<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 03 Aug 2026 07:29:28 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 03 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-03-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-03-august-2026#comments</comments><guid isPermaLink="false">3d51818e-8311-4109-ba52-03a94a3844a8</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:23:38 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:14:22.263Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/orsv477b/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/orsv477b/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rajmohan-accuses-false-propaganda-keerthana" rel="nofollow">அமைச்சர் கீர்த்தனா மீது திட்டமிட்டு, வன்மத்தோடு பொய் பரப்புரை..!- அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு</a></p><p>*  நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனைவரின் வழக்குகளை முதல்வர் விஜய் ரத்து செய்திருக்கிறார்.</p><p>* ஒரு இளம் அமைச்சர் அவருடைய சாதனைகளை திட்டமிட்டு சிறுமைப்படுத்த முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-cauvery-issue-tvk-government-is-ignorant-of-history">காவிரி பிரச்சனை: தவெக அரசுக்கு வரலாறே தெரியவில்லை - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* காவிரி விவகாரம் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. </p><p>* கர்நாடக அரசாங்கம் அரசியல் கட்சி தலைவர்களை விவசாயிகளை மதித்து அனைத்து கட்சியை கூட்டியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session">சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அதிரடி: 4 அமைச்சர்களை மாற்ற முதலமைச்சர் விஜய் முடிவு!</a></p><p>* தனது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யாரையும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தின் போதே அறிவுறுத்தினார். </p><p>* சிபாரிசு கடிதம் பெறுவதற்கு பணம் பெறுகிறார்களா? என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh" rel="nofollow">பாலியல் குற்றச்சாட்டு- பிரிஜ் பூஷண் சிங்கை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு</a></p><p>* நீதிபதி அஷ்வினி பன்வார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p>* டெல்லி போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து, பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mla-markandayan-conditional-bail-granted-madras-high-court">முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின்</a></p><p>* திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார்.</p><p>* திமுக எம்.எல்.ஏ. தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kerala-rains-landslide-death-toll-rises-to-9" rel="nofollow">கேரளத்தில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு</a></p><p>* படகு கவிழ்ந்து மாயமான மீனவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.</p><p>*  விழிஞ்ஞம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி படகு கவிழ்ந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-unresolved-grievances-of-the-police-personnel-must-be-addressed">காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்!- அன்புமணி</a></p><p>* 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்குவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். </p><p>* தமிழக அரசு நினைத்தால் காவல் துறையினரின் இந்தக் குறைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-3-8-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை கடந்த 28-ந்தேதி முதல் மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-memorial-day-cm-vijay-pay-tribute">தீரன் சின்னமலை வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் விஜய்</a></p><p>* தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது. </p><p>* சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-festival-installation-showers-at-river">ஆடிப்பெருக்கு விழா - மக்கள் வசதிக்காக படித்துறையில் 'ஷவர்கள்' அமைப்பு</a></p><p>* ஆடிப்பெருக்கு நாளில் சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வர்.</p><p>* காவிரியில் தண்ணீர் இல்லாததால் புனித நீராடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app">இந்தியர்கள் அதிக நேரத்தை செலவிடும் செயலி - ஆய்வில் புதிய தகவல்</a></p><p>* ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு (பிரீ பயர்) இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.</p><p>*&nbsp;வாட்ஸ்-அப் செயலியில் மாதத்துக்கு 18 மணி நேரம் 49 நிமிடம் சராசரியாக இந்தியர்கள் செலவிடுவது் தெரிய வந்துள்ளது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates">ரிசர்வ் வங்கி இன்று முதல் ஆலோசனை- வங்கிக்கடன் வட்டியில் மாற்றம் வருமா?</a></p><p>* ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி முடிவு செய்து, 5-ந் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பார்.</p><p>* ரெப்போ ரேட் மாற்றப்படுமா என்பது குறித்து 10 பொருளாதார நிபுணர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district">காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்... தனியார் தொழிற்சாலைகளை பார்வையிடுகிறார்</a></p><p>* ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பார்வையிடுகிறார்.</p><p>* "பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. </p>]]></content:encoded></item><item><title>மொத்த ஜோக்கர் கூட்டமும் அமைச்சரவையில் உள்ளது - உதயநிதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-entire-joker-team-sits-in-cabinet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-entire-joker-team-sits-in-cabinet#comments</comments><guid isPermaLink="false">c936eac8-02c0-4506-a078-e056eec870cb</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:28:09 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:28:09.379Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/nnyrgz69/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/nnyrgz69/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தவெக அரசை கண்டித்து தஞ்சையில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:</p><p>* குறுவை சாகுபடி முழுவதுமாக பொய்த்து போய்விட்டது.</p><p>* ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி வறண்டு போய் கிடக்கின்றது.</p><p>* நிர்வாக திறனற்ற அரசாக தவெக அரசு உள்ளது.</p> <h2>மத்திய அரசு</h2><p>* ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. இதுவரை காவிரி நீர் வந்து சேரவில்லை.</p><p>* ஆட்சி அமைந்து 3 மாதங்களாகியும் முதல்வர் வாயில் இருந்து பாஜக என்ற வார்த்தை வரவில்லை.</p><p>* மகாராஷ்டிரா நாக்பூரில் ரெயிலில் இருந்து விவசாயிகள் பாதியில் இறக்கிவிடப்பட்டது குறித்து முதல்வர் வாய் திறக்காதது ஏன்?</p><p>* மத்திய அரசை பகைத்தால் பிரச்சனை வரும் என்பதால் பாஜக என்ற பெயரை உச்சரிக்காத அளவு தைரியசாலி தவெக.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>* கர்நாடகா செல்வதாக நாடகம் ஒன்றை ஆடினார் முதலமைச்சர் விஜய்.</p><p>* அரை நூற்றாண்டுகளாக நடைபெறும் சட்டப்போராட்டம் என்பதால் கர்நாடகா செல்ல வேண்டாம் என முதல்வருக்கு கூறினோம்.</p><p>* முதலமைச்சரை பார்க்க சென்ற விவசாயிகளை குண்டுக்கட்டாக கைது செய்தது தமிழக அரசு.</p><p>* கர்நாடக முதல்வரை பார்க்க நினைக்கும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session">முதலமைச்சர் விஜய்</a> தமிழக விவசாயிகளை அழைத்து பார்க்காதது ஏன்?</p> <p>* செய்தியாளர்களை பார்த்ததும் திருடனை போல ஓடுகிறார் நீர்வளத்துறை அமைச்சர்.</p><p>* பள்ளிகள் மட்டுமல்ல கழிவறையை கூட விடாமல் ரீல்ஸ் எடுத்து போட்டு கொண்டிருக்கின்றனர்.</p><h2>ரீல்ஸ் போடும் அரசு</h2><p>* ரீல்ஸ் போடும் ஒரு அரசை இந்தியாவே இதுவரை கண்டது இல்லை.</p><p>* வேளாண் பட்ஜெட்டை திருப்பதிக்கு எடுத்து சென்று பூஜை போடுகிறார் வேளாண் அமைச்சர்.</p><p>* அமைச்சர்கள் மட்டும் அல்ல அவர்களின் சொந்தக்காரர்களும் ஆய்வுக்கு செல்கின்ற அளவுக்கு ரீல்ஸ் மோகம் முத்தி உள்ளது.</p> <p>* மக்கள் மன்றத்தில் மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தையும் தொடங்கி உள்ளது திமுக.</p><p>* திருட்டு லாட்டரி விற்றவர், திருட்டு விசிடி விற்றவர், பிளாக்கில் டிக்கெட் விற்றவர் என மொத்த கேபினட்டும் ஜோக்கர் கூட்டமாக அமைந்துள்ளது.</p><h2>காவிரி தண்ணீர்</h2><p>* 5 ஆண்டுகளாக காவிரியில் முறையாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.</p><p>* தினமும் மக்களை திசைதிருப்பும் வேலையை முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.</p><p>* தினமும் 4 மணிக்கு ஒரு ரீல்ஸ் போட்டு திசை திருப்பும் வேலையை செய்கிறார் முதலமைச்சர்.</p> <p>* திமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.</p><h2>தவெக ஆட்சி</h2><p>* அடுத்த ஜென்மம் ஒன்னு இருந்தா விவசாயியா பொறக்கனும் என பேசிய முதல்வர் ஏன் காத்திருக்க வேண்டும், இப்போதே பண்ணலாமே.</p><p>* தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே அதிக பாதிப்புக்கு உள்ளானது விவசாயிகள் தான்.</p><p>* நீர் இல்லாததால் குறுவை சாகுபடியில்லாமல் 14 லட்சம் விவசாயிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>* காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது அவமானம் என நினைக்கிறார் முதல்வர் விஜய்.</p> <h2>அனைத்துக்கட்சி கூட்டம்</h2><p>* ஊரான் வீட்டு நெய்யில் இன்று அவர் வீட்டுக்கு ஸ்வீட் செய்கிறார் முதல்வர்.</p><p>* கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி தங்கள் ஒற்றுமையை காட்டி உள்ளனர்.</p><p>* சம்பா சாகுபடிக்காக விவசாய பொருட்கள், உரங்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.</p><p>* ஆக.5 பட்ஜெட் கூட்டத்தில் சும்மா விட மாட்டோம், மக்கள் மன்றம், நீதிமன்றம் என எங்கும் குரல் எழுப்புவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>முழுசா செலுத்த முடியாது! குத்தகைக்கு வரும் மடிக்கக்கூடிய ஐபோன்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/apples-foldable-iphone-could-cost-over-2000</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/apples-foldable-iphone-could-cost-over-2000#comments</comments><guid isPermaLink="false">5069c9f5-99cf-4a08-bf64-15e3be4ea8c9</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:23:17 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:23:17.731Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,foldable iPhone,மடிக்கக்கூடிய ஐபோன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/c0r2gpfm/iPhone-17-Pro-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iPhone 17 Pro]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/c0r2gpfm/iPhone-17-Pro-1.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது . ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் கூற்றுப்படி, ஆப்பிள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 'ஆப்பிள் அப்கிரேட்' திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்படும் முதல் முக்கிய தயாரிப்புகளில் இந்த சாதனமும் ஒன்றாக இருக்கும்.</p><p>கிளார்னாவின் ஆதரவுடன் வழங்கப்படும் ஆப்பிள் அப்கிரேட் (Apple Upgrade) திட்டம், தகுதியான ஆப்பிள் சாதனங்களுக்கு வாடிக்கையாளர்களை மாதந்தோறும் பணம் செலுத்த அனுமதிக்கிறது. </p><p>குத்தகைக் காலத்தின் முடிவில், பயனர்கள் ஒரு புதிய சாதனத்திற்கு மேம்படுத்திக்கொள்ளலாம், சாதனத்தை திருப்பி கொடுக்கலாம் அல்லது மீதமுள்ள தொகையை செலுத்தி அதை தங்களிடமே வைத்துக்கொள்ளலாம். ஆப்பிள் வாடிக்கையாளர் அனுபவத்தை நிர்வகிக்க, கிளார்னா நிதியுதவியை கையாளுகிறது.</p><h2>ஆப்பிள் மேம்படுத்தல்:</h2><p>ஆப்பிள் நிறுவனம் முன்னதாக, தனக்குள்ளேயே ஒரு வன்பொருள் சந்தா சேவையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்திருந்தது. ஆனால், செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த கவலைகள் காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டதாகவும், அதன் பிறகு கிளார்னாவுடன் தற்போதைய குத்தகை மாதிரியை அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.</p><p>வாடிக்கையாளர்கள் மடிக்கக்கூடிய ஐபோனை ஒரே முறை வாங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு எடுக்க முடியும் என்று குர்மன் கூறுகிறார்.</p><p>மடிக்கக்கூடிய ஐபோன் விலை 2,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,90,360) விலையில் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு தொகையையும் முன்பணமாக செலுத்துவதற்கு பதிலாக, ஆப்பிள் அப்கிரேட் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சாதனத்தை மாதத்திற்கு சுமார் $60 முதல் $70 வரை குத்தகைக்கு எடுக்க முடியும் என்று குர்மன் கூறுகிறார்.</p><h2>அதிக விலை:</h2><p>முன்னதாக இணையத்தில் லீக் ஆன தகவல்களின்படி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் விலையை குறைந்தபட்சம் ரூ. 20,000-இல் தொடங்கி அதிகபட்சம் ரூ. 30,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. தற்போது ஐபோன் 17 ப்ரோ மாடல் ரூ. 1,34,999 என்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் விலை ரூ. 1,49,900 விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.</p><p>அமெரிக்க சந்தையில் புதிய ஐபோன்களின் விலை 200 டாலர்கள் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் கீர்த்தனா மீது திட்டமிட்டு, வன்மத்தோடு பொய் பரப்புரை..!- அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajmohan-accuses-false-propaganda-keerthana</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajmohan-accuses-false-propaganda-keerthana#comments</comments><guid isPermaLink="false">cd89f950-541e-4bbd-a1cf-c5ad7cad6cdc</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:07:08 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:07:08.659Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/qgp24s8h/Minister-Rajmohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/qgp24s8h/Minister-Rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>முதலமைச்சர் விஜய் செய்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. விரும்பத்தகாத கோஷங்கள் எழுப்பினார்கள், பதாகைகள் வைத்தார்கள், முதல்வரை இழிவுபடுத்திச் சில இடங்களில் பேசினார்கள்.</p><p>ஆனால் தாயுள்ளம் கொண்ட தலைவன், தாயுள்ளத்தோடு தன் மீது எந்த வசவாளர்கள் வசைபாடினார்களோ 'வாழ்க வசவாளர்கள்' என்று அண்ணா வழியில், நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனைவரின் வழக்குகளை முதல்வர் விஜய் ரத்து செய்திருக்கிறார்.</p><p>மாணவர்களுடன் தானும் இருக்கிறேன் என்பதைத்தான் தலைவர் இதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு முதல்வருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றி.</p><p>பட்ஜெட் தாக்கலுக்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் பல முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.</p><p>திரையில் மட்டுமே நடிக்கக்கூடியவர் எங்கள் தலைவர் விஜய்.</p><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>அமைச்சர் கீர்த்தனா மீது திட்டமிட்டு, வன்மத்தோடு பொய் பரப்புரை செய்யப்படுகிறது. ஒரு வலைத்தளத்தில் கூட சில தகவல்கள் வெளியாகி இருந்தது. அது முழுக்க முழுக்க தற்போது இருக்கக்கூடிய கள நிலவரத்தை உள்வாங்காமல் அதை வெளியிட்டிருந்தார்கள்.</p><p>உண்மை என்னவென்றால், முன்பு இருந்த ஆட்சி பெரியதாக எந்த தொழில் முதலீட்டையுமே ஈர்க்கவில்லை.  </p><p>ஆனால், அமைச்சர் கீர்த்தனா அவர்களின் தலைமையில் துறை முதல் மூன்று மாதங்களிலேயே, மிகப்பெரிய முதலீடுகளை ஈர்த்துள்ளார். அவர்கள் முதல் 6 மாதத்தில் தொட்டதை கீர்த்தனா 50 நாட்களில் முடித்திருக்கிறார்.</p><p>ஒரு பெண், ஒரு மாண்புமிகு அமைச்சர், ஒரு இளம் அமைச்சர் அவருடைய சாதனைகளை திட்டமிட்டு சிறுமைப்படுத்த முடியாது. அவர் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா - இத்தாலி நட்புறவை கொண்டாட பார்லேயின் புதிய &apos;மெலோடி டிராமிசு&apos; அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/parle-launches-melody-tiramisu-to-celebrate-india-italy-friendship</link><comments>https://www.maalaimalar.com/news/national/parle-launches-melody-tiramisu-to-celebrate-india-italy-friendship#comments</comments><guid isPermaLink="false">0664e36c-e216-42f7-9540-da0074150472</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:47:40 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:47:40.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Blinkit,பிளிங்கிட்,Melodi,Parle Melody,பார்லே மெலடி,Melody Tiramisu,மெலடிடிராமிசு,India Italy Friendship,புதிய சாக்லேட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/iwc3ouc8/Parle-Melody-Tiramisu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parle Melody Tiramisu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/iwc3ouc8/Parle-Melody-Tiramisu?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்தில் இணையதளத்தில் வைரலான பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் 'மெலோடி' தருணங்களை குறிக்கும் வகையில், பார்லே நிறுவனம் தனது புகழ்பெற்ற மெலோடி டாப்பியில் ஒரு புதிய சுவை கொண்ட சாக்லேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. </p><p>'மெலோடி டிராமிசு' என்ற பெயரில் வந்துள்ள இந்த சாக்லேட் பாக்கெட்டில் 'இந்தியா - இத்தாலி நட்புறவைக் கொண்டாடுகிறோம்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.