<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 25 Jul 2026 07:25:57 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-july-2026#comments</comments><guid isPermaLink="false">d2490f83-5c37-441d-8937-34c77d9fb209</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:14:22 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:22:42.962Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8cnfoez2/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8cnfoez2/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/technology/anthropic-claude-opus-5-new-ai-breakthrough">AI-ல் புதிய பாய்ச்சல்: ஆந்திரோபிக் நிறுவனத்தின் 'Claude Opus 5' அதிகாரப்பூர்வமாக வெளியீடு!... </a></p><p>செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சியில் முன்னணி வகிக்கும் 'ஆந்திரோபிக்' நிறுவனம், தனது அடுத்த தலைமுறை முதன்மை AI மாடலான 'Claude Opus 5'-ஐ உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ramadoss-announced-retiring-from-politics-starting-today">இன்று முதல் அரசியல் துறவறம்- ராமதாஸ்</a></p><p>* தலைசுற்றல் இருந்ததால் 20 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன் என்றார்.</p><p>* பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/pm-modi-greets-indian-lifter-jandukumar-for-commonwealth-bronze" rel="nofollow">காமன்வெல்த் போட்டியில் வெண்கலம்- இந்திய வீரர் ஜண்டுகுமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p>* வலிமையை அதிகரிப்பதற்காக மட்டுமே பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டார்.</p><p>*  130.9 புள்ளிகளை பெற்று பதக்க மேடையில் இடம்பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-to-gummidipoondi-train-service-change">இன்றும், நாளையும் சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்</a></p><p>* கும்மிப்பூண்டி- மூர் மார்க்கெட்  இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடைய ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>* கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave">திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி ஆந்திர பக்தர் பலி </a></p><p>* குகை  வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். </p><p>* உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/thirumavalavan-says-we-are-the-reason-for-the-dmk-winning-a-large-number-of-constituencies">தி.மு.க. அதிக தொகுதிகள் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம் - திருமாவளவன் பேச்சு</a></p><p>* மகாத்மா காந்தி பெயரில் இருந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றியது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு. </p><p>* த.வெ.க. ஆட்சியில் விசிகவுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது என்றுதான் இப்போதும் சிலர் இருக்கின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minor-boy-allegedly-forced-into-sex-8-month-pregnant-girl-booked-under-pocso" rel="nofollow">சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு- கர்ப்பமான இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது</a></p><p>* சிறுவனின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.</p><p>* புகாரின் பேரில் இளம்பெண் மீது போலீசார்&nbsp;<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B">போக்சோ</a>&nbsp;வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members">தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? - இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை</a></p><p>* மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><p>* மாணவர்கள் போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amarnath-yatra-resumes-after-6-day-weather-halt-over-6000-pilgrims-leave-jammu">சீரடைந்த வானிலை: 6 நாளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது அமர்நாத் யாத்திரை</a></p><p>* அமர்நாத் யாத்திரை கடந்த 19-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது.</p><p>* 223 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் 18வது குழு பயணித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-metro-curbs-enter-4th-day-18-stations-closed-today-as-security-tightens-over-neet-protests">நீட் தேர்வு போராட்டம் எதிரொலி: டெல்லியில் 4-வது நாளாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்</a></p><p>* கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>* இன்று காலை 7.30 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-questions-when-chief-minister-will-break-silence-on-custodial-deaths" rel="nofollow">தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?- மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>* Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?</p><p>* முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jyothika-backs-students-protest-against-neet-scam" rel="nofollow">பதவி விலகுங்கள் தர்மேந்திர பிரதான் - நடிகை ஜோதிகா இன்ஸ்டா பதிவு</a></p><p>* நான் பொறுப்புணர்வுடன் நிற்கிறேன்!</p><p>* நான் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-wont-be-fooled-by-empty-promises-and-repression-manickam-thakur" rel="nofollow">வெற்று வாக்குறுதிகளாலும், அடக்குமுறைகளாலும் இளைஞர்களை ஏமாற்ற முடியாது!- மாணிக்கம் தாகூர்</a></p><p>* கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி நீக்கம் செய்க!</p><p>* பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-third-spot-for-tamil-thai-anthem-at-manonmaniam-sundaranar">மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?- அன்புமணி கண்டனம்</a></p><p>* தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவது இடத்திற்கு  திட்டமிட்டு தள்ளுவது கண்டிக்கத்தக்கது.</p><p>*   ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடு ஆகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/south-korean-tycoon-ordered-to-pay-6200-crore-divorce-settlement" rel="nofollow">முன்னாள் மனைவிக்கு ரூ.6,200 கோடி இழப்பீடு: தென்கொரிய தொழிலதிபருக்கு சியோல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு!</a></p><p>* நிறுவனத்தின் பங்குகளை விற்காமல், முழு தொகையையும் ரொக்கமாக கொடுக்க உத்தரவு.</p><p>*  பரபரப்பான விவாகரத்து வழக்கில் சியோல் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-tagore-urges-removal-of-dharmendra-pradhan" rel="nofollow">தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்- மாணிக்கம் தாகூர்</a></p><p>* 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.</p><p>* கேள்வித்தாள் கசிவு நடந்ததை மத்திய கல்வி அமைச்சரே ஒப்புக்கொண்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-07-2026">GOLD PRICE TODAY : வார இறுதிநாளில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>* ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/sanam-shetty-indictment-to-fake-is-student-protest-taking-place-at-balan-illam-in-chennai">சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது- சனம் ஷெட்டி குற்றச்சாட்டு</a></p><p>* இந்த மேடையை அரசியலாக மாற்றினால் அதற்கு நான் ஆதரவு தெரிவிக்கமாட்டேன். இவர்கள் ஜனநாயகத்துக்காக போராடவில்லை. </p><p>* டெல்லியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. நான் அங்கு போகவில்லை. இப்போதும் சொல்கிறேன். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/zim-v-ind-match-today">ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்- இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?</a></p><p>* ஜிம்பாப்வேக்கு எதிராக இன்று நடக்கும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் இந்திய அணி களம் காணுகிறது.... </p><p> * தொடரை இழக்காமல் இருக்க ஜிம்பாப்வே முடிந்த வரை கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக அமையும் என நம்பலம்.</p>]]></content:encoded></item><item><title>5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/medical-student-dies-by-suicide-jumping-from-5th-floor</link><comments>https://www.maalaimalar.com/news/national/medical-student-dies-by-suicide-jumping-from-5th-floor#comments</comments><guid isPermaLink="false">6a059e56-88b4-41ab-bc27-035ca3aae105</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:24:53 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:24:53.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,suicide,Telangana,Medical student,தெலுங்கானா,மருத்துவ மாணவி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2ftbkbiy/suicide.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Medical student suicide attempt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2ftbkbiy/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டம், கீசரா, மேற்கு காந்தி நகரை சேர்ந்தவர் தீக்ஷிதா (வயது26). இவர் பெங்களூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதுகலை கண் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.</p><p>நேற்று வீட்டில் இருந்த தீக்ஷிதா திடீரென 5-வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார். படுகாயம் அடைந்த தீக்ஷிதா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.</p><p>போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீக்ஷிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உலக ஜூனியர் ஸ்குவாஷ்: 20 ஆண்டுக்கு பின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அனாஹத் சிங்</title><link>https://www.maalaimalar.com/sports/anahat-singh-first-indian-to-reach-world-junior-final-since-2005</link><comments>https://www.maalaimalar.com/sports/anahat-singh-first-indian-to-reach-world-junior-final-since-2005#comments</comments><guid isPermaLink="false">f02816cb-fa04-4dcd-bd94-6333273571b4</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:24:35 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:24:35.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>anahat singh,அனாஹத் சிங்,World Junior Squash,உலக ஜூனியர் ஸ்குவாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2elrex7d/anahat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anahat singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2elrex7d/anahat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>க​ன​டா​வின் ஆன்​டாரியோ நகரில் உலக ஸ்கு​வாஷ் ஜூனியர் தனி​நபர் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது.</p><p>இதில் பெண்கள் பிரிவு அரையிறுதி சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனாஹத் சிங், எகிப்​தின் பார்ப் சமே உடன் மோதி​னார்.</p><p>இந்த மோதலில் அனாஹத் சிங் 11-3, 8-11, 11-4, 11-6 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிச்சுற்​றுக்கு முன்னேறி​னார்.</p><p>முன்னதாக, இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.</p><p>கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் அனாஹத் சின் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கோவையில் பரபரப்பு சம்பவம்: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய 4 ஊழியர்கள் கைது </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/koniamman-temple-hundiyal-money-theft-4-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/koniamman-temple-hundiyal-money-theft-4-arrest#comments</comments><guid isPermaLink="false">ce17bf03-a292-44f2-a111-51f5d046eb33</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:24:12 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:24:12.148Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,உண்டியல் பணம் திருட்டு,koniamman temple,கோனியம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l8h579zo/koniamman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l8h579zo/koniamman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு ஊழியர்கள் கைதான சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</aside><p>கோவை நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் உள்ளது. கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கிறார்கள். </p><p>ஆடி மாத வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மனை வழிபட கோவிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. </p><h2><strong>உண்டியல் பணம் திருட்டு</strong> </h2><p>இத்தகைய புகழ்பெற்ற இந்த கோவிலில் உண்டியல் திருட்டு சம்பவம் நிகழ்ந்ததும், கோவில் ஊழியர்களே இத்தகை இழிவான செயலில் ஈடுபட்டதும் பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியில் உள்ளது. </p><p>கோனியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மொத்தம் 9 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக ஒரு உண்டியல் உள்ளது. சமீபத்தில் நடந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு 6 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. </p><p>மொத்தம் இருந்த 16 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி கடந்த 15-ந் தேதி கோவில் வளாகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. கோவில் ஊழியர்கள் மட்டுமல்லாமல் பக்தர்கள், தன்னார்வலர்கள் இணைந்து உண்டியல் பணத்தை எண்ணினர். அப்போது ஒரு உண்டியலை திறக்காமலேயே ஊழியர்கள் சிலர் அதில் இருந்த பணத்தை திருடி விட்டதாக பக்தர் ஒருவர் சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். </p><h2><strong>அதிகாரி விசாரணை</strong> </h2><p>அதன்பேரில் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நேற்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ்குமார் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் ஆய்வு செய்து விசாரிக்கப்பட்டது. </p><p>விசாரணையில் உண்டியல் பணம் திருடப்பட்டது உண்மை என தெரியவந்தது. இந்த விவகாரத்தில் கோவில் சீட்டு விற்பனையாளராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், பிரதீப்குமார், பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டு சேர்ந்து செயல்பட்டது தெரியவந்தது. </p><p>உண்டியல் எண்ணும் பணியின்போது ஒரு உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை எடுக்காமல் ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களோடு அதனை சேர்த்து மறைத்து வைத்திருக்கின்றனர். இதை அதிகாரிகள் கவனிக்கவில்லை. பின்னர் அந்த உண்டியலை டிராலியில் எடுத்துச் சென்று கலையரங்கத்துக்கு பின்னால் வைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து பையில் போட்டு எடுத்துச் சென்று இருக்கிறார்கள். </p><h2><strong>4 ஊழியர்கள் கைது</strong> </h2><p>மொத்தம் அதில் ரூ.31 ஆயிரம் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தை ஊழியர் பாலசுப்பிரமணியன் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் 4 பேரும் சேர்ந்து பங்கு வைத்துக் கொண்டுள்ளனர். விசாரணையில் 4 பேரும் பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். </p><p>இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் குமார் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் ஊழியர்கள் பாலசுப்பிரமணியன், சரவணன், பிரதீப்குமார், கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். </p><p>இவர்களில் பாலசுப்பிரமணியம் கேரளாவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கோவை பீளமேடு பகுதியில் தங்கியிருந்து வேலைக்கு வந்து சென்றுள்ளார். சரவணன் பேரூரைச் சேர்ந்தவர், பிரதீப் குமார் ரத்தினபுரியில் வசித்து வருகிறார். கிருஷ்ணராஜ் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் 4 பேரையும் இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். </p><p>பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு ஊழியர்கள் கைதான சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>AI-ல் புதிய பாய்ச்சல்: ஆந்திரோபிக் நிறுவனத்தின் &apos;Claude Opus 5&apos; அதிகாரப்பூர்வமாக வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/technology/anthropic-claude-opus-5-new-ai-breakthrough</link><comments>https://www.maalaimalar.com/technology/anthropic-claude-opus-5-new-ai-breakthrough#comments</comments><guid isPermaLink="false">3125cdd8-b573-4bc8-9523-b14224e89505</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:18:42 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:18:42.