<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 31 Jul 2026 06:22:03 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-july-2026#comments</comments><guid isPermaLink="false">d8cd286b-4c31-474c-af85-099af23fd194</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:40:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:11:58.892Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/l7iuwwkz/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/l7iuwwkz/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-close-liquor-shops">தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ? மதுக்கடைகளை மூடுங்கள்! - அன்புமணி </a></p><p>* திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானார்கள்.</p><p>* மதுவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தவெகவின் ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாகவே திகழுமோ என்ற கவலை தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation">மேகதாது அணை விவகாரம் - முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை</a></p><p>* தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. </p><p>* கர்நாடக  விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon" rel="nofollow">முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வௌியாகும்- அமைச்சர் நிர்மல் குமார்</a></p><p>* மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.</p><p>* தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/modi-ai-defamation-fir-filed-naming-meta-india-head-in-telangana-cyber-case">பிரதமர் மோடி குறித்து இழிவான ஏஐ சித்தரிப்புகள்.. மெட்டா இந்திய தலைமை அதிகாரி மீது வழக்குப்பதிவு<br></a><br>*மோடி வெளியிட்ட வீடியோ பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டது</p><p>*தவறாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் அண்மையில் மன்னிப்பு கோரியது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/sports/brazil-plays-first-international-friendly-in-india" rel="nofollow">இந்தியா-பிரேசில் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி</a></p><p>* தரவரிசையில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு அணியுடன் இந்தியா மோத இருப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p>* இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/historic-agreement-to-make-hamas-lay-down-its-arms-trump-announces">ஹமாஸ் அமைப்பை ஆயுதங்களை கைவிடச் செய்யும் ஒப்பந்தத்தை எட்டிய காசா அமைதி வாரியம் - டிரம்ப் அறிவிப்பு</a></p><p>*நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.</p><p>* 'அமைதி வாரியம்' மூலம் இந்த முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-reforms-row-215-academics-condemn-priyankas-remarks-on-iit-m-director-kamakoti">ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடியை 'கோமிய நிபுணர்' என விமர்சித்த பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் கண்டன கடிதம்</a></p><p>*மோடி அமைத்த தேர்வு முறைகேடுகளை ஆராயும் உயர்மட்ட குழுவில் ஒரு 'கோமிய நிபுணர்' கூட சேர்க்கப்பட்டுள்ளார்</p><p>*காய்ச்சலின் போது கோமியம் அருந்தி குணமடைந்ததாக பேசியிருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/manusmriti-promotes-caste-discrimination-rss-dominance-in-the-education-system-kharges-remarks-expunged-in-the-rajya-sabha">சாதிப் பாகுபாடு செய்யும் மனுஸ்மிருதி.. கல்வி முறையில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் - மாநிலங்களவையில் கார்கே பேச்சு நீக்கம்!</a></p><p>*பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களே நியமிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.</p><p>*சி.பி. ராதாகிருஷணன் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/india-cms-report-adr-reveals-wealth-criminal-cases-age-education">நாட்டின் இளைய முதலமைச்சர் யார்?.. யார் மேல் அதிக குற்ற வழக்குகள்? சொத்து மதிப்பு என்ன? - ADR அறிக்கை</a></p><p>*தற்போது ஆளும் 31 முதலமைச்சர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை</p><p>*டி.கே. சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் மிகவும் பணக்கார முதல்வராக உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/exam-paper-leak-law-modi-insta-video-strict-penalties-face-strong-cjp-opposition">நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் தோல் தான் பிரகாசமாக இருக்கிறது - பிரதமர் மோடியின் செல்பி வீடியோ குறித்து தீப்கே</a></p><p>*மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர சமூக ஊடக Influence-ராக மாறலாம்</p><p>*தண்டனைகளை அதிகரிப்பது மட்டும் முறைகேடுகளை தடுக்காது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/thane-building-collapse-four-storey-residential-block-falls-eight-people-dead"> மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த 4 மாடி  குடியிருப்பு கட்டிடம்.. 8 பேர் சடலங்களாக மீட்பு</a></p><p>*பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உட்பட சிலர் உள்ளேயே சிக்கியுள்ளனர்.</p><p>*இந்த கட்டிடம் பாதுகாப்பற்றது என பிவாண்டி நகராட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-31-07-2026">GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-amavasai-restrictions-imposed-devotees-visiting-karaiyar-sorimuthu-ayyanar-temple">ஆடி அமாவாசை - காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு</a></p><p>* ஆகஸ்டு 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது.</p><p>* ஆகஸ்டு 13-ந் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-gold-demand-falls-drops-6-percent">இந்தியாவில் தங்கத்தின் தேவை 6 சதவீதம் சரிவு!</a></p><p>* தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், வாங்கப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு புதிய சாதனையைப் படைத்துள்ளது.&nbsp;</p><p>* தங்க நகைகளுக்கான தேவை 15 சதவீதம் குறைந்து 75.1 டன்னாக பதிவாகியுள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-power-disruptions-ever-since-tvk-government-assumed-office">த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான் -  மு.க.ஸ்டாலின்</a></p><p>* முதலில் மின்வெட்டுப் பிரச்சனை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சனை</p><p>* மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam">எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: தாம்பரம், மாம்பலத்திற்கு மாற்றப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</a></p><p>* மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>* முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க ஏதுவாக இந்த தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் மலையேற்றத்தின்போது பனிச்சரிவு.. பிரபல வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் மாயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-avalanche-nirmal-purja-among-10-climbers-missing-after-broad-peak-snow-slide</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-avalanche-nirmal-purja-among-10-climbers-missing-after-broad-peak-snow-slide#comments</comments><guid isPermaLink="false">5d7ec2ae-7c77-47e0-a8ea-00d1400ec18a</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:20:10 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:20:10.300Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Avalanche,பனிச்சரிவு,மலையேற்றம்,Mountaineering</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/kxrjl8ud/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிர்மல் புர்ஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ நிர்மல் புர்ஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/kxrjl8ud/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.google.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+maalaimalar&amp;oq=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D++maalaimalar&amp;gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQABjvBTIHCAIQABjvBTIHCAMQABjvBTIHCAQQABjvBTIGCAUQRRg8MgYIBhBFGDwyBggHEEUYPNIBCDI5MTlqMGo5qAIGsAIB8QXtOrgWckmHUQ&amp;sourceid=chrome&amp;source=chrome.ob&amp;ie=UTF-8">பாகிஸ்தானின் </a>காரகோரம் மலைத்தொடரில் 8,047 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள  பிராட் பீக் சிகரம் உலகின் 12வது மிக உயரிய  சிகரம் ஆகும். </p><p>இங்கு நேற்று (ஜூலை 30) ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள வம்சாவளி மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.  </p> <h2>பனிச்சரிவு</h2><p>நேற்று நண்பகல் வேளையில் பிராட் பீக் சிகரத்தின் உச்சியை அடையும் நோக்கில், சுமார் 6,600 மீட்டர் உயரத்தில் வீரர்கள் ஏறிக் கொண்டிருந்தபோது இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p>பனிச்சரிவுக்கு பின் மலையேற்றக் குழுவினருடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p>பாகிஸ்தான் மலையேற்ற அமைப்பான பாகிஸ்தான் அல்பைன் கிளப் தகவலின்படி, மாயமான 10 பேர் கொண்ட குழுவில் நிர்மல் புர்ஜா உட்பட நேபாளத்தை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள், பாகிஸ்தானின் ஹன்சாவை சேர்ந்த சுஹைல் சாகி, ஓமன் நாட்டை  சேர்ந்த நதீரா, அமெரிக்காவை சேர்ந்த மல்லோரி கேஸ், சீனாவை சேர்ந்த வாங் மற்றும் மேலும் ஒரு வெளிநாட்டு மலையேற்ற வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p><h2>நம்பிக்கை</h2><p>பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் இர்பான் அர்ஷத் தலைமையில் தேடுதல் பணி நடந்து வருகிறது. </p><p>மோசமான வானிலை காரணமாக மீட்பு ஹெலிகாப்டர்கள் மூலம்  வான்வழியாக தேடுதல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>நிர்மல் புர்ஜாவின் ஜிபிஎஸ் டிராக்கரின் இருப்பிடம் பனிச்சரிவுக்கு பிறகும் மாறியிருப்பதை மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.</p><p>எனவே அவர் பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும், டிராக்கரின் நகர்வு அவர் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறை உணர்த்துவதாகவும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.</p> <h2>யார் இந்த நிர்மல் புர்ஜா?</h2><p>நேபாளத்தில் பிறந்த நிர்மல் புர்ஜா, பிரிட்டிஷ் ராணுவத்தின் கூர்கா படைப்பிரிவிலும், பின்னர் இங்கிலாந்தின் சிறப்புப் படகு சேவையிலும் (SBS) பணியாற்றியவர்.</p><p>2019இல் உலகின் 8,000 மீட்டருக்கு மேற்பட்ட 14 சிகரங்களையும் வெறும் 6 மாதங்களில் ஏறி உலக சாதனை படைத்தார்.</p><p>இவருடைய இந்த சாதனை நெட்பிலிக்ஸின் '14 Peaks: Nothing Is Impossible' என்ற ஆவணப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.</p><p>8,000 மீட்டர் உயரமுள்ள அனைத்து 14 சிகரங்களையும் மூன்று முறை ஏறி முடித்த முதல் மனிதர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைக்கும் முயற்சியில் அவர் இந்த மலையேற்றத்தை மேற்கொண்டிருந்தார்.</p> ]]></content:encoded></item><item><title>மூன்றாம் தலைமுறையை குடிகாரர்களாக்கி, தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ? - அன்புமணி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-close-liquor-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-close-liquor-shops#comments</comments><guid isPermaLink="false">d7271818-1db0-490e-a972-9fffbbb6863f</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:02:51 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:02:51.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மூன்றாம் தலைமுறையை குடிகாரர்களாக்கி, தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ?என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p> <p>தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், தமிழர்களின் மரபணுவிலேயே மது மீதான மோகமும், அடிமைத்தனமும் பதிந்து விடும் என்று பொது சுகாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். இது எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில், மிகச் சரியான தருணத்தில் ஊதப்பட்டிருக்கும் அபாய சங்காகவே இது தோன்றுகிறது.</p> <p>தமிழக அரசின் மருத்துவத் துறையில் பொது சுகாதாரத்துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான மருத்துவர் குழந்தைசாமி அவர்கள் தான் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். ‘‘தமிழகத்தில், 1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அப்போது தொடங்கி, இப்போது வரையிலான 55 ஆண்டுகளில் இரண்டு தலைமுறையினர் மது குடிக்கின்றனர். இதனால், மது குடிப்பவர்களின் குழந்தைகளின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. </p> <p>இப்போதுள்ள மூன்றாவது தலைமுறையும் மதுவை தொடர்ந்து குடித்தால், அது தமிழர்களின் மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழர்களை மது மீது மோகம் கொண்டவர்களாகவும், மதுவுக்கு அடிமையானவர்களாகவும் மாற்றி விடும். அதற்குபின் பிறக்கும் குழந்தைகள் மதுவுக்கு அடிமைகளாகவே பிறக்க வாய்ப்பு உள்ளது’’ என்று மருத்துவர் குழந்தைசாமி அவர்கள் எச்சரித்திருக்கிறார். அவரது எச்சரிக்கை உண்மை தான். இதையே தான் பாட்டாளி மக்கள் கட்சியும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது.</p> <p>மதுவால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மது குடிப்பவர்களை 60 நோய்கள் தான் தாக்குவதாக எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக 200 நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் இழைநார் வளர்ச்சி (Liver Cirrhosis), நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு போன்றவை அவற்றில் முக்கியமானவை ஆகும்.</p> <p>மதுவால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மது குடிப்பவர்களை 60 நோய்கள் தான் தாக்குவதாக எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக 200 நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் இழைநார் வளர்ச்சி (Liver Cirrhosis), நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு போன்றவை அவற்றில் முக்கியமானவை ஆகும்.</p> <p>தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே, 1937-38 ஆம் ஆண்டுகளில் இன்றைய தமிழ்நாட்டின் அங்கமாக இருக்கும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் முழு மதுவிலக்கை இராஜாஜி அவர்கள் ஏற்படுத்தினார். இந்தியா விடுதலையடைந்த காலத்தில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திற்கும் மதுவிலக்கை நீட்டித்தார். அப்போது தொடங்கி 1971ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் ஒரு தலைமுறையே மதுவை மறந்திருந்தது. 1971ஆம் ஆண்டில் இராஜாஜி அவர்களின் எச்சரிக்கையையும் மீறி சாராயக்கடைகளை திறந்து மதுவை வெள்ளமாக ஓட வைத்தது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி தான்.</p> <p>கடந்த திமுக ஆட்சியில் மதுப் புழக்கம் புதிய பரிமாணத்தை அடைந்தது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 5000<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-consider-decision-to-hand-tasmac-shops-back-to-private-sector"> மதுக்கடைகள்</a> இருந்த நிலையில், அவற்றையொட்டிய பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்துக்கடைகளை திறந்து, தெருவுக்கு தெரு மது கிடைப்பதை திமுக அரசு உறுதி செய்தது. 500 மதுக்கடைகளை மூடியதாக அறிவித்த திமுக அரசு, அதற்கு பதிலாக 1200&amp;க்கும் கூடுதலான மனமகிழ் மன்றங்களைத் திறந்தது. அதுமட்டுமின்றி, மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 284 குடிப்பகங்களிலும் மதுவணிகத்தை திமுக அரசு நடத்தியது. இதனால் திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானார்கள்.</p> <p>முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் மூடப்பட்ட போது, இந்த ஆட்சியில் மது கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், ரெஸ்டோ பார்களை திறக்க அனுமதி அளிக்கவும், அரசு மதுக்கடைகளை தனியார்மயமாக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் இந்த நம்பிக்கையை குலைத்துவிட்டன. மதுவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தவெகவின் ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாகவே திகழுமோ என்ற கவலை தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.</p> <p>தமிழர்கள் நோயில்லா வாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் வரலாற்றில் மதுவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தை நிரந்தரமான குடிகார சமுதாயமாக மாற்றி விடக் கூடாது. எனவே, மதுவணிகத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வௌியாகும்- அமைச்சர் நிர்மல் குமார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon#comments</comments><guid isPermaLink="false">2f51a6cb-41be-4811-b6ec-8c7e03591360</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:55:57 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:55:57.765Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேகதாது அணை விவகாரம்,Megadatu dam,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f0oxft0h/minister-nirmal-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f0oxft0h/minister-nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூடுதல் மின் கட்டணம் என 3.70 லட்சம் பேர் புகார் தெரிவித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-</p><p>சமூக வலைத்தளத்தில் வரும் தகவல்களை வைத்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அது தவறான தகவல். வாட்ஸ் அப் மூலம் யாரோ கூறும் தகவல்களை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் 11.50 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்தது தற்போது 9 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்துள்ளது. இதுகுறித்த ரொட்டீன் செக் அப் செய்கிறோம்.