<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 08 Sep 2026 13:31:15 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026#comments</comments><guid isPermaLink="false">271c6b9f-172f-4ef3-bb75-008623eab7d3</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:42:33 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:54:42.321Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uj2yvx5o/JCD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uj2yvx5o/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-budget-session-ends-today">பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு</a></p><p>* பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.</p><p>* முதல்வர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனித்தார்.</p><p>என்னை பின்பற்றி என் தொகுதி மக்கள் வருவார்கள், நான் இல்லாமல் போனாலும் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும்.</p><p>சட்டசபையில் முதன்முறையாக பேசிய திருவிக  நகர் எம்எல்ஏ பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பல்லவி பேசினார்.</p> <p>போதைப்பொருள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் விளையாட்டு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.</p><p>இதுவரை எத்தனையோ எம்எல்ஏ வந்தார்கள். எங்கள் தொகுதி மாறவில்லை, மாற்றம் கொண்டு வரும் வகையில் செயல்படுவேன் -  பல்லவி</p> <p>வடசென்னையில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எங்கள் தொகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும்.</p><p>வடசென்னையில் பள்ளி மாணவர்கள் போதைப்புழக்கத்தில் அதிகம் பாதிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்  -  பல்லவி</p><p>பூங்கா கட்டுவதை மட்டுமே முந்தைய எம்எல்ஏக்கள் செய்து கொண்டிருந்தனர்.</p><p>மேயரும் அமைச்சரும் எனது தொகுதியில் தான் இருக்கிறார்கள் -  பல்லவி</p> <p>போதைப்பொருள் புழக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது - தவெக எம்எல்ஏ பல்லவி</p> <p>உயர் ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் ஆகியவை மிக முக்கிய பொது சுகாதார பிரச்சனைகள்.</p><p>தமிழ்நாட்டு மக்கள் நாளொன்றுக்கு 7 முதல் 8 கிராம் உப்பு உட்கொள்கின்றனர் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>மக்களிடம் கேட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் பட்டியல் வைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - சி.வி.சண்முகம்</p><p>தமிழகத்தில் மட்டும் மொத்தம் 370 சாதிகள் உள்ள நிலையில் மத்திய அரசின் பட்டியலில் 290 சாதிகள் மட்டுமே உள்ளது.</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் தவெக அரசின் கோரிக்கை</p><p>ரூ.12,000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு, மாநில  அரசுக்கு ஏற்றவாறு சாதிப்பெயரின் பட்டியல் தேவை.</p><p>சமத்துவமான மரியாதையுடன் வாய்ப்பையும் தருவதுதான் சமூக நீதி - அமைச்சர் ஆதவ் </p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>இந்தியாவிலேயே கடந்த 100 வருடங்களாக சமூகநீதிக்கான குரலை எழுப்பும் மாநில அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.</p><p>சமூகநீதிக்காக பிரதமர், முதலமைச்சர் பதவியை இழந்தவர்களின் வழியில் தவெக அரசும் தீர்மானம் நிறைவேற்றுகிறது.</p><p>நான் சார்ந்த சமூகம் ஓபிசி பட்டியலில் இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எடுப்போம் என்று தான் மத்திய அரசு கூறி இருக்கிறது.</p><p>சாதிப்பட்டியலை வைத்துக்கொண்டு கணக்கெடுப்பு நடத்தவும். சாதிப்பட்டியலை டவுன்லோடு செய்து மக்களே பார்க்கும் வசதி தேவை - சி.வி.சண்முகம்</p><p>சுதந்திரத்திற்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு - 4147 சாதிகள் இருந்தன.</p><p>2011-ல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது - சி.வி.சண்முகம்</p><h2>அதிமுக  சி.வி.சண்முகம் உரை</h2><p>நான் கவுண்டர் என கூறுவேன், வன்னியர் குல சத்திரியர் என சான்றிதழில் உள்ளது.</p><p>ஒரே சாதி பல்வேறு பிரிவுகளின் பெயரில் இருக்கிறது.</p><p>கடலூரில் படையாட்சி எனவும் சென்னையில் நாயக்கர் எனவும் கூறிக்கொள்வர்.</p><p>யாதவர்கள் தங்களது சாதி அடையாளத்தை 1931-ல் சரியாக தீர்மானித்துவிட்டனர்.</p><p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிடக்கோரி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தீர்மானம்</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி விவரம் தொடர்பான திறந்தவெளி முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்</p><p>பட்டியலில் உள்ள சாதி அடிப்படையில் மட்டும் பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பதிவேற்றம் செய்யப்பட்ட சாதிகளின் பட்டியலில் இருந்து சாதி விவரத்தை குறிப்பிடும் வகையில் வழிவகை செய்யக்கோரி தீர்மானம்</p><p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பட்ஜெட் அனுமதி இல்லாமலேயே 14-1-2026 அரசாணை மூலம் 2026-27-ம் ஆண்டு பணிகளுக்கு ரூ.2000 கோடி எடுத்துள்ளதாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுக்கப்பட்டது குறித்த விசாரணை தேவை.</p><p>80 பணிகளுக்கு எதிர்கால பட்ஜெட்டில் முன்கூட்டியே ரூ.2,000 கோடி ஒதுக்கியது மிகப்பெரிய தவறு - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்</h2><p>கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி முறைகேடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்.</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுத்துள்ளது திமுக.</p><p>தாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றெண்ணி எதிர்கால பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி முறைகேடு என குற்றச்சாட்டு</p><p>அவையை முடிக்கவிடாமல் திமுகவினர் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?</p><p>முதலமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கு காரணத்தையும் கூறி விட்டேன்.</p><p>தவெக எம்எல்ஏக்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. </p><p>என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்த்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி - சபாநாயகர்</p><h2>சபாநாயகர் உரை</h2><p>திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா?</p><p>சபையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என திமுகவினருக்கு உள்நோக்கம்.</p><p>அவையின் மாண்பு தான் முக்கியம், திமுகவினரை வெளியேற்றியதை தவறாக கருதவில்லை.</p><p>பிற்பகல் 1.30 மணிக்குள்ளாக சட்டசபையை முடிக்க வேண்டும்</p> <p>சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்திருந்த திமுக எம்எல்ஏக்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர்.</p><p>சட்டசபை மாண்பை குலைக்கும் வகையில் செயல்படும் திமுக உறுப்பினர்களை அவை காவலர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு</p><p>திமுக கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் - சபாநாயகர்</p><p>அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்து திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.</p><p>சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்தும், சூழ்ந்து நின்றும் திமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி வருகின்றனர்.</p><p>அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு திமுக உறுப்பினர்கள் வந்துள்ளீர்கள்.</p><p>சட்டசபையை நடத்தவிடாமல் தடைசெய்யும் நோக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர் - சபாநாயகர்</p><p>2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேறுங்கள் - அவை முன்னவர் செங்கோட்டையன்</p><p>சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளி</p><p>நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய எதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை - சபாநாயகர்</p> <p>சட்டசபையில் திமுகவினர் என் அனுமதியின்றி போஸ்டர்களை காட்டினீர்கள்.</p><p>சர்காரியாக கமிஷன் செய்தி பற்றி பலமுறை மாமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.</p><p>மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தி - சபாநாயகர்</p><p>சட்டசபையில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசியபோது ஒரு நிமிடம் கூட திமுகவினர் கவனிக்கவில்லை -சபாநாயகர் குற்றச்சாட்டு</p><p>திமுக ஆட்சியின் மீது சர்காரியா கமிஷனிடம் புகார் அளித்ததே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் தான் - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>திமுக ஆட்சியில் என்னென்ன ஊழல் நடந்தது என்று காட்டும் பொறுப்பு தவெக அரசுக்கு உள்ளது.</p><p>திமுக ஆட்சியில் நடந்தவற்றை ஒவ்வொரு துறையாக கிளீன் செய்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>ஊழல் என்ற புற்றுநோயை திமுக உருவாக்கி உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>மறைந்தவர்கள் பற்றியும் அவையில் இல்லாதவர் பற்றியும் முதலமைச்சர் பேரவையில் பேசுவது நியாயமில்லை - கே.என்.நேரு</p><p>என்னை பேச விடமாட்டார்கள், தவெகவினர் பேசினாலே பயந்து எழுந்து நின்று கூச்சல் போடுவர் - அமைச்சர் ஆதவ்</p><p>எம்ஜிஆரும் அவையில் சர்காரியா கமிஷன் குறித்து பேசி உள்ளதால் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டாம் - செங்கோட்டையன்</p><p>ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்</p><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் தொடர்பான வழக்கிற்கு தான் கைது செய்யப்பட்டார்.</p><p>21-வது அம்ச திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>விசாரணையையோ நீதிமன்றத்தை பற்றியோ நேற்று முதலமைச்சர் விஜய் பேசவில்லை.</p><p>கலைஞர் எங்கெங்கு எல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்காரியாக கமிஷனில் உள்ளது. </p><p>திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம், அது எல்லாம் மிசா வழக்கு ஆகாது.</p> <p>முதலமைச்சர் விஜய் ஆதாரம் இன்றி பேசிய அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது.</p><p>குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது - எ.வ.வேலு</p><p>நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது -  எ.வ.வேலு </p> <p>மிசா சட்டத்தை பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக எதிர்ப்பு </p><p>பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார் - எ.வ.வேலு</p><p>நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.</p><p>அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.</p><p>ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின் - எ.வ.வேலு </p> <h2>சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு உரை</h2><p>பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார்.</p><p>அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார்.</p><p>நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.</p><p>சட்டசபையில் இன்று பொதுத்துறை, அயலக தமிழர் நலன், மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் ஓய்வுக்கால நன்மைகளும், போக்குவரத்து ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது. </p><p>அமைச்சர்கள் செங்கோட்டையன், மரிய வில்சன், பார்த்திபன், தென்னரசு ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>துலீப் டிராபி இறுதிப்போட்டி: 3ம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 242/6</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/south-zone-242-for-6-wickets-in-end-of-3rd-day-against-east-zone-in-duleep-trophy-final</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/south-zone-242-for-6-wickets-in-end-of-3rd-day-against-east-zone-in-duleep-trophy-final#comments</comments><guid isPermaLink="false">1fbfe24f-5bc6-438e-8585-c87d740732e9</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:24:57 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:24:57.297Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துலீப் டிராபி,Duleep Trophy,south zone,East Zone,கிழக்கு மண்டலம்,தெற்கு மண்டலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/pyslrt60/padikkal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ padikkal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/pyslrt60/padikkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>துலீப் டிராபி இறுதிப்போட்டியின் மூன்றாவது நாளில் தெற்கு மண்டல அணி 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது.</strong></em></p><p>துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதில் கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>இஷான் கிஷான் இரட்டை சதம்</h2><p>அதன்படி, முதலில் பேட் செய்த கிழக்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி இரட்டை சதம் கடந்தார். அவர் 270 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.</p><h2>குமார் குஷாக்ரா சதம்</h2><p>குமார் குஷாக்ரா சதமடித்து 101 ரன்னில் வெளியேறினார். ஷிகர் மோகன் 85 ரன்னும், அபிமன்யு ஈஸ்வரன் 75 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>தெற்கு மண்டல அணி சார்பில் திரிபுரன விஜய் 4 விக்கெட்டும், சமா மிலிந்த், ஷ்ரேயாஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. கேப்டன் திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து ஆடி வருகிறார்.</p><h2>திலக் வர்மா அரை சதம்</h2><p>இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. திலக் வர்மா 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><p>தெற்கு மண்டல அணி இன்னும் 466 ரன்கள் பின்தங்கி யுள்ளது. இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் கிழக்கு மண்டல அணியே வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.</p><p>கிழக்கு மண்டல அணி சார்பில் ஷமி, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>உடல்கேலி செய்கை - முதலமைச்சர் விஜய்மீது திமுக புகார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/allegation-of-inappropriate-physical-conduct-dmk-lodges-complaint-against-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/allegation-of-inappropriate-physical-conduct-dmk-lodges-complaint-against-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">d5a5f480-2f5c-4d1a-b82f-2786544facdc</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:11:33 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:11:33.314Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,மு.க.ஸ்டாலின்,M.k. stalin,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/b0xjtixd/New-Project-2026-09-08T183521.576.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உடல்கேலி செய்கை - முதலமைச்சர் விஜய்மீது திமுக புகார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/b0xjtixd/New-Project-2026-09-08T183521.576.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேலி செய்யும் வகையில், மிசா சட்டத்தை குறிப்பிட்டு பேசும்போது சைகை ஒன்றை செய்தார்.</p><p>இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழு, தன்னுடைய அந்த செய்கை திட்டமிட்ட உடல்மொழி இல்லை என்றும், தான் பேசும்போது எதார்த்தமாக வெளிப்பட்டது என்றும், யாரையும் புண்படுத்தும் செயல் இல்லை என்றும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-speech-after-anna-mgr-and-ntr-it-is-vijay">முதலமைச்சர் விஜய்</a> கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இந்நிலையில் முதலமைச்சரின் இந்த செயல்தொடர்பாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் அவை உரிமை மீறல் புகார் மனுவை அளித்துள்ளார் திமுக துணைக் கொறடா கோவி.செழியன்.</p><p>சட்டமன்றத்தில் இல்லாத முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முரசொலி மாறன் குறித்து பேசியது, சர்க்காரியா ஆணையம், நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி பேசியது ஆகியவை சட்டப்பேரவை விதிகளுக்கு எதிரானது. எனவே, முதலமைச்சர் விஜய்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மேகமலை விசாரணை செப்.22 -க்கு ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/megamalai-hill-encroachment-case-hearing-postponed-to-sept-22-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/megamalai-hill-encroachment-case-hearing-postponed-to-sept-22-supreme-court#comments</comments><guid isPermaLink="false">99fdafc3-6a75-4129-be8f-9640a85c5c40</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:54:49 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:54:49.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்சநீதிமன்றம் உத்தரவு,உச்சநீதிமன்றம்,Megamalai Issue,மேகமலை விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/mszy340t/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Megamalai issue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/mszy340t/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஒத்திவைப்பு </h2><p>மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்ற விவகாரத்தின் மீதான விசாரணையானது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court">நீதிபதிகள்</a> விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் வேறோரு அமர்வில் ஆஜரான நிலையில், இந்த வழக்கை தள்ளி வைக்க வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று  விசாரணையை செப் 22 க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. </p><h2>மேகமலை விவகாரம்</h2><p>மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்ய வேண்டும், இலவம் பஞ்சு தோட்டங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும், அங்கு யாருக்கும் பட்டா வழங்க கூடாது என்றும், மின் மற்றும் நீர் இணைப்புகளை முழுமையாக துண்டிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவில்லையென்றால் ராணுவத்தை அனுப்புவோம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. </p><h2>அரசு தரப்பு </h2><p>இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் அறிவித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசுக்கு சிறிது கால அவகாசம் தேவை என்று தனது வாதத்தை அரசு முன்வைத்திருந்தது. இதற்கு <a href="https://www.maalaimalar.com/news/national/retirement-age-of-judges-raised-to-62">உச்சநீதிமன்றம், </a>ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி உத்தரவிட்டிருந்தது.