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,செயற்கை நுண்ணறிவு,ஆந்திரோபிக்,Anthropic,Claude Opus 5,கிளவுட் ஓபுஸ் 5</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/15a895ai/api.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Claude Opus 5]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/15a895ai/api.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சியில் முன்னணி வகிக்கும் 'ஆந்திரோபிக்' நிறுவனம், தனது அடுத்த தலைமுறை முதன்மை AI மாடலான 'Claude Opus 5'-ஐ உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>முந்தைய Opus 4.8 மாடலின் அதே விலை நிர்ணயத்தில், Fable 5 மாடலுக்கு இணையான அதீத திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடல், கணினி கோடிங், வணிக ஆட்டோமேஷன் மற்றும் நீண்டநேர ஏஜென்டிக் பணிகளில் புதிய சாதனையை படைத்துள்ளது.</p><h2><strong>சர்வதேச API கட்டண விவரங்கள்:</strong></h2><p>ஆந்திரோபிக் நிறுவனம் தனது API பயன்பாட்டுச் செலவை முந்தைய தலைமுறை மாடலை விட உயர்த்தாமல் அப்படியே வைத்துள்ளது. அதிகாரப்பூர்வமாக அமெரிக்க டாலரில் கட்டணம் விதிக்கப்பட்டாலும், உலகம் முழுவதிலும் உள்ள உருவாக்குநர்களின் வசதிக்காகப் பல்வேறு சர்வதேச நாணயங்களில் இதன் தோராயமான மதிப்பு கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளில் 1 மில்லியன் (10 லட்சம்) டோக்கன்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளீடு (Input) மற்றும் வெளியீடு (Output) கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அமெரிக்க டாலரில் 1 மில்லியன் Input Tokens-க்கு $5, Output Tokens-க்கு $25 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>அதேபோல், இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ.435 (Input) மற்றும் ரூ.2,175 (Output) ஆகும். மேலும், யூரோவில்  €4.30 / €21.50, பிரிட்டிஷ் பவுண்டில் £3.70 / £18.50, ஜப்பானிய யெனில் ¥740 / ¥3,700 என தோராயமான கட்டண மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தொகைகள் நாணய மாற்று விகிதங்களுக்கு ஏற்ப மாறக்கூடிய தோராயமான மதிப்புகளாகும்.</p><h2><strong>கூடுதல் சலுகை:</strong></h2><p>Prompt Caching தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வழக்கமான உள்ளீட்டுக் கட்டணத்தில் 60% முதல் 80% வரை கட்டணச் சலுகையைப் பெற முடியும். மேலும், அதிவேகப் பதில்களுக்கு 'Fast Mode' அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>Claude Opus 5-முக்கிய சிறப்பம்சங்கள்:</strong></h2><h3><strong>1 Million Token Context Window:</strong></h3><p>ஒரே நேரத்தில் சுமார் 7,500 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தையோ அல்லது முழுமையான மென்பொருள் குறியீடுகளையோ பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டது.</p><h2><strong>128,000 Output Capacity:</strong></h2><p>மிக நீண்ட அறிக்கைகள், முழுமையான அப்ளிகேஷன் குறியீடுகள் மற்றும் விரிவான ஆவணங்களை ஒரே பதிலில் உருவாக்கும்.</p><h2><strong>சிந்திக்கும் திறன் கட்டுப்பாடு:</strong> </h2><p>டெவலப்பர்கள் AI சிந்திக்கும் ஆழத்தை தங்கள் தேவைக்கேற்ப மாற்றியமைக்கலாம். எளிய பணிகளுக்கு வேகமாகவும், சிக்கலான கணக்குகளுக்கு ஆழமான பகுப்பாய்வுடனும் இயங்கும்.</p><h2><strong>Agentic Coding SOTA:</strong> </h2><p>எண்ட்-டு-எண்ட் மென்பொருள் உருவாக்குவதில், மனிதர்கள் செய்யும் சோதனைகளைத் தானே செய்து பார்த்து தவறுகளைத் திருத்தும் திறனில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.</p><h2><strong>PDF &amp; Visual Analysis:</strong></h2><p>வரைபடங்கள், தரவுத் தாள்கள், சிக்கலான PDF ஆவணங்கள் மற்றும் UI டிசைன்களை மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ளும்.</p><h2><strong>செயல்திறன் ஒப்பீடு:</strong></h2><p>சர்வதேச அளவில் AI மாடல்களை மதிப்பிடும் முக்கியத் தேர்வுகளில் Claude Opus 5 வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.இதில், Frontier-Bench  43.3%  புள்ளிகள் பெற்று சந்தையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது (Fable 5-ன் 33.7%-ஐ விட இது கணிசமாக அதிகம்). ARC-AGI-3  30.2% மதிப்பெண் பெற்று, இதுவரை வெளியான AI மாடல்களிலேயே மிக உயர்ந்த புள்ளியைப் பெற்றுள்ளது.</p><h2><strong>உயிரி தொழில்நுட்பம்:</strong></h2><p>ஆர்கானிக் கெமிஸ்ட்ரி மற்றும் புரோட்டீன் கட்டமைப்பு கணிப்புகளில் முந்தைய Opus 4.8-ஐ விட 10.2% கூடுதல் துல்லியத்தை வழங்குகிறது.</p><h2><strong>யாரெல்லாம், எங்கு அணுகலாம்?</strong> </h2><p>டெவலப்பர்கள் உடனடியாக API விசைகளைப் பயன்படுத்தி உருவாக்கத் தொடங்கலாம். Claude Max சந்தாதாரர்களுக்கு இதுவே முதன்மை இயல்புநிலை மாடலாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 'Claude Pro' மற்றும் 'Team' பயனர்களுக்கும் நேரடியாகக் கிடைக்கிறது. அமேசான் நிறுவனத்தின் 'Amazon Bedrock (AWS)' மற்றும் பிற முன்னணி கிளவுட் தளங்களில் உடனடியாகக் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>இன்று முதல் அரசியல் துறவறம்- ராமதாஸ் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ramadoss-announced-retiring-from-politics-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ramadoss-announced-retiring-from-politics-starting-today#comments</comments><guid isPermaLink="false">3d55457e-d27d-4a87-92c5-8645733dba8e</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:10:14 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:10:14.164Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Ramadoss,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/t6m7ye6i/ramadoss.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராமதாஸ் பேசிய போது எடுத்த படம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமதாஸ் பேசிய போது எடுத்த படம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/t6m7ye6i/ramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.</aside><p>பா.ம.க. நிறுவனர் டாக்டர் <a href="https://www.maalaimalar.com/topic/ராமதாஸ்">ராமதாஸ்</a> இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி தந்தை ராமதாசை சந்தித்து பா.ம.க. தலைவர் அன்புமணி வாழ்த்து பெற்றார். </p><p>இதனை தொடர்ந்து விழுப்புரம் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் மனைவியுடன் ராமதாஸ் பங்கேற்றார். விழா மேடையில்  மனைவி மற்றும் மகனுடன் அமர்ந்து ராமதாஸ் பேசியதாவது:- </p><p>* எனது 88-வது பிறந்தநாளான இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். </p><p>* அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன், பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார். </p><p>* தலைசுற்றல் இருந்ததால் 20 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன் என்றார். </p><p>பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் வெண்கலம்- இந்திய வீரர் ஜண்டுகுமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/sports/pm-modi-greets-indian-lifter-jandukumar-for-commonwealth-bronze</link><comments>https://www.maalaimalar.com/sports/pm-modi-greets-indian-lifter-jandukumar-for-commonwealth-bronze#comments</comments><guid isPermaLink="false">4dfa587e-549b-49a2-95f7-fee069509c7c</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:08:12 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:08:12.637Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,pm modi,Common Wealth,பிரதமர் மோடி,ஜண்டுகுமார்,Jandukumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/tsxk4nmm/PM-Modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/tsxk4nmm/PM-Modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஜண்டுகுமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><h2>வெண்கல பதக்கம்</h2><p>போலியோ, வறுமை மற்றும் பல வருடங்களாக செய்த பல்வகை வேலைகள் நிறைந்த குழந்தை பருவத்தை கடந்து, இந்தியாவின் ஜண்டு குமார், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார். இதன் மூலம் அவர் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார்.</p><p>28 வயதான இவர், 181 கிலோ மற்றும் 190 கிலோ எடைகளை வெற்றிகரமாக தூக்கி, 130.9 புள்ளிகளை பெற்று பதக்க மேடையில் இடம்பிடித்தார். 196 கிலோ எடைப் பிரிவில் தனது இறுதி முயற்சியில் அவர் தோல்வியடைந்தார். </p><h2>வெற்றி மகுடம்</h2><p>ஐந்து வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட குமார், பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்னாட் கிராமத்தில், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தன் பெற்றோருடன் காய்கறிகள் விற்க உதவினார். அந்த சூழலில் இருந்து அவர் அடைந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு அவரது இந்த வெற்றி மகுடம் சூட்டியது.</p><p>குறைந்த நிதி ஆதரவுடன், குமார் ஆரம்பத்தில் 2010 முதல் 2012 வரை, குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் முயற்சி செய்வதற்கு முன்பு, வலிமையை அதிகரிப்பதற்காக மட்டுமே பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டார். இறுதியில், அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதலில் தனது உண்மையான திறமையைக் கண்டறிந்தார்.</p><h2>பிரதமர் மோடி வாழ்த்து</h2><p>ஆண்களுக்கான ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, #CWG2026-ல் இந்தியாவின் பதக்கப் பட்டியலைத் தொடங்கி வைத்துள்ள ஜண்டு குமாரின் செயல்பாடு அபாரமானது! அவருக்கு வாழ்த்துகள்.</p><p>அவரது இந்தச் சாதனை, அளவற்ற வலிமை, தளராத உறுதி மற்றும் பல ஆண்டுகால ஒழுக்கமான முயற்சி ஆகியவற்றின் வலிமையான பிரதிபலிப்பாகும். </p><p>ஒவ்வொரு சவாலையும் வென்று சர்வதேச அரங்கில் சிறந்து விளங்குவதன் மூலம், அவர் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார் மற்றும் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A spectacular performance by Jhandu Kumar, who has opened India’s medal tally at the <a href="https://x.com/hashtag/CWG2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CWG2026</a> by winning a Bronze in the Men’s Heavyweight Para Powerlifting event! Congratulations to him. His achievement is a powerful reflection of immense strength, unwavering determination and… <a href="https://t.co/kMdkU6RRAF">pic.twitter.com/kMdkU6RRAF</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2080873132559323405?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-fishermen-strike-for-demanding-the-release-of-fishermen-arrested-by-srilanka</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-fishermen-strike-for-demanding-the-release-of-fishermen-arrested-by-srilanka#comments</comments><guid isPermaLink="false">90d3f55d-6789-4385-bdf2-2d20d8e6afc2</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:53:33 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:53:33.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram Fishermen strike,Fishermen strike,மீனவர்கள் வேலை நிறுத்தம்,ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/iolzxnve/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ boat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/iolzxnve/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 22-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகும், அதில் இருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கச்சத்தீவு அருகே கைது செய்தது.</p><h2>6-ம் தேதி வரை காவல்</h2><p>இலங்கை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் 9 பேரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வரும் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.</p><p>மீனவர்கள் சிறை பிடிப்பு விவகாரம் ராமேசுவரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இதுதொடர்பாக மீனவர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.</p><p>இந்தக் கூட்டத்தில்  இலங்கை கடற்படை கைதுசெய்த  மீனவர்களை மத்திய அரசும், மாநில அரசும் உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.</p><p>மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது, மீனவர்கள் பிரச்சனை  குறித்து முதலமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து முறையிட ஏற்பாடு செய்ய வேண்டும். </p><p>இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து இனி வரும் காலங்களில் பிரச்சனை இல்லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.</p><p>மீனவர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களின்படி ராமேசுவரத்தில் இன்று ஒருநாள் மீனவர்கள் அடை யாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><h2>மீனவர்கள் வேலைநிறுத்தம்</h2><p>இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையோரம் நங்கூரம் விட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வேலை நிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் மீன் வர்த்தகம் அதிகளவில் நடைபெறும். ஆனால் வேலைநிறுத்தம் காரணமாக ராமேசுவரத்தில் மீன்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-to-gummidipoondi-train-service-change</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-to-gummidipoondi-train-service-change#comments</comments><guid isPermaLink="false">80e8a6e4-824a-456e-95cd-a2c5d9fa42f1</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:46:30 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:46:30.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்சார ரெயில்,train service change,Electric Trains,electric trains cancelled,ரெயில் சேவை மாற்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/i3dvd5af/train.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/i3dvd5af/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.</aside><h2><strong>பராமரிப்பு பணிகள்</strong></h2><p>சென்னை சென்ட்ரல்- கூடூர்  பிரிவில் கும்மிடிப்பூண்டி யார்டில் நேற்று முதல் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள்  இன்றும், நாளையும் நடக்கிறது. </p><p>இதையொட்டி கும்மிடிப் பூண்டி மார்க்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்">மின்சார ரெயில்</a> சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. </p><h2><strong>மின்சார ரெயில் ரத்து</strong></h2><p>இரவு 9.45 மணிக்கு  புறப்படும் மூர் மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே ரத்து  செய்யப்பட்டு உள்ளது. இரவு 11.20 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட்-  கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்  பொன்னேரி- கும்மிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது. </p><p>இரவு 10.35 மணிக்கு புறப்படும். மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே  பகுதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்மிப்பூண்டி- மூர் மார்க்கெட்  இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடைய ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>அதிகாலை 3.