<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 08 Sep 2026 09:23:53 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2,000 கோடி முறைகேடு: அமைச்சர் ஆதவ்  புகார் - 8 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026#comments</comments><guid isPermaLink="false">271c6b9f-172f-4ef3-bb75-008623eab7d3</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:42:33 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:34:51.980Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/un7xbzuk/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/un7xbzuk/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>என்னை பின்பற்றி என் தொகுதி மக்கள் வருவார்கள், நான் இல்லாமல் போனாலும் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும்.</p><p>சட்டசபையில் முதன்முறையாக பேசிய திருவிக  நகர் எம்எல்ஏ பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பல்லவி பேசினார்.</p><p>போதைப்பொருள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் விளையாட்டு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.</p><p>இதுவரை எத்தனையோ எம்எல்ஏ வந்தார்கள். எங்கள் தொகுதி மாறவில்லை, மாற்றம் கொண்டு வரும் வகையில் செயல்படுவேன் -  பல்லவி</p> <p>வடசென்னையில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எங்கள் தொகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும்.</p><p>வடசென்னையில் பள்ளி மாணவர்கள் போதைப்புழக்கத்தில் அதிகம் பாதிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்  -  பல்லவி</p><p>பூங்கா கட்டுவதை மட்டுமே முந்தைய எம்எல்ஏக்கள் செய்து கொண்டிருந்தனர்.</p><p>மேயரும் அமைச்சரும் எனது தொகுதியில் தான் இருக்கிறார்கள் -  பல்லவி</p> <p>போதைப்பொருள் புழக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது - தவெக எம்எல்ஏ பல்லவி</p> <p>உயர் ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் ஆகியவை மிக முக்கிய பொது சுகாதார பிரச்சனைகள்.</p><p>தமிழ்நாட்டு மக்கள் நாளொன்றுக்கு 7 முதல் 8 கிராம் உப்பு உட்கொள்கின்றனர் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>மக்களிடம் கேட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் பட்டியல் வைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - சி.வி.சண்முகம்</p><p>தமிழகத்தில் மட்டும் மொத்தம் 370 சாதிகள் உள்ள நிலையில் மத்திய அரசின் பட்டியலில் 290 சாதிகள் மட்டுமே உள்ளது.</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் தவெக அரசின் கோரிக்கை</p><p>ரூ.12,000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு, மாநில  அரசுக்கு ஏற்றவாறு சாதிப்பெயரின் பட்டியல் தேவை.</p><p>சமத்துவமான மரியாதையுடன் வாய்ப்பையும் தருவதுதான் சமூக நீதி - அமைச்சர் ஆதவ் </p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>இந்தியாவிலேயே கடந்த 100 வருடங்களாக சமூகநீதிக்கான குரலை எழுப்பும் மாநில அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.</p><p>சமூகநீதிக்காக பிரதமர், முதலமைச்சர் பதவியை இழந்தவர்களின் வழியில் தவெக அரசும் தீர்மானம் நிறைவேற்றுகிறது.</p><p>நான் சார்ந்த சமூகம் ஓபிசி பட்டியலில் இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எடுப்போம் என்று தான் மத்திய அரசு கூறி இருக்கிறது.</p><p>சாதிப்பட்டியலை வைத்துக்கொண்டு கணக்கெடுப்பு நடத்தவும். சாதிப்பட்டியலை டவுன்லோடு செய்து மக்களே பார்க்கும் வசதி தேவை - சி.வி.சண்முகம்</p><p>சுதந்திரத்திற்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு - 4147 சாதிகள் இருந்தன.</p><p>2011-ல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது - சி.வி.சண்முகம்</p><h2>அதிமுக  சி.வி.சண்முகம் உரை</h2><p>நான் கவுண்டர் என கூறுவேன், வன்னியர் குல சத்திரியர் என சான்றிதழில் உள்ளது.</p><p>ஒரே சாதி பல்வேறு பிரிவுகளின் பெயரில் இருக்கிறது.</p><p>கடலூரில் படையாட்சி எனவும் சென்னையில் நாயக்கர் எனவும் கூறிக்கொள்வர்.</p><p>யாதவர்கள் தங்களது சாதி அடையாளத்தை 1931-ல் சரியாக தீர்மானித்துவிட்டனர்.</p><p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிடக்கோரி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தீர்மானம்</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி விவரம் தொடர்பான திறந்தவெளி முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்</p><p>பட்டியலில் உள்ள சாதி அடிப்படையில் மட்டும் பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பதிவேற்றம் செய்யப்பட்ட சாதிகளின் பட்டியலில் இருந்து சாதி விவரத்தை குறிப்பிடும் வகையில் வழிவகை செய்யக்கோரி தீர்மானம்</p><p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பட்ஜெட் அனுமதி இல்லாமலேயே 14-1-2026 அரசாணை மூலம் 2026-27-ம் ஆண்டு பணிகளுக்கு ரூ.2000 கோடி எடுத்துள்ளதாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுக்கப்பட்டது குறித்த விசாரணை தேவை.</p><p>80 பணிகளுக்கு எதிர்கால பட்ஜெட்டில் முன்கூட்டியே ரூ.2,000 கோடி ஒதுக்கியது மிகப்பெரிய தவறு - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்</h2><p>கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி முறைகேடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்.</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுத்துள்ளது திமுக.</p><p>தாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றெண்ணி எதிர்கால பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி முறைகேடு என குற்றச்சாட்டு</p><p>அவையை முடிக்கவிடாமல் திமுகவினர் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?</p><p>முதலமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கு காரணத்தையும் கூறி விட்டேன்.</p><p>தவெக எம்எல்ஏக்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. </p><p>என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்த்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி - சபாநாயகர்</p><h2>சபாநாயகர் உரை</h2><p>திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா?</p><p>சபையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என திமுகவினருக்கு உள்நோக்கம்.</p><p>அவையின் மாண்பு தான் முக்கியம், திமுகவினரை வெளியேற்றியதை தவறாக கருதவில்லை.</p><p>பிற்பகல் 1.30 மணிக்குள்ளாக சட்டசபையை முடிக்க வேண்டும்</p> <p>சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்திருந்த திமுக எம்எல்ஏக்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர்.</p><p>சட்டசபை மாண்பை குலைக்கும் வகையில் செயல்படும் திமுக உறுப்பினர்களை அவை காவலர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு</p><p>திமுக கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் - சபாநாயகர்</p><p>அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்து திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.</p><p>சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்தும், சூழ்ந்து நின்றும் திமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி வருகின்றனர்.</p><p>அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு திமுக உறுப்பினர்கள் வந்துள்ளீர்கள்.</p><p>சட்டசபையை நடத்தவிடாமல் தடைசெய்யும் நோக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர் - சபாநாயகர்</p><p>2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேறுங்கள் - அவை முன்னவர் செங்கோட்டையன்</p><p>சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளி</p><p>நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய எதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை - சபாநாயகர்</p> <p>சட்டசபையில் திமுகவினர் என் அனுமதியின்றி போஸ்டர்களை காட்டினீர்கள்.</p><p>சர்காரியாக கமிஷன் செய்தி பற்றி பலமுறை மாமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.</p><p>மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தி - சபாநாயகர்</p><p>சட்டசபையில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசியபோது ஒரு நிமிடம் கூட திமுகவினர் கவனிக்கவில்லை -சபாநாயகர் குற்றச்சாட்டு</p><p>திமுக ஆட்சியின் மீது சர்காரியா கமிஷனிடம் புகார் அளித்ததே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் தான் - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>திமுக ஆட்சியில் என்னென்ன ஊழல் நடந்தது என்று காட்டும் பொறுப்பு தவெக அரசுக்கு உள்ளது.</p><p>திமுக ஆட்சியில் நடந்தவற்றை ஒவ்வொரு துறையாக கிளீன் செய்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>ஊழல் என்ற புற்றுநோயை திமுக உருவாக்கி உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>மறைந்தவர்கள் பற்றியும் அவையில் இல்லாதவர் பற்றியும் முதலமைச்சர் பேரவையில் பேசுவது நியாயமில்லை - கே.என்.நேரு</p><p>என்னை பேச விடமாட்டார்கள், தவெகவினர் பேசினாலே பயந்து எழுந்து நின்று கூச்சல் போடுவர் - அமைச்சர் ஆதவ்</p><p>எம்ஜிஆரும் அவையில் சர்காரியா கமிஷன் குறித்து பேசி உள்ளதால் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டாம் - செங்கோட்டையன்</p><p>ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்</p><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் தொடர்பான வழக்கிற்கு தான் கைது செய்யப்பட்டார்.</p><p>21-வது அம்ச திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>விசாரணையையோ நீதிமன்றத்தை பற்றியோ நேற்று முதலமைச்சர் விஜய் பேசவில்லை.</p><p>கலைஞர் எங்கெங்கு எல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்காரியாக கமிஷனில் உள்ளது. </p><p>திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம், அது எல்லாம் மிசா வழக்கு ஆகாது.</p> <p>முதலமைச்சர் விஜய் ஆதாரம் இன்றி பேசிய அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது.</p><p>குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது - எ.வ.வேலு</p><p>நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது -  எ.வ.வேலு </p> <p>மிசா சட்டத்தை பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக எதிர்ப்பு </p><p>பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார் - எ.வ.வேலு</p><p>நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.</p><p>அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.</p><p>ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின் - எ.வ.வேலு </p> <h2>சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு உரை</h2><p>பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார்.</p><p>அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார்.</p><p>நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.</p><p>சட்டசபையில் இன்று பொதுத்துறை, அயலக தமிழர் நலன், மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் ஓய்வுக்கால நன்மைகளும், போக்குவரத்து ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது. </p><p>அமைச்சர்கள் செங்கோட்டையன், மரிய வில்சன், பார்த்திபன், தென்னரசு ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>புதுச்சேரி இடைத்தேர்தலில் த.வெ.க.-காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/topnews/tvk-and-the-congress-regarding-the-byelection-what</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/tvk-and-the-congress-regarding-the-byelection-what#comments</comments><guid isPermaLink="false">11051052-6ea5-4049-8286-35a6d4f0704e</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:21:56 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:21:56.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,காங்கிரஸ்,தவெக,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/v3q6nay0/vijayrahul.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/v3q6nay0/vijayrahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>புதுச்சேரி (Puducherry)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி முதல்-மந்திரி  ரங்கசாமி சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><h2><strong>இடைத்தேர்தல்</strong></h2><p>தேர்தலுக்கு பிறகு மங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியில் அவர் தொடர்கிறார். தட்டாஞ்சாவடி தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். இதற்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2><strong>என்.ஆர்.காங்கிரஸ்</strong></h2><p>தேர்தலில் ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக்ஆனந்து போட்டியிட உள்ளார். இதனை முதல்-மந்திரி ரங்கசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விழாவில் அறிவித்தார்.</p><h2><strong>திமுக கூட்டணி</strong></h2><p>கடந்த தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக ரங்கசாமியும், அவரை எதிர்த்து காங்கிரஸ், <a href="https://www.maalaimalar.com/topic/திமுக">தி.மு.க</a>. கூட்டணியில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், த.வெ.க. கூட்டணியில் இடம் பெற்ற நேயம் மக்கள் கழகம் விநாயகம் ஆகியோர் போட்டியிட்டனர்.</p><h2><strong>த.வெ.க.வுக்கு ஆதரவு</strong></h2><p>சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் தவெக ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்கின்றன.</p><h2><strong>முதல்-மந்திரி ரங்கசாமி</strong></h2><p>தமிழகத்தில் த.வெ.க.வுடன் அமைந்துள்ள கூட்டணி புதுச்சேரியிலும் தொடருமா? என கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தேர்தலுக்கு பிறகு புதுவை காங்கிரசாரை த.வெ.க. நிர்வாகிகள் யாரும் சந்திக்கவே இல்லை. ஆனால் புதுச்சேரிக்கு வந்திருந்த த.வெ.க. பொது செயலாளரும், அமைச்சருமான ஆனந்து, முதல்-மந்திரி ரங்கசாமியை சந்தித்து சென்றார்.</p><h2><strong>தமிழக முதலமைச்சர் விஜய்</strong></h2><p>அதுமட்டுமில்லாமல், அமைச்சர் ஆனந்து பிறந்த நாளில் முதல்-மந்திரி ரங்கசாமி, சென்னைக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அதுபோல முதல்-மந்திரி ரங்கசாமி பிறந்தநாளுக்கும் தமிழக முதலமைச்சர் விஜய் போன்மூலம் வாழ்த்து தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பு ரங்கசாமி, விஜய் இடையில் இருந்த நட்பு இப்போதும் தொடர்கிறது. இதனாலேயே புதுச்சேரியில் காங்கிரசை த.வெ.க. தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு அகில இந்திய அளவிலான இந்தியா கூட்டணியில் த.வெ.க. இதுவரை இடம் பெறவில்லை. அதோடு சமீபத்தில் பிரதமர் வேட்பாளராக விஜய்யை த.வெ.க.வினர் முன்னிருத்துவது காங்கிரசில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2><strong>பிரதமர் வேட்பாளர்</strong></h2><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என தமிழக அமைச்சர்கள் கொந்ததளித்தனர். இதனிடையே த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் சமீபத்தில் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் அளித்த பேட்டியில், முதல்-மந்திரி ரங்கசாமி, த.வெ.க.வுக்கு வேட்பாளரைக்கூட விட்டுத் தருவார் என கூறியிருந்தார்.</p><p>அதேநேரத்தில் கடந்த தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட நேயம் மக்கள் கழகம் மீண்டும் போட்டியிட த.வெ.க.விடம் வாய்ப்பு கேட்டுள்ளது. நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகம், தேர்தல் பணியை தொடங்கி செய்தும் வருகிறார்.</p><h2><strong>தட்டாஞ்சாவடி தொகுதி</strong></h2><p>இடைதேர்தலில் த.வெ.க. நேரடியாக போட்டியிட எந்த முனைப்பும் காட்டவில்லை. இதனால் த.வெ.க. ஆதரவு யாருக்கு? என தொண்டர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி. 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.</p><h2><strong>விடுதலை சிறுத்தைகள்</strong></h2><p>இதனால் காங்கிரஸ் களம் இறங்கும் வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. நேயம் மக்கள் கழக வேட்பாளரை த.வெ.க., காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஆதரிக்கலாம் என தெரிகிறது.</p><h2><strong>தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி</strong></h2><p>தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி உடைந்துள்ளது. இதனால் தட்டாஞ்சாவடி இடைதேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மும்முனைப்போட்டி ஏற்படலாம் என கூறப்படுகிறது.</p><h2><strong>என்.ஆர். காங்கிரஸ்</strong></h2><p>ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தன், கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த நேயம் மக்கள் கழகம் விநாயகம் ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தி.மு.க.வில் டாக்டர் நித்தீசும் களத்தில் இறங்கியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மிசா குறித்து பேச முதலமைச்சர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது - பரந்தாமன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-paranthaman-asked-what-standing-cm-vijay-to-speak-about-misa</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-paranthaman-asked-what-standing-cm-vijay-to-speak-about-misa#comments</comments><guid isPermaLink="false">6abad820-07ff-46f9-b19a-0f788dd77f9c</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:17:22 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:17:22.661Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/wjp770yv/paranthaman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paranthamen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/wjp770yv/paranthaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயமா? என்று பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.</p>  <p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி எழுப்பிய 15 கேள்விகளுக்கு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/topnews/tvk-is-running-a-reels-administration-ev-velu">விஜய்</a> பதில் அளிக்கவில்லை.</p> <p>* 13 எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிய நிலையில் முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை. முதலமைச்சர் பதில் அளிப்பதே மரபு.</p><p>* பெண்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்கள் கூட மிசாவில் கைது செய்யப்படுவர் என நிர்மல்குமார் கூறுகிறார்.