</p><h2>போராட்டம் </h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/meghamalai-issue-members-debate-the-calling-attention-motion">மேகமலை</a> புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் 4600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மேகமலை ஆக்கிரமிப்புக்களை ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் அகற்ற உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விசாரணையானது செப் 22 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-budget-session-ends-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-budget-session-ends-today#comments</comments><guid isPermaLink="false">e8b49f67-7e6f-4a87-bc72-e03e9e014388</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:47:47 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:47:47.650Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Budget session,TN assembly,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்,பட்ஜெட் கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/tarx8rnb/JCD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ jcd prabhakar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/tarx8rnb/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.</strong></em></p><p>தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.</p><p>சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்ற கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடந்தன.</p><h2>தனித்தீர்மானங்கள்</h2><p>சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் உள்பட பல்வேறு தனித்தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.</p><p>முதலமைச்சர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.</p><h2>திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்</h2><p>இன்று காலை அமளியில் ஈடுபட்ட தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.</p><h2>தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு</h2><p>இந்நிலையில், ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு அடைந்தது. இதையடுத்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>பண மோசடி வழக்கு: பினராயி விஜயன், அவரது மகள் மீது FIR பதிவு செய்ய கேரளம் டிஜபி-க்கு ED கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/cmrl-case-ed-writes-to-keralam-dgp-seeking-fir-against-ex-cm-vijayan-daughter-and-son-in-law</link><comments>https://www.maalaimalar.com/news/national/cmrl-case-ed-writes-to-keralam-dgp-seeking-fir-against-ex-cm-vijayan-daughter-and-son-in-law#comments</comments><guid isPermaLink="false">f5ac964d-deb9-47c3-b3e8-5f09e6175b88</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:40:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:40:13.026Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பினராயி விஜயன்,Pinarayi Vijayan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/bnf0svei/Pinarayivijayan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வீணா- பினராயி விஜயன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/bnf0svei/Pinarayivijayan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன். இவரது மகள் வீணா. இவரது ஆட்சிக் காலத்தில் கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL), தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் என்ற பெயரில் வீணாவின் நிறுவனமான எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் (Exalogic Solutions) நிறுவனத்திற்கு 2.78 கோடி ரூபாய் மதிப்பிலான முறையற்ற பணப் பரிமாற்றங்களை செய்ததாக அமலாக்கத் துறை (ED) குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>FIR பதிவு செய்ய டிஜிபிக்கு கடிதம்</h2><p>வீணாவின் நிறுவனம், போலியான பண பரிமாற்றங்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு கார்ப்பரேட் கருவி (corporate vehicle) என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில் விசாரணை அடிப்படையில் பணமோசடி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் உள்பட 13 பேர் மீது FIR பதிவு செய்ய வேண்டும் என கேரளம் DGP-க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.</p><p>கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் நிறுவனத்திற்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் வழங்கியது எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம். இதற்காக CMRL நிறுவனத்தில் இருந்து 2.78 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் (தற்போது இல்லை) பினராயி விஜயன் மகள் வீணா தொடங்கியது. அரசு பணத்தை முறைகேடாக பெறுவதற்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட பணம், முறைகேடாக துபாய்க்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.</p><p>இது தொடர்பாக அமலாக்கத்துறை பல இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது பண மோசடிக்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தது. அதேவேளையில், தங்கள் கைகள் சுத்தமானவை என்று கேரளம் முதல்வர் பினராயி விஜய் தெரிவித்திருந்தார்.</p><p>FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை DGP-க்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், "எங்கள் தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை. எந்த வகையான விசாரணையையும் நடத்தலாம் என்று சிபிஐ(எம்) தலைவர் பி.ஏ. முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது: முதலமைச்சர் விஜய் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-explain-body-languge-is-certain-action-not-planned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-explain-body-languge-is-certain-action-not-planned#comments</comments><guid isPermaLink="false">da534a84-44fb-4e21-83b6-769ad170c740</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:20:29 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:20:29.822Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,Body language,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,உடல்மொழி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/u0i0z3sd/cm-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/u0i0z3sd/cm-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மானிய கோரிக்கையின்போது என் பதிலுரையின் இடையே எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.</strong></em></p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். ஆனால் அந்த பதிலுரையில் கேள்விகளுக்கான பதில் இடம்பெறாமல், முழுக்க முழுக்க திமுக மீதான விமர்சனங்களே இருந்தன.</p><p>மிசா சட்டத்தில் கைது மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசினார். </p><h2>தலைவர்கள் கண்டனம்</h2><p>உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்கு உரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும். சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும் என கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.</p><h2>தன்னிச்சையாக வெளிப்பட்டது</h2><p>இந்நிலையில், மானிய கோரிக்கையின் போது என்னுடைய பதிலுரையின் இடையே எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது: என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் போலி அடையாள அட்டை, துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-id-gun-youth-arrested-at-pm-modi-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-id-gun-youth-arrested-at-pm-modi-event#comments</comments><guid isPermaLink="false">663fc79d-cca8-43b9-8341-f6abd8c91605</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:07:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:07:21.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,Prime Minister Modi,mumbai,பிரதமர் மோடி.,Bandra Kurla,மகாராஷ்டிர மாநிலம்,மும்பை பாந்த்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y4sbyvs8/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Prime Minister Modi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y4sbyvs8/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p><p>மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge">நீதா முகேஷ் அம்பானி</a> கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், தீவிரக் கண்காணிப்பும் போடப்பட்டிருந்தது.</p><h2>போ<strong>லி அடையாள அட்</strong>டை</h2><p>நிகழ்ச்சி வளாகத்தின் நுழைவுப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 24 வயதான ரோஹன் பாரேக் என்ற இளைஞர் உள்ளே செல்ல முயன்றார். அவர் தன்னை 'பிரதமர் அலுவலக அதிகாரி' என அறிமுகப்படுத்திக் கொண்டு அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். ஆனால், சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரது அடையாள அட்டையைத் தீவிரமாகப் பரிசோதித்தபோது, அது முற்றிலும் போலி என்பது தெரியவந்தது.</p><h2>துப்பாக்கி<strong>யுடன் சிக்கிய</strong> பாதுகாவலர்</h2><p>ரோஹன் பாரேக் தனியாக வரவில்லை; அவருடன் ஒரு தனியார் பாதுகாவலரும் வந்திருந்தார். சோதனையின் போது அந்தப் பாதுகாவலரிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவர்களை பாந்த்ரா குர்லா வளாக காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.</p><h2>போலீசார் தீ<strong>விர விசார</strong>ணை</h2><p>பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றதன் பின்னணியில் என்ன திட்டம் இருந்தது என்பது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் கொடு - சொந்த மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சீனத் தாய்!</title><link>https://www.maalaimalar.com/news/world/15-years-raising-granddaughter-45-lakh-rupees-demand</link><comments>https://www.maalaimalar.com/news/world/15-years-raising-granddaughter-45-lakh-rupees-demand#comments</comments><guid isPermaLink="false">4c5a841a-47a9-417f-9de0-a12bbc3c252f</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:07:07 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:07:07.809Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,குழந்தை பராமரிப்பு,Child Care,Grandparenting Fees,Shanghai Court,Unpaid Labour,Parental Responsibility</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/2ugp2fd0/Grand-parenting-Fees" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Grand parenting Fees  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/2ugp2fd0/Grand-parenting-Fees?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குடும்ப உறவுகளுக்கும், கூட்டுக்குடும்பப் பாரம்பரியத்திற்கும் பெயர் போன ஆசியக் கலாச்சாரத்தில், ஒரு வயதான தாய் தனது பேத்தியை வளர்த்துக் கொடுத்ததற்காகத் தன் சொந்த மகனிடமே பராமரிப்புக் கட்டணம் கேட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறியுள்ள வினோத சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்த விவகாரம், "தாத்தா-பாட்டிகள் பேரக் குழந்தைகளை வளர்ப்பது குடும்பக் கடமையா? அல்லது அதற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டுமா?" என்ற தேசிய அளவிலான விவாதத்தை உலகளவில் தூண்டியுள்ளது.</p><h2>15 ஆண்டுகால உழைப்பும் குடும்ப மோதலும்</h2><p>கிழக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனாவைச் </a>சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க 'சு' (Xu) என்ற பெண்மணி, ஷாங்காய் நீதிமன்றத்தில் தனது மகன் 'லியாங்' என்பவருக்கு எதிராக இந்த அதிரடி வழக்கைத் தொடர்ந்துள்ளார்.</p><p>கடந்த 2014-ஆம் ஆண்டில் லியாங் தனது மனைவியை விவாகரத்து செய்தபோது, அவரது மகளுக்கு (சு-வின் பேத்திக்கு) வெறும் 4 வயது மட்டுமே ஆகியிருந்தது.</p><p>விவாகரத்திற்குப் பிறகு, தனது தாயுடன் வசித்து வந்த லியாங், குழந்தையை வளர்க்கும் முழுப் பொறுப்பையும் தாய் 'சு'-விடமே ஒப்படைத்துள்ளார்.</p><p>கடந்த 15 ஆண்டுகளாக அந்தப் பெண்மணி, தனது பேத்தியின் அன்றாட வாழ்க்கைச் செலவுகள், மருத்துவச் செலவுகள் மற்றும் கல்விச் செலவுகள் என அனைத்தையும் தனது சொந்தப் பணத்தில் இருந்தே கவனித்து வந்துள்ளார்.</p><h2>தாயின் குமுறலும் மகனின் வாதமும்</h2><p>பிரச்சனை எப்போது தீவிரமானது என்றால், மகன் லியாங் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, தனது புதிய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறித் தனியாக வாழத் தொடங்கினார். ஆனால், தனது மகளைத் தாயின் பராமரிப்பிலேயே விட்டுச் சென்றுவிட்டார்.</p><p>பொருளாதார நெருக்கடியாலும், முதுமையாலும் பாதிக்கப்பட்ட தாய் சு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "என் மகனுக்குக் குடும்பப் பொறுப்பு என்பது சிறிதும் இல்லை. </p><p>ஒரு தந்தையாகத் தன் கடமையைச் செய்ய அவன் தவறிவிட்டான். இனிமேல் என்னால் பண உதவி செய்து என் பேத்தியைப் பராமரிக்க முடியாது.</p><p>எனவே, நான் 15 ஆண்டுகள் வளர்த்ததற்கான கட்டணமாக 3,60,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 45 லட்சத்திற்கும் மேல்) எனக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.</p><p>இதற்குப் பதிலளித்த மகன் லியாங், தனக்கு அப்போது மாதம் ரூ.37,000 மட்டுமே வருமானம் இருந்ததாகவும், தன் சக்திக்கு உட்பட்டு மகளுக்குப் பண உதவி செய்ததாகவும் வாதிட்டுள்ளார்.</p><h2>சீனாவில் தொடரும் 'தாத்தா-பாட்டி கட்டண' வழக்குகள்</h2><p>சீனாவில் இது போன்ற வழக்குகள் தொடர்வது இது முதல் முறையல்ல. பெய்ஜிங் நீதிமன்றத்தில் நடந்த மற்றொரு வழக்கில், 1 வயது முதல் பேத்தியை வளர்த்த தாத்தா-பாட்டி, தங்களது மகன் மற்றும் மருமகளுக்கு எதிராக ரூ. 40 லட்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.</p><p>மற்றொரு சம்பவத்தில், ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 59 வயது மூதாட்டி ஒருவர், தனது மகனின் குழந்தையை வெறும் 6 மாதங்கள் கவனித்துக் கொண்டதில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, 20 கிலோ உடல் எடையைக் குறைத்து தீவிர மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார் இது போன்ற பல வழக்குகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><h2>சமூக மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்து</h2><p>இந்த விவகாரம் குறித்துச் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். சீனாவில் கிராமப்புற தொழிலாளர்கள் வேலை தேடி நகரங்களுக்கு இடம்பெயர்வதாலும், நகரங்களில் கணவன்-மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதாலும், குழந்தைகளைப் பராமரிக்கும் சுமை முதியவர்கள் மீதே விழுகிறது. </p><p>ஒரு காலத்தில் பேரக் குழந்தைகளை வளர்ப்பது பாசத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டது.</p><p>ஆனால் தற்போது அது ஒரு 'ஊதியமில்லா உழைப்பு' என்ற அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. ஓய்வூதியம் பெற்று நிம்மதியாக வாழ வேண்டிய வயதில் முதியவர்கள் இந்தச் சுமையைத் தாங்க வேண்டியுள்ளது.</p><p>இது குறித்துப் பேசிய ஷாங்காய் சட்ட வல்லுநர்கள், "இது குடும்ப உறவுகளை வியாபாரமாக்குவது அல்ல, மாறாகப் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துவதாகும். </p><p>குழந்தைகளை வளர்க்கும் முதல் பொறுப்பு பெற்றோருக்கே உரியது. அவர்களால் முடியாத பட்சத்தில் மட்டுமே தாத்தா-பாட்டி உதவ வேண்டும்" என்று கூறியுள்ளனர்.</p><p>இணையவாசிகளோ, சீனா தனது நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க விரும்பினால், முதியவர்களைச் சார்ந்து இருக்காமல், குறைந்த கட்டணத்தில் தரமான அரசு குழந்தை காப்பகங்களை உருவாக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் போர், புதிய அணுமின் நிலையம், ஆயுதம் கொள்முதல்: புதின்- பிரதமர் மோடி பேசப்போவது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/russia-will-welcome-indias-efforts-toward-peaceful-resolution-of-ukraine-conflict-peskov</link><comments>https://www.maalaimalar.com/news/national/russia-will-welcome-indias-efforts-toward-peaceful-resolution-of-ukraine-conflict-peskov#comments</comments><guid isPermaLink="false">60e73132-cbfe-4979-9065-6502bd35cba3</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:42:36 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:42:36.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Putin,புதின்,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/us7f9ts2/PutinModi001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரஷிய அதிபர் புதின்- பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/us7f9ts2/PutinModi001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>இந்தியாவில் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 18-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்கிறார். மாநாட்டிற்கிடையே, இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.