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்பட்டு மூர் மார்க்கெட்டுக்கு வரும் மின்சார ரெயில் கும்மிப்பூண்டி- மீஞ்சூர் இடையே இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>அதிகாலை 4.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி ஆந்திர பக்தர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave#comments</comments><guid isPermaLink="false">c5e4ca33-be97-40b6-8fdc-7d4a61556508</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:34:48 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:34:48.222Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,Tiruvannamalai temple,கிரிவலப்பாதை,ஆந்திர பக்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/eowzdqbp/andhra.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இடுக்கு பிள்ளையார் கோவில் குகை போன்ற பகுதி வழியாக பக்தர்கள் வெளியே வரும் காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ இடுக்கு பிள்ளையார் கோவில் குகை போன்ற பகுதி வழியாக பக்தர்கள் வெளியே வரும் காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/eowzdqbp/andhra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.</aside><h2><strong>இடுக்கு பிள்ளையார் கோவில்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/திருவண்ணாமலை-கோவில்">திருவண்ணாமலை</a> கிரிவலப்பாதையில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. </p><p>இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும். </p><p>குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.</p><h2><strong>ஆந்திர பக்தர்</strong></h2><p>இந்த நிலையில் நேற்று இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (வயது 36) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். சுமார் 11 மணியளவில் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு மணிக்குமார் வந்தார். </p><p>குகை  வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். </p><p>பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் மயங்கி கிடந்தவரை போராடி வெளியே கொண்டு வந்தனர். </p> <p>108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்ட மணிக்குமார் குடும்பத்தினர் கதறி அழுதனர். </p><p>இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் போராட்டத்துக்கு பெற்றோர் தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டாம்- நடிகர் ரஞ்சித்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dont-send-children-to-neet-protests-actor-ranjith</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dont-send-children-to-neet-protests-actor-ranjith#comments</comments><guid isPermaLink="false">b2324948-56a7-47d8-94c4-73c189bbbaba</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:33:13 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:33:13.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,student protest,நடிகர் ரஞ்சித்,Actor Ranjith,neet protest,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/bs6kwe7n/Actor-Ranjith.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Ranjith]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/bs6kwe7n/Actor-Ranjith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூரில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ஆன்மிகம் நிறைந்த இந்த பூமியில் கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தகவல் பரப்புவது அதிகரித்துள்ளது.<a href="https://www.maalaimalar.com/search?q=%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81" rel="nofollow"> நீட் தேர்வு</a> வினாத்தாள் கசிந்தது என்பது கண்டிக்கத்தக்கது. இதற்கான கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் போராட்டம் நடத்துவது நியாயமானது.</p><p>ஆனால் இந்த போராட்டங்களில் அரசியல் பேசுவது  போன்றவற்றை பார்க்கும்போது அப்பாவி மாணவர்களை பலிகடாவாக்குவது போல் உள்ளது. போராட்டத்தில் அரசியல் கலக்கக்கூடாது. இதுபோன்ற போராட்டங்களுக்கு தங்கள் பிள்ளைகளை பெற்றோர் அனுப்ப வேண்டாம். முழுக்க, முழுக்க அரசியல் கலந்துவிட்டது.</p><p>​இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து, வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கப்படும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/pm-thanks-people-for-responses-positive-suggestions-received-for-midnight-video" rel="nofollow">பிரதமர் மோடி</a> தெரிவித்துள்ளார். அதற்கு பிறகும் போராட்டம் நடத்துவது அர்த்தமற்றது.</p><p>தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குச் செயல்படத் தேவையான கால அவகாசத்தை வழங்க வேண்டும். </p><p>குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டாமல், அவர்களின் மக்கள் பணிகளை உற்றுநோக்க வேண்டும். சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் பரப்பப்படும் எதிர்மறைச் செய்திகள் மாணவர்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தையும் வன்முறை எண்ணங்களையும் தூண்டுகிறது.</p><p>​இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. அதிக தொகுதிகள் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம்- திருமாவளவன் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/thirumavalavan-says-we-are-the-reason-for-the-dmk-winning-a-large-number-of-constituencies</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/thirumavalavan-says-we-are-the-reason-for-the-dmk-winning-a-large-number-of-constituencies#comments</comments><guid isPermaLink="false">65d8928c-6a3c-4232-a4c3-b4c2c73eb9e9</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:23:24 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:23:24.917Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,thirumavalavan,திருமாவளவன்,Viduthalai chiruthaigal katchi,tvk,விடுதலை சிறுத்தைகள் கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/17a3ci6f/thirumavalavan03.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/17a3ci6f/thirumavalavan03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>த.வெ.க. ஆட்சியில் விசிகவுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது என்றுதான் இப்போதும் சிலர் இருக்கின்றனர்.</aside><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/திருமாவளவன்">திருமாவளவன் </a>பிறந்தநாளையொட்டி உளுந்துார்பேட்டையில் வருகிற ஆகஸ்டு 17-ந் தேதி தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடக்கிறது.</p><p>இதையொட்டி கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்தது. கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:- </p><h2><strong>ஆட்சியில் பங்கு</strong></h2><p>சட்டசபை தேர்தலுக்கு முன்பும் பின்பும் விடுதலை சிறுத்தை கட்சியை இலக்காக வைத்து ஒரு சில அரசியல் இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆட்சிக்கு ஆதரவு கோரியும் ஒரு சில நாள்கள் கழித்துதான் ஆதரவு அளித்தோம்.  மேலும், ஆட்சியிலும் பங்கேற்றோம். இது தொடர்பாக விவாதித்து தான் விடுதலை சிறுத்தை கட்சி முடிவு எடுத்தது. இந்த ஜனநாயக மரபை விடுதலை சிறுத்தை கட்சி  பின்பற்றுகிறது என்ற அணுமுறையைக் கூட ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லை. சரியான முடிவைதான் விடுதலை சிறுத்தை கட்சி எடுத்திருக்கிறது. </p><h2><strong>பஞ்சு மிட்டாய் தலைவர்கள்</strong></h2><p>மேலும் சமகாலத்தில் இயக்கம் கண்டவர்கள் வேறு ஒரு கட்சியில் கரைந்து போய்விட்டார்கள். மருத்துவர் ராமதாஸ் தலித் தலைவர்களை பஞ்சு மிட்டாய் தலைவர்கள் என்று கூறுவார். பஞ்சு மிட்டாய் பார்க்க பெரிய பிம்பமாகத் தெரியும். ஆனால் ஒன்றுமில்லாமல் இருக்கும். அதுபோன்றது அல்ல விடுதலை சிறுத்தை கட்சி.</p><h2><strong>நாங்கள் காரணம்</strong></h2><p>நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. 60 பேருக்கு போட்டியிட வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஆனால்  விடுதலை சிறுத்தை கட்சி  3 பேருக்குதான் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. அதை பெரிதாக்கி இந்த கட்சியை உடைக்க சிலர் முயற்சி செய்தனர். அது பலிக்கவில்லை. மேலும், தி.மு.க. அதிக தொகுதிகள் வெற்றிக்கு விடுதலை சிறுத்தை கட்சி தான் காரணம். இதற்கு ஆதாரம் இருக்கிறது. </p><p>அ.தி.மு.க.வுக்கு 47 இடங்கள்தான் கிடைத்தன. அந்த கட்சிக்கு சுமார் 20 இடங்கள் இழப்பு. நாம் தமிழர் கட்சிக்கு 8 சதத்திலிருந்து 4 சதம்தான் வாக்கு கிடைத்தது. பா.ஜனதா 11.5 சதத்திலிருந்து 2.5 சதமாகக் குறைந்துவிட்டது. எல்லோருக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அதையெல்லாம் யாரும் பேசவில்லை. த.வெ.க. ஆட்சியில் விசிகவுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது என்றுதான் இப்போதும் சிலர் இருக்கின்றனர்.</p><h2><strong>தடை ஏன் கோரவில்லை</strong></h2><p>டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். அவர்களைச் சந்தித்து ஏன் நாடு முழுவதும் நீட் தேர்வுக்குத்தடை கோரவில்லை என்று கேட்டதற்கு, அடுத்த நகர்வு என்று சொன்னார்கள். </p><p>முதலில் இருந்தே இந்தத் தேர்வு முறையே வேண்டாம் என்று கூறிவரும் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி. இந்த நீட் தேர்வு முறை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதனால் காங்கிரஸ் கட்சியினர் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.</p><p>மகாத்மா காந்தி பெயரில் இருந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றியது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு. அது போன்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களின் பெயரை மாற்றியது இந்த பா.ஜனதா அரசு. அப்படியென்றால் நீட் தேர்வை இந்த பா.ஜனதா அரசு ஒழிக்க வேண்டியதுதானே. பாஜக அதைச் செய்யாது, அதில் சுகம் கண்டுவிட்டது. </p><p>இவ்வாறு திருமாவளவன் பேசினார். </p><p>கூட்டத்தில், ரவிக்குமார் எம்.பி. , முன்னாள் எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், புதுவை முதன்மைச் செயலர் அரிமா தமிழன் உட்பட பலர் பேசினர். விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு- கர்ப்பமான இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minor-boy-allegedly-forced-into-sex-8-month-pregnant-girl-booked-under-pocso</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minor-boy-allegedly-forced-into-sex-8-month-pregnant-girl-booked-under-pocso#comments</comments><guid isPermaLink="false">e3236d67-7f9b-4db0-ac7b-6b56a419c118</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:12:19 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:12:19.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் உறவு,போக்சோ வழக்கு,இளம்பெண் கைது</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/v29gtkld/Women.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pregnant women arrest under POCSO]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/v29gtkld/Women.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.</p><p>அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் இளம்பெண்ணிடம் கணவர் குறித்த விவரத்தை கேட்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.</p><p>இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண்ணின் கர்ப்பம் குறித்து பல தகவல்கள் தெரியவந்தது.</p><h2>கட்டாய பாலியல் உறவு</h2><p>அதாவது அந்த இளம்பெண் விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு பட்டய படிப்புக்காக குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுவனும் சேர்ந்துள்ளார். அந்த பாடப்பிரிவில் இவர்கள் 2 பேர் மட்டுமே படித்துள்ளனர்.</p><p>இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். சம்பவத்தன்று இளம்பெண் களியக்காவிளையில் உள்ள சிறுவனின் வீட்டுக்கு பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்றுள்ளார். அப்போது இளம் பெண்ணின் கட்டாயத்தின் பேரில் இருவரும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81" rel="nofollow">பாலியல் உறவு</a> கொண்டுள்ளனர். இதேபோன்ற நிலை பலமுறை தொடர்ந்து நடந்துள்ளது.</p><h2>இளம்பெண் மீது போக்சோ வழக்கு</h2><p>இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பமானார். எனினும் கர்ப்பமானதை அவர் பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போதுதான் அவர் கர்ப்பமானது தெரியவந்தது.</p><p>இதையடுத்து சிறுவனின் வீட்டுக்கு சென்று அவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டதாக சிறுவனின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.</p><p>அந்த புகாரின் பேரில் இளம்பெண் மீது போலீசார் <a href="https://www.maalaimalar.com/news/national/on-bail-telangana-man-kills-wife-children-teen-he-assaulted-and-her-family" rel="nofollow">போக்சோ</a> வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உஷார்! ஊக்கத்தொகை என்ற பெயரில் புதுவகை மோசடி: ஊறுகாய் வியாபாரியின் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-investigation-to-merchant-money-cheating</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-investigation-to-merchant-money-cheating#comments</comments><guid isPermaLink="false">f42c13e7-a762-42cd-aa35-194e72ae7e7e</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:57:41 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:57:41.592Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீசார் விசாரணை,money cheating,பண மோசடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/9jgzj0p0/cyber.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/9jgzj0p0/cyber.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மகன் படிப்புக்கு ஊக்கத்தொகை வந்துள்ளதாக கூறி ஊறுகாய் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் 'அபேஸ்' செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.</aside><h2><strong>படிப்புக்கு ஊக்கத்தொகை</strong></h2><p>சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் முத்து காமாட்சி (வயது 50). இவர், மளிகை கடைகளுக்கு ஊறுகாய் வினியோகம் செய்து வருகிறார். இவரது மகன் மகாலிங்கம். இவர், கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம்ஆண்டு படித்து வருகிறார்.</p><p>இந்தநிலையில், முத்து காமாட்சியின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, உங்கள் மகனின் படிப்புக்காக ரூ.48 ஆயிரத்து 500 ஊக்கத்தொகை வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அந்த பணத்தை பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து அனுப்பிய கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்யுமாறு கூறினார்.</p><h2><strong>பணம் 'அபேஸ்'</strong></h2><p>இதை உண்மை என நம்பிய முத்து காமாட்சி, அந்த கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 250 மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><p>அதன்பிறகுதான் மர்மநபர் தன்னிடம் நூதன முறையில் பேசி வங்கி கணக்கில் உள்ள பணத்தை 'அபேஸ்' செய்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் கொடுத்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊறுகாய் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து, நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? - இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை</title><link>https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members</link><comments>https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members#comments</comments><guid isPermaLink="false">83b7c160-46d8-4fca-a9a8-ee3fbffd2e4f</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:37:36 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:37:36.