<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 03 Aug 2026 14:33:04 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 03 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-03-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-03-august-2026#comments</comments><guid isPermaLink="false">3d51818e-8311-4109-ba52-03a94a3844a8</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:23:38 +0000</pubDate><atom:updated>2026-08-03T13:53:20.893Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/orsv477b/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/orsv477b/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-us-war-tensions-hormuz-strait-deal-trump-claims-iran-denies">ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம்: ஹார்முஸ் நீரிணை ஒப்பந்தம் எட்டப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு; ஈரான் மறுப்பு!... </a></p><p>*டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் உடனடியாக மறுத்துள்ளார். </p><p>*அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீங்கும் வரை இந்த நிலைமையில் மாற்றம் இருக்காது என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/karntaka-cabinet-congress-mla-yashavantaraya-gouda-patil-resigns">டி.கே. சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எம்.எல்.ஏ. ராஜினாமா</a></p><p>* 2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது.</p><p>* ஆனால் அரசு அமைக்கப்பட்டபோது, ​​இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-approval-for-bike-taxis-fine-for-violations-tn-govt-to-madras-hc">பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!... </a></p><p>*தமிழகத்தில் ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>*இவை சாமானிய மக்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பகுதிநேர வாழ்வாதாரமாகவும், பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் இலக்கை அடையும் வசதியாகவும் செயல்படுகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-industrial-parks-in-kanchipuram">ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!</a></p><p>* செயிண்ட் கோபைன், ரெனால்ட்-நிசான், டெய்ம்லர் நிறுவனங்களை பார்வையிட்டார்  </p><p>* ஆயிரக்கணக்கானோர் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/students-protest-continues-in-ranchi-swiggy-zomato-orders-show-support">ராஞ்சியில் தொடரும் மாணவர்கள் போராட்டம்: 'ஸ்விகி,சொமேட்டோ' மூலம் உணவளித்து ஆதரவு!... </a></p><p>*ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் கடந்த பல நாட்களாகத் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>*மெக்டொனால்ட்ஸ் உணவு பொட்டலங்கள் முதல் சூடான இந்திய உணவுகள் வரை தினமும் நூற்றுக்கணக்கான டெலிவரி முகவர்கள் மைதானத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/lsg-captaincy-buzz-aiden-markram-plays-down">லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் குறித்த கேள்விக்கு மார்கிராம் அளித்த பதில்..!</a></p><p>* அணி உரிமையாளர்கள் எது சிறந்தது என்று கருதுகிறார்களோ அதை முடிவு செய்யலாம்.</p><p>* அணியில் திறமையான தலைவர்கள் பலர் உள்ளனர். அதனால் நான் அதுபற்றி அதிகம் கவலைப்படவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-cabinet-expansion-20-new-ministers-take-oath-today-gs-patil-elected-speaker">கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 20 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு-சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீல் தேர்வு!... </a></p><p>*தற்போது, ​​கர்நாடகாவில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 34 அமைச்சர்களுக்கு எதிராக, முதலமைச்சர் உட்பட 14 அமைச்சர்களே உள்ளனர்.</p><p>*அமைச்சர் வேட்பாளர்களுக்கான பதவியேற்பு விழா மாலை 4.05 மணிக்கு நடைபெற உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/are-officials-using-inspections-to-crack-down-on-fireworks-industry-asks-thangam-thenarasu" rel="nofollow">ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழில் செய்வோரை முடக்குவதா?- தங்கம் தென்னரசு கேள்வி</a></p><p>* தொழிலாளர்கள் அன்றாட ஊதியமிழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.</p><p>* விதிமுறைகளைப் பின்பற்றுவதும் எப்போதுமே முதன்மையானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/american-education-row-will-you-show-your-degree-certificate-cjp-founder-abhijit-dipke-questions-pm-modi">அமெரிக்க கல்வி சர்ச்சை: உங்கள் டிகிரி சர்டிபிக்கேட்டை காட்டத் தயாரா?-பிரதமர் மோடிக்கு CJP நிறுவனர் அபிஜீத் திப்கே கேள்வி... </a></p><p>*பல்கலைக்கழகம் வழங்கிய உதவித்தொகை மற்றும் நான் பெற்ற கல்விக்கடன் மூலமே எனது கல்வி செலவுகள் பூர்த்தி செய்யப்பட்டன. </p><p>*CJP கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் போராட்டங்களுக்கான நிதியை, முழு வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களிடமிருந்தே திரட்டத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/wi-vs-pak-2nd-tes-port-of-spain-west-indies-1st-day-stumps-239-for-5">பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் நாளில் 239/5</a></p><p>* ஜஸ்டின் கிரீவ்ஸ் 64 ரன்கள் உடனும், ராஸ்டன் சேஸ் 36 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர்.</p><p>* பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அலி 17 ஓவர்கள் வீசி 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-case-sub-registrar-and-assistant-officer-suspended">பழனி கோவில் நில மோசடி - சார்பதிவாளர், பெண் உதவி அலுவலர் பணியிடை நீக்கம்</a></p><p>* திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>* முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-issue-tn-government-files-case-in-supreme-court">காவிரி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு</a></p><p>* தமிழகத்திற்கு உரிய நேரத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீரை திறந்து விடவில்லை.</p><p>* காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/vinesh-phogat-on-brijbhushan-singh-acquittal-we-will-appeal" rel="nofollow">பிரிஜ்பூஷன் சிங் விடுவிப்பு: மேல்முறையீடு செய்வோம்..!- வினேஷ் போகத்</a></p><p>* வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜூலை 2-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.</p><p>* மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல்  துன்புறுத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/purnia-bypoll-prashant-kishor-leads-bjp-candidate-in-early-counting-rounds">பங்கிபூர் இடைத்தேர்தல்: பா.ஜ.க-வை முந்தி பிரசாந்த் கிஷோர் அதிரடி முன்னிலை!</a></p><p>* பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் 1,145 வாக்குகள் முன்னிலை  </p><p>* 4-வது சுற்றில் ஜன சுராஜ் 6,269 வாக்குகள் பெற்றது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parle-launches-melody-tiramisu-to-celebrate-india-italy-friendship">இந்தியா - இத்தாலி நட்புறவை கொண்டாட பார்லேயின் புதிய 'மெலோடி டிராமிசு' அறிமுகம்!</a></p><p>* பார்லே மெலோடி டிராமிசு இந்தியா-இத்தாலி நட்பை கொண்டாடுகிறது.</p><p>* மோடி+மெலோனி மீம்ஸ் உண்மை சாக்லேட்டாக மாறியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-remembered-as-defender-of-tamil-motherland">மாவீரர் தீரன் சின்னமலை 'அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர்' என உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!</a></p><p>* அன்னைத்தமிழ் மண் காத்த மாவீரர் தீரன் சின்னமலை  </p><p>* 221வது நினைவுநாள் தமிழகமெங்கும் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-session-of-parliament-both-houses-adjourned-amid-continued-uproar" rel="nofollow">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு</a></p><p>* எதிர்க்கட்சி உறுப்பினர்ள் முழக்கமிட்டனர்.</p><p>* இன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.</p><p>​​<a href="https://www.maalaimalar.com/news/national/thiruparankundram-deepam-case-supreme-court-ask-question-tn-govt">திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு: இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்?- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி</a></p><p>* ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்பரங்குன்றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்தது.</p><p>* ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-entire-joker-team-sits-in-cabinet">மொத்த ஜோக்கர் கூட்டமும் அமைச்சரவையில் உள்ளது - உதயநிதி </a></p><p>* கர்நாடகா செல்வதாக நாடகம் ஒன்றை ஆடினார் முதலமைச்சர் விஜய்.</p><p>* ரீல்ஸ் போடும் ஒரு அரசை இந்தியாவே இதுவரை கண்டது இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rajmohan-accuses-false-propaganda-keerthana" rel="nofollow">அமைச்சர் கீர்த்தனா மீது திட்டமிட்டு, வன்மத்தோடு பொய் பரப்புரை..!- அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு</a></p><p>*  நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனைவரின் வழக்குகளை முதல்வர் விஜய் ரத்து செய்திருக்கிறார்.</p><p>* ஒரு இளம் அமைச்சர் அவருடைய சாதனைகளை திட்டமிட்டு சிறுமைப்படுத்த முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-cauvery-issue-tvk-government-is-ignorant-of-history">காவிரி பிரச்சனை: தவெக அரசுக்கு வரலாறே தெரியவில்லை - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* காவிரி விவகாரம் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. </p><p>* கர்நாடக அரசாங்கம் அரசியல் கட்சி தலைவர்களை விவசாயிகளை மதித்து அனைத்து கட்சியை கூட்டியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session">சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அதிரடி: 4 அமைச்சர்களை மாற்ற முதலமைச்சர் விஜய் முடிவு!</a></p><p>* தனது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யாரையும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தின் போதே அறிவுறுத்தினார். </p><p>* சிபாரிசு கடிதம் பெறுவதற்கு பணம் பெறுகிறார்களா? என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh" rel="nofollow">பாலியல் குற்றச்சாட்டு- பிரிஜ் பூஷண் சிங்கை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு</a></p><p>* நீதிபதி அஷ்வினி பன்வார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p>* டெல்லி போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து, பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mla-markandayan-conditional-bail-granted-madras-high-court">முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின்</a></p><p>* திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார்.</p><p>* திமுக எம்.எல்.ஏ. தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kerala-rains-landslide-death-toll-rises-to-9" rel="nofollow">கேரளத்தில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு</a></p><p>* படகு கவிழ்ந்து மாயமான மீனவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.</p><p>*  விழிஞ்ஞம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி படகு கவிழ்ந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-unresolved-grievances-of-the-police-personnel-must-be-addressed">காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்!- அன்புமணி</a></p><p>* 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்குவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். </p><p>* தமிழக அரசு நினைத்தால் காவல் துறையினரின் இந்தக் குறைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-3-8-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை கடந்த 28-ந்தேதி முதல் மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-memorial-day-cm-vijay-pay-tribute">தீரன் சின்னமலை வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் விஜய்</a></p><p>* தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது. </p><p>* சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-festival-installation-showers-at-river">ஆடிப்பெருக்கு விழா - மக்கள் வசதிக்காக படித்துறையில் 'ஷவர்கள்' அமைப்பு</a></p><p>* ஆடிப்பெருக்கு நாளில் சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வர்.</p><p>* காவிரியில் தண்ணீர் இல்லாததால் புனித நீராடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app">இந்தியர்கள் அதிக நேரத்தை செலவிடும் செயலி - ஆய்வில் புதிய தகவல்</a></p><p>* ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு (பிரீ பயர்) இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.</p><p>*&nbsp;வாட்ஸ்-அப் செயலியில் மாதத்துக்கு 18 மணி நேரம் 49 நிமிடம் சராசரியாக இந்தியர்கள் செலவிடுவது் தெரிய வந்துள்ளது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates">ரிசர்வ் வங்கி இன்று முதல் ஆலோசனை- வங்கிக்கடன் வட்டியில் மாற்றம் வருமா?</a></p><p>* ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி முடிவு செய்து, 5-ந் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பார்.</p><p>* ரெப்போ ரேட் மாற்றப்படுமா என்பது குறித்து 10 பொருளாதார நிபுணர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district">காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்... தனியார் தொழிற்சாலைகளை பார்வையிடுகிறார்</a></p><p>* ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பார்வையிடுகிறார்.</p><p>* "பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. </p>]]></content:encoded></item><item><title>உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேறியது!</title><link>https://www.maalaimalar.com/news/national/the-bill-to-increase-the-number-of-supreme-court-judges-to-38-has-been-passed-in-the-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-bill-to-increase-the-number-of-supreme-court-judges-to-38-has-been-passed-in-the-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">e33d60f3-835b-4199-ab85-80b955bdbed9</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:27:31 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:27:31.773Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,Lok Sabha,Supreme Court Bill,உச்ச நீதிமன்ற மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/whjve5am/New-Project-2026-08-03T195710.887.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேறியது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/whjve5am/New-Project-2026-08-03T195710.887.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்த மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா, உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்துகிறது.</p><p>மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர்  அர்ஜுன் ராம் மேக்வால் முன்மொழிந்த இந்த மசோதா, 1956-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற சட்டத்தை மாற்றியமைக்கிறது.</p><p>வழக்குகளை விரைவில் முடிக்கவேண்டும் என்ற முக்கிய காரணத்திற்காக இந்த மசோதாவை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த கூடுதல் நீதிபதிகளுக்கான ஆண்டுச் செலவு ரூ.10.57 கோடி எனவும், அவர்களுக்கு வழங்கப்படும் அலுவல் இல்லங்கள் மற்றும் கார் என ஒருமுறை செலவு ரூ.3.47 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>1950-ல் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டபோது, ​​தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 1956-ல் 11 ஆகவும், 1960-ல் 14 ஆகவும், 1977-ல் 18 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டின் இறுதி வரை அமைச்சரவையால் நீதிபதிகளின் எண்ணிக்கை 15 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டது. </p><p>பின்னர், அப்போதைய தலைமை நீதிபதியின் வேண்டுகோளின் பேரில் அந்தக் கட்டுப்பாடு விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, 1986-ல் 18-லிருந்து 26 ஆகவும், 2009-ல் 26-லிருந்து 31 ஆகவும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் வழக்குகளில் தொடர்புடைய 112 அரசு அதிகாரிகள் இன்னும் பணியில் உள்ளனர்: RTI-ல் அதிர்ச்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/rti-revelation-112-corruption-accused-officials-still-on-duty</link><comments>https://www.maalaimalar.com/news/national/rti-revelation-112-corruption-accused-officials-still-on-duty#comments</comments><guid isPermaLink="false">a87b2fdb-2c51-4f16-86c3-1d86bbd07ede</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:25:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:25:24.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,RTI Act,மும்பை மாநகராட்சி,ஆர்.டி.ஐ. தகவல்,Brihanmumbai Municipal Corporation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/dpq1vslq/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Mumbai Corruption Cases Shock: 112 accused officials still in service]]></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai municipal corporation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/dpq1vslq/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>தகவல் அறியும் உரிமை சட்டம்</strong></h3><p>மும்பை மாநகராட்சியைச் சேர்ந்த 207 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புப் பணியகத்தின் தகவல் அறியும் உரிமை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.</p><p>மேலும் அவர்களில், 112 பேர் இன்னும் பணியில் உள்ளதாகவும், 68 பேர் தங்கள் வழக்குகளுக்கு இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><h3><strong>மும்பை மாநகராட்சி</strong></h3><p>மகராஷ்டிராவில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளின் சுயவிவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2026 ஏப்ரல் 30 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.</p><p>அரசு பணிகளில் ஊழியர்களில் 207 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 27 அதிகாரிகள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது.</p><p>இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் சுமார் 87 சதவீதம் பேர், விசாரணை முடிவடையாத நிலையில் இன்னும் பணியில் உள்ளதாகவும், சில நபர்கள் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>சமூக ஆர்வலர்</strong></h3><p>இதுகுறித்து தி யங் விசிலோப்ளவர்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜீதேந்திர கட்கே கூறுகையில், “ஒவ்வொரு ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கையும் முடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு இருக்க வேண்டும். ஊழல் வழக்குத் தொடர அனுமதிப்பது தொடர்பான முடிவுகள் உடனடியாக எடுக்கப்பட்டு, மேலும் ஊழல் வழக்குகளில் எடுக்கப்படும் நடவடிக்கை முற்றிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.