</p><p>இது தொடர்பாக ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியும். அது பெருமளவுக்கு எங்கள் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. ஏனெனில், உக்ரைன் விவகாரத்திற்கு அமைதியான வழிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம்.</p><h2>புதிய அணுமின் நிலையம்</h2><p>புதிய அணுமின் நிலையங்களை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா காத்திருக்கிறது. Su-57 ரக விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதும் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.</p><p>இவ்வாறு பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்கா 100 சதவீதம் வரி எச்சரிக்கை</h2><p>மேலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, அமெரிக்காவின் அறிவிப்பு சட்டவிரோதம் மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. பிரமுகர் படுகொலை- 3 பள்ளி மாணவர்கள் அதிரடி கைது</title><link>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">ef28800c-b0f2-48eb-8d06-4b7731cb709d</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:33:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:33:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,சென்னை,தவெக பிரமுகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/t8hge11a/murderr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/t8hge11a/murderr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த த.வெ.க. பிரமுகர் கண்ணன். கடந்த 5 ந்தேதி இரவு 9 மணியளவில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2><strong>கொலை</strong></h2><p>அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கண்ணனை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிய போது கண்ணனின் நண்பர்கள் கற்களை வீசி தடுக்க முயன்றனர் இருப்பினும் கொலையாளிகள் அவர்களை மிரட்டிவிட்டு கண்ணனை வெட்டி கொன்றனர். இந்தக் கொலை தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் பதை பதைப்பை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்களான ராகேஷ், நரேஷ், ஹரிஹரன், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.</p><h2><strong>பழி தீர்த்த பயங்கரம்</strong></h2><p>போலீஸ் விசாரணையில், இந்தக் கொலைக்கு 17 ஆண்டுகால பகையே காரணம் என்பது தெரியவந்தது. கடந்த 2009-ம் ஆண்டு பரணியின் பெரியப்பா சிவா, 2016-ல் பரணியின் தந்தை வேலு ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். தனது தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு கண்ணன் தான் முக்கிய காரணம் என்று கருதிய பரணி திட்டம் போட்டு இந்த கொலையை செய்திருப்பது அம்பலமானது. இப்படி பழிக்கு பழியாக கொலை அரங்கேறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. </p><h2><strong>வாக்கு மூலம்</strong></h2><p>“என் தந்தை மற்றும் பெரியப்பாவைக் கொன்ற அவர், சமீபத்தில் ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு அந்தப் பகுதியில் பெரிய ஆள் போல வலம் வந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை உயிரோடுவிட்டால் மீண்டும் எங்களுக்கு ஆபத்து என்று கருதினேன். அதனால்தான் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக் கட்டினேன். இப்போதுதான் என் தந்தை மற்றும் பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைந்துள்ளது" என வாக்கு மூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2><strong>3 பள்ளி மாணவர்கள்</strong></h2><p>இதற்கிடையே இந்த கொலை வழக்கில் மேலும் 4 பேர் போலீசில் சிக்கி உள்ளனர் இவர்களில் 3 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர். கல்லூரி மாணவர் பரணியின் நண்பர்களான இவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><h2><strong>போலீசார் தீவிர விசாரணை</strong></h2><p>சென்னை மாநகரில் பரபரப்பாக அரங்கேறிய துணிகர கொலை சம்பவத்தில் கல்லூரி மாணவரோடு சேர்ந்து பள்ளி மாணவர்களும் கொலையில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் போலீசார் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து கொலையின் முழு பின்னணி குறித்தும் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘பில்லா-2’ திரைப்படத்தை இயக்காதது ஏன்? இயக்குநர் விஷ்ணு வர்தன் முதன்முறையாக மனம் திறந்த பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/why-vishnuvardhan-did-not-direct-billa-2-first-time-open-interview</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/why-vishnuvardhan-did-not-direct-billa-2-first-time-open-interview#comments</comments><guid isPermaLink="false">e0a393e5-f4e1-435b-9ae7-7cad55011642</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:17:52 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:17:52.031Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Billa 2,Ajith Kumar,அஜித் குமார்,Vishnuvardhan,விஷ்ணு வர்தன்,பில்லா-2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/38vu9f72/vishnu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Billa 2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/38vu9f72/vishnu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற 'பில்லா' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் விஷ்ணு வர்தன். அதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து 'பில்லா-2' திரைப்படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதே காலகட்டத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாணின் 'பஞ்சா' திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் தீவிரமடைந்து வந்தன.</p><p>இரண்டு பெரிய திரைப்படங்களின் படப்பிடிப்பு தேதிகளும் ஒரே நேரத்தில் அமைந்ததால், ஒரே நேரத்தில் இரு திரைப்படங்களையும் இயக்க முடியாத சூழல் இயக்குநருக்கு ஏற்பட்டது. இதனால் ஏதேனும் ஒரு திரைப்படத்தை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தொழில்முறை நேர்மை மற்றும் வாக்களித்த கடமையின் அடிப்படையில் பவன் கல்யாணின் 'பஞ்சா' திரைப்படத்திற்கே முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதால், அப்படத்தை இயக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>அஜித் <strong>குமாரின் பெருந்த</strong>ன்மை</h2><p>இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து நடிகர் அஜித் குமாரிடம் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/pulavar-teaser-bharathirajas-last-film-unveiled">விஷ்ணு வர்தன்</a> நேரில் விளக்கிக் கூறியபோது, அதனை மிகவும் புரிந்துகொண்டு பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். தன்னுடைய சூழ்நிலையை உணர்ந்து அஜித் ஆதரவு அளித்த நிகழ்வை இயக்குநர் விஷ்ணு வர்தன் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.</p><p>விஷ்ணு வர்தன் விலகியதைத் தொடர்ந்து 'பில்லா-2' திரைப்படத்தை சக்ரி டோலெட்டி இயக்கினார். இருப்பினும், அஜித் குமாருடன் விஷ்ணு வர்தன் கொண்டிருந்த நல்லுறவின் காரணமாக, பின்னொரு நாளில் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து 'ஆரம்பம்' என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>“இது ஒரு செயலிழந்த அரசாங்கம்” - தவெக ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/this-is-a-dysfunctional-government-edappadi-palaniswami-criticizes-the-tvk-administration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/this-is-a-dysfunctional-government-edappadi-palaniswami-criticizes-the-tvk-administration#comments</comments><guid isPermaLink="false">bc2b5556-d17d-4ad1-b995-77c28e361ddc</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:06:59 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:06:59.581Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/xipnqmit/New-Project-2026-09-08T163358.893.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இது ஒரு செயலிழந்த அரசாங்கம்” - தவெக ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/xipnqmit/New-Project-2026-09-08T163358.893.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-could-become-us-president-instead-of-trump-edappadi-palaniswami">எடப்பாடி பழனிசாமி</a> இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,</p><h2>சபை நேரம் வீணடிக்கப்படுகிறது</h2><p>சட்டமன்ற நிகழ்வுகள் தொடங்கி உடன் கேள்விநேரம் ஆரம்பிக்கிறது. பின்னர் பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கு பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது. </p><p>அவர்கள் பேச முற்படும்போது, ஆளுங்கட்சியினர் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை அவர்கள்மீது சுமத்தி, இருதரப்பினரும் மாறி, மாறி அவை நேரத்தை வீண்டிக்கின்றனர்.</p><p>10 மணிநேரம் அவை நடக்கிறது என பெருமையாக பேசுகின்றனர். ஆனால், அதில் 3 மணிநேரம்தான் மக்களின் பிரச்னை பேசப்படுகிறது. மீதமிருக்கும் 7 மணிநேரம் ஆளும் கட்சியினராலும், எதிர்க்கட்சியினராலும் வீண்டிக்கப்படுகிறது. </p><h2>மூன்றே அமைச்சர்கள்தான்</h2><p>பலதுறைகள் இருந்தாலும், அனைத்து துறைகளுக்கும் பெரும்பாலும் மூன்று அமைச்சர்களே எழுந்து பதில் கூறுகின்றனர். மற்ற அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. அந்தந்த துறையின் அமைச்சர்கள், அந்தந்த துறைக்கு பதில் சொல்லவேண்டும். </p><h2>கேள்விகளுக்கு பதிலே இல்லை</h2><p>காவல்துறை, தீயணைப்புத்துறை முதலமைச்சருடையது. வியாழன்கிழமை இத்துறைகள்மீதான விவாதம் நடைபெற்றது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக தரப்பில் நான் சில கருத்துகளை பகிர்ந்துகொண்டேன். </p><p>முதலமைச்சர் பதிலுரையின்போது எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. </p><p>ஒரே பதில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆனால், எப்போது என தெரிவிக்கவில்லை.</p><h2>எஃப்கியூஎல் மோசடி</h2><p>மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் எஃப்.க்யூ.எல். மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். ரூ.1,000 கோடி மக்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்டு பேசினேன். ஆனால் இதற்கு முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை.</p><p>இப்படி பல கேள்விகளுக்கு பதில் இல்லை. பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவுகள் சரியாக செயல்படவில்லை. இதனை இந்த அரசு கண்காணிக்க வேண்டும்.</p><h2>நீண்டகால குற்றங்கள்</h2><p>பதிலுரையில் பேசிய முதலமைச்சர், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் சீண்டல்கள், போதைப்பொருள் குற்றங்கள் எல்லாம் நீண்டகாலமாக இருக்கும் குற்றங்கள், உடனே நிறுத்தமுடியாது என்கிறார். </p><p>அது தவறு. ஒரு பொறுப்புடைய முதலமைச்சர்தான் அவர்கீழ் இருக்கும் காவல்துறையை வைத்து தடுக்கவேண்டும். அவரே இப்படி ஒரு பதிலை வழங்கினால், மக்கள் பிரச்னைகளை யாரிடம் சொல்லமுடியும்? இது ஒரு செயலிழந்த அரசாங்கம்.</p><p>இவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முழுமையாக சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இந்தநிலை தொடரக்கூடாது. அரசு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். </p><h2>ஊழல்</h2><p>இந்த ஆட்சி வந்த பிறகுதான் ஊழல் அதிகமாகி உள்ளது. அரசு அலுவலங்களில் நடக்கும் தவறுகள் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கட்டுபடுத்தப்படும். எல்லா ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது. </p><p>இவர்கள் ஆட்சியில் மட்டும்தான் செயல்படுவதுபோல் பேசுவது. அதற்கு ஒரு ரீல் போடுகிறார்கள். லஞ்சம் இல்லையென்றால், சோதனையின்போது பணம் எவ்வாறு கைப்பற்றப்படுகிறது?</p><p>இந்த ஆட்சியில் லஞ்சம் அதிகரித்துள்ளது. நகராட்சித்துறை முதலமைச்சரின்கீழ் உள்ளது. ஆனால் வேறு அமைச்சர் பதில் சொல்கிறார்? அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் செயல்படுத்தக்கூடிய அமைப்பு நகராட்சி அமைப்பு.</p><p>ஆனால் அத்துறை சரியாக செயல்படுத்தப்படவில்லை. அதனால்தான் இன்று சட்டப்பேரவையில் இவ்வளவு குற்றச்சாட்டுகள் அரசின்மீது. இனியாவது முதலமைச்சர் அவர் துறையை கண்காணிக்க வேண்டும். இது விவசாயிகளை காக்கும் அரசு கிடையாது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சபாநாயகருக்கு எதிராக இழிவான பேச்சு: இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/two-brs-mlcs-held-over-alleged-remarks-against-telangana-assembly-speaker</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-brs-mlcs-held-over-alleged-remarks-against-telangana-assembly-speaker#comments</comments><guid isPermaLink="false">bd0b34b2-f2e6-405f-94a8-35cf1f479757</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:59:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:59:21.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,தெலங்கானா,சபாநாயகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kia4hs0/Telangana001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தெலங்கானா சபாநாயகர் கதம் பிரசாத் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kia4hs0/Telangana001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநில சட்டசபைக்குள் நேற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-க்கள் நுழைய முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பி.ஆர்.எஸ். மேலவை எம்.எல்.ஏ.-க்கள் தத்தா மதுசூதன் மற்றும் நவீன் குமார், சபாநாயகர் கதம் பிரசாத் குமாருக்கு எதிராக இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக தெரிகிறது.</p><p>இது தொடர்பாக சட்டசபை சபாநாயகருக்கான சிறப்புப் பணி ஆதிகாரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் இரண்டு எம்.எல்.ஏ.-க்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p>அவர்கள் (இரண்டு BRS சட்டமன்ற உறுப்பினர்கள்) சபாநாயகரின் நேர்மை, அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான நடத்தையை பகிரங்கமாக கேள்விக்குட்படுத்தியுள்ளனர். சமூகப் பின்னணி மற்றும் அரசியலமைப்புப் பாத்திரத்தின் காரணமாக அவரை அவமானப்படுத்தவும், இழிவுபடுத்தவும், தரக்குறைவாக நடத்தவும், அவரது தனிப்பட்ட மற்றும் சமூக அந்தஸ்தைக் குறைக்கவும் திட்டமிட்ட சொற்களை வேண்டுமென்றே பயன்படுத்தினர் என புகாரில் கூறப்பட்டிருந்தது.</p><h2>சபாநாயகர் கதம் பிரசாத் குமார்</h2><p>நேற்று தலித் தலைவரான சபாநாயகர் கதம் பிரசாத் குமாருக்கு எதிராக இருவரும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இரண்டு பேரின் கருத்து 4 கோடி மக்களை இழிவுப்படுத்துவதாகும் என்றார். என்றாலும், இருவரும் சபாநாயருக்கு எதிராக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடியின் இயலாமையால் மணிப்பூர் மக்கள் மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவதிப்படுகிறார்கள்: கார்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge</link><comments>https://www.maalaimalar.com/news/national/people-of-manipur-suffering-both-within-and-outside-state-under-modi-sarkar-kharge#comments</comments><guid isPermaLink="false">a55dc196-cc8d-49db-b062-acaffe35197b</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:36:51 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:36:51.376Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கார்கே,Kharge,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n2o7uggc/Kharge001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/n2o7uggc/Kharge001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிப்பூரை சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் சோங்தம் விக்ரம் சிங், டெல்லியில் ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.</p><p>இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவியில் கூறியிருப்பதாவது:-</p><p>மோடி அரசின் "இயலாமை" காரணமாக மணிப்பூர் மக்கள் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் துன்பத்திற்கு ஆளாகியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். </p><h2>மணிப்பூர் இசைக்கலைஞர் கொலை</h2><p>மணிப்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் சோங்தம் விக்ரம் சிங் ஒரு கும்பலால் இரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டது, பாஜக ஆட்சியின் கீழ் நிலவும் முழுமையான சட்டமின்மையை நினைவூட்டும் மற்றொரு அதிர்ச்சிகரமான நிகழ்வாகும்.</p><p>மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். பெண்கள் தினமும் கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த மக்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.</p><h2>டெல்லி குற்றங்களின் தலைநகராக மாறியுள்ளது</h2><p>உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கண்காணிப்பில், டெல்லி குற்றங்களின் தலைநகராக மாறியுள்ளது. தேசிய தலைநகரில் குற்றங்கள் மிக அதிக அளவில் நடைபெறுவதை என்சிஆர்பி (NCRB) ஆண்டுதோறும் பதிவு செய்து வருகிறது.</p><p>அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மோடி அரசின் இயலாமை காரணமாக மணிப்பூர் மக்கள் தங்கள் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவதிப்படுகின்றனர்.</p><p>இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்</p><p>டெல்லியில் வீட்டிற்கு வெளியே மது அருந்தியபடி சத்தம் எழுப்பியதை தட்டிக்கேட்டதால் மணிப்பூர் இசைக்களைஞர் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் குரல் அல்ல, பொய்களின் சூழ்ச்சி: காங்கிரசை கிண்டல் செய்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-mocks-congress-chhatron-ki-goonj-campaign-dubs-it-jooth-ki-goonj</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-mocks-congress-chhatron-ki-goonj-campaign-dubs-it-jooth-ki-goonj#comments</comments><guid isPermaLink="false">65a39026-bb1b-4ae9-bd84-44dfeafcd82e</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:56:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:56:26.963Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/8vbefhg0/RahulGandhi0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi- PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/8vbefhg0/RahulGandhi0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பல்வேறு திட்டங்களை திறந்து வைத்ததுடன், அடிக்கல் நாட்டினார்.