<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 02 Sep 2026 02:06:33 +0000</lastBuildDate><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-2-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-2-september-2026#comments</comments><guid isPermaLink="false">c4a50387-1305-451d-b98c-fbcc502f2fec</guid><pubDate>Wed, 02 Sep 2026 02:00:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T02:00:19.659Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/awvbgdsi/maalai-malar2026-08-24b0k0t00ltn-32.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/awvbgdsi/maalai-malar2026-08-24b0k0t00ltn-32.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (2.9.2026 - (புதன்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 2.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கல்யாண வாய்ப்புகள் கைகூடும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-2-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-2-september-2026#comments</comments><guid isPermaLink="false">ef57aba5-24a3-4c82-bb58-bbcf4679a21a</guid><pubDate>Wed, 02 Sep 2026 01:49:33 +0000</pubDate><atom:updated>2026-09-02T01:49:33.221Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/01/19461778-rasipalan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/01/19461778-rasipalan.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். வீடு, வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.</p><h2>ரிஷபம்</h2><p>யோகமான நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் கைகூடும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.</p> <h2>மிதுனம்</h2><p>இனிமையான நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.</p><h2>கடகம்</h2><p>தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். மறைமுகப்போட்டிகளை முறியடிப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.</p> <h2>சிம்மம்</h2><p>பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் லாபம் உண்டு. தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும்.</p><h2>கன்னி</h2><p>யோசித்து செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.</p> <h2>துலாம்</h2><p>வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிடையும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>வரவு இரு மடங்காகும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.</p> <h2>தனுசு</h2><p>முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.</p><h2>மகரம்</h2><p>அலைச்சல் அதிகரிக்கும் நாள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச்செலவுகளைச் செய்யும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p> <h2>கும்பம்</h2><p>ஒற்றுமை பலப்படும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் ஏற்படும். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவலொன்று வரலாம்.</p><h2>மீனம்</h2><p>கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். பக்குவமாகப்பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 செப்டம்பர் 2026: தேய்பிறை சஷ்டி விரதம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-2-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-2-september-2026#comments</comments><guid isPermaLink="false">22c4899a-0fb8-4645-8b03-f4722224ed5f</guid><pubDate>Wed, 02 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-02T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-22/le7z01it/muruga1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-22/le7z01it/muruga1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-16 (புதன்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  பஞ்சமி காலை 6.11 மணி வரை பிறகு சஷ்டி மறுநாள் விடியற்காலை 4.12 வரை பிறகு சப்தமி</p><p>நட்சத்திரம் : பரணி பின்னிரவு 2.20 மணி வரை பிறகு கார்த்திகை</p> <p>யோகம் :  சித்த / அமிர்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு</h2><p>தேய்பிறை சஷ்டி விரதம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. </p> <p>பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தலங்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் தலங்களில் அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம். அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் காலை சிறப்பு அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - பொறுப்பு</p><p>ரிஷபம் - நற்செயல்</p><p>மிதுனம் - லாபம்</p><p>கடகம் - ஆதரவு</p><p>சிம்மம் - வரவு</p><p>கன்னி - கவனம்</p> <p>துலாம் - செலவு</p><p>விருச்சிகம் - புகழ்</p><p>தனுசு - பாராட்டு</p><p>மகரம் - மகிழ்ச்சி</p><p>கும்பம் - அன்பு</p><p>மீனம் - பக்தி</p> ]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ கடந்தது - மீட்பு பணிகளில் தொடர் சிக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-death-toll-crosses-1000-rescuers-reach-remote-areas-2</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-death-toll-crosses-1000-rescuers-reach-remote-areas-2#comments</comments><guid isPermaLink="false">83c4fbe0-9f2b-4d49-ba5c-a7ab50bd909e</guid><pubDate>Wed, 02 Sep 2026 00:26:34 +0000</pubDate><atom:updated>2026-09-02T00:26:34.122Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death toll,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/85aqkxxs/Nepal-site.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal site after floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/85aqkxxs/Nepal-site.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது. ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில், உள்நாட்டு மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/world">சர்வதேச</a> உதவிகள் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றன.</p><p>கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் 1,003 பேர் உயிரிழந்ததை <a href="https://www.maalaimalar.com/topic/touist">நேபாள</a> அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 3,900-க்கும் மேற்பட்டோர் குறித்த தகவல் ஏதும் இல்லை.</p><h2>மீட்பு பணிகளில் சிக்கல்:</h2><p>தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள ராணுவம் மற்றும் காவல்துறை சுமார் 10,000 பணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளது. இருப்பினும், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்திருப்பதாலும், இடிபாடுகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதாலும் இப்பணிகளில் சிக்கல்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>இதற்கிடையில், அடையாளம் காணப்படாத உயிரிழந்தவர்களின் உடல்களைக் கூட்டு முறையில் அடக்கம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. சித்வான் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் சுமார் 200 உடல்கள் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். </p><p>உடல்கள் சிதைவடைந்த நிலையில் இருந்ததாலும், அவற்றை நகர்ப்பகுதிக்கு கொண்டு செல்வது மிகவும் கடினமாக இருந்ததாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.</p><h2>மருத்துவ பொருட்கள் பற்றாக்குறை:</h2><p>உயிரிழந்தவர்கள் பின்னர் அடையாளம் காணப்பட்டால் உடல்களை மீண்டும் தோண்டி எடுக்க ஏதுவாக, டிஎன்ஏ (DNA) மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு அடக்க இடமும் கவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>நேபாளத்தில் பலர் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ முன்வருகின்றனர்; காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பலர் ரத்த தானம் செய்து வருகின்றனர். ரத்த இருப்பு குறைந்து வருவதாகவும், கூடுதல் தானங்களை மருத்துவமனை கோருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவ பொருட்களும் போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>எல்லையின் சீனப் பகுதியில், 16 பேர் உயிரிழந்ததாகவும், 540-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>சுமார் 65,000 பேருக்குத் தண்ணீர், சுகாதாரம் மற்றும் தூய்மைப் பராமரிப்பு தொடர்பான உதவிகள் அவசரமாகத் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். </p><p>மேலும், சுமார் 10,500 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்து உதவி தேவைப்படுவதாகவும், 5 வயதுக்குட்பட்ட 2,600 குழந்தைகளுக்குக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கான (severe wasting) சிகிச்சை தேவைப்படலாம் என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>உச்சிமாநாட்டு புகைப்படத்தில் பிரதமர் மோடி மிஸ்ஸிங்... எடிட் செய்த படத்தை பதிவிட்ட பாக். பிரதமரால் சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/world/shehbaz-sharif-crops-out-pm-modi-to-take-centre-stage-in-shanghai-bloc-pic</link><comments>https://www.maalaimalar.com/news/world/shehbaz-sharif-crops-out-pm-modi-to-take-centre-stage-in-shanghai-bloc-pic#comments</comments><guid isPermaLink="false">da7d5187-5fad-45a9-972a-0097d6ad67bd</guid><pubDate>Tue, 01 Sep 2026 23:47:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T23:47:35.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>shehbaz sharif,ஷெபாஸ் ஷெரிப்,Shanghai,pm modi,பிரதமர் மோடி,ஷாங்காய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ajti2wxc/New-Project-10.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pak. PM Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ajti2wxc/New-Project-10.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">பாகிஸ்தான்</a> பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் அலுவலகம், செவ்வாயன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டு புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் அபத்தமான முறையில் பகிர்ந்தது. ஆனால், அசல் புகைப்படத்தில் இருந்த மற்ற உலக தலைவர்களை நீக்கிவிட்டு, தன்னை மட்டும் மையத்தில் வைக்கும் வகையில் அதனை மாற்றியிருந்தது.</p><p>பாகிஸ்தான் பிரதமர் பகிர்ந்த புகைப்படத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங், கிர்கிஸ்தான் அதிபர் சதிர் ஜபரோவ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான், உஸ்பெக் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் கிர்கிஸ்தான் கர்னல் உலர்பீக் ஸர்லிகோவிச் ஷர்ஷீவ் ஆகியோர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.</p><h2>குழு புகைப்படத்தில் குழப்பம்:</h2><p>கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் அமர்வுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக நின்றுகொண்டிருந்தனர்.</p><p>இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி அசல் புகைப்படத்தைப் பகிர்ந்து, உண்மையில் ஷெரீப் வலமிருந்து நான்காவதாக நின்றிருந்ததையும், மற்ற ஐந்து உலகத் தலைவர்கள் படத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்ததையும் காட்டினார்.</p><p>பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, 26-ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) தலைமைத்துவ உச்சிமாநாடு 10 உறுப்பு நாடுகள், 15 கூட்டாளர் நாடுகள் மற்றும் இரண்டு பார்வையாளர் நாடுகளை ஒன்றிணைத்தது.</p><h2>மாநாட்டில் பிரதமர் மோடி கூறியது:</h2><p>கிர்கிஸ்தானில் நடைபெற்ற 26ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளை கோடிட்டு காட்டினார். உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் பொருளாதாரங்களை பாதித்துள்ள, மத்திய கிழக்கில் தொடரும் மோதலுக்கு மத்தியில் அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகின.</p><p>10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), 2001-ஆம் ஆண்டில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் நிறுவப்பட்டது. 2017-ஆம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும், அதனைத் தொடர்ந்து 2023-ஆம் ஆண்டில் ஈரானும், 2024-ஆம் ஆண்டில் பெலாரஸும் முழு உறுப்பினர்களாகின.</p><p>SCO-வின் மூன்று முக்கிய தூண்களான பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்பு ஆகியவற்றைச் சுற்றி வலுவான ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். தொலைநோக்குப் பார்வையைத் தாண்டி, அளவிடக்கூடிய விளைவுகளை நோக்கி பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ்</title><link>https://www.maalaimalar.com/news/national/saayoni-ghosh-met-vijay-at-his-office</link><comments>https://www.maalaimalar.com/news/national/saayoni-ghosh-met-vijay-at-his-office#comments</comments><guid isPermaLink="false">ea6c7543-6efb-4592-a2fc-9333ace5cd2e</guid><pubDate>Tue, 01 Sep 2026 22:59:25 +0000</pubDate><atom:updated>2026-09-01T22:59:25.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Saayoni Ghosh,சயோனி கோஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/g5hap4oh/Saayoni-Ghosh-met-Vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Saayoni Ghosh met Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/g5hap4oh/Saayoni-Ghosh-met-Vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி.யான சயோனி கோஷ், நேற்று (செவ்வாய்க்கிழமை) <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை சந்தித்தார். அப்போது, ​​மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றுக்கான விஜய்யின் தொலைநோக்கு பார்வையை அவர் பாராட்டினார்.</p><p>இந்த சந்திப்புக்கு பிறகு, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">மேற்கு வங்கம்</a> குறித்தும், அதன் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் மீதான தனது விருப்பம் குறித்தும் விஜய் அன்புடன் பேசியதாக கோஷ் தெரிவித்தார்.</p><p>"தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய்யைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது," என்று கோஷ் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இதுகுறித்த பதிவில், "தமிழ்நாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்புகள், நல்லாட்சி ஆகியவற்றில் வேரூன்றிய அதன் எதிர்காலம் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்துகொண்ட அதே வேளையில், மேற்கு வங்கம் மற்றும் அதன் செழுமையான கலாச்சாரம், பாரம்பரியங்கள் மீதான தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.</p><p>அவரது அன்பான உபசரிப்புக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். தனது மாநிலத்திற்கான தொலைநோக்கு பார்வையை நனவாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்," என்றும் அவர் மேலும் கூறினார்.</p><h2>திரைத்துறை சார்ந்த எம்.பி.:</h2><p>2021-இல் அரசியலில் நுழைந்த நடிகையும், பாடகியுமான கோஷ், ஜூன் 2026-இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து (TMC) மற்ற அதிருப்தி எம்.பி.க்களுடன் வெளியேறிய பிறகு, தற்போது 'நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா' (NCPI) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.யாக உள்ளார்.</p><p>அதிருப்தி குழுவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவர் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.