<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 20 Aug 2026 05:47:45 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: சவுதியில் மயிலாடுதுறை மீனவர் சுட்டுக்கொலை - சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
 - 20 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-august-2026#comments</comments><guid isPermaLink="false">93b3f2e7-5044-4111-8cf3-3a4d554048e3</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:51:46 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:42:32.852Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/iwp8qd2p/speaker.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/iwp8qd2p/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டாசு ஆலை உள்ளிட்ட விவகாரத்தில் பிரச்சனை முடிந்தும் போராட்டம் நடத்துவதால் தான் அரசியல் என்கிறோம் - அமைச்சர் கீர்த்தனா</p><h2>பட்டாசு ஆலை விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் - திமுக எல்எல்ஏ தங்கம் தென்னரசு</h2><p>பட்டாசு ஆலை உரிமம் ரத்து, சீல் விவகாரத்தில் திமுக மட்டுமல்ல பொது அமைப்புகளும் போராட்டம் நடத்துகிறது.</p><p>விதிமுறை மீறி ஆலைகளை ஆய்வு செய்வதை யாரும் தடுக்கவில்லை, ஆனால் சிறு ஆலையையும் ஆய்வு செய்வதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.</p><p>முந்தைய காலத்தில் ஆண்டு கணக்கில் பதில் இல்லா கேள்விகளுக்கு உள்ளது, முந்தைய காலம் என்றதும் பயப்பட வேண்டாம் - சபாநாயகர்</p><p>மின்கட்டண உயர்வு, மின் கணக்கீடு முறையில் குழப்பம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி</p><p>கொள்கை விளக்க குறிப்பு நள்ளிரவில் வருகிறது. 3 நாட்களுக்கு முன் கொடுத்தால் படித்துவிட்டு பேசலாம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>கேள்விகள் கொடுத்து பல நாட்கள் ஆகிறது, அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம்.</p><p>குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காத அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்.</p><p>உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீண்ட நாட்களாக பதிலளிக்காமல் தாமதப்படுத்துவது அவையை அவமதிக்கும் செயல் - திமுக எம்எல்ஏ ஆஸ்டின்</p> <p>விவசாயிகளுக்கு எப்போதும் தவெக அரசு துணை நிற்கும். என்எல்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி, நிலம் கொடுத்த விவசாயிகள் பிள்ளைகளுக்குக்கூட பணி வழங்கவில்லை.</p><p>நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளை பணியில் சேர்த்துக்கொள்ள எந்த என்எல்சி தேர்வு வைக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>மயிலம் தொகுதியில் மூடப்பட்ட மதுக்கடையை எந்தவித அறிவிப்பும் இன்று மீண்டும் திறந்துள்ளனர்.</p><p>செஞ்சியில் மூடிவிட்டு தற்போது கிராம பகுதியில் திறந்துள்ள டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை தேவை - எம்எல்ஏ சிவி சண்முகம்</p><p>சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 மாதமாக ஆந்திராவில் உள்ளதால் அவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குங்கள். </p><p>ஆந்திராவில் மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட 7 விசைப்படகுகளையும் ஆந்திர அரசு விடுவிக்கவில்லை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>ஆந்திரா - தமிழக மீனவர்கள் மோதல் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சட்டசபையில் விளக்கம்</p><p>ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை.</p><p>திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு. தவெக ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு.</p><p>தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கம் வழங்க நடவடிக்கை.</p><p>வெளிநாடுகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் - அமைச்சர் வன்னி அரசு</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>மாணவனுக்கு நிதி கொடுத்தது திமுக ஆட்சியில் என்பது ஒத்துக்கொள்கிறேன்.</p><p>கடந்த ஆட்சியில் தான் மாணவனுக்கு நிதி வழங்கப்பட்டது என சரியாக குறிப்பிட்டு தான் பேசி உள்ளேன்.</p><p>தான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னர் தான் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 3 மடங்கு உயர்வு.</p><p>500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் குறைந்த நபர்களுக்கு தான் திமுக வழங்கியது. நான் துறைக்கு வந்த பின் 3 மடங்கு உயர்வு.</p> <p>மற்ற மாணவர்களுக்கு வந்து விட்டது, தனக்கு நிலுவை தொகை வரவில்லை என்றே மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.</p><p>திமுக ஆட்சியில் நிதி தரப்பட்டதை தான் அமைச்சர் தேதி வாரியாக வாசித்தார், குற்றச்சாட்டுக்கு பதில் தரவில்லை  - கோவி செழியன்</p> <p>இதுவரை மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்நாண்டு உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்பிக்காமல் மாணவர் குற்றச்சாட்டு.</p><p>தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் ரூ.135 கோடி வழங்கப்பட்டுள்ளது.</p><p>முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை - அமைச்சர் வன்னி அரசு</p><p>10 மாதங்கள் ஆகியும் மாணவர் தனது ஆவணங்களை பதிவு செய்யவில்லை.</p><p>அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.</p><p>மாணவருக்கு அரசு வழங்கி உள்ள நிதியை தேதி வாரியாக குறிப்பிட்டு வன்னி அரசு பதில்</p><p>அம்பேத்கர் அயலக உதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு.</p><p>மலேசியாவில் பயின்று வரும் மாணவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் வன்னி அரசு பதில்</p> <p>ஒழுங்கு அமைதி பராமரிப்பது குறித்து உயர்கல்வித்துறை மூலம் கல்லூரி கல்வி இயக்கத்திற்கு சுற்றறிக்கை.</p><p>அனைத்து கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தவறுதலாக குறிப்பிடப்பட்ட வார்த்தை அறிந்ததும் வாபஸ்.</p><p>மாணவர்களின் நியாயமாக போராடும் உரிமைகளை காக்கும் அரசாக தவெக அரசு செயல்படும் - அமைச்சர் விஸ்வநாதன்</p> <h2>உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்</h2><p>மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை கண்காணிக்க  சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.</p><p>சுற்றறிக்கையில் தவறுதலாக சில வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.</p><p>மாணவர்களின் உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசிற்கு இல்லை.</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியரை சர்வே செய்வதற்காக அனுப்பப்பட்டவர். வட்டாட்சியர் தேவையில்லாமல் கடிதம் எழுதி உள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>இடதுசாரி அமைப்புகளுடன் செயல்பட்டு போராடுவோர் தொடர்பாக கணக்கெடுப்பு எடுக்க சொல்லி உள்ளனர் - மாரிமுத்து</p><p>மாணவர்கள் போராடுவதை கண்காணிக்க கடிதம் அனுப்பப்பட்டது தொடர்பாகவும் கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>உயர்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை தொடர்பாக கம்யூ. எம்எல்ஏ மாரிமுத்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>அண்ணா பல்கலை. உள்ளிட்ட 9 கல்லூரிகளுக்கு டீன் இல்லை, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -  அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம்</p><h2>மீனவர் பலி - அமைச்சர் ஆதவ் விளக்கம்</h2><p>சவுதி அரேபியாவில் 10-ந்தேதி ஈரானிய கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் தமிழக மீனவர் பலி.</p><p>புலன் விசாரணை நடைபெறுவதால் தான் உயிரிழந்த மீனவர் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம்.</p><p>மீனவர் உடலை தாயகம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p> <p>சவுதி தாக்குதலில் ஒரு மீனவர் பலி, 3 பேர் படுகாயம், இலங்கை கடற்படையும் மீனவர் மீது தாக்குதல்.</p><p>மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் - சிபிஐ ராமச்சந்திரன்</p><p>மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் ஈரான் துப்பாக்கிச்சூட்டில் பலி, அரசு நடவடிக்கை எடுத்து மானியம் தர வேண்டும் - சிவக்குமார்</p><p>சிறப்பு கவன ஈர்ப்பு தந்தாலும் அமைச்சர் தரப்பில் பதில் வந்தால் தான் விவாதம்.</p><p>சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பதிவு செய்ய மட்டும் அனுமதி தருகிறேன், பதில் வந்த பின் விவாதம் நடத்தலாம் - சபாநாயகர்</p> <p>அவசரம் என்பதால் தான் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறோம் - எ.வ.வேலு</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>சவுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்.</p><p>நேரமில்லா நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதை பதிவு செய்வது வழக்கம் தான்.</p><p>காசிமேடு மீனவர்கள் 80 பேர் சிறையில் அடைப்பு, அவர்களின் படகுகளை ஆந்திர அரசு பறிமுதல் செய்துள்ளது - எடப்பாடி பழனிசாமி</p><p>சட்டசபை கூடியது - அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>5 நாட்களுக்கு பிறகு மீனவர் உயிரிழப்பு தொடர்பாக பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது. </p><p>இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: தொடங்கியது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு: அருகருகே அமர்ந்த முதலமைச்சர் விஜய்- டி.கே.சிவக்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/south-state-chief-ministers-conference-started</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/south-state-chief-ministers-conference-started#comments</comments><guid isPermaLink="false">cb36fd62-7fd2-4e70-beee-fb6ee0c8232d</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:29:38 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:29:38.173Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,அமித்ஷா,Amitshah,தென்மாநில முதல்-மந்திரிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/qh63ifkn/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/qh63ifkn/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு தொடங்கியது.</strong> </h2><p>சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள ஃபிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலில் முதல்-மந்திரிகள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-appointed-as-vice-chairman-of-the-southern-zonal-council">மாநாடு</a> தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரள முதல்-மந்திரி சதீசன் உள்ளிட்டோரும் அரசு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chengalpattu, Tamil Nadu | Union Home Minister Amit Shah chairs the 31st Meeting of the Southern Zonal Council, which comprises the states of Andhra Pradesh, Karnataka, Keralam, Tamil Nadu and Telangana, and the Union Territories of Puducherry, Andaman and Nicobar… <a href="https://t.co/UFta3U3bAo">pic.twitter.com/UFta3U3bAo</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2090308839333879956?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>மேலும், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பங்கேற்காத நிலையில் துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா பங்கேற்றுள்ளார். புதுச்சேரி சார்பில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றுவார் என்பதால் முதலமைச்சர் ரங்கசாமி இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க துணை நிலை ஆளுநர், முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் அந்தமான், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். </p><p>இந்த மாநாட்டில் முதலமைச்சர் விஜய், கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அருகருகே அமர்ந்துள்ளனர். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chengalpattu, Tamil Nadu | Union Home Minister Amit Shah chairs the 31st Meeting of the Southern Zonal Council <a href="https://t.co/uPteMKrIRk">pic.twitter.com/uPteMKrIRk</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2090306978988142664?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>தென்மாநிலங்களுக்கு இடையேயயான உறவை சுமூகமாக பேணும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் எல்லைப் பிரச்சனை, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், தொகுதி மறுவரையறை, காவிரி நீர் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. </p><p>தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு தொடங்கியதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் விஜய் பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chengalpattu, Tamil Nadu | Union Home Minister Amit Shah chairs the 31st Meeting of the Southern Zonal Council<br><br>The Union Home Minister was felicitated by Tamil Nadu CM Vijay at the event.<br><br>The Southern Zonal Council comprises the states of Andhra Pradesh, Karnataka,… <a href="https://t.co/ZbwL0VCh7N">pic.twitter.com/ZbwL0VCh7N</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2090307645609759086?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>எல்லை தாண்டிய காதல்: குருவாயூர் கோவிலில் மலையாளி பெண்ணை கரம்பிடித்த ஸ்காட்லாந்து எம்பி!</title><link>https://www.maalaimalar.com/news/national/scottish-mp-ties-the-knot-with-malayali-woman-at-guruvayur-temple</link><comments>https://www.maalaimalar.com/news/national/scottish-mp-ties-the-knot-with-malayali-woman-at-guruvayur-temple#comments</comments><guid isPermaLink="false">2414fbd0-6909-4986-a93e-5de23bfc19da</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:39:47 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:39:47.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ScotlandMP,GuruvayurTemple,InternationalCouple,loveCrossesBorders,ஸ்காட்லாந்துஎம்பி,குருவாயூர்கோவில்,எல்லைதாண்டியகாதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/kidjcn2q/mp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ScotlandMP Wedding]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/kidjcn2q/mp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே, கேரளாவைச் சேர்ந்த நிதிஷா (நிதிச் சந்த்) என்பவரைப் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.</p><h2>சந்திப்பும் கா<strong>தல் மலர்ச்</strong>சியும்</h2><p>எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் பகுதியை சேர்ந்த நிதிச் சந்த், 2008-ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு கல்வி பயின்ற போது, விசா விதிமுறை மாற்றங்களால் ஏற்பட்ட சிக்கல்களை எதிர்த்து நாடாளுமன்றக் குழுக்கள் முன் தீவிரமாகப் போராடினார். அந்தச் சமயத்தில் தான் அன்றைய இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான மார்ட்டின் டேவை அவர் சந்தித்தார். ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பந்தம், 2016-ஆம் ஆண்டு காதலாக மாறியது.</p><h2>10 ஆண்டு கா<strong>ல நீண்ட காத்திருப்</strong>பு</h2><p>2016-ஆம் ஆண்டிலேயே சட்டப்பூர்வமாக இங்கிலாந்தில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/avadi-man-marries-transgender-woman-who-acted-in-films"> பதிவுத் திருமணம்</a> செய்து கொண்ட போதிலும், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் சந்நிதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே நிதிச் சந்தின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் 2018 கேரள வெள்ளப்பெருக்கு, கோவிட் பெருந்தொற்று மற்றும் குடும்பச் சூழல் காரணமாக இந்த நிகழ்வு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.</p><h2>குருவாயூரில் ந<strong>டைபெற்ற கோலாகல</strong> விழா</h2><p>நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மார்ட்டின் டே கேரளா வந்தடைந்து, தனது மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றினார். வேஷ்டி அனிந்து கேரளா பாரம்பரிய உடையில் மாப்பிள்ளையாக மார்ட்டின் டே மிளிர, நிதிச் சந்த் கசவு புடவையில் காட்சியளித்தார். இந்த திருமண விழாவில் நிதிச் சந்தின் 22 வயது மகன் வேதிக் சங்கர் உட்பட நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.</p><p>தற்போது நிதிச் சந்த் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார், மார்ட்டின் டே ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) முக்கிய தலைவராக மக்கள் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வாழ்த்துகளைப் பெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>வகுப்பறைகளை மாற்ற நினைக்கும் முயற்சிகளை மாணவர்கள் வீழ்த்துவார்கள்- சு.