<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 16 Sep 2026 14:10:41 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 16 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-september-2026#comments</comments><guid isPermaLink="false">a0811bc2-a555-463b-9aff-906d36ceb0c8</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:17:56 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:38:40.201Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/x1wtm4iq/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/x1wtm4iq/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-thittam-cm-vijay-to-launch-it-on-september-25th">தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: செப்.25-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்</a></p><p>* அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.  </p><p>* முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/tragedy-in-us-news-helicopter-covering-bus-crash-plummets-killing-three">அமெரிக்காவில் கோரம்: பேருந்து விபத்தை நேரலை செய்த செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு... </a></p><p>*அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சாலை விபத்து தொடர்பான செய்தியை நேரலை கவரேஜ் செய்து கொண்டிருந்த NBC4 செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chennai-return-tomorrow-morning">முதலமைச்சர் விஜய் நாளை காலை சென்னை திரும்புகிறார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு</a></p><p>* லண்டனில் தங்கி உள்ள முதலமைச்சர் விஜய் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி உள்ளார். </p><p>* தனது ரசிகர்களை தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/mysuru-dasara-festival-will-tamil-nadu-cm-vijay-attend-collector-lakshmikant-answers">மைசூரு தசரா விழா: தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்பா?- ஆட்சியர் லட்சுமிகாந்த் பதில்</a></p><p>*மைசூரு  தசரா ஊர்வலத்திற்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. </p><p>*'ஜம்பூ சவாரி' எனப்படும் தசரா யானைகள் ஊர்வலம் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-says-no-stay-on-madurantakam-dharapuram-byelections" rel="nofollow">மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்</a></p><p>* நீதிபதிகள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது.</p><p>* மக்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-bypoll-tvk-candidate-sathyabama-files-nomination" rel="nofollow">தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் தவெக வேட்பாளர் சத்யபாமா </a></p><p>* வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.</p><p>* வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/chess-olympiad-begins-today-in-uzbekistan-india-aims-to-retain-title" rel="nofollow">உஸ்பெகிஸ்தானில் இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டி- பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!</a></p><p>* முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.</p><p>* ஒவ்வொரு சுற்றும் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismisses-election-petition-against-ev-velu">எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</a></p><p>* எ.வ.வேலு வெற்றியை எதிர்த்து த.வெ.க. வேட்பாளர் அருள் ஆறுமுகம், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><p>* வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-ramasami-padayatchiyar">ராமசாமி படையாட்சியாரின் மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்- முதலமைச்சர் விஜய்</a></p><p>*  எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.  </p><p>* எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்கள் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-financial-assistance-for-tuition-fees-should-also-be-provided-to-students-from-backward-classes-and-most-backward-classes">பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்!- அன்புமணி</a></p><p>* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப்படுவதில்லை. </p><p>* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid">அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்</a></p><p>* மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு.</p><p>* பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh">தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு</a></p><p>* அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>* தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  பதிவு செய்துள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-central-government-should-abandon-the-plan-to-levy-charges-on-upi-transactions">யு.பி.ஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும், கொரோனா காலத்தில் நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கவும் யுபிஐ மூலமான பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டன.</p><p>* ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கும் பொருள் வாங்கும் மக்கள் இந்தக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-thank-you-to-everyone-who-kindly-inquired-about-my-health">மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளேன்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். </p><p>* கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-expansion-scheme-cm-vijay-to-launch-it-on-22nd">காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் - முதலமைச்சர் விஜய் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்</a></p><p>* முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றியது. </p><p>* இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-raid-at-former-minister-anbil-maheshs-residence">முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை </a></p><p>* சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திமுக பிரமுகரான பி.டி. அரசகுமாரை கைது செய்தனர். </p><p>* அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>‘நேரம் தவறாமைதான் அப்பாவிடம் பிடிக்கும்’ - தந்தை குறித்து ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/punctuality-is-what-i-like-about-dad-jason-sanjay-speaks-movingly-about-his-father</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/punctuality-is-what-i-like-about-dad-jason-sanjay-speaks-movingly-about-his-father#comments</comments><guid isPermaLink="false">51810f9b-d067-485b-bfd5-98b723de316d</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:49:23 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:49:23.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jason sanjay,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/8e9p5ul3/New-Project-2026-09-16T191850.521.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நேரம் தவறாமைதான் அப்பாவிடம் பிடிக்கும்’ - தந்தை குறித்து ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/8e9p5ul3/New-Project-2026-09-16T191850.521.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முதலமைச்சரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள திரைப்படம் ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-second-song-from-the-movie-sigma-has-been-released">சிக்மா</a>’. இப்படத்தின் சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படம் அக்.2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. </p><p>இதையொட்டி, படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா செப்.18ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பட புரமோஷன் விழா ஒன்றில் ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.</p><p>அந்த வீடியோக்களில் முதலமைச்சர் விஜய் இப்படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாகவும், தனது தந்தை முதலமைச்சரானதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும், மேலும் தனக்காக அவர் ரசிகர்களை கொடுத்துள்ளார் எனவும் தந்தை குறித்துப் பேசியுள்ளார்.</p><p>மேலும் தந்தையிடம் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம் என்ன? என்ற கேள்விக்கு ‘நேரம் தவறாமை’ என பதிலளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் கன்னட நடிகர் ஆனந்த் நாக்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-anant-nag-to-be-honoured-with-dadasaheb-phalke-award</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-anant-nag-to-be-honoured-with-dadasaheb-phalke-award#comments</comments><guid isPermaLink="false">c68e2598-3476-482b-9004-bd0b7c6188bb</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:28:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:28:27.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆனந்த் நாக்,தாதா சாகேப் பால்கே விருது,Dada Saheb Phalke,anant nag</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ex4dq697/anant-nag.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anant nag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ex4dq697/anant-nag.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கன்னட நடிகரான ஆனந்த் நாக்கிற்கு நாட்டின் உயரிய திரைப்பட விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.</p><p>இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குஜராத் மாநிலம் கெவாடியாவில் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த உயரிய விருது நடிகர் அனந்த் நாக்கிற்கு வழங்கப்படவுள்ளது.</p><p>தாதா சாகேப் பால்கே விருதுடன் தங்கத் தாமரை பதக்கம், பொன்னாடை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கும்.</p><p>ஏற்கனவே, கடந்த 2025-ம் ஆண்டில் ஆனந்த் நாக் இந்தியாவின் 'பத்ம பூஷன்' விருதை பெற்றுள்ளார்.</p><p>கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/world/new-zealand-parliament-passes-trade-deal-with-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/new-zealand-parliament-passes-trade-deal-with-india#comments</comments><guid isPermaLink="false">d1dea483-85e7-4d57-a877-0c9a782d55f9</guid><pubDate>Wed, 16 Sep 2026 13:18:24 +0000</pubDate><atom:updated>2026-09-16T13:18:24.883Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Trade Agreement,வர்த்தக ஒப்பந்தம்,கிறிஸ்டோபர் லக்சன்,christopher luxon</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/bheucmjr/NZPM001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியா மற்றும் நியூசிலாந்து பிரதமர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/bheucmjr/NZPM001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா- நியூசிலாந்து இடையில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி கையெழுத்து ஆனது. இந்த ஒப்பந்தத்திற்கு நியூசிலாந்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தபோதிலும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இதில் உறுதியாக இருந்தார்.</p><p>இது தொடர்பான மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய உடனான வர்த்தக ஒப்பந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக கிறிஸ்டோபர் லக்சன் கூறியதாவது:-</h2><p>இந்தியா உடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் சாத்தியம் இல்லை என்று மக்கள் என்னிடம் சொன்னார்கள். நன்று, இன்று நாடாளுமன்ற இறுதி வாக்கெடுப்பில் இந்த ஒப்பந்தம் மசோதா நிறைவேறியது. இது நிகழ்ந்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் மூலம், அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் வருமானம் நியூசிலாந்துக்கு கிடைக்கும். 140 கோடி இந்திய நுகர்வோர் நியூசிலாந்து பொருட்களை விற்பனை செய்வதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.</p><p>அடுத்த மாதத்தில் இருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>இந்திய பொருட்களுக்கு வரி இல்லை</h2><p>டெக்ஸ்டைல்ஸ், தோல், காலணி, ஜூவல்லரி, பதப்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை வரியில்லாமல் நியூசிலாந்திற்கு இந்தியா ஏற்றுமதி செய்ய முடியும். </p><p>மறுபுறம், இருதரப்பு வர்த்தக மதிப்பில் 95 சதவீதத்தை உள்ளடக்கிய நியூசிலாந்தின் 70 சதவீத கட்டணப் பிரிவுகளுக்கு (tariff lines) இந்தியா கட்டண தளர்வை வழங்கியுள்ளது. அதேவேளையில், 29.97 சதவீத தயாரிப்பு வகைகளை இந்த ஒப்பந்தத்தின் வரம்பிற்கு வெளியே வைத்துள்ளது.</p><h2>பால் பொருட்களுக்கு இந்தியா விலக்கு அளிக்கவில்லை</h2><p>ஒப்பந்தத்தின் வரம்பிற்கு வெளியே உள்ள தயாரிப்புகளில் பால் பொருட்கள் (பால், க்ரீம், வே (whey), தயிர், சீஸ்), விலங்கு சார்ந்த பொருட்கள் (செம்மறி ஆட்டு இறைச்சி தவிர), விவசாயப் பொருட்கள் (வெங்காயம், கொண்டைக்கடலை, பட்டாணி, சோளம், பாதாம்), சர்க்கரை, செயற்கைத் தேன், விலங்கு/தாவர/நுண்ணுயிர் கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தாமிரம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் (கேத்தோடுகள், கார்ட்ரிட்ஜ்கள், தண்டுகள், கம்பிகள், சுருள்கள்), அலுமினியம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் (இங்காட்கள், பில்லட்டுகள், கம்பித் தண்டுகள்) ஆகியவை அடங்கும். </p><p>நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு இந்தியா வரி இல்லாத அனுமதியை வழங்கும். இதில் மரக்கட்டைகள், coking coal, உலோகக் கழிவுகள் மற்றும் ஸ்கிராப், மரம், செம்மறி ஆட்டு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்படாத தோல் ஆகியவை அடங்கும்.</p><h2>ஒயினுக்கு படிப்படியாக வரிகள் குறைக்கப்படும்</h2><p>அதேபோல பெட்ரோலிய எண்ணெய், மால்ட் சாறு (malt extract), தாவர எண்ணெய்கள், குறிப்பிட்ட சில மின் மற்றும் இயந்திர உபகரணங்கள் மற்றும் பெப்டோன்கள் (peptones) போன்ற பொருட்களுக்கு இந்தியா 3, 5, 7 மற்றும் 10 ஆண்டுகளில் படிப்படியாக வரிகளைக் குறைக்கும். </p><p>கட்டணக் குறைப்புப் பலனைப் பெறும் நியூசிலாந்து தயாரிப்புகளில் ஒயின், மருந்துகள், பாலிமர்கள், அலுமினியம் மற்றும் இரும்பு/எஃகு பொருட்கள் ஆகியவை அடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>‘உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது’ - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-is-easy-to-enjoy-a-position-obtained-without-hard-work-selvaperunthagai-hits-back-at-praveen-chakravarty</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-is-easy-to-enjoy-a-position-obtained-without-hard-work-selvaperunthagai-hits-back-at-praveen-chakravarty#comments</comments><guid isPermaLink="false">1a97e850-4932-4638-81c9-07bef566cf0c</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:59:37 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:59:37.322Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,selvaperunthagai,tvk,Praveen Chakravarty,Prime Ministerial candidate</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n7tiytc2/New-Project-2026-09-16T182626.956.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது’ - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n7tiytc2/New-Project-2026-09-16T182626.956.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாகவே ‘பிரதமர் வேட்பாளர்’ விவகாரத்தில் தமிழ்நாட்டின் கூட்டணிக் கட்சிகளான தவெக மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ்,  பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் உறுதியாக உள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தால் காங்கிரஸ் உள்ளேயும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. </p><p>ஆனால் தவெகவினர் முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி பேசிவருகின்றனர். </p><p>இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் மாநிலத்தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijays-act-in-house-a-disgrace-slams-tncc-chief">செல்வப்பெருந்தகை</a>.,</p><p>“ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் கூட்டணிக்கான வாய்ப்பு என்ன இருக்கிறது?” என கருத்து தெரிவித்திருந்தார். </p><p>இதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி பற்றி கருத்து சொல்ல செல்வப்பெருந்தகை யார் என கேள்வி எழுப்பினார்.