<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 10 Aug 2026 14:57:51 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள் - 10 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026#comments</comments><guid isPermaLink="false">1bbee6de-4ec6-459e-bfff-1b842e60b35a</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:09:30 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:57:00.138Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/803u20uo/vinoth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/803u20uo/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-speaks-onjharkhand-protest-crackdown-use-of-force-against-students-is-wrong">ஜார்க்கண்டில் சட்டசபையை நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தவறானது: ராகுல் காந்தி</a></p><p>* ஜார்க்கண்ட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>* சட்டசபை நோக்கி பேரணி சென்றபோது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/child-among-13-killed-in-one-of-deadliest-ukraine-drone-strikes-in-russia">ரஷியா மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்: 13  பொதுமக்கள் உயிரிழப்பு- பலர் காயம்</a></p><p>* உக்ரைனில் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல்.</p><p>* உக்ரைன் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mbbs-bds-admissions-2026-27-rank-list-72633-applicants">MBBS, BDS தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 2026-27 மருத்துவப் படிப்புகளுக்கு 72,633 பேர் விண்ணப்பம்!... </a></p><p>*மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்ப விவரங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.</p><p>*இதில் 26,956 விண்ணப்பங்கள் தகுதியானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 9,105 மாணவர்களும், 17,851 மாணவிகளும் உள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-issue-tamil-nadu-govt-give-private-law-former-minister-regupathy">தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஒன்றிய அரசு என உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா? முன்னாள் அமைச்சர் ரகுபதி</a></p><p>* தமிழ்நாட்டிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்கின்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை அரசு பெற்று தந்தால்தான் அது நிலைத்து நிற்க முடியும்.</p><p>* ஒன்றிய அரசு என்று சொல்லவே அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே ஒன்றிய அரசு என்று உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா என்பது சந்தேகம்.</p><p>மேட்டூர் அணை திறப்பு எப்போது? விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வீர்களா? மாட்டீர்களா? என எம்எல்ஏ ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். </p><p>சட்டமன்ற விவாதத்தில் நிதியமைச்சர் இவ்வளவு கோபப்படக்கூடாது என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர்,"நிதியமைச்சர் சட்டமன்றத்தில் பேசுவதை பர்சனலாக எடுத்துக்கொள்கிறார். கடையநல்லூர் எம்எல்ஏ தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் அப்படிக்கூறினார், அவர் அவைக்கு புதியவர்" என விளக்கம் அளித்தார்.</p> <p>சட்டமன்றத்தின் அலுவல் மொழி தமிழோ, ஆங்கிலத்திலோ.. இரு மொழியிலும் பேசலாம் என விதி உள்ளது. தனக்கு எதிரே இருந்தவர் தெலுங்கில் பேசியபோது அனுமதித்து தெலுங்கிலேயே பதில் தந்தவர் ஜெயலலிதா- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</p><p>அந்தந்த மாவட்ட பழக்க வழக்கத்திற்கு ஏற்றார்போல் தமிழ் மொழி பேசும் விதம் மாறும்- திமுக எம்எல்ஏ எ.வ.வேலு </p><p>அமெரிக்காவில் இருந்து வந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தபோதும் இந்த நிலைதான் இருந்தது- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.</p><p>நிதியமைச்சர் வரும் காலத்தில் பிழையின்றி தமிழில் பட்ஜெட் வாசிக்க வேண்டும் என்று ராஜேந்திரன் கூறியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில்,"எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சங்கத்தமிழிலா பேசுகிறார்?" என்றார்.</p><p>தமிழில் நன்றாக பேச அமைச்சர் ராஜ்மோகனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ராஜேந்திரன் கூறியதால் அமைச்சர் மரிய வில்சன் ஆவேசமடைந்தார்.</p><p>தனது தமிழ் குறித்து திமுக எம்எல்ஏ பேசியதால் ஆத்திரடைந்த நிதியமைச்சர்,"சாதி ரீதியாக கேலி செய்வது அதிகரித்துள்ளது, தற்போது மொழி ரீதியாக கேலி செய்வதும் அதிகரித்துவிட்டது. என்னால் இப்படிதான் பேச முடியும், வேண்டும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்உங்களுக்காக என் ஸ்டைலை மாற்ற முடியாது" என பதில் அளித்தார்.</p><p>நிதி அமைச்சரின் நிதி நிலை அறிக்கை மிக தெளிவாக இருந்தது  - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>கடந்த திமுக ஆட்சியில் நீர்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>பால் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க காரணம் திமுக, 90 நாட்களில் தவெக எப்படி கொண்டுவர முடியும்.</p><p>விவசாயிகளுக்கு எவ்வளவு இலவச மின் இணைப்புகள் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை - ராஜேந்திரன்</p><p>கைது செய்யப்பட்ட நாளை தனது நாளாக்கியவர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.</p><p>கொரோனா பாதித்த நோயாளிகளை நேரில் பார்த்த ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ராஜேந்திரன்</p><p>கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் உரையாற்றினார்.</p><p>மதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர். நான் சார்ந்திருக்கும் திமுக சார்பில் நன்றி. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நன்றி.</p><p>வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய கூடாது என முடிவெடுத்தவன் நான்.</p><p>தமிழுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த பாரதியார் கோட் சூட் அணிந்து தான் வாழ்ந்தார். தமிழ் எங்கள் உயிர் என்பது எங்களது சொல்லில் அல்ல செயலில் இருக்கும், முதல்வர் அத்தகையவர் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - பாஜக எம்எல்ஏ</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர் போஜராஜன் உரையாற்றினார்.</p><p>பேரவைக்கு முதல்வர் வேஷ்டி சட்டையுடன் வருவது பொங்கல், தீபாவளியை போல் ஒரு மகிழ்ச்சி வருகிறது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றி இன்றும் முதல்வர் உள்ளிட்ட அனைவரும் வேட்டி, சட்டையில் வந்திருக்கலாம்.</p><p>இடைவெளி இல்லாமல் சட்டசபை நடப்பதால் உறுப்பினர்களுக்கு உடல்சோர்வு ஏற்பட்டுள்ளது. உடல் சோர்வால் உறுப்பினர்கள் பாதி பேர் வெளியே சென்று விட்டார்கள் - தமிமுன் அன்சாரி</p><p>தேவைப்பட்டால் சட்டசபை மாலை நேரத்திலும் நடத்த முடிவு - சபாநாயகர்</p><p>கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த ஆய்வு நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு தடை விதிக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி </p> <p>காமராஜர் திட்டமிட்ட ராசிமணல் அணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.</p><p>ராசிமணலில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். ராசிமணலில் அணை கட்டினால் இரு மாநிலத்துக்கு பிரச்சனை ஏற்படாது  - தமிமுன் அன்சாரி </p><p>நீட் தேர்வு  வேண்டாம் என்பது தான் தவெக அரசின் நிலைப்பாடு. அப்படியிருக்கும்போது திக பரப்புரைக்கு அனுமதி மறுத்தது ஏன்?</p><p>புதிய முஸ்லீம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்று  கிடைக்கும் வகையில் சட்டம் இயற்ற நடவடிக்கை தேவை.</p><p>ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் - தமிமுன் அன்சாரி கோரிக்கை</p><h2>தமிமுன் அன்சாரி</h2><p>புதிய சட்டமன்றத்தை கட்டுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.</p><p>திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளா?</p><p>நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை ஒடுக்கியது நியாயமா?</p><p>சிஏஏ சட்டத்தில் ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வலியுறுத்த வேண்டும்.</p><p>ஈழ தமிழர்கள் தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.</p><p>காவிரி விவகாரத்தில் மாற்று நடவடிக்கை குறித்து ஏன் பேச கூடாது.</p> <p>பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டசபை உறுப்பினர் தமிமுன் அன்சாரி உரையாற்றினார்.</p><p>சட்டசபை விவாதங்களால் அழகுப்படுத்த வேண்டும்.</p><p>விவாதங்களின் முடிவில் வெற்றி பெறுவது மக்களின் கோரிக்கைகளாக இருக்க வேண்டும்.</p><p>சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக உடனுக்குடன் ஒளிபரப்பப்படுவதால் உறுப்பினர்கள் நேர்த்தியாக பேச வேண்டும்.</p><p>முன்பு பேரவையில் நடந்தது மறுநாள் காலை செய்தி தாளில் வரும். ஆனால் தற்போது நேரலையில் மக்கள் பார்க்கின்றனர்.</p><p>ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் விவாதத்தில் ஈடுபட்டாலும் வெல்வது மக்களாக இருக்க வேண்டும்.</p> <p>சட்டசபை உறுப்பினர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பேசினால் இப்படி நேரம் இழுக்காது.  உறுப்பினர்கள் தங்கள் புகார்களை ஆதாரத்துடன் வைத்தால் சரியான நேரத்தில் பேசி, அதற்கு பதிலும் சரியாக கிடைக்கும் - சபாநாயகர்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2lsd8hib/ministerkeerthana.jpg" /></figure><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>சிப்காட்டிற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளது. பெருந்துறை சிப்காட்டில் எந்த விதமான பெரிய மாற்றங்களையும் நான் பார்க்கவில்லை.</p><p>நேரு சொன்னதை போல் எவ்வித மாற்றத்தையும் திருச்சி சிப்காட்டில் நான் பார்க்கவில்லை.</p><p>திருச்சி சிப்காட் நன்றாக நடைபெறுவதாக நேரு கூறினார். நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.</p><p>திமுக அல்வா கொடுத்ததாக பேசிய தவெகவினருக்கு கே.என்.நேரு பதில் அளித்தார்.</p><p>திருச்சியின் பெரிய தொகுதியான மணப்பாறைக்கு கூட்டுக்குடிநீர் திட்டம், தலைமை மருத்துவமனை திமுக ஆட்சியில் கிடைத்தவை.</p><p>புதிய கல்லூரி திறப்பு, கிராமங்களுக்கு புதிய சாலை, சிப்காட்டில் வேலை ஏற்படுத்தியது திமுக ஆட்சியில் தான்.</p><p>புதிதாக வந்த தம்பி... முதல்வர் விஜயிடம் கேட்டு இன்னும் நிறைய செய்யுங்கள். அல்வா என்றெல்லாம் சொல்லாதீர்கள்.</p><h2>மணப்பாறை தவெக எம்எல்ஏ கதிரவன்</h2><p>மணப்பாறை முறுக்கு பிரபலம் என்றாலும் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு அல்வாவே அதிகம் கிடைத்தது.</p><p>திமுக ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.</p><p>பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு அனைவரும் வரவேற்பு - மணப்பாறை எம்எல்ஏ கதிரவன்</p><p>நெய்யாறு பிரச்சனை குறித்து முதலமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் பேசி நெய்யாறு பிரச்சனையை தீர்க்க வேண்டும் - பிரவீன்</p><p>விளவங்கோடு தொகுதி மக்களின் பிரச்சனை தீர்க்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><h2>அமைச்சர் ரஞ்சித் குமார்</h2><p>யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின நபருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மனித - விலங்கு மோதலை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்.</p><p>யானைகள் 3000 கி.மீ. நடந்து செல்லும், அது செல்லும் பாதை காடுகளை வளப்படுத்தும் - அமைச்சர் ரஞ்சித்</p><p>தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உரையாற்றினார்.</p><p>மனிதர் - வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நீலகிரியில் இருந்த புல்லட் ராஜா யானை தற்போது குமரியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு.</p><p>யானை புல்லட் ராஜா குமரிக்கு வந்ததில் இருந்து பொதுமக்கள் மீது அதிகளவில் தாக்குதல்.</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ ஜமால் யூனுஸ் உரை</h2><p>காவிரி நீர் விவகாரத்தில் தமிழக உரிமையை மீட்க தவெக அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>65 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கிடைத்துள்ளது. நிச்சயம் உறுதுணையாக இருந்து செயல்படுவோம்.</p> <p>காங்கிரஸ் அல்லாத ஆட்சி என கூறிய காமராஜூக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் அமமுக எம்எல்ஏ காமராஜ் உரையாற்றினார்.</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் நல்ல தொடக்கம். வருவாயை பெருக்க அலுவாலியா தலைமையில் குழுவுக்கு வரவேற்பு</p><p>தமிழ்நாடு மீண்டும் மின்மிகை மாநிலமாக மாறும். விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள். மேலும் ரூ.8,000 கோடி மட்டுமே விவசாய கடன்  உள்ளது. ரூ.8000 கோடி கடனை தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்காக கடன் வாங்கியாவது திட்டங்களை நிறைவேற்றுங்கள்.</p><p>நீங்கள் இருக்கும் வரை நீங்கள் தான் முதலமைச்சர். பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி மத்தியில் அமைக்க வேண்டும்.</p> <p>முதலமைச்சர் கர்நாடகா செல்ல நினைத்தது தவறானது. உபரி நீரை மட்டும் திறந்து விட தமிழகம் கர்நாடகாவின் வடிகாலா?</p><p>மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என காமராஜ் வேண்டுகோள் விடுத்தார்.</p><p>அதிமுக எம்எல்ஏ காமராஜ் கூறுகையில்,</p><p>தமிழக அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு முக்கியத்துவமில்லை. விவசாயம் என்பது வெறும் தொழில் அல்ல, விவசாயிகளின் வாழ்க்கை முறை. மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>கர்நாடகத்திடம் உரிய நீரை கேட்கிறோம், உபரி நீரை அல்ல. தண்ணீர் இல்லை என கூறி 2 நாட்கிில் அணை நிரம்பி விட்டதாக கூறுகின்றனர்.</p> <h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>திமுக அரசு முதல் காலாண்டில் வாங்கிய கடனை விட குறைவாகவே தவெக ஆட்சியில் ரூ.29,881 கோடி கடன்.</p><p>முதல் காலாண்டில் கடன் வாங்கும் தொகையை தவெக அரசு சற்று குறைத்துள்ளது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவை 0.54-ல் இருந்து 0.51 ஆக குறைத்துள்ளோம்.</p><p>கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>தேர்தல் அறிக்கையில் கூறிய 125 அறிவிப்புகள் தவெக அரசின் முதல் பட்ஜெட்டிலேயே அறிவித்துள்ளோம். துறை ரீதியான மாற்றங்களை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார். கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.</p><h2> அதிமுக எம்எல்ஏ காமராஜ்</h2><p>பட்ஜெட் தாக்கல் என்ற பெயரில் வெற்றி என்ற பெயரை ஒவ்வொரு திட்டத்திற்கு சூட்டும் விழா தான் நடைபெற்றது.</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த புதிய திட்டமும் இல்லை.</p><p>மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம்.</p><p>நிதி நிலையை சரி செய்ய 2 ஆண்டு தேவை என தவெக அரசு சொல்கிறது. ஆனால் 50 ஆண்டு தேவை என நிதித்துறை செயலாளர் கூறுகிறார்.</p><p>நன்னிலம் அதிமுக எம்எல்ஏ காமராஜ் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றினார். </p><p>அதிமுக ஆட்சிக்காலத்தில் விலைவாசி, கடன் கட்டுக்குள் இருந்தன.</p><p>தவெகவின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.</p><p>தவெகவின் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் அறிவிப்பாக வரவில்லை.</p> <p>கரும்புக்கு என கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியது மராட்டிய மாநிலம். விரைவில் கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணிக்கு வரும் - அமைச்சர் ஆதவ்</p><h2>சைதாப்பேட்டை எம்எல்ஏ அருள்பிரகாசம்</h2><p>தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்னல் வேகத்தில் முன்னேறுகிறது. சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டையில் மாசுவை நீக்கி தூய்மை கிடைத்துள்ளது.</p><p>நமது மண்ணில் விளையும் கரும்புக்கு சர்க்கரைத்தன்மை குறைவு - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பழைய கள்ளு. புதிய மொந்தை.</p><p>திமுக அரசின் பட்ஜெட்டை தான் தவெக அரசு அப்படியே வாசிக்கிறது என கிராமத்தில் பேசுகிறார்கள் -  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>ரேஷன் கடைகளில் தரமான அரிசி கொடுத்தால் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என எம்ஜிஆர் கூறினார்.</p><p>ரேஷன் கடைகளில் தரப்படும் அரிசியை வைத்து ஆட்சியை மதிப்பிடலாம் என எம்ஜிஆர் கூறினார் - சபாநாயகர்</p><p>திறந்த வெளியில் உள்ள 10 லட்சம் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடத்தில் 70% குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலையின்றி தவித்ததால் தவெக அரசு நடவடிக்கை.</p><p>விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக இந்த 5 ஆண்டு கால ஆட்சியை முதல்வர் விஜய் மாற்றுவார் என அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>திமுக ஆட்சியில் இதுவரை ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி அதை நாம் சமைத்து சாப்பிட்டோமா?</p><p>இலவசமாக தரும் அரிசி சாப்பிட முடியாத நிலையில் உள்ளதால் தான் சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு. </p><p>திமுகவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.</p><p>கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு சாகுபடியின் பரப்பளவு குறைந்துள்ளது.</p><h2>சொன்னால் செய்பவர் முதலமைச்சர் விஜய்</h2><p>பிரசாரத்தின்போது விவசாயியாக பிறக்க வேண்டும் என 3 முறை சொன்னார் முதல்வர் விஜய். அதை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்.</p><p>சொன்னால் செய்பவர் முதல்வர். நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசா சங்கங்களுடன் பேச்சு நடத்திய நிலையில் கரும்பு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>நீங்கள் 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.</p><p>5 வருடங்கள் ஆட்சியில் இருந்த திமுக 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா?</p><p>200 தொகுதிகளில் வெல்வோம் என அடிக்கடி சொன்ன திமுக, விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி தேர்தல் அறிக்கையில் பேசவே இல்லை.</p> <p>திமுக ஆட்சியில் தரமான அரிசிகள் வழங்கப்பட்டது. ஆட்சியர் தலைமையிலான குழு தான் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளித்தது - சக்கரபாணி</p><h2>அமைச்சர் வெங்கட்ரமணன்</h2><p>நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் திமுக ஆட்சியில் கையூட்டு பெறப்பட்டது. திமுக ஆட்சியில் ரேஷனில் தரப்பட்ட அரிசியை பயன்படுத்த முடியவில்லை என மக்களே கூறினர்.</p><p>ரேஷன் அரிசி தொடர்பாக புகார் வரும் நிலையில் அதனை சரிசெய்ய தொடர் நடவடிக்கை எடுக்கிறோம்.</p> <h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் நடந்துள்ளது. திமுக 2 லட்சம் மின் இணைப்பு கொடுத்தது விவசாயிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இலவச மின்சாரம் தொடர்பாக அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. தவெக ஆட்சியில் மின்சாரமே வரமேட்டேங்குது.</p><p>நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரத்திற்கு திமுக ஆட்சியைவிட கூடுதலாக ரூ.8 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் குறித்து மானிய கோரிக்கையில் அறிவிப்பு - நிர்மல்குமார்</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்த போகிறதா அரசு? நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கடந்த ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்?</p><p>வேளாண் துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ.279 கோடி குறைத்து நிதி ஒதுக்கி உள்ளது தவெக அரசு.</p><p>திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கான செலவை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டதாக அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார்.</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>தவெகவினர் படத்தை பார்த்து வந்தவர்கள், திமுகவினர் முரசொலி படித்து வந்தவர்கள். வேளாண்மை துறைக்கு திமுக ஆட்சியை விட குறைவாக ஒதுக்கி உள்ளது தவெக.</p><p>திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக்  தெரிகிறது.</p> <p>திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.</p><p>நெல் கிடங்குகள் கட்டவில்லை என அமைச்சர் ரமேஷ் தவறாக கூறினார். திமுக ஆட்சியில் 18 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.</p><p>மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதற்காக கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் போடப்பட்டதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் பேசினார்.</p><h2>அமைச்சர் ரமேஷ்</h2><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறந்த திரைக்கடை எழுதி உள்ளார்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.