</p> <p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-what-standing-does-the-chief-minister-have-to-speak-about-misa">மிசா</a> பற்றி பேசுவதற்கு முதலமைச்சர் விஜய்க்கும் அமைச்சர் நிர்மல்குமாருக்கும் எந்த தகுதியும் இல்லை.</p><p>* மிசாவில் கைதானோர் தாக்குதலுக்கு உள்ளானது குறித்த இஸ்மாயில் கமிஷன் பற்றி தெரியுமா?</p><p>* மிசாவில் அரசியல் கைதிகள் கொடுமைக்குள்ளானது பற்றிய ஆணைய அறிக்கையில் தெளிவாக உள்ளது.</p> <p>* முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயமா?</p><p>* ஆதாரம் வேணும், ஆதாரம் வேணும்னு கேட்டீங்களே, போதுமா? நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன் என முதல்வர் வசனம் பேசுகிறார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>‘உருவக்கேலி செய்வதை யாராக இருந்தாலும் ஏற்கமுடியாது’ - முதலமைச்சர் விஜய்யின் செய்கைக்கு பெ.சண்முகம் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/body-shaming-is-unacceptable-whoever-the-person-may-be-pe-shanmugam-condemns-chief-minister-vijays-action</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/body-shaming-is-unacceptable-whoever-the-person-may-be-pe-shanmugam-condemns-chief-minister-vijays-action#comments</comments><guid isPermaLink="false">c37754d5-f50b-4f47-9856-9d45910fbd9e</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:55:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:55:06.631Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,மு.க.ஸ்டாலின்,பெ.சண்முகம்,P Shanmugam,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/iaek3ia8/New-Project-2026-09-08T142242.805.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உருவக்கேலி செய்வதை யாராக இருந்தாலும் ஏற்கமுடியாது’ - முதலமைச்சர் விஜய்யின் செய்கைக்கு பெ.சண்முகம் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/iaek3ia8/New-Project-2026-09-08T142242.805.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். ஆனால் அந்த பதிலுரையில் கேள்விகளுக்கான பதில் இடம்பெறாமல், முழுக்க முழுக்க திமுக மீதான விமர்சனங்களே இருந்தன.</p><p>இந்நிலையில் இதனைக் குறிப்பிட்டு,“சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயல்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpim-shanmugam-clarifies-will-support-for-tvk-continue-for-5-years">பெ.சண்முகம் </a>விமர்சித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><h2>கேள்விக்கான எந்தப் பதிலும் இல்லை</h2><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்டவை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த 'பதிலுரையில்' எந்த பதிலும் இடம் பெறவில்லை.</p><p>மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல. </p><p>முதலமைச்சர் ஆக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும், சிறையில் அடைக்கப்பட்டதும், பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். </p><p>தோழர் பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விபரம் அறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.</p><p>அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும், அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது.</p><h2>உருவக்கேலி</h2><p>உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும். </p><p>சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். </p><h2>யாராக இருந்தாலும்...</h2><p>கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. </p><p>ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழ்நாடு மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பழிக்குப் பழியாக அரங்கேறிய சம்பவம் -  த.வெ.க. பிரமுகர் படுகொலையில் கைதானவர்கள் வாக்குமூலம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionary-murdered-3-school-students-arrested-in-swift-action</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionary-murdered-3-school-students-arrested-in-swift-action#comments</comments><guid isPermaLink="false">f224b1d8-b033-4539-9e99-7355a568d3ac</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:43:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:43:18.198Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Students Arrested,tvk,தவெக பிரமுகர் கொலை,பள்ளி மாணவர்கள் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/h2zjxqqo/arrested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/h2zjxqqo/arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. பிரமுகர் படுகொலை சம்பவத்தில் கல்லூரி மாணவரோடு சேர்ந்து பள்ளி மாணவர்களும் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.</p><p>சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/news/topnews/tvk-is-running-a-reels-administration-ev-velu">த.வெ.க. </a>பிரமுகர்  கண்ணன். கடந்த 5 ந்தேதி இரவு 9 மணியளவில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>அப்போது 2  மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல்,  <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> பிரமுகர் கண்ணனை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியபோது கண்ணனின் நண்பர்கள் கற்களை வீசி தடுக்க முயன்றனர் இருப்பினும் கொலையாளிகள் அவர்களை மிரட்டிவிட்டு கண்ணனை வெட்டி கொன்றனர். </p> <p>இந்தக் கொலை தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும்  பதைபதைப்பை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக  அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்களான ராகேஷ், நரேஷ், ஹரிஹரன், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.</p> <h2>பழி தீர்த்த பயங்கரம்</h2><p>போலீஸ்  விசாரணையில், இந்தக் கொலைக்கு 17 ஆண்டுகால பகையே காரணம் என்பது தெரியவந்தது.</p><p>கடந்த 2009-ம் ஆண்டு பரணியின் பெரியப்பா சிவா, 2016-ல் பரணியின் தந்தை வேலு ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். தனது தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு கண்ணன் தான் முக்கிய காரணம் என்று கருதிய பரணி திட்டம் போட்டு இந்த கொலையை செய்திருப்பது அம்பலமானது. இப்படி பழிக்கு பழியாக கொலை அரங்கேறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. </p> <p>“என் தந்தை மற்றும் பெரியப்பாவைக் கொன்ற அவர், சமீபத்தில் ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு அந்தப் பகுதியில் பெரிய ஆள் போல வலம் வந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை உயிரோடுவிட்டால் மீண்டும் எங்களுக்கு ஆபத்து என்று கருதினேன். அதனால்தான் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக் கட்டினேன். இப்போதுதான் என் தந்தை மற்றும் பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைந்துள்ளது" என வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>3 பள்ளி மாணவர்கள்</h2><p>இதற்கிடையே இந்த கொலை வழக்கில் மேலும் 4  பேர் போலீசில் சிக்கி உள்ளனர் இவர்களில் 3 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர். கல்லூரி மாணவர் பரணியின் நண்பர்களான இவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p> <p>சென்னை மாநகரில் பரபரப்பாக அரங்கேறிய துணிகர கொலை சம்பவத்தில் கல்லூரி மாணவரோடு சேர்ந்து பள்ளி மாணவர்களும் கொலையில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் போலீசார் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  இதைத்தொடர்ந்து கொலையின் முழு பின்னணி குறித்தும் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வேலை வாங்கி தருவதாக பண மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/money-cheating-case-order-issued-to-return-rajendra-balajis-passport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/money-cheating-case-order-issued-to-return-rajendra-balajis-passport#comments</comments><guid isPermaLink="false">323c73d5-c609-4010-9633-f4947f28819a</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:40:59 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:40:59.933Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Rajendra Balaji,ராஜேந்திர பாலாஜி,பண மோசடி வழக்கு,money cheating case</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/14rrd5fo/rajendrabalaji.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ராஜேந்திர பாலாஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜேந்திர பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/14rrd5fo/rajendrabalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் இன்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.</strong></em> </p><p>கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/ராஜேந்திர-பாலாஜி">கே.டி.ராஜேந்திரபாலாஜி</a>  ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2><strong>8 பேர் மீது வழக்கு</strong></h2><p>பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். மேலும் பண மோசடியில் ஈடுபட்டதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு தடையின்றி ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு இருந்தது.</p><p>இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இருந்தபோதிலும் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் இன்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது. </p><p>மேலும் அவர் வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்ற அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாஸ்போட்டை வழங்க முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் உத்தரவு பிறப்பித்தார்.</p>]]></content:encoded></item><item><title>புலிப்பட வருவாயை மறைத்த உத்தமருக்கு மிசாவைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? - தயாநிதி மாறன் காட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-moral-standing-does-the-noble-soulwho-concealed-income-worth-croreshave-to-speak-about-misa-dayanidhi-maran-lashes-out</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-moral-standing-does-the-noble-soulwho-concealed-income-worth-croreshave-to-speak-about-misa-dayanidhi-maran-lashes-out#comments</comments><guid isPermaLink="false">a438ee47-dc91-4585-b7b4-e71485d2a00b</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:34:23 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:34:23.105Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தயாநிதி மாறன்,Dayanidhi Maran,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/srm12zrk/New-Project-2026-09-08T140045.996.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊழலைப் பற்றிப் பேசும் உத்தமருக்கு மிசாவைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? - தயாநிதி மாறன் காட்டம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/srm12zrk/New-Project-2026-09-08T140045.996.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (செப்.8) காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionarys-murder-udhayanidhi-stalin-criticizes-the-state-of-law-and-order">முதலமைச்சர் விஜய்</a>, திமுகமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p>அப்போது மிசா, சர்க்காரியா ஆணையம் உள்ளிட்டவை குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறம் கடுமையான கண்டனங்களை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர்., </p><p>ஊழலைப்பற்றிப் பாடம் எடுக்கும் உத்தமரே! ஊரெங்கும் நடக்கும் கொலைகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன தொடர்பு?</p><p>அமலாக்கத்துறையில் அதிக வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது யார்? அரசியல் காரணமாக அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களையும் முதலமைச்சர் அடுத்த முறை வாசிப்பாரா?</p><h2>உள்ளூர் பத்திரிக்கையாளர்களுக்கே அஞ்சும் ஒருவர்</h2><p>உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் என் தந்தை மறைந்த முரசொலி மாறன். வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர். </p><p>உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சும் ஒரு முதலமைச்சர் மரியாதைக்குரிய முரசொலி மாறனைப் பற்றிப் பேசலாமா?</p><h2>விஜய்யை அவமதித்த காங்கிரஸ் </h2><p>இன்று அவரைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சர், அதே முரசொலி மாறனின் மகனான எனது அழைப்பை ஏற்று, ஜனவரி 2006-இல், அப்போதைய பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, </p><p>“பொங்கல் சிறப்பு தபால் தலை” வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த சமயத்தில், விஜய்மீது வருமானவரி வழக்கு நிலுவையில் உள்ளதால், அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் விஜய்யை மேடையில் ஏற்றக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பினை கடுமையாக தெரிவித்தப்போது, </p><p>உடனடியாக அதற்கு ஆட்சேபனையைத் தெரிவித்து, விஜய்யை மேடையில் நிற்க வைத்து, தபால் தலையை பெறுவதற்கான உரிய மரியாதையை வாதாடி அவருக்கு பெற்றுத் தந்தது முரசொலி மாறன் மகன்தானே?</p><h2>மிசாவை பற்றிப்பேசும் அருகதை முதலமைச்சருக்கு இருக்கிறதா?</h2><p>அந்த தபால் தலையை பெற்றுக் கொண்டு சிரிக்கும்போது, இப்போதைய ஞானோதயம் இல்லாமல் ஞானசூனியமாக இருந்தாரா? முதலில், ஊழலைப் பற்றியோ மிசாவைப் பற்றியோ பேசும் அருகதை இந்த முதலமைச்சருக்கு உள்ளதா? </p><p>போர்பந்தரில் பிறந்தவரின் வாரிசாக தன்னைத் தானே யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது. இந்த வீராதி வீரர் கொடநாட்டில் தனது திரைப்படத்திற்காக, ஒருநாள் முழுவதும் அங்கேயே காத்திருந்து, வீடியோவில் கைகட்டி வாய்பொத்தி முனகியதையும் மறந்துவிடலாகாது.</p><h2>கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால்...</h2><p>கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இப்படித்தான் ஆகஸ்ட் 2026-இல் நடந்த கொலைகளுக்கு எமெர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கையில் பதில் தேட வேண்டியிருக்கும்!</p><p>தேடி முடிக்கும் முன் அடுத்த கொலைகள் நடந்தேறிச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சிறைச்சாலை தாக்குதலுக்கு பதிலடி.. சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 73 பேர் காயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/retaliation-for-prison-attack-73-injured-in-attack-by-houthi-rebels-in-saudi-arabia</link><comments>https://www.maalaimalar.com/news/world/retaliation-for-prison-attack-73-injured-in-attack-by-houthi-rebels-in-saudi-arabia#comments</comments><guid isPermaLink="false">4835fa07-e5ce-4057-a671-4011965f42f3</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:25:46 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:25:46.562Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,சவுதி அரேபியா,Yemen,ஏமன்,Houthi rebels,ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jl3n6h30/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிறைச்சாலை தாக்குதல் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறைச்சாலை தாக்குதல் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jl3n6h30/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் நாட்டில் சிறைச்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில் பதிலடியாக சவுதி அரேபிய பகுதிகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 73 பேர் காயமடைந்துள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">ஏமனின் </a>தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளை <a href="https://www.maalaimalar.com/news/world/houthi-push-to-control-bab-al-mandeb">ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</a> கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அங்கு அவர்கள் தனி அரசை உருவாக்கி நடத்தி வருகின்றனர். </p> <p>இந்நிலையில் ஏமனின் Jouf மாகாணத்தில் உள்ள Al Hazm நகர மத்திய சிறைச்சாலையின் மீது சவுதி அரேபியா நடத்திய விமான தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டதாவும், ஒரு பெண் உட்பட 7 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனீஸ் அல் அஸ்பஹி தெரிவித்துள்ளார்</p><p>தாக்குதலுக்குப் பிறகு கட்டிடம் முற்றிலும் இடிந்ததில், உள்ளே 35 கைதிகளும், தன் கணவரைப் பார்க்க வந்த ஒரு பெண்ணும் சிக்குண்டுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>ஹவுதிக்கள் பதிலடி</h2><p>இதனிடையே ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியர்கள் தங்கள் நாட்டின் மீது நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 73 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. </p><p>ஏமன் எல்லையை ஒட்டியுள்ள சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள சிவிலியன் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக சவுதி தரப்பு தெரிவித்துள்ளது. </p> <p>சவுதி எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அதிகாலையில் தெற்குப் பகுதிகளில் உள்ள பல எரிசக்தித் தளங்கள் தாக்கப்பட்டதில் குடிமக்கள் காயமடைந்ததாகவும், பல இடங்களில் தீப்பற்றியதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.</p><p>ஆனால் ஹவுதிக்கள் இந்த தாக்குதல் குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை.</p><h2>ஹவுதி - சவுதி மோதல்</h2><p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2014ஆம் ஆண்டு ஏமன் தலைநகரான சனா நகரத்தை கைப்பற்றி, அப்போதைய அரசாங்கத்தை வெளியேற்றினர்.</p><p>அதை தொடர்ந்து சவுதி தலைமையிலான கூட்டணி, ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவும், ஈரானின் முக்கிய கூட்டாளியான ஹவுதிக்களை எதிர்த்து போராடவும் தொடங்கியது.</p><p>இதையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் ஏமன் அரசாங்க படைகளுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு போர் ஒப்பந்தம் போடப்பட்டது.</p> <p>அண்மையில் ஹவுதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரத்தில், ஈரான் நாட்டிற்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிரங்க முயன்றது.