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/a5x4k31z/pradhan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ dharmendra pradhan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/a5x4k31z/pradhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சி தொடங்கிய நீட் தேர்வுக்கு எதிரான மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பான போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது.</p><p>இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கரப்பான்பூச்சி கட்சியினருடன் இரு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.</p><h2>மந்திரி பதவி விலக கோரிக்கை</h2><p>மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், உயர்கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளுதல் என 3 கோரிக்கைகளை கரப்பான்பூச்சி கட்சியினர் முன்வைத்தனர்.</p><p>நேற்று 2-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இரு தரப்பினருக்கும் பொதுவாக அரசியல் சாசன கிளப்பில் நடைபெற்றது. அரசாங்கம் தரப்பில் சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். கரப்பான் பூச்சி ஜனதா தரப்பில் இருந்து அதன் செய்தி தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.</p><p>இந்தப் பேச்சுவார்த்தையின்போது தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் கோரிக்கை சமரசத்திற்கு அப்பாற்பட்டது என சி.ஜே.பி. தேசிய செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைச்சர்களிடம் தெரிவித்தனர்.</p><h2>அவகாசம் கேட்ட மத்திய அரசு</h2><p>இதுதொடர்பாக ஆலோசிக்க நாளை (இன்று) மதியம் வரை மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. </p><h2>3வது கட்ட பேச்சுவார்த்தை</h2><p>இந்நிலையில், இன்று பிற்பகல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?- மு.க.ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-questions-when-chief-minister-will-break-silence-on-custodial-deaths</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-questions-when-chief-minister-will-break-silence-on-custodial-deaths#comments</comments><guid isPermaLink="false">df6c0002-9f9b-4f1e-82fd-17b9fbce5e7e</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:15:40 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:15:40.243Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Lockup death,முக ஸ்டாலின்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,காவல் மரணங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/yb9ejem8/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Ex CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/yb9ejem8/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல் மரணங்கள் தொடரும் நிலையில் முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>தொடரும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="nofollow">காவல் மரணங்கள்</a>. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?</p><p>எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?</p><p>Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?</p><p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பதவி விலகுங்கள் தர்மேந்திர பிரதான் - நடிகை ஜோதிகா இன்ஸ்டா பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/jyothika-backs-students-protest-against-neet-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/jyothika-backs-students-protest-against-neet-scam#comments</comments><guid isPermaLink="false">0d4995d9-bae9-4720-91a4-f0a090d494f6</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:58:10 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:58:10.377Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜோதிகா,Jyothika,neet protest,CJP Protest,சிஜேபி போராட்டம்,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/i078vcr7/Jyothika.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Jyothika]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/i078vcr7/Jyothika.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் முறைகேட்டை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் நடத்தும் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார்.</p><p>நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள். ராஜினாமா செய்யுங்கள்.</p><p>நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் துணையாக நிற்கிறேன்!</p><p>நான் பொறுப்புணர்வுடன் நிற்கிறேன்!</p><p>நான் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்!</p><p>நான் ஒரு சீர்திருத்தக் கல்விக்காக நிற்கிறேன்!</p><p>சோனம் வாங்சுக், அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம்..</p><p>தடையின்றி வெளிப்படையாக இருக்கும் ஜென் Z தலைமுறையினரே, உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம்..</p><p>நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்ததுதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்..</p><p>அழுத்தத்தை உடைத்ததற்கு நன்றி.. எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சிஜேபி</p><p>ஜெய் ஹிந்த்</p><p>இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஏ.ஐ. அக்கவுண்ட்களுக்கு செக் வைக்கும் ஃபேஸ்புக் - வேற லெவல் அம்சம் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/facebook-introduces-free-facebook-verified-badge-to-fight-ai-impersonators</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/facebook-introduces-free-facebook-verified-badge-to-fight-ai-impersonators#comments</comments><guid isPermaLink="false">a5a32627-d6d6-4043-9ee4-2b1d281ed997</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:52:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:52:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பேஸ்புக்,Facebook,AI,ஏஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/sxospm0p/fb-verified.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Facebook Verified]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/sxospm0p/fb-verified.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் கணக்குகள் அதிகரித்து வருவதால், உண்மையான மனிதர்களுக்கும் ஏ.ஐ. (AI) கணக்குகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை கண்டறிவது கடினமாகி வருகிறது. இதை சமாளிக்க, பேஸ்புக் நிறுவனம் "பேஸ்புக் வெரிஃபைடு" (Facebook Verified) என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. </p><p>செய்திகள், குறுந்தகவல்கள், ப்ரோஃபைல் மற்றும் குறுந்தகவல்களை ஏ.ஐ. மூலம் எளிதாக உருவாக்க முடிவதால், ஒரு ப்ரோஃபைலின் பின்னணியில் உண்மையான நபர் இருப்பதை பயனர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த வசதியை வழங்க விரும்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h2>செல்ஃபி வீடியோ:</h2><p>இது பேஸ்புக்கின் இலவச சரிபார்ப்பு முறையாகும்; இதில் பயனர்களின் 'வீடியோ செல்ஃபி' பெறப்பட்டு, அது ஏற்கனவே உள்ள சுயவிவர புகைப்படங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படுகிறது. இந்த செயல்முறைக்கு சில நிமிடங்களே ஆகும். சரிபார்ப்பு முடிந்ததும், பயனருக்கு ஒரு 'பேட்ஜ்' அல்லது 'டிக் மார்க்' வழங்கப்படும்; இது அவர்களின் சுயவிவர பக்கத்தில் காட்டப்படும்.</p><p>பேஸ்புக் டேட்டிங், மார்க்கெட்பிளேஸ், க்ரூப்ஸ் மற்றும் ப்ரோஃபைல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த குறியீடு பயன்படுத்தப்படும் என்றும் ஃபேஸ்புக் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>சரிபார்ப்பு செயல்முறையில் தேர்ச்சி பெற, ஒரு கணக்கு மெட்டாவின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதையும், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள ஃபேஸ்புக் பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.</p><h2>வெளியீடு:</h2><p>மெட்டாவின் தகவலின்படி, "பேஸ்புக் வெரிஃபைடு" வசதி முதலில் குறிப்பிட்ட சில சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.</p><h2>மெட்டா கருத்து:</h2><p>இது குறித்து மெட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேஸ்புக் வெரிஃபைடு பேட்ஜ் என்பது, ஒரு ப்ரோபைல் உண்மையான நபருக்கு சொந்தமானது என்பதை குறிக்கிறது — அதாவது, அவர் செல்ஃபி சரிபார்ப்பை முடித்து, எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்பவராக இருக்க வேண்டும். </p><p>நீங்கள் ஒரு சந்திப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்போ, அல்லது ஒரு உரையாடலில் சேர்வதற்கு முன்போ, மறுமுனையில் ஒரு உண்மையான நபர் தான் இருக்கிறார் என்பதை உணர்த்தும் ஒரு விரைவான, வெளிப்படையான சமிக்ஞை இது," என தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-wont-be-fooled-by-empty-promises-and-repression-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-wont-be-fooled-by-empty-promises-and-repression-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">41a00058-2991-4d7c-b76f-877c0c86fad2</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:35:42 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:35:42.671Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,pm modi,neet protest,பிரதமர் மோடி,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/1u5kmwx3/manickam-tagore1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/1u5kmwx3/manickam-tagore1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெற்று வாக்குறுதிகளாலும் அடக்குமுறைகளாலும் இந்தியாவின் இளைஞர்களையும் மாணவர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது என்று காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><h2>கண் துடைப்பு நாடகம்</h2><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் "<a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-fast-track-courts-to-ensure-swift-and-stringent-punishment-for-those-involved-in-paper-leaks" rel="nofollow">விரைவு நீதிமன்றங்கள்</a>" அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்! </p><p>அரசு தரவுகளே உண்மையை உடைக்கின்றன:</p><p>880 விரைவு நீதிமன்றங்களில் 13.9 லட்சம் வழக்குகள் தேங்கி நிற்கின்றன!</p><p>One more court … </p><p>FTSC சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் 2025-ல் 2,45,579 ஆக உயர்ந்துள்ளன!</p><p>தேர்வு முறையையே ஒழுங்காக நடத்தத் தெரியாத #NTA முற்றிலும் தோல்வியடைந்த ஒரு அமைப்பு!</p><h2>மாணவர்களின் கோரிக்கை </h2><p>பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் கோரிக்கைகள் மிகவும் தெளிவானவை:</p><p>1. கல்வி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation" rel="nofollow">தர்மேந்திர பிரதான்</a> உடனடியாகப் பதவி நீக்கம் செய்க!</p><p>2. பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>3. அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!</p><p>வெற்று வாக்குறுதிகளாலும் அடக்குமுறைகளாலும் இந்தியாவின் இளைஞர்களையும் மாணவர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வினாத்தாள் கசிவு விவகாரத்தில் &quot;விரைவு நீதிமன்றங்கள்&quot; அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்! <br><br>அரசு தரவுகளே உண்மையை உடைக்கின்றன:<br><br>880 விரைவு நீதிமன்றங்களில் 13.9 லட்சம் வழக்குகள் தேங்கி நிற்கின்றன!<br><br>One more court … <br><br> FTSC சிறப்பு நீதிமன்றங்களில்… <a href="https://t.co/YdNBYce8A7">pic.twitter.com/YdNBYce8A7</a></p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2080846489904165211?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?- அன்புமணி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-third-spot-for-tamil-thai-anthem-at-manonmaniam-sundaranar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-third-spot-for-tamil-thai-anthem-at-manonmaniam-sundaranar#comments</comments><guid isPermaLink="false">858d2b1b-ed36-4159-a2b4-79951e3211ea</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:17:34 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:17:34.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Manonmaniam Sundaranar University,தமிழ்த்தாய் வாழ்த்து,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,Tamilthai vazhthu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/rhoo6wud/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/rhoo6wud/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படும் என்ற அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும்,"தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவரின் பெயரின் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?" என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவரின் பெயரிலான பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடமா முதலில் பாடப்படுவதை உறுதி செய்க!</p><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும்  28-ஆம் தேதி நடைபெறவுள்ள 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலில் "வந்தே மாதரம்" தேசியப் பாடலும், அடுத்து "ஜன கண மன”  தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாகத் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அப்பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். </p><p>மத்திய அரசே வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகும்  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவது இடத்திற்கு  திட்டமிட்டு தள்ளுவது கண்டிக்கத்தக்கது.</p><h2>ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வு</h2><p>நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய  துணைவேந்தர் சந்திரசேகர்,"இது ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், ஆளுநர் மாளிகையிலிருந்து எங்களுக்குத் தெளிவான மற்றும் கண்டிப்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பங்கேற்கும் விழாக்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தான்  நடந்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>குடியரசுத் தலைவர், ஆளுனர் பங்கேற்கும் மாநில அரசு விழாக்களில் முதலில் தேசியப் பாடல்,  இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு பிறப்பித்திருந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.</p><p>கடந்த மே 10-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற தமிழக அரசு பதவியேற்கும் விழாவில் முதலில் தேசியப் பாடல், பின்னர் தேசிய கீதம் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவதாக  தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. இந்த வரிசை முறைக்கு  தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.</p><p>அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9-ஆம் தேதி பிறப்பித்த ஆணையில்,  மாநிலப் பாடல்கள் பாடப்படும் விழாக்களில்  அது தான் முதலில் பாடப்பட வேண்டும்; அதன்பின் தேசியப் பாடல்; மூன்றாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தெளிவாக விளக்கம்  அளிக்கப்பட்டிருக்கிறது.</p><p>ஆனால்,  அதையும் மீறி வந்தே மாதரம் என்ற  தேசியப் பாடலைத் தான்  முதலில் பாட வேண்டும் என்று  ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடு ஆகும்.