</p><p>ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்னாச்சு?</p><p>நெல்லுக்கும் கரும்புக்கும் அரசு ஒரு விலை நிர்ணயித்தால் அதிகாரிகள் ஒரு விலை நிர்ணயித்தார்களே அது தெரியாதா?</p><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? துன்பப்பட்டார்களா? என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.</p><p>திரைக்கதையை தயார் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.</p><p>கிடங்குகள் வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர் -  அமைச்சர் ரமேஷ்</p> <p>திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.</p><p>பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இருந்து கருத்துக்களை பெற்றோம் -  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>விவசாயிகள் வாங்கிய ரூ.21,000 கோடி கடனை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><p>விவசாயக்கடன் முழு தள்ளுபடி என நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் தான் சொன்னீர்கள்.</p><p>ரூ.21,000  கோடி கடனை தள்ளுபடி செய்கிறோம் எனக்கூறிவிட்டு வெறும் ரூ.6,000 கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள்.</p><p>தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 1.30 கோடி பெண்களுக் திமுக அரசு உரிமைத்தொகை கொடுத்தது.</p><p>நான் முதல்வன் திட்டத்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக அதிகம் பேர் பயிற்சி பெறுகின்றனர்.</p><p>திமுக ஆட்சியில் திடீர் திடீரென மழை பெய்தது. தவெக ஆட்சியில் மழையே பெய்யவில்லை.</p><p>நெல், கரும்பிற்கான ஊக்கத்தொகை தொடர்பாக தவெக - திமுக காரசார விவாதம் நடைபெற்றது.</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்து தான் வாக்குறுதி அளிக்க வேண்டும்.</p><p>திமுக இடைக்கால பட்ஜெட்டில் கரும்புக்கு ரூ.4000 கொடுப்போம் என கூறி இருந்தோம்.</p><p>திமுக ஆட்சியில் ரூ.19,500 கோடி கடன் தள்ளுபடி செய்தோம். </p> <h2>அமைச்சர் வினோத்</h2><p>விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை படிப்படியாகவே திமுக அரசு உயர்த்தியது.</p><p>திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் நெல்லுக்கு ரூ.2500, கரும்பிற்கு ரூ.3500 உயர்த்தி தரவில்லை.</p><p>புதிய ஆட்சி அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்தனர் விவசாயிகள். ஆனால் கிள்ளி தருகிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><h2>அமைச்சர் ஆனந்த்</h2><p>வாய்க்கால் தகராறுக்கு கூட சரிசெய்து விட்டீர்களா என இரவு பகல் பாராது போன் செய்கிறார் முதல்வர் விஜய்.</p><p>நாங்களும் தினந்தோறும் டென்ஷனாகத்தான் இருக்கிறோம்.</p><p>கரும்பு டன்னுக்கு ரூ.4,500 கொடுப்போம் என தவெக வாக்குறுதி அளித்தது.</p><p>எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் டென்ஷனாகத்தான் இருப்போம். நீங்கள் ரிலா்்ஸாக இருக்கிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p> <p>கரும்பு டன்னுக்கு ரூ.4000 கொடுத்தது வரலாற்றில் முதல்முறை. விவசாயிகள் நலனுக்காக வரலாறு படைத்துள்ளார்  முதலமைச்சர் விஜய் - செங்கோட்டையன்</p><p>விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட ஆட்சி திமுக ஆட்சி - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகவே இருக்கிறார் -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p> <p>திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.</p><p>கொள்கையை பேசி பேசி மக்கள் மனதை பிடித்தவர்கள் திராவிட இயக்கத்தினர்.</p><p>பட்ஜெட்டில் மாற்றத்தை காணவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது.</p><p>கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் இன்றி வாழ்ந்தார்கள்.</p><p>தமிழக பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் தொடங்கியது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழ்நாட்டின் நிதிநிலை சரியாக இல்லை என விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.</p><p>நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். </p><p>நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்.</p><p>பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2.600 வழங்கப்படும்.</p><p>கரும்புக்கான ஊக்கத்தொகை ஒரு டன்னுக்கு ரூ.709.50 உயர்த்தி வழங்கப்படும்.</p><p>வரலாற்றிலேயே முதல்முறையாக நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ.156 வரை உயர்த்தப்பட்டுள்ளது.</p> <p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு</p><p>தனித் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்காது என்பதால் சட்டமாக இயற்ற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கோரிக்கை.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் ராஜ்மோகன் உரையாற்றினார்.</p><p>மொழியின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகு பார்க்கும் கூட்டம் இது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது உலகத்தாய் வாழ்த்து.</p><p>இனி பொது நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்கள், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ  அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும் அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும் அவரை வாழ்த்தும் இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.</p><p>தனித்தீர்மானத்தின் மீது ஐயூஎம்எல் எம்எல்ஏவும் அமைச்சருமான ஷாஜகான் ஆதரவு அளித்து உரையாற்றினார்.</p><p>மொழி உணர்வை சீண்டி பார்க்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.</p> <p>முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்தது.</p><p>மாநில அரசுகள் பின்பற்றும் தனித்துவ விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு இருக்கக்கூடாது.</p> <p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது பாமக எம்எல்ஏ சிவகுமார் உரையாற்றினார்.</p><p>பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும்.</p><p>பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.</p><h2>வன்னி அரசு</h2><p>ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்காக தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சி.</p><p>தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும் தீர்மானம் இது.</p><p>தமிழ் தேசியமும் திராவிடமும் வேறு வேறு என பேசும் அபாயகரமான அரசியல்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது அமைச்சர் வன்னிஅரசு உரையாற்றினார். </p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விசிக ஆதரவு.</p><p>தமிழ்நாடு, தமிழர் என்ற அரசியல் தான் இன்றும் தொடர்கிறது.</p>   <p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்எல்ஏவும் அமைச்சருமான விஸ்வநாதன் உரையாற்றினார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் 8.5 கோடி தமிழ் மக்களால் ஏற்கப்பட்டுள்ளது.</p><p>மனேன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தமிழுக்கு ஏற்பட்ட அவமானம்.</p> <h2>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.</h2><p>1981-ல் மதுரையில் 5-வது தமிழ்நாட்டை நடத்தியவர் எம்.ஜி.ஆர்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல.</p><p>தமிழ் என்ற வரும்போது இந்த பேரவை ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்மொழியின் தொன்மை, பண்பாட்டின் அடையாளம்.</p><p>தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனம், அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படுவது தமிழர்களின் உணர்வு.</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ கோவி செழியன் உரையாற்றினார். </p><p>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-ம் இடம் என்று சொல்லும்போது அவமானமாக இருக்கிறது.</p><p>தமிழ்மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாக்கியவர் கலைஞர் கருணாநிதி.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர்.</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளித்தது.</p><p>தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும் வகையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்</p> <p>1891-ம் ஆண்டு சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணீயம் நாடக நூலின் பாயிரம்.</p><p>1970 நவம்பர் 23-ல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என அரசாணை கொண்டுவரப்பட்டது.</p><p>2021 டிச.12-ல் தமிழ்நாட்டின் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது.</p><p>பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தின் முதலாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழின் பெருமையை சொல்ல திருக்குறள் ஒன்று போதாதா?</p><p>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் கொடுப்பது தானே மாநில உரிமை.</p><p>தமிழ் என்று சொன்னாலே ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒன்றாக வந்து நிற்கும்.</p><p>தமிழ் மொழியின் பெருமைய பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது.</p> <h2>முதலமைச்சர் விஜய்  உரை</h2><p>தாய் எப்படி புனிதமோ, அதை போன்றே தாய் மொழியும்.</p><p>தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் எனில் நாம் எல்லோரும் போற்றும் தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும்.</p><p>தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.</p><p>இந்தியாவின் நெற்றில் இருக்கும் பொட்டு தான தமிழ் மொழி.</p><p>தமிழும், தமிழனும் இல்லாத நாடு ஏது?</p> <p>தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது நமது உயிர், உணர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என சட்டசபை ஏகமனதாக தீர்மானிக்கிறது.</p><p>சட்டசபை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் என்சிற கோமுகி மணியனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய தனித்தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-resolution-priority-tamizh-thai-vazhthu">தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்</a></p> ]]></content:encoded></item><item><title>மழை பெய்தும் மாறாத நிலை... இந்தியாவில் தொடரும் பருவமழை பற்றாக்குறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/monsoon-deficit-continues-in-india-despite-recent-rains</link><comments>https://www.maalaimalar.com/news/national/monsoon-deficit-continues-in-india-despite-recent-rains#comments</comments><guid isPermaLink="false">3360cdb2-c29f-4102-be80-1485895cb988</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:50:26 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:50:26.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,பருவமழை,monsoon,Monsoon deficit,பருவமழை பற்றாக்குறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2xgrdkq7/monsoon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Monsoon deficit  India]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2xgrdkq7/monsoon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி, ஹரியானா மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் கடந்த வாரத்தில் பெய்த நல்ல மழை, அப்பகுதிகளில் நிலவி வந்த மழைப் பற்றாக்குறையைச் போக்க உதவிய போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த பருவமழைப் பற்றாக்குறையில் இது பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்களின் அடிப்படையில் நாட்டின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:</p><h2>மழை ப<strong>ற்றாக்கு</strong>றை நிலவரம்</h2><p>கடந்த 2-ஆம் தேதி நிலவரப்படி '12%' ஆக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த பருவமழை பற்றாக்குறை, நேற்று (ஆகஸ்ட் 9) '11%' ஆக மட்டுமே குறைந்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அதிகபட்சமாக '25%' மழை பற்றாக்குறை பதிவாகியுள்ளது. தெற்கு தீபகற்ப இந்தியாவில் '17%' மற்றும் வடமேற்கு இந்தியாவில் '11%' பற்றாக்குறை பதிவாகியுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் 20% மற்றும் அதற்கு மேற்பட்ட கடுமையான மழை பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.</p><h2>விவசாய<strong>த்தில் இதன்</strong> தாக்கம்</h2><p>* நாட்டின் மொத்த விவசாயப் பரப்பளவில் சுமார் '88%' பகுதிகளில் கரீஃப் பருவச் சாகுபடி/விதைப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.</p><p>* இதனால், கடந்த வார மழை விதைப்பு பரப்பளவில் நிலவிய பற்றாக்குறையை 1% மட்டுமே குறைக்க உதவியுள்ளது.</p><p>* நாட்டின் முக்கிய கரீஃப் பயிரான 'நெல் சாகுபடி பரப்பு', கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இன்னமும் 4% குறைவாகவே உள்ளது. பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நெல் மற்றும் சோளம் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>அணை <strong>நீர்மட்டம் &amp; மின் உ</strong>ற்பத்தி</h2><p>இம்மாதத்தில் பெய்து வரும் இந்த மழை, நாட்டின் முக்கிய அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நீர் இருப்பை உயர்த்த உதவும். இது நீர்மின் உற்பத்திக்கும் மற்றும் அடுத்த சாகுபடி பருவத்திற்கும் சாதகமான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>வானிலை <strong>முன்னறிவிப்பு</strong></h2><p>வங்காளதேசம் மற்றும் வட வங்கக்கடலோரப் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆகஸ்ட் 13 முதல் மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மழை மீண்டும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்டில் சட்டசபையை நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தவறானது: ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-speaks-onjharkhand-protest-crackdown-use-of-force-against-students-is-wrong</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-speaks-onjharkhand-protest-crackdown-use-of-force-against-students-is-wrong#comments</comments><guid isPermaLink="false">4d879c93-f0c4-4557-a397-3f5ff9d92837</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:46:19 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:46:19.587Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Jharkhand,மாணவர்கள் போராட்டம்,ஜார்க்கண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/o6htc9yw/RahulGandhi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/o6htc9yw/RahulGandhi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலை வாய்ப்புக்கான அம்மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் ஜார்க்கண்ட் மாநில அரசு பல்வேறு கட்டங்களாக மாணவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.</p><p>இதற்கிடையே பல அதிகாரிகளை அரசு நீக்கியது. இருந்தபோதிலும் போராட்டத்தை மாணவர்கள் கைவிடவில்லை. இன்று ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தொடங்கியது. மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர்.</p><h2>போலீசார் தடியடி</h2><p>காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை மீறி மாணவர்கள் முன்னேறிச் சென்றனர். இதனால் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவியது தவறானது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்க பதிவில் "ஜார்க்கண்ட் அரசு தொடர்ந்து மாணவர்களின் குறைகளை கேட்டு, அதை உடனடியாக தீர்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பாஜக மீது அமைச்சர் குற்றச்சாட்டு</h2><p>இன்று காலை ஜார்க்கண்ட் சட்டசபை கூட்டம் தொடங்கியது. போராட்டம் குறித்து அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அமைச்சர் சுதிவ்யா குமார், மாணவர்களின் போராட்டத்தை எதிர்க்கட்சியான பாஜக கைப்பற்றிக் கொண்டதாக குறு்றம்சாட்டினார்.</p><p>மேலும், மாணவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், மாணவர்களின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும், போராட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து பாஜக, அவர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.</p><h2>எதிர்க்கட்சித் தலைவர் கைது</h2><p>இதனிடையே தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜகவை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முதல்வர் இல்லத்தின் வெளியே போராட்டம் நடத்திய பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜக தலைவர்களை மாநிலக் காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியது.</p><h2>பாபுலால் குற்றச்சாட்டு</h2><p>மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிரப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜார்க்கண்ட் அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தேவையின்றி காலந்தாழ்த்தி வருவதாக பாபுலால் மராண்டி சாடினார்.</p><p>JPSC, JSSC மற்றும் CGL தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் முதன்மைக் கோரிக்கையை நிறைவேற்றாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மாநில அரசு முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/powerful-74-magnitude-earthquake-in-colombia</link><comments>https://www.maalaimalar.com/news/world/powerful-74-magnitude-earthquake-in-colombia#comments</comments><guid isPermaLink="false">35a3d556-d7d3-4af2-9c24-3e8933b35042</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:44:39 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:44:39.148Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,Ecuador,ஈக்வடார்,கொலம்பியா,Colombia,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3y1p7yel/New-Project-2026-08-10T200410.659.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3y1p7yel/New-Project-2026-08-10T200410.659.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு கொலம்பியாவில் உள்ளூர் நேரப்படி காலை  7:34 மணிக்கு, 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்  பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>கொலம்பியாவின் பசிபிக் கடலோரப் பகுதியான சோகோ மாகாணத்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சான் ஜோஸ் டெல் பால்மார் என்ற கிராமத்திற்கு அருகில், சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகக் கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>நிலநடுக்கம் ஏற்பட்ட சோகோ மாகாணத்தின் தலைநகரான கிப்டோ மற்றும் பிற பகுதிகளில் உள்ள கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சாண்டியாகோ டி கலி நகரில் குறைந்தது 20 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். </p><p>இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாட்டின் தலைநகரான பொகோட்டா மட்டுமன்றி, அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் வெனிசுலா வரையிலும் உணரப்பட்டுள்ளது. பொகோட்டாவில் உள்ள உயரமான கட்டடங்களில் இருந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இரு பிரிவினருக்கு இடையேயான மோதலால் பாதிரியார்கள் மீது தாக்குதல்: தேவாலயத்தை பூட்டிய காவல்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/clash-between-two-factions-in-church-police-lock-church-after-attack-on-priests</link><comments>https://www.maalaimalar.com/news/national/clash-between-two-factions-in-church-police-lock-church-after-attack-on-priests#comments</comments><guid isPermaLink="false">511bc5d3-78f4-4856-9ac9-a343ee9ec7a3</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:28:27.032Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,church attack,கேரளா,malankara church,ஆலயம் தாக்குதல்,மலங்காரா ஆலயம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/en5ppc4n/Untitled-design-32.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இரு பிரிவினரின் வாக்குவாதம் வன்முறையாக மாறி பாதிரியார்கள் தாக்கப்பட்டதால் ஆலயத்தை பூட்டிய காவல்துறை ]]></media:title><media:description type="html"><![CDATA[ Kerala Church]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/en5ppc4n/Untitled-design-32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் மூவாற்றுப்புழா அருகே உள்ள பிரமடத்தில் அமைந்துள்ள மலங்கரா ஆலயத்தில் ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஜேக்கபைட் பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆலயத்திற்குள் மோதிக்கொண்டனர்.