</p><h2>அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-</h2><p>எல்லா இடங்களிலும் பொய்யான சூழ்ச்சி மூலம் உங்களை திசை திருப்ப முயற்சிக்கும் மனிதர்களைக் காண்பீர்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் உண்மையின் பக்கம் நிற்பார்கள்.</p><p>நாட்டின் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் நிபுணர்களாக மாற வேண்டும். அவர்கள் இத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.</p><p>சூரிய சக்தி, காற்றாலை, நீர் மின்சாரம் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுவதில் அரசாங்கம் எவ்வளவு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்பதை இளைஞர்களால் காண முடிகிறது.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p><h2>ராகுல் காந்தியின் மாணவர்கள் குரல் பிரசாரம்</h2><p>காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மாணவர்களின் குரல் (Chhatron Ki Goonj) என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். வினாத்தாள் கசிவு, மாநில வேலைவாய்ப்பு தேர்வில் உள்ள முறைகேடு தொடர்பாக முக்கிய நகரங்களில் உள்ள இளைஞர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.</p><p>இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இவ்வாறு கிண்டல் செய்துள்ளார். அதேவேளையில் ராகுல் காந்தியின் முன்னெடுப்பை கண்டு பாஜக அஞ்சுகிறது என்று காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சீமான் - வீடியோ வெளியிட்ட சேயோன் படக்குழு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/seeman-to-act-in-a-film-produced-by-kamal-haasan-seyon-film-crew-releases-video</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/seeman-to-act-in-a-film-produced-by-kamal-haasan-seyon-film-crew-releases-video#comments</comments><guid isPermaLink="false">2ac4ef94-62d5-4655-a5ec-4a6dab036a4f</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:52:49 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:52:49.696Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,சிவகார்த்திகேயன்,Seyon,சேயோன்,சீமான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9hwwa85o/New-Project-2026-09-08T150413.982.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சீமான்... வீடியோ வெளியிட்ட சேயோன் படக்குழு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9hwwa85o/New-Project-2026-09-08T150413.982.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுத்து மற்றும் இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-song-velum-mayilum-penned-by-sivakarthikeyan-has-been-released">சிவகார்த்திகேயன்</a> நடிக்கும் திரைப்படம் சேயோன். </p><p>பாக்யஸ்ரீ போர்ஸ், பால சரவணன், அருள்தாஸ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>ஆர். மகேந்திரனுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமரனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 2வது படம் இதுவாகும்.</p><p>இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் சீமான் இணைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சேயோனில் இணைகிறார் செந்தமிழன் சீமான் அவர்கள்<a href="https://x.com/Seeman4TN?ref_src=twsrc%5Etfw">@Seeman4TN</a><a href="https://x.com/hashtag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#சேயோன்</a> <a href="https://x.com/hashtag/Seyon?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Seyon</a> <a href="https://x.com/hashtag/VetrivelVeeravel?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VetrivelVeeravel</a> <a href="https://x.com/hashtag/Varendi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Varendi</a><a href="https://x.com/hashtag/KamalHaasan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KamalHaasan</a> <a href="https://x.com/hashtag/Sivakarthikeyan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Sivakarthikeyan</a><a href="https://x.com/ikamalhaasan?ref_src=twsrc%5Etfw">@ikamalhaasan</a> <a href="https://x.com/Siva_Kartikeyan?ref_src=twsrc%5Etfw">@Siva_Kartikeyan</a> <a href="https://x.com/hashtag/Mahendran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mahendran</a> <a href="https://x.com/Dir_SivakumarM?ref_src=twsrc%5Etfw">@Dir_SivakumarM</a> <a href="https://x.com/Music_Santhosh?ref_src=twsrc%5Etfw">@Music_Santhosh</a> <a href="https://x.com/anbariv?ref_src=twsrc%5Etfw">@anbariv</a> <a href="https://x.com/hashtag/BhagyashriBorse?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BhagyashriBorse</a> <a href="https://x.com/RajbShettyOMK?ref_src=twsrc%5Etfw">@RajbShettyOMK</a> <a href="https://x.com/RKFI?ref_src=twsrc%5Etfw">@RKFI</a> <a href="https://x.com/turmericmediaTM?ref_src=twsrc%5Etfw">@turmericmediaTM</a>… <a href="https://t.co/LPb7BVQR2y">pic.twitter.com/LPb7BVQR2y</a></p>&mdash; Raaj Kamal Films International (@RKFI) <a href="https://x.com/RKFI/status/2097240383927500929?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் அதிபர் புதின் பிரதமர்  மோடியை சந்திக்கிறார்: கிரெம்ளின் மாளிகை</title><link>https://www.maalaimalar.com/news/world/kremlin-says-pm-modi-to-meet-putin-ahead-of-brics-summit</link><comments>https://www.maalaimalar.com/news/world/kremlin-says-pm-modi-to-meet-putin-ahead-of-brics-summit#comments</comments><guid isPermaLink="false">b95707c8-13ac-49eb-bbac-7ce1ffd05b07</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:51:38 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:51:38.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Putin,BRICS Summit,பிரிக்ஸ் உச்சி மாநாடு,pm modi,பிரதமர் மோடி,அதிபர் புதின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9fxuuztp/putin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi, putin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9fxuuztp/putin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் ரஷிய அதிபர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.</strong></em></p><p>பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறுகிறது.</p><h2>பிரிக்ஸ் மாநாடு</h2><p>நான்காவது முறையாக இந்தியா தலைமை தாங்கி மாநாட்டை நடத்துகிறது. இது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.</p><p>இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பொதுவான முன்னுரிமைகள் மற்றும்</p><p>உலகளாவிய, பிராந்திய விவகாரங்கள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.</p><p>இதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>அதிபர் புதின் பங்கேற்கிறார் </h2><p>இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்பார் என்றும், பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.</p><p>பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>நிலவுக்கு பட்டா போட்ட டிரம்ப்: ‘Truth Social’ பதிவால் உலக அரங்கில் வெடித்த புதிய சர்ச்சை!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-claims-moon-ownership-truth-social-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-claims-moon-ownership-truth-social-controversy#comments</comments><guid isPermaLink="false">8c635fcd-6bbb-4dd1-86cf-316e4b2853f4</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:40:42 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:40:42.053Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,TRUTH Social,அமெரிக்க அதிபர் டிரம்ப்,அதிபர் டொனால்ட் டிரம்ப்,The Moon is Ours,Green Lantern,டிரூத் சோஷியல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/gbs54h1n/trump.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/gbs54h1n/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிபர் டிரம்பின் இந்த உரிமை கோரல் சர்வதேச விண்வெளி உடன்படிக்கைகளுக்கு மாறானது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/military-secret-leak-us-government-conducts-lie-detector-tests-on-50-high-ranking-officials">டொனால்ட் டிரம்ப் </a>தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமான ‘டுரூத் சோஷியல்’ மூலம் வெளியிடும் அறிக்கைகள் உலகளவில் தொடர்ந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, பூமியின் இயற்கை செயற்கைக்கோளான நிலவு அமெரிக்காவுக்கே சொந்தம் எனக் கூறிப் பதிவிட்டுள்ள கருத்து, சர்வதேச அரசியலிலும் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளிடையேயும் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.</p><h2>நி<strong>லவின் மீது உரிமை கோரிய டிரம்ப்</strong></h2><p>டிரூத் சோஷியல் தளத்தில் நிலவின் பெரிய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த டிரம்ப், அதன் பின்புலத்தில் பூமி மற்றும் அமெரிக்கக் கொடி தெரியுமாறு அமைக்கப்பட்ட படத்துடன் “நிலவு நமக்குச் சொந்தமானது” என்ற வாசகத்தைக் குறிப்பிட்டிருந்தார். இந்த உரிமை கோரல் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படாதபோதிலும், அமெரிக்காவின் எல்லை விரிவாக்கம் மற்றும் இறையாண்மையைக் காட்டும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.</p><h2><strong>விண்வெளிப் படைக்கு புதிய சீருடை அறிமுகம்</strong></h2><p>நிலவு குறித்த பதிவைத் தொடர்ந்து, அமெரிக்க விண்வெளிப் படையினருக்கு புதிய சீருடை வடிவமைப்பையும் டிரம்ப் வெளியிட்டார். சாம்பல் மற்றும் கருப்பு நிறக் கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆடை, ‘ஸ்டார்ஷிப் ட்ரூப்பர்ஸ்’ திரைப்பட பாணியில் மிகவும் நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விண்வெளி எல்லைகளைப் பாதுகாக்கும் வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>டிரம்பின் இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து, அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகை சமூக வலைதளப் பக்கம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டது. இதில் டிரம்ப் ‘கிரீன் லேந்தர்ன்’ எனும் பிரபல காமிக்ஸ் சூப்பர்ஹீரோ போன்று, கையில் மின்னும் பச்சைக் கல் மோதிரத்துடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தார். அந்த வீடியோவில், "ஒளிமயமான பகலிலும், இருண்ட இரவிலும், எந்த ஒரு தீமையும் என் பார்வையிலிருந்து தப்ப முடியாது" என்ற சூப்பர்ஹீரோ வசனமும் இணைக்கப்பட்டிருந்தது.</p><h2>பன்னா<strong>ட்டு விண்வெளிச் சட்ட</strong>ம்</h2><p>அதிபர் டிரம்பின் இந்த உரிமை கோரல் சர்வதேச விண்வெளி உடன்படிக்கைகளுக்கு மாறானது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 1967-ஆம் ஆண்டைய பன்னாட்டு ‘வெளி விண்வெளி ஒப்பந்தத்தின்’ படி, நிலவு மற்றும் பிற விண்வெளிப் பொருட்கள் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டுக்கும் சொந்தமானதாக உரிமை கொண்டாட முடியாது. அமெரிக்காவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், டிரம்பின் இந்த சமூக வலைதளப் பதிவு வெறும் அரசியல் உத்தியா அல்லது கொள்கை முடிவா என்பது குறித்த விவாதங்கள் உலக அரங்கில் தீவிரமடைந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பீஃப் நூடுல்ஸில் உயிருடன் கிடந்த எலிக்குட்டி: ஹாங்காங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பகீர் சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/baby-rat-in-beef-noodles-sparks-outrage-in-hong-kong</link><comments>https://www.maalaimalar.com/news/world/baby-rat-in-beef-noodles-sparks-outrage-in-hong-kong#comments</comments><guid isPermaLink="false">ea07740e-c174-4b6b-adf3-8b6c63dd0a30</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:38:57 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:38:57.722Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஹாங்காங்,Hong Kong,நூடுல்ஸ்,Food Safety,Kwai Chung,Rat In Noodles,WaJer Restaurant,Food Hygiene</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zv6r1kig/Rat-In-Noodles" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rat In Noodles ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zv6r1kig/Rat-In-Noodles?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D">ஹாங்காங்கின் </a>குவாய் சுங் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பார்சல் வாங்கப்பட்ட சாத்தே பீஃப் நூடுல்ஸ் உணவிற்குள், உயிருடன் இருந்த எலிக்குட்டி ஒன்று கை, கால்களை அசைத்துக் கொண்டு கிடந்த சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இது தொடர்பான 18 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. </p><p>மசாலா சாஸுக்குள் மூழ்கியிருக்கும் அந்தச் சிறிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF">எலிக்குட்டி </a>உயிருடன் அசைவதைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களையும், உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><h2>அலுவலகத்தில் திறந்தபோது அதிர்ச்சி</h2><p>அப்பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர், திங்கட்கிழமை மதியம் 12.50 மணியளவில் அங்கிருந்த 'வா ஜெர்' என்ற உணவகத்தில் மதிய உணவு ஆர்டர் செய்துள்ளார்.</p><p>சாத்தே பீஃப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">நூடுல்ஸ்</a>, ஆம்லெட் மற்றும் ஒரு பானம் அடங்கிய இந்த உணவை 10 சதவீத தள்ளுபடியுடன் இந்திய மதிப்பில் ரூ. 530 -க்கு அவர் வாங்கியுள்ளார்.</p><p>அவர் உணவு பார்சல் வாங்கிக்கொண்டு தனது அலுவலகத்திற்குச் சென்று, சாப்பிடுவதற்காக அந்தப் பெட்டியைத் திறந்தபோதுதான் உள்ளே எலிக்குட்டி உயிருடன் நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். </p><p>இதுகுறித்து அவர் உடனடியாக உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறையிடம் புகார் அளித்துள்ளார்.</p><h2>உணவக உரிமையாளர் விளக்கம்</h2><p>இந்தச் சம்பவம் குறித்து அந்த உணவகத்தின் உரிமையாளர் மைக் கூறும்போது, "இது மிகவும் பயங்கரமான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகத் தெரிகிறது. கடந்த ஓராண்டாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறோம். </p><p>இதுவரை எலி அல்லது பூச்சிகள் உணவில் இருந்ததாக ஒரு புகார் கூட வந்தது இல்லை. இது ஒரு தொழிற்பேட்டை பகுதி என்பதால் எப்போதாவது வெளியில் எலிகள் நடமாடுவது உண்டு.</p><p> இருப்பினும், நாங்கள் மாதந்தோறும் ஆழமான துப்புரவு மற்றும் கிருமிநாசினி பணிகளைச் செய்து வருகிறோம்," என்று விளக்கமளித்தார்.</p><p>மேலும், இது யாரேனும் செய்த குறும்பா இருக்க வாய்ப்பில்லை என்றும், இனிவரும் நாட்களில் பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இணையத்தில் இந்தச் செய்தியைக் கண்ட நெட்டிசன்கள் சிலர், "நூடுல்ஸ் உடன் 'எலி சஷிமி' இலவசமாக வந்துள்ளது" என கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். </p><p>பலரோ, இனிமேல் இந்த வகை உணவுகளை ஆர்டர் செய்யவே பயமாக இருக்கிறது எனத் தங்களது ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பிக் பாஷ் லீக்கை தனியார் மயமாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/cricket-australia-approves-privatisation-in-bbl-melbourne-renegades-up-for-sal</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/cricket-australia-approves-privatisation-in-bbl-melbourne-renegades-up-for-sal#comments</comments><guid isPermaLink="false">cbf84786-4a93-40f3-b3e4-8cbdd93b7536</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:35:59 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:35:59.680Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BBL,பிக் பாஷ் கிரிக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/yxzwdkuj/BBL001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Big Bash League]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/yxzwdkuj/BBL001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் நடத்தப்படும் பிரான்சைஸ் டி20 லீக்கான ஐபிஎல் உலகளவில் பிரபலம் அடைந்துள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த லீக்கில் சர்வதேச போட்டிகளில் விளையாடும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடுகிறார்கள். ஐ.பி.எல். தொடரை இந்திய கிரிக்கெட் போர்டு நடத்தினாலும், ஒவ்வொரு அணியும் தனியாரிடம்தான் உள்ளது.</p><p>இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் நடைபெறுவது போன்று, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்த 8 அணிகளின் உரிமையாளர்கள் தனியார் கிடையாது. அந்தந்த மாநிலத்தின் கிரிக்கெட் சங்கம்தான் உரிமையாளராக இருந்து வருகின்றன.</p><h2>தனியார் வசமாகும் பிக் பாஷ் லீக்</h2><p>இந்த நிலையில் பிக் பாஷ் லீக்கை தனியார்மயமாக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் ஒரு அணியின் 100 சதவீதம் பங்குகளையும் தனியார் வாங்க முடியும். தற்போது மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா கைவசம் உள்ளது. இதனால் இந்த அணி முதலாவதாக விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>அதேவேளையில் ஆஸ்திரேலியா வீரர்களுக்கான சங்கம், புதிய திட்டம் குறித்து குறிப்பிடத்தகுந்த பிரச்சனை தொடர்பாக இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.