</p><h2>மெலோடியின் பின்னணி</h2><p>கடந்த மே மாதம் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இத்தாலி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவின் பாரம்பரிய மெலோடி சாக்லேட்டுகளை பரிசாக வழங்கினார். </p><p>இந்த பரிசைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மெலோனி, 'பிரதமர் மோடி தங்களுக்கு மிகவும் சுவையான மெலடி சாக்லேட்டை பரிசாக தந்துள்ளார்' என்று நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p><p>இந்த வீடியோ உலகம் முழுவதும் பரவி டிரெண்டிங்காக மாறியது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் இவர்களது நட்பை இருவரின் பெயரையும் இணைத்து 'மோடி + மெலோனி' என்ற பெயரை சேர்த்து மெலோடி என்ற ஹாஷ்டேகை பயன்படுத்தி வருகின்றனர். </p><p>இப்போது அது உண்மையாகவே ஒரு சாக்லேட் வடிவில் உருவெடுத்துள்ளது.</p><h2><strong>'மெலடி டிராமிசு'</strong></h2><p>இத்தாலியின் புகழ்பெற்ற காபி கலந்த இனிப்பு வகையான 'டிராமிசு' சுவையில் இந்த புதிய மெலோடி தயாரிக்கப்பட்டுள்ளது. பாக்கெட்டின் முகப்பிலேயே இந்தியா - இத்தாலி நாட்டின் நட்புறவை போற்றும் வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் ஒரு சாதாரண மிட்டாய், சர்வதேச ராஜதந்திர உறவின் அடையாளமாக மாறியுள்ளது.</p><h2><strong>எங்கே, எப்படி வாங்கலாம்?</strong></h2><p>இந்த சாக்லேட், விரைவுப் பொருள் விநியோக தளம் ஒன்றில் மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கிறது. வேறு எந்த கடைகளிலும் தற்போதைக்கு கிடைக்காது. </p><p>180 கிராம் எடையுள்ள பாக்கெட்டாக, காபி கேண்டி பிரிவின் கீழ் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. </p><p>மேலும் இந்த சாக்லேட் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு லிமிடெட் எடிஷன் தயாரிப்பாகும்.</p>]]></content:encoded></item><item><title>விமானம் அருகில் பறந்து வந்த மர்ம பொருள் - விமானி சொன்ன அதிர்ச்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/pilot-reports-seeing-mysterious-disc-shaped-object-near-gatwick-airport-in-london</link><comments>https://www.maalaimalar.com/news/world/pilot-reports-seeing-mysterious-disc-shaped-object-near-gatwick-airport-in-london#comments</comments><guid isPermaLink="false">0c55bc89-715d-4c2c-bf41-9d4a21484ce3</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:41:48 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:41:48.772Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானி,Pilot,லண்டன்,london,Mysterious Object</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/7a2b39ky/ufo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/7a2b39ky/ufo.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/london">லண்டன்</a> கேட்விக் விமான நிலையத்திற்கு அருகில் தரையிறங்க தயாராகி கொண்டிருந்தபோது, ​​ஒரு வணிக விமானத்தின் விமானி மர்மமான தட்டு வடிவ பொருள் ஒன்றைக் கண்டதை கூறியதாக மெட்ரோ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிக்கை ஒன்றின்படி, இந்த சம்பவத்தில் ஏர்பஸ் A319 ரக பயணிகள் விமானம் ஒன்று ஈடுபட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/flight">விமானம்</a> கீழ் இறங்கி, ஓடுபாதையை நோக்கி இடதுபுறமாகத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​'பறக்கும் தட்டு' அல்லது ஒரு தனித்துவமான ட்ரோன் போன்ற பொருள் ஒன்று வலது இறக்கைக்கு மிக அருகில் அபாயகரமாக கடந்து செல்வதை விமானி கவனித்துள்ளார்.</p><h2>முழு விசாரணை:</h2><p>அந்த மர்ம பொருள், விமானத்தில் இருந்து சுமார் 100 முதல் 300 அடி தொலைவில், அதே உயரத்திலும் எதிர் திசையிலும் பயணித்து கொண்டிருந்தது. விமான போக்குவரத்தில் ஏற்படும் நூலிழை தவறல்களை கண்காணிக்கும் ஒரு சுதந்திர அமைப்பான யு.கே. ஏர்பிராக்ஸ் போர்டு, இந்த நிகழ்வை முழுமையாக விசாரித்தது.</p><p>"ஏ319 விமானி கீழே இறங்கி, இடதுபுறம் திரும்பியபோது, ​​தட்டு அல்லது 'பறக்கும் சாஸர்' வகையை சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு ட்ரோன், அவருக்கு மிக அருகில் எதிர் திசையில், அதே மட்டத்தில், அவரது வலது இறக்கையை கடந்து பறந்ததாக விமானி தெரிவித்தார்," என்று ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இங்கிலாந்து ஏர்பிராக்ஸ் வாரியத்தின் அறிக்கை தெரிவித்தது.</p><p>கேட்விக்குக்கு தெற்கே சுமார் ஏழு மைல் தொலைவில் உள்ள ஹேங்க்ராஸ் என்ற கிராமத்திற்கு அருகே, சசெக்ஸ் கிராமப்புறத்தின் மீது அந்த பொருள் வட்டமிட்டு கொண்டிருந்ததாக விமானி குறிப்பிட்டார்.</p><h2>தனித்துவமான தட்டு:</h2><p>விமானி அந்த விண்கலத்தை, அதன் வெளி விளிம்பில் அடர் நிற குறிகளை கொண்ட ஒரு தனித்துவமான தட்டு என்று விவரித்தார். அது ஒரு மேம்பட்ட அல்லது அசாதாரணமான ட்ரோனாக இருக்கலாம் என்று விமான குழுவினர் சந்தேகித்தபோதிலும், அதன் சரியான அடையாளத்தையோ அல்லது அது தோன்றிய இடத்தையோ அவர்களால் சரிபார்க்க முடியவில்லை.</p><p>விமானம் மிக அருகில் இருந்தபோதிலும், விமானி அவசரகால தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை, ஏனெனில் அந்த விமானம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட திருப்பத்தின் நடுவில் இருந்தது.</p><p>"அந்தப் பொருள், விளிம்பில் அடர் நிறக் கோடுகளுடன் கூடிய ஒரு தட்டு போல தெரிந்தது; அது ஒரு ட்ரோனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, ஆனால் உறுதியாக தெரியவில்லை," என்று அதன் மாதாந்திர கூட்ட அறிக்கை கூறியதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. "அது விமானத்திற்கு மிக அருகில் இருந்தது, ஆனால் அவர்கள் ஏற்கனவே திரும்பி கொண்டிருந்ததால், எந்த தற்காப்பு நடவடிக்கையும் தேவைப்படவில்லை."</p>]]></content:encoded></item><item><title>மாவீரர் தீரன் சின்னமலை &apos;அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர்&apos; என உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-remembered-as-defender-of-tamil-motherland</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-remembered-as-defender-of-tamil-motherland#comments</comments><guid isPermaLink="false">2968e7b5-6690-4d6f-848f-0dd41e02f816</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:38:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:38:58.263Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி,Dheeran Chinnamalai,freedom fighter,சுதந்திர போராட்ட வீரர்,தீரன் சின்னமலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/pue8en38/Udhayanidhi-Dheeran-Chinnamalai" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi - Dheeran Chinnamalai ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/pue8en38/Udhayanidhi-Dheeran-Chinnamalai?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221 - வது நினைவு நாளான இன்று தமிழகம் முழுவதும் தியாக நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. </p><p>இதனை முன்னிட்டு, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாவீரர் தீரன் சின்னமலையின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>"சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை" - வீரமுழக்கம்!</strong></h2><p>தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களுக்குச் சவால் விடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரிகளைத் தனது செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார். </p><p>"சென்னிமலைக்கும் – சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை" என்று வீறுகொண்டு முழக்கமிட்டு, வரிப்பணத்தை மக்களுக்கே மீட்டுக் கொடுத்த தீரன் சின்னமலையின் அசாத்திய துணிச்சலையும், அவரது தியாகத்தையும் நாம் என்றும் நெஞ்சில் ஏந்திப் போற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் இன்று!<br><br>ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர் தீரன் சின்னமலையின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.<br><br>‘சென்னிமலைக்கும் – சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை’ என்று வீரமுழக்கமிட்ட தீரன்… <a href="https://t.co/aLeicCaI3h">pic.twitter.com/aLeicCaI3h</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2084153071551021331?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>அன்னைத்தமிழ் மண் காத்த மாவீரர்</strong></h2><p>ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், அவர்களின் அடிமைத்தனத்தை வேரறுக்கவும் தன் வாழ்நாளின் இறுதிவரை அன்னைத்தமிழ் மண்ணின் உரிமைகளைக் காக்கப் போராடியவர் தீரன் சின்னமலை. </p><p>நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் செய்த உயரிய தியாகமும், அஞ்சாத வீரமும் தமிழர்களின் வரலாற்றில் நீங்காப் புகழுடன் என்றும் நிலைத்திருக்கும் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.</p><h2><strong>தமிழகம் முழுவதும் மலர் தூவி மரியாதை</strong></h2><p>தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி, ஓடாநிலை, மற்றும் சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள அவரது திருவுருவச் சிலைகளுக்கும், திருவுருவப் படங்களுக்கும் முதலமைச்சர் விஜய் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பொதுமக்களும் மாலை அணிவித்து, மலர் தூவி தங்களது வீரவணக்கத்தைச் செலுத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீண்ட நாட்களாக கட்டணம் செலுத்தாவிட்டால் தானியங்கி முறையில் மின் இணைப்பு துண்டிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/automatic-disconnection-of-electricity-supply-if-payment-is-not-made-for-an-extended-period</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/automatic-disconnection-of-electricity-supply-if-payment-is-not-made-for-an-extended-period#comments</comments><guid isPermaLink="false">660b23e7-5396-45ed-afdf-4bbc9e22e967</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:31:08 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:31:08.701Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் இணைப்பு,மின் கட்டணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/qx0g9kr6/EBhike.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் இணைப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/qx0g9kr6/EBhike.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம் (டான்செட்கோ) நீண்ட நாட்களாக மின்கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை நிரந்தரமாக  துண்டிக்கும் நடைமுறையை தானியங்கி மயமாக்கியுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வழிமுறையின்படி, அக்டோபர் 2025 முதல் துண்டிக்கப்பட்ட குறைந்த மின்னழுத்த இணைப்புகளுக்கு இந்த விதிகள் பொருந்தும்.</p><h2><strong>மின் இணைப்பு துண்டிப்பு</strong> </h2><p>இனி 6  மாதங்களுக்கும் மேலாக கட்டணம் செலுத்தாத நுகர்வோருக்கு நேரில் கடிதம் வழங்கப்படாமல், <a href="https://www.maalaimalar.com/topic/மின்-இணைப்பு">மின் இணைப்பு</a> துண்டிக்கப்பட்ட 90 நாட்களுக்கு பிறகு நோட்டீசிற்கான இணையதள லிங்க் அடங்கிய எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். அதன் பின்னரும் 90 நாட்களுக்குள் நிலுவையை  செலுத்தாவிட்டால் கணக்கு நிரந்தரமாக முடிக்கப்படும்.</p><p>தற்போது வீட்டிற்கு மீட்டர் கணக்கெடுத்ததில் இருந்து 20 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், அதற்குள் செலுத்த தவறினால் சேவை துண்டிக்கப்படுகிறது. நிலுவையிலுள்ள கணக்குகளை நிரந்தரமாக முடிக்கப் பொறியாளர்கள் மற்றும் கணக்கு அதிகாரிகளுக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த புதிய அமலாக்கம் குறித்து நுகர்வோர் ஆர்வலர்களும் ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>அபராதம்</strong> </h2><p>கட்டண அவகாசம் முடிந்த 7 நாட்களில் மின் இணைப்பைத் துண்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதே தவிர, அது நேரடியாக  களத்தில் துண்டிக்கப்படுமா? அல்லது பதிவேட்டில் மட்டும் துண்டிக்கப்படுமா? என்பதில் தெளிவில்லை என சென்னை  பட்டாபிராமை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சாரம் நேரில் துண்டிக்கப்படாமல் நுகர்வோர் அறியாமல் அதைப் பயன்படுத்தினால், பின்னர் அவர்கள் மீது மின் திருட்டு வழக்கு, அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும் அபாயம் உள்ளது. </p><p>மேலும், ஓய்வுபெற்ற அதிகாரி நீலகண்ட பிள்ளை, இந்த சுற்றறிக்கை தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்  எந்த விதிகளின் கீழ் வெளியிடப்பட்டது எனக் கேள்வி எழுப்பியதுடன், வைப்புத்தொகை திரும்ப பெற இன்னமும் மனுக்களை நேரடியாகத் தர வேண்டியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.  இதற்கு  பதிலளித்துள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழக அதிகாரிகள், 2022ல் திருத்தப்பட்ட விதிகளின்படியே இது அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், வைப்புத்தொகை திரும்பப்பெறும் நடைமுறையும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி பிரச்சனை: தவெக அரசுக்கு வரலாறே தெரியவில்லை - எடப்பாடி பழனிசாமி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-cauvery-issue-tvk-government-is-ignorant-of-history</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-cauvery-issue-tvk-government-is-ignorant-of-history#comments</comments><guid isPermaLink="false">544a5daa-af4e-422d-abb3-28d033c954a4</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:27:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:27:49.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,Cauvery Issue,காவிரி விவகாரம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-27/4qxem44x/EPS.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-27/4qxem44x/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.</strong></em></p><p>தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள் காவிரி நீரை நம்பியே உள்ளன.</p><h2>காவிரி விவகாரம்</h2><p>வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/the-mekedatu-project-is-the-only-solution-to-the-cauvery-issue-dk-shivakumar">காவிரி</a> நதிநீர் ஆணைய உத்தரவுபடி தமிழகத்துக்குரிய நீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருவதால் டெல்டா மாவட்டங்கள் வறண்டு வருகின்றன.</p> <h2>கன்னட அமைப்புகள் போராட்டம்</h2><p>இந்த விவகாரம் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்துக்கு 4% டி.எம்.சி. நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகம் மறுத்துவிட்டது. கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.</p> <h2>சுப்ரீம் கோர்ட்</h2><p>இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முயற்சித்துள்ளது. </p><h2>தீரன் சின்னமலை நினைவுநாள் </h2><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 221-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p> <p>* காவிரி பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பான வரலாறே தவெகவுக்கு தெரியவில்லை.</p><p>* காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும்.</p><p>* கர்நாடக அரசாங்கம் அரசியல் கட்சி தலைவர்களை விவசாயிகளை மதித்து அனைத்து கட்சியை கூட்டியது.</p><p>* காவிரி நீர் விவகாரத்தில் அதிமுக, திமுக ஆட்சியில் எவ்வளவு போராட்டம் நடந்தது என மக்களுக்கு தெரியும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அதிரடி: 4 அமைச்சர்களை மாற்ற முதலமைச்சர் விஜய் முடிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session#comments</comments><guid isPermaLink="false">fc5973cd-2c3b-436b-87bb-5d4081c66250</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:18:13 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:18:13.542Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,தமிழக அமைச்சரவை,TN Cabinet,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/v24ngth4/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/v24ngth4/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழக அமைச்சரவையில் மிக முக்கியமான மாற்றங்களை செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் 4 அமைச்சர்கள் நீக்கப்படலாம் என தெரிகிறது.</aside><p>திராவிட கட்சிகளின் 59 ஆண்டு கால அரசியல் ஆதிக்கத்தை உடைத்து, தமிழகத்தில் ஒரு மாற்று ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்த பாடுபட்டு வருகிறார்.</p><p>பொதுமக்கள் யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள். அதையும் மீறி அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>ஆட்சி அமைத்ததில் இருந்தே முதலமைச்சர் விஜய் இதை வலியுறுத்தி வருவதால் மேல்மட்ட அளவில் உயர் அதிகாரிகள் யாரும் இப்போது லஞ்சம் வாங்குவதில்லை. அரசு அலுவலகங்களில் இப்போது கீழ்மட்ட அளவிலும் லஞ்சம் கேட்க பயப்படுகின்றனர்.</p><p>தூய்மையான ஆட்சியை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள முதலமைச்சர் விஜய், தனது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யாரையும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தின் போதே அறிவுறுத்தினார். </p><p>அதுமட்டுமின்றி சென்னை கோட்டையில் ஒவ்வொரு அமைச்சர்களின் அறையிலும் போலீஸ் கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. யார்-யார் சந்திக்க வருகிறார்கள். டிரான்ஸ்பர்களுக்கு யாரேனும் பணம் வாங்குகிறார்களா? என்பதை கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள்.</p><p>சிபாரிசு கடிதம் பெறுவதற்கு பணம் பெறுகிறார்களா? என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். மொத்தத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பிலேயே உள்ளனர். இதையறிந்து யாரும் இப்போது பணம் வாங்குவதில்லை. ஆனாலும் ஒரு சில அமைச்சர்கள் மீதான மறைமுக குற்றச்சாட்டு புகார்கள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால் ஆரம்பத்திலேயே ‘களை’ எடுக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.</p><h2><strong>4 அமைச்சர்கள்</strong></h2><p>இதற்காக தனது அமைச்சர்களின் செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்த ரகசிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் விஜய் தனது முதல் அமைச்சரவையை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளார்.