<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 18 Sep 2026 18:24:27 +0000</lastBuildDate><item><title>பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முகத்தில் கேக் பூசிய  நண்பனை வெட்டிக் கொன்ற இளைஞன் </title><link>https://www.maalaimalar.com/news/national/enraged-after-having-cake-smeared-on-his-face-during-a-birthday-celebration-a-young-man-hacked-his-friend-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/enraged-after-having-cake-smeared-on-his-face-during-a-birthday-celebration-a-young-man-hacked-his-friend-to-death#comments</comments><guid isPermaLink="false">8c750727-d84b-4417-984d-58d6d2b42294</guid><pubDate>Fri, 18 Sep 2026 18:14:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T18:14:41.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு காஷ்மீர்,Murder,கொலை,BirthDay Celebration,பிறந்தநாள் கொண்டாட்டம்,Jammu &amp; Kashmir</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/o8cem7du/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கொலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கொலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/o8cem7du/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முகத்தில் கேக் பூசப்பட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், நண்பனை இளைஞர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.</p> <p>ஜம்மு காஷ்மீர் ஜானுபூரில் அமைந்துள்ள லோயர் ரூப்நகர் பகுதியில் நேற்று இரவு சாலையோரத்தில் நீரஜ் என்ற 'அன்ஷு' தனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. </p><p>நீரஜின் சகோதரர் ரிஷு, நண்பர்கள் பவன் நாயர் என்கிற சமீர்,  ஜான் சோத்ரா, கௌரவ் சிங் மற்றும் சுகந்த் பட்டி உள்ளிட்ட நண்பர்கள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். </p> <p>கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீரஜ் கேக் வெட்டிக்கொண்டிருந்தபோது, ​​பவன் நாயர் நீரஜின் முகத்தில் கேக்கை பூசினார். இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.</p><p>மற்ற நண்பர்கள் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றபோதிலும், கோபமடைந்த நீரஜ் கத்தியை எடுத்து பவன் நாயரின் கழுத்தை வெட்டினார்.</p> <p>படுகாயமடைந்த பவன், உடனடியாக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.</p><p>ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக நீரஜ் மற்றும் அவரது சகோதரர் ரிஷுவை ஜெயின்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">குற்றத்தில் </a>பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>எதைப்பற்றி பேசுகிறது பா. ரஞ்சித்தின் வேட்டுவம்?..  &quot;வேர்ல்ட் ஆப் வேட்டுவம்&quot; வீடியோ ரிலீஸ்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/what-is-pa-ranjiths-vettuvam-about-world-of-vettuvam-video-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/what-is-pa-ranjiths-vettuvam-about-world-of-vettuvam-video-released#comments</comments><guid isPermaLink="false">2140aad2-bb6c-4707-8259-05685243be8b</guid><pubDate>Fri, 18 Sep 2026 17:43:40 +0000</pubDate><atom:updated>2026-09-18T17:43:40.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆர்யா,Arya,பா. ரஞ்சித்,vettuvam,வேட்டுவம்,Pa. Ranjith</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/6sergqav/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வேட்டுவம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேட்டுவம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/6sergqav/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தின் "வேர்ல்ட் ஆப் வேட்டுவம்" வீடியோ வெளியாகி உள்ளது.</p> <p>தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் முக்கியமானவர் <a href="https://www.maalaimalar.com/topic/pa-ranjith">பா. ரஞ்சித்</a>, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார். </p><p>சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார். </p><p>அம்பேத்கர் மற்றும் புத்தரின் சிந்தனையையும், சித்தாந்தத்தையும் அதிகம் பேசுபவர் ரஞ்சித். நீலம் குழுமம் என்ற அமைப்பின் மூலம் நூலகம், சிறப்பு திரையிடல், மார்கழி மக்களிசை என பல மாற்றத்தை சமூகத்தில் உருவாக்கி வருகிறார்.</p> <h2>வேட்டுவம்</h2><p>கடைசியாக சீயான் விக்ரம் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்பொழுது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">வேட்டுவம் </a>திரைப்படத்தை இயக்கி வருகிறார்.</p><p>இப்படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். </p><p>இப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக இருக்கிறது. மணிகண்டன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.</p><p>இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.</p> <h2>வேர்ல்ட் ஆப் வேட்டுவம்</h2><p>இந்நிலையில் வேட்டுவம் படத்தில் கதைக்களம் என்ன? என்பது குறித்த விளக்கத்துடன் மேக்கிங் வீடியோ பாணியில் "வேர்ல்ட் ஆப் வேட்டுவம்" வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.</p><p>படத்தில் ஒரு பதவிக்கான போட்டி நடக்கிறது என்றும் அதில் வெல்லப்போவது யார்? என்பதாக கதை இருக்கும் என ரஞ்சித் வீடியோவில் பேசுகிறார்.</p><p>படம் வரலாற்று பின்னணியையும் நிகழ்காலத்தையும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/oZnAxf_5qYw"></iframe></figure>]]></content:encoded></item><item><title>ஜேசன் சஞ்சய் இயக்கிய &apos;சிக்மா&apos; டிரெய்லர் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trailer-release-of-sigma-directed-by-jason-sanjay</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trailer-release-of-sigma-directed-by-jason-sanjay#comments</comments><guid isPermaLink="false">81b6e0f1-3f8a-4724-90e7-d53f4123cf05</guid><pubDate>Fri, 18 Sep 2026 17:18:10 +0000</pubDate><atom:updated>2026-09-18T17:18:10.170Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jason sanjay,சந்தீப் கிஷன்,Sundeep Kishan,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/6so6q7ag/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிக்மா]]></media:title><media:description type="html"><![CDATA[ சிக்மா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/6so6q7ag/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.</p> <p>முதலமைச்சர் விஜய்யின் மகனான <a href="https://www.maalaimalar.com/topic/jason-sanjay">ஜேசன் சஞ்சய்</a> இயக்கத்தில், சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட், சம்பத் ராஜ், ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் சிக்மா. </p><p>லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.கே.தமிழ்க்குமரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.</p><p>ஆக்சன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.</p><p>இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. </p> <h2>டிரெய்லர் ரிலீஸ்</h2><p>படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல், இரண்டாவது பாடலான அய்யய்யோ அம்மாடி ஏற்கனவே வெளியாகி இருந்தது.</p><p>‘சிக்மா’ படத்தில் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய், கேத்தரின் தெரசா நடனமாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.</p><p>இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது.</p><h2>ரிலீஸ்</h2><p>படம் முன்னதாக ஜூலை.31ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>தொடர்ந்து காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஜேசன் சஞ்சய்</h2><p>ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படித்துள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/hgnVXBtuWe8"></iframe></figure>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நிறைவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-maternal-uncles-gold-ring-scheme-review-meeting-chaired-by-chief-minister-vijay-concludes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-maternal-uncles-gold-ring-scheme-review-meeting-chaired-by-chief-minister-vijay-concludes#comments</comments><guid isPermaLink="false">aad04445-e3cd-4e37-b461-9820ba755831</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:59:01 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:59:01.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக அரசு,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rcposhf7/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rcposhf7/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  </p> <p>முதலமைச்சர் ஜோசப் விஜய் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-to-launch-thaaymaaman-gold-ring-scheme-on-28th">தாய்மாமன் தங்க மோதிரம் </a>திட்டத்தை 28.9.2026 அன்று தொடங்கி வைக்கிறார்.</p><p>இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p> <p>அரசு தரப்பில் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், </p><p>"<a href="https://www.maalaimalar.com/topic/tvk-govt">தமிழ்நாடு அரசு</a> தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. </p><p>கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.</p> <h2>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.</p><p>இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.</p> <h2>பிரசவங்கள்</h2><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல்பதிவாகியுள்ளது. </p><p>இவற்றில் 4.20 இலட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEmONC Centres) நடைபெறுகின்றன. </p><p>இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><h2>தங்க மோதிரம்</h2><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். </p><p>அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும். </p><p>இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICMEயில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் பெற்றிருக்க வேண்டும்.</p><p>இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 28.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் தினமும்100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. </p><p>இத்திட்டம் முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்கமோதிரம் வழங்கப்படும்.</p> <h2>செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் தவிர்த்து</h2><p>இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அத்தொகுதிகள் இடம்பெற்றுள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் இத்திட்டம் 28.9.2026 அன்று தொடங்கி வைக்கப்படும்.</p><p>இத்திட்டம், அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவமுறையை ஊக்குவிப்பதாகவும், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.</p> <h2>கூட்டம் </h2><p>இக்கூட்டத்தில், மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு. தாரேஸ் அகமது, இ.ஆ.ப., தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் மரு. அனீஷ் சேகர், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.பி.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மரு. எஸ். உமா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மரு. ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 18 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026#comments</comments><guid isPermaLink="false">f7bc1909-9f6e-45cd-ab52-a2e557cf3a39</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:37:23.242Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused">அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை - மாணவர் பாரதிதாசன் விளக்கம்</a></p><p>* 2-ம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர் கூறுவது தவறானது.</p><p>* ஆராய்ச்சி செலவுகளுக்கான பில் அனைத்தும் ஆக.26-ந்தேதியே அனுப்பிவிட்டேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly">சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்</a></p><p>* சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>* தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/amid-war-russia-parliament-election-begins-today" rel="nofollow">போர் சூழலுக்கு இடையே.. ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடக்கம்</a></p><p>* உக்ரைன் உடனான போரில் ரஷியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. </p><p>* புதின் தனது அதிகார பலத்தால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/48-dead-from-poisonous-alcohol-in-nigeria" rel="nofollow">நைஜீரியாவில் விஷச்சாராயம் குடித்த 48 பேர் உயிரிழப்பு</a></p><p>* ஒண்டோ மாகாணத்தில் ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.</p><p>* விஷசாராயம் காய்ச்சிய முக்கிய நபர் உள்பட 15 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/womens-cricket-india-japan-quarterfinal-today" rel="nofollow">பெண்கள் கிரிக்கெட்: கால் இறுதியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்</a></p><p>* போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் நேரடியாக கால் இறுதியில் கால் பதித்தன.</p><p>*  அரை இறுதியில் இந்தியா-ஜப்பான் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-18-9-2026">GOLD PRICE TODAY: ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute" rel="nofollow">இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: திமுக எம்பி கனிமொழி புகழஞ்சலி!</a></p><p>* 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>* சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases" rel="nofollow">தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு- தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு</a></p><p>* மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகரப்படுத்த உத்தரவு.</p><p>* இதுவரை 16,577 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management">தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் விஜய் என்ன செய்யப் போகிறார் - அன்புமணி</a></p><p>* அனைத்து சாதிகளிலும் உள் ஒதுக்கீடு நிறைய உள்ளது.</p><p>* தண்ணீருக்காக நாம் அடுத்த மாநிலத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions">யுபிஐ வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: நிதியமைச்சருக்கு ஜோதிமணி கடிதம்</a></p><p>* ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும்.</p><p>* நாடு முழுவதிலும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations">சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு  கூடுதல் சிறப்பு பேருந்துகள்- அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு</a></p><p>* பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>*  சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days">மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். </p><p>* எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-aiadmk-star-speakers-to-campaign">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. </p><p>* 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days">மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு உறுதி</a></p><p>* தம்பி பாரதிதாசனை படிக்க வைப்போம்.