</p><p>மின் கட்டணம் உயர்வு என வதந்தி பரவுகிறது. வெயில் காலத்தில் அதிகளவு ஏசி பயன்படுத்துவதால் கட்டணம் உயர்கிறது. </p><p>கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு குறைவான நபர்களுக்கு தான் மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளது. மின் பயன்பாடு அதிகரிக்கும்போது மின் கட்டணம் அதிகரித்து வரத்தான் செய்யும்.</p><p>மேகதாது பிரச்சனை இரு மாநிலம் விவகாரம் என்பதால் முதலமைச்சர் அனைத்து தரப்பு ஆலோசனைகளையும் கேட்கிறார். மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.</p><p>தேவையின்றி மக்களை குழப்பும் வகையில் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.</p><p>ஆணையத்தில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்த பின்னரும் கர்நாடகா நீர் திறக் மறுக்கிறது. </p><p>மேகதாது விவகாரத்தில் சட்டநடவடிக்கை தொடர்பாக ஒரு சில நாட்களில் அறிவிப்பு வரும். முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா, இல்லையா என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.</p><p>தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி குறித்து இழிவான ஏஐ சித்தரிப்புகள்.. மெட்டா இந்திய தலைமை அதிகாரி மீது வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-ai-defamation-fir-filed-naming-meta-india-head-in-telangana-cyber-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-ai-defamation-fir-filed-naming-meta-india-head-in-telangana-cyber-case#comments</comments><guid isPermaLink="false">8ed2972a-e536-4ea4-9e40-513e03ff193f</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:33:23 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:33:23.919Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Meta,மெட்டா,AI Video,ஏஐ வீடியோ,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/4ktrtfjo/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அருண் ஸ்ரீனிவாஸ், பிரதமர் மோடி  ]]></media:title><media:description type="html"><![CDATA[ அருண் ஸ்ரீனிவாஸ், பிரதமர் மோடி  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/4ktrtfjo/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> முன்னெடுத்த போராட்டங்களின் போது, பிரதமர் மோடியின் உருவத்தை ஆபாசமாகவும் இழிவாகவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. </p><p>இதுபற்றி தெலுங்கானா மாநில பாஜக நிர்வாகி சாய்கிரண்  புகாரின் அடிப்படையில் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் எப்ஐஆர் பதிந்துள்ளனர். அதில் மெட்டா மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி இணை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p> <h2>எப்ஐஆர்</h2><p>சாய்கிரண் அளித்த புகாரில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை ஏஐ மூலம் இழிவாக சித்தரிக்கும் வகையில் இருந்த 20 பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளின் (ரீல்ஸ்களின்) இணைப்பை பகிர்ந்துள்ளார்.</p><p>பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், அந்த சமூக வலைதள கணக்குகளை வைத்திருந்தவர்கள் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.</p> <h2>அருண் ஸ்ரீனிவாஸ்</h2><p>குறிப்பாக இத்தகைய உள்ளடக்கங்களை அனுமதிக்க உதவியதாக கூறி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உடைய தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி அருண் ஸ்ரீனிவாஸ் இணை குற்றவாளியாக அந்த எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>புகாரில் குறிப்பிடப்பட்ட பதிவுகள் குறித்து மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த போலி வீடியோக்கள் மற்றும் படங்களைப் பதிவேற்றிய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p> <h2>மோடி</h2><p>தேர்வு முறைகேடு தொடர்பாகப் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேஸ்புக்கிலிருந்து தவறாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் அண்மையில் மன்னிப்பு கோரியது.</p><p>இந்த விவகாரங்களைத் தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன், மெட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம் - முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation#comments</comments><guid isPermaLink="false">85bd1c2f-6361-48a4-a8cc-f2807d168fd7</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:30:33 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:30:33.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-25/4l6xsfoh/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Mekedatu Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-25/4l6xsfoh/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.</strong></em></p><p>காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது.</p> <h2>மேகதாது விவகாரம்</h2><p>கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், அது தமிழக விவசாயத்தை பாதிக்கும் என்பதால் தமிழகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><h2>நாடாளுமன்றம்</h2><p>இந்தநிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை குறித்து எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.</p> <h2>மத்திய மந்திரி பதிலால் சர்ச்சை</h2><p>இதற்கு மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வமான பதி லில், காவிரி நீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி வழங் கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக மாநிலம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.</p><p>மத்திய மந்திரியின் இந்த பதில் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பதிலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.</p> <h2>பிரதமருக்கு முதல்வர் கடிதம்</h2><p>இது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/national/exam-paper-leak-law-modi-insta-video-strict-penalties-face-strong-cjp-opposition">பிரதமர் மோடி</a>க்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி இருந்தார். அதில், </p><p>காவிரி நதி வெறும் நீருக்கான ஆதாரமாக மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தையும், நீதித்துறை முடிவுகளையும் நிலைநாட்ட பிரதமர் இதில் தலையிட வேண்டும்.</p> <p>மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் விவகாரங்களில் சட்டப்பூர்வமான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவது, கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நம்பிக்கையைத் தக்கவைக்க உதவும். நீதி மற்றும் சட்டத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் எதிர்பார்ப்பாகும் என்ற தெரிவித்து இருந்தார்.</p> <p>இதற்கிடையே, தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடக  விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>கர்நாடக-தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்வதில் நிலவி வரும் நீண்டகாலப் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கருதுகிறார். இதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரைச் சந்தித்து பேச முடிவு செய்து அவர் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், வருகிற 3-ந்தேதி அவர் பெங்களூரு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.</p> <h2>ஆலோசனை</h2><p>இந்நிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> பிரச்சனை குறித்து முதலமைச்சர் விஜய், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமை செயலாளர் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இந்தியா-பிரேசில் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி</title><link>https://www.maalaimalar.com/sports/brazil-plays-first-international-friendly-in-india</link><comments>https://www.maalaimalar.com/sports/brazil-plays-first-international-friendly-in-india#comments</comments><guid isPermaLink="false">f9aa75f2-a91d-43e5-bae4-c472041727c1</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:14:25 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:14:25.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Brazil,பிரேசில்,சர்வதேச கால்பந்து போட்டி,international football match</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ji5ha32v/brazil.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India vs Brazil]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ji5ha32v/brazil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள பிரேசில் கால்பந்து அணி முதல்முறையாக இந்தியா வந்து சர்வதேச நட்புறவு போட்டியில் விளையாடுகிறது.</p><p>இந்தியா-பிரேசில் அணிகள் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க நட்புறவு கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் வருகிற அக்டோபர் 3-ந் தேதி நடக்கிறது. இதனை இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது.</p><p>உலக தரவரிசையில் இந்தியா 138-வது இடத்திலும், பிரேசில் 5-வது இடத்திலும் உள்ளது. தரவரிசையில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு அணியுடன் இந்தியா மோத இருப்பது இதுவே முதல் முறையாகும். </p><p>பிரேசில் அணியில் கேப்டன் மார்கினோஸ், கேஸ்மிரோ, மேத்யூஸ் குன்ஹா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>நகைக்கடையில் தங்க, வைர நகைகளை திருடிசென்று பதுக்கிய கில்லாடி எலி - சிசிடிவியில் குட்டு அம்பலம்</title><link>https://www.maalaimalar.com/news/national/rats-stole-gold-rings-chains-in-bizarre-karnataka-heist</link><comments>https://www.maalaimalar.com/news/national/rats-stole-gold-rings-chains-in-bizarre-karnataka-heist#comments</comments><guid isPermaLink="false">9723d03f-e9ba-4e64-a01b-68e7ec0d06f4</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:08:24 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:08:24.878Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>rat,Jewelry Shop,எலி,நகைக்கடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/j2tw89hc/rat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/j2tw89hc/rat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>துமகூரு நகைக்கடையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை ஒரு எலி திருடி சென்று பதுக்கியது. இந்த குட்டு கண்காணிப்பு கேமராவால் அம்பலமானது.</aside><h2><strong>துமகூரு நகைக்கடை</strong></h2><p>பொதுவாக வீடுகள், நகைக்கடைகளை உடைத்து தங்க நகைகள், பணத்தை மர்மநபர்கள் திருடி செல்வது வழக்கம். ஆனால் நகைக்கடை ஒன்றில் தங்கம், வைர நகைகளை எலி திருடி சென்ற ருசிகர சம்பவம் கர்நாடக மாநிலம் துமகூருவில் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-</p><p>துமகூரு (மாவட்டம்) டவுன் கால் டெக்ஸ் சர்க்கிளில் விஸ்வாஷ் ஜூவல்லரி என்ற பெயரில் ஒரு நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரத்துக்காக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வந்தனர்.</p><h2><strong>ரூ.10 லட்சம் நகைகள் திருட்டு</strong></h2><p>எப்போதும் கடையை திறந்ததும் நகைகள் அனைத்தும் சரியாக உள்ளதா? என உரிமையாளர், ஊழியர்கள் சரி பார்ப்பது வழக்கம். அதுபோல், சரி பார்த்த போது கடையில் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் விதமாக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த 10 வைர மோதிரங்கள், 2 தங்க சங்கிலிகள் காணாமல் போய் இருப்பதை கண்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.</p><p>நகைக்கடையின் இரும்பு கதவும் உடைக்கப்படாமல் இருந்தது. அதே வேளையில் நகைக்கடை சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து மர்மநபர்கள் நகைகளை திருடி சென்றதற்கான எந்த அடையாளமும் இல்லை. அப்படி இருந்தும் ரூ.10 லட்சம் மதிப்பிலான 10 வைர மோதிரங்கள். 2 தங்க சங்கிலிகள் மர்மமான முறையில் திருட்டுப் போனதால் உரிமையாளர் செய்வது அறியாமல் திகைத்தார். இதையடுத்து, துமகூரு டவுன் போலீசில் புகார் அளிக்கவும் உரிமையாளர் தயாரானார்.</p><h2><strong>எலியின் கைவரிசை</strong></h2><p>அதே நேரத்தில் கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் யாரும் கைவரிசை காட்டினார்களா? என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கும் முன்பாக நகைகள் எப்படி திருட்டுப்போனது என்பதை பார்க்க, கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை உரிமையாளர் ஆய்வு செய்தார். அப்போது உரிமையாளருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.</p><p>அதாவது கடையில் இருந்த நகைகளை எந்தவொரு திருடர்களோ அல்லது ஊழியர்களோ திருடி செல்லவில்லை. ஒரு கில்லாடி எலி தான் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. நகைக்கடைக்குள் ஒரு எலி இரவில் சுற்றி திரிந்தது. அந்த எலி தான், வியாபாரத்துக்காக வைக்கப்பட்டு இருந்த மோதிரங்கள், தங்க சங்கிலியை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி எடுத்து செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்தது.</p><h2><strong>நகைகள் மீட்பு</strong></h2><p>இதையடுத்து, அந்த நகைகளை எலி எங்கே கொண்டு சென்று வைத்தது? எலி எங்கு தங்கி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஆசாரியை அழைத்து வந்து நகைக்கடையில் மரப்பலகையால் அமைக்கப்பட்ட அலமாரிகள் திறந்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. அப்போது ஒரு மரப்பலகை பின்னால் இருந்த வலையில் (துளையில்) காணாமல் போன தங்க நகைகள் இருப்பதை கண்டு உரிமையாளர் நிம்மதி அடைந்தார்.</p><p>நகைக்கு மேல் ஒட்டி இருந்த விலை பட்டியலை மட்டுமே எலி தின்று இருந்தது. மோதிரங்கள், தங்க சங்கிலியை விழுங்காமல் பத்திரமாக எலி பதுக்கி வைத்திருந்தது. எலி திருடி சென்ற நகைகளை சுமார் 13 மணிநேரம் போராடி உரிமையாளர் மீட்டு இருந்தார். நகைகளை எலி திருடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><h2><strong>எலி சிக்கவில்லை</strong></h2><p>ரூ.10 லட்சம் நகைகள் கிடைத்தாலும், இதற்கு காரணமான அந்த கில்லாடி எலி மட்டும் எங்களிடம் இன்னும் சிக்கவில்லை. அதனை தேடிவருகிறோம். இனி எச்சரிக்கையாக இருப்போம் என்று கடை உரிமையாளர் தெரிவித்தார்.</p><p>தமிழில் நடிகர் முரளி நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் படத்தில் எலி நடிகர் வடிவேலுவின் பாஸ்போர்ட்டை கடித்து தின்றுவிடும். இதனால் அந்த எலியை பிடிக்க அவர் நூதன முறைகளை கடைப்பிடித்தும் அந்த எலி சிக்காமல் தப்பிவிடும். அதே பாணியில் நகைக்கடையில் திருட்டுப்போன நகை சிக்கிவிட்டது. இன்னும் அந்த கில்லாடி எலி சிக்காமல் இருப்பது ருசிகர விவாதமாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த 4 மாடி குடியிருப்பு கட்டிடம்..  8 பேர் சடலங்களாக  மீட்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/thane-building-collapse-four-storey-residential-block-falls-eight-people-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/thane-building-collapse-four-storey-residential-block-falls-eight-people-dead#comments</comments><guid isPermaLink="false">7621a630-ceb6-47c5-9030-f647af507091</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:52:07 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:52:07.008Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,உயிரிழப்பு,கட்டிட விபத்து,Building Collapse,Fatalities</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/cn2u3ln2/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்]]></media:title><media:description type="html"><![CDATA[ இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/cn2u3ln2/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலம் தானேவில்  4 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடித்த <a href="https://www.maalaimalar.com/topic/accident">விபத்தில் </a>8 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>தானேவில் உள்ள பிவாண்டி பாலாஜி நகரின் கங்காராம் வாடா பகுதியில் உள்ள கோஹினூர் பில்டிங் என்ற அந்த  குடியிருப்பு கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று இரவு 11:00 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.</p> <h2>விபத்து</h2><p>ஒவ்வொரு தளத்திற்கும் 12 அறைகள் வீதம் 48 அறைகளை கொண்ட இந்த கட்டிடம் பாதுகாப்பற்றது என பிவாண்டி நகராட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது. இருந்தபோதும் அங்கு மக்கள் வாசித்துள்ளனர். மேலும் கீழ் தளத்தில் பழுது பார்க்கும் பணிகளும் நடந்து வந்துள்ளன.</p><p>நேற்று இரவு 9 மணி அளவிலேயே கட்டிடத்தில் பலத்த சத்தங்கள் கேட்டுள்ளன. இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கட்டிடத்தில் இருந்த குடும்பங்கள் வெளியேறின. இருப்பினும் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உட்பட சிலர் உள்ளேயே சிக்கியுள்ளனர்.