<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 18 Aug 2026 05:37:21 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: 4 துறைகள் மீதான மானிய கோரிக்கை தொடங்கியது - 18 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026#comments</comments><guid isPermaLink="false">c27daa42-6f88-4a58-93d9-0737d7f66078</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:37:16.594Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு அதிகாரிகள் பொதுவானவர்கள்.</p><p>நேற்று எங்களுக்கு சல்யூட்... இன்று உங்களுக்கு சல்யூட் - எ.வ.வேலு </p><h2>எ.வ.வேலு உரை</h2><p>இந்த நிதி ஆண்டுக்கான எதிர்கால திட்டமிடல் குறித்து எதுவும் இல்லை.</p><p>வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து கொள்ளை விளக்க குறிப்பில் இல்லை.</p><p>சட்டசபையை கலைநயமிக்கதாக மாற்றியது திமுக தான்.</p><p>4 வழித்தடம், 2 வழித்தடம் சாலைகள் இந்த நிதி ஆண்டில் எவ்வளவு அமைக்கப்பட்டது? - எ.வ.வேலு</p><p>முதலமைச்சருக்கு அதிக திறமை இருக்கிறது என்பதை ஏற்கிறேன் - எ.வ.வேலு</p><p>டெண்டர் விலையை உயர்த்தி முறைகேடு செய்யத் தெரியாது என முதல்வர் கூறுகிறார் - எ.வ.வேலு</p><p>அமைச்சர் போல் திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியல் போடுகிறீர்கள் - சபாநாயகர்</p><p>மானியக்கோரிக்கையை விட்டுவிட்டு காலை உணவு குறித்து பேசுவது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?</p><p>புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்கிறோம்.</p><p>முதலமைச்சர் என்பது பொதுவான சொற்றொடர் - எ.வ.வேலு</p><p>மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம் - எ.வ.வேலு</p><p>கோவை தந்தை பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும் - எ.வ.வேலு கோரிக்கை</p><p>அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை.</p><p>எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது - ஆதவ் அர்ஜூனா</p><p>3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்? - எ.வ.வேலு</p><p>பெரியார் கொள்கை தலைவர் என தவெக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது - எ.வ.வேலு</p><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்து தந்தோம் - எ.வ.வேலு</p><p>மானியக் கோரிக்கை மீது விவாதம் - எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு உரை</p><p>சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லா ஊரே இல்லை - எ.வ.வேலு</p><p>4 துறைகள் மீதான மானிய கோரிக்கை தொடங்கியது.</p><p>மனிதவள மேலாண்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் சரத்குமார்.</p><p>பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தவெக அரசு அனுமதிக்காது - அமைச்சர் ராஜீவ்</p><p>3 கிணறுகளுக்கு திமுக ஆட்சியிலும், ஒரு கிணறுக்கு அதிமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ராஜீவ்</p><p>ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்தால் புதுவை முதல் கன்னியாகுமரி வரை கடல் வளம் பாதிக்கப்படும் -  சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து</p><h2>எம்எல்ஏ தமிமுன் அன்சாரி உரை</h2><p>சுற்றுச்சூழல் பாதிப்பை கூர்ந்தாய்வு செய்து அரசு நடவடிக்கை என அமைச்சர் கூறி உள்ளார்.</p><p>புதிதாக 4 கிணறு தோண்டினால் மீனவர் நலன் என பல பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம்.</p><p>பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்.</p><h2>கடலூர் பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டமா? அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்தார்.</h2><p>பரங்கிப்பேட்டையில் 4 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் திட்டம்.</p><p>மீனவர்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் முதலமைச்சர் விஜய் அரசு அனுமதிக்காது.</p><p>சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.</p><p>பரங்கிப்பேட்டையில் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோஷன் நிறுவன கிணறுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு என கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசின் மேல் நடவடிக்கை என்ன? </p><p>தமிழர்களை சுட்டுக்கொன்றவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு கோரியுள்ளதா?  - திமுக</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - அமைச்சர் ரஞ்சித்</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படுமா? - எடப்பாடி பழனிசாமி</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடக அரசின் விசாரணையை தமிழ்நாடு அரசு கண்காணிக்கிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>சிபிஐ விசாரணை தேவை என்கிறோம் - தவெக அரசின் நிலைப்பாடு என்ன? - பாமக</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - தவெக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - பாமக</p><p>யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? - அமைச்சர் நிர்மல்குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு</p><p>அமைச்சர் நிர்மல்குமார் இனி தேவையற்றதை பேச அனுமதிக்க மாட்டேன் - சபாநாயகர்</p><p>திமுகவை விமர்சித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியவை அவை குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய் - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்</h2><p>சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்குவது குறித்து கர்நாடகா பரிசீலனை.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறை மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்.</p><h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன்</h2><p>துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். </p><p>பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசும் நிதி வழங்க வேண்டும்.</p><p>தமிழர்கள் நலனுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய வேண்டும்.</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது பொய்யான செய்தி - கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ லதா</p><p>தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது.  சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் - தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - அதிமுக, பாமக, காங்கிரஸ், சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்.</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட்</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் ஏதோ இருக்கிறது என கர்நாடக எம்எல்ஏவே கூறுகிறார். கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ கணேஷ் </p><h2>பாமக எம்எல்ஏ கணேஷ் உரை</h2><p>மேட்டூர் கட்டப்பட்டதால் கர்நாடகாவிற்கு புலம்பெயர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை.</p><p>தங்கள் கால்நடைகளை தேடிச்சென்றவர்களை சுட்டுக்கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது ஏற்புடையது அல்ல.</p><p>மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.</p><p>வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும்  - எடப்பாடி பழனிசாமி</p> <h2>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுககொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிக்சை.</p><p>அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் - மனோஜ்பாண்டியன் </p><h2>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள்  - கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மனோஜ்பாண்டியன் உரை</h2><p>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால்  சுட்டுக்கொலை.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>கடலூரில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்ததற்கு எ.வ. வேலு எதிர்ப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/velu-raises-periyar-library-delay-and-cm-breakfast-scheme-naming-issue-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/velu-raises-periyar-library-delay-and-cm-breakfast-scheme-naming-issue-in-assembly#comments</comments><guid isPermaLink="false">4ec75a39-f4fa-427d-8f1c-853a64c3aefa</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:36:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:36:21.989Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly,காமராஜர் காலை உணவுத் திட்டம்,எ.வ. வேலு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ylljt2l7/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எ.வ. வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ எ.வ. வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ylljt2l7/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.  </p><p>இதில் எதிர்க்கட்சி திமுகவை சேர்ந்த கொறடா <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81">எ.வ.வேலு </a>பேசுகையில், </p><p>"சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லா ஊரே இல்லை.</p> <h2>பெரியார்</h2><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்து தந்தோம். பெரியார் கொள்கை தலைவர் என தவெக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. 3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்?</p><p>அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை. எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது. கோவை தந்தை பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும்.</p> <h2>காமராஜர்</h2><p>மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம். காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?.</p><p>புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்கிறோம். ஆனால் முதலமைச்சர் என்ற பொதுவான சொற்றொடரை நீக்கிவிட்டு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன? திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டபோது ஏன் இதற்கு மு.க. ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்கக்கூடாது எனக் கேட்டேன்.</p> <h2>மு.க. ஸ்டாலின்</h2><p>அதற்கு அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலின், முதலமைச்சர் என்று வைத்தால் ஒரு தனிப்பட்ட நபரை குறிக்காமல் அடுத்து வரும் அனைத்து முதல்வர்களையும் குறிக்கும், அந்த பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறியதாக எ.வ. வேலு தெரிவித்தார்.</p> <p>உடனே எழுந்த அவை முன்னவர் செங்கோட்டையன், "மானியக்கோரிக்கையை விட்டுவிட்டு காலை உணவு குறித்து பேசுவது ஏன்?" என கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து மானிய கோரிக்கை பற்றி மட்டுமே பேச வேண்டும் என சபாநாயகர் கண்டித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு  அரசு முடிவு கட்ட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-put-an-end-to-the-continuing-deaths-in-police-custody</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-put-an-end-to-the-continuing-deaths-in-police-custody#comments</comments><guid isPermaLink="false">fec904da-0dd9-4c67-8c4d-f322355cc0cb</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:20:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:20:22.276Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,காவல் நிலைய மரணங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/aynl8f9p/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/aynl8f9p/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனிவரும் காலங்களில் காவல் மரணங்கள் நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த  பரமசிவம்  குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட  மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம் என்பவரை, காவல்நிலையத்தில் வைத்து  கொடூரமாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில்  தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார் என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  பூசாரி பரமசிவம் அவர்களை இழந்து வாடும்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>மனித உரிமை மீறல்கள்</strong> </h2><p>காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த பரமசிவம் எந்த தவறும் செய்யவில்லை. அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம்  19-ஆம் தேதி  அழைத்துச் சென்ற  சிந்தாமணி காவல் நிலைய காவலர்கள், அவரை கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அவதிப்பட்ட பரமசிவம்  மதுரை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும் பயனின்றி  உயிரிழந்திருக்கிறார். காவல்துறையினர் தம்மை கொடூரமாகத் தாக்கியது தான் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதற்கு காரணம் என்று இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட காணொலியில் பரமசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குவதும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.  நாகர்கோவில் கிளைச்சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளியும், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞரும் முறையே சிறைத்துறையினர், காவல்துறையினர்  தாக்கியதில் உயிரிழந்ததால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே  மதுரை கோயில் பூசாரி பரமசிவம் உயிரிழந்தது மனித உரிமை மீறல்கள் குறித்த கவலையை  அதிகரித்துள்ளது.</p><p>ஆட்சிக்கு வந்தால் காவல் மரணங்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் என்று கடந்த தேர்தலின் போது தவெக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 6 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  இனிவரும் காலங்களில் காவல் மரணங்கள் நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த  பரமசிவம்  குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் வெள்ளைக் கொடி தூக்க வேண்டும்.. ஹார்முஸில் ஓமன் தலையிட்டால் தாக்குவோம் - டிரம்ப் </title><link>https://www.maalaimalar.com/news/world/usiran-tensions-trump-warns-unconditional-surrender-and-tougher-sanctions</link><comments>https://www.maalaimalar.com/news/world/usiran-tensions-trump-warns-unconditional-surrender-and-tougher-sanctions#comments</comments><guid isPermaLink="false">d5ac39bb-b122-4fa4-bcab-6f7d2aa04343</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:15:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:15:03.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/oc1903s6/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/oc1903s6/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் Fox News தொலைக்காட்சிக்கு அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>சிறப்பு பேட்டி அளித்துள்ளார். </p><h2>ஈரான் போர்</h2><p>அதில் <a href="https://www.maalaimalar.com/news/world/iran-nuclear-strike-talks-trump-administration-accused-of-risking-global-war-over-iran-attack-plans">ஈரானுடனான போர்</a> குறித்து பேசிய அவர்,</p><p>"ஈரான் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகச் சரணடைய வேண்டும். அவர்கள் சரணடைவதற்கான வெள்ளைக் கொடியை உயர்த்த வேண்டும்.</p><p>இதில் எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. இதற்கென எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.</p><p>எங்களது கடற்படை முற்றுகையால் ஈரான் தினமும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இழந்து வருகிறது.</p><p>இந்த வாரத்தில் அவர்கள் மீது இன்னும் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.</p><p>ஈரானின் ஆட்சியாளர்கள் நல்ல ராஜதந்திரிகள், ஆனால் அவர்களின் பொருளாதாரம் தற்போது முற்றிலும் குலைந்துவிட்டது." என்று தெரிவித்தார்.</p> <h2>ஹார்முஸ்</h2><p>ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு தற்காலிக புதிய போக்குவரத்து பாதையை உருவாக்க ஈரானுடன் ஓமன் ஒப்பந்தம் எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், "ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஒருவேளை ஓமன் குறுக்கே நின்றால், அவர்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்துவோம்." என்றார்.</p><p>முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், அதை அமெரிக்காவின் பகுதியாக அறிவிக்கப்போவதாகவும் டிரம்ப் கூறியதன் பின்னனியில் இவ்வாறு பேசியுள்ளார்.</p><p>Fox News பேட்டியில் தொடர்ந்து பேசிய அவர், ஈரான் அணுஆயுத வல்லரசாக மாறுவதைத் தடுப்பதே எங்களது முதன்மை இலக்கு. இதுவரை நாங்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மிகச் சிறியவை.</p><p>பைடன் ஆட்சியில் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளும் எங்களிடம் தயார் நிலையில் உள்ளன." என தெரிவித்தார்.</p> <h2>காசா</h2><p>காசா - இஸ்ரேல் விவகாரம் குறித்து பேசிய அவர், "ஹமாஸ் அமைப்பினர் தங்களிடமுள்ள ஆயுதங்களைக் கைவிட்டு வருகிறார்கள். </p><p>எனவே, காசா மீது இஸ்ரேல் இனி தொடர்ந்து தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியமில்லை" எனத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>செயற்கை சுவையூட்டிகளுக்கு தடை: ராயல் சேலஞ்ச், மெக்டவல்ஸ் மதுபானங்களின் பார்முலா மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-authority-forces-formula-change-for-royal-challenge-mcdowells-spirits</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-authority-forces-formula-change-for-royal-challenge-mcdowells-spirits#comments</comments><guid isPermaLink="false">74611483-60c4-4af3-a1e7-69648b0a7366</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:08:41 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:08:41.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Royal Challenge,McDowell&apos;s,Antiquity Blue,ராயல் சேலஞ்ச்,மெக்டவல்ஸ்,ஆண்டிகுவிட்டி ப்ளூ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/e3rstyzq/royal-challange.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Royal Challenge   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/e3rstyzq/royal-challange.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுபானங்களின் தயாரிப்பு முறையில் மாற்றம் செய்ய டியாஜியோ ஒப்புக் கொண்டுள்ளது. ராயல் சேலஞ்ச், ஆண்டிகுவிட்டி ப்ளூ மற்றும் மெக்டவல்ஸ் எண் 1 ஆகிய பிரபல மதுபானங்களின் தயாரிப்பு முறைகளை மாற்றப் போவதாக அந்த நிறுவனம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (FSSAI) உறுதி அளித்துள்ளது.</p><p>உணவுப் பாதுகாப்பு அமைப்பின் அதிரடி நடவடிக்கை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac">மதுபானங்களில் </a>செயற்கை சுவையூட்டிகளைச் சேர்ப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாக சில மாநிலங்களில் இந்த பானங்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது தயாரிப்பு முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><h2>தடைக்<strong>கான காரணம்</strong></h2><p>இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் மதுபான தயாரிப்பில் உள்ள சில விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>* விஸ்கி பானத்தில் பிரத்யேக விஸ்கி சுவையையோ அல்லது ரம் பானத்தில் செயற்கையான ரம் சுவையையோ தனியாகச் சேர்ப்பது சர்வதேச உற்பத்தி நடைமுறைகளுக்கு எதிரானது என ஆணையம் தெரிவித்தது.</p><p>* பழைய மரப் பீப்பாய்களில் முறைப்படி சேமித்து வைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, நடுநிலையான தானிய மதுபானத்துடன் செயற்கை சுவையூட்டிகளைச் சேர்த்துத் தயாரிப்பது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயலாகும் என எச்சரிக்கப்பட்டது.</p><p>* ராயல் சேலஞ்ச் மற்றும் ஆண்டிகுவிட்டி ப்ளூ ஆகியவை மத்தியப் பிரதேசத்திலும், மெக்டவல்ஸ் எண் 1 ரம் மகாராஷ்டிராவிலும் உள்ள உற்பத்தி மையங்களில் விதிகளுக்குப் புறம்பாகச் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.</p><h2>டியா<strong>ஜியோ நிறுவனத்தின் புதிய மு</strong>டிவுகள்</h2><p>கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கையை அடுத்து, டியாஜியோ நிறுவனம் இந்தியா முழுவதற்கும் பொருந்தக்கூடிய சில முக்கிய மாற்றங்களைச் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.</p><p>* தனது பிரபல மதுபானங்களில் தனியாகச் சேர்க்கப்பட்டு வந்த விஸ்கி மற்றும் ரம் சுவையூட்டிகளை முற்றிலுமாக நிறுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.</p><p>* அடுத்த 3 மாத கால அவகாசத்திற்குள் அனைத்துப் பிராண்டுகளின் தயாரிப்பு விதிகளையும் மாற்றி அமைக்க டியாஜியோ திட்டமிட்டுள்ளது.