<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 17 Aug 2026 03:47:40 +0000</lastBuildDate><item><title>வீடியோ: &apos;100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி&apos; - முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-video-released-100-day-administration-represents-peoples-conscience-for-an-era</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-video-released-100-day-administration-represents-peoples-conscience-for-an-era#comments</comments><guid isPermaLink="false">69e176cd-5925-4f8b-9e79-c06c17cadbc9</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:07:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:07:37.552Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழ்நாடு அரசு,TN Government,tvk,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1a7sb81x/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1a7sb81x/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில் 'ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என பதிவிட்டு முதலமைச்சர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.</strong></em></p> <p>தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தவெக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026">விஜய்</a> மே 10-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.</p> <p>தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கல், பெண்களின் பாதுகாப்பிற்கான சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பான முக்கிய 3 முக்கிய திட்டங்களை அமல்படுத்தும் கோப்புகளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> கையெழுத்திட்டார்.</p><p>இந்நிலையில், தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் பதிவில்,  'ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் செய்யப்பட்ட திட்டங்களின் பட்டியலை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.</p> <p>அதில், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">100 நாள் ஆட்சி <br>ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி<br><br>100 Days of Governance <br>A Government for Generations<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://t.co/so1MP9Mw96">pic.twitter.com/so1MP9Mw96</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2089163922746323414?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">b29a5a86-04b9-406d-90bf-e07e0e78acd4</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:42:48 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:42:48.107Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,thirumavalavan,திருமாவளவன்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/xapu501c/mkstalin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்- முக ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்- முக ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/xapu501c/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொல். திருமாவளவனுக்கு முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-thirumavalavan">தொல். திருமாவளவன்</a> இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், <a href="https://www.maalaimalar.com/topic/திருமாவளவன்">தொல். திருமாவளவனுக்கு</a> முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.</p><p>தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து  ஈடுபட விழைகிறேன் என கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் <a href="https://x.com/thirumaofficial?ref_src=twsrc%5Etfw">@ThirumaOfficial</a> அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.<br><br>தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து  ஈடுபட விழைகிறேன்.</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2089191915321508214?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பி.எஸ்.என்.எல். 5ஜி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/bsnl-5g-launch-timeline-new-update</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/bsnl-5g-launch-timeline-new-update#comments</comments><guid isPermaLink="false">1e006386-e63e-4788-bd61-b88beaf47d5a</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிஎஸ்என்எல்,BSNL,5G,5ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/0d9ittzq/BSNL-5G.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BSNL 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/0d9ittzq/BSNL-5G.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான <a href="https://www.maalaimalar.com/topic/bsnl">பி.எஸ்.என்.எல்.</a> (BSNL), இந்த ஆண்டு 5ஜி மொபைல் சேவைகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது; இதற்கான காலக்கெடுவாக டிசம்பர் மாதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>பி.எஸ்.என்.எல்.-இன் கேரள பிரிவு தலைமை பொது மேலாளர் (CGM) சாஜி குமார் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, நிறுவனத்தின் தற்போதைய 4ஜி கட்டமைப்பு ஏற்கனவே "5ஜி-க்கு தயாராக" (5G-ready) இருப்பதால், அடுத்த தலைமுறை சேவைக்கு எளிதாக மாற முடியும் என்று தெரிவித்தார்.</p><h2>மென்பொருள் அப்டேட்:</h2><p>"5ஜி-க்கு மாறுவதற்கு மென்பொருள் மேம்படுத்தல்கள் மட்டுமே தேவைப்படும். உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட எங்கள் 5ஜி நெட்வொர்க்கின் சோதனையை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். இருப்பினும், அடுத்த தலைமுறைக்கு மேம்படுத்துவதற்கு முன், எங்களின் தற்போதைய 4ஜி நெட்வொர்க் முதலில் நிலைபெற வேண்டும்.</p><p>5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடுவாக டிசம்பர் 2026 எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது," என்று பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சாஜி குமார் கூறினார்.</p><h2>புதிய மொபைல் டவர்கள்:</h2><p>86 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை கொண்ட பி.எஸ்.என்.எல்.-இன் கேரளப் பிரிவில், 5ஜி-க்கு எளிதாக மேம்படுத்தக்கூடிய சுமார் 7,200 4ஜி மொபைல் டவர்கள் உள்ளன என்று சாஜி குமார் மேலும் தெரிவித்தார். 4ஜி கட்டமைப்பை வலுப்படுத்த நாடு முழுவதும் நிறுவப்பட்டு வரும் 26,300 புதிய மொபைல் டவர்களாலும் மாநிலம் பயனடையும்.</p><p>மாநிலத்தின் தொலைதூர பகுதிகளில் சேவை வரம்பை மேம்படுத்த, போதிய சேவை இல்லாத இடங்களில் 323 டவர்களையும், லட்சத்தீவில் மேலும் 37 டவர்களையு பி.எஸ்.என்.எல். நிறுவ உள்ளது. </p><p>மாநிலத்தில் தனது IMS (IP Multimedia Subsystem) திறனை பி.எஸ்.என்.எல். மேம்படுத்தியுள்ளதாகவும், இது குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரையிலான அதிகப்படியான பயன்பாட்டு சுமையைக் கையாள உதவும் என்றும் தலைமைப் பொது மேலாளர் தெரிவித்தார்.</p><h2>அறிவிக்கப்பட்ட திட்டங்கள்:</h2><p>முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்காக பல கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்தது. இவற்றில் 'Re. 1 Freedom 2.0' திட்டம், மாதத்திற்கு ரூ. 1,111 என்ற அறிமுகச் சலுகையுடன் கூடிய 'Fibre Freedom Plan', மற்றும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் வேலிடிட்டி ஆகியவை அடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>தனியாக வசிக்கும் பெண்கள் தான் குறி.. மைனர் மகனுடன் சேர்ந்து கொலைகளை அரங்கேற்றிய சீரியல் கில்லர் தாய்</title><link>https://www.maalaimalar.com/news/national/telangana-mother-son-duo-targeted-lone-women-for-serial-murder-and-robbery-in-siddipet</link><comments>https://www.maalaimalar.com/news/national/telangana-mother-son-duo-targeted-lone-women-for-serial-murder-and-robbery-in-siddipet#comments</comments><guid isPermaLink="false">8fc47dfb-b03b-42ac-bfba-318274a2a68f</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:03:55 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:03:55.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Murder,கொலை,Telangana,கொள்ளை,robbery,தெலுங்கானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/hiidix93/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/hiidix93/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானாவின் சித்திபேட் பகுதியில் தாயும் மைனர் மகனும் சேர்ந்து தனியே வாழும் பெண்களை குறிவைத்து தொடர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-three-people-including-plus-two-student-brutally-killed-two-arrested">கொலை</a>, கொள்ளையில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p><h2>சடலம்</h2><p>துப்பாக் மண்டலத்தில் உள்ள ராமக்கபேட் கிராமத்திற்கு வெளியே ஒரு விவசாய நிலத்தில், பூபள்ளியைச் சேர்ந்த விஜயா என்பவரின் பாதி எரிந்த சடலத்தை ஆகஸ்ட் 8 ஆம் தேதி காவல்துறையினர் மீட்டனர்.</p><p>சித்திபேட் காவல்துறை ஆணையர் ரேஷ்மி பெருமாள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் விபரங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.</p><p>சம்பவம் நடந்த அன்று மாலை பூபள்ளியை சேர்ந்த சக்கலி ரஜிதா (38) என்பவரது மாளிகைக் கடைக்குள் விஜயா செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. மேலும் அவர்கள் விஜயாவின் உடலுடன் பைக்கில் செல்லும் காட்சிகளும் கிடைத்தன.</p><p>இதன் அடிப்படையில் ரஜிதாவையும் அவரது மைனர் மகனையும் விசாரித்ததில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.</p>  <h2>கொலைகள்  </h2><p>தனியாக வாழ்ந்து வந்த விஜயாவை ரஜிதா மற்றும் அவரது மைனர் மகன் தங்கள் மளிகைக் கடைக்கு வந்தபோது மூச்சுத் திணறச் செய்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">கொன்று</a>, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். </p><p>பின்னர் சடலத்தைப் பைக்கில் ஏற்றிச் சென்று ராமக்கபேட் பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.</p><p>விசாரணை செய்ததில், அவர்கள் முன்னதாக செய்த மற்ற குற்றங்களும் அம்பலமாயின. </p><p>மே 28 அன்று, பூபள்ளி குவாட்டர்ஸில் தனியே வசித்து வந்த குந்தா ரேகா என்ற பெண்ணைக் கொலை செய்து, அவரது சடலத்தை அச்சமய்யப்பள்ளி வனப்பகுதிக்குக் கொண்டு சென்று எரித்துள்ளனர்.</p><p>2025  ஜூன் மாதம், காலை நடைப்பயிற்சி சென்ற பூபள்ளியைச் சேர்ந்த அன்னபூர்ணா என்பவரைதாக்கி, அவரது தங்க தாலியை பறித்துச் சென்றுள்ளனர். </p> <h2>இலக்கு</h2><p>ரஜிதா டீக் கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அங்கு வரும் வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலை மற்றும் குடும்பப் பின்னணியைக் கூர்ந்து கவனித்துள்ளனர்.</p><p>முக்கியமாக தனிமையில் வாழ்பவர்கள் அல்லது குடும்பப் பிரச்சனை உள்ள பெண்களையே இலக்காகக் கொண்டுள்ளனர்.</p><p>இவர்களைக் கொன்றால் சந்தேகம் மற்றவர்கள் மீது திரும்பும் எனக் கணக்கிட்டுச் செயல்பட்டுள்ளனர்.</p><p>ரஜிதாவின் கணவர் உட்பட மேலும் 4 பேரைக் கொலை செய்ய இவர்கள் திட்டமிட்டிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p> <h2>கைது</h2><p>குற்றவாளிகளிடமிருந்து தங்க, வெள்ளி நகைகள், ரூ.1.03 லட்சம் ரொக்கம், மொபைல் போன்கள், சடலத்தை கடத்தப் பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>தற்போது ரஜிதா நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மைனர் மகன்அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருமாவளவனுக்கு இன்று பிறந்தநாள்... பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்: முதலமைச்சர் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">8b1cccab-04d1-4cd1-b543-04319f71196f</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:59:48 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:59:48.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,thirumavalavan,திருமாவளவன்,vijay,Viduthalai chiruthaigal katchi,விடுதலை சிறுத்தைகள் கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/b10ojuyj/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தொல். திருமாவளவன்- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ தொல். திருமாவளவன்- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/b10ojuyj/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.</strong></em> </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான <a href="https://www.maalaimalar.com/topic/திருமாவளவன்">தொல். திருமாவளவன்</a> இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், தொல். திருமாவளவனுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!</p><p>சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.</p><p>தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்! என கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!<br><br>சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும்… <a href="https://t.co/QyRCaq68lA">pic.twitter.com/QyRCaq68lA</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2089178494555377852?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 17 ஆகஸ்ட் 2026: சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-17-august-2026-sivan-temple-somavara-abhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-17-august-2026-sivan-temple-somavara-abhishekam#comments</comments><guid isPermaLink="false">7da18ce6-df53-4ade-93fd-8b48ea6da593</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:26:54 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:26:54.842Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/02/25766063-sivan9.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/02/25766063-sivan9.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-32 (திங்கள்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  பஞ்சமி இரவு 8.26 மணி வரை பிறகு சஷ்டி</p><p>நட்சத்திரம் :  அஸ்தம் காலை 7.43 வரை பிறகு சித்திரை</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவாரம்பம்</h2><p>விருதுநகர் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் உற்சவாரம்பம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவாரம்பம். மதுரை ஸ்ரீ சோம சுந்தரப் பெருமான் நாரைக்கு முக்தியருளிய காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. </p> <p>நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - நன்மை</p><p>ரிஷபம் - ஓய்வு</p><p>மிதுனம் - சாந்தம்</p><p>கடகம் - பாராட்டு</p><p>சிம்மம் - நலம்</p><p>கன்னி - இன்பம்</p> <p>துலாம் - அன்பு</p><p>விருச்சிகம் - பக்தி</p><p>தனுசு - லாபம்</p><p>மகரம் - ஆக்கம்</p><p>கும்பம் - தனம்</p><p>மீனம் - உற்சாகம்</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு முயற்சியில் வெற்றி கிடைக்கும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-17-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-17-august-2026#comments</comments><guid isPermaLink="false">85c72d94-4cc8-4c61-bd8a-d1db64fb3c6f</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:16:42 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:16:42.522Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/27/25436530-rasipalan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/27/25436530-rasipalan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>வரவு திருப்தி தரும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.</p><h2>ரிஷபம்</h2><p>முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.</p> <h2>மிதுனம்</h2><p>உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் நாள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.</p><h2>கடகம்</h2><p>புதிய பாதை புலப்படும் நாள். கொள்கைப்பிடிப்பை தளர்த்திக்கொள்ள நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் நன்மை உண்டு.</p> <h2>சிம்மம்</h2><p>நண்பர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். மதிய நேரத்திற்கு மேல் மறக்க முடியாத சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.</p><h2>கன்னி</h2><p>நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். குடும்பத்தில் செல்வாக்கு மேலோங்கும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும்.</p> <h2>துலாம்</h2><p>வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடும்.</p><h2>விருச்சிகம்</h2><p>வளர்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.</p> <h2>தனுசு</h2><p>முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்ள நேரிடும்.</p><h2>மகரம்</h2><p>நிழல்போலத் தொடர்ந்த கடன் சுமை குறையும் நாள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு உண்டு.</p> <h2>கும்பம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மருத்துவச்செலவு உண்டு. உத்தியோகத்தில் பிறருக்கு பொறுப்புச் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.</p><h2>மீனம்</h2><p>யோகமான நாள். பழைய கடன்களை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். உறவினர்களால் உதவி உண்டு.</p> ]]></content:encoded></item><item><title>யுஜிசி நெட் தேர்வில் குளறுபடிகள்.. 3 பாடங்களுக்கு மறுதேர்வு அறிவித்த தேசியத் தேர்வு முகமை!</title><link>https://www.maalaimalar.com/news/national/ugc-net-retest-english-commerce-and-sociology-exams-to-be-reconducted-after-question-paper-errors</link><comments>https://www.maalaimalar.com/news/national/ugc-net-retest-english-commerce-and-sociology-exams-to-be-reconducted-after-question-paper-errors#comments</comments><guid isPermaLink="false">32acb490-28e1-4122-8d43-de847d47cee6</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:15:19 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:15:19.442Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>என்டிஏ,NTA,Re-examination,ugc net,யுஜிசி நெட்,மறுதேர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/s4de3qog/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ யுஜிசி நெட் தேர்வில் குளறுபடிகள்
