<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 11 Aug 2026 09:56:29 +0000</lastBuildDate><item><title>
Tamil News Live: FCRA திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்  - 11 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-august-2026#comments</comments><guid isPermaLink="false">a3c449d5-f099-414e-8242-4ebc0475b347</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:54:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:56:16.719Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lbx76f8s/speaker1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lbx76f8s/speaker1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆக்கப்பூர்வ, ஆரோக்கியமாக கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம்- அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சட்டசபையில் சபாநாயகர் எழுந்து நின்ற பின்பும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சல் போடுவது சரியல்ல- ராஜ்மோகன்</p><p>நாங்கள் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது போல், அமைச்சர் ஆதவ் கூறியதையும் சபாநாயர் நீக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி</p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தேவையில்லாத கருத்துகளை சட்டசபையில் பதிவு செய்திருக்கிறார்- எடப்பாடி பழனிசாமி</p><p>எடப்பாடி பழனிசாமி இறுதியாக பேசியது ஆத்திரம் மூட்டும் வகையில் இருந்தது- முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>திமுக, அதிமுக ஒன்றாக சேர்ந்து பேசுகிறோம் என்று சபாநாயகர் கூறினார், அது தேவையற்றது- முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>திமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை- முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும்- அமைச்சர் ராஜ்மோகன்</p><p>குதிரை பேரம் குறித்து அதிமுக- தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி மாறி முழக்கமிட்டதால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.</p><p>அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உங்களுடைய நலனுக்காக டெல்லியில் சரணடைந்தீர்கள். எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைகின்றனர். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அங்கிருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் பயணிக்கின்றனர்- ஆதவ் அர்ஜூனா</p><p>ஜெயலலிதா இருந்த வரை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படவில்லை - ஆதவ் அர்ஜூனா</p><p>இந்த ஆட்சியில் ஒரு கட்சியில் வெற்றி பெற்று ராஜினாமா செய்கிறார்கள். உடனே வேறு கட்சியில் சேருகிறார்கள். 'குதிரை பேரம்' இதனை தவிர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p> <p>நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.</p><p>மத்திய அரசு 60% மாநில அரசின் 40% பங்களிப்புடன் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.</p><p>காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டத்திற்கு தேவையான திட்ட அறிக்கை முன்னதாக தயாரிக்கப்பட்டு விட்டது - எடப்பாடி பழனிசாமி</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>கலப்பின பசுக்கள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகள் நலனை காக்கும் வகையில் அறிமுகம் செய்ய வேண்டும்.</p><p>3 மாவட்டங்களை உள்ளடக்கிய அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் உள்ள சிறுசிறு குறைபாடுகளை நீக்க வேண்டும்.</p><p>அத்திக்கடவு-அவினாசி திட்டம் கட்டம் 2-ஐ செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p>மாசடைந்த அமராவதி, நொய்யல் ஆறுகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p> <h2>உழவன் செயலி</h2><p>அதிமுக கொண்டு வந்த உழவன் செயலி திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.</p><p>விவசாயிகள் நலன் கருதி ஓசூரில் உள்ள சர்வதேச மலர் ஏல மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மாம்பழ விளைச்சல் அதிகம், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்பு, தேவையான நிவாரணம் தரப்பட வேண்டும்.</p><p>தட்கல் முறையில் விண்ணப்பித்து காத்திருக்கும் 65,000 விவசாயிகளுக்கு உடனடியாக பம்பு செட் தரப்பட வேண்டும்.</p><p>சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>தவெக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><p>வறட்சியால் தவிக்கும் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் சிறு, குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கி கண்டமான பேருந்துகளை ஒதுக்கிவைத்து விட்டு புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்.</p><p>நெல், கரும்புக்கு தவெக அரசு அறிவித்த ஊக்கத்தொகை போதாது.</p><p>அதிமுக அரசு இருந்தபோது 2 முறை விவசாய கடனை தள்ளுபடி செய்தோம். இப்போது விவசாயிகள் காத்திருக்கின்றனர் - எடப்பாடி பழனிசாமி </p><p>தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளையும் ஏசி பேருந்துகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் கூறி உள்ளார் - அமைச்சர் தமிழன் பார்த்திபன்</p><p>அனைத்து குக்கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்து சேவைகள் ஏற்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><h2>பணியிடங்கள்</h2><p>மின்துறையில் அதிக காலிப்பணியிடங்கள் இருப்பதன் காரணமாக தான் அதிக மின்தடைகள் ஏற்படுகிறது.</p><p>ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை 5 முதல் 7% வரை உள்ளதால் காலி பணியிடம் அதிகரித்துள்ளது.</p><p>விரைந்து செயல்பட்டால் தான் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியும் - எடப்பாடி பழனிசாமி</p><h2>எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு</h2><p>தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது.</p><p>காலி பணியிடங்களை படிப்படியாக நிரப்பினால் தான் அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.</p><p>ஆட்சிக்கு வந்த உடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனக்கூறினீர்கள், அதனை செயல்படுத்த வேண்டும்.</p><p>பொதுப்பணித்துறை நிறுவனங்களில் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடம், மின்சாரத்துறையிலும் பல காலிப்பணியிடங்கள் உள்ளன.</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன், 40,000 பள்ளிகளுக்கு தேவையான நிதியை கேட்டுப் பெறுவார் என நம்புகிறேன்.</p><p>பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் சில இடங்களில் பேசினால் தான் தீர்வு காண முடியும்.</p><p>தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும் </p><p>பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றி உள்ளீர்கள். தமிழ்நாட்டில் உள்ள 40,000 அரசு பள்ளிகளிலும் தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p> <h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி.</p><p>ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாக தரப்படுமா என விளக்கம் அளிக்க வேண்டும்.</p><p>வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை, வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை இல்லை.</p><p>நிதி மேலாண்மைக்கு சரியான பாதை போடப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது.</p><p>இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக உயர்த்தி விடுவீர் என்பதில் சந்தேகமில்லை.</p> <p>அடுத்த 6 மாதங்களில் 8000 கோடி கிடைக்க வேண்டுமென்றால் அது ஏன் வரி வருவாயில் சேரவில்லை -எடப்பாடி பழனிசாமி</p><p>2026-2027 வரி வருவாயைப் பார்க்கும்போது நிதி மேலாண்மையை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது - எடப்பாடி பழனிசாமி</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாள்கள் தான்.</p><p>100 நாள் செயல் திட்டங்களை புதிய அரசு வெளியிடுவது வழக்கம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதலீடுகள் கிடைக்கும்.</p><p>வெள்ளை அறிக்கையில் மாநில வரி வருவாய் கணிசமாக கசிந்துள்ளதாக தவெக அரசு கூறியுள்ளது.</p><p>தவெகவை போல திமுகவும், அதிமுகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளன - எடப்பாடி பழனிசாமி</p><p>வேளாண் பட்ஜெட் மீதான விவாதம்</p><h2>எடப்பாடி பழனிசாமி (அதிமுக) உரை</h2><p>புதிய அரசு பொறுப்பேற்ற முதல் சில மாதங்கள் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.</p><p>FCRA சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.</p><p>FCRA சட்டதிருத்த மசோதா மூலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிகம் பாதிக்கப்படும் - அமைச்சர் வன்னிஅரசு</p><p>கிறிஸ்தவர்களை குறிவைத்து தான் FCRA திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.</p><p>தொண்டு நிறுவனங்களை முடக்க, சொத்துக்களை அபகரிக்க ஏற்கனவே 4 முறை பாஜக அரசு சட்டத்திருத்தம். 4 முறை சட்டத்திருத்தம் கொண்டு வந்த பாஜக இப்போது கிறிஸ்தவ அமைப்பை முடக்குவதை நோக்கமாக புதிய சட்டம் கொண்டுவர முயற்சி</p><p>காலம் காலமாக கல்வி நிறுவனங்களை நடத்திவரும் கிறிஸ்தவ அமைப்புகள் நடைமுறையில் சிறு தவறு செய்தால் சொத்தை முடக்குவதா? - அமைச்சர் வன்னிஅரசு</p><h2>அமைச்சர் வன்னிஅரசு உரை</h2><p>நீட் விலக்கு, FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானம் இரண்டுமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள்.</p><p>FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம்.</p><p>நேற்று தான் சிறுபான்மை அமைப்பினருடன் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். இன்று தீர்மானம்.</p><p>கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என விவிலியத்தில் கூறியதை  நிஜத்தில் நிறைவேற்றி உள்ளார் முதல்வர்.</p><p>RSS திட்டங்களை கொண்டுவருவதை தான் பாஜக அரசு வேலையாக வைத்துள்ளது.</p><p>அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக வைப்பதுதான் பாஜகவின் வேலை.</p><p>FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு விசிக ஆதரவு - அமைச்சர் வன்னிஅரசு</p><p>FCRA திருத்த மசோதா சட்டமானால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். மத்திய அரசின் நோக்கம் நாட்டை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்வதா? சிறுபான்மை நிறுவங்களை முடக்குவதா? அமைச்சர் ஷாஜகான் </p><h2>அமைச்சர் ஷாஜகான் உரை</h2><p>தமிழ்நாட்டில் 50% உயர்கல்வி அடைவதற்கு சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் காரணம்.</p><p>வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.</p><p>உயர்கல்வியில் 50% படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதற்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தான் காரணம்.</p><p>முதல்வர், பேரவை தலைவர், அமைச்சர், நான் உள்பட பலர் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனத்தில் தான் படித்தோம்.</p><p>FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு ஐயுஎம்எல் ஆதரவு - அமைச்சர் ஷாஜகான்</p><h2>திமுக எம்எல்ஏ ஆஸ்டின் உரை</h2><p>சிறுபான்மையினரால் நடத்தப்படும் தொண்டு நிறுவனங்கள் மீது மிகப்பெரிய தாக்குதலே FCRA திருத்த மசோதா </p><p>16 சிறுபான்மை நல அமைப்பினருடன் திமுக எம்பி வில்சன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மசோதா குறித்த பேசினார்.</p><p>சிறுபான்மை அமைப்புகளின் தொண்டு நிறுவனங்களை மிரட்டுவதற்கு அமலாக்கத்துறை போல் செயல்படுகிறது FCRA.</p><p>50 ஆண்டுகளாக நாம் கட்டிக்காத்த சமூக நல அமைப்புகள் ஒரே கையெழுத்தில் மத்திய அரசின் கைக்கு சென்று விடும்.</p><p>இது சட்டத்தின் பெயரில் துப்பாக்கி முனையில் அடிக்கப்படும் கொள்ளை மட்டுமல்ல சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் கொள்ளை. இந்த தீர்மானத்தை மத்திய பாஜக அரசு திரும்பப்பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த FCRA மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு திமுக ஆதரவு - எம்எல்ஏ ஆஸ்டின்</p><p>சிறுபான்மையினருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது - சிபிஎம்</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு சிபிஎம் ஆதரவு</p><p>சிறுபான்மை அமைப்புகளுக்கு வரும் நிதி பறிக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும் - சிபிஎம்</p><h2>மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா உரை</h2><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு.</p><p>தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை கண்காணிக்க வருமான வரித்துறை இருக்கும்போது FCRA எதற்கு?</p><p>FCRA சட்டமே தேவையற்றது. அதில் சட்டத்திருத்தமும் தேவையற்றது.</p><p>தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் தான் பணம் வருகிறது. அதுவும் கண்காணிக்கப்படுகிறது.</p><p>வெளிநாட்டு நிதி வங்கிகள் மூலம் தான் வரும் போது புதிதாக சட்டத்திருத்தம் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன?</p> <h2>அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>வெளிநாட்டில் இருந்து வரும் பணம் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என கண்காணிக்கவே மசோதா.</p><p>FCRA பதிவு புதுப்பிக்கப்படவில்லை என்றால் சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் அபாயம் உள்ளது. நேர்மையாக நடத்தப்படும் நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.</p> <h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன் உரை </h2><p>FCRA வேண்டாம் என சொல்லவில்லை. திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியதால் தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நல்ல சமூக திட்டங்களுக்காக வரும் பணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு இல்லை, அதனை வரைமுறைப்படுத்துவதே நோக்கம்.</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு - எம்எல்ஏ போஜராஜன்</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - எம்எல்ஏ மாரிமுத்து</p><h2>பிரேமலதா உரை</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து நேற்று இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் தேமுதிக சார்பில் ஆதரவு.</p><p>தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காதவர் கேப்டன் விஜயகாந்த் தமிழ் மொழி மட்டுமே பேசினார்.</p><p>இலங்கை வாழ் தமிழர்களுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து உரித்தாகும்.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் இறுதி சடங்கில் தகனமேடைக்கு அருகே நின்று அஞ்சலி செலுத்தினார் கேப்டன்.</p> <p>இன்று 2 முக்கியமான தீர்மானங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு தேமுதிக சார்பில் நன்றி.</p><p>நேரலையில் பேரவை நிகழ்வை காண்பிக்க வேண்டுமென கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை வைத்த நிலையில் இன்று நிறைவேற்றம் - பிரேமலதா</p><h2>அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>FCRA விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி, சிறுபான்மையினர் கல்வி நிறுவன செயல்பாட்டை பாதிக்கும்.</p><p>மத, கல்வி, மருத்துவ, சமூக அமைப்புகள், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்த வேண்டும்.</p><p>FCRA சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர். FCRA மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். FCRA மசோதாவிற்கு எதிராக தவெக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்த FCRA மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறது.</p><p>வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.</p><p>பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்.</p><p>டெல்லி போராட்டத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு தந்தது தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>மாணவர்கள் சமூகத்திற்கு இனியும் இழுக்கு ஏற்படக்கூடாது என தனித்தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர். நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டக்களத்தில் ராகுல்காந்தி நின்று கொண்டிருக்கிறார் - அமைச்சர் விஸ்வநாதன்</p> <p>நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ் தரப்பில் ஆதரவு - உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன்</p><p>நீட் இந்தியா முழுவதும் கொண்டு வந்தார்கள். ஆனால் அதனை தமிழ்நாட்டிற்கு கலைஞர் ஏற்கவில்லை. </p><p>நீட் தேர்வு இந்தியா முழுவதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்திற்குள் நுழையாமல் தடுத்தவர் கலைஞர் கருணாநிதி  - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p><p>நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தவர் திமுகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் காந்தி செல்வன் - அமைச்சர் ஆதவ்</p><p>பலனடையும் ஒரு சில குழந்தைகளை விட பாதிக்கப்படும் குழந்தைகளே அதிகம்.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா வீட்டின் தரையில் அமர்ந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் விஜய்.</p><p>அனிதாவின் மதிப்பெண்ணை டீசர்ட்டாக அணிந்தவர் நமது முதலமைச்சர் விஜய்.</p><p>ஆயிரம் அவதூறுகளை அள்ளி வீசினாலும் அந்த மாமனிதன் முதலமைச்சர் விஜயை அவமதிக்க முடியாது - அமைச்சர் ராஜ்மோகன் </p><p>நீட் தொடர்பான தீர்மானத்தில் அரசியல் தேவையில்லை. இதில் மாணவர் நலனே முக்கியம். </p><p>நீட் விவகாரத்தில் பாஜகவை தவிர தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம். </p><p>நீட் விவகாரத்தில் திமுக என்ன செய்துள்ளது என்பது எங்களுக்கும் தெரியும், ஆதாரம் உள்ளது - அமைச்சர் ஆதவ்</p><p>நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்திற்கு சரியான வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனரா? என தவெக அரசு விளக்கம் தர வேண்டும்.</p><p>நீட் மட்டும் தான் உலகமா? என தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் பேசியிருக்கிறார்.</p><p>மருத்துவம் மட்டும் தான் படிப்பா? பிளம்பர், கார்பெண்டருக்கு நிறைய தேவை இருக்கிறது என அமைச்சர் பேசி இருக்கிறார் - திமுக எம்எல்ஏ முத்துராஜா</p><h2>திமுக எம்எல்ஏ முத்துராஜா உரை</h2><p>நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நீட் தேர்வு நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறியபடி தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.</p><p>இந்தியாவிலேயே நீட் தேர்வை முதல்முதலில் எதிர்த்தவர் கலைஞர் கருணாநிதி. 2017-ல் அமலுக்கு வந்த நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தது திமுக.</p><p>நீட் விலக்கு தொடர்பாக 12 மாநில முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.</p> <h2>தமிமுன் அன்சாரி உரை</h2><p>நீட் ரத்து கருத்தியலை நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும்.</p><p>நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருவதை ஒரு சடங்காக செய்யக்கூடாது. நிரந்தர தீர்வு தேவை.</p><p>பாஜக ஆளாத இதர மாநிலங்களிலும் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு மனிதநேய ஜனநாயக்கட்சி ஆதரவு - தமிமுன் அன்சாரி</p><h2>ஓ.எஸ்.மணியன் உரை</h2><p>நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது.</p><p>திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.</p><p>மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக.</p><p>நீட் பாதிப்பில் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக 31 பேர் உயிரிழந்துள்ளது.</p> <p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு - ஓ.எஸ்.மணியன்</p> <p>மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு நீட், CUTE உள்ளிட்ட எந்தவிதமான நுழைவுத்தேர்வும் வைக்கக்கூடாது.</p><p>சமூக நீதி, அரசு பள்ளி மாணவர், கிராமப்புற மாணவர், ஏழை மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு. நீட் கோச்சிங் என்பது மிகப்பெரிய வணியமயமாகி விட்டது.</p><p>இதுவரை நீட் தேர்வால் நாடு முழுவதும் 500 மாணவர்கள் உயிரிழப்பு, தமிழ்நாட்டில் மட்டும் 50 பேர் உயிரிழப்பு. இந்த முறை நீட் வினாத்தாள் கசிவு, அதன்பின் நடந்த தேர்வு நடைமுறைகளால் மட்டும்  13 மாணவர்கள் பலியாகி உள்ளனர் - சவுமியா அன்புமணி</p><h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>நீட் ரத்து தீர்மானத்தை பாமக ஆதரிக்கிறது.</p><p>2006-ம் ஆண்டே நீட் தேர்வு கொண்டு வர இருந்தபோது அன்புமணி அதனை தடுத்தார்.</p><p>நீட்டில் 110 மதிப்பெண் எடுத்த மாணவர் வசதியாக இருந்தால் மருத்துவராகலாம்.</p><p>590 மதிப்பெண் எடுத்த ஏழை மாணவரால் மருத்துவராக முடியவில்லை.</p><p>ஆண்டுக்கு 23 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு மட்டுமே சீட் கிடைக்கிறது.</p><h2>சிபிஐ எம்எல்ஏ செல்லசுவாமி உரை</h2><p>கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது பெரிய துரோகம். அரசுப்பள்ளி மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை</p><h2>சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன் உரை</h2><p>நீட் தேர்வால் ஏற்படும் மனஅழுத்தத்தால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>சமூக நீதியின் வேரில் வெந்நீரை ஊற்றுகிறது நீட்.</p><p>நாடு முழுவதும் நீட் கோச்சிங் சென்டர்கள் புற்றீசல் போல் முறைத்துள்ளன.</p><p>நீட் மட்டுமல்ல எந்த படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கூடாது என்பது தான் எங்களது நிலைப்பாடு.</p><p>நீட் ரத்து தீர்மானத்தை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாஜக எம்எல்ஏ போஜராஜன் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.