<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 11 Sep 2026 08:01:59 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 11 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-september-2026#comments</comments><guid isPermaLink="false">789700bb-cf5a-4554-8f14-89283a96d916</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:00:55 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:36:08.969Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7tgua07i/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7tgua07i/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-mahakavi-bharathiyar-memorial-day">மனதில் உறுதி வேண்டும்: இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்</a></p><p>* கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர என பல பரிமாணங்கள் கொண்டவர்.</p><p>* இந்த நாளை 'மகாகவி நாள்' என கடைப்பிடிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-reached-london-to-attract-industrial-investments">தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தமிழர்கள் உற்சாக வரவேற்பு</a></p><p>* முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.</p><p>* தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-in-number-1-place-in-wta-ranking">டென்னிஸ் தரவரிசை: நம்பர் 1 இடத்தைப் பிடித்த ரிபாகினா</a></p><p>* அரினா சபலென்கா 99 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்து வந்தார்.</p><p>* சிறு வயது கனவு. அதனை அடைந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/foreign-workers-60-day-grace-period-for-h-1b-visa-renewal-cancel-trump-action">இந்திய ஊழியர்களுக்கு ஆப்படித்த டிரம்ப்.. H-1B விசா புதுப்பிப்புக்கு வழங்கப்படும் 60 நாள் கெடு ரத்து?</a><br><br>*ஏற்கெனவே விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டது.</p><p>*புதிய நிறுவனத்தைத் தேடிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/69th-death-anniversary-ministers-pay-homage-at-immanuel-sekaran-memorial">69-வது ஆண்டு நினைவு தினம்: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை</a></p><p>* பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. </p><p>* உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/brics-conference-in-delhi-what-is-the-point-p-chidambarams-question-sasi-tharoors-answer-bjp-is-having-fun">டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு.. என்ன பயன்? என ப.சிதம்பரம் கேள்வி - சசி தரூர் பதில் - காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடு<br></a><br>*சீன அதிபர் ஜி ஜின் பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வருகிறார்.</p><p>*ரஷிய அதிபர் புதின் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-more-parties-will-join-secular-social-justice-victory-alliance">மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - அமைச்சர் செங்கோட்டையன் </a></p><p>* தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்த தளபதி இருக்கும் வரை அவர் தான் நிரந்தர முதலமைச்சர்.</p><p>* பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம் விரைவில் மின் உற்பத்தி அதிகரிக்கும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/fraud-allegations-sheikh-hasinas-daughter-resigns-from-world-health-organization-post">மோசடி குற்றச்சாட்டுகள்.. உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா மகள்!</a><br><br>*பிப்ரவரி 2024 முதல் அவர் அப்பதவியில் இருந்து வந்தார்.</p><p>*குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran">சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை</p><p>* இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released">புதிதாக 30.. ஆகமொத்தம் 190 அணு ஆயுதங்கள் இந்தியா வசம் உள்ளது - வெளியான அறிக்கை </a><br><br>*140 முதல் 225 அணுஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியம் உள்ளது </p><p>*மேலும் 2 புதிய ஏவுதல் அமைப்புகள் இறுதிக்கட்ட உருவாக்கத்தில் உள்ளன</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026">GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi">BRICS: ஒன்றுகூடும் தலைவர்கள்.. உலக நலனை முன்னிறுத்தி விவாதிப்போம் - பிரதமர் மோடி</a></p><p>*மாநாட்டில் ஈரான் போர் விவகாரம், அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* ரஷிய அதிபர் புதின் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/china-25-dead-in-cargo-ship-fire">சீனாவில் சோகம்.. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு</a></p><p>*5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>* கிங்டாவோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/five-earthquakes-struck-india-tibet-and-afghanistan-in-quick-succession">இந்தியா, திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் பதிவு</a></p><p>*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p><p>*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/85-lakh-bank-employees-across-country-on-strike-today">நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்</a></p><p>* அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது</p><p>* வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு</a></p><p>* வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகி விடுகிறது.&nbsp;</p><p>* சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran">தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் - கனிமொழி</a></p><p>* விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார்  நினைவு நாள் இன்று.</p><p>* இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். </p>]]></content:encoded></item><item><title>சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks#comments</comments><guid isPermaLink="false">c7cfbb0b-9e72-4b9f-acb1-bb54be5788cf</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:59:39 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:59:39.046Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,Swami Vivekanandar,சுவாமி விவேகானந்தர்,chicago speech,சிகாகோ உரை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qf7si60l/pm-modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi, vivakanandar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qf7si60l/pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுவாமி விவேகானந்தர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய தினம் இன்று என்பதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.</strong></em></p><p>சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பிறந்தவர். இந்து மதத்தை உலகளாவிய மதமாக உயர்த்தியவர் என்று போற்றப்படுகிறார்.</p><p>இந்தியாவின் பாரம்பரியமிக்க வேதாந்த தத்துவங்களையும், யோகாவையும் மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியவர் சுவாமி விவேகானந்தர்.</p><h2>சிகாகோ உரை</h2><p>சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்த ‘சர்வதேச மதங்களின் நாடாளுமன்றம்’ என்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையை, "அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே" என்ற வாக்கியத்துடன் ஆரம்பித்தார்.</p><p>அவரது உரை அங்கிருந்த சுமார் 7 ஆயிரம் பிரதிநிதிகளின் மனதை வென்றதோடு மட்டுமின்றி, இந்து மதத்திற்கான சர்வதேச அடையாளங்களில் ஒன்றாகவும் மாறியது.</p><h2>எழுச்சியூட்டும் விவேகானந்தர் உரை</h2><p>இந்நிலையில், சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினத்தை பிரதமர் மோடி இன்று நினைவு கூர்ந்துள்ளார். </p><p>இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 11 செப்டம்பர் 1893, சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரை, இந்தியாவின் நாகரீக நெறிமுறையைப் படம்பிடித்துக் காட்டியது. அவரது எழுச்சியூட்டும் வார்த்தைகள் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.</p><h2>25வது ஆண்டு நினைவு நாள்</h2><p>2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாளை அமெரிக்கா அனுசரிக்கும் வேளையில், பிரதமர் மோடி விவேகானந்தரின் உரையை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>குண்டு பாய்ந்தாலும் குரல் ஓயவில்லை.. ஓராண்டுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட சார்லி கிர்க் நினைவை போற்றும் வலதுசாரிகள்</title><link>https://www.maalaimalar.com/news/world/even-though-the-bomb-fell-the-voice-did-not-restright-wingers-honor-the-memory-of-charlie-kirk-who-was-murdered-a-year-ago</link><comments>https://www.maalaimalar.com/news/world/even-though-the-bomb-fell-the-voice-did-not-restright-wingers-honor-the-memory-of-charlie-kirk-who-was-murdered-a-year-ago#comments</comments><guid isPermaLink="false">b40d2636-4d82-4851-ada5-6f2102f12edf</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:41:40 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:41:40.889Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,வலதுசாரி,charlie kirk,சார்லி கிர்க்,right wing</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m8x979q7/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  சார்லி கிர்க்]]></media:title><media:description type="html"><![CDATA[  சார்லி கிர்க்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m8x979q7/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நெருக்கமான வலதுசாரி செயல்பாட்டாளர் சார்லி கிர்க் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி டிரம்ப் மற்றும் கிர்க் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.</p> <p>அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அதற்கான குடியரசு கட்சி மாநாடு டல்லாஸில் நேற்று முதல் நடந்து வருகிறது. நேற்று <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>செப்டம்பர் 10 அங்கு உரையாற்றினார். இடைக்கால தேர்தலில் தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் நாட்டில் உள்ள வயது வந்த அனைத்து குடிமக்களுக்கும் ஆளுக்கு 5000 டாலர் தருவதாக அறிவித்தார். </p> <p>இந்நிலையில் மாநாட்டு திடலில் <a href="https://www.maalaimalar.com/topic/charlie-kirk?botrequest=true">சார்லி கிர்க்</a>கிற்கு குடியரசுக் கட்சியினர் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.</p><p>டல்லாஸில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான குடியரசுக் கட்சியினர் "சார்லி, சார்லி" என முழக்கமிட்டனர்.</p><p>தொடர்ந்து சார்லி கிர்க்கின் நினைவாக 5 நிமிட அஞ்சலி வீடியோ திரையிடப்பட்டது.</p> <h2>சார்லி கிர்க்</h2><p>சார்லி கிர்க் டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தவர் ஆவார்.</p><p>கடந்த ஆண்டு செப்டம்பர் 10, உட்டா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிகொண்டிருந்தபோது சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டார்.</p><p>சார்லி கிர்க்கின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி எரிகா கிர்க்டர்னிங் பாயிண்ட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்று, பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.</p> <p>டர்னிங் பாயிண்ட் அமைப்பின் துணைத் தலைவரும் போதகருமான லூகாஸ் மைல்ஸ் குடியரசு கட்சி மாநாட்டின் மேடையில் பேசுகையில், "ஒரு வருடம் கடந்த போதிலும் அவரது குரல் ஓயவில்லை. மாறாக நமது அமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் சமூக வலைதளப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது" என்று கூறினார்.</p> <h2>கொலை வழக்கு</h2><p>சார்லி கிர்க் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 வயதான டைலர் ராபின்சன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான நீதிமன்ற வழக்கு நடந்து வரும் நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><p>கல்லூரி வளாகங்களில் வலதுசாரிச் சிந்தனைகளைப் பரப்புவதில் சார்லி கிர்க் முக்கியப் பங்காற்றினார்.</p><p>இளைஞர்கள் மற்றும் தீவிரக் கிறிஸ்தவப் பழமைவாதிகள் மத்தியில் செல்வாக்குமிக்க தலைவராகவும், டிரம்பின் 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' இயக்கத்தின் முக்கியத் தூணாகவும் அவர் திகழ்ந்தார்.</p><p>கொலை செய்யப்பட்ட அதே உட்டா பல்கலைக்கழக வளாகத்தில், நேற்று மாலை (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) டர்னிங் பாயிண்ட் அமைப்பு சார்பில் சார்லி கிர்க்கிற்கான சிறப்பு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.</p>]]></content:encoded></item><item><title>5 வயதில் உலக சாதனை.. அமெரிக்காவை சேர்ந்த 6 வயது யோகா ஆசிரியர் பற்றி தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/world/a-world-record-at-age-5-do-you-know-about-the-6-year-old-yoga-teacher-from-the-us</link><comments>https://www.maalaimalar.com/news/world/a-world-record-at-age-5-do-you-know-about-the-6-year-old-yoga-teacher-from-the-us#comments</comments><guid isPermaLink="false">0db81ac7-190f-4859-8edf-395395154fe0</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:13:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:13:53.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>young girl,Yoga,கின்னஸ் சாதனை,Guinness record,யோகா,சிறுமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uw1raqst/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uw1raqst/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவை சேர்ந்த பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ் என்ற 6  வயது யோகா ஆசிரியர்  பற்றி தெரியுமா?</p><p>அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். அவருக்கு வெறும் 6 வயது. </p><p>ஆனால் ஓராண்டுக்கு முன்னதாகவே அதாவது, அவரின் 5 வயதில், சரியாக 5 ஆண்டுகள் மற்றும் 337 நாட்களில் அவர் உலக சாதனை ஒன்றை படைத்திருந்தார். </p><h2>சாதனை </h2><p>இந்த வயதில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 200 மணிநேர <a href="https://www.maalaimalar.com/health/fitness/healthy-yoga-practice-777831">யோகா </a>ஆசிரியர் பயிற்சி பாடத்தை (Course) வெற்றிகரமாக முடித்து, இந்த இளம் வயதிலேயே சான்றிதழ் பெற்ற, அதாவது அங்கீகரிக்கப்பட்ட யோகா ஆசிரியரானார். இது உலக சாதனை ஆகும்.</p><p>இந்த சாதனையை<a href="https://www.maalaimalar.com/news/national/indian-man-sets-world-record-with-29-foot-long-fingernails"> கின்னஸ் உலக சாதனை </a>அமைப்பு அங்கீகரித்தது.</p><p>கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அவரின் பெயர் வெளியீட்டின் போது பேசிய அவர், "நான் புதிய விஷயங்களை முயற்சிப்பதையும், கற்றுக்கொள்ளும்போதே மகிழ்ச்சியாக இருப்பதையும் விரும்புகிறேன்.</p> <p>உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் தங்களின் வயது என்னவாக இருந்தாலும், தங்களது கனவுகளைப் பின்தொடர தூண்டுகோலாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.