</p><p>2027-28 தொடரில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பிக் பாஷ் லீக் அணிகளுக்கு புதிய உரிமையாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். விற்பனை நடைமுறை இந்த வருடம் நடைபெறும் தொடரை எந்த வகையிலும் பாதிக்காது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.</p><h2>முக்கிய முடிவுகளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா எடுக்கும்</h2><p>ஒவ்வொரு மாநிலமும் தங்களது அணிகளில் உள்ள பங்குகளை எப்போது, எப்படி விற்பது என்பது குறித்து தாங்களே முடிவெடுக்க அனுமதிக்கப்படும். ஹோபார்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளும் தனியார் முதலீட்டில் ஆர்வம் காட்டுவதாக நம்பப்படுகிறது. ஆனால், சிட்னி சிக்ஸர்ஸ், சிட்னி தண்டர், பிரிஸ்பேன் ஹீட் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் தற்போதைக்குத் தனியார் முதலீட்டில் ஆர்வம் காட்டவில்லை.</p><p>சர்வதேச போட்டி அட்டவணை, வீரர்களின் பங்கேற்பு, சம்பள உச்சவரம்புகள் மற்றும் ஊடக உரிமைகள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை நிர்வாக அமைப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் மைக் பெயர்ட் தெரிவித்தார்.</p><p>முதலீட்டாளர்களை அங்கீகரிக்க அல்லது நிராகரிக்க, குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா  தக்க வைத்துக் கொள்ளும். கிளப் பெயர்கள், வண்ணங்கள் மற்றும் பிராண்டிங்கில் செய்யப்படும் எந்த மாற்றங்களுக்கும் ஒப்புதல்கள் தேவைப்படும்.</p>]]></content:encoded></item><item><title>1972-ல் மாறிய விதி: 20 லட்சம் பறவைகளின் புகலிடமாக மாறிய அட்லாண்டிக் பெருங்கடலின் &apos;நியூ ஐலாண்ட்&apos; தீவு!</title><link>https://www.maalaimalar.com/news/world/in-1972-a-remote-new-island-in-the-south-atlantic-became-a-haven-for-2-million-seabirds</link><comments>https://www.maalaimalar.com/news/world/in-1972-a-remote-new-island-in-the-south-atlantic-became-a-haven-for-2-million-seabirds#comments</comments><guid isPermaLink="false">3ebc815f-a5de-4481-b849-3cb432a3611d</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:28:59 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:28:59.407Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>atlantic ocean,பென்குயின்,நியூ ஐலாண்ட்,New Island,Penguin Sanctuary,Eco Tourism,Sea birds,Biodiversity Area,அட்லாண்டிக் பெருங்கடல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/rlrr53fi/Penguin-Sanctuary" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Penguin Sanctuary ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/rlrr53fi/Penguin-Sanctuary?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு தொலைதூரத் தீவை, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் விலைக்கு வாங்கி, அதனை உலகின் மிக முக்கியமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வனவிலங்கு பாதுகாப்பு சரணாலயமாக </a>மாற்றியுள்ளார் என்ற ஆச்சரியமூட்டும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.</p><p>'நியூ ஐலாண்ட்' என்று அழைக்கப்படும் ஃபாக்லாந்து தீவுகளின் ஒரு பகுதியான இந்தத் தீவு, இன்று 5 வகையான <a href="https://www.maalaimalar.com/topic/penguin">பெங்குவின்கள் </a>மற்றும் 20 லட்சத்திற்கும் அதிகமான கடல் பறவை ஜோடிகளின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது.</p><h2>பேராசையில் அழிந்த வரலாறு</h2><p>ஒரு காலத்தில் இந்தத் தீவு மனிதர்களால் மிகவும் மோசமாக சுரண்டப்பட்டது. திமிங்கல வேட்டை முகாம்கள், பெங்குயின்களைக் கொன்று அவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கும் கொடூரங்கள் இங்கு அரங்கேறின.</p><p>அதுமட்டுமின்றி, ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகளும், எலிகள், பூனைகள் மற்றும் முயல்கள் போன்ற ஆக்கிரமிப்பு உயிரினங்களும் மனிதர்களால் இங்கு இறக்கப்பட்டன.</p><p>இதனால் நிலத்தின் வளம் உறிஞ்சப்பட்டு, உள்ளூர் தாவரங்களும், பறவைகளும் முற்றிலும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டன.</p><h2>1972-இல் ஏற்பட்ட திருப்புமுனை</h2><p>கடந்த 1972-ஆம் ஆண்டு, வனவிலங்கு ஆர்வலரும் புகைப்படக் கலைஞருமான இயன் ஸ்ட்ரேஞ்ச் என்பவர், ரோடி நேப்பியர் என்பவருடன் இணைந்து இந்தத் தீவை விலைக்கு வாங்கினார்.</p><p> அவர்கள் வழக்கமான வணிக நோக்கங்களை விடுத்து, இயற்கை அன்னைக்கு ஒரு மறுவாய்ப்பு கொடுக்க முடிவு செய்தனர்.</p><p>'நியூ ஐலாண்ட் டிரஸ்ட்' என்ற அமைப்பைத் தொடங்கி, ஆடு, மாடு மேய்ப்பதை முழுமையாக நிறுத்தினர். வணிகப் பயன்பாட்டைத் தவிர்த்து, ஆராய்ச்சி மற்றும் சூழலியல் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். </p><p>இதன் விளைவாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு நிலம் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கி, பூர்வீக தாவரங்களும், பறவைகளும் தீவிற்குத் திரும்பின.</p><h2>20 லட்சம் பறவைகள் மற்றும் 5 வகை பெங்குயின்கள்</h2><p>வெறும் 13 கிலோமீட்டர் நீளம் மட்டுமே கொண்ட இந்த சிறிய தீவில் தற்போதைய பறவைகளின் எண்ணிக்கை வியக்க வைக்கிறது.</p><p> கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான ஜோடி மெல்லிய-அலகு பிரியான்கள் கடல் பறவைகள் இங்கு வசித்து வருகின்றன. இவை மண்ணில் துளையிட்டு வாழும் மர்மமான பறவைகளாகும்.</p><p>ஜென்டூ (Gentoo), தெற்கு ராக்ஹாப்பர் (Southern Rockhopper), மெகல்லானிக் (Magellanic), மேக்ரோனி (Macaroni) மற்றும் எப்போதாவது தென்படும் கிங் பெங்குவின் (King penguin) என ஐந்து அபூர்வ பெங்குயின் வகைகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p>கருப்பு புருவ அல்பட்ரோஸ்கள், இம்பீரியல் ஷாக்ஸ் மற்றும் வெள்ளை நிற பெட்ரல்கள் என மொத்தம் 39 வகையான இனப்பெருக்கப் பறவைகள் இங்கு வாழ்வதாக ஃபாக்லாந்து சுற்றுலா வாரியம் கணக்கெடுத்துள்ளது.</p><p>இதன் காரணமாக இது ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பறவைகள் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.</p><h2>சவால்களும் தற்போதைய நிலையும்</h2><p>இயற்கை மீண்டெழுந்தாலும், மனிதர்களால் கொண்டு வரப்பட்ட எலிகள், பூனைகள் போன்றவற்றை முழுமையாக ஒழிப்பது இன்னும் சாத்தியப்படவில்லை. எனினும், விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பால் அவை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>இன்று இந்தத் தீவில் எந்தவொரு தார் சாலையோ, பரிசுப் பொருட்களோ வாங்கும் கடைகளோ இன்றி, இயற்கையின் தூய்மையான வடிவமாகவே பாதுகாக்கப்படுகிறது.</p><p>1972-இல் இயன் ஸ்ட்ரேஞ்ச் எடுத்த ஒரு மாற்று முடிவு, 50 ஆண்டுகள் கழித்து இன்று லட்சக்கணக்கான கடல் உயிரினங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-accompanied-by-thunder-and-lightning-in-chennai-over-the-next-three-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-accompanied-by-thunder-and-lightning-in-chennai-over-the-next-three-days#comments</comments><guid isPermaLink="false">2f19613a-28b4-49be-972e-c9ee0c0b7207</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:25:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:25:18.190Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,Chennai Rain,சென்னை மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/gphf1okq/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/gphf1okq/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>9-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>10-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>11-ந்தேதி கடலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>12-ந்தேதி மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>13-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>14-ந்தேதி வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே, இன்று முதல் 12-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி இடைத்தேர்தலில் த.வெ.க.-காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/topnews/tvk-and-the-congress-regarding-the-byelection-what</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/tvk-and-the-congress-regarding-the-byelection-what#comments</comments><guid isPermaLink="false">11051052-6ea5-4049-8286-35a6d4f0704e</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:21:56 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:21:56.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,காங்கிரஸ்,தவெக,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/v3q6nay0/vijayrahul.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/v3q6nay0/vijayrahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>புதுச்சேரி (Puducherry)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி முதல்-மந்திரி  ரங்கசாமி சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><h2><strong>இடைத்தேர்தல்</strong></h2><p>தேர்தலுக்கு பிறகு மங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியில் அவர் தொடர்கிறார். தட்டாஞ்சாவடி தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். இதற்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2><strong>என்.ஆர்.காங்கிரஸ்</strong></h2><p>தேர்தலில் ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக்ஆனந்து போட்டியிட உள்ளார். இதனை முதல்-மந்திரி ரங்கசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விழாவில் அறிவித்தார்.</p><h2><strong>திமுக கூட்டணி</strong></h2><p>கடந்த தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக ரங்கசாமியும், அவரை எதிர்த்து காங்கிரஸ், <a href="https://www.maalaimalar.com/topic/திமுக">தி.மு.க</a>. கூட்டணியில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், த.வெ.க. கூட்டணியில் இடம் பெற்ற நேயம் மக்கள் கழகம் விநாயகம் ஆகியோர் போட்டியிட்டனர்.</p><h2><strong>த.வெ.க.வுக்கு ஆதரவு</strong></h2><p>சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் தவெக ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்கின்றன.</p><h2><strong>முதல்-மந்திரி ரங்கசாமி</strong></h2><p>தமிழகத்தில் த.வெ.க.வுடன் அமைந்துள்ள கூட்டணி புதுச்சேரியிலும் தொடருமா? என கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தேர்தலுக்கு பிறகு புதுவை காங்கிரசாரை த.வெ.க. நிர்வாகிகள் யாரும் சந்திக்கவே இல்லை. ஆனால் புதுச்சேரிக்கு வந்திருந்த த.வெ.க. பொது செயலாளரும், அமைச்சருமான ஆனந்து, முதல்-மந்திரி ரங்கசாமியை சந்தித்து சென்றார்.</p><h2><strong>தமிழக முதலமைச்சர் விஜய்</strong></h2><p>அதுமட்டுமில்லாமல், அமைச்சர் ஆனந்து பிறந்த நாளில் முதல்-மந்திரி ரங்கசாமி, சென்னைக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அதுபோல முதல்-மந்திரி ரங்கசாமி பிறந்தநாளுக்கும் தமிழக முதலமைச்சர் விஜய் போன்மூலம் வாழ்த்து தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பு ரங்கசாமி, விஜய் இடையில் இருந்த நட்பு இப்போதும் தொடர்கிறது. இதனாலேயே புதுச்சேரியில் காங்கிரசை த.வெ.க. தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு அகில இந்திய அளவிலான இந்தியா கூட்டணியில் த.வெ.க. இதுவரை இடம் பெறவில்லை. அதோடு சமீபத்தில் பிரதமர் வேட்பாளராக விஜய்யை த.வெ.க.வினர் முன்னிருத்துவது காங்கிரசில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2><strong>பிரதமர் வேட்பாளர்</strong></h2><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என தமிழக அமைச்சர்கள் கொந்ததளித்தனர். இதனிடையே த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் சமீபத்தில் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் அளித்த பேட்டியில், முதல்-மந்திரி ரங்கசாமி, த.வெ.க.வுக்கு வேட்பாளரைக்கூட விட்டுத் தருவார் என கூறியிருந்தார்.</p><p>அதேநேரத்தில் கடந்த தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட நேயம் மக்கள் கழகம் மீண்டும் போட்டியிட த.வெ.க.விடம் வாய்ப்பு கேட்டுள்ளது. நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகம், தேர்தல் பணியை தொடங்கி செய்தும் வருகிறார்.</p><h2><strong>தட்டாஞ்சாவடி தொகுதி</strong></h2><p>இடைதேர்தலில் த.வெ.க. நேரடியாக போட்டியிட எந்த முனைப்பும் காட்டவில்லை. இதனால் த.வெ.க. ஆதரவு யாருக்கு? என தொண்டர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி. 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.</p><h2><strong>விடுதலை சிறுத்தைகள்</strong></h2><p>இதனால் காங்கிரஸ் களம் இறங்கும் வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. நேயம் மக்கள் கழக வேட்பாளரை த.வெ.க., காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஆதரிக்கலாம் என தெரிகிறது.</p><h2><strong>தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி</strong></h2><p>தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி உடைந்துள்ளது. இதனால் தட்டாஞ்சாவடி இடைதேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மும்முனைப்போட்டி ஏற்படலாம் என கூறப்படுகிறது.</p><h2><strong>என்.ஆர். காங்கிரஸ்</strong></h2><p>ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தன், கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த நேயம் மக்கள் கழகம் விநாயகம் ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தி.மு.க.வில் டாக்டர் நித்தீசும் களத்தில் இறங்கியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மிசா குறித்து பேச முதலமைச்சர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது - பரந்தாமன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-paranthaman-asked-what-standing-cm-vijay-to-speak-about-misa</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-paranthaman-asked-what-standing-cm-vijay-to-speak-about-misa#comments</comments><guid isPermaLink="false">6abad820-07ff-46f9-b19a-0f788dd77f9c</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:17:22 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:17:22.661Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/wjp770yv/paranthaman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paranthamen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/wjp770yv/paranthaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயமா? என்று பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.</p>  <p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி எழுப்பிய 15 கேள்விகளுக்கு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/topnews/tvk-is-running-a-reels-administration-ev-velu">விஜய்</a> பதில் அளிக்கவில்லை.</p> <p>* 13 எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிய நிலையில் முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை. முதலமைச்சர் பதில் அளிப்பதே மரபு.</p><p>* பெண்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்கள் கூட மிசாவில் கைது செய்யப்படுவர் என நிர்மல்குமார் கூறுகிறார்.</p> <p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-what-standing-does-the-chief-minister-have-to-speak-about-misa">மிசா</a> பற்றி பேசுவதற்கு முதலமைச்சர் விஜய்க்கும் அமைச்சர் நிர்மல்குமாருக்கும் எந்த தகுதியும் இல்லை.</p><p>* மிசாவில் கைதானோர் தாக்குதலுக்கு உள்ளானது குறித்த இஸ்மாயில் கமிஷன் பற்றி தெரியுமா?</p><p>* மிசாவில் அரசியல் கைதிகள் கொடுமைக்குள்ளானது பற்றிய ஆணைய அறிக்கையில் தெளிவாக உள்ளது.</p> <p>* முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயமா?</p><p>* ஆதாரம் வேணும், ஆதாரம் வேணும்னு கேட்டீங்களே, போதுமா? நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன் என முதல்வர் வசனம் பேசுகிறார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>‘உருவக்கேலி செய்வதை யாராக இருந்தாலும் ஏற்கமுடியாது’ - முதலமைச்சர் விஜய்யின் செய்கைக்கு பெ.சண்முகம் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/body-shaming-is-unacceptable-whoever-the-person-may-be-pe-shanmugam-condemns-chief-minister-vijays-action</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/body-shaming-is-unacceptable-whoever-the-person-may-be-pe-shanmugam-condemns-chief-minister-vijays-action#comments</comments><guid isPermaLink="false">c37754d5-f50b-4f47-9856-9d45910fbd9e</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:55:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:55:06.631Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,மு.க.ஸ்டாலின்,பெ.சண்முகம்,P Shanmugam,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/iaek3ia8/New-Project-2026-09-08T142242.805.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உருவக்கேலி செய்வதை யாராக இருந்தாலும் ஏற்கமுடியாது’ - முதலமைச்சர் விஜய்யின் செய்கைக்கு பெ.சண்முகம் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/iaek3ia8/New-Project-2026-09-08T142242.805.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். ஆனால் அந்த பதிலுரையில் கேள்விகளுக்கான பதில் இடம்பெறாமல், முழுக்க முழுக்க திமுக மீதான விமர்சனங்களே இருந்தன.</p><p>இந்நிலையில் இதனைக் குறிப்பிட்டு,“சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயல்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpim-shanmugam-clarifies-will-support-for-tvk-continue-for-5-years">பெ.