<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 21 Jul 2026 20:19:00 +0000</lastBuildDate><item><title>காங்கிரஸ் கட்சி மாணவர்களை அரசியல் கருவிகளாக பயன்படுத்துகிறது  - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்</title><link>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-said-congress-exploiting-students-as-political-tools</link><comments>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-said-congress-exploiting-students-as-political-tools#comments</comments><guid isPermaLink="false">558b8c31-23d4-49be-9c40-769aae673e02</guid><pubDate>Tue, 21 Jul 2026 20:11:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T20:11:04.416Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gu8lou0m/D-P-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் தர்மேந்திர பிரதான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gu8lou0m/D-P-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் (NEET) தேர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், இளைஞர்களின் நியாயமான கவலைகள் ஒவ்வொன்றையும் நாடாளுமன்றத்தில் தீர்த்து வைக்கவும் அரசு உறுதியுடன் உள்ளது என்று மத்திய அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/dharmendra-pradhan">தர்மேந்திர பிரதான்</a> வலியுறுத்தினார்.</p><p>மேலும், பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சாடிய பிரதான், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இடையூறுகளை 'உருவாக்குவதற்காக' மாணவர்களை 'அரசியல் கருவிகளாக' பயன்படுத்துவதாக அவர் மீது குற்றம் சாட்டினார்.</p><p><strong>எக்ஸ் தள பதிவு:</strong></p><p>முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததை கண்டித்து, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பல மூத்த தலைவர்கள் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்; அப்போது அவர்கள் பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.</p><p>"எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இடையூறுகளை உருவாக்க மாணவர்களை வெட்கமின்றி அரசியல் கருவிகளாக பயன்படுத்துவதைத் தொடர்கின்றனர். அவர்கள் மாண்புமிகு பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா நடத்தத் தேர்ந்தெடுத்ததன் மூலம், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததுடன், நிறுவப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளையும் புறக்கணித்தனர்," என்று பிரதான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>"விரிவான விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்த பின்னரும், காங்கிரஸ் ஜனநாயக ரீதியான விவாதத்தை விடுத்து அரசியல் நாடகத்தையே தேர்ந்தெடுத்தது. மாணவர்களுக்கான தீர்வுகளை காண்பது அவர்களின் நோக்கமாக இருக்கவில்லை; மாறாக, அரசியல் ரீதியான தலைப்பு செய்திகளை பெறுவதற்காக இடையூறுகளை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.</p><p>ராகுல் காந்தியை பொறுத்தவரை, இது மாணவர்களை பற்றியது அல்ல; விவாதத்திற்கான அனைத்து நியாயமான வழிகளும் திறக்கப்பட்ட பிறகும் மோதலை உருவாக்குவதை பற்றியதே இது</p><p>நீட் தேர்வு குறித்து விவாதிக்கவும், நாடாளுமன்றத்தில் நமது இளைஞர்களின் நியாயமான கவலைகள் ஒவ்வொன்றையும் தீர்க்கவும் எங்கள் அரசு 100 சதவீதம் உறுதியுடன் உள்ளது. அரசியல் பிரச்சாரத்திற்கான வெறும் கருவிகளாக நடத்தப்படுவதை விட மிக சிறந்ததையே இந்தியாவின் மாணவர்கள் பெற தகுதியானவர்கள். குழப்பத்திற்கு பதிலாக தெளிவையும், முழக்கங்களுக்கு பதிலாகத் தீர்வுகளையும், இடையூறுகளுக்கு பதிலாக பொறுப்புணர்வையும் அவர்கள் பெற தகுதியானவர்கள்.</p><p>மாணவர்களுக்கு வெறும் கோபத்தை மட்டும் வெளிப்படுத்துவது போதாது; அவர்களுக்கு பதில்களையும், சீர்திருத்தங்களையும், பொறுப்புக்கூறலையும் வழங்குவதே நமது கடமை. அதைத்தான் எங்கள் அரசாங்கம் தொடர்ந்து நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளது," என்று பிரதான் கூறினார்.</p><p><strong>பேச்சுவார்த்தை:</strong></p><p>பிரதமர் அலுவலகத்தின் (PMO) இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோர் காந்தியை சந்தித்து, அவர் மேற்கொண்டு வரும் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.</p><p>நீட் (NEET) தேர்வு மற்றும் அது தொடர்பான இயக்கம் குறித்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக தான் காந்தியிடம் கூறியதாகவும், ஆனால் காங்கிரஸ் தலைவர் தனது நிலைப்பாட்டை மாற்றி, பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக சிங் தெரிவித்தார்.</p><p>பின்னர், எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்பகுதியிலிருந்து காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு பின்னப் விடுவிகப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் தொடக்க விழா: இந்திய அணி பயணப் பெட்டிகள் காணாமல் போனதால் குத்துச்சண்டை வீரர்கள் தவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/missing-luggage-leave-indian-boxers-scrambling-before-cwg-opening-ceremony</link><comments>https://www.maalaimalar.com/sports/missing-luggage-leave-indian-boxers-scrambling-before-cwg-opening-ceremony#comments</comments><guid isPermaLink="false">358c162f-05d7-46c8-b636-79020d8e34ce</guid><pubDate>Tue, 21 Jul 2026 19:15:06 +0000</pubDate><atom:updated>2026-07-21T19:15:06.953Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,Indian Boxing Team,இந்திய குத்துச்சண்டை அணி,காமன்வெல்த் போட்டிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/h7pkygsd/boxing.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Boxing Gloves]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/h7pkygsd/boxing.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய குத்துச்சண்டை அணியின் பயண பெட்டிகளில் கிட்டத்தட்ட பாதி பெல்ஃபாஸ்டில் விடப்பட்டதால், அணிக்கு சிரமமான தொடக்கம் ஏற்பட்டது.</p><p>22 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி, பெல்ஃபாஸ்டில் நடந்த ஆயத்த பயிற்சி முகாமுக்கு பிறகு கிளாஸ்கோ வந்தடைந்தது. </p><p><strong>பைகள் மாயம்:</strong></p><p>ஆனால், சாக்ஷி சௌத்ரி (51 கிலோ), உலக சாம்பியன் ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ), பர்வீன் ஹூடா (65 கிலோ), ஜதுமணி சிங் (55 கிலோ), கபில் பொக்காரியா (90 கிலோ) மற்றும் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சி. குட்டப்பா உள்ளிட்டோரின் பைகள் அவர்களுடன் வந்து சேரவில்லை.</p><p>குறுகிய பெல்ஃபாஸ்ட்-கிளாஸ்கோ வழித்தடத்தில் இயக்கப்பட்ட விமானம் சிறியது என்று அணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். காணாமல் போன பயண பெட்டிகளில், பயிற்சி உபகரணங்களும், வியாழக்கிழமை நடைபெறும் தொடக்க விழாவில் குத்துச்சண்டை வீரர்கள் அணியவிருந்த உடைகளும் இருந்தன.</p><p><strong>தொடர்கதை:</strong></p><p>இந்த மாத தொடக்கத்தில், குத்துச்சண்டை வீரர்கள் தோஹாவில் இருந்து பெல்ஃபாஸ்டுக்கு விமானத்தில் சென்றபோதும் இதே போன்ற சம்பவங்கள் நடந்திருந்தன.</p><p>குத்துச்சண்டை போட்டி வெள்ளிக்கிழமை தொடங்குவதால், இறுதி தயாரிப்புகள் வேகம் பிடிப்பதற்குள் பயண பெட்டிகள் கிளாஸ்கோவை சென்றடையும் என்று குழுவினர் நம்புகின்றனர்.</p><p>மேலும், மகளிர் பயிற்சியாளர் மந்தகானி சானுவுக்கு, குத்துச்சண்டை வீரர்கள் தங்கியிருக்கும் அதே ஹோட்டலில் தங்குமிடம் வழங்கப்படவில்லை. குத்துச்சண்டை நிகழ்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி விடுவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-priyanka-released-from-detention-as-congress-staged-protest-at-lok-kalyan-marg</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-priyanka-released-from-detention-as-congress-staged-protest-at-lok-kalyan-marg#comments</comments><guid isPermaLink="false">72200364-b6a5-4254-a952-5ece11f881f7</guid><pubDate>Tue, 21 Jul 2026 18:31:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T18:31:05.096Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,காங்கிரஸ் போராட்டம்,congress protest,Priyanka gandhi,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ri9aky9q/p-g.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரியங்கா காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ri9aky9q/p-g.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி 'லோக் கல்யாண் மார்க்' பகுதியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின்போது, ​​டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி</a>, பிரியங்கா காந்தி மற்றும் பல கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.</p><p>காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சத்ராசல் மைதானத்தில் இருந்து ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். பிரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி தலைவர் சோனியா காந்தி சென்றார்.</p><p><strong>கங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு:</strong></p><p>காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி. வேணுகோபால் மற்றும் பவன் கேரா ஆகியோர் லோக் கல்யாண் மார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>கேரள முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (NDA) இணையக்கூடும் என்ற வதந்திகள் பரவியிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலேவும் காங்கிரஸின் போராட்டத்தில் பங்கேற்றார்.</p><p><strong>எக்ஸ் தள பதிவு:</strong></p><p>நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்ப தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர்கள், 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) நடத்திய 'சான்சத் சலோ' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகே போராட்டம் நடத்தினர்.</p><p>இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, "அரசு எந்த பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை; அதேவேளையில் நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவும் விரும்பவில்லை. இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பீகார் தலைமை செயலகம், முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/bomb-threat-emails-trigger-security-alert-in-patna-gayaji</link><comments>https://www.maalaimalar.com/news/national/bomb-threat-emails-trigger-security-alert-in-patna-gayaji#comments</comments><guid isPermaLink="false">107dd69c-7976-4022-ba07-9e2a0ad9e79c</guid><pubDate>Tue, 21 Jul 2026 17:40:49 +0000</pubDate><atom:updated>2026-07-21T17:40:49.288Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bomb threat,வெடிகுண்டு மிரட்டல்,Patna,பாட்னா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gwc8z436/patna.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gwc8z436/patna.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் தலைமைச் செயலகம், முதலமைச்சர் இல்லம், பள்ளிகள் மற்றும் பஸ்போர்ட் அலுவலகங்களை குறிவைத்து அனுப்பப்பட்ட தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள், பாட்னா மற்றும் கயாஜியில் பாதுகாப்பு எச்சரிக்கையை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>உள்துறை ஆணையர் மற்றும் மாநில தலைமை செயலகம் உள்ளிட்ட பல அதிகாரப்பூர்வ அரசு மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் மிரட்டல் மின்னஞ்சல், பாட்னாவில் உள்ள முக்கிய அரசு நிறுவனங்களில் குண்டுவெடிப்புகள் நிகழும் என எச்சரித்ததாக அவர்கள் கூறினர்.</p><p><strong>பாதுகாப்பு அதிகரிப்பு:</strong></p><p>முக்கிய அரசு நிறுவனங்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று பெறப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் (பாட்னா - மத்திய) மம்தா கல்யாணி கூறினார். "காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. நகருக்கு உள்ளேயும் அதை சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று அவர் கூறினார்.</p><p>அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, அந்த மின்னஞ்சலை அனுப்பியவர் காலிஸ்தான் ஆதரவு அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறிக்கொண்டார். மேலும், 2023 ஜூன் மாதம் கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.</p><p><strong>மனித வெடிகுண்டு தாக்குதல்:</strong></p><p>அந்த மின்னஞ்சலில், நிஜ்ஜாரின் கொலைக்கு அப்போதைய கனடாவுக்கான இந்திய உயர் ஆணையரே காரணம் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டிருந்தது. மேலும், பீகார் அரசு அவருக்கு பாட்னாவில் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் அவரை குறிவைப்பதாகவும் அது மேலும் அச்சுறுத்தியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>பாட்னாவின் தானாபூர் பகுதியில் உள்ள நான்கு பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்திருந்தன.</p><p><strong>தீவிர சோதனை:</strong></p><p>வெடிகுண்டு அகற்றும் குழு மற்றும் மோப்ப நாய் படைகள் பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தினர், ஆனால் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில், பாட்னாவில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் குறித்து அதன் கிளைகளை எச்சரித்ததை தொடர்ந்து, கயாஜியில் உள்ள பொது அஞ்சல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திலும் பாதுகாப்பு படையினர் சோதனைகளை நடத்தினர்.</p><p>சிவில் லைன்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் ஷாமின் அகமது கூறுகையில், வெடிகுண்டு அகற்றும் மற்றும் மோப்ப நாய் படைகள் வளாகத்தை ஆய்வு செய்து, அந்த மிரட்டல் ஒரு பொய் என அறிவித்தன.</p><p>மூத்த அஞ்சல் அதிகாரி பிரணவ் குமார் ஜா கூறுகையில், பாட்னாவில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அந்த மிரட்டல் மின்னஞ்சல் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cong-sfi-stage-protest-in-chennai-condemning-police-action-on-students-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cong-sfi-stage-protest-in-chennai-condemning-police-action-on-students-in-delhi#comments</comments><guid isPermaLink="false">26ea6114-53be-4a5c-b164-006fe547a473</guid><pubDate>Tue, 21 Jul 2026 17:13:49 +0000</pubDate><atom:updated>2026-07-21T17:13:49.606Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,protest,போராட்டம்,SFI,இந்திய மாணவர் சங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/z715nknk/sfi-protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SFI Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/z715nknk/sfi-protest.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நீட் (NEET) தேர்வு விவகாரம் தொடர்பாக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையை கண்டித்து <a href="https://www.maalaimalar.com/topic/sfi">இந்திய மாணவர் சங்கம்</a> மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><strong>போராட்டம்:</strong></p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது டெல்லி காவல்துறை மேற்கொண்ட "தன்னிச்சையான" கைது நடவடிக்கைகளை கண்டித்தும், இந்த தேசிய தகுதி தேர்வை ரத்து செய்ய கோரியும் இந்திய மாணவர் சங்க (SFI) உறுப்பினர்கள் <a href="https://www.maalaimalar.com/topic/protest">போராட்டம்</a> நடத்தினர்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் ராஜினாமாவை வலியுறுத்தி அவரது இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதை கண்டித்து, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் மற்றும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.