<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 30 Aug 2026 12:29:27 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 30 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">197709fa-b7be-4f14-952f-71d97d446d53</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:42:07.142Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/4knayp7t/30082026LiveUpdates.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil News Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/4knayp7t/30082026LiveUpdates.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-china-erases-tibetan-records">நேபாள வெள்ளப் பேரழிவு: திபெத் மக்களின் பதிவுகளை நீக்கி உண்மையை மறைக்கும் சீனா!... </a></p><p>*திபெத்தின் கைரோங் எல்லைப் பகுதியில் வெள்ளம் வீடுகளையும் சுங்கச் சாவடியையும் அடித்துச் செல்லும் பயங்கர காட்சிகளை திபெத்திய மக்கள் விசாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். </p><p>*ஆனால், அந்த வீடியோக்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-level-touches-90-feet-after-194-days">நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது</a></p><p>* நாளைமறுதினம் காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்க மேட்டூருக்கு செல்கிறார்.</p><p>* 194 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியை எட்டியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-100-tamils-still-missing-as-rescue-efforts-intensify">நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழர்கள் 100 பேரை தேடும் பணி தீவிரம்</a></p><p>* 219 தமிழர்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட இருக்கிறார்கள்.</p><p>* 100 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-plan-to-bury-unidentified-bodies">நேபாள வெள்ளப் பேரழிவு: அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்யத் திட்டம்... </a></p><p>*நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.</p><p>*உடல்கள் அடக்கம் செய்யப்பட்டாலும், எதிர்காலத்தில் உறவினர்கள் தங்களது குடும்பத்தினரை அடையாளம் கண்டுகொள்ளப் பல நவீன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/nepal-flash-floods-death-toll-rises-to-734">நேபாளத்தில் பாய்ந்தோடும் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 734 ஆக உயர்வு; நிவாரணம் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்... </a></p><p>*இந்த இயற்கை சீற்றத்தால் ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>*இதுவரை சுமார் 2,500 பேர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharati-challenge-to-tn-cm-vijay-you-open-three-files-i-open-three">3 ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்: நான் மோசமான ஆளு- ஆர்.எஸ். பாரதி</a></p><p>* திமுக-வை பார்த்து சவால் விடுகிறார் விஜய். கோப்புகள் எல்லாம் ரெடியா இருக்கு, டேபிளில் இருக்கிறது. நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார்.</p><p>* ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery">என்னை கொன்று விடுவார்கள் என்று கதறிய கர்ப்பிணி - பிரசவத்திற்கு பின்பு தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery"> </a>* அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பச்சிளம் குழந்தை இருவரும் உயிரிழப்பு.</p><p>* அரசு மருத்துவமனை ஊழியர்கள் தன்னை கொன்று விடுவார்கள் என கர்ப்பிணி கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/no-true-hindu-can-think-muslims-should-not-be-in-india-mohan-bhagwat">இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது: மோகன் பகவத்... </a></p><p>* இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று நினைப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது.</p><p>* ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளார்ந்த கண்ணியம் உண்டு, நமக்கிடையே எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nepal-floods-97-year-old-grandmother-heroic-rescue">நேபாள வெள்ளம்: இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டி- போர் வீரனை போல் காட்சியளித்ததாக பேரன் உருக்கம்...</a></p><p>* நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 97 வயதான மூதாட்டி ஒருவரை மீட்பு படையினர் மீட்டனர்.</p><p>* அந்த மூதாட்டியை கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்பதற்கு நேபாள ராணுவத்திற்கு சுமார் நான்கு மணி நேரம் ஆனது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kiran-kumar-reddy-likely-appointment-tamil-nadu-governor">தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு</a></p><p>* தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கவர்னர்கள் புதிதாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்</p><p>* கிரண் குமார் ரெட்டி 2010 முதல் 2014 வரை ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/boat-carrying-270-passengers-capsizes-in-northern-cyprus</link><comments>https://www.maalaimalar.com/news/world/boat-carrying-270-passengers-capsizes-in-northern-cyprus#comments</comments><guid isPermaLink="false">87cece6f-eb28-49d6-87d2-be7af530b5f4</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:51:21 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:51:21.661Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Passenger boat,northern Cyprus,பயணிகள் படகு,வடக்கு சைப்ரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/4a3n0er0/New-Project-2026-08-30T172028.528.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/4a3n0er0/New-Project-2026-08-30T172028.528.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கடலுக்கு நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>கைரேனியா கடற்கரையிலிருந்து துருக்கியின் தாசுசு துறைமுகத்திற்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கப்பல் கவிழ்ந்துள்ளது. </p><p>கப்பல் கவிழ்ந்த உடனேயே துருக்கிய சைப்ரஸ் கடலோரக் காவல் படகுகள் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்திற்கு விரைந்தன. மேலும் ஒரு ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p><p>இதில் 159 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 99 பயணிகள் மற்றும் ஊழியர்கள் குறித்து இன்னும் தெரியவில்லை என்று கைரேனியா நகர மேயர் முராத் சென்குல் தெரிவித்துள்ளார். </p><p>இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே மோசமான வானிலை நிலவி வருவதால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம்: திட்டமிட்டச் செயலாகவே கருத வேண்டியுள்ளது - மு. வீரபாண்டியன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/removal-of-the-names-of-periyar-ambedkar-and-nehru-must-be-viewed-as-a-deliberate-act-mu-veerapandian</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/removal-of-the-names-of-periyar-ambedkar-and-nehru-must-be-viewed-as-a-deliberate-act-mu-veerapandian#comments</comments><guid isPermaLink="false">ee7c96b7-80da-41f7-9f67-b471a3ba6b66</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:32:08 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:32:08.797Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,Government of Tamil Nadu,M. Veerapandian,மு. வீரபாண்டியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ketfzs27/New-Project-2026-08-30T151811.712.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம்: திட்டமிட்டச் செயலாகவே கருத வேண்டியுள்ளது - மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ketfzs27/New-Project-2026-08-30T151811.712.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இது தவறுதலாகவோ அல்லது தற்செயலாகவோ நடைபெற்றது அல்ல, திட்டமிட்ட செயலாகவே கருத வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>விடை இல்லை</h2><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. </p><p>இது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. கண்டனக் கணைகளின் தாக்கத்திற்குப் பிறகு, தற்பொழுது அத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பேட்டில் சேர்க்கப்படும் என அமைச்சர் வி.சம்பத்குமார் கூறியுள்ளார். எனினும், இதற்குக் காரணமானவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படவில்லை.</p><h2>மகத்தான தலைவர்கள்</h2><p>தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆகியோர் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் ஆவர். பிற்போக்குத் தனங்களை, இந்துத்துவ மதவெறி அரசியலை, வகுப்புவாதத்தை வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடியவர்கள் ஆவர். </p><p>நவீன இந்தியாவை உருவாக்குவதில் மகத்தான பங்களிப்பை தத்தம் வழிகளில் செலுத்தியவர்கள் ஆவர். அவர்களை சமூக நீதிக்காகப் போராடியவர்கள் என்று மட்டுமே பார்த்து விட முடியாது. அதற்கும் மேலாக உண்மையான சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னதக் கோட்பாட்டை இந்திய மண்ணில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அயராது பாடுபட்டவர்கள் ஆவர்.</p><h2>தற்செயலானது அல்ல</h2><p>அப்படிப்பட்ட மகத்தானத் தலைவர்களின் பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டது என்பதை, தற்செயலானதாக, சாதாரண ஒரு தவறாக பார்க்க முடியாது. அதை ஒரு திட்டமிட்டச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. </p><p>இந்த மாபெரும் தலைவர்களின் பெயர்கள் இந்துத்துவா சக்திகளுக்கு, மத அடிப்படை வாதிகளுக்கு,பிற்போக்குச் சக்திகளுக்கு எப்பொழுதுமே எட்டிக்காய் போன்று கசப்பதாகும். </p><p>அவர்கள் மீது வெறுப்பு எனும் நெருப்பை இச்சக்திகள் தொடர்ந்து அள்ளி வீசுகின்றன. அத்தலைவர்களை இழிவுபடுத்தி வருகின்றன.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>எனவே, இந்நிலையில், இத்தலைவர்கள் பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன? இந்த நீக்கத்துக்குப் பின்னால் உள்ள சக்திகள் எவை ? என்பவை குறித்து முழுமையான நேர்மையான விசாரணையை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். </p><p>இத்தலைவர்களின் பெயர் நீக்கத்திற்குக் காரணமானவர்களை கண்டறித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>உசிலம்பட்டி அருகே சிறுமி தற்கொலை: திமுக எம்பி கனிமொழி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/16-year-old-dalit-girl-dies-by-suicide-near-usilampatti</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/16-year-old-dalit-girl-dies-by-suicide-near-usilampatti#comments</comments><guid isPermaLink="false">41b33bf0-4ea0-454c-8c78-7712dadece55</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:20:34 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:20:34.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கனிமொழி எம்பி,Kanimozhi MP,girl suicide,சிறுமி தற்கொலை,உசிலம்பட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/i4yvwhxw/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/i4yvwhxw/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது என திமுக எம்பி கனிமொழி கூறினார்.</p><p>பள்ளிச் சேர்க்கைக்காக சென்ற சிறுமி அவமானப்படுத்தப்பட்டதாக கூறும் நிலையில் மனவேதனையில் உயிரை மாய்த்துள்ளார் என கனிமொழி கூறினார்.</p><p>இதுகுறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.</p><p>தனது எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் பள்ளிச் சேர்க்கைக்காகச் சென்ற அந்தச் சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனவேதனையில் அச்சிறுமி உயிரை மாய்த்து கொண்டதால், அவரது குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது.</p><p>ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையும், கண்ணியமும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது அவர்களின் உரிமை.</p><p>இது போன்ற மனவேதனைக்கு எந்தக் குழந்தையும் தள்ளப்படக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி, நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மனதின் குரல்: அவகோடா பயிரிட்டு லாபம் ஈட்டும் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/voice-of-the-mind-pm-modi-praises-avocado-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/national/voice-of-the-mind-pm-modi-praises-avocado-farmers#comments</comments><guid isPermaLink="false">a3e96dbf-e332-43a5-88fe-4ceb75ddce60</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:11:16 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:11:16.636Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Agriculture,மனதின் குரல்,பிரதமர் மோடி.,pm modi,Mannki Baat,tamilnadu farmers,Avocado Farming,அவகோடா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/sovz83dc/Avocado-Farming" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Avocado Farming ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/sovz83dc/Avocado-Farming?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆற்றிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின்</a> 137-வது பதிப்பில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் புதுமையான முயற்சிகள் மற்றும் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் பேசினார்.</p><p>அப்போது, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் என்பவரின் சாதனையை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.</p><h2><strong>அவகோடா பழங்களின் தேவை</strong></h2><p>இதுகுறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி </a>பேசியதாவது:</p><p><br>என் அன்பு நாட்டு மக்களே, தற்போது இந்திய நகரங்களில் அவகோடா மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஒரு காலத்தில் இந்த பழத்தைப் பற்றி பலருக்கும் தெரியாது, அதற்கான தேவையும் சந்தை மதிப்பும் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று, ஆரோக்கியம் மற்றும் பிரீமியம் சந்தைகளில் இது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதோடு, பலரது உணவு மேஜைகளிலும் தவறாமல் இடம் பெறத் தொடங்கியுள்ளது என்று கூறினார்.</p><h2><strong>கொடைக்கானல் விவசாயியின் சாதனை</strong></h2><p>தொடர்ந்து பேசிய பிரதமர், இந்த புதிய பயிர் வாய்ப்பைப் பயன்படுத்தி தென்னிந்திய விவசாயிகள் எப்படித் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணங்களைச் சுட்டிக்காட்டினார்.</p><p>"தமிழ்நாடு, கொடைக்கானலைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் அவர்கள் தனது அரை ஹெக்டேர் நிலத்தில் அவகோடா பழங்களைப் பயிரிடத் தொடங்கினார். </p><p>தற்போதைய சந்தையில் இப்பழங்களுக்குக் கிடைக்கும் நல்ல விலையின் காரணமாக, அவருக்குப் பெரிய அளவில் லாபம் கிடைத்துள்ளதுடன், அவரது வருமானமும் பல மடங்கு அதிகரித்துள்ளது" என்று பிரதமர் குறிப்பிட்டார்.</p><h2><strong>பிற மாநில விவசாயிகளின் உத்வேகம்</strong></h2><p>தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநில விவசாயிகளின் உழைப்பையும் பிரதமர் பாராட்டிப் பேசினார். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">ஆந்திர பிரதேசம்</a> கடப்பாவைச் சேர்ந்த வரதராஜ் என்ற விவசாயி, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை சுமார் 4 டன் அவகோடா பழங்களை உற்பத்தி செய்து, இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக உள்ளூர் கடைகளுக்கு விற்று நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.</p><p><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகா </a>மாநிலம் </strong>சிக்மகளூரு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது காபித் தோட்டங்களுக்கு நடுவே அவகோடா மரங்களை ஊடுபயிராக நட்டு, காபி மற்றும் மிளகுடன் சேர்த்து உபரி வருமானமும் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர் மேலும் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை கூறினார்.</p><h2><strong>இந்திய <a href="https://www.maalaimalar.com/news/district/avocado-prices-have-fallen-in-kodaikanal-515722">அவகோடா</a></strong></h2><p>"நகரத்து உணவகங்களில் அவகோடா டோஸ்ட் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால், இதே <a href="https://www.maalaimalar.com/news/district/avocado-prices-have-fallen-in-kodaikanal-515722">அவகோடா </a>மூலம் நமது நாட்டின் புதுமைப்பித்த விவசாயிகளும் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு புதிய வழியைக் கண்டறிந்துள்ளனர். </p><p>சுருக்கமாகச் சொன்னால், நமது நாட்டின் மண்ணில் விளைந்த அவகோடா, வாடிக்கையாளர்களின் உணவைச் சுவையாக்குவதோடு, மறுபுறம் இந்திய விவசாயிகளின் வருமானத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளது" எனப் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்லில் பால் வேன் மோதி 4 சிறார்கள் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/four-children-killed-as-milk-van-hits-them-in-dindigul</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/four-children-killed-as-milk-van-hits-them-in-dindigul#comments</comments><guid isPermaLink="false">687eebcc-8f78-4ed6-a3ee-6c447123aec9</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:03:45 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:03:45.616Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,திண்டுக்கல்,Children Death,சிறுவர்கள் உயிரிழப்பு,Dindugul</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zek4xzgo/acci.