]]></media:title><media:description type="html"><![CDATA[ யுஜிசி நெட் தேர்வில் குளறுபடிகள்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/s4de3qog/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை ஜூன் மாதத்ம் நடத்திய யுஜிசி நெட் (UGC NET) தேர்வில்  நடந்த குளறுபடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>ஆங்கிலம், வணிகவியல், மற்றும் சமூகவியல்  வினாத்தாள்களில்  தவறுகள் கண்டறியப்பட்டதை அடுத்து அந்த மூன்று பாடங்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.</p> <h2>தவறுகள்</h2><p>நிபுணர் குழு நடத்திய ஆய்வில் வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p>வழங்கப்பட்ட தகவல்களில் தவறுகள் மற்றும் அச்சடிப்புப் பிழைகள், மொழிபெயர்ப்பு தவறுகள் மற்றும் இலக்கணப் பிழைகள் இருந்துள்ளன. முக்கிய அறிஞர்களின் பெயர்கள் மற்றும் புத்தகங்களின் பெயர்கள் விடுபட்டிருந்தது.</p><p>கேள்விகளின் வாக்கிய அமைப்பில் தவறுகள் மற்றும் எண்களில் குளறுபடி, தெளிவில்லாத விடைகள் மற்றும் ஒரே கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.</p><p>இத்தனை தவறுகள் இருப்பதால், சில கேள்விகளை மட்டும் நீக்கிவிட்டு மதிப்பெண் வழங்குவது சாத்தியமில்லை என்பதால் மறுதேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.</p> <h2>அட்டவணை</h2><p>செப்டம்பர் 9 அன்று காலை ஆங்கிலம், மதியம் வணிகவியல், செப்டம்பர் 10 காலை சமூகவியல் மறுதேர்வு நடைபெறும் என என்டிஏ அறிவித்துள்ளது.</p><p>காலை தேர்வு 9:00 - 12:00 மணி வரையும் மதியம் 3:00 - 6:00 மணி வரையும் தேர்வு நடைபெறும் மறுதேர்வு</p><p>மறுதேர்வை எழுதும் மாணவர்களிடம் இருந்து எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.</p> <h2>விடைக்குறிப்பு</h2><p>மறுதேர்வு அறிவிக்கப்பட்ட மூன்று பாடங்களை தவிர்த்து மீதமுள்ள 84 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது.</p><p>மாணவர்கள் விடைக்குறிப்பு தொடர்பான தங்களின் ஆட்சேபனைகளை ஆகஸ்ட் 18 அன்று இரவு 11:59 மணி வரை பதிவு செய்யலாம். ஒரு கேள்விக்கு ஆட்சேபனை தெரிவிக்க ரூ.200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p> <h2>யுஜிசி நெட்</h2><p>இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் இளநிலை ஆய்வு உதவித்தொகை (JRF) பெறுவதற்கான தகுதியை நிர்ணயிக்கவும், Phd சேர்க்கைக்கான தகுதியை உறுதிப்படுத்தவும் யுஜிசி நெட் தேர்வு ஆண்டுதோறும் இருமுறை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் 
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-petrol-and-diesel-prices-crude-oil</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-petrol-and-diesel-prices-crude-oil#comments</comments><guid isPermaLink="false">d328df98-8075-4323-b626-27ba218bd151</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:41:47 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:41:47.133Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fagicsjh/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fagicsjh/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/kill-a-us-soldier-get-30000-iran-announces-bounty-double-pay-for-women">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (17.08.2026 - திங்கள்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் <a href="https://www.maalaimalar.com/news/topnews/indias-russian-crude-oil-imports-hit-record-50-8-percent-in-july">கச்சா எண்ணெய்</a> பேரல் ஒன்றுக்கு 88.52 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>வெற்றி ஸ்டிக்கரில் வெற்று விளம்பரம்.. பட்டாசு தொழிலை மொத்தமாக முடக்கும் தவெக அரசு - தங்கம் தென்னரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-fireworks-protest-dmk-condemns-tveka-government-inspections-crippling-licensed-factories</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-fireworks-protest-dmk-condemns-tveka-government-inspections-crippling-licensed-factories#comments</comments><guid isPermaLink="false">a1b725af-4149-4816-8c25-581669cc1eb2</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:04:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:04:37.671Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,சிவகாசி,Sivakasi,Thangam Thennarasu,firecracker industry,பட்டாசு தொழில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fpuwtty0/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தங்கம் தென்னரசு ]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் தென்னரசு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fpuwtty0/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டாசுத் தொழிலை முடக்கும் வகையில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்டித்து விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fireworks-factory-accident-near-sivakasi-3-killed">சிவகாசியில் </a>கண்டனப் போராட்டம் நடைபெற்றது.</p><p>இந்த போராட்டத்தில் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தங்கம் தென்னரசு </a>கலந்து கொண்டார்.</p> <h2>தங்கம் தென்னரசு</h2><p>இதில் பேசிய அவர்,</p><p>"ஒரு அரசு தனது மக்களைக் காப்பதில் எந்த அளவிற்கு முன்முயற்சியுடன் செயல்பட வேண்டுமோ, அதேபோல் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கும் தொழிலையும் பாதுகாக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.</p><p>இந்த வட்டாரத்தில் 6,000க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ள நிலையில், இதன்மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.</p><p>ஆனால், த.வெ.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் பட்டாசுத் தொழிலை நசுக்கும் வகையிலான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது.</p><p>கடந்த மூன்று மாதங்களில் இந்த தொழிலை நசுக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p> <h2>ஆய்வு</h2><p>அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் விபத்துகளைக் காரணம் காட்டி ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலையும் ஒரேடியாக முடக்கி நசுக்குவது எந்த வகையில் நியாயமாகும்.</p><p>ஏனெனில், ஒரு தொழிற்சாலை மூடப்பட்டால் அது அந்த நிர்வாகத்தோடு முடிந்துவிடாது. அந்தத் தொழிற்சாலையை நம்பியுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலை என்னவாகும் என்பதை அதிகாரிகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.</p> <p>முறையாக விதிகளைப் பின்பற்றாமல், அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்கப்போவதில்லை.</p><p>யாராவது சட்டவிரோதமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தால், அதை முழுமையாகத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை நாம் வரவேற்கிறோம்.</p><p>ஆனால், முறையாக உரிமம் பெற்றுள்ள தொழிற்சாலைகளிலும் திடீர் ஆய்வுகள் என்ற பெயரில் சென்று தொழிலை மொத்தமாக முடக்குவது எந்த வகையில் நியாயம் என்பதுதான் எங்களுடைய கேள்வி.</p><p>சாதாரண சிறு வணிகர்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படும் வகையில் ஆய்வுகள் என்ற பெயரில் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை.</p> <h2>மாற்றம்</h2><p>இதை உடனடியாக நிறுத்த வேண்டும். தவெக ஆட்சி வந்த உடனே சிவகாசி மாறிவிடும் என்று கூறினீர்கள். இந்த மூன்று மாதங்களில் என்ன மாற்றம் வந்துள்ளது.</p><p>பட்டாசுத் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்குவோம் என்று கூறினீர்களே, வழங்கினீர்களா?. சிவகாசியில் இருக்கிற தொழில்துறை அமைச்சர், தேர்தல் நேரங்களில் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு வந்து ரீல்ஸ் எடுத்துப் பதிவிட்டார்.</p> <p>அதில் 10 கி.மீ. சுற்றளவுக்கு ஒரு தீயணைப்பு நிலையமும், ஆம்புலன்ஸ் வசதியும் அமைக்கப்படும் என்று கூறினார். ஆனால், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதுகுறித்து எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா?</p> <p>மொத்தத்தில், எதை கேட்டாலும் எல்லாமே இல்லை, இல்லை என்று சொல்வதுதான் உங்களுடைய மாற்றம்.</p><p>ஆனால், இருக்கிறது, இருக்கிறது என்று மக்களுக்கு தேவையான அத்தனை திட்டங்களுக்கும் அள்ளித் தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.</p><p>தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி ரூ.1 லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்ததாக விளம்பரம் செய்கிறீர்கள். ஆனால், உங்கள் காலடியில் இருக்கக்கூடிய பட்டாசுத் தொழிலை ஏன் நசுங்க செய்கிறீர்கள்?</p> <h2>வெற்றி ஸ்டிக்கர்</h2><p>இந்த ஆட்சியில் ஒவ்வொரு துறைக்கும் வழங்க வேண்டிய நிதியைக் குறைத்திருக்கிறீர்கள். பட்டாசுத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, கல்வித்துறை நிதி என பல்வேறு துறைகளிலும் நிதி குறைக்கப்பட்டுள்ளது.</p><p>திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நல்ல திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து, அதற்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.</p> <p>எல்லாவற்றிலும் வெற்றி, வெற்றி என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்கிறீர்கள். ஆனால் அந்த வெற்றி உண்மையிலேயே மக்களின் வெற்றியாக இருக்கிறதா என்றால் இல்லை.</p><p>அவை வெற்றித் திட்டங்களாக இல்லை; வெற்றுத் திட்டங்களாகத்தான் இருக்கின்றன. த.வெ.க. அரசு இந்த மூன்று மாத காலத்தில் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது. " எனத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-today-debates-on-demands-forg-grants-session-begin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-today-debates-on-demands-forg-grants-session-begin#comments</comments><guid isPermaLink="false">e286180e-a5da-4932-b51f-1b1d4f6cc627</guid><pubDate>Mon, 17 Aug 2026 00:27:43 +0000</pubDate><atom:updated>2026-08-17T00:27:43.876Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழ் நாடு சட்டசபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/gfrq98hb/TN-Assembly" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Assembly ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/gfrq98hb/TN-Assembly?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ் நாடு</a> சட்டசபையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>இந்த நிலையில், கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/tn-budget">பொது பட்ஜெட்</a> மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.</p><h2>விடுமுறை:</h2><p>அதனைத் தொடர்ந்து, சட்டசபையில் இன்று, 2026-2027-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.</p><p>இதனைத் தொடர்ந்து கடந்த வியாழன் (13-ஆம் தேதி) மற்றும் வெள்ளிக்கிழமை (14-ஆம் தேதி) சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. </p><p>நேற்று முன்தினம் (15-ஆம் தேதி) சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை நாளாகும். அடுத்த நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.</p><h2>மானியக் கோரிக்கை விவாதம்:</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் கூடுகிறது. பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் காலை 9.30 மணி முதல் தொடங்குகிறது. அதில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் தொடங்குகிறது.</p><p>முதல் நாளில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>&apos;திமாகி நக்சல்&apos; என்பதில் பெருமை கொள்கிறேன்: பிரதமருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/national/proud-to-be-dimagi-naxal-congs-p-chidambaram-hits-back-at-pm</link><comments>https://www.maalaimalar.com/news/national/proud-to-be-dimagi-naxal-congs-p-chidambaram-hits-back-at-pm#comments</comments><guid isPermaLink="false">d27c2330-36c5-4b66-9507-7bb4bc6ee561</guid><pubDate>Sun, 16 Aug 2026 23:49:46 +0000</pubDate><atom:updated>2026-08-16T23:49:46.064Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>P Chidambaram,ப சிதம்பரம்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/38cdp0di/P-Chidambaram-and-PM-Modi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ P Chidambaram and PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/38cdp0di/P-Chidambaram-and-PM-Modi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சுதந்திர தின உரை:</h2><p>பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> குறிப்பிட்ட 'திமாகி நக்சல்' (சிந்தனையளவில் நக்சல் ஆதரவாளர்கள்) என்ற கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பதிலடி கொடுத்தார். "நான் ஒரு 'திமாகி நக்சல்' என்பதில் பெருமை கொள்கிறேன்" என்று அவர் கூறினார். </p><p>சனிக்கிழமையன்று சுதந்திர தின உரையின்போது, ​​அமைப்பிற்குள் ஊடுருவி, கொள்கைகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைப்பதன் மூலம் சமூகத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கும் 'திமாகி நக்சல்கள்' குறித்து மோடி எச்சரித்தார். அவர்களை "அடையாளம் கண்டு தனிமைப்படுத்த" வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.</p><p>செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் மோடி, காடுகளில் ஆயுதம் ஏந்திய நக்சலிசத்தை ஒழிப்பதில் நாடு வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறினார்; ஆனால், அதன் கருத்தியல் ஆதரவாளர்கள் வன்முறையையும் குழப்பத்தையும் பரப்ப வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் எச்சரித்தார்.</p><h2>சிதம்பரம் பதிலடி:</h2><p>பிரதமரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ப சிதம்பரம் எக்ஸ் தளத்தில், "நான் ஒரு 'திமாகி நக்சல்' என்பதில் பெருமை கொள்கிறேன்!" என்று பதிவிட்டார்.</p><p>மற்றொரு பதிவில், முன்னாள் உள்துறை அமைச்சரான அவர், "திமாகி நக்சல்கள்" என்பது பா.ஜ.க.வின் பழைய குற்றச்சாட்டுகளான "நகர்ப்புற நக்சல்கள்", "அந்தோலன்ஜீவி" மற்றும் "துக்டே துக்டே கேங்" ஆகியவற்றின் புதிய வடிவம் என்று கூறினார். "நகர்ப்புற நக்சல்கள் யார்? அந்தோலன்ஜீவிகள் யார்? துக்டே துக்டே கும்பல் யார்? அந்த பழைய வசவுகள் அனைத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கியே முன்வைக்கப்பட்டன," என்று அவர் கூறினார். "திமாகி நக்சல்கள்" என்பது அந்த வசவுகளின் ஒரு புதிய வடிவம் என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.</p><h2>அமைச்சர் விளக்கம்:</h2><p>பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர்களை "திமாகி நக்சல்கள்" என்று குறிப்பிடவில்லை என்றும், மாவோயிஸ்டுகள் மற்றும் பிரிவினைவாதிகளை ஆதரிப்பவர்களையும் இந்திய அரசியலமைப்பை நிராகரிப்பவர்களையுமே அவ்வாறு குறிப்பிட்டார் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு கூறினார்.</p><p>சிதம்பரத்தின் 'எக்ஸ்' பதிவை பகிர்ந்த ரிஜிஜு, இந்தியாவின் மதிப்பிற்குரிய முன்னாள் உள்துறை அமைச்சரிடம் இருந்து வந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான மற்றும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருத்து இது என்று கூறினார்.