</p><p>* பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களின் கல்விக்கும் தவெக அரசு உதவும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-no-violations-regarding-madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-pass-issue">மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பாஸ் விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடந்து முடிந்த நிலையில் தேவையின்றி திமுகவினர் அவதூறு பரப்புகின்றனர்.</p><p>* இபிஎஸ்-ஐ வீழ்த்துவது தான் என் வாழ்நாள் லட்சியம் என்று கூறிய தினகரன் தற்போது அவரை முதல்வராக்க துடிக்கிறார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/trp-raaja-indictment-tvk-govt">முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை- டி.ஆர்.பி.ராஜா</a></p><p>* புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தால் அதைக் காட்டலாமே? நிறுவனத்தின் பெயரைக் கூட ஏன் சொல்லவில்லை?</p><p>*  ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ரீல் விட்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-property-taxes-in-urban-areas-should-not-be-raised-repeatedly">நகர்ப்புறங்களில் சொத்து வரியை மீண்டும், மீண்டும் உயர்த்தக் கூடாது:  அன்புமணி</a></p><p>* உள்ளாட்சி அமைப்புகள் நிதித் தற்சார்பு பெற்றால் மட்டுமே மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்.</p><p>* முந்தைய திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/princess-diana-brother-claims-on-charles">டயானா சகோதரர் எழுதிய புத்தகத்தில் மன்னர் சார்லஸ் மீது குற்றச்சாட்டு - பக்கிங்காம் அரண்மனை மறுப்பு</a></p><p>* டயானாவின் மரணம் உறுதி செய்யப்பட்ட உடனேயே சார்லஸ் என்னுடன் பேசினார்.​</p><p>* ஒரு சிறுவன் தன் தாயின் உடலுக்குப் பின்னால் நடந்து செல்வது எவ்வளவு பெரிய மன அதிர்ச்சியைத் தரும்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-expand-kamarajar-breakfast-scheme-statewide-on-22nd-rajmohan">22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p>* அனைவருக்கும் உணவு, ஆரோக்கியமான உணவு என்பதுதான் எங்களுடைய அனைவருடைய எதிர்பார்ப்பு.</p><p>* வருங்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/football-vs-envelope-mamata-banerjee-party-rebels-get-new-name-symbol">மம்தா பானர்ஜி தரப்புக்கு புதிய கட்சி பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் அங்கீகாரம்</a></p><p>* மம்தா பிரிவுக்கு மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. </p><p>* அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-srilanka-womens-teams-enter-sf-in-asian-games">ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: இந்தியா, இலங்கை அரையிறுதிக்கு முன்னேற்றம்</a></p><p>* இந்தியாவின் ஷபாலி வர்மா 40 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>* இந்தியாவின் ஸ்ரீசரணி 4 விக்கெட்டும், ஷபாலி வர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/at-45-speech-and-hearing-impaired-jammu-woman-clears-class-10-exam-with-82-percent">சாதிக்க எதுவும் தடையில்லை: 45 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளி தாய்</a></p><p>* சைகை மொழியை நன்கறிந்த நமன், தனது தாய்க்கு தானே ஆசிரியராக மாறினார்.</p><p>* என் கனவு நனவாகி உள்ளது. என் மகனால்தான் இவை அனைத்தும் சாத்தியமானது என்றார் ரேணு.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-to-launch-thaaymaaman-gold-ring-scheme-on-28th">28-ந்தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு</a></p><p>* 107 மையங்களில் (Hubs)  தினமும் 100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>* இத்திட்டம் தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/first-shiv-sena-ncp-now-tmc-rahul-gandhi-sees-ec-bjp-pattern-in-theft-of-parties">சிவசேனா, என்சிபி வரிசையில் திரிணாமுல்: கட்சி திருட்டு என பாஜகவை சாடிய ராகுல் காந்தி</a></p><p>* ஒரு கட்சியைப் பிளவுபடுத்த பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் கைகோர்க்கின்றன.</p><p>* ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டம் இது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-byelection-edappadi-palaniswami-6-day-campaign">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 6 நாட்கள் பிரசாரம்</a></p><p>* மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 24, 25 மற்றும் அக்டோபர் 3-ந்தேதி</p><p>* தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 27, 28 மற்றும் அக்டோபர் 2-ந்தேதி</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-no-support-for-byelection-in-tn">இடைத்தேர்தல்: அன்புமணி அறிவிப்பால் அதிமுக அதிர்ச்சி</a></p><p>* பா.ம.க. நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. </p><p>* அன்புமணியின் அறிவிப்பால் அ.தி.மு.க. அதிர்ச்சி அடைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-no-to-navodaya-schools-special-assembly-session-if-needed">நவோதயா பள்ளிகள் வேண்டாம்: தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவோம்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது.</p><p>* இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாகத் தமிழ்நாடு விளங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>நந்திகிராம் இடைத்தேர்தல்: மம்தா ஆதரவு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அதிரடி கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-nandigram-pick-arrested-after-mamata-banerjee-announces-support</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-nandigram-pick-arrested-after-mamata-banerjee-announces-support#comments</comments><guid isPermaLink="false">87fb0aaf-2fc5-4ad9-a968-5824a0d3bd81</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:29:50 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:29:50.941Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,மேற்கு வங்கம்,west bengal,Nandigram,நந்திகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgevzmyc/CongressParty001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் வேட்பாளர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgevzmyc/CongressParty001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்துள்ளது. மம்தா பானர்ஜி, மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.</p><h2>2007-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது</h2><p>இதற்கிடையே நந்திகிராம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். இவர் தெரிவித்த சில மணி நேரங்களில் நந்திகிராம் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானை போலீசார் கைது செய்துள்ளது. அவர் மீதான பழைய கொலை வழக்கில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.</p><p>2007-ம் ஆண்டு நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் கூறுகையில் "பாஜக-வின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் 'வென்டிலேட்டர்' உதவியுடன் உயிர்வாழும் நிலையில் உள்ளது. எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை (Opposition-Mukt Bharat) உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நமது மகத்தான அரசியலமைப்பு சார்ந்த ஜனநாயகத்தை ஒரு கேலிக்கூத்தான நாடாக (Banana Republic) மாற்றும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது.</p><h2>ஜனநாயகத்தைக் கைப்பற்ற பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்- காங்கிரஸ்</h2><p>மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில நிமிடங்களிலேயே, 2007-ம் ஆண்டைச் சேர்ந்த, நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த ஒரு வழக்கை கையில் எடுத்து எங்கள் வேட்பாளரை கைது செய்தது, ஜனநாயகத்தைக் கைப்பற்ற பா.ஜ.க. எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையே காட்டுகிறது. அடக்குமுறை மிக்க ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடி அவர்களை வெளியேற்றிய கட்சி எங்களுடையது. எனவே, அவர்களைப் போலச் செயல்படும் இவர்களின் இத்தகைய மலிவான மிரட்டல் உத்திகள் எங்களை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது. அதிகாரத்தின் இந்த தவறான பயன்பாட்டை எதிர்த்து நாங்கள் உறுதியாக நிற்போம். அத்துடன் பாஜகவின் தோல்வியையும் உறுதி செய்வோம்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>நவோதயா பள்ளிகள் வேண்டாம்: தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவோம்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-no-to-navodaya-schools-special-assembly-session-if-needed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-no-to-navodaya-schools-special-assembly-session-if-needed#comments</comments><guid isPermaLink="false">9f77bde9-7ec9-42c1-ae1f-248735ee20c6</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:22:50 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:22:50.564Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,நவோதயா பள்ளிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4kfyeqvi/UdhayanidhiStalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4kfyeqvi/UdhayanidhiStalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தி மொழித் திணிப்பு வேண்டாம் என்று கூறுவதாலேயே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு, இந்திக்கு எதிரான தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். மாநிலங்கள் தனி நாடுகளாக இயங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.</p><p>இந்த நேரத்தில், நாங்கள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. தமிழ்நாடு தனி நாடாக இயங்கவில்லை. தனித்தன்மையுடன் இயங்குகிறது.</p><h2>இந்தியைக் கற்பதற்கும் நாட்டுப் பற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை</h2><p>இந்தியைத் திணிப்பதுதான் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனித்தீவாக அந்நியப்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மதித்து, அந்தந்த மாநிலங்கள் தாங்கள் விரும்பும் மொழிக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிப்பதே, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமையும்.</p><p>இந்திய சீனப் போர், வங்கதேச விடுதலைப் போர், கார்கில் போர், குஜராத் நிலநடுக்கம் என நம் நாடு சந்தித்த ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும் தமிழர்கள் தங்களுடைய நாட்டுப்பற்றை, வேறெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் குறைவில்லாத வகையில் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>எனவே, இந்தி மொழித் திணிப்பு வேண்டாம் என்று கூறுவதாலேயே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியைக் கற்பதற்கும் நாட்டுப் பற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.</p><h2>இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை</h2><p>இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடுதான், அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. உயர்கல்விச் சேர்க்கையில் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே, தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாகத் திகழ்கிறது. நோபல் விருதாளர்கள் முதல் இஸ்ரோவின் முன்னணி அறிவியலாளர்கள் வரை, இந்தி தெரியாமலேயே தமிழர்கள் சாதனைகளைப் படைத்துள்ளனர்.</p><p>எனவே, இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாகத் தமிழ்நாடு விளங்குகிறது.</p><p>நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், முந்தைய திராவிட மாடல் அரசின் சார்பில் உறுதியான வாதங்களை எடுத்து வைத்தோம்.</p><h2>அரசின் கொள்கையை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை</h2><p>அரசியலமைப்புச் சட்டத்தில், கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், ஒன்றிய அரசின் கொள்கையை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரிப் பள்ளிகள் எனும், உண்டு-உறைவிடப் பள்ளிகள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டுவருகிறது.</p><p>அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றிபெற்று, நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், நவோதயா பள்ளிகளுக்காகத் தனியாக இடம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. நவோதயா பள்ளிகளுக்கு அளிக்கும் நிதியைத் தமிழ்நாடு அரசிடம் அளித்தால், தற்போது நம்மிடம் உள்ள கட்டமைப்பைக் கொண்டே சிறப்பாகச் செயல்பட முடியும்.</p><p>மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே, சமக்ர சிக்‌ஷா திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய 3,548 கோடி ரூபாயை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அந்த நிதியை விடுவிக்க வேண்டும் எனப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம்.</p><p>தற்போது அந்த வழக்கில், தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள அரசும் நமது இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி, நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்கத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.</p><h2>உறுதியான வாதங்களை எடுத்து வைத்திட வேண்டும்</h2><p>இந்த நிலைப்பாட்டில், தற்போதைய அரசு தொடர்ந்து உறுதியான வாதங்களை எடுத்து வைத்திட வேண்டும். மேலும், தேவை எழுந்தால் உடனடியாகச் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி, நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது எனும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, தனித் தீர்மானம் இயற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>பேரறிஞர் அண்ணா அவர்களால் இம்மண்ணில் விதைக்கப்பட்ட இருமொழிக் கொள்கையை, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டுவோம்! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகளைத் தடுத்து நிறுத்துவோம்!</p><p>இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>2வது போட்டியிலும் வெற்றி: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/australia-beat-zimbabwe-in-second-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/australia-beat-zimbabwe-in-second-odi#comments</comments><guid isPermaLink="false">8c68d62b-fa00-41e2-bf4c-814d874c29cc</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:18:49 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:18:49.091Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Travis Head,டிராவிஸ் ஹெட்,ZIMvAUS,ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/kk5cgns9/zampa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ adam zampa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/kk5cgns9/zampa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 84 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.</strong></em></p><p>ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷ் 53 ரன்னில் அவுட்டானார்.</p><h2>சதமடித்த டிராவிஸ் ஹெட்</h2><p>2-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் கூப்பர் கானலி இணைந்தார். இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 112 ரன்னில் வெளியேறினார். கூப்பர் கானலி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். கடைசி கட்டத்தில் ஆலிவர் பீக் அதிரடியாக ஆடி 18 பந்தில் 41 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><h2>பிராட் இவான்ஸ் 3 விக்கெட்</h2><p>ஜிம்பாப்வே சார்பில் பிராட் இவான்ஸ் 3 விக்கெட்டும், மசகட்சா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட்கள் விழுந்தன.