</p><h2>33-வது பட்டமளிப்பு விழா</h2><p>நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதியவரே  மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை  அவர்கள் தான்.  அவரது  பெயர்  தான் நெல்லை பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.</p><p>அங்கும் கூட, மத்திய அரசின் வழிகாட்டுதல்களையும் புறக்கணித்து விட்டு, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவதும்,   அதை பல்கலைக்கழக துணை வேந்தர்  அப்படியே  ஏற்றுக் கொள்வதும் சரியல்ல.  இதை  தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.</p><p>தமிழ்நாட்டில் நடைபெறும்  ஆளுனர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில்  தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஜூலை   28-ஆம் தேதி நடைபெறவுள்ள  33-வது பட்டமளிப்பு விழாவிலும்  தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப் படுவதை  தமிழ்நாடு அரசும்,  பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-07-2026#comments</comments><guid isPermaLink="false">c5ff5fc0-195c-4706-85a9-6c073ca100d0</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:14:56 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:14:56.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/edwvlnwx/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/edwvlnwx/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.</aside><p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை கடந்த 17-ந்தேதி வரை குறைந்து கொண்டே வந்தது. பின்னர் 18-ந்தேதிக்கு பிறகு உயரத் தொடங்கியது. தினமும் ஏறுமுகத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், நேற்று திடீரென்று தங்கம் விலையில் அதிரடி சரிவு காணப்பட்டதை பார்க்க முடிந்தது.</p><p>அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 500-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2><strong>தங்கம் விலை உயர்வு</strong></h2><p>இந்நிலையில் வார இறுதிநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,300-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>24-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840</p><p>23-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,000</p><p>22-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,440</p><p>21-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>20-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>24-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>23-07-2026- ஒரு கிராம் ரூ.245</p><p>22-07-2026- ஒரு கிராம் ரூ.245</p><p>21-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>20-07-2026- ஒரு கிராம் ரூ.235</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் மனைவிக்கு ரூ.6,200 கோடி இழப்பீடு- தென்கொரிய தொழிலதிபருக்கு சியோல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/world/south-korean-tycoon-ordered-to-pay-6200-crore-divorce-settlement</link><comments>https://www.maalaimalar.com/news/world/south-korean-tycoon-ordered-to-pay-6200-crore-divorce-settlement#comments</comments><guid isPermaLink="false">56a1d6a2-efe7-46a1-895a-856d5e56790e</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:03:29 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:03:29.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Divorce case,SouthKorea,விவாகரத்து வழக்கு,தென்கொரிய அதிபர்,விவாகரத்து இழப்பீடு,Divorce compensation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/byaxx7jc/Divorce.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ South korea president]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/byaxx7jc/Divorce.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் கொரிய நாட்டின் 2-வது மிகப்பெரிய நிறுவனமான 'எஸ்கே குரூப்' அதிபர் சே டே-வோன். இவருக்கும், அந்த நாட்டின் முன்னாள் அதிபரின் மகள் ரோ சோ-இயோங்கிற்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக விவாகரத்து வழக்கு நடந்து வந்தது.</p><p>இந்த பரபரப்பான வழக்கில் சியோல் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தொழிலதிபர் சே டே-வோன் தனது முன்னாள் மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக ரூ.6 ஆயிரத்து 200 கோடியை (944 பில்லியன் வான்) கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p><p>நிறுவனத்தின் பங்குகளை விற்காமல், இந்த முழு தொகையையும் ரொக்கமாகவே கொடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு கூறியுள்ளது.</p><p>சே டே-வோன் மற்றும் ரோ சோ-இயோங்</p><p>தென் கொரிய வரலாற்றிலேயே விவாகரத்து வழக்கில் ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது- சனம் ஷெட்டி குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sanam-shetty-indictment-to-fake-is-student-protest-taking-place-at-balan-illam-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sanam-shetty-indictment-to-fake-is-student-protest-taking-place-at-balan-illam-in-chennai#comments</comments><guid isPermaLink="false">3cc68f6e-8496-41f7-9e09-e13d52a1afa7</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:02:29 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:02:29.509Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,நீட் தேர்வு,students protest,Sanam Shetty,TN protesters,CJP Protest,TN Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/y7qgmrcl/sanamshetty.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நடிகை சனம் ஷெட்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ நடிகை சனம் ஷெட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/y7qgmrcl/sanamshetty.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டா வைத்து நடத்துகிறார்கள் என்றும் நடிகை சனம் ஷெட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.</aside><h2><strong>விஜய்யின் தீவிர ரசிகை</strong></h2><p>இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தில் நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/Sanam-Shetty">சனம் ஷெட்டி</a> பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>இது மாணவர்கள் போராட்டம். மாணவர்களுக்கான போராட்டம். மாணவர்களை ஆதரித்து இங்கு பேச வந்துள்ளேன். இந்த மேடையை அரசியலுக்காக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்தான் ஜோக்கர்ஸ். நான் தளபதியோட (முதலமைச்சர் விஜய்) தீவிரமான ரசிகை. நான் நேற்று ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டு தான் வந்து இருக்கிறேன். (அப்போது மாணவர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர்). </p><p>உடனடியாக அவர் இது ஜனநாயகம் அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சுரிமை உள்ளது. இப்போது புரிகிறதா? நான் எதைப்பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று தெரிகிறதா? என்றார். உடனடியாக மாணவர்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர். (நடிகை சனம் ஷெட்டியிடம் இருந்து மைக் வாங்கப்பட்டது)</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><h2><strong>மாணவர்களுக்கு ஆதரவு</strong></h2><p>பின்னர் நடிகை சனம் ஷெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>மாணவர்களுக்கான போராட்டம் என்று தானே கூப்பிட்டார்கள். ஜனநாயகத்துக்காக போராடுகிறோம் என்கிறார்கள். பேசிக்கிட்டு இருக்கும்போதே வந்து மைக்கை பிடுங்கினார்களே. அதுதான் ஜனநாயகமா? நான் பொதுமக்களில் ஒருத்தியாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இங்கு வந்துள்ளேன்.</p><p>இந்த மேடையை அரசியலாக மாற்றினால் அதற்கு நான் ஆதரவு தெரிவிக்கமாட்டேன். இவர்கள் ஜனநாயகத்துக்காக போராடவில்லை. அவர்கள் அஜெண்டா வைத்து தான் போராடுகிறார்கள். இந்த பொறிக்குள்ள விழுந்து விட வேண்டாம். பேசுவதற்கு சுதந்திரம் கொடுக்காதவர்கள் சுதந்திரத்துக்காக போராடுகிறார்களா?</p><p>போலியான போராட்டம்</p><p>இது ஒரு போலியான போராட்டம். டெல்லியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. நான் அங்கு போகவில்லை. இப்போதும் சொல்கிறேன். 100 சதவீதம் மாணவர்களுக்கு சல்யூட் அடிக்கிறேன். சோனம் வாங்சுக்கு பெரிய மரியாதை அளிக்கிறேன். அவரை காந்திக்கு நிகராக பார்க்கிறேன். மாணவர்களின் காலில் விழுந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறேன். ஆனால், இங்கு நடக்கும் போராட்டம் போலியானது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே வாலிபரை திருமணம் செய்த 3 இளம்பெண்கள்: உத்தரப்பிரதேசத்தில் வினோதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/3-sisters-in-up-marry-the-same-man-wedding-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/news/national/3-sisters-in-up-marry-the-same-man-wedding-goes-viral#comments</comments><guid isPermaLink="false">0b980225-b35b-4970-b72b-215e82626ba2</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:42:20 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:42:20.119Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,marriage,சமூகவலைத்தளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/gw9t3z0n/up.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உத்தரபிரதேசத்தில் வாலிபரை திருமணம் செய்து கொண்ட 3 பெண்கள்.]]></media:title><media:description type="html"><![CDATA[ உத்தரபிரதேசத்தில் வாலிபரை திருமணம் செய்து கொண்ட 3 பெண்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/gw9t3z0n/up.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உத்தரபிரதேசத்தில் 3 இளம்பெண்கள் ஒரே வாலிபரை ஒன்றாக திருமணம் செய்து கொண்ட வினோதம் நடந்துள்ளது. சிறுவயதில் இருந்தே சேர்ந்து வாழ்வதால் பிரிய மனம் இல்லை என்று மணப்பெண்கள் தெரிவித்து உள்ளனர்.</aside><h2><strong>வீடியோ வெளியிடும் பெண்கள்</strong></h2><p>உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில், 2 உடன் பிறந்த சகோதரிகளும், அவர்களது உறவுப்பெண்ணும் ஒரே வாலிபரை மணந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சமூக வலைதளங்களில் உள்ளடக்கங்களை உருவாக்குபராக உள்ளவர் சரோஜ் (வயது 20). இவர் சகோதரி சாவித்ரி ராணி (19) மற்றும் உறவுப்பெண் சந்தோஷ் கடக்வன்ஷி (18) ஆகியோருடன் இணைந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர்களின் வீடியோக்களை கேமராமேன் விகாஸ் சாமுண்டா (20) என்பவர் படம் பிடித்து வந்தார்.</p><h2><strong>ஒரே ஆணை மணந்தனர்</strong></h2><p>இந்த நிலையில் அந்த 3 இளம்பெண்களும், கேமராமேனை ஒன்றாக திருமணம் செய்து கொண்ட வினோதம் நடந்துள்ளது. அங்குள்ள கோவிலில் சமீபத்தில் அவர்கள் திருமணம் நடந்துள்ளது. அதுபற்றிய வீடியோக்கள், புகைப்படங்களையும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் மணமகன் யாக குண்டத்தில் நெருப்பு வளர்ப்பதையும். 3 மணமகள்களும் அவருடன் சேர்ந்து நெருப்புமூட்டி திருமண பந்தத்தில் இணைவது, மணமகனின் காலை மூவரும் ஒன்றாக தொட்டு வணங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.</p><h2><strong>வாழ்ந்தால் சேர்ந்து வாழ்வோம்</strong></h2><p>வினோதமான இந்த திருமணம் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அதுகுறித்து மணப்பெண்களில் ஒருவரான சரோஜ் கூறியதாவது:-</p><p>சிறுவயது முதல் நாங்கள் மூவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். திருமணம் எங்களைப் பிரித்துவிடும் என்று தெரிந்தபோது, பிரிந்து வாழ்வதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பிரிந்து வாழ்ந்தால் தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என்று சிந்தித்து உள்ளோம். ஆனால் இறப்பதைவிட ஒரே நபரைத் திருமணம் செய்து ஒன்றாக வாழலாம் என்று முடிவு செய்தோம். எங்கள் விருப்பத்தை விகாசிடம் தெரிவித்தோம். அவரும் அதற்கு சம்மதித்தார். நாங்கள் அனைவரும் வயது வந்தவர்கள். இந்த முடிவை எங்கள் விருப்பப்படி எடுத்தோம்.</p><p>இவ்வாறு சரோஜ் கூறியுள்ளார்.</p><h2><strong>திருமணம் செல்லுமா?</strong></h2><p>மணமகன் விகாசும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் கூறும்போது, "மூவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசத்தை நான் அறிந்திருந்தேன். அவர்கள் பிரிய விரும்பவில்லை. அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்தே இந்த முடிவை ஏற்றுக்கொண்டேன். எங்கள் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் </p><p>எனினும், இந்த திருமணம் இந்து திருமணச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது குறித்து சட்ட ரீதியான விவாதம் எழுந்துள்ளது. சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. </p>]]></content:encoded></item><item><title>6500mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் புது ஐகூ ஸ்மார்ட்போன் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/iqoo-z11-lite-with-6500mah-battery-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/iqoo-z11-lite-with-6500mah-battery-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">9052097e-0612-44e8-994f-a8c1e32764f9</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:36:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:36:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>iQOO,smartphone,ஸ்மார்ட்போன்,ஐகூ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/o5n0pt35/iQOO-Z11-Lite.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iQOO Z11 Lite]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/o5n0pt35/iQOO-Z11-Lite.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/iqoo">ஐகூ</a> நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய Z11 லைட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> டூயல் சிம் ஸ்லாட், மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியுடன் வருகிறது.</p><h2>அம்சங்கள்:</h2><p>இந்த ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 120 ஹெர்ச்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பிரைட்னஸ், மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிிபி வரை விர்சசுவல் ரேம், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, IP65 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.</p><p>புதிய ஐகூ ஸ்மார்ட்போன் ஏ.ஐ. அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓ.எஸ். கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 ஓ.எஸ். அப்டேட்கள், 4 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என ஐகூ தெரிவித்துள்ளது.</p><p>புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 0.08MP லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4, யு.எஸ்.பி. டைப் சி 2.0 வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய ஐகூ Z11 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் சோலார் ஃபிளேம் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,499 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21,499 என்றும் டாப் எண்ட் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஐகூ இந்தியா வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விற்பனை ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது.</p><p>அறிமுக சலுகையாக புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்.டி.