<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 27 Jul 2026 12:32:33 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026#comments</comments><guid isPermaLink="false">8b4780d9-1157-4420-b1d3-5493e3a0aec3</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:28:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:20:50.295Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-urges-vaibhav-sooryavanshi-to-improve-fitness-after-first-player-of-the-series-win">வைபவ் சூர்யவன்ஷி இதை கண்டிப்பாக செய்யனும்: லக்ஷ்மண் அட்வைஸ்</a></p><p>* வைபவ் சூர்யவன்ஷி மிகவும் இளம் வயதுடையவர். விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள அவரே விரும்புகிறார்.</p><p>* டீப் ஸ்கொயர் லெக் (deep square leg) பகுதியிலிருந்து ஓடிவந்து டைவிங் கேட்ச் (diving catch) பிடிக்க முயன்றபோது அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும், அவர் தொடர்ந்து களத்தில் இருக்கவே விரும்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled">கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-on-fetal-gender-reveal-health-officials-to-requestion-youtuber-irfan">கருவின் பாலினம் அறிவித்த வழக்கு: யூடியூபர் இர்ஃபானை மீண்டும் விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு!...</a></p><p>*கடந்த திமுக ஆட்சியில் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. </p><p>*மருத்துவப் பயிற்சி பெறாத ஒருவர் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்து மருத்துவ நடைமுறையைச் செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-never-fears-sofa-government-arrests" rel="nofollow">சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.</p><p>* ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd">தமிழகத்தில் வருகிற 2-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments">முதலமைச்சர் கர்நாடகா பயணம்: உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் கெஞ்ச வேண்டும் - துரைமுருகன்</a></p><p>* எம்ஜிஆர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம்.</p><p>* மேகதாது, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-comfort-young-woman-sobs-and-wails-against-reels-culture">‘ரீல்ஸ்’ கலாச்சாரத்திற்கு எதிராக கண்ணீர் விட்டு கதறி அழுத இளம்பெண்- அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்</a></p><p>* தமிழ் சங்கங்கள் தாங்கிப்பிடித்த நமது பாரம்பரிய தமிழ் சமூகம், வெறும் 'ரீல்ஸ்' மோகத்திற்காக இப்படி தரம் தாழ்ந்து போகலாமா?" என  உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். </p><p>* சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான் என்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-feature-key-announcements-minister-vinod" rel="nofollow">வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும்- அமைச்சர் வினோத்</a></p><p>* விவசாயிகள்   கருத்துகளின்  அடிப்படையில்  வேளாண் பட்ஜெட்  தயாரிக்கப்பட உள்ளது.</p><p>* குளிர்சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-shooting-bihar-cop-suspended-for-firing-ak-47-at-students">VIDEO: பீகாரில் போராடிய மாணவர்களை ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்டு!</a></p><p>*குறைந்தபட்சம் 4 முதல் 5 சுற்றுகள் வரை சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>*15 வயது சிறுவன் முகமது ஆரிப் கழுத்தில் குண்டடிபட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-mk-stalin-for-allegedly-concealing-information-in-election-nomination-papers-hearing-adjourned">தேர்தல் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு</a></p><p>* வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை என மு.க.ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.</p><p>* ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு  ஐகோர்ட் உத்தரவு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/e20-ethanol-row-nitin-gadkari-moves-bombay-high-court">E20 எத்தனால் விவகாரம்: பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி வழக்கு!... </a></p><p>*சமீபகாலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் E20 பெட்ரோல் பயன்பாட்டினால் வாகனங்களின் என்ஜின் பழுதடைவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. </p><p>*தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dr-apj-abdul-kalam-11th-death-anniversary-leaders-pay-tribute">"ஏவுகணை நாயகனின் கனவுகள் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகின்றன" - கலாமுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!</a></p><p>* தலைவர்கள் கலாமின் எளிமை, தேசபக்தி, அறிவியல் பங்களிப்பை புகழ்ந்தனர்</p><p>* இளைஞர்களுக்கு கனவு, புதுமை வழிகாட்டியாக கலாம் இன்றும் வாழ்கிறார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament">கடும் அமளிக்கு மத்தியில் 'தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா' மக்களவையில் தாக்கல்.. அம்சங்கள் என்ன? </a></p><p>பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' அவையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>*சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon">ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் - அமைச்சர் வன்னி அரசு</a></p><p>* சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.</p><p>* பிரதமர் மோடி அமைத்துள்ள உயர்மட்ட குழுவே ஒரு ஏமாற்ற வேலைதான். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery"> சுங்கக் கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் - மாணிக்கம் தாகூர்</a></p><p>* கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கட்டணம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.</p><p>* தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது மோடி அரசு. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/desilting-of-water-bodies-minister-anand-conducts-field-inspection-after-arriving-on-a-motorcycle">நீர்நிலைகள் தூர்வாரும் பணி - மோட்டார் சைக்கிளில் வந்து கள ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த் </a></p><p>* கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஆனந்த் தனது காரில் சென்றார்.</p><p>* கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online">இணையத்தில் 'ஜன நாயகன்' பார்த்தவருக்கு முன்ஜாமின்</a></p><p>* படம் கசிந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட 8 முதல் 21 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்</p><p>* வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india" rel="nofollow">இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்..!- யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?</a></p><p>* ராஜா தனது பள்ளி காலத்தில் இருந்தே பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று வந்துள்ளார்.</p><p>* 2018-ம் ஆண்டில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 6-வது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">போராட்டம் நடத்தினாலே தடியடியா? மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்</a><br><br>*போராட்டம் என்பது வன்முறை என்று அர்த்தமாகாது.</p><p>*தாக்குதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal" rel="nofollow">காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்: தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.</p><p>* ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam">"மக்கள் ஜனாதிபதி" டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி!</a></p><p>* இராமேஸ்வரத்தில் பிறந்த எளிய செய்தித்தாள் விற்பனையாளர் மகன்</p><p>* மக்களின் ஜனாதிபதி, மாணவர்களுக்கு கனவு காண கற்றுக்கொடுத்தவர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault">தர்மேந்திர பிரதானுக்கு ராஜ வரவேற்பு.. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி - அவைகள் ஒத்திவைப்பு</a></p><p>*கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மக்களவை எம்.பி.யாக இன்று அவைக்கு வருகை புரிந்தார்.</p><p>*அவையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/what-events-will-india-participate-in-at-the-commonwealth-games-today" rel="nofollow">காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எவை?</a></p><p>* ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் முதல் சுற்று - குரிந்தர்விர் சிங். </p><p>* ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று, (பி பிரிவு)-லோகேஷ் சத்யநாதன். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/hattrick-gold-for-india-brings-immense-joy-mirabai-chanu" rel="nofollow">இந்தியாவுக்காக ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி- மீராபாய் சானு</a></p><p>* நான் 48 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் போது அதில் கடினமாக இருக்கிறது. </p><p>* நான் 3 நாட்களாக தண்ணீர் கூட குடிக்கவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/abdul-kalam-memorial-day-11th-death-anniversary-collector-and-annamalai-pay-tribute">11-ம் ஆண்டு நினைவு நாள் - அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர், அண்ணாமலை மரியாதை</a></p><p>* ஏபிஜே அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது. </p><p>* பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டு வந்து  அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kavin-first-death-anniversary-minister-vanni-arasu-meets-family">கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - குடும்பத்தினரை சந்தித்து  அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்</a></p><p>* காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். </p><p>* கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-27-07-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்திலேயே தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி: அதிரடியாக உயர்ந்த விலை!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament">நீட் தேர்வு தடை, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க தி.மு.க நோட்டீஸ்</a></p><p>*தொடர்ச்சியான தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும்</p><p>* கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/seattle-food-festival-shooting-two-killed-five-injured-at-space-needle-event">அமெரிக்கா: உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி - ஐவர் காயம்</a></p><p>*தப்பிக்கும் முயற்சியில், மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டபடி சென்றதால் பலர் கீழே விழுந்தது பதிவாகியுள்ளது.</p><p>*இருவர் கைது என சியாட்டில் நகர மேயர் கேட்டி வில்சன் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/plans-for-womens-premier-league-cricket-in-tamil-nadu" rel="nofollow">தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் 'பெண்கள் பிரீமியர் லீக்' போட்டி?</a></p><p>* தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது.</p><p>* போட்டியுடன் பெண்களுக்கான இரண்டு கண்காட்சி போட்டி நடத்தப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-mariya-wilson-says-a-list-of-dmks-acts-of-corruption-will-be-released-during-the-upcoming-budget-session">நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும்- அமைச்சர் மரிய வில்சன்</a></p><p>* முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போதே, ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசாக இருக்கும் என்று உறுதியளித்தார்.</p><p>* '100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக த.வெ.க. அரசின் பட்ஜெட் இருக்கும்' என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளி குப்பைகளைக் கண்காணிக்க சீனாவின் புதிய &apos;கண்டே&apos; செயற்கைக்கோள் நெட்வொர்க்!</title><link>https://www.maalaimalar.com/news/world/china-new-kande-satellite-network-to-track-space-debris</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-new-kande-satellite-network-to-track-space-debris#comments</comments><guid isPermaLink="false">811e6774-ebd6-4a6b-9aa6-4eda14422d2b</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:29:28 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:29:28.734Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ChinaSpace,SpaceDebris,விண்வெளிக்குப்பைகள்,GandeConstellation,Lijian1,Tiangong,SpaceExploration</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/zwtola3b/ChinaSpaceDebris" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ChinaSpaceDebris ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/zwtola3b/ChinaSpaceDebris?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விண்வெளியில் அதிகரித்து வரும் ஆபத்தான குப்பைகளைக் கண்காணித்து விண்கலன்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சீனா தனது முதல் வணிக ரீதியிலான 'கண்டே' செயற்கைகோள் நெட் வொர்க் திட்டத்தை தொடங்கியுள்ளது. </p><p>இதற்கான முதல் செயற்கைகோள், வடமேற்கு சீனாவிலிருந்து 'லிஜியான்-1' என்ற வணிக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.</p><h2><strong>கண்டே திட்டத்தின் முக்கியப் பின்னணி</strong></h2><p>கண்டே திட்டம் என்பது சீனாவின் விண்வெளிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான விண்வெளிக் கண்காணிப்பு வலையமைப்பாகும்.</p><p>விண்வெளியில் அதிவேகமாகச் சுற்றி வரும் ஆபத்தான விண்வெளிக் குப்பைகளைக் கண்காணிப்பதும், புவியின் அனைத்து வகையான வட்டப்பாதைகளிலும் உள்ள விண்கலன்கள் மற்றும் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிந்து கண்காணிப்பதுமே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.</p><p>குறிப்பாக, சீனா வேகமாக ஏவி வரும் வணிகரீதியான பெரும் செயற்கைக்கோள் கூட்டங்கள் விண்வெளிக் குப்பைகளுடன் மோதி சேதமடையாமல் தடுத்து, ஒட்டுமொத்த விண்வெளிப் பயண விபத்துகளைத் தவிர்த்துப் பாதுகாப்பதில் இத்திட்டம் ஒரு முக்கியப் பின்னணியாகச் செயல்படுகிறது. </p><p>இந்த நெட்வொர்க் சீனாவின் விண்வெளிப் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துகிறது.</p><h2><strong>செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் உத்திகள்</strong></h2><p>'கண்டே' திட்டத்தின் செயற்கைகோள் நிலைநிறுத்தும் உத்திகள் படி, ஒட்டுமொத்தமாக 120 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது. </p><p>இந்த முழு நெட்வொர்க்கும் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் மூன்று முக்கிய கட்டங்களாக விண்வெளியில் முழுமையாக நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்டத்தில் (LX630), 14 செயற்கைக்கோள்கள் மட்டும் முதலில் அனுப்பப்பட்டு, அவை பூமியின் கீழ் வட்டப்பாதையில் உள்ள விண்வெளிப் பொருட்கள் மற்றும் குப்பைகளை முழுமையாகக் கண்காணித்துப் பட்டியலிடும் பணியைச் செய்யும். </p><p>சீனாவின் வணிக விண்வெளித் துறையில் விண்வெளிக் குப்பைகளைக் கண்காணிப்பதற்கான பிரத்யேக வசதி இதுவரை இல்லாமல் இருந்த பெரிய குறையை இத்திட்டம் முழுமையாக நிவர்த்தி செய்கிறது என்றும், இது ஒரு முக்கிய மைல்கல் என்றும் இதன் தலைமைப் பொறியாளர் ஃபான் வெய் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>அதிநவீன தொழில்நுட்பப் புரட்சி</strong></h2><p>'கண்டே' திட்டத்தின் அதிநவீன தொழில்நுட்பப் புரட்சி படி, விண்ணில் செலுத்தப்பட்டுள்ள இதன் முதல் செயற்கைக்கோளில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் ஏஐ கணினி பொருத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம், பூமியிலிருந்து தரைக்கட்டுப்பாடு மையத்தின் தலையீடு மிகக் குறைவாக இருந்தாலும், செயற்கைகோள் தனது சுயக் கட்டுப்பாட்டுடன் தானாகவே வழக்கமான கண்காணிப்பு, அவசரக்கால நடவடிக்கைகள் மற்றும் அதிவேகத் தேடுதல் பணிகளைச் செய்யும் திறன் பெற்றுள்ளது. </p><p>மேலும் விண்வெளிக் குப்பைகளை மிக அருகில் சென்று உற்று நோக்குவதற்கும், பிற விண்வெளிச் செயல்பாடுகளுக்கும் தகுந்தபடி தனது வட்டப்பாதையைத் தானே மாற்றிக் கொள்ளும் பாதை மாறும் திறனும் இந்த அதிநவீன செயற்கைக்கோள்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>விண்வெளிக் குப்பைகளால் சீனா சந்தித்த ஆபத்துகள்</strong></h2><p>விண்வெளிக் குப்பைகளால் சீனா சந்தித்த ஆபத்துகள் காரணமாகவே தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>அண்மையக் காலங்களில் சீனா தனது விண்வெளிப் பயணங்களில் குப்பைகளால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. </p><p>குறிப்பாக, ஷென்சோ-20 விண்கலத்தின் திரும்பும் காப்ஸ்யூல் பகுதியில் உள்ள ஜன்னல் விண்வெளிக் குப்பைகளால் தாக்கப்பட்டது, இதனால் விண்வெளி வீரர்கள் திட்டமிட்ட நேரத்தை விடக் கூடுதல் காலம் 'தியாங்காங்' விண்வெளி நிலையத்திலேயே தங்க வேண்டியதாயிற்று. </p><p>அதேபோல், கடந்த 2024 இல் ஷென்சோ-17 பயணத்தின்போது விண்வெளிக் குப்பைகள் மோதியதால் விண்வெளி நிலையத்தின் மையப் பகுதியில் இருந்த சோலார் பேனல்கள் பழுதடைந்தன, இதனைப் பழுதுபார்க்க விண்வெளி வீரர்கள் விண்கலத்திற்கு வெளியே வந்து இரண்டு முறை விண்வெளி நடைபயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>Video: வெல்லம் ஊட்டிய ஆட்டோ ஓட்டுனரை மிதித்து கொன்ற யானை - பாகன் மீது வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/auto-driver-killed-by-elephant-in-indore-after-feeding-jaggery</link><comments>https://www.maalaimalar.com/news/national/auto-driver-killed-by-elephant-in-indore-after-feeding-jaggery#comments</comments><guid isPermaLink="false">1296eff4-f240-489e-892f-74dc9ebaa986</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:28:24 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:28:24.224Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>indore,CCTVFootage,ElephantAttack,யானைதாக்குதல்,TragicIncident,BNSAct,PublicSafety</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uk4nsixk/ElephantAttack" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ElephantAttack ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uk4nsixk/ElephantAttack?