனக் கொடியின் சிவப்பு, பச்சை, கருப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களை பயன்படுத்துவதற்கு கூடக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலம் இருந்தது. அப்போது குறியீடுகள் மூலம் மக்களின் சுதந்திர தாகத்திற்கு உயிர் கொடுத்தார்.</p><p>நியூ விஷன்ஸ் என்ற கலைக் கூட்டமைப்பை தொடங்கிய இவர், இஸ்ரேலின் பொருட்களை புறக்கணித்து உள்நாட்டில் கிடைக்கும் மண், சேறு, மஞ்சள், களிமண் போன்ற இயற்கையானவற்றை பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்தார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/gcqcl0qv/tn-6.jpg" /></figure><h2>பேரிழப்பு</h2><p>இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பாக மன்சூரின் ஒவ்வொரு படைப்பும் உலக அரங்கில் விளங்கியது.</p><p>தற்போதுவரை தனது தாய்நாட்டிற்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக தன் கலையின் வழியே குரல் கொடுக்க அவர் தவறவில்லை.</p><p>சுலைமான் மன்சூரின் மறைவு, பாலஸ்தீனக் கலை வரலாற்றுக்கு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு அண்டார்டிகாவில் பனிப்பரப்பிற்கு அடியில் பாயும் பிரம்மாண்ட நதி: நாசா செயற்கைக்கோள் அளித்த அதிர்ச்சித் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/massive-river-flowing-beneath-west-antarctic-ice-nasa-satellite-reveals-shocking-data</link><comments>https://www.maalaimalar.com/news/world/massive-river-flowing-beneath-west-antarctic-ice-nasa-satellite-reveals-shocking-data#comments</comments><guid isPermaLink="false">2aaa03ed-55da-4395-87eb-39e2e11ce862</guid><pubDate>Tue, 25 Aug 2026 12:14:31 +0000</pubDate><atom:updated>2026-08-25T12:14:31.999Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்டார்டிகா,West Antarctica,NASA satellite,ICESat,Antarctica river,மேற்கு அண்டார்டிகா,நாசா செயற்கைக்கோள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/4vs1mjkq/hh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ West Antarctica]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/4vs1mjkq/hh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அண்டார்டிகா கண்டம் என்பது வெளிப்புறப் பார்வைக்கு உறைந்துபோன, எந்தவித அசைவுமற்ற பனிப்பாறையாக மட்டுமே தோற்றமளிக்கிறது. ஆனால், அதன் தடிமனான பனிப்படலத்திற்கு அடியில் மிகவும் சுறுசுறுப்பான நீரோட்ட அமைப்பும், பிரம்மாண்டமான ஏரிகளும் இயங்கி வருகின்றன என்பதை விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் செயற்கைக்கோள் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-delists-syria-from-state-sponsors-of-terrorism-list">நாசா</a> அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்ட 'ஐஸ்சாட்' செயற்கைக்கோள், கடந்த 2003 முதல் 2006 வரையிலான காலக்கட்டத்தில் அண்டார்டிகாவின் மேற்பரப்பைத் தொடர்ந்து ஆய்வு செய்தது. இதில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன லேசர் கருவிகள் மூலம் பனிப்பரப்பின் உயரத்தில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்கள் கூடத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில், மேற்கு அண்டார்டிகாவின் பனிப்பரப்பிற்கு அடியில் நீர் தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டிருக்கும் 14 பகுதிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.</p><h2>மூ<strong>ன்று ஆண்டுகளில் மாயமான ஏரி</strong> நீர்</h2><p>புவிப்பௌதிகவியலாளர் ஹெலன் அமண்டா ஃபிரிக்கர் தலைமையிலான அறிவியல் குழுவினர், 'விலான்ஸ்' மற்றும் 'மெர்சர்' பனி நதிகளின் மேற்பரப்பில் ஏற்பட்ட பெரிய பள்ளங்களைக் கவனித்தனர். 2003 முதல் 2005 வரையிலான குறுகிய காலத்தில், அப்பகுதியின் பனிப்பரப்பு சுமார் 9 மீட்டர் வரை கீழே சரிந்திருந்தது.</p><p>இதன் பின்னணியை ஆராய்ந்தபோது, 'ஏங்கல்பார்ட்' என்ற மறைமுக ஏரியிலிருந்து சுமார் 2 கன கிலோமீட்டர் அளவிலான பிரம்மாண்டமான நன்னீர் வெளியேறிப் பெருங்கடலில் கலந்தது தெரியவந்தது. உறைந்த பனி அடுக்குக்கு அடியில் நிலவும் புவிவெப்பம், உராய்வு மற்றும் மிகக் கடுமையான அழுத்தம் காரணமாக நீர் உறைந்துபோகாமல் திரவ நிலையில் தொடர்ந்து பாய்கிறது.</p><h2>கால<strong>நிலை மாறுபாட்டின் தாக்</strong>கம்</h2><p>ஒரு பகுதியில் ஏரி நீர் குறையும் போது பனிப்பரப்பு தாழ்வதும், நீர் சேரும்போது மேற்பரப்பு உயர்வதும் இயற்கை நிகழ்வாக நடைபெறுகிறது. பனி அடுக்குக்கு அடியில் பாயும் இந்த நீர், பனிப்பாறைகள் கடலை நோக்கிச் சரிந்து நகர்வதை விரைவுபடுத்தும் ஒரு உராய்வு நீக்கியாகச் செயல்படுகிறது.</p><p>அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் விரைவாகக் கடலில் சரிந்தால், அது உலகளாவிய கடல் மட்டம் உயர்வதற்கு வழிவகுக்கும். எனவே, பனிக்கு அடியில் இயங்கும் இந்த மறைமுக நீரோட்ட அமைப்பைப் புரிந்துகொள்வது, எதிர்காலக் காலநிலை மாற்றங்களை முன் கணிப்பதற்கும், கடல் மட்ட உயர்வைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.</p>]]></content:encoded></item><item><title>‘பரந்தூர் விவகாரத்தில் திமுக வெளிப்படைத் தன்மையுடன் இல்லை’ - பெ.சண்முகம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lacks-transparency-regarding-the-parandur-issue-p-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lacks-transparency-regarding-the-parandur-issue-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">93c08ac0-809e-466b-8e75-dca7d541a913</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:59:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:59:39.946Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,P. Shanmugam,பெ.சண்முகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/kgyyis4x/New-Project-2026-08-25T172914.153.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பரந்தூர் விவகாரத்தில் திமுக வெளிப்படைத் தன்மையுடன் இல்லை’ - பெ.சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/kgyyis4x/New-Project-2026-08-25T172914.153.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத் திட்டமான பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் நேற்று சட்டமன்றத்தில் தெரிவித்தார். பரந்தூருக்குப் பதிலாக மாற்று இடம் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>தவெக அரசின் இந்த முடிவிற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். குறிப்பாக திமுக தலைவர்கள் பலர் நேற்று இந்த விவகாரம் குறித்து பல பின்னடைவுகளை குறிப்பிட்டு விளக்கிப் பேசியிருந்தனர். </p><p>ஆனால் விமான நிலையம் அமையப்போகிறது என அப்பகுதியில் திமுக தலைவர்கள் பலர் இடம் வாங்கிப்போட்டுவிட்டதால் இந்த அக்கறை என தவெக விமர்சித்தது. </p><p>இந்நிலையில் பரந்தூர் விவகாரத்தில் திமுக வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>“எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் ‌பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?</p><p>இந்த விஷயத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘தூயசக்தியின் முகமூடியை கிழித்தெறிய ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன்’ - டிடிவி தினகரன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-have-lodged-a-complaint-with-the-governor-to-tear-off-the-mask-of-pure-power-thuya-sakthi-ttv-dhinakaran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-have-lodged-a-complaint-with-the-governor-to-tear-off-the-mask-of-pure-power-thuya-sakthi-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">bc5da45c-352f-4be1-87a4-b6a4c6cc9f96</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:46:14 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:46:14.845Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Governor Rajendra Arlekar,ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mbmse1if/New-Project-2026-08-25T171553.601.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘தூயசக்தியின் முகமூடியை கிழித்தெறிய ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன்’ - டிடிவி தினகரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mbmse1if/New-Project-2026-08-25T171553.601.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, மாற்றுக் கட்சிகளில் இணைவது தொடர்பாக, தவெக அரசு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரை சந்தித்து இன்று புகாரளித்தார். </p><p>ஆளுநர் உடனான சந்திப்புக்கு பின் கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்.,</p><p>என்ன முகாந்திரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைகிறார்கள்? அவர்களுக்கு அமைச்சர் பதவி என ஆசைவார்த்தை காட்டுகிறார்களா? இந்த நடைமுறை தொடரந்துகொண்டே செல்கிறது.</p><p>பதவி ஆசையில் சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யும் இந்த தவறு தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன். ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மாற்று கட்சியினரை ஆசைக்காட்டி தங்கள் பக்கம் இழுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.</p><p>சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் ஓநாய்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்பதற்காகவும், தூய சக்தி என்று சொல்லிக்கொண்டு நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களின் முகமூடியை கிழித்தெறிந்து உண்மையை காட்டவேண்டும் என்பதற்காக ஆளுநரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். அதை ஆவணம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு: கைதாகும் போது தற்கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிய கொள்ளையன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-stand-robber-stabs-himself-to-escape-police</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-stand-robber-stabs-himself-to-escape-police#comments</comments><guid isPermaLink="false">a89fe167-d3ce-4b1f-a29d-5ac5a8356430</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:43:27 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:43:27.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,koyambedu bus stand,Suicide threat,police chasing,தற்கொலை மிரட்டல்,கோயம்பேடு,Robber Escapes</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/cdornp2j/Koyambedu-Robber" width="1500"><media:title type="html"><![CDATA[ Koyambedu]]></media:title><media:description type="html"><![CDATA[ Koyambedu Robber]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/cdornp2j/Koyambedu-Robber?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81">கோயம்பேடு </a>பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பணத்தையும், செல்போனையும் திருடிய கொள்ளையன் ஒருவன், போலீசாரிடம் மாட்டிக்கொண்டதும் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>மழையால் நேர்ந்த அவதி</strong></h2><p>வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவர் சொந்தமாக ஒரு தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் தனது மோட்டார்</p><p>சைக்கிளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81">கோயம்பேடு </a>100 அடி சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார்.</p><p>அப்போது திடீரென பலத்த மழை பெய்ததால், மழையில் இருந்து தப்பிக்க கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்திற்குள் சென்றார். நீண்ட தூரப் பயணம் மற்றும் நள்ளிரவு நேரம் என்பதால், அசதி காரணமாக பேருந்து நிலையத்திலேயே அருள் படுத்துத் தூங்கியுள்ளார்.</p><h2><strong>நள்ளிரவில் கைவரிசை</strong></h2><p>நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், தூங்கிக் கொண்டிருந்த அருளின் அருகே ஒரு மர்ம வாலிபர் வந்து அமர்ந்தார். அருள் நன்கு தூங்குவதைக் நோட்டமிட்ட அந்த நபர், மெதுவாக அவரது சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.2,800 ரொக்கப் பணம் மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்களைத் திருடினான். திருடிய பொருட்களுடன் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.</p><h2><strong>பொதுமக்களிடம் சிக்கிய திருடன்</strong></h2><p>அப்போது அந்த வாலிபரின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரைச் சூழ்ந்து மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். </p><p>தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சபாநாயகம் மற்றும் போலீஸ்காரர் பாண்டிச்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொள்ளையனைப் பொதுமக்களிடம் இருந்து மீட்டு முறைப்படி கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றனர்.</p><h2><strong>தற்கொலை மிரட்டல்</strong></h2><p>யாரும் எதிர்பாராத விதமாக, அந்த கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை திடீரென வெளியில் எடுத்தான். "யாராவது என் அருகில் வந்தால் கழுத்தை அறுத்துக் கொள்வேன்" என்று கத்தியபடி, தன் கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொண்டான்.</p><p>ரத்தம் சொட்டச் சொட்ட தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று யோசிப்பதற்குள், அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.</p><h2><strong>தீவிரத் தேடுதல் வேட்டை</strong></h2><p>பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போலீஸ் பிடியில் இருந்த கொள்ளையன் தனக்குத்தானே கத்திக்குத்து நிகழ்த்தித் தப்பிய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. </p><p>தப்பியோடிய மர்ம கொள்ளையன் யார்? அவனுக்குக் காயம் பலமாக இருக்கிறதா? என கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>1979-க்கு பின்.. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சிரியாவை நீக்கியது அமெரிக்கா</title><link>https://www.maalaimalar.com/news/world/us-delists-syria-from-state-sponsors-of-terrorism-list</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-delists-syria-from-state-sponsors-of-terrorism-list#comments</comments><guid isPermaLink="false">e38d05a1-7612-4f1c-9703-74641bf731a2</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:42:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:42:39.395Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிரியா,அமெரிக்கா,பயங்கரவாதம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/hp4ycmhl/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அல் ஷரா, டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ அல் ஷரா, டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/hp4ycmhl/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சிரியாவை அதிகாரபூர்வமாக நீக்கியுள்ளது அமெரிக்கா. </p><h2>உள்நாட்டுப் போர்</h2><p>14 ஆண்டுகால நீடித்த உள்நாட்டுப் போர் கடந்த 2024 டிசம்பரில் <a href="https://www.maalaimalar.com/news/world/death-sentence-imposed-on-syrias-former-president">பஷர் அல் ஆசாத்</a> ஆட்சியை கவிழ்த்ததன் மூலம் நிறைவடைந்தது. </p><p>பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் ஒரு சில வாரங்களில் பல நகரங்களை கைப்பற்றி இந்த ஆட்சிக் கவிழ்ப்பை சாத்தியப்படுத்தியது. </p><p>ஆசாத் அவருக்கு ஆதவளித்து வந்த ரஷியாவுக்கு தப்பியோடினார். அங்கு தற்போது அவரது இருப்பிடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. </p> <p>இதனிடையே ஆட்சி கவிழ்ப்பில் முக்கிய பங்காற்றிய கிளர்ச்சி குழு தலைவர் அகமது அல் ஷரா சிரியாவின் அதிபரானார்.</p><p>போர் நிறைவடைந்ததால் வெவ்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களும் சொந்த மண்ணுக்கு திரும்ப தொடங்கினர்.</p><p>உள்நாட்டு போரின் பொருளாதார தாக்கத்தில் இருந்து சிரியா மெல்ல மீண்டு வரும் முயற்சியில் உள்ளது. அல் ஷரா அரசுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. ஏனெனில் முந்தைய ஆட்சியாளர் பஷர் அல் ஆசாத் ரஷியாவின் ஆதரவாளர் என்பதால்..</p><p>அவரின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்கு மறைமுக ஆதரவை அமெரிக்கா வழங்கி வந்திருக்கிறது. தனக்கேற்ற வகையில் புதிய அரசு அமைந்த பின் அந்நாட்டின் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கி வருகிறது.</p><p>வரலாற்றில் முதல் முறையாக ஒரு சிரியா அதிபர் - அல் ஷரா கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு சென்று அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்தார்.</p> <h2>பயங்கரவாத ஆதரவு நாடு</h2><p>1979 முதல் சிரியா, அமெரிக்காவின் பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் உள்ளது. அப்போது பஷர் அல் ஆசாத்தின் தந்தை ஹபீஸ் அல் ஆசாத் ஆட்சியில் இருந்தார். </p><p>அவர் ஆயுதக்குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி அமெரிக்கா சிரியாவை அந்த பட்டியலில் சேர்த்தது. அவருக்கு பின் அவரது மகன் பஷர் அல் ஆசாத் ஆட்சிக் காலத்திலும் சிரியா அந்த பட்டியலில் நீடித்தது.</p><p>இந்த சூழலில் 2024 இல் ஆட்சி மாற்றம் நடந்து அங்கு சாதகமான அரசு உருவாகியுள்ள நிலையில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து அந்நாட்டை நீக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜூலையில் அந்நாட்டின் பாராளுமன்ற அமைப்பான காங்கிரஸ் முன் தீர்மானத்தை கொண்டு வந்தார்.</p><p>45 நாட்கள் காங்கிரஸ் பரிசீலனைக்கு பின் இது அமலுக்கு வந்துள்ளது.</p><p>சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து சிரியா முற்றிலும் விலகி நிற்கும் என அதிபர் அகமது அல்ஷரா அளித்த உறுதிமொழிகள் அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>உள்நாட்டுப் போரின் பாதிப்புகளிலிருந்து மீண்டு வரவும், நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்கும் இத்தீர்மானம் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் என சிரிய அரசு கருதுகிறது.</p> <h2>சிரியா அதிபர் வரவேற்பு</h2><p>அமெரிக்காவின் இந்நடவடிக்கையை வரவேற்ற சிரிய அதிபர் அகமது அல் ஷரா தன் சமூக வலைத்தளத்தில், வேதனை நிறைந்த பழைய காலம் முடிவுக்கு வந்து, வளர்ச்சியும் மறுசீரமைப்பும் கொண்ட புதிய உலகிற்குள் நாடு நுழைகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>என்ன பலன்?</h2><p>பயங்கரவாத ஆதரவு பட்டியல்லில் இருந்ததால் சிரியாவிற்கு வெளிநாட்டு உதவிகள், பாதுகாப்பு ஏற்றுமதிகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் பெருமளவில் தடைபட்டிருந்தன.</p><p>கடந்த ஆண்டு தடைகளில் தளர்வுகள் வந்த பிறகும், இந்தப் பட்டியலில் பெயர் இருந்ததால் வங்கிகளும் முதலீட்டாளர்களும் சிரியாவில் முதலீடு செய்யத் தயங்கினர்.</p><p>இந்நிலையில் சிரியா அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அல் ஷராவின் அமைப்பும் உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உலகையே வியக்கவைத்த 10 வயது சிறுவன்: புதிய சிலந்தி இனத்திற்கு சிறுவனின் பெயர் சூட்டி விஞ்ஞானிகள் கௌரவம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/australian-boy-discovers-new-spider-species-arthoriopsis-murphyi</link><comments>https://www.maalaimalar.com/news/world/australian-boy-discovers-new-spider-species-arthoriopsis-murphyi#comments</comments><guid isPermaLink="false">a48a297d-655b-4ad4-8610-5512d3db1c19</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:13:53 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:13:53.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Australia,ஆஸ்திரேலியா,Young Scientist,New Spider Species,Murphy Widdowson,மர்பி விட்டோவ்சன்,Scientific Discovery,Deal Island</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s7p6zlm1/New-Spider-Species" width="1500"><media:title type="html"><![CDATA[ Spider]]></media:title><media:description type="html"><![CDATA[ New Spider Species ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s7p6zlm1/New-Spider-Species?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரும்பாலான குழந்தைகளுக்கு சிலந்தி என்றாலே பயமும் அலறலும் தான் முதலில் வரும். ஆனால், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">ஆஸ்திரேலியாவைச்</a> சேர்ந்த 10 வயது சிறுவன் மர்பி விட்டோவ்சன் செய்த ஒரு காரியம், இன்று அவனை உலக அறிவியல் வரலாற்றில் இடம்பிடிக்கச் செய்துள்ளது.</p><p>அவன் கண்டுபிடித்த ஒரு வகை சிறிய சிலந்தி, அதுவரை உலகிற்குத் தெரியாத ஒரு புதிய இனம் என்பதை விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.</p><h2><strong>டீல் தீவில் நடந்த ஆச்சரியம்</strong></h2><p>கடந்த 2020-ஆம் ஆண்டு, மர்பிக்கு 10 வயது இருக்கும் போது, அவனது பெற்றோர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">ஆஸ்திரேலியாவின்</a> டாஸ்மேனியா கடற்கரையில் உள்ள 'டீல் தீவில்' பணிபுரிந்து வந்தனர். </p><p>அப்போது அந்தத் தனித்தீவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், வித்தியாசமான ஒரு சிறிய சிலந்தியைப் பார்த்துள்ளான். அதைக்கண்டு பயந்து ஓடாமல், அது என்ன வகையான சிலந்தி என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான்.</p><h2><strong>அருங்காட்சியகத்தை நாடிய சிறுவன்</strong></h2><p>தன் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள, லான்செஸ்டனில் உள்ள 'ராணி விக்டோரியா அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தை' மர்பி தொடர்புகொண்டான். அங்குள்ள பிரபல சிலந்தி ஆராய்ச்சியாளர் ஜான் டக்ளஸ் அந்த சிலந்தியை ஆய்வு செய்தார். ஆனால், அவராலும் அதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. </p><p>இதில் ஏதோ விசேஷம் இருக்கிறது என்று உணர்ந்த அவர், மேல் ஆய்விற்காக அதை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிலந்தி வகைப்பாட்டியல் நிபுணர் டாக்டர் வோல்கர் ஃபிராமெனாவிடம் அனுப்பினார்.</p><h2><strong>ஓநாய் சிலந்தி</strong></h2><p>விஞ்ஞானிகள் அந்த சிலந்தியை அதிநவீன நுண்ணோக்கி மூலம் தீவிரமாக ஆய்வு செய்தனர். சாதாரண கண்களுக்கு அது மற்ற ஓநாய் சிலந்திகளைப் போலவே தெரிந்தாலும், அதன் உடலமைப்பிலும், குறிப்பாக அதன் இனப்பெருக்க இருப்புகளிலும் முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான அம்சங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். </p><p>அதுவரை மனிதகுலம் கண்டறியாத ஒரு புதிய "ஓநாய் சிலந்தி" இனம் அது என்பது உறுதி செய்யப்பட்டது.</p><h2><strong>ஆர்டோரியோப்சிஸ் மர்பி எனப் பெயரிடல்</strong></h2><p>மர்பியின் இந்த அசாத்திய ஆர்வத்தைப் பாராட்டும் விதமாக, அந்தப் புதிய சிலந்தி இனத்திற்கு அந்த சிறுவன் பெயரைச் சேர்த்து 'ஆர்டோரியோப்சிஸ் மர்பி' என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர். </p><p>இதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள், அருங்காட்சியக ஊழியர்கள் மற்றும் சிறுவனின் குடும்பத்தினர் முன்னிலையில் மர்பிக்கு ஒரு பெரிய பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில், சிலந்தியின் அறிவியல் பெயர் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி சிறுவனின் சாதனையை கொண்டாடப்பட்டது.</p><h2><strong>இந்த சிலந்தி ஆபத்தானதா?</strong></h2><p>சிலந்தி என்றாலே பலருக்கும் பயம் இருக்கும். ஆனால், இந்த 'ஆர்டோரியோப்சிஸ் மர்பி' சிலந்திகள் மனிதர்களுக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று ஆராய்ச்சியாளர் ஜான் டக்ளஸ் தெரிவித்துள்ளார். </p><p>இது வெறும் 5 மில்லிமீட்டர் அளவு மட்டுமே கொண்டது. இது மனிதர்களைக் கடித்தாலும் விஷத்தன்மை அற்றது. இதன் பற்கள் மனித தோலைத் துளைத்தாலும், நமக்குப் பெரிய அளவில் வலியோ அல்லது எந்த உணர்வோ கூடத் தெரியாது.</p><p>அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பவை எப்போதுமே அதிநவீன ஆய்வகங்களில் மட்டுமே பிறப்பதில்லை; சாதாரண மனிதர்களின், குறிப்பாகக் குழந்தைகளின் தேடல் மற்றும் ஆர்வத்திலிருந்தும் பிறக்கும் என்பதை மர்பியின் இந்தச் சாதனை நிரூபித்துள்ளது. </p><p>ஆஸ்திரேலியாவின் காடுகளில் இன்னும் கண்டறியப்படாத கோடிக்கணக்கான உயிரினங்கள் உள்ளன என்பதற்கும் இது ஒரு சிறந்த சான்றாகும்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் எண்ணெய் வர்த்தகம்: இந்தியாவின் நான்கு நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிரடி தடை..!</title><link>https://www.maalaimalar.com/news/world/four-indian-firms-among-those-sanctioned-by-us-for-iran-oil-trade-amid-operation-economic-outcast</link><comments>https://www.maalaimalar.com/news/world/four-indian-firms-among-those-sanctioned-by-us-for-iran-oil-trade-amid-operation-economic-outcast#comments</comments><guid isPermaLink="false">ec438be9-15b1-434d-b8f5-da3dc9547977</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:09:17 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:09:17.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பொருளாதார தடை,US Iran war,அமெரிக்கா ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/p0jctngu/IranShips001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல் போக்குவரத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/p0jctngu/IranShips001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>Operation Economic Outcast (ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்) என்பது ஈரானின் பொருளாதார மற்றும் நிதி வலைப்பின்னல்களை முழுமையாக முடக்க அமெரிக்க அரசு தொடங்கியுள்ள ஒரு புதிய பொருளாதாரத் தடைத் திட்டமாகும்.</p><p>இந்த நிலையில் ஈரானில் இருந்து பெட்ரோல் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்ததற்காக இந்திய நிறுவனம் மற்றும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடைவிதித்துள்ளது.</p><p>பொருளாதார தடையை எதிர்கொண்ட நிறுவனங்களில் ஒன்று Portease Partners LLP ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவுக்கு அதிகமாக ஈரானின் பெட்ரோகெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்ததற்காக இந்த தடையை விதித்துள்ளது.</p><h2>சதாஷிவ ஓவர்சீஸ் லிமிடெட்</h2><p>சதாஷிவ ஓவர்சீஸ் லிமிடெட், பிபி சாஃப்ட்டெக் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிராக்ருட்டீஸ் இன்ஃப்ரா இம்பேக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கும் தடை விதித்துள்ளது.</p><h2>பிபி சாஃப்ட்டெக் பிரைவேட் லிமிடெட்</h2><p>சதாஷிவா நிறுவனம் பிப்ரவரி 2024 முதல் ஜூன் 25 வரை ஈரானின் பெட்ரோலிய பொருட்களை பல்வேறு நிறுவனங்களில் இருந்து 69 மில்லியன் டாலர் அளவில் இறக்குமதி செய்துள்ளது. இதில் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட Bonjoure Commodity FZE என்ற நிறுவனமும் அடங்கும்.</p><p>பிபி சாஃப்ட்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 25 மில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போர்ஷே இடையே $1.4 பில்லியன் மெகா ஒப்பந்தம்: $373 மில்லியனில் MHP நிறுவனத்தை கைகப்பற்றுகிறது TCS</title><link>https://www.maalaimalar.com/news/national/porsche-tcs-1-4-billion-mega-deal-mhp-acquisition</link><comments>https://www.maalaimalar.com/news/national/porsche-tcs-1-4-billion-mega-deal-mhp-acquisition#comments</comments><guid isPermaLink="false">f4664ffe-1450-4dd0-9fe5-5a978352a241</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:45:08 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:45:08.050Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Porsche,போர்ஷே,TCS,MHP,டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vlg34l8p/tcs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TCS acquires MHP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vlg34l8p/tcs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு விளையாட்டு கார்கள் தயாரிப்பு நிறுவனமான போர்ஷேவின் துணை நிறுவனமான 'MHP மேனேஜ்மென்ட்' அமைப்பைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. </p><p>சுமார் $373 மில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹3,100 கோடிக்கும் மேல்) மதிப்பிலான இந்த கையகப்படுத்தல், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான $1.4 பில்லியன் மதிப்பிலான 5 ஆண்டு கால மூலோபாய கூட்டாண்மையின் ஒரு முக்கிய பகுதியாகும்.