</p><p>இதற்கு முன்பு இந்தியாவின் பிரான்வி குப்தா தனது 7 வயதில் படைத்திருந்த சாதனையை, இந்த ஹூஸ்டன் சிறுமி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தமிழர்கள் உற்சாக வரவேற்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-reached-london-to-attract-industrial-investments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-reached-london-to-attract-industrial-investments#comments</comments><guid isPermaLink="false">cd1c765b-82b3-4ac1-93b0-bb899674569c</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:04:46 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:04:46.400Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,லண்டன்,london,தொழில் முதலீடுகள்,Business Investment</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8l134jbe/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8l134jbe/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொழில் முதலீடுகளை ஈர்க்க நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். </p> <h2>தொழில் முதலீடுகள்</h2><p>முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் விஜய் நள்ளிரவில் துபாயை சென்றடைந்தார். அங்கிருந்து வேறொரு விமானத்தின் மூலம் இன்று பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். </p> <h2>முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு</h2><p>லண்டனில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith">முதலமைச்சர் விஜய்க்கு</a> தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு வசித்து வரும் ஏராளமான தமிழர்கள் விஜயை த.வெ.க. கொடியுடன் வரவேற்றனர்.</p><h2>100 நாட்கள்</h2><p>தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.</p> <h2>தவெக அரசு</h2><p>இதன்படி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-on-vetri-kazhagam-recognition-and-whistle-symbol-approval">த.வெ.க. </a>அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p> <h2>ஐரோப்பிய நாடுகள்</h2><p>பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்து உள்ளதுடன், அவற்றின் மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.</p> <h2>ஏற்றுமதி</h2><p>நடைமுறைக்கு வந்த இந்தியா–பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் வாயிலாக, இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.</p> <h2>முக்கிய நோக்கம்</h2><p>பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளையும், உலகளாவிய திறன் மையங்களையும் நிறுவி செயல்பட்டு வருகின்றன. </p> <p>இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறை களில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் முதலமைச்சர் தற்போது மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.</p><p>மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த ஒரு ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ மாநிலத்தில் அமைக்கப்படும் என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற ‘சில்வர்ஸ் டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. </p> <h2>வாய்ப்புகள்</h2><p>இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</h2><p>லண்டன் சென்றுள்ள குழுவில் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், மற்றும் அரசு அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.</p> <h2>வெளிநாட்டு பயணம்</h2><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவருடன் சென்று உள்ள குழுவினர் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 17-ந்தேதி சென்னை திரும்புகிறார்.</p>]]></content:encoded></item><item><title>மனதில் உறுதி வேண்டும்: இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-mahakavi-bharathiyar-memorial-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-mahakavi-bharathiyar-memorial-day#comments</comments><guid isPermaLink="false">8e12a7da-f586-4664-9992-912ad02d0918</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:56:52 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:56:52.320Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathiyar,நினைவு தினம்,மகாகவி பாரதியார்,Memorial Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/d81kifoe/bharathi.jpg.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bharathiyar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/d81kifoe/bharathi.jpg.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விடுதலை போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.</strong></em></p><p>சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.</p><p>தனது பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். இவர் கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.</p><h2>நினைவு நாள்</h2><p>இவர் தனது 39-ம் வயதில் 1921-ம் வருடம் செப்டம்பர் மாதம் 11-ம் நாள் மறைந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்  11-ம் தேதி பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாரதியாரின் சிலைகள் மற்றும் உருவப் படங்களுக்கு பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p><h2>மகாகவி நாள்</h2><p>இந்த நாளை 'மகாகவி நாள்' என கடைப்பிடிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>செங்கடலில் பரபரப்பு: துறைமுக நகரை கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் - உச்சகட்ட அபாயத்தில் பாப் அல் மாண்டெப் ஜலசந்தி!</title><link>https://www.maalaimalar.com/news/world/tension-in-the-red-sea-houthi-rebels-capture-port-city-bab-el-mandeb-strait-at-extreme-risk</link><comments>https://www.maalaimalar.com/news/world/tension-in-the-red-sea-houthi-rebels-capture-port-city-bab-el-mandeb-strait-at-extreme-risk#comments</comments><guid isPermaLink="false">2a202ac4-1030-404c-9b0c-c088ef186c3c</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:49:41 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:49:41.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,ஏமன்,Houthi rebels,செங்கடல்,Red Sea,ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/e0gdyo8v/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹவுதி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹவுதி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/e0gdyo8v/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் நாட்டில் சவுதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளிடமிருந்து முக்கிய செங்கடல் துறைமுக நகரமான மொகாவை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/yemen">ஏமனில் </a>தலைநகர் சனா உள்ளிட்ட பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். </p><p>சவுதி அரேபிய ஆதரவு பெற்ற சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசு தனது கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள உள்ள பகுதிகளை தற்காத்துக்கொள்ள போராடி வருகிறது. </p> <p>கடந்த வாரம் முதல் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு படைகளுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற <a href="https://www.maalaimalar.com/news/world/no-need-to-answer-brick-with-stone-pakistan-warns-houthis">ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்</a> இடையே கடும் மோதல் மூண்டுள்ளது.</p><p>ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் உலகின் மிக முக்கியமான கடல்வழிப்பாதைகளுள் ஒன்றான பாப் அல் மாண்டெப் ஜலசந்தியை கைப்பற்ற ஹவுதிக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.</p> <h2>இலக்கை நெருங்கிய ஹவுதிக்கள்?</h2><p>இந்த நிலையில் தான் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு வசம் இருந்த முக்கிய செங்கடல் துறைமுக நகரமான ஏமனின் மொகா (Mokha) நகரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாகி தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இதன்மூலம் பாப் அல்  மாண்டெப் ஜலசந்தியிலிருந்து வெறும் 75 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஹவுதி படைகள் முன்னேறியுள்ளன.</p><p>மொகா நகரைக் கைப்பற்ற நள்ளிரவில் நடந்த கடுமையான தாக்குதல்களால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.</p><p>வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், யேமன் சர்வதேச அரசின் தலைமையகமான ஏடன் நகரை நோக்கி தப்பிச் சென்று கொண்டிருக்கின்றனர்.</p> <p>மொகா நகரை மட்டுமின்றி, செங்கடலில் உள்ள முக்கியத் தீவான 'ஜுகார்' (Zuqar) தீவையும் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.</p><p>பதிலடியாக, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தாயிஸ், ஹுதைதா, மாரிப் உள்ளிட்ட பகுதிகளில் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் 64 க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.</p><p>இதனிடையே, நேற்று ஹவுதிகள் சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள காமிஸ் முஷைத், அப்ஹா மற்றும் ஜாசான் ஆகிய நகரங்கள் மீது நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைகளை தாக்குதலில் 73 பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் சேதமடைந்துள்ளன.</p><p>கடந்த ஒரு வாரத்தில் நடந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், சாலைகளில் காயமடைந்தவர்கள் உதவியின்றி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p> <h2>பாப் அல் மாண்டெப் </h2><p>அமெரிக்கா - ஈரான் போர் காரணமாகப் பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ளது.</p><p>இதனால் சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு செங்கடல் பாதையையே முழுமையாக நம்பியிருந்தது.</p><p>சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு தடையில்லை என்று ஹவுதி அமைப்பு கூறினாலும், சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.</p><p>இந்த திடீர் மோதல் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p>இதனிடையே ஏமன் பகுதிகளைப் பாதுகாக்க அந்நாட்டு அரசு, அரபு மற்றும் சர்வதேச நாடுகளுடன் கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாடு எதிரொலி: இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டி அட்டவணையில் மாற்றமா? </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/confusion-over-first-afg-ind-t20i-after-delhi-police-request-ddca-statement</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/confusion-over-first-afg-ind-t20i-after-delhi-police-request-ddca-statement#comments</comments><guid isPermaLink="false">efaef6f2-d23b-4178-8065-a398b0f23bb3</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:17:03 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:17:03.337Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல் ஒருநாள் போட்டி,BRICS Summit,பிரிக்ஸ் உச்சி மாநாடு,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்,1st ODI</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wz6uwyda/afghan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ afghanistan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wz6uwyda/afghan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் போட்டி அட்டவணையில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் டெல்லியில் வரும் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. </p><h2>அட்டவணையில் மாற்றமா?</h2><p>இந்நிலையில் பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் நாளை  முதல் 2 நாட்கள் நடைபெறுவதால் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியது. </p><h2>பிரிக்ஸ் மாநாடு</h2><p>உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகிறார்கள். மேலும், கிரிக்கெட் போட்டியைப் பார்க்க 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.  </p><p>எனவே, 13-ம் தேதி நடைபெற உள்ள முதல் டி20 ஆட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு டெல்லி போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் அட்டவணையில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது. </p><p>ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளோ போட்டி அட்டவணையில் மாற்றம் இல்லை. திட்டமிட்டபடி போட்டி நடைபெறும்  என தெரிவித்துள்ளனர்.</p><p>இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.)  நிர்வாகி ஒருவர் போட்டியை தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். </p><p>இதுதொடர்பாக அவர் கூறுகையில், போட்டிக்கான தேதியை மாற்றுவதற்கான வாய்ப்பு இன்னும் முழுமையாக நிராகரிக்கப்படவில்லை. நிலைமை சரியாக அமையாவிட்டால் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் ஆட்டம் திங்கட்கிழமைக்கு (14-ம் தேதி) மாற்றப்படலாம் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய ஊழியர்களுக்கு ஆப்படித்த டிரம்ப்..  H-1B விசா புதுப்பிப்புக்கு வழங்கப்படும் 60 நாள் சலுகை காலம் ரத்து?</title><link>https://www.maalaimalar.com/news/world/foreign-workers-60-day-grace-period-for-h-1b-visa-renewal-cancel-trump-action</link><comments>https://www.maalaimalar.com/news/world/foreign-workers-60-day-grace-period-for-h-1b-visa-renewal-cancel-trump-action#comments</comments><guid isPermaLink="false">51450216-34d8-4e66-b53b-843fa0492735</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:11:29 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:11:29.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,அமெரிக்கா,USA,டிரம்ப்,எச்1பி விசா,H-1B visa</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4ydd28gg/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4ydd28gg/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் வெளிநாட்டு பாண்டியர்களின் எச்1பி விசா புதுப்பிப்பு சலுகை காலத்தை ரத்து செய்யும் முடிவை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது. </p><p>அமெரிக்காவில் கடந்த 2025 இல் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.</p><p>சட்டவிரோத குடியேற்றங்களை முழுவதுமாக தடுக்கும் அதே வேளையில்  சட்டப்பூர்வக் குடியேற்றங்களை மேலும் கட்டுப்படுத்தும் கொள்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். </p> <p>அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற தனது கொள்கையின்படி அவரது நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அங்கு பணிபுரியும், பயிலும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டவர்களுக்கு கஷ்டகாலமாக மாறி வருகிறது.</p><p>நிறுவனங்களில் காலியாகும் பணியிடங்களுக்கு அமெரிக்கக் குடிமக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவரது நிர்வானம் நிறுவனங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. </p><p>வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கமர்த்த விரும்பும் நிறுவனங்கள், அதற்கு இணையான தகுதிவாய்ந்த அமெரிக்க விண்ணப்பதாரர்களை நியமிக்க வேண்டும் என கெடுபிடி காட்டப்படுகிறது. </p><p>ஏற்கெனவே <a href="https://www.maalaimalar.com/news/world/us-proposes-additional-usd-103-lakh-fee-for-h-1b-visa-cap-subject-applications">விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டதுடன்</a>, தற்காலிகமாக இமிக்ரண்ட் விசா நேர்காணல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.</p><h2>H-1B சலுகைக் காலம் ரத்து?