</p><p>இந்நிலையில் பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த கருத்துக்கு பதில்கூறும் வகையில் செல்வப்பெருந்தகை சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;</p><p>“கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர்.</p><p>வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது.</p><h2>சிரித்தால் போதுமா?</h2><p>நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி?</p><p>அதற்கு நீண்ட நேரம் முதலமைச்சர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி.</p><p>உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதலமைச்சராவது ஒரே ஒரு முறை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே.</p><h2>பாஜக குறித்துப் பேசினாலே..</h2><p>முதலமைச்சர் கூட சொல்ல வேண்டாம். அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளவர்கள் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதலமைச்சரிடம் நமது அணியின் பிரதமர் வேட்பாளர் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவர் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன். </p><p>பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதலமைச்சரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.</p><h2>காலம் பலரை முன்னிறுத்தும்... ஆனால்</h2><p>உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும்.</p><p>காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்து போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்கிறது. காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது.</p><p>தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார். </p><p>உரக்கச் சொல்கிறேன்.</p><p>நான் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>132 ஆண்டுகள் கழித்து அமெரிக்க நூலகத்திற்குத் திருப்பிக் கொடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வார இதழ்!</title><link>https://www.maalaimalar.com/news/world/historic-weekly-returned-to-us-library-after-132-years</link><comments>https://www.maalaimalar.com/news/world/historic-weekly-returned-to-us-library-after-132-years#comments</comments><guid isPermaLink="false">567a9d91-0f0b-4e86-b055-2f0fb0c9e50f</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:53:55 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:53:55.035Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,library,நூலகம்,132YearsLater,132 ஆண்டுகள்,Rare Magazine,Fine Waived,Concord Library</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hvw0zqlc/Rare-Magazine" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rare Magazine  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hvw0zqlc/Rare-Magazine?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவின் </a>நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள கான்கார்ட் பொது நூலகத்தில் இருந்து 132 ஆண்டுகளுக்கு முன்பு இரவல் வாங்கப்பட்ட 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழைய மாத இதழ், தற்போது நூலகத்திடமே பத்திரமாகத் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அபராதம் தள்ளுபடி</h2><p>செப்டம்பர் 1894-ஆம் ஆண்டு வெளியான "தி செஞ்சுரி இல்லஸ்ட்ரேட்டட் மன்த்லி மேகசின்". இந்த இதழை மொத்தம் 48,220 நாட்கள் தாமதமாகத் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>நூலக விதிகளின்படி இதற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நூலகத்தின் புதிய சலுகையால் இந்த அபராதம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><h2>இதழ் திரும்பியது எப்படி?</h2><p>ஜான் என்ற வாசகர் இந்த இதழை நூலகத்தில் ஒப்படைத்தார். இது குறித்து அவர் கூறும்போது, இந்த இதழ் பல தசாப்தங்களாகத் தனது வீட்டில்தான் கிடந்ததாகவும், ஆனால் இது எப்படித் தன் வீட்டிற்கு வந்தது என்பது தனக்கே தெரியாது என்றும் கூறியுள்ளார். </p><p>சமீபத்தில் உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில், நூலகம் அபராதங்களை ரத்து செய்துள்ள செய்தியைப் படித்த பிறகே, இதைத் திரும்பக் கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார்.</p><h2>நூலகத்தின் புதிய திட்டம்</h2><p>கான்கார்ட் பொது நூலகம் கடந்த செப்டம்பர் 1 முதல் ஒரு வருட காலத்திற்கு அபராதக் கட்டணங்களுக்கு முழு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. "அபராதமில்லா நூலகம்" என்ற இந்தத் திட்டத்தின் மூலம் பல பழைய புத்தகங்கள் திரும்ப வரும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இதழ் திரும்ப வரும் என்று தாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் நூலக நிர்வாகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.</p><h2>அடுத்த கட்ட நடவடிக்கை</h2><p>132 ஆண்டுகள் பழமையான இந்த இதழ் இனி பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படாது. அதற்குப் பதிலாக, இந்த நூலகத்தில் உள்ள உள்ளூர் வரலாற்றைப் பாதுகாக்கும் பிரத்யேகப் பகுதியான "கான்கார்ட் அறையில்" காட்சிக்கு வைக்கப்படலாம் என்று நூலக நிர்வாகம் அதன் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மெஸ்சி நிகழ்ச்சி சர்ச்சை: கேரளம் செய்தி சேனல் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை- எதிர்க்கட்சிகள் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/messi-event-row-police-raid-reporter-tv-office-promoters-homes-cm-defends-action</link><comments>https://www.maalaimalar.com/news/national/messi-event-row-police-raid-reporter-tv-office-promoters-homes-cm-defends-action#comments</comments><guid isPermaLink="false">4257d383-2132-4bc6-a458-aeaa89e97adc</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:36:29 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:36:29.103Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Messi,மெஸ்சி,VD Satheesan,கேரளம்,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/imf7gv0p/PoliceRaid.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போலீஸ் சோதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/imf7gv0p/PoliceRaid.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ஜென்டினா அணியும், மெஸ்சியும் கேரளம் மாநிலம் வருகை தந்து விளையாடுவதாக இருந்தது. இது தொடர்பாக அர்ஜென்டினா அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர், அர்ஜென்டினா அணி கேரளா வரவில்லை. இது தொடர்பாக பண முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.</p><p>இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), RBC பிரைவேட் லிமிடெட், அதன் நிர்வாக இயக்குநர் ஆண்டோ அகஸ்டின் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேரள அரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றி தங்களுக்கு முறையற்ற ஆதாயத்தை அடையும் நோக்கத்துடன் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்துடனான (டிசம்பர் 20, 2024 தேதியிட்ட) ஒப்பந்தத்தில் சட்ட விரோதமான மற்றும் பொய்யான அம்சங்களை சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>கிரேட்டர் கொச்சி மேம்பாட்டு ஆணையத்தின் (Greater Cochin Development Authority) கட்டுப்பாட்டில் உள்ள, கலூரில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான ஜவஹர்லால் நேரு சர்வதேச விளையாட்டு அரங்கத்தை RBC-யிடம் ஒப்படைப்பதற்கும், 5 கோடி ரூபாய் பிணைத் தொகையை (security deposit) தள்ளுபடி செய்வதற்கும் செப்டம்பர் 26, 2025 அன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>RBC நிறுவனம் மெஸ்சி மற்றும் அர்ஜென்டினா அணி விளையாட வருவதற்கு ஸ்பான்சராக செயல்பட முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் ரிப்போர்ட்டர் டி.வி. என்ற செய்தி சேனலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரிப்போர்ட்டர் டி.வி. அலுவலகம் மற்றும் அகஸ்டின் சகோதரர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர்களுடைய பூர்வீக வீடு ஆகியவற்றில் SIT போலீசார் இன்று சோதனை நடத்தினர். கொச்சி மற்றும் வயநாடுகளில் உள்ள 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்து.</p><p>செய்திப் பிரிவு செயல்பட்டு வரும் ஆர்.பி.சி. அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீசார், செய்திப் பிரிவு இடத்திற்கு சென்று செய்தியாளர்களின் செல்போன்கள் மற்றும் பணிபுரிபவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்ததாகவும், செய்தி வெளியிடுவதற்கு இடையூறாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.</p><h2>சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி விளக்கம்</h2><p>இது தொடர்பாக SIT தலைவரும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியுமான பி. விஜயன் கூறுகையில் "எந்த இடத்தில் சோதனை நடத்த சென்றாலும், அங்குள்ளவர்களிடம் போனை பயன்படுத்தக்கூடாது என சொல்லி வாங்கி வைத்து விடுவோம். நாங்கள் ஒரு போனைக் கூட பறிமுதல் செய்யவில்லை. செய்தி ரூமுக்குள் இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லவில்லை. ஆவணங்களை சேகரிப்பதே எங்களுடைய நோக்கம். டிஜிட்டல் லாக்கர்களில் ஏற்பட்ட அணுகல் சிக்கல் காரணமாக, தேடுதலுக்கு அதிக நேரம் பிடித்தது. இந்த நடவடிக்கைகள் வீடியோவும் பதிவு செய்யப்பட்டன. </p><p>சோதனைப் பதிவேட்டின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட நபர்களின் கையொப்பங்களைப் பெறுகிறோம். அந்தப் பதிவேட்டைப் பார்த்து, ஏதேனும் பத்திரிகையாளர்களின் அலைபேசிகளை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோமா என்று பாருங்கள்" என்றார்.</p><h2>முதல்வர் வி.டி. சதீசன்</h2><p>இந்த சோதனையை கேரளம் மாநில முதல்வர் வி.டி. சதீசன் நியாயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வி.டி. சதீசன் கூறுகையில் "இந்தச் சோதனை, சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் காவல்துறை விசாரணையின் ஒரு பகுதியாகும். இதில் அரசு தலையிடாது. SIT முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. வாரண்ட் உடன் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளது. இது தொடர்பாக ஜிஎஸ்டி துறை விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை தொடக்கத்தில் ஜி.எஸ்.டி. மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்றார்.</p><h2>விளையாட்டுத்துறை அமைச்சர்</h2><p>அதன் ஸ்பான்சர் யார்? RBC-தான் அந்த ஸ்பான்சர். எனவே, அந்த ஆதரவாளர் தொடர்பான ஒரு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும்போது, ​​அது வேறு எங்கே நடத்தப்பட முடியும்? அது இயல்பான ஒன்றுதானே?. செய்தி வெளியிட்டதற்காக எந்தவொரு ஊடக நிறுவனம் அல்லது பத்திரிகையாளர் மீதும் அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்ததில்லை; இனிமேலும் அவ்வாறு செய்யாது" என்றார்.</p><h2>பினராயி விஜயன் கண்டனம்</h2><p>முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான பினராயி விஜயன், செய்தி நிறுவனத்திற்குள் சென்ற பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது தொடர்பாக விமர்சனம் செய்திருந்திருந்தார். இதுபோன்ற சோதனை கேரளம் மாநிலத்தில் இதுவரை இல்லாதது. முதலமைச்சரின் நேர வற்புறுத்தலின் போரில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டியிருந்தார்.</p><h2>RBC நிர்வாக இயக்குநர் சொன்னது என்ன?</h2><p>ஆண்டோ அகஸ்டின் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் இது தொடர்பாக கூறுகையில் "போலீசார் மெஸ்சி நிகழ்ச்சி தொர்பாக எந்த கேள்வியும் கேட்கவில்லை" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- வேறு பெண்ணுடன் இருந்ததை தட்டிக் கேட்ட காதலியை காரால் மோதி இழுத்துச் சென்ற காதலன்- லக்னோவில் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/video-lucknow-anamika-car-attack-shanawaz</link><comments>https://www.maalaimalar.com/news/national/video-lucknow-anamika-car-attack-shanawaz#comments</comments><guid isPermaLink="false">8cc9ca0f-aa3b-4a5c-87f5-a60aaa4f86d5</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:29:01 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:29:01.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தரபிரதேச மாநிலம்,லக்னோ,lucknow,LucknowCrime,லக்னோசம்பவம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/66x3x413/gfd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ drags girlfriend with his car]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/66x3x413/gfd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஷாநவாஸ் தனது உண்மையான பெயர் மற்றும் அடையாளத்தை மறைத்து ஏமாற்றியதை அனாமிகா கண்டறிந்துள்ளார். </p><p>உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், தனது உண்மையான அடையாளத்தை மறைத்து காதலித்து வந்த நபர் ஒருவர், தட்டிக் கேட்ட காதலியை காரால் மோதி, காரின் முன்பகுதியில் (போனட்) வைத்து இழுத்துச் சென்று ஏற்றி இறக்கிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="hi" dir="ltr">लखनऊ में अपने प्रेमी को नई गर्लफ्रेंड के साथ देख भड़की युवती. कार के सामने आई तो युवक ने किया हिट एंड रन का प्रयास...! <a href="https://t.co/a8qU6egytR">pic.twitter.com/a8qU6egytR</a></p>&mdash; Rupesh Mishra (@rupeshmishramp) <a href="https://x.com/rupeshmishramp/status/2100194257479053318?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>உண்மை<strong>யை கண்டுபிடித்த காத</strong>லி</h2><p>லக்னோவைச் சேர்ந்த அனாமிகா என்ற பெண், 'யஷ் தாகூர்' என்ற பெயரில் அறிமுகமான ஷாநவாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ஷாநவாஸ் தனது உண்மையான பெயர் மற்றும் அடையாளத்தை மறைத்து ஏமாற்றியதை அனாமிகா கண்டறிந்துள்ளார். மேலும், இன்று காலை பூங்கா ஒன்றின் அருகே ஷாநவாஸ் வேறு ஒரு பெண்ணுடன் டீ கடையில் நின்று கொண்டிருந்தபோது அனாமிகா அவரை நேரில் பார்த்துப் பிடித்துள்ளார்.</p><h2>காரால் மோதி <strong>கொடூரத் தாக்குதல்</strong></h2><p>தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனாமிகா, ஷாநவாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த ஷாநவாஸ், காரை வேகமாக இயக்கி அனாமிகா மீது மோதியுள்ளார். இதனால் அனாமிகா காரின் போனட் மீது விழுந்தநிலையிலும், காரை நிறுத்தாமல் ஷாநவாஸ் முன்னோக்கிச் சென்றுள்ளார். சற்று தூரத்தில் அனாமிகா காரில் இருந்து கீழே விழுந்தபோது, இரக்கமின்றி கார் சக்கரத்தை அவர் மீது ஏற்றிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் அனாமிகாவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><h2>வைரல் வீ<strong>டியோ</strong></h2><p>இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வீடியோவில் அனாமிகா "காரை நிறுத்து" என்று கதறியும் ஷாநவாஸ் காரை நிறுத்தாமல் ஏற்றிச் செல்வது பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அனாமிகா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த லக்னோ காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஷாநவாஸை தீவிரமாகத் தேடி கைது செய்துள்ளனர். பெயர் மற்றும் மத அடையாளத்தை மறைத்து காதலித்த விவகாரம் மற்றும் கொலை முயற்சி கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் ப்ரீமியர் லீக் 2027: போட்டி தேதி, ஏலம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/sports/womens-premier-league-2027-tournament-dates-and-auction-announcement</link><comments>https://www.maalaimalar.com/sports/womens-premier-league-2027-tournament-dates-and-auction-announcement#comments</comments><guid isPermaLink="false">b0e4688f-2162-4e59-bcee-c74ae15b5320</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:26:51 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:26:51.432Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,மகளிர் பிரீமியர் லீக்,பிசிசிஐ,WPL 2027</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/f6xwyl4h/New-Project-2026-09-16T171040.853.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Women's Premier League 2027: Tournament dates and auction announcement!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/f6xwyl4h/New-Project-2026-09-16T171040.853.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது சீசன், அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. </p><p>வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் அக்டோபர் 28ம் தேதி கொச்சியில் நடைபெறும் என்றும், வீராங்கனைகளை தக்கவைத்து கொள்வதற்கான இறுதிநாள் செப்.28 என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. </p><p>நடப்பாண்டு சாம்பியனாக<a href="https://www.maalaimalar.com/sports/cricket/ipl-news-in-tamil/womens-premier-league-final-bengaluru-wins-the-toss-against-delhi-and-opts-to-bowl-808141"> ராயல் சேலஞ்சர்ஸ்</a> அணி உள்ளது. டெல்லியும், பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதிய நிலையில், ஆர்சிபி த்ரில் வெற்றிப் பெற்றது. </p><p>ஐந்தாவது சீசனிலும் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகளும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. </p><p>இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இத்தொடர் நடத்தப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கடைசி நேர பெரிய மாற்றங்களைத் தவிர்க்க வேண்டும்..!