</p><p><strong>கேரளாவில் ஆலயத்தில் மோதல்</strong></p><p>கொச்சியில் அமைந்துள்ள புனித யோவான் பெத்லகேம் ஆலயம் ஜேக்கபைட் என்ற பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் பாதிரியார்கள் தலைமையிலான ஆர்த்தடாக்ஸ் என்ற பிரிவினர், நீதிமன்ற உத்தரவு தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக கூறி ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் கூட்டம் நடத்த வந்தனர்.</p><p>அப்போது மற்றொரு ஜேக்கபைட் பிரிவினர் ஆலயத்திற்குள் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தனர். அங்கு வந்த ஆர்த்தடாக்ஸ் பிரிவினர்களிடம் முன்சிப் நீதிமன்றம் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பளித்துள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><p>வாய்மொழி வாக்குவாதம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து, இரு தரப்பு பாதிரியார்களும் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும்படி கூறினர்.</p><p><strong>ஆலயத்தை பூட்டிய காவல்துறை</strong></p><p>ஆனால் பதற்றம் தொடர்ந்து அதிகரித்ததால், காவல்துறை அதிகாரிகள் ஆலயத்தை தற்காலிகமாக பூட்டு போட்டு பூட்டினர். இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை மாலை இருதரப்பை சேர்ந்தவர்களும் மாவட்ட நிர்வாகத்தில்டம் பேச்சுவார்த்தை நடத்தும்படி காவல்துறை கூறியது.</p><p>ஆலயத்தில் நடந்த தாக்குதலில் பாதிரியார்கள் காயமடைந்ததாக இரு தரப்பினரும் குற்றம்சாட்டி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><p><strong>பாதிரியார்கள் குற்றச்சாட்டு</strong></p><p>இதுகுறித்து ஜேக்கபைட் சிரியன் ஆலயத்தின் ஊடகப் பிரிவுத் தலைவர் குரியகோஸ் மோர் கூறுகையில், “தேவாலயத் தகராறு தொடர்பான பிரச்சினைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால், ஒரு சுமுகமான தீர்வைக் காண்பதற்காக மாநில அரசு இரு தரப்பினருடனும் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.</p><p>இந்தச் சூழ்நிலையில், ஜேக்கபைட் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குவதும் பதற்றத்தைத் தூண்டுவதும் அமைதி முயற்சிகளைப் பாதிக்கும்” என்று அவர் கூறினார்.</p><p>இதையடுத்து ஆர்த்தடாக்ஸ் பிரிவர் சேர்ந்த ஊடகப் பிரிவின் தலைவரான யுஹானோன் மோர் கூறுகையில், “புனித குர்பானாவைக் கொண்டாட வந்த பாதிரியார் மற்றும் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் நாங்கள் கண்டிக்கிறோம்.</p><p>சட்டப்படி நியமிக்கப்பட்ட பிரிவினருக்கு இடையூறு செய்யக்கூடாது என்று மூவாற்றுப்புழா துணை நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஓடும் ரெயிலில் செல்போன் பறிப்பு: தவறி விழுந்து வாலிபர் பரிதாப பலி-குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/mobile-snatching-on-moving-train-youth-dies-after-fall-in-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/mobile-snatching-on-moving-train-youth-dies-after-fall-in-gujarat#comments</comments><guid isPermaLink="false">9cf7afff-09e9-47a2-8f68-c4c895a0c461</guid><pubDate>Mon, 10 Aug 2026 14:13:48 +0000</pubDate><atom:updated>2026-08-10T14:13:48.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>train accident,gujarat,குஜராத் மாநிலம்,ராஜஸ்தான்,Panoli,பாணோலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/luqbecxg/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat Train accident  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/luqbecxg/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் பாணோலி ரெயில் நிலையத்தில், இயங்கிக்கொண்டிருந்த ரெயிலில் இருந்து மர்ம நபர் ஒருவன் செல்போனைப் பறித்ததால், ரெயிலில் இருந்து தவறி விழுந்த 32 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை நடுங்க வைக்கும் இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p> உயிரிழந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் குர்ஜார் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது குடும்பப் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த 6 ஆம் தேதி அன்று, அசோக் குர்ஜார் ராஜஸ்தானின் சவாய் மாதோபூரிலிருந்து சூரத் நோக்கி ஜெய்ப்பூர் - பாந்த்ரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுப் பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்.</p><h2>திடீர் <strong>தாக்கு</strong>தல்</h2><p>ரெயில் பாணோலி ரெயில் நிலையத்தைக் கடந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, அசோக் ரெயிலின் வாசலுக்கு அருகே அமர்ந்திருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்சில் தூங்குவது போல் நடித்த நபர் ஒருவன், ரெயில் நெருங்கியதும் திடீரென எழுந்து ஓடிவந்து அசோக்கின் கையில் இருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பினான். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைதடுமாறிய அசோக், ரெயிலைப் பிடித்துத் தொங்க முயன்றார். ஆனால் வேகம் காரணமாக சில நொடிகளில் பிடிநழுவி பிளாட்பாரத்தில் பலமாக விழுந்து படுகாயமடைந்தார்.</p><h2>காவ<strong>ல்துறை நடவடிக்கை</strong></h2><p>விபத்துக்குப் பிறகு உடனடியாக மீட்கப்பட்ட அசோக், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரெயில்வே காவல்துறை, ரெயில் நிலைய சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் துணிச்சலாகச் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு, ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமான அந்த மர்ம நபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>குஜராத்தில் அரங்கேறியுள்ள இச்சம்பவம், ரெயில் பயணிகளிடையே பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-tax-will-be-levied-on-upi-transactions-union-minister-nirmala-sitharaman</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-tax-will-be-levied-on-upi-transactions-union-minister-nirmala-sitharaman#comments</comments><guid isPermaLink="false">8db06255-8e77-4c5d-9a6e-adf71badc4e7</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:58:35 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:58:35.521Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,நிர்மலா சீதாராமன்,nirmala Sitharaman,UPI transactions,parliament,யுபிஐ பரிவர்த்தனைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/p9xh5wgr/New-Project-2026-08-10T191606.820.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/p9xh5wgr/New-Project-2026-08-10T191606.820.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா நிறைவேறியது. </p><p>கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, இன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. </p><p>மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த மசோதா எந்த வரியையும் அல்லது பரிவர்த்தனை கட்டணத்தையும் புதிதாக முன்மொழியவில்லை என தெளிவுப்படுத்தினார். </p><p>“நுகர்வோர் யுபிஐ கட்டணம் ஏதேனும் செலுத்துவார்களா என்றால் இல்லை. யுபிஐ தொடங்கப்பட்டதிலிருந்தே நுகர்வோருக்கு இலவசமாகவே இருந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு இந்தியரும் எந்தவித பரிவர்த்தனைக் கட்டணமும் செலுத்தாமல் இந்த உடனடி டிஜிட்டல் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்” என தெரிவித்தார்.</p><p>வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 மூன்று முக்கிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்கிறது. பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுமுறைகள் சட்டம், 2007, வருமான வரிச் சட்டம், 2025, நிதிச் சட்டம், 2026  ஆகிய மூன்று பிரிவுகளில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.</p><p>பணம் செலுத்துதல் சட்டத்தில் திருத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமோ என பயனர்களிடையே அச்சம் எழுந்துவந்தது. இந்நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். </p><p>எதிர்காலத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், அந்த சுமை பொதுமக்கள் மீது விழாது. அது பெரிய வணிகர்களிடம் மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>SPIDER-MAN: BRAND NEW DAY- இந்தியாவில் வசூல் எவ்வளவு தெரியுமா..? </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-box-office-record-india</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-box-office-record-india#comments</comments><guid isPermaLink="false">674557be-c822-49a2-9886-7b5f10eaa090</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:29:55 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:29:55.402Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tom Holland,Zendaya,ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே,டாம் ஹாலண்ட்,Spider-Man: Brand New Day,ஜெண்டாயா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/at37uij2/SPIDER.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Spider-Man: Brand New Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/at37uij2/SPIDER.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹாலிவுட்டின் நட்சத்திர நாயகன் டாம் ஹாலண்ட் நடிப்பில் ஜூலை 30 அன்று வெளியான 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம், இந்தியாவில் வெளியான 12 நாட்களிலேயே ரூ.500 கோடி Gross வசூல் மைல்கல்லைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் ரூ.500 கோடி வசூலை எட்டிய முதல் ஹாலிவுட் திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.</p><h2>இந்தி<strong>ய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகள்</strong> </h2><p>ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' (ரூ.477.50 கோடி gross) மற்றும் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' (ரூ.445 கோடி gross) ஆகிய முன்னணி ஹாலிவுட் படங்களின் சாதனைகளை முறியடித்து இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.</p><p>2 நாட்களில் - ரூ.100 கோடி</p><p>3 நாட்களில் - ரூ.200 கோடி</p><p>8 நாட்களில் - ரூ.400 கோடி</p><p>12 நாட்களில் - ரூ.500+ கோடி</p><h2>நிக<strong>ர வசூல்</strong> </h2><p>இந்தியாவில் இதன் நிகர வசூல் மட்டும் ரூ.415 கோடியைத் தாண்டியுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகி, குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் 50%-க்கும் அதிகமான திரையரங்க ஆக்கிரமிப்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.</p><h2>உலக<strong>ளாவிய வசூல் மழை</strong> </h2><p>உலகளவில் வெளியான 10-12 நாட்களுக்குள் இத்திரைப்படம் $1.67 பில்லியன் (சுமார் ரூ.14,000 கோடிக்கு மேல்) வசூலித்து உலக பாக்ஸ் ஆபீஸை அதிரவைத்துள்ளது. வட அமெரிக்காவில்  மட்டும் $655.1 மில்லியன் வசூலித்துள்ளது. வட அமெரிக்காவைத் தவிர்த்து சர்வதேச சந்தைகளில் $1 பில்லியனுக்கும் மேல் வசூலித்துள்ளது. தற்போதைய வேகத்தைப் பார்த்தால், உலகளவில் விரைவில் $2 பில்லியன் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>திரை<strong>ப்படத்தின் சி</strong>றப்பம்சங்கள்</h2><p>மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) 38-வது படமான இதனை டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ளார். கெவின் ஃபெய்கி மற்றும் ஏமி பாஸ்கல் இணைந்து தயாரித்துள்ளனர். டாம் ஹாலண்ட் உடன் எம்.ஜே ஆக ஜெண்டாயா, நெட் ஆக ஜேக்கப் பேட்டலான், சாடி சிங்க், ஜான் பெர்ந்தல் (பனிஷர்) மற்றும் மார்க் ரஃப்பாலோ (ஹல்க்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். </p><p>தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களிடையேயும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருவதால், இத்திரைப்படத்தின் வசூல் வேட்டை வரும் வாரங்களிலும் நீடிக்கும் என்று வர்த்தக பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூருவில் பப் மற்றும் ஹோட்டல்களில் அழுகிய, பூஞ்சைகள் சூழ்ந்த இறைச்சிகளால் அதிர்ந்து போன அதிகாரிகள்: பாய்ந்தது நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/45-kg-of-rotten-beef-seized-in-bengaluru-after-star-hotel-raids</link><comments>https://www.maalaimalar.com/news/national/45-kg-of-rotten-beef-seized-in-bengaluru-after-star-hotel-raids#comments</comments><guid isPermaLink="false">9b4f1c03-792a-416b-8a16-b116c8602a85</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:20:13 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:20:13.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Food Safety Officer,உணவு பாதுகாப்புத் துறை,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்,rotten meat,அழுகிய இறைச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/wuqkn19g/Untitled-design-31.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெங்களூரு மதுபான விடுதியில் 45 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ Bengaluru Food Safety ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/wuqkn19g/Untitled-design-31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் உள்ள பகிர் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அழுகிய மற்றும் பூஞ்சை பாதித்த இறைச்சிகள், காலாவதியான பால் பொருட்கள் மற்றும் முறையற்ற முறையில் சேமிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டது. </p><p>இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள ஒரு மதுபான விடுதி மூடப்பட்டு, மேலும் பல உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. </p><p>பெங்களுரில் யுபி சிட்டி ஆடம்பர வணிக வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, சமையலறை சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படுவது கண்டறியப்பட்டது.</p><p>மேலும் சமையலறையில் அழுகிய நிலையில் இருந்த கோழி மற்றும் மாட்டிறைச்சி கண்டெடுக்கப்பட்டு, அந்த இறைச்சியில் பூஞ்சை வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது.</p><h3><strong>காலாவதியான உணவு பொருட்கள்</strong></h3><p>அப்போது சுமார் 10 நாட்கள் காலாவதி தேதி கடந்த பால் மற்றும் தயிர் பொருட்கள், 45 கிலோ அழுகிய கோழி மற்றும் மாட்டிறைச்சி, 6 கிலோ காய்கறிகள், கட்லெட்டுகள் உட்பட மொத்தம் 51 கிலோ உணவுப் பொருட்கள் உண்ணத் தகுதியற்றவை எனக் கண்டறியப்பட்டது. </p><p>மேலும் 15 லிட்டர் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யும் கண்டறியப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டது.</p><h3><strong>உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை</strong></h3><p>முன்னதாக ராயல் செயின் ஹோட்டலில் அதிகாரிகள் 50 கிலோ வாத்துக்கறியையும் 5 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர். மெட்ராஸ் கிச்சனில் 5 கிலோ பச்சை பட்டாணியும், டெஸ்கான் ஹோட்டலில் இருந்து 5 கிலோ காளான்களும் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>சென்செஸ் ஹோட்டலில் அதிகாரிகள் 3 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்ததோடு, கேக், உருளைக்கிழங்கு மற்றும் டாக்கோஸ் அடங்கிய மேலும் 7 கிலோ உணவுப் பொருட்களை அப்புறப்படுத்தினர்.</p><p>பெங்களூருவில் உள்ள பல புகழ்பெற்ற ஹோட்டல்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் கோல்ட்மேன் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணா ஃபுட்லேண்ட் நிறுவனங்களால் இயக்கப்படும் உணவு சேமிப்பு மற்றும் விநியோக மையங்களும் ஆய்வு செய்யப்பட்டன.</p><p>இந்த ஆலைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்போது, காலாவதி தேதி நெருங்கிய சுமார் 70 கிலோ சோயா சாஸ் மற்றும் பல்வேறு இதர சாஸ்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.</p><p>உணவு பாதுகாப்புத் துறை ஐந்து இறைச்சி மாதிரிகளையும், 13 இதர உணவு மாதிரிகளையும் சேகரித்து, அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.</p><p>ஸ்ட்ராபெர்ரி சுவையுடைய பானங்கள் மற்றும் காலாவதி தேதி நெருங்கிய பிற பானங்கள் உட்பட, சுமார் 10 லிட்டர் குளிர்பானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை கூறுகையில், “சேமிப்பு நிலைமைகள், உணவு பொருட்களின் தரம் மற்றும் வளாகங்களில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.</p><p>உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர தேவைகளை மீறுவதாக கண்டறியப்பட்ட உணவு வணிக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘நான் கிறிஸ்தவன்... தாக்குதல், தற்காப்பு இரண்டும் தெரியும்’ - சட்டப்பேரவையில் ஆவேசமான அமைச்சர் மரியவில்சன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-am-a-christian-i-know-both-how-to-attack-and-how-to-defend-minister-maria-wilson-speaks-passionately-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-am-a-christian-i-know-both-how-to-attack-and-how-to-defend-minister-maria-wilson-speaks-passionately-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">a1008beb-bbd5-43ab-91b0-af3bc9b81510</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:19:02.088Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்,tamil,Minister Maria Wilson,அமைச்சர் மரியவில்சன்,MLA Rajendran,எம்எல்ஏ ராஜேந்திரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2deowv9h/New-Project-2026-08-10T183204.163.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நான் கிறிஸ்தவன்... தாக்குதல், தற்காப்பு இரண்டும் தெரியும்’ - சட்டப்பேரவையில் ஆவேசமான அமைச்சர் மரியவில்சன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2deowv9h/New-Project-2026-08-10T183204.163.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடர்பான விவாத கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய விவாதத்தின்போது பேசிய கடையநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்.,</p><p>“நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, நான் ஒரு சொற்பொழிவாளன், தமிழ் ஆர்வலன் என்ற முறையில் உன்னிப்பாக கவனித்தேன். அவர் ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தது.</p><p>தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல் விட்டுவிட்டார். சில தொடர்கள் இலக்கண பிழையுடன் அமைந்தன. இதை குறையாகவோ, குற்றச்சாட்டாகவோ அவையில் வைக்க விரும்பவில்லை. </p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது கட்சிக்காக வெகுவாக வாதாடி, பலம் சேர்க்கிறார் என்பதை நாம் காண்கிறோம். வருங்காலத்தில் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் நிலை இருக்குமானால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர் பிழையின்றி பேச முயற்சிகள் எடுக்கவேண்டும்.” என தெரிவித்தார்.</p><p>அதற்கு சபாநாயகர்,  “எம்.எல்.ஏ ராஜேந்திரன் பேசும்போது பட்ஜெட் என்று சொல்கிறார். தமிழில் நிதிநிலை அறிக்கை என்று சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார்.</p><p>தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கருத்துக்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன்.,</p><p>நான் ஒரு கூடைப்பந்து விளையாட்டாளர். தாக்குதல், தற்காப்பு இரண்டும் எனக்குத் தெரியும். எப்போது தாக்கவேண்டும், எப்போது தடுக்கவேண்டும் என எனக்குத் தெரியும். நீங்கள் கத்தினால் நானும் கத்துவேன். நான் 25 முதல் 30 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருந்திருக்கிறேன். என்னுடைய தொடர்புமுறை எல்லாம் ஆங்கிலத்தில்தான் இருந்திருக்கின்றன.</p><p>இந்த மாமன்றத்தில் அவர் கூறியவாறு கொஞ்ச நாளாகவே உருவ கேலி, சாதி மற்றும் பெண்களைக் கேலி செய்தவர்கள், இப்போது மொழி கேலிக்கு வந்துவிட்டார்கள். எனக்கு ஒரு மொழியை எங்கள் கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தமிழ் படித்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது.</p><p>நான் பைபிள் படித்திருக்கிறேன். கிறிஸ்தவனாக பிறந்துள்ளேன். உங்களுக்கு அந்த மொழிதான் வேண்டும் என்றால், உங்கள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐந்து வருடமாக மக்களவையில் இருந்துள்ளார். அவர் பேசியதே கிடையாது. நான் முயற்சி செய்கிறேன். </p><p>நான் உங்களுக்காக எதையும் மாற்றிக்கொள்ள முடியாது. நான் இப்படித்தான் பேசுவேன். என்னுடைய ஸ்டைல் இதுதான். ராஜேந்திரனுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. கேலி செய்கிறீர்களா? என  கோவமாக பதிலளித்தார். </p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் கால்பதித்தது அல்லு அர்ஜுனின் &apos;AAA சினிமாஸ்&apos;: விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் திறப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/allu-arjun-aaa-cinemas-grand-opening-in-visakhapatnam</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/allu-arjun-aaa-cinemas-grand-opening-in-visakhapatnam#comments</comments><guid isPermaLink="false">042a0525-c2a4-42f7-a99d-0e72c44f550e</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:33:34 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:33:34.749Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அல்லு அர்ஜுன்,allu arjun,Visakhapatnam,ஆந்திரா,விசாகப்பட்டினம்,AAA Cinemas</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2bcr6nmk/allu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Allu Arjun ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2bcr6nmk/allu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன், ஐதராபாத்தைத் தொடர்ந்து தனது 'AAA Cinemas' (Asian Allu Arjun Cinemas) திரையரங்கத்தை ஆந்திரப் பிரதேசத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளார். விசாகப்பட்டினம் சாலக்ராமபுரத்தில் உள்ள புதிய 'இனார்பிட் மாலில்' அமைந்துள்ள இந்த அதிநவீன மல்டிபிளக்ஸ் வளாகத்தை நேற்று திறந்து வைத்தார்.</p><h2>அ<strong>திநவீன திரை</strong>கள்</h2><p>மொத்தம் 8 திரைகள் மற்றும் 1,556 இருக்கை வசதிகளைக் கொண்டுள்ள இந்த வளாகத்தில், இந்தியாவின் முதல் 'LED Projection Q-Luxon' திரை நிறுவப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்திலேயே மிகப்பெரிய அளவிலான (70 அடி × 30 அடி) பிரம்மாண்ட LED சினிமா திரை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. </p><p>விஐபி பார்வையாளர்களுக்காகப் பிரத்யேகமாக 'ஐகான் ஸ்டார் லவுஞ்ச்' மற்றும் ரீக்லைனர் இருக்கைகளுக்கான தனி நுழைவாயில் வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தனிநபர் காட்சிகளுக்காக '82 Lounge' எனும் பிரத்யேக வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது.</p><h2>பிசின<strong>ஸ் கூட்டாண்மை</strong></h2><p>ஐதராபாத் அமீர்பேட்டையில் அமைந்த முதல் 'AAA சினிமாஸ்' திரையரங்கின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு திரையுலகின் பிரபல விநியோக நிறுவனமான 'ஏசியன் சினிமாஸ்' உடன் இணைந்த கூட்டு முயற்சியாக அல்லு அர்ஜுன் இத்திட்டத்தை ஆந்திராவில் விரிவுபடுத்தியுள்ளார்.</p><h2>நெகிழ்ச்சி<strong>யுடன்</strong> பேசிய அல்லு அர்ஜுன்</h2><p>திரையரங்கைத் திறந்து வைத்துப் பேசிய அல்லு அர்ஜுன், "எனது முதல் திரைப்படமான 'கங்கோத்ரி' காலத்திலிருந்தே விசாகப்பட்டினத்துடன் எனக்கு ஆழமான உணர்வுப்பூர்வமான பிணைப்பு உண்டு. இந்த அழகான நகரத்தில் AAA சினிமாஸைக் கொண்டு வருவது எனது நீண்ட நாள் கனவு. ரசிகர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சினிமா அனுபவத்தை வழங்குவதற்காகவே இது அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரஷியா மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்: 13  பொதுமக்கள் உயிரிழப்பு- பலர் காயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/child-among-13-killed-in-one-of-deadliest-ukraine-drone-strikes-in-russia</link><comments>https://www.maalaimalar.com/news/world/child-among-13-killed-in-one-of-deadliest-ukraine-drone-strikes-in-russia#comments</comments><guid isPermaLink="false">0a4ac9f3-ac99-43f8-8655-56dcf48ea7be</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:30:24 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:30:24.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரோன் தாக்குதல்,உக்ரைன் ரஷியா போர்,Drone Attacks,ukraine russia war</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/qox20d81/RussiaDroneAttacks001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷியா மீது உக்ரைன் தாக்குதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/qox20d81/RussiaDroneAttacks001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய ரஷியாவில் உள்ள நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் 13 பேர் உயிரிழந்தனர். </p><h2>எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் குறிவைத்து தாக்குதல்</h2><p>உக்ரைனில் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.</p><p>அதேவேளையில் இந்த தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 75 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>ரஷியாவின் டாடர்ஸ்டான் எண்ணெய் வளங்களுக்கான மிகப்பெரிய பிராந்தியம் ஆகும். இங்கு ஏராளமான மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. ரஷியாவின் பதிலடி தாக்குதலுக்கான இந்த பகுதியை இலக்காக கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2>வெளிநாட்டினரும் உயிரிழப்பு</h2><p>உக்ரைன் ராணுவம் சார்பில் டெனேகோ எண்ணெய் சுத்திகரிப்பு அலை மீது தாக்குதல் நடத்திய தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரஷிய ராணுவத்திற்கான எரிபொருள் சப்ளையை குறைக்க முடியும் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.</p><p>இதில் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.</p><h2>உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்</h2><p>இதற்கிடையே உக்ரைன் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p>இந்திய நேரப்படி நேற்றிரவில் இருந்து இன்று காலை 456 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம தெரிவித்துள்ளது. இதில் எத்தனை டிரோன்கள் இலக்குகளை அடைந்து சேதம் விளைவித்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதேவேளையில், ரஷியா 126 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-mistreat-those-taken-in-for-questioning-madras-high-court-orders-police</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-mistreat-those-taken-in-for-questioning-madras-high-court-orders-police#comments</comments><guid isPermaLink="false">2811056b-8722-47c1-9097-cfdf413ef38b</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:20:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:20:27.619Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,police,விசாரணை,investigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/67d47jtz/New-Project-2026-08-10T174958.091.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/67d47jtz/New-Project-2026-08-10T174958.091.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>விசாரணைக்கு முறையான சம்மன் அனுப்பப்பட்டு, அதில் விசாரணை தேதி, நேரம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும், விசாரணை குறித்த விவரங்கள் காவல் நிலையப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.</p><p>விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் துன்புறுத்த கூடாது என உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன்,  “விசாரணை என்ற பெயரில் மக்களை துன்புறுத்தக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. </p><p>காவல் துறையின் விசாரணையில் வழக்கமாக நீதிமன்றம் தலையிடுவதில்லை; அதேநேரம் துன்புறுத்தல்களை பார்த்து கண்மூடி கொண்டிருப்பதும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சவப்பெட்டியில் பாய்ந்த மின்சாரம்: துக்கம் விசாரிக்க சென்ற மூதாட்டி உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/puducherry-funeral-electric-leak-claims-elderly-life</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/puducherry-funeral-electric-leak-claims-elderly-life#comments</comments><guid isPermaLink="false">597c3fa1-1f9f-4ebf-bd20-01866be80e6b</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:16:41 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:16:41.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி,dead,மூதாட்டி பலி,Pondycherry,சவப்பெட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/c5ikpcdv/freezer-box.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Freezer box]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/c5ikpcdv/freezer-box.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுவை அரியாங்குப்பம் அருகே காக்கையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது49). இவர் உடல் நலக்குறைவால் இறந்து போனார்.</p><p>இவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் சவபெட்டியில் (பிரீசர் பாக்ஸ்) வைக்கபட்டு இருந்தது.</p><p>இன்று காலை அதே பகுதியை சேர்ந்த ராஜாத்தி (75) மற்றும் ஒருவர் துக்கம் விசாரிக்க சென்றனர். அங்கு சவபெட்டியில் கை வைத்து அஞ்சலி செலுத்தினர்.</p><p>அப்போது திடீரென அவர்கள்  இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் உஷாராகி மற்றவர்கள் சவபெட்டியை தொடாத வண்ணம்   தடுத்துவிட்டனர்.</p><p>மேலும், சவபெட்டிக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து மின்சாரம் தாக்கி காயமடைந்தவர்களை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.</p><p>அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜாத்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து மின்சாரம் தாக்கி காயமடைந்த மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் மின்சார கசிவு ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியாக பாட வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-order-has-been-issued-mandating-that-the-tamil-thai-vazhthu-be-sung-last-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-order-has-been-issued-mandating-that-the-tamil-thai-vazhthu-be-sung-last-central-government#comments</comments><guid isPermaLink="false">0e2f7477-1049-4ddb-979c-611c6e7c302f</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:00:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:00:43.911Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,சென்னை உயர் நீதிமன்றம்,Madras HC,Centre,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vaazthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rzg4xpuy/New-Project-2026-08-10T172703.811.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியாக பாட வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - மத்திய அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rzg4xpuy/New-Project-2026-08-10T172703.811.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தொடர்பாக தமிழ்நாட்டிற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. </p><p>அதாவது அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப்பாடல் எப்போது பாடப்பட வேண்டும் என எந்த உத்தரவும் மாநில அரசுகளுக்கு பிறப்பிக்கப்படவில்லை எனவும், தேசியப் பாடலும் தேசிய கீதமும் பாடப்படும் பட்சத்தில், முதலில் தேசியப் பாடலையும், அதைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்பதே வழிகாட்டுதல் என மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. </p><p>மாநிலத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடக்கோரி, சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநலமனு இன்று தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, “தேசியப் பாடலும், தேசிய கீதமும் பாடப்படும் பட்சத்தில், முதலில் தேசியப் பாடலையும், அதைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்பதே வழிகாட்டுதல் என, 2026 ஆகஸ்ட் 9 அன்று மத்திய அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டது," என மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர். எல். சுந்தரேசன் தெரிவித்தார்.</p><p>இதன்மூலம் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. </p><h2>தொடங்கிய சர்ச்சை</h2><p>முதலமைச்சர் விஜய் பதவி ஏற்பு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை தொடங்கியது. ஆனால் அது ஆளுநர் நிகழ்ச்சி என்பதால் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதாக தவெக அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் விளக்கம் அளித்தனர். </p><p>இச்சூழலில் கடந்த 2026 ஜூலை 28 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.</p><p>இந்த விழாவில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. தமிழ்நாட்டின் மாநிலப்பாடலும், அப்பாடலை எழுதியவருமான மனோன்மணியம் பெயரைக் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பலதரப்பிலிருந்தும் கண்டனங்களை பெற்றது.</p><p>இதனிடையே விழாவிற்கு முன்னரே பல்கலைக்கழக வேந்தர் இதுதொடர்பாக பேசியிருந்தார். இதனால் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனும் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்தார். </p><h2>தீர்மானம்</h2><p>இவ்வாறு இவ்விவகாரம் பெரும் பேசுபொருளாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்று தவெக தலைமையிலான அரசு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது.</p><p>ஆனால் இதற்கு முன்னரே, 2021-ம் ஆண்டே திமுக அரசு மாநில நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 14-ல் வெளியாகிறது சூர்யாவின் &apos;விஸ்வநாத் &amp; சன்ஸ்&apos; : ஆகஸ்ட் 11 முதல் முன்பதிவு துவக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/surya-s-viswanath-and-sons-releases-august-14-pre-booking-from-august-11</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/surya-s-viswanath-and-sons-releases-august-14-pre-booking-from-august-11#comments</comments><guid isPermaLink="false">1e0eb014-2f48-47c6-be73-a60bc5f044d1</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:00:27.234Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mamitha Baiju,சூர்யா,suriya,மமிதா பைஜூ,Gvprakash kumar,VenkyAtluri,Vishwanath&amp;Sons,விஸ்வநாத்&amp;சன்ஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4d5wlqru/Vishwanath-Sons" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vishwanath & Sons ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4d5wlqru/Vishwanath-Sons?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">சூர்யா </a>நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள '<a href="https://www.maalaimalar.com/topic/vishwanath-and-sons">விஸ்வநாத் &amp; சன்ஸ்</a>' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.</p><p>இத்திரைப்படத்திற்கான முன்பதிவுகள் நாளை, ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை 6:00 மணி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது எனப் படக்குழு புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.</p><h2>புதிய போஸ்டர் வெளியீடு:</h2><p>இன்று படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், நடிகர் சூர்யா ஒரு பச்சிளம் குழந்தையைத் தனது கைகளில் ஏந்தியபடி மிகவும் பாசமான தந்தை தோற்றத்தில் காட்சியளிக்கிறார். </p><p>சூர்யாவின் முந்தைய ஆக்ஷன் மற்றும் மாஸ் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு எமோஷனல் மற்றும் ஃபீல்-குட் குடும்பத் திரைப்படமாக இது இருக்கும் என்பதை இப்போஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>கதைக்களம் என்ன?</h2><p>இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா, 40 வயதுகளில் இருக்கும் சர்வதேச அளவிலான ஒரு துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீரராக 'சஞ்சய் விஸ்வநாத்' என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். </p><p>ஒரு நடுத்தரக் குடும்பத்து மனிதன், தனது விளையாட்டு லட்சியம் மற்றும் குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே சந்திக்கும் சவால்களையும், தந்தை-மகன் பாசத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் இருக்கும் என்று ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் இப்படத்தை கணித்து வருகின்றனர்.</p><h2>வாத்தி', 'லக்கி பாஸ்கர்' இயக்குநருடன் முதல் கூட்டணி:</h2><p>தமிழில் தனுஷ் நடித்த 'வாத்தி' மற்றும் துல்கர் சல்மான் நடித்த 'லக்கி பாஸ்கர்' ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, முதன்முறையாக நடிகர் சூர்யாவுடன் இணைந்துள்ளார். </p><p>சூர்யாவின் 'விண்டேஜ்' எமோஷனல் நடிப்பை மீண்டும் திரையில் கொண்டு வரும் வகையில் இதன் திரைக்கதையை அவர் அமைத்துள்ளார்.</p><h2>பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளம்:</h2><p>'பிரேமலு' திரைப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9C%E0%AF%81">மமிதா பைஜூ</a> இப்படத்தில் சூர்யாவுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். </p><p>இவர்களுடன் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D">ஜி. வி. பிரகாஷ்</a> இசையமைத்துள்ளார்.</p><h2>சுதந்திர தின விடுமுறை கொண்டாட்டம்:</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டும், வார இறுதி விடுமுறையை முன்னிட்டும் இப்படம் ஆகஸ்ட் 14 அன்று உலகெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸாகிறது. </p><p>சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தின் திரையரங்கு டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">THE FAMILY IS COMING HOME ❤️<br><br>And Tamil Nadu is getting ready to welcome <a href="https://x.com/hashtag/VishwanathAndSons?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishwanathAndSons</a> to the big screens <br><br>Bookings open tomorrow at 6PM <a href="https://x.com/hashtag/VASonAUG14th?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VASonAUG14th</a> <a href="https://x.com/Suriya_offl?ref_src=twsrc%5Etfw">@Suriya_offl</a> <a href="https://x.com/hashtag/VenkyAtluri?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VenkyAtluri</a> <a href="https://x.com/_mamithabaiju?ref_src=twsrc%5Etfw">@_mamithabaiju</a> <a href="https://x.com/realradikaa?ref_src=twsrc%5Etfw">@realradikaa</a> <a href="https://x.com/TandonRaveena?ref_src=twsrc%5Etfw">@TandonRaveena</a> <a href="https://x.com/gvprakash?ref_src=twsrc%5Etfw">@gvprakash</a> <a href="https://x.com/vamsi84?ref_src=twsrc%5Etfw">@vamsi84</a> <a href="https://x.com/NavinNooli?ref_src=twsrc%5Etfw">@NavinNooli</a> <a href="https://x.com/NimishRavi?ref_src=twsrc%5Etfw">@NimishRavi</a>… <a href="https://t.co/RteIh6hUiF">pic.twitter.com/RteIh6hUiF</a></p>&mdash; Primark Productions (@PrimarkProd) <a href="https://x.com/PrimarkProd/status/2086723939469033672?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>MBBS, BDS தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 2026-27 மருத்துவப் படிப்புகளுக்கு 72,633 பேர் விண்ணப்பம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mbbs-bds-admissions-2026-27-rank-list-72633-applicants</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mbbs-bds-admissions-2026-27-rank-list-72633-applicants#comments</comments><guid isPermaLink="false">edf6cf5d-de74-4c88-a1e3-e1521802950e</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:58:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:58:18.281Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MBBS,பல் மருத்துவம்,MBBS, BDS Rank List Released,Minister Dr. Arunraj,MBBS, BDS தரவரிசைப் பட்டியல்,அமைச்சர் டாக்டர் அருண்ராஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xg3i98uz/mbbs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MBBS, BDS Rank List Released]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xg3i98uz/mbbs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Allied &amp; Health Care Courses) பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2026-27ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்ப விவரங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.</p><h2>72,633 பேர் <strong>விண்ணப்</strong>பம்</h2><p>MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 72,633 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் கீழ் 4,860 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவில் 468 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவில் 524 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.</p><h2>அரசு <strong>ஒதுக்கீட்டில் 35,926 விண்ணப்பங்கள் ஏற்</strong>பு</h2><p>2026-27ஆம் ஆண்டுக்கான MBBS மற்றும் BDS அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 41,726 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 35,926 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 12,551 பேர் மாணவர்கள்; 23,375 பேர் மாணவிகள். 