</p><p>"எதிர்க்கட்சித் தலைவர்கள் 'திமாகி நக்சல்கள்' என்று பிரதமர் நரேந்திர மோடி ஜி கூறவில்லை," என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 53-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/rescuers-dig-through-rubble-in-quake-hit-indonesia-death-toll-at-53</link><comments>https://www.maalaimalar.com/news/world/rescuers-dig-through-rubble-in-quake-hit-indonesia-death-toll-at-53#comments</comments><guid isPermaLink="false">edd5c358-6550-47d4-b7bf-3761f51b7033</guid><pubDate>Sun, 16 Aug 2026 23:20:46 +0000</pubDate><atom:updated>2026-08-16T23:20:46.238Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,இந்தோனேசியா,indonesia,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/k3dtna6u/indonesia-earthquake.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indonesia Earthquake]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/k3dtna6u/indonesia-earthquake.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிழக்கு இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கம்</a> ஏற்பட்ட மறுநாளான ஞாயிற்றுக்கிழமையன்று, மீட்புக் குழுவினர் மேலும் ஆறு உடல்களை மீட்டனர்; இதனால் பலி எண்ணிக்கை 53-ஆக உயர்ந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் குறித்த அச்சத்தால் பலர் இரவு முழுவதும் திறந்தவெளியில் தங்கினர். </p><p>முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்நாட்டின் கத்தோலிக்கர்கள் அதிகம் வசிக்கும் 'ஃப்ளோரஸ்' தீவில் உள்ள ஆறு மாவட்டங்களில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை தேடி மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றினர். </p><p>நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மங்கராய், கிழக்கு மங்கராய் மற்றும் நாகேகியோ ஆகிய மூன்று மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன; ஏனெனில் இப்பகுதிகளைச் சென்றடைவது கடினமாக இருந்தது.</p><h2>மீட்பு பணிகள்:</h2><p>"நாங்கள் பெரும்பாலான நிலச்சரிவுகளை அகற்றி, தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களுக்கான சாலைகளை மீண்டும் திறந்துள்ளோம். இருப்பினும், தகவல் தொடர்பு மற்றும் மின்சார விநியோகத் தடைகள் தேடுதல் பணிகளுக்குத் தொடர்ந்து இடையூறாக உள்ளன," என்று சிக்கா மாவட்டத்தின் தலைநகரான மௌமேரேவில் உள்ள தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவு அலுவலகத்தின் தலைவர் ஃபதுர் ரஹ்மான் கூறினார்.</p><p>கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் 900-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், 450 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்தன. இதனால் சுமார் 5,000 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஃப்ளோரஸ் பகுதியில் மட்டும் குறைந்தது 241 வீடுகள் சேதமடைந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் பேரிடர் தடுப்புப் பிரிவுத் தலைவர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.</p><h2>சக்திவாய்ந்த நிலநடுக்கம்:</h2><p>சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்குச் சற்று முன்னதாக, 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டதால், மக்கள் பீதியடைந்து வெளியேறினர்.</p><p>நிலநடுக்கத்திற்குப் பிறகு குறைந்தது 995 அதிர்வுகள் பதிவாகியுள்ளன, ஆனால் அவற்றில் 46 அதிர்வுகள் மட்டுமே மக்களால் உணரப்பட்டன என்று முஹாரி கூறினார்; மேலும் இதில் 135 பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காசா விவகாரம்: ஹமாஸ் அமைப்பினருடன் டிரம்ப் மருமகன் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-envoy-meets-hamas-leaders-over-gaza-plan</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-envoy-meets-hamas-leaders-over-gaza-plan#comments</comments><guid isPermaLink="false">42bd956a-89c5-49c0-818d-eeb91c550c9d</guid><pubDate>Sun, 16 Aug 2026 22:43:25 +0000</pubDate><atom:updated>2026-08-16T22:43:25.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,Hamas,ஹமாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/37grqcvf/Jared-Kushner.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jared Kushner]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/37grqcvf/Jared-Kushner.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முடங்கியுள்ள காசா போர் நிறுத்தத்தில் முன்னேற்றம் காண்பதற்கான ஒரு புதிய இராஜதந்திர முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டொனால்டு டிரம்ப்-இன் மருமகன் ஜாரெட் குஷ்னர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹமாஸ் தலைவரை சந்தித்தார். இதுதவிர குஷ்னர் இன்று (திங்கட்கிழமை) இஸ்ரேல் பிரதமரை நெதன்யாகுவை சந்திக்கிறார்.</p><p>காசாவில் ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுவதற்கும், போரினால் சிதைக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கும் அமெரிக்காவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட புதிய 15 அம்ச செயல்திட்டத்தை காப்பாற்றுவதே இந்த பேச்சுவார்த்தைகளின் நோக்கமாகும்.</p><h2>மிக முக்கிய பேச்சுவார்த்தை:</h2><p>முக்கிய இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்த போர்நிறுத்தம் ஏற்பட்டு 10 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், காசாவில் உள்ள சுமார் 20 லட்சம் மக்களின் உயிர்களும், தற்போது பெருமளவில் இஸ்ரேலிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நெரிசலான பகுதியின் புனரமைப்பும் கேள்விக்குறியாகியுள்ளன. கடந்த ஆண்டு எகிப்தில் குஷ்னர், சக தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு இடையே நடந்த சந்திப்பு, போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்த உதவியது. ஹமாஸின் ஆயுத களைவு என்ற முக்கிய பிரச்சினையால் இதுவரை அதன் முன்னேற்றம் தடைபட்டிருந்தது.</p><p>எகிப்தில் ஹமாஸின் கலீல் அல்-ஹய்யாவுடன் நடந்த அரிதான சந்திப்பை, ஒரு பிராந்திய அதிகாரியும் ஒரு ஹமாஸ் அதிகாரியும் உறுதிப்படுத்தினர். செய்தியாளர்களிடம் பேச அவர்களுக்கு அதிகாரம் இல்லாததால், அவர்கள் இருவரும் தங்கள் அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை. அல்-ஹய்யாவை சந்தித்த மூன்று தூதர்கள் கொண்ட குழுவில் குஷ்னரும் ஒருவர்; மத்தியஸ்த நாடுகளான எகிப்து, கத்தார் மற்றும் துருக்கி ஆகியவற்றின் அதிகாரிகளும் அங்கு இருந்தனர்.</p><h2>நிராகரிப்பு:</h2><p>இஸ்ரேலின் மிக நெருங்கிய கூட்டாளியான டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான தனது அரிதான பகிரங்க எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் 15 அம்ச திட்டத்தை நிராகரித்தார்.</p><p>தற்போது குஷ்னர், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் மற்றும் போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடும், அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அமைதி வாரியத்தின் இயக்குனர் நிக்கோலே மிலாடெனோவ் ஆகியோர் திங்கட்கிழமை நெதன்யாகுவை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பு குறித்து விவாதிப்பதற்காக, இருவரும் தங்களது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில் பேசினர்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் போராட்டம்: மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அம்மாநில அரசு அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-government-invites-student-protesters-for-fresh-talks-on-monday</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-government-invites-student-protesters-for-fresh-talks-on-monday#comments</comments><guid isPermaLink="false">43df95e4-64ae-4886-bbdd-36ff783ebd46</guid><pubDate>Sun, 16 Aug 2026 22:07:31 +0000</pubDate><atom:updated>2026-08-16T22:07:31.543Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Students,மாணவர்கள்,அரசு,Government,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/hpoq4806/Jharkhand-protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/hpoq4806/Jharkhand-protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை, புதிய சுற்று பேச்சுவார்த்தைக்காக <a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> அரசு அழைத்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை இன்று (திங்கள் கிழமை) நடைபெறுகிறது.</p><p>போராட்டம் நடைபெற்ற இடமான ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், துணைப் பிரிவு அதிகாரி மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாணவர்களுடன் நடத்திய கூட்டத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><h2>பேச்சுவார்த்தை:</h2><p>"ஆகஸ்ட் 17-ஆம் தேதியன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு போராட்டக்காரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் தங்களது சட்ட ஆலோசகருடன் கலந்துரையாடலில் பங்கேற்கலாம் என்ற முன்மொழிவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது," என்று அந்த அதிகாரி கூறினார்.</p><p>முன்னதாக, ஜார்க்கண்ட் அரசுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கும் இடையே ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.</p><p>போராட்டத்தை முன்னின்று நடத்தும் முக்கிய மாணவர் அமைப்பான 'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்தக் குழு', மாநில விருந்தினர் மாளிகையில் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசின் முன்மொழிவை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் தங்கள் கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளது.</p><p>போராடி வரும் மாணவர்களின் சட்ட ஆலோசகர் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என 'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்தக் குழு' தலைவர் ரவீந்திர பஸ்வான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><h2>கோரிக்கைகளில் உறுதி:</h2><p>இது குறித்து பேசிய பஸ்வான், "நாங்கள் இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதால், நிச்சயமாக பேச்சுவார்த்தைக்கு செல்வோம். ஆனால், ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை மற்றும் ஜே.எஸ்.எஸ்.சி-சி.ஜி.எல் (ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையம்-ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை) தேர்வுகளை ரத்து செய்வது ஆகிய இரண்டு கோரிக்கைகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று பஸ்வான் கூறினார்.</p><p>அரசு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள தூதுக்குழுவில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.</p><p>ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்ற கடைசி சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு திருப்புமுனையும் ஏற்படவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று போராட்டங்கள் 23-வது நாளை எட்டின.</p>]]></content:encoded></item><item><title>மெட்ரோ ரெயிலில் சர்ச்சை - சி.ஐ.எஸ்.எஃப். வீரரை சுற்றி வளைத்த பயணிகளால் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/chaos-in-delhi-metro-after-paramilitary-official-allegedly-takes-womans-pic</link><comments>https://www.maalaimalar.com/news/national/chaos-in-delhi-metro-after-paramilitary-official-allegedly-takes-womans-pic#comments</comments><guid isPermaLink="false">91b5e382-3282-476e-9b2c-b2f3d1186f1f</guid><pubDate>Sun, 16 Aug 2026 19:50:40 +0000</pubDate><atom:updated>2026-08-16T19:50:40.706Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi Metro,டெல்லி மெட்ரோ,Paramilitary Official,துணை ராணுவ அதிகாரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/icpglxs7/Delhi-Metro-incident-scrn.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Metro incident screenshot]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/icpglxs7/Delhi-Metro-incident-scrn.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி <a href="https://www.maalaimalar.com/topic/metro-train">மெட்ரோ ரயில்</a> பெட்டிக்குள் ஒரு பெண்ணை ரகசியமாக புகைப்படம் எடுத்ததாக துணை ராணுவ அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயணிகள் அவரை எதிர்கொண்டு, அந்த படங்களை நீக்குமாறு வற்புறுத்த முயன்றனர்.</p><p>சனிக்கிழமை இரவு தாமதமாக நடந்த இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் வைரலானது. இது உண்மையாக நிரூபிக்கப்பட்டால், அது மிகுந்த கவலைக்குரிய விஷயமாக இருக்க வேண்டும் என்று மக்கள் சுட்டிக்காட்டினர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national">டெல்லி</a> மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் உள்ள எய்ம்ஸ் மெட்ரோ நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><h2>அதிர்ச்சி சம்பவம்:</h2><p>சமூக வலைத்தளங்களில் வைரலானதாக கூறப்படும் அந்த சம்பவத்தின் காணொளியில், டெல்லி மெட்ரோ பயணிகள் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) வீரரிடம் முறையிடுவது போன்ற காட்சி இடம்பெற்று இருக்கிறது. அவர் ஆரம்பத்தில், புகைப்படங்கள் எடுத்ததை மறுத்துள்ளார்.</p><p>இருப்பினும், மெட்ரோவுக்குள் இருந்த அந்த பெண்ணும் மற்ற பயணிகளும் அவரது ஸ்மார்ட்போனின் புகைப்பட தொகுப்பை காட்டும்படி கேட்டபோது, ​​அவர்தான் அந்த படங்களை எடுத்திருந்தார் என்பது தெரியவந்தது.</p><p>இது மேலும் ஒரு மோதலுக்கு வழிவகுத்தது, அது விரைவாக கைகலப்பாக மாறியது. அப்பெண், "இது என்ன? என் புகைப்படங்களை நீக்குங்கள்" என்று கூறுவது கேட்கப்பட்டது. பயணிகள் சி.ஐ.எஸ்.எஃப். வீரரின் கைபேசியை பறிக்க முயன்றபோது, ​​அவர் அதை எதிர்த்தார்.</p><h2>தீவிர விசாரணை:</h2><p>சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே குற்றம் சாட்டப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று சி.ஐ.எஸ்.எஃப். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>மெட்ரோ ரயில் ஒன்றில் பெண் பயணி ஒருவரிடம் சி.ஐ.எஸ்.எஃப். வீரர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து புகார் வந்துள்ளது. சி.ஐ.எஸ்.எஃப். இந்த விஷயத்தை உயர் மட்டங்களில் மிகுந்த தீவிரத்துடன் கருதியுள்ளது. </p><p>சம்பந்தப்பட்ட வீரர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்று சி.ஐ.எஸ்.எஃப்.-இன் டெல்லி மெட்ரோ பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிறுவனம் மேலும் குறிப்பிட்டது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க வீரரை கொன்றால் 30,000 டாலர்கள் - பெண்களுக்கு இருமடங்கு வெகுமதி அறிவித்த ஈரான்!</title><link>https://www.maalaimalar.com/news/world/kill-a-us-soldier-get-30000-iran-announces-bounty-double-pay-for-women</link><comments>https://www.maalaimalar.com/news/world/kill-a-us-soldier-get-30000-iran-announces-bounty-double-pay-for-women#comments</comments><guid isPermaLink="false">eebf9bac-7b82-4bdd-aeb4-ebc53d8005c6</guid><pubDate>Sun, 16 Aug 2026 19:04:28 +0000</pubDate><atom:updated>2026-08-16T19:04:28.474Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,ஈரான்,Iran,us</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/fqj1omx4/Iran-Army.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran Army]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/fqj1omx4/Iran-Army.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> ராணுவ வீரரை கொன்றால் 30,000 டாலர்கள் சன்மானம் வழங்குவதாக ஈரான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. மேலும், பெண்களுக்கு இதற்கான வெகுமதி இரட்டிப்பாக்கி 60,000 டாலர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.</p><p>வீரர்களைப் பிடிப்பதற்காக 30,000 டாலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய இராணுவ தளபதி அமீர் ஹதாமி அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் பங்கேற்க "பெரும் எண்ணிக்கையிலான கோரிக்கைகள்" வந்ததை தொடர்ந்து இந்த திட்டம் வகுக்கப்பட்டதாக ஐ.ஆர்.என்.ஏ. அரசு செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>வெகுமதி அறிவிப்பு:</h2><p>"ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவ வீரரை கொன்றாலோ அல்லது பிடித்து ஒப்படைத்தாலோ, ஈரான் இஸ்லாமிய குடியரசின் இராணுவத்திடம் இருந்து 30,000 டாலர்கள் அல்லது 5 பில்லியன் டோமான்களுக்கு இணையான வெகுமதி வழங்கப்படும். இத்தகைய செயலை மேற்கொள்ளும் துணிச்சல்மிக்க ஈரானிய பெண்களுக்கு இரட்டிப்பு வெகுமதி வழங்கப்படும்," என்று ஹதாமி கூறினார்.</p><p>இருப்பினும், அமெரிக்க வீரர்களை கொல்வது அல்லது பிடிப்பது எப்போது, ​​எங்கே நடைபெறும் என்பது குறித்த விவரங்களை அவர் அளிக்கவில்லை.