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zek4xzgo/acci.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த கோர விபத்தில் 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>விபத்தில் சிறுவன் மோசிகரன், சிறுமிகள் யோகவர்ஷினி, அனன்யா, தனு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/moderate-rain-forecast-for-western-ghats-districts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/moderate-rain-forecast-for-western-ghats-districts#comments</comments><guid isPermaLink="false">a4d3da7d-7631-4c09-a7cd-9d4c50aa6ead</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:40:04 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:40:04.706Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,Rain,மழை,Meteorological Centre,Weather,மேற்குதொடர்ச்சி மலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ngmpl060/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ngmpl060/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</strong></em></p><h2>13 மாவட்டங்களில் மழை</h2><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் வரும் 1 மற்றும் 2ம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>கள்ளக்குறிச்சிணண, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,2ம் தேதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.</p><h2>3ம் தேதி மிதமான மழை</h2><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 3ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.</p><p>விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் 4, 5ம் தேதிகளில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-wife-and-lover-arrested-for-husband-murder</link><comments>https://www.maalaimalar.com/news/national/andhra-pradesh-wife-and-lover-arrested-for-husband-murder#comments</comments><guid isPermaLink="false">e2e93aaa-1fd6-42c2-9214-9d1842716b75</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:37:58 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:37:58.951Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Murder case,Andhra Pradesh,husband murder,Wife Arrested,ஆந்திர பிரேதசம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/d525zt7e/Murder-Case" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murder Case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/d525zt7e/Murder-Case?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில், குடும்பத் தகராறு மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரைக் கொலை செய்து உடலைக் கிணற்றில் வீசியதாக ஒரு பெண்ணையும் அவரது கள்ளக் காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h2>குடும்பத் தகராறு</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">ஆந்திர மாநிலம்</a>, அன்னமய்யா மாவட்டம் நீலகண்டராவ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணா. இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரபி என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>இதனைப் பாலகிருஷ்ணா கண்டித்ததால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.</p><h2>கொலைச் சம்பவம்</h2><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பாலகிருஷ்ணா தனது விவசாய நிலத்திற்குச் சென்றபோது, அங்கு வந்த அவரது மனைவி மற்றும் ரபி ஆகிய இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கி கொலை செய்துள்ளனர். </p><p>பின்னர் கொலையை மறைப்பதற்காகப் பாலகிருஷ்ணாவின் உடலை ஒரு கோணிப்பையில் கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.</p><h2>விசாரணை மற்றும் கைது</h2><p>மறுநாள் காலை கிணற்றில் உடல் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய தீவிர <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணையில்</a>, பாலகிருஷ்ணாவின் மனைவி மற்றும் ரபி ஆகியோர் இணைந்து இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.</p><p>தற்போது போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை </a>நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘முஸ்தபாவின் நச்சுப் பேச்சை முதலமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-must-condemn-mustafas-toxic-remarks-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-must-condemn-mustafas-toxic-remarks-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">f923f2e9-190a-473c-b6c6-b7707dc8ffe6</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:28:12 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:28:12.524Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,TVK Mustafa,தவெக முஸ்தபா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/b1ebdqqp/New-Project-2026-08-30T155745.412.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘முஸ்தபாவின் நச்சுப் பேச்சை முதலமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/b1ebdqqp/New-Project-2026-08-30T155745.412.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் தவெகவின் மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“தவெக சட்டமன்ற உறுப்பினர்  முஸ்தபா, அண்மையில் 'அமரன்' திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. </p><p>இந்திய மண்ணைக் காக்கத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாற்றைப் போற்றும் 'அமரன்' திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக்கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்? முஸ்தபா ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்படுவதை ஏன் சகித்துக்கொள்ள மறுக்கிறார்? பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, முஸ்தபாவைப் போலக் கண்ணீர் வரக்கூடாது. </p><p>உங்களது அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா? மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான 'துப்பாக்கி' திரைப்படத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளை நீக்க வைத்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்  முஸ்தபா. </p><p>திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. முஸ்தபா போன்றவர்களின் இத்தகைய நச்சுப் பேச்சுக்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். </p><p>இல்லையெனில், இதுதான் தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பதாக தமிழ்நாடு மக்கள் மக்கள் புரிந்துகொள்வார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளப் பேரழிவு: சத்தீஸ்கர் நண்பர்கள் 5 பேரின் உயிரைக் காப்பாற்றிய ஒரு டீ இடைவேளை!</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-tea-break-saves-five-friends-from-chhattisgarh</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-tea-break-saves-five-friends-from-chhattisgarh#comments</comments><guid isPermaLink="false">265fbbd2-c20e-4603-9832-bfe15d7c5437</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:08:29 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:08:29.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சத்தீஸ்கர்,chhattisgarh,நேபாள நிலச்சரிவு,nepal flood,நேபாள வெள்ளப் பேரழிவு,Nepal  Disaster</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/pd33c3dl/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Flood  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/pd33c3dl/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-missing-uk-tourists-daughter-tracks-location">வெள்ளப்பெருக்கு</a> மற்றும் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் மிக நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26ம் தேதி அன்று வழியில் அவர்கள் எடுத்துக்கொண்ட 10 முதல் 15 நிமிட டீ இடைவேளையே, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் அவர்களைக் காப்பாற்றிய அற்புதத் தருணமாக மாறியுள்ளது.</p><p>சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த நாராயண் சென், தினேஷ் ஓஜா, பிரேம் சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ் மற்றும் தினேஷ் சிங் தாக்குர் ஆகிய ஐந்து பேரும் நேபாளத்தின் பசுபதிநாத் கோயில் உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப் பார்க்க வாடகை காரில் பயணம் மேற்கொண்டனர். ஆகஸ்ட் 26 அன்று காலை தாடிங் மாவட்டத்தில் உள்ள மலேகு பகுதியில் அவர்கள் டீ குடிப்பதற்காக ஒரு விடுதியில் காரை நிறுத்தினர். </p><p>அந்தச் சில நிமிட இடைவெளியில், அவர்கள் செல்லவிருந்த பாதையில் இருந்த மேம்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட செய்தி அவர்களுக்குத் தெரியவந்தது. சற்று நேரத்திற்கு முன்பே புறப்பட்டிருந்தால் தங்களின் நிலையும் பரிதாபமாகியிருக்கும் என அவர்கள் உறைந்துபோயினர்.</p><h2>காரிலே<strong>யே கழிந்த </strong>இரவுகள்</h2><p>மேம்பாலம் உடைந்ததால் பயணம் முடங்கிய நிலையில், மலேகு பகுதியில் உள்ள உயரமான பாதுகாப்பான இடத்திற்கு அவர்கள் தப்பிச் சென்றனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியின்றி, தங்கள் வாடகை காரிலேயே இரவுகளைக் கழித்தனர். அவர்களின் கண்முன்னே பொங்கி வழிந்த திரிசூலி ஆற்றில் கார்களும், கட்டிடக் கழிவுகளும் அடித்துச் செல்லப்பட்ட கொடூரமான காட்சிகளை அவர்கள் அதிர்ச்சியுடன் கண்டனர். உள்ளூர் இந்திய உணவக உரிமையாளர் மற்றும் காவல் துறையினரின் உதவியால் அவர்களுக்கு உணவும் பாதுகாப்பும் கிடைத்தன.</p><p>இணைய வசதி சீராக இருந்ததால், இந்திய அரசின் உதவி மையத்தையும் குடும்பத்தினரையும் தொடர்புகொண்டு தங்களின் இருப்பிடத்தைப் பகிர்ந்துகொண்டனர். ஆபத்தான சூழலிலும் சிவபெருமானின் பெயரை உச்சரித்தபடி பயத்துடன் காலத்தைக் கழித்த அவர்கள், ஆகஸ்ட் 28 அன்று நேபாளத்திலிருந்து புறப்பட்டு சத்தீஸ்கரில் உள்ள தங்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர். ஒரு சிறிய டீ இடைவேளை தங்களின் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றியமைத்து உயிரைக் காப்பாற்றியதை மறக்க முடியாது என அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அரக்கோணம் அருகே  2 மகன்களுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-mother-two-sons-die-by-suicide-arakkonam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-mother-two-sons-die-by-suicide-arakkonam#comments</comments><guid isPermaLink="false">56868c30-f768-405a-b000-8728cc7147e0</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:04:17 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:04:17.399Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரக்கோணம்,Arakkonam,3 Person Suicide,PoliceInvestigation,Family Tragedy,Mangammapetai,Tragic Incident</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qpcewinr/Family-Tragedy" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Family-Tragedy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qpcewinr/Family-Tragedy?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, கணவனை இழந்த இளம்பெண் ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் ரெயில் முன் பாய்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை </a>செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பின்னணி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/ranipet">ராணிப்பேட்டை </a>மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோட்டையா (30). அம்மிக்கல் செய்யும் தொழிலாளியான இவருக்கு, வள்ளி (23) என்ற மனைவியும், பரத் (7), சந்தோஷ் (3) ஆகிய இரண்டு மகன்களும் இருந்தனர். </p><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டையா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவரின் மறைவுக்குப் பின், வள்ளி தனது இரண்டு குழந்தைகளுடன் மங்கம்மாபேட்டையில் வசித்து வந்தார்.</p><h2>ரெயில் முன் பாய்ந்து கோர முடிவு</h2><p>இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் வீட்டில் இருந்த தனது இரண்டு மகன்களையும் வள்ளி வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அரக்கோணம் - திருத்தணி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மங்கம்மாபேட்டை வழித்தடத்தில், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற மின்சார ரெயிலின் முன், வள்ளி தனது இரண்டு குழந்தைகளையும் அணைத்தபடி திடீரென பாய்ந்துள்ளார்.</p><p>இதில் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி, தாய் மற்றும் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ரெயில்வே போலீசார்</a> சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். </p><p>உயிரிழந்த வள்ளி மற்றும் அவரது மகன்களான பரத், சந்தோஷ் ஆகிய மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2><strong>தற்கொலைக்கான காரணம் என்ன?</strong></h2><p>கணவர் இறந்ததால் ஏற்பட்ட வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வள்ளி இந்த விபரீத முடிவை எடுத்தாரா? அல்லது உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பக் கருத்து வேறுபாடு காரணமா? என்ற பல கோணங்களில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு சிறுவர்கள் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் மங்கம்மாபேட்டை மற்றும் அரக்கோணம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/pm-modi-honoured-with-uzbekistans-top-civilian-award</link><comments>https://www.maalaimalar.com/news/world/pm-modi-honoured-with-uzbekistans-top-civilian-award#comments</comments><guid isPermaLink="false">e3ef8df8-0957-41f8-b63d-26cae5739cea</guid><pubDate>Sun, 30 Aug 2026 09:34:25 +0000</pubDate><atom:updated>2026-08-30T09:34:25.208Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Award,uzbekistan,pm modi,பிரதமர் மோடி,உயரிய விருது,உஸ்பெகிஸ்தான்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/8o5z2wmo/Modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/8o5z2wmo/Modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உஸ்பெகிஸ்தானின் அதிபர் ஷவ்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.</p><p>உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி அதிபருடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.</p><p>2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி  உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளார். இந்திய விமானங்கள் செல்ல தடை விதித்து பாகிஸ்தான் வான்பரப்பு மூடப்பட்டதால் பிரதமர் மோடி சீனா வழியாக உஸ்பெகிஸ்தான் சென்றார்.</p><p>பிரதமர் மோடிக்கு வரவேற்பு</p><p>தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்த நாட்டு ​​அதிபர் மிர்சியோயேவ் ஆரத்தழுவி வரவேற்றார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தாஷ்கண்டில் முக்கிய கட்டிடங்கள் இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் ஒளிரவிடப்பட்டிருந்தன. இது பிரதமர் மோடியின் உஸ்பெகிஸ் தானுக்கான 4-வது பயணமாகும்.</p><p>தொடர்ந்து பிரதமர் மோடிக்கு தாஷ்கண்டில் உள்ள ஒரு ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.  பின்னர் பிரதமர் மோடி யாங்கி உஸ்பெகிஸ்தான் பூங்காவிற்குச் சென்று, சுதந்திர நினைவுச் சின்னத் தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.</p><h2>இருதரப்பு பேச்சுவார்த்தை</h2><p>தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உஸ்பெகிஸ்தான் யோகா கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். </p><p>பங்கேற்பாளர்கள் குழுவாக யோகா செய்து கொண்டிருந்தபோது, ​​பிரதமர் மோடி அந்த இடத்தை சுற்றி வந்து அவர்களுடன் கலந்துரையாடினார். </p><p>முடிவில் பங்கேற்பாளர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இன்று மதியம் பிரதமர் மோடியும், உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயேவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்</p><p>2 நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன், பாதுகாப்பு, டிஜிட்டல் தொடர்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.</p><p>மேலும், விக்சித் பாரத் 2047 மற்றும் யாங்கி உஸ்பெகிஸ்தான் 2030 ஆகிய 2 நாடுகளின் பகிர்ந்தளிக்கப்பட்ட வளர்ச்சிக்கான பார்வையை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசிக்கின்றனர்.