எப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி மற்றும் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்</title><link>https://www.maalaimalar.com/sports/today-india-games-in-commenwealth</link><comments>https://www.maalaimalar.com/sports/today-india-games-in-commenwealth#comments</comments><guid isPermaLink="false">27c0a602-4aa9-47b1-b5f8-869df38ed22f</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:33:10 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:33:10.582Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,காமன்வெல்த்,Commonwealth,Glasgow,கிளாஸ்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/0dadu8yc/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ india]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/0dadu8yc/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் கோலாகலமாகத் தொடங்கியது.  ஆகஸ்ட் 2-ம் தேதி வரை 11 நாட்கள் இந்தப் போட்டி நடைபெறுகிறது. </p><h2>மொத்தம் 74 நாடுகள்</h2><p>இதில் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் .</p><p>தடகளம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், கூடைப்பந்து (3x3), ஜிம்னாஸ்டிக் (ஆர்ஸ்டிக்), சைக்கிளிங், ஜூடோ, நெட்  பால், பவுல்ஸ் வலு தூக்குதல் (பாரா பிரிவினருக்கு மட்டும்) ஆகிய 11  விளையாட்டுகள் 215 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில்  6 விளையாட்டுகள் பாரா பிரிவினருக்கு நடத்தப்படுகிறது.</p><p>இதில் இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இதில் 78 பேர் வீரர்கள், 48 வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். 8 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். 5 பாரா விளையாட்டுகளில் கலந்துகொள்கிறார்கள்.</p><p>பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் தேசிய கொடியை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை  மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆகியோர் ஏந்திச்சென்றனர்.</p><p>73 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க இருந்த ஜூடோ வீரர் அருண்குமார் இந்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் பரிசோதனையில் தோல்வி அடைந்ததால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்.</p><p>ஜூடோ வீராங்கனை துலிகா மான், தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த 12 மாதங்களில் 3 முறை தனது இருப்பிடம் குறித்த தகவலைத் தெரிவிக்கத் தவறியதால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.</p><h2>முதல் பதக்கம்</h2><p>காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் ஜண்டு குமார் முதல் பதக்கத்தை பெற்று தந்தார். ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார்.</p><h2>இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்</h2><p>இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பிரனதி நாயக், நிஷ்கா அகர்வால், இஷிதா ரேவால், புரோதிஸ்தா சமந்தா, ரித்தி ஷர்மா ஆகியோர் சாகசம் காட்டுகிறார்கள்.</p><p>குத்துச்சண்டையில் (60 கிலோ) மாலை 4 மணிக்கு இந்திய வீரர் சச்சின் சிவாச், கனடாவின் கியாமா அல் அக்மடியாவுடன் கோதாவில் குதிக்கிறார்.</p><p>மாலை 4.19 மணிக்கு ஆண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் தக்ஷன் ஷஷிகுமார் நீந்துகிறார்.</p><p>மாலை 4.49 மணிக்கு வீல்சேர் கூடைப் பந்து போட்டியில் இந்திய அணி, வேல்சை (பி பிரிவு) எதிர்கொள்கிறது.</p><p>இரவு 7.30 மணிக்கு லான் பவுல்ஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரர் புதுல் சோனோவால் மலேசியாவின் இஜாத் ஷமீரை சந்திக்கிறார்.</p><p>போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-tagore-urges-removal-of-dharmendra-pradhan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-tagore-urges-removal-of-dharmendra-pradhan#comments</comments><guid isPermaLink="false">c0e11e07-0061-43ed-9aef-71af7293dc5c</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:19:50 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:19:50.815Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,neet protest,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2v3obqeg/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2v3obqeg/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள், நாட்டின் கல்வி, மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.</p><h2>மாணிக்கம் தாகூர்</h2><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்.</p><p>NEET-UG 2026 என்பது வெறும் தேர்வு அல்ல. கோடிக்கணக்கான இந்திய மாணவர்களின் கனவு.</p><p>தேர்வுக் கேள்வித்தாள்கள் கசிந்தன. மே 3 மற்றும் மே 7 நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் மீண்டும் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81" rel="nofollow">கேள்வித்தாள் கசிவு</a> நடந்ததை மத்திய கல்வி அமைச்சரே ஒப்புக்கொண்டார். தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>பிரதமர் மோடி மவுனம் ஏன்?</h2><p>ஆனால் இந்த ஊழலின் மிகப் பெரிய விலை என்ன?</p><p>21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 21 குடும்பங்களின் வாழ்க்கை என்றென்றும் சோகத்தில் மூழ்கியுள்ளது.</p><p>மாணவர்கள் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு இந்த அரசு தோல்வியடைந்துள்ளது. ஒரு தேர்வை ரத்து செய்ததால் மட்டும் பொறுப்பு முடிவடையாது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/national/students-are-not-alone-we-stand-with-them-rahul-gandhi" rel="nofollow">ராகுல் காந்தி</a> தொடர்ந்து வலியுறுத்துவது போல, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த மிகப்பெரிய கல்வி ஊழல் குறித்து பிரதமர் மோடியின் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><h2>பதவி நீக்கம்</h2><p>இந்திய மாணவர்கள் நியாயமான, வெளிப்படையான, நம்பகமான கல்வி அமைப்பிற்கு தகுதியானவர்கள். தோல்வி, ஊழல், அலட்சியம் ஆகியவற்றிற்கு அல்ல.</p><p>தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யுங்கள். இந்தியாவின் கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுங்கள்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் போராட்டம் எதிரொலி: டெல்லியில் 4-வது நாளாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-curbs-enter-4th-day-18-stations-closed-today-as-security-tightens-over-neet-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-curbs-enter-4th-day-18-stations-closed-today-as-security-tightens-over-neet-protests#comments</comments><guid isPermaLink="false">65d2b84b-ee75-4aca-988c-d48ed474f6ab</guid><pubDate>Sat, 25 Jul 2026 02:56:11 +0000</pubDate><atom:updated>2026-07-25T02:56:11.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,போராட்டம்,neet,நீட் தேர்வு,Delhi Metro,டெல்லி மெட்ரோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/28u0kv50/metro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ delhi metro]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/28u0kv50/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்களின் போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் நான்காவது நாளாக இன்றும் 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>4-வது நாளாக</h2><p>தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் போராட்டக்காரர்களின் கல்வீச்சு போன்ற சம்பவங்களால் டெல்லி பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தை கலைப்பதற்கும், கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் கடந்த 2 நாளாக 15க்கு மேற்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.</p><p>இந்நிலையில், மாணவர் போராட்டத்தையடுத்து தொடர்ந்து நான்காவது நாளாக டெல்லியில் இன்று 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று காலை 7.30 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>18 மெட்ரோ நிலையங்கள்</h2><p>இதன்படி லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், படேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரம மார்க், பாரகாம்பா சாலை, சுப்ரீம் கோர்ட், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம், ஐ.டி.ஓ., டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக், சிவாஜி ஸ்டேடியம், ஜாண்டேவலன் மற்றும் நியூ டெல்லி ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.</p><p>அதே சமயம் ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் மெட்ரோ நிலையங்களில் இன்டர்சேஞ்ச் வசதி மட்டும் வழக்கம்போல் தொடர்ந்து கிடைக்கும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>6 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய அமர்நாத் யாத்திரை!</title><link>https://www.maalaimalar.com/news/national/amarnath-yatra-resumes-after-6-day-weather-halt-over-6000-pilgrims-leave-jammu</link><comments>https://www.maalaimalar.com/news/national/amarnath-yatra-resumes-after-6-day-weather-halt-over-6000-pilgrims-leave-jammu#comments</comments><guid isPermaLink="false">58631784-5697-4930-b470-45b0f5d937db</guid><pubDate>Sat, 25 Jul 2026 02:26:44 +0000</pubDate><atom:updated>2026-07-25T02:26:44.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amarnath yatra,அமர்நாத் யாத்திரை,Pilgrims,Ice lingam,பக்தர்கள்,பனிலிங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/9yctg02s/yatra.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ amarnath yatra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/9yctg02s/yatra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை ஆகஸ்டு 28-ம் தேதி நிறைவடையும்.</p><h2>3.77 லட்சம் பேர் தரிசனம்</h2><p>அமர்நாத் குகைக் கோவிலை 3.77 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>யாத்திரை நிறுத்தம்</h2><p>இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை கடந்த 19-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. </p><p>இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி யாத்திரை நிறுத்தப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள வேண்டாம். யாத்திரை எப்போது தொடங்கும் என்பதை வானிலை குறித்த விரிவான மதிப்பீடு, வழித்தடத்தில் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.</p><p>இதேபோல், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டது.</p><h2>சீரடைந்த வானிலை</h2><p>இந்நிலையில், வானிலை சீரடைந்ததை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.</p><p>பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், அமர்நாத் யாத்திரைக்கான 18வது குழு 6,269 பக்தர்களைக் கொண்ட புதிய குழு இன்று அதிகாலை பால்டால் முகாமில் இருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 25 குழந்தைகள், 1470 பெண்கள், 54 சாதுக்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். 223 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் 18வது குழு பயணித்துள்ளது.</p><p>முன்னதாக, அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. நபர் ஒருவர் ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மருத்துவ சான்றிதழ் ஒன்றையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.</p><p>நடப்பு ஆண்டில் 5 நாட்களில் 90 சதவீதம் அளவுக்கு பனிலிங்கம் உருகியது என்றாலும், பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 ஜூலை 2026: சர்வ ஏகாதசி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-panchangam-and-important-events-25-july-2026-sarva-ekadasi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-panchangam-and-important-events-25-july-2026-sarva-ekadasi#comments</comments><guid isPermaLink="false">45d22806-5f87-46cb-a072-00675a7ce7a0</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/16/18711846-perumal.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perumal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/16/18711846-perumal.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-9 (சனிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   ஏகாதசி நண்பகல் 1.55 வரை பிறகு துவாதசி</p><p>நட்சத்திரம் : அனுஷம் காலை 7.29 வரை பிறகு கேட்டை</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு</h2><p>சர்வ ஏகாதசி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் பூம்பல்லக்கில் பவனி. மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி திருமஞ்சனம். கலிய நாயனார் குரு பூஜை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராஜாங்க சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.</p><p>உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம் ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - முயற்சி</p><p>ரிஷபம் - இன்பம்</p><p>மிதுனம் - புகழ்</p><p>கடகம் - செலவு</p><p>சிம்மம் - சுகம்</p><p>கன்னி - வெற்றி</p> <p>துலாம் - உறுதி</p><p>விருச்சிகம் - சிறப்பு</p><p>தனுசு - தனம்</p><p>மகரம் - லாபம்</p><p>கும்பம் - சாந்தம்</p><p>மீனம் - அன்பு</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-status-in-chennai-today</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-status-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">83448dbf-49ec-4136-92da-2db1471a1845</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:25:08 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:25:08.067Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,கச்சா எண்ணெய்,Crude oil,diesel,டீசல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zb9pki7q/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zb9pki7q/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (25.07.2026 - சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan | இன்றைய ராசிபலன் 25.7.2026: இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/today-rasipalan-2572026-in-tamil</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/today-rasipalan-2572026-in-tamil#comments</comments><guid isPermaLink="false">3b6bdd1f-854d-4aaf-9daf-a8a5ac817bd6</guid><pubDate>Sat, 25 Jul 2026 00:48:28 +0000</pubDate><atom:updated>2026-07-25T00:48:28.248Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-25/vb2s2e0p/rasi-6.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-25/vb2s2e0p/rasi-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ஆன்மிகம் (devotional)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>எதிரிகளின் பலம் கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் உண்டு.</p><h2>ரிஷபம்</h2><p>அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் உண்டு.</p><h2>மிதுனம்</h2><p>நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் கவனம் தேவை.</p><h2>கடகம்</h2><p>தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். தைரியத்தோடும். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.</p><h2>சிம்மம்</h2><p>தேவைக்கேற்ப பணம் வந்து சேரும். உறவினர்கள் வழியில் உருவான மனக்கசப்பு அகலும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றி சிந்திப்பீர்கள்.</p><h2>கன்னி</h2><p>அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். தொழில் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி வந்துசேரும்.</p><h2>துலாம்</h2><p>புது முயற்சி வெற்றி பெறும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்துமுடிப்பீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். தொழில் சீராக நடைபெறும்.</p><h2>தனுசு</h2><p>வசதிகள் பெருகும் நாள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமை பொறுப்புகள் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.</p><h2>மகரம்</h2><p>இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கூட்டு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.