</p><p>* புதிய தயாரிப்பு முறை நடைமுறைக்கு வரும் வரை, பாட்டில்களின் முன்பகுதியில் என்ன சுவையூட்டி சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நுகர்வோர் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் லேபிளிங் செய்யப்படும்.</p><h2>விற்பனைத் <strong>தடை விலக்கப்படுமா</strong></h2><p>நிறுவனம் தயாரிப்பு முறையை மாற்றுவதற்கும், பாட்டில்களில் சரியான விவரங்களைக் குறிப்பிடுவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளதால், விதிக்கப்பட்ட தடையை வாபஸ் பெற உணவுப் பாதுகாப்பு ஆணையம் பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு லட்சக்கணக்கான கேஸ்கள் விற்பனையாகும் இந்த முக்கிய பிராண்டுகளின் தயாரிப்பு மாற்றம், நாட்டின் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள மதுபான சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் த.வெ.க. அரசு அனுமதிக்காது- அமைச்சர் ராஜீவ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeev-says-tvk-government-will-not-permit-any-project-that-harms-fisheries-or-the-environment</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeev-says-tvk-government-will-not-permit-any-project-that-harms-fisheries-or-the-environment#comments</comments><guid isPermaLink="false">c5bc84b0-446f-4a1f-8da8-19937d314e20</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:04:42 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:04:42.253Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6r806m9g/rajeev.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜீவ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜீவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6r806m9g/rajeev.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இன்றி த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று  கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். இதைதொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். </p><p>அதனை தொடர்ந்து, கடலூரில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேச்சைத் தொடர்ந்து அமைச்சர் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>மஜக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி</strong></h2><p>சுற்றுச்சூழல் பாதிப்பை கூர்ந்தாய்வு செய்து அரசு நடவடிக்கை என அமைச்சர் கூறியுள்ளார். புதிதாக 4 கிணறு தோண்டினால் மீனவர் நலன் என பல பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். </p><h2><strong>சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து</strong> </h2><p>ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்தால் புதுவை முதல் கன்னியாகுமரி வரை கடல் வளம் பாதிக்கப்படும் என்றார். </p><h2><strong>அமைச்சர் ராஜீவ்</strong></h2><p>3 கிணறுகளுக்கு திமுக ஆட்சியிலும், ஒரு கிணறுக்கு அதிமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ல் HOEC நிறுவனம் மேலும் கிணறு அமைக்கும் விண்ணப்பத்தை கடலோர மண்டல மேலாண்மை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மீன்வளம் சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் த.வெ.க. அரசு அனுமதிக்காது. சுற்றுச்சூழலுக்கு எதிரான, மீனவர்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் இந்த அரசு அனுமதிக்காது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இன்றி த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். </p><h2><strong>தமிமுன் அன்சாரி</strong> </h2><p>சுற்றுச்சூழுல் விழிப்புணர்வு ஏற்படும் முந்தைய காலத்தில் முந்தைய ஆட்சியாளர்கள் அனுமதி வழங்கியிருக்கலாம்.  மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கிணறு அமைக்க அனுமதி தரவில்லை. எந்த அரசு செய்தது என்ற வாதத்திற்கு செல்லாமல், மண் வளத்தை காக்கும் வகையில் தான் பேரவையில் இதுகுறித்து பேசுகிறோம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் கொலையில் சிபிஐ விசாரணை வேண்டும் - சட்டசபையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-demands-justice-parties-seek-higher-compensation-and-cbi-probe-into-killing-of-3-tamils-in-karnataka-forest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-demands-justice-parties-seek-higher-compensation-and-cbi-probe-into-killing-of-3-tamils-in-karnataka-forest#comments</comments><guid isPermaLink="false">d5b47a8d-4fd1-4052-b9fa-b8282c097b4b</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:41:00.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழர்கள் சுட்டுக்கொலை,Karnataka Forest Department,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7tw3jsfb/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7tw3jsfb/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">கர்நாடகாவில் </a>சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் சட்டசபையில் கொண்டு வந்தார். </p><h2></h2><h2>காங்கிரஸ்</h2><p>இதன் மீதான விவாதத்தில் பேசிய குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமரை தீட்சித்,</p><p>"கர்நாடகா சாம்ராஜ் மாவட்ட வனப்பகுதியில் தமிழர்களை சுட்டுத் தள்ளியுள்ளார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.</p><p>மனித உயிருக்கு இன்று விலை இல்லாமல் போய்விட்டது என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். எப்பொழுதும் எந்த பிரச்சனை என்றாலும் தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்ட சூழ்நிலை உள்ளது.</p><p>இதை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-condemns-killing-of-three-tamils-in-karnataka">முதலமைச்சர் கண்டித்துள்ளார்</a>. கர்நாடக அரசு கொடுத்துள்ள இழப்பீடு நியாயமானது அல்ல. </p><p>எனவே இதற்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதோடு இதற்கு தகுந்த சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.</p> <p>அதைப்போல இன்றைக்கு மகிமி தாஸ் என்பவர் அங்கே உயிருக்கு போராடிக்கொண்டிருக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. </p><p>அதற்கும் கர்நாடக அரசு அவருவடைய சிகிச்சைக்கான செலவுகளை முழுமையாக ஏற்க வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் நிலைப்பாடு.</p><p>இறந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கில் ஆணித்தனமான சிபிஐ விசாரணை வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூற விழைகிறேன். "என்றார்.</p><h2>கம்யூனிஸ்ட்</h2><p>தொடர்ந்து தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பேசுகையில், "தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது. </p><p>சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசுக்கு தமிழக அரசும் நம் முதலமைச்சரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றார்.</p> <p>கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ லதா பேசுகையில், " மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது பொய்யான செய்தி. </p><p>துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.</p><p>பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசும் நிதி வழங்க வேண்டும். </p><p>இந்த விஷயத்தில் தமிழர்கள் நலனுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய வேண்டும்." என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: அமைச்சரின் விளக்கமும்... தி.மு.க. எதிர்ப்பும்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-explain-three-tamils-shot-dead-in-karnataka-incident</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-explain-three-tamils-shot-dead-in-karnataka-incident#comments</comments><guid isPermaLink="false">22c0f8f5-0642-4d42-b9df-b3330da4d3e9</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:38:41 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:38:41.160Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தமிழர்கள் சுட்டுக்கொலை,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ii6i0mp6/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ii6i0mp6/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று  கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். இதைதொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 3 பேர் வனத்துறையால் சுட்டுக்கொலை, ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். </p><p>* ஆக.12-ல் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்தது. </p><p>* உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. </p><p>* இடைக்கால நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கிய கர்நாடக அரசு விசாரணைக்கு பின் கூடுதல் நிவாரணம் தருவதாக கூறியுள்ளது. </p><p>* கர்நாடக வனத்துறை நடத்தியது படுகொலை என குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்தார். </p><p>* 3 தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல, விசாரணை தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார். </p><p>*ஒரு சிலருக்கு திடீரென தமிழ் பாசம் தமிழர் பாசம் இருக்கும் என்றார். </p><p>அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், யாருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக அமைச்சர் இதுபோன்று பேசுகிறார் எனத் தெரியவில்லை. கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான அமைச்சரின் பதில் மட்டுமே அவைக்குறிப்பில் இருக்கும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>விரைவில் வெளியீடு - ஒரே நாளில் ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் அறிமுகம் செய்யும் ஐகூ</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/iqoo-buds-are-launching-in-india-on-this-date</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/iqoo-buds-are-launching-in-india-on-this-date#comments</comments><guid isPermaLink="false">96ead538-031f-4091-9d14-aa5449536073</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>iQOO,Earbuds,ஐகூ,இயர்பட்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/700yc9ao/iQOO-TWS.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iQOO TWS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/700yc9ao/iQOO-TWS.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/vivo">விவோ</a> நிறுவனத்தின் துணை பிராண்டான ஐகூ (iQOO) விரைவில் இந்தியாவில் புதிய ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இவை ஐகூ பட்ஸ் என்று அழைக்கப்படும், மேலும் தற்போது இந்தியாவிற்கான இதன் வெளியீட்டுத் தேதியை அந்த பிராண்ட் உறுதி செய்துள்ளது. </p><p>புதிய <a href="https://www.maalaimalar.com/topic/earbuds">இயர்பட்ஸ்</a> மாடலுடன் ஐகூ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ Z11 5ஜி என அழைக்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மற்றும் இயர்போன் என இரண்டு சாதனங்களும் ஒரே நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.</p><h2>வெளியீட்டு தேதி:</h2><p>புதிய ஐகூ பட்ஸ், 2026 ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இத்துடன் ஐகூ Z11 5ஜி உடன் சேர்ந்து நடைபெறும். ஐகூ Z11 வடிவமைப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. </p><p>இது சந்தையில் உள்ள மற்ற இயர்போன்களை போல தோற்றமளிக்கிறது. ஐகூ பட்ஸ், அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டீசரில், இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் இருப்பதை காணலாம்.</p><p>ஐகூ பட்ஸ், காதுக்குள் பொருந்தும் வடிவமைப்பை கொண்டிருக்கும், மேலும் அதன் சார்ஜிங் கேஸின் அடிப்பகுதியில் ஒரு எல்.இ.டி. இண்டிகேட்டர் உள்ளது. புதிய ஐகூ Z11 ஸ்மார்ட்போன் தற்போது இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.</p><h2>அம்சங்கள்:</h2><p>புதிய ஐகூ Z11 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7500 SoC வழங்கப்படுகிறது. மேலும் இதில் AI சார்ந்த பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 1.5K ரெசல்யூஷனுடன் 6.8-இன்ச் கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000nits பிரைட்னஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 7050mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 40,000-க்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது அரோரா கிரீன் மற்றும் செலஸ்டியல் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேச்சு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamils-shot-dead-in-karnataka-mlas-speak-during-special-calling-attention-motion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamils-shot-dead-in-karnataka-mlas-speak-during-special-calling-attention-motion#comments</comments><guid isPermaLink="false">b639043d-19a7-40aa-b12d-be5475fb64ec</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:21:16 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:21:16.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தமிழர்கள் சுட்டுக்கொலை,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ooatftz3/assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மனோஜ் பாண்டியன்- எடப்பாடி பழனிசாமி-கணேஷ் குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ மனோஜ் பாண்டியன்- எடப்பாடி பழனிசாமி-கணேஷ் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ooatftz3/assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் போலி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதானம் நடைபெறுகிறது.  </p><p>முதலில், கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் முதலில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் போலி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலையும் நிவாரணமும் வழங்க வேண்டும் என்றார். </p><h2><strong>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி</strong></h2><p>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுக்கொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை. 2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்களக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும். </p><h2><strong>பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார்</strong></h2><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தற்காப்புக்காக கொலை, இதில் உரிமை மீறல் எதுவுமில்லை என கர்நாடக வனத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழர்களுக்கான நியாயம், நிவாரணம், நீதி கிடைக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காசாவில் தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் - இஸ்ரேல் அமைச்சர் பென் க்விர்  </title><link>https://www.maalaimalar.com/news/world/israeli-minister-calls-for-daily-killings-ben-gvir-urges-expulsion-and-systematic-killing-of-palestinians-in-gaza</link><comments>https://www.maalaimalar.com/news/world/israeli-minister-calls-for-daily-killings-ben-gvir-urges-expulsion-and-systematic-killing-of-palestinians-in-gaza#comments</comments><guid isPermaLink="false">1b2a3faa-7a6c-4281-8bc0-2f70a0e0f2ce</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:16:47 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:16:47.554Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>palestine,காசா,இஸ்ரேல்,gaza,Israel,இனப்படுகொலை,Genocide,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/994kv0ub/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பென் க்விர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பென் க்விர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/994kv0ub/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-envoy-meets-netanyahu-over-gaza-plan-day-after-talks-with-hamas">காசாவில் </a>தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D">இஸ்ரேல் </a>தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் இலக்கு நிர்ணயித்துள்ளார். </p><p>தினமும் இரவில் 30 முதல் 40 பாலஸ்தீனர்களை கொல்ல வேண்டும் என்றும், அச்சுறுத்தலாக இல்லாத நபர்களையும் இலக்கு வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>2023 அக்டோபர் 7 அன்று நோவா இசை நிகழ்வில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ரோம் பிராஸ்லாவ்ஸ்கி என்பவருடனான பாட்காஸ்ட் உரையாடலில் பென் க்விர் இக்கருத்தை தெரிவித்துள்ளார். </p> <h2>தினமும் இரவு கொலை செய்ய வேண்டும்</h2><p>அவர் பேசியதாவது, "எனக்கும் பிரதமருக்கும் கருத்து வேறுபாடு இருப்பது இரகசியமல்ல. </p><p>காசாவில் தினமும் இரவில் 30 முதல் 40 பேரைக் கொல்வதற்கு இலக்கு நிர்ணயித்து நாம் தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.</p><p>அந்த நேரத்தில் நமக்கு உடனடி ஆபத்தாக இருப்பவர்களை மட்டும் இலக்கு வைக்கக் கூடாது. அங்கு வாழத் தகுதியற்ற பலர் இருக்கிறார்கள். அவர்கள் வாழவேக் கூடாது. அவர்கள் மனிதர்களே அல்ல.</p><p>அதைச் செய்ய நான் உலகத்தையே தலைகீழாக மாற்றுவேன். அது நடக்கும் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன்.</p> <h2>காசா நமக்கே சொந்தம்</h2><p>முழு காசாவையும் நான் நமக்கே சொந்தமானதாகப் பார்க்கிறேன். காசா முழுவதிலும் யூதக் குடியேற்றங்களை அமைக்க வேண்டும்.</p><p>முடிந்தவரை பாலஸ்தீனர்களை இங்கிருந்து வெளியேற்றி அவர்களின் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும். </p><p>தீவிரவாதிகளுக்கு வெளியேற்றமெல்லாம் இல்லை, அவர்களை ஒவ்வொன்றாகக் கொன்றழிக்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p>மேலும் பயணக்கைதியாக பிடித்துச்செல்லப்பட்டதற்கு பழிதீர்க்க, ரோம் பிராஸ்லாவ்ஸ்கியே நேரடியாக இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதி அளிப்பதாகவும் பென் க்விர் வாக்குறுதி அளித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>என்னை நிம்மதியாக சாக விடுங்கள்.. த்விஷா சர்மா தற்கொலைக்கு கணவர் - மாமியாரே காரணம் - சிபிஐ குற்றப்பத்திரிகை  </title><link>https://www.maalaimalar.com/news/national/twisha-sharma-suicide-case-husband-and-mother-in-laws-harassment-drove-model-actress-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/twisha-sharma-suicide-case-husband-and-mother-in-laws-harassment-drove-model-actress-to-death#comments</comments><guid isPermaLink="false">91194dc3-72ba-4885-b493-b89515d507bf</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:55:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:55:06.743Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வரதட்சணை கொடுமை,மாமியார்,Dowry harassment,mother-in-law,த்விஷா சர்மா,tiwsha sharma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/39henela/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ த்விஷா சர்மா, கணவர் - மாமியார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ த்விஷா சர்மா, கணவர் - மாமியார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/39henela/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/twisha-sharma">த்விஷா ஷர்மா </a>மாடல் அழகியாகவும் நடிகையாகவும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.</p><p>கடந்த மே 13 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் கட்டாரா மலைப்பகுதியில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் த்விஷா ஷர்மாவின் உடல் மீட்கப்பட்டது.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>தனது மகளை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">வரதட்சணை </a>தொடர்பாக துன்புறுத்தி கொன்றுவிட்டதாகவும், அவர் வசித்து வந்த வீட்டின் கேமரா காட்சிகளில் முரண்பாடு உள்ளதாகவும் பெண்ணின் தந்தை நவ்நீதி ஷர்மா குற்றம்சாட்டியிருந்தார்.</p><p>இதையடுத்து தலைமறைவான பெண்ணின் கணவர் சமர்த் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான சமர்த்தின் தாயார் கிரிபலா சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p> <h2>சிபிஐ குற்றப்பத்திரிகை</h2><p>இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ போபால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p><p>அதில், கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் அளித்த தொடர் மன உளைச்சல் மற்றும் கொடுமைகள் காரணமாக த்விஷா சர்மா தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லாமல் போயுள்ளது என்று சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது</p><p>த்விஷா சர்மா பெற்ற மனநல ஆலோசனை குறித்த ஆவணங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவை இதற்கு முக்கிய ஆதாரங்களாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.