</p><h2>வாகனத் <strong>தொழில் மேம்பாடு</strong></h2><p>இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், <a href="https://www.maalaimalar.com/news/national/mandatory-marathi-test-sparks-mumbai-auto-taxi-strike">போர்ஷேவின் </a>பொறியியல், உற்பத்தி, வாடிக்கையாளர் சேவை மற்றும் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தொழில்நுட்ப மாற்றத்தைக் கொண்டு வருவதாகும். மேலும், அடுத்த தலைமுறை வாகனத் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மென்பொருள் அடிப்படையிலான வாகன தளங்களை உருவாக்க TCS மற்றும் போர்ஷே இணைந்து செயல்படும்.</p><p>MHP நிறுவனம் ஐரோப்பாவில் டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உற்பத்தி டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய துறைகளில் சிறந்த அனுபவம் கொண்டது. கையகப்படுத்தலுக்குப் பிறகும் MHP தனது சொந்த பெயரிலேயே தனித்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நிறுவன தலைவ<strong>ர்களின் கருத்துக்க</strong>ள்</h2><p>TCS தலைமைச் செயல் அதிகாரி கிருதிவாசன் கூறுகையில், AI மற்றும் தரவு அறிவியல் வாகனத் துறையை மறுவரையறை செய்து வரும் வேளையில், TCS-ன் AI திறன்களும் MHP-ன் வாகன ஆலோசனைக் கூர்மையும் இணைந்து போர்ஷே நிறுவனத்தில் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தும் என்றார்.</p><p>போர்ஷே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் மைக்கேல் லைட்டர்ஸ், தனது நிறுவனம் தனது முதன்மை கார்ப்பரேட் இலக்குகளில் கவனம் செலுத்துவதற்காக MHP பங்கு பரிமாற்றத்தை மேற்கொண்டதாகவும், TCS போன்ற ஒரு வலுவான தொழில்நுட்ப பங்காளியைக் கண்டறிந்துள்ளது தங்களின் உலகளாவிய போட்டியை மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.</p><h2>தொழில்துறை <strong>தாக்கம்</strong></h2><p>நெதர்லாந்தில் உள்ள TCS-ன் துணை நிறுவனம் மூலம் இந்த பங்கு கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்குப் பிறகு, அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலகளாவிய கூட்டணி மூலம் TCS நிறுவனம் ஐரோப்பிய உற்பத்தி மற்றும் வாகனத் தொழில் சந்தையில் தனது AI மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் வழக்கு - முதலமைச்சர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனாவுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-case-high-court-warns-chief-minister-vijay-and-aadhav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-case-high-court-warns-chief-minister-vijay-and-aadhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">3096e592-ff13-4941-a8ba-b2fb73b81c2a</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:44:09 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:44:09.656Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/6f7pxl77/New-Project-2026-08-25T161347.208.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேர்தல் வழக்கு - முதலமைச்சர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனாவுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/6f7pxl77/New-Project-2026-08-25T161347.208.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. </p><p>இதேபோல, ஆதவ் அர்ஜூனா தரப்பிலும் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி, தேர்தல் வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டியுள்ளது.</p><p>கடந்த முறையே வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என கூறியிருந்தேன் என்றார். தொடர்ந்து 2 வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி, 27-ந்தேதி வரை அவகாசம் வழங்கினார். </p><p>அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளியில் மலம் கழிக்க வீரர்கள் திணறுவது ஏன்?.. உடலில் என்ன நடக்கிறது? - விடையை கண்டுபிடித்த ஆய்வு! </title><link>https://www.maalaimalar.com/news/world/why-do-astronauts-struggle-to-defecate-in-space-what-happens-to-the-body-a-study-reveals-the-answer</link><comments>https://www.maalaimalar.com/news/world/why-do-astronauts-struggle-to-defecate-in-space-what-happens-to-the-body-a-study-reveals-the-answer#comments</comments><guid isPermaLink="false">65ceef5c-64f2-4af2-98d3-21f24f458f1f</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:39:09 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:39:09.845Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>astronauts,மலச்சிக்கல்,constipation,study,ஆய்வு,விண்வெளி வீரர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/jkty5rie/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விண்வெளி வீரர்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ விண்வெளி வீரர்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/jkty5rie/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/astronaut-captures-purple-lightning-from-space">விண்வெளிப் பயணம்</a> செல்லும் வீரர்கள் எப்படி மலம் கழிக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கு எழுவதுண்டு. </p><p>விண்வெளி வீரர்களுக்கு பெரிய தலைவலியான விஷயமும் இந்த மலம் கழித்தல் தான். விண்வெளியில் அவர்களின் ஜீரண மண்டலம் மிகவும் மெதுவாகவே செயல்படுவதால் சாதரணமாக மலம் கழிப்பது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகிறது.</p><p>நேச்சுரல் கம்யூனிகேஷன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று, விண்ணில் மனித செரிமான மண்டலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த உயிரியல் ரீதியான விஷயங்களை பற்றி விவரிக்கிறது. </p><h2>ஆய்வு</h2><p>சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 முதல் 9 மாதங்கள் வரை கழித்த விண்வெளி வீரர்களின் ரத்த மாதிரிகளை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, உடல், குடலில் உள்ள உணவு, குடல் நுண்ணுயிரிகள் ஆகியவற்றின் மூலக்கூறுகளில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்தனர்.</p><p>உணவில் இருந்து உடல் ஆற்றலை பெருகிறது. உட்கொள்ளும் உணவு குடலுக்கு சென்று அங்குள்ள நுண்ணுயிர்கள் அந்த உணவை செரிக்கச் செய்து இந்த ஆற்றலை உருவாக்குகிறது.</p><p>இந்நிலையில் புவியீர்ப்பு விசை குறைந்து அல்லது முற்றிலும் இல்லாது (மைக்ரோ கிராவிட்டி) உள்ள விண்வெளியில் உடலில் உள்ள குடல் இயக்கம் மிகவும் மெதுவாக இருப்பது தெரியவந்துள்ளது.</p> <p>உட்கொண்ட உணவு குடலில் இருக்கும்போது ஆற்றலை உருவாக்க நுண்ணுயிரிகள் அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் கார்போஹைடிரேட்-ஐ விட புரதங்களையே அதிகம் சார்ந்து செயல்படுகிறது.</p><p>வழக்கமாக ஆற்றலுக்கு நார்ச்சத்து மற்றும் கார்போஹைடிரேட் அதிகம் தேவைப்படும் நிலையில் விண்வெளியில் புரதத்தை மட்டுமே குடல் நுண்ணுயிர்கள் அதிகம் சார்ந்துள்ளதால், இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>இது வருங்காலங்களில் வருடக்கணக்கில் விண்வெளியில் இருக்க வேண்டிய சூழல் வீரர்களுக்கு எழும்போது கடும் உடல்நல பிரச்சனையாக மாறலாம்.</p> <h2>மலம் கழிக்க கஷ்டப்படுவது ஏன்?</h2><p>மலசிக்கல் என்பது விண்வெளி வீரர்களையே பொதுவாக காணப்படும் பிரச்சனையாகவே உள்ளது. இதற்கான உயிரியல் காரணம் என்று பார்த்தால் அது, உடல் இயக்கம் மற்றும் குடலில் வாழும் நுண்ணியிர்களின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றமே ஆகும்.</p><p>சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோதும் திரும்பி வந்தபின்னரும் 52 விண்வெளி வீரர்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 488 ரத்த மாதிரிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.</p> <p>2 முதல் 9 மாதங்கள் வரை இந்த வீரர்கள் விண்வெளியில் இருந்துள்ளனர். அவர்கள் ரத்த மாதிரிகள் முகம் அவர்கள் விண்ணில் இருக்கும்போது உடலின் கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.</p><p>மொத்தம் 40 கூறுகள் அவர்களின் உடலில் மாறுதலுக்கு உள்ளாகி உள்ளன. இந்த மாறுதலுக்கு உள்ளான கூறுகளில் பெரும்பாலானவை குடல் நுண்ணியிரிகள், ஆற்றலுக்காக புரதத்தை உடைக்கும்போது தான் ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த ஆய்வு, மைக்ரோகிராவிட்டி அதாவது புவியீர்ப்பு விசை இன்மை குடலின் செயல்பாடுகளை மெதுவாக்குகிறது என்பதையே உணர்த்துகிறது.</p><p>இதன் பொருள் என்னவென்றால் உணவு செரிமானமும் அதிலிருந்து கழிவு பிரிவதும் செரிமான மண்டலத்தில் மிக மெதுவாகவே நிகழ்கின்றன என்பதாகும்.</p><p>எனவே மலம் உருவாவதே மெதுவாக இருப்பதால் மலம் கழிப்பது குறைகிறது. நீண்ட நாட்கள் இவ்வாறு இருக்கும்போது அது உடல்நலத்தை பாதிக்கிறது. இதனால் தேவையில்லாத நச்சுப்பொருட்களும் உருவாகிறது.</p><h2>முடிவு</h2><p>இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த மாற்றங்கள் விண்வெளிக்கு ஏவப்பட்ட சில நாட்களிலேயே தொடங்கிவிடுகின்றன.</p><p>விண்வெளி வீரர்கள் பூமியில் தரையிறங்கிய சில நாட்களுக்குள் இவை இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகின்றன.</p><p>வீரர்களின் உணவுமுறையை சரியான முறையில் தீர்மானிப்பதன் மூலம் இந்த மாற்றங்களை ஓரளவு தவரிக்கலாம். ஆனால் நீடித்த தீர்வு என்பது அடுத்தடுத்த ஆய்வுகள் மூலமே எட்டப்படும்</p>]]></content:encoded></item><item><title>ஏய்... நிறுத்துடா வண்டிய... என்னய்யா போலீஸ் நீ... போதையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த இளம்பெண்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-women-brought-traffic-to-a-standstill-while-intoxicated</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-women-brought-traffic-to-a-standstill-while-intoxicated#comments</comments><guid isPermaLink="false">8c003d62-d021-47be-845e-965be7066fd4</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:35:56 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:35:56.584Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Drugs,போதை,இளம்பெண்கள்,Young Womens</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bd11mi31/womens.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ போதையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த இளம்பெண்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ போதையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த இளம்பெண்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bd11mi31/womens.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெண்களின் வண்டி மட்டும் அவர்களை போலவே அங்கும் இங்குமாக தள்ளாடியபடி வந்தது. அப்போது ஒரு வாகனத்தின் மீது அந்த பெண்கள் வந்த இருசக்கர வாகனம் மோதி விட்டது.</strong></em> </p><p>ஏய்... வண்டியை நிறுத்து... என்று இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் நின்று ஆக்ரோஷமாக சத்தம் போட்டதை கேட்டதும் மற்றொரு பக்கம் வழியாக சென்று விடலாம் என்று வண்டியை ஒருவர் திருப்பினார். உடனே அந்த வண்டியின் முன்பு போய் நின்றபடி போயிருவியா நீ... என்று அவரையும் மிரட்டினார் அந்த பெண்மணி. </p><p>சுடிதாரில் காட்சி அளித்த 2 இளம்பெண்கள் புழல் ஜி.என்.டி. ரோட்டில் மாலை நேரத்தில் நடத்திய ‘அட்ராசிட்டி’ காட்சிகள்தான் இது. </p><p><em>‘தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்</em></p><p><em>இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி..</em></p><p><em>என் கண்ண கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி’</em></p><p>என்ற கதையில் அந்த 2 பெண்களும் <a href="https://www.maalaimalar.com/topic/போதை">மதுவை</a> ஊற்றிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஹாயாக வந்து கொண்டு இருந்தார்கள். அவர்களோடு வாலிபர் ஒருவரும் கம்பெனிக்காக உடன் வந்தார். மப்பு ஏறிய நிலையில் வண்டி எங்கே போகிறது? நாம் எங்கே போகிறோம்? என்று எதுவும் தெரியாமல் வண்டி வந்துக் கொண்டு இருந்தது. </p><p>புழல் சந்திப்பில் வாகனங்கள் அந்த மாலை வேளையில் நெரிசலில் வரிசைக்கட்டி நின்றன. ஆனால் அந்த பெண்களின் வண்டி மட்டும் அவர்களை போலவே அங்கும் இங்குமாக தள்ளாடியபடி வந்தது. அப்போது ஒரு வாகனத்தின் மீது அந்த பெண்கள் வந்த இருசக்கர வாகனம் மோதி விட்டது.  அவ்வளவுதான்... வண்டியைவிட்டு ஆவேசமாக கீழே இறங்கிய ஒரு பெண் தலைமுடியை வாரி சுருட்டி கட்டியபடி கோதாவில் இறங்கினார். ‘ஏய்... என் வண்டியையே இடிச்சிட்டியா?’ யார்டா நீ... என்று ஆவேசமாக கத்தினார். </p><p>அதைக்கேட்டதும் எம்மா... இடிச்சது நீ... பழி என் மீதா? என்பது போல் அந்த வாகன ஓட்டி பரிதாபமாக ஆளைவிட்டால் போதும் என்று வாகனத்தை நகர்த்த தொடங்கினார். ஆனால் ஆவேசத்தில் இருந்த அந்த பெண்கள் நடுரோட்டில் இறங்கி நின்று இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து பேட்டை ரவுடிகளை போல் ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசி ஆட்டம் போட்டனர். </p><p>அப்போது ஒரு லாரி நெருங்கி வந்தது. அதை பார்த்ததும் ஏய் இடிச்சுடுவியா நீ... இடிச்சுட்டு போ பார்க்கலாம் என்றார். இந்த களேபரத்தால் ரோட்டில் வாகனங்கள் எதுவும் நகர முடியாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. அதை பார்த்த பொதுமக்கள் சிலர் அந்த பெண்களை சமாதானப்படுத்த வந்தனர். கிட்டே வந்த போதுதான் அவர்கள் மப்பில் இருப்பது அவர்களுக்கே தெரிந்தது. </p><p>ஒருவர் வண்டியை ஓரங்கட்டுங்கள் என்றார். அதைக் கேட்டதும் ‘என்னய்யா சொல்ற... என் வண்டியை ஓரங்கட்ட சொல்றியா? எங்க ஊராக இருந்தால் சீனே வேற...’ என்றார். உடனே அங்கிருந்த ஆண்கள் சிலர் உங்களுக்கு எந்த ஊரும்மா? என்றதும் என் ஊரு துபாய் தெரியுமா? என்றனர். பார்த்தாலே தெரியுது என்றபடி அங்கிருந்த ஆண்களில் ஒருவர் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒரு அறை விட்டார்.  அருகில் நின்ற போக்குவரத்து போலீஸ்காரரும் நிலைமை எல்லை மீறி செல்கிறதே என்று தவித்தபடி அவர்களை சமாதானப்படுத்தினார். ஆனால் அந்த பெண்கள் சமாதானம் ஆகவில்லை. என்னய்யா போலீஸ் நீ... (அதற்கு பிறகு பேசிய வார்த்தைகள் அச்சில் சேர்க்க முடியாதவை).