<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 10 Aug 2026 08:02:15 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: விவசாயிகள் கடன் தள்ளுபடி - ஊக்கத்தொகை: சட்டசபையில் தவெக – திமுக இடையே காரசார விவாதம்! - 10 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026#comments</comments><guid isPermaLink="false">1bbee6de-4ec6-459e-bfff-1b842e60b35a</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:09:30 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:47:45.363Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/803u20uo/vinoth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/803u20uo/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெய்யாறு பிரச்சனை குறித்து முதலமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் பேசி நெய்யாறு பிரச்சனையை தீர்க்க வேண்டும் - பிரவீன்</p><p>விளவங்கோடு தொகுதி மக்களின் பிரச்சனை தீர்க்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><h2>அமைச்சர் ரஞ்சித் குமார்</h2><p>யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின நபருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மனித - விலங்கு மோதலை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்.</p><p>யானைகள் 3000 கி.மீ. நடந்து செல்லும், அது செல்லும் பாதை காடுகளை வளப்படுத்தும் - அமைச்சர் ரஞ்சித்</p><p>தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உரையாற்றினார்.</p><p>மனிதர் - வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நீலகிரியில் இருந்த புல்லட் ராஜா யானை தற்போது குமரியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு.</p><p>யானை புல்லட் ராஜா குமரிக்கு வந்ததில் இருந்து பொதுமக்கள் மீது அதிகளவில் தாக்குதல்.</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ ஜமால் யூனுஸ் உரை</h2><p>காவிரி நீர் விவகாரத்தில் தமிழக உரிமையை மீட்க தவெக அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>65 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கிடைத்துள்ளது. நிச்சயம் உறுதுணையாக இருந்து செயல்படுவோம்.</p> <p>காங்கிரஸ் அல்லாத ஆட்சி என கூறிய காமராஜூக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் அமமுக எம்எல்ஏ காமராஜ் உரையாற்றினார்.</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் நல்ல தொடக்கம். வருவாயை பெருக்க அலுவாலியா தலைமையில் குழுவுக்கு வரவேற்பு</p><p>தமிழ்நாடு மீண்டும் மின்மிகை மாநிலமாக மாறும். விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள். மேலும் ரூ.8,000 கோடி மட்டுமே விவசாய கடன்  உள்ளது. ரூ.8000 கோடி கடனை தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்காக கடன் வாங்கியாவது திட்டங்களை நிறைவேற்றுங்கள்.</p><p>நீங்கள் இருக்கும் வரை நீங்கள் தான் முதலமைச்சர். பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி மத்தியில் அமைக்க வேண்டும்.</p> <p>முதலமைச்சர் கர்நாடகா செல்ல நினைத்தது தவறானது. உபரி நீரை மட்டும் திறந்து விட தமிழகம் கர்நாடகாவின் வடிகாலா?</p><p>மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என காமராஜ் வேண்டுகோள் விடுத்தார்.</p><p>அதிமுக எம்எல்ஏ காமராஜ் கூறுகையில்,</p><p>தமிழக அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு முக்கியத்துவமில்லை. விவசாயம் என்பது வெறும் தொழில் அல்ல, விவசாயிகளின் வாழ்க்கை முறை. மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>கர்நாடகத்திடம் உரிய நீரை கேட்கிறோம், உபரி நீரை அல்ல. தண்ணீர் இல்லை என கூறி 2 நாட்கிில் அணை நிரம்பி விட்டதாக கூறுகின்றனர்.</p> <h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>திமுக அரசு முதல் காலாண்டில் வாங்கிய கடனை விட குறைவாகவே தவெக ஆட்சியில் ரூ.29,881 கோடி கடன்.</p><p>முதல் காலாண்டில் கடன் வாங்கும் தொகையை தவெக அரசு சற்று குறைத்துள்ளது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவை 0.54-ல் இருந்து 0.51 ஆக குறைத்துள்ளோம்.</p><p>கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>தேர்தல் அறிக்கையில் கூறிய 125 அறிவிப்புகள் தவெக அரசின் முதல் பட்ஜெட்டிலேயே அறிவித்துள்ளோம். துறை ரீதியான மாற்றங்களை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார். கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.</p><h2> அதிமுக எம்எல்ஏ காமராஜ்</h2><p>பட்ஜெட் தாக்கல் என்ற பெயரில் வெற்றி என்ற பெயரை ஒவ்வொரு திட்டத்திற்கு சூட்டும் விழா தான் நடைபெற்றது.</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த புதிய திட்டமும் இல்லை.</p><p>மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம்.</p><p>நிதி நிலையை சரி செய்ய 2 ஆண்டு தேவை என தவெக அரசு சொல்கிறது. ஆனால் 50 ஆண்டு தேவை என நிதித்துறை செயலாளர் கூறுகிறார்.</p><p>நன்னிலம் அதிமுக எம்எல்ஏ காமராஜ் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றினார். </p><p>அதிமுக ஆட்சிக்காலத்தில் விலைவாசி, கடன் கட்டுக்குள் இருந்தன.</p><p>தவெகவின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.</p><p>தவெகவின் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் அறிவிப்பாக வரவில்லை.</p> <p>கரும்புக்கு என கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியது மராட்டிய மாநிலம். விரைவில் கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணிக்கு வரும் - அமைச்சர் ஆதவ்</p><h2>சைதாப்பேட்டை எம்எல்ஏ அருள்பிரகாசம்</h2><p>தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்னல் வேகத்தில் முன்னேறுகிறது. சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டையில் மாசுவை நீக்கி தூய்மை கிடைத்துள்ளது.</p><p>நமது மண்ணில் விளையும் கரும்புக்கு சர்க்கரைத்தன்மை குறைவு - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பழைய கள்ளு. புதிய மொந்தை.</p><p>திமுக அரசின் பட்ஜெட்டை தான் தவெக அரசு அப்படியே வாசிக்கிறது என கிராமத்தில் பேசுகிறார்கள் -  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>ரேஷன் கடைகளில் தரமான அரிசி கொடுத்தால் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என எம்ஜிஆர் கூறினார்.</p><p>ரேஷன் கடைகளில் தரப்படும் அரிசியை வைத்து ஆட்சியை மதிப்பிடலாம் என எம்ஜிஆர் கூறினார் - சபாநாயகர்</p><p>திறந்த வெளியில் உள்ள 10 லட்சம் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடத்தில் 70% குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலையின்றி தவித்ததால் தவெக அரசு நடவடிக்கை.</p><p>விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக இந்த 5 ஆண்டு கால ஆட்சியை முதல்வர் விஜய் மாற்றுவார் என அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>திமுக ஆட்சியில் இதுவரை ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி அதை நாம் சமைத்து சாப்பிட்டோமா?</p><p>இலவசமாக தரும் அரிசி சாப்பிட முடியாத நிலையில் உள்ளதால் தான் சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு. </p><p>திமுகவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.</p><p>கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு சாகுபடியின் பரப்பளவு குறைந்துள்ளது.</p><h2>சொன்னால் செய்பவர் முதலமைச்சர் விஜய்</h2><p>பிரசாரத்தின்போது விவசாயியாக பிறக்க வேண்டும் என 3 முறை சொன்னார் முதல்வர் விஜய். அதை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்.</p><p>சொன்னால் செய்பவர் முதல்வர். நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசா சங்கங்களுடன் பேச்சு நடத்திய நிலையில் கரும்பு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>நீங்கள் 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.</p><p>5 வருடங்கள் ஆட்சியில் இருந்த திமுக 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா?</p><p>200 தொகுதிகளில் வெல்வோம் என அடிக்கடி சொன்ன திமுக, விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி தேர்தல் அறிக்கையில் பேசவே இல்லை.</p> <p>திமுக ஆட்சியில் தரமான அரிசிகள் வழங்கப்பட்டது. ஆட்சியர் தலைமையிலான குழு தான் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளித்தது - சக்கரபாணி</p><h2>அமைச்சர் வெங்கட்ரமணன்</h2><p>நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் திமுக ஆட்சியில் கையூட்டு பெறப்பட்டது. திமுக ஆட்சியில் ரேஷனில் தரப்பட்ட அரிசியை பயன்படுத்த முடியவில்லை என மக்களே கூறினர்.</p><p>ரேஷன் அரிசி தொடர்பாக புகார் வரும் நிலையில் அதனை சரிசெய்ய தொடர் நடவடிக்கை எடுக்கிறோம்.</p> <h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் நடந்துள்ளது. திமுக 2 லட்சம் மின் இணைப்பு கொடுத்தது விவசாயிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இலவச மின்சாரம் தொடர்பாக அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. தவெக ஆட்சியில் மின்சாரமே வரமேட்டேங்குது.</p><p>நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரத்திற்கு திமுக ஆட்சியைவிட கூடுதலாக ரூ.8 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் குறித்து மானிய கோரிக்கையில் அறிவிப்பு - நிர்மல்குமார்</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்த போகிறதா அரசு? நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கடந்த ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்?</p><p>வேளாண் துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ.279 கோடி குறைத்து நிதி ஒதுக்கி உள்ளது தவெக அரசு.</p><p>திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கான செலவை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டதாக அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார்.</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>தவெகவினர் படத்தை பார்த்து வந்தவர்கள், திமுகவினர் முரசொலி படித்து வந்தவர்கள். வேளாண்மை துறைக்கு திமுக ஆட்சியை விட குறைவாக ஒதுக்கி உள்ளது தவெக.</p><p>திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக்  தெரிகிறது.</p> <p>திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.</p><p>நெல் கிடங்குகள் கட்டவில்லை என அமைச்சர் ரமேஷ் தவறாக கூறினார். திமுக ஆட்சியில் 18 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.</p><p>மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதற்காக கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் போடப்பட்டதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் பேசினார்.</p><h2>அமைச்சர் ரமேஷ்</h2><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறந்த திரைக்கடை எழுதி உள்ளார்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.</p><p>ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்னாச்சு?</p><p>நெல்லுக்கும் கரும்புக்கும் அரசு ஒரு விலை நிர்ணயித்தால் அதிகாரிகள் ஒரு விலை நிர்ணயித்தார்களே அது தெரியாதா?</p><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? துன்பப்பட்டார்களா? என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.</p><p>திரைக்கதையை தயார் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.</p><p>கிடங்குகள் வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர் -  அமைச்சர் ரமேஷ்</p> <p>திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.</p><p>பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இருந்து கருத்துக்களை பெற்றோம் -  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>விவசாயிகள் வாங்கிய ரூ.21,000 கோடி கடனை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><p>விவசாயக்கடன் முழு தள்ளுபடி என நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் தான் சொன்னீர்கள்.</p><p>ரூ.21,000  கோடி கடனை தள்ளுபடி செய்கிறோம் எனக்கூறிவிட்டு வெறும் ரூ.6,000 கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள்.</p><p>தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 1.30 கோடி பெண்களுக் திமுக அரசு உரிமைத்தொகை கொடுத்தது.</p><p>நான் முதல்வன் திட்டத்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக அதிகம் பேர் பயிற்சி பெறுகின்றனர்.</p><p>திமுக ஆட்சியில் திடீர் திடீரென மழை பெய்தது. தவெக ஆட்சியில் மழையே பெய்யவில்லை.</p><p>நெல், கரும்பிற்கான ஊக்கத்தொகை தொடர்பாக தவெக - திமுக காரசார விவாதம் நடைபெற்றது.</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்து தான் வாக்குறுதி அளிக்க வேண்டும்.</p><p>திமுக இடைக்கால பட்ஜெட்டில் கரும்புக்கு ரூ.4000 கொடுப்போம் என கூறி இருந்தோம்.</p><p>திமுக ஆட்சியில் ரூ.19,500 கோடி கடன் தள்ளுபடி செய்தோம். </p> <h2>அமைச்சர் வினோத்</h2><p>விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை படிப்படியாகவே திமுக அரசு உயர்த்தியது.</p><p>திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் நெல்லுக்கு ரூ.2500, கரும்பிற்கு ரூ.3500 உயர்த்தி தரவில்லை.</p><p>புதிய ஆட்சி அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்தனர் விவசாயிகள். ஆனால் கிள்ளி தருகிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><h2>அமைச்சர் ஆனந்த்</h2><p>வாய்க்கால் தகராறுக்கு கூட சரிசெய்து விட்டீர்களா என இரவு பகல் பாராது போன் செய்கிறார் முதல்வர் விஜய்.</p><p>நாங்களும் தினந்தோறும் டென்ஷனாகத்தான் இருக்கிறோம்.</p><p>கரும்பு டன்னுக்கு ரூ.4,500 கொடுப்போம் என தவெக வாக்குறுதி அளித்தது.</p><p>எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் டென்ஷனாகத்தான் இருப்போம். நீங்கள் ரிலா்்ஸாக இருக்கிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p> <p>கரும்பு டன்னுக்கு ரூ.4000 கொடுத்தது வரலாற்றில் முதல்முறை. விவசாயிகள் நலனுக்காக வரலாறு படைத்துள்ளார்  முதலமைச்சர் விஜய் - செங்கோட்டையன்</p><p>விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட ஆட்சி திமுக ஆட்சி - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகவே இருக்கிறார் -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p> <p>திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.</p><p>கொள்கையை பேசி பேசி மக்கள் மனதை பிடித்தவர்கள் திராவிட இயக்கத்தினர்.</p><p>பட்ஜெட்டில் மாற்றத்தை காணவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது.</p><p>கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் இன்றி வாழ்ந்தார்கள்.</p><p>தமிழக பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் தொடங்கியது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழ்நாட்டின் நிதிநிலை சரியாக இல்லை என விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.</p><p>நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். </p><p>நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்.</p><p>பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2.600 வழங்கப்படும்.</p><p>கரும்புக்கான ஊக்கத்தொகை ஒரு டன்னுக்கு ரூ.709.50 உயர்த்தி வழங்கப்படும்.</p><p>வரலாற்றிலேயே முதல்முறையாக நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ.156 வரை உயர்த்தப்பட்டுள்ளது.</p> <p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு</p><p>தனித் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்காது என்பதால் சட்டமாக இயற்ற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கோரிக்கை.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் ராஜ்மோகன் உரையாற்றினார்.</p><p>மொழியின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகு பார்க்கும் கூட்டம் இது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது உலகத்தாய் வாழ்த்து.</p><p>இனி பொது நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்கள், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ  அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும் அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும் அவரை வாழ்த்தும் இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.</p><p>தனித்தீர்மானத்தின் மீது ஐயூஎம்எல் எம்எல்ஏவும் அமைச்சருமான ஷாஜகான் ஆதரவு அளித்து உரையாற்றினார்.</p><p>மொழி உணர்வை சீண்டி பார்க்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.</p> <p>முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்தது.</p><p>மாநில அரசுகள் பின்பற்றும் தனித்துவ விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு இருக்கக்கூடாது.</p> <p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது பாமக எம்எல்ஏ சிவகுமார் உரையாற்றினார்.</p><p>பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும்.</p><p>பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.</p><h2>வன்னி அரசு</h2><p>ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்காக தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சி.</p><p>தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும் தீர்மானம் இது.</p><p>தமிழ் தேசியமும் திராவிடமும் வேறு வேறு என பேசும் அபாயகரமான அரசியல்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது அமைச்சர் வன்னிஅரசு உரையாற்றினார். </p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விசிக ஆதரவு.</p><p>தமிழ்நாடு, தமிழர் என்ற அரசியல் தான் இன்றும் தொடர்கிறது.</p>   <p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்எல்ஏவும் அமைச்சருமான விஸ்வநாதன் உரையாற்றினார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் 8.5 கோடி தமிழ் மக்களால் ஏற்கப்பட்டுள்ளது.</p><p>மனேன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தமிழுக்கு ஏற்பட்ட அவமானம்.</p> <h2>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.</h2><p>1981-ல் மதுரையில் 5-வது தமிழ்நாட்டை நடத்தியவர் எம்.ஜி.ஆர்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல.</p><p>தமிழ் என்ற வரும்போது இந்த பேரவை ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்மொழியின் தொன்மை, பண்பாட்டின் அடையாளம்.</p><p>தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனம், அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படுவது தமிழர்களின் உணர்வு.</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ கோவி செழியன் உரையாற்றினார். </p><p>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-ம் இடம் என்று சொல்லும்போது அவமானமாக இருக்கிறது.</p><p>தமிழ்மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாக்கியவர் கலைஞர் கருணாநிதி.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர்.</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளித்தது.</p><p>தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும் வகையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்</p> <p>1891-ம் ஆண்டு சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணீயம் நாடக நூலின் பாயிரம்.</p><p>1970 நவம்பர் 23-ல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என அரசாணை கொண்டுவரப்பட்டது.</p><p>2021 டிச.12-ல் தமிழ்நாட்டின் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது.</p><p>பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தின் முதலாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழின் பெருமையை சொல்ல திருக்குறள் ஒன்று போதாதா?</p><p>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் கொடுப்பது தானே மாநில உரிமை.</p><p>தமிழ் என்று சொன்னாலே ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒன்றாக வந்து நிற்கும்.</p><p>தமிழ் மொழியின் பெருமைய பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது.</p> <h2>முதலமைச்சர் விஜய்  உரை</h2><p>தாய் எப்படி புனிதமோ, அதை போன்றே தாய் மொழியும்.</p><p>தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் எனில் நாம் எல்லோரும் போற்றும் தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும்.</p><p>தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.</p><p>இந்தியாவின் நெற்றில் இருக்கும் பொட்டு தான தமிழ் மொழி.</p><p>தமிழும், தமிழனும் இல்லாத நாடு ஏது?</p> <p>தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது நமது உயிர், உணர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என சட்டசபை ஏகமனதாக தீர்மானிக்கிறது.</p><p>சட்டசபை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் என்சிற கோமுகி மணியனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய தனித்தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-resolution-priority-tamizh-thai-vazhthu">தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்</a></p> ]]></content:encoded></item><item><title>51 வயதிலும் மகேஷ் பாபுவின் இளைமையின் ரகசியம் இதுதான்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mahesh-babus-youthful-look-plant-based-diet-and-good-health-boost-skin-glow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mahesh-babus-youthful-look-plant-based-diet-and-good-health-boost-skin-glow#comments</comments><guid isPermaLink="false">a5c6b8c6-5fda-473e-b55e-37b059de7ba8</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:59:54 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:59:54.919Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மகேஷ் பாபு,குடல் ஆரோக்கியம்,சரும பொலிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/00b93273/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மகேஷ் பாபு]]></media:title><media:description type="html"><![CDATA[ மகேஷ் பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/00b93273/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>அழகுக் குறிப்புகள் (Beauty)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கு சூப்பர்ஸ்டார்<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/mahesh-babu-birthday-special-varanasi-film-rudra-look-release"> மகேஷ் பாபு </a>நேற்று (ஆகஸ்ட் 9) தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.</p><p>51 வயதிலும் அவரது இளமையான தோற்றத்திற்கு அவரின் உணவு முறையே காரணம் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p> <h2>உணவு கட்டுப்பாடு</h2><p>பேஸ்ட்ரி (கேக் வகை), பர்கர் மற்றும் தயிர் சாதம் ஆகிய மூன்றில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் என ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டபோது, "நான் இவை எதையும் சாப்பிடுவதில்லை. பால் பொருட்கள் மற்றும் ரொட்டிவகைகளை முற்றிலுமாகத் தவிர்க்கிறேன். பர்கர் பக்கமே போவதில்லை" என மகேஷ் பாபு பதிலளித்திருந்தார்.</p><p>அவர் காய்கறிகள் நிறைந்த தாவர அடிப்படையிலான உணவுகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார்.</p> <figure><img alt=" &apos;வாரணாசி&apos; பட புதிய போஸ்டர் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/lffauyqr/tn-5.jpg" /><figcaption> 'வாரணாசி' பட புதிய போஸ்டர் </figcaption></figure><h2>குடல் - தோல் ஒத்திசைவு</h2><p>அமெரிக்காவில் வசிக்கும் பிரபல இரைப்பை குடல் மருத்துவர் டாக்டர் பழனியப்பன் மாணிக்கம் இது குறித்து விளக்குகையில்,</p><p>காய்கறிகளில் உள்ள நார்ச்சத்துக்கள் நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைகின்றன.</p><p>இந்த நல்ல பாக்டீரியாக்கள் உடலில் ஏற்படும் Inflammation (அழற்சி - வீக்கம்)-ஐ குறைக்கின்றன.</p><p>உடலில் Inflammation குறையும் போது சருமத்தின் பொலிவும் மேம்பட்டு, முதுமை தோற்றம் தள்ளிப்போகிறது. இதை மருத்துவத்தில் Gut-Skin Axis என அழைக்கின்றனர்.</p> <h2>பொலிவுக்கு டிப்ஸ்</h2><p>குடல் ஆரோக்கியத்தை பொறுத்தே சருமப் பொலிவு என கூறப்படும் நிலையில் மருத்துவர் கரண் ராஜன் என்பார் இதற்கு சில ஆலோசனைகளை வழங்குகிறார்.</p><p>பெரும்பாலானோர் நாளொன்றுக்கு 15 கிராமிற்கும் குறைவாகவே நார்ச்சத்து உட்கொள்கின்றனர். ஆனால் ஆரோக்கியமான குடல் செயல்பாட்டிற்குத் தினமும் குறைந்தபட்சம் 30 கிராம் நார்ச்சத்து தேவை.</p> <p>இதற்கு பலவகை காய்கறிகளை உண்ண வேண்டும். கேரட், குடைமிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளில் உள்ள Carotenoids உடலின் Internal Sun screen செயல்பட்டு சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கின்றன.</p><p>அடுத்ததாக மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நாள்பட்ட மன அழுத்தம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையைக் குலைத்து சருமப் பிரச்சினைகளை உருவாக்குகிறது.</p><p>சுருக்கமாகக் கூறின், சிறந்த சரும ஆரோக்கியம் என்பது நாம் முகத்தில் தடவும் கிரீம்களில் மட்டும் இல்லை. நம் குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு அளிக்கும் உணவிலேயே அடங்கியுள்ளது என்கிறது மருத்துவ உலகம்.</p>]]></content:encoded></item><item><title>&quot;சாமி அமைச்சர்&quot; என்று அழைத்த எம்.ஆர்.கே..!- அவையில் குலுங்கி குலுங்கி சிரித்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-mrk-god-minister-remark-vijay-bursts-into-laughter</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-mrk-god-minister-remark-vijay-bursts-into-laughter#comments</comments><guid isPermaLink="false">710b9ef5-a107-4f1e-9a4b-673ecf6f3b7e</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:53:08 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:53:08.342Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எம்ஆர்கே பன்னீர்செல்வம்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,அமைச்சர் ரமேஷ்,MRK Paneerselvam,Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3btefm5y/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3btefm5y/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,"முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞராக இருந்தாலும், ஸ்டாலின் ஆக இருந்தாலும் செய்தித்தாளை  பார்த்து காலையிலேயே தொலைபேசியில் அழைப்பார்கள்.</p><p>5 ஆண்டுகளாக நாங்கள் டென்ஷனாகவே இருந்தோம் ஆனால் நீங்கள் ரிலாக்சாக இருக்கிறீர்கள்” என்றார்.</p><p>இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் என்.ஆனந்த்,"சிறிய வாய்க்கால் பிரச்சினையாக இருந்தாலும்   முதலமைச்சர் தொடர்பு கொண்டு பேசுகிறார். பிரச்சினையை சரி செய்து விட்டார்களா என்று போன் செய்து கேட்கிறார்.</p><p>உங்களுக்கு 5 வருடம்தான் டென்ஷன். ஆனால் ஒரு பயத்தோடுதான் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு தினசரி டென்ஷன்தான் என்று கூறினார்.</p><p>இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. இந்த உரையாடலை முதலமைச்சர் விஜய் புன்னகைத்தபடி ரசித்தார்.</p><p>சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை எனவும், மாற்றம் வரும் என நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியதாக கூறினார்.</p><p>இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,"கடந்த ஆட்சியில் ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என அறிவித்தது என்ன ஆனது.</p><p>எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திரைக்கதை, வசனம் பேசுகிறார். விவசாயிகளுக்கு கடந்த ஆட்சியில் நெல்லைச் சேமித்து வைக்க இடமில்லாத நிலை இருந்தது. நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.</p><p>கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்து சென்ற விவசாயி குறித்தும் அவர் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "தமிழக வெற்றிக் கழகம் எப்படி ஆட்சிக்கு வந்தது என சாமி அமைச்சரை பார்த்தாலே தெரிகிறது" என்றார். </p><p>இந்து சமய அறநிலைதுறை அமைச்சரை சாமி அமைச்சர் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறிய நிலையில் இதனை கண்ட  முதலமைச்சர்  விஜய் அவையில் குலுங்கி குலுங்கி சிரித்த சம்பவம் கவனத்தை ஈர்த்தது.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள்.. டெல்லியில் போராடிய மாணவிகள் குறித்த கருத்தால் இந்துத்துவா சித்தாந்தவாதி கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/hindutva-commentator-arrested-dg-mohandas-held-by-kerala-cyber-crime-for-inflammatory-remarks-on-neet-protest-at-jantar-mantar</link><comments>https://www.maalaimalar.com/news/national/hindutva-commentator-arrested-dg-mohandas-held-by-kerala-cyber-crime-for-inflammatory-remarks-on-neet-protest-at-jantar-mantar#comments</comments><guid isPermaLink="false">0e04ed40-a8ce-4dfd-8b9c-ba96525d6357</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:41:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:41:07.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வலதுசாரி,CJP Protest,சிஜேபி போராட்டம்,அரசியல் விமர்சகர்,Political commentator,right-winger</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/7k34r9rq/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டி.ஜி.மோகன்தாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.ஜி.மோகன்தாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/7k34r9rq/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு  எதிராகப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் </a>குறித்து அவதூறாகவும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய இந்துத்துவா சித்தாந்தவாதியும் வலதுசாரி அரசியல் விமர்சகருமான  டி.ஜி.மோகன்தாஸ் கேரளா சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  </p><p> பத்ரிகா  என்ற தனது யூடியூப் சேனலில் ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அவர் வெளியிட்ட வீடியோக்களில், ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து மோகன்தாஸ் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.  </p><h2>வீடியோ</h2><p>அந்த வீடியோவில், "நான் மட்டும் பொறுப்பில் இருந்திருந்தால், ஜந்தர் மந்தரைச் சுற்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, போராட்டக்காரர்களைக் கலைந்து போக உத்தரவிட்டிருப்பேன். அவர்கள் கேட்காவிட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டு இருப்பேன். சிலர் உயிரிழந்தாலும் சூழல் சில மணிநேரங்களில் அமைதியாகிவிடும்" என்று அவர் பேசியிருந்தார்.</p><p>மேலும், டெல்லியில் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு வழிவகுத்திருக்கும் என்றும், ஆனால் "அதுகுறித்து எந்த புகாரும் வந்திருக்காது, ஏனெனில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள், அதுமட்டுமின்றி, சில பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை ரசிக்கவும் செய்கிறார்கள்" என வீடியோவில் கொச்சையாக பேசியிருந்தார்.</p><p>இந்த வீடியோக்கள் தொடர்பாக இந்திய மாணவர் சங்கமான எஸ்எப்ஐ மற்றும் அகில இந்திய மாணவர் பெருமன்றம் ஏஐஎஸ்எப் ஆகிய மாணவர் அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.</p> <h2>கைது</h2><p>கொச்சி, மட்டான்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று மாலையில் கஸ்டடியில் எடுக்கப்பட்ட மோகன்தாஸ், நள்ளிரவில் திருவனந்தபுரம் சைபர் காவல நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார்.</p><p>வன்முறையைத் தூண்டுதல், பொய்யான தகவல்களைப் பரப்புதல் உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>சமூக வலைதளங்களில் இருந்து அந்தச் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p>மோகன்தாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் திருவனந்தபுரம் சைபர் காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! - மு.க.ஸ்டாலின் பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-tweet-for-murasoli-is-the-eldest-child-nurtured-by-kalaignar-with-his-own-blood</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-tweet-for-murasoli-is-the-eldest-child-nurtured-by-kalaignar-with-his-own-blood#comments</comments><guid isPermaLink="false">960b7eff-a3d7-451c-a465-ca8424b7da6e</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:24:32 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:24:32.226Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,murasoli,முரசொலி,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/kyqzv3s9/MKStalin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/kyqzv3s9/MKStalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க! என்று கூறியுள்ளார்.</strong></em></p><h2><strong>85-வது ஆண்டு</strong></h2><p>‘முரசொலி’ நாளிதழின் 85-வது ஆண்டு விழாவை ஒட்டி அதன் அலுவலகத்திற்கு சென்று தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! </p><p>அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!</p><p>தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன்.</p><p>அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே இயங்கும் பல அரசியல் கட்சி இதழ்களுக்கு இடையே, கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் மலர், பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க! என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிடும் வகையில் தரம் உயர்த்தவே ஊக்கத்தொகை உயர்வு– அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/subsidy-hike-to-improve-ration-rice-quality-says-minister-athav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/subsidy-hike-to-improve-ration-rice-quality-says-minister-athav-arjuna#comments</comments><guid isPermaLink="false">a02fedf8-789f-4f7b-8eba-ac933ec4fd80</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:14:47 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:14:47.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,TN assembly,தமிழக சட்டசபை கூட்டம்,Adhav Arjuna,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/du0lfbrj/Adhav-arjuna.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Adhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/du0lfbrj/Adhav-arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று 2வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:-</p><p>நீங்கள் 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.</p><p>5 வருடங்கள் ஆட்சியில் இருந்த திமுக 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா?</p><p>200 தொகுதிகளில் வெல்வோம் என அடிக்கடி சொன்ன திமுக, விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி தேர்தல் அறிக்கையில் பேசவே இல்லை.</p><p>பிரசாரத்தின்போது விவசாயியாக பிறக்க வேண்டும் என 3 முறை சொன்னார் முதல்வர் விஜய். அதை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்.</p><p>சொன்னால் செய்பவர் முதல்வர். நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய். பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்கங்களுடன் பேச்சு நடத்திய நிலையில் கரும்பு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர்.</p><h2>இலவச ரேஷன் அரிசி </h2><p>திமுக ஆட்சியில் இதுவரை ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி அதை நாம் சமைத்து சாப்பிட்டோமா?</p><p>இலவசமாக தரும் அரிசி, சாப்பிட முடியாத நிலையில் உள்ளதால் தான் சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு. ரேஷன் அரிசி வீட்டில் சாப்பிடும் அளவுக்கு தரம் உயர்த்தப்படுவதற்காக தான் நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தினார் முதலமைச்சர் விஜய்.</p><p>திமுகவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு சாகுபடியின் பரப்பளவு குறைந்துள்ளது.</p><p>கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடத்தில் 70% குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலையின்றி தவித்ததால் தவெக அரசு நடவடிக்கை.</p><p>விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக இந்த 5 ஆண்டு கால ஆட்சியை முதல்வர் விஜய் மாற்றுவார் என அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்கா-ஈரான் போரால் விண்ணை தொடும் அத்தியாவசியப்பொருட்கள் விலை!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-iran-war-sends-essential-prices-soaring</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-iran-war-sends-essential-prices-soaring#comments</comments><guid isPermaLink="false">8db39e12-ae23-446d-a533-8c0b50200207</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:14:16 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:14:16.980Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>America,Iran,Pentagon,America iran war,OperationEpicBury,WeaponsShortage,EconomicLoss,DefenseSpending</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/y6ojy3ef/America-Iran-War" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ America Iran War]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/y6ojy3ef/America-Iran-War?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்கா</a> மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஈரான்</a> இடையே கடந்த பிப்ரவரி மாதம் வெடித்த போர், 6 மாதங்களை எட்டவுள்ள நிலையில் உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. </p><p>தொடக்கத்தில் ராணுவத் தாக்குதலாக மட்டுமே பார்க்கப்பட்ட இந்த மோதல், தற்போது சாதாரண மனிதனின் அமைதியான வாழ்க்கையிலும், சமையலறையிலும் தன் கொடூரக் கரங்களை நீட்டியுள்ளது. </p><p>ஏவுகணைத் தாக்குதல்களின் சத்தம் ஓய்ந்த பின்னரும், அதன் விளைவாக உருவான விலைவாசி உயர்வும் நிதிப் பற்றாக்குறையும் உலக நாடுகளைத் திணறடித்து வருகின்றன.</p><h2><strong>எரிபொருள் விலை உயர்வு:</strong></h2><p>இந்த போரினால் அமெரிக்க அரசுக்கு ஏற்பட்டுள்ள ராணுவச் செலவுகள் ஒருபுறமிருக்க, சாதாரண நுகர்வோரின் பாக்கெட்டுகளைப் பதம் பார்க்கும் வகையில் எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. </p><p>உலகம் முழுவதும் வணிகக் கப்பல்கள் சென்று வரும் முக்கிய நீர்வழியான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ஹார்முஸ் நீரிணை</a>யை ஈரான் அடைத்துள்ளதால், சர்வதேச வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்வழியை மீண்டும் திறக்க அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.</p><h2><strong>பென்டகனில் நிதியிழப்பு ஆயுத பற்றாக்குறை:</strong></h2><p>போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்காவின் பென்டகன் அமைப்பில் கடுமையான நிதியிழப்பும், ஆயுதப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D">டொனால்ட் டிரம்ப்</a> மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இடையே கடந்த வாரம் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.</p><h2><strong>செப்டம்பருக்குள் 37.5 பில்லியன் செலவாகும்:</strong></h2><p>கெட்டவர்களை ஒழிக்கப் பணம் தேவைப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கடந்த மார்ச் மாதம் வெளிப்படையாகக் கூறியிருந்தார். </p><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானிய இலக்குகள் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலுடன் தொடங்கிய இந்தப் போரில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சுமார் 37.5 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதில் ஈரான் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அமெரிக்க ராணுவத் தளங்களின் இழப்புகள் சேர்க்கப்படவில்லை.