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சாலையில் நின்றிருந்த யானை ஒன்றுக்கு அன்போடு வெல்லம் ஊட்ட முயன்ற ஆட்டோ ஓட்டுநர், அந்த யானையால் கொடூரமாக மிதித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கடந்த சனிக்கிழமை நகரின் ராஜ் நகர் காவல் நிலையத்திற்கு நேர் எதிரே அரங்கேறிய இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.</p><h2><strong>வெல்லம் ஊட்டியதால் ஆபத்து</strong></h2><p>இறந்துபோன நபர் இந்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய் ஹோல்கர் (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சனிக்கிழமையன்று சாலையில் யானை நிற்பதைக் கண்ட அவர், அதற்கு ஏதேனும் உணவளிக்க விரும்பியுள்ளார். </p><p>அதன்படி, கையில் வெல்லக் கட்டிகளுடன் யானையின் அருகில் சென்று அதை ஊட்ட முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த யானை திடீரென கோபமடைந்து, தனது தும்பிக்கையால் விஜய் ஹோல்கரை பலமாகத் தள்ளி கீழே வீழ்த்தியது.</p><h2><strong>பாகனின் அஜாக்கிரதை</strong></h2><p>விஜய் ஹோல்கர் கீழே விழுந்ததைக் கண்டு பதற்றமடைந்த யானையின் பாகன் உமேஷ் கோஸ்வாமி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர நினைத்தார். </p><p>ஆனால், அவர் கையாண்ட விதம் நிலைமையை மேலும் மோசமாக்கியது. யானையைத் அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக, தனது கையில் இருந்த தடியால் யானையின் தலைப்பகுதியில் பலமாக அடித்தார். </p><p>பாகன் அடித்த அடியில் ஏற்பட்ட வலியால் நிலைதடுமாறிய அந்த யானை, முற்றிலும் தனது கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கே சென்றது.</p><h2><strong>தும்பிக்கையால் வீச்சு</strong></h2><p>கட்டுப்பாட்டை இழந்த யானை, கீழே விழுந்து தவித்துக் கொண்டிருந்த விஜய் ஹோல்கரை மீண்டும் தனது தும்பிக்கையால் சுருட்டி காற்றில் தூக்கி வீசியது. </p><p>அத்துடன் நிறுத்தாமல், கீழே விழுந்த அவரது வயிற்றுப் பகுதியின் மீது தனது கால்களால் பலமாக மிதித்துத் துவைத்தது. அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடிவந்து, பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரை மீட்டனர்.</p><h2><strong>சிகிச்சை பலனின்றி மரணம்</strong></h2><p>கடுமையான காயங்களுடன் கிடந்த விஜய் ஹோல்கர் உடனடியாக அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். </p><p>அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட போதிலும், நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவசரப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். </p><p>அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜய் ஹோல்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>யானையின் மிதியால் அவரது உடலின் முக்கிய உட்புற உறுப்புகள் கடுமையாகச் சிதைந்து, கடுமையான காயங்கள் ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்று பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் .</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/MlskmA4WdTk"></iframe></figure><h2><strong>காவல்துறை விசாரணை மற்றும் வழக்குப்பதிவு</strong></h2><p>போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சில ஆன்மீகத் துறவிகள் தங்களது சமூக நிகழ்ச்சி ஒன்றிற்காக இந்த யானையை நகருக்குள் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. </p><p>அந்த யானையை நகரின் பல்வேறு தெருக்களுக்குக் கூட்டிச் சென்று, மக்களிடம் யாசகம் பெற வைத்துள்ளனர்.</p><p>பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த நகர்ப்புற பகுதிக்கு யானையை அழைத்து வருவதற்கு முன்பாக, வனத்துறையிடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இதற்கிடையில், யானையைச் சரியாகப் பராமரிக்காமல் அஜாக்கிரதையாகச் செயல்பட்டு ஒருவரின் மரணத்திற்குக் காரணமான பாகன் உமேஷ் கோஸ்வாமி மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 106 மற்றும் 291 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வைபவ் சூர்யவன்ஷி இதை கண்டிப்பாக செய்யனும்: லக்ஷ்மண் அட்வைஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-urges-vaibhav-sooryavanshi-to-improve-fitness-after-first-player-of-the-series-win</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-urges-vaibhav-sooryavanshi-to-improve-fitness-after-first-player-of-the-series-win#comments</comments><guid isPermaLink="false">f5f1260e-53eb-46b4-9417-d7fd2b2d7309</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:18:32 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:18:32.879Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வைபவ் சூர்யவன்ஷி,vvs laxman,விவிஎஸ் லக்ஷ்மண்,Vaibhav Sooryavanshi,INDvsZIM</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/d6oz5e41/Sooryavanshi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sooryavanshi and Laxman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/d6oz5e41/Sooryavanshi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய டி20 அணியில் 15 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்துள்ளார். அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு  எதிரான தொடரில் அயர்லாந்துக்கு எதிராக களம் இறக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் 4 போட்டிகள் முழுமையாக நடைபெற்றன. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.</p><h2>ஜிம்பாப்வே தொடரில் தொடர் நாயகன்</h2><p>4 போட்டிகளிலும் இரண்டு போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றார். ஆனால் சரியாக விளையாடவில்லை. <a href="https://www.maalaimalar.com/sports/india-whitewashes-zimbabwe-on-home-soil-back-to-the-top-spot-in-t20-rankings">ஜிம்பாப்வே</a> அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினார். இதில் இரண்டு அரைசதங்களுடன் 151 ரன்கள் குவித்தார். 3-வது போட்டியில் 81 ரன்கள் விளாசினார். அத்துடன் தொடர் நாயகன் விருதை கைப்பற்றி அசத்தினார்.</p><p>முதல் போட்டியில் 19 பந்தில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 50 ரன்கள் அடித்தார். 2-வது போட்டியில் 9 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 20 ரன்கள் சேர்த்தார். கடைசி போட்டியில் 49 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 81 ரன்கள் விளாசினார்.</p><p>கடைசி போட்டியில் கேட்ச் பிடிக்க சென்றபோது, சூர்யவன்ஷிக்கு காயம் ஏற்பட்டது. இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ். லக்ஷ்மண் இருந்தார்.</p><h2>லக்ஷ்மண் அட்வைஸ்</h2><p>வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்தமாக உடற்தகுதியில் மேம்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லக்ஷ்மண் கூறியதாவது:-</p><p>வைபவ் சூர்யவன்ஷி மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பும் ஒரு விஷயம் அவரது ஒட்டுமொத்த உடற்தகுதிதான். வைபவ் சூர்யவன்ஷி மிகவும் இளம் வயதுடையவர். விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள அவரே விரும்புகிறார். டீப் ஸ்கொயர் லெக் (deep square leg) பகுதியிலிருந்து ஓடிவந்து டைவிங் கேட்ச் (diving catch) பிடிக்க முயன்றபோது அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும், அவர் தொடர்ந்து களத்தில் இருக்கவே விரும்பினார்.</p><p>எங்கள் பிசியோதான் அவரை வெளியே வருமாறு கேட்டுக்கொண்டார். அணியின் நலனுக்காக முடிந்த வழிகளிலெல்லாம் பங்களிக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வமும் தீவிரமும் அத்தகையது.</p><h2>ராஜஸ்தான் ராயல்ஸ்</h2><p>கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் முதன்முறையாக விளையாடியபோதே, நெருக்கடியை அவர் கையாண்ட விதம் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. எந்தவொரு ஐபிஎல் போட்டியும் ஒரு சர்வதேச போட்டிக்கு இணையானது என்றே நான் கருதுகிறேன். 14 அல்லது 15 வயதில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும்போது, ​​அந்த சூழலை கண்டு மலைத்துப்போகவோ அல்லது அந்த நெருக்கடியை ஏற்றுக்கொண்டு செயல்படவோ வாய்ப்புள்ளது. அவர் இரண்டாவது வழியையே தேர்ந்தெடுத்தார் என்று நான் நினைக்கிறேன்.</p><h2>சர்வதேச அளவில் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார்</h2><p>ஆகவே, இந்தத் தொடர் சென்ற விதம் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. சதம் அடிக்காதது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இது அவருக்கு கிடைக்கும் முதல் அல்லது கடைசி வாய்ப்பாக இருக்காது என்று நாங்கள் அவரிடம் கூறியிருந்தோம். அவருக்கு முன்னால் ஒரு நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான மனப்பான்மையும் மனநிலையும் அவரிடம் உள்ளது. அவர் முன்னேறி, சர்வதேச அளவில் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதைச் செய்வதற்கான அனைத்து ஆற்றலும் திறமையும் அவரிடம் உள்ளது.</p><p>இவ்வாறு லக்ஷ்மண் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled#comments</comments><guid isPermaLink="false">5ee8aa82-9606-4abd-a1a8-1fb1f3cd6af1</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:10:16 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:10:16.726Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,Madurai Bench of the High Court,கரூர் கூட்ட நெரிசல்  வழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hozfbunj/New-Project-2026-07-27T173947.313.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hozfbunj/New-Project-2026-07-27T173947.313.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தவெகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது விஜய்யை காண ஒரேநேரத்தில் அதிகளவிலான மக்கள் திரண்டதால்  கூட்டநெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கி பிஞ்சு குழந்தை உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். </p><p>இச்சம்பவம் அப்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. </p><p>இந்நிலையில் கடந்த 10ம் தேதியன்று கரூருக்கு சென்ற முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார். தகுதியுடைய 31 பேருக்கு அரசுப்பணியும், ஒருவருக்கு ரூ.10 லட்சம் பணமும் வழங்கினார். </p><p>இந்த பணி நியமன ஆணைகளுக்கு பெரும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. ஒருதரப்பினர் இதனை ஆதரிக்கவும் செய்தனர். இந்நிலையில் இந்த பணி வழங்கலை எதிர்த்து நாதக மற்றும் மஜக தரப்பு நிர்வாகிகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். </p><p>இந்தமனு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>தினந்தோறும் சாலை விபத்தில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் அரசு வேலை வழங்க முடியுமா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. </p><p>சாதாரண அரசு வேலையே வழங்கப்பட்டதாக அரசுத்தரப்பு வைத்த வாதத்திற்கு, “எந்தப் பணியும் சாதாரணம் அல்ல; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவும் பணியே” என்றும் நீதிபதிகள் பதில் அளித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கருவின் பாலினம் அறிவித்த வழக்கு: யூடியூபர் இர்ஃபானை மீண்டும் விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-on-fetal-gender-reveal-health-officials-to-requestion-youtuber-irfan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-on-fetal-gender-reveal-health-officials-to-requestion-youtuber-irfan#comments</comments><guid isPermaLink="false">60ae3c81-0ad6-4bec-bc80-7501ecbab3bb</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:08:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:08:03.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Youtuber Irfan,தமிழக சுகாதாரத்துறை,யூடியூபர் இர்ஃபான்,Tamil Nadu health department,PCPNDT Act,பாலினத் தேர்வு தடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7649lds1/irfan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ YouTuber Irfan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7649lds1/irfan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல யூடியூபரும் உணவு விமர்சகருமான இர்ஃபான் மீது ஏற்கனவே பதிவான மருத்துவ விதிமீறல் புகார்கள் தொடர்பான விவகாரத்தில், அவரை மீண்டும் நேரில் வரவழைத்து தீவிர விசாரணை நடத்த தமிழக மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.</p><h2><strong>தொப்புள் கொடி அறுவை சிகிச்சை சர்ச்சை:</strong></h2><p>தனக்குக் குழந்தை பிறந்தபோது, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்று, தனது குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் சுயமாகக் கத்தரித்து அதனை வீடியோவாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மருத்துவப் பயிற்சி பெறாத ஒருவர் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்து மருத்துவ நடைமுறையைச் செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.</p><h2><strong>மருத்துவமனை மீது நடவடிக்கை:</strong></h2><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் உரிமத்தை 10 நாட்களுக்குத் தற்காலிகமாக ரத்து செய்த சுகாதாரத்துறை, ரூ.50,000 அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்தது.</p><h2><strong>கருவின் பாலினம் அறிவித்த வழக்கு:</strong></h2><p>இதற்கு முன்பாகவும், வெளிநாட்டில் தனது மனைவிக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை மூலம் பிறந்த குழந்தையின் பாலினத்தை அறிந்து, அதை வீடியோவாக வெளியிட்டு பாலினத் தேர்வு தடைச் சட்டத்தை (PCPNDT Act) மீறியதாக இர்ஃபான் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த திமுக ஆட்சியில் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்து மருத்துவத்துறை விதிகளை மீறிச் செயல்பட்டது குறித்தும், இது தொடர்பான வழக்குகள் மற்றும் விளக்கங்கள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தவே யூடியூபர் இர்பான் பைலை  மீண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு  எடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>சிவகாசி பட்டாசு ஆலை விபத்து- பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-fireworks-factory-accident-death-toll-rises-to-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-fireworks-factory-accident-death-toll-rises-to-5#comments</comments><guid isPermaLink="false">3276549d-b9a2-42b7-a950-8795cc512145</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:55:37 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:55:37.363Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivakasi,பலி எண்ணிக்கை உயர்வு,பட்டாசு விபத்து,Firecrackers Explosion,சிவகாசி பட்டாசு ஆலை,Death rate raise</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2alrq4ga/sivakasi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ fireworks blast in sivakasi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2alrq4ga/sivakasi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தனது இடத்தில் தகரசெட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்தார். </p><p>இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அங்கு 5 தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். </p><h2>வெடி விபத்து</h2><p>அப்போது திடீரென எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறத் தொடங்கியது. இதில் அந்த பட்டாசு தயாரிக்க அமைக்கப்பட்டிருந்த தகர செட்டுகள் முழுவதும் வெடித்து சிதறி தரைமட்டமானது.