</p><p>கோஷ் பிப்ரவரி 2021-இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்; அந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஆசன்சோல் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். பா.ஜ.க. வேட்பாளர் அக்னிமித்ரா பாலிடம் அவர் தோல்வியடைந்தாலும், பின்னர் கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.</p><h2>அபார வெற்றி:</h2><p>2024 மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் சார்பில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்ட கோஷ், 2.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். </p><p>ஒரு காலத்தில் திரிணாமுல் தலைமைக்கு நெருக்கமான முக்கிய இளம் தலைவராகக் கருதப்பட்ட அவர், 2026 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் கட்சி அடைந்த படுதோல்விக்கு பிறகு அதிருப்தி அடைந்து விலகினார்.</p><p>2011 முதல் மேற்கு வங்கத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வந்த திரிணாமுல் காங்கிரஸ், 294 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் 80 இடங்களுக்கு சுருங்கியது. பா.ஜ.க. 207 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றதுடன், மாநிலத்தில் தனது முதல் அரசாங்கத்தையும் அமைத்தது.</p>]]></content:encoded></item><item><title>காசாவில் ஹமாஸ் மூத்த தலைவர் கைது - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு</title><link>https://www.maalaimalar.com/news/world/netanyahu-says-israeli-forces-have-captured-hamas-security-chief-in-gaza</link><comments>https://www.maalaimalar.com/news/world/netanyahu-says-israeli-forces-have-captured-hamas-security-chief-in-gaza#comments</comments><guid isPermaLink="false">122eadf8-d715-4035-92e7-f2a46fb817b6</guid><pubDate>Tue, 01 Sep 2026 20:13:33 +0000</pubDate><atom:updated>2026-09-01T20:13:33.974Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரேல்,Israel,Benjamin Netanyahu,Hamas,ஹமாஸ்,பெஞ்சமின் நெதன்யாகு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/10/18/1968467-isr.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Benjamin Netanyahu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/10/18/1968467-isr.webp?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காசாவில் நடைபெற்ற தரைவழி நடவடிக்கையின்போது ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவரை இஸ்ரேலிய படைகள் கைது செய்ததாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இந்த நடவடிக்கையில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் கூறியிருந்தனர்.</p><p>காசாவில் உள்ள ஹமாஸின் உள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரே இலக்கு என்று பிரதமர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார், ஆனால் அவர் மேலதிக விவரங்களை அளிக்கவில்லை. இஸ்ரேலிய ஊடகங்கள் அவரை முயின் அல்-அராபித் என அடையாளம் காட்டின. </p><h2>பல இலக்குகளில் தாக்குதல்:</h2><p>ராணுவமும் ஷின் பெட் உள்நாட்டுப் பாதுகாப்பு சேவையும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், இலக்கு வைக்கப்பட்ட அமைப்பு "சமீபத்தில் வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும், இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னெடுக்கவும் செயல்பட்டது" என்று தெரிவித்துள்ளன.</p><p>மேலதிக விசாரணைக்காக அவர் இஸ்ரேலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தரைவழி நடவடிக்கையுடன் இணைந்து, தனது படைகளுக்கு இருந்த அச்சுறுத்தல்களை அகற்றும் நோக்கில் அப்பகுதியில் உள்ள பல இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாக அந்த அறிக்கை தெரிவித்தது.</p><h2>12 தாக்குதல்கள்:</h2><p>காசா பகுதிக்குள் இருந்த இஸ்ரேலுடன் கூட்டணி வைத்துள்ள போராளி குழுவும் அந்த படைகளில் அடங்கியிருந்தது என்று காசா பாதுகாப்பு வட்டாரம் ஒன்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.</p><p>மேற்கு காசா நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் பன்னிரண்டு தாக்குதல்கள் நடந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தன. அங்கு மூன்று குழந்தைகளும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக அப்பகுதியின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு கூறியது; கொல்லப்பட்டவர் அரபித்தின் மனைவி என பாலஸ்தீனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>ஹமாஸின் கீழ் மீட்புப் படையாகச் செயல்படும் குடிமைப் பாதுகாப்புப் படையினர் அளித்த உயிரிழப்பு எண்ணிக்கையை காசா நகரத்தின் அல்-ஷிஃபா மருத்துவமனை உறுதிப்படுத்தியது.</p><p>தாக்குதல்களுக்குப் பிந்தைய ஏ.எஃப்.பி. காணொளி காட்சிகளில், சவத்துணிகளால் போர்த்தப்பட்ட இரண்டு குழந்தைகளின் உடல்கள் தெருக்களின் வழியே எடுத்துச் செல்லப்படுவதும், அங்கு ஒரு வாகனத்தின் சிதைந்த பாகங்கள் கிடந்ததும் பதிவாகியிருந்தன.</p>]]></content:encoded></item><item><title>எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது நடிகனுக்கு கிடைத்த ஆசி - நடிகர் சூர்யா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-suriya-said-everybody-see-karthi-as-sardar-its-a-blessing-for-actor</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-suriya-said-everybody-see-karthi-as-sardar-its-a-blessing-for-actor#comments</comments><guid isPermaLink="false">5f19cb6f-bbed-4bc3-948f-482c1bb06215</guid><pubDate>Tue, 01 Sep 2026 19:28:52 +0000</pubDate><atom:updated>2026-09-01T19:28:52.077Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,Karthi,கார்த்தி,Sardar 2,சர்தார் 2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/epp02xn1/karthi-and-Suriya.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ karthi and Suriya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/epp02xn1/karthi-and-Suriya.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா தயாரிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/karthi">கார்த்தி</a> நடிப்பில் தயாராகி உள்ள 'சர்தார் 2' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. </p><p>இந்நிகழ்வில் நடிகர் சூர்யா, ரவி மோகன், இயக்குநர் மோகன் ராஜா, சுந்தர் சி மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/suriya">சூர்யா</a> சர்தார் டீசரை வெகுவாக பாராட்டினார். </p><h2>நடிகனுக்கு கிடைத்த ஆசி:</h2><p>தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா, "சர்தார் 2 படத்தின் டிரெய்லர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியும், உண்மையாக நடந்த சம்பவங்களை அடித்தளமாக எடுத்துக்கொண்டு உருவாகி இருக்கிறது. நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது. அதை திரையில் சிறிதளவு தான் காண்பிக்க முடிகிறது.</p><p>ஒரு ஸ்பை திரில்லரை தமிழில் அண்மை காலத்தில் இவ்வளவு தத்துரூபமாக உண்மை சம்பவங்களுக்கு நெருக்கமாக இவ்வளவு அழகியலுடன் நாம் பார்த்ததில்லை. </p><p>இயக்குநர் மித்ரன் ஒரு அற்புதமான எழுத்தாளர்- இயக்குநர்- இன்வெஸ்டிகேட்டட் ஜர்னலிசம் தெரிந்தவர் என நினைக்கிறேன். அவருடன் பேசும்போது, அவரிடம் ஏராளமான கதைகள் உள்ளதை தெரிந்து கொண்டேன்</p><p>ஒரு நடிகரை விட ஒரு கதாபாத்திரம் நிறைய பேசப்படுகிறது என்றால்.. அது ஒரு நடிகருக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம். கார்த்தி சர்தாராக திரையில் தோன்ற முடிகிறது. நிற்க முடிகிறது. </p><p>எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள். இன்னும் ரசிகர்கள் அந்த படத்தை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு திரைப்படத்தின் பார்ட் 2 உருவாகி இருக்கிறது என்றால்; அதை நடிகனுக்கு கிடைத்த ஒரு ஆசியாக பார்க்கிறேன்," என்றார்.</p><h2>சர்தார் 2 படக்குழு:</h2><p>இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்தார் 2' திரைப்படத்தில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், நாசர், ஆசிஷ் வித்யார்த்தி, 'நிழல்கள்' ரவி, அச்யுத் குமார், தேவதர்ஷினி, சின்னி ஜெயந்த், ஜீன் பால் லால், பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.</p><p>ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலு குட்டி மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜீவன் கையாண்டிருக்கிறார். உளவுத்துறை அதிகாரிகளின் வாழ்வியல் பின்னணியை ஆக்சன் என்டர்டெய்னராக விவரிக்கும் இந்த திரைப்படம் - செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராஷ்மிகா மந்தனா நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா: ‘மைசா’ ரிலீஸ் அப்டேட்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rashmika-mandana-starrer-mysaa-movie-release-update</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/rashmika-mandana-starrer-mysaa-movie-release-update#comments</comments><guid isPermaLink="false">1d1c6528-9bd9-4b00-9d0f-bf097d3e7f2e</guid><pubDate>Tue, 01 Sep 2026 18:40:12 +0000</pubDate><atom:updated>2026-09-01T18:40:12.744Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஷ்மிகா மந்தனா,மைசா,Rashmika Madana,Mysaa</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/nqxgtuyr/Mysaa.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mysaa Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/nqxgtuyr/Mysaa.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/rashmika-mandana">ராஷ்மிகா மந்தனா</a>, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக தனது உடல் மற்றும் நடிப்பு திறன்களின் எல்லைகளை கடந்து உழைத்து வருகிறார். </p><p>இப்படத்தில் கோண்ட் பழங்குடியின பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா, கதாபாத்திரத்தின் உணர்வையும், தீவிரத்தையும் திரையில் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.</p><p>அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் தயாராகி வரும் இப்படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>ரிலீஸ் அப்டேட்:</h2><p>அதன்படி, ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் தேதிக்கான போஸ்டரில், கையில் பிரம்மாண்டமான ஈட்டியுடன் ராஷ்மிகா மந்தனா காட்சியளிக்கிறார். அவரது முகத்தில் போர்க்காயங்களும், பின்னணியில் ஏராளமான மக்கள் கூட்டமும், தீப்பிழம்புகளும் இடம்பெற்றுள்ளன.</p><p>பாரம்பரிய உடைகள், ஆயுதங்கள், தீக்காட்சிகள் மற்றும் ராஷ்மிகாவின் ஆக்ரோஷமான முகபாவனை ஆகியவை போஸ்டருக்கு வலிமையான வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆக்‌ஷன் திரைப்படத்திற்கான தோற்றத்தை அளிக்கின்றன.</p><p>மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘மைசா’, நவீன இந்திய சினிமாவின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அதிரடியான ஸ்டண்ட் காட்சிகளுடன், பார்வையாளர்களுக்கு பரபரப்பும், அட்ரினலின் நிறைந்த அனுபவத்தையும் வழங்கும் வகையில் இப்படம் உருவாகிறது.</p><h2>வேகமெடுக்கும் பின்னணி பணிகள்:</h2><p>பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரைப்படங்களின் எல்லைகளை மட்டுமின்றி, இந்திய சினிமாவின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான தரத்தையே புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ‘மைசா’ உருவாகி வருகிறது.</p><p>படப்பிடிப்பில் மிகவும் சவாலான அதிரடி காட்சியில் நடித்தபோது ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டது. தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து வரும் அவர், விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்யவுள்ளார். படப்பிடிப்பில் இன்னும் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.</p><p>அதே நேரத்தில், படத்தின் பின்னணி பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்டமான காட்சியமைப்பை உருவாக்கும் வகையில் அதிநவீன VFX பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனுடன், படத்தின் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் சக்திவாய்ந்த பின்னணி இசை மற்றும் ஒரிஜினல் ஸ்கோர் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.</p><p>இப்படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மைசா’ திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிறுமியுடன் பாலியல் உறவு: முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்தாலும் போக்சோ பொருந்தும் - நீதிமன்றம் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-hc-said-muslim-marriage-doesnt-shield-man-from-pocso-for-sex-with-17yo</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-hc-said-muslim-marriage-doesnt-shield-man-from-pocso-for-sex-with-17yo#comments</comments><guid isPermaLink="false">b9ae3a4f-bb0f-4f9d-b614-599057c97df1</guid><pubDate>Tue, 01 Sep 2026 17:57:33 +0000</pubDate><atom:updated>2026-09-01T17:57:33.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kerala HC,POCSO,கேரளா உயர்நீதிமன்றம்,போக்சோ,Muslim marriage,முஸ்லிம் திருமணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/d2dtezil/KL-HC.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/d2dtezil/KL-HC.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>17 வயது சிறுமியிடம் தொடர்ச்சியாக பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய <a href="https://www.maalaimalar.com/news/national">கேரள</a> உயர் நீதிமன்றம் அதிரடியாக மறுத்தது. </p><p>முஸ்லிம் மத சடங்குகளின்படி திருமணம் நடைபெற்று இருந்தாலும், அது அவரை POCSO சட்டத்தின் (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம்) கீழ் வரும் குற்றப் பொறுப்பில் இருந்து காப்பாற்றாது என்று நீதிமன்றம் கூறியது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/keralam">மன்னார்க்காடு</a> காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நபர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜோபின் செபாஸ்டியன் தள்ளுபடி செய்தார். இவ்வழக்கு பட்டாம்பியில் உள்ள விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.</p><h2>பாலியல் குற்றத்திற்காக தண்டிக்கப்படலாம்:</h2><p>'இன்டிபென்டன்ட் தாட்' (Independent Thought) வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்த சட்டத்தை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், 18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ளும் நபர், பாதிக்கப்பட்டவர் தனது மனைவியாக இருந்து, அவரது வயது 15 முதல் 18-க்குள் இருந்தாலும், இந்திய தண்டனை சட்டம் (IPC) பிரிவு 376-இன் கீழ் பாலியல் வன்முறை குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடியவர் என்று கூறியது.</p><p>"எனவே, இந்த வழக்கில், IPC பிரிவு 375-இன் விதிவிலக்கு 2-இன் உதவியுடன் குற்றவாளி சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது" என்று ஆகஸ்ட் 19 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்தது.</p><h2>பாலியல் குற்ற தடுப்பு சட்டம்:</h2><p>பாதிக்கப்பட்ட சிறுமி தனது சட்டப்பூர்வமான மனைவி என்றும், இஸ்லாமிய மதச் சடங்குகளின்படி அவருக்கு 17 வயது ஒரு மாதம் ஆனபோது திருமணம் செய்துகொண்டதாகவும் குற்றவாளியின் வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.</p><p>தனிநபர் சட்டத்தின்படி திருமணம் செல்லுபடியாகுமா என்பது ஒருபுறம் இருக்க, திருமணத்தில் ஈடுபடும் தரப்பினரில் ஒருவர் மைனராக (சிறுவர்/சிறுமியாக) இருக்கும்போது, ​​குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் (POCSO) பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது.</p><p>திருமண உறவை சாக்காக கொண்டு குற்றவாளி சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. </p><p>வாதத்திற்காக, இஸ்லாமிய மத சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின்படி திருமணம் நடைபெற்றதாக கொண்டாலும், அது மனுதாரர் மீதான குற்றவியல் பொறுப்பை நீக்காது. குறிப்பாக, அந்த திருமணம் மற்றும் அதை தொடர்ந்த பாலியல் செயல்களின் போது அப்பெண்ணுக்கு 17 வயது மட்டுமே இருந்ததால் இது பொருந்தும்.</p><h2>சட்டத்தின் விதிகள் பொருந்தும்:</h2><p>"தனிநபர் சட்டத்தின் கீழ் திருமணம் செல்லுபடியாகுமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, திருமணத்தில் ஈடுபடும் தரப்பினரில் ஒருவர் சிறாராக இருந்தால், போக்சோ சட்டத்தின் விதிகள் பொருந்தும் என்பது மறுக்க முடியாத உண்மை," என்று நீதிமன்றம் கூறியது.</p><p>பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023-இன் பிரிவு 528-இன் கீழ் இந்த வழக்கு நடவடிக்கைகளை ரத்து செய்யுமாறு குற்றம் சாட்டப்பட்டவர் கோரியிருந்தார். </p><p>குற்றச்சாட்டு தரப்பின்படி, அக்டோபர் 23, 2021 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் அப்பெண்ணை காரில் தனது வீட்டிற்கு அழைத்து சென்று, அக்டோபர் 23 முதல் 26 வரையிலான காலகட்டத்தில் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் ஈரான் மீதான தாக்குதல்களை தொடங்கியது அமெரிக்கா</title><link>https://www.maalaimalar.com/news/world/us-begins-strikes-in-iran-after-attacks-on-american-bases-in-middle-east</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-begins-strikes-in-iran-after-attacks-on-american-bases-in-middle-east#comments</comments><guid isPermaLink="false">2e1ef194-244c-41b1-96c6-9bbd9198a9e0</guid><pubDate>Tue, 01 Sep 2026 17:38:44 +0000</pubDate><atom:updated>2026-09-01T17:38:44.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,ஈரான்,Iran,us,மத்திய கிழக்கு,Middle East</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/p2ku1mco/trump.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic: Strait of Hormuz-Trump  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/p2ku1mco/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படை வீரர்கள் மீதும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல் முயற்சிகளை தொடர்ந்து, <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> மீதான தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு, <a href="https://www.maalaimalar.com/topic/US">அமெரிக்க</a> படைகள் ஈரானில் உள்ள ஐ.ஆர்.ஜி.சி. இலக்குகள் மீது தாக்குதலை தொடங்கின என்று அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"இன்று கிழக்கு நேரப்படி மதியம் 12 மணிக்கு, அமெரிக்க படைகள் ஈரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் (IRGC) இலக்குகள் மீது தாக்குதலை தொடங்கின.</p><p>ஹார்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்கள் மீதும், அப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்க படை வீரர்கள் மீதும் IRGC சமீபத்தில் நடத்திய தாக்குதல் முயற்சிகளை தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன," என்று அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.</p><h2>ராக்கெட் ஏவுதளங்கள் மீது தாக்குதல்:</h2><p>ஆறு மாத கால போருக்கு பிறகும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டே உள்ளது, மேலும் அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை தொடர்கிறது.</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமை, பல வாரங்களுக்கு பிறகு அமெரிக்கா ஈரான் மீது தனது முதல் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானிய தீவு ஒன்று தாக்கப்பட்டது. </p><p>கப்பல் போக்குவரத்து பாதையில் இஸ்லாமிய குடியரசு மேலும் கண்ணிவெடிகளை புதைப்பதை தடுப்பதற்காக, லராக் தீவில் உள்ள ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது தங்கள் படை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியது.</p>]]></content:encoded></item><item><title>ரஷிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/51-indians-who-joined-and-served-in-the-russian-army-have-lost-their-lives</link><comments>https://www.maalaimalar.com/news/national/51-indians-who-joined-and-served-in-the-russian-army-have-lost-their-lives#comments</comments><guid isPermaLink="false">fe1b9dd3-ec7f-4c36-a008-e39bd4a70167</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:36:58 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:36:58.567Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>indians,ரஷிய ராணுவம்,Russian Army,Ministry of External Affairs,இந்தியர்கள்,இந்திய வெளியுறவுத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/h42lt8j2/New-Project-2026-09-01T220637.698.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் உயிரிழப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/h42lt8j2/New-Project-2026-09-01T220637.698.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 227 இந்தியர்களில் 51 பேர் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 139 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக ரஷிய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். கிர்கிஸ்தானில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரி.,</p><p>இந்தியக் குடிமக்களை விடுவிப்பது மற்றும் தாயகம் திரும்ப அனுப்புவது தொடர்பான இந்த நிலைமையை மாஸ்கோவில் உள்ள எங்கள் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p><p>எஞ்சியிருக்கும் நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதை உறுதி செய்வதற்காகவும், அதன் மூலம் இவர்களை விரைவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காகவும், நாங்கள் ரஷியத் தரப்புடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.” என தெரிவித்தார்.</p><p>ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்த சிறிது நேரத்திலேயே மிஸ்ரியின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்தன.</p><p>சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட, ரஷிய ராணுவப் பிரிவுகளில் துணைப் பணியாளர்களாகப் பணியாற்றி வரும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்குமாறு ரஷியாவிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வாலும் தெரிவித்துள்ளார். </p><p>ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்னும் ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது.</p><p>இதற்கிடையில், ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை குடும்பத்தினருடன் ஒருங்கிணைப்பதற்காக, வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.</p><h2>ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்</h2><p>பெரும்பாலான இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் கட்டுமானப் பணி, உணவகப் பணி போன்ற பொதுவான வேலைகளுக்காகவே ரஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><h2>கட்டாய ஒப்பந்தம்</h2><p>ரஷியா சென்றடைந்தவுடன் அவர்களது கடவுச்சீட்டுகள் பறிக்கப்பட்டு, போதிய ராணுவப் பயிற்சியின்றி கட்டாயமாக உக்ரைன் எல்லைப் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.</p><h2>அரசு எச்சரிக்கை</h2><p>இது போன்ற போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஆபத்தான சூழல் நிலவும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை: அமைச்சர் வெங்கட்ரமணன் - 1 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026#comments</comments><guid isPermaLink="false">3665960b-ee31-49d1-bea4-c46614cb472a</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:55:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:27:14.642Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/b48fqijv/venkatramanan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/b48fqijv/venkatramanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கைத்தறி, துணிநூல், கதர் கிராமத் தொழில்கள், தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு, குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது.</p><p>மேலும் தமிழ்நாடு நகர் மற்றம் ஊரமைப்பு (திருத்தச்) சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படும்.</p> <p>மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி Ban NEET வாசகம் கொண்ட கருப்பு டீ சர்ட் அணிந்து சட்டசபைக்கு வருகை.</p><p>நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்த அனிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கருப்பு உடையில் வருகை.</p><p>சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரம் தொடங்கியது.</p><p>வேலவன் ஊராட்சியில் விளையாட்டு உபகரணம் வைப்பதற்காக புதிய கட்டடம் கட்டப்படும் என எம்எல்ஏ நாராயணன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>சிவகங்கை, நெல்லை மாவட்டங்களில் பாரம்பரிய விளையாட்டு தொடர்பான சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது - அமைச்சர் ஆதவ் </p><p>மாவட்டத்திற்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் காயமடையாத வகையில் மேட் அமைத்து விளையாட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>எல்லா மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி கூடம், ஓடுதளம், நீச்சல் குளம் அமைக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p> <p>மதுரையில் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்பட உள்ளது - எம்எல்ஏ கார்த்திகேயன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>தருமபுரி தொகுதியில் உள்ள பல அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டிடத்தில இயங்கி வருகிறது. புதிய அரசு கட்டிடம் தேவை - சவுமியா அன்புமணி</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள 54,481 அங்கன்வாடி மையங்களில் 42,223 சொந்த கட்டிடங்களில் செயல்படுகின்றன.</p><p>எஞ்சிய அங்கன்வாடிகளுக்கும் அரசு இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p><p>நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி உயிர்நீத்த தங்கை அனிதாவின் நினைவு நாள் இன்று.</p><p>எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், எங்கள் முதல்வர் விஜய் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை.</p><p>2029 தேர்தல் சூழ்நிலை நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் தூக்கி எறியப்படும் நாளாக மாறும் -  அமைச்சர் ஆதவ்</p> <p>தங்கை அனிதா கண்ட கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்.</p><p>அனைத்து மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நம் பக்கம் வரும் - அமைச்சர் ஆதவ்</p> <p>சென்னை பெசன்ட் நகரில் நடத்தப்படவிருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு தவெக அரசு அனுமதி மறுத்துள்ளது - உதயநிதி</p> <p>அமைதியாக நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்காதது ஏன்? - உதயநிதி </p><p>பெசன்ட் நகர் தேவாலய கொடியேற்ற விழா முடிந்த நிலையில் அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பது ஏன்? - உதயநிதி</p><p>தமிழ்நாடு இளைஞர் கூட்டமைப்பினர் ஆக.22-ந்தேதி அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்தார்கள்.</p><p>செப்.8 வரை பெசன்ட் நகர் மாதா கோவில் விழா இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என அனுமதி மறுப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>வேறு இடம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள், இன்று ஒருநாளாவது அரசியல் செய்யாமல் இருங்கள் - அமைச்சர் ஆதவ் வேண்டுகோள்</p> <p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசித்து வரும் 1,535 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>1,535 வீடுகள் அகற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி</p><p>திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களுடன் தமிழ்நாடு அரசு உடன் நிற்கும் - அமைச்சர் ஆதவ் உறுதி</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை - அமைச்சர் வெங்கட்ரமணன்</p> <p>ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்க ஒரு கிலோ வீதம் வெங்காயம் விற்பனை செய்யப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>தனியார் மருத்துவ கல்லூரிகளில் நான்கரை ஆண்டுக்கு பதிலாக ஜந்தரை ஆண்டுக்கான கட்டணம் வசூல்.</p><p>பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது - அக்ரி கிருஷ்ணமூர்த்தி புகார்</p><p>மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு செய்தபோது அதிக கட்டணம் வசூல் குறித்தஎந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.</p><p>அதிக கட்டணம் வசூலிக்கும் எந்த கல்லூரியாக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்</p><p>நெசவாளர்கள் நலனை கருத்தில் கொண்டு கூலி மற்றும் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>உயர்தர பட்டு ரகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காஞ்சிபுரத்தில் ரூ.2 கோடியில் பட்டு ஏற்றுமதி வர்த்தக மையம்.</p><p>கைத்தறி நெசவாளர் மின்செலவை குறைக்க 1,000 தனிநபர் கூடங்களில் 100% மானியத்தில் சூரிய ஒளி மின் தகடு அமைக்கப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>முதலீட்டு மானியம் கோரியவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - அமைச்சர் மதன்ராஜா </p><p>மாநிலம் முழுவதும் உள்ள கதர் அங்காடிகள் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.</p><p>கதர், பட்டு உற்பத்தியில் ஈடுபடும் நூற்பாளர், நெசவாளருக்கான நலநிதி பங்குத்தொகை 12-ல் இருந்து 16% ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>முதலீட்டு மானியம் கோரியவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>செயற்கை நுண்ணறிவு, சென்சார் தொழில்நுட்பங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான மானியம் ரூ.30 கோடி ஒதுக்கீடு.</p><p>குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான விளிம்புத்தொகை உதவித்தொகை திட்டம் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் மதன்ராஜா </p><p>விருத்தாச்சலம் தொகுதியில் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தை தரம் உயர்த்த வேண்டும் - பிரேமலதா</p><p>பழைய ரக சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கைத்தறி நெசவிற்கு அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் - பிரேமலதா</p>]]></content:encoded></item><item><title>CMDA உறுப்பினராக த.வெ.க. எம்.எல்.ஏ. ரேவந்த் சரண் நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/appoint-tvk-mla-revanth-charan-member-of-cmda</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/appoint-tvk-mla-revanth-charan-member-of-cmda#comments</comments><guid isPermaLink="false">b8b68a3e-3696-426b-b2dd-24c94f5655d2</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:26:19 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:26:19.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிஎம்டிஏ,CMDA,MLA Revanth Charan,எம்.எல்.ஏ. ரேவந்த் சரண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vfjddraf/RevanthCharan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Revanth Charan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vfjddraf/RevanthCharan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினராக த.