</p><h2><strong>காலியான ஆயுத கிடங்குகள்</strong></h2><p>போரைத் தொடரவும், காலியான ஆயுதக் கிடங்குகளை மீண்டும் நிரப்பவும் 67 பில்லியன் டாலர் கூடுதல் நிதி ஒதுக்குமாறு பீட் ஹெக்செத் கோரிக்கை விடுத்தார். </p><p>இதையேற்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை 73 பில்லியன் டாலர் நிதியை ஒப்புக்கொண்டது. இருப்பினும், இதில் முழுத் தொகையும் பாதுகாப்புத் துறைக்கு மட்டும் செல்லாது என்பதால், கோடைக்கால இடைவேளைக்கு முன்பாக அமெரிக்க மேலவை இதைத் தற்காலிகச் செலவின மசோதாவுடன் நிறைவேற்ற அவசரம் காட்டி வருகிறது.</p><h2><strong>வெடிமருந்து செலவு:</strong></h2><p>ஆனால், உண்மையான போர்க்காலச் செலவு இதைவிட மிகவும் அதிகம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தைச் சேர்ந்த மார்க் கான்சியன் வெளியிட்ட கணிப்பின்படி, ராணுவப் படைகளின் நிறுத்தம், உபகரண இழப்புகள், எரிபொருள் செலவு மற்றும் அடிப்படைச் சேதங்களை மட்டும் கணக்கிட்டால், இந்தச் செலவு 35.2 பில்லியன் முதல் 42.5 பில்லியன் டாலர் வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதில் ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளுக்காக மட்டுமே 26.1 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவிடப்பட்டு உள்ளது.</p><h2><strong>ஆயுத இருப்பு குறைந்து செலவு இடைவெளி:</strong></h2><p>இஸ்ரேலைப் பாதுகாக்க அமெரிக்கா தனது அதிநவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை அதிக அளவில் பயன்படுத்தியதால், அதன் சொந்த ஆயுத இருப்பு பெருமளவில் குறைந்துவிட்டது. </p><p>ஆனால், ஈரான் ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த செலவிலான ஆயுதங்களையே பயன்படுத்தியதால், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்க்காலச் செலவில் மிகப்பெரிய இடைவெளி உருவானது.</p><h2><strong>பொருளாதார சுமை:</strong></h2><p>ஆயுதக் கையிருப்பு குறித்த தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதாகக் கருதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இது குறித்து பீட் ஹெக்செத்திடம் விளக்கம் கேட்டுப் போர்க்கொடி உயர்த்தினார். </p><p>இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா 200-க்கும் மேற்பட்ட 'தாட்' ரகத் தடுப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. இது பென்டகனின் மொத்த இருப்பில் பாதியாகும். </p><p>இதில் ஒரு ஏவுகணையின் விலையே 15 மில்லியன் டாலர் வரை இருக்கும் நிலையில், அவற்றை மீண்டும் தயாரிப்பது பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும்.</p><h2><strong>5.6 பில்லியன் ஆயுதங்கள் 2 நாட்களில்:</strong></h2><p>அதேபோல, தோமாஹாக் ரகக் குரூஸ் ஏவுகணைகள் ஒவ்வொன்றும் 2 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்டவை. தற்போது இவற்றின் தயாரிப்புச் செலவு இன்னும் அதிகரித் துள்ளதாக ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் பேராசிரியர் லிண்டா பில்ம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>மேலும், போரின் முதல் இரண்டு நாட்களில் மட்டுமே 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை பென்டகன் பயன்படுத்தியது. முதல் நான்கு வாரங்களில் 850-க்கும் மேற்பட்ட தோமாஹாக் ஏவுகணைகள் வீசப்பட்டன. </p><p>ஆனால், அமெரிக்காவில் ஆண்டுக்குச் சில நூறு ஏவுகணைகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>ராணுவ தளங்கள் சேதம்:</strong></h2><p>கடந்த ஜூன் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு தாக்குதல்கள் குறைந்தபோதிலும், செலவுகள் குறைந்தபாடில்லை. </p><p>மே மாதத்திற்குள் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் 228-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் ஈரானியத் தாக்குதலால் சேதமடைந்ததாகச் செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்கின்றன.</p><p>கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளங் களைச் சீரமைக்க 5 பில்லியன் டாலர் வரை செலவாகும் என அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் கணித்துள்ளது. மேலும், 42 போர் விமா னங்கள் வரை சேதமடைந்துள்ளதாகக் காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை தெரிவித்துள்ளது.</p><h2>ஆபரேஷன் எபிக் புரி 38.6 பில்லியன் செலவு:</h2><p>முன்னாள் பென்டகன் அதிகாரியான எலைன் மெக்கஸ்கர் கணக்கீட்டின்படி, 'ஆபரேஷன் எபிக் புரி' போரின் செலவு ஜூன் நிலவரப்படி 38.6 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. </p><p>இது ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனின் தலையிலும் தோராயமாக 115 டாலர் கடனைச் சுமத்தியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களின் நலன், புனரமைப்பு மற்றும் கடன் வட்டி என இந்தப் போரின் நீண்டகாலச் செலவு 1 டிரில்லியன் டாலரைத் தாண்டும் என்றும், அமெரிக்க மக்கள் இதன் கடனை பல ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் பேராசிரியர் லிண்டா பில்ம்ஸ் எச்சரித்துள்ளார்.</p><h2><strong>அன்றாட வாழ்க்கை பாதிப்பு:</strong></h2><p>ராணுவச் செலவுகள் ஒருபுறமிருக்க, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் இந்தப் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 'டாக்ஸ்பேயர்ஸ் பார் காமன் சென்ஸ்' அமைப்பின் கொள்கை ஆய்வாளர் கேப் மர்பி கூறுகையில், போரின் நேரடிச் செலவுகளை விட மறைமுகச் செலவுகளே வரும் காலத்தில் அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p> <h2><strong>குடும்பத்திற்கு 609 டாலர் கூடுதல் செலவு:</strong></h2><p>பிரவுன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கக் குடும்பங்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக மட்டும் கூடுதலாக 79.8 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளன. </p><p>அதாவது ஒரு குடும்பத்திற்குச் சராசரியாக 609 டாலர் கூடுதல் செலவாகி யுள்ளது. மூடிஸ் அனலிட்டிக்ஸ் நிறுவ னத்தின் முதன்மைப் பொருளாதார நிபுணர் மார்க் சாண்டி கூறுகையில், ஒரு சராசரி குடும்பம் இறுதியில் 1,000 டாலர் வரை போர் சார்ந்த செலவுகளுக்காக இழக்க நேரிடும் என்றார்.</p><h2><strong>உயர்ந்த விலை உலக பொருளாதார பாதிப்பு:</strong></h2><p>உயர்ந்துள்ள டீசல் விலை காரணமாகச் சரக்கு போக்குவரத்து, மளிகைப் பொருட்களின் விலை மற்றும் விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. </p><p>வரிக் குறைப்புகள் சில நன்மைகளை அளித்தபோதிலும், போரின் தாக்கம் அதை முறியடித்துவிட்டது. ஹார்முஸ் நீரிணை அடைக்கப்பட்டதால் சர்வதேச போக்குவரத்து சந்தை சீர்குலைந்துள்ள நிலையில், இந்த போரின் முழுமையான உலகளாவிய பொருளாதாரப் பாதிப்பை உடனடியாகக் கணிப்பது மிகவும் கடினம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விபி ஜி ராம் ஜி திட்டம்.. அமலான முதல் மாதத்திலேயே மொத்த ஊரக வேலை நாட்கள் பாதியாக சரிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/rural-jobs-fall-workdays-under-new-vpg-ramji-scheme-drop-nearly-50-in-first-month</link><comments>https://www.maalaimalar.com/news/national/rural-jobs-fall-workdays-under-new-vpg-ramji-scheme-drop-nearly-50-in-first-month#comments</comments><guid isPermaLink="false">3ece3f3f-ff97-47cf-9006-39616be5caa4</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:03:59 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:03:59.159Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,MGNREGA Scheme,விபி ஜி ராம் ஜி,VB G Ram G,ஊரக வேலை உறுதித் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/76h003vy/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விபிஜி ராம் ஜி திட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விபிஜி ராம் ஜி திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/76h003vy/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNERA) பதிலாக மத்திய அரசு,<a href="https://www.maalaimalar.com/news/national/mgnrega-renamed-as-vpg-ramji-scheme-sparks-bjp-ruled-states-protest-over-higher-state-funding-burden"> விபி ஜி ராம் ஜி</a> திட்டத்தை கொண்டு வந்தது. </p><h2>விபி ஜி ராம் ஜி </h2><p>மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியும், திட்டத்திற்காக மத்திய - மாநில நிதி பங்கீட்டில் மாற்றம் செய்தும்,வேலை நாட்களை 100 இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தியும் கொண்டுவரப்பட்ட இந்த விபி ஜி ராம் ஜி திட்டம் கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. </p><p>இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்திற்கும் திட்டத்தின் பிற அம்சங்களுக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் முந்தைய திட்டத்தை விட விபி ஜி ராம் ஜி திட்டம் ஊரக வேலைவாய்ப்பு வழங்குவதில் தொய்வை கண்டுள்ளதாக திட்டம் அமலான கடந்த ஜூலை மாதத்திற்கான தரவுகள் தெரிவிக்கின்றன. </p> <h2>சரிவு</h2><p>MGNREGA திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் தடையின்றித் தொடரும் என்றும் மத்திய அரசு உறுதியளித்தபோதும் புதிய திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாத முடிவில், ஊரக வேலைநாட்கள் பாதியாக சரிந்துள்ளது.</p><p>கடந்த ஆண்டு அமலில் இருந்த MGNREGA இன் கீழ் இதே ஜூலை மாதம் 100 நாள் வேலைத் திட்டத்தில் 15.33 வேலை நாட்களுக்கான பணி மேற்கொள்ளப்பட்டது.</p><p>ஆனால் அதற்கு மாற்றாக இந்த ஆண்டு அமலான விபி ஜி ராம் ஜி-யின் கீழ் மொத்த வேலை நாட்கள் 7.67 கோடியாக சரிந்துள்ளது. ஜூலை மாதத்தில் 68.94 லட்சம் குடும்பங்கள் மட்டுமே வேலை பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டை விட 49.94 சதவீதம் குறைவாகும்.</p>  <h2>மறுப்பு</h2><p>ஆனால் திட்ட மாற்றத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மறுத்துள்ளது. ஜூலை 22 வரை வேலை கோரிய தொழிலாளர்களில் 99.5% பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. </p><p>ஆனால் ஜூலை 22 க்கு பின் மாத இறுதியில் வெளியான அதிகாரப்பூர்வ தரவுகள், ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மந்தமடைந்ததை சுட்டிக்காட்டுகின்றன.</p> <h2>மந்தம்</h2><p>அதாவது, திட்டம் தொடங்கப்பட்ட முதல் மாதத்திலேயே, கடந்த ஆண்டை விட சரிபாதி அளவுக்கு வேலை நாட்களின் அளவு சரிந்துள்ளது.</p><p>இந்த வீழ்ச்சி புதிய திட்டத்திற்கு மாறியதால் ஏற்பட்ட தற்காலிகத் தேக்கமா அல்லது கிராமப்புற வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள பொதுவான மந்தநிலையா என்பது வரும் மாதங்களின் தரவுகள் மூலமே தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>எங்கள் ஆட்சியில் ஆக்டிங் கிடையாது, ஆக்ஷன் மட்டுமே!- சட்டமன்றத்தில் திமுக - தவெக சுவாரசிய விவாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/in-our-rule-no-acting-only-action-dmk-tvk-interesting-assembly-debate</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/in-our-rule-no-acting-only-action-dmk-tvk-interesting-assembly-debate#comments</comments><guid isPermaLink="false">ac092886-5a94-49d0-b4d6-fc0f39a3f8c3</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:47:24 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:47:24.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,TN assembly,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,தமிழக சட்டமன்ற கூட்டம்,பட்ஜெட் விவாதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/1dq8r81r/Ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh- Ex Minister MRK Paneer selvam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/1dq8r81r/Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று 2வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்,"திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒரு போராட்டம் கூட நடத்தியது இல்லை" என்றார்.</p><p>இதற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.</p><p><strong>அமைச்சர் ரமேஷ்:</strong> திரைக்கதையை தயார் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறந்த திரைக்கடை எழுதி உள்ளார். கிடங்குகள் வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.</p><p>ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்னாச்சு?</p><p>நெல்லுக்கும் கரும்புக்கும் அரசு ஒரு விலை நிர்ணயித்தால் அதிகாரிகள் ஒரு விலை நிர்ணயித்தார்களே அது தெரியாதா?</p><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? துன்பப்பட்டார்களா? என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.</p><p>மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதற்காக கரும்பு தோட்டத்திற்குள் கான்கிரீட் போட்டு நடந்த விவசாயியை எம்ஆர்கே பன்னீர்செல்வம்  மறந்துவிட்டார்.</p><p>திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.</p><p><strong>முன்னாள் அமைச்சர் சக்கரபாணி:</strong>  நெல் கிடங்குகள் கட்டவில்லை என அமைச்சர் ரமேஷ் தவறாக கூறினார். திமுக ஆட்சியில் 18 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.</p><p>பின்னர், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது குறித்து அமைச்சர் போசும்போது டெக்னிக் தெரிகிறது என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.</p><p>எம்ஆர்கே பன்னர்செல்வம்: தவெகவினர் படத்தை பார்த்து வந்தவர்கள், திமுகவினர் முரசொலி படித்து வந்தவர்கள். வேளாண்மை துறைக்கு திமுக ஆட்சியை விட குறைவாக ஒதுக்கி உள்ளது தவெக.</p><p>திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது. தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக்  தெரிகிறது.</p><p><strong>அமைச்சர் ரமேஷ்:</strong> அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டேன்.</p><p><strong>எம்ஆர்கே பன்னர்செல்வம்:</strong> விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்த போகிறதா அரசு? நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கடந்த ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்?</p><p>வேளாண் துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ.279 கோடி குறைத்து நிதி ஒதுக்கி உள்ளது தவெக அரசு. திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கான செலவை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>திமுக ஆட்சியை விட தவெக ஆட்சியில் வேளாண் துறைக்கு ரூ.481 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>சாமி அமைச்சர்</h2><p>அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை சாமி அமைச்சர் என எம்ஆர்கேபி கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. அப்போது, முதலமைச்சர் விஜயும் சிரித்தார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;தமிழகத்திற்குப் பெருமை! அமெரிக்க  பல்கலைக்கழகத்தில் படிக்க ரூ.3.55 கோடி ஸ்காலர்ஷிப் வென்ற ஈரோடு மாணவர்!&quot;</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/proud-moment-for-tamil-nadu-erode-student-wins-rs-3-55-crore-scholarship-to-study-at-us-university</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/proud-moment-for-tamil-nadu-erode-student-wins-rs-3-55-crore-scholarship-to-study-at-us-university#comments</comments><guid isPermaLink="false">beb40341-edac-4b78-87f0-1e4935ccdd20</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:33:28 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:33:28.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>scholarship,Erode,Pranav Ilango,பிரணவ் இளங்கோ,Brown University,பிரவுன் பல்கலைக்கழகம்,Ivy League,Scholarship Success,Education Matters,Erode teenager</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/07tftjcm/Erode-Pranav-Ilango" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Erode Pranav Ilango ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/07tftjcm/Erode-Pranav-Ilango?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81">ஈரோடு</a> மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் மிக உயரிய மற்றும் புகழ்பெற்ற ‘ஐவி லீக்’ கல்வி நிறுவனங்களில் ஒன்றான ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் ரூ. 3.55 கோடி முழு கல்வி உதவித்தொகையுடன் படிக்கத் தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவன்.</p><p>அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான அவரது முழு படிப்புச் செலவு மற்றும் அமெரிக்காவில் தங்கிப் படிப்பதற்கான அனைத்துச் செலவுகளையும் இந்த ஸ்காலர்ஷிப் முழுமையாக ஏற்கும் என்பது.</p><h2>என்ன படிக்கப் போகிறார் பிரணவ்?</h2><p>பிரணவ், ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் 'பொது சுகாதாரம் மற்றும் பயன்பாட்டு கணிதம்' ஆகிய துறைகளைத் தேர்வு செய்து படிக்கவுள்ளார். </p><p>கணிதம், தொழில்நுட்பம் மற்றும் தரவு அறிவியல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உலகின் மிக முக்கியமான பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இவரது முக்கிய நோக்கமாகும்.</p><h2>சர்வதேச அளவில் குவிந்த வாய்ப்புகள்:</h2><p>பிரணவின் கல்வித் திறமையைப் பாராட்டி அமெரிக்காவின் ப்ரவுன் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, ஆசியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனமான ஹாங்காங் பல்கலைக்கழகமும் அவருக்கு 100% முழு கல்வி உதவித்தொகையுடன் படிக்க அனுமதி வழங்கியது. இதன் மூலம் உலக அளவில் பிரணவின் திறமைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.</p><h2>பள்ளிப் பருவமும் உலக சாதனையும்:</h2><p>ஈரோட்டில் உள்ள சிஎஸ் அகாடமியில் பள்ளிப் படிப்பை முடித்த பிரணவ், சிறு வயது முதலே சர்வதேசக் கல்விக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்தார். </p><p>தனது 13 வயதிலேயே 'டெக்ஸ்டெரிட்டி குளோபல்' அமைப்பின் தேசிய மாணவர் மேம்பாட்டுத் திட்டத்தில் இணைந்து முறையான வழிகாட்டுதலை பெற்றார். </p><p>கேம்பிரிட்ஜ் சர்வதேசப் பள்ளித் தேர்வுகளில் கணிதப் பாடத்தில் 'உலக அளவில் முதலிடம்' பிடித்து சாதனை படைத்தார்.</p><h2>சமூக நோக்குடன் கூடிய கணித அறிவு:</h2><p>கணிதத்தை வெறும் மதிப்பெண்களுக்கான பாடமாகப் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக பிரணவ் கருதுகிறார். </p><p>செயற்கை நுண்ணறிவு, புரோகிராமிங் மற்றும் தரவு அறிவியல் மூலம், குறிப்பாக மருத்துவ வசதிகள் மற்றும் துல்லியமான தகவல்கள் கிடைக்காத கிராமப்புற மற்றும் பின்தங்கிய மக்களின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதே தனது நீண்டகால லட்சியம் என்று பிரணவ் தெரிவித்துள்ளார்.</p><h2>வழிகாட்டுதலின் முக்கியத்துவம்:</h2><p>இந்த அசாத்திய வெற்றி குறித்துப் பேசிய பிரணவ், முறையான வழிகாட்டுதலும் கடின உழைப்பும் இருந்தால், எந்தவொரு சிறிய நகரத்தில் இருந்து வரும் மாணவனும் உலக அளவில் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்குத் தனது இந்தப் பயணமே சாட்சி என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் VS தனுஷ்: தமிழக அரசியலின் புதிய களமும், ஸ்டாலினின் எதிர்காலமும்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vs-dhanush-the-new-arena-of-tamil-nadu-politics-and-stalins-future</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vs-dhanush-the-new-arena-of-tamil-nadu-politics-and-stalins-future#comments</comments><guid isPermaLink="false">3eef04c4-d92e-4967-83be-7a41665faed9</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:27:09 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:27:09.763Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,விஜய்,vijay,Dhanush,தனுஷ்,முக ஸ்டாலின்,ஜோதிடர் ரத்தன் பண்டிட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/zly97krw/Astrology.