வெங்கடேசன் எம்பி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/su-venkatesan-says-students-will-thwart-attempts-to-change-the-classrooms</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/su-venkatesan-says-students-will-thwart-attempts-to-change-the-classrooms#comments</comments><guid isPermaLink="false">5526a442-8313-42fe-921b-6ddb5e12d6d9</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:38:30 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:38:30.312Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Su Venkatesan,சு வெங்கடேசன்,Tamilisai Soundararajan,தமிழிசை சவுந்தரராஜன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tq3gc3mu/suvenkatesan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சு.வெங்கடேசன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சு.வெங்கடேசன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tq3gc3mu/suvenkatesan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அறிவியல் மனப்பான்மை கொண்ட வகுப்பறைகளை மாட்டு மூத்திரத்தின் மேன்மையை விளக்கும் மேடையாக மாற்ற நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் மாணவர்கள் வீழ்த்திக் காட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் <a href="https://www.maalaimalar.com/topic/சு-வெங்கடேசன்">சு.வெங்கடேசன்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, போராட்டம் தேவையில்லை என்ற கரடுதட்டிப் போன பழமைவாதத்தின் குரலைச் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே தூக்கி குப்பையில் வீசியவர்கள் நமது மாணவர்கள். அவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும், தீர்க்கமான போராட்டமும்தான் விடுதலைப் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியது.</p><h2><strong>நாடாளுமன்றத்திற்கே வரவில்லை</strong></h2><p>மாணவர்களின் பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையைச் சீர்குலைக்க நீங்கள் செய்யும் பட்டவர்த்தன முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்ட கல்வித் துறையின் மோசடிகள் அனைத்தும். அதற்கு எதிராக இந்திய மாணவர்கள் துணிவோடு களத்தில் நிற்கிறார்கள். </p><p>பெல்லட் குண்டுகளையும், ஆணி பொறுத்திய லத்திகளையும் துணிவோடு எதிர் கொண்டு அவர்கள் களத்தில் நின்றார்கள். ஆனால், மாணவர்களைத் தாக்க உத்தரவிட்டது யார் என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாமல்  உள்துறை அமைச்சர் 20 நாளாக நாடாளுமன்றத்திற்கே வரவில்லை.</p><p>இந்த உண்மையை எதிர் கொள்ள முடியாமல் வெளிப்படுவதுதான் இன்றைய கதறல்கள் எல்லாம்.</p><p>தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் நடத்திய சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தின் முடிவுகளும், தமிழிசை செளந்தரராஜனின் X தள பதிவும் ஒரே திசையில் மாணவர்களையும், இடது சாரிகளையும் குற்றம் சாட்டுகிறது.</p><p>“திமாமி நக்சல்” என பிரதம் பட்டம் சூட்டிய நபர்களின் பட்டயலைத் தயார் செய்ய துவங்குகிறீர்கள்.</p><p>சங்கமாகச் செயல்படும் மாணவர் உரிமையை சங்கிகள் கூட்டத்தால் தடுத்துவிட முடியாது. </p><p>அறிவியல் மனப்பான்மை கொண்ட வகுப்பறைகளை மாட்டு மூத்திரத்தின் மேன்மையை விளக்கும் மேடையாக மாற்ற நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் மாணவர்கள் வீழ்த்திக் காட்டுவார்கள் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, போராட்டம் தேவையில்லை என்ற கரடுதட்டிப் போன பழமைவாதத்தின் குரலைச் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே தூக்கி குப்பையில் வீசியவர்கள் நமது மாணவர்கள். அவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும், தீர்க்கமான போராட்டமும்தான் விடுதலைப் போராட்டத்தை மேலும்… <a href="https://t.co/78oOJiuqAS">https://t.co/78oOJiuqAS</a></p>&mdash; Su Venkatesan MP (@SuVe4Madurai) <a href="https://x.com/SuVe4Madurai/status/2090290445138198799?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் இதுவரை நிதி தாமதமாக வழங்கப்படவில்லை- வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-rebuts-claims-of-late-payments-in-ambedkar-overseas-education-plan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-rebuts-claims-of-late-payments-in-ambedkar-overseas-education-plan#comments</comments><guid isPermaLink="false">079175d1-8c56-40e4-bdf2-ceea9f3c6fec</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:25:45 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:25:45.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,அம்பேத்கர் அயலக கல்வி திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1814953k/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1814953k/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை இன்று தொடங்கிய நிலையில், அம்பேத்கர் அயலக உதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>மலேசியாவில் பயின்று வரும் மாணவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் வன்னி அரசு மறுப்பு தெரிவித்தார். மாணவருக்கு அரசு வழங்கி உள்ள நிதியை தேதி வாரியாக குறிப்பிட்டு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81" target="_blank">வன்னி அரசு</a> பதில் அளித்தார்.</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>அம்பேத்கர் அயலக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/officers-warns-novel-scam-targeting-parents-with-promises-of-educational-scholarships" rel="nofollow">கல்வி உதவி தொகை</a> கிடைக்கவில்லை என மலேசியாவில் பயிலும் தமிழக மாணவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தாண்டு உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்பிக்காமல் மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.</p><p>மாணவனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்பது தவறான, அரசியல் உள்நோக்கத்துடனான குற்றச்சாட்டு.</p><p>மாணவரின் குற்றச்சாட்டை ஆராயாமல் அரசியல் கட்சிகள் உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டுகின்றன.</p><p>இதுவரை மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் ரூ.135 கோடி வழங்கப்பட்டுள்ளது.</p><p>முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை.</p><p>மற்ற மாணவர்களுக்கு வந்துவிட்டது, தனக்கு நிலுவை தொகை வரவில்லை என்றே மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.</p><h2>கோவி செழியன்</h2><p>திமுக ஆட்சியில் நிதி தரப்பட்டதை தான் அமைச்சர் தேதி வாரியாக வாசித்தார், குற்றச்சாட்டுக்கு பதில் தரவில்லை.</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>கடந்த ஆட்சியில் தான் மாணவனுக்கு நிதி வழங்கப்பட்டது என சரியாக குறிப்பிட்டு தான் பேசி உள்ளேன்.</p><p>தான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னர் தான் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் குறைந்த நபர்களுக்கு தான் திமுக வழங்கியது. நான் துறைக்கு வந்த பின் 3 மடங்கு உயர்த்தியுள்ளேன்.</p><p>திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு. தவெக ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு.</p><p>தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>வெளிநாடுகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>27 முறை கத்திக்குத்து.. பணத்துக்காக பள்ளித் தலைமை ஆசிரியை கொலை - 10ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/telangana-school-murder-two-class-10-students-stab-principal-roopa-reddy-27-times-for-cash</link><comments>https://www.maalaimalar.com/news/national/telangana-school-murder-two-class-10-students-stab-principal-roopa-reddy-27-times-for-cash#comments</comments><guid isPermaLink="false">09010f24-841a-4067-9022-b8df904005e1</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:25:24 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:25:24.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Murder,கொலை,Telangana,Headmaster,தலைமையாசிரியர்,தெலுங்கானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/6yrumy71/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தெலுங்கானா]]></media:title><media:description type="html"><![CDATA[ தெலுங்கானா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/6yrumy71/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானாவில் பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்கள் காசுக்காக கத்தியால் குத்திப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">படுகொலை </a>செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளியின் </a>தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரூபா ரெட்டி. </p><p>கடந்த ஆகஸ்ட் 11 அன்று அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். </p> <h2>விசாரணை</h2><p>உடலைக் கைப்பற்றி இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 தனிப்படைள் அமைத்து விசாரணையை செய்து வந்தனர்.</p><p>இந்நிலையில் இந்த கொலையை செய்தது அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்கள் என கண்டுபிடித்துள்ளனர்.</p> <h2>சிக்கியது எப்படி?</h2><p>ரூபா ரெட்டி கொல்லப்படுவதற்கு முன்பு தனது அத்தையிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர் யாரையோ பார்த்து 'பாபு' என்று அழைத்துள்ளார்.</p><p>அவர் பள்ளியில் மாணவர்களை அழைப்பதற்கு வழக்கமாகப் பயன்படுத்தும் சொல் இது என்பதை அறிந்த போலிசார், கொலை நடந்த காலகட்டத்தில் பள்ளிக்கு வராத மாணவர்கள் மீது கவனத்தைத் திருப்பினர்.</p><p>சம்பவம் நடந்து 4 நாட்களுக்குப் பிறகு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டபோது, பள்ளிக்கு வராத 13 மாணவர்களைப் போலிசார் கண்டறிந்து விசாரணை நடத்தினர்.</p> <p>அந்த 13 பேரில் 10ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் கையில் அதிக அளவில் பணத்தை வைத்துக்கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து வந்தது போலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><h2>ரத்தக் கறை ரூபாய்</h2><p>போலிசார் நடத்திய சோதனையில், ஒரு சிறுவனிடமிருந்து ரத்தக் கறை படிந்த ரூ. 1.54 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.</p> <p>தடம் அறிவியல் சோதனையில் ரூபாய் நோட்டுகளில் ரூபா ரெட்டியின் ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டது.</p><p>மேலுக்கும் 70 சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் அவர்களே கொலையை செய்தது உறுதியான நிலையில் அவர்களை போலீசார் கைது செய்த்தனர்.</p> <h2>காரணம்</h2><p>கைதான மாணவர்களில் ஒருவன் முன்பு பள்ளி விடுதியில் தங்கிப் படித்துள்ளான். </p><p>மதுப் பழக்கம், மோட்டார் சைக்கிள்கள் மீது மோகம் கொண்ட அவனது பையில் இருந்து கைபேசி மற்றும் பணத்தை ரூபா ரெட்டி கைப்பற்றியுள்ளார்.</p><p>அவனைக் கண்டித்ததோடு, விடுதியிலிருந்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இது அந்த மாணவனுக்கு அவர் மீது பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கோவா சென்று வந்த அந்த மாணவன், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளான்.</p><p>பள்ளிக் கட்டண பணம் ரூபா ரெட்டியின் வீட்டில் தான் இருக்கும் என்பதை அறிந்து, கொலை நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டை நோட்டம் பார்த்துள்ளான். கொலைக்கு தன் நண்பனையும் கூட்டு சேர்த்துள்ளான்.  </p><h2>கொலை</h2><p>ஆகஸ்ட் 11 அன்று, ரூபா ரெட்டி பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும், முகமூடி அணிந்த இரு சிறுவர்களும் சுவரேறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து அவரைத் தாக்கியுள்ளனர்.</p><p>தாக்குதலின் போது ஒருவனின் முகமூடி விலகியதால், ரூபா ரெட்டி அவனைக் அடையாளம் கண்டுகொண்டார்.</p> <p>மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், அந்தச் சிறுவர்கள் ரூபா ரெட்டியை கத்தியால் 27 முறை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளனர்.</p><p>பின்னர் வீட்டிலிருந்த ரூ. 1.54 லட்சம் பணம், ஒரு ஐபோன் மற்றும் ரூபா ரெட்டியின் கைபேசி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியோடினர்.</p><p>கொலையாளிகள் இருவரும் சிறுவர்கள் என்பதால், போலிசார் அவர்களைச் சிறுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆத்மநிர்பார் பாரத் புதிய உச்சம்! ரூ.3,070 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் சுதேசிமயமாக்கல்-பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/aatmanirbhar-bharat-new-milestone-rs-3070-crore-indigenisation-defence-ministry-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/national/aatmanirbhar-bharat-new-milestone-rs-3070-crore-indigenisation-defence-ministry-announcement#comments</comments><guid isPermaLink="false">5ef57d52-010a-439f-be9d-9b9cfab89f1c</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:19:08 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:19:08.144Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AatmanirbharBharat,IndianDefence,இந்தியராணுவம்,IndianArmedForces,DefenceMinistry,பாதுகாப்புஅமைச்சகம்,ஆத்மநிர்பார்பாரத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zwmpean3/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian Armed Forces]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/zwmpean3/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய பாதுகாப்புத் துறை உற்பத்தியை மேம்படுத்தவும், வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து சுயசார்பை எட்டவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு உற்பத்தித் துறை 6-வது 'நேர்மறை உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை'  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய பட்டியலில் 405 உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உபகரணங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3,070 கோடி மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் உருவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.</p><h2>எந்தெந்த ராணு<strong>வ தளவாடங்களுக்</strong>கு இந்தத் தடை</h2><p>இந்த ஆறாவது பட்டியலில் 389 உபகரணங்கள் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களுக்கும், 16 உபகரணங்கள் இந்திய கடலோரக் காவல்படைக்கும் உரியவை ஆகும். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், <a href="https://www.maalaimalar.com/news/national/us-envoy-affirms-jammu-kashmir-integral-part-of-india">போர்க்கப்பல்கள் </a>மற்றும் கனரகப் போர் வாகனங்களுக்குத் தேவையான முக்கிய உதிரிப்பாகங்கள், துணை அமைப்புகள் மற்றும் மூலப்பொருட்கள் இதில் அடங்கும்.</p><p>அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர், லைட் யுட்டிலிட்டி ஹெலிகாப்டர், சுகோய் Su-30MKI, தேஜஸ் லைட் காம்பாட் ஏர்கிராப்ட் மற்றும் AL-31FP இன்ஜின் உதிரிப்பாகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தரைப்படை வாகனங்களான T-72, T-90 போர் டாங்கிகள் மற்றும் BMP-II காலாட்படை போர் வாகனங்களின் பாகங்களும் இதில் அடங்கும்.</p><p>மேலும் கான்ஹர்-எம், இன்வார், எம்.ஆர்.எஸ்.ஏ.எம் ஏவுகணை அமைப்புகள், அதிநவீன டேங்க் எதிர்ப்பு வெடிமருந்துகள், ராடார் அமைப்புகள், சோனார் உபகரணங்கள், ஃபயர் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனங்கள் எனப் பல அதிநவீன அமைப்புகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><h2>ஸ்ரீஜன் தளம் மூலம் <strong>குறு, சிறு நிறுவனங்க</strong>ளுக்குப் பெரு வாய்ப்பு</h2><p>இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பொருட்களும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். தயாரிப்பு வெற்றி அடைந்த பிறகு, அவை இந்தியத் தொழில் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இதற்கான முழு விவரங்களும், காலக்கெடுவும் 'ஸ்ரீஜன்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமைத் தொடக்க நிறுவனங்கள் 'Make' நடைமுறைகள் மூலம் பெருமளவில் பயன்பெறும்.</p><h2>ரூ.