</p><p>இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சர் உள்பட 4 அமைச்சர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக உயர்மட்ட வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சரால் நியமிக்கப்பட்டு தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் தயாரித்த ரகசிய செயல் திறன் மதிப்பாய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இதற்காக ஒவ்வொரு அமைச்சரின் செயல்திறன் குறித்தும் முதலமைச்சர் விஜய் விரிவான அறிக்கையை கோரியிருந்தார். அந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 5-ந்தேதி தொடங்க இருப்பதால் அடுத்த மாதம் சட்டசபை கூட்டம் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று தெரிய வருகிறது. இதனால் அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் குற்றச்சாட்டு- பிரிஜ் பூஷண் சிங்கை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh</link><comments>https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh#comments</comments><guid isPermaLink="false">2e03cbf5-c018-4d3d-9f98-2156974758cd</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:00:19 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:00:19.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi court,பாலியல் குற்றச்சாட்டு,நீதிமன்றம் உத்தரவு,Sexual Harassment,Brij Bhushan Sharan Singh,பிரிஜ் பூஷண் சிங்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2ib5tnzj/brij.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ brij bhushan singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/2ib5tnzj/brij.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்  தொடர்பான வழக்கில், பாஜக மூத்த தலைவரும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்  முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங்கை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுவித்துள்ளது.</p><p>நீதிபதி அஷ்வினி பன்வார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்-கேமரா முறையில் நடைபெற்றது.</p><p>கடந்த 2023-ஆம் ஆண்டு முன்னணி மகளிர் மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு டெல்லி போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து, பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.</p><p>பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் தொல்லை, பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் பலவந்தமாக நடந்துகொண்டது, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. </p><p>பின்னர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவரை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mla-markandayan-conditional-bail-granted-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mla-markandayan-conditional-bail-granted-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">7cd4075f-a2dc-4f78-a20a-5e0a7160f054</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:43:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:43:58.747Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Madras High Court,சென்னை ஐகோர்ட்,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/emsnyk78/Markandayan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vilathikulam MLA Markandayan -  Madras high court
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/emsnyk78/Markandayan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>திமுக பொதுக்கூட்டம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந்தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district">முதலமைச்சர் விஜய்</a>க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார்.</p><h2>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல்</h2><p>இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F">தி.மு.க. எம்.எல்.ஏ. </a>மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20-ந்தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.</p> <h2>தூத்துக்குடி கோர்ட்</h2><p>இதையடுத்து, தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22-ந்தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமின் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2-வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதை கடந்த 30-ந்தேதி விசாரித்த கோர்ட்டு அந்த ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தது.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>இதையடுத்து, முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மார்க்கண்டேயன் சார்பில் அவரது வழக்கறிஞரான தி.மு.க.வின் சரவணன் அண்ணாதுரை இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. </p> <h2>நிபந்தனை ஜாமின்</h2><p>இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், மார்க்கண்டேயன் தினமும் தூத்துக்குடி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.</p><p>மேலும், மார்க்கண்டேயன் எதிர்காலத்தில் இப்படி பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து பிரமாணபத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.</p> ]]></content:encoded></item><item><title> Spider Man Brand New Day- இந்தியாவில் வசூல் சாதனை: 4 நாட்களில் எத்தனை கோடி தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-bo-collection-day-4-film-delivers-rs-300-crore-opening-weekend</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-bo-collection-day-4-film-delivers-rs-300-crore-opening-weekend#comments</comments><guid isPermaLink="false">676312a4-f382-4efa-b660-bc9488acc6d5</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:27:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:27:41.902Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tom Holland,Spider Man Brand New Day,ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே,டாம் ஹாலண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/qxtz37yb/spiderman-brand-new-day.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ spiderman brand new day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/qxtz37yb/spiderman-brand-new-day.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/spider-man-brand-new-day">ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே</a> திரைப்படம் தொடக்க வார இறுதியில் சாதனை படைத்து இந்திய பாக்ஸ் ஆஃபீஸ்-இல் வரலாறு படைத்துள்ளது. </p><p>டாம் ஹாலண்ட் நடித்த இந்தப் படம், தொடக்க வார இறுதியில் இந்தியாவில் ரூ. 300 கோடி மொத்த வசூலை கடந்த முதல் <a href="https://www.maalaimalar.com/topic/hollywood">ஹாலிவுட்</a> திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. மேலும், ரிலீசான நான்கே நாட்களில் ரூ. 250 கோடி நிகர வசூல் என்ற இலக்கையும் கடந்துள்ளது.</p><h2>வரலாற்று வசூல்:</h2><p>மார்வெல்-இன் பிரம்மாண்ட வெற்றிப் படம், தொடக்க வார இறுதியில் வசூலை வாரி குவித்தது. சனிக்கிழமையன்று இந்தியாவில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் பெற்ற அதிகபட்ச ஒரு நாள் வசூல் என்ற புதிய சாதனையை படைத்ததுடன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதைவிட சிறப்பாக செயல்பட்டது.</p><p>இந்தப் படம், பல பெரிய பாலிவுட் படங்களின் முதல் வார வசூலையும் முறியடித்துள்ளது. இது இந்திய ரசிகர்களிடையே ஸ்பைடர்மேன் சீரிஸ் மற்றும் மார்வெல் திரைப்படங்களின் பெரும் பிரபலத்தை காட்டுகிறது. வலுவான பாராட்டுக்களால், இப்படம் திரையரங்குகளில் தனது சிறப்பான ஓட்டத்தைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>சாக்னில்க் மதிப்பீடுகளின்படி, 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் நான்காம் நாளில் 18,051 காட்சிகளில் இருந்து நிகரமாக ரூ.76 கோடி வசூலித்துள்ளது. இது சனிக்கிழமை வசூலித்த ரூ.70.25 கோடியை விட 8.2% அதிகமாகும்.</p><p>இதன் மூலம் இப்படத்தின் இந்திய நிகர வசூல் ரூ. 256.20 கோடியாகவும், மொத்த வசூல் ரூ. 306.37 கோடியாகவும் உயர்ந்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழுவதும், இந்தப் படம் அனைத்து முக்கிய மொழி பதிப்புகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக வரவேற்பை பெற்றது.</p><h2>மொழி வாரியான வசூல்:</h2><p>ஆங்கில பதிப்பே மிகப்பெரிய பங்களிப்பாளராக திகழ்ந்து, 67% ஒட்டுமொத்த இருக்கைகள் நிரம்பிய நிலையில் ரூ. 40 கோடி வருவாய் ஈட்டியது.</p><p>இந்தி பதிப்பு 29 கோடி ரூபாய் வசூலித்து, 95% அரங்கு நிரம்பலைப் பதிவுசெய்ததன் மூலம், மிகவும் சிறப்பாகச் செயல்பட்ட மொழிமாற்றுப் பதிப்பாகத் திகழ்கிறது. தென்னிந்தியப் பதிப்புகளில், தமிழ் பதிப்பு 82% இருக்கை நிரம்பலுடன் ரூ. 3.55 கோடியும், தெலுங்கு பதிப்பு 57% இருக்கை நிரம்பலுடன் ரூ. 3.25 கோடியும் வசூலித்தன. கன்னட மற்றும் மலையாளப் பதிப்புகள் தலா ரூ. 10 லட்சம் பங்களித்தன.</p><h2>ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே:</h2><p>டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கிய ' ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம், உலகம் பீட்டர் பார்க்கரின் அடையாளத்தை மறந்த பிறகு, அவன் தன் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க முயற்சிப்பதை விவரிக்கிறது. ஸ்பைடர்-மேனாக நியூ யார்க்கை பாதுகாத்து வரும் அவன், எல்லாவற்றையும் மாற்றும் ஒரு ஆபத்தான புதிய எதிரியை எதிர்கொள்கிறான்.</p><p>இந்தப் படத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டயா, ஜேக்கப் படலோன், ஜான் பெர்ன்தால் மற்றும் சேடி சிங்க் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கேரளத்தில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-rains-landslide-death-toll-rises-to-9</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-rains-landslide-death-toll-rises-to-9#comments</comments><guid isPermaLink="false">2f63d3f8-b8c9-4fc8-8388-dc72cde2ecef</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:27:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:27:24.834Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kerala,landslide,மழை,பலி எண்ணிக்கை உயர்வு,Death toll,கேரளா,நிலச்சரிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/tygbndx7/kerala2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kerala landslide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/tygbndx7/kerala2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளத்தில் மழை, நிலச்சரிவால் இதுவரை 9 பேர் இறந்துள்ளதாக முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.</p><h2>மழை பாதிப்பு</h2><p>கேரளத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பை சந்தித்துள்ளது. பூஞ்ஞார், அடூர் மலை போன்ற மலையோர பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது.</p><p>பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா, ஆலப்புழை போன்ற மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு, வடியாமல் இருக்கிறது. இது அங்குள்ள மக்களை வெகுவாக பாதித்துள்ளது.</p><h2>9 பேர் பலி</h2><p>மேலும் மழை பாதிப்பு தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20" rel="nofollow">கேரளம் முதலமைச்சர் </a>வி.டி.சதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்திற்கு இதுவரை 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். 13 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.</p><p>8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை 27 வீடுகள் முற்றிலுமாகவும், 196 வீடுகள் சிறிய அளவிலும் சேதம் அடைந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட 5,792 பேர் 209 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>மீனவர் உடல் மீட்பு</h2><p>இதற்கிடையே கடலில் மீன்பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து மாயமான மீனவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அதாவது திருவனந்தபுரம் அருகே உள்ள முதலப்பொழி முகத்துவாரப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 4 மீனவர்கள் ஒரு படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.</p><p>அப்போது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஜோஸ், ஸ்மித் ஆகிய 2 மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். பிரீமன் (வயது 28), ஷிஜின் (32) ஆகியோர் மாயமானார்கள். இதில் நேற்று பிரீமன் பிணமாக மீட்கப்பட்டார். மாயமான ஷிஜினை தொடர்ந்து தேடி வரும் பணி நடக்கிறது.</p><h2>தேடும் பணி தீவிரம்</h2><p>இந்தநிலையில் நேற்று முன்தினம் விழிஞ்ஞம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி படகு கவிழ்ந்தது. இதில், மாயமான புல்லுவிளையைச் சேர்ந்த ஜான் (54), கொட்டுக்காலைச் சேர்ந்த ஆண்டனி (63) ஆகியோரையும் விழிஞ்ஞம் கடலோர காவல் குழும போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>அந்த இருவரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்!- அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-unresolved-grievances-of-the-police-personnel-must-be-addressed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-unresolved-grievances-of-the-police-personnel-must-be-addressed#comments</comments><guid isPermaLink="false">96522846-585b-4488-9646-e01ba97353aa</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:24:09 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:24:09.518Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,காவல்துறை,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/57vib675/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/57vib675/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>காவல்துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து பணியில் சேருவதும், 6 முதல் 9 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் எத்தகைய மனவலியை ஏற்படுத்தும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>காவல்துறையினரின் பதவி உயர்வு தொடர்பாக நியாயத்தின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுப்பதற்கு பதிலாக, அனைத்து சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகள் மூலம் எதிர்கொள்வதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதால், பல்லாயிரக்கணக்கான காவல்துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. காவல்துறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நிவாரணமும் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க. அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது  நியாயமல்ல.</p><p>கொள்கை முடிவுகளை எடுப்பதில் கடந்த ஆட்சியாளர்களும், இன்றைய ஆட்சியாளர்களும் இழைத்த தவறுகளாலும், தவறுகளை சரி செய்வதில் ஆர்வம் காட்டாததாலும் ஏற்பட்ட அநீதியின் வரலாறு 1994&amp;ஆம் ஆண்டில் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு நீதி வழங்கப்படாததால், அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறையினருக்கும் நீதி கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு நீதி வழங்குவதில் அரசுகளும் ஆர்வம் காட்டவில்லை.</p><p>தமிழக காவல்துறைக்கு 1198 சார் ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை 1994&amp;95ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 500 பேருக்கு 1996&amp;ஆம் ஆண்டிலும், 600 பேருக்கு 1997&amp;ஆம் ஆண்டிலும் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 98 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்படாத நிலையில், அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 1998&amp;99ஆம் ஆண்டில் 968 சார் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், 1994&amp;95 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 சார் ஆய்வாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாததை சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவர்களுக்கு 22.05.2000&amp;ஆம் நாளில் நியமன ஆணை  வழங்கப் பட்டது. ஆனால், அவர்களுக்கு 1994&amp;95ஆம் ஆண்டின் பணி மூப்பு வழங்கப்படாதது தான் சிக்கல் ஆகும்.</p><p>அதைவிட பெரிய அநீதி என்னவென்றால், 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில்  நியமிக்கப்பட்ட 98 சார் ஆய்வாளர்களில் இருவருக்கு மட்டும் 1995&amp;ஆம் ஆண்டின் பணிமூப்பு வழங்கப்பட்டு    காவல் ஆய்வாளராகவும், காவல் துணை கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதமுள்ள  96 பேர் காவல் ஆய்வாளர் என்ற நிலைக்கு மட்டுமே உயர்ந்துள்ளனர். அவர்களின் 46 பேர் ஓய்வு பெற்று விட்ட நிலையில், மீதமுள்ள 50 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் 3 ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள்.</p><p>இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அவர்களுடன் நிற்கவில்லை. அவர்களுக்குப் பிறகு இன்று வரை பணியில் சேர்ந்த அனைத்து காவல் சார் ஆய்வாளர்களுக்கும் அநீதி தொடர்கிறது. இவர்களுக்குப் பிறகு 1998&amp;99ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 968 காவல் சார் ஆய்வாளர்களுக்கு 2008&amp;ஆம் ஆண்டில் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், 2020&amp;21ஆம் ஆண்டில் துணை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், 2004&amp;ஆம் ஆண்டில் சார் ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு இப்போது துணை கண்காணிப்பாளர்களாகவும், 2016&amp;ஆம் ஆண்டில் தேர்வான ஆய்வாளர்களுக்கு இப்போது  ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பதவி உயர்வு வழங்கப்படவில்லை.