</h2><p>இந்நிலையில் வேலை இழக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களின் H-1B விசாவில் இதுவரை வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகைக் காலத்தை (Grace period) ரத்து செய்யும் திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.</p><p>அமெரிக்காவின் பெடரல் பதிவேட்டில் (அரசிதழ்) வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய முன்மொழிவின்படி, H-1B மற்றும் அது தொடர்பான பணி விசா வைத்திருப்பவர்கள் தங்களது வேலையை இழக்கும் பட்சத்தில், உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.</p><p>கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த இந்த 60 நாட்கள் சலுகைக் காலத்தின் மூலம், ஊழியர்கள் தங்களுக்குப் புதிய நிறுவனத்தைத் தேடிக் கொள்ளவோ அல்லது தங்களது குடும்பத்தினருடன் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைசெய்யவோ அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. </p><p>புதிய முன்மொழிவு செயல்பாட்டுக்கு வந்தால் இனி அந்த அவகாசம் கிடைக்காது.</p> <h2>இந்தியர்களுக்குப் பின்னடைவு</h2><p>அமெரிக்கத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளில் H-1B விசாவைப் பயன்படுத்திப் பணிபுரியும் ஊழியர்களில் இந்தியர்களே அதிகளவில் உள்ளனர்.</p><p>டிசிஎஸ், இன்போசிஸ், எச்சிஎல் டெக், எல்டிஐ மைண்ட்டீரி போன்ற இந்திய ஐடி நிறுவனங்களும், டெலாய்ட் , இடபிள்யூசி, எர்ன்ஸ்ட் அண்ட் யங் போன்ற நிறுவனங்களும் இந்த விசாவை அதிகளவில் பயன்படுத்துகின்றன.</p><p>வேலை இழக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதால், அமெரிக்காவில் உள்ள இந்தியப் வல்லுநர்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் இடையே இந்த நடவடிக்கை பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.</p><h2>அடுத்தது என்ன?</h2><p>அமெரிக்காவின் சட்டத்தின்படி ஒரு புதிய விதியை  அமல்படுத்தும்போது அது முதலில் மக்கள் மற்றும் சம்பந்தபட்டவர்கள் கருத்துக்கு 60 நாட்கள் விடப்படும்.</p><p>60 நாட்கள் அவகாசம் முடிந்ததும், பெறப்பட்ட கருத்துகளை உள்துறை பாதுகாப்பு துறை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>இதன் அடிப்படையில் முன்மொழியப்பட்ட விதியில் சிறு மாற்றங்களையோ அல்லது தளர்வுகளையோ கொண்டு வர அரசு தீர்மானிக்கலாம்.</p><p>பரிசீலனைக்குப் பிறகு, இறுதி விதி தயாரிக்கப்பட்டு மீண்டும் பெடரல் பதிவேடு அலுவலகம் அதனை வெளியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்.</p><p>ஆனால் இதை எதிர்த்து பாதிக்கப்புக்குள்ளாவோர் பெடரல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம். அதை விசாரித்து நீதிமன்றம், அந்த விதிக்கு இடைக்கால தடை விதிக்கலாம்.</p> ]]></content:encoded></item><item><title>69-வது ஆண்டு நினைவு தினம்: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/69th-death-anniversary-ministers-pay-homage-at-immanuel-sekaran-memorial</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/69th-death-anniversary-ministers-pay-homage-at-immanuel-sekaran-memorial#comments</comments><guid isPermaLink="false">b6b5ec7d-f18b-4f7e-854b-5ad443aeb122</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:06:22 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:06:22.596Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Government,தமிழக அரசு,நினைவு தினம்,Memorial Day,Immanuel Sekaran,தியாகி இமானுவேல் சேகரன்,அமைச்சர்கள் மரியாதை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m5bpz0ta/ministers.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Immanuel sekaran memorial Ministers Pay Homage]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m5bpz0ta/ministers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ், டி.கே.பிரபு, மதன்ராஜா, ராஜீவ், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். </p><h2>இமானுவேல் சேகரனார் நினைவு தினம்</h2><p>ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran">தியாகி இமானுவேல் சேகரனாரின்</a> 69ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. </p><h2>அமைச்சர்கள் மரியாதை</h2><p>இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபா ராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.</p> <p>இதையடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ், டி.கே.பிரபு, மதன்ராஜா, ராஜீவ், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a>, முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.</p><h2>அதிமுக</h2><p>அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.</p><h2>அமைச்சர் வன்னியரசு</h2><p>அதேபோல் அ.ம.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைச்சர் வன்னியரசு மற்றும் நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.</p> <h2>பலத்த பாதுகாப்பு</h2><p>பாதுகாப்பு பணிக்காக தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மணிவண்ணன் உள்ளிட்ட 3 டி.ஐ.ஜி.க்கள், 24 மாவட்ட எஸ்.பி.க்கள், கூடுதல் எஸ்.பி.க்கள், 70 டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டென்னிஸ் தரவரிசை: நம்பர் 1 இடத்தைப் பிடித்த ரிபாகினா</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-in-number-1-place-in-wta-ranking</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-in-number-1-place-in-wta-ranking#comments</comments><guid isPermaLink="false">9e9a58a3-f598-40f4-815a-c2cd1970f9a2</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:58:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:58:00.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எலினா ரிபாகினா,Elena Rybakina,டென்னிஸ் தரவரிசை,WTA Ranking</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wfr2s8pc/ryba1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rybakina]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wfr2s8pc/ryba1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கஜகஸ்தானின் எலினா ரிபாகினா நம்பர் 1 இடத்தையும் அடைந்தார்.</strong></em></p><p>டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது. தற்போது நடந்து வரும் அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு கஜகஸ்தானின் எலினா ரிபாகினா முன்னேறினார்.</p><h2>ரிபாகினா நம்பர் 1 இடம்</h2><p>இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஒரு இடம் முன்னேறி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார்.</p><p>இந்த வெற்றியின் மூலம் எலினா ரிபாகினா உலக தரவரிசையில் முதல் முறையாக நம்பர் 1 இடத்துக்கு உயர்ந்தார்.</p><p>27 வயதான ரிபாகினா தரவரிசையில் முதலிடத்தை அலங்கரிக்கும் 30-வது மங்கை. முதல் கஜகஸ்தான் நாட்டவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.</p><p>2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரியணையில் ஏறி தொடர்ந்து 99 வாரங்கள் 'நம்பர் ஒன்'னாக வலம் வந்த பெலாரசின் அரினா சபலென்கா 2-வது இடத்துக்கு தள்ளப்பட் டார்.</p><h2>சிறு வயது கனவு</h2><p>இதுகுறித்து ரிபாகினா கூறுகையில், 'உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கவேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. அதனை அடைந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த சாதனையை எட்ட ஆதரவாக இருந்த எனது பயிற்சி குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு.. என்ன பயன்? என ப.சிதம்பரம் கேள்வி - சசி தரூர் பதில் - காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடு</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-conference-in-delhi-what-is-the-point-p-chidambarams-question-sasi-tharoors-answer-bjp-is-having-fun</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-conference-in-delhi-what-is-the-point-p-chidambarams-question-sasi-tharoors-answer-bjp-is-having-fun#comments</comments><guid isPermaLink="false">4e851d21-c38b-4cf6-8e76-84dc02eaf7b7</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:37:24 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:37:24.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சசி தரூர்,ப. சிதம்பரம்,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8lybxlvx/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ப.சிதம்பரம் - சசி தரூர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ப.சிதம்பரம் - சசி தரூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8lybxlvx/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினுள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.</p> <p>18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பார்த் மண்டபத்தில் நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 13) நடைபெறவுள்ளது. </p><p>இதில் கலந்துகொள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit">ரஷிய அதிபர் புதின்</a> இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார். இன்று அவர் <a href="https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi">பிரதமர் மோடியை </a>சந்திக்கிறார். </p><p>சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் விரைவில் வர உள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வருகிறார். </p> <p>ஈரான் அதிபர் பெசஸ்கியான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய உறுப்பு நாட்டு தலைவர்களும் வருகை தர உள்ளனர்.</p><p>இந்த மாநாட்டிற்காக டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து காங்கிரஸுக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.</p><p>இம்மாநாடு தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.</p><p>காங்கிரஸ் எம்பி சசி தரூர் மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆதரித்துள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதனால் கிடைக்கும் பலன்கள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p> <h2>ப.சிதம்பரத்தின் கேள்வி</h2><p>கடந்த இரண்டு அல்லது மூன்று பிரிக்ஸ் மாநாடுகளால் நாட்டிற்கு எந்தவொரு தெளிவான அல்லது குறிப்பிடத்தக்கப் பலன்களும் கிடைக்கவில்லை எனப் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கு பதிலளித்த பாரதிய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ் கட்சி நாட்டின் சர்வதேச வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்டு எப்போதும் எதிர்மறையான மனநிலையையே வெளிப்படுத்துகிறது என சாடியுள்ளது.</p> <h2>சசி தரூரின் நிலப்பாடு</h2><p>ப. சிதம்பரம் கேள்வியை தொடர்ந்து சசி தரூர் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரிக்ஸ் மாநாட்டின் முக்கியத்துவம் பற்றி தெரிவித்துள்ளார்.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 11 உறுப்பு நாடுகள் உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியையும், உலகளாவிய GDPயில் மார் 41 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.</p><p>எனவே பிரிக்ஸ் அமைப்பு Global South எனப்படும் வளரும் நாடுகளுக்கு மிக முக்கியமான ஒரு சர்வதேச தளமாகும் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.</p><p>பல நாட்டுத் தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தருவது இந்தியாவின் வெளியுறவு மற்றும் தூதரகப் பலத்தைக் காட்டுகிறது என்றும், இம்மாநாட்டை இந்தியா நடத்துவது நாட்டிற்குப் பெருமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>மாநாட்டின் முக்கியத்துவத்தைப் பேசிய அதே வேளையில், உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளையும் சசி தரூர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 11 நாடுகளும் வெவ்வேறு தேசிய நலன்களைக் கொண்டுள்ளதால், அனைத்து உலகளாவிய விவகாரங்களிலும் பொதுவான ஒரு முடிவை எட்டுவது சவாலானது.</p><p>சமீபத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அனைத்து நாடுகளும் ஏற்கும் வகையிலான கூட்டுப் பிரகடனத்தை வெளியிட முடியாமல் போனதைச் சுட்டிக்காட்டிய தரூர், இந்த உச்சி மாநாட்டில் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்துச் சீரான முடிவை எடுப்பது இந்தியத் தூதர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - அமைச்சர் செங்கோட்டையன் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-more-parties-will-join-secular-social-justice-victory-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-more-parties-will-join-secular-social-justice-victory-alliance#comments</comments><guid isPermaLink="false">2503d104-8d32-45f9-b1ff-ab6eccf7700c</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:33:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:33:34.951Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,tvk,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/w6qmcuae/sengottaiyan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sengottaiyan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/w6qmcuae/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த  செங்கோட்டையன், பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.</p><p>மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருவாய் துறை அமைச்சர் கே.ஏ. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">செங்கோட்டையன்</a>  வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>ஆட்சி கலையும்</h2><p>ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி கலையும் என்று ஆர்.எஸ்.பாரதி பேசியது குறித்து பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்த தளபதி இருக்கும் வரை அவர் தான் நிரந்தர முதலமைச்சர்,  ஆர்.எஸ் பாரதி சொல்வது போல், ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை, தி.மு.க.வினருக்கு தான் நாட்கள் எண்ணப்படுகின்றன.</p> <h2>இடைத்தேர்தலில் வெற்றி</h2><p>தமிழக இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றி வாய்ப்பு எட்டுவோம், தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அதனை தீர்ப்பதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம் விரைவில் மின் உற்பத்தி அதிகரிக்கும்.</p> <h2>கம்யூனிஸ்ட் கட்சிகள்</h2><p>கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த  செங்கோட்டையன், பொறுத்திருந்து பாருங்கள். மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும் என்று தெரிவித்தார். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/here-is-the-agenda-for-chief-minister-vijays-london-trip-full-details">முதலமைச்சர் விஜய்</a> உடல் மொழி கிண்டல் செய்தது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர், 2017-ம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் தனபால் அறையில் சேரை இழுத்து கீழே தள்ளி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த அராஜகம் எல்லோருக்கும் தெரியும், எனவே, அதனைப் பற்றி எல்லாம் பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மோசடி குற்றச்சாட்டுகள்.. உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா மகள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/fraud-allegations-sheikh-hasinas-daughter-resigns-from-world-health-organization-post</link><comments>https://www.maalaimalar.com/news/world/fraud-allegations-sheikh-hasinas-daughter-resigns-from-world-health-organization-post#comments</comments><guid isPermaLink="false">d676b4e0-9798-46ad-b8eb-d50f307fc0d3</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:05:41 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:05:41.232Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உலக சுகாதார அமைப்பு,ஷேக் ஹசீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/q8huogil/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  சைமா வாசித்]]></media:title><media:description type="html"><![CDATA[  சைமா வாசித்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/q8huogil/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாசித் ராஜினாமா செய்துள்ளார்.