</p> <h2>மன உளைச்சல்</h2><p>குற்றப்பத்திரிக்கையின்படி, திருமணத்திற்குப் பிறகு த்விஷா சர்மா தொடர்ந்து மன ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கணவர் சமர்த் சிங் அவரைப் பலமுறை அவமானப்படுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.</p><p>மகனின் இந்த தவறான நடவடிக்கைகளுக்கு தாய் கிரிபாலா சிங் முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தியுள்ளார். கணவர் மீது த்விஷா புகார் கூறும்போதெல்லாம் , கிரிபாலா தன் மகனுக்கு ஆதரவாக நின்று அவரைப் பாதுகாத்துள்ளார்.</p><p>த்விஷாவிற்கு நீண்டகாலம் மன உளைச்சலை ஏற்படுத்துவதே இருவரின் முதன்மை நோக்கமாகவும் திட்டமாகவும் இருந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>கர்ப்பம்</h2><p>2026 ஏப்ரல் மாதத்தில் த்விஷா கர்ப்பமானார். ஆனால், குடும்பத்தில் நிலவிய தொடர் கசப்பான சூழல், திருமண வாழ்க்கையின் மீது ஏற்பட்ட விரக்தி மற்றும் விரிசல் காரணமாக, கர்ப்பத்தை தொடர்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவர் இருந்துள்ளார்</p><p>இறுதியாக தனது கர்ப்பத்தைக் கலைக்க த்விஷா முடிவெடுத்தார். இந்த முடிவால் த்விஷா, அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோருக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்தது. தொடர் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.</p> <h2>நிம்மதியாக சாக விடுங்கள்</h2><p>மே 12, இரவு 9:36 மணியளவில் த்விஷா தற்கொலை செய்துகொள்வதற்குச் சற்று முன்பு தனது நாத்தனார் ராஷி அப்ரோலுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் குறுஞ்செய்தியில், "உன் அண்ணனிடம் (சமர்த்) அவரது மனைவியின் எஞ்சிய உடலை வந்து எடுத்துக்கொள்ளச் சொல். </p><p>ஆனால் நாளைக்கு வந்து எடுக்கச் சொல். இப்போது என்னை நிம்மதியாக சாக விடுங்கள்" என்று மெசேஜ் செய்திருக்கிறார்.</p> <p>இந்த வாட்ஸ்அப் குறுஞ்செய்திதான், த்விஷா தீவிர மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கான மிக முக்கிய ஆதாரமாக சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வழக்கின் விசாரணை இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. த்விஷாவின் ஐபோன், சிசிடிவி மற்றும் குரல் மாதிரிகளின் தடயவியல் பரிசோதனை முடிவுகளுக்காக சிபிஐ காத்திருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>குற்ற வழக்குகளை சந்திக்கும் 14 முதலமைச்சர்கள், 326 எம்.பி.க்கள் - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/14-cm-and-326-mps-facing-criminal-cases-information-revealed-in-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/14-cm-and-326-mps-facing-criminal-cases-information-revealed-in-supreme-court#comments</comments><guid isPermaLink="false">b1442748-58f1-452b-8c67-a5b34878e24e</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:46:20 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:46:20.698Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்,CM,எம்பிக்கள்,MPs,criminal cases,குற்ற வழக்குகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7jjepzho/supremecourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7jjepzho/supremecourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாட்டில் 14 முதல்-மந்திரிகள், 326 எம்.பி.க்கள் ஆகியோர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.</strong></em></p> <h2>சுப்ரீம் கோர்ட்</h2><p>எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி வக்கீல் அஸ்வினி உபாத்யாயா <a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-to-release-cauvery-water-state-assures-12000-cusecs-per-day-to-tamil-nadu-in-supreme-court">சுப்ரீம் கோர்ட்டில்</a> ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.</p><p>அந்த வழக்கில், கோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த வக்கீல் விஜய் ஹன்சாரியா நியமிக்கப்பட்டார். அவர் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.</p> <p>அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p><h2>ரேவந்த் ரெட்டி</h2><p>நாட்டில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில், 14 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு எதிராக அதிகபட்சமாக 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p> <h2>குற்றவியல் வழக்குகள்</h2><p>மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது 19 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.</p><p>முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 4 ஆயிரத்து 192 குற்றவியல் வழக்குகள் இருக்கின்றன. மொத்தம் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களில், 251 பேர் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர். அவற்றில் 170 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்கவை ஆகும்.</p> <p>மொத்தம் உள்ள 233 மாநிலங்களவை எம்.பி.க்களில் 75 பேர் (33 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவற்றில் 40 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்கவை ஆகும்.</p><h2>கேரளம், தமிழ்நாடு</h2><p>மாநிலவாரியாக பார்த்தால், கேரளாவின் மொத்த எம்.பி.க்கள் 20 பேரில் 19 பேர் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர். அவர்களில் 11 பேர் மீது கடுமையான வழக்குகள் உள்ளன.</p> <h2>உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா</h2><p>17 தெலுங்கானா எம்.பி.க்களில் 14 பேர் மீதும், 21 ஒடிசா எம்.பி.க்களில் 16 பேர் மீதும், 14 ஜார்கண்ட் எம்.பி.க்களில் 10 பேர் மீதும், 39 தமிழக எம்.பி.க்களில் 26 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன. </p><p>உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகா, ஆந்திரா ஆகிய பெரிய மாநிலங்களின் சுமார் 50 சதவீத எம்.பி.க்கள் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.</p><p>கடந்த ஆண்டு, 1.243 குற்றவியல் வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. அதே ஆண்டில் 1,050 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p>  <p>எம்.பி.. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க அவற்றை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சுப்ரீம் கோர்ட்டு</a> கண்காணிக்க வேண்டும். அந்த வழக்குகளின் விசாரணையை முடித்த பிறகுதான் மற்ற வழக்குகளை தனிக்கோர்ட்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.</p> <p>எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் முடிந்த பிறகுதான் மற்ற வழக்குகளை தனிக்கோர்ட்டுக்கு மாவட்ட நீதிபதிகள் ஒதுக்க வேண்டும். அந்த வழக்குகளின் முன்னேற்றத்தை ஐகோர்ட்டுகள் மாதந்தோ றும் கண்காணிக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் விசாரணை முடிவடைய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் மீண்டும் ஜியோ பிரைம் திட்டத்தை கொண்டுவந்த ரிலையன்ஸ் ஜியோ</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-prime-membership-relaunched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-prime-membership-relaunched-in-india#comments</comments><guid isPermaLink="false">d2cf26af-caee-4e91-a0d5-0db747093ce9</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jio,Jio Prime,ஜியோ பிரைம்,ஜியோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/kiysr9ja/Jio-Logo-.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jio Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/kiysr9ja/Jio-Logo-.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jio">ஜியோ</a> பிரைம் திட்டம் இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் அறிவித்தது. இந்த திட்டம், ஜியோ சந்தாதாரர்களுக்கு விலை உறுதித்தன்மையை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் தொலைத்தொடர்பு திட்டங்களின் விலையை ஓராண்டுக்கு நிர்ணயித்துக்கொள்ள முடியும். </p><p>எனவே, ஜியோ தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தினால், பயனர்கள் தங்களின் தற்போதைய திட்டத்தை பழைய விலையிலேயே வாங்க முடியும். விலை நிர்ணயத்தைத் தவிர, ஜியோ பிரைம் சந்தா மற்ற பலன்களையும் வழங்குகிறது. </p><p>பிரைம் சந்தாதார்களுக்கு முன்னுரிமை ஆதரவையும், புதிய ஜியோ தயாரிப்புகளை முன்கூட்டியே அணுகும் வாய்ப்பையும் நிறுவனம் உறுதியளிக்கிறது. பிரைம் உறுப்பினர்கள் கூடுதல் கேஷ்பேக் சலுகைகளையும் பெற முடியும்.</p><h2>ஜியோ பிரைம் நன்மைகள்:</h2><p>வாடிக்கையாளர்கள் ரூ. 300 ஒருமுறை செலுத்தி ஜியோ பிரைம் சந்தாவை பெறலாம். தற்போதுள்ள அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இந்த பிரைம் சந்தா கிடைக்கிறது.</p><p>தற்போது வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரின் வாடிக்கையாளர்களாக இருக்கும் பயனர்கள், ஜியோ பிரைம் உறுப்பினராக ஆவதற்கு ஜியோவிற்கு மாறலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நன்மைகளில், ஜியோ பிரைம் விலை உறுதித்தன்மை, கேஷ்பேக் மற்றும் பிற பிரத்யேக பலன்களை வழங்குகிறது.</p><p>ஜியோ பிரைம் திட்டம், வாடிக்கையாளரின் தற்போதைய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை, செப்டம்பர் 5, 2027 வரை, ஒரு வருடத்திற்கு நிலையாக வைத்திருக்கும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.</p><h2>கேஷ்பேக் வவுச்சர்:</h2><p>எதிர்கால விலை உயர்வுகள் மற்றும் பிற மாற்றங்களை பொருட்படுத்தாமல், சந்தாதாரர்கள் தாங்கள் முன்பு செலுத்திய அதே விலையில் போஸ்ட்பெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யவும் பணம் செலுத்தவும் முடியும்.</p><p>இது தவிர, பிரைம் சந்தா ரூ. 300 மதிப்புள்ள கேஷ்பேக் வவுச்சரை வழங்கும், இதை ஒரு புதிய ஜியோஹோம் அல்லது ஜியோபிசி இணைப்புக்கு பணம் செலுத்தும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.</p><p>மேலும், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்காக ஒரு புதிய ஜியோ சிம் இணைப்பை சேர்ப்பதன் மூலம், ஜியோ பிரைம் சந்தா ரூ. 300 மதிப்புள்ள மற்றொரு கேஷ்பேக் வவுச்சரை வழங்கும்.</p><p>ஜியோ நிறுவனம், பிரைம் சந்தாதாரர்களுக்கு புதிய ஜியோ தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சோதனைகளுக்கான முன்கூட்டிய அணுகலையும் வழங்கும், இதன் மூலம் அவர்கள் மற்றவர்களுக்கு முன்பாக அவற்றை சோதித்து பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>முகமது அலி ஜின்னா பற்றிய ரகசியத்தை பாதுகாத்த மும்பை மருத்துவர்கள் 2 பேருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-honours-mumbai-doctors-top-civilian-award-for-keeping-jinnahs-illness-secret</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-honours-mumbai-doctors-top-civilian-award-for-keeping-jinnahs-illness-secret#comments</comments><guid isPermaLink="false">7f213d90-96ec-40ab-914e-192b785d6593</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:08:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:08:00.842Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,பிரிவினை,முகமது அலி ஜின்னா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/w7ivp7uv/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜின்னா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜின்னா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/w7ivp7uv/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.google.com/search?sca_esv=89ea68fd8af44367&amp;sxsrf=APpeQnsecMLmVPzfx0fYR--h23pyUgnhQg:1787019745961&amp;q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+maalaimalar&amp;spell=1&amp;sa=X&amp;ved=2ahUKEwiPk6ipj6mWAxW6muEIHT-gO-cQBSgAegQIEBAB&amp;biw=1422&amp;bih=659&amp;dpr=1.35">1947 பிரிவினைக்கு</a> முன்னர் முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவுக்கு இருந்த நோயை வைத்திருந்ததற்காக மும்பையை சேர்ந்த இரு மருத்துவர்களுக்குப் பாகிஸ்தானின் உயரிய குடிமகன் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>நாட்டுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/independence-day">சுதந்திரம் </a>கிடைத்ததோடு பிரிவினையும் ஏற்பட்டு இந்தியா - பாகிஸ்தான் என பிரிந்தது. பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு மூல கர்த்தா முகமது அலி ஜின்னா ஆவார். அவரே பாகிஸ்தானின் நிறுவனராக அறியப்படுகிறார். </p> <h2>ரகசியம்</h2><p>1946இல் ஜின்னாவின் எக்ஸ்ரேயைப் பரிசோதித்து அவருக்கு நுரையீரல் காசநோய் முற்றிய நிலையில் இருப்பதாகவும், அவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருக்கக்கூடும் என்றும் இரு மருத்துவர்கள் கணித்திருந்தனர்.</p><p>மும்பையை சேர்ந்த மருத்துவர் ஜல் ரத்தன்ஜி படேல் மற்றும் எக்ஸ்ரே நிபுணர் டாக்டர் ஜல் தைபோ ஆகியோரே அவ்விருவர் ஆவர்.</p><p>இந்த இரு மருத்துவர்களும் ஜின்னாவின் மருத்துவ அறிக்கையை ரகசியமாக வைத்திருந்தனர்.</p> <h2>முக்கியத்துவம்</h2><p>லேரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேபியர் எழுதிய Freedom at Midnight புத்தகத்தில், "ஜின்னாவின் நோய் குறித்த தகவல் லார்ட் மவுண்ட்பேட்டன், ஜவஹர்லால் நேரு அல்லது மகாத்மா காந்தி ஆகியோருக்கு தெரிந்திருந்தால், விடுதலை மற்றும் பிரிவினைக்கான அரசியல் கணக்கீடுகளே மாறியிருக்கக்கூடும்" எனகுறிப்பிடப்பட்டுள்ளது.</p> <h2>விருது</h2><p>இந்நிலையில் மறைந்த இந்த மருத்துவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டின் உயரிய விருதான நிஷான் இ இம்தியாஸ் விருது வழங்கப்படும் எனப் பாகிஸ்தான் அமைச்சரும், நாட்டின் விருதுகள் குழுவின் தலைவருமான அஹ்சன் இக்பால் தெரிவித்துள்ளார்.</p> <h2>ஜின்னாவின் நோய்</h2><p>1930களில் இருந்தே ஜிண்ணா காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் இந்த நோய்யை குணப்படுத்த ஆன்டிபயாடிக் எதுவுமில்லை.</p><p>தனது அரசியல் வாழ்வின் இறுதிப் பகுதியில் கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.</p><p>பாகிஸ்தான் பிறந்த ஓராண்டிற்குப் பிறகு, 1948 செப்டம்பர் 11 அன்று நுரையீரல் காசநோய் காரணமாக அவர் காலமானார்.</p>]]></content:encoded></item><item><title>பணிக்கு தாமதமாக வந்ததை போட்டுக்கொடுத்த AI மேனேஜர்... ஊழியர் பணிநீக்கம் - வரலாற்றில் முதல்முறை!</title><link>https://www.maalaimalar.com/news/world/for-the-first-time-ai-boss-fires-human-employee-at-us-store-after-17-late-arrivals</link><comments>https://www.maalaimalar.com/news/world/for-the-first-time-ai-boss-fires-human-employee-at-us-store-after-17-late-arrivals#comments</comments><guid isPermaLink="false">3d37590f-5501-4812-9139-b03689d119c1</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:05:49 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:05:49.451Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>AI,பணிநீக்கம்,ஏஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/javv7bup/luna-aii.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/javv7bup/luna-aii.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மனித ஊழியர் ஒருவரை செயற்கை நுண்ணறிவு மேலாளர் மதிப்பிட்டுப் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்தது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை எனக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</strong></em></p><p>அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ‘ஆண்டன் மார்க்கெட்’ என்ற சில்லறை விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் நிர்வாகத்தை கவனிக்க ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாட்' தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட ஏ.ஐ. மேலாளரை உருவாக்கி உள்ளனர். அதற்கு ‘லூனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.</p><p>இந்த ஏ.ஐ. மேலாளருக்கு வரவு-செலவு கணக்கு பார்ப்பது, இணைய வசதியை அணுகுவது மற்றும் நிர்வாகம் செய்யவும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><h2><strong>பணி நீக்கம்</strong></h2><p>இந்த கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் 17 முறை பணிக்கு தாமதமாக வந்துள்ளார். மேலும், பணிநேரத்தில் வெளியே சென்றது உள்ளிட்ட விதிமீறல்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இந்தச் செயல்களைக் கவனித்த ஏ.ஐ. மேலாளர் லூனா, அந்த ஊழியரைப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">பணி நீக்கம்</a> செய்ய பரிந்துரை செய்தது.</p><p>அந்த பரிந்துரையை, ஆண்டன் லேப்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து, ஊழியரை பணிநீக்கம் செய்தனர். மனித ஊழியர் ஒருவரை <a href="https://www.maalaimalar.com/technology/techfacts/ai-job-loss-warning-anthropic-ceo-says-ai-will-permanently-displace-white-collar-work">செயற்கை நுண்ணறிவு</a> மேலாளர் மதிப்பிட்டுப் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்தது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை எனக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 18-8-2026 முதல் 24-8-2026 வரை</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-18-8-2026-to-24-8-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-18-8-2026-to-24-8-2026#comments</comments><guid isPermaLink="false">4f84b333-1515-40f4-b12f-2dd069d62526</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:55:13 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:55:13.738Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/837e0yq3/chokkanathar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pittukku man sumantha leelai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/837e0yq3/chokkanathar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>18-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* சஷ்டி விரதம்.</p><p>* விருதுநகர் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.</p><p>* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.</p><p>* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.</p> <h2>19-ந் தேதி (புதன்)</h2><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளுதல்.</p><p>* குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு.</p><p>* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>20-ந் தேதி (வியாழன்)</h2><p>* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.</p><p>சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.</p><p>* திருப்பதி திருவேங்கட முடையானுக்கு புஷ்பாங்கி சேவை.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>21-ந் தேதி (வெள்ளி)</h2><p>* வரலட்சுமி விரதம்.</p><p>* நெல்லை கெட்வெல் கனக மகாலட்சுமி வளையல் உற்சவம்.</p><p>* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>22-ந் தேதி (சனி)</h2><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு பட்டாபிஷேகம். </p><p>* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருமோகூர் காளமேகப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.</p><p>* திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>23-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* முகூர்த்த நாள்.</p><p>* சுமார்த்த ஏகாதசி.</p><p>* திருப்பரங்குன்றம் ஆண்டவரும், திருவாதவூர் மாணிக்க வாசகரும் மதுரை எழுந்தருளல்.</p><p>* நெல்லை குறுக்குத் துறை சுப்பிரமணியர் அதிகாலை உருகுசட்ட சேவை.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>24-ந் தேதி (திங்கள்)</h2><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்தருளிய லீலை.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> ]]></content:encoded></item><item><title>&quot;ப. சிதம்பரம் உண்மையான நக்ஸலைட்..