</p><p>இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உரிமையாளர் ராம் பிரகாஷ் (வயது 32), மீனம்பட்டியை சேர்ந்த இன்னாசி முத்து (42) ஆகியோர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர். </p><p>இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், அங்கு பணிபுரிந்த மூன்று தொழிலாளர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். இதில் ராமச் சந்திரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். </p><h2>5 பேர் பலி</h2><p>மேலும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அய்யப்ப ராஜா (38), பாண்டித்துரை (35) ஆகிய இரண்டு பேரை</p><p>யும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரங்களுக்கு பின்பு அவரது உடல்கள் சிதறிய நிலையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. இதனால் 4 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>மேலும், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் மூலம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உலகெங்கிலும் இருந்து வந்த 2,500 வாழ்த்து அட்டைகள்: அன்பு மழையில் நனைந்த ‘பஞ்ச்’!</title><link>https://www.maalaimalar.com/news/world/2500-greeting-cards-from-across-the-globe-punch-drenched-in-a-shower-of-love</link><comments>https://www.maalaimalar.com/news/world/2500-greeting-cards-from-across-the-globe-punch-drenched-in-a-shower-of-love#comments</comments><guid isPermaLink="false">a95092c1-9a50-42f0-8f45-296efeb809a1</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:50:56 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:50:56.387Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,Birthday,பிறந்தநாள்,monkey Punch,பஞ்ச் குரங்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/g6jna4cr/New-Project-2026-07-27T162607.455.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உலகெங்கிலும் இருந்து வந்த 2,500 வாழ்த்து அட்டைகள்: அன்பு மழையில் நனைந்த ‘பஞ்ச்’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/g6jna4cr/New-Project-2026-07-27T162607.455.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனிதர்கள் சிலநேரம் தனிமையை விரும்புவார்கள் அல்லது தனிமை அவர்களுக்கு பரிசளிக்கப்படும். தானாக தனிமையை விரும்புவது என்பது வேறு. ஆனால் அது பரிசளிக்கம்படும்போது சொல்லொண்ணா துயரம் ஆட்கொள்ளும்.</p><p>அப்படி தனிமைப்படுத்தப்பட்டு, மனதை உருக்கும் தன்னுடைய கதையால் உலகம் முழுவதும் பிரபலமாகி, போதும் போதும் என்ற அளவிற்கும் அன்பை பெற்றதுதான் பஞ்ச் குரங்கு. </p><p>இந்நிலையில் நேற்று பஞ்ச் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியது. அதற்கு உலகம் முழுவதிலிருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்துள்ளன.</p><p>ஜப்பானுக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து சுமார் 2,500 பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை பஞ்ச் பெற்றுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் தலைவர் தகாஷி யசுனாகா கூறியுள்ளார். </p><h2>பஞ்ச் </h2><p>ஜப்பான் நாட்டின் சிபா மாகாணத்தில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சி சாலையில் 2025ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று பஞ்ச் பிறந்தது. </p><p>கோடைக்கால வெப்பம், முதல் குழந்தை, சோர்வு என பல காரணங்களால் பஞ்சின் தாய் அதனை கைவிட்டது. தாயன்பு கிடைக்காமல் ஏங்கிய பஞ்ச், கடுமையான தனிமையிலும் மன உளைச்சலிலும் வாடியது. </p><p>மேலும் அங்கிருந்த மற்றக் குரங்குகளும் பஞ்சை தங்களுடன் சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கின. இதனால் மிருகக்காட்சி சாலையின் ஊழியர்கள் ஆரஞ்சு நிற ஒராங்குட்டான் பஞ்சுப் பொம்மை ஒன்றை பஞ்சிற்கு கொடுத்துள்ளனர். </p><p>எங்கு சென்றாலும் அந்தப் பெரிய பொம்மையைத் தன் சிறிய கைகளால் கட்டிப்பிடித்து பஞ்ச் இழுத்துச் சென்றது. உறங்கும் போதும், பயப்படும் போதும் அந்தப் பொம்மையின் நெஞ்சில் முகத்தைப் புதைத்து ஆறுதல் தேடிக்கொண்டது. </p><p>இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும், காட்சிகளுமே இணையத்தை உலுக்கின.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/f4pko1su/New-Project-2026-07-27T170740.531.jpg" /></figure><p>பின்னர் பூங்கா ஊழியர்களின் தொடர் பராமரிப்பால், பஞ்ச் படிப்படியாகப் பொம்மையைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக் கொண்டு, மற்ற குரங்குகளுடன் விளையாடவும், இருக்கவும் பழகிகொண்டது. இதனையும் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தெரியப்படுத்தியிருந்தது. </p><h2>முதல் பிறந்தநாள்</h2><p>இந்நிலையில் பஞ்ச் நேற்று தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியது. அதற்கு உலகம் முழுவதிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துள்ளன. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகள் பூங்காவிற்கு வந்துள்ளன. பூங்கா நிர்வாகம் இந்த வாழ்த்து அட்டைகளை ஒரு தனி அறையில் மக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டி: ஷிர்சே, ஸ்ரீஷங்கர், லோகேஷ் சத்யநாதன் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்</title><link>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-games-shirse-shrishankar-reached-final</link><comments>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-games-shirse-shrishankar-reached-final#comments</comments><guid isPermaLink="false">ae0aa39c-b9a8-4281-9266-8714558183cc</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:36:47 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:36:47.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,Glasgow,கிளாஸ்கோ,Shirse,ஷிர்சே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/x6o3i0kz/Shirse0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய வீரர் ஷிர்சே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/x6o3i0kz/Shirse0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மதியம் ஆண்களுக்கான 100மீ தடைகள் தாண்டி ஓட்டம் (110M HURDLES) தகுதிச் சுற்று நடைபெற்றது.</p><h2>அஷோக் ஷிர்சே</h2><p>இதில் ஹீட் 1-ல் இந்திய வீரர் தேஜாஷ் அஷோக் ஷிர்சே கலந்து கொண்டார். இவர் பந்தைய தூரத்தை 13.76 விநாடிகளில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார். இந்த பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் இவர் தகுதி பெற்றார்.</p><p>இங்கிலாந்து வீரர் சாமுவேல் பென்னெட் 13.20 விநாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். ஜமைக்கா வீரர் ஜெரோம் கேம்ப்பெல் 13.33 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்தார். இந்திய வீரர் ஷிர்சே மொத்தமாக 7-வது இடத்தை பிடித்தார்.</p><p>இறுதிச் சுற்று இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.15 மணிக்கு நடக்கிறது.</p><h2>நீளம் தாண்டுதல்</h2><p>நீளம் தாண்டுதல் போட்டிக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீஷங்கர் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்திருந்தார். இவருடன் மொத்தம் 10 பேர் பங்கேற்றனர். இதில் ஸ்ரீஷங்கர் 8.01 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்தார். அத்துடன் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><h2>லோகேஷ் சத்யநாதன்</h2><p>லோகேஷ் சத்யநாதன் குரூப் பி-யில் 7.77 மீட்டர் தூரம் தாண்டி 4-வது இடம் பிடித்தார். இவர் தகுதிக்கான தூரத்தை தாண்டவில்லை என்றாலும், பெஸ்ட் என்ற அடிப்படையில் இறுதி சுற்றுககு தகுதி பெற்றார். 29-ந்தேதி இறுதிச் சுற்று நடைபெற இருக்கிறது.</p><h2>பதக்கம் பட்டியல்</h2><p>தற்போது வரை ஆஸ்திரேலியா 17 தங்கம், 9  வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மொத்தமாக 39 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 4 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 19 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.</p><p>நைஜீரியா 4 தங்கம், 4 வெள்ளியுடன் மொத்தம் 8 பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 4 பதக்கங்கள் வென்று 8-வது இடத்தை பிடித்துள்ளது.</p><h2>குர்விந்தர்வீர் சிங்</h2><p>இந்தியா சார்பில் குர்விந்தர்வீர் சிங் 100மீ ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார். இவர் 4-வது ஹீட்டில் ஓடினார். இவருடன் மேலும் 6 பேர் ஓடினர். மொத்தமாக 7 பேர் ஓடியதில் ஜமைக்கா வீரர் ரோஹன் வாட்சன் 10.13 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இந்த வீரர் குர்விந்தர்வீர் சிங் 10.39 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்தார்.</p><h2>கானா வீரர் பெஞ்சமின் அசாமதி</h2><p>என்றபோதிலும், ஒட்டுமொத்தமாக அரையிறுதிக்கு 17 வீரர்கள்தான் தகுதி பெற முடியும். அந்த வகையில் குர்விந்தவீர் சிங் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார். ஒட்டுமொத்தமாக குர்விந்தர்வீர் சிங் 28-வது இடத்தை பிடித்தார்.</p><p>கானா வீரர்கள் பெஞ்சமின் அசாமதி (10.00 விநாடி), அப்துல்-ரஷீத் சமினு (10.01 விநாடி) ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். இங்கிலாந்து வீரர் எலியட் ஜோன்ஸ் 10.07 விநாடிகளில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நாட்டில் போராட்டத்தை உருவாக்க முயற்சிப்பதே, ராகுல் காந்தியின் ஒரே குறிக்கோளாக உள்ளது: பா.ஜ.க</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-s-only-goal-is-to-create-protests-in-the-country-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-s-only-goal-is-to-create-protests-in-the-country-bjp#comments</comments><guid isPermaLink="false">06656907-8e6d-4fc8-8026-c759d3c95446</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:13:42 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:13:42.474Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Bihar Bandh,பீகார் பந்த்,AK 47,ஏகே 47</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/30qutxj2/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP Slams Rahul Gandhi over AK-47 claims in Bihar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/30qutxj2/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க ஏ.கே 47 ரக துப்பாக்கியை காவலர் ஒருவர் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  </p><h3><strong>பீகார் பந்த:</strong></h3><p>பீகாரில் மாநிலம் தழுவிய பந்த் (முழு அடைப்பு) போராட்டம் நடைபெற்றது. அப்போது மாணவர் அமைப்புகள் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. </p><p>இதையடுத்து போராட்டாத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது காவலர் ஒருவர், ஏகே-47 துப்பாக்கியை பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இணையத்தில் பரவின. </p><p>இதைதொடர்ந்து துப்பாக்கியை பயன்படுத்திய காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். </p><h3><strong>ஏகே-47 பயன்படுத்தியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு:</strong></h3><p>இந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.</p><p>மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கொலை செய்வதற்கு, யார் அதிகாரம் கொடுத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.</p><p>இந்நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், மக்களவை உறுப்பினருமான சம்பித் பத்ரா, ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்கட்சித் தலைவர் மிகுந்த பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தி இருப்பது வெட்கக்கேடான செயல் என்றும் அவர் கூறினார்.</p><h3><strong>பாஜக கண்டனம்:</strong></h3><p>இதுகுறித்து சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருக்கும் ஒருவரால், இத்தகைய பொய் பரப்பப்படுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.</p><p>இந்த நாட்டில் காவல்துறை எப்போதாவது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஏகே-47 துப்பாக்கிகளை பயன்படுத்தி இருக்கிறதா?</p><p>அந்த மாதிரி சம்பவம் எப்போதாவது நடந்திருக்கிறதா? ஏகே-47 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தியால் எப்படி கூற முடியும்?</p><p>இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற அவதூறுகளையும் பொய்களையும் பரப்பியதற்காக ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>இதுபோன்ற பிரச்சாரங்களை செய்து, தவறான தகவல்களை பரப்புவதன் மூலம், ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் நாடு முழுவதும் பீதியையும், குழப்பத்தையும், அராஜகச் சூழலையும் உருவாக்க விரும்புகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p><p>ராகுல் காந்தி ஒரு பொறுப்பான எதிர்கட்சி தலைவராக நடந்துகொண்டு, இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பியதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>இயற்கையாகவே பிரச்சனைகளை தீர்ப்பது ராகுல் காந்தியின் நோக்கம் அல்ல. அமளியை தூண்டிவிட்டு, செயற்கையான கோபத்தை உருவாக்கி ஒரு போராட்டத்தை உருவாக்க முயற்சிப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக அராஜகத்தை உருவாக்க முயற்சிப்பது ஆகியவையே ராகுல் காந்தியின் ஒரே குறிக்கோளாக உள்ளது,” என்று பத்ரா கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/successful-wrist-surgery-for-actor-ram-charan-at-coimbatore-hospital</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/successful-wrist-surgery-for-actor-ram-charan-at-coimbatore-hospital#comments</comments><guid isPermaLink="false">2533e244-d3ac-40aa-ac76-c9829eab2e4e</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:08:54 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:08:54.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெத்தி,கோவை மருத்துவமனை,coimbatore hospital,actor Ram Charan,Beddi,நடிகர் ராம் சரண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4dzft596/ram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ram Charan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4dzft596/ram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ராம்சரண், மாவீ ரன், 'ஆர்.ஆர்.ஆர்.' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். கடினமான சண்டை காட்சிகள் மற்றும் நடன அசைவுகளுக்கு பெயர் பெற்ற இவர், 'பெத்தி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.</p><h2><strong>மணிக்கட்டில் காயம்:</strong></h2><p>இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு விறுவிறுப்பாக நடை பெற்றது. அப்போது அதில் இடம்பெற்ற ஒரு மல்யுத்த சண்டை காட்சியில் ராம்சரண் பங்கேற்றார். அப்போது அவருக்கு இடதுகை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. </p><p>இருந்தபோதிலும் படத்தின் இறுதிகட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ராம்சரண் உடனடியாக பெரிய அளவிலான சிகிச்சை மேற்கொள்ளாமல் தற்காலிகமாக தள்ளி வைத்திருந்தார்.</p><h2><strong>மருத்துவமனையில் அனுமதி</strong></h2><p>பெத்தி படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவருக்கு எம்.ஆர்.ஐ., எக்ஸ்ரே பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டன. மருத்துவ பரிசோதனையின் முடிவில், ராம்சரணுக்கு இடதுகை மணிக்கட்டில் தசைநார் கிழிவு மற்றும் லேசான எலும்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் தசைநார் முழுமையாக கிழிந்து உள்ளதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.</p><p>இந்தியாவில் எலும்பு, தசைநார் மற்றும் கை அறுவை சிகிச்சையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே ராம்சரண் அறுவை சிகிச்சைக்காக ஐதராபாத் அல்லது வெளிநாடுகளுக்கு செல்லாமல், கோவை தனியார் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தார். </p><p>அதன்படி, அவர் சிறப்பு விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது அவருடன் தந்தை ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, தாயார் சுரேகா மற்றும் மனைவி உபாசனா கொனிடேலா ஆகியோரும் வந்திருந்தனர்.</p><h2><strong>அறுவை சிகிச்சை</strong></h2><p>கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நடிகர் ராம்சரணுக்கு இன்று மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ராம்சரண் ஒருசில வாரங்கள் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>மேலும் காயம் அடைந்த இடது கை மணிக்கட்டு இயல்புநிலைக்கு திரும்ப குறைந்தது 4-6 வாரங்கள் வரை ஆகும் என்பதால் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படலாம். இதனால் அவர் கோவை மருத்துவமனையில் இன்னும் சில நாட்கள் தங்கியிருந்து டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி சில நாட்கள் ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>கோவை தனியார் மருத்துவமனையில் நடிகர் ராம்சரண் அனுமதிக்கப்பட்டு உள்ள செய்தி வெளியானதில் இருந்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டி: 100மீ ஓட்டத்தில் இந்திய வீரர் குர்விந்தர்வீர் சிங் ஏமாற்றம்</title><link>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-games-gurvindervir-singh-100m-running-fail-to-reach-semi-final</link><comments>https://www.maalaimalar.com/sports/glasgow-commonwealth-games-gurvindervir-singh-100m-running-fail-to-reach-semi-final#comments</comments><guid isPermaLink="false">e5252092-6dd7-4576-92a7-8641ffa957fb</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:55:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:55:18.