</p> <p>வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/sheikh-hasina">ஷேக் ஹசீனாவின்</a> மகளான சைமா வாசித் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?botrequest=true">உலக சுகாதார அமைப்பின் </a>தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநர் பதவியிலிருந்து விலகியுள்ளார். </p><p>கடந்த செப்டம்பர் 9 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். </p><p>நிதி மோசடி மற்றும் போலி சுற்றறிக்கை குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வந்தது. </p><p>இதன் தொடர்ச்சியாக இவரை பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு பரிசீலிக்க இருந்த நிலையில் இந்தத் திடீர் ராஜினாமா நிகழ்ந்துள்ளது.</p> <h2>மோசடி பின்னணி</h2><p>நவம்பர் 2023ல் அந்த பிராந்திய இயக்குநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 2024 முதல் அவர் அப்பதவியில் இருந்து வந்தார்.</p><p>சீனாவுக்கான பயணச் செலவு தொடர்பான நிதியை கையாடல் செய்ததாகவும், தனது முனைவர் பட்டம் மற்றும் சான்றிதழ்கள் குறித்துத் தவறான தகவல்களை சமர்ப்பித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.</p> <p>ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்த காலத்தில் வங்கதேசத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலம் வாங்கியதாகவும் அவர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.</p><p>தொடர் சர்ச்சையால் 2025ல் சம்பளமில்லாத விடுப்பில் அவர் அனுப்பப்பட்டார். அவரை நிரந்தரமாக பதவிநீக்கம் செய்யவதற்காக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸுக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.</p> <h2>குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு</h2><p>அதில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார் சீனப் பயணச் செலவு தொடர்பான பிரச்சினை, தனது உதவியாளரின் நிர்வாகத் தவறால் ஏற்பட்டது என்றும் அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.</p><p>அதேபோல தனது முனைவர் பட்டம் தொடர்பாக தவறான தகவலை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், ஆட்டிசம் தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளுக்காக தனக்குக் கௌரவக் முனைவர் பட்டம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அதைத் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>மேலும் நில விவகாரம் குறித்து குறிப்பிடுகையில் உலக சுகாதார அமைப்பில் சேருவதற்கு முன்பே வங்கதேசச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே அந்த நிலத்தை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சொந்த மண்ணில் கோகோ காப்பை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய ரிபாகினா</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-coco-gauff-in-sf-round-in-us-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-coco-gauff-in-sf-round-in-us-open-tennis#comments</comments><guid isPermaLink="false">55e8257d-1c56-4151-9c51-3d2ca2259263</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:05:16 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:05:16.971Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Elyna Rybakina,எலினா ரிபாகினா,US Open Tennis,அமெரிக்க ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n6pkl77f/elena.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rybakina]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n6pkl77f/elena.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் சொந்த மண்ணிலேயே அமெரிக்காவின் கோகோ காப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா.</strong></em></p><p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.</p><p>பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்தன.</p><p>முதல் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், கஜகஸ்தானின் எலினா <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE">ரிபாகினா</a> உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 3-6 என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட ரிபாகினா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.</p><p>சொந்த மண்ணில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p>நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சபலென்கா உடன் எலினா ரிபாகினா மோதுகின்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/jawa-42-all-stars-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/jawa-42-all-stars-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">ef74a9cd-067b-4473-88c5-1e26098e6a54</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:54:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:54:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Motorcycle,மோட்டார்சைக்கிள்,ஜாவா,Jawa</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/038mpdna/Jawa-42-All-Stars.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jawa 42 All Stars]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/038mpdna/Jawa-42-All-Stars.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jawa">ஜாவா</a> 42 ஆல் ஸ்டார்ஸ் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஜாவா பைக்கின் விலை இந்திய சந்தையில் ரூ. 1.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் எடிஷன், பேட்டில் கிரீன், நெபுலா ப்ளூ, மாஸ் கிரே, ஐவரி மற்றும் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. </p><p>இவற்றில் பிளாக் நிற வேரியண்ட் மிக விலை உயர்ந்தது, இதன் விலை ரூ. 1.90 லட்சம் ஆகும். இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும். ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ், சாதாரண <a href="https://www.maalaimalar.com/topic/bike">பைக் </a>மாடல்களில் இருந்து தோற்றத்தில் முற்றிலும் மாறுபட்டு, மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்கிறது.</p><h2>என்ஜின் மற்றும் செயல்திறன்:</h2><p>இயந்திரவியல் ரீதியாக, ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் வழக்கமான மாடலை போன்றதே ஆகும். இதிலும் 294சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7,950 ஆர்.பி.எம்-இல் 26.9 ஹெச்.பி. பவர் மற்றும், 6,000 ஆர்.பி.எம்-இல் 26.8 நியூட்டன் மீட்டர் டார்க் உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.</p><p>பைக்கின் பாடிவொர்க்கின் கீழ், 35mm டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்ட டபுள் கிராடில் ஃபிரேம் உள்ளது. இந்த பைக், 18-இன்ச் முன்புற மற்றும் 17-இன்ச் பின்புற சக்கரங்களில் இயங்குகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 280mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளன.</p><p>போட்டியைப் பொறுத்தவரை, ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ், ராயல் என்ஃபீல்ட் மீட்டியோர் 350 மற்றும் ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran#comments</comments><guid isPermaLink="false">6a742ad6-417e-414b-aa3d-8168baf8476d</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:46:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:46:53.873Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Immanuel Sekaran,தியாகி இமானுவேல் சேகரன்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wnnkt9jf/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Immanuel sekaran - MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wnnkt9jf/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran">தியாகி இமானுவேல்</a> சேகரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. </p><p>இதையொட்டி திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்</p> <p>தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம்.</p> <p>நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிதாக 30.. ஆகமொத்தம் 190 அணு ஆயுதங்கள் இந்தியா வசம் உள்ளது - வெளியான அறிக்கை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released</link><comments>https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released#comments</comments><guid isPermaLink="false">29b244e1-eefb-4630-9c79-3b6df3f7bb8d</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:43:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:43:53.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அணுஆயுதம்,INDIAN ARMY,Nuclear weapon,இந்திய ராணுவம்,அணுகுண்டு,atom bomb</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uq9gu8ee/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அணு ஆயுதங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ அணு ஆயுதங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uq9gu8ee/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா வசம் 190 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவை சேர்ந்த Federation of American Scientists என்ற ஆராய்ச்சி மையம் வெளியிட்டஅறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது. </p><h2>அணுகுண்டுகள் </h2><p>அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள ஏவுகணைகளுக்கான 160 <a href="https://www.maalaimalar.com/news/world/responsibility-and-resilience-hiroshima-day-2026-remembering-atomic-bombing-and-call-for-a-peaceful-nuclear-free-world">அணுகுண்டுகள் </a>உள்ளன. </p><p>புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் ஏவுகணைகளுக்காக மேலும் 30 அணுகுண்டுகள் உருவாக்கப்பட்டு நாட்டின் மொத்த அணுகுண்டு இருப்பு தற்போது 190 ஆக உயர்ந்துள்ளது.</p><p>மேலும் இந்தியா தனது ராணுவத் தேவைகளுக்காக 140 முதல் 225 அணுஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியத்தை சேமித்து வைத்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.   </p> <p>சமீபத்திய அறிக்கையின்படி பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், இந்தியாவின் அணுஆயுத இருப்பு அதைவிட அதிகமாக வளர்ந்துள்ளது.</p><p>2 போர் விமானங்கள், 6 தரைவழி பாலிஸ்டிக் ஏவுகணைகள், 1 நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை என இந்தியா தற்போது 9 வெவ்வேறு வகையான அணுஆயுத ஏவுதல் அமைப்பை பயன்பாட்டில் வைத்துள்ளது.</p><p>மேலும் 2 புதிய ஏவுதல் அமைப்புகள் இறுதிக்கட்ட உருவாக்கத்தில் உள்ளன, அவை விரைவில் முப்படைகளில் இணையவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்தியா தனது அணுஆயுத தரவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில்லை. எனவே அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் அரசு ஆவணங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் பொதுவெளியில் கிடைக்கும் தரவுகள் மூலமே மதிப்பிடப்பட்டவை ஆகும்.</p><h2>கல்பாக்கம்</h2><p>பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் 'துருவா' அணு உலைக்குப் பிறகு, தமிழ்நாடு கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் கட்டப்பட்ட 500 மெகாவாட் PFBR அணு உலை இந்த ஆண்டு ஏப்ரலில் தனது முதன்மைக் கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>இந்த உலை 80% திறனுடன் இயங்கினால், ஆண்டிற்கு சுமார் 140 கிலோ புளுட்டோனியம்-239 ஐ உற்பத்தி செய்ய முடியும். இது ஆண்டிற்கு 35 புதிய அணுஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமானது.</p><p>கல்பாக்கத்தில் FBR-1 மற்றும் FBR-2 ஆகிய மேலும் இரண்டு வேகப்பெருக்கு அணு உலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026#comments</comments><guid isPermaLink="false">a3660614-573c-4b03-9092-ba689b0d9a17</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:30:26 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:30:26.465Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/23/26949366-gold.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/23/26949366-gold.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. </p> <p>அதனை தொடர்ந்து 3-ந்தேதி தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது. </p> <p>அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.14,190-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.</p> <p>7-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 130-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 8-ந்தேதி கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. 9-ந்தேதி சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும் விற்பனையானது.</p> <p>நேற்று தங்கம் விலை சவரனுக்கு  ரூ.800 உயர்ந்து ரூ.1,14,040-க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும் விற்பனையானது.</p><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>10-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,040</p><p>09-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,160</p><p>08-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,160</p><p>07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040</p><p>06-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>10-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>09-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>08-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>07-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.255</p> ]]></content:encoded></item><item><title>இந்தியா, திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் பதிவு </title><link>https://www.maalaimalar.com/news/world/five-earthquakes-struck-india-tibet-and-afghanistan-in-quick-succession</link><comments>https://www.maalaimalar.com/news/world/five-earthquakes-struck-india-tibet-and-afghanistan-in-quick-succession#comments</comments><guid isPermaLink="false">d005102c-f8da-4c03-8348-80024ba09cbb</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:20:37 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:20:37.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நில அதிர்வு,திபெத்,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xe1zgypa/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிலநடுக்கங்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிலநடுக்கங்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xe1zgypa/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் லடாக், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களிலும், அண்டை நாடுகளான திபெத் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் ஒரே அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>நேற்று நள்ளிரவு 12:27 மணியளவில் இந்தியாவிலுள்ள லடாக்கின் லே பகுதியில்  3.7 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம் பதிவானது.  