</p><p>மேலும், “ஊழல் தடுப்புப் பிரிவால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், விசாரணைகள் ஏன் இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன என்பது குறித்து மகாராஷ்டிர அரசும் சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளும் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கண்டுபிடிப்புகளின்படி, மும்பை மாநகராட்சி பொறியியல் துறைதான் ஊழல் வழக்குகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>அரசு ஊழியர்கள்</strong></h3><p>மேலும் அதில், 33 துணைப் பொறியாளர்கள், 13 உதவிப் பொறியாளர்கள், 13 இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் பல மூத்த பொறியியல் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குகளில் நான்காம் நிலை ஊழியர்களான 48 துப்புரவுப் பணியாளர்கள், 24 கூலியாட்கள், 6 மேற்பார்வையாளர்கள், 6 பியூன்கள் மற்றும் பல களப் பணியாளர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>இந்தியா முழுவதும் நிலுவையில் உள்ள மிகப் பழமையான ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு 2005-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. மேலும், சில சமயங்களில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகியும் இறுதித் தீர்ப்பு எதுவும் எட்டப்படாமல் உள்ளது.</p><p>இது வெறும் தனிப்பட்ட லஞ்ச சம்பவங்களை மட்டுமல்ல, புலனாய்வு அமைப்பின் ஒரு கடுமையான தோல்வியையே பிரதிபலிக்கிறது என ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள் வாதிட்டு வருகின்றனர்.</p><p>இவர்கள் மீது ஊழல் வழக்குத் தொடர அனுமதி இல்லாமல் குற்றவியல் நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுத்துச் செல்ல முடியாது. இந்த நிர்வாகத் தாமதங்களால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது அடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.</p><p>கொரோனா பெருந்தொற்று காலத்தில், தனிமைப்படுத்தல் மையங்களுக்கும் அவசர சேவைகளுக்கும் பணியாளர்கள் தேவைப்படுவதைக் காரணம் காட்டி, முன்னர் இடைநீக்கம் செய்யப்பட்ட 43 அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தி உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம்: ஹார்முஸ் நீரிணை ஒப்பந்தம் எட்டப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு; ஈரான் மறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-us-war-tensions-hormuz-strait-deal-trump-claims-iran-denies</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-us-war-tensions-hormuz-strait-deal-trump-claims-iran-denies#comments</comments><guid isPermaLink="false">5b77f432-2986-436f-b96a-b423d57dfb68</guid><pubDate>Mon, 03 Aug 2026 13:49:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T13:49:41.257Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,அமெரிக்கா,டிரம்ப்,ஈரான்,Iran,Strait of Hormuz,ஹார்முஸ் நீரிணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/h5tt2myq/TRUMP.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TRUMP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/h5tt2myq/TRUMP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கிழக்கில் ஈரான் உடனான போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், உலக வர்த்தகத்திற்குப் மிக முக்கியமான கடல்வழியான 'ஹார்முஸ் நீரிணையை' மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.</p><p>ஈரான் மீது தீவிர ராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கப் படைகள் தயார் நிலையில்  இருந்தபோதிலும், பிராந்திய நட்பு நாடுகளின் வேண்டுகோள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்தத் தாக்குதல்கள் ரத்து செய்யப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>ஈரானின் அதிகாரப்பூர்வ மறுப்பு:</strong></h2><p>டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் உடனடியாக மறுத்துள்ளார். அமெரிக்காவுடன் எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈரான் ஈடுபடவில்லை என்றும், அண்டை நாடான 'ஓமன்' நாட்டின் வழிகாட்டலில் ஹார்முஸ் நீரிணையில் தற்காலிகப் பாதுகாப்பான கடல்வழிப் பாதையை அமைப்பது குறித்து மட்டுமே ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீங்கும் வரை இந்த நிலைமையில் மாற்றம் இருக்காது என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.</p><h2><strong>உலகப் பொருளாதாரம்:</strong></h2><p>அமெரிக்க அதிபரின் பேச்சுவார்த்தை குறித்த தகவல்களைத் தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை பேரல் ஒன்றுக்கு '$82.18' ஆகக் குறைந்துள்ளது. இது ஒரே நாளில் 5% க்கும் அதிகமான சரிவாகும். பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.</p><h2><strong>அமெரிக்க கடற்படை முற்றுகை:</strong></h2><p>அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) கீழ் 'USS Abraham Lincoln' மற்றும் 'USS George HW Bush' ஆகிய இரு பெரும் அணுசக்தி விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளன.</p><h2><strong>செங்கடல் பகுதியில் புதிய பிரச்சனை:</strong></h2><p>ஹார்முஸ் நீரிணை பிரச்சனை ஒருபுறமிருக்க, ஏமனின் ஹூதி அமைப்பினர் செங்கடல் பகுதியில் உள்ள 'பாப் அல்-மந்தேப்' நீரிணையில்  கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ளதால், சர்வதேச கடல்வழி வர்த்தகம் மேலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிழக்கு எகிப்தில் 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இஸ்ரேலிலும் அதிர்வை உணர்ந்த மக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/powerful-5-5-magnitude-earthquake-in-eastern-egypt-tremors-felt-in-israel</link><comments>https://www.maalaimalar.com/news/world/powerful-5-5-magnitude-earthquake-in-eastern-egypt-tremors-felt-in-israel#comments</comments><guid isPermaLink="false">3fd619c7-1a63-4017-9183-11e8bc2db15b</guid><pubDate>Mon, 03 Aug 2026 13:20:10 +0000</pubDate><atom:updated>2026-08-03T13:20:10.812Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,இஸ்ரேல்,Israel,நிலநடுக்கம்,Eastern Egypt,கிழக்கு எகிப்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/las87oz9/Eastern-Egypt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Eastern Egypt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/las87oz9/Eastern-Egypt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிழக்கு எகிப்தின் சூயஸ் கால்வாய் பகுதிக்கு வடக்கே 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் கடுமையான பீதியடைந்தனர். இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடான இஸ்ரேல் வரை உணரப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>எகிப்தின் வானியல் மற்றும் புவி இயற்பியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல்படி, சூயஸ் நகருக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 8 முதல் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. வடக்கு கெய்ரோவில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து 3 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். </p><p>சூயஸ் பகுதியில் ஒரு வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் ஒருவர் லேசான காயமடைந்தார். பெருமளவில் பெரிய உயிர்ச்சேதமோ, அல்லது பெரிய கட்டமைப்பு சேதங்களோ இதுவரை அறிக்கையிடப்படவில்லை.</p><h2><strong>அதிர்வுகள் உணரப்பட்ட பகுதிகள்:</strong></h2><p>தலைநகர் கெய்ரோ, சினாய் தீபகற்பம் மற்றும் காசா எல்லைப் பகுதியான எல்-அரிஷ் வரை அதிர்வுகள் பலமாக உணரப்பட்டன. மேலும் இஸ்ரேலின் பீர்ஷெபா, ஜெருசலேம் நகரின் சில பகுதிகள் மற்றும் ஜோர்டான், லெபனான் நாடுகளிலும் அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><h2><strong>அவசரநிலை பிரகடனம்:</strong></h2><p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எகிப்திய சுகாதார அமைச்சர் காலித் அப்தெல் கஃபார், நாடு தழுவிய அவசரக்கால செயல்பாட்டுத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆம்புலன்ஸ் சேவைகளை அதிஉயர் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய மற்றும் பலவீனமான கட்டிடங்களை விட்டு விலகி பாதுகாப்பாக இருக்குமாறு எகிப்திய செஞ்சிலுவைச் சங்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><h2><strong>ஆண்ட்ராய்டு எச்சரிக்கை:</strong></h2><p>நிலநடுக்கத்தின் போது இஸ்ரேல் மக்களுக்கு மொபைல் போன்களில் நிலநடுக்க எச்சரிக்கை வந்தது. இந்த எச்சரிக்கை இஸ்ரேல் ராணுவத்தின் 'ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட்' பாதுகாப்பு அமைப்பால் அனுப்பப்படவில்லை என்றும், கூகுளின் 'ஆண்ட்ராய்டு' தானியங்கி எச்சரிக்கை அமைப்பால் அனுப்பப்பட்டது என்றும் இஸ்ரேல் புவியியல் ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>ஒரே நேரத்தில் பல ஆண்ட்ராய்டு போன்கள் அதிர்வுக்குள்ளானதை உணர்ந்த கூகுள் சென்சார்கள், நிலநடுக்கம் எனத் தவறாகக் கணித்து மக்களுக்கு எச்சரிக்கை மெசேஜை அனுப்பியுள்ளன. இஸ்ரேலின் சொந்த எச்சரிக்கை அமைப்பான 'த்ரூஆ' நிலநடுக்கத்தைக் கண்டறிந்த போதிலும், அது எல்லைக்கு அப்பால் நடந்த குறைந்த தீவிரமுடைய நிலநடுக்கம் என்பதால் அதிகாரப்பூர்வ எச்சரிக்கையை வெளியிடவில்லை.</p>]]></content:encoded></item><item><title>டி.கே. சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எம்.எல்.ஏ. ராஜினாமா</title><link>https://www.maalaimalar.com/news/national/karntaka-cabinet-congress-mla-yashavantaraya-gouda-patil-resigns</link><comments>https://www.maalaimalar.com/news/national/karntaka-cabinet-congress-mla-yashavantaraya-gouda-patil-resigns#comments</comments><guid isPermaLink="false">19951f68-ea2d-4623-ae69-41d532546605</guid><pubDate>Mon, 03 Aug 2026 13:07:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T13:07:41.315Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,DK Shivakumar,டிகே சிவக்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/g5oerw4m/DKShivakumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டி.கே. சிவக்குமார்- யஷ்வந்தராயகௌடா பாட்டீல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/g5oerw4m/DKShivakumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநில மந்திரி சபை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காததால், அதிருப்தி அடைந்த யஷ்வந்தராய கௌடா பாட்டீல் என்ற எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><h2>யஷ்வந்தராய கௌடா பாட்டீல்</h2><p>கர்நாடக மாநில முதல்வராக <a href="https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-cm-requests-karnataka-cm-dk-shivakumar-to-release-9-9-tmc-water-in-cauvery">டி.கே. சிவக்குமார்</a> பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் புதிதாக 20 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.</p><p>இந்த நிலையில் அமைச்சரவை பட்டியலில் இடம் இல்லாத குறித்தும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது குறித்தும் யஷ்வந்தராயகௌடா பாட்டீல் கூறியதாவது:-</p><p>இன்று காலை வரை அமைச்சரவைக்கான பட்டியலில் தனது பெயர் இருந்தது. தனக்கு அது குறித்த தகவல் கூட வந்திருந்தது. ஆனால் கட்சி வெளியிட்ட இறுதிப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை.</p><p>கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகளை நான் கவனித்து வருகிறேன். இறுதியில், இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, ​​நமது தலைமை அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டது. எனவே, வேறு வழியின்றி நான் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டேன்.</p><p>இது என் மனசாட்சிக்கு ஏற்புடையதல்ல. விஜயபுரா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் விசுவாசத்திற்கும் நேர்மைக்கும் மதிப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது. எனக்கு வேறு வழியில்லை. எனது ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன்.</p><h2>அமைச்சர் பதவி தருவதாக உறுதி</h2><p>2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அரசு அமைக்கப்பட்டபோது, ​​இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும் அவர்கள் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டனர். எனக்கு வேறு வழியில்லை. நான் கட்சியிலிருந்து விலகவில்லை, ஆனால் என்னை ராஜினாமா செய்யத் தூண்டும் சூழலை அவர்களே உருவாக்கிவிட்டனர்.</p><p>நான் எட்டுத் தேர்தல்களைச் சந்தித்த ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி. நான் எடுத்த முடிவுகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இது எனது தொகுதி வாக்காளர்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை.</p><p>இவ்வாறு யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல் தெரிவித்தார்.</p><p>யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல் தனது ராஜினாமா கடிதத்தை பெங்களூருவில் உள்ள விதான சௌதாவில் சட்டமன்ற துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானியிடம் சமர்ப்பித்தார்.</p><p>இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>பீகாரில் தகர்ந்த பாஜக கோட்டை... மூன்று மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/news/national/bjps-stronghold-crumbles-in-bihar-results-of-by-elections-in-three-states</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjps-stronghold-crumbles-in-bihar-results-of-by-elections-in-three-states#comments</comments><guid isPermaLink="false">13c47371-9c70-43e4-80e8-f5a978aedb4b</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:59:26 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:59:26.946Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,Assembly Constituencies,bye election,இடைத்தேர்தல்,சட்டமன்ற தொகுதிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/7jlg9m10/New-Project-2026-08-03T180849.900.jpg" width="1501"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பீகாரில் தகர்ந்த பாஜக கோட்டை... மூன்று மாநில இடைத்தேர்தல் முடிவுகள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/7jlg9m10/New-Project-2026-08-03T180849.900.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜினாமா, தகுதி நீக்கம், மரணம் உள்ளிட்ட காரணங்களால் பீகார், ம.பி., குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டமன்ற தொகுதி காலியானது. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினின் ராஜினாமாவைத் தொடர்ந்து பீகாரின் பாங்கிபூர் சட்டமன்ற தொகுதி காலியானது.</p><p>மத்தியப் பிரதேசத்தில், ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ததியா தொகுதி காலியானது. குஜராத்தில், யோகேஷ்பாய் நரந்தாஸ் படேலின் மரணத்தால் மஞ்சள்பூர் காலியானது.</p><p>இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஜூலை 30ம் தேதி வாக்குப்பதிவும், இன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.</p><p>இந்நிலையில் பீகாரில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சியும், குஜராத்தில் பாஜகவும்,  ம.பி.யில் காங்கிரஸும் வெற்றிப் பெற்றுள்ளன.</p><h2>பிரசாந்த் கிஷோர் வெற்றி</h2><p>பீகாரில் பாஜக வேட்பாளர் நீரஜ்குமாரை 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.</p><p>காரணம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் பாங்கிபூர் தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வந்தது. இந்த இடைத்தேர்தலில் அந்தக் கோட்டை தகர்த்தப்பட்டு, பாஜகவிற்கு பெரும் இடியாக இறங்கியுள்ளது. </p><p>கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் பொதுத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்திருந்தது. அதன் பின், பிரசாந்த் கிஷோர் நேரடியாகக் களம் கண்ட முதல் தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில் வென்றதன் மூலம் அவர் முதல்முறையாக பீகார் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார். </p><p>இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பீகாரின் பாட்னாவில் உள்ள ஜன் சுராஜ் கட்சித் தலைமையகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கிப் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>குஜராத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் என இருதரப்பு மட்டுமே போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிக்காபாய் ரபாரியை 30,630 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சதேந்திர பாய் படேல் தோற்கடித்துள்ளார்.</p><p>ம.பி.யில் 6016 வாக்குகள் அதிகம்பெற்று பாஜக வேட்பாளர் அஷுதோஷ் திவாரியை தோற்கடித்துள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங். </p>]]></content:encoded></item><item><title>ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தீவிர டிரோன் தாக்குதல்: 8 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/russia-says-635-ukrainian-drones-downed-in-deadly-overnight-attack</link><comments>https://www.maalaimalar.com/news/world/russia-says-635-ukrainian-drones-downed-in-deadly-overnight-attack#comments</comments><guid isPermaLink="false">66a3e236-73b6-438e-99b1-4182117a097c</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:50:28 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:50:28.793Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,டிரோன் தாக்குதல்,ரஷ்யா,உக்ரைன்,DroneAttack,Wildberries,வில்ட்பெர்ரிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/u09dvsce/DRONE.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DRONE ATTACK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/u09dvsce/DRONE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷ்யாவின் பல பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் ஒரே இரவில் நடத்திய தீவிரமான டிரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். அதேவேளையில், தங்கள் நாட்டு வான்வழிப் பகுதியை நோக்கி வந்த 635 உக்ரேனிய டிரோன்களை வான் பாதுகாப்பு மண்டலம் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>எல்லைப் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தின் அருகே உக்ரேனிய டிரோன் விழுந்து வெடித்ததில் ஒரு குழந்தை உயிரிழந்தது. மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர். மற்ற இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் மேலும் 3 பேர் பலியாகினர். இதனைதொடர்ந்து, எங்கெல்ஸ் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றின் மீது டிரோன் விழுந்து தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். </p><p>இங்குள்ள ராணுவ விமானதளம் மற்றும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. உட்முர்டியா பகுதியில் நடந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். தொழில்துறை மையமான உஃபா நகரில் டிரோன் வீழ்த்தப்பட்டதால் பெருந்தீ விபத்து ஏற்பட்டது.</p><h2><strong>வணிக மையங்கள் மீது தாக்குதல்:</strong></h2><p>ரஷ்யாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான 'வில்ட்பெர்ரிஸ்'  நிறுவனத்தின் கிடங்குகளை உக்ரைன் டிரோன்கள் தாக்கியுள்ளன. ரஷ்யாவின் பொருளாதாரத்தையும் விநியோகச் சங்கிலியையும் முடக்கும் உத்தியாக உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><h2><strong>ரஷ்யாவின் பதில் தாக்குதல்:</strong></h2><p>உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடியாக, ரஷ்ய படைகளும் உக்ரைன் மீது சரமாரி தாக்குதல்களை நடத்தியுள்ளன. ராணுவப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரு கப்பல்கள் மற்றும் கருங்கடல் பகுதியில் சென்ற மற்றொரு விநியோகக் கப்பல் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி அழித்தன. தென்கிழக்கு உக்ரைனின் முக்கியமான நகரமான ஸபோரிழியா மீது ரஷ்யா வீசிய குண்டுகளால் ஒருவர் உயிரிழந்தார். 21 பேர் காயமடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி- நாளை முதல் தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/eight-teams-participating-tnpl-20-over-cricket-tournament-begins-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/sports/eight-teams-participating-tnpl-20-over-cricket-tournament-begins-tomorrow#comments</comments><guid isPermaLink="false">d27ea1cb-3163-4786-972f-dfceb71de136</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:43:23 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:43:23.258Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரிக்கெட் போட்டி,tnpl,திண்டுக்கல் டிராகன்ஸ்,டிஎன்பிஎல் கிரிக்கெட்,Tiruppur Tamizhans,Dindugul draganos</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0arxghij/TNPL.