</p><p>மத்திய கிழக்கில் அமெரிக்க-ஈரான் போர் தொடங்கியதில் இருந்து , ஈரான் விமானி ஒருவர் காயமடைந்த அந்த ஒரு சம்பவத்தை தவிர, அமெரிக்க படைகள் அங்கு தரைப்படையாக நிறுத்தப்பட்டதாக அறியப்படவில்லை.</p><p>புதிய ஆயுதம்:</p><p>தி ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட மற்றொரு அறிக்கையின்படி, அமெரிக்க வீரரை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இருமடங்கு விலைக்கு வாங்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட நபருக்கு புதிய ஆயுதம் வழங்கப்படும் என்றும் ஹதாமி கூறியதாக தெரிவிக்கிறது.</p><p>ஈரானுடனான போரின்போது, ​​தங்களது ராணுவ பலம் குறித்த அமெரிக்காவின் கூற்றுக்கள் அம்பலமாகிவிட்டதாக அவர் அறிவித்தார். "பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா அல்லது ஹார்முஸ் நீரிணைக்குள் நுழைய அவர்களுக்கு இனி அனுமதி இல்லை" என்று கூறி, மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்ற தனது நாட்டின் அழைப்பை ஹதாமி ஆதரித்தார்.</p><p>ஜூன் 17-ஆம் தேதியன்று கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-ஈரான் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள 60 நாள் காலக்கெடு நெருங்கி வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 28 முதல் 40 நாட்கள் நீடித்த சண்டைக்குப் பிறகு, இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரானும் அமெரிக்காவும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கும், நிரந்தர தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை தொடரவும் ஒப்புக்கொண்டிருந்தன.</p>]]></content:encoded></item><item><title>காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டெடுப்பு - பெரும் சதித்திட்டம் முறியடிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/cops-find-bomb-timer-in-suspicious-packet-in-amritsar</link><comments>https://www.maalaimalar.com/news/national/cops-find-bomb-timer-in-suspicious-packet-in-amritsar#comments</comments><guid isPermaLink="false">766d4f5c-b018-497a-8d6f-342b8d1aea97</guid><pubDate>Sun, 16 Aug 2026 18:08:00 +0000</pubDate><atom:updated>2026-08-16T18:08:00.485Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெடிகுண்டு,Amritsar,காவல் துறை,bomb,Cops,அம்ரித்சரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/8gfxywce/Punjab-Police.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Punjab Police]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/8gfxywce/Punjab-Police.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>690 கிராம் எடை கொண்ட <a href="https://www.maalaimalar.com/topic/bomb">வெடிகுண்டு</a> மற்றும் மின்னணு வெடிகுண்டு கருவியை மீட்டெடுத்ததன் மூலம், காவல் நிலையம் ஒன்றை குறிவைத்து நடத்தப்பட இருந்த பயங்கரவாத சதியை முறியடித்ததாக <a href="https://www.maalaimalar.com/news/national">அமிர்தசரஸ்</a> ஊரக காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>சனிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில் இந்தப் பறிமுதல் மேற்கொள்ளப்பட்டது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"அமிர்தசரஸ் ஊரக காவல்துறை, ஒரு காவல் நிலையத்தை குறிவைத்த பயங்கரவாத சதியை முறியடித்து, 690 கிராம் எடையுள்ள மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு (IED), அதனுடன் ஒரு மின்னணு வெடிப்பி, மின்கலம், டைமர் மற்றும் இரும்பு பெட்டி ஆகியவற்றை மீட்டெடுத்தது.</p><p>கைப்பற்றப்பட்ட பிறகு, அந்த வெடிபொருள் நிறுவப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளின்படி கையாளப்பட்டு, வெடிகுண்டு அகற்றும் குழுவினரால் செயலிழக்க செய்யப்பட்டது," என்று பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) கௌரவ் யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>அமிர்தசரஸ் ஊரக காவல்துறை, தேசவிரோத சக்திகளின் சதித்திட்டத்தை முறியடித்து, பொது பாதுகாப்பிற்கு ஏற்பட இருந்த அச்சுறுத்தலை தடுத்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.</p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு நிறுவனங்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமிர்தசரஸ் ஊரக மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி.) கன்வல்பிரீத் சிங் சஹால் தெரிவித்தார்.</p><h2>வழக்குப்பதிவு:</h2><p>ஆகஸ்ட் 15-16 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குல்பீர் சிங் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​கக்கோமஹால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான, மெழுகால் சுற்றப்பட்ட கருப்பு நிறப் பொட்டலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்ததில், ஒரு மின்னணு வெடிகுண்டு, ஒரு மின்கலம், ஒரு டைமர் மற்றும் ஒரு இரும்புப் பெட்டி ஆகியவை அதில் இருந்தது கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.</p><p>வெடிகுண்டு அகற்றும் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டுகள் அங்கேயே பாதுகாப்பாக செயலிழக்க செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சஹால் கூறினார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக, அமிர்தசரஸ் ஊரகத்தில் உள்ள ராம்டாஸ் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-condemns-killing-of-three-tamils-in-karnataka</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-condemns-killing-of-three-tamils-in-karnataka#comments</comments><guid isPermaLink="false">4bce81d7-69b1-4d5a-9d35-85995747ecd8</guid><pubDate>Sun, 16 Aug 2026 17:09:07 +0000</pubDate><atom:updated>2026-08-16T17:09:07.067Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,மு.க. ஸ்டாலின்,Tamil Nadu government,Forest Department,M.k. stalin,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/js750yq9/Vijay03.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/js750yq9/Vijay03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று (சனிக்கிழமை) காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர். </p><h2>முதல்வர் கண்டனம்:</h2><p>துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் என விசாரணையில் தெரியவந்தது. மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். </p><p>இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். </p><p>மேலும், பலர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த சம்பவத்தை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பதிவில், "கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.</p><p>இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.</p><p>இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வழக்குப்பதிவு:</h2><p>முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கர்நாடக காவல்துறை நடவடிக்கை எடுத்தது. வனத்துறை அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிடாமல் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்த அந்தோணி சாமியின் மனைவி மேரி அளித்த புகாரின் அடிப்படையில் ஆனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர்.. காரணம் இதுதான்</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-bjp-leader-resigns-actor-devan-quits-post-and-primary-membership</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-bjp-leader-resigns-actor-devan-quits-post-and-primary-membership#comments</comments><guid isPermaLink="false">77cb16d7-16f9-473d-9302-aa5671f6a371</guid><pubDate>Sun, 16 Aug 2026 16:25:02 +0000</pubDate><atom:updated>2026-08-16T16:25:02.956Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,கேரளா,கேரள நடிகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/t3mrk5s5/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தேவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ தேவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/t3mrk5s5/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைப்பட நடிகரும் கேரளா <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பாஜக </a>மாநில  துணைத் தலைவருமான தேவன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். </p><p>கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.</p> <h2>அறிவிப்பு</h2><p>ஆலப்புழாவில் உள்ள கணச்சுகுளங்கரை தேவி கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவன் கலந்துகொண்டார்.</p><p>இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் பொதுச்செயலாளர் வெள்ளாப்பள்ளி நடேசன் மற்றும் பாஜக தலைவர் பி. ராதாகிருஷ்ணன் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தேவன் தனது விலகலை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.</p> <p>சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகள், தத்துவங்கள் மற்றும் திட்டங்களை உள்ளடக்கிய அரசியலையே தான் விரும்புவதாகத் தேவன் குறிப்பிட்டார்.</p><p>கடந்த 5 ஆண்டுகளாக கேரளா பாஜகவில் பணியாற்றிய பிறகு, அந்த லட்சியங்களை அடைய முடியவில்லை என்றும், தன் பாதை வேறு என்பதை உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.</p> <h2>அரசியல் பின்னணி</h2><p>'<a href="https://www.maalaimalar.com/topic/kerala">கேரளா </a>பீப்பிள்ஸ் பார்ட்டி' என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வந்த தேவன் , 2020இல் அதனை 'நவ கேரளா பீப்பிள்ஸ் பார்ட்டி' எனப் பெயர் மாற்றினார்.</p><p>2021இல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.</p><p>2024 மக்களவை தேர்தலில் திருவனந்தபுரத்தில் ராஜீவ் சந்திரசேகர் பெற்ற கணிசமான வாக்குகளுக்கும் வெற்றிக்கும் தனது உழைப்பு முக்கியப் பங்காற்றியதாகத் தேவன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.</p> <h2>பாஜக அதிருப்தி</h2><p>தேவன் ராஜினாமாவை கோவில் நிகழ்வு மேடையில் அறிவித்தது குறித்து பாஜக தலைவர் பி. ராதாகிருஷ்ணன் மேனன் அதிருப்தி தெரிவித்தார்.</p><p>2047க்குள் இந்தியாவை உலகின் முதன்மை நாடாக மாற்றப் பாஜக எடுக்கும் முயற்சிகளில் இருந்து விலக தேவன் எடுத்த முடிவுக்கான காரணம் தெரியவில்லை என்றும், ஆனால் இத்தகைய முடிவை அறிவிப்பதற்கு இந்த மேடை உகந்தது அல்ல என்றும் அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 16 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026#comments</comments><guid isPermaLink="false">114f1354-2cfc-439f-8ee1-fbc2ae5ae0a8</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:20:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T16:13:58.057Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கிய செய்திகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/withdraw-coalition-support-jharkhand-protesters-demand-from-rahul-gandhi">ஜார்க்கண்ட் முதல்வர், ராகுல் காந்தி உருவ பொம்பை எரிப்பு: 20-ந்தேதி சோரன் வீடு முற்றுகை போராட்டம்- மாணவர்கள் அறிவிப்பு</a></p><p>* ராகுல் காந்தி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், உறுதியான நடவடிக்கை பின்பற்றப்படவில்லை.</p><p>* அதனால் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/djokovic-lose-second-round-in-cincinnati-open-tennis">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.</p><p>* முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-moves-in-second-place-in-tnpl-points-table">டிஎன்பிஎல்: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது சேப்பாக்</a></p><p>* முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.</p><p>* மதுரை பாந்தர்ஸ் அணி 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-beat-wales-in-hockey-world-cup">உலகக் கோப்பை ஹாக்கி: வேல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா</a></p><p>* இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளது.</p><p>* கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office">முன்னாள் அமைச்சர் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுப்பு: மம்தாவுக்கு நெருக்கமானவர்..!</a></p><p>* கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் மம்தா பானர்ஜி அரசின் கீழ் பணியாற்றியுள்ளார்.</p><p>* இந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக-வின் துருபா சஹாவிடம் தோல்வியடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi" rel="nofollow">திமுக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை..!- திமுக எம்பி கனிமொழி</a></p><p>* பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>*  தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/south-railway-revenue-up-8-84-percent-in-2025-26" rel="nofollow">2025-26ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வேயில்  ரூ.13,778 கோடி வருவாய்- பொதுமேலாளர் சுப்பாராவ்</a></p><p>* நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 13.48 மில்லியன் டன்களை எட்டியுள்ளோம்.</p><p>* 2025-26-ம் ஆண்டில் 42.184 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya" rel="nofollow">3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்கிறது மியான்மர்</a></p><p>* தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.</p><p>*  3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech" rel="nofollow">இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!- செங்கோட்டையில் பிரதமரின் உரை குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்</a></p><p>* நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!</p><p>* ரூ.63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery" rel="nofollow">ஒகேனக்கல் ஆற்றில் 8,000 கனஅடி நீர் வரத்து..!- பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை</a></p><p>* தமிழகத்திற்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.</p><p>* குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/president-murmu-pm-modi-pay-tribute-to-vajpayee" rel="nofollow">வாஜ்பாய் நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி</a></p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.</p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் டெல்லி முதலமைச்சர் ரேகா அஞ்சலி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mob-baying-for-her-shashi-tharoor-backs-mahua-moitra-after-late-night-eviction-bid">நடுராத்திரியில் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற்ற முயற்சி: மஹுவா மொய்த்ரா எம்.பி. குற்றச்சாட்டு</a></p><p>* மாலை 6.15 மணியளவில் நான் சர்க்யூட் ஹவுஸ் அறைக்குச் சென்றேன். ஊழியர்கள் எனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர்.</p><p>* அந்த அறை தங்குவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. மாலை 7 மணிக்கு எனது அறைக்குத் தேநீர் கொண்டு வரப்பட்டது. இரவு 9.20 மணிக்கு இரவு உணவு அங்கேயே பரிமாறப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-beat-australia-in-first-test">டார்வின் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் நொறுக்கியது வங்கதேசம்-சாதனை வெற்றி</a></p><p>* வங்கதேசம் 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து வென்றது.</p><p>* ஹசன் மகமது ஆட்ட நாயகன் விருது வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/match-delayed-due-to-rain-in-second-day-for-srilanka-india-match">இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட்:  மழையால் பாதிப்பு</a></p><p>* சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில் சதம் விளாசினார்.</p><p>* மழையால் ஆட்டம் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest">கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்- பெ. சண்முகம் வலியுறுத்தல்</a></p><p>* துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>* சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran">தரக்குறைவான பேச்சுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்!</a></p><p>* நயினார் நாகேந்திரன் தமிழக மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.</p><p>* அரசியல் எதிர்ப்பு: விஜய் குடும்பம் பற்றிய அநாகரிக பேச்சுக்கு பல கட்சிகளிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/wtc-points-table-changed-bangladesh-to-enter-the-wtc-final-race">உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்தது வங்கதேசம்</a></p><p>* வங்கதேச அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.