</p><p><strong>தங்கபாலு கண்டனம்:</strong></p><p>மத்திய அரசின் சர்வாதிகார போக்கு மற்றும் ஜனநாயக குரல்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் என கூறப்படுபவற்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு கண்டித்தார்.</p><p>டெல்லியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என்று அவர் விமர்சித்தார். மேலும், இந்த தேசிய பிரச்சினையை கையாண்ட விதம் குறித்து மத்திய அரசு மற்றும் காவல்துறையை அவர் குறை கூறினார்.</p><p>குறிப்பாக, நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் அநீதி மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவது குறித்தும் அவர் குறிப்பிட்டார். மோடி அரசின் கொள்கைகளுக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், லோக் பவனை முற்றுகையிடும் போராட்ட பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்தும் என்று தங்கபாலு அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>போராட்டத்தால் கைது... மகளை காண காவல் நிலையம் சென்ற சோனியா காந்தி!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhi-visited-the-police-station-to-see-her-daughter</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhi-visited-the-police-station-to-see-her-daughter#comments</comments><guid isPermaLink="false">7352a508-a4ec-4227-8c5b-897ea321e6d6</guid><pubDate>Tue, 21 Jul 2026 16:19:31 +0000</pubDate><atom:updated>2026-07-21T16:19:31.017Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,sonia gandhi,Priyanka gandhi,சோனியா காந்தி,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0d51wzxg/New-Project-2026-07-21T214322.532.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மகளை காண காவல் நிலையம் சென்ற சோனியா காந்தி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0d51wzxg/New-Project-2026-07-21T214322.532.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கைதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு விரைந்துள்ளார்.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிரான போலீசாரின் அராஜகப் போக்கை கண்டித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என பிரதமர் இல்லம் முன்பு காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தொடர்ந்து பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்ற போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p>பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதின்போது ராகுல் காந்தியின் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. </p><p>தலைவர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையறிந்த சோனியா காந்தி, மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அடைக்கப்பட்ட பிரியங்கா காந்தியை சென்று பார்த்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கடுமையான குற்றம் என வகைப்படுத்தப்பட்டால்., சிறார் கிடையாது, வயது வந்தோர்: உச்சநீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/minor-can-be-tried-as-adult-if-crime-qualifies-as-heinous-offence-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/minor-can-be-tried-as-adult-if-crime-qualifies-as-heinous-offence-supreme-court#comments</comments><guid isPermaLink="false">cc95ba72-2e49-4ec3-997c-ac014537ee52</guid><pubDate>Tue, 21 Jul 2026 15:47:30 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:47:30.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-09/902uanwe/supremecourt.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுப்ரீம் கோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-09/902uanwe/supremecourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>18 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறார் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டால், சிறாருக்கான நீதி சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.</p><p>18 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறார் சில சமயங்களில் பெரிய அளவிலான குற்றத்தில் ஈடுபடும் சம்பவம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்படும் சிறார்களுக்கு, சிறார் நீதி சட்டத்தின் தண்டனை வழங்கப்படும். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 302-ன் கீழ் வரும் கொலைக் குற்றத்தை, சிறுவர் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் கீழ் கொடுமையான குற்றம் என வகைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.</p><p>சிறுவர்களைப் பெரியவர்களைப் போல விசாரிப்பதற்கான சட்டக் கட்டமைப்பைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.</p><p>இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 302-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதில் ஆயுள் தண்டனையே குறைந்தபட்ச தண்டனையாக உள்ளது. எனவே, இது கடுமையான குற்றம் என வகைப்படுத்தப்படும் என்று நீதிபதி பார்திவாலா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும், பிரிவு 302-இன் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றங்கள் ஆயுள் தண்டனைக்குக் குறைவான தண்டனையை விதிக்க முடியாது என்பதால், கொலைக்கான குறைந்தபட்ச தண்டனை ஆயுள் தண்டனை என்பது அதன் தவிர்க்க முடியாத உட்பொருளாகும்.</p><p>சிறார் நீதிச் சட்டத்தின்படி, குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களே கடுமையான குற்றங்கள் (heinous offences) எனக் கருதப்படுகின்றன.</p><p>பீகார் மாநிலம் பாட்னா உயர்நீதிமன்தற்தில் இது தொடர்பான ஒரு வழக்கில் மேல்முறையீட்டாளரை வயது வந்தவராகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், இந்த வழக்கை ஒரு வழக்கமான நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சிறார் நீதி வாரியத்திற்கு உத்தரவிட்டது.</p><p>சிறுவரைத் தாங்களே விசாரிக்க வேண்டும் என்று சிறார் நீதி வாரியம் ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தது, ஆனால் மேல்முறையீட்டு அமர்வு நீதிமன்றம் அந்த முடிவை ரத்து செய்தது. பின்னர், சிறாரை வயது வந்தவராகக் கருதி விசாரிக்க அனுமதிக்கும் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.</p><p>இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் &apos;கட்டா குஸ்தி 2&apos; - உலகளவில் ரூ.55 கோடி வசூல்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gatta-kusthi-2-makes-a-massive-impact-at-the-box-office-grosses-55-crore-worldwide</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/gatta-kusthi-2-makes-a-massive-impact-at-the-box-office-grosses-55-crore-worldwide#comments</comments><guid isPermaLink="false">43013b3e-1730-4548-ab11-03abdcd993a1</guid><pubDate>Tue, 21 Jul 2026 15:46:13 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:46:13.913Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vishnu Vishal,விஷ்ணு விஷால்,aishwarya lekshmi,கட்டா குஸ்தி 2,Gatta Kusthi 2,ஐஸ்வர்யா லக்ஷ்மி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oeie4mwh/New-Project-2026-07-21T211549.828.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் 'கட்டா குஸ்தி 2' – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oeie4mwh/New-Project-2026-07-21T211549.828.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செல்ல அய்யாவு எழுத்து மற்றும் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை.3ம் தேதி வெளியானப் படம் ‘கட்டா குஸ்தி 2’. 2022-ல் வெளியாகி வெற்றிபெற்ற 'கட்டா குஸ்தி' படத்தின் தொடர்ச்சியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>இரண்டாம் பாகத்திலும், முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த், மற்றும் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன்  இசையமைத்துள்ளார். </p><p>வெளியானதிலிருந்து தற்போதுவரை திரையரங்குகளில் படம் நன்றாக ஓடிவருகிறது. இந்நிலையில் படம் உலகளவில் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>இதன்மூலம் நடிகர் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்திலேயே ரூ.50 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் இதுவாகும். மேலும் 2026 ஆம் ஆண்டில் ரூ.50 கோடி வசூலைக் கடந்த 8-வது தமிழ் படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026#comments</comments><guid isPermaLink="false">e1a983bf-6930-4a96-8d7d-aee2f254884f</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:01:21 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:07:11.371Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp">CJP போராட்டத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தியை உட்கார அனுமதித்ததே பிரதமர் மோடிதான்: ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/arivu-secretariat-meeting-with-chief-minister-vijay">தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் பின்னணி பாடகர் அறிவு சந்திப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/prison-is-not-new-to-dmk-kanimozhi-mp-interview">சிறைச்சாலை தி.மு.க.விற்கு புதிது கிடையாது: கனிமொழி எம்.பி. பேட்டி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amid-cjp-protests-iit-roorkee-asks-students-staff-not-to-partake-in-political-activity">CJP போராட்டம் எதிரொலி: மாணவர்கள், ஸ்டாஃப்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐ.ஐ.டி. ரூர்க்கீ</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/world-cup-hockey-tournament-india-mens-team-announced">உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய ஆண்கள் அணி அறிவிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-war-iranian-delegation-in-pakistan-to-hold-talks-with-pm-sharif-field-marshal-munir">பாகிஸ்தானில் ஈரானின் உயர்மட்டக் குழு: பிரதமர், ராணுவ தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bengal-cm-blames-previous-tmc-govt-for-loss-of-europe-air-links-mounting-debt-on-state-economy">ரூ. 8 லட்சம் கோடி கடன்: முந்தைய மம்தாவின் திரிணாமுல் அரசு மீது சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/food-delivery-worker-wins-chinas-top-literary-prize">சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/hs-prannoy-and-devika-sihag-exit-early-at-china-open">சீனா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியர்கள் ஏமாற்றம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/opposition-parties-disrupt-parliament-both-houses-adjourned-all-day">எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-do-not-drag-us-into-it-delhi-high-court-on-plea-alleging-use-of-force-on-students">மாணவர்கள் போராட்டம் விவகாரத்தில் எங்களை இழுக்காதீர்கள்: டெல்லி உயர்நீதிமன்றம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/77516b2d-5a97-484d-ab57-83028e4f9e4e">நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் - பாடகர் அறிவு கைது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-allows-sonam-wangchuk-to-choose-hospital">விருப்பப்பட்ட மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி: சோனம் வாங்சுக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/uttarakhand-downpour-dabkeshwar-mahadev-temple-flooded">உத்தரகாண்டில் கனமழை: டப்கேஷ்வர் மகாசிவன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/number-1-in-rankings-arina-sabalenkas-new-record">தரவரிசையில் நம்பர் 1: அரினா சபலென்காவின் மற்றொரு சாதனை</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/both-teams-have-equal-chance-to-win-t20-series-sikandar-raza">இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்பு: டி20 தொடர் குறித்து சிக்கந்தர் ராசா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/this-country-is-not-your-fathers-property-pm-modi-arvind-kejriwal-slams">"இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல, பிரதமர் மோடி!"-அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/be4bfd4a-1099-42c1-a508-04536354f321">பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை - மல்லிகார்ஜூன கார்கே</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/03334d6b-6bde-42fe-a82d-3764dba7b6c9">பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/36d83f67-0602-4ab4-b0b3-77cfbae2bbb4">துணை ஜனாதிபதி வருகை - திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a4d618d4-266a-4a6e-b6c1-6738d4a795b5">கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம் - வீடுகள் விலை குறைகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-slaps-50-tariffs-new-duties-on-key-canadian-imports-under-uscanada-trade-dispute">இது நியாயமே இல்ல.. கனடா மீது 50% வரியை தீட்டிய டிரம்ப் -கார்னி கொந்தளிப்பு<br></a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/c06bac6b-6b04-4642-9bd5-8b4c9398b0d7">மக்களே ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! - மு.க.ஸ்டாலின்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive">கயானா படகு விபத்து: 27 உடல்கள் மீட்பு; போதைப்பொருள் பரிசோதனையில் மாலுமிகள் சிக்கியதால் பரபரப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award">தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு 'லோக்மான்ய திலகர் விருது'!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed">ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப்பெருக்கு: 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ca9c7d59-6f3b-4f07-939f-20fe3e86130f">நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874">அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35">கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a">நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0462a245-3b74-4003-834b-ab1c2c54d599">ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/cce69c86-57c0-4546-a672-e41cbf604cc5">வறட்சியால் வாடும் கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">NEET-UG 2026: போலியான OMR விடைத்தாள்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை-NTA எச்சரிக்கை!