</p><p>அப்போது ஏமன் அரசாங்கம் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு போடப்பட்டிருந்த போர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.</p><p>இதைத்தொடர்ந்து இவர்களுக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை ஏமனில் உள்ள மேற்கு தைஸ் மற்றும் தெற்கு ஹொடைதா பகுதிகளில் ஹவுதிக்கள் தாக்குதலை நடத்தினர்.</p> <h2>பலி</h2><p>இந்த தாக்குதலில் ஏமன் அரசாங்க படைகள் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையை சேர்ந்த 129 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இதைத்தொடர்ந்து ஏமனின் தென்மேற்கு பகுதியில் ஹவுதிக்கள் மீண்டும் நடத்திய தாக்குதலில், 26 ஏமன் அரசாங்க படையினரும், 31 ஹவுதி கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர்.</p><p>ஏமன் கடற்கரையோர துறைமுக நகரங்களை ஒட்டி அமைந்துள்ள, பாப் அல் மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில், ஹவுதிக்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.</p><p>உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் 24 முதல் இதுவரை நடைபெற்ற மோதல்களில் 1,078 பேர் உயிரிழந்துள்ளனர் .</p><p>கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கிய தீவிர மோதலின்பின் 21,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>பாப் அல் மண்டேப் ஜலசந்தி</h2><p>சூயஸ் கால்வாய்க்கு செல்லும் கப்பல்களுக்கு பாப் அல் மண்டேப் ஜலசந்தி ஒரு முக்கியமான கடல்வழி தளமாக உள்ளது. உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 10 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.</p><p>அமெரிக்கா ஈரான் போர் தொடங்கிய பிறகு, சவுதி அரேபியா பல மாதங்களாக எண்ணெய் ஏற்றுமதி செய்ய இந்த பாப் அல் மண்டேப் ஜலசந்தியை பயன்படுத்தி வருகிறது.</p> <p>மார்ச் 2026 முதல் ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்டதன் விளைவாக ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ள உலகளாவிய பொருட்களின் விலையை, பாப் அல் மண்டேப் பகுதியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டால் அது மேலும் அதிகரிக்க செய்யும் என அஞ்சப்படுகிறது.</p><p>ஹவுதிக்கள் அந்த துறைமுக நகரத்தை மீண்டும் கைப்பற்றி, செங்கடல் கடற்கரையோரமுள்ள முக்கிய பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால், அது செங்கடலில் நடைபெறும் கடற்படை போக்குவரத்தை கட்டுப்படுத்த அவர்களுக்கு வழிவகை செய்யும்.</p> ]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜி வழக்கு: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் மாநில அரசுக்கே முழு அதிகாரம்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-case-tamil-nadu-govt-affidavit-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-case-tamil-nadu-govt-affidavit-supreme-court#comments</comments><guid isPermaLink="false">290cf31d-9ef4-47d0-b3fa-301c61430c19</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:24:07 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:24:07.722Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Supreme Court,செந்தில் பாலாஜி வழக்கு,Senthil Balaji case,உச்சநீதிமன்றம்,Senthil Murugan,Washington Dhanasekaran,வி.செந்தில் முருகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/vbg23aka/senthil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil Balaji Case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/vbg23aka/senthil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசுத் தரப்பு வழக்கறிஞர் மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதியை நிலைநாட்டவே நியமிக்கப்படுகிறாரே தவிர, குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பயனளிக்கும் வகையில் நியமிக்கப்படுவதில்லை</p><p>முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில், சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-extends-stay-on-announcement-of-by-elections-for-5-constituencies">தமிழக போக்குவரத்துத் துறையில் </a>வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வாஷிங்டன் தனசேகரன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக வி.செந்தில் முருகன் புதிய சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.</p><h2>த<strong>மிழக அரசு விளக்கம்</strong></h2><p>இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில், அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கும் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதில் உரிமை கோர அவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. </p><p>அரசுத் தரப்பு வழக்கறிஞர் மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதியை நிலைநாட்டவே நியமிக்கப்படுகிறாரே தவிர, குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பயனளிக்கும் வகையில் நியமிக்கப்படுவதில்லை. எனவே, சிறப்பு வழக்கறிஞரைத் தேர்வு செய்வதும் நியமிப்பதும் முற்றிலும் மாநில அரசின் நிர்வாக அதிகாரத்திற்குட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>வழக்கு விசாரணை<strong>யின் மு</strong>ன்னேற்றம்</h2><p>புதிய சிறப்பு வழக்கறிஞராக வி.செந்தில் முருகன் நியமிக்கப்பட்ட பிறகு, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்த பிரமாணப் பத்திரத்தில் விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு தொடர்பாகத் தமிழக அரசு தன் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, வழக்கு அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 23-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என் இசையால் உயிர் பெற்ற குழந்தை: இளையராஜா நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ilaiyaraaja-says-child-brought-to-life-by-my-music</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ilaiyaraaja-says-child-brought-to-life-by-my-music#comments</comments><guid isPermaLink="false">3d7ca5dc-0372-4158-8b82-1d9852176830</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:18:57 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:18:57.262Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,ilaiyaraaja,மஞ்சணத்தி திரைப்படம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8zks1dm/ilaiyaraaja.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்த காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்த காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8zks1dm/ilaiyaraaja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரிய வந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம். அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. மஞ்சணத்தி படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்றார்.</strong></em></p><p>மாரி செல்வராஜ் இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/இளையராஜா">இளையராஜா</a> இசையமைப்பில் உருவாகும் புதிய படம் ‘மஞ்சணத்தி’. படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, “காக்கா முட்டை”  விக்னேஷ், “வாழை” படப்புகழ் ராகுல் மற்றும் ராகவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.</p><p>படப்பிடிப்பை இளைய ராஜா கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.</p><h2><strong>காடுமேடுகளில்</strong></h2><p>விழாவில் இளையராஜா பேசியதாவது:-</p><p>நீங்கள் அனைவரும் காடுமேடுகளில் பிறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். நானும் காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன்தான். அங்கிருந்து எப்படியோ இசையைக் கற்றுக்கொண்டு முன்னேறினேன். இசையைச் சொல்லித்தர எனக்கு அருகில் யாரும் இல்லை. ஏதோ ஒரு தாகத்தோடு நானே இசையைக் கற்றுக்கொண்டேன்.</p> <p>உலகிலுள்ள மிகப்பெரிய மேதைகளெல்லாம் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது. அதனால் நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இசை எனக்குள் அதுவாகவே வந்தது. எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இருக்கிறதே, அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும்.”</p><h2><strong>உயிர்பெற்ற குழந்தை</strong></h2><p>ஜெர்மனியில் இருந்த ஒரு தமிழ் தம்பதியின் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் நின்று விட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது என் இசையை கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரிய வந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம். அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. மஞ்சணத்தி படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளப் பேரழிவு: சேமிப்பு உண்டியலை வழங்கி மனங்களை வென்ற 10 வயது இந்திய சிறுவன்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-tragedy-10-year-old-indian-boy-wins-hearts-with-savings-donation</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-tragedy-10-year-old-indian-boy-wins-hearts-with-savings-donation#comments</comments><guid isPermaLink="false">b594257e-6b7b-478d-b2ad-861216b3d46e</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:05:47 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:05:47.533Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாள நிலச்சரிவு,nepal flood,நேபாள வெள்ளப்பெருக்கு,நேபாள வெள்ளப் பேரழிவு,Nepal flood disaster,Nepal Donating</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/hags6arm/nepal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Nepal Donating ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/hags6arm/nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யூடியூப் மற்றும் செய்திகளில் நேபாள வெள்ளத்தின் சீற்றத்தையும், அங்கு வீடுகளை இழந்து தவிக்கும் மக்களின் கண்ணீரையும் பார்த்த அல்ஃபாஸ், மிகுந்த வேதனையடைந்தான்.</p><p>நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.<a href="https://www.maalaimalar.com/news/world/tibet-glacier-collapse-disaster-chinese-researchers-shocking-report"> நிலச்சரிவு</a> மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களின் துயரச் செய்திகள் உலகெங்கிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய சோகமான சூழ்நிலையிலும், மனிதநேயத்தின் உன்னதத்துவத்தை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.</p><h2>துய<strong>ரம் கண்டு</strong> உருகிய இளம் மனம்</h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பெட்டியா கிராமத்தைச் சேர்ந்த இம்ரான் அலி சித்திக்கியின் 10 வயது மகன் அல்ஃபாஸ் ஷேக். ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுவன், கடந்த ஒரு ஆண்டாகத் தனது சொந்தத் தேவைகளுக்காகச் சிறுகச் சிறுக உண்டியலில் பணம் சேமித்து வந்துள்ளான்.</p><p>யூடியூப் மற்றும் செய்திகளில் நேபாள வெள்ளத்தின் சீற்றத்தையும், அங்கு வீடுகளை இழந்து தவிக்கும் மக்களின் கண்ணீரையும் பார்த்த அல்ஃபாஸ், மிகுந்த வேதனையடைந்தான். தான் சேமித்து வைத்த தொகையைக் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தனது எண்ணத்தை வீட்டாாரிடம் தெரிவித்தான். சிறுவனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினரும் அவனுக்கு முழு ஆதரவு அளித்தனர்.</p><h2><strong>மாவட்ட ஆ</strong>ட்சியரிடம் ஒப்படைக்கப்பட்ட  உண்டியல்</h2><p>தனது தந்தையுடன் குஷிநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற அல்ஃபாஸ் ஷேக், தான் ஆசையோடு சேமித்து வைத்திருந்த பண உண்டியலை மாவட்ட ஆட்சியர் மகேந்திர சிங் தன்வாரிடம் ஒப்படைத்தான். தான் சேமித்த தொகை நேபாளத்தில் துயருறும் மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தான். </p><p>சிறுவனின் இச்செயலைக் கண்டு நெகிழ்ந்த மாவட்ட ஆட்சியர், உண்டியலில் உள்ள தொகையை விடச் சிறுவனின் உன்னதமான எண்ணமே முதன்மையானது எனக் கூறி, அதை உடனடியாக எண்ணாமல் மதிப்பளித்தார். இந்த உதவித்தொகை உரிய அரசு வழிமுறைகள் மூலம் நேபாள நிவாரண நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.</p><p>சிறுவன் அல்ஃபாஸின் இந்த அன்பு மற்றும் கருணைமிக்க செயல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. "கடவுள் இந்தச் சிறுவனை ஆசீர்வதிக்கட்டும்", "உண்மையான மனிதநேயம் எல்லைகளைத் தாண்டியது" எனப் பலரும் சிறுவனுக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கத் தான் சேமித்த முழுப் பணத்தையும் தயங்காமல் வழங்கிய சிறுவன் அல்ஃபாஸ் ஷேக், எதிர்காலத்தில் தான் என்னவாக வளர்ந்தாலும் ஆபத்தில் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து உதவுவதே தனது லட்சியம் எனக் கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளான்.</p>]]></content:encoded></item><item><title>13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: நிரந்தரக் கிடங்குகளை  விரைந்து அமைக்க வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-13-lakh-bags-of-paddy-damaged-by-rain-permanent-warehouses-must-be-constructed-quickly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-13-lakh-bags-of-paddy-damaged-by-rain-permanent-warehouses-must-be-constructed-quickly#comments</comments><guid isPermaLink="false">e8bc29b7-d7a6-4e82-822a-1a5d885b9d8b</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:58:02 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:58:02.046Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,நெல் மூட்டைகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/3nw9yxig/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/3nw9yxig/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக  பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மழையில் நனைந்து முளைத்து விட்டன</strong></h2><p>செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த  சுமார் 13 லட்சம் <a href="https://www.maalaimalar.com/topic/நெல்-மூட்டைகள்">நெல் மூட்டைகள்</a> கடந்த சில நாள்களில்  பெய்த மழையில் நனைந்து சேதமடைந்திருக்கின்றன.  அவற்றில் பல்லாயிரம் நெல் மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழுகி விட்டன.  பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை அரசு நிர்வாகம் பொறுப்பின்றி மழையில் நனைய விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சமத்துவபுரத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள  திறந்தவெளிக் கிடங்கில் 50 ஆயிரம் டன், அதாவது 12.50 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டன. அதே செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த புள்ளேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிடங்கிலும் பல்லாயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்து விட்டன. கடலூர் மாவட்டம்  விருத்தாசலத்தை அடுத்த இராஜேந்திரன்பட்டினம் பகுதியில் உள்ள திறந்தவெளிக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டன.</p><p>மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நேற்றோ அதற்கு முதல் நாளோ கொள்முதல் செய்யப்பட்டவை அல்ல. பல வாரங்களுக்கு முன் கொள்முதல் செய்யப்பட்டு  சேமித்து வைக்கப்பட்டவை தான். அவை உரிய காலத்தில் கிடங்குகளுக்கோ, அரவை ஆலைகளுக்கோ கொண்டு செல்லப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உரிய காலத்தில் அங்கிருந்து  அகற்றாத அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.</p><h2><strong>நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும்</strong></h2><p>வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து  சேதமடைகின்றன.</p><p>இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தான். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 80 லட்சம் டன் நெல் உள்பட மொத்தம் 120 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் அதிகபட்சமாக 2025-26ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  நெல் கொள்முதலை மேற்கொள்ளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் வெறும் 18 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட  கிடங்குகள் தான் உள்ளன. இது தமிழ்நாட்டில் விளையும் உணவு தானியங்களில்  வெறும் 15% மட்டும் தான். இது போதுமானதல்ல.</p><p>மழையில் நனைந்து சேதமடைந்த  நெல் மூட்டைகளை பயன்படுத்த முடியாது. அவற்றை அரவை செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்கினால் துர்நாற்றம் எடுத்து பயன்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கும். இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகும். நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக  பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்- த.வெ.க. எம்.எல்.ஏ.</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-pallavi-says-please-forgive-me-if-i-have-spoken-inappropriately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-pallavi-says-please-forgive-me-if-i-have-spoken-inappropriately#comments</comments><guid isPermaLink="false">c9100d1f-4daf-481f-9ddf-70655808438d</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:45:52 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:45:52.769Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk,பல்லவி,Pallavi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9xsifhwk/pallavi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி]]></media:title><media:description type="html"><![CDATA[ திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9xsifhwk/pallavi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் முதன்முறையாக பேசிய பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி பேசியதாவது:-</p><p>* போதைப்பொருள் புழக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது.</p><p>* பூங்கா கட்டுவதை மட்டுமே முந்தைய எம்எல்ஏக்கள் செய்து கொண்டிருந்தனர்.</p><p>* மேயரும் அமைச்சரும் எனது தொகுதியில் தான் இருக்கிறார்கள்.</p><p>* வடசென்னையில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எங்கள் தொகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும்.