<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 21 Jul 2026 09:30:13 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026#comments</comments><guid isPermaLink="false">e1a983bf-6930-4a96-8d7d-aee2f254884f</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:01:21 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:28:19.813Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://maalai-malar.quintype.com/story/77516b2d-5a97-484d-ab57-83028e4f9e4e">நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் - பாடகர் அறிவு கைது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-allows-sonam-wangchuk-to-choose-hospital">விருப்பப்பட்ட மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி: சோனம் வாங்சுக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/uttarakhand-downpour-dabkeshwar-mahadev-temple-flooded">உத்தரகாண்டில் கனமழை: டப்கேஷ்வர் மகாசிவன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/number-1-in-rankings-arina-sabalenkas-new-record">தரவரிசையில் நம்பர் 1: அரினா சபலென்காவின் மற்றொரு சாதனை</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/both-teams-have-equal-chance-to-win-t20-series-sikandar-raza">இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்பு: டி20 தொடர் குறித்து சிக்கந்தர் ராசா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/this-country-is-not-your-fathers-property-pm-modi-arvind-kejriwal-slams">"இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல, பிரதமர் மோடி!"-அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/be4bfd4a-1099-42c1-a508-04536354f321">பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை - மல்லிகார்ஜூன கார்கே</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/03334d6b-6bde-42fe-a82d-3764dba7b6c9">பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/36d83f67-0602-4ab4-b0b3-77cfbae2bbb4">துணை ஜனாதிபதி வருகை - திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a4d618d4-266a-4a6e-b6c1-6738d4a795b5">கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம் - வீடுகள் விலை குறைகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-slaps-50-tariffs-new-duties-on-key-canadian-imports-under-uscanada-trade-dispute">இது நியாயமே இல்ல.. கனடா மீது 50% வரியை தீட்டிய டிரம்ப் -கார்னி கொந்தளிப்பு<br></a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/c06bac6b-6b04-4642-9bd5-8b4c9398b0d7">மக்களே ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! - மு.க.ஸ்டாலின்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive">கயானா படகு விபத்து: 27 உடல்கள் மீட்பு; போதைப்பொருள் பரிசோதனையில் மாலுமிகள் சிக்கியதால் பரபரப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award">தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு 'லோக்மான்ய திலகர் விருது'!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed">ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப்பெருக்கு: 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ca9c7d59-6f3b-4f07-939f-20fe3e86130f">நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874">அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35">கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a">நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0462a245-3b74-4003-834b-ab1c2c54d599">ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/cce69c86-57c0-4546-a672-e41cbf604cc5">வறட்சியால் வாடும் கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">NEET-UG 2026: போலியான OMR விடைத்தாள்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை-NTA எச்சரிக்கை!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a">ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/spain-second-world-cup-triumph-madrid-fans-historic-celebration">ஸ்பெயின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டம்: மேட்ரிட் நகரில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title">விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4">நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears">'மீண்டும் என்னை தேசவிரோதி என்பார்கள்': மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித் தோசாஞ்ச்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27">தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations">Sikkim: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு - மீத்தேன் வாயு கசிவால் மீட்பதில் சிக்கல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge">இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் - CJP அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6718ca4f-394f-4ce0-8f4d-f2a524f402dc">இங்கிலாந்து புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ce5bfe19-8180-4674-acf1-75b69c84a40e">வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்- ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3">கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f86052c-a139-4221-a893-68b35a1821b8">சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/74493a2e-1175-4349-bd50-436bf3bd4bc3">போலி மருந்து தயாரிப்பு வழக்கில் 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு</a></p> ]]></content:encoded></item><item><title>விருப்பப்பட்ட மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி: சோனம் வாங்சுக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-allows-sonam-wangchuk-to-choose-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-allows-sonam-wangchuk-to-choose-hospital#comments</comments><guid isPermaLink="false">34e3718a-3779-4513-b170-7f9786486191</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:23:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:23:54.089Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi High Court,Sonam Wangchuk,டெல்லி உயர் நீதிமன்றம்,சோனம் வாங்சுக்,Medanta,மெதாந்தா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/cf31ixy2/sonam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sonam Wangchuk  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/cf31ixy2/sonam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பினர் (CJP) நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக 24 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரபல பருவநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், டெல்லி சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையிலிருந்து குருகிராமில் உள்ள மெதாந்தா தனியார் மருத்துவமனைக்கு மாற டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p><p>தனக்கு விருப்பமான மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><h2><strong>சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றம்:</strong></h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்ததால், காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக அகற்றி சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p>சஃப்தர்ஜங் மருத்துவமனையின் பரிசோதனை அறிக்கைகளில் முரண்பாடுகள் இருப்பதாகக் குற்றம்சாட்டிய அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தை நாடினார்.</p><h2><strong>வழக்கறிஞர்களின் காரசார வாதம்:</strong></h2><p>சோனம் வாங்சுக் கைது செய்யப்படவோ அல்லது எவ்விதக் குற்றச்சாட்டின்கீழ் சிறையில் அடைக்கப்படவோ இல்லை என சுட்டிக்காட்டிய சிரேஷ்ட வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அகில் சிபல், ஒரு குடிமகனுக்குத் தனக்குப் பிடித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற முழு உரிமை உண்டு என வாதிட்டனர்.</p><h2><strong>மத்திய அரசின் சம்மதம்:</strong></h2><p>மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சோனம் வாங்சுக்கை மெதாந்தா மருத்துவமனைக்கு மாற்றுவதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.</p><p>சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இதுவரை சோனம் வாங்சுக்கிற்கு அளிக்கப்பட்ட அனைத்து மருத்துவச் சான்றுகளும் அறிக்கைகளும் உடனடியாக மெதாந்தா மருத்துவமனைக்கு வழங்கப்பட வேண்டும்.மெதாந்தா மருத்துவமனை இயக்குநர் தலைமையில் சோனம் வாங்சுக்கிற்கு சிகிச்சை அளிக்கத் தனியாக மருத்துவர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். மெதாந்தா மருத்துவர்களின் ஆலோசனையின்றி அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படக் கூடாது.</p><h2><strong>சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை:</strong></h2><p>24 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கும் சோனம் வாங்சுக்கின் ரத்தத்தில் பொட்டாசியம் அளவுகள் குறைந்துள்ளதாகவும், யூரிக் அமிலம் அதிகரித்து உள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. உடலில் சர்க்கரை அளவு குறைந்துள்ள போதிலும், அவர் உணவு மற்றும் குளுக்கோஸ் எடுத்துக்கொள்ள மறுத்து வருவதால், தொடர்ந்து தீவிர கண்காணிப்பு தேவை என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் - பாடகர் அறிவு கைது
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/slogans-raised-against-neet-exam-singer-arivu-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/slogans-raised-against-neet-exam-singer-arivu-arrested#comments</comments><guid isPermaLink="false">77516b2d-5a97-484d-ab57-83028e4f9e4e</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:15:55 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:15:55.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrested,நீட் தேர்வு,Neet exam,Singer Arivu,பாடகர் அறிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ovva776v/arivu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Singer Arivu arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ovva776v/arivu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.</p><p>சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து <a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">நீட் தேர்வை</a> ரத்து செய்யுமாறு கோஷமிட்ட பாடகர் அறிவை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்றனர்.</p><p>பாடகர் அறிவு (அறிவரசு கலைநேசன்) ஒரு இந்திய சொல்லிசை, பாடலாசிரியர், மற்றும் பின்னணிப் பாடகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகின்றார். அனிருத்தின் இசையமைப்பில் மாசுடர் (2021) படத்திற்காக இவர் எழுதிய "வாத்தி இரைடு" பாடலுக்காகவும், தீ உடன் இணைந்து இவர் பாடிய "எஞ்சாய் எஞ்சாமி" என்ற பாடலாலும் புகழ் பெற்றார். பாடகர் அறிவு தவெகவின் கொடிப்பாடலை பாடி உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>உத்தரகாண்டில் கனமழை: டப்கேஷ்வர் மகாசிவன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/uttarakhand-downpour-dabkeshwar-mahadev-temple-flooded</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttarakhand-downpour-dabkeshwar-mahadev-temple-flooded#comments</comments><guid isPermaLink="false">6cbb8e1e-ff39-445e-8e3f-1d52e8ddc9e7</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:15:25 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:15:25.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sdrf,FlashFloods,TapkeshwarMahadev,DehradunRain,UttarakhandFloods,TamsaRiver</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/pt3gtf0j/Tapkeshwar-Shiva-temple-Floods" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tapkeshwar Shiva temple Floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/pt3gtf0j/Tapkeshwar-Shiva-temple-Floods?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/uttarakhand">உத்தரகண்ட் </a>மாநிலத்தின் தலைநகரான டேராடூண் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இதன் விளைவாக, அங்குள்ள முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் கிடுகிடுகென உயர்ந்து தரைத்தளம் அனைத்தும் வெள்ளக்கிடங்காய் ஓடியது.</p><h2><strong>கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்:</strong></h2><p>டேராடூணில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பழமையான 'டப்கேஷ்வர் மகாசிவன் கோவில்' வளாகத்திற்குள் தம்சா நதியின் காட்டாற்று வெள்ளம் புகுந்துள்ளது. </p><p>நதியில் ஏற்பட்டுள்ள ராட்சத வெள்ளப்பெருக்கு காரணமாக, வெள்ள நீரானது கோவிலின் தரைத்தளம் மற்றும் படிக்கட்டுகளை முழுமையாக மூழ்கடித்தபடி ஓடியது.</p><p>கோவிலின் உள்ளே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பிரதான கட்டமைப்புகள் மற்றும் சிலைகளைச் சுற்றிலும் தம்சா நதி வெள்ளம் அதிவேகத்தில் பாய்கிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Uttarakhand: Tamsa River in spate following incessant heavy rainfall in Dehradun and its surrounding areas. The river is flowing through the historic Tapkeshwar Mahadev Temple. <a href="https://t.co/l1XumQQMR9">pic.twitter.com/l1XumQQMR9</a></p>&mdash; ANI UP/Uttarakhand (@ANINewsUP) <a href="https://x.com/ANINewsUP/status/2079421037440278806?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>பாதுகாப்பு எச்சரிக்கை:</strong></h2><p>தொடர் மழையினால் ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நதிக்கரையோரப் பகுதிகளுக்கோ அல்லது டப்கேஷ்வர் கோவில் வளாகத்திற்கோ செல்ல வேண்டாம் என உள்ளூர் நிர்வாகமும் பாதுகாப்புப் படையினரும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கண்ணுக்குக் கண் பதிலடி: மத்திய கிழக்கில் புதிய பதற்றம்... சவுதி அரேபியாவிற்கு எதிராக கடல்வழி முற்றுகையை அமல்படுத்துவதாக ஹூதி அமைப்பு அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/tit-for-tat-retaliation-tensions-in-the-middle-east-reach-a-new-peak-houthi-group-announces-a-maritime-blockade-against-saudi-arabia</link><comments>https://www.maalaimalar.com/news/world/tit-for-tat-retaliation-tensions-in-the-middle-east-reach-a-new-peak-houthi-group-announces-a-maritime-blockade-against-saudi-arabia#comments</comments><guid isPermaLink="false">886c7ebc-d2b2-445c-9f58-bfe745766033</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:59:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:59:42.429Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,சவுதி அரேபியா,செங்கடல்,Red Sea,houthis,ஹூதி அமைப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/we6ttne1/New-Project-2026-07-21T142917.713.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கண்ணுக்குக் கண் பதிலடி: மத்திய கிழக்கில் புதிய உச்சக்கட்ட பதற்றம்... சவுதி அரேபியாவிற்கு எதிராக கடல்வழி முற்றுகையை அமல்படுத்துவதாக ஹூதி அமைப்பு அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/we6ttne1/New-Project-2026-07-21T142917.713.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானின் ஆதரவுப்பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பு, சவுதி அரேபியாவுக்கு எதிராக உடனடி கடற்படை முற்றுகையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஏமன் மக்கள் அனைவரும் போருக்கு ஆயத்த நிலையில் இருக்குமாறும், ஆயுதமேந்தி போரிடத் தயாராகுமாறும் அழைப்பு விடுத்துள்ளது. </p><p>கடந்த வாரம் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தை சவூதி அரேபியா தாக்கியதாக ஹூதிகள் குற்றம் சாட்டினர். இதற்குப் பதிலடியாக, சவூதியின் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹூதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாகவே இந்த கடல்வழி முற்றுகை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே தங்களின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடலை மறிக்குமாறு ஹூதிகளுக்கு ஈரான் அழைப்பு விடுத்திருந்தது.