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் தனுஷ்- ஜோதிடர் ரத்தன் பண்டிட்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் தனுஷ்- ஜோதிடர் ரத்தன் பண்டிட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/zly97krw/Astrology.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எதிர்காலத்தில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருக்கிறது. அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் வந்தால் தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும்.</strong></em> </p><p>பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்துறை பிரபலங்களுக்கு பல ஆண்டுகளாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.</p><p>இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியவர் என்ற பெருமையையும் பெற்றவர். அதேபோல் முதலமைச்சர் விஜய்யுடனும் நீண்டகாலமாக நெருக்கமாக இருந்து வருகிறார்.</p><p>சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலின் போது அவரது ஜோதிட கணிப்பு உலகம் முழுவதும் பேசுபொருளானது. தேர்தல் ஆணையம் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அறிவித்து இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே காலை 9 மணியளவில் பூங்கொத்துடன் விஜய்யை நேரில் சந்தித்து, “வெற்றிக்கு வாழ்த்துகள்” என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.</p><p>பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியானதில் விஜய் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, ரத்தன் பண்டிட்டின் ஜோதிடத் திறன் உலகளவில் கவனம் பெற்றதுடன், அவரது கணிப்பு பரவலாக பேசப்பட்டது.</p><p>இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற அவர் பேசும்போது, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து மீண்டும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும் அரசியலில் யார் யாரெல்லாம் சாதிப்பார்கள். யாரெல்லாம் ஜொலிக்க மாட்டார்கள் என்றும் அவர் தனது கணிப்பை தெரிவித்தார்.</p><p>விழாவில் ஜோதிடர் ரத்தன் பண்டிட் பேசியதாவது:-</p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong> </h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> கையில் கட்டி இருக்கும் சிகப்பு கயிறு முருகப்பெருமானின் அருளின் அடையாளம். அந்த சிகப்பு கயிறு வெற்றியையும் உயர்வையும் குறிக்கிறது. முருகனின் அருளால் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அவர் எடுத்துள்ள பாதை வெற்றிப் பாதையாக அமையும்.</p><h2><strong>மு.க.ஸ்டாலின்</strong></h2><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனி வெற்றி யோகம் இல்லை. அவருடைய அரசியல் பயணம் ஓய்வை நோக்கி செல்லும்.</p><h2><strong>உதயநிதி ஸ்டாலின்</strong></h2><p>விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் தற்போதைய சூழலில் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியே அமையும்.</p><h2><strong>அண்ணாமலை</strong></h2><p>அண்ணாமலைக்கு தமிழக அரசியலில் முதலமைச்சர் யோகம் இல்லை. இனி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக இருப்பவர் முதலமைச்சர் விஜய் தான்.</p><h2><strong>நடிகர் தனுஷ்</strong></h2><p>எதிர்காலத்தில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/தனுஷ்">தனுஷ்</a> அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருக்கிறது. அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் வந்தால் தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும். அதுவரை தமிழக முதலமைச்சர் விஜய்க்கு குறிப்பிடத்தக்க அரசியல் போட்டி இருக்காது. தனுசின் அரசியல் வருகைக்கு பிறகே தமிழக அரசியல் புதிய கட்டத்தை நோக்கி செல்லும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>ஜோதிடர் ரத்தன் பண்டிட் பகிர்ந்த இந்த கணிப்புகள் விழாவில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, நிகழ்ச்சி முடிந்த பிறகும் சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விடுதி மாடியில் மாணவியின் கழுத்தை கம்பியால் இறுக்கி பாலியல் வன்கொடுமை : பாதுகாப்பு காவலர் அதிரடி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-of-student-on-ahmedabad-hostel-terrace-security-guard-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-of-student-on-ahmedabad-hostel-terrace-security-guard-arrested#comments</comments><guid isPermaLink="false">af0e6024-b0ab-4225-9735-9da44f5b6674</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:25:39 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:25:39.033Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பாலியல் வன்கொடுமை,ahmedabad,rape case,women safety,Gujarat:,அகமதாபாத்,CCTVEvidence,PGHostelSafety,PGSecurityGuardArrested</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8c5384fs/Ahmedabad-Rape-Case" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ahmedabad Rape Case Rape Case ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/8c5384fs/Ahmedabad-Rape-Case?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத் </a>மாநிலம் <a href="https://www.maalaimalar.com/topic/ahmedabad">அகமதாபாத்</a>தில்உள்ள தங்கும் விடுதி ஒன்றின் மொட்டை மாடியில், கல்லூரி மாணவி ஒருவரைப் பாதுகாப்பு காவலர் கம்பியால் கழுத்தை நெரித்து கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குற்றவாளியான பாதுகாப்பு காவலரை 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்துள்ளனர்.</p><h2><strong>பின்னணி:</strong></h2><p>குஜராத் பல்கலைக்கழகத்தில் இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் 23 வயது மாணவி ஒருவர், அகமதாபாத் ஆனந்த்நகர் பகுதியில் உள்ள பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது, கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் பெரும் பாதிப்புக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><h2><strong>மொட்டை மாடியில் நடந்த கொடூரம்</strong></h2><p>மாணவி இரவு நேரத்தில் விடுதியின் மொட்டை மாடிக்கு நடைப்பயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாதுகாப்பு காவலர் தர்மசிங், மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். </p><p>இதனால் பயந்துபோன மாணவி அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்க, காவலர் அவரது கழுத்தில் கம்பியை மாட்டி பலமாக இறுக்கியுள்ளார். </p><p>இதனால் மாணவியால் சத்தம் போட முடியாமல் போனது. அதை சாதகமாக்கிக் கொண்டு அந்த நபர் மாணவியைக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.</p><h2><strong>மீட்பு மற்றும் மருத்துவ சிகிச்சை</strong></h2><p>தாக்குதலுக்குப் பின், குற்றவாளி தப்பியோடியதை அடுத்து மாணவி மாடியில் இருந்து சத்தம் போட்டு கீழே இருந்த குடியிருப்புவாசிகளை உதவிக்கு அழைத்துள்ளார். </p><p>பொதுமக்கள் மற்றும் விடுதி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>10 தனிப்படைகள் மூலம் அதிரடி வேட்டை</strong></h2><p>இந்த சம்பவம் குறித்து ஆனந்த்நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படத்தை அடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/ahmedabad">அகமதாபாத்</a> குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீசாரும் இணைந்து உடனடியாக 10 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். </p><p>விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தபோது, குற்றவாளி லிப்ட் மூலமாக மாடிக்கு செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.</p><h2><strong>குற்றவாளி குறித்த அதிர்ச்சித் தகவல்</strong></h2><p>கைது செய்யப்பட்ட குற்றவாளி தர்மசிங், உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் அந்த தங்கும் விடுதியில் பாதுகாப்பு காவலராகச் பணியில் சேர்ந்து சில நாட்களே ஆகியுள்ளது என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.</p><p>இந்த வழக்கில் பாதுகாப்பு காவலர்களை வேலைக்கு அமர்த்தும் ஏஜென்சியின் பின்னணி மற்றும் அவர்கள் முறையான பின்னணி சரிபார்ப்பு செய்தார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு அள்ளித் தருவார்கள் என பார்த்தால் கிள்ளித் தருகிறீர்கள்..!- தவெக அரசை சாடிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mrk-panneerselvam-says-dmk-promised-to-shower-benefits-on-farmers-but-pinches-them-instead</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mrk-panneerselvam-says-dmk-promised-to-shower-benefits-on-farmers-but-pinches-them-instead#comments</comments><guid isPermaLink="false">4a74e822-5ced-4aff-8bee-71ce56e2a5c4</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:01:55 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:01:55.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN assembly,tvk,எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ,தமிழக சட்டமன்ற கூட்டம்,MRK Paneerselvam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/jdo70si7/MRK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Bussy Anand- DMK MLA MRK Panner selvam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/jdo70si7/MRK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.</p><p>இந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><h2>காரசார விவாதம்</h2><p>இதைதொடர்ந்து, சட்டமன்றத்தில் நெல், கரும்பிற்கான ஊக்கத்தொகை தொடர்பாக தவெக- திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.</p><p>அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்," திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகள் போராடவே இல்லை" என்றார்.</p><p>இதற்கு, பதிலடி கொடுத்த தவெக அமைச்சர் நிர்மல் குமார்,"5 ஆண்டுகால திமுக ஆட்சியில் விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டு போராட்டம் ஒடுக்கப்பட்டது" என்றார்.</p><h2>நாங்களும் பிஸிதான்</h2><p><strong>எம்ஆர்கே பன்னீர்செல்வம்:</strong> எந்த போராட்டம் என தெரியாமல் அமைச்சர் பேசுகிறார், அது சிப்காட் தொடர்பான போராட்டம்.</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகவே இருக்கிறார். எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் டென்ஷனாகத்தான் இருப்போம், நீங்கள் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்.</p><p><strong>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்:</strong>  நாங்களும் தினந்தோறும் டென்ஷனாகத்தான் இருக்கிறாம். வாய்க்கால் தகராறுக்கு கூட சரிசெய்துவிட்டீர்களா என இரவு பகல் பாராதுபோன் செய்கிறார் முதலமைச்சர் விஜய்.</p><p><strong>எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்:</strong> புதிய ஆட்சி அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்தனர் விவசாயிகள், ஆனால் கிள்ளி தருகிறீர்கள். அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியதால் விவசாயிகள் நம்பிவிட்டனர்.</p><p>திமுக இடைகால பட்ஜெட்டில் கரும்புக்கு ரூ.4000 கொடுப்போம் என கூறியிருந்தோம். </p><h2>விவசாய ஊக்கத்தொகை</h2><p>அமைச்சர் வினோத்: திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் நெல்லுக்கு ரூ.2,500, கரும்பிற்கு ரூ.3500 உயர்த்தி தரவில்லை என்றும், விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை படிப்படியாக திமுக அரசு உயர்த்தியது. திமுக படிப்படியாக உயர்த்திய நிலையில் ஒரே ஆண்டில் இந்தளவுக்கு விவசாய ஊக்கத்தொகை உயர்த்தியது தவெக தான்.</p><p>எம்ஆர்கே பன்னீர்செல்வம்: திமுக ஆட்சியில் ரூ.19,500 கோடி கடன் தள்ளுபடி செய்தோம். ரூ.21 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறோம் எனக்கூறிவிட்டு வெறும் ரூ.6000 கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள்.</p><p>விவசாயிகள் வாங்கிய ரூ.21,000 கோடி கடனை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயக்கடன் முழு தள்ளுபடி என நாங்கள் சொல்லவில்லை, நீங்கள் தான் சொன்னீர்கள். எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்துதான் வாக்குறுதி அளிக்க வேண்டும்.</p><p>தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 1.30 கோடி பெண்களுக்கு திமுக அரசு உரிமைத்தொகை கொடுத்தது. தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்வு முறைகேடு: ஜார்க்கண்ட் சட்டமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணி.. முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற எதிர்க்கட்சி தலைவர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-scam-protest-students-march-to-assembly-breaking-barricades-demanding-cbi-probe-into-jpsc-jssc-irregularities</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-exam-scam-protest-students-march-to-assembly-breaking-barricades-demanding-cbi-probe-into-jpsc-jssc-irregularities#comments</comments><guid isPermaLink="false">a177da05-1eed-4f3b-bfa9-2ccc8d37d7ac</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:57:01 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:57:01.759Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,மாணவர்கள் போராட்டம்,ஜார்க்கண்ட்,Hemant Soren,தேர்வு முறைகேடு,Student protests,exam irregularities</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xb1vrbkg/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜார்க்கண்ட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜார்க்கண்ட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xb1vrbkg/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/3-jharkhand-psc-members-resign-amid-paper-leak-protests">ஜார்க்கண்ட் அரசு தேர்வாணையம்</a> (JPSC) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அம்மாநில மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><h2>பேரணி </h2><p>இன்று ஜார்க்கண்ட் சட்டமன்றம் கூடும் நிலையில், மாணவர்கள் அறிவித்தபடி சட்டமன்றம் நோக்கி பேரணியை தொடங்கியுள்ளனர். </p><p>மத்திய படையினர், போலீசார் முன்னரே தயார் நிலையில் நிறுத்தப்பட்டு மாணவர்களை தடுக்க பேரிகேட் தடுப்புகள் நிறுவப்பட்டன.  </p><p>இந்நிலையில் ராஞ்சியில் உள்ள பழைய சட்டமன்றக் கட்டிடத்தில் இருந்து புதிய சட்டமன்றக் கட்டிடத்தை நோக்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட திரளான மாணவர்கள் பேரணியாகச் சென்றனர்.  </p><p>அப்போது காவல்துறை அமைத்திருந்த பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் முன்னேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. </p><p>அசம்பாவிதங்களைத் தடுக்கக் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இருப்பினும் மாணவர்கள் தடுப்புகளை தாண்டி பேரணியை தொடரும் முனைப்பில் அணுவகுத்து சென்று கொண்டிருக்கின்றனர். </p> <h2>எதிர்க்கட்சித் தலைவர் கைது</h2><p>இதனிடையே தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜகவை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதையடுத்து, முதல்வர் இல்லத்தின் வெளியே போராட்டம் நடத்திய பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜக தலைவர்களை மாநிலக் காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியது.</p> <h2>பாபுலால் குற்றச்சாட்டு</h2><p>மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிரப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜார்க்கண்ட் அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தேவையின்றி காலந்தாழ்த்தி வருவதாக பாபுலால் மராண்டி சாடினார்.</p><p>JPSC, JSSC மற்றும் CGL தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் முதன்மைக் கோரிக்கையை நிறைவேற்றாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மாநில அரசு முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p> <h2>பேச்சுவார்த்தை</h2><p>முன்னதாக போராட்டக்குழு பிரதிநிதிகளுடன் ஜார்கண்டின் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோச்சா அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.</p><p>இதில் சர்ச்சைக்குரிய 14வது JPSC சிவில் சர்வீஸ் தேர்வை ரத்து செய்ய நேற்று உடன்பாடு எட்டப்பட்டது. மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.</p><p>தொடர்ந்து JPSC ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.</p> <h2>தொடரும் போராட்டம்</h2><p>அரசு தங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த போதிலும், மாணவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டனர்.</p><p>மாநில அமைப்புகளின் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும், சிபிஐ மூலமே சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் உறுதியாக உள்ளனர். JSSC-CGL தேர்வில் நடந்த முறைகேடுகளையும் கண்டித்து, அந்தத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல், கரும்பு ஊக்கத்தொகை அதிகரிப்பு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-increase-in-incentive-payments-for-paddy-and-sugarcane</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-increase-in-incentive-payments-for-paddy-and-sugarcane#comments</comments><guid isPermaLink="false">b772a505-490a-4ce4-9260-556eb0e9b0e7</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:15:48 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:15:48.099Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/je1eqtza/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/je1eqtza/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மத்திய அரசு தரும் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ஒரு டன் கரும்புக்கான ஊக்கத்தொகையாக விவசாயிக்கு ரூ.4000 கிடைக்கும் என்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து பேசினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p><p>இதையடுத்து, முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பேசியதாவது:-</p><p>* நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். </p><p>* பொதுரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.159 அதிகரித்து குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும். </p><p>* நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்.</p><p>* வரலாற்றிலேயே முதல் முறையாக நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.159 வரை உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>* கரும்புக்கான ஊக்கத்தொகையாக ஒரு டன்னுக்கு ரூ.709.50 வழங்கப்படும்.