வெ.க. எம்.எல்.ஏ. ரேவந்த் சரண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மதுரவாயல் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்.</p><p>சென்னை பெருநகரப் பகுதிக்கான திட்டமிடல், வளர்ச்சிப் பணிகள், கட்டிட அனுமதி மற்றும் நிறைவுச் சான்றிதழ் வழங்குதல் இதன் முதன்மையான பணியாகும். தலைமையகம் சென்னை எழும்பூரில் உள்ளது. தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்குகிறது.</p><p>தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகளிலும் நகர்ப்புற வளர்ச்சியை  வழிநடத்திச் செல்வது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான். சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள் உள்பட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 5,904 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதிகளில் நிலப்பயன்பாடு, கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிப்பது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான்.</p><p>1972-ஆம் ஆண்டில் மதராஸ் பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 54 ஆண்டுகளாக நிதி நிலையில் தற்சார்புடன் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இந்த அமைப்பின் நிதிநிலை மிக மோசமாக சீரழிக்கப்பட்டிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தாயாரின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும் - புதுச்சேரி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/caste-certificates-must-be-issued-based-on-the-mothers-lineage-high-court-orders-puducherry-government</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/caste-certificates-must-be-issued-based-on-the-mothers-lineage-high-court-orders-puducherry-government#comments</comments><guid isPermaLink="false">5198b4f2-53e1-4d25-95f0-b38c9f22fc6a</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:17:17 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:17:17.641Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Puducherry government,சாதி சான்றிதழ்,caste certificate,புதுச்சேரி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/07hj6b22/New-Project-2026-09-01T214658.186.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாயாரின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும் - புதுச்சேரி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/07hj6b22/New-Project-2026-09-01T214658.186.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாயாரின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/what-authority-does-the-dgp-have-to-ban-cockfighting-madras-high-court-asks">சென்னை உயர் நீதிமன்றம் </a>உத்தரவிட்டுள்ளது.</p><h2>சாதி சான்றிதழ்</h2><p>புதுச்சேரியில் பிறந்து, வளர்ந்த குழந்தைகளின் தாயார் புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும், அவர்களது தந்தை வெளிமாநிலத்தைச் சேர்ந்தராக இருந்தால், தாயாரின் சாதி அடிப்படையில் சாதி சான்றிதழ் மறுக்கப்பட்டது. </p><p>சிலருக்கு புலம்பெயர்ந்தோர் என சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் தங்களுக்கான புதுச்சேரி அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு பலன்களை பெற முடியவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட 28 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்தனர்.</p><p>இந்த வழக்குகள் விசாரணை நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட தாயாரின், பூர்வீக சாதியை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால், புதுச்சேரி அரசு வழங்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. </p><p>அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15 மற்றும் 16 அனைவருக்குமான சமத்துவத்தை உறுதி செய்கின்றன.</p><h2>தந்தையின் சமூக அந்தஸ்து</h2><p>எனவே, சமூக அந்தஸ்தை தந்தையின் மூலம் மட்டுமே தீர்மானிக்கும் பாரம்பரியக் கருத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாது. </p><p>எனவே, தாயாரின் பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சட்டவிரோதமானது” என்று வாதிட்டனர்.</p><p>புதுச்சேரி அரசு தரப்பில், ‘‘ஒரு மாநிலத்தில் கிடைக்கும் சமூக அந்தஸ்து மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு பலன்களை புலம் பெயர்ந்தவர்கள் அப்படியே கேட்கமுடியாது. </p><p>சமூக அந்தஸ்து தந்தையின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. தாயாரின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கக்கோருவது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன” என்று வாதிடப்பட்டது.</p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-</p><h2>ஏற்புடையதல்ல</h2><p>புதுச்சேரியைச் சேர்ந்த ஆண் ஒருவர் வெளிமாநில பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், அவர்களது குழந்தைகளுக்கு புதுச்சேரி பூர்வீகத்தின் அடிப்படையில் சாதி சான்றிதழ் மற்றும் இடஒதுக்கீட்டுப் பலன்கள் வழங்கப்படுகின்றன. </p><p>அதேநேரம், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அவர்களது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ், இடஒதுக்கீடு வங்குவது இல்லை. இது பாலினம் அடிப்படையிலான வேறுபாடாக கருதப்படுகிறது.</p><p>இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கமே சமூகத்தில் பின்தங்கிய நிலையை சரிசெய்வதுதான். அந்த சமூக அந்தஸ்து தந்தை வழியில் வந்ததா அல்லது தாய் வழியில் வந்ததா? என்பதை தீர்மானி்ப்பது அல்ல. எனவே, புதுச்சேரியில் பாலின அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்க புதுச்சேரி அரசு மறுப்பது ஏற்புடையதல்ல.</p><p>இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருப்பதால் தந்தை வழியாக மட்டுமே சமூக அந்தஸ்தை தீர்மானிக்க முடியும் என்ற கூற்றையும் ஏற்க முடியாது.</p><h2>தடை இல்லை</h2><p>ஒரு பெண்ணின் அடையாளம் திருமணத்துக்குப் பிறகு கணவரின் அடையாளத்துடன் கரைந்து போய்விடக்கூடாது. பெண்களுக்கான சம உரிமையை அரசியலமைப்பு சட்டம் தந்துள்ளது. </p><p>எனவே, தந்தையின் பூர்வீக அடிப்படையில் மட்டுமே சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு அவர்களின் தாயாரின் பூர்வீகத்தின் அடிப்படையில் உரிய சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும். </p><p>அந்த சாதி சான்றிதழின் அடிப்படையில் புதுச்சேரி அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து உரிமைகளையும், இடஒதுக்கீட்டு பலன்களையும் வழங்கவேண்டும். </p><p>அதேநேரம் தவறான கோரிக்கை முன்வைக்கப்பட்டாலோ அல்லது தாயாரின் பூர்வீகம் நிரூபிக்கப்படாவிட்டாலோ சாதி சான்றிதழ் வழங்க முடியாது என அரசு மறுப்பதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது.”</p><p>என நீதிபதி உத்தரவில் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-authority-does-the-dgp-have-to-ban-cockfighting-madras-high-court-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-authority-does-the-dgp-have-to-ban-cockfighting-madras-high-court-asks#comments</comments><guid isPermaLink="false">05f4f282-9fcc-41fb-8e6f-3908ed72e18f</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:01:34 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:01:34.133Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,தமிழ்நாடு காவல்துறை,Tamil Nadu Police,சேவல் சண்டை,Cockfighting</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/49bjg7m4/New-Project-2026-09-01T213111.641.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/49bjg7m4/New-Project-2026-09-01T213111.641.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேவல் சண்டைக்கு தடை விதிக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.</p><h2>சேவல் சண்டை</h2><p>தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பித்தார். </p><p>இந்தநிலையில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோடைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>அந்த மனுவில், “கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயங்கள் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். </p><p>போலீசார் விதிக்கும் நிபந்தனைகளப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்டம் இல்லை. விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. </p><p>எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.</p><h2>என்ன அதிகாரம்?</h2><p>இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், மிருக வதை தடை சட்டம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.</p><p>இதை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது? </p><p>போலீசுக்கு எத்தனையோ பணிகள் இருக்கும்போது, ஆடு சண்டை எங்கே நடக்கிறது? சேவல் சண்டை எங்கே நடக்கிறது? என கண்காணிப்பதுதான் வேலையா? என கேள்வி எழுப்பினார். </p><p>இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்.7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/sports/t20-series-against-afghanistan-indian-squad-led-by-shreyas-iyer-announced</link><comments>https://www.maalaimalar.com/sports/t20-series-against-afghanistan-indian-squad-led-by-shreyas-iyer-announced#comments</comments><guid isPermaLink="false">f5985d3f-0547-4da5-b640-d84e6e528b15</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:44:38 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:44:38.160Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Afghanistan,ஸ்ரேயாஸ் ஐயர்,T20I series,ஆப்கானிஸ்தான்,டி20 தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/oczaezo7/New-Project-2026-09-01T210110.447.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/oczaezo7/New-Project-2026-09-01T210110.447.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இத்தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும், துணை கேப்டனாக திலக் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>இந்திய டி20 அணி விவரம்</h2><p>ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா  ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.</p><h2>உடற்தகுதி சோதனை</h2><p>ஜஸ்பிரீத் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், தங்களது உடற்தகுதி சான்றிதழைப் பெறுவதைப் பொறுத்தே விளையாடுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. </p><p>இந்த மாத இறுதியில் ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காகப் பயணம் மேற்கொள்ளும் அதே அணிதான் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், இலங்கை தொடரை முழங்கால் காயம் காரணமாக தவறவிட்ட பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இருப்பினும் உடற்தகுதியை வைத்தே விளையாடுவாரா, இல்லையா என்பது தெரியவரும்.</p><p>இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் செப்டம்பர் 13 முதல் 17 வரை, தேசிய தலைநகரில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளன. </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் இரண்டாம் கருவறை: அமைச்சர் பர்வேஸ் உருக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-parvez-calls-cm-vijay-second-womb</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-parvez-calls-cm-vijay-second-womb#comments</comments><guid isPermaLink="false">97ea5aa1-07db-4f52-a1e2-a60d0554cdb5</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:40:47 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:40:47.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் பர்வேஸ்,TN Minister Parvesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/7x5wqjtf/MinisterPravesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் பர்வேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/7x5wqjtf/MinisterPravesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் சட்டமன்ற கூட்டத்தில் தொழிலாளர்கள் நலன் குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசிய பின்னர், பதிலுரை அளித்தார். அப்போது அவர் முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசினார்.</p><h2>அமைச்சர் பர்வேஸ் பேசியதாவது:-</h2><p>புதுக்கோட்டையைச் சேர்ந்த இஸ்லாமியர் ஆன இந்த எளியவனை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர வைத்த இரண்டாம் கருவறையாம் தளபதிக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்.</p><p>எல்லோரும் உயிலை எழுதி தருவார்கள். நான் அவருக்கு என் உயிரையே எழுதி தருகிறேன். விஜய்தான் எனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம்</p><p>Ever Rest இல்லாமல் உழைக்கும் Everest ஆக உயர்ந்து நிற்கிறார் முதல்வர்.</p><p>காலத்தை குறிப்பிட கி.மு., கி.பி. சொல்வார்கள். அரசியலில் இனி விஜய்க்கு முன், விஜய்க்கு பின்  (வி.மு., வி.பி.,) என்றுதான் குறிப்பிட வேண்டும். ஊழலும், லஞ்சமும் விஜயின் சாட்டை அடிக்கு பயந்து தலை தெறித்து ஓடிவிட்டது.</p><p>இவ்வாறு அமைச்சர் பர்வேஸ் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை... இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு - இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-provision-to-withdraw-resignation-by-election-is-the-only-solution-high-court-refuses-to-accept-isakki-subbiahs-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-provision-to-withdraw-resignation-by-election-is-the-only-solution-high-court-refuses-to-accept-isakki-subbiahs-petition#comments</comments><guid isPermaLink="false">88802761-962c-4915-8f45-ac358650a2b6</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:27:13 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:27:13.084Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Resignation,Ambasamudram,அம்பாசமுத்திரம்,இசக்கி சுப்பையா,ராஜினாமா,Esakki Subaya</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suasbgy7/New-Project-2026-09-01T205359.421.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை... இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு - இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suasbgy7/New-Project-2026-09-01T205359.421.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றப் பேரவை விதிகளின்படி, ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட ராஜினாமா கடிதத்தை  திரும்பப் பெறுவதற்கு எந்தவொரு விதியும் இல்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் அலுவலகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><p>முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா, தனது ராஜினாமா கடிதத்தை ஏற்க வேண்டாம் என்றும், மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தொடர விரும்புவதாகவும் பேரவைச் செயலரிடம் கடிதம் அளித்திருந்த நிலையில் இந்த விளக்கமும், அறிவிப்பும் வெளியாகியுள்ளது.</p><h2>இடைத்தேர்தலே தீர்வு</h2><p>இசக்கி சுப்பையா பிரதிநிதித்துவப்படுத்திய அம்பாசமுத்திரம் தொகுதி ஏற்கனவே காலியானதாக அறிவிக்கப்பட்டுவிட்டதால், தற்போது அங்கு இடைத்தேர்தல் நடத்துவது மட்டுமே சட்டப்படியான ஒரே தீர்வு எனச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.