சண்முகம் </a>விமர்சித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><h2>கேள்விக்கான எந்தப் பதிலும் இல்லை</h2><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்டவை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த 'பதிலுரையில்' எந்த பதிலும் இடம் பெறவில்லை.</p><p>மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல. </p><p>முதலமைச்சர் ஆக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும், சிறையில் அடைக்கப்பட்டதும், பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். </p><p>தோழர் பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விபரம் அறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.</p><p>அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும், அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது.</p><h2>உருவக்கேலி</h2><p>உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும். </p><p>சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். </p><h2>யாராக இருந்தாலும்...</h2><p>கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. </p><p>ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழ்நாடு மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பழிக்குப் பழியாக அரங்கேறிய சம்பவம் -  த.வெ.க. பிரமுகர் படுகொலையில் கைதானவர்கள் வாக்குமூலம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionary-murdered-3-school-students-arrested-in-swift-action</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionary-murdered-3-school-students-arrested-in-swift-action#comments</comments><guid isPermaLink="false">f224b1d8-b033-4539-9e99-7355a568d3ac</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:43:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:43:18.198Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Students Arrested,tvk,தவெக பிரமுகர் கொலை,பள்ளி மாணவர்கள் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/h2zjxqqo/arrested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/h2zjxqqo/arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. பிரமுகர் படுகொலை சம்பவத்தில் கல்லூரி மாணவரோடு சேர்ந்து பள்ளி மாணவர்களும் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.</p><p>சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/news/topnews/tvk-is-running-a-reels-administration-ev-velu">த.வெ.க. </a>பிரமுகர்  கண்ணன். கடந்த 5 ந்தேதி இரவு 9 மணியளவில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>அப்போது 2  மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல்,  <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> பிரமுகர் கண்ணனை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியபோது கண்ணனின் நண்பர்கள் கற்களை வீசி தடுக்க முயன்றனர் இருப்பினும் கொலையாளிகள் அவர்களை மிரட்டிவிட்டு கண்ணனை வெட்டி கொன்றனர். </p> <p>இந்தக் கொலை தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும்  பதைபதைப்பை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக  அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்களான ராகேஷ், நரேஷ், ஹரிஹரன், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.</p> <h2>பழி தீர்த்த பயங்கரம்</h2><p>போலீஸ்  விசாரணையில், இந்தக் கொலைக்கு 17 ஆண்டுகால பகையே காரணம் என்பது தெரியவந்தது.</p><p>கடந்த 2009-ம் ஆண்டு பரணியின் பெரியப்பா சிவா, 2016-ல் பரணியின் தந்தை வேலு ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். தனது தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு கண்ணன் தான் முக்கிய காரணம் என்று கருதிய பரணி திட்டம் போட்டு இந்த கொலையை செய்திருப்பது அம்பலமானது. இப்படி பழிக்கு பழியாக கொலை அரங்கேறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. </p> <p>“என் தந்தை மற்றும் பெரியப்பாவைக் கொன்ற அவர், சமீபத்தில் ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு அந்தப் பகுதியில் பெரிய ஆள் போல வலம் வந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை உயிரோடுவிட்டால் மீண்டும் எங்களுக்கு ஆபத்து என்று கருதினேன். அதனால்தான் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக் கட்டினேன். இப்போதுதான் என் தந்தை மற்றும் பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைந்துள்ளது" என வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>3 பள்ளி மாணவர்கள்</h2><p>இதற்கிடையே இந்த கொலை வழக்கில் மேலும் 4  பேர் போலீசில் சிக்கி உள்ளனர் இவர்களில் 3 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர். கல்லூரி மாணவர் பரணியின் நண்பர்களான இவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p> <p>சென்னை மாநகரில் பரபரப்பாக அரங்கேறிய துணிகர கொலை சம்பவத்தில் கல்லூரி மாணவரோடு சேர்ந்து பள்ளி மாணவர்களும் கொலையில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் போலீசார் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  இதைத்தொடர்ந்து கொலையின் முழு பின்னணி குறித்தும் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வேலை வாங்கி தருவதாக பண மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/money-cheating-case-order-issued-to-return-rajendra-balajis-passport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/money-cheating-case-order-issued-to-return-rajendra-balajis-passport#comments</comments><guid isPermaLink="false">323c73d5-c609-4010-9633-f4947f28819a</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:40:59 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:40:59.933Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Rajendra Balaji,ராஜேந்திர பாலாஜி,பண மோசடி வழக்கு,money cheating case</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/14rrd5fo/rajendrabalaji.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ராஜேந்திர பாலாஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜேந்திர பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/14rrd5fo/rajendrabalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் இன்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.</strong></em> </p><p>கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/ராஜேந்திர-பாலாஜி">கே.டி.ராஜேந்திரபாலாஜி</a>  ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2><strong>8 பேர் மீது வழக்கு</strong></h2><p>பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். மேலும் பண மோசடியில் ஈடுபட்டதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு தடையின்றி ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு இருந்தது.</p><p>இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இருந்தபோதிலும் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் இன்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது. </p><p>மேலும் அவர் வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்ற அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாஸ்போட்டை வழங்க முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் உத்தரவு பிறப்பித்தார்.</p>]]></content:encoded></item><item><title>புலிப்பட வருவாயை மறைத்த உத்தமருக்கு மிசாவைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? - தயாநிதி மாறன் காட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-moral-standing-does-the-noble-soulwho-concealed-income-worth-croreshave-to-speak-about-misa-dayanidhi-maran-lashes-out</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-moral-standing-does-the-noble-soulwho-concealed-income-worth-croreshave-to-speak-about-misa-dayanidhi-maran-lashes-out#comments</comments><guid isPermaLink="false">a438ee47-dc91-4585-b7b4-e71485d2a00b</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:34:23 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:34:23.105Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தயாநிதி மாறன்,Dayanidhi Maran,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/srm12zrk/New-Project-2026-09-08T140045.996.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊழலைப் பற்றிப் பேசும் உத்தமருக்கு மிசாவைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? - தயாநிதி மாறன் காட்டம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/srm12zrk/New-Project-2026-09-08T140045.996.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (செப்.8) காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionarys-murder-udhayanidhi-stalin-criticizes-the-state-of-law-and-order">முதலமைச்சர் விஜய்</a>, திமுகமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p>அப்போது மிசா, சர்க்காரியா ஆணையம் உள்ளிட்டவை குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறம் கடுமையான கண்டனங்களை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர்., </p><p>ஊழலைப்பற்றிப் பாடம் எடுக்கும் உத்தமரே! ஊரெங்கும் நடக்கும் கொலைகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன தொடர்பு?</p><p>அமலாக்கத்துறையில் அதிக வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது யார்? அரசியல் காரணமாக அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களையும் முதலமைச்சர் அடுத்த முறை வாசிப்பாரா?</p><h2>உள்ளூர் பத்திரிக்கையாளர்களுக்கே அஞ்சும் ஒருவர்</h2><p>உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் என் தந்தை மறைந்த முரசொலி மாறன். வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர். </p><p>உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சும் ஒரு முதலமைச்சர் மரியாதைக்குரிய முரசொலி மாறனைப் பற்றிப் பேசலாமா?</p><h2>விஜய்யை அவமதித்த காங்கிரஸ் </h2><p>இன்று அவரைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சர், அதே முரசொலி மாறனின் மகனான எனது அழைப்பை ஏற்று, ஜனவரி 2006-இல், அப்போதைய பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, </p><p>“பொங்கல் சிறப்பு தபால் தலை” வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த சமயத்தில், விஜய்மீது வருமானவரி வழக்கு நிலுவையில் உள்ளதால், அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் விஜய்யை மேடையில் ஏற்றக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பினை கடுமையாக தெரிவித்தப்போது, </p><p>உடனடியாக அதற்கு ஆட்சேபனையைத் தெரிவித்து, விஜய்யை மேடையில் நிற்க வைத்து, தபால் தலையை பெறுவதற்கான உரிய மரியாதையை வாதாடி அவருக்கு பெற்றுத் தந்தது முரசொலி மாறன் மகன்தானே?</p><h2>மிசாவை பற்றிப்பேசும் அருகதை முதலமைச்சருக்கு இருக்கிறதா?</h2><p>அந்த தபால் தலையை பெற்றுக் கொண்டு சிரிக்கும்போது, இப்போதைய ஞானோதயம் இல்லாமல் ஞானசூனியமாக இருந்தாரா? முதலில், ஊழலைப் பற்றியோ மிசாவைப் பற்றியோ பேசும் அருகதை இந்த முதலமைச்சருக்கு உள்ளதா? </p><p>போர்பந்தரில் பிறந்தவரின் வாரிசாக தன்னைத் தானே யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது. இந்த வீராதி வீரர் கொடநாட்டில் தனது திரைப்படத்திற்காக, ஒருநாள் முழுவதும் அங்கேயே காத்திருந்து, வீடியோவில் கைகட்டி வாய்பொத்தி முனகியதையும் மறந்துவிடலாகாது.</p><h2>கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால்...</h2><p>கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இப்படித்தான் ஆகஸ்ட் 2026-இல் நடந்த கொலைகளுக்கு எமெர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கையில் பதில் தேட வேண்டியிருக்கும்!</p><p>தேடி முடிக்கும் முன் அடுத்த கொலைகள் நடந்தேறிச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சிறைச்சாலை தாக்குதலுக்கு பதிலடி.. சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 73 பேர் காயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/retaliation-for-prison-attack-73-injured-in-attack-by-houthi-rebels-in-saudi-arabia</link><comments>https://www.maalaimalar.com/news/world/retaliation-for-prison-attack-73-injured-in-attack-by-houthi-rebels-in-saudi-arabia#comments</comments><guid isPermaLink="false">4835fa07-e5ce-4057-a671-4011965f42f3</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:25:46 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:25:46.562Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,சவுதி அரேபியா,Yemen,ஏமன்,Houthi rebels,ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jl3n6h30/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிறைச்சாலை தாக்குதல் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறைச்சாலை தாக்குதல் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jl3n6h30/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் நாட்டில் சிறைச்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில் பதிலடியாக சவுதி அரேபிய பகுதிகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 73 பேர் காயமடைந்துள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">ஏமனின் </a>தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளை <a href="https://www.maalaimalar.com/news/world/houthi-push-to-control-bab-al-mandeb">ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</a> கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அங்கு அவர்கள் தனி அரசை உருவாக்கி நடத்தி வருகின்றனர். </p> <p>இந்நிலையில் ஏமனின் Jouf மாகாணத்தில் உள்ள Al Hazm நகர மத்திய சிறைச்சாலையின் மீது சவுதி அரேபியா நடத்திய விமான தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டதாவும், ஒரு பெண் உட்பட 7 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனீஸ் அல் அஸ்பஹி தெரிவித்துள்ளார்</p><p>தாக்குதலுக்குப் பிறகு கட்டிடம் முற்றிலும் இடிந்ததில், உள்ளே 35 கைதிகளும், தன் கணவரைப் பார்க்க வந்த ஒரு பெண்ணும் சிக்குண்டுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>ஹவுதிக்கள் பதிலடி</h2><p>இதனிடையே ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியர்கள் தங்கள் நாட்டின் மீது நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 73 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. </p><p>ஏமன் எல்லையை ஒட்டியுள்ள சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள சிவிலியன் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக சவுதி தரப்பு தெரிவித்துள்ளது. </p> <p>சவுதி எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அதிகாலையில் தெற்குப் பகுதிகளில் உள்ள பல எரிசக்தித் தளங்கள் தாக்கப்பட்டதில் குடிமக்கள் காயமடைந்ததாகவும், பல இடங்களில் தீப்பற்றியதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.</p><p>ஆனால் ஹவுதிக்கள் இந்த தாக்குதல் குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை.</p><h2>ஹவுதி - சவுதி மோதல்</h2><p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2014ஆம் ஆண்டு ஏமன் தலைநகரான சனா நகரத்தை கைப்பற்றி, அப்போதைய அரசாங்கத்தை வெளியேற்றினர்.</p><p>அதை தொடர்ந்து சவுதி தலைமையிலான கூட்டணி, ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவும், ஈரானின் முக்கிய கூட்டாளியான ஹவுதிக்களை எதிர்த்து போராடவும் தொடங்கியது.</p><p>இதையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் ஏமன் அரசாங்க படைகளுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு போர் ஒப்பந்தம் போடப்பட்டது.</p> <p>அண்மையில் ஹவுதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரத்தில், ஈரான் நாட்டிற்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிரங்க முயன்றது.</p><p>அப்போது ஏமன் அரசாங்கம் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு போடப்பட்டிருந்த போர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.</p><p>இதைத்தொடர்ந்து இவர்களுக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை ஏமனில் உள்ள மேற்கு தைஸ் மற்றும் தெற்கு ஹொடைதா பகுதிகளில் ஹவுதிக்கள் தாக்குதலை நடத்தினர்.</p> <h2>பலி</h2><p>இந்த தாக்குதலில் ஏமன் அரசாங்க படைகள் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையை சேர்ந்த 129 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இதைத்தொடர்ந்து ஏமனின் தென்மேற்கு பகுதியில் ஹவுதிக்கள் மீண்டும் நடத்திய தாக்குதலில், 26 ஏமன் அரசாங்க படையினரும், 31 ஹவுதி கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர்.</p><p>ஏமன் கடற்கரையோர துறைமுக நகரங்களை ஒட்டி அமைந்துள்ள, பாப் அல் மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில், ஹவுதிக்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.</p><p>உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் 24 முதல் இதுவரை நடைபெற்ற மோதல்களில் 1,078 பேர் உயிரிழந்துள்ளனர் .</p><p>கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கிய தீவிர மோதலின்பின் 21,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>பாப் அல் மண்டேப் ஜலசந்தி</h2><p>சூயஸ் கால்வாய்க்கு செல்லும் கப்பல்களுக்கு பாப் அல் மண்டேப் ஜலசந்தி ஒரு முக்கியமான கடல்வழி தளமாக உள்ளது. உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 10 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.</p><p>அமெரிக்கா ஈரான் போர் தொடங்கிய பிறகு, சவுதி அரேபியா பல மாதங்களாக எண்ணெய் ஏற்றுமதி செய்ய இந்த பாப் அல் மண்டேப் ஜலசந்தியை பயன்படுத்தி வருகிறது.