</p><p>அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 45 ரன்னும், பிரெண்டன் டெய்லர் 39 ரன்னும், கிரெய்க் எர்வின் 38 ரன்னும், இன்னசன்ட் காலா 34 ரன்னும், பென் கர்ரன் 30 ரன்னும் எடுத்தனர்.</p><p>இறுதியில் ஜிம்பாப்வே அணி 48.3 ஓவரில் 272 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.</p><h2>டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன்</h2><p>ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹேசில்வுட், கூப்பர் கானலி, ஆடம் ஜாம்பா, மாட் ரென்ஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல்: அன்புமணி அறிவிப்பால் அ.தி.மு.க. அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-no-support-for-byelection-in-tn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-no-support-for-byelection-in-tn#comments</comments><guid isPermaLink="false">1c9c4a2c-20fc-4a51-9b33-2ab4aa5b856e</guid><pubDate>Fri, 18 Sep 2026 14:58:24 +0000</pubDate><atom:updated>2026-09-18T14:58:24.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,அன்புமணி ராமதாஸ்,ByElection,Anbumani Ramadass,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pxehockw/anbu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pxehockw/anbu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவை போட்டியிடுகின்றன. அங்கு 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.</p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது எனக்கூறிய அன்புமணி ராமதாஸ், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p><p>பா.ம.க. நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது. நிர்வாகிகளின் ஆலோசனைக்கு பிறகு எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என முடிவெடுக்கப்பட்டது.</p><p>பா.ம.க. தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அன்புமணியின் இந்த அறிவிப்பால் அ.தி.மு.க. அதிர்ச்சி அடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 6 நாட்கள் பிரசாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-byelection-edappadi-palaniswami-6-day-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-byelection-edappadi-palaniswami-6-day-campaign#comments</comments><guid isPermaLink="false">3c642763-99a9-4cba-a414-55a86edddb21</guid><pubDate>Fri, 18 Sep 2026 14:46:34 +0000</pubDate><atom:updated>2026-09-18T14:46:34.172Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,EPS</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-10/0znsb7yy/EPS.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-10/0znsb7yy/EPS.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் கே. பானுமதியும் போட்டியிடுகின்றனர்.</p><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ராஜினாமா செய்த இந்த இரண்டு தொகுதி எம்.எல்.ஏ.க்களும், த.வெ.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.</p><h2>எடப்பாடி பழனிசாமி 6 நாட்கள் தேர்தல் பிரசாரம்</h2><p>அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் கே. பானுமதியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இரண்டு தொகுதிகளிலும் தலா 3 நாட்கள் என 6 நாட்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 24, 25 மற்றும் அக்டோபர் 3-ந்தேதி என மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 27, 28 மற்றும் அக்டோபர் 2-ந்தேதி என மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.</p><p>சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் வழித் தடங்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளார்.</p><p>த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தவெக சார்பில் அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுகின்றனர்.</p><p>தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் இ. பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இளையராஜா இசையில் வெளியான மராத்தி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/marathi-thriller-gondhal-becomes-indias-official-entry-for-oscars-2027</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/marathi-thriller-gondhal-becomes-indias-official-entry-for-oscars-2027#comments</comments><guid isPermaLink="false">9a9810b5-d8c8-4b5c-8388-d70321eb5e68</guid><pubDate>Fri, 18 Sep 2026 14:24:02 +0000</pubDate><atom:updated>2026-09-18T14:24:02.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>oscar 2027,gondhal,marathi film,ஆஸ்கர் 2027,கோந்தல்,மராத்தி படம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/3pt1i1q0/gondhal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gondhal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/3pt1i1q0/gondhal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் இளையராஜா இசையமைத்த கோந்தல் என்ற மராத்தி திரைப்படம் தேர்வாகி உள்ளது.</strong></em></p><p>கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛கோந்தல்'. அறிமுக இயக்குனரான சந்தோஷ் திவாகர் இயக்கியிருந்தார்.</p><p>இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.</p><p>மகாராஷ்டிர கிராமம் ஒன்றில் நடைபெறும் கோந்தல் எனும் பாரம்பரிய சடங்குகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. 'கோந்தல்' என்பது மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மற்றும் வழிபாட்டு முறை.</p><p>கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது.</p><p>56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருது வென்றது.</p><p>இந்நிலையில், அடுத்த ஆண்டு (2027) நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க “கோந்தல்” திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக இப்படம் ஆஸ்கருக்கு செல்கிறது.</p><p>மராத்தி சினிமா வரலாற்றில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் 4-வது திரைப்படம் இதுவாகும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு பரவலை தடுக்காதது அரசின் அலட்சிய போக்கு : சீமான் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-negligence-on-rapidly-spreading-dengue-in-tamil-nadu-seeman-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-negligence-on-rapidly-spreading-dengue-in-tamil-nadu-seeman-condemns#comments</comments><guid isPermaLink="false">ade8befa-0260-4fd8-b942-bb96e0737ce6</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:35:55 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:35:55.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,dengue fever,டெங்கு ஒழிப்பு நடவடிக்கை,dengue fever death,dengue fever Tamil Nadu,சீமான் கண்டனம்,டெங்கு,சீமான்,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="280" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/nv3vjife/images-13.jfif" width="478"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/nv3vjife/images-13.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>டெங்கு</h2><p>தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு அனைத்து மாவட்டங்களிலும்  நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது மிகுந்த கவலையும், வேதனையும் அளிப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>16 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என்று தெரிவித்திருக்கிறார். </p><h2>அலட்சியபோக்கு கண்டனத்திற்குரியது</h2><p>தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. </p><p>தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>வேகமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் தற்போதுவரை, தமிழ்நாட்டில் 16,577  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. </p><h2>ஆறுதல்</h2><p>சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில்  டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும்  நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்த துயரச்செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். </p><h2>தீவிர நடவடிக்கை வேண்டும் </h2><p>மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல், தலைநகர் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். </p><p>தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 300 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதால், டெங்கு காய்ச்சல் குறித்த பயமும், பீதியும் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்குகின்றன. டெங்கு காய்ச்சலிலிருந்து தங்களை தற்காக்க முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்து வருகிறார்கள். </p><p>டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல், என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு சுகாதாரத்துறை? மிக மெத்தனமாக செயல்பட்டு மக்களின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அலட்சிய அணுகுமுறை நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என்று தெரிவித்துள்ளார்.</p><h2>விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்</h2><p>தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி, அதனால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, டெங்கு காய்ச்சல் குறித்த விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனடியாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.</p> <p>மேலும், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழ்நாட்டின் மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதோடு, மக்களை டெங்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிலவேம்பு கசாயம் கபசுர குடிநீர் உள்ளிட்ட நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மசூதியில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/world/suicide-squad-attack-on-pakistan-mosque-15-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/suicide-squad-attack-on-pakistan-mosque-15-killed#comments</comments><guid isPermaLink="false">be78dde8-53b6-4550-9213-e4efb064d05d</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:31:42 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:31:42.865Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,bomb blast,வெடி விபத்து,மசூதி,Mosque,pakisan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/02nhbrkx/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan Mosque Suicide Blast]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/02nhbrkx/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானில் கோஹாட் லைன்ஸ் பகுதியில் பொதுமக்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்த மசூதியில், தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">பாகிஸ்தானின்</a> வடமேற்கில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வோ மாகாணத்தில், பழைய காவல்துறை வளாகத்திற்கு அருகே ஒரு மசூதி உள்ளது. </p><p>இந்த மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டு, மசூதி முழுவதுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது.</p><p>இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நபர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இதையடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் தாஹிர் அலி ஷா கூறுகையில், காயமடைந்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் இதுவரையில் 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.</p><h3><strong>பிரதமர் இரங்கல்</strong></h3><p>இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.</p><p>பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில், குறிப்பாக கைபர் பக்துன்க்வாவில், பயங்கரவாதிகளின் வன்முறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. </p><p>அந்த பகுதியில் பாதுகாப்புப் படைகளும் காவல்துறையினரும் அதிகளவில் பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.</p><p>ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பான புகலிடங்களைப் பயன்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு தாக்குதல் பயிற்சிகளை அளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் நிலவும் தீவிரவாதத்தை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்றும் குறிப்பிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய விசா நடைமுறைகள் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/news/world/australia-introduces-new-visa-rules-to-control-immigration</link><comments>https://www.maalaimalar.com/news/world/australia-introduces-new-visa-rules-to-control-immigration#comments</comments><guid isPermaLink="false">06b9de43-8fc3-46a9-9397-42568285a782</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:28:37 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:28:37.533Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Australia,ஆஸ்திரேலியா,விசா,visa approvals</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/lamrmrk0/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Australia visa rules]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/lamrmrk0/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு நபர்களின் பணி விடுமுறை விசா விதிகளை கடுமையாக்க உள்ளதாக ஆஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">ஆஸ்திரேலியாவில்</a> பெரும்பாலான சர்வதேச மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தங்கி படித்தும் பகுதி நேரமாக வேலை செய்தும் வருகின்றனர்.</p><p>கடந்த 2023-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் உச்சபட்சமாக 5,18,000 வெளிநாட்டவர்கள் தங்கி வருவதாக அறிக்கை ஒன்று வெளியானது.  </p><p>இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி கட்சியான ஒன் நேஷன் கட்சி, அந்நாட்டு மக்களிடையே தீவிரமாக எழுச்சி பெற்று வரும் நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிகமாக புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 7,50,000 ஆக குறைக்கப்போவதாக கடந்த வாரம் அறிவித்தது.</p><p>இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க், விசா காலம் முடிந்தும் இங்கு தங்கியிருப்பவர்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து உள்துறை அமைச்சர் கூறுகையில், “நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு வர விரும்பினால், தற்காலிக விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க விரும்பினால், நிரந்தர விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.</p><p>மேலும் உங்களிடம் உரிய விசா இல்லையென்றால், நீங்கள் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற வேண்டும்” என்று கூறினார்.</p><p>இந்த நிலையில் இந்த புதிய விசா நடவடிக்கையின் கீழ், சர்வதேச குடியேறிகளின் விசாக்களில் ‘மேலும் தங்க கூடாது’ என்ற விதிமுறை இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இதன்மூலம் கூட்டாளர் விசா போன்ற மற்றொரு விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, விசா வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்குவது தடுக்கப்படும்.