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில் 4,860 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3,625 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 981 மாணவர்களும், 2,644 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர். </p><p>சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 30,907 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 26,956 விண்ணப்பங்கள் தகுதியானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 9,105 மாணவர்களும், 17,851 மாணவிகளும் உள்ளனர்.</p><h2>MBBS-க்<strong>கு 7,157 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்</strong></h2><p>2026-27ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் MBBS படிப்புக்கு மொத்தம் 7,157 இடங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் 4,473 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2,684 இடங்களும் உள்ளன.</p><p>BDS படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 1,383 இடங்கள் உள்ளன. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 213 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,170 இடங்களும் உள்ளன.</p><h2><strong>7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு 641 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள்</strong></h2><p>7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் கீழ் MBBS படிப்பில் மொத்தம் 537 இடங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 335 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 202 இடங்களும் உள்ளன. BDS படிப்பில் இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 104 இடங்கள் உள்ளன. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.</p><h2>நிர்வா<strong>க ஒதுக்கீட்</strong>டில் MBBS-க்கு 1,966 இடங்கள்</h2><p>சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 1,966 MBBS இடங்களும், 580 BDS இடங்களும் உள்ளன.</p><h2>Allied <strong>Health Care படி</strong>ப்புகளுக்கும் தரவரிசைப் பட்டியல்</h2><p>மருத்துவம் சார்ந்த Allied &amp; Health Care படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது. B.Sc. Nursing, B.Pharm, இணை மருத்துவப் படிப்புகள், Pharm-D, DGNM மற்றும் Diploma in Pharmacy உள்ளிட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூன் 21 முதல் ஜூலை 12, 2026 வரை பெறப்பட்டன.</p><p>Allied and Healthcare Degree Courses-க்கு 66,525 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 65,475 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. Pharm-D 6 ஆண்டு படிப்புக்கு 12,657 விண்ணப்பங்களில் 12,263 விண்ணப்பங்களும், Pharm-D 3 ஆண்டு படிப்புக்கு 32 விண்ணப்பங்களில் 29 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. DGNM படிப்புக்கு 18,308 விண்ணப்பங்களில் 17,676 விண்ணப்பங்களும், Diploma in Pharmacy படிப்புக்கு 13,018 விண்ணப்பங்களில் 12,718 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.</p><h2>மருத்துவ<strong>ம் சார்ந்த படிப்</strong>புகளில் ஆயிரக்கணக்கான இடங்கள்</h2><p>Allied and Healthcare Degree Courses-ல் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2,786 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 3,969 இடங்களும் உள்ளன. B.Sc. Nursing-ல் அரசு ஒதுக்கீட்டில் 400 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 11,807 இடங்களும் உள்ளன. B.Pharm படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 120 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 7,234 இடங்களும் உள்ளன. Pharm-D 6 ஆண்டு படிப்பில் 1,011 இடங்களும், 3 ஆண்டு படிப்பில் 72 இடங்களும் சுயநிதி கல்லூரிகளில் உள்ளன. DGNM படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 2,080 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 5,455 இடங்களும் உள்ளன. Diploma in Pharmacy படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 240 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 6,540 இடங்களும் உள்ளன.</p><h2>MBBS இடங்கள் <strong>அதிகரிப்பு</strong></h2><p>2021ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS சேர்க்கை இடங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். திருப்பூர், திருவள்ளூர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் வீதம் மொத்தம் 150 கூடுதல் MBBS இடங்கள் கிடைத்துள்ளன. மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 700 கூடுதல் MBBS இடங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த MBBS இடங்களின் எண்ணிக்கை 9,999 ஆகவும், BDS இடங்களின் எண்ணிக்கை 2,000 ஆகவும் உயர்ந்துள்ளதாக அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p><h2>தமிழக அளவி<strong>ல் விழு</strong>ப்புரம் முதலிடம் </h2><p>நீட் நுழைவுத்தேர்வில் தமிழக அளவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார், புதுக்கோட்டை ஸ்ரீனிகா 700 மதிப்பெண்களுடன் 2 ஆம் இடத்தையும், விருதுநகர் சுடர் 696 மதிப்பெண்ணுடன் 3ஆம் இடத்தையும் பிடித்தனர். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நாகையை சேர்ந்த தினேஷ் 599 மார்க்குடன் முதலிடம், சேலம் தரணீஷ் 595 மதிப்பெண்ணுடன் 2ஆம் இடம் பிடித்தார். </p><p>இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் வா. லோகநாயகி மற்றும் தேர்வுக்குழு துணை இயக்குநர்கள் டாக்டர் கராமத், டாக்டர் பாலநாக நந்தினி, டாக்டர் சாந்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். </p> ]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஒன்றிய அரசு என உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா? முன்னாள் அமைச்சர் ரகுபதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-issue-tamil-nadu-govt-give-private-law-former-minister-regupathy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-issue-tamil-nadu-govt-give-private-law-former-minister-regupathy#comments</comments><guid isPermaLink="false">d84c5dfe-a89f-48cf-b4a7-caf049c50e02</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:31:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:31:07.229Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,தமிழ்த்தாய் வாழ்த்து,ரகுபதி எம்.எல்.ஏ.,தவெக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/qej1nkiw/Regupathy0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் அமைச்சர் ரகுபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/qej1nkiw/Regupathy0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசு இன்று தமிழ்த்தாய் வாழ்த்தினை முதலில் பாட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.</p><h2>தனித் தீர்மானம்</h2><p>இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தமிழ்நாடு அரசு இன்று தமிழ்த்தாய் வாழ்த்தினை முதலில் பாட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. கடந்த திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். அதை சொந்த குரலிலே பாட வேண்டும் என்கின்ற உத்தரவு மூலம் அமல்படுத்தப்பட்டது.</p><p>ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டின் ஆளுனர் அர்லேகர் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டார். திமுக ஆட்சியிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு எல்லா நிகழ்ச்சிகளிலேயும் அது அமல்படுத்தப்பட்டது.</p><h2>ஆளுநரை கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்</h2><p>எனவே இன்றைக்கு கொண்டு வந்திருக்கிற அந்த தீர்மானம் என்பது நிச்சயமாக ஆளுநரையோ மற்றவர்களையோ கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்.</p><p>எனவே திமுக-வை பொறுத்தவரையில் ஒரு மசோதா கொண்டுவந்து அதன் மூலமாக இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்கின்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை அரசு பெற்று தந்தால்தான் அது நிலைத்து நிற்க முடியும். ஆனால் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளிப்பதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.</p><h2>சட்டம் கொண்டு வர வேண்டும்</h2><p>ஒன்றிய அரசு என்று சொல்லவே அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே ஒன்றிய அரசு என்று உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா என்பது சந்தேகம். கொண்டு வர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். கொண்டு வர வேண்டும். கொண்டு வந்தால்தான் அது நிலைத்து நிற்கும்.</p><p>இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>போதை பொருளை ஒழிக்க 65 சிறப்பு படைகள்- ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs#comments</comments><guid isPermaLink="false">ea68d024-163d-410c-a822-5e808d3609fd</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:30:45 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:30:45.217Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,போதைப்பொருள்,சிறப்பு படை,Anti drugs,Tamil Nadu Anti-Drugs Force</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2y49i088/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2y49i088/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்புக்கு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின்பேரில் போதைப்பொருளை ஒழிக்க 65 சிறப்பு படைகளை உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>சிறப்பு படைகளில் 65 காவல் ஆய்வாளர்கள், 130 உதவி ஆய்வாளர்கள், 325 காவலர்கள் பணியாற்றுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p><p>37 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு படையும், சென்னையில் மட்டும் 12 சிறப்பு படைகளும் உருவாக்கப்படும்.</p><p>ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய முக்கிய மாநகரங்களில் தலா 2 படைகள் வீதம் உருவாக்கப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/former-chairman-of-the-jharkhand-public-service-commission-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/former-chairman-of-the-jharkhand-public-service-commission-arrested#comments</comments><guid isPermaLink="false">5c79da20-56b4-4fb8-89d1-036569892946</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:25:01 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:25:01.257Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,JPSC chairperson,Khiangte,ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம்,கியாங்டே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6bl11m4t/New-Project-2026-08-10T155637.464.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6bl11m4t/New-Project-2026-08-10T155637.464.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு முறைகேடு புகாரில், ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் எல். கியாங்டே, குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரியில் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜூலை.22ம் தேதி இப்பதவியை ராஜினாமா செய்தார். </p><p>இவ்விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதே தனது ராஜினாமாவின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.</p><h2>பிரச்னை என்ன? </h2><p>14-வது ஜார்க்கண்ட் சிவில் சர்வீசஸ் ஆரம்பத் தேர்வு மற்றும் பிற அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. </p><p>அரசுத் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் தலைநகர் ராஞ்சியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.</p><p>போராட்டத்தின் ஒருபகுதியாக மாணவர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது, போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களைக் கலைத்தனர். </p><p>மாணவர் அமைப்பினர் அரசுடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும் சிஜிஎல் தேர்வை ரத்து செய்ய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இவ்விவகாரம் போராட்டமாக வெடித்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>நரேந்திரா பெயரை வெறுக்கிறேன்: பாகிஸ்தான் வீரர் கூறியதை பிரதமர் மோடியிடம் நினைவு கூர்ந்த இந்திய வீரர்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/i-hate-the-name-narendra-pakistan-boxer-remark-recalled-to-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-hate-the-name-narendra-pakistan-boxer-remark-recalled-to-modi#comments</comments><guid isPermaLink="false">22486426-e5e3-450b-a67f-bd0ff6717c9f</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:18:42 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:18:42.445Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,நரேந்திர மோடி,Jadumani Singh,Narendar berwal,நரேந்திர பெர்வால்,ஜடுமணி சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/vulgzri5/Untitled-design-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாகிஸ்தான் வீரர் குறித்து குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால் கூறியது, மோடியை நீண்ட நேரம் சிரிக்க வைத்தது.]]></media:title><media:description type="html"><![CDATA[ Narendra Modi - Narendra berwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/vulgzri5/Untitled-design-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தில் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இந்தியா சார்பாக கலந்துகொண்டு பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். </p><p>அப்போது, இந்திய குத்துச்சண்டை வீரர், தன்னிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் வீரர் குறித்து ஒரு நகைச்சுவையான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.</p><p>கிளாஸ்கோவில் நடைபெற்ற ஆண்களுக்கான 90+ கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வால், 2015 உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் (world military games) ஒரு பாகிஸ்தானிய வீரரை தோற்கடித்தபோது நடந்த ஒரு சம்பவத்தை, பிரதமர் மோடியிடம் கூறினார்.</p><h3><strong>குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால்</strong></h3><p>அப்போது தோல்வியடைந்த பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் என்னிடம் கூறுகையில், “உங்கள் பெயர் நரேந்தர், உங்கள் பயிற்சியாளரின் பெயர் நரேந்தர், உங்களின் பிரதமரின் பெயர் நரேந்திரா. நான் நரேந்திரா என்ற பெயரை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்” என்று அவர் கூறியதாக பகிர்ந்துகொண்டார்.</p><p>இதை பிரதமர் மோடி கேட்டதும், தனது சிரிப்பை அடக்க முடியாமல் நீண்ட நேரத்திற்கு சிரித்துக் கொண்டே இருந்தார்.</p><h3><strong>கார்கில் வீரர்களுக்கு சமர்ப்பணம்</strong></h3><p>இதையடுத்து 55 கிலோ ஆடவர் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜதுமணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பாகிஸ்தானின் சுமாமா ரஹ்மானை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.</p><p>அப்போது அவர் பிரதமர் மோடியிடம் கூறுகையில், “அது கார்கில் தினம், அன்றுதான் நான் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினேன். இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவன் என்பதால், நான் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.</p><p>நான் அவர்களை 5-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, அந்த வெற்றியை நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணித்தேன்,” என்று கூறினார்.</p><h3><strong>பிரதமர் மோடி</strong> பெருமிதம்</h3><p>இதைத்தொடர்ந்து பேசிய மோடி, இந்த வெற்றியின் முக்கியத்துவத்தையும், அது கார்கில் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதையும் பாராட்டினார்.</p><p>மேலும் அவர், “அதை நினைவுகூர்கையில், குறிப்பாக நீங்களே படைகளைச் சேர்ந்தவர் என்பதால், உங்கள் பதக்கத்தை கார்கில் வெற்றியாளர்களுக்கு அர்ப்பணித்து நீங்கள் வெளிப்படுத்திய உணர்வு, அந்த வெற்றிக்குக் கூடுதல் பெருமையைச் சேர்த்தது என்று நான் உண்மையாகவே நம்புகிறேன்.</p><p>மேலும், நீங்கள் யாரைத் தோற்கடித்தீர்களோ, அவர்களைத்தான் தோற்கடித்தீர்கள்!” என்று மோடி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>போலி அடையாளத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகளை ஏமாற்றிய வாலிபர் - 25 பெண்கள் மோசடி அம்பலமாகி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-identity-marriage-scam-youth-who-wed-bjp-mla-daughter-cheated-25-women</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-identity-marriage-scam-youth-who-wed-bjp-mla-daughter-cheated-25-women#comments</comments><guid isPermaLink="false">ee02c5e1-4997-4e29-9d24-a2084d3ad24a</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:18:08 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:18:08.820Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,உத்தரபிரதேசம்,uttarpradesh,BJPMLA,PrakharTrivedi,GyanTiwari,CheatingWomen,CroreScam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/692ibcdo/BJP-MLA-Daughter-Cheated" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  BJP MLA Daughter Cheated]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/692ibcdo/BJP-MLA-Daughter-Cheated?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரபிரதேசம் சேவதா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கியான் திவாரியின் மகளை திருமணம் செய்த வாலிபர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட வசதியான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பணம் பறித்தது அம்பலமாகியுள்ளது. </p><p>ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என பொய் கூறி நடத்திய இந்த மோசடியில் தற்போது மருமகன் பிரகர் திரிவேதி மற்றும் அவரது தந்தை அனுஜ் திரிவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>போலி அறிமுகத்தில் திருமணம்:</h2><p>உத்தரப் பிரதேசம் மாநிலம்,சேவதா தொகுதி பா.ஜ.கஎம்.எல்.ஏ.வாக இருப்பவர் கியான் திவாரி. இவரது மகள் பிரக்யா. இவர் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அனுஜ் திரிவேதியின் மகன் பிரகர் திரிவேதியை கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். </p><p>திருமணத்திற்கு முன்பு மும்பையில் பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அதிபர் என மனைவியிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவரது குடும்பத்தினருக்கு உள்ளூரில் நல்ல மரியாதை இருப்பதால் கியான் திவாரி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.</p><h2>25 பெண்கள் மோசடி அம்பலம்:</h2><p>சமீபத்தில் தனது மருமகனின் நடவடிக்கைகள் மற்றும் மோசடி தொடர்பான வழக்குகள் வெளிவந்தது. இதனை அறிந்த கியான் திவாரி தனது மருமகனின் கடந்த காலத்தை பற்றி விசாரணை நடத்தினார். </p><p>அதில் மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட வசதி படைத்த பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரிய வந்தது. </p><p>திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்துள்ளார்.</p><h2>எம்.எல்.ஏ. கியான் திவாரியின் வீடியோ பதிவு:</h2><p>இது குறித்து சமூக வலைத்தளங்களில் மருமகனின் நடத்தை குறித்து வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் போலி அட்டைகளை தயார் செய்து தனது மகளை திருமணம் செய்வதற்கு முன்பு பல மாநிலங்களில் 25 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்து இருக்கிறார்.</p><p>தற்போது அவர்களது குடும்ப உறவை துண்டித்து விட்டு மகளை வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறேன். பிரகர் திரிவேதி தனது குற்ற பின்னணி மற்றும் வழக்கு களை மறைத்து தனது மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். </p><p>இதனால் மக்கள் பிரதிநிதிதியாக உள்ள தனது நற்பெயரும் பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசில் புகார் செய்து இருக்கிறேன் என வீடியோவில் தெரி வித்துள்ளார்.