- 2027 உலகக்கோப்பை குறித்து  யுவராஜ்சிங் முக்கிய அறிவுரை!</title><link>https://www.maalaimalar.com/sports/avoid-last-minute-major-changes-yuvraj-singh-2027-world-cup-advice</link><comments>https://www.maalaimalar.com/sports/avoid-last-minute-major-changes-yuvraj-singh-2027-world-cup-advice#comments</comments><guid isPermaLink="false">d2f8855b-3539-42b1-9046-1592532bb2ad</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:16:41 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:16:41.429Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cricket,கிரிக்கெட்,யுவராஜ் சிங்,world cup,உலகக்கோப்பை,yuvaraj singh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cfxy4tkg/YV.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Yuvaraj singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cfxy4tkg/YV.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (50 ஓவர்) தொடர் நாயகன் விருது பெற்ற யுவராஜ்சிங் கூறியதாவது:-</p><h2>மாற்றத்தை தவிர்க்க வேண்டும்</h2><p>2027-ம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பை போட்டிக்கு முன்பு மிகப் பெரிய அளவிலான மாற்றங்களை தவிர்க்க வேண்டும். </p><p>20 ஓவர் உலக கோப்பை வெற்றிகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு 50 ஓவர் உலக கோப்பைக்கான நிலையான ஒரு அணியை உருவாக்க வேண்டும்.</p><p>2027 உலக கோப்பையை கைப்பற்ற சிறந்த அணியை தேர்ந்தெடுத்து அதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். கடந்த காலங்களில் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்திய கடைசி நேர பெரிய மாற்றங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.</p><p>ஒரு ஆண்டுக்கு பிறகு விளையாடப் போகும் அதே அணியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கடைசி நேரத்தில் பெரிய மாற்றம் செய்யக் கூடாது.</p><p>கடைசி நேரத்திலோ அல்லது தொடர் நடைபெற்று கொண்டு இருக்கும் போதோ பெரிய மாற்றங்களை செய்த போதெல்லாம் இந்தியா சறுக்கலை சந்தித்து உள்ளது.</p><p>எனவே உலக கோப்பையை வெல்லக் கூடியது என்று நம்பும் அணியை உறுதி செய்து அவர்களுடன் நிற்பது முக்கியம்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டி.ஆர் - பாக்யராஜ் இணைந்த ஒரே படம்... உயிர் கொடுக்கும் இளையராஜா - &apos;கன்னடத்து பைங்கிளி&apos; மெகா கூட்டணி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-only-film-uniting-tr-and-bhagyaraj-ilaiyaraajas-soul-stirring-voicea-mega-collaboration-featuring-the-kannada-nightingale</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-only-film-uniting-tr-and-bhagyaraj-ilaiyaraajas-soul-stirring-voicea-mega-collaboration-featuring-the-kannada-nightingale#comments</comments><guid isPermaLink="false">672f1b4e-647f-4a51-a508-438991a346fc</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:00:10 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:00:10.106Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,T Rajendar,டி ராஜேந்தர்,ilaiyaraaja,Actor Bhagyaraj,Kannadathu Paingili,நடிகர் பாக்யராஜ்,கன்னடத்து பைங்கிளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/s1robppi/New-Project-2026-09-16T172814.379.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டி.ஆர் - பாக்யராஜ் இணைந்த ஒரே படம்... உயிர் கொடுக்கும் இளையராஜா - 'கன்னடத்து பைங்கிளி' மெகா கூட்டணி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/s1robppi/New-Project-2026-09-16T172814.379.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிப்பில் ஆர். கோபி வழங்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்தை ‘சிங்கம் புலி’, 'மொட்ட சிவா கெட்ட சிவா' &nbsp;படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ளார். </p><p>பன்முக வித்தகரான&nbsp;டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில் அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். </p><h2>டிஆர் - பாக்யராஜ் இணைவு</h2><p>மேலும், சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான&nbsp;கே. <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/film-writers-association-boycotts-the-memorial-event-for-directors-bharathiraja-and-bhagyaraj">பாக்யராஜ்</a> நடித்த கடைசி படமாக இது அமைந்துள்ளது. டி.ஆர். மற்றும் பாக்யராஜ் இணைந்து பணியாற்றிய ஒரே படம்&nbsp;'கன்னடத்து பைங்கிளி' என்பதும் குறிப்பிடத்தக்கது. </p><p>நாயகனின்&nbsp;தந்தையாக படம் முழுவதும் வரும் பாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை பாக்யராஜ் வழங்கியுள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>35 ஆண்டுகளுக்கு பின் மனைவியுடன் இணையும் பாக்யராஜ்</h2><p>சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜும், அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படமும் இது தான். அதுவும் கணவன் மனைவியாகவே நடித்துள்ளனர்.&nbsp;இப்படத்தில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். </p><p>சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக் மற்றும் இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.&nbsp;</p><p>இவர்களுடன் ஸ்ரீகாந்த் ஐயங்கார் எனும் தெலுங்கில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர் அறிமுகம் ஆகிறார். கர்நாடகாவில் இருந்து ஸ்வேதா எனும் நடிகையும் அறிமுகமாகிறார்.</p><p>'பேராண்மை', 'மீகாமன்', 'வாகா' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ். ஆர். சதீஷ் குமார் 'கன்னடத்து பைங்கிளி' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது. </p><p>தமிழ்நாடு- கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் சாய் ரமணி தெரிவித்தார்.&nbsp;இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>UPI கட்டணம்: டிரம்ப் முன் அடிபணிய பிரதமர் முடிவு செய்துள்ளார்- ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-has-decided-to-prostrate-before-trump-rahul-on-upi-tax</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-has-decided-to-prostrate-before-trump-rahul-on-upi-tax#comments</comments><guid isPermaLink="false">9b1928d5-89d4-4ea2-aaad-dbaf4ccb94ce</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:33:10 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:33:10.032Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pm modi,பிரதமர் மோடி,UPI payment</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/rkq9ghf0/RahulGandhi00002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UPI- Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/rkq9ghf0/RahulGandhi00002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன் மண்டியிடவும் (அடி பணியவும்), அமெரிக்காவிற்குப் பெருந்தொகையை வழங்கவும் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, <a href="https://www.maalaimalar.com/news/national/american-crisis-upi-fee-row-centre-clarifies">UPI</a> பரிவர்த்தனைகள் மீது கட்டணம் விதிக்கும் அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><h2>UPI கட்டணம் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் அமல்</h2><p>வங்கிக் கணக்கை பயன்படுத்தாமல் பண பரிமாற்றம் செய்ய மத்திய அரசு UPI என்ற நடைமுறையை கொண்டு வந்தது. இதை பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை ஒரு விநாடியில் செலுத்த முடியும். இதன்மூலம் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை UPI பயன்படுத்தி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில்தான் வணிக நோக்கத்திற்காக 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணி பரிவர்த்தனை செய்தால், வணிக நிறுவனம் 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்தது. அக்டோபர் 15-ந்தேதியில் இருந்து இது அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி அடுத்த மாதம் 15-ந்தேதியில் இருந்து ஒரு வணிக நிறுவனத்தில் நுகர்வோர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்து, UPI மூலம் பணம் செலுத்தினால் அந்த வணிக நிறுவனம், 0.4 சதவீதம் என்ற அடிப்படையில் கட்டணம் வங்கிக்கு செலுத்த வேண்டும். அதேவேளையில் தனிநபர் ஒருவர் மற்றொருவருக்கு பணம் பரிமாற்றம் செய்தால் கட்டணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அத்துடன் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.</p><h2>ராகுல் காந்தி குற்றச்சாட்டு</h2><p>இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் பிரதமர் மோடி மண்டியிட முடிவு செய்துள்ளார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-</p><p>முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜியிடம் ஒருமுறை அவர் இடதுசாரி கொள்கை கொண்டவரா அல்லது வலதுசாரி கொள்கை கொண்டவரா என்று கேட்கப்பட்டபோது, ​​நான் இடதுபுறமோ அல்லது வலதுபுறமோ சாய்வதில்லை. நான் நேராக நிற்கிறேன் என்று பதிலளித்தார். ஆனால் மோடி ஜியின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. அவர் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. அவர் டொனால்டு டிரம்ப் முன் நேராகப் படுத்துக்கொண்டு மண்டியிட (சாஷ்டாங்கமாகப் பணிய) முடிவு செய்துள்ளார்.</p><p>UPI-க்கு வரி விதிப்பதன் மூலமும், அமெரிக்காவிற்குப் பெருந்தொகையை வழங்குவதன் மூலமும் ஒவ்வொரு இந்தியர் மீதும் அவர் (மோடி) வரியை சுமத்தியுள்ளார். மோடி ஜி, இப்போதே UPI வரியை திரும்பப் பெறுங்கள்.</p><p>இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.</p><h2>காங்கிரஸ் குற்றச்சாட்டு</h2><p>இதற்கு முன்னதாக காங்கிரஸ், ஜீரோ MDR (வணிகர் தள்ளுபடி விகிதம்) முறையை நீக்கிவிட்டு UPI-க்குக் கட்டணம் விதிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு அரசு பணிந்து விட்டது. பிரதமர் மோடி, NOTA (நோட்டா)வை நரேந்திராவின் தொடர்ச்சியான டிரம்ப் சமாதான நடவடிக்கை (Narendra's Ongoing Trump Appeasement) என்று வரையறுத்துள்ளார் எனத் தெரிவித்திருந்தது.</p><p>பிரதமர் மோடி அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து சமரசம் செய்து கொண்டுள்ளார். மீண்டும் ஒருமுறை சரணடைகிறார். ராகுல் காந்தி முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>இதற்குப் பதிலடி கொடுத்த பாஜக, காங்கிரஸ் போலிச் செய்திகளை பரப்புவதாகக் குற்றம் சாட்டியதுடன், நுகர்வோர் மீது MDR கட்டணங்கள் விதிக்கப்படாது என்பதை அரசு மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறியது.</p>]]></content:encoded></item><item><title>திமுகவினர் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்..!- சோதனை நிறைவுக்கு பிறகு அன்பில் மகேஷ் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-cadres-unafraid-anbil-mahesh-speaks-after-search</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-cadres-unafraid-anbil-mahesh-speaks-after-search#comments</comments><guid isPermaLink="false">16b1e46d-cfd6-411c-ac8d-40d28c72dd6c</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:23:57 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:23:57.110Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,anbil mahesh,Raid,அன்பில் மகேஷ்,சோதனை நிறைவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n8nebcri/Anbil.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbil mahesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n8nebcri/Anbil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி தென்னூரில் உள்ள முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh" rel="nofollow">அன்பில் மகேஷ் </a>இல்லத்தில் நடந்த சோதனை நிறைவடைந்தது.</p><p>இதைதொடர்ந்து, தென்னூரில் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:</p><p>சந்தேகத்தின் அடிப்படையில் எனது இல்லத்தில் 8 மணி நேரமாக அதிகாரிகள் சோதனையிட்டனர்.</p><p>காலை 7 மணியளவில் அதிகாரிகள் இல்லத்தில் நுழைந்ததில் இருந்து முடியும் வரை முழு ஒத்துழைப்பு தரப்பட்டது.</p><p>எனது வீட்டில் வைத்திருந்த கல்வித்துறை சார்ந்த ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து சென்றனர்.</p><p>புதிய தலைமைச் செயலகம், இடைத்தேர்தல் தொடர்பாக பேசியதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p>அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற சோதனைகளை டேக் டைவர்ஷன் தவெக அரசு மேற்கொண்டுள்ளது.</p><p>நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் இல்லை நாங்கள், 75 ஆண்டு கால இயக்கம் திமுக.</p><p>மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை, திமுகவினர் எதற்கும் அஞ்சமாட்டார்கள்.</p><p>எனக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்த அதிகாரிகள் எனக்கு எதிராக செயல்படுமாறு அன்பாக மிரட்டுகின்றனர். இந்த சோதனை உங்களுக்கு இல்லைங்க, அவரை குறிவைத்து தான், அவருக்கு எதிராக சொல்லுங்க என அன்பாக மிரட்டுகிறார்கள்.</p><p>18ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் கூறிச்சென்றனர்.</p><p>18ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜரான பின்னர் நேரடியாக இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரத்திற்கு செல்வேன்.</p><p>மிசா சட்டம், மு.க.ஸ்டாலின் குறித்து சட்டசபையில் அவதூறாக பேசிய அமைச்சர்கள் மீது வழக்குப்பதிய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓசோன் படல பாதுகாப்பு தினம்: &apos;பூமியை குளிர்விக்க உலகளாவிய நடவடிக்கை&apos; என்ற கருப்பொருளுடன்  கொண்டாட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/ozone-layer-protection-day-global-action-to-cool-the-earth-celebration</link><comments>https://www.maalaimalar.com/news/world/ozone-layer-protection-day-global-action-to-cool-the-earth-celebration#comments</comments><guid isPermaLink="false">e51b21cd-ec10-4067-ac31-2618eb19c55b</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:23:38 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:23:38.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ozone Day,ஓசோன் தினம்,Montreal Protocol,Kigali Amendment,கிகாலி திருத்தம்,Save Ozone Layer,ஓசோன் படலம்,Climate Action,Global Cooling</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pyggxsth/World-Ozone-Day" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ World Ozone Day ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pyggxsth/World-Ozone-Day?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பூமியின் உயிர்க்கவசமான ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1987-ஆம் ஆண்டு மாண்ட்ரியல் உடன்படிக்கை கையெழுத்தான தினத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ஆம் தேதி சர்வதேச ஓசோன் படல பாதுகாப்பு தினமாக உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.</p><h2>2026-ஆம் ஆண்டின் மையக்கருத்து</h2><p>இந்த ஆண்டிற்கான சர்வதேச ஓசோன் தினம் "பூமியை குளிர்விக்க உலகளாவிய நடவடிக்கை" என்ற கருப்பொருளின் கீழ் கடைப்பிடிக்கப்படுகிறது. </p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க 'கிகாலி திருத்தம்' கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த ஆண்டின் மையக்கருத்து அதனைச் சிறப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>உலகை மாற்றிய மாண்ட்ரியல் உடன்படிக்கையும், கிகாலி திருத்தமும்!</h2><p>அறிவியல் பூர்வமான கொள்கைகள், அனைத்து நாடுகளின் பங்களிப்பு மற்றும் முறையான நிதியுதவி ஆகியவற்றின் மூலம் ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும் வேதிப்பொருட்களை வெற்றிகரமாக ஒழிக்க முடியும் என்பதை இந்த உடன்படிக்கை நிரூபித்துக் காட்டியுள்ளது. </p><p>2016 அக்டோபர் 15 அன்று ருவாண்டாவின் கிகாலி நகரில் நடந்த மாநாட்டில், புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான வலிமைமிக்க பசுமை இல்ல வாயுக்களான ஹைட்ரோபுளோரோகார்பன்களை படிப்படியாகக் குறைக்க நாடுகள் ஒப்புக்கொண்டன. </p><p>கடந்த 10 ஆண்டுகளில், இந்த கிகாலி திருத்தம் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத, ஆற்றல் திறன்மிக்க குளிர்சாதன தொழில்நுட்பங்களை உருவாக்கவும், உலக வெப்பநிலையைக் குறைக்கவும் பெரும் பங்காற்றியுள்ளது.