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a">ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/spain-second-world-cup-triumph-madrid-fans-historic-celebration">ஸ்பெயின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டம்: மேட்ரிட் நகரில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title">விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4">நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears">'மீண்டும் என்னை தேசவிரோதி என்பார்கள்': மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித் தோசாஞ்ச்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27">தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations">Sikkim: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு - மீத்தேன் வாயு கசிவால் மீட்பதில் சிக்கல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge">இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் - CJP அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6718ca4f-394f-4ce0-8f4d-f2a524f402dc">இங்கிலாந்து புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ce5bfe19-8180-4674-acf1-75b69c84a40e">வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்- ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3">கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f86052c-a139-4221-a893-68b35a1821b8">சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/74493a2e-1175-4349-bd50-436bf3bd4bc3">போலி மருந்து தயாரிப்பு வழக்கில் 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு</a></p> ]]></content:encoded></item><item><title>CJP போராட்டத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தியை உட்கார அனுமதித்ததே பிரதமர் மோடிதான்: ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp#comments</comments><guid isPermaLink="false">7297e388-64db-41c8-8406-7fd6350a82ed</guid><pubDate>Tue, 21 Jul 2026 15:05:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:05:54.970Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,AAP,pm modi,பிரதமர் மோடி,CJP Protest,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xdxogc8n/RahulGAndhi00004.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi Arrest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xdxogc8n/RahulGAndhi00004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததை எதிர்த்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை முன்னெடுத்தது. கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து நீக்கும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.</p><h2>நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்</h2><p>நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதை சரியாக பயன்படுத்த நினைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்தது. நேற்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றபோது, போலீசார் துணை ராணுவத்துடன் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.</p><p>மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான இந்த அடக்கு முறைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.</p><h2>ராகுல் காந்தி தர்ணா</h2><p>இன்று மாலை திடீரென ராகுல் காந்தி பிரதமர் மோடி வீட்டை நோக்கி பேரணி சென்றார். அவருடன் காங்கிரஸ் தலைவர்களும் சேர்ந்து சென்றனர். பிரதமர் மோடி வீட்டின் அருகில் போலீசார் <a href="https://www.maalaimalar.com/news/national/protest-near-prime-ministers-residence-rahul-and-priyanka-gandhi-forcibly-detained">ராகுல் காந்தி</a>யை தடுத்து நிறுத்தனர்.</p><p>அவர் கீழே அமர்ந்து போராட்டம் நடத்தினார். பின்னர், கலைந்து செல்லவில்லை என்றால், கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர். ஆனால், ராகுல் காந்தி கலைந்து செல்லவில்லை. இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><h2>ஆம் ஆத்மி குற்றச்சாட்டு</h2><p>இந்த நிலையில் ராகுல் காந்தி பிரதமர் வீட்டு அருகே போராட்டம் நடத்தியதை ஆம் ஆத்மி கட்சி விமர்சனம் செய்துள்ளது. மோடிதான் அவரை உட்கார வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளது.</p><p>இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் தனது எக்ஸ் பக்கத்தில் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டத்தை பலவீனப்படும் வகையில், பிரதமர் மோடி ராகுல் காந்தியை போராட்டம் நடத்த கொண்டு வந்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>அதிஷி</h2><p>டெல்லி மாநில முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிஷி கூறுகையில் "மத்திய அரசு ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் CJP மற்றும் வாங்சுக் உடன் பேச மறுத்துவிடடது. ராகுல் காந்தி போராட்டத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.</p><p>நேற்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றபோது 100 மீட்டருக்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால், ராகுல் காந்தியை பிரதமர் வீடு வரைக்கும் அனுமதித்துள்ளனர். காங்கிரஸ்- பாஜக ஒன்று என்பது இதுவே சாட்சி" எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக தவெக செயலாளர் சிவா நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-secretary-siva-appointed-as-chairman-of-the-tamil-nadu-housing-board</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-secretary-siva-appointed-as-chairman-of-the-tamil-nadu-housing-board#comments</comments><guid isPermaLink="false">1a70fe52-f8de-41af-9213-0b437c27b2f7</guid><pubDate>Tue, 21 Jul 2026 14:55:47 +0000</pubDate><atom:updated>2026-07-21T14:55:47.469Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,தவெக அரசு,TVK Govt,Tamil Nadu Housing Board</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ekr74mcz/New-Project-2026-07-21T202522.818.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக தவெக செயலாளர் சிவா நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ekr74mcz/New-Project-2026-07-21T202522.818.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக வடசென்னை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த பூச்சி முருகன் கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். </p><p>அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த புதிய நியமனம் போடப்பட்டுள்ளது. நியமனத்திற்கான அரசாணை வெளியானதைத் தொடர்ந்து, வி. சிவா தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.</p><p>முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகவும், தவெகவின் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியதிலும் வி. சிவா முக்கியப் பங்காற்றியுள்ளார்.  </p><p>விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடாமல் இருந்திருந்தால், இவர்தான் அங்கு தேர்தலில் நின்றிருப்பார் என்றும் கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட செய்தித் தொடர்பாளர் நீக்கம் - கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/spokesperson-dismissed-for-eating-a-burger-during-the-protest-cockroach-party-takes-drastic-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/spokesperson-dismissed-for-eating-a-burger-during-the-protest-cockroach-party-takes-drastic-action#comments</comments><guid isPermaLink="false">1e4a678c-a44c-464e-916b-815b060cbcf8</guid><pubDate>Tue, 21 Jul 2026 14:39:40 +0000</pubDate><atom:updated>2026-07-21T14:39:40.128Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Burger,பர்கர்,Cockroach Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Vijeta Dahiya,விஜேதா தஹியா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/16ce12hr/New-Project-2026-07-21T200917.938.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட செய்தித் தொடர்பாளர் நீக்கம் - கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/16ce12hr/New-Project-2026-07-21T200917.938.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று கரப்பான்பூச்சி கட்சி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில், அதில் பங்கேற்காமல், பர்கர் சாப்பிட்டுக் கொண்டும், விமர்சிப்பவர்களைக் கேலி செய்துகொண்டும் இருந்த காணொளிகள் இணையத்தில் வைரலாகின.</p><p>இதனைத்தொடர்ந்து சிஜேபியின் தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் கட்சியின் பிற உறுப்பினர்கள் காவல்துறையின் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்ட நேரத்தில், அவர் இவ்வாறு நடந்துகொண்டது "மிகவும் உணர்ச்சியற்றது" மற்றும் பொறுப்பற்றது என்று சிஜேபி தெரிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு, போராட்டத்தில் ஈடுபட்ட பலரைப் போலவே தானும் இரண்டு நாட்களாக தூங்கவில்லை என்றும், பசியின் காரணமாகவே பர்கர் சாப்பிட்டதாகவும் விஜேதா தஹியா விளக்கம் அளித்துள்ளார். </p><p>“போராட்டக்காரராக இருப்பதுதான் என் வேலை என்பது போல என்னை ஏன் பொறுப்பேற்கச் சொல்கிறீர்கள்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அனிருத் குரலில் &apos;Hi&apos; படத்தின் &apos;ரசகுல்லா&apos; பாடலின் ப்ரோமோ வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hi-rasagulla-song-promo-out-anirudh-second-single</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hi-rasagulla-song-promo-out-anirudh-second-single#comments</comments><guid isPermaLink="false">987675a0-cb79-478b-a8b6-d54a3ea5df95</guid><pubDate>Tue, 21 Jul 2026 14:28:58 +0000</pubDate><atom:updated>2026-07-21T14:28:58.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anirudh Ravichander,நயன்தாரா,Nayanthara,kavin,கவின்,HiMovie,RasgullaPromo,VishnuEdavan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vsqbhna0/Hi-Movie-Second-Single-Update" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hi Movie Second Single Update]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vsqbhna0/Hi-Movie-Second-Single-Update?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா மற்றும் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவின் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் திரைப்படம் 'Hi'.</p><p>ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.</p><p>ஏற்கனவே வெளியான இந்த படத்தின் முதல் பாடல் ஜிவி பிரகாஷ் குரலில் வெளியான ' கண்ணக்குழியா' மெலடி பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலின் அப்டேட் வெளியாகியுள்ளது.</p><h2>'ரசகுல்லா' ப்ரோமோ:</h2><p>'Hi' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'ரசகுல்லா' பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் தனது துள்ளலான குரலில் பாடியுள்ளார். </p><p>ப்ரோமோ வீடியோவின் இறுதியில், இப்பாடல் நாளை வெளியாகும் என்று அப்படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><h2><strong>புதிய ஜோடி..</strong></h2><p>நயன்தாரா - கவின் ஆகியோர் முற்றிலும் புதிய காம்பினேஷனில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/FWBApe_54w0?si=-6SJi528xpfqhxZt"></iframe></figure>]]></content:encoded></item><item><title>பிரதமர் இல்லம் அருகே போராட்டம்: ராகுல், பிரியங்கா காந்தி குண்டுகட்டாக கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/protest-near-prime-ministers-residence-rahul-and-priyanka-gandhi-forcibly-detained</link><comments>https://www.maalaimalar.com/news/national/protest-near-prime-ministers-residence-rahul-and-priyanka-gandhi-forcibly-detained#comments</comments><guid isPermaLink="false">fd28a478-da75-42b8-897d-2fdaac4ca249</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:55:17 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:55:17.559Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pm modi,Priyanka gandhi,பிரதமர் மோடி,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4x3dbvd8/New-Project-2026-07-21T191654.032.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் இல்லம் அருகே போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி குண்டுகட்டாக கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4x3dbvd8/New-Project-2026-07-21T191654.032.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஜூன்.20 முதல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று நாடாளுமன்றத்தில் நோக்கி பேரணியாக சென்றனர்.</p><p>இந்த பேரணியின்போது போலீசார் இளைஞர்கள் மற்றும் பெண்கள்மீது சராமாரி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து இன்று காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பதவி விலகவேண்டும் என வற்புறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.</p><p>ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மல்லிகார்ஜூனே கார்கே, பிரியங்கா காந்தி, வேணுகோபால், கர்நாடகா மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களும் மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் கலந்துகொண்டனர். </p><p>போராட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ராகுல் காந்தியிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பேச்சுவார்த்தை ஒத்திவராத நிலையில் கிட்டத்தட்ட 3 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்தது. தொடர்ந்து பிரதமரின் இல்லத்தை நோக்கி பேரணியாக சொல்ல முற்பட்டனர். </p><p>இந்தப் பேரணியை கலைக்க முற்பட்டபோது காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வையும் கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் பின்னணி பாடகர் அறிவு சந்திப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arivu-secretariat-meeting-with-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arivu-secretariat-meeting-with-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">5d9ff185-cc58-4f78-b281-99298c9016ae</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:44:00 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:44:00.217Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Secretariat,CMVIJAY,AadhavArjuna,NEETProtest,TherukuralArivu,பாடகர்அறிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ytk8hl25/CMVijay-SingerArivu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMVijay - SingerArivu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ytk8hl25/CMVijay-SingerArivu?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து தமிழ்நாட்டில் சில இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. </p><p>இதன் ஒரு பகுதியாக, இன்று பிற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பாகப் பிரபல ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2><strong>தலைமைச் செயலகத்தில் போராட்டம்</strong></h2><p>இன்று பிற்பகல் சுமார் 12:30 மணியளவில் பாடகர் அறிவு தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முயன்றார். "நாடு தழுவிய அளவில் நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வேண்டும், இதுகுறித்துத் தமிழக முதல்வர் பேச வேண்டும்" எனப் பலத்த கோஷங்களை எழுப்பினார்.</p><h2><strong>போலீசார் நடவடிக்கை:</strong></h2><p>அனுமதியின்றித் தலைமைச் செயலகம் முன்பாகப் போராட்டம் நடத்தியதால், அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். </p><p>இதனால் அங்குச் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்த பாடகர் அறிவைக் காவல்துறையினர் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.</p><h2><strong>'கைதான அறிவை கூட்டிட்டு வாங்க" - முதல்வர் விஜய் உத்தரவு</strong></h2><p>பாடகர் அறிவு கைது செய்யப்பட்ட விபரம் அறிந்த சில நிமிடங்களிலேயே, தமிழக முதல்வர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். "கைது செய்யப்பட்ட பாடகர் அறிவை உடனடியாகத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வாருங்கள்" என முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று, அறிவை ஏற்றிச் செல்லப்பட்ட அதே போலீஸ் வாகனத்திலேயே அவரை மீண்டும் தலைமைச் செயலகத்திற்குப் பலத்த பாதுகாப்புடன் ஏற்றி அனுப்பினார்.