</p><p>* இந்திய அணி 48.15 சதவீத புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தில் உள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/fe62a5ce-a42c-4356-ac59-ed3a71cf4c4a">நான் அரசியலில் நுழைந்ததே தவறு.. வாழ்நாளில் ஊழல் செய்ததே இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் தற்கொலை கடிதம்</a></p><p>* ஆசிஷ் பானர்ஜி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>*கட்சி அலுவலகத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.</p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies">கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் - காலை முதல் நடந்த போராட்டம் வாபஸ் – உடல்களைப் பெற உறவினர்கள் சம்மதம்!</a></strong></p><p>* அரசு பேச்சுவார்த்தை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று அரசு தரப்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><p>* இழப்பீடு அறிவிப்பு: உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/31932a92-6497-472b-973c-21979f9f4fdd">சோனியா காந்தி செய்த பாவத்தை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - அமித் ஷா</a></p><p>*சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும்</p><p>* தியாகிகள் தூக்குமேடை ஏறும்போது பாடிய தாரக மந்திரம்</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f845adee-a555-4331-baee-b546ce27480c">ராமநாதபுரம்: லஞ்ச வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு</a></p><p>*கடந்த 3 ஆண்டுகளில் ஜி பே மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் பண பறிமாற்றம்</p><p>*நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவருக்கும் சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e5986a56-482a-401b-b017-f97d0b2c649a">மேகதாது விவகாரம் போல வாய்மூடி இருக்கக்கூடாது.. கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்</a></p><p>*அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p><p>*அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/697f8b2b-6ea2-4df2-82c8-51a68ab73f25">வாரணாசி விமான நிலையத்தில் சோதனையின்போது வெடித்த துப்பாக்கி.. குண்டடிபட்டு 2 பேர் காயம்</a></p><p>*ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்க வந்திருந்தார்.</p><p>*இரண்டு பாதுகாப்பு ஊழியர்களின் மீது பாய்ந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-ncr-youth-turn-dance-into-business">டெல்லி-என்.சி.ஆரில் உருவெடுக்கும் 'டான்ஸ்பிரீனர்ஸ்': நடனக் கலையை வெற்றிகரமான வணிகமாக மாற்றும் இளைஞர்கள்</a>!</p><p>*இன்றைய டான்ஸ்பிரீனர்ஸ் வெறும் நடனம் கற்பிப்பதோடு நின்றுவிடுவதில்லை. அவர்கள் தங்கள் நிறுவனங்கள் மூலமாகப் பல்வேறு நவீன வணிக மாதிரிகளைச் செயல்படுத்துகின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-three-tamils-shot-dead-protest-over-bodies">கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் உடல்களை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்: வனத்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு!</a></p><p>*இந்த வழக்கால் அரசும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்துவோம் என்று  கூறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sudden-ban-on-subsidised-fertiliser-sales-in-madhya-pradesh">மத்தியபிரதேசத்தில் மானிய உரங்கள் விற்பனைக்கு திடீர் தடை: காரீஃப் பயிர் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம்!</a></p><p>*இந்த தடையால் உரம் கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhis-sarcastic-remark-regarding-the-arrest">"நான் கூட இதுக்கு தான் நினைச்சேன்..."-கைது குறித்து  உதயநிதி நையாண்டி பேச்சு!</a></p><p>* "அரசே சொந்தச் செலவில் எனக்கு ஒரு ரோடு ஷோ ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றது போல் இருந்தது" என்று நகைச்சுவையாகக் கூறினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-needs-to-watch-his-tongue-cpm-urges-legal-action">நயினாருக்கு நாவடக்கம் தேவை: சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!</a></p><p>*நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-officer-dies-after-fainting-at-independence-day-parade">சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கி விழுந்து காவலர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் விஜய் உத்தரவு!</a></p><p>*காவலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government">த.வெ.க அரசிற்கு அண்ணாமலை பாராட்டு: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நடவடிக்கைக்கு வரவேற்பு!</a></p><p>*த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால், உடனடியாக முடிவுகளுக்கு வர இயலாது,</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue">'மேகதாது விவகாரத்தில் நேர்மையான, தவறு செய்யாத மோடியை இன்றும் நான் நம்புகிறேன்'-அண்ணாமலை!</a></p><p>*தலைவர்கள் இனி டெல்லியிலோ, புனித ஜார்ஜ் கோட்டையிலோ, போயஸ் தோட்டத்திலோ, கோபாலபுரத்திலோ அல்லது பனையூரிலோ உட்கார்ந்து முடிவுகளை எடுக்கும் காலம் முடிந்துவிட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/64-crore-voters-seeking-change-in-2029-parliamentary-election-annamalai-prediction">2029 நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றத்தை விரும்பும் 64 கோடி வாக்காளர்கள்: அண்ணாமலை கணிப்பு!</a></p><p>*பாரம்பரிய அரசியல் வழிகளிலிருந்து விலகி, வெளிப்படைத்தன்மை மற்றும் தொலைநோக்குக் பார்வை கொண்ட தலைமைக்கே மக்கள் முன்னுரிமை அளிப்பார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-solutions-most-diseases-next-10-years-anthropic-ceo-dario-amodei-prediction">அடுத்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான நோய்களுக்கு AI மூலம் தீர்வு: ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி கணிப்பு!... </a></p><p>*AI-ன் உதவியால் சில வாரங்களிலேயே புதிய மருந்துகளை வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.</p><p>*மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உயிரியல் துறையில் AI தொழில்நுட்பம் புகுத்தப்படுவதன் மூலம், ஆய்வுகளின் வேகம் 10 மடங்கு வரை அதிகரிக்கும் என்று டாரியோ அமோடி சுட்டிக்காட்டியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஹங்கேரி: சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 12 பேர் உயிரிழப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/hungary-bus-crash-12-polish-tourists-killed-driver-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/world/hungary-bus-crash-12-polish-tourists-killed-driver-arrested#comments</comments><guid isPermaLink="false">61ea74fe-3cc5-4344-b838-295353aaa07d</guid><pubDate>Sun, 16 Aug 2026 16:06:10 +0000</pubDate><atom:updated>2026-08-16T16:06:10.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bus accident,ஹங்கேரி,hungary,பேருந்து விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/50b19p1k/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பேருந்து விபத்து ]]></media:title><media:description type="html"><![CDATA[ பேருந்து விபத்து ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/50b19p1k/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF">ஹங்கேரியில் </a>சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். </p><h2>விபத்து </h2><p>போலந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் போஸ்னியவில் உள்ள புனித தலத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. </p><p>ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் இருந்து சுமார் 140 கி.மீ தொலைவில் உள்ள மெஸோகெரெஸ்டெஸ்  அருகே உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு 1 மணியளவில் நெடுஞ்சாலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கவிழ்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/bus-accident">விபத்துக்குள்ளானது</a>. </p><h2>ஓட்டுநர் கைது</h2><p>பேருந்தில் மொத்தம் 57 பயணிகளும் 2 ஓட்டுநர்களும் இருந்தனர். உயிரிழந்த 12 பேரைத் தவிர, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p> <p>பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் காவல்துறை தெரிவித்துள்ளது. ஓட்டுநர் தற்போது காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த சம்பவத்திற்கு ஹங்கேரி மற்றும் போலந்து நாட்டின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பேசிய ஒரே வரி.. பொங்கியெழுந்த காங்கிரஸ் - &apos;திமாகி நக்சல்&apos; யார்? - ரிஜிஜூ விளக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/national/dimaki-naxal-row-modis-independence-day-speech-sparks-opposition-backlash</link><comments>https://www.maalaimalar.com/news/national/dimaki-naxal-row-modis-independence-day-speech-sparks-opposition-backlash#comments</comments><guid isPermaLink="false">7f07c034-91ab-4f6c-902c-4a8c6abc6d0a</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:34:08 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:34:08.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Prime Minister Modi,Independence Day,சுதந்திர தினம்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/s6b3id4b/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/s6b3id4b/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் 80வது சுதந்திர தினத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-speech-error-and-flag-row-ev-sales-misquote-and-inverted-tricolour-spark-controversy-at-independence-day-event">பிரதமர் மோடி</a> 'திமாகி நக்சல்' என்ற சொல்லாடலை பயன்படுத்தியது சர்ச்சை ஆனது. </p><p>திமாக் என்றால் ஹிந்தியில் அறிவு என அர்த்தமாகும். திமாகி நக்சல் என்றால் அறிவுஜீவி நக்சல் என்பது பொருள்.</p><p>80வது சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி, "காடுகளில் ஆயுதம் ஏந்திப் போராடிய நக்சலைட்டுகள் ஒடுக்கப்பட்டுவிட்ட போதிலும், அமைப்பிற்குள் இருக்கும் ‘திமாகி நக்சல்கள்’ இன்னும் வன்முறைக்கான வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும்" என்று பேசினார். </p><h2>காங்கிரஸ்</h2><p>பிரதமரின் இந்த உரை எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.</p><p>முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், "நான் ஒரு திமாகி நக்சலாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்" என பதிலடி கொடுத்தார்.</p> <h2>கிரண் ரிஜிஜு விளக்கம்</h2><p>இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் ‘திமாகி நக்சல்கள்’ என்று குறிப்பிடவில்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார்.</p><p>மார்க்சிஸ்ட், மாவோயிஸ்ட் சித்தாந்தத்தை ஆதரித்து, இந்திய அரசியலமைப்பை நிராகரிப்பவர்கள், பிரிவினைவாதிகளை ஆதரித்து ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்க வேண்டும் என்று கோருபவர்கள் ஆகியோரையே பிரதமர் மோடி திமாகி நக்சல்கள் என்று குறிப்பிட்டதாக ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/prime-minister-modi">பிரதமர் மோடி</a>, காங்கிரஸ் தலைவர்களை அர்பன் (நகர்ப்புற) நக்சல்கள் என பல முறை விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370ஐ கடந்த 2019 இல் மோடி தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்து அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் - லடாக் என இரு யூனியன் பிரதேசமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.</p><p>அண்மையில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மாநில அந்தசஸ்தை பறிக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய போராடியிருப்பார்கள் என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>2026-ன் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்: பதிலடித் தாக்குதலில் இறங்கிய ரஷியா-ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் ஏவுகணை வீச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/world/2026s-largest-airstrike-russia-retaliatory-missile-attack-on-zelenskys-hometown</link><comments>https://www.maalaimalar.com/news/world/2026s-largest-airstrike-russia-retaliatory-missile-attack-on-zelenskys-hometown#comments</comments><guid isPermaLink="false">0b37a085-7ffb-4eab-b128-b79e9190a7a3</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:30:11.206Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,airstrike,வான்வழித் தாக்குதல்,President Zelenskyy,ஜெலென்ஸ்கி,ரஷியா,உக்ரைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/apzgfvpt/rush.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Zelenskyy's  hometown]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/apzgfvpt/rush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைன் மற்றும் ரஷியா இடையே போரின் தீவிரத்தன்மை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய மற்றும் போரின் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான ட்ரோன் தாக்குதலை ரஷியா எல்லைக்குள் உக்ரைன் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரை இலக்கு வைத்து ரஷிய படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளன.</p><h2>ரஷியாவுக்<strong>குள் ஊடுருவிய 8</strong>22 ட்ரோன்கள்</h2><p>ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, உக்ரைன் ஏவிய 822 ட்ரோன்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷிய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியும், செயலிழக்கச் செய்தும் அழித்துள்ளன. <a href="https://www.maalaimalar.com/news/world/donald-trump-says-will-soon-declare-strait-of-hormuz-us-territory">ரஷியா</a>வின் தெற்கு மற்றும் மேற்கு எல்லைப்புற மண்டலங்கள் உட்பட 17 பிராந்தியங்களில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. </p><p>மாஸ்கோ பிராந்தியத்தை மட்டும் சுமார் 600 ட்ரோன்கள் வரை இலக்கு வைத்ததாகவும், அவற்றில் 187 ட்ரோன்கள் மாஸ்கோ நகரை அடையும் முன்னே சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆன்லைன் வர்<strong>த்தக நிறுவன</strong> கிடங்கில் பெரும் தீ</h2><p>இந்த ட்ரோன் தாக்குதலில் ரஷியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Wildberries-க்குச் சொந்தமான கொலிடினோ லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மாஸ்கோவிற்கு தெற்கே 45 கி.மீ தொலைவில் சுமார் 2,500,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட கிடங்கு தீப்பற்றி எரிந்தது. வானளவு உயர்ந்த கருப்புப் புகையும் தீப்பிளம்புகளும் அப்பகுதியை உலுக்கின. இந்தத் தாக்குதல்களில் ரஷிய தரப்பில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2>ஜெலென்ஸ்கியி<strong>ன் சொந்த ஊரில் </strong>தாக்குதல்</h2><p>உக்ரைனின் இந்த அதிரடித் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரை அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பிறந்த ஊரான கிரிவி ரிஹ்  நகரத்தைக் குறிவைத்து ரஷிய படைகள் ஏவுகணைகளை வீசின. அங்குள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் நாட்டின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி ஆலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். ஆலையின் மின் உற்பத்தி மற்றும் உற்பத்தி அலகுகள் சேதமடைந்ததால் அதன் செயல்பாடுகள் பகுதி அளவு முடங்கியுள்ளன.</p><h2>போரின் <strong>போக்கு தீவிர</strong>மடைகிறது</h2><p>உக்ரைன் தலைநகர் கெய்வ் மீதும் ரஷியா பேலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் சமீபகாலமாக 2,400 கி.மீ தொலைவு வரை பாயக்கூடிய அதிநவீன ட்ரோன் தொழில் நுட்பங்களை உருவாக்கி ரஷியாவின் வர்த்தக கிடங்குகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இரு நாடுகளும் எல்லை தாண்டி வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதால், இந்தப் பகுதியில் போரின் தாக்கம் மேலும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உடலின் ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கும் ‘அடிசன் நோய்’: தொடக்கத்திலேயே கண்டறிவது எப்படி?