</p><p>அடங்காமல் நடுரோட்டில் ஆடிக் கொண்டு இருந்த அந்த பெண்களை எப்படி அடக்கி அங்கிருந்து அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் தவித்த போலீஸ்காரர் ஒருவழியாக மற்ற போலீஸ்காரர்களையும் வரவழைத்து 2 பெண்கள் மற்றும் அவருடன் வந்திருந்த இன்னொரு வாலிபரையும் சேர்த்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  அவர்கள் யாரும் தன்னிலையில் இல்லை என்பதை போலீசார் உணர்ந்து கொண்டனர். அவர்களை விசாரித்த போது ஒரு பெண்ணுக்கு 17 வயது சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் என்பதும், இன்னொருவருக்கு வயது 18 அயப்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அனைவரும் போதை தலைக்கேறிய நிலையில் இருந்ததால் போதை தெளிந்த பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்று மகளிர் போலீஸ் பாதுகாப்பில் வைத்து இருந்தனர்.</p><p>இந்த சம்பவம் புழல் பகுதியில் சிறிது நேரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை கேமராவுக்குள் அடக்கிய ‘ஜென் சி’ தலைமுறையினர் இணைய தளங்களில் வைரலாக பரவ விட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மீன் மார்க்கெட்டுக்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டதால் சர்ச்சை..!</title><link>https://www.maalaimalar.com/news/national/row-erupts-after-surat-fish-market-named-after-pm-modi-he-never-consumed-seafood-is-pure-vegetarian</link><comments>https://www.maalaimalar.com/news/national/row-erupts-after-surat-fish-market-named-after-pm-modi-he-never-consumed-seafood-is-pure-vegetarian#comments</comments><guid isPermaLink="false">bf779550-7283-4725-a8f5-0a30da339538</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:31:04 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:31:04.764Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/24eebn3v/ModiFishMarket001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நரேந்திர மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/24eebn3v/ModiFishMarket001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் சூரத்தில் மாநகராட்சி சார்பில் மிகப்பெரிய மீன் மார்க்கெட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு முன், ஸ்ரீ நரேந்திர மோடி மொத்த விற்பனை மீன் மார்க்கெட் என்று பெயரிடப்பட்டுள்ளது.</p><p>பிரதமர் மோடி சுத்த சைவம். அவர் மீன் சாப்பிடமாட்டார். அப்படி இருக்கும்போது, சைவ உணவை பின்பற்றும் பிரதமர் மோடி பெயரை வைத்துள்ளது நியாயமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>நரேந்திர மோடி தனது வாழ்நாளில் ஒருபோதும் கடல் உணவை உட்கொண்டதில்லை. அவர் ஒரு முழுமையான சைவ உணவு உண்பவர். மோடி ஒரு சைவ உணவு உண்பவர் என்பதால், இந்தப் பலகையை வைக்கக்கூடாது என்று மீன் விற்பனையாளர் சுரேந்த்ரா லஷ்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>ஆனால், சூரத் மாநகராட்சி மீன் மார்க்கெட்டிற்கான பெயர் இன்னும் பரிசீலனையில் உள்ளது. பெயர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.</p><p>அதிகாரப்பூர்வமான தீர்மானம் ஏதுமின்றி அந்தப் பலகை வைக்கப்பட்டது. இதுகுறித்து நாங்கள் அவர்களிடம் தெரிவித்தோம். அவர்களே அதை அகற்றிவிடுவதாக வாய்மொழி உறுதியளித்துள்ளனர் என்று எஸ்.எம்.சி. (SMC) மத்திய மண்டலத்தின் செயல் பொறியாளர் ஆர்.டி. கஞ்சவாலா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றக் கண்ணியம் காக்கப்பட வேண்டும்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உருக்கமான வேண்டுகோள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-makes-an-earnest-appeal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-makes-an-earnest-appeal#comments</comments><guid isPermaLink="false">6d4431c6-b8e3-4a74-a66a-70b5bd1a5332</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:26:49 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:26:49.089Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN assembly,tvk,சட்டசபை,சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்,J.C.D. Prabhakar,Speaker J.C.D. Prabhakar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/yqrl63s1/dd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ J.C.D. Prabhakar  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/yqrl63s1/dd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அவையின் விவாதங்களின் போது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-project-cancelled-issue-arguments-in-assembly">சட்டசபை </a>உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும், அவையின் மரபுகள் மீறப்படுவது குறித்தும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். மக்கள் மன்றமான சட்டமன்றத்தை ஜனநாயகப் பண்புகளோடு நடத்த உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>ஜனநா<strong>யக உணர்வோடு அவையை நடத்</strong>தும் கடமை</h2><p>சட்டமன்றத்தில் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நான் வருத்தத்துடன் ஒரு கருத்தை வெளியிட விரும்புகிறேன். மிகுந்த ஜனநாயக உணர்வோடும் அன்போடும் சபை கண்ணியத்தை மீறாமல் அனைவருக்கும் வாய்ப்பளித்து இந்த சபையை இப்படித்தான் நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ, அப்படி இருக்க வேண்டும் என்றுதான் முதலமைச்சர் அளித்த இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.</p><h2>இரு தரப்பு <strong>எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள்</strong> குறித்து அதிருப்தி</h2><p>தொடர்ந்து பேசிய சபாநாயகர், பேரவையில் சில உறுப்பினர்கள் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஆளுங்கட்சி தரப்பிலும் சில எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் தவறாகவும் அவையின் மரபுகளுக்கு முரணாகவும் இருப்பதாக அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். மக்கள் நலன் சார்ந்த சட்டமன்ற விவாதங்களின் தன்மையைக் குறைக்கும் வகையில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.</p><p>அவையின் கட்டுப்பாட்டைப் பேண வேண்டிய பொறுப்பு தமக்கு இருந்தாலும், எந்தவொரு உறுப்பினரையும் பேரவையில் இருந்து நீக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ தாம் விரும்பவில்லை என்று சபாநாயகர் தெளிவுபடுத்தினார். "யாரையும் அவையில் இருந்து நீக்கிவிடக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்" என்று குறிப்பிட்ட அவர், உறுப்பினர்கள் அனைவரும் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு, அவையின் கண்ணியத்தையும் பெருமையையும் காப்பாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - சிஐடிக்கு மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/case-regarding-the-shooting-death-of-three-tamils-by-the-karnataka-forest-department-transferred-to-the-cid</link><comments>https://www.maalaimalar.com/news/national/case-regarding-the-shooting-death-of-three-tamils-by-the-karnataka-forest-department-transferred-to-the-cid#comments</comments><guid isPermaLink="false">59ba20fe-de52-45df-8eb8-dff7da4dbb6e</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:20:19 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:20:19.699Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தமிழர்கள்,சிஐடி,CID,Tamil Men</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/a1r4mh54/New-Project-2026-08-25T154855.638.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - சிஐடிக்கு மாற்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/a1r4mh54/New-Project-2026-08-25T154855.638.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை, விரிவான விசாரணைக்காக குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் காவேரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். </p><p>இவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டதாகவும், தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை தெரிவித்தது.</p><p>ஆனால் இன்று வெளியான மூவரின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவர்களின் விலா எலும்புகள் உடைக்கப்பட்டு, கொடூரமான காயங்களுடன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. </p><p>மேலும் மூன்று பேரும் அருகருகே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் சட்டமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.</p><p>இந்நிலையில் இந்த வழக்கில் உள்ள தீவிரத்தன்மையை உணர்ந்து, கர்நாடக காவல்துறை விசாரித்து வந்த இந்த வழக்கு, தற்போது சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night-3#comments</comments><guid isPermaLink="false">622b3b97-d8b1-493c-81a6-bce0e15a73a7</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:15:42 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:15:42.076Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bujuekhd/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bujuekhd/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இன்று நீலகிரி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>27-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>28-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 28-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>29-ந்தேதி மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>நவம்பர் 13-ந்தேதி உலகம் அழியுமா?- இணையத்தில் வெளியான கணித அறிஞர் கணிப்பால் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/will-the-world-end-on-friday-the-13th-november-2026</link><comments>https://www.maalaimalar.com/news/world/will-the-world-end-on-friday-the-13th-november-2026#comments</comments><guid isPermaLink="false">ddfc2994-6d1b-4da6-a9fa-dd0b5b85a056</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:00:01 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:00:01.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உலகம்,கணித அறிஞர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7f4p073f/november.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7f4p073f/november.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நவம்பர் 13-ந்தேதி நெருங்கி வருவதால், அறிவியலின் கணித மாதிரிகள் குறித்த விவாதங்கள் இணையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</strong></em></p><p>நவம்பர் 13-ந்தேதி...</p><p>கடந்த சில நாட்களாக இணையத்தில் அதிகமாக பேசுபொருளாகி உள்ள தேதி இது. இந்த தேதி உலக அளவில் பலரையும் நடுங்கவும் வைத்துள்ளது. </p><p>இந்த நாளில் பூமி அழியப் போகிறது என்றும், அன்றுடன் மனித இனம் அழியப் போகிறது என்ற செய்தி காட்டுத்தீயாக பரவிக் கொண்டு இருக்கிறது. எத்தனையோ போலி தீர்க்க தரிசனங்களை நாம் இதுவரைக்கும் கடந்து வந்து இருக்கிறோம். ஆனால் இது ஒரு சாமியாரோ, தீர்க்கதரிசியோ சொன்னது கிடையாது. </p><p>உலகத்தின் மிகச்சிறந்த விஞ்ஞானி கணிதபூர்வமாக நிரூபித்து சொல்லியிருக்கும் நாள் இது. நிறைய தேதிகள் இருக்கும் போது சரியாக நவம்பர் 13-ந்தேதியை ஏன் அவர் தேர்ந்து எடுத்தார். அதற்கு பின்னாடி இருக்கக்கூடிய பயங்கரமான கணக்கு என்ன? சற்று விரிவாக பார்ப்போம்.</p><p>1960-வது வருடம் ஆஸ்டிரிய அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி ஹெய்ன்ஸ் வான் போர்ஸ்டர் விசித்திரமான ஆராய்ச்சியில் இறங்கினார்.</p><p>கடந்த 2000 ஆயிரம் ஆண்டு கால உலக மக்கள் தொகையோட வளர்ச்சி தரவுகளை கையில் எடுத்தார். மனித இனம் எப்படி வளர்ந்து இருக்கிறது என்று கணக்கு போட்ட போது ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை அவருக்கு தெரிந்தது. இயற்கையோட விதிகளை மீறி மனித இனம் ஒரு ஹைபர் போலிக் குரோத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறது. அதாவது மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அடுத்தடுத்து அது வளருகிற வேகமும் அதிகரிக்கும் என்று அவர் நினைத்தார். </p><p>போர்ஸ்டர் ஒரு பிரத்யேக கணித பார்முலாவை உருவாக்கினார். அந்த பார்முலாவில் கடந்த கால தரவுகளை போட்டு எதிர்காலத்தை நோக்கி கணக்கு போட்டபிறகு அந்த கணித சமன்பாடு ஒரு குறிப்பிட்ட புள்ளியில் போய் நின்றது. கணிதத்துல  சிங்கிளா ரிட்டி இல்லன்னா முடிவிலி புள்ளி என்று கூறுவார்கள். அதாவது கணக்கிட முடியாத அளவுக்கு ஒரு பிரமாண்டமான வெடிப்பு நிகழக் கூடிய புள்ளி. </p><p>அந்த கணக்கு காட்டிய துல்லியமான இறுதி தேதிதான் நவம்பர் 13, வெள்ளிக்கிழமை 2026. மேலை நாடுகளில் ‘பிரைடே 13இத்’ அப்படி என்பது ஒரு சபிக்கப்பட்ட துரதிருஷ்டவசமான நாளாக பார்க்கப்படுகிறது. ஆனால் போர்ஸ்டர் வேண்டுமென்றே அந்த நாளை தேர்ந்து எடுக்கவில்லை. </p><p>அவருடைய கணித பார்முலா இயற்கையோட விதியாகி அந்த தேதியை கொண்டு  வந்து நிறுத்தியதாலதான் எல்லோரும் இதை ஒரு மர்மமாக பார்க்கிறார்கள்.</p><p>மனிதர்களின் மக்கள்தொகை இதே வேகமாகவே தொடர்ந்து அதிகரித்தால், பூமியின் நிலைமை மோசமாகி, மக்கள் பசியால் மட்டும் அல்ல, ‘அதிகமான மக்கள் நெருக்கடியில்’ இறந்து விடுவார்கள் என அவர் எச்சரித்திருந்தார். அணு யுத்தம் அல்லது வேறு பெரிய பேரழிவு ஏதாவது நடக்காமல் இருந்தால், கட்டுப்பாடற்ற மக்கள்தொகை வளர்ச்சி மனித நாகரிகத்தையே பாதிக்கக் கூடும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.</p><p>இப்போது இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டாலும், இதை “உலக அழிவு” கணிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என வல்லுநர்கள் விளக்குகின்றனர். ஹெய்ன்ஸ் வான் போர்ஸ்டர் கூட இதை எந்த வகையிலும் தெய்வீக தீர்க்கதரிசனம் என்று கூறவில்லை. </p><p>அப்போது கிடைத்த மக்கள் தொகைத் தரவுகளை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு கணித மாதிரி மட்டுமே எனவும் தெரிவித்துள்ளனர். தற்போதைய நவீன மக்கள் தொகை ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஹெய்ன்ஸ் வான் போர்ஸ்டரின் கோட்பாட்டை முற்றிலும் நிராகரித்துள்ளனர். 