<strong>9,000 கோடி இறக்குமதி</strong> செலவு மிச்சம்</h2><p>2020 ஆகஸ்ட் மாதம் ஸ்ரீஜன் இணையதளம் தொடங்கப்பட்டதிலிருந்து 33,000-க்கும் மேற்பட்ட ராணுவப் பொருட்கள் உள்நாட்டு உற்பத்திக்காக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட முதல் 5 பட்டியல்கள் மூலம் 15,700-க்கும் மேற்பட்ட பொருட்கள் வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.9,000 கோடி மதிப்பிலான வெளிநாட்டு இறக்குமதி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>மேலும், இந்திய நிறுவனங்களுக்கு சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான கொள்முதல் ஆர்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் இந்திய பாதுகாப்பு உற்பத்திக் கட்டமைப்பை பலப்படுத்துவதோடு, உள்நாட்டு முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>குடும்ப முன்னேற்றத்தை கொடுத்து செல்வ வளம் தரும் வரலட்சுமி விரதம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/varalakshmi-vratam-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/varalakshmi-vratam-worship#comments</comments><guid isPermaLink="false">d2972e7a-665f-4b98-97ea-8f99d681935d</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:14:18 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:14:18.842Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழிபாடு,worship,வரலட்சுமி விரதம்,விரதம்,Varalakshmi Vratam,viratam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/6iapn41a/VaralakshmiVratam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Varalakshmi Vratam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/6iapn41a/VaralakshmiVratam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>வரலட்சுமி விரதம்</strong></h2><p>செல்வத்தை வாரி வழங்கக் கூடிய லட்சுமிதேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம்.  ஆவணி மாத பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் தான் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் வருகிற 27-ந் தேதி பவுர்ணமி திதி வருவதால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான நாளை வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.</p><h2><strong>பண்டிகை</strong></h2><p>மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக் கூடிய இந்த விரதத்தை பெண்கள் அனுஷ்டிக்க வேண்டும். சில பண்டிகைகளையும், விரதங்களையும் கோவிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே கொண்டாடலாம். அந்த வகையில் பெண்களால் வீட்டிலேயே கொண்டாடப்படும் பண்டிகை வரலட்சுமி விரதம்.</p><h2><strong>பூஜை</strong></h2><p>வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து மலர்களால் பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும். மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, மங்கள பொருட்கள் சமர்பித்து, பழங்கள் மற்றும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். மகாலட்சுமியின் 108 திருநாமங்களை சொல்லும் லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளியை சொல்லியோ அல்லது ஸ்ரீ சுக்தம் பாராயணம் செய்து வழிபடலாம்.</p><h2><strong>மங்கள பொருட்கள்</strong></h2><p>அதோடு சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு குங்குமம், மங்கள பொருட்கள், தாம்பூலம் ஆகியவற்றைக் கொடுத்து, வயதில் மூத்த சுமங்கலிகள் கைகளால் நோம்பு கயிறு கட்டிக் கொண்டு, அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.</p><h2><strong>விளக்கு பூஜை</strong></h2><p>வரலட்சுமி பூஜை அன்று வீட்டில் லட்சுமிக்கு குங்குமம், வாசனை மலர்கள் ஆகியவற்றால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், விளக்கு பூஜை செய்து வழிபடுவதும் சிறப்பு. பொருளாதார சிக்கல்கள், கடன் பிரச்சனைகள் இருந்தாலும் அது நீங்கி விடும். வீட்டில் வழக்கமாக வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் மட்டுமின்றி, புதிதாக வரலட்சுமி விரதம் இருக்க நினைப்பவர்களும் இந்த விரதத்தத்தை மேற்கொள்ளலாம். இதனால் மகாலட்சுமியின் அருளால் வாழ்க்கையில் மாற்றம் வரும். வரலட்சுமி விரதம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த விரதமாகும். தன்னை வேண்டுவோருக்கு கேட்கும் வரங்களை தரும் லட்சுமி என்பதால் அவளுக்கு வரலட்சுமி என்று பெயர்.</p><h2><strong>திருமண வாழ்க்கை</strong></h2><p>குடும்ப நலன், கணவரின் ஆயுள், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, செல்வ வளம், சுபிட்சம், குழந்தைகள் மற்றும் கணவரின் ஆயுள், ஆரோக்கியம், அமைதி ஆகியவற்றுடன் நிறைவாக வாழ்க்கை வேண்டி பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து, மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, பூஜைகள் செய்து வழிபட்டு, மகாலட்சுமியின் அருளையும் ஆசியையும் பெறுவதற்கான நாளாகும்.</p><h2><strong>அஸ்வமேத யாகம்</strong></h2><p>இதை வரலட்சுமி நோன்பு, மாங்கல்ய நோன்பு, சுமங்கலி விரதம் என்பது உள்ளிட்ட பல பெயர்களின் மக்கள் குறிப்பிடுகிறார்கள். வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் அஷ்டலட்சுமிகள் எனப்படும் 8 லட்சுமிகளின் அருள் கிடைக்கும். அஸ்வமேத யாகம் நடத்தியதற்கு இணையான பலன் கிடைக்கும்.</p><h2><strong>வெள்ளிக்கிழமை</strong></h2><p>இந்த நாளில் திருமணமான பெண்கள் மட்டுமின்றி, திருமணம் ஆகாத பெண்களும் நல்ல கணவர் அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு நோம்புக் கயிறு கட்டிக் கொண்டு, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபடுவார்கள். சில பெண்கள் உடல் பிரச்னை காரணமாக இந்த வரலட்சுமி விரதத்தை வரும் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்க முடியாவிட்டால், அடுத்து வரும் வெள்ளியன்று கடைப்பிடிக்கலாம். </p><h2><strong>குடும்ப வாழ்க்கை</strong></h2><p>அப்போதும் கடைப்பிடிக்க முடியாத சூழல் நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் இந்த விரதத்தை மேற் கொண்டால் மகாலட்சுமியின் அருள் அப்போதும் பரிபூரணமாக கிடைக்கும். சுமங்கலிகள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்பம் தலைத்தோங்கும். கன்னிப்பெண்கள் இந்த விரதம் இருந்து வழிபட்டால் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-20-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-20-08-2026#comments</comments><guid isPermaLink="false">105d1234-c1ff-452f-881f-80f9c59420c4</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:45:01 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:45:01.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/vjusha2y/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/vjusha2y/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</strong></em></p><p>சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாள்தோறும் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கத்தின்</a> விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 10-ந்தேதி கிராம் ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர், தங்கம் விலை ஏற்றத்துடனே பதிவாகி வந்தது. </p><p>இதற்கிடையே, கடந்த 18-ந்தேதி கிராம் ரூ.14 ஆயிரத்து 290-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செயப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14 ஆயிரத்து 205 எனவும், சவரனுக்கு ரூ.680 சரிந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது. காலையில் குறைந்த தங்கம் விலை மாலை திடீரென உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 400-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.</p><h2><strong>அதிரடி உயர்வு</strong></h2><p>இந்த நிலையில், இன்று தங்கம் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கு விற்பனையாகிறது.</p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200</p><p>18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320</p><p>17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160</p><p>16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>15-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>19-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>18-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>17-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>16-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>15-08-2026- ஒரு கிராம் ரூ.255</p>]]></content:encoded></item><item><title>இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரன்.. நினைவு தினத்தில் முதல்வர் விஜய் புகழஞ்சலி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-cm-pays-tribute-vijay-honors-ondiveerans-sacrifice-against-british-rule-on-remembrance-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-cm-pays-tribute-vijay-honors-ondiveerans-sacrifice-against-british-rule-on-remembrance-day#comments</comments><guid isPermaLink="false">9f600b5f-0413-4db5-820b-0514b314cfca</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:42:03 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:42:03.336Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Ondiveeran Memorial Day,ஒண்டிவீரன் நினைவு தினம்,பூலித்தேவர்,Puli Thevar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/fqqi5m5e/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஒண்டிவீரன், விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒண்டிவீரன், விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/fqqi5m5e/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக போராடி வீரமரணமடைந்த ஒண்டிவீரன்  நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 20) அனுசரிக்கப்படுகிறது.</p><p>இதையொட்டி முதல்வர் விஜய் அவரது வீரத்தை மெச்சும் விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>தமிழக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ள பதவில் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>கூறியதாவது, </p><p>"ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம்!</p> <p>மாவீரன் <a href="https://www.maalaimalar.com/sirappukatturaigal/puli-thevan-birthday-today-657249">பூலித்தேவனின் </a>படைத்தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை ஒற்றை வீரராக எதிர்த்து நின்று, நிலைகுலையச் செய்ததோடு, தன் ஒரு கரத்தையே இழந்தபோதிலும் பல போர்களைப் புரிந்து தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரன் அவர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றிடுவோம் !</p> <p>வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>8000mAh பேட்டரி, 80 வாட் சார்ஜிங்... புது ஸ்மார்ட்போன் டீசர் வெளியிட்ட ரியல்மி</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/realme-p4s-set-to-launch-in-india-on-august-26th</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/realme-p4s-set-to-launch-in-india-on-august-26th#comments</comments><guid isPermaLink="false">6f123b46-b47c-4613-a0bc-01ca796f3607</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:36:00 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:36:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Realme,ரியல்மி,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gwobe5yq/Realme-P4s.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Realme P4s]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gwobe5yq/Realme-P4s.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரியல்மி நிறுவனம் ஒருவழியாக தனது புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் <a href="https://www.maalaimalar.com/topic/realme">ரியல்மி</a> P4s என அழைக்கப்படுகிறது. </p><p>இந்த மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ரியல்மி P4, P4 ப்ரோ, P4x, P4 பவர் மற்றும் P4 லைட் ஆகிய மாடல்களின் வரிசையில் இணைகிறது. </p><p>வெளியீடு மட்டுமின்றி புதிய ரியல்மி P4s <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> 8000mAh பேட்டரி, 1.5K சாம்சங் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களுடன் வரும் என்பதை உணர்த்தும் வகையில் டீசர்களை வெளியிட்டுள்ளது.</p><h2>வெளியீட்டு அப்டேட்:</h2><p>புதிய ரியல்மி P4s ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 26-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் இந்தியா வலைதளங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. </p><p>இத்துடன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் வரை இந்த தளத்தில் அதன் டீசர்கள் மற்றும் அம்சங்கள் படிப்படியாக அறிவிக்கப்படலாம்.</p><p>தற்போதைய டீசர்களின் படி ரியல்மி P4s ஸ்மார்ட்போன் மெட்டாலிக் டர்கொய்ஸ் மற்றும் லைட் கோல்டு ஷேட் என இருவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.</p><h2>எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:</h2><p>இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி P4s ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி சிப்செட், ஹைப்பர் விஷன் பிளஸ் ஏ.ஐ. சிப், 8000mAh பேட்டரி, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது உறுதியாகிறது. இந்த ஸ்மாரட்போன் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 3 நாட்கள் வரையிலான பேக்கப் வழங்கும் என்று தெரிகிறது.</p><p>இத்துடன் புதிய ரியல்மி P4s மாடலில் 1.5K டிஸ்ப்ளே (1272x2772 பிக்சல்), 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், HDR10+, நெட்ஃப்ளிக்ஸ் HDR சப்போர்ட், நியர்-லாஸ்லெஸ் 2K வீடியோ பிளேபேக் உடன் வருகிறது. </p><p>இந்த ஸ்மார்ட்போன் IP69, IP68 மற்றும் IP66 தர டஸ்ட் மற்றும் வாட்ட்ர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. மேலும், 50MP கேமரா, ஏஐ கேமிங் பார்ட்னர் போன்ற அம்சங்களுடன் வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சவுதியில் மீனவர் பலி- சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது உறுப்பினர்கள் விவாதமும், அமைச்சரின் விளக்கமும்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-explain-mayiladuthurai-fishermen-dead-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-explain-mayiladuthurai-fishermen-dead-issue#comments</comments><guid isPermaLink="false">01a7f0ea-a7ec-47df-83b1-f48e0fbe0e67</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:26:04 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:26:04.468Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/7r4y062h/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/7r4y062h/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புலன் விசாரணை நடைபெறுவதால தான் உயிரிழந்த மீனவர்கள் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனவர் மாவீரனின் உடலை தாயம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபை</a>  கூட்டத்தொடர் தொடங்கியதும் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்தது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. </p><p>அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-</p><p>* சவுதியில் ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் உயிரிழந்தார். </p><p>* உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>* சவுதியின் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>* காசிமேடு மீனவர்கள் 80 பேர் சிறையில் அடைப்பு, அவர்களின் படகுகளை ஆந்திர அரசு பறிமுதல் செய்துள்ளது என்றார். </p><p>இதற்கிடையே பேசிய சபாநாயகர், சிறப்பு கவன ஈர்ப்பு தந்தாலும் அமைச்சர் தரப்பில் பதில் வந்தால் தான் விவாதம் நடைபெறும் என தெரிவித்தார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதை பதிவு செய்வது வழக்கம் தான் என்றார். </p><p>எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ எ.வ.வேலு பேசுகையில், அவசரம் கருதி எடுக்கப்படும் பிரச்சனைகளுக்கு 15 நாட்கள் கழித்து பதில் வந்தால் எப்படி?  அவசரம் என்பதால் தான் சிறப்பு தீர்மானம் கொண்டு வருகிறோம் என்றார். </p><p>அதற்கு, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பதிவு செய்ய மட்டும் அனுமதி தருகிறேன், பதில் வந்த பின் விவாதம் நடத்தலாம் என சபாநாயகர் தெரிவித்தார். </p><p>இதனை தொடர்ந்து எம்எல்ஏ சிவக்குமார் பேசுகையில், மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் ஈரான் துப்பாக்கிச்சூட்டில் பலி அரசு நடவடிக்கை எடுத்து மானியம் தரவேண்டும் என்றார். </p><h2><strong>சிபிஐ ராமச்சந்திரன்</strong></h2><p>சவுதி தாக்குதலில் ஒரு மீனவர் பலி, 3 பேர் படுகாயம், இலங்கை கடற்படையும் மீனவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழர்கள் மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். </p><h2><strong>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</strong> </h2><p>சவுதி அரேபியாவில் 10-ந்தேதி ஈரானிய கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் தமிழக மீனவர் பலியாகி உள்ளார். புலன் விசாரணை நடைபெறுவதால தான் உயிரிழந்த மீனவர்கள் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனவர் மாவீரனின் உடலை தாயம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். </p><p>இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>&quot;வந்தே மாதரம்&quot; முதல் இரண்டு அடிகள் மட்டுமே பாடப்படும் - 1937 தீர்மானத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் திட்டவட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-policy-congress-restricts-party-events-to-first-two-stanzas-of-national-song</link><comments>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-policy-congress-restricts-party-events-to-first-two-stanzas-of-national-song#comments</comments><guid isPermaLink="false">2acd640d-b5a4-4131-a073-70ce14117619</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:14:04 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:14:04.606Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/0ykol55d/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கார்கே, சோனியா காந்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ கார்கே, சோனியா காந்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/0ykol55d/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">வந்தே மாதரம்</a> தேசியப் பாடலின் முதல் இரண்டு அடிகள் மட்டுமே கட்சி நிகழ்வுகளில் பாடப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. </p> <h2>சர்ச்சை</h2><p>அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் இசைக்க வேண்டும் என மத்திய பாஜக அரசு நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றி சட்டமாக்கியது.