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL 2026]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0arxghij/TNPL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில்  டி.என். பி.எல். ( தமிழ்நாடு பிரீ மியர் லீக்) போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.</p><p>இதுவரை 9 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. இதில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிகபட்சமாக 4 முறை (2017, 2019, 2021, 2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.</p><p>கோவை கிங்ஸ் 2 தடவையும் (2022, 2023), டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018), திண்டுக்கல் டிராகன்ஸ் (2024), திருப்பூர் தமிழன்ஸ் (2025) ஆகியவை தலா ஒரு முறையும்   கோப்பையை வென்று உள்ளன.</p><h2>டி.என்.பி.எல். போட்டி நாளை தொடக்கம் </h2><p>10-வது  டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (4-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை 2 கட்டமாக இந்த போட்டி நடத்தப்படுகிறது. </p><p>முதல் கட்ட போட்டிகள் நாளை  முதல் 15-ந்தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், இறுதிப்போட்டி உள்ளிட்ட 2-வது கட்ட ஆட்டங்கள்  18-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடக்கிறது. </p><h2>8 அணிகள் </h2><p>இதில் 4 முறை  டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் , நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் </p><p>ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.</p><p>ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக்  முடிவில் புள்ளிகள்  அடிப்படையில்  முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி கள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். </p><p>மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில்  திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17- ந் தேதி ஓய்வு தினமாகும். </p><p>22-ந் தேதியுடன் லீக் சுற்று முடிவடைகிறது. குவாலி பையர்-1 போட்டி  23-ந் தேதியும், எலிமினேட்டர்  ஆட்டம் 24-ந் தேதியும், குவாலிபையர்-2 போட்டி 26-ந்தேதியும், இறுதிப் போட்டி  28-ந்தேதியும் நடக்கிறது.</p><h2>திருப்பூர்-திண்டுக்கல்</h2><p>நாளை (செவ்வாய்கிழமை) நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. வெற்றியுடன்  தொடங்கப் போவது யார் ? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி டென் 4 தமிழ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதேபோல யூடியூபிலும்  டி.என்.பி.எல். போட்டியை காணலாம்.</p><h2>சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</h2><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் போட்டியில் நெல்லை ராயல் கிங்சை 5-ந்தேதி (இரவு 7.30) எதிர்கொள்கிறது. </p><p>அன்று முன்னதாக மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில்  திருச்சி கிராண்ட் சோழாஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>துலீப் டிராபி: வடக்கு மண்டல அணி கேப்டனாக ஜம்மு-காஷ்மீர் விக்கெட் கீப்பர் நியமனம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/central-zone-captain-kanhaiya-wadhawan-24-year-old-to-lead-arshdeep-singh-ayush-badoni-in-duleep-trophy</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/central-zone-captain-kanhaiya-wadhawan-24-year-old-to-lead-arshdeep-singh-ayush-badoni-in-duleep-trophy#comments</comments><guid isPermaLink="false">d0937686-98de-4303-8624-51725cdd77d5</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:37:15 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:37:15.925Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>துலீப் டிராபி,Duleep Trophy,Kanhaiya Wadhawan,கணையா வதாவன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/9ljru5lv/KanhaiyaWadhawan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கணையா வதாவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/9ljru5lv/KanhaiyaWadhawan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மிகப் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்று துலீப் டிராபி. இது வடக்கு, தேற்கு, மேற்கு, வடகிழக்கு, மத்தி, கிழக்கு ஆகிய 6 மண்டலமாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.</p><h2>கணையா வதாவன்</h2><p>ஆகஸ்ட் 23-ந்தேதி இந்தத் தொடர் தொடங்குகிறது. இந்த நிலையில் வடக்கு மண்டலம் (North Zone) அணியின் கேப்டனாக ஜம்மு-காஷ்மீர் மாநில விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கணையா வதாவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் கீழ் இந்திய அணிக்காக விளையாடி வரும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆயுஷ் படோனி விளையாட உள்ளனர்.</p><p>2025-26 ரஞ்சி டிராபியை ஜம்மு-காஷ்மீர் அணி வென்றது. அப்போது, இந்தியா முழுவதும் இந்த கணையா வதாவன் தெரியவந்தார்.</p><h2>யார் இந்த கணையா வதாவன்</h2><p>ஜம்முவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தவர் கணையா வதாவன். 17 வயதில் 2018-19 ரஞ்சி டிராபி சீசனில் அசாம் அணிக்கு எதிராக முதன்முதலில் முதல்தர கிரிக்கெட்டில் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக விளையாடினார்.</p><p>ஆனால், ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக விளையாடிய அடுத்தப் போட்டியில் இவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.</p><p>அதன்பின் 2019-20, 2021-22, 2022-23, 2023-24, 2024-25 ரஞ்சி டிராபிக்கான ஜம்மு-காஷ்மீர் அணியில் இடம் கிடைக்கவில்லை.</p><h2>கடந்த துலீப் டிராபி சீசனில் அசத்தல்</h2><p>கடந்த வரும் துலீப் டிராபிக்கான வடக்கு மண்டலம் அணியில் இடம் பிடித்தார். அப்போது இரண்டு போட்டிகளில் 99 ரன்கள் அடித்தார். இதில் ஒரு போட்டியில் அரைசதம் அடித்தார். இதனால் 2025-26 ரஞ்சி டிராபிக்கான ஜம்மு-காஷ்மீர் அணியில் இடம் பிடித்தார்.</p><p>இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 10 போட்டிகளில் 474 ரன்கள் விளாசினார். சராசரி 36.46 ஆகும். ஒரு சதம், இரண்டு அரைசதங்கள் அடித்தார். கர்நாடகா அணிக்கெதிராக இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்தார். இமாச்சல பிரதேசம் அணிக்கெதிராக சதம் அடித்தார்.</p><h2>அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 3-வது இடம்</h2><p>ஜம்மு-காஷ்மீர் அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்தார். தற்போது வரை 16 முதல்தர போட்டிகளில் 883 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதம், 6 அரைசதங்கள் அடங்கும்.</p><p>கடந்த வருடம் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் டி20 அணியில் அறிமுகம் ஆனார். 4 போட்டிகளில் 77 ரன்கள் சேர்த்தார்.</p><p>ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிதன் மூலம் அவருக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘நிழல் போல நானும் நடை போட நீயும்’ - மனைவி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/walking-side-by-side-like-a-shadow-ajith-kumar-to-act-in-a-film-produced-by-his-wife</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/walking-side-by-side-like-a-shadow-ajith-kumar-to-act-in-a-film-produced-by-his-wife#comments</comments><guid isPermaLink="false">c003e21a-08eb-440c-92c2-6666ddef84c1</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:32:32 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:32:32.758Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Ajith Kumar,அஜித்குமார்,shalini,ஷாலினி,Dare Devil,டேர் டெவில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4xievx7g/New-Project-2026-08-03T175803.564.jpg" width="1501"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நிழல் போல நானும் நடை போட நீயும்’ - மனைவி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4xievx7g/New-Project-2026-08-03T175803.564.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குட் பேட் அக்லி-யைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கிறார்.</p><p>இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை நடிகையும், அஜித்குமாரின் மனைவியுமான ஷாலினி அஜித்குமாரே தயாரிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ப்ரேவ்ஹார்ட்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். </p><p>மேலும் படத்திற்கு டேர் டெவில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஷாலினி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானநிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. </p><p>இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr"><a href="https://x.com/hashtag/DareDevil?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DareDevil</a> - <a href="https://x.com/hashtag/AjithKumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumar</a> <a href="https://x.com/hashtag/ShaliniAjithkumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ShaliniAjithkumar</a>  <a href="https://x.com/hashtag/BraveHeartsProduction?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BraveHeartsProduction</a> <a href="https://x.com/Adhikravi?ref_src=twsrc%5Etfw">@Adhikravi</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/SureshChandraa?ref_src=twsrc%5Etfw">@SureshChandraa</a> <a href="https://x.com/AbinandhanR?ref_src=twsrc%5Etfw">@AbinandhanR</a> <a href="https://x.com/editorvijay?ref_src=twsrc%5Etfw">@editorvijay</a> <a href="https://x.com/supremesundar?ref_src=twsrc%5Etfw">@supremesundar</a> <a href="https://x.com/hashtag/Subbhunaarayan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Subbhunaarayan</a> <a href="https://x.com/itsanuvardhan?ref_src=twsrc%5Etfw">@itsanuvardhan</a> <a href="https://x.com/kayoas13?ref_src=twsrc%5Etfw">@kayoas13</a> <a href="https://x.com/valentino_suren?ref_src=twsrc%5Etfw">@valentino_suren</a> <a href="https://x.com/DoneChannel1?ref_src=twsrc%5Etfw">@Donechannel1</a> <a href="https://x.com/AbdulNassarOffl?ref_src=twsrc%5Etfw">@AbdulNassarOffl</a> <a href="https://x.com/AMBANINSK?ref_src=twsrc%5Etfw">@AMBANINSK</a><a href="https://x.com/hashtag/AK64?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AK64</a> <a href="https://t.co/ccUoL0Zltg">pic.twitter.com/ccUoL0Zltg</a></p>&mdash; Suresh Chandra (@SureshChandraa) <a href="https://x.com/SureshChandraa/status/2084250997606785085?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>டிமான்டி காலனி 3 படத்தின் ‘ரத்தத்த தா’ பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-song-rathaththa-dhaa-from-the-movie-demonte-colony-3-has-been-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-song-rathaththa-dhaa-from-the-movie-demonte-colony-3-has-been-released#comments</comments><guid isPermaLink="false">9981bd9e-8c44-4547-b5df-3b8503462a5e</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:15:13 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:15:13.658Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arulnithi,அருள்நிதி,டிமான்டி காலனி 3,Demonte Colony saga</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/hg5g2g32/New-Project-2026-08-03T174434.973.jpg" width="1501"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிமான்டி காலனியின் ‘ரத்தத்த தா’ பாடல் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/hg5g2g32/New-Project-2026-08-03T174434.973.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் டிமான்டி காலனி 3. ‘டிமான்டி காலனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம், அதன் தொடர்ச்சியாக தற்போது மூன்றாவது பாகம் உருவாகியுள்ளது. </p><p>இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மூன்றாவது பாகத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஃபேஷன் ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்கிறது. </p><p>இப்படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரத்தத்த தா வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Jd2N7QsDsrY"></iframe></figure>]]></content:encoded></item><item><title>பீகாரில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து: 3 பெட்டிகள் எரிந்து சேதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/fire-accident-on-passenger-train-in-bihar-3-coaches-damaged</link><comments>https://www.maalaimalar.com/news/national/fire-accident-on-passenger-train-in-bihar-3-coaches-damaged#comments</comments><guid isPermaLink="false">5942529a-8cc6-49e0-93f0-53ff60d2f376</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:13:07 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:13:07.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Train,fire accident,பீகார்,Bihar,தீ விபத்து,ரெயில் தீ விபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4fkpn86f/train.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Train fire accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4fkpn86f/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர்- சஹர்சா இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை 3 மணியளவில் சஹர்சா மாவட்டத்தில் உள்ள சிம்ரி பக்தியார்பூர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது என்ஜின் பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது.</p><p>சிறிது நேரத்தில் என்ஜினுடன் இணைக்கப்பட்ட மற்ற பெட்டிகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக ரெயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>பயணிகள் ரெயில் சிம்ரி பக்தியார்பூர் நிலையத்தை அடைந்தபோது, ​​அதன் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. திடீரென்று தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தீ விரைவாக அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த 3 பெட்டிகளுக்கும் பரவியது. தீ விபத்து நடந்த போது பெரும்பாலான பய ணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.</p><p>தீப்பிடித்து எரிவது பற்றிய தகவல் கிடைத்தவுடன், ரெயிலுக்குள் பீதி ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக ரெயிலில் இருந்து இறங்கி ஓடினார்கள். அனைத்து பயணிகளும் உரிய நேரத்தில் ரெயிலில் இருந்து வெளியேறிவிட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.</p><p>ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும், ரெயில்வே பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். </p><p>சுமார் 2½ மணி நேரம் போராடிய பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சிம்ரி பக்தியார்பூர் ரெயில் நிலையத்தில் காலை 6 மணிக்கு பிறகு மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-approval-for-bike-taxis-fine-for-violations-tn-govt-to-madras-hc</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-approval-for-bike-taxis-fine-for-violations-tn-govt-to-madras-hc#comments</comments><guid isPermaLink="false">6122e182-1437-4edd-82a2-7eb7bc0c2e9f</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:10:18.540Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,உயர்நீதிமன்றம்,High Court,Tamilnadu Government,Bike taxis,பைக் டாக்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/625rp9hw/tamil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bike taxi
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/625rp9hw/tamil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் அரசு உரிய கொள்கை முடிவை எடுக்கும் வரை பைக் டாக்சிகளை இயக்குவதற்கு அனுமதி கிடையாது என்றும், விதிகளை மீறி பைக் டாக்சிகளை இயக்கினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளது.</p><p>மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.நவீன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சாமானிய மக்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பகுதிநேர வாழ்வாதாரமாகவும், பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் இலக்கை அடையும் வசதியாகவும் செயல்படுகின்றன. </p><p>இருப்பினும், இதற்கென மாநில அரசு தெளிவான விதிகளை வகுக்காததால், காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பைக் ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதித்து வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றனர். ஆனால், பைக் டாக்சி நிறுவனங்களை கட்டுப்படுத்தாமல், ஓட்டுநர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது நியாயமற்றது. மத்திய அரசின் மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பைக் டாக்சிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை (Motor Vehicle Aggregator Guidelines) உடனடியாக உருவாக்க வேண்டும் என கோரப்பட்டது.</p><h2><strong>அரசு தரப்பு வாதம்:</strong></h2><p>இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில், பைக் டாக்சிகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறை, நிதித் துறை மற்றும் 'கும்டா' (CUMTA) பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>கொள்கை முடிவு:</strong></h2><p>இந்த விவகாரத்தில் அரசு விரிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளது. கொள்கை முடிவு எடுக்கப்படும் வரை தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது. விதிகளை மீறி யாரேனும் பைக் டாக்சி இயக்கினால் தொடர்ந்து அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும் எனத் தெரிவித்தார்.</p><h2><strong>பொதுமக்கள் விழிப்புணர்வு:</strong></h2><p>பைக் டாக்சிகளுக்குத் தற்போது அனுமதி இல்லை என்றால், அதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அரசு விளம்பரப்படுத்தவோ அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தவோ கூடாது. பைக் டாக்சிகளில் பயணத்தின் போது விபத்து ஏதும் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பது? பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.</p><h2><strong>விரைவு முடிவு:</strong></h2><p>பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து அரசு விரைந்து கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர். மனுதாரர் தரப்பில் மத்திய அரசு சட்டப்படியும் வழிகாட்டுதலின்படியும் பைக் டாக்சிகளுக்கு அனுமதி உள்ளதாக வாதிடப்பட்ட நிலையில், இந்த வழக்கு குறித்த அடுத்தகட்ட விசாரணைகள் மற்றும் கொள்கை முடிவு அறிவிப்புகளைத் தலைமை நீதிமன்றம் உற்றுநோக்கி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராமராக ரன்பீர் கபூர்... ஏற்க மறுக்கும் ரசிகர்கள்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ranbir-kapoor-as-rama-fans-refuse-to-accept-it</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ranbir-kapoor-as-rama-fans-refuse-to-accept-it#comments</comments><guid isPermaLink="false">8b81a760-0843-45a5-9a86-32f042bc3a56</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:50:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:50:33.389Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Ramayana,ரன்பீர் கபூர்,Ranbir Kapoor,ராமாயணா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xengnoic/New-Project-2026-08-03T165625.069.jpg" width="1501"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமராக ரன்பீர் கபூர்... ஏற்க மறுக்கும் ரசிகர்கள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xengnoic/New-Project-2026-08-03T165625.069.