<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 19 Aug 2026 05:27:49 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - அமைச்சர் ஆனந்த் - 19 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-august-2026#comments</comments><guid isPermaLink="false">532f6d4f-39f1-4437-8daa-00952ab7e206</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:04:15 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:27:27.103Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/jm97tm2q/anand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/jm97tm2q/anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பெயரை ஏன் மாற்ற வேண்டும்? கொள்கைத் தலைவர் என கூறும் அண்ணா பெயரை மாற்றியது ஏன்? - ஐ. பெரியசாமி</p><h2>ஐ.பெரியசாமி  உரை</h2><p>அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது.</p><p>கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி.</p><p>கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும்.</p><p>வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான்.</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஏற்கெனவே வீடு வைத்துள்ளவர்களுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளது - அமைச்சர் ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - அமைச்சர் ஆனந்த்</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது - ஐ.பெரியசாமி</p><p>தற்போது எம் சாண்ட் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்.</p><p>ஜல்லி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது - ஐ.பெரியசாமி</p><p>வீடுகள் முறையாக கட்டப்பட்ட ரூ.5 லட்சம் வழங்குகிறது தவெக அரசு - புஸ்ஸி ஆனந்த்</p><p>வீடு கட்ட திமுக ஆட்சியில் கொடுத்த ரூ.3.5 லட்சம் போதுமானதாக இல்லை - புஸ்ஸி ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட வீடுகள் அடித்தளத்துடன் நிற்கின்றன.</p><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - புஸ்ஸி ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில வருடத்திற்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன - ஐ.பெரியசாமி </p><p>நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை - அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார்</p><p>சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்தில் எடுக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு அதிமுகவினர் வெளிநடப்பு.</p><p>சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>நாடே மெச்சும் வகையில் முதலமைச்சர் அறிவிப்பு</p><p>ரூ.300 கோடியில் பெரம்பூரில் மருத்துவமனை அமைப்பதற்கு வரவேற்பு.</p><p>வடசென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் அறிவிப்பு</p> <p>வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு</p><p>நான் ரெயிலில்தான் சட்டசபைக்கு வந்து செல்கிறேன். வேலையும் கொடுத்து காரும் கொடுக்கும் முதலமைச்சருக்கு நன்றி - எம்எல்ஏ சபரி ஐங்கரன்</p><p>பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றம் - மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ் வரவேற்பு</p><p>பால் கொள்முதல் விலை உயர்வுக்கு திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து வரவேற்பு</p><p>முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி - அமைச்சர் ஷாஜகான்</p><p>முதலமைச்சர் விஜயால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>ஏற்கனவே எம்எல்ஏ ஒருவருக்கு அனைத்துப்படிகளும் சேர்த்து ரூ.1.05 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>ஏற்கனவே சட்டமன்ற அமர்வுகள் நடக்கும்போது தினப்படியாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது.</p><p>வாகனத்திற்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும்.</p><p>ஒரு உதவியாளரை நியமித்து கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ரூ.351 கோடி மதிப்பீட்டில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும்.</p><p>5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><h2>முதலமைச்சர் விஜய் உரை</h2><p>முதலமைச்சர் மருத்துவ காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>7 அரசு மருத்துவ கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும்.</p><p>7 புதிய செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்.</p><p>முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும்.</p><p>பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கை கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38 -ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தி அறிவிப்பு -முதலமைச்சர் விஜய் </p><p>ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.41 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.</p><p>பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்துவது அரசின் கடமை.</p><p>கடந்த காலத்தில் ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் விதி 110 கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிடுகிறார்.</p><p>ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</p><p>சட்டசபையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>அதிமுக வெளிநடப்பு: தவெக ஆட்சி வந்த வேகத்தில் படுபாதாளத்திற்கு சென்றுவிடும்..!-எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-stages-walkout-edappadi-says-tvk-government-heading-towards-ruin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-stages-walkout-edappadi-says-tvk-government-heading-towards-ruin#comments</comments><guid isPermaLink="false">c96479d7-33b9-4c83-87b8-7b17d289d52c</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:23:59 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:23:59.863Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,தமிழக சட்டமன்றம்,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/eymutj78/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/eymutj78/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்திற்கு எடுக்க மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>இதைதொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து 5 நாட்களான பின்னும் விவாதத்திற்கு ஏற்க மறுக்கின்றனர்.</p><p>சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடல் தாயகம் கொண்டு வருவது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>தமிழர்களை காப்போம் என்று சொல்லும் தவெக அரசு சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p>ஈரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் தொடர்பான கவன ஈர்ப்பை விவாதத்திற்கு ஏற்க மறுக்கின்றனர்.</p><p>கடற்கொள்ளையர்கள் சுட்டதில் ஒரு மீனவர் பலியான நிலையில் மேலும் 4 மீனவர்கள் சவுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>அரசாங்கம் நடக்கவில்லை, ரீல்ஸ் மட்டும்தான் போடுகின்றனர். எதற்கு கத்துகிறார்கள் என தெரியாமலேயே கத்துகிறார்கள்.</p><p>எந்த அளவுக்கு வேகமாக தவெக ஆட்சி வந்துள்ளதோ, அதே வேகத்தில் படுபாதாளத்திற்கு சென்றுவிடும்.</p><p>மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் உடலை மீட்பது தொடர்பான நடவடிக்கை எடுக்காமல் தவெக அரசு தட்டிக் கழிக்கிறது.</p><p>துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் உயிரிழப்பு குறித்து பேசும்போது தவெக எம்எல்ஏக்கள் சிரிக்கின்றனர்.</p><p>3 மீனவர்கள் உடல் ஒருவாரமாக தமிழகம் கொண்டுவர முடியாமல் தவிக்கின்றனர். இதைவிட என்ன முக்கியமானது உள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா? </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-19-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-19-08-2026#comments</comments><guid isPermaLink="false">61682066-552e-42d9-9247-5178c656669a</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:17:21 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:17:21.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/osvftska/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/osvftska/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த 5 நாட்களாக விலைமாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a>... என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது. ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால், இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>சற்று குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில், இந்த வாரத்தில் தொடக்கத்தில் இருந்து அதாவது கடந்த 2 நாட்களாக சற்று உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,205-க்கும் சவரனுக்கு  680 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களாக விலைமாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320</p><p>17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160</p><p>16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>15-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>14-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>18-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>17-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>16-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>15-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>14-08-2026- ஒரு கிராம் ரூ.255</p>]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/redmi-note-17-pro-max-with-10000mah-battery-to-launch-on-august-27</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/redmi-note-17-pro-max-with-10000mah-battery-to-launch-on-august-27#comments</comments><guid isPermaLink="false">ee38aa04-4d25-4fc3-8cdb-67983ca0dcf6</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:38:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Redmi,ரெட்மி,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ne2gxco1/redmi-note-17-pro-max.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ redmi note 17 pro max]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ne2gxco1/redmi-note-17-pro-max.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/xiaomi">சியோமி</a> நிறுவனம் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை விரைவில் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது. </p><p>இந்த நிலையில், ரெட்மி நோட் 17 ப்ரோ <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஆகஸ்ட் 27-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் சிலவற்றை சியோமி ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>சிறப்பம்சங்கள்:</h2><p>அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் 10,000mAh அளவில் பெரிய பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 1.5K AMOLED ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் வரவிருக்கும் ரெட்மி நோட் 17 வரிசையில் முதன்மையான மாடலாக இருக்கும். இதன் விலை பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது.</p><p>ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் 10,000mAh பேட்டரி 'சிலிக்கான்-கார்பன்' பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கும் திறன் கொண்டது.