</p><p>மேலும் சர்வதேச மாணவர்கள் தகுதி அளவில் முன்னேறினால் மட்டுமே, தங்களது மாணவர் விசாக்களை புதுப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பெரும்பாலான மாணவர் விசாக்களில் இரண்டாம் நிலை விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சர்வதேச மாணவர்களின் மனைவிகளும் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பணிபுரியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும் அவர்கள் படிக்கும் பாடத்தைப் பொறுத்து, அவர்களுக்கு அனுமதிக்கப்படும் கால நேரம் மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வருமான வரி வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும்: எஸ்.ஜே. சூர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/madras-high-court-to-sj-surya-income-tax-cases-must-be-faced</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/madras-high-court-to-sj-surya-income-tax-cases-must-be-faced#comments</comments><guid isPermaLink="false">3469809c-ef34-4152-bfe7-d737c1653679</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:22:52 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:22:52.110Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எஸ் ஜே சூர்யா,சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt,sj surya</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/i8902uwn/SJSurya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்.ஜே. சூர்யா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/i8902uwn/SJSurya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆறு மனுக்களையும் எஸ்.ஜே.சூர்யா தரப்பில் திரும்பப் பெற்றதையடுத்து அவற்றை நீதிபதி தள்ளுபடி செய்தார்.</p><p>கடந்த 2002-03 முதல் 2009-10 வரையிலான ஆறு நிதியாண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.</p><h2>ஏற்கனவே மனுக்கள் தள்ளுபடி</h2><p>இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்கள் 2022-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அதே காரணங்களை முன்வைத்து தற்போது மீண்டும் வழக்குகளில் இருந்து விடுவிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்டது.</p><h2>எதிர்கொண்டே ஆக வேண்டும்</h2><p>இதையடுத்து, இந்த ஆறு வழக்குகளையும் எஸ்.ஜே.சூர்யா எதிர்கொண்டே ஆக வேண்டும் என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், மனுக்களை ஏற்க இயலாது என்றும் கூறினார்.</p><p>இதனைத் தொடர்ந்து ஆறு மனுக்களையும் எஸ்.ஜே.சூர்யா தரப்பில் திரும்பப் பெற்றதையடுத்து அவற்றை நீதிபதி தள்ளுபடி செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-urgent-plea-supreme-court-cauvery-water</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-urgent-plea-supreme-court-cauvery-water#comments</comments><guid isPermaLink="false">f4affd7a-b471-4247-8b18-82d78471d60b</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:08:33 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:08:33.885Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Cauvery Water Issue,உச்சநீதிமன்றம்,காவிரி நீர் விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4ps4eco8/CaiuveryIssues.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி நீர் விவகாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4ps4eco8/CaiuveryIssues.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.</p><p>அந்த மனுவில் "உரிய நீரை வழங்காத கர்நாடகா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 16.01 டி.எம்.சி. நீரை திறந்தவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் 30 நாட்களுகு்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின் போரில் கர்நாடக அரசு போதுமான நீரை திறந்து விடாத நிலையில், தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிவசேனா, என்சிபி வரிசையில் திரிணாமுல்: கட்சி திருட்டு என பாஜகவை சாடிய ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/first-shiv-sena-ncp-now-tmc-rahul-gandhi-sees-ec-bjp-pattern-in-theft-of-parties</link><comments>https://www.maalaimalar.com/news/national/first-shiv-sena-ncp-now-tmc-rahul-gandhi-sees-ec-bjp-pattern-in-theft-of-parties#comments</comments><guid isPermaLink="false">6d4f0dde-6a09-41fe-bc94-67762d4b6c64</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:07:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:07:00.138Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,BJP,பாஜக,தேர்தல் ஆணையம்,Election commision,TMC,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/d9hapwyd/rahul.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/d9hapwyd/rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலில் சிவசேனா, பிறகு தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணாமுல் காங்கிரஸ் என பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தைச் சாடியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.</strong></em></p><p>மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முறையிடப்பட்டனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் (இரட்டைப் பூக்கள்) சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.</p><p>தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல் காந்தி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>முதலில் சிவசேனா, பிறகு தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணாமுல் காங்கிரஸ்.</p><p>ஒவ்வொரு முறையும் அதே பாணிதான். ஒரு கட்சியைப் பிளவுபடுத்த பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் கைகோர்க்கின்றன. பின்னர், அக்கட்சியின் தேர்தல் சின்னம் பறிக்கப்படுகிறது.</p><p>ஒரு முழு கட்சியையே அபகரிக்க முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளும் திருடப்படக்கூடும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.</p><p>வாக்குத் திருட்டு, அரசுத் திருட்டு. இப்போது கட்சித் திருட்டு. இவை அனைத்தும் நமது ஜனநாயக சரிவின் அடையாளங்களாக மாறிவிட்டன.</p><p>மக்களின் தீர்ப்பை பாதுகாப்பதே தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு சார்ந்த கடமை. ஆனால் அதற்கு மாறாக, மக்களின் தீர்ப்பை தலைகீழாக மாற்றும் சக்திகளுக்கே அது துணை நிற்கிறது.</p><p>இந்தப் போராட்டம் மம்தா பானர்ஜியுடையது மட்டுமல்ல. சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டம் இது என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முறையான விசாரணை நடத்தாமல் நீக்கியது கண்டனத்திற்குரியது: கருப்பு முருகானந்தம் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karuppu-muruganandam-condemns-removal-without-due-investigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karuppu-muruganandam-condemns-removal-without-due-investigation#comments</comments><guid isPermaLink="false">42cb0003-7aa6-4f9d-b60d-71b597086c22</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:46:37 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:46:37.307Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,karuppu muruganantham</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/1n0v12yx/BJPKaruppuMuruganantham.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கருப்பு முருகானந்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/1n0v12yx/BJPKaruppuMuruganantham.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பெண் புகாரளித்ததை அடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>கருப்பு முருகானந்தம் குற்றச்சாட்டு</h2><p>இந்த நிலையில், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் முறையான விசாரணை நடத்தாமல் என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்திருப்பது கண்டனத்திற்குரியது.</p><p>AI மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கருப்பு முருகானந்தம் குற்றம்சாட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>28-ந்தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-to-launch-thaaymaaman-gold-ring-scheme-on-28th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-to-launch-thaaymaaman-gold-ring-scheme-on-28th#comments</comments><guid isPermaLink="false">e012354f-feca-4961-a902-90c3283de520</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:33:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:33:00.451Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TVK Govt,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgjlyt7h/TNVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgjlyt7h/TNVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p><p>தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் </p><p>தாய்- சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.</p><p>தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.</p><p>இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.</p><h2>ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன</h2><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல் (National Family Health Survey-6) பதிவாகியுள்ளது. இவற்றில் 4.20 லட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEmONC Centres) நடைபெறுகின்றன. இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>தினமும் 100 குழந்தைகள்</h2><p>இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் 28.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் (Hubs)  தினமும் </p><p>100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்கமோதிரம் வழங்கப்படும்.</p><p>இத்திட்டம், அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவமுறையை ஊக்குவிப்பதாகவும், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.</p><p>இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலைகளை கரைப்பதை பார்த்து கதறும் சின்னஞ்சிறுசுகள்.... அப்பா தண்ணீரில் போடாதீங்க பிளீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-worship-11</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-worship-11#comments</comments><guid isPermaLink="false">fd261211-0f85-4383-9390-e0f915deccf4</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:55:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:55:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vinayagar Chatuthi,vinayagar,விநாயகர்,விநாயகர்   சதுர்த்தி,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/xf8rsp7q/vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/xf8rsp7q/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிஞ்சு மனங்கள் விநாயகர் சிலைகளை பிரிய மனமில்லாமல் தவிப்பதும், அடம் பிடிப்பதும் நீர்நிலைகள் அருகில் நித்தமும் அரங்கேறும் காட்சிகளாகிவிட்டன.</p><p>வீடுகளிலும், பொதுஇடங்களிலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த விநாயகர் சிலைகளை பக்தி பரவசத்துடன் எடுத்துச்சென்று ஆறு, கடல், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்து வருகிறார்கள்.</p><p>அழகிய வேலைப்பாடுகளுடன் விதவிதமாக வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் தூக்கிப்போடும் போது அது ஐதீகமாக தெரிந்தாலும், மனதில் லேசான கவலையும் தோன்றாமல் இருப்பதில்லை. கண் எதிரில் விநாயகர் சிலைகள் தண்ணீரில் உடைந்து நொறுங்கி சிதறுவது ஒன்றிரண்டு நாட்கள் மனக்கண் முன்பு வந்து செல்ல தவறுவதில்லை. அந்த உணர்வை பெரியவர்கள் வெளிக்காட்டுவதில்லை.</p><h2><strong>விநாயகர் சிலை</strong></h2><p>ஆனால் பிஞ்சு மனங்கள் விநாயகர் சிலைகளை பிரிய மனமில்லாமல் தவிப்பதும், அடம் பிடிப்பதும் நீர்நிலைகள் அருகில் நித்தமும் அரங்கேறும் காட்சிகளாகிவிட்டன.</p><p>விநாயகர் சதுர்த்திக்காக சிறு பிள்ளையார் சிலைகளை வாங்கி சென்று வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள். அப்போது அந்த வீடுகளில் இருக்கும் குழந்தைகளும் விளையாட்டு தனத்தோடு வழிபட்டாலும் அந்த சிலைகளோடு ஒன்றிவிடுகிறார்கள். பின்னர் கரைப்பதற்காக பூக்களால் அலங்காரம் செய்து சிலைகளை எடுத்து வந்து நீர்நிலைகளின் அருகில் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்கள். வீட்டில் நடக்கும் பூஜையை போல்தான் வெளியிலும் எடுத்து வந்து அப்பா-அம்மா பூஜை செய்கிறார்கள் என்று அதுவரை சந்தோஷமாக இருக்கும் குழந்தைகள் சிலையை எடுத்து தண்ணீரில் போடப்போகும் போதுதான் உடைந்து நொறுங்கி விடுகிறார்கள்.</p><h2><strong>சென்னை பட்டினப்பாக்கம்</strong></h2><p>சென்னை பட்டினப்பாக்கத்தில் ஒரு விநாயகர் சிலையை கரைக்க விடாமல் குழந்தை ஒன்று அடம்பிடித்தது. ஒரு வழியாக சிலையை கடலில் போட்டு திரும்பினாலும் ‘எனக்கு பிள்ளையார் சாமி’ வேணும்... என்று கண்ணீர் விட்டு அழுத குழந்தையிடம்,</p><p>“நீ எங்க செல்லக்குட்டித்தானே?”</p><p>“ம்”</p><p>“அப்போ அப்பா சொல்றதை கேட்பியா...”</p><p>“ம்”</p><p>“நம்ம செல்ல விநாயகரும் கடலில் குளித்துவிட்டு வந்து விடுவார்.. சரியா...?”</p><p>“அப்போ... நாம நின்னு கூட்டிட்டு போவோப்பா...”</p><p>“நாம வெயிட் பண்ண வேண்டாம்... அவர் வேகமாக வருவார்.”</p><p>நாம் வீட்டுக்கு போவதற்குள் அவர் வந்துவிடுவார் பாரேன் என்று அந்த குழந்தையை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்கள்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/2jvd26jz/vinayaga.jpg" /></figure><h2><strong>குழந்தை</strong></h2><p>ஆந்திர கடலோரங்களில் நடந்த காட்சிகள் மிகவும் உருக்கமாக இருந்தது. ஒரு குழந்தை விநாயகர் சிலையை கட்டித் தழுவியபடி ‘நான் விடமாட்டேன்’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது. அந்த குழந்தையை சமாதானப்படுத்தி சிலையை எடுத்து சென்று கரைப்பதற்கு பெற்றோர் பெரும்பாடுபட்டனர்.</p><p>ஒரு குழந்தைக்கு தாவணி எல்லாம் போட்டு அழைத்து வந்திருந்தார்கள். அதுவரை உற்சாகமாக இருந்த அந்த குழந்தையும் விநாயகர் சிலையை கடலில் போடப்போகிறார்கள் என்று தெரிந்ததும் ‘பிளீஸ்பா... வேண்டாம்பா... வீட்டுக்கு கொண்டு செல்வோம்’ என்று சிலையை கட்டிப்பிடித்து கதறியது.</p><h2><strong>விநாயகரை பிரியமனமில்லாமல் நடத்திய பாச போராட்டம்</strong></h2><p>இன்னொரு குட்டிகுழந்தை அவளது தந்தை விநாயகர் சிலையை தூக்கியதும் கொண்டு செல்லவிடாமல் தடுத்து தன்னிடம் கொடுத்து விடும்படி கெஞ்சி அழுவதை பார்க்க பரிதாபமாக இருந்தது. தாய் அந்த குழந்தையை பிடித்து வலுக்கட்டாயமாக தன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டார். இன்னொரு குழந்தையின் சிறு பிள்ளைத்தனமான எதிர்ப்பையும் மீறி அந்த குழந்தையின் பெற்றோர் சிலையை கடலில் கொண்டு போட்டனர். அதை பார்த்து ஏங்கி ஏங்கி அழுத அந்த குழந்தையை சிறிது நேரம் சமாதானப்படுத்தவே முடியவில்லை. சிலை கரைக்க வந்திருந்த பலரும் அந்த குழந்தையை சமாதானப்படுத்த நீண்டநேரம் போராடினார்கள்.</p><p>விநாயகரோடு ஒன்றிவிட்ட குழந்தைகள் விநாயகரை பிரியமனமில்லாமல் நடத்திய பாச போராட்டம்தான் பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.</p>]]></content:encoded></item><item><title>டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: 15,000 ரன் குவித்து ஜோஸ் பட்லர் உலக சாதனை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/jos-buttler-passes-kieron-pollard-becomes-first-batter-to-reach-15000-t20-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/jos-buttler-passes-kieron-pollard-becomes-first-batter-to-reach-15000-t20-runs#comments</comments><guid isPermaLink="false">10878782-7a02-44a7-9be1-dd26146c49a5</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:50:23 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:50:23.129Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பொல்லார்டு,Jos Butler,ஜோஸ் பட்லர்,kieran pollard,15000</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jx4kt6sx/butler.