</p><h2>மோசடி வாலிபர் கைது:</h2><p>இது சம்பந்தமாக உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து அனுஜ் திரிவேதி மற்றும் பிரகர் திரிவேதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>மகாராஷ்டிராவிலும் பல பெண்கள் புகார் செய்ததால் அந்த மாநில போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் மகளை ஏமாற்றி வாலிபர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறப்பாகவும், நீண்ட காலமாகவும் விளையாடுவார்: குர்னூர் பிரார் மீது நம்பிக்கை வைத்த ஜாகீர் கான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/zaheer-khan-i-believe-gurnoor-brar-is-the-one-who-has-the-ability-to-have-a-good-and-lengthy-career</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/zaheer-khan-i-believe-gurnoor-brar-is-the-one-who-has-the-ability-to-have-a-good-and-lengthy-career#comments</comments><guid isPermaLink="false">7597db16-a066-4729-8990-58a68730af61</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:14:54 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:14:54.125Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Zaheer Khan,SLvsIND,Gurnoor Brar,குர்னூர் பிரார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/ybpzwsj2/GurnoorBrabZaheerKhan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குர்னூர் பிரார்- ஜாகீர் கான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/ybpzwsj2/GurnoorBrabZaheerKhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 26 வயதான பஞ்சாப் வீரர் குர்னூர் பிரார் இடம் பிடித்திருந்தார். இவர் 6 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர். இலங்கை லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி 2 இன்னிங்சிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.</p><h2>குர்னூர் பிரார் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அறிமுகம்</h2><p>ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளதால், இவருக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.</p><p>இந்த நிலையில் குர்னூர் பிரார், இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடும் திறன் உள்ளதாக ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p> <h2>இது தொடர்பாக ஜாகீர் கான் கூறியதாவது:-</h2><p>அதிவேகத்தில் (140 கி.மீ.) பந்து வீசும் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நல்ல மற்றும் நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் திறன் குர்னூர் பிராரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். அவருக்கு விரைவான முன்னேற்றம் கிடைத்தது நல்லது. நான் அவருடன் சிறிது காலம் செலவிட்டபோதே, அவரின் அபாரமான திறனை என்னால் காண முடிந்தது. இறுதியில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ஆனால் திறனைப் பொறுத்தவரை, அவர்தான் என்னை மிகவும் கவர்ந்துள்ளார்.</p><p>இவ்வாறு ஜாகீர் கான் தெரிவித்தார்.</p><h2>ஐபிஎல் கிரிக்கெட்டில் குர்னூர் பிரார்</h2><p>2019-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியன் நெட் பவுரலாக செயல்பாட்டார். 2023-ல் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2025-ல் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 1.3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.</p>]]></content:encoded></item><item><title>வாட்ஸ்அப்பில் மீடியா ஃபைல்கள் அனுப்ப உலகளவில் சிக்கல்: புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வதில் தாமதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/whatsapp-users-worldwide-face-problems-sending-media-files</link><comments>https://www.maalaimalar.com/news/national/whatsapp-users-worldwide-face-problems-sending-media-files#comments</comments><guid isPermaLink="false">d3d9ef40-1b57-4f5f-b518-82f90b85e30c</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:14:23 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:14:23.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,WhatsApp,Meta,மெட்டா,வாட்ஸ்அப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/5so7as66/whatsapp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WhatsApp ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/5so7as66/whatsapp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மெட்டா நிறுவனத்தின் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப்பில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் ஜிஃப் உள்ளிட்ட ஊடகக் கோப்புகளைப் (Media Files) பகிர்வதில் உலகளவில் பெரும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதலே, பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் மீடியா ஃபைல்களை அனுப்ப இயலாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.</p><p>பயனர்களுக்கு சாதாரண உரைச் செய்திகள் தடையின்றிச் சென்று சேர்கின்றன. ஆனால், படங்கள், வீடியோக்கள் அல்லது ஸ்டிக்கர்களை அனுப்பும்போது அவை 'அப்லோட்' ஆகாமல் நீண்ட நேரம் நின்றுவிடுகின்றன. இணைய சேவை தடைகளைக் கண்காணிக்கும் டவுன்டெடெக்டர் தளத்தின் தரவுகளின்படி, பதிவான புகார்களில் 41% செய்திகள் அனுப்புவதிலும், 40% செயலியின் இயக்கத்திலும், 13% நோட்டிபிகேஷன் பிரிவிலும் சிக்கல்கள் உள்ளதாகக் காட்டுகின்றன.</p><h2>பாதிக்கப்<strong>பட்ட நாடு</strong>கள்</h2><p>இந்தத் தொழில்நுட்பக் கோளாறு இந்தியா மட்டுமன்றி பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில், கனடா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவலாக எதிரொலித்துள்ளது.</p><h2>பயனர்க<strong>ளின் புலம்பல்</strong> </h2><p>பயனர்கள் பலர் தங்களது போன்களை ரீஸ்டார்ட் செய்தல், வைஃபை (Wi-Fi) மற்றும் மொபைல் டேட்டாவை மாற்றி அமைத்தல், செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்தல் போன்ற நடைமுறைகளைச் செய்தபோதிலும் இந்த மீடியா பகிர்வு சிக்கல் தீரவில்லை. இதனால், பலரும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீம்களுடனும் புகார்களுடனும் தங்களது அதிருப்தியைப் பதிவிட்டு வருகின்றனர்.</p><p>இந்தத் திடீர் சேவைத் தடை குறித்து வாட்ஸ்அப் அல்லது மெட்டா நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது அறிக்கை தகவலோ வெளியடப்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்பக் குழுவினர் இந்தச் சிக்கலைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மதுரையில் தொடங்கும் சிவகார்த்திகேயனின் &apos;சேயோன்&apos; இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sivakarthikeyan-seyon-madurai-action-drama-shoot</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sivakarthikeyan-seyon-madurai-action-drama-shoot#comments</comments><guid isPermaLink="false">a2726d41-d876-4693-b700-95d4886d93ef</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:44:09 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:44:09.720Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகார்த்திகேயன்,Sivakarthikeyan,Seyon,சேயோன்,Bhagyashri Borse,பாக்யஸ்ரீ போர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/hev7e1ub/seyon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivakarthikeyan's 'Seyon']]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/hev7e1ub/seyon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படமான '<a href="https://www.maalaimalar.com/topic/சேயோன்">சேயோன்</a>' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்தகட்டப் படப்பிடிப்பு மதுரையில் கோலாகலமாகத் தொடங்குகிறது.</p><h2>வி<strong>ருமாண்டி பாணி</strong></h2><p>கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்த ஆக்ஷன்-டிராமா திரைப்படத்தில், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் மக்களால் சாமியாக வழிபடப்படும் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில், 'விருமாண்டி' படத்தின் பாணியில் கிராமத்து திருவிழா பின்னணியும், மக்களின் நம்பிக்கையும் மையக்கருவாகக் காட்டப்பட்டுள்ளது. இயக்குநர் சிவகுமார் முருகேசன், "இது இரு வேறு தெய்வங்களை நம்பும் மக்களின் வாழ்வியலையும் மனித நேயத்தையும் பேசும் கதை" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>'அமரன்' படத்தின் ரூ.300 கோடி வசூல் சாதனைக்குப் பிறகு, உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 2-வது படம் இதுவாகும்.  'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குகிறார். </p><p>துல்கர் சல்மானின் 'காந்தா' படத்திற்குப் பிறகு, நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் கமிட்டாகியுள்ள 2-வது படம் இது. சந்தோஷ் நாராயணன் முதன்முறையாக RKFI - சிவகார்த்திகேயன் கூட்டணியில் இசையமைக்கிறார்.</p><h2>ரிலீ<strong>ஸ் திட்ட</strong>ம்</h2><p>மதுரையில் நடைபெறவுள்ள இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் முக்கியமான ஆக்ஷன் சண்டைக்காட்சிகள் மற்றும் கிராமத்துப் பகுதிகள் படமாக்கப்பட உள்ளன. படம் வரும் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-5#comments</comments><guid isPermaLink="false">57affb1f-d167-4536-b976-8583537e951e</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:26:54 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:26:54.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IMD,Chennai Rain,சென்னையில் மழை,சென்னை வானிலை ஆய்வு மையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/ae7mhdlx/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/ae7mhdlx/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதனால் இன்று மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>லேசான மழை</strong> </h2><p>நாளை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>12-ந்தேதி மற்றும் 13-ந்தேதிகளில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>14-ந்தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி மற்றும் 16-ந்தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 14-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>ஜெய்ப்பூரில் திடீரென உள்வாங்கும் சாலை: வீடுகளில் விரிசல்- அச்சத்தில் மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/jaipur-road-collapse-leaves-residents-in-fear</link><comments>https://www.maalaimalar.com/news/national/jaipur-road-collapse-leaves-residents-in-fear#comments</comments><guid isPermaLink="false">dc7c500e-db7e-4776-8b5d-e1c5df4c8d79</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:22:09 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:22:09.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jaipur,Shikariyon Ki Mori,Mohammed Zakariya,ஜெய்பூர்,ஷிகாரியோன் கி மோரி,முகமது ஜக்கரியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mandgf9v/shikariyon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shikariyon Ki Mori ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/mandgf9v/shikariyon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜெய்பூர் நகரின் பழைய கோட்டைப் பகுதிக்கு உட்பட்ட போடா நிக்காஸ் சாலையில் அமைந்துள்ள ஷிகாரியோன் கி மோரி பகுதியில், திடீரென சாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும், வீடுகளில் விரிசல்கள் விழுந்து வருவதாலும் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.</p><h2>சுவர் இடி<strong>ந்து விழுந்தது</strong></h2><p>அப்பகுதியில் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த வீடுகளுக்கு ஜெய்பூர் மாநகராட்சி காலி செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், காலி செய்யப்பட்ட வீடு ஒன்றின் சுவர் நேற்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, வீடு முன்கூட்டியே காலி செய்யப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.</p><h2>அதிகாரிகளி<strong>ன் அலட்சிய</strong>ம்</h2><p>சுவர் இடிந்து விழுந்த பிறகும் ஜெய்பூர் மாநகராட்சியின் எந்தவொரு உயர் அதிகாரியோ அல்லது மீட்புக் குழுவினரோ சம்பவ இடத்தைப் பார்வையிட வரவில்லை என்றும், மாநகராட்சியால் நியமிக்கப்பட்ட ஒரு பாதுகாவலர் மட்டுமே அங்கு இருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>1000 மணல் <strong>மூட்டைகள் வீ</strong>ண்</h2><p>சுமார் 10 நாட்களுக்கு முன்பு சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளைப் போட்டு அதை அடைக்க முயன்றனர். ஆனால், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் மணல் அடித்துச் செல்லப்பட்டு பள்ளம் மேலும் பெரிதானது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டும், மழைநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள மகாதேவ் கோவில் கிணற்றுக்குள் மண் குவிந்து வருகிறது.</p><h2>காலி செ<strong>ய்ய நோட்டீஸ்</strong></h2><p>சாலை தொடர்ந்து உள்வாங்கி வருவதால், இதுவரை 10 முதல் 15 வீடுகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை 4-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உடனடியாகக் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் மேலும் பல குடும்பங்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றன.</p><h2>முன்னா<strong>ள் கவுன்சிலரின்</strong> ஆதங்கம்</h2><p>முன்னாள் கவுன்சிலர் முகமது ஜக்கரியா மற்றும் உள்ளூர்வாசிகள் கூறுகையில், "இங்கு எந்தவித சட்டவிரோதக் கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. வடிகால் வசதி சரிவர இல்லாததாலும், மழைநீர் சரியாக வெளியேறாததாலும் தான் சாலை உள்வாங்கி மண் அரிப்பு ஏற்படுகிறது. வெறும் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, பிரச்சனைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும். வீடுகளைக் காலி செய்யச் சொன்னால் நாங்கள் எங்கே செல்வது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள மேலும் பல வீடுகள் பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை: பதிலி அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமைதி காப்பது ஏன்? - தயாநிதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-does-the-congress-which-holds-meetings-of-mps-with-a-proxy-government-in-place-remain-silent-in-the-states-where-it-is-in-power-dayanidhi-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-does-the-congress-which-holds-meetings-of-mps-with-a-proxy-government-in-place-remain-silent-in-the-states-where-it-is-in-power-dayanidhi-asks#comments</comments><guid isPermaLink="false">58b1b29e-7618-4155-bfdc-0d291db048a2</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:17:34 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:17:34.677Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தயாநிதி மாறன்,Dayanidhi Maran,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/pcowkp1d/New-Project-2026-08-10T154702.760.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பதிலி அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், ஆளும் மாநிலங்களில் அமைதி காப்பது ஏன்? - தயாநிதி கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/pcowkp1d/New-Project-2026-08-10T154702.760.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவது ஏன் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் ஆளும் எந்த மாநிலங்களிலும் இதுதொடர்பாக எந்த ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“தமிழ்நாட்டில் மட்டும் தொகுதி மறுவரையறை தேவையில்லை எனும் நாடகம் ஏன்? தங்கள் பதிலி அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், தான் ஆளும் நான்கு மாநிலங்களில் ஏன் அமைதியாக இருக்கிறது? தொகுதி மறுவரையறையை ஆதரித்த ரேவந்த் ரெட்டி அவர்களைக் கேள்வி கேட்கத் துணியுமா?</p><p>த.வெ.க. அரசைத் தூண்டிவிட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டம் என்று நாடகமொன்றை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?</p><p>நியாயமான தொகுதி மறுவரையறை என்ற நிலைப்பாட்டிலிருந்து தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று அடித்திருக்கும் பல்டி தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா?</p><p>அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் இப்படியான எம்.பி.க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை?</p><p>தொகுதி மறுவரையறை தேவையில்லை என்று இங்கு நாடகமிடும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்களில் ஒருவரான ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுவரையறை நடந்தால் தெலங்கானா மாநிலத்தின் பிரதிநித்துவம் அதிகரிக்கும் என்று பேசியிருப்பது ஏன்?</p><p>தொகுதி மறுவரையறையில் தெளிவான நிலைப்பாடின்றி இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் செய்வது அற்ப அரசியல் அன்றி வேறல்ல.</p><p>நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் பதிலி அரசை நடத்திக் கொண்டிரும் ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காலநிலை மாற்றத்தால் பேரடி வாங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்: பில்லியன் கணக்கில் குவியும் நிதியிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/european-economy-hit-hard-by-climate-change-billions-in-losses</link><comments>https://www.maalaimalar.com/news/world/european-economy-hit-hard-by-climate-change-billions-in-losses#comments</comments><guid isPermaLink="false">68b5711a-9483-4861-bfc4-32933659be2d</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:06:40 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:06:40.719Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>European,European economy,Danube river,ஐரோப்பிய பொருளாதாரம்,ரைன் நதி,டானூப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/x3g7ar7o/europe.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ European economy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/x3g7ar7o/europe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய கண்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பதிவாகி வரும் தீவிர வெப்ப அலைகள், கடுமையான வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகியவை வெறும் இயற்கை பேரிடராக மட்டுமின்றி, அப்பிராந்தியத்தின் பொருளாதார கட்டமைப்பையே உலுக்கி வருகின்றன. பருவநிலை மாற்றம் என்பது எதிர்காலப் பிரச்சனை என்ற எண்ணத்தை உடைத்து, தற்போதைய நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெருமளவு வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பொருளாதார <strong>இழப்புகள்</strong> </h2><p>அலையன்ஸ் நிதி அமைப்பின் கணிப்பின்படி, ஜூன் மாதத்தில் வீசிய இருவார வெப்ப அலையால் மட்டுமே ஐரோப்பாவின் ஜிடிபி 0.3% அளவுக்கு (சுமார் 180 பில்லியன் யூரோக்கள்) சரிவைக் கண்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகும் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பொருளாதாரம் 2030-க்குள் 5% முதல் 7% வரை சுருங்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>உலகின் மற்ற கண்டங்களை விட ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடைந்து வருவதால், அரசுகளின் வரவு-செலவுத் திட்டம், நுகர்வோர் விலைவாசி மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு ஆகியவை தொடர் நெருக்கடிக்கு உள்ளாகின்றன.</p><h2>கப்பல் போக்கு<strong>வரத்து</strong> மற்றும் வர்த்தக முடக்கம்</h2><p>ஐரோப்பாவின் முக்கிய வணிக நதிகளான ரைன் மற்றும் டானூப் ஆகியவற்றில் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.இதனால் சரக்குக் கப்பல்கள் முழு கொள்ளளவுடன் செல்ல முடியாமல் வர்த்தகம் முடங்கியுள்ளது. ING வங்கியின் கூற்றுப்படி, ரைன் நதிப் போக்குவரத்து தடையால் ஜெர்மனியின் ஜிடிபி 0.3% குறைய வாய்ப்புள்ளது.</p><h2>மின் உற்ப<strong>த்தி முடக்</strong>கம் </h2><p>ஆறுகளில் நீர்மட்டம் சரிந்ததாலும், நீரின் வெப்பநிலை உயர்ந்ததாலும், அணுமின் நிலையங்களைக் குளிரூட்ட நீர் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இதனால் பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள பல அணுமின் உலைகள் உற்பத்தியைக் குறைக்கவும், தற்காலிகமாக மூடவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன. ஹங்கேரியின் முக்கிய அணுமின் நிலையம் ஒரு வாரம் முடங்கினாலும் நாட்டின் ஜிடிபியில் 0.1% இழப்பு ஏற்படும் என MBH வங்கி தெரிவித்துள்ளது.