</p><p>நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏ போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>நமது மாணவர்களின் திறமையை குறைவாக மதிப்பிடாதீர்கள். தரமான கல்வியை கொடுத்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற செய்யுங்கள்.</p><p>நீட் தேர்வு மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையானது.</p><p>தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் தாழ்வுமனப்பான்மையுடன் பார்க்க வேண்டும்.</p><p>நீட் பயிற்சி முகாமை அரசே நடத்த வேண்டும்.</p><p>நீட் தேர்வு எழுதாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவர் ஆனவன் நான். ஐஆர்எஸ் ஆவதற்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியவன் நான் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>நீட் தேர்வால் பிள்ளைகளுக்கு பெற்றோர் அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. நீட் தேர்வு - விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பயிற்சி கிடைப்பதில்லை. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது.</p><p>நீட் தேர்வில் தோல்வி அடைபவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் உள்ளது.</p><p>தமிழக சட்டசபையின் தீர்மானத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் - சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்</p><h2>சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உரை</h2><p>மருத்துவக்கல்வி திறமை உள்ள அனைவருக்கும் வேண்டும். மருத்துவக் கல்வி வசதி படைத்தவர்களுக்கான மட்டும் அல்ல.</p><p>முன்னர் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.</p><p>பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை - கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயின்றனர். தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மேம்பட்டது.</p><p>நீட் தேர்வால் சமூக சமநிலை கட்டமைப்பு சீர்குலைந்து விட்டது. ஒரு நாள் நடக்கும் தேர்வு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடாது.</p><p>நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள்தான் பலன் பெறுகின்றன.</p><p>நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்.</p><p>தமிழ்நாட்டை வழிநடத்திய திராவிட கட்சிகளின் மூத்த தலைவர்களின் அனுபவ பாடங்களை இளம் தலைமுறையினர் கேட்க வேண்டும்.</p><p>அரசியல் களத்தில் பார்வைகளும் பயணங்களும் வேறாக இருக்கலாம். ஆனால் அனுபவசாலிகளின் அறிவுரைகளை கேட்கலாம் -  நித்தியானந்தன் </p> <p>முதலமைச்சர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சியில் மைக்ரோ டெக் பார்க் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் கீர்த்தனா</p><p>வேட்டி, சேலை திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.300 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>பரம்பிக்குளம் - ஆழியார் திட்டம் குறித்து தவறான புரிதல் உள்ளது. ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் 2.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கலாம்.</p><p>பிஏபி பிரதான மற்றும் கிளை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் -  நித்தியானந்தன் </p> <p>பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் வேண்டும். முழு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லாதது ஏமாற்றம் - நித்தியானந்தன் </p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் கொமதேக எம்எல்ஏ நித்தியானந்தன் உரையாற்றினார்.</p><p>விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் குறைவு தான்.</p> <p>மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும் - கால்நடைத்துறை அமைச்சர் கமலி உறுதி</p><p>நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட தவெக அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் எங்களுக்கும் தான் மாவட்டம். விவசாயிகளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.</p><p>முதல்வருடன் கலந்தாலோசித்து சவுமியா கேட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்  - அமைச்சர் ஆனந்த்</p><p>கானல் நீராக அரசு வேலை இருக்கும் நிலையில் அது குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.</p><p>3000 பணியிடத்திற்கு 30,000 பேர் தேர்வெழுதும் நிலை, அந்தளவுக்கு வேலைவாய்ப்பு இன்றி இளைஞர்கள் தவிக்கின்றனர்.</p><p>அரசு பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தாலும் கூட பணி கிடைப்பதில்லை  - சவுமியா அன்புமணி</p> <p>தமிழ்நாட்டில் உள்ள 27,000 குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும். 42,000 ஏரிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 27,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை 1 மீட்டர் அளவு தூர்வார வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 10 கிமீ ஒரு தடுப்பணைகளை கட்டினால் கேரளா, கர்நாடகாவிடம்  நீர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.</p><p>ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை - சவுமியா அன்புமணி</p> <h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>வேளாண் பட்ஜெட்டில் மிகமிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு பாமக சார்பில் நன்றி, வாழ்த்துகள்.</p><p>கால்நடை, பால்வளம், நீர்ப்பாசனம் வேளாண்துறைக்கு பட்ஜெட்டில் மிகமிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>வீட்டில் பெண்கள் பட்ஜெட் போடும்போது சாப்பாடுக்கு உரிய நிதி ஒதுக்காமல் இருப்பார்களா?</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் சவுமியா அன்புமணி உரையாற்றினார்.</p><p>பாமகவின் 13 வருட கோரிக்கையான சேவை உரிமை சட்டத்தி அமல்படுத்திய தவெக அரசுக்கு வாழ்த்துகள் - சவுமியா</p><p>பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் சேவை உரிமைச்சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதலுக்கு நன்றி.</p><p>முன்னர் ஆட்சியில் இருந்தோர் பட்டா வழங்கியதாக கூறினார்கள். பட்டா உள்ளது இடம் எங்கே என கேட்கின்றனர் மக்கள்.</p><p>பட்டாவுடன் இடத்திற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என கூறி உள்ளோம் - கால்நடைத்துறை அமைச்சர்</p><p>முதல்வர் எப்போது அழைப்பார் என்ற நிலை மாறி தற்போது முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தாலே பயமாக இருக்கிறது - அமைச்சர் ஆனந்த்</p><p>மக்கள் குறையை சரிசெய்ததன் விளைவு தான் தவெக ஆட்சியில் உள்ளது - சூலூர் எம்எல்ஏ சுகுமார்</p><p>வார்த்தைகள் மற்றவரை புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என எம்எல்ஏ சுகுமாருக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.</p><p>உங்களுக்கும் சிபிஐ வழக்குகள் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பதில் அளித்தார்.</p><p>திமுகவினர் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் என தவெக எம்எல்ஏ சுகுமார் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.</p><p>மூலதன செலவு குறைவாக இருக்கும்போது கடன் பெறுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுகிறது. திராவிட மாடல் உருவாக்கிய வலுவான அடித்தளத்தில் நிற்கும் தவெக அரசு அதன் பலனை பயன்படுத்தி வருகிறது.</p><p>மத்திய அரசின் மானியங்களும் மூலதன செலவில் குறைப்பும் தான் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க காரணம். நிதி, அதிகார பகிர்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.</p><p>மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை புலப்படுத்துகிறது தவெகவின் பட்ஜெட் என்று  ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p> <h2>ஓ.பன்னீர்செல்வம்</h2><p>மாநில வரி வருவாயை உயர்த்த புதிய திட்டமோ அணுகுமுறையோ இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை. வெள்ளை அறிக்கை தயாரிக்க காட்டிய முனைப்பை வருவாய் உயர்த்தும் திட்டத்திற்கு காட்டவில்லை.</p><p>திராவிட மாடல் அரசில் பொறுப்பான நிதி மேலாண்மை செய்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறை சொல்லக்கூடாது. அரசு கடன் வாங்காமல் இருக்க முடியாது, கடன் வாங்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியது என்பதுதான் முக்கியம்.</p><p>தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமை சட்டத்தின் அடிப்படையில் எல்லை கோட்டை மீறி எந்த அரசும் கடன் வாங்க முடியாது. வருவாய் மதிப்பீட்டை கணிப்பது தொடர்பான தவெக அரசின் கணக்கீட்டில் நம்பிக்கை இல்லை.</p><p>மின் கட்டணம், நூல் கட்டணம் உயர்வு, நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் தூங்குகிறது. மாநிலத்தை திராவிட மாடல் அரசு கடன் கடலில் ஆழ்த்திவிட்டதாக பிரசாரம் செய்கிறது தவெக அரசு.</p><p>அடுத்த 50 ஆண்டுகள் வரை கடன் இன்றி யாரும் ஆட்சி செய்ய முடியாது என நிதித்துறை செயலரே கூறுகிறார். கடன் குறித்த முதலமைச்சர் விஜயின் விமர்சனம் தவறு என்பது தற்போது புரிகிறதா? என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p> <h2>ஓ.பன்னீர்செல்வம்</h2><p>திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.</p><p>பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.</p><p>வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.</p><p>கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர்.</p><p>தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதலமைச்சருக்கு இப்போது தெரிந்திருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p><p>தற்போது சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் நான் இருப்பதற்கு காரணம் ஸ்டாலின், எனவே அவர் படத்தை வைத்துள்ளேன் - ஓபிஎஸ்</p><p>5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓபிஎஸ் சொல்வதை போல் 3 மாதத்தில் சரித்திரம் படைக்க முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை - ஓபிஎஸ்</p> <p>மாணவர் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பில்லை -  ஓபிஎஸ்</p><p>அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய தேவையில்லை - ஓபிஎஸ்</p><p>ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓபிஎஸ், யார் படத்தை தற்போது வைத்துள்ளார் - ஆதவ்</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>செங்கோட்டையன் இடம் மாறினாலும் அவரது பாக்கெட்டில் புகைப்படம் மாறவில்லை.</p><p>ஓபிஎஸ் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>படத்தை காட்டி ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை - ஓபிஎஸ்</p><p>முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பதில்</p><p>இடம் மாறியதால் துதி பாட வேண்டாம் என ஓபிஎஸ்-க்கு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்.</p><p>மாணவர் இடைநிற்றலை தவிர்க்க நிதி ஒதுக்கீடு திட்டம் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை - ஓ.பன்னீர்செல்வம்</p><p>உரிமைத்தொகை உயரவில்லை, 6 சிலிண்டர் என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றம்  - ஓ.பன்னீர்செல்வம்</p><p>புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக் கொண்டே இருக்கிறேன் - ஓபிஎஸ்</p><p>திருப்புகின்ற பக்கமெல்லாம் திமுக ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன - ஓபிஎஸ்</p><p>பெயர் மாற்ற பட்டியல் போல் வெளியாகி உள்ளது தமிழக பட்ஜெட் - ஓபிஎஸ்</p><p>செய்வதை மட்டும் தான் சொல்வோம் என கூறி அள்ளித்தெறித்த வாக்குறுதிகளை தவெக அரசு மறந்துவிட்டது - ஓ.பன்னீர்செல்வம்</p><p>3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>சட்டசபையில் இன்று 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.</p><p>சட்டசபையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-against-neet-exam-and-fcra-tn-assembly-toady">நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம்!</a></p><p>* நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் மருத்துவ கனவு கொண்ட லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.&nbsp;</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தலா 1 டி.எம்.சி.  தண்ணீர்  திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-regulation-committee-urges-daily-release-to-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-regulation-committee-urges-daily-release-to-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">d24d5ae8-858e-482a-bc58-2e339a0909d6</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:49:31 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:49:31.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,CauveryWaterIssue,காவிரிநீர்விவகாரம்,CauveryDispute,CauveryRiver,TamilNaduFarmers</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0sxq4rlt/CauveryWater-Issue" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CauveryWater Issue ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0sxq4rlt/CauveryWater-Issue?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>டெல்லியில் தொடர் கூட்டம்:</strong></h2><p>தமிழகத்தில் போதிய தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நீர்</a> மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்தக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ளது. </p><p>இந்த மனு வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், டெல்லியில் காவிரி ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டம் தொடர்ந்து பரபரப்புடன் நடைபெற்று வருகிறது.</p><p>இக்கூட்டத்தில், தமிழகத்திற்கு <strong>தினசரி 1 டி.எம்.சி வீதம்</strong> 15 நாட்களுக்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஒழுங்குமுறைக் குழு அதிரடியாகப் பரிந்துரை செய்துள்ளது. </p><p>தமிழ்நாடு சார்பில் அரசு அதிகாரிகள் வீடியோ கான்பிரென்ஸ் மூலம் சென்னையில் இருந்து கலந்துகொண்டனர்.</p><h2><strong>தமிழகத்தின் நிலைப்பாடும் பரிந்துரையும்:</strong></h2><p>தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை கர்நாடகா உரிய நேரத்தில் திறந்து விடாததால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை இக்கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். </p><p>இரு மாநில நிலவரங்களையும் ஆய்வு செய்த குழு, தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக தினசரி 1 டி.எம்.சி வீதம் தண்ணீரைத் திறக்க வேண்டும் 15 நாட்களுக்கு் நீர் திறக்க காவிரி ஒழுங்கற்று பரிந்துரைக்குழு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் ஆகஸ்ட் மாதம் வழங்க கூடிய 45 டிஎம்சி நீரை திறந்து வைக்க உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும்.</p><p>இது தொடர்பான இறுதி முடிவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிரியாவின் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை விதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/death-sentence-imposed-on-syrias-former-president</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-sentence-imposed-on-syrias-former-president#comments</comments><guid isPermaLink="false">11748cd4-3ed6-4d46-8d5e-d29deee969f9</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:39:01 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:39:01.424Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிரியா,syria,மரண தண்டனை,death sentence,Bashar al Assad,பஷார் அல் அசாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/olrmj1ry/New-Project-2026-08-11T144658.914.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிரியாவின் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை விதிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/olrmj1ry/New-Project-2026-08-11T144658.914.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிரியாவின் உள்நாட்டுப் போரின்போதான ‘போர்க்குற்றங்கள்’ மற்றும் ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு உள்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. </p><p>பஷார் அல்-அசாத் சிரியாவில் இல்லாத நிலையில் இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2024-ல் கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யாவின் மாஸ்கோவிற்குத் தப்பிச் சென்றார். </p><p>பஷார் அல்-அசாத்துடன் சேர்ந்து அவரது தம்பியான மாஹெர் அல்-அசாத் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அசாத்தின் உறவினரான ஆதிப் நஜீப் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் ஆதிப் நஜீப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அசாத் மற்றும் அவரது தம்பியை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>சிரியாவில் 14 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் போது, திட்டமிட்ட கொலைகள், சித்திரவதை, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொன்றது மற்றும் சட்டவிரோதக் காவல் போன்ற மனிதநேயமற்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>சிரியாவில் அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி வீழ்ந்த பிறகு, அங்கு பொறுப்பேற்றுள்ள புதிய <strong>இடைக்கால அரசு </strong>முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தொடங்கிய சட்ட நடவடிக்கைகளின் முதல் மரண தண்டனைத் தீர்ப்பு இதுவாகும்.</p>]]></content:encoded></item><item><title>காலி பணியிடங்கள் நிரப்புதல், பேருந்து கொள்முதல்: சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-filling-vacant-posts-bus-purchases-edappadi-palaniswami-speech-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-filling-vacant-posts-bus-purchases-edappadi-palaniswami-speech-assembly#comments</comments><guid isPermaLink="false">9230c16e-61fe-4a6c-b9eb-4aff8a702641</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:35:16 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:35:16.348Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,தமிழக சட்டசபை,TN budget,தமிழக பட்ஜெட்,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/rxddu4gz/EPS00002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/rxddu4gz/EPS00002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>* பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி.</p><p>* ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாக தரப்படுமா என விளக்கம் அளிக்க வேண்டும்.</p><p>* வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை, வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை இல்லை.</p><p>* நிதி மேலாண்மைக்கு சரியான பாதை போடப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது.</p><p>* 3 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக உயர்த்திவிடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.</p><p>* பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றி உள்ளீர்கள். தமிழ்நாட்டில் உள்ள 40,000 அரசு பள்ளிகளிலும் தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.</p><p>* அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன், 40,000 பள்ளிகளுக்கு தேவையான நிதியை கேட்டுப் பெறுவார் என நம்புகிறேன்.</p><p>* பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும்.</p><p>* தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்.</p><h2>எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு</h2><p>* தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. காலி பணியிடங்களை படிப்படியாக நிரப்பினால்தான் அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.</p><p>* ஆட்சிக்கு வந்த உடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறினீர்கள், அதனை செயல்படுத்த வேண்டும்.</p><p>* பொதுப்பணித்துறை நிறுவனங்களில் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடம், மின்சாரத்துறையிலும் பல காலிப்பணியிடங்கள் உள்ளன.</p><p>* மின்துறையில் அதிக காலிப்பணியிடங்கள் இருப்பதன் காரணமாகத்தான் அதிக மின்தடைகள் ஏற்படுகிறது.</p><p>* ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை 5 முதல் 7% வரை உள்ளதால் காலி பணியிடம் அதிகரித்துள்ளது. விரைந்து செயல்பட்டால்தான் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியும். அனைத்து குக்கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்து சேவைகள் ஏற்படுத்த வேண்டும்.</p><p>* தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளையும் ஏ.சி. பேருந்துகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் கூறி உள்ளார்.</p><p>* ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கி கண்டமான பேருந்துகளை ஒதுக்கிவைத்து விட்டு புதிய பேருந்துகளை வாங்க வேண்டும். தற்போது 20 ஆயிரம் பேருந்துகள் உள்ளன. இந்த பேருந்துகளுக்கு மாற்று பேருந்துகள் வாங்குவது ஐந்து வருடத்தில் இயலாத காரியம்.</p><p>* நெல், கரும்புக்கு தவெக அரசு அறிவித்த ஊக்கத்தொகை போதாது.</p><p>* அ.தி.மு.க. அரசு இருந்தபோது 2 முறை விவசாய கடனை தள்ளுபடி செய்தோம். இப்போது விவசாயிகள் காத்திருக்கின்றனர்</p><p>* தவெக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><p>* வறட்சியால் தவிக்கும் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் சிறு, குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><h2>உழவன் செயலி</h2><p>* அதிமுக கொண்டு வந்த உழவன் செயலி திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.