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ jos butler]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jx4kt6sx/butler.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஸ் பட்லர் டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். </strong></em></p><p>இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என முன்னிலை பெற்றது.</p><p>நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. </p><p>இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற இருக்கிறது.</p><h2>ஜோஸ் பட்லர் ரன் குவிப்பு</h2><p>இந்தத் தொடரில் ஜோஸ் பட்லர் முதல் போட்டியில் 44 பந்தில் 80 ரன்னும், இரண்டாவது போட்டியில் 16 பந்தில் 30 ரன்னும் எடுத்து அசத்தினார்.</p><h2>பட்லர் 15,000 ரன் </h2><p>இந்நிலையில், இந்த சிறப்பான பேட்டிங் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஜோஸ் பட்லர் 15,000 ரன்களைக் கடந்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் கெய்ரன் பொல்லார்டு 14,999 ரன்களுடன் இருக்கிறார்.</p><p>இந்தப் பட்டியலில் 6வது இடத்தில் இந்தியாவின் விராட் கோலி இடம் பிடித்துள்ளார்.</p><p>டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்</p><p>ஜாஸ் பட்லர்: 15,000 ரன் (528 போட்டிகள்)</p><p>கெய்ரன் பொல்லார்டு: 14,999 ரன் (754 போட்டிகள்)</p><p>அலெக்ஸ் ஹேல்ஸ்: 14,581 ரன் ( 537 போட்டிகள்)</p><p>கிறிஸ் கெயில்: 14,562 ரன் (463 போட்டிகள்)</p><p>டேவிட் வார்னர்: 14,284 ரன் (439 போட்டிகள்)</p><p>விராட் கோலி: 14,218 ரன் (430 போட்டிகள்)</p><p>ஜேம்ஸ் வின்ஸ்: 14,081 ரன் (501 போட்டிகள்)</p><p>சோயப் மாலிக்: 13,571 ரன்</p><p>குயிண்டன் டி காக்: 13,046 ரன்</p><p>பாப் டூ பிளசிஸ்: 12,782 ரன்</p>]]></content:encoded></item><item><title>பெண் ஊழியருக்கு கத்திக்குத்து: சட்டம்- ஒழுங்கை தினமும் சர்வ நாசம் செய்து கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு- கனிமொழி எம்.பி. சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-employee-stabbed-tvk-govt-destroying-law-and-order-kanimozhi-mp-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-employee-stabbed-tvk-govt-destroying-law-and-order-kanimozhi-mp-criticism#comments</comments><guid isPermaLink="false">b3ebf810-6f76-4750-aa55-01d96f41290c</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:29:40 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:29:40.164Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanimozhi MP,கனிமொழி எம்.பி.,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/uvu5iylr/KanimozhiMP001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/uvu5iylr/KanimozhiMP001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. அரசு ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா?</p><h2>கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வசாதாரணாமாகிவிட்டது.</p><p>பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், ஏன் சிறைக் கைதிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை எனும் நிலையைத் தமிழ்நாட்டில் உருவாக்கி சட்டம் ஒழுங்கை தினமும் சர்வ நாசம் செய்து கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு.</p><p>பண்ருட்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும். குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பதில் தாமதிக்காமல் இனியாவது இந்தப் பொறுப்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? இல்லை ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா?</p><h2>நடந்தது என்ன?</h2><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் முதல்வர் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகம் வடகைலாசம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வருகிறது.</p><h2>கத்திக்குத்து</h2><p>இங்கு காடாம்புலியூர் அடுத்த புறங்கணியை சேர்ந்த திவ்யா (23) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல வேலைக்கு வந்தார். மருந்தகத்தை திறந்து பணியில் இருந்தார். அப்போது அங்கு அதே கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (30) என்பவர் வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக குத்தினார். இதில் அந்த பெண்ணுக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.</p><h2>சிகிச்சை</h2><p>வலியால் அலறி துடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அருகே இருந்த ஊழியர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது அங்கு இளம்பெண் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார். அருகே அந்த வாலிபர் நின்றிருந்தார்.</p><p>உடனடியாக அவர்கள், அந்த வாலிபரை பிடித்து வைத்து கொண்டு காடாம்புலியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜிம்பாப்வே உடனான 2வது ஒருநாள் போட்டி: டிராவிஸ் ஹெட் சதத்தால் 356 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/zimbabwe-need-357-runs-to-win-against-australia-in-second-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/zimbabwe-need-357-runs-to-win-against-australia-in-second-odi#comments</comments><guid isPermaLink="false">b57fbd23-7ff2-4ac0-b0b3-21bafe330eb0</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:10:22 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:10:22.947Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Travis Head,டிராவிஸ் ஹெட்,AUSvZIM,ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/o223nbtz/head.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ head, marsh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/o223nbtz/head.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார்.</strong></em></p><p>ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.</p><h2>மார்ஷ் அரை சதம்</h2><p>முதல் விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷ் 53 ரன்னில் அவுட்டானார்.</p><p>அடுத்து இறங்கிய கூப்பர் கானலி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.</p><h2>சதமடித்த டிராவிஸ் ஹெட்</h2><p>2-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் கூப்பர் கானலி இணைந்தார். இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 112 ரன்னில் வெளியேறினார்.</p><p>கூப்பர் கானலி அரை சதம் கடந்து 78 ரன்னில் அவுட்டானார்.</p><p>கடைசி கட்டத்தில் ஆலிவர் பீக் அதிரடியாக ஆடி 18 பந்தில் 41 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது.</p><h2>பிராட் இவான்ஸ் 3 விக்கெட்</h2><p>ஜிம்பாப்வே சார்பில் பிராட் இவான்ஸ் 3 விக்கெட்டும், மசகட்சா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>மம்தா பானர்ஜி தரப்புக்கு புதிய கட்சி பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் அங்கீகாரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/football-vs-envelope-mamata-banerjee-party-rebels-get-new-name-symbol</link><comments>https://www.maalaimalar.com/news/national/football-vs-envelope-mamata-banerjee-party-rebels-get-new-name-symbol#comments</comments><guid isPermaLink="false">7fadf310-195c-4dd0-801d-b373d01a759a</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:46:13 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:46:13.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,Trinamool Congress Party,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0i0pgvku/Mamata0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0i0pgvku/Mamata0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் <a href="https://www.maalaimalar.com/news/national/ec-bars-rival-tmc-factions-from-using-party-name-symbol-in-west-bengal-bypolls">திரிணாமுல் காங்கிரஸ்</a> படுதோல்வியை சந்தித்தது. அதன்பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. சுமார் 60 எம்.எல்.ஏ.-க்கள் (மூன்றில் இரண்டு பங்கு) தனியாக செயல்பட முடிவு செய்தனர். இவர்கள் அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்பில் செயல்பட தொடங்கினர்.</p><p>அதேவேளையில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என மம்தா பானர்ஜி தரப்பு கூறி வந்தது. இதற்கிடையே, திரிணாமுல் கட்சி எம்.பி.க்கள் 20 பேர், வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முறையிடப்பட்டனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் (இரட்டைப் பூக்கள்) சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.</p><h2>மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்</h2><p>இந்த நிலையில் இரண்டு தரப்பிலும் பரிந்துரை செய்த கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மம்தா பிரிவுக்கு மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அத்துடன் கால்பந்து வீரர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.</p><h2>ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்</h2><p>அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த தரப்புக்கு அஞ்சல் உறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மேற்கு வங்கம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட இந்த கட்சியின் பெயரில் இருதரப்பினரும் செயல்படுவார்கள்.</p><p>மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால், கட்சிக்கு உரிமை கொண்டாடும் தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-rain-accompanied-by-thunder-and-lightning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-rain-accompanied-by-thunder-and-lightning#comments</comments><guid isPermaLink="false">710e3bde-ad57-470f-8990-93222a27c027</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:21:26 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:21:26.165Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/mwt9ytkb/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/mwt9ytkb/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, வடக்கு உள் தமிழகம் மற்றும் மராத்வாடா-அரபிக்கடல் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக இன்று முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழை, மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 4.5 கிமீ உயரத்தில் வடக்கு உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் மராத்வாடாயிலிருந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை, உள் கர்நாடகா மற்றும் கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>20 மற்றும் 21-ந்தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>22-ந்தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>23 மற்றும் 24-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் அந்தமான் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடலின் அநேக பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>பெண் நிர்வாகி புகார்: கருப்பு முருகானந்தம் மீது பாஜக நடவடிக்கை..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-removes-karuppu-muruganandam-after-female-member-complaint</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-removes-karuppu-muruganandam-after-female-member-complaint#comments</comments><guid isPermaLink="false">34531e1b-63bb-43c7-956a-2d45905c0fef</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:13:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:13:53.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,karuppu muruganantham</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/n2qy20uj/KaruppuMuruganandham.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கருப்பு முருகானந்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/n2qy20uj/KaruppuMuruganandham.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகபெண் புகாரளித்ததை அடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>பா.ஜ.க-வின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளராக இருப்பவர் திவ்யா சேஷாத்ரி. பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம் தன்னை உடல் ரீதியான தாக்கியதாகவும், மனரீதியான துன்புறுத்தியதாகவும், தனக்கு மிரட்டல் விடுவதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கட்சியின் தேசியத் தலைமையிடம் புகார் அளித்திருந்தாா். தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாவும் கட்சி மேலிடத்திற்கு புகார் அளித்திருந்தார்.</p><p>இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். </p><h2>விளக்கம்</h2><p>இதனிடையே, கருப்பு முருகானந்தம் "அந்தப் புகார் என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. அது குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. என் மீதான புகாரோ அல்லது குற்றச்சாட்டுகளோ என்னவென்று தெரியாமல் என்னால் எதற்கும் பதிலளிக்க முடியாது. விவரங்களை அறிந்த பிறகு, இது குறித்து விளக்கம் அளிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-expand-kamarajar-breakfast-scheme-statewide-on-22nd-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-expand-kamarajar-breakfast-scheme-statewide-on-22nd-rajmohan#comments</comments><guid isPermaLink="false">295fa2f5-f2af-4b55-9758-eac983b4dbae</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:54:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:54:21.442Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காலை உணவு திட்டம்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/25fowcvp/MinisterRajmohan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/25fowcvp/MinisterRajmohan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் விஜய் இன்று காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் உள்ளிட்டவை குறித்து துறை அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.</p><p>இந்த ஆலோசனைக்குப் பிறகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* ஏற்கனவே, 19 லட்சத்து 34 ஆயிரத்து 230 மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் மூலம் பலன் அடைகிறார்கள். 37,440 பள்ளிகள் மூலமாக காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.</p><p>* காலை உணவு திட்டம் விரிவாக்கம் மூலமாக மேலும் 15,450 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.</p><h2>பயனடையும் மாணவர்கள் எண்ணிக்கை 34.64 லட்சம்</h2><p>* புதிதாக 15 லட்சத்து 30 ஆயிரத்து 141 மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். மொத்தமாக பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் மூலமாக 34 லட்சத்து 64 ஆயிரத்து 371 மாணவர்கள் காலை தோறும் உணவு பெறுவார்கள்.</p><p>* 22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced"> காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் </a>தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. 38 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கப்படும்.