</p><p>ஏமனின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ வெளியிட்ட வீடியோவில், பல ஆண்டுகளாக ஏமன் மக்கள் மீது சவூதி விதித்துள்ள தடைகளுக்குப் பதிலடியாக, "கண்ணுக்குக் கண்" என்ற அடிப்படையில் இந்த முற்றுகை உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் தீவிரப் போர்ச் சூழலுக்கு மத்தியில், சவுதி அரேபியாவின் வணிகக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை இலக்கு வைத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஹார்முஸ் வழியாக செல்லமுடியாத கப்பல்களுக்கு, பாப் அல்-மண்டேப் ஜலசந்தி ஒரு மாற்றுப் பாதையாக இருந்து வருகிறது. </p><p>செங்கடலின் தென்முனைக்குள் செல்லும் பாப் அல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஏமன் பகுதியை ஹூதிகள் கட்டுப்படுத்துகின்றனர். இந்த ஜலசந்தியை மூடுவதால் உலகின் எண்ணெய் விநியோகம் 7 ​​சதவீதம் குறையும் என்றும், சவூதியின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதிகள் மத்திய கிழக்கிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>ஹார்மூஸ்க்கு இணையாக இருந்த மற்றொரு வர்த்தகப் பாதையையும் மூடுவது உலகப் பொருளாதாரத்தின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>&apos;இது முதலமைச்சர் விஜய் ஆட்சி&apos; என்று சொன்ன பிறகும் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை!- டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-farmers-distressed-that-bribes-are-being-demanded-even-after-declaration-that-this-is-cm-vijays-regime</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-farmers-distressed-that-bribes-are-being-demanded-even-after-declaration-that-this-is-cm-vijays-regime#comments</comments><guid isPermaLink="false">f481c958-8a93-499e-9153-ccc98004e726</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:51:17 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:51:17.559Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,நெல் கொள்முதல்,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7qykdquq/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7qykdquq/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>விவசாயிகள் எந்தவித இடையூறும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விலையுடனும் தங்களது நெல்லை விற்பனை செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யும் வகையில் நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</aside><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>புகார்</strong></h2><p>தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> செய்யும் பெயரில் ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ கூடுதல் எடை கேட்பது, "தூற்றுகிறோம்" என்ற பெயரில் மேலும் ஒன்றரை கிலோ நெல்லை பிடித்தம் செய்வது, அதோடு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருக்கும் விவசாயிகள், லஞ்சம் வழங்க மறுத்தால் "நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது" என்ற காரணத்தைக் கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><h2><strong>அலட்சியம்</strong></h2><p>சில தினங்களுக்கு முன்னர், கடலூர் மாவட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் மேற்கொண்ட ஆய்விலேயே ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.50 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal">லஞ்சம்</a> வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>ஏற்கனவே, தேர்தலுக்கு முன் தவெக அளித்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி, இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் ஏற்பட்டுள்ள வறட்சி, விதை நெல் மற்றும் உரங்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல்லை விற்பனை செய்யவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, தவெக அரசின் விவசாயிகள் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.</p><p>"லஞ்சம் கேட்டால், 'இது முதலமைச்சர் விஜய் ஆட்சி' என்று கூறுங்கள்" என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்ததை நம்பி, அதிகாரிகளிடம் முறையிட்ட விவசாயிகளுக்கு, "நீங்கள் கொடுக்கும் லஞ்சம் எங்களுக்கு மட்டும் அல்ல; மேலிடம் வரை செல்கிறது" என்ற பதிலே கிடைப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுவே முதலமைச்சர் விஜய் கூறிய 'வெளிப்படையான ஆட்சி' என்பதன் உண்மையான பொருளா? என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புகின்றனர்.</p><h2><strong>வேதனை</strong></h2><p>தமிழகத்தில் விவசாயம் செய்வதே சாத்தியமற்றதாக மாறியுள்ளதாகவும், இந்த நெருக்கடி நிலை தொடர்ந்தால், தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும், அதோடு கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எப்படி ரூ.30 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கினார்களோ அதைப்போலவே எங்களுக்கு பின் எங்கள் குடும்பத்திற்கும் கொடுங்கள் என விரக்தியான மனநிலையில் விவசாயிகள் எழுப்பும் கேள்வி அரசின் செயல்பாடுகள் மீதான அவர்களின் விரக்தியையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறது.</p><p>எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, லஞ்சம் மற்றும் எடை முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகள் எந்தவித இடையூறும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விலையுடனும் தங்களது நெல்லை விற்பனை செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யும் வகையில் நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>&quot;இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல, பிரதமர் மோடி!&quot;-அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/this-country-is-not-your-fathers-property-pm-modi-arvind-kejriwal-slams</link><comments>https://www.maalaimalar.com/news/national/this-country-is-not-your-fathers-property-pm-modi-arvind-kejriwal-slams#comments</comments><guid isPermaLink="false">bb6e8b41-1b67-4a55-a856-90a72e3cd6a4</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:44:32 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:44:32.435Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,delhi,பிரதமர் மோடி.,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/33g1tsxf/MODI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modi-Arvind Kejriwal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/33g1tsxf/MODI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு மற்றும் ஆளும் பாஜகவின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி அக்னி கணைகளை வீசியுள்ளார். </p><p>டெல்லியில் நடைபெற்ற முக்கிய அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார்.</p><h2><strong>அதிகார துஷ்பிரயோகம் குறித்த சாடல்:</strong></h2><p>மத்திய அரசின் அடக்குமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய கெஜ்ரிவால், "இந்த ஜனநாயக நாடு மக்களுக்கே சொந்தமானது. இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல Mr.மோடி!" என்று மிக ஆவேசமாகக் கூறினார்.</p><h2><strong>ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்:</strong></h2><p>மத்திய அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தவறான வழிகளில் ஆட்சி நடத்துவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் குரல்களையும் நசுக்கப் பார்ப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.</p><h2><strong>நாடு தழுவிய கொந்தளிப்பு:</strong></h2><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை முடக்க நினைக்கும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.</p><h2><strong>அரசியல் களத்தில் நிலவும் அதிர்வலைகள்:</strong></h2><p>அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அதிரடியான கருத்து, தேசிய அரசியலிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆம் ஆத்மி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இக்கருத்தைப் பரப்பி வரும் நிலையில், பாஜக தரப்பில் இருந்து இதற்குக் கடுமையான எதிர்ப்புகளும் பதிலடிகளும் வரத் தொடங்கியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை - மல்லிகார்ஜூன கார்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-decided-not-celebrate-birthday-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-decided-not-celebrate-birthday-today#comments</comments><guid isPermaLink="false">be4bfd4a-1099-42c1-a508-04536354f321</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:40:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:40:26.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,mallikarjun kharge,மல்லிகார்ஜூன கார்கே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/09/30/1769804-mallikarjunkharge.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மல்லிகார்ஜூன கார்கே]]></media:title><media:description type="html"><![CDATA[ Mallikarjun Kharge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/09/30/1769804-mallikarjunkharge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் மூத்த தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87">மல்லிகார்ஜூன கார்கே</a>வுக்கு இன்று 84-வது பிறந்தநாள். ஆனால் தான் பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை என்று அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-</p><p>நீட் தேர்வுக்காக காலவரையின்றி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் வாங்சுக் வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கரப்பான்பூச்சி கட்சி சார்பில் நடத்தப்பட்ட அமைதியான ஜனநாயக போராட்டத்தை அரசு ஒடுக்கியதையும், தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டு வீச்சுகளையும் நாடு நேற்று கண்டது. நீதி கோரிய <a href="https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears">மாணவர்கள்</a> குரலுக்கு வன்முறைதான் பதிலாக கிடைத்தது. இத்தகைய வேதனையான சூழ்நிலையில் இன்று எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.</p><p>இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் முழுமையாக விவாதிக்க வேண்டும். மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தானாக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும். மாணவர்களுக்கு தேவை நீதிதான். ஒடுக்குமுறை அல்ல.</p><p>இவ்வாறு கார்கே அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் அடுத்த பிரமாண்டம்: துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/work-on-the-harbour-to-maduravoyal-double-decker-flyover-intensifies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/work-on-the-harbour-to-maduravoyal-double-decker-flyover-intensifies#comments</comments><guid isPermaLink="false">b24dc60f-7284-47c4-a0e2-c96083aced2a</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:39:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:39:54.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை,மேம்பால பணிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oey5mtne/maduravoyoal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் அடுக்குக்கான கார்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம். ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் அடுக்குக்கான கார்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oey5mtne/maduravoyoal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>நகரின் மையப்பகுதியில் இருந்து கோயம்பேடு அல்லது மதுரவாயல் நோக்கிச் செல்லும் உள்ளூர் வாகனங்கள் சிக்னல்கள் இல்லாத கீழ் தளத்தைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் இலக்கை அடையலாம்.</aside><p>சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான ஈரடுக்கு மேம்பாலம் ரூ.3,570 கோடி முதல் ரூ.5,770 கோடி வரையிலான மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த 21 கி.மீ. நீளமுள்ள திட்டம், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 2 தளங்களைக் கொண்டுள்ளது.</p><h2><strong>6 வழிச்சாலை</strong></h2><p>மேல்தளம் துறைமுக சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்படும் 6 வழிச்சாலை. இது துறைமுகம் வரை தொடர்கிறது. கீழ்த்தளம் சாதாரண உள்ளூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படும் 4 வழிச்சாலை.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/மதுரவாயல்-துறைமுகம்-பறக்கும்-சாலை">மதுரவாயல்</a> முதல் கோயம்பேடு வரை ஒற்றைத் தளம் மட்டுமே இருக்கும். உள்ளூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, முதல் அடுக்கில் மொத்தம் 13 இடங்களில் சாய்தளங்கள் (7 ஏறும் வழிகள் மற்றும் 6 இறங்கும் வழிகள்) அமைக்கப்படுகின்றன.</p><p>கோயம்பேடு, சிவானந்தா சாலை, ஸ்பர்டேங்க் சாலை மற்றும் கல்லூரி சாலை வாகனங்கள் ஏறி இறங்குவதற்கான சாய்தளங்கள் அமைக்கப்படுகின்றன. சிவானந்தா சாலை மற்றும் கல்லூரி சாலை ஆகிய 2 இடங்களில் இந்த மேம்பாலத்தில் நுழைவதற்கும், காமராஜர் சாலை, ஸ்பர்டேங்க் சாலை உட்பட 2 இடங்களில் வெளியேறுவதற்கும் பிரத்தியேகப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.</p><h2><strong>போக்குவரத்து நெரிசல் குறையும்</strong></h2><p>இந்த மேம்பாலம் சென்னை துறைமுகம் கதவு எண் 10 (நேப்பியர் பாலம் அருகில்) தொடங்கி, கூவம் ஆற்றின் கரையோரமாக பயணித்து, கோயம்பேடு வழியாகச் சென்று மதுரவாயல் சந்திப்பில் முடிவடைகிறது. துறைமுகம் முதல் கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் போக்கைப் பின்பற்றி ஈரடுக்கு பாலமாக அமைகிறது.</p><p>கோயம்பேடு முதல் மதுரவாயல் வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் ஒற்றை அடுக்கு பாலமாகத் தொடர்கிறது. சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மேல் தளத்தில் நேரடியாகச் செல்வதால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும்.</p><p>நகரின் மையப்பகுதியில் இருந்து கோயம்பேடு அல்லது மதுரவாயல் நோக்கிச் செல்லும் உள்ளூர் வாகனங்கள் சிக்னல்கள் இல்லாத கீழ் தளத்தைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் இலக்கை அடையலாம்.</p><p>செம்பரம்பாக்கம் அருகே உள்ள 64 ஏக்கர் பரப்பளவிலான யார்டில், மேம்பாலத்திற்கான பிரம்மாண்ட கான்கிரீட் தூண்கள் மற்றும் ‘பாக்ஸ் கார்டர்’ தயாரிக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.  </p><figure><img alt="ஈரடுக்கு மேம்பாலத்தின் மாதிரி தோற்றம்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/cxyuzk8r/maduravoyal0.jpg" /><figcaption>ஈரடுக்கு மேம்பாலத்தின் மாதிரி தோற்றம்</figcaption></figure><h2><strong>கார்டர்கள் பொருத்தும் பணி</strong></h2><p>கடந்த மே மாதம் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இப்பணிகள், பருவமழை உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் சற்றே தாமதமானது. தற்போது, தினமும் பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என மொத்தம் 11 மணி நேரங்கள் தீவிரமாகப் பணிகள் நடந்து வந்தன. தற்போது நாள் ஒன்றுக்கு  16 மணி நேரமாக உயர்த்தி பணிகளை விரைவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.  முதல் அடுக்குக்கான கார்டர்களைப் பொருத்தும் பணி தற்போது தொடங்கி உள்ளது. </p><p>மொத்தம் 21 கி.மீ. நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தின் 15 கி.மீ. பகுதி கூவம் ஆற்றின் வழியே செல்கிறது. இந்த மேம்பாலத்தின் பணிகள் அனைத்தும் நவம்பர் 2027-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், தினசரி சுமார் 20 ஆயிரம் உள்ளூர் வாகனங்களும், 5,500 கனரக வாகனங்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரின் உட்புறச் சாலைகளில் நிலவும் நெரிசலை பெருமளவு குறைக்கும்.</p><h2><strong>சென்னைக்கு வரப்பிரசாதம்</strong></h2><p>வரும் காலங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டிற்குள் இந்த உயர்மட்டச் சாலையில் பயணிக்கும் உள்ளூர் வாகனங்களின் எண்ணிக்கை தினசரி 52,080 ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p><p>2047-ம் ஆண்டுக்குள் சென்னை துறைமுகத்தின் சரக்குக் கையாளுதல் திறன் ஆண்டுக்கு 200 மில்லியன் டன்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஈரடுக்கு மேம்பால சாலை சென்னைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.</p>]]></content:encoded></item><item><title>ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல் ஹய்யா தேர்வு.. யார் இவர்?</title><link>https://www.maalaimalar.com/news/world/hamas-appoints-khalil-al-hayya-as-new-leader-amid-gaza-government-dissolution-and-genocide-allegations</link><comments>https://www.maalaimalar.com/news/world/hamas-appoints-khalil-al-hayya-as-new-leader-amid-gaza-government-dissolution-and-genocide-allegations#comments</comments><guid isPermaLink="false">a740404d-cf01-4752-9cac-6232bc41a6de</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:32:18 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:32:18.585Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காசா,இஸ்ரேல்,gaza,Israel,Hamas,ஹமாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/isml521y/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கலீல் அல் ஹய்யா]]></media:title><media:description type="html"><![CDATA[ கலீல் அல் ஹய்யா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/isml521y/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலஸ்தீனத்தின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE">காசா</a>வில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல் ஹய்யா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். </p><p>2024 அக்டோபரில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் பின் தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டுள்ளார். </p><h2> கலீல் அல் ஹய்யா </h2><p>ஹமாஸின் அரசியல் தலைமையின் நீண்டகால உறுப்பினரான கலீல் அல் ஹய்யா, அந்த அமைப்பின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராவார்.