</p><p>தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிராகத் டெல்லி மற்றும் தமிழகத்தில் நடக்கும் மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்தும், மாநிலத்தின் கல்வி உரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் அறிவு விரிவாக எடுத்துரைத்தார் என்ற செய்தியும் தெரிவந்துள்ளது.</p><p>போராட முயன்ற கலைஞர் ஒருவரைத் தடுத்துக் கைது செய்யாமல், உடனே நேரில் அழைத்து அவரது கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதல்வர் விஜய்யின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் தற்போதைய டிரெண்டிங் டாபிக்காக மாறி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிறைச்சாலை தி.மு.க.விற்கு புதிது கிடையாது: கனிமொழி எம்.பி. பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/prison-is-not-new-to-dmk-kanimozhi-mp-interview</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/prison-is-not-new-to-dmk-kanimozhi-mp-interview#comments</comments><guid isPermaLink="false">fcd96713-5959-4a7b-ac6b-5ed7f8ba9c9b</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:29:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:29:54.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,சிறை,Kanimozhi,கனிமொழி,Prison</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8rto6mas/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8rto6mas/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. </p><p>தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனும் பங்கேற்றார்.</p><p>கூட்டத்தில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசும்போது முதலமைச்சர் விஜய்யை கடுமையான வார்த்தைகளால் ஒருமையில் பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. </p><h2>3 பிரிவுகளில் வழக்கு</h2><p>மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சுக்கு எதிராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிடம் புகார் மனு அளித்தார். </p><p>அதில், முதலமைச்சர் பற்றி அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.</p><p>புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 351(3)-கொலை மிரட்டல் விடுத்தல், 352- அவதூறாக பேசுதல், 353(2)- மக்களிடையே பகை வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>மார்க்கண்டேயன் கைது</h2><p>இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இல்லத்திற்கு டி.எஸ்.பி.க்கள் கண்ணன், சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜானி தலைமையிலான போலீசார் சென்றனர். அதன்பின், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.</p><p>தி.மு.க. எம்.எல்.ஏ. கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருக்கு எதிராக திமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பி, போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்நிலையில், நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு கனிமொழி பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், தி.மு.க.விற்கு சிறைச்சாலை புதிது கிடையாது. வழக்குகள், கைதுக்கு திமுக அஞ்சாது.</p><p>திமுகவினர் பாளையங்கோட்டை சிறைக்கு வருவதைப் பெருமையாகக் கருதுவர்.</p><p>புகார் குறித்து விசாரிக்க கூட அரசு தயாராக இல்லை.</p><p>முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனனையும் சிறையில் அடைக்க முயற்சித்தனர்.</p><p>ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லாமல் செயல்படுகிறது தவெக அரசு.</p><p>எதிர்க்கட்சிகளை அடக்கவே காவல்துறை முயற்சிக்கிறது.</p><p>திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கை இல்லை.</p><p>பாஜக பெயரை சொல்ல தயக்கம் காட்டுகிறது.</p><p>கொள்கையை ஒருபோதும் திமுக விட்டுக் கொடுக்காது.</p><p>அதிமுக, திமுக ஒருபோதும் நெருங்கி வந்தது கிடையாது.</p><p>தமிழ்நாட்டின் உரிமைக்கு எல்லா கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு - தவெக அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-stance-is-that-the-neet-exam-is-not-needed-tvk-statement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-stance-is-that-the-neet-exam-is-not-needed-tvk-statement#comments</comments><guid isPermaLink="false">9f977a06-013c-4c60-ba1d-c5a70a27cbc3</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:15:24 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:15:24.194Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Neet exam,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/hbwkr3o7/New-Project-2026-07-21T184509.271.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு - தவெக அறிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/hbwkr3o7/New-Project-2026-07-21T184509.271.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வேண்டாம் என்பதே தங்களின் நிலைப்பாடு என நாடு முழுவதும் எதிரொலிக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் தவெக தெரவித்துள்ளது. இதுதொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ளப் பதிவில்,</p><p>“நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.</p><p>கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். </p><p>அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் கட்சித் தலைவர் விஜய் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.</p><p>மற்றவர் உழைப்புக்கும், மற்றவர் சிந்தனைக்கும், மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். </p><p>இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>CJP போராட்டம் எதிரொலி: மாணவர்கள், ஸ்டாஃப்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐ.ஐ.டி. ரூர்க்கீ</title><link>https://www.maalaimalar.com/news/national/amid-cjp-protests-iit-roorkee-asks-students-staff-not-to-partake-in-political-activity</link><comments>https://www.maalaimalar.com/news/national/amid-cjp-protests-iit-roorkee-asks-students-staff-not-to-partake-in-political-activity#comments</comments><guid isPermaLink="false">a8068579-401f-4a56-9993-d8706ea8d581</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:04:22 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:04:22.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி,IIT Roorkee,ஐஐடி ரூர்க்கீ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/er4bw7l7/IITRoorkee.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IIT Roorkee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/er4bw7l7/IITRoorkee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அரசியல் சார்பான அறிக்கைகள் வெளியிடக்கூடாது என உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஐஐடி ரூர்க்கீ அறிவுறுத்தியுள்ளது.</p><h2>NEET வினாத்தாள் லீக்</h2><p>மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை (NTA) எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான தகுதித் தேர்வை (NEET) நடத்துகிறது. இந்த வருட படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால், தேர்வு நடைபெற்ற பின்னர், தேர்வுக்கு முன்னதாக வினாத்தாளில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் அடங்கிய மாதிரி வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.</p><p>இதனால், பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.</p><h2>தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்</h2><p>இதனால் ஒரு தேர்வை சரியாக நடத்த முடியவில்லை. உயர்க்கல்வி சீர்குலைந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரதான் மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கரப்பான் பூச்சி கட்சி வலியுறுத்தியது.</p><p>இரண்டு நடைபெறவில்லை. இதனால் கடந்த மாதம் காலவரையற்ற போராட்டத்தை ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடங்கினர். நேற்று இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. இதை பயன்படுத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி நடத்தினர். இதனால் போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி மாணவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.</p><h2>ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம்</h2><p>இருந்தபோதிலும், ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஐஐடி ரூர்க்கீ, தனது மாணவர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று ரிஜிஸ்டர் ஆபிஸ் மூலமாக அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அந்த அறிவுறுத்தலில் "அரசியல் அறிக்கைகள் வெளியிட மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அனுமதி இல்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அத்தகைய கருத்துகள் மத்திய அரசுடனான ஐ.ஐ.டி.யின் உறவில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பிரதமர் மோடி</h2><p>நீட் வினாத்தாள் லீக் தொடர்பான இன்று பிரதமர், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மத்தியில் பேசினார். அப்போது இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய ஆண்கள் அணி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/world-cup-hockey-tournament-india-mens-team-announced</link><comments>https://www.maalaimalar.com/sports/world-cup-hockey-tournament-india-mens-team-announced#comments</comments><guid isPermaLink="false">d7ed01bd-ace5-469b-98cb-4610463114c1</guid><pubDate>Tue, 21 Jul 2026 12:23:37 +0000</pubDate><atom:updated>2026-07-21T12:23:37.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய அணி,Team India,ஹாக்கி இந்தியா,India squad,World cup Hockey,உலகக் கோப்பை ஹாக்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7twe7iwq/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ indian team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7twe7iwq/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகக் கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த மாதம் பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது.</p><p>சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது.</p><h2>மொத்தம் 16 அணிகள்</h2><p>மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்தியா, வேல்ஸ், இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் டி பிரிவில் இடம்பெற்றுள்ளன.</p><p>ஆகஸ்ட் 15-ம் தேதி வேல்ஸ் அணியுடனும், ஆகஸ்ட் 17-ம் தேதி இங்கிலாந்து அணியுடனும், ஆகஸ்ட் 19-ம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் இந்திய அணி மோதுகிறது.</p><p>இந்நிலையில், உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான 20 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இன்று அறிவிக்கப்பட்டது.</p><p>இதில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>இந்திய அணி</h2><p>இந்திய ஆண்கள் அணி விவரம் வருமாறு:</p><p>கோல்கீப்பர்கள்: மோஹித் எச்.எஸ், சூரஜ் கர்கேரா</p><p>டிபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய் சுமித், யஷ்தீப் சிவாச்</p><p>மிடில் பீல்டர்கள்: ரஜிந்தர் சிங், ஆதித்யா அர்ஜுன் லலாகே, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, விவேக் சாகர் பிரசாத்</p><p>முன்கள வீரர்கள்: தில்பிரீத் சிங், ஷீலானந்த் லக்ரா, ஷுக்தீக் சிங், மன்தீப் சிங், அபிஷேக்</p><p>உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் 1975-ல் தங்கமும், 1973-ல் வெள்ளியும், 1971-ல் வெண்கலமும் இந்தியா வென்றது. அதன்பின், இந்திய அணி எந்த பதக்கத்தையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் ஈரானின் உயர்மட்டக் குழு: பிரதமர், ராணுவ தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது</title><link>https://www.maalaimalar.com/news/world/us-iran-war-iranian-delegation-in-pakistan-to-hold-talks-with-pm-sharif-field-marshal-munir</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-iran-war-iranian-delegation-in-pakistan-to-hold-talks-with-pm-sharif-field-marshal-munir#comments</comments><guid isPermaLink="false">3e513fa2-4f46-4ca3-bb32-edb4a781f785</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:58:41 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:58:41.611Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Asim Munir,அசிம் முனிர்,shehbaz sharif,US Iran war,அமெரிக்கா ஈரான் போர்,ஷெபாஸ் ஷெரீப்,Iran delegation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/90jsoiho/Iraniandelegation.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iranian delegation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/90jsoiho/Iraniandelegation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து இரு நாடுகளும் மீண்டும் பயங்கரமான தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் உயர்மட்டக்குழு பாகிஸ்தான் சென்றுள்ளது.</p><h2>முடிவுக்கு வந்த அமெரிக்கா- ஈரான் போர்</h2><p>பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முயற்சியால் அமெரிக்கா- ஈரான் இடையில் கடந்த மாதம் 60 நாள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்பின் சுவிட்சர்லாந்தில் டெக்னிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனால் <a href="https://www.maalaimalar.com/news/world/us-military-says-its-carrying-out-its-10th-consecutive-night-of-strikes-on-iran">அமெரிக்கா</a>- ஈரான் இடையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என நம்பப்பட்டது.</p><p>ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற வணிக கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.</p><h2>போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது- அமெரிக்கா</h2><p>பின்னர் ஈரான் உடனான இடைக்கால போர் நிறுத்தம் முடிவடைந்ததாக அமெரிக்கா அறிவித்தது. அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிக்கக் கூடிய ஈரானின் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.</p><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. இதற்கிடையே இடைக்கால போர் நிறுத்தத்திற்கான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஈரான் அறிவித்தது.</p> <h2>ஷெபாஸ் ஷெரீப் உடன் சந்திப்பு</h2><p>இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே மீண்டும் தீவிரமான போர் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் ஈரான் உள்துறை அமைச்சர் மொமேனி தலைமையிலான ஈரானின் உயர்மட்டக்குழு பாகிஸ்தான் சென்றுள்ளது. இந்த குழுவை பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி வரவேற்றார்.</p><p>இந்த குழு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.</p><p>போரை நிறுத்த திரைக்குப் பின்னால் பாகிஸ்தான் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் தொடங்கியதில் இருந்து பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி அணைகளில் நீரிருப்பு 60 டி.எம்.சியாக உயர்வு: தமிழ்நாட்டிற்கு உரியநீரை அரசு கேட்டுப்பெற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-storage-in-cauvery-dams-rises-to-60-tmc-government-must-secure-tamil-nadus-due-share-of-water-anbumani-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-storage-in-cauvery-dams-rises-to-60-tmc-government-must-secure-tamil-nadus-due-share-of-water-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">2b3c9456-9f7a-4667-99b1-ee3d66a6b37a</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:36:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:36:26.042Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Cauvery,Government of Tamil Nadu,காவிரி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ohqtcsmm/New-Project-2026-07-21T170553.796.