</p><p>இரவு 11 - 11.30 மணியளவில் கட்டிடத்தின் பி-விங் பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்க இரவு முழுவதும் போராடினர்.</p><p>ஆனால் துரதிஷ்டவசமாக இதுவரை 8 பேர் சடலங்களாக மட்டுமே மீட்டப்பட்டுள்ளனர்.</p> <h2>தகவல்</h2><p>இதுகுறித்து பிவாண்டி தீயணைப்பு அதிகாரி நிதின் சவான் கூறுகையில், "உள்ளூர்வாசிகளின் தகவல்படி, கட்டடத்தில் வசித்த 6 பேர் மற்றும் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் காணாமல் போயிருந்தனர்.</p><p>இதுவரை இடிபாடுகளிலிருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டு ஐ.ஜி.எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த தொழிலாளர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.</p><p>சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள், ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களுடன் மீட்புப் படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  </p>]]></content:encoded></item><item><title>பணமின்றி பொருட்களை வாங்கும் வசதி - ப்ளிப்கார்ட் பே லேட்டர் இந்தியாவில் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/flipkart-pay-later-launched-in-india-with-flexible-repayment-options</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/flipkart-pay-later-launched-in-india-with-flexible-repayment-options#comments</comments><guid isPermaLink="false">400c59f3-0849-4a2e-a467-411b7327bee9</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:34:00 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Flipkart,ப்ளிப்கார்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/oy5mr79g/flipkart-pay-later.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Flipkart Pay Later Banner]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/oy5mr79g/flipkart-pay-later.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னணி ஆன்லைன் வர்த்தக வலைதளமான <a href="https://www.maalaimalar.com/topic/flipkart">ப்ளிப்கார்ட்</a>, இந்தியாவில் 'ப்ளிப்கார்ட் பே லேட்டர்' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையானது, வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான கடன் வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த அம்சத்தை கொண்டு வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய பொருட்களை, பணம் செலுத்தும் இடத்திலேயே நேரடியாகத் தேர்ந்தெடுத்து, வசதியான திருப்பி செலுத்தும் விருப்பங்களை தேர்வு செய்யலாம். 'ப்ளிப்கார்ட் பே லேட்டர்' சேவையானது பல்வேறு தளங்களில் கிடைக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்நிறுவனம், பேயு ஃபைனான்ஸ் (PayU Finance) உடன் இணைந்து இந்தக் கடன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் மூன்று திருப்பிச் செலுத்தும் விருப்பங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.</p><h2>மூன்று விருப்பங்கள்:</h2><p>நேற்று (வியாழக்கிழமை) ஒரு வலைப்பதிவின் மூலம், ப்ளிப்கார்ட் குழுமம் 'ப்ளிப்கார்ட் பே லேட்டர்' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை ப்ளிப்கார்ட், மிந்த்ரா மற்றும் ப்ளிப்கார்ட் மினிட்ஸ் ஆகியவற்றில் கிடைக்கும். இது மூன்று திருப்பி செலுத்தும் விருப்பங்களை வழங்குகிறது.</p><p>முதலாவது 'பே லேட்டர்' சேவையாகும், இது அன்றாடம் வாங்கிய பொருட்களை திருப்பி செலுத்த 30 நாட்கள் வரை அவகாசம் வழங்குகிறது. 'பே இன் 3' விருப்பம், கட்டணத்தை மூன்று தவணைகளாக பிரிக்கிறது. மூன்றாவது விருப்பம் EMI திட்டங்கள் ஆகும்.</p><p>இவை ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபகரணங்கள் மற்றும் ஃபர்னிச்சர் போன்ற அதிக மதிப்புள்ள பொருட்களுக்கு மூன்று முதல் 12 மாதங்கள் வரையிலான தவணைகளை வழங்குகின்றன. இந்த மாத தவணை திட்டத்தை, ப்ளிப்கார்ட் மினிட்ஸ் (Flipkart Minutes), ஃபேஷன், அழகு, வீடு மற்றும் பொது வணிக பிரிவுகளில் அடிக்கடி செய்யப்படும் குறைந்த மதிப்புள்ள பொருட்களை வாங்கவும் பயன்படுத்தலாம்.</p><h2>கூட்டணி:</h2><p>முன்னர் குறிப்பிட்டபடி, ப்ளிப்கார்ட் பே லேட்டர் (Flipkart Pay Later) திட்டமானது, பே-யு (PayU) வங்கி சாரா நிதி நிறுவன பிரிவான பே-யு ஃபைனான்ஸ் (PayU Finance) உடன் இணைந்து தொடங்கப்பட்டது.</p><p>ப்ளிப்கார்ட் ஏற்கனவே யுபிஐ (UPI), வாலெட்கள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் மாத தவணை சலுகைகளை பயன்படுத்தி பணம் செலுத்த வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது. </p><p>ப்ளிப்கார்ட் நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான பொருட்கள் மற்றும் இடங்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி (COD) சேவையை வழங்குகிறது. ப்ளிப்கார்ட் கிஃப்ட் கார்டுகள் மற்றும் வவுச்சர்களை செக் அவுட்-இன் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.</p>]]></content:encoded></item><item><title>நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் தோல் தான் பிரகாசமாக இருக்கிறது -  பிரதமர் மோடியின் செல்பி வீடியோ குறித்து தீப்கே </title><link>https://www.maalaimalar.com/news/national/exam-paper-leak-law-modi-insta-video-strict-penalties-face-strong-cjp-opposition</link><comments>https://www.maalaimalar.com/news/national/exam-paper-leak-law-modi-insta-video-strict-penalties-face-strong-cjp-opposition#comments</comments><guid isPermaLink="false">32f04fbe-c084-4d0c-9a41-4f04244e91c7</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:31:36 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:31:36.712Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,BJP Protest,பிரதமர் மோடி,அபிஜித் தீப்கே,Abhijit Dipke,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/42zq1vjh/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீப்கே, மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ தீப்கே, மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/42zq1vjh/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/abhijit-deepke">அபிஜித் தீப்கேவின்</a> சிஜேபி தலைமையில் ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தை அடுத்து கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். </p><p>பிரதமர் மோடி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகள் குறித்து மௌனம் கலைத்து, விரைவு நீதிமன்றங்கள், சிறப்பு மசோதா, உயர்மட்ட குழு உள்ளிட்ட அறிவிப்புகளை அடுத்தடுத்து  இன்ஸ்டா வீடியோவாக பேசி வெளியிட்டார். </p><p>'<a href="https://www.maalaimalar.com/news/national/manusmriti-promotes-caste-discrimination-rss-dominance-in-the-education-system-kharges-remarks-expunged-in-the-rajya-sabha">பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்தச் சட்ட மசோதா - 2026</a>'  நேற்று முன் தினம் மக்கலவையிலும், நேற்று மாநிலங்களவையிலும் நிரைவேற்றப்பட்டது. அதன் பின் பிரகலாத் ஜோஷி கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.</p><p>முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் தண்டனை உள்ளிட்ட 'கடுமையான' தண்டனைகள் வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. தண்டனைகளை அதிகரிப்பது மட்டும் முறைகேடுகளை தடுக்காது என நேற்று இந்த மசோதா மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவர் கார்கே சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.</p> <h2>செல்பி வீடியோ</h2><p>இதனிடையே மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி மீண்டும் ஒரு செல்பி பாணியில் வீடியோ பேசி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.</p><p>அந்த வீடியோவில் பேசிய அவர், 'வினாத்தாள் கசிவு' மாபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நவீன தொழில்நுட்பம் மற்றும் கடுமையான சட்டங்கள் மூலம் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் தொடரும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.</p><p>இன்ஸ்டாகிராமில் வெளியான அவரின் வீடியோ பதிவில் கமண்ட் செய்த சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே, "நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் தோல் தான் பிரகாசமாக இருக்கிறது" என்று கிண்டலாகக் பதிவிட்டுள்ளார்.</p> <h2>சிஜேபி எதிர்ப்பு</h2><p>இந்தச் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பிருந்தே சிஜேபி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.</p><p>இது தொடர்பாக சிஜேபி தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில், "வினாத்தாள் கசிவை முன்கூட்டியே எவ்வாறு தடுப்பது என்பதற்குப் பதிலாக, கசிவு நடந்த பிறகு வழங்கப்படும் தண்டனைகளில் மட்டுமே இந்தச் சட்டம் கவனம் செலுத்துகிறது" என்று குற்றம் சாட்டினார்.</p><p>அத்துடன் தேசிய தேர்வு முகமையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p> <h2>தீப்கே பேட்டி</h2><p>இதுகுறித்து நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, "நாட்டில் தொடர்ந்து சட்டங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் எண்ணம் சரியாக இல்லாத வரை எதுவுமே மாறாது.</p><p>வினாத்தாள் கசிவு வழக்குகளுக்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் எனப் பிரதமர் அறிவித்தார். ஆனால், சிபிஐ வழக்கறிஞர் ஆஜராகாததால் இதன் முதல் விசாரணையே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>சட்டங்களை இயற்றுவதை விட அதை அமல்படுத்துபவர்களின் செயல்பாடே இங்கு முக்கியம்." 4என தெரிவித்தார்.</p><p>மேலும் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான இன்ஸ்டா வீடியோ பதிவுகளை <a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-dharmendra-pradhan-quits-as-abhijit-deepke-slams-pm-modi">விமர்சித்த தீப்கே</a>, "மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர சமூக ஊடக Influence-ராக மாறலாம்" என்றும் சாடினார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-31-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-31-07-2026#comments</comments><guid isPermaLink="false">ba77a473-2624-4637-ae8b-595d3a2b18cd</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:31:32 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:31:32.637Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-28/bflp3azn/Gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-28/bflp3azn/Gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது.</p><p>தங்கம் விலை கடந்த 27-ந்தேதி முதல் தொடர்ச்சியாக விலை குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 155-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 240-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,230-க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>30-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840</p><p>29-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,240</p><p>28-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,720</p><p>27-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960</p><p>26-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>30-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>29-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>28-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>27-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>26-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை - காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-amavasai-restrictions-imposed-devotees-visiting-karaiyar-sorimuthu-ayyanar-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-amavasai-restrictions-imposed-devotees-visiting-karaiyar-sorimuthu-ayyanar-temple#comments</comments><guid isPermaLink="false">0b0d36cd-abed-4e9b-81af-9196f7e87448</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:21:00 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:21:00.994Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாபநாசம்,aadi amavasai,Karaiyar Sorimuthu Ayyanar Temple,ஆடி அமாவாசை,காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/d8c6f9vo/temple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Karaiyar Sorimuthu Ayyanar Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/d8c6f9vo/temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு அரசு பஸ்களில் மட்டுமே சென்று வர பக்தர்களுக்கு அனுமதி அளிக் கப்படும். வனப்பகுதியில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.</em></p> <p>மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>சொரிமுத்து அய்யனார் கோவில்</h2><p>பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் கருதி பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வனத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, 4 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் அது உருவாகும் வனத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்முறையில் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><h2>சோதனைச்சாவடி</h2><p>கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி 6 நாட்கள் வரை வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் பொருட்களை எடுத்து செல்ல ஆகஸ்டு 9-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் பாபநாசம் சோதனைச்சாவடியில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆகஸ்டு 7 மற்றும் 8 ஆகிய நாட்கள் முழுவதும் கோவில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் காரணத்தினால் அரசு பஸ், தனியார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் பாபநாசம் சோதனைச்சாவடியில் அனுமதிக்கப்படமாட்டாது.</p> <h2>அரசு பஸ்களில் மட்டுமே அனுமதி</h2><p>ஆகஸ்டு 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் மட்டுமே கோவிலுக்கு சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது.</p> <p>ஆகஸ்டு 13-ந் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு ஆகஸ்டு 14-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணிவரையிலும் பாபநாசம் கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும். கீழே இறங்கும் பக்தர்களுக்காக அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும்.</p> <p>ஆகஸ்டு 15, 16-ந் தேதிகளில் தூய்மை பணிகள் மற்றும் கோவில் உழவார பணி காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 17-ந் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி கோவிலுக்கு சென்று வரலாம்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: தாம்பரம், மாம்பலத்திற்கு மாற்றப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam#comments</comments><guid isPermaLink="false">bc163fba-c454-463d-943e-5b53eed5facb</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:05:57 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:05:57.397Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,tambaram railway station,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,தாம்பரம் ரெயில் நிலையம்,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/pmhymsr8/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/pmhymsr8/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்களை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> அறிவித்துள்ளது. </p><p>அதன்படி, வழக்கமாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august">எழும்பூர்</a> வரை இயக்கப்படும் 5 முக்கிய ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்களுடன் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ளவும், அங்கிருந்தே மீண்டும் புறப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. </p><p>இந்த மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><h2><strong>தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் ரெயில்கள்</strong></h2><p>வழக்கமாக சென்னை எழும்பூர் வரை வந்து செல்லும் கீழ்க்கண்ட ரெயில்கள் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தாம்பரத்துடன்</a> நிறுத்தப்பட்டு, மீண்டும் அங்கிருந்தே மறுமார்க்கமாக இயக்கப்படும்.</p><p>*  தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16866)  மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16160) கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 20636) சேலம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22154).  </p><h2><strong>மாம்பலம் வரை இயக்கப்படும் ரெயில்</strong></h2><p>திருச்சியிலிருந்து சென்னை எழும்பூர் வரும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12654) தற்காலிகமாக மாம்பலம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு, அங்கிருந்தே மீண்டும் திருச்சிக்குப் புறப்படும்.  </p><h2><strong>பயணிகளுக்கு அறிவுறுத்தல்</strong></h2><p>மறுசீரமைப்பு பணிகள் முடியும் வரை பயணிகள் எழும்பூர் ரெயில் நிலையத்திற்குப் பதிலாக, தங்களின் பயணத் திட்டத்திற்கு ஏற்ப தாம்பரம் அல்லது மாம்பலம் ரெயில் நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க ஏதுவாக இந்த தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாட்டின் இளைய முதலமைச்சர் யார்?.. யார் மேல் அதிக குற்ற வழக்குகள்? சொத்து மதிப்பு என்ன?  - ADR அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/india-cms-report-adr-reveals-wealth-criminal-cases-age-education</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-cms-report-adr-reveals-wealth-criminal-cases-age-education#comments</comments><guid isPermaLink="false">bca7c227-7ade-4637-9743-6ea924d576f4</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:00:10 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:00:10.552Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,முதல்வர்கள்,குற்றவியல் வழக்குகள்,ஏடிஆர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/fy0sjytu/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரேவந்த் ரெட்டி, விஜய், பகவந்த் மான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ரேவந்த் ரெட்டி, விஜய், பகவந்த் மான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/fy0sjytu/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இவற்றை தற்போது ஆளும் 31 முதலமைச்சர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) மற்றும் நேஷனல் எலக்ஷன் வாட்ச் ஆகிய அமைப்புகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.</p><h2>சொத்து மதிப்பு</h2><p>அதன்படி, 31 முதலமைச்சர்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ.3,660 கோடி ஆகும். சராசரியாக ஒரு முதலமைச்சரின் சொத்து மதிப்பு ரூ.118.07 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் மிகவும் பணக்கார முதல்வராக உள்ளார். ரூ.931.83 கோடியுடன் இரண்டாம் இடத்தில் ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு உள்ளார். </p><p>ரூ.648.85 கோடி சொத்து மதிப்புடன் தமிழக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>மூன்றாம் இடத்தில் உள்ளார்.  அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு  ரூ.332.56 கோடியுடன் நான்காம் இடத்தில் உள்ளார். </p><p>ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மிகக் குறைந்த அளவாக ரூ.55.24 லட்சம் மட்டுமே சொத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.</p><h2>குற்றவியல் வழக்குகள் </h2><p>ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 31 முதல்வர்களில் 14 பேர் (45%) தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். </p><p>இதில் 11 பேர் (35%) மீது தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன. தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி மீது அதிகபட்சமாக 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p>மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும், டி.கே. சிவகுமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது தலா 19 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.</p> <h2>கல்வி, வயது, பாலினம்</h2><p>நாட்டின் 31 முதலமைச்சர்களில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மட்டுமே ஒரே பெண் முதலமைச்சராக பணியாற்றுகிறார்.</p><p>31 முதலமைச்சர்களில் 9 பேர் முதுகலை, 7 பேர் இளங்கலை, 6 பேர் தொழிற்கல்விப் பட்டம் மற்றும் 3 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.</p><p>31 பேரில் 17 முதலமைச்சர்கள் 51 முதல் 60 வயதுடையவர்கள். புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி (75 வயது) மிகவும் மூத்த முதலமைச்சராகவும், அருணாச்சலப் பிரதேசத்தின் பெமா கண்டு (44 வயது) மற்றும் மேகாலயாவின் கான்ராட் சங்மா (44 வயது) ஆகியோர் மிகவும் இளைய முதலமைச்சர்களாகவும் உள்ளனர்.</p><p>உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் 50 வயதுடன் 3ஆம் இடத்திலும், தமிழக முதல்வர் விஜய், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இருவரும் 52 வயதுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரி, 80வாட் சார்ஜிங்... புது ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்தது ஒப்போ!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-a7-pro-max-with-10000mah-battery-coming-on-aug-4</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-a7-pro-max-with-10000mah-battery-coming-on-aug-4#comments</comments><guid isPermaLink="false">12f8ec02-63f4-45a1-a16e-be31ddb7cb17</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>OPPO,ஒப்போ,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/kcgz1jlo/Oppo-A7-Pro-Max-launch.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Oppo A7 Pro Max]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/kcgz1jlo/Oppo-A7-Pro-Max-launch.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/oppo">ஒப்போ</a> நிறுவனம் தனது A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை ஒருவழியாக அறிவித்தது. கடந்த சில தினங்களாக புதிய ஸ்மார்ட்போனின் டீசர்களை ஒப்போ வெளியிட்டு வந்த நிலையில், தற்போது வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. </p><p>அதன்படி ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 04-ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய A7 ப்ரோ மேக்ஸ் 10,000mAh பேட்டரியுடன் அறிமுகமாகும் ஒப்போ நிறுவனத்தின் முதல் <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மாரட்போன்</a> ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.</p><h2>மூன்று நிறங்கள்:</h2><p>வலைதள விவரங்களின் படி ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் பிளாக், ஆரஞ்சு மற்றும் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி என மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும்.</p><p>முன்னதாக டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மற்றும் கீக்பென்ச் பென்ச்மார்க் தளங்களில் லீக் ஆன தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் 8.47mm தடிமனாக இருக்கும் என்றும் இதன் எடை 226 கிராம் எடை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. </p><p>மற்ற அம்சங்களை பொருத்தவரை ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் 1.5K 120Hz OLED ஃபிளாட் ஸ்கிரீன், 50MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா மற்றும் 2MP லென்ஸ் வழங்கப்படுகிறது.</p><p>இதுதவிர புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட், 10,000mAh சிங்கிள் செல் பேட்டரி மற்றும் 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கு தற்போதைய உடனடி தேவை, அவசியத் தேவை காவிரி தண்ணீர்- ஜி.கே.வாசன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-the-immediate-and-essential-requirement-for-tamil-nadus-samba-cultivation-is-cauvery-water</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-the-immediate-and-essential-requirement-for-tamil-nadus-samba-cultivation-is-cauvery-water#comments</comments><guid isPermaLink="false">a7903532-b596-4895-964c-211d7e1f1d7b</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:32:05 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:32:05.724Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>GK Vasan,ஜிகே வாசன்,காவிரி நீர்,Cauvery water,காவிரி மேலாண்மை ஆணையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/g6hrxy79/vasan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/g6hrxy79/vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.</aside><p>தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக விவசாயிகளின் உணர்வைப் புரிந்து அவர்களின் தேவையைக் கவனத்தில் கொண்டு தமிழகத்திற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரியில் </a>தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருப்பது நியாயமானது. அதாவது காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் 4 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>மறுக்கக்கூடாது</strong></h2><p>குறிப்பாக <a href="https://www.maalaimalar.com/topic/காவிரி-மேலாண்மை-ஆணையம்">காவிரி மேலாண்மை ஆணையம்</a> ஏற்கனவே கொடுத்த உத்தரவின்படி தண்ணீர் திறக்க மறுத்து மேல்முறையீடு செய்த கர்நாடக அரசின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசின் நியாயமற்ற போக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழகத்திற்கான காவிரி நீர் தமிழக விவசாயிகளின் பயிர் தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் மிக மிக அவசரமானது மட்டுமல்ல</p><p>அவசியமானதும் கூட.</p><p>ஏற்கனவே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தற்போதைய சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் உடனடி தேவையாக இருக்கிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு கடைபிடிக்க வேண்டுமே தவிர அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒத்த கருத்து என்று கூறி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கக்கூடாது.</p><h2><strong>கர்நாடக அரசு</strong></h2><p>எனவே தமிழக விவசாயிகள், கர்நாடக விவசாயிகள் எனப்பிரித்துப் பார்க்காமல் விவசாய வர்க்கம் என எண்ணி அவர்களைப் பாதுகாக்கக்கூடிய நிலையை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் நியாயமான உரிமையை கர்நாடக அரசு கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.</p><p>மேலும் நேற்றைய தினம் கர்நாடக அரசின் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது கர்நாடக அரசின் வீண்முயற்சியை, பின்னடவை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>எனவே கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் தங்கத்தின் தேவை 6 சதவீதம் சரிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-gold-demand-falls-drops-6-percent</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-gold-demand-falls-drops-6-percent#comments</comments><guid isPermaLink="false">7a4d56b3-3745-4c93-970d-0e4a07d23f2d</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:26:47 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:26:47.225Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,pm modi,தங்கம் விலை,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/11/01/1975038-goldbiscuts.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/11/01/1975038-goldbiscuts.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>இந்தியாவில் தங்கத்தின் தேவை 6 சதவீதம் சரிவு அடைந்துள்ளது. ஆனால் விற்பனை மதிப்பு ரூ.1.98 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.</em></p><h2>விலை உயர்வு</h2><p>உலக தங்க கவுன்சில், 2026-ம் ஆண்டின் 2-வது காலாண்டுக்கான (ஏப்ரல்-ஜூன்) அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அதில் கூறியிருப்பதாவது:-</p> <h2>தங்கத்தின் தேவை</h2><p>இந்தியாவில் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் தங்கத்தின் மொத்த தேவை 131.4 டன்னாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த 139,7 டன்னுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவாகும்.</p><h2>பிரதமர் மோடி</h2><p>பருவகால அடிப்படையில் விற்பனை குறைந்தது. இறக்குமதி சுங்க வரி உயர்வு மற்றும் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-said-wont-spare-gangs-playing-with-future-of-children">பிரதமர் மோடி</a> விடுத்திருந்த வேண்டுகோள் ஆகியவை தங்கத்தின் தேவை குறைய முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளன.</p> <h2>புதிய சாதனை</h2><p>ஆனால், தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், வாங்கப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலத்தில் ரூ.1.32,500 கோடியாக இருந்த தங்க விற்பனை மதிப்பு, இந்த ஆண்டு 50 சதவீதம் அதிகரித்து ரூ.1,98,100 கோடியாக உயர்ந்துள்ளது.</p> <h2>முதலீடு</h2><p>தங்க நகைகளுக்கான தேவை 15 சதவீதம் குறைந்து 75.1 டன்னாக பதிவாகியுள்ளது. இருப்பினும், விலை உயர்வு காரணமாக நகை விற்பனையின் மதிப்பு 34 சதவீதம் உயர்ந்து ரூ.1,13,210 கோடியாக உள்ளது. அட்சய திருதியை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு நகை வாங்கும் பழக்கம் தொடர்ந்தாலும், அதிக விலையால் மக்கள் குறைந்த எடையிலான மற்றும் குறைந்த காரட் நகைகளை அதிகம் வாங்கியதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.</p> <h2>கோல்டு இ.டி.எப். முதலீடு</h2><p>மறுபுறம், முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்க கட்டிகள்</a> மற்றும் தங்க நாணயங்களின் தேவை 9 சதவீதம் அதிகரித்து 50,3 டன்னாக உயர்ந்துள்ளது. அதேபோல், கோல்டு இ.டி.எப். முதலீடும் 49 சதவீதம் அதிகரித்து 4.2 டன்னாக பதிவாகியுள்ளது. இது தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மக்கள் தொடர்ந்து கருதுவதை காட்டுகிறது. </p> <p>இந்தியாவின் தங்க இறக்குமதி 23 சதவீதம் குறைந்து 98.1 டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 127.4 டன்னாக இருந்தது. பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து பயன்படுத்திய அளவும் 17 சதவீதம் குறைந்து 19.2 டன்னாக பதிவாகியுள்ளது.</p><p>இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (01.08.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-35</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-35#comments</comments><guid isPermaLink="false">eca887a6-7bf8-4789-8715-d1a8e34d5b01</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:20:27 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:20:27.238Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/3wpvse0h/powercut.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/3wpvse0h/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (01.08.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>மாங்காடு</strong></h2><p>அம்பாள் நகர், பத்மாவதி நகர், அட்டிசன் நகர், மணலி ராமகிருஷ்ணா நகர், பாலாஜி அவென்யு, எஸ்எஸ் கோவில் தெரு, மேலண்டை மாட வீதி, பெருமாள் கோவில் தெரு, பள்ளி தெரு, நரிவன சாலை, நியூ போலீஸ் ஸ்டேஷன், எம்ஜிஆர் நகர், ஏஎஸ் நகர் பட்டூர், அப்பாவு நகர், வெள்ளீஸ்வரன் நகர், சரஸ்வதி நகர், பாண்டியன் நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராமகிருஷ்ணாபுரம், மாரியம்மன் கோவில் தெரு.</p><h2><strong>மாடம்பாக்கம்</strong></h2><p>ராஜ்பாரிஸ் பிளாட்ஸ், மாம்பாக்கம் பிரதான சாலை, ராகேஷ் ஷர்மா நகர், விக்டோரியா பார்ம் ஹவுஸ், கோவிலஞ்சேரி, கிரஞ்ச் அண்ட் கரி, குறிஞ்சி நகர், அகரம் தென், திரௌபதி அம்மன் கோவில் தெரு, ஜி.கே. அவென்யூ.</p><h2><strong>பள்ளிக்கரணை</strong></h2><p>காமகோட்டி நகர், ஐஐடி காலனி, நாகம்மாள் அவென்யூ, விஜிபி ராஜேஷ் நகர், மா.பொ.சி. நகர், என்ஐஓடி.</p><h2><strong>திரிசூலம்</strong></h2><p>பிவிஆர் மால், சந்தை சாலை, ஆறுமலைச் சாவடி, ஹார்பர் ஆர்ட்டர்ஸ், முக்கண்ணி அம்மன் கோவில் தெரு, ராணி அண்ணா நகர், கென்னடி வெளி, மூவரசன்பேட்டை பிரதான சாலை.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>ஜி.இ. நிறுவனம், ராணுவக் குடியிருப்புகள், ஏர் இந்தியா, டிஆர்டிஓ, தாஜ் ஃப்ளைட் கிச்சன், பிபிசிஎல், எல் &amp; டி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பம்மல் காமராஜபுரம், திருநீர்மலை பிரதான சாலை, எல்.ஐ.சி. காலனி விரிவாக்கம், ராஜீவ் காந்தி நகர், விக்டோரியா தெரு, பெரியார் தெரு, நியூஸ்மேன் தெரு, மரியன் தெரு, அன்னை மேரி தெரு, வினாய நகர், இபி காலனி, அமர்சன் நகர், த்ரீ ரோசஸ் அபார்ட்மெண்ட்ஸ், திருவள்ளுவர் பிரதான சாலை, பக்தவச்சலம் 1வது முதல் 3வது தெருக்கள் வரை.</p><h2><strong>சித்தாலப்பாக்கம்</strong></h2><p>வரதராஜ பெருமாள் கோவில் தெரு, ஏடிபி அவென்யூ, வேங்கைவாசல் பிரதான சாலை, பிஎஸ்சிபிஎல், போலினேனி ஹில்சைடு அபார்ட்மென்ட்ஸ், டிஎன்எச்பி காலனி, வெண்பா அவென்யூ, கன்னிகோவில் தெரு, எம்.ஜி.ஆர். நகர், பாசில் அவென்யூ, விவேகானந்தா நகர் நூக்கம்பாளையம் சாலை, விவேகானந்தா நகர், ஜெயா நகர், வள்ளுவர் நகர், காந்தி நகர், ஒட்டியம்பாக்கம், அரசங்கழனி பிரதான சாலை, கரணை பிரதான சாலை, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், ஜோன்ஸ் காசியா, நேசமணி நகர் மால்ஸ் மற்றும் கே.ஜி. அபார்ட்மென்ட், ஆர்.சி. பிளாசம் அபார்ட்மென்ட், நேசமணி நகர், ஏரிக்கரை சாலை, வரதபுரம்.</p><h2><strong>வேளச்சேரி</strong></h2><p>பேபி நகர், தரமணி 100 அடி பிரதான சாலை, விஜயா நகர், பார்க் அவென்யூ, டாஸ் அவென்யூ, ராமகிரி நகர்.</p><h2><strong>பூவிருந்தவல்லி</strong></h2><p>பூவிருந்தவல்லி பகுதியில் 33/11 கி.வோ துணை மின் நிலையத்தில் 33 கி.வோ மற்றும் 11 கி.