</p><p>* விவசாயிகள் நலன் கருதி ஓசூரில் உள்ள சர்வதேச மலர் ஏல மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>* மாம்பழ விளைச்சல் அதிகம், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்பு, தேவையான நிவாரணம் தரப்பட வேண்டும்.</p><p>* தட்கல் முறையில் விண்ணப்பித்து காத்திருக்கும் 65,000 விவசாயிகளுக்கு உடனடியாக பம்பு செட் தரப்பட வேண்டும்.</p><p>* சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>எஃப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம் - ஆதரவளிக்காத பாஜக!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-the-fcra-amendment-bill-bjp-does-not-support-it</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-the-fcra-amendment-bill-bjp-does-not-support-it#comments</comments><guid isPermaLink="false">ebe35a05-665d-4b82-a9ea-4da0ddc06e91</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:14:17 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:14:17.902Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,தமிழ்நாடு சட்டப்பேரவை,Tamil Nadu Legislative Assembly,FCRA Amendment Bill,எஃப்சிஆர்ஏ திருத்த மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/gbb5irhe/New-Project-2026-08-11T144044.490.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஃப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம் - ஆதரவளிக்காத பாஜக!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/gbb5irhe/New-Project-2026-08-11T144044.490.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எஃப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, விசிக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. </p><p>தீர்மானம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் போகராஜன்.,</p><p>“சரியான பொறுப்புக்கூறல்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவே சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது. சமூக திட்டங்களுக்காக வருகிற பணத்தை நிச்சயமாக மத்திய அரசு எதிர்க்கவில்லை. இதனை வரைமுறைப்படுத்த வேண்டும்.</p><p>நல்ல காரியங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டும். தேசத்தின் நலனுக்கு எதிரான காரியங்களுக்கு இந்த பணம் சென்றுவிடக்கூடாது என்ற நல்ல அக்கறையுடன் இந்த சட்டத்திருத்ததை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.</p><p>ஆகவே இந்த திருத்தம் அவசியம் என்பதை பாஜக முன்மொழிகிறது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்  OG சமூக நீதி மாடல் அரசை  நடத்தி வருகிறார்-எம்எல்ஏ அபிஷேக் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-og-social-justice-model-government-mla-abhishek</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-og-social-justice-model-government-mla-abhishek#comments</comments><guid isPermaLink="false">f1e291c1-d2b6-46a2-ba64-db4a3745c019</guid><pubDate>Tue, 11 Aug 2026 09:03:54 +0000</pubDate><atom:updated>2026-08-11T09:03:54.158Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,TNAssembly,சட்டப்பேரவை,MLA Abhishek,எம்எல்ஏ அபிஷேக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/fc5k50h8/abi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/fc5k50h8/abi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்ஜெட் மீது பொது விவாதத்தின் மீது  தவெக எம்எல்ஏ அபிஷேக் உரையாற்றியதாவது,</p><p>முதலமைச்சர் விஜய்  OG சமூக நீதி மாடல் அரசை  நடத்தி வருகிறார், என்னை போன்ற GEN-Z தலைமுறையை எம்எல்ஏ ஆக்கி அழகு பார்த்தவர்,  இந்த சட்டப்பேரவையில் நிறைய சிறப்புகள் உள்ளது.</p><p>கடந்த 16 முறை இல்லாத தனிச்சிறப்பு இந்த 17 சட்டமன்றத்தில் உள்ளது. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற உண்மையான சமூக நீதியை உருவாக்கியுள்ளது. இந்த ஆட்சியில் பெண்களுக்காக ஆட்சி‘</p><p>நாங்களே ஆட்சியாளர்கள் நாங்களே எஜமானர்கள் என்ற பழைய மாடலின் தோரணையை விஜய் ஆட்சி தகர்த்திருக்கிறது. ஊழலற்ற ஆட்சி என்பது தினம் தினம் உறுதியாகிக்கொண்டிருக்கிறது. </p><p>கற்பி ஒன்றுசேர் அரசியல் பழகு என்று எங்களுக்கு கற்று கொடுத்தவர் தமிழக முதலமைச்சர் விஜய். இந்த பட்ஜெட் அனைவருக்கும் திருப்பி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றார். விவசாயிகளுக்கான பட்ஜெட்டாக அமைந்து விவசாயிகளின் மகனாக விஜய் உருவெடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பேசினால் தான் தீர்வு காண முடியும்- பட்ஜெட் மீதான உரையில் இபிஎஸ் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-solution-can-be-found-only-through-dialogue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-solution-can-be-found-only-through-dialogue#comments</comments><guid isPermaLink="false">82afffe2-e7ae-45e5-ae89-604f09806efc</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:55:25 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:55:25.949Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lkk4fyx4/EPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lkk4fyx4/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கது தான், ஆனால் சில இடங்களில் பேசினால் தான் தீர்வு காண முடியும் என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று நீட் தேர்வுக்கு எதிராகவும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி என இரு தனித்தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்று ஒருமனதான நிறைவேற்றப்பட்டது. </p><p>இதனை தொடர்ந்து, பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், </p><h2><strong>வெள்ளை அறிக்கை</strong></h2><p>* புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்கள் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். </p><p>* புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாட்கள் தான். </p><p>* 100 நாள் செயல்திட்டங்களை புதிய அரசு வெளியிடுவது வழக்கம், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதலீடுகள் கிடைக்கும். </p><p>* த.வெ.க.வை போல் ஏற்கெனவே வெள்ளை அறிக்கையை அதிமுக, திமுகவும் வெளியிட்டுள்ளது. </p><p>* வெள்ளை அறிக்கையில் மாநில வரி வருவாய் கணிசமாக கசிந்துள்ளதாக தவெக அரசு கூறியுள்ளது. </p><p>*  2026-2027 வரி வருவாயை பார்க்கும் போது நிதி மேலாண்மையை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. </p><p>* அடுத்த 6 மாதங்களில் ரூ.8ஆயிரம் கோடி கிடைக்க வேண்டும் என்றால் அது ஏன் வரி வருவாயில் வரவில்லை? </p><p>* நீர் மேலாண்மைக்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. </p><p>* பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளது.</p><h2><strong>கவர்ச்சி வார்த்தைகள்</strong></h2><p>* மக்களின் கவனத்தை ஈர்க்க கவர்ச்சி வார்த்தைகளே உள்ளன. </p><p>* ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாக தரப்படுமா என விளக்கம் அளிக்க வேண்டும். </p><p>* வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை, வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை இல்லை. </p><p>* நிதி மேலாண்மைக்கு சரியான பாதை போடப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது. </p><p>* 3 மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது தவெக அரசு, இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக உயர்த்தி விடுவீர் என்பதில் சந்தேகமில்லை. </p><p>* பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை, அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றியுள்ளீர்கள். </p><p>* மக்கள் பிரச்சனைகளை தீர்க்க புதிய சிந்தனை இல்லை. </p><p>* தமிழ்நாட்டில் உள்ள 40 ஆயிரம் அரசு பள்ளிகளிலும் தரமும் உயர்த்தப்பட வேண்டும், அதற்குரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.</p><p>* அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன் 40,000  பள்ளிகளுக்கும் தேவையான நிதியை கேட்டுப்பெறுவார் என நம்புகிறேன். </p><p>* பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கது தான், ஆனால் சில இடங்களில் பேசினால் தான் தீர்வு காண முடியும். </p><p>* தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும். </p><p> என்றார். </p>]]></content:encoded></item><item><title>அடுத்து 133 ஆண்டுகள் கழித்து தான்.. நாளை பொழியும் எரிகற்கள் மழை - எங்கு பார்க்கலாம்?</title><link>https://www.maalaimalar.com/news/world/rare-perseid-meteor-shower-where-to-watch-tomorrows-once-in-133-years-fireball-rain</link><comments>https://www.maalaimalar.com/news/world/rare-perseid-meteor-shower-where-to-watch-tomorrows-once-in-133-years-fireball-rain#comments</comments><guid isPermaLink="false">68dc1f0f-bb29-4db2-b04b-e65a52d5d6a6</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:38:29 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:38:29.042Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>space,விண்வெளி,விண்கல் மழை,வானியல் நிகழ்வு,meteor shower,astronomical event</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/tgumuh3g/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எரிகற்கள் மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ எரிகற்கள் மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/tgumuh3g/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சூரியனை சுற்றி வரும்போது  'ஸ்விப்ட் டட்டில்' என்ற வால் நட்சத்திரத்தில் இருந்து உருகும் பனி,  தூசி துகள்களாகவும் சிற்சிறிய பாறைகளாகவும் தனியே பிரிந்து <a href="https://www.maalaimalar.com/news/world/china-new-kande-satellite-network-to-track-space-debris">விண்ணில் </a>எஞ்சுகிறது. </p><p>இவ்வாறு எஞ்சுவனவற்றை விண்வெளி தூசிகள் என்றும் சில நேரங்களில் அவற்றின் அளவை பொறுத்து சிறிய விண்கற்கள் என்றும் வகைப்படுத்தலாம். </p><p>அவ்வாறான விண்கற்கள் பெர்செய்ட் (Perseid) என அழைக்கப்படுகின்றன. </p><h2>விண்கல் மழை</h2><p>பூமி சூரியனை ஒரு முறை முழுமையாக சுற்றி வருவது ஒரு ஆண்டு என்று கணக்கிடப்படுகிறது.</p><p>இவ்வாறு பூமியானது சூரியனை சுற்றி வரும்போது விண்வெளியில் உள்ள இந்த பெர்செய்ட் விண்கற்கள் மற்றும் தூசிகள் வளிமண்டலத்திற்குள் நுழைகின்றன.</p><p>இவ்வாறாக பிரகாசமாக எரியும் கற்கள் (எரிகற்கள் - எரி நட்சத்திரம்) நெருப்பு பந்துகளை போல மழையாக பொழிவதாக நமக்கு தென்படும். அதுவே விண்கல் அல்லது எரிகல் மழை என்று அழைக்கப்படுகிறது.</p><p>இந்த வண்ணமயமான பெர்செய்ட் விண்கற்கள் பொழிவு கோடைக்காலத்தை ஒட்டி இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்கிறது. </p><p>ஏனெனில் ஆண்டின் இந்த சமயத்தில் பூமியானது சூரியனை சுற்றிவரும்போது விண்வெளியில் உள்ள இந்த பெர்செய்ட் விண்கற்கள் குப்பைகளுடன் மோதுகிறது.</p><p>அவை அதிவேகமாக வளிமண்டலத்தில் நுழைவதால் காற்றுடன் ஏற்படும் உராய்வு காரணமாக அவை சூடாகி நெருப்பு பந்துகளை போல ஒளிவிடுகின்றன. </p><h2></h2><h2>எங்கு பார்க்கலாம்?</h2><p>இவற்றை வட அரைக்கோளத்தில், அதாவது பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள பூமியின் ஒரு பாதியில் இருந்து நன்றாக பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் வட அரைக்கோளத்தில் உள்ள எந்தெந்த நாடுகளில் தெளிவாக தெரியும் என குறிப்பிடப்படவில்லை. ஆகஸ்ட் 12, நாளை இந்த பெர்செய்ட் விண்கற்கள் பொழிவு அதன் உச்சத்தை எட்டும்.</p><p>தொடர்ந்து அடுத்த நாள், ஆகஸ்ட் 13, வியாழக்கிழமை, ஸ்பெயின், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஊடாக நிகழ உள்ள சூரிய கிரகனத்துடனும், அதே நாளில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் தோன்றும் 'கிரகங்களின் அணிவகுப்பு'டனும் இந்த விண்கற்கள் பொழிவு நிகழ உள்ளது கூடுதல் சிறப்பு.</p><p>தெளிவான வானிலையில் ஒரு மணி நேரத்திற்கு 50 முதல் 100 விண்கற்கள் பொழிவதை காண முடியும் என நாசா தெரிவித்துள்ளது. கிராமப்புறப் பகுதிகளில் 30 முதல் 50 விண்கற்கள் வரை தெளிவாகத் தெரியும்.</p><p>இருட்டான இடத்தைத் தேர்வு செய்து, சுமார் 30 நிமிடங்கள் கண்கள் இருளுக்குப் பழக்கப்படும் வரை காத்திருந்து திறந்தவெளியில் இதைக் காணலாம்.</p><p>விண்கற்கள் மழையின் உச்சக்கட்டத்தின் போது நிலவு அமாவாசை கட்டத்தில் இருக்கும். இதனால் நிலவின் ஒளி வானத்தை அடைக்காது என்பதால், வழக்கத்தை விட அதிகமான எரிகற்களைத் தெளிவாகக் காண முடியும்.</p><h2>சிறப்பு என்ன?</h2><p>133 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஸ்விப்ட் டட்டில் சூரியனை சுற்றி வருகிறது. அப்போதே அதன் பனி உருகி பெஸ்ட்ராய்ட்கள் உருவாகின்றன. எனவே இந்தாண்டு நாளை - நாளை மறுநாள் நடக்கும் இந்த நிகழ்வுக்குபின், இது மீண்டும் 2125ல் தான் மீண்டும் இது நிகழும்.</p><p>கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பெஸ்ட்ராய்ட்கள் விண்கல் மழை மனிதர்களால் கவனிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fcra-amendment-bill-resolution-passed-unanimously-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fcra-amendment-bill-resolution-passed-unanimously-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">461913b9-2b50-46a3-8c0c-075117df2b5e</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:31:20 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:31:20.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,ஜேசிடி பிரபாகர்,speaker prabakar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/pr03ohok/JCD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ speaker JCD prabhakar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/pr03ohok/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். அப்போது அவர் கூறுகையில், FCRA மசோதாவை திரும்பப்பெற வேண்டும். FCRA விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி, சிறுபான்மையினர் கல்வி நிறுவன செயல்பாட்டை பாதிக்கும். மத, கல்வி, மருத்துவ, சமூக அமைப்புகள், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்தவேண்டும். FCRA சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர். FCRA திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபணை தெரிவிக்கிறது என தெரிவித்தார்.</p><p>FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.</p><p>தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், பாமக, அதிமுக, மஜக, திமுக, விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.</p><p>இதனை தொடர்ந்து FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு அளிக்கவில்லை.</p><p>இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனித்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம்- வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vanni-arasu-welcome-the-resolution-opposing-the-fcra-bill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vanni-arasu-welcome-the-resolution-opposing-the-fcra-bill#comments</comments><guid isPermaLink="false">032daf7b-837c-4cd5-b8b3-ce18b80788d0</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:30:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:30:24.256Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,vanni arasu,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/06vohwhw/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/06vohwhw/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>தமிழக சட்டசபையில் இன்று வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE">மசோதாவை</a> தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித்தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்தார். தனித்தீர்மானத்தை அமைச்சர் வன்னி அரசு வரவேற்றார். அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:-</p><p>* FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். </p><p>* நேற்று தான் சிறுபான்மை அமைப்பினருடன் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தோம், இன்று தீர்மானம். </p><p>* கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என விவிலியத்தில் கூறியதை நிஜத்தில் நிறைவேற்றியுள்ளார் முதல்வர். </p><p>* ஆர்எஸ்எஸ் திட்டங்களை கொண்டு வருவைதை தான் பாஜக அரசு வேலையாக வைத்துள்ளது. </p><p>*  அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக வைப்பது தான் பாஜகவின் வேலை. </p><p>* கிறிஸ்தவர்களை குறிவைத்து தான் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-and-admk-support-to-fcra-bill">FCRA</a> திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. </p><p>* தொண்டு நிறுவனங்களை முடக்க, சொத்துக்களை அபகரிக்க ஏற்கெனவே 4 முறை பாஜக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. </p><p>* 4 முறை சட்டத்திருத்தம் கொண்டு வந்த பாஜக இப்போது கிறிஸ்தவ அமைப்பை முடக்குவதை நோக்கமாக புதிய சட்டம் கொண்டு வர முயற்சி. </p><p>* காலம் காலமாக கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் கிறிஸ்தவ அமைப்புகள் நடைமுறையில் சிறு தவற செய்தால் சொத்தை முடக்குவதா? </p><p>* கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்தை முடக்கி அதனை முழுமையாக விற்கக்கூட அரசுக்கு அனுமதி தருகிறது புதிய சட்டத்திருத்த மசோதா. </p><p>* FCRA சட்டத்திருத்தம் மூலம் நாடு முழுவதும் 37 ஆயிரம் அமைப்புகளின் சொத்துக்களை முடக்க பாஜக திட்டம்.</p><p>* புதிய சட்டதிருத்த மசோதா மூலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிகம் பாதிக்கப்படும். தொண்டு நிறுவனங்களும் அதன் மூலம் செயல்படும் கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தான் அதிகம். </p><p>* தமிழ்நாட்டில் உள்ள 6ஆயிரம் தொண்டு நிறுவனங்களில் 2000-க்கு மட்டும் தான் FCRA பதிவு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை அபகரிக்க பாஜக காத்திருக்கிறது. </p><p>* கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்தை முடக்கி அதனை முழுமையாக விற்கக்கூட அரசுக்க அனுமதி தருகிறது புதிய சட்டத்திருத்த மசோதா என்றார். </p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசின் FCRA மசோதாவிற்கு எதிராக தமிழ்நாடு பேரவையில்  திமுக-ஐயுஎம்எல் ஆதரவு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-iuml-support-against-central-govt-fcra-bill-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-iuml-support-against-central-govt-fcra-bill-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">ab4d9502-93b0-4ce2-862b-0b4751825ff3</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:25:08 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:25:08.966Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,IUML,TNAssembly,ஐயுஎம்எல்,FCRA,தமிழ்நாடு பேரவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/6gqbiy8t/dmk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK and IUML ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/6gqbiy8t/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த (FCRA) மசோதாவைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பேசினார்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த FCRA திருத்த மசோதா, குறிப்பாகச் சிறுபான்மையினரால் நடத்தப்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் மிகப்பெரிய தாக்குதலாகும். </p><p>இந்த மசோதாவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து 16 சிறுபான்மை நல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.வில்சன் மற்றும் பிரதிநிதிகள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.</p><h2>அமலாக்<strong>கத்துறை போ</strong>ல் செயல்படும் FCRA</h2><p>தொண்டு நிறுவனங்களை மிரட்டுவதற்கும், அச்சத்திலேயே வைத்திருப்பதற்கும் மத்திய அரசால் அமலாக்கத்துறை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறதோ, அதே போல் இந்த FCRA சட்டமும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினார்.</p><p>கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்குக் கல்வி, மருத்துவம் மற்றும் சமூகப் பணிகளை ஆற்றி கட்டிக்காக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், மத்திய அரசின் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் அவர்களின் கைக்குச் சென்றுவிடும் ஆபத்து இதில் உள்ளது.</p><h2>ச<strong>ட்டப்பூர்வக் கொள்ளை</strong></h2><p>"இது வெறும் சட்டத்தின் பெயரால் துப்பாக்கி முனையில் நடத்தப்படும் கொள்ளை மட்டுமல்ல; சட்டப்பூர்வமாக அரங்கேற்றப்படும் மிகப்பெரிய கொள்ளை" என்று கடுமையாக விமர்சித்த அவர், இந்த ஆபத்தான தீர்மானத்தை மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.