</p><p>* தமிழ்நாட்டை பொறுத்தவரை அன்றும் இன்றும் இருமொழிக் கொள்கைதான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. உச்சநீதிமன்ற நீதிபதி கருத்துதான் தெரிவித்துள்ளார். தீர்ப்பு கிடையாது. விசாரணை சென்று கொண்டிருக்கிறது. எந்த மொழிக்கும் எதிரானது தமிழ்நாடு அரசு அல்ல. இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.</p><h2>உணவு மெனு தயாரிக்க கமிட்டி</h2><p>* அனைவருக்கும் உணவு, ஆரோக்கியமான உணவு என்பதுதான் எங்களுடைய அனைவருடைய எதிர்பார்ப்பு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு என்ற வகையில் வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். என்னென்ன வகையிலான உணவு என்ற மெனுவை தயாரிக்க புதிய கமிட்டியை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளார். திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஓரிரு நாளில் இந்த கமிட்டி அமைக்கப்படும்.</p><p>* வருங்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.</p><p>இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சாதிக்க எதுவும் தடையில்லை: 45 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளி தாய்</title><link>https://www.maalaimalar.com/news/national/at-45-speech-and-hearing-impaired-jammu-woman-clears-class-10-exam-with-82-percent</link><comments>https://www.maalaimalar.com/news/national/at-45-speech-and-hearing-impaired-jammu-woman-clears-class-10-exam-with-82-percent#comments</comments><guid isPermaLink="false">c17c3d74-db8e-4879-94e5-3ba190f51d67</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:53:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:53:41.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Class 10,பத்தாம் வகுப்பு,jammu women,renu hans,naman kaul,ஜம்மு பெண்மணி,ரேணு ஹான்ஸ்,நமன் கவுல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rl2lij02/naman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Renu, Naman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rl2lij02/naman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சாதனைக்கு வயதோ, உடலோ எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் ஜம்முவைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்.</strong></em></p><p>ஜம்முவைச் சேர்ந்த 45 வயதுடைய் பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவர், தனது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.</p><p>ஜம்முவின் ரூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணு ஹான்ஸ் (45). பேசும் மற்றும் கேட்கும் திறனற்றவர்.</p><p>கடந்த 2002-ம் ஆண்டு தனது 10-ம் வகுப்பு தேர்வை எழுதினார். எதிர்பாரா விதமாக கணிதத்தில் தோல்வி அடைந்தார். அதன்பின், திருமணம், குடும்பம், குழந்தைகள் என அவரது கல்விப் பயணம் முடங்கியது.</p><p>ஆனாலும், எப்படியாவது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாக இருந்தது.</p><h2>தாய்க்கு ஆசிரியரான மகன்</h2><p>ரேணுவின் கனவை நனவாக்க அவரது 12-ம் வகுப்பு படிக்கும் மகன் நமன் கவுல் முன்வந்தார். சைகை மொழியை நன்கறிந்த நமன், தனது தாய்க்கு தானே ஆசிரியராக மாறினார்.</p><p>மாலையில் பள்ளி முடிந்து வந்ததும், நமன் தனது தாய்க்கு பாடங்களை சைகை மொழி மூலம் பொறுமையுடன் கற்றுக் கொடுத்தார். </p><p>கேட்கும் திறனற்ற ஒருவருக்கு கடினமான அறிவியல் மற்றும் கணிதக் கோட்பாடுகளைப் புரிய வைப்பது கடும் சவாலாக இருந்தது.</p><h2>82 சதவீதத்துடன் தேர்ச்சி</h2><p>ஜம்மு காஷ்மீர் திறந்தநிலைப் பள்ளி மூலம் கடந்த ஏப்ரல் மாதம் ரேணு ஹான்ஸ் தேர்வு எழுதினார். தேர்வு மையத்துக்குச் சென்ற ரேணுவுக்கு கொஞ்சம் டென்ஷனாகவே இருந்திருக்கிறது.</p><p>தன்னைவிட மிகவும் இளைய மாணவர்களும், வயதானவர்களும் அங்கு இருந்ததைப் பார்த்து முதலில் தயங்கினார். அவரது மகன் கொடுத்த ஊக்கத்தினால் தேர்வு எழுதினார்.</p><p>கடந்த 10-ம் தேதி அன்று வெளியான தேர்வு முடிவுகளில் அவர் 500-க்கு 410 மதிப்பெண்கள் (82 சதவீதம்) பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.</p><h2>கனவு நனவானது</h2><p>இதுதொடர்பாக ரேணு ஹான்ஸ் கூறுகையில், இன்று என் கனவு நனவாகி உள்ளது. என் மகனால்தான் இவை அனைத்தும் சாத்தியமானது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.</p><p>மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கேற்ப முறையான வழிகாட்டுதலும், தளராத நம்பிக்கையும் இருந்தால் மாற்றுத் திறனாளிகளாலும் எந்த சாதனையையும் படைக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்த ரேணு ஹான்சுக்கு நாமும் ஒரு வாழ்த்து சொல்லலாமே.</p>]]></content:encoded></item><item><title>மகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டேஸ்வரி தேவி: மைசூர் தசரா திருவிழா வரலாறு</title><link>https://www.maalaimalar.com/news/national/goddess-chamundeshwari-slays-mahishasura-mysore-dasara-history</link><comments>https://www.maalaimalar.com/news/national/goddess-chamundeshwari-slays-mahishasura-mysore-dasara-history#comments</comments><guid isPermaLink="false">c4392bee-0b16-4ea9-a419-1a41d6db039f</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:25:12 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:25:12.672Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தசரா திருவிழா,மைசூர்,Mysore,Dasara</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wqsscxxy/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mysuru Dasara]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wqsscxxy/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் மகிஷாசுரன் என்ற எருமை அரக்கனை சாமுண்டேஸ்வரி தேவி மலையில் வைத்து கொன்ற நிகழ்வை அடுத்து, ராஜா உடையார் என்பவர் தசரா பண்டிகையை பாரம்பரியமாக கொண்டாட தொடங்கினார்.</p><h3><strong>விஜயநகரப் பேரரசு</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில்</a> தசரா விழாவானது தீமையை நன்மையால் வென்ற நிகழ்வை கொண்டாடும் ஒரு அரச திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்த விழா அம்மாநிலத்தில் ‘நாதஹப்பா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.</p><p>விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சிக்கு பிறகு 1610 ஆம் ஆண்டு ராஜா உடையார் தசரா பண்டிகையை பாரம்பரியமாக நிறுவினார். </p><h3><strong>சாமுண்டேஸ்வரி தேவி</strong></h3><p>இந்த விழாவானது முதலில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து மைசூர் தலைநகராக அறிவிக்கப்பட்டபோது, தசரா மைசூரில் கொண்டாடப்பட ஆரம்பித்தது.</p><p>மகிஷாசுரன் என்ற எருமை அரக்கனை சாமுண்டேஸ்வரி தேவி மலையில் வைத்து கொன்ற நிகழ்வை அடுத்து, ‘மைசூரு’ என்ற நகரின் பெயர் உருவானது.</p><p>இதையடுத்து ராஜா உடையார், சாமுண்டேஸ்வரியை குலதெய்வமாக ஆக்கி, தசராவை மைசூரில் கொண்டாட தொடங்கினார்.</p><h3><strong>மைசூர் தசரா</strong></h3><p>தசரா என்பது விஜயதசமியன்று முடிவடையும் ஒரு 10 நாள் திருவிழாவாகும். இந்த நாள் அதற்கு முந்தைய ஒன்பது நாட்களின் வெற்றியை குறிப்பதாக அமைந்துள்ளது.</p><p>நவராத்திரியின் முந்தைய ஒன்பது நாட்களுக்கான கொண்டாட்டங்கள், ஆறு நாட்களுக்குப் பிறகே தொடங்குகின்றன. ஆறாம் நாள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.</p><p>இதையடுத்து எட்டாம் நாள் துர்கா தேவிக்கும், ஒன்பதாம் நாள் செல்வத்தின் தேவியான லட்சுமிக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. பத்தாம் நாளில், மைசூர் அரண்மனையிலிருந்து தொடங்கி மணிமண்டபத்தில் முடிவடையும் ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெறுகிறது.</p><h3><strong>ஜம்போ சவாரி</strong></h3><p>பத்தாம் நாளான விஜயதசமி அன்று, 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீதுள்ள தங்க தொட்டிலில் சாமுண்டேஸ்வரி தேவியின் சிலை வைக்கப்பட்டு, மைசூர் அரண்மனையில் இருந்து மணிமண்டபம் வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.</p><p>மேலும் மகாநவமி அன்று மன்னனின் வாள், யானைகள் மற்றும் குதிரைகளுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வழிபடப்படுகிறது.</p><p>இதைத்தொடர்ந்து அடுத்த நாள் மாலை, அந்த சிலை அம்பா விலாஸ் அரண்மனையில் இருந்து புறப்பட்டு, ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணிமண்டபத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.</p><p>அங்கு பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு சமிக்குள் மறைத்து வைத்து, இந்த நாளில் அவற்றை மீண்டும் எடுத்ததை நினைவுகூறும் வகையில் கெளரவிக்கப்படுகிறது.</p><p>இந்த தசரா திருவிழாவில் 12 தசரா யானைகள், மைசூர் அரண்மனையிலிருந்து மண்டபம் வரையிலான ஊர்வலப் பாதையில் தினமும் இருமுறை அணிவகுத்துச் செல்கின்றன.</p><p>பத்து நாட்கள் இரவு நடைபெறும் ஜம்போ சவாரி மற்றும் குதிரைப்படை வீரர்கள் தீப்பந்தங்களை ஊர்வலமாக எடுத்து செல்லும் பஞ்சின கவசத்துடன் தசரா திருவிழா முடிவடைகிறது.</p><h3><strong>2026 தசரா பண்டிகை</strong></h3><p>இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாடப்படும் தசரா திருவிழாவானது, அக்டோபர் மாதம் 11ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 அன்று வரை நடைபெறவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை 15 நாட்கள் மட்டுமே பாதுகாக்க முடியும் எனக் கூறுவதா?- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/can-police-keep-cctv-recordings-only-15-days-asks-madurai-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/can-police-keep-cctv-recordings-only-15-days-asks-madurai-high-court#comments</comments><guid isPermaLink="false">ad7e05ad-627b-46ca-8acc-ffd9256bc812</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:19:22 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:19:22.393Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CCTV,highcourt madurai branch,சிசிடிவி,உயர் நீதிமன்ற மதுரைக் கிளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ High court madurai bench]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண்ணை மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் 36 மணி நேரம் சட்ட விரோதக் காவலில் அடைத்து வைத்தது தொடர்பான வழக்கில், சிசிடிவி பதிவுகளை சமர்பிக்க உத்தரவிடக்கோரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thoothukudi-shooting-incident-high-court-madurai-bench-key-order-to-government">உயர்நீதிமன்ற மதுரைக்கிளை</a>யில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.</p><p>உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி..</p><p>அப்போது போலீஸ் தரப்பில் 15 நாட்கள் மட்டுமே சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் 18 மாதங்கள் பாதுகாக்க வேண்டும். CCTV கேமராக்களைப் பராமரிக்க வேண்டிய கடமை எஸ்.பி.க்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டயானா சகோதரர் எழுதிய புத்தகத்தில் மன்னர் சார்லஸ் மீது குற்றச்சாட்டு - பக்கிங்காம் அரண்மனை மறுப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/world/princess-diana-brother-claims-on-charles</link><comments>https://www.maalaimalar.com/news/world/princess-diana-brother-claims-on-charles#comments</comments><guid isPermaLink="false">c7e1a178-fb1c-4ec2-9833-3b1a85beaffc</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:03:24 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:03:24.103Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Buckingham Palace,சார்லஸ்,Charles,Diana,டயானா,பக்கிங்காம் அரண்மனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/fyoykvki/charles.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Charles diana - Charles Spencer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/fyoykvki/charles.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மன்னர் சார்லஸ் குறித்து ஸ்பென்சர் தெரிவித்து உள்ள குற்றச்சாட்டுகளை பக்கிங்காம் அரண்மனை திட்டவட்டமாக மறுத்து உள்ளது.</p><h2>இளவரசி டயானா</h2><p>இங்கிலாந்து மன்னர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D">சார்லசுக்கும்</a> அவரது முதல் மனைவியான இளவரசி டயானாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1992-ம் ஆண்டு பிரிந்தனர். பின்னர் 1996-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். 1997-ம் ஆண்டு டயானா, பாரிசில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். </p> <h2>டயானா சகோதரர் ஸ்பென்சர்</h2><p>இந்த நிலையில் டயானாவின் சகோதரர் ஸ்பென்சர் தனது சகோதரி குறித்து ஸ்வான் சாங் டயானா மை சிஸ்டர் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். அடுத்த வாரம் வெளியாக உள்ள இந்த புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் வெளியாகி உள்ளது. அதில் டயானா மரணம் அடைந்த பிறகு மன்னர் சார்லசுடன் நடந்த உரையாடலை ஸ்பென்சர் குறிப்பிட்டு உள்ளார். அது தொடர்பாக அவர் கூறியதாவது:-</p> <h2>சார்லஸ்</h2><p>டயானாவின் மரணம் உறுதி செய்யப்பட்ட உடனேயே சார்லஸ் என்னுடன் பேசினார்.​ அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். மறுமணம் செய்து கொள்வதற்கான புதிய சுதந்திரம் கிடைத்த உணர்வே அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். அவர் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தார். ஒரு லாட்டரி வென்றவரைப் போல அவர் பேசினார் என்று அப்போது நான் நினைத்தது எனக்கு நினைவிருக்கிறது. </p> <h2>டயானா இறுதி ஊர்வலம்</h2><p>டயானாவின் இறுதி ஊர்வலத்தில் அவரது மகன்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் நடந்து செல்வது குறித்து, எனக்கும் சார்லசுக்கும் இடையே காரசாரமான தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஒரு சிறுவன் தன் தாயின் உடலுக்குப் பின்னால் நடந்து செல்வது எவ்வளவு பெரிய மன அதிர்ச்சியைத் தரும்? அது மிகவும் மோசமான ஒன்று. எனவே அதைத் தடுக்க நான் முயற்சித்தேன்.</p><p>டயானா தனது மகன்கள் இதுபோன்ற கடினமான சூழலுக்கு ஆளாவதை விரும்ப மாட்டார் என்று நான் கூறினேன். அதற்கு சார்லஸ், கவலைப்பட வேண்டாம். நாங்கள் அவரை விரைவில் மறந்து விடுவோம் என்றார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.</p><p>இந்த உரையாடலில் சார்லஸ் தனது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். டயானா மீது தனக்குள்ளே அடக்கி வைத்திருந்த அவமதிப்பு உணர்வையும், அவரது மறைவால் உலகம் அடைந்த பெரும் அதிர்ச்சியைக் கண்டு தனக்கு ஏற்பட்ட வெறுப்பையும் அவர் கொட்டித் தீர்த்தார். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p> <h2>பக்கிங்காம் அரண்மனை மறுப்பு</h2><p>மன்னர் சார்லஸ் குறித்து ஸ்பென்சர் தெரிவித்து உள்ள குற்றச்சாட்டுகளை பக்கிங்காம் அரண்மனை திட்டவட்டமாக மறுத்து உள்ளது. இதுதொடர்பாக அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p> <p>கொள்கை ரீதியாகப் புத்தகங்கள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்றாலும், சகோதர இழப்பால் ஏற்படும் துயரம் என்பது பகுத்தறிவை மங்கச் செய்து, முடிவெடுக்கும் திறனைப் பாதித்து, மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில் நினைவுகளை மாற்றியமைக்கவும் கூடும் என்பதை மன்னர் நன்கு அறிவார். இது பல ஆண்டுகள் கடந்த பிறகும் கூட நிகழலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மன்னர் சார்லஸ் கடந்த 2005-ம் ஆண்டு கமிலா பார்க்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வருடாந்திர பிரம்மோற்சவ விழா - திருப்பதியில் நாளை கருட சேவை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/brahmotsavam-festival-garuda-seva-in-tirupati-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/spirituality/brahmotsavam-festival-garuda-seva-in-tirupati-tomorrow#comments</comments><guid isPermaLink="false">828f14b0-eeb7-44ec-8c9a-99ee3db34282</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:37:13 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:37:13.662Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,Tirupati temple,brahmotsavam,திருப்பதி கோவில்,பிரம்மோற்சவம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/19/17376952-tirupatitemple.