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி அணைகளில் நீரிருப்பு 60 டி.எம்.சியாக உயர்வு: தமிழ்நாட்டிற்கு உரியநீரை அரசு கேட்டுப்பெற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ohqtcsmm/New-Project-2026-07-21T170553.796.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக காவிரி அணைகளில் நீர் இருப்பு 60 டி.எம்.சியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இதனை எடுத்துரைத்து, தமிழ்நாடு உரிய நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்,</p><p>“கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள  கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நீர் இருப்பு இன்று பிற்பகல் நிலவரப்படி 60  டி.எம்.சியாக  உயர்ந்திருக்கிறது. </p><p>நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.</p><p>காவிரி நடுவர் மன்றம்  மற்றும்  உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் 9.91 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி என மொத்தம் 41.15 தண்ணீர் வழங்க வேண்டும் . அதன்படி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று வரை 31.07 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு காவிரியில் வழங்கியிருக்க வேண்டும். </p><p>ஆனால்,  கடந்த 50 நாள்களில் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. இன்று வரை கர்நாடகம்  தமிழ்நாட்டுக்கு 28.63 டி.எம்.சி நீரை பாக்கி வைத்திருக்கிறது. கர்நாடக அணைகளில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக தண்ணீர் இருந்தும் கூட  காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பது மனிதநேயமற்றது.</p><p>மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை நிலவரப்படி  74.7 அடியாக (நீர் இருப்பு 36.87 டி.எம்.சி) குறைந்துவிட்டது.  காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும்,  நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதாலும்  காவிரி பாசன மாவட்டங்களில்  குறுவை பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. இதன்பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காததை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால்  அது தமிழ்நாடு உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.</p><p>கர்நாடக அணைகளுக்கு கடந்த 20 நாள்களில் மட்டும் 35 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இப்போதும் தினமும்  0.8  டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மைகளையும், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகத்  தொடங்கியிருப்பதையும்  டெல்லியில் நாளை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை காவிரியில் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா?</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/lose-5-kilos-in-one-week-with-horse-gram</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/lose-5-kilos-in-one-week-with-horse-gram#comments</comments><guid isPermaLink="false">bb1d6a54-7f55-494e-9c83-e8e0fef22e6f</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:28:47 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:28:47.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,health benefits,கொள்ளு,horse gram,உடல்நலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/v8om9nxw/ell.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ weight loss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/v8om9nxw/ell.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உடல் எடையைக் எளிதாகவும், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கை முறையில் குரைக்க கொள்ளு பருப்பு உகந்தவை. அதன் அற்புத பயன்களையும் எப்படி உட்கொள்ளவேண்டும் என்பதையும் இங்கே காணலாம்.</p><p>1) கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச்சதை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும், இதில் அதிகளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.</p><figure><img alt="horse gram" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/kq2yht32/sdf.jpg" /></figure><p>2) கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.</p><p>3) தினமும் கொள்ளினை உணவில் சேர்த்து வருபவர்களின் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும்.</p><p>4) கொள்ளு பருப்பை வறுத்து பொடி செய்துகொண்டு, ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் ஒரு டீஸ்பூன் கொள்ளு பவுடர் மற்றும் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து மறுநாள் காலை பருகி வர ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைவதை உணரமுடியும்.</p><p>‘இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் கொள்ளுவில் அதிக சக்தி உள்ளது....</p> ]]></content:encoded></item><item><title>சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்</title><link>https://www.maalaimalar.com/news/world/food-delivery-worker-wins-chinas-top-literary-prize</link><comments>https://www.maalaimalar.com/news/world/food-delivery-worker-wins-chinas-top-literary-prize#comments</comments><guid isPermaLink="false">5f8b7459-cbd9-4736-9779-1a0b65bfceae</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:16:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:16:51.642Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,Literary Awards,wang jibing,வாங் ஜிபிங்,இலக்கிய விருது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/69jysaxv/wang.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ wang jibing]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/69jysaxv/wang.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி பணியாளரும், கவிஞருமான வாங் ஜிபிங், கவிதைப் பிரிவில் சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.</p><p>நவீன சீன இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் லு சூனின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, சீனாவின் மிக உயர்ந்த இலக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாகும்.</p><h2>லோ பிளைட்</h2><p>சீனாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் அன்றாடப் போராட்டங்கள், விரக்திகள் மற்றும் சவால்களை மையமாக வைத்து 'லோ பிளைட்' (Low Flight) எனும் கவிதைத் தொகுப்பு நூலை எழுதியுள்ளார்.</p><p>இந்த நூலுக்காக சுமார் 200 சக டெலிவரி ஊழியர்களிடம் அவர் உரையாடியுள்ளார்.</p><h2>6,000 கவிதைகள்</h2><p>பகலில் உணவு டெலிவரி செய்யும் இவர், கடந்த 8 ஆண்டுகளில் தனது ஸ்கூட்டரில் சுமார் 1,50,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்து, ஓய்வு நேரங்களில் 6,000-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.</p><p>களப்பணியாளர்களின் யதார்த்தமான வாழ்க்கையை எழுத்தாக்கிய இவரது வெற்றி, சீனாவில் தொழிலாளர்களின் இலக்கிய படைப்புகளுக்குக் கிடைத்துவரும் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.</p><p>ஜியாங்சு மாகாணத்தில் பிறந்த வாங் ஜிபிங், வீட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இளமையிலேயே பள்ளியிலிருந்து விலகினார். அவர் உணவு டெலிவரி ஊழியராக மாறுவதற்கு முன் கட்டுமானம், குப்பை சேகரிப்பு மற்றும் தெருவோர வியாபாரம் என பல்வேறு வேலைகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ரூ. 8 லட்சம் கோடி கடன்: முந்தைய மம்தாவின் திரிணாமுல் அரசு மீது சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/bengal-cm-blames-previous-tmc-govt-for-loss-of-europe-air-links-mounting-debt-on-state-economy</link><comments>https://www.maalaimalar.com/news/national/bengal-cm-blames-previous-tmc-govt-for-loss-of-europe-air-links-mounting-debt-on-state-economy#comments</comments><guid isPermaLink="false">1baf92e4-6b4f-484b-b08d-bce0f5e0dc1d</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:14:53 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:14:53.446Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,Mamata Banerjee,சுவேந்து அதிகாரி,Suvendu Adhikari,TMC,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/6udk6xah/SuvenduAdhikari001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suvendu Adhikari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/6udk6xah/SuvenduAdhikari001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி பரிபஹன் பவன்-IIல் இருந்து 50 ஏ.சி. பேருந்தகள் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.</p><h2>சுவேந்து அதிகாரி பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:-</h2><p>கொல்கத்தாவில் வாட்டர் மெட்ரோவை அறிமுகம் செய்யும் திட்டமிட்டுள்ளது. மற்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரெயில் சேவையை இணைக்கும் திட்டமும் உள்ளது. மின்சார பேருந்துகளுக்கு சார்ஜிங் ஏற்றும் சார்ஜிங் நிலையங்கள், கல்யாணியின் க்ரீன்பீல்டு விமான நிலையம் போன்ற திட்டங்களும் அரசிடம் உள்ளது என்றார்.</p><h2>ஐரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கான விமான போக்குவரத்து நிறுத்தம்</h2><p>நாம் ஐரோப்பியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்ள நகரங்களுக்கு விமான போக்குவரத்தை தொடர்பை கொண்டிருந்தோம். முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ், பெரும்பாலான நகரங்களுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளன. லண்டன் உள்பட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களுக்கு கொல்கத்தாவில் இருந்து விமான சேவை இல்லை.</p><p>கொல்கத்தா அருகே 2-வது விமான நிலையத்திற்கான முன்மொழிவையும் முன்னெடுக்கவில்லை. கொல்கத்தா அருகே மற்றொரு விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, நிலம் கேட்டு கடிதம் எழுந்தியிருந்தார். பங்கர் பகுதியில் இருந்து நிலத்தை கையகப்படுத்த முடியாது என்று முந்தைய மம்தா அரசு கடிதம் எழுதியது. அது பலவீனமான அரசு.</p><h2>8 லட்சம் கோடி ரூபாய் கடன்</h2><p>மேற்கு வங்க மாநிலத்தை ஆண்ட இடதுசாரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுகள் மாநிலத்தை கடனில் ஆழ்த்தியுள்ளன.சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் சுமையை தற்போதைய அரசு மீது சுமத்தியுள்ளனர்.</p><p>சிறந்த வருவாயை கொண்டு வருவதற்கான முக்கியம்சமாக போக்குவரத்துத்துறை இருக்க முடியும். கடனில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கான வாய்ப்பாகவும் இருக்கும். 8 லட்சம் ரூபாய் கடன் மாநில அரசு மீது உள்ளது.</p><p>ஒரு மாநிலத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பு நவீனமாக இருக்கும்போது, ​​அதன் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைப் பெற முடியும். உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டால், அதிகமான தொழில்முனைவோர்கள் அம்மாநிலத்தில் முதலீடு செய்வார்கள். இதன் விளைவாக வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.</p><h2>மத்திய அரசு உதவியுடன் கூடுதல் மின்சார பேருந்துகள்</h2><p>கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிஎன்ஜி (CNG) மற்றும் மின்சார வாகனங்களை அதிகளவில் அறிமுகப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்... 60:40 என்ற நிதிப் பகிர்வு முறையின் கீழ், மத்திய அரசின் உதவியுடன் கூடுதல் மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.</p><p>இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி: பிரதமர் மோடி, அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-congress-members-led-by-rahul-gandhi-protest-demanding-the-resignation-of-prime-minister-modi-and-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-congress-members-led-by-rahul-gandhi-protest-demanding-the-resignation-of-prime-minister-modi-and-amit-shah#comments</comments><guid isPermaLink="false">edafb30c-514b-4fb4-993b-065662790b1d</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:46:00 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:46:00.730Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,protest,போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/b4ztamvu/New-Project-2026-07-21T160048.085.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி: பிரதமர் மோடி, அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் போராட்டம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/b4ztamvu/New-Project-2026-07-21T160048.085.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. </p><p>இப்போராட்டம் நேற்று தீவிரமடைந்த நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார், ராணுவப் படையினர் தடியடி நடத்தினர். இதில் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீதான காவல்துறையின் அப்பட்டமான அத்துமீறலுக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் காங்கிரஸ் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.</p><p>நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாகவும் செல்ல முற்பட்டவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>இந்தப் போராட்டத்தில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனே கார்கே, வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>4 இந்திய மாலுமிகள் பலி: ரஷிய தூதரை அழைத்து கண்டித்த இந்தியா..!</title><link>https://www.maalaimalar.com/news/national/unacceptable-india-protests-deaths-of-4-indian-sailors-in-russian-attack-near-ukraine</link><comments>https://www.maalaimalar.com/news/national/unacceptable-india-protests-deaths-of-4-indian-sailors-in-russian-attack-near-ukraine#comments</comments><guid isPermaLink="false">d975d1d3-50b8-4a95-aacb-0a3e6c34f476</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:26:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:26:05.333Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,கப்பல்,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war,vessel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gtzw2loc/RussiaAttack.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Russian Charge d'Affaires Vladimir Ladanov]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gtzw2loc/RussiaAttack.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட வணிக கப்பல் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. 10 மாலுமிகள் உயிரிழந்தனர். இதில் நான்கு பேர் இந்தியர்கள் ஆவார்கள். இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இந்தியாவுக்கான ரஷிய தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியா சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளது.</p><p>தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில், இந்தியாவுக்கான ரஷிய தூதரக பொறுப்பாளர் விளாடிமிர் டேலனவ்-க்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அவர் இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சகத்திற்கு வந்து ஆஜரானார். அப்போது அவரிடம் இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.