1960-களில் உலக மக்கள் தொகை பெருக்கம் ஆண்டுக்கு 2.2 சதவீதமாக உச்சத்தில் இருந்த நிலையில், 2026-ல் இதன் வளர்ச்சி விகிதம் 0.84 சதவீதமாக கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், போர்ஸ்டரின் கணிதக் கோட்பாட்டைப் பின்னோக்கி இயக்கிப் பார்த்த போது, மனித இனம் 200 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்ற தவறான முடிவு கிடைத்ததால், அவரே தனது கணிப்பில் பிழைகள் இருப்பதையும் ஒப்புக்கொண்டார்.</p><p>மக்கள்தொகை கட்டுப்பாடின்றி வேகமாக அதிகரித்தால், பூமியின் வளங்கள் மீது மிகுந்த அழுத்தம் வரும் என்ற எச்சரிக்கையாகவே இந்தக் கணிப்பு கருதப்பட்டது. பூமியின் வளங்கள் வரையறுக்கப்பட்டவை; கட்டுப்பாடில்லாத வளர்ச்சி ஒரு கட்டத்தில் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.</p><p>ஐக்கிய நாடுகள் மற்றும் பிற அமைப்புகளின் சமீபத்திய ஆய்வுகள்படி, உலக மக்கள் தொகை இன்னும் சில ஆண்டுகளில் நிலைபெற்று, 2030-க்கு அருகில் உச்சத்தை எட்டிய பின் மெதுவாகக் குறையலாம். 2026 என்ற ஆண்டு எந்த உண்மையான பேரழிவையும் குறிக்கவில்லை. அது அந்த பழைய கணித மாதிரியின் வரம்புகளை மட்டுமே காட்டுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p>ஆராய்ச்சியாளர்களே இந்தத் தேதியை ஒரு குறியீடாகத் தேர்ந்தெடுத்ததாகவும், நவம்பர் 13 என்பது ஹெய்ன்ஸ் வான் போர்ஸ்டரின் பிறந்த நாள் என்றும் கூறப்படுகிறது. அதனால், 2026-ல் உலகம் அழியும் என்ற கூற்று ஒரு அறிவியல் உண்மை அல்ல. ஒரு பழைய கணித மாதிரியை தவறாக புரிந்து கொண்டதால் உருவான தவறான பேச்சு மட்டுமே. ஆனால் இந்த ஆய்வு சொல்லும் முக்கியமான செய்தி என்னவென்றால், பூமியின் வளங்கள் வரையறுக்கப்பட்டவை. கட்டுப்பாடில்லாத வளர்ச்சி அல்லது மக்கள்தொகை அதிகரிப்பு நீண்ட காலத்தில் பெரிய சவால்களை உருவாக்கலாம் எனவும் கூறப்படுகிறது.</p><p>நவம்பர் 13-ந்தேதி நெருங்கி வருவதால், அறிவியலின் கணித மாதிரிகள் குறித்த விவாதங்கள் இணையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><h2><strong>தவறான கணிப்பு- பீதி தேவை இல்லை</strong></h2><p>கணிதத் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற ஓய்வு பெற்ற பேராசிரியர் இளங்கோ இந்த கணிப்பு பற்றி கூறியதாவது:-</p><p>கணிதத்தின் அடிப்படையிலான இந்த கணிப்பு என்பது அந்த கால சூழ்நிலைக்கு ஏற்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. ஹெயின்ஸ் வான் போர்ஸ்டர் மக்கள் தொகை பெருக்கம் உலக அளவில் 1960-ல் 2.2 சதவீதமாக இருந்ததை அடிப்படையாக வைத்து கணித்துள்ளார்.</p><p>ஆனால் இப்போது 2.2 சதவீதமாக இருந்த பிறப்பு வளர்ச்சி என்பது 0.84 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இதன் மூலம் அவர் கணித்த போது இருந்த கட்டுப்பாடு மாறி உள்ளது. இதன்படி பார்த்தால் பார்முலாவின்படி செய்யப்படும் கணிப்பு தவறாகி விடுகிறது. மேலும் அவரது ஆய்வுக்கால சூழல் வேறு. அதாவது இப்போது எல்நினோ மாற்றம், மேற்கத்திய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் இவைகளெல்லாம் கணிக்கும் அனுமானத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி பார்த்தால் போர்ஸ்டரின் கணிப்பு தவறாகி விடுகிறது. எனவே அந்த கூற்றை அடிப்படையாக வைத்து நவம்பர் 13-ந்தேதி உலகம் அழியும் என்ற கணிப்பு தவறாகும். எனவே இதை உண்மை என்று நம்பி மக்கள் பீதி அடைய தேவையில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>துலீப் டிராபி: வடகிழக்கு மண்டல அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய கிழக்கு மண்டலம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/duleep-trophy-quarter-final-east-zone-wony-by-an-innings-and-210-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/duleep-trophy-quarter-final-east-zone-wony-by-an-innings-and-210-runs#comments</comments><guid isPermaLink="false">bd59f79e-aada-4945-9414-56d38f924368</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:58:31 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:58:31.970Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துலீப் டிராபி,Duleep Trophy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/86le22sz/DuleepTrophy0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துலீப் டிராபி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/86le22sz/DuleepTrophy0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துலீப் டிராபி காலிறுதி ஒன்றில் கிழக்கு- வடகிழக்கு மண்டலம் இடையிலான போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வடகிழக்கு மண்டலம் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி கிழக்கு மண்டலம் முதலில் பேட்டிங் செய்தது. சுதிப் குமார் கராமி 185 பந்தில் 146 ரன்கள் விளாசினார். இதனால் முதல் இன்னிங்சில் கிழக்கு மண்டலம் 467 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.</p><h2>வடகிழக்கு மண்டலம்</h2><p>பின்னர், வடகிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கியது. அபித் சர்கார் (5), ஷபாஸ் அகமது (3) அபாரமாக பந்து வீச வடகிழக்கு மண்டலம் 111 ரன்களில் ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.</p><p>இதனால் வட கிழக்கு மண்டலம் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் வடகிழக்கு மண்டலம் பேட்ஸ்மேன்கள் திணறினர். இதனால் 146 ரன்களில் சுருண்டது. இதனால் காரணமாக கிழக்கு மண்டலம் 210 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அனுகுல் ராய் 5 விக்கெட்டும், வைபவ் சூர்யவன்ஷி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>மராத்தி மொழித் தேர்வு : மும்பையில் ஆட்டோ, டாக்ஸி போக்குவரத்து ஸ்தம்பித்தது – ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/mandatory-marathi-test-sparks-mumbai-auto-taxi-strike</link><comments>https://www.maalaimalar.com/news/national/mandatory-marathi-test-sparks-mumbai-auto-taxi-strike#comments</comments><guid isPermaLink="false">1a1a990b-da88-4133-981a-7a6e67afc800</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:58:03 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:58:03.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Maharastra,Marathi Language,Taxi Shortage,Auto Strike,Commercial VehicleRules,RTO Checking</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/thkcl915/Mumbai-Auto-Strike" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Auto Strike ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/thkcl915/Mumbai-Auto-Strike?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பையின்</a> அடையாளமாகத் திகழும் 'காளி-பீலி' டாக்ஸிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு மராத்தி மொழி அறிந்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதன் காரணமாக பிராந்திய போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நகர் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த சோதனைகளால் ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதோடு, நகரில் கடுமையான ஆட்டோ, டாக்ஸி தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஓட்டுநர்களின் குற்றச்சாட்டு</h2><p>பயணிகளிடம் பேசத் தேவையான அடிப்படை மராத்தி சொற்களைக் கற்றுக்கொள்ள ஓட்டுநர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. </p><p>ஆனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களை மறித்து சோதனை செய்யும் RTO அதிகாரிகள், தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு மிகவும் கடினமான கேள்விகளைத் தங்களைக் கேட்பதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>இதனால், பல ஆண்டுகளாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பையில்</a> வசித்து வரும் வடமாநில ஓட்டுநர்கள் மற்றும் படிக்காத முதியவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.</p><h2>1,200-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ்</h2><p>ஆகஸ்ட் 20 முதல் தொடங்கப்பட்ட இந்த அதிரடி சோதனையில், இதுவரை 8,217 ஓட்டுநர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இதில், மும்பை பெருநகரப் பகுதியில் மட்டும் 3,995 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டதில், 604 பேருக்கு மராத்தி பேசத் தெரியவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>மாநிலம் தழுவிய அளவில் முதல்கட்ட சோதனையிலேயே 1,268 ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த நோட்டீஸ் பெற்றவர்கள் 1 மாதத்திற்குள் மராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். </p><p>தவறினால், அவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் எச்சரித்துள்ளார்.</p><h2>ஆட்டோக்கள் தட்டுப்பாடு &amp; 3 நாள் வேலைநிறுத்தம்</h2><p>RTO அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையால் பயந்த பல ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை இயக்காமல் நிறுத்தியுள்ளனர். </p><p>மேலும், மொழித் தேர்வின் பெயரால் ஓட்டுநர்கள் மிரட்டப்படுவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் கூறி மும்பையின் கண்டிவாலி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.</p><p>இதன் தொடர்ச்சியாக, திங்கட்கிழமை மாலை முதல் ஆட்டோ ஓட்டுநர்கள் 3 நாட்கள் அதிரடி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பணிக்குச் செல்லும் பொதுமக்கள், ரெயில்களில் இருந்து இறங்கும் பயணிகள் ஆட்டோ, டாக்ஸி கிடைக்காமல் 45 நிமிடங்களுக்கும் மேலாகக் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.</p><p>ஓலா, உபெர் போன்ற ஆப்-அடிப்படையிலான டாக்ஸிகளுக்கும் இந்த விதி பொருந்துவதால் ஒட்டுமொத்த மும்பையும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.</p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D">தேவேந்திர பட்னாவிஸ்</a> விளக்கம்</p><p>இந்த விவகாரம் குறித்துப் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிர</a> முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், "இங்குள்ள இந்தி பேசும் சகோதரர்களை மராத்தி மொழியில் நிபுணர்களாக்குவது எங்களது நோக்கமல்ல. ஆனால், அவர்களுக்கு மராத்தி மொழியின் அடிப்படை வேலை அறிவு கண்டிப்பாக இருக்க வேண்டும். </p><p>இதற்கான காலக்கெடு ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொழியின் அடிப்படையில் யாருக்கும் அநீதி இழைக்கப்படுவதை எங்கள் 'மகாயுதி' அரசு அனுமதிக்காது" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.</p><p>மும்பையில் மராத்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 36% ஆக உள்ள நிலையில், வடமாநிலப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மராத்தி மொழியைக் காக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய விதிமுறை தற்போது மும்பையை உலுக்கி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அசல் ஜங்கிள் புக்.. காட்டில் ஓநாய்களுடன் வாழ்ந்த &apos;ஓநாய் மனிதர்&apos; மறைவு - யார் இவர்?</title><link>https://www.maalaimalar.com/news/world/mowgli-in-real-life-the-wolf-man-who-lived-with-wolves-in-the-forest-has-passed-away-who-is-he</link><comments>https://www.maalaimalar.com/news/world/mowgli-in-real-life-the-wolf-man-who-lived-with-wolves-in-the-forest-has-passed-away-who-is-he#comments</comments><guid isPermaLink="false">e01d9808-ad25-4e50-a65d-c45e9602e06f</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:44:42 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:44:42.089Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல்,ஸ்பெயின்,ஓநாய்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/w8gb501p/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மார்கோஸ் ரோட்ரிகஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்கோஸ் ரோட்ரிகஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/w8gb501p/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காட்டில் மிருகங்களுடன் வளர்ந்த தார்சன், ஜங்கிள் புக் கதையில் வரும் மௌக்லி உள்ளிட்ட கற்பனை கதாபாத்திரங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம்.</p><p>அவ்வாறு நிஜ வாழ்வில் ஓநாய்களுடன் வாழ்ந்து,  'ஓநாய் மனிதர்' என பெயரெடுத்த  மார்கோஸ் ரோட்ரிகஸ் பாண்டோஜா என்பவர் தனது  80வது வயதில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று காலமானார்.</p><h2>வாழ்வு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/death-toll-hits-57-in-mass-refugee-crossing-to-spain">ஸ்பெயினில் </a>1946 இல் வறுமைச் சூழலில் பிறந்தவர் மார்கோஸ். வருக்கு 6 அல்லது 7 வயது இருக்கும்போது அவரை அவரது தந்தை ஒரு ஆடு மேய்ப்பரிடம் விற்றுவிட்டார்.</p><p>அந்த ஆடு மேய்ப்பரிடம் வேலை செய்து வளர்ந்த மார்கோஸ் அவர் இறந்த பிறகு, ஆதரவுமின்றி மலை காட்டில் தனித்து விடப்பட்டார்.</p><p>இருப்பினும் அங்குள்ள இயற்கையோடும் விலங்குகளோடும் மெல்ல மெல்ல வாழப் பழகிக் கொண்டார் மார்கோஸ்.</p> <p>சுமார் 12 ஆண்டுகள் மனிதத் தொடர்பே இன்றி வாழ்ந்த அவர், படங்களில் வருவதுபோல விலங்குகளின் சத்தங்களை எழுப்பி அவற்றுடன் பேசப் பழகிக்கொண்டார்.</p><p>ஒரு ஓநாய் கூட்டத்தின் குட்டிகளுக்கு உணவளித்து, அவற்றின் நம்பிக்கையைப் பெற்று அந்தக் கூட்டத்தின் ஒரு உறுப்பினராகவே மாறினார். ஓநாய்களுடன் இணைந்து வேட்டையாடவும் கற்றுக்கொண்டார். பதின்பருவம் இவ்வாறாக காட்டில். கழிந்தது</p> <h2>திருப்பம்</h2><p>1965இல்தனது 19வது வயதில் ஸ்பெயின் அதிகாரிகளால் காட்டில் கண்டெடுக்கப்பட்டு மனித சமூகத்திற்கு அழைத்து வரப்பட்டார் மார்கோஸ்.</p><p>ஆனால், மனிதர்கள் மத்தியில் வாழ்வது அவருக்குப் பிடிக்கவில்லை.</p><p>"காட்டில் ஓநாய்களுடன் வாழ்ந்த நாட்களே எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள்" என்று அவர் இதன்பின் பல சமயங்களில் கூறியுள்ளார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y7gq2f09/tn-2.jpg" /></figure><h2>இறுதி நாட்கள்</h2><p>பின்னநாட்களில் பள்ளிகளுக்கு சென்று இயற்கையையும் விலங்குகளையும் பாதுகாப்பது குறித்துக் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை செய்து வந்தார் அவர்.</p><p>அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 2010 இல் 'Entrelobos' (Among wolves) என்ற திரைப்படமும் வந்துள்ளது.</p><p>2001 முதல் ஸ்பெயினின் வடமேற்கில் உள்ள ரான்டே கிராமத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார் அவர். அந்த கிராம மக்கள் அன்போடு கவனித்துக்கொண்டனர்.