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Gurvindervir singh,குர்விந்தர்வீர் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/g6wnfgqe/Gurvindervirsingh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gurvindervir singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/g6wnfgqe/Gurvindervirsingh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தடகளத்தில் இன்று ஆடவர்களுக்கான 100மீ தகுதிச் சுற்று ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. மொத்த 11 ஹீட் (பிரிவு) ஆக வீரர்கள் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.</p><h2>குர்விந்தர்வீர் சிங்</h2><p>இந்தியா சார்பில் குர்விந்தர்வீர் சிங் 100மீ ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார். இவர் 4-வது ஹீட்டில் ஓடினார். இவருடன் மேலும் 6 பேர் ஓடினர். மொத்தமாக 7 பேர் ஓடியதில் ஜமைக்கா வீரர் ரோஹன் வாட்சன் 10.13 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இந்த வீரர் குர்விந்தர்வீர் சிங் 10.39 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்தார்.</p><h2>கானா வீரர் பெஞ்சமின் அசாமதி</h2><p>என்றபோதிலும், ஒட்டுமொத்தமாக அரையிறுதிக்கு 17 வீரர்கள்தான் தகுதி பெற முடியும். அந்த வகையில் குர்விந்தவீர் சிங் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார். ஒட்டுமொத்தமாக குர்விந்தர்வீர் சிங் 28-வது இடத்தை பிடித்தார்.</p><p>கானா வீரர்கள் பெஞ்சமின் அசாமதி (10.00 விநாடி), அப்துல்-ரஷீத் சமினு (10.01 விநாடி) ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். இங்கிலாந்து வீரர் எலியட் ஜோன்ஸ் 10.07 விநாடிகளில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.</p><h2>பதக்கம் பட்டியல்</h2><p>தற்போது வரை ஆஸ்திரேலியா 17 தங்கம், 9  வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மொத்தமாக 39 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 4 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 19 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.</p><p>நைஜீரியா 4 தங்கம், 4 வெள்ளியுடன் மொத்தம் 8 பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 4 பதக்கங்கள் வென்று 8-வது இடத்தை பிடித்துள்ளது.</p><p>ஆடவர் நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் முரளி ஸ்ரீஷங்கர், லோகேஷ் சத்யநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.</p><p>110மீ தடைதாண்டும் ஓட்டத்தில் தேஜாஸ் ஷிர்சே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.</p><p>பெண்களுக்கான வெயிட்லிப்ட்டிங் 52 கிலோ எடைப்பிரிவில் ஞானேஷ்வரி யாதவ் கலந்து கொள்கிறார். இது பதக்கத்திற்கான போட்டியாகும். 58 கிலோ எடைப்பிரிவில் பந்தியாராணி தேவி கலந்து கொள்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 2-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd#comments</comments><guid isPermaLink="false">47670048-d20c-4d56-ac46-c77bc1588526</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:29:19 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:29:19.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lc4ndtdt/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lc4ndtdt/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின், ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>30-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>31-ந்தேதி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>01-ந்தேதி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மற்றும் வடகடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>02-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>30 மற்றும் 31-நதேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை! - உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-play-school-teacher-accused-of-burning-childs-private-parts</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-play-school-teacher-accused-of-burning-childs-private-parts#comments</comments><guid isPermaLink="false">adc59bfe-486c-4913-b8ff-4b605d4641f1</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:26:09 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:26:09.689Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,வாரணாசி,playschool,physically assaulted,உத்தரப் பிரதேச மாநிலம்,பிளேஸ்கூல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/bqp9ug6c/up.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Horrific Incident in UP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/bqp9ug6c/up.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், வகுப்பறையில் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பேண்ட்டிலேயே கழித்த 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் பிளேஸ்கூல் ஆசிரியை ஒருவர் பழுக்கக் காய்ச்சிய கத்தியால் சூடு வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>வகுப்பறையில் நடந்த அநியாயம்:</strong></h2><p>வாரணாசியில் உள்ள அகதா பகுதியில் இயங்கி வரும் 'சீரீன் சோனி பிளேஸ்கூல்' என்ற தனியார் பள்ளியில், வழக்கறிஞர் ஒருவரின் 5 வயது சிறுவன் நர்சரி படித்து வருகிறான். சம்பவத்தன்று வகுப்பில் இருந்த சிறுவன், இயற்கை உபாதையைக் கழிக்க ஆசிரியையிடம் அனுமதி கேட்டுள்ளான். ஆனால், ஆசிரியை அனுமதி மறுத்ததால், சிறுவனால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பேண்ட்டிலேயே கழித்துவிட்டான்.</p><h2><strong>பழுக்கக் காய்ச்சிய கத்தியால் சித்திரவதை:</strong></h2><p>இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, சிறுவனை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு இருந்த கேஸ் ஸ்டவ்வை பற்றவைத்து, அதில் கத்தியை பழுக்கக் காய்ச்சிய ஆசிரியை, அச்சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியில் யாருடனாவது சொன்னால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சிறுவனைத் தாக்கி மிரட்டியும் உள்ளார்.</p><h2><strong>தாயிடம் கண்ணீருடன் கூறிய சிறுவன்:</strong></h2><p>வீட்டிற்குத் திரும்பிய சிறுவன், வலியால் கதறி அழுது நடந்த கொடுமைகளைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனின் உடலில் கொப்புளம் இருப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியையைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.</p><p>இதையடுத்து பள்ளி முதல்வர் ஹேமலதா சிங் மற்றும் மேலாளரிடம் புகார் தெரிவிக்க நேரில் சென்றபோது, அவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு ஆதரவாகச் செயல்படாமல் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.பள்ளி நிர்வாகத்தின் இந்த போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர், லால்பூர்-பாண்டேபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். </p><p>புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் பாதுகாப்புடன் படிக்க வேண்டிய 5 வயதுக் குழந்தைக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது..!- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-never-fears-sofa-government-arrests</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-never-fears-sofa-government-arrests#comments</comments><guid isPermaLink="false">946286cd-89ea-423b-9452-24c204f433e7</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:22:25 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:22:25.678Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Markandeyan MLA,மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gnph5rf6/udhayanithi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gnph5rf6/udhayanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ மார்கண்டேயனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.</p><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-</p><p>சர்வாதிகார சோஃபா மாடல் அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம். </p><p>சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம்.</p><p>அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.</p><p>மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.</p><p>விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தந்தை பட இயக்குநருடன் ஜேசன் சஞ்சய் சந்திப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjay-meets-the-director-of-the-movie-thanthai</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjay-meets-the-director-of-the-movie-thanthai#comments</comments><guid isPermaLink="false">57c5c90d-15ac-4576-9728-d5db174e0c48</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:19:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:19:00.800Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,jason sanjay,H. Vinoth,ஹெச்.வினோத்,ஜேசன் சஞ்சய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/pecu564i/New-Project-2026-07-27T154841.538.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தந்தை பட இயக்குநருடன் ஜேசன் சஞ்சய் சந்திப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/pecu564i/New-Project-2026-07-27T154841.538.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், இயக்குநர் ஹெச்.வினோத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.</p><p>இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. இச்சந்திப்பின்போது, இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் மாறவேண்டும் என சஞ்சய்க்கு வினோத் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. </p><h2>சிக்மா</h2><p>ஜேசன் சஞ்சய் தற்போது லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடித்துள்ள 'சிக்மா'  திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் தொடர்பாக வினோத்தை சஞ்சய் சந்தித்தாரா அல்லது ஜன நாயகன் தொடர்பாக சந்தித்தாரா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="qme" dir="ltr"><a href="https://x.com/hashtag/JasonSanjay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JasonSanjay</a> <a href="https://x.com/hashtag/HVinoth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HVinoth</a> ❤️ <a href="https://t.co/lAkkLr0qll">pic.twitter.com/lAkkLr0qll</a></p>&mdash; Cine World Entertainment  (@CineWorldEnt) <a href="https://x.com/CineWorldEnt/status/2081091220739404242?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் வரும் அக்.15-ல் அரசியல் அறநெறி மையம் தொடக்கம்..!- அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-political-ethics-center-launch-oct-15-annamalai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-political-ethics-center-launch-oct-15-annamalai#comments</comments><guid isPermaLink="false">47554ef2-2d03-4022-b7b5-b913c3902cd5</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:52:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:52:00.010Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்,அறநெறி மையம்,ethics centre</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1pmgyhga/annamalai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1pmgyhga/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்திய, ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>மலரஞ்சலி</h2><p> அப்துல் கலாமின் குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் அவரது மறைவுக்கு பிறகு அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி துவா செய்து வருகின்றனர்.</p><p>இந்த ஆண்டு நானும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். அதனைத் தொடர்ந்து கலாம் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன்.</p><p>அறிவியலும், ஆன்மீகமும் கலந்து இருக்க வேண்டும் என்று கலாம் விரும்பினார். நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அப்துல் கலாம். நான் மாணவராக இருக்கும்போதே அப்துல் கலாமின் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன்.</p><p>கலாம் வழியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை நல்வழியில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். இங்கு வந்து உரம் ஏற்றிக் கொண்டு செல்வதற்காக வந்திருக்கிறேன்.</p><h2>அரசியலில் அறநெறி</h2><p>அரசியலில் நன்நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்று விரும்பியவர் அப்துல் கலாம். அரசியலில் அறநெறி என்பதை விரும்பி அதற்காக அன்றே புத்தகம் எழுதியவர். தகுதியானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர். கலாம் வழியில் எங்களது பயணம் தொடரும்.</p><p>அக்டோபர் 15-ந்தேதி கோவையில் அப்துல் கலாம் பிறந்த நாளில் அரசியல் அறநெறிக்கான மையம் என்ற பெயரில் மையம் ஒன்றை தொடங்கி  வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறோம். ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேர் அதில் தகுதி பெற்று வருவார்கள். கலாம் அய்யாவின் கனவுகளை நனவாக்க பாடுபடுவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>பின்னர் அவரிடம் தமிழக அரசின் செயல்பாடு தற்போது எப்படி இருக்கிறது என்று நிருபர்கள் கேட்டதற்கு, கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருப்பதால் அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>‘தேர்தலுக்கு பின் அழுது பிரயோஜனமில்லை... சமாஜ்வாதியுடன் கூட்டணிக்கு தயார்’ - ஓவைசி அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/no-use-crying-after-the-election-ready-for-an-alliance-with-samajwadi-owaisis-call</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-use-crying-after-the-election-ready-for-an-alliance-with-samajwadi-owaisis-call#comments</comments><guid isPermaLink="false">3c7a8f91-683c-45a5-9f99-3174a600763e</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:42:21 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:42:21.459Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav,asaduddin owaisi,AIMIM,UP Polls,உ.பி. தேர்தல்,அசாதுதீன் ஓவைசி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/3yrde59v/New-Project-2026-07-27T145125.953.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/3yrde59v/New-Project-2026-07-27T145125.953.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார்.</p><p>பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் நீடிப்பதை தான் விரும்பவில்லை என்றும், ஓட்டுகள் பிரிவதை தவிர்ப்பதற்காகவே சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக மொராதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓவைசி.,</p><p>“இதை நான் முன்பே கூறியுள்ளேன், மீண்டும் கூறுகிறேன்: உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை மஜ்லிஸ் விரும்பவில்லை. நான் கைகோர்க்கத் தயார். நான் கூட்டணி அமைக்கத் தயார். பேசுவதற்கான நேரம் இது. தேர்தல் முடிந்த பிறகு அழ வேண்டாம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை.</p><p>ஓவைசி போட்டியிடுவது நமக்குத் தீங்கு விளைவிக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் உங்களுடன் இணைந்து போராடத் தயார். எங்கள் போராட்டம் எங்கள் கௌரவத்திற்கான போராட்டம். எங்கள் போராட்டம் நீதிக்கான போராட்டம். இப்போது நாங்கள் சும்மா உட்கார்ந்திருக்க விரும்பவில்லை. இப்போது எங்களுக்கு சமத்துவம் வேண்டும்.</p><p>அகிலேஷ் ஒரு நாற்காலியில் அமர்ந்தால், ஓவைசி அந்த நாற்காலிக்கு முன்னால் சம்மணமிட்டு அமர்ந்து உரிமைகள் மற்றும் நீதி பற்றிப் பேசுவார்.” என்று கூறினார்.</p><p>ஓவைசியின் இந்த அழைப்பு விமர்சித்துள்ள பாஜக, இருவரும் நாணயத்தின் இரு பக்கங்கள். அகிலேஷ் யாதவும், ஓவைசியும் ஒருவரையொருவர் திருப்திப்படுத்துவதில் போட்டியிடுகிறார்கள். இன்று அவர்கள், 'யார் பெரிய அண்ணா?' என்ற போட்டியை ஒதுக்கிவிட்டு, 'அண்ணா கூட்டணி அமைப்போம்' என்கிறார்கள். </p><p>ஓவைசி, அகிலேஷ் யாதவ்வுக்கு ஃபிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்துள்ளார் என விமர்சித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஞானபீட விருது வென்ற கவிஞர் வைரமுத்துவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/home-minister-amit-shah-congratulates-jnanpith-laureate-poet-vaairamuthu</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/home-minister-amit-shah-congratulates-jnanpith-laureate-poet-vaairamuthu#comments</comments><guid isPermaLink="false">ae26e962-de14-4abf-8ebb-17eff7ba97a1</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:26:09 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:26:09.