&quot; விசாரணை நடத்த அசாம் முதல்வர் வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/national/naxalism-political-row-chidambaram-and-himanta-trade-barbs-over-modis-dimagi-naxal-remark</link><comments>https://www.maalaimalar.com/news/national/naxalism-political-row-chidambaram-and-himanta-trade-barbs-over-modis-dimagi-naxal-remark#comments</comments><guid isPermaLink="false">eef3e399-8cf9-4d4b-b68a-0b7afc7732f8</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:42:53 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:42:53.213Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Naxalite,ஹிமாந்தா பிஸ்வா சர்மா,Himanta Biswa Sarma,p. chidambaram,ப. சிதம்பரம்,நக்ஸலைட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2cvn9rd4/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ப. சிதம்பரம், ஹிமாந்தா பிஸ்வா]]></media:title><media:description type="html"><![CDATA[ ப. சிதம்பரம், ஹிமாந்தா பிஸ்வா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2cvn9rd4/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>80வது சுதந்திர தினமான கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் உரையாற்றுகையில் நாட்டில் ஆயுதமேந்திய நக்ஸலைட்டுகளை ஒழித்துவிட்டோம் ஆனால் <a href="https://www.maalaimalar.com/news/national/dimaki-naxal-row-modis-independence-day-speech-sparks-opposition-backlash">திமாகி நக்சல்கள் </a>(அறிவுஜீவி நக்சல்கள்) இன்னும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார். </p> <h2>திமாகி நக்சல்</h2><p>இது கேள்வி கேட்டும் எதிர்கட்சிகளை நோக்கி பிரதமர் பயன்படுத்திய வார்த்தையாக பார்க்கப்பட்டது. இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/national/proud-to-be-dimagi-naxal-congs-p-chidambaram-hits-back-at-pm">ப. சிதம்பரம் </a>தான் ஒரு திமாகி நக்சலாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.</p><p>மறுபுறம் திமாகி நக்சல் என பிரதமர் குறிப்பிட்டது எதிர்கட்சிகளை அல்ல, நாட்டை பிரிக்க நினைக்கும் பிரிவினைவாதிகளை என்று விளக்கம் அளித்தார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ.</p><p>இந்த சூழலில் ப. சிதம்பரம் கருத்துக்கு பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா எதிர்வினை ஆற்றியுள்ளார்.</p> <h2>ஹிமாந்தா பிஸ்வா</h2><p>நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சர்மா, ப. சிதம்பரம் வெறும் 'திமாகி நக்சல்' அல்ல, அவர் ஒரு ‘பியூர் நக்சல்’ (உண்மையான நக்சல்)</p><p>ப. சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நாட்டில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் தொடர்ந்தபோதிலும், அவர் வேண்டுமென்றே நக்சலிசத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தாரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><p>சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான், சத்தீஸ்கரில் மூத்த காங்கிரஸ் தலைவர் வி.சி. சுக்லா உட்படப் பல காங்கிரஸ் தலைவர்கள் நக்சல் தாக்குதலில் உயிரிழந்தனர்.</p> <p>இவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்பட்ட பிறகும், நக்சலிசத்தை அழிக்கக் காங்கிரஸ் அரசு எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.</p><p>நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தி, அதைப் பயன்படுத்தி 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது.</p><p>பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான ஆட்சியில், ஆயுதமேந்திய நக்சலிசம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிடும் டிரம்ப்?.. லீக் ஆன தகவல்  </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-nuclear-strike-talks-trump-administration-accused-of-risking-global-war-over-iran-attack-plans</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-nuclear-strike-talks-trump-administration-accused-of-risking-global-war-over-iran-attack-plans#comments</comments><guid isPermaLink="false">3e15815b-06b8-438e-8c9c-62af96f2b438</guid><pubDate>Tue, 18 Aug 2026 02:04:49 +0000</pubDate><atom:updated>2026-08-18T02:04:49.123Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,அணு ஆயுதம்,Nuclear weapon,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/p5ga5yhg/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெய்லர் கிரீன், டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டெய்லர் கிரீன், டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/p5ga5yhg/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-threatens-to-go-on-offensive-in-hormuz-if-diplomacy-with-us-fails">ஈரான் </a>மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருவதாக அமெரிக்க முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கிரீன்,</p> <h2>அணு ஆயுத தாக்குதல்</h2><p>"<a href="https://www.maalaimalar.com/topic/iran-war">வெளிநாட்டுப் போர்களில்</a> இனி அமெரிக்கா ஈடுபடாது என்று டிரம்ப் வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது ஈரான் மீது அணு ஆயுத தாக்குதலுக்கான எல்லையை டிரம்ப் நிர்வாகம் குறைத்து வருகிறது.</p><p>ஈரான் மீது தாக்குதல் நடத்த வெள்ளை மாளிகை மூத்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.</p><p>ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் அளவு விளிம்பிற்கு இன்னும் வரவில்லை என்ற அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.</p><p>இஸ்ரேலின் எச்சரிக்கைகளை கேட்டு மட்டுமே அவர்கள் நடக்கின்றனர்.</p><p>ஈரான் மீது அணுஆயுதத்தைப் பயன்படுத்தினால் அது மிகப்பெரிய உலகப்போராக மாறி, லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கும். கடுமையான பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும்" என எச்சரித்துள்ளார்.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>கிரீனின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.</p><p>ஜூன் 2025இல் ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, வெளிநாட்டுப் போர்களைத் தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சார வாக்குறுதிகளை டிரம்ப் கைவிட்டுவிட்டதாக கிரீன் முன்பும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 ஆகஸ்ட் 2026:  வளர்பிறை சஷ்டி விரதம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-18-august-2026-valarpirai-sashti-viratham</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-18-august-2026-valarpirai-sashti-viratham#comments</comments><guid isPermaLink="false">46106342-a650-4b0b-a6b4-ca0d68c3054f</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:55:30 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:55:30.585Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/08/27259313-muruga1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/08/27259313-muruga1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-1 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  சஷ்டி இரவு 9.06 மணி வரை பிறகு சப்தமி</p><p>நட்சத்திரம் :  சித்திரை இரவு 8.50 வரை பிறகு சுவாதி</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்</h2><p>வளர்பிறை சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீ ஆலவாய் அண்ணல் மாணிக்கம் விற்றருளிய லீலை கைலாச வாகனத்தில் பவனி. சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.</p> <p>திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், திருநெல்வேலி 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய திருத்தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல் ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமாள் பவனி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஆக்கம்</p><p>ரிஷபம் - சுகம்</p><p>மிதுனம் - ஆர்வம்</p><p>கடகம் - கவனம்</p><p>சிம்மம் - கடமை</p><p>கன்னி - உழைப்பு</p> <p>துலாம் - முயற்சி</p><p>விருச்சிகம் - நலம்</p><p>தனுசு - சுபம்</p><p>மகரம் - இரக்கம்</p><p>கும்பம் - ஜெயம்</p><p>மீனம் - புகழ்</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 18.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு சுபச்செய்திகள் வந்து சேரும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-18-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-18-august-2026#comments</comments><guid isPermaLink="false">179de9d1-dca7-4f8f-85b8-f4e327a40d71</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:44:29 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:44:29.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/07/24376583-rasipalan1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/07/24376583-rasipalan1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>அலைபேசி வழித்தகவலால் ஆதாயம் கிட்டும் நாள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள் பண நெருக்கடி தீரும். உடன் இருப்பவர்கள் கேட்ட உதவி கிடைக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடைபெறும். செய்யும் காரியங்களில் உங்கள் திறமை மேம்படும்.</p> <h2>மிதுனம்</h2><p>வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். பயணங்கள் பலன் தரும்.</p><h2>கடகம்</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வரும். பயணத்தால் பால்ய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்களால் விரயமுண்டு.</p> <h2>சிம்மம்</h2><p>யோகமான நாள். சேமிப்பு உயரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.</p><h2>கன்னி</h2><p>முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர்.</p> <h2>துலாம்</h2><p>கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.</p><h2>விருச்சிகம்</h2><p>சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.</p> <h2>தனுசு</h2><p>சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.</p><h2>மகரம்</h2><p>மனக்குழப்பம் அகலும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சு முடிவாகும்.</p> <h2>கும்பம்</h2><p>காரிய வெற்றி ஏற்படும் நாள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.</p><h2>மீனம்</h2><p>சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai-2#comments</comments><guid isPermaLink="false">e6a808f6-2a91-46b8-be22-769dab6004d8</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:36:26 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:36:26.578Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,petrol diesel prices</media:keywords><media:content height="614" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/b0nhpc4w/maalai-malar2026-08-11blbkipxnmaalai-malar2026-08-08eyp4pp4lpetrol.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/b0nhpc4w/maalai-malar2026-08-11blbkipxnmaalai-malar2026-08-08eyp4pp4lpetrol.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-threatens-to-go-on-offensive-in-hormuz-if-diplomacy-with-us-fails">ஈரான் போரினால் </a>மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (18.08.2026 - செய்வ்வாய்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 91.01 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>குடிநீர் குழாய்களில் பாக்டீரியா.. நாட்டின் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளே இல்லை - சிஏஜி அறிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/national/cag-report-flags-poor-passenger-amenities-and-contaminated-drinking-water-at-major-railway-stations</link><comments>https://www.maalaimalar.com/news/national/cag-report-flags-poor-passenger-amenities-and-contaminated-drinking-water-at-major-railway-stations#comments</comments><guid isPermaLink="false">d8bb99c5-2639-42b2-a846-a459f439b9db</guid><pubDate>Tue, 18 Aug 2026 01:03:25 +0000</pubDate><atom:updated>2026-08-18T01:03:25.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்வே,Railways,railway stations,CAG Report,ரெயில் நிலையங்கள்,சிஏஜி அறிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/030opsjm/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில் நிலையம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் நிலையம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/030opsjm/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/another-ac-electric-train-in-chennai">ரெயில் </a>நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளில் கடும் குறைபாடு இருப்பதாக சிஏஜி அறிக்கை  வெளியாகியுள்ளது. </p><p>பல்வேறு <a href="https://www.maalaimalar.com/topic/railway-stations">ரெயில்வே </a>மண்டலங்களில் உள்ள 512 புறநகர் அல்லாத வெளியூர் ரெயில்கள் இயக்கப்படும் ரெயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>கோயம்புத்தூர், பாலக்காடு, ஐதராபாத், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரெயில் நிலையம் ஆகியவை இதில் அடங்கும்.</p> <h2>பாக்டீரியா</h2><p>அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டில் 8 மண்டலங்களில் உள்ள 49 ரெயில் நிலையங்களின் பிளாட்பார குடிநீர் குழாய்களில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் Total Coliform என்ற பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>2023-24 நிதியாண்டில் 9 மண்டலங்களில் உள்ள 56 ரெயில் நிலையங்களில் வாட்டர் கூலர்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் E. coli பாக்டீரியா கண்டறியப்பட்டது.</p><p>E. coli பாக்டீரியா பொதுவாக மனித அல்லது விலங்கு கழிவு மாசுபாட்டால் நீரினுள் ஊடுருவக்கூடிய ஒன்றாகும்.</p>  <h2>அடிப்படை வசதிகள்</h2><p>ஆய்வு செய்யப்பட்ட 512 ரெயில் நிலையங்களில் 458 நிலையங்களில், அதாவது சுமார் 90% நிலையங்களில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய அத்தியாவசிய வசதிகள் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p>மும்பை சென்ட்ரல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், ஹவுரா - சீல்டா மற்றும் டெல்லி போன்ற நாட்டின் மிகப்பெரிய ரெயில் நிலையங்களிலும் கூட இருக்கை வசதி, தூய்மை, குப்பைத் தொட்டிகள் மற்றும் மின்னணு தகவல் பலகைகள் அமைப்பதில் பெருமளவு குறைபாடுகள் பதிவாகியுள்ளன.</p> <h2>பரிந்துரை</h2><p>ரெயில்வே வாரியம் ஏப்ரல் 2018இல் NSG-1 முதல் NSG-6 வகையை சேர்ந்த அனைத்து ரெயில் நிலையங்களிலும் குறைந்தபட்ச வசதிகளை உறுதி செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.</p><p>எனவே, ரெயில் நிலையங்களில் குடிநீர் விநியோக அமைப்புகளைத் தொடர்ந்து ஆய்வு செய்யவும், குடிநீரின் தரத்தைச் சோதிக்க நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு பின்பற்றவும் ரெயில்வே நிர்வாகத்திற்கு சிஏஜி பரிந்துரை செய்துள்ளது.</p> <p>NSG-1 முதல் NSG-3 வரை அதிக வருமானம் ஈட்டும் மிக முக்கியப் பெருநகர நிலையங்கள் எனவும், NSG-4 முதல் NSG-6 வரை நடுத்தர மற்றும் சிறிய அளவிலான ரெயில் நிலையங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தேர்வுகள் ரத்து - உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்ட மாணவர் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-devendra-nath-mahto-ends-hunger-strike-after-jssc-cgl-exam-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-devendra-nath-mahto-ends-hunger-strike-after-jssc-cgl-exam-cancelled#comments</comments><guid isPermaLink="false">701adfe1-747c-4d29-8220-eb83f701a286</guid><pubDate>Tue, 18 Aug 2026 00:19:45 +0000</pubDate><atom:updated>2026-08-18T00:19:45.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்வுகள் ரத்து,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Exams Cancelled</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/a4y3aunq/Devendra-Nath-Mahto.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Devendra Nath Mahto]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/a4y3aunq/Devendra-Nath-Mahto.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக <a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.</p><p>JSSC-CGL தேர்வு மற்றும் TDPL மூலம் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/hemant-soren">ஹேமந்த் சோரன்</a> அறிவித்ததைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோர் முன்னிலையில், ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். </p><h2>கடுமையான சட்டங்கள் தேவை:</h2><p>மாநிலத்தில் ஆட்சேர்ப்பு தேர்வு நடைமுறைகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக மஹ்தோ இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார். </p><p>செய்தியாளர்களிடம் பேசிய மஹ்தோ, தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதற்காக முதல்வர் சோரன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் மாநில அமைச்சர்கள் தீபிகா பாண்டே மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.</p><p>தேர்வுகளை கண்காணிக்கவும், வினாத்தாள் கசிவை தடுக்கவும் கடுமையான சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>இது குறித்து பேசும் போது மஹ்தோ கூறியதாவது: "இன்று உண்ணாவிரத போராட்டத்தின் 16-வது நாள்; இந்தப் போராட்டம் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 20-ஆம் தேதி முதல்வருடனான சந்திப்பை தொடர்ந்து, ஜூலை 28-ஆம் தேதி சிஐடி (CID) விசாரணை தொடங்கப்பட்டது. முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் JPSC தலைவர் போன்ற உயர்மட்டப் பொறுப்பில் உள்ளவர்கள் உட்பட யாரையும் விட்டுவைக்காமல், இந்த விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><h2>துணிச்சலான நடவடிக்கை:</h2><p>இத்தகைய முக்கிய முடிவை எடுப்பதற்கான துணிச்சலை காட்டிய ஜார்க்கண்ட் அரசுக்கு நான் நன்றி கூறுகிறேன். ஒரு தேர்வை ரத்து செய்வது என்பது மிகப்பெரிய சவாலான காரியமாகும். JSSC CGL தேர்வுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை ஏற்கனவே பணி நியமனம் பெறும் நிலையை எட்டியிருந்ததாலும், பல மாணவர்கள் ஏற்கனவே தங்கள் இடங்களை உறுதி செய்திருக்கக்கூடும் என்பதாலும், இது எளிதான முடிவாக இருக்கவில்லை.</p><p>இருப்பினும், இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்காக அரசு இந்த துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டது... ஜார்க்கண்ட் அரசு, முதல்வர் ஹேமந்த் சோரன், ராகுல் காந்தி, எங்கள் எம்.எல்.ஏ., அமைச்சர் தீபிகா பாண்டே, இர்பான் அன்சாரி, மாணவர்கள், ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டத்தின் போது நள்ளிரவு 1 அல்லது 2 மணிக்கு எங்களுக்குத் தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கிய அறிமுகம் இல்லாத நபர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவுடன் ராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால் - ஈரான் பகிரங்க எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-threatens-to-go-on-offensive-in-hormuz-if-diplomacy-with-us-fails</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-threatens-to-go-on-offensive-in-hormuz-if-diplomacy-with-us-fails#comments</comments><guid isPermaLink="false">75ceab94-9756-429f-9963-12c288deae5b</guid><pubDate>Mon, 17 Aug 2026 23:32:40 +0000</pubDate><atom:updated>2026-08-17T23:32:40.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Strait of Hormuz,ஹார்முஸ் நீரிணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/54lnwim9/strait-of-hormuz.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Strait of Hormuz]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/54lnwim9/strait-of-hormuz.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை காரணமாக, <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> தனது கொள்கையை தற்காப்பு நிலையில் இருந்து முழுமையான தாக்குதல் நிலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளது என்று ஒரு மூத்த ஈரானிய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p>அமைதி பேச்சுவார்த்தைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான முன்னேற்றம் முடங்கியுள்ளது. மேலும், பிப்ரவரி 28-ஆம் தேதியன்று <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்கா</a> மற்றும் இஸ்ரேலும் தொடங்கிய இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த அறிகுறியும் போரிடும் தரப்புகளுக்கு இல்லை.</p><h2>சரியான நேரத்தில் தாக்குதல்:</h2><p>"ஹோர்முஸ் நீரிணை மற்றும் பரந்த பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க ஈரானிய அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும், ஏனெனில் கடினமான முடிவுகள் மீது ஈரான் முடிவெடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கும்," என்று அந்த ஈரானிய அதிகாரி கூறினார்.</p><p>மேலும், ராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால், அமெரிக்க கடற்படை முற்றுகையை உடைக்க தெஹ்ரான் "சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான" ராணுவ தாக்குதலை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>சிதைந்து போன ஒப்பந்தம்:</h2><p>போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், ஜூன் மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரானும் அமெரிக்காவும் ஒரு இறுதி உடன்பாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நாள் திங்கட்கிழமை ஆகும்.