</p><h2><strong>சபாநாயகரின் பதில்</strong></h2><p>இந்த விவகாரம் தொடர்பாகச் சபாநாயகர் தரப்பிலிருந்து இசக்கி சுப்பையாவிற்கு அதிகாரப்பூர்வப் பதில் கடிதம் அனுப்பப்பட உள்ளது.</p><h2>இசக்கி சுப்பையாவின் மறுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு</h2><p>இதற்கிடையே, அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. </p><p>அப்போது தனது ராஜினாமா மனுவை திரும்பப் பெறுவதாகவும், இடைத்தேர்தல் வரும்வரை தனது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் இசக்கி சுப்பையா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. </p><p>இதுதொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர்.</p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>தொடர்ந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மலைவாழ் மக்களுக்கு நீங்கள் செய்த வேலை எந்த லட்சணத்துல இருக்கு... திமுக, அதிமுகவை வெளுத்துவிட்ட அமைச்சர் வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-lashes-out-at-dmk-and-aiadmk-hill-tribes-welfare-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-lashes-out-at-dmk-and-aiadmk-hill-tribes-welfare-issues#comments</comments><guid isPermaLink="false">cd2cb305-f51f-42b3-8196-4d6166ffbeae</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:08:55 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:08:55.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,தமிழக சட்டசபை,TN assembly,vanni arasu,வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/p601onpi/VanniArasu001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/p601onpi/VanniArasu001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thangam-thennarasu-clarifies-congress-allegation-land-not-provided-for-kamarajar-memorial-at-marina">தமிழக சட்டசபை</a>யில் இன்றைய மானியக் கோரிக்கையின்போது மலைவாழ் மக்கள் குறித்த விவாதம் எழுந்தது. அப்போது முன்னாள் அமைச்சரும், திமுக கொறடாவும் ஆன எ.வ. வேலு பேசும்போது "மலைவாழ் பகுதி என்பது நீண்ட நெடிய ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. அதன்பின் அரசு வந்தபோதுதான் அப்பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.</p><h2>திமுக-தான் அதிகமாக செய்தது</h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமுனாமரத்தூர் என்ற மலை உள்ளது. அங்கு 200 கிராமங்கள் உள்ளன. கல்வராயன் மலையிலும் அதுபோன்ற எண்ணிக்கையில் கிராமங்கள் உள்ளன. சில நேரங்களில் போக்குவரத்திற்குக் கூட வசதி இல்லை. ஒத்தையடி பாதை கூட இல்லாத ஏராளமான கிராமங்கள் உண்டு.</p><p>அந்தந்த ஆட்சிகள் வந்தபோதுதான் பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இவர்கள் சொல்கிற பகுதி முழுமை அடைந்து விட்டது என்று சொல்ல முடியாது. அங்கு காலம் காலமாக இருந்தார்கள். உழுதார்கள். ஆனால் நிலம் அவர்களுக்கு சொந்தம் கிடையாது. இப்படிப்பட்ட நிலைதான்.</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக தொடங்கப்பட்டபோது, நான் நேரடியாக சென்று 13 ஆயிரம் பேருக்கு நில உரிமை பட்டா கொடுத்திருக்கிறேன். அதனால் முழுமை அடைந்ததாக அர்த்தம் அல்ல. ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்று செய்ய வேண்டியுள்ளது. நாங்களும் ஜாதி சான்றிதழ் கொடுத்திருக்கிறோம். நாங்கள் கொடுத்தோம். தேவை இருக்கிறது. நீங்களும் முடிக்க முடியாது. மலைப்பகுதியில் அவ்வளவு கிராமங்கள் இருக்கிறது. திமுக ஆட்சியில் முடிந்த அளவிற்கு சொய்திருக்கிறோம். அதிகம் செய்த ஆட்சி திமுக ஆட்சிதான்" என்றார்.</p><p>அதன்பின் "மலைாவாழ் மக்கள் எண்ணிக்கை சுமார் 8 லட்சம் பேர்தான். 5 வருடத்திற்குள் கொடுக்க முடியும். திரும்ப திரும்ப சொல்கிறேன். நான் குறைகளை சொல்லவில்லை. போதாமைகளை சொல்கிறேன்" என்று அமைச்சர் வன்னி அரசு பேசினார்.</p><h2>அதிமுக அமைச்சர் கால் படாத இடமே இல்லை</h2><p>பின்னர் அதிமுக உறுப்பினர் எழுந்து "2011 முதல் 2016 வரை அதிமுக அமைச்சர் காலடி படாத இடமே மலையில் கிடையாது. மலைக்கு தேவையான அனைத்தையும் அதிமுக செய்து கொடுத்தது. இந்த அளவிற்காவது இருப்பதற்கு அம்மாவின் அதிமுகதான் காரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா பீல்டிங்கிலும் அம்மா பெயரும், அதிமுக முன்னாள் அமைச்சர் மோகன் பெயரும் இருந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.</p><h2>அமைச்சர் வன்னி அரசு</h2><p>உடனே வன்னி அரசு "செய்தியை திரித்தி திருப்பு வாதம் செய்ய முயற்சி செய்கிறார்கள். கீழ் தீவனூர், மேல் தீவனூரில் இப்போதும் நீங்கள் சென்று பார்க்கலாம்., 10 கி.மீ. சாலைகள் இல்லை. நாங்கள் நடந்து சென்றோம். ஆட்சியர் உள்ளிட்டோர் வந்தார்கள். இன்றும் சாலை இல்லாத கிராமம் இருக்கு.</p><p>இப்படிப்பட்ட ஒரு கிராமத்தைதான் நீங்கள் தத்தெடுத்திருக்கீங்க, நீங்கள் வேலை பார்த்திருக்கீங்க, அப்படின்னா, என்ன லட்சணத்தில் இருக்குன்னு இந்த இடத்தில் நான் சொல்கிறேன். நான் வெளிப்படையாக பேசுகிறேன். நாங்கள் செய்தோம், நீங்கள் செய்தோம் என்பதல்ல, தேவைப் பற்றி சொல்கிறோம். கோரிக்கைகள் பற்றி சொல்கிறோம். மக்கள் வலியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். வலியை பற்றி பேசாமல், செய்தோம் என்று சொன்னால், சாவல் விடுகிறேன். நீங்க வாங்க, மேல் தூவனூர், கீழ் தூவனூரில் சாலை இல்லை. நாங்கள் போட சொல்லியிருக்கிறோம். தொடங்கியிருக்கிறோம்." என்றார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-death-toll-crosses-1000-rescuers-reach-remote-areas</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-death-toll-crosses-1000-rescuers-reach-remote-areas#comments</comments><guid isPermaLink="false">74945ec5-28f1-4a96-8733-5af503a55e02</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:28:04 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:28:04.097Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,flood,Death toll,பலி எண்ணிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/x737y5gw/nepal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ nepal flood]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/x737y5gw/nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.</strong></em></p><h2>நேபாளத்தில் வெள்ளம்</h2><p>சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. நேபாள எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த 26-ம் தேதி திடீர் வெள்ளம் ஏற்பட்டது.</p><p>இமயமலையில் பனிப்பாறை உடைந்து திபெத் வழியாக நேபாளத்தில் பாயும் போடேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. </p><p>இந்த வெள்ளத்தால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.</p><p>வெள்ளத்தில் உள்நாட்டு மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சாலைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. </p><p>வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்ததால் பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டது.</p><h2>பலி எண்ணிக்கை 1000</h2><p>இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1003 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.</p><p>வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4,000 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பில் சிக்கிய 11,000 பேர் மீட்கப்பட்டனர்.</p><p>மீட்புப் பணிகளில் நேபாளம், இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தான்: ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/rajasthan-boy-who-accidentally-fell-into-a-borewell-rescued-safely-after-a-5-hour-operation</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajasthan-boy-who-accidentally-fell-into-a-borewell-rescued-safely-after-a-5-hour-operation#comments</comments><guid isPermaLink="false">d21a0bc2-738e-4a39-9260-815690840e85</guid><pubDate>Tue, 01 Sep 2026 14:21:15 +0000</pubDate><atom:updated>2026-09-01T14:21:15.953Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,Borewell,ராஜஸ்தான்,ஆழ்துளைக் கிணறு</media:keywords><media:content height="1913" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/x96s0jkj/New-Project-2026-09-01T184337.668.jpg" width="3402"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராஜஸ்தான்: ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/x96s0jkj/New-Project-2026-09-01T184337.668.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் 300 அடி ஆழமுள்ள திறந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவன், 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். </p><p>அல்வார் மாவட்டத்தின் ராம்நகர் பகுதியிலுள்ள புடோலி கிராமத்தில் பானு குர்ஜார் என்ற சிறுவன் நேற்று (ஆக.31) மாலை பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்துள்ளான். பட்டத்தை பிடிக்க முயன்று கீழே பார்க்காமல், மேலே பார்த்தவாறு ஓடியுள்ளான். </p><p>அப்போது அப்பகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றை மூடியிருந்த கல்லின் மீது சிறுவன் கால் வைத்து, தவறி உள்ளே விழுந்துள்ளான். சுமார் 50 முதல் 55 அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்க அப்பகுதி மக்கள் முயற்சித்துள்ளனர்.</p><p>தொடர்ந்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.</p><p>சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 11.30 மணிக்கு மீட்கப்பட்டுள்ளார். உடனே மருத்துவ பரிசோதனைக்காக அருகில் இருந்த அல்வார் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: காலையில் உயர்ந்து மாலையில் கணிசமாக குறைந்த தங்கம் - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-decrease-in-evening-today</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-decrease-in-evening-today#comments</comments><guid isPermaLink="false">59ba7d5c-5145-4f61-85d6-d6c20e96c9c7</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:38:19 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:38:19.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/guqydvrd/Gold" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/guqydvrd/Gold?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காலையில் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் 1680 ரூபாய் குறைந்துள்ளது.</strong></em></p><p>தங்கம் என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது.</p><p>ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால், இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதற்கிடையே, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.</p><p>தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14 ஆயிரத்து 370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 960-க்கும் விற்றது.</p><h2>சற்று உயர்வு</h2><p>மாத தொடக்க நாளான இன்று காலையில் தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>வெள்ளி விலை குறைவு</h2><p>கடந்த 3 நாளாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது.</p><h2>கணிசமாக குறைந்த தங்கம்</h2><p>இந்நிலையில், இன்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு 210 ரூபாயும், சவரனுக்கு 1,680 ரூபாயும் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 14,175 ரூபாய்க்கு, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலையும் மாலையில் குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையானது.</p><p>காலையில் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் 1680 ரூபாய் குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிரான வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-acceptance-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-acceptance-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date#comments</comments><guid isPermaLink="false">0a5355db-679c-415a-b4db-154c0f053cea</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:24:27 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:24:27.820Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/r93dftkk/ChennaiHighcourt001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை உயர்நீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/r93dftkk/ChennaiHighcourt001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அதிமுக-வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.</p><p>த.வெ.க. தலைவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது கொறடா உத்தரவை மீறி, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் எஸ்.ஆர். ராஜகோபால் ஆகியோர், இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஆனால், இந்த விசாரணை என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல. அரசியல் சாசன கடமை. அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டனர்.</p><p>ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெக-வில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்.</p><h2>அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை</h2><p>ராஜினாமாவை ஏற்கும் முன், தகுதி நீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டினர்.</p><p>சபாநாயகர் தரப்பில் ஆஜரான சி.எஸ். வைத்தியநாதன் ராஜினாமா ஏற்றுக் கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகிவிடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும் எனக் குறிப்பிட்டார்.</p><h2>சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை</h2><p>சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா என்பதை மட்டும்தான் விசாரிக்க முடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா, குதிரைபேரம் நடந்ததா என்பதை தகுதி நீக்க நடவடிக்கையில்தான் விசாரிக்க முடியும். ராஜினாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜினாமாவை ஏற்கும்போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.</p><p>இருதரப்பு வாக்குவாதம் மற்றும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. தரப்பிலான வாக்குவாதம் ஆகியவற்றிக்குப் பிறகு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதல்: இந்தியர் உள்பட 12 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/kyiv-attack-kills-12-including-indian-citizen-in-russias-straight-strike</link><comments>https://www.maalaimalar.com/news/world/kyiv-attack-kills-12-including-indian-citizen-in-russias-straight-strike#comments</comments><guid isPermaLink="false">b2a6bc32-203a-4bd1-9541-33f89f678a0e</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:09:12 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:09:12.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிபர் ஜெலன்ஸ்கி,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war,Indian killed,Volodymr Zelensky,இந்தியர் பலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/a0dg1ddk/zelensky.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ zelensky]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/a0dg1ddk/zelensky.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் பலியாகினர் என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது 5-வது ஆண்டாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.