</p><p>காசாவின் ஷஜாய்யா மாவட்டத்தைச் சேர்ந்த அல் ஹய்யா, ஹமாஸை உருவாக்கிய தலைவர்களின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். </p><p>அவர் ஹமாஸின் அரசியல் குழுவில் நீண்டகால உறுப்பினராக இருந்ததுடன், அக்குழுவின் கொள்கையை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.</p><p>காசாவிலும் சர்வதேச அளவிலும் நடந்த பேச்சுவார்த்தைகளில் அந்த அமைப்பின் பிரதான குரலாக விளங்கினார். </p><p>இஸ்ரேலின் 'மிகவும் தேடப்படும்' பட்டியலில் உள்ள தலைவர்களில் அல் ஹய்யாவும் ஒருவர்.  கடந்த பல ஆண்டுகளாக கத்தாரின் தோஹாவில் தங்கியிருந்தார்.</p><p>இஸ்ரேலுடனான மோதல்களின் போது, ​​அவரது வீடுகளும் அலுவலகங்களும் இஸ்ரேலிய படைகளால் பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டு நடந்த ஒரு தாக்குதலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.</p><p>யஹ்யா சின்வாரின் மரணத்தைத் தொடர்ந்து ஹமாஸ் சந்தித்து வரும் உலகளாவிய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அல் ஹய்யாவின் நியமனம் வந்துள்ளது. </p><figure><img alt="மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உடன் அல் ஹயா" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/jjpim213/tn-15.jpg" /><figcaption>மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உடன் அல் ஹய்யா</figcaption></figure><h2>ஹமாஸ் அரசு கலைப்பு</h2><p>புதிய தலைமையின் கீழ் ஹமாஸின் இராஜதந்திர மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மாறுமா என்பதை சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்து வருகிறது.</p><p>ஏற்கனவே காசாவில் இருந்த தங்கள் அரசு நிர்வாகத்தை ஹமாஸ் கலைத்தது. அமெரிக்கா தலைமையில் கடந்த அக்டோபரில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தங்கள் அரசை ஹமாஸ் கலைத்தது.</p><p>போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்கி வருவதாலும், காசாவுக்குள் மக்களுக்கு தேவையான உணவு, மருந்து மற்றும் நிவாரண பொருட்களை உள்ளே வர விடாமல் இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளதாலும் அங்கு மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.</p><p>எனவே ஒப்பந்தபடி தங்கள் அரசை கலைத்து, சர்வதேச சமூகத்தின் மூலமும் அமெரிக்கா மூலமும் இஸ்ரேலுக்கு நெருக்கடி அளிக்கவே ஹமாஸ் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காசாவை நிர்வகித்து வந்த தங்கள் அரசை கலைத்ததாக கூறபடுகிறது. ஆனால் ஒப்பந்தத்தில் உள்ள மற்றொரு நிபந்தனையான ஆயுதங்களை கைவிடும் நிபந்தனைக்கு ஹமாஸ் உடன்பட தொடர்ந்து மறுத்து வருகிறது.</p><h2> காசா இனப்படுகொலை </h2><p>காசாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அதன் உரிமைகளை பறிப்பதாக கூறி, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.</p><p>பழிவாங்கவும், பணய கைதிகளை மீட்கவும் காசா மீது <a href="https://www.maalaimalar.com/topic/israel">இஸ்ரேல் </a>நடத்தி வந்த தாக்குதல் கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்காவின் தலையீட்டில் பெயரளவில் முடிவுக்கு வந்தது.</p><p>ஆனால் ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,000 த்தை கடந்துள்ளது. இதில் பாதி பேர் காசாவை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p>ஹமாஸ் மீதான தாக்குதல் போர்வையில் மக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியும், செயற்கையான பஞ்சத்தை உருவாக்கியும், கட்டாய இடப்பெயர்வு செய்ய வைத்தும் இன அழித்தொழிப்பில் ஈடுபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. காசாவில் இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்களை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அந்நாட்டு பிரதமர் நேதன்யாகுவை போர் குற்றவாளி என அறிவித்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. </p> ]]></content:encoded></item><item><title>பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">03334d6b-6bde-42fe-a82d-3764dba7b6c9</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:24:57 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:24:57.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Madras High Court,சென்னை ஐகோர்ட்,பெரம்பூர் தொகுதி,Perambur constituency,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-07/t4hvg0wz/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Madras high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-07/t4hvg0wz/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.</p><h2>பெரம்பூர் தொகுதி</h2><p>சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice">விஜய்</a> 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதலமைச்சர் விஜய் மொத்தம் 1,20,365 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66 ஆயிரத்து 650 வாக்கு பெற்றிருந்தார். </p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து தி.மு.க.  வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p> தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கில், வேட்புமனுவில்  முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி இருப்பதாகவும், சொத்து விவரங்கள் மற்றும் வழக்குகள் விவரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை என்பதால் விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>ஐகோர்ட் நோட்டீஸ்</h2><p>இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என, ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து, முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- பயணிகள் எதிர்பார்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/when-will-the-new-tiruvallur-bus-station-come-into-use-expectations-of-passengers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/when-will-the-new-tiruvallur-bus-station-come-into-use-expectations-of-passengers#comments</comments><guid isPermaLink="false">4da0550b-2a0b-4307-b3f5-df19987c73b0</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:17:11 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:17:11.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruvallur Bus Stand,பயணிகள்,திருவள்ளூர் பஸ் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/e83st0to/tiruvallur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தை படத்தில் காணலாம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தை படத்தில் காணலாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/e83st0to/tiruvallur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>திருவள்ளூரில் கடும் இட நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பஸ்நிலைய பயணிகள் புதிய பஸ்நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.</aside><h2><strong>கடும் நெரிசல்</strong></h2><p>திருவள்ளூர் ராஜாஜி சாலையில் பஸ் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த நிலையம் அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் உள்ளது. இங்கிருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.</p><p>தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படும் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 பஸ்களை மட்டுமே நிறுத்த முடியும்.  மேலும் பஸ் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழி குறுகலாக இருப்பதால் பஸ்கள் உள்ளே சென்று விட்டு வெளியே வரவும் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினந்தோறும் பஸ்நிலைய பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. </p><h2><strong>மாவட்ட நிர்வாகம்</strong></h2><p>இதைத்தொடர்ந்து  2019-ம் ஆண்டு திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லுாரில் ரூ.36 கோடி  மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற்றது. </p><p>பஸ் நிலைய பணி இறுதி கட்டத்தில் இருந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கடந்த மார்ச் 4-ந் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டது.  பின்னர் மீதம் உள்ள கட்டுமான பணிகளையும் முடித்து மார்ச் 30-ந் தேதி முதல் அனைத்து பஸ்களும் வேடங்கிநல்லுார் புதிய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. </p><h2><strong>தாமதம்</strong></h2><p>ஆனால் இன்னும் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை.  கட்டுமான பணிகள் இன்னும் முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. பஸ் நிலையத்தின் முன் சாலையை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. </p><p>இதன் காரணமாக புதிய பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.</p><p>திருவள்ளூரில் கடும் இட நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பஸ்நிலைய பயணிகள் புதிய பஸ்நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். </p><p>புதிய பஸ்நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. பஸ்நிலையத்தில் இறுதி கட்ட பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>video-&apos;டாக்ஸிக்&apos; படத்தின் &apos;தடுமாறுதே&apos; பாடல் வெளியீடு: யஷ்-தாரா சுதாரியா கெமிஸ்ட்ரியால் தூள் பறக்கும் இணையதளம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/thadumaaruthey-romantic-track-from-toxic-yash-tara-sutaria-sets-internet-abuzz</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/thadumaaruthey-romantic-track-from-toxic-yash-tara-sutaria-sets-internet-abuzz#comments</comments><guid isPermaLink="false">cd83cadf-d4de-4f90-a4d5-84e226a80a42</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:10:39 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:10:39.706Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>யஷ்,Yash,Toxic,டாக்ஸிக்,Tara Sutaria,தாரா சுதாரியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/w0dgo5w5/yash.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Yash-Tara Sutaria]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/w0dgo5w5/yash.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'கே.ஜி.எஃப்' திரைப்பட வரிசைகளின் உலகளாவிய பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, கன்னடத் திரையுலகின் 'ராக்ஸ்டார்' யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள 'டாக்ஸிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' திரைப்படத்தின் இரண்டாவது ரொமாண்டிக் பாடலான 'தடுமாறுதே' லிரிக்கல் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/B08hVmMTmNc"></iframe></figure><p>கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் முந்தைய 'தபாகி' ஆக்ஷன் பாடல் தந்த அதிரடியான வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள இந்த இரண்டாவது பாடலில் யஷ் மற்றும் தாரா சுதாரியா இடையே உள்ள ஆழமான காதல் உணர்வுகளும், வசீகரமான திரைக் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது.</p><p>இப்பாடலுக்குத் தனிஷ்க் பாக்சி, அர்ஸ்லான் நிஜாமி மற்றும் ஃபஹீம் அப்துல்லா ஆகிய மூவர் கூட்டணி மனதை மயக்கும் வகையில் இசையமைத்துள்ளது. பாடகர் சித்தார்த் பஸ்ரூர் தனது வசீகரக் குரலால் தமிழ்ப் பதிப்பைப் பாடியுள்ளார். இப்பாடலின் தமிழ்ப் பதிப்பிற்குப் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகளை எழுதியுள்ளார்.</p><p>"பெரும் புயலும் என்னை தீண்டாதே... புவி ஈர்க்கும் விசை என்னை தள்ளாதே... இவை எல்லாமே இன்று என்னை கைவிட்டதே..." எனத் தொடங்கும் காதல் வரிகள் இப்பாடலுக்கு கூடுதல் அழகைச் சேர்த்துள்ளன.</p><p>திரைப்படத்தில் 'ராயா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் யஷ் மற்றும் 'ரெபெக்கா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் தாரா சுதாரியா ஆகியோரின் காதல் தருணங்களை அழகாகப் படம்பிடித்துள்ள இப்பாடல் வீடியோவில், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மற்றும் தென்னிந்தியத் திரை உலகின் முன்னணி நடிகை நயன்தாரா ஆகியோரின் முக்கியக் காட்சிகளும் இடம்பெற்று கதையின் மீதான சுவாரசியத்தை அதிகரித்துள்ளன.</p><p>கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தில் யஷ், தாரா சுதாரியா, நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். </p><p>ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைக்கும் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26, 2026 அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்பு: டி20 தொடர் குறித்து சிக்கந்தர் ராசா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/both-teams-have-equal-chance-to-win-t20-series-sikandar-raza</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/both-teams-have-equal-chance-to-win-t20-series-sikandar-raza#comments</comments><guid isPermaLink="false">588753c5-f162-44ff-aa2a-13602fd16006</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:09:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:09:51.673Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிக்கந்தர் ராசா,Sikandar Raza,ZIMvIND,ஜிம்பாப்வே இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/44uoroid/raza.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sikandar raza]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/44uoroid/raza.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய ஆணி ஹராரே சென்றடைந்துள்ளது.</p><h2>டி20 தொடர்</h2><p>இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது போட்டி 25-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளது.</p><p>இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரவி பிஷ்னோய் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><h2>சிக்கந்தர் ராசா</h2><p>இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் குறித்து ஜிம்பாப்வே டி20 அணி கேப்டன் சிக்கந்தர் ராசா கூறியதாவது:</p><p>வரவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், இரு அணிகளுக்கும் வெற்றி பெற சம வாய்ப்புள்ள, மிகவும் விறுவிறுப்பான போட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியா வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படும் பேச்சுகளை சிகந்தர் ராசா நிராகரித்துள்ளார்.</p><p>முன்னதாக, புதிய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையில் பெல்பாஸ்டில் அயர்லாந்திடம் 0-2 என்ற கணக்கிலும் டி20 தொடரில் இந்தியா தோல்வி அடைந்தது.</p><p>அதன்பின், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.</p><p>சுப்மன் கில் தலைமையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது</p>]]></content:encoded></item><item><title>இது நியாயமே இல்ல.. கனடா மீது 50% வரியை தீட்டிய டிரம்ப் - கார்னி கொந்தளிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/trump-slaps-50-tariffs-new-duties-on-key-canadian-imports-under-uscanada-trade-dispute</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-slaps-50-tariffs-new-duties-on-key-canadian-imports-under-uscanada-trade-dispute#comments</comments><guid isPermaLink="false">7e76ed43-6ffe-49fa-938c-8b1edc504460</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:07:45 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:07:45.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,taxation,கனடா,canada,வரிவிதிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0ajrnumk/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப், கார்னி ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப், கார்னி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0ajrnumk/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு  கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>கையெழுத்திட்டுள்ளார்.  </p><p>அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், வாகனங்கள் மற்றும் பால் பொருட்கள் மீது கனடா பாகுபாடு காட்டுவதாகக் குற்றம் சாட்டியே டிரம்பின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. </p><h2>புதிய வரி</h2><p>டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவின்படி, இந்த புதிய வரி விகிதங்கள் அடுத்த 30 நாட்களுக்குள் அமலுக்கு வரும். </p><p> வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, இந்தப் புதிய வரியானது, ஒயின், ஐஸ் ஹாக்கி மட்டைகள் மற்றும் சிமெண்ட் போன்ற கனடாவின் முக்கிய சந்தைப் பொருட்களை நேரடியாகப் பாதிக்கும். </p><p>இருப்பினும், எரிசக்திப் பொருட்கள், பொட்டாஷ் மற்றும் ஏற்கனவே சிறப்பு வரிகள் அமலில் பொருட்களுக்கு இந்தப் புதிய 50 சதவீத வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ஆனால் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (USMCA) கீழ் வரும் பொருட்களுக்கும் இந்தப் புதிய வரி பொருந்தும். எனவே இது கனடாவுக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. </p><h2>புதிய சட்டப் பாதை</h2><p>முன்னதாக டிரம்ப் விதித்த பல வரிகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இந்த முறை நீதிமன்றங்களில் எளிதில் ரத்து செய்ய முடியாத புதிய சட்டப் பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p>1930 ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டத்தின் 338 ஆம் பிரிவு எனப்படும், அரிதாகப் பயன்படுத்தப்படும் சட்ட வழிமுறையைப் பயன்படுத்தி டிரம்ப் இந்தப் புதிய வரியை விதித்துள்ளார். </p><p>டிரம்ப் தொடர்ந்து வரிகளை விதித்து வந்தாலும், இதற்கு முன்னர் வட அமெரிக்க ஒப்பந்தங்களின் கீழ் வரும் பொருட்களுக்கு அவர் விலக்கு அளித்திருந்தார். </p><p>ஆனால் இந்த முறை, அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியான கனடாவிற்கு எதிராக கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. </p><p>கனடாவின் பெரும்பாலான மாகாணங்கள் அமெரிக்க மதுபானங்களைப் புறக்கணித்து, அவற்றை கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளன. </p><p> கனடா, அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற வேண்டும் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனடாவின் இந்த நடவடிக்கை அமைந்தது. இந்த சூழலில் இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. </p><p>"கனடா தனது சந்தையிலிருந்து அமெரிக்க மதுபானங்களை விலக்கியுள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பால் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது, மேலும் அமெரிக்காவிலிருந்து தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரம்புகளை விதித்துள்ளது" என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்தார். </p><p>கனடாவின் இந்த பாகுபாட்டிற்குப் பதிலடியாகவே இந்தப் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார். </p><p>அதேபோல சில நாட்களுக்கு முன்பு, கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து பரவிய புகை அமெரிக்காவிற்கும் பரவியதால், கனடா மீது வரிகளை விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தினார். இந்த சூழலில் புதிய வரியானது விதிக்கப்பட்டுள்ளது. </p> <h2>மார்க் கார்னி</h2><p>டிரம்பின் அறிவிப்புக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள கனடா பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF">மார்க் கார்னி</a>, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை USMCA வர்த்தக ஒப்பந்தத்தின் நேரடி மீறல் என்று குற்றம் சாட்டினார்.</p><p>இருப்பினும், சர்ச்சைகளைத் தீர்க்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கனடா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஜந்தர் மந்தர்: &quot;இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல, இது மனிதாபிமானம் சார்ந்தது&quot; - நடிகை வரலட்சுமி கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jantar-mantar-not-a-political-issue-a-humanitarian-one-says-actress-varalaxmi</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jantar-mantar-not-a-political-issue-a-humanitarian-one-says-actress-varalaxmi#comments</comments><guid isPermaLink="false">9298c009-b0c8-4586-a57a-757f7e261ca2</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:52:39 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:52:39.374Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DelhiProtest,JantarMantar,VaralaxmiSarathkumar,HumanityFirst,StopViolence,வரலட்சுமிசரத்குமார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/qjskgudw/VaralaxmiSarathkumarSupportDelhiProtest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VaralaxmiSarathkumarSupportDelhiProtest   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/qjskgudw/VaralaxmiSarathkumarSupportDelhiProtest?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கல்வி சீர்திருத்தம் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>இது குறித்து தனது எக்ஸ் தளத்தின் பதிவில் கூறியிருப்பதாவது, 'சில நேரங்களில், நாம் நம் சொந்த வாழ்க்கையில் மூழ்கிப்போய், மேலோட்டமான தகவல்களைக் கேட்டு, பிரச்சினைகள் தானாகவே சரியாகிவிடும் என்று நினைத்துவிடுகிறோம். ஆனால், சமீபத்தில் நாம் கண்ட காட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பரவி வரும் காணொளிகள் மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன.</p><p>நம் சமூகம் இன்னும் எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்பதை அவை காட்டுகின்றன. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீதான வன்முறை எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. நம்மைப் பாதுகாக்க வேண்டியவர்களே நமக்குத் தீங்கு விளைவித்தால், நாம் யாரிடம் செல்வது? அடுத்த தலைமுறையினருக்காகக் கல்வி முறையை மேம்படுத்த ஒரு பேச்சுவார்த்தையை மட்டுமே அவர்கள் கோருகிறார்கள். யாருமே குரல் கொடுக்காத நிலையில், தமக்காகத் தாங்களே குரல் கொடுக்கும் நம் நாட்டின் இளைஞர்களுடன் நான் துணை நிற்கிறேன்.</p><p>உயிர்கள் பறிபோவதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; நடப்பவை எதுவும் சரியல்ல! நமக்கு வெவ்வேறு அரசியல் கருத்துகள் இருக்கலாம்; சில நேரங்களில் மௌனம் பலனளிக்காது, நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. தாமதமாகக் குரல் கொடுப்பதற்கு வருந்துகிறேன். நமக்கு வெவ்வேறு அரசியல் கருத்துகள் இருக்கலாம்; ஆனால் இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல, இது மனிதாபிமானம் சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="qme" dir="ltr"><a href="https://x.com/hashtag/jantarmantar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#jantarmantar</a> <a href="https://t.co/dTeThu2UfY">pic.twitter.com/dTeThu2UfY</a></p>&mdash;   (@varusarath5) <a href="https://x.com/varusarath5/status/2079430114417471707?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி வருகை - திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-visit-ban-on-drone-in-tiruppur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-visit-ban-on-drone-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">36d83f67-0602-4ab4-b0b3-77cfbae2bbb4</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:43:03 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:43:03.195Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,துணை ஜனாதிபதி,சிபி ராதாகிருஷ்ணன்,CP Radhakrishnan,Vice president,Drones Ban,டிரோன் பறக்க தடை,திருப்பூர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/29/23909409-cpradhakrishnan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CP Radhakrishnan - Drones ban]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/29/23909409-cpradhakrishnan.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சிபி.ராதாகிருஷ்ணன்</h2><p>​இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருப்பூரில் தங்குகிறார்.</p><h2>அவினாசி லிங்கேஸ்வரர்</h2><p>​டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை கோவை வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மாலை 5½ மணிக்கு அவினாசியில் உள்ள அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருகை தருகிறார். அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் அருகில் சுந்தரமூர்த்தி நாயனார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கட்டிட புனரமைப்பு பணியில் ‘சிஜிரானை வரிசைக்கல்’ தொடக்க விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.</p><p>​அதன்பிறகு இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள டாலர் இல்லத்துக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். பின்னர் நாளை மறுநாள் காலை 5 மணிக்கு கார் மூலமாக புறப்பட்டு அவர் கோவை செல்கிறார்.</p> <p>​<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">துணை ஜனாதிபதி</a> வருகையை முன்னிட்டு அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நாளை மதியம் 1 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு இரவு நடை சாத்தும் வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை. மறுநாள் காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>டிரோன்கள் பறக்க தடை</h2><p>​துணை ஜனாதிபதி வருகையையொட்டி அவர் செல்லும் வழிகள் மற்றும் வருகைபுரியும் இடங்களில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனீஷ் நாரணவரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மக்களே ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-2#comments</comments><guid isPermaLink="false">c06bac6b-6b04-4642-9bd5-8b4c9398b0d7</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:32:28 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:32:28.292Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0yn34vyy/MKstalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0yn34vyy/MKstalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஆங்கில நாளிதழில் வெளியான தலையங்கத்தை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.</aside><p>தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>தலையங்கம்</strong></h2><p>ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது The Hindu நாளேட்டின் இன்றைய தலையங்கம்.</p><p>நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது.</p><p>ஆட்சியின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt">அலங்கோலங்களை</a> எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது <a href="https://x.com/the_hindu?ref_src=twsrc%5Etfw">@The_Hindu</a> நாளேட்டின் இன்றைய தலையங்கம்.<br><br>நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும்… <a href="https://t.co/MDtwEdbL8J">https://t.co/MDtwEdbL8J</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2079459769883222427?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு.. டெல்லி நோக்கி வந்த பஞ்சாப் விவசாயிகள் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-us-trade-deal-protest-punjab-farmers-stopped-at-shambhu-border-on-way-to-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-us-trade-deal-protest-punjab-farmers-stopped-at-shambhu-border-on-way-to-delhi#comments</comments><guid isPermaLink="false">96ee06e9-2fb8-4d9b-a00c-50e35c16785d</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:17:03 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:17:03.090Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>farmers,விவசாயிகள்,Shambhu Border,மகாபஞ்சாயத்து,ஷம்பு எல்லை,Mahapanchayat</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/84qa21so/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஷம்பு எல்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஷம்பு எல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/84qa21so/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இறுதிக்கட்டத்தில் இருக்கும் <a href="https://www.maalaimalar.com/news/world/india-us-trade-deal-soon-trump-cites-close-ties-with-modi-for-smooth-agreement">இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு</a> எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று விவசாயிகளின் மகாபஞ்சாயத்து கூட்டப்பட்டது. </p><p>தேஷ் பச்சாவ் மோட்சா என்ற அமைப்பின் கீழ் பஞ்சாப், அரியானா மற்றும் இமாச்சல பிரதேச விவசாய அமைப்புகள் ஒன்று திரண்டு இந்த மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்தன. </p><h2>தடுத்து நிறுத்தம்</h2><p>இதில் பங்கேற்க, பஞ்சாபில் இருந்து ஆயிரக்கணக்கான விவாசாயிகள் தலைநகர் நோக்கி வந்துகொண்டிருந்த நிலையில் பஞ்சாப், அரியானா எல்லையான ஷம்புவில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். </p><p>எல்லையில் இரும்பு முற்கள், பேரிக்கேட்கள் உள்ளிட்டவற்றால் தடுப்பு அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  </p><p>டெல்லி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கோபமடைந்த விவசாயிகள் ஷம்பு எல்லையையே போராட்டக் களமாக மாற்றியுள்ளனர்.</p><p>பஞ்சாப் அணிவகுப்பு தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அரியானாவின் அம்பாலா, குருக்ஷேத்ரா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லி நோக்கிப் பயணித்து வருகின்றனர்.</p> <p>கடந்த ஆண்டு பிப்ரவரியில் இதேபோல டெல்லி நோக்கி செல்ல முற்பட்ட விவசாயிகள் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் அந்த இடத்தையே போராட்டக்களமாக மாற்றினர். இந்த போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. அதேபோல இம்முறையும் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>டெல்லியில் CJP</h2><p>ஏற்கனவே டெல்லியில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-march-to-parliament-in-delhi-turns-violent-with-lathicharge-tear-gas-178-injured-and-70-arrested">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதன் பின்னணியில் அவர்கள் நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றபோது போலீசாரால் தாக்கப்பட்டனர். </p><p>தடியடி, கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தி அவர்களை போலீசார் கலைத்தனர். இதன்போது ஏற்பட்ட வன்முறையில் 118 போலீசார், 70 போராட்டக்காரர்கள் காயமுற்றனர். 70 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் என சிஜேபி அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.</p><p>இந்த சூழலில் டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.</p> <h2>அமெரிக்கா -  இந்தியா ஒப்பந்தம்</h2><p>இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் ஆரம்பம் முதலே இந்த ஒப்பந்தத்தின் அம்சங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க வேளாண் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இது அமெரிக்க விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என அந்நாட்டு தலைவர்கள் பேசியதும் வைரலானது.</p><p>அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு வெளிப்படையாக அழுத்தம் கொடுத்து வருகிறது.</p><h2>வாழ்வாதார இழப்பு  </h2><p>சோயாபீன், சோளம், பருத்தி, ஆப்பிள், பாதாம் மற்றும் பால் பொருட்கள் மீதான வரிகள் குறைந்தால், மானியம் பெறும் அமெரிக்கப் பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கும். இதனால் இந்தியச் சிறு விவசாயிகள் அமெரிக்கப் பொருட்களுடன் போட்டியிட முடியாமல் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். </p><p>இந்தியாவில் சுமார் 8 கோடி கிராமப்புற குடும்பங்கள் பால் பண்ணைத் தொழிலையே நம்பியுள்ளன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் கிராமப்புற பொருளாதாரம் முற்றிலுமாகச் சீர்குலையும் என்று விவசாய அமைப்புகள் எச்சரிக்கின்றனர்.</p><p>இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு உடனடியாகக் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களிடம் விரிவான கலந்தாய்வு நடத்தாமல் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கயானா படகு விபத்து: 27 உடல்கள் மீட்பு; போதைப்பொருள் பரிசோதனையில் மாலுமிகள் சிக்கியதால் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive</link><comments>https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive#comments</comments><guid isPermaLink="false">a68f669c-aea6-46ea-bc1d-b6056f56c2b9</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:08:23 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:08:23.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Guyana Ferry Disaster,MVBarima,Mark Phillips,கயானா படகு விபத்து,எம்.வி. பாரிமா,மார்க் பிலிப்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/g966ww04/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guyana Ferry Disaster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/g966ww04/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் அமெரிக்க நாடான கயானாவில் அண்மையில் நிகழ்ந்த மிக மோசமான கடல் விபத்தில், நீரில் மூழ்கிய படகில் இருந்து இதுவரை 27 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 'எம்.வி. பாரிமா' என்ற அந்தப் படகின் கேப்டன் உட்பட ஊழியர்கள் போதைப்பொருள் (கஞ்சா) பயன்படுத்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2><strong>விபத்தின் பின்னணி மற்றும் மீட்புப் பணிகள்:</strong></h2><p>கயானாவின் தலைநகர் ஜார்ஜ்டவுனில் இருந்து வடமேற்குப் பகுதியில் உள்ள போர்ட் கைடூமா நோக்கிச் சென்று கொண்டிருந்த 'எம்.