</p><h2>ஐயுஎம்எ<strong>ல் ஆதரவு -அமைச்சர்</strong> ஷாஜகான்</h2><p>FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு அமைச்சர் ஷாஜகான் ஆதரவு தெரிவித்து பேசியதாவது, தமிழ்நாட்டில் 50% உயர்கல்வி அடைவதற்கு சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் காரணம். வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உயர்கல்வியில் 50% படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. </p><p>அதற்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தான் காரணம். முதல்வர், பேரவை தலைவர், அமைச்சர், நான் உள்பட பலர் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனத்தில் தான் படித்தோம். கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் நடத்துவோர் கலங்கிப்போய் உள்ளனர். FCRA திருத்த மசோதா சட்டமானால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். மத்திய அரசின் நோக்கம் நாட்டை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்வதா? சிறுபான்மை நிறுவங்களை முடக்குவதா? என அமைச்சர் ஷாஜகான் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>FCRA மசோதாவுக்கு எதிரான தீர்மானம்: சிபிஐ, அதிமுக ஆதரவு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-and-admk-support-to-fcra-bill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-and-admk-support-to-fcra-bill#comments</comments><guid isPermaLink="false">f090ea36-bb69-47b9-904a-110aaeefe2e6</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:11:03 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:11:03.853Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/pldxwdtx/FCRA.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ FCRA மசோதா]]></media:title><media:description type="html"><![CDATA[ FCRA மசோதா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/pldxwdtx/FCRA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ, அதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.</strong></em> </p><p>தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. </p><p>இதனை தொடர்ந்து, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE">மசோதாவை</a> தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித்தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்தார். தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-moved-a-special-resolution-against-the-fcra-act">FCRA</a> மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு தெரிவித்தது. </p><h2><strong>பாஜக எதிர்ப்பு</strong></h2><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பதாக எம்எல்ஏ போஜராஜன் தெரிவித்தார். இதுதொடர்பாக போஜராஜன் பேசுகையில், </p><p>FCRA வேண்டாம் என சொல்லவில்லை. திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியதால் தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நல்ல சமூக திட்டங்களுக்காக வரும் பணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு இல்லை, அதனை வரைமுறைப்படுத்துவதே நோக்கம் என்றார்.</p><h2><strong>ஆதரவு</strong></h2><h2><strong>அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி</strong></h2><p>FCRA தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பணம் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என கண்காணிக்கவே மசோதா. FCRA பதிவு புதுப்பிக்கப்படவில்லை என்றால் சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் அபாயம் உள்ளது. நேர்மையாக நடத்தப்படும் நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார். </p><h2><strong>மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா</strong></h2><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு. தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை கண்காணிக்க வருமான வரித்துறை இருக்கும்போது FCRA எதற்கு? FCRA சட்டமே தேவையற்றது. அதில் சட்டத்திருத்தமும் தேவையற்றது என்றார். </p>]]></content:encoded></item><item><title>FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-moved-a-special-resolution-against-the-fcra-act</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-moved-a-special-resolution-against-the-fcra-act#comments</comments><guid isPermaLink="false">bed6abe2-3edf-4b93-bf1a-e0449200e5ad</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:52:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:52:39.756Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0iwx27he/raj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minster Raj Mohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0iwx27he/raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:</p><h2>FCRA மசோதாவை திரும்பப்பெற வேண்டும்</h2><p>FCRA விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி, சிறுபான்மையினர் கல்வி நிறுவன செயல்பாட்டை பாதிக்கும்.</p><p>மத, கல்வி, மருத்துவ, சமூக அமைப்புகள், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்தவேண்டும்.</p><p>FCRA திருத்த சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர்.</p><p>FCRA மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.</p><p>FCRA திருத்த மசோதாவிற்கு எதிராக தவெக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபணை தெரிவிக்கிறது என தெரிவித்தார்.</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>இந்த தீர்மானம் தொடர்பாக தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:</p><p>இன்று 2 முக்கியமான தீர்மானங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு தேமுதிக சார்பில் நன்றி.</p><p>நேரலையில் பேரவை நிகழ்வை காண்பிக்க வேண்டுமென கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை வைத்த நிலையில் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து நேற்று இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் தேமுதிக சார்பில் ஆதரவு.</p><p>தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காதவர், கேப்டன் விஜயகாந்த் தமிழ் மொழி மட்டுமே பேசினார்.</p><p>இலங்கைவாழ் தமிழர்களுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து உரித்தாகும்.</p><p>நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் இறுதிச்சடங்கில் தகனமேடைக்கு அருகே நின்று அஞ்சலி செலுத்தினார் கேப்டன்.</p><p>FCRA பணம் புறவாசல் வழியாக வந்துவிடாமல் தவெக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.</p><p>தவறான வழியில் தமிழகத்தில் நுழையும் பணத்தை கட்டுப்படுத்துவதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு ரத்து தீர்மானம்- கடும் விவாதத்திற்கு பிறகு ஒருமனதாக நிறைவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-cancellation-resolution-passed-unanimously</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-cancellation-resolution-passed-unanimously#comments</comments><guid isPermaLink="false">bbe9ceae-8f37-461f-a982-8de12b383df5</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:49:49 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:49:49.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,neet,நீட்,நீட் தேர்வு,Neet exam,தனித்தீர்மானம்,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/3m3uk8c6/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/3m3uk8c6/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் நுழைவுத்தேர்வுக்கு</a> எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்தார். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதை கூறி தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. </p><p>தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், பாமக, அதிமுக, மஜக, திமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனிடையே தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. </p><p>இதனை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு காங்கிரஸ் தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக  உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், மாணவர்கள் சமூகத்திற்கும் இனியும் இழுக்கு ஏற்படக்கூடாது என தனித்தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர். நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டக்களத்தில் ராகுல்காந்தி நின்று கொண்டிருக்கிறார் என்றார். </p><p>டெல்லி போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு தந்தது தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசியதற்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-cancellation-resolution-tvk-and-dmk-arguments">தி.மு.க.</a> எம்.எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன் நீட் சமூக நீதிக்கு எதிரானது, வினாத்தாள கசிவுகள் மாணவர்களின் கனவுகளை கலைக்கிறது. நீட் தேர்வு முறையால் கல்வி மாபிஃயாக்கள் பயனடைகிறார்கள், ஏழை, கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். ஒரே ஒரு நுழைவுத்தேர்வு வழியாக மாணவர்களின் திறமையை தீர்மானிப்பது மிகப்பெரிய தவறு. நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்திய பின்பு மாணவர்களும், பெற்றோர்களும் மன உளைச்சலில் உள்ளனர். டிஜிட்டல் இந்தியா என மேடைக்கு மேடை முழங்கும் பாஜக அரசால் ஒரு தேர்வை கூட சிறப்பாக நடத்த முடியவில்லை என்றார். </p><p>அமைச்சர் விஸ்வநாதன் பேச்சுக்கு குறுக்கிட்டு பேசிய எ.வ.வேலு, நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து பேசியவர் காங்கிரசை சேர்ந்த மூத்த அமைச்சர் குலாம் நபி ஆசாத் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனித்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>மழைக் காலத்தில் பரவும் &apos;பன்றிக் காய்ச்சல்&apos;.. யார் யாருக்கு பாதிப்பு அதிகம்? மருத்துவர்கள் தரும் பகீர் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/swine-flu-surges-in-delhi-during-monsoon-who-is-most-at-risk</link><comments>https://www.maalaimalar.com/news/national/swine-flu-surges-in-delhi-during-monsoon-who-is-most-at-risk#comments</comments><guid isPermaLink="false">a18c39de-dd90-48bf-9849-d313aa09412f</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:34:42 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:34:42.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dengue,swine flu,Covid-19,கோவிட்-19,டெங்கு,H1N1,பன்றிக் காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0qtzfl94/swine-flu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Swine flu-H1N1 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0qtzfl94/swine-flu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியங்களில் H1N1 இன்ஃப்ளூயன்சா (பன்றிக் காய்ச்சல்) பாதிப்பு இந்த பருவமழைக் காலத்தில் வழக்கத்திற்கு மாறாக மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வெறும் 229 ஆக இருந்த H1N1 பாதிப்புகள், இந்த ஆண்டு '1,344' ஆக உயர்ந்து கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகரித்துள்ளது. டெல்லியின் முன்னணி மருத்துவமனைகளின் வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் 7 முதல் 10 நோயாளிகள் வரை H1N1 அறிகுறிகளுடன் சேர்க்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>திடீர் உ<strong>யர்வுக்குக் காரணம் என்ன?</strong> </h2><p>மழைக்காலத்தில் ஏற்படும் திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம் வைரஸ் கிருமிகள் வேகமாகப் பரவுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன. கடந்த ஆண்டு டெல்லியில் H3N2 வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு H1N1 டைப்-ஏ (Influenza A) வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு, கோவிட்-19 மற்றும் வழக்கமான சளி-காய்ச்சல் அறிகுறிகளும் H1N1 அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால், தொடக்கத்தில் பலர் இதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.</p><h2><strong>அறிகுறிக</strong>ள்</h2><p>வைரஸ் தொற்று ஏற்பட்ட 1 முதல் 4 நாட்களுக்குள் பின்வரும் அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.</p><p>*திடீர் அதிக காய்ச்சல்: தணியாத காய்ச்சல் மற்றும் நடுக்கத்துடன் கூடிய குளிர்.</p><p>*சுவாசப் பிரச்சனைகள்: தொடர் வறட்டு இருமல், தொண்டை வலி, மூக்கு அடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல்.</p><p>*உடல் உபாதைகள்: கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, மிகுந்த உடல் சோர்வு.</p><p>*செரிமான பிரச்சனைகள்: குறிப்பாக குழந்தைகளிடம் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு.</p><h2>அதிக ஆ<strong>பத்து உள்ளவர்</strong>கள் </h2><p>பெரும்பாலோருக்கு இந்நோய் 3 முதல் 5 நாட்களில் தானாகவே சரியாகிவிட்டாலும், பின்வரும் பிரிவினருக்கு இந்நோய் நுரையீரல் அழற்சி அல்லது தீவிர மூச்சுத்திணறலாக மாற வாய்ப்புள்ளது.</p><p>•முதியவர்கள் &amp; குழந்தைகள்: 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகள்.</p><p>•நாட்பட்ட நோயாளிகள்: நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகள்.</p><p>•கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மாறுபடுவதால் இவர்களுக்கு ஆபத்து அதிகம்.</p><p>•குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள்: புற்றுநோய் சிகிச்சை பெறுவோர் அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்.</p><h2>உடனடி மரு<strong>த்துவ உதவி</strong> </h2><p>கீழ்க்கண்ட தீவிர அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனையை அணுக வேண்டும்:</p><p>* மூச்சு விடுவதில் சிரமம் அல்லது கஷ்டப்பட்டு மூச்சு வாங்குதல்.</p><p>* நெஞ்சுப் பகுதியில் தொடர்ச்சியான வலி அல்லது அழுத்தம்.</p><p>* உதடுகள், நகங்கள் அல்லது சர்மம் நீல நிறமாக மாறுதல் (ஆக்ஸிஜன் குறைபாடு).</p><p>* சளியில் ரத்தம் வருதல் அல்லது காய்ச்சல் குறையாமல் 5 நாட்களுக்கு மேல் நீடித்தல்.</p><p>* அதிகப்படியான மயக்கம் அல்லது குழப்பமான நிலை.</p><h2>த<strong>டுப்பு முறைக</strong>ள் </h2><p>•சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு குறைந்தது 20 வினாடிகள் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.</p><p>•இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் 2-3 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கும்.</p><p>• மருத்துவரின் பரிந்துரை இன்றி தானாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது; ஏனெனில் H1N1 என்பது ஒரு வைரஸ் தொற்று.</p><p>•ஆபத்து பிரிவில் உள்ளவர்கள் ஆண்டுதோறும் போடும் 'Flu Vaccine' தடுப்பூசியை எடுத்துக்கொள்வது தீவிர பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமருக்கு புதிய இல்லம் கட்ட முடியும் என்றால் கிராமங்களில் புதிய பள்ளிகளைக் கட்ட முடியாதா?.. CJPயின் அடுத்த நகர்வை அறிவித்த அபிஜித் தீப்கே </title><link>https://www.maalaimalar.com/news/national/rural-govt-schools-campaign-cjp-launches-national-drive-to-improve-village-school-infrastructure</link><comments>https://www.maalaimalar.com/news/national/rural-govt-schools-campaign-cjp-launches-national-drive-to-improve-village-school-infrastructure#comments</comments><guid isPermaLink="false">60b61cf6-f2e9-4e2f-acb4-1d27c6757b8b</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:33:01 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:33:01.162Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசுப் பள்ளிகள்,government schools,CJP Protest,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v1x07ijl/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே ]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v1x07ijl/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிராமப்புற அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) மற்றும் அதன் நிறுவனர் அபிஜித் திப்கே அறிவித்துள்ள தேசிய அளவிலான பிரச்சாரத்தின் முக்கியச் செய்திகள் தமிழில் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:  </p><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள், மாணவர்களை ஒன்றுதிரட்டி கரப்பான் பூச்சி கட்சி ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்திய போராட்டம் மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததன் மூலம் வெற்றி பெற்றது. </p><p>இதைதொர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">சிஜேபியின் </a>அடுத்தகட்ட நகர்வு என்ன என எதிர்பார்க்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சத்திரபதி சாம்பாஜி நகரில் தன் வீட்டில் இருந்தபடி  சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அமைப்பின் அடுத்தகட்ட செயல்திட்டத்தை தீட்டி வருகிறார். </p> <h2>ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு</h2><p>ஜார்கண்டில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நேற்று சட்டமன்றம் நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் அடக்குமுறையில் ஈடுபடத்தை அவர் கண்டித்துள்ளார்.</p><p>மேலும் முறைகேடு நடைபெற்ற ஜார்க்கண்ட் அரசு தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து நேற்று பேரணியில் காயம்பட்ட தலைவர் தேவேந்திரநாத் மாதோவுடன் வீடியோ காலில் அபிஜித் தீப்கே பேசினார்.</p> <h2>புதிய பிரச்சாரம்</h2><p>இந்நிலையில் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் அவலநிலையைப் போக்கவும், அவற்றின் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் சிஜேபி சார்பில் ல் ஆகஸ்ட் 15 முதல் தேசிய அளவிலான பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது.</p><p>வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில், கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பஞ்சாயத்து தலைவர்களும்பெற்றோர்களும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அபிஜித் திப்கே கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2> பிரதமர் இல்லம் </h2><p>மேலும் அவர் இதுகுறித்து தீப்கே தெரிவிக்கையில், "கடந்த 80 ஆண்டுகளாக கிராமப்புறப் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.</p><p>புதிய நாடாளுமன்றக் கட்டடமும், பிரதமருக்கு புதிய இல்லமும் கட்ட முடிந்தது என்றால், கிராமப்புற விவசாயிகளின் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக புதிய பள்ளிகளைக் கட்ட முடியாதா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>கிராமப்புற பள்ளிகள்</h2><p>தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில் உள்ள அரசுப் பள்ளியைச் சீரமைக்க உள்ளூர் பஞ்சாயத்து தலைவரிடம் கோரிக்கை வைக்கப் போவதாகத் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>பள்ளிகளைச் சிறப்பாக மேம்படுத்தும் பஞ்சாயத்து தலைவர்களின் புகைப்படங்களை சிஜேபியின் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு கௌரவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மின்சாரம், குடிநீர், கழிப்பறை மற்றும் சத்தான மதிய உணவு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>வசதிகள் இல்லாத பட்சத்தில் வீடியோ பதிவு செய்து, சிஜேபி வழங்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து contact@cockroachjantaparty.org என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் ரத்து தீர்மானம்: தவெக Vs திமுக காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-cancellation-resolution-tvk-and-dmk-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-cancellation-resolution-tvk-and-dmk-arguments#comments</comments><guid isPermaLink="false">b0aebc88-8200-46df-b583-435bc5b8bc11</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:24:21 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:24:21.909Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,neet,நீட்,நீட் தேர்வு,Neet exam,தனித்தீர்மானம்,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/tdifs1y4/tvk.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/tdifs1y4/tvk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது தவெக மற்றும் தி.மு.க. இடையே காரசார விவாதம் நடைபெற்றது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட்</a> நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்தார். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதை கூறி தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. </p><p>தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ், பாமக, அதிமுக, மஜக, திமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராஜா பேசுகையில், எந்த நுழைவுத்தேர்வும் இருக்க கூடாது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு. சட்டப்போராட்டங்கள் எந்த அளவில் உள்ளது என்பதை தமிழக அரசு விளக்கம் வேண்டும். நீட் மட்டும் தான் உலகமா? என தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் பேசியிருக்கிறார். மருத்துவம் மட்டும் தான் படிப்பா? பிளம்பர், கார்பெண்டருக்கு நிறைய தேவை இருக்கிறது என அமைச்சர் பேசியிருக்கிறார்.  மின்துறை அமைச்சர் பேசியது குலக்கல்வி திட்டத்திற்கு ஆதரவாக உள்ளது என்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-dmk-support-to-neet-cancellation-resolution">தி.மு.க</a>. எம்.எல்.ஏ. முத்துராஜாவின் இந்த பேச்சுக்கு த.வெ.க. தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ஆதர் அர்ஜூனா, நீட் தொடர்பான தீர்மானத்தில் அரசியல் தேவையில்லை, இதில் மாணவர் நலனே முக்கியம். நீட் விவகாரத்தில் பாஜகவை தவிர தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம். நீட் விவகாரத்தில் திமுக என்ன செய்துள்ளது என்பது எங்களுக்கம் தெரியும், ஆதாரம் உள்ளது என்றார். </p><p>அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், நீட் விவகாரத்தில் இங்கே பலனடைந்த ஒரு சில மாணவர்களை பற்றி பாஜக எம்எல்ஏ பேசியுள்ளார், பல ஆயிரம் மாணவர்களின் நிலை என்ன?. பலனடையும் ஒரு சில குழந்தைகளை விட பாதிக்கப்படும் குழந்தைகளே அதிகம். பாதிக்கப்படும் பல லட்சம் குழந்தைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். </p><p>இதற்கிடையே டெல்லி சிஜேபி நடத்திய போராட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆதரவு தெரிவிக்கவில்லை என தி.மு.க. எம்.எல்.ஏ. தெரிவிக்க, நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா வீட்டின் தரையில் அமர்ந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் விஜய். அனிதாவின் மதிப்பெண்ணை டீசர்ட்டாக அணிந்தவர் நமது முதலமைச்சர் விஜய். ஆயிரம் அவதூறுகளை அள்ளி வீசினாலும் அந்த மாமனிதன் முதலமைச்சர் விஜயை அவமதிக்க முடியாது என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். மேலும் பல முறை அறிவுறுத்திய பின்னரும் தி.மு.க. எம்எல்ஏ நீட் தொடர்பான தீர்மானத்தில் அரசியல் பேசுகிறார் என்று அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டினார். </p><p>இதனிடையே, நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தவர் திமுகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் காந்தி செல்வன் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். இதற்கு, நீட் இந்தியா முழுவதும் கொண்டு வந்தார்கள். ஆனால் அதனை தமிழ்நாட்டிற்கு கலைஞர் ஏற்கவில்லை. நீட தேர்வு இந்தியா முழுவதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது, தமிழகத்திற்குள் நுழையாமல் தடுத்தவர் கலைஞர் கருணாநிதி என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். </p><p>இவ்வாறு சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. </p> ]]></content:encoded></item><item><title>நீட் ரத்து தீர்மானத்திற்கு பாமக முழு ஆதரவு!- சவுமியா அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-full-support-for-neet-cancellation-resolution-sowmya-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-full-support-for-neet-cancellation-resolution-sowmya-anbumani#comments</comments><guid isPermaLink="false">931362c0-0f58-433c-b04e-11df413b0865</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:16:26.912Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சவுமியா அன்புமணி,neet,நீட் தேர்வு,தமிழ்நாடு சட்டப்பேரவை,Sowmya Anbumani,TNAssembly,Bhojarajan,எம்.எல்.ஏ போஜராஜன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/sx4evmw1/ggg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sowmya Anbumani  Bhojarajan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/sx4evmw1/ggg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் சவுமியா அன்புமணி முழு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார்.</p><p>நீட் தேர்வு முறையால் அதிக மதிப்பெண்கள் பெற்ற போதிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத அவலநிலை நீடிக்கிறது. தற்போதுள்ள சூழலில் வெறும் 15 சதவீத மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூட ரூ.30 லட்சம் வரை பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரிகளில் சேரும் நிலை உள்ளது. இது உண்மையான திறமைக்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>மாநில<strong>ப் பட்டியலுக்கு மாற்</strong>றம்</h2><p>கல்வித்துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பாமகவின் தொடர் கோரிக்கை என்று குறிப்பிட்ட அவர், மாநில அரசே மருத்துவச் சேர்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.</p><h2>தீர்மா<strong>னத்திற்கு</strong> ஆதரவு</h2><p>வணிகமயமாக்கப்பட்டு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நிறைவேற்றப்படும் இந்தத் தனித் தீர்மானத்தை பாமக முழு மனதுடன் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.</p><h2><strong>நீட் பயிற்சி மையங்களை அரசே ஏற்று நடத்தலாமே- பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன்</strong> </h2><p>முன்னதாக பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன், மாநில அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நீட் தேர்வின் அவசியத்தையும், அதன் மூலம் கிடைக்கும் கல்வித் தரத்தையும் சுட்டிக்காட்டினார். நீட் தேர்வு முறையினால் கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள் என்பதற்குச் சான்றாக, பல்லடத்தில் உள்ள ஒரே அரசுப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.</p><h2>அரசே பயி<strong>ற்சி மையங்களை நடத்த கோரிக்கை</strong></h2><p>தனியார் பயிற்சி மையங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழும் நிலையில், "நீட் பயிற்சி மையங்களை ஏன் அரசே நேரடியாக ஏற்று நடத்தக்கூடாது?" என்ற கேள்வியை முன்வைத்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசே இலவசப் பயிற்சி அளிக்கும் போது அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி ஏழுமலையான் கோவில்: ரூ.900 கோடி திட்டங்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/chandrababu-naidu-to-open-rs-900-crore-projects-at-tirupati-seven-hills-temple</link><comments>https://www.maalaimalar.com/news/national/chandrababu-naidu-to-open-rs-900-crore-projects-at-tirupati-seven-hills-temple#comments</comments><guid isPermaLink="false">95c14bca-1c5b-4a5a-976c-ae5f4d903ead</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:16:26.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பதி,Tirumala M Tirupathi,mukesh ambani,ChandraBabu Naidu,andhrapradesh,Venkateswara Museum,AnantAmbani,Reliance Donation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/mhdxw92k/Chandrababu-Naidu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chandrababu Naidu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/mhdxw92k/Chandrababu-Naidu?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்க உள்ளது. </p><p>விழாவின் முதல் நாளன்று ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பிக்கிறார். </p><p>இந்த வருகையின் போது, திருப்பதி மலையில் ரூ.900 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய அதிநவீன கட்டிடங்கள் மற்றும் வசதிகளை அவர் திறந்து வைக்க உள்ளார்.</p><h2><strong>திருப்பதி வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம்:</strong></h2><p>டி.சி.எஸ் நிறுவனத்தின் ₹145 கோடி நிதி மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புடன், உலகளாவிய பக்தர்களைக் கவரும் வகையில் அதிநவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது. </p><p>அதே வேளையில், உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு தயாரிக்கத் தொடங்கி 310 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு லட்டு திருவிழாவில், ஆந்திர மாநில முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு அவர்கள் ஒரு சிறப்பு தங்க நாணயத்தை வெளியிடுகிறார்.</p><h2><strong>ஒரே நேரத்தில் 10,000 பக்தர்கள் தங்கும் பிரம்மாண்ட விடுதி!</strong></h2><p>திருப்பதிக்கு வரும் சாதாரண பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் சுமார் ரூ.600 கோடி இமாலய நிதிச் செலவில், ஒரே நேரத்தில் 10,000 பக்தர்கள் தங்கும் வகையிலான பிரம்மாண்ட புதிய விடுதிகள் வளாகம் திருமலையில் கட்டப்பட்டுள்ளது. </p><p>இந்த மாபெரும் விடுதி திறக்கப்படுவதன் மூலம் திருப்பதி மலையில் நிலவி வரும் தங்கும் அறைகளுக்கான தட்டுப்பாடு இனி பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆன்மீக நிதியுதவிகள்!</strong></h2><p>ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் ரூ.120 கோடி நிதியுதவியுடன் திருப்பதியில் ஒருங்கிணைந்த உயர் தொழில்நுட்ப சமையலறைகள் கட்டப்பட்டுள்ளதுடன், அவரது மகன் ஆனந்த் அம்பானி ரூ.27.5 கோடி மதிப்பில் நவீன மின்சார பஸ்களை திருமலைக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>இந்த மின்சார பஸ்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில், இவற்றை இயக்குவதற்காக 50 புதிய பஸ் டிரைவர்கள் நியமிக்கப்பட்டு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.</p><h2><strong>திருப்பதி உண்டியல் விவரம்:</strong></h2><p>திருப்பதி திருமலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 81,064 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில், இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் டோக்கன் பெற்று சுமார் 18 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்துள்ளனர். </p><p>மேலும் நேற்று 33,136 பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தியுள்ளனர், பக்தர்களின் காணிக்கை மூலம் உண்டியல் வருவாயாக ரூ. 5.36 கோடி வசூலாகியுள்ளதுடன், சாதனை அளவாக 4.09 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>நீட் ரத்து தீர்மானம்- அதிமுக, திமுக, மஜக ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-dmk-support-to-neet-cancellation-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-dmk-support-to-neet-cancellation-resolution#comments</comments><guid isPermaLink="false">c7d8a301-bce7-4f7c-8058-17dba27b042f</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:56:29 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:56:29.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,neet,நீட்,நீட் தேர்வு,Neet exam,தனித்தீர்மானம்,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/el5yfk6a/NEET.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நீட்]]></media:title><media:description type="html"><![CDATA[ நீட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/el5yfk6a/NEET.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தை திமுக, அதிமுக, மஜக ஆகிய கட்சிகள் ஆதரித்தனர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் நுழைவுத்தேர்வுக்கு</a> எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்தார். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதை கூறி தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. </p><h2><strong>ஆதரவு</strong></h2><p>இந்த தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், பாமக கட்சிகள் ஆதரவு அளித்தன. இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஓ.எஸ்.மணியன் தீர்மானத்தின் மீது பேசுகையில், </p><p>நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.  நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது. மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக தான் என்றார். </p><p>அ.தி.மு.க.வை தொடர்ந்து நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக பேசிய தமிமுன் அன்சாரி, நீட் ரத்து கருத்தியலை நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருவதை ஒரு சடங்காக செய்யக்கூடாது, நிரந்தர தீர்வு தேவை. பாஜக ஆளாத இதர மாநிலங்களிலும் நீட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முதலமைச்சர் விஜய் வலியுறுத்த வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக கருத்தியலை நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு தி.மு.க.வும் ஆதரவும் தெரிவித்தது. இதுதொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராஜா பேசுகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறியபடி தீர்மானத்தை ஆதரிக்கிறோம். இந்தியாவிலேயே நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தவர் கலைஞர் கருணாநிதி. நீட் தேர்வு எழுதாமல் மருத்துவராக தேர்வு பெற்றவன் நான். நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை நீட் தேர்வு நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை. எந்த நுழைவுத்தேர்வும் இருக்கக்கூடாது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு என்றார். </p>]]></content:encoded></item><item><title>&apos;கல்வி மாபியாக்களின் கையில் நீட் மையம்&apos;: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் அதிரடி பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-center-in-hands-of-education-mafia-mla-thali-ramachandran-fiery-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-center-in-hands-of-education-mafia-mla-thali-ramachandran-fiery-speech#comments</comments><guid isPermaLink="false">e809d09e-5dba-4694-9281-d5caad52222b</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:54:17 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:54:17.293Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,TNAssembly,சட்டப்பேரவை கூட்டத்தொடர்,MLA Thali Ramachandran,எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/zkbznay7/ll.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MLA Thali Ramachandran  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/zkbznay7/ll.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் நீட் தேர்வு மற்றும் அதை சுற்றியுள்ள வர்த்தக அமைப்புகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.</p><p>சமூக நீதியின் ஆணிவேராக தமிழ்நாடு திகழ்கிறது. சமூகநீதியின் ஆணிவேரில் வெண்ணீரை ஊற்றுவது போல ஒன்றிய அரசு இளங்கலை மருத்துவப் படிப்பில் நீட் என்ற நுழைவுத்தேர்வவை ஒரு நவீன தீட்டை நுழைத்து தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைத்திருக்கிது. இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு அரியலுர் மாணவி அனிதா மற்றும் அவரை தொடர்ந்து அநேக மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.</p><h2>கல்வி மா<strong>பியாக்களின்</strong> ஆதிக்கம்:</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-moved-a-special-resolution-against-the-neet-exam">நீட் தேர்வு </a>முறையை மூலதனமாக வைத்து நாடு முழுவதும் புற்றீசல் போல தனியார் நீட் பயிற்சி மையங்கள் பிரம்மாண்ட வர்த்தகத்தை நடத்தி வருகின்றன. இத்தகைய மையங்களை அரசியல் பின்புலம் வாய்ந்த 'கல்வி மாபியாக்கள்' தான் இயக்கி வருகிறார்கள் என்று சாடிய அவர், இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.</p><h2>சமூக நீதிக்கு<strong>ம் ஏழை</strong> மாணவர்களுக்கும் பாதிப்பு</h2><p>இவ்வளவு பெரிய தொகையைக் கட்டணமாகச் செலுத்த முடியாத கிராமப்புற, அடித்தட்டு மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவு தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. திறமை இருந்தும் பண வசதி இல்லாத காரணத்தால் ஏழை மாணவர்கள் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. எந்த உயர் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு கூடாது என்றார்.  மேலும், பொதுப்பட்டியலில் இருக்கும் நமது கல்விளை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி நீட் தேர்வு ரத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>லஞ்ச வழக்கு தள்ளுபடி.. பங்குச்சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் உயர்வு  </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/us-court-dismisses-bribery-case-against-gautam-adani-stocks-rally-in-indian-market</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/us-court-dismisses-bribery-case-against-gautam-adani-stocks-rally-in-indian-market#comments</comments><guid isPermaLink="false">cf0a2966-41ed-4493-82f6-8b11b9e1edf2</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:52:19 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:52:19.204Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதானி,Adani,adani group,Stock Market,பங்குச்சந்தை,அதானி குழுமம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/22pvs1sf/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அதானி ]]></media:title><media:description type="html"><![CDATA[ அதானி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/22pvs1sf/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கௌதம் <a href="https://www.maalaimalar.com/news/world/adani-bribery-case-dismissed-new-york-court-drops-us-criminal-charges-against-gautam-adani">அதானி</a>, அவரது உறவினர் அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் அதானி கிரீன் எனர்ஜி முன்னாள் சி.இ.ஓ வினீத் ஜெயின் ஆகியோர் மீதான லஞ்சம் மற்றும் மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. </p><p>இதையடுத்து இன்று இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் வெவ்வேறு நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன. </p><p>வர்த்தகத் தொடக்கத்தில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 1.7% வரை உயர்ந்தது.  </p><p>அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்கு காலை வர்த்தகத்தில் 2%க்கும் மேல் உயர்ந்து. அதிகபட்சமாக ரூ.1,670 வரை உயர்ந்தது.</p><p>அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.  </p> <h2>வழக்கு தள்ளுபடி</h2><p>2024ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றவியல் வழக்கை அமெரிக்க நீதிமன்றம் நிரந்தரமாகத் தள்ளுபடி செய்துள்ளது.</p><p>அமெரிக்க அரசின் நீதித்துறை வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தது. இதற்கு பிரதிபலனாக அதானி அமெரிக்காவில் முதலீடு செய்ய உள்ளாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அதை அரசு தரப்பு மறுத்தது. மேலும் அதானி தரப்பும் நீதிமன்ற உத்தரவுப்படி, எந்த பிரதிபலனும் செய்யவில்லை என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தார்.</p><p>இதற்கிடையில், அதானிக்கு எதிரான இறுதித் தீர்ப்பின் மூலம், அமெரிக்க பங்குச்சந்தை வாரியமான 'செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன்'  (SEC) தொடர்ந்திருந்த சிவில் வழக்கும் முடிவுக்கு வந்துள்ளது. </p><p>தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாமலும், அதே நேரம் மறுக்காமலும் அவர் இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டார். இத்தீர்ப்பின்படி, அதானி 30 நாட்களுக்குள் SEC-க்கு 6 மில்லியன் டாலர் சிவில் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும்.</p> <h2>அதானி நன்றி</h2><p>இந்தத் தீர்ப்பு குறித்து கௌதம் அதானி, "நீதித்துறை நடவடிக்கைகளை மிகுந்த பணிவுடனும் மரியாதையுடனும் வரவேற்கிறேன். இந்தச் சவாலான காலத்தில், உண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை குலையவில்லை. எங்கள் மீதும், நாட்டின் நீதித் துறை மீதும் நம்பிக்கை இழக்காத அனைவருக்கும் என் நன்றிகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>NEET தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-moved-a-special-resolution-against-the-neet-exam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-moved-a-special-resolution-against-the-neet-exam#comments</comments><guid isPermaLink="false">33ee50ff-f7d5-4214-a3d1-ef3b192c3ee2</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:33:09 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:33:09.010Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,நீட் தேர்வு,Neet exam,தனித்தீர்மானம்,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/utlpz29t/arunraj.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/utlpz29t/arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்வழி மாணவர்கள், சமூக &amp;  பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் மருத்துவ கனவை நீட் பறிக்கிறது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட்</a> நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்தார். நீட் முறைகேட்டால் உயிரிழப்பும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சொல்லொணா துயரமும் ஏற்பட்டுள்ளதாக தீர்மானத்தில் விளக்கம் கூறப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்ட நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  </p><p>தீர்மானத்தை கொண்டு வந்து அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், </p><h2><strong>சொல்லொணா துயரம்</strong></h2><p>* ஒரு மாணவர் 12 ஆண்டாக பள்ளியில் கற்ற கல்வியை விட ஒரு நாள் நடக்கும் தேர்வு அவரது திறமையை மதிப்பிடக்கூடாது. </p><p>* தமிழ்நாடு சமூகநீதியை அடிப்படையாக கொண்ட கல்வியை அளித்த மாநிலம். பல துறைகளில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக உள்ளது. </p><p>* இதன்மூலம் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்ள இயலும். </p><p>* முறைகேடுகளை கருத்தில் கொண்டு நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். </p><p>*  நீட் ரத்து தொடர்பாக உள்ள சட்டங்களில் மத்திய அரசு உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். </p><p>* ஒரு மனதாக சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டும் குடியரசுத் தலைவர் இசைவு தெரிவிக்கவில்லை. </p><p>* வினாத்தாள் கசிவு, முறைகேடுகளால் 2026 நீட் இளநிலைத் தேர்வு ரத்தாகி மறுதேர்வு நடத்தப்பட்டது. </p><p>* கடும் உழைப்பில் தேர்வெழுதிய மாணவர்கள் சொல்லொணா துயரம்,  சிலரை உயிரை மாய்த்தப் பரிதாபம். </p><p>* நீட் அமலுக்கு வந்த பின்னர் அடிப்படை சமநிலை கேள்விக்குள்ளாகி உள்ளது. </p><p>* தமிழ்வழி மாணவர்கள், சமூக &amp;  பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் மருத்துவ கனவை நீட் பறிக்கிறது. </p><p>* வரம்பின்றி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகவே நீட் வழி வகுக்கிறது. </p><p>* மாணவர்களின் கவனத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து திசைத்திருப்புகிறது நீட் தேர்வு. </p><p>* மாணவர்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துள்ள நீட் நுழைவுத்தேர்வு அகற்றப்பட வேண்டும். </p><p>* நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. </p><p>* மாநில அரசின் கருத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். </p><p>* கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றார். </p><p>மேலும் நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். </p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் அதானி லஞ்ச வழக்கு தள்ளுபடி.. குற்றச்சாட்டுகள் என்ன? - வழக்கு கடந்து வந்த பாதை!