வோ அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளான பழைய பஸ்பார் குழாய்கள் மற்றும் சேதமடைந்த கிளாம்ப்களை மாற்றும் பணிகள் நடைப்பெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். </p>]]></content:encoded></item><item><title>ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடியை &apos;கோமிய நிபுணர்&apos; என விமர்சித்த பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் கண்டன கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-reforms-row-215-academics-condemn-priyankas-remarks-on-iit-m-director-kamakoti</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-reforms-row-215-academics-condemn-priyankas-remarks-on-iit-m-director-kamakoti#comments</comments><guid isPermaLink="false">3df3ce6c-d12e-478b-a134-bdee4a39dc75</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:20:15 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:20:15.866Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கோமியம்,காமகோடி,Priyanka gandhi,Kamakoti,பிரியங்கா காந்தி,Gomiyam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/blv74pls/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரியங்கா காந்தி, காமகோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரியங்கா காந்தி, காமகோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/blv74pls/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பசுவின் சிறுநீரில் (கோமியத்தில்) மருத்துவ குணம் உள்ளதாக ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி பேசியது சர்ச்சையாகி இருந்தது. அது தற்போது மீண்டும் விவாதப்பொருளாகி உள்ளது. </p><h2>காமகோடி </h2><p>2025இல் சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது, சன்னியாசி ஒருவர் காய்ச்சலின் போதுகோமியம் அருந்தி குணமடைந்ததாக அறிவியல் ஆய்வுக் கட்டுரையில் தாம் படித்ததாக  மேற்கோள்காட்டி பேசியிருந்தார். </p><h2>உயர்மட்ட குழு </h2><p>இதனிடையே நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக சிஜேபி தலைமையில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக பல மாதங்களுக்கு பின் மௌனம் கலைத்த<a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-said-wont-spare-gangs-playing-with-future-of-children"> பிரதமர் மோடி</a>, இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தேர்வு முறைகேடுகளை தடுப்பது குறித்து ஆராய இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேனி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைப்பதாக அறிவித்தார். இதில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.</p><p>குறிப்பாக இதில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமக்கோடியும் இடம்பெற்றுள்ளார். </p> <h2>பிரியங்கா</h2><p>மக்களவையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வுச் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி "புதிய குழுக்களை அமைப்பதால் மட்டும் எந்தப் பயனும் இல்லை. தேர்வுச் சீர்திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட புதிய குழுவில், ஒரு ஐடி நிறுவன உரிமையாளர் மற்றும் ஒரு 'கோமிய நிபுணர்' கூட சேர்க்கப்பட்டுள்ளார்" என்று விமர்சித்திருந்தார்</p><p>இந்நிலையில் பிரியங்கா காந்தி, காமகோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து 215 கல்வியாளர்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.</p> <h2>கடிதம்</h2><p>பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் மற்றும் மூத்த பேராசிரியர்கள் உட்பட 215 கல்வியாளர்கள் பிரியங்கா காந்திக்கு எழுதியுள்ள இந்த கடிதத்தில்,</p><p>"இந்தியாவின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக பேராசிரியர் வி. காமகோடி விளங்குகிறார்.</p><p>ஒரு கல்வியாளராகத் தனது கருத்துகளையோ அல்லது பாரம்பரிய அறிவைப் பற்றிய உரையாடல்களையோ முன்வைக்க அவருக்கு முழு உரிமை உண்டு.</p><p>ஒரு அறிஞரின் கருத்துகளை ஆரோக்கியமாக விவாதிப்பதற்குப் பதிலாக, இப்படிப்பட்ட முத்திரைகளைக் குத்தி அவரை நிராகரிப்பது, நாட்டின் அரசியலமைப்பு வலியுறுத்தும் Scientific Temper-ஐ சீர்குலைக்கும் செயலாகும். எள்ளல் பேச்சுக்கள் ஒருபோதும் நியாயமான உரையாடலுக்கு மாற்றாக முடியாது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஹமாஸ் அமைப்பை ஆயுதங்களை கைவிடச் செய்யும் ஒப்பந்தத்தை எட்டிய காசா அமைதி வாரியம் - டிரம்ப் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/historic-agreement-to-make-hamas-lay-down-its-arms-trump-announces</link><comments>https://www.maalaimalar.com/news/world/historic-agreement-to-make-hamas-lay-down-its-arms-trump-announces#comments</comments><guid isPermaLink="false">b0f79137-40eb-42e1-a06c-5a5509c400fb</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:51:33 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:51:33.778Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,palestine,காசா,இஸ்ரேல்,gaza,Israel,Hamas,ஹமாஸ்,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/0gt142sw/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹமாஸ், டிரம்ப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹமாஸ், டிரம்ப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/0gt142sw/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">காசாவில்</a> அமைதியை நிலைநாட்டும் வகையில் ஹமாஸ் அமைப்பை ஆயுதங்களை கைவிடச்செய்யும்  வரலாற்று  சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்</p><p>கடந்த அக்டோபரில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டபோது காசாவில் மீண்டும் அமைதியை ஏற்படுத்தப்பட்ட 'அமைதி வாரியம்' மூலம் இந்த முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>தனது ட்ரூத் சோசியல் பதிவில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>"காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் தங்களது ஆயுதங்களை முழுமையாகத் துறப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை அமைதி வாரியம் எட்டியுள்ளது. </p><p>பிராந்தியத்தில் நிலையான அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கான ஒரு மிகப்பெரிய மைல்கல் இது" என தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் அவரது பதிவில்,  "இந்த ஒப்பந்தம் கவனமாக திட்டமிடப்பட்ட கட்டங்களில் செயல்படுத்தப்படும். ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக கைவிட்ட பின்னர், இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து படிப்படியாக வெளியேறும்.</p><p>காசாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய, நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் சர்வதேச படை புதிய பாலஸ்தீன காவல் படையுடன் இணைந்து செயல்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் காசா, தனது மக்களுக்கு சேவை செய்யும் புதிய பாலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் வரும்." எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த எகிப்து, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p> <h2>இஸ்ரேல் அதிருப்தி</h2><p>முன்மொழியப்பட்ட ஒப்பந்த நிபந்தனைகள் திருப்திகரமாக இல்லை என மூத்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D">இஸ்ரேலிய </a>அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.</p><p>காசா முழுமையாக ராணுவமயமாக்கப்பட்டு ஹமாஸிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் அகற்றப்பட்டால் மட்டுமே எந்தவொரு அமைதி நடவடிக்கைக்கும் இஸ்ரேலின் உடன்படும் என அவர் கூறியுள்ளார்.</p><p>இந்த ஒப்பந்தம் குறித்து ஹமாஸ் இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை.</p><h2>காசா போர்</h2><p>2023 அக்டோபர் 7 அன்று காசாவை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபடும் இஸ்ரேலுக்கு எதிராக அந்நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.</p><p>தாக்குதலுக்கு பதிலடியாகவும் பணய கைதிகளை மீட்கவும், காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஆனால் பெரும்பாலும் <a href="https://www.maalaimalar.com/news/world/israeli-strikes-in-gaza-9-palestinians-including-10-year-old-boy-and-8-at-police-station-killed-in-drone-attack">பொதுமக்களையே</a> தாக்கிய இஸ்ரேல் கடந்த ஆண்டு அக்டோபரில் டிரம்ப் முயற்சியில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை தாக்குதலை தொடர்ந்தது. போர் நிறுத்தத்தின் பின்னரும் தாக்குதல் தொடர்கிறது. இதனால் காசாவில் பலி எண்ணிக்கை 72,000 த்தை கடந்துள்ளது.</p><p>இந்த அறிவிப்புக்கு மத்தியிலும் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.</p><p>மேலும் காசாவுக்கு மருத்துவ உதவி மற்றும் உணவுப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தடுத்து வருவதால் அங்கு மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தம் கொடுக்க, ஹமாஸ் தங்கள் அரசை காசாவில் கலைப்பதாக அறிவித்தது. ஆனால் ஆயுதங்களை கைவிட மறுத்தது. இந்நிலையில் தற்போது டிரம்ப்பின் அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் உடன்படுமா என்பது நிச்சயமில்லை.</p><h2>காசா அமைதி வாரியம்</h2><p>காசாவில் போருக்குப் பிந்தைய நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பே இந்த அமைதி வாரியம். டிரம்ப் இதன் நிறுவனத் தலைவராக செயல்படுகிறார். இதில் பல நாடுகள் இடம்பெற்றுள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 31 ஜூலை 2026: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-31-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-31-july-2026#comments</comments><guid isPermaLink="false">467b0827-54d7-4414-9d18-2e08863693a8</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:33:23 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:33:23.563Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/05/27220541-amman2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அம்மன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/05/27220541-amman2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-15 (வெள்ளிக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   துவிதியை இரவு 10.32 மணி வரை பிறகு திருதியை</p><p>நட்சத்திரம் : அவிட்டம் இரவு 10.32 வரை பிறகு சதயம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு</h2><p>திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. வடமதுரை ஸ்ரீ சௌந்திர ராஜப் பெருமாள் வசந்த உற்சவம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பருக்கும், ஸ்ரீ காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் அலங்கார திருமஞ்சன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகனசேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு. </p> <p>லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம் அலங்காரம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் காலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - சாதனை</p><p>ரிஷபம் - சோர்வு</p><p>மிதுனம் - பரிவு</p><p>கடகம் - அன்பு</p><p>சிம்மம் - இன்பம்</p><p>கன்னி - ஆதரவு</p> <p>துலாம் - வாழ்வு</p><p>விருச்சிகம் - தாமதம்</p><p>தனுசு - களிப்பு</p><p>மகரம் - லாபம்</p><p>கும்பம் - ஆதாயம்</p><p>மீனம் - கடமை</p> ]]></content:encoded></item><item><title>சாதிப் பாகுபாடு செய்யும் மனுஸ்மிருதி.. கல்வி முறையில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் - மாநிலங்களவையில் கார்கே பேச்சு நீக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/manusmriti-promotes-caste-discrimination-rss-dominance-in-the-education-system-kharges-remarks-expunged-in-the-rajya-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/manusmriti-promotes-caste-discrimination-rss-dominance-in-the-education-system-kharges-remarks-expunged-in-the-rajya-sabha#comments</comments><guid isPermaLink="false">193d65b5-ae6a-4bbe-8cde-2b37d6162fb2</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:05:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:05:42.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநிலங்களவை,rajya sabha,கார்கே,Kharge,ஜே.பி. நட்டா,J.P. Nadda</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ahuwzyd8/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கார்கே, ராதாகிருஷ்ணன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கார்கே, ராதாகிருஷ்ணன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ahuwzyd8/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிஜேபி தலைமையில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மத்திய அரசு, <a href="https://www.maalaimalar.com/news/national/parliament-passes-anti-paper-leak-amendment-bill-with-stricter-punishment">பொதுத்தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) மசோதா 2026</a> ஐ கொண்டுவந்துள்ளது. நேற்று முன் தினம் மக்களவையிலும் நேற்று மாநிலங்களவையில் 8 மணி நேரத்திற்கும் மேலான விவாதத்தின் பின்னரும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. </p><h2>மசோதாவின் முக்கிய அம்சங்கள் </h2><p>வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.</p><p>திட்டமிட்டு முறைகேடு செய்யும் அமைப்புகளுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.</p><p>வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மற்றும் சிறப்புத் புலனாய்வுக் குழு அமைக்கப்படும்.</p> <h2>ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்</h2><p>முன்னதாக விவாதத்தின்போது மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் கார்கே மத்திய அரசின் கல்வி முறையை கடுமையாக விமர்சித்தார்.</p><p>பள்ளி மற்றும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதை குறிப்பிட்டு பேசிய அவர், தற்போதைய கல்வி முறை மனுஸ்மிருதியின் சிந்தனைகளை நினைவூட்டும் வகையில் சாதிப் பாகுபாட்டையும் சமத்துவமின்மையையும் ஊக்குவிப்பதாக சாடினார்.</p><p>பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களே நியமிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.</p> <h2>தேர்வு முறைகேடுகள்</h2><p>விவாதத்தின் கருப்பொருளான தேர்வு முறைகேடுகள் கமசோதா குறித்து பேசிய கார்கே, வெறும் தண்டனைகளையும் அபராதங்களையும் அதிகரிப்பதன் மூலம் மட்டும் வினாத்தாள் கசிவைத் தடுத்துவிட முடியாது, தேர்வு முகமைகளில் முழுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p> <h2>நட்டா பதில்</h2><p>அவைத் தலைவர் ஜே.பி. நட்டா கார்கேவுக்கு பதிலளித்து பேசுகையில், மனுஸ்மிருதி தொடர்பான தனது கூற்றுகளுக்கு கார்கே தகுந்த ஆதாரங்களை அளிக்க வேண்டும் என சவால் விடுத்தார்.</p><p>உணர்ச்சிவசப்பட்டோ அல்லது அவைக்குப் புறம்பான வார்த்தைகளையோ எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்தக் கூடாது என்று கூறிய நட்டா, கார்கேவின் குறிப்பிட்ட கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனச் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.</p><h2>சபாநாயகர் தலையீடு</h2><p>இருதரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் எழுந்ததை தொடர்ந்து தலையிட்ட மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மனுஸ்மிருதி தொடர்பாக கார்கே கூறிய கருத்துகள் மற்றும் மேற்கோள்கள் நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இடம்பெறாது என உத்தரவிட்டார்.</p><p>சி.பி. ராதாகிருஷணன் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான் -  மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-power-disruptions-ever-since-tvk-government-assumed-office</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-power-disruptions-ever-since-tvk-government-assumed-office#comments</comments><guid isPermaLink="false">13a6d5ed-da70-49b4-a3b3-becbb7f09d1a</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:02:20 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:02:20.237Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-07/1dxebw23/mks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-07/1dxebw23/mks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</em></p><h2>மின் தடை</h2><p>தமிழகத்தில் நிலவும் தொடர் மின் தடை மற்றும் குறைந்த மின்னழுத்தப் பிரச்சனையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். </p><p>பராமரிப்புப் பணிகள் மற்றும் மின்மாற்றிக் கோளாறுகள் தாமதமாவதே இதற்கு முக்கியக் காரணமாக கூறப்பட்டாலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து உள்ளது.</p> <h2>சென்னையில் மின்வெட்டு</h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திடீரென மின் தடை ஏற்படுவது அதிகரித்துள்ளது. இரவில் மக்கள் மின் தடையால் தூங்க முடியாமல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்கதையாகி வருகிறது.</p><p>பகலெல்லாம் சுட்டெரிக்கும் வெயில் ஒரு பக்கம் இரவில் வீட்டிற்கு வந்தால் மின் வெட்டு என்ற நிலை சென்னை மற்றும் புறநகர் மக்களை குமுற வைத்துள்ளது.</p> <h2>பொதுமக்கள் மறியல்</h2><p>இரவில் குடியிருப்புப் பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் சாலை மறியல், மின்வாரியத்தை முற்றுகையிடுவது போன்ற போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.</p> <h2>த.வெ.க. ஆட்சி</h2><p>இந்நிலையில், திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery">த.வெ.க. ஆட்சி</a> அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...</p><p>முதலில் மின்வெட்டுப் பிரச்சனை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சனை.</p> <p>3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.</p><p>இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.</p> <p>இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...<br><br>முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.<br><br>3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில்… <a href="https://t.co/6FubNiIFPa">https://t.co/6FubNiIFPa</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2083002205204852971?