</p><p>ரஷியாவுக்கு நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது. போரால் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகியும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர்.</p><h2>டிரோன் தாக்குதல்</h2><p>உக்ரைன் ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் சமாதான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.</p><p>இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட செய்தியில், ஒடேசா மற்றும் அப்பகுதியைச் சுற்றி நேற்று மாலை முதல் வான்வழி வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் டிரோன் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.</p><h2>இந்தியர் பலி</h2><p>ரஷியா நடத்திய இந்த தாக்குதலில் மொத்தம் 12 பேர் பலியாகினர். அவர்களில், ஒருவர் இந்தியர். தவிர 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை - சிபிஎம் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sterlite-shooting-firm-action-needed-against-officials-responsible-for-the-killings-cpm-insists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sterlite-shooting-firm-action-needed-against-officials-responsible-for-the-killings-cpm-insists#comments</comments><guid isPermaLink="false">e5dde014-c9c2-4814-8800-5dffb8bc7850</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:02:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:02:00.936Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழ்நாடு அரசு,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,சிபிஎம்,Thoothukudi Sterlite firing case,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/v19it82n/New-Project-2026-09-01T182841.257.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை - சிபிஎம் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/v19it82n/New-Project-2026-09-01T182841.257.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவ வழக்கில் காவல்துறை அதிகாரிகள்மீதான நடவடிக்கை கைவிடப்பட்டதாக தமிழ்நாடு அரசு நேற்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. </p><p>இந்நிலையில் கொலைக்கு காரணமான அதிகாரிகள்மீது உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்டை எதிர்த்தப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக கொல்லப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். </p><p>இதற்கென அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி தனது பரிந்துரையை அரசுக்கு அளித்தது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் இதற்கு காரணமானவர்கள் என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். </p><p>அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கையும், குற்ற வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. </p><p>31.08.2026 அன்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள் கொலைக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது. இவர்களில் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நேற்றைய நீதிமன்ற நிகழ்வின் வெளிப்பாடாகும்.</p><p>இது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாக அரசு அமைப்புகள் செயல்படும் என்பதற்கான மிக வெளிப்படையான நிகழ்வாகும். அந்த வகையில் திமுகவும், தவெகவும் அதிகாரிகளுக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்துள்ளன. </p><p>சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து மக்கள் சுட்டிக்காட்டியபோதே, ஸ்டெர்லைட் நிர்வாகமோ அல்லது அரசு அமைப்புகளோ நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. </p><p>பன்னாட்டு முதலாளி ஒருவரின் நலனை பாதுகாப்பதற்காகவே ஆளும் வர்க்கத்தின் அடியாளாக செயல்பட்ட இந்த அதிகாரிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. </p><p>இத்தகைய நிலைமை நீடிப்பது நிர்வாகத்தாலும், நீதித்துறையாலும், அரசாங்கத்தாலும் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது என்று குடிமக்களை நிராதரவாக நிற்க வைக்கும். ஜனநாயக நாட்டில் இத்தகைய நிலையை அரசாங்கம் எடுத்திருப்பது முற்றிலும் ஏற்கத் தக்கதல்ல. </p><p>எனவே, தமிழ்நாடு அரசு முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, 13 பேர் கொலைக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்து  சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், </p><p>உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் அதிரடி நீக்கம்:  மிஸ்பா-உல்-ஹக் எடுத்த அதிரடி முடிவு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-cricket-turmoil-deepens-as-ex-captain-quits-day-after-mass-sackings</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-cricket-turmoil-deepens-as-ex-captain-quits-day-after-mass-sackings#comments</comments><guid isPermaLink="false">4aeeb06f-38f1-4913-8052-7d12484344f6</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:51:40 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:51:40.837Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PCB,பாகிஸ்தான் கிரிக்கெட்,Misbah ul Haq,மிஸ்பா உல்-ஹக்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ypnw6kzy/MisbahUlHaq.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மிஸ்பா உல் ஹக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ypnw6kzy/MisbahUlHaq.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். முதல் டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. 2-வது டெஸ்டில் 150 ரன்களுக்கும் மேல் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.</p><h2>இமாம்-உல்-ஹக்</h2><p>இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோரை உடனடியாக நாடு திரும்ப கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் சல்மான் ஆகா, அலி உஸ்மான், ஆமீர் ஜமால், அவைஸ் ஜாஃபர், குர்ரம் ஷேசாத் ஆகியோரை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>ஐந்து அறிமுக வீரர்களை 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்த்துள்ளது. இதில் சிலர் விசா கிடைத்தால்தான் இங்கிலாந்துக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளனர்.</p><p>வீரர்களை தவிர்த்து தலைமை பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சாளர் பயிற்சியாளர்களான சர்பராஸ் அகமது மற்றும் உமர் குல் ஆகியோரையும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு கமிட்டி பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி முற்றிலுமாக சீரமைக்கப்பட இருக்கிறது.</p><h2>ஹர்சா போக்லே</h2><p>இதற்கிடையே இந்தியாவின் கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்சா போக்லே, நம்ப முடியாததைச் செய்வதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை நம்பலாம் என்று தெரிவித்துள்ளார். ஒரு தொடர் முடிவடைவதற்கு முன்னதாகவே பயிற்சியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதை இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/keir-starmer-announces-resignation-as-member-of-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/world/keir-starmer-announces-resignation-as-member-of-parliament#comments</comments><guid isPermaLink="false">fca6d52c-14f9-43bb-b317-70c131be82ef</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:27:51 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:27:51.108Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,கெய்ர் ஸ்டார்மர்,Keir Starmer,இடைத்தேர்தல்,மத்திய லண்டன் தொகுதி,central London constituency</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/v9x6322o/New-Project-2026-09-01T174045.767.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/v9x6322o/New-Project-2026-09-01T174045.767.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்தில் பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கெய்ர் ஸ்டார்மர், தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். </p><p>நாடாளுமன்றப் பணிகளில் இருந்து விலகி, இனிவரும் காலங்களில் பாதுகாப்பு, அமைதி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் தனது கவனத்தைச் செலுத்தப் போவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார். </p><p>கெய்ர் ஸ்டார்மரின் இந்த திடீர் விலகல் முடிவைத் தொடர்ந்து, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மத்திய லண்டன் நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்  நடத்தப்படவுள்ளது.</p><p>கட்சிக்குள் ஏற்பட்ட கடுமையான அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் காரணமாக <a href="https://www.maalaimalar.com/news/topnews/keir-starmer-announced-his-resignation-as-prime-minister-of-britain">ஸ்டார்மர்</a> பதவி விலகியதைத் தொடர்ந்து ஆண்டி பர்ன்ஹாம் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார். </p><p>பிரதமர் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தல் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வதாக அறிவித்திருந்தார். ஆனால் திடீரென்று அப்பதவியையும் ராஜினாமா செய்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>கிரிப்டோகரன்சி மோசடி: முதலீட்டாளர்கள் நெருக்கடியால் திண்டுக்கலில் 25 வயது வாலிபர் தற்கொலை; பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cryptocurrency-fraud-investor-crisis-25-year-old-man-suicide-dindigul-case-moved-to-economic-offences-wing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cryptocurrency-fraud-investor-crisis-25-year-old-man-suicide-dindigul-case-moved-to-economic-offences-wing#comments</comments><guid isPermaLink="false">4900ec49-ef34-4636-ad7f-9d64f29b72c9</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:26:49 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:26:49.657Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,cryptocurrency scam,கிரிப்டோகரன்சி மோசடி,Multi-Level Marketing,FQL Investment Trading,பொருளாதார குற்றப்பிரிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/78lo14gr/raja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cryptocurrency scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/78lo14gr/raja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் பல அடுக்கு சந்தைப்படுத்தல் பெயரில் நடைபெற்ற பல கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில், முதலீடு செய்தவர்களின் கடுமையான நெருக்கடிக்கு ஆளான ராஜா என்ற 25 வயது வாலிபர் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>40 நா<strong>ட்களில் பண</strong>ம் இரட்டிப்பாகும் என ஆசைவார்த்தை</h2><p>மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 7 மாதங்களாக 'எஃப்.க்யூ.எல் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-rs-1000-crore-financial-company-fraud-youth-commits-suicide-the-police-having-failed-to-prevent-it-must-bear-responsibility">இன்வெஸ்ட்மென்ட் டிரேடிங்</a>', 'எஃப்.க்யூ.எல் எக்ஸ்சேஞ்ச் செயலி' மற்றும் 'வி.ஜி இன்வெஸ்ட்மென்ட் குரூப் சிண்டிகேட்' ஆகிய அமைப்புகள் இயங்கி வந்துள்ளன. இதில் முதலீடு செய்தால் தினமும் அதிகபட்ச லாபம் கிடைக்கும் என்றும், 40 முதல் 45 நாட்களுக்குள் முதலீட்டுத் தொகை அப்படியே இரட்டிப்பாகும் என்றும் உள்ளூர் முகவர்கள் மூலம் மக்களுக்கு ஆசைவார்த்தை காட்டப்பட்டுள்ளது.</p><h2>கிரிப்டோ <strong>வாலட்க</strong>ளுக்கு மாற்றப்பட்ட பணம்</h2><p>பொதுமக்களிடம் இருந்து ரொக்கம், கூகுள் பே மற்றும் யுபிஐ மூலமாகப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட நிதியில் ஒரு பகுதி 'டெதர்'  எனப்படும் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு, சந்தேகத்திற்குரிய எஃப்.க்யூ.எல் டிஜிட்டல் வாலட்களில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற முயன்றபோது, செயலி மூலம் பணத்தை எடுக்க முடியாமல் முடங்கியது. கூடுதல் பணம் செலுத்தினால்தான் கணக்கை இயக்க முடியும் எனக் கூறிய நிறுவனத்தினர், திடீரென செயலியை முற்றிலுமாக முடக்கிவிட்டு தலைமறைவாகினர்.</p><h2>பணத்தை இ<strong>ழந்தவர்கள் முற்</strong>றுகை</h2><p>இந்தத் திட்டத்தை நம்பி தனது பகுதி மக்களை பெருமளவில் முதலீடு செய்ய தூண்டியவர்  ராஜா நிதி நிறுவனம் ஏமாற்றியதை அறிந்த முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு ராஜாவின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். முதலீட்டாளர்களின் தொந்தரவைத் தாங்க முடியாமலும், பணத்தைத் திரும்பத் தர வழியில்லாமலும் மன உலைச்சலுக்கு ஆளான ராஜா, தனது வீட்டிலேயே உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட பிறகும், அவரிடம் கொடுத்த பணம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவரது வீட்டின் முன் திரண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>பொருளா<strong>தார குற்றப்பிரிவு</strong>க்கு விசாரணை மாற்றம்</h2><p>பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் திரண்டு புகார்களை அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் ரூ.25 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், 'பைனான்ஸ்' வாலட்கள் மற்றும் சர்வதேச அளவிலான தொடர்புகள் இந்த மோசடியில் இருப்பதால், வழக்கு விசாரணையை தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைவர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.</p><h2><strong>21 பேர் கைது</strong></h2><p>இவ்வழக்கு தொடர்பாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, முதன்மை அமைப்பாளர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட முக்கிய நபர் அமெரிக்காவில் இருந்து அண்மையில் இந்தியா திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதோடு, கிரிப்டோ வாலட்களை முடக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தனிமைச் சிறைவாசம் கூடாது: இம்ரான் கான், அவரது மனைவிக்கு நிவாரணம் வழங்கிய நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/world/pak-court-big-relief-for-imran-khan-bushra-bibi-no-solitary-confinement</link><comments>https://www.maalaimalar.com/news/world/pak-court-big-relief-for-imran-khan-bushra-bibi-no-solitary-confinement#comments</comments><guid isPermaLink="false">8aa90231-139e-4f9e-a959-dd69dea68340</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:02:59 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:02:59.997Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Imran Khan,இம்ரான் கான்,BushraBibi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/2gpcmxa8/ImranKhan0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இம்ரான் கான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/2gpcmxa8/ImranKhan0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, அவரது உறவினர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான், தேர்லில் களம் இறங்கி பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இனசாப் (PTI) என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, இம்ரான் கான் பிரதமர் ஆனார்.</p><p>2022-ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறையில் இருந்து வருகுிறார். இவருடைய மனைவி புஷ்ரா பிபியும் சிறையில் உள்ளார்.