</p><h2>பின்னணி: ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வேதிப்பொருட்கள்</h2><p>மனிதர்களால் உருவாக்கப்படும் சில வேதிப்பொருட்கள் ஓசோன் படலத்திற்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>குறிப்பாக, புரோமின் மற்றும் குளோரின் கொண்ட ஹாலோகார்பன்கள்.குளோரோபுளோரோகார்பன்கள், ஹைட்ரோகுளோரோபுளோரோகார்பன்கள், கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் மெத்தில் புரோமைடு.</p><p>இதன் தீவிரத்தை உணர்ந்த சர்வதேச சமூகம், 1985 மார்ச் 22 அன்று 28 நாடுகளின் கையெழுத்துடன் 'வியன்னா மாநாட்டை' நடத்தியது. </p><p>அதன் தொடர்ச்சியாகவே 1987 செப்டம்பரில் மாண்ட்ரியல் உடன்படிக்கை வரையறுக்கப்பட்டு, 1994-இல் ஐநா பொதுச்சபையால் இந்தத் தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.</p><h2>தற்போதைய நிலவரம் மற்றும் விதிவிலக்குகள்</h2><p>உலக நாடுகள் அனைத்தும் மாண்ட்ரியல் உடன்படிக்கையின் இலக்குகளைச் சரியாகப் பின்பற்றி வருகின்றன. வளரும் நாடுகளில் HCFC-களின் பயன்பாட்டை 2040-க்குள் முழுமையாக நிறுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், ஆஸ்துமா நோயாளிகளுக்கான இன்ஹேலர்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்/விமானங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு அமைப்புகள் போன்ற மாற்றுப் பொருட்கள் இல்லாத சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தற்காலிக விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>2009 செப்டம்பர் 16 அன்று, வியன்னா மாநாடு மற்றும் மாண்ட்ரியல் உடன்படிக்கை ஆகிய இரண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றிலேயே அனைத்து நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட முதல் உடன்படிக்கைகள் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதித்த தடை நீட்டிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-extends-airspace-ban-for-indian-aircraft-till-oct-24</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-extends-airspace-ban-for-indian-aircraft-till-oct-24#comments</comments><guid isPermaLink="false">9868d79c-3f57-4500-826a-718a848b21a8</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:17:42 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:17:42.053Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,airspace,வான்வெளி,இந்திய விமானங்கள்,indian aircraft</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/v8w0gsnr/plane.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ flight]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/v8w0gsnr/plane.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.</strong></em></p><p>பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த ஆண்டு மே 7-ம் தேதி அன்று இந்தியா <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">ஆபரேஷன் சிந்தூர்</a> நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.</p><p>பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.</p><p>பாகிஸ்தானும் தங்கள் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது.</p><p>அதன்படி, இந்திய விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை அக்டோபர் 24-ம் தேதி வரை நீட்டித்து பாகிஸ்தான் உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க நெருக்கடியா? UPI கட்டண விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/american-crisis-upi-fee-row-centre-clarifies</link><comments>https://www.maalaimalar.com/news/national/american-crisis-upi-fee-row-centre-clarifies#comments</comments><guid isPermaLink="false">31908eb3-3dd8-4cdb-9bc0-7e17cf7e0095</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:59:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:59:13.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,அமெரிக்கா,America,pmmodi,central government,மோடி,UPI payment</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/xmaqkoin/UPI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[   PMModi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/xmaqkoin/UPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனிநபர்களுக்கு இடையேயான பணப்பரிவர்த்தனைகளுக்கும், கடைகளில் QR கோட் மூலம் செய்யப்படும் சாதாரண பரிவர்த்தனைகளுக்கும் எந்தவிதக் கட்டணமும் விதிக்கப்படாது. </p><p>UPI பரிவர்த்தனைகளுக்கு Merchant Discount Rate (MDR) கட்டணம் அமல்படுத்துவது அமெரிக்க நிறுவனங்களுக்கு பயனளிப்பதற்காகவே என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவின் கொள்கை முடிவுகள் முற்றிலும் சுயாதீனமாகவே எடுக்கப்படுகின்றன என்று மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>மத்திய அரசு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. <a href="https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers">UPI</a> மற்றும் RuPay தளங்களின் வளர்ச்சியால் Visa மற்றும் Mastercard போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்ததாகவும், அவற்றை ஊக்குவிக்கவே இந்த கட்டணம் கொண்டுவரப்படுவதாகவும் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் சாடினார்.</p><h2>மத்திய நிதி <strong>அமைச்சக</strong>த்தின் விளக்கம்</h2><p>இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சகம், "UPI தொடர்பான முடிவுகள் அனைத்தும் நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித வெளிநாட்டு தலையீடும் இல்லை" எனத் தெரிவித்தது.</p><h2>புதிய <strong>UPI கட்டண விதி</strong>முறைகள்</h2><p>*தனிநபர்களுக்கு இடையேயான (Person-to-Person) பணப்பரிவர்த்தனைகளுக்கும், கடைகளில் QR கோட் மூலம் செய்யப்படும் சாதாரண பரிவர்த்தனைகளுக்கும் எந்தவிதக் கட்டணமும் விதிக்கப்படாது. இவை எப்போதும் போல் முற்றிலும் இலவசமாகவே தொடரும்.</p><p>*அக்டோபர் 15 முதல், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்படும். ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக UPI மூலம் பணம் பெறும் வணிகர்கள் மட்டுமே இந்த வரம்பிற்குள் வருவார்கள்.</p><p>*இந்த கட்டணம் பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 95 சதவீதத்திற்கும் அதிகமான வணிகப் பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு குறைவாகவே இருப்பதால், சாதாரணக் கடைக்காரர்களோ அல்லது நுகர்வோரோ இதன் மூலம் பாதிக்கப்பட மாட்டார்கள்.</p><p>*இந்த MDR கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது வணிகர்கள் சுமத்தக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.</p><h2><strong>கட்டணம் வசூலிப்பதன் நோக்</strong>கம்</h2><p>இந்தக் கட்டணம் அரசுக்கோ அல்லது UPI அமைப்பை இயக்கும் NPCI நிறுவனத்திற்கோ செல்லும் வரி அல்ல என்றும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. UPI கட்டமைப்பு, தொழில்நுட்ப பராமரிப்பு மற்றும் வங்கிகளின் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவே இந்த நிதி பயன்பாட்டுப் பங்கேற்பாளர்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம் - இயக்குநர் சீனு ராமசாமி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-one-should-attack-vijay-sethupathi-personally-director-seenu-ramasamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-one-should-attack-vijay-sethupathi-personally-director-seenu-ramasamy#comments</comments><guid isPermaLink="false">3021c4a6-800b-4bff-a089-140c47386e5c</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:58:46 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:58:46.583Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் விஜய் சேதுபதி,Actor vijay Sethupathi,Bigg Boss,பிக்பாஸ்,Director Seenu Ramasamy,இயக்குநர் சீனு ராமசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5wba6xdf/New-Project-2026-09-16T162628.003.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம் - இயக்குநர் சீனு ராமசாமி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5wba6xdf/New-Project-2026-09-16T162628.003.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைமைத்துவம் குறித்த<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/dharmadurai-completes-10-years-did-it-leave-a-lasting-impression-on-the-audience-director-seenu-ramasamys-post"> நடிகர் விஜய் சேதுபதி</a>யின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவசரப்பட்டு அவர்மீது தனிநபர் தாக்குதலை தொடுக்கவேண்டாம் என மக்களிடம் இயக்குநர் சீனு ராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“அனைவருக்கும் அன்பான வணக்கம். விஜய் சேதுபதியை உள்ளும், புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல. உண்மையில் தமிழ்நாடு சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள்.</p><h2>அரசியல் சாயம்</h2><p>மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலேயே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை. பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.</p><p>ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். </p><p>அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது.</p><h2>வில்லன் கதாபாத்திரங்களிலும்...</h2><p>ஊக்கப்படுத்தப்பட்ட பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர், தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலேயே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர், நிறைய புதிய இயக்குநர்களோடு பயணித்தவர், 100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர், பல படங்கள் சிக்கலில் சிக்கியபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர். </p><p>முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சூடானில் தங்கம் வெட்டியெடுக்கும் சுரங்கம் இடிந்து விபத்து: 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாப பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/sudan-il-illegal-gold-mine-collapse-over-60-workers-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/sudan-il-illegal-gold-mine-collapse-over-60-workers-killed#comments</comments><guid isPermaLink="false">1aa5f9ee-d086-4cc3-88eb-e5f3ec34dffd</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:33:54 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:33:54.040Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sudan,சூடான்,West Kordofan,al-Nuhud,தங்கம் சுரங்கம்,அல்-நூஹுத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/doexbvy7/gold.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sudan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/doexbvy7/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சூடானில் வெட்டியெடுக்கப்படும் பெரும் அளவிலான தங்கம் முறையான அரசாங்க பதிவுகளின்றி சட்டவிரோதமாக அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. </p><p>ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்கு கோர்டோஃபான் பிராந்தியத்தில் இயங்கி வந்த சட்டவிரோத தங்க சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>அல்-நூஹுத் நகருக்கு வடக்கே உள்ள தொலைதூர கிராமப்புறப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சுரங்கத்தில், ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் தங்கத் தாதுக்களை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இடிபாடு ஏற்பட்டது. பகுதி மிகவும் தொலைதூரத்தில் அமைந்துள்ளதாலும், மீட்பு சாதனங்கள் போதுமான அளவு இல்லாததாலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. உள்ளூர் வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின்படி, இதுவரை 60-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>பா<strong>துகாப்பற்ற கைவினை சுரங்கங்க</strong>ள்</h2><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ipl-2027-auction-to-be-held-in-india">சூடான்</a> ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எனினும், நாட்டின் பெரும்பாலான தங்க உற்பத்தி முறையான அனுமதி அல்லது பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இல்லாத பாரம்பரிய மற்றும் கைவினைச் சுரங்க முறைகளையே நம்பியுள்ளது. இத்தகைய சுரங்கங்களில் எந்தவிதமான கட்டமைப்பு பாதுகாப்போ, அவசர கால பாதுகாப்பு வசதிகளோ இல்லாததால், நிலச்சரிவு மற்றும் சுரங்க இடிபாடுகள் அடிக்கடி நிகழும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.</p><p>சூடானில் வெட்டியெடுக்கப்படும் பெரும் அளவிலான தங்கம் முறையான அரசாங்க பதிவுகளின்றி சட்டவிரோதமாக அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. போதிய தொழிலாளர் பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்படாததும், தொலைதூர பகுதிகளில் உள்ள சுரங்கங்களை கண்காணிக்க போதிய அரசு அமைப்புகள் இல்லாததுமே இத்தகைய தொடர் மனித உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என சமூக ஆர்வலர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">68859268-5c7e-4ad3-a3c4-1c8601164f7b</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:24:35 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:24:35.904Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ts1ns5rt/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ts1ns5rt/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட மற்றும் தென் தமிழகத்தின் பல பகுதிகள், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>சுமார் 1.5 கிமீ உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><h2><strong>கனமழை</strong></h2><p>இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>18-ந்தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>19-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>20-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>18-ந்தேதி தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தை இந்தியாவில் நடத்த முடிவு: ஐ.பி.எல். நிர்வாகம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/ipl-2027-auction-to-be-held-in-india</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/ipl-2027-auction-to-be-held-in-india#comments</comments><guid isPermaLink="false">11d5ab6d-b8f2-44bc-a654-e3f34a2cb423</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:49:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:49:04.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IPL auction,ஐபிஎல் ஏலம்,IPL 2027,ஐபிஎல் 2027</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/yxq7d35i/IPL.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ipl auction]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/yxq7d35i/IPL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தை இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.</strong></em></p><p>இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.</p><p>இதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில் நடத்தப்பட்டது.</p><p>அதன்பின் 2024, 2025, 2026-ம் ஆண்டுகளில் ஐ.பி.எல். ஏலங்கள் துபாய், ஜெட்டா, அபுதாபி போன்ற வெளிநாடுகளில் நடத்தப்பட்டன. </p><p>இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தை இந்தியாவில் நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மினி ஏலம் நடத்தப்பட உள்ளது.</p><p>அணிகளின் நிர்வாகக் குழுவினர் வெளிநாடு செல்வதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p>ஏலம் இந்தியாவில் நடைபெறுவது உறுதியாகிவிட்டாலும், எங்கு நடக்கும் என முடிவாகவில்லை.</p><p>2028-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் வெளிநாட்டில் நடத்தப்படலாம் என தெரிவித்துள்ளது.</p><p>வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஐ.பி.எல். ஏலம் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டில் மகளிர் கிரிக்கெட் நாளை தொடக்கம்: இந்தியா- ஜப்பான் கால் இறுதியில் மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/womens-cricket-asian-games-india-vs-japan-quarterfinal</link><comments>https://www.maalaimalar.com/sports/womens-cricket-asian-games-india-vs-japan-quarterfinal#comments</comments><guid isPermaLink="false">68431d10-db8c-4350-b434-5f121bc511f6</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:47:37 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:47:37.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மகளிர் கிரிக்கெட்,ஆசிய விளையாட்டு போட்டி,இந்தியா ஜப்பான்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/o79op9fj/INDvsJPN.