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>ஏசி பயன்பாடு</h2><p>வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகமாகி வருவதால், அதிக சுமை காரணமாக துணை மின்நிலையங்களில் உள்ள மின் மாற்றிகள் பாதிப்பு அடைவதால் மின் தடை ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><p>மின்தடையை சமாளிக்க, மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை துணை மின்நிலையங்களில் இப்போது பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்பட்டுள்ளது.</p> <h2>மின் வாரியம்</h2><p>மின்தடை தொடர்பாக பொதுமக்கள் "மின்னகம்" மையத்திற்கு தெரிவிக்கும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதிப்பை சரி செய்து வருகிறோம். இது சம்பந்தமாக துறை அலுவலர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்படுகிறது.</p><p>பொதுமக்களின் புகார்களை பெறுவதற்காக மொத்தம் 95 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மின்மாற்றி பழுது காரணமாக ஏற்படும் இழப்புகளை சரி செய்யவும் தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கவும், துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 31.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை உயரும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-31-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-31-july-2026#comments</comments><guid isPermaLink="false">75cd1f60-9e8d-4f97-a9da-b7176e84bfe0</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:54:53 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:54:53.136Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/13/27322352-rasi-3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/13/27322352-rasi-3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். சொத்துப் பிரச்சனைகள் சுமூகமாக முடிவடையும். தொழில் சம்பந்தமாக வெளியூர்ப் பயணம் உண்டு.</p><h2>ரிஷபம்</h2><p>நன்மைகள் நடைபெறும் நாள். தொழில் சீராக நடைபெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர்.</p> <h2>மிதுனம்</h2><p>மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.</p><h2>கடகம்</h2><p>நிதிப்பற்றாக்குறை ஏற்படும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உறவினர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.</p> <h2>சிம்மம்</h2><p>போட்டிகள் அகலும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.</p><h2>கன்னி</h2><p>துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபச்செய்திகள் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். தொழில் சீராக நடைபெறும்.</p> <h2>துலாம்</h2><p>அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.</p> <h2>தனுசு</h2><p>ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றிபெறும்.</p><h2>மகரம்</h2><p>ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்க விரயம் செய்வீர்கள்.</p> <h2>கும்பம்</h2><p>தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>வருமானம் திருப்தி தரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடர்பாடுகள் அகலும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-iran-war-hormuz-tension-push-up-chennai-fuel-rates</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-iran-war-hormuz-tension-push-up-chennai-fuel-rates#comments</comments><guid isPermaLink="false">804353b4-a236-478a-ad35-c5dd2239a01e</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:33:53 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:33:53.604Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/7xia9etr/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/7xia9etr/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/hormuz-cannot-be-opened-as-long-as-there-is-us-interference-iran-asserts">ஈரான் போரினால் </a>மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p> <h2>பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</h2><p>அந்த வகையில் இன்று (31.07.2026 - வெள்ளிக்கிழமை)க்கான பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல்ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேவேளை, இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 86.27 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p><p>மத்திய அரசு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் டிரோன் தாக்குதல்.. பாகிஸ்தானில் 11 காவல்துறையினர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-drone-terror-strike-11-policemen-killed-at-hangu-checkpoint-near-afghanistan-border</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-drone-terror-strike-11-policemen-killed-at-hangu-checkpoint-near-afghanistan-border#comments</comments><guid isPermaLink="false">5d25612a-cb8f-4b84-9fef-116860a7aa15</guid><pubDate>Fri, 31 Jul 2026 01:06:22 +0000</pubDate><atom:updated>2026-07-31T01:06:22.089Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Terrorist attack,பயங்கரவாத தாக்குதல்,Khyber Pakhtunkhwa,கைபர் பக்துன்கவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f5bzij7o/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பயங்கரவாதிகள்  தாக்குதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ பயங்கரவாதிகள்  தாக்குதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f5bzij7o/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானில்  காவல் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 காவல்துறையினர் உயிரிழந்தனர்.</p><h2>தாக்குதல்</h2><p>வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள Hangu மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ள சோதனைச் சாவடி மீது நேற்று பயங்கரவாதிகள் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட டிரோன்களை  பயன்படுத்தித் தாக்குதல் நடத்தினர்.</p><p>டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து, காவல்துறையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><p>இந்த மோதலின் போது, பயங்கரவாதிகள் 3 காவல் வாகனங்களுக்குத் தீ வைத்தனர். </p><p>காவல் உதவி ஆய்வாளர்  தியார் கான் தலைமையில் கூடுதல் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.</p><p>பல மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சூடில் 11 காவல்துறையினர் உயிரிழந்தனர் . இதில் தியார் கானும் அடங்குவார். </p><p>மேலும் 28 காவல்துறையினர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p> <h2>தாக்குதல் பின்னணி</h2><p>இத்தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 'தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்' அமைப்பே இத்தாக்குதலை நடத்தியதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.</p><p>பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் சமீபகாலமாக பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.</p><h2>பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் பதற்றம் </h2><p>2021இல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, TTP என அழைக்கப்படும் தெஹ்ரிக் இ பாகிஸ்தான் அமைப்பு கைபர் பக்துன்க்வாவில் வலுவடைந்துள்ளது. </p><p>TTP பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இருந்துகொண்டு அங்கிருந்து திட்டம் தீட்டி கைபர் பக்துன்க்வாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதாக <a href="https://www.maalaimalar.com/news/world/balochistan-girl-killed-body-displayed-on-military-vehicle">பாகிஸ்தான்</a> அரசு குற்றம்சாட்டுகிறது.</p><p>இதனால் இரு நாடுகள் இடையே ராணுவ மோதல் அவ்வப்போது வெடித்து அடங்குகிறது. </p><p>கைபர் பக்துன்க்வா பகுதியில் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு தாக்குதல்கள் உள்ளூர் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்கா முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் &apos;டிரம்ப்&apos; முத்திரை கொண்ட நினைவு பாஸ்போர்ட்கள்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-branded-commemorative-passports-will-become-available-across-the-us</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-branded-commemorative-passports-will-become-available-across-the-us#comments</comments><guid isPermaLink="false">1ec0b970-d737-49b9-a565-07cf23c6f5c5</guid><pubDate>Fri, 31 Jul 2026 00:27:31 +0000</pubDate><atom:updated>2026-07-31T00:27:31.050Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,பாஸ்போர்ட்,Passport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/uc323vhb/US-250-Passport.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US Passport]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/uc323vhb/US-250-Passport.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் 250-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையிலும், அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> புகைப்படம் இடம்பெற்ற 'லிமிட்டெட் எடிஷன்' (limited-edition) பாஸ்போர்ட்களை, தலைநகருக்கு வெளியே வசிக்கும் அமெரிக்கர்களும் விரைவில் பெற முடியும் என்று வெளியுறவு துறை அறிவித்தது.</p><p>நாடு முழுவதும் உள்ள அந்த துறையின் 27 பாஸ்போர்ட் அலுவலகங்கள் அடுத்த மாதம் முதல் இந்த சிறப்பு பயண ஆவணங்களை வழங்க தொடங்கும். முன்னதாக, இவை வாஷிங்டன் டி.சி.யில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே கிடைத்தன.</p><p>உள் பக்கத்தில் அவரது கம்பீரமான உருவப்படம் அச்சிடப்பட்டுள்ள, இந்த பயண ஆவணத்தில் இடம்பெற்ற முதல் உயிருள்ள அதிபர் டிரம்ப் ஆவார்.</p><h2>நினைவு நாணயம்:</h2><p>கட்டிடங்கள், ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய அடையாளங்களில் தனது பெயரையும் உருவத்தையும் டிரம்ப் இணைத்துக்கொள்வதன் சமீபத்திய உதாரணமாக இந்த பாஸ்போர்ட்கள் அமைந்துள்ளன. நாட்டின் உருவாக்கத்தை கொண்டாடும் வகையில் அமெரிக்க மின்ட் (US Mint) தயாரித்து வரும் தங்க முலாம் பூசப்பட்ட நினைவு நாணயத்திலும் அவரது உருவம் இடம்பெற்றுள்ளது.</p><p>மேலும், பதவியில் இருக்கும் அதிபர் ஒருவரின் கையொப்பத்தை அனைத்து புதிய அமெரிக்க காகித நாணயங்களிலும் இடம்பெற செய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.</p><h2>பேட்ரியாட் பாஸ்போர்ட்:</h2><p>"அதிகரித்து வரும் தேவையை முன்னிட்டு, வெளியுறவுத் துறை கூடுதலாக 2,50,000 சிறப்பு நினைவு பாஸ்போர்ட்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்குகிறது. 'பேட்ரியாட் பாஸ்போர்ட்' (Patriot Passport) என்று அழைக்கப்படும் இந்த கூடுதல் சிறப்பு பாஸ்போர்ட்களுக்கு, நாடு முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் விண்ணப்பிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்," என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சென்டெனியல், சிகாகோ, டல்லாஸ், டெட்ராய்ட், நியூ ஆர்லியன்ஸ், நியூயார்க் மற்றும் ஸ்டாம்போர்ட் ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள், ஆகஸ்ட் 8 முதல் நடைபெறும் ஒரு நாள் சிறப்பு நிகழ்வுகளில் இந்த டிரம்ப் பாஸ்போர்ட்களை வழங்கும். ஆகஸ்ட் மாதம் முழுவதும் பிற பாஸ்போர்ட் அலுவலகங்களும் இந்த சேவையில் இணைக்கப்படும்.</p><p>இந்த சிறப்பு பாஸ்போர்ட்டை விரும்புவோர், துறையின் பாஸ்போர்ட் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். வழக்கமான பாஸ்போர்ட்டை விரும்புவோர் வேறு நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்.</p><h2>வடிவமைப்பு:</h2><p>இந்த நினைவு பாஸ்போர்ட்டின் உட்புறப் பக்கத்தில், டிரம்பின் கையொப்பம் தங்க நிறத்தில் அச்சிடப்பட்டிருக்க, அதற்கு மேல் அவரது புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதன் அட்டைப் பகுதியில், தற்போதைய நிலையான வடிவமைப்பிற்கு மாறாக, மேல் பகுதியில் தடித்த தங்க நிற எழுத்துக்களில் "United States of America" என்றும், கீழ் பகுதியில் "Passport" என்றும் அச்சிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், பின் பக்க அட்டையின் அடிப்பகுதியில், நட்சத்திரங்களால் சூழப்பட்ட '250' என்ற எண்ணுடன் கூடிய சிறிய தங்க நிற அமெரிக்க கொடி முத்திரை இடம்பெற்றுள்ளது. தற்போதைய அமெரிக்க பாஸ்போர்ட்களில், தெற்கு டகோட்டாவில் உள்ள ரஷ்மோர் மலையின் இருபக்க சித்திரத்தில் மட்டுமே ஜனாதிபதிகள் இடம்பெற்றுள்ளனர் - ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் ஆபிரகாம் லிங்கன்.</p><p>மற்ற சித்திரங்களில் சுதந்திர தேவி சிலை, பிலடெல்பியாவில் உள்ள லிபர்ட்டி பெல் மற்றும் இன்டிபென்டன்ஸ் ஹால், மற்றும் பெரும் சமவெளிகள், மலைகள் மற்றும் தீவுகளின் காட்சிகள் ஆகியவை அடங்கும். தற்போதைய பாஸ்போர்ட்களில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் ஜனாதிபதிகள் வாஷிங்டன், ஜெபர்சன், ரூஸ்வெல்ட், ஜான் எஃப். கென்னடி மற்றும் டுவைட் ஐசன்ஹோவர் ஆகியோரின் மேற்கோள்களும் உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்து: 18 தொழிலாளர்கள் பலி, 24 பேர் சிக்கினர்</title><link>https://www.maalaimalar.com/news/world/coal-mine-blast-in-pakistan-kills-at-least-18-miners</link><comments>https://www.maalaimalar.com/news/world/coal-mine-blast-in-pakistan-kills-at-least-18-miners#comments</comments><guid isPermaLink="false">83bc3db9-b639-4e72-a82f-67de523c5069</guid><pubDate>Thu, 30 Jul 2026 23:50:11 +0000</pubDate><atom:updated>2026-07-30T23:50:11.256Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,நிலக்கரி சுரங்கம்,coal mine</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/dd26bsng/File-Pic-explosion.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/dd26bsng/File-Pic-explosion.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/coal-mine">நிலக்கரி சுரங்கம்</a> ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; மேலும் 24 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். உயிருக்கு ஆபத்தான சூழலில் அவர்கள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் கருதும் நிலையில், மீட்பு குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p><p>நேற்று (வியாழக்கிழமை) நிகழ்ந்த இந்த <a href="https://www.maalaimalar.com/topic/explosion">வெடிவிபத்து</a>, மீத்தேன் வாயு தேங்கியதால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது பலூசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டாவின் புறநகர் பகுதியில் நிகழ்ந்ததாக அரசு சுரங்க ஆய்வாளர் கனி பலோச் தெரிவித்தார்.</p><h2>மீட்பு பணிகள்:</h2><p>விபத்து நடந்த சில மணிநேரங்களுக்கு பிறகு முதலில் ஏழு தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன; பின்னர் அவசரக்கால மீட்பு குழுவினர் மேலும் 11 உடல்களை கண்டெடுத்ததாக அதிகாரிகளும் மாகாண பேரிடர் மேலாண்மை அமைப்பும் தெரிவித்தன.</p><p>சிக்கியுள்ள அனைத்து தொழிலாளர்களும் கண்டறியப்படும் வரை மீட்பு பணிகள் தொடரும் என்று கூறிய பலோச், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.</p><p>"மீத்தேன் வாயு வெடிப்புகளுக்கு பிறகு உயிருடன் யாரையாவது கண்டறிவதற்கான வாய்ப்புகள் குறைவு; ஏனெனில் ஆக்சிஜன் அளவு பூஜ்ஜியமாக குறைந்துவிடுகிறது. மேலும் மீட்பு குழுவினரும் சுரங்கத்திற்குள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே முன்னேறிச் செல்கின்றனர்," என்று பலோச் கூறினார்.</p><h2>இழப்பீடு:</h2><p>உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்வதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும், அதேவேளையில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள் பதற்றத்துடன் தகவலுக்காகக் காத்திருப்பதாகவும் பலோச் தெரிவித்தார்.</p><p>மீட்புக் குழுவினர் மிகவும் கடினமான சூழலில் பணியாற்றி வருவதாக பலூசிஸ்தான் மாகாண சுரங்க மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் ஷோயப் நோஷர்வானி கூறினார். தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் மாகாண அரசு முழு வீச்சில் ஈடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார்.</p><p>பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்த நோஷர்வானி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் 5,00,000 பாகிஸ்தான் ரூபாயை இழப்பீடாக மாகாண அரசு வழங்கும் என்று அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: வட்டு எறிதலில் வெண்கலம் வென்றார் சீமா கலிராம்னா</title><link>https://www.maalaimalar.com/sports/cwg-2026-seema-kaliramna-wins-discus-throw-bronze</link><comments>https://www.maalaimalar.com/sports/cwg-2026-seema-kaliramna-wins-discus-throw-bronze#comments</comments><guid isPermaLink="false">5e462b29-901e-412c-a395-328f3f9ea5a9</guid><pubDate>Thu, 30 Jul 2026 23:09:25 +0000</pubDate><atom:updated>2026-07-30T23:09:25.801Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Seema Kaliramna,சீமா காலிராம்னா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/q5j1jd7c/Seema-Kaliramna.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seema Kaliramna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/q5j1jd7c/Seema-Kaliramna.