</p><p>6 அடி கொண்ட 3 நிமிடம் 10 வினாடிகள் நீளமுள்ள வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.</p><p>கடந்த வாரம் நடந்த 80வது சுதந்திரத்தினவிழாவில் காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் இசைக்கும்போது அதை பாதியில் நிறுத்துமாறு சோனியா காந்தி சைகை செய்ததாக <a href="https://www.maalaimalar.com/news/national/vande-mataram-row-amit-shah-slams-sonia-gandhi-over-gesture-during-anthem">பாஜக குற்றம்சாட்டியது.</a></p><p>ஆனால் மூத்த தலைவர் கார்கே அமர நாற்காலி எடுத்து வரவே சோனியா சைகை செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.</p><h2>முடிவு</h2><p>நேற்று டெல்லியில் நடைபெற்ற நான்கு மணி நேரத்திற்கும் மேலான செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் ஜெயராம் ரமேஷ் ஆகியோர் இத்தகவலைத் தெரிவித்தனர்.</p><p>1937ஆம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு தீர்மானத்தை மீண்டும் உறுதி செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.</p> <h2>வரலாற்று பின்னணி</h2><p>அக்டோபர் 28, 1937 அன்று மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் மௌலானா அசாத் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் செயற்குழு முதல் முறையாக இத்தீர்மானத்தை நிறைவேற்றியது.</p><p>பங்கிம் சந்திரர் எழுதிய 'ஆனந்தமடம்' நாவலில் இடம்பெற்ற வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் தாய்நாட்டைப் போற்றுவதாகவும், பிந்தைய சரணங்கள் குறிப்பிட்ட மத மற்றும் புராண குறியீடுகளைகொண்டிருப்பதாகவும் அமைந்துள்ளன.</p> <p>எனவே, அனைத்துத் தரப்பு மக்களும் இணையும் தேசிய நிகழ்வுகளுக்கு முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பொருத்தமானவை என ரவீந்திரநாத் தாகூர் ஜவஹர்லால் நேருவுக்குக் கடிதம் மூலம் ஆலோசன வழங்கினார்.</p><p>சுதந்திரத்தின் பின் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அறிவித்தபடி, 'ஜன கண மன' தேசிய கீதமாகவும், 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு: கோவளத்தில் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chief-ministers-of-southern-states</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chief-ministers-of-southern-states#comments</comments><guid isPermaLink="false">36951dd6-8723-4043-b936-09af6f957368</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:07:16 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:07:16.836Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Amit Shah,அமித்ஷா,தென்மாநில முதல்-மந்திரிகள்,south states CM</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/8h7e4efd/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/8h7e4efd/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-met-home-minister-amit-shah">அமித்ஷா</a> தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று  நடக்கிறது.</p><h2>அமித்ஷா</h2><p>இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து நேற்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 9 மணி அளவில் சென்னை வந்தடைந்தார்.</p> <p>சென்னை விமானநிலையத்தில் அவரை தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகளும் வரவேற்றனர். அதன்பின் அமித்ஷா காரில் கோவளத்திற்கு மாநாடு நடைபெ றும் நட்சத்திர ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.</p> <h2>முதலமைச்சர் விஜய் வரவேற்பு</h2><p>அங்கு நட்சத்திர ஓட்டலில் மத்திய மந்திரி அமித்ஷாவை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-salary-of-tamil-nadu-mlas">முதலமைச்சர் விஜய்</a> பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா, அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர். லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர்அதிகாரிகள் வந்திருந்தனர்.</p> <p>அவர்களும் மத்திய மந்திரி அமித்ஷாவை வரவேற்றனர். அதனை தொடர்ந்து அமித்ஷா சிறிது நேரம் கலந்துரையாடினார். அமித்ஷாவும், விஜய்யும் சந்தித்து சிறிது நேரம் பேசினர். அதன்பின் இரவு விருந்தில் அனைவரும் உணவருந்தினர். இரவில் அந்த ஓட்டலில் அமித்ஷா தங்கினார்.</p><p>மாநாட்டில் பங்கேற்க கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன் ஆகியோர் நேற்று நள்ளிரவு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் இன்று மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மேலும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணிப்பதாகவும், அவருக்கு பதிலாக கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பதாகவும் கூறப்படுகிறது.</p> <h2>மாநாடு</h2><p>இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அதே ஓட்டலில் தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென் மண்டல குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் தென் மண்டல குழுவின் தலைவராக அமித்ஷாவும், துணை தலைவராக முதலமைச்சர் விஜய்யும் உள்ளனர். இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், நீர் பங்கீடு, கல்வி, சுகாதாரம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.</p> <h2>பிரதமர் மோடி</h2><p>நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் 'பாரத குழு' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்பட்டுள்ள மண்டல குழு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும் மத்திய-மாநில அரசுகளின் உறவை மேம்படுத்தும் வகையிலும் இம்மாநாடு நடைபெறுகிறது.</p> <h2>காவிரி விவகாரம்</h2><p>மாநாட்டில் தொகுதி மறுசீரமைப்பு, காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம், 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கர்நாடகாவிடம் தமிழக அரசு தரப்பில் பேசி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>இந்நிலையில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் புறப்பட்டார்.</p><p>சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய் கோவளம் சென்றடைந்தார்.</p>]]></content:encoded></item><item><title>5 வயது காசா சிறுமி ஹிந்த் ரஜப் குடும்பத்துடன் கொலை  - பொறுப்பேற்ற இஸ்ரேல் - விசாரணைக்கு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/world/murder-of-5-year-old-gaza-girl-with-hind-rajab-family-israel-claims-responsibility-investigation-ordered</link><comments>https://www.maalaimalar.com/news/world/murder-of-5-year-old-gaza-girl-with-hind-rajab-family-israel-claims-responsibility-investigation-ordered#comments</comments><guid isPermaLink="false">adf8276a-9625-453f-b475-8c1f570cb05a</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:52:41 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:52:41.486Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காசா,இஸ்ரேல்,gaza,Israel,ஹிந்த் ரஜப்,Hind Rajab</media:keywords><media:content height="614" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bltle96x/maalai-malar2026-06-21rpr5kl3wtn-8.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ ஹிந்த் ரஜப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹிந்த் ரஜப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bltle96x/maalai-malar2026-06-21rpr5kl3wtn-8.avif?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/israeli-minister-calls-for-daily-killings-ben-gvir-urges-expulsion-and-systematic-killing-of-palestinians-in-gaza">காசாவில் </a>5 வயதான பாலஸ்தீன சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவளது குடும்பத்தினர் பயணித்த காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை முதன்முறையாக இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. </p><h2>ஹிந்த் ரஜப்</h2><p>கடந்த ஜனவரி 29, 2024 அன்று காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிச் செல்லும்போது 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவளது குடும்பத்தினர் பயணித்த கார் தாக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D">இஸ்ரேல் </a>ராணுவ பீரங்கியில் இருந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஹிந்த் ரஜப்பை தவிர காரில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.</p><p>அந்த காரை நோக்கி மொத்தம் 335 தோட்டாக்கள் சுடப்பட்டதும், உள்ளே குழந்தைகள் உட்பட அப்பாவி மக்களே இருப்பது தெரிந்தே தாக்குதல் நடத்தப்பட்டதும் பின்னர் விசாரணையில் தெரியவந்தது.</p><p>காயங்களுடன் காருக்குள் இருந்தபடியே ஹிந்த், மீட்பு அமைப்பான ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு ஹிந்த் போன் செய்து உதவி கேட்டாள்.</p><p>ஆனால் இறுதியில் ஹிந்த் மற்றும் அவளை மீட்க வந்த 2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரும் மீண்டும் இஸ்ரேல் படையினர் நடததிய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.</p><p>ஹிந்த், கடைசியாக காரில் இருந்தபடி பயத்துடன் தனது மழலைக்குரலில் மீட்பு அமைப்பினரிடம் போனில் பேசிய ஆடியோ பின்னர் வெளியாகி உலகையே உலுக்கியது. </p><p>வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜப் என்ற பெயரில் திரைப்படமும் வெளியாகி சர்வதேச அங்கீகாரம் பெற்றது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/q5e90dyi/maalai-malar2026-06-21lvaisgaftn-6.avif" /></figure><h2>விசாரணை</h2><p>இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் முதல் முறையாக தற்போது வெளிப்படையாக பொறுப்பேற்றுள்ளது </p><p>இந்த சம்பவம் மற்றும் இதுபோன்ற பிற பாலஸ்தீனியர்களின் மரணத்திலும் முறையான குற்றவியல் விசாரணையை தொடங்கப் போவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>ராணுவத்தின் எச்சரிக்கைகளை மீறி அந்த வாகனம் சென்றதால் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், இச்சம்பவம் குறித்து ராணுவ காவல் குற்ற புலனாய்வுப் பிரிவு விசாரணையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பவும், தங்களது படைகளின் தவறுகளை தாங்களே ஆய்வு செய்யத் தயார் என்பதை காட்டவுமே இஸ்ரேல் இந்த விசாரணையை தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><h2>மனித உரிமைகள்</h2><p>'யெஷ் தின்' என்ற இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜிவ் ஸ்டால் கூறுகையில், "ராணுவத்தினருக்கு எதிரான புகார்களில் மிகச் சில வழக்குகளில் மட்டுமே விசாரணை நடத்தப்படுகிறது.</p><p>குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும் மிகக் குறைந்த அளவிலான தண்டனைகளே வழங்கப்படுகின்றன" என தெரிவித்துள்ளார்.</p> <p>ஹிந்தின் மரணத்தைத் தவிர, 2025 மார்ச்சில் தெற்கு காசாவின் ராஃபாவில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஐ.நா அமைப்பின் வாகனத்தின் மீது ராணுவம் நடத்திய தாக்குதலும் இந்த விசாரணையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>இத்தாக்குதலில் 2 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஒரு ஐ.நா ஊழியர் உட்பட 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்மார்ட்போனுக்கு ரூ. 12,000 விலை உயர்வு: சத்தமின்றி வேலை பார்த்த சாம்சங்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/samsung-galaxy-s25-price-hiked-in-india-by-up-to-rs-12000</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/samsung-galaxy-s25-price-hiked-in-india-by-up-to-rs-12000#comments</comments><guid isPermaLink="false">9b1bcdb6-efb5-4d57-801b-45bd61d7a316</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:49:00 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:49:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/5tu2oq2l/Samsung-Galaxy-S25.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samsung Galaxy S25]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/5tu2oq2l/Samsung-Galaxy-S25.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்த கேலக்ஸி S25 <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> இந்திய விலை உயர்த்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது ரூ. 12,000 வரை உயர்ந்துள்ளது. மாற்றப்பட்ட புதிய விலை சாம்சங் இந்தியா வலைதளத்திலும் பிரதிபலிக்கிறது.</p><p>ஃபிளாக்ஷிப் தர ஸ்மார்ட்போனான கேலக்ஸி S25 மாடலில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஃபார் கேலக்ஸி பிராசஸர் உடன் வருகிறது. இத்துடன் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><h2>புதிய விலை விவரங்கள்:</h2><p>சாம்சங் இந்தியா வலைதளத்தின் படி கேலக்ஸி S25 மாடலின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 84,999 என மாறியுள்ளது. இது முந்தைய விலையை விட ரூ. 4,000 அதிகம் ஆகும்.</p><p>இதேபோல் 12ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 1,04,999 என மாறியிருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 12,000 அதிகம் ஆகும்.</p><p>முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 80,000 மற்றும் ரூ. 92,999 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை மட்டும் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் விலை ரூ. 74,999 என்றே தொடர்கிறது.</p><h2>சிறப்பம்சங்கள்:</h2><p>அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி S25 மாடலில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஃபார் கேலக்ஸி பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 12MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. </p><p>இந்த ஸ்மார்ட்போன் 4000mAh பேட்டரி, 25 வாட் சார்ஜிங் சப்போர்ட், IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டம்ட் வசதியுடன் வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மத்திய அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் - &apos;ஜென் Z&apos;களை கவர பிரதமர் மோடி பிளான்</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-govt-campus-outreach-ministers-to-visit-universities-daily-under-one-day-one-university-campaign-to-engage-gen-z-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-govt-campus-outreach-ministers-to-visit-universities-daily-under-one-day-one-university-campaign-to-engage-gen-z-students#comments</comments><guid isPermaLink="false">33ab427a-bc3c-42ff-a600-d30611c8b62c</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:40:08 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:40:08.322Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,ஜென் இசட்,Gen z,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ovwi8oxs/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ovwi8oxs/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய <a href="https://www.google.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+maalaimalar&amp;oq=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+maalaimalar&amp;gs_lcrp=EgZjaHJvbWUyCAgAEEUYJxg5MgYIARBFGDzSAQg2ODc2ajBqOagCBrACAfEFEUcb3hwEigg&amp;sourceid=chrome&amp;source=chrome.ob&amp;ie=UTF-8">போராட்டம்</a>, தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது. </p><p>இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி, இன்ஸ்டாகிராமில் மாணவர்களை கவரும் வேலையில் இறங்கியுள்ளார். கட்சியினரையும் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். </p><p>அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிப்பதில் ஜென் இசட் முக்கிய காரணியாக மாறும் சூழலில், அவர்களை கவர பல்வேறு விஷயங்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. பாஜகவின் சிந்தாந்த தலைமையாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் <a href="https://www.maalaimalar.com/news/national/the-experiences-of-a-gen-z-youth-who-left-city-life-for-a-mountain-village">ஜென் இசட்</a> சந்திப்புகளை நடத்தி வருகிறது. </p> <h2>புதிய திட்டம்</h2><p>இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுடன் நேரடியாக உரையாடுவதற்காக மோடி அரசு ஒரு புதிய தேசிய அளவிலான பிரச்சாரத்தைத் திட்டமிட்டுள்ளது.