</p><p>தனது இறுதி நாட்களையும் அங்கேயே கழித்த அவர் கடந்த ஆகஸ்ட் 15 இல் 80வது வயதில் அமைதியான முறையில் இயற்கை எய்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sai-abayankar-rathima-new-song-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sai-abayankar-rathima-new-song-release#comments</comments><guid isPermaLink="false">27595cc6-f37c-4fcd-9f58-456593f56311</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:39:40 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:39:40.129Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sai Abhyankkar,சாய் அபயங்கர்,Bhagyashri Borse,Radhimaa,ரதிமா,பாக்யஸ்ரீ போர்ஸே,Think Indie,LyricsByVivek</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/27gqcfv0/Radhimaa-Song" width="1500"><media:title type="html"><![CDATA[ Radhimaa ]]></media:title><media:description type="html"><![CDATA[ Radhimaa Song]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/27gqcfv0/Radhimaa-Song?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'கட்சி சேரா' மற்றும் 'ஆச கூட' போன்ற உலகளாவிய ரீதியில் வைரலான இண்டீபெண்டண்ட் ஹிட் பாடல்களைக் கொடுத்த இளம் இசையமைப்பாளரும் பாடகருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சாய் அபயங்கர்</a> தனது அடுத்த அதிரடி இண்டீ பாடலான ‘ரதிமா’ பாடலை வெளியீட்டுள்ளார்.</p><p>திங்க் மியூசிக் நிறுவனத்தின் ‘திங்க் இண்டீ’ லேபிளின் கீழ் இப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.</p><h2><strong>‘ஹேப்பி பிரேக்ப்’ பாடல்!</strong></h2><p>வழக்கமான காதல் தோல்விப் பாடல்கள் போல சோகமாகவோ அல்லது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவோ இல்லாமல், காதலை அழகான நினைவுகளுடன் விடைபெற்று ஏற்றுக்கொள்ளும் ஒரு துள்ளலான பாணியில் இப்பாடலை சாய் அபயங்கர் உருவாக்கியுள்ளார். </p><p>சமகாலத்திய நடன இசையையும், கவாலி இசை வடிவத்தையும் கலந்து அழகான வரிகளுடன் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>'ரதிமா’வாக காந்தா பட நடிகை</strong></h2><p>சாய் அபயங்கரின் முந்தைய பாடல்களில் புதுமுகங்கள் மற்றும் பிரபல நடிகைகள் நடித்து ஹிட் அடித்த வரிசையில், இப்பாடலின் மியூசிக் வீடியோவில் 'காந்தா' பட புகழ் முன்னணி இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே முதன்மை கதாபாத்திரமான 'ரதிமா'வாக நடித்துள்ளார். </p><p>இவருடன் இணைந்து சாய் அபியங்கரும் இந்த வீடியோவில் நடித்துள்ளனர்.</p><h2><strong>ரதிமா குழுவினர்</strong></h2><p>சாய் அபயங்கர் இசையமைத்து, தயாரித்து, பாடியுள்ளார். இவருடன் இணைந்து பெண் குரல்களில் நர்கிஸ் , அஷ்மா மற்றும் சாய் ஸ்மிருதி ஆகியோர் பாடியுள்ளனர்.</p><p>பிரபல பாடலாசிரியர் விவேக் இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். சாய் அபயங்கரின் ஆஸ்தான இயக்குநரான தேஜோ பரத்வாஜ் இப்பாடலை இயக்கியுள்ளார். 'மஞ்சும்மெல் பாய்ஸ்' புகழ் பிரபல ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித் காட்சிகளைப் படமாக்கியுள்ளார். </p><p>கெபா ஜெரெமையா (எலக்ட்ரிக் &amp; பேஸ் கிட்டார்), ராபின் செபாஸ்டியன் (கூடுதல் கிட்டார்), சச்சின் கவிதியா (புல்புல் தரங்), ஆஷிஷ் (புல்லாங்குழல்) மற்றும் சின்மயி (வயலின்) போன்ற முன்னணி கலைஞர்கள் பங்களித்துள்ளனர். சென்னை ‘யோலோ ரெக்கார்ட்ஸ்’ ஸ்டுடியோவில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சாய் அபயங்கர்</a> மிக்ஸிங் செய்ய, ரூபேந்தர் வெங்கடேஷ் மாஸ்டரிங் செய்துள்ளார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/jR3rWCBeO6M"></iframe></figure><p>சினிமா துறையிலும் விஜய் சேதுபதியின் 'பத்தா' மற்றும் தனுஷின் 'ஓம் சாப்டர் 1' போன்ற பெரிய படங்களுக்கு இசையமைத்து வரும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சாய் அபயங்கர்</a>, தனது 6-வது தனித்துவமான இண்டீ சிங்கிளான ‘ரதிமா’ மூலம் மீண்டும் ஒருமுறை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளார்.</p><p>இப்பாடலின் கவர்ச்சிகரமான ஹூக் ஸ்டெப் மற்றும் துள்ளல் இசை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மத்தியப் பிரதேசம்: 3400 முத்தம் கொடுத்த காதலி... காதலனுக்கு ரூ.5,500 அபராதம் விதித்த காவல்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-girlfriend-plants-3400-kisses-police-fine-boyfriend-5500</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-girlfriend-plants-3400-kisses-police-fine-boyfriend-5500#comments</comments><guid isPermaLink="false">5e97e86a-54d0-4551-8fab-ed9974ef62d0</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:34:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:34:39.513Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Traffic Police,போக்குவரத்து போலீசார்,Gwalior,குவாலியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/gmf63gz9/New-Project-2026-08-25T150417.069.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்தியப் பிரதேசம்: 3400 முத்தம் கொடுத்த காதலி... காதலனுக்கு ரூ.5,500 அபராதம் விதித்த காவல்துறை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/gmf63gz9/New-Project-2026-08-25T150417.069.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தில் காதலியின் முத்தத்தால், காதலன் ரூ.5,500 அபராதம் கட்டிய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.  </p><p>மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் முத்த அடையாளங்களுடன் வலம் வந்த காரின் உரிமையாளருக்குப் போக்குவரத்துப் போலீஸார் ரூ.5,500 அபராதம் விதித்துள்ளனர். </p><p>மேலும், காரில் இருந்த அனைத்து முத்த அடையாளங்களையும் காதலனையே வைத்து அழிக்கச் சொல்லியுள்ளனர். </p><h2>3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்</h2><p>வெளிநாடுகளில் நடக்கும் ஒரு ட்ரெண்டை பார்த்துவிட்டு, ஆதித்யா சிகர்வார் என்ற இளைஞரின் காதலி, அவரின் கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை பதித்துள்ளார். கார் முழுவதும் முத்தங்களை பதிக்க சுமார் 4 மணிநேரம் ஆனதாம். </p><p>உடல் முழுவதும் முத்தம் பதிக்கப்பட்ட காரை எடுத்துக்கொண்டு ஆதித்யா வெளியே சென்றுள்ளார். முத்த தடயங்களால் கார் சென்ற இடமெல்லாம் தனித்து தெரிந்துள்ளது. </p><h2>கார் பறிமுதல்</h2><p>உடனே சாலையில் சென்ற பலர் அதனை வீடியோ, போட்டோக்கள் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த கார் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அதில் தெரிந்த வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்தி போலீசார் காரின் உரிமையாளரை கண்டறிந்துள்ளனர்.</p><p>மேலும் காரையும் பறிமுதல் செய்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக (மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், வாகனத்தின் அசல் தோற்றத்தை மாற்றியமைத்ததற்காக) ஆதித்யாவிற்கு ரூ.5,500 அபராதம் விதித்துள்ளனர்.</p><p>தொடர்ந்து ஆதித்யா மன்னிப்புக்கோர காரை கொடுத்த போலீசார், லிப்ஸ்டிக் முத்த தடயங்களை அனைத்தையும் அவரை வைத்தே அழிக்கச் சொல்லியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒற்றுமை - சகோதரத்துவத்தை போற்றும் ஓணம் பண்டிகை</title><link>https://www.maalaimalar.com/spirituality/onam-festival-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/onam-festival-worship#comments</comments><guid isPermaLink="false">cb3c6c65-caaa-4542-a8cf-68f93f2011cf</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:32:22 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:32:22.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,ஓணம் பண்டிகை,onam festival</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/3in68h1l/onam1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/3in68h1l/onam1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>திருவோண நட்சத்திரம்</h2><p>கேரள மக்கள் அனைவரும் சாதி, மத, இன வேறுபாடின்றி, மிகவும் மகிழ்ச்சியோடு எதிர்நோக்கும் ஒரு திருவிழா, ஓணம் பண்டிகை ஆகும். ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டிற்கு விஜயம் செய்வதாக நம்பிக்கை. எனவே, அவரை வரவேற்கும் நாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.</p> <h2>ஓணம் பண்டிகை</h2><p>ஓணம் பண்டிகை, கேரள மக்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழாவாகும். இந்நாளில் கேரளம் முழுவதும், புத்தாடைகள், பூக்கோலங்கள், விளையாட்டுப் போட்டிகள், பலகாரங்கள் என கொண்டாட்டம் களைக்கட்டும். </p><p>கேரளம் மட்டுமின்றி தென்தமிழக மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p> <h2>மகாபலி சக்கரவர்த்தி</h2><p>கேரளத்தை ஆட்சி செய்த மகாபலி சக்கரவர்த்தி, அசுர குலத்தில் பிறந்திருந்தாலும் மக்களிடம் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். இவர், தனது நாட்டை மிகவும் சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தார். இவரது ஆட்சியில் பசி, வறுமை, அநீதி இல்லாமல், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர்.</p> <h2>மகாவிஷ்ணு</h2><p>மகாபலி சக்கரவர்த்தியின் புகழ் மூவுலகிலும் பரவியது. தர்மத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கிய மகாபலி, மூவுலகையும் ஆட்சி செய்ய ஆரம்பித்தார். இதனால், 'தானே அனைவரிலும் சிறந்தவர்' என்ற அகந்தை மகாபலி சக்கரவர்த்திக்கு ஏற்பட்டது. மகாபலியின் புகழைக் கண்டு தேவர்கள் அனைவரும் பயந்தனர். இதையடுத்து தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.</p> <h2>சுக்ராச்சாரியார்</h2><p>அவ்வேளையில் மகாபலி சக்கரவர்த்தி, தனது குருவான சுக்ராச்சாரியாரின் ஆசியோடு மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினார். யாகம் முடியும்போது, யார் தானம் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்க வேண்டும் என்பது வழக்கம். அதன்படி மகாபலி சக்கரவர்த்தி, நாட்டு மக்களுக்கு கேட்கும் தானத்தை வழங்கினார். அச்சமயம் மகாவிஷ்ணு, வாமன (குள்ள வடிவம்) அவதாரம் எடுத்து, யாகம் நடைபெறும் இடத்திற்கு வந்தார்.</p> <h2>வாமனர்</h2><p>வாமனரை பார்த்த மகாபலி சக்கரவர்த்தி, அவரிடம் “என்ன தானம் வேண்டும்" என்று கேட்டார். அதற்கு வாமனர், “அரசே! எனக்கு மூன்று அடி நிலம் மட்டும் போதும்” என்றார். </p><p>மகாபலி சக்கரவர்த்தி சிரித்துக் கொண்டே, "மூன்று அடி நிலம் தானா?" என்று கேட்டார். சுக்ராச்சாரியார், “வந்திருப்பவர் சாதாரண சிறுவன் அல்ல. மகாவிஷ்ணுவின் அவதாரமே” என்பதை உணர்ந்தார். எனவே மகாபலியிடம், அவர் கேட்ட தானத்தை வழங்க வேண்டாம் எனக் கூறினார்.</p> <h2>மூன்றடி நிலம் தானம்</h2><p>ஆனால், யாகம் முடியும் தருவாயில் உள்ளதால் மகாபலி சக்கரவர்த்தி தானம் கொடுப்பதை நிறுத்த விரும்பவில்லை. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். வாமனருக்கு மூன்றடி நிலம் கொடுக்க ஒப்புக்கொண்டார். உடனே குள்ள வடிவில் இருந்த வாமனர், மிகப் பெரிய உருவம் எடுத்து பூமிக்கும் வானுக்குமாக உயர்ந்து நின்றார்.</p> <h2>பாதாள உலகம்</h2><p>பின்னர், தன்னுடைய முதல் அடியில் பூமி முழுவதையும் அளந்தார். இரண்டாவது அடியில் வானத்தை அளந்தார். பின்னர், “மூன்றாவது அடியை எங்கே வைப்பது?” எனக் கேட்க, மகாபலி சக்கரவர்த்தி தனது தலையை தாழ்த்தி “எனது தலையில் வைத்துக்கொள்ளுங்கள்" என்றார். உடனே வாமனர், மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் தனது மூன்றாவது அடியை வைத்தார். இதனால் மகாபலி சக்கரவர்த்தி, பாதாள உலகத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.</p> <h2>மகாபலி சக்கரவர்த்தி வேண்டுகோள்</h2><p>இருப்பினும், மகாபலி சக்கரவர்த்தியின் நல்ல மனதையும், தான தர்மத்தையும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் பண்பையும் போற்றிய மகாவிஷ்ணு, அவருக்கு வரம் அளிப்பதாக கூறினார். மகாபலி, “என் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை, நான் ஆண்டுக்கு ஒரு முறையாவது வந்து பார்க்க வேண்டும்” என்று கேட்டார். மகாவிஷ்ணுவும் அவரது வேண்டுகோளை ஏற்று வரம் அளித்தார்.</p><h2>ஓணம் பண்டிகை</h2><p>அதன்படி, ஆவணி மாத திருவோண நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தனது மக்களை காண பூமிக்கு வருவதாக கருதப்படுகிறது. இதையே ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் நம்பிக்கையோடு கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை, ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி புதன்கிழமை வருகிறது. </p> <h2>ஓண சத்யா</h2><p>கேரளாவில் ஓணம் பண்டிகை அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பத்து நாட்களுமே கேரளத்தில் கொண்டாட்டம் களைக்கட்டிவிடும். ஓண சத்யா, படகுப் போட்டி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், யானை ஊர்வலம், ஓண ஊஞ்சல் என கேரளம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.</p> <h2>அறுவடை திருவிழா</h2><p>இயற்கைக்கும், விவசாயத்திற்கும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருவிழாவாகவும் ஓணம் பண்டிகை பார்க்கப்படுகிறது. ஓணம் பண்டிகையின்போது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்வதால், இது ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை போற்றும் விழாவாகவே உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சீனாவின் ரோபா ராணுவம்: எச்சரித்த காங்கிரஸ்- ராகுல் காந்தியை சுட்டிக்காட்டி பதில் கொடுத்த பா.ஜ.க.</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-mp-warns-of-chinese-robot-army-bjp-fires-rahul-robot-jibe</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-mp-warns-of-chinese-robot-army-bjp-fires-rahul-robot-jibe#comments</comments><guid isPermaLink="false">75de3f33-de01-41e5-a2f5-869a2efe0af7</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:32:02 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:32:02.496Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,Usain Bolt,robot,Humanoid Robot,மனித உருவ ரோபோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/2vwfidfi/ChineseRobo0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீனா ரோபோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/2vwfidfi/ChineseRobo0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உசைன் போல்ட் சாதனையை 100மீ ஓட்டப் பந்தயத்தில் ரோபோ முறியடித்துள்ள நிலையில், சீனா தன் ராணுவத்தில் ரோபோவை இணைக்கக் கூடும் என்று காங்கிரஸ் எம்.