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் சீமா கலிராம்னா தொடர்ச்சியாக மூன்று முறை தவறு செய்தபோதிலும், அவரது மூன்றாவது முயற்சியில் 58.65 மீட்டர் தூரம் எறிந்ததே வெண்கல பதக்கத்தை வெல்ல போதுமானதாக இருந்தது. அதே நேரத்தில், மற்றொரு இந்திய வீராங்கனையான நிதி ராணி <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த்</a> போட்டிகளில் நான்காவது இடத்தை பிடித்தார். </p><p>சீமா தனது நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது முயற்சிகளில் தவறு செய்து, பதற்றமான இறுதி பகுதியை எதிர்கொண்டார். இருப்பினும், அவரது மூன்றாவது சுற்று முயற்சி வெண்கல பதக்கத்தைத் தக்கவைக்க போதுமானதாக அமைந்தது. கேமரூனின் மோனி நோரா ஆதிம் வெண்கல பதக்கத்தை கைப்பற்ற ஒரு இறுதி வாய்ப்பை பெற்றார், ஆனால் தேவையான தூரத்தை எட்ட தவறி, தனது கடைசி முயற்சியில் 11.18 மீட்டர் மட்டுமே எறிந்தார்.</p><h2>முனைவர் பட்ட படிப்பு:</h2><p>இதனால், சீமா நிதியை முந்தி பதக்க மேடையில் இடம்பிடித்தார். ஜமைக்காவின் சமந்தா ஹால், போட்டிகளிலேயே அதிகபட்சமாக 61.66 மீட்டர் தூரம் எறிந்து தங்க பதக்கத்தை வென்றார். கனடாவின் ஜூலியா டங்க்ஸ் 60.67 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.</p><p>27 வயதான சீமா, தாய்மைக்கு பிறகு மீண்டும் போட்டிக்கு வெற்றிகரமாக திரும்பி, 2025 தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்றார். அவர் முனைவர் பட்ட படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.</p><p>நிதி 53.19 மீட்டர் தூரம் எறிந்து இந்தியாவின் பயணத்தை தொடங்கினார், ஆனால் உடனடியாக நைஜீரியாவின் ஒபியாகேரி பமீலா அமாயேச்சி (53.68 மீ) மற்றும் உகாண்டாவின் மோனி நோரா ஆதிம் (55.37 மீ) ஆகியோரால் முந்தப்பட்டார். இதற்கிடையில், சீமா தனது வட்டு வலைக்குள் சென்றதால், ஒரு ஃபவுலுடன் தனது பயணத்தை தொடங்கினார்.</p><h2>முன்னிலை:</h2><p>முதலில் 58.21 மீட்டர் தூரம் எறிந்து டங்க்ஸ் முதலிடத்திற்கு முன்னேறியதை தொடர்ந்து, ஹால் 59.27 மீட்டர் தூரம் எறிந்து முன்னிலையை கைப்பற்றினார். நிதி இரண்டாவது சுற்றில் 55.67 மீட்டர் தூரம் வலுவாக எறிந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார், ஆனால் சீமா இரண்டாவது சுற்றில் 57.32 மீட்டர் தூரம் வட்டு எறிந்து தனது சக வீராங்கனையை விரைவில் முந்தினார்.</p><p>டங்க்ஸ் தனது தூரத்தை 60.67 மீட்டராக உயர்த்தி வெள்ளிப் பதக்கத்திற்கான தனது பிடியை வலுப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, பாதிப் போட்டி முடிவில் சீமா தனது தூரத்தை 58.65 மீட்டராக அதிகரித்து, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டார்.</p><p>ஹால் நான்காவது சுற்றில் 60.95 மீட்டர் தூரம் எறிந்து தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தினார், பின்னர் ஐந்தாவது சுற்றில் தனது சிறந்த எறிதலான 61.66 மீட்டர் மூலம் தங்கப் பதக்கத்தை வென்றார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய லவ்பிரீத் சிங்</title><link>https://www.maalaimalar.com/sports/lovepreet-bags-silver-after-games-record-in-snatch-at-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/sports/lovepreet-bags-silver-after-games-record-in-snatch-at-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">52c408d8-f4ee-41ed-be29-f41230a5ea79</guid><pubDate>Thu, 30 Jul 2026 22:23:34 +0000</pubDate><atom:updated>2026-07-30T22:23:34.860Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Lovepreet Singh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/x586xk8v/Lovepreet-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lovepreet Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/x586xk8v/Lovepreet-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்க எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகின்றனர். தற்போது வரை 17 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் பிரகாசமாகி இருக்கிறது.</p><p>தேசிய சாதனையாளரான லவ்பிரீத் சிங், ஸ்னாட்ச் பிரிவில் காமன்வெல்த் விளையாட்டு சாதனை படைத்த போதிலும், ஆடவர் +110 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கத்தையே வென்றார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய பளுதூக்கு வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர்.</p><h2>388 கிலோ:</h2><p>அமிர்தசரஸை சேர்ந்த 28 வயதான இவர், ஸ்னாட்ச் பிரிவில் விளையாட்டு சாதனையாக 176 கிலோவையும், அதை தொடர்ந்து கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 212 கிலோவையும் தூக்கி, மொத்தமாக 388 கிலோவை எட்டினார்.</p><p>இருப்பினும், நியூசிலாந்தின் டேவிட் ஆண்ட்ரூ லிட்டி, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் காமன்வெல்த் விளையாட்டு சாதனையாக 223 கிலோவை தூக்கி, இந்தியரை முந்தி, மொத்தமாக 389 கிலோவுடன் தங்க பதக்கத்தை வென்றார். ஆண்ட்ரூ லிட்டி ஸ்னாட்ச் பிரிவில் 166 கிலோவை மட்டுமே தூக்கியிருந்தார்.</p><p>இங்கிலாந்தின் ஆண்ட்ரூ கிரிஃபித்ஸ், ஸ்னாட்ச் பிரிவில் 165 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 191 கிலோவும் என மொத்தமாக 356 கிலோவை தூக்கி வெண்கல பதக்கத்தை வென்றார்.</p><h2>லவ்பிரீத் சிங் பின்னணி:</h2><p>பஞ்சாபின் எல்லை மாவட்டமான அமிர்தசரஸில் உள்ள பால் சிக்கந்தர் கிராமத்தை சேர்ந்த லவ்பிரீத், ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை ஒரு தையல்காரர், அதே சமயம் அவரது தாத்தா காய்கறிகள் விற்று பிழைப்பு நடத்தினார். குடும்ப தொழிலை விடுத்து விளையாட்டை தொடருமாறு குடும்பத்தினரால் ஊக்குவிக்கப்பட்ட அவர், தனது 13வது வயதில் DAV மைதானத்தில் பளுதூக்குதலை தொடங்கினார். அன்று முதல் இந்தியாவின் முன்னணி ஹெவிவெயிட் பளுதூக்கு வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.</p><p>"ஸ்னாட்ச் பிரிவில் தங்கம் வெல்வேன் என்று நினைத்தேன், ஆனால் அது கடவுளின் கையில் இருந்தது. கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் எனது இறுதி முயற்சியில் என்னால் பளு தூக்க முடியவில்லை என்பதில் சற்று ஏமாற்றம்தான், பயிற்சியில் இதைவிட அதிகமாக நான் பளு தூக்கியுள்ளேன்," என்று வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு லவ்பிரீத் சிங் கூறினார்.</p><p>பஞ்சாப் பளுதூக்கு வீரரான இவர், ஸ்னாட்ச் பிரிவில் மிக சிறந்த ஃபார்மில் இருந்தார். முதலில் 168 கிலோவை எளிதாக தூக்கி, பின்னர் சிரமமின்றி பளுவை 173 கிலோவாக உயர்த்தினார்.</p><p>பின்னர், தனது மூன்றாவது முயற்சியில் பிழையின்றி 176 கிலோவை தூக்கி, விளையாட்டு போட்டி சாதனையை முறியடித்தார். இதன் மூலம் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 10 கிலோ முன்னிலையுடன் வலுவான தொடக்கத்தை பெற்றார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதில் இருந்து 16 இந்தியர்கள் உயிரிழப்பு: மத்திய அரசு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/16-indians-have-lost-lives-since-conflict-began-in-middle-east-this-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/16-indians-have-lost-lives-since-conflict-began-in-middle-east-this-year#comments</comments><guid isPermaLink="false">87b4e77e-29e8-4278-82f7-669dcab8733d</guid><pubDate>Thu, 30 Jul 2026 21:52:44 +0000</pubDate><atom:updated>2026-07-30T21:52:44.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>indians,இந்தியர்கள்,மத்திய கிழக்கு,Middle East</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/3phie3xe/middle-east-conflict.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/3phie3xe/middle-east-conflict.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கிழக்கில் இந்த ஆண்டு மோதல் தொடங்கியதில் இருந்து, 10 மாலுமிகள் உட்பட 16 <a href="https://www.maalaimalar.com/topic/indians">இந்தியர்கள்</a> உயிரிழந்துள்ளதாக அரசு நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்தது.</p><p>மாநிலங்களவையில் சி.பி.ஐ.(எம்) எம்.பி. ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இதனை தெரிவித்தார்.</p><p>மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலால் கொல்லப்பட்ட, காயமடைந்த, சிக்கிக்கொண்ட அல்லது வெளியேற்றப்பட்ட இந்திய மாலுமிகள் மற்றும் பிற இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் கேட்கப்பட்டிருந்தது.</p><h2>இந்தியர்கள் உயிரிழப்பு:</h2><p>"மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதில் இருந்து, 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் அங்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 75 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர் (ஐக்கிய அரபு அமீரகத்தில் 32 பேர்; ஓமனில் 24 பேர்; கத்தாரில் நால்வர்; குவைத்தில் 13 பேர்; சவுதி அரேபியாவில் ஒருவர்; மற்றும் இஸ்ரேலில் ஒருவர்)," என்று சிங் கூறினார்.</p><p>தாக்குதல்கள் தொடர்பில்லாத தனிப்பட்ட விபத்து ஒன்றில், கத்தாரில் உள்ள ராஸ் லஃபான் எரிவாயு நிலையத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு கொண்டுவருவதற்காக, சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளுடன் இணைந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.</p><h2>ரூ. 10 லட்சம் இழப்பீடு:</h2><p>காயமடைந்த இந்தியர்களுக்கு உள்ளூர் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை தொடர்ந்து அறிந்தன.</p><p>அத்துடன் குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்துதல், பயண வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பாக இந்தியா திரும்புதல் போன்ற தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கின என்று இணையமைச்சர் கூறினார்.</p><p>"போர் மண்டல சம்பவங்கள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலும், DGMA நலத்திட்டத்தின் கீழ், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. உரிய பரிசீலனை மற்றும் சரிபார்ப்புக்கு பிறகு, பாதிக்கப்பட்ட கடல்சார் பணியாளர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இந்த தொகை அரசால் விரைவாக வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வினாத்தாள் கசிவைத் தடுக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-passes-anti-paper-leak-amendment-bill-with-stricter-punishment</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-passes-anti-paper-leak-amendment-bill-with-stricter-punishment#comments</comments><guid isPermaLink="false">184060a7-913f-4c26-a06a-f89d4617cb3e</guid><pubDate>Thu, 30 Jul 2026 20:15:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T20:15:43.092Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>parliament,பாராளுமன்றம்,exam bill,தேர்வு வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gtyxh7u6/New-Project-2026-07-30T210545.938.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gtyxh7u6/New-Project-2026-07-30T210545.938.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் எதிர்காலமாக திகழும் மாணவர்களின் நலன்களை பாதுகாக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/central-government">அரசு</a>, வினாத்தாள் கசிவை தடுக்கும் சட்டத்தை மேலும் கடுமையாக்கும் மசோதாவை நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.</p><p>'இந்தியா' கூட்டணியை சேர்ந்த பல எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், 'பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா 2026', மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. <a href="https://www.maalaimalar.com/topic/parliment">மக்களவை</a> இந்த மசோதாவை புதன்கிழமையன்று நிறைவேற்றி இருந்தது.</p><h2>பிரதமர் உறுதி:</h2><p>மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே, பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்; அதில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்கும் முக்கிய பணி நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.</p><p>வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வு முறையை மேம்படுத்துவது அவசியமாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.</p><p>மாணவர்களின் எதிர்காலத்துடன் வினாத்தாள் கசிவு தொடர்பான எந்தவொரு கும்பலும் விளையாடாத வகையில் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.</p><h2>ரூ. 10 கோடி அபராதம்:</h2><p>திருத்தப்பட்ட மசோதாவின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.</p><p>திட்டமிட்ட குற்றங்களை பொறுத்தவரை, குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 கோடி ரூபாய்க்கு குறையாத அபராதமும் விதிக்கப்பட வேண்டும் என்று மசோதா முன்மொழிகிறது.</p><h2>அரசு உறுதி:</h2><p>மசோதா மீதான ஏழு மணி நேர விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், பொது தேர்வுகள் வெளிப்படையானதாகவும், நம்பகமானதாகவும், தகுதியின் அடிப்படையில் அமைந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் மாணவர்களின் உண்மையான முயற்சிகள் பாதுகாக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளதாக கூறினார்.</p><p>மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதோடு, பொது தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளை தடுப்பதற்கான சட்ட கட்டமைப்பை இந்த திருத்தங்கள் மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.</p><p>வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் கசிவு, விடைத்தாள்கள் மற்றும் கணினி அமைப்புகளில் முறைகேடு செய்தல், தேர்வு நடைமுறைகளை திரித்தல், போலி இணையதளங்கள் மற்றும் அனுமதி அட்டைகளை உருவாக்குதல் முதல் தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளுக்கு உதவும் திட்டமிட்ட முயற்சிகள் வரை பல்வேறு குற்றங்களை இச்சட்டம் விரிவாக கையாள்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடும்&apos; கும்பல்கள் தப்ப முடியாது: பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-said-wont-spare-gangs-playing-with-future-of-children</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-said-wont-spare-gangs-playing-with-future-of-children#comments</comments><guid isPermaLink="false">8f227b3f-d719-41ae-bc9f-6ba45b8d65a3</guid><pubDate>Thu, 30 Jul 2026 18:48:34 +0000</pubDate><atom:updated>2026-07-30T18:48:34.533Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,paper leaks,பிரதமர் மோடி,வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u448l57y/PM-Modi-17.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u448l57y/PM-Modi-17.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் வினாத்தாள் கசிவு பிரச்சினையை எதிர்கொள்ளும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடுமையான வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். </p><p>இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய வீடியோ பதிவில், பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு என்பது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களுக்கும் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது என்று மோடி கூறினார். </p><p>எனவே, இந்த பிரச்சினையை கையாளும் வகையில் கல்வி முறையில் விரிவான மாற்றங்களை கொண்டுவருவது அவசியமாகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.</p><h2>விட்டுவைக்க மாட்டோம்:</h2><p>இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, "மத்திய அரசும் பல மாநிலங்களும் பல ஆண்டுகளாக வினாத்தாள் கசிவு பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. </p><p>வினாத்தாள் கசிவு கும்பல்கள், வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் யாரையும் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம்," என்று பிரதமர் கூறினார்.</p><p>தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "வினாத்தாள் கசிவு சம்பவங்கள் கட்டுப்பாடின்றி தொடர அனுமதிக்கப்படாது. இந்த பிரச்சினைக்கு எதிரான எங்கள் போராட்டம் எதிர்காலத்திலும் தொடரும்," என்று கூறினார்.</p><h2>மசோதா நிறைவேற்றம்:</h2><p>நாட்டின் எதிர்காலமாக திகழும் மாணவர்களின் நலன்களை பாதுகாக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உறுதிபூண்டுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத்தில் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றம் வியாழக்கிழமை நிறைவேற்றியது.</p><p>'பொது தேர்வுகள் திருத்த மசோதா 2026' இந்தியா (INDIA) கூட்டணியை சேர்ந்த பல எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>24 ஆண்டுகளுக்கு பின் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் - ஐ.சி.சி. அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/2027-odi-world-cup-will-be-played-across-12-venues-featuring-8-in-south-africa</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/2027-odi-world-cup-will-be-played-across-12-venues-featuring-8-in-south-africa#comments</comments><guid isPermaLink="false">f44bac19-4934-43e2-b020-dc4383a351da</guid><pubDate>Thu, 30 Jul 2026 18:08:22 +0000</pubDate><atom:updated>2026-07-30T18:08:22.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ICC,ஐசிசி,2027 ODI World Cup,ஒருநாள் உலகக் கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/6wwu0ijy/2027-ODI.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2027 ODI World Cup Banner]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/6wwu0ijy/2027-ODI.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2027 <a href="https://www.maalaimalar.com/topic/odi-world-cup">ஒருநாள் உலகக் கோப்பை</a> போட்டிகள் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் உள்ள 12 மைதானங்களில் நடைபெறும் என்றும், இதில் தென் ஆப்பிரிக்கா எட்டு மைதானங்களை வழங்கும் என்றும் ஐசிசி அறிவித்தது.