</title><link>https://www.maalaimalar.com/news/world/adani-bribery-case-dismissed-new-york-court-drops-us-criminal-charges-against-gautam-adani</link><comments>https://www.maalaimalar.com/news/world/adani-bribery-case-dismissed-new-york-court-drops-us-criminal-charges-against-gautam-adani#comments</comments><guid isPermaLink="false">88fc7b52-3ce4-4516-bed8-ad40c6199df6</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:11:25 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:11:25.320Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதானி,Adani,adani group,அதானி குழுமம்,அதானி ஊழல்,Adani corruption</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/o3vr9tog/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அதானி ]]></media:title><media:description type="html"><![CDATA[ அதானி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/o3vr9tog/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/adani">அதானி </a>குழுமத் தலைவர் கௌதம் அதானி மீது அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த லஞ்சம் மற்றும் மோசடி வழக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. </p><p>அவருடன், அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் அதானி கிரீன் எனர்ஜி முன்னாள் சி.இ.ஓ வினீத் ஜெயின் ஆகியோரும் நியூ யார்க் நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். </p><p>நியூயார்க் பெடரல் நீதிமன்ற நீதிபதி நிக்கோலஸ் கரௌபிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  </p><p>இதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்க அரசு எதிர்காலத்தில் இவர்கள் மீது மீண்டும் குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய முடியாத வகையில் 'Dismissed with prejudice'  என்ற அம்சத்தின் கீழ் அவர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. </p> <h2>அதானி ஊழல் குற்றச்சாட்டு</h2><p>இந்திய அரசு அதிகாரிகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி குழுமத்தின் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது.</p><p>மேலும் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்க முதலீட்டை பெற்றதாக கெளதம் அதானி மீது வழக்கு தொடரப்பட்டது.</p><p>இதன் தொடர்ச்சியாக அமெரிக்கப் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் தொடர்ந்த இந்த வழக்கில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும், அதே சமயம் மறுக்காமலும் அதானி 6 மில்லியன் டாலர் மற்றும் சாகர் அதானி 12 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டனர்.</p><p>இதையடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, மேலும் கூடுதல் நேரத்தை செலவிட அமெரிக்க நீதித்துறை விரும்பவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.</p><p>இந்நிலையில் புரூக்ளினை தளமாக கொண்ட அமெரிக்க மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கரோபிஸிடம் இந்த வழக்கை உடனடியாக முறைப்படி தள்ளுபடி செய்யுமாறு அதானி வழக்கறிஞர்கள் வாதாடினர்.</p><p>அமெரிக்காவின் குற்றவியல் விதிப்படி, ஒரு வழக்கை திரும்பப் பெறுவதற்கு முன் அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் நியாயமானவை தானா என்பதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.</p><p>எனவே அதானி மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கைக்கு உடனடியான தீர்ப்பு வழங்க அமெரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்</p><p>மேலும் இந்த வழக்கை கைவிடுவதற்கான தங்களது முடிவை நியாயப்படுத்தும்படியும் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/b4kfj8ge/tn-24.jpg" /></figure><h2>நியாயம்</h2><p>இதற்கு ஜூலை 4 அன்று பதிலளித்த அமெரிக்க நீதித்துறை தரப்பு வழக்கறிஞர், முந்தைய ஜோ பைடன் நிர்வாகத்தின் கடைசி நாட்களில், விசாரணை எந்தவொரு சாத்தியக்கூறுகளும் இல்லாத சூழலிலேயே அவசர அவசரமாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.</p><p>மேலும், இது இந்திய மின் கொள்முதல் ஒப்பந்தம் சார்ந்து இந்தியப் அதிகாரிகள் மீது பதியப்பட்ட வழக்கு என்பதால், இதில் அமெரிக்கா தலையிட வேண்டிய அவசியமில்லை.</p><p>இந்தியாவே தனது உள்நாட்டு சட்ட வழிமுறைகள் மூலம் இதனை கையாண்டு கொள்ள முடியும் என்றும் வாதாடினார்.</p> <h2>சந்தேகம்</h2><p>இந்த வழக்கை கைவிடும் முடிவை அரசாங்கமே தன்னிச்சையாக எடுத்துள்ளது. அமெரிக்காவில் அதானி குழுமம் 10 பில்லியன் முதலீடு செய்யப் போவதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் இந்த வழக்கு கைவிடப்படுகிறது என வெளியாகும் செய்திகள் உண்மையல்ல என்று வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.</p><p>எனினும், அரசு வழக்கறிஞரின் இந்த விளக்கமே நீதிமன்றத்திற்குப் புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதுவரை நீதிமன்றத்தின் கவனத்திற்கு வராத ஏதேனும் ஒரு ரகசிய ஒப்பந்தம் அல்லது ஏற்பாடு இதன் பின்னணியில் இருக்கலாமோ என்று சந்தேகிப்பதாக கூறிய நீதிபதி, இறுதி முடிவை எடுக்கும் முன் அதானியின் நேரடி விளக்கம் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>குறிப்பாக, அதானி தரப்பில் ஆஜராகும் சலிவன் &amp; குரோம்வெல் நிறுவனத்தின் வழக்கறிஞர் ராபர்ட் ஜே. கியூப்ரா ஜூனியர், தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2>பிரமாண பத்திரம்</h2><p>வழக்கை கைவிடுவதற்குப் பிரதிபலனாக எந்தவொரு ரகசிய ஒப்பந்தமோ அல்லது வாக்குறுதியோ அளிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த பிராமண பத்திரம் சமர்ப்பிக்குமாறு அதானிக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>ஜூலை 15க்குள் அதானி இந்த பிராமண பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது.</p><p>பிராமண பத்திரத்தில், இந்த வழக்கைக் கைவிடுவது தொடர்பாக யாரேனும், ஏதேனும் ஒரு வாக்குறுதியை உங்களிடம் கேட்டிருக்கிறார்களா, உங்களிடமிருந்து பெற்றிருக்கிறார்களா அல்லது அத்தகைய ஒப்பந்தத்திற்கு நீங்கள் உடன்பட்டிருக்கிறீர்களா?</p><p>இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதற்குப் பிரதிபலனாக ஏதேனும் ஒரு ஆதாயத்தை பரிமாறிக் கொள்வது குறித்த ஒப்பந்தம் ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க நீதிமன்றம் கோரியது.</p> <h2>பதில்</h2><p>நீதிபதி உத்தரவுப்படி அதானி தரப்பும் அப்படி எதுவும் பிரதிபலன்கள் செய்யப்படவில்லை என உறுதிமொழிப் பத்திரம் சமர்பித்ததை தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.</p><p>இதற்கிடையில், அதானிக்கு எதிரான இறுதித் தீர்ப்பின் மூலம், அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திற்கு  தொடர்ந்திருந்த சிவில் வழக்கும் முடிவுக்கு வந்துள்ளது.</p><p>தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாமலும், அதே நேரம் மறுக்காமலும் அவர் இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டார். இத்தீர்ப்பின்படி, அதானி 30 நாட்களுக்குள் SEC-க்கு 6 மில்லியன் டாலர் சிவில் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும்.</p><h2>உண்மையை பற்றி அதானி</h2><p>இந்தத் தீர்ப்பு குறித்து கௌதம் அதானி, "நீதித்துறை நடவடிக்கைகளை மிகுந்த பணிவுடனும் மரியாதையுடனும் வரவேற்கிறேன். இந்தச் சவாலான காலத்தில், உண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை குலையவில்லை. எங்கள் மீதும், நாட்டின் நீதித் துறை மீதும் நம்பிக்கை இழக்காத அனைவருக்கும் என் நன்றிகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>செங்கோட்டையில் எதிரொலிக்கும் &apos;வந்தே மாதரம்&apos;: 80-வது சுதந்திர தின விழாவில் அரங்கேறும் புதிய வரலாறு!</title><link>https://www.maalaimalar.com/news/national/red-fort-to-echo-vande-mataram-on-indias-80th-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/red-fort-to-echo-vande-mataram-on-indias-80th-independence-day#comments</comments><guid isPermaLink="false">70c05b1d-cf11-4815-b57b-bbb5bdaa275c</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:06:48 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:06:48.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Delhi Red Fort,செங்கோட்டை,பிரதமர் நரேந்திர மோடி,narendra  modi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/2abnbxlj/RED-FORT.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Red Fort ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/2abnbxlj/RED-FORT.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் 80-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15, 2026 அன்று டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இவ்வாண்டு சுதந்திர தின விழாவில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களும் புதிய அம்சங்களும் இடம்பெறவுள்ளன.</p><h2>வந்தே மாத<strong>ரம் பாடலின் 150-</strong>வது ஆண்டு</h2><p>பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இயற்றப்பட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு எழுச்சியூட்டிய 'வந்தே மாதரம்' தேசிய பாடல் உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், வரலாற்றிலேயே முதன்முறையாக செங்கோட்டை மேடையில் இப்பாடல் முழுமையாகப் பாடப்படவுள்ளது.</p><h2>நிகழ்<strong>ச்சி நிரல்</strong></h2><p>பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை தந்தவுடன் 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்படும். அதைத் தொடர்ந்து அவர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். உரைக்குப்பின் NCC மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீண்டும் பாடலையும், தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாடுவர்.</p><h2><strong>மையக்கருத்து</strong> </h2><p>இந்த ஆண்டின் முக்கியக் கருப்பொருளாக 'வந்தே மாதரம் 150 ஆண்டுகள்' மற்றும் 'விகசித் பாரத் 2047-க்கான யுவ சக்தி' ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>வான்வெளி</strong> அணிவகுப்பு</h2><p>இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகாப்டர் 'வந்தே மாதரம் 150' என்ற பதாகையை ஏந்தி வந்து, விழா மைதானத்தில் உள்ள மக்கள் மீது பூக்களைத் தூவும். செங்கோட்டைக்கு எதிரே உள்ள ஞான்பாத் பகுதியில் 2,500 தேசிய மாணவர் படை மற்றும் 'மை பாரத்' தன்னார்வலர்கள் 'வந்தே மாதரம்' என்ற வார்த்தை வடிவில் நின்று சிறப்பிப்பர். வருகை தருபவர்கள் அனைவரும் உடன் சேர்ந்து பாடும் வகையில், அழைப்பிதழில் வந்தே மாதரம் பாடலின் வரிகள் முழுமையாக அச்சிடப்பட்டுள்ளன. </p><p>மேலும், 'சேவா தீர்த்தம்' மற்றும் 'தர்ம சக்கரம்' படங்களும் இடம்பெற்றுள்ளன. VIP கலாச்சாரத்தைக் குறைக்கவும், நீர் வளப் பாதுகாப்பை வலியுறுத்தவும், விருந்தினர்கள் அமரும் பகுதிகள் இந்தியாவின் முக்கிய ஏரிகளின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.</p><h2>சிறப்<strong>பு விருந்தி</strong>னர்கள்</h2><p>சர்வதேச கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஒலிம்பியாட் 2026 போட்டிகளில் பதக்கம் வென்ற 19 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக முதன்மை மேடையில் அமர வைக்கப்படுகின்றனர். இவர்களுடன் இளம் தொழில்முனைவோர்கள், 'ஸ்டார்ட்-அப்' அமைப்பாளர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் உட்பட சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். </p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஆகஸ்ட் 8 முதல் 15 வரை 343 இடங்களில் முப்படை மற்றும் பாதுகாப்புப் படைகளின் இசைக்குழுக்களின் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பத்திரப்பதிவை தடை செய்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களை பாதுகாத்தோம்- பி.கே. சேகர்பாபு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-temple-property-saved-p-k-sekar-babu-say</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-temple-property-saved-p-k-sekar-babu-say#comments</comments><guid isPermaLink="false">c91726e2-7b8a-4ce2-9517-9b1dd9958288</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:06:22 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:06:22.670Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,பிகே சேகர்பாபு,PK Sekar Babu,Madurai Meenakshi Temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/mrw2syka/madurai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/mrw2syka/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>தி.மு.க முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- </p><h2><strong>மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</strong></h2><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சொத்துக்களைப் பாதுகாத்த ஆட்சி, திராவிட மாடல் ஆட்சிதான். 2016-ம் ஆண்டிலேயே அந்தச் சொத்துக்களின் பத்திரப் பதிவிற்குத் தடை கோரி, அன்றைய மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டிருந்தார். </p><h2><strong>தி.மு.க. அரசு</strong></h2><p>அதனைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டிலிருந்து வெவ்வேறு மாவட்டங்களில் அந்தப் பத்திரப் பதிவை மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், அந்த அனைத்து முயற்சிகளையும் தி.மு.க. அரசு முறியடித்தது. 9,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இந்து சமய அறநிலையத்துறைச் சொத்துக்களை மீட்டிருக்கின்றோம்.</p><h2><strong>நிலங்கள்</strong></h2><p>பட்டா மற்றும் சிட்டா போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்ததையும் கண்டறிந்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம்.</p><h2><strong>ஸ்ரீரங்கம் கோபுரம்</strong></h2><p>ஸ்ரீரங்கம் கோபுரத்தைப் பொறுத்தவரை, 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதன் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளின் சில பாகங்கள் உதிர்ந்து, கோபுரம் சரிந்தது. அதை அறிந்தவுடனேயே, அன்றைய அமைச்சராக இருந்த கே.என்.நேருவும் நானும் நேரில் ஆய்வு செய்தோம். அப்போது ஜெயபால் என்பவர் ரூ.1.75 கோடி ரூபாய் செலவில் அதனைப் புதுப்பித்துத் தருவதற்கு அனுமதி கேட்டார். </p><h2><strong>கோபுரப்பணிகள்</strong></h2><p>ஒரே மாதத்தில் அனுமதி வழங்கி பணிகள் முடிக்கப்பட்டன. ஆகவே, இந்தக் கோபுரப்பணிகள் எந்த வகையிலும் தாமதிக்கப்படவில்லை. அதற்கு ஸ்டிக்கர் ஒட்டத்தான் அமைச்சர் சென்றிருக்கிறார்.</p><h2><strong>திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்</strong></h2><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் திறன் என்ன என்று ஒரு வருடத்தில் காட்டுவோம். அதிகாரிகளை மிரட்டுவது, “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்று பேசுவது மட்டுமே கையில் வைத்திருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றோம்.</p><h2><strong>மக்கள் பணிகள்</strong></h2><p>அதை பார்த்தாலே, 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய மக்கள் பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய ஆட்சி கடந்த திராவிட மாடல் ஆட்சி என்பது தெரியும்.</p><h2><strong>ஆன்மீகம்</strong></h2><p>ஆன்மீகம் என்றாலே தி.மு.க. அதற்கு எதிரானது என்றொரு பிம்பத்தைக் கட்டமைத்திருந்தார்கள். அந்தப் பிம்பத்தை அடித்து நொறுக்கிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் 3-ம் நாள் விவாதம்: சவுமியா அன்புமணிக்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sowmiya-anbumani-says-failure-to-waive-crop-loans-is-disappointing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sowmiya-anbumani-says-failure-to-waive-crop-loans-is-disappointing#comments</comments><guid isPermaLink="false">44d1fec3-f012-40a8-a5f0-d273daff3fa8</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:54:26 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:54:26.300Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,தமிழக சட்டசபை,சவுமியா அன்புமணி,Sowmiya Anbumani,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/j4bm90a3/sowmiya0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சவுமியா அன்புமணி- அமைச்சர் ஆனந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ சவுமியா அன்புமணி- அமைச்சர் ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/j4bm90a3/sowmiya0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று சவுமியா அன்புமணி கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க., த.வெ.க. தரப்பில் காரசார விவாதம் நடைபெற்றது. </p><p>விவாதத்தின் போது, தி.மு.க.வினர் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் என த.வெ.க. எம்.எல்.ஏ. சுகுமார் பேசினார். இதற்கு தி.மு.க.வினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போதுபேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சரும் டென்ஷன் என சொன்னார், அவருக்கும் சி.பி.ஐ. வழக்குகள் உள்ளது என பேசினார். </p><p>இதையடுத்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், வார்த்தைகள் மற்றவரை புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என எம்.எல்.ஏ. சுகுமாருக்கு அறிவுரை வழங்கினார். </p><p>இதனை தொடர்ந்து, பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி ராமதாஸ், பா.ம.க.வின் 13 வருட கோரிக்கையான சேவை உரிமை சட்டத்தை அமல்படுத்திய த.வெ.க. அரசுக்கு வாழ்த்துகள்.</p><h2><strong>ஏமாற்றம்</strong></h2><p>* பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் சேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதலுக்கு நன்றி. </p><p>* நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு பா.ம.க. சார்பில் நன்றி, வாழ்த்துகள். </p><p>* பட்ஜெட்டில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.</p><p>* கால்நடை, பால்வளம், நீர்ப்பாசனம் வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் மிக மிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>* 5 கோடி விவசாய மக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ததும் மிகக் குறைவான தொகை.</p><p>* வீட்டில் பெண்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneerselvam-says-tvk-budget-proven-no-one-can-surpass-stalin-in-thinking-about-welfare-of-people">பட்ஜெட்</a> போடும் போது சாப்பாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காமல் இருப்பார்களா?</p><h2><strong>தூர்வார வேண்டும்</strong></h2><p>* ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். </p><p>* மழை நீர் கடலில் வீணாக கலந்து விடுகிறது. </p><p>* 10 கி.மீ. ஒரு தடுப்பணைகளை கட்டினால் கேரளா, கர்நாடகாவிடம் நீர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. தடுப்பணைகள் மூலம் 100 டிஎம்சி நீரை சேமித்து வைக்கப்படும். </p><p>* ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. </p><p>* தமிழ்நாட்டில் உள்ள 27ஆயிரம் குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும். </p><p>* நீர் இல்லையென்றால் விவசாயிகள் எப்படி விவசாயம் செய்வார்கள்?. ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்.</p><p>*  நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. </p><p>* வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. 3000 பணியிடத்திற்கு 30 ஆயிரம் பேர் தேர்வெழுதும் நிலை, அந்தளவுக்கு வேலைவாய்ப்பு இன்றி இளைஞர்கள் தவிக்கின்றனர். </p><p>* தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு முறையை கொண்டுவர வேண்டும். தனியார் துறையிலும் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை தேவை. </p><p>* தருமபுரியில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துங்கள் என்றார். </p><h2><strong>நடவடிக்கை</strong></h2><p>சவுமியா அன்புமணிக்கு பதில் அளித்து நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசுகையில், நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட த.வெ.க. அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தருமபுரி மாவட்டம் எங்களுக்கும் தான் மாவட்டம், விவசாயிகளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். முதலமைச்சருடன் கலந்தாலோசித்து சவுமியா கேட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். </p><p>இதனிடையே, மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என கால்நடைத்துறை அமைச்சர் கமலி உறுதி அளித்தார். </p><p>இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>சதுரகிரியில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: பக்தர்கள் மலையேற மாவட்ட நிர்வாகம் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncontrolled-forest-fire-in-sathuragiri-devotees-barred-from-climbing-hill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncontrolled-forest-fire-in-sathuragiri-devotees-barred-from-climbing-hill#comments</comments><guid isPermaLink="false">e1a08d71-9561-468c-acca-09250e96877e</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:42:42 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:42:42.138Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சதுரகிரி,Sathuragiri,காட்டுத்தீ,வத்திராயிருப்பு,Vathirairuppu,Thanipparai forest,தாணிப்பாறை வனப்பகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/amulm2us/Sathuragiri.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sathuragiri  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/amulm2us/Sathuragiri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ பரவி வருவதைத் தொடர்ந்து, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேறிச் செல்ல மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன.</p><h2>திடீரெ<strong>ன பரவிய காட்டு</strong>த்தீ</h2><p>பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் குவிந்தனர்.</p><p>இந்நிலையில், தாணிப்பாறை வனப்பகுதியில் நேற்று இரவில் பரவத் தொடங்கிய காட்டுத்தீ, காற்றின் வேகம் காரணமாக மலையின் கீழ் பகுதியை நோக்கி கட்டுக்கடங்காமல் பரவத் தொடங்கியது.</p><h2>மாவட்ட ஆட்சிய<strong>ரின் பாதுகாப்பு</strong> உத்தரவு</h2><p>தீயின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பக்தர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதால், சூழல் சீராகும் வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். </p><p>ஏற்கனவே மலையேறிய பக்தர்கள் அனைவரும் வனத்துறை வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அடிவாரம் நோக்கித் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், வனத்துறை சிறப்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் வீசும் காற்றின் திசையைக் கண்காணிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>ஆடி அமாவாசை <strong>தரிசனம் என்னா</strong>கும்?</h2><p>ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில் சதுரகிரி மகாலிங்கத்தை தரிசிப்பது சிறப்பு என்பதால், இந்தத் திடீர் தடையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். காட்டுத்தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பிறகே, ஆடி அமாவாசை நாளில் பக்தர்களை மீண்டும் அனுமதிப்பது குறித்து களநிலவரத்தை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என வனத்துறை அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: சட்டப்பேரவை தீர்மானத்திற்கு கமல்ஹாசன் வரவேற்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-gets-top-billing-at-government-events-kamal-haasan-welcomes-assembly-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-gets-top-billing-at-government-events-kamal-haasan-welcomes-assembly-resolution#comments</comments><guid isPermaLink="false">f5578667-a029-4e27-9b67-ccfb25526112</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:17:16 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:17:16.574Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Thai Vazhthu,kamal haasan,TNAssembly,தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்,கமல்ஹாசன்,சட்டப்பேரவை 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/5eh4s18j/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kamal Haasan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/5eh4s18j/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் கட்டாயம் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசினர் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><h2>கட்<strong>டாய முன்னுரிமை</strong></h2><p>மாநிலத்தின் எந்தவொரு அரசு, கல்வி அல்லது பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளாக இருந்தாலும், நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் தன்னாட்சி மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. </p><p>1891-இல் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடல் வரிகள், 1970 முதல் அரசு விழாக்களின் தொடக்கப் பாடலாகவும், 2021 முதல் மாநிலப் பாடலாகவும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>கமல்<strong>ஹாசன் எம்.பி. வர</strong>வேற்பு</h2><p>சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் நீதி மய்யம் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடர வேண்டும்." என பதிவிட்டுள்ளார்.</p><p>சமீபத்தில் நடைபெற்ற சில பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படாமல் தாமதித்துப் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் சட்டப்பூர்வமாக உறுதி செய்யவே இந்தத் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை நிரூபித்துவிட்டது தவெக பட்ஜெட் - ஓபிஎஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneerselvam-says-tvk-budget-proven-no-one-can-surpass-stalin-in-thinking-about-welfare-of-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneerselvam-says-tvk-budget-proven-no-one-can-surpass-stalin-in-thinking-about-welfare-of-people#comments</comments><guid isPermaLink="false">ebad1ce0-a61f-4140-a76e-03416c8e3f95</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:12:53 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:12:53.892Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக சட்டசபை,O Panneerselvam,TN budget,தமிழக பட்ஜெட்,TN assembly,tvk,ஓ பன்னீர்செல்வம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kxiy546f/ops1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ O Panneerselvam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kxiy546f/ops1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது. 3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபை</a> கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* மாணவர் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பில்லை.</p><p>* மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை.</p> <h2>திராவிட இயக்கம்</h2><p>* திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.</p><p>* பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.</p><p>* வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.</p><p>* கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர்.</p> <h2>மின் கட்டணம்</h2><p>* தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதலமைச்சருக்கு இப்போது தெரிந்திருக்கும்.</p><p>* மின் கட்டணம், நூல் கட்டணம் உயர்வு, நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் தூங்குகிறது. </p><p>* மாநிலத்தை திராவிட மாடல் அரசு கடன் கடலில் ஆழ்த்திவிட்டதாக பிரசாரம் செய்கிறது தவெக அரசு.</p><p>* அடுத்த 50 ஆண்டுகள் வரை கடன் இன்றி யாரும் ஆட்சி செய்ய முடியாது என நிதித்துறை செயலரே கூறுகிறார். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>* கடன் குறித்த முதலமைச்சர் விஜயின் விமர்சனம் தவறு என்பது தற்போது புரிகிறதா? </p><p>* மாநில வரி வருவாயை உயர்த்த புதிய திட்டமோ அணுகுமுறையோ இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை. </p><p>* வெள்ளை அறிக்கை தயாரிக்க காட்டிய முனைப்பை வருவாய் உயர்த்தும் திட்டத்திற்கு காட்டவில்லை.</p><p>* திராவிட மாடல் அரசில் பொறுப்பான நிதி மேலாண்மை செய்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறை சொல்லக்கூடாது. </p> <h2>தவெக அரசு</h2><p>* அரசு கடன் வாங்காமல் இருக்க முடியாது, கடன் வாங்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியது என்பதுதான் முக்கியம்.</p><p>* தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமை சட்டத்தின் அடிப்படையில் எல்லை கோட்டை மீறி எந்த அரசும் கடன் வாங்க முடியாது. </p><p>* வருவாய் மதிப்பீட்டை கணிப்பது தொடர்பான தவெக அரசின் கணக்கீட்டில் நம்பிக்கை இல்லை.</p><p>* மூலதன செலவு குறைவாக இருக்கும்போது கடன் பெறுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுகிறது. </p> <h2>மு.க.ஸ்டாலின்</h2><p>* திராவிட மாடல் உருவாக்கிய வலுவான அடித்தளத்தில் நிற்கும் தவெக அரசு அதன் பலனை பயன்படுத்தி வருகிறது.</p><p>* மத்திய அரசின் மானியங்களும் மூலதன செலவில் குறைப்பும் தான் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க காரணம். </p><p>* நிதி, அதிகார பகிர்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.</p><p>* முதலமைச்சராக இருந்த <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> பொறுப்பாக நிதி மேலாண்மை செய்தவர்.</p><p>* மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை புலப்படுத்துகிறது தவெகவின் பட்ஜெட் என்று அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>கொலம்பியாவை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்.. 132 பேர் பலி - 2000 பேர் மாயம் - அதிரவைக்கும் வீடியோ, புகைப்படங்கள்</title><link>https://www.maalaimalar.com/news/world/colombia-earthquake-74-magnitude-quake-kills-132-thousands-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/colombia-earthquake-74-magnitude-quake-kills-132-thousands-missing#comments</comments><guid isPermaLink="false">6a2c170f-0f15-4d0d-9026-aea0c5a00316</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:05:53 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:05:53.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெனிசுலா,Earthquake,Venezuela,கொலம்பியா,Colombia,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/8owun82n/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொலம்பியா நிலநடுக்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலம்பியா நிலநடுக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/8owun82n/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொலம்பியாவில் நேற்று இரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/earthquake">நிலநடுக்கத்தில் </a>உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. </p><p>மேலும் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>மேற்கு கொலம்பியாவின் சொகோ (Choco) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகருக்கு அருகே பூமிக்கு அடியில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.  </p><p>தொடர்ந்து பல நில அதிர்வுகள் பதிவாகின. இந்த அதிர்வுகள் அண்டை நாடுகளான ஈக்வடார், பானமா மற்றும் வெனிசுவேலா வரையிலும் உணரப்பட்டன.  </p> <figure><img alt="கொலம்பியா " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/5dpqnvtq/tn-21.jpg" /></figure><h2>வெனிசுலாவை தொடர்ந்து..</h2><p>அண்டை நாடான வெனிசுவேலாவில் கடந்த மாதம் ஜூன் 24 அன்று 7.2, 7.5 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி 6,301 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த சூழலில் தற்போது கொலம்பியாவில் 21ஆம் நூற்றாண்டின் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கம் இது. வெனிசுலாவில் 3.8 ரிக்டர் அளவு தற்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.</p> <h2>கொலம்பியா நிலநடுக்க பாதிப்பு</h2><p>கொலம்பியாவில் நேற்றிரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரமாகப் பெரேரா உருவெடுத்துள்ளது. இங்கு மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.</p><p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாகக் காளி (Cali) மற்றும் பெரேரா (Pereira) நகரங்களில் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.</p><p>நாட்டின் 5 முக்கியத் நகரங்களுக்கு இன்னமும் ரெட் அலர்ட் அமலில் உள்ளது.</p> <figure><img alt="கொலம்பியா " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/rl43ud6v/tn-18.jpg" /></figure><h2>அவசர நிலை</h2><p>நிலநடுக்கம் குறித்து பேசிய கொலம்பியா அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரீல்லா கூற்றுப்படி,</p><p>நிலநடுக்கத்தால் 1,577 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அதில் 37 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. </p><p>60க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. 18 மருத்துவ மையங்கள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன. 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.</p> <figure><img alt="கொலம்பியா " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0fdjv5lm/tn-22.jpg" /></figure><p>நிலநடுக்கத்தின் பேரழிவைக் கருத்தில் கொண்டு கொலம்பியா அரசு தேசிய பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.</p><p>இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்க ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><p>காளி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் இடிந்து விழுந்துள்ளதால், அங்குப் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p><figure><img alt="கொலம்பியா " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m7iw65q2/tn-20.jpg" /></figure><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">NEW footage is circulating from a magnitude 7.4 earthquake that struck Colombia&#39;s Pacific region today. <br><br>The epicenter was near San José del Palmar in Chocó department, at a depth of around 96 km. <br><br>It was felt strongly across much of Colombia—including Bogotá, Medellín, and… <a href="https://t.co/X03limcIts">pic.twitter.com/X03limcIts</a></p>&mdash; Clash Report (@clashreport) <a href="https://x.com/clashreport/status/2086811623902052811?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A powerful earthquake struck Colombia, and several buildings appeared to be about to collapse due to the powerful tremors. <a href="https://x.com/hashtag/Earthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Earthquake</a> <a href="https://x.com/hashtag/colombia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#colombia</a> <a href="https://x.com/hashtag/colombiaearthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#colombiaearthquake</a> <a href="https://t.co/Kp2jWEuXlf">https://t.co/Kp2jWEuXlf</a> <a href="https://t.co/10A3kYSs2D">pic.twitter.com/10A3kYSs2D</a></p>&mdash; Bara (@Reueus) <a href="https://x.com/Reueus/status/2087024035591041294?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>நகரின் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தூசிப் படலம் பரவியது. பயத்தில் மக்கள் வீடுகளின் மாடியிலிருந்து குதித்தும் தப்பிக்க முயன்றனர்.</p><p>பெரேரா நகரில் 4 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.</p><p>மேனிசேல்ஸ் நகரின் புகழ்பெற்ற நவதோதிக் கதீட்ரல் தேவாலயத்தின் பக்கவாட்டுக் கோபுரம் இடிந்து விழுந்தது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">At least 132 people confirmed dead, 570 injured in the <a href="https://x.com/hashtag/ColombiaEarthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ColombiaEarthquake</a>. <a href="https://t.co/rNPKDi2PA2">pic.twitter.com/rNPKDi2PA2</a></p>&mdash; Upendrra Rai (@UpendrraRai) <a href="https://x.com/UpendrraRai/status/2087019747238183051?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>உதவி</h2><p>அவசரகால நிதியாக கொலம்பியாவுக்கு சுமார் ரூ.130 கோடி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><p>எல் சால்வடார் அதிபர் நயீப் புக்கேலே, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் மற்றும் சிலி அதிபர் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் ஆகிய லத்தீன் அமெரிக்க நாட்டுத் தலைவர்கள் கொலம்பியாவுக்கு தேவையான மருத்துவக் குழுக்கள், மீட்புப் படைகள் மற்றும் நிவாரணப் பொருட்களை உடனடியாக அனுப்பத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anti-drug-pledge-led-by-the-chief-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anti-drug-pledge-led-by-the-chief-minister#comments</comments><guid isPermaLink="false">b720c112-d51c-47f7-a372-6bd95beb288b</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:00:07 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:00:07.444Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,போதைப்பொருள்,Drugs</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/516q2uxc/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/516q2uxc/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் விருது மற்றும் பதக்கங்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.</strong></em> </p><p>சென்னை மாநில கல்லூரியில் இன்று போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. </p><h2><strong>உறுதிமொழி</strong></h2><p>இந்த விழாவில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழக <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியை வாசித்தார்.</p><p>அதனை மாணவ, மாணவிகள் திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழா மேடையில் முதலமைச்சர் வாசித்த உறுதிமொழி வருமாறு:-</p><h2><strong>அறிவுரை</strong></h2><p>போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்துக்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். </p><p>போதை பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதை பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் உறுதி மொழியை வாசித்தார்.</p><h2><strong>ஆரவாரம்</strong></h2><p>இந்த விழாவுக்கு முதலமைச்சர் விஜய் வந்த போது மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். பலர் விஜய் மேடை ஏறியதும் தங்களது ஆனந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் கூச்சலும் போட்டனர். </p><p>உறுதிமொழியை வாசிப்பதற்கு முன்பு முதலமைச்சர் விஜய் ‘குட்மார்னிங்’. அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா? உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டார். </p><h2><strong>விருதுகள்</strong></h2><p>அப்போதும்  மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்ட பிறகு சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் விருதுகளை வழங்கினார்.</p><p>இதன் பிறகு விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி நிர்வாகிகளுடன் மேடைக்கு சென்று முதலமைச்சர் விஜய்யுடன் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.</p><p>முன்னதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமார், டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஆகியோர் முதலமைச்சர் விஜய்யை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! சவரன் ரூ. 2,400 உயர்வு- முழு விவரம்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-11-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-11-08-2026#comments</comments><guid isPermaLink="false">ebd10d7e-20cc-43d2-b035-231146529038</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:43:02 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:43:02.351Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v29o4453/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v29o4453/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்துள்ளது தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</strong></em> </p><p>கடந்த சில நாட்களாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் 3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது. 4-ந்தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.</p><p>5-ந்தேதி காலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும் விற்பனையான நிலையில் மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840-க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.13,480 விற்பனையானது. 6-ந்தேதி சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000-க்கும், கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கும் விற்பனையானது.</p><p>7-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/why-is-the-price-of-gold-suddenly-rising-like-this">தங்கம்</a> விலை கிராமுக்கு ரூ.150 ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. 8-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனையானது. 