</p><h2>டிஸ்ப்ளே:</h2><p>இந்த ஸ்மார்ட்போன் 1.5K ரெசல்யூஷன் கொண்ட 6.83 இன்ச் AMOLED ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் மெல்லிய பெசல்களுடன் கூடிய இந்த CrystalRes AMOLED திரை, சியோமியின் பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதன் மூலம், மல்டிமீடியா மற்றும் கேமிங் பயன்பாடுகளுக்கு இந்த மாடல் மிகவும் ஏற்றதாக அமையும்.</p><p>ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 பிராசஸர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 12 ஜிபி வரை ரேம் வழங்கப்படும் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>எம்எல்ஏக்களுக்கு கார்... முதலமைச்சர் அறிவிப்பால் இன்ப அதிர்ச்சி அடைந்த உறுப்பினர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-shocking-cm-vijay-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-shocking-cm-vijay-announced#comments</comments><guid isPermaLink="false">b11e170b-c5d8-493d-991f-8ab14a5ac665</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:36:03 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:36:03.579Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8347zcxc/vijay01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8347zcxc/vijay01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சில தினங்களுக்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி வாகனம் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் நடப்பு சட்டசபை தொடரிலேயே முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், தொகுதி பணியை தொடர்ந்து மேற்கொள்ளவும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வாகனம் வழங்கப்படும். </p><p>* வாகனத்திற்காக மாதம் தோறும் ரூ.75,000 வாகனப்படி, ஓர் உதவியாளரை நியமித்து ஊதியம் தர மாதத்திற்கு ரூ.25ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். </p><p>சில தினங்களுக்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி வாகனம் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் நடப்பு சட்டசபை தொடரிலேயே முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி: அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி</p><p>அமைச்சர் ராஜ்மோகன்: முதலமைச்சர் விஜயால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.</p><p>அமைச்சர் ஷாஜகான்: முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.</p><p>எம்எல்ஏ காமராஜ்: முதலமைச்சர் கொடுக்கும் காரில்தான் செல்வதே கெத்து. </p><p>பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றனர். </p>]]></content:encoded></item><item><title>Video: கேரள கிரிக்கெட் லீக் 2026: சஞ்சு சாம்சன், மோகன்லால் இணைந்த விளம்பர வீடியோ வைரல்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kerala-cricket-league-2026-sanju-samson-mohanlal-ad-video-goes-viral</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kerala-cricket-league-2026-sanju-samson-mohanlal-ad-video-goes-viral#comments</comments><guid isPermaLink="false">cafe9e87-3d91-4c8b-a867-de114cc1845c</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:29:16 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:29:16.182Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mohanlal,Sanju samson,சஞ்சு சாம்சன்,மோகன்லால்,T20Cricket,Kerala Cricket League,KCL 2026,கேரள கிரிக்கெட்லீக்,Kerala Cricket</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/qn9en032/SanjuSamson-Mohanlal" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SanjuSamson  - Mohanlal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/qn9en032/SanjuSamson-Mohanlal?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரள கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் <a href="https://www.maalaimalar.com/sports/cricket/sanju-samson-joins-kochi-blue-tigers-in-record-breaking-kcl-2025-bid-779344">கேரள கிரிக்கெட் லீக் </a>டி20 தொடரின் 3-வது சீசன், திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்டு சர்வதேச மைதானத்தில் நாளை மிக பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது.</p><p>இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">சஞ்சு சாம்சன் </a>மற்றும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D">மோகன்லால் </a>ஆகியோர் இணைந்து நடித்துள்ள விளம்பர வீடியோ தற்போது இணைய தளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.</p><h2><strong>ஒன்றிணைந்த சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள்</strong></h2><p>சஞ்சு சாம்சன் மற்றும் மோகன்லால் என கேரளாவின் இரு மாபெரும் ஆளுமைகள் இந்த விளம்பர வீடியோவில் ஒன்றாகத் தோன்றுவது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><p>இந்த வீடியோவில் சஞ்சு சாம்சன் காரை ஓட்ட, மோகன்லால் அருகில் அமர்ந்து உரையாடுவது போன்ற சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவர்களின் இந்த எதிர்பாராத கூட்டணி, சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களை இணைத்து சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. </p><p>சமீபத்தில் நடைபெற்ற கேசிஎல் கோப்பை அறிமுக விழாவில் பங்கேற்ற சஞ்சு சாம்சன், கேரளாவின் இளம் கிரிக்கெட் திறமைகளை வெளிக்கொண்டு வர இந்த லீக் ஒரு மிகச்சிறந்த தளம் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>நாளை தொடங்கும் கிரிக்கெட் திருவிழா</strong></h2><p>இந்த 3-வது சீசன் ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 5, 2026 வரை நடைபெற உள்ளது. இதில் பல அணிகள் கலந்து கொள்ளவுள்ளன.</p><p>ரசிகர்கள் போட்டிகளை மதியம் 2:00 மணி முதல் நேரலையாக Star Sports 3 தொலைக்காட்சியிலும், JioHotstar ஓடிடி தளத்திலும் நேரடியாகக் கண்டு ரசிக்கலாம்.</p><p>மலையாள திரையுலகின் பிரம்மாண்டமும், கிரிக்கெட் நட்சத்திரத்தின் அனல் பறக்கும் கூட்டணியும் இணைந்து இந்த விளம்பர வீடியோ மூலம் கேரள கிரிக்கெட் லீக்கிற்கான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Chettan with Ettan! ❤️<a href="https://x.com/hashtag/Mohanlal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mohanlal</a>&#39;s unmatched swagger meets <a href="https://x.com/hashtag/SanjuSamson?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SanjuSamson</a>&#39;s star power in the new <a href="https://x.com/hashtag/KCL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KCL</a> ad!  <a href="https://x.com/hashtag/Kerala?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Kerala</a> are you ready for cricket season? <a href="https://x.com/hashtag/KCLPromo?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KCLPromo</a><br> <a href="https://t.co/Dn8dYIWuuA">pic.twitter.com/Dn8dYIWuuA</a></p>&mdash; Jayaraman (@JournoJRaman) <a href="https://x.com/JournoJRaman/status/2089614609884053509?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.25 லட்சமாக உயர்வு- முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh#comments</comments><guid isPermaLink="false">ecb2dbba-3c35-4bfb-8858-0d6f17826781</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:20:41 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:20:41.220Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6wp3cc7v/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6wp3cc7v/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.470 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபை</a> தொடங்கியது. சபை தொடங்கியதும் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கை கொண்ட பன்னோன்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.</p><p>* முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும். </p><p>* ரூ.351 கோடி மதிப்பீட்டில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும். </p><p>* 7 அரசு மருத்துவ கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும். </p><p>* பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்துவது அரசின் கடமை. கடந்த காலத்தில் ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.</p><p>* ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும். </p><p>* முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.470 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.</p><p>* 5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை பக்தர்கள் கவனத்திற்கு... செப்டம்பர் 1-ந்தேதி முதல் வரும் புது ரூல்ஸ்!</title><link>https://www.maalaimalar.com/spirituality/ban-on-carrying-mobile-phones-inside-the-tiruvannamalai-arunachaleswarar-temple-starting-september-1</link><comments>https://www.maalaimalar.com/spirituality/ban-on-carrying-mobile-phones-inside-the-tiruvannamalai-arunachaleswarar-temple-starting-september-1#comments</comments><guid isPermaLink="false">796fa815-ea13-4822-b9f7-76a2c1cca795</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:54:30 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:54:30.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,செல்போன் தடை,Tiruvannamalai temple,cellphone ban</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ohus83y7/tiruvannamalai.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருவண்ணாமலை கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவண்ணாமலை கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ohus83y7/tiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>கோவில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>செல்போன்களுக்கு தடை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/திருவண்ணாமலை-கோவில்">திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்</a> பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே, பக்தர்கள் செல்போன் எடுத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><h2><strong>பாதுகாப்பு மையங்கள்</strong></h2><p>மேலும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல ஏதுவாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகில் 2 இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் 2 இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ரூ.5 கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியவுடன் டோக்கன்களை காண்பித்து பாதுகாப்பு மையங்களில் இருந்து செல்போன்களை பெற்றுக் கொள்ளலாம்.</p><h2><strong>பறிமுதல் செய்யப்படும்</strong></h2><p>இந்த உத்தரவினை மீறி கோவிலுக்குள் மறைமுகமாக எடுத்துச் செல்லும் செல்போன்களை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆறு மாதங்களில் 2-ஆவது முறையாக விலையை உயர்த்திய சாம்சங், சியோமி</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/samsung-galaxy-m17-galaxy-f17-prices-in-india-hiked-for-second-time-in-six-months</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/samsung-galaxy-m17-galaxy-f17-prices-in-india-hiked-for-second-time-in-six-months#comments</comments><guid isPermaLink="false">23f56c28-85e1-4e87-8539-314734617420</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2czu0io0/Samsung-Galaxy-M17.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samsung Galaxy M17]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2czu0io0/Samsung-Galaxy-M17.