இந்த <a href="https://www.maalaimalar.com/news/world/earthquake-measuring-53-magnitude-strikes-nepal">நிலநடுக்கம்</a>, பூமிக்கு அடியில் சுமார் 12 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. </p><p>நள்ளிரவில் திடீரென வீடுகள் அதிர்ந்ததால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.</p><p>லடாக்கைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் அதிகாலை 1:20 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. </p> <p>இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகப் பதிவானதுடன், பூமிக்கு அடியில் 39 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. 3.1 ரிக்டர் அளவு என்பது லேசான நிலநடுக்கப் பிரிவில் வகைப்படுத்தப்பட்டாலும், நள்ளிரவில் ஏற்பட்டதால் மக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகினர்.</p><p>இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்துவார் பகுதியிலும் அதிகாலையில் நில அதிர்வு பதிவானது. ரிக்டர் அளவுகோலில் இது 3.0 ஆகப் பதிவாகியிருந்தது.</p> <h2>திபெத் - ஆப்கானிஸ்தான்</h2><p>இன்று அதிகாலை 4:02 மணியளவில் திபெத் பகுதியில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.</p><p>திபெத் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 18 நிமிடங்களில், அதாவது அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p> <p>ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் மிக ஆழமாகச் சுமார் 163 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.</p><p>பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படும்போது அதன் மேலடுக்குத் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும் என்பதால் இங்குப் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.</p> <h2>பாதிப்புகள்</h2><p>அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், தரவுகளின்படி இவை எதுவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இல்லை.</p><p>நிலநடுக்கத்தின் அளவு 3.0 முதல் 4.7 ரிக்டர் வரை மட்டுமே இருந்ததால், இதுவரை எந்தப் பகுதியிலிருந்தும் உயிர்ச்சேதமோ அல்லது பாதிப்புகளோ பதிவாகவில்லை என தேசிய நிலநடுக்கவியல் மைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>இந்தியாவில் தான் ரூ. 3 லட்சம்... உலகில் மற்ற நாடுகளில் ஐபோன் டுயோ விலை ரூ. 1 லட்சம் வரை கம்மி தான்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/cheapest-countries-to-buy-iphone-duo</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/cheapest-countries-to-buy-iphone-duo#comments</comments><guid isPermaLink="false">91c4d49f-2720-42b7-b060-dba9cdde1c12</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:17:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:17:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,Foldable Smartphone,மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/e956hopf/iPhone-Duo-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iPhone Duo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/e956hopf/iPhone-Duo-1.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனம் ஒருவழியாக தனது மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகம் செய்தது. ஐபோன் டுயோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. </p><p>வழக்கமாக ஆப்பிள் சாதனங்கள் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த முறை ஆப்பிள் தனது <a href="https://www.maalaimalar.com/topic/iphone">ஐபோன்</a> மாடல்களின் விலையை யாரும் எதிர்பாராத வகையில் நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் 256 ஜிபி ஐபோன் டுயோ மாடலின் ஆரம்ப விலை ரூ. 2,99,900 ஆகும். இதன் மூலம் இதன் விலை ரூ. 3 லட்சம் என்ற இலக்கை அடைய வெறும் ரூ. 100 மட்டுமே குறைவாக உள்ளது. </p><p>இது ஆப்பிள் நிறுவனத்தின் இதுவரை இல்லாத மிகவும் விலை உயர்ந்த ஐபோன் மற்றும் இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை உயர்ந்த ஸமார்ட்போன் ஆகும். விலை விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐபோன் டுயோ மாடல் இந்தியா தவிர்த்து வேறு எந்த நாடுகளில் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறது.</p><h2>உலகில் ஐபோன் டுயோவின் விலை எங்கு குறைவாக இருக்கும்?</h2><p>அந்த வகையில், புதிய ஐபோன் டுயோ மாடல் இந்தியாவை விட வேறு எந்தெந்த நாடுகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம். அமெரிக்காவில், ஐபோன் டுயோ பேஸ் மாடலின் ஆரம்ப விலை 1,999 அமெரிக்க டாலர்கள், அதாவது தோராயமாக ரூ. 1.9 லட்சம் ஆகும். இது ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான வித்தியாசம் ஆகும்.</p><p>ஒப்பிடப்பட்ட சந்தைகளில், அமெரிக்கா மிகக் குறைந்த பட்டியலிடப்பட்ட விலையைக் கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கனடா, ஹாங்காங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை உள்ளன. இந்தியா இந்தப் பட்டியலின் கடைசியில் உள்ளது.</p><p>அமெரிக்கத் தொகையுடன் ஒரு அடிக்குறிப்பும் வருகிறது. 1,999 அமெரிக்க டாலர் விலையில் மாநில விற்பனை வரி சேர்க்கப்படவில்லை, எனவே இறுதித் தொகையானது தொலைபேசி எங்கு வாங்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. இருப்பினும், அதைக் கணக்கில் கொண்ட பிறகும், இந்தியாவுடனான வித்தியாசம் கணிசமானதாகவே உள்ளது.</p><p>இந்தியாவில் ஐபோன் டியோ 256ஜிபி மாடலின் ஆரம்ப விலை ரூ. 2,99,900 ஆகும். 512 ஜிபி மாடலின் விலை ரூ. 3,24,900 ஆகவும், 1 டிபி மற்றும் 2 டிபி மாடல்களின் விலை முறையே ரூ. 3,74,900 மற்றும் ரூ. 4,49,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்மார்ட்போனின் விலை எத்தனை மடங்கு அதிகமாக இருந்தாலும், இது ஒரு கணிசமான தொகையாகும்.</p>]]></content:encoded></item><item><title>மிகக் குறைந்த விலையில் ஸ்பேஷியல் ஆடியோ வசதி கொண்ட விவோ இயர்பட்ஸ் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/vivo-buds-launched-at-rs-1999-in-india-with-spatial-audio</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/vivo-buds-launched-at-rs-1999-in-india-with-spatial-audio#comments</comments><guid isPermaLink="false">4f243472-5ae4-4c0f-bdcb-0dc07332b440</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vivo,Earbuds,விவோ,இயர்பட்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2xz98frn/Vivo-Buds.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vivo Buds]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2xz98frn/Vivo-Buds.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/vivo">விவோ</a> நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. விவோ பட்ஸ் என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் தினமும் இயர்பட்ஸ் பயன்படுத்துவோரை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. </p><p>தலைசிறந்த ஆடியோ, நீண்ட நேர பேட்டரி, அழைப்புகள் மற்றும் கனெக்டிவிட்டி ஆகியவற்றை சிறப்பான டிசைனில் விவோ பட்ஸ் ஒருசேர வழங்குகிறது. நீண்டநேர பயன்பாடுகளின் போதும் அசௌகரியம் ஏற்படாத வகையில், இந்த <a href="https://www.maalaimalar.com/topic/earbuds">இயர்பட்ஸ்</a> குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>புதிய விவோ பட்ஸ் 10 மில்லிமீட்டர் அதிக ரெசல்யூஷன் ஸ்பீக்கர் டிரைவர் கொண்டிருக்கிறது. இகு அழைப்புகளின் போது குரல் தெளிவாக கேட்பதை உறுதி செய்கிறது. இத்துடன் பயனர்கள் சவுண்ட்-ஐ 10-பேன்ட் EQ கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்களுடன் பயன்படுத்தும் போது இந்த இயர்பட்ஸ் ஸ்பேஷியல் ஆடியோ வசதியை ஆதரிக்கிறது.</p><p>இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 12 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது அதிகபட்சம் 50 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 4 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.</p><p>இத்துடன் டூயல் மைக் ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் அழைப்புகளின் போது வெளிப்புற சத்தங்களை தடுத்து நிறுத்தும், இதனால் குரல் அதிக தெளிவாக கேட்கும்.</p><h2>விலை மற்றும் விற்பனை விவரங்கள்:</h2><p>புதிய விவோ பட்ஸ் மாடலின் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறைந்த செலவில் புது இயர்பட்ஸ் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு ஏற்ற மாடலாக அமைந்துள்ளது. இந்த இயர்பட்ஸ் நீலகிரி கிரீன் மற்றும் பசால்ட் பிளாக் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-5-lakh-bank-employees-across-country-on-strike-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-5-lakh-bank-employees-across-country-on-strike-today#comments</comments><guid isPermaLink="false">587acd5d-ae99-4c19-a3cd-2c3a69900965</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:39:46 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:39:46.155Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,வேலைநிறுத்தம்,வங்கி ஊழியர்கள்,Bank employees,Bank Strike,central government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xl1mnu0j/bank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank strike]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xl1mnu0j/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சனி, ஞாயிறு விடுமுறை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி அறிவித்துள்ளது.</p><p>சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>மத்திய அரசு</h2><p>வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசு</a> தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கினால், அதற்கு ஈடாக வாடிக்கையாளர்களுக்கான வணிக சேவை நேரத்தை கூடுதலாக 40 நிமிடங்கள் அதிகரித்து பணியாற்ற வங்கி ஊழியர்கள் தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>8½ லட்சம் வங்கி ஊழியர்கள்</h2><p>ஆனால், 24 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த விவகாரம் நிதி அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வு காண வேண்டி அரசுக்கு நோட்டீஸ் வழங்கியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதனால். வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.</p> <h2>வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்</h2><p>இதுதவிர, வங்கிகளில் எழுத்தர் மற்றும் துணை ஊழியர்களை போதுமான அளவில் பணியமர்த்துதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டமாக மாற்றுதல், பணிக்கொடை உச்சவரம்பை அதிகரித்தல், வங்கிகளில் தொழிலாளர் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை வேண்டும் என்றே நிரப்பாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சுமார் 8½ லட்சம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">வங்கி ஊழியர்கள்</a> இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>BRICS: ஒன்றுகூடும் தலைவர்கள்.. உலக நலனை முன்னிறுத்தி விவாதிப்போம் - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi#comments</comments><guid isPermaLink="false">65f8ec5a-aa1a-40cb-9277-4ce8815952a9</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:14:39 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:14:39.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,BRICS Summit,பிரதமர் மோடி,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/c24bjje3/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/c24bjje3/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி ஆக்கபூர்வமாக பேச உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p> <p>இந்தியாவின் தலைமையில் 18வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">பிரிக்ஸ் </a>உச்சி மாநாடு நாளை (செப்டம்பர் 12) மற்றும்  நாளை மறுநாள் (செப்டம்பர் 13) டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. </p><p>2026 ஜனவரி 1 அன்று இந்தியா 4வது முறையாகப் பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றது.</p><p>இந்த மாநாட்டில் கலந்துகொள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit">ரஷிய அதிபர் புதின்</a> இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். </p><p>சீன அதிபர் ஜி ஜின் பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தருகிறார்.  ஈரான் அதிபர் பெசஸ்கியானும் மாநாட்டில் கலந்துகொள்ள வருகிறார்.</p> <h2>பிரதமர் மோடி</h2><p>இதனிடையே பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,"அடுத்த சில நாட்களில் உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் பிரிக்ஸ் மாநாட்டிற்காக ஒன்றுகூடவுள்ளனர்.</p><p>உலக நலனை முன்னிறுத்தி, பல்வேறு முக்கிய விவகாரங்களில் இந்த உச்சி மாநாடு நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களைக் காணும் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.</p><p>இந்த மாநாட்டில் ஈரான் போர் விவகாரம், அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">All set for BRICS 2026!

@BricsIndia2026 https://t.co/nXqqoBmoAm</p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2098026841844138247?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