</p><p>'ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்' என்ற இந்த திட்டத்தின்படி, மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று மாணவர்களுடன் உரையாடுவார்கள்.</p> <h2>உரையாடல் </h2><p>இளைஞர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதோடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் நலன் தொடர்பான மத்திய அரசின் திட்டங்களை விளக்குவதே அவர்களின் பணி.</p><p>அமைச்சர்கள் மாணவர்களுடன் உரையாடுவதோடு, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைப்பார்கள்.</p> <h2>நோக்கம்</h2><p>இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகள் தொடர்பான கவலைகளை நேரடியாகக் கேட்டறிவதற்கான ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>ஜென் இசட் தலைமுறையினருடன் நேரடித் தொடர்பை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.</p><p>மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மாணவர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதும் இதன் ஒரு பகுதியாகும். இவற்றில் எது முக்கிய நோக்கம் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி - அமெரிக்க தூதர் திட்டவட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/national/us-envoy-affirms-jammu-kashmir-integral-part-of-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/us-envoy-affirms-jammu-kashmir-integral-part-of-india#comments</comments><guid isPermaLink="false">427ffeba-a272-45c3-a4c4-19133a015764</guid><pubDate>Thu, 20 Aug 2026 02:03:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:03:05.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,ladakh,அமெரிக்க தூதர்,லடாக்,Jammu &amp; Kashmir,Sergio Gor,செர்ஜியோ கோர்,US Envoy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/50dkhgrg/tn-17.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/50dkhgrg/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jammu-and-kashmir">ஜம்மு காஷ்மீர்</a> இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். </p><p>அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு சென்றுள்ளார். </p><p>சந்திப்பு</p><p>நேற்று ஸ்ரீநகர் சென்றடைந்ததும் முதல்வர் உமர் அப்துல்லாவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.</p><p>ஸ்ரீநகரில் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் <a href="https://www.maalaimalar.com/news/world/sergio-gore-sworn-in-as-us-ambassador-to-india-trump-talks-about-tax-cuts-796890">செர்ஜியோ கோர் </a>நேற்று செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். </p> <h2>இந்தியாவின் பகுதி</h2><p>அப்போது ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மிக முக்கியமான பகுதி என்றும், இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதிக்கு வர ஏராளமான அமெரிக்கர்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.</p><p>மத்திய அரசும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக செர்ஜியோ கோர் பாராட்டினார்.</p><h2></h2><h2>மறுபரிசீலனை</h2><p>மேலும், "அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்குப் பயண எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. இந்த எச்சரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து வருகிறோம்.</p><p>பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ள சூழலில், ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்க பயணிகள் வருகை தர தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கைகளை அமெரிக்க அரசு மறுபரிசீலனை செய்யும் என்றார்.</p><p>மிகச் சுமூகமாகவும் நட்புறவோடும் இந்தச் சந்திப்பு அமைந்ததாகவும், வாஷிங்டன் மற்றும் டெல்லி திரும்பிய பிறகு இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த இந்தப் பயணம் உதவும் என்றும் அவர் கூறினார்.</p><p>ஜம்மு காஷ்மீருக்கு 2019 இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு அமெரிக்க தூதர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும்.</p> <h2>உமர் அப்துல்லா</h2><p>இந்தச் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறிய முதல்வர் உமர் அப்துல்லா, இந்தியா - அமெரிக்கா இருதரப்பு உறவுகள் குறித்தும், குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு அமெரிக்கா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 20.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-20-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-20-august-2026#comments</comments><guid isPermaLink="false">1191fba8-12ce-461e-8fb0-d255bd6c7558</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:52:35 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:52:35.520Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/27/25436530-rasipalan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/27/25436530-rasipalan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயம் ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>உடன்பிறப்புகளின் உதவி கிட்டும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.</p> <h2>மிதுனம்</h2><p>விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வரவு திருப்தி தரும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோக மாற்றம் உறுதியாகும்.</p><h2>கடகம்</h2><p>தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தொலைபேசி வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>வசதிகள் பெருகும் நாள். உறவினர்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். பணிபுரியுமிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.</p><h2>கன்னி</h2><p>லாபகரமான நாள். செல்வாக்கு அதிகரிக்கும். உடன் பிறப்புகளின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.</p> <h2>துலாம்</h2><p>பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். வரவு போதுமானதாக இருக்கும்.</p> <h2>தனுசு</h2><p>யோகமான நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.</p><h2>மகரம்</h2><p>அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை அறிந்து கூடுதல் பொறுப்புக் கொடுப்பர்.</p> <h2>கும்பம்</h2><p>தொழில் மாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். உத்தியோகத்தில் தங்களிடம் கொடுக்கப்பட்ட வேலையை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.</p><h2>மீனம்</h2><p>உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். திரும்பிச்சென்ற வரன்கள் மீண்டும் வரலாம்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-fuel-prices-iran-war-tensions-in-hormuz-push-up-chennai-petrol-diesel-and-cng-rates</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-fuel-prices-iran-war-tensions-in-hormuz-push-up-chennai-petrol-diesel-and-cng-rates#comments</comments><guid isPermaLink="false">33d8972d-554e-416c-bad3-bf0c12077ef1</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:36:59 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:36:59.078Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1g366y0c/maalai-malar2026-08-06wi7y6invmaalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1g366y0c/maalai-malar2026-08-06wi7y6invmaalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/missile-attack-threat-uae-halts-all-trade-with-iran">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (20.08.2026 - வியாழக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 91.89 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 20 ஆகஸ்ட் 2026:  குருபகவானுக்கு திருமஞ்சனம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-20-august-2026-guru-bhagavan-thirumanjanam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-20-august-2026-guru-bhagavan-thirumanjanam#comments</comments><guid isPermaLink="false">85973089-b049-4889-81c7-2e1d2a7b8176</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/27/17757023-gurubhagavan1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guru Bhagavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/27/17757023-gurubhagavan1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-3 (வியாழக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி : அஷ்டமி இரவு 11.49 மணி வரை பிறகு நவமி</p><p>நட்சத்திரம் :  விசாகம் நண்பகல் 12.26 வரை பிறகு அனுஷம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை</p><p>சூலம் : தெற்கு</p><p>நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்</h2><p>சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ சோமசுந்தரர் உலவாக் கோட்டையருளிய திருவிளையாடல்; நந்தீஸ்வர யாளி வாகனத்தில் பவனி வரும் காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. வேலூர் கோட்டை ஸ்ரீதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீதுர்கையம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். </p> <p>ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. </p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - லாபம்</p><p>ரிஷபம் - நலம்</p><p>மிதுனம் - களிப்பு</p><p>கடகம் - செலவு</p><p>சிம்மம் - பரிசு</p><p>கன்னி - அமைதி</p> <p>துலாம் - பாசம்</p><p>விருச்சிகம் - இன்பம்</p><p>தனுசு - பயணம்</p><p>மகரம் - உதவி</p><p>கும்பம் - ஆதரவு</p><p>மீனம் - உண்மை</p> ]]></content:encoded></item><item><title>கலிபோர்னியா ஈரானின் ஒரு பகுதி.. ஹார்முஸை அமெரிக்க பகுதியாக அறிவித்த டிரம்புக்கு பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-us-map-row-trump-sparks-middle-east-tension-by-depicting-hormuz-as-us-territory</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-us-map-row-trump-sparks-middle-east-tension-by-depicting-hormuz-as-us-territory#comments</comments><guid isPermaLink="false">0f25c0ed-332e-4ba7-a8bb-4e32eb299448</guid><pubDate>Thu, 20 Aug 2026 01:03:57 +0000</pubDate><atom:updated>2026-08-20T01:03:57.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,california,கலிபோர்னியா,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bq0ybd03/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மொஜ்தபா காமேனி, டிரம்ப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மொஜ்தபா காமேனி, டிரம்ப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bq0ybd03/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/usiran-tensions-trump-warns-unconditional-surrender-and-tougher-sanctions">ஈரான் - அமெரிக்கா இடையிலான போரில் </a>மத்திய கிழக்கில் இருந்து மற்ற நாடுகளுக்கு எண்ணெய், எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பயணிக்கும் கடல்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. </p> <h2>ஹார்முஸ்</h2><p>இதனிடையே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ஹார்முஸ் </a>தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அதை அமெரிக்காவின் ஒரு பிராந்திய பகுதி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் தனது சமூக வலைதளத்தில் வரைபடம் வெளியிட்டு அறிவித்தார்.</p><p>பின்னர், அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கும் இந்தப் படத்தை மறுபதிவு செய்திருந்தது.</p> <h2>ஈரான் பதிலடி</h2><p>டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கவின் முக்கிய மாகாணங்களுள் ஒன்றான கலிபோர்னியா மாகாணத்தை, ஈரானின் ஒரு பிராந்திய பகுதி என்று சித்தரித்து ஈரான் வரைபடம் வெளியிட்டுள்ளது.</p><p>ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இந்த வரைபடம் பதிவிடப்பட்டுள்ளது.</p><p>அதில் கலிபோர்னியா மாநிலத்தை நீல நிறத்தில் பளிச்சிடும் வகையில் குறிப்பிட்டு, அதை "இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய பிராந்திய பகுதி" என கூறிப்பட்டுள்ளது.</p> <h2>ஏன் கலிபோர்னியா?</h2><p>உலகிலேயே அதிக அளவிலான புலம்பெயர்ந்த ஈரானியர்கள் வாழும் இடமாக அமெரிக்காவின் கலிபோர்னியா திகழ்கிறது.</p><p>முக்கியமாக லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியில் சுமார் 1,41,000 ஈரானிய வம்சாவளி அமெரிக்கர்கள் வசிக்கின்றனர்.</p> <p>லாஸ் ஏஞ்சலஸின் வெஸ்ட்வுட் பகுதி "தெஹ்ரான்கலெஸ்" என்றும் அழைக்கப்படுகிறது. தெஹ்ரான், ஈரானின் தலைநகர் ஆகும்.</p><p>1979ஆம் ஆண்டில் ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, ஈரானில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தப் பகுதி ஒரு முக்கிய மையமாக மாறியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல் - கீவ்-இல் இருவர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/2-killed-in-kyiv-as-russia-launches-fresh-missile-strike</link><comments>https://www.maalaimalar.com/news/world/2-killed-in-kyiv-as-russia-launches-fresh-missile-strike#comments</comments><guid isPermaLink="false">bc5f1297-46f3-4b37-8641-5e83aeb511d5</guid><pubDate>Thu, 20 Aug 2026 00:30:51 +0000</pubDate><atom:updated>2026-08-20T00:30:51.175Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,ரஷ்யா,ஏவுகணை தாக்குதல்,கீவ்,Kyiv,missile strike</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/q36guc0z/kyiv-attacked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kyiv attacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/q36guc0z/kyiv-attacked.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைன் தலைநகர் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் ரஷ்ய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ராணுவமும் தெரிவித்தன.</p><p>சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவும் உக்ரைனும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக ரஷ்யா, உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் மாநகரங்கள் மீதான தனது தொலைதூர தாக்குதல்களை அதிகரித்துள்ளது.</p><p>கீவ் மீது இரவில் நடத்தப்பட்ட ஒரு பெரும் ஏவுகணை தாக்குதலில், குடியிருப்பு பகுதிகளும் கிடங்குகளும் தாக்கப்பட்டன; இதில் மக்கள் காயமடைந்தனர் அல்லது உயிரிழந்தனர் என்று கீவ் மேயர் விட்டாலி கிளிச்கோ டெலிகிராமில் எழுதியுள்ளார்.</p><h2>இருவர் உயிரிழப்பு:</h2><p>"ஒன்பது மாடி குடியிருப்பு கட்டிடத்தின் மேல் தளங்கள் இடிந்து விழுந்ததோடு, தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். மற்றொரு பகுதியில், மக்கள் ஒரு குடியிருப்பு வளாகத்திற்குள் சிக்கியுள்ளனர். ஒரு தங்குமிடத்திற்குள் மக்கள் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் வந்திருப்பதாக அவர் முன்னதாக கூறியிருந்தார்.</p><p>"ஆறு பேர் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது. வருந்தத்தக்க வகையில், எதிரிகளின் தாக்குதலில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்," என்று கீவ் நகர அதிகாரிகள் டெலிகிராமில் உயிரிழப்பு எண்ணிக்கையை தெரிவித்தனர்.</p><h2>விமானப்படை எச்சரிக்கை:</h2><p>கீவ் பிராந்தியத்தில் உள்ள ககார்லிக் கிராமத்தின் அருகே, தலைநகரை நோக்கி ரஷ்யாவின் 'கலிபர்' ஏவுகணைகள் வருவதாகவும் உக்ரைன் விமானப்படை எச்சரித்துள்ளது.</p><p>கீவ் கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், ஏறக்குறைய நானரை ஆண்டுகாலப் போருக்குப் பிறகு ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு வர அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில், உக்ரைனும் சமீப மாதங்களில் ரஷ்யா மீதான தனது பதிலடி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>துலீப் கோப்பை இறுதிப் போட்டி சென்னைக்கு மாற்றம் - பி.சி.சி.ஐ. சொன்ன முக்கிய காரணம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/duleep-trophy-final-moved-from-bengaluru-to-chennai</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/duleep-trophy-final-moved-from-bengaluru-to-chennai#comments</comments><guid isPermaLink="false">8cb49d48-6792-468b-aa23-5c24f2128706</guid><pubDate>Wed, 19 Aug 2026 23:43:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T23:43:52.178Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,Duleep Trophy,பிசிசிஐ,துலீப் கோப்பை தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/carhwpwu/Duleep-Trophy.