</p><p>அதற்கான காரணம், 1994&amp;95ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர்களில் மணிமாறன் உள்ளிட்ட சிலர், தங்களுக்கு 1995-ஆம் ஆண்டு பணிமூப்பு வழங்க ஆணையிடக் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை தான். இந்தத் தடை வரும் 10&amp;ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்காததற்கு காரணம் அவர்கள் செய்த தவறு அல்ல... மாறாக அரசு செய்த தவறு தான். 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1198 காவல் சார் ஆய்வாளர்களுக்கு ஒரே கட்டமாக பணி ஆணை வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒரே பணி மூப்பு வழங்கப் பட்டிருந்தாலோ இந்த சிக்கல் எழுந்திருக்காது; இரு தலைமுறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.</p><p>காவல்துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து பணியில் சேருவதும், 6 முதல்  9 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் எத்தகைய மனவலியை ஏற்படுத்தும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். இந்தத் தவறை அரசு தான் சரி செய்ய வேண்டும். 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்குவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். அதை செய்வதுடன் 1998&amp;99, 2004, 2016 ஆகிய ஆண்டுகளில் காவல் சார்&amp;ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டை இது குறித்த வழக்கு வரும் 10&amp;ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அரசு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் 30 ஆண்டு கால சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.</p><p>அதேபோல், காவல்துறை பணிகளில் சேருவதற்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் பணியில் உள்ள காவலர்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள 20% இடங்களில் போட்டியிடும் தமிழ்வழிக் கல்வியில் படித்த காவலர்களுக்கு அதற்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே ஒருமுறை தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றவர்கள், அதே துறையின் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வில் மீண்டும் அனுபபிக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஜனவரி 23&amp;ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காததாலும், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதாலும் அந்த சட்டம் காலாவதியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்த சட்டத்தை மீண்டும் இயற்றி காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் துறை சார்ந்த ஒதுக்கீட்டில் போட்டியிடும் தமிழ்வழியில் கற்ற காவலர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.</p><p>காவல்துறையினருக்கு படி வழங்குவதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு ஊதியம், இரவு நேரப் பணிக்கான படிகள், பணி ஆபத்து படிகள் ஆகியவை அதே துறையில் பணியாற்றும் விரல் ரேகை வல்லுனர்களுக்கு வழங்கப்ப்படுவதில்லை. சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களில் பணியாற்றும் விரல்ரேகை பிரிவினருக்கு உணவுப்படி கூட வழங்கப்படுவதில்லை. இந்த பாகுபாடு உடனடியாக களையப்பட வேண்டும்.</p><p>தமிழக அரசு நினைத்தால் காவல் துறையினரின் இந்தக் குறைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும். இதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை பெற்று காவல்துறையினரின் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் குறைகளையும் தமிழக அரசு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-3-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-3-8-2026#comments</comments><guid isPermaLink="false">215e392a-095e-4593-af1f-47da1a488e4a</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:44:06 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:44:06.562Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/27/20695559-gold4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/27/20695559-gold4.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 31-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனையானது. </p><p>ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும் விற்பனையானது. நேற்று ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும் விற்பனையானது. </p> <h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலை கடந்த 28-ந்தேதி முதல் 7 நாட்களாக மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>02-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>01-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>31-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,040</p><p>30-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840</p><p>29-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,240</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>01-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>31-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>30-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>29-07-2026- ஒரு கிராம் ரூ.235</p> ]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-memorial-day-cm-vijay-pay-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-memorial-day-cm-vijay-pay-tribute#comments</comments><guid isPermaLink="false">ca01fae4-69dd-46b4-b770-2071daf215a6</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:31:39 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:31:39.040Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Dheeran Chinnamalai,freedom fighter,சுதந்திர போராட்ட வீரர்,தீரன் சின்னமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/q4s3v0mz/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை - முதலமைச்சர் விஜய்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/q4s3v0mz/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரன் தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! என்று முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டி உள்ளார்.</strong></em></p><p>சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளையொட்டி முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-tn-cm-vijay-nirmal-kumar-dmk-former-miniser-regupathy">விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.</p><p>கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது. </p> <p>சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.<br><br>கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக… <a href="https://t.co/1bXR5IKJVE">pic.twitter.com/1bXR5IKJVE</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2084128801680961594?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>2030 காமன்வெல்த் போட்டிகளுக்காக உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் தயாராகும் அகமதாபாத் - குஜராத் துணை முதல்வர்</title><link>https://www.maalaimalar.com/news/national/ahmedabad-is-preparing-world-class-infrastructure-for-2030-cwg-gujarat-deputy-cm-harsh-sanghavi</link><comments>https://www.maalaimalar.com/news/national/ahmedabad-is-preparing-world-class-infrastructure-for-2030-cwg-gujarat-deputy-cm-harsh-sanghavi#comments</comments><guid isPermaLink="false">a580956a-ca57-4e12-9690-c9687404e6ce</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:26:52 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:26:52.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ahmedabad,காமன்வெல்த் போட்டிகள்,CWG 2030,Harsh Sanghavi,ஆமதாபாத்,ஹர்ஷ் சங்கவி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0bnr1uey/Harsh-Sanghavi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Harsh Sanghavi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0bnr1uey/Harsh-Sanghavi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விளையாட்டு மேம்பாட்டிற்காக பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> தொடர்ந்து மேற்கொண்டு வரும் உந்துதலைப் பாராட்டிய குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் மீதான அரசின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக கூறினார். </p><p>மேலும், கிளாஸ்கோ <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்று வரும் வேளையில், நாட்டின் விளையாட்டு சூழலை வலுப்படுத்த மத்திய அரசு விளையாட்டுக்கான பட்ஜெட்டை எட்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>பிரதமருக்கு நன்றி:</h2><p>"பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒருபுறம், 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நமது நாட்டின் வீரர்கள் பதக்கங்களுக்கு மேல் பதக்கங்களை வென்று வந்தனர். மறுபுறம், பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களுக்கான பட்ஜெட்டை எட்டு மடங்கு அதிகரித்துள்ளார். இது அவரது அர்ப்பணிப்பை தெளிவாகக் காட்டுகிறது," என்று ஹர்ஷ் சங்கவி கூறினார்.</p><p>2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக அகமதாபாத் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை வேகமாக உருவாக்கி வருவதாகவும், இந்த வசதிகள் குஜராத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து வரும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கும் பயனளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.</p><h2>சர்வதேச தரம்:</h2><p>இதுகுறித்து பேசிய அவர், "இந்திய இளைஞர்கள் அனைவரின் கனவுகளையும் நனவாக்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த, சர்வதேச தரத்திலான விளையாட்டு உள்கட்டமைப்பை அகமதாபாத் முழுமையாக தயார் செய்து வருகிறது. இந்த உள்கட்டமைப்பு அகமதாபாத் அல்லது குஜராத் மாநிலத்திற்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படாது. நாடு முழுவதிலும் இருந்து ஒவ்வொரு இளம் விளையாட்டு வீரரும் தங்கள் கனவுகளை அடைய அகமதாபாத்தை தங்கள் இல்லமாகக் கருதலாம்," என்று சங்கவி கூறினார்.</p><p>2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வரும் வேளையில் அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இப்போட்டிகளின் நூற்றாண்டு பதிப்பிற்காக, சர்வதேச தரத்திற்கு இணையான விளையாட்டு அரங்குகள் மற்றும் விளையாட்டு வீரர்களை மையமாக கொண்ட வசதிகளை உருவாக்கும் பணிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.</p><p>பல்வேறு பிரிவுகளில் இந்தியா தனது மிகச்சிறந்த செயல்பாடுகளில் ஒன்றை வெளிப்படுத்திய கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் போது, ​​குஜராத் துணை முதலமைச்சர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><h2>உறுதியான பாரம்பரியம்:</h2><p>2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை அகமதாபாத் நடத்த இருக்கிறது. குஜராத் அரசு, இந்த நகரத்தை ஒரு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு தலமாக நிலைநிறுத்தி வருகிறது. இந்த போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டு வரும் உள்கட்டமைப்பானது, சர்வதேச தரத்திற்கு இணையாக இருக்கும்.</p><p>உயர் செயல்திறன் பயிற்சி வசதிகள மற்றும் விளையாட்டு அரங்கங்களை உருவாக்குவதன் மூலம் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு நீடித்த பலன்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது, இந்த பல்நோக்கு விளையாட்டு நிகழ்வுக்கு பிறகும் நீடித்து நிலைக்கும் ஒரு பாரம்பரியத்தை உறுதி செய்கிறது.</p>]]></content:encoded></item><item><title> ஆடிப்பெருக்கு விழா - மக்கள் வசதிக்காக படித்துறையில் &apos;ஷவர்கள்&apos; அமைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-festival-installation-showers-at-river</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-festival-installation-showers-at-river#comments</comments><guid isPermaLink="false">b1da5847-f857-4bd2-b0b1-bed7a8903003</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:18:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:18:58.985Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery,aadi perukku,ஆடிப்பெருக்கு,பக்தர்கள் புனித நீராடல்,காவிரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/kpl91ebl/shower.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shower]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/kpl91ebl/shower.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2> ஆடிப்பெருக்கு விழா</h2><p>தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் 18-ந்தேதி காவிரி கரையோர மாவட்டங்களில் இந்த விழா ஆண்டாண்டு காலமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>அகண்ட காவிரி பாயும் திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டும்.</p><p>கடந்த ஆண்டு அம்மா மண்டபத்தின் 12 படிக்கட்டுகளையும் தொட்டபடி காவிரி புதுப்புனலாக பாய்ந்து சென்றது. இதன் காரணமாக காவிரியில் புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.</p> <h2>வறண்ட காவிரி</h2><p>ஆனால் இந்த ஆண்டுபருவமழை பொய்த்தது மற்றும் கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படாததால் காவிரி ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், ஆடிப்பெருக்கு விழாவையும் மக்கள் கடந்த ஆண்டைப்போல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.</p> <h2>காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை</h2><p>ஆனாலும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">ஆடிப்பெருக்கு</a> நாளன்று சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வார்கள். புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு, புனித நீராடி வழிபாடு செய்வது உண்டு. காவிரியில் தண்ணீர் இல்லாததால் புனித நீராடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.</p> <h2>குளிப்பதற்கு ஏற்பாடு</h2><p>காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் சாக்கடை போல் தண்ணீர் சிறிதளவே தேங்கி நிற்கிறது. </p><p>இதன் காரணமாக அம்மா மண்டபம் படித்துறையில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள ஷவரில் பக்தர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக அம்மா மண்டபம் படித்துறை பகுதியில் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.</p> <h2>போலீசார் பாதுகாப்பு</h2><p>ஆடிப்பெருக்கு விழாவின்போது மக்கள் அதிக அளவில் கூடும்போது கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றுக்குள் தற்காலிக கண்காணிப்பு கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>தஞ்சை மாவட்டம் திருவையாறிலும் காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராட வசதியாக பம்பு செட் அமைக்கப்பட்டுள்ளன.</p> <h2>ஷவர் அமைப்பு</h2><p>இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீரின்றி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அப்போது பக்தர்கள் குளிக்க வசதியாக 'ஷவர்' அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2020, 2021, 2022, 2023, 2024, 2025-ம் ஆண்டுகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.</p><p>தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தண்ணீர் இல்லாமல் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்... தனியார் தொழிற்சாலைகளை பார்வையிடுகிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district#comments</comments><guid isPermaLink="false">9eb64882-40cf-454c-9d10-3fc8b9e78281</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:40:25 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:40:25.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,தனியார் தொழிற்சாலைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/eoqi738c/Vijay05.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/eoqi738c/Vijay05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பார்வையிடுகிறார்.</aside><h2><strong>ஒரகடம் பயணம்</strong></h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் வளர்ச்சி மையத்தில், 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' என்ற நிறுவனம் சார்பில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ‘டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்’ உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>"பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. வணிக வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தை இன்று <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.</p><h2><strong>கண்ணாடி தொழிற்சாலை</strong></h2><p>அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் செயல்படும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயின்ட் கோபின் நிறுவனமும், தமிழக அரசுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>இந்த நிறுவனம் உலகத்தரத்திலான கண்ணாடி தயாரிப்பு வளாகத்தை விரிவுபடுத்தி உள்ளது. இதனை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நிசான் கார் கம்பெனியையும் முதலமைச்சர் விஜய் பார்வையிடுகிறார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியர்கள் அதிக நேரத்தை செலவிடும் செயலி - ஆய்வில் புதிய தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app</link><comments>https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app#comments</comments><guid isPermaLink="false">23f48111-dc1c-4c00-9d6a-6670a2e1336f</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:25:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:25:33.884Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>YouTube,Instagram,indians,smartphone,CELLPHONES,செல்போன்,இந்தியர்கள்,இன்ஸ்டாகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/r8blba5o/socialmedia.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/r8blba5o/socialmedia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தியர்கள் எந்தெந்த செயலிகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்? என்பது குறித்த ஆய்வில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.