</figure><h2>பிரிக்ஸ்</h2><p>கோல்ட்மேன் சாக்ஸ் நிதி நிறுவன பொருளாதார நிபுணர் ஜிம் ஓநீல், 2001ல் "BRIC" (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) என்ற சொல்லை முதன்முறையாகப் பயன்படுத்தினார்.</p><p>2006ல் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்குப் பின், 2009ல் ரஷியாவின் யெகாடெரின்பர்க்கில் முதலாவது உச்சி மாநாடு நடைபெற்றது.</p><p>2010ல் அழைப்பு விடுக்கப்பட்டு, 2011ல் தென்னாப்பிரிக்கா இணைந்தவுடன் 'BRIC' என்பது 'BRICS' ஆக மாறியது.</p> <p>2024 இல் எகிப்து, எதியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முழு உறுப்பு நாடுகளாக இணைந்தன. 2025இல் இந்தோனேசியா 11வது முழு உறுப்பு நாடாக இணைந்தது.</p><p>மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பெலாரஸ், நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் கூட்டாண்மை நாடுகளாக சேர்க்கப்பட்டன.</p><p>வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பிரிக்ஸ் கூட்டமைப்பின் பிரதான நோக்கங்கள் ஆகும்.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">a4e751d5-93b9-4c47-b0dc-bbd16060fd98</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:02:32 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:02:32.915Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,ஆம்னி பஸ்,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,கட்டணம் உயர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8r496rta/omnibus.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Omni bus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8r496rta/omnibus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. மதுரை செல்ல அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.</p><h2>லட்சக்கணக்கான மக்கள்</h2><p>தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்களின் கல்வி, வேலை, சுய தொழில், வியாபாரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பஸ் ரெயில்களில் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். ரெயில்களில் இருக்கைகள் முன்கூட்டியே நிரம்பிவிடுவதாலும், முக்கியமாக விழாக்காலங்களில் சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிடுவதாலும் பெரும்பாலான மக்கள் பஸ் போக்குவரத்தையே நம்பி இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-tn-govt-for-omni-bus-fare-issue">ஆம்னி பஸ்</a> உரிமையாளர்கள் தங்கள் பஸ் பயண டிக்கெட் விலையை விழாக்காலங்களில் கடுமையாக உயர்த்துவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.</p> <h2>4 மடங்கு கட்டணம் உயர்வு</h2><p>அந்த வகையில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி</a> வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகி விடுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட உள்ளனர். இதனால், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.</p> <p>அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4 ஆயிரத்து 13-ம், கோவைக்கு ரூ.3 ஆயிரத்து 239-ம், நெல்லைக்கு ரூ.3,499-ம், கன்னியாகுமரிக்கு ரூ.3 ஆயிரத்து 882-ம், நாகர்கோவிலுக்கு ரூ.3 ஆயிரத்து 699-ம், ஈரோட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 580-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>திங்கட்கிழமை கட்டண விவரம்</h2><p>அதே போன்று மறுமார்க்கத்தில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கான அதிகபட்ச பஸ் கட்டணம் விவரம் வருமாறு:-</p> <p>மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 650-ம், கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 999-ம், நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 999-ம். கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 831-ம், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 599-ம், ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 40-ம் தற்போதைய கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஒருவேளை இந்த கட்டணங்கள் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் மக்களின் தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.</p> <h2>நெரிசலுக்கு வாய்ப்பு</h2><p>இதுஒருபுறம் இருக்க, ஏராளமானோர் இன்று தங்கள் சொந்த கார்களிலும், தங்கள் ஊர்களுக்கு படையெடுப்பார்கள் என்பதால் சுங்கச்சாவடிகளில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அதேபோன்று, சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் இன்று கடுமையான கூட்ட நெரிசல் இருக்கும் என்பது நிதர்சனம். போலீசார் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran#comments</comments><guid isPermaLink="false">6935146d-9d06-4369-b262-c6cda00a6b45</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:40:28 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:40:28.300Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,Immanuel Sekaran,தியாகி இமானுவேல் சேகரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/huk31stb/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Immanuel Sekaran - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/huk31stb/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமானுவேல் சேகரனின் நினைவு தினமான இன்று அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். </p> <p>தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. </p><p>இமானுவேல் சேகரன் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதி செல்லூர் எனும் கிராமத்தில் 1924 அக்.9-ந்தேதி பிறந்தார். அவர் ஒரு சமூக நீதிப் போராட்டக்காரரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும் ஆவார். படுகாத்து குடியிருப்பு கிராமத்தில் பிறந்த இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் தனது இளமைக் காலம் தொட்டே தீவிரமாகக் குரல் கொடுத்தார்.</p> <p>இமானுவேல் சேகரன் தனது 18வது வயதிலேயே இந்திய சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசப்பற்றுடன் செயல்பட்டார்.</p><p>ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக சமத்துவம் மற்றும் தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தப் இமானுவேல் சேகரன் பாடுபட்டார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">இமானுவேல் சேகரன்</a> ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். மேலும் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக இயங்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.</p><p>சாதிய வன்முறைகளின் உச்சகட்டமாக, அவர் தனது 33-வது வயதில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார்.</p> <p>இமானுவேல் சேகரனின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ந்தேதி அரசு விழாவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இவருக்கென மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசியலிலும் சமூக நீதியிலும் இவரது தியாகம் ஒரு வரலாற்று அடையாளமாகக் கருதப்படுகிறது.</p> <p>இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash">திமுக</a> எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சீனாவில் சோகம்.. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/china-25-dead-in-cargo-ship-fire</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-25-dead-in-cargo-ship-fire#comments</comments><guid isPermaLink="false">0cc9698b-0c74-4f6a-8d3b-08ee168e6ade</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:12:22 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:12:22.346Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,fire accident,ship accident,தீவிபத்து,கப்பல் விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qcniesry/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சீனா]]></media:title><media:description type="html"><![CDATA[ சீனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qcniesry/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவில் துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p> <p>லைபீரியக் கொடியுடன் பயணிக்கும் 'ஓஷன் மெலடி' என்ற சரக்குக் கப்பல், பராமரிப்புப் பணிகளுக்காக கிங்டாவோ துறைமுகத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனாவின் </a>முக்கியக் கப்பல் போக்குவரத்து மையமான கிங்டாவோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p> <h2>தீ விபத்து </h2><p>இந்நிலையில் நேற்று துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த கப்பலில் திடீரென பயங்கர<a href="https://www.maalaimalar.com/news/world/fire-on-passenger-boat-in-the-philippines-5-dead-87-missing"> தீ விபத்து </a>ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்ட சமயத்தில் கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்துள்ளனர்.</p><p>மீட்பு பணியின்போது கப்பலுக்குள்ளிருந்து 25 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சீன அரசு ஊடகமான Xinhua உயிரிழப்புகளை உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது.</p> <p>மேலும் விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>பராமரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தீப்பற்றியதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்துச் சீனத் துறைமுக அதிகாரிகளும் தீயணைப்பு துறையினரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 11.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் 
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-11-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-11-september-2026#comments</comments><guid isPermaLink="false">25be7d97-499a-439e-853b-db5e7d2a09bc</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:42:54 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:42:54.723Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/11/19903158-raasi.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/11/19903158-raasi.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொத்துகள் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.</p><h2>மிதுனம்</h2><p>விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபார விரோதம் அதிகரிக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள்.</p><h2>கடகம்</h2><p>பெருமைகள் சேரும் நாள். பிறர் பாராட்டும்படியான செயல் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. வரன்கள் முடிவாகும்.</p> <h2>சிம்மம்</h2><p>உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தெய்வபலம் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருப்பர். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.</p><h2>கன்னி</h2><p>நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அரைகுறையாக நின்ற பணிகளை துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.</p> <h2>துலாம்</h2><p>அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பாதியில் நின்ற கட்டிடப்பணிகள் மீதியும் தொடரும்.</p><h2>விருச்சிகம்</h2><p>யோகமான நாள். உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.</p> <h2>தனுசு</h2><p>நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.</p><h2>மகரம்</h2><p>கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவுகளைச் சமாளிக்க கைமாத்து வாங்கும் சூழ்நிலை உண்டு. அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.</p> <h2>கும்பம்</h2><p>போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.</p><h2>மீனம்</h2><p>விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வீடு மாற்றம் உறுதியாகலாம். உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரிகள் இடமாற்றம் பெறுவர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-4</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-4#comments</comments><guid isPermaLink="false">cb27fa7b-e4de-4760-a80d-39157327c387</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:35:06 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:35:06.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய பெட்ரோல் விலை,Todays petrol price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>வணிகம் (Business)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>இன்றைய (11.09.2026 - வெள்ளிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iranian-attack-on-us-warships-will-lead-to-oil-tanker-strikes-us-warns">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 107.65 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 11 செப்டம்பர் 2026: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-11-september-2026-srivilliputhur-andal-purappadu</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-11-september-2026-srivilliputhur-andal-purappadu#comments</comments><guid isPermaLink="false">10f69507-59a6-46fe-a1b0-9f2812fea49c</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/19/26734327-amman2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/19/26734327-amman2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-25 (வெள்ளிக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   அமாவாசை காலை 9.40 மணி வரை பிறகு பிரதமை</p><p>நட்சத்திரம் : பூரம் பிற்பகல் 2.47 மணி வரை பிறகு உத்திரம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை</h2><p>பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதியுலா. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. </p> <p>லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - பொறுமை</p><p>ரிஷபம் - மேன்மை</p><p>மிதுனம் - ஆதரவு</p><p>கடகம் - போட்டி</p><p>சிம்மம் - பரிசு</p><p>கன்னி - மகிழ்ச்சி</p> <p>துலாம் - ஆதாயம்</p><p>விருச்சிகம் - களிப்பு</p><p>தனுசு - இன்பம்</p><p>மகரம் - நன்மை</p><p>கும்பம் - விவேகம்</p><p>மீனம் - பணிவு</p> ]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் லண்டன் பயணத்தின் அஜெண்டா இதுதான் - முழு விவரம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/here-is-the-agenda-for-chief-minister-vijays-london-trip-full-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/here-is-the-agenda-for-chief-minister-vijays-london-trip-full-details#comments</comments><guid isPermaLink="false">4bd5e6ae-68d5-4095-b057-222f2747c831</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:02:45 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:02:45.578Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,England,Business Investment,இங்கிலாந்து,தொழில் முதலீடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/iqqxboe6/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/iqqxboe6/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார். நேற்று இரவு லண்டன் புறப்பட்டார்.</p><p>முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். </p><p>நேற்றிரவு சென்னை விமான நிலயத்தில் இருந்து புறப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>துபாய் சென்று அங்கிருந்து லண்டன் பயணிக்கிறார். </p><p>நேற்று (செப்டம்பர் 10) சென்னையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய் தலைமையிலான குழு வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி நாடு திரும்பும். </p><p>அவரது குழுவில், விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். </p><p>இந்த அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith">பிரிட்டனில் அஜித்குமார் பங்கேற்கும் </a>'Michelin Le Mans Cup' கார் பந்தயத்தை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>திட்டம்</h2><p>விஜய் பயணம் குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், </p><p>“தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.</p><p>முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026ன் வாயிலாக ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p> <p>பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளதுடன், அவற்றின்மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.</p> <p>15.07.2026 அன்று நடைமுறைக்கு வந்த இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. </p><p>இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் வாயிலாக, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.</p><p>பல்வேறு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாடு வலுவான தொழில்துறைத் திறன்களைக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இத்துறைகளில் பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.</p> <p>குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், வாகன உதிரிபாகங்கன், பொறியியல் பொருட்கள் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகள், பிரிட்டன் சந்தையில் அதிகரித்துவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பான நிலையில் உள்ளன.</p><p>மேலும், கூட்டு நிறுவன பங்குதாரர்களைப் பெறுவதற்கும். தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.</p><p>பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன. </p><p>இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளையும். உலகளாவிய திறன் மையங்களையும் நிறுவி செயல்பட்டு வருகின்றன.