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிதிஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி, இந்தியா முழுவதும் இந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளப் படம் இந்துக்களின் புராணக் கதைகளில் ஒன்றான ராமாயணத்தை கருப்பொருளாக கொண்டு உருவாகியுள்ள ராமாயணா.</p><p>இப்படத்தில் ராமராக பாலிவுட் நட்சத்திரம் ரன்பீர் கபூரும், சீதையாக சாய்பல்லவியும், ராவணனாக யஷ்ஷும் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி 35 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. ஆனால் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இதனை சூழ்ந்துள்ள ஒரு சர்ச்சை என்றால் அது ராமர் கதாப்பாத்திர தேர்வுதான்.</p><p>ரன்பீர் கபூரின் கடந்தகால வாழ்க்கைகள் மற்றும் முகத்தில் ராமருக்கான கலை இல்லை என பல காரணங்கள் இதற்கு முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் புகழ்பெற்ற ராமாயணம் தொடரின் இயக்குநர் ராமானந்த் சாகரின் பேரனும் ரன்பீர் கபூரின் தேர்வு குறித்துப் பேசியுள்ளது வைரலாகி வருகிறது. </p><p>ராமானந்தின் பேரனான ஷிவ் சாகர் இதுதொடர்பாக பேசியுள்ளதாவது;</p><p>“நான் டிரெய்லரைப் பார்த்தேன். அவர்கள் முன்பு வெளியிட்ட டீசரில் மிகக் குறைவான தகவல்களே இருந்ததால் டிரெய்லர், ப்ரோமோவை விட மிகவும் சிறப்பாக இருந்தது. டிரெய்லரில், கதாபாத்திரங்களையும், விஎஃப்எக்ஸ்-ஐயும் அதிகமாகக் காண முடிந்தது. </p><p>ஒட்டுமொத்தமாக, ராவணனாக யஷ் மற்றும் சீதையாக சாய் பல்லவியின் தேர்வு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏனென்றால் அவர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். தென்னிந்திய நடிகர்களுக்கு நமது புராணங்கள் நன்கு புரியும். இந்தக் கதைகளை அவர்கள் சிறு வயதிலிருந்தே தங்கள் தாத்தா, பாட்டிகளால் சொல்லப்பட்டு வந்திருக்கிறார்கள். </p><p>அதனால், அவர்களுக்கு அந்தக் கதாபாத்திரங்களின் உடல்மொழிகள் நன்றாகத் தெரியும். இந்தக் கதாபாத்திரங்களையும் அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் யஷ் மற்றும் சாய் பல்லவியால் இந்தக் கதாபாத்திரங்களைத் தங்கள் நடிப்பில் முழுமையாக உள்வாங்க முடிந்தது என்று நான் நினைக்கிறேன். ஆனால், மற்ற நடிகர்களை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.</p><p>பொதுவாக நாங்கள் ராமர் போன்ற ஒரு கதாபாத்திரத்திற்கு ஒரு புதுமுகத்தைத் தேர்ந்தெடுப்போம். ஏனென்றால், 'அனிமல்' படத்திற்குப் பிறகு ரன்பீர் ராமராக ஏற்றுக்கொள்ளப்படுவாரா என்று எனக்கு உண்மையில் தெரியவில்லை, ஆனால் விஎஃப்எக்ஸ் மிகவும் நன்றாக இருந்தது.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-industrial-parks-in-kanchipuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-industrial-parks-in-kanchipuram#comments</comments><guid isPermaLink="false">50d2b10c-b4b8-4166-a73b-d54cbb894075</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:41:26 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:41:26.237Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Sriperumbudur,Renault Nissan,cm vijay,முதலமைச்சர் விஜய்,CMVijay Inspection,Oragadam SIPCOT,ஒரகடம் சிப்காட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/teuaqqeb/CM-Vijay-Inspection" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay Inspection ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/teuaqqeb/CM-Vijay-Inspection?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புதிய உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D"> முதலமைச்சர் ஜோசப்</a> விஜய் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் சிப்காட் தொழில் வளாகங்களில் நேரடி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.</p><h2><strong>செயிண்ட் கோபைன் கண்ணாடி ஆலையில் ஆய்வு:</strong></h2><p>ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை மற்றும் மாம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் நாட்டின் பன்னாட்டு நிறுவனமான 'செயிண்ட் கோபைன்' உலகத்தரம் வாய்ந்த கண்ணாடி தயாரிப்பு வளாகத்தில் தனது முதல் ஆய்வை முதலமைச்சர் மேற்கொண்டார்.</p><p>தமிழக அரசுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்த ஆலை மிகப்பிரம்மாண்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. </p><p>அங்கு தயாரிக்கப்படும் அதிநவீன கண்ணாடி உற்பத்திப் பிரிவுகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். </p><p>முதலமைச்சரின் வருகையை ஒட்டி, அப்பகுதியின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பொதுமக்களும் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><h2><strong>ரெனால்ட்-நிசான் நிறுவனத்திலும் ஆய்வு:</strong></h2><p>கண்ணாடி ஆலை நிறுவன ஆய்வை முடித்து விட்டு, அதனைத் தொடர்ந்து ஒரகடம் பகுதியிலேயே அமைந்துள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்-நிசான் தொழிற்சாலைக்கும் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டார். </p><p>முதலமைச்சர் விஜய்க்கு அங்கிருந்த அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.</p><h2><strong>அடுத்த இலக்கு: ஒரகடம் 'டெய்ம்லர் இந்தியா' ஆலை:</strong></h2><p>முதலமைச்சர் விஜய் அடுத்ததாக ஒரகடம் சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் அமைந்துள்ள 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' மற்றும் 'டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்' உற்பத்தித் தொழிற்சாலைக்கு ஆய்வுக்காக விரைந்துள்ளார்.</p><p>சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை இந்தியாவின் மிகப்பிரம்மாண்டமான வணிக வாகன உற்பத்தி மையங்களில் ஒன்றாகும். </p><p>உலகப் புகழ்பெற்ற 'பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட நவீன பஸ்கள், கனரக லாரிகள் மற்றும் பஸ் சேஸ்கள் இங்கு சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.</p><p> தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆலையின் உற்பத்தித் திறன், எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலன்கள் குறித்து முதலமைச்சர் விஜய் அடுத்ததாகநேரில் ஆய்வு செய்ய உள்ளார்.</p><h2><strong>பயணத்தின் முக்கிய நோக்கம்:</strong></h2><p>தமிழகத்தை இந்தியாவின் முதன்மை முதலீட்டு மையமாக மாற்றுவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும். </p><p>பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தித் திறனை நேரில் மதிப்பீடு செய்வதன் மூலமும், தொழில்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும் மாநிலத்தில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராஞ்சியில் தொடரும் மாணவர்கள் போராட்டம்: &apos;ஸ்விகி,சொமேட்டோ&apos; மூலம் உணவளித்து ஆதரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/students-protest-continues-in-ranchi-swiggy-zomato-orders-show-support</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-protest-continues-in-ranchi-swiggy-zomato-orders-show-support#comments</comments><guid isPermaLink="false">46b90850-3b7f-486d-86c7-4d3dacb1fd9c</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:38:57 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:38:57.816Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,Zomato,சொமேட்டோ,ராஞ்சி,Ranchi protests,Student protests</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/th8t2gv5/raanchi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ranchi protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/th8t2gv5/raanchi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்ட் மாநில பொதுச்சேவை ஆணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வு ஆணையம் (JSSC) நடத்திய அரசு வேலைவாய்ப்புப் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடந்துள்ளதாகக் கூறி, ஆயிரக்கணக்கான தேர்வர்களும் மாணவர்களும் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் கடந்த பல நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இப்போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், முன்பின் தெரியாத மனிதர்கள் காட்டும் 'டிஜிட்டல் மனிதநேயம்' புதிய சமூகப் புரட்சியாக மாறியுள்ளது.</p><h2><strong>'ஸ்விகி, சொமேட்டோ' மூலம் குவியும் உணவுப் பொட்டலங்கள்</strong></h2><p>டெல்லியில் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, அதே போன்ற ஒரு நெகிழ்ச்சியான ஆதரவு அலை தற்போது ராஞ்சியிலும் வீசத் தொடங்கியுள்ளது.</p><h2><strong>அநாமதேயக் கொடையாளர்கள்:</strong></h2><p>மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூர நகரங்களில் வாழும் பொதுமக்கள், ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளான 'Swiggy' மற்றும் 'Zomato' மூலம் உணவுகளை ஆர்டர் செய்து ராஞ்சி போராட்டக் களத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். உணவை ஆர்டர் செய்யும் நபர்கள், "ராஞ்சி மைதானத்தில் பசியுடன் போராடும் மாணவர்களுக்கு இதை வழங்கவும்" எனக் குறிப்பு எழுதி உணவை அனுப்பி வைக்கின்றனர்.</p><h2><strong>நள்ளிரவிலும் தொடரும் சேவை:</strong></h2><p>மெக்டொனால்ட்ஸ் உணவு பொட்டலங்கள் முதல் சூடான இந்திய உணவுகள் வரை தினமும் நூற்றுக்கணக்கான டெலிவரி முகவர்கள் மைதானத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.</p><h2><strong>மாணவர்களின் கோரிக்கைகள் என்ன?</strong></h2><p>ஜார்க்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ள மாநில குற்றப்பிரிவு விசாரணையில் திருப்தியில்லை என்றும், CBI மற்றும் அமலாக்கத்துறை மூலம் நடுநிலையான மத்திய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் 14-வது JPSC முதன்மைத் தேர்வு மற்றும் JSSC-CGL தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டி, தேர்வு வாரியங்களின் உயர் அதிகாரிகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.</p><h2><strong>சட்டமன்ற முற்றுகை எச்சரிக்கை:</strong></h2><p>போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மழை மற்றும் கடுமையான வெப்பத்திற்கு இடையே குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதிகள் போன்றவை போராட்டக் களத்தில் பெரும் சவாலாக உள்ளன. அரசு தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகச் செவிசாய்க்காவிட்டால், மாநிலச் சட்டமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்போவதாக 'Gen Z' இளைஞர்கள் எச்சரித்துள்ளனர். </p><h2><strong>பாதுகாப்பு பலப்படுத்துதல்:</strong></h2><p>மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, ராஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள ரெயில் நிலையங்கள், முக்கியப் பகுதிகளில் காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.  இளைஞர்களின் நீதிக்கான இப்போராட்டத்தில், உணவோ இருப்பிடமோ தடையாக இருக்கக் கூடாது என்பதில் இணைய வழியில் ஒன்றுபட்ட இந்திய மக்கள் உறுதியாக உள்ளனர். 'ஸ்விகி - சொமேட்டோ' போன்ற வர்த்தக தளங்கள், மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு கரங்கள் நீட்டும் புதிய வடிவிலான டிஜிட்டல் தளமாக மாறியுள்ளது சமூக வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விதிகளை மீறிய ஓல்ட் மங்க், மெக்டொவல்ஸ், ராயல் சேலஞ்ச் மதுபான நிறுவனங்கள்: FSSAI குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/old-monk-mcdowells-royal-challenge-liquor-firms-accused-of-rule-violations-fssai</link><comments>https://www.maalaimalar.com/news/national/old-monk-mcdowells-royal-challenge-liquor-firms-accused-of-rule-violations-fssai#comments</comments><guid isPermaLink="false">7e523a95-b7fd-487f-8c07-4776c75429ed</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:52:31 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:52:31.733Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alcohol,FSSAI,விஸ்கி,மதுபானம்,Whisky,உணவு பாதுகாப்பு துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/by38zocp/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ FSSAI Crackdown on Liquor Firms: Illegal Flavouring and Misleading Age Claims Exposed]]></media:title><media:description type="html"><![CDATA[ Liquor Firms]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/by38zocp/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அனுமதிக்கப்படாத சுவையூட்டும் முறைகளைப் பயன்படுத்தியதாகவும், வயது தொடர்பான தவறான தகவல்களைக் கூறியதாகவும் குற்றம் சாட்டி, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அமலாக்க நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. </p><p>ஓல்ட் மங்க், மெக்டொவல்ஸ், பேக்பைப்பர், ஆன்டிகுவிட்டி ப்ளூ, ராயல் சேலஞ்ச் உள்ளிட்ட பல மதுபான உற்பத்தி நிறுவனங்கள், தற்போதுள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் லேபிளிங் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் அது கூறியுள்ளது. </p><p>மூலப்பொருட்கள், நொதித்தல், காய்ச்சி வடிகட்டுதல் மற்றும் முதிர்ச்சியடைதல் ஆகியவற்றின் மூலம் அதன் தனித்துவமான சுவையும் நறுமணமும் இயற்கையாக உருவாக அனுமதிப்பதற்குப் பதிலாக,</p><p>சில உற்பத்தியாளர்கள் ரம்மில் வெளிப்புறமாக "ரம் சுவையையும்" விஸ்கியில் "விஸ்கி சுவையையும்" சேர்ப்பது ஆய்வுகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டதாக உணவு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.</p><h3><strong>மதுபான நிறுவனங்கள் மீது FSSAI குற்றச்சாட்டு</strong></h3><p>இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய தயாரிப்புகள் பிரதானமாக நடுநிலை ஆல்கஹால் அல்லது கூடுதல் நடுநிலை ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கப்பட்டிருந்தாலும், அவை சாதாரண ரம் அல்லது விஸ்கி என்று சந்தைப்படுத்தப்படுகின்றன. </p><p>இந்த ஆல்கஹாலில், அந்தப் பானங்களின் உள்ளார்ந்த சுவை அம்சம் இருப்பதில்லை. அவற்றின் தன்மையைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில், இந்தத் தயாரிப்புகளுக்குப் பதிலாக "ரம் சுவையூட்டப்பட்ட ஸ்பிரிட்" அல்லது "விஸ்கி சுவையூட்டப்பட்ட ஸ்பிரிட்" என்று பெயரிடப்பட வேண்டும்.</p><p>சில உற்பத்தியாளர்கள், பொருளின் உள்ளார்ந்த நறுமணத்தையும் சுவையையும் போலியாகக் காட்டும் வகையில் வெளிப்புறமாகச் சுவையூட்டியைச் சேர்த்து, அதை ஒரு தரமான பொருளாக விற்பனை செய்வதன் மூலம் நுகர்வோரைத் தவறாக வழிநடத்துகின்றனர்.</p><p>இத்தகைய சுவையூட்டியைச் சேர்க்க வேண்டியதன் சாத்தியமான தேவை, தற்போதுள்ள ஒரு முறைகேட்டின் காரணமாகக் காணப்படுகிறது.</p><p>இதில் உற்பத்தியாளர்கள், இயற்கையாகவே சுவையை வளர்ப்பதற்காக வெல்லப்பாகு, மால்ட் அல்லது திராட்சை போன்ற மூலப்பொருட்களிலிருந்தும் மற்றும்</p><p>அவற்றை பக்குவப்படுத்துதலின் மூலமும் பொருட்களை உருவாக்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சுவை இல்லாத ஸ்பிரிட் ஆல்கஹாலை முதன்மையாகப் பயன்படுத்தி, வெளிப்புறமாகச் சுவையூட்டியைச் சேர்க்கின்றனர்.</p><p>இத்தகைய தயாரிப்புகள் தரம் குறைந்தவையாக இருப்பது மட்டுமல்ல, வழக்கமான வகைகளின் பெயர்களை பயன்படுத்தி தவறாகவும் சித்திரிக்கப்படுகின்றன.</p><p>மேலும், அந்த பாட்டிலின் முன்பக்கம் தயாரிப்பின் உண்மையான தன்மையை முற்றிலுமாக வெளிப்படுத்த தவறுகிறது.</p><p>ஓல்ட் மங்க் XXX ரம் வகையின் லேபிளில் உள்ள 7 ஆண்டுகள் பழமையான கலவை என்ற கூற்றும் தவறாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இந்த ரம் மதுபானத்தில் பக்குவப்பட்ட ரம் ஸ்பிரிட் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இது தற்போதுள்ள விதிமுறைகளின் தெளிவான மீறலாகும்.</p><p>ஏனெனில் FSS விதிமுறைகள், 2018-இன் படி ஸ்பிரிட் வயது குறிப்பானது கவலையில் உள்ள புதிய ஸ்பிரிடில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்,” என்று ஒரு அறிக்கையில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையம் கூறியது.</p><h3><strong>மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு தடை</strong></h3><p>இதன் அடிப்படையில் மோகன் ராக்கி ஸ்பிரிங்வாட்டர் (ஓல்ட் மங்க் வகைகள்), யுனைடெட் ஸ்பிரிட்ஸ் (மெக் டொவல்ஸ் நம்பர் 1 ரம்), இன்ப்ரூ பெவரேஜஸ் மற்றும் அசோசியேட்ஸ் ஆல்கஹால் மற்றும் ப்ரூவரீஸ் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட தயாரிப்புகளின் விற்பனைக்கு FSSAI தடைவிதித்துள்ளது.</p><p>இந்த ஒழுங்கு நடவடிக்கை ஒட்டுமொத்த மதுபான தொழிலையும் குறிவைக்கவில்லை என்றும், பல உற்பத்தியாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட தர நிலைகளுக்கு முழுமையாக இணங்கி மதுபானங்களை தொடர்ந்து உற்பத்தி செய்து வருவதாகவும் ஆணையம் தெரிவித்தது.</p><p>மேலும் மதுபான பாட்டிலின் முன்பக்க லேபிளில் கலவையின் உண்மையான தன்மையை தெளிவாக வெளிப்படுத்திய பின்னரே, தற்போதுள்ள இருப்பை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>மதுபான உற்பத்தி நிறுவனங்கள் எதிர்காலத்தில், இதே போன்ற சுவை ஊட்டிகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘இபிஎஸ் அளித்த பதவிகள் வேண்டாம்... சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்’ - எஸ்.பி.வேலுமணி பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-do-not-want-the-posts-given-by-eps-sasikala-and-ttv-dhinakaran-must-be-inducted-into-the-party-sp-velumanis-interview</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-do-not-want-the-posts-given-by-eps-sasikala-and-ttv-dhinakaran-must-be-inducted-into-the-party-sp-velumanis-interview#comments</comments><guid isPermaLink="false">671cefc7-e4f4-4052-b966-d6530d921be0</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:36:22 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:36:22.795Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,EPS,இபிஎஸ்,எஸ்.பி.வேலுமணி,S.P. Velumani</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/s7v9g3qo/New-Project-2026-08-03T160549.781.jpg" width="1501"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘இபிஎஸ் அளித்த பதவிகள் வேண்டாம்... சசிகலா, டிடிவி தினகரை கட்சியில் சேர்க்க வேண்டும்’ - எஸ்.பி.வேலுமணி பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/s7v9g3qo/New-Project-2026-08-03T160549.781.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அதிமுகவில் மோதல் வெடித்தது. இபிஎஸ்மீதான அதிருப்தியில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கரூர், விராலிமலை விஜயபாஸ்கர்கள் என முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஒரு அணியாக திரண்டனர்.</p><p>அப்போது இவர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் இன்னும் மோதல் முற்ற சிவி சண்முகம் உள்ளிட்டப் பலரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் இபிஎஸ்.</p><p>பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைகள் எட்டப்பட்டு எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சிலர் சுமூகமாக சென்றனர். அவர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கினார் இபிஎஸ். ஆனால் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பதவிமட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை. </p><p>வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதனால் அப்பொறுப்புகளை ஏற்கமாட்டோம் என எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அறிவித்தனர்.</p><p>இதனிடையே விஜயபாஸ்கர்கள் உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்தனர். மேலும் இந்த உட்கட்சி பூசல் விவகாரமும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி மீண்டும் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்கவேண்டும் எனவும் இல்லையென்றால் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளை ஏற்கமாட்டோம் என மீண்டும் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>“எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்கள். அதுபோல இபிஎஸ் முதலமைச்சர், பொதுச்செயலாளர் ஆவதற்கும் உழைத்தவர் சி.வி.சண்முகம். தொடர்ந்து கட்சியில் இருந்து நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை தொடரக்கூடாது. கட்சி பலப்படுத்தப்பட வேண்டும். </p><p>சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சியில் இருந்து பிரிந்த அனைவரையும் மீண்டும் சேர்க்கவேண்டும். எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பழைய பொறுப்புகளை அளித்தால், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறோம்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் குறித்த கேள்விக்கு மார்கிராம் அளித்த பதில்..!