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian Womens Team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/o79op9fj/INDvsJPN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>20-வது ஆசிய விளையாட்டு போட்டி  ஜப்பானில் உள்ள அய்சி - நகோயா நகரில் வருகிற 19-ந்தேதி  முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 43 விளையாட்டுகள் 71 வகையில் 469 பிரிவில் நடைபெறுகிறது. </p><h2>மகளிர் கிரிக்கெட் நாளை தொடக்கம் </h2><p>ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் கிரிக்கெட்  நாளை (17- ந் தேதி) தொடங்குகிறது. 20 ஓவருக்கான  இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், மலேசியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து  ஆகிய  8 நாடுகள் பங்கேற்கின்றன.</p><p>நாக் அவுட் முறையில் போட்டி நடத்தப்படுகிறது.  நேரடியாக கால் இறுதி தொடங்குகிறது.</p><h2>இந்தியா-ஜப்பான்</h2><p>ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி கால் இறுதியில் ஜப்பானை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.</p><p>இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதனால் ஆசிய விளையாட்டில் தங்க பதக்கம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றது. தற்போது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.</p><p>ஆசிய கோப்பை போட்டியில் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஸ்ரீசரணி, திப்தி சர்மா சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.</p><h2>இலங்கை- மலேசியா</h2><p>நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் கால் இறுதியில் இலங்கை-மலேசியா அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் (18-ந் தேதி) நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் சீனா- வங்காளதேசம், பாகிஸ்தான்- தாய்லாந்து அணிகள் மோதுகின்றன. 20-ந்தேதி அரை இறுதி போட்டியும், 22-ந்தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.</p><h2>ஆண்கள் பிரிவு</h2><p>ஆண்கள் பிரிவு கிரிக்கெட் 24-ந்தேதி தொடங்குகிறது. கடந்த ஆசிய விளையாட்டில் இந்திய அணி தங்கம் வென்று இருந்தது.</p><p>ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி நேரடியாக கால் இறுதியில் விளையாடுகிறது. 28-ந்தேதி இந்திய அணி ஆடுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathis-maharaja-to-be-remade-in-hollywood</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathis-maharaja-to-be-remade-in-hollywood#comments</comments><guid isPermaLink="false">0dfc01e1-9d37-4e49-b284-14caa65826b3</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:47:15 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:47:15.538Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Hollywood,maharaja,விஜய் சேதுபதி,Vijay sethupathi,மகாராஜா,ஹாலிவுட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/9jrl91py/New-Project-2026-09-16T145115.245.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/9jrl91py/New-Project-2026-09-16T145115.245.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/maharaja-film-wins-two-national-awards">மகாராஜா</a>’ திரைப்படம், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. </p><h2>மகாராஜா </h2><p>நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப்,  நடிகை சாச்சனா நமிதாஸ், திவ்ய பாரதி, அபிராமி, சிங்கம் புலி, முனிஷ்காந்த், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் ‘மகாராஜா’.</p><p>தி ரூட் , திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு, அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. </p><h2>ஹாலிவுட் ரீமேக்</h2><p>இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றநிலையில், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்படவுள்ளது. மகாராஜா திரைப்படம் சீனாவில் 91.65 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. </p><p>மேலும், இப்படம் வெளிநாடுகளில் உள்ள ஓடிடி தளங்களிலும் பிரபலமடைந்தது.</p><p>தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்தின் தகவல்களின்படி, படத்தை ரீமேக் செய்யவுள்ள நிறுவனம் விஜய் சேதுபதிக்கான கதாபாத்திர தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் அடுத்த ஆண்டு படப்பணிகள் தொடங்கும் என்றும் தெரியவந்துள்ளது.</p><p>பெரும்பாலும் ஹாலிவுட் புகழ் மேத்யூ  மெக்கோனாஹே தேர்வாக வாய்ப்புள்ளதாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: செப்.25-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-thittam-cm-vijay-to-launch-it-on-september-25th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-thittam-cm-vijay-to-launch-it-on-september-25th#comments</comments><guid isPermaLink="false">c103d95e-fd0f-4275-9b1b-51ba301f6a6e</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:33:12 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:33:12.314Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மதுரை,madurai,thaimaman gold ring scheme,தாய்மாமன் தங்க மோதிர திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ue0xvdm0/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ue0xvdm0/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. </p><p>தவெக அரசின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான 'தாய்மாமன் சீர் திட்டம்' செப்டம்பர் 15-ந்தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chennai-return-tomorrow-morning">முதலமைச்சர் விஜயின்</a> லண்டன் பயணம் காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. </p> <p>இந்நிலையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை மதுரையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-will-chief-minister-vijay-launch-it-in-perambur-on-the-22nd">முதலமைச்சர் விஜய்</a> தொடங்கி வைக்கிறார்.</p><p>தமிழக பாரம்பரிய மரபின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.  </p> <p>ஜூன் 22, 2026 முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தும். ஆண்டுதோறும் சுமார் ரூ. 755.83 கோடி இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கவும், ஏழை எளிய குடும்பங்களின் தாய்மையின் மகிழ்ச்சியைக் கௌரவிக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டீசர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathis-paththa-teaser-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-sethupathis-paththa-teaser-released#comments</comments><guid isPermaLink="false">2d028353-1bbd-4e97-a2b1-a8824fee5c8d</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:13:50 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:13:50.655Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>லிஜோமோல் ஜோஸ்,lijomol jose,விஜய் சேதுபதி,Vijay sethupathi,Baththa,பத்தா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l208ut0q/New-Project-2026-09-16T143649.046.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டீசர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l208ut0q/New-Project-2026-09-16T143649.046.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலாஜி தரணிதரன் எழுத்து மற்றும் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">விஜய் சேதுபதி</a> முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘பத்தா’. </p><p>சினி ஒன் ஸ்டூடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். </p><p>இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p><p>இந்நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Dt4476TjEo0"></iframe></figure>]]></content:encoded></item><item><title>ரூ.13½ லட்சம் கோடி கடன் இருக்கும்போது புதிதாக தலைமைச் செயலகம் தேவையா? - சீமான் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-is-a-new-secretariat-necessary-when-there-is-a-debt-of-rs-13-5-lakh-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-is-a-new-secretariat-necessary-when-there-is-a-debt-of-rs-13-5-lakh-crore#comments</comments><guid isPermaLink="false">d53e8fdd-3a9d-4794-a523-c4ab150d9452</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:49:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:49:04.524Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,naam tamilar katchi,New Secretariat,சீமான்,நாம் தமிழர் கட்சி,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/k7ao2to1/seeman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/k7ao2to1/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதிதாக தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சீமான் கூறினார்.</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- </p><p>13½ லட்சம் கோடி கடன் இருப்பதாக தமிழக அரசுதான் நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்தது. வட்டிக்கு கடன் வாங்கி வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் எதற்கு புதிய தலைமைச் செயலகம்? தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் பல மேதைகள் அமர்ந்து ஆகச்சிறந்த சட்டங்களையும் திட்டங்களையும் தீட்டியிருக்கிறார்கள். </p> <p>ஒருவேளை, தலைமைச் செயலகத்துக்கு அவசியம் ஏற்பட்டால் கருணாநிதி கட்டிய ஓமந்தூரார் மருத்துவமனை இருக்கும் கட்டிடத்தை பயன்படுத்தலாம். அதற்காக மருத்துவமனையை வேண்டுமானால் வேறு இடத்திற்கு மாற்றலாம். புதிதாக தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.</p> <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">விஜய்சேதுபதி </a>தெரிவித்தது, பொதுவான கருத்து. அவர் குறிப்பிட்டது இதற்கு முன்பிருந்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைதான் தம்பி விஜய்சேதுபதி தெரிவித்திருந்தார். அதனை விமர்சிப்பது சரியாக இருக்காது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>SIIMA விருதுகள்: டூரிஸ்ட் பேமிலி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார் சிம்ரன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/evergreen-actress-simran-clinches-siima-2026-best-actress</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/evergreen-actress-simran-clinches-siima-2026-best-actress#comments</comments><guid isPermaLink="false">59de693c-aef1-4408-a0b6-0abd89e479ed</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:38:06 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:38:06.826Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourist Family,SIIMA விருது வழங்கும் விழா,Simran,சிம்ரன்,Best actress award,SIIMA2026,சிறந்த நடிகை,டூரிஸ்ட் பேமிலி,SIIMA Awards</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/t9ibwfp0/Simran" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Simran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/t9ibwfp0/Simran?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்னிந்திய திரையுலகின் முன்னணி மற்றும் எவர்கிரீன் நடிகைகளில் ஒருவரான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">சிம்ரன்</a>, டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் தனது அசாத்திய மற்றும் இயல்பான நடிப்பிற்காக SIIMA 2026-ல் சிறந்த நடிகைக்கான மதிப்புமிக்க விருதைத் தட்டிச் சென்றுள்ளார். </p><p>பெங்களூரில் நடைபெற்ற இந்த விருது விழாவில் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்துகொண்டு தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.</p><h2><strong>எவர்கிரீன் நடிகை</strong></h2><p>திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனக்கான ஒரு வலுவான மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடித்திருந்தார் சிம்ரன். </p><p>'<a href="https://www.maalaimalar.com/topic/tourist-family">டூரிஸ்ட் பேமிலி</a>' படத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் எதார்த்தமான சூழலையும், உணர்வுகளையும் மிக நேர்த்தியாகத் தனது நடிப்பில் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.</p><p>ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே இந்த கதாபாத்திரம் பெரும் பாராட்டுகளைப் பெற்ற நிலையில், தற்போது அதற்கான மிகச்சிறந்த அங்கீகாரமாக இந்த <strong>சைமா விருது</strong> கிடைத்துள்ளது. </p><p>பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் சிம்ரனுக்கு, இந்த வெற்றி அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாகும்.</p><h2><strong>அள்ளிக் குவித்த 6 சைமா விருதுகள்!</strong></h2><p>பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">சசிகுமார்</a> மற்றும் சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் SIIMA 2026 விருது விழாவில் மொத்தம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.</p><ul><li><p>சிறந்த படம் (Best Film)</p></li><li><p>சிறந்த இயக்குநர் (Best Director)</p></li><li><p>சிறந்த அறிமுக இயக்குநர் (Best Debut Director) - அபிஷன் ஜீவிந்த்</p></li><li><p>சிறந்த முதன்மை நடிகர் (Best Lead Actor)</p></li><li><p>சிறந்த நடிகை (Best Actress) - சிம்ரன்</p></li><li><p>சிறந்த திரைக்கதை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்</p></li></ul><p>இதன் மூலம் இந்த ஆண்டின் சைமா விழாவில் அதிக விருதுகளைப் பெற்ற தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது.</p><h2><strong>படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்</strong></h2><p>ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி என்பது அதன் வசூலைத் தாண்டி, அதில் உழைத்த திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தில்தான் உள்ளது. தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், கோவிட் சூழலுக்குப் பிந்தைய ஒரு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் குடும்பத்தின் வாழ்வியலை நகைச்சுவை மற்றும் எதார்த்தமான பாணியில் பேசியிருந்தது.</p><p>படக்குழுவினரின் இந்த அசாத்திய கூட்டு உழைப்பிற்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>5 லட்சம் போலி ஜிமெயில் கணக்குகள் மூலம் பரப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்: கூகுளிடம் விளக்கம் கேட்கும் இந்திய காவல்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/world/500000-fake-gmail-accounts-bomb-threats-indian-police-questions-google</link><comments>https://www.maalaimalar.com/news/world/500000-fake-gmail-accounts-bomb-threats-indian-police-questions-google#comments</comments><guid isPermaLink="false">048d14c9-0742-4b44-9147-15ae009bd94e</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:37:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:37:13.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Google,குஜராத்,gujarat,Bomb threats,Cyber ​​Crime,ஜிமெயில்,சைபர் கிரைம்,fake Gmail accounts</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/q0qycu9l/google.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Google]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/q0qycu9l/google.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுவாக ஒரு ஜிமெயில் கணக்கை உருவாக்கவும், பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் இருபடி சரிபார்ப்பு முறை அவசியமாகும். </p><p>குஜராத் மாநிலத்தில் அரசு அலுவலகங்களுக்கு அடுத்தடுத்து வந்த போலி வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் காவல்துறை, இதன் பின்னணியில் இருந்த மிகப்பெரிய குற்றப் பின்னணி வலையமைப்பை கண்டறிந்து முடக்கியுள்ளது. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி ஜிமெயில் கணக்குகளை உருவாக்கி, அவற்றின் மூலம் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>பிரி<strong>க்ஸ் உச்சிமாநாட்டிற்கு அச்சுறுத்த</strong>ல்</h2><p>கடந்த 10-ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, <a href="https://www.maalaimalar.com/sports/rinku-singh-priya-saroj-to-tie-the-knot-in-december">குஜராத் அரசு </a>அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அத்துடன் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவுடன் ஒத்துழைக்கும் நாடுகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சல்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர சோதனையில், அவை அனைத்தும் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.