</p> <p>மார்ச் 2026 முதல் ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்டதன் விளைவாக ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ள உலகளாவிய பொருட்களின் விலையை, பாப் அல் மண்டேப் பகுதியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டால் அது மேலும் அதிகரிக்க செய்யும் என அஞ்சப்படுகிறது.</p><p>ஹவுதிக்கள் அந்த துறைமுக நகரத்தை மீண்டும் கைப்பற்றி, செங்கடல் கடற்கரையோரமுள்ள முக்கிய பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால், அது செங்கடலில் நடைபெறும் கடற்படை போக்குவரத்தை கட்டுப்படுத்த அவர்களுக்கு வழிவகை செய்யும்.</p> ]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜி வழக்கு: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் மாநில அரசுக்கே முழு அதிகாரம்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-case-tamil-nadu-govt-affidavit-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-case-tamil-nadu-govt-affidavit-supreme-court#comments</comments><guid isPermaLink="false">290cf31d-9ef4-47d0-b3fa-301c61430c19</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:24:07 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:24:07.722Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Supreme Court,செந்தில் பாலாஜி வழக்கு,Senthil Balaji case,உச்சநீதிமன்றம்,Senthil Murugan,Washington Dhanasekaran,வி.செந்தில் முருகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/vbg23aka/senthil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil Balaji Case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/vbg23aka/senthil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசுத் தரப்பு வழக்கறிஞர் மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதியை நிலைநாட்டவே நியமிக்கப்படுகிறாரே தவிர, குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பயனளிக்கும் வகையில் நியமிக்கப்படுவதில்லை</p><p>முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில், சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-extends-stay-on-announcement-of-by-elections-for-5-constituencies">தமிழக போக்குவரத்துத் துறையில் </a>வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வாஷிங்டன் தனசேகரன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக வி.செந்தில் முருகன் புதிய சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.</p><h2>த<strong>மிழக அரசு விளக்கம்</strong></h2><p>இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில், அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கும் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதில் உரிமை கோர அவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. </p><p>அரசுத் தரப்பு வழக்கறிஞர் மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதியை நிலைநாட்டவே நியமிக்கப்படுகிறாரே தவிர, குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பயனளிக்கும் வகையில் நியமிக்கப்படுவதில்லை. எனவே, சிறப்பு வழக்கறிஞரைத் தேர்வு செய்வதும் நியமிப்பதும் முற்றிலும் மாநில அரசின் நிர்வாக அதிகாரத்திற்குட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>வழக்கு விசாரணை<strong>யின் மு</strong>ன்னேற்றம்</h2><p>புதிய சிறப்பு வழக்கறிஞராக வி.செந்தில் முருகன் நியமிக்கப்பட்ட பிறகு, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்த பிரமாணப் பத்திரத்தில் விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு தொடர்பாகத் தமிழக அரசு தன் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, வழக்கு அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 23-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என் இசையால் உயிர் பெற்ற குழந்தை: இளையராஜா நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ilaiyaraaja-says-child-brought-to-life-by-my-music</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ilaiyaraaja-says-child-brought-to-life-by-my-music#comments</comments><guid isPermaLink="false">3d7ca5dc-0372-4158-8b82-1d9852176830</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:18:57 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:18:57.262Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,ilaiyaraaja,மஞ்சணத்தி திரைப்படம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8zks1dm/ilaiyaraaja.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்த காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்த காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8zks1dm/ilaiyaraaja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரிய வந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம். அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. மஞ்சணத்தி படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்றார்.</strong></em></p><p>மாரி செல்வராஜ் இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/இளையராஜா">இளையராஜா</a> இசையமைப்பில் உருவாகும் புதிய படம் ‘மஞ்சணத்தி’. படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, “காக்கா முட்டை”  விக்னேஷ், “வாழை” படப்புகழ் ராகுல் மற்றும் ராகவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.</p><p>படப்பிடிப்பை இளைய ராஜா கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.</p><h2><strong>காடுமேடுகளில்</strong></h2><p>விழாவில் இளையராஜா பேசியதாவது:-</p><p>நீங்கள் அனைவரும் காடுமேடுகளில் பிறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். நானும் காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன்தான். அங்கிருந்து எப்படியோ இசையைக் கற்றுக்கொண்டு முன்னேறினேன். இசையைச் சொல்லித்தர எனக்கு அருகில் யாரும் இல்லை. ஏதோ ஒரு தாகத்தோடு நானே இசையைக் கற்றுக்கொண்டேன்.</p> <p>உலகிலுள்ள மிகப்பெரிய மேதைகளெல்லாம் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது. அதனால் நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இசை எனக்குள் அதுவாகவே வந்தது. எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இருக்கிறதே, அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும்.”</p><h2><strong>உயிர்பெற்ற குழந்தை</strong></h2><p>ஜெர்மனியில் இருந்த ஒரு தமிழ் தம்பதியின் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் நின்று விட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது என் இசையை கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரிய வந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம். அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. மஞ்சணத்தி படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளப் பேரழிவு: சேமிப்பு உண்டியலை வழங்கி மனங்களை வென்ற 10 வயது இந்திய சிறுவன்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-tragedy-10-year-old-indian-boy-wins-hearts-with-savings-donation</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-tragedy-10-year-old-indian-boy-wins-hearts-with-savings-donation#comments</comments><guid isPermaLink="false">b594257e-6b7b-478d-b2ad-861216b3d46e</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:05:47 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:05:47.533Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாள நிலச்சரிவு,nepal flood,நேபாள வெள்ளப்பெருக்கு,நேபாள வெள்ளப் பேரழிவு,Nepal flood disaster,Nepal Donating</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/hags6arm/nepal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Nepal Donating ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/hags6arm/nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யூடியூப் மற்றும் செய்திகளில் நேபாள வெள்ளத்தின் சீற்றத்தையும், அங்கு வீடுகளை இழந்து தவிக்கும் மக்களின் கண்ணீரையும் பார்த்த அல்ஃபாஸ், மிகுந்த வேதனையடைந்தான்.</p><p>நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.<a href="https://www.maalaimalar.com/news/world/tibet-glacier-collapse-disaster-chinese-researchers-shocking-report"> நிலச்சரிவு</a> மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களின் துயரச் செய்திகள் உலகெங்கிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய சோகமான சூழ்நிலையிலும், மனிதநேயத்தின் உன்னதத்துவத்தை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.</p><h2>துய<strong>ரம் கண்டு</strong> உருகிய இளம் மனம்</h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பெட்டியா கிராமத்தைச் சேர்ந்த இம்ரான் அலி சித்திக்கியின் 10 வயது மகன் அல்ஃபாஸ் ஷேக். ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுவன், கடந்த ஒரு ஆண்டாகத் தனது சொந்தத் தேவைகளுக்காகச் சிறுகச் சிறுக உண்டியலில் பணம் சேமித்து வந்துள்ளான்.</p><p>யூடியூப் மற்றும் செய்திகளில் நேபாள வெள்ளத்தின் சீற்றத்தையும், அங்கு வீடுகளை இழந்து தவிக்கும் மக்களின் கண்ணீரையும் பார்த்த அல்ஃபாஸ், மிகுந்த வேதனையடைந்தான். தான் சேமித்து வைத்த தொகையைக் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தனது எண்ணத்தை வீட்டாாரிடம் தெரிவித்தான். சிறுவனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினரும் அவனுக்கு முழு ஆதரவு அளித்தனர்.</p><h2><strong>மாவட்ட ஆ</strong>ட்சியரிடம் ஒப்படைக்கப்பட்ட  உண்டியல்</h2><p>தனது தந்தையுடன் குஷிநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற அல்ஃபாஸ் ஷேக், தான் ஆசையோடு சேமித்து வைத்திருந்த பண உண்டியலை மாவட்ட ஆட்சியர் மகேந்திர சிங் தன்வாரிடம் ஒப்படைத்தான். தான் சேமித்த தொகை நேபாளத்தில் துயருறும் மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தான். </p><p>சிறுவனின் இச்செயலைக் கண்டு நெகிழ்ந்த மாவட்ட ஆட்சியர், உண்டியலில் உள்ள தொகையை விடச் சிறுவனின் உன்னதமான எண்ணமே முதன்மையானது எனக் கூறி, அதை உடனடியாக எண்ணாமல் மதிப்பளித்தார். இந்த உதவித்தொகை உரிய அரசு வழிமுறைகள் மூலம் நேபாள நிவாரண நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.</p><p>சிறுவன் அல்ஃபாஸின் இந்த அன்பு மற்றும் கருணைமிக்க செயல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. "கடவுள் இந்தச் சிறுவனை ஆசீர்வதிக்கட்டும்", "உண்மையான மனிதநேயம் எல்லைகளைத் தாண்டியது" எனப் பலரும் சிறுவனுக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கத் தான் சேமித்த முழுப் பணத்தையும் தயங்காமல் வழங்கிய சிறுவன் அல்ஃபாஸ் ஷேக், எதிர்காலத்தில் தான் என்னவாக வளர்ந்தாலும் ஆபத்தில் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து உதவுவதே தனது லட்சியம் எனக் கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளான்.</p>]]></content:encoded></item><item><title>13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: நிரந்தரக் கிடங்குகளை  விரைந்து அமைக்க வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-13-lakh-bags-of-paddy-damaged-by-rain-permanent-warehouses-must-be-constructed-quickly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-13-lakh-bags-of-paddy-damaged-by-rain-permanent-warehouses-must-be-constructed-quickly#comments</comments><guid isPermaLink="false">e8bc29b7-d7a6-4e82-822a-1a5d885b9d8b</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:58:02 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:58:02.046Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,நெல் மூட்டைகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/3nw9yxig/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/3nw9yxig/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக  பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மழையில் நனைந்து முளைத்து விட்டன</strong></h2><p>செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த  சுமார் 13 லட்சம் <a href="https://www.maalaimalar.com/topic/நெல்-மூட்டைகள்">நெல் மூட்டைகள்</a> கடந்த சில நாள்களில்  பெய்த மழையில் நனைந்து சேதமடைந்திருக்கின்றன.  அவற்றில் பல்லாயிரம் நெல் மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழுகி விட்டன.  பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை அரசு நிர்வாகம் பொறுப்பின்றி மழையில் நனைய விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சமத்துவபுரத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள  திறந்தவெளிக் கிடங்கில் 50 ஆயிரம் டன், அதாவது 12.50 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டன. அதே செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த புள்ளேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிடங்கிலும் பல்லாயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்து விட்டன. கடலூர் மாவட்டம்  விருத்தாசலத்தை அடுத்த இராஜேந்திரன்பட்டினம் பகுதியில் உள்ள திறந்தவெளிக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டன.</p><p>மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நேற்றோ அதற்கு முதல் நாளோ கொள்முதல் செய்யப்பட்டவை அல்ல. பல வாரங்களுக்கு முன் கொள்முதல் செய்யப்பட்டு  சேமித்து வைக்கப்பட்டவை தான். அவை உரிய காலத்தில் கிடங்குகளுக்கோ, அரவை ஆலைகளுக்கோ கொண்டு செல்லப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உரிய காலத்தில் அங்கிருந்து  அகற்றாத அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.</p><h2><strong>நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும்</strong></h2><p>வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து  சேதமடைகின்றன.</p><p>இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தான். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 80 லட்சம் டன் நெல் உள்பட மொத்தம் 120 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் அதிகபட்சமாக 2025-26ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  நெல் கொள்முதலை மேற்கொள்ளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் வெறும் 18 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட  கிடங்குகள் தான் உள்ளன. இது தமிழ்நாட்டில் விளையும் உணவு தானியங்களில்  வெறும் 15% மட்டும் தான். இது போதுமானதல்ல.</p><p>மழையில் நனைந்து சேதமடைந்த  நெல் மூட்டைகளை பயன்படுத்த முடியாது. அவற்றை அரவை செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்கினால் துர்நாற்றம் எடுத்து பயன்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கும். இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகும். நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக  பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்- த.வெ.க. எம்.எல்.ஏ.</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-pallavi-says-please-forgive-me-if-i-have-spoken-inappropriately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-pallavi-says-please-forgive-me-if-i-have-spoken-inappropriately#comments</comments><guid isPermaLink="false">c9100d1f-4daf-481f-9ddf-70655808438d</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:45:52 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:45:52.769Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk,பல்லவி,Pallavi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9xsifhwk/pallavi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி]]></media:title><media:description type="html"><![CDATA[ திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9xsifhwk/pallavi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் முதன்முறையாக பேசிய பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி பேசியதாவது:-</p><p>* போதைப்பொருள் புழக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது.</p><p>* பூங்கா கட்டுவதை மட்டுமே முந்தைய எம்எல்ஏக்கள் செய்து கொண்டிருந்தனர்.</p><p>* மேயரும் அமைச்சரும் எனது தொகுதியில் தான் இருக்கிறார்கள்.</p><p>* வடசென்னையில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எங்கள் தொகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும்.</p><p>* வடசென்னையில் பள்ளி மாணவர்கள் போதைப்புழக்கத்தில் அதிகம் பாதிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்.</p><p>* போதைப்பொருள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் விளையாட்டு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.</p><p>* இதுவரை எத்தனையோ எம்எல்ஏ வந்தார்கள். எங்கள் தொகுதி மாறவில்லை, மாற்றம் கொண்டு வரும் வகையில் செயல்படுவேன்.</p><p>* என்னை பின்பற்றி என் தொகுதி மக்கள் வருவார்கள், நான் இல்லாமல் போனாலும் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்றார். </p><p>இதனிடையே, சட்டசபையில் முதன்முறையாக பேசிய பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>&apos;இயக்குநர் இமயம்&apos; பாரதிராஜாவின் கடைசி காவியம்: &apos;புலவர்&apos; திரைப்படத்தின் டீசர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/pulavar-teaser-bharathirajas-last-film-unveiled</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/pulavar-teaser-bharathirajas-last-film-unveiled#comments</comments><guid isPermaLink="false">d4830ef6-7b38-426d-9a92-b451e7f28dc2</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:43:56 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:43:56.257Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Raichal Rebecca,பாரதிராஜா,BharathiRaja,Pulavar,புலவர்,Murugaiya,Bharathiraja Last Movie</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ldkthwww/Pulavar-Teaser" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pulavar Teaser]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ldkthwww/Pulavar-Teaser?