பி. எச்சரித்துள்ளார்.</p><p>அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. சமீபத்தில் ரோபாக்களுக்கான சர்வதேச போட்டியை நடத்தியது. இதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சீனாவின் மனித ரோபா, <a href="https://www.maalaimalar.com/sports/robot-breaks-usain-bolt-record-100m-9-39-seconds">உசைன் போல்ட்</a> சாதனையை முறியடித்தது.</p><p>இந்த நிலையில் மனித ரோபாவை சீனா ராணுவத்தில் ஈடுபடுத்தக் கூடும் என்று காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி எச்சரித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>இந்தியா கவனமாக இல்லாவிட்டால், மிக விரைவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) ஒரு ரோபோ சீன ராணுவத்தில் (PLA) போரிட நேரிடலாம். வளர்ந்து வரும் வல்லரசு என்ற ஆரவாரங்கள் இருந்தபோதிலும், தொழில்நுட்பப் போட்டியில் சீனாவுடன் ஒப்பிடுகையில் நாம் உண்மையில் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதை சீனாவின் பிரமிக்க வைக்கும் மனித உருவ ரோபோக்களின் வளர்ச்சி நமக்கு ஒரு யதார்த்தமான பாடத்தைக் கற்பிக்கக் கூடும். மேலும் இது அதன் வகைகளில் ஒன்று மட்டுமே.</p><p>75 கிரிட்டிக்கல் டெக்னாலாஜியில் 67-ல் அமெரிக்காவை விட சீனா முன்னோக்கி உள்ளது.</p><p>இவ்வாறு மணிஷ் திவாரி பதிவிட்டிருந்தார்.</p><p>இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதில் அளிக்கும் வகையில் கூறுகையில் "முதலாவதாக, உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மனநிலையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். டோக்லாம் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​சீனக் கூடாரங்களுக்குள் காணப்பட்டவர்கள் அவர்கள்தான்.</p><p>சீனர்கள் நமது ராணுவத்தை அடித்து வீழ்த்திவிட்டார்கள் என்று ராகுல் காந்தி கூறினார். அவர் ஒரு சீன ரோபோ. அவரது மனநிலையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.</p><p>இவ்வாறு பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதிலடி கொடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திரிணாமுல் காங்கிரசில் இருந்து தாவிய 20 எம்.பி.களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-political-shake-up-supreme-court-notice-to-20-tmc-mps-in-anti-defection-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-political-shake-up-supreme-court-notice-to-20-tmc-mps-in-anti-defection-case#comments</comments><guid isPermaLink="false">e1afe23f-62f5-4d10-bec0-5328556e1faa</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:02:34 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:02:34.257Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,Supreme Court,trinamool congress,உச்சநீதிமன்றம்,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7egx82gt/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம், மம்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம், மம்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7egx82gt/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் <a href="https://www.maalaimalar.com/news/national/bjp-insulting-netaji-and-his-legacy-mamata-banerjee-urge-people-to-protest-against">மம்தா பானர்ஜியின்</a> திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. </p><p>இதன்மூலம் மேற்கு வங்கத்தில் முதல் முறை பாஜக ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.</p><p>பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் வென்றது. </p><p>இருந்தபோதும் அதில் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்தனர். எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களையே சட்டமன்ற எதிர்க்கட்சியாக சட்டமன்ற சபாநாயகர் அங்கீகரித்தார். </p><h2>பிளவு</h2><p>இதனிடையே மத்தியிலும் திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை மாநிலங்களவை எம்பிக்கள் இடையே பிளவு ஏற்பட்டது. 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி என்சிபிஐ என்ற பிராந்திய கட்சியில் இணைந்து பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களின் முடிவை அங்கீகரித்தார்.</p><p>மோடி தலைமையிலான என்டிஏ எம்பிக்கள் கூட்டத்திலும் இந்த 20 பேர் பங்கேற்றனர். இதனிடையே கட்சி மாறிய எம்பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திரிணாமுல் காங்கிரசில் மம்தா தலைமையிலான அணி சபாநாயகரை அணுகியது.</p><p>மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி இதுதொடர்பாக சபாநாயகரை அணுகிறார்.</p><h2>கைவிரித்த சபாநாயகர்</h2><p>இந்த 20 எம்பிக்களையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஜூனில் மனு அளித்தும், ஆகஸ்டில் நேரில் சந்தித்தும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டதால், அபிஷேக் பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 20 மக்களவை எம்பிக்கள் வேறு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது அல்லது இணைவது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவரது மனுவில் தெரிவித்தார்.</p><h2>உச்சநீதிமன்றம் தலையீடு</h2><p>இந்த மனு இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோஹனா ஆகியோர் அடங்கிய <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்சநீதிமன்ற </a>அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>வழக்கு தொடர்பாகத் தங்களது விளக்கத்தை அளிக்குமாறு 20 எம்பிக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடப்பட்டது.</p><p>இந்த விவாகரத்தில் சபாநாயகரின் காலதாமதத்தை சுட்டிக்காட்டியபோதும் மக்களவை சபாநாயகர் ஒரு அரசியலமைப்புப் பதவி என்பதால் அவருக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது</p><p>சபாநாயகர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சபாநாயகர் ஏற்கனவே இது தொடர்பாக நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி - தலைவர்கள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-edappadi-palaniswami-and-leaders-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-edappadi-palaniswami-and-leaders-wishes#comments</comments><guid isPermaLink="false">e4b69390-252c-4c05-9082-c4aaf8ec94d2</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:44:46 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:44:46.500Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,ஓணம் பண்டிகை,onam festival,மகாபலி,mapali</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/ff5zdgl8/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/ff5zdgl8/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாளை ஓணம் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-</p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/controversy-in-tn-assembly-for-admk-mlas-resign">எடப்பாடி பழனிசாமி</a>:-</p><p>பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">திருஓணம்</a> திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த  `ஓணம்’ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <h2>மகாபலி சக்கரவர்த்தி</h2><p>மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட, திருமால் வாமனன் அவதாரம் பூண்டு மூன்றடி மண் கேட்க, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களைக் காண வரம் கொடுத்தார்.  அதன்படி மக்களைக் காண வரும் மகாபலி மன்னனை  வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று  ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது.   </p> <p>ஜாதி, மத பேதமின்றி மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் வண்ணப் பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து, ஓணம் விருந்துண்டு, மோகினி ஆட்டம், கோலாட்டம் போன்ற நடனங்களை ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.</p><p>அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.</p> <p>மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட தலைவர்கள் ஓணம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>எகிப்து வான்படை பயிற்சியில் ரஃபேல்-ஜே-16 போர் விமானங்கள் நேருக்கு நேர்: உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/news/world/egypt-air-force-drill-rafale-j16-face-off-india-watching-closely</link><comments>https://www.maalaimalar.com/news/world/egypt-air-force-drill-rafale-j16-face-off-india-watching-closely#comments</comments><guid isPermaLink="false">eb9d285d-7c69-408c-bfe0-bbaa73998848</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:34:53 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:34:53.955Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Rafale,Egyptian Air Force,Eagles of Civilization,எகிப்து வான்படை,ரஃபேல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/qq3s8u0f/flight.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Egyptian Air Force  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/qq3s8u0f/flight.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எகிப்து மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெறும் 2026-ஆம் ஆண்டிற்கான "ஈகிள்ஸ் ஆஃப் சிவிலைசேஷன்" கூட்டு வான்படை பயிற்சி, சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. எகிப்திய வான்படையில் உள்ள பிரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களும், சீன வான்படையின் அதிநவீன ஜே-16 ரக போர் விமானங்களும் முதன்முறையாக போலி வான்வழித் தாக்குதல் பயிற்சிகளில் நேரடியாக மோதுகின்றன.</p><h2><strong>சீனாவின் ஜே-16 போர் விமானத்</strong>தின் திறன்கள்</h2><p>சீனாவின் "<a href="https://www.maalaimalar.com/news/topnews/s-jaishankar-meets-putin-in-moscow">ஹிடன் டிராகன்</a>" என்று அழைக்கப்படும் ஜே-16 விமானங்கள், இரட்டை என்ஜின் கொண்ட 4.5-ஆம் தலைமுறை மல்டிரோல் போர் விமானங்களாகும். ஏறத்தாழ 6,000 கிலோமீட்டர் தூரம் வரை வான்வழியாகவே எரிபொருள் நிரப்பி எகிப்து வந்தடைந்துள்ள இந்த விமானங்கள், அதிநவீன ரேடார்கள், மின்னணு போர் சாதனங்கள் மற்றும் நீண்டதூர ஏவுகணைகளை ஏந்தும் திறன் கொண்டவை.</p><h2>இந்தி<strong>ய வான்ப</strong>டை </h2><p>இந்திய வான்படை தற்போது பிரான்சிடமிருந்து பெறப்பட்ட ரஃபேல் போர் விமானங்களை முதன்மைப் படைகளாகப் பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், எல்லைப் பகுதிகளில் சீன வான்படை தனது ஜே-16 விமான பெருக்கத்தைக் கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும், பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவின் ஜே-10சி ரக விமானங்களை இயக்கி வரும் நிலையில், ஜே-16 விமானங்களையும் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.</p><p>எகிப்தில் நடக்கும் இந்த ஒன்-ஆன்-ஒன் வான்வழி மோதல் பயிற்சிகளின் மூலம், மேற்கத்திய தொழில்நுட்பத்தில் உருவான ரஃபேல் விமானங்களின் வான் சூழ்ச்சித் திறன், ரேடார் கண்டறிதல் எல்லைகள் மற்றும் வான் தாக்குதல் உத்திகளை சீனப் படைகள் நேரடியாக மதிப்பிட முடிகிறது.</p><p>ரஃபேல் விமானங்களின் பல பலவீனங்கள் மற்றும் நுட்பங்களைச் சீனா அறிந்து கொண்டால், அது எல்லைப் பாதுகாப்பில் இந்தியாவுக்கு சவாலாக அமையக்கூடும். இதனால், இந்த பயிற்சியில் ஜே-16 மற்றும் ரஃபேல் விமானங்கள் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: செயற்கைக்கோள் தரவுகளை வெளியிட்டு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/southwest-monsoon-intensifies-again-imd-warning-with-satellite-data</link><comments>https://www.maalaimalar.com/news/national/southwest-monsoon-intensifies-again-imd-warning-with-satellite-data#comments</comments><guid isPermaLink="false">b29bd25e-0b46-4cee-b236-a1b86f06bf0f</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:22:01 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:22:01.032Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய வானிலை ஆய்வு மையம்,India Meteorological Department,Southwest Monsoon,தென்மேற்கு பருவமழை,delhi,டெல்லி,INSAT-3DS</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/8cfkkrsc/climate.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  India Meteorological Department  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/8cfkkrsc/climate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு <a href="https://www.maalaimalar.com/news/national/flooded-gurugram-again-who-is-to-blame-for-citys-infrastructure-collapse">தென்மேற்கு பருவமழை </a>மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நாட்டின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் திரண்டுள்ள பெரும் மேகக் கூட்டங்களை இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட INSAT-3DS வானிலை செயற்கைக்கோள் துல்லியமாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன் மூலம் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>INSAT-3DS செயற்கைக்கோளின் தெர்மல் அகச்சிவப்பு படங்கள், வங்கக் கடலின் வடபகுதியிலிருந்து தொடங்கி ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் இந்தோ-கங்கைச் சமவெளி வரை பரந்து விரிந்த அடர்ந்த மேகக் கூட்டங்களைக் காட்டுகின்றன. ஆழமான வெப்பச்சலனம் காரணமாக உருவாகியுள்ள இந்த 'கியுமுலோநிம்பஸ்' ரக மேகங்கள், இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழையை உருவாக்கும் திறன் கொண்டவை.