</p><h2><strong>5 லட்சம் போலி ஜிமெயில் கணக்குகள்</strong></h2><p>வழக்கை விசாரித்த குஜராத் சைபர் கிரைம் காவல்துறையினர், இந்த விவகாரம் தொடர்பாக இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2022-ஆம் ஆண்டு முதல் சுமார் 5,13,847 போலி ஜிமெயில் கணக்குகள் மற்றும் அவற்றின் கடவுச்சொற்களை உருவாக்கி ஒரு சர்வதேச நெட்வொர்க் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போலி கணக்குகள் வங்காளதேசத்தைச் சேர்ந்த நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் கிரிப்டோகரன்சி வடிவில் பணம் பெறப்பட்டதும் தெரியவந்துள்ளது.</p><h2><strong>கூகுள் நிறுவனத்தின் குறைபாடுகள்</strong></h2><p>பொதுவாக ஒரு ஜிமெயில் கணக்கை உருவாக்கவும், பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் இருபடி சரிபார்ப்பு முறை அவசியமாகும். ஆனால், இந்த போலி கணக்குகள் அனைத்திலும் இந்த பாதுகாப்பு முறையை குற்றவாளிகள் எவ்வாறு எளிதாக கடந்து சென்றார்கள் என்பது காவல்துறைக்கு பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. </p><p>இதனைத் தொடர்ந்து, தங்களது தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்யவும், கொள்கை மாற்றங்களைச் செய்யவும் வலியுறுத்தி கூகுள் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுத குஜராத் காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையில் கூகுள் நிறுவனத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க திட்டமிட்டுள்ளனர். </p><p>இந்தியாவில் ஆன்லைன் மற்றும் தொழில்நுட்பக் குற்றங்கள் மூலம் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படும் நிலையில், கூகுள் போன்ற சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது கேள்வி குறியாகியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஜப்பானில் வரலாற்றுச் சாதனை: 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது!</title><link>https://www.maalaimalar.com/news/world/japan-makes-history-with-over-100000-people-aged-100-plus</link><comments>https://www.maalaimalar.com/news/world/japan-makes-history-with-over-100000-people-aged-100-plus#comments</comments><guid isPermaLink="false">99162cbc-ea2e-4bf3-868f-eaf3cd9aae9a</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:32:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:32:04.178Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,100 வயது,நீண்ட ஆயுள்,100 years,Aged people</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pjxtovxr/Japan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Japan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pjxtovxr/Japan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகில் நீண்ட ஆயுள் காலம் கொண்ட நாடாக உள்ள ஜப்பானில் முதல் முறையாக 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து உள்ளது. </p><p>இம்மாத நிலவரப்படி, 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 56-வது ஆண்டாக அதிகரித்து 1,07,677-யை எட்டியுள்ளது.</p><p>இது கடந்த ஆண்டை விட சுமார் 8 ஆயிரம் அதிகம் என்று சுகாதார, தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம் தெரிவித்தது.</p><p>இவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். இதில், கியோட்டோவைச் சேர்ந்த 114 வயது பூயோ கிஷிமோட்டோ, குமாமோட்டோவைச் சேர்ந்த 112 வயது ஹிகாரு கட்டோ ஆகியோரும் அடங்குவர் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் சரிவு இருந்து வருகிறது. அங்கு பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் 100 வயதுப் பிரிவில் மட்டும்  எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆரோக்கியமான உணவு முறைகள், மேம்பட்ட சுகாதார அமைப்பு ஆகியவை ஜப்பான் மக்களின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தனிச்சிறப்புகள்!
</title><link>https://www.maalaimalar.com/spirituality/unique-features-of-madurai-meenakshi-amman-temple</link><comments>https://www.maalaimalar.com/spirituality/unique-features-of-madurai-meenakshi-amman-temple#comments</comments><guid isPermaLink="false">b1c20a33-b99f-4e0c-9f80-038ad7167be8</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:26:31 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:26:31.319Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,கும்பாபிஷேகம்,Kumbhabhishekam,madurai meenakshi amman,மதுரை மீனாட்சி அம்மன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/tn538idn/MeenakshiAmman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madurai Meenakshi amman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/tn538idn/MeenakshiAmman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</h2><p>உலக அதிசயங்களில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் பழங்கால கட்டிடங்களில் ஒன்றாக <a href="https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-parivara-moorthy-kumbhabhishekam">மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</a> உள்ளது. இக்கோவில் 13-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனுக்கு 'திருக்காமக் கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்' என்பதுதான் பெயராக இருந்தது. 1752-ம் ஆண்டிலிருந்துதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆனது.</p> <h2>மரகதவல்லி</h2><p>மீனாட்சி அம்மனின் சிலை, சுத்த மரகத கல்லால் ஆனதாகும். இதனால் அன்னைக்கு 'மரகதவல்லி' என்ற பெயரும் உண்டு. சிவபெருமான் நடனமாடியதாக கூறப்படும் ஐம்பெரும் சபைகளில் மீனாட்சியம்மன் கோவிலும் ஒன்று. மற்ற எல்லா இடங்களிலும் இடது காலை தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு மட்டுமே வலது காலை தூக்கிவைத்து நடனமாடுகிறார்.</p> <h2>பிரியாவிடை அம்மன்</h2><p>பொதுவாக அனைத்து சிவத்தலங்களிலும் உற்சவ மூர்த்தியாக சோமாஸ்கந்தர் (சிவன், உமை, முருகன்) இருப்பார். ஆனால் மதுரையில் மட்டும் இறைவனுடன் எப்போதும் இணைந்தே இருக்கும் பிரியாவிடை அம்மன் இருக்கிறார்.</p><h2>பூப்புனித நீராட்டு விழா</h2><p>மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா நடக்கும். இது, கருவறை உள்ளேயே நடத்தப்படுவதால் வெளியே தெரிவதில்லை. மதுரை பகுதியில் எப்படி வீடுகளில் பூப்புனித நீராட்டு விழா நடக்குமோ அப்படியே நடக்கும்.</p> <h2>வைரக் கிரீடம்</h2><p>மீனாட்சி அம்மனுக்குச் சூட்டப்படும் வைரக் கிரீடம் சுமார் 400 காரட் எடையுள்ளது. தங்கக் கவசம் சுமார் 6 கிலோ தங்கத்தால் ஆனது. முத்து விதானம், நீலமேகப் பதக்கம், தங்க அங்காடி, முத்து, நவரத்தினக் கிரீடங்கள், நற்பவளக் கொடி, விலை உயர்ந்த காசுமாலைகள் முதலிய நகைகளும் உள்ளன. நளமகாராஜா, பாண்டிய, நாயக்க மன்னர்கள் மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து நகைகளும் மதுரை மீனாட்சியம்மனுக்குச் சொந்தமானவை.</p> <h2>பீட்டர் பாதுகம்</h2><p>1812-1828-ம் ஆண்டு வரை மதுரை கலெக்டராக இருந்தவர், ரவுஸ் பீட்டர். ஒரு முறை மீனாட்சி அம்மன் சிறுமி வடிவில் வந்து, இவரின் உயிரை காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாக அம்மனுக்கு தங்கத்தால் ஆன காலணிகளை பரிசாக அளித்தார். அதில் பீட்டர் என்ற தன் பெயரையும் பொறித்திருந்தார். இன்றும் சித்திரை உற்சவ நாளில் மீனாட்சி அம்மனின் பாதங்களில் இந்த காலணி அணிவிக்கப்படுகிறது. இந்த பாதுகம் 'பீட்டர் பாதுகம்' என்று அழைக்கப்படுகிறது.</p> <p>தீபாவளி அன்று, காலையிலும், மாலையிலும் மீனாட்சி அம்மனுக்கு தங்கப் புடவையும், சொக்கநாதருக்கு வைர நெற்றி பட்டையும் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார்கள். <a href="https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-specials">மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்</a> ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி ஆகிய 3 நாட்கள் மட்டும் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்கப் புடவை அணிவிக்கப்படும்.</p> <h2>நகரா முரசு இசைக்கருவி</h2><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கி.பி.1700-ம் ஆண்டு முதல் இன்று வரை தினமும் இரண்டு முறை 'நகரா முரசு' என்ற இசைக் கருவி ஒலிக்கிறது. </p><p>கோவிலின் கிழக்குக் கோபுரம் எதிரில் உள்ள நகரா மண்டபத்தில் தினமும் காலை 4.30 மணி முதல் 5 மணிக்குள்ளும், மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள்ளும் இந்த நகரா முரசு ஒலிக்கும். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் ஏற்பாடு செய்த இந்த நகரா முரசு, கோவில் நடை திறக்கப்படுவதை அறிவிக்க ஒலிக்கப்படுகிறது.</p> <h2>சிவலிங்கம்</h2><p>அம்மன் சன்னிதி பிரகாரத்தில் சிதைந்த நிலையில் ஒரு சிவலிங்கம் உள்ளது. கி.பி. 1330-ம் ஆண்டு அன்னிய படையெடுப்பின்போது, இக்கோவிலில் தாக்குதல் நடக்கலாம் என்று எண்ணிய பக்தர்கள், இந்த லிங்கத்தை மண்ணால் மூடி வைத்தனர். அந்த தாக்குதலில் இருந்து தப்பிய லிங்கம் தான் இது.</p>  <h2>அஷ்டமி சப்பரம் விழா</h2><p>உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் படி அளக்கும் ஈச ஈசனின் லீலையின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் அஷ்டமி சப்பரம் விழா நடைபெறும். அன்று மீனாட்சி - சுந்தரேஸ்வரர் இருவரும் சப்பரத்தில் மதுரை வெளி வீதிகளில் பவனி வருவர். சிவாச்சாரியார்கள் அரிசியை தூவிக்கொண்டு முன் செல்ல, அந்த சப்பரத்தை பெண்கள் மட்டுமே இழுத்து செல்கின்றனர்.</p><h2>முக்கனி அபிஷேகம்</h2><p>ஆனி பவுர்ணமி அன்று, மீனாட்சியம்மனுக்கு உச்சக் கால பூஜையில் முக்கனி அபிஷேகம் செய்கின்றனர். கோவிலில் அம்மன், சுவாமிக்கென ஏராளமான நகைகள் இருந்தாலும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு என பிரத்யேக ஆபரணங்கள் அணிவித்து வருவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. திருக்கல்யாணம் அன்று மட்டும் அம்மனுக்கு பிட்டத்தகடு அதாவது அம்மனின் பின் பகுதியில் பொருத்தப்படும் கவசங்கள் அணிவிக்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் விற்பனை: இந்திய ரிசர்வ் வங்கி</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rbi-to-sell-rs-1-lakh-crore-government-bonds-to-control-liquidity</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rbi-to-sell-rs-1-lakh-crore-government-bonds-to-control-liquidity#comments</comments><guid isPermaLink="false">8d99fe29-7b09-497d-9417-2b31d52a851b</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:22:32 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:22:32.825Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>reserve bank,பணவீக்கம்,inflation,ரிசர்வ் வங்கி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ezu6h5uy/Your-paragraph-text-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RBI bond sale of ₹1 lakh crore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ezu6h5uy/Your-paragraph-text-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் அதிகரித்து வரும் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி தனது அரசு பத்திரங்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்திய பத்திரங்களின் விலை சரிந்து காணப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">இந்திய ரிசர்வ் வங்கியின்</a> கீழ் செயல்படும் வங்கிகள் அரசு பத்திரங்களை (soverign notes) பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்கின்றன. </p><p>நாட்டில் தற்போது பணப்புழக்கம் அதிகரித்து (inflation) காணப்படுகிறது; மேலும் எண்ணெய் இறக்குமதி விலைகளும் அதிகரித்து, அடுத்த மாதம் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.</p><p>இந்தியாவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2 முதல் 6 சதவீதம் வரை அதிகரித்து காணப்பட்டது.</p><p>உலகளாவிய விற்பனை சரிவில் உள்நாட்டு பத்திரங்களும் இணைந்ததால், 2036-ஆம் ஆண்டில் முதிர்வடையும் 6.94 சதவீதப் பத்திரத்தின் மீதான வருவாய் 7 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 7.09 சதவீதமாக காணப்பட்டது.</p><p>மேலும் 2031-ஆம் ஆண்டில் முதிர்வடையும் 6.36 சதவீதப் பத்திரத்தின் மீதான வருவாய் 16 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 6.78 சதவீதமாக உள்ளது.</p><p>தேசிய அளவில் அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வாங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><h3><strong>1 லட்சம் கோடி கடன் பத்திரங்கள்</strong></h3><p>இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்க அபாயங்களை ஏற்படுத்தும், வங்கிகளில் காணப்படும் உபரி பணத்தை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.</p><p>இதைத்தொடர்ந்து அரசு பத்திரங்களை விற்பனை செய்து, அதன்மூலம் வங்கிகளிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடி பணத்தை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.</p><h3><strong>கரூர் வைஸ்யா வங்கி கருவூல தலைவர்</strong></h3><p>இந்திர ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு குறித்து கரூர் வைஸ்யா வங்கி கருவூல தலைவர் வி.ஆர்.சி. ரெட்டி கூறுகையில், “இந்த முடிவு, இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளிலேயே மிகவும் கடுமையானதாகும்.</p><p>இதனால், அதிக மதிப்புடையதாக இருந்த ஐந்தாண்டு பத்திரப் பிரிவுதான் தர்க்கரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலப் பத்திரங்களின் வருவாய் அதிகரிக்கும்போது, வருவாய் வளைவு மேலும் அதிகரிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.</p><p>ஐந்தாண்டு மற்றும் பத்து ஆண்டுப் பத்திரங்களின் வருவாய்க்கு இடையிலான இடைவெளி சுமார் 20-30 அடிப்படைப் புள்ளிகள் அளவில் நிலைபெறக்கூடும்” என்று குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் சேதுபதி பேசுவதால் அரசியல் மாறிவிடாது!- ஆனால் பெயரை குறிப்பிட்டு பேசட்டும்:  கனிமொழி எம்.எல்.ஏ. சவால்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-mla-challenge-vijay-sethupathi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-mla-challenge-vijay-sethupathi#comments</comments><guid isPermaLink="false">910dbdda-593b-4840-bba1-673727ba10f8</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:19:37 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:19:37.949Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய் சேதுபதி,Vijay sethupathi,tvk,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ecu2jf5i/kanimozhisanthosh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய் சேதுபதி- கனிமொழி சந்தோஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் சேதுபதி- கனிமொழி சந்தோஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ecu2jf5i/kanimozhisanthosh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என்று கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் செரையம்பாளையம் - நீலாம்பூர் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர், தொகுதியில் மேல்நிலைப் பள்ளி அமைப்பது மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">விஜய் சேதுபதி</a> தெரிவித்த கருத்துகள் குறித்து எம்.எல்.ஏ.  கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களிடம் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><figure><img alt="பேருந்து சேவையை தொடங்கி வைத்த கனிமொழி சந்தோஷ்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n4k4n1ea/kanimozhi.jpg" /><figcaption>பேருந்து சேவையை தொடங்கி வைத்த கனிமொழி சந்தோஷ்</figcaption></figure><h2><strong>மேல்நிலைப் பள்ளி கொண்டு வர முயற்சி எடுப்போம்</strong></h2><p>செரையம்பாளையம் பகுதியில் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து பேசிய அவர், </p><p>“மாணவர்களின் எண்ணிக்கையை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கான முக்கியத்துவத்தை வழங்குவோம். அந்தப் பகுதியில் மேல்நிலைப் பள்ளி கொண்டு வருவதற்கான முயற்சிகளை நிச்சயமாக மேற்கொள்வோம்” என்றார்.</p><p>பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தெரிவித்த தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் அரசியல் விவாதமாக மாறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,</p><p>“பிக் பாஸ் என்பது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. ஜனநாயக நாட்டில் அரசியல் விமர்சனம் செய்வதற்கான கருத்துரிமை அனைவருக்கும் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்” என்று தெரிவித்தார்.</p><h2><strong>தலைவர் விஜய் பெயரை குறிப்பிட்டு பேசட்டும்; மக்கள் பதில் சொல்வார்கள்!</strong></h2><p>மேலும் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/கனிமொழி-சந்தோஷ்">கனிமொழி சந்தோஷ்</a>,</p><p>“குறிப்பிட்ட ஒரு கட்சியின் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால், அந்தக் கட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசலாம். எங்கள் தலைவர் விஜய் அவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசட்டும். அதற்கு மக்கள் தங்களுடைய பதிலைச் சொல்வார்கள்.”