</p><p>* மத்திய அரசு தரும் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ஒரு டன் கரும்புக்கான ஊக்கத்தொகையாக விவசாயிக்கு ரூ.4000 கிடைக்கும். </p><p>* விவசாயிகளை நம் அரசு எப்போதும், விட்டுவிடாது, தோளோடு தோளாக ஆதரவாக இருப்போம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிக்கும்.. முதல்வரின் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும் - அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-resolution-tamil-nadu-assembly-declares-anthem-as-global-mother-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-resolution-tamil-nadu-assembly-declares-anthem-as-global-mother-tribute#comments</comments><guid isPermaLink="false">1a4e4bef-753b-4c49-8b8c-f6d74f3ba8de</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:14:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:14:18.545Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rajmohan,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,ராஜ்மோகன்,தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்,Tamil Nadu Legislative Assembly session</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/lm6lrc53/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜ்மோகன், விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜ்மோகன், விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/lm6lrc53/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று (ஆகஸ்ட் 10) தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu">தமிழ்த்தாய் வாழ்த்து</a> தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.</p><h2>ராஜ்மோகன் பேச்சு </h2><p>இந்த தீர்மானத்தின் மீது பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், </p><p>தாயே தமிழே வணக்கம். தாய்ப் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும். உலகில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் பெயர் வைப்பார்கள். ஆனால் தாய் மொழியையே பெயராக வைக்கக்கூடிய கூட்டம் இந்த தமிழ் கூட்டம். </p><p>தமிழரசன், தமிழழகன், தமிழழகி என மொழியின் பெயரையே தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகுப் பார்க்கக்கூடிய கூட்டம் நம் தமிழ்க்கூட்டம். இந்த கூட்டம் தமிழ் தாயை வாழ்த்தும் பாடல் தான் தமிழ்த்தாய் வாழ்த்து. </p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>ஆனால் இது தமிழ்த்தாய்க்கான வாழ்த்து மட்டுமல்ல. இந்த பூமித்தாயை வாழ்த்தும் வாழ்த்து. இந்த நிலம், நிலத்தை சுற்றி கடல், அந்த நீல நிற கடலை புடவையாக சுற்றியிருக்கிறாளாம் பூமித்தாய். 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தை'. அந்த பூமித்தாய்க்கு ஒரு அழகான முகம். 'சீராரும் வதனமென' வதனம் என்றால் முகம். அந்த சீராரும் வதனம் எதுவென்று பார்த்தால் அது 'திகழ்பரத கண்டமெனில்' இந்த பூமித்தாயின் முகம் பாரதத்தாய், அவளுக்கு சிறு பிறை போன்ற நெற்றி, அது இந்த தென்னிந்தியா, அந்த நெற்றிக்கு அழகு அதில் வைக்கிற ஒரு பொட்டு.</p><p>அது இந்த தமிழ்நாடு என்கிற தாய். அந்த பொட்டு நெற்றிக்கு மட்டுமா, அது வாசமும் தருகிறது. எட்டுத் திக்கும் மணமாக வீசுகிறது. அப்படி எட்டுத் திக்கும் புகழோடு இருப்பவள் தமிழ்த் தாய். இத்தனை காலங்கள் இருந்தால் தாய்க்கு வயதாகும் தானே.</p><h2>உலகத் தாய் வாழ்த்து</h2><p>ஆனால் இத்தனாயிரம் ஆண்டுகள் வளர்ந்த பின்னும் நீ எப்படி இன்னும் இளமையாக இருக்கிறாய்! உன் இளமையை வாழ்த்துகிறேன் என்று, தமிழை, தமிழ்நாட்டை வாழ்த்தி, தென்னிந்தியாவை சொல்லி, பாரத்தாயை வாழ்த்தி, உலகத் தாயையே வாழ்த்தும் இந்த தமிழ்த்தாய் வாழ்த்தை உலகத் தாய் வாழ்த்து என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.</p><p>இருகரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன். இனி பொது நிகழ்ச்சிகளில், கல்வி நிலையங்களில், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும். அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும். அவரை வாழ்த்தி இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் சற்றே குறைந்த தங்கம் விலை</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-slight-decline-in-gold-rates-at-start-of-week</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-slight-decline-in-gold-rates-at-start-of-week#comments</comments><guid isPermaLink="false">9a767e57-8284-4d6d-bb18-d5a7ccc4dd4f</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:11:44 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:11:44.058Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gold rate,தங்கம் விலை குறைவு,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,todays gold rate,Gold rate reduce</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4p4ps8ss/Gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Jewellery]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/4p4ps8ss/Gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் 3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது. 4-ந்தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.</p><p>5-ந்தேதி காலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும் விற்பனையான நிலையில் மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840-க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.13,480 விற்பனையானது. 6-ந்தேதி சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000-க்கும், கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கும் விற்பனையானது. </p><p>7-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து,  ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. 8-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனையானது. நேற்று ஒரு சவரன் ரூ.1,11,720-க்கும், ஒரு கிராம் ரூ.13,965-க்கும் விற்பனையானது.</p><h2>தங்கம் விலை</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>09-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p><p>08-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p><p>07-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200</p><p>06-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,000</p><p>05-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,840</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>09-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>08-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>07-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>05-08-2026- ஒரு கிராம் ரூ.240</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்- தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-special-resolution-passed-unanimously</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-special-resolution-passed-unanimously#comments</comments><guid isPermaLink="false">ce930b5d-9641-47c1-afcf-c32f7e2359a3</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:58:42 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:58:42.444Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xak7c49c/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xak7c49c/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</strong></em> </p><h2><strong>தனித்தீர்மானம்</strong></h2><p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/தமிழ்த்தாய்-வாழ்த்து">தமிழ்த்தாய் வாழ்த்துக்கு</a> முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தனித்தீர்மானத்தை கொண்டு வந்த போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி; தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது?. தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் அன்பு... தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.  ஒரு பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது தமிழ்தான். தமிழ் நமது நாகரிகம், பண்பாடு ஒட்டு மொத்த உயிர் மூச்சு.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார். </p><h2><strong>ஆதரவு</strong></h2><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பேசினார். </p><p>இதையடுத்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம் தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும்- வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-standalone-resolution-to-project-tamil-identity-worldwide-vanni-arasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-standalone-resolution-to-project-tamil-identity-worldwide-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">5c491c1c-0b27-4526-80a0-68f289d1cc1a</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:55:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:55:07.517Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>resolution passed,தனித்தீர்மானம்,vanni arasu,தமிழ்த்தாய் வாழ்த்து,வன்னி அரசு,Tamilthai vaazhthu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/649rkbts/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/649rkbts/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது.</p><p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.</p><p>இந்நிலையில், சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்.</p><p>ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்காக தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம் தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும் விதமாக உள்ளது.</p><p>இந்து, இந்தி, இந்து ராஷ்டிரியம் என்ற போக்கை எதிர்க்கும் விதமான இந்த தீர்மானத்திற்கு விசிக தரப்பில் ஆதரவு.</p><p>தீர்மானம் குறித்து முதலமைச்சர் பேசியபோது ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமே அதிகமாக கைதட்டி வரவேற்றனர்.</p><p>தனித்தீர்மானம் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து என்பதால் எதிர்க்கட்சி தரப்புமே கைதட்டி வரவேற்கலாமே..</p><p>தமிழ்தேசியமும், திராவிடமும் ஒன்றென சொல்லும் அபாய சூழலில் தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம் சிறப்புக்குரியது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்: நாம் அனைவரும் ஒரே குரலாக இருக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-admk-supports-the-special-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-admk-supports-the-special-resolution#comments</comments><guid isPermaLink="false">daa3a564-d614-44a4-8b2e-a08543736a1e</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:50:16 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:50:16.356Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/d8wyciot/EPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/d8wyciot/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவளிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கூறினார்.</strong></em> </p><p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தமிழ்த்தாய் வாழ்த்துக்கு</a> முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். </p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-dmk-supports-the-special-resolution">தி.மு.க. வை</a> தொடர்ந்து அ.தி.மு.க.வும் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,  </p><h2><strong>தமிழர்கள் உணர்வு</strong></h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழியின் தொன்மை, பண்பாட்டின் அடையாளம். 1981-ல் மதுரையில் 5-வது தமிழ் மாநாட்டை நடத்தியவர் எம்ஜிஆர். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனம், அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படுவது தமிழர்கள் உணர்வு. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது நமது தாய்மொழிக்கான மரியாதை; யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழன்னைக்கான மரியாதை. தமிழுக்கு நாம் செலுத்தும் மரியாதை, தேசப்பற்றும் மொழிப்பற்றும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. இந்தியர் என்பதில் நாம் பெருமை அடைகிறோம், தமிழர் என்பதில் அதே அளவுக்கு பெருமை அடைகிறோம். அரசியலில் நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம், தமிழ் என்று வரும் போது நாம் அனைவரும் ஒரே குரலாக இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவளிப்பதாக கூறினார்.</p><p>முன்னதாக, தனித்தீர்மானத்தை கொண்டு வந்த போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி; தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது?. தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் அன்பு... தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.  ஒரு பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது தமிழ்தான். தமிழ் நமது நாகரிகம், பண்பாடு ஒட்டு மொத்த உயிர் மூச்சு.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்- தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-dmk-supports-the-special-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-dmk-supports-the-special-resolution#comments</comments><guid isPermaLink="false">b14f4880-7d05-4252-b173-47cce55749a9</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:33:44 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:33:44.710Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/931z5mim/DMK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/931z5mim/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கிறது என்றார்.</strong></em> </p><p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தமிழ்த்தாய் வாழ்த்துக்கு</a> முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தனித்தீர்மானத்தை கொண்டு வந்த போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி; தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது?. தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் அன்பு... தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.  ஒரு பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது தமிழ்தான். <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu">தமிழ்</a> நமது நாகரிகம், பண்பாடு ஒட்டு மொத்த உயிர் மூச்சு.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார். </p><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் பேசுகையில், </p><p>சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கிறது. தமிழ்தாய் வாழ்த்திற்கு 3-ம் இடம் என்று சொல்லும் போது அவமானமாக இருக்கிறது. தமிழ் மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாக்கியவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர். தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியவர் பெயரிலான பல்கலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது வேதனை. தமிழ்த்தாய் விவகாரத்தில சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். </p>]]></content:encoded></item><item><title>7000mAh பேட்டரியுடன் விரைவில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/moto-g-max-with-7000mah-battery-india-launch-on-august-14</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/moto-g-max-with-7000mah-battery-india-launch-on-august-14#comments</comments><guid isPermaLink="false">d8f462e1-e4c2-47ee-aa14-7dfced4289ef</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:32:00 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Motorola,மோட்டோரோலா,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/7vtp2bpg/moto-g-max.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ moto g max]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/7vtp2bpg/moto-g-max.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/motorola">மோட்டோரோலா</a> நிறுவனம் விரைவில் புது ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் பிரபலமான G சீரிஸ் மாடல் ஆகும். இது மோட்டோ G மேக்ஸ் என அழைக்கப்படுகிறது. </p><p>அம்சங்களை பொருத்தவரை இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மோட்டோ g57 பவர் மாடலில் உள்ளதை போன்றே கொண்டிருக்கும் என்று தெரிகிறது. </p><h2>வடிவமைப்பு:</h2><p>புதிய மோட்டோ G மேக்ஸ் ஸ்மார்ட்போன் பேன்டோன் ஸ்டார்கேசஸர், பேன்டோன் மலகா மற்றும் பேன்டோன் அலாஸ்க் புளூ என மூன்று புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 6.72 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெட் ரேட். கார்னிங் கொரில்லா கிளாஸ்7i பாதுகாப்பு, MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியுன் வருகிறது.</p><h2>புகைப்படங்கள்:</h2><p>புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் புகைப்படங்களை எடுக்க 50MP சோனி LYT-600 பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ மற்றும் 16MP செல்ஃபி கேமராவுடன் வரும் என்று கூறப்படுகிறது.</p><p>மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 4 பிாசஸர், அதிகபட்சம் 8 ஜபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இதன் 7000mAh பேட்டரி இருக்கும். இது ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 3 நாட்களுக்கு தேவையன பேட்டரி பேக்கப் வழங்கப்படலாம்.</p><h2>விற்பனை விவரம்:</h2><p>புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். உடன் வரும் என்றும் இந்த மாடல் 2 ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்கிரேடுகள், மூன்று ஆண்டுகள் செக்யூரிட்டி பேட்ச் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் ஆக்ஸ்ட் 14-ஆம் தேதி வெளியீட்டிற்கு பிறகு மோட்டோரோலா, ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ் என்றால் கெத்து, பவர்.. தமிழ்த்தாய் வாழ்த்து மீதான தீர்மானத்தில் முதல்வர் விஜய் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu#comments</comments><guid isPermaLink="false">bf81b7e7-8efd-4b6d-9246-eae3303c7f4a</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:21:28 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:21:28.526Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,தமிழக சட்டமன்ற கூட்டம்,Tamil Nadu Legislative Assembly session</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/my1so0pq/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதல்வர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்வர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/my1so0pq/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று (ஆகஸ்ட் 10) <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026">தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்</a> கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. </p><p>முதலாவதாக இந்த தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் உரையாற்றினார். </p><h2>விஜய் உரை</h2><p>அவர் பேசியதாவது,</p><p>மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்றே. அதை யாரும் மறுக்க முடியாது. உலகில் உள்ள எல்லா மொழிக்கும் இது பொருந்தும். ஆனால் தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல. அது நமது உயிர். நமது உணர்வு. </p><p>நம்மை பெற்ற தாயை அம்மா என்று சொல்லும்போது பாசம் நேசம் எல்லாமும் நமக்குள் உணர்வாக தோன்றுவதுபோல தமிழும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. தாய் எப்படியோ அதுபோல தான் தாய் மொழியும். </p><p>நம் தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் என்றால் நம் எல்லாருக்குமான தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும். தாயை போற்றுகிற வாழ்த்துகிற சமூகம் தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விடும். விடாது. விடவும் மாட்டோம். நமது தமிழ்த்தாய் வாழ்த்தை 1891 இல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம் தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாக பாடினார். </p><p>இந்திய துணை கண்டதை இந்திய ஒன்றியதை அழகிய முகமாக கூறிய சுந்தரனார் அந்த முகத்தோட நெத்தியில் வைக்கிற திலகம் தான் தமிழ்நாடு என்றார். இந்தியாவோட நெற்றியில் இருக்குற பொட்டு மாதிரி ஒரு வெற்றி பொட்டு தான் தமிழ்நாடு. அதன் நறுமணம் உலகம் முழுவதும் பரவுவதுபோல தமிழோட புகழும் உலகம் முழுக்க பரவ வேண்டும் என்றார். </p><h2>தமிழ் என்றால் கெத்து, பவர்</h2><p>இன்று தமிழ் பேசும் மக்கள் இல்லாத நாடுகளே குறைவுதான். தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது?. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது ஒரு பண்பாடு. அது ஒரு சிந்தனை, அது ஒரு அன்பு. தமிழ் என்றால் விருந்தோம்பல். சுருக்கமாக தமிழ் என்றால் கெத்து. தமிழ் என்றால் பவர். </p><p>அந்த தமிழோட புகழை கூறும் தமிழ்த்தாய் வாழ்த்தில் அனைத்துலகும் இன்பமுற என்று சொல்லி உலகத்தையே நம் தமிழ் உயர்த்தி பிடிக்கிறதே எந்த மொழி, மதம், இனத்தையும், எந்த தனி மனிதனையும் தாழ்த்தி பேசவில்லை. கொஞ்சமும் காயப்படுத்தவில்லை.</p><p>நம் ஒவ்வொருவருக்கும் தனி தனி பெயர் இருக்கும். கூட்டத்தில் நம் பெயரை சொல்லி கூப்பிட்டால் நாம் மட்டுமே திரும்பிப் பாப்போம். ஆனால் தமிழ் என்றால் ஒட்டுமொத்தமாக நாம் எல்லாருமே திரும்பிப்பார்ப்போம் . அப்படி நமக்கு இருக்கும் பொதுப் பெயர் அது. </p><p>நமக்கு தமிழ் என அடையாளம் கொடுத்ததே தமிழ் தான். ஒரே பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது நம் தமிழ்தான். அப்படி உயர்த்திப்பிடிக்கும் தமிழை பின்னே தள்ளினால் தமிழ்நாடு எப்படி பொறுக்கும். ஒரு கட்சிக்கு பிரச்சனை என்றால் அந்த கட்சி மட்டுமே போராடும். </p><p>ஆனால் தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடே வந்து நிற்கும். அதனால் தான் தமிழ் என்றால் உயிர், உணர்வு. உலகில் தோன்றிய பல மொழிகள் காலப்போக்கில் மறைந்தன. ஆனால் தமிழ் நீடித்து நிற்கும் ஒன்று.</p><p>தமிழில் என்ன இல்லை?, இலக்கியம் இலக்கணம் என பல்லாயிர வருடமாக இருப்பது நம் தாய் மொழிக்கு தான். தொல்காப்பியம், சங்க இலக்கியம், உலகம் முழுவதும் தெறிந்த திருக்குறள் ஒன்று போதும் தமிழின் பெருமையை சொல்வதற்கு. இப்படிப்பட்ட தமிழுக்கான அடையாளம் தான் தமிழ்த்தாய் வாழ்த்து. </p><p>ஒட்டுமோத்த இந்தியாவுடைய பன்முகத்தன்மையை உயர்த்தி பேசும் நம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் முதல் இடத்தில தான் இருக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு மாநில மொழி, பண்பாடு, பாரம்பரியத்திற்கு பாதுகாப்பு உரிமையை கொடுத்திருக்கிறது. அந்த உரிமையின் அடிப்படையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல் இடம் கொடுத்து தான் ஆக வேண்டும். அதுதான் மாநில உரிமை.</p><p>அப்படிப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தான் 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாட வேண்டும் என அரசாணை போடபட்டு செயல்பாட்டுக்கு வந்தது. பின்னர் 2021 டிசம்பர் 17 முதல் மாநில பாடலாக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது நிறுவன நிகழ்வுகளில் தமிழ்த்தாய் பாட வேண்டும் என அரசாணை உள்ளது.</p><p>2026 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி ஒன்றிய அரசின் கடிதத்தில் அரசு விழாக்களில் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் வெளியிடப்பட்டது. அந்த ஆணையில் மாநில பாடல் குறித்து எந்த வழிமுறையும் இல்லாமல் இருந்தது. நம் அரசு பொறுப்பேற்றும் கடந்த மே 27 ஆம் தேதி பிரதமருக்கு, மாநில பாடல்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் அறிக்கையில் திருத்தம் வேண்டும் என்றும் மாநில விழாக்களில் மாநில பாடல்களை முதலில் பாடுவதற்கான அங்கீகாரம் வேண்டும் என கடிதம் எழுதியிருந்தோம்.</p><p>அதைத்தொடர்ந்து ஜூலை 9 அன்று கடிதத்தில் மாநில பாடல் பாடப்படுவதுபற்றி இருந்தது. ஆனால் நம் தமிழ்நாட்டில் 1970களில் இருந்து எல்லா அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது மரபாக இருக்கிறது. அதற்கான அரசாணையும் இருக்கிறது. தமிழ் நம் அடையாளம். பண்பாடு. எனவே அதை பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழக அரசு சமரசம் செய்யாது. </p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவது கூட்டாட்சிக்கு எதிரானது அல்ல. மாறாக இந்தியாவின் உயர்ந்த கொள்கையான ஒற்றுமையை வெளிப்படுத்துவது. இது அரசியல் தொடர்பான விவதாக மாற அவசியமில்லை. </p><p>இது தமிழரின் பொது அடையாளம். நம்மை வேறுபடுத்துவது அல்ல, ஒன்றிணைப்பது. தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும் தமிழின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பெருமையையும் பாதுகாக்கும் உயரிய பணியில் இந்த பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைத்து, அனைத்து பல்கலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவன நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கொண்டுவரப்படும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்தார் </p> ]]></content:encoded></item><item><title>பாலியல் புகார்கள் ஜோடிக்கப்பட்டவையா?.. பிரிஜ் பூஷன் &quot;குற்றமற்றவர்&quot; என விடுவிக்கப்பட்டது எப்படி? - தீர்ப்பின் முழு விவரம் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/national/court-acquits-ex-wfi-chief-delhi-judge-calls-women-wrestlers-sexual-harassment-case-false-and-politically-motivated</link><comments>https://www.maalaimalar.com/news/national/court-acquits-ex-wfi-chief-delhi-judge-calls-women-wrestlers-sexual-harassment-case-false-and-politically-motivated#comments</comments><guid isPermaLink="false">fd418cee-ccc4-4456-b67d-0f841525a7d5</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:59:42 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:59:42.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மல்யுத்த சம்மேளனம்,Wrestling Federation of India,பிரிஜ் பூஷன் சிங்,Brij Bhushan Singh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rjticb7e/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  பிரிஜ் பூஷன்  சிங் ]]></media:title><media:description type="html"><![CDATA[  பிரிஜ் பூஷன்  சிங் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rjticb7e/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பாஜக முன்னாள் எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான <a href="https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh">பிரிஜ் பூஷன்  சிங்</a> கடந்த ஆகஸ்ட் 3 அன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தால் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். </p><p>அவருடன் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்யுத்த சம்மேளன முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். </p><p>வீராங்கனைகள் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கிலிருந்து கூடுதல் முதன்மை தலைமை பெருநகர நீதிபதி அஸ்வினி பன்வார் அவர்களை விடுவித்த நிலையில் அவர் வழங்கிய தீர்ப்பு குறித்த விரிவான விளக்கம் வெளியாகி உள்ளது. </p> <h2>தீர்ப்பில் உள்ளது என்ன?</h2><p>நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு குறித்த விரிவான தகவல்கள் இணையத்தில் தற்போது பதிவேற்றப்பட்டுள்ளன.</p><p>அதில் பிரிஜ் பூஷன் ஏன் விடுவிக்கப்பட்டார், குற்றச்சாட்டுகளை ஏன் நீதிமன்றம் புறக்கணித்தது என்பது குறித்த விரிவான விளக்கங்கள் உள்ளன.</p><p>நீதிபதி அஸ்வினி பன்வார் தனது தீர்ப்பில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் "இந்த வழக்கு பொய்யானது, ஜோடிக்கப்பட்டது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p> <h2>குற்றச்சாட்டுகள் போலி?</h2><p>தீர்ப்பில் கூறியுள்ளதாவது, "ஒலிம்பிக் தகுதிச் சுற்றின் போது நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தில், ஒரு வாக்குமூலத்தில் அந்தச் சம்பவம் 2015இல் துருக்கியில் நடந்ததாகக் கூறிய புகார்தாரர், மற்றொரு வாக்குமூலத்தில் அது 2016இல் மங்கோலியாவில் நடந்ததாக கூறியுள்ளார்.</p><p>நாட்டின் பெயர் மற்றும் ஆண்டிலேயே இவ்வளவு பெரிய முரண்பாடு இருக்கிறது.</p><p>அரியானாவை தளமாக கொண்ட மகாதேவ் மல்யுத்த பயிற்சி அகமெடியின் சில பயிற்சியாளர்களாலும் வீராங்கனைகளாலும் பின்னப்பட்டதாக தெரிகிறது</p> <p>2018இல் டெல்லி மைதானத்தில் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் பிற வீரர்கள் முன்னிலையில் பாலியல் அத்துமீறல் நடந்ததாகக் கூறப்பட்ட போதிலும், எந்தவொரு சுயாதீன சாட்சியும் பிரீஜ் பூஷனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வரவில்லை.</p><p>வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாகக் கூறப்பட்ட 5 பெண்களில் 2 பேர் பிரிஜ் பூஷன் எந்த பாலியல் அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் மகாதேவ் அகாடமி பயிற்சியாளர்களின் மிரட்டல் மற்றும் வற்புறுத்தலின் பேரிலேயே தாங்கள் முன்னர் வாக்குமூலம் அளித்ததாகவும் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.</p><p>போராட்டத்தில் உட்காருவதற்கு முன்பாக எந்தவொரு பெண் மல்யுத்த வீரரும் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களையோ வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.</p><p>ஆனால், பின்னர் தேர்வு செய்யப்பட்ட பெண் மல்யுத்த வீரர்கள் முன்னால் வந்து, அலங்காரமாக ஒரே பாணியிலான தயார் செய்யப்பட்ட புகார்களைக் காவல்துறையிடம் அளித்துள்ளனர்.</p><p>அனைத்துப் புகார்களிலும் உள்ள குற்றச்சாட்டுகள் ஒரே மாதிரியாக உள்ளது.</p> <p>பாலியல் அத்துமீறல் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்திற்குப் பிறகும், புகாரளித்தவர்கள் பிரிஜ் பூஷனுடன் சுமூகமான உறவைப் பேணி வந்துள்ளனர். பொது நிகழ்ச்சிகளில் அவருடன் இயல்பாகப் பழகியுள்ளனர்.</p><p>நீண்ட காலத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட இந்தப் புகார்கள் அனைத்தும் கற்பிக்கப்பட்டவை மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது.</p><p>இதனால் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட வினோத் தோமரை நீதிமன்றம் கௌரவமாக விடுவிக்கிறது" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p> <h2>வீராங்கனைகள் போராட்டம் </h2><p>பிரிஜ் பூஷன் சிங் பாஜகவில் மிகவும் சக்திவாய்ந்த தலைவர் ஆவார். 2023 இல் அவர் மீது புகார் அளித்தும் வழக்குப் பதிய டெல்லி போலீஸ் மறுத்தது. வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 2023 ஜனவரி முதல் ஜூன் வரை போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீஸ் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து வந்த அழுத்தத்தின் பின் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. </p><p>அவர் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் வழக்கில் அவர் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதன்பின் 2024 இல் நடந்த எம்.பி தேர்தலில் அவருக்கு பதில் அவரின் மகனுக்கு சீட் வழங்கப்பட்டது. </p><p>தொடர்ந்து அவர் மீது வழக்கு நடந்து வந்த நிலையில் தற்போது அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுத்துள்ளது. பிறழ் சாட்சியம் அளிக்க கூறி பாதிக்கப்பட்டவர்களில் 2 வீராங்கனைகள் மிரட்ட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>வெளியீட்டுக்கு தயாராகும் பிக்சல் 11 சீரிஸ் மாடல்கள் - லீக் ஆன இந்திய விலை விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/google-pixel-11-series-expected-price-specifications</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/google-pixel-11-series-expected-price-specifications#comments</comments><guid isPermaLink="false">726aa75b-2b58-41ba-b824-184e4ef408d8</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:41:00 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Google,smartphone,கூகுள்,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/mfw5cvx4/Pixel-11-Series-Teaser.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pixel 11 Series]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/mfw5cvx4/Pixel-11-Series-Teaser.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூகுள் நிறுவனம் தனது புதிய தலைமுறை பிக்சல் <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> மாடல்களை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த முறை பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ XL மற்றும் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டு என மொத்தத்தில் நான்கு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.</p><p>ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து <a href="https://www.maalaimalar.com/topic/google">கூகுள்</a> நிறுவனம் பிக்சல் வாட்ச் 5 மற்றும் புதிய பிக்சல் பட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. புதிய பிக்சல் சாதனங்கள் வெளியீட்டை ஒட்டி கடந்த சில வாரங்களாக புதிய சாதனங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. இதில் பிக்சல் 11 சீரிஸ் டிசைன், நிறங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை என பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>வெளியீடு:</p><p>கூகுள் நிறுவனம் தனது அடுத்த ஹார்டுவேர் நிகழ்ச்சியான மேட் பை கூகுள் (Made By Google) நிகழ்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடக்கும் என்று அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்விலேயே புதிய சாதனங்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று தெரிகிறது. இந்த நிகழ்விலேயே பிக்சல் வாட்ச் 5, பிக்சல் பட்ஸ் மற்றும் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகம் செய்யப்படலாம்.</p><p>இத்துடன் கடந்த ஆண்டை போன்றே இந்த முறையும் நான்கு பிக்சல் ஸ்மார்ட்போன்கள்: பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ XL மற்றும் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டு அறிமுகம் செய்யப்படலாம். இவை முந்தைய பிக்சல் 10 சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும்.</p><p>வடிவமைப்பு:</p><p>தோற்றத்தில் புதிய பிக்சல் 11 சீரிஸ் மாடல்கள் அதன் முந்தைய மாடல்களை போன்றே காட்சியளிக்கும் என கூகுள் வெளியிட்ட டீசர்களில் தெரியவந்துள்ளது. தோற்றம் தவிர்த்து புதிய ஸ்மார்ட்போன்களில் பிக்சல் க்ளோ என்ற அம்சம் வழங்கப்படுவதும், இது அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் இதர நோட்டிபிகேஷன்களுக்கு கேமராவை சுற்றி மின்விளக்குகள் ஒளிரும் என்று தெரிகிறது.</p><p>சமீத்தில் இணையத்தில் லீக் ஆன ரெண்டர்களின் படி புதிய பிக்சல் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முற்றிலும் புது நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மாரட்போன்களின் பின்புறம் கேமரா மற்றும் பேனலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.</p><p>விலையை பொருத்தவரை பிக்சல் 11 மாடல் இந்திய மதிப்பில் ரூ. 1.08 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டு மாடலின் விலை ரூ. 2.17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.</p>]]></content:encoded></item><item><title>பெருமாள் கோவிலில் சடாரி ஏன் வைக்கிறார்கள் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/spirituality/perumal-temple-sadari</link><comments>https://www.maalaimalar.com/spirituality/perumal-temple-sadari#comments</comments><guid isPermaLink="false">f1686925-7bfd-4be4-bb44-5c8f71fde56d</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:28:46 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:28:46.067Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,பெருமாள் கோவில்,worship,perumal temple,Perumal Sadari,சடாரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6dnu4eq3/sadari.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sadari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/6dnu4eq3/sadari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெருமாள் கோவில்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து முடித்ததும், அர்ச்சகர் நமக்கு துளசியும், தீர்த்தமும் வழங்குவார். அத்துடன் நம் தலையில் கிரீடம் போன்ற ஒரு பொருளை வைத்து ஆசீர்வதிப்பார். அதற்கு 'சடாரி' அல்லது 'சடகோபம்' என்று பெயர்.</p><p>எதற்காக இந்த சடாரி சேவை என்று எப்போதாவது யோசித்தது உண்டா? வைணவ ஆலயத்தில் வழங்கப்படும் இந்த சடாரியின் பின்னணியில் உள்ள ஆழ்ந்த ஆன்மிகத் தத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. 'சடம் ஹரி (ஹரியின் பாதம்) என்பதே மருவி 'ஸ்ரீ சடாரி' என்று அழைக்கப்படுகிறது.</p> <p>சடாரியின் மேல் பகுதியில் உற்று நோக்கினால், அதில் மகாவிஷ்ணுவின் இரு திருவடிகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கருவறையில் இருக்கும் பெருமாளின் திருவடியை நாம் நேரடியாகத் தொட முடியாது. ஆனால், சடாரி மூலம் அந்த இறைவனின் அருளை நாம் நேரடியாக அனுபவிக்கலாம்.</p><p>சடாரியை நம் தலையில் வைப்பது, பகவானின் திருவடிகளை நேரடியாகத் தலையில் ஏற்றிக் கொள்வது போல, 'இறைவா, நான் உன் அடியேன், உன் திருவடிகளே எனக்கு தஞ்சம் என்று நம்மை முழுமையாக இறைவனிடம் சரணாகதி கொடுப்பதற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.</p> <p>மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் 'நான்' என்ற அகங்காரமும், 'எனது' என்ற மமதையும் இறைவனின் சன்னிதியில் அழிய வேண்டும் என்பதை நினைவூட்டவே சடாரி சாற்றப்படுகிறது. மேலும், வைணவ மரபில் 'நம்மாழ்வாரே" பெருமாளின் திருவடிகளாகப் போற்றப்படுகிறார். நம்மாழ்வாருக்கு 'சடகோபன்' என்ற திருநாமமும் உண்டு. எனவே, சடாரியைத் தலையில் ஏற்பதன் மூலம், பெருமாளின் அருளோடு சேர்த்து ஆழ்வாரின் அருளையும் நாம் ஒருசேரப் பெறுகிறோம்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க காதலியை கொன்று தப்பியோடிய இந்திய இளைஞர் ஜெர்மனியில் கைது</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-boyfriend-held-in-germany-19-year-old-julissa-ruby-salar-murder-case-in-arizona</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-boyfriend-held-in-germany-19-year-old-julissa-ruby-salar-murder-case-in-arizona#comments</comments><guid isPermaLink="false">a7e82398-7269-4e00-910a-f0c82baa3bd7</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:15:11 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:15:11.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,அமெரிக்கா,USA,ஜெர்மனி,Germany</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rtkv28dz/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  ஜூலிசா ரூபி சலார், வருண் பட்சிகாரி]]></media:title><media:description type="html"><![CDATA[  ஜூலிசா ரூபி சலார், வருண் பட்சிகாரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rtkv28dz/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் 19 வயது கல்லூரி மாணவி ஜூலிசா ரூபி சலார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது இந்தியக் காதலனான வருண் பட்சிகாரி (20) என்பவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளான். </p><h2>கொலை </h2><p>அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள டக்சன் பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில், ஜூலிசா சலார் பலத்த காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.</p><p>மகளைக் காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட சோதனையிலேயே இது கொடூரமான கொலை என்பது உறுதியானது.