</p><p>இருவரும் ஒரே ஜெயிலில் அடைக்கப்பட்டாலும் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். யாரும் அவர்களை சந்திக்க முடியாது. இம்ரான் கான் கூட, தனது மனைவியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.</p><h2>இம்ரான் கான் உடல்நிலை பாதிப்பு எனப் புகார்</h2><p>இதனைத் தொடர்ந்து சிறைச்சாலையில் இம்ரான் கான் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியானது. குறிப்பாக அவர் கண் பார்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் கண் பரிசோனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>இதற்கிடையே இம்ரான் கானின் சகோதரி அலீமா கான், புஷ்ரா பிபியின் மகள் முபாஷரா கவார் மனேகா தனிமைச் சிறைவாசத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.</p><h2>இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு</h2><p>இந்த வழக்கு விசாரணை முடிவில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் "சிறைச்சாலை விதிப்படி இம்ரான் கானின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்த அனுமதிக்க வேண்டும். இம்ரான் கான் மற்றும் அவரது மகன் டெலிபோனில் பேச அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.</p><p>இம்ரான் கானுக்கு படிக்க செய்தித்தாள்கள் வழங்கப்பட வேண்டும். தினந்தோறும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். சிறைச்சாலை விதிப்படி அவருக்கு மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.</p><p>மேலும், இம்ரான் கான்- புஷாரா பிபி நேருக்கு நேர் சந்தித்து பேசவும் அனுமதி வழங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெயரில் நூதன மோசடி: மத்திய பிரதேசத்தில் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த பொதுமக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-chief-minister-vijay-name-used-in-sophisticated-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-chief-minister-vijay-name-used-in-sophisticated-scam#comments</comments><guid isPermaLink="false">297f8d9a-ee2e-4fe6-a433-c81a6921faec</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:49:20 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:49:20.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,Cyber Crime,இந்தூர்,மோசடி கும்பல்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,மத்திய பிரதேச மாநிலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/uwfmr9l0/cm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/uwfmr9l0/cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதல்வர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். </p><p>மத்திய பிரதேச மாநிலத்தில் தமிழ்நாடு  முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, ஏழை எளிய மக்களிடம் நிதியுதவி மற்றும் கடன் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   </p><h2>முதல்வர் விஜய் <strong>பெயரில் போலி</strong> அறக்கட்டளை   </h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/digital-payments-without-internet-phonepe-launches-upi-123pay-for-feature-phones">மத்திய பிரதேச மாநிலம் </a>இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதல்வர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். தமிழக முதல்வர் விஜய் மூலம் சிறு தொழில் தொடங்குவதற்கான மானியக் கடன், இலவச நிதியுதவி, கல்வி நிதியுதவி மற்றும் வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக ஆசை வார்த்தைகள் கூறி மக்களை நம்ப வைத்துள்ளனர்.  </p><h2>நூதன <strong>முறையிலான பண</strong>ப்பறிப்பு   </h2><p>இந்த போலி அறக்கட்டளை மூலமாக ரூ.10 லட்சம் வரை மானியம் மற்றும் நிதி உதவி பெற முடியும் எனக் கூறி மக்களைத் தொடர்புகொண்ட அந்த கும்பல், அதற்கான நடைமுறைகளுக்காக பணம் பறித்துள்ளது. விண்ணப்பப் பதிவு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கான கட்டணம் என்ற பெயரில் தலா ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.   </p><h2>காவல்துறையி<strong>ல் குவிந்த</strong> புகார்கள்   </h2><p>பணம் செலுத்திய பிறகு குறிப்பிட்ட நபர்களைத் தொடர்புகொள்ள முடியாமலும், எவ்வித நிதியுதவியும் கிடைக்காமலும் போனதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்தை நாடினர். கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவில் இந்த மோசடி தொடர்பாக 6 அதிகாரப்பூர்வ புகார்கள் பதிவாகியுள்ளன.   </p><h2>சைபர் கிரைம் <strong>போலீஸ் தீவிர</strong> விசாரணை   </h2><p>பொதுமக்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சைபர் குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அடையாளம் தெரியாத போலி நபர்கள் மற்றும் அறக்கட்டளைகளின் பெயரில் வரும் அழைப்புகளை நம்பி முன்பணம் செலுத்த வேண்டாம் என மக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘ட்ரம்புக்கு பதில் விஜய் அமெரிக்க அதிபராகலாம்’ - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-could-become-us-president-instead-of-trump-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-could-become-us-president-instead-of-trump-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">1f4f14f3-8c6b-4bf7-a382-3415522374d1</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:44:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:44:35.109Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,President Donald Trump,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,அதிபர் டொனால்ட் ட்ரம்ப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/z05srh8o/New-Project-2026-09-01T165005.394.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ட்ரம்புக்கு பதில் விஜய் அமெரிக்க அதிபராகலாம்’ - எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/z05srh8o/New-Project-2026-09-01T165005.394.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர்.,</p><p>“அனல்மின் நிலையத் திட்டத்தை அறிவித்துதானே உள்ளனர், உடனே செயல்பாட்டிற்கு வராது. தவெக ஆட்சிக்கு வந்த இரண்டு அறிவிப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றும் திமுக ஆட்சியில் (மகளிருக்கு இலவசப் பேருந்து) கொண்டுவரப்பட்டது. </p><h2>ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான்</h2><p>திட்டமில்லாத செயல்பாடுதான் தவெக ஆட்சி. கட்சி நிதி உண்மையா, பொய்யா என்பதை தவெகவிடம்தான் கேட்கவேண்டும். எதையாவது சொல்லி காலத்தை ஓட்டவேண்டும். ஊழல் என்றால் ஆதாரத்தை காட்டி நிருபீக்க வேண்டும். தவெக ஆட்சி அமைந்தபின்தான் ஊழல் அதிகரித்துள்ளது என மக்கள் பேசுகிறார்கள்.</p><p>ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான். லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றியுள்ளனர். அப்போது ஊழல் நடந்துகொண்டுதானே இருக்கிறது? இதனை எப்படி தூய்மையான ஆட்சி எனக்கூற முடியும்?</p><h2>தமிழ்நாட்டில் ரீல்விடலாம், அமெரிக்காவில் முடியாது</h2><p>இந்த ஆட்சியில் எங்காவது சோதனை நடந்தால், உடனே ரீல்ஸ். ஊடகங்கள் அதற்கு மெருகூட்டுகிறார்கள். ரீல்ஸ் (வீடியோ) போட்டே வண்டியை ஓட்டுகிறார்கள், ரியல் (உண்மை) எதுவும் இல்லை. </p><p>அமெரிக்க நாட்டிற்கு கூட அவர் ஜனாதிபதி ஆகலாம், தவறில்லை. ட்ரம்புக்கு பதில் அவரே அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகலாம், அதில் தவறில்லை. அது அவருடைய விருப்பம். இங்கு ரீல் விடலாம், அங்கு அது நடக்காது.</p><p>தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம். தவெக ஆட்சி செல்லும்போக்கை பார்த்தாலே ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்பது தெரிகிறது. விளையும் பயிர் முளையிலே தெரியும். எவ்வளவு போராட்டங்கள்? அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்ந்துள்ளது. </p><p>விலை உயர்வை கட்டுபடுத்த அரசு என்ன செய்தது? ஆக்கப்பூர்வமான திட்டம் எதுவும் கையில் இல்லை? கடன் மட்டுமே வாங்குகிறது, வருவாய்க்கு வழி இல்லை.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு: இருவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/grand-canyon-flash-flood-two-dead-one-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/grand-canyon-flash-flood-two-dead-one-missing#comments</comments><guid isPermaLink="false">bae1730f-345c-4e1e-b629-d2a10831cf95</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:35:03 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:35:03.008Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,Grand Canyon,கிராண்ட் கேன்யன்,Canyon  Flash floods,கேன்யன் வெள்ளப்பெருக்கு,அரிசோனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zkjw5zt9/can.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Canyon  Flash floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zkjw5zt9/can.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கிராண்ட் கேன்யன் தேசிய பூங்காவில் வீசிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.</p><p>அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கிராண்ட் கேன்யன் தேசிய பூங்கா பகுதியில் திடீரென வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பிரைட் ஏஞ்சல் என்ற இடத்தில் கடுமையான <a href="https://www.maalaimalar.com/news/world/green-house-stands-strong-amid-disaster-in-nepal-floods">வெள்ளப்பெருக்கு</a> ஏற்பட்டது. நீர்வரத்து மிக வேகமாக அதிகரித்ததால், ஆற்றின் கரையோரங்களில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.</p><h2>டெ<strong>க்சாஸ் மருத்துவர் பலி</strong></h2><p>இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 46 வயதான பிரபல உடலியக்க பிசியோதெரபி மருத்துவர் ஜான் ஜியுஸ்டி என்பவரும் அடங்குவார். இவர் தனது நண்பர்களுடன் மீன்பிடித்தல் மற்றும் மலையேற்றப் பயிற்சிக்காக இங்கு வந்திருந்தபோது, வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். மேலும் மற்றொரு ஆண் சுற்றுலாப் பயணியின் உடலும் கொலராடோ ஆற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>80 <strong>பயணிகள் மீட்</strong>பு</h2><p>வெள்ளப்பெருக்கு குறித்துத் தகவல் அறிந்ததும், தேசிய பூங்கா மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன மீட்புக் கருவிகள் மூலம் களத்தில் இறங்கினர். இரவு நேரத்திலும் சிறப்புப் பார்வை சாதனங்களைப் பயன்படுத்தி தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்ட அவர்கள், வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 80 சுற்றுலாப் பயணிகளைப் பத்திரமாக மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். இருப்பினும், இன்னமும் ஒரு நபர் மாயமாகியுள்ளதால் அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><h2>முக்கிய கு<strong>டிநீர் குழாய் சே</strong>தம்</h2><p>திடீர் வெள்ளத்தின் காரணமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த பல மரப் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுத் துண்டிக்கப்பட்டன. பூங்காவின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் குடிநீர் விநியோகக் குழாய்கள் மிகக் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கும் குடிநீர் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை குறிப்பிட்ட பாதைகள் மற்றும் முகாம்களை பூங்கா நிர்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஹர்திக் பாண்ட்யாவின் நிறைவடையாத டீல்: மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்?</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/hardik-pandya-told-trade-might-not-happen-rohit-sharma-to-pick-next-mi-captain</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/hardik-pandya-told-trade-might-not-happen-rohit-sharma-to-pick-next-mi-captain#comments</comments><guid isPermaLink="false">2f0cc45e-ecfc-4872-8b70-c9bdf29de201</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:30:39 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:30:39.515Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rohit sharma,ரோகித் சர்மா,Hardik Pandya,ஹர்திக் பாண்ட்யா,Mumbai Indians,மும்பை இந்தியன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/e9lfp4dv/HardikPandya001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹர்திக் பாண்ட்யா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/e9lfp4dv/HardikPandya001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரோகித் சர்மா, பும்ரா, திலக் வர்மா ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.</p><p>ஐ.பி.எல். லீக்கில் முன்னணி அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா உள்ளார். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்த ரோகித் சர்மாவுக்குப் பதிலாக இவரை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமித்தது.</p><p>அதில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அணிக்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இறுதியாக ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.</p><p>சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட பல அணிகள் இவரை வாங்க முயற்சி மேற்கொண்டு இருக்கின்றன. ஆனால், ஹர்திக் பாண்ட்யா வேண்டுமென்றால் பெரும்தொகையுடன் சில வீரர்களும் வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் கோரிக்கை வைக்கிறது.</p><p>இதனால் டீல் இன்னும் நிறைவடையவில்லை. நிறைவடையாமல் போகலாம் என்ற செய்தியும் வெளியாகியுள்ளன. ஆகவே, மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடிக்க வாய்ப்புள்ளது.</p><p>அப்படி நீடித்தால், ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் இருக்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி என்றால் யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><h2>ரோகித் சர்மா</h2><p>ரோகித் சர்மா இந்தியாவுக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவில் மட்டுமே விளையாடி வருகிறார். இவர் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேவேளையில் பும்ராவும் போட்டியில் இருக்கிறார்.</p><p>இருவரையும் தவிர்த்து நீண்ட பலனை கருத்தில் கொண்டால், திலக் வர்மாவை கேப்டனாக்கலாம் என்ற வாய்ப்பும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்திய டி20 அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்கிறார். பகுதி நேர கேப்டனாகவும் செயல்படும் நிலையில் உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆப்பிள் புதிய சிஇஓ- ஆக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பு - பதவி விலகிய டிம் குக்விற்கு எலான் மஸ்க் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/world/apple-appoints-new-ceo-john-ternus-elon-musk-congratulates-tim-cook</link><comments>https://www.maalaimalar.com/news/world/apple-appoints-new-ceo-john-ternus-elon-musk-congratulates-tim-cook#comments</comments><guid isPermaLink="false">f84ebade-1941-4ada-a6c9-03dc2a487343</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:28:18 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:28:18.204Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Elon Musk,எலான் மஸ்க்,Apple CEO,Apple TimCook,டிம்குக்,New Apple CEO,Tim Cook Farewell</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/n7wlx5q2/John-Ternus-Tim-Cook" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ John Ternus - Tim Cook ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/n7wlx5q2/John-Ternus-Tim-Cook?