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,கவிஞர் வைரமுத்து,Kavignar Vairamuthu,Jnanpith Award,ஞானபீட விருது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/zrfj1xnx/vairamuthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vairamuthu-Amit Shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/zrfj1xnx/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய இலக்கியத் துறையின் மிக உயரிய விருதான 'ஞானபீட விருதை' வென்றுள்ள பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான 'வைரமுத்துவுக்கு', மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>வரலாற்றுச் சாதனை:</strong></h2><p>தமிழ் இலக்கிய உலகின் 60-வது ஞானபீட விருதை கவிஞர் வைரமுத்து பெற்றுள்ளார். அகிலன் (1975) மற்றும் ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் 3-வது தமிழ் எழுத்தாளர் இவர் ஆவார்.</p><h2><strong>கவிதைக்கு முதல் முறை:</strong></h2><p>இதற்கு முன் இந்த விருதைப் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் வசன நடை/நாவல்களுக்காகப் பெற்ற நிலையில், தமிழ் கவிதைக்காக ஞானபீட விருது பெறப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.</p><h2><strong>அமைச்சரின் வாழ்த்து:</strong></h2><p>தங்களின் பல ஆண்டுகால தளராத அர்ப்பணிப்பு, ஆழமாக அறிவுத்திறன் மற்றும் சிறந்த படைப்பாற்றலுக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த விருது. எதிர்காலத்திலும் உங்கள் படைப்புகள் சமூகத்திற்கு புதிய பார்வை, புதிய விழிப்புணர்வு மற்றும் நேர்மறையான வழிகாட்டுதலை வழங்கும். </p><p>வருங்காலத் தலைமுறைகள் தங்களது தாய்மொழிகளுடனும், இலக்கியத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க ஊக்கமளிக்கும் இந்த வரலாற்று சாதனையை முன்னிட்டு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறேன்.</p><p>தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு கவிஞர் வைரமுத்து ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், அவருக்குப் பல்வேறு தேசியத் தலைவர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்தில் இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் முறை அறிமுகம்: புகார்களை வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யலாம்</title><link>https://www.maalaimalar.com/news/national/e-zero-fir-system-introduced-in-gujarat-online-complaints-from-home</link><comments>https://www.maalaimalar.com/news/national/e-zero-fir-system-introduced-in-gujarat-online-complaints-from-home#comments</comments><guid isPermaLink="false">33cb09fb-7fb7-4112-b5f4-a9ff25e1ae0d</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:20:08 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:20:08.704Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FIR,குஜராத்,gujarat,e-zero FIR,எஃப்.அப்.ஆர்,இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4v4qhucx/Untitled-design-86.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat launched e-Zero FIR System]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4v4qhucx/Untitled-design-86.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலத்தில் இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களுக்கு, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு செல்லாமலேயே சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்க, இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி, காந்தி நகரில் சைபர் நிதி மோசடி இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் சேவையை இன்று தொடங்கி வைத்தார்.</p><h3><strong>குஜராத்தில் இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் அறிமுகம்:</strong> </h3><p>இதன் தொடக்க விழாவில் பேசிய ஹர்ஷ் சங்வி, “இ-ஜீரோ முதல் தகவல் அறிக்கை ( e-Zero FIR) அமைப்பு மூலம், இணையவழி மோசடியால் பாதிக்கப்படவர்கள் தங்கள் விடுகளில் இருந்தபடியே வசதியாக புகார்களை பதிவு செய்ய முடியும்.</p><p>மேலும் உரிய நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை, மோசடி செய்யப்பட்ட தொகையை மீட்பதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்” என்று கூறினார்.</p><p>இந்த விழாவில் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.</p><h3><strong>புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை:</strong></h3><p>காவல்துறை தலைமை இயக்குநர் ஞானேந்திர சிங் மாலிக் கூறுகையில், அனைத்து களப் பிரிவுகளும் இதுபோன்ற புகார்களை தீவிரமாகவும், கவனமாகவும் கையாள வேண்டும் என்று கூறினார்.</p><p>மேலும் புதிய அமைப்பை திறம்பட செயல்படுத்துவதன் மூலம் புகார்தாரர்களுக்கு விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.</p><p>சைபர் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் அமைப்பின் தலைவர் பிபின் அஹிரா கூறுகையில், “இ-ஜீரோ முதல் தகவல் அறிக்கை செயல்முறையானது 14C உடன் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>இணையவழி நிதி மோசடி புகார் எண்:</strong></h3><p>1930 என்ற உதவி எண் மூலம் பெறப்படும் இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்கள், தானாகவே பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கையாக (Zero FIR) உருவாக்கப்பட்டு, பின்னர் அது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும்.</p><p>மேலும், இதனை தொடர்ந்து காவல்துறையினர் புகார்தாரரை தொடர்புகொண்டு, தேவையான தகவல்களை பெற்று, சட்ட நடைமுறைகளின்படி முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்து, உடனடியாக விசாரணையை தொடங்குவார்கள்” என்று பிபின் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் கர்நாடகா பயணம்: உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் கெஞ்ச வேண்டும் - துரைமுருகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments#comments</comments><guid isPermaLink="false">1609cadc-fa9e-4043-9e3c-348f8fdc1e89</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:18:50 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:18:50.469Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,கர்நாடகா,Karnataka,vijay,மேகதாது அணை,துரைமுருகன்,duraimurugan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1kgde3d4/duraimurugan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Durai Murugan - Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1kgde3d4/duraimurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><em>காவிரி பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்று குழுவை தான் நாட வேண்டும். நேரடியாக சென்றால் கோர்ட் உத்தரவு வீணாகும் என்று திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.</em></p><p>தமிழகத்துக்கு காவிரி நீரில் உரிய பங்கை தருவதற்கு கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளையும் செயல்படுத்த மறுக்கிறது.</p> <h2>விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு</h2><p>சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால் போதிய மழை பெய்யாததால் அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. வறட்சி நிலவுகிறது என்ற காரணத்தை சொல்லி காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை.</p><p>காவிரி நீரில் உரிய பங்கு கிடைக்காததால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதித்து வருகிறது.</p> <h2>மேகதாது அணை</h2><p>இந்த சூழ்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு, புதிதாக அணை கட்டுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.</p><p>மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும் என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.</p> <h2>முதலமைச்சர் விஜய் கடிதம்</h2><p>மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் விஜய் கடிதமும் எழுதி உள்ளார்.</p><p>மேலும் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் அனைத்து முயற்சிகளையும் சட்டரீதியாக தடுப்பது குறித்து முதலமைச்சர் விஜய், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.</p> <h2>காவிரி மேலாண்மை ஆணையம்</h2><p>இந்த சூழலில் டெல்லியில் சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பேசிய தமிழக நீர்வளத்துறை செயலாளர், கர்நாடகத்தில் உள்ள 4 முக்கிய அணைகளில் 48.979 டி.எம்.சி. தண்ணீர் இருப்பை சுட்டிக்காட்டியதுடன், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி விகிதாசார அடிப்படையில் தண்ணீரை திறக்கவும் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.</p><p>அதற்கு கர்நாடக அரசு, தங்கள் மாநிலத்தில் உள்ள 4 முக்கிய அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இல்லை என்பதால் தங்களால் தற்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறிவிட்டது.</p><p>இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.</p> <h2>பெங்களூரு செல்லும் விஜய்</h2><p>இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எழுதி உள்ள கடிதத்தில், வருகிற ஆகஸ்டு 3-ந் தேதி, தான் பெங்களூரு வந்து காவிரி நீர் பிரச்சனை, மேகதாது விவகாரம் குறித்து உங்களுடன் பேச விரும்புகிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>இதற்காக பெங்களூரு செல்லும் முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறுவது குறித்தும், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.</p> <h2>துரைமுருகன்</h2><p>இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* முதலமைச்சர் எதற்காக கர்நாடகா செல்கிறார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.</p><p>* எம்ஜிஆர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம்.</p><p>* உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் போய் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.</p> <p>* காவிரி பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்று குழுவை தான் நாட வேண்டும். நேரடியாக சென்றால் கோர்ட் உத்தரவு வீணாகும்.</p><p>* மேகதாது, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.</p><p>* என்ன நடக்கிறது என்பது முதலமைச்சர் சென்று வந்த பின்னர் தான் தெரியும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஜூலை.31 முதல் கோழி இறைச்சி விற்கப்படாது - தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chicken-meat-will-not-be-sold-starting-july-31-tamil-nadu-chicken-merchants-federation-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chicken-meat-will-not-be-sold-starting-july-31-tamil-nadu-chicken-merchants-federation-announces#comments</comments><guid isPermaLink="false">8fad5759-b3e8-406a-bf7a-28f2619aed0b</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:15:04 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:15:04.397Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu Chicken Traders Federation,Chicken Sales,கோழி விற்பனை,தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0p6xec3/New-Project-2026-07-27T144444.929.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜூலை.31 முதல் கோழி இறைச்சி விற்கப்படாது - தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0p6xec3/New-Project-2026-07-27T144444.929.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கடைகளில் கோழி விற்பனை செய்யப்படாது என தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கோழி எடை மோசடியை தடுக்கக்கோரி இந்த கடையடைப்பை அறிவித்துள்ளனர்.</p><p>தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்., “கறிக்கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நெறிமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கடைப்பிடிப்பதில்லை.</p><p>கோழிகளுக்கு கடைசி நிமிடம் வரை தீவனம் கொடுப்பதால், அவற்றின் உடலில் தீவனம் தங்கி ஜீரணமாகாமல் அப்படியே இருக்கிறது. இதனால் நுகர்வோருக்கு கூடுதல் எடையுடன் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன.</p><p>தீவனம் ஜீரணிக்காமல் கழிவுகள் வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, இறைச்சியின் தன்மையும், தரமும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.” என கோழி விற்பனையாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். </p><p>தொடர்ந்து கோழி உற்பத்தியாளர்கள் 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்தும் நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் அரசு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர். </p><p>இதனை வலியுறுத்தி தற்போது இந்த விற்பனை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு கோழி இறைச்சி கிடைப்பதில் தற்காலிக தட்டுப்பாடு அல்லது விலை அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காதலிக்க மறுத்த ப்ளஸ் 1 மாணவியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய வாலிபர் தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-one-student-stabbed-for-rejecting-love-youth-dies-by-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-one-student-stabbed-for-rejecting-love-youth-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">a3826c9b-8d4d-491c-98b6-cf4f78932f05</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:08:04 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:08:04.764Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர் தற்கொலை,Chidambaram,சிதம்பரம்,youth suicide,Student Attack,மாணவி கொலை முயற்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/qbzrgrvq/Suicide.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Youth Suicide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/qbzrgrvq/Suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது28). எலக்ட்ரீசியன்.</p><h2>ஒருதலைக்காதல்</h2><p>இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அய்யப்பன், பலமுறை அந்த மாணவியை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார்.</p><p>ஆனால் அந்த மாணவியோ, அய்யப்பனை காதலிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் மாணவி மீது அய்யப்பன் கோபத்தில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார்.</p><h2>கத்திக்குத்து</h2><p>இதனை அறிந்து கொண்ட அய்யப்பன் மாணவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு மாணவியை சந்தித்த அய்யப்பன், என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டார்.</p><p>தன்னை காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். ஆனால் இந்த மிரட்டலுக்கு எல்லாம் மாணவி பயப்படாமல் உன்னை காதலிக்க முடியாது என்று கூறினார்.</p><p>இதனால் கடும் கோபம் அடைந்த அய்யப்பன் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து மாணவியின் கை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.</p><p>இதில் மாணவி பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் அய்யப்பன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.</p><h2>விசாரணை</h2><p>மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அய்யப்பனை தேடி வந்தனர்.</p><p>இந்த நிலையில் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதாக  சிதம்பரம் தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது.</p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கியவர் யார் என விசாரணை நடத்தினர்.</p><h2>வாலிபர் தற்கொலை</h2><p>அப்போது அது மாணவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான அய்யப்பன் என்பது தெரியவந்தது. தன்னை காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் மாணவியை கத்தியால் குத்திய அய்யப்பன் அங்கிருந்து ஓடியுள்ளார்.</p><p>எப்படியும் போலீசார் தன்னை பிடித்து விடுவர் என்று நினைத்த அவர் அரசுகலைக்கல்லூரி பின்பு றம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் ரவி மோகனுடன் கூட்டணி: நெகிழ்ச்சியடைந்த இயக்குநர் கணேஷ் கே பாபு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karate-babu-director-ganesh-k-babu-moved-by-working-with-ravi-mohan</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karate-babu-director-ganesh-k-babu-moved-by-working-with-ravi-mohan#comments</comments><guid isPermaLink="false">11caa6d0-51eb-43b5-9df6-7a29aedaf3dc</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:50:52 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:50:52.