9-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,11,720-க்கும், ஒரு கிராம் ரூ.13,965-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>தங்கம் விலை</strong></h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்துள்ளது தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>கடந்த சில தினங்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>10-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,620</p><p>09-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p><p>08-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p><p>07-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200</p><p>06-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,000</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>10-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>09-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>08-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>07-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.250</p>]]></content:encoded></item><item><title>7,500mAh பேட்டரியுடன் சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/redmi-17-5g-launched-globally-with-7500mah-battery-price-features</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/redmi-17-5g-launched-globally-with-7500mah-battery-price-features#comments</comments><guid isPermaLink="false">c04ef986-7f3b-4714-b183-cdb771e1f987</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:38:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Redmi,ரெட்மி,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/loswf5ub/Redmi-17-5G.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Redmi 17 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/loswf5ub/Redmi-17-5G.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சியோமி நிறுவனத்தின் <a href="https://www.maalaimalar.com/topic/redmi">ரெட்மி</a> பிரான்டு தனது முற்றிலும் புதிய ரெட்மி 17 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இதே <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையிலும் வெளியாகியுள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4 சீரிஸ் சிப்செட், LPDDR4x ரேம், UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. சீன சந்தையில் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனுடன் அதன் 4ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி91 அல்ட்ரா சிப்செட் கொண்டிருக்கிறது.</p><h2>அம்சங்கள்:</h2><p>அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 17 5ஜி மாடலில் 6.9 இன்ச் LCD ஸ்கிரீன், HD+ ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி8300 பிராசஸர், 4 ஜிபி அல்லது 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு சார்ந்த சியோமியின் சொந்த ஹைப்பர் ஓ.எஸ். 3 வழங்கப்பட்டுள்ளது.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.</p><p>கனெக்டிவிட்டிக்கு டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், என்.எப்.சி, யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>மலேசிய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 769 ரிக்கெட்ஸ் இந்திய மதிப்பில் ரூ. 18,000 என தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 869 ரிக்கெட்ஸ் இந்திய மதிப்பில் ரூ. 20,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>படம் வைத்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை- செங்கோட்டையனுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-ops-and-sengottaiyan-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-ops-and-sengottaiyan-arguments#comments</comments><guid isPermaLink="false">5eb37cbd-d2b1-4e25-84e2-ead7f22ee1fd</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:26:05 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:26:05.529Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செங்கோட்டையன்,Sengottaiyan,O Panneer Selvam,தமிழக சட்டசபை,TN assembly,ஓ பன்னீர்செல்வம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/18jg5mfs/OPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செங்கோட்டையன்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:title><media:description type="html"><![CDATA[ செங்கோட்டையன்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/18jg5mfs/OPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை போல் 3 மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று தொடங்கியது. சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2><strong>பெயர் மாற்றப்பட்டியல்</strong></h2><p>தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசின் நிதிநிலை அறிக்கையானது ஏமாற்றின் வடிவமாக ஜொலிக்கும் பட்ஜெட். செய்வதை மட்டும் தான் சொல்வோம் எனக்கூறி அள்ளித்தெளித்த வாக்குறுதிகளை த.வெ.க. அரசு மறந்துவிட்டது. துறை ரீதியான கூட்டம் நடத்தி அமைச்சரவை கூட்டம் நடத்திய பின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வெற்றிக்கழக அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை பெயர் மாற்றப்பட்டியல் போல் உள்ளது.</p><p>உரிமைத் தொகை உயரவில்லை, 6 சிலிண்டர் என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றம். மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க நிதி ஒதுக்கீடு திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை. </p><p>திருப்புகின்ற பக்கமெல்லாம் தி.மு.க. ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன. புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன் என்று கூறினார். </p><p>ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறுகையில், 5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை போல் 3 மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் இடம் மாறியிருப்பதற்காக இவ்வளவு துதி பாட வேண்டும் என்று அவசியம் இல்லை என்றார். </p><p>இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறுகையில், முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் தான் என்றார். </p><p>மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், இடத்தை மாற்றியபோது அவரின் இதயத்தின் அருகே வைத்துள்ள நிழல் படத்தை மாற்றவேண்டாம் என கூறினார் முதலமைச்சர் விஜய். ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் யார் படத்தை தற்போது வைத்துள்ளார் என்றார். </p><p>ஓ.பன்னீர்செல்வம் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார் என அமைச்சர் ராஜ்மோகன் பேசினார். </p><p>இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறுகையில், அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றார். </p><p>இவ்வாறு சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>ரூ.5 லட்சம் பணத்தை வயலில் புதைத்துவிட்டு, எங்கு புதைத்தோம் என்பதை மறந்த விவசாயி.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/buried-cash-destroyed-by-termites-rajasthan-farmer-loses-5-lakh-as-banks-refuse-to-accept-damaged-notes</link><comments>https://www.maalaimalar.com/news/national/buried-cash-destroyed-by-termites-rajasthan-farmer-loses-5-lakh-as-banks-refuse-to-accept-damaged-notes#comments</comments><guid isPermaLink="false">23b3dc48-12b0-4249-9836-09c97ca8cb6b</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:12:46 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:12:46.473Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயி,Farmer,வைரல்,viral,bank,வங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dlj04xnt/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விவசாயி]]></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dlj04xnt/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருடர்கள் பயத்தால் பணத்தை வீட்டில் வைக்க முடியாமல் வயலில் புதைத்து வைத்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விவசாயி </a>ஒருவருக்குப் பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. </p><h2>விவசாயி</h2><p> ராஜஸ்தானை சேர்ந்த ஒரு விவசாயி, ஒரு வருடத்திற்கு முன்பு தனது நிலத்தை விற்றதன் மூலம் ரூ. 5 லட்சம் கிடைத்தது.</p><p>அந்தப் பணத்தைக் கொண்டு வீடு கட்ட நினைத்த அவர், வீட்டில் வைத்தால் திருடு போய்விடும் என்ற பயத்திலும், வீண் செலவு ஆகக் கூடாது என்பதற்காகவும் அப்பணத்தை அப்போதே ஒரு பாலிதீன் பையில் சுற்றி வயலில் குழிதோண்டிப் புதைத்து வைத்தார்.</p><p>ஒரு வருடத்திற்கு பின் பணத்தை  மீண்டும் எடுக்க நினைத்த அவர், மதுப் பழக்கம் மற்றும் ஞாபக மறதி காரணமாக எந்த இடத்தில் பணத்தை புதைத்து வைத்தோம் என்பதை அந்த விவசாயி மறந்துவிட்டார். </p><p>வயலில் பலமுறை தேடியும் பணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>இறுதியில் தனது மனைவி மற்றும் மகனிடம் விஷயத்தைக் கூறவே, அவர்களும் வயலின் பல இடங்களில் தோண்டித் தேடிப் பார்த்தனர். இருப்பினும் பணம் கிடைக்கவில்லை.</p> <h2>கிடைத்தது எப்படி?</h2><p>சமீபத்தில் மழைக்கால சாகுபடி பணிகளுக்காக வயலைத் தயார் செய்து, வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விவசாயியின் மனைவிக்கும் மகனுக்கும் அந்தப் பாலிதீன் பை கிடைத்தது.</p> <h2>அடுத்த அதிர்ச்சி</h2><p>பையைத் திறந்து பார்த்த போது, உள்ளிருந்த ரூபாய் நோட்டுகள் முழுவதையும் கரையான்கள் அரித்துச் சின்னா பின்னமாக்கியிருந்தன.</p><p>சேதமடைந்த நோட்டுகளையாவது மாற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், உள்ளூரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு சென்றுள்ளார்.</p><p>ஆனால், நோட்டுகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், அவற்றைப் பெற்றுக் கொள்ள வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.</p><p>அதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை வங்கி கிளையை அணுகியும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபை தொடங்கியது... நீட், வெளிநாட்டு பங்களிப்பு மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானங்கள் தாக்கல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-started</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-started#comments</comments><guid isPermaLink="false">beac5d2a-d690-47cf-99f4-9fe51fff1023</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:02:52 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:02:52.812Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,நீட் தேர்வு,Neet exam,TN assembly,தனித்தீர்மானங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0brt4tif/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0brt4tif/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெறுகிறது. இந்தநிலையில், நீட் தேர்வை திரும்பப் பெற்று பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார். </p><p>நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு கடந்த 2021-ல் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றிய பின்பும் ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.</p><h2><strong>அமைச்சர் அருண்ராஜ்</strong></h2><p>நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகளால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்பு, நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இந்த தேர்வு இழந்துள்ளது. ஆகையால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் கோர உள்ளார்.</p> <p>மற்றொரு தீர்மானமாக, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்ய உள்ளார்.</p><p>இந்தத் தீர்மானங்களின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அசாம் - அருணாச்சல பிரதேச எல்லைப் பிரச்சனை.. துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் காயம் - நால்வர் கவலைக்கிடம்</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-arunachal-border-firing-18-injured-and-4-critical-in-land-dispute-clash</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-arunachal-border-firing-18-injured-and-4-critical-in-land-dispute-clash#comments</comments><guid isPermaLink="false">2f50362f-9136-4770-9cc4-e16cc35ce989</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:57:15 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:57:15.960Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,அசாம்,Assam,அருணாச்சல பிரதேசம்,Arunachal Pradesh,shooting incident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kuceq0lo/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அசாம் - அருணாச்சல பிரதேச எல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ அசாம் - அருணாச்சல பிரதேச எல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kuceq0lo/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/assam">அசாமின் </a>தேமாஜி மாவட்டம்  அருணாச்சலப் பிரதேச எல்லையில் அமைந்துள்ளது. </p><p>தேமாஜி மாவட்டத்தில் கோகாமுக் வருவாய் வட்டத்திற்குட்பட்ட மின்மாங் படாட்டி என்ற பகுதியில், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக இரு மாநில எல்லைக் கிராம மக்களுக்கு இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்தது.</p><h2>துப்பாக்கிச்சூடு </h2><p>இந்நிலையில் நேற்று அருணாச்சலப் பிரதேச பகுதியிலிருந்து வந்த மர்ம நபர்கள், அசாம் கிராம மக்களை நோக்கிக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><p>இந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 18 பேரும் உடனடியாக கோகாமுக் கிராமப்புற மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. </p><p>அவர்கள் மேல் சிகிச்சைக்காக திப்ரூகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p> <h2>அசாம் முதல்வர் விளக்கம்</h2><p>இச்சம்பவத்திற்கு பிறகு பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "அசாம் எல்லைப் பகுதியில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>அசாமின் ஒரு அங்குல நிலத்தைக் கூட இழக்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இரு மாநிலத் தலைமைச் செயலாளர்களும், டிஜிபிக்களும் பேசிச் சூழலைத் தணித்து வருகின்றனர்" என்றார்.</p><p>அசாம் கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு அருணாச்சலப் பிரதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்டுள்ளார்.</p> <h2>எல்லைப் பிரச்சினை</h2><p>அசாம் - அருணாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே 804 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதி உள்ளது.</p><p>சுதந்திரத்திற்குப் பின் வடகிழக்கு மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட போது இந்த எல்லைப் பிரச்சினை தொடங்கியது.</p><p>அருணாச்சலப் பிரதேசம் 1987இல் தனி மாநில அந்தஸ்து பெற்ற பிறகு, முத்தரப்புக் குழு அளித்த பரிந்துரைகளை அசாம் ஏற்க மறுத்ததால், இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.</p> <p>ஜூலை 29 அன்று அசாம் சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, அசாமின் 7 மாவட்டங்களில் உள்ள 16,144 ஹெக்டேர் நிலம் அருணாச்சலப் பிரதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.</p><p>அதேவேளையில் அருணாச்சலப் பிரதேசமும் 858 சதுர கி.மீ நிலத்திற்கு உரிமை கோரி வருகிறது.</p><p>இச்சிக்கலை தீர்க்க ஜூலை 15, 2022 அன்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா கண்டும் 'நாம்சாய் பிரகடனத்தில்' கையெழுத்திட்டபோதிலும் சிக்கல் தீரவில்லை.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாயே! உன்னைச் செயல் மறந்து மட்டுமல்ல செயல் புரிந்தும் வாழ்த்துவோம் - வைரமுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vairamuthu-wishes-tamil-thai-vazhthu-always-comes-first-resolution-passes-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vairamuthu-wishes-tamil-thai-vazhthu-always-comes-first-resolution-passes-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">e95fda52-2c7f-41b0-b13f-d692b97d919d</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:54:18 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:54:18.904Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Vairamuthu,TN assembly,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,வைரமுத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/yg6yghrj/vairamuthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vairamuthu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/yg6yghrj/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்த்தாய் வாழ்த்தை கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் பொது அமைப்பு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக முதலில் பாட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-special-resolution-passed-unanimously">சட்டசபையில்</a> தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அது அனைவரின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>இதுதொடர்பாக கவிஞர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வைரமுத்து</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>சட்டமன்றத்தில்</p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்</p><p>தனித் தீர்மானம் இயற்றிய</p><p>தமிழ்நாட்டரசையும்</p><p>ஒருதுளி மறுப்புமின்றி</p><p>ஒருமனதாக</p><p>நிறைவேற்றிக்கொடுத்த</p><p>அனைத்துக் கட்சித்</p><p>தலைவர்களையும்</p><p>பரந்துபட்ட தமிழ் உலகம்</p><p>பாராட்டுகிறது;</p><p>எழுந்துநின்று நன்றி சொல்கிறது</p> <p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது</p><p>வெறும் சொற்கூட்டமல்ல;</p><p>அது</p><p>புவியியல், வரலாறு,</p><p>பீடு, பெருமிதம்</p><p>அனைத்தும் கொண்ட</p><p>இனத்தின் குறியீடாகும்</p> <p>தேசிய கீதத்தின் அளவுக்குத்</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தைத்</p><p>தமிழர்கள் அனைவரும்</p><p>மனப்பாடம் செய்யவில்லை</p><p>பள்ளியிலிருந்தே அது</p><p>மனப்பாடப் பொருளாக</p><p>மாற்றப்பட வேண்டும்</p> <p>மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர்</p><p>முன்மொழிந்ததைப் போலவே</p><p>அது சட்டமாகவும்</p><p>இயற்றப்பட வேண்டும்</p> <p>தமிழ்த்தாயே!</p><p>உன்னைச்</p><p>செயல் மறந்து மட்டுமல்ல</p><p>செயல் புரிந்தும் வாழ்த்துவோம்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஸ்மார்ட்போன் விலையை மீண்டும் உயர்த்திய விவோ</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/vivo-x300-fe-price-increased-by-rs-3000-new-8gb-256gb-variant-tipped</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/vivo-x300-fe-price-increased-by-rs-3000-new-8gb-256gb-variant-tipped#comments</comments><guid isPermaLink="false">426bf472-54f0-4c63-9013-2b4fbb0742eb</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vivo,smartphone,ஸ்மார்ட்போன்,விவோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/oz4u20ea/Vivo-X300-FE.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vivo X300 FE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/oz4u20ea/Vivo-X300-FE.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/vivo">விவோ</a> நிறுவனம் இந்திய சந்தையில் தனது X300 FE ஸ்மார்ட்போன் விலையை திடீரென உயர்த்தியது. அதன்படி தற்போது விவோ X300 FE ஸ்மார்ட்போனின் விலை ரூ. 89,999 என மாறியுள்ளது. இது ஸ்மார்ட்போனின் அறிமுக விலையை விட ரூ. 10,000 அதிகம் ஆகும். </p><p>இந்திய சந்தையில் விவோ X300 FE <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> கடந்த மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், உற்பத்தி செலவீனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக ஸ்மார்ட்போனின் விலை பல முறை மாற்ற்பட்டது. இதுதவிர விவோ நிறுவனம் X300 FE ஸ்மார்ட்போனின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. </p><h2>புதிய விலை விவரங்கள்:</h2><p>விலை உயர்வின் படி விவோ X300 FE ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 86,999-இல் இருந்து ரூ. 89,999 என மாறியுள்ளது. இதே போல் இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 96,999-இல் இருந்து ரூ. 99,999 என மாறியுள்ளது.</p><p>புது வெர்ஷனை பொருத்தவரை டிப்ஸ்டர் சஞ்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, விவோ X300 FE ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. புதிய விவோ X300 FE ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 84,999 என நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.</p><h2>அம்சங்கள்:</h2><p>விவோ X300 FE ஸ்மார்ட்போனில் 6.31 இன்ச் LTPO 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர், 6500mAh பேட்டரி, 90 வாட் வயர்டு ஃபிளாஷ் சார்ஜ், 40 வாட் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜ் வசதியுடன் வருகிறது.</p><p>மேலும், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>