</p><h2>ம<strong>ழைப்பொழிவு</strong> </h2><p>வரவிருக்கும் இந்த மழைப் பொழிவு நாடு முழுவதும் ஒரே சீராக இருக்காது என்று வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கிழக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகள் அதிக அளவு மழைப்பொழிவைப் பெறவுள்ள நிலையில், நாட்டின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஒப்பீட்டளவில் குறைவான அல்லது மிதமான மழையையே சந்திக்கும். டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பரவலான புதுமழைக்கான வாய்ப்புகள் நிலவுகின்றன.</p><h2>அணை<strong>களின் நீர்மட்டம் உயர்வு</strong></h2><p>பருவமழையின் இந்த மீட்சி, குறிப்பாக 'காரிஃப்' பருவச் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. நெல், பருத்தி, கரும்பு போன்ற பயிர்களுக்குத் தேவையான நீர் ஆதாரத்தை இது உறுதிசெய்யும். மேலும், மத்திய மற்றும் கிழக்கு இந்திய அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. தொடர் மழை எச்சரிக்கை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் கால் பதிக்கும் த.வெ.க.- மாநில தலைவர் ஆகிறார் நடிகர் தேவன்</title><link>https://www.maalaimalar.com/news/national/tvk-entered-in-kerala-actor-devan-joining</link><comments>https://www.maalaimalar.com/news/national/tvk-entered-in-kerala-actor-devan-joining#comments</comments><guid isPermaLink="false">03219221-93ca-473a-95c9-fb351bc8a654</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:21:29 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:21:29.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேவன்,தவெக,விஜய்,vijay,tvk,Devan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/i3uyw1ww/deva.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தமிழக முதலமைச்சர் விஜய்- நடிகர் தேவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக முதலமைச்சர் விஜய்- நடிகர் தேவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/i3uyw1ww/deva.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>செப்டம்பர் 8-ந்தேதியுடன் முடிவடையும் தமிழக சட்டசபை  கூட்டத்தொடருக்கு  பிறகு, 10-ந்தேதிக்கு மேல் சென்னையில் விஜய்யை நேரில் சந்தித்து  பேசிய பிறகே இறுதி முடிவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.</strong></em></p><p>பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய மலையாள திரைப்பட நடிகர் தேவன், முதலமைச்சர்  விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தனக்கு  கேரள மாநிலத் தலைவர் பதவியை வழங்க முன்வந்துள்ளதாக தெரி வித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டை  தளமாக  கொண்ட  <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க</a>., கட்சி கேரளத்திலும் தனது அரசியலை விரிவாக்கம் செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.</p><p>பா.ஜ.க.வில் சுமார் 5  ஆண்டுகள் இருந்தும் தமக்கு எவ்வித முக்கிய  பொறுப்பும் வழங்கப்படாததால், மக்களுக்கு பங்காற்ற முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாகவே கடந்த ஆகஸ்ட் 16-ந்தேதி அன்று அந்த அமைப்பில் இருந்து விலகியதாக தேவன்  சுட்டிக்காட்டினார். </p><p>தாம் விலகிய தகவலை அறிவித்த மறுநாளே விஜய்யின் அலுவலகத்தில் இருந்து  தம்மைத் தொடர்பு கொண்டு பேச விருப்பம் தெரிவித்ததாகவும், அன்றைய தினமே  த.வெ.க. பிரதிநிதிகள் 2 பேர்  நடிகை பிரியங்காவுடன் சாலக்குடியில் உள்ள தமது இல்லத்திற்கு நேரில் வந்து சுமார் 3  மணி நேரம் விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார். </p><h2><strong>த.வெ.க.வில் இணைகிறார்</strong></h2><p>அதனைத்தொடர்ந்து  த.வெ.க.வின்  மூத்த தலைவர்கள் கூகுள் மீட் வழியாகவும் மேல்நிலைப் பேச்சுகளை நடத்தினர். இந்த ஆலோசனைகளின் மூலம் தனக்கும் விஜய்க்கும் இடையே எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் மக்கள் நலப்பணிகளில் ஒரே மாதிரியான பார்வைகள் இருப்பது தெளிவானதாக தேவன் தெரிவித்துள்ளார். எனவே இணைந்து செயல்படுவதில் எவ்விதச் சிக்கலும் இல்லை என்றும், தம்மை கேரள மாநிலத் தலைவராக  பொறுப்பேற்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும்   கூறினார்.</p><p>காங்கிரஸ் கட்சி உள்பட சில உள்ளூர் அமைப்புகளும் தம்மை  தொடர்புகொண்டு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் தாம் அவற்றை ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். </p><h2><strong>விஜய்யுடன் சந்திப்பு</strong> </h2><p>திரைத்துறையில் விஜய்யுடன் 6 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள தேவன், கேரளம் அரசியலில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க., ஆகிய முன்னணி அமைப்புகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக இளைஞர்கள் த.வெ.க.வை ஒரு புதிய மாற்றாகப் பார்க்க  தொடங்கியுள்ள தாக  தெரிவித்தார். செப்டம்பர் 8-ந்தேதியுடன் முடிவடையும் தமிழக சட்டசபை  கூட்டத்தொடருக்கு  பிறகு, 10-ந்தேதிக்கு மேல் சென்னையில் விஜய்யை நேரில் சந்தித்து  பேசிய பிறகே இறுதி முடிவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பீகார் அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு.. முதலமைச்சர் இல்லம் நோக்கி மாணவர்கள் பேரணியால் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/bpsc-exam-scam-protest-patna-students-march-to-cm-residence-police-use-water-cannons-to-stop-rally</link><comments>https://www.maalaimalar.com/news/national/bpsc-exam-scam-protest-patna-students-march-to-cm-residence-police-use-water-cannons-to-stop-rally#comments</comments><guid isPermaLink="false">848123fc-266d-4032-81e9-d3783883cf80</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:17:26 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:17:26.168Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,மாணவர்கள் போராட்டம்,தேர்வு முறைகேடு,Student protests,exam irregularities</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vpwyz3p4/tn.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vpwyz3p4/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநில அரசு நடத்தும் பிபிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் தலைநகர் பாட்னாவில்  பேரணி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  </p><h2>தேர்வு முறைகேடு </h2><p>நடந்து முடிந்த 70வது பிபிஎஸ்சி தேர்வில் முறைகேடு மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/government-to-introduce-exam-irregularities-bill-lok-sabha-today">வினாத்தாள் கசிவு </a>நடந்ததாக குற்றம்சாட்டி மாணவர்கள் காந்தி மைதானத்தில் இருந்து முதல்வர் இல்லம் நோக்கி இன்று தங்கள் பேரணியை தொடங்கினர். </p><p>செல்லும் வழி நெடுகிலும் கோஷங்களை எழுப்பியவண்ணம் சென்ற அவர்கள்  போலீசாரால் போடப்பட்ட தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றனர். </p><p>மாணவர்ளை தடுக்க அங்கு குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் மத்திய படையினர் முயன்று வருகின்றனர். மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் தடுக்க முயன்றபோதும் அவர்கள் முதலமைச்சர் இல்லத்தை நெருங்கியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. </p><p>முன்னதாக நேற்று போராட்டக்குழு மாணவர்களின் பிரதிநிதிகளிடம் பீகார் என்டிஏ அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் தீர்வு  எட்டப்படாததால் இன்று பேரணி நடத்தப்பட்டது. </p><h2>மாணவர்கள் கோரிக்கை</h2><p>மாணவர் தலைவர் சவுரவ் குமார் அரசுடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக அமைந்ததாகவும் இருப்பினும் தங்கள் கோரிக்கை நிறைவடையும் வரை தங்கள் எதிர்ப்பு செயல்பாடுகளை தொடரப்போவதாகவும் தெரிவித்தார்.</p><p>"நாங்கள் பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியை சந்திக்க விரும்புகிறோம். இதுவரை எங்களிடம் கீழ்நிலை அதிகாரிகளே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முதல்வரை சந்தித்தால் தான் தீர்வுகிடைக்கும் . </p><p>எங்களுக்கு முதல்வரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்தால் நாங்கள் போராட்டத்தை கைவிட தயார்" எனவும் அவர் குறிப்பிட்டார்.</p> <p>மேலும் " எங்களின் முதன்மை கோரிக்கை முதலமைச்சரை சந்திப்பதுதான். அது சாத்தியப்படவில்லை என்றால் இரண்டாவது பட்சமாக நாங்கள் கல்வி அமைச்சரை சந்திக்க ஒப்புக்கொள்கிறோம். </p><p>ஆனால் இவர்கள் இருவரை தவிர வேறு யாரையும் நாங்கள் சந்திக்க தயாராக இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.</p> <h2>அரசின் முன்னெடுப்பு</h2><p>இதனிடையே மாணவர்களின் குறைகளை கேட்டறிய, "வித்யார்தி சாயோக் சிவிர்" (மாணவர் உதவி முகாம்) மாதந்தோறும் நடத்தப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது.</p><p>கல்வி நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் 4 வது செவ்வாய்கிழமை இந்த முகாம்கள் நடத்தப்படும் என்றும் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாணவர்களின் குறைகள் சென்று சேரும் என்றும் முதலமைச்சர் சவுத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>"மாணவர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய ஒரு இணைய போர்டல் உருவாக்கப்படும். அதில் மாணவர்கள் புகார்களை பதிவு செய்து அது எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அறியலாம். மேலும் 1100 என்ற உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளை சர்க்கரை விலை உயர்வின் பாதிப்பைத் தடுக்க ரேஷன்  கடைகளில் 2 கிலோ கூடுதலாக வழங்க வேண்டும்: அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-to-mitigate-the-impact-of-the-rise-in-white-sugar-prices-an-additional-2-kg-should-be-provided-at-ration-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-to-mitigate-the-impact-of-the-rise-in-white-sugar-prices-an-additional-2-kg-should-be-provided-at-ration-shops#comments</comments><guid isPermaLink="false">828c54e2-3a4f-4f9a-a7e5-83a5e955129e</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:02:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:02:44.788Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,sugar price,சர்க்கரை விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/41ttxzp1/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/41ttxzp1/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>6 மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இல்லாத வகையில், சீனி எனப்படும் வெள்ளை சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல்  ரூ.25 வரை அதிகரித்து ரூ.75 முதல் ரூ.80  என்ற அளவை எட்டியுள்ளது. இது அடுத்து வரும் மாதங்களில் மேலும் உயர்ந்து  தீப ஒளி திருவிழா காலத்தின் போது ரூ.100 என்ற உச்சத்தை அடையக்கூடும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் கரும்பு விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்காத நிலையில், இன்னொருபுறம் மக்களை பாதிக்கும் வகையில் சர்க்கரை விலை உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.</p><p>எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் வகையில்,  வாகன எரிபொருளில்  அதிக அளவில் எத்தனால் கலப்பதை  மத்திய அரசு ஊக்குவிப்பதாகவும்,  அதற்காக சர்க்கரை ஆலைகள் வெள்ளை சர்க்கரை உற்பத்தியை விட  மொலாசஸ் எனப்படும்  கரும்பு வெல்லப்பாகு  உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தருவது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.  இதில்  ஓரளவு உண்மை இருப்பதை மறுக்க முடியாது.</p><p>ஆனால், இதையும் தாண்டிய முதன்மைக் காரணம், தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கரும்பு சாகுபடி பரப்பு அண்மைக்காலங்களில் மிக வேகமாக குறைந்து வருவது தான். தேசிய அளவில் 2022-ஆம் ஆண்டில்  58.85 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 2024-ஆம் ஆண்டில் 54.49 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது.</p><h2><strong>அநீதி</strong></h2><p>தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டுக்கு முன் 15 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு 2025-ஆம் ஆண்டில்  வெறும் 5 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. அதேபோல், தமிழ்நாட்டில்  2018ஆம் ஆண்டில் 2.8 கோடி டன்னாக இருந்த  சர்க்கரை உற்பத்தி 2024-ஆம் ஆண்டில் 1.59 கோடி டன்னாக குறைந்து விட்டது. இதற்கு காரணம் கரும்புக்கான உற்பத்திச் செலவு  அதிகரித்து விட்டதும், அதற்கு ஏற்ற வகையில்  கரும்பின் கொள்முதல் விலை  உயர்த்தப்படாததும் தான்.  இந்த நிலை மாற்றப்பட்டு  சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டால் தான் சர்க்கரை உற்பத்தி அதிகரித்து விலை குறையும்.</p><p>ஒரு டன் கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, மொலாசஸ், சக்கை உள்ளிட்ட அனைத்து துணைப் பொருள்களின் வாயிலாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/suger-price-hike-in-tamilnadu">சர்க்கரை</a> ஆலைகளுக்கு  ரூ,21 ஆயிரத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும் நிலையில், சர்க்கரை ஆலைகள் ஒரு டன் கரும்புக்கு  ரூ.5000 கூட கொள்முதல் விலையாக வழங்க மறுப்பதும், அதற்கு ஆட்சியாளர்கள் துணை போவதும் அநீதியாகும்.</p><p>ஒரு டன் கரும்பில் சராசரியாக ஒரு குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால், ஒரு குவிண்டால் சர்க்கரையின் மொத்த விலை  ரூ.7000 ஆக இப்போது உயர்ந்துள்ள நிலையில், அதே விலை ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக வழங்கப்பட வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் கிடைக்கும் துணை பொருள்கள் மூலம் ஆலைகளுக்கு கிடைக்கும் வருமானம் இலாபமாக இருக்கும். ஆனால், இயல்பாக வழங்க வேண்டிய விலையில் பாதிக்கும் குறைவாக ரூ..3383  தான் கொள்முதல் விலையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை குறைந்தபட்சம்  ரூ.5000 என்ற அளவுக்காவது அதிகரிக்க வேண்டும். அப்போது தான் கரும்பு சாகுபடி பரப்பும், சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும்.</p><p>இவை ஒருபுறமிருக்கு சர்க்கரை விலை உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை  குறைப்பதற்காக பொங்கல் திருநாள் வரை நடப்பு மாதம் தொடங்கி  6 மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item></channel></rss>