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ravi Mohan,Karathey Babu,கராத்தே பாபு,ganesh k babu,கணேஷ் கே பாபு,நடிகர் ரவி மோகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/i3gnoe8n/ravi-mohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ravi Mohan-Ganesh K Babu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/i3gnoe8n/ravi-mohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'டாடா' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் கணேஷ் கே பாபு தனது அடுத்த திரைப்படமான 'கராத்தே பாபு' படத்தில் நடிகர் ரவி மோகனை கதாநாயகனாக இயக்கி வருகிறார்.</p><p>திரைப்படப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரவி மோகனுடன் இணைந்து பணியாற்றுவது குறித்த தனது நெகிழ்ச்சியான தருணங்களை இயக்குநர் கணேஷ் கே பாபு பகிர்ந்துள்ளார். </p><h2><strong>உருக்கமான பதிவு:</strong></h2><p>'சில கனவுகள் நனவாக பல ஆண்டுகள் ஆகலாம், ஆனால் இன்று என் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது' என்று தெரிவித்துள்ள அவர், ரவி மோகனுடன் பணியாற்ற வேண்டும் என்பது தனது நெடுநாள் விருப்பம் என்றும், அவருடன் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக உருக்கமாகக் கூறியுள்ளார்.</p><p>ரவி மோகனின் 34-வது திரைப்படமாக உருவாகும் 'கராத்தே பாபு', அரசியல் மற்றும் ஆக்சன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு எமோஷனல் த்ரில்லர் திரைப்படமாகும். ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அதிகாரப்பூர்வ வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் நட்பைப் பிரதிபலிக்கும் வகையில் இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், தௌதி ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் நாசர், கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசுதேவன், வி.டி.வி. கணேஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்கிறார். 'கராத்தே பாபு' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஆடி மாத பவுர்ணமி - திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-month-pournami-time-for-girivalam-at-tiruvannamalai</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-month-pournami-time-for-girivalam-at-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">30376ee5-daf3-4801-b517-15444c4144fa</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:50:12 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:50:12.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,Pournami Girivalam,பவுர்ணமி கிரிவலம்,ஆடி மாத பவுர்ணமி,Tiruvannamalai temple,aadi month pournami</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-26/74qhcz9l/tiruvannamalai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiruvannamalai Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-26/74qhcz9l/tiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். </p><p>கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.</p> <p>இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.32 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு 8.54 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>பவுணர்மியன்று கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில் கிரிவலப்பாதையில் காவி வேடத்தில் கையில் தட்டு வைத்து நெற்றியில் விபூதி பூசி பணம் கேட்கும் போதை கும்பலுக்கு பணத்தை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் கொடுக்கும் பணம் அந்த கும்பலின் போதைக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘ரீல்ஸ்’ கலாச்சாரத்திற்கு எதிராக கண்ணீர் விட்டு கதறி அழுத இளம்பெண்- அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-comfort-young-woman-sobs-and-wails-against-reels-culture</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-comfort-young-woman-sobs-and-wails-against-reels-culture#comments</comments><guid isPermaLink="false">90df8396-701c-46f5-b0e6-e655b346b576</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:40:34 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:40:34.358Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,anbil mahesh poyyamozhi,அன்பில் மகேஷ் பொய்யாமொழி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uh0tanxo/anbilmahesh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கண்ணீர் விட்டு அழுத இளம்பெண்ணுக்கு அன்பில் மகேஷ் ஆறுதல் கூறினார். ]]></media:title><media:description type="html"><![CDATA[ கண்ணீர் விட்டு அழுத இளம்பெண்ணுக்கு அன்பில் மகேஷ் ஆறுதல் கூறினார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uh0tanxo/anbilmahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான். அவர்களுக்குப் பண்பாட்டையும், சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் எடுத்துச்சொல்லி, அன்போடு திருத்துவோம் என்றார்.</aside><h2><strong>ஆலோசனைக் கூட்டம்</strong></h2><p>திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான <a href="https://www.maalaimalar.com/topic/அன்பில்-மகேஷ்-பொய்யாமொழி">அன்பில் மகேஷ் பொய்யாமொழி </a>தலைமையில் பொன்மலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.</p><p>நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்த போது இளம்பெண் நிர்வாகி ஒருவரின் பேச்சு அங்கிருந்தோரை உலுக்கியது.</p><h2><strong>ரீல்ஸ் மோகம்</strong></h2><p>அவர் பேசுகையில், "இன்றைய டிஜிட்டல் உலகில் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பலரும் 'ரீல்ஸ்' என்ற பெயரில் சமூக ஊடகங்களில் கிண்டலாகவும், விளையாட்டுத்தனமாகவும் பகிர்ந்து வருகிறார்கள். இது என்ன மாதிரியான நாகரிகம்?, இதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது என்று  பேசினார்.</p><p>மேலும், "திறமையான ஆளுமைகளும், மாபெரும் தலைவர்களும் கண்ணியம் காத்த தமிழக சட்டமன்றம் இது. தமிழ் சங்கங்கள் தாங்கிப்பிடித்த நமது பாரம்பரிய தமிழ் சமூகம், வெறும் 'ரீல்ஸ்' மோகத்திற்காக இப்படி தரம் தாழ்ந்து போகலாமா?" என  உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.  அவரது இந்த  கேள்வி கூட்டத்தில் இருந்த மூத்த நிர்வாகிகள் பலரையும் சிந்திக்க வைத்ததுடன், அங்கு ஒரு நிமிடம் பெரும் அமைதியை ஏற்படுத்தியது.</p><h2><strong>அன்போடு திருத்துவோம்...</strong> </h2><p>அழுத பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாகப் பேசிய அன்பில் மகேஷ் பொய்யா மொழி, "அழாதீர்கள், உங்கள் ஆதங்கம் நியாயமானது. சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான். அவர்களுக்குப் பண்பாட்டையும், சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் எடுத்துச்சொல்லி, அன்போடு திருத்துவோம்" என்று கூறி  தேற்றினார்.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும்- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-feature-key-announcements-minister-vinod</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-feature-key-announcements-minister-vinod#comments</comments><guid isPermaLink="false">423ae281-36a1-48b0-ad5f-b92d9ae43f34</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:32:37 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:32:37.131Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,வேளாண் பட்ஜெட்,அமைச்சர் வினோத்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1i9k83hl/minister-vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1i9k83hl/minister-vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், சட்ட சபையில் வேளாண்மைத் துறைக்காக வரும் 6-ந் தேதி தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.</p><p>இந்த பட்ஜெட்டை தயாரிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன், வினோத், ஸ்ரீநாத், ராஜ லட்சுமி, கமலி, விஜய் பாலாஜி, ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p><p>கூட்டத்தில் வேளாண்மைத் துறை  அமைச்சர் வினோத் பேசியதாவது:- </p><p>வேளாண்மை பட்ஜெட்டை தயாரிப்பதற்கான மக்கள் கருத்துக்கணிப்பு கூட்டம் இதுவரை மண்டல அளவிலான 4 கூட்டம் நடத்தி உள்ளோம். </p><p>இதில் சென்னை தவிர மற்ற மாவட்ட விவசாயி களிடம் கருத்துக்கள் கேட்டு முதலமைச்சரிடம் வழங்கி உள்ளோம். விவ சாயிகள்   கருத்துகளின்  அடிப்படையில்  வேளாண் பட்ஜெட்  தயாரிக்கப்பட உள்ளது.</p><p>கால்நடை, மீன்வளம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும்.</p><p>குளிர்சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.  விவசாயிகளின் உற்பத்தி மட்டும் அதிகரித்தால் போதாது. விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயர வேண்டும்.</p> <p>பெண் விவசாயிகளுக்கும் இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். விவசாயிகள் வைக்கும் அனைத்து கோரிக்கையும் கவனமாக பரிசீலித்து நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் இந்த ஆண்டு எல் நினோ ஆண்டாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறிவித்திருக்கிறார்கள். விவசாயிகள் ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>2031-ஆண்டுக்குள் தனுஷ் அரசியல் கட்சி தொடங்க திட்டமா?- ரசிகர்கள் எதிர்பார்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-dhanush-planning-to-launch-a-political-party-by-2031-fans-await-the-move</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-dhanush-planning-to-launch-a-political-party-by-2031-fans-await-the-move#comments</comments><guid isPermaLink="false">907c871e-417f-4cec-ba84-58e83b72e0f9</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:31:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:31:11.922Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ரசிகர்கள்,Dhanush,தனுஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/iy31eja0/dhanush.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தனுஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ தனுஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/iy31eja0/dhanush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தற்போது விஜய் வழியில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான திட்டத்துடன் தனது ரசிகர் மன்றங்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார்.</aside><h2><strong>நலத்திட்ட உதவிகள்</strong></h2><p>திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/தனுஷ்">தனுஷ்</a> பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. </p><p>இதில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். </p><p>நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ் ரசிகர்கள் சிலர் கூறியதாவது:-</p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தனித்து நின்று சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து உள்ளார். தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக 50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.</p><h2><strong>கொடி அறிமுகம்</strong></h2><p>இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது தனது ரசிகர் மன்றத்திற்கு வெள்ளை - சிகப்பு நிறத்தின் நடுவில் நட்சத்திரம் குறிக்கப்பட்டு, அதன் நடுவே தனது உருவப்படம் இருப்பது போன்று கொடியினை அறிமுகப்படுத்தினார். </p><p>தற்போது விஜய் வழியில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான திட்டத்துடன் தனது ரசிகர் மன்றங்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார்.</p><h2><strong>எதிர்பார்ப்பு</strong> </h2><p>தமிழகம் முழுவதும் விரைவில் மாவட்டம் வாரியாக சென்று ரசிகர்களை சந்தித்து, தனது மன்றங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் மக்களை சந்திப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறார். எனவே 2031-ம் ஆண்டுக்குள் நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: பீகாரில் போராடிய மாணவர்களை ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-shooting-bihar-cop-suspended-for-firing-ak-47-at-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-shooting-bihar-cop-suspended-for-firing-ak-47-at-students#comments</comments><guid isPermaLink="false">bd3d4c12-5f40-4db5-b937-d357d6795ae0</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:24:04 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:24:04.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,பீகார்,Bihar,shooting,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/0jdmviah/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஷேக் படேல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஷேக் படேல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/0jdmviah/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பீகார் பந்த்</h2><p>டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான நடந்த CJP <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">போராட்டத்திற்கு </a>ஆதரவாக ஜூலை 25 அன்று பீகாரில், 'பீகார் பந்த்' போராட்டம் நடைபெற்றது. </p><p>இதில் மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல இளைஞர்கள் கலந்துகொண்டனர். மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இப்போராட்டம் அன்றைய தினம் நடந்தது. </p><p>இதன்போது பல இடங்களில் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் கல்வீச்சுகள் பதிவாகின. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். </p> <h2>துப்பாக்கிச்சூடு</h2><p>இதில் குறிப்பாக சீவானில் நடந்த போராட்டத்தில் அபிஷேக் படேல் என்ற காவலர், போராட்டக்காரர்களை நோக்கிப் பாய்ந்து சென்று மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கியால் சுடும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.</p><p>வைரலாகி வரும் வீடியோவில், நீல ஹெல்மெட், போலீஸ் உடுப்பு அணிந்து அபிஷேக் படேல் ஏகே 47 துப்பாக்கியால் போராட்டக்காரர்களை நோக்கி சுடுவது இடம்பெற்றுள்ளது.</p><p>வீடியோவில் ஒரே ஒரு தோட்டா மட்டுமே சுடப்பட்ட காட்சி இடம்பெற்றிருந்த போதிலும், குறைந்தபட்சம் 4 முதல் 5 சுற்றுகள் வரை சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சீவான் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூன்று போராட்டக்காரர்கள் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>இதில் 15 வயது சிறுவன் முகமது ஆரிப் கழுத்தில் குண்டடிபட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Siwan, Bihar: SIT team member Abhishek Patel, who fired shots from an AK-47 in Siwan, has been suspended <br><br>(Visuals from the spot, July 25) <a href="https://t.co/1pTl9RyLLe">pic.twitter.com/1pTl9RyLLe</a></p>&mdash; IANS (@ians_india) <a href="https://x.com/ians_india/status/2081591725244764174?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>வழக்கு</h2><p>இச்சம்பவம் குறித்து மாநிலங்களவை எம்.பி மனோஜ் குமார் ஜா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p><p>இதனிடையே அபிஷேக் படேல் ஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.</p><p>துறை ரீதியான விசாரணை தொடங்கியுள்ளதாகவும், காவல்துறை நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>கண்டனம் </h2><p>பீகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>E20 எத்தனால் விவகாரம்: பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/e20-ethanol-row-nitin-gadkari-moves-bombay-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/e20-ethanol-row-nitin-gadkari-moves-bombay-high-court#comments</comments><guid isPermaLink="false">c9a00177-ce44-4588-8cba-d0cf42efe026</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:04:22 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:04:22.991Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nitin gadkari,நிதின் கட்கரி,மும்பை உயர் நீதிமன்றம்,E20 Ethanol,Mumbai  High Court,E20 எத்தனால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/pnf2tz73/nitin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Nitin Gadkari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/pnf2tz73/nitin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசின் E20 எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் மூலம் தானும் தனது குடும்பத்தினரும் பெருமளவில் லாபம் அடைவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் அவதூறு வீடியோக்கள் மற்றும் 'டீப்ஃபேக்' (Deepfake) உள்ளடக்கங்களுக்கு எதிராக மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.</p><h2><strong>நீதிமன்ற அனுமதி:</strong></h2><p>இந்த அவதூறு உள்ளடக்கங்களை வெளியிட்ட நபர்கள் மற்றும் தளங்கள் நீதிமன்ற எல்லைக்கு வெளியே இருப்பதால், அவர்கள் மீது வழக்குத் தொடுக்க அனுமதி கோரி நிதின் கட்கரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அபய் அஹுஜா, மெட்டா, கூகுள் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு தொடர கட்கரிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.