</p><h2>கும்பம்</h2><p>சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் மீது நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு, 100 பேர் படுகாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/10-killed-around-100-injured-in-russian-strike-in-ukraines-kyiv</link><comments>https://www.maalaimalar.com/news/world/10-killed-around-100-injured-in-russian-strike-in-ukraines-kyiv#comments</comments><guid isPermaLink="false">53ed1cfd-2677-45d8-8c77-c9d06923dd5a</guid><pubDate>Sat, 25 Jul 2026 00:25:28 +0000</pubDate><atom:updated>2026-07-25T00:25:28.191Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,ரஷ்யா,உக்ரைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/3pnein12/kyiv-Attacked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kyiv Attacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/3pnein12/kyiv-Attacked.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், மேலும் சுமார் 100 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் ஒரு பாதுகாப்பு துறை சார்ந்த நிகழ்வு நடைபெற்ற இடத்தில் நிகழ்ந்தது; இந்த நிகழ்வு நடத்தப்பட்டிருக்கவே கூடாது என்று அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/zelenskyy">வோலோடிமிர் ஜெலென்ஸ்கி</a> கூறினார்.</p><p>தலைநகருக்கு வடக்கே அமைந்துள்ள அந்த இடத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக உக்ரைனின் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. அவசர சேவைகள் துறையால் இணையத்தில் வெளியிடப்பட்ட படங்களில், பல வீடுகளுக்கு அருகிலுள்ள அந்த இடத்தில் இடிபாடுகளை மீட்பு குழுவினர் அகற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாது:</h2><p>"நிச்சயமாக, இந்த தாக்குதலுக்கு காரணம் ரஷ்ய ஏவுகணைகள்தான்; இது ரஷ்யாவின் பயங்கரவாதத்தை தவிர வேறில்லை. எனினும், இத்தகைய போர்க்காலச் சூழலில், இது போன்ற ஒரு எதிரியை எதிர்கொள்ளும்போது, ​​மக்கள் பெருமளவில் கூடும் ஆயுதக் கண்காட்சிகளை - குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் - நடத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நாங்கள் ஆயிரம் முறை கூறியிருக்கிறோம்," என்று ஜெலென்ஸ்கி தனது இரவு நேர காணொளி உரையில் கூறினார்.</p><p>ட்ரோன் (ஆளில்லா விமானம்) தயாரிப்பாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு, தலைநகரின் புறநகர் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் நடைபெற்றது.</p><h2>அதிகபட்ச பாதுகாப்பு:</h2><p>இராணுவத்தின் பொதுப் பணியாளர் பிரிவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த நிகழ்வு தங்கள் அதிகார வரம்பிற்கு உட்படாத இடத்தில் நடைபெற்றதாக குறிப்பிட்டார். அதேவேளையில், இது போன்ற நிகழ்வுகளுக்கு "அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள்" தேவை என்றும் அவர் கூறினார்.</p><p>கீவ் பிராந்தியத்தின் பொறுப்பு ஆளுநரான ருஸ்லான் ஒலினிக், அப்பிராந்தியத்தில் இன்று (சனிக்கிழமை) துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.</p><p>உக்ரைனின் பாதுகாப்பு துறை கவுன்சில் வெளியிட்ட தகவலின்படி, உக்ரைனின் பாதுகாப்பு துறைப் பிரதிநிதிகள் கூடியிருந்த இடத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாங்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை என்றும் அக்குழு கூறியது.</p><h2>ஏவுகணை தாக்குதல்:</h2><p>உக்ரைனின் ட்ரோன் நிறுவனமான 'ஃபர்ஸ்ட் காண்டாக்ட்'-இன் நிறுவனர் வலேரி போரோவிக், உக்ரைனிய ஊடகங்களிடம் பேசுகையில், பாதுகாப்புத் துறை கண்காட்சி நடைபெற்று கொண்டிருந்த பயிற்சி மைதானத்தின் மீது ஏவுகணை தாக்கியதாகத் தெரிவித்தார்.</p><p>உக்ரைனின் தலைமை அரசு வழக்கறிஞர் ருஸ்லான் கிராவ்சென்கோ கூறுகையில், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியதில் அதிகாரப்பூர்வ கடமைகளைச் சரியாகச் செய்யத் தவறியிருக்கலாம் என்ற அடிப்படையில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் உள்ள ஸ்லோவியன்ஸ்க் (Sloviansk) நகரில் ரஷ்யாவின் வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர் என்று பிராந்திய ஆளுநர் வாடிம் ஃபிலாஷ்கின் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: போலியோ, வறுமையை  தாண்டி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று அசத்திய ஜண்டு குமார்</title><link>https://www.maalaimalar.com/sports/jhandu-kumar-is-indias-1st-cwg-2026-medallist</link><comments>https://www.maalaimalar.com/sports/jhandu-kumar-is-indias-1st-cwg-2026-medallist#comments</comments><guid isPermaLink="false">3c2aadc9-a935-4f39-8671-0a81d8127a51</guid><pubDate>Fri, 24 Jul 2026 23:39:04 +0000</pubDate><atom:updated>2026-07-24T23:39:04.705Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,Jhandu Kumar,CWG 2026,ஜண்டு குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/v2ei1wku/Jhandu-Kumar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜண்டு குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/v2ei1wku/Jhandu-Kumar.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போலியோ, வறுமை மற்றும் பல வருடங்களாக செய்த பல்வகை வேலைகள் நிறைந்த குழந்தை பருவத்தை கடந்து, இந்தியாவின் ஜண்டு குமார், <a href="https://www.maalaimalar.com/topic/commonwealth-games">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில் ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார். இதன் மூலம் அவர் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார். </p><p>28 வயதான இவர், 181 கிலோ மற்றும் 190 கிலோ எடைகளை வெற்றிகரமாக தூக்கி, 130.9 புள்ளிகளை பெற்று பதக்க மேடையில் இடம்பிடித்தார். 196 கிலோ எடைப் பிரிவில் தனது இறுதி முயற்சியில் அவர் தோல்வியடைந்தார். இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான சுதிர் (114.1), ஆறாவது இடத்தை பிடித்தார். நைஜீரியாவின் இட்ரிஸ் ரிலுவான் 132.8 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், மேத்யூ ஹார்டிங் (131) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.</p><h2>வெற்றி மகுடம்:</h2><p>ஐந்து வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட குமார், பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்னாட் கிராமத்தில், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தன் பெற்றோருடன் காய்கறிகள் விற்க உதவினார். அந்த சூழலில் இருந்து அவர் அடைந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு அவரது இந்த வெற்றி மகுடம் சூட்டியது.</p><p>குறைந்த நிதி ஆதரவுடன், குமார் ஆரம்பத்தில் 2010 முதல் 2012 வரை, குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் முயற்சி செய்வதற்கு முன்பு, வலிமையை அதிகரிப்பதற்காக மட்டுமே பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டார். இறுதியில், அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதலில் தனது உண்மையான திறமையைக் கண்டறிந்தார்.</p><h2>காய்கறி வியாபாரம்:</h2><p>இருப்பினும், மிகப்பெரிய தடை உடற்பயிற்சிக் கூடத்திற்கு வெளியேதான் வந்தது. உயர்மட்டப் போட்டிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வாங்க வசதியில்லாத குமார், சக்கர நாற்காலி சொந்தமாக இல்லாதபோதிலும், உள்ளூர் சந்தைகளுக்குச் செல்ல கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் பயணம் செய்து ஒரு சிறிய காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.</p><p>பின்னர், பிழைப்புக்காக நண்பர்களிடம் கடன் வாங்கி ஒரு மின்சார ஆட்டோவை வாங்கினார், ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று அந்தத் திட்டங்களைச் சீர்குலைத்தது.</p><p>அவரது விடாமுயற்சிக்கு இறுதியில் பலன் கிடைத்தது. அவர் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்க மேடையில் ஏறி, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு திட்டத்தில் இந்தியாவிற்கு ஒரு உத்வேகத்தை அளித்தார்.</p><h2>தவறிய வாய்ப்புகள்:</h2><p>முன்னதாக, ஆடவர் இலகு எடைப் பிரிவில் அசோக் மாலிக் 143.8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்து, பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார்.</p><p>இந்தியாவின் பரம்ஜீத் குமார் 135.6 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பிடித்தார்.</p><p>மகளிர் ஹெவிவெயிட் இறுதிப் போட்டியில், கஸ்தூரி ராஜாமணி தனது மூன்று முயற்சிகளிலும் தோல்வியடைந்தார்.</p><p>மகளிர் லைட்வெயிட் இறுதிப் போட்டியில், ஜஸ்பிரீத் கவுர் மற்றும் சுமன் தேவி பதக்கங்களை வெல்ல தவறினர்.</p>]]></content:encoded></item><item><title>ஒடுக்குமுறைக்கு அஞ்சியே உண்ணாவிரதம் முடித்துக்கொள்ளப்பட்டது: வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/national/no-deal-with-centre-ended-fast-fearing-crackdown-like-ladakh-wangchuk</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-deal-with-centre-ended-fast-fearing-crackdown-like-ladakh-wangchuk#comments</comments><guid isPermaLink="false">8270f9e5-d078-4a4f-9234-5ba6d3453d80</guid><pubDate>Fri, 24 Jul 2026 23:06:31 +0000</pubDate><atom:updated>2026-07-24T23:06:31.067Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,Wangchuk,சிஜேபி போராட்டம்,வாங்சுக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/90fgbr1d/Sonam-Wangchuck.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/90fgbr1d/Sonam-Wangchuck.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போராட்டக்காரர்கள் மீது உடனடி ஒடுக்குமுறை ஏவப்படலாம் என்ற அச்சம் மற்றும் வன்முறையை தவிர்க்கும் நோக்கில், மத்திய அரசிடமிருந்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகளை பெற்ற பிறகு தனது 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்ததாக சமூக ஆர்வலர் <a href="https://www.maalaimalar.com/topic/wangchuk">சோனம் வாங்சுக்</a> தெரிவித்தார். </p><p>அப்போது, ​​செப்டம்பர் 24, 2025 அன்று லடாக்கில் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/shoot-out">துப்பாக்கிச் சூடு</a> சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.  வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோவில், அரசாங்கத்துடன் தான் ஏதேனும் ஒப்பந்தம் செய்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை வாங்சுக் மறுத்தார்.</p><h2>முதன்மை நோக்கம்:</h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வன்முறைக்கோ அல்லது சட்டரீதியான விளைவுகளுக்கோ ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதே தனது முதன்மை நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>பேச்சுவார்த்தையின் போது கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தான் கோரவில்லை என்றும், போராட்டக்காரர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை தடுப்பதே தனது முன்னுரிமையாக இருந்தது என்றும் அவர் விளக்கினார். பிரதான் இறுதியில் பதவி விலகுவார் என்ற நம்பிக்கையையும் வாங்சுக் வெளிப்படுத்தினார்.</p><h2>ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படலாம்:</h2><p>இதுகுறித்து பேசிய வாங்சுக், "நேற்று நள்ளிரவு வாக்கில், அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க ஒப்புக்கொண்டதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் நிலவிய சூழல் காரணமாக நான் அவசரமாக செயல்பட வேண்டியிருந்தது; ஒரு பெரிய ஒடுக்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் இருந்தது.</p><p>செய்திகளைப் பார்த்தபோது, ​​செப்டம்பர் 24, 2025 அன்று லடாக் இளைஞர்கள் மீது காவல் துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப். (CRPF) வீரர்கள் இரக்கமின்றி துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் நினைவுக்கு வந்தது. இங்கும் அதுபோன்ற ஒன்று நடக்கக்கூடுமோ என்று நான் அஞ்சினேன். உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு அமைதிக்கு அழைப்பு விடுத்தால், சூழல் தணியக்கூடும் என்று நான் கருதினேன்.</p><p>நான் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டியிருந்திருந்தால், 26 நாட்கள் பட்டினியாக இருந்திருப்பேனா? டெல்லியின் வெப்பத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்கு பதிலாக, குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தே ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கலாமே?</p><h2>எழுத்துப்பூர்வ உறுதிமொழி:</h2><p>அவர்கள் ஆரம்பத்தில் இழப்பீடு மற்றும் நாடாளுமன்ற விவாதத்திற்கு ஒப்புக்கொண்டனர், ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது என்று உறுதியளிக்க தயாராக இல்லை. அவர்கள் வாய்மொழி உறுதிமொழியை மட்டுமே அளித்தனர். நான் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை வலியுறுத்தினேன்; அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளும் வரை நான் பணியவில்லை.</p><p>மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலேயே என் கவனம் இருந்தது. சட்ட நடவடிக்கைகள் மற்றும் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்படுவது குறித்தே நான் அதிகம் கவலைப்பட்டேன். அமைச்சரின் பதவி விலகலை நான் தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கவில்லை.</p><p>எனக்கு ஆதரவளிக்க வந்திருந்த எனது சகாக்கள், மாணவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான் உண்ணாவிரதத்தை முடிக்கும்போது அங்கு இருக்க முடியாமல் போனதுதான் என் மனதிற்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது," என்று அவர் கூறினார்.</p><h2>காலவரையற்ற உண்ணாவிரதம்:</h2><p>அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யாதது குறித்தும், தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவது குறித்தும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் சாதகமான நிலைப்பாட்டை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து, வியாழக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.</p><p>போட்டி தேர்வுகளில் முறைகேடுகள், கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 'காக்ரோச் ஜனதா கட்சி' தலைமையிலான போராட்டத்தில் இணைந்த பிறகு, ஜூன் 28-ஆம் தேதி முதல் அவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் குறித்து நீதித்துறை விசாரணை: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் குழு கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/retired-civil-servants-seek-judicial-probe-into-use-of-pellet-guns-on-student-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/retired-civil-servants-seek-judicial-probe-into-use-of-pellet-guns-on-student-protesters#comments</comments><guid isPermaLink="false">56b995e6-95d1-4823-9a13-8b9a807a0a2b</guid><pubDate>Fri, 24 Jul 2026 22:27:54 +0000</pubDate><atom:updated>2026-07-24T22:27:54.924Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,சிஜேபி போராட்டம்,ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்,Retired civil servants</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/jjeprs78/cjp-protestors.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டக்காரர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/jjeprs78/cjp-protestors.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ஜூலை 20-ஆம் தேதியன்று <a href="https://www.maalaimalar.com/topic/cjp-protest">மாணவர் போராட்டக்காரர்கள்</a> மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து சுதந்திரமான நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என 93 ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அடங்கிய குழு கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கிகள், மின்சார தடியடிகள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை சட்டவிரோதமாகவும், வரம்பு மீறியும் பலத்தை பயன்படுத்திய <a href="https://www.maalaimalar.com/topic/police">அதிகாரிகள்</a> மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 'அரசியலமைப்பு நடத்தை குழு' அழைப்பு விடுத்துள்ளது.