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/lsg-captaincy-buzz-aiden-markram-plays-down</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/lsg-captaincy-buzz-aiden-markram-plays-down#comments</comments><guid isPermaLink="false">502c706f-abe0-402e-83ac-3aaf07113ebb</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:30:51 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:30:51.184Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>IPL,Aiden Markram,LSG,எல்எஸ்ஜி,எய்டன் மார்கிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/n7ac3mcb/LSGMarkram0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எய்டன் மார்கிராம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/n7ac3mcb/LSGMarkram0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ டெல்லிக்கு அணிக்கு கொடுத்து, அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவை வாங்கியுள்ளது.</p><h2>டெல்லி அணிக்கு சென்ற ரிஷப் பண்ட்</h2><p>ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் 10 அணிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். இந்த அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் இருந்தார். இவரது தலைமையின் கீழ் கடந்த இரண்டு சீசனில் லக்னோ சூப்பர்  ஜெயன்ட்ஸ் அணி மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை.</p><p>இதனால் லக்னோ அணி, ரிஷப் பண்ட்-ஐ அணியில் இருந்து விடுவிக்க முடிவு செய்தது. அவரை வாங்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தயாராக இருந்ததது. இதனால் ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு, குல்தீப் யாதவை வாங்கியுள்ளது.</p><h2>மார்க்கிராம் சொல்வது என்ன?</h2><p>இதனால் லக்னோ அணி புதிய கேப்டனை நியமிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அந்த அணியில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்கிராம் உள்ளார். இவர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் SA டி20 லீக்கிலும் கேப்டனாக இருந்து வருகிறார். அதேபோல் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஹன்ட்ரடு (Hundred) தொடரிலும் கேப்டனாக உள்ளார்.</p><p>இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக எய்டன் மார்கிராம் நியமிக்கப்படலாம் என்ற தகவல் உள்ளது.</p><p>இந்த நிலையில் அவரிடம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டனாக வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறதே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.</p><h2>இதற்கு எய்டன் மார்கிராம் அளித்த பதில் பின்வருமாறு:-</h2><p>எனக்கு அதுபற்றி எந்த தகவலும் இல்லை. அணி உரிமையாளர்கள் எது சிறந்தது என்று கருதுகிறார்களோ அதை முடிவு செய்யலாம். அந்த அணியில் திறமையான தலைவர்கள் பலர் உள்ளனர். அதனால் நான் அதுபற்றி அதிகம் கவலைப்படவில்லை. அந்த பொறுப்பு யாருக்குக் கிடைத்தாலும், அவர்கள் அதை ஏற்றுச் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், இதுகுறித்து நான் இன்னும் பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை.</p><p>இவ்வாறு மார்கிராம் தெரிவித்துள்ளார்.</p><h2>மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன்</h2><p>லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்கா டி20 அணி கேப்டன் மிட்செல் மார்ஷ், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் நிக்கோலஸ் பூரன் போன்ற கேப்டன் பதவிக்கான போட்டியில் உள்ளனர். நிக்கோலஸ் பூரன் பகுதி நேர கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 20 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு-சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீல் தேர்வு!</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-cabinet-expansion-20-new-ministers-take-oath-today-gs-patil-elected-speaker</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-cabinet-expansion-20-new-ministers-take-oath-today-gs-patil-elected-speaker#comments</comments><guid isPermaLink="false">0300b89e-9d56-424d-a63b-41f1bf77c8e1</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:23:38 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:23:38.404Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka Cabinet,கர்நாடக அமைச்சரவை,டி.கே.சிவகுமார்,,G.S.Patil,D.K.Shivakumar,ஜி.எஸ்.பாட்டீல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/iwhw9poc/dk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ G.S.Patil-D.K.Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/iwhw9poc/dk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், மாநில சட்டமன்றத்தின் அடுத்த சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீலின் பெயரையும் கட்சித் தலைமை அங்கீகரித்துள்ளது.</p><h2><strong>கார்கே-ராகுல் காந்தி சந்திப்பு:</strong></h2><p>இந்தப் பட்டியலில், ஜமீர் அகமது கான் மற்றும் சந்தோஷ் லாட் போன்ற சில தற்போதைய அமைச்சர்களின் பெயர்கள் உட்பட 20 பெயர்கள் உள்ளன. கார்கே மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, இது முதலமைச்சர் சிவகுமாரிடம் பகிரப்பட்டது. நெறிமுறையின்படி, அமைச்சர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு முன்பு, முதலமைச்சர் இந்தப் பட்டியலை ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் பகிர வேண்டும்</p><p>இதில், பட்கல் சட்டமன்ற உறுப்பினர் மங்கல் வைத்யாவின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அவரது பெயரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக எஸ்.எஸ். மல்லிகார்ஜுனின் பெயரைச் சேர்த்தது. இந்தச் சம்பவத்திற்குக் காரணம் தட்டச்சுப் பிழை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.</p><h2><strong>புதிய</strong> சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீல்:</h2><p>மேலும், ஜி.எஸ்.பாட்டீல் சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்படுவார். இந்தப் பதவியை முன்னதாக வகித்த யூ.டி. காதர், கடந்த ஜூன் மாதம் சிவகுமார் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமைச்சர் வேட்பாளர்களுக்கான பதவியேற்பு விழா மாலை 4.05 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக, பட்டியலை இறுதி செய்யும் போது காங்கிரஸ் தலைமை சாதி, மதம் மற்றும் பிராந்திய சமன்பாடுகளை கவனமாக மதிப்பீடு செய்து வருவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.</p><p>பல்வேறு சமூகக் குழுக்கள் மற்றும் பிராந்தியங்களிடையே சமநிலையை ஏற்படுத்த கட்சித் தலைமை முயற்சி செய்து வருவதாக, அந்த செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. நிலுவையில் இருந்த அமைச்சரவை விரிவாக்கம் முன்னதாக ஜூலை 31, வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் டெல்லியில் கட்சித் தலைமை நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><h2><strong>காலியாகவுள்ள 20 இடங்கள்:</strong></h2><p>ஜூன் 3-ஆம் தேதி சிவகுமார் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, இது பல வாரங்களாக விவாதத்தில் இருந்து வருகிறது. தற்போது, ​​கர்நாடகாவில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 34 அமைச்சர்களுக்கு எதிராக, முதலமைச்சர் உட்பட 14 அமைச்சர்களே உள்ளனர். இதனால், அமைச்சரவையில் 20 இடங்கள் காலியாக உள்ளன.</p><p>கார்கே, காந்தி மற்றும் முதல்வர் சிவகுமார் ஆகியோரைத் தவிர, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடகப் பொறுப்பு ஏ.ஐ.சி. பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் காங்கிரஸ் கர்நாடகத் தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோரும் அமைச்சரவை விரிவாக்கத்திற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழில் செய்வோரை முடக்குவதா?- தங்கம் தென்னரசு கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/are-officials-using-inspections-to-crack-down-on-fireworks-industry-asks-thangam-thenarasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/are-officials-using-inspections-to-crack-down-on-fireworks-industry-asks-thangam-thenarasu#comments</comments><guid isPermaLink="false">5dfdd6e4-c4f9-4b14-b883-aace79585c4e</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:09:50 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:09:50.960Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,Thangam Thennarasu,தவெக அரசு,TVK Govt,பட்டாசு தொழிற்சாலை,fire works</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/af78x2bo/Thangam-thennarasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thangam thennarasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/af78x2bo/Thangam-thennarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டாசு ஆலைகள், விற்பனையகங்களில் ஆய்வு என்ற பெயரில் அரசு அதிகாரிகள் கெடுபிடி செய்வதா? என்றும் தீபாவளி நெருங்கும் நேரத்தில் இத்தகைய கெடுபிடிகள் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் பொருளியல் வரைபடத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் விருதுநகர் மாவட்டத்தின் அச்சாணியாகவும். லட்சக்கணக்கான ஏழை எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்வது சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பட்டாசு உற்பத்தித் தொழிலே ஆகும். </p><p>ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.6000 கோடி அளவில் வர்த்தகம் நடக்கும் இத்தொழிலை நம்பி ஏறத்தாழ 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணி செய்கின்றனர். </p><p>நமது நாட்டின் மொத்தப் பட்டாசுத் தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகப் பூர்த்தி செய்து, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்தப் பட்டாசுத் தொழிலும், அதனை நம்பியிருக்கும் மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்களும், தொழிலாளர்களும் இன்று த.வெ.க. அரசின் தேவையற்ற கெடுபிடிகளினால் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.</p><p>சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீதோ அல்லது பாதுகாப்பு விதிகளைப் புறக்கணித்து சட்டவிரோதமாகச் செயல்படுபவர்கள் மீதோ சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை யாரும் தவறு என்று சொல்லப்போவதில்லை. மனித உயிர்களின் பாதுகாப்பும். விதிமுறைகளைப் பின்பற்றுவதும் எப்போதுமே முதன்மையானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. </p><p>ஆனால், அரசின் அனைத்துச் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு. உரிய அரசுத் துறைகளிடம் நாக்பூர் உரிமம், மெட்ராஸ் உரிமம் மற்றும் பிற முறையான உரிமங்களைப் பெற்று, ஆண்டுதோறும் அவற்றை முறைப்படி புதுப்பித்துத் தொழில் நடத்திவரும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில், "அதிரடி ஆய்வு" என்ற பெயரில் அரசு நிர்வாகமும், அதிகாரிகளும் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களும் கெடுபிடிகளும் கடும் கண்டனத்திற்குரியவை.</p><p>தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் இக்காலகட்டத்தில், பட்டாசு உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கவிருக்கும் நேரத்தில், அதிகாரிகளின் இந்தத் தேவையற்ற அதிரடி சோதனைகள் தொழில்முனைவோரிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பூர்வமாக வரி செலுத்தி, உரிமம் பெற்று வணிகம் செய்யும் வர்த்தகர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தி, ஆய்வுகள் என்ற பெயரில் அவர்களின் அன்றாடச் செயல்பாடுகளை முடக்குவது எந்தவிதத்தில் நியாயம்?</p><p>இந்தத் தொழிலில் பெருமளவில் கிராமப்புறப் பெண்களும், எளிய மக்களுமே ஈடுப்பட்டுள்ள நிலையில், அரசின் தேவையற்ற கெடுபிடிகளால் தொழிற்சாலைகளும் கடைகளும் முடங்கும்போது. அதைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் அன்றாட ஊதியமிழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.</p><p>சிவகாசி மாநகரத்தின் வர்த்தகச் சங்கிலி அறுந்துபோனால், அது விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும், மாநிலத்தின் வர்த்தகச் சூழலையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, சட்டப்பூர்வமாக உரிமம் பெற்று இயங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில் "ஆய்வு" என்ற பெயரில் நடத்தப்படும் அச்சுறுத்தல்களையும், கெடுபிடிகளையும் இந்த த.வெ.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.</p><p>பட்டாசுத் தொழிலை முடக்குவதற்குப் பதிலாக, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி. தொழில்முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகளையும் பாதுகாப்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கும் அணுகுமுறையை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.</p><p>வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு. பட்டாசு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் எவ்வித அச்சமுமின்றித் தங்களது வணிகத்தைத் தொடரத் தேவையான சூழலை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.</p><p>உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களையும், விற்பனையாளர்களையும், வணிகப் பெருமக்களையும் அச்சுறுத்தும் போக்கு தொடருமானால், கழகத் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அனுமதி பெற்று, பட்டாசுத் தொழில் உரிமையாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கச் சிவகாசியில் மாபெரும் ஜனநாயக வழியிலான போராட்டத்தை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரிஷா நற்பணி மன்றம்?- மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-the-trisha-welfare-association-recognized-by-the-government-of-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-the-trisha-welfare-association-recognized-by-the-government-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">eca776b7-d056-427a-b3f4-3d3ac76271c4</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:09:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:09:41.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trisha,திரிஷா,திரிஷா நற்பணி மன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/u5f4ui2m/madurai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/u5f4ui2m/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மதுரையில் முதன்முறையாக திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் திரிஷா அரசியலுக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.</aside><p>அரசியலாக இருந்தாலும் சரி, ஆன்மிகமாக இருந்தாலும் சரி, மதுரையில் ஒட்டப்படும் பிரமாண்ட போஸ்டர்கள் தமிழ்நாடு  முழுவதும் பேசுபொருளாக மாறுவது காலங்காலமாக நடந்து வருகிறது. </p><p>அதிலும் பல மீட்டர் அளவுக்கு இடம்பெறும் போஸ்டர்கள் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.  அந்தவகையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE">திரிஷா</a> தொடர்பான போஸ்டரும் இடம்பெற்றுள்ளது. </p><h2><strong>நற்பணி மன்றம்</strong></h2><p>தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகையாக வலம் வரும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/trisha-in-goddess-attire-controversy-erupts-over-aadi-festival-banner">திரிஷா</a> தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் நிலையில் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதேபோல் திரிஷா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள். </p><p>இந்தநிலையில், மதுரையில் முதன்முறையாக திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் திரிஷா அரசியலுக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>அந்த போஸ்டரில் தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில், முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷாவுக்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் என்ற வாசகத்தோடும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை என்றும், மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால்... என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.</p><p>அந்த போஸ்டரில் வீரமங்கை வேலுநாச்சியாரின் படம் மற்றும் திரிஷா படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>சாதி, மதமற்றவர் என உத்தரவிடக்கோரி பார்த்திபன் தொடர்ந்த வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/court-orders-government-to-respond-to-the-case-filed-by-parthiban-seeking-a-declaration-of-having-no-caste-or-religion</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/court-orders-government-to-respond-to-the-case-filed-by-parthiban-seeking-a-declaration-of-having-no-caste-or-religion#comments</comments><guid isPermaLink="false">6b49bfa0-85f4-45a5-b579-b7b085fada1e</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:59:11 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:59:11.593Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Actor Parthiban,நடிகர் பார்த்திபன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/fnuhtrvd/New-Project-2026-08-03T152701.926.jpg" width="1501"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாதி, மதமற்றவர் என உத்தரவிடக்கோரி பார்த்திபன் தொடர்ந்த வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/fnuhtrvd/New-Project-2026-08-03T152701.926.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல நடிகரும், இயக்கநருமான ஆர். பார்த்திபன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “நான் சாதி, மதமற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உழைத்து வருகிறேன். </p><p>என்னுடைய திரைப்படங்களிலும் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். இந்த நிலையில் நான் சாதி, மதமற்றவன் என்ற சான்றிதழை கேட்டு தாசில்தாரிடம் விண்ணப்பித்த போது எனக்கு வழங்கவில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த சாதி, மதமற்றவன் என்ற சான்றிதழை பெற்றேன்.</p><p>ஆனால் கடந்த 2025-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு யாராவது விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்து,  அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதுவரை அரசும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.</p><p>எனவே சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் கேட்பவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கும் வகையில் சட்டம் அல்லது அரசாணை அல்லது சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். </p><p>இந்த மனு தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மதிகாரி நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது . மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவுக்கு நான்கு வாரத்திற்குள் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-jiiva-thagappan-first-look-poster-update</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-jiiva-thagappan-first-look-poster-update#comments</comments><guid isPermaLink="false">3d0b33cb-4165-4913-ac53-a84f208ef481</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:51:20 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:51:20.899Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jiiva,ஜீவா,Thagappan,தகப்பன்,Ra Venkat,Lark Studios,Thagappan FirstLook</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/yso3wi9z/Thagappan-FirstLook" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thagappan FirstLook]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/yso3wi9z/Thagappan-FirstLook?