</p><p>ஜூன் 17 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் எதிர்காலம் போன்ற பரந்த பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒரு உடன்பாட்டை வாஷிங்டனும் தெஹ்ரானும் எட்டுவதற்கு, பரஸ்பர ஒப்புதலுடன் நீட்டிக்கப்படக்கூடிய 60 நாள் காலக்கெடுவை நிர்ணயித்தது.</p><p>இருப்பினும், அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக அறிவித்த அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு குறித்த தகராறு காரணமாக விரைவாக சிதைந்து போனது.</p><p>புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 5-ஆவது பிரிவு, நீர்வழியை நிர்வகிக்கும் உரிமையை தங்களுக்கு அளிப்பதாக தெஹ்ரான் கூறியது, ஆனால் வாஷிங்டன் அந்த விளக்கத்தை நிராகரித்தது. அங்கீகரிக்கப்படாத பாதையில் நீர்வழி வழியாக செல்ல முயன்றதாக கூறப்பட்ட கப்பல்கள் மீது தெஹ்ரான் துப்பாக்கி சூடு நடத்த தொடங்கியதால், மோதல்கள் மீண்டும் தொடங்கின.</p>]]></content:encoded></item><item><title>இம்ரான் கானின் கண் பார்வை &apos;கிட்டத்தட்ட இயல்பு&apos; நிலைக்கு திரும்பியது: சிறை நிர்வாகம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/jail-authorities-said-imran-khans-eye-condition-almost-normal-to-apex-court</link><comments>https://www.maalaimalar.com/news/world/jail-authorities-said-imran-khans-eye-condition-almost-normal-to-apex-court#comments</comments><guid isPermaLink="false">7b02a04b-08f7-4c91-a183-490579caabfe</guid><pubDate>Mon, 17 Aug 2026 21:25:04 +0000</pubDate><atom:updated>2026-08-17T21:25:04.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறை,Imran Khan,இம்ரான் கான்,நீதிமன்றம்,jail,Court</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/utk8b4wh/Imran-Khan-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Imran Khan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/utk8b4wh/Imran-Khan-1.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கண் பார்வை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும், அவரது பார்வைத்திறன் "கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு" திரும்பியுள்ளதாக சிறை அதிகாரிகள் <a href="https://www.maalaimalar.com/news/world">பாகிஸ்தான்</a> உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.</p><p>இஸ்லாமாபாத்தில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனையான 'ஷிஃபா இன்டர்நேஷனல்' மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/imran-khan">இம்ரான் கான்</a> விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் விசாரிக்கவிருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>மருத்துவ அறிக்கை:</h2><p>ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ள 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்' (PTI) கட்சியின் நிறுவனர் இம்ரான் கான், ஜனவரி மாத இறுதியில் அவருக்கு வலது கண்ணில் 'சென்ட்ரல் ரெட்டினல் வெயின் அக்லூஷன்' (CRVO) எனும் கண் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதில் இருந்து, கண் சிகிச்சைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள 'பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்' (PIMS) மருத்துவமனைக்கு பலமுறை அழைத்து செல்லப்பட்டுள்ளார்.</p><p>ராவல்பிண்டியில் உள்ள அடியால சிறை அதிகாரிகள், 73 வயதான இம்ரான் கான் கண்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.</p><p>இம்ரான் கானின் மருத்துவ பிரச்சனை கண்டறியப்பட்டதில் இருந்து அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், PIMS மருத்துவமனையின் கண் மருத்துவ பிரிவுத் தலைவர் டாக்டர் முகமது ஆரிஃப் கான் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள அல்ஷிஃபா டிரஸ்ட் கண் மருத்துவமனையின் விட்ரியோ-ரெட்டினல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நதீம் குரேஷி ஆகியோர் அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.</p><h2>பார்வைத்திறன் முன்னேற்றம்:</h2><p>"இதன் விளைவாக, அவரது கண்ணில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது, மேலும் அவரது பார்வைத்திறன் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது" என்று அந்த அறிக்கை கூறியது.</p><p>மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பார்வைத்திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை, கானுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதில் சிறை நிர்வாகம் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டதை காட்டுவதாக அது மேலும் குறிப்பிட்டது.</p><p>மருத்துவ அதிகாரிகள் தினமும் மூன்று முறை இம்ரான் கானை சந்தித்து, அவரது உணவை சரிபார்ப்பதுடன், இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட முக்கிய உடல்நல குறியீடுகளை பரிசோதிப்பதாக அது கூறியது. சிறைவாசத்தின் போது அவரது மருத்துவ பதிவுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் போருக்கு எதிராக பேசிய கிரெம்ளின் விமர்சகருக்கு 11 ஆண்டுகள் சிறை - ரஷ்யா</title><link>https://www.maalaimalar.com/news/world/russia-jails-kremlin-critic-for-11-years-for-speaking-against-ukraine-war</link><comments>https://www.maalaimalar.com/news/world/russia-jails-kremlin-critic-for-11-years-for-speaking-against-ukraine-war#comments</comments><guid isPermaLink="false">5c189651-29cb-4e73-a72d-5248493789b3</guid><pubDate>Mon, 17 Aug 2026 20:25:52 +0000</pubDate><atom:updated>2026-08-17T20:25:52.556Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,Russia,Ukraine War,ரஷ்யா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/kzqod4sa/Lev-Shlosberg.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lev Shlosberg]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/kzqod4sa/Lev-Shlosberg.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, <a href="https://www.maalaimalar.com/news/world">உக்ரைன்</a> போருக்கு எதிராக குரல் எழுப்பிய முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் 11 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தது.</p><p>2022 பிப்ரவரியில் <a href="https://www.maalaimalar.com/topic/russia">ரஷ்யா</a> தனது அண்டை நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை பேரில் போரை தொடங்கியதில் இருந்து, எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்காக ரஷ்யா எடுத்துவரும் மற்றுமொரு நடவடிக்கையாக, யப்லோகோ கட்சியின் மூத்த உறுப்பினரான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு எதிரான தீர்ப்பு அமைந்துள்ளது. போரை வெளிப்படையாக எதிர்க்கும் ஒரே அதிகாரப்பூர்வ அரசியல் கட்சி யப்லோகோ ஆகும்.</p><h2>சகித்துக்கொள்ளாது:</h2><p>திங்களன்று வழங்கப்பட்ட தனித் தீர்ப்பில், ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 18-20 தேதிகளில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தலில் யப்லோகோ கட்சியை வேட்பாளர் பட்டியலில் இருந்து தடைசெய்த தனது முந்தைய முடிவை உறுதிசெய்ததுடன், அக்கட்சியின் மேல்முறையீட்டையும் நிராகரித்தது.</p><p>தற்போது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் போர் குறித்த எந்தவொரு விமர்சனத்தையும் கிரெம்ளின் சகித்துக்கொள்ளாது என்பதை, ஷ்லோஸ்பெர்க் மற்றும் யாப்லோகோவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.</p><p>63 வயதான ஷ்லோஸ்பெர்க், யப்லோகோவின் துணைத் தலைவர் ஆவார். இவர் 2016 முதல் 2021 வரை பிஸ்கோவ் பிராந்திய சட்டமன்றத்தில் பணியாற்றினார். </p><p>மாஸ்கோவில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிஸ்கோவ் நகரில், ரஷ்ய இராணுவத்தை பற்றி "அவமதிப்பு" விளைவித்ததாகவும் மற்றும் "பொய் தகவல்களை" பரப்பியதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மீது விசாரணை நடைபெற்றது.</p><h2>வெளிநாட்டு உளவாளி:</h2><p>போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த விவாதத்தில் இருந்தும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் படத்திற்கு அருகில் இரத்தம் தோய்ந்த பெண்ணின் படத்தை கொண்ட ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையின் முதல் பக்கத்தை, "அவள் இரத்தம்... அவன் கைகள்" என்ற தலைப்புடன் தனது டெலிகிராம் சேனலில் பதிவிட்டதில் இருந்தும் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஷ்லோஸ்பெர்க் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிராகரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காலே டெஸ்ட்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜடேஜா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/ravindra-jadeja-joins-kapil-dev-in-elite-list-to-achieve-this-feat</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/ravindra-jadeja-joins-kapil-dev-in-elite-list-to-achieve-this-feat#comments</comments><guid isPermaLink="false">0ab2200a-dce3-47b7-b460-64a8794b42fb</guid><pubDate>Mon, 17 Aug 2026 19:33:54 +0000</pubDate><atom:updated>2026-08-17T19:33:54.933Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Kapil Dev,ரவீந்திர ஜடேஜா,Ravindra Jadeja,கபில் தேவ்,Galle Test,காலே டெஸ்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/yj63hrbi/Jadeja.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jadeja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/yj63hrbi/Jadeja.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காலேயில் இலங்கைக்கு எதிரான <a href="https://www.maalaimalar.com/sports/cricket">முதல் டெஸ்ட்</a> போட்டியில், இந்திய ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 350 விக்கெட்டுகளை பூர்த்தி செய்து, ஒரு உயர்மட்டக் குழுவில் நுழைந்தார். </p><p>37 வயதான <a href="https://www.maalaimalar.com/topic/jadeja">ஜடேஜா</a>, டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய பந்துவீச்சாளர் ஆனார். அவருக்கு முன்னதாக அனில் கும்ப்ளே (619), ரவிச்சந்திரன் அஸ்வின் (537), கபில் தேவ் (434) மற்றும் ஹர்பஜன் சிங் (417) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். </p><h2>மூன்றவது இடம்:</h2><p>இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில், இலங்கையின் ரங்கனா ஹெரத் (433) மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி (362) ஆகியோருக்குப் பின்னால், டெஸ்ட் விக்கெட்டுகளில் ஜடேஜா இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். </p><p>இலங்கை வீரர் கேசர நுவந்தா, வெளிநோக்கித் திரும்பிய பந்தை அடிக்க முயன்றபோது, ​​அவரது ஷாட்டை தவறவிட்டதால் ஜடேஜா இந்த மைல்கல்லை எட்டினார். சுப்மன் கில் அந்த கேட்சை பிடித்து, ஜடேஜாவின் 350-ஆவது டெஸ்ட் விக்கெட்டை பெற்றுத் தந்தார்.</p><p>இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், 4,000-க்கும் மேற்பட்ட டெஸ்ட் ரன்களையும் 350 விக்கெட்டுகளையும் குவித்த ஒரே இந்தியர்களான முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் உடன் ஜடேஜா இணைந்தார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன், ஜடேஜா 89 டெஸ்ட் போட்டிகளில் 4,095 ரன்களையும் 348 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார்.</p><p>ஒட்டுமொத்தமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000-க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த நான்காவது வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார். அவருக்கு முன்னதாக கபில் தேவ், இங்கிலாந்தின் இயன் போத்தம் மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.</p><p>கபில் தனது புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை 5,248 ரன்கள் மற்றும் 434 விக்கெட்டுகளுடன் நிறைவு செய்தார். அதே சமயம், போத்தம் 5,200 ரன்கள் மற்றும் 383 விக்கெட்டுகளையும், வெட்டோரி 4,531 ரன்கள் மற்றும் 362 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.</p><h2>பின்தங்கிய இலங்கை:</h2><p>இலங்கையின் இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே, கேப்டன் தனஞ்சய டி சில்வாவை 21 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து ஜடேஜா தனது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். </p><p>இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் 13 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும், நாள் ஆட்டம் முடிவடைவதற்குள் அவர் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தினார்.</p><p>தேவ்தத் படிக்கலின் 167 ரன்களுக்குப் பிறகு இந்தியா 462 ரன்களை எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் அந்த அணி தற்போது 178 ரன்கள் பின்தங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீ கார்டியன் டிரோன்களை குத்தகைக்கு எடுக்கும் இந்திய கடற்படை - ரூ. 1,943 கோடியில் ஒப்பந்தம்</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-navy-to-get-2-mq-9b-sea-guardian-drones-in-rs-1943-cr-lease-deal</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-navy-to-get-2-mq-9b-sea-guardian-drones-in-rs-1943-cr-lease-deal#comments</comments><guid isPermaLink="false">e590a10a-cc5d-4a68-b414-42faa82edfe2</guid><pubDate>Mon, 17 Aug 2026 18:51:47 +0000</pubDate><atom:updated>2026-08-17T18:51:47.637Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DRONES,Indian Navy,இந்திய கடற்படை,டிரோன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/te8irl5d/MQ-9B-SeaGuardian-Drone.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MQ-9B SeaGuardian Drone]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/te8irl5d/MQ-9B-SeaGuardian-Drone.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கடற்படைக்காக, அதிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கக்கூடிய ஆளில்லா விமானங்களான (UAV) இரண்டு MQ-9B சீ கார்டியன் (Sea Guardian) ரக டிரோன்களை, அமெரிக்காவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனமான 'ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ்'-இடம் இருந்து ரூ. 1,943 கோடிக்கு குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.</p><p>ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு சீ கார்டியன் டிரோன்களை கடற்படை இயக்கி வருகிறது. அமெரிக்காவுடனான 4 பில்லியன் டாலர் மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் இது போன்ற 31 டிரோன்களை இந்தியா பெற காத்திருக்கும் நிலையில், கூடுதலாக இரண்டு MQ-9B சீ கார்டியன் டிரோன்களை குத்தகைக்கு எடுக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>ஒப்பந்த மதிப்பு:</h2><p>இந்த டிரோன்கள் 35 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறக்கும் திறன் கொண்டவை. மேலும் இவை நான்கு 'ஹெல்ஃபயர்' (Hellfire) ஏவுகணைகளையும், சுமார் 450 கிலோ எடையுள்ள குண்டுகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டவை. </p><p>கடல்சார் கண்காணிப்பு, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் மற்றும் எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளை குறிவைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என்பதால் இந்த சீ கார்டியன் டிரோன்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.</p><p>தொலைவில் இருந்து இயக்கப்படும் இந்த விமானங்களுக்காக 'ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ்' நிறுவனத்துடன் 30 மாத காலத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.</p><p>"இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ. 1,943 கோடியாகும். பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் தலைமை இயக்குநர் (கொள்முதல்) முன்னிலையில் இது கையெழுத்தானது," என்று அது கூறியது.</p><h2>கடல்சார் விழிப்புணர்வு:</h2><p>MQ-9B சீ கார்டியன் தொலைவில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் மேம்பட்ட அமைப்புகள், அதிநவீன சென்சார்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இந்திய கடற்படையின் கடல்சார் விழிப்புணர்வு திறனை கணிசமாக மேம்படுத்தும் என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>"இந்த அமைப்புகள் கடல்சார் பகுதிகளில் பரந்த பரப்பளவில் தொடர்ச்சியான உளவு தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல் (ISR) ஆகிய சேவைகளை வழங்கும். இதன் மூலம் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், அவற்றுக்கு எதிர்வினையாற்றவும் இந்தியாவின் திறன் வலுப்படுத்தப்படும்," என்று அது கூறியது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வுகளை ரத்து செய்தது ஜார்க்கண்ட் அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-cancels-jssc-cgl-all-exams-conducted-since-2014-by-outsourced-agency-tdpl</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-cancels-jssc-cgl-all-exams-conducted-since-2014-by-outsourced-agency-tdpl#comments</comments><guid isPermaLink="false">7425eea3-6495-43e3-a927-eada104d7316</guid><pubDate>Mon, 17 Aug 2026 17:58:20 +0000</pubDate><atom:updated>2026-08-17T17:58:20.321Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்வுகள் ரத்து,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Exams Cancelled</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/3nj3so0f/Jharkhand-Protestors.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protestors]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/3nj3so0f/Jharkhand-Protestors.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக <a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.</p><p>தேர்வு ரத்து மற்றும் சி.பி.ஐ. விசாரணை கோரி <a href="https://www.maalaimalar.com/topic/jharkhand-protest">மாணவர்கள் போராட்டம்</a> மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>அமைச்சரவை கூட்டம்:</h2><p>முதல்வர் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையின் நீண்ட நேர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வை (JSSC-CGL) ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.</p><p>மேலும், வெளிமுகமை நிறுவனமான TDPL (TSR Data Processing Pvt Ltd) நடத்திய அனைத்துத் தேர்வுகளையும், அந்த நிறுவனம் வெளியிட்ட தேர்வு முடிவுகளையும் ரத்து செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு சோரன் கூறினார்.</p><h2>தேர்வு சீர்திருத்த குழு:</h2><p>மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் தேர்வு சீர்திருத்த குழு ஒன்றை அமைப்பதாகவும் அவர் அறிவித்தார். பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வரும் வேலை தேடுபவர்கள், சி.பி.ஐ. விசாரணை மற்றும் JSSC-CGL தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.</p><p>இந்தப் போராட்டம் இன்றுடன் (திங்கள்கிழமை) 24-ஆவது நாளை எட்டியது; இதில் ஆறு போராட்டக்காரர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>பேச்சுவார்த்தை:</h2><p>முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பிரதிநிதிகளுடன் ஜார்க்கண்ட் மாநில அரசு இன்றும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஏற்கனவே பலக்கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளில் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு தற்போது அறிவித்து இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>காசா விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் அதிபரை சந்தித்த டிரம்ப் தூதர்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-envoy-meets-netanyahu-over-gaza-plan-day-after-talks-with-hamas</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-envoy-meets-netanyahu-over-gaza-plan-day-after-talks-with-hamas#comments</comments><guid isPermaLink="false">ce320ce6-4f44-444d-9b55-69f9e1c8b67f</guid><pubDate>Mon, 17 Aug 2026 17:19:04 +0000</pubDate><atom:updated>2026-08-17T17:19:04.910Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,Benjamin Netanyahu,Hamas,ஹமாஸ்,பெஞ்சமின் நெதன்யாகு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/5n45pjf1/Jared-Kushner-and-benjamin-netanyahu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jared Kushner and benjamin netanyahu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/5n45pjf1/Jared-Kushner-and-benjamin-netanyahu.