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Duleep Trophy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/carhwpwu/Duleep-Trophy.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதன்மை உள்ளூர் போட்டியான <a href="https://www.maalaimalar.com/topic/duleep-trophy">துலீப் கோப்பை</a> இறுதிப் போட்டி, சென்டர் ஆஃப் எக்சலன்ஸ்-இல் இருந்து எம்.ஏ. சிதம்பரம் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. </p><p>இதைத் தொடர்ந்து, துலீப் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 6 முதல் 10 வரை நடைபெறும் போட்டியை அதிக பார்வையாளர்கள் காண வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/bcci">பி.சி.சி.ஐ.</a> இந்த முடிவை எடுத்துள்ளது. அதே சமயம், தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 முதல் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ்-இல் நடைபெறும்.</p><h2>பி.சி.சி.ஐ. அறிக்கை:</h2><p>"2026-27 துலீப் கோப்பையின் இறுதிப் போட்டி, பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்சலன்ஸ்-இல் இருந்து (CoE) சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 6 முதல் 10 வரை நடைபெறும் இந்த முக்கிய உள்ளூர் போட்டியில் பார்வையாளர்கள் கலந்துகொள்ளவும், இறுதிப் போட்டியை மைதானத்தில் நேரடியாக காணவும் அனுமதிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று பி.சி.சி.ஐ. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>"துலீப் கோப்பையின் மீதமுள்ள போட்டிகள், ஆகஸ்ட் 23 ஆம் தேதி CoE-இல் திட்டமிட்டபடி தொடரும். இதில் கிழக்கு மண்டலம் வடகிழக்கு மண்டலத்தையும், வடக்கு மண்டலம் மேற்கு மண்டலத்தையும் எதிர்கொள்ளும்," என்று அது மேலும் கூறியது.</p><p>2026-27 ஆம் ஆண்டுக்கான துலீப் கோப்பை போட்டி தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் பதிப்பிற்காக, இந்த தொடர் அதன் பாரம்பரிய மண்டல வடிவத்திற்கு திரும்பியுள்ளது. ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெறும் இந்த தொடரில் போட்டியிடும் ஆறு மண்டல அணிகள் மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டலம் ஆகும்.</p><h2>முக்கியமான முதல் தரப் போட்டி:</h2><p>CoE-இல் போட்டிகளை காண அனுமதிக்கப்படும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் இருப்பதால், இறுதிப் போட்டியை அங்கிருந்து சென்னைக்கு மாற்றும் முடிவு எடுக்கப்பட்டதாக பி.சி.சி.ஐ. செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்தார்.</p><p>துலீப் கோப்பை நமது போட்டி அட்டவணையில் ஒரு முக்கியமான முதல் தரப் போட்டியாகும், மேலும் இது ஒரு வளமான பாரம்பரியத்தை கொண்டுள்ளது. கிரிக்கெட்டின் தரம் எப்போதும் உயர்வாக இருக்கும். இறுதிப் போட்டியை ரசிகர்கள் மைதானத்தில் நேரடியாக பார்க்கும் வாய்ப்பை பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.</p><h2>தொலைக்காட்சி நேரலை:</h2><p>"CoE-இல் பார்வையாளர்கள் வருகை தொடர்பாக சில கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, ரசிகர்கள் கலந்துகொண்டு அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய ஓர் இடத்திற்கு இறுதிப் போட்டியை மாற்றுவது பொருத்தமானது என்று நாங்கள் கருதினோம்," என்று சைகியா கூறினார்.</p><p>"நாங்கள் இந்த தொடரின் ஒளிபரப்பையும் அதிகரித்துள்ளோம். துலீப் கோப்பையின் அனைத்துப் போட்டிகளும் நேரலையாக ஒளிபரப்பப்படும். மேலும், ஒரு காலிறுதி போட்டி, ஒரு அரையிறுதி போட்டி மற்றும் இறுதி போட்டி ஆகியவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு பேர் உயிரிழப்பு - வடக்கு கென்யாவில் சோகம்</title><link>https://www.maalaimalar.com/news/world/5-americans-among-7-killed-after-helicopter-crashes-in-northern-kenya</link><comments>https://www.maalaimalar.com/news/world/5-americans-among-7-killed-after-helicopter-crashes-in-northern-kenya#comments</comments><guid isPermaLink="false">1b841fd7-f001-408c-a9ed-1d1b465fdc55</guid><pubDate>Wed, 19 Aug 2026 23:01:24 +0000</pubDate><atom:updated>2026-08-19T23:01:24.715Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>America,helicopter crash,ஹெலிகாப்டர் விபத்து,கென்யா,Kenya</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/yv9i7dfw/Helicopter-Crash.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Helicopter Crash Site]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/yv9i7dfw/Helicopter-Crash.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடக்கு கென்யாவின் தொலைதூர பகுதி ஒன்றில் சஃபாரி <a href="https://www.maalaimalar.com/topic/helicopter">ஹெலிகாப்டர்</a> ஒன்று விபத்துக்குள்ளானதில், ஐந்து அமெரிக்கர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் காவல்துறை மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> வெளியுறவு துறை தெரிவித்துள்ளன.</p><p>சம்புரு மாவட்டத்தில் உள்ள லோய்சாபா வனப்பாதுகாப்புப் பகுதியில் இருந்து இவாசோ நைரோ பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளானதாக கென்யா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளது. </p><p>இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆறு பயணிகள் மற்றும் விமானி என மொத்தம் ஏழு பேர் பயணம் செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.</p><h2>7 பேர் உயிரிழப்பு:</h2><p>நேற்று (புதன்கிழமை) இரவு, சம்புருவின் காவல்துறை தலைவர் டேவிட் என்கோரோய், ஹெலிகாப்டரில் இருந்த ஏழு பேரும் உயிரிழந்துவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வாஷிங்டனில், உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் அமெரிக்கர்கள் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.</p><p>பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் உயிரிழந்தவர்களில் ஒருவர், என்.பி.சி. யுனிவர்சலுக்கு சொந்தமான, அமெரிக்காவை தளமாக கொண்ட ஸ்பானிஷ் மொழி தொலைக்காட்சியான டெலிமுண்டோ நிலையங்களின் தலைவராகவும் பொது மேலாளராகவும் இருந்த 55 வயதான ஜோஸ் சுவாரெஸ் என்று புளோரிடாவின் மியாமியில் உள்ள ஒரு உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>"கென்யாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜோஸ் உயிரிழந்தார் என்ற துயர செய்தியை கேட்டு நாங்கள் மிகுந்த துயரமடைந்தோம்," என்று மியாமியில் உள்ள என்.பி.சி. துணை நிறுவனம், என்.பி.சி. யுனிவர்சல் மற்றும் டெலிமுண்டோ தலைமைகளின் கூட்டறிக்கையில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளது.</p><p>உள்ளூர் சஃபாரி நிறுவனமான ட்ராபிக் ஏர் கென்யா, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காகத் தனது இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த விமானம் யூரோகாப்டர் EC130 B4 வகையை சேர்ந்தது என்று விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.</p><h2>மீட்பு பணி:</h2><p>"மீட்புக் குழுக்கள் விபத்து நடந்த இடத்தை அடையப் பணியாற்றி வரும் நிலையில், எங்களின் அவசரகால மீட்புக் குழுக்கள் பல்துறை முகமைகளின் ஒருங்கிணைந்த மீட்பு பணியில் பங்கேற்று வருகின்றன," என்று கென்யா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. ஒலோலோக்வே மலை போன்ற தொலைதூர இடங்களுக்கு பார்வையாளர்களை ஏற்றி செல்ல உள்நாட்டு விமானங்களையே சார்ந்திருக்கும் ஒரு சுற்றுலா துறை உள்ளது.</p><p>கடந்த பிப்ரவரியில், மேற்கு கென்யாவின் மலைப்பாங்கான பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆறு பேரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் அடங்குவார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-met-home-minister-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-met-home-minister-amit-shah#comments</comments><guid isPermaLink="false">3abe17e7-d068-4d9d-9206-97bf3837628b</guid><pubDate>Wed, 19 Aug 2026 21:18:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T21:18:54.040Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/4wygd99o/Amit-shah-and-Vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit shah and Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/4wygd99o/Amit-shah-and-Vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டின் தென்மண்டலக் குழுவின் துணை தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>இந்த மாநாட்டில் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும் தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.</p><p>இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அவர் வருகை தந்தார். நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை தந்த அமித் ஷாவை முதலமைச்சர் விஜய் வரவேற்றார்.</p><p>முதல் அமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று அமித் ஷாவை சந்தித்தார். இரவு நடைபெறும் உணவு விருந்தில் அமித்ஷா மற்றும் விஜய் உள்பட மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vikkals-vikram-starrer-light-weight-baby-movie-first-look-out</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vikkals-vikram-starrer-light-weight-baby-movie-first-look-out#comments</comments><guid isPermaLink="false">4b4ed64a-b513-4860-9075-6a86a42e8119</guid><pubDate>Wed, 19 Aug 2026 20:28:01 +0000</pubDate><atom:updated>2026-08-19T20:28:01.351Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விக்கல்ஸ் விக்ரம்,Vikkals Vikram,ightweight baby,லைட்வெயிட்  பேபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/mvf9kyia/lightweight-baby-First-look.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ lightweight baby First look ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/mvf9kyia/lightweight-baby-First-look.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விரைவில் வெளியாகவுள்ள காதல் பொழுதுபோக்கு திரைப்படமான ‘லைட்வெயிட், பேபி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான ஹிதா ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. </p><p>இதில் ஸ்டாண்ட்-அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் பிரபலமான ஆரத்தி கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் கே.சி. குரு இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை பிரமோத் கொட்டியன் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஹரிஷ் கொம்மே மேற்கொள்கிறார்.</p><h2>அசத்தல் ஃபர்ஸ்ட் லுக்:</h2><p>படத்தின் ஃபர்ஸ்ட் லுக்- காதல், நகைச்சுவை மற்றும் போட்டித்தன்மை கொண்ட ஃபிட்னஸ் உலகை வித்தியாசமான முறையில் இணைத்து, திரைப்படத்தின் தனித்துவமான உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. வண்ணமயமான ஜிம் பின்னணியில் அமைந்துள்ள இந்த போஸ்டரில், விளையாட்டுத்தனமான சூழலில் விக்கல்ஸ் விக்ரமும், தனது ஃபிட்னஸ் உலகின் இயல்பான தோற்றத்தில் ஆரத்தி கிருஷ்ணாவும் இடம்பெற்றுள்ளனர்.</p><p>இருவரின் மாறுபட்ட குணாதிசயங்கள், படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய நகைச்சுவை, காதல் மற்றும் குழப்பமான சம்பவங்களை சுட்டிக்காட்டுகின்றன. படத்தின் தலைப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், கதையின் இலகுவான மற்றும் நவீனமான அணுகுமுறையையும் வெளிப்படுத்துகிறது.</p><h2>கதைக்களம்:</h2><p>விக்கல்ஸ் விக்ரமுக்கு, ‘லைட்வெயிட், பேபி’ நாயகனாக அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும். தனது தனித்துவமான நகைச்சுவை நேர்த்திக்காக அறியப்படும் அவர், இந்த படத்திற்கு வசனங்களையும் எழுதியுள்ளார். ஆரத்தி கிருஷ்ணா, ஃபிட்னஸ் மற்றும் பாடிபில்டிங் துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமாகிறார்.</p><p>ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியனும், ஒரு ஃபிட்னஸ் பிரபலமும் இணையும் இந்த வித்தியாசமான கூட்டணி, படத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக அமைகிறது. ஃபிட்னஸ் உலகை பின்னணியாக கொண்டிருந்தாலும், வெவ்வேறு உலகங்களில் இருந்து வரும் இரு நபர்களின் உறவை, காதல், நகைச்சுவை, குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் தனிப்பட்ட லட்சியங்களுடன் இணைத்து இப்படம் சொல்லவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புது ரெயில்வே திட்டங்கள் சரக்கு போக்குவரத்தை வலுப்படுத்தும்  - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-hails-new-railway-highway-projects</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-hails-new-railway-highway-projects#comments</comments><guid isPermaLink="false">7c30e5f8-841d-4218-89f4-92798bbd4ea6</guid><pubDate>Wed, 19 Aug 2026 19:17:40 +0000</pubDate><atom:updated>2026-08-19T19:17:40.645Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,railway projects,ரெயில்வே திட்டங்கள்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/es9ry3jd/pm-modi" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/es9ry3jd/pm-modi?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் நான்கு ரெயில்வே திட்டங்கள் மற்றும் நான்கு வழி நெடுஞ்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை பிரதமர்<a href="https://www.maalaimalar.com/topic/pm-modi"> நரேந்திர மோடி</a> பாராட்டினார். மேலும், இந்த முயற்சிகள் போக்குவரத்து இணைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.</p><p>ஆந்திர பிரதேசம், ஒடிசா, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் ரயில் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புக்கு பெரும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இது குறித்த எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோடி, "இந்திய ரெயில்வே நெட்வொர்க்கிற்கு முக்கியமான திறனை சேர்த்து, லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்கள் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை வலுப்படுத்துதல், நெரிசலை குறைத்தல், சிறந்த இணைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்ற பல நன்மைகளை கொண்டிருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>பீகாரின் முழுமையான வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு, இணைப்பு வசதிகளை விரைவாக விரிவுபடுத்துவது முற்றிலும் அவசியம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.</p><p>இந்த திசையில், தேசிய நெடுஞ்சாலை 22-இன் முசாஃபர்பூர்-சீதாமர்ஹி-சோன்பர்சா பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க இன்று எங்கள் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலம் முழுவதற்கும் உயிர்நாடியாக அமையவிருக்கும் இந்த திட்டம், முன்னேற்றத்தின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்க உள்ளது. இது பயண நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாவையும் மேம்படுத்தும், என்று அவர் கூறினார்.</p><p>முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, சுமார் ரூ. 9,450 கோடி மொத்த மதிப்பிலான ரயில்வே அமைச்சகத்தின் நான்கு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.</p><h2>திட்ட விவரங்கள்:</h2><p>இந்தத் திட்டங்களில், மேற்கு வங்கத்தின் கரக்பூருக்கும் ஒடிசாவின் பத்ரக் பகுதிக்கும் இடையே 173 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்காவது வழித்தடம் அமைப்பதும், பத்ரக்கிற்கும் ஒடிசாவின் ஹரிதாஸ்பூருக்கும் இடையே 75 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்காவது வழித்தடம் அமைப்பதும் அடங்கும்.</p><p>பீகாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 22-இன் முசாஃபர்பூர்-சீதாமர்ஹி-சோன்பர்சா பகுதியை ரூ. 3,590.73 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாகத் தரம் உயர்த்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>முசாஃபர்பூர்-சீதாமர்ஹி-சோன்பர்சா வழித்தடமானது, தேசிய சரக்குப் போக்குவரத்து கட்டமைப்புடன் தடையற்ற இணைப்பை உறுதி செய்வதோடு, குறிப்பிடத்தக்க மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருச்சி கிராண்ட் சோலாஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-trichy-grand-cholas-beat-dindigul-dragons-by-28-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-trichy-grand-cholas-beat-dindigul-dragons-by-28-runs#comments</comments><guid isPermaLink="false">7a41bb2f-b6ba-4762-8b7e-a0d4d61dca0f</guid><pubDate>Wed, 19 Aug 2026 18:32:38 +0000</pubDate><atom:updated>2026-08-19T18:32:38.803Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திண்டுக்கல் டிராகன்ஸ்,Dindigul Dragons,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோலாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/vxjzmhq4/Trichy-Grand-Cholas-Win-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Trichy Grand Cholas Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/vxjzmhq4/Trichy-Grand-Cholas-Win-1.