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE">ஜீவா</a> நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'தகப்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அப்படக்குழு அறிவித்துள்ளது.</p><h2>சுவாரசிய அப்டேட்</h2><p>லார்ச் ஸ்டுடிஓஸ் தயாரிப்பில், கே.குமார் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்றுமாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>தந்தை மற்றும் மகனின் எமோஷனல் பாசப் பிணைப்பை உணர்த்தும் வகையில், ஒரு முதியவர் இளைஞனின் கையை இறுக்கமாகப் பிடித்திருப்பது போன்ற போஸ்டர் டிசைன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Beyond love. Beyond words. Beyond world.<a href="https://x.com/hashtag/Thagappan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Thagappan</a> First Look - Today 5pm<a href="https://x.com/larkstudios1?ref_src=twsrc%5Etfw">@larkstudios1</a> <a href="https://x.com/JiivaOfficial?ref_src=twsrc%5Etfw">@JiivaOfficial</a> <a href="https://x.com/rajisha_vijayan?ref_src=twsrc%5Etfw">@rajisha_vijayan</a> <a href="https://x.com/LakshmyRamki?ref_src=twsrc%5Etfw">@LakshmyRamki</a> <a href="https://x.com/ravenkatdir83?ref_src=twsrc%5Etfw">@ravenkatdir83</a> <a href="https://x.com/dopmsukumar?ref_src=twsrc%5Etfw">@dopmsukumar</a> <a href="https://x.com/Inagseditor?ref_src=twsrc%5Etfw">@Inagseditor</a> <a href="https://x.com/MaheshMathewMMS?ref_src=twsrc%5Etfw">@MaheshMathewMMS</a> <a href="https://x.com/hashtag/BalaKumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BalaKumar</a> <a href="https://x.com/dineshashok_13?ref_src=twsrc%5Etfw">@dineshashok_13</a> <a href="https://x.com/Udaykumar_Mix?ref_src=twsrc%5Etfw">@Udaykumar_Mix</a> <a href="https://x.com/prithivipradeep?ref_src=twsrc%5Etfw">@prithivipradeep</a> <a href="https://x.com/kumarkarupannan?ref_src=twsrc%5Etfw">@kumarkarupannan</a>… <a href="https://t.co/gXwxvPQLsM">pic.twitter.com/gXwxvPQLsM</a></p>&mdash; Jiiva (@JiivaOfficial) <a href="https://x.com/JiivaOfficial/status/2084153959904944182?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>தொழில்நுட்பக் கூட்டணி</h2><p>எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு திங்க் மியூசிக் நிறுவனம் இசையமைக்கிறது. 'மாமன்னன்', 'கருடன்' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லார்ஜ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படம் என்பதால், வணிக ரீதியாகவும் ‘தகப்பன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. </p><p>இன்று மாலை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் படத்தின் அடுத்தகட்ட கதைக் களம் தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க கல்வி சர்ச்சை: உங்கள் டிகிரி சர்டிபிக்கேட்டை காட்டத் தயாரா?-பிரதமர் மோடிக்கு CJP நிறுவனர் அபிஜீத் திப்கே கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/national/american-education-row-will-you-show-your-degree-certificate-cjp-founder-abhijit-dipke-questions-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/american-education-row-will-you-show-your-degree-certificate-cjp-founder-abhijit-dipke-questions-pm-modi#comments</comments><guid isPermaLink="false">98a4afe1-dcaf-4bd1-a190-5677ef12aac8</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:47:39 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:47:39.988Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரதமர் மோடி.,pm modi,Cockroach Janta Party,அபிஜீத் திப்கே,Abhijit Dipke,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/emzqqpfn/MODI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Abhijit Dipke-PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/emzqqpfn/MODI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே தனது அமெரிக்கக் கல்விச் செலவுகள் குறித்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போஸ்டன் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகை கடிதம் மற்றும் கல்விக்கடனை ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.</p><p>சூரத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) ஆர்வலர் அமித் திவாரி என்பவர், அபிஜீத் திப்கேயின் தந்தை பகவான்ராவ் திப்கே மீது மகாராஷ்டிர அரசிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். மகாராஷ்டிர தொழில் வளர்ச்சி கழகத்தில் (MIDC) இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அவரது மாதச் சம்பளம் சுமார் ரூ.60,000 முதல் ரூ.65,000 வரை மட்டுமே இருந்த நிலையில், தனது மகனை எப்படி அமெரிக்காவில் உயர் கல்வி படிக்க வைக்க முடிந்தது என கேள்வி எழுப்பினார்.</p><h2><strong>அபிஜீத் திப்கே அளித்த விளக்கம்:</strong></h2><p>இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மூத்த பத்திரிகையாளர் பார்கா தத்துடனான நேர்காணலில் விளக்கமளித்த அபிஜீத் திப்கே,"எனது அமெரிக்கப் படிப்பிற்கு குடும்பச் சொத்துகள் பயன்படுத்தப்படவில்லை. போஸ்டன் பல்கலைக்கழகம் வழங்கிய உதவித்தொகை மற்றும் நான் பெற்ற கல்விக்கடன் மூலமே எனது கல்வி செலவுகள் பூர்த்தி செய்யப்பட்டன. </p><p>இந்தக் கடனை நான் இன்னமும் திரும்பச் செலுத்த வேண்டி உள்ளது" எனது கல்வி உதவித்தொகை மற்றும் வங்கி கடன் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளிப்படையாக வெளியிட நான் தயார் என்று கூறி பல்கலைக்கழக சேர்க்கை மற்றும் உதவித்தொகை கடிதத்தையும் வெளியிட்டார்.</p><h2><strong>பிரதமர் மோடிக்கு் சவால்:</strong></h2><p>"நான் எனது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கடன் ஆவணங்களைக் காட்டத் தயார். அதேபோல், நாட்டின் பேரரசராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியும் தனது கல்லூரி டிகிரி சான்றிதழைக் காட்டத் தயாரா?" என்று காட்டமாகச் சவால் விடுத்துள்ளார்.</p><h2><strong>தேர்தல் ஆணையத்தில் புகார்:</strong></h2><p>CJP கட்சி பதிவு செய்யப்பட்ட அமைப்பா, இல்லையா என்பதை ஆய்வு செய்யக் கோரியும், கபில் சிபல் அறிவித்த நிதிக்கு ஜி.எஸ்.டி வரம்புகள் பொருந்துமா எனக் கோரியும் RTI ஆர்வலர் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளார். இதற்கிடையில், இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தனிநபரின் கல்விக் கட்டணத்தை சர்ச்சையாக்குவது தேவையற்றது என்றும் CJP கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைஷ்ணவி கவுர் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>பொதுமக்களின் ஆதரவு நிதி:</strong></h2><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட மாணவர் போராட்டங்களை நடத்தி புகழ்பெற்றவர் அபிஜீத் திப்கே.  CJP கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் போராட்டங்களுக்கான நிதியை, முழு வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களிடமிருந்தே திரட்டத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். CJP அமைப்பின் சட்டபூர்வ நிலை மற்றும் கபில் சிபல் அறிவித்த ரூ.1 கோடி வழக்கு நிதி உதவி குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மறைமுக வரிகள் வாரியத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சைதாப்பேட்டை திடீர் நகரில் அமைச்சர் என்.ஆனந்த் திடீர் ஆய்வு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-inspection-to-saidapet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-inspection-to-saidapet#comments</comments><guid isPermaLink="false">d5913084-a038-4ed4-84d8-cbd360907412</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:41:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:41:41.619Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,புஸ்சி ஆனந்த்,tvk,Minister Bussy Anand</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/t8eohbw6/bussyanand.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சைதாப்பேட்டை திடீர் நகரில் அமைச்சர் என்.ஆனந்த் திடீர் ஆய்வு ]]></media:title><media:description type="html"><![CDATA[ சைதாப்பேட்டை திடீர் நகரில் அமைச்சர் என்.ஆனந்த் திடீர் ஆய்வு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/t8eohbw6/bussyanand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவுபடி அமைச்சர் என்.ஆனந்த் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><p>நிகழ்ச்சி முடிந்து திரும்பிய அமைச்சர் ஆனந்த் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட திடீர் நகரில் திடீரென ஆய்வு பணிகளை மேற்கொண்டார். </p><h2><strong>பொதுமக்களிடம் கலந்துரையாடல்</strong></h2><p>ஆய்வின்போது <a href="https://www.maalaimalar.com/topic/புஸ்சி-ஆனந்த்">அமைச்சர் என்.ஆனந்த்</a> பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கழிப்பிட வசதி மற்றும் வீட்டு வசதி என அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கோரிக்கைகள் வைத்தனர். </p><p>கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் என்.ஆனந்த் முதற்கட்டமாக அந்தப் பகுதியில் உடனடியாக மொபைல் கழிப்பறை வசதி செய்ய ஏற்பாடு செய்தார். </p><p>தொடர்ந்து நிரந்தரமாக கழிப்பிட வசதி மற்றும் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றி தரப்படும் என பொதுமக்களிடம் கூறினார். தமிழக முதலமைச்சர் விஜய் எப்போதும் ஏழை மக்களின் நலனில் தீவிர அக்கறை கொண்டவர்.</p><p>உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் அவர் செய்து கொடுப்பார் எனக்கு கூறினார்.</p><p>இதைக்கேட்ட பொது மக்கள் அவருக்கு மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.  தொடர்ந்து திடீர் நகரில் உள்ள கூவம் ஆற்றில் அமைச்சர் என்.ஆனந்த் ஆய்வு செய்தார். ஆற்றின் கரையோர பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்தபோது கூவம் ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து இருப்பதை கண்டார். </p><p>இதனால் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்படுவதை அறிந்த அமைச்சர் என். ஆனந்த் ஆகாயத்தாமரை செடிகள் அனைத்தையும் உடனடியாக அகற்றி கூவம் ஆற்றை தூர் வாரவும் உத்தரவிட்டார். </p><p>தூர்வாரும் பணிகளை வருகிற மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்க வேண்டும் என அமைச்சர் என்.ஆனந்த் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.</p><p>ஆய்வின் போது சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தன.</p>]]></content:encoded></item><item><title>காவிரியில் தண்ணீர் வராதது ஏமாற்றம் அளித்தது - புதுமண தம்பதி பேட்டி 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-couple-says-disappointment-over-lack-of-water-in-cauvery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-couple-says-disappointment-over-lack-of-water-in-cauvery#comments</comments><guid isPermaLink="false">04d56682-5038-48db-95de-84a2758f5d8c</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:30:37 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:30:37.683Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery,aadi perukku,ஆடிப்பெருக்கு,புதுமண தம்பதி,காவிரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/6xoqupdk/couple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadi perukku festival Couple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/6xoqupdk/couple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் திருச்சியில் இன்று ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. இது  பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய இளங்கோவன் -காவ்யா தம்பதியினர் கூறும்போது, </p><h2>ஆடிப்பெருக்கு விழா</h2><p>திருமணத்துக்கு பின் முதல் முறையாக இன்று <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">ஆடிப்பெருக்கு</a> விழாவை கொண்டாட வந்தோம். ஆடிப்பெருக்கு என்றாலே காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடும் நீரில் குளித்து மகிழ்வதே முதலில் ஞாபகத்துக்கு வரும். ஆனால் தண்ணீர் இல்லாத காரணத்தினால் காவிரி ஆற்றில் குளிக்க முடியாதது ஏமாற்றமாகி விட்டது. </p> <h2>மாங்கல்யம் மாற்றி சிறப்பு வழிபாடு</h2><p>தண்ணீர் வராத காரணத்தினால் நாங்கள் வீட்டிலிருந்து குளித்துவிட்டு இங்கு புறப்பட்டு வந்தோம். பின்னர் மாங்கல்யம் மாற்றி சிறப்பு வழிபாடு செய்தோம். தண்ணீர் வராத காரணத்தினால் வழக்கமான கூட்ட த்தையும் பார்க்க முடிய வில்லை என்றனர்.</p><p>பொதுமக்கள் சிலர் கூறுகையில், <a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-perukku-2">ஆடிப்பெருக்கு</a> நாளன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு வந்து புனித நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். கரைபுரண்டு ஓடும் புதுவெள்ளத்தில் கால்களை வைத்து, காவிரித் தாயை வேண்டி, பூக்களையும் மங்களப் பொருட்களையும் ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு செய்வதே அளப்பரிய மகிழ்ச்சியைத் தரும். ஆனால், இந்த ஆண்டு கண் எட்டும் தூரம் வரை வெறும் மணல் பரப்பாகவே காட்சியளிக்கிறது.</p> <h2>காவிரி வறண்டது</h2><p>பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் வரும் தண்ணீரில் நீராடி வழிபாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜீவ நதியான காவிரியில் நீர்வரத்தின்றி வறண்டு கிடப்பதைப் பார்க்கும்போது மனதிற்கு மிகுந்த வேதனையளிக்கிறது. </p> <p>விவசாயிகள் கூறுகையில், “ஆடிப்பெருக்கு நாளன்று காவிரியில் நீர் பொங்கி வந்தால் மட்டுமே அந்த ஆண்டில் விவசாயம் செழித்து வளரும் என்பது எங்களின் தலைமுறை நம்பிக்கை. காவிரி அன்னைக்கு சிறப்புப் படையலிட்டு, ஆற்று நீரைக் தலையில் தெளித்து வழிபாடு செய்தால்தான் எங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். தற்போது ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டதால், வறண்ட மணல் பரப்பிலேயே நின்று வழிபாடு செய்துவிட்டுத் திரும்புகிறோம். இந்த ஆண்டு விவசாய பணிகள் எவ்வாறு அமையப் போகிறதோ என்ற கவலையும் பயமும் எங்களை ஆட்கொண்டுள்ளது என்றார். </p> <h2>புதுமண தம்பதி</h2><p>புதுமண தம்பதி வசந்த் - அம்மு கூறும்போது, தண்ணீர் இல்லையென்றாலும் மனசு இருந்தால் வருவார்கள். இயற்கையை நாடி, மனமிருந்தால் தண்ணீரில் இருக்கும் மீன்களுக்கும் உணவளியுங்கள். அதுவும் உயிர்கள் தானே என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிஜேபி மாணவர்கள் இயக்கம் ஒரே இரவில் எப்படி அரசியல் இயக்கமாக மாறியது?: ஆர்எஸ்எஸ் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/how-did-cjp-student-movement-turn-political-overnight-rss-chief</link><comments>https://www.maalaimalar.com/news/national/how-did-cjp-student-movement-turn-political-overnight-rss-chief#comments</comments><guid isPermaLink="false">9a4b7fc8-c60b-4633-b927-bd4896d8ba72</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:28:05 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:28:05.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RSS,ஆர்.எஸ்.எஸ்,neet protest,சிஜேபி,CJP,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/93hxdqsh/Untitled-design-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ CJP student movement turns political: RSS leader Atul Limaye questions sudden shift]]></media:title><media:description type="html"><![CDATA[ RSS leader Atul Limaye]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/93hxdqsh/Untitled-design-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) இணைப் பொதுச் செயலாளர் அதுல் லிமாயே, முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கு காரணமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குறித்து ஆழமான கள ஆய்வு நடத்துமாறு நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>மேலும் அவர் தற்போதுள்ள காலகட்டத்தில் தேசிய கண்ணோட்டத்துடன் செயல்படும் அமைப்புகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.</p><p><strong>ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளர் </strong></p><p>மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதுல் லிமாயே, டெல்லியில் நடைபெற்ற சிஜேபி கட்சியின் போராட்டம் குறித்து பேசினார்.</p><p>அப்போது அவர், “தற்போது டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகள், தேசிய கண்ணோட்டம் கொண்ட அமைப்புகள் இளைஞர்கள் மத்தியில் தடம் பதிப்பது எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.</p><p>சிஜேபி கட்சி முதன்மையாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் வழி நடத்தப்பட்ட ஒரு இயக்கம் என்பதால், அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பு போன்ற பல இடதுசாரி மாணவர் அமைப்புகள் இதில் தீவிரமாக ஈடுபட்டன.</p><p>மனித உரிமைகள், பழங்குடியினர் பிரச்சனைகள், பெண்கள் உரிமைகள், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், பத்திரிக்கை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றுடன் தொடர்புடைய ஏராளமான அமைப்புகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்றன.</p><p>சில மேடைகளில் இருந்து இந்துக்களுக்கு எதிரான குரல்கள் எவ்வாறு எழுப்பப்பட்டன? சர்ச்சைக்குரிய மற்றும் தேசவிரோத முழக்கங்களை எழுப்பிய அல்லது ஆதரித்த நபர்கள் அங்கு ஏன் இருந்தனர்?</p><p>இயக்கத்திற்குள் இடதுசாரி சித்தாந்தம் கொண்ட செல்வாக்கு திடீரென எப்படி அதிகரித்தது? பல்வேறு அரசியல் கட்சிகளும் அவற்றின் நலன்களும் அதனுடன் எப்படி ஒன்று சேர்ந்தது?</p><p>முற்றிலும் மாணவர்களால் வழி நடத்தப்பட்ட ஒரு இயக்கம், ஒரே இரவில் எவ்வாறு அரசியல் இயக்கமாக மாறியது? நாடு முழுவதும் ஒரே மாதிரியான செயல்பாடுகளும் போராட்டங்களும் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டன? இந்த இயக்கம் வெளிநாடுகளிலும் கூட எப்படி விரிவடைந்து ஆதரவை திரட்டியது?</p><p>இந்த மனநிலையின் கீழ், கருத்து சுதந்திரம் மற்றும் உள்ளிருப்பு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் உரிமை போன்ற ஜனநாயகத்தால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பயன்படுத்துவதன் மூலம், ஜனநாயக அமைப்புக்கே சவால் விடுக்கப்படுகிறது.</p><p>எதிர்கால ஜனநாயகம் என்பது நாடாளுமன்றம் மற்றும் தேர்தல்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அவை தெருக்களாலும், எதிர்ப்பாலும் தீர்மானிக்கப்படும்.</p><p>இந்த வகையான போராட்டங்கள் பொதுவாக வரையறுக்கப்பட்ட சில கட்டங்களை உள்ளடக்கியுள்ளது. முதலாவது, பல்வேறு கல்வி மற்றும் சமூக நிறுவனங்களில் கருத்தியல் ரீதியாக ஊடுருவுவதை உள்ளடக்கியது.</p><p>இரண்டாவதாக, நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலப்பு கட்டமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாகும்.</p><p>மூன்றாவது, கல்வி, இலக்கியம், ஊடகம், சினிமா மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் ஒரு மாற்று மன நிலையை வளர்த்து, ஒரு கருத்துகளை கொண்டு போர் நடத்துவதாகும்.</p><p>இறுதியில் வெகுஜன இயக்கங்கள் மூலம் அரசாங்கம் மற்றும் சமூகத்தின் மீது அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.</p><p>சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அம்பேத்கர் வலியுறுத்தி இருந்தார்.</p><p>அரசியலைப்பிற்கு எதிரான அல்லது வன்முறை இயக்கங்களுக்கு எதிராக எச்சரித்த அம்பேத்கர், அவற்றை அராஜகத்தின் இலக்கணம் என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p>இத்தகைய இயக்கங்களுக்கு மிகவும் பயனுள்ள பதில் என்பது வெறும் எதிர்ப்போ அல்லது விமர்சனமோ கிடையாது, மாறாக இளைஞர்களுடன் தொடர்ச்சியான, நேர்மறையான உரையாடலை பேணுவதிலும், தேசியவாத உணர்வை வளர்ப்பதிலும் அடங்கியுள்ளது” என்று ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளர் அதுல் லிமாயே கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் நாளில் 239/5</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/wi-vs-pak-2nd-tes-port-of-spain-west-indies-1st-day-stumps-239-for-5</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/wi-vs-pak-2nd-tes-port-of-spain-west-indies-1st-day-stumps-239-for-5#comments</comments><guid isPermaLink="false">dbcbdbf3-0a3d-4eee-a7de-e882c8a93e48</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:25:50 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:25:50.395Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Brandon King,பிராண்டன் கிங்,justin greaves,ஜஸ்டின் கிரீவ்ஸ்,WIvsPAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/a458zu69/JustinGreaves001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிராண்டன் கிங்- ஜஸ்டின் கிரீவ்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/a458zu69/JustinGreaves001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.