</p><h2>விவசாய<strong>ம் மற்றும்</strong> உணவுப் பணவீக்கம்</h2><p>கடும் வறட்சியால் மக்காச்சோளம் மற்றும் சூரியகாந்தி விளைச்சல் 6% முதல் 7% வரை சரிந்துள்ளது. பார்சிலோனா சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தின் ஆய்வின்படி, இதுபோன்ற வெப்ப அலைகள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி, ஐரோப்பிய மண்டலத்தின் பணவீக்கத்தை 0.34% வரை உயர்த்துகின்றன.</p><h2>சுற்றுலாத் து<strong>றையில் ஏற்</strong>படும் மாற்றங்கள் </h2><p>தெற்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸ் ஆகியவற்றில் வெப்பநிலை 45°C வரை பதிவாவதால், கோடைகால சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்களின் பயணங்களை வடக்கு ஐரோப்பிய நாடுகளுக்கோ அல்லது குளிர்ச்சியான மாதங்களுகோ மாற்றியமைப்பதால், தெற்கு ஐரோப்பிய வணிகங்கள் கடும் நஷ்டத்தை எதிர்நோக்குகின்றன.</p><h2>மனித உயி<strong>ரிழப்புக</strong>ள்</h2><p>தீவிர வெப்பத்தால் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் மட்டுமே வெப்ப அலை காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.</p><h2>வரி வருவா<strong>ய் சரி</strong>வு</h2><p>தொழில் வர்த்தக முடக்கத்தால் பிரான்ஸ் நாட்டின் வருடாந்திர வரி வருவாய் 1.8% வரையிலும், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளின் வரி வருவாய் 1.3% வரையிலும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>வட்டி விகித <strong>நெருக்கடி</strong></h2><p>பேரிடர் நிவாரணம், தீயணைப்பு மற்றும் மின் விநியோக சீரமைப்பு என அவசர கால செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஏற்கனவே அதிகக் கடனில் இருக்கும் பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கூடுதல் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதால், ஐரோப்பிய மத்திய வங்கிக்கு வட்டி விகிதங்களைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் உருவாகியுள்ளது.</p><p>வெப்ப அலை, வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகிய பேரிடர்கள் ஒரே நேரத்தில் தாக்குவதால், ஐரோப்பிய நாடுகள் இனி தற்காலிக நிவாரணங்களை மட்டுமே நம்பியிருக்காமல், நீண்டகால உள்கட்டமைப்பு மாற்றங்களில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்வது மட்டுமே பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்!- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-may-the-glory-of-mother-tamil-rise-high-across-the-world</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-may-the-glory-of-mother-tamil-rise-high-across-the-world#comments</comments><guid isPermaLink="false">dd54dbf3-372e-4279-805a-a409c71fb4fe</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:55:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:55:43.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/js750yq9/Vijay03.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/js750yq9/Vijay03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்.</strong></em></p><p>தமிழ்நாட்டில் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தமிழ்த்தாய் வாழ்த்து</a> முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் இன்று சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. </p><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தமிழ் நம் உயிர்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu">தமிழ்</a> ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.</p><p>மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.</p><p>இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்!</p><p>தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.<br><br>மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2086745353290965207?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பூனையை காப்பாற்ற முயன்ற போது சோகம்: 8 வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-year-old-boy-dies-saving-pet-cat-from-snakebite</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-year-old-boy-dies-saving-pet-cat-from-snakebite#comments</comments><guid isPermaLink="false">3b08506d-9902-47ae-9468-e5a02f7b0070</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:49:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:49:18.465Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,Snakebite,ஆவடி,Avadi,திருவள்ளூர்,விஷப்பாம்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tv0l1cke/snakr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ snakebite  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tv0l1cke/snakr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது 8 வயது மகன் நிச்சிஷ், ஆவடி கவுரிப்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலையில் நிச்சிஷ் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்சாரம் இல்லாததால் வீட்டின் உட்பகுதி இருட்டாக இருந்துள்ளது. </p><p>இந்நிலையில், திடீரென வீட்டில் இருந்த வளர்ப்புப் பூனை பயங்கரமாகச் சத்தமிட்டு கத்தியுள்ளது. பூனைக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்த நிச்சிஷ், அதனைத் தூக்குவதற்காக அருகில் சென்றுள்ளான். அப்போது, பூனையைத் தாக்க வந்த விஷப்பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் நிச்சிஷைக் கடித்தது.</p><p>பாம்பு கடித்ததில் வலியால் அலறித்துடித்த சிறுவனை, அவனது பெற்றோர் மற்றும் அண்டை வீட்டார் உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p>இச்சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நான் மட்டும் சட்டமன்றத்துக்கு சென்றிருந்தால் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கும்- ஆர்.பி. உதயகுமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-says-had-i-alone-gone-to-the-legislative-assembly-tvk-mlas-would-have-suffered-chest-pain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-says-had-i-alone-gone-to-the-legislative-assembly-tvk-mlas-would-have-suffered-chest-pain#comments</comments><guid isPermaLink="false">54894c4b-a7e2-4c87-9c88-f79d027602db</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:34:10 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:34:10.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,RB Udhayakumar,ஆர்பி உதயகுமார்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/miir0drh/RBUdhayakumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆர்பி உதயகுமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்பி உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/miir0drh/RBUdhayakumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தற்போதைய சூழலில் என்னைப்போன்றவர்கள் சட்டமன்றத்துக்கு சென்றிருந்தால் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தி இருப்போம்.</strong></em> </p><p>தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ஆர்.பி.உதயகுமார்</a> விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-</p><h2><strong>ஒரு எம்.பி.கூட இல்லாத த.வெ.க. அரசு</strong></h2><p>தமிழகத்தில் இன்னும் ரீல்ஸ் ஆட்சி தான் நடக்கிறது. தமிழக முதல்வருக்கு மேகதாது அணை, காவிரி பிரச்சனை, முல்லைப்பெரியாறு குறித்து ஏதாவது தெரியுமா? இதுபோன்றவர்களைத்தான் தமிழக மக்கள், இளைஞர்கள் தேர்வு செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பி உள்ளனர்.</p><p>தேனி மாவட்டத்தில் மேகமலை புலிகள் சரணாலயத்தை காரணம் காட்டி வருசநாடு மற்றும் 60-க்கும் மேற்பட்ட கிராம மக்களை வெளியேற்றும் முயற்சி நடந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சருக்கு ஏதாவது தெரியுமா? தேனி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருக்காவது தெரியுமா? தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்து இங்குள்ள மக்களை காப்பாற்ற வேண்டும். தமிழகத்தில் ஒரு எம்.பி.கூட இல்லாத த.வெ.க. அரசு எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்துகிறது. </p><h2><strong>வேதனை</strong></h2><p>2029-ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அப்போது இந்த ஆட்சி நிச்சயம் இருக்காது. தற்போதைய சூழலில் என்னைப்போன்றவர்கள் சட்டமன்றத்துக்கு சென்றிருந்தால் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt">த.வெ.க.</a> எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தி இருப்போம். எதிர்கட்சியின் கேள்விகளுக்கு ஆளும் கட்சியினர் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் தற்போதயை அரசுக்கு அது புரியவில்லை. 75 சதவீத மக்கள் ஏன் இந்த அரசுக்கு வாக்களித்தோம் என்ற வேதனையில் உள்ளனர்.</p><p>அ.தி.மு.க.வில் ராஜாபோல் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் தரையில் அமர்ந்து போராடும் சாதாரண நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஒற்றுமையுடன் இயங்கி வருகிறது. வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>அமித் ஷா பதில் அளிக்கும்போது அச்சப்படவோ, அவையில் இருந்து வெளியேறவோ வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரஜிஜு வேண்டுகோள்</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-kiren-rijiju-amit-shah-gives-his-response-congress-party-and-the-opposition-not-to-be-afraid-or-run-away</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-kiren-rijiju-amit-shah-gives-his-response-congress-party-and-the-opposition-not-to-be-afraid-or-run-away#comments</comments><guid isPermaLink="false">fe6dfb46-368c-4724-99a4-12f5ae6317b1</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:18:44 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:18:44.545Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,Amit Shah,அமித் ஷா,Kiren Rijiju,கிரண் ரிஜிஜு,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6wlndx8l/Amitshah1008026.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா- கிரண் ரிஜிஜு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6wlndx8l/Amitshah1008026.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் முறைகேடு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/students-protest-victory-dharmendra-pradhan-resigns">தர்மேந்திர பிரதான்</a> தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்தனர்.</p><p>இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 20-ந்தேதி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் காவல்துறையின் தடுப்புகளை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றதால் மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார்- மாணவர்களுக்கு இடையிலான மோதல் காரணமாக தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர்.</p><p>மாணவர்களுக்கு எதிராக போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக இரு அவைகளிலும் குரல் எழுப்பினர்.</p><p>இந்த நிலையில்தான் கிரண் ரிஜிஜி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.</p><h2>இது தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறியதாவது:-</h2><p>காங்கிரஸ் கட்சியினருக்கும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினருக்கும் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். மத்திய உள்துறை அமைச்சர் தனது பதிலை நாடாளுமன்றத்தில் வழங்கும்போது, தயவுசெய்து அச்சப்பட வேண்டாம். அவையிலிருந்து வெளியேறவோ வேண்டாம் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.</p><h2>கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வது</h2><p>ஜனநாயகத்தின் அடிப்படை வலிமை என்பது கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதில்தான் உள்ளது. ஆளும் தரப்பு பேசும்போது எதிர்க்கட்சியும் அதைக் கேட்டு, அதில் உள்ள உண்மைகள் என்ன, தவறுகள் என்ன, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் என்ன என்பதை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால், அதற்குப் பின்னர் வலுவான கேள்விகளையும் ஆதாரங்களையும் முன்வைத்து அரசை பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும்.</p><p>நாடாளுமன்றம் என்பது வெறும் கோஷங்களை எழுப்புவதற்கான இடம் அல்ல. மக்களின் பிரச்சினைகளை விவாதித்து, அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய மிக முக்கியமான ஜனநாயக அமைப்பு. எனவே, உள்துறை அமைச்சர் அளிக்கும் பதிலை முழுமையாகக் கேட்பது எதிர்க்கட்சியின் ஜனநாயகப் பொறுப்பாகும்.</p><h2>விவாதத்தைத் தவிர்ப்பது மக்களுக்கு சரியான செய்தியை அளிக்காது</h2><p>கருத்து வேறுபாடு இருந்தால் அதைக் குரல் கொடுத்து வெளிப்படுத்துங்கள். தவறான தகவல் இருந்தால் உண்மையான தகவல்களுடன் மறுத்துப் பேசுங்கள். அரசின் பதில் போதுமானதாக இல்லை என்றால், அதற்கான விளக்கத்தை கேளுங்கள். ஆனால் விவாதத்தைத் தவிர்ப்பது மக்களுக்கு சரியான செய்தியை அளிக்காது.</p><p>எனவே, காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் தைரியமாக இருந்து, உள்துறை அமைச்சரின் பதிலை நேரில் எதிர்கொண்டு, ஜனநாயக ரீதியாக தங்களது கருத்துகளையும் கேள்விகளையும் வலுவாக முன்வைக்க வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்.</p>]]></content:encoded></item><item><title>போலந்து அகதிகளின் நினைவாக மகராஷ்டிராவில் அருங்காட்சியகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/museum-for-polish-refugees-in-maharashtra-meeting-with-chief-minister</link><comments>https://www.maalaimalar.com/news/national/museum-for-polish-refugees-in-maharashtra-meeting-with-chief-minister#comments</comments><guid isPermaLink="false">23d7f88c-0730-4d71-8f62-265526939eee</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:08:41 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:08:41.839Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போலந்து,Poland,Kolhapur,கோலாப்பூர்,valivade museum,வாலிவாடே அருங்காட்சியகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4muv5izf/Untitled-design-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோலாப்பூர் வாலிவாடேவில் போலந்து அகதிகள் புகலிடத்தை நினைவுகூரும் மனிதநேய அருங்காட்சியகம் அமைப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ India Poland வரலாற்று நட்பு அருங்காட்சியகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4muv5izf/Untitled-design-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாம் உலக போரின்போது போலந்து நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், புகலிடம் தேடி மகராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரிருக்கு வந்தனர். </p><p>அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட புகலிடத்தை நினைவுகூரும் வகையில், கோலாப்பூருக்கு அருகில் உள்ள வாலிவாடேவில் ஒரு அருங்காட்சியகம் அமைய உள்ளது.</p><p>இது இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பஞ்சகங்கா ஆற்றின் கரையில் அமைந்து, சஹ்யாத்ரி மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ள மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரம், போலந்து நாட்டுடன் மிகவும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. </p><h3><strong>இரண்டாம் உலகப் போர்</strong></h3><p>ஜெர்மானியப் படையெடுப்பு 1939 செப்டம்பர் 17 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுகளின் போது, 1939 முதல் 1945 வரை  இரண்டாம் உலக போர் நீடித்தது.</p><p>அதன் விளைவாக ஆயிரக்கணக்கான போலந்து மக்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். அப்போது முதன்முதலில் குஜராத்தில் சுமார் ஆயிரம் போலந்து நாட்டை சேர்ந்த அனாதை குழந்தைகளுக்கான குடியிறுப்பு ஒன்று நிறுவப்பட்டது.</p><p>பின்னர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 5,000 மக்களுக்காக, கோலாப்பூருக்கு அருகிலுள்ள வாலிவாடேவில் போலந்து குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டது.</p><h3><strong>மகாராஷ்டிராவில் அருங்காட்சியகம்</strong></h3><p>இந்த நிலையில் போலந்து நாட்டை சேர்ந்த அகதிகளுக்கு வழங்கப்பட்ட புகலிடத்தை நினைவுகூரும் வகையில், வாலிவாடே மனிதநேய அருங்காட்சியகம் கோலாப்பூரில் அமையவிருக்கிறது.</p><p>கடந்த வாரம், போலந்து நாடாளுமன்ற உறுப்பினரும் மற்ற பிரதிநிதிகளும், கோலாப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த யுவராஜ் சம்பாஜி மகாராஜாவுடன் இணைந்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்தனர்.</p><h3><strong>கோலாப்பூர் மகாராஜா யுவராஜ் சம்பாஜி</strong></h3><p>இதையடுத்து அரச குடும்பத்தை சேர்ந்த சம்பாஜி மகாராஜா கூறுகையில், “இந்த தனித்துவமான மனிதாபிமான பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் ஆதரவளித்து வரும் மகாராஷ்டிர அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.</p><p>போலந்து பிரதமரும் இந்த பகிரப்பட்ட வரலாற்றை மிகவும் உயர்வாக மதிப்பதோடு, தங்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பயணத்தில் இந்தியாவை ஒரு முக்கிய உத்திசார் நட்பு நாடாகவும் கருதுகின்றனர்.</p><p>மேலும் இந்த அருங்காட்சியகம் அமைதி, கருணை மற்றும் சர்வதேச நட்புறவை ஊக்குவிப்பதோடு, இந்த பகிரப்பட்ட பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்கவும் முயல்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் அர்ச்சனா கல்பாத்தி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/archana-kalpathi-on-the-temple-trustee-selection-committee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/archana-kalpathi-on-the-temple-trustee-selection-committee#comments</comments><guid isPermaLink="false">ba969419-b085-4a37-86c3-03d89746d858</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:06:03 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:06:03.229Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்து சமய அறநிலையத்துறை,Temple Trustee,Archana Kalpathi,HR&amp;CE,அர்ச்சனா கல்பாத்தி,கோயில் அறங்காவலர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/foynms2o/New-Project-2026-08-10T143457.808.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் அர்ச்சனா கல்பாத்தி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/foynms2o/New-Project-2026-08-10T143457.808.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான குழு உறுப்பினர்களில் ஒருவராக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மூலம் அமைக்கப்பட்டும் இந்தக் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார். மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் இக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.</p><p>இந்தத் தேர்வுக் குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ப.ரா. சம்பத், ஓய்வு பெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர் இராமநாதன் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>இந்தக் குழுவின் பணி</h2><p>கோயில்களின் நிர்வாகம், சொத்துக்களைப் பராமரித்தல் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பரம்பரை அல்லாத அறங்காவலர்களாக நியமிப்பதே இக்குழுவின் முதன்மைப் பணியாகும்.</p><h2>யார் இந்த அர்ச்சனா கல்பாத்தி?</h2><p>ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், 'பிகில்', 'கோட்' போன்ற நடிகர் விஜய்யின் பிரம்மாண்டத் திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். </p>]]></content:encoded></item><item><title>சொந்த மாவட்டத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை..!- சி.வி.சண்முகம் விளாசல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-influence-in-own-district-for-edappadi-palanisamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-influence-in-own-district-for-edappadi-palanisamy#comments</comments><guid isPermaLink="false">ac7f1c89-676a-48c6-b8be-277aac588fc5</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:42:50 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:42:50.240Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,CV Shanmugam,சிவி சண்முகம்,TN assembly,தமிழக சட்டமன்ற கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/y41210tv/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EPS- CV Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/y41210tv/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 பேர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் சிலர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். </p><h2>சி.