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">இஸ்ரேல்</a> இதுவரை நிராகரித்துள்ள காசா அமைதி திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிபர் டொனால்டு டிரம்பின் தூதர் ஜாரெட் குஷ்னர், <a href="https://www.maalaimalar.com/topic/hamas">ஹமாஸ்</a> தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இன்று (திங்கள்கிழமை) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார்.</p><p>டிரம்பின் காசா திட்டத்தின் சமீபத்திய கட்டத்திற்கு பாலஸ்தீனிய இஸ்லாமிய குழு ஒப்புதல் அளித்த இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு நெதன்யாகு ஆதரவளிக்க மறுத்து, எந்தவொரு தீர்வும் அந்த குழு "உண்மையாகவே நிராயுதபாணியாக்கப்படுவதை" உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.</p><p>ஜெருசலேமில் இன்றைய கூட்டம் தாமதமாக தொடங்கியதாக தூதரக அதிகாரி ஏ.எஃப்.பி. (AFP) செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார்.</p><h2>குஷ்னர் கோரிக்கை:</h2><p>டிரம்பின் மருமகனான குஷ்னர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எகிப்தின் மத்திய தரைக்கடல் நகரமான எல்-அலமைனில் ஹமாஸின் புதிய தலைவர் கலீல் அல்-ஹய்யாவை சந்தித்தார். அமெரிக்காவால் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்பட்ட ஒரு குழுவிற்கும், ஒரு காலத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்த பேச்சுவார்த்தைகளின் சமீபத்திய நிகழ்வு இது.</p><p>நெதன்யாகுவுக்கு ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக இருக்கும் வகையில், அந்த குழு தனது ஆயுதங்களை கைவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், 2023 அக்டோபர் 7-ஆம் தேதியன்று இஸ்ரேலுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை நடத்தி காசா போரை தொடங்கிய ஹமாஸ், பாலஸ்தீனத்தை ஆளும் எந்தவொரு எதிர்கால பங்கையும் கைவிட வேண்டும் என்றும் குஷ்னர் கோரியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><h2>ஹமாஸ் உறுதி:</h2><p>இஸ்ரேலிய தலைவருடன் நீண்டகால குடும்ப தொடர்புகளைக் கொண்ட குஷ்னர் மற்றும் திட்டத்தை செயல்படுத்தும் ட்ரம்பின் "அமைதி வாரியத்தில்" காசாவிற்கான உயர் பிரதிநிதியான நிக்கோலாய் மிலாடெனோவ் ஆகியோரை நெதன்யாகு சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரும், தற்போது அமைதி வாரியத்தின் மூத்த அதிகாரியுமான டோனி பிளேரும் கலந்துகொள்வார் என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>காசா திட்டத்திற்கு தாங்கள் உறுதியுடன் இருப்பதாகவும், நெதன்யாகு மீது அழுத்தம் கொடுக்க விரும்புவதாகவும் குஷ்னரிடம் ஹமாஸ் அமைப்பு தெரிவித்ததாக அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் வற்றிய பவல் ஏரி - நீர் மற்றும் மின்சார விநியோகத்திற்கு அச்சுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/world/us-lake-powell-drought-poses-risk-to-water-and-electricity-distribution</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-lake-powell-drought-poses-risk-to-water-and-electricity-distribution#comments</comments><guid isPermaLink="false">b7f75eaf-e4e3-47fa-a389-f1b409834c04</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:29:19 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:29:19.286Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,american lake,அமெரிக்க ஏரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/waipyhw6/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lake Powell]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/waipyhw6/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமான பவல் ஏரியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளதால், கொலராடோ நதி அமைப்பில் நெருக்கடி நிலைகள் அதிகரித்துள்ளன.</p><p>லேக் பாவெல் ஏரியில் ஏற்பட்ட இந்த நிலைமையின் காரணமாக, ஆற்றின் மற்றொரு முக்கிய நீர்த்தேக்கமான லேக் மீட் ஏரியும் வரலாற்று சரிவை எட்டியுள்ளது. </p><p>கடுமையாக சரிந்துவரும் நீர்மட்டம், கொலராடோ ஆற்று படுகைக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. </p><p>இப்பகுதி, வனவிலங்குகள், நீர்மின்சக்தி மற்றும் ஏழு அமெரிக்க மாகாணங்களில் உள்ள 40 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.</p><p>கூட்டாட்சி அரசாங்கமும், ஆற்றை நம்பி வாழும் கலிபோர்னியா, அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, யூட்டா, வயோமிங் மற்றும் கொலராடோ போன்ற மாநிலங்களும், குறைந்து வரும் இந்த வளத்திற்கான நீண்டகால மேலாண்மைத் திட்டத்தில் உடன்பாடு காணப் போராடி வரும் வேளையில், ஆற்று நீரின் அளவுகள் குறைந்து காணப்படுகின்றன.</p><p>தொடர்ச்சியான அதீதப் பயன்பாடு, வரலாறு காணாத வறண்ட குளிர்காலம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவை இணைந்து பவல் ஏரி மற்றும் மீட் ஏரி ஆகிய இரண்டையும் வற்றச் செய்து வருகின்றன.</p><p>அமெரிக்க மீள்குடியேற்றப் பணியகத்தின் (US Bureau of Reclamation) தரவுகளின்படி, பவல் ஏரியின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 3,519.91 அடியாக (1072.9 மீட்டர்) குறைந்துள்ளது.</p><p>இது, ஏப்ரல் 2023-ல் பதிவான முந்தைய சாதனையை விட சற்றே குறைவாகும். இந்த ஏரியின் நீர்மட்டம், ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விட 20 அடிக்கும் (6.10 மீட்டருக்கும்) அதிகமாகக் குறைந்துள்ளது என்று USBR தரவுகள் தெரிவித்துள்ளன.</p><p>டர்பைன்கள் நீர்மின்சார உற்பத்தியை நிறுத்தும் புள்ளியிலிருந்து நீர்த்தேக்கம் தற்போது சுமார் 30 அடி (9.1 மீட்டர்) தொலைவில் உள்ளது.</p><p>இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த வரம்பை எட்டுவதை தவிர்க்க, ஒரு "பெரிய தலையீடு" அவசியமாக இருக்கும் என்று மத்திய அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.</p><p>அரிசோனா, கலிபோர்னியா மற்றும் நெவாடா ஆகிய மாநிலங்களில் பெரும் நீர் விநியோகக் குறைப்புகளை உள்ளடக்கிய 10 ஆண்டுத் திட்டத்தை USBR ஜூலை மாதம் முன்மொழிந்தது.</p><p>இந்த நெருக்கடி பல ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இரு நீர்த்தேக்கங்களும் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளன, மேலும் நீர்மட்டம் தொடர்ந்து குறையக்கூடும் என்று USBR தரவுகள் காட்டுகின்றன.</p><p>கல்வியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நீர் அதிகாரிகள் குழு ஒன்று வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, பவல் ஆற்றைத் தடுத்து நிறுத்தும் கிளென் கேன்யன் அணை கட்டப்பட்ட மே 1957-இல்தான் கடைசியாக அவற்றின் ஒருங்கிணைந்த நீர்த்தேக்கம் இவ்வளவு குறைவாக இருந்தது.</p><p>மேலும் பவல் ஆறு 1963-இல் நிரம்பத் தொடங்கியது. அதன்பிறகு நீர் வற்றியதால், லேக் பாவெல்லின் கணிசமான சுற்றுலாத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நீர்த்தேக்கத்திலுள்ள படகுத் துறைமுகங்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன.</p><p>படகு இறங்குதளங்கள் மூடப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், படகுத் துறைமுகங்கள் தற்காலிகமாக ஆழமான நீர்ப்பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- 17 ஆகஸ்ட் 2026 </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026#comments</comments><guid isPermaLink="false">e5056155-d3e7-4ac5-831d-27ef01f8d24e</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:01:34 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:20:12.354Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-today-debates-on-demands-forg-grants-session-begin">மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடக்கம்</a></p><p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டசபை கூட்டத்தொடர் கூடியது.</p><p>சட்டசபையில் இன்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள தவெக ஆட்சிக்கு பாராட்டு - சபாநாயகர்</p><p>மக்களின் நாடித்துடிப்பை அறிந்து தவெக அரசு பல துறைகளில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது - சபாநாயகர்</p><p>வளமான சமத்துவமான ஊழலற்ற தமிழ்நாடு என்ற கட்டமைப்பை முதல் 100 நாட்களில் செயல்படுத்தி உள்ளது தவெக அரசு  - சபாநாயகர்</p><p>கோவை அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம் - திமுக எம்எல்ஏ வேலு</p><p>கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டுள்ளது - சபாநாயகர்</p><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><h2>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரை</h2><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது.</p><p>கோவை கல்லூரி மாணவன் கொலையை ஏற்கெனவே அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதலால் கொலை என கூறினார். இரு தரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை. </p><p>அமுதனின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஆதரவு கூறினேன்.</p><p>போதைப்பொருள் புழக்கம் பற்றி தகவல் அளித்ததால் தான் அமுதன் கொலை என அவரின் பெற்றோர் திட்டவட்டம்.</p><p>கோவையில் மட்டுமல்ல சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் கொலை.</p><p>சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுத்து கொலை.</p><p>கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் நடந்த கொலைகளை பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார்.</p><p>கொலை மட்டுமல்ல பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது.</p><p>100 நாள் சாதனை என பெருமை பேசும் தவெக அரசு, 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும் - உதயநிதி</p><p>போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்தார்.</p><h2>அதிமுக எம்எல்ஏ காமராஜ் உரை</h2><p>விடுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை, பயன்பாட்டை புகார் தந்த மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>மாணவன் தாக்கப்பட்ட பின் விடுதியில் இருந்து வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.</p><p>மைதானத்தில் வைத்து மாணவன் அமுதனை இரும்பு கம்பியால் அடித்தும் கத்தியால் குத்தியும் 20 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது.</p><p>செல்போன் சம்பந்தப்பட்ட சீனியர் ஜூனியர் சம்பவம், கோஷ்டி மோதல் என காவல்துறை அதிகாரியே சொல்கிறார்.</p> <h2>பாமக எம்எல்ஏ கணேஷ் குமார்</h2><p>போதைப்பொருள் 15 வயது மாணவர்கள் இடையே புழக்கத்தில் உள்ளது.</p><p>கடந்த ஆட்சியில் இருந்த போதைப்பொருள் புழக்கம் போன்றவை தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்வது வேதனை தருகிறது.</p><p>மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><p>கஞ்சா போதை பழக்கமே கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் தாக்குதலுக்கு காரணமாக உள்ளது - எம்எல்ஏ செல்லசாமி</p><p>சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல்   காவல்துறையை களை எடுத்து கரைபடியாத கரங்களாக கொண்டு வர வேண்டும் - எம்எல்ஏ செல்லசாமி</p> <h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கட்பட் உரை</h2><p>இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில் போதைப்பொருளால் அசம்பாவிதம் நடக்கிறது.</p><p>பள்ளி, கல்லூரிகளில் மாணவ அமைப்புகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.</p><p>மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் -  தாரகை கட்பட்</p><p>கோவை அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>இரண்டாமாண்டு பயிலும் அமுதனின் நண்பனுக்கும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலான மோதலில் தாக்கி உள்ளனர்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>அமுதன் இறந்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>அமுதன் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரிய வந்துள்ளது.</p><p>போதைப்பொருள் புகார் தந்தவரின் தகவலை போலீசார் கசிய விட்டது என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்.</p><p>போதைப்பொருள் குறித்து புகார் அளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை. போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்தால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம்.</p><p>கோவை மாணவன் அமுதன் கொலையில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை.  கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என நாம் அறிந்ததே.</p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னர் ஜாபர் சாதிக் உடன் கடந்த ஆட்சியில் முதல்வரின் குடும்பத்தினரிடம் தொடர்பு உள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஜாபர் சாதிக் உடன் திமுக ஆட்சியில் இருந்த முதல்வர் உடன் தொடர்பு என அமைச்சர் குற்றம்சாட்டியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது - உதயநிதி</p><p>ஐபிஎல் போட்டியில் தவெக அமைசசர் பவுடர் என உதயநிதி பேசியதும் தவெக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட தவெக அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா? </p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னன் விவகாரத்தில் திமுக உடனடி நடவடிக்கை எடுத்தது - உதயநிதி</p><p>ஸ்டேடியத்தில் நடந்தவற்றை பற்றி விளக்கம் அளித்துவிட்டேன், ஆதாரம் இன்றி தேவையின்றி பேசக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது, அப்படியென்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா?  - அமைச்சர் சரத்</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என் அமைச்சர் சரத் கேள்வி எழுப்பினார்.</p><p>கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார்? பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும் - கே.என்.நேரு</p><h2>கோவை மாணவர் விவகாரம் - அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>கோவை மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவர் தனுஷ் கொலையில் எந்தவித சார்பும் இன்றி காவல்துறை விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மாணவர் கொலை விவகாரத்தில் சார்பு தன்மை இன்றி நேர்மையாக காவல்துறை விசாரணை நடைபெறும்.</p><p>கொல்லப்பட்ட மாணவர்ன தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>தவெகவின் 100 நாள் ஆட்சி, அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளம். தவெக ஆட்சியை உருவாக்கிய இளைஞர்கள், பெண்களுக்கு நாங்கள் என்றும் உண்மையாக இருப்போம்.</p><p>மாணவர் கொலை வழக்கு விசாரணையில் எவ்வித அழுத்தம் இருக்காது. முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு குழு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க தவெக அரசு உறுதியாக உள்ளது.</p><p>நாங்கள் எழுந்தால் நீங்கள் பேசவே முடியாது என்று அமைச்சர் ஆதவ் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் உறுதியாக இல்லை.</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால் தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>திமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்ததாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு.</p> <p>கடந்த திமுக ஆட்சியில் 40 சதவீத போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. இது காவல்துறை கொடுத்த அறிக்கை - அமைச்சர் ஆதவ்  </p><p>போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாக தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தனர் என்ற அமைச்சர் ஆதவின் பேச்சுக்கு பேரவையில் அமளி</p><p>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கக்கூடாது - எ.வ.வேலு</p><p>கேள்வி நேரத்திலும் கவன ஈர்ப்பு தீர்மான நேரத்திலும் குற்றச்சாட்டு கூறக்கூடாது என்பது தான் பேரவை விதி - எ.வ.வேலு</p><p>கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானத்தில் அரசு விளக்கம் தான் கூற வேண்டும், பதில் குற்றச்சாட்டு கூறுவது அவை மரபு அல்ல - எ.வ.வேலு</p><p>திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவெக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அமைச்சர் ஆதவ் பேச்சிற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி?</p><p>திமுக ஆட்சியை குறை சொல்ல புகைப்படம் காட்டும் அமைச்சரே நாங்கள் எடுத்த நடவடிக்கை குறித்து சான்று தருகிறார் - உதயநிதி</p><p>இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.</p><p>போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எதற்காக நாங்கள் அமர்த்திய அதிகாரிக்கு முக்கிய பதவி தந்தீர்கள்?  - உதயநிதி</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாருக்கு தவெக அரசே விருது தந்தது ஏன்?- உதயநிதி</p><p>எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என கூறி பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுவதால் நேரம் வீணாகிறது - எடப்பாடி பழனிசாமி</p><h2>மேகமலை விவகாரம் - தொடர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது - அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><h2>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.</p><p>மேகமலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவெடுத்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை.</p><p>மேகமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்து அப்பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.</p><h2>எம்எல்ஏ செல்லசாமி உரை</h2><p>மேகமலையை காப்புக்காடு என அறிவித்த நிலையில் வனத்துறை அதிக கட்டுப்பாடு விதித்துள்ளது.</p><p>வனத்துறையினர் கெடுபிடிகள் காரணமாக விளைபொருளை விற்க கூட முடியாமல் மேகமலை மக்கள் தவிக்கின்றனர்.</p><p>சாலை, போக்குவரத்து, குடிநீர், பள்ளிக்கூடம், ரேஷன் உள்ளிட்ட வசதிகளை தமிழ்நாடு அரசே செய்து கொடுத்துள்ளது.</p> <p>உச்சநீதிமன்றமே சொந்த நாட்டு மக்களை துணை ராணுவம் கொண்டு வெளியேற்ற கூறியது வேதனை - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பட்டா வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><h2>தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உரை</h2><p>மேகமலை - வருசநாடு மலைகிராம மக்களை வெளியேற்றுவததை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>உச்சநீதிமன்றத்தில் கடந்த கால அரசு சரியாக வாதாடாததே இந்த நிலைக்கான காரணம்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>2009 திமுக ஆட்சியில்தான் மேகமலை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டது.</p><p>2009-ல் காப்புக்காடாக அறிவித்தபோது திமுக முறையாக கையாண்டிருந்தால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது.</p><p>மேகமலை விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த தவறுகளை தவெக அரசு செய்யாது.</p><p>மேகமலை விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் தவெக அரசு மேற்கொள்கிறது. </p><p>15 ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர். கடந்த கால ஆட்சியில் இந்த வழக்குகள் முறையாக கையாளப்படவில்லை.</p><p>2025 முதல் 2026-ம் ஆண்டு வரை ஆய்வு செய்தபோது முறையான ஆதாரம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>திமுக அளித்த இறுதி அறிக்கை பெயரில் தான் உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக செய்த ஒட்டுமொத்த தவறின் காரணமாகத்தான் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.</p><p>திமுக தவற விட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>சட்டசபையில் வருவாய்த்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பதில்</p><p>சட்டசபையில் 3 துறைகள் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><h2>அமைச்சர் அருண்ராஜ்</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 100-வது நாள் இன்று.</p><p>மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற மாபெரும் தூணை தூக்கிப் பிடிக்க என்னிடம் ஒப்படைத்த முதல்வருக்கு நன்றி.</p><p>சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மீதான மானிய கோரிக்கை மீதும் விவாதம் தொடங்கியது. திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>கலைஞரின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் கொண்ட இளம் தலைவர் உதயநிதி.</p><p>திமுக ஆட்சியில் 400 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்க குறிப்பு தவெக ஆட்சியில் 300 பக்கமாக குறைந்துள்ளது. </p><p>பக்கங்கள் தான் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் கொள்கை, லட்சியங்கள் குறையவில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி</p><p>தவெக அரசின் லட்சியங்கள் குறையவில்லை. லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது - செங்கோட்டையன்</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கினோம். சொன்னது எதையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை.</p><p>கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் 77,000 பேருக்கு பட்டா வழங்கினோம்.</p><p>சென்னையில் மீட்கப்படாமல் இருந்த தோட்டக்கலை சங்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை மீட்டெடுத்தவர் ஸ்டாலின்.