</p><p>இந்த முக்கியத்துவம் வாய்ந்த 50 ஓவர் போட்டி தொடர் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. </p><p>முன்னதாக 2003-இல், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய நாடுகள் 8-ஆவது ஆண்கள் <a href="https://www.maalaimalar.com/topic/cricket">கிரிக்கெட்</a> உலகக் கோப்பை தொடரை நடத்தின. </p><h2>பிரம்மாண்ட விழா:</h2><p>ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், தென்னாப்பிரிக்காவின் எட்டு நகரங்கள், ஜிம்பாப்வேயின் மூன்று நகரங்கள் மற்றும் நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹோக் ஆகியவை இப்போட்டித் தொடரின் இணை-நடத்துநர்களாக அறிவிக்கப்பட்டன.</p><p>இந்த முக்கிய நிகழ்வில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான்களான கிரீம் ஸ்மித், மகாயா என்டினி, ஹஷிம் அம்லா, தெம்பா பவுமா மற்றும் ககிசோ ரபாடா ஆகியோருடன் ஜிம்பாப்வேயின் ஹாமில்டன் மசகட்சா மற்றும் நமீபியாவின் ருடால்ஃப் ஜான்சன் வான் வூரென் ஆகியோரும் கலந்துகொண்டனர்.</p><h2>களம் அறிமுகம்:</h2><p><strong><ins>தென் ஆப்பிரிக்கா:</ins></strong> வாண்டரர்ஸ் ஸ்டேடியம் (ஜோகன்னஸ்பர்க்), செஞ்சுரியன் (ஷ்வானே), நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் (கேப் டவுன்), கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானம் (டர்பன்), செயின்ட் ஜார்ஜ் பார்க் (கெபெர்ஹா), மங்காங் ஓவல் (ப்ளோம்ஃபோன்டைன்), போலண்ட் பார்க் (பார்ல்) மற்றும் பஃபலோ பார்க் (கு-கோம்போ சிட்டி).</p><p><strong><ins>ஜிம்பாப்வே:</ins></strong> ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் (ஹராரே), குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (புலவாயோ) மற்றும் புதிதாகக் கட்டப்பட்ட ஃபாலே மோசி-ஓவா-துன்யா சர்வதேச கிரிக்கெட் மைதானம் (விக்டோரியா ஃபால்ஸ்). நமீபியாவில் நடைபெறும் போட்டிகள் நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் (விண்ட்ஹோக்) நடைபெறும்.</p><p>"24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த புகழ்பெற்ற போட்டி தொடர் மீண்டும் ஆப்பிரிக்காவிற்கு வருவது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல். </p><p>இப்பகுதியின் தனித்துவமான பண்புகளான விருந்தோம்பல், ஆர்வம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தி, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகியவை மறக்க முடியாத ஒரு நிகழ்வை வழங்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என்று ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>57 போட்டிகள்:</h2><p>2027 ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் மொத்தம் 57 போட்டிகள் நடைபெறும். புதிய மூன்று-கட்ட வடிவத்தின் மூலம் போட்டிகள் அதிக முக்கியத்துவம் மற்றும் விறுவிறுப்புடன் நடத்தப்பட்டு, ரசிகர்களின் அனுபவம் மேம்படுத்தப்படும்.</p><p>'சூப்பர் சீரிஸ்' சுற்றில், தரவரிசையில் 12 முதல் 14-ஆவது இடங்களில் உள்ள மூன்று அணிகள் 'ரவுண்ட்-ராபின்' முறையில் மோதும்; இதில் வெற்றி பெறும் அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். மொத்தம் 30 போட்டிகளை கொண்ட இந்த சுற்றில் 12 அணிகள் பங்கேற்கின்றன; இவை தலா ஆறு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, 'ரவுண்ட்-ராபின்' முறையில் விளையாடும்.</p><p>ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளும், அத்துடன் இரு குழுக்களிலும் அடுத்த சிறந்த நிலையில் உள்ள அணியும் 'சூப்பர் 7' சுற்றுக்கு முன்னேறும்.</p><p>'சூப்பர் 7' சுற்றில் 21 'ரவுண்ட்-ராபின்' போட்டிகள் நடைபெறும்; இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அரையிறுதியில், 'சூப்பர் 7' சுற்றில் முதலிடம் பிடித்த அணி நான்காம் இடத்தை பிடித்த அணியுடனும், இரண்டாம் இடம் பிடித்த அணி மூன்றாம் இடம் பிடித்த அணியுடனும் மோதும்.</p>]]></content:encoded></item><item><title>சி.ஜே.பி. போராட்டத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த 25 வயது பெண் மீது வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/25-year-old-woman-charged-for-remarks-against-pm-modi-at-paper-leak-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/25-year-old-woman-charged-for-remarks-against-pm-modi-at-paper-leak-protest#comments</comments><guid isPermaLink="false">ce465db2-b232-415d-8b8f-ac9145173c1e</guid><pubDate>Thu, 30 Jul 2026 17:18:52 +0000</pubDate><atom:updated>2026-07-30T17:18:52.932Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/51oztf38/CJP-Protest-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protests]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/51oztf38/CJP-Protest-2.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக <a href="https://www.maalaimalar.com/topic/CJP">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> முன்னெடுத்த போராட்டங்களின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 25 வயது பெண் ஒருவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வழிவகுத்துள்ளது.</p><p>ஜூலை 23-ஆம் தேதியன்று ஜந்தர் மந்தரில் ருச்சிகா சிங் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து, புதன்கிழமை அன்று புகார் அளிக்கப்பட்டது. அவரது கருத்துக்கள் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர்</a> அலுவலகத்தின் கண்ணியத்தை அவமதிப்பதாகவும், பொது அமைதியை குலைக்கக்கூடும் என்றும் புகார்தாரர் குறிப்பிட்டார்.</p><h2>வழக்குப்பதிவு:</h2><p>நொய்டாவில் உள்ள எக்ஸ்பிரஸ்வே காவல் நிலையத்தில், அமைதியை குலைக்கும் வகையில் தூண்டுதல், பொது குழப்பத்தை விளைவிக்கும் அறிக்கைகள் மற்றும் அவதூறு [பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவுகள் 352, 353(1) மற்றும் 356(1)] தொடர்பான பிரிவுகளின் கீழ் ஒரு ஜீரோ முதல் தகவல் அறிக்கை (குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தை பொருட்படுத்தாமல், எந்த காவல் நிலையத்திலும் தாக்கல் செய்யப்படும்) பதிவு செய்யப்பட்டது.</p><p>முதல் தகவல் அறிக்கை பார்லிமென்ட் ஸ்டிரீட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது, அங்கு இந்த விவகாரம் தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும்.</p><h2>கண்டிக்கத்தக்கது:</h2><p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ், "சிங்கின் கருத்துக்கள் தவறாக இருக்கலாம் என்று கூறியபோதிலும், இதுபோன்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.</p><p>நிச்சயமாக, இழிவான தன்மையுடைய ஏதேனும் மொழி பயன்படுத்தப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட நபர் அவருக்கு எதிராக உரிமையியல் அவதூறு மற்றும் குற்றவியல் அவதூறு வழக்குகளை தொடர சுதந்திரம் உண்டு. இருப்பினும், போராட்டக்காரர்களுக்கு எதிராக குற்றவியல் இயந்திரத்தை பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது, மேலும் ஆட்சேபனைக்குரிய எந்தவொரு மொழிக்காகவும் யாரும் தண்டிக்கப்படக்கூடாது.</p><p>அந்த மொழி சரியானது என்று நான் கூறவில்லை. அந்த மொழி தவறாக இருக்கலாம், அது யாருக்காவது ஆட்சேபனைக்குரியதாக இருக்கலாம், ஆனால் அதற்காக அத்தகையவர்களுக்கு எதிராக குற்றவியல் இயந்திரத்தை ஏவுவதற்கு எந்த காரணமும் இல்லை. இது ஒருவித அச்சமூட்டும் விளைவை ஏற்படுத்துகிறது. இது யாருக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாதது:</h2><p>தொடர்ந்து பேசிய சௌரவ் தாஸ், "இளைய தலைமுறையினர் அனைவரும் தங்கள் வார்த்தைகளிலும், பொதுவாக மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் அவமதிப்புகள் மற்றும் வாக்கியங்களிலும் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது முற்றிலும் கூடாது. அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, அது நடக்கவே கூடாது.</p><p>காவல்துறையினரும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் தங்கள் அதிகாரங்களை தவறாக பயன்படுத்த கூடாது என்றும் நாங்கள் கூற விரும்புகிறோம்," என்று மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க தலையீடு இருக்கும்வரை ஹார்மூஸை திறக்கமுடியாது - ஈரான் திட்டவட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/world/hormuz-cannot-be-opened-as-long-as-there-is-us-interference-iran-asserts</link><comments>https://www.maalaimalar.com/news/world/hormuz-cannot-be-opened-as-long-as-there-is-us-interference-iran-asserts#comments</comments><guid isPermaLink="false">9b6b32bc-7586-4ed8-93f8-1664e597d721</guid><pubDate>Thu, 30 Jul 2026 16:29:04 +0000</pubDate><atom:updated>2026-07-30T16:29:04.023Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,ஈரான்,Iran,us,ஹார்முஸ் ஜலசந்தி,Hormuz Strait</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2kugrc74/New-Project-2026-07-30T155402.628.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்க தலையீடு இருக்கும்வரை ஹார்மூஸை திறக்கமுடியாது - ஈரான் திட்டவட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2kugrc74/New-Project-2026-07-30T155402.628.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும், தலையீடுகளும் நீடிக்கும் வரை பன்னாட்டு கப்பல் போக்குவரத்திற்காக<strong> </strong>ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கமுடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. </p><p>“அமெரிக்காவின் மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும், கடல்வழிப் போக்குவரத்தில் அவர்களின் தலையீடும் தொடரும் வரை, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது” என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>ஓமனின் பரிந்துரை நிராகரிப்பு</h2><p>ஹார்மூஸ் நீரிணையை அமைதியான முறையில் இரு நாடுகளும் இணைந்து (50-50 என்ற விகிதத்தில்) நிர்வகிக்கலாம் என்ற அண்டை நாடான ஓமனின் சமரச திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. </p><p>மேலும் முன்பு இருந்ததைப்போல, அதாவது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைப் போல, அனைவருக்கும் தடையற்ற சுதந்திரமான அணுகல் நிலைக்கு ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திரும்பாது என்று ஈரான் மீண்டும் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முன்ஜாமினுக்கு உச்ச நீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜி - கேவியட் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-moves-supreme-court-for-anticipatory-bail-directorate-of-vigilance-and-anti-corruption-files-caveat-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-moves-supreme-court-for-anticipatory-bail-directorate-of-vigilance-and-anti-corruption-files-caveat-petition#comments</comments><guid isPermaLink="false">166c7ac5-6e7f-4db0-9f33-783655edeef2</guid><pubDate>Thu, 30 Jul 2026 16:07:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T16:07:00.264Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,Supreme Court,உச்ச நீதிமன்றம்,DVAC,லஞ்ச ஒழிப்புத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/tc5ct60u/New-Project-2026-07-30T213623.378.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்ஜாமினுக்கு உச்ச நீதிமன்றத்தை நாடிய செந்தில்பாலாஜி - கேவியட் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/tc5ct60u/New-Project-2026-07-30T213623.378.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மனுவிற்கு எதிராக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது. </p><p>தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் எவ்வித இடைக்கால உத்தரவோ அல்லது முன்ஜாமினோ வழங்கிவிடக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. </p><h2>முன்ஜாமினை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்</h2><p>கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக்  நிறுவனத்தின் மதுபான ஒப்பந்தங்கள், பார் டெண்டர்கள் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் ரூ. 17 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறி, செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகன் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை.28ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. </p><p>இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் முக்கிய தகவல்களுக்காக செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்யவேண்டியது அவசியம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><h2>உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு </h2><p>உயர் நீதிமன்றம் முன்ஜாமினைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை நாளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், இவ்வழக்கில் தங்களது தரப்பு வாதத்தை கேட்கும் வரை செந்தில் பாலாஜிக்கு எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மக்களவையிலும் வந்தே மாதர மசோதா நிறைவேற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-bill-passed-in-the-lok-sabha-too</link><comments>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-bill-passed-in-the-lok-sabha-too#comments</comments><guid isPermaLink="false">3f941de1-a435-4dc4-97a5-1fa561764e2b</guid><pubDate>Thu, 30 Jul 2026 15:37:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T15:37:50.316Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,Lok Sabha,Vande Mataram bill,வந்தே மாதர மசோதா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gtyxh7u6/New-Project-2026-07-30T210545.938.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவையிலும் வந்தே மாதர மசோதா நிறைவேற்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gtyxh7u6/New-Project-2026-07-30T210545.938.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026' நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மக்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரும்பட்சத்தில் சட்டமாக நிறைவேறும்.</p><h2>தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து</h2><p>1971-ஆம் ஆண்டின் தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ், தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றிற்கு உள்ள அதே சட்டப் பாதுகாப்பு மற்றும் அந்தஸ்து இனி 'வந்தே மாதரம்' பாடலுக்கும் வழங்கப்படும்.</p><h2>3 ஆண்டுகள் சிறைத்தண்டனை</h2><p>வந்தே மாதரம் பாடல் பாடுவதை வேண்டுமென்றே தடுப்பது, இடையூறு விளைவிப்பது அல்லது அவமதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.</p><h2>எதிர்ப்பு</h2><p>மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். குறிப்பாக திமுக இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. </p>]]></content:encoded></item><item><title>பேரணிக்கு அனுமதி மறுப்பு: ‘போராட்டங்களைப் பார்த்தால் பா.ஜ.க.வைவிட, த.வெ.க.தான் அதிகம் அஞ்சுகிறது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/denial-of-permission-to-dravidar-kazhagam-rally-if-you-look-at-the-protests-it-is-dveka-who-is-more-afraid-than-bjp-mkstals-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/denial-of-permission-to-dravidar-kazhagam-rally-if-you-look-at-the-protests-it-is-dveka-who-is-more-afraid-than-bjp-mkstals-criticism#comments</comments><guid isPermaLink="false">83c469b8-e369-417a-a7ee-f0414322e962</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:57:38 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:57:38.968Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,திராவிடர் கழகம்,dravidar kazhagam,மு.க.ஸ்டாலின்,tvk,M.k. stalin</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8tc411om/New-Project-2026-07-30T202705.675.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இருசக்கர பேரணிக்கு அனுமதி மறுப்பு: ‘போராட்டங்களைப் பார்த்தால் பா.ஜ.க.வைவிட, த.வெ.க.தான் அதிகம் அஞ்சுகிறது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8tc411om/New-Project-2026-07-30T202705.675.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வையும், EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பாக இன்று சென்னை வேப்பேரியில், இருசக்கர வாகன பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.</p><p>வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து இருசக்கர வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இப்பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெரியார் திடலில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். </p><p>இதனைத்தொடர்ந்து இந்த பேரணியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. கடந்த 18ம் தேதியே அனுமதி கேட்டநிலையில், கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது; </p><h2>போராட்டத்தைக் கண்டு பா.ஜ.க.வைவிட த.வெ.க.தான் அதிகம் அஞ்சுகிறது</h2><p>“தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு, பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்? </p><p>திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?</p><p>கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. </p><p>அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, கி.வீரமணியின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>