வி.சண்முகம்</h2><p>இந்தநிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டி எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளே அ.தி.மு.க. தோல்விக்கு காரனம் என்று அவர்கள் கூறியிருந்தனர்.</p><p>அதற்கு பதிலளிக்கும் விதமாக அ.தி.மு.க. சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில்,"சில மாவட்ட செயலாளர்களே அ.தி.மு.க. தோல்விக்கு காரனம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். </p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>தொடர் தோல்வி</h2><p>எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளையே அ.தி.மு.க. சந்தித்துள்ளது. சென்னையில் அ.தி.மு.க. துடைத்து எறியப்பட்டுவிட்டது. </p><p>வலுவான தலைமை வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தோம். அவரது தலைமையில் அ.தி.மு.க.வால் வெற்றிபெற முடியவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் எதிலும் வெற்றிபெற முடியவில்லை. </p><p>பழனிசாமியின் சொந்த செல்வாக்கில்தான் 47 தொகுதிகளில் வென்றதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். 47 தொகுதிகள் வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமி காரணம் என்றால் 187 தொகுதிகளில் அவர் செல்லாக்காசாகி விட்டாரா?. </p><p>வெற்றிபெற்றால் அவர் செல்வாக்கு, தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பா? விழுப்புரத்தில் எனக்கு 6 தொகுதிகள் உள்ளன. அதில் 3 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. </p><h2>சொந்த மாவட்டத்தில்</h2><p>சொந்த மாவட்டமான சேலத்தில் 7 தொகுதியில் ஏன் அவருக்கு செல்வாக்கு இல்லை? சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 தொகுதிகளில் மட்டும்  அ.தி.மு.க. வென்றுள்ளது.  கூட்டணியில் பா.ம.க. இருந்ததால் வட மாவட்டங்களில் 34 தொகுதிகளில் அ.தி.மு.க. வென்றது. தேர்தல் தோல்விக்கான காரணத்தை என்னால் சொல்ல முடியும். </p><p>தேர்தல் தோல்விக்காக எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்யுமாறு நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று பல தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்கள். காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். </p><p>திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும் என்று மாற்று திட்டத்தை நான் கூறினேன். தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யும் த.வெ.க.வை ஏன் நாம் ஆதரிக்கக் கூடாது என்று பழனிசாமியிடம் கேட்டேன்.</p><h2> த.வெ.க.வை ஆதரிப்பதில் தவறு இல்லை</h2><p>தி.மு.க. ஆதரவில் பழனிசாமி முதலமைச்சராக முயன்றபோது, தி.மு.க.வை எதிர்க்கும் த.வெ.க.வை ஆதரிப்பதில் தவறு இல்லை.</p><p>தே.மு.தி.க.வை திட்டமிட்டு வெளியேற்றினார். தி.மு.க. வுடன் கூட்டணி பேசவில்லை என்று அவர் சத்தியம் செய்ய முடியுமா? </p><p>அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அவரே இருக்கட்டும். தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று கோருகிறோம். தோல்விக்கான காரணங்களை உண்மையாக ஆராயாமல் எங்கள் மீது பழிபோடுவதை நிறுத்துங்கள். தைரியம் இருந்தால் எங்களை அழைத்து பேசுங்கள். </p><p>ஜெயலலிதா அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி. அதிகாரி தற்கொலை செய்த விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா. </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் ஓராண்டில் ரூ.1,800 கோடி ஆன்லைன் மோசடி: ஈரோடு, கோவையில் பாதிப்பு அதிகம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-loses-rs1800-crore-to-online-scams-in-a-year-erode-coimbatore-most-affected</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-loses-rs1800-crore-to-online-scams-in-a-year-erode-coimbatore-most-affected#comments</comments><guid isPermaLink="false">995deadf-0f1f-4564-a838-09dc9e4f8aad</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:37:23 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:37:23.412Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,நிதி மோசடி,Cybercrime,Online Fraud,ஆன்லைன் மோசடி,Erode,cybersecurity,சைபர் குற்றங்கள்,SylendraBabu,சைலேந்திரபாபு,FakeFinance</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/456gtttv/Sylendra-Babu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sylendra Babu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/456gtttv/Sylendra-Babu?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/erode">ஈரோடு</a>, கோவை மாவட்டங்களை குறிவைத்து போலி நிதி நிறுவனங்களின் மோசடி மீண்டும் தலைதூக்கியுள்ளது. சைபர் குற்றங்கள் மூலம் ஒரே ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ.1,800 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">ஆன்லைன் மோசடி</a> முதல் போதைப்பொருள் வரை சமூகத்தில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு முன்னாள் டி.ஜி.பி. <a href="https://www.maalaimalar.com/topic/sylendra-babu">சைலேந்திரபாபு </a>பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>அப்போது அவர் கூறியதாவது:-</h2><p>பொய்யான நிதி நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டி .ஜி. பி.ஆக இருக்கும் பொழுது 5 நிதி நிறுவனங்களை மூடினோம். </p><p>ஆனால் தமிழகத்தில் துரதிஷ்டவசமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிறுவனங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ஈரோடு, கோவை, சேலம் மக்கள்தான் அதிகம் ஏமாற்றப்படுகின்றார்கள்.</p><h2><strong>நிதி நிறுவனம்:</strong></h2><p>ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ரூ.3 லட்சம், ரூ 4 லட்சம் கிடைக்கும் என்றெல்லாம் கூறி ரூ.10 லட்சம், ஒரு கோடி, இரண்டு கோடி என முதலீடு பெற்று ஏமாற்றுகின்றனர். </p><p>கணவனுக்கு தெரியாமல் மனைவியும் மனைவிக்கு தெரியாமல் கணவனும் முதலீடு செய்வார்கள். ஆரம்பத்தில் பணத்தை கொடுக்கும் நிதி நிறுவனம் அதிக பணம் கிடைத்ததும் ஏமாற்றி விடுவார்கள்.</p><p>இத்தகைய பெரும் மோசடியில் மக்கள் ஏமாற கூடாது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.</p><h2><strong>ரூ.1800 கோடி மோசடி:</strong></h2><p>சைபர் மோசடியில் ஓராண்டில் தமிழ்நாட்டில் 1800 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது மற்ற திருட்டு வழக்குகளில் மொத்தமாக கூட்டினால் 100 கோடி கூட தாண்டாது. </p><p>ஆனால் மொபைல் போன் மூலமாக மட்டும் ஆண்டிற்கு 1800 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதற்காகத்தான் சைபர் செக்யூரிட்டி ஹெட் குவாட்டர்ஸ் துவங்கப்பட்டது. </p><p>லட்சக்கணக்கான மக்கள் ஏமாற்ற தயாராக இருக்கிறார்கள் வட இந்தியாவில் இதற்காக ஐ.டி கம்பெனி போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எளிதில் ஏமாறக்கூடாது.</p><h2><strong>காவல் மரணம்:</strong></h2><p>காவல் மரணம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே இருக்கிறது. இதில் பெரும்பளவு கட்டுப்படுத்தப்ப ட்டது ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிகழ்வுகள் நடந்து வருகிறது. </p><p>இந்த நிகழ்வுகள் காவலர்கள் தாக்கி தான் இறந்தார்களா இயற்கையில் இறந்தார்களா என்பதெல்லா ம் தெரியாது. திருட்டு போன்ற குற்றங்களில் காவல்துறையினருக்கு பாதிக்கப்பட்டவர்கள் அழுத்தம் தருவார்கள் அதை தாங்காமல் காவலர்கள் பலம் பிரயோகிக்கலாம்</p><p>ஆனால் அது பெரும்பாலும் குறைவு காவல் நிலையத்தில் இறந்தால் அவர்கள் குடும்பமும் கஷ்டப்படுகிறது. அதில் காவலர்களும் பாதிக்கப்படுகிறார்கள் அவர்களும் கைது செய்யப்படுகிறார்கள் அவர்கள் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. </p><p>அனைத்து காவல் நிலையங்களிலும் கேமரா இருக்கிறது 1680 காவல் நிலையங்களிலும் கேமரா இருக்கிறது துன்புறுத்தல் குறைந்து விட்டது .</p><p>இது இல்லாமல் ஆக வேண்டும் நாகரீகமான சமூகமாக இருக்க வேண்டும். காவலர்கள் மீது பொது மக்களுக்கும் நம்பிக்கை வருவதில்லை பாதிக்கப்பட்டார்கள் கொடுக்கும் அழுத்தம் தான் இதற்கு காரணம்.</p><h2>போதை பொருள்:</h2><p>போதை பொருள் புழக்கம் தொடர் நிகழ்வாக உள்ளது 45 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற போதை பொருட்கள் இருந்தன.</p><p>பெரும் அளவில் காவல்துறை கட்டுப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது நான் டிஜிபி ஆக இருக்கும் போது சொத்துக்களை பறிமுதல் செய்தோம் நல்ல அதிகாரிகள் வந்துள்ளார்கள் சில மாற்றங்கள் இருக்கின்றன.</p><p>ஆனால் நூறு சதவீதம் ஒழிக்க வேண்டும். சட்டம் கடுமையாகத் தான் இருக்கிறது இதற்கு பலமுனை தாக்குதல் நடத்த வேண்டும் பள்ளிகள் கல்லூரிகள் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் இது போன்ற நபர்களை கண்டறிந்து தடுக்க வேண்டும் மனநல நிபுணர்களை நியமிக்க வேண்டும். </p><p>தொடர்ச்சியாக போதை பொருள் பயன்படுத்துவார்கள் மனநல பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் டி அடிக்சன் மையங்களை பெருமளவில் கொண்டு வர வேண்டும் இதற்கு அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டும். </p><p>இது மிகப்பெரிய போர் சமுதாயத்தில் டிமாண்ட் இருக்கும்போது சப்ளை எப்படியும் வந்து விடும் இதற்கு பலமுனை தாக்குதல் நடத்த வேண்டும் அப்பொழுதுதான் போதை பொருளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு:  கொள்முதல் விலையை உயர்த்தாமல் கோடை வெயிலை குறை கூறுவதா?- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-blaming-the-summer-heat-instead-of-raising-the-procurement-price-for-aavin-milk-shortage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-blaming-the-summer-heat-instead-of-raising-the-procurement-price-for-aavin-milk-shortage#comments</comments><guid isPermaLink="false">fd9652dc-f4a8-4e82-885f-c69b999fc9e1</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:33:20 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:33:20.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,aavin milk,ஆவின் பால்,கோடை வெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tsfso6ot/aavinm.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆவின் பால்- அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆவின் பால்- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tsfso6ot/aavinm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலுக்கு கடந்த சில நாள்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏழைகள் மற்றும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஆவின் பால் அனைத்து மக்களுக்கும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தவறியிருப்பது கவலையளிக்கிறது.</p><p>ஆவின் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் தினமும் 16 லட்சம் லிட்டருக்கும் கூடுதலாக ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே ஆவின் பால் விற்பனை படிப்படியாக குறைந்து விட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் ஆவின் பால் விற்பனை மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டு விட்டதாகவும், சென்னையில் 20% அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2><strong>தரமான பால்</strong></h2><p>ஆவின் பால் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் இரு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் தான் ஒப்பீட்டளவில் தூய்மையானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆவின் பாலை வழங்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் தரமான பாலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>இரண்டாவதாக, ஆவின் பால் விலை தட்டுப்பாட்டால் தனியார் நிறுவன பால்களை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டியுள்ளது. ஆவின் பாலுடன் ஒப்பிடும் போது தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.16 முதல் 24 வரை அதிகம் ஆகும். ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஏழைகள் மாதத்திற்கு குறைந்தது ரூ.750 வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டும். இது அவர்களுக்கு பெரும் சுமை.</p><h2><strong>கொள்முதலை அதிகரிக்க முடியாது</strong></h2><p>ஆவின் பாலுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் கவலையும், கோபமும் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆவின் நிறுவனம் எந்தக் கவலையும் பட்டதாக தெரியவில்லை. கொடைக்காலம் என்பதால் பால் உற்பத்தி குறைந்திருப்பது தான் இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறி இந்த விவகாரத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல ஆவின் நிறுவனம் முயல்கிறது. இது உண்மையல்ல.</p><p>கடந்த ஐந்தாண்டுகளாகவே ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டில்  ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும் 41 லட்சம் லிட்டராக இருந்தது.  2022-ஆம் ஆண்டில்  38 லட்சம் லிட்டர்,  2023-ஆம் ஆண்டில் 30 லட்சம் லிட்டர் என குறைந்த ஆவின் பால் கொள்முதல், இப்போது 28 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. அதாவது மூன்றில் இரு பங்காகி விட்டது.</p><p>ஆவின் பால்கொள்முதல் 13 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதற்கு காரணம் அதன் கொள்முதல் விலைகள் உயர்த்தப்படாதது தான். பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு  லிட்டர் ஒன்றுக்கு ரூ.44  என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அதை விட லிட்டருக்கு 12 வரை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றன. அதற்கு இணையாக ஆவின்  நிறுவனமும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதன் கொள்முதலை அதிகரிக்க முடியாது.</p><p>ஆனால், ஆவின் நிறுவனமும், அரசும் இதை உணரவில்லை.  ஆவின் பால் கொள்முதல் குறையவில்லை  என்றும், கோடை வெப்பத்தால் குறைந்த அளவு மட்டும் தான் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் காரணம் கூறி வருகிறது. இந்த மாயையில் இருந்து தமிழக அரசு மீள வேண்டும். ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கான உண்மையான காரணத்தை அறிந்து கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும்.</p><p>ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் தீவிரம்: மகன் ஹண்டர் பைடன் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/former-us-president-joe-bidens-cancer-worsens-son-hunter-biden-reveals</link><comments>https://www.maalaimalar.com/news/world/former-us-president-joe-bidens-cancer-worsens-son-hunter-biden-reveals#comments</comments><guid isPermaLink="false">5d1878f6-81ee-4f1b-8a10-b4a88abb2951</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:28:00 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:28:00.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Joe Biden,ஜோ  பைடன்,ஹண்டர் பைடன்,Hunter Biden,prostate cancer,புரோஸ்டேட் புற்றுநோய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/94zrvo35/Joe-Biden.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Joe Biden  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/94zrvo35/Joe-Biden.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (83) பரவி வரும் புரோஸ்டேட் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்து, அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கும் பரவியுள்ளதாக அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவித்துள்ளார்.</p><p> 2025 மே மாதம் ஜோ பைடனுக்கு கடுமையான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இந்நோய் எலும்புகளுக்குப் பரவியுள்ளதால், அவர் கடுமையான வலியினாலும் உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வருவதாக ஹண்டர் பைடன் கூறியுள்ளார். பைடனின் புற்றுநோய் திசு பரிசோதனையில் கிளீசன் ஸ்கோர் 9 எனப் பதிவாகியுள்ளது. இது புற்றுநோயின் மிகத் தீவிரமான நிலையைக் (Grade Group 5) குறிக்கிறது.</p><p>கதிர்வீச்சு மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், புற்றுநோய் செல்கள் எலும்புகளுக்கு அப்பாலும் பரவி, அவரது உடலை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன. இதுகுறித்து அவரது மகன்  ஹண்டர் பைடன் கூறுகையில், "என் தந்தை கடுமையான வலியால் அவதிப்படுவதைப் பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இருப்பினும், அவர் தனது மன உறுதியுடன் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>எலும்<strong>பு முடக்கம் என்றால்</strong> என்ன?</h2><p>புரோஸ்டேட் பகுதியில் உருவாகும் புற்றுநோய் செல்கள், ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலம் வழியாக உடலின் பிற பகுதிகளுக்குப் பரவுவது 'மெட்டாஸ்டாசிஸ்' எனப்படும். புரோஸ்டேட் புற்றுநோய் முதன்முதலில் எலும்புகளிலேயே (குறிப்பாக முதுகெலும்பு, இடுப்பு மற்றும் தொடை எலும்புகள்) அதிகம் பரவுகிறது. புற்றுநோய் செல்கள் எலும்புகளை அடைந்து அதன் வலிமையை இழக்கச் செய்வதால், கடுமையான வலி, எலும்பு முறிவு மற்றும் நடப்பதில் சிரமம் போன்றவை ஏற்படுகின்றன.</p><h2>அ<strong>றிகுறிகள்</strong> </h2><p>* ஆரம்ப கட்டத்தில் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு பெரிய அறிகுறிகள் இருக்காது.</p><p>* நோய் தீவிரமடைம்போது சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் வருதல் மற்றும் இடுப்புப் பகுதியில் வலி போன்றவை ஏற்படும்.</p><h2>சிகிச்<strong>சை முறை</strong>கள் </h2><p>புற்றுநோய் எலும்புகளுக்குப் பரவிய பின், அதை முற்றிலுமாக குணப்படுத்துவதை விட நோயின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதும் வலியைக் குறைப்பதுமே முதன்மை சிகிச்சையாக இருக்கும். புற்றுநோய் செல்கள் வளர்வதற்குக் காரணமான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனைத் தடுக்கும் சிகிச்சை. </p><p>கதிர்வீச்சு சிகிச்சை என்பது எலும்புகளில் ஏற்படும் வலியைக் குறைக்கவும், புற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் வழங்கப்படுகிறது. பிஸ்ஃபோஸ்ஃபோனேட்ஸ் போன்ற மருந்துகள் மூலம் எலும்பு முறிவுகள் தடுக்கப்படுகின்றன.வயது முதிர்வு மற்றும் நோயின் தீவிரம் காரணமாகவும், ஜோ பைடன் தகுந்த மருத்துவக் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>சவுதி அரேபியா: சோபா தொழிற்சாலையில் தீ விபத்து - 16 வங்கதேச தொழிலாளர்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/riyadh-sofa-factory-fire-16-bangladeshi-workers-killed-in-saudi-industrial-blaze</link><comments>https://www.maalaimalar.com/news/world/riyadh-sofa-factory-fire-16-bangladeshi-workers-killed-in-saudi-industrial-blaze#comments</comments><guid isPermaLink="false">d274ec8d-6e7f-4bd8-93b6-d1b8c67a7d8d</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:17:01 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:17:01.733Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,fire accident,வங்கதேசம்,Saudi Arabia,தொழிலாளர்கள்,சவுதி அரேபியா,Workers,தீவிபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/78q9vudo/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/78q9vudo/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியில் உள்ள மூஸா சனய்யா என்ற இடத்தில் இயங்கி வந்த சோபா தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர <a href="https://www.maalaimalar.com/news/world/houthi-group-attacks-saudi-arabia-israeli-media-report">தீவிபத்தில் </a>16 வங்கதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.  </p><h2>விபத்து </h2><p>ரியாத் அருகில் உள்ள சோபா தொழிற்சாலையில் நேற்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் திடீரென தீப்பற்றியது.</p><p>தீ மிக வேகமாக தொழிற்சாலை முழுவதும் பரவியதால், அங்கிருந்த தொழிலாளர்களால் தப்பிக்க முடியாமல் போயுள்ளது.  </p><p> விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். </p> <h2>வங்கதேசத்தினர்</h2><p>அங்கு பணியாற்றிய 16 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>ரியாத்தில் உள்ள வங்கதேசத் தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டு விவரங்களைச் சேகரித்தனர்.</p><p>உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணவும், சட்டப்பூர்வ நடைமுறைகளை முடித்து உடல்களைத் தாயகம் கொண்டு வரவும் சவுதி அதிகாரிகளுடன் தூதரகம் இணைந்து செயல்பட்டு வருகிறது. </p><p>இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள வங்கதேச வெளியுறவு அமைச்சகம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>