</p><h2>ஒரே காரில் பயணம்</h2><p>முன்னதாக உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடியும்,  அதிபர் மிர்சியோயேவும் அதிபர் மாளிகைக்கு ஒரே காரில் பயணம் செய்தனர்.</p><p>அதிபர் மாளிகையில் இரவு விருந்துடன் கூடிய சந்திப்பு நடைபெற்றது. பிரதமர் மோடி முதன்முறையாக 2014-ம் ஆண்டு அமெரிக்கப் பயணத்தின்போது, ​​அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் காரில் பயணம் செய்தார்.  </p><p>கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்காக சீனா சென்றிருந்தபோது, ​​பிரதமர் மோடி விளாடிமிர் புதின் பயணித்த அதே காரில் பயணம் செய்தார்.</p><p>இதற்குப் பிரதிபலனாக, சில மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் மாதம் ரஷிய அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோதும் அவருடன் பிரதமர் மோடி ஒரே காரில் சென்றார்.</p><p>அதன் பிறகு, பிரதமர் மோடி பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இத்தாலிய பிரதமர் ஜார் ஜியா மெலோனி, ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் காரில் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>உயரிய விருது</h2><p>உஸ்பெகிஸ்தானின் உயரிய விருதான ஒலி தரஜாலி டஸ்ட்லிக் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.</p><h2>கிர்கிஸ்தான் </h2><p>உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26-வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ் தான் நாட்டுக்கு செல்கிறார்.</p><p>உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ro" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tashkent, Uzbekistan: President Shavkat Mirziyoyev confers the Order of “Oliy Darajali Dustlik,” Uzbekistan’s supreme state award, on Prime Minister Narendra Modi<br><br>(Source: ANI/DD) <a href="https://t.co/WbHZtBB6ZU">pic.twitter.com/WbHZtBB6ZU</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2093987750433402947?ref_src=twsrc%5Etfw">August 30, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் முதல்முறை: ஆண், பெண் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்கும் மும்பை கிரிக்கெட் சங்கம்!</title><link>https://www.maalaimalar.com/sports/a-first-in-india-mumbai-cricket-association-to-provide-equal-pay-to-male-and-female-players</link><comments>https://www.maalaimalar.com/sports/a-first-in-india-mumbai-cricket-association-to-provide-equal-pay-to-male-and-female-players#comments</comments><guid isPermaLink="false">5b454e3c-63a2-4506-85d7-6b7d3edd156f</guid><pubDate>Sun, 30 Aug 2026 09:33:43 +0000</pubDate><atom:updated>2026-08-30T09:33:43.616Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Mumbai Cricket Association,ஊதியம்,Wages,மும்பை கிரிக்கெட் சங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/r8kgrwpc/New-Project-2026-08-30T150318.489.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியாவில் முதல்முறை: ஆண், பெண் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்கும் மும்பை கிரிக்கெட் சங்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/r8kgrwpc/New-Project-2026-08-30T150318.489.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என இருதரப்பினருக்கும் இனி சம ஊதியம் வழங்குவதாக மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. </p><p>இதன்மூலம் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வரலாற்றிலேயே இருபாலினத்தவருக்கும் சம ஊதியம் வழங்கும் முதல் கிரிக்கெட் சங்கம் என்றப் பெருமையை பெறுகிறது. 2026-2027ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசனில் இருந்து இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது. </p><p>ஏப்ரல் மாதம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ஒப்பந்தங்கள் இறுதியாகியுள்ளன. பிசிசிஐ- இன் மத்திய ஒப்பந்தத்தில் இல்லாத மற்றும் பிற முக்கியப் பட்டியல்களில் இடம் பெறாத உள்நாட்டு வீரர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த ஒப்பந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>மொத்தம் 22 வீரர்கள் (14 ஆண்கள் மற்றும் 8 பெண்கள்) இந்த ஒப்பந்தத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று தரவரிசைகளின்கீழ் ஊதியம் வழங்கப்படும். அதன்படி கிரேடு ‘ஏ’ பிரிவினருக்கு ரூ.12 லட்சமும், கிரேடு ‘பி’ பிரிவினருக்கு ரூ.8 லட்சமும், கிரேடு ‘சி’ பிரிவினருக்கு ரூ.6 லட்சமும் ஆண்டுக்கு வழங்கப்படும்.</p><p>ஆண்டு ஊதியத்தைத் தவிர, ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் போட்டிக்கான ஊதியம், தினசரிப் படிகள் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைகள் தனியாக வழங்கப்படும்.</p><p>இது தவிர, சமீபத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கேப்டன் அஜின்கியா ரஹானேவின் பெயரில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்க “அஜின்கியா ரஹானே உதவித்தொகை நிதி” என்ற பெயரில் கல்வி உதவித்தொகை நிதி அமைப்பு ஒன்றையும் மும்பை கிரிக்கெட் சங்கம் தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போதையில்லா இந்தியாவை உருவாக்குவோம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-youth-to-build-drug-free-india-in-mann-ki-baat</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-urges-youth-to-build-drug-free-india-in-mann-ki-baat#comments</comments><guid isPermaLink="false">d55938de-b3da-44e5-8d13-d09a9feda988</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:52:17.176Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மனதின் குரல்,Swachh Bharat,pm modi,Mannki Baat,பிரதமர் மோடி,Drug Free India,SVA Nidhi Scheme</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/iwd9zbs7/MannKi-Baat" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MannKi Baat  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/iwd9zbs7/MannKi-Baat?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்று தனது 137-வது பதிவில் பிரதமர் மக்களின் நலன் கருதி பேசியுள்ளார்.</p><h2>உள்நாட்டு பொருட்கள்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மனதின் குரல் நிகழ்ச்சியை</a> பல்வேறு மாநில முதல்வர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். வரலாறு தொடர்பாக விவரங்களை எளிதாக பெற இணைய தளம் உருவாக்கப்பட்டது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், சேர ராஜ்ஜியம் குறித்து இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>பண்டிகை நாட்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும். உள்நாட்டு பொருட்கள் குறித்து நாம் பெருமைபட வேண்டும்.</p><h2>மகளிருக்கு உதவி</h2><p>தெருவோர வியாபாரிகளுக்கான நலத்திட்டமான பிரமதரின் சுவனதி திட்டம் மகளிருக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி மகளிர் சுய தொழில்களை வளர்க்கிறார்கள்.</p><p>இந்த திட்டம் மூலம் லட்சக்கணக்கான தாய்மார்களும், சகோதரிகளும் புதிய வலிமையை பெறுகிறார்கள்.</p><p>இந்த திட்டத்தின் பயனாளிகளில் 46 சதவீதம் பேர் பெண்கள். அதாவது நாடு சுமார் 35 லட்சம் பெண்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.</p><p>தூய்மை இந்தியா திட்டம் இளைஞர்களின் முன்னெடுப்பால் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது. அமர்நாத் யாத்திரையிலும் தூய்மை பணிகள் முக்கிய இடம் பிடித்தது.</p><p> உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மாணவிகள் செயற்கைகோள் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்தனர்.</p><h2>போதை பொருள் இல்லாத நாடு</h2><p>இந்தியாவை போதை பொருள் இல்லாத நாடாக மாற்ற மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். </p><p>போதை பொருள் பயன்பாட்டு அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிக்கவும், இளைஞர்களுக்கு வலுவான எதிர்காலத்தை உருவாக்கவும் ஒன்றிணைய வேண்டும்.</p><p>‘வளர்ந்த இந்தியாவுக்கான போதை பொருள் இல்லாத இளைஞர்கள்’ என்ற பிரசாரம் நாடு முழுவதும் வேகம் பெற்று வருகிறது. இதன் நோக்கம் தெளிவானது. </p><p>போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சி, போதை பொருள் தேவையை குறைப்பதற்கான தேசிய செயல்திட்டத்தின் கீழ் 2020 ஆகஸ்டு 15-ந் தேதி அன்று தொடங்கப்பட்ட அரசின் ஒரு முக்கிய முன் முயற்சியாகும்.</p><h2>பிரசாரம்</h2><p>இந்த பிரசாரமானது விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக பங்கேற்பு, சிகிச்சை மறுவாழ்வு, தொடர் பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதையும், அதற்கு எதிரான நாடு தழுவிய இயக்கத்தை வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்று பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வார்த்தைகளை விட செயல்களே பேசப்பட வேண்டும்: மோகன் பகவத் உரைக்கு கபில் சிபில் எதிர்வினை</title><link>https://www.maalaimalar.com/news/national/kapil-sibal-criticises-mohan-bhagwat-over-unity-in-diversity-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/national/kapil-sibal-criticises-mohan-bhagwat-over-unity-in-diversity-remarks#comments</comments><guid isPermaLink="false">02624ca0-be87-4231-b7db-a4fb1d33d01f</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:39:01 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:39:01.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mohan Bhagwat,RSS,மோகன் பகவத்,ஆர்.எஸ்.எஸ்,கபில் சிபில்,Kapil Sibal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/crhck41u/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kapil Sibal slams Mohan Bhagwat’s US speech]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/crhck41u/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D">மோகன் பகவத்</a> பேசிய வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்துக்கு இந்தியாவின் மூத்த வழக்கறிஞரான கபில் சிபில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வழக்கறிஞர் கபில் சிபில், வார்த்தைகள் ஒரு பொருட்டல்ல என்றும் செயல்களே பேசப்பட வேண்டும் என்றும் மோகன் பகவத் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார்.</p><p>வெளிநாட்டில் ஞானமான வார்த்தைகளை பேசுவது ஒரு பொருட்டல்ல என்றும், நமது வார்த்தைகளை விட நமது செயல்களே பேச வேண்டும் என்றும் கூறினார்.</p><p>நியூயார்க்கில் புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா உலகளாவிய மக்கள் தொடர்புத் திட்டத்தின் கூட்டம் நடைபெற்றது. </p><p>'ஒரே உலகம் ஒரே மனிதநேயம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.</p><p>அப்போது மோகன் பகவத் தனது ஒரு மணி நேர உரையில், பன்முகத்தன்மை கொண்டாடப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.</p><p>மேலும் அவர், “இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர்கள் உண்மையான இந்துவாக இருக்க முடியாது. உண்மையறிந்தவர்கள், கற்றறிந்த அறிஞராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, அனைவரையும் சமமாகவே பார்க்கிறார்கள்.</p><p>இந்த வெளித்தோற்ற வேறுபாடுகள் இயற்கையை மட்டுமே அலங்கரிக்கின்றன, அவ்வளவுதான். அன்றாட வாழ்வில் நாம் அவற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தாலும், நாம் அனைவரும் ஒன்று என்பதே அடிப்படை உண்மை.</p><p>பிரிவினையின் மாயைகள் நீடிக்கலாம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை செழிக்கவும் கூடும், ஆனால் இறுதியில் அவை மங்கிவிடும்; புதிய மாயைகள் அவற்றின் இடத்தைப் பிடித்துக்கொள்ளும்.</p><p>மதங்கள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் மனிதநேயம் ஒன்றுதான் என்று பாரம்பரியமாகக் கூறும் ஒரு சமூகத்தில் நான் பணியாற்றுகிறேன். நான் ஒரு மத அறிஞரோ, மத அதிகாரியோ அல்ல” என்று கூறினார்.</p><p>இந்த நிலையில் மோகன் பகவத்தின் கருத்து குறித்து கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர் கபில் சிபில் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,  'பன்முகத்தன்மை என்பது நமது இயல்பான ஒற்றுமையின் ஓர் அணிகலன்; அது பாதுகாக்கப்பட வேண்டும்'. வெளிநாட்டில் ஞானம் பொதிந்த வார்த்தைகள், ஆனால் உள்நாட்டிலோ மௌனம். வெறும் வார்த்தைகள் முக்கியமல்ல, செயல்களே பேச வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளப் பேரழிவு: திபெத் மக்களின் பதிவுகளை நீக்கி உண்மையை மறைக்கும் சீனா!</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-china-erases-tibetan-records</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-china-erases-tibetan-records#comments</comments><guid isPermaLink="false">e0ca31a1-092d-4e2e-9196-9ba877f4d6b3</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:38:20 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:38:20.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,திபெத்,nepal flood,Nepal disaster,Tibetan,நேபாள வெள்ளப் பேரழிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/w3a7nys1/neoal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Disaster ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/w3a7nys1/neoal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திபெத் பகுதியின் உள்ளூர் மக்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்ட வெள்ளப் பாதிப்பு வீடியோக்கள் மற்றும் தகவல்களை சீனா அரசு தீவிரமாக நீக்கி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-plan-to-bury-unidentified-bodies">திபெத்</a> பகுதியின் உள்ளூர் மக்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்ட வெள்ளப் பாதிப்பு வீடியோக்கள் மற்றும் தகவல்களை சீனா அரசு தீவிரமாக நீக்கி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜின்பிங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த இணையத் தணிக்கை சர்வதேச அளவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.</p><h2>வைரல் வீடி<strong>யோக்</strong>கள் நீக்கம் </h2><p>திபெத்தின் கைரோங் எல்லைப் பகுதியில் வெள்ளம் வீடுகளையும் சுங்கச் சாவடியையும் அடித்துச் செல்லும் பயங்கர காட்சிகளை திபெத்திய மக்கள் விசாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஆனால், அந்த வீடியோக்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் உதவி கோரி வெளியிட்ட பதிவுகளும், கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உண்மையான பாதிப்பின் அளவை மறைக்க சீனா முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>பாதிப்பின் தீவிரத்தை விளக்கும் வீடியோக்களை நீக்கிவிட்டு, அரசு ராணுவமும் மீட்புக் குழுவினரும் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை மட்டுமே சீன அரசு ஊடகங்கள் பரப்பி வருகின்றன. ஜின்பிங்கின் வழிகாட்டுதலில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக மட்டுமே செய்திகள் வெளியிடப்படுகின்றன. திபெத் பகுதியில் சுதந்திரமான ஊடகப் பதிவுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் உண்மையான சேத விவரங்கள் வெளிவராமல் முடக்கப்பட்டுள்ளன.</p><p>துல்லியமான தகவல்கள் மற்றும் பதிவுகள் மறைக்கப்படுவதால் மீட்புப் பணிகளின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கை மற்றும் அவர்கள் இருக்கும் இடங்கள் குறித்த விவரங்கள் கிடைக்காததால், எல்லை தாண்டிய மீட்பு முயற்சிகள் பாதிக்கப்படலாம் என சர்வதேச வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொரானா காலத்தில் தகவல்களை மூடி மறைத்ததைப் போலவே, தற்போதும் சீனா பேரழிவுச் செய்திகளை மறைப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பள்ளிக்கரணையில் சதுப்புநில பாதுகாப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரசாரம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-awareness-campaign-in-pallikaranai-chennai-on-wetland-protection</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-awareness-campaign-in-pallikaranai-chennai-on-wetland-protection#comments</comments><guid isPermaLink="false">5cc3d0c7-c382-4c74-b1b1-1fc4477e7b50</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:30:32 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:30:32.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Sowmiya Anbumani,சதுப்பு நிலம்,Pallikaranai,பள்ளிக்கரணை,Wetland,Pasumai Thaayagam,Save Pallikaranai</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/t11sdro8/Anbumani-Ramadoss-Sowmiya-Anbumani" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss  - Sowmiya Anbumani ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/t11sdro8/Anbumani-Ramadoss-Sowmiya-Anbumani?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பது குறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> சென்னை பள்ளிக்கரணை பகுதியில் இன்று அதிரடி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.