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D">டிம் குக்</a> அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். </p><p>கடந்த 15 ஆண்டுகளாக நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வந்த அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ-ஆக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D">ஜான் டெர்னஸ்</a> பொறுப்பேற்றுள்ளார்.</p><p>டிம் குக் சிஇஓ பதவியிலிருந்து விலகினாலும், அவர் நிறுவனத்தை விட்டு வெளியேறவில்லை; மாறாக, ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் என்ற புதிய பொறுப்பை ஏற்கிறார்.</p><h2>டிம் குக்-ன் கடிதம்</h2><p>தன்னுடைய கடைசி நாளன்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D">ஆப்பிள் </a>ஊழியர்களுக்கு டிம் குக் உணர்ச்சிப்பூர்வமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: </p><p>இந்தச் சிறந்த நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் தலைவராகச் செயல்பட்டது எனது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமையாகும்.</p><p>ஆப்பிள் நிறுவனத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு ஊழியர்களாகிய நீங்கள்தான் காரணம். உங்களின் அர்ப்பணிப்பும் அன்பும் என்னை எப்போதும் வியக்க வைக்கிறது.</p><p>உங்களது உழைப்பு என் வாழ்நாளில் நான் கண்ட மிகச்சிறந்த குழுப் பணியாகும். 2011-இல் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜோப்ஸிடமிருந்து பொறுப்பேற்றதை நினைவு கூர்ந்த அவர், "உலகில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஜோப்ஸின் கனவை நாம் அனைவரும் இணைந்து நிஜமாக்கியுள்ளோம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.</p><p>மேலும், புதிய சிஇஓ ஜான் டெர்னஸ் குறித்துப் பேசிய டிம் குக், "உலகை மாற்றக்கூடிய தயாரிப்புகளை எப்படி உருவாக்குவது என்பது ஜானுக்குத் தெரிந்த அளவு வேறு யாருக்கும் தெரியாது. அவரது தலைமையில் ஆப்பிள் அடுத்தக்கட்டத்திற்குச் செல்வதைக் காண ஆவலாக உள்ளேன்," என்று பாராட்டியுள்ளார்.</p><h2>'எனது கடைசி நாள்' - டிம் குக்கின் எக்ஸ் பதிவு</h2><p>டிம் குக் தனது எக்ஸ் பக்கத்தில், 'தலைமைச் செயல் அதிகாரியாக எனது கடைசி நாளில், ஆப்பிள் சமூகத்தினருக்கு எனது அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>நாளை எனது பதவி மாறலாம், ஆனால் ஆப்பிள் சமூகத்தின் மீதான எனது அன்பு ஒருபோதும் மாறாது. நீங்கள் தொடர்ந்து எனக்கு உத்வேகம் அளித்து வந்தமைக்கு நன்றி. </p><p>என் நன்றியுணர்வு எல்லையற்றது; அடுத்தகட்டப் பயணத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.</p><h2>டிம் குக்கின் சாதனைகள் மற்றும் புதிய சகாப்தம்</h2><p>2011-இல் டிம் குக் பொறுப்பேற்கும்போது ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.33,21,752 கோடி இருந்தது. </p><p>தற்போது அவரது 15 ஆண்டுகால உழைப்பால் அது ரூ. 3,79,62,880 கோடி டாலருக்கும் மேல் உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. </p><p>இவரது காலத்தில்தான் ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ், ஆப்பிள் சிலிகான் சிப்கள் போன்ற தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன.</p><p>புதிய சிஇஓ ஜான் டெர்னஸ், முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்தார். </p><p>அவரது தலைமையில் ஆப்பிள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>எலான் மஸ்கின் வாழ்த்து</h2><p>டிம் குக்கின் இந்த உணர்ச்சிப்பூர்வமான எக்ஸ் பதிவிற்குப் பதிலளிக்கும் விதமாக, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D">எலான் மஸ்க்</a> தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் தனது பதிவில், "ஆப்பிளில் ஒரு மகத்தான பணி வாழ்க்கைக்கு வாழ்த்துகள்!" என்று டிம் குக்கிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேற்குவங்கம்: மம்தா பானர்ஜியின் மருமகள், வீட்டில் இருந்து சடலமாக மீட்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-mamata-banerjees-daughter-in-law-found-dead-at-her-home</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-mamata-banerjees-daughter-in-law-found-dead-at-her-home#comments</comments><guid isPermaLink="false">cbf9494f-2b14-49d7-82e2-45df2f17769d</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:48:30 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:48:30.071Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்குவங்கம்,west bengal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/2j9510id/New-Project-2026-09-01T161529.092.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேற்குவங்கம்: மம்தா பானர்ஜியின் மருமகள் வீட்டில் இருந்து சடலமாக மீட்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/2j9510id/New-Project-2026-09-01T161529.092.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் தாய்வழியிலான ஒன்றுவிட்ட சகோதரரின் மகள் பிரிஷ்டி முகர்ஜி, இன்று அவரது வீட்டில் இருந்து தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். </p><p>பீர்பூம் மாவட்டம், ராம்பூர்ஹாட்டின் குசும்பா கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்து 31 வயதான பிரிஷ்டி முகர்ஜி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். </p><p>கடந்த சில ஆண்டுகளாகவே பிரிஷ்டி மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிரிஷ்டி முகர்ஜி தனது வேலையை இழந்திருந்தாகவும், மேலும், அவருக்கு விவாகரத்து வழக்கு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>தொடர்ந்து காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராம்பூர்ஹாட் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். </p><p>இது தற்கொலையாக இருக்கலாம் என்றும், எனினும் மரணத்திற்கான முழுமையான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-today-and-tomorrow-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-today-and-tomorrow-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a1141394-d3c2-450a-8717-e6dc577da6c7</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:25:53 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:25:53.020Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/q6mn1lo5/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/q6mn1lo5/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>3-ந்தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>4-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 5-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 3-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-question-paper-leak-protest-supreme-court-issues-a-bold-order-quashing-cases-against-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-question-paper-leak-protest-supreme-court-issues-a-bold-order-quashing-cases-against-protesters#comments</comments><guid isPermaLink="false">bdfeef31-629f-4b31-91a4-7e1b03ec42ad</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:24:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:24:08.391Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,FIR,Protesters,போராட்டக்காரர்கள்,NEET Paper Leak,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு,முதல் தகவல் அறிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hrt7fddv/New-Project-2026-09-01T155057.462.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hrt7fddv/New-Project-2026-09-01T155057.462.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-ன்கீழ் தங்களுக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><h2>வழக்குகள் ரத்து</h2><p>ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>இருப்பினும் போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும், மேலும் முன்னரே வழக்குகளை கொண்டுள்ள 2,873 நபர்களுக்கு இந்த ரத்து உத்தரவு பொருந்தாது, அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>மனுத்தாக்கல்</h2><p>இந்தியா முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><h2>போராட்டம் வாபஸ்</h2><p>மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற மனு அளித்து, நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 5-ஆம் தேதி டெல்லியில் நடத்தத் திட்டமிட்டிருந்த மாபெரும் <a href="https://www.maalaimalar.com/news/national/cockroach-janata-party-withdraws-announcement-for-september-5-rally">போராட்டப் பேரணி</a>யை வாபஸ் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பரில் குறையும் மழை: 1901-க்குப் பிறகு மிக வெப்பமான ஆகஸ்ட் மாதத்தைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/rainfall-to-decrease-in-september</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/rainfall-to-decrease-in-september#comments</comments><guid isPermaLink="false">4e1294b6-4f30-4d69-9e34-ef9bf459d7fb</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:17:37 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:17:37.666Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,Meteorological Department,மழைப்பொழிவு,rainfall,எல் நினோ,El Nino</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/1pbpyxb1/el-nino.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ El Nino]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/1pbpyxb1/el-nino.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிக வெப்பமண்டல மாதமாக மாறியுள்ள நிலையில், வரவிருக்கும் செப்டம்பர் மாதத்திலும் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது</p><h2>செப்<strong>டம்பர் மாத மழைப்</strong>பொழிவு கணிப்பு</h2><p>இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாதாந்திர அறிக்கையின்படி, செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பெய்யும் மழையின் அளவு நீண்டகால சராசரியில் 91 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. 1971 முதல் 2020 வரையிலான தரவுகளின் அடிப்படையில், செப்டம்பர் மாதத்திற்கான நீண்டகால சராசரி மழைப்பொழிவு 167.9 மி.மீ ஆகும். மேலும், நாடு முழுவதும் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பநிலையும் தொடர வாய்ப்புள்ளது.</p><h2><strong>எல் நினோ தாக்க</strong>ம்</h2><p>பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் எல் நினோ நிலவரம் பலமடைந்து வருவதே இந்த மழைப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. எல் நினோ வலுவடைந்து வருவதால், தென்மேற்கு பருவமழையின் இறுதிப் பகுதியிலும் மழைப்பொழிவு பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்ஜய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.</p><h2>வரலா<strong>ற்றுச் சாதனை</strong> </h2><p>கடந்த ஆகஸ்ட் மாதத்தின் சராசரி வெப்பநிலை 28.01 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது வழக்கமான சராசரி வெப்பநிலையான 27.34 டிகிரி செல்சியஸை விட அதிகம். அதேபோல, இரவிலும் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 24.36 டிகிரி செல்சியஸாக உயர்ந்து, 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச வெப்பமண்டல ஆகஸ்ட் மாதமாக இது அமைந்துள்ளது.</p><h2>மழைப் <strong>பற்றாக்குறையின் தற்போதை</strong>ய நிலை</h2><p>ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 213.3 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது 2001-க்குப் பிறகு பதிவான ஏழாவது குறைந்தபட்ச மழைப்பொழிவாகும். இம்மாதத்தில் நான்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி, சுமார் 26 நாட்கள் நீடித்தபோதிலும், அவற்றின் தாக்கம் பெரும்பாலும் இந்தோ-கங்கை சமவெளிப் பகுதிகளில் மட்டுமே மையம் கொண்டிருந்தது. இதனால் நாட்டின் பிற பகுதிகள் கடுமையான மழைப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஒற்றை கையால் அசால்டாக பிடித்த கேட்ச்: வைரலாகும் கிளென் பிலிப்ஸ் போஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/cpl-2026-glenn-phillips-stuns-everyone-with-uncanny-one-handed-catch</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/cpl-2026-glenn-phillips-stuns-everyone-with-uncanny-one-handed-catch#comments</comments><guid isPermaLink="false">f54d1f8d-06ce-4b66-84cc-d697a042be16</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:10:11.933Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Glenn Phillips,கிளென் பிலிப்ஸ்,CPL,catch,கரீபியன் லீக் தொடர்,கேட்ச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/l9kt9poe/glenn.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ glenn phillips]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/l9kt9poe/glenn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் ஒற்றை கையில் பிடித்த அசத்தலான கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</strong></em></p><p>கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 22வது லீக் போட்டியில் டிரினிடாட் அண்ட் டொபாகோ நைட்ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.</p><p>மழை பெய்ததால் இந்தப் போட்டி 16 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ்  வென்ற டிரிபாகோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><h2>சதமடித்த ஹெட்மயர்</h2><p>அதன்படி, முதலில் பேட் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது. ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடியாக ஆடி 40 பந்தில் சதம் விளாசி அசத்தினார். அவர் 43 பந்தில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நடப்பு தொடரில் இது அவரது 2-வது சதமாகும். ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியாக ஆடி 27 ரன்கள் எடுத்தார்.</p><p>இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி டிரினிடாட் அணிக்கு 16 ஓவரில் 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.</p><p>அப்போது கடினமான இலக்கை நோக்கி விளையாடிய டிரினிடாட் அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன், டுவைன் பிரிட்டோரியஸ் வீசிய பந்தை லெக் சைடில் தூக்கி அடித்தார்.</p><h2>பிலிப்ஸ் அசத்தல் கேட்ச்</h2><p>அப்போது பவுண்டரி எல்லையில் நின்றிருந்த கிளென் பிலிப்ஸ் வேகமாக ஓடிவந்து, பாய்ந்து ஒற்றை கையால் கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த கேட்ச்சை நம்பமுடியாமல் அவர் சிரித்தபடி நின்றார். இதனால் சுனில் நரைன் 1 ரன்னில் வெளியேறினார்.</p><h2>கயானா அணி வெற்றி</h2><p>தொடர்ந்து ஆடிய டிரினிடாட் அணி 16 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>அலெக்ஸ் ஹேல்ஸ் 24 பந்தில் 55 ரன்னும், நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 16 பந்தில் 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>கயானா அணி சார்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். </p><p>சமீப காலமாக கிளென் பிலிப்ஸ் சூப்பர்மேனாக பாய்ந்து பந்தை தடுப்பது, கேட்ச் பிடிப்பது என தொடர்ந்து அசாத்தியமாக பீல்டிங் செய்துவருகிறார். கிளென் பிலிப்சின் அபார கேட்ச் கயானா அணியின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது.</p>]]></content:encoded></item></channel></rss>