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> நிறுவனத்தின் கேலக்ஸி M17, கேலக்ஸி F17, கேலக்ஸி F70e 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் சியோமி நிறுவனத்தின் பேட் 8 மாடலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. </p><p>இது சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் டேப்லெட் மாடல் ஆகும். அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே சாம்சங் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/xiaomi">சியோமி</a> நிறுவனங்கள் தங்களது சாதனங்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தியுள்ளது.</p><p>இந்த சாதனங்களின் விலை உயர்த்தப்படுவது முதல் முறையல்ல. சியோமி பேட் 8 மாடல் கடந்த இரு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் சாம்சங் கேலக்ஸி F மற்றும் கேலக்ஸி M சீரிஸ் மாடல்கள் கந்த ஆறு மாதங்களில் இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளன.</p><h2>விலை உயர்வு:</h2><p>சாம்சங் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் மாடல்களின் விலை முறையே ரூ. 1000, ரூ. 2000 மற்றும் ரூ. 3000 உயர்த்தப்பட்டுள்ளன. இதேபோல் கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி மற்றும் 8 ஜிபி மெமரி மாடல் விலை முறையே ரூ. 1000 மற்றும் ரூ. 2000 உயர்த்தப்பட்டு இருக்கிறது.</p><p>இதேபோல் சாம்சங் கேலக்ஸி F70e 5ஜி மற்றும் கேலக்ஸி M17e 5ஜி ஸ்மார்ட்போன்களின் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 1000 மற்றும் ரூ. 2000 உயர்த்தப்பட்டு இருக்கிறது. </p><p>விலை உயர்வை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன்களின் தொடக்க விலை முறையே ரூ. 17,499 என மாறியுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 13,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.</p><h2>சியோமி டேப்லெட்:</h2><p>சியோமி இந்தியா ஆன்லைன் தளத்தில் சியோமி பேட் 8 மாடலின் புதிய விலை மாற்றப்பட்டுவிட்டது. அதன்படி இந்த டேப்லெட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38,999 என மாறியிருக்கிறது. </p><p>இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 43,999 என மாறி இருக்கிறது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் இரு வேரியண்ட்களின் விலை ரூ. 35,999 மற்றும் ரூ. 38,999 என உயர்த்தப்பட்டது. </p><p>தற்போது இந்த மாடலின் விலை முறையே ரூ. 3000 மற்றும் ரூ. 5000 உயர்த்தப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மின்வாரிய உபகரணங்கள் கொள்முதலில் மோசடி - 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anti-corruption-department-raids-40-locations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anti-corruption-department-raids-40-locations#comments</comments><guid isPermaLink="false">d9d6622d-6e8e-46c7-a6c9-4f8c6b869b6d</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:36:36 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:36:36.925Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,TNEB,தமிழ்நாடு மின்சார வாரியம்,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8vgkl34f/transformer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ transformer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8vgkl34f/transformer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் சுமார் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு</a> மின்மாற்றிகள் உள்ளிட்ட  உபகரணங்கள் கொள்முதலில் மோசடி எனப் புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூரில் சுமார் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.</p> <p>மின்வாரியத்திற்கு உபகரணங்கள் வழங்கிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகள் உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>சென்னையில் 27 இடங்களில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">லஞ்ச ஒழிப்புத்துறை</a> போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p> <p>சென்னை பெருங்குடியில் 4 இடங்கள், அண்ணா நகரில் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>திருவள்ளூர், செங்கல்பட்டிலும் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் இருந்து 10,000 பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்: நசீர் மத்னி </title><link>https://www.maalaimalar.com/news/world/10000-terrorists-sent-from-pakistan-to-india-naseer-madni</link><comments>https://www.maalaimalar.com/news/world/10000-terrorists-sent-from-pakistan-to-india-naseer-madni#comments</comments><guid isPermaLink="false">6e72c916-60d6-4729-8c64-07848eed3489</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:51:44 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:51:44.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,பஹல்காம் தாக்குதல்,Pahalgam attack,Lashkar-e-Taiba,லஷ்கர்-இ-தொய்பா,Mumbai attack,மும்பை தாக்குதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/02a6rxoh/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நசீர் மத்னி]]></media:title><media:description type="html"><![CDATA[ Nasir Madni]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/02a6rxoh/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடைய ஹபீஸ் சையத் குறித்து, மதகுரு நசீர் மத்னி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.</strong></em></p><h3><strong>மதகுரு மத்னி</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">பாகிஸ்தானில்</a> தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு கூட்டத்தின் மேடை பிரசாரத்தின்போது மதகுரு நசீர் மத்னி கூறுகையில்,</p><p>பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு 10,000 பயங்கரவாதிகளை லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.</p><p>மதகுரு மத்னியின் கருத்துக்கள், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பங்கு குறித்தும், அதன் தலைவர் குறித்தும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தியாவின் பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய ஹபீஸ் சயீத், பாகிஸ்தானை் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஆவார். இந்த அமைப்பு இந்தியாவிற்கு எதிராக கடந்த ஆண்டுகளில் மிகவும் கொடூரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><h3><strong>லஷ்கர்-இ-தொய்பா</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/லஷ்கர்-இ-தொய்பா">லஷ்கர்-இ-தொய்பா</a> அமைப்பிற்கு அல்-கொய்தா மற்றும் தலிபான்களுடன் தொடர்பு இருந்ததன் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபை 2005-ல் அந்த அமைப்பிற்கு தடை விதித்தது. பின்னர், 2008-ல் அமெரிக்கா ஹபீஸ் சயீதை உலகளாவிய பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது.</p><p>கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் உட்பட, இந்தியாவின் முக்கிய பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளிலும் ஹபீஸ் சயீத்-இன் பெயர் இடம்பெற்றுள்ளது.</p><p>முன்னதாக ஜூலை மாதம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பாக சயீதுக்கு எதிராக ஜம்மு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்தது.</p><p>இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆறு பாகிஸ்தானிய குற்றவாளிகளுக்கு எதிராக மும்பை காவல்துறை சட்டமுறைப்படி விசாரணையை தொடங்கியது.</p><h3><strong>மும்பை தாக்குதல்</strong></h3><p>2008-ம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இரவு, 10 பயங்கரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்து தாஜ் ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல்களை நடத்தினர். அடுத்த நான்கு நாட்களில், அவர்கள் நகரம் முழுவதும் நடத்திய தாக்குதல்களில், 166 பொதுமக்கள் கொல்லப்பட்டு, சுமார் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.</p><p>மும்பையின் மிகவும் பரபரப்பான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடந்த இந்த தாக்குதல், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p><p>இதையடுத்து 2025 ஏப்ரல் மாதத்தில் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கிலும் பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சையதின் பெயர் அடிபட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>எங்களை தூக்கிலிட்டாலும் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவோம் - கர்நாடக காங்கிரஸ் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/national/hang-us-we-will-sing-only-first-two-verses-of-vande-mataram-karnataka-congress-chief</link><comments>https://www.maalaimalar.com/news/national/hang-us-we-will-sing-only-first-two-verses-of-vande-mataram-karnataka-congress-chief#comments</comments><guid isPermaLink="false">c8f79eff-be88-464e-ac3f-59c0d320a4f1</guid><pubDate>Wed, 19 Aug 2026 02:47:39 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:47:39.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,கர்நாடகா,Karnataka,வந்தே மாதரம்,Vande Mataram,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/0jacagwa/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹரி பிரசாத்]]></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka Congress Leader Hariprasath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/0jacagwa/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> கட்சி எப்போதுமே வந்தே மாதரத்தின் இரண்டு சரணங்களை மட்டுமே பாடி வந்துள்ளது என்றும் இனிமேலும்  தொடர்ந்து அவ்வாறே பாடும் என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கே. ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.</strong></em></p><h3><strong>வந்தே மாதரம் சர்ச்சை</strong></h3><p>முன்னதாக <a href="https://www.maalaimalar.com/news/national/bjp-claims-sonia-gandhi-tried-to-stop-singing-of-vande-mataram-congress-denies">சுதந்திர தினத்தன்று</a> காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டபோது, அந்த பாடலை பாடியவர் இரண்டு சரணங்களுக்கு மேல் பாடியபோது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கையை நீட்டி சைகை காட்டினார்.</p><p>இதையடுத்து வந்தே மாதரம் தேசிய பாடலை, பாடகர்களை முழுமையாக பாட அனுமதிக்காமல் சோனியா காந்தி தடுத்ததாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டினர்.</p><h3><strong>கர்நாடக காங்கிரஸ் தலைவர்</strong></h3><p>இதையடுத்து இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் ஹரி பிரசாத் கூறுகையில், “அவர்கள் ஏன் ஆசாத் ஹிந்த் ஜிந்தாபாத் அல்லது இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்களை எழுப்புவதில்லை என்பதை விளக்கட்டும்.</p><p>வந்தே மாதரத்தின் முழு பதிப்பையும் பாடுமாறு மக்களை கட்டாயப்படுத்துவதன் மூலம், பாரதிய ஜனதா கட்சி ’ஜன கன மன’ என்ற தேசிய கீதத்தை அவமதிக்கிறது.</p><p>வந்தே மாதரத்தை தேசிய கீதமாக மாற்றுவதற்கு சங் பரிவார் திட்டமிட்டு வருகிறது.</p><p>பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தங்களது அலுவலகங்களில் இந்த பாடலை எத்தனை முறை பாடுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.</p><p>அவர்கள் எங்களை தூக்கில் இடட்டும், நாங்கள் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவோம். அந்த பாடலின் இரண்டு சரணங்களுக்கு மேல் நாங்கள் ஒருபோதும் பாடமாட்டோம்.