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் கமழும் கதைகளையும், எதார்த்தமான மனிதர்களையும் திரையில் உயிர்ப்பித்துத் தனக்கென ஒரு தனி சகாப்தத்தை உருவாக்கியவர் "<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE">இயக்குநர் இமயம்" பாரதிராஜா.</a></p><p>பாரதிராஜா இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் பல படங்களில் தனது முத்திரையைப் பதித்த அவர், இந்த ஆண்டு ஜூன் 10-ந் தேதி காலமானார். </p><p>அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரையுலகிற்கும் பேரிழப்பாக அமைந்த நிலையில், அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து மறைந்த அவரது கடைசித் திரைப்படமான <strong>‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/first-look-video-of-bharathirajas-pulavar-785560">புலவர்</a>’</strong> படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.</p><h2><strong>'புலவர்' ரிலீஸ் தேதி</strong></h2><p>பாரதிராஜாவின் இறுதித் திரைப்படைப்பான 'புலவர்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 25-ந் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>டீசர் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்பார்ப்பு</strong></h2><p>தற்போது வெளியாகியுள்ள ‘புலவர்’ படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p>பாரதிராஜாவின் கம்பீரமான திரைத் தோற்றத்தையும் எதார்த்தமான நடிப்பையும் மீண்டும் ஒருமுறை திரையில் காணும் அரிய வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.</p><p>பாரதிராஜாவின் கடைசித் திரைப்படம் என்பதால், இப்படம் ரசிகர்களுக்கு ஒரு சாதாரணத் திரைப்படமாக இல்லாமல், அவர் திரையில் தோன்றும் கடைசி நினைவாகவும், அவருக்குச் செலுத்தும் உன்னதமான அஞ்சலியாகவும் அமையவுள்ளது.</p><p>இதனால் இப்படத்திற்கு இயல்பாகவே கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம்</strong></h2><p>இத்திரைப்படத்தை இயக்குநர் முருகையா மிகவும் எதார்த்தமான வாழ்வியல் பின்னணியுடன் இயக்கியுள்ளார். </p><p>பாரதிராஜாவுடன் இணைந்து 'குட் நைட்' பட புகழ் ரேச்சல் ரெபெக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன் மற்றும் வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/WUYToTU73kY"></iframe></figure><h2><strong>தொழில்நுட்பக் குழு</strong></h2><p>படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, படம் ரிலீசுக்குத் தயாராக உள்ள நிலையில், 'புலவர்' திரைப்படத்தைத் திரையில் காண பாரதிராஜாவின் ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: சத்தம் எழுப்பியதை தட்டிக்கேட்ட பிரபல மணிப்பூர் இசைக்கலைஞர் டெல்லியில் அடித்துக் கொலை - 8 பேர் கைது 
</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-manipuri-musician-beaten-to-death-after-objecting-to-noise-8-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-manipuri-musician-beaten-to-death-after-objecting-to-noise-8-arrested#comments</comments><guid isPermaLink="false">291a463a-9576-4776-bf06-f35f99997efa</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:43:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:43:06.243Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை,இசைக்கலைஞர்,டெல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0ng51qin/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விக்ரம் சிங்]]></media:title><media:description type="html"><![CDATA[ விக்ரம் சிங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/0ng51qin/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மணிப்பூரை சேர்ந்த கிட்ட்டார் இசைக்கலைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/manipur">மணிப்பூரை  </a>சேர்ந்த 55 வயது விக்ரம் சிங், கடந்த 17 ஆண்டுகளாக டெல்லியில் தங்கித் இசை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். </p><p>தென்கிழக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/1133-buildings-collapsed-and-98-people-lost-their-lives-in-delhi-over-three-years-residents-living-in-fear">டெல்லியின் </a>கிலோகரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 3வது தளத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். </p><p>நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11:30 மணியளவில் குப்பைகளை கொட்டுவதற்காக விக்ரம் சிங் வீட்டின் 3ஆம் தளத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். </p> <h2>தாக்குதல்</h2><p>அப்போது அருகில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் சிலர் அவர் குடியிருக்கும் கட்டிடத்தின் வெளியே உரக்கச் சத்தமிட்டு குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர்.</p><p>அவர்களின் இந்த செயலை விக்ரம் சிங் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டது.</p><p>அவர்கள் தாக்க முயன்றதால் பயந்துபோன விக்ரம் சிங் தனது வீட்டை நோக்கி ஓடியபோது, அக்கும்பல் அவரை 3வது தளம் வரை துரத்திச் சென்று, காரிடாரில் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டுத் தப்பியோடியது.</p><h2>உயிரிழப்பு</h2><p>காயமடைந்த விக்ரம் சிங்கை அவருடைய குடும்பத்தினர் ஓக்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p>ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.</p> <h2>கைது</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட பரத் குமார் (19), பிரமோத் (26), ரம்ஜான் கான் (22), விஜய் (36), தீபன்ஷு (21), மோகன் விஸ்வகர்மா (32), மன்னு (26) ஆகிய 7 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஒரு 15 வயது சிறுவனும் பிடிபட்டுள்ளான்.</p> <h2>போராட்டம்</h2><p>இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் டெல்லியில் வாழும் நூற்றுக்கணக்கான வடகிழக்கு மாநில மக்கள் கிலோகரி பகுதியில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் நடத்தினர்.</p> <p>மணிப்பூர் முன்னாள் முதல்வர் பைரன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், "இசைக்கலைஞர் விக்ரம் சிங்கின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>டெல்லி காவல்துறை இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டுத் தீவிர விசாரணை நடத்தி, விரைந்து நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Deeply saddened by the tragic passing of renowned Manipuri guitarist and Western music pioneer, Shri Chongtham Vikram Singh, and deeply concerned by the incident in which he was allegedly assaulted near his residence in southeast Delhi. <br><br>Shri Vikram Singh’s invaluable… <a href="https://t.co/MH49Pcdh8A">pic.twitter.com/MH49Pcdh8A</a></p>&mdash; N. Biren Singh (@NBirenSingh) <a href="https://x.com/NBirenSingh/status/2096952980566376849?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>யார் இந்த விக்ரம் சிங்?</h2><p>மணிப்பூரின் இம்பால் மேற்குப் பகுதியை சேர்ந்த விக்ரம் சிங், மணிப்பூரின் பல முன்னணி இசைக்குழுக்களில் முதன்மை கிட்டார் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லிக்கு இடம்பெயர்ந்த அவர், அங்குத் தனியாக இசைப்பள்ளி ஒன்றை நிறுவி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார். </p> <p>பல இசைக்கச்சேரிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.</p><p>விக்ரம் சிங் பாரம்பரியமான கலைக் குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரது தாயார் 86 வயதான சொங்தாம் ஓங்பி கமலா தேவி மணிப்பூரின் புகழ்பெற்ற பாரம்பரிய பாடகி ஆவார்.</p><p>விக்ரம் சிங், இந்தியாவின் முதல் BAFTA விருதை வென்ற Boong திரைப்படத்தின் இயக்குநர் லக்ஷ்மிபிரியா தேவியின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.</p><p>விக்ரம் சிங்கிற்கு ஜோத்சனா (54) என்ற மனைவியும், யைபாபா (20) என்ற மகனும் உள்ளனர். மகன் யைபாபா சட்டம் பயின்று வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நகர்ப்புற போக்குவரத்தில் புதிய மைல்கல்: மெட்ரோ ரெயில் சேவையில் அமெரிக்காவை முந்தி உலகளவில் 2-வது இடத்தை பிடிக்கும் இந்தியா</title><link>https://www.maalaimalar.com/news/national/india-to-overtake-us-in-global-metro-network-second-largest</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-to-overtake-us-in-global-metro-network-second-largest#comments</comments><guid isPermaLink="false">e8500717-8ea2-4665-9be2-c7068178155e</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:34:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:34:06.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,China,சீனா,அமெரிக்கா,America,மெட்ரோ ரெயில்,metro rail services,urban transport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ab1850nv/metro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ metro rail services  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ab1850nv/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்தன. </p><p>இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பொது போக்குவரத்துத் துறை மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, மெட்ரோ ரெயில் திட்டங்கள் விரிவாக்கப்பட்டு வரும் வேகமானது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய மெட்ரோ ரெயில் நெட்வொர்க்கைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளது.</p><p>தற்போது சர்வதேச அளவில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இருப்பினும், அமெரிக்காவை விட மிக குறைந்த இடைவெளியிலேயே <a href="https://www.maalaimalar.com/news/national/isro-not-to-be-privatised-isro-chief-v-narayanan-assures-employees">இந்தியா</a> பின் தங்கியிருப்பதாலும், நாடு முழுவதும் பெருமளவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாலும், விரைவில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தை உறுதியாகக் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.</p><p>உலகளாவிய மெட்ரோ ரெயில் நெட்வொர்க்கில் சீனா 11,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வழித்தடங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.</p><p>*சீனா: 11,000 கி.மீ. (முதலிடம்)</p><p>*அமெரிக்கா: 1,386 கி.மீ. (இரண்டாம் இடம்)</p><p>*இந்தியா: 1,170 கி.மீ. (மூன்றாம் இடம்)</p><p>தற்போது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வேறுபாடு வெறும் 216 கிலோமீட்டர் மட்டுமே. இந்தியாவில் நகர்ப்புற போக்குவரத்து தேவைகள் அதிகரித்து வருவதால், இந்த இடைவெளி மிக விரைவாகக் குறைந்து வருகிறது.</p><h2>பிரமா<strong>ண்ட வளர்ச்</strong>சி</h2><p>கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்தன. அப்போது ஒட்டுமொத்த மெட்ரோ வழித்தடத்தின் நீளம் 245 கிலோமீட்டராக மட்டுமே இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர உள்கட்டமைப்பு மேம்பாடுகள் காரணமாக, தற்போது நாட்டின் 26 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வழித்தடத்தின் நீளம் 1,170 கிலோமீட்டராகப் பன்மடங்கு உயர்ந்துள்ளது.</p><h2>கட்டுமா<strong>னப் பணிகள்</strong> தீவிரம் </h2><p>இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நகரங்களில் தற்போது சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் கட்டுமானப் பணிகள் பல்வேறு கட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்த 900 கி.மீ. வழித்தடத்தில் ஒரு சிறிய பகுதி நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தாலே, இந்தியா மிக எளிதாக 1,386 கி.மீ. கொண்ட அமெரிக்காவை முந்தி சர்வதேச தரவரிசையில் இரண்டாம் இடத்தைச் சென்றடையும்.</p><h2>பொருளாதார <strong>தாக்</strong>கம்</h2><p>மெட்ரோ ரெயில் சேவைகளின் விரிவாக்கம் வெறும் போக்குவரத்து வசதியை மட்டும் வழங்காமல், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது. தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் நகரங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைகிறது. விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதால், வேலைக்குச் செல்வோர் மற்றும் வணிகச் செயல்பாடுகளுக்கான நேர விரயம் குறைக்கப்பட்டு நகர்ப்புறப் பொருளாதாரம் புதிய வேகத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு- ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-extends-stay-on-announcement-of-by-elections-for-5-constituencies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-extends-stay-on-announcement-of-by-elections-for-5-constituencies#comments</comments><guid isPermaLink="false">2aae0f17-1b37-40ef-954f-5f0592417a9d</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:29:40 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:29:40.723Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்,Madras HC,5 Constituency By Election,5 தொகுதி இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kio8yc8/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kio8yc8/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்த சென்னை ஐகோர்ட், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ந்தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.</strong></em></p><p>தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டை பாஜக கட்சியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-ஐகோர்ட்">ஐகோர்ட்டில்</a> பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது. தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில்மனு தாக்கல் செய்திருந்தது.</p><p>இந்த வழக்கில், முதலமைச்சர் விஜய் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17 -ந்தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மே 10-ந்தேதியே தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், ராஜினாமா செய்து, அதை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல மனுவைத் தாக்கல் செய்துள்ள மனுதாரர் சம்மந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் வழக்கு தொடர்ந்தவரோ அல்ல, வாக்காளரும் அல்ல. திருச்சி கிழக்கு தொகுதியில மக்கள் பிரதிநிதி இல்லாமல் காலவரையின்றி இடைத்தேர்தலைத் தாமதப்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். இதே போல் தடையை நீக்க கோரி முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர்,எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமைநீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முரளிதர், ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு இன்று காலையில் நிராகரிக்கப்பட்டதாகவும் எனவே தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தல் ஆணையம் சார்பாக வழக்கறிஞர் நிரஞ்சன் உத்தரவு நகல் கிடைக்கப்பெறவில்லை என்றும் வந்தபின் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். அனைத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற 28-ந்தேதி நடைபெறும் என உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>அஜித்தின் ரேஸை முதலமைச்சர் விஜய் நேரில் காண உள்ளதாக தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-will-personally-watch-ajiths-race</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-will-personally-watch-ajiths-race#comments</comments><guid isPermaLink="false">3d4ca011-cf01-4a8a-9c5d-8280652a7b4e</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:10:30 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:10:30.177Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Ajith,Car race,அஜித்,கார் ரேஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ny9xl2qj/ajith.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் அஜித்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் அஜித்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ny9xl2qj/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</strong></em> </p><h2><strong>லண்டன் பயணம்</strong></h2><p>தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 10-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகிற 10-ந்தேதி பிரிட்டன் சென்று செப்டம்பர் 16-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.  இந்த பயணத்தின் போது பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க  வருமாறு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><h2><strong>எதிர்பார்ப்பு</strong></h2><p>லண்டனில் வரும் 11 மற்றும் 12-ந்தேதிகளில் MICHELIN LE MANS CUP கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதனால் முதலமைச்சரின் லண்டன் பயணமும், கார் பந்தயமும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. </p><p>முன்னதாக, தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். மேலும் ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3 மற்றும் ஃபார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டு பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இரு அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். </p><p>முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்து இருந்தார். அஜித் கூறுகையில், மோட்டார் விளையாட்டு உட்பட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் தேவையான முக்கியத்துவத்தை அளித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item></channel></rss>