</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/addison-disease-that-affects-the-bodys-hormonal-balance-how-to-detect-it-early</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/addison-disease-that-affects-the-bodys-hormonal-balance-how-to-detect-it-early#comments</comments><guid isPermaLink="false">533121a8-c14c-4bef-81ea-9af0ec12c5e9</guid><pubDate>Sun, 16 Aug 2026 15:06:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T15:06:24.160Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,Adrenal Crisis,Addison&apos;s disease,அடிசன் நோய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7ufq911w/adrinal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adrenal Crisis ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7ufq911w/adrinal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடிசன் நோய் அல்லது முதன்மை அட்ரினல் பற்றாக்குறை என்பது உடலின் முக்கிய செயல்பாடுகளுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் அட்ரினல் சுரப்பிகள் சேதமடைவதால் ஏற்படும் ஒரு அரிதான மருத்துவ நிலையாகும். </p><p>சிறுநீரகங்களின் மேல் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிறிய சுரப்பிகள், உடலின் வளர்சிதை மாற்றம், ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கார்டிசோல் மற்றும் அல்டோஸ்டிரோன் ஆகிய அத்தியாவசிய ஹார்மோன்களைப் போதுமான அளவில் சுரக்கத் தவறும்போது இந்நோய் ஏற்படுகிறது.</p><h2><strong>தொடக்கக் கட்ட அறிகுறி</strong></h2><p>இந்நோயின் ஆரம்பக்கால அறிகுறிகள் மனச்சோர்வு அல்லது சாதாரண காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். இதனால் இதனைத் தொடக்கத்திலேயே கண்டறிவது சவாலாக அமைகிறது. தீவிர சோர்வு, தசை பலவீனம், மனநிலை மாற்றம், பசியின்மை, உடல் எடை குறைதல் மற்றும் அதிக தாகம் ஆகியவை இதன் முதன்மை அறிகுறிகளாகும். நோய் தீவிரமடைதல் தலைச்சுற்றல், மயக்கம், தசைப்பிடிப்பு, கடுமையான சோர்வு மற்றும் சருமம் அல்லது உதடுகள் கருமையாதல் போன்ற மாற்றங்கள் உடலில் தோன்றும்.</p><h2>நோய் ஏற்<strong>படுவதற்கான முத</strong>ன்மை காரணங்கள்</h2><p>உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தவறாகச் செயல்பட்டு, அட்ரினல் சுரப்பியின் வெளி அடுக்கைத் தாக்கி அழிப்பதே இந்நோய் ஏற்படுவதற்கு 70 முதல் 90 சதவீதக் காரணமாக அமைகிறது. இது தவிர, காசநோய் போன்ற தீவிர நோய்த்தொற்றுகள் அட்ரினல் சுரப்பிகளைப் பாதிப்பதாலும் அரிதாக இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்களை விட பெண்களுக்கே இந்நோய் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.</p><h2>வாழ்<strong>நாள் சிகிச்</strong>சை</h2><p>அடிசன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் விடுபட்ட ஹார்மோன்களை ஈடுசெய்யும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான மருத்துவ வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சையின் மூலம் இந்நோயாளிகள் இயல்பான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும்.</p><p>எனினும், மருந்தைச் சரியாக உட்கொள்ளத் தவறினாலோ அல்லது பிற கடுமையான நோய்கள் தாக்கினாலோ உடலின் கார்டிசோல் அளவு திடீரெனக் குறைந்து 'அட்ரினல் கிரைசிஸ்' எனும் ஆபத்தான நிலை ஏற்படக்கூடும். கடுமையான குமட்டல், குழப்பம், காய்ச்சல் மற்றும் திடீர் பலவீனம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்நிலை ஏற்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுவது மிக அவசியமாகும்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கம்: காங்கிரஸ் தலைவர், மகன் கொடூர கொலை - திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-congress-leader-murder-district-chief-and-son-killed-in-shooting-and-sharp-weapon-attack</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-congress-leader-murder-district-chief-and-son-killed-in-shooting-and-sharp-weapon-attack#comments</comments><guid isPermaLink="false">bfee4d71-6911-42e4-aee4-65a7160337d4</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:55:02 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:55:02.331Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,காங்கிரஸ் தலைவர்,கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/vlzpvdwm/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபு சுபியான், அனிசூர் ரஹ்மான்]]></media:title><media:description type="html"><![CDATA[ அபு சுபியான், அனிசூர் ரஹ்மான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/vlzpvdwm/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தில்</a> காங்கிரஸ் தலைவர் மற்றும் அவரின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>மேற்கு வங்க மாநிலம்  நதியா மாவட்ட காங்கிரஸ் தலைவர் அனிசூர் ரஹ்மான் (50). இவரது 24 வயது மகன் அபு சுபியான் வழக்கறிஞராக உள்ளார். </p> <h2>கொலை</h2><p>நேற்று சனிக்கிழமை இரவு 9:30 மணியளவில் காரில் இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, நகாடி ரெயில்வே கேட் அருகே ஒரு கும்பல் இவர்களை வழிமறித்துள்ளது.</p><p>காரை நோக்கி முதலில் துப்பாக்கியால் சுட்ட கும்பல், பின்னர் இருவரையும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.</p><h2>கைது</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளாக கண்டறிப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/national/west-bengal-tmc-leader-ashish-banerjee-dies-by-suicide-amid-corruption-row">திரிணாமுல் காங்கிரசை </a>சேர்ந்த ஹரநகர் கிராம பஞ்சாயத்து தலைவர் பாத்திமா பீவி, சாஜேப் ஷேக் மற்றும் மித்து ஷேக் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கிருஷ்ணாநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 9 நாட்கள் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p> <p>சிறையில் இருக்கும் பாத்திமா பீவியின் கணவர் ஜப்பார் ஷேக் தான் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்ட முக்கிய குற்றவாளி என தெரியவந்துள்ளது.</p><h2>காங்கிரஸ் கண்டனம் </h2><p>இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், சுதந்திர தின நாளில் இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் நடப்பது மக்களின் பாதுகாப்புக்கும், சுதந்திரமாக அரசியல் செய்வதற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான நோய்களுக்கு AI மூலம் தீர்வு: ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி கணிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/ai-solutions-most-diseases-next-10-years-anthropic-ceo-dario-amodei-prediction</link><comments>https://www.maalaimalar.com/news/world/ai-solutions-most-diseases-next-10-years-anthropic-ceo-dario-amodei-prediction#comments</comments><guid isPermaLink="false">885b8827-a71e-481b-883d-9fcb3ee03c29</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:49:39 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:49:39.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AI,செயற்கை நுண்ணறிவு,Anthropic,ஆந்த்ரோபிக்,Dario Amodei,டாரியோ அமோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/rvg4cx51/ANTHRO.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anthropic Dario Amodei]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/rvg4cx51/ANTHRO.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி, மருத்துவத் துறையில் AI ஏற்படுத்தப் போகும் புரட்சி குறித்து மிக முக்கியக் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் மனிதகுலத்தை அச்சுறுத்தும் பெரும்பாலான நோய்களுக்கு AI தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><h2>100 ஆண்<strong>டு மருத்துவ வளர்</strong>ச்சி</h2><p>மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உயிரியல் துறையில் AI தொழில்நுட்பம் புகுத்தப்படுவதன் மூலம், ஆய்வுகளின் வேகம் 10 மடங்கு வரை அதிகரிக்கும் என்று <a href="https://www.maalaimalar.com/news/world/anthropic-ceos-wife-linked-to-jeffrey-epstein-luxury-porn-startup-funding-emails-revealed">டாரியோ அமோடி </a>சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, வழக்கமான மருத்துவ அறிவியலில் 50 முதல் 100 ஆண்டுகள் ஆகக்கூடிய ஆராய்ச்சிகள் மற்றும் மருந்து கண்டுபிடிப்புகள், இனி வரும் 5 முதல் 10 ஆண்டுகளுக்குள்ளேயே சாத்தியமாகும் நிலை உருவாகும் என்று அவர் விளக்கியுள்ளார்.</p><h2>புற்றுநோய் <strong>மற்றும் மரபணு நோய்</strong>களுக்கு முற்றுப்புள்ளி</h2><p>AI தொழில்நுட்பத்தின் துணையோடு புற்றுநோய், அல்சைமர், தொற்றுநோய்கள் மற்றும் சிக்கலான மரபணு சார்ந்த நோய்களுக்கான காரணங்களை எளிதில் கண்டறிந்து அவற்றுக்குத் துல்லியமான சிகிச்சைகளை வடிவமைக்க முடியும். புதிய மருந்துகளைக் கண்டறிவதற்கும், சோதிப்பதற்கும் பல ஆண்டுகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் நிலையில், AI-ன் உதவியால் சில வாரங்களிலேயே புதிய மருந்துகளை வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.</p><h2>மனித ஆயுட்<strong>காலம் அதிகரிக்கும்</strong> வாய்ப்பு</h2><p>நோய்களைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை கணிசமாக உயர்த்தவும் AI உதவும் என்று கணித்துள்ள டாரியோ அமோடி, மனநலம் சார்ந்த கோளாறுகளுக்கும் AI மூலம் சிறந்த தீர்வுகள் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சி மனித சமூகத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு - சீமான் இணையும் புதிய படம்: ‘ஒரு கைதியின் டைரி’ போஸ்டர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/susindran-directs-shanthanu-seeman-new-film-oru-kaithiyin-diary-poster-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/susindran-directs-shanthanu-seeman-new-film-oru-kaithiyin-diary-poster-release#comments</comments><guid isPermaLink="false">1c26f2f5-106d-4aee-82fb-29dd9d94f97b</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:33:14 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:33:14.478Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shanthanu Bhagyaraj,Seeman,Suseenthiran,சீமான்,OruKaidhiyinDiary,ஒருகைதியின்டைரி,சாந்தனு பாக்யராஜ்,KRG10</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/fvaiifou/Shanthnu-Bhagyaraj-Seeman" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shanthnu Bhagyaraj - Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/fvaiifou/Shanthnu-Bhagyaraj-Seeman?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81">சாந்தனு பாக்யராஜ் </a>மற்றும் -அரசியல் பிரமுகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான் </a>ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. </p><p>கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ‘ஒரு கைதியின் டைரி’ எனப் பெயரிடப்பட்டு, அதன் அதிரடியான போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>மிரட்டலான போஸ்டர்</h2><p>தயாரிப்பு நிறுவனமான KRG குரூப்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. <strong>"ஒரு மனிதன், ஒரு கதை, ஒரு சகாப்தம். இதுவே ஒரு கைதியின் டைரி!"</strong> என்ற அழுத்தமான வரிகளுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு எகிற வைத்துள்ளது.</p><h2>சுசீந்திரன் - சாந்தனு - சீமான் கூட்டணி</h2><p>'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' போன்ற யதார்த்தமான மற்றும் விறுவிறுப்பான கதைகளை இயக்கி தனக்கென ஒரு முத்திரை பதித்த இயக்குனர் சுசீந்திரன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். </p><p>இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜும், மிக முக்கிய ஆளுமையான சீமானும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களின் கூட்டணி திரையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆர்வம் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">ஒரு மனிதன், ஒரு கதை, ஒரு சகாப்தம்.<br>இதுவே ஒரு கைதியின் டைரி! <br><br>Presenting the motion poster of <a href="https://x.com/hashtag/KRG10?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KRG10</a> - <a href="https://x.com/hashtag/OruKaidhiyinDiary?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#OruKaidhiyinDiary</a><br><br> <a href="https://t.co/Py9uSmfPT0">https://t.co/Py9uSmfPT0</a><br><br>Starring <a href="https://x.com/imKBRshanthnu?ref_src=twsrc%5Etfw">@imKBRshanthnu</a> <a href="https://x.com/SeemanOfficial?ref_src=twsrc%5Etfw">@SeemanOfficial</a> <br><br>Produced By <a href="https://x.com/KRGOffl?ref_src=twsrc%5Etfw">@KRGOffl</a> <a href="https://x.com/hashtag/KannanRavi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KannanRavi</a><br>Co Produced By <a href="https://x.com/hashtag/DeepakRavi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DeepakRavi</a><br><br>Directed by <a href="https://x.com/hashtag/suseenthiran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#suseenthiran</a> <a href="https://t.co/RsK1t2hJ6W">pic.twitter.com/RsK1t2hJ6W</a></p>&mdash; KANNAN RAVI GROUPS (@KRGOffl) <a href="https://x.com/KRGOffl/status/2088983615048999078?ref_src=twsrc%5Etfw">August 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>தலைப்பால் ஈர்க்கப்பட்ட பழைய நினைவு</h2><p>1985-ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில், பாக்யராஜ் கதையமைப்பில் வெளியான மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் தலைப்புதான் 'ஒரு கைதியின் டைரி'. </p><p>தற்போது அதே தலைப்பை பாக்யராஜின் மகனான சாந்தனு நடிக்கும் படத்திற்குப் பயன்படுத்தியிருப்பது சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p>பழைய படத்திற்கும் இதற்கும் கதைக்கள ரீதியாக ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதும் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.</p><h2>தயாரிப்பு குழு</h2><p>இத்திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 'கண்ணன் ரவி குரூப்ஸ்' சார்பில் கண்ணன் ரவி பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். </p><p>இவருடன் இணைந்து தீபக் ரவி இணை தயாரிப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்நிறுவனத்தின் 10-வது மைல்கல் திரைப்படமாக இது உருவாவது குறிப்பிடத்தக்கது.</p><h2>அடுத்தடுத்த அறிவிப்புகள்</h2><p>தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. </p><p>படத்தின் படப்பிடிப்பு விபரங்கள், இசையமைப்பாளர், பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படம் வெளியாகும் தேதி குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>2029 நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றத்தை விரும்பும் 64 கோடி வாக்காளர்கள்: அண்ணாமலை கணிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/64-crore-voters-seeking-change-in-2029-parliamentary-election-annamalai-prediction</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/64-crore-voters-seeking-change-in-2029-parliamentary-election-annamalai-prediction#comments</comments><guid isPermaLink="false">094f41f4-7739-48e5-9c94-db94916638d1</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:28:18 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:28:18.560Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,நாடாளுமன்றம்,parliament,annamalai,We the Leaders,வீ தி லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/zoe179cy/ana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/zoe179cy/ana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், ஆகஸ்ட் மாதத்தைச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிப்பதன் ஒரு பகுதியாக, சென்னையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.