</p><p>ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் நாங்கள் இரண்டு சரணங்களை மட்டுமே பாடியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-19-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-19-august-2026#comments</comments><guid isPermaLink="false">79fd3e55-8614-485b-b088-059614ec1afe</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:59:13 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:59:13.239Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (19.8.2026 - (புதன்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 19.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு இடம் வாங்கும் முயற்சி கைகூடும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-19-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-19-august-2026#comments</comments><guid isPermaLink="false">21d8eb4d-01b2-4ce8-b070-c231752685ad</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:49:07 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:49:07.126Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/26/20636815-rasi2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/26/20636815-rasi2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>உற்சாகத்துடன் செயல்படும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>பணவரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.</p> <h2>மிதுனம்</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். பொதுவாழ்வில் நீங்கள் எடுத்த முடிவு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.</p><h2>கடகம்</h2><p>அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும் நாள். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>வெளியுலகத் தொடர்பு விரிவடையும் நாள். வருமானம் திருப்தி தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்களுக்காக செலவிடும் சூழ்நிலை உருவாகும்.</p><h2>கன்னி</h2><p>தடைகள் விலகும் நாள். தனித்து இயங்க முற்படுவீர்கள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும்.</p> <h2>துலாம்</h2><p>கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.</p> <h2>தனுசு</h2><p>தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழிலில் ஏற்பட்ட தொய்வு அகலும்.</p><h2>மகரம்</h2><p>தடைகளைக் கண்டு தளர்வடையாத நாள். செல்வந்தர்களின் சந்திப்பால் சில பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.</p> <h2>கும்பம்</h2><p>மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.</p><h2>மீனம்</h2><p>வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை. வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிலும் பொறுமையாக முடிவெடுப்பது நல்லது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 ஆகஸ்ட் 2026: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் அபிஷேகம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-19-august-2026-aruppukottai-muthumariamman-abhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-19-august-2026-aruppukottai-muthumariamman-abhishekam#comments</comments><guid isPermaLink="false">d684fe0a-c846-4a51-ab81-efa98904c3e6</guid><pubDate>Wed, 19 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/05/27220541-amman2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அம்மன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/05/27220541-amman2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-2 (புதன்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  சப்தமி இரவு 10.15 மணி வரை பிறகு அஷ்டமி</p><p>நட்சத்திரம் :  சுவாதி காலை 10.24 வரை பிறகு விசாகம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்</h2><p>மதுரை ஸ்ரீ சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழியருளிய காட்சி. தங்கச் சப்பரத்திலும் யானை வாகனத்திலும் திருவீதியுலா. விருதுநகர் ஸ்ரீசுவாமி கைலாச வாகனத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். </p> <p>கரூரில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர், பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தலங்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் தலங்களில் அபிஷேகம், திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி அபிஷேகம். அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உயர்வு</p><p>ரிஷபம் - பக்தி</p><p>மிதுனம் - உழைப்பு</p><p>கடகம் - பாசம்</p><p>சிம்மம் - மேன்மை</p><p>கன்னி - சாதனை</p> <p>துலாம் - அன்பு</p><p>விருச்சிகம் - ஆர்வம்</p><p>தனுசு - ஆக்கம்</p><p>மகரம் - விவேகம்</p><p>கும்பம் - சாந்தம்</p><p>மீனம் - உவகை</p> ]]></content:encoded></item><item><title>தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் விஜய்?</title><link>https://www.maalaimalar.com/news/national/south-chief-ministers-conference-cm-vijay-likely-to-attend</link><comments>https://www.maalaimalar.com/news/national/south-chief-ministers-conference-cm-vijay-likely-to-attend#comments</comments><guid isPermaLink="false">6c92a152-8fc3-40f0-970c-5a3523dab5a9</guid><pubDate>Wed, 19 Aug 2026 00:27:32 +0000</pubDate><atom:updated>2026-08-19T00:27:32.969Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/7k1ycajg/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/7k1ycajg/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய <a href="https://www.maalaimalar.com/news/national">உள்துறை அமைச்சகம்</a> சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. எனினும், கடந்த 2022-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறாமல் இருந்தது. </p><p>இந்தநிலையில், 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு இன்று (புதன்கிழமை) சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் தொடங்குகிறது.</p><p>இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார். இதில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், கேரளம் முதலமைச்சர் திரி சதீசன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.</p><h2>முக்கிய விவகாரங்கள் விவாதம்:</h2><p>தென் மாநில முதலமைச்சர்களுடன், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.</p><p>மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தக வல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.</p><h2>சென்னையில் மத்திய அமைச்சர்:</h2><p>தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.</p><p>அதன்டி இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக சென்னை புறப்படும் மத்திய அமைச்சர் அமித் ஷா இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கிறார்கள். பின்னர் அவர், கார் மூலம் சாலை மார்க்கமாக கோவளம் செல்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த திட்டமும் இல்லை - அதிபர் டிரம்ப்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-says-us-has-no-talks-planned-with-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-says-us-has-no-talks-planned-with-iran#comments</comments><guid isPermaLink="false">75d137e5-b65f-4c86-8dfc-d67fefe363f4</guid><pubDate>Tue, 18 Aug 2026 23:59:33 +0000</pubDate><atom:updated>2026-08-18T23:59:33.734Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஈரான்,Iran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிபர் டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"தெஹ்ரான் ஒரு ஒப்பந்தம் செய்யத் தயாராகும் வரை" ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைக்குமாறு தனது பேச்சுவார்த்தைக் குழுவிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டுக்கொண்டதாக அல் ஜசீரா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தெஹ்ரானுடனான ராஜதந்திர ஈடுபாடு குறித்த நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.</p><p>அமெரிக்கா ஈரானுடன் "ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில்" ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால் மேற்கொண்டு செல்வதற்கு முன்பு டிரம்ப் "காத்திருக்க முடிவு செய்துள்ளார்" என்றும் அதிகாரி ஒருவர் அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.</p><h2>எந்த முரண்பாடும் இல்லை:</h2><p>ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த அமெரிக்க நிர்வாகத்தின் அணுகுமுறையில் எந்த முரண்பாடும் இல்லை என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். ஹார்முஸ் நீரிணையின் நிலை குறித்து வாஷிங்டனும் தெஹ்ரானும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வரும் வேளையிலும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியிலும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>முன்னதாக, ஹார்முஸ் நீரிணை குறித்த ஈரானின் நிலைப்பாட்டிற்கு டிரம்ப் முரண்பட்டு, கடற்படை முற்றுகை "முழு வீச்சில் அமலில் உள்ளது" என்றும், அதே நேரத்தில் ஹார்முஸ் நீரிணை "திறந்து இருக்கிறது, அது இயங்கிக் கொண்டிருக்கிறது" என்றும் கூறியிருந்தார்.</p><p>ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், தெஹ்ரானுடன் தற்போது எந்த பேச்சுவார்த்தைகளோ கலந்துரையாடல்களோ நடைபெறவில்லை என்றும், ஹார்முஸ் நீரிணை செயல்பாட்டில் இருப்பதாகவும், கடற்படை கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடிக்க செய்யப்பட்டுவிட்டன என்றும் டிரம்ப் கூறினார்.</p><h2>கடுமையான பதிலடி:</h2><p>"ஈரானிய இஸ்லாமிய குடியரசுடன் எந்த பேச்சுவார்த்தைகளோ உரையாடல்களோ நடைபெறவில்லை, அல்லது திட்டமிடப்படவில்லை. கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்கிறது. ஹார்முஸ் நீரிணை திறந்த நிலையிலேயே இயங்குகிறது," என்று டிரம்ப் கூறினார்.</p><p>இதற்கிடையில், முற்றுகையை நீக்குதல், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் மற்றும் எண்ணெய் மீதான தடைகளை தளர்த்துதல் உள்ளிட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றும் வரை, ஹார்முஸ் நீரிணையை தெஹ்ரான் மீண்டும் திறக்காது என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறியிருந்தார்.</p><p>அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறுவதாக கூறியதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானின் இராணுவ மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் இணைந்து செயல்படும் என்றும், பதற்றம் அதிகரித்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் காலிபாஃப் எச்சரித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: 30 சுரங்க தொழிலாளர்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/gold-mine-collapses-in-central-african-republic-killing-at-least-30-miners</link><comments>https://www.maalaimalar.com/news/world/gold-mine-collapses-in-central-african-republic-killing-at-least-30-miners#comments</comments><guid isPermaLink="false">0a7dd63d-7aaa-43ea-83de-59c0dfdf3f62</guid><pubDate>Tue, 18 Aug 2026 23:27:07 +0000</pubDate><atom:updated>2026-08-18T23:27:07.355Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold Mine,Central African Republic,மத்திய ஆப்பிரிக்க குடியரசு,தங்க சுரங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/djlz722y/Gold-Mine.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Mine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/djlz722y/Gold-Mine.