</p><h2><strong>பள்ளிக்கரணையில் அன்புமணி பிரச்சாரம்</strong></h2><p>சென்னை மாநகரின் மிக முக்கியமான இயற்கை அரணாக விளங்கும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">பள்ளிக்கரணை </a>சதுப்பு நிலப் பகுதி ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகள் கொட்டப்படுவதாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், இந்த இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பள்ளிக்கரணை பகுதியில் நேரடியாகக் களமிறங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.</p><h2><strong>சௌமியா அன்புமணியும் பங்கேற்பு</strong></h2><p>இந்த விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தில் பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> அவர்களுடன், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும் பாமக முக்கிய நிர்வாகியுமான <strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">சௌமியா அன்புமணியும்</a> இணைந்து கலந்துகொண்டார்</strong>.</p><p>அவரும் அங்கிருந்த பொதுமக்களிடமும், பெண்களிடமும் சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.</p><h2><strong>சதுப்பு நிலத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைப்பு</strong></h2><p>பிரச்சாரத்தின் போது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் அப்பகுதி பொதுமக்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் முக்கியக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்தனர்</p><p>சென்னை பெருநகரப் பகுதியை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">பள்ளிக்கரணை சதுப்பு நிலம்</a> எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை விளக்கினர். </p><p>இப்பகுதியை சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு இந்த சதுப்பு நிலமே அடித்தளமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.</p><p>அழியும் நிலையில் உள்ள இந்த இயற்கைச் சூழலையும், அங்கு வாழும் பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரினங்களையும் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.</p><h2><strong>பொதுமக்கள் பங்கேற்பு</strong></h2><p>இந்த விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகிகளும், பெருந்திரளான தொண்டர்களும் கலந்துகொண்டனர். </p><p>அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணியின் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிக்கு அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக 3,500 கி.மீ. பயணம் சென்ற குடும்பம்</title><link>https://www.maalaimalar.com/news/world/chinese-family-drives-3500-km-spends-300000-rupees-for-sons-medical-college</link><comments>https://www.maalaimalar.com/news/world/chinese-family-drives-3500-km-spends-300000-rupees-for-sons-medical-college#comments</comments><guid isPermaLink="false">1a1bf917-8019-4951-aece-aac56b7d545c</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:27:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:27:35.608Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,Medical University,மருத்துவ பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/fxyccnk4/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chinese family drives 3,500 km]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/fxyccnk4/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவில் உள்ள குடும்பம் ஒன்று, மேல்படிப்பை தொடர இருக்கும் மகனை, தங்களது கிராமத்தில் இருந்து 3,500 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு அழைத்து சென்று, அந்த பயணத்திற்காக குடும்பத்தினர் சுமார் 3 லட்சம் செலவழித்துள்ளது குடும்பத்தின் மீதான ஒற்றுமை காட்டுவதாக அமைந்துள்ளது.</p><p>சீனாவின் ஸாவோஷூ வாங் என்ற நகரத்தில் ஜெங் என்பவரின் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. ஜெங்கின் மகன் உள்ளூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த பின்பு, ஷின் ஜியாங் என்ற நகரத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவ சேர்க்கை பெற்றான்.</p><p>இதையடுத்து தனது மகனை மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதற்காக, அவனது தந்தை ஏழு இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய வாகனத்தை எடுத்துச் செல்ல தீர்மானித்தார்.</p><p>இந்த கல்லூரியானது, ஜெங்கின் கிராமத்தில் இருந்து சுமார் 3,500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பயணத்தில் தனது மகனுடன் சேர்ந்து அவனது பெற்றோர்கள், மூத்த சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் 80 வயது தாத்தா ஆகிய ஆறு குடும்ப உறுப்பினர்கள் காரில் செல்வதற்கு திட்டமிட்டனர்.</p><p>கடந்த ஆகஸ்ட் 20 அன்று தங்களது கிராமத்தில் இருந்து புறப்பட்ட அந்த குடும்பத்தினர், நான்கு நாட்கள் பயணம் செய்து மருத்துவ கல்லூரியை அடைந்தனர்.</p><p>இந்த பயணத்தை மறக்க முடியாத பயணமாக ஆக்குவதற்காக, மாணவனின் தந்தை காரின் பின்பக்க கண்ணாடியில், “மகனை கல்லூரிக்கு அனுப்புகிறோம்; ஸாவோஷூ வாங் கிராமத்தில் இருந்து ஷின் ஜியாங் நகரத்திற்கு” என்று சீன எழுத்துக்களில் பெயிண்ட் அடித்திருந்தார்.</p><p>காரின் பின்பக்க கண்ணாடியில் எழுதியிருந்த இந்த வாசகம், வழி நெடுகிலும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த பயணத்தில் கெங் மற்றும் அவரின் மனைவி இருவரும் வாகனத்தை மாற்றி மாற்றி ஓட்டினர்.</p><p>இந்த பயணத்தை மேலும் சுவாரஸ்மயாக ஆக்குவதற்காக, கெங் தனது குடும்பத்தினருடன் அந்த வழியாக இருந்த சுற்றுலா தளங்களுக்கும் அழைத்து சென்றுள்ளார்.</p><p>தனது மருத்துவ சேர்க்கைகான பயணம் குறித்து மாணவரின் தந்தையான கெங் கூறுகையில், பயணத்தின் மொத்த பயணச் செலவு சுமார் 3 லட்சமாக இருக்கும் என தெரிவித்தார்.</p><p>இந்த பயணத்தில் பெட்ரோல் செலவுக்காக 85,000 ரூபாய் செலவழித்ததாகவும், சாலை கட்டணமாக 44,000 ரூபாய் செலுத்தியதாகவும், உணவு செலவுக்காக ஆயிரக்கணக்கில் செலவழித்ததாகவும் அவர் கூறினார்.</p><p>மருத்துவ கல்லூரிக்கு தனது கிராமத்தில் இருந்து ரெயில் மூலம், 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக இருந்ததாகவும், ஆனால் ரெயில் பயணத்தை விட கார் பயணத்தை தான் விரும்பியதாகவும் அவர் கூறினார்.</p><p>பணம் சம்பாதிப்பதை விட, தனது மகனை கல்லூரியில் சேர்ப்பதும், அவனை அனுப்புவதும் தான் தனக்கு முக்கியமானதாக இருந்ததாக அவர் கூறினார். இதற்காக தனது கடையை இரண்டு வாரத்திற்கு விடுமுறை விட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.</p><p>இந்த பயணம் குறித்து மாணவர் கூறும்போது, என்னை கல்லூரியில் சேர்ப்பதற்காக எனது குடும்பத்தினர், எடுத்த முடிவு தன்னை மிகவும் நெகிழச் செயவ்தாக உள்ளதாக கூறினார்.</p><p>மேலும் என் மீது அவர்கள் வைத்துள்ள ஆழ்ந்த அன்பு சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவதாகவும் மாணவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரத்தில் அரசு அலட்சியம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்- டாக்டர் அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-negligence-on-mekedatu-issue-all-party-meeting-must-be-convened-immediately-says-dr-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-negligence-on-mekedatu-issue-all-party-meeting-must-be-convened-immediately-says-dr-anbumani#comments</comments><guid isPermaLink="false">8f6614b6-3e9c-48aa-8a17-9aa224d65b60</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:27:21 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:27:21.076Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="269" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/w5gcs7m4/anbumani.jpg" width="480"><media:title type="html"><![CDATA[  Anbumani condemns LPG Price Hike]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/w5gcs7m4/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</h2><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், மேகதாது அணையை கட்டுவதற்கான அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடக அரசு விரைவில் அணுக இருப்பதாகவும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.</p><p>மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் மத்தியிலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அணையை கட்ட கர்நாடக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>மேகதாது அணையின் நீர்த்தேக்கப்பகுதி எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்பதும் கர்நாடக முதல்-மந்திரியின் உரை மூலம் தெரியவந்துள்ளது.</p><p>நேபாளத்தில் இமய மலையில் உருவாகியிருந்த ஏரிகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதேபோல், இயற்கை சீற்றங்களால் எதிர்காலத்தில் மேகதாது அணைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதன்கீழ் பகுதியில் உள்ள தமிழக பகுதிகள் பேரழிவை சந்திக்கும் ஆபத்தும் உள்ளது.</p><p>மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல.</p><p>தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.</p><p>மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் காய்கறி மாலைகள் அணிந்து போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/protest-in-vandavasi-over-spiralling-vegetable-prices</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/protest-in-vandavasi-over-spiralling-vegetable-prices#comments</comments><guid isPermaLink="false">208b684e-ff1d-4ecb-91d3-663d04dc4460</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:26:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:26:35.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>essential commodities,விலைவாசி உயர்வு,price rise,vegetable price hike,Vandavasi,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி,வந்தவாசி,CPIM Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/1oxbqvra/CPIM-Protest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CPIM Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/1oxbqvra/CPIM-Protest?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் கடுமையான விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, வந்தவாசியில்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D"> மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a>யினர் காய்கறி மாலைகளை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2><strong>கிடுகிடுவென உயர்ந்த விலைவாசி</strong></h2><p>கடந்த சில வாரங்களாகவே அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் தக்காளி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வெங்காயம் </a>உள்ளிட்ட அன்றாட சமையல் காய்கறிகளின் விலைகள் சந்தையில் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. </p><p>இந்த திடீர் விலை ஏற்றம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டை பதம் பார்த்துள்ளதுடன், பொதுமக்களைப் பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.</p><h2><strong>காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்</strong></h2><p>விலைவாசி உயர்வை கவனித்து அரசு உரிய முறையில் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a> சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சரமரமாகக் கோர்த்து மாலையாக அணிந்து கொண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.</p><p>காய்கறிகளின் விலை உயர்வால் அவை நகையாகவும் மாலையாகவும் மதிக்கும் நிலைக்கு வந்துவிட்டதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது.</p><h2><strong>முக்கிய கோரிக்கைகள்</strong></h2><p>ஆர்ப்பாட்டத்தின் போது, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய </a>மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மாநில அரசுகளுக்கு</a> எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.</p><p>ஓயாமல் உயர்ந்து வரும் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி விலைகளைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>வெளிச்சந்தையில் விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கும் வகையில், கூட்டுறவு அங்காடிகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் தரமான மளிகைப் பொருட்களை வழங்க அரசு முன்வர வேண்டும். </p><p>உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை உயர்த்தும் பெரு முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என்று கோரிக்கைளை முன்வைத்தனர்.</p><h2><strong>மக்கள் ஆதரவு</strong></h2><p>வந்தவாசியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள், மகளிர் அமைப்பினர் மற்றும் விலைவாசி உயர்வாலும், பணவீக்கத்தாலும் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண நேபாளம் புறப்பட்டது குஜராத் தடயவியல் குழு</title><link>https://www.maalaimalar.com/news/national/gujarat-forensic-team-to-nepal-to-identify-flood-victims</link><comments>https://www.maalaimalar.com/news/national/gujarat-forensic-team-to-nepal-to-identify-flood-victims#comments</comments><guid isPermaLink="false">9618943d-ac10-43c6-bc8b-2978dc9bbe95</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:24:05 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:24:05.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Forensic Team,nepal flood,தடயவியல் ஆய்வு,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/vwd94nic/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat National Forensic Science University team travels to Nepal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/vwd94nic/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/நேபாள்">நேபாளத்தில்</a> ஏற்பட்ட பெருவெள்ள விபத்தில் உயிரிழந்த மக்களை அடையாளம் காண்பதற்காக, குஜராத்தை தளமாக கொண்ட தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு என்று நேற்று மாலை நேபாளத்திற்கு புறப்பட்டது.</p><p>இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் இந்த திட்டம், பேரிடரால் உயிரழந்தவர்களை நேரடியாக அடையாளம் காணும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது.</p><p>தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகம் கடந்த ஜூன் 12, 2025 அன்று நடந்த AI-171 விமான விபத்தில் உயிரிழந்த நபர்களின் டி.என்.ஏ.வை கண்டறியும் செயல்முறையை 10 நாட்களில் முடித்தது.</p><p>இதன்மூலம் மேம்படுத்தப்பட்ட தடயவியல் அறிவியல் திறன்கள், சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளின் பாராட்டுகளையும், தேசிய எல்லைகளை கடந்து குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தையும் பெற்றது.</p><p>மேலும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள், இரண்டாம் உலகப் போரின்போது இந்தியாவில் காணாமல் போன, அமெரிக்க படை வீரர்களை கண்டறிய அமெரிக்க பாதுகாப்பு துறையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் டி.என்.ஏ தடயவியல் சிறப்பு மையத்தின் தலைவர் டாக்டர் பார்கவ் படேல் தலைமையிலான குழுவினர், நேபாள வெள்ளத்தில் இறந்துபோனவர்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து அடையாளம் காண உள்ளனர்.</p><p>இந்த குழுவினரின் பணி, காணாமல் போன குடும்ப உறுப்பினர்களை தேடும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்விட்சர்லாந்து ரேவ் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்; தப்பிய நபரைதேடும் காவல்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/world/switzerland-rave-party-shooting-one-killed-five-injured</link><comments>https://www.maalaimalar.com/news/world/switzerland-rave-party-shooting-one-killed-five-injured#comments</comments><guid isPermaLink="false">62826613-f6a5-4da1-b34a-2ba3a17de407</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:06:30 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:06:30.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>switzerland,Swiss rave,Aarav Rave,ஆராவ் ரேவ்,ஸ்விட்சர்லாந்து,ஸ்விட்சர்லாந்து ரேவ் பார்ட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/cev87wu1/swis.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Switzerland rave party]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/cev87wu1/swis.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆராவ் நகரின் ஷாசென் பகுதியில் நடைபெற்ற ‘ஆராவ் ரேவ்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் அதிகாலை 2:30 மணியளவில் திரளான மக்கள் திரண்டிருந்த சூழலில், திடீரென அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.</p><p>ஸ்விட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில் உள்ள ஆராவ் நகரில் நடைபெற்ற ரேவ் இசை நிகழ்ச்சியில் அதிகாலை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர். குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெற்ற இந்த விபரீதச் சம்பவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைப் பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.