</p><h2>வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு</h2><p>பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி <a href="https://www.maalaimalar.com/sports/cricket/west-indies-beat-pakistan-in-90-runs-in-first-test">வெஸ்ட் இண்டீஸ்</a> சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் இந்திய நேரப்படி நேற்றிரவு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் தொடங்கியது.</p><p>டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டஜேநரைன் சந்தர்பால், பிராண்டன் கிங் ஆகியோர் தொடக்க வீரர்ளாக களம் இறங்கினர். டஜேநரைன் சந்தர்பால் 15 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கவேம் ஹோட்ஜ் களம் இறங்கினார். இவர் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.</p><h2>பிராண்டன் கிங் 46</h2><p>மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரர் பிராண்டன் கிங் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின்னர் வந்த அமீர் ஜாங்கூ 26 ரன்களிலும், ஷாய் ஹோப் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். </p><p>6-வது விக்கெட்டுக்கு ஜஸ்டின் கிரீவ்ஸ் உடன் கேப்டன் ராஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 92 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார்.</p><h2>74 ஓவரில் முடிவடைந்த முதல்நாள் ஆட்டம்</h2><p>வெஸ்ட் இண்டீஸ் அணி 74 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் அடித்திருக்கும்போது, முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மோசமான வானிலை காரணமாக ஆட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாது என நடுவர்கள் தெரிவித்ததால் 90 ஓவர்களில் நிறைவடைய வேண்டிய முதல்நாள் ஆட்டம் 74 ஓவர்களில் நிறைவடைந்தது.</p><h2>ஜஸ்டின் கிரீவ்ஸ் 64 நாட்அவுட்</h2><p>ஜஸ்டின் கிரீவ்ஸ் 64 ரன்கள் உடனும், ராஸ்டன் சேஸ் 36 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அலி 17 ஓவர்கள் வீசி 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இவர் 5 ஓவர்களை மெய்டனாக வீசினார்.</p><p>உபைத் ஷா 9 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், அலி உஸ்மான் 25 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், சஜித் கான் 22 ஓவர்களில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>‘திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர் கள்ள மௌனம் காக்கிறார்’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-person-who-played-the-role-of-a-son-of-the-soil-farmer-on-screen-is-maintaining-a-studied-silence-mk-stalins-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-person-who-played-the-role-of-a-son-of-the-soil-farmer-on-screen-is-maintaining-a-studied-silence-mk-stalins-criticism#comments</comments><guid isPermaLink="false">108460f2-4e02-4da1-8337-34004387d56b</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:17:52 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:17:52.915Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.k. stalin,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/kthe3y7k/New-Project-2026-08-03T144712.254.jpg" width="1501"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர் கள்ள மௌனம் காக்கிறார்’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/kthe3y7k/New-Project-2026-08-03T144712.254.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்!</p><p>விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் ஜவஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக்  ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை. ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள் விவசாயவிரோதிவிஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.</p><p>தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?</p><p>முழுக் கடன் தள்ளுபடி என வாழைப்பழம் போல வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.</p><p>மேகதாது அணையை கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் துடியாய்த் துடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதலமைச்சருக்கு நேரமில்லையா?</p><p>விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக் கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா?</p><p>நாக்பூரில் நம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், கள்ள மவுனம் காக்கிறார் திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர்.</p><p>விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல் த.வெ.க. அரசு வாக்குறுதியளித்தபடி முழுக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும்.</p><p>காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை கழகத்தின் போராட்டம் தொடரும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு
</title><link>https://www.maalaimalar.com/news/national/cauvery-issue-tn-government-files-case-in-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/cauvery-issue-tn-government-files-case-in-supreme-court#comments</comments><guid isPermaLink="false">093efff7-d6a8-400a-bf40-413482f47da5</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:09:45 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:09:45.739Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Supreme Court,சுப்ரீம் கோர்ட்,Cauvery Issue,காவிரி விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/q9iumpi4/tngovernment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cauvery water - Supreme court - TN government]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/q9iumpi4/tngovernment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழ்நாடு அரசு</a> வழக்கு தொடர்ந்தது.</p><p>தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவில்,</p><p>* விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடகம் அளிக்க தவறி விட்டது. </p><p>* 26.954 டி.எம்.சி. நீரை <a href="https://www.maalaimalar.com/news/national/the-mekedatu-project-is-the-only-solution-to-the-cauvery-issue-dk-shivakumar">கர்நாடகம்</a> தமிழகத்திற்கு தந்திருக்க வேண்டும்.</p> <p>* தமிழகத்திற்கு உரிய நேரத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீரை திறந்து விடவில்லை.</p><p>* காவிரி மேலாண்மை ஆணையம் உத்தவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.</p><p>* ஆக.3 நிலவரப்படி கேஆர்எஸ் அணையில் 23 டிஎம்சியும், கபினி அணையில் 18.6 டிஎம்சியும், ஹாரங்கியில் 7.8 டிஎம்சியும், ஹேமாவதி அணையில் 28 டிஎம்சி என மொத்தம் 77.53 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.</p> <p>* 77.53 டிஎம்சி தண்ணீர் உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதில் கர்நாடகாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை.</p><p>* காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.</p><p>* காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.</p><p>* தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்கவேண்டிய நீர் 26.954 டிஎம்சி.</p><p>* உரிய நேரத்தில் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடி - சார்பதிவாளர், பெண் உதவி அலுவலர் பணியிடை நீக்கம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-case-sub-registrar-and-assistant-officer-suspended</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-case-sub-registrar-and-assistant-officer-suspended#comments</comments><guid isPermaLink="false">7c8fbf05-c7cc-43d6-a5d9-7044ef3e0218</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:34:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:34:58.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani temple,பழனி கோவில்,land scam,சிபிசிஐடி,நிலமோசடி,cbcid</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9behzefp/New-Project-2026-07-16T205514.573.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோயில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9behzefp/New-Project-2026-07-16T205514.573.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பழனி கோவில்</h2><p>பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><p>இவ்வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கடந்த 27ந் தேதி முதல் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தினந்தோறும் ஆஜராகி வருகிறார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஷஜீதா, டி.எஸ்.பி. அஜய்தங்கம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <h2>சி.பி.சி.ஐ.டி. </h2><p>அதன்படி இன்று திண்டுக்கல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF">சி.பி.சி.ஐ.டி. </a>அலுவலகத்தில் ஆஜராகும் ஜஸ்டின் மணிகண்டன் தனது முன்ஜாமினுக்கு பழனி நீதிமன்றத்தை அணுக உள்ளார்.</p><p>அவர் பணிபுரிந்த பழனி, கொடைக்கானல், தேனி, வடமதுரை, ஒட்டன்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு பத்திரப்பதிவு செய்யப்பட்டதா? என தணிக்கை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அறிக்கை பத்திரப்பதிவு த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அதன்மீதான விசாரணை நடைபெற உள்ளது.</p><p>தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலவிஜய். இவர் தற்போது காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார்.</p> <p>மேல்மங்கலம் கிராமத்தில் பாலவிஜய்க்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் வீடு மற்றும் நிலத்தினை கட்ட தேவன் என்பவர் பராமரித்து வந்தார். </p><h2>பத்திரப்பதிவு</h2><p>இந்த நிலையில் பாலவிஜய் தனது சொத்துக்களை விற்பனை செய்வதற்காக முயற்சித்தபோது கட்ட தேவன் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து பாலவிஜய் போல் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்து சொத்தை விற்பனை செய்துள்ளனர்.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த பாலவிஜய் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சொத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக கடந்த ஆண்டு புகார் அளித்துள்ளார்.</p> <p>புகாரை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கட்டதேவன், ஈஸ்வரன் மற்றும் அப்போதைய பெரியகுளம் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஜெகதீஸ்வரன், ஓய்வு பெற்ற சிறப்பு ஆய்வாளர்கள் அம்மா வாசி, பாண்டியராஜன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் தற்போது தேனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி இன்று திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.</p><p>ஏற்கனவே திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.</p> <p>ஜஸ்டின் மணிகண்டன் இதுவரை பணி செய்த 10க்கும் மேற்பட்ட இடங்களில் மோசடி பதிவுகள் நடத்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ளதால் ஆவணங்கள் அனைத்தையும் சேகரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>இதனிடையே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-thandayuthapani-temple-land-scam-case-cb-cid-arrests-4">பழனி கோவில் நிலமோசடி</a> வழக்கில் மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p> <h2>பணியிடை நீக்கம்</h2><p>இந்நிலையில் பழனியில் நிரந்தரமாக பணிபுரிந்து வந்த சார்பதிவாளர் பாலசந்தர், உதவி அலுவலர் சிவசங்கரி ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் பணிபுரிந்து வந்த பாலசந்தர் ஜூன் முதல் வாரத்தில்தான் பழனிக்கு மாறுதலாகி வந்துள்ளார். அவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய முடியாது என நிறுத்தி வைத்திருந்த ஆவணங்களை சரிபார்க்காமல் ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவு செய்துள்ளார். </p><p>ஆனால் விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு வந்த பாலசந்தர் இந்த முறைகேடு பத்திரப்பதிவை கண்காணிக்காமல் விட்டுள்ளார். அதன் காரணமாகவும் இந்த புகாரில் தகவல்களை மறைத்ததற்காக உதவி பெண் அலுவலர் சிவசங்கரியும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரிஜ்பூஷன் சிங் விடுவிப்பு: மேல்முறையீடு செய்வோம்..!- வினேஷ் போகத்</title><link>https://www.maalaimalar.com/news/national/vinesh-phogat-on-brijbhushan-singh-acquittal-we-will-appeal</link><comments>https://www.maalaimalar.com/news/national/vinesh-phogat-on-brijbhushan-singh-acquittal-we-will-appeal#comments</comments><guid isPermaLink="false">3da77da5-1342-436c-a075-48bff7336e39</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:31:42 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:31:42.173Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வினேஷ் போகத்,பாலியல் குற்றச்சாட்டு,பிரிஜ் பூஷன் சரண் சிங்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xbz63khs/vinesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Brij Bhushan singh- Vinesh phogat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/xbz63khs/vinesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க முன்னாள் எம்.பி.யான பிரிஜ்பூஷன் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தார்.</p><h2>பாலியல் புகார்</h2><p>கடந்த 2023-ம் ஆண்டு 6 மல்யுத்த வீராங்கனைகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்கள். முன்னணி வீராங்கனைகள் பிரிஜ்பூஷன் மீது செக்ஸ் புகார் கூறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக வீராங்கனைகள் போராட்டமும் நடத்தினார்கள்.</p><p>இதை தொடர்ந்து 6 முறை எம்.பி.யாக இருந்த அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகினார்.</p><h2>குற்றப்பத்திரிகை</h2><p>மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் குறித்த வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. கடந்த 2024-ம் ஆண்டு பிரிஜ்பூஷன் சிங் மீது குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டை பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.</p><h2>கடந்த ஜூன் மாதம் </h2><p>15-ந்தேதி டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 354 (பெண்ணின் கண்ணியத்திற்கு ஊறுவிளைவிக்கும் நோக்கத்துடன் தாக்குதல்), 54ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354டி (பின் தொடர்தல், தொல்லை கொடுத்தல்), 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து இருந்தது.</p><h2>போக்சோ பிரிவு ரத்து</h2><p>புகார் அளித்த வீராங்கனைகளில் ஒருவர் மைனர் பெண் என்பதால்  போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பொய்யான புகார் அளிக்கப்பட்டதாக அவரது தந்தை திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p>இதையடுத்து அந்த புகாரை ரத்து செய்யக்கோரி டெல்லி போலீசார் அளித்த பரிந்துரையை ஏற்று  பிரிஜ்பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து போக்சோ பிரிவை கோர்ட்டு ரத்து செய்தது.</p><h2>விடுவிப்பு</h2><p>இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜூலை 2-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு ஆகஸ்டு 3-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.</p><p>அதன்படி மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல்  துன்புறுத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷன் சிங், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் இணை செயலாளர் வினோத் தோமர் ஆகியோரை கோர்ட்டு விடுவித்தது.</p><p>கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு அஸ்வினி  பன்வார் ஆதாரம் இல்லாததால் இருவரையும் விடுவிப்பதாக உத்தரவில் தெரிவித்தார்.</p><h2>மேல்முறையீடு முடிவு</h2><p>பிரிஜ் பூஷண் சிங் விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>6000mAh பேட்டரி, 50MP கேமரா... பட்ஜெட் விலையில் புது சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-f70-pro-5g-with-6000mah-battery-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-f70-pro-5g-with-6000mah-battery-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">c8008973-7d4c-438a-88c6-1a5b74fa6e5c</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:26:57 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:26:57.365Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/v2q5cuww/Samsung-Galaxy-F70-Pro-5G.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாம்சங் கேலக்ஸி F70 ப்ரோ 5ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/v2q5cuww/Samsung-Galaxy-F70-Pro-5G.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய கேலக்ஸி F70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மாடல் அதிக செயல்திறன், மேம்பட்ட டிசைன் மற்றும் நீண்ட கால மென்பொருள் சப்போர்ட் உடன் வருகிறது.</p><p>புதிய கேலக்ஸி F70 ப்ரோ 5ஜி ஃபிளாட் ரியர் பேனல், மூன்று கேமரா சென்சார்களை கொண்ட கேமரா ஐலேண்ட் கொண்டிருக்கிறது. இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> அரோரா கிரீன் மற்றும் ஆல்ஃபா பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதோடு டெக்ஸ்ச்சர் மற்றும் லெதர் போன்ற பேக் பேனல் கொண்டுள்ளது.</p><p>அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இத்துடன் IP64 தர டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், மற்றும் UFS 3.1 ஸ்டோரஜ் உடன் வருகிறது. </p><h2>சாம்சங் கேலக்ஸி F70 ப்ரோ சிறப்பம்சங்கள்:</h2><p>6.7-இன்ச் (1080×2340 பிக்சல்) FHD+ Infinity-O Super AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்</p><p>கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு</p><p>ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிராசஸர்</p><p>அட்ரினோ 710 GPU</p><p>6 ஜிபி / 8 ஜிபி LPDDR5X ரேம்</p><p>128 ஜிபி / 256 ஜிபி UFS 3.1 மெமரி</p><p>மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி</p><p>ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்</p><p>ஆண்ட்ராய்டு 16 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ 8.5</p><p>50MP பிரைமரி கேமரா, f/1.8, OIS</p><p>5MP அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, f/2.2</p><p>2MP மேக்ரோ லென்ஸ், f/2.4</p><p>12MP செல்ஃபி கேமரா, f/2.2</p><p>பக்கவாட்டில் கைரேகை சென்சார்</p><p>யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ</p><p>ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்</p><p>5ஜி SA / NSA, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3</p><p>GPS + GLONASS, USB Type-C, NFC</p><p>6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்</p><p><strong>விலை விவரங்கள்:</strong></p><p>புதிய சாம்சங் கேலக்ஸி F70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையாக ரூ. 23,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 25,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 08-ஆம் தேதி தொடங்கும் ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் விற்பனைக்கு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பங்கிபூர் இடைத்தேர்தல்: பா.ஜ.