</p><p>“ஒரு நிகழ்ச்சியில் பொதுவாக பேசப்படும் கருத்துகளை அரசியல் ரீதியாக மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அரசியல் விமர்சனம் என்றால் அது வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்றார்.</p><p>மேலும் அவர், “விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்.”</p><h2><strong>இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது</strong></h2><p>“இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கவுண்டம்பாளையம் தொகுதியிலும் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருந்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்றார்.</p><h2><strong>மக்கள் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர்</strong></h2><p>“அரசியலில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் இறுதியில் மக்கள் எதை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்கள் நேரடியாக காணும் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் தங்களது முடிவுகளை எடுப்பார்கள்” என்று கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பாலஸ்தீனத்தை விடுவியுங்கள் என்று கூறிய ராப் பாடகர் - அமெரிக்க இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை </title><link>https://www.maalaimalar.com/news/world/free-palestine-remark-rapper-banned-from-us-shows</link><comments>https://www.maalaimalar.com/news/world/free-palestine-remark-rapper-banned-from-us-shows#comments</comments><guid isPermaLink="false">03ae9a3b-bcbf-43df-8cb2-db3b0d71bd01</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:17:35 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:17:35.538Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,palestine,Rapper,பாலஸ்தீன்,பாடகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/v5fctvs1/Your-paragraph-text-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Palestine Support Rapper Ban]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/v5fctvs1/Your-paragraph-text-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் ‘எட் ஷீரன்’ நடத்தும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராப் பாடகரான மேக்லமோர், பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்காவில் நடைபெறவுள்ள மற்ற நிகழ்ச்சிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவில்</a> இசைக் கலைஞரான எட் ஷீரன் மொத்தம் 10 இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் இரண்டு இசை நிகழ்ச்சிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், அடுத்த இசை நிகழ்ச்சி பிலடெல்பியாவில் செப்டம்பர் 19 அன்று  மீண்டும் தொடங்க உள்ளது.</p><p>இந்த நிலையில் அமெரிக்காவில் முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், “பாலஸ்தீனத்தை விடுவி” என்ற கருத்தை ராப் பாடகர் மேக்லமோர் கூறியிருந்தார். அவர் தெரிவித்த இந்த கருத்து இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது.</p><h3><strong>பாலஸ்தீனத்தை விடுவி</strong></h3><p>மேலும் மேக்லமோர் அந்த இசை நிகழ்ச்சியில், “நான் இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள விரும்பியதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, இது போன்ற அரங்கங்களில் எழுந்து நின்று, என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான இரண்டு வார்த்தைகளைச் சொல்வதற்காகத்தான்.</p><p>'பாலஸ்தீனத்தை விடுவி, பாலஸ்தீனத்தை விடுவி' என்ற வார்த்தைகள் உரக்கத் தெளிவாக ஒலிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான், காசாவில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை வரை உள்ள மக்கள், நாங்கள் அவர்களை மறக்கவில்லை என்பதை அறிந்துகொள்வார்கள்” என்று கூறினார்.</p><p>அவர் தெரிவித்த கருத்து இணையத்தில் வெளியாகி சர்ச்சையானதை தொடர்ந்து, அமெரிக்காவில் நடக்க இருக்கும் மற்ற நிகழ்ச்சிகளில் மேக்லமோர் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>எட் ஷீரன் அறிக்கை</strong></h3><p>இந்த நிலையில் மேக்லமோர் தனது இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எட் ஷீரன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.</p><p>அவர் அந்த பதிவில், “நியூஜெர்சியில் நடந்த எனது நிகழ்ச்சிகளில் மேக்லெமோரின் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அவர் தொடர்ந்து துணைக்கலைஞராக பங்கேற்றால், எனது வரவிருக்கும் சுற்றுப்பயணத் தேதிகளில் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிடுவோம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.</p><p>அவர் கூறிய அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டிராமல், தனது நிகழ்ச்சியின் போது மேக்லெமோர் தனது செய்தியின் ஒரு பகுதியை வெளிப்படுத்திய விதத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.</p><p>மேக்லெமோர் சுற்றுப் பயணத்திலிருந்து விலகியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் முடிவு; அது என்னுடையதல்ல. சுற்றுப்பயணத்திற்கான ஒப்பந்தம் மேக்லெமோருடையது, என்னுடையது் அல்ல.</p><p>திட்டமிட்டிருந்த ரசிகர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்; அதேபோல், வேலைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் என்னைச் சார்ந்திருக்கும் சுற்றுப்பயணக் குழுவினரையும், மற்ற துணைக்கலைஞர்களையும், இசைக்கலைஞர்களையும் நான் கைவிட மாட்டேன்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவு யாருக்கு?- அன்புமணி விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-will-pmk-support-in-the-by-election-anbumani-explains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-will-pmk-support-in-the-by-election-anbumani-explains#comments</comments><guid isPermaLink="false">fcef2726-0572-4ee1-ae06-ccf65c25dbd2</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:15:34 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:15:34.574Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,anbumani,பாமக,அன்புமணி ராமதாஸ்,ByElection,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5gqmad67/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5gqmad67/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் வரும் ஆக்போடர் 6ம் தேதி நடைபெறும் 2 தொகுதி இடைத்தேர்தலில், பாமகவின் ஆதரவு கோரி தவெக, திமுக, அதிமுக உங்களை அணுகியதா என்கிற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.  </p><p>சென்னை கிண்டியில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>முதலமைச்சர் லண்டன் பயணம்</h2><p>லண்டனில் முதலமைச்சர் ஒப்பந்தம் செய்த நிறுவனம் சென்னையில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.</p><p>லண்டன் சென்று முதலமைச்சர் விஜய் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இங்கேயே செய்திருக்கலாம்.</p><h2>புதிய தலைமை செயலகம் </h2><p>பட்டினபாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் முடிவு மிக மிக தவறானது. அதனை தமிழக அரசு கைவிட வேண்டும்.</p><p>பட்டினப்பாக்கம் ஒரு குறுகிய பகுதி. சென்னைக்கு வெளியில் ஆயிரம் ஏக்கரில் நிர்வாக நகரம் அமைக்கலாம்.</p><h2>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?</h2><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது.</p><p>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.</p><p>பரந்தூரில் விமான நிலையத்திற்கு பதில் சிப்காட் வந்தால் சுற்றுச்சூழல் பாதிக்காதா?</p><p>பரந்தூரில் எந்த தொழிற்பேட்டையும் அமைக்கக்கூடாது, அப்படி அமைக்க நினைத்தால் நானே போராடுவேன்.</p><p>மக்களுக்கு திமுக, அதிமுகவை பிடிக்கவில்லை, அதனால்தான் முதல்வராக விஜயை மக்கள் தேர்வு செய்துள்ளனர்.</p><p>மீண்டும் மீண்டும் பழைய அரசை பழி சொல்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.</p><p>நீங்கள் அவர்களை குறை சொல்வது, அவர்கள் உங்களை குறை சொல்வதும் போதும், மக்கள் குறைகளை களைய நடவடிக்கை எடுங்கள்.</p><p>வேலையில்லா திண்டாட்டம், நீர் மேலாண்மை, விவசாயிகளின் துன்பத்தை போக்க நடவடிக்கை எடுங்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>டிசம்பரில் கரம்பிடிக்கிறார்கள் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்-பிரியா சரோஜ்! </title><link>https://www.maalaimalar.com/sports/rinku-singh-priya-saroj-to-tie-the-knot-in-december</link><comments>https://www.maalaimalar.com/sports/rinku-singh-priya-saroj-to-tie-the-knot-in-december#comments</comments><guid isPermaLink="false">b29dc65c-d65b-4344-9c08-dea683f21b19</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:11:08 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:11:08.782Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rinku singh,Priya Saroj,ரிங்கு சிங்,லக்னோ,lucknow,Machhlishahr,பிரியா சரோஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/vtfmtcso/rimj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rinku Singh-Priya Saroj  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/vtfmtcso/rimj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரிங்கு சிங்-பிரியா சரோஜ் ஜோடியின் திருமணம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பிரபல 'ரமாடா'  நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது.</p><p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்பி <a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-srilanka-today-in-womens-asia-cup-final">பிரியா சரோஜ் </a>ஆகியோரின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திருமணத்தின் அதிகாரப்பூர்வ தேதியும், அது நடைபெறும் இடமும் தற்போது வெளியாகியுள்ளது.</p><h2>டிசம்<strong>பர் 4-ல் லக்னோவில் திருமண</strong> விழா</h2><p>ரிங்கு சிங்-பிரியா சரோஜ் ஜோடியின் திருமணம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பிரபல 'ரமாடா'  நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. இரு குடும்பத்தினரின் முழுச் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டுள்ள இந்தத் திருமண விழாவில், முக்கிய கிரிக்கெட் வீரர்கள், சமாஜ்வாதி கட்சியின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p>கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி லக்னோவில் உள்ள 'தி சென்ட்ரம்' ஹோட்டலில் இருவருக்கும் மிகவும் விமரிசையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சோஷியல் மீடியா வாயிலாக அறிமுகமாகி காதலிக்க தொடங்கிய இந்த ஜோடி, சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், தற்போது இல்லற வாழ்க்கையில் இணையவுள்ளனர்.</p><h2>யார் இந்த ரி<strong>ங்கு சிங் மற்றும் பி</strong>ரியா சரோஜ்?</h2><p>ரிங்கு சிங் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது இந்திய டி20 அணியின் முக்கிய 'பினிஷராக' திகழ்ந்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் மசாலிஷஹர் தொகுதி எம்பியான பிரியா சரோஜ், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் மிக இளம் வயது எம்பிக்களில் ஒருவராகச் நாடாளுமன்றத்திற்குத் தேர்வானவர். இவர் முன்னாள் எம்பி தூபானி சரோஜின் மகளாவார்.</p><p>நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவீட்டாரும் இணைந்து திருமணத் தேதியை இறுதி செய்துள்ளதை அடுத்து, கிரிக்கெட் ரசிகர்கள்  இத்தம்பதியினருக்குத் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.                             </p>]]></content:encoded></item><item><title>கோவையில் லாட்டரி டிக்கெட் விற்பனை – 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/whatsapp-banned-kerala-onam-bumper-lottery-sales-six-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/whatsapp-banned-kerala-onam-bumper-lottery-sales-six-arrested#comments</comments><guid isPermaLink="false">6219d919-4095-4687-b100-082087a0906a</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:00:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:00:13.306Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Kerala Lottery,லாட்டரி டிக்கெட்,Lottery ticket,fake lottery ticket sale,WhatsApp Scam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/g27j0me6/Lottery-Ticket-Sale" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lottery Ticket Sale]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/g27j0me6/Lottery-Ticket-Sale?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில <a href="https://www.maalaimalar.com/topic/lottery-ticket">லாட்டரி சீட்டுகளை</a> வாட்ஸ்-அப் செயலி மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில், 3 பெண்கள் உட்பட 6 பேரை கோயம்புத்தூர் மாவட்ட ஆனைமலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். </p><p>அவர்களிடமிருந்து ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 5,900 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2><strong>ரகசிய தகவல்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88">கோவை </a>மாவட்டம் ஆனைமலை பாரதி நகரைச் சேர்ந்த கவுதம் (34) என்பவர், கேரள மாநில எல்லையான மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார். </p><p>இவர் தமிழக எல்லையான ஆனைமலை பகுதியில் உள்ள தனது வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளைப் பதுக்கி வைத்து, வாட்ஸ்-அப் செயலி மூலம் தமிழக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.</p><h2><strong>5,900 லாட்டரிகள் பறிமுதல்</strong></h2><p>ஆனைமலை போலீசார் தலைமையில், போலீசார் அடங்கிய தனிப்படையினர் கவுதமின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 5,900 கேரள மாநில லாட்டரி சீட்டுகளை போலீசார் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் என்று கண்டறியப்பட்டது.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">ஆன்லைன் </a>வியாபாரம்</strong></h2><p>போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. </p><p>கைது செய்யப்பட்ட கவுதம் மற்றும் அவரது உறவினர்களான ஜெயசவுந்தராயன் (32), ஜீவானந்தம் (26) ஆகியோர் இணைந்து, கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 'ஓணம் பம்பர்' லாட்டரி சீட்டுகளின் புகைப்படங்களை வாடிக்கையாளர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு அனுப்பி வந்துள்ளனர்.</p><p>பரிசு விழுந்தால் பெரும் தொகை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, ஆன்லைன் மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்தச் சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.</p><h2><strong>6 பேர் கைது: நீதிமன்றத்தில் ஆஜர்</strong></h2><p>இந்தச் சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த கவுதம், ஜெயசவுந்தராயன், ஜீவானந்தம் மற்றும் இவர்களுக்குத் துணையாக இருந்த 3 பெண்கள் என <strong>மொத்தம் 6 பேரை</strong> போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கான பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் வாட்ஸ்-அப் மூலம் பம்பர் லாட்டரி விற்ற கும்பல் சிக்கிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்&apos;: நீரிழிவு மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் பாஜக நன்கொடை- மனோ தங்கராஜ் ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/profit-from-burning-house-bjp-diabetes-drug-donations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/profit-from-burning-house-bjp-diabetes-drug-donations#comments</comments><guid isPermaLink="false">9898f70b-97c0-4025-8387-c53e7e19755d</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:45:55 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:45:55.966Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,மனோ தங்கராஜ்,Mano Thangaraj,Lupin,USV,Sun Pharma,Right to Health,Torrent,நீரிழிவு மருந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/o14jlv23/MANO.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mano Thangaraj ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/o14jlv23/MANO.