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இன்றைய போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 22-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/trichy-grand-cholas">திருச்சி கிராண்ட் சோலாஸ்</a> அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>கடின இலக்கு:</h2><p>திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராஜ்குமார் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 71 ரன்கள் (9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சுரேஷ் குமார் 41 பந்துகளில் 60 ரன்கள் (7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார்.</p><p>அடுத்து களமிறங்கிய சஞ்சய் யாதவ் தன் பங்கிற்கு 20 பந்துகளில் 33 ரன்களை (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். இவருடன் ஆடிய ஜாஃபர் ஜமால் 9 பந்துகளில் 21 ரன்கள் (3 சிக்சர்கள்) எடுத்தார்.</p><p>இதன் காரணமாக திருச்சி அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் விஜூ அருள் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வரன் 1 விக்கெட் கைப்பற்றினர்.</p><h2>தடுமாறிய திண்டுக்கல் டிராகன்ஸ்:</h2><p>சற்றே கடின இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ஷிவம் சிங் நல்ல தொடுக்கத்தை கொடுத்தார். இவர் 28 பந்துகளில் 47 ரன்கள் (8 பவுண்டரிகள்) விளாசினார். இவருடன் களமிறங்கிய வி.கே. வினீத் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபா இந்திரஜித் 22 பந்துகளில் 32 ரன்கள் (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார்.</p><p>பின்னர் வந்தவர்களில் ஆர்.கே. ஜெயந்த் கடைசி வரை போராடினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆர்.கே. ஜெயந்த் 27 பந்துகளில் 34 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை மட்டுமே எடுத்தது.</p><p>இதன் மூலம் திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஈஸ்வரன் 4 விக்கெட்டுகளையும், அந்தோனி தாஸ் 3 விக்கெட்டுகளையும், அதிசயராஜ் டேவிட்சன் 1 விக்கெட் கைப்பற்றினார்.</p>]]></content:encoded></item><item><title>பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/famous-actress-sowcar-janaki-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/famous-actress-sowcar-janaki-hospitalised#comments</comments><guid isPermaLink="false">4cd30f38-ae18-41a5-bfb6-495e12406f9a</guid><pubDate>Wed, 19 Aug 2026 17:41:30 +0000</pubDate><atom:updated>2026-08-19T17:41:30.919Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sowcar janaki,சௌகார் ஜானகி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/459mq2vr/Sowcar-Janaki.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sowcar Janaki]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/459mq2vr/Sowcar-Janaki.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழம்பெரும் நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/sowcar-janaki">சௌகார் ஜானகி</a> உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>கன்னட மொழி பேசும் குடும்பத்தில் டிசம்பர் 12, 1931-ஆம் ஆண்டு பிறந்த சௌகார் ஜானகி தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.</p><h2>திரையுலக பயணம்:</h2><p>நடிகை சௌகார் ஜானகி 1959-ஆம் ஆண்டு வெளியான கன்னடா மொழியில் முதல் பான் இந்தியா திரைப்படமான மகிஷாசுர மர்தினியில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சௌகார் ஜானகி டாக்டர் ராஜ்குமாருடன் நடித்தார். அந்த வகையில், சௌகார் ஜானகி புகழ்பெற்ற பான் இந்தியா நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட ஷவுகாரு என்ற திரைப்படத்தில் தான் நடிகை சௌகார் ஜானகி முதன் முதலில் நடித்தார். இந்தப் படத்தை இயக்குநர் எல்.வி. பிரசாத் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் இவருக்கு சௌகார் என்ற புனை பெயர் வந்தது. இவர் 1952-ஆம் ஆண்டு வெளியான வளையாபதி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.</p><h2>வென்ற விருதுகள்:</h2><p>இதைத் தொடர்ந்து இவர் எண்ணற்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் இவர் நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதோடு, இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுக்கொடுத்தது.</p><p>கலைத்துறையில் சௌகார் ஜானகி பங்களிப்பை பாராட்டும் வகையில் இவருக்கு நந்தி விருதுகள், கலைமாமணி மற்றும் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவரது சகோதரியான கிருஷ்ண குமாரியும் புகழ்பெற்ற நடிகை ஆவார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் அணிக்கு 198 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி கிராண்ட் சோலாஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-trichy-grand-cholas-set-198-runs-as-target-for-dindigul-dragons</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-trichy-grand-cholas-set-198-runs-as-target-for-dindigul-dragons#comments</comments><guid isPermaLink="false">1a12ed01-1d53-4d96-aada-c147e1b1a97a</guid><pubDate>Wed, 19 Aug 2026 16:45:33 +0000</pubDate><atom:updated>2026-08-19T16:45:33.694Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திண்டுக்கல் டிராகன்ஸ்,Dindigul Dragons,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோலாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/v9mmbstm/Trichy-Grand-Cholas.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Trichy Grand Cholas]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/v9mmbstm/Trichy-Grand-Cholas.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இன்றைய போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 22-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/trichy-grand-cholas">திருச்சி கிராண்ட் சோலாஸ்</a> அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>அதிரடி தொடக்கம்:</h2><p>திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராஜ்குமார் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 71 ரன்கள் (9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சுரேஷ் குமார் 41 பந்துகளில் 60 ரன்கள் (7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார். </p><p>அடுத்து களமிறங்கிய சஞ்சய் யாதவ் தன் பங்கிற்கு 20 பந்துகளில் 33 ரன்களை (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். இவருடன் ஆடிய ஜாஃபர் ஜமால் 9 பந்துகளில் 21 ரன்கள் (3 சிக்சர்கள்) எடுத்தார்.</p><p>இதன் காரணமாக திருச்சி அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் விஜூ அருள் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வரன் 1 விக்கெட் கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் கவனத்திற்கு... தமிழ்நாடு காவல்துறை மீதான புகார்களை தெரிவிக்க தனிப்பிரிவு துவக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/for-public-attention-a-dedicated-wing-to-report-corruption-allegations-against-the-police</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/for-public-attention-a-dedicated-wing-to-report-corruption-allegations-against-the-police#comments</comments><guid isPermaLink="false">a43ee758-2c3d-49f0-8b46-83beae2ac968</guid><pubDate>Wed, 19 Aug 2026 16:36:44 +0000</pubDate><atom:updated>2026-08-19T16:36:44.594Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு காவல்துறை,Tamil Nadu Police,Internal Vigilance Cells,உள்-கண்காணிப்புப் பிரிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/wvwbn9pz/New-Project-2026-08-19T220456.991.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள் கவனத்திற்கு... தமிழ்நாடு காவல்துறை மீதான புகார்களை தெரிவிக்க தனிப்பிரிவு துவக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/wvwbn9pz/New-Project-2026-08-19T220456.991.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு காவல் துறையில் போலீசார் மீதான ஊழல், லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற புகார்களைத் தெரிவிக்க மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக புதிய விசாரணை தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி சென்னை காவல் துறையினர் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க 78717 23000 என்ற வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களுக்கும் தனித்தனி மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>இதன்மூலம் பொதுமக்கள் தங்களின் புகார்களை எளிமையாக வாட்ஸ்அப் மற்றும் மொபைல் எண்கள் மூலம் அனுப்பலாம் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>புகார் அளிப்பவர்கள் மற்றும் சாட்சிகளின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என காவல்துறை உறுதியளித்துள்ளது. </p><p>அனைத்து புகார்களும் உரிய காலக்கெடுவுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஊழலற்ற காவல்துறையை உறுதிசெய்ய மக்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் தமிழ்நாடு டிஜபி அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p> உள்-கண்காணிப்புப் பிரிவுகளின் செயல்பாடுகள் மூத்த காவல் அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘107 அறிவிலிகள் அவையை ஆக்கிரமித்ததன் விளைவு’ - அமைச்சர் ஆனந்தின் சர்கார் விமர்சனத்திற்கு அதிமுக பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-consequence-of-107-fools-occupying-the-house-aiadmk-hits-back-at-minister-anands-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-consequence-of-107-fools-occupying-the-house-aiadmk-hits-back-at-minister-anands-criticism#comments</comments><guid isPermaLink="false">6cb698e7-0453-4ac3-8f72-1f8c19e8ea95</guid><pubDate>Wed, 19 Aug 2026 16:20:36 +0000</pubDate><atom:updated>2026-08-19T16:20:36.119Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Sarkar,சர்கார்,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/jh6h8qye/New-Project-2026-08-19T214648.607.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘அரசியல் புரிதலற்ற 107 அறிவிலிகள் அவையை ஆக்கிரமித்ததன் விளைவு’ - அமைச்சர் ஆனந்தின் விமர்சனத்திற்கு அதிமுக பதிலடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/jh6h8qye/New-Project-2026-08-19T214648.607.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் ஆனந்த், விஜய் நடித்த சர்கார் படப்பேனரை கிழித்ததால்தான் அதிமுக ஆட்சியை இழந்தது என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அமைச்சர் ஆனந்தின் இந்தப் பேச்சுக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.</p><p>இதுதொடர்பாக அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“விபரீத யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட மாய மோகம் தலைக்கேறி, வாய்க்கு வந்ததை அஇஅதிமுக குறித்து சட்டமன்றத்தில் பேசியுள்ள அமைச்சர் ஆனந்துக்கு கண்டனம்!</p><p>நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்தான பதிலுரையில், அதைத் தவிர எல்லாவற்றையும் பேசினார் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.</p><p>அவர் அவரது கட்சி குறித்தும், அவரது தலைவர் குறித்தும் பேசியது பற்றி யாருக்கும் எந்த கவலையும் இல்லை. பிளாக் டிக்கெட் வித்தது எல்லாம் ஒரு வரலாறா? என்றெல்லாம் கேள்வி கேட்கப் போவதும் இல்லை.</p><p>ஆனால், தேவையே இல்லாமல் அஇஅதிமுக-வை சீண்டும் வகையில் பேசியிருக்கிறார். அதற்கான எதிர்வினையை நிச்சயம் அவர் எதிர்கொள்ள வேண்டும்.</p><p>அதாவது, சர்கார் திரைப்பட பேனர்களை கட்சித் தொண்டர்கள் கிழித்ததால் தான் அஇஅதிமுக ஆட்சி 2021-ல் அமையவில்லையாம். அரசியல் புரிதலற்ற 107 அறிவிலிகள் அவையை ஆக்கிரமித்து இருப்பதால் இந்த அலங்கோலத்தை கேட்கும் நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.</p><p>உலகில் வாழும் தமிழர்கள் உள்ளமெல்லாம் வீற்றிருக்கும் உன்னதத் தாய், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரை பயன்படுத்தி, தவறான வகையில் அரசியல் ரீதியாக சித்தரித்து ஒரு படம் வந்தால், அம்மாவின் வழிவந்த தொண்டர்கள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பார்களா என்ன?</p><p>அப்போதும் சரி, </p><p>இப்போதும் சரி,</p><p>எப்போதும் சரி,</p><p>எங்கள் இதயதெய்வங்களை பழித்துப் பேசுவோர் யாராக இருந்தாலும், இந்த இயக்கத்தின் தொண்டன் வீறுகொண்டு எழுவான்! அவனது அரசியல் எதிர்வினை, எதிரிகளின் அரசியல் வாழ்க்கையையே முடித்துக் கட்டிவிடும்!</p><p>அதே சர்கார் படத்தில் நீங்கள் தூக்கி எறிவது போல காட்சி அமைத்த “அம்மா லேப்டாப்”களை இப்போது ஏன் வழங்குகிறீர்கள்? அன்று பழித்து பேசிய ஜெயலலிதாவின் பெயரை, அன்று படத்தில் தூக்கி எறிந்த அவரின் மக்கள் நலத் திட்டங்களை இன்று அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு உங்களுக்கு கேவலமாக இல்லையா?</p><p>2021 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு ஒரு மாற்றம் வேண்டும் என்ற தமிழ்நாடு மக்களின் சாதாரான எண்ணப்படி தான் எங்கள் வெற்றி வாய்ப்பு நழுவியது. அப்போதும் 33.3% வாக்குகளோடு, 75 தொகுதிகளில் வென்று, மக்களின் ஆதரவோடு ஐந்தாண்டுகள் பிரதான எதிர்க்கட்சியாக பணியாற்றினோம்.</p><p>அதனால், “பேனரைக் கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்தது, ஒரு நடிகனைக் கண்டு அரசாங்கமே” என்றெல்லாம் உருட்டும் உங்கள் பழைய போக்கை தியேட்டர் வாசலோடும், ட்விட்டர் அணில் குஞ்சுகளோடும் நிறுத்திக் கொள்ளுங்கள் அமைச்சரே..!!</p><p>(பி.கு. : சர்கார் பட சர்ச்சையில் ஒரு விஷயத்திற்கு வேண்டுமானால் வருத்தப் படுகிறோம்- அந்த குப்பைப் படத்திற்கு எங்களால் ஒரு 2 நாட்கள் இலவச விளம்பரம் கிடைத்ததற்காக..!!)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘கஜானா காலி... கார் மட்டும் எப்படி? இல்லாதவர்களுக்கு மட்டும் கொடுக்கவேண்டும்’ - திமுக எழிலன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-treasury-is-empty-how-is-this-alone-possible-it-should-be-given-only-to-those-who-do-not-own-a-car-dmks-ezhilan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-treasury-is-empty-how-is-this-alone-possible-it-should-be-given-only-to-those-who-do-not-own-a-car-dmks-ezhilan#comments</comments><guid isPermaLink="false">01fb97ca-60f5-4380-8ff8-1b766685301a</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:57:36 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:57:36.751Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Car,கார்,Ezhilan Naganathan,எழிலன் நாகநாதன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/oxlt7gq6/New-Project-2026-08-19T212651.799.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘கஜானா காலி... இது மட்டும் எப்படி? கார் இல்லாதவர்களுக்கு மட்டும் கொடுக்கவேண்டும்’ - திமுக எழிலன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/oxlt7gq6/New-Project-2026-08-19T212651.799.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களில் கார் இல்லாதவர்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவிப்பு தொடர்பாக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவ அணிச் செயலாளருமான எழிலன் நாகநாதன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,</p><p>“சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது, உதவியாளர் வழங்குவது மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவது தொடர்பானது. ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.3 கோடி அளவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இந்த எம்.எல்.ஏ. நிதி என்ற நடைமுறையை முத்தமிழறிஞர் கலைஞர்தான் கொண்டு வந்தார்.</p><p>ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அடிப்படைப் பொறுப்பு என்ன? சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவுகளை விவாதிப்பது, அவற்றை சட்டங்களாக மாற்றுவதற்கான பணிகளில் பங்கேற்பது, மக்களின் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைப்பது, அவர்களின் தேவைகளுக்கான திட்டங்களை உருவாக்குவதில் பங்களிப்பது, தொகுதி மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது என்பதுதான். அதற்காகத்தான் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டது.</p><p>ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி என்ற அளவில் தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்கிறது என்றால், ஐந்து ஆண்டுகளில் ஒரு எம்.எல்.ஏ. தனது தொகுதிக்கு கணிசமான நிதியை நேரடியாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. </p><p>இப்போது அரசாங்கமே பொருளாதார நெருக்கடி இருப்பதாகச் சொல்கிறது. கடுமையான நிதிக் கட்டுப்பாட்டில் அரசு செயல்படுகிறது என்று கூறுகிறது. அப்படியிருக்கும்போது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவாக கார், உதவியாளர், சம்பளம், பெட்ரோல் மானியம் போன்ற சலுகைகளை வழங்குவது அவசியமா?