</p><p>கொலையாளி வருண், ஜூலிசாவின் மொபைல் போன் மற்றும் கிரெடிட் கார்டுகளைத் திருடிக் கொண்டு தப்பியோடினான்.</p> <h2>தப்பியோட முயற்சி</h2><p>ஜூலிசாவின் போனில் இருந்து அவருடைய தாயாருக்கு சந்தேகத்திற்குரிய வகையில் குறுஞ்செய்தி வந்ததை அடுத்து, காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது.</p><p>விசாரணையில், ஜூலிசாவை கொலை செய்த அதே நாளில் வருண், டக்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து ஹூஸ்டன் வழியாக ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. அங்கிருந்து இந்தியாவிற்குத் தப்பிக்க அவன் திட்டமிட்டிருந்தான்.</p> <h2>ஜெர்மனியில் கைது</h2><p>வருண் மீது கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.</p><p>அமெரிக்காவின் எப்.பி.ஐ, இன்டர்போல் உடன் இணைந்து செயல்பட்டு, ஜெர்மனியை சென்றடைந்த வருணை அங்கேயே கைது செய்தது.</p><p>ஜூலிசா, வருனுடனான காதலை முறித்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார் என்றும், அதற்கு முன்பே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.</p><p>அரிசோனா பல்கலைக்கழகத்தில் பிசினஸ் அனலிட்டிக்ஸ் படித்து வந்த வருண், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டவன் என்பதும், அவன் மீது வேறு சில வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து கட்டிப்பிடித்து கதறி அழுத பெண்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-hugged-trees-and-wept-protest-against-their-felling</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-hugged-trees-and-wept-protest-against-their-felling#comments</comments><guid isPermaLink="false">a18e1d61-9a64-468a-b96b-906a14ab6739</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:11:02 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:11:02.422Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trees,woman,கள்ளக்குறிச்சி,kallakurichi,மரங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/eh89b1r7/tree.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Selvi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/eh89b1r7/tree.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வளர்த்த மரங்களை ஈவு இரக்கமில்லாமல் வெட்டாதீர்கள் என்று கூறி மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு செல்வி கதறி அழுதார்.</strong></em></p><h2>மகோகனி, தேக்கு மரங்கள்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் மனைவி செல்வி (வயது 58). இவர், தனது விவசாய நிலத்தில் மகோகனி, தேக்கு, தென்னை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரங்களை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்து பராமரித்து வந்தார். </p><h2>உயர் அழுத்த மின்கோபுரம்</h2><p>கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது நிலத்தின் வழியாக உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதாக மின்வாரிய துறை அதிகாரிகள் செல்வியிடம் தெரிவித்தனர்.</p> <p>இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இங்கு மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதால், இந்த வழியாக மின்பாதை அமைக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது. </p><h2>இழப்பீட்டு தொகை</h2><p>இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வியின் நிலத் தில் உயர் அழுத்த மின் கம்பத்திற்கான கோபுரம் அமைக்கப்பட்டு, மின் கம்பிகளும் பொருத்தப்பட்டது. அப்போது மரங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.97 ஆயிரம் வழங்குவதாக கூறியுள்ளனர். </p> <p>இந்தநிலையில் விவசாய நிலத்தில் இருந்த 89 மரங்களை மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வெட்டி அகற்றினர். </p><p>இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வி குழந்தையைப்போல் வளர்த்த மரங்களை ஈவு இரக்கமில்லாமல் வெட்டாதீர்கள் என்று கூறி மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.</p><h2>நிலம் தானம்</h2><p>இச்சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது. செல்வி அதே பகுதியில் அரசுப் பள்ளி கட்டுவதற்காக 10 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம் - முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoist-national-flag-for-first-time</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoist-national-flag-for-first-time#comments</comments><guid isPermaLink="false">f578de1d-ffdc-478a-bdac-26f9f9d8faf6</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:56:06 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:56:06.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,national flag,Independence Day,தேசியக்கொடி,சுதந்திர தினவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-31/6x3o1h60/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-31/6x3o1h60/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ந் தேதி முதலமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்ற இருப்பதையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.</strong></em></p> <h2>சுதந்திர தின விழா</h2><p>நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றுகிறார். முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wide-anti-drug-pledge-campaign"> விஜய்</a>, தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தகைசால் தமிழர் விருது ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்க இருக்கிறார்.</p> <h2>இளைஞர்களுக்கு விருது</h2><p>அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல்ஆளுமை விருது, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணிகளுக்கான விருதுகள். சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வழங்கி கவுரவிக்க உள்ளார்.</p> <h2>ஏற்பாடுகள் தீவிரம்</h2><p>இந்தநிலையில், கோட்டை கொத்தளத்தில் சுதந்திரத் தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை தலைமைச் செயலகம் எதிரில் மேடை அமைப்பது உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வர்ணம் பூசும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.</p> <h2>அணிவகுப்பு ஒத்திகை</h2><p>சுதந்திரதின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை மெரினா கடற்கரையில் கடந்த 7-ந்தேதி நடந்தது. தொடர்ந்து, அணிவகுப்பு ஒத்திகை நாளை (செவ்வாய்கிழமை) மற்றும் 13-ந் தேதிகளிலும் நடக்கிறது. அணிவகுப்பு ஒத்திகை நடக்கும் நாட்களில் தலைமைச் செயலகம் மற்றும் மெரினா சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அணிவகுப்பு ஒத்திகை மற்றும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடி மர சாலை ஆகியவற்றில் வாகனங்கள் செல்வதற்கு உரிய அனுமதி அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.</p> <h2>கண்காணிப்பு தீவிரம்</h2><p>அனுமதி அட்டை இல்லாத வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலை பகுதிகளை பயன்படுத்த அனுமதி இல்லை. மேலும் பாதுகாப்பு கருதி விமான நிலையம், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆர்.ஜி. கர் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு.. புதிய விசாரணைக்கு முதல்வர் சுவேந்து உத்தரவு - 3 திரிணாமுல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-doctor-murder-case-cm-orders-fresh-probe-into-rushed-cremation-after-second-anniversary-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-doctor-murder-case-cm-orders-fresh-probe-into-rushed-cremation-after-second-anniversary-tribute#comments</comments><guid isPermaLink="false">0c9f3aab-7670-4a83-bf52-93a650eb3a85</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:42:15 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:42:15.946Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,சுவேந்து அதிகாரி,பயிற்சி மருத்துவர் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3wwqzpqp/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதல்வர் சுவேந்து, ரத்னா தேப்நாத் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்வர் சுவேந்து, ரத்னா தேப்நாத் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3wwqzpqp/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது.  </p><h2>அஞ்சலி </h2><p>மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொல்லப்பட்ட மருத்துவருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  </p><p>இச்சம்பவத்தின் நினைவாக நடைபெற்ற கூட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தாயாரும், பாணிஹாட்டி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ரத்னா தேப்நாத் கலந்துகொண்டார்.</p><p>"எங்கள் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்" என அவர் கூட்டத்தில் பேசினார்.</p><p>இந்த வழக்கில் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. </p><p>கடந்த மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இது நடந்த நிலையில் இந்த சம்பவம் மேற்கு வங்க அரசியலில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. </p><h2>புதிய விசாரணை</h2><p>இந்நிலையில் பெண் மருத்துவர் உடலை அவசர அவசரமாகத் தகனம் செய்தது குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்க முதல்வர்<a href="https://www.maalaimalar.com/topic/suvendu-adhikari"> சுவேந்து அதிகாரி</a> உத்தரவிட்டுள்ளார்.</p><p>பரேக்பூர் காவல்துறை ஆணையருக்கு முதல்வர் சுவேந்து அதிகாரி இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>அதில், ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை சில மணி நேரங்களிலேயே முடிக்கப்பட்டு, அன்றைய தினமே உடல் அவசர அவசரமாகத் தகனம் செய்யப்பட்டது.</p><p>தகனம் செய்ய வேண்டிய உடல்களின் பட்டியலில் அந்த உடல் 3வது இடத்தில் இருந்த நிலையில், அது விதிமுறைகளை மீறி 1வது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p>விதிமுறைகளின்படி இறந்தவரின் குடும்பத்தினர் கட்டணம் செலுத்தி ஆவணங்களில் கையொப்பமிட வேண்டும், ஆனால் இங்கு அது நடக்கவில்லை என சுவேந்து குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>மேலும், இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நிர்மல் கோஷ், பஞ்சாயத்து உறுப்பினர் சோமநாத் டே, உள்ளூர் தலைவர் சஞ்சீவ் முகர்ஜி ஆகிய மூவர் மீதும் குற்றம்சாட்டியுள்ள சுவேந்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>இச்சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையைச் சரியாகக் கையாளாதது மற்றும் பெற்றோருக்குப் பணம் கொடுக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் வினீத் கோயல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளைச் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு இந்த மாத தொடக்கத்தில் பணியிடை நீக்கம் செய்து அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர். ரகுமான் மகன் </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/chennai-accident-ar-ameen-luxury-car-collision-near-kathipara-flyover-minor-injuries-reported</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/chennai-accident-ar-ameen-luxury-car-collision-near-kathipara-flyover-minor-injuries-reported#comments</comments><guid isPermaLink="false">bd8a33df-67e4-4f55-a26f-5eed82639652</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:21:02 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:21:02.945Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கார் விபத்து,Car accident,சென்னை,AR Rahman,ஏஆர் ரகுமான்,Chennai Accident,arr ameen</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/gje1pzad/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[   ஏ.ஆர்.அமீன், ஏ.ஆர். ரகுமான்]]></media:title><media:description type="html"><![CDATA[   ஏ.ஆர்.அமீன், ஏ.ஆர். ரகுமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/gje1pzad/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இசையமைப்பிலார்  <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8F%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஏ.ஆர். ரகுமானின்</a> மகன் ஏ.ஆர்.அமீன் கார் விபத்தில் சிக்கியுள்ளார். </p><p>சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே காரில் நண்பர்களுடன் அமீன் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. </p> <h2>விபத்து</h2><p>இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து பார்கவ் என்ற நண்பருடன் அமீன் வந்த சொகுசு கார் கத்திப்பாரா மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த கால் டாக்சி மீது மோதியுள்ளது.</p><p>இந்த விபத்தில் ஏஆர் அமீன், அவரது நண்பர் பார்கவ், கால் டாக்சி டிரைவர் ஆகிய அனைவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <h2>ஏஆர் அமீன்</h2><p>23 வயது நிரம்பிய ஏஆர் அமீன் சிறுவயதிலேயே தன் தந்தையின் இசையில் பாடகராக அறிமுகமானார். ஓகே கண்மணி உள்ளிட்ட படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 ஆகஸ்ட் 2026: பிரதோஷம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-10-august-2026-pradosham</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-10-august-2026-pradosham#comments</comments><guid isPermaLink="false">f4f2f285-f8bb-4093-bbcb-ff6109c5badd</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:57:23 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:57:23.238Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/15/26514511-pradosham.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Siva peruman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/15/26514511-pradosham.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-25 (திங்கள்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  துவாதசி காலை 6.38 மணி வரை பிறகு திரயோதசி பின்னிரவு 3.40 வரை பிறகு சதுர்த்தசி</p><p>நட்சத்திரம் :  திருவாதிரை நண்பகல் 12.01 வரை பிறகு புனர்பூசம்</p> <p>யோகம் :  சித்த / அமிர்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்</h2><p>பிரதோஷம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்நியில் ஐந்து கருட சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்க விருஷப சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். </p> <p>சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஆக்கம்</p><p>ரிஷபம் - ஆசை</p><p>மிதுனம் - ஆதரவு</p><p>கடகம் - ஓய்வு</p><p>சிம்மம் - புகழ்</p><p>கன்னி - மகிழ்ச்சி</p> <p>துலாம் - தனம்</p><p>விருச்சிகம் - நலம்</p><p>தனுசு - வெற்றி</p><p>மகரம் - போட்டி</p><p>கும்பம் - தெளிவு</p><p>மீனம் - ஊக்கம்</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 10.8.2026 - இந்த ராசிக்காரர்கள் தொட்ட காரியம் வெற்றி பெறும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-10-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-10-august-2026#comments</comments><guid isPermaLink="false">32c8f320-8c70-4b06-9054-13b2644c1b6e</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:46:44 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:46:44.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/12/27309556-rasi-2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/12/27309556-rasi-2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு கட்டும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.</p><h2>ரிஷபம்</h2><p>வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.</p> <h2>மிதுனம்</h2><p>சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.</p><h2>கடகம்</h2><p>நல்ல தகவல் கிடைக்கும் நாள். இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உறவினர்கள் வழியில் சிறு விரயமுண்டு.</p> <h2>சிம்மம்</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர்.</p><h2>கன்னி</h2><p>யோகமான நாள். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வீடு வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.</p> <h2>துலாம்</h2><p>சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். தொழிலில் தனலாபம் கிடைக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் கவனம் தேவை.</p> <h2>தனுசு</h2><p>வெற்றிச் செய்திகள் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.</p><h2>மகரம்</h2><p>தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்பை வழங்குவர்.</p> <h2>கும்பம்</h2><p>கனவுகள் நனவாகும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தொட்ட காரியம் வெற்றி பெறும். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர்.</p><h2>மீனம்</h2><p>திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் கூடும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/august-10-2026-todays-petrol-and-diesel-prices-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/august-10-2026-todays-petrol-and-diesel-prices-in-chennai#comments</comments><guid isPermaLink="false">96155066-e53e-4bbd-ae53-f5a4746b8fe2</guid><pubDate>Mon, 10 Aug 2026 01:42:31 +0000</pubDate><atom:updated>2026-08-10T01:42:31.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/m97y2pjq/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/m97y2pjq/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/if-iran-opens-hormuz-strait-trump-may-drop-nuclear-deal-plan">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (10.08.2026 - திங்கள்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 84.043 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விமான படைத்தளம் அருகே அதிநவீன அமெரிக்க ஆளில்லா விமானம் நொறுங்கி விபத்து - ஹவுதிக்கள் காரணமா?</title><link>https://www.maalaimalar.com/news/world/us-reaper-drone-crash-mq-9a-reaper-goes-down-near-chabelley-air-base-in-djibouti-amid-red-sea-security-tensions</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-reaper-drone-crash-mq-9a-reaper-goes-down-near-chabelley-air-base-in-djibouti-amid-red-sea-security-tensions#comments</comments><guid isPermaLink="false">99e4b534-8c55-4a82-beff-fb79a801245a</guid><pubDate>Mon, 10 Aug 2026 00:56:36 +0000</pubDate><atom:updated>2026-08-10T00:56:36.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்க ராணுவம்,ஹவுதி கிளர்ச்சியாளர்கள்,டிரோன் விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/0bsojo0i/tn-73.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ MQ-9 ரீப்பர்]]></media:title><media:description type="html"><![CDATA[ MQ-9 ரீப்பர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/0bsojo0i/tn-73.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள சாபெல்லி அமெரிக்க விமான படைத்தளத்திற்கு அருகே அமெரிக்க விமானப் படையின் அதிநவீன டிரோன்  நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><h2>டிரோன் விபத்து </h2><p>விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க விமானப் படையின் 'MQ-9A ரீப்பர்' டிரோன் என்பது தெரியவந்துள்ளது.  </p><p>சாபெல்லி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த டிரோன் கீழே விழுந்து நொறுங்கியதாக நம்பப்படுகிறது.  </p><p>ரீப்பர் டிரோன் எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகதானாகவே நொறுங்கி விழுந்ததா என்பது குறித்து தகவல் இல்லை. </p> <h2>ஜிபூட்டி</h2><p>ஜிபூட்டி நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள சாபெல்லி விமான ஏர் பேஸ், ஆப்பிரிக்க கண்டத்தில் அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான மையமாகச் செயல்பட்டு வருகிறது.</p><p>தெற்கு செங்கடல் பகுதி உட்படப் பிராந்தியம் முழுவதும் உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா இந்த 'MQ-9 ரீப்பர்' டிரோன்களை சாபெல்லி தளத்தில் இருந்தே இயக்கி வருகிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="fr" dir="ltr">Un drone américain s&#39;écrase près du cimetière de Chebelley<a href="https://x.com/hashtag/adi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#adi</a> <a href="https://t.co/SJJjVFxiyK">pic.twitter.com/SJJjVFxiyK</a></p>&mdash; Agence Djiboutienne d&#39;Information (ADI) (@AgenceAdi) <a href="https://x.com/AgenceAdi/status/2086439726999818476?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>ஹவுதி சதித் திட்டமா?</h2><p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஏமனுக்கும் ஜிபூட்டிக்கும் இடையே உள்ள பாப் எல் மண்டேப் ஜலசந்தி மற்றும் செங்கடல் பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள சூழ்நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.</p><p>கடந்த காலத்தில் அமெரிக்காவின் பல 'MQ-9 ரீப்பர்' டிரோன்களை ஹவுதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்பதோடு, செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.</p><p>இதனால், இந்த டிரோன் விபத்துக்கும் ஏமனின்<a href="https://www.maalaimalar.com/news/world/houthi-rebel-attacks-kill-at-least-30-yemeni-govt-forces"> ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் </a>ஏதேனும் தொடர்பிருக்குமா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.</p><p>இருப்பினும் இந்தச் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.</p> <h2>விசாரணை</h2><p>பாப் எல் மண்டேப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது இந்த டிரோனின் சிக்னல் மற்றும் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகச் ஆரம்பக்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>அமெரிக்க ராணுவம் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. டிரோன் விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-resolution-priority-tamizh-thai-vazhthu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-resolution-priority-tamizh-thai-vazhthu#comments</comments><guid isPermaLink="false">6fbb6abc-37f4-4dba-9226-2b4faff8ccff</guid><pubDate>Mon, 10 Aug 2026 00:34:49 +0000</pubDate><atom:updated>2026-08-10T00:34:49.119Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்த்தாய் வாழ்த்து,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Govt,Tamizh Thai Vazhthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2ojc7n5k/CM-Vijay-3.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2ojc7n5k/CM-Vijay-3.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 10) சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கென தனித்தீர்மானம் கொண்டுவருகிறார் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/CM-Vijay">ஜோசப் விஜய்</a>.</p><p>அதாவது மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும் என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிகிறார்.</p><h2>சர்ச்சை:</h2><p>2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க தேவைப்பட்ட பெரும்பான்மையை தேர்தலில் வெற்றி பெற்ற இதர கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டர்.</p><p>முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்ட விழாவில் தொடங்கி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவரை அரசு நிகழ்ச்சிகளில் மாநிலத்தின் பாடல் முதலில் பாடப்படாதது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.</p><h2>தனித்தீர்மானம்:</h2><p>தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. இதனையொட்டி தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக எம்.பி.க்கள் 21 பேர் கூட்டாக இதுதொடர்பாக கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில் த.வெ.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாடுவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானத்தை முன்மொழிய உள்ளது.</p><p>தீர்மானம் முன்மொழியப்பட்ட பின் அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் குறித்து பேசுவர். பின்னர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அங்கீகரிக்கப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>98 சதவீத கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக அரசு கூறுவது பொய்: ஜார்க்கண்ட் மாணவர் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-claim-of-accepting-98-pc-demands-full-of-lies-jharkhand-student-leader</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-claim-of-accepting-98-pc-demands-full-of-lies-jharkhand-student-leader#comments</comments><guid isPermaLink="false">c45da76f-20a4-4448-bb9b-13fd79da1d55</guid><pubDate>Mon, 10 Aug 2026 00:11:21 +0000</pubDate><atom:updated>2026-08-10T00:11:21.883Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Jharkhand,போராட்டம்,ஜார்க்கண்ட்,JPSC</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/bu4j0d7z/JPSC-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/bu4j0d7z/JPSC-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்டில் பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி <a href="https://www.maalaimalar.com/topic/students">மாணவர்கள்</a> போராடி வருகின்றனர். மாணவர்களின் 98 சதவீத கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக அரசு அமைத்த குழு அறிவித்த சில மணிநேரங்களிலேயே, போராட்டக்காரர்கள் அரசின் கூற்றை மறுத்துள்ளனர். </p><p>மொத்தம் 13 போட்டி தேர்வுகளில் 3 தேர்வுகளை மட்டுமே ரத்து செய்ய ஒப்புக்கொண்ட <a href="https://www.maalaimalar.com/news/national">அரசு</a>, "பொய்களைப் பரப்புவதாக" அவர்கள் குற்றம் சாட்டினர்.</p><h2>அனுமதிக்க மாட்டோம்:</h2><p>தங்கள் அமைதியான ஜனநாயகப் போராட்டத்திற்கும், இன்று நடைபெறவுள்ள 'சட்டமன்றப் பேரணி'க்கும் (Vidhan Sabha March) ஆதரவளிக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இங்கு செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், சமூக விரோத சக்திகள் தங்கள் ஜனநாயக போராட்டத்தை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர்.</p><h2>பொய் பிரச்சாரம்:</h2><p>"எங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை நிறைவேற்றியதாக ஜார்க்கண்ட் அரசு பொய் பிரச்சாரம் செய்கிறது. நாங்கள் கோரிய 13 தேர்வுகளில் 3-ஐ மட்டுமே அரசு ரத்து செய்துள்ளது. மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளிலும் உள்ள முறைகேடுகளை வெளிக்கொண்டுவரும் வகையில் சி.பி.ஐ. (CBI) விசாரணை கோரி இன்று நடைபெறும் 'சட்டமன்றப் பேரணி'யில் ஜார்க்கண்ட் மாணவர்கள் அனைவரும் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று மாணவர் தலைவர் குற்றம் சாட்டினார்.</p><p>மற்றொரு மாணவர் தலைவரான ரவீந்திர பாஸ்வான், "முறைகேடுகளை மூடிமறைப்பதற்குப் பெயர் பெற்ற சி.ஐ.டி. (CID) விசாரணை நடத்த வேண்டும் என்பதில் அரசு பிடிவாதமாக உள்ளது" என்று குற்றம் சாட்டினார்.</p><p>தங்கள் போராட்டம் "அமைதியானதாகவும் ஜனநாயக ரீதியிலானதாகவும்" இருக்கும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.</p><p>"எங்கள் அமைதியான, ஜனநாயக போராட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளை அனுமதிக்க மாட்டோம்," என்று மற்றொரு மாணவர் தலைவர் கூறினார்.</p><h2>வேண்டுகோள்:</h2><p>இன்று நடைபெறவுள்ள போராட்டத்தை ஒரு "மக்கள் இயக்கமாக" மாற்றுமாறு மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்; மேலும், எந்தவொரு அரசியல் கொடியும் இன்றி நடைபெறும் தங்கள் பிள்ளைகளின் போராட்டத்திற்குப் பெற்றோர்கள் தார்மீக ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர்.</p><p>"ஜார்க்கண்டில் நிலவும் வேலை விற்பனை முறையை ஒழிக்க விரும்புகிறோம்; எங்கள் போராட்டம் வன்முறையற்றது," என்று போராட்டக்காரர் ஒருவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காசா தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ஒப்பந்தத்தை நிராகரித்தது இஸ்ரேல்</title><link>https://www.maalaimalar.com/news/world/israel-rejects-trumps-gaza-plan</link><comments>https://www.maalaimalar.com/news/world/israel-rejects-trumps-gaza-plan#comments</comments><guid isPermaLink="false">95515239-4a69-4bfc-9802-48fd111aab8a</guid><pubDate>Sun, 09 Aug 2026 23:18:53 +0000</pubDate><atom:updated>2026-08-09T23:18:53.242Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,இஸ்ரேல்,Israel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/i9vnly6q/Israel-Flag.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Israel Flag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/i9vnly6q/Israel-Flag.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/gaza">காசா</a> தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிராகரித்தது. ஹார்முஸ் நீரிணையை நிர்வகிப்பது குறித்து ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையேயான சாத்தியமான ஒப்பந்தம் குறித்த விவரங்கள் வெளிவந்த நிலையில், "விரோத நாடுகளுடன்" தொடர்புடைய கப்பல்கள் இந்த முக்கிய நீர்வழியில் நுழைய தடை விதிக்கப்படும் என்று தெஹ்ரான் தெரிவித்தது.</p><p>இதற்கிடையில், ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள், அந்நாட்டின் செங்கடல் கடற்கரையில் உள்ள அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தினர்.</p><p>இது, கப்பல் போக்குவரத்து வழித்தடங்களுக்கான அச்சுறுத்தல்கள் மற்றும் உள்நாட்டு போர் மீண்டும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை ஆழப்படுத்தியுள்ளது. அண்டை நாடான சவுதி அரேபியாவில் உள்ள ஒரு எண்ணெய் ஆலை மீதும் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் கூறினர்.</p><h2>காசா ஒப்பந்தம்:</h2><p>கடந்த மாதம் டிரம்ப் அறிவித்த காசா ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தார். "ஹமாஸ் உண்மையாகவே ஆயுதங்களை கைவிடும் வரை இஸ்ரேலிய இராணுவம் எந்தவொரு படையையும் திரும்பப் பெறாது" என்றும் அவர் கூறினார். "15 அம்ச ஆவணத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது" என்று அமைச்சரவைக் கூட்டத்தில் நெதன்யாகு கூறினார், ஆனால் கடந்த வாரம் இதே போன்ற கருத்துக்களைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, காசாவுக்கான திட்டங்கள் குறித்து வாஷிங்டனுடன் இன்னும் விவாதித்து வருகிறார்.</p><p>ஹமாஸ் பயங்கரவாத குழுவின் ஆயுத களைவு நிறைவடைந்தவுடன் இஸ்ரேலிய படைகள் வெளியேறும் என்று டிரம்ப் கூறியிருந்தார். சுமார் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் பாலஸ்தீனிய பகுதியின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை இஸ்ரேலிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன, மேலும் அப்பகுதி பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது.</p><p>"நாங்கள் செயல் திட்டத்திற்கு உறுதியுடன் இருக்கிறோம்," என்று ஹமாஸின் அரசியல் குழுவின் உறுப்பினர் பாசெம் நைம் கூறினார். மேலும், அக்டோபர் 27 அன்று நடைபெறவிருக்கும் அடுத்த தேர்தலுக்கு முன்னதாக அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நெதன்யாகு மீது மத்தியஸ்தர்களும் அமெரிக்காவும் அழுத்தம் கொடுப்பார்கள் என்று தங்கள் குழு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.</p><p>அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான தாக்குதல் காசா போரை தூண்டியது. ஒரு நிலையற்ற போர் நிறுத்தம் தொடர்கிறது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான் அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-general-warns-us-against-ground-invasion</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-general-warns-us-against-ground-invasion#comments</comments><guid isPermaLink="false">8bfa0abd-9ea4-4cb5-a760-b1a55c9e9ce3</guid><pubDate>Sun, 09 Aug 2026 22:41:18 +0000</pubDate><atom:updated>2026-08-09T22:41:18.197Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,ஈரான்,Iran,us</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ai982xog/Mojtaba-Khamenei-and-Donald-Trump.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Mojtaba Khamenei and Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ai982xog/Mojtaba-Khamenei-and-Donald-Trump.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> தரைப்படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி, எந்தவொரு வெளிநாட்டு தரைவழி தலையீடும் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையின் மூலம் எதிர்கொள்ளப்படும் என்று அறிவித்து, அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.</p><p>எந்தவொரு ஊடுருவலுக்கும் எதிராக எச்சரித்த ஜஹான்ஷாஹி, "<a href="https://www.maalaimalar.com/topic/US">அமெரிக்க</a> இராணுவ வீரர்கள் எவரேனும் ஈரானில் கால் வைத்தால், நாங்கள் அவர்களை உடைத்துவிடுவோம். எதிரியின் எந்தவொரு நடவடிக்கைக்கும் நாங்கள் உறுதியான மற்றும் கடுமையான பதிலடி கொடுப்போம்" என்று உறுதிப்படுத்தினார்.</p><h2>தயார் நிலையில் தரைப்படை:</h2><p>தேசிய எல்லைகளில் உள்ள செயல்பாட்டு நிலை குறித்து விவரித்த ஜஹான்ஷாஹி, "ஈரானிய தரைப்படைகள் முழுமையான போர் தயார் நிலையில் இருப்பதுடன், நாட்டின் எல்லைகளை உறுதியாக பாதுகாத்து, நடமாட்டங்களையும் அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன" என்று வலியுறுத்தினார்.</p><p>இராணுவ தலைமையின் இந்த இராணுவ எச்சரிக்கைகளுக்கு இணையாக, தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான இராஜதந்திர வழிமுறைகள் கடுமையாக மறைமுகமாகவே நீடிக்கின்றன.</p><p>"நாங்கள் தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; செய்தி பரிமாற்றங்கள் இடைத்தரகர்கள் மூலமாகவே நடைபெறுகின்றன," என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி கூறியதாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒலிபரப்பு நிறுவனம் (IRIB) மேற்கோள் காட்டியுள்ளது.</p><h2>சாத்தியம் இல்லை:</h2><p>இந்த மறைமுகத் தொடர்புகளின் நோக்கத்தை விரிவுபடுத்திப் பேசிய வெளியுறவு அமைச்சர், பல நாடுகள் புதுப்பிக்கப்பட்ட உரையாடலுக்கான நிலைமைகளை உருவாக்கப் பணியாற்றி வரும் வேளையில், வாஷிங்டன் தனது கடந்தகால இருதரப்பு ஒப்பந்த மீறல்களை சரிசெய்யும் வரை தெஹ்ரான் நேரடி பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பாது என்று குறிப்பிட்டார்.</p><p>"சில நாடுகள் பேச்சுவார்த்தைக்கான களத்தை மீண்டும் அமைக்க இன்னும் முயற்சி செய்து வருகின்றன. எங்கள் கருத்தின்படி, இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவது முடிவுக்கு வந்து, தான் மீறியவற்றுக்கு ஈடுசெய்யும் வரை, பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு எந்த சாத்தியமும் இல்லை," என்று அராக்சி மேலும் கூறினார்.</p><p>ஹார்முஸ் நீரிணை வழியாக ஒரு சட்டப்பூர்வ வழிமுறை மற்றும் திருத்தப்பட்ட போக்குவரத்து வழித்தடம் குறித்து ஓமனுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என்றும், இருப்பினும் அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையை மீண்டும் திறப்பது அமெரிக்காவின் இழப்பீட்டைப் பொறுத்தே அமையும் என்றும் அராக்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;தூய பெட்ரோல் உங்க அப்பா வீட்டிலிருந்து வருமா?&apos; பாஜக எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-mp-janardan-mishra-asks-will-pure-petrol-come-from-your-fathers-house</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-mp-janardan-mishra-asks-will-pure-petrol-come-from-your-fathers-house#comments</comments><guid isPermaLink="false">86cc44ca-c123-4f72-a119-df8dac488c10</guid><pubDate>Sun, 09 Aug 2026 21:28:29 +0000</pubDate><atom:updated>2026-08-09T21:28:29.505Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,பெட்ரோல்,Petrol,Janardan Mishra,ஜனா்தன் மிஷ்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/avhe1f67/Janardan-Mishra.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Janardan Mishra ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/avhe1f67/Janardan-Mishra.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில், ரேவா தொகுதி <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> எம்.பி.யான ஜனார்தன் மிஸ்ரா மத்திய அரசின் எத்தனால் கொள்கையை ஆதரித்து கடுமையாக பேசினார். அப்போது அதை எதிர்ப்பவர்களிடம், "தூய பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வருகிறது?" என்று அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார்.</p><p>ரேவாவில் இருந்து போபால் மற்றும் கொல்கத்தாவிற்கு புதிய விமான சேவைகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய மிஸ்ரா, <a href="https://www.maalaimalar.com/news/national">இந்தியா</a> தனது கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதத்தை மட்டுமே உற்பத்தி செய்வதாகவும், மீதமுள்ள 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். </p><p>உலகளாவிய புவிசார் அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டிய எம்.பி. மிஸ்ரா, எண்ணெய் விநியோகத்திற்காக கப்பல்கள் சுமார் 18,000 கிலோமீட்டர்கள் கூடுதல் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்று கூறினார். </p><h2>எம்.பி. ஆவேசம்:</h2><p>"இத்தகைய சூழலில், பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பது பற்றிப் பேசும்போது, ​​சிலர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்குகிறார்கள். எத்தனால் வேலை செய்யாது, தூய பெட்ரோல்தான் பயன்படும் என்று ஒரு பிரச்சாரம் நடைபெறுகிறது. தூய பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வருகிறது? நாட்டில் தூய பெட்ரோல் இல்லையென்றால், அது எங்கிருந்து வரும்?" என்று அவர் கேட்டார்.</p><p>இந்தியாவில் உள்ள வாகனங்கள் எத்தனால் கலப்பு எரிபொருளில் இயங்கக்கூடியவை என்றும், ஆனால் சிலர் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறுவதாகவும் மிஸ்ரா தெரிவித்தார்.</p><p>பெட்ரோலில் எத்தனால் கலப்பதை ஆதரித்துப் பேசிய அவர், பிரேசிலில் வாகனங்கள் 100 சதவீத எத்தனாலில் இயங்குவதாகவும், அங்கு வாகனங்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறினார்.</p><h2>100 சதவீத எத்தனால்:</h2><p>உலகிலேயே அதிக அளவில் எத்தனால் உற்பத்தி செய்யும் நாடாக பிரேசில் இருப்பதால், அங்குள்ள வாகனங்கள் 100 சதவீத எத்தனாலில் இயங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கும் மிஸ்ரா, இந்தியாவிலும் நிபுணர்கள் எத்தனால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புவதாகவும், இருப்பினும் அதற்கு "தேவையற்ற" எதிர்ப்பு இருப்பதாகவும் கூறினார்.</p><p>இன்று உலகில் பணவீக்கம் மிக குறைவாகவும், வேலைவாய்ப்பு மிக அதிகமாகவும் உள்ள ஒரு இடம் இருந்தால், அது இந்தியாதான் என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>