</strong></em></p><h2>செயலிகள்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">செல்போன்</a> உலகில் இன்று அனைவரும் மூழ்கிப் போய்த்தான் கிடக்கிறோம். இதில் யாரும் மாற்று கருத்தை சொல்ல முடியாது. ஒருவர் வீட்டில் இருந்து வெளியில் புறப்படுவதற்கு முன்பு எந்த பொருளை எடுக்க மறக்கிறாரோ? இல்லையோ? முதலில் கையில் எடுப்பது செல்போனாகத்தான் இருக்கும். அந்தவகையில் நம்முடைய அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாகவே அது மாறிவிட்டது.</p> <h2>ஸ்மார்ட்போன்</h2><p>இந்த நிலையில் இந்தியாவில் '<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">ஸ்மார்ட்போன்</a>' பயன்படுத்தும் பயனாளர்கள் எந்த செயலியில் (அப்ளி கேஷன்ஸ்) அதிக நேரம் செலவிடுகிறார்கள்? என்பது குறித்து 'பேங்க் ஆப் அமெரிக்காவின்' நிதிச் சந்தை ஆராய்ச்சி பிரிவு ஆய்வு நடத்தியுள்ளது. அதில் ஒரு மாதத்தில் எவ்வளவு நேரம் அந்த செயலிகளில் நேரத்தை செலவிடுகிறார்கள் என்ற புள்ளிவிவரங்களுடன் ஆய்வை வெளியிட்டுள்ளது.</p> <h2>சமூக வலைதளங்கள்</h2><p>அதில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இந்தியர்கள் சராசரியாக இன்ஸ்டாகிராம் செயலிக்கு 49 மணி நேரம் 42 நிமிடமும், யூ-டியூப் செயலிக்கு 47 மணி நேரம் 23 நிமிடமும் செலவிடுகிறார்கள். அதாவது நாளொன்றுக்கு சுமார் 16 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்துகிறார்கள். அதற்கடுத்தபடியாக முகநூலில் 24 மணி நேரம் 45 நிமிடமும், 'எக்ஸ்' தளத்தில் 13 மணி நேரம் 30 நிமிடமும் கழிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>சமூக வலைத்தளங்களை தவிர, ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு (பிரீ பயர்) இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதற்கு மட்டும் மாதத்துக்கு 41 மணி நேரம் 12 நிமிடம் செலவிடுகிறார்கள். இதேபோல், லுடோ கிங், கேரம் ஆகிய கேமிங் செயலிகளுக்கு முறையே சுமார் 13 மணி நேரம் செலவு செய்கிறார்கள்.</p> <h2>வாட்ஸ்-அப்...</h2><p>சமூக வலைத்தளங்கள். கேமிங் செயலிகளை போல, ஓ.டி.டி தளங்களிலும் நீண்ட நேரம் நேரத்தை செலவிடுகிறார்கள். அதில் பிரபல நிறுவனங்களின் ஓ.டி.டி. தளங்களை அதிகபட்சமாக மாதத்துக்கு இந்தியர்கள் சராசரியாக 10 மணி நேரம் முதல் 22 மணி நேரம் வரை பயன்படுத்துகிறார்கள்.</p><p>இதுதவிர வாட்ஸ்-அப் செயலியில் மாதத்துக்கு 18 மணி நேரம் 49 நிமிடம் சராசரியாக இந்தியர்கள் செலவிடுவதும் இந்த புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.</p> <p>இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணங்கள் குறைவாக இருப்பதும், மலிவான ஸ்மார்ட்போன்கள் பரவலாக கிடைப்பதும் மக்கள் தங்களின் பெரும்பகுதி நேரத்தை பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் சமூக வலைத்தளங்களில் செலவிட வழிவகுத்துள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சியை காட்டுவதாக சொல்லப்பட்டிருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;வலிமையாக மீண்டுவர உத்வேகம்&quot;: காமன்வெல்த்-இல் வெண்கலம் வென்ற இந்திய வீரர் செல்வ பிரபு திருமாறன்</title><link>https://www.maalaimalar.com/sports/motivation-to-come-back-stronger-indias-selva-prabhu-thirumaran-after-cwg-bronze-in-triple-jump</link><comments>https://www.maalaimalar.com/sports/motivation-to-come-back-stronger-indias-selva-prabhu-thirumaran-after-cwg-bronze-in-triple-jump#comments</comments><guid isPermaLink="false">9bf1fc9e-036f-4d25-8f85-550f7832de5f</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:22:45 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:22:45.362Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Selva Prabhu Thirumaran,செல்வ பிரபு திருமாறன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/7o97we3p/Selva-Prabhu-Thirumaran.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Selva Prabhu Thirumaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/7o97we3p/Selva-Prabhu-Thirumaran.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ் நாட்டை சேர்ந்த டிரிபில் ஜம்ப் வீரர் செல்வ பிரபு திருமாறன், இந்த சாதனை தனக்கு ஒரு பெருமைக்குரிய தருணம் என்றும், எதிர்காலத்தில் மேலும் பெரிய வெற்றிகளை அடைய தொடர்ந்து முயற்சிப்பதற்கான உந்துதல் என்றும் கூறி மகிழ்ச்சி தெரிவித்தார். </p><p>கடந்த சனிக்கிழமை நடந்த ஆடவர் டிரிபில் ஜம்ப் போட்டியில் செல்வ பிரபு வெண்கல பதக்கத்தையும், சக வீரரான பிரவீன் சித்ரவேல் வெள்ளி பதக்கத்தையும் வென்ற அசத்தினர். இதனால், இந்தியா ஒரு மறக்க முடியாத இரட்டை மேடை வெற்றியை இந்தப் போட்டியில் பதிவு செய்ய முடிந்தது.</p><p>தனது சாதனையை நினைவுகூர்ந்த செல்வ பிரபு திருமாறன், தனது பயணம் முழுவதும் தனக்கு துணையாக நின்ற பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.</p><h2>வெண்கல பதக்கம்:</h2><p>போட்டி முழுவதும் சீரான முன்னேற்றத்தை காட்டிய இந்திய வீரர் செல்வா, 16.52 மீட்டர் என்ற தனது சிறந்த தாண்டுதலுடன் வெண்கல பதக்கத்தை வென்றார்.</p><p>வெண்கல பதக்கத்தை வென்ற பிறகு ஏ.என்.ஐ-யிடம் பேசிய செல்வ பிரபு திருமாறன், "எனக்கும் என் பெற்றோருக்கும் இது மிகுந்த பெருமை அளிக்கிறது. இது ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் கனவாக இருந்தது. நான் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அவர்கள் எப்போதும் விரும்பினார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பதக்கம் வலிமையாக மீண்டுவருவதற்கான உத்வேகம் அளித்திருக்கிறது.</p><p>என் கவனம் பதக்கத்தின் மீது இருந்தது. நான் என் செயல்திறனில் அதிக கவனம் செலுத்தினேன். இந்தியாவுக்காக ஒரு பதக்கத்தை பெறுவது சிறந்த விஷயம். எனக்கு ஆதரவளித்தவர்கள், என் பயிற்சியாளர்கள், பிசியோக்கள், சக வீரர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இந்த பதக்கத்தை நான் அர்ப்பணிக்கிறேன். அவர்கள் எப்போதும் என் முதுகெலும்பாக இருக்கிறார்கள்," என்றார்.</p><h2>வெள்ளி பதக்கம்:</h2><p>செல்வ பிரபு திருமாறன் தனது இரண்டாவது முயற்சியில் 16.17 மீட்டர் தாண்டி பதக்க நிலைகளுக்குள் நுழைந்தார், பின்னர் மூன்றாவது சுற்றில் அதை 16.43 மீட்டராக மேம்படுத்தினார். அதன்பிறகு, 16.52 மீட்டர் என்ற தனது சிறந்த முயற்சியை வெளிப்படுத்தி, பதக்க மேடையில் தனக்கான இடத்தை உறுதி செய்தார்.</p><p>விறுவிறுப்பான போட்டியில், பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். தொடக்க மூன்று சுற்றுகளுக்குப் பிறகு அவர் ஐந்தாவது இடத்தில் இருந்தார்; முதலில் 16.05 மீட்டர் தாண்டிய அவர், மூன்றாவது முயற்சியில் அதை 16.31 மீட்டராக மேம்படுத்தினார்.</p><p>பின்னர், தனது நான்காவது முயற்சியில் 16.58 மீட்டர் தாண்டி அசத்தினார். இதன் மூலம் சிறிது நேரம் முன்னிலை பெற்ற சித்ரவேல், இறுதியில் வெள்ளி பதக்கத்தை வென்றார்.</p><p>கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் தடகள பிரிவு செயல்பாடு, இரட்டை பதக்க வெற்றியால் மேலும் சிறப்படைந்தது.</p>]]></content:encoded></item><item><title>வங்கிக்கடன் வட்டியில் மாற்றம் வருமா? - ரிசர்வ் வங்கி இன்று முதல் ஆலோசனை </title><link>https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates</link><comments>https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates#comments</comments><guid isPermaLink="false">bc800ef4-79c0-4fe5-9835-8db109fe38c2</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:15:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:15:33.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,ரெப்போ வட்டி,Repo,ரிசர்வ் வங்கி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/fma9yx71/RBI.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரிசர்வ் வங்கி]]></media:title><media:description type="html"><![CDATA[ ரிசர்வ் வங்கி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/fma9yx71/RBI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது. இந்த தடவை, வங்கிக்கடன் வட்டி விகிதம் மாற்றம் வருமா என்பது 5-ந்தேதி தெரியும்.</aside><h2><strong>3 நாட்கள் ஆலோசனை</strong></h2><p>வங்கிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">ரிசர்வ் வங்கி</a> வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 'ரெப்போ ரேட்' என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் தீர்மானிக்கின்றன.</p><p>2 மாதங்களுக்கு ஒருதடவை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவது வழக்கம். அதுபோல், இம்முறைக்கான இக்கூட்டம் இன்று மும்பையில் தொடங்குகிறது. 5-ந்தேதி வரை ஆலோசனை நடைபெறுகிறது.</p><h2><strong>மாற்றம் இருக்காது</strong></h2><p>ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி முடிவு செய்து, 5-ந் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பார். ரெப்போ ரேட் மாற்றப்படுமா என்பது குறித்து 10 பொருளாதார நிபுணர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், பெரும்பாலான நிபுணர்கள், ரிசர்வ் வங்கி, தற்போதைய வங்கிக்கடன் வட்டியான 5.25 சதவீதத்தில் மாற்றம் செய்யாது என்று கருத்து தெரிவித்தனர்.</p><p>அவர்கள் கூறியதாவது:-</p><p>மேற்கு ஆசிய பதற்றம் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. பருவமழையும் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது.</p><h2><strong>காரணம் என்ன?</strong></h2><p>இருப்பினும், <a href="https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-soon-in-india-union-government-approves-rbi-proposal">ரிசர்வ் வங்கி</a> 'காத்திருந்து பார்க்கும்' அணுகுமுறையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கிறோம். பண வீக்கம் தீங்கற்ற நிலையில்தான் இருக்கிறது. எனவே தற்போதைய நிலையே தொடர வாய்ப்புள்ளது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர். </p><p>கடந்த ஆண்டு பல தவணைகளாக ‘ரெப்போ ரேட்’ 1.5 சதவீதம் குறைக்கப்பட்டது. தற்போது 5.25 சதவீதமாக உள்ளது. இதே வட்டிவிகிதம் மாற்றமின்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 ஆகஸ்ட் 2026: ஆடிப்பெருக்கு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-3-august-2026-aadi-perukku</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-3-august-2026-aadi-perukku#comments</comments><guid isPermaLink="false">9039cbf6-9e2d-4427-a5e4-9dfb1e978a3a</guid><pubDate>Mon, 03 Aug 2026 02:41:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T02:41:58.359Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/831iq12f/aadiperukku.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆடிப்பெருக்கு விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/831iq12f/aadiperukku.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-18 (திங்கள்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  பஞ்சமி இரவு 9.13 மணி வரை பிறகு சஷ்டி</p><p>நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.06 வரை பிறகு ரேவதி</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>ஆடிப்பெருக்கு விழா</h2><p>சகல நதி தீரங்களில் ஆடிப்பெருக்கு விழா. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. </p> <p>கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தலங்களில் காலை அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - யோகம்</p><p>ரிஷபம் - சாந்தம்</p><p>மிதுனம் - உயர்வு</p><p>கடகம் - நற்செயல்</p><p>சிம்மம் - இன்பம்</p><p>கன்னி - உழைப்பு</p> <p>துலாம் - சாதனை</p><p>விருச்சிகம் - சாதனை</p><p>தனுசு - முயற்சி</p><p>மகரம் - சுகம்</p><p>கும்பம் - விருத்தி</p><p>மீனம் - உற்சாகம்</p> ]]></content:encoded></item><item><title>மதுரை அருகே பயங்கர விபத்து - சென்னையை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/car-accident-near-madurai-4-dead</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/car-accident-near-madurai-4-dead#comments</comments><guid isPermaLink="false">2d88e209-61ed-4a6c-8b01-2e83a868fadc</guid><pubDate>Mon, 03 Aug 2026 02:33:06 +0000</pubDate><atom:updated>2026-08-03T02:33:06.050Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கார் விபத்து,Car accident,மதுரை,madurai</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/h328g1vi/accident-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/h328g1vi/accident-1.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p><p>சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் தனது குடும்பத்தினருடன் <a href="https://www.maalaimalar.com/topic/trichy">திருச்சி</a> சென்ற போது, மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்ரீரராம், அவரது மனைவி ரஞ்சனா, ஒன்றரை வயது குழுந்தை பிரனிதா உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><h2>தீவிர சிகிச்சை:</h2><p>மேலும், மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு மேலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இருசக்கர வாகனத்தின் மீது தனது கார் மோதுவதை தவிர்க்க காரை ஓட்டி வந்த ஸ்ரீராரம் காரை வலது புறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு காரின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது.</p><h2>பெரும் சோகம்:</h2><p>இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்து, இடிபாடுகளில் சிக்கிய காரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலையிலேயே நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-3-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-3-august-2026#comments</comments><guid isPermaLink="false">352ddef9-be69-4a68-b082-311ef7393ea6</guid><pubDate>Mon, 03 Aug 2026 02:24:24 +0000</pubDate><atom:updated>2026-08-03T02:24:24.442Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/lultzg19/petrol.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Petrol Diesel ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-14/lultzg19/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (3.8.2026 - (திங்கள்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட்: காவல் துறையுடனான மோதலில் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர் சுட்டுக் கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/man-accused-of-criminal-activities-shot-dead-in-police-encounter-in-jharkhand</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-accused-of-criminal-activities-shot-dead-in-police-encounter-in-jharkhand#comments</comments><guid isPermaLink="false">10b634db-5e07-4fbc-9d7f-b8999339a93e</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:55:59 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:55:59.691Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜார்கண்ட்,Jharkhand,என்கவுண்டர்,police encounter</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vxvqeo1e/Jamtara-SP-Shambhi-Kumar-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vxvqeo1e/Jamtara-SP-Shambhi-Kumar-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாஹிப்கஞ்ச் சிறையில் இருந்து தன்பாத் சிறைக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தபோது, ​​ஜம்தாரா மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை நடைபெற்ற போலீஸ் மோதலில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சுஜித் சின்ஹா ​​கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/jharkhand">ஜார்க்கண்ட்</a> காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p>இதுகுறித்து காவல் துறையினர் அளித்த தகவலின்படி, கைதிகளை ஏற்றி சென்ற வாகனம் பயணத்தின்போது விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து நடந்த மோதலில் சின்ஹா ​​கொல்லப்பட்டார்.</p><h2>தீவிர விசாரணை:</h2><p>மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடயவியல் குழுவும் வரவழைக்கப்பட்டது. அதேவேளையில், அனைத்து சட்ட மற்றும் நடைமுறை விதிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் ஒரு மாஜிஸ்திரேட் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.</p><p>இந்த மோதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் முழு வரிசையையும் கண்டறிய விசாரணையும் தடயவியல் ஆய்வும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜம்தாரா மாவட்டகாவல் கண்காணிப்பாளர் (SP) ஷாம்பி குமார் சிங், "சுஜித் சின்ஹா ​​சாஹிப்கஞ்ச் சிறையில் இருந்து தன்பாத் சிறைக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தார். பயணத்தின்போது வாகனம் விபத்துக்குள்ளானது.</p><p>அதைத் தொடர்ந்து போலீஸ் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது, மேலும் மாஜிஸ்திரேட்டும் சம்பவ இடத்தில் உள்ளார்," என்று கூறினார்.</p><h2>தடயவியல் ஆய்வு:</h2><p>தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) வழிகாட்டுதல்களின்படி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்படும் தடயவியல் ஆய்வு மோதல் தொடர்பான துல்லியமான சூழலை தீர்மானிக்க உதவும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.</p><p>"நாங்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக பின்பற்றி வருகிறோம். மாஜிஸ்திரேட் முன்னிலையில் சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்படும் முழுமையான ஆய்வு, மீதமுள்ள அம்சங்களை தெளிவுபடுத்த உதவும்," என்று காவல் கண்காணிப்பாளர் மேலும் கூறினார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி மேலோங்கும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-3-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-3-august-2026#comments</comments><guid isPermaLink="false">b8ecf373-a672-4bae-bdf6-a9381ee68e38</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:53:54 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:53:54.