</p><h2><strong>அவதூறு குற்றச்சாட்டுகள்:</strong></h2><p>சமீபகாலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் E20 பெட்ரோல் பயன்பாட்டினால் வாகனங்களின் என்ஜின் பழுதடைவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. </p><p>அதோடு, இந்த எத்தனால் கொள்கையின் மூலம் அமைச்சர் நிதின் கட்கரியும் அவரது குடும்பத்தினரும் நிதி ரீதியாகப் பயனடைகிறார்கள் என்ற தவறான செய்திகளும், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான 'டீப்ஃபேக்' வீடியோக்களும் பரப்பப்பட்டு வருகின்றன.</p><h2><strong>நிதின் கட்கரி தரப்பு விளக்கம்:</strong></h2><p>எத்தனால் கலப்பு தொடர்பான E20 கொள்கை மற்றும் அதன் நிர்வாகம் முழுமையாக 'மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்' கட்டுப்பாட்டில்தான் வருகிறது. சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கும் இதற்கும் நேரடியாகத் தொடர்பு இல்லை.</p><p>தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும், இதன் மூலம் தனிப்பட்ட முறையிலோ அல்லது குடும்பத்தின் மூலமாகவோ பெருமளவு லாபம் அடைவதாகக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற பொய் என்றும் கட்கரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p>முன்னதாக, தவறான தகவல்களைப் பரப்பியதாக யூடியூபர் மணீஷ் காஷ்யப் உட்பட சில சமூக வலைதளப் பிரபலங்கள் மீது நாக்பூர் சைபர் பிரிவு போலீஸார் BNS சட்டப் பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனினும், இது தொடர்பான சர்ச்சைகள் தொடரும் நிலையில், தன் மீதான அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைச்சர் நிதின் கட்கரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-mk-stalin-for-allegedly-concealing-information-in-election-nomination-papers-hearing-adjourned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-mk-stalin-for-allegedly-concealing-information-in-election-nomination-papers-hearing-adjourned#comments</comments><guid isPermaLink="false">6e34b1c0-4e19-4d48-8762-77d0c1f4da54</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:02:42 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:02:42.556Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Madras High Court,சென்னை ஐகோர்ட்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/y0s90ena/madrashighcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin - Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/y0s90ena/madrashighcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ஐகோர்ட்டில் திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-to-uddhav-thackeray">மு.க.ஸ்டாலின்</a> மீது தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. </p><h2>கொளத்தூர் தொகுதி</h2><p>சட்டசபை தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வேட்புமனுவில், திமுக அறக்கட்டளை தலைவராக உள்ள விவரம், சொத்து விவரங்களை மறைத்தது குறித்து தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி  திருஞானசம்பந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. </p><p>வழக்கு விசாரணையின்போது, வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை என மு.க.ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.</p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>இந்நிலையில், ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதியளித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஏவுகணை நாயகனின் கனவுகள் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகின்றன&quot; - கலாமுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/dr-apj-abdul-kalam-11th-death-anniversary-leaders-pay-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/national/dr-apj-abdul-kalam-11th-death-anniversary-leaders-pay-tribute#comments</comments><guid isPermaLink="false">f8d0471b-730c-40c4-bc6a-c53a0c1c3ff3</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:50:01 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:50:01.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அப்துல்கலாம்,AbdulKalam,PeoplesPresident,DrAPJAbdulKalam,MissileManOfIndia,ஏவுகணைமனிதர்,July27,இளைஞர்களின்வழிகாட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7bpqlhtr/APJAbdulKalam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ APJAbdulKalam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7bpqlhtr/APJAbdulKalam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நாட்டிற்கு அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.</p><h2><strong>மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா</strong></h2><p>மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான டாக்டர் ஏ.பி.ஜே. <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">அப்துல் கலாம் </a>அவர்களின் நினைவு நாளில் அவருக்கு மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.</p><p> 'ஏவுகணை நாயகன்' என்று போற்றப்படும் டாக்டர் கலாம், வளர்ந்த, தன்னிறைவு பெற்ற மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தார். </p><p>உள்நாட்டு ஏவுகணை மற்றும் விண்வெளித் திட்டங்களை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதில் அவர் ஆற்றிய பங்களிப்பு, இந்திய அறிவியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. </p><p>அறிவு, ஒழுக்கம், எளிமை மற்றும் தேச சேவை ஆகியவற்றைத் தனது வாழ்வின் அடித்தளமாகக் கொண்ட அவர், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களிடையே தன்னம்பிக்கை, புதுமை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வை ஊட்டினார். </p><p>"கனவு என்பது தூக்கத்தில் வருவதல்ல; உங்களைத் தூங்க விடாமல் செய்வதே கனவு" - டாக்டர் கலாமின் இத்தகைய சிந்தனைகள், இன்றும் ஒவ்வொரு இளைஞரும் தங்கள் இலக்குகளில் உறுதியுடன் இருக்க ஊக்கமளித்து வருகின்றன" என்று தனது உறுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.</p><h2><strong>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா</strong></h2><p>"இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டங்களின் சிற்பியும் தொலைநோக்குச் சிந்தனையாளருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். </p><p>அறிவியல் துறையில் டாக்டர் கலாம் அவர்களின் சிறப்பான பங்களிப்பு, இந்தியா ஒரு வலிமையான உத்திசார் சக்தியாக உருவெடுப்பதற்கான பாதையை வகுத்துத் தந்தது; அதேவேளையில், அவரது ஞானம் லட்சக்கணக்கானோரைச் சிறந்த சாதனைகளைப் புரியத் தூண்டி, அவர்களின் வாழ்வை ஒளிமயமாக்கியது. </p><p>'மக்களின் ஜனாதிபதி'யான டாக்டர் கலாம் அவர்கள், தேசபக்தர்களுக்கு என்றும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வார்" என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>தர்மேந்திர பிரதான்</strong></h2><p>டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளான இன்று சமூக வலைதளப் பதிவு வெளியிட்டுள்ள முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் எங்களின் மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம். </p><p>கல்வி, புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கை, வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.</p><h2><strong>என். சந்திரபாபு நாயுடு</strong></h2><p>ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "நாட்டிற்குப் பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வெற்றிகளைப் பெற்றுத் தந்து, 'ஏவுகணை நாயகன்' என்று போற்றப்பட்ட பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாளில் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். </p><p>எளிமை, நேர்மை மற்றும் மனிதாபிமானப் பார்வை போன்ற தனித்துவமான பண்புகளால், கலாம் அவர்கள் 'மக்களின் ஜனாதிபதி'யாகத் திகழ்ந்தார். அந்த மகத்தான ஆளுமையின் நினைவு நாளில், அவருக்கு எனது அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்.</p><p>கல்வி, புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, வளர்ந்த நாடாக இந்தியா மேற்கொள்ளும் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது" என்று கூறியுள்ளார்.</p><h2><strong>ராஜ்நாத் சிங்</strong></h2><p>மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் புண்ணியதிதியில், அவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைச் செலுத்துகிறேன். </p><p>அவரது எளிமை, நேர்மை மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்க்கை, தலைமுறைகள் பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றிப் புதுமைகளைப் புகுத்தவும், தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்குச் சேவை செய்யவும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. </p><p>கல்வி, புதுமை மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கை, இந்தியா ஒரு வளர்ந்த தேசத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து ஒளிரச் செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.</p><h2><strong>டாக்டர் ஜித்தேந்திர சிங்</strong></h2><p>மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தனது எக்ஸ் தள பதிவில், "மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவருக்குப் பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன். </p><p>டாக்டர் கலாமுடன் தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தது ஒரு பெரும் பேறாகும்.</p><p>எளிமை, நேர்மை மற்றும் நாட்டின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நிறைந்த அவரது வாழ்க்கை, பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றிப் புதுமைகளைப் படைக்கவும், சுயநலமற்ற ஈடுபாட்டுடன் நாட்டிற்குச் சேவையாற்றவும் பல தலைமுறையினரைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. </p><p>கல்வி, புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, வளர்ந்த நாடாக இந்தியா மேற்கொள்ளும் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது" என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்!- ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-raja-muthupandi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-raja-muthupandi#comments</comments><guid isPermaLink="false">f3f26e88-16ef-461b-81e4-f433f689406c</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:38:06 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:38:06.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,காமன்வெல்த் போட்டி,முக ஸ்டாலின்,Raja Muthupandi,ராஜா முத்துப்பாண்டி,Common wealth games 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lhe7qrft/mkstalin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜா முத்துப்பாண்டி- மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜா முத்துப்பாண்டி- மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lhe7qrft/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.</aside><h2><strong>வெள்ளிப்பதக்கம்</strong></h2><p>23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 126 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. இதில் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற போட்டியில் தமிழக பளு தூக்கும் வீரர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">ராஜா முத்துப்பாண்டி</a> வெள்ளிப்பதக்கம் வென்றார். </p><p>ஆண்களுக்கான 65 கிலோ உடல் எடை பிரிவில் கலந்து கொண்ட அவர் ஸ்னாட்ச் முறையில் 126 கிலோவும், கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 160 கிலோவும் ஆக மொத்தம் 286 கிலோ தூக்கி 2-வது இடத்தை பிடித்தார். வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் அவர் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். </p><h2><strong>பாராட்டுகள்...</strong></h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்க புரத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதை தொடர்ந்து அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினும், <a href="https://maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india">ராஜா முத்துப்பாண்டிக்கு </a>வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>இந்தியாவுக்குப் பெருமை</strong></h2><p>#CWG2026-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு என் பாராட்டுகள்.</p><p>தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றி ஊக்கமளிக்கட்டும்! கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr"><a href="https://x.com/hashtag/CWG2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CWG2026</a>-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு என் பாராட்டுகள்.<br><br>தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா… <a href="https://t.co/hWc8PIZHHK">pic.twitter.com/hWc8PIZHHK</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2081636929226104915?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கடும் அமளிக்கு மத்தியில் &apos;தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா&apos; மக்களவையில் தாக்கல்.. அம்சங்கள் என்ன? </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament#comments</comments><guid isPermaLink="false">de8f33c4-69ef-4e65-9161-06581d3f9c4d</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:25:43 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:25:43.019Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bill,மக்களவை,Lok Sabha,question paper leak,வினாத்தாள் கசிவு,மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ldzryqsr/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை ]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ldzryqsr/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாம் கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">மாணவர்கள் மீதான தாக்குதல்</a> குறித்து உடனே விவாதகிக்க இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதைத்தொடர்ந்து இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மீண்டும் இரு அவைகளும் கூடின. </p><h2>மசோதா தாக்கல்</h2><p>மக்களவை மீண்டும் கூடிய உடனே,  'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கால் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>வினாத்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிக்கும் விதமாக சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><h2>மசோதாவின் அம்சங்கள்</h2><p>முறைகேட்டின் தீவிரத்தை பொறுத்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும். திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை; ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.</p><p>மேல் முறையீடு வழக்குகள் மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும். தவறு செய்யும் நிறுவனங்கள் பொதுத்தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடை காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளிட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ளன</p><h2>அவையில் அமளி</h2><p>மசோதா அறிமுகத்தின்போதும் அதை தொடர்ந்தும், ஜூலை 20 அன்று மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <h2>ஜூலை 20 தாக்குதல்</h2><p>ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.</p><p>அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.</p><p>ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் - அமைச்சர் வன்னி அரசு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon#comments</comments><guid isPermaLink="false">747547db-dfb6-46ec-b258-39679ac5f87b</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:15:44 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:15:44.015Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>honour killing,ஆணவ படுகொலை,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/8aiycqxm/vanniarasu1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/8aiycqxm/vanniarasu1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.</p><h2>ஆணவப்படுகொலை</h2><p>காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் கவின் படுகொலை செய்யப்பட்டார். கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு ஓராண்டான நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆறுதல் கூறினார்.</p> <h2>சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம்</h2><p>இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:</p><p>* தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும்.