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சுரங்க விபத்து:</h2><p>மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அன்று பாரம்பரிய தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில், குறைந்தது 30 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர். </p><p>மேலும் பலர் உள்ளே சிக்கியிருப்பதாக  அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் தெரிவித்தனர்.</p><p>உயிர் பிழைத்த சுரங்க தொழிலாளர்களில் ஒருவரான ஃப்ளோரியன் ககுவெண்டேவின் கூற்றுப்படி, நானா-மாம்பெரே மாகாணத்தின் அப்பா பகுதியில் இந்த சுரங்கம் இடிந்து விழுந்தது.</p><h2>மீட்பு பணிகள்:</h2><p>உள்ளே சிக்கியிருப்பதாக நம்பப்படும் கூடுதல் சுரங்கத் தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும், ஆனால் அவர்களை உயிருடன் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் "குறைந்து கொண்டே வருகின்றன" என்று அவர் கூறினார்.</p><p>சுரங்க விபத்து குறித்து பேசிய மாகாணத்தின் துணை மேயர், சுலைமான் பி, மீட்புக் குழுவினரும் அப்பகுதி மக்களும் பல மணி நேரம் போராடி இடிந்து விழுந்த சுரங்கத்தில் இருந்து 30 உடல்களை மீட்டதாகவும், காயமடைந்த சுரங்க தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.</p><h2>குழப்பமான மீட்பு பணி:</h2><p>"இது மிகவும் கொடூரமானது. தங்களால் மீள முடியாத நிலையில் உள்ளவர்களை இந்த படுகுழியிலிருந்து மீட்க உதவுமாறு, அமைப்புகளிடமும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமும் நாங்கள் உதவி கோருகிறோம்," என்று பி கூறினார்.</p><p>சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக தோன்றும் காணொளிக் காட்சிகள், அங்கு நடந்த குழப்பமான மீட்பு பணிகளை பதிவு செய்துள்ளன. </p><p>பெரும்பாலும் சேறு படிந்த இளம் ஆண்களும் பெண்களுமான சுரங்க தொழிலாளர்கள், குழியில் இருந்து ஒரு சடலத்தை வெளியே இழுப்பதை காண முடிந்தது. அதே சமயம், டஜன் கணக்கான பிற சுரங்க தொழிலாளர்களும் பணியாளர்களும் அந்த பரந்த இடத்தில் சிதறிக்கிடந்தனர், அவர்களில் சிலர் உதவிக்காகக் கூச்சலிட்டனர்.</p><h2>போதுமான பாதுகாப்பு இல்லை:</h2><p>அரசு செய்தித் தொடர்பாளர் எவரிஸ்ட் என்கமானா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் உதவியும் வழங்க அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருவதாகவும் கூறினார்.</p><p>மத்திய ஆப்பிரிக்க குடியரசில், பல ஆயிரம் மக்கள் சிறு அளவிலான கனிம அகழ்வு சுரங்க தொழிலில் செய்வதால், அங்கு பாரம்பரிய சுரங்கங்கள் இடிந்து விழுவது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. சுரங்க தொழிலாளர்களுக்கு பொதுவாக போதுமான பாதுகாப்பு இல்லாததாலும், இந்த விபத்துகள் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்துவதாலும் இப்பணி அபாயகரமானது.</p>]]></content:encoded></item><item><title>ரத்து செய்யப்பட்ட 44 பணி நியமனத் தேர்வுகளின் பட்டியலை வெளியிட்டது ஜார்க்கண்ட் அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-44-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-44-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">3c1b696c-f420-4468-b0b2-32bd543bcd8f</guid><pubDate>Tue, 18 Aug 2026 23:00:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T23:00:03.195Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்வுகள் ரத்து,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Exams Cancelled</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vlamcen1/Jharkhand-protest-4.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vlamcen1/Jharkhand-protest-4.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட 44 பணி நியமன தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியிட்டது.</p><p>இரவு நேரத்தில் எட்டு அறிவிப்புகளை வெளியிட்ட ஜார்க்கண்ட் அரசு, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் 2014-ஆம் ஆண்டு முதல் ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் (JPSC) மற்றும் வெளிமுகமை நிறுவனமான 'டி.எஸ்.ஆர். டேட்டா பிராசஸிங் பிரைவேட் லிமிடெட்' (TDPL) ஆகியவற்றால் நடத்தப்பட்ட தேர்வுகள் அடங்கும் என்று தெரிவித்தது.</p><h2>பட்டியல் சுருக்கம்:</h2><p>மருந்து ஆய்வாளர்கள், உதவி பேராசிரியர்கள், துணை ஆட்சியர்கள், பல் மருத்துவர்கள், உதவி பொறியாளர்கள், உரிமையியல் நீதிபதிகள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வன வரம்பு அலுவலர்கள் (Forest Range Officers) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் இதில் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான 'ஜே.எஸ்.எஸ்.சி.-கூட்டுப் பட்டதாரி நிலை' (JSSC-CGL) தேர்வையும், அத்துடன் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகள் மற்றும் அதனால் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளையும் ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்தது.</p><h2>முதலமைச்சர் அறிவிப்பு:</h2><p>பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.</p><p>JSSC-CGL தேர்வு மற்றும் TDPL மூலம் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்ததைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோர் முன்னிலையில், ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.</p><p>மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் தேர்வு சீர்திருத்த குழு ஒன்றை அமைப்பதாகவும் அவர் அறிவித்தார். பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வரும் வேலை தேடுபவர்கள், சி.பி.ஐ. விசாரணை மற்றும் JSSC-CGL தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும், ஆனால் எங்களையும் வாழ விடுங்கள் - மன்சூர் அலிகான்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mansoor-ali-khan-said-let-us-to-live</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mansoor-ali-khan-said-let-us-to-live#comments</comments><guid isPermaLink="false">3b4746c1-da76-4243-8f99-9d59887b4aa1</guid><pubDate>Tue, 18 Aug 2026 20:51:04 +0000</pubDate><atom:updated>2026-08-18T20:51:04.626Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மன்சூர் அலிகான்,Mansoor Ali Khan,James Vasanthan,ஜேம்ஸ் வசந்தன்,All Pass,ஆல் பாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/svrh6vw9/Mansoor-Ali-Khan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mansoor Ali Khan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/svrh6vw9/Mansoor-Ali-Khan.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக  நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஒன் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார். </p><p>இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி மைதீன் இயக்கியுள்ளார். ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.</p><h2>டிரெய்லர் வெளியீட்டு விழா:</h2><p>இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வரிசையில், நடிகர் மன்சூர் அலிகான் பேசும் போது, "‘ஆல் பாஸ்’ அற்புதமான படம், ஜேம்ஸ் வசந்தன் எனக்கு பிடித்த கலைஞர். </p><p>ஒரு திரைப்படத்தில் பணிபுரியும் கலைஞர்களை விளம்பரங்களில் தெரிவது போல விளம்பரம் செய்யுங்கள். அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்தப் படத்தில் தமிழகத்திற்கு நல்ல கதாநாயகன், நாயகி கிடைத்துள்ளார்கள்.</p><p>நான் "கருப்பு" படத்தின் கிளைமாக்ஸில் டான்ஸ் ஆடினேன் ஆனால் அதை அப்படியே தூக்கி விட்டார்கள், என்ன அநிநியாயம் இது. யூடுயூப்பில் வெளியிடுவோம் என்று அதையும் செய்யவில்லை. </p><p>சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள். நான் பல வருடங்களாக நடிகராக, தயாரிப்பாளராக இருக்கிறேன். எனக்கான நியாயம் கிடைக்க வேண்டும்.</p><p>நீங்களே பாருங்கள். உடனே வாட்ஸ்அப், மீடியா என்று எதை எதையோ வைத்துக்கொண்டு எங்களைப் பற்றி தப்பாக எழுதுகிறார்கள். எங்களுக்கு வேலை கொடுக்கிறார்களோ இல்லையோ, கீழே போய் உட்கார்ந்து கொண்டு, ‘உன் பையன் கஞ்சா அடிக்கிறான், பைத்தியக்காரன்’ என்று என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.</p><h2>உழைப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது:</h2><p>நான் என்ன நல்ல வேலை செய்தேன் என்று நினைத்தாலும், கீழே போய் அதை கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அதுதான் வேலை. எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ‘ஆல் பாஸ்’ ஒரு அற்புதமான பெயர். </p><p>இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்லி கொள்கிறேன். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் முக்கியமானது.</p><p>சினிமாவில் வேலை செய்யும் ஒவ்வொருவரையும், விளம்பர மீடியா உள்ளிட்ட அனைவரையும் நான் மதிக்கிறேன். இது என்னுடைய ஊர், என்னுடைய வாழ்க்கை, என்னுடைய சினிமா. ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களுடைய வேலையை உண்மையாகச் செய்தாலே போதும். யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. நன்றி, வணக்கம், வாழ்த்துகள்” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>குரு சோமசுந்தரம் சாருடன் சண்டை - பட விழாவில் உண்மையை உடைத்த அனுமோல்</title><link>https://www.maalaimalar.com/photo-gallery/cinema/actress-anumol-said-she-had-fight-with-guru-somasundaram</link><comments>https://www.maalaimalar.com/photo-gallery/cinema/actress-anumol-said-she-had-fight-with-guru-somasundaram#comments</comments><guid isPermaLink="false">557cb784-b374-4c43-80e9-27fae890253a</guid><pubDate>Tue, 18 Aug 2026 20:01:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T20:01:17.457Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குரு சோமசுந்தரம்,guru somasundaram,Paris Cafe,அனுமோல்,anumol,பாரிஸ் கஃபே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ygh17vjs/Anumol.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anumol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ygh17vjs/Anumol.png?w=280" width="280"></media:thumbnail><category>Cinema</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டெயின்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் "பாரிஸ் கஃபே" (Paris cafe) <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> விரைவில் திரைக்கு வர உள்ளது. </p><p>இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்  மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர்  நடித்துள்ளனர்.</p><p>பாரிஸ் கஃபே திரைப்படத்தை சராஜ் சீலன் எழுதி இயக்கியுள்ளார். கே இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருது வென்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.</p><h2>நம்பிக்கை இருந்தது:</h2><p>இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை அனுமோல், "நான் நடிக்கும் படங்கள் சமுதாயத்திற்கு தேவையான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பேன். இயக்குநரிடம் பேசும் போது ஒரு நம்பிக்கை இருந்தது, அதனால் தான் இந்தப் படத்தில் நான் நடித்தேன். </p><p>இந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் எல்லோரடனும் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. கே இசையமைப்பாளர் அவருடைய தமிழ் பாட்டை விட மலையாள பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.