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-26/5jm25v3a/rasipalan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-26/5jm25v3a/rasipalan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மிகப் பயணம் உண்டு. தொழில் சீராக இருக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.</p> <h2>மிதுனம்</h2><p>கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டம் தீட்டுவீர்கள்.</p><h2>கடகம்</h2><p>யோகமான நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.</p> <h2>சிம்மம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நிலையான போக்கு இருக்காது.</p><h2>கன்னி</h2><p>கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றிக்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். அதிக முதலீடுகள் செய்து தொழிலை விரிவுபடுத்த நினைப்பீர்கள்.</p> <h2>துலாம்</h2><p>மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் விலகும். கடன் சுமை குறையும்.</p><h2>விருச்சிகம்</h2><p>ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்புக் கிட்டும். விரும்பிய காரியத்தை செய்து முடிப்பீர்கள். புது முயற்சி வெற்றி தரும்.</p> <h2>தனுசு</h2><p>ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வாகன யோகம் உண்டு. அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.</p><h2>மகரம்</h2><p>யோகமான நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் அதிரடி மாற்றங்களை மேலதிகாரிகள் செய்வர்.</p> <h2>கும்பம்</h2><p>நல்லது நடக்கும் நாள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டுகள் கிடைக்கும்.</p><h2>மீனம்</h2><p>ஆரோக்கியம் சீராகும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வியாபார ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p> ]]></content:encoded></item><item><title>வளைகுடா தலைவர்களால் தான் ஈரான் மீதான புதிய தாக்குதல்கள் தள்ளிவைக்கப்பட்டன - அதிபர் டிரம்ப் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-said-gulf-leaders-input-weighed-heavily-in-decision-to-hold-off-on-ordering-new-iran-strikes</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-said-gulf-leaders-input-weighed-heavily-in-decision-to-hold-off-on-ordering-new-iran-strikes#comments</comments><guid isPermaLink="false">6811fbc5-81cd-4565-bd5b-f8666c577777</guid><pubDate>Mon, 03 Aug 2026 01:14:15 +0000</pubDate><atom:updated>2026-08-03T01:14:15.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஈரான்,Iran,Gulf Leaders</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/f0766le0/Donald-Trump-5.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/f0766le0/Donald-Trump-5.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துமாறு அமெரிக்க படைகளுக்கு உத்தரவிடுவதை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> தெரிவித்தார். கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நட்பு நாடுகளின் வலியுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.</p><p>இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரிய தாக்குதலை <a href="https://www.maalaimalar.com/topic/US">அமெரிக்க</a> படைகள் நடத்துவதற்கான திட்டம் தயாராக இருந்ததாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். </p><p>ஆனால், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய வளைகுடா நாட்டு தலைவர்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகும், பெயர் குறிப்பிடப்படாத ஈரான் அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரிலும், அந்த திட்டத்தை கைவிட்டு, இராஜதந்திர முயற்சிகளுக்கு மேலும் கால அவகாசம் அளிக்க அவர் முடிவு செய்தார்.</p><h2>எதை விரும்புகிறீர்கள்?</h2><p>நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டரில் உள்ள தனது கோல்ஃப் கிளப்பில் வார இறுதி நாட்களை கழித்துவிட்டு வாஷிங்டனுக்குத் திரும்பும் வழியில், 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "நான் இளவரசரிடம், 'நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? நாங்கள் இதை செய்வதையா அல்லது செய்யாமல் இருப்பதையா?' என்று கேட்டேன்," என்று கூறினார்.</p><p>"தாக்குதலை விட ஒரு ஒப்பந்தத்தையே நாங்கள் பெரிதும் விரும்புகிறோம் என்று அவர்கள் கூறினார்கள்; ஏனெனில் இத்தகைய தாக்குதல்கள் எங்கு போய் முடியும் என்று யாருக்கும் தெரியாது," என்றும் அவர் தெரிவித்தார்.</p><h2>புதிய ஒப்பந்தம்:</h2><p>ஐந்து மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தின் "அடிப்படை அம்சங்களை" மத்திய கிழக்கு நட்பு நாடுகள் எட்டியுள்ளதாக சமூக ஊடக பதிவு ஒன்றில் டிரம்பும் இளவரசரும் இது குறித்து பேசினர்.</p><p>உருவாகி வரும் இந்த ஒப்பந்தத்தில் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த அமெரிக்காவின் கவலைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவை அடங்கும் என்று டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p>அமெரிக்காவுடனான மோதலின் ஒரு பகுதியாக, தனது அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல முயலும் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.</p><h2>பேச்சுவார்த்தை இல்லை:</h2><p>மேலும், போர் தொடங்கிய நாளான பிப்ரவரி 28-க்கு முன்பு இருந்த நிலைக்கு ஹார்முஸ் நீரிணை "எந்த வகையிலும் திரும்ப போவதில்லை" என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் கூறினார். ஈரானிய அரசு தொலைக்காட்சியுடனான உரையாடலில், ஹார்முஸ் நீரிணையின் மறுபுறம் உள்ள ஓமானுடன் அந்த நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மேற்கொள்வது குறித்து ஈரான் விவாதித்து வருவதாகவும், ஆனால் அந்த முக்கியமான நீர்வழியை மீண்டும் திறப்பது குறித்த பேச்சுவார்த்தை எதுவும் தற்போது நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, பல சந்தர்ப்பங்களில் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்; இருப்பினும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்து மீண்டும் மோதல்கள் வெடித்தன.</p><p>டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, தங்கள் நாடு "ஆச்சரியப்படவோ அல்லது செயலற்றிருக்கவோ இல்லை" என்று ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்; மேலும், அமெரிக்காவிடம் இருந்து வரும் உறுதியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஈரான் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>2030இல் இந்தியாவில் சங்கமிக்கும் உலக வீரர்கள்.. காமன்வெல்த் கொடியை பெற்றுக்கொண்ட நீரஜ் சோப்ரா - பி.டி. உஷா</title><link>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-2026-glasgow-closing-ceremony-india-wins-39-medals-ahmedabad-to-host-2030-edition</link><comments>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-2026-glasgow-closing-ceremony-india-wins-39-medals-ahmedabad-to-host-2030-edition#comments</comments><guid isPermaLink="false">b0549700-90dd-4377-b585-e904317013f3</guid><pubDate>Mon, 03 Aug 2026 00:12:59 +0000</pubDate><atom:updated>2026-08-03T00:12:59.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ahmedabad,Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Scotland,ஸ்காட்லாந்து,அகமதாபாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0u2wex5f/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நீரஜ் சோப்ரா - பி.டி. உஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ நீரஜ் சோப்ரா - பி.டி. உஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/0u2wex5f/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கோலாகலமாக நடைபெற்று வந்த <a href="https://www.maalaimalar.com/sports/2026-commonwealth-games-conclude-notable-achievements">2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் </a>அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன.</p><p>இசை நிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் கொடி இறக்கப்பட்டு, போட்டிகள் முடிவுக்கு வந்தன.</p><p>இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார்.</p><p>"2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 100வது ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரை கொண்டாட, உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களை இந்தியாவின் அகமதாபாத் நகருக்கு அன்போடு அழைக்கிறேன்" என்று அவர் பேசினார்.</p> <h2>நிறைவு</h2><p>நிறைவு விழாவில் ஸ்காட்டிஷ் மற்றும் இந்திய பாரம்பரியக் கலைகளை ஒருங்கிணைத்து இந்தோ-ஸ்காட்டிஷ் கலாச்சார இசை மற்றும் நடன நிகழ்வு அரங்கேறியது.</p><p>"உலகம் ஒரே குடும்பம்" என்ற இந்தியத் தத்துவத்தை மையமாகக் கொண்டு இந்தியக் கலை நிகழ்ச்சிகள் அமைந்தன.</p><p>வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாடும் வகையில், நடிகை மனுஷி சில்லார் தலைமையில் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் மற்றும் ஷங்கர் மகாதேவனின் இசையுடன் பிரம்மாண்ட நடன நிகழ்வு நடைபெற்றது.</p><p>பிரபல பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளுடன் அனைத்து நாடுகளின் கொடியேந்திகள் அணிவகுத்து வந்தனர்.</p><p>இந்திய அணி சார்பில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தேசியக் கொடியை ஏந்தி வந்தார்.</p><p>விழா முடிவில், 2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் அகமதாபாத் நகரத்திற்காக, இந்தியாவின் சார்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவி பி.டி. உஷா மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் காமன்வெல்த் கொடியைப் பெற்றுக்கொண்டனர்.</p> <h2>பட்டியல்</h2><p> 2026 காமன்வெல்த் தொடரில் இந்தியாவின் 39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் அடங்கும்.</p><p>13 தங்கம், ஒன்பது வெள்ளி உட்பட 39 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 5வது இடத்தில் உள்ளது.</p><p>68 தங்கம், 41 வெள்ளி மற்றும் 54 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 163 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதலித்தில் உள்ளது.</p><p>26 தங்கம், 43 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 105 பதக்கங்களைப் பெற்று இங்கிலாந்து இரண்டாம் இடம் பிடித்தது.</p><p>18 தங்கம், 20 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 59 பதக்கங்களை அடைந்து மூன்றாம் கனடா இடத்தில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்தகட்ட நகர்வு.. ஆகஸ்ட் 5 அறிவிக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி 
</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-fallout-dharmendra-pradhan-quits-cjb-to-decide-next-political-moves</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-fallout-dharmendra-pradhan-quits-cjb-to-decide-next-political-moves#comments</comments><guid isPermaLink="false">360fd072-3fb0-4fe1-b7e6-33faca764e78</guid><pubDate>Sun, 02 Aug 2026 23:51:18 +0000</pubDate><atom:updated>2026-08-02T23:51:18.147Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party,CJP Protest,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/9weqp9ql/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி 
]]></media:title><media:description type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/9weqp9ql/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான், கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த ஜூன் 20 முதல் 1 மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது. </p><p>இதன் விளைவாக கடந்த வாரம் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சிறப்பு மசோதா, விரைவு நீதிமன்றங்கள், உயர்மட்ட குழு உள்ளிட்ட அறிவிப்புகளை பல மாத மௌனத்தை கலைத்து பிரதமர் மோடி அடுத்தடுத்து வெளியிட்டார். </p><p>இந்த போராட்டத்தின் வெற்றியை தொடர்ந்த சிஜேபி கட்சி தனது அடுத்த செயல்திட்டத்தை குறித்து முடிவெடுக்க உள்ளது. </p><p>போராட்டத்திற்குப் பிறகு, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.</p> <p>இந்நிலையில் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் சிஜேபி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/news/national/trouble-for-the-cockroach-party-founder-where-did-the-money-for-us-studies-come-from-new-petition-seeks-rti-inquiry">அபிஜித் தீப்கே</a> வீட்டில், முக்கிய நிர்வாகிகள் வரும் ஆகஸ்ட் 5 அன்று இதுகுறித்து ஆலோசிக்க கூடுகின்றனர்.</p><h2>ஆலோசனை </h2><p>நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் மற்றும் தொண்டர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, ஆகஸ்ட் 5 ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>இதில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>ஆகஸ்ட் 5 அன்று நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துத் தங்களது அடுத்தகட்ட முடிவுகளை சிஜேபி அறிவிக்கவுள்ளது.</p><p>இதனிடையே, தனது இல்லத்தில் அப்பகுதி மாணவர்களை சந்தித்த அபிஜித் தீப்கே நேற்று நண்பர்கள் தினத்தை கொண்டாடினார்.</p> <h2>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</h2><p>உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலையற்ற இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என அழைத்தன் எதிர்வினையாக இணையத்தில் தொடங்கப்பட்ட சிஜேபி இயக்கத்துக்கு இளைஞர்களும் மற்றும் ஜென் இசட் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. </p><p>தொடர்ந்து நாட்டில் நடைபெற்ற நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை கையில் எடுத்த சிஜேபி தெருக்களுக்கு வந்தது. கல்வியாளர் சோனம் வாங்சுக் இப்போராட்டத்தில் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது சிஜேபி வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது. </p><p>தங்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் நோக்கம் இல்லை என அதன் நிர்வாகிகள் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>கஜினி படத்துல இருந்தே சூர்யா சார் மேல எனக்கு க்ரஷ் - விஸ்வநாத் &amp; சன்ஸ் இசை வெளியீட்டு விழாவில் மமிதா </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/suriyas-viswanath-sons-audio-launch-mamitha-reveals-crush-new-song-gains-buzz</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/suriyas-viswanath-sons-audio-launch-mamitha-reveals-crush-new-song-gains-buzz#comments</comments><guid isPermaLink="false">bdae61fb-2ecb-44bb-8bd2-0f0b109abd32</guid><pubDate>Sun, 02 Aug 2026 23:16:00 +0000</pubDate><atom:updated>2026-08-02T23:16:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,mamitha baiju,மமிதா பைஜூ,Surya,விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்,Viswanathan &amp; Sons</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/3a9abmcb/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஸ்வநாத் & சன்ஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ விஸ்வநாத் & சன்ஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/3a9abmcb/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'கருப்பு' படத்தை தொடர்ந்து நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">சூர்யா</a>வின் 46வது படமாக ‘விஸ்வநாத் &amp; சன்ஸ்’ படம் உருவாகியுள்ளது. </p><p>தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.</p><p>'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் ஒரு நடுத்தர வயது விளையாட்டு வீரருக்கும், அவர் மீது ஈர்ப்பு கொள்ளும் இளம் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தை கொண்டுள்ளது என டிரெய்லர் மூலம் அறிய முடிகிறது. </p><p>இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள சூர்யா இன்று விமான மார்க்கமாக கோவை வந்தடைந்தார். </p><p>இந்த விழாவில் படத்தின் நாயகி மமிதா பைஜூ, படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகர் சுனில், நடிகை ராதிகா, இயக்குநர் அட்லூரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். </p><p>இந்நிகழ்வில் பேசிய நடிகை மமிதா, சூர்யா மீது தனக்கு இருந்த க்ரஷ்-ஐ தெரிவித்துள்ளார். </p> <h2>மமிதா பேச்சு</h2><p>மேடையில் மமிதா சூர்யா குறித்து பேசியதாவது, சூர்யா சாரை பார்த்து நிறைய கத்துருக்கேன்.</p><p>ஆஃப் ஸ்கிரின்ல இருந்தும் நிறைய இன்ஸ்பையர் பண்ணிருக்காரு. அவரோட சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இதுக்கு முன்னாடி மிஸ் ஆகிடுச்சு. ஆனா இந்த முறை அந்த வாய்ப்பு அமைஞ்சுடுச்சு. கஜினி படத்துல இருந்தே சூர்யா சார் மேல எனக்கு க்ரஷ்.</p><p>அவரோட சேர்ந்து வொர்க் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவரு ஒரு சீனை அப்ரோச் பண்ணுற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். </p><p>ஜிவி சார் கூட இரண்டாவது முறையாக வொர்க் பண்ணதுல ரொம்ப ஹாப்பி. ராதிகா மேம் செட்ல ஒரு மெண்டாராக எனக்கு இருந்தாங்க." என்றார்</p><p>‘விஸ்வநாத் &amp; சன்ஸ்’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.</p> <h2>பாடல்கள்</h2><p>‘விஸ்வநாத் &amp; சன்ஸ்’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.</p><p>நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் வெளியான இரண்டாவது பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.</p> <p>இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை, நடிகர் சூர்யாவே தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார்.