</p><p>* வடசென்னையில் பள்ளி மாணவர்கள் போதைப்புழக்கத்தில் அதிகம் பாதிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்.</p><p>* போதைப்பொருள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் விளையாட்டு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.</p><p>* இதுவரை எத்தனையோ எம்எல்ஏ வந்தார்கள். எங்கள் தொகுதி மாறவில்லை, மாற்றம் கொண்டு வரும் வகையில் செயல்படுவேன்.</p><p>* என்னை பின்பற்றி என் தொகுதி மக்கள் வருவார்கள், நான் இல்லாமல் போனாலும் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்றார். </p><p>இதனிடையே, சட்டசபையில் முதன்முறையாக பேசிய பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>&apos;இயக்குநர் இமயம்&apos; பாரதிராஜாவின் கடைசி காவியம்: &apos;புலவர்&apos; திரைப்படத்தின் டீசர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/pulavar-teaser-bharathirajas-last-film-unveiled</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/pulavar-teaser-bharathirajas-last-film-unveiled#comments</comments><guid isPermaLink="false">d4830ef6-7b38-426d-9a92-b451e7f28dc2</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:43:56 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:43:56.257Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Raichal Rebecca,பாரதிராஜா,BharathiRaja,Pulavar,புலவர்,Murugaiya,Bharathiraja Last Movie</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ldkthwww/Pulavar-Teaser" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pulavar Teaser]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ldkthwww/Pulavar-Teaser?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் கமழும் கதைகளையும், எதார்த்தமான மனிதர்களையும் திரையில் உயிர்ப்பித்துத் தனக்கென ஒரு தனி சகாப்தத்தை உருவாக்கியவர் "<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE">இயக்குநர் இமயம்" பாரதிராஜா.</a></p><p>பாரதிராஜா இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் பல படங்களில் தனது முத்திரையைப் பதித்த அவர், இந்த ஆண்டு ஜூன் 10-ந் தேதி காலமானார். </p><p>அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரையுலகிற்கும் பேரிழப்பாக அமைந்த நிலையில், அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து மறைந்த அவரது கடைசித் திரைப்படமான <strong>‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/first-look-video-of-bharathirajas-pulavar-785560">புலவர்</a>’</strong> படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.</p><h2><strong>'புலவர்' ரிலீஸ் தேதி</strong></h2><p>பாரதிராஜாவின் இறுதித் திரைப்படைப்பான 'புலவர்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 25-ந் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>டீசர் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்பார்ப்பு</strong></h2><p>தற்போது வெளியாகியுள்ள ‘புலவர்’ படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p>பாரதிராஜாவின் கம்பீரமான திரைத் தோற்றத்தையும் எதார்த்தமான நடிப்பையும் மீண்டும் ஒருமுறை திரையில் காணும் அரிய வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.</p><p>பாரதிராஜாவின் கடைசித் திரைப்படம் என்பதால், இப்படம் ரசிகர்களுக்கு ஒரு சாதாரணத் திரைப்படமாக இல்லாமல், அவர் திரையில் தோன்றும் கடைசி நினைவாகவும், அவருக்குச் செலுத்தும் உன்னதமான அஞ்சலியாகவும் அமையவுள்ளது.</p><p>இதனால் இப்படத்திற்கு இயல்பாகவே கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம்</strong></h2><p>இத்திரைப்படத்தை இயக்குநர் முருகையா மிகவும் எதார்த்தமான வாழ்வியல் பின்னணியுடன் இயக்கியுள்ளார். </p><p>பாரதிராஜாவுடன் இணைந்து 'குட் நைட்' பட புகழ் ரேச்சல் ரெபெக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன் மற்றும் வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/WUYToTU73kY"></iframe></figure><h2><strong>தொழில்நுட்பக் குழு</strong></h2><p>படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, படம் ரிலீசுக்குத் தயாராக உள்ள நிலையில், 'புலவர்' திரைப்படத்தைத் திரையில் காண பாரதிராஜாவின் ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: சத்தம் எழுப்பியதை தட்டிக்கேட்ட பிரபல மணிப்பூர் இசைக்கலைஞர் டெல்லியில் அடித்துக் கொலை - 8 பேர் கைது 
</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-manipuri-musician-beaten-to-death-after-objecting-to-noise-8-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-manipuri-musician-beaten-to-death-after-objecting-to-noise-8-arrested#comments</comments><guid isPermaLink="false">291a463a-9576-4776-bf06-f35f99997efa</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:43:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:43:06.243Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை,இசைக்கலைஞர்,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0ng51qin/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விக்ரம் சிங்]]></media:title><media:description type="html"><![CDATA[ விக்ரம் சிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0ng51qin/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மணிப்பூரை சேர்ந்த கிட்ட்டார் இசைக்கலைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/manipur">மணிப்பூரை  </a>சேர்ந்த 55 வயது விக்ரம் சிங், கடந்த 17 ஆண்டுகளாக டெல்லியில் தங்கித் இசை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். </p><p>தென்கிழக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear">டெல்லியின் </a>கிலோகரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 3வது தளத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். </p><p>நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11:30 மணியளவில் குப்பைகளை கொட்டுவதற்காக விக்ரம் சிங் வீட்டின் 3ஆம் தளத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். </p> <h2>தாக்குதல்</h2><p>அப்போது அருகில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் சிலர் அவர் குடியிருக்கும் கட்டிடத்தின் வெளியே உரக்கச் சத்தமிட்டு குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர்.</p><p>அவர்களின் இந்த செயலை விக்ரம் சிங் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டது.</p><p>அவர்கள் தாக்க முயன்றதால் பயந்துபோன விக்ரம் சிங் தனது வீட்டை நோக்கி ஓடியபோது, அக்கும்பல் அவரை 3வது தளம் வரை துரத்திச் சென்று, காரிடாரில் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டுத் தப்பியோடியது.</p><h2>உயிரிழப்பு</h2><p>காயமடைந்த விக்ரம் சிங்கை அவருடைய குடும்பத்தினர் ஓக்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p>ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.</p> <h2>கைது</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட பரத் குமார் (19), பிரமோத் (26), ரம்ஜான் கான் (22), விஜய் (36), தீபன்ஷு (21), மோகன் விஸ்வகர்மா (32), மன்னு (26) ஆகிய 7 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஒரு 15 வயது சிறுவனும் பிடிபட்டுள்ளான்.</p> <h2>போராட்டம்</h2><p>இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் டெல்லியில் வாழும் நூற்றுக்கணக்கான வடகிழக்கு மாநில மக்கள் கிலோகரி பகுதியில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் நடத்தினர்.</p> <p>மணிப்பூர் முன்னாள் முதல்வர் பைரன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், "இசைக்கலைஞர் விக்ரம் சிங்கின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>டெல்லி காவல்துறை இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டுத் தீவிர விசாரணை நடத்தி, விரைந்து நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Deeply saddened by the tragic passing of renowned Manipuri guitarist and Western music pioneer, Shri Chongtham Vikram Singh, and deeply concerned by the incident in which he was allegedly assaulted near his residence in southeast Delhi. <br><br>Shri Vikram Singh’s invaluable… <a href="https://t.co/MH49Pcdh8A">pic.twitter.com/MH49Pcdh8A</a></p>&mdash; N. Biren Singh (@NBirenSingh) <a href="https://x.com/NBirenSingh/status/2096952980566376849?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>யார் இந்த விக்ரம் சிங்?</h2><p>மணிப்பூரின் இம்பால் மேற்குப் பகுதியை சேர்ந்த விக்ரம் சிங், மணிப்பூரின் பல முன்னணி இசைக்குழுக்களில் முதன்மை கிட்டார் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லிக்கு இடம்பெயர்ந்த அவர், அங்குத் தனியாக இசைப்பள்ளி ஒன்றை நிறுவி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார். </p> <p>பல இசைக்கச்சேரிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.</p><p>விக்ரம் சிங் பாரம்பரியமான கலைக் குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரது தாயார் 86 வயதான சொங்தாம் ஓங்பி கமலா தேவி மணிப்பூரின் புகழ்பெற்ற பாரம்பரிய பாடகி ஆவார்.</p><p>விக்ரம் சிங், இந்தியாவின் முதல் BAFTA விருதை வென்ற Boong திரைப்படத்தின் இயக்குநர் லக்ஷ்மிபிரியா தேவியின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.</p><p>விக்ரம் சிங்கிற்கு ஜோத்சனா (54) என்ற மனைவியும், யைபாபா (20) என்ற மகனும் உள்ளனர். மகன் யைபாபா சட்டம் பயின்று வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நகர்ப்புற போக்குவரத்தில் புதிய மைல்கல்: மெட்ரோ ரெயில் சேவையில் அமெரிக்காவை முந்தி உலகளவில் 2-வது இடத்தை பிடிக்கும் இந்தியா</title><link>https://www.maalaimalar.com/news/national/india-to-overtake-us-in-global-metro-network-second-largest</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-to-overtake-us-in-global-metro-network-second-largest#comments</comments><guid isPermaLink="false">e8500717-8ea2-4665-9be2-c7068178155e</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:34:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:34:06.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,China,சீனா,அமெரிக்கா,America,மெட்ரோ ரெயில்,metro rail services,urban transport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ab1850nv/metro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ metro rail services  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ab1850nv/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்தன. </p><p>இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பொது போக்குவரத்துத் துறை மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, மெட்ரோ ரெயில் திட்டங்கள் விரிவாக்கப்பட்டு வரும் வேகமானது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய மெட்ரோ ரெயில் நெட்வொர்க்கைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளது.</p><p>தற்போது சர்வதேச அளவில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இருப்பினும், அமெரிக்காவை விட மிக குறைந்த இடைவெளியிலேயே <a href="https://www.maalaimalar.com/news/national/isro-not-to-be-privatised-isro-chief-v-narayanan-assures-employees">இந்தியா</a> பின் தங்கியிருப்பதாலும், நாடு முழுவதும் பெருமளவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாலும், விரைவில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தை உறுதியாகக் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.</p><p>உலகளாவிய மெட்ரோ ரெயில் நெட்வொர்க்கில் சீனா 11,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வழித்தடங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.</p><p>*சீனா: 11,000 கி.மீ. (முதலிடம்)</p><p>*அமெரிக்கா: 1,386 கி.மீ. (இரண்டாம் இடம்)</p><p>*இந்தியா: 1,170 கி.மீ. (மூன்றாம் இடம்)</p><p>தற்போது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வேறுபாடு வெறும் 216 கிலோமீட்டர் மட்டுமே. இந்தியாவில் நகர்ப்புற போக்குவரத்து தேவைகள் அதிகரித்து வருவதால், இந்த இடைவெளி மிக விரைவாகக் குறைந்து வருகிறது.</p><h2>பிரமா<strong>ண்ட வளர்ச்</strong>சி</h2><p>கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்தன. அப்போது ஒட்டுமொத்த மெட்ரோ வழித்தடத்தின் நீளம் 245 கிலோமீட்டராக மட்டுமே இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர உள்கட்டமைப்பு மேம்பாடுகள் காரணமாக, தற்போது நாட்டின் 26 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வழித்தடத்தின் நீளம் 1,170 கிலோமீட்டராகப் பன்மடங்கு உயர்ந்துள்ளது.</p><h2>கட்டுமா<strong>னப் பணிகள்</strong> தீவிரம் </h2><p>இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நகரங்களில் தற்போது சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் கட்டுமானப் பணிகள் பல்வேறு கட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்த 900 கி.மீ. வழித்தடத்தில் ஒரு சிறிய பகுதி நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தாலே, இந்தியா மிக எளிதாக 1,386 கி.மீ. கொண்ட அமெரிக்காவை முந்தி சர்வதேச தரவரிசையில் இரண்டாம் இடத்தைச் சென்றடையும்.</p><h2>பொருளாதார <strong>தாக்</strong>கம்</h2><p>மெட்ரோ ரெயில் சேவைகளின் விரிவாக்கம் வெறும் போக்குவரத்து வசதியை மட்டும் வழங்காமல், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது. தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் நகரங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைகிறது. விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதால், வேலைக்குச் செல்வோர் மற்றும் வணிகச் செயல்பாடுகளுக்கான நேர விரயம் குறைக்கப்பட்டு நகர்ப்புறப் பொருளாதாரம் புதிய வேகத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு- ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-extends-stay-on-announcement-of-by-elections-for-5-constituencies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-extends-stay-on-announcement-of-by-elections-for-5-constituencies#comments</comments><guid isPermaLink="false">2aae0f17-1b37-40ef-954f-5f0592417a9d</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:29:40 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:29:40.723Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்,Madras HC,5 Constituency By Election,5 தொகுதி இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kio8yc8/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kio8yc8/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்த சென்னை ஐகோர்ட், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ந்தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.</strong></em></p><p>தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டை பாஜக கட்சியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-ஐகோர்ட்">ஐகோர்ட்டில்</a> பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது. தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில்மனு தாக்கல் செய்திருந்தது.</p><p>இந்த வழக்கில், முதலமைச்சர் விஜய் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17 -ந்தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மே 10-ந்தேதியே தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், ராஜினாமா செய்து, அதை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல மனுவைத் தாக்கல் செய்துள்ள மனுதாரர் சம்மந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் வழக்கு தொடர்ந்தவரோ அல்ல, வாக்காளரும் அல்ல. திருச்சி கிழக்கு தொகுதியில மக்கள் பிரதிநிதி இல்லாமல் காலவரையின்றி இடைத்தேர்தலைத் தாமதப்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். இதே போல் தடையை நீக்க கோரி முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர்,எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமைநீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முரளிதர், ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு இன்று காலையில் நிராகரிக்கப்பட்டதாகவும் எனவே தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தல் ஆணையம் சார்பாக வழக்கறிஞர் நிரஞ்சன் உத்தரவு நகல் கிடைக்கப்பெறவில்லை என்றும் வந்தபின் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். அனைத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற 28-ந்தேதி நடைபெறும் என உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>அஜித்தின் ரேஸை முதலமைச்சர் விஜய் நேரில் காண உள்ளதாக தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-will-personally-watch-ajiths-race</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-will-personally-watch-ajiths-race#comments</comments><guid isPermaLink="false">3d4ca011-cf01-4a8a-9c5d-8280652a7b4e</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:10:30 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:10:30.177Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Ajith,Car race,அஜித்,கார் ரேஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ny9xl2qj/ajith.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் அஜித்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் அஜித்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ny9xl2qj/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</strong></em> </p><h2><strong>லண்டன் பயணம்</strong></h2><p>தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 10-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகிற 10-ந்தேதி பிரிட்டன் சென்று செப்டம்பர் 16-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.  இந்த பயணத்தின் போது பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க  வருமாறு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><h2><strong>எதிர்பார்ப்பு</strong></h2><p>லண்டனில் வரும் 11 மற்றும் 12-ந்தேதிகளில் MICHELIN LE MANS CUP கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதனால் முதலமைச்சரின் லண்டன் பயணமும், கார் பந்தயமும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. </p><p>முன்னதாக, தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். மேலும் ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3 மற்றும் ஃபார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டு பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இரு அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். </p><p>முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்து இருந்தார். அஜித் கூறுகையில், மோட்டார் விளையாட்டு உட்பட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் தேவையான முக்கியத்துவத்தை அளித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>ஜெர்மனி அரசியலில் திருப்பம்.. மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வெற்றி 