</p><p>குரு சோமசுந்தரம் கூட நடித்தது சந்தோஷமா இருந்தது. எனக்கு அவர் மீது கோபம் நான் அழகா இல்ல என்ன விட வேற ஒரு ஹீரோயின் அழகா இருக்கங்கன்னு என்கிட்டயே சொல்றாரு இப்ப கூட அவர் கிட்ட சண்டை போட்டேன், ஆனால் அந்த சண்டை அன்பான சண்டைதான். இவர் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கு. எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார் . இந்தப் படத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கு," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அமீரகத்திற்கு குறி வைத்த ஈரான் - 2 ஏவுகணைளை கண்டறிந்ததாக ஐக்கய அரபு அமீரகம் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/uae-detects-2-ballistic-missile-launches-from-iran</link><comments>https://www.maalaimalar.com/news/world/uae-detects-2-ballistic-missile-launches-from-iran#comments</comments><guid isPermaLink="false">91f5636b-bc79-462b-acdc-a30752433efa</guid><pubDate>Tue, 18 Aug 2026 18:56:56 +0000</pubDate><atom:updated>2026-08-18T18:56:56.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐக்கிய அரபு அமீரகம்,UAE,ஈரான்,Iran,ballistic missile,ஏவுகணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9dtm1954/UAE.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UAE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9dtm1954/UAE.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">ஐக்கிய அரபு அமீரகம்</a> 'ஏவுகணை அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது' என எச்சரித்து, மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>அந்நாட்டின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA), தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் நாட்டை குறிவைக்கும் ஏவுகணை அச்சுறுத்தலை கண்டறிந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2>ஏவுகணை அச்சுறுத்தல்:</h2><p>"ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள், நாட்டை தாக்கும் ஏவுகணை அச்சுறுத்தலை கண்டறிந்துள்ளன. தயவுசெய்து பாதுகாப்பான இடத்தில் இருங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் வெளியிடப்படும் எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகளை பின்பற்றுங்கள்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>மத்திய கிழக்கில் சண்டைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) காலாவதியான ஒரு நாள் கழித்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை:</h2><p>இதற்கிடையில், "தற்போதைய சூழ்நிலை மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் தஞ்சம் அடைய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>"தற்போதைய சூழ்நிலை மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் காரணமாக, உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் தஞ்சம் அடையுங்கள்," என உள்துறை அமைச்சகம் தொலைபேசி வாயிலாக விடுத்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டது, அது சிறிது நேரத்திலேயே திரும்பப் பெறப்பட்டது.</p><p>ஈரானில் இருந்து தங்களை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளை கண்டறிந்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவற்றில் ஒன்று எல்லைக்குட்பட்ட கடல் எல்லைக்குள் விழுந்ததாகவும், மற்றொன்று அதற்கு வெளியே விழுந்ததாகவும் கூறியது. மேலம், எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகம் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தியது.</p><p>ஒரு நாள் முன்னதாக, ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் சனிக்கிழமை தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோவை கிங்ஸ் வெற்றி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-kovai-kings-beat-chepauk-super-gillies-by-5-wickets</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-kovai-kings-beat-chepauk-super-gillies-by-5-wickets#comments</comments><guid isPermaLink="false">461f156d-3b7c-43e1-ab94-4d9703093324</guid><pubDate>Tue, 18 Aug 2026 18:02:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T18:02:06.695Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/e28w3zqp/Kovai-kings-won.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kovai kings won]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/e28w3zqp/Kovai-kings-won.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 21-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்ஸீஸ் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/kovai-kings">கோவை கிங்ஸ்</a> அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>ராம் அரவிந்த் அபாரம்:</h2><p>சேப்பாக் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய மோகித் ஹரிஹரன் 13 ரன்களும், கேப்டன் நாராயன் ஜெகதீசன் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஆஷிக் ரன் ஏதும் எடுக்காமல் டக் ஆகி வெளியேறினார்.</p><p>பின்னர் களமிறங்கிய ராம் அரவிந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய ஸ்வப்நில் சிங் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கியவர்களில் தினேஷ் ராஜ் மட்டும் 18 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். ராம் அரவிந்த் தன் பங்கிற்கு 32 பந்துகளில் 63 ரன்களை விளாசினார்.</p><p>கடைசியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கோவை கிங்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆர்.எஸ். ஆம்ப்ரிஷ் 3 விக்கெட்டுகளையும், மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டுகளையும், திவாகர், கிஷூர் மற்றும் ஜதாவேத் சுப்ரமணியன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p><h2>கோவை கிங்ஸ் வெற்றி:</h2><p>சற்றே எளிய இலக்கை துரத்திய கோவை கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களான ராதாகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் முறையே 38 மற்றும் 40 ரன்களை எடுத்தனர்.</p><p>அடுத்து களமிறங்கிய பாலசுப்ரமணியனம் சச்சின் 37 ரன்களை எடுத்தார். கேப்டன் ஷாருக் கான் 11 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார்.</p><p>இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ் தாய் வாழ்த்தை முதலில் பாட தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-bar-on-singing-tamil-anthem-before-vande-mataram-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-bar-on-singing-tamil-anthem-before-vande-mataram-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">3238126c-896e-4bed-9149-071b01c586dc</guid><pubDate>Tue, 18 Aug 2026 17:22:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T17:22:21.449Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Madras High Court,சென்னை உயர்நீதிமன்றம்,Tamil Anthem,தமிழ் தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/chyem2zt/Chennai-High-Court.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/chyem2zt/Chennai-High-Court.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் 'தமிழ் தாய் வாழ்த்து' பாடலை முதலில் பாடுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், சமீபத்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை மாநில பாடலை பின்னுக்குத் தள்ளவில்லை என்றும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">சென்னை</a> உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>தமிழகத்தில் அரசின் செயல்பாடுகள் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்குவதை உறுதி செய்ய உத்தரவு கோரி, சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு விசாரணையின்போது இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.</p><h2>மத்திய அரசு விளக்கம்:</h2><p>அரசு நிகழ்ச்சிகளை தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் முடிப்பது தமிழ்நாட்டில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியம் என்று மனுதாரர் வாதிட்டார். மனுவின்படி, அரசு நிகழ்ச்சிகள் வந்தே மாதரத்துடன் தொடங்க வேண்டும் என்று கோரும் ஜனவரி 28-ஆம் தேதியிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையை ரத்து செய்ய அவர் கோரினார்.</p><p>மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூலை 9-ஆம் தேதியன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிவிக்கையை சுட்டிக்காட்டினார். அந்த அறிக்கையின்படி, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் ஆகியவை அடுத்தடுத்து பாடப்பட வேண்டும் என்றும், தேசிய கீதத்திற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.</p><p>மாநில கீதங்கள் குறித்து அந்த அறிவிப்பில் எதுவும் கூறப்படவில்லை என்றும், தமிழ் தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட வேண்டும் என்று அதில் நிபந்தனை விதிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><h2>வரிசை குறித்த சர்ச்சை:</h2><p>தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தினத்தன்று இதே வரிசைமுறைதான் பின்பற்றப்பட்டது என்றும், முதலில் தமிழ் வாழ்த்து, அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியது.</p><p>பாரம்பரியமாக அரசு நிகழ்ச்சிகள் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கும் தமிழ்நாட்டில், பாடல்களின் வரிசை குறித்த சர்ச்சை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. </p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனது வழக்கமான உரைக்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தியதை அடுத்து, இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தது. இந்த கோரிக்கையை அப்போதைய தி.மு.க. அரசு நிராகரித்தது.</p>]]></content:encoded></item><item><title>இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி!</title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-supreme-court-grants-permission-to-move-imran-khan-to-a-private-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-supreme-court-grants-permission-to-move-imran-khan-to-a-private-hospital#comments</comments><guid isPermaLink="false">47690900-4f0a-488e-ae2b-c9935fd9620b</guid><pubDate>Tue, 18 Aug 2026 16:33:18 +0000</pubDate><atom:updated>2026-08-18T16:33:18.995Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Imran Khan,Pakistan,இம்ரான் கான்,Supreme Court,உச்ச நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9i0ekl13/New-Project-2026-08-18T212939.604.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9i0ekl13/New-Project-2026-08-18T212939.604.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் தற்போதைய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானை, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு 2 நாட்களுக்குள் மாற்றுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>மேலும் இம்ரான் கானின் சகோதரி டாக்டர் உஸ்மா கான், அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் ஃபைசல் சுல்தான் உட்பட அவருக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையை மேற்பார்வையிட ஒரு மருத்துவக் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>குடும்பத்தினர் மருத்துவமனையில் இம்ரான் கானை சந்திக்கலாம் என்றும், வெளிநாட்டில் வசிக்கும் மகன்களுடன் இம்ரான் கான் பேசவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. </p><h2>என்ன சிகிச்சை?</h2><p>பல ஊழல் வழக்குகள் தொடர்பாக கடந்த 2023 ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார். நீண்டநாட் சிறையில் இருப்பதால் அவருக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகவும், மேலும் சிறையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>இந்த உடல்நலப் பிரச்னைகள் தொடர்பாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு மருத்துவர்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், தனியார் மருத்துவ நிபுணர்களின் சிகிச்சை தேவை என்றும் அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.