</p><p>ADR உள்ளிட்ட அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும், தற்போதைய சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ஏழை, எளிய, சாமானிய மக்களை சட்டமன்றத்திற்கு கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் கூறும்போது, உண்மையில் யாருக்கு வாகனம் தேவைப்படுகிறது, யாருக்கு தேவையில்லை என்பதை அவர்களுடைய அஃபிடவிட்டின் அடிப்படையில் மதிப்பீடு செய்யலாமே? </p><p>பெரிய அளவிலான சொத்துகளையும், வாகனங்களையும் வைத்திருக்கும் ஒருவருக்கும், உண்மையில் வாகன வசதி இல்லாத ஒருவருக்கும் ஒரே மாதிரியான சலுகை வழங்குவது சரியான அணுகுமுறையா?. தேவைப்படுகிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் உதவி வழங்கும் முறையை உருவாக்கலாம். </p><p>இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், ஒருபுறம் விவசாயக் கடன் தள்ளுபடி, பல்வேறு நலத்திட்டங்கள், நிதிப் பற்றாக்குறை என்று கூறுகிறீர்கள். மறுபுறம், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார், உதவியாளர், பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறீர்கள். இது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்த கேள்வியை எழுப்புகிறது.</p><p>மேலும், முந்தைய ஆட்சியினர் கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றார்கள், கடுமையான நிதிச்சுமையை விட்டுச் சென்றார்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கமே, இப்போது இப்படிப்பட்ட புதிய செலவினங்களை அறிவிக்கும்போது, அது இரட்டை நிலைப்பாடாக உள்ளது. ” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் எவ்வளவு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-salary-of-tamil-nadu-mlas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-salary-of-tamil-nadu-mlas#comments</comments><guid isPermaLink="false">9c9623b6-26da-47a8-93ce-0a20efc166bf</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:35:55 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:35:55.029Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gepyy7tp/TVKVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gepyy7tp/TVKVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா ஒரு கார் வழங்கப்படும். வாகனப்படி 75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். உதவியாளர்படி 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.</p><h2>அடிப்படை சம்பளம்</h2><p>அதன்படி ஒரு எம்.எல்.ஏ. இதற்கு முன்னதாக அடிப்படை சம்பளம் மற்றும் படிகள் மூலமாக 1.05 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றனர். தற்போது அது 1.80 லட்சம் கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>அடிப்படை ஊதியம் முன்னதாக 30 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது அது 30 ஆயிரம் ரூபாயாகவே உள்ளது.</p><p>மாதாந்திரப்படி 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போதும் அது 10 ஆயிரமாக உள்ளது. தொகுதிப்படி 25 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அது அப்படியே உள்ளது, அஞ்சல் படி 2500 ரூபாய், தொலைபேசிப்படி 7500 ரூபாய், தொகுப்புப்படி 5 ஆயிரம் ரூபாய் என இருந்தது. தற்போதும் அதுவே நீடிக்கிறது.</p><h2>கார் மற்றும் உதவியாளர் படி</h2><p>தற்போது வாகனப்படி 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. உதவியாளர் படி 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படுகிறது. அத்துடன் காரும் வழங்கப்படுகிறது.</p><p>ஒரு தொகுதிக்கு மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு 3.54 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆப்சென்ட்! </title><link>https://www.maalaimalar.com/news/national/south-indian-chief-ministers-conference-tomorrow-telangana-chief-minister-revanth-reddy-absent</link><comments>https://www.maalaimalar.com/news/national/south-indian-chief-ministers-conference-tomorrow-telangana-chief-minister-revanth-reddy-absent#comments</comments><guid isPermaLink="false">841d038e-7528-435a-92cd-b01be63c157e</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:28:51 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:28:51.861Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி,CM Revanth Reddy,Southern Zonal Council meeting,தென்மண்டல கவுன்சில் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/63s5lusr/New-Project-2026-08-19T205829.039.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆப்சென்ட்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/63s5lusr/New-Project-2026-08-19T205829.039.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. </p><p>பிரிட்டன் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு 10 நாட்கள் முதலீட்டுப் பயணம் மேற்கொள்வதால் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><p>முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இல்லாததால், அம்மாநில துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்கா அல்லது மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நாளை (ஆகஸ்ட் 20) தென்மண்டல கவுன்சில் குழு மாநாடு நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். </p>]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/india-beat-pakistan-in-hockey-world-cup</link><comments>https://www.maalaimalar.com/sports/india-beat-pakistan-in-hockey-world-cup#comments</comments><guid isPermaLink="false">e50c9295-9916-41cc-b1d4-b81fb1786795</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:11:17 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:11:17.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய அணி,Team India,Hockey World Cup,உலகக் கோப்பை ஹாக்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/nchanhd7/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ team india]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/nchanhd7/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>16-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. வரும் 30-ம் தேதி வரை நடக்கும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறுகிறது.</p><h2>16 நாடுகள்</h2><p>ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 16 நாடுகளும் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளன.</p><p>பாகிஸ்தான், இங்கிலாந்து வேல்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.</p><p>ஆண்கள் உலகக் கோப்பையில் நெதர்லாந்தில் நடந்த முதல் லீக் போட்டியில் இந்திய அணி வேல்ஸ் அணியை 3–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இங்கிலாந்து உடனான போட்டியில் இந்தியா 2-4 என தோல்வி அடைந்தது.</p><h2>இந்தியா-பாகிஸ்தான்</h2><p>இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் உலகக் கோப்பையில் இந்திய அணி தனது 3வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5–3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.</p><h2>ஹர்மன்பிரீத் சிங் அபாரம்</h2><p>இந்தியா சார்பில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், அபிஷேக் தலா இரு கோல்களை அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் 3 கோல் அடிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.</p><p>இறுதியில், இந்திய அணி 5 - 3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2வது வெற்றியைப் பெற்றது. அத்துடன், இந்திய அணி அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.</p>]]></content:encoded></item><item><title>“மனிதர்கள் ஏமாற்றுகிறார்கள்... நாங்கள் மாட்டிக் கொள்கிறோம்” - ம.பி.யில் மனுவில் ஒலித்த தெருநாய்களின் வேதனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/despite-sterilization-i-have-six-pups-humans-deceive-and-we-get-caught-the-anguish-of-stray-dogs-voiced-in-a-petition-from-madhya-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/despite-sterilization-i-have-six-pups-humans-deceive-and-we-get-caught-the-anguish-of-stray-dogs-voiced-in-a-petition-from-madhya-pradesh#comments</comments><guid isPermaLink="false">6c614fd2-8619-4c59-a7f6-6af74c6a85d9</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:58:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:58:54.090Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,stray dog ​​sterilization,தெருநாய்கள் கருத்தடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/45wssmgo/New-Project-2026-08-19T194444.809.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இவர்கள் ஏமாற்றுகிறார்கள்... நாங்கள் மாட்டிக் கொள்கிறோம்” - ம.பி.யில் மனுவில் ஒலித்த தெருநாய்களின் வேதனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/45wssmgo/New-Project-2026-08-19T194444.809.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாய் முகமூடி அணிந்து மனு அளிக்க சென்ற நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><p>மாநகராட்சி பகுதியில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதில் குறைபாடு இருப்பதாகக் கூறி அலுவலகத்திற்கு மனு அளிக்கச் சென்றவர் இந்த நூதன ஆர்ப்பாட்டை முன்னெடுத்துள்ளார். </p><p>ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, வேடிக்கையாக அதே சமயம் அதிகாரிகளைச் சாடும் வகையிலான புகாரை அளித்த அந்த நபர்., “நாங்கள் அவர்களைக் கடிப்பதாக மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அதில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. முன்பு எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கிடைக்கும், ஆனால் இப்போது அது நடப்பதில்லை. அதனால், நாங்கள் நிச்சயமாக மக்களைத் துரத்திச் செல்வோம். </p><p>மாவட்ட ஆட்சியரிடம் இருந்து நாங்கள் நீதியைக் கோருகிறோம். எங்கள் பெயரில் நிதியைத் திருடி, எங்களுக்கு அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டேன் என்பது எனக்குத் தெரியும். எனக்கு நீதி கிடைக்கும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என தெரிவித்தார்.</p><p>மேலும் நாய்களுக்கு முறையான அறுவை சிகிச்சை செய்யாமல், அதிகாரிகள் போலியான ரசீதுகளை மட்டும் தயாரித்து ஊழல் செய்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p>இவருக்கு துணையாக மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் தீபக் முல்லு ரத்தோரும் சென்றுள்ளார். </p><h2>ரூ. 40 லட்சம் ஊழல் குற்றச்சாட்டு </h2><p>மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்குக் கருத்தடை சிகிச்சை செய்யவும் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ. 40 லட்சம் வரை செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.</p><p>ஆனால் அதே காலகட்டத்தில், 13,225 நாய் கடி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட்டுள்ளன.</p><p>மறுபுறம் மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் சஞ்சய் சுக்லா, ஊழல் குற்றச்சாட்டை மறுத்தார். கருத்தடைத் திட்டம் தொடர்பான பதிவுகளும், தரவுகளும் வழங்கப்படும் என்றும் கூறினார்.</p><p>மேலும் இவ்விவகாரம் நகராட்சி ஆணையருடன் விவாதிக்கப்பட்டதாகவும், விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள்: 31-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்-பள்ளிக் கல்வித்துறை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/school-education-department-says-state-education-policy-based-curriculam-comments-can-be-submitted-by-the-31st</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/school-education-department-says-state-education-policy-based-curriculam-comments-can-be-submitted-by-the-31st#comments</comments><guid isPermaLink="false">c88fbb42-342c-48f5-833b-347b66206af7</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:43:02 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:43:02.386Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,School Education Department,பள்ளிக்கல்வித்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/24k3s1sh/DPI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DPI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/24k3s1sh/DPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:</p><p>பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-ன் அடிப்படையில் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. </p><p>இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஆறு முதல் பத்து வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.</p><p>இப்பாடத்திட்டங்களைக் கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் https://tnschools.gov.in இணையத் தளத்தில் 20.08.2026 முதல் பார்க்கலாம்.   </p><p>பாடத்திட்டம் சார்ந்து கருத்து கூறுவோார் https://tnschools.gov.in இணையத் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையவழிப் படிவம் (online form) வாயிலாக, சுய விவரங்களுடன் தம் கருத்துகனை 31.08.2026-க்குள் அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெற்ற மகளையே சீரழித்த கொடூர தந்தை: போலி ஆதாரைப் பயன்படுத்தி குழந்தையை விற்ற அத்தை உள்பட 8 பேர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/cruel-father-abused-his-own-daughter</link><comments>https://www.maalaimalar.com/news/national/cruel-father-abused-his-own-daughter#comments</comments><guid isPermaLink="false">ad9cf8cd-d02f-461e-8bd7-c82b41f94435</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:41:50 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:41:50.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>POCSO,Raipur,போக்சோ,ChildTrafficking,AadhaarForgery,ராய்பூர்,ராய்பூர்கொடூரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6kwcsfz3/rape.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Child Trafficking]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6kwcsfz3/rape.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் மனிதநேயமற்ற, நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 16 வயதுடைய பெற்ற மகளையே சொந்தத் தந்தை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.</p><h2>கட்டாய க<strong>ருக்கலைப்பு</strong></h2><p>கடந்த 2023-ஆம் ஆண்டு பெற்ற தாய், தந்தையை விட்டுப் பிரிந்து சென்றதைத் தொடர்ந்து, மூத்த மகளான இந்த சிறுமியைத் தந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துத் தொடர்ந்து அச்சுறுத்தி <a href="https://www.maalaimalar.com/news/national/atrocity-against-14-year-old-girl-by-instagram-friend-in-mumbai">பாலியல் துன்புறுத்தலுக்கு </a>உள்ளாக்கியுள்ளார். இதனால் சிறுமி முதன்முறையாகக் கர்ப்பமடைந்தபோது, அவரது அத்தையும் தந்தையும் இணைந்து சட்டவிரோதமாகக் மாத்திரைகள் வழங்கி கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளனர்.</p><h2>மீண்<strong>டும் கர்ப்பம் அடைந்த சி</strong>றுமி</h2><p>அதன் பின்னரும் தொடர்ந்த கொடுமையால், அச்சிறுமி மீண்டும் 2025-இல் கர்ப்பமடைந்தார். இம்முறை இக்குற்றத்தை மறைப்பதற்காக, செவிலியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சிலருடன் இணைந்து தந்தை சதித்திட்டம் தீட்டினார். சிறுமியின் உண்மையான வயதை மறைத்து, போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரித்து, அவருக்குத் திருமணமாகிவிட்டதாகப் பொய் சித்திரத்தை உருவாக்கியுள்ளனர்.</p><h2>குழ<strong>ந்தை விற்பனை</strong></h2><p>இதனைப் பயன்படுத்தி ஒரு தனியார் மருத்துவமனையில் அச்சிறுமியை அனுமதித்து, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறக்க வைத்துள்ளனர். குழந்தை பிறந்தவுடனேயே, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களின் உதவியோடு அக்குழந்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளனர்.</p><h2>அத்தை உள்<strong>பட 8 பேர் கை</strong>து</h2><p>சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலமாகத் தன் தாயைத் தொடர்புகொண்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுது விவரித்துள்ளார். உடனடியாகத் தாய் அளித்த புகாரின் பேரில், நியூ ராஜேந்திர நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றத்தில் ஈடுபட்ட தந்தை, அத்தை, போலியான ஆவணங்களை உருவாக்க உதவிய செவிலியர்கள் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய நபர் உட்பட 8 பேரை காவல்துறையினர் போக்சோ, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சிறுவர் நீதிச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>