</p><p>மேலும் கென் கருணாஸ் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல், ஒரு குடும்பத் திருமண விழாவின் கொண்டாட்டங்களை மையமாகக் கொண்டு துள்ளலான இசையுடன் பின்னப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய வரைபடத்தில் விடுபட்ட வடகிழக்கு.. சுட்டிக்காட்டிய வீராங்கனை லவ்லினா - திருத்திக்கொண்ட ஸ்காட்லாந்து உணவகம் </title><link>https://www.maalaimalar.com/sports/india-map-row-boxer-lovlina-flags-missing-northeast-in-glasgow-restaurant</link><comments>https://www.maalaimalar.com/sports/india-map-row-boxer-lovlina-flags-missing-northeast-in-glasgow-restaurant#comments</comments><guid isPermaLink="false">746fa1cc-987a-4dea-94cf-f3359f1a687c</guid><pubDate>Sun, 02 Aug 2026 22:09:00 +0000</pubDate><atom:updated>2026-08-02T22:09:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,வடகிழக்கு மாநிலங்கள்,northeastern states,Boxing,குத்துச்சண்டை,Lovlina,லவ்லினா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/nal0eids/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ லவ்லினா ]]></media:title><media:description type="html"><![CDATA[ லவ்லினா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/nal0eids/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் <a href="https://www.maalaimalar.com/sports/india-boxing-wins-seven-golds-sachin-and-ankush-clinch-titles-at-glasgow-commonwealth-games">குத்துச்சண்டை </a>அணி 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்றது.</p><h2>மிஸ்டர் சிங்ஸ் இந்தியா உணவகம்</h2><p>இந்த வரலாற்று சாதனையை கொண்டாடும் வகையில்,  கிளாஸ்கோ நகரில் உள்ள 'மிஸ்டர் சிங்ஸ் இந்தியா'  என்ற உணவகத்திற்கு  இந்திய வீரர் வீராங்கனைகள் சென்றுள்ளனர். </p><p>கிளாஸ்கோவில் மிகவும் பிரபலமான 'மிஸ்டர் சிங்ஸ் இந்தியா' உணவகம், விளையாட்டு வீரர்கள் மற்றும் முக்கியப் பிரபலங்கள் பலர் வந்து செல்லும் உணவகமாகும். </p><p>நேற்று 75 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை லவ்லினா போர்கோஹைனும் சென்றுள்ளார். </p><p>உணவகத்தில் பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் மற்றும் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில் வடகிழக்கு மாநிலங்கள் விடுவிக்கப்பட்டிருப்பதை அவர் கவனித்துள்ளார்.</p> <h2>லவ்லினா</h2><p>இது குறித்து லவ்லினா அங்கு பேசிய வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.</p><p>அதில் அவர், "தயவுசெய்து இதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதைப் பார்த்தபோது எனக்குச் சற்று மனவருத்தமாக இருந்தது.</p><p>இந்த இந்திய வரைபடத்தில் எங்கள் வடகிழக்குப் பகுதியைக் காணவில்லை. வெளியிலும் வடகிழக்கு பகுதி நீக்கப்பட்ட வரைபடமே வைக்கப்பட்டுள்ளது.</p><p>வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில் இது எங்களுக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. அடுத்த முறை இதைக் கவனத்தில் கொள்ளுங்கள், நன்றி." என சுட்டிக்காட்டினார்.</p> <h2>அஜய் சிங்</h2><p>இது குறித்து இந்தியக் குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் அளித்த பேட்டியில், "உணவக நிர்வாகத்துடன் எந்த மோதலோ அல்லது வாக்குவாதமோ ஏற்படவில்லை. நானும் லவ்லினாவும் அந்தத் தவறான வரைபடத்தை அவர்களிடம் சுட்டிக்காட்டினோம்.</p><p>உணவக நிர்வாகத்தினர் உடனடியாகத் தங்களது தவறை ஒப்புக்கொண்டு, வரைபடத்தை விரைவில் சரிசெய்வதாக உறுதியளித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>2026 காமன்வெல்த்  போட்டிகள் நிறைவு.. கவனிக்கத்தக்க சாதனைகள் </title><link>https://www.maalaimalar.com/sports/2026-commonwealth-games-conclude-notable-achievements</link><comments>https://www.maalaimalar.com/sports/2026-commonwealth-games-conclude-notable-achievements#comments</comments><guid isPermaLink="false">04480b6f-3a11-4aa7-a486-68b80f7766b9</guid><pubDate>Sun, 02 Aug 2026 21:14:25 +0000</pubDate><atom:updated>2026-08-02T21:14:25.594Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Scotland,ஸ்காட்லாந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/eg93shn0/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 2026 காமன்வெல்த்  போட்டிகள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ 2026 காமன்வெல்த்  போட்டிகள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/eg93shn0/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கோலாகலமாக நடைபெற்று வந்த<a href="https://www.maalaimalar.com/sports/commonwealth-games-medal-tally-india-finishes-fourth-with-39-medals-in-glasgow"> 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் </a>அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன. </p><p>இசை நிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் கொடி இறக்கப்பட்டு, போட்டிகள் முடிவுக்கு வந்தன.</p> <h2>பட்டியல்</h2><p>இந்தியாவின் 39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் அடங்கும்.</p><p>13 தங்கம், ஒன்பது வெள்ளி உட்பட 39 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 5வது இடத்தில் உள்ளது.</p><p>68 தங்கம், 41 வெள்ளி மற்றும் 54 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 163 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதலித்தில் உள்ளது.</p><p>26 தங்கம், 43 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 105 பதக்கங்களைப் பெற்று இங்கிலாந்து இரண்டாம் இடம் பிடித்தது.</p><p>18 தங்கம், 20 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 59 பதக்கங்களை அடைந்து மூன்றாம் கனடா இடத்தில் உள்ளது.</p> <h2>தொடரின் நாயகர்கள்</h2><p>34 வயதான சத் லே குளோஸ் தென் ஆப்பிரிக்க நீச்சல் வீரர் சத் லே குளோஸ் இத்தொடரில் 3 பதக்கங்களை வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் தொடர்களில் இவர் வென்ற பதக்கங்களில் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது. காமன்வெல்த் வரலாற்றிலேயே அதிக பதக்கம் வென்ற வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.</p><p>போட்டியில் வேல்ஸ் நாட்டின் டிராக் சைக்கிளிங் வீராங்கனை எம்மா பினுக்கேன் ஒரே காமன்வெல்த் தொடரில் 4 தங்கப் பதக்கங்களை வென்று ஒரே தொடரில் 4 தங்கம் வென்ற முதல் சைக்கிளிங் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.</p> <h2>இந்திய சாதனை</h2><p>10 விளையாட்டுகள் மட்டுமே இடம்பெற்ற இத்தொடரில், இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.</p><p>இந்தியாவிற்கு அதிக பதக்கங்களை அள்ளிக் கொடுத்த விளையாட்டாகக் குத்துச்சண்டை அமைந்தது. அதில் மட்டுமே ஆண்கள், பெண்கள் பிரிவை சேர்த்து இந்தியா 7 தங்க பதக்கங்களை கொண்டுள்ளது.</p> <figure><img alt="இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் லவ்லினா, ஜாஸ்மின் லம்போரியா, பிரியா கங்காஸ், பிரீத்தி பவார், சாக்ஷி சவுத்ரி, அருந்ததி சவுத்ரி  (இடமிருந்து வலம்) 
" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/k6jm3um9/tn-18.jpg" /><figcaption>இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் லவ்லினா, ஜாஸ்மின் லம்போரியா, பிரியா கங்காஸ், பிரீத்தி பவார், சாக்ஷி சவுத்ரி, அருந்ததி சவுத்ரி  (இடமிருந்து வலம்) 
</figcaption></figure><h2>இளம் வீரர்கள் வருகை</h2><p>ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தவிர்த்து, தேஜஸ்வின் சங்கர், யாஷ்வீர் சிங் மற்றும் பல இளம் வீரர்கள் தடகளப் பிரிவில் பதக்கங்களை வென்றுள்ளனர். </p><p>ஜூடோ, பளுதூக்குதல் மற்றும் குத்துச்சண்டையில் இளம் வீரர்கள் பதக்கங்களை வென்று எதிர்கால நம்பிக்கையை விதைத்துள்ளனர்.</p>  <h2>அடுத்த இலக்கு</h2><p>காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்திய வீரர்களின் அடுத்தகட்ட இலக்கு ஜப்பானில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.</p><p>சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற வல்லரசுகள் பங்கேற்பதால் அங்குப் போட்டி கடுமையாக இருக்கும்.</p> ]]></content:encoded></item><item><title>கிரீஸ்: காட்டுத் தீயை அணைக்கும்போது 2 தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்து </title><link>https://www.maalaimalar.com/news/world/greece-firefighting-helicopters-crash-two-choppers-collide-mid-air-near-athens-during-wildfire-mission</link><comments>https://www.maalaimalar.com/news/world/greece-firefighting-helicopters-crash-two-choppers-collide-mid-air-near-athens-during-wildfire-mission#comments</comments><guid isPermaLink="false">691bc97a-0aa1-40e9-a8aa-e2fa559133a5</guid><pubDate>Sun, 02 Aug 2026 20:34:26 +0000</pubDate><atom:updated>2026-08-02T20:34:26.662Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரீஸ்,greece,helicopter crash,ஹெலிகாப்டர் விபத்து,காட்டுத் தீ,wildfire</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/r310kti4/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிரீஸ் விபத்து ]]></media:title><media:description type="html"><![CDATA[ கிரீஸ் விபத்து ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/r310kti4/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே <a href="https://www.maalaimalar.com/news/world/europe-wildfires-crisis-heat-fuelled-forest-fires-in-france-and-spain-affect-220000-people">காட்டுத்தீயை </a>அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. </p><p>ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள போர்ட்டோ ஜெர்மெனோ பகுதியில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின. </p> <h2>தேடுதல்</h2><p>கிரீஸ் தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மோதிக்கொண்ட ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா இரண்டு விமானப் படை வீரர்கள் என மொத்தம் 4 பேர் இருந்தனர்.</p><p>விபத்து நடந்த இடத்தில் தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், விமானிகளின் நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p>விபத்தில் ஒரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.</p><h2>ஐரோப்பாவில் தீ</h2><p>ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் காட்டுத்தீ பரவலாக தீவிரமடைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் காட்டுத் தீயானது தன் தலைநகர் பாரிஸை விட 4 மடங்கு பெரிய பரப்பளவை எரித்து சாம்பலாக்கியுள்ளது.</p><p>சுமார் 2,24,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>தீயை அணைக்க ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், ராணுவம், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரத்யேக விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.</p> <p>வீசும் கடுமையான காற்று, வறண்ட நிலப்பரப்பு மற்றும் காற்றில் குறைந்த ஈரப்பதம் ஆகியவை தீயை விரைவாகப் பரவச் செய்வதால், தணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p><p>இருப்பினும் ஸ்பெயினின் பல்வேறு பகுதிகளில் பரவி வந்த காட்டுத் தீயின் வேகம், தீயணைப்பு வீரர்களின் தொடர் முயற்சியால் தற்போது சற்றுக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்ட இந்த காட்டுத் தீ காரணமாக சுமார் 3.5 லட்சம் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p>வானிலை முக்கியக் காரணமாகக் கருதப்பட்டாலும், திட்டமிட்டு நாசவேலையில் ஈடுபட தீ வைக்கப்பட்டதா அல்லது மனிதத் தவறுகளால் தீ வைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.</p><p>முன்னதாக இந்த வார தொடக்கத்தில் அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜுவான் மாகாணத்தில் தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்களுக்கு காதலை விட மரியாதையை அதிகம் கொடுங்கள் - ‘விஸ்வநாத் &amp; சன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/suriya-stresses-enduring-love-and-respect-for-women-at-viswanath-sons-audio-launch</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/suriya-stresses-enduring-love-and-respect-for-women-at-viswanath-sons-audio-launch#comments</comments><guid isPermaLink="false">2575f795-a7bd-4ea3-ab7c-91ef67fc70e2</guid><pubDate>Sun, 02 Aug 2026 19:36:31 +0000</pubDate><atom:updated>2026-08-02T19:36:31.545Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,mamitha baiju,மமிதா பைஜூ,விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்,Viswanathan &amp; Sons</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/q78ygwah/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ‘விஸ்வநாத் & சன்ஸ்’]]></media:title><media:description type="html"><![CDATA[ ‘விஸ்வநாத் & சன்ஸ்’]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/q78ygwah/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'கருப்பு' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 46வது படமாக ‘<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">விஸ்வநாத் &amp; சன்ஸ்</a>’ படம் உருவாகியுள்ளது. </p><p>தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.</p><p>'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் ஒரு நடுத்தர வயது விளையாட்டு வீரருக்கும், அவர் மீது ஈர்ப்பு கொள்ளும் இளம் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தை கொண்டுள்ளது என டிரெய்லர் மூலம் அறிய முடிகிறது. </p><p>இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள சூர்யா இன்று விமான மார்க்கமாக கோவை வந்தடைந்தார். </p><p>இந்த விழாவில் படத்தின் நாயகி மமிதா பைஜூ, படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகர் சுனில், நடிகை ராதிகா, இயக்குநர் அட்லூரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். </p><p>இந்நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா பெண்கள், அவர்கள் மீதான காதல் மற்றும் மரியாதை குறித்து பேசியுள்ளார். </p> <h2>சூர்யா பேச்சு</h2><p>மேடையில் சூர்யா பேசியதாவது, "காதல் என்பது என்றும் மாறாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது தாலி கட்டும் நாளில் மட்டும் உணரப்படும் ஒன்று அல்ல. ஒவ்வொரு நாளும் நாம் காதலிக்க வேண்டும்.</p><p>ஒருவருடன் 20 ஆண்டுகள் வாழ்ந்தாலும், அந்த அன்பும் காதலும் தொடர வேண்டும். உங்கள் துணை மீது எப்போதும் மரியாதையும் அன்பும் குறையாமல் இருக்க வேண்டும்.</p><p>காலப்போக்கில் ஒவ்வொருவரும் மாறுகிறார்கள். நாமும் மாறுகிறோம், நம் துணையும் மாறுவார்.</p><p>20, 25 அல்லது 30 வயதில் நமது முன்னுரிமைகள் வேறாக இருக்கும். நமது சிந்தனைகள் மாறலாம், வாழ்க்கை எந்தப் பாதையிலும் செல்லலாம். ஆனால், நமது துணை மீது நாம் வைத்துள்ள அன்பும் பாசமும் ஒருபோதும் மாறக்கூடாது."</p> <p>ஒரு பெண் ஒரு நிலையை அடையக் கடந்து வரும் பாதையானது, ஒரு ஆண் கடந்து வருவதை விட மிகவும் கடினமானது.</p><p>ஒரு வீட்டைக் கவனித்துக் கொள்வதிலும், ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதிலும் பெண்கள் எவ்வளவோ விட்டுக் கொடுத்துத் தியாகங்களைச் செய்கிறார்கள்.</p><p>அவர்களின் தியாகங்களுக்கு எப்போதும் மதிப்பளியுங்கள். அந்த மரியாதையுடன் முடிந்தவரை உறுதியாக நில்லுங்கள். உண்மையில் காதலை விட மரியாதையை அதிகம் அவர்களுக்குக் காட்டுங்கள்." என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முடிவுக்கு வரும் 2026 காமன்வெல்த் போட்டிகள்: 39 பதக்கங்களுடன் இந்தியா 4ஆம் இடம்! - முதலிடம் யார்?</title><link>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-medal-tally-india-finishes-fourth-with-39-medals-in-glasgow</link><comments>https://www.maalaimalar.com/sports/commonwealth-games-medal-tally-india-finishes-fourth-with-39-medals-in-glasgow#comments</comments><guid isPermaLink="false">716eb3fa-b3d9-4e11-ba89-c2fe44f5d5b6</guid><pubDate>Sun, 02 Aug 2026 18:42:42 +0000</pubDate><atom:updated>2026-08-02T18:42:42.404Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Scotland,ஸ்காட்லாந்து,cycling,சைக்கிளிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/o20ad3aq/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காமன்வெல்த் போட்டிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ காமன்வெல்த் போட்டிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/o20ad3aq/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/india-advances-to-fourth-with-18-medals-in-a-day-at-commonwealth-games">2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்</a> இந்தியாவின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. </p><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற இப்போட்டிகளில், இந்தியா 39 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. </p><p>தற்போது, ​​பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. </p><h2>பட்டியல் </h2><p>இந்தியாவின் 39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் அடங்கும்.    </p><p>13 தங்கம்,  ஒன்பது வெள்ளி உட்பட 39 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஸ்காட்லாந்து மேலும் தங்கப் பதக்கங்களை வென்றால், அது நான்காவது இடத்தை அடைந்திருக்கும். அதே நேரத்தில் இந்தியா ஐந்தாவது இடத்திற்குச் சரியும்.</p><p> 68 தங்கம், 41 வெள்ளி மற்றும் 54 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 163 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதலித்தில் உள்ளது. </p><p>26 தங்கம், 43 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 105 பதக்கங்களைப் பெற்று இங்கிலாந்து இரண்டாம் இடம் பிடித்தது.</p><p>18 தங்கம், 20 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 59 பதக்கங்களை அடைந்து மூன்றாம் கனடா  இடத்தில் உள்ளது. </p> <h2>முடிவுக்கு வந்த 40வது பதக்க எதிர்பார்ப்பு</h2><p>இன்று நடந்த பாரா சைக்கிளிங் போட்டியில் இந்தியாவின்16 வயது லிஷா தாஸ் ஏமாற்றத்தைச் சந்தித்தார். லிஷா ஆறாவது இடத்தைப் பிடித்தார். அவரால் பதக்கம் வெல்ல முடியாததால், 40 பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு முடிவுக்கு வந்தது.</p><p>முன்னதாக மகளிர் 78 கிலோ எடைப் பிரிவில் போட்டியில், இஷ்ரூப் நாரங் கனடாவின் கோரலி காட்பவுட்டிடம் தோல்வியடைந்தார்.