</p><p>* சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.</p><p>* ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அரசு அதிகாரிகளின் கருத்தின்படி விரைவில் முதலமைச்சர் விஜயிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.</p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>* நீட் விவகாரத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருப்பது சரியல்ல. பிரதமரே பதவி விலக வேண்டும். ஏனென்றால் அவரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.</p><h2>நீட் தேர்வு ரத்து</h2><p>* நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். பிரதமர் மோடி அமைத்துள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/panel-formed-to-restore-prime-ministers-tainted-image-jairam-ramesh">உயர்மட்ட குழுவே</a> ஒரு ஏமாற்ற வேலைதான். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் இதுதான் நம்முடைய இலக்கு. தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும் அதுதான்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>இணையத்தில் &apos;ஜன நாயகன்&apos; பார்த்தவருக்கு முன்ஜாமின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online#comments</comments><guid isPermaLink="false">ea6334ca-8a2c-46c7-b964-98e6249a84bb</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:12:41 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:12:41.474Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,சென்னை ஐகோர்ட்,Madras HC</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/tb80akb6/jana.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜன நாயகன் பட காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜன நாயகன் பட காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/tb80akb6/jana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.</aside><h2><strong>இணையதளத்தில்...</strong></h2><p>சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, தனது கடைசிப்படம் என முதலமைச்சர் விஜய் அறிவித்து, நடித்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">ஜனநாயகன்</a> படம், கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு குழுவின்  ஆய்வில் படம் இருந்த நிலையில், ஏப்ரல் 3-ந்தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது.</p><p>பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை சென்னை  சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த எறகுண்டப்பட்டியை சேர்ந்த ஆர்.பிரதீப்குமார் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2><strong>முன் ஜாமின்</strong></h2><p>இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி பிரதீப்குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, மனுதாரர் தரப்பில், <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/3-big-films-starring-mamitha-baiju-are-releasing-within-a-same-month">ஜனநாயகன்</a> படம் திருட்டுத்தனமாக வெளியான போது பதிவு செய்யப்பட்ட பிரதான வழக்கில் அந்தப் படத்தை பார்த்தார் என்ற காரணத்திற்காக மட்டும் மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படம் கசிந்த விவகாரத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டபோது சாட்சியாக இருந்த மனுதாரர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது குற்றம்சாட்டப்பட்ட நபர் அந்த குற்றச்சாட்டிலிருந்தே விடுவிக்கப்பட்டுவிட்டார். விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், மேற்கொண்டு காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இல்லை. குற்றம்சாட்டப்பட்ட மற்ற சிலரும் ஜாமின், முன் ஜாமின் பெற்றுள்ளனர். எனவே,மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க வேண்டுமென் வாதிடப்பட்டது.</p><p>போலீஸ் தரப்பில், "படம் கசிந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட 8 முதல் 21 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட குற்றப்பத்திரிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரரை கைது செய்து விசாரிக்காவிட்டால், படம் கசிவு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். படத்தின் சட்டவிரோத வெளியீட்டு அதிகம்பேர் பார்த்து, படக்குழுவினருக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். மனுதாரரும் இந்த வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபர் என்பதால், அவரது முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டார்.</p><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரப்பன், "வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டபோது காவல்துறை தரப்பு சாட்சியாக ​​மனுதாரர் இருந்ததிலிருந்தே அவர் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார் என்பது தெரியவருகிறது. எனவே, அவருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்குகிறேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்..!- யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?</title><link>https://www.maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india</link><comments>https://www.maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india#comments</comments><guid isPermaLink="false">a18eb8b7-3858-4271-b88b-050479171ea8</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:12:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:12:03.109Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக வீரர்,காமன்வெல்த் போட்டி,Raja Muthupandi,ராஜா முத்துப்பாண்டி,TN player Raja muthupandi,Common wealth games 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/wrk4hnh3/CWG.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Weight Lifter Raja Muthupandi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/wrk4hnh3/CWG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்க புரத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி என்ற பளுதூக்கும் வீரர் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.</p><h2>சாதனை</h2><p>இவரது பெற்றோர்  முத்துப்பாண்டி- பேச்சியம்மாள். இந்த தம்பதியின் இளைய மகனான ராஜா முத்துப்பாண்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.</p><p>ராஜா வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளதால் அவரது குடும்பத்தினர் மற்றும்  கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராஜாவின் தந்தை முத்துப்பாண்டி சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார்.</p><h2>சகோதரரும் பளு தூக்கும் வீரர்</h2><p>அவரது தாயார் பேச்சியம்மாள் தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய  அண்ணன் சுரேஷ்குமாரும்  பளுதூக்கும் வீரர் ஆவார். இவர் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார்.</p><p>காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள ராஜா, அவருடைய சகோதரர் சுரேஷ் குமார் இருவரும் தொடக்கத்தில் கபடி விளையாட்டில் ஆர்வம் செலுத்திய நிலையில், உடலை பராமரிக்க வேண்டும், உடல் வலிமை பெற வேண்டும் என்பதற்காக  சங்கரலிங்கபுரத்தில் உள்ள  ஜிம்மில் பயிற்சி பெற சென்றுள்ளனர்.</p><h2>ரெயில்வே பணி</h2><p>இவர்கள் ஜிம்மில் காட்டும் ஆர்வத்தை பார்த்து அங்குள்ள பயிற்சியாளர்கள் இருவரையும் பளுதூக்கும் விளையாட்டிற்கு தயார் செய்துள்ளனர். வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ள ராஜா தனது பள்ளி காலத்தில் இருந்தே பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைக்க, அவருக்கு மயிலாடுதுறையில் உள்ள  சாய் விளையாட்டு விடுதியில் இடம் கிடைத்து.</p><p>அங்கு பயிற்சி பெற்று மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்க பெரம்பூர் ரெயில்வேயில் அவருக்கு பணி கிடைத்தது.</p><h2>வெள்ளி பதக்கம்</h2><p>2018-ம் ஆண்டில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 6-வது இடம் பிடித்தார். 2022-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் உடல்நிலை பாதிப்பு காரணமாக பங்கேற்க முடியாத சூழ்நிலை இருந்தது.</p><p>இந்த நிலையில் தான் தற்போது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>போராட்டம் நடத்தினாலே தடியடியா? மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march#comments</comments><guid isPermaLink="false">84b89d0c-f779-4b02-862c-b7c3307a9d6c</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:52:05 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:52:05.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Delhi Police,டெல்லி காவல்துறை,உச்சநீதிமன்றம்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ziofnyz9/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜூலை 20 தாக்குதல் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜூலை 20 தாக்குதல் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ziofnyz9/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைதியான போராட்டத்தில் லத்திகளால் தடியடி நடத்தியிருக்க கூடாது என ஜூலை 20 அன்று டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற இளைஞர்கள் மீதான தாக்குதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. </p><h2>ஜூலை 20 தாக்குதல் </h2><p>ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். </p><p>அப்போது அவர்கள் மீது <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் </a>லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.</p><p>ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். </p><p>இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் இன்று தொடங்கிய நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டம் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. </p> <h2>உச்சநீதிமன்றம் குட்டு</h2><p>இதனிடையே ஜூலை 20 அன்று பேரணி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான மிதமிஞ்சிய தாக்குதலை விசாரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.</p><p>இதன்போது பேசிய தலைமை நீதிபதி சூரியகாந்தி போராட்டம் நடத்தினார்கள் என்பதற்காகவே அவர்கள் மீது போலீசார் லத்திகளால் தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தார்.</p><p>அவர் கூறியதாவது, "சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், அமைதியான போராட்டத்திற்கு வழிவகை செய்யும் வகையிலான நாடு தழுவிய ஒரே மாதிரியான வழிமுறையை வரையறுக்க வேண்டியது அவசியம்.</p><p>அமைதியான முறையில் போராடுவதற்கு அரசியலமைப்பு அனுமதி அளிக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவை மறுக்கப்பட கூடாது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது என்பதற்காக போலீசார் எல்லைமீறி மிதமிஞ்சிய தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது.</p> <h2>போராட்டம் நடத்தினாலே தடியடி</h2><p>போராட்டம் நடத்தினாலே தடியடி  நடத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. போராட்டம் என்பது வன்முறை என்று அர்த்தமாகாது. அப்படி அத்துமீறப்பட்ட சம்பவங்கள் விசாரிக்கப்பட வேண்டும்.</p><p>அமைதியான போராட்டங்களை நடத்த முறையான இடம் ஒதுக்கீடு செய்து தருவது உள்ளிட்ட சில நெறிமுறைகள் அவசியமானது. இத்தகைய தருணங்களில் சுய கட்டுப்பாடு மிக முக்கியமானது" என தெரிவித்தார்.</p><p>அமர்வில் இடம்பெற்ற நீதிபதி ஜோய்மாலா பேசுகையில், "போராட்டங்களின் போது காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது அரசின் கடமை" என தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து விசாரணை நாளை (செவ்வாய்க்கிழமைக்கு) ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>சுங்கக் கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் - மாணிக்கம் தாகூர்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery#comments</comments><guid isPermaLink="false">c599fac6-e775-4aac-8076-6291da065cd1</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:42:02 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:42:02.640Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,சுங்கவரி கட்டணம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><h2>நிதின் கட்கரி</h2><p>நெடுஞ்சாலைகளையே தான் கண்டுபிடித்தது போல, எப்போதும் தற்பெருமை பேசி வருபவர் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. 'நெடுஞ்சாலைத் துறை ஹீரோ” என்று, தனக்குத் தானே தம்பட்டம் அடித்து மகிழ்ச்சி அடையும் அமைச்சராகவும் அவர் இருக்கிறார்.</p> <h2>சுங்கக் கட்டணம் உயர்வு</h2><p>மோடி ஆட்சியில் நெடுஞ்சாலைகள் என்பது, சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் வழியாக மாறிவிட்டன. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையாலும், மொத்த விற்பனை விலைக் குறியீடு அடிப்படையிலான கணக்கீட்டுச் சொதப்பலாலும், கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கட்டணம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.</p> <p>பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, நடுத்தர குடும்பங்களையும், வாடகை வாகன ஓட்டுநர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆனால், இது பற்றியெல்லாம் கவலைப்படாமல், ‘நெடுஞ்சாலைகளை அமைத்து விட்டோம் - இந்தியா வளர்ந்து விட்டது" என்று தினமும் பொய் கதைகளைப் பரப்பி வருகின்றனர்.</p> <h2>மோடி அரசு</h2><p>தமிழ்நாட்டில் உள்ள 80 சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ரூ. 4,200 கோடிக்கு அதிகமாக மோடி அரசு வசூல் செய்து வருகிறது. அதன் பிறகும் அடங்காமல், லாரிகளுக்கு ரூ. 30 வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்தி, மீண்டும் தமிழக மக்களுக்கு 'அல்வா” கொடுத்துள்ளது.</p><p>லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் பாக்கெட்டையும் பிடுங்கும் திருட்டு பாஜக அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது. சுங்க கட்டண உயர்வை மோடி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.</p> <h2>மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டம்</h2><p>தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது மோடி அரசு. ஆனால், தமிழகத்திற்கு எந்த திட்டங்களை தராமல், கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. ரெயில்வே துறைக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் தமிழ்நாட்டிற்கு, 'வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்கள்” ஒதுக்காமல் வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டை வெறும் பணம் காய்க்கும் மரமாக மட்டும் பயன்படுத்திக் கொண்டு, அந்த மரத்தையே வெட்ட நினைக்கும் மோடி அரசுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலுவான குரல் எழுப்புவோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்: தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal#comments</comments><guid isPermaLink="false">50990a5e-097e-43b0-9552-61c3ee91b16e</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:36:29 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:36:29.416Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,Common wealth Games,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி,TN player Raja muthupandi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2h2u3nl1/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Player Raja Muthupandi- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2h2u3nl1/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><h2>ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை</h2><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும்   23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.</p><p>ராஜா முத்துப்பாண்டி அவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.</p><p>அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.  அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அவர் கூறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி</h2><p>கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, தனது மூன்றாவது தொடர்ச்சியான தங்க பதக்கத்தை வென்று, இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்த இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருந்தார்.</p><p>இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் தனது அறிமுகத்திலேயே, ஆண்களுக்கான 65 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம், இங்கு நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகள் அனைத்திலும் இந்தியா குறைந்தது ஒரு பதக்கத்தையாவது உறுதி செய்தது.</p><h2>புள்ளி விவரம்:</h2><p>முத்துப்பாண்டி 'ஸ்னாட்ச்' (snatch) முறையில் 126 கிலோவையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' (clean and jerk) முறையில் 160 கிலோவையும் தூக்கி, மொத்தம் 286 கிலோ எடையுடன் போட்டியை நிறைவு செய்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>