</p><h2>குழுவினர் விவரம்:</h2><p>பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.பி.கே. சிங் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த திங்களன்று நடைபெற்ற 'சன்சத் சலோ' பேரணியின் போதும் அதற்கு பின்னரும் டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடி படையினர் வரம்பு மீறிய பலத்தை பயன்படுத்தியதாகவும், இதனால் பல போராட்டக்காரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அந்த அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>கையெழுத்திட்டவர்களில் டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஏ.எஸ். துலத், பஞ்சாபின் முன்னாள் டி.ஜி.பி. ஜூலியோ ரிபேரோ, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ் மந்தர் மற்றும் பல ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகள் அடங்குவர்.</p><h2>அறுவை சிகிச்சை:</h2><p>கண் மற்றும் கழுத்தில் இருந்து பெல்லட்களை அகற்ற ஒரு இளம் போராட்டக்காரருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்றும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 வயது குழந்தையும் அடங்கும் என்றும் அந்த குழு கூறியது.</p><p>"டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடிப் படை (RAF) வீரர்கள், போராட்டக்காரர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள், மின்சார தடியடிகள் மற்றும் கண்ணீர்ப் புகை குண்டுகளை பயன்படுத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>இதன் விளைவாக, கண் மற்றும் கழுத்தில் இருந்து பெல்லட்களை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்பட்ட ஒரு இளம் போராட்டக்காரர் உட்பட பல இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 வயது குழந்தையும் அடங்கும்," என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.</p><h2>பாலியல் இடையூறு:</h2><p>முன்னாள் அரசு ஊழியர்கள் மேலும் கூறுகையில், பெயர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மற்றும் சாதாரண உடையில் இருந்தவர்கள் உட்பட பல டெல்லி காவல்துறை மற்றும் RAF வீரர்கள், ஆணிகள் பதிக்கப்பட்ட தடிகளால் போராட்டக்காரர்களை "இரக்கமின்றி" தாக்கியதாக குற்றம் சாட்டினர்.</p><p>மேலும், குறைந்தது ஒரு காவலராவது பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியதுடன், அந்த அதிகாரியை அடையாளம் கண்டு அவருக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.</p><p>கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தபோதிலும் போராட்ட இடத்திற்கு அருகில் "கற்கள் நிரம்பிய லாரி" ஒன்று இருந்தது குறித்தும், காவல்துறையினர் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்தும், மேலும் போராட்டக்காரர்கள் வளைத்து பிடிக்கப்பட்டு வழக்கறிஞர்களை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாமலேயே ஒரு காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டனர் என்பது குறித்தும் அந்த கடிதம் கேள்வி எழுப்பியது.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் குற்றச்சாட்டு: சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் பதவிநீக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/icc-chief-prosecutor-removed-from-post-over-sexual-misconduct-allegations</link><comments>https://www.maalaimalar.com/news/world/icc-chief-prosecutor-removed-from-post-over-sexual-misconduct-allegations#comments</comments><guid isPermaLink="false">7eb7fb09-9647-4c02-8408-c273b48d7909</guid><pubDate>Fri, 24 Jul 2026 21:48:03 +0000</pubDate><atom:updated>2026-07-24T21:48:03.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ICC,சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்,தலைமை வழக்கறிஞர்,chief prosecutor</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/q42tilts/Karim-Khan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரீம் கான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/q42tilts/Karim-Khan.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் மீதான பாலியல் முறைகேடு புகார்கள் எழுந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்ததாக இரண்டு தூதர்கள் 'அசோசியேட்டட் பிரஸ்' (AP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.</p><p>பிரிட்டிஷ் வழக்கறிஞரான கரீம் கான், ஒரு பெண் உதவியாளரிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்; இது குறித்த செய்திகளை AP தொடர்ச்சியாக வெளியிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகளை கான் உறுதியாக மறுத்து வந்துள்ளார். </p><p>ICC-யின் 125 உறுப்பு நாடுகளின் பெரும்பான்மையான ஆதரவுடன் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்; ஒரு தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p><h2>தற்காலிக பணிநீக்கம்:</h2><p>நீதிமன்றத்தின் மேற்பார்வை அமைப்பின் நிர்வாக குழு வெளியிட்ட அறிக்கையில் கான் "தீவிரமான முறைகேட்டில்" ஈடுபட்டது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்புக்கு முன்னதாகவே, ஜூன் மாதத்தில் அவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். </p><p>AP பார்த்த ஆவணங்களின்படி, கான் அந்த பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அவர் தனது குற்றச்சாட்டுகளை தொடர்வதை தடுக்க முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகளை கான் மறுக்கிறார்.</p><p>மனிதகுலத்திற்கு எதிரான மிக மோசமான குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதற்காக நிறுவப்பட்ட ICC-யை "கலைக்க" அமெரிக்கா மேற்கொள்ளும் பிரச்சாரம் உள்ளிட்ட பெரும் சவால்களை நீதிமன்றம் எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறை மனித உரிமை ஆர்வலர்கள், ஊழியர்கள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது.</p><h2>விரிவான பிரச்சாரம்:</h2><p>கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவின் இறையாண்மைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விடுத்துள்ள அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான விரிவான பிரச்சாரத்தை" அமெரிக்கா தொடங்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.</p><p>உறுப்பு நாடுகள் இந்த அமைப்பிலிருந்து விலகவும், நீதிமன்றத்துடன் இணைந்து செயல்படும் அமைப்புகள் மீது தடைகளை விதிக்கவும், நீதிமன்ற ஊழியர்கள் அமெரிக்காவிற்குள் பயணம் செய்வதை தடை செய்யவும் அழுத்தம் கொடுக்கப்போவதாக ரூபியோ கூறினார். "அமெரிக்காவின் பாதுகாப்பு குடையின் கீழ் பலன் பெறும்" நாடுகள், அமெரிக்க குடிமக்கள் மீதான நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நிராகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படும்.</p>]]></content:encoded></item><item><title>ராமர் உட்பட அனைத்தையும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வணிகமாக மாற்றுகின்றன: சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/cpim-gen-secy-said-sangh-parivar-bjp-rss-turn-everything-into-business</link><comments>https://www.maalaimalar.com/news/national/cpim-gen-secy-said-sangh-parivar-bjp-rss-turn-everything-into-business#comments</comments><guid isPermaLink="false">6c11c8d4-6108-45f4-a872-be7e5d11f768</guid><pubDate>Fri, 24 Jul 2026 21:10:47 +0000</pubDate><atom:updated>2026-07-24T21:10:47.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,CPI(M),CJP Protest,சிஜேபி போராட்டம்,சிபிஐ எம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0wk6ku0v/ma-baby.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ma baby]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/0wk6ku0v/ma-baby.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவை அனைத்தையும் வணிக அல்லது வர்த்தக நடவடிக்கையாக மாற்றுவதாகவும், இது ஊழலுக்கு வழிவகுப்பதாகவும் <a href="https://www.maalaimalar.com/topic/cpim">சி.பி.ஐ. எம்</a> பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி குற்றம் சாட்டினார்.</p><p>டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்புக்கு ஆதரவாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேபி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> ஆகியவை ராமர் விவகாரத்தை கூட வணிகமயமாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.</p><h2>குற்றச்சாட்டு:</h2><p>இது குறித்து பேசிய சி.பி.ஐ.(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, "அயோத்தியில் ராமர் கோயில் ஏன் கட்டப்பட்டது என்பது நம் அனைவருக்கும் தெரியும். மத ரீதியான பிளவுகளை உருவாக்கியது மட்டுமின்றி, அது ஊழலுக்கும் வழிவகுத்தது என்பதை நாம் சமீபத்தில் கண்டோம். சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவை அனைத்தையும் வணிகமாக மாற்றுகின்றன," என்று கூறினார்.</p><p>கோயிலுக்கு வழங்கப்பட்ட பக்தர்கள் காணிக்கைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>டெல்லியில் மாணவர்கள் மற்றும் சி.ஜே.பி. (CJP) ஆர்வலர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கூட, நுழைவு தேர்வுகளை நடத்துவதில் நிலவும் ஊழலே அடிப்படை காரணம் என்று கூறிய பேபி, அந்த தேர்வுகளும் "வணிகமாக மாற்றப்பட்டுவிட்டன" என்று தெரிவித்தார்.</p><h2>சிஜேபி போராட்டம்:</h2><p>நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த சம்பவம் காரணமாக நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமளிகளால் தினந்தோரும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.</p><p>ஒருபக்கம் ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் மாணவர்கள் மீது காவல் துறை அடக்குமுறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன. மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுக்க பரபரப்பான சழல் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டா வீடியோவுக்கு நல்ல வரவேற்பு: பொது மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-thanks-people-for-responses-positive-suggestions-received-for-midnight-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-thanks-people-for-responses-positive-suggestions-received-for-midnight-video#comments</comments><guid isPermaLink="false">d37af75b-70f7-4467-8f51-c043122118e5</guid><pubDate>Fri, 24 Jul 2026 19:24:18 +0000</pubDate><atom:updated>2026-07-24T19:24:18.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Inside Out 2,Modi,Instagram,Instagram Post,pm modi,Instagram reel,பிரதமர் மோடி,இன்ஸ்டாகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/esuf4zvg/pm-modi-15.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/esuf4zvg/pm-modi-15.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டத்தை கொண்டுவருவதற்கான அரசின் முடிவை அறிவித்து பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> வெளியிட்ட காணொளிக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/paper-leaks">வினாத்தாள் கசிவு</a> விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய புதிய மசோதா ஒன்று, அடுத்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அந்த காணொளி செய்தியில் மோடி குறிப்பிட்டார்.</p><h2>இன்ஸ்டா ரீல்:</h2><p>வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் பிரதமர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் அறிவித்த மசோதாவின் வரைவுக்கு, வெள்ளிக்கிழமையன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.</p><p>"நண்பர்களே, நன்றி. நள்ளிரவில் உங்களுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது காணொளிக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கு அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு தொடர்ந்து கிடைக்கட்டும்; நம்மிடையேயான உறவு மேலும் வலுப்பெறட்டும். நன்றி, நன்றி நண்பர்களே," என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக வெளியிடப்பட்ட புதிய காணொளி செய்தியில் அவர் கூறினார்.</p><h2>புதிய சாதனை:</h2><p>24 மணி நேரத்தில் ஒரு 'ரீல்' காணொளிக்கு அதிகபட்ச பார்வைகளைப் பெற்றதன் மூலம் மோடி புதிய உலக சாதனை படைத்துள்ளார்; இதுவரை இக்காணொளி 303 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய சாதனை 300 மில்லியன் பார்வைகளாக இருந்தது.</p><p>தேர்வு தொடர்பான முறைகேடுகள் புகாரை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) தலைமையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் 'சான்சத் சலோ' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு நாட்களுக்கு பிறகு, மோடி இந்த காணொளியை வெளியிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கருங்கடலில் வர்த்தக கப்பல் மீது தாக்குதல் - இந்தியர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-killed-in-attack-on-commercial-vessel-in-black-sea</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-killed-in-attack-on-commercial-vessel-in-black-sea#comments</comments><guid isPermaLink="false">de040bdd-216e-4b1e-8a19-ce8e7942f476</guid><pubDate>Fri, 24 Jul 2026 18:06:48 +0000</pubDate><atom:updated>2026-07-24T18:06:48.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>black sea,கருங்கடல்,commercial vessel,வர்த்தக கப்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ts1cl02n/mv-omorfi-attatcked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MV OMORFI Attacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/ts1cl02n/mv-omorfi-attatcked.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கருங்கடலில் உள்ள ரஷ்யாவின் கடல் எல்லை பகுதி வழியாக சென்று கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது ஜூலை 18 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக <a href="https://www.maalaimalar.com/topic/mea">வெளியுறவு அமைச்சகம்</a> தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/ukraine">உக்ரைன்</a> கடற்கரைக்கு அப்பால் ஜூலை 19-ஆம் தேதியன்று வணிக கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், அதில் நான்கு இந்தியர்கள் அடங்குவர் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த சில நாட்களிலேயே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>இந்தியர் உயிரிழப்பு:</h2><p>"ஜூலை 18 அன்று, 'எம்வி ஓமோர்ஃபி' (MV OMORFI) என்ற வணிக கப்பல் கருங்கடலில் - ரஷ்யாவின் கடல் எல்லைப் பகுதிக்குள் - சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்ட தகவல் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது, ​​கப்பலில் மூன்று இந்தியர்கள் உட்பட மொத்தம் 10 பணியாளர்கள் இருந்தனர்," என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.</p><p>"கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இத்தாக்குதலில் ஒரு இந்தியர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். கப்பலில் இருந்த மற்ற இரண்டு இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முயற்சித்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.</p><h2>இந்தியா வலியுறுத்தல்:</h2><p>"வணிகக் கப்பல்களைக் குறிவைப்பதையும், அப்பாவி பணியாளர்களின் உயிரை ஆபத்துக்குள்ளாக்குவதையும் இந்தியா உறுதியாக கண்டிக்கிறது. கடல்வழி போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் சுதந்திரம் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்," என்று அது கூறியது.</p><p>"கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் தடையற்ற ஓட்டத்தை உறுதி செய்வதற்கான சர்வதேச கடமைகளை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இந்தியா வலியுறுத்துகிறது," என்றும் வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்தது.</p><p>ஜூலை 19 அன்று 'எம்வி கோல்டன் லியோ' (MV Golden Leo) கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு ரஷ்யாவின் தூதரகப் பொறுப்பாளரைசெவ்வாய்க்கிழமை அன்று வரவழைத்து விளக்கம் கேட்டிருந்தது.</p>]]></content:encoded></item></channel></rss>