</p><p>இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதது</h2><p>ஞாயிற்றுக்கிழமையன்று எம்.வி. கோல்டன் லியோ (MV Golden Leo) என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து, இந்தியா தனது கடுமையான கவலையையும் தெளிவான கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச கடல்வழி வர்த்தகத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கின்றன என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>வணிகக் கப்பல்களை குறிவைப்பதும், அதனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் தீவிர கவலைகளைத் தங்கள் நாட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு ரஷ்யத் தூதரகப் பொறுப்பாளர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.</p><p>இவ்வாறு அறிக்கையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.</p><h2>ஒடெசா துறைமுகம்</h2><p>உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில் பயணித்த நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர். எம்.வி. கோல்டன் லியோ (MV Golden Leo) என்ற அந்தக் கப்பலில் ஐந்து இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 4 இந்தியர்கள், 5 சிரியாவைச் சேர்ந்தவர்கள் பலியானார்கள். ஒரு இந்தியர் மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷியா, உக்ரைனின் கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை கடற்பகுதியில் நடத்தியது. அதில் ஒன்றுதான் வணிக கப்பல் மீதான தாக்குதல். ரஷியா- உக்ரைன் இடையிலான 4 வருடத்திற்கு மேலான போரில், கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர்கள் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.</p>]]></content:encoded></item><item><title>மோசடி செய்து பழனி கோயில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/vellathurai-who-purchased-palani-temple-land-through-fraud-files-a-petition-seeking-anticipatory-bail</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/vellathurai-who-purchased-palani-temple-land-through-fraud-files-a-petition-seeking-anticipatory-bail#comments</comments><guid isPermaLink="false">22ca4b6f-e21d-490c-97b1-21986fa09622</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:22:43 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:22:43.432Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,Anticipatory bail,சிபிசிஐடி,முன்ஜாமின்,பழனி கோயில்,Palani temple land fraud,Madurai Bench of HC,CB-CID</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/c5zi5shc/New-Project-2026-07-21T155215.452.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி செய்து பழனி கோயில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/c5zi5shc/New-Project-2026-07-21T155215.452.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி கோயில் நில மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். </p><p>இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த மனுவில் சிபிசிஐடி போலீசாரைப் பதில் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு  விசாரணையை நாளைக்கு (ஜூலை.22) ஒத்திவைத்துள்ளது. </p><h2>வழக்கின் பின்னணி </h2><p>பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலை அடிவாரத்தில், கோயில் மடத்திற்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம் தற்போது பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.</p><p>இதனை வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் வாங்கியுள்ளார். </p><p>சட்டப்படி கோயிலுக்கு சொந்தமான நிலத்தைத் தனியாருக்கு விற்கவோ, கைமாற்றவோ தடை உள்ளது. ஆனால் இதனை மீறியும் மடத்தின் வாரிசு என்று போலியாகக் கூறிக்கொண்ட விழுப்புரம் முருகதாஸ் என்பவரிடமிருந்து, வெள்ளத்துரை மற்றும் பழனியைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவரும் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றியுள்ளனர். </p><p>இந்தக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதில் சம்பந்தப்பட்ட, இந்த நிலப் பதிவை மேற்கொண்ட பழனி சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். </p><p>மேலும் இந்த மோசடிப் பதிவு செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. மேலும் பத்திரப்பதிவுத்துறை சார்பிலும் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. </p><p>இந்நிலையில் தலைமறைவாக உள்ள வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>&apos;ஓபன்ஹைமர்&apos; நிர்வாண காட்சி ஷூட்டிங்கில் ரிப்பேர் ஆன கேமரா-நடிகை சொன்ன அதிர்ச்சி தகவல்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/oppenheimer-nude-scene-camera-repair-actress-reveals-shocking-detail</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/oppenheimer-nude-scene-camera-repair-actress-reveals-shocking-detail#comments</comments><guid isPermaLink="false">1b45220b-2251-470e-bcfe-8c2a98ec20d7</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:11:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:11:54.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிறிஸ்டோபர் நோலன்,Florence Pugh,christopher nolan,oppenheimer,Cillian Murphy,ஓபன்ஹைமர்,ஃப்ளோரன்ஸ் பியூ,சிலியன் மரஃபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/qsj6nk0l/nolan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Florence Pugh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/qsj6nk0l/nolan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹாலிவுட் திரையுலகின் பிரம்மாண்ட இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான 'ஓபன்ஹைமர்'  திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு சங்கடமான, அதேவேளையில் சுவாரசியமான அனுபவத்தை பிரபல நடிகை 'ஃப்ளோரன்ஸ் பியூ' பகிர்ந்துள்ளார்.</p><p>இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், சிலியன் மரஃபி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்தில், ஜீன் டாட்லாக் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஃப்ளோரன்ஸ் பியூ நடித்திருந்தார்.</p><h2><strong>'நாங்கள் இருவரும் ஆடைகள் இன்றி இருந்தபோது...'</strong></h2><p>லண்டனில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் ஃப்ளோரன்ஸ் பியூ பேசுகையில், "எங்களுக்கும் இதுவரை யாரும் அறியாத ஒரு சுவாரசிய சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் நடந்தது. சிலியன் மரஃபி மற்றும் நான் பங்குபெற்ற நிர்வாண காட்சியைப் படமாக்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென கேமரா பழுதாகிவிட்டது. </p><p>நாங்கள் இருவரும் ஆடைகள் எதுவும் இன்றி இருந்த அந்த தருணத்தில் கேமரா பழுதானது மிகவும் சங்கடமான ஒரு சூழலை உருவாக்கியது."</p><h2><strong>மூடிய அறை மற்றும் 'கேமரா சர்ஜன்:</strong></h2><p>அந்த காட்சி ஒரு 'Closed Set' என்பதால், மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை இரு நடிகர்களும் தங்கள் உடலைக் கைகளால் மறைத்தபடி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.</p><h2><strong>மாற்று கேமரா இல்லை:</strong></h2><p>படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட மற்றொரு கேமராவும் ஏற்கனவே பழுதுபார்க்கும் மையத்தில் இருந்ததால், உடனடியாக வேறு கேமராவைப் பயன்படுத்த இயலவில்லை. இதன்பின், பழுதைச் சரிசெய்ய ஒரு கேமரா தொழில்நுட்ப வல்லுநர் அந்த அறைக்குள் வரவழைக்கப்பட்டார்.</p><h2><strong>ஃப்ளோரன்ஸ் பியூ செய்த செயல்:</strong></h2><p>இந்த அசௌகரியமான அமைதியைத் தவிர்க்க எண்ணிய ஃப்ளோரன்ஸ் பியூ, அந்த நேரத்தை ஒரு கற்றல் வாய்ப்பாக மாற்றிக் கொண்டார். அவர் தொழில்நுட்ப வல்லுநரிடம், "சரி நண்பரே, இந்த கேமராவின் ஷட்டரில் என்ன பிரச்சனை? என்ன ஆனது?"* என்று ஆர்வம் பொங்க கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். </p><p>பின்னர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனும் அங்கு வந்து, கேமராவிற்குள் வெளிச்சம் தவறான வழியில் ஊடுருவியதால் தான் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பதை விளக்கியுள்ளார்.</p><h2><strong>படக்குழுவின் மீதான பாராட்டு:</strong></h2><p>இந்த சம்பவத்தைக் குறிப்பிட்ட ஃப்ளோரன்ஸ் பியூ, 'ஓபன்ஹைமர்' படக்குழுவின் தொழில்முறை திறமையைப் வெகுவாகப் பாராட்டினார். "படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒவ்வொரு நபரும் சினிமா தொழில்நுட்பத்தைப் பற்றி மிகவும் ஆழமான அறிவு படைத்தவர்களாக இருந்தனர்.</p><p>இத்தகைய அர்ப்பணிப்புள்ள குழுவுடன் பணியாற்றிய ஒவ்வொரு நொடியும் எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்" என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-till-july-27th-across-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-till-july-27th-across-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">bf9f4b4c-3e24-4d3e-9ce0-a9d94db7a6f4</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:46:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:46:05.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/n37k2se7/rain005.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/n37k2se7/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <p>23-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>24-ந்தேதி வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>25-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>27-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 23-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/opposition-parties-disrupt-parliament-both-houses-adjourned-all-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/opposition-parties-disrupt-parliament-both-houses-adjourned-all-day#comments</comments><guid isPermaLink="false">80f983fe-dfb4-40b9-9d41-a984964f3efe</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:42:12 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:42:12.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>winter session,நாடாளுமன்றம்,parliment,மழைக்கால கூட்டத்தொடர்,adjourned,ஒத்திவைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/r2vnzj7e/loksabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ loksabha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/r2vnzj7e/loksabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.</p><h2>முக்கிய மசோதாக்கள்</h2><p>இந்தக் கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட் (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>எனினும், நேற்றைய கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.</p><h2>எதிர்க்கட்சிகள் அமளி</h2><p>இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று 2-வது நாளாக கூடியது. அப்போது, எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்டன. டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது.</p><p>இதனைக் கண்டிக்கும் வகையில், அவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.</p><p>இதன்பின்னர், 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது, டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.</p><h2>ஒத்திவைப்பு</h2><p>இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டம் விவகாரத்தில் எங்களை இழுக்காதீர்கள்: டெல்லி உயர்நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-do-not-drag-us-into-it-delhi-high-court-on-plea-alleging-use-of-force-on-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-do-not-drag-us-into-it-delhi-high-court-on-plea-alleging-use-of-force-on-students#comments</comments><guid isPermaLink="false">0f043efb-862c-4dd8-bd9a-c3d180fbbc09</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:41:53 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:41:53.631Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நாடாளுமன்றம்,டெல்லி உயர்நீதிமன்றம்,delhi highcourt,parliament,CJP Protest,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/iavasin7/CJPProtestDelhiHighcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/iavasin7/CJPProtestDelhiHighcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வி தொடர்பான விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தினர்.</p><h2>நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்</h2><p>நேற்று இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்றது. அதேவேளையில் நாடாளுமன்றம் முற்றுகையிடப்படும் என<a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested"> கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</a> அறிவித்தது. அதன்படி ஜந்தர் மந்தரில் நேற்று காலை சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூடினர்.</p><p>அவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணியாக சென்றனர். நாடாளுமன்றம் அருகே சென்றபோது, டெல்லி போலீசார் மற்றும் இந்திய துணை ராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியது. தடுப்புகளையும் தாண்டி அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர். இதனால் மாணவர்களுக்கு எதிரான போலீசார் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை விரட்டியடித்தனர்.</p><h2>போலீசார் மற்றும் மாணவர்கள் காயம்</h2><p>இந்த அசாதாரண சூழ்நிலையில் 100-க்கும் அதிகமான போலீசார் மற்றும் மாணவர்கள் காயம் அடைந்தனர். மாணவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான வகையில் தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.</p><p>இதற்கிடையே மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறையை கண்டிக்க வேண்டும். போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.</p><h2>அவசர மனுவாக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு</h2><p>இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அவசர மனுவாக விசாரிக்க மறுத்து விட்டது. மேலும், இதில் தங்களை இழுக்க நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.</p><p>நீதிபதிகள் டி.கே. உபத்யாயா மற்றும் தேஜாஸ் கரியா அடங்கிய பெஞ்ச் இவ்வாறு தெரிவித்துள்ளது. இது விவகாரம் தொடர்பாக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பட்டியலிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் டெல்லி போலீசார், மாணவர்களுக்கு எதிராக மிக அதிகமான அடக்குமுறையை கையாண்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.</p><p>நேற்று மாலை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு செய்தி தொடர்பாளர்கள் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து பேசினர். அப்போது தர்மேந்திர பிரதானை நீக்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்தனர். 3 கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார் போராட்டத்தை கைவிட தயார் என்றனர்.</p><p>இன்று காலையும் பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்வோம் என கரப்பான் பூச்சி ஜனதா தளம் தெரிவித்திருந்தது.