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருந்து நிறுவனங்கள் தங்களது பிராண்ட் மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய வைக்க, மருத்துவர்களைக் கவர பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>இந்தியாவில் நீரிழிவு (சர்க்கரை) நோய்க்கான மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முன்னணி மருந்து நிறுவனங்கள் (Pharma Companies), ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் ரூ.400 கோடிக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளப் பதிவில் மிகக் கடுமையான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார். </p><p>இந்தியாவில் நீரிழிவு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, வீடுகள்தோறும் சர்க்கரை நோயாளிகள் பெருகிவரும் இந்த வேளையில், மக்களின் உடல்நலப் பிரச்சனையை வைத்து அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவது மக்கள் நலனுக்கே எதிரானது என்று சாடியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid">மத்திய பாஜக அரசு</a> Production Linked Incentive (PLI) திட்டத்தின் கீழ், இந்த குறிப்பிட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.6,000 கோடிக்கும் அதிகமான தொகையை அரசு மானியமாக வழங்கியுள்ளது. 2024-25ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.15,000 கோடியை எட்டியுள்ளது. இதில் Sun Pharma, USV, Torrent, Lupin போன்ற முன்னணி பிராண்டுகள் 2025-26 நிதியாண்டில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளன.</p><h2>மருத்து<strong>வர்களுக்கா</strong>ன சலுகை</h2><p>இந்த மருந்து நிறுவனங்கள் தங்களது பிராண்ட் மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய வைக்க, மருத்துவர்களைக் கவர பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதில், விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் அன்பளிப்புகள்,  வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் மற்றும் இலவச மருந்து சாம்பிள்கள் ஆகியவற்றை சலுகைகளாக வழங்குகின்றன.</p><p>இதன் விளைவாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் சராசரியாக ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை மருத்துவச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். நோயாளிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றச் செலவிடும் தொகையிலிருந்தே பாஜக தனது கட்சி நிதிக்கான பங்கைப் பெறுகிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h2>'எரிகிற வீட்<strong>டில் பிடுங்கியது</strong> லாபம்'</h2><p>பாஜக, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற எண்ணத்துடன் கொள்ளையடிக்கிற நோக்கத்தில் குறியாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது எங்கு பார்த்தாலும் நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். இந்தியாவில் போலியோ, அம்மை போன்ற பல தீவிர தொற்று நோய்களை வெற்றிகரமாக ஒழித்த வரலாறு உள்ளது. ஆனால், நீரிழிவு நோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனையாக மத்திய அரசு அணுகத் தவறிவிட்டது. </p><p>மாறாக, அதை ஒரு நிதி வசூலிக்கும் வாய்ப்பாகவே ஆளும் பாஜக பார்க்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தனது முக்கியத் தீர்ப்புகளில், "இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ன் படி வாழ்வுரிமையின் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான் சுகாதார உரிமை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளும் அரசுகள் மக்களுக்கு இந்த சுகாதார உரிமையை இலவசமாகவும் நியாயமான முறையிலும் உறுதி செய்ய வேண்டுமே தவிர, கார்ப்பரேட் லாபத்திற்கும் அரசியல் கட்சி நிதிக்கும் வழியமைக்கக் கூடாது என மனோ தங்கராஜ் தனது வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.4.70 கோடி உண்டியல் வசூல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/tiruppati-temple-collects-rs-4-70-crore-in-a-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/tiruppati-temple-collects-rs-4-70-crore-in-a-day#comments</comments><guid isPermaLink="false">c6ca67d5-10e8-4c59-a43f-2fff754bb374</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:36:44 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:36:44.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பதி,Tirupati,உண்டியல் காணிக்கை,devotees rush,திருப்பதி கோவில்,Laddu Sales,Donation box collection</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/110lezhu/Tirupati-Temple" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/110lezhu/Tirupati-Temple?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகப் பிரசித்தி பெற்ற தி<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">ருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு </a>தினந்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். </p><p>இந்நிலையில், நேற்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை, உண்டியல் காணிக்கை மற்றும் லட்டு விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.</p><h2><strong>61 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்</strong></h2><p>திருப்பதி மலையில் பக்தர்களின் வருகை தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது. தேவஸ்தான புள்ளிவிவரங்களின்படி, நேற்று ஒரே நாளில் மட்டும் 61,000-க்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையானைக் கண்டு தரிசித்துள்ளனர். </p><p>குறிப்பிட்ட தேதி மற்றும் நேரம் அச்சிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல், வழக்கமான இலவச தர்ம தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்ததாகக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>தலைமுடி காணிக்கை மற்றும் உண்டியல் வருவாய்</strong></h2><p>ஏழுமலையானுக்குத் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 722 பக்தர்கள் தலைமுடி காணிக்கை அளித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பக்தர்கள் </a>தங்களின் வேண்டுதலாகக் காணிக்கையாகச் செலுத்தியதில், நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ. 4 கோடியே 70 லட்சம் உண்டியல் வருவாயாக வசூலாகியுள்ளதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.</p><h2><strong>லட்டு விற்பனை மற்றும் அன்னப்பிரசாதம்</strong></h2><p>திருப்பதிக்கு வரும் பக்தர்களின் முக்கிய அங்கமான பிரசாத விநியோகமும் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.</p><p>நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 20 ஆயிரம் லட்டுகள் பக்தர்களால் வாங்கப்பட்டு விற்பனையாகின.</p><p>திருமலைக்கு வருகை தந்த பக்தர்களில் 1 லட்சத்து 84 ஆயிரம் பேர் தேவஸ்தானம் வழங்கிய இலவச அன்னப்பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டனர்.</p><p>திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 3,189 பக்தர்கள் அவசர மற்றும் பொதுவான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.</p><p>தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ தினங்கள் இல்லாத போதிலும், ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் சீராகக் காணப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>எனது கேப்டன் பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது..!- ஷ்ரேயஸ் அய்யர்</title><link>https://www.maalaimalar.com/sports/my-captain-journey-like-roller-coaster-shreyas-iyer</link><comments>https://www.maalaimalar.com/sports/my-captain-journey-like-roller-coaster-shreyas-iyer#comments</comments><guid isPermaLink="false">40121a20-889b-47fe-a580-ba001d1bc100</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:32:45 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:32:45.335Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,ஷ்ரேயஸ் அய்யர்,ஆப்கானிஸ்தான்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/3rrwpalj/shreyas-iyer.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shreyas iyer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/3rrwpalj/shreyas-iyer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது 20 ஓவர்  போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.</p><h2>160 ரன் இலக்கு </h2><p>டெல்லியில்  நடந்த இந்த ஆட்டத்தில்  முதலில் ஆடிய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">ஆப்கானிஸ்தான்</a> அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியாவுக்கு 160 ரன் இலக்காக இருந்தது.</p><p>கேப்டன்  இப்ராகிம்  ஜத்ரன்  அதிகபட்சமாக   33  பந்தில் 37 ரன்னும் (6 பவுண்டரி),  ரஷீத் கான்  16    பந்தில் 28 ரன்னும் (3  பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.   நிதிஷ் குமார் ரெட்டி  3 விக்கெட்டும், அர்ஷ்தீப்சிங் 2  விக்கெட்டும்,  பும்ரா, அக் ஷர் படேல்,  ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டும்  வீழ்த்தினார்கள்.</p><h2>தொடரை வென்றது </h2><p>பின்னர் விளையாடிய  இந்திய அணி 31 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 160 ரன் இலக்கை எடுத்தது. 14.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.</p><p>சஞ்சு சாம்சன் 22 பந்தில் 57 ரன்னும் (7 பவுண்டரி, 4 சிக்சர்), அபிஷேக் சர்மா 19   பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), இஷான் கிஷன் 23 பந்தில் 38 ரன்னும்  (3  பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ரஷீத் கான் 3 விக்கெட்டையும் கைப்பற்றினார்.</p><p>இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. முதல் ஆட்டத்திலும் இதே மாதிரி 7 விக்கெட்டில் வீழ்த்தி இருந்தது.</p><h2>ஏற்றம்- இறக்கம்</h2><p>தொடரை வென்றது குறித்து இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் கூறியதாவது:-</p><p>கடந்த  ஆட்டத்தை  வைத்து இந்த  போட்டியில் ஒரு முழுமையான வெற்றியை  எதிர்பார்த்தோம்.   அதே மாதிரி இந்த ஆட்டம் சிறப்பாக அமைந்தது. </p><p>கேப்டனாக என்னுடைய  பயணத்தில் ஏற்றம் -  இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்தது.</p><p>கேப்டனாக என்னுடைய பயணத்தை தொடங்கிய போது கசப்பாக அமைந்தது. அதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. என்னுடைய பயணம் எப்போதுமே ஒரு ரோலர் கோஸ்டர் போல் தான் மேலே கீழே செல்லும்.</p><h2>சமநிலையான மனநிலை</h2><p>எனவே முடிந்தவரை  சமநிலையான மனநிலையில் இருக்க வேண்டும். சூழ்நிலையை   எவ்வளவு அதிகமாக ஏற்றுக் கொள்கிறீர்களோ அவ்வளவு சிறப்பாக அது அமையும்.</p><p>3-வது  போட்டியில் நிச்சயமாக மாற்றங்கள்  இருக்கும். அணியில் உள்ள அனைவரும் ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு பயிற்சி பெற வேண்டும் என்று  விரும்புகிறேன். எனவே இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.</p><p>இவ்வாறு ஷ்ரேயஸ் அய்யர் கூறினார்.</p><p>இந்திய அணி கடந்த ஜூன் மாதம் அயர்லாந்தில் 20 ஓவர் தொடரில் ஆடியது. இந்த தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக அறிமுகம் ஆனார். 2 போட்டியிலும் தோற்று இந்தியா தொடரை இழந்தது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பயணத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் அணி 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது.</p><p>ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. அவர் தலைமையில் வென்ற முதல் தொடராகும். தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் தொடரை சொந்த மண்ணில் கைப்பற்றி உள்ளது.</p><p>ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் சூர்யவன்ஷி, வாஷிங்டன் சுந்தர், ஹர்சித் ரானா, யாஷ் தாக்கூர் ஆகியோருக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்பட வில்லை. நாளைய ஆட்டத்தில் அவர்கள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>நாளை  கடைசி போட்டி </h2><p>இந்தியா- ஆப்கானிஸ்தான்  அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை (17-ந்தேதி) நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் கோரம்: பேருந்து விபத்தை நேரலை செய்த செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/tragedy-in-us-news-helicopter-covering-bus-crash-plummets-killing-three</link><comments>https://www.maalaimalar.com/news/world/tragedy-in-us-news-helicopter-covering-bus-crash-plummets-killing-three#comments</comments><guid isPermaLink="false">17f59d82-b973-4065-8264-84487f2f79f9</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:19:59 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:19:59.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,ஹெலிகாப்டர் விபத்து,Los Angeles,News Chopper crash,News helicopter,லாஸ் ஏஞ்சலஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6ok3qpbz/los.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ News Chopper crash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6ok3qpbz/los.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சாலை விபத்து தொடர்பான செய்தியை நேரலை கவரேஜ் செய்து கொண்டிருந்த NBC4 செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/terror-in-iran-plane-shakes-midair-cabin-roof-collapses">லாஸ் ஏஞ்சலஸின்</a> சேட்ஸ்வொர்த் பகுதியில் உள்ள வட மேசன் அவென்யூ அருகில், ஒரு சொகுசு கார் பயணிகள் பயணித்த மெட்ரோ பேருந்து மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இந்தக் கொடூர விபத்து காட்சிகளையும் மீட்புப் பணிகளையும் தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்புவதற்காக ஊடகங்களின் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பறந்து கொண்டிருந்தன.</p><h2>கட்டுப்பாட்டை இழ<strong>ந்து தீப்பிடித்த ஹெ</strong>லிகாப்டர்</h2><p>அப்போது NBC4 மற்றும் டெலிமுண்டோ 52 தொலைக்காட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான 'செய்தி ஹெலிகாப்டர்', வழக்கமான முறையில் மேலிருந்து விபத்துக் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டு ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து வேகமாகத் தரையை நோக்கி சரியத் தொடங்கியது. வர்த்தகக் கட்டடங்களுக்கு இடையே இருந்த கொள்கலன்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதி, ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் தீப்பற்றி எரிந்தது.</p><h2><strong>மீட்புப் பணிகள்</strong></h2><p>தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்புப் படையினர், நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் தரையில் இருந்த ஒருவர் மற்றும் விமானத்தில் பயணித்தவர்கள் உட்பட மொத்தம் 3 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் முற்றிலும் உருக்குலைந்து போனதால், விபத்துக்குள்ளான நபர்களின் விவரங்களை அடையாளம் காணும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.</p><p>விபத்து ஏற்படுவதற்குச் சில நொடிகளுக்கு முன்பு, ஹெலிகாப்டரின் என்ஜின் சத்தம் மாறியதும், 'மேலே தூக்குங்கள்'  எனக் குரல் எழுப்பிய அதிர்ச்சி தரும் ஆடியோ பதிவும் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அமெரிக்க நாட்டின் தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவை இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. என்ஜின் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரு பெரும் விபத்துகள் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் நாளை காலை சென்னை திரும்புகிறார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chennai-return-tomorrow-morning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chennai-return-tomorrow-morning#comments</comments><guid isPermaLink="false">7400c974-65f8-4bf8-b209-1bfa480c356c</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:17:43 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:17:43.797Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,சென்னை விமான நிலையம்,chennai airport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/4ob1s1as/Vijay05.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/4ob1s1as/Vijay05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லண்டன் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள முதலமைச்சர் விஜய் நாளை காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.</strong></em></p><p>தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a>  கடந்த 10-ந்தேதி லண்டன் சென்றார்.  அங்கு நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.</p><p>இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு சுமார் ரூ.12 ஆயிரத்து 300 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள், முதலமைச்சர் விஜய் முன்னிலையில்  ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>லண்டனில் தங்கி உள்ள அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி உள்ளார். தனது ரசிகர்களை தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.</p><p>லண்டன் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள முதலமைச்சர் விஜய் நாளை காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>