</title><link>https://www.maalaimalar.com/news/world/a-turning-point-in-german-politics-far-right-party-wins-state-election</link><comments>https://www.maalaimalar.com/news/world/a-turning-point-in-german-politics-far-right-party-wins-state-election#comments</comments><guid isPermaLink="false">273f3446-9005-437d-942c-246db0b03bd9</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:09:32 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:09:32.641Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெர்மனி,Germany,வலதுசாரி,சட்டமன்ற தேர்தல்,state election,right wing</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9sib6msk/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ AfD]]></media:title><media:description type="html"><![CDATA[ AfD]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9sib6msk/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜெர்மனியில் நடைபெற்ற மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றி அந்நாட்டு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. </p> <p>இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி அரசியலில் இதுவரை இல்லாத அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. </p><p>ஜெர்மனியின் கிழக்கே உள்ள சாக்சனி அன்ஹால்ட் மாகாண சட்டமன்றத் தேர்தலில், ஆளும்கட்சியான அதிபர் பிரீட்ரிக் மெர்சின் 'கிறிஸ்டியன் டெமோக்ராடிக் யூனியன்' (CDU) கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. </p><p>'</p><h2>தீவிர வலதுசாரி வெற்றி</h2><p>ஆல்டர்னேட்டிவ் ஃபார் ஜெர்மனி' (AfD) என்ற <a href="https://www.maalaimalar.com/news/world/belfast-far-right-violence-city-erupts-after-refugee-linked-knife-attack-sparks-riots">தீவிர வலதுசாரி </a>கட்சி அங்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது.</p><p>AfD கட்சி 43.8% வாக்குகளைப் பெற்று, மொத்தமுள்ள 83 தொகுதிகளில் 39 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கடந்த 2021 தேர்தலோடு ஒப்பிடுகையில் அக்கட்சிக்கு இரட்டிப்பு வாக்குகள் கிடைத்துள்ளது.</p> <p>அதிபர் மெர்ஸின் CDU கட்சி வெறும் 17.2% வாக்குகளை மட்டுமே பெற்று, 15 இடங்களை மட்டும் வென்றுள்ளது.</p><p>2002 முதல் இந்த மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த CDU கட்சிக்கு இது வரலாற்றிலேயே மிகக் குறைந்த வாக்குச் சதவீதமாகும்.</p><h2>பெரும்பான்மை இல்லை</h2><p>பெரும்பான்மைக்கு 42 இடங்கள் தேவை என்ற நிலையில், AfD கட்சிக்கு இன்னும் 3 இடங்கள் குறைவாக உள்ளன.</p><p>பிற பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் AfD உடன் கூட்டணி வைக்க முன்வராததால் அங்கு ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நிலவுகிறது.</p><p>அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் முடிவு CDU கட்சியின் அடித்தளத்தையே ஆட்டிப்பார்த்துள்ளதாகவும், இது தமக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>பிரபலங்கள் வெளியிட்ட &apos;ஹோப்&apos; குறும்படத்தின் டிரெய்லர்: உலகத் தரத்தில் ஆந்தாலஜி திரைப்படமாக மாறுகிறது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/celebrities-release-hope-short-film-trailer-evolving-into-world-class-anthology</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/celebrities-release-hope-short-film-trailer-evolving-into-world-class-anthology#comments</comments><guid isPermaLink="false">a3f9bd85-220b-4251-9e5f-2ee004dc97f2</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:04:23 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:04:23.982Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Samuthirakani,Abhinaya,ஹோப்,Hope Short Film,Hope Trailer,Ramu Kannan,Anthology Movie,ஆந்தாலஜி படம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/c7uf8hg6/Hope-Short-Film" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hope Short Film ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/c7uf8hg6/Hope-Short-Film?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைப்பட பட்ஜெட்டில், படைப்பாக்கத்தில் எந்தவொரு சமரசமும் இன்றி உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'ஹோப்' என்ற 30 நிமிட குறும்படத்தின் முதல் பார்வை மற்றும் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><h2><strong>பிரபலங்கள் ஆதரவு</strong></h2><p>தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81">வெங்கட் பிரபு</a>, கார்த்திக் சுப்புராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி, நித்திலன் சாமிநாதன், ஸ்ரீகணேஷ், பி.எஸ். வினோத்ராஜ் மற்றும் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இணைந்து இப்படத்தின் டிரெய்லரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.</p><h2><strong>தேசிய விருது கலைஞர்களின் கூட்டணி</strong></h2><p>டிரைபாட் டிராவல் மற்றும் டி ஹெச் எஃப் ஃபிலிம் கார்ப்பொரேஷன் பேனர்களில் ராமு கண்ணன் மற்றும் தேவகி நித்யானந்தம் இணைந்து தயாரித்துள்ள இக்குறும்படத்தை ராமு கண்ணன் இயக்கியுள்ளார். </p><p>இவர்களுடன் 'நாடோடிகள்' புகழ் அபிநயா ஆனந்த், சுரேஷ் கண்ணன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.</p><p>இப்படத்திற்கு 'சவுதி வெள்ளக்கா' படத்திற்காக 2022-ல் தேசிய விருது வென்ற பிரபல மலையாள இசையமைப்பாளர் பாலி பிரான்சிஸ் முதன்முறையாகத் தமிழில் இசையமைத்துள்ளார்.</p><p>2023-ல் தேசிய விருது வென்ற சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் எம் ஒலிக் கலவையை கையாண்டுள்ளனர். கோபி துரைசாமி ஒளிப்பதிவையும், இயக்குநர் ராமு கண்ணனே படத்தொகுப்பையும் தயாரிப்பு வடிவமைப்பையும் கையாண்டுள்ளார்.</p><h2><strong>ஆந்தாலஜி திரைப்படமாக உருமாற்றம்</strong></h2><p>வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களை 'நம்பிக்கையுடன்' கையாள்வதே இதன் முக்கியக் கதைக்களமாகும். </p><p>இக்குறும்படம் ஏற்கனவே <strong>சிம்லா மற்றும் கல்கத்தா</strong> திரைப்பட விழாக்களுக்குத் தேர்வாகிப் பாராட்டைப் பெற்றுள்ளது.</p><p>தற்போது இந்த 30 நிமிடப் படத்துடன் த்ரில்லர், நகைச்சுவை, ஆக்ஷன் என மேலும் மூன்று கதைகளை இணைத்து, முழு நீள <strong>ஆந்தாலஜி திரைப்படமாக</strong> உருவாக்கும் பணிகளில் இயக்குநர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/NlsAkp8WZMs"></iframe></figure><h2>தியேட்டர்களில் முன்னோட்டம்</h2><p>இப்படத்தின் முன்னோட்டம் சென்னை <strong>கமலா திரையரங்கில்</strong> திரையிடப்படும் அனைத்துத் திரைப்படங்களின் இடைவேளையின் போதும் பிரத்யேகமாகக் காண்பிக்கப்பட்டு வருகிறது. </p><p>தன் மீதும் தனது படைப்பின் மீதும் நம்பிக்கை வைத்த அனைத்துப் பிரபலங்களுக்கும் இயக்குநர் ராமு கண்ணன் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு- தேர்தல் நடத்தை விதிகள் அமல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-bypoll-oct-6-voting-model-code</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-bypoll-oct-6-voting-model-code#comments</comments><guid isPermaLink="false">b829217f-57e3-43a5-be5d-117c2123d70e</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:04:16 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:04:16.749Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Satyabhama,மதுராந்தகம்,தாராபுரம் தொகுதி,இடைத்தேர்தல்,Maragatham Kumaravel,மரகதம் குமரவேல்,Madhuranthakam,Dharapuram Constituency,சத்யபாமா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/v56f1r9m/election.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Satyabhama-Maragatham Kumaravel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/v56f1r9m/election.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் அறிவிப்பு வெளியான உடனடியாகவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. </p><p>தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-hold-by-elections-in-two-assembly-seats-on-october-6">இடைத்தேர்தல்</a> தேதியைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.</p><p>கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை துறந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன் காரணமாக இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.</p><h2>தேர்தல் அட்<strong>டவணை விவரங்</strong>கள்</h2><p>தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வேட்புமனுத் தாக்கல் நாளை (செப்டம்பர் 9) தொடங்குகிறது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைச் சமர்ப்பிக்க இறுதிக்காலம் நிர்ணயிக்கப்பட்டு, பரிசீலனைக்குப் பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.</p><p>அக்டோபர் 6-ஆம் தேதி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.</p><h2>நடத்தை <strong>விதிகள்</strong> </h2><p>தேர்தல் அறிவிப்பு வெளியான உடனடியாகவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அரசின் புதிய நலத்திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை இவ்விரு தொகுதிகளிலும் செயல்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம் சார்பாகப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காகத் துணை ராணுவப் படையினரும், மத்திய தேர்தல் கண்காணிப்பாளர்களும் விரைவில் வருகை தர உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ரீல்ஸ் ஆட்சி நடத்துகிறது- எ.வ.வேலு ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/tvk-is-running-a-reels-administration-ev-velu</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/tvk-is-running-a-reels-administration-ev-velu#comments</comments><guid isPermaLink="false">2f56c055-ca8c-4f4c-b63f-1eba7d8516f6</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:03:07 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:03:07.506Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,எவ வேலு,TN assembly,தமிழக சட்டசபை |</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/eddgtspj/velu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/eddgtspj/velu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மிசா என்பது எல்லோருக்கும் தெரியும். மிசா கொடுமையை அனுபவித்தவர் எங்கள் தலைவர். அவர் ரியல் ஆட்சி நடத்தினார். ஆனால் இப்போது ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது. ரீல்ஸ் எடுப்பதற்காகவே நேற்று சினிமா பாணியில் பேசினார்.</p><h2><strong>சட்டசபை வளாகத்தில் தி.மு.க. கொறடா எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-</strong></h2><h2><strong>குற்றச்சாட்டு</strong></h2><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, ‘காவல்துறை, சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எடுத்து வைத்தார். இந்த ஆட்சி பொறுப்புக்கு வந்த 116 நாட்களில் 550 குற்றங்கள் நடந்துள்ளன. அதில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் அத்துமீறல்கள், காவல் நிலைய மரணங்கள், ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன என்று குறிப்பிட்டார். இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் அளிப்பார் என்றுதான் எதிர்பார்த்தோம். </p><h2><strong>திட்டமிட்டு பேசினார்</strong></h2><p>எனவேதான் நேற்று முதலமைச்சர் பேசும் போது, ‘27 நிமிடங்கள் வரை அமைதியாக கேட்டுக் கொண்டுதான் இருந்தோம். ஆனால் முதலமைச்சர் திட்டமிட்டு அவை விதிகளை மீறி அதாவது நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக விவாதிக்கக் கூடாது என்பது விதி. ஆனால் அதையும் மீறி அமலாக்கத்துறை தெரிவித்துள்ள தகவல்களை முழுமையாக படித்தார். இது சட்டசபை விதிகளை மீறிய செயல்.</p><h2><strong>மிசா</strong></h2><p>மிசா பற்றி பேசும் போது அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதால் உடல் அசைவுகளை எல்லாம் செய்து காட்டினார். மிசா என்பது எல்லோருக்கும் தெரியும். மிசா கொடுமையை அனுபவித்தவர் எங்கள் தலைவர். அவர் ரியல் ஆட்சி நடத்தினார். ஆனால் இப்போது ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது. ரீல்ஸ் எடுப்பதற்காகவே நேற்று சினிமா பாணியில் பேசினார்.</p><h2><strong>ரீல்ஸ்</strong></h2><p>சர்க்காரியா கமிஷன் பற்றி ஏற்கனவே பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு கலைஞரும் பல முறை பதில் அளித்து இருக்கிறார். இப்போது நாங்கள் பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டை பாக்கு பற்றி அவர் பேசுகிறார். 4 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு தகவலையும் சொல்கிறேன். சபாநாயகர் இருக்கையில் சத்யபாமா எம்.எல்.ஏ.வை அமர வைத்ததும் இதுவரை எந்த பெண் எம்.எல்.ஏ.வும் அமர்ந்ததில்லை என்று ரீல்ஸ் போட்டார்கள். ஆனால் காங்கிரசை சேர்ந்த பொன்னம்மாள், யசோதா, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த லீமாரோஸ் இப்படி பல பெண் தலைவர்கள் அந்த ஆசனத்தில் அமர்ந்த வரலாறு உண்டு என்பதை மறந்து விட்டார்கள்.</p><h2><strong>நிரூபிக்க முடியவில்லை</strong></h2><p>சர்க்காரியா கமிஷன் விசாரணையின் போது ஆஜரான எம்.ஜி.ஆரே தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கமிஷன் விசாரணை முடியும் போது 28 புகார்கள் கூறப்பட்டதாகவும், ஆனால் எதையும் நிரூபிக்க முடியவில்லை என்று அந்த வழக்கையே மூடிவிட்டார்.</p><p>அதே போல் முதலமைச்சர் நேற்றைய பேச்சின் போது முரசொலி மாறன் பற்றியும் பேசினார். முரசொலிமாறனை போற்றும் வகையில் தபால் தலை வெளியிட்ட போது அந்த குடும்பத்தினர் இன்றைய முதலமைச்சரையும் டெல்லிக்கு அழைத்து சென்றனர். முதலாளியாக இருந்து அந்த குடும்பம் சினிமாவில் நடிப்பதற்காக கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொண்டவர்தான்.</p><h2><strong>சர்வாதிகாரம்</strong></h2><p>அப்படிப்பட்டவர் இன்று முரசொலிமாறனை கொச்சைப்படுத்தி பேச என்ன அவசியம் வந்தது. எனவேதான் நேற்று முதலமைச்சர் பேசியது தவறு. மிசாவை பற்றி குறிப்பிட்டது தவறு. சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியது தவறு. எனவே அந்த பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. நடுநிலை போல் செயல்பட்ட சபாநாயகர் இன்று சர்வாதிகாரத்தின் உச்சத்துக்கே சென்று எங்களை வெளியே தூக்கி போட்டு உள்ளார். ஜனநாயகத்தின் மரபுகள் கெட்டு போய் உள்ளன.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு தொடருமா? - சண்முகம் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpim-shanmugam-clarifies-will-support-for-tvk-continue-for-5-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpim-shanmugam-clarifies-will-support-for-tvk-continue-for-5-years#comments</comments><guid isPermaLink="false">d37d5494-e8ed-4224-90b1-2c9e72c10d95</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:59:40 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:59:40.822Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Shanmugam,CPIM,தமிழக சட்டசபை,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,TN assembly,tvk,சண்முகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/pfea26kl/shanmugam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/pfea26kl/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் நேரலையில் பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று மாநில செயலாளர் சண்முகம் கூறினார்.</p><p>சென்னை சைதாப்பேட்டையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/k-balakrishnan-says-cpm-will-not-participate-in-the-meeting-of-tvks-alliance-parties">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</a> மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* நாளை நடைபெறும் தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது.</p><p>* சட்டமன்றம் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மன்றமாக நடக்க வேண்டும்.</p> <p>* ஆளுங்கட்சி என்ற முறையில் தவெகவிற்கு கூடுதல் பொறுப்பு உள்ளது.</p><p>* சட்டசபை மக்கள் வரிப்பணத்தில் தான் நடக்கிறது. அவர்களின் சொந்த பணத்தில் நடக்கவில்லை.</p><p>* ஏதாவது ஒரு கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதில் அளித்தாரா?</p> <p>* உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் ஒன்றுக்கு கூட முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை.</p><p>* நாங்கள் நினைத்ததை எல்லாம் பேசுவோம் என்ற வகையில் சட்டமன்றத்தை நடத்த வேண்டும்.</p><p>* சட்டசபை சண்டை மன்றமாகவும் கத்துவதற்கான மன்றமாகவும் நடைபெறுவதை கண்டிக்கிறோம்.</p> <p>* மிசா குறித்த அமைச்சர் நிர்மர்குமாரின் பேச்சு அறியாமையின் வெளிப்பாடு.</p><p>* சேற்றை வாரி வீசுவதை போன்று அமைச்சர்கள் பேசக் கூடாது.</p><p>* தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் நேரலையில் பார்த்து கொண்டிருக்கின்றனர்.</p> <p>* தவெக அமைச்சர்கள் முதலில் நிறைய படிக்க வேண்டும் என்று நான் அறிவுரை கூறுகிறேன்.</p><p>* வரலாறு தெரியாது திமுகவின் மீது இருக்கும் வெறுப்பில் சகட்டு மேனிக்கு பேசுவது தவறு.</p><p>* 3  கோப்புகள் மேஜையில் இருப்பதாக கூறும் முதல்வர் ஏன் 50 ஆண்டுகள் முன் உள்ளவற்றை கிளறுகிறார்.</p> <p>* ஊழலில் நடவடிக்கை என்பதில் கம்யூனிஸ்ட் உறுதியாக உள்ளது,  தவெக உறுதியாக உள்ளதா என்றுதான் சந்தேகம் எழுகிறது.</p><p>* வீணான விவாதங்களில் சட்டசபை நேரம் விரயம் ஆவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.</p><p>* வரும் தேர்தல்களை கூட்டணியாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என தவெக அமைச்சர்கள் கூறினர்.</p> <p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-praise-tvk-members-and-edappdi-palaniswami">தவெக</a> அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும்.</p><p>* தவெகவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் 5 ஆண்டு ஆதரவு தொடர வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாட்டை பொருத்தது.</p><p>இவ்வாறு அவர்  கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு 10-ந் தேதி வரை பெறலாம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/topnews/edappadi-palaniswami-byelection-applications-to-contest-on-behalf-admk-can-be-submitted-until-the-10th</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/edappadi-palaniswami-byelection-applications-to-contest-on-behalf-admk-can-be-submitted-until-the-10th#comments</comments><guid isPermaLink="false">71a3504f-4a2a-44f3-b8d1-f133c34298c6</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:40:54 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:40:54.094Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Edappadi  Palaniswami,ByElection,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/6wie47zg/epss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/6wie47zg/epss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, 10-ந் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக்கழகத்தில் வழங்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.</p><p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுக்களை பெறலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். </p><h2><strong>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-</strong></h2><p>மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்கள் தலைமைக்கழகத்தில் இன்று (8-ந் தேதி) முதல் 10-ந் தேதி (வியாழக்கிழமை) வரை வழங்கப்படுகிறது.</p><h2><strong>படிவங்கள்</strong></h2><p>தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, 10-ந் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக்கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கியாஸ் சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக  குறைப்பு 