</p>]]></content:encoded></item><item><title>‘பரந்தூருக்கு பதில் விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தற்போதுவரை தமிழ்நாடு அரசு கோரவில்லை’ - மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/second-airport-for-chennai-the-tamil-nadu-government-has-not-yet-requested-an-alternative-site-to-parandur-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/second-airport-for-chennai-the-tamil-nadu-government-has-not-yet-requested-an-alternative-site-to-parandur-central-government#comments</comments><guid isPermaLink="false">097edde7-d8b9-48ea-8efd-1c2ab8e4098a</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:30:24 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:30:24.758Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,பரந்தூர் விமான நிலையம்,Parandur,Civil Aviation,T.N. govt,airport site,மத்திய விமான போக்குவரத்துத் துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ab8sq356/New-Project-2026-07-21T143402.771.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ "The Tamil Nadu government has not yet requested an alternative site for the airport in place of Parandur" – Central Government.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ab8sq356/New-Project-2026-07-21T143402.771.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னைக்காக முன்மொழியப்பட்ட இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, தமிழ்நாடு அரசு இதுவரையிலும் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என மத்திய விமானப் போக்குவரத்துத்துறையின் இணை அமைச்சர் முரளிதர் கிசான் மொஹோல் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.</p><p>திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், ‘முன்மொழியப்பட்ட விமான நிலையத்தை இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசு எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை’ என்று எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.</p><p>“காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஒரு சர்வதேச புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு தொழிற்கல்வி கழகத்திற்கு (டிட்கோ) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2025 ஏப்ரல் 7 அன்று கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. </p><p>2024 செப்டம்பரில் டிட்கோ சமர்ப்பித்த கொள்கை ரீதியான விண்ணப்பத்தின்படி, திட்டத்தின் முதல் கட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ. 10,500 கோடி ஆகும்.” என தெரிவித்தார். </p><h2>பரந்தூர் விமான நிலையத் திட்டம்</h2><p>மத்திய அரசால் சென்னையில் முன் மொழியப்பட்ட இந்த இரண்டாவது விமான நிலையம், நகரத்திலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள பரந்தூரில் 5,746 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவைப்படும் மொத்த நிலத்தில், சுமார் 2,500 ஏக்கர் தனியார் நிலமாகவும் (பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுடையது), மீதமுள்ள நிலம் அரசுக்குச் சொந்தமானதாகவும் உள்ளது.</p><p>பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, இடப்பெயர்வு மற்றும் விவசாய நில இழப்பு குறித்த கவலைகள் காரணமாக ஏகனாபுரம் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நாட்கள் இம்மக்களின் போராட்டம் தொடர்ந்தாலும், யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை.</p><p>இச்சூழலில், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, ​​தவெக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ஜோசப் விஜய், கடந்தாண்டு ஜனவரி அப்பகுதிக்குச் சென்று, அம்மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். </p><p>போராட்டக் களத்திற்கு செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி, தனியார் மண்டபம் ஒன்றில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் முக்கிய பிரதிநிதிகளை அழைத்து, இந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு துணை நிற்பதாக உறுதியளித்தார்.</p><p>மேலும் வளர்ச்சியை தடுக்கவில்லை என்றும், மாற்று இடத்தையே தேர்வு செய்ய வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போதுவரை அவர் தலைமையிலான அரசு அமைந்தபிறகும் இந்த இடமாற்றம் தொடர்பாக பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>விருப்பப்பட்ட மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி: சோனம் வாங்சுக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-allows-sonam-wangchuk-to-choose-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-allows-sonam-wangchuk-to-choose-hospital#comments</comments><guid isPermaLink="false">34e3718a-3779-4513-b170-7f9786486191</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:23:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:23:54.089Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi High Court,Sonam Wangchuk,டெல்லி உயர் நீதிமன்றம்,சோனம் வாங்சுக்,Medanta,மெதாந்தா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/cf31ixy2/sonam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/cf31ixy2/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பினர் (CJP) நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக 24 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரபல பருவநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், டெல்லி சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையிலிருந்து குருகிராமில் உள்ள மெதாந்தா தனியார் மருத்துவமனைக்கு மாற டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p><p>தனக்கு விருப்பமான மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><h2><strong>சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றம்:</strong></h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்ததால், காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக அகற்றி சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p>சஃப்தர்ஜங் மருத்துவமனையின் பரிசோதனை அறிக்கைகளில் முரண்பாடுகள் இருப்பதாகக் குற்றம்சாட்டிய அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தை நாடினார்.</p><h2><strong>வழக்கறிஞர்களின் காரசார வாதம்:</strong></h2><p>சோனம் வாங்சுக் கைது செய்யப்படவோ அல்லது எவ்விதக் குற்றச்சாட்டின்கீழ் சிறையில் அடைக்கப்படவோ இல்லை என சுட்டிக்காட்டிய சிரேஷ்ட வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அகில் சிபல், ஒரு குடிமகனுக்குத் தனக்குப் பிடித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற முழு உரிமை உண்டு என வாதிட்டனர்.</p><h2><strong>மத்திய அரசின் சம்மதம்:</strong></h2><p>மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சோனம் வாங்சுக்கை மெதாந்தா மருத்துவமனைக்கு மாற்றுவதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.</p><p>சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இதுவரை சோனம் வாங்சுக்கிற்கு அளிக்கப்பட்ட அனைத்து மருத்துவச் சான்றுகளும் அறிக்கைகளும் உடனடியாக மெதாந்தா மருத்துவமனைக்கு வழங்கப்பட வேண்டும்.மெதாந்தா மருத்துவமனை இயக்குநர் தலைமையில் சோனம் வாங்சுக்கிற்கு சிகிச்சை அளிக்கத் தனியாக மருத்துவர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். மெதாந்தா மருத்துவர்களின் ஆலோசனையின்றி அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படக் கூடாது.</p><h2><strong>சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை:</strong></h2><p>24 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கும் சோனம் வாங்சுக்கின் ரத்தத்தில் பொட்டாசியம் அளவுகள் குறைந்துள்ளதாகவும், யூரிக் அமிலம் அதிகரித்து உள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. உடலில் சர்க்கரை அளவு குறைந்துள்ள போதிலும், அவர் உணவு மற்றும் குளுக்கோஸ் எடுத்துக்கொள்ள மறுத்து வருவதால், தொடர்ந்து தீவிர கண்காணிப்பு தேவை என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் - பாடகர் அறிவு கைது
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/slogans-raised-against-neet-exam-singer-arivu-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/slogans-raised-against-neet-exam-singer-arivu-arrested#comments</comments><guid isPermaLink="false">77516b2d-5a97-484d-ab57-83028e4f9e4e</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:15:55 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:15:55.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrested,நீட் தேர்வு,Neet exam,Singer Arivu,பாடகர் அறிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ovva776v/arivu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Singer Arivu arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ovva776v/arivu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.</p><p>சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து <a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">நீட் தேர்வை</a> ரத்து செய்யுமாறு கோஷமிட்ட பாடகர் அறிவை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்றனர்.</p><p>பாடகர் அறிவு (அறிவரசு கலைநேசன்) ஒரு இந்திய சொல்லிசை, பாடலாசிரியர், மற்றும் பின்னணிப் பாடகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகின்றார். அனிருத்தின் இசையமைப்பில் மாசுடர் (2021) படத்திற்காக இவர் எழுதிய "வாத்தி இரைடு" பாடலுக்காகவும், தீ உடன் இணைந்து இவர் பாடிய "எஞ்சாய் எஞ்சாமி" என்ற பாடலாலும் புகழ் பெற்றார். பாடகர் அறிவு தவெகவின் கொடிப்பாடலை பாடி உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>உத்தரகாண்டில் கனமழை: டப்கேஷ்வர் மகாசிவன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/uttarakhand-downpour-dabkeshwar-mahadev-temple-flooded</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttarakhand-downpour-dabkeshwar-mahadev-temple-flooded#comments</comments><guid isPermaLink="false">6cbb8e1e-ff39-445e-8e3f-1d52e8ddc9e7</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:15:25 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:15:25.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sdrf,FlashFloods,TapkeshwarMahadev,DehradunRain,UttarakhandFloods,TamsaRiver</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/pt3gtf0j/Tapkeshwar-Shiva-temple-Floods" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tapkeshwar Shiva temple Floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/pt3gtf0j/Tapkeshwar-Shiva-temple-Floods?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/uttarakhand">உத்தரகண்ட் </a>மாநிலத்தின் தலைநகரான டேராடூண் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இதன் விளைவாக, அங்குள்ள முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் கிடுகிடுகென உயர்ந்து தரைத்தளம் அனைத்தும் வெள்ளக்கிடங்காய் ஓடியது.</p><h2><strong>கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்:</strong></h2><p>டேராடூணில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பழமையான 'டப்கேஷ்வர் மகாசிவன் கோவில்' வளாகத்திற்குள் தம்சா நதியின் காட்டாற்று வெள்ளம் புகுந்துள்ளது. </p><p>நதியில் ஏற்பட்டுள்ள ராட்சத வெள்ளப்பெருக்கு காரணமாக, வெள்ள நீரானது கோவிலின் தரைத்தளம் மற்றும் படிக்கட்டுகளை முழுமையாக மூழ்கடித்தபடி ஓடியது.</p><p>கோவிலின் உள்ளே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பிரதான கட்டமைப்புகள் மற்றும் சிலைகளைச் சுற்றிலும் தம்சா நதி வெள்ளம் அதிவேகத்தில் பாய்கிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Uttarakhand: Tamsa River in spate following incessant heavy rainfall in Dehradun and its surrounding areas. The river is flowing through the historic Tapkeshwar Mahadev Temple. <a href="https://t.co/l1XumQQMR9">pic.twitter.com/l1XumQQMR9</a></p>&mdash; ANI UP/Uttarakhand (@ANINewsUP) <a href="https://x.com/ANINewsUP/status/2079421037440278806?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>பாதுகாப்பு எச்சரிக்கை:</strong></h2><p>தொடர் மழையினால் ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நதிக்கரையோரப் பகுதிகளுக்கோ அல்லது டப்கேஷ்வர் கோவில் வளாகத்திற்கோ செல்ல வேண்டாம் என உள்ளூர் நிர்வாகமும் பாதுகாப்புப் படையினரும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கண்ணுக்குக் கண் பதிலடி: மத்திய கிழக்கில் புதிய பதற்றம்... சவுதி அரேபியாவிற்கு எதிராக கடல்வழி முற்றுகையை அமல்படுத்துவதாக ஹூதி அமைப்பு அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/tit-for-tat-retaliation-tensions-in-the-middle-east-reach-a-new-peak-houthi-group-announces-a-maritime-blockade-against-saudi-arabia</link><comments>https://www.maalaimalar.com/news/world/tit-for-tat-retaliation-tensions-in-the-middle-east-reach-a-new-peak-houthi-group-announces-a-maritime-blockade-against-saudi-arabia#comments</comments><guid isPermaLink="false">886c7ebc-d2b2-445c-9f58-bfe745766033</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:59:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:59:42.429Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,சவுதி அரேபியா,செங்கடல்,Red Sea,houthis,ஹூதி அமைப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/we6ttne1/New-Project-2026-07-21T142917.713.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கண்ணுக்குக் கண் பதிலடி: மத்திய கிழக்கில் புதிய உச்சக்கட்ட பதற்றம்... சவுதி அரேபியாவிற்கு எதிராக கடல்வழி முற்றுகையை அமல்படுத்துவதாக ஹூதி அமைப்பு அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/we6ttne1/New-Project-2026-07-21T142917.713.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானின் ஆதரவுப்பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பு, சவுதி அரேபியாவுக்கு எதிராக உடனடி கடற்படை முற்றுகையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஏமன் மக்கள் அனைவரும் போருக்கு ஆயத்த நிலையில் இருக்குமாறும், ஆயுதமேந்தி போரிடத் தயாராகுமாறும் அழைப்பு விடுத்துள்ளது. </p><p>கடந்த வாரம் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தை சவூதி அரேபியா தாக்கியதாக ஹூதிகள் குற்றம் சாட்டினர். இதற்குப் பதிலடியாக, சவூதியின் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹூதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாகவே இந்த கடல்வழி முற்றுகை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே தங்களின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடலை மறிக்குமாறு ஹூதிகளுக்கு ஈரான் அழைப்பு விடுத்திருந்தது.</p><p>ஏமனின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ வெளியிட்ட வீடியோவில், பல ஆண்டுகளாக ஏமன் மக்கள் மீது சவூதி விதித்துள்ள தடைகளுக்குப் பதிலடியாக, "கண்ணுக்குக் கண்" என்ற அடிப்படையில் இந்த முற்றுகை உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் தீவிரப் போர்ச் சூழலுக்கு மத்தியில், சவுதி அரேபியாவின் வணிகக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை இலக்கு வைத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஹார்முஸ் வழியாக செல்லமுடியாத கப்பல்களுக்கு, பாப் அல்-மண்டேப் ஜலசந்தி ஒரு மாற்றுப் பாதையாக இருந்து வருகிறது. </p><p>செங்கடலின் தென்முனைக்குள் செல்லும் பாப் அல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஏமன் பகுதியை ஹூதிகள் கட்டுப்படுத்துகின்றனர். இந்த ஜலசந்தியை மூடுவதால் உலகின் எண்ணெய் விநியோகம் 7 ​​சதவீதம் குறையும் என்றும், சவூதியின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதிகள் மத்திய கிழக்கிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>ஹார்மூஸ்க்கு இணையாக இருந்த மற்றொரு வர்த்தகப் பாதையையும் மூடுவது உலகப் பொருளாதாரத்தின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>&apos;இது முதலமைச்சர் விஜய் ஆட்சி&apos; என்று சொன்ன பிறகும் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை!- டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-farmers-distressed-that-bribes-are-being-demanded-even-after-declaration-that-this-is-cm-vijays-regime</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-farmers-distressed-that-bribes-are-being-demanded-even-after-declaration-that-this-is-cm-vijays-regime#comments</comments><guid isPermaLink="false">f481c958-8a93-499e-9153-ccc98004e726</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:51:17 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:51:17.559Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,நெல் கொள்முதல்,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7qykdquq/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7qykdquq/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>விவசாயிகள் எந்தவித இடையூறும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விலையுடனும் தங்களது நெல்லை விற்பனை செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யும் வகையில் நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</aside><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>புகார்</strong></h2><p>தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> செய்யும் பெயரில் ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ கூடுதல் எடை கேட்பது, "தூற்றுகிறோம்" என்ற பெயரில் மேலும் ஒன்றரை கிலோ நெல்லை பிடித்தம் செய்வது, அதோடு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருக்கும் விவசாயிகள், லஞ்சம் வழங்க மறுத்தால் "நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது" என்ற காரணத்தைக் கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><h2><strong>அலட்சியம்</strong></h2><p>சில தினங்களுக்கு முன்னர், கடலூர் மாவட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் மேற்கொண்ட ஆய்விலேயே ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.50 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal">லஞ்சம்</a> வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>ஏற்கனவே, தேர்தலுக்கு முன் தவெக அளித்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி, இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் ஏற்பட்டுள்ள வறட்சி, விதை நெல் மற்றும் உரங்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல்லை விற்பனை செய்யவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, தவெக அரசின் விவசாயிகள் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.</p><p>"லஞ்சம் கேட்டால், 'இது முதலமைச்சர் விஜய் ஆட்சி' என்று கூறுங்கள்" என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்ததை நம்பி, அதிகாரிகளிடம் முறையிட்ட விவசாயிகளுக்கு, "நீங்கள் கொடுக்கும் லஞ்சம் எங்களுக்கு மட்டும் அல்ல; மேலிடம் வரை செல்கிறது" என்ற பதிலே கிடைப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுவே முதலமைச்சர் விஜய் கூறிய 'வெளிப்படையான ஆட்சி' என்பதன் உண்மையான பொருளா? என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புகின்றனர்.</p><h2><strong>வேதனை</strong></h2><p>தமிழகத்தில் விவசாயம் செய்வதே சாத்தியமற்றதாக மாறியுள்ளதாகவும், இந்த நெருக்கடி நிலை தொடர்ந்தால், தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும், அதோடு கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எப்படி ரூ.30 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கினார்களோ அதைப்போலவே எங்களுக்கு பின் எங்கள் குடும்பத்திற்கும் கொடுங்கள் என விரக்தியான மனநிலையில் விவசாயிகள் எழுப்பும் கேள்வி அரசின் செயல்பாடுகள் மீதான அவர்களின் விரக்தியையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறது.</p><p>எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, லஞ்சம் மற்றும் எடை முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகள் எந்தவித இடையூறும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விலையுடனும் தங்களது நெல்லை விற்பனை செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யும் வகையில் நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>&quot;இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல, பிரதமர் மோடி!&quot;-அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/this-country-is-not-your-fathers-property-pm-modi-arvind-kejriwal-slams</link><comments>https://www.maalaimalar.com/news/national/this-country-is-not-your-fathers-property-pm-modi-arvind-kejriwal-slams#comments</comments><guid isPermaLink="false">bb6e8b41-1b67-4a55-a856-90a72e3cd6a4</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:44:32 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:44:32.435Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,delhi,பிரதமர் மோடி.,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/33g1tsxf/MODI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modi-Arvind Kejriwal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/33g1tsxf/MODI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு மற்றும் ஆளும் பாஜகவின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி அக்னி கணைகளை வீசியுள்ளார். </p><p>டெல்லியில் நடைபெற்ற முக்கிய அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார்.</p><h2><strong>அதிகார துஷ்பிரயோகம் குறித்த சாடல்:</strong></h2><p>மத்திய அரசின் அடக்குமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய கெஜ்ரிவால், "இந்த ஜனநாயக நாடு மக்களுக்கே சொந்தமானது. இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல Mr.மோடி!" என்று மிக ஆவேசமாகக் கூறினார்.</p><h2><strong>ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்:</strong></h2><p>மத்திய அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தவறான வழிகளில் ஆட்சி நடத்துவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் குரல்களையும் நசுக்கப் பார்ப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.</p><h2><strong>நாடு தழுவிய கொந்தளிப்பு:</strong></h2><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை முடக்க நினைக்கும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.</p><h2><strong>அரசியல் களத்தில் நிலவும் அதிர்வலைகள்:</strong></h2><p>அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அதிரடியான கருத்து, தேசிய அரசியலிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆம் ஆத்மி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இக்கருத்தைப் பரப்பி வரும் நிலையில், பாஜக தரப்பில் இருந்து இதற்குக் கடுமையான எதிர்ப்புகளும் பதிலடிகளும் வரத் தொடங்கியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை - மல்லிகார்ஜூன கார்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-decided-not-celebrate-birthday-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-decided-not-celebrate-birthday-today#comments</comments><guid isPermaLink="false">be4bfd4a-1099-42c1-a508-04536354f321</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:40:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:40:26.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,mallikarjun kharge,மல்லிகார்ஜூன கார்கே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/09/30/1769804-mallikarjunkharge.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மல்லிகார்ஜூன கார்கே]]></media:title><media:description type="html"><![CDATA[ Mallikarjun Kharge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/09/30/1769804-mallikarjunkharge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் மூத்த தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87">மல்லிகார்ஜூன கார்கே</a>வுக்கு இன்று 84-வது பிறந்தநாள். ஆனால் தான் பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை என்று அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-</p><p>நீட் தேர்வுக்காக காலவரையின்றி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் வாங்சுக் வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கரப்பான்பூச்சி கட்சி சார்பில் நடத்தப்பட்ட அமைதியான ஜனநாயக போராட்டத்தை அரசு ஒடுக்கியதையும், தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டு வீச்சுகளையும் நாடு நேற்று கண்டது. நீதி கோரிய <a href="https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears">மாணவர்கள்</a> குரலுக்கு வன்முறைதான் பதிலாக கிடைத்தது. இத்தகைய வேதனையான சூழ்நிலையில் இன்று எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.</p><p>இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் முழுமையாக விவாதிக்க வேண்டும். மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தானாக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும். மாணவர்களுக்கு தேவை நீதிதான். ஒடுக்குமுறை அல்ல.</p><p>இவ்வாறு கார்கே அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் அடுத்த பிரம்மாண்டம்: துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/work-on-the-harbour-to-maduravoyal-double-decker-flyover-intensifies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/work-on-the-harbour-to-maduravoyal-double-decker-flyover-intensifies#comments</comments><guid isPermaLink="false">b24dc60f-7284-47c4-a0e2-c96083aced2a</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:39:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:39:54.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை,மேம்பால பணிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oey5mtne/maduravoyoal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் அடுக்குக்கான கார்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம். ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் அடுக்குக்கான கார்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oey5mtne/maduravoyoal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>நகரின் மையப்பகுதியில் இருந்து கோயம்பேடு அல்லது மதுரவாயல் நோக்கிச் செல்லும் உள்ளூர் வாகனங்கள் சிக்னல்கள் இல்லாத கீழ் தளத்தைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் இலக்கை அடையலாம்.</aside><p>சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான ஈரடுக்கு மேம்பாலம் ரூ.3,570 கோடி முதல் ரூ.5,770 கோடி வரையிலான மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த 21 கி.மீ. நீளமுள்ள திட்டம், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 2 தளங்களைக் கொண்டுள்ளது.</p><h2><strong>6 வழிச்சாலை</strong></h2><p>மேல்தளம் துறைமுக சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்படும் 6 வழிச்சாலை. இது துறைமுகம் வரை தொடர்கிறது. கீழ்த்தளம் சாதாரண உள்ளூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படும் 4 வழிச்சாலை.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">மதுரவாயல்</a> முதல் கோயம்பேடு வரை ஒற்றைத் தளம் மட்டுமே இருக்கும். உள்ளூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, முதல் அடுக்கில் மொத்தம் 13 இடங்களில் சாய்தளங்கள் (7 ஏறும் வழிகள் மற்றும் 6 இறங்கும் வழிகள்) அமைக்கப்படுகின்றன.</p><p>கோயம்பேடு, சிவானந்தா சாலை, ஸ்பர்டேங்க் சாலை மற்றும் கல்லூரி சாலை வாகனங்கள் ஏறி இறங்குவதற்கான சாய்தளங்கள் அமைக்கப்படுகின்றன. சிவானந்தா சாலை மற்றும் கல்லூரி சாலை ஆகிய 2 இடங்களில் இந்த மேம்பாலத்தில் நுழைவதற்கும், காமராஜர் சாலை, ஸ்பர்டேங்க் சாலை உட்பட 2 இடங்களில் வெளியேறுவதற்கும் பிரத்தியேகப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.</p><figure><img alt="ஈரடுக்கு மேம்பாலத்தின் மாதிரி தோற்றம்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/cxyuzk8r/maduravoyal0.jpg" /><figcaption>ஈரடுக்கு மேம்பாலத்தின் மாதிரி தோற்றம்</figcaption></figure><h2><strong>போக்குவரத்து நெரிசல் குறையும்</strong></h2><p>இந்த மேம்பாலம் சென்னை துறைமுகம் கதவு எண் 10 (நேப்பியர் பாலம் அருகில்) தொடங்கி, கூவம் ஆற்றின் கரையோரமாக பயணித்து, கோயம்பேடு வழியாகச் சென்று மதுரவாயல் சந்திப்பில் முடிவடைகிறது. துறைமுகம் முதல் கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் போக்கைப் பின்பற்றி ஈரடுக்கு பாலமாக அமைகிறது.</p><p>கோயம்பேடு முதல் மதுரவாயல் வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் ஒற்றை அடுக்கு பாலமாகத் தொடர்கிறது. சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மேல் தளத்தில் நேரடியாகச் செல்வதால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும்.</p><p>நகரின் மையப்பகுதியில் இருந்து கோயம்பேடு அல்லது மதுரவாயல் நோக்கிச் செல்லும் உள்ளூர் வாகனங்கள் சிக்னல்கள் இல்லாத கீழ் தளத்தைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் இலக்கை அடையலாம்.</p><p>செம்பரம்பாக்கம் அருகே உள்ள 64 ஏக்கர் பரப்பளவிலான யார்டில், மேம்பாலத்திற்கான பிரம்மாண்ட கான்கிரீட் தூண்கள் மற்றும் ‘பாக்ஸ் கார்டர்’ தயாரிக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.  </p><h2><strong>கார்டர்கள் பொருத்தும் பணி</strong></h2><p>கடந்த மே மாதம் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இப்பணிகள், பருவமழை உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் சற்றே தாமதமானது. தற்போது, தினமும் பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என மொத்தம் 11 மணி நேரங்கள் தீவிரமாகப் பணிகள் நடந்து வந்தன. தற்போது நாள் ஒன்றுக்கு  16 மணி நேரமாக உயர்த்தி பணிகளை விரைவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.  முதல் அடுக்குக்கான கார்டர்களைப் பொருத்தும் பணி தற்போது தொடங்கி உள்ளது. </p> <p>மொத்தம் 21 கி.மீ. நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தின் 15 கி.மீ. பகுதி கூவம் ஆற்றின் வழியே செல்கிறது. இந்த மேம்பாலத்தின் பணிகள் அனைத்தும் நவம்பர் 2027-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், தினசரி சுமார் 20 ஆயிரம் உள்ளூர் வாகனங்களும், 5,500 கனரக வாகனங்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரின் உட்புறச் சாலைகளில் நிலவும் நெரிசலை பெருமளவு குறைக்கும்.</p><h2><strong>சென்னைக்கு வரப்பிரசாதம்</strong></h2><p>வரும் காலங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டிற்குள் இந்த உயர்மட்டச் சாலையில் பயணிக்கும் உள்ளூர் வாகனங்களின் எண்ணிக்கை தினசரி 52,080 ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p><p>2047-ம் ஆண்டுக்குள் சென்னை துறைமுகத்தின் சரக்குக் கையாளுதல் திறன் ஆண்டுக்கு 200 மில்லியன் டன்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஈரடுக்கு மேம்பால சாலை சென்னைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.</p>]]></content:encoded></item></channel></rss>