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் கனமழை, வெள்ளம், புயல் ஏற்பட்ட நிலையில் ரூ.5,000 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>தவெக அளித்த வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை வழங்காதது ஏன்? - திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>100 நாட்கள் தான் முடிந்தது, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>மகளிர் உரிமைத்தொகையை 28 மாதங்களுக்கு திமுக தரவில்லை, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தான் தந்தது - செங்கோட்டையன்</p><p>கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக தாமதமாக தந்தது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>திமுக ஆட்சியின் முந்தைய அதிமுக காலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வந்தது - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>கொரோனா காலத்தில் கைகொடுக்காதீர் என்று தான் சொன்னார்கள். உரிமைத்தொகை தராதீர் என சொல்லவில்லை - அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்</p><p>பட்டா கொடுத்தீர்கள், ஆனால் இடம் இல்லையே என்று கேள்வி எழுப்பிய மக்கள் தான் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ஒரு சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம், ஆனால் திமுக ஆட்சியில் நாங்கள் 27 லட்சம் பட்டா வழங்கி உள்ளோம் - சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>முறைகேடு நடந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>தவெக அரசு பொறுப்பேற்ற 100-வது நாளையொட்டி 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>திமுக தலைவர் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியதற்காக முதலமைச்சர் விஜய் பேரவையில் வருத்தம் தெரிவித்தார்.</p><p>தமிழக மக்கள் நம் உயிர் என்றால் விவசாயிகள் நம் உயிர்நாடி, சாதி மதம் என அனைத்திற்கும் அப்பாற்பட்ட தொழில் விவசாயம் - முதலமைச்சர்</p><p>தமிழ்நாட்டில் விவசாயிகளின் பயிர்க்கடன் கூடுதலாக தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பு </p><p>75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ளவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி.</p><p>ரூ.75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி.</p><p>ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35,000 தள்ளபடி - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டமன்றத்தின் கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு கற்றுக்கொடுங்கள்  </p><p>சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் கற்றுக்கொடுக்க வேண்டும்.</p><p>முதலமைச்சர் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் எழுந்திருக்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ் பேச்சால் அவையில் சலசலப்பு</p><p>முன்னாள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்றதில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை - கே.என்.நேரு</p><p>அதிமுக ஆட்சியில் நீட் கொண்டு வரப்படவில்லை. 2011, 2012ல் தான் நீட் தொடர்பான அறிவிக்கை வந்தது - தளவாய் சுந்தரம்</p><h2>தளவாய் சுந்தரம் உரை</h2><p>தமிழ்நாட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p><p>அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p> <p>2017-ம் ஆண்டு தான் நீட் தேர்வு வந்தது - அமைச்சர் ராஜேஷ் தளவாய் சுந்தரம்குமார்</p><p>நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோரை ராகுல் சந்தித்தார் - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><p>விரும்பாத மாநிலங்களுக்கு நீட் இல்லை 2014-ல் ராகுல் காந்தி வாக்குறுதி - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>2010-ம் ஆண்டு டிசம்பரில் நீட் அறிவிக்கை வந்தது.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் அறிவிக்கை வெளியிடப்பட்டது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நடந்து கொள்ள முடியாது.</p><p>நீட் தேர்வுக்கு விலக்கு தேவை என்பதே அதிமுகவின் கொள்கை.</p> <p>மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது.</p><p>மதுரவாயல் தொகுதியில் பட்டா பிரச்சனை அதிகமாக உள்ளது - தவெக எம்எல்ஏ ரேவந்த் சரண்</p><h2>ஓ.பன்னீர்செல்வம் உரை</h2><p>பேரவைக்கு சபாநாயகர் வரும்போது எழுந்து நிற்பது தான் மரபு. </p><p>முதலமைச்சர் வரும்போது அவையில் அனைவரும் எழுந்து நிற்பது மரபு இல்லை. </p> <p>சபாநாயகருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - சபாநாயகர்</p><h2>சபாநாயகர் பேச்சு</h2><p>தமிழர் பண்பாட்டை கடைபிடித்து மரியாதை செலுத்துவது அவரவர் விருப்பம்.</p><p>முதலமைச்சர் விஜய் வரும்போது இ.பி.எஸ். எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.</p><p>எழுந்து நிற்பது அவரவர் விருப்பம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. </p> <h2>அமைச்சர் ஆனந்த் உரை</h2><p>அம்மா முதலமைச்சராக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எழுந்து நிற்பார். குனிந்தபடி நிற்பார் அதை உலகமே அறியும்.</p><p>தலைவர் தளபதிக்காக மட்டுமே எங்கள் எல்லோருக்கும் மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.</p><p>ஏனென்றால் தளபதி முதலமைச்சராக வர வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.  அதன்  அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்தார்கள்.</p> <p>நீட் தேர்வை இந்த அரசு எந்தளவிற்கு எதிர்க்கிறதோ அந்த அளவிற்கு நெக்ஸ்ட் தேர்வையும் கண்டிப்பாக எதிர்ப்போம் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும் - வைத்தியலிங்கம்</p><h2>பாமக எம்எல்ஏ வைத்தியலிங்கம் உரை</h2><p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும்.</p><p>முந்திரியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். </p><p>விருத்தாசலம் - கும்பகோணம் சாலை 4 வழிச்சாலையாக்க வேண்டும்.</p><p>இயற்கை சீற்றங்களுக்கு நிரந்தர நிவாரண திட்டம் தேவை.</p><p>கும்பகோணம், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும்.</p> <h2>அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</h2><p>அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரிவுப்படுத்தி காங்கேயம் பகுதியை இணைக்க வேண்டும்.</p><p>காங்கேயத்தில் தேங்காய், அரிசி உற்பத்திக்காக புதிய தொழிற்பேட்டை அவசியம்.</p><p>தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3 கோடியை ரூ.7 கோடியாக உயர்த்த வேண்டும்.</p><p>விவசாயிகள் நலன் கருதி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.</p><p>வெள்ளவயலை தனி வட்டாரமாக அறிவிக்க வேண்டும்.</p><p>அமராவதி ஆற்றின் உபரி நீரை நீரேற்றம் செய்து காங்கேயம் தொகுதிக்கு வழங்க வேண்டும் - அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</p><h2>திமுக எம்எல்ஏ லெட்சுமணன் உரை</h2><p>3.2% மட்டுமே மருத்துவ கட்டமைப்புக்கு நிதி உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>செவிலியர்கள் பணி நிரந்தரம் - பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.</p> <h2>அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் உரை</h2><p>15 வகையான நோயாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை போதாது, ரூ.10,000- ஆக உயர்த்த வேண்டும்.</p><p>எந்த நேரத்திலும் உடல் கூறு ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும். </p><h2>வருவாய்த்துறை மானியக்கோரிக்கை மீது அமைச்சர் செங்கோட்டையன் பதிலுரை</h2><p>வருவாய்த்துறை சேவை துறையாக மாறி உள்ளது. வருவாய்த்துறையில் 26 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.</p><p>15 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>100 நாட்களில் சுமார் 39 லட்சம் சான்றிதழ்கள் வழங்கி உள்ளது வருவாய்த்துறை.</p><p>முதலமைச்சர் விஜய் ஒரு தீர்க்கதரிசி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot">அசாமில் பழங்குடியின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர் மீது துப்பாக்கிச்சூடு!... </a></p><p>* விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்றதால் காவல்துறை அவரைக் காலில் சுட்டுப் பிடித்துள்ளது. </p><p>*அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிராங் மாவட்ட சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் துருபா போரா தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/546-crimes-in-100-days-dmk-legal-wing-deputy-secretary-parandhaman">100 நாளில் 546 குற்றச் சம்பவங்கள்: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்</a></p><p>* இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான சர்க்கார் அல்ல, வெறும் சர்க்கஸ் சர்க்கார்!</p><p>* நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bangkok-gun-market-thailand-tightens-rules-traders-protest">பாங்காக் துப்பாக்கி சந்தையில் தாய்லாந்து அரசின் புதிய கட்டுப்பாடுகள்: வியாபாரிகள் கொந்தளிப்பு!... </a></p><p>*அரசின் இந்தத் தொடர் கட்டுப்பாடுகள் காரணமாகப் பல தசாப்தங்களாகத் இயங்கி வந்த பாரம்பரிய துப்பாக்கிக் கடைகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன.</p><p>*ஆசிய கண்டத்திலேயே அதிகளவில் பொதுமக்களிடம் துப்பாக்கிகள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து தாய்லாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் நடந்த உலகின் மிக அசிங்கமான நாய் போட்டி</title><link>https://www.maalaimalar.com/news/world/worlds-ugliest-dog-contest-held-in-america</link><comments>https://www.maalaimalar.com/news/world/worlds-ugliest-dog-contest-held-in-america#comments</comments><guid isPermaLink="false">314939e6-7f67-451a-82d9-76291ef48e5b</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:15:47 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:15:47.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ugliest dog,dog contest,american dog,அசிங்கமான நாய்,நாய் போட்டி,அமெரிக்க நாய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/degu9he3/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ World’s Ugliest Dog]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/degu9he3/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 ஆம் ஆண்டின் உலகின் மிக அசிங்கமான நாய் போட்டியில், ஜின்னி லூ என்ற 6 வயது பக் நாய் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தனித்துவமான தோற்றமுடைய நாய்களை ஒன்றிணைத்து உலகின் அசிங்கமான நாய் போட்டி நடத்தப்பட்டது. </p><p>சோனோமா-மரின் விவசாய சங்கத்தால் நடத்தப்பட்ட நாய் போட்டி, கலிபோர்னியாவின் சாண்டா ரோசாவில் உள்ள சோனோமா கவுண்டி கண்காட்சி மைதானத்தில் ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்றது.</p><p>இந்த நிகழ்வில், விசித்திரமான ஆனால் அழகான தோற்றமுடைய நாய்கள், முதல் பரிசை பெற்றுக் கொள்வதற்காக போட்டியிட்டன. சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஜின்னி லூவின் உரிமையாளர் மிஷேல் கிரேடிக்கு, MUG ரூட் பீர் நிறுவனத்திடமிருந்து சுமார் 4,77,252 ரூபாயும் ($5,000) பரிசாக வழங்கப்பட்டது.</p><p>MUG ரூட் பீர் நிறுவனம், இரண்டாம் இடம் பிடித்த சிஹுவாஹுவா/போமரேனியன் கலப்பின நாயான பிங்கிக்கு சுமார் 2,86,770 ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த சிஹுவாஹுவா கலப்பின நாயான ஓட்டோவிற்கு சுமார் 1,91,180 ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.</p><p>முதல் பரிசை பெற்ற ஜின்னி லூ நாய், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பக் ரெஸ்க்யூ மூலம் தத்தெடுக்கப்பட்டதாகவும், அன்றிலிருந்து அது தொடர்ச்சியான குறும்பு மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்து வருவதாகவும் அதன் பாதுகாவலர் தெரிவித்தார்.</p><p>இதுகுறித்து நாயின் உரிமையாளர் கூறுகையில், உலகின் மிக அசிங்கமான நாய் என்ற பட்டத்தை வெல்வதற்காக எனது ஜின்னி லூ நாய் தொடர்ந்து நான்காவது முயற்சியை மேற்கொண்டது.</p><p>அமெரிக்க்காவில் நடத்தப்பட்ட இந்த, ‘உலகின் மிக அசிங்கமான நாய் போட்டி’ என்பது ஒருபோதும் நாய்களை அவமானப்படுத்துவதற்காக நடத்தப்படுவதில்லை.</p><p>மாறாக, போட்டி அமைப்பாளர்கள் இந்த நிகழ்வை, ஒவ்வொரு நாயின் தனித்தன்மையையும் உள்ளார்ந்த அழகையும் எடுத்துக்காட்டவும், அன்புக்காக காத்திருக்கும் பாசமுள்ள நாய்களை வெளி உலகிற்கு காண்பித்து, செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் ஊக்குவிப்பாக பார்கின்றனர்.</p><p>50 ஆண்டுகளாக, இந்த நிகழ்வு ஒவ்வொரு நாயின் தனித்துவத்தையும் கொண்டாடுவதோடு, கருணை, மீட்பு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய செய்திகளையும் பகிர்ந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>25 ஆண்டுகள் பொறியாளர் பணி - தற்போது பள்ளி பேருந்து ஓட்டுநர்: அமெரிக்க மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/25-years-as-engineer-now-school-bus-driver-life-of-us-software-engineer</link><comments>https://www.maalaimalar.com/news/world/25-years-as-engineer-now-school-bus-driver-life-of-us-software-engineer#comments</comments><guid isPermaLink="false">f622adf3-cf32-4e6d-8be1-38af7d434bae</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:11:01 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:11:01.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,software engineer,Adobe,மென்பொருள் பொறியாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/q9a3mdsa/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 25 ஆண்டுகள் Adobe பொறியாளர் தற்போது பள்ளி பேருந்து ஓட்டுநராக புதிய வாழ்க்கை தொடக்கம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ Adobe engineer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/q9a3mdsa/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடோபில் முன்னாள் மென்பொருள் தரப் பொறியாளராக 25 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர், வேறு தொழில்நுட்ப பணியை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், பள்ளி பேருந்து ஓட்டுநர் வேலையை தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p>அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த ஜேம்ஸ் ஸ்ட்ரான், ஆகஸ்ட் 2025-ல் அடோப் டிஜிட்டல் வீடியோவில் மூத்த மென்பொருள் தரப் பொறியாளர் பதவியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அன்று முதல், அவர் நீண்ட நாட்களாக வேறு வேலையை தேடி வந்தார்.</p><p>ஆனால் ஒரு வருடத்திற்கும் மேலாகியும் வேலை கிடைக்காத காரணத்தால், அவர் முற்றிலும் மாறுபட்ட பாதையை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் தனது மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பேருந்து ஓட்டுநர் வேலைக்கு முயற்சி செய்து, அதனை தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் லிங்க்ட்இன் தளத்தில் ஒரு பதிவில், “ஒரு வருடத்திற்கும் மேலாக நீண்ட, கடினமான வேலை தேடிய பிறகு, உயர் தொழில்நுட்ப துறையால் மனமுடைந்து, பாகுபாட்டிற்கு உள்ளானேன்.</p><p>இந்த நிலையில், எனது அடுத்த அத்தியாயம் தொடங்கியுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று அவர் எழுதியிருந்தார்.</p><p>மேலும் தனது முந்தைய தொழில்நுட்ப பணியை விட இந்த புதிய வேலையில் சம்பளம் கணிசமாக குறைவாக இருந்தாலும், இந்த மாற்றத்தை ஆவலுடன் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>இந்தப் பணி தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், தனது புதிய சக ஊழியர்கள் அக்கறையோடும், அன்போடும், இயல்போடும் இருப்பதாகவும் அவர் கூறினார்.</p><p>மேலும், “என் முந்தைய நிறுவனத்தில் என்னை புறக்கணித்து, என்னை தாழ்த்தி, இறுதியில் வேலையை விட்டு நீக்கியவர்களுக்கும் நன்றி. ஆனால், நீங்கள் எனக்கு ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான வழியை காட்டியதால் மட்டுமே இந்த நன்றி.</p><p>உங்களைப் போன்றவர்களால் தான், நான் ஒரு கணினிக்கு பதிலாக 40 அடி பேருந்தை ஓட்டப் போகிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.</p><p>மேலும், என் விண்ணப்பங்களைக் கண்மூடித்தனமாக நிராகரித்து, நேர்முக தேர்வுக்கு பதிலளிக்காமல் தவிர்த்தவர்களும், நேர்காணல்களுக்கு கூட வராமல் இருந்த முதலாளிகளும், இனியாவது வேலை தேடி வருபவர்களை நல்ல முறையில் நடத்துவார்கள் என்று நம்புகிறேன்,” என்று அவர் பதிவிட்டார்.</p><p>பொறியாளரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஒருவர் அந்த பதிவுக்கு, “அடோபில் நீங்கள் செய்த வேலையை போலவே பேருந்து ஓட்டுவதும் முக்கியமானது தான்.</p><p>நீங்கள் அதை ஆர்வத்துடன் செய்யும் வரை, நீங்கள் எதிர்பாராத விதத்தில் ஒருவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பெருநிறுவன உலகம் சிறந்த மனிதர்களை இழந்து வருகிறது, இதை நாம் வரும் தலைமுறைகளிலும் காண்போம்” என்று பதிவிட்டார்.</p><p>மற்றொரு நபர், “பள்ளி வாகனங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது ஒரு உன்னதமான கடமையாகும். நீங்களும் உங்களுக்காக கூடுதல் வழிகளை கண்டறிவீர்கள் என்று நம்புகிறேன்.</p><p>இந்த வாழ்க்கையில் நமக்கு இருப்பது ஒரே ஒரு உடல்தான், ஆனால் நாம் செய்யும் வேலைகள் எல்லாமே நமது நேரத்தையும் சக்தியையும் வேறு இடங்களில் செலவிட வேண்டும் என்று நிர்பந்திக்கிறது.</p><p>பணம் என்பது குறுகிய வடிவம் தான், ஆனால் நீங்கள் வாழ்வதற்கு தேவையானவை உங்களிடம் நிச்சயமாக இருக்கும்” என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உயிரோடு இருக்கும் பெண்ணிற்கு இறந்ததாக சான்றிதழ்: கலெக்டரின் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/certificate-declaring-living-woman-dead-collectors-complaint</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/certificate-declaring-living-woman-dead-collectors-complaint#comments</comments><guid isPermaLink="false">23127582-a5af-4918-a629-fced1d610b5b</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:02:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:02:37.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,madurai,இறப்பு சான்றிதழ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/h1g3p1m8/complaint001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இறப்பு சான்றிதழ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/h1g3p1m8/complaint001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரோடு இருக்கும்போது வி.ஏ.ஓ. இறந்ததாக சான்றிதழ் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மதுரையில் வசிக்கும் பெண்மணி ஒருவர் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது பெருமாள் என்பவர் யார்? என்று கேட்டுள்ளனர். அதற்கு என்னுடைய மகன்தான் என அந்த பெண்மணி கூறியுள்ளார். அப்போது பெருமாளுடைய அம்மா இறந்து விட்டதாகவும், இறந்து போன பெருமாளின் அம்மாவிற்கு நிலமும், நகையும் உள்ளது. அதை பெற்றுத் தருமாறு பெருமாளின் மனைவி மனு கொடுத்துள்ளார். அதன் விசாரணை நடத்த வந்துள்ளோம் என போலீசார் சென்னதை கேட்டு அந்த பெண் அதிர்ந்துள்ளார்.</p><p>நான் இங்கு உங்கள் முன் உயிரோடு நிற்கிறேன். நான் இறந்ததாக எப்படி கூறலாம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் என்னுடைய மகன் பெருமாள் சுமார் 6 மாதத்திற்கு முன் இறந்து போனார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து உடற்கூறு ஆய்வு ரிப்போர்ட் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அப்போது போலீசார் நீங்கள் இறந்ததாக சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்தாங்க. இதுதான் சான்றிதழ் என காண்பித்துள்ளனர். ஆனால், அந்த பெண் நான் உயிரோடு இருக்கிறேன் என அடித்துச் சொல்லியுள்ளார். பின்னர்தான் சுந்தரி என்ற தனது மருமகள் போலியாக சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p>அப்படி என்றால் ஆதார் கார்டு உடன் காவல் நிலையத்திற்கு வாருங்கள் என்று கூறிவிட்டு போலீசார் சென்றுள்ளனர். அங்கு போலீசாரிடம் தன்னுடைய ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் காட்டியுள்ளார். உடனே போலீசார், விஏஓ-வை சென்று பாருங்கள் என்று கூறியுள்ளனர்.</p><p>அந்த பெண்மணியும் வி.ஏ.ஓ. அலுவலகம் சென்று, நான் உயிரோடு இருக்கிறேன். அப்படி இருக்கும்போது இறந்து விட்டதாக சான்றிதழ் வழங்கியுள்ளீர்கள். என்ன நியாயம் என்று கேட்டுள்ளார்.</p><h2>வி.ஏ.ஓ.-விடம் முறையீடு</h2><p>அதற்கு வி.ஏ.ஓ. நாங்கள் ஆதாரத்துடன்தான் சான்றிதழ் வழங்கியுள்ளோம் என்று கூறியிருக்கிறார். நான் 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் செல்கிறேன் என்று கூறிய பின்னரும் வி.ஏ.ஓ. சொன்னதை திரும்பவும் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் இறப்பு சான்றிதழை தாருங்கள் என்று கேட்க, அவரும் வழங்கியுள்ளார்.</p><p>இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. பின்னர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கும் தீர்வு கிடைக்கவில்லை. நாங்கள் உங்களுக்கு என்ன தேவையோ அதை செய்கிறோம் என சமாதானம் செய்யப்பட்டுள்ளது. எனக்கு ஏதும் தேவையில்லை. ஏன் வழங்கப்பட்டது என்று கேட்டு தீர்வு வேண்டும் எனக் கூறியுள்ளார்.