வி. பாரிமா' என்ற பயணிகள் படகு கடந்த சனிக்கிழமை இரவு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகின் உத்தியோகபூர்வ பதிவேட்டில் 116 பயணிகளும் 17 ஊழியர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தனர். </p><p>ஆனால், மீட்புப் பணியின் போது பட்டியலில் பெயரில்லாத 32 பேர் மீட்கப்பட்டதால், படகில் மொத்தம் 179 பேர் வரை பயணித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை '69 பேர்' உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 83 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><h2><strong>போதைப்பொருள் சோதனை:</strong></h2><p>விபத்தைத் தொடர்ந்து படகின் கேப்டன் மற்றும் ஊழியர்களைக் காவலில் எடுத்துப் பரிசோதித்ததில், அவர்கள் கஞ்சா பயன்படுத்தியிருந்தது உறுதியானது."பணியில் இருக்கும்போது ஊழியர்கள் மது அருந்துவதையோ அல்லது போதைப்பொருள் பயன்படுத்துவதையோ எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது" என பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் தெரிவித்துள்ளார்.</p><p>படகு முனையங்களில் உள்ள அதிகாரிகள் பயணிகளிடம் ரொக்கப் பணம் பெற்றுக்கொண்டு, பயணிகளின் உண்மையான எண்ணிக்கையைப் பதிவேட்டில் எழுதாமல் முறைகேடு செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஊழியர்களின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மார்க் பிலிப்ஸ் உத்தரவிட்டுள்ளார்.</p><h2><strong>அதிபர் ஆறுதல்:</strong></h2><p>கயானா அதிபர் இர்ஃபான் அலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உயிர்தப்பியவர்களையும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். கடந்த பல தசாப்தங்களில் கயானா கண்ட மிக மோசமான கடல் பேரிடராக இது பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு &apos;லோக்மான்ய திலகர் விருது&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award</link><comments>https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award#comments</comments><guid isPermaLink="false">3852d399-dfe6-4174-9752-84583c57eb55</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:53:40 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:53:40.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,Ajit Doval,அஜித் தோவல்,Lokmanya Tilak National Award,லோக்மான்ய திலகர் விருது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s6w0j5v9/ajith.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajit Doval]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s6w0j5v9/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஆற்றிய மிகச் சிறந்த பங்களிப்பிற்காக, நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் 'அஜித் தோவல்' இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க 'லோக்மான்ய திலகர் தேசிய விருது' வழங்கப்படவுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பைத் திலக் ஸ்மாரக் டிரஸ்ட் தலைவரான டாக்டர் ரோஹித் திலக் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.</p><h2><em><strong>விருது வழங்கப்படும் நாள்:</strong></em></h2><p>ஆகஸ்ட் 1 (விடுதலைப் போராட்ட வீரர் லோக்மான்ய பால் கங்காதர திலகரின் 106-வது நினைவு நாள்) அன்று மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கடாரியா உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விருதை அஜித் தோவலுக்கு வழங்குகிறார். இதில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுனேத்ரா பவார் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.</p><h2><em><strong>நீண்ட காலம் பணியாற்றிய பாதுகாப்பு ஆலோசகர்:</strong></em></h2><p>இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பெருமை 81 வயதான அஜித் தோவலையே சேரும். 2014-ஆம் ஆண்டு முதல் இவர் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.</p><p>இந்தியா-சீனா எல்லைப் பேச்சுவார்த்தைக்கான இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதியாகச் செயல்பட்ட தோவல், 2017-இல் இந்தியா-சீனா இடையே நிலவிய டோக்லாம் எல்லைப் பிரச்சனையை தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான முறையில் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார்.</p><h2><em><strong>உளவுத்துறை &amp; முக்கிய ராணுவ நடவடிக்கைகள்:</strong></em></h2><p>1968-ஆம் ஆண்டு கேரளா கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், உளவுத்துறையில் 3 தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றி அதன் இயக்குநராக ஓய்வு பெற்றார். மிசோரம், பஞ்சாப் (ஆபரேஷன் பிளாக் தண்டர்), சிக்கிம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற பதற்றமான பகுதிகளில் உளவுப் பணிகளையும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் திறம்பட கையாண்டுள்ளார்.</p><p>பாலகோட் வான்வழித் தாக்குதல், எல்லைத் தாண்டிய தாக்குதல்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கியமான பாதுகாப்பு வியூகங்களை வகுப்பதில் முதன்மை பங்காற்றியுள்ளார்.</p><h2><em><strong>லோக்மான்ய திலகர் விருதின் வரலாறு:</strong></em></h2><p>சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் நினைவாக 1983-இல் திலக் ஸ்மாரக் டிரஸ்ட்டால் இந்த விருது தொடங்கப்பட்டது. நாட்டின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அபார பங்களிப்பை அளித்த தலைவர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி இது வழங்கப்படுகிறது.</p><p>சோசலிசத் தலைவர் 'எஸ்.எம். ஜோஷி'க்கு முதன்முதலில் இந்த விருது வழங்கப்பட்டது. இதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி (2023), முன்னாள் பிரதமர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங், இந்திரா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மூத்த அரசியல்வாதி சரத் பவார் மற்றும் நிதின் கட்கரி (2025) போன்ற பல பிரபலங்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம் - வீடுகள் விலை குறைகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/collection-party-funds-construction-permits-halted-housing-prices-to-drop</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/collection-party-funds-construction-permits-halted-housing-prices-to-drop#comments</comments><guid isPermaLink="false">a4d618d4-266a-4a6e-b6c1-6738d4a795b5</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:51:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:51:51.890Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Building permit,party funds,House prices,கட்சி நிதி,வீடுகள் விலை,கட்டிட அனுமதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lgp703kf/house.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ House]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lgp703kf/house.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கட்டுமான அனுமதி வழங்க வசூலிக்கப்பட்ட கட்சி நிதி நிறுத்தப்பட்டதால் வீடுகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.</p><h2>கட்சி நிதி</h2><p>சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பிலும், நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. சார்பிலும், கட்டுமான திட்ட அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இதில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது சதுர அடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை கட்சி நிதி என்ற பெயரில், கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.</p><p>கட்டிட அனுமதிக்கான கோப்புகள் அதிகாரிகள் வசம் இருந்தாலும், அதில் உள்ள விபரங்களை பெறும் அரசியல் புள்ளிகள் கட்டுமான நிறுவனங்களை அணுகி கட்சி நிதி கேட்பது உண்டு. இதற்கு உடன்படாத நிறுவனங்களுக்கு, கட்டிட அனுமதி நிறுத்தி வைக்கப்படும். இதில் கட்சிநிதி கொடுப்பதற்கான செலவையும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டின் விலையில் சேர்த்து, மக்களிடம் வசூலித்து வந்தன. இதனால், வீடுகளின் விலைகள் வெகுவாக உயர்ந்தன.</p> <h2>தமிழக அரசு</h2><p>இந்த நிலையில், கட்டிட அனுமதி வழங்க கட்சி நிதி வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் முடிவை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம் ஆகியவை வரவேற்றுள்ளன.</p><h2>வீடுகள் விலை</h2><p>இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:</p><p>கட்சி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டதால், கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு மிச்சமாகி உள்ளது. இதன் பயனை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. புதிதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில், வீடுகள் விலையை சதுரடிக்கு 100 ரூபாய் வரை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>மதுரை அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/madurai-alagar-kovil-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/madurai-alagar-kovil-worship#comments</comments><guid isPermaLink="false">e4a3a1da-0258-4012-9d5a-8c69c8c90709</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:45:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:45:51.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,madurai,வழிபாடு,worship,அழகர்கோவில்,Alagar kovil</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxcznp49/AlagarKovil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Alagar Kovil ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxcznp49/AlagarKovil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் எனப்படும் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆடிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான விழா இன்று (21-ந்தேதி) காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மங்கள இசை முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். </p><h2><strong>சிறப்பு யாகங்கள்</strong></h2><p>முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க, பட்டாச்சாரியார்கள் தலைமையில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் தோரணங்கள், வண்ண மலர் அலங்காரங்கள், தூப நறுமணம் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.</p><h2><strong>ஆடித் திருவிழா</strong></h2><p>ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றதன் மூலம் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கின. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், பூஜைகள், வாகன சேவைகள், மண்டகப்படி உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற உள்ளன. </p><p>இன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. அதன்படி, நாளை (22-ந்தேதி) காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் பெருமாள் புறப்பாடு நடைபெறும். 23-ந்தேதி இரவு அனுமார் வாகனத்திலும், 24-ந்தேதி இரவு கருட வாகனத்திலும் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளுகிறார்.</p><p>26-ந்தேதி மோகினி அவதாரத்தில் சுந்தரராஜ பெருமாள் இரவு யானை வாகனத்திலும், 27-ந்தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 28-ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.</p><h2><strong>தேரோட்டம்</strong></h2><p>திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 29-ந்தேதி காலை கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்று காலை 7.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். இதனைத் தொடர்ந்து 30-ந் தேதி தீர்த்தவாரியும், 31-ந் தேதி உற்சவ சாந்தியும் நடைபெறும்.</p><h2><strong>பக்தர்கள்</strong></h2><p>ஆடிப்பெருந்திருவிழாவையொட்டி மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அழகர்கோவிலுக்கு வருகை தந்தனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ உதவி, பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்கள் மீது தாக்குதல், தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க  சபாநாயகரிடம்  ராகுல் கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-scam-police-crackdown-rahul-urges-parliament-debate-on-student-assault</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-scam-police-crackdown-rahul-urges-parliament-debate-on-student-assault#comments</comments><guid isPermaLink="false">8e3a5f8f-69f8-4a16-aada-390d8c2b9561</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:41:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:41:51.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s39nyher/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஓம் பிர்லா, ராகுல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஓம் பிர்லா, ராகுல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/s39nyher/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நேற்று பாராளுமன்றம் நோக்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணியின் போது <a href="https://www.maalaimalar.com/news/national/will-the-cockroach-partys-protest-succeed-is-dharmendra-pradhan-set-to-resign">இளைஞர்கள் </a>மீது காவல்துறையால் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள் இன்றும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. </p><p>விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) கடும் அமளியில் ஈடுபட்டன. </p><h2>மாநிலங்களவையில் கார்கே பேச்சு </h2><p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, </p><p> "லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, அரசு அவர்களின் குரலை ஒடுக்க முயல்கிறது" என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p>கார்கே பேசத் தொடங்கியதும் ஆளுங்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். அதற்குப் பதிலடியாக காங்கிரஸ் எம்பிக்களும் முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, அவையை நடத்த முடியாத சூழல் உருவானது.   </p><p>இதனால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் அமளியால் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. </p><h2>ராகுல் காந்தி - சபாநாயகர் சந்திப்பு</h2><p>மறுபுறம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி எம்பிக்களுடன் சென்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்துப் பேசினார்.</p><p>சிஜேபி போராட்டத்தின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் மற்றும் நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.</p><p>சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:</p><p>"நேற்று தங்கள் எதிர்காலம் குறித்து நியாயமான கேள்விகளை எழுப்பியதற்காக மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p>தேர்வு முறைகேடுகள் குறித்து எந்தப் அக்கறையும் இல்லாத அரசைக் கண்டித்தும், மாணவர் நலன் குறித்தும் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்ற எளிமையான கோரிக்கையைத்தான் நாங்கள் முன்வைத்துள்ளோம்.</p><p>இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களின் பிரச்சனைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியவில்லை என்றால், இந்த நாடாளுமன்றம் வேறு எதற்காக இயங்குகிறது?</p><p>இந்த விவகாரத்தை சும்மா விட்டுவிடாது. மாணவர்களின் குரல் வீதிகளிலும் ஒலிக்கும், நாடாளுமன்றத்திலும் ஒலிக்கும் என்பதை நாங்கள் உறுதிசெய்வோம்." என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-police-personnel-must-not-compromise-their-dignity</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-police-personnel-must-not-compromise-their-dignity#comments</comments><guid isPermaLink="false">92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:36:39 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:36:39.598Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,காவல்துறை,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rea5olea/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rea5olea/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>காவல் துறை கண்ணியம் தவறக்கூடாது; தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரின் நாகரிகமற்ற செயலுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</aside><p>பா.ஜ.க. மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/நயினார்-நாகேந்திரன்">நயினார் நாகேந்திரன்</a> எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>கண்டனம்</strong></h2><p>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிகையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை “வாடா, போடா” என ஒருமையில் சாடியுள்ள, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திபு அவர்களின் நாகரிகமற்ற செயல் கண்டனத்திற்குரியது. </p><p>காக்கிச் சட்டைக்கென்று ஒரு தனி மரியாதையும், கண்ணியமும் உண்டு என்பதை மறந்து விட்டு, காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரியே “பேட்டை ரவுடி” போல இப்படி பொதுவெளியில் சண்டைக்கு நிற்பது ஒட்டுமொத்த காவல்துறையின் பிம்பத்தையும் சிதைத்து விடும். </p><h2><strong>அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்</strong></h2><p>ஏற்கனவே தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களால், காவல்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும், பாதுகாப்புணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வரும் நிலையில், காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் தங்களது “Decorum”-மை கடைபிடிக்க வேண்டும். </p><p>மேலும், காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வர் விஜய் அவர்கள், காவல்துறையை வெறும் “ஏவல்துறை”யாக மட்டும் பயன்படுத்தக் கூடாது எனவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது! <br><br>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிக்கையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை… <a href="https://t.co/jkyp77jzq5">pic.twitter.com/jkyp77jzq5</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2079447132038439274?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப்பெருக்கு: 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed#comments</comments><guid isPermaLink="false">d207f0e8-9382-44fe-91de-e02740810c00</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:28:19 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:28:19.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெள்ளப்பெருக்கு,Flash Flood,Afghanistan Floods,Parun,ஆஃப்கானிஸ்தான் வெள்ளப்பெருக்கு,பாரூன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/b5x3mrdh/flood.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Afghanistan Floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/b5x3mrdh/flood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நூரிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கரத் திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தபட்சம் '20 பேர்' உயிரிழந்துள்ளனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><h2><strong>பாரூன் நகரில் பேரழிவு:</strong></h2><p>நூரிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான பாரூன் நகரமே இந்த வெள்ளத்தினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகம், உணவகங்கள், நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் உருக்குலைந்துள்ளன.</p><h2><strong>முக்கிய அதிகாரிகள் மாயம்:</strong></h2><p>பாரூன் நகர மேயர் மற்றும் பல அரசு ஊழியர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளதாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><h2><strong>சிக்கலான மீட்புப்பணி:</strong></h2><p>வெள்ள நீருடன் பெரிய பாறைகளும் இடிபாடுகளும் அடித்து வரப்பட்டுள்ளதால், போதிய நவீன உபகரணங்கள் இல்லாத நிலையிலும் உள்ளூர் மக்களும் பேரிடர் மீட்புக் குழுவினரும் இடிபாடுகளுக்கிடையே மனித உயிர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2><strong>வெள்ளப் பெருக்குக்கான முக்கியக் காரணங்கள்:</strong></h2><p> புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய உலக நாடுகளில் ஆஃப்கானிஸ்தானும் ஒன்று. தெற்காசியாவில் தீவிரமடைந்துள்ள பருவமழைப் பொழிவு இங்கு திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>காடழிப்பு:</strong></h2><p>நூரிஸ்தான் பகுதி அடர்ந்த காடுகளுக்கும் இயற்கை எழிலுக்கும் பெயர் பெற்றது. இருப்பினும், சமீபகாலமாக நடைபெற்று வரும் சட்டவிரோத மரம் வெட்டுதல் மற்றும் காடழிப்பு காரணமாக, நிலத்தின் மழைநீரை உறிஞ்சும் இயற்கைத்தன்மை குறைந்து வெள்ளத்தின் வீரியம் அதிகரித்துள்ளது.</p><h2><strong>அரசு எச்சரிக்கை:</strong></h2><p>தாலிபன் அரசாங்கத்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், நாட்டின் 34 மாகாணங்களில் 10 மாகாணங்களில் தொடர்ந்து கனமழை, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. நதிக்கரைகள் மற்றும் ஆபத்தான தாழ்வான பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-pm-modi-breaks-silence-13-arrested-as-youth-protests-intensify</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-pm-modi-breaks-silence-13-arrested-as-youth-protests-intensify#comments</comments><guid isPermaLink="false">ca9c7d59-6f3b-4f07-939f-20fe3e86130f</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:14:42 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:14:42.105Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Sonam Wangchuk,பிரதமர் மோடி,சோனம் வாங்சுக்,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak,சிஜேபி,CJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vfcblpeg/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vfcblpeg/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் 2 ஆம் நாள் கூட்டம் தொடங்கும் முன்னர் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணி பாராளுமன்ற எம்.பிக்கள் கூட்டத்தை நடத்தினார். </p><p>இந்த கூட்டத்தில்,  கடந்த மே 3 நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி முதல் முறையாக வாய்திறந்துள்ளார். </p><p>ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சியின் தொடர் போராட்டம் இன்றுடன் 23வது நாளை எட்டும் <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-sonam-wangchuk-seeks-discharge-activist-asks-hospital-to-allow-him-join-parliament-march">சோனம் வாங்சுக் </a>உண்ணாவிரதம், நேற்றைய சிஜேபி பேரணியில் ஏற்பட்ட வன்முறை உள்ளிட்ட தொடர் அழுத்தங்களை தொடர்ந்து மோடி மௌனம் கலைத்துள்ளார். </p><h2>மோடி</h2><p>கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக பாராளுமன்ற விவகாரங்கள் குழு அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது,</p><p>வினாத்தாள் கசிவு ஒரு கொடிய பாவச் செயல். இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். தவறான பாதையில் செல்வது எளிது. ஆனால் அதிலிருந்து மீண்டும் சரியான பாதைக்கு திரும்புவது மிகவும் கடினம். அவர்களை தூண்டுவிடாமல், சரியான நாம் அவர்களை சரியான பாதைக்கு கொண்டு வர வேண்டும். அது நமது பொறுப்பு. இளைஞர்களின் எதிர்காலமே முக்கியம். இதில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என பேசியுள்ளார்.</p><p>இது அரசுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராடும் இளைஞர்களை குறிப்பிட்டு மோடி பேசியதாக புரிந்துகொள்ளப்படுகிறது.</p> <h2>ரிஜிஜூ</h2><p> தொடர்ந்து கிரண் ரிஜிஜூ பேசுகையில், நீட் வினாத்தாள் கசிவு தெரியவந்ததும் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தேர்வர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அரசு, மறுதேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு, குறித்த நேரத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும், எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதமர் மோடியின் கறார் உத்தரவிட்டுள்ளார் என கிரண் ரிஜிஜூ மேலும் தெரிவித்தார்.</p> <h2>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</h2><p>நேற்று <a href="https://www.maalaimalar.com/news/national/cjp-leaders-meet-union-minister-jp-nadda-submit-letter-of-demands">கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்</a> பிரதிநிதிகள் இருவர், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.</p><p>அதில், நிர்வாக தோல்விக்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவிநீக்கம் செய்ய வேண்டும், மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கை விடுவிக்க வேண்டும், நீட் குளறுபடிகளால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட 20 மாணவர்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தது.</p>]]></content:encoded></item><item><title>அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice#comments</comments><guid isPermaLink="false">ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:13:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:13:26.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தலைமை செயலகம்,Astrologer,Secretariat,ஜோதிடர்,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vzzz7g2d/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vzzz7g2d/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யின் அறை இடம் மாறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>முதலமைச்சர் அறை, அலுவலகம்</h2><p>சென்னை காமராஜர் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச்செயலகம் இயங்கி வருகிறது. கோட்டை கட்டிடத்தின் முதல் தளத்தில், முதலமைச்சர் அறை, அலுவலகம் உள்ளது. இதேபோல், அமைச்சர்கள் அலுவலகம், சட்டசபை கூட்ட அரங்கம், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த செயலாளர்களின் அலுவலகங்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறை, நூலகம் உள்ளிட்டவை அந்தக் கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன.</p><h2>இட நெருக்கடி</h2><p>இந்த நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes">முதலமைச்சர் விஜயை</a> சந்திக்க நாள்தோறும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் வந்து செல்கின்றனர்.</p><p>தற்போதுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இட நெருக்கடி ஏற்படுவதால், அவரை சந்திக்க வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகத்தை, கோட்டை கட்டிடத்திற்கு அருகே உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p> <h2>ஆஸ்தான ஜோதிடர்</h2><p>தற்போது, 10-வது மாடியில் கருத்தரங்க கூடமும், ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான உணவருந்தும் கூடமும் உள்ளது. அவற்றை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, 10-வது மாடி முழுவதுமே முதலமைச்சர் அறை மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இடநெருக்கடியால், முதலமைச்சர் அறை மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டாலும், வாஸ்துபடி தற்போதைய அறை சரியில்லை என்று அவருடைய ஆஸ்தான ஜோதிடர் கூறியதாகவும், தொடர்ந்து உச்சத்தில் இருக்க உயரமான கட்டிடத்தில் முதலமைச்சர் அலுவலகம் செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும், அதுவும் கடலை பார்த்தபடி முதலமைச்சர் அறை இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. </p><p>அதன்படியே, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகம் மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p> ]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-on-august-5th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-on-august-5th#comments</comments><guid isPermaLink="false">0462a245-3b74-4003-834b-ab1c2c54d599</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:13:07 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:13:07.679Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vgdr7ezj/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vgdr7ezj/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</aside><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்ற பிறகு முதல் சட்டசபை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p><h2><strong>தமிழக பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பொது பட்ஜெட்</a> மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.</p><p>இதனிடையே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-likely-chance-august-first-week">ஆகஸ்ட்</a> முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.</p><h2><strong>ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:-</p><p>ஆகஸ்ட் 5-ந்தேதி காலை 10 மணிக்கு 2026-27-ம் ஆண்டுக்கான  நிதி நிலை அறிக்கை சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 6-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். </p><h2><strong>நேரலை</strong></h2><p>மேலும் அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட்டாக இருக்கும். கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடத்தப்படும் என்பது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரை முழு நேரலை செய்ய வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். எம்எல்ஏக்களை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவையில்லை என்றார். </p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>NEET-UG 2026: போலியான OMR விடைத்தாள்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை-NTA எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026</link><comments>https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026#comments</comments><guid isPermaLink="false">a6e50631-d03c-44ab-8c01-ab7fb08591ca</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:07:01 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:07:01.984Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் ஊழல்,NTA,தேசிய தேர்வு முகமை,NEET-UG 2026,OMR answer sheets,OMR விடைத்தாள்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oman4fr0/omr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ fake omr sheets]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oman4fr0/omr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய தேர்வு முகமை (NTA), நீட் (NEET-UG 2026) தேர்வின் போலியான மற்றும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்ட OMR விடைத்தாள்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதற்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><h2><strong>போலியான விடைத்தாள்கள் வதந்தி:</strong></h2><p>சமூக வலைதளங்களில் சில மாணவர்களின் "சரியான OMR விடைத்தாள்கள்" எனக் கூறி சில படங்கள் வைரலாகி வருகின்றன. ஆனால், அந்த படங்கள் அனைத்தும் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI/OCR) தொழில் நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்டவை என NTA திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><h2><strong>NTA-வின் விளக்கம்:</strong></h2><p>சர்ச்சைக்குரிய மாணவர்களின் தேர்வுப் பதிவேடுகள் மற்றும் அசல் OMR விடைத்தாள்களை ஆய்வு செய்ததில், அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் முற்றிலும் சரியானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் படங்களில் கூடுதல் விடைகள் குறிக்கப்பட்டது போலவும், வினாத்தாள் விவரங்கள் மற்றும் அறை கண்காணிப்பாளரின் கையொப்ப நேரம் மாற்றப்பட்டது போலவும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. </p><p>அசல் OMR விடைத்தாள்கள் ஏற்கனவே மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் அதிகாரப்பூர்வ லாகின் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக NTA தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2><strong>AI &amp; டிஜிட்டல் முறைகேடு கண்டறியப்பட்டது:</strong></h2><p>அசல் OMR விடைத்தாள்கள் குறைந்த தெளிவுத்திறன் கொண்டவை, ஆனால் போலி OMR தாள்கள் உயர் தெளிவுத்திறன் கொண்டவையாகவும், பேனா மை நிறம் கருப்பிலிருந்து நீல-ஊதா நிறமாக மாற்றப்பட்டும் உள்ளன. AI தொழில்நுட்பத்தைக் கொண்டு எழுத்துக்களை மீண்டும் உருவாக்க முயன்றதில், OMR தாளில் உள்ள அச்சிடப்பட்ட வாக்கியங்களில் பிழைகள் ஏற்பட்டுள்ளதை NTA நுணுக்கமாகக் கண்டறிந்துள்ளது.</p><h2><strong>சட்டப்பூர்வ நடவடிக்கை எச்சரிக்கை:</strong></h2><p>போலியான OMR விடைத்தாள்களை உருவாக்குவது, சமூக வலைதளங்களில் பரப்புவது அல்லது முறையீட்டிற்காக சமர்ப்பிப்பது சட்டப்படி குற்றமாகும். இதன் மீது கீழ் கண்ட சட்டங்களின் கீழ் கடுமையாக வழக்குப்பதிவு செய்யப்படும் என NTA எச்சரித்துள்ளது:</p><p>1. பொதுத் தேர்வுகள் (நடைமுறை முறைகேடுகள் தடுப்பு) சட்டம், 2024</p><p>2. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 </p><p>3. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000</p><h2><strong>மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்:</strong></h2><p> சமூக வலைதளங்களில் பரவும் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், மதிப்பெண் வேறுபாடுகள் குறித்த புகார்களுக்கு அசல் OMR நகல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் NTA கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:01:47 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:01:47.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,விஜய்,vijay,mallikarjun kharge,மல்லிகார்ஜூன கார்கே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rcideyp7/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mallikarjun Kharge - CM Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rcideyp7/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மதிப்பிற்குரிய மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!