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/19/17376952-tirupatitemple.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட வாகன சேவை நாளை நடைபெறுகிறது.</p><h2>திருப்பதி கோவில்</h2><p>திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். </p><h2>கருட சேவை</h2><p>இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளினார். மாட வீதிகளில் பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது. </p> <h2>பிரம்மோற்சவ விழா</h2><p>பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட வாகன சேவை நாளை நடைபெறுகிறது. மாலை 6.30 மணி முதல் நள்ளிரவு வரை கருட சேவை நடைபெறும். </p><p>கருட சேவையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கருட சேவையை முன்னிட்டு ஆந்திரா பிரதேச போக்குவரத்து துறை சார்பில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கருட சேவையை காண காலை முதலே பக்தர்கள் மாட வீதிகளில் குவிவார்கள். </p> <p>பக்தர்களின் வசதிக்காக மாட வீதிகளின் நுழைவு வாயிலில் சிறப்பு வழிகாட்டி பலகைகள் பொருத்தப்பட்டு உள்ளன.  பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் பல மடங்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. </p><h2>15 மணிநேரம்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பதியில்</a> நேற்று 68,265 பேர் தரிசனம் செய்தனர். 26,959 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.</p><p>3.21 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நகர்ப்புறங்களில் சொத்து வரியை மீண்டும், மீண்டும் உயர்த்தக் கூடாது- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-property-taxes-in-urban-areas-should-not-be-raised-repeatedly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-property-taxes-in-urban-areas-should-not-be-raised-repeatedly#comments</comments><guid isPermaLink="false">b896709e-de23-458e-aa46-ddcc2c75c571</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:33:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:33:41.722Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,சொத்து வரி,property tax</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y4nkl4g4/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y4nkl4g4/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உள்ளாட்சிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக நியாயமான நிதிப்பகிர்வு, வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை  மட்டுமே ஏழாம் மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று மாநில நிதி ஆணையம் பரிந்துரைத்தாலும் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது என அன்புமணி கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல</strong></h2><p>உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக சொத்துவரியை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கவுள்ளதாக ஏழாம் மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சிகளின் நிதிநிலையை மேம்படுத்த ஏராளமான வழிமுறைகள் இருக்கும் போது, மீண்டும், மீண்டும் மக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வையே அனைத்து அரசுகளும் கையில் எடுப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.</p><p>சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/சொத்து-வரி">சொத்து வரி</a> உயர்வு, வரி அல்லாத வருவாயை அதிகரித்தல் உள்ளிட்ட மூன்று அம்சங்களை அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார். அவருடன் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ''உள்ளாட்சி அமைப்புகளின் சொந்த வருவாயை அதிகரிக்க, சொத்து வரி உள்ளிட்டவைகளை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.</p><h2><strong>விலக்கு</strong></h2><p>உள்ளாட்சி அமைப்புகள் நிதித் தற்சார்பு பெற்றால் மட்டுமே மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்; அதனால் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக மீண்டும், மீண்டும் சொத்து வரியை உயர்த்தி அதன் மூலம் மக்களைச் சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>முந்தைய திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன் சுமையையே மக்களால் தாங்க முடியாத நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை 6% சொத்து வரி உயர்த்தும் முறை கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களின் அதிருப்தியை தவிர்ப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சொத்துவரி உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.</p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் நிலைமை மாறவில்லை. சென்னையில் சில மாதங்களுக்கு முன் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 10 மடங்கு வரை  சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த முடிவை தவெக அரசு கைவிட்டது. இத்தகைய சூழலில் மீண்டும் சொத்துவரி உயர்த்தப்படுவதை  மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.</p><h2><strong>நியாயமல்ல</strong></h2><p>மாநில அரசின் வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பங்கை முறையாக பகிர்ந்தளித்தாலே அவை சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான நிதி கிடைக்கும். ஆனால், மாநில அரசுகள் அதை செய்ய முன்வருவதில்லை. மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் மத்திய அரசு எத்தகைய மேலாதிக்க அணுகுமுறையை கடைபிடிக்கிறதோ, அதே அணுகுமுறையைத் தான் உள்ளாட்சிகளுக்கான நிதிப்பகிர்வில் மாநில  அரசும்  கடைபிடிக்கிறது.</p><p>உள்ளாட்சிகளுக்கு வருவாய் கிடைப்பதற்காக உள்ள பல வரிகளை அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் ரத்து செய்யும் மாநில அரசு, அதனால் ஏற்படும் இழப்புகளை சொத்துவரி உயர்வு மூலம் ஈடுகட்ட விரும்புவது நியாயமல்ல.</p><p>எனவே, உள்ளாட்சிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக நியாயமான நிதிப்பகிர்வு, வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை  மட்டுமே ஏழாம் மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று மாநில நிதி ஆணையம் பரிந்துரைத்தாலும் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது என கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா- மத்திய அமைச்சகம் பரிந்துரை</title><link>https://www.maalaimalar.com/news/national/health-ministry-proposes-cctv-in-medical-shops-to-monitor-prescription-drug-sales</link><comments>https://www.maalaimalar.com/news/national/health-ministry-proposes-cctv-in-medical-shops-to-monitor-prescription-drug-sales#comments</comments><guid isPermaLink="false">44bab348-e49c-458f-909e-47f8c0d42c2e</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:29:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:29:53.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Ministry,மத்திய அமைச்சகம்,சிசிடிவி கேமரா,CCTV camera,மருந்து கடை,pharmacies</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jkvvzudv/CCTV.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CCTV Camera]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jkvvzudv/CCTV.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருந்து விதிகள் 1945-ல் பல்வேறு திருத்தங்களை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த திருத்தங்களுடன் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.</p><p>இதில் முக்கியமாக சரியான மருந்துச்சீட்டுகள் அல்லது டாக்டரின் பரிந்துரைச்சீட்டு இன்றி அட்டவணை எச்., எச்.1 மற்றும் எக்ஸ் பட்டியலில் உள்ள மருந்துகளை பெறுவதையும், விற்பனை செய்வதையும் தடுப்பதை இந்த திருத்தம் நோக்கமாக கொண்டுள்ளது.</p><p>எனவே டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்பதை கண்காணிக்க மருந்து கடைகளில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE" rel="nofollow">கண்காணிப்பு கேமரா</a> வைக்க சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது. </p><p>இந்த நடவடிக்கை பொது சுகாதாரத்துக்கான ஒழுங்குமுறை மேற்பார்வை மற்றும் பாதுகாப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதி என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து செல்வங்களையும் தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/purattasi-month-perumal-worship-3</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/purattasi-month-perumal-worship-3#comments</comments><guid isPermaLink="false">de0a919b-c1f1-4a79-a4d5-ace57a836216</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:08:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:08:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,பெருமாள் வழிபாடு,perumal worship,புரட்டாசி மாதம்,Purattasi Month</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/cgayr5yp/perumal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/cgayr5yp/perumal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புரட்டாசி முதல் சனிக்கிழமையான நாளை விரதத்தை நாம் மேற்கொண்டு, பெருமாளின் அருளை பெறுவோம்.</p><p>நாளை புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை...</p><p>புரட்டாசி மாதம் என்றாலே நாராயணனின் நாமம் எங்கும் ஒலிக்கும் பக்தி மாதம். பூலோக வைகுண்டமான திருமலையில் ஸ்ரீ வெங்கடாசலபதி கலியுகரதனாக அவதரித்தது இந்த மாதத்தில்தான் என்பது ஐதீகம். அதிலும் குடும்பத்தில் அமைதியும், நீண்ட ஆயுளும், சகல ஐஸ்வர்யங்களும் அள்ளித்தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மகத்துவம் நிறைந்தது.</p><h2><strong>கன்னி ராசி</strong></h2><p>பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.</p><h2><strong>புரட்டாசி சனிக்கிழமை</strong></h2><p>புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் சிலர் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வர வேண்டும். புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினார் என்கிறது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.</p><h2><strong>சனி பகவான்</strong></h2><p>சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. அன்று பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.</p><h2><strong>பாவங்கள்</strong></h2><p>ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு அன்று ஆலம் இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும். வருடம் முழுவதும் சனிக்கிழமை விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால், வருடம் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்த பலனை பெற முடியும் என சொல்வார்கள். இதிலிருந்தே புரட்டாசி சனிக்கிழமை விரதம் எவ்வளவு மகத்தானது என்பதை புரிந்து கொள்ளலாம்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/x8wi8day/vijayaragavan.jpg" /><figcaption>ஜி.விஜயராகவன் ஸ்ரீரங்கபுரம், தேனி</figcaption></figure><h2><strong>சனி பகவானின் கலியுக பயணம்</strong></h2><p>சனி பகவான், கலியுகத்திற்கு புறப்பட தயாரான சமயத்தில் அந்த வழியாக வந்த நாரதர், சனி பகவானின் கலியுக பயணம் பற்றி விசாரித்துள்ளார். பிறகு, “பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல். ஆனால், திருமலை பக்கம் மட்டும் தவறியும் சென்று விடாதே” என எச்சரித்து தனது கலகத்தை தொடங்கி உள்ளார். எதை செய்ய கூடாது என சொல்கிறார்களோ, அதை ஏன் செய்யக் கூடாது. செய்து பார்த்தால் என்ன நடக்கும் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இயல்பாக வருவது போல் சனி பகவானுக்கும் ஏற்பட்டுள்ளது. நேராக திருமலைக்கு சென்று கால் வைத்த அடுத்த நொடியே தூக்கி வீசப்பட்டார். அனைவரையும் துன்புறுத்தி பார்க்கும் சனி பகவானுக்கு, பூலோக வைகுண்டமாக திகழும் திருமலையில் என்ன வேலை என சனி பகவான் மீது கோபம் கொண்டார் திருமலை வேங்கடவன். அவரின் பாதம் பணிந்து மன்னிப்புக் கேட்ட சனிபகவானிடம், திருமலை வந்து தன்னை வழிபடும் பக்தர்களை துன்புறுத்தக் கூடாது என கட்டளையும் இட்டார் மகாவிஷ்ணு. பிறகு மன்னிப்பு கேட்ட சனி பகவானுக்கு மனம் இறங்கி, தனக்குரிய புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடும் பக்தர்களுக்கு தனது அருள் பரிபூரணமாக கிடைக்கும் என மகா விஷ்ணுவே வரமளித்ததாக புராணங்கள் சொல்கின்றன.</p><h2><strong>பாவ கிரகம்</strong></h2><p>மேலும் நவகிரகங்களில் தன்னை மட்டுமே அனைவரும் வெறுப்பதாகவும், பாவ கிரகம் என ஒதுக்குவதாக கவலை கொண்ட சனி பகவானுக்கு மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து, இதற்கு ஒரு தீர்வு கேட்கும் படி யோசனை வழங்கி உள்ளார் நாரதர். அதை ஏற்று, சனி பகவானும் கடும் தவம் செய்துள்ளார். இதனை ஏற்று அவர் முன் தோன்றிய மகா விஷ்ணுவிடம், சனி பகவான் தனது மனக்குறையை கூறி உள்ளார். இதனால் சனிபகவானின் கவலையை போக்க விரும்பிய மகா விஷ்ணு, மற்ற மாதங்களை விட தனக்குரிய புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் அதிகமானவர்கள் உன்னை விரும்பி வழிபடுவார்கள். அப்படி வணங்குபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக வாக்களித்ததாக ஒரு கதையும் சொல்லப்படுவதுண்டு.</p><h2><strong>சனிக்கிழமை விரதம்</strong></h2><p>இத்தகைய சிறப்பு வாய்ந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான கஷ்டங்களும் நீங்கி, வளமான வாழ்க்கையை பெறலாம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து சனிபகவானுக்கு நல்லெண்ணையில் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்து, பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.</p><h2><strong>பாண்டவர்கள் வனவாசம்</strong></h2><p>பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது, புரட்டாசி சனிக்கிழமை தோறும் தவறாமல் விரதமிருந்து பெருமாளை வழிபட்டதன் பலனாகவே அவர்கள் போரில் வென்று, தாங்கள் இழந்த நாடு, ராஜ்ஜியம், செல்வம் அனைத்தையும் திரும்ப பெற்றதாக புராண கதைகள் சொல்கின்றன. இத்தகைய புரட்டாசி முதல் சனிக்கிழமையான நாளை விரதத்தை நாம் மேற்கொண்டு, பெருமாளின் அருளை பெறுவோம்.</p> ]]></content:encoded></item><item><title>6 மாத குழந்தையை கடித்த பிட்புல் நாய்: அரியானாவில் கொடூரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/pitbull-dog-bites-6-month-old-baby-walking-on-road</link><comments>https://www.maalaimalar.com/news/national/pitbull-dog-bites-6-month-old-baby-walking-on-road#comments</comments><guid isPermaLink="false">9699ebf0-031a-4334-a4ca-b03b1047de8e</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:05:09 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:05:09.345Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pitbull,haryana,அரியானா,dog bite,நாய் கடி,பிட்புல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ib241ttf/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pitbull Attack in Haryana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ib241ttf/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானாவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணையும் அவருடன் இருந்த ஆறு மாத குழந்தையையும் பிட்புல் நாய் ஒன்று கடித்ததை அடுத்து, படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE">அரியானாவின்</a> சோனிபட் பகுதியில் ஆறு மாத குழந்தையுடன், அவரின் அத்தை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் இருந்த வீட்டு உரிமையாளரின் பிட்புல் நாய் ஒன்று அவிழ்த்து வெளியே விடப்பட்டிருந்தது. </p><p>இதையடுத்து குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை, திடீரென பார்த்து பிட்புல் நாய் ஆக்ரோஷமாக குரைக்க ஆரம்பித்தது.