</p><p>பேரணியின் நிறைவில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue">அண்ணாமலை</a>, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வாக்காளர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் களம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், வரவிருக்கும் 2029 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் குறித்த அண்ணாமலையின் கணிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. </p><h2>அ<strong>ரசியல் மாற்றம்</strong></h2><p>செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றிய அண்ணாமலை, 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் கிட்டத்தட்ட 64 கோடி வாக்காளர்கள் பெரும் மாற்றத்தை விரும்புவார்கள் என்று குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், மக்களின் தேவைகள் மற்றும் எதிர்காலக் கனவுகளை மையமாகக் கொண்டு வாக்காளர்கள் தங்களது தீர்ப்பை அளிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p><h2>எதி<strong>ர்கால அரசியல்</strong> </h2><p>பாரம்பரிய அரசியல் வழிகளிலிருந்து விலகி, வெளிப்படைத்தன்மை மற்றும் தொலைநோக்குக் பார்வை கொண்ட தலைமைக்கே மக்கள் முன்னுரிமை அளிப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டினார். இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் பங்களிப்பு இந்த மாற்றத்தில் மிக முக்கியமான காரணியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், 2029 தேர்தல் இந்திய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என உறுதியாகத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச படங்களில் முதலீடு செய்ய எப்ஸ்டீனை அணுகிய ஆந்திரோபிக் சிஇஓவின் மனைவி  - வெளியான அதிர்ச்சி இமெயில் </title><link>https://www.maalaimalar.com/news/world/anthropic-ceos-wife-linked-to-jeffrey-epstein-luxury-porn-startup-funding-emails-revealed</link><comments>https://www.maalaimalar.com/news/world/anthropic-ceos-wife-linked-to-jeffrey-epstein-luxury-porn-startup-funding-emails-revealed#comments</comments><guid isPermaLink="false">8c394e17-6a33-4670-845c-1804374a3917</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:12:17 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:12:17.490Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jeffrey Epstein,ஜெப்ரி எப்ஸ்டீன்,Epstein files,எப்ஸ்டீன் கோப்புகள்,ஆந்திரோபிக்,Anthropic</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/pjjocl52/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  எப்ஸ்டீன்]]></media:title><media:description type="html"><![CDATA[  எப்ஸ்டீன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/pjjocl52/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த பாலியல் குற்றவாளி  <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D">ஜெப்ரி எப்ஸ்டீன்</a> மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/anthropic">ஆந்திரோபிக் </a>ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிஇஓ டேரியோ அமோடியின்  மனைவி கேமி கிளார்க் இடையே வணிகத் தொடர்பு இருந்ததாக  தி வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  </p><h2>எப்ஸ்டீன்</h2><p>அமெரிக்க பெரும் புள்ளிகளுடன் தொடர்பில் இருந்த எப்ஸ்டீன் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி அவர்களுக்கு அனுப்பும் வேலையை செய்து வந்தவர் ஆவார். இதற்கென மிகப்பெரிய நெட்வொர்க், தனித் தீவு ஆகியவற்றை எப்ஸ்டீன் கொண்டிருந்தார்.</p><p>கடந்த 2019 இல் அவர் நியூ யார்க் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தொடர்பில் இருந்தவர்களுடனான இமெயில் மற்றும் புகைப்படங்களை ஆவணப்படுத்தியிருந்தார். அவை எப்ஸ்டீன் பைல்ஸ் என அழைக்கப்படுகின்றன. அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படி அவை பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.</p> <h2>ஆபாசப் பட நிறுவனம்</h2><p>டேரியோ அமோடியின் மனைவி கேமி கிளார்க் 2010 இல் Eddice என்ற பெண்களுக்கான சொகுசு ஆபாசப் பட - Luxury Porn ஸடார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியிருந்தார்.</p><p>கேமி கிளார்க் மற்றும் அவரது பங்குதாரர் இணைந்து Eddice ஸ்டார்ட் நிதி திரட்டி வந்தனர்.</p> <h2>வால் ஸ்ட்ரீட் செய்தி</h2><p>வால் ஸ்ட்ரீட் செய்தியின்படி, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜான் ப்ரோக்மேன் என்பவரால் கேமி கிளார்க் எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.</p><p>எப்ஸ்டீன் 2008லேயே பாலியல் குற்றவாளியாக தண்டனை பெற்றவர் என்று தெரிந்தும் அவரை கிளார்க் அணுகியுள்ளார்.</p><p>கிளார்க் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில், 'American Girl in Paris' உள்ளிட்ட தலைப்பிட்ட படங்களின் திரைக்கதைகளை அனுப்பி நிதி முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.</p><p>2012 மார்ச்சில் கிளார்க் மீண்டும் முதலீடு பற்றி கேட்டபோது, "Can't do TV sex" என்று கூறி எப்ஸ்டீன் அந்த முதலீட்டை நிராகரித்தார். எப்ஸ்டீன் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.</p> <h2>கேமி கிளார்க் யார்?</h2><p>கேமி கிளார்க் ஆந்திரோபிக் நிறுவனத்தில் எந்த அதிகாரப்பூர்வப் பொறுப்பிலும் இல்லை. ஆனால், அவர் சிஇஓவான தனது கணவர் டேரியோ அமோடெய்க்கு முக்கிய ஆலோசகராகவும், முதலீட்டாளர்களை ஒருங்கிணைக்கும் நபராகவும் செயல்படுகிறார்.</p><p>அமோடெயைத் திருமணம் செய்வதற்கு முன்பு, 2014ஆம் ஆண்டு முதல் சுமார் 3 ஆண்டுகள் கூகுள் முன்னாள் சிஇஓ எரிக் ஸ்மித்துடன் கிளார்க் உறவில் இருந்தார்.</p><p>2016ல் கிளார்க் தான் டேரியோ அமோடெயை எரிக் ஸ்மித்திற்கு அறிமுகப்படுத்தினார்.</p><p>2021ல் அமோடெய் மற்றும் அவரது சகோதரி டேனியேலா சேர்ந்து ஆந்திரோபிக் நிறுவனத்தைத் தொடங்கியபோது, எரிக் ஸ்மித் அந்த நிறுவனத்தில் அதிக முதலீட்டை செய்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வாரணாசி விமான நிலையத்தில் சோதனையின்போது வெடித்த துப்பாக்கி.. குண்டடிபட்டு 2 பேர் காயம் </title><link>https://www.maalaimalar.com/news/national/varanasi-airport-accidental-gunfire-two-security-staff-injured-during-firearm-check</link><comments>https://www.maalaimalar.com/news/national/varanasi-airport-accidental-gunfire-two-security-staff-injured-during-firearm-check#comments</comments><guid isPermaLink="false">697f8b2b-6ea2-4df2-82c8-51a68ab73f25</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:36:33 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:36:33.659Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமான நிலையம்,துப்பாக்கிச்சூடு,வாரணாசி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/8p1wvxgj/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/8p1wvxgj/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள<a href="https://www.maalaimalar.com/news/national/mumbai-airport-bomb-hoax-causes-flight-delay"> விமான நிலையத்தில்</a> சோதனையின்போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். </p><h2></h2><h2>துப்பாக்கியுடன் பயணி வருகை</h2><p>இன்று, காலை சுமார் 9.30 மணியளவில் உத்திரப் பிரதேச மாநிலம் ஆசம்காரை சேர்ந்த ஒரு பயணி, தனது மனைவியுடன் வாரணாசியில் இருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்க வந்திருந்தார்.</p><p>அவர் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அடங்கிய மேகசினை உடன் எடுத்து வந்திருந்தார்.</p><p>விமானத்தில் ஏறுவதற்கு முன் பாதுகாப்பு விதிகளின்படி அவரிடம் துப்பாக்கி இருப்பதை அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவித்தார்.</p> <h2>சோதனை</h2><p>வாரணாசி விமான நிலைய இயக்குநர் புனீத் குப்தா தெரிவித்த தகவலின்படி, பயணியின் துப்பாக்கி மற்றும் அதற்கான உரிம ஆவணங்களை விமான நிலையப் பாதுகாப்பு ஊழியர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்தது.</p><p>துப்பாக்கியில் இருந்து வெளிவந்த தோட்டா முதலில் தரையில் பட்டு, பின்னர் அங்கிருந்த இரண்டு பாதுகாப்பு ஊழியர்களின் மீது பாய்ந்தது.</p> <h2>காயம்</h2><p>தனியார் நிறுவனத்தை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவரின் தொடையிலும், ஆண் ஊழியர் ஒருவரின் கையிலும் தோட்டா பாய்ந்து காயம் ஏற்பட்டது.</p><p>காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருவரின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p> <h2>விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, துப்பாக்கி வெடித்ததற்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனப்பகுதியில் நடந்த சம்பவத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் - பிரேமலதா!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-demands-unbiased-investigation-into-karnataka-forest-shooting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-demands-unbiased-investigation-into-karnataka-forest-shooting#comments</comments><guid isPermaLink="false">36c8bc80-23cd-431c-adff-3170746de036</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:22:17 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:22:17.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Forest Department,DMDK,பிரேமலதா,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/jw9a5mc3/Premalatha" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/jw9a5mc3/Premalatha?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநிலம் ஹானூர் அருகே மரிமங்கலம் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கூறி வனத்துறையினர் நடத்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-forest-shooting-three-tamil-men-killed-by-forest-officials-protests-erupt-over-alleged-unjust-firing">துப்பாக்கிச் சூட்டில் </a>மூன்று தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தேமுதிக பொது செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மனித உயிர்களை மதிக்காமல் நடந்த இந்த கொடூரத்திற்கு உடனடியாக விசாரணை மற்றும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><h2>இது குறித்து பிரேமலதா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக மாநிலம்</a> ஹானூர் அருகே உள்ள மரிமங்கலம் பகுதியில், மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்களான அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் எற்படுத்தியுள்ளது.</p><p>வேட்டையில் ஈடுபட்டதாகவும், வனத்துறை அலுவலர்களைத் தாக்கியதாகவும் கூறப்படும் நிலையில், மூன்று பேரின் உயிரையும் பறிக்கும் அளவிற்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. </p><p>மனித உயிர்களின் மதிப்பை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் கொடூரச் சம்பவத்தை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.</p><p>சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள வனத்துறையினர், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உயிரைப் பறிக்கும் வகையில் செயல்பட்டிருந்தால், அதற்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும், உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கும் தமிழக அரக உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><p>தமிழ்நாடு-கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், உரிமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இரு மாநில அரசுகளின் கடமையாகும். </p><p>எனவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>தமிழர்களின் உயிரிழப்பை சாதாரணமாகக் கடந்து செல்லாமல், இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். </p><p>இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை கர்நாடக அரக மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துக்கிறோம் என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 2வது நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இந்தியா 460 ரன்கள் 
</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-vs-sri-lanka-test-devdutt-padikkal-ton-puts-india-at-strong-4609</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-vs-sri-lanka-test-devdutt-padikkal-ton-puts-india-at-strong-4609#comments</comments><guid isPermaLink="false">f7e9d795-b5cb-47e8-90f3-73c36e4dcf7e</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:13:45 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:13:45.620Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெஸ்ட் தொடர்,Test series,இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்,India-Sri Lanka Test series</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/q3pm2lb0/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தேவ்தத் படிக்கல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தேவ்தத் படிக்கல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/q3pm2lb0/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. </p><p>காலே நகரில் நேற்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-288-for-2-wickets-in-first-innings-for-end-of-first-day-against-srilanka-first-test">முதல்நாள் ஆட்டநேர முடிவில்</a> இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் சேர்த்திருந்தது.</p> <h2>இரண்டாம் நாள் ஆட்டம்</h2><p>இன்றைய ஆட்டம் மழை காரணமாக தாமதமான நிலையில் மீண்டும் தொடங்கியது.</p><p>படிக்கல்லும், பன்ட்டும் இன்று 2வது நாள் ஆட்டத்தை துவங்கினர். பன்ட் 39 ரன்னில் அவுட்டான பிறகு, கேஎல் ராகுல் பேட் செய்ய வந்தார்.</p><p>கேஎல் ராகுல், இன்றைய ஆட்டத்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்து அவுட்டானார்.</p><p>பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் அரைசதம் கடந்து 51 ரன்கள் சேர்த்தார்.</p><p>இலங்கை அணியின் அறிமுக வீரரான கேஷர நுவாந்தா, ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><p>இந்த ஆட்டத்தில் தேவ்தத் படிக்கல் தனது டெஸ்ட் வாழ்க்கையின் முதல் சதத்தைப் பதிவு செய்து, 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 230 பந்துகளில் 167 ரன்கள் குவித்தார்.</p><p>இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன்கள் எடுத்துள்ளது.</p> <h2>படிக்கல் சாதனை</h2><p>இலங்கைக்கு எதிராக 3வது வரிசை வீரராக களமிறங்கி 150 ரன்கள் எடுத்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை தேவ்தத் படிக்கல் படைத்துள்ளார். </p><p>முன்னதாக 2009 இல் ராகுல் டிராவிட் 177 ரன்கள் எடுத்து முதலிடத்திலும், 2017ஆம் ஆண்டு புஜாரா 153 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>&apos;மேகதாது விவகாரத்தில் நேர்மையான, தவறு செய்யாத மோடியை இன்றும் நான் நம்புகிறேன்&apos;- அண்ணாமலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue#comments</comments><guid isPermaLink="false">9a118262-c241-4b42-9206-0cbb0718637f</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:12:50 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:12:50.975Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்தா,அண்ணாமலை,Modi,Amit Shah,மேகதாது,annamalai,மோடி,We the Leaders</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/0fh6eip2/annamaka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modi-Annamalai   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/0fh6eip2/annamaka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய அண்ணாமலை, மேகதாது அணை விவகாரம், மத்திய அரசுடனான தொடர்பு, தற்போதைய ஆட்சிமுறை மற்றும் தனது அரசியல் நகர்வுகள் குறித்து வெளிப்படையாக கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.</p><h2>மேகதாது விவ<strong>காரத்தில் பிரத</strong>மர் மோடிக்கு ஆதரவு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government">மேகதாது அணை </a>விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, இதில் பிரதமர் நரேந்திர மோடி நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்பட்டுள்ளார் என்றும், அவர் மீதான தனது நம்பிக்கை இன்றளவும் தொடர்வதாகவும் தெரிவித்தார். கர்நாடகாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வரும் சூழலில், எல்லைக்குச் சென்று பச்சைத் துண்டு அணிந்து போராட்டம் நடத்துவது, பேருந்துகளை சேதப்படுத்துவது போன்ற விளம்பர அரசியலைத் தாம் ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய போலித்தனமான அரசியலால் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று விமர்சித்தார்.</p><h2>சுற்றுச்சூழ<strong>ல் இலக்கு</strong> </h2><p>சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக, நடப்பு மாதத்திற்குள் 20 லட்சம் மரக்கன்றுகளை நடுவதுதான் தங்கள் அமைப்பின் முதன்மை இலக்கு எனத் தெரிவித்த அண்ணாமலை, தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள அமைச்சர்கள் மீது முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>டெல்லி பய<strong>ணம் பற்றிய வி</strong>ளக்கம்</h2><p>தலைவர்கள் இனி டெல்லியிலோ, புனித ஜார்ஜ் கோட்டையிலோ, போயஸ் தோட்டத்திலோ, கோபாலபுரத்திலோ அல்லது பனையூரிலோ உட்கார்ந்து முடிவுகளை எடுக்கும் காலம் முடிந்துவிட்டது என்று அவர் அழுத்தமாகக் கூறினார். </p><figure><img alt=" Amit Shah -Annamalai   " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/kwxmttr3/amit.jpg" /></figure><p>மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தம்மை டெல்லிக்கு அழைத்து பொறுப்பேற்கச் சொன்னது உண்மைதான் எனக் குறிப்பிட்ட அவர், தம்மீது அல்லது பா.ஜ.க மீது சந்தேகம் இருப்பவர்கள் நேரடியாக அமித்ஷாவிடமே சென்று கேட்டுத் தெளிவுபெறலாம் என்று சவால் விடுத்தார்.</p><h2>ஒரு வருட <strong>கால அவகா</strong>சம்</h2><p>தான் பா.ஜ.கவின் ‘பி’ டீமாகச் செயல்படுகிறேனா அல்லது கட்சியின் வரம்புகளை மீறி இயங்குகிறேனா என்ற பல்வேறு விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மாற்றத்திற்கு ஒரு வருட கால அவகாசம் அளித்துச் செயல்பட விட வேண்டும் என்றார். இந்த அரசு தவறு செய்தால் தட்டிக் கேட்போம், நல்ல விஷயங்களைச் செய்தால் பாராட்டுவோம், சரியாக ஆட்சி செய்யத் தவறினால் அரசை வீழ்த்துவோம் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகள் மூடல்: த.