</p><p>ஆராவ் நகரின் ஷாசென் பகுதியில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தில் ‘<a href="https://www.maalaimalar.com/news/world/the-largest-oil-deal-in-world-history-venezuelan-oil-to-come-under-us-control-trump-announces">ஆராவ் ரேவ்</a>’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 2:30 மணியளவில் திரளான மக்கள் திரண்டிருந்த சூழலில், திடீரென அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓடினர்.</p><p>சிலர் இசை மேடையின் அடியில் ஒளிந்துகொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்காவ் மாகாணக் காவல்துறை மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.</p><p>சம்பவம் நடந்த குதிரைப் பந்தய மைதானத்தைச் சுற்றியுள்ள விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் காவல்துறை முழுமையாகத் தனிமைப்படுத்தி முடக்கியுள்ளது. ஹெலிகாப்டர் உதவியுடன் அப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் யாரும் ஷாசென் பகுதிக்கு வர வேண்டாம் என்றும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார், அவரது நோக்கம் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. தப்பிச் சென்ற குற்றவாளியைப் பிடிக்க சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பாக ஏதேனும் புகைப்படங்கள் அல்லது வீடியோ ஆதாரங்கள் இருந்தால் காவல்துறையிடம் வழங்கி உதவுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>ஐரோப்பாவில் துப்பாக்கிகள் வைத்திருக்கும் வீடுகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் ஸ்விட்சர்லாந்தும் ஒன்று என்ற போதிலும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அங்கு அரிதாகவே நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>‘வேட்ட சாமி’யாக அருள்நிதி: கருப்பு அவதாரத்தில் வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/arulnithi-as-vetta-saami-first-look-in-black-avatar-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/arulnithi-as-vetta-saami-first-look-in-black-avatar-goes-viral#comments</comments><guid isPermaLink="false">d43cfeab-f44b-4dd0-94cb-fa36097bdb9f</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:39:43 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:39:43.270Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அருள்நிதி,Arulnithi,அமீர்,வேட்ட சாமி,Vetta Saami,Samuel Matthew,M.Selvakumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/92o0pb50/arulnithi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arulnithi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/92o0pb50/arulnithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குநரும் நடிகருமான அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/bharat-ratna-music-queen-ms-subbulakshmi-biopic-rashmika-mandanna">வேட்ட சாமி</a>’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2023-ல் வெளியான ‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கி கவனத்தைப் பெற்ற எம்.செல்வகுமார் இத்திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். 7 மைல்ஸ் பெர் செகண்ட் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p>நெல்லை மாவட்டத்தின் கிராமிய வாழ்வியல் மற்றும் சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட பாரம்பரிய காவல் தெய்வ வழிபாடுகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சாதி, மத எல்லைகளைத் தாண்டி தலைமுறைகளாகத் தொடரும் சமூகப் பிரச்சனைகளையும், அதனால் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களையும் ஆக்‌ஷன் மற்றும் ஆன்மிக உணர்வுகளுடன் இணைத்து ஒரு அழுத்தமான கதையாக இயக்குநர் செல்வகுமார் உருவாக்கியுள்ளார். வழக்கமான கதாநாயகி வழி சினிமா பாணியை விடுத்து, கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படம் செதுக்கப்பட்டுள்ளது.</p><h2>கருப்பு அ<strong>வதாரத்தில் அருள்நிதி</strong></h2><p>இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து வெளியிட்டுள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருள்நிதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமான பார்வையுடன், சாமி வந்து ஆவேசமாக ஆடும் கருப்பு அவதாரத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். போஸ்டரின் பின்னணியில் பிரம்மாண்டமான சாமி சிலையும், கிராமியக் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. வில்லிசைக் கலைஞர் மாதவியின் குரலில் தொடங்கும் கிளிம்ப்ஸ் வீடியோவில், அருள்நிதி மற்றும் அமீரின் அழுத்தமான கதாபாத்திர அறிமுகங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளன.</p><p>இப்படத்தில் அருள்நிதி மற்றும் அமீருடன் ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவுப் பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>பாரத ரத்னா இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bharat-ratna-music-queen-ms-subbulakshmi-biopic-rashmika-mandanna</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bharat-ratna-music-queen-ms-subbulakshmi-biopic-rashmika-mandanna#comments</comments><guid isPermaLink="false">58004784-c07d-4d72-9662-7be0a8b1e709</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:09:08 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:09:08.846Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராஷ்மிகா மந்தனா,rashmika,எம்.எஸ்.சுப்புலட்சுமி,M.S.Subbulakshmi,Gowtam Tinnanuri,அல்லு அரவிந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ilwk3gu5/rashmika.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rashmika -M.S.Subbulakshmi   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ilwk3gu5/rashmika.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கர்நாடக இசைத்துறையின் முன்னணி ஆளுமையும் பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பயோபிக் திரைப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>'ஜெர்சி' திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற இயக்குனர் கவுதம் தின்னனுரி இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த், பன்னி வாஸ் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றனர். <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/what-is-the-babys-name-samanthas-playful-reply">எம்.எஸ்.சுப்புலட்சுமியின்</a> சிறு வயது இசைப் பயணம் தொடங்கி சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகியாக மாறியது வரையிலான அவரது சாதனைகளை இத்திரைப்படம் விரிவாகப் பதிவு செய்யவுள்ளது.</p><h2>நடிகைகள் <strong>தேர்வில் நிலவிய க</strong>டும் போட்டி</h2><p>இந்த வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சாய் பல்லவி, ருக்மிணி வசந்த், நயன்தாரா மற்றும் திரிஷா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. குறிப்பாக, சாய் பல்லவி முதன்மைத் தேர்வாக இருந்தபோதிலும், பிற திரைப்படப் படப்பிடிப்புகளின் கால அவகாசம் காரணமாக அவர் இத்திட்டத்தில் இருந்து விலகினார். இறுதியாக, ராஷ்மிகா மந்தனாவின் நடிப்புத்திறன் மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் அவரை இக்கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்துள்ளனர்.</p><h2>செப்டம்<strong>பர் 16 அன்று அறி</strong>விப்பு</h2><p>எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்தநாளான செப்டம்பர் 16 அன்று இத்திரைப்படத்தின் பெயர், பிற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்திய இசை பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட இக்கதாபாத்திரம் ராஷ்மிகா மந்தனாவின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>&apos;டோரதி&apos; திரைப்படத்தின் &apos;முத்துமணி&apos; பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dorathi-muthumani-song-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dorathi-muthumani-song-released#comments</comments><guid isPermaLink="false">677deb47-9328-4279-8a21-3e4efc7224f7</guid><pubDate>Sun, 30 Aug 2026 07:03:29 +0000</pubDate><atom:updated>2026-08-30T07:03:29.435Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthik Subbaraj,Keerthi Suresh,இளைய ராஜா,Ilaiyaraaja,டோரதி,Dorothy,Muthumani,Raaja Trance</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/kldzo80o/Ilaiyaraaja-Keerthy-Suresh" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ilaiyaraaja - Keerthy Suresh  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/kldzo80o/Ilaiyaraaja-Keerthy-Suresh?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">கார்த்திக் சுப்பராஜ்</a> மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'முத்துமணி' அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><p>இப்படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">கீர்த்தி சுரேஷ்</a>, சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>படத்தை தம்மம் ஃபிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்பராஜும் இயக்கத்தில், சிக்யா என்டர்டெயின்மென்ட் சார்பில் குனீத் மோங்காவும், ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜோதி தேஷ்பாண்டேவும் இணைந்து தயாரித்துள்ளனர்.</p><p>இந்நிலையில் இன்று படத்தின் இரண்டாவது பாடலான 'முத்துமணி' படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.</p><h2><strong>டிரான்ஸ் வடிவில் ஒரு புதிய காதல் காவியம்!</strong></h2><p>இசைஞானி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE">இளையராஜாவின்</a> திரையுலகப் பயணத்தில் இது 1540-வது திரைப்படமாகும். தற்போது வெளியாகியுள்ள 'முத்துமணி' பாடல் முற்றிலும் மாறுபட்ட ஒரு 'ராஜா டிரான்ஸ்' ரக காதல் பாடலாகும். </p><p>இப்பாடலை இளையராஜாவே எழுதி, பிரபல பின்னணிப் பாடகி சுவேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார். பாடலோடு சேர்ந்து வெளியாகியுள்ள இதன் பிரத்யேக மியூசிக் வீடியோவை பாரத் முரளிதரன் இயக்கியுள்ளார்.</p><h2><strong>சர்வதேச அரங்கில் தமிழ் சினிமா: டொராண்டோ பிரீமியர்!</strong></h2><p>தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய முதன்முறைத் திரையிடலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/rs0gQ-3hbPQ"></iframe></figure><h2><strong>தொழில்நுட்பக் குழு &amp; ரிலீஸ் தேதி</strong></h2><p>இப்படத்திற்கு எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவையும், கணேஷ் சிவா படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். </p><p>டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் திரையிடலைத் தொடர்ந்து, '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF">டோரதி</a>' திரைப்படம் வரும் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-level-touches-90-feet-after-194-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-level-touches-90-feet-after-194-days#comments</comments><guid isPermaLink="false">c9af8457-f3f1-4f74-b61f-85bb3016a1fa</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:42:07 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:42:07.054Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam,காவிரி நீர்,Cauvery water</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/sno16eke/Mettur0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி நீர்வரத்து அதிகரிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/sno16eke/Mettur0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர் அணையை திறப்பதற்காக முதலமைச்சர் விஜய் நாளை மறுதினம் சேலம் செல்கிறார். அங்கிருந்து மேட்டூர் அணைக்கு சென்று பாசனத்திற்கான தண்ணீர் திறக்க உள்ளார்.</p><p>கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக நீர் திறப்பு குறைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.</p><h2>11 ஆயிரத்து 312 கனஅடி</h2><p>அதன்படி கபினி அணையில் இருந்து விநாடிக்கு 6,600 கனஅடி வீதமும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4712 கன அடி வீதமும் என மொத்தம் 11 ஆயிரத்து 312 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p><h2>ஒகேனக்கல்</h2><p>இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 7500 கன அடியாக தொடர்ந்து வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.</p> <h2>பரிசல் இயக்க தடை</h2><p>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சீராக இல்லாமல் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்றுடன் தடை 15-வது நாளாக நீடிக்கிறது. இன்று வார விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளிலும், காவிரி ஆற்றங்கரை ஓரங்களிலும் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகா ரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><h2>மேட்டூர் அணை</h2><p>ஒகேனக்கல்லில் இருந்து தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து 6702 கன அடியாக இருந்த நிலையில் மாலையில் 7022 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 6,887 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.</p><p>அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை 89.95 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மாலையில் 90.07 அடியாக உயர்ந்தது.</p><h2>194 நாட்களுக்கு பிறகு அடி</h2><p>கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நீர்மட்டம்  90.07 அடியாக இருந்த நிலையில் அப்போது அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 27 கன அடி மட்டுமே இருந்தது. இந்த நிலையில் 194 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும்  90 அடியை எட்டியது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 90.30 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 52.99 டி.எம்.சி. உள்ளது. </p><p>நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையின் 16 கண் மதகு பகுதியில் நீரின் பரப்பு அதிகரித்து, பாறை திட்டுகள் படிப்படியாக நீரின் மூழ்கி வருகின்றன.</p><p>அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து    தண்ணீர் திறந்து வைக்க மேட்டூருக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அம்பேத்கர், பெரியார் பெயர் நீக்கம்: அமைச்சர், அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்- திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambedkar-periyar-name-removal-minister-officials-must-give-proper-explanation-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambedkar-periyar-name-removal-minister-officials-must-give-proper-explanation-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">59c0c27b-36cc-464c-9629-8be1717007c0</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:28:57 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:28:57.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக சட்டசபை,TN assembly,அம்பேத்கர்,பெரியார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/iny056ep/Thirumavalavan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொல் திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/iny056ep/Thirumavalavan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி விமான நிலையத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>உள்நோக்கம்</h2><p>சட்டமன்ற கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் உள்ளதா?  என்கிற கேள்வி எழுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சரும் இதற்கு உரிய விளக்கம் அளிப்பார்கள் என நம்புகிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிழைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டது ஏற்புடையதல்ல. அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினரை அச்சுறுத்த நினைத்து, தன்னிச்சையாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களின் அந்த கோரிக்கையை நான் முழு மனதோடு வரவேற்கிறேன்.</p><h2>தனிச்சட்டம்</h2><p>தமிழக அரசு தலித் மக்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. தலித் மக்களை பாதுகாக்க தனிச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதனை தற்போதைய அரசு செய்யும் என்று நம்புகிறோம். செய்யச் சொல்லித் தொடர்ந்து வலியுறுத்துவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைக்கு என்ன பேரு?