</p><p>இதனால் பதற்றம் அடைந்த அந்த பெண்மணி, அங்கிருந்து செல்ல முயன்றபோது, அந்த நாய் அவர்கள் மேலே தாவியது.</p><p>அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பெண்ணை, பிட்புல் நாய் கை மற்றும் கால்களில் கடித்தது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், நாயை விரட்டிவிட்டு படுகாயமடைந்த பெண்ணையும், குழந்தையையும் ரோத்தக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><h3><strong>சிறுவனின் காதை கடித்த பிட்புல் நாய்</strong></h3><p>இதேபோன்று டெல்லியின் வினய் என்கிளேவ் பகுதியில் ஆறு வயது சிறுவனின் வலது காதின் ஒரு பகுதியை பிட்புல் நாய் கடித்து குதறியது.</p><p>இதையடுத்து ஆக்ரோஷமான நாயை கட்டி வைக்காமல் அலட்சியமாக செயல்பட்ட நாய் உரிமையாளர் மீது, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Pitbull pet attacks 6 month old kid in Sonipat Haryana.<br><br>Check how relaxed is the Pitbull owner, sorry parent, while the dog was brutally attacking the kid.<br><br>Kid is severely injured, in hospital.<br><br>But Dog Lovers will still defend it. Justify it by saying dog must be hungry,… <a href="https://t.co/K2LSXf8tUK">pic.twitter.com/K2LSXf8tUK</a></p>&mdash; Ankur Singh (@AnkurSingh) <a href="https://x.com/AnkurSingh/status/2100638076108521967?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதைத்தொடர்ந்து நாய் உரிமையாளர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.</p><h3><strong>சமூக ஆர்வலர்கள் கோரிக்கை</strong></h3><p>இந்த நிலையில் இந்தியாவில் காசியாபாத், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்ரோஷமான நாய் இனத்தை சேர்ந்த பிட்புல் மற்றும் ராட்வீலர் உள்ளிட்ட சில நாய்கள், வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/police-officer-on-duty-shot-dead-in-punjab</link><comments>https://www.maalaimalar.com/news/national/police-officer-on-duty-shot-dead-in-punjab#comments</comments><guid isPermaLink="false">3fd40481-5ae6-4e15-94ad-3782f78b8aba</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:04:51 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:04:51.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுட்டுக்கொலை,gun shot,பஞ்சாப்,Punjab,போலீஸ் அதிகாரி,Police officer</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y9jwgver/punjab.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sub inspector ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y9jwgver/punjab.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஞ்சாப்பில் பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஹர்ஜித் சிங் (வயது 50). இவர் இன்று அதிகாலை அம்ரித்சரின் கேட் ஹகிமா பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார்.</p><h2>சுட்டுக்கொலை</h2><p>அப்போது, துப்பாக்கியுடன் பைக்கில் வந்த இருவர் போலீஸ் அதிகாரி ஹர்ஜித் சிங் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81" rel="nofollow">துப்பாக்கி சூடு</a> நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.</p><p>இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஹர்ஜித் சிங்கை மீட்ட சக போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். </p><p>அங்கு ஹர்ஜித் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றவர்களை தேடி வருகின்றனர். மேலும், இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அதேவேளை, சுட்டுக்கொல்லப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங்கின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை- டி.ஆர்.பி.ராஜா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trp-raaja-indictment-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trp-raaja-indictment-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">205de3fb-cba8-4ce2-8b8c-bb6fee35daa5</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:58:14 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:58:14.978Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,டிஆர்பி ராஜா,TRB Rajaa,லண்டனன் பயணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ho197nbu/TRBRaaja.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- டி.ஆர்.பி.ராஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- டி.ஆர்.பி.ராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ho197nbu/TRBRaaja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சித்துள்ளார்.</strong></em> </p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> அரசு முறை பயணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றார். அதனை தொடர்ந்து நேற்று காலை முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பினார். முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது. </p><p>இதையடுத்து, முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று மேற்கொண்ட முதலீடுகள் குறித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-ask-question-to-tn-govt-for-cm-vijay-london-trip">வெள்ளை அறிக்கை</a> வெளியிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். </p><p>இந்த நிலையில், முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை என தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><h2><strong>ரீல் விடுகிறது தவெக அரசு</strong></h2><p>* முதலீடுகளில் அரசியல் இருக்கக்கூடாது என நினைத்து நானே சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறினேன். </p><p>* தொழில் முதலீடு தொடர்பாக தினம் தினம் த.வெ.க. அரசு ரீல் விடுகிறது.</p><p>* ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ரீல் விட்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். </p><h2><strong>வெளிநாட்டில் மானத்தை வாங்காதீர்கள்</strong></h2><p>* முதலமைச்சர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே உள்ள மருத்துவமனை அருகே நின்று கத்துகின்றனர். </p><p>* வெளிநாட்டுக்கு சென்று தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள். </p><p>* புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தால் அதைக் காட்டலாமே? நிறுவனத்தின் பெயரைக் கூட ஏன் சொல்லவில்லை?</p><p>* ரூ.3000 கோடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் பெயரையே சொல்லாதது ஏன்? </p><h2><strong>பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?</strong></h2><p>* லண்டனில் கார் பந்தயத்தை பார்க்கச் செல்கிறேன் என்றால் யார் என்ன சொல்லப்போகிறார்கள். </p><p>* எஃப்1 கார் பந்தயம் நடத்த 2 ஆயிரம் ஏக்கம் நிலம் தேவை, அதை எந்த இடத்தில் எடுக்கப்போகிறார்கள்? </p><p>* உண்மையான தொழில் முதலீடு தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்? </p><p>* ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போது பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார்.</p><p>* வெளிநாடுகளில் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது, எவ்வளவு முதலீடு என நாள்தோறும் அறிக்கை வெளியிட்டோம். </p><p>* முதலமைச்சர் வெளிநாடு செல்லும் முன்பும், சென்றுவிட்டு வந்த பின்பும் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை? </p><p>* வெற்றி முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் வெற்று முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள். </p><p>* திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதலீடுகளை தாங்கள் கொண்டு வந்ததாக த.வெ.க. அரசு கூறுகிறது. </p><p>* திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தில் உடனுக்குடன் தகவல்களை தந்தோம். </p><p>* முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை என கூறினார். </p>]]></content:encoded></item><item><title>இரண்டாவது குழந்தையை தத்தெடுக்கும் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ நடிகை மில்லி பிரவுன்: காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/stranger-things-star-millie-brown-adoption</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/stranger-things-star-millie-brown-adoption#comments</comments><guid isPermaLink="false">7a6c5717-25df-4893-886d-cb3cae119109</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:56:42 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:56:42.725Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மில்லி பாபி பிரவுன்,StrangerThings,millie bobby brown,ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0icc05b6/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Millie Bobby Brown new child adoption]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0icc05b6/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து நடிகையான மில்லி பாபி பிரவுன் தனது கணவர் ஜேக் போங்கியோவி-யுடன் இணைந்து இரண்டாவது குழந்தையை தத்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">நெட்பிளிக்ஸ் தளத்தில்</a> கடந்த 2016-ஆம் ஆண்டு மிகவும் பிரபலமான வெப் சீரிஸான  ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ வெளியானது. இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மில்லி பாபு பிரவுன் நடித்திருந்தார்.</p><p>இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜேக் போங்கியோவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இந்த தம்பதிகள் ஆகஸ்ட் 2025-இல் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர்.</p><h3><strong>முதல் குழந்தை</strong></h3><p>இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட மில்லி, இந்த கோடையில், தத்தெடுப்பின் மூலம் எங்கள் அன்பு பெண் குழந்தையை வரவேற்பதாக பதிவிடிருந்தார்.</p><p>மேலும் பெற்றோராகும் இந்த அழகான அடுத்த அத்தியாயத்தை அமைதியாகவும் தனிமையாகவும் தொடங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் பதிவிட்டிருந்தார்.</p><h3><strong>குழந்தை தத்தெடுப்பு</strong></h3><p>நடிகை மில்லி குழந்தை தத்தெடுப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தத்தெடுப்பு எப்போதுமே தனது மனதிற்கு நெருக்கமான ஒன்றாக இருந்து வருவதாக கூறியுள்ளார்.</p><p>குழந்தையை பெற்றுக்கொள்வது என்பது என்றாவது ஒருநாள் எதிர்காலத்தில் அமையும் என தான் நம்புவதாகவும் கூறியிருந்தார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc-4seFFR-K/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc-4seFFR-K/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc-4seFFR-K/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Millie Bobby Brown (@milliebobbybrown)</a></p></div></blockquote>
<script async src="//www.instagram.com/embed.js"></script></figure><h3><strong>இரண்டாவது குழந்தை</strong></h3><p>இந்த நிலையில் இத்தாலி நாட்டில் அமைந்துள்ள டோலோமைட்ஸ் மலைத்தொடருக்கு தனது கணவருடன் சுற்றுப்பயணம் சென்றதை, விடியோவாக பதிவு செய்து வலைதளத்தில் மில்லி பகிர்ந்துள்ளார்.</p><p>இதையடுத்து மில்லி பரவுன் தனது கணவருடன் இணைந்து இரண்டாவது குழந்தையை தத்தெடுக்க உள்ளதாக பீபிள் என்ற தனியார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பாஸ் விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-no-violations-regarding-madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-pass-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-no-violations-regarding-madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-pass-issue#comments</comments><guid isPermaLink="false">efe69372-2e40-4620-8ed7-ace969ebdfdc</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:53:44 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:53:44.689Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கும்பாபிஷேகம்,Kumbhabhishekam,Madurai Meenakshi Amman temple,மதுரை மீனாட்சியம்மன் கோவில்,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/hcxaehfc/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/hcxaehfc/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சரியான முறையில் கையாண்டுள்ளோம் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p> <p>சென்னை அண்ணாசாலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல்குமார்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:</p><p>* மக்கள் யாருக்கும் எவ்வித இடையூறும் இன்றி மதுரை <a href="https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-devotees-worship">மீனாட்சியம்மன் கோவில்</a> குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.</p><p>* மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாஸை நான் யாருக்கும் கொடுக்கவில்லை.</p> <p>* பாஸ் என்ன நிறம் என்பதே முந்தைய நாள் தான் எனக்கு தெரிய வந்தது.</p><p>* கும்பாபிஷேகத்திற்கான பாஸ் யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவை அறநிலையத்துறை தான் எடுத்தது.</p><p>* கும்பாபிஷேகத்திற்காக 9,000 பாஸ்கள் ஆன்லைன் மற்றும் கோவில் நிர்வாகம் தான் கொடுத்தது.</p> <p>* மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக டோக்கன் எனது குடும்பத்தினருக்கு கூட நான் கொடுக்கவில்லை.</p><p>* திமுக ஆட்சியில் அவர்களுடைய கட்சி சார்ந்த குடும்பத்தினர் தான் முன்வரிசையில் இருப்பர்.</p><p>* திமுகவை சேர்ந்த சிலர் தான் சில பிரச்சனைகளை கிளப்பினார்கள்.</p> <p>* கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடந்து முடிந்த நிலையில் தேவையின்றி திமுகவினர் அவதூறு பரப்புகின்றனர்.</p><p>* மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பாஸ் விவகாரத்தில் எவ்வித விதிமீறலும் இல்லை.</p><p>* மின்சார தட்டுப்பாடு என்பது அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.</p> <p>* ஆர்.கே.நகர், ஸ்டான்லி நகரில் பிஎஸ்என்எல் வேலையின்போது மின்வாரிய ஒயருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் மின்தடை ஏற்பட்டது.</p><p>* மின் பற்றாக்குறையால் கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 14 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டது.</p><p>* மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சரியான முறையில் கையாண்டுள்ளோம்.</p> <p>* கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட 1 லட்சம் மின் கம்பங்களை சரி செய்ய 5 மாதங்கள் தேவைப்பட்டது.</p><p>* பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.</p><p>* 10 ஆண்டு காலம் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் டிடிவி தினகரன்.</p> <p>* இபிஎஸ்-ஐ வீழ்த்துவது தான் என் வாழ்நாள் லட்சியம் என்று கூறிய தினகரன் தற்போது அவரை முதல்வராக்க துடிக்கிறார்.</p><p>* தலைமை நீதிபதியை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவமதித்த புகார் பற்றி எனக்கு தெரியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>