வெ.க அரசிற்கு அண்ணாமலை பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government#comments</comments><guid isPermaLink="false">09be4588-48bb-4ad3-bd99-9a8271185fcf</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:18:58 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:18:58.434Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>vijay,அண்ணாமலை,டாஸ்மாக் கடைகள்,tasmac shops,annamalai,tvk government,த.வெ.க அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3cfo6zbm/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai- vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3cfo6zbm/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் இருந்து இயற்கை வளங்கள், நிலம், நீர் மற்றும் வனப்பாதுகாப்பை வலியுறுத்தி அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் உணர்வுப்பூர்வமாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்சியில் பேசிய அண்ணாமலை தவெக அரசை பாராட்டியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-beaten-to-death-is-tvk-govt-trying-to-cover-up-asks-mp-kanimozhi">தமிழக வெற்றிக் கழகம்</a> (த.வெ.க) தலைமையிலான புதிய அரசு அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாஜக முக்கியத் தலைவர் அண்ணாமலை த.வெ.க அரசின் சில குறிப்பிட்ட செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்று குறுகிய காலமே ஆகியுள்ளதால், அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.</p><h2>டாஸ்<strong>மாக் கடைகள்</strong> மூடல்</h2><p>பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளை த.வெ.க அரசு அதிரடியாக மூடியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியது என்றும், மக்கள் நலன் சார்ந்த இத்தகைய முடிவுகள் பாராட்டத்தக்கவை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</p><h2>பொறு<strong>மை காக்க வலியுறுத்த</strong>ல்</h2><p>த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால், உடனடியாக முடிவுகளுக்கு வர இயலாது என்று கூறிய அண்ணாமலை, அரசின் அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளின் அமலாக்கத்தைப் பொறுத்திருந்து கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருப்பினும், நன்மைகளை ஆதரிக்கும் அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம் போல வாய்மூடி இருக்கக்கூடாது.. கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-forest-shooting-three-tamil-men-killed-by-forest-officials-protests-erupt-over-alleged-unjust-firing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-forest-shooting-three-tamil-men-killed-by-forest-officials-protests-erupt-over-alleged-unjust-firing#comments</comments><guid isPermaLink="false">e5986a56-482a-401b-b017-f97d0b2c649a</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:10:47 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:10:47.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,மு.க. ஸ்டாலின்,Tamil Nadu government,Forest Department,M.k. stalin,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l0q9j2jk/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  மு.க.ஸ்டாலின் 

]]></media:title><media:description type="html"><![CDATA[  மு.க.ஸ்டாலின் 

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l0q9j2jk/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கொலை </h2><p>கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இதில் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p> <h2>காரணம்</h2><p>மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.</p><p>கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies">பேச்சுவார்த்தையை </a>அடுத்து உடல்களை வாங்க சம்மதித்துள்ளனர்.  </p> <p>உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே 3 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.</p> <h2>ஸ்டாலின் கண்டனம்</h2><p>அந்த வகையில் திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/mk-stalin">மு.க. ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,</p><p>"கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.</p> <p>குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது.</p><p>அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.</p> <p>மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.</p><p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம்: லஞ்ச வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-row-ramnathapuram-revenue-inspector-under-graft-probe-given-best-employee-award-later-withdrawn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-row-ramnathapuram-revenue-inspector-under-graft-probe-given-best-employee-award-later-withdrawn#comments</comments><guid isPermaLink="false">f845adee-a555-4331-baee-b546ce27480c</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:48:09 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:48:09.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,bribery,Ramanathapuram,Corruption,ராமநாதபுரம்,ஊழல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/je7tvl2c/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிறந்த பணிக்கான சான்றிதழ் பெறும் கார்த்திகேயன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறந்த பணிக்கான சான்றிதழ் பெறும் கார்த்திகேயன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/je7tvl2c/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேற்று நாட்டின் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-speech-error-and-flag-row-ev-sales-misquote-and-inverted-tricolour-spark-controversy-at-independence-day-event">80 வது சுதந்திர தினம்</a> நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கோட்டை கொத்தளத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">முதல்வர் விஜய் </a>கொடியேற்றினார்.</p> <h2>சிறந்த ஊழியர்கள்</h2><p>மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டன.</p><p>அந்த வகையில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழாவில் சிறந்த பணிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.</p> <h2>விருது</h2><p>நகராட்சி தலைவர் கார்மேகம், நகராட்சி பொறுப்பு ஆணையர் சுகுமாறன் ஆகியோர் சிறந்த பணிக்கான சான்றிதழ்களை நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கினர்.</p><p>இதில் நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவருக்கும் சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.</p> <h2>சர்ச்சை</h2><p>ஆய்வாளர் கார்த்திகேயன் கணக்கில் வராத பணத்தை வைத்திருந்த வழக்கு ராமநாதபுரம் லஞ்ச ஊழல் ஒழிப்பு துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு சிறந்த பணியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ஊழல்</h2><p>கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி லஞ்ச ஊழல் ஒழிப்பு துறை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் நகராட்சியில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 3 லட்சத்து 60 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>கார்த்திகேயன் வங்கி கணக்கில் கடந்த 3 ஆண்டுகளில் ஜி பே மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் பண பறிமாற்றம் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டது.</p><p>இதையடுத்து முறைகேடான வழியில் பணம் பரிமாற்றம் நடந்ததாக கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வரும் நிலையில் கார்த்திகேயனுக்கு சிறந்த பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விவகாரம் கண்டனங்களை குவித்த நிலையில் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை திரும்ப பெற்றுவிட்டதாக நகராட்சி பொறுப்பு ஆணையர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கி விழுந்து காவலர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் விஜய் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-officer-dies-after-fainting-at-independence-day-parade</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-officer-dies-after-fainting-at-independence-day-parade#comments</comments><guid isPermaLink="false">5516ca60-728f-4167-8101-0cf5b2b525db</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:41:42 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:41:42.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,காவலர் உயிரிழப்பு,Police constable dies</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7151n5lw/cm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7151n5lw/cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில்  நேற்று நடைபெற்ற 80-வது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-cm-vijay-hoists-tricolour-at-fort-st-george">சுதந்திர தின விழா </a>அணிவகுப்புப் பணியின்போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த ஆவடி சிறப்புக் காவல் படை இசைக்குழு காவலரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார்.</p><h2>அணிவகுப்புப் ப<strong>ணியின்போது நேர்ந்</strong>த சோகம்</h2><p>சென்னை நேற்று (ஆகஸ்ட் 15) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற  சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலரான தர்மராஜ் (வயது 56) பங்கேற்றுத் தன் கடமையை ஆற்றி வந்தார். அணிவகுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில், எதிர்பாராதவிதமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார்.</p><h2>மருத்துவமனையி<strong>ல் பலனின்றி</strong> முடிந்த சிகிச்சை</h2><p>மயக்கமடைந்து கீழே விழுந்த காவலர் தர்மராஜை, அங்கிருந்த சக காவலர்களும் மருத்துவக் குழுவினரும் உடனடியாக மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் விழாவுக்கு வந்திருந்தோரிடையேயும் சக காவலர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>முதலமை<strong>ச்சர் நிதியு</strong>தவி </h2><p>காவலர் தர்மராஜின் மறைவு செய்தி அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது வேதனையை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது திடீரென மயங்கி விழுந்து சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். </p><p>கடமை உணர்வுடன் பணியாற்றிய முதல்நிலைக் காவலர் தர்மராஜின் மறைவு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்த முதலமைச்சர், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.30 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சோனியா காந்தி செய்த பாவத்தை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - அமித் ஷா 
</title><link>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-row-amit-shah-slams-sonia-gandhi-over-gesture-during-anthem</link><comments>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-row-amit-shah-slams-sonia-gandhi-over-gesture-during-anthem#comments</comments><guid isPermaLink="false">31932a92-6497-472b-973c-21979f9f4fdd</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:23:21 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:23:21.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Amit Shah,அமித் ஷா,sonia gandhi,சோனியா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/i1rxle6d/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  Amit Shah, Sonia Gandhi]]></media:title><media:description type="html"><![CDATA[  Amit Shah, Sonia Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/i1rxle6d/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>வாஜ்பாய் நினைவு தினம் </h2><p>இன்று (ஆகஸ்ட் 16) முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம் ஆகும். இதையொட்டி  ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் அடல் பிஹாரி வஜ்பாயின் 21 அடி உயரச் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/amit-shah">அமித் ஷா</a> திறந்து வைத்தார். </p><p>இந்த நிகழ்வில் பேசிய அமித் ஷா, நேற்று 80வது சுதந்திர தின நிகழ்வின்போது காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடப்படும் சோனியா காந்தி செய்த சைகை குறித்து விமர்சித்துள்ளார்.</p> <h2>சோனியா சைகை</h2><p>சோனியா காந்தி அந்நிகழ்வில் வந்தே மாதரம் பாடப் படும்போது கையை உயர்த்தி சைகை செய்ய, அது அவர் வந்தே மாதரத்தை பாதியில் நிறுத்த சொல்வது போல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது.</p><p>ஆனால் <a href="https://www.maalaimalar.com/news/national/bjp-claims-sonia-gandhi-tried-to-stop-singing-of-vande-mataram-congress-denies">காங்கிரஸ் தரப்பு அளித்த விளக்கத்தில்</a>, மூத்த தலைவர் கார்கே நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்ததால் அவர் அமர்வதற்காக நாற்காலி எடுத்துச் வரச் சொல்லியே சோனியா அச்சைகையை செய்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>அமித் ஷா சாடல்</h2><p>இந்நிலையில் இன்றைய நிகழ்வில் பேசிய அமித் ஷா, "சோனியா ஜி, நாட்டின் 140 கோடி மக்களும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>நீங்கள் செய்த இந்த பாவத்தை இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்துவது பற்றி ஒருவரால் எப்படி நினைக்க முடியும்? காங்கிரஸ் தலைவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்." என பேசியுள்ளார்.</p> <p>பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல், சுதந்திரப் போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கான தியாகிகள் தூக்குமேடை ஏறும்போது பாடிய தாரக மந்திரம் என்றும், அந்தப் பாடலை முழுமையாகப் பாடாமல் அவமதிப்பது சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>அரசு நிகழ்வுகளில் வந்தே மாதரம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு நடந்து முடிந்த</p>]]></content:encoded></item><item><title>நயினாருக்கு நாவடக்கம் தேவை: சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-needs-to-watch-his-tongue-cpm-urges-legal-action</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-needs-to-watch-his-tongue-cpm-urges-legal-action#comments</comments><guid isPermaLink="false">79884528-daef-4639-9c91-42d644f19265</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:15:54 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:15:54.179Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Shanmugam,CPM,பெ.சண்முகம்,சிபிஎம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l2cnhqts/cpm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran  CPM  Shanmugam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l2cnhqts/cpm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினரைக் குறிவைத்துத் தனிப்பட்ட முறையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொதுவெளியில் கண்ணியம் மீறிப் பேசிய இந்த உரை, தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பையும் பல்வேறு தலைவர்களின் கண்டனங்களையும் அலை அலையாகப் பெற்று வருகிறது.</p><h2>எ<strong>ல்லை மீறிய பேச்சுக்கு</strong> எழுந்த கடும் எதிர்ப்பு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran">நயினார் நாகேந்திரனின்</a> இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இது குறித்து வெளியிட்ட காரசாரமான அறிக்கையில், பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் கண்ணியத்துடனும் பொறுப்புடனும் பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல் நயினார் நாகேந்திரன் நடந்து கொண்டுள்ளார் என்று சாடியுள்ளார். </p><p>பெண்களை மதிப்பது என்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத ஒன்று என்பது இதன்மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்றும், நயினாருக்கு நாவடக்கம் தேவை என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><h2>சட்டப்ப<strong>டி நடவடிக்கை எடுக்கக் கோரி</strong>க்கை</h2><p>அரசியல் நாகரிகத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் செயல்பட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அவதூறு பேச்சுகள் தமிழ்நாட்டின் ஆரோக்கியமான அரசியல் சூழலைச் சீர்குலைக்கும் என்பதால், அரசும் காவல் துறையும் இதில் தலையிட்டுத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>