</p><p>இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் முதலமைச்சர் விஜய் தற்போது மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும்.</p> <p>இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும். மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு.</p><p>உலகத்தரம் வாய்ந்த ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' மாநிலத்தில் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்துள்ளார். </p><p>இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். </p><p>இதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.</p> <p>இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு. விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரஷிய அதிபர் புதின் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகை</title><link>https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit#comments</comments><guid isPermaLink="false">98391dea-b57d-4772-bab4-9e849bc38724</guid><pubDate>Fri, 11 Sep 2026 00:28:05 +0000</pubDate><atom:updated>2026-09-11T00:28:05.763Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விளாடிமிர் புதின்,Vladimir Putin,BRICS Summit,pm modi,பிரதமர் மோடி,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pv62ur7n/Vladimir-Putin.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vladimir Putin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pv62ur7n/Vladimir-Putin.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ரஷிய அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/vladimir-putin">விளாடிமிர் புதின்</a> டெல்லி வந்துள்ளார்.</p><p>பிரதமர் மோடியும் புதினும் கடந்த வாரம் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே கடைசியாக சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, ​​மாஸ்கோவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ரஷ்யா-<a href="https://www.maalaimalar.com/news/world">உக்ரைன்</a> மோதலைக் குறிப்பிட்டு, "முடிவற்ற போரில் இருந்து போரின் முடிவை நோக்கி" நகருமாறு பிரதமர் ரஷிய தலைவரை வலியுறுத்தினார்.</p><h2>பிரதமர் வலியுறுத்தல்:</h2><p>"நாம் 'முடிவற்ற போர்' என்ற சூழ்நிலையில் இருந்து 'போர் முடிவு' என்ற நிலைக்கு நகர வேண்டும்... இந்தப் போர் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே மனிதகுலத்தின் விருப்பம்," என்று பிரதமர் மோடி கூறினார்.</p><p>இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில், பிரம்மோஸ் ஏவுகணை மேம்பாடுகள் போன்ற பாதுகாப்பு திட்டங்கள் உட்பட, இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>எஸ்-400 வழங்க ரஷியா உறுதி:</h2><p>பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்துவது குறித்து இந்தியாவும், ரஷியாவும் ஆராய்ந்து வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்தார். மேலும், ரஷ்யா தனது மீதமுள்ள எஸ்-400 அமைப்புகளை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், முன்மொழியப்பட்ட எஸ்யு-57 போர் விமானங்களை வழங்குவது குறித்தும் விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார்.</p><p>பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்துவது குறித்து புது தில்லியும் மாஸ்கோவும் ஆராய்ந்து வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்தார். மேலும், ரஷியா தனது மீதமுள்ள எஸ்-400 அமைப்புகளை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், முன்மொழியப்பட்ட எஸ்யு-57 போர் விமானங்களை வழங்குவது குறித்தும் விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார்.</p><p>இந்தியா நடத்தும் இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் புதின் கலந்துகொள்கிறார். ஆண்டுதோறும் நடைபெறும் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் முழு அமர்வில் அவர் உரையாற்றுவார். அதன்பிறகு, பிரதமர் மோடியுடன் இன்னோபிராம் கண்காட்சியை அவர் பார்வையிடுவார்.</p>]]></content:encoded></item><item><title>ஹிஸ்புல்லா சுரங்கங்களை இடித்து அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/israel-says-it-destroyed-key-hezbollah-tunnels-in-south-lebanon</link><comments>https://www.maalaimalar.com/news/world/israel-says-it-destroyed-key-hezbollah-tunnels-in-south-lebanon#comments</comments><guid isPermaLink="false">2d19c8c8-304c-402a-b63a-f0a03b132125</guid><pubDate>Thu, 10 Sep 2026 23:49:56 +0000</pubDate><atom:updated>2026-09-10T23:49:56.279Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரேல்,Israel,lebanon,Hezbollah,லெபனான்,ஹிஸ்புல்லா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sr4atnjq/Hezbollah-Tunnels-Attacked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hezbollah Tunnels Attacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sr4atnjq/Hezbollah-Tunnels-Attacked.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு லெபனானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் மலைத்தொடருக்கு கீழே, <a href="https://www.maalaimalar.com/news/world">ஈரான்</a> ஆதரவு ஹிஸ்புல்லா குழுவால் கட்டப்பட்ட முக்கிய சுரங்கங்களை இடித்துத் தள்ளியதாக இஸ்ரேல் தெரிவித்தது.</p><p>"இது ஈரானின் நிதியுதவி மற்றும் திட்டமிடலுடன் இரண்டு தசாப்தங்களாக கட்டப்பட்ட ஒரு பயங்கரவாத உள்கட்டமைப்பு ஆகும். இதை அழிப்பது "அலி அல்-தாஹிர் முகட்டின் மீது - தரைக்கு மேலேயும் கீழேயும் - செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை முழுமையாக்குகிறது," என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/israel">இஸ்ரேல்</a> காட்ஸ் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. </p><h2>சக்திவாய்ந்த அதிர்வு:</h2><p>லெபனானின் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம், நபாத்தியே பிராந்தியத்தில் உள்ள அலி அல்-தாஹெர் முகட்டில் இஸ்ரேல் ஒரு "மாபெரும் வெடிப்பை" நடத்தியதாகவும், அது "நிலநடுக்கங்களையும் சக்திவாய்ந்த அதிர்வையும் ஏற்படுத்தியதாகவும்" செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>தெற்கு லெபனானில் உள்ள ஏ.எஃப்.பி. பத்திரிகையாளர்களும் வியாழக்கிழமை மாலை பெரும் வெடி சத்தங்களை கேட்டதாக தெரிவித்தனர். இரண்டு கிலோமீட்டருக்கும் (1.2 மைல்கள்) அதிகமான நீளத்திற்கு விரிந்திருந்த அந்தக் கட்டமைப்பில், "ஈரானில் தயாரிக்கப்பட்ட டஜன் கணக்கான ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், அத்துடன் இயந்திர துப்பாக்கிகள், டஜன் கணக்கான டாங்கெதிர்ப்பு ஏவுகணைகள், மற்றும் நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள்" இருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.</p><p>அந்த நிலத்தடி வளாகத்தில் ஹிஸ்புல்லாவின் 'பத்ர்' பிரிவின் கட்டளை மையமும் அடங்கியிருந்தது என்று ராணுவம் மேலும் தெரிவித்தது.</p><p>மலைத்தொடர் பகுதியில் செயல்பட்டு வந்த சில தீவிரவாதிகள் அவ்விடத்தைக் கைவிட்டுவிட்டதாகவும், மற்றவர்கள் "வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டனர்" என்றும் ஓர் இராணுவ அதிகாரி AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p>அலி அல்-தாஹெர் முகட்டைக் கைப்பற்றிவிட்டதாக இஸ்ரேல் கடந்த வாரம் அறிவித்திருந்தது.</p><p>மார்ச் மாதத்தில், ஹிஸ்புல்லா ஈரானுக்கு ஆதரவான ஒரு பிராந்திய போரில் லெபனானை இழுத்தது. ஆனால், ஜூன் மாதத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு மற்றும் லெபனான்-இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு பிறகு வன்முறையின் தீவிரம் குறைந்துள்ளது.</p><h2>தெற்கில் பாதுகாப்பு மண்டலம்:</h2><p>பேச்சுவார்த்தைகளின் போது, ​​அவற்றிற்கு ஆதரவளித்த அமெரிக்கா, லெபனான் ராணுவம் அலி அல்-தாஹெர் முகட்டைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்று முன்மொழிந்தது, ஆனால் ஹிஸ்புல்லா அதை மறுத்துவிட்டது என இரு தரப்பினருக்கும் நெருக்கமான ஓர் வட்டாரம் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.</p><p>மார்ச் மாதம் முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் மொத்தம் 4,300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக பெய்ரூட் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், இஸ்ரேலிய படைகள் தெற்கில் "பாதுகாப்பு மண்டலம்" என்று அழைக்கப்படும் ஒரு பகுதியைத் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>இந்தியா - ஜப்பான் டி20 போட்டி டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-vs-japan-t20i-tickets-sold-out-historic-first-international-cricket-clash</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-vs-japan-t20i-tickets-sold-out-historic-first-international-cricket-clash#comments</comments><guid isPermaLink="false">4e93b00a-c307-48d4-8427-116ae0a52539</guid><pubDate>Thu, 10 Sep 2026 23:03:24 +0000</pubDate><atom:updated>2026-09-10T23:03:24.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>T20I,டி20 போட்டி,இந்தியா - ஜப்பான்,India vs Japan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/92024zlo/Japan-vs-India.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Japan vs India]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/92024zlo/Japan-vs-India.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செப்டம்பர் 22-ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்தியா-ஜப்பான் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜப்பான் <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> சங்கம் (ஜே.சி.ஏ.) அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச கிரிக்கெட் போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.</p><p>ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஒரே ஒரு டி20 போட்டி, இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசுகி கோப்பையின் கீழ் நடைபெறும் இந்தப் போட்டி, இந்தியா-ஜப்பான் தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக அமைகிறது.</p><h2>சமூக வலைத்தள பதிவு:</h2><p>போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜே.சி.ஏ. சமூக வலைதளங்களில் அறிவித்ததோடு, இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கு ஆதரவளித்த ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தது.</p><p>இந்திய மற்றும் ஜப்பான் ஆண்கள் அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இந்த மோதல் அமையும். ஜே.சி.ஏ. மற்றும் பி.சி.சி.ஐ. இந்த மாத தொடக்கத்தில் இந்த போட்டியை கூட்டாக அறிவித்தன.</p><p>இந்தப் போட்டி, விளையாட்டின் மூலம் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே மக்கள் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'ஸ்போர்ட் 75' என்ற முன்னெடுப்பையும் தொடங்கி வைக்கும். ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முன்னெடுப்பு உருவாகியுள்ளது.</p><h2>விளையாட்டை அறிமுகப்படுத்த வாய்ப்பு:</h2><p>"ஜப்பானில் நடைபெறும் ஒரு சிறப்பு டி20 சர்வதேச போட்டிக்காக இந்திய மற்றும் ஜப்பானிய ஆண்கள் அணிகள் ஒன்றிணையும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் பி.சி.சி.ஐ. மகிழ்ச்சி கொள்கிறது. இது கிரிக்கெட்டிற்கு ஒரு முக்கியமான தருணம், ஏனெனில் இது இந்திய அணியை ஒரு புதிய தளத்திற்கு அழைத்துச் செல்வதோடு, ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள பார்வையாளர்களுக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது," என்று பி.சி.சி.ஐ. செயலாளர் தேவாஜித் சைகியா கூறினார்.</p><p>2036 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் லட்சியத்தையும் கருத்தில் கொண்டு, விளையாட்டின் மூலம் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான மக்கள் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிழக்கு காங்கோவில் 2 பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/fire-in-eastern-congo-kills-at-least-26-students-at-2-schools</link><comments>https://www.maalaimalar.com/news/world/fire-in-eastern-congo-kills-at-least-26-students-at-2-schools#comments</comments><guid isPermaLink="false">6e17107c-d9d8-474e-af7e-660835739eb7</guid><pubDate>Thu, 10 Sep 2026 21:19:46 +0000</pubDate><atom:updated>2026-09-10T21:19:46.145Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire,காங்கோ,Congo,தீ விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/n2jjfm3b/Fire-in-eastern-Congo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fire in eastern Congo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/n2jjfm3b/Fire-in-eastern-Congo.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிழக்கு காங்கோவின் புகாவு நகரில் அருகருகே அமைந்திருந்த இரண்டு பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 26 <a href="https://www.maalaimalar.com/topic/students">மாணவர்கள்</a> உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தில் மேலும் பலர் காயமடைந்தனர் என்று மாகாண அரசு தெரிவித்துள்ளது.</p><p>தெற்கு கிவு (South Kivu) மாகாண அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 19 மாணவிகளும் 7 மாணவர்களும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது; மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இந்நகரத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள M23 கிளர்ச்சிக் குழுவின் செய்தி தொடர்பாளர் லாரன்ஸ் கன்யுகா, முன்னதாக 24 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், 29 பேர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.</p><h2>மளமளவென பரவிய தீ:</h2><p>ஒரு வீட்டில் தொடங்கிய தீ, அதனையொட்டி அமைந்திருந்த இரண்டு பள்ளிகளுக்கும் பரவியதாக உள்ளூர் பகுதி நிர்வாகி மொய்ஸ் லுபாலா 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p>ஃபுராஹா மேல்நிலை பள்ளிக்குள் பல மாணவர்கள் சிக்கிக்கொண்டதாகவும், அவர்களில் சிலர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.</p><p>வெவ்வேறு வயதுடைய மாணவ-மாணவிகள் பள்ளிச் சீருடைகளுடன் நியாமுலகிரா BDOM சுகாதார மையத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக செவிலியர் சிசா ஜீன்-பாப்டிஸ்ட் ஏபி-யிடம் தெரிவித்தார். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், துல்லியமான எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் மருத்துவப் பணியாளர்கள் சிரமப்பட்டதாக அவர் கூறினார்.</p><h2>மரத்தால் ஆன வீடுகள்:</h2><p>"வெளியேறும் வழி மிகவும் குறுகலாக இருந்ததால், சில மாணவர்கள் ஜன்னல்கள் வழியாகக் குதிக்கத் தொடங்கினர்; மற்றவர்கள் கதவை நோக்கி ஓடினர். அனைவரும் வெளியேற முண்டியடித்தபோது, ​​மாணவர்கள் கீழே தள்ளப்பட்டு மிதிக்கப்பட்டனர்," என்று லுபாலா கூறினார்.</p><p>தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை; ஆனால் தீ தொடங்கிய பகுதி அதிக மக்கள் அடர்த்தி கொண்டது என்றும், அங்குள்ள பெரும்பாலான வீடுகள் மரத்தால் ஆனவை என்றும் லுபாலா தெரிவித்தார்.</p><p>காங்கோ அரசு நாட்டின் கிழக்கு பகுதி மீது கட்டுப்பாட்டை நிலைநாட்டப் போராடி வருகிறது. ருவாண்டாவின் ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சியாளர்கள் பிப்ரவரி 2025-இல் புகாவு நகரத்தைக் கைப்பற்றினர். உலகின் பெரும்பாலான தொழில்நுட்பத் துறைக்கு இன்றியமையாததாகத் திகழும், கிழக்கு காங்கோவின் டிரில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள கனிம வளங்களைக் கைப்பற்ற 100-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய குழுக்கள் போட்டியிட்டு வருகின்றன.