- ரசிகரின் கேள்விக்கு சமந்தா ஜாலியான பதில்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/what-is-the-babys-name-samanthas-playful-reply</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/what-is-the-babys-name-samanthas-playful-reply#comments</comments><guid isPermaLink="false">45287e9a-7a05-451d-8197-b9ecb0042e17</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:27:59 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:27:59.593Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samantha,Raj Nidimoru,சமந்தா,சமந்தா கர்ப்பம்,ராஜ் நிடிமோரு,Samantha baby pump</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/7awkt55v/sam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samantha baby pump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/7awkt55v/sam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்ப கால அனுபவங்களை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகிறார். திரைப்படங்களில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்றுள்ள அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நடத்திய கலந்துரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>இந்தக் கலந்துரையாடலின் போது, பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சமந்தா, குழந்தைக்குப் பெயர் தேர்ந்தெடுப்பது தான் நினைத்ததை விட மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது என்று ஜாலியாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நல்ல பெயர்களைப் பரிந்துரைக்க ரசிகர்களின் உதவியையும் அவர் நகைச்சுவையாகக் கேட்டுள்ளார்.</p><p>கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், இதுவரை 11 கிலோ வரை எடை அதிகரித்துள்ளதாக வெளிப்படையாகக் கூறினார். தாய்மைப் பயணம் தனக்கு பயத்தை அளிக்கும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் இந்த அனுபவம் தனக்கு புதிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் தந்திருப்பதாக உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். </p><p>எந்தவொரு வழிகாட்டிப் புத்தகமும் இல்லாத இந்த அழகிய தாய்மைப் பயணத்தை மனதார அனுபவித்து வருவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் ராஜ் நிடிமோருவை மணந்த சமந்தா, விரைவில் தனது முதல் குழந்தையை வரவேற்கத் தயாராகி வருகிறார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அவரது இன்ஸ்டாகிராம் பதில்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.</p> ]]></content:encoded></item><item><title>நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழர்கள் 100 பேரை தேடும் பணி தீவிரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-100-tamils-still-missing-as-rescue-efforts-intensify</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-100-tamils-still-missing-as-rescue-efforts-intensify#comments</comments><guid isPermaLink="false">917c2021-554e-4488-a1c1-199582aee664</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:02:15 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:02:15.460Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாளம் வெள்ளம்,Rasuwa,ரசுவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/y0p3s5ca/NepalFlood.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளம் பெரு வெள்ளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/y0p3s5ca/NepalFlood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களில் 219 தமிழர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்த நிலையில், 100 பேர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.</p><p>நேபாளத்தில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பெரு வெள்ளம் உலகையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இமயமலையில் பனிச்சிகரம் உடைந்து போதோகோஷி, திரிசூலி, நாராயணி ஆகிய 3 நதிகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை வாரி சுருட்டியது.</p><p>இதில் 2 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் காணாமல் போனார்கள். இது தொடர்பாக நேபாள அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 2,362 பேர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2>மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்றுடன் 5 நாட்கள் ஆகும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சேறும் சகதியுமாக காணப்படும் பகுதிகளில் உடல்களை தேடி கண்டு பிடித்து மீட்டு வருகிறார்கள். வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கியதால் பல உடல்கள் உருக்குலைந்து சிதைந்து உள்ளன.</p><h2>பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு</h2><p>பெருவெள்ளத்தால் கடும்பாதிப்பை சந்தித்துள்ள இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேருடன் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு படையினர் களத்தில் உள்ளனர். அவர்கள் உயிர் இழந்தவர்களின் உடல்களை ஒவ்வொரு நாளும் மீட்டு வருகிறார்கள். இதுவரை 682 உடல்கள்  மீட்கப்பட்டுள்ளன. அதே வேளையில் பாதிக்கப்பட்ட இமயமலை பகுதி முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 691 ஆக உயர்ந்து உள்ளது.</p><p>வெள்ளத்தில் சிக்கிய 3,700 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் இந்தியர்கள், சீனர்கள், தென்கொரிய நாட்டினர் உள்பட வெளிநாட்டினரும் அடங்குவார்கள். காயங்ளுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க துன்சே, திரிசூலி ஆகிய இடங்களில் அவசரகால சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். இதில் 275 இந்தியர்கள் அடங்குவர். அவர்களை தேடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.</p><h2>தமிழர்கள்</h2><p>நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் அடங்கிய குழு டெல்லி சென்றது. அவர்கள் டெல்லியில் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள். இதன் மூலம் நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். ஏற்கனவே 21 தமி ழர்கள் மீட்கப்பட்டு சென்னை திரும்பி இருக்கிறார்கள்.</p><h2>சென்னை திரும்பினர்</h2><p>இந்த நிலையில் டெல்லியில் இருந்து மூன்று அமைச்சர்கள் நேற்று இரவு சென்னை திரும்பினார்கள். விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>கடந்த 3 நாட்களாக முதல்-அமைச்சர் விஜய் ஆணைக்கிணங்க நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்டு பல்வேறு பணிகள் மேற்கொண்டோம். தற்போது அயலக தமிழர் துறை அமைச்சர் தென்னரசு டெல்லியில் தங்கி மீட்பு பணிகளை கண்காணித்து கொண்டிருக்கிறார்.</p><p>இந்திய வெளியுறவு துறை செயலாளரை நேரில் சந்தித்து ஆலோசித்தோம். தமிழ்நாட்டில் இருந்து 319 பேர் பல்வேறு குழுக்கள் மூலமாக நேபாளம் சென்று உள்ளனர். இதில் 219 பேர் பாதுகாப்பாக இருக்கிறார்கள். வருகிற 31-ந்தேதி (நாளை) இரவுக்குள் சென்னை வந்து விடுவார்கள்.</p><h2>100 தமிழர்கள்</h2><p>மீதமுள்ள 100 தமிழர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் மாயமானவர்கள் பட்டியலில் இருந்து வருகிறார்கள். ஹெலிகாப்டர் மூலமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2>சர்வதேச பேரிடர்</h2><p>நேபாள வெள்ளம் சர்வதேச பேரிடராக உள்ளது. பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் கூட உடைமைகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. 2 நாடுகளின் ராணுவம் மீட்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளன.</p><p>கும்பகோணம் ஏஜென்சி முலம் சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த குழுவில் சென்ற 36 பேரை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2>சீன எல்லை</h2><p>மற்றொரு குழுவாக சென்ற 150 பேர் சீன எல்லை வழியாக காத்மாண்டு வந்து உள்ளனர். இவர்கள் பல்வேறு விமானங்களில் வந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் 39 பேர் குழுவாக சென்றவர்கள் பத்திரமாக உள்ளனர். இதில் 33 பேர் 31-ந்தேதி மாலை கோவைக்கு வந்து சேருகிறார்கள். 6 பேர் சென்னைக்கு வந்து சேருவார்கள்.</p><p>மகாதேவி யாத்திராவின் சேர்ந்த 49 பேர் எங்கு இருக்கிறார்கள் என்பது தொடர்பாக தகவல் தெரியவில்லை. 100 பேரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தில் பங்கேற்கிறோம். இந்த நேரத்தில் நம்பிக்கையுடன் உள்ளோம்.</p><h2>பெங்களூரு</h2><p>சென்னையில் இருந்து பெங்களூரு வழியாகவும் சென்று உள்ளனர். மத்திய அரசின் வார் ரூம் முலமாக விரைவாக நடந்து வருகிறது. </p><p>இந்த சம்பவத்தில் அனைவரும் ஒன்று இணைந்துதான் செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும் என்பது ஒரே நோக்கமாக உள்ளது.</p><p>இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.</p><h2>கலக்கம்</h2><p>நேபாள வெள்ளபாதிப்பு ஏற்பட்டு 5 நாட்கள் ஆகியும் தமிழர்கள் 100 பேரின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளதால் அவர்களது உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நேபாளத்திற்கு சென்று மாயமானவர்களை உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>திண்டுக்கல்</h2><p>திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மகள் தங்கமதி (வயது 49). தஞ்சாவூரில் வசித்து வரும் இவர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கேரளத்தில் வசித்து வருகிறார். கும்பகோணத்தை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கடந்த 23-ந்தேதி தங்கமதி நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். 26-ந்தேதி வரை குடும்பத்தினருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் எந்த தகவலும் இல்லாததால் தங்கமதியை மீட்டுத்தரக் கோரி அவரது குடும்பத்தினர் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம், தலைமை செயலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் நேபாள தூதரக உதவி எண்களை தொடர்பு ெகாண்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>தேனி தம்பதி</h2><p>இதேபோல் தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்த செல்வம் (48). அவரது மனைவி சித்ரா தேவி (40), தாய் சரஸ்வதி ஆகியோருடன் ெசன்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் நேபாளத்திற்கு கடந்த 14-ந்தேதி ஆன்மீக சுற்றுலா சென்றனர். அவர்களுடன் 49 பேர் சென்றனர். 27-ந்தேதி பயணத்தை நிறைவு செய்து ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்திற்கு பின்னர் சுற்றுலா குழுவினர் மாயமாகினர். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>இதுகுறித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இருந்தபோதும் ஆன்மீக சுற்றுலா சென்ற 3 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள், கோடாங்கிபட்டி கிராமத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்ைகை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளப் பேரழிவு: அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்யத் திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-plan-to-bury-unidentified-bodies</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-plan-to-bury-unidentified-bodies#comments</comments><guid isPermaLink="false">48d3af50-9f6f-4d8e-9e5a-81de585dd5bb</guid><pubDate>Sun, 30 Aug 2026 05:57:19 +0000</pubDate><atom:updated>2026-08-30T05:57:19.091Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,Nepal Floods,Nepal disaster,நேபாள வெள்ளப்பெருக்கு,Bank vault theft,வஙகி கொள்ளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/2s72xvhz/army.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal flood disaster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/2s72xvhz/army.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் சடலங்கள் தொடர்ந்து அழுகும் அபாயத்தில் இருப்பதால், சுகாதாரச் சீர்கேட்டைத் தவிர்க்க அவற்றை உடனடியாக அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p>நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி போன்ற சேறு மற்றும் வெள்ளப் பெருக்கால் கிராமங்களும் நகரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் 734 சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2,400க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். பலியானவர்களின் சடலங்கள் தொடர்ந்து அழுகும் அபாயத்தில் இருப்பதால், சுகாதாரச் சீர்கேட்டைத் தவிர்க்க அவற்றை உடனடியாக அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p>இந்திய எல்லையோர மாவட்டமான சித்வானில் அதிகபட்சமாக 233 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மருத்துவமனைகளில் போதிய குளிரூட்டும் வசதிகள் இல்லாததால், தற்காலிக ஏற்பாடாகக் கட்டடங்களில் சடலங்கள் வைக்கப்பட்டன. எனினும், துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் கருதி, அடையாளம் தெரியாத உடல்களை உடனடியாக அடக்கம் செய்ய சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><h2>டிஎன்ஏ <strong>மாதிரிகள்</strong> </h2><p>உடல்கள் அடக்கம் செய்யப்பட்டாலும், எதிர்காலத்தில் உறவினர்கள் தங்களது குடும்பத்தினரை அடையாளம் கண்டுகொள்ளப் பல நவீன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு உடலிலும் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றுக்குத் தனித்துவமான குறிப்பு எண்கள் வழங்கப்படுகின்றன. சடலங்கள் 1.5 மீட்டர் ஆழமுள்ள குழிகளில் 40 சென்டிமீட்டர் இடைவெளியில் தனித்தனியாகப் புதைக்கப்படுகின்றன.</p><p>அடக்கம் செய்யப்படும் இடத்தை அடையாளப்படுத்த அதன் மேல் கான்கிரீட் தளமும், அதனுடன் கூடிய தகவல் பலகையும் அமைக்கப்படுகிறது. மேலும், இந்தப் புதைக்கும் நிகழ்வு முழுவதும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்படுவதோடு, அந்த இடத்தின் புவிசார் குறியீடும் பதிவு செய்யப்படுகிறது.</p><h2>உறவின<strong>ர்கள் கண்டறியும் நடைமு</strong>றை</h2><p>காணாமல் போனவர்களைத் தேடும் உறவினர்கள் நேபாளத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை வழங்கலாம். நேபாள சுகாதாரத் துறை, அடக்கம் செய்யப்பட்ட உடல்களிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ தரவுகளுடன் உறவினர்களின் மாதிரிகளை ஒப்பீடு செய்யும். டிஎன்ஏ பொருத்தம் உறுதி செய்யப்பட்டால், காவல்துறை பதிவேடுகளின் உதவியுடன் குறிப்பிட்ட புதைவிடம் கண்டறியப்பட்டு, சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.</p><p>பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் அடையாளம் தெரியாத உடல்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் நேபாள காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து பயணிகள் - டிக்டாக் வீடியோ மூலம் இருப்பிடத்தை தேடிய மகள்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-missing-uk-tourists-daughter-tracks-location</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-missing-uk-tourists-daughter-tracks-location#comments</comments><guid isPermaLink="false">f1fc7957-69b8-479b-a759-edebab6d584b</guid><pubDate>Sun, 30 Aug 2026 05:50:05 +0000</pubDate><atom:updated>2026-08-30T05:50:05.629Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திபெத்,Tibet,nepal flood,நேபாள வெள்ளம்,england tourists,இங்கிலாந்து பயணிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/89urykob/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UK Tourists Missing in Nepal Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/89urykob/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்தில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">நேபாளத்திற்கு</a> சுற்றுலா சென்ற தனது தாய் மற்றும் அத்தை பெருவெள்ள பேரிடரில் சிக்கி காணாமல் போனதையடுத்து, அவர்கள் கடைசியாக எடுத்த டிக்டாக் வீடியோ மூலம் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து, அவர்களை தொடர்ந்து தேடி வருவதாக படேல் என்பவர் தெரிவித்துள்ளார்.</p><p>இங்கிலாந்தில் இருந்து 33 பேர் அடங்கிய குழு ஒன்று, நேபாள் நாட்டிற்கு கடந்த சனிக்கிழமை (22.08.26) சுற்றுப்பயணம் செய்தது. இதையடுத்து கடந்த புதன்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 675க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.</p><p>மேலும் 3,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 13 வயது சிறுவன் உட்பட 33 பிரிட்டிஷ் நாட்டினர், என்.எச்.எஸ் பணியாளர்கள் மற்றும் ஒரு பாதிரியார் ஆகியோர் காணாமல் போயினர்.</p><p>இந்த குழுவினருடன் இணைந்து ஹேமங்கினி ஜிதேந்திர படேலின் தாயார் துளசி படேல் மற்றும் அவரின் அத்தை ஹேமா சுனில் அமீன் ஆகியோர் திபெத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு, கடந்த வாரம் நேபாளத்திற்கு சென்றனர்.</p><p>இதையடுத்து நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், படேலின் தாயாரும், அத்தையும் காணாமல் போயினர். அவர்களை பல வழிகளில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், படேலால் முடியாமல் போனது.</p><p>இந்த நிகழ்வு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு படேல் அளித்த பேட்டியில், தனது தாயாரும், அத்தையும் திபெத் செல்வதற்காக ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, அதற்கான முயற்சிகளை செய்து வந்ததாக கூறினார்.</p><p>மேலும் அவர்கள் காணாமல் போனதை அடுத்து, உள்ளூர் நேபாள சுற்றுலா வழிகாட்டி ஒருவர் எடுத்திருந்த ஒரு டிக்டாக் வீடியோவை தான் கண்டறிந்ததாக கூறினார்.