</title><link>https://www.maalaimalar.com/news/national/gas-cylinder-booking-interval-fixed-at-25-days</link><comments>https://www.maalaimalar.com/news/national/gas-cylinder-booking-interval-fixed-at-25-days#comments</comments><guid isPermaLink="false">79d89a85-34e5-4107-b929-c13d482ade64</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:40:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:40:26.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்பிஜி,கியாஸ் சிலிண்டர்,சமையல் எரிவாயு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/id2xp2ay/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிலிண்டர் முன்பதிவு ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிலிண்டர் முன்பதிவு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/id2xp2ay/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எரிபொருள் வினியோக நிலைமை மேம்பட்டுள்ளதால் கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-pilot-killed-in-iran-war-compensation-dispute">ஈரான் - அமெரிக்கா போர்</a> காரணமான வளைகுடா நாடுகளில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ஹார்முஸ் ஜலசந்தி</a> வழியாக ஏற்றுமதி தடைபட்டு உலக அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்தது. </p> <p>போர் தொடர்ந்தபோதிலும் அண்மை காலமாக எரிபொருள் தட்டுப்பாடு இன்றி சீராக கிடைக்கத் தொடங்கியுள்ளது.</p><p>எனவே வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவில் விதித்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி வருகிறது.</p><p>அந்த வகையில் கிராமம், நகரப்பகுதிகள் என வேறுபாடின்றி ஒரே சீராக கியாஸ் சிலிண்டர் மறு நிரப்பலுக்கான (ரீபில்) முன்பதிவு இடைவெளிக் காலம் 25 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p> <h2>தளர்வு</h2><p>முன்னதாக நெருக்கடியால் நகர்ப்புறங்களில் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் நிர்ணயிக்கப்பட்டது.</p><p>தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால் கிராமங்களுக்கும் மறுநிரப்பலுக்கான இடைவெளிக்காலம் 45 இல் இருந்து 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.</p><p>இதை நடைமுறைப்படுத்த கியாஸ் விநியோக நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.</p> <p>இந்த தளர்வு குறித்த தகவலை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p>வினியோக நிலை மேம்பட்டு இருப்பதாலும், மறு நிரப்பல் நிலுவை கணிசமாக குறைந்து இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்</p><p>இதனால் கிராமப்புறங்களில் வசிப்போர் பதற்றம் தணிந்து நிம்மதியடைந்துள்ளனர் </p>]]></content:encoded></item><item><title>International Literacy Day 2026: மெக்சிகோவில் உலகளாவிய யுனெஸ்கோ மாநாடு கோலாகல தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/world/international-literacy-day-2026-global-unesco-conference-opens-in-mexico</link><comments>https://www.maalaimalar.com/news/world/international-literacy-day-2026-global-unesco-conference-opens-in-mexico#comments</comments><guid isPermaLink="false">1e2f84f5-0841-4954-912e-af4e9f34b523</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:33:37 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:33:37.746Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மெக்சிகோ,Mexico,UNESCO,International Literacy Day,International Literacy Day 2026,சர்வதேச எழுத்தறிவு தினம்,யுனெஸ்கோ மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jms2xgvk/lite.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ International Literacy Day 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jms2xgvk/lite.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>1966-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோவின் 14-வது பொது மாநாட்டின் போது, செப்டம்பர் 8-ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. </p><p>இன்று (செப்டம்பர் 8) உலகம் முழுவதும் சர்வதேச எழுத்தறிவு தினம் வெகு விமரிசையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மனித உரிமை, சமத்துவம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான அடிப்படைத் தூணாகத் திகழும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் நோக்கில் இந்நாள் ஆண்டுதோறும் நினைவு கூரப்படுகிறது. இந்த 2026-ஆம் ஆண்டில், சர்வதேச எழுத்தறிவு தினம் தனது 60-வது ஆண்டு நிறைவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>வரலா<strong>ற்றுப் பின்னணி</strong></h2><p>1966-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோவின் 14-வது பொது மாநாட்டின் போது, செப்டம்பர் 8-ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1967-ஆம் ஆண்டு முதல் முறையாக இந்நாள் உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டது. வெறும் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறனைக் கடந்து, தனிநபரின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எழுத்தறிவு அவசியம் என்பதை வலியுறுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.</p><h2>2026-<strong>ஆம் ஆண்டின் மைய</strong>க்கருத்து</h2><p>இந்த ஆண்டிற்கான சர்வதேச எழுத்தறிவு தினத்தின் மையக்கருத்து “மக்களுக்கு, பூமிக்கு மற்றும் செழிப்புக்கு எழுத்தறிவு”(Literacy for people, the planet and prosperity) என்பதாகும். தனிமனித சமூக ஒருங்கிணைப்பு, <a href="https://www.maalaimalar.com/news/world/tibet-glacier-collapse-disaster-chinese-researchers-shocking-report">சுற்றச்சூழல் பாதுகாப்பு </a>மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுடன் எழுத்தறிவு எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த மையக்கருத்து வெளிப்படுத்துகிறது.</p><h2>யுனெஸ்<strong>கோ மாநாடு</strong></h2><p>2026-ஆம் ஆண்டின் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ உலகளாவிய கொண்டாட்டங்கள் மற்றும் மாநாடு செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் நகரில் நடைபெறுகின்றன. மெக்சிகோ அரசுடன் இணைந்து நடத்தப்படும் இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் கல்வி அமைச்சர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். </p><p>இதில் உலகளாவிய எழுத்தறிவுச் சவால்கள் மற்றும் அதற்கான கொள்கை ரீதியான தீர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், எழுத்தறிவுப் பணியில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கான யுனெஸ்கோ சர்வதேச எழுத்தறிவு விருதுகளும் இங்கு வழங்கப்படவுள்ளன.</p><p>கடந்த அறுபது ஆண்டுகளில் உலக அளவில் கல்வியறிவு விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளபோதிலும், தற்போதைய தரவுகளின்படி உலகம் முழுவதும் சுமார் 739 மில்லியன் இளைஞர்களும் பெரியவர்களும் அடிப்படை எழுத்தறிவுத் திறன் இல்லாமல் உள்ளனர். மேலும், சர்வதேச அளவில் 10 குழந்தைகளில் 4 குழந்தைகளுக்குப் போதிய வாசிப்புத் திறன் எட்டப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>எனவே, வறுமை ஒழிப்பு, பாலின சமத்துவம் மற்றும் நிலையான சமூக வளர்ச்சிக்கு எழுத்தறிவை ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி அனைவருக்குமான கல்வியை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த 60-வது ஆண்டு சர்வதேச எழுத்தறிவு தினம் வலியுறுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் &apos;பிக்காசோ&apos; படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dr-sivarajkumar-abhishan-jeevind-join-for-picasso-first-look-poster-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dr-sivarajkumar-abhishan-jeevind-join-for-picasso-first-look-poster-release#comments</comments><guid isPermaLink="false">7a1e22bf-a809-44ab-b798-316737a2d38b</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:20:15 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:20:15.089Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Abishan Jeevinth,சிவராஜ் குமார்,Shiva Rajkumar,Rishab Shetty,Picasso,அபிஷன் ஜீவிந்த்,பிக்காசோ,Gautham Sivaraman,Gaana Vinoth</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/2f6kdoth/Shiva-Rajkumar-Abishan-Jeevinth" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Shiva Rajkumar - Abishan Jeevinth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/2f6kdoth/Shiva-Rajkumar-Abishan-Jeevinth?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'கருணாட சக்ரவர்த்தி' டாக்டர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">சிவராஜ்குமார் </a>மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய தலைமுறை பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B">பிக்காசோ</a>' எனப் பெயரிடப்பட்டுள்ளது.</p><p>பிக்காசோ படத்தின் அதிரடியான மற்றும் கலைநயமிக்க ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகரும் இயக்குநருமான<a href="https://www.maalaimalar.com/search?q=%20%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF"> ரிஷப் ஷெட்டி</a> அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>இரண்டு தலைமுறைகளின் சுவாரஸ்யமான திரை இணைப்பு</strong></h2><p>டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார்.</p><p>பழம்பெரும் நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமாரின் தனித்துவமான மிரட்டலான திரை ஆளுமையுடன், அடுத்த தலைமுறை கலைஞரான <a href="https://www.maalaimalar.com/topic/abishan-jeevinth">அபிஷன் ஜீவிந்த்தின்</a> புதிய தலைமுறை நடிப்புத் திறனும் இதில் இணையவுள்ளது.</p><p>இரண்டு வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இரு முன்னணி நடிகர்களின் இந்தத் திரை விந்தையானது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>பட்டாசு போஸ்டரின் பின்னணி மற்றும் கலைநயமிக்க தலைப்பு</strong></h2><p>தற்போது வெளியாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வழக்கமான பாணியில் இல்லாமல் மிகவும் வித்தியாசமான காட்சியமைப்புடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. </p><p>டாக்டர் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், வெடித்துச் சிதறிய பட்டாசுகளின் நடுவே மாஸாக அமர்ந்திருக்கிறார்கள்.</p><p>இருவரின் இயல்பான, அதே சமயம் குறும்புத்தனமான தோற்றமும், அவர்களைச் சுற்றியுள்ள வெடித்த பட்டாசுகளும் படத்திற்கு ஒரு மாறுபட்ட சூழலை உருவாக்குகிறது. </p><p>படத்தின் 'பிக்காசோ' என்ற தலைப்பு மஞ்சள் நிற எழுத்துக்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>இது இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ஒரு தனித்துவமான கலைநயமிக்க தோற்றத்தை வழங்குகிறது. இந்த போஸ்டர் படத்தின் கதை முற்றிலும் புதியதொரு அணுகுமுறையில் இருக்கும் என்பதை உணர்த்துகிறது.</p><h2><strong>வலுவான நட்சத்திரப் பட்டாளம் அறிமுகம்</strong></h2><p>இப்படத்தில் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார். </p><p>மேலும், தமிழ் திரையுலகின் பிரபல சுயாதீன பாடகர் கானா வினோத் இப்படத்தின் மூலம் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>தொழில்நுட்பக் குழு</strong></h2><p>இப்படத்திற்கு கவுதம் சிவராமன் கதை எழுதி இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். </p><p>பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். </p><p>ஸ்வாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், விஜு விஜயன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.</p><h2><strong>தயாரிப்பு மற்றும் தற்போதைய நிலை</strong></h2><p>டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் இப்படத்தைப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். </p><p>இவர்களுடன் ஆர். கார்த்திகேயன், தினேஷ் பாலச்சந்திரன் மற்றும் ஆர்.ஆர். தீபன் ராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். </p><p>மேலும், கிரீன் காட் மற்றும் டி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் இணைந்துள்ளன.</p><p>இப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. </p><p>முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது- கே.பாலகிருஷ்ணன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/k-balakrishnan-says-cpm-will-not-participate-in-the-meeting-of-tvks-alliance-parties</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/k-balakrishnan-says-cpm-will-not-participate-in-the-meeting-of-tvks-alliance-parties#comments</comments><guid isPermaLink="false">29449ff1-b528-40e1-b1c8-12ad7809b6ac</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:16:37 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:16:37.168Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,CPM,CPI,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/udt1s6dn/CPM.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/udt1s6dn/CPM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை என்று சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.</strong></em> </p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனைக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவித்து இருந்தனர். </p><p>அதன்படி, முதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு பேசிய சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.வின்</a> கூட்டணி கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது என  தெரிவித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், த.வெ.க. கூட்டணியில் இல்லை, அதனால் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். கடந்த மாத கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இப்போது எப்படி செல்வோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை என்றார். </p><p>இதனால் நாளை நடைபெறும் கூட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்பது திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனை தொடர்ந்து, சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. </p><p>ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே நாளை நடைபெறும் த.வெ.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்குமா? பங்கேற்காதா? என்பது குறித்து தெரியவரும். </p><p>முன்னதாக த.வெ.