</p><p>வரலாற்றிலேயே மிகக் கொடிய எபோலா நோய்த்தொற்றுப் பரவலால் இப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரச் சேவைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன; இந்நோய்த்தொற்றால் 3,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6,800-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>3-ஆவது டெஸ்ட்: 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 268 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/3rd-test-day-2-stumps-england-close-in-series-sweep-against-pakistan</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/3rd-test-day-2-stumps-england-close-in-series-sweep-against-pakistan#comments</comments><guid isPermaLink="false">e490eb05-9db4-47bc-adba-9c7c75fa0253</guid><pubDate>Thu, 10 Sep 2026 20:38:22 +0000</pubDate><atom:updated>2026-09-10T20:38:22.069Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ENGvPAK,இங்கிலாந்து பாகிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/fezsykf8/Pak-Stumps.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pak at Day 2 Stumps]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/fezsykf8/Pak-Stumps.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட <a href="https://www.maalaimalar.com/sports/cricket">டெஸ்ட்</a> தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. </p><p>இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற <a href="https://www.maalaimalar.com/topic/engvpak">இங்கிலாந்து அணி</a> பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><h2>பாகிஸ்தான் ஆல் அவுட்:</h2><p>அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். சவுத் ஷகீல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.</p><p>இதனால், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் வெறும் 133 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளையும், ஆலி ராபின்சன் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.</p><h2>இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்:</h2><p>இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எமிலோ கே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த எமிலோ கே - ஹாரி புரூக் ஜோடி 104 ரன்கள் சேர்த்த நிலையில் எமிலோ கே 60 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு156 ரன்கள் எடுத்திருந்தது.</p><p>இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். ஹாரி புரூக் 70 ரன்னில் அவுட்டானார். டான் லாரன்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜேமி ஸ்மித் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 69 ரன்னில் வெளியேறினார்.</p><p>கடைசி கட்டத்தில் இறங்கிய ஆலி ராபின்சனும் தன் பங்குக்கு அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியை விட இங்கிலாந்து அணி 320 ரன்கள் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் சார்பில் ரசவுல்லா 4 விக்கெட்டுகளையும், முகமது அலி மற்றும் இம்ரான் ரந்தவா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.</p><h2>பாகிஸ்தான் 2-ஆவது இன்னிங்ஸ்:</h2><p>320 ரன்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சயிம் ஆயுப் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அப்துல்லா ஷஃபிக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.</p><p>மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய ஆசான் அவைஸ் நிதானமாக ஆடி 29 ரன்களை எடுத்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஷான் மசூத் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவர் 21 ரன்களை எடுத்த போது, இரண்டாம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. </p><p>தொடர்ந்து மழை பெய்ததால், இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்து 268 ரன்கள் பின்தங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி உள்பட பல உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-collegium-recommends-15-judges-for-delhi-3-other-high-courts</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-collegium-recommends-15-judges-for-delhi-3-other-high-courts#comments</comments><guid isPermaLink="false">581b0793-40b0-4e22-b486-25017d2b1394</guid><pubDate>Thu, 10 Sep 2026 19:38:08 +0000</pubDate><atom:updated>2026-09-10T19:38:08.815Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,judge,Collegium,கொலீஜியம்,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/hhx7264m/Supreme-Court.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/hhx7264m/Supreme-Court.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்ற</a> கொலீஜியம், டெல்லி, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நியமனங்களை பரிந்துரைத்தது.</p><p>நீதித்துறை அதிகாரிகளான உஷாராணி, கே.எஸ். பரத் குமார் மற்றும் நேரேல வீரபத்ரையா பவானி ஆகியோரை <a href="https://www.maalaimalar.com/news/national">கர்நாடக</a> உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2>நீதிபதிகள் நியமன வழிமுறை:</h2><p>வியாழக்கிழமை நடைபெற்ற தனது கூட்டத்தில், உச்ச நீதிமன்ற கொலீஜியம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்வதற்காக எட்டு நீதித்துறை அதிகாரிகளின் பெயர்களையும் பரிந்துரைத்தது. பரிந்துரைக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் குர்விந்தர் பால் சிங், நிவேதிதா அனில் சர்மா, நிஷா சஹாய் சக்சேனா, சஞ்சய் சர்மா, பரத் பராஷர், டாக்டர் (திருமதி) அதிதி சௌத்ரி, தினேஷ் பட் மற்றும் அருண் பரத்வாஜ் ஆவர்.</p><p>"2026 செப்டம்பர் 10-ஆம் தேதியன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில், பின்வரும் நீதித்துறை அதிகாரிகளை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது," என்று உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற நீதிபதியாக நீதித்துறை அதிகாரி யஷ் பால் போர்னியை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.</p><p>நீதித்துறை அதிகாரிகளான மனோஜ் பிரசாத், அகில் குமார் மற்றும் ராம் சர்மா ஆகியோரை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் அது பரிந்துரைத்தது.</p><h2>நடைமுறை விதிகள்:</h2><p>உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை நிர்வகிக்கும் நடைமுறை விதிகளின்படி, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அந்த உயர் நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகளுடன் கலந்தாலோசித்து நியமனத்திற்கான பரிந்துரையை தொடங்குகிறார். அந்தப் பரிந்துரையை தலைமை நீதிபதி, முதலமைச்சருக்கு அனுப்புகிறார், அவர் அதை ஆளுநருக்கு அனுப்புகிறார். ஆளுநர், அந்தப் பரிந்துரையை, தொடர்புடைய உள்ளீடுகள் மற்றும் ஆவணங்களுடன் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சருக்கு அனுப்புகிறார்.</p><p>பின்னர் அந்த முன்மொழிவு மத்திய அரசால் பரிசீலிக்கப்பட்டு, இந்திய தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. அவர், பரிந்துரையை இறுதி செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளுடன் கலந்தாலோசிப்பார்.</p><p>கொலீஜியத்தின் ஒப்புதலை தொடர்ந்து, அந்த பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிறது. குடியரசு தலைவர் நியமன ஆணைகளில் கையொப்பமிட்டு, நீதித்துறை இந்திய அரசிதழில் அறிவிக்கையை வெளியிட்ட பின்னரே இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-ind-w-beat-ban-w-enters-final</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-ind-w-beat-ban-w-enters-final#comments</comments><guid isPermaLink="false">08dfe728-46f5-45c5-b8de-4c3f326ddffa</guid><pubDate>Thu, 10 Sep 2026 18:57:34 +0000</pubDate><atom:updated>2026-09-10T18:57:34.442Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/j24bs9uk/IND-W-Won.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND W Won]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/j24bs9uk/IND-W-Won.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.</p><p>அதன்படி 'ஏ' பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா (3 வெற்றியுடன் 6 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி) அணியும் 'பி' பிரிவில் முதல் இரு இடங்களை பெற்ற நடப்பு சாம்பியன் இலங்கை (6 புள்ளி) மற்றும் வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் <a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup">அரையிறுதி</a> சுற்றுக்கு முன்னேறின.</p><h2>முதல் அரையிறுதி போட்டி:</h2><p>இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் மகளிர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பந்துவீச முடிவு செய்தார். அதன்படி பேட்டிங் தொடங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.</p><p>இந்திய மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த ஸ்மிருதி மந்தனா 2 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஷஃபாளி வர்மா சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய பிரதிகா ராவல் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p>பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ரிச்சா கோஷ் 21 ரன்களும், தீப்தி சர்மா 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 24 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது.</p><h2>வங்கதேசம் சொதப்பல்:</h2><p>எளிய இலக்கை துரத்திய வங்கதேச மகளிர் அணிக்கு திலாரா அக்தர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஜௌரியா ஃபெர்டோஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். சோபனா மொஸ்தரா 18 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய கேபடன் நிகர் சுல்தானா 19 ரன்களை எடுத்தார்.</p><p>இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு வெறும் 109 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் இந்திய மகளிர் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.</p><p>இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், நந்தனி ஷர்மா 2 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சராணி மற்றும் பிரேமா ராவத் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு நிகழ்ச்சிகளில் &apos;வந்தே மாதரம்&apos; பாடலின் 2 சரணங்களை மட்டுமே பாட வேண்டும் - கர்நாடகா உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-govt-orders-singing-of-only-2-vande-mataram-stanzas-at-state-programmes</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-govt-orders-singing-of-only-2-vande-mataram-stanzas-at-state-programmes#comments</comments><guid isPermaLink="false">8be99fd7-dfc7-48ca-a3aa-4924f9bd4a94</guid><pubDate>Thu, 10 Sep 2026 17:07:19 +0000</pubDate><atom:updated>2026-09-10T17:07:19.536Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rdtytzsu/DK-Shivakumar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rdtytzsu/DK-Shivakumar.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதமர் அல்லது ஆளுநர் ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தவிர, கர்நாடக அரசு நடத்தும் பிற நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட வேண்டும் என்று அம்மாநிலத்திலுள்ள காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>மாநிலத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்து மாநில அமைச்சரவை எடுத்த முடிவை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்:</p><p>தேசிய கீதமான 'ஜன கண மன' மற்றும் 'வந்தே மாதரம்' ஆகிய இரண்டும் ஒன்றாக இசைக்கப்படும்போது, ​​'வந்தே மாதரம்' பாடலின் அனைத்து 6 சரணங்களையும் பாட வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.</p><p>இருப்பினும், 'வந்தே மாதரம்' பாடல் தொடர்பாக 1937-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கடைப்பிடிக்க காங்கிரஸ் செயற்குழு ஆகஸ்ட் 19 அன்று முடிவு செய்தது; அந்தத் தீர்மானத்தின்படி, கட்சியின் நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்.</p><p>கட்சி நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாக பாடாமல் அவமதிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜ.க. குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><p>உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்கள்:</p><p>செப்டம்பர் 8 தேதியிட்ட மாநில அரசின் உத்தரவின் முன்னுரையில், இந்திய தேசிய இயக்கத்தின் போது தேசியம், ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வளர்ப்பதில் 'வந்தே மாதரம்' பாடல் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>தேசிய பாடலின் அதிகாரப்பூர்வ வடிவம் மற்றும் பல்வேறு அரசு மற்றும் பொது விழாக்களில் அதனைப் பாடுவதற்கான அல்லது இசைப்பதற்கான நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>தேசிய பாடலை இசைப்பதற்கும், கூட்டாக பாடுவதற்கும் ஏற்ற நிகழ்வுகளை அந்த வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith#comments</comments><guid isPermaLink="false">69495474-cebc-433d-be87-4f4fc990448f</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:57:50 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:57:50.893Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>actor Ajith Kumar,நடிகர் அஜித்குமார்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Le Mans Cup</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/965fnm1w/New-Project-2026-09-10T210959.115.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/965fnm1w/New-Project-2026-09-10T210959.115.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிட்டனில் நடைபெறும் 'Michelin Le Mans Cup' கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த சர்வதேச கார் பந்தயத்தில் நடிகரும், ரேஸருமான அஜித்குமாரின் கார் பந்தயக்குழு பங்கேற்கிறது. </p><h2>முதலமைச்சரின் பயணம் </h2><p>தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight">முதலமைச்சர் விஜய் </a>செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார். இன்று இரவு லண்டன் புறப்பட்டார்.</p><p>இந்த அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் இப்போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார். </p><p>ஒரே சமயத்தில் முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணமும், நடிகர் அஜித்தின் கார் பந்தயமும் அமைந்திருப்பதால், இவ்விரு திரையுலக ஜாம்பவான்களும் நேரில் சந்தித்துக் கொள்ளும் இந்த தருணம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A special guest will be waving the green flag at Silverstone this weekend!  C. Joseph VIJAY<br><br>The Indian actor and Chief Minister of Tamil Nadu <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a>, will be joining us to support our Indian drivers in the UK and officially start the <a href="https://x.com/hashtag/SilverstoneRound?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SilverstoneRound</a> in front of the… <a href="https://t.co/pZiZOKy7yW">pic.twitter.com/pZiZOKy7yW</a></p>&mdash; Le Mans Cup (@LeMansCup) <a href="https://x.com/LeMansCup/status/2098050030162559409?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item></channel></rss>