</p><p>அந்த வீடியோவில் தனது அம்மா மற்றும் அத்தையின் புகைப்படங்கள் இருந்ததாகவும் அவர் கூறினார். </p><p>இதையடுத்து நேபாள-சீன எல்லையில் உள்ள நட்பு பாலம் என்ற இடத்தில் சுற்றுலா குழுவிடம் இருந்து கிடைத்த ஜிபிஎஸ் சிக்னல் மூலம், தனது குடும்பத்தினர் கடைசியாக இருந்த இடம் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.</p><p>பின்னர் அந்த சுற்றுலா வழிகாட்டியிடம் உள்ளூர் சிம்கார்டு இருக்கும் என்பதால், அவருக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறினார்.</p><p>காணாமல் போன தனது தாய் மற்றும் அத்தையை தேடுவதற்காக, தனது குடும்பத்தினர் நேபாள் செல்ல இருந்ததாகவும், ஆனால் அந்த பகுதி எந்த இடத்தில் எவ்வாறு உள்ளது என்று தெரியாத காரணத்தால், அந்த முடிவை கைவிட்டதாகவும் அவர் கூறினார்.</p><p>இதையடுத்து காணாமல் போன தனது தாய் மற்றும் அத்தையை மீட்பு குழுவினரின் உதவியுடன் படேல் தொடர்ந்து தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் பாய்ந்தோடும் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 734 ஆக உயர்வு; நிவாரணம் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/nepal-flash-floods-death-toll-rises-to-734</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/nepal-flash-floods-death-toll-rises-to-734#comments</comments><guid isPermaLink="false">9c93690f-bc91-4198-b3db-5ef5e063eaa8</guid><pubDate>Sun, 30 Aug 2026 05:36:21 +0000</pubDate><atom:updated>2026-08-30T05:36:21.913Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,Nepal Floods,Nepal disaster,நேபாள வெள்ளப்பெருக்கு,Bank vault theft,வஙகி கொள்ளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/caaa6kom/mm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raging floods in Nepal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/caaa6kom/mm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உலகம் (World)</category><content:encoded><![CDATA[ <p>வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 734 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>நேபாள நாட்டின் இமயமலை எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக லெண்டே கோலா மற்றும் திரிசூலி ஆறுகளில் மிகக் கடுமையான <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-rescue-army-saves-boy-from-rooftop-by-helicopter">வெள்ளப்பெருக்கு </a>ஏற்பட்டுள்ளது. இந்த பெருவெள்ளம் கிராமங்களையும், உட்கட்டமைப்புகளையும் அடியோடு அடித்துச் சென்று பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 734 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>காணா<strong>மல் போன 2,500 நபர்</strong>களைத் தேடும் பணி</h2><p>இந்த இயற்கை சீற்றத்தால் ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 2,500 பேர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அந்நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முப்படையினரும் காவல் துறையினரும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>சேறும் சகதியு<strong>மாக மாறிய குடியி</strong>ருப்புப் பகுதிகள்</h2><p>பாதிக்கப்பட்ட பல கிராமங்கள் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், மீட்புக் குழுவினர் அங்குச் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. பல இடங்களில் பாலம் மற்றும் சாலைகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டதால், வெளி உலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சென்றடைய ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><h2>மருத்துவ<strong>மனைகளில் தட்டு</strong>ப்பாடு</h2><p>மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளதால் முகாம்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க போதிய மருந்துகள் இன்றி மருத்துவப் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.</p><h2>மீண்டும் உ<strong>யரும் நதிநீர் மட்</strong>டம்</h2><p>சன் கோஷி மற்றும் போடே கோஷி ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் மீண்டும் திடீரென உயர்ந்து அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களும் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. தொடரும் மேகமூட்டம் மற்றும் மோசமான வானிலை மீட்பு நடவடிக்கைகளுக்குப் பெரிய சவாலாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- மரண விளிம்பில் துணிச்சல்: சிறுவனுக்கு கை கொடுத்த டி-சர்ட்-  உயிரை மீட்ட ராணுவம் !</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-rescue-army-saves-boy-from-rooftop-by-helicopter</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-rescue-army-saves-boy-from-rooftop-by-helicopter#comments</comments><guid isPermaLink="false">71954af3-3e4c-44f0-a0ae-a375a8119ec6</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:41:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T04:41:35.542Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal Floods,Flash Flood,Rasuwa,ரசுவா,நேபாள வெள்ளப்பெருக்கு,Nuwakot,போதே கோஷி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3bjxiqvf/flidh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3bjxiqvf/flidh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள நாட்டின் வடக்கே அமைந்த ரசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட கனமழை காரணமாக <a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-swept-bank-safe-29-arrested">போதே கோஷி நதியில் </a>கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பல மாடி கட்டிடம் ஒன்றின் மேல் கூரையில் சிறுவன் ஒருவன் தனியாகச் சிக்கிக் கொண்டான். நாற்புறமும் சீறிப்பாய்ந்த வெள்ள நீரால் சூழப்பட்டு, வேறு எந்த வழியும் இன்றி உயிருக்குப் போராடிய நிலையில், அவன் காப்பாற்றக் கோரி தான் அணிந்திருந்த டி-சர்ட்டை கழற்றி வானத்தை நோக்கித் தொடர்ச்சியாக வீசி சிக்னல் கொடுத்தான்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"> The house was already sitting in the river, then a boy climbed onto the roof and started waving his T-shirt at the sky. <br><br>That was the only signal he had... Then a Nepal Army helicopter dropped in close enough for a soldier to grab his hand and pull him off the roof.<br><br>Hundreds…</p>&mdash; Mario Nawfal (@MarioNawfal) <a href="https://x.com/MarioNawfal/status/2093541653441085758?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>வானில் <strong>பறந்த ஹெலி</strong>காப்டர்</h2><p>சிறுவனின் சிக்னலைக் கண்ட நேபாள ராணுவப் மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டரை உடனடியாக அக்கட்டிடத்தின் கூரைக்கு மிக நெருக்கமாகத் தாழ்த்திப் பறக்கவிட்டனர். மிகக் கடுமையான காற்றும் வெள்ள இரைச்சலும் இருந்த போதிலும், திறமையுடன் செயல்பட்ட ராணுவ வீரர் ஒருவர், ஹெலிகாப்டரின் கீழ் பகுதியைப் பிடித்துக் கொண்டு நின்ற சிறுவனின் கையைப் பற்றி இழுத்து விமானத்திற்குள் பத்திரமாக ஏற்றினார். இந்தத் விறுவிறுப்பான மீட்புப் பணி தொடர்பான காணொளி தற்போது உலகளவில் இணையத்தில் வைரலாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.</p><h2>தொடரும் <strong>மீட்புப் பணி</strong>கள்</h2><p>இந்த திடீர் வெள்ளத்தால் சீனா-நேபாள எல்லைப் பகுதிகளான நுவாகோட் மற்றும் ரசுவா ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன, சாலைகள் மற்றும் பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்களை ராணுவம் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டு வருகிறது. காணாமல் போன நூற்றுக்கணக்கானோரைக் கண்டுபிடிக்கத் தீவிர தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது.</p>]]></content:encoded></item><item><title>3 ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்: நான் மோசமான ஆளு- ஆர்.எஸ். பாரதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharati-challenge-to-tn-cm-vijay-you-open-three-files-i-open-three</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharati-challenge-to-tn-cm-vijay-you-open-three-files-i-open-three#comments</comments><guid isPermaLink="false">517d77de-dc63-4ff0-ae2a-40762e8e38e5</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:32:51 +0000</pubDate><atom:updated>2026-08-30T04:32:51.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,RS Bharati,tn cm vijay,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ipwqapqe/RSBharati001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- ஆர்எஸ் பாரதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ipwqapqe/RSBharati001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேலுரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-political-clash-rs-bharathi-counters-adhav-arjunas-challenge-over-local-body-polls-and-mayor-post">ஆர்.எஸ். பாரதி</a> கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>திமுக-வை பார்த்து சவால் விடுகிறார் விஜய். கோப்புகள் எல்லாம் ரெடியா இருக்கு, டேபிளில் இருக்கிறது. நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார். அவிழ்ப்பதுதான் உன்னோட வேலை. இந்த பூச்சாண்டி காட்டுவதெல்லாம் வேண்டாம். தணிக்கை செய்யப்பட்டது என்கிறார்.</p><p>ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சிஏஜி அறிக்கை வைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். அதேபோல் சட்டசபையில் சிஏஜி ரிப்போர்ட்டை வைப்பார்கள். அந்த சிஏஜி ரிப்போர்ட்தான் இந்த மூன்றும்.</p><p>எந்தவொரு சிஏஜி ரிப்போர்ட்டும் அரசாங்கத்தை பாராட்டி இருக்காது. ஆடிட் என்பது மாநகராட்சி முதல் அரசாங்கம் வரை நடக்கக் கூடியது. உடனே ஊடகங்கள் எல்லாம், பத்திரிகை எல்லாம் மூன்று பைல்கள் இருக்கிறது..,</p><h2>ஜெயலலிதா என்கிட்ட வால் ஆட்டிச்சி</h2><p>நான் கூட திருவொற்றியூர் கூட்டத்தில் தைரியமாக சொன்னேன். நீ அவிழ் மூன்ற, நான் அவிழ்க்கிறேன் மூன்ற. நான் மோசமான ஆளு. இப்படிதான் முதன்முதல் ஜெயலலிதா என்கிட்ட வால் ஆட்டிச்சி. அதன் விளைவு என்ன என்பதை அந்த அம்மா உயிரோடு இருந்தா கேட்டு தெரிஞ்சுக்கோங்க.</p><p>இதேபோல்தான் ஆணவமாக பேசினார். அன்னைக்கு ஜெயலலிதா பெரிய தப்பு எதுவும் செய்யல. டான்சி நிலத்தை வாங்கினாங்க. அரசு நிலத்தை வாங்கக் கூடாது. நான் டான்சி நிலத்தை வாங்கியது தவறு என ஒரு அறிக்கை கொடுத்தது. திமுக-வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட கிடையாது. கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளை காணவில்லை என்று சொன்னார்.</p><h2>வாய்க்கொழுப்பு</h2><p>மூன்று பேர்தான் திமுக-வில் வெற்றி பெற்றார்கள். கலைஞர் ராஜினாமா செய்துவிட்டார். இருவர் அவைக்கு சென்றார்கள். அந்த தைரியத்தில் அந்த அம்மா, நான் டான்சி நிலத்தை வாங்கினேன். வாங்கினால் என்ன தப்பு என்று சொன்னார்.</p><p>வாம்மா மாட்டினியா நீ என்று சொல்லி., போட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று உள்ளே சென்றார்கள். வாய்க்கொழுப்பு மட்டும் இருக்கக் கூடாது. எந்த கொழுப்பும் இருக்கலாம். வாய்க்கொழுப்பு மட்டும் இருக்கக் கூடாது. அந்த அம்மா பெரிய தப்பு ஏதும் செய்துவிடல. எனக்கு வேண்டாம் என்று அந்த நிலத்தை திருப்பி கொடுத்திருந்தாலம் முடிஞ்சி போச்சு.</p><p>இவ்வாறு ஆர்.எஸ். பாரதி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>என்னை கொன்று விடுவார்கள் என்று கதறிய கர்ப்பிணி - பிரசவத்திற்கு பின்பு தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery</link><comments>https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery#comments</comments><guid isPermaLink="false">173f9c91-460e-498b-9a8f-4d0e84ab06c3</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:26:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T04:26:35.332Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மருத்துவமனை,Government Hospital,மத்திய பிரதேசம்,Madhyapradesh,கர்ப்பிணி,pegnant women</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ysgfqynz/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pregnant Woman and Newborn Die]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ysgfqynz/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/மத்திய-பிரதேசம்">மத்திய பிரதேசத்தில்</a> உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயதான கர்ப்பிணி ஒருவர், தனக்கு மருத்துவமனை ஊழியர்கள் சரியாக மருத்துவம் பார்க்காமல் கொன்றுவிடுவார்கள்; </p><p>அதனால் தன்னை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லுமாறு கூறியதை அடுத்து, குழந்தையை பெற்ற சிறிது நேரத்திலேயே அந்த பெண்மணியும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h3><strong>அரசு மருத்துவமனை</strong></h3><p>மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரேவா மாவட்டம் ஹட்வா பகுதியை சேர்ந்த கல்பனா என்ற 25 வயது கர்ப்பிணி ஒருவர், தனது முதல் குழந்தையை பிரசவிப்பதற்காக, அந்த பகுதியில் உள்ள ஒரு சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.</p><p>அப்போது அவர், “நான் பிழைக்க மாட்டேன், தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள், என் உயிருக்கு ஆபத்து” என்று கூறிய வீடியோ ஒன்று வெளியானது.</p><p>மேலும் அவர், “என்னை இப்படி நடத்துவது தொடர்ந்தால், மருத்துவமனை ஊழியர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்” என்று கூறுவதும் அந்த வீடியோவில் பதிவானது.</p><p>இதையடுத்து சில மணி நேரங்கள் கழித்து பிரசவித்த பச்சிளம் குழந்தையும், அந்த பெண்ணும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.</p><h3><strong>கர்ப்பிணியின் காணொளி</strong></h3><p>இந்த நிலையில் கல்பனா இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதும், பிரசவ வார்டுக்குள் அழுதுகொண்டு, அங்கிருந்து வெளியேற முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது.</p><p>மேலும் அந்த பெண்மணி தனது உறவினர்களை தொடர்பு கொள்ள முயல்வதும், அவரை செவிலியர்கள் கட்டுப்படுத்தி, அங்கேயே இருக்குமாறு சமாதானப்படுத்த முயற்சிப்பதும் பதிவானது.</p><p>ஒரு கட்டத்தில், ஒரு ஊழியர் அந்த பெண்ணிடம், “உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?" என்று கேட்கும்போது, கர்ப்பிணி தொடர்ந்து தனது குடும்பத்தினரை நோக்கிச் சென்று, தனக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை என்று அழுதுகொண்டே குற்றம் சாட்டுவது பதிவானது.</p><h3><strong>தந்தை கோரிக்கை</strong></h3><p>கர்ப்பிணி கல்பனா உயிரிழந்தது குறித்து அவருடைய தந்தை ராம்ஷரன் மிஸ்ரா கூறுகையில், “கல்பனா எனது ஒரே மகள்; அவளது திருமணத்திற்காக 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்றிருந்தேன்.</p><p>இன்று அவள் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டாள். இந்த அலட்சியத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும்.</p><p>பணியில் இருந்த மருத்துவரையும் ஊழியர்களையும் இடைநீக்கம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பிரேதப் பரிசோதனை நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் கூறினார்.</p><p>மேலும் கல்பனாவின் குடும்பத்தினர் கூறுகையில், மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பிறகு கல்பனாவுக்கு சுயநினைவு திரும்பவில்லை. அதிகப்படியான மருந்தளவு அவரது மரணத்திற்கு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.</p><h3><strong>மருத்துவமனை நிர்வாகம்</strong></h3><p>இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், மருத்துவ நெறிமுறைகளின்படி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் தரப்பில் எந்தவிதமான அலட்சியமும் இல்லை என்றும் தெரிவித்தது.</p><p>இதையடுத்து கர்ப்பிணி மற்றும் அவரது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க, ஒரு உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்படும் என்றும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் உறுதியளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஐதராபாத் நில ஏலத்தில் புதிய வரலாறு: ரூ.1,447 கோடிக்கு விற்பனையான பிளாட்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/hyderabad-land-auction-sets-new-record-plot-sold-for-rs-1447-crore</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/hyderabad-land-auction-sets-new-record-plot-sold-for-rs-1447-crore#comments</comments><guid isPermaLink="false">206994a2-c711-40f3-8246-81263264765b</guid><pubDate>Sun, 30 Aug 2026 03:55:42 +0000</pubDate><atom:updated>2026-08-30T03:55:42.628Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hyderabad,Telangana,ஐதராபாத்,தெலுங்கானா,Hyderabad land auction,ஐதராபாத் நில ஏலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qnnedfvd/hydra.