</p><p>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட எனது உளமார்ந்த வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வறட்சியால் வாடும் கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/villagers-suffering-from-drought-hold-a-frog-wedding-to-pray-for-rain</link><comments>https://www.maalaimalar.com/news/national/villagers-suffering-from-drought-hold-a-frog-wedding-to-pray-for-rain#comments</comments><guid isPermaLink="false">cce69c86-57c0-4546-a672-e41cbf604cc5</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:59:32 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:59:32.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,special worship,சிறப்பு வழிபாடு,தவளை திருமணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/bqjwfx6i/frog.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/bqjwfx6i/frog.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கர்நாடகா மாநிலத்தில் இரண்டு  தவளைகளுக்கு திருமணம் நடத்தி கிராம மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.</aside><h2><strong>சிறப்பு வழிபாடு</strong></h2><p>வெயிலின் தாக்கம் அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், விவசாயத்தை காக்கவும், கோடை வெப்பத்தைத் தணிக்கவும் மழை வேண்டி பொதுமக்கள் தீவிர வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>நாடு முழுவதும் முக்கிய சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோவில்களில் 'வருண ஜெபம்' மற்றும் 'மகா வருண யாகங்கள்' நடத்தப்பட்டு வருகின்றன. அர்ச்சகர்கள் கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு, வருண பகவானுக்குரிய மந்திரங்களை ஓதி சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். மேலும், நந்திகேஸ்வரருக்கு நவதானியங்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மழை பொழிய வேண்டி பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.</p><p>நகரங்களில் யாகங்கள் நடத்தப்படும் வேளையில், கிராமப்புறங்களில் தொன்றுதொட்டு பின்பற்றி வரும் பாரம்பரிய வினோத வழிபாட்டு முறைகளும் அரங்கேறி வருகின்றன. </p><p>இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் இரண்டு  தவளைகளுக்கு திருமணம் நடத்தி கிராம மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அது குறித்து பார்ப்போம்... </p><h2><strong>கடும் வறட்சி</strong></h2><p>கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவிற்கு உட்பட்ட தபதேஷ்வரா காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.</p><p>தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும், குடிநீருக்காக பெண்கள் தினமும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை தொடர்கிறது. மக்களும், கால்நடைகளும் குடிநீருக்காக கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.</p><h2><strong>சிறப்பு பிரார்த்தனை</strong></h2><p>இந்த சூழலில், ஊரில் நல்ல மழை பெய்து வறட்சி நீங்க வேண்டும் என்ற நோக்கில் அப்பகுதி பெண்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி இரண்டு தவளைகளை பிடித்து வந்து, அவற்றுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் திருமண சடங்குகளை நடத்தினர். பின்னர், மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடும் பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.</p><h2><strong>நம்பிக்கை</strong></h2><p>இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், "வறட்சி காலங்களில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது முன்னோர்களிடம் இருந்து வந்த நம்பிக்கை. தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவும் இந்த வழிபாட்டை நடத்தினோம்" என்று தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-protest-on-july-27th-in-nerkundram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-protest-on-july-27th-in-nerkundram#comments</comments><guid isPermaLink="false">b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:50:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:50:51.951Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,ADMK protest,அதிமுக ஆர்ப்பாட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xqn4k21n/EdappadiPalaniswami0002.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xqn4k21n/EdappadiPalaniswami0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மதுரவாயல் தொகுதி நெற்குன்றம் பல்லவன் நகரில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</aside><p>அ.தி.மு.க.பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>டாஸ்மாக் மதுபானக் கடை</strong></h2><p>சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு விடியா திமுக அரசால் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி நெற்குன்றம் பல்லவன் நகரில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.</p><p>நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள், வேலைக்குச் செல்வோர் என மக்கள் அதிகம் புழங்கும் இந்த இடத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக் கோரி விடியா திமுக ஆட்சியில், கழகத்தின் சார்பில் பொதுமக்களுடன் இணைந்து முறையிட்டதைத் தொடர்ந்து, இக்கடை விரைவில் மூடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டும் தற்போதுவரை மூடப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதிவாழ் மக்களும், நாள்தோறும் இந்தச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும் பல்வேறு வகையில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.</p><h2><strong>இடையூறு</strong></h2><p>மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இடங்களில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றிவிட்டதாகக் கூறும் த.வெ.க. அரசு, நெற்குன்றம் பல்லவன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாதது வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இந்நிலையில், மதுரவாயல் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1000-supporters-of-cve-shanmugam-in-villupuram-district-resign-en-masse">அண்ணா திராவிட முன்னேற்றக் கழக</a> திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் சார்பில், 27.7.2026 - திங்கட் கிழமை காலை 10 மணியளவில், மதுரவாயல் பகுதி, நெற்குன்றம் N.T. பட்டேல் சாலை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><h2><strong>மக்கள் நலன்</strong></h2><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான  S. கோகுல இந்திரா அவர்கள் தலைமையிலும், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் K.S. ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த, கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்பெயின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டம்: மேட்ரிட் நகரில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு!</title><link>https://www.maalaimalar.com/sports/spain-second-world-cup-triumph-madrid-fans-historic-celebration</link><comments>https://www.maalaimalar.com/sports/spain-second-world-cup-triumph-madrid-fans-historic-celebration#comments</comments><guid isPermaLink="false">d500d17a-c2a0-4609-a59d-9701bc9d5fe4</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:43:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:43:51.157Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கால்பந்து,FootBall,Madrid,மேட்ரிட்,spainworldcup,King Felipe VI,ஸ்பெயின் உலகக்கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/6jg71tci/winning.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Spain World Cup Victory Celebration]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/6jg71tci/winning.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் தேசிய அணி, தங்களது தாய்நாட்டிற்குத் திரும்பியதை அடுத்து, தலைநகர் மேட்ரிட்டில் வரலாறு காணாத வகையில் பிரம்மாண்ட வெற்றி ஊர்வலமும், அரச குடும்பத்து வரவேற்பும் அளிக்கப்பட்டது.</p><p>அமெரிக்காவில் இருந்து மேட்ரிட் பராகாஸ் விமான நிலையம் வந்தடைந்த ஸ்பெயின் வீரர்களை, அந்நாட்டு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.</p><h2><strong>அரச வரவேற்பு:</strong></h2><p>அரசர் ஆறாம் பெலிப்பே மற்றும் அரச குடும்பத்தினர் வீரர்களை நேரில் சந்தித்துப் பாராட்டினர். "இது ஒரு வீர காவிய வெற்றி; உங்கள் திறமையையும் உறுதியையும் கண்டு ஒட்டுமொத்த ஸ்பெயினும் பெருமிதம் கொள்கிறது" என்று அரசர் புகழாரம் சூட்டினார்.</p><h2><strong>பிரதமர் வாழ்த்து:</strong> </h2><p>அதன் பின்னர், மொன்க்லோவா அரண்மனையில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வீரர்களைச் சந்தித்து வாழ்த்தினார். "உங்கள் விளையாட்டுத் திறனுக்கும், உழைப்பிற்கும், வெற்றிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" எனத் தெரிவித்தார்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/42een4ww/foot-baal.jpg" /></figure><h2><strong>திறந்தவெளி பேருந்தில் பிரம்மாண்ட பேரணி:</strong></h2><p>அரசு மரியாதைகளுக்குப் பிறகு, ஸ்பெயின் அணி வீரர்கள் திறந்தவெளிப் பேருந்தில் மேட்ரிட்டின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். சுமார் '18 லட்சம் முதல் 20 லட்சம் ரசிகர்கள்' சிவப்பும் மஞ்சளுமான தேசியக் கொடிகளை ஏந்தி, வீதிகளிலும், கட்டிடங்களின் பால்கனிகளிலும் திரண்டு நின்று வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><h2><strong>கொண்டாட்டத்தின் உச்சம்:</strong></h2><p>கேப்டன் ரோட்ரி, இளம் நட்சத்திரம் லாமின் யமால், மார்க் குக்குரெல்லா உள்ளிட்ட வீரர்கள் உலகக்கோப்பையைக் கையில் ஏந்தி, "Somos Campeones" (நாம் சாம்பியன்கள்) என்ற ஆடைகளை அணிந்து ரசிகர்களுடன் பாடி ஆட்டமிட்டனர்.</p><h2><strong>சிபெலெஸ் சதுக்கத்தில் கலைநிகழ்ச்சிகள்:</strong></h2><p>பேரணியின் இறுதி இலக்கான புகழ்பெற்ற 'சிபெலெஸ் சதுக்கத்தை' அடைந்தபோது, அங்கு சுமார் 1,20,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஐதானா, அனா மெனா மற்றும் லோலா இண்டிகோ ஆகிய முன்னணி இசைக்கலைஞர்களின் நேரலை கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டின. </p><p>பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுயென்டே பேசுகையில்: "இத்தகைய உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அர்ப்பணிப்புமிக்க ரசிகர்களைக் கொண்ட நாட்டிற்காகப் பிரதிநிதித்துவப்படுத்தியது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது" என்றார்.</p><h2><strong>வரலாற்றுச் சாதனை: </strong>2வது உலகக்கோப்பை:</h2><p>2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 2வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.</p><h2><strong>இரட்டைச் சாதனை:</strong></h2><p>2023-ல் ஸ்பெயின் பெண்கள் அணி உலகக்கோப்பையை வென்ற நிலையில், தற்போது ஆண்கள் அணியும் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக்கோப்பை இரண்டையும் ஒரே நேரத்தில் கைவசம் வைத்துள்ள முதல் நாடு என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்பெயின் படைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிக்கிம்: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 7 பேர் பலி.. ஏனையோரை மீட்கும் பணி தீவிரம் </title><link>https://www.maalaimalar.com/news/national/sikkim-hydropower-tunnel-tragedy-7-workers-dead-after-landslide-and-methane-leak</link><comments>https://www.maalaimalar.com/news/national/sikkim-hydropower-tunnel-tragedy-7-workers-dead-after-landslide-and-methane-leak#comments</comments><guid isPermaLink="false">af1dac4e-58bf-49b2-8866-78ae73722a28</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:34:59 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:34:59.236Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>landslide,Tunnel,sikkim,நிலச்சரிவு,சுரங்கப்பாதை,methane gas leak,மீத்தேன் வாயு கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/kpve6f1d/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Sikkim tragedy]]></media:title><media:description type="html"><![CDATA[ Sikkim tragedy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/kpve6f1d/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிக்கிமில் நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் திடீர் <a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations">நிலச்சரிவு </a>காரணமாக உள்ளே சிக்கிய தொழிலாளர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். </p><h2>நிலச்சரிவு</h2><p>சிக்கிம் மாநிலம் நாம்ச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் Teesta Stage-VI நீர்மின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சாமர்துங் சுரங்கப்பாதைக்கு வெளியே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.</p><p>கனமழையினால் மலைச்சரிவில் இருந்து பெருமளவில் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில், சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் முற்றிலும் அடைபட்டது.</p><p>நிலச்சரிவு ஏற்பட்ட போது சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 27 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.</p><p>நிலச்சரிவைத் தொடர்ந்து சுரங்கப்பாதைக்குள் மீத்தேன் வாயு கசியத் தொடங்கியுள்ளது.</p><p>நிலச்சரிவினால் ஏற்பட்ட பாறை முறிவுகள் மற்றும் நிலத்தடி அடுக்குகளின் அதிர்வு காரணமாகவே இந்த இயற்கை வாயு கசியத் தொடங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.</p><p>விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை மாநில பேரிடர் மீட்புப் படை மாவட்ட காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்ட போதிலும், சுரங்கப்பாதையின் உட்பகுதியில் இருந்து ஆபத்தான மீத்தேன் வாயு கசியத் தொடங்கியது மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p>வாயு கசிவு காரணமாக உள்ளே செல்ல முயன்ற சில மீட்புப் படை வீரர்களுக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.</p><p>வாயு கசிவை சமாளிக்கும் வகையில், அதிநவீன வாயு கவசங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய சிறப்புப் பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் பக்கத்து மாநிலமான மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.</p><p>மீட்புப் படையினர் சிறப்பு மாஸ்க்குகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் நவீன துளையிடும் கருவிகளின் உதவியுடன் அடைபட்டுள்ள நுழைவு வாயிலைத் தோண்டி உள்ளே செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>சுரங்கப்பாதையின் குறுகிய அமைப்பு, புகை மற்றும் வாயு கசிவால் ஏற்பட்டுள்ள மோசமான பார்வைத்திறன்  ஆகியவை மீட்புப் பணியை மிகவும் கடினமாக்கியுள்ளன.</p><p>சுரங்கத்தில் இருந்து வெளியே அழைத்துவரப்படும் தொழிலாளர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்களும், மருத்துவக் குழுக்களும் சம்பவ இடத்திலேயே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p> உள்ளே சிக்கிய தொழிலாளர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. </p><h2>மாவட்ட ஆட்சியர்</h2><p>மாவட்ட ஆட்சியர் அனுபமா தாம்லிங் இது குறித்து தெரிவிக்கையில், </p><p>'சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னமும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், அது தற்போதைய மதிப்பீட்டை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.</p><p>தற்போது உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களைப் பத்திரமாக மீட்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>மீட்புப் பணிகள் முடிந்த பிறகு, இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>அம்மன் வேடத்தில் திரிஷா: ஆடித் திருவிழா பேனரால் வெடித்த சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trisha-in-goddess-attire-controversy-erupts-over-aadi-festival-banner</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trisha-in-goddess-attire-controversy-erupts-over-aadi-festival-banner#comments</comments><guid isPermaLink="false">d6ddd858-cd47-4045-a1f7-e8bd096df244</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:24:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:24:54.