க-வை முந்தி பிரசாந்த் கிஷோர் அதிரடி முன்னிலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/purnia-bypoll-prashant-kishor-leads-bjp-candidate-in-early-counting-rounds</link><comments>https://www.maalaimalar.com/news/national/purnia-bypoll-prashant-kishor-leads-bjp-candidate-in-early-counting-rounds#comments</comments><guid isPermaLink="false">a7a61430-b708-47f0-ae96-df66463bc6d6</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:19:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:19:49.351Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,bankipur bypoll,Bankipur,பங்கிபூர்,BJPBihar,NeerajKumar Sinha,பங்கிபூர் இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4ofplele/Prashant-Kishor" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Prashant Kishor  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4ofplele/Prashant-Kishor?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தின் பங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 'ஜன சுராஜ் கட்சி' நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தனது எதிர்தரப்பான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை விடத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.</p><h2>4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்</h2><p>பங்கிபூர் தொகுதியில் மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள 31 சுற்று வாக்கு எண்ணிக்கைகளில், 4 சுற்றுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்படி, ஜன சுராஜ் கட்சியின் பிரசாந்த் கிஷோர் 6,269 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். </p><p>பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா 5,124 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ரேகா குமாரி 884 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.</p><p>பா.ஜ.க வேட்பாளரை விட 1,145 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் இருக்கிறார்.</p><h2>பிரசாந்த் கிஷோரின் முதல் தேர்தல் களம்</h2><p>கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தல், தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோரின் முதல் நேரடித் தேர்தல் களம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>பா.ஜ.க-வின் பாரம்பரியமான மிக வலுவான கோட்டையாகக் கருதப்படும் இந்த பங்கிபூர் தொகுதி, அங்கு எம்.எல்.ஏ-வாக இருந்த பா.ஜ.க தலைவர் நிதின் நபின் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து காலியானது குறிப்பிடத்தக்கது.</p><p>பாட்னாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பல அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 27 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை எஞ்சியுள்ளது.</p> <h2>பாதுகாப்பான தொகுதியை நான் தேடவில்லை - பிரசாந்த் கிஷோர்</h2><p>முன்னதாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பிரசாந்த் கிஷோர், ' அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்களுக்குப் பாதுகாப்பான தொகுதிகளைத் தேடுவார்கள். ஆனால், நான் அதற்கு நேர்மாறாகச் செய்கிறேன். </p><p>பீகார் மக்கள் சாதி, மதங்களைக் கடந்து வாக்களிக்க வேண்டும் என்ற செய்தியைச் சொல்லவே பாஜக -வின் கோட்டையான பங்கிப்பூரைத் தேர்ந்தெடுத்தேன். </p><p>லாலு பிரசாத் யாதவ் மீதான பயத்தால் பாஜக -விற்கும், பாஜக மீதான பயத்தால் லாலுவிற்கும் மக்கள் வாக்களிப்பதை நிறுத்த வேண்டும்' என்று தனது அரசியல் நோக்கத்தை விளக்கியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய அணியில் இணையும் காஷ்மீரின் முதல் வீரர் - இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆகிப் நபி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/auqib-nabi-earns-maiden-india-call-up-replaces-injured-bumrah-in-indias-test-squad-for-sl-tour</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/auqib-nabi-earns-maiden-india-call-up-replaces-injured-bumrah-in-indias-test-squad-for-sl-tour#comments</comments><guid isPermaLink="false">93fa1198-ac0d-498d-94da-fc92a61c7b31</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:18:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:18:33.419Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,இலங்கை,Sri Lanka,Auqib Nabi,ஆகிப் நபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/9ei6uyky/auqib-nabi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ auqib nabi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/9ei6uyky/auqib-nabi.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-vs-sri-lanka-test-series-india-reduce-4-day-warm-match-to-3-day">இலங்கை</a> அணிக்கு எதிரான வரவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட <a href="https://www.maalaimalar.com/sports/cricket">டெஸ்ட்</a> தொடரில், காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி (Auqib Nabi) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.</p><p>தொடக்கத்தில் அணியில் இடம்பெற்றிருந்த பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ஏற்பட்ட இடது முழங்கால் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார். </p><h2>முதல் முறை:</h2><p>மூத்த தேசிய அணிக்கு நபி அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். "ஆண்களுக்கான தேர்வு குழு, பும்ராவுக்கு பதிலாக ஆகிப் நபியை தேர்வு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இந்த வேகப்பந்து வீச்சாளர் முதன்முறையாக மூத்த தேசிய அணிக்கு தேர்வாகியுள்ளார்," என்று பிசிசிஐ (BCCI) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தை சேர்ந்த 29 வயதான நபி, பர்வேஸ் ரசூல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கு பிறகு மூத்த தேசிய அணிக்கு தேர்வாகும் ஜம்மு-காஷ்மீரின் மூன்றாவது வீரர் ஆவார். ரசூல் மற்றும் மாலிக் ஆகியோர் இதற்கு முன் குறைந்த ஓவர் போட்டிகளில் (limited overs format) இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர்.</p><p>கடந்த இரண்டு ரஞ்சி கோப்பை சீசன்களில் மொத்தம் 104 விக்கெட்டுகளை (2025-26 சீசனில் மட்டும் 60 விக்கெட்டுகள்) வீழ்த்திய நபி, ஜம்மு-காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார். அவர் பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கக்கூடியவர்.</p><h2>பும்ரா விலகல்:</h2><p>சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 'ஏ' அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்; அங்கு இரண்டு முதல் தரப் போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முக்கிய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, தனது முழங்காலில் ஏற்பட்ட வீக்கம் ஆரம்பத்தில் தோன்றியதை விட தீவிரமானதாக இருந்ததால் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.</p><p>பெங்களூருவில் உள்ள 'சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' (Centre of Excellence) விளையாட்டு அறிவியல் குழு, அடுத்து வரவிருக்கும் தொடர்ச்சியான போட்டிகளை கருத்தில் கொண்டு, அனுபவம் வாய்ந்த இந்த வேகப்பந்து வீச்சாளரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அவசரமாக திரும்ப செய்ய விரும்பவில்லை.</p><p>32 வயதான பும்ரா, கடந்த மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட காயத்தால் அப்போட்டியில் விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற 'இந்தியா ஏ' தொடரின்போது ஏற்பட்ட கால் காயத்தில் இருந்து சாய் சுதர்சன் தொடர்ந்து குணமடைந்து வருவதால், இத்தொடரில் அவர் பங்கேற்பது அவரது உடல் தகுதி குறித்த ஒப்புதலை பொறுத்தே அமையும்.</p><p>இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 15 அன்று காலே நகரில் தொடங்குகிறது.</p><p><strong>இந்தியாவின் மாற்றியமைக்கப்பட்ட அணி விவரம்:</strong></p><p>சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சாரான்ஷ் ஜெயின், ஆகிப் நபி.</p> ]]></content:encoded></item><item><title>VIDEO: முதலமைச்சர் விஜய் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து... அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-if-chief-minister-vijay-opens-his-mouth-it-spells-danger-for-many</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-if-chief-minister-vijay-opens-his-mouth-it-spells-danger-for-many#comments</comments><guid isPermaLink="false">bf54e55c-958c-400a-896e-4297e2716d6d</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:11:34 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:11:34.257Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,tvk,அமைச்சர் செங்கோட்டையன்,Minister Senogttaiyan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/w1lqlz0m/sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/w1lqlz0m/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">கே.ஏ. செங்கோட்டையன்</a>, ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>நிரந்தர முதலமைச்சர்</strong></h2><p>தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் மாண்புமிகு வெற்றி தளபதியுடைய தலைமையில் தமிழகம் சிறப்பான முறையில் எல்லா துறைகளிலும் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு அயரால் உழைத்து வருகிறார்கள். அவரை பொறுத்தவரையும் விவசாயிகள் மீது வைத்திருக்கிற பேரன்பு அளப்பெரியதாக இருக்கிறது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்திலே தஞ்சையிலே பேசுகையில், அடுத்து எனக்கு ஒரு ஜென்மம் இருக்குமேயானால் நான் ஒரு விவசாய குடும்பத்திலே பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று குறிப்பிட்டு இருக்கிறார். </p><p>அந்த அடிப்படையில் தங்களுடைய காளைகளை காங்கியம் என்று சொல்லப்படுகிற உயர்தர காளைகளை இந்த கண்காட்சிக்கு கொண்டு வந்து பரிசுகளை பெறுவதற்காக விவசாயிகள் இங்கே பெருந்திரளாக வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களுடைய சார்பாகவும், சட்டமன்ற உறுப்பினர் சார்பாக, இங்கே வருகை தந்திருக்கிற அனைவர் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>நம்முடைய பகுதியிலே வாழுகிற மக்கள் காங்கியம் காளை, காங்கியம் கரை மாடுகள் என்று சொன்னால் உயர்தரமான காளை மாடுகள் என்பதை நாம் அறிவோம். அதே நேரத்தில் மருத்துவ குணம் பெறுவதற்கு இங்கே இருக்கிற நம் பசுவின் பாலை தான் அருந்த வேண்டும் என்று மருத்துவர் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.  காங்கியம் பசுமாட்டின் பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலமாக அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர முடியும் என்பதை பல்வேறு புள்ளி விவரங்களை மருத்துவர் மூலமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். எல்லா விவசாயிகளும் எல்லா நலமும் பெற வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். </p><p>இதனிடையே, காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் இருக்கும்போது தமிழ்நாட்டிலயும் அதே மாதிரி அனைத்து கட்சிகளும் இருக்கணும். அதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டணும்னு அரசியல் கட்சிகள் எல்லாம் சொல்கிறார்கள் என்று செய்தியாளர் கூறியதற்கு, பொதுவாக எல்லோரும் ஒருங்கிணைந்து தான் அந்த பணிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். அதிலே கருத்து வேறுபாடுகள் இல்லை. ஒரு மாநிலத்திலே அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது என்று உதாரணம் காட்டி எங்களிடத்திலே கேள்வி கேட்பதை காட்டிலும் எல்லோரும் ஒருங்கிணைந்து இந்த தமிழ்நாட்டினுடைய நம்முடைய தமிழ் மக்களுக்காக தஞ்சைதரனிலேயே இருக்கின்ற காவிரி டெல்டா பகுதியில் வாழுகிற விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவு. அந்த கனவு நிறைவேறுகிற காலம் துவங்கப்பட்டிருக்கிறது. ஆகவே அது வெற்றிக்கரமாக நடைபெற நல்ல ஒரு முதலமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவர் காலம் என்றைக்கும் பொற்காலமாக அமையும் என்றார். </p><p>மேலும், மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் வாய் திறக்க மாட்டேங்குறார் என்று செய்தியாளர் கூற, அவர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வருகிறது. ஆகவே தான் வாய் திறப்பதில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/IDZ9PqHXZNw"></iframe></figure>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-of-parliament-both-houses-adjourned-amid-continued-uproar</link><comments>https://www.maalaimalar.com/news/national/monsoon-session-of-parliament-both-houses-adjourned-amid-continued-uproar#comments</comments><guid isPermaLink="false">d8c59191-1c9f-47a8-bf1e-5bdc87f30424</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:47:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:47:33.156Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Loksabha,அமளி,parliament,rajyasabha mp,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்,அவை ஒத்திவைப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/6qrx0a2t/parliament.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parliament]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/6qrx0a2t/parliament.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கிய முதல் நாள் முதலே எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்து வருகிறது.</p><p>இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 11வது நாளான இன்று நீட் முறைகேடு விவகாரம், மாணவர் போராட்டங்கள் மீதான போலீஸ் நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.</p><p>அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்ள் முழக்கமிட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.  தொடக்கத்திலேயே ஏற்பட்ட அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷங்களால் அவை பாதிக்கப்பட்டது. தொடர் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, இன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.</p><p>மக்களவையில் இந்திய புள்ளியியல் நிறுவனம் மசோதா, 2026 மற்றும் வங்கியாளர்களின் ஆவண சான்று மசோதா, 2026 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.</p><p>மாநிலங்களவையில் பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா, 2026 மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை (திருத்தம்) மசோதா, 2026 ஆகியவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.</p><p>மேலும், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை (FCRA) திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இன்னும் சில வேலை நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அவையில் தொடர்ந்து அமளி நீடித்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு: இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்?- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/national/thiruparankundram-deepam-case-supreme-court-ask-question-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/national/thiruparankundram-deepam-case-supreme-court-ask-question-tn-govt#comments</comments><guid isPermaLink="false">b29f3fc5-7de3-4c2f-8f98-df88ad84d874</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:38:42 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:38:42.187Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,Supreme Court,சுப்ரீம் கோர்ட்,திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,திருப்பரங்குன்றம் தீபம்,Thiruparankundram Deepam Case,திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/jnb5c0yg/supremecourt.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு]]></media:title><media:description type="html"><![CDATA[ ​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/jnb5c0yg/supremecourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும்.</aside><p>திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கடந்​த ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி தீபம் ஏற்​றக்கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவி​கு​மார் உள்​ளிட்​டோர் உயர்நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்தாக்​கல் செய்தனர். அந்த மனுக்​களை விசா​ரித்த சென்னை உயர்நீ​தி​மன்ற தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தீபத்​தூணில் கார்த்திகை திரு​நாள் அன்று தீபம் ஏற்ற வேண்​டுமென கடந்த டிச.1-ந்தேதி உத்​தர​விட்டார்.</p><p>ஆனால், இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர் மற்​றும் கோவில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், செயல் அலு​வலர் ஆகியோர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்​றாததற்​காக வருத்​தம் தெரிவித்தனர்.</p><p>இதனைதொடர்ந்​து, தனி நீதிபதி உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசும், அவம​திப்பு நடவடிக்​கையை எதிர்த்து அதி​காரி​களும் உயர் ​நீ​தி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​தனர். அந்த மேல்​முறை​யீட்டு மனுக்​களை விசா​ரித்த மதுரை அமர்வு, அதி​காரிகளுக்கு எதி​ரான நீதி​மன்ற நடவடிக்​கைக்கு தடை​வி​தித்து உத்​தர​விட்​டது. அதே வேளை​யில், ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்​தது.</p><p>இதனையடுத்​து, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோவில் நிர்​வாகம் தரப்​பில் <a href="https://www.maalaimalar.com/topic/சுப்ரீம்-கோர்ட்">சுப்ரீம் கோர்ட்டில்</a> மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பி.கருணாகரனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்தத் தீர்ப்புக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறையின்படியே கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அரவிந்த் குமார், வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-</p><p>அறநிலையத்துறை தரப்பு:- உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் ஒரு புதிய நடைமுறையை புகுத்த பார்க்கிறார்கள்.</p><p>நீதிபதிகள்:-  கார்த்திகை தீபம் என்று அந்த தீப தூணில் விளக்கேற்றும் நடைமுறை முன்பு இருந்ததா? </p><p>அறநிலையத்துறை ஆணையர்:- தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நடைமுறை முன்னர் இல்லை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து புதிய ஒரு நடைமுறையை புகுத்த பார்க்கிறது. நடைமுறையில் இல்லாத ஒரு விஷயத்தை எப்படி உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் செயல்படுத்த முடியும்? ஏற்கனவே நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மனுவை விசாரித்து நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.</p><p>நீதிபதிகள்:- தற்போதைய நிலையில் எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. வழக்கை முழுமையாக விசாரித்து அதன் பின்பே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.</p><p>எதிர்மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு:- சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்திருந்த நிலையில் தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போதும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாக கூறி வழக்கை இழுத்து அடித்து வருகிறார்கள்.</p><p>நீதிபதிகள்:- சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி மாதம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் இத்தனை நாட்கள் தமிழக அரசு என்ன செய்து கொண்டு இருந்தது? </p><p>அறநிலையத்துறை தரப்பு:- பல்வேறு ஆவணங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டியதிருந்ததால்தான் காலதாமதம் ஏற்பட்டது. நாங்கள் அனைத்தையும் தற்போது நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறோம்.</p><p>நீதிபதிகள்:- இந்த விவகாரம் தொடர்பாக ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும். மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற மனுதார்கள் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. வழக்கு 8 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item></channel></rss>