க. கூட்டணி கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்பதில்லை என அறிவித்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தாம்பரம் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 ஆக உயர்த்த தென்னக ரெயில்வே திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railways-plan-to-increase-number-of-tracks-to-15-at-tambaram-railway-station</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railways-plan-to-increase-number-of-tracks-to-15-at-tambaram-railway-station#comments</comments><guid isPermaLink="false">984a1694-761c-4a86-a963-7fe142b531b4</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:12:39 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:12:39.351Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,tambaram railway station,Indian Railway,சென்னை எழும்பூர்,தென்னக ரெயில்வே,தாம்பரம் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/e4xpty8g/tambaram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tambaram Railway Station ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/e4xpty8g/tambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாம்பரம் நிலையத்தில் தண்டவாள மேம்பாடு மற்றும் நடைமேடைகளை நீட்டிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. </p><p>சென்னை புறநகர் மற்றும் தொலைதூர ரெயில் பயணங்களில் மிக முக்கியமான முனையமாக விளங்கும் தாம்பரம் ரெயில் நிலையத்தை, நகரின் இரண்டாவது பெரிய ரெயில் செயல்பாட்டு மையமாக மேம்படுத்த தென்னக ரெயில்வே விரிவான திட்டத்தை தயாரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போதுள்ள தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><h2>முதன்<strong>மை முனையமாக மாறும் தா</strong>ம்பரம்</h2><p>சென்னையின் மூன்றாவது ரெயில் முனையமாக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம் ரெயில் நிலையம், இந்த விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-train-tickets-sell-out-within-minutes-passengers-shocked">சென்னை எழும்பூர்</a> ரெயில் நிலையத்தை விட பெரிய மையமாக உருவெடுக்கும். இதன் மூலம் தென் மாவட்டங்களுக்கும் நாட்டின் பிற வட மாநிலங்களுக்கும் இயக்கப்படும் தொலைதூர ரெயில் சேவைகளை தாம்பரத்தில் இருந்தே தடையின்றி இயக்க முடியும். மேலும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் நிலவும் கடும் போக்குவரத்து மற்றும் நடைமேடை நெரிசலுக்கு இது பெரிய தீர்வாக அமையும்.</p><h2>நடைமேடை <strong>விரிவாக்கம்</strong> </h2><p>தற்போது தாம்பரம் நிலையத்தில் தண்டவாள மேம்பாடு மற்றும் நடைமேடைகளை நீட்டிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், நிலையத்தின் வடக்குப் பகுதியில் ரூ.19 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது நடைமேடைப் பாலம் மற்றும் அதனுடன் இணைந்த பயன்பாட்டுப் பகுதிகளும் மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும். கிழக்குப் பகுதியில் அமைந்த பாரதமாதா சாலையுடன் புதிய அணுகுசாலையை இணைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.</p><h2>ரூ.<strong>19 கோடியில் ந</strong>வீன உள்கட்டமைப்பு</h2><p>ஆண்டுதோறும் 3.50 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தும் தாம்பரம் ரெயில் நிலையம் ‘பிரிவு 1’ தரவரிசையில் உள்ளது. இங்கு வருகை தரும் பயணிகள், குறிப்பாக மூத்த குடிமக்கள் நீண்ட தூர ரெயில்களை அணுகுவதில் சிரமம் அடைவதைத் தவிர்க்க பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய நடைமேடைப் பாலத்தில் நவீன காத்திருப்போர் அறை மற்றும் உயர்த்தப்பட்ட பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும், அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் 9 மின்தூக்கிகள் மற்றும் 10 தானியங்கிப் படிக்கட்டுகள் நிறுவப்பட உள்ளன.</p><h2>விரிவான திட்<strong>ட அறிக்கை</strong> </h2><p>தாம்பரம் ரெயில் நிலையத்தை சர்வதேச தரத்திலான பெரிய முனையமாக முழுமையாக மறுசீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை ரெயில் நில மேம்பாட்டு ஆணையம் தற்போது தயாரித்து வருகிறது. இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் போது, தென் சென்னைப் பிராந்தியத்தின் மிக முக்கியப் போக்குவரத்து மையமாக தாம்பரம் உருவெடுக்கும்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : இன்று தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/topnews/business-and-gold-rate-gold-price-details-08-09-2026</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/business-and-gold-rate-gold-price-details-08-09-2026#comments</comments><guid isPermaLink="false">b0dc083c-aa02-4b57-bb17-03406b383690</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:01:41 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:01:41.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>வணிகம் (Business)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. அதனை தொடர்ந்து 3-ந்தேதி தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. </p><h2><strong>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை</strong></h2><p>இதையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270க்கு விற்பனையாகிறது.</p> <h2><strong>வெள்ளி விலையில் இன்று</strong></h2><p>வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040</p><p>06-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p><p>05-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p><p>04-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880</p><p>02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>05-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>04-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.250</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் - விசாரணை அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/inquiry-report-on-kallakurichi-illicit-liquor-deaths-submitted-to-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/inquiry-report-on-kallakurichi-illicit-liquor-deaths-submitted-to-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">4d16b5c0-ef22-4b5b-ab31-e3c862ee38c4</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:57:25 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:57:25.729Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Illegal Liquor Death,kallakurichi,கள்ளச்சாராயம்,கள்ளக்குறிச்சி விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jbkepu5h/kallakuruchi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jbkepu5h/kallakuruchi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி பலர் உயிரிழந்தது தொடர்பாக இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.</p> <h2>கள்ளக்குறிச்சி</h2><p>கடந்த 2024-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். </p><p>இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.</p> <h2>நீதியரசர் கோகுல்தாஸ்</h2><p>இந்த ஆணையம் தீவிர விசாரணை நடத்தி தனது இறுதி அறிக்கையை இன்று தாக்கல் செய்தது.</p><p>நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-the-move-made-by-ev-velu-in-the-confidence-of-returning-to-poweraadhav-arjuna-levels-allegations-in-the-assembly">சட்டசபையில்</a> சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் தரப்பில் கடுமையான அலட்சியமும் கடமை தவறிய போக்கும் இருந்துள்ளது என்று நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>இதுதொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்,</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கள்ளச்சாராயம்</a> விற்பனைக்கு பெயர் போன பகுதிகளிலும் காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவே உயிரிழப்புகள் அதிகரிக்க வழிவகுத்தது. </p><p>கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட பகுதிகளின் அதிகார வரம்பைக் கொண்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகளே இதற்கு பொறுப்பு. </p> <p>கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் கச்சிராப்பாளையம் வட்டங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் இந்நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள்.</p><p>விழுப்புரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கள்ளச்சாராய துயர சம்பவத்திலிருந்து இச்சம்பவம் நிகழ்ந்த 2024 வரை பணியாற்றிய இச்சம்பவத்திற்கு பொறுப்பான பல்வேறு பதவிகளை வகித்துவந்த அதிகாரிகள் மீது துறை சார்ந்த விசாரணையை தொடங்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த கல்வி கற்ற திறன்மிக்க திறன்சாரா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்சாலைகளை அமைக்க கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரையும் செய்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் விசித்திரம்: பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் அகற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/bizarre-case-in-andhra-14-pens-5-wooden-spoons-removed-from-womans-stomach</link><comments>https://www.maalaimalar.com/news/national/bizarre-case-in-andhra-14-pens-5-wooden-spoons-removed-from-womans-stomach#comments</comments><guid isPermaLink="false">962f78fd-234f-4725-af22-0abed24d62b6</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:55:02 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:55:02.589Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra,ஆந்திரா,Laparoscopic procedure,Wooden Spoons,Pica Syndrome,பல்நாடு மாவட்டம்,நரசராவ்பேட்டை,லாப்ரோஸ்கோபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uh81jcl6/ccc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bizarre incident in Andhra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uh81jcl6/ccc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது. </p><p>ஆந்திரப் பிரதேசம், பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பெட்லூரிவாரிபாலெம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், கடந்த சில நாட்களாகக் கடுமையான நெஞ்சு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலியின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை நரசராவ்பேட்டையில் உள்ள மாதாஸ்ரீ என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.</p><h2>ஸ்கேனி<strong>ங் பரிசோதனை</strong>யில் அதிர்ச்சி</h2><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்குக் முதல்கட்டப் பரிசோதனைகள் மற்றும் வயிற்றுப்பகுதி ஸ்கேனிங் செய்யப்பட்டது. ஸ்கேன் அறிக்கையைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஏராளமான அநாவசியப் பொருட்கள் உள்கொள்ளப்பட்டுச் சிக்கியிருப்பது தெரியவந்தது.</p><h2>லாப்ரோ<strong>ஸ்கோபி சிகிச்சை</strong></h2><p>மருத்துவர் பி.ராமசந்திர ரெட்டி தலைமையிலான நிபுணர் குழுவினர், பெண்ணுக்கு உடனடியாக '<a href="https://www.maalaimalar.com/news/national/father-held-for-smuggling-rs-1-crore-gold-in-babys-diaper">லாப்ரோஸ்கோபி</a>' எனும் நுண் துளை அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். வயிற்றுப் பகுதியில் சிறிய துளையிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் மூலம், பெண்ணின் வயிற்றிலிருந்து மொத்தம் 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் 1 மெழுகுவர்த்தி ஆகிய 20 பொருட்கள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன.</p><p>வெளியே எடுக்கப்பட்ட பேனாக்களில் ஒன்றின் மூடி கழன்ற நிலையில் இருந்தது. அந்தப் பேனாவின் கூர்மையான பகுதி பெண்ணின் வயிற்றின் உட்புறச் சுவரில் குத்தியதால் தான் அவருக்குத் தாங்க முடியாத அளவு கடுமையான வலியும் அசௌகரியமும் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அப்பெண் நலமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார்.</p><p>அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார். உணவு அல்லாத பிற தேவையற்ற பொருட்களை உண்ணும் ‘பைகா சின்ட்ரோம்’ அல்லது தீவிர மன அழுத்தப் பாதிப்பே பெண்ணின் இந்தச் செயலுக்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் மிரட்டும் &apos;என்ன விலை&apos; டிரெய்லர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karunas-nimisha-sajayan-starrer-ennavilai-trailer</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karunas-nimisha-sajayan-starrer-ennavilai-trailer#comments</comments><guid isPermaLink="false">b92784cb-a7d7-47ff-9b05-704945748d82</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:51:42 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:51:42.570Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>நிமிஷா சஜயன்,Nimisha Sajayan,Karunas,கருணாஸ்,Sam CS,Enna Vilai,என்ன விலை,Sajeev Pazhoor</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/mx305k7m/Enna-Vilai-Trailer" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Enna Vilai Trailer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/mx305k7m/Enna-Vilai-Trailer?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய விருது பெற்ற மலையாளத் திரைக்கதை ஆசிரியர் சஜீவ் பாழூர் இயக்கத்தில், நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/karunas">கருணாஸ் </a>மற்றும் பிரபல நடிகை நிமிஷா சஜயன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 'என்ன விலை' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><h2>நீதிமன்ற பின்னணியில் ஒரு பரபரப்பான கதைக்களம்</h2><p>தற்போது வெளியாகியுள்ள '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">என்ன விலை</a>' திரைப்படத்தின் டிரெய்லர், இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே நடக்காத ஒரு விசித்திரமான மற்றும் மிகவும் அரிய வழக்கை மையமாகக் கொண்டு கதை நகர்வதை உணர்த்துகிறது.</p><p>டிரெய்லரின் தொடக்கத்திலேயே வழக்கறிஞர் ஒருவர், "மை லார்ட், இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக..." என வாதாடும் வசனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.</p><p>இப்படத்தில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். <a href="https://www.maalaimalar.com/topic/nimisha-sajayan">நிமிஷா சஜயன்</a> வழக்கறிஞராக நடித்துள்ளார். </p><p>ஒரு முக்கிய சமூக அல்லது மாநிலப் பிரச்சனைக்கு இந்த வழக்கு எப்படி காரணமாக அமைகிறது என்பதை விறுவிறுப்பான நீதிமன்றக் காட்சிகளுடன் டிரெய்லர் வெளியாகி விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டுள்ளது.</p><h2>நட்சத்திரப் பட்டாளம்</h2><p>இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயனுடன் இணைந்து விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், சேத்தன் சீனு, மோகன் ராமன், பூர்ணிமா பாக்யராஜ், தீபா சங்கர், டி.எஸ்.ஆர் சீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/KmQg4xxu18U"></iframe></figure><h2>தொழில்நுட்பக் குழு</h2><p>தேசிய விருது பெற்ற சஜீவ் பாழூர் எழுத்து மற்றும் இயக்கத்தில், 'விக்ரம் வேதா', 'கைதி' படப்புகழ் சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவையும், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளனர்.</p><p>'களமயா சினிவெர்ஸ்' வழங்கும் கிதேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் பின்னணி இசை மற்றும் டொல்பி அட்மாஸ் ஒலிப்பதிவு ஆகியவை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.</p><p>தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ள இத்திரைப்படம், செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திடீர்ன்னு சாமி வந்துடுச்சு.. சட்டசபையில் ஆவேசமாக துள்ளிய திமுக எம்.எல்.ஏ! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/suddenly-possessed-dmk-mla-leaps-about-furiously-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/suddenly-possessed-dmk-mla-leaps-about-furiously-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">0f569b2c-2297-42e0-9693-70504e558409</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:50:54 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:50:54.502Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,தமிழக சட்டசபை,திமுக எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/dgu96ips/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபை  ]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/dgu96ips/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அவையில் இருந்து வெளியேற்றப்படும் திமுக எம்எல்ஏ சாமி ஆடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026">தமிழ்நாடு சட்டசபை</a>யில் சர்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-remarks-cannot-be-expunged-from-the-house-records-speaker-asserts-firmly">சபாநாயகர் </a>நிராகரித்தார். </p><p>சபாநாயகர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.</p> <h2>வெளியேற்றம்</h2><p>அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், 2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றுங்கள் என்றார்.</p><p>இருப்பினும் சபாநாயகர், தி.மு.க. கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் என பல முறை கூறினார். ஆனால் தி.மு.க. உறுப்பினர் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு அமளி செய்தனர்.</p><p>இதனால் அவை காவலர்களை அழைத்து அமளியில் ஈடுபடும் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.</p> <h2>சாமி ஆடிய எம்எல்ஏ</h2><p>அதன்படி திமுக எம் எல் ஏ க்களை அவைக்காவலர்கள் வெளியேற்ற முற்பட்ட போது வால்பாறை தொகுதி திமுக எம் எல் ஏ குட்டி (எ) சுதாகர் சாமி வந்ததுபோல் ஆவேசம் அடைந்தார்.</p><p>சட்ட சபையில் கோஷம் எழுப்பிய படி தரையில் அமர்ந்திருந்த அவர் திடீரென துள்ள ஆரம்பித்தார்.</p> <p>இதைப் பார்த்த சபாநாயகர், அவருக்கு உடல்நிலை சரியில்லை பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்.</p><p>அதை தொடர்ந்து 5 பேர் அவரை பாதுக்காப்பாக பத்திரமாக வெளியேற்றினார்கள்.</p><p>அப்போது அவர் தனக்கு திடீரென சாமி வந்து விட்டதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பிரிட்டன் திரும்பினாலும் ஹாரி-மேகன் ஜோடிக்கு அரச குடும்ப அந்தஸ்து இல்லை : மன்னர் சார்லஸ் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/harry_meghan_to_be_treated_as_private_citizens_not_royal_representatives_says_king_charles</link><comments>https://www.maalaimalar.com/news/world/harry_meghan_to_be_treated_as_private_citizens_not_royal_representatives_says_king_charles#comments</comments><guid isPermaLink="false">aaf56af4-5600-4a98-9700-6b6e8c355973</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:44:40 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:44:40.004Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>King Charles,மன்னர் சார்லஸ்,Royal Family,British,பிரிட்டன்,Prince Harry Meghan,ஹாரி மேகன்,DukeOfSussex,Sandringham Agreement</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0en0e7ow/Prince-Harry-Meghan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Prince Harry Meghan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0en0e7ow/Prince-Harry-Meghan?