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hyderabad land auction]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qnnedfvd/hydra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் முக்கிய வணிக மையமான ராய்துர்க் பகுதியில் நடத்தப்பட்ட மின்னணு நில ஏலத்தில் 5.38 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிளாட் பி2, ரூ.1,447.22 கோடிக்கு விற்பனையாகி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தெலுங்கானா தொழில்முறை உள்கட்டமைப்பு கழகம் நடத்திய இந்த ஏலத்தில், ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ரூ.269 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.</p><h2>ஒரே வார<strong>த்தில் உடைந்த</strong> முந்தைய சாதனை</h2><p>ராய்துர்க் நாலேஜ் சிட்டி பகுதியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட மற்றொரு ஏலத்தில் 5.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிளாட் பி1, ஏக்கருக்கு ரூ.264 கோடி வீதம் ரூ.1,386 கோடிக்கு விற்பனையானது. அந்த சாதனை படைக்கப்பட்டு ஒரே வாரத்திற்குள் தற்போது ஏக்கருக்கு ரூ.5 கோடி அதிகரித்து, புதிய வரலாற்று சாதனையை இந்த பிளாட் பி2 ஏலம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் ஏக்கருக்கு ரூ.237 கோடியாகவும், ஜூன் மாதம் ரூ.204 கோடியாகவும் இருந்த நிலத்தின் மதிப்பு, தற்போது மிக குறுகிய காலத்தில் ரூ.269 கோடியாக உயர்ந்துள்ளது.</p><p>கடந்த இரு வாரங்களில் நடத்தப்பட்ட இந்த இரு ஏலங்கள் மூலம் 10.63 ஏக்கர் நிலத்திலிருந்து தெலுங்கானா அரசுக்கு மொத்தம் ரூ.2,833.22 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த மின் ஏலம் எம்.எஸ்.டி.சி தளம் வழியாகவும், ஜே.எல்.எல் நிறுவனத்தின் ஆலோசனையுடனும் வெளிப்படையாக நடத்தப்பட்டது. ஐதராபாத்தின் நவீன உள்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழிலாளர் சாதகமான சூழல் ஆகியவை சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து வருவதை இந்த ஏலத்தின் வெற்றி வெளிப்படுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட வங்கிப் பெட்டகம்: உடைத்து கொள்ளையடித்த 29 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-swept-bank-safe-29-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-swept-bank-safe-29-arrested#comments</comments><guid isPermaLink="false">f5e3ab90-7bcc-4ff7-a1a6-35a6d04fc30e</guid><pubDate>Sun, 30 Aug 2026 03:27:02 +0000</pubDate><atom:updated>2026-08-30T03:27:02.031Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,Nepal Floods,Nepal disaster,நேபாள வெள்ளப்பெருக்கு,Bank vault theft,வஙகி கொள்ளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zpswg8q1/oo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal floods  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zpswg8q1/oo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகம் ஆற்றின் வழியே பல மைல் தூரம் அடித்துச் செல்லப்பட்டது. கரை ஒதுங்கிய அந்தப் பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த பெரும் தொகையை அப்பகுதி மக்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. &nbsp; </p><p>நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரு வங்கியின் வலுவான பணப் பெட்டகம் மிதந்து சென்றுள்ளது. இது திரிசூலி ஆற்று வழியே பல கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டு, தாதிங் மாவட்டத்தின் கலச்சி கிராம ஊராட்சிக்குட்பட்ட பெல்குகோலா பகுதியில் கரை ஒதுங்கியது. <a href="https://www.maalaimalar.com/news/national/108-indian-nationals-rescued-from-flood-hit-nepal">வெள்ள நிவாரணப் பணிகள்</a> ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஆற்றின் ஓரம் மிதந்து வந்த இந்த இரும்புப் பெட்டகத்தை அப்பகுதி மக்கள் சிலர் பார்த்துள்ளனர். &nbsp; </p><h2>பெட்டகத்<strong>தை உடைத்து ரூ.92 லட்சம் சுரு</strong>ட்டல்</h2><p>இரும்புப் பெட்டகத்தை கண்டெடுத்த நபர்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல், கருவிகளைக் கொண்டு அதனை உடைத்துள்ளனர். அதனுள் வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை பணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாதிங் மாவட்ட காவல்துறையினர் உடனடி விசாரணை மேற்கொண்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். &nbsp;</p><h2>29 <strong>பேர் கைது</strong></h2><p>காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட சோதனையில், கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 19 முதல் 49 வயது வரையிலான 29 பேரைப் பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 92,68,505 நேபாள ரூபாயை (இந்திய மதிப்பில் சுமார் 58 லட்சம் ரூபாய்) காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் கலச்சி, சித்தாலேக் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். &nbsp; </p><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 2,400-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலத்திலிருந்து தங்கத் தோடுகளைத் திருடிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஒருபுறம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், இதுபோன்ற தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நேபாள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>லார்ட்ஸ் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட முடிவில் 357 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் இங்கிலாந்து</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-england-strong-position-357-run-lead-lords-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-england-strong-position-357-run-lead-lords-test#comments</comments><guid isPermaLink="false">7e4cc19f-029f-46c9-bc7d-d04029230043</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:50:11 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:50:11.122Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Lords Test,லார்ட்ஸ் டெஸ்ட்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/nbg7l62n/ENGvsPAK001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லார்ட்ஸ் டெஸ்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/nbg7l62n/ENGvsPAK001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் அணி 110 ரன்களில் சுருண்டது.</p><h2>இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்</h2><p>இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 27-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.</p><p>அதன்படி இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஜோர்டன் காக்ஸ் 55 ரன்களும், ஜேமி ஸ்மித் 61 ரன்களும், கஸ் அட்கின்சன் 45 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அபப்ாஸ் 4 விக்கெட்டும், முகமது அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினர். குர்ரம் ஷேசாத் மற்றும அலி உஸ்மான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.</p><h2>பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்</h2><p>பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஷான் மசூத் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அப்துல்லா ஷபிக் 5 ரன்களிலும், பாபர் அசாம் 8 ரன்களிலும், சாத் ஷகீல் 16 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 7 ரன்களிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் அசான் அவைஸ் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அலி உஸ்மான், குர்ரம் ஷேசாத் தலா ஒரு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இமாம்-உல்-ஹக் காயம் காரணமாக களம் இறங்காததால் பாகிஸ்தான் 110 ரன்களில் சுருண்டது. பாகிஸ்தான் அணியால் 37.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸ்</h2><p>180 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. முன்னணி வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்த போதிலும், டான் லாரன்ஸ் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். தற்போது வரை இங்கிலாந்து 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் கைவசம் 3 விக்கெட் உள்ளது. இதனால் 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.</p><p>400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு கடினமான இலக்காகும். இதனால் இங்கிலாந்து இந்த போடடியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டி- போர் வீரனை போல் காட்சியளித்ததாக பேரன் உருக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-97-year-old-grandmother-heroic-rescue</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-floods-97-year-old-grandmother-heroic-rescue#comments</comments><guid isPermaLink="false">6c8c4b58-4c2f-4b63-bcc0-64a8329c8a6e</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:20:48 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:20:48.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாள்,nepal,nepal flood,nepal army,நேபாள ராணுவம்,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/quhw1g95/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal army rescued 97-year-old Guna Maya Bohara]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/quhw1g95/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாள வெள்ளத்தில்</a> மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்  97 வயதான மூதாட்டி ஒருவரை மீட்பு படையினர் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக மீட்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.</p><h3><strong>97 வயது மூதாட்டி</strong></h3><p>நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமாகி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 97 வயதான மூதாட்டி குணா மாயா போஹரா என்பவரை மீட்பு குழுவினர் ஜேசிபி வாகனத்தின் மூலம் பத்திரமாக மீட்டனர்.</p><p>அந்த மூதாட்டியை கட்டிட இடிபாடுகளில் இருந்து வெளியே எடுப்பதற்கு, நேபாள ராணுவத்திற்கு சுமார் நான்கு மணி நேரம் ஆனது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த மீட்பு நடவடிக்கை குறித்து மூதாட்டியின் கொள்ளு பேரன் தீபக் போஹரா கூறுகையில், எனது மகனும், எனது சகோதரரும் கயிறு வழியாக கீழே இறங்கி மூதாட்டி உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர்.</p><p>மேலும் எனது பாட்டி போரில் வெற்றி பெற்று திரும்பும் ஒரு போர்வீரனை போல காட்சியளித்ததாகவும் அவரின் கொள்ளுப் பேரன் கூறினார்.</p><h3><strong>நேபாள வெள்ளம்</strong></h3><p>நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் இதுவரையில் குறைந்தது 676 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட, கிட்டத்தட்ட 3,000 பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.</p><p>குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வீடுகள் முதல் குடியிருப்புகள் வரை, அனைத்தையும் அடித்து கொண்டு போனது.</p><p>இதையடுத்து நேபாளத்தில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மற்றும் நிவாரண மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>நேபாள மீட்பு படையினருடன், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த மீட்பு மற்றும் நிவாரண குழுவினர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="es" dir="ltr">RESCATAN CON VIDA A MUJER DE 97 AÑOS TRAS CASI 24 HORAS BAJO LOS ESCOMBROS <br><br>Contra todo pronóstico, Guna Maya Bohara, de 97 años, fue rescatada con vida después de permanecer cerca de 24 horas atrapada bajo lodo y escombros tras las devastadoras inundaciones en Nepal.<br><br>… <a href="https://t.co/kxf1pQXjMr">pic.twitter.com/kxf1pQXjMr</a></p>&mdash; EnBoga (@EnBogaMx) <a href="https://x.com/EnBogaMx/status/2093570797763715075?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதற்கிடையில் நேபாளத்தில் புதிதாக மழை மற்றும் இடியுட கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>நேபாள வெள்ளம் குறித்து அந்நாட்டின் நிதி அமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே கூறுகையில், வெள்ளத்திற்கு பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டாலர் வரை தேவைப்படும் என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கிற்கு சமம் என்றும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பணியின்போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வழிகாட்டுதல்களை உருவாக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-directs-guidelines-on-cash-held-by-government-staff</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-directs-guidelines-on-cash-held-by-government-staff#comments</comments><guid isPermaLink="false">3e1d88df-13be-43f0-bee2-98cef7bf97b4</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:17:20 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:17:20.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,மதுரை ஐகோர்ட் கிளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/akmpk2g4/MaduraiHighcourt001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/akmpk2g4/MaduraiHighcourt001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு ஊழியர்கள் பணியின்போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது பற்றிய வழிகாட்டுதல்களை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.</p><h2>லஞ்ச வழக்கு</h2><p>நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-</p><p>நெல்லை மாவட்டம் முக்கூடலில் சார்பதிவாளராக கடந்த 2021-ம் ஆண்டில் பணியாற்றினேன். அப்போது எனது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.45 ஆயிரத்தை கைப்பற்றினர். இந்த நடவடிக்கை தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் என் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.</p><p>இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.</p><p>இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், அந்த தொகை திருமண செலவுக்காக மனுதாரர் வைத்திருந்த பணம்தான். எனவே அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் என வாதாடினார்.</p><h2>சுற்றறிக்கை</h2><p>இந்த வழக்கை விசாரித்து நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-</p><p>லஞ்ச ஒழிப்பு துறையினரால் நடத்தப்பட்ட திடீர் ஆய்வின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச பண அளவு குறித்து எந்தவொரு வழிகாட்டுதலோ அல்லது நிபந்தனையோ இல்லை என்றே தெரிகிறது.</p><p>இதே கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிற வழக்குகளில், வெறும் 1,500 ரூபாயை வைத்து இருந்ததற்காகக்கூட லஞ்ச ஒழிப் புத்துறையால் வழக்குகள் தொடரப்பட்டு இருப்பது தெரியவருகிறது. இந்த விவகாரத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் உதவுமாறு கோரப்பட்டது. இதையடுத்து பதிவுத்துறை சார்பில் 2009-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரத்தை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.</p><p>அதில், பதிவுத்துறையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது பணம் வைத்திருப்பது தொடர்பான சில வழிகாட்டுதல்களை இந்த சுற்றறிக்கை அறிவுறுத்துகிறது. இதுதொடர்பாக பதிவேடுகளை பராமரிக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.</p><h2>சாத்தியக்கூறுகள்</h2><p>இது பதிவுத்துறைக்கு மட்டுமே அனுப்பப்பட்ட சுற்றறிக்கையாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான வழிகாட்டுதலோ அல்லது அரசாணையோ வெளியிடப்படவில்லை என்றே தெரிகிறது.</p><p>எனவே இந்த விவகாரம் குறித்து அரசு மட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டி உள்ளது. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அந்தந்தத் துறைகளில் ஏதேனும் வழிகாட்டுதல்கள் உள்ளதா என்பது குறித்தும், பணியில் இருக்கும்போது அரசு ஊழியர்கள் வைத்திருக்கக்கூடிய பணத்தின் அளவை நிர்ணயிக்கும் வகையில் சீரான வழிகாட்டுதல்கள் அல்லது அரசா ணையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அரசின் கருத்துகளை இந்த கோர்ட்டு எதிர்பார்க்கிறது.</p><h2>வழிகாட்டுதல்கள்</h2><p>ஏறக்குறைய அனைத்து கட்டணங்களையும் டிஜிட்டல் மூலம் மக்கள் செலுத்தக்கூடிய இன்றைய காலகட்டத்தில், அலுவலகத்திற்கு செல்லும்போது கணிசமான அளவு ரொக்கப் பணத்தை எடுத்து செல்வது தொடர்பான நடைமுறை குறித்து, அரசு ஒரு பொருத்தமான வழிகாட்டுதலை நிர்ணயிப்பதன் மூலம் தீர்வு காணவேண்டும். இத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால், அது அரசு அலுவலகங்களில் ஊழலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தக்கூடும். அதேநேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையற்ற வகையில் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும்.</p><p>ஊழலை ஒழிப்பதை அரசு தனது நோக்கமாக கொண்டுள்ளது. இதுதொடர்பாக வகுக்கப்படும் வழிகாட்டுதல்களானது, ஊழலற்ற நிர்வாகத்தை அடைவதற்கான அரசின் நோக்கத்தை வலுப்படுத்தக்கூடும். அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கு வருகிற வருகிற 3-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item></channel></rss>