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadi Festival,trisha,திரிஷா,ஆடி திருவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/82c60g32/trisha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சர்ச்சையான கோவில் திருவிழா பேனர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சர்ச்சையான கோவில் திருவிழா பேனர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/82c60g32/trisha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் உள்ள நடிகை திரிஷா சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் ஏதாவது ஒரு போஸ்ட் போட்டால்கூட அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளாகி வருகிறது. இந்த நிலையில், நடிகை திரிஷாவை அம்மன் போல சித்தரித்து ரசிகர்கள் வைத்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.</aside><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ugrz7znu/trisha01.jpg" /></figure><h2><strong>அம்மன் வேடத்தில் திரிஷா</strong></h2><p>ஆடி மாதம் தொடங்கினால் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். திருவிழா தொடர்பாக வித்தியாசமாக வைக்கப்படும் பேனர்கள் வைரலாகும். அந்த வகையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி ஆத்தூர் பயணியர் மாளிகை பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் ஒரு பேனரில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மிகப்பெரிய படமும், அதற்கு பின்னால், ராவணன் தலை இருப்பது போன்றும்... அதற்கு கீழே நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE">திரிஷா</a> அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டிருந்தது.</p> <p>இந்த பேனரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதனை பார்த்த நெட்டிசன்கள், கோவில் திருவிழாவில் நடிகையின் போட்டோவை அம்மன் வேடத்தில் வைத்து பேனர் அடிக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் திருவிழாவிற்கும் சினிமா பிரபலங்களுக்கும் சம்பந்தமே இல்லாத விஷயத்தை ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று  தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். </p><h2><strong>2 பேர் மீது வழக்குப்பதிவு</strong></h2><p>மேலும் பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றங்களும் அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் பேனர்கள் எப்படி வைக்கப்படுகின்றன? கோவில் திருவிழா என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அச்சிடிட்டு வைக்கலாமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இரவோடு இரவாக பேனரில் இருந்து நடிகை திரிஷா புகைப்படம் மாற்றப்பட்டது. திரிஷா படம் இருந்த இடத்தில் வேறு ஒரு பெண் அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படத்தை ஒட்டி வைத்தனர்.</p><p>இதற்கிடையே, ஆத்தூர் பயணியர் மாளிகை முன்பு அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் டவுன் போலீசார் கடைவீதியை சேர்ந்த சந்துரு, தலைவாசல் பகுதியை சேர்ந்த கோகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இச்சம்பவம் கோவில் திருவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nadigar-thilagam-sivaji-ganesan-memorial-day-minister-rajmohan-pays-respect</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nadigar-thilagam-sivaji-ganesan-memorial-day-minister-rajmohan-pays-respect#comments</comments><guid isPermaLink="false">9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:19:55 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:19:55.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivaji Ganesan,சிவாஜி கணேசன்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lwskqxiy/sivaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan respect nadigar thilagam sivaji ganesan
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lwskqxiy/sivaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடையாறில் உள்ள நினைவு மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு அமைச்சர் ராஜ்மோகன்  மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p><h2>நடிகர் திலகம் சிவாஜி கணேசன்</h2><p>'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற நடிப்பு ஆளுமையான திகழ்ந்த அவர், 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி அன்று காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>மணிமண்டபம்</h2><p>நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையுடன் தமிழக அரசால் கட்டப்பட்ட இந்த நினைவகத்தில அவரது அரிய புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. அவரது நினைவு நாளன்று ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இந்த மணிமண்டபத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.</p> <h2>அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</h2><p>இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-வது ஆண்டு நினைவு நாளான இன்று தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>அடையாறில் உள்ள நினைவு மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சிவாஜி குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p> ]]></content:encoded></item><item><title>video-’அயர்ன் மேன்’ ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்-இணையத்தை ஆக்கிரமித்த ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/iron-man-returns-as-doctor-doom-in-viral-avengers-doomsday-trailer</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/iron-man-returns-as-doctor-doom-in-viral-avengers-doomsday-trailer#comments</comments><guid isPermaLink="false">7cbeb8a8-05d9-4cf6-8901-4a3fa198464d</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:15:43 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:15:43.745Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Iron Man,அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்,Avengers End Game,Avengers Doomsday,அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே,அயர்ன் மேன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/nte0mtd7/AVANGERS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Avengers: Doomsday]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/nte0mtd7/AVANGERS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. டூம்ஸ்டே டிரெய்லரில் அயர்ன் மேன் கதாபாத்திரம் கம்பேக் கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரும் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. கடைசியாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் உயிரிழப்பது போல காட்டப்பட்டிருக்கும்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/bWDGKRdiVZc"></iframe></figure><p>ஆனால், இந்த டிரெய்லர் மூலம் மீண்டும் மார்வெல் உலகில் நுழைந்துள்ளார். அதில் தான் ரசிகர்களுக்கு மிகப்பெரும் ட்விஸ்ட் காத்திருக்கிறது. இதுவரை டோனி ஸ்டார்க்காக கலக்கி வந்த அயர்ன் மேன் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். ’அயர்ன் மேன்’ கதாபாத்திரம் குறித்து இயக்குநர் ஜோ ரூஸோ கூறுகையில், ”அவர் சாதாரண வில்லன் கிடையாது. மார்வல் யுனிவர்சில் மிகக் கடினமான வில்லன்களின் ஒருவர்” என்றார். </p><p>மார்வெல் யுனிவர்சில் அயர்ன் மேன் முக்கிய சூப்பர் ஹீரோவாக வலம் வந்த நிலையில், டூம்ஸ்டே படத்தில் கொடூர வில்லனாக நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நடிகர் கிறிஸ்டியன் எவான்ஸ் மீண்டும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. </p><p>மேலும், ‘ஃபெண்டாஸ்டிக் ஃபோர்’ மற்றும் ‘தண்டர்போல்ட்ஸ்’ பட கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல், ‘தோர்’, ‘எக்ஸ் மேன்’ போன்ற கேரக்டர்களும் இப்படத்தில் முக்கிய பங்காற்றும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுதவிர ’ஸ்பைடர் மேன்’ டூம்ஸ்டே படத்தில் இடம்பெறுவாரா என்பது ரசிகர்களின் கேள்விக்குறியாக உள்ளது. டிரெய்லரில் அவரது கதாபாத்திரம் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. </p><p>கடைசியாக ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நிலையில், வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்ட உள்ளது. அந்த படத்தின் இறுதியில் டூம்ஸ் டே படத்திற்கு முன்னோட்டமாக 7 நிமிட காட்சிகள் இடம்பெறவுள்ளது.’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. </p><p>ரூஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வோர்த், ஆண்டனி மெக்கி, ராபர்ட் டவுனி ஜூனியர், வனிஸா கிர்பி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக ரூஸோ பிரதர்ஸ் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், எண்ட்கேம் ஆகிய படங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!</title><link>https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title</link><comments>https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title#comments</comments><guid isPermaLink="false">5ff3c63c-715f-4246-a996-551ddc7e1a26</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:57:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:57:05.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Virat Kohli,விராட் கோலி,pv sindhu,பேட்மிண்டன்,பி.வி.சிந்து,badminton</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/99lv5gcl/virat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ virat-pv.sindhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/99lv5gcl/virat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமான பி.வி. சிந்த ஜப்பான் ஓபன் சூப்பர் 750  தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தி தனது முதல் சூப்பர் 750 பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.</p><p>கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் தோல்விகள், எலும்பு முறிவு  காயம் மற்றும் ஃபார்ம் இழப்பு போன்ற கடுமையான சவால்களைச் சந்தித்து வந்த பி.வி.சிந்துவின் இந்த பிரமாண்ட மீட்சிக்குக் காரணம், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் அவர் பேசிய ஒரு தொலைபேசி உரையாடல்தான் என்ற சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.</p><h2><strong>சாம்பியன் பட்டம்:</strong></h2><p>இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை 21-17, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். 2024 சையத் மோடி சர்வதேச தொடருக்குப் பிறகு பி.வி.சிந்து கைப்பற்றும் முதல் முக்கியச் சர்வதேச பட்டம் இதுவாகும். தனது பேட்மிண்டன் வாழ்க்கையில் சிந்து வெல்லும் முதல் 'சூப்பர் 750' பட்டமும் இதுவே.</p><h2><strong>விராட் கோலியுடன் பேசிய தொலைபேசி உரையாடல்:</strong></h2><p>பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்குப் பிறகு ஃபார்ம் இல்லாமல் தவித்த பி.வி. சிந்து, மன அழுத்தத்தில் இருந்தபோது விளையாட்டு உலகத்தில் உச்சத்தைத் தொட்டு, பல விமர்சனங்களை எதிர்கொண்டு மீண்டும் மீண்டு வந்த விராட் கோலியைத் தொடர்புகொண்டு ஆலோசனைக் கேட்டுள்ளார்.</p><p>"நான் பட்டங்களை வெல்வதற்காக மட்டுமே என் வாழ்க்கையைத் தொடரவில்லை. விளையாட்டின் மீதான இயல்பான மகிழ்ச்சியைக் கண்டறியவே விரும்பினேன். மனதளவில் மிகவும் சோர்வடைந்திருந்த தருணத்தில் விராட் கோலியுடன் உரையாடினேன். உச்சக்கட்ட அழுத்தங்களையும், விமர்சனங்களையும் ஒரு விளையாட்டு வீரராக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அவர் அளித்த ஆலோசனைகளும் பார்வையும் தான் எனது மனநிலையை முற்றிலும் மாற்றியது".</p><p>"நாங்கள் என்ன பேசினோம் என்பது எப்போதும் எங்களுக்குள்ளேயே இருக்கும். ஆனால், எனக்கு ஒரு வழிகாட்டுதல் தேவைப்பட்ட அந்தத் தருணத்தில் அவர் எனக்கு ஆதரவாக நின்றதற்கு நான் என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். அவர் அதிக வார்த்தைகள் பேசவில்லை; ஆனால், அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கும் தத்தாவுக்கும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. </p><p>சில உரையாடல்கள் நாம் உலகத்தைப் பார்க்கும் பார்வையையே முற்றிலும் மாற்றிவிடும்; எங்களுக்கு அந்த உரையாடல் அப்படிப்பட்டதுதான்." நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த உரையாடலின் போது சிந்துவின் கணவர் தத்தாவும் உடனிருந்தார்.</p><h2><strong>காயத்தில் இருந்து மீண்ட கதை:</strong></h2><p>கால் எலும்பு முறிவு காயத்திலிருந்து மீண்டு வருவது சிந்துவுக்குப் பெரும் சவாலாக இருந்தது.மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆரம்பக் கட்டத்திலேயே வெளியேறியது சிந்துவுக்குப் பலத்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனால், கடுமையான உடற்பயிற்சிகள், முறையான வழிகாட்டுதல் மற்றும் சரியான மனநிலையுடன் களம் கண்ட சிந்து, தற்போது ஜப்பான் ஓபன் தொடரைக் கைப்பற்றி தான் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal#comments</comments><guid isPermaLink="false">3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:56:15 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:56:15.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,நெல் கொள்முதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxmts0af/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxmts0af/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கவலை</strong></h2><p>தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாகக் கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வது தான் உழவர்களுக்கு பெரும் துயரமாக மாறியிருக்கிறது. ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள் தங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கு  ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்கிறது.</p><h2><strong>முறைகேடுகள்</strong></h2><p>40 கிலோ எடை கொண்ட <a href="https://www.maalaimalar.com/topic/நெல்-கொள்முதல்">நெல் மூட்டையை</a> எடை வைத்து கொள்முதல் செய்வதற்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை உழவர்கள் தர வேண்டியுள்ளது. இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக கூடுதலாக எடை வைத்து கொள்முதல் செய்வதன் வாயிலாகவும், பதர்களைத் தூற்றுவதாகக் கூறி ஒன்றரை கிலோ வரையிலான நெல்லை ஒதுக்குவதன் வாயிலாகவும் 3 கிலோ நெல் கூடுதலாக வாங்கப்படுவதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வகையில் மட்டும் ஒரு குவிண்டாலுக்கு ரொக்கமாக ரூ.150, நெல்லாக ரூ.175 என மொத்தம்  ரூ.325 கையூட்டாக பறிக்கப்படுகிறது. தனியார் வணிகர்களை விட அரசு  கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.500 முதல் ரூ.600 வரை கூடுதல் விலை கிடைக்கிறது என்பதால் தான் அரசு கொள்முதல் நிலையங்களைத் தேடி உழவர்கள் வருகிறார்கள். அதற்காக அவர்களை வாரக் கணக்கில் காத்திருக்க வைப்பதும், குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டாக பறித்துக் கொள்வதும் பெரும் அநீதி. இதே நிலை தொடர்ந்தால் உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்கத் தயாராகி விடுவார்கள்.அப்படி  ஒரு நிலை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்கு அரிசியே கிடைக்காத நிலை உருவாகி விடும்.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை  தமிழக அரசு மறுக்க முடியாது. சில நாள்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர், நெல் விற்பனை செய்த உழவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார். கொள்முதலுக்காக கையூட்டு ஏதேனும் கொடுத்தீர்களா? என்று அமைச்சர் கேட்டபோது, எதிர்முனையில் இருந்த உழவர் முட்டைக்கு ரூ.50 கையூட்டு கொடுத்ததாக தெரிவிக்கிறார். இதைத் தொடர்ந்து உழவரிடம் கையூட்டு வாங்கிய கொள்முதல் நிலைய எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் ஆணை பிறப்பிக்கிறார். இவற்றைப் பார்க்கும் போது நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடப்பதைத் தடுக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புவதை புரிந்து கொள்ள முடிகிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், கொள்முதல் நிலைய  ஊழலுக்கான காரணங்களை கண்டுபிடித்து சரி செய்யாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக கடைநிலை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வதால் ஊழல் ஒழியப்போவதில்லை; உழவர்களும் பயனடையப் போவதில்லை.</p><h2><strong>தமிழக அரசு</strong></h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து கையூட்டு வழங்கப்படுவதற்கு கொள்முதல் நிலையப் பணியாளர்கள் தரப்பில் சில நியாயங்கள் கூறப்படுகின்றன.  நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்கு போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின்  தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தொகை முறையாக வழங்கப் படவில்லை. அதே போல், நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல என்றெல்லாம் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறுவதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இதை சரி செய்தால் மட்டும் தான் கொள்முதல் நிலைய ஊழலை ஒழிக்க முடியும்.</p><p>நெல் கொள்முதல் நிலைய கையூட்டு கலாச்சாரம் புதிதாக தோன்றியதில்லை. பல ஆண்டுகளாகவே இந்த சுரண்டல்  தொடர்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் உழவர்கள் வாக்களித்தனர். அவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.</p>]]></content:encoded></item></channel></rss>