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரச குடும்பப் பொறுப்புகளில் இருந்து விலகி, தற்போது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">பிரிட்டன் </a>திரும்பியுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/prince-harry">இளவரசர் ஹாரி</a> மற்றும் மேகன் ஜோடி, அரச குடும்பத்தின் பிரதிநிதிகளாக அல்லாமல் 'தனிப்பட்ட குடிமக்களாகவே' கருதப்படுவார்கள் என்று பிரிட்டன் மன்னர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D">மன்னர் சார்லஸ்</a> தரப்பில் இருந்து திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தில், கடந்த 2020-ஆம் ஆண்டு அரச குடும்பப் பொறுப்புகளில் இருந்து ஹாரி-மேகன் தம்பதியினர் விலகியபோது ஒப்புக்கொள்ளப்பட்ட 'சாண்ட்ரிங்ஹாம் ஒப்பந்தத்தின்' விதிமுறைகள் தற்போதும் அவர்களுக்குப் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.</p><h2>பாதி உள்ளே, பாதி வெளியே</h2><p>இந்தக் கடிதம் இளவரசர் ஹாரியின் குழுவினர், அரசுத் துறைகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் லார்ட் லெப்டினன்ட்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>அதில் கூறப்பட்டுள்ளதாவது, டக் மற்றும் டச்சஸ் ஆஃப் சசெக்ஸ் (ஹாரி - மேகன்) ஆகியோர் இனி அரச குடும்பத்தின் பணிபுரியும் உறுப்பினர்கள் அல்ல.</p><p>அவர்கள் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் பிரிட்டன் மன்னரின் பிரதிநிதிகளாகச் செயல்பட முடியாது. தங்களுக்குரிய '<a href="https://www.maalaimalar.com/news/world/harry-and-meghan-plan-permanent-return-to-england">ஹெச்.ஆர்.ஹெச்</a>' என்ற அரச குடும்பப் பட்டங்களை அவர்கள் பயன்படுத்தக் கூடாது.</p><p>அவர்களின் அறக்கட்டளை மற்றும் வணிகப் பணிகள் அனைத்தும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தவை. </p><p>சுருக்கமாகக் கூறின், அவர்கள் வணிக மற்றும் தொண்டு நோக்கங்களைக் கொண்ட தனிப்பட்ட குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள்.</p><p>அரச குடும்பப் பணிகளில் இருந்துகொண்டே தனிப்பட்ட வணிக நலன்களையும் கவனிக்கும் "பாதி உள்ளே, பாதி வெளியே" என்ற நிலைக்கு அரச குடும்பத்தில் இடமில்லை என்பது இதன் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>பாதுகாப்பு பிரச்சனை</h2><p>பிரிட்டனில் தங்களுக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்று இளவரசர் ஹாரி தொடர்ந்து புகார் கூறி வரும் நிலையில், இந்தக் கடிதம் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.</p><p>இவர்களது பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு செயல்பாட்டுப் பிரச்சினைகளும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடமே நேரடியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும், இதற்கும் அரச குடும்பத்திற்கும் தொடர்பில்லை என்றும் கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><h2>மீண்டும் பிரிட்டன் திரும்பிய தம்பதி</h2><p>கடந்த 2020-ஆம் ஆண்டு அரச குடும்பப் பொறுப்புகளைத் துறந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்குச் சென்ற ஹாரி-மேகன் தம்பதி, சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் பிரிட்டன் திரும்பினர்.</p><p>அரச குடும்பத்தில் நிலவிய நிறவெறிப் போக்கு, ஊடகங்களின் எல்லை மீறிய தலையீடு மற்றும் குடும்பக் கசப்புகள் காரணமாக அவர்கள் பிரிட்டனை விட்டு வெளியேறினர்.</p><p>தற்போது பிரிட்டன் திரும்பியுள்ள மேகன், வரும் வாரங்களில் சில தொண்டு நிறுவனப் பணிகளில் ஈடுபட உள்ளார். இளவரசர் ஹாரியும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார்.</p><p>மேலும், இவர்களது குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் காட்ஸ்வொல்ட்ஸ் பகுதியில் உள்ள அவர்களது இல்லத்திற்கு அருகிலுள்ள பள்ளியில் சேர்க்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.</p><p>எனினும், இவர்களின் வருகை அரச குடும்பப் பணிகளுக்குத் திரும்புவதைக் குறிக்காது என்பதை மன்னரின் கடிதம் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தோப்பு வெங்கடாசலம் மனுவை நிராகரித்தது ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-thoppu-venkatachalam-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-thoppu-venkatachalam-petition#comments</comments><guid isPermaLink="false">726949df-fa59-4383-a8f2-0e6b7479c53e</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:44:14 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:44:14.269Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,சென்னை ஐகோர்ட்,Madras HC,பெருந்துறை தொகுதி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zknnh4wq/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zknnh4wq/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.</strong></em></p><p>கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார், 9 ஆயிரத்து 693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜெயக்குமார், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார்.</p><p>இதனிடையே,தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-ஐகோர்ட்">சென்னை ஐகோர்ட்டில்</a> தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்த காரணங்களும் இல்லை எனக்கூறி, ஜெயக்குமாரின் மனுவை ஏற்று, தோப்பு வெங்கடாசலத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.</p><p>பெருந்துறை தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்க ஐகோர்ட்  தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்திருந்தது என்பதும், தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து சமீபத்தில் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>திபெத் பனிப்பாறை சரிவு பேரழிவு: சீன ஆய்வாளர்களின் அதிர்ச்சித் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/tibet-glacier-collapse-disaster-chinese-researchers-shocking-report</link><comments>https://www.maalaimalar.com/news/world/tibet-glacier-collapse-disaster-chinese-researchers-shocking-report#comments</comments><guid isPermaLink="false">a067a9ef-abe2-44b4-8258-730f7b6e4c2c</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:35:52 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:35:52.611Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal disaster,Tibet glacier collapse,Chinese researchers,திபெத் பனிப்பாறை சரிவு,திபெத்திய பீடபூமி,நேபாள வெள்ளப்பபெருக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/23golues/gka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tibet glacier collapse ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/23golues/gka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லங்டாங் லிருங் மலையின் உயர் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறை மற்றும் பாறைப் பகுதிகள் திடீரென சரிந்து வீழ்ந்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/sudden-flood-disaster-raises-questions-over-kathmandu-tibet-railway-bri-dream-project">திபெத்</a> மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் அண்மையில் நடந்த கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுக்குப் பின்னால் புவி வெப்பமயமாதலின் கொடூரப் பங்கு இருப்பதாக சீன அறிவியல் அகாடமியின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சீன-நேபாள எல்லையில் ஆகஸ்ட் 26 அன்று நிகழ்ந்த பனிப்பாறை உடைப்பு, பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அது குறித்த விரிவான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>7 நிமிடங்களி<strong>ல் 22 கி.மீ பா</strong>ய்ந்த பேராபத்து</h2><p>லங்டாங் லிருங் மலையின் உயர் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறை மற்றும் பாறைப் பகுதிகள் திடீரென சரிந்து வீழ்ந்துள்ளன. இவ்வாறு சரிந்த பனி, பாறை மற்றும் களிமண் கலவை வெறும் 6 முதல் 7 நிமிடங்களுக்குள் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிரோங் துறைமுகப் பகுதியைச் சென்றடைந்துள்ளது. மலையிலிருந்து சரிந்து வரும் வழியில் பாயும் ஆற்றின் படுக்கையிலிருந்த மணல், கற்கள் மற்றும் கரைகளின் இடிபாடுகளை இழுத்துக் கொண்டு வந்ததால், இது அதிவேகக் களிமண் வெள்ளமாக மாறியது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>கடந்த 60 <strong>ஆண்டுகளில் 24% சரிந்த பனி</strong>ப்பரப்பு</h2><p>சீன தேசிய காலநிலை மையத்தின் தகவலின்படி, கடந்த 60 ஆண்டுகளில் திபெத்திய பீடபூமியில் இருந்த பனிப்பாறை பரப்பளவு 51,000 சதுர கிலோமீட்டரிலிருந்து 39,000 சதுர கிலோமீட்டராகக் குறைந்துள்ளது. இதன்மூலம் சுமார் 24 சதவீத பனிப்பாறைகள் உருகி மறைந்துள்ளதாகவும், 7,000 சிறிய பனிப்பாறைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>திபெத்திய பீடபூமிப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளின் கட்டமைப்பு நிலைத்தன்மை வரும் நாட்களில் மேலும் பலவீனமடையும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். வழக்கமான கனமழை அல்லது ஏரிகள் உடைவது போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் இன்றி, உயர் மலைப்பகுதிகளில் திடீரென ஏற்படும் இத்தகைய பனிப்பாறைச் சரிவுகளைக் கண்டறிவது தற்போதைய தொழில்நுட்ப அமைப்புகளுக்கு சவாலாக உள்ளது. இதனால், செயற்கைக்கோள் அடிப்படையிலான நவீன கண்காணிப்பு முறைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டுமென வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேசிய சபாநாயகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-praise-tvk-members-and-edappdi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-praise-tvk-members-and-edappdi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">399d7177-ff64-4e58-87fb-1ff3ab6931c6</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:32:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:32:26.710Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uy5spdte/speaker.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uy5spdte/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> சர்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனது தீர்ப்பை கூறினார். அதில், முதலமைச்சரின் பதிலுரையில் குறிப்பிட்ட எதையும் அவைக்குறிப்பில் இருந்து தேவையில்லை, நீக்க முடியாது என்றார். இதையடுத்து சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனால் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக்காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றினர். </p><p>இதன்பின், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது:-</p><p>* திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா?</p><p>* சபையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என திமுகவினருக்கு உள்நோக்கம் உள்ளது.</p><p>* அவையின் மாண்பு தான் முக்கியம், திமுகவினரை வெளியேற்றியதை தவறாக கருதவில்லை.</p><p>* பிற்பகல் 1.30 மணிக்குள்ளாக சட்டசபையை முடிக்க வேண்டும்.</p><p>* அவையை முடிக்கவிடாமல் திமுகவினர் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?</p><p>* முதலமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கு காரணத்தையும் கூறி விட்டேன்.</p><p>* தவெக எம்எல்ஏக்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. </p><p>* என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்த்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி என்றார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.2000 கோடி.. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் எ.வ. வேலு செய்த வேலை - சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா புகார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-the-move-made-by-ev-velu-in-the-confidence-of-returning-to-poweraadhav-arjuna-levels-allegations-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-the-move-made-by-ev-velu-in-the-confidence-of-returning-to-poweraadhav-arjuna-levels-allegations-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">2458f3a7-14ce-40bf-b38a-9b9216aeceee</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:29:03 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:29:03.854Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Tamil Nadu Legislative Assembly,E.V. Velu,எ.வ. வேலு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9m5i58ma/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா, எ.வ. வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா, எ.வ. வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9m5i58ma/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆதவ் அர்ஜுனா, திமுக கொறடா எ.வ. வேலு குறித்த  பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p>சட்டசபையின் கடைசி நாள் இன்று. நேற்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>காவல்துறை மானிய கோரிக்கை பதிலுரையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-remarks-cannot-be-expunged-from-the-house-records-speaker-asserts-firmly">சர்க்காரியா கமிஷன் </a>குறித்து பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் மறுத்த நிலையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். </p><p>இதையடுத்து அவை நடவடிக்கைகள் தொடர்தன. </p><p>அப்போது எழுந்த விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக கொறடா எ.வ. வேலு குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். </p> <p>ஆதவ் அர்ஜுனா அவையில் பேசியதாவது, "சட்டப்சபையின் உரிமை மீறல் பிரச்னையை நாங்கள் கொண்டுவந்தோம். </p><p>தமிழ்நாடு சட்டசபை விதிகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மற்றும் இன்றைய எம்எல்ஏ எவ வேலு 2021 - 2026 ஆம் காலகட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்தபோது 14.1.2026 நாளிட்ட அரசாணை எண் 06 மூலம் 2026-27 ஆம் ஆண்டிற்கான சிஆர்ஐடிபி திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூ.2000 கோடி முன்கூட்டிய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அத்தொகை 2026-27 இல் மொத்த திட்ட அனுமதிக்குள் சரிசெய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>ஆனால் அந்த நேரத்தில் அந்த மானிய கோரிக்கைக்கள் சட்டசபையில் அப்போது வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. </p><p>இருப்பினும் இப்பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு 2025-26 நிதியாண்டிலே 80 பணி ஆணைகளும் வழங்கப்பட்டு எதிர்கால பட்ஜெட் புரொவிஷன் மீது ரூ.2000 கோடி காமிட்ட் லயபிலிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இது சட்டமன்ற நடைமுறைக்கு எதிரானது.</p><p>சட்டமன்றத்தில் ஒப்புதல் இல்லாமலேயே ஆட்சி வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ. 2000 கோடியை ஒதுக்கியுளளனர். </p><p>இதனால் மானிய கோரிக்கையை பரிசீலித்து அனுமதி வழங்கும் சட்டசபையின் அதிகாரம் செயல்முறையில் பறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பொறுப்பற்ற செயல் குறித்த அறிக்கையை ஆய்வக்கு சட்டமன்றம் அனுப்ப வேண்டும் என கோருகிறேன்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு வழி சொல்கிறார் முதலமைச்சர்- எ.வ.வேலு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-indictment-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-indictment-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">ee457877-b141-41b1-8b0d-e317a510952b</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:13:50 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:13:50.801Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,kn nehru,தமிழக சட்டசபை,கேஎன் நேரு,ev velu,எவ வேலு,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/q9ln2jpq/evvelu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்பில் எ.வ.வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்பில் எ.வ.வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/q9ln2jpq/evvelu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காவல்துறை மானியக்கோரிக்கை மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> நேற்று சர்காரியா அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைக்காவலர்கள் மூலம் சபையில் இருந்து தி.மு.க. வினர்கள் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். </p><p>இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு கூறுகையில், </p><p>தி.மு.க.வை அசிங்கப்படுத்தும் நோக்கில் பொய்யான செய்திகளை சினிமா பாணியில் முதலமைச்சர் பேசினார். அமலாக்கத்துறை பற்றி முதலமைச்சர் பேசிய நிலையில் பதிலளிக்க எங்களுக்கு அனுமதி தாருங்கள் என சபாநாயகரிடம் கேட்டோம். அதற்கு நாங்கள் பதில் சொல்லும் முயலும்போது எங்களை அவையில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள் என்றார். </p><p>தி.மு.க. கொறடா எ.வ.வேலு கூறுகையில், </p><p>* எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிப்பார் என எதிர்பார்த்தோம். </p><p>* காவல்துறை மானியக்கோரிக்கை மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை.</p><p>* மிசாவைப் பற்றி பேசிய போது முதலமைச்சர் விஜய் வெளிப்படுத்திய மோசமான உடல்மொழியை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். </p><p>* மிசாவில் சிறை சென்ற முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தியுள்ளனர். </p><p>* முரசொலி மாறன் குடும்பத்தினரிடம் பணம் வாங்கி படம் நடித்த முதலமைச்சர் அவரை ஏன் கொச்சைப்படுத்தினார்?</p><p>* பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு வழி சொல்கிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>* பெண் மாற்று தலைவரே இதுவரை இல்லை என்று ரீல்ஸ் போடுவதற்காக சத்யபாமாவை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர் என்றார். </p>]]></content:encoded></item></channel></rss>