</p><p>ஆனால் மருத்துவமனையை மாற்றமுடியாது, அதற்கு பதில் ஒரு மருத்துவ குழுவை அமைத்து, அந்தக் குழு அளிக்கும் அறிக்கையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. </p><p>கடந்த சில மாதங்களாக இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், கடந்த வாரம் அவரை பரிசோதித்த மருத்துவக்குழு நேற்று மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தது. </p><h2>இம்ரான் கானின் மருத்துவ அறிக்கை</h2><p>73 வயதான இம்ரான் கான், தனது குடும்பத்தினரை நீண்டநாட்களாக காணததால் அவருக்குக் கடுமையான ரத்த அழுத்தம், மன உளைச்சல் மற்றும் இதயத் துடிப்பில் மாறுபாடுகள் ஏற்பட்டதாக சுட்டிக் காட்டியது. </p><p>மேலும் நாடித்துடிப்பும், இதய நிலையும் இயல்பாக இல்லை என்றும், அவரது முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படத் தொடங்கியிருந்தன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><h2>வலது கண் பார்வையில் கடுமையான பாதிப்பு</h2><p>மேலும் இம்ரான் கானுக்கு வலது கண்ணில் <strong>CRVO (Central Retinal Vein Occlusion)</strong> என்ற ரத்த நாள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது <strong>வலது கண் பார்வையில் சுமார் 85 சதவீதத்தை இழந்துவிட்டார்</strong> என்று அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். </p><p>சிறையில் இதற்கு உரிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.</p><p>இந்த மருத்துவ அறிக்கையைத் தொடர்ந்து மருத்துவமனை மாற்றத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>TNPL: கோவை கிங்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-chepauk-super-gillies-168-runs-targest-to-kovai-kings</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-chepauk-super-gillies-168-runs-targest-to-kovai-kings#comments</comments><guid isPermaLink="false">952103ce-66b9-4a90-8ff0-ce16a961e1de</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:59:09 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:59:09.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,CSG,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/629lfx53/CSG0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராம் அரவிந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/629lfx53/CSG0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு பிரீமியர் லீக் 2027 சீசனின் 21-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.</p><p>டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் மோகித் ஹரிஹரன் மற்றும் என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினர். ஹரிஹரன் 13 ரன்களிலும், என். ஜெகதீசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஆஷிக் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>ராம் அர்விந்த் அரைசதம்</h2><p>அடுத்து இம்பேக்ட் பிளேயராக வந்த ராம் அர்விந்த் அதிரடியாக விளையாடினார். அவர் 32 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 63 ரன்கள் விளாசினார். அதன்பின் ஸ்வப்னில் சிங் (20), அஷ்வந்த் வல்தபா (5), மோகனா பிரசாத் (12) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>6.1 ஓவரில் 50 ரன்களை தொட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ், 10 ஓவரில் 100 ரன்களை தொட்டது. ஆனால், கடைசி 10 ஓவரில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் 19.3 ஓவரில் 167 ரன்களில் ஆல்அவுட் ஆனது.</p> <p>கோவை கிங்ஸ் அணியில் ஆர்.எஸ். அம்ப்ரிஸ் 3 விக்கெட்டுகளும், மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டுகளும், ஆர். திவாகர், ஜி. கிஷோர், ஜே. சுப்ரமணியன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>வேறு மாநிலங்களில் கன்னட மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடகா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்குமா? - பெ.சண்முகம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/would-karnataka-remain-a-silent-spectator-if-kannada-people-were-affected-in-other-states-p-shanmugam-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/would-karnataka-remain-a-silent-spectator-if-kannada-people-were-affected-in-other-states-p-shanmugam-asks#comments</comments><guid isPermaLink="false">fd07eabb-b9ab-4ccf-a041-5ac4541d38e4</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:55:11 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:55:11.675Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,P. Shanmugam,பெ.சண்முகம்,Chief Minister D.K. Shivakumar,முதலமைச்சர் டி.கே.சிவகுமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zrpqwewy/New-Project-2026-08-18T212452.389.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேறு மாநிலங்களில் கன்னட மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடகா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்குமா? - பெ.சண்முகம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zrpqwewy/New-Project-2026-08-18T212452.389.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு தலையிடக்கூடாது என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்.,</p><p>“கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு தலையிடக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் கூறியிருப்பதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>உலகில் தமிழ் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நியாயமும் நீதியும் கிடைக்கக் குரல் கொடுப்பது தமிழ்நாடு தலைவர்கள் மற்றும் அரசின் கடமையாகும்.</p><p>இக்கொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்த தமிழ்நாட்டு முதலமைச்சரை, “உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கர்நாடக முதலமைச்சர் கடுமையான வார்த்தைகளில் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. </p><p>வேறு மாநிலங்களில் கன்னட மொழி பேசும் மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடக அரசு வாயை மூடிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்குமா என்பதை விளக்க வேண்டுகிறோம்.</p><p>கர்நாடக நிர்வாகத்தில் தமிழ்நாடு தலையிடுவதாகப் பிரச்சனையைத் திசை திருப்புவதை விடுத்து, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் கர்நாடக அரசு கவனம் செலுத்தட்டும்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: கண்டனம் தெரிவிக்காத தமிழ்நாடு அரசின்  நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-the-tamil-nadu-governments-failure-to-condemn-the-incident-is-shocking-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-the-tamil-nadu-governments-failure-to-condemn-the-incident-is-shocking-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">511f68c8-865d-486c-85ac-71ad706cd46c</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:43:46 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:43:46.812Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தமிழ்நாடு அரசு,Udhayanidhi Stalin,Government of Tamil Nadu,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hvkn9mr8/New-Project-2026-08-18T211244.382.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: கண்டனம் தெரிவிக்காத தமிழ்நாடு அரசின்  நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது - உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hvkn9mr8/New-Project-2026-08-18T211244.382.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனத்துறையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் நாளை நடைபெற உள்ள தென்மாநில முதலமைச்சர் மாநாட்டின்போது, முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் இதுதொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டுப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் பாணியையே எதிரொலித்தார்.</p><p>தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை.</p><p>த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. </p><p>அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும். </p><p>இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.</p><p>இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.</p><p>மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>குருகிராமில் மலைபோல் குவிந்த குப்பைகள்: பொதுமக்கள் கடும் அவதி..!</title><link>https://www.maalaimalar.com/news/national/garbage-piles-up-at-gurugram-waste-points-amid-delay-in-lifting</link><comments>https://www.maalaimalar.com/news/national/garbage-piles-up-at-gurugram-waste-points-amid-delay-in-lifting#comments</comments><guid isPermaLink="false">e6c04dde-d943-4989-96c4-a84b11945409</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:26:50 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:26:50.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Garbage,gurugram,குருகிராம்,குப்பைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/xpnwd9vr/GarbageGurugram001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குர்கிராம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/xpnwd9vr/GarbageGurugram001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் மாநகராட்சி கண்ட்ஸா (Khandsa) பகுதியில் உள்ள உள்ளூர் இரண்டாம் நிலை குப்பை சேகரிப்பு மையத்திலிருந்து (SCP) பல மாதங்களாகக் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால், அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>நகரம் முழுவதும் உள்ள இரண்டாம் நிலை குப்பை சேகரிப்பு மையங்களில் (SCPs) குப்பைகள் மலைபோல் குவிந்து வருவதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குப்பைகளை அகற்றுவதில் ஏற்படும் கடும் தாமதத்தால், குடியிருப்புப் பகுதிகள் சுகாதாரமற்ற சூழலாகவும், நோய்க்கிருமிகள் பெருகும் இடமாகவும் மாறியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><h2>குருகிராம் மாநகராட்சி</h2><p>குருகிராம் மாநகராட்சி (MCG) அதிகாரிகளின் கூற்றுப்படி, நகரின் 14 சேகரிப்பு மையங்களில் 12 மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. பிரேம் பூரியில் உள்ள மையம் சில மாதங்களுக்கு முன்பே மூடப்பட்டது. செக்டார் 70-ல் உள்ள டுலிப் சௌக் (Tulip Chowk) அருகிலுள்ள மையமும் மூடப்பட்டு, அங்கிருந்து அகற்றப்பட வேண்டிய குப்பைகள் இனி 'பெரி வாலா பாக்' (Beri Wala Bagh) பகுதிக்கு மாற்றப்பட்டு அகற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>வீடு வீடாகச் சேகரிக்கப்படும் குப்பைகள், பதப்படுத்துவதற்காக பந்த்வாரி (Bandhwari) பகுதிக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாக, தரம் பிரிப்பதற்காகக் கொண்டு வரப்படும் இடைநிலை மையங்களாக இந்த SCP-கள் செயல்படுகின்றன.</p><p>கண்ட்ஸா பகுதியில், உள்ளூர் சேகரிப்பு மையத்திலிருந்து பல மாதங்களாகக் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால், அங்கு குப்பைகள் பெருமளவில் குவிந்துள்ளதாக மக்கள் கூறினர்.</p><p>"நான் அந்தச் சேகரிப்பு மையத்திற்கு அருகில் வசிக்கிறேன்.  