</p><h2>கலெக்டரிடம் புகார்</h2><p>இறுதியாக கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார். கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரோடு இருக்கும் பெண்மணிக்கு இறந்ததாக சான்றிதழ் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாங்காக் துப்பாக்கி சந்தையில் தாய்லாந்து அரசின் புதிய கட்டுப்பாடுகள்: வியாபாரிகள் கொந்தளிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/bangkok-gun-market-thailand-tightens-rules-traders-protest</link><comments>https://www.maalaimalar.com/news/world/bangkok-gun-market-thailand-tightens-rules-traders-protest#comments</comments><guid isPermaLink="false">8d3153d2-897b-4d94-8d20-b9a796d293aa</guid><pubDate>Mon, 17 Aug 2026 15:15:07 +0000</pubDate><atom:updated>2026-08-17T15:15:07.934Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தாய்லாந்து,thailand,பாங்காக்,Asian countries,Bangkok gun market,பாங்காக் துப்பாக்கி சந்தை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/w16ml21l/yyyy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bangkok gun market ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/w16ml21l/yyyy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற துப்பாக்கி விற்பனைப் பகுதியில் அரசு மேற்கொண்டு வரும் கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளூர் வணிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து அரசு எடுத்து வரும் இந்த முடிவுகள், உண்மையான குற்றங்களைத் தடுக்காமல் சட்டப்பூர்வ வணிகங்களை மட்டுமே கடுமையாகப் பாதிப்பதாக வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>துப்பாக்கி இ<strong>றக்குமதித்</strong> தடை</h2><p>கடந்த 2023-ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/news/world/london-house-prices-see-largest-fall-in-eight-years">பாங்காக் </a>வணிக வளாகத்தில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தாய்லாந்தில் வெளிநாடுகளிலிருந்து துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதற்கு அரசு முற்றுப்புள்ளி வைத்தது. இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் நடந்த பள்ளித் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் விளைவாக, புதிய துப்பாக்கி வாங்குவதற்கான அனுமதிகளை வழங்குவதையும் உரிமங்களைப் புதுப்பிப்பதையும் இடைநிறுத்த பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>தொ<strong>ழில் இழ</strong>ப்பு</h2><p>அரசின் இந்தத் தொடர் கட்டுப்பாடுகள் காரணமாகப் பல தசாப்தங்களாகத் இயங்கி வந்த பாரம்பரிய துப்பாக்கிக் கடைகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன. பல கடைகளில் விற்பனைக்குத் துப்பாக்கிகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது. சில கடை உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காகத் துப்பாக்கிக் கடைகளை ரொட்டிப் பாக்கரி போன்ற வேறு தொழில்களாக மாற்றி நடத்தி வரும் பரிதாபகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.</p><h2>கறுப்பு<strong>ச் சந்தை அதி</strong>கரிக்கும் என்ற எச்சரிக்கை</h2><p>அரசின் இந்த முடிவுகள் குறித்துப் பேசிய தாய்லாந்து துப்பாக்கி வணிகர்கள் சங்கத்தின் தலைவர், சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி வாங்குவதைக் கட்டுப்படுத்துவது குற்றங்களைக் குறைக்காது என்று தெரிவித்துள்ளார். சட்டப்பூர்வ வழிகள் அடைக்கப்படும் போது, மக்கள் சட்டவிரோத கறுப்புச் சந்தையை நோக்கித் தள்ளப்படுவார்கள் என்றும், இதனால் குற்றங்கள் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.</p><p>ஆசிய கண்டத்திலேயே அதிகளவில் பொதுமக்களிடம் துப்பாக்கிகள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து தாய்லாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. தோராயமாக 1 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் பொதுமக்களிடம் உள்ள நிலையில், அதில் 40 லட்சத்திற்கும் அதிகமானவை எந்தவிதப் பதிவும் இல்லாத சட்டவிரோதத் துப்பாக்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>100 நாளில் 546 குற்றச் சம்பவங்கள்: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/546-crimes-in-100-days-dmk-legal-wing-deputy-secretary-parandhaman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/546-crimes-in-100-days-dmk-legal-wing-deputy-secretary-parandhaman#comments</comments><guid isPermaLink="false">fc05a74b-6863-4e41-a81d-642ceacb1c2a</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:51:33 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:51:33.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தவெக அரசு,TVK Govt,பரந்தாமன்,Parandhaman</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rwwmea9d/Parandhaman001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தாமன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rwwmea9d/Parandhaman001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-remarks-trigger-dmk-aiadmk-protest-in-assembly">திமுக</a> சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>த.வெ.க. அரசு பொறுப்பேற்றபோது ‘இட்ஸ் எ பிகினிங் ஆஃப் ஏ நியூ எரா’ என்று சொன்னார். உண்மைதான், இது ஒரு நியூ எரா—100 நாளில் 546 குற்றச் சம்பவங்களைச் செய்த ஒரு நியூ எரா!. இன்னைக்கு விஜய்யினுடைய சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியின் சாதனை இது. 'பெண்கள் பாதுகாப்பு ரொம்ப நான் ஸ்ட்ரிக்ட்டா வச்சிருப்பேன்'னு சொன்னார். ஆனால், இன்னைக்கு பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் தமிழ்நாட்டில் இருக்கின்றது என நாட்டு மக்களுக்கே நன்றாகத் தெரியும். தவெக கட்சியில் இருக்கக்கூடிய பெண்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு பலவீனமான சர்க்காராகத்தான் இது.</p><h2>கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது</h2><p>போதை கலாச்சாரத்திலிருந்து நம்ம பசங்களை மீட்கணும், அவங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்குனு சொன்னார். ஆனால் போதை பழக்கமும் கடத்தலும் இங்க தீவிரமாக இருக்கிறது. கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது என்று காவல்துறைக்குத் தகவல் கொடுத்த கோவை கல்லூரி மாணவன் அமுதனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத வெட்கக்கேடான சர்க்கஸ் சர்க்கார் அரசுதான் இந்த விஜய்யின் அரசு.</p><p>காவல்துறையைக் கையில் வச்சிருக்கக்கூடிய முதலமைச்சர். 'ஜென்-ஜி' பிள்ளைகள் எல்லாம் உங்களுக்கு ஆர்வமாக வாக்களித்தார்களே, இந்த முதலமைச்சருக்கு, இன்னைக்கு 'ஜென்-ஜி'கள் மட்டும் ஏறத்தாழ 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்றைக்குக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த கொலைப் பழியை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த 100 நாளில் பல குற்றச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கு. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி 546 குற்றச் சம்பவங்கள் இருக்கு. இந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக்கிட்டீங்களா?</p><p>கோவையில் போதைப்பொருளைப் பற்றித் தகவல் கொடுத்ததாகச் சொல்லி, அமுதன் என்கிற மாணவனை அடித்துக் கொன்றுள்ளனர். அந்த மாணவன் போதை பொருள் பற்றி கொடுத்த தகவலை காவல்துறையே போதை கும்பலிடம் கொடுத்துள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் என்ன சொல்றாரு? 'இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல்'னு சொல்லிட்டு வழக்கின் தன்மையை திசைதிருப்புறார்.</p><p>நான் கேட்கிறேன் முதலமைச்சர் அவர்களே, இளைஞர்களுக்கான அரசு' என்று நீங்கள் மார்தட்டிக் கொள்கிறீர்கள். இளைஞர்கள் மூலமாகவே ஆட்சிக்கு வந்தேன் என்று சொல்லுகிற நீங்கள், ஒரு இளைஞன் குற்றம் நடைபெறுகிறது என்று காவல்துறைக்குச் சொன்ன ரகசியத்தைக் காப்பாற்றாத காவல்துறை—அப்படிப்பட்ட காவல்துறை வைத்திருக்கும் உங்களுக்கு முதலமைச்சராக இருப்பதற்கு கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் உங்களை நோக்கி நான் கேட்கிறேன்.</p><p>அமுதனுடைய தாயார் சொல்லுகிறார்கள், அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி  எங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றால், ஆளுகிற அரசின் மீது இந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை! எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக மீதுதான் நம்பிக்கை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.</p><h2>இரண்டு அமைச்சர்களை ஓட விட்டிருக்கிறார்கள்</h2><p>நேற்றைக்கு திருவொற்றியூரில் இரண்டு அமைச்சர்களை (ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன்) ஓடவிட்டிருக்கிறார்கள். இந்த 100 நாள் சாதனை என்னவென்று சொன்னால், அமைச்சர்களை தலைதெறிக்க ஓட வைத்ததுதான் இந்த 100 நாள் சாதனை. இதே மாதிரி தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்றதை தட்டிக் கேட்ட பையனை அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செஞ்சிருக்காங்க. திருவெறும்பூரில் இரண்டு தவெக காரங்க ஒருத்தரை வெட்டிக் கொலை பண்ணியிருக்காங்க.</p><p>விருதுநகரில் ஒரு பள்ளிப் பெண்ணைத் துன்புறுத்தியதைத் தட்டிக் கேட்ட அப்பாவை வெட்டிக் கொன்றிருக்காங்க. காஞ்சிபுரத்தில் கோயில் திருவிழாவில் இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றிருக்காங்க. திருப்பூர்ல காதலை மறுத்த பெண்ணைக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த அம்மாவையும் இளைஞர்களையும் கொன்றிருக்காங்க. ஈரோட்டில் ஃபேன்சி ஸ்டோருக்குள் புகுந்து ஒரு பெண்ணைக் கத்தியால் குத்தியிருக்காங்க. இதெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் நடந்த குற்றச் சம்பவங்கள்.</p><p>அம்பத்தூர் புதூரில் ஆட்டோவில் ஒரு பெண்ணை உட்கார வச்சு கழுத்தை அறுத்து ரோட்டில் வீசியிருக்காங்க. இந்த மாதிரியான குற்றச் சம்பவங்கள் எல்லாம் இதற்கு முன்னாடி நடந்ததே இல்லை. சினிமா படத்தில் வருகிற மாதிரியான கொலைக் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். கும்மிடிப்பூண்டியில் 17 வயசு இளைஞனைக் கொன்று கல்லறை மேல போட்டு, சில கொலைச் சம்பவங்களைச் செய்து ரீல்ஸ் எடுத்து வெளியிடுகிறார்கள். இதெல்லாம் எந்தக் கலாச்சாரத்தைக் காட்டுகிறது?</p><p>ஒரு திரைத்துறையிலிருந்து வந்தவர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர். அதனுடைய விளைவு என்னவென்றால், நீங்கள் திரைப்படத்தில் ஹீரோவாக இருக்கலாம், நடித்த ஹீரோயிசத்தைப் பார்த்து இன்னைக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இதைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.</p><h2>வேலூரில் தலைமைப் பெண் காவலர் கொலை</h2><p>வேலூரில் தலைமைப் பெண் காவலரையே குத்திக் கொன்றிருக்கிறார்கள். இதைவிட என்ன கேவலம் இருக்கு? வெட்கமாக இல்லை முதலமைச்சருக்கு? காவல்துறையைத் தன் கையில் வச்சிருக்கக்கூடிய முதலமைச்சர், காவல்துறையிடம் தகவலைக் கொடுக்கும் பையனைக் காப்பாற்றுவதற்கு வக்கில்லை இந்த காவல்துறைக்கு. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் கைதின் போது, சாலைகளில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞரைப் பார்த்து இரண்டு கையை வைத்து அடிப்பார் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ். எந்தக் காவல் ஆணையர் ஒரு கைது நடவடிக்கைக்கு ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள்? இருக்கிற வேலையை விட்டுவிட்டு வேறு வேலையை நீங்கள் செய்வதனால்தான் இந்த குற்றச் சம்பவங்கள் நடக்கிறது.</p><p>கோயம்புத்தூரில் இதே மாதிரி நகைக்காக ஒரு வயதான பெண்ணைக் கொன்றிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் பச்சிளம் குழந்தையிலிருந்து பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தா சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுவேன்'னு சொன்னாரே, இதான் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றும் லட்சணமா?.</p><p>இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான சர்க்கார் அல்ல, வெறும் சர்க்கஸ் சர்க்கார்! நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது. இந்த 100 நாட்களில் செய்ததெல்லாம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என எதையும் சரிசெய்ய முடியாமல் பல்லிளிக்குது இந்த 100 நாள் ஆட்சி.</p><p>இவ்வாறு பரந்தாமன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அசாமில் பழங்குடியின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர் மீது துப்பாக்கிச்சூடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot</link><comments>https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot#comments</comments><guid isPermaLink="false">4a3885cc-3049-4421-984b-b31fbd6ca81f</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:50:26 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:50:26.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Sexual assault,துப்பாக்கிச்சூடு,அசாம்,Assam,Kajalkhan Police Station</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/qv7v9o41/gun.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/qv7v9o41/gun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அது தொடர்பான வீடியோவை இணையத்தில் பரப்பிய குற்றச்சாட்டில் கைதான நபர், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்றதால் காவல்துறை அவரைக் காலில் சுட்டுப் பிடித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கை<strong>து நடவடிக்கை</strong></h2><p>அசாம் மாநிலம் சிராங் மாவட்டத்திற்குட்பட்ட காஜல்கான் காவல் எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த நசிருல் ஷேக் என்பவன், தனது கூட்டாளிகளான பீர் முகமது மற்றும் ஹாருனுல் ஹசன் ஆகியோருடன் இணைந்து <a href="https://www.maalaimalar.com/news/national/bengaluru-toddler-critical-after-fall-two-year-old-boy-severely-injured-in-third-floor-apartment-grille-accident">பழங்குடியின</a>த்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.</p><p>மேலும், அந்த கொடூரமான சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சிராங் மாவட்ட காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, முதன்மை குற்றவாளியான நசிருல் ஷேக் உட்பட மூன்று பேரையும் கைது செய்தது.</p><h2>விசாரணை<strong>யின் போது தப்பியோ</strong>ட முயற்சி</h2><p>கைது செய்யப்பட்ட நசிருல் ஷேக்கை, நீதிமன்ற உத்தரவின்படி மூன்று நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, வழக்கு தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்க காஜல்கான் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புமேஸ்வர் மலைப் பகுதிக்கு நசிருல் ஷேக்கை காவல்துறையினர் நேற்று அழைத்துச் சென்றனர்.</p><p>அப்போது, நசிருல் ஷேக் திடீரென பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை பலமாகத் தள்ளிவிட்டு, அடர்ந்த காட்டுப்பகுதியை நோக்கித் தப்பியோட முயன்றுள்ளான்.</p><h2>கா<strong>லில் துப்பாக்கி</strong>ச்சூடு</h2><p>காவல்துறையினர் உடனடியாக எச்சரிக்கை விடுத்தும் அவன் நிற்காமல் தொடர்ந்து ஓடியதால், வேறு வழியின்றி அவனைக் கட்டுப்படுத்த துப்பாக்கியால் சுட்டனர். இதில் நசிருல் ஷேக்கின் காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான். உடனடியாக மீட்கப்பட்ட அவன், காஜல்கானில் உள்ள ஜே.எஸ்.பி சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். </p><p>தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிராங் மாவட்ட சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் துருபா போரா தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு 1,00,097-ஆக உயர்வு - மருத்துவர்கள் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/health/tamil-nadu-records-over-one-lakh-new-cancer-cases-in-2025</link><comments>https://www.maalaimalar.com/health/tamil-nadu-records-over-one-lakh-new-cancer-cases-in-2025#comments</comments><guid isPermaLink="false">22ee139e-cc04-482e-995b-0ffedf10ce19</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:47:27 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:47:27.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cancer,புற்றுநோய் அபாயம்,Cancer hospital,Cancer Awareness,புற்றுநோய்,புற்றுநோய் அறிகுறி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/t27u3i23/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது]]></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Cancer ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/t27u3i23/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆரோக்யம் (Health)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய <a href="https://www.maalaimalar.com/topic/புற்றுநோய்">புற்றுநோய்</a> பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டுக்கான சமீபத்திய புள்ளிவிவரங்களில், மாநிலத்தில் 1,00,097 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.</p><p>இது, நோய்ப் பரவலின் தீவிரம் மற்றும் தொடர்ச்சியான உயர்வை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு, நோய்த்தடுப்பு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சைத் திறன் குறித்து சுகாதார அதிகாரிகளிடையே கவலைகளையும் எழுப்பியுள்ளது. </p><h3><strong>புற்றுநோய் முன்னெச்சரிக்கை</strong></h3><p>வலுவான பரிசோதனைத் திட்டங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் இல்லாமல், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>புற்று நோய் பாதிப்பு 2020-ல் 68,750 இல் இருந்து, 2021-ல் 76,968 ஆகவும்; 2022-ல் 89,265 ஆகவும் 2023-ல் 92,816 ஆகவும், 2024-ல் 96,486 ஆகவும் உயர்ந்து, இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளை தாண்டியுள்ளது.</p><p>இந்தத் தொடர்ச்சியான அதிகரிப்பு, பெருகிவரும் நோய்ப் பாதிப்பையும், மாவட்டங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகளின் அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுகிறது.</p><h3><strong>புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு</strong></h3><p>2025-ஆம் ஆண்டில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில், 53,542 பேர் பெண்கள், 46,555 பேர் ஆண்கள் ஆவர். தமிழ்நாட்டில் தற்போது புற்றுநோயுடன் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கை 1,09,097-ஐ எட்டியுள்ளது.</p><p>சென்னையில் இந்த ஆண்டு 8,505 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகி, தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் 7,295 வழக்குகளும், வேலூரில் 6,525 வழக்குகளும் பதிவாகியுள்ளன.</p><p>நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளுக்கு வாழ்க்கை முறை தொடர்பான இடர் காரணிகள், காற்று மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் தாமதமான நோயறிதல் ஆகியவற்றை சுகாதார வல்லுநர்கள் காரணமாகக் கூறுகின்றனர்.</p><h3><strong>புற்றுநோய் பாதிப்பு</strong></h3><p>புற்றுநோய்களின் தன்மைகள் பாலினத்தைப் பொறுத்தும் மாறுபடுகின்றன. ஆண்களிடையே, வாய்ப் புற்றுநோயே மிகவும் பொதுவானதாக உள்ளது; இது பெரும்பாலும் புகையிலைப் பயன்பாட்டுடன் தொடர்புடையது. அதனைத் தொடர்ந்து பெருங்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்கள் காணப்படுகின்றன.</p><p>பெண்களிடையே, மார்பகப் புற்றுநோய் முதலிடம் வகிக்கிறது. கருப்பை வாய் மற்றும் சினைப்பைப் புற்றுநோய்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. இது, வலுவான விழிப்புணர்வு மற்றும் வழக்கமான சமூகப் பரிசோதனை முயற்சிகளின் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறது.</p><p>கிட்டத்தட்ட பாதி புற்றுநோய் பாதிப்புகள் முற்றிய நிலைகளில் கண்டறியப்படுவதால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து, சிகிச்சைச் செலவுகளும் அதிகரிக்கின்றன என்று மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.</p><h3><strong>பழக்க வழக்கங்கள்</strong></h3><p>வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல், புகையிலை மற்றும் மதுவைத் தவிர்த்தல், மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள், அபாயத்தைக் குறைப்பதற்கு அத்தியாவசியமானவையாகக் கருதப்படுகின்றன.</p><p>தொடர்ச்சியான கட்டிகள், காரணமற்ற எடை இழப்பு, நீடித்த வலி அல்லது அசாதாரண அறிகுறிகளுக்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>இதற்கிடையில், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் கருப்பை, மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களால் மட்டும் 10,821 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>