</p> <h2>கொடி ஏந்தல்</h2><p>இன்றிரவு 1.30 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் 24 வயதான குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா இந்தியாவின் கொடி ஏந்திச் செல்வார். நேற்று மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் அவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான்: காவல் நிலையம் அருகே அமைதி பேரணியில் தற்கொலைப் படை தாக்குதல் - 14 பேர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-swat-suicide-bombing-14-killed-and-over-20-injured-during-peace-rally</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-swat-suicide-bombing-14-killed-and-over-20-injured-during-peace-rally#comments</comments><guid isPermaLink="false">c6e263c8-13c4-4f2f-bc97-109110f992da</guid><pubDate>Sun, 02 Aug 2026 18:01:13 +0000</pubDate><atom:updated>2026-08-02T18:01:13.894Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,பயங்கரவாத தாக்குதல்,suicide attack,Khyber Pakhtunkhwa,கைபர் பக்துன்கவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/agqy4oz4/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாகிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/agqy4oz4/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் <a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-drone-terror-strike-11-policemen-killed-at-hangu-checkpoint-near-afghanistan-border">கைபர் பக்துன்கவா</a> மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில் கபல் சவுக் பகுதியில்  பயங்கரவாதத்திற்கு எதிராக  ஸ்வாட் ஆமன் ஜிர்கா என்ற அமைப்பின் தலைமையில் உள்ளூர் மக்களின் அமைதிப் பேரணி இன்று நடைபெற்றது. </p><p>பேரணியில் பேச்சாளர் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில், அருகில் உள்ள கபல் காவல் நிலையத்தின் நுழைவாயில் வழியே நுழைய முயன்ற நபரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்திச் சோதனை செய்ய முயன்றனர். </p><p>அப்போது, அந்த நபர் உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.</p> <h2>உயிரிழப்புகள்</h2><p>தொடக்கத்தில் 4 காவலர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்வாட் மாவட்ட காவல் செய்தித் தொடர்பாளர் நாசிர் இக்பால் கரிமி தெரிவித்துள்ளார்.</p><p>காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>விசாரணை</h2><p>சம்பவம் நடந்த இடம் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.</p><p>அமைதியை வலியுறுத்தி திரண்ட மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் பதற்றம்</p><p>2021இல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, TTP என அழைக்கப்படும் தெஹ்ரிக் இ பாகிஸ்தான் அமைப்பு கைபர் பக்துன்க்வாவில் வலுவடைந்துள்ளது.</p><p>பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் சமீபகாலமாக பயங்கரவாதத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.</p><p>TTP பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இருந்துகொண்டு அங்கிருந்து திட்டம் தீட்டி கைபர் பக்துன்க்வாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டுகிறது.</p><p>இதனால் இரு நாடுகள் இடையே ராணுவ மோதல் அவ்வப்போது வெடித்து அடங்குகிறது.</p><p>கைபர் பக்துன்க்வா பகுதியில் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு தாக்குதல்கள் உள்ளூர் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 2 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">48999084-21c9-4682-8ced-862e589bbdef</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:01:11 +0000</pubDate><atom:updated>2026-08-02T17:04:47.979Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-offers-condolences-on-iuml-president-kader-mohideen-sons-death">IUML தேசியத் தலைவர் காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்</a></p><p>தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-water-release-cut-to-10000-cusecs-warning-to-riverbank-residents-continues">கபினி அணையில் நீர் திறப்பு 10,000 கன அடியாக குறைப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை தொடர்கிறது!... </a></p><p>*இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முயற்சித் நிலையில் இயற்கையே தற்போது கைகொடுத்துள்ளது.</p><p>*கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கர்நாடக-தமிழக எல்லையான 'பிலிகுண்டுலு' பகுதி வழியாக தமிழகத்திற்கு வந்தடையும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-jump-to-fourth-after-day-10-australia-continue-to-lead-medal-standings">காமன்வெல்த் விளையாட்டு: டாப் 5 பட்டியலில் சட்டென முன்னேறிய இந்தியா</a></p><p>* இந்திய அணி இதுவரை 13 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.</p><p>* காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhir-warned-questions-will-be-asked-with-india-in-tough-fight-for-wtc-final-spot">உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறனும், இல்லைனா... எச்சரித்த கம்பீர்</a></p><p>* அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்படும்.</p><p>* ஏனென்றால், நாம் சொந்த மண்ணில் தோற்றிருக்கிறோம். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mumbai-indians-have-denied-hardik-pandya-negotiations-with-csk-or-other-outfits-at-present">ஹர்திக் பாண்ட்யா விடுவிப்பா? - மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விளக்கம்</a></p><p>* கடந்த 3 சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.</p><p>* ஹர்திக் பாண்ட்யாவை வாங்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-camp-today-to-register-fingerprints-of-left-out-ration-cardholders">ரேசன் கடைகளில் விடுபட்டவர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்</a></p><p>* மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது.</p><p>* இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-says-us-halts-military-attack-on-iran">ஈரானுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை ரத்து செய்தது அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!... </a></p><p>*உலகின் நன்மைக்காகவும், ஈரானின் எதிர்கால வாழ்விற்காகவும் இந்த தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.</p><p>*அமெரிக்கப் படைகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் இல்லாத அளவிற்குத் தயாராக இருக்கின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-i-wear-coat-suit-too-vijay-prabhakaran-jabs-cm-vijay">நானும் கோட் ஷூட் போட்டால்.., முதல்வர் விஜயை சீண்டிய விஜய பிரபாகரன்</a></p><p>*காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக சார்பில் போராட்டம்.</p><p>* நானும் கோட் ஷூட் கண்ணாடி எல்லாம் போட்டால், நானும் அழகாகதான் இருப்பேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-beach-cleanup-campaign-annamalai-launches">'WE THE LEADERS' இயக்கம் சார்பில் கடற்கரை தூய்மைப் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்!... </a></p><p>*கடற்கரை தூய்மை இயக்கம் கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.</p><p>* சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த மாநிலத் தழுவிய கடற்கரை தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-rights-dmk-mp-dayanidhimaran-critics-rahul-gandhi">தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்: ராகுல்காந்திக்கு தயாநிதி மாறன் பதிலடி</a></p><p>பாஜக-வின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெக-வின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே!</p><p>ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து X-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே!</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/broad-peak-avalanche-in-pakistan-claims-life-of-record-breaking-climber-nirmal-purja">பாகிஸ்தான் பிராட் பீக் சிகரத்தில் பனிச்சரிவு: புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பலி!... </a></p><p>*ஹெலிகாப்டர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு மீட்புக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p>*உலகின் 8,000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள 14 சிகரங்களையும் வெறும் '6 மாதங்கள் மற்றும் 6 நாட்களில்' ஏறி சாதனை படைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kaveri-water-dispute-tamil-nadu-politics">டி.கே. சிவக்குமார் உடன் சேர்ந்து கொண்டு திமுக முட்டுக்கட்டை: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு</a></p><p>* ஒரே மாநிலத்தில் காவிரி நதி நீர் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டால், அது குழப்பத்தை ஏற்படுத்தும்</p><p>* கடந்த முப்பது ஆண்டுகளாக காவிரி நதி நீர் பிரச்சனையில், தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுக தான்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-tn-cm-vijay-nirmal-kumar-dmk-former-miniser-regupathy">கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார்: காவிரி தொடர்பாக முதல்வர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி</a></p><p>* ஊடகங்களைச் சந்தித்தால் தனது இமேஜ் சரிந்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அஞ்சுவதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். </p><p>* ஆனால், காவிரி போன்ற முக்கியப் பிரச்சினையில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-won-the-title-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் தன்வி ஷர்மா</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு வீராங்கனை உன்னதி ஹூடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/litton-das-added-to-bangladesh-squad-for-darwin-test">ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் சேர்ப்பு</a></p><p>* முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13 முதல் 17 வரை டார்வினில் நடைபெறுகிறது.</p><p>* வங்கதேச அணி கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷான்டோ செயல்படுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/i-did-not-run-or-hide-i-have-seen-prison-senthil-balaji">'நான் சிறையைப் பார்த்தவன்'- திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான பின் செந்தில் பாலாஜி பேட்டி!... </a></p><p>*காவல்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-இல் எனது பெயரோ அல்லது எனது சகோதரர் அசோக் குமாரின் பெயரோ தொடக்கத்தில் இடம்பெறவில்லை. </p><p>*அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பின்னணியில் எங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியாக இந்தப் பொய் வழக்குகளை எதிர்கொண்டு முறியடிப்பேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/why-should-people-who-love-india-settle-in-dubai">இந்தியாவை நேசிப்பவர்கள் ஏன் துபாயில் குடியேற வேண்டும்? - விவேக் ஒபராய் மற்றும் ஆர். மாதவனை விமர்ச்சித்த ராஜ் தாக்கரே!</a></p><p>* மோடியை புகழும் நடிகர்கள் ஏன் துபாய் சென்றனர்</p><p>* இந்தியா நன்றாக இருந்தால் வெளிநாட்டில் ஏன் வாழ்கிறீர்கள்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/250-km-in-2-hours-donor-heart-races-via-vande-bharat-to-save-life">வந்தே பாரத் ரெயிலில் பறந்து வந்த இதயம்: சாதித்து காட்டிய இந்திய ரெயில்வே</a></p><p>* சூரத்தில் இருந்து புறப்​பட்டு அகம​தா​பாத்​துக்கு 2 மணி நேரத்தில் வந்தடைந்தது.</p><p>* இந்​திய ரெயில்வேயின் ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வு இது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/jessica-pegula-enter-final-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் ஜெசிகா பெகுலா</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-heavy-rains-trigger-landslide-risk-in-pamba-sabarimala-devotees-warned">கேரளாவில் கனமழை-பம்பையில் நிலச்சரிவு அபாயம்: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!... </a></p><p>*கேரளாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பம்பை ஆற்றில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது.</p><p>*இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள சிறப்பு 'நிறபுத்தரி' பூஜையைக் காண பக்தர்கள்  திட்டமிட்டிருந்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-the-mekedatu-dam-had-already-been-built-even-the-water-now-being-released-from-kabini-would-not-have-reached-tn">மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: அன்புமணி ராமதாஸ்</a></p><p>* கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக  எல்லைக்கு அருகில் அமையும்.</p><p>* ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-china-border-trade-resumes-after-6-years">6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது இந்தியா-சீனா எல்லை வர்த்தகம்!... </a></p><p>*இந்த வர்த்தகப் பாதையில் இந்தோ-திபெத்திய எல்லைப் போலீஸ் படையினர் தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>*இந்த எல்லை வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே நடைபெறும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mumbai-tv-actress-aditi-sharma-files-complaint-against-husband">மும்பை சின்னத்திரையில் பரபரப்பு: கணவர், புகுந்த வீட்டினர் மீது நடிகை அதிதி சர்மா புகார்!</a></p><p>* கணவர் சந்தேகம் மாமியார் நகை பறித்ததாக அதிதி குற்றச்சாட்டு</p><p>* கோரேகான் போலீஸ் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்தது</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/puduchcheri-july-gst-collection-203-crore" rel="nofollow">புதுச்சேரியில் ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. ரூ.203 கோடி வசூல்</a></p><p>* கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15.4 சதவீதம் அதிகரித்துள்ளது.</p><p>* நாட்டின் நிகர ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,81,237 கோடியாக உயர்ந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/death-of-kadhar-mogitheen-son-edappadi-palanisamy-condolence" rel="nofollow">காதர் மொகிதீன் மகன் இறப்பு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்</a></p><p>* கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.</p><p>* அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>எம்.பி. பப்பு யாதவ் மீது செய்தியாளர் சந்திப்பில் காலணி வீச்சு.. குற்றவாளியிடம் இருந்து கத்தி பறிமுதல்  </title><link>https://www.maalaimalar.com/news/national/ayodhya-donation-row-independent-mp-pappu-yadav-faces-shoe-attack-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/ayodhya-donation-row-independent-mp-pappu-yadav-faces-shoe-attack-in-delhi#comments</comments><guid isPermaLink="false">82d58c46-6971-4cce-8245-6c019dedc16c</guid><pubDate>Sun, 02 Aug 2026 17:03:56 +0000</pubDate><atom:updated>2026-08-02T17:03:56.263Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பப்பு யாதவ்,டெல்லி,அயோத்தி ராமர் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xazqname/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பப்பு யாதவ், அமித் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பப்பு யாதவ், அமித் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/xazqname/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் மாநிலத்தை சேர்ந்த சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டை விமர்சிக்கும் விதமாக கடந்த பாராளுமன்ற கூட்டத்தின்போது சாமியார் வேடத்தில் உண்டியலுடன் வந்திருந்தார். </p><p>அவருடன், நன்கொடை திருட்டை கண்டித்து எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற வளாகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/pappu-yadav-stages-unique-protest-in-parliament-over-ram-temple-donation-row">நூதன போராட்டம் </a>நடத்தின. </p> <h2>காலணி வீச்சு</h2><p>இதற்காக பப்பு யாதவ், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பப்பு யாதவ் சனாதன தர்மத்தை அவமதித்ததாக கண்டனம் எழுந்தது.</p><p>இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது பப்பு யாதவ் மீது நபர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>தாக்குதல் நடத்திய நபர் உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரைச் சேர்ந்த சுமித் என கண்டறியப்பட்டது. அவர் அங்கிருந்தவர்களால் உடனடியாக பிடிக்கப்பட்டு டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.</p><p>தாக்குதல் நடத்தியவர் தன்னைக் கத்தியால் குத்திக் கொல்லத் திட்டமிட்டு வந்ததாகப் பப்பு யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>அமித் இடம் இருந்த கத்தி கைப்பற்றப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>பப்பு யாதவுக்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் இருந்தும், டெல்லி காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், தாக்குதலின் போது மெத்தனமாகச் செயல்பட்டதாகவு காங்கிரஸ் தலைவர் பவன் கேரா ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை, தாக்குதலின் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <h2>ராமர் கோவில் திருட்டு </h2><p>உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம், தங்கம் உள்ளிட்டவை கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>விசாரணையில் அங்குள்ள ஊழியர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 77 லட்சம் ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>இந்த முறைகேடுகளுக்கு தார்மிக பொறுப்பேற்று, ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த சம்பத் ராயிடமும், போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>ராமர் கோவில் நன்கொடை திருட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.</p>]]></content:encoded></item></channel></rss>