குப்பைகள் போதுமான அளவு அகற்றப்படாததால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதை நான் கவனித்திருக்கிறேன்," என்று அப்பகுதிவாசியான பிரசாந்த் குமார் கூறினார்.</p><p>சமீபத்திய மாதங்களில் பலமுறை தீ விபத்துகள் ஏற்பட்டதால், இந்த இடம் தீ விபத்து அபாயம் கொண்ட இடமாகவும் மாறியுள்ளது. கண்ட்ஸா மையத்தில் ஒரே வாரத்தில் இரண்டு முறை தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், ஒவ்வொன்றையும் அணைக்க 24 மணி நேரத்திற்கும் மேலான நேரம் தேவைப்பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.</p><p>செக்டார் 110 மற்றும் பாலம் விஹார் (Palam Vihar) பகுதிகளிலிருந்தும் இதேபோன்ற புகார்கள் எழுந்துள்ளன. அங்குள்ள 'பாஜ்கேரா' (Bajghera) சேகரிப்பு மையத்தில், குப்பை சேகரிப்பிற்கும் அதை அகற்றுவதற்கும் இடையே பெரும் இடைவெளி (சமச்சீரற்ற நிலை) இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.</p><p>"குப்பையைக் கொட்டுவதற்கு ஐந்து லாரிகள் வந்தால், அதை அகற்றுவதற்கு ஒரே ஒரு லாரி மட்டுமே வருகிறது. மழைக்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகிறது. அந்த இடம் முழுவதும் தண்ணீர் தேங்கிவிடுவதால், அப்பகுதி மக்களுக்கும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அது ஆபத்தானதாகவும் சுகாதாரமற்றதாகவும் மாறுகிறது" என்று செக்டார் 110-ஐச் சேர்ந்த பாரத் நைன் கூறினார்.</p><p>செக்டார் 21-ல், கார்டர்புரி (Carterpuri) சேகரிப்பு மையத்தில் தண்ணீர் தேங்கியதால், பல நாட்களாக வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. "மழைநீரால் அந்த இடத்தின் நிலை மோசமாக இருந்ததால், புதிதாகக் குப்பைகளைக் கொட்ட முடியவில்லை என்று தொழிலாளர்கள் கூறினர்" என்று செக்டார் 21 குடியிருப்போர் நலச் சங்கத்தின் (RWA) பொதுச் செயலாளர் குந்தன் லால் சர்மா தெரிவித்தார். தண்ணீர் வெளியேற்றப்பட்ட பின்னரே அந்த இடத்தில் குப்பைகளைக் கொட்டும் பணியை மீண்டும் தொடங்க முடிந்தது என்று ஷர்மா மேலும் கூறினார்.</p><p>NH-48 சாலையில் அமைந்துள்ள, நகரத்தின் மிகப்பெரிய குப்பை சேகரிப்பு மையமான பெரி வாலா பாக், குடியிருப்பு வளாகங்களிலிருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது என்றும், அங்கு டிராக்டர்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன என்றும் அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 100 சிக்சர்: வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/rishabh-pant-becomes-first-indian-and-fastest-to-hit-100-sixes-in-test-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/rishabh-pant-becomes-first-indian-and-fastest-to-hit-100-sixes-in-test-cricket#comments</comments><guid isPermaLink="false">01979c6e-1350-458c-bc07-ae8e2344a377</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:02:26 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:02:26.735Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rishabh Pant,SLvIND,ரிஷப் பண்ட்,இலங்கை இந்தியா தொடர்,100 sixer,100 சிக்சர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/wspm9buh/rishab.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rishabh pant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/wspm9buh/rishab.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காலே போட்டியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் அதிவிரைவில் 100 சிக்சர்களை விளாசி வரலாற்று சாதனை படைத்தார்.</p><p>இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 167 ரன் குவித்தார்.</p><p>இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>அடுத்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சோனல் தினுஷா 100 ரன்னில் அவுட்டானார். </p><p>இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>178 ரன் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 66 ரன்னில் அவுட்டானார். </p><p>இந்நிலையில், ரிஷப் பண்ட் 89 இன்னிங்ஸ்களில் 100 சிக்சர்களை விளாசி அதிவிரைவாக 100 சிக்சர்கள் அடித்தவர் எனற சாதனையைப் படைத்தார்.</p><p>இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் மற்றும் இன்னிங்ஸ் எண்ணிக்கை:</p><p>ரிஷப் பண்ட் 100 சிக்சர்கள் - 89 இன்னிங்ஸ்.</p><p>பென் ஸ்டோக்ஸ் 138 சிக்சர்கள் - 220 இன்னிங்ஸ்</p><p>பிரெண்டன் மெக்கல்லம் 107 சிக்சர்கள் - 176 இன்னிங்ஸ்</p><p>ஆடம் கில்கிறிஸ்ட் - 100 சிக்சர்கள் - 137 இன்னிங்ஸ்.</p>]]></content:encoded></item><item><title>சீனா மற்றும் ரஷியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிய ஆர்டிக் கடல் வழித்தடம்</title><link>https://www.maalaimalar.com/news/world/why-the-arctic-sea-route-has-become-so-important-for-china-and-russia</link><comments>https://www.maalaimalar.com/news/world/why-the-arctic-sea-route-has-become-so-important-for-china-and-russia#comments</comments><guid isPermaLink="false">d1d043c0-63b4-44cf-a3f5-6e821f0c5f63</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:01:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:01:03.260Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,China,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8brr9hks/Arcticsea001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்டிக் கடல் வழித்தடம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8brr9hks/Arcticsea001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுடன் உலகளாவிய கப்பல் போக்குவரத்து இடையூறுகளும் வடக்கு கடல் வழித்தடத்தின் (Northern Sea Route) மூலோபாய முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளன.</p><p>மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீன சரக்கு கப்பல்கள் வடக்கு கடல் வழித்தடத்தில் பயணிக்கத் தொடங்கியதிலிருந்து, ஆர்டிக் கப்பல் போக்குவரத்துப் பாதை உலகளாவிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.</p><h2>செங்கடலில் ஹவுதி தாக்குதல்</h2><p>அதே ஆண்டின் பிற்பகுதியில் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்கள், ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான மிக விரைவான கடல்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாய் வழியாகச் செல்லும் போக்குவரத்தை பாதித்தன. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரபு-இஸ்ரேலிய போருக்குப் பிறகு, மோதல் காரணமாக ஏற்பட்ட மிக தீவிரமான போக்குவரத்து இடையூறாக இது அமைந்தது.</p><p>5,600 கி.மீ (3,480 மைல்) நீளமுள்ள வடக்கு கடல் வழித்தடம் (Northern Sea Route), ரஷியாவின் ஆர்டிக் கடற்கரைப் பகுதியில் பாரண்ட்ஸ் கடல் (Barents Sea) முதல் பெரிங் நீரிணை (Bering Strait) வரை பரவியுள்ளது.</p><p>ஆண்டின் பெரும்பகுதி பயணிக்க முடியாததாக இருந்த இத்தடம், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால், காலநிலை மாற்றத்தின் விளைவாக இப்போது எளிதில் பயணிக்கக் கூடியதாக மாறி வருகிறது.</p><p>இப்பகுதியில் ரஷியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், சூயஸ் கால்வாயில் ஏற்படும் மோதல்கள் மற்றும் கடல் கொள்ளை சம்பவங்கள் போக்குவரத்தை பாதித்து வருவதால், சீன நிறுவனங்களுக்கு ஆர்டிக் பகுதி ஒரு மாற்றுப் பாதையாக அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மோதல் அல்லது போர்க் காலங்களில் உலகளாவிய தொடர்பை உறுதிசெய்ய, மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கியக் குறுகிய கடல் வழித்தடங்கள் (chokepoints) இல்லாத ஒரு பாதையைத் தேடும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவுக்கு, இத்தடம் மிக முக்கியமானது.</p><h2>சீனாவின் கடல்சார் உத்தி</h2><p>சீனாவின் கடல்சார் உத்தி என்பது தென் சீனக் கடல், கிழக்கு சீனக் கடல் மற்றும் தைவான் ஆகியவற்றுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. அது சீனா எவ்வாறு உலகளவில் இணைகிறது மற்றும் எவ்வாறு உலகளாவிய இணைப்புத் தொடர்பை உருவாக்குகிறது என்பதோடும் தொடர்புடையது என்று வியன்னாவைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான FACE-ன் நிறுவனரும் புவிசார் அரசியல் உத்தியாளருமான வெலினா சக்கரோவா (Velina Tchakarova) கூறினார்.</p><p>"வடக்குக் கடல் வழித்தடம்" இல்லாவிட்டால், சீனா தனது இறக்குமதிகள் மீதான முற்றுகை, இடையூறு மற்றும் குழப்பம் போன்ற பெரும் அபாயங்களை எப்போதும் எதிர்கொள்ள நேரிடும். எனவே, சீனாவின் கண்ணோட்டத்தில் இந்த வழித்தடம் மூலோபாய ரீதியாக முக்கியமானது. இதை மேம்படுத்துவதிலும் இதற்கான வசதிகளை உருவாக்குவதிலும் சீனா முதலீடு செய்வது இயல்பான மற்றும் தர்க்கரீதியான ஒன்றே.</p><h2>முதல் சீன கப்பல் பயணம்</h2><p>அரசுக்குச் சொந்தமான கோஸ்கோ (Cosco) குழுமத்தால் இயக்கப்படும் முதல் சீன சரக்குக் கப்பல் 2013-ல் வடக்குக் கடல் வழித்தடம் வழியாக பயணம் செய்தது. ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, ‘நியூ நியூ ஷிப்பிங்’ (New New Shipping) என்ற தனியார் நிறுவனம், ஆர்டிக் வழியாக சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே வழக்கமான சேவையைத் தொடங்கியது.</p><p>ஆனால், அக்டோபர் மாதத்தில் சீனாவின் நிங்போவிலிருந்து (Ningbo) இங்கிலாந்தின் ஃபெலிக்ஸ்டோவிற்கு (Felixstowe) சீ லெஜண்ட் (Sea Legend) நிறுவனத்தின் இஸ்தான்புல் பிரிட்ஜ் (Istanbul Bridge) என்ற கப்பல் பயணித்தபோதுதான், வடக்குக் கடல் வழித்தடத்தை சீனக் கப்பல்கள் பயன்படுத்துவது பரவலான கவனத்தை ஈர்த்தது. இந்தப் பயணம் வெறும் 20 நாட்களிலேயே நிறைவடைந்தது. இது மற்ற கடல் வழித்தடங்களைப் பயன்படுத்தும்போது ஆகும் பயண நேரத்தில் ஏறக்குறைய பாதியளவே ஆகும்.</p> <p>அதன்பிறகு மேலும் பல கப்பல்கள் இவ்வழித்தடத்தைப் பயன்படுத்தத் தொடங்கின. இந்த கோடைக்காலத்தில், சுமார் 38 சரக்கு கப்பல்கள் (container ships) சீனத் துறைமுகங்களிலிருந்து ஆர்டிக் வழித்தடம் வழியாக ரஷியா அல்லது வடக்கு ஐரோப்பாவிற்குப் பயணம் செய்கின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை அதே வழியில் திரும்பவும் உள்ளன.</p><h2>பயணம் நாட்கள் குறைவு</h2><p>கடந்த ஆண்டில் வடக்குக் கடல் வழித்தடம் வழியாக 17 சீன வணிகக் கப்பல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆர்டிக் வழித்தடத்தின் மூலமான பயணம் மிகவும் வேகமானது. சீனாவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அல்லது பிற ஐரோப்பிய துறைமுகங்களைச் சென்றடைய சுமார் 30 நாட்களே ஆகின்றன.</p><p>சமீபத்திய கப்பல் போக்குவரத்து அட்டவணைகளின்படி, சூயஸ் கால்வாய் வழியாகச் செல்ல சுமார் 45 நாட்களும், நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாகச் செல்ல சுமார் 60 நாட்களும் ஆகின்றன.</p><p>வடக்கு கடல் வழித்தடம் (Northern Sea Route) ஜூலை முதல் அக்டோபர் வரை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. 2024 மற்றும் 2025-ல் சாதனை அளவிலான போக்குவரத்து நிகழ்ந்த போதிலும், சூயஸ் கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுடன் ஒப்பிடுகையில், இதன் வழியாகச் செல்லும் சரக்குகளின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது.</p><p>இருப்பினும், <a href="https://www.maalaimalar.com/news/world/usiran-tensions-trump-warns-unconditional-surrender-and-tougher-sanctions">ஹார்முஸ் ஜலசந்தி</a> (Strait of Hormuz) அடைப்பு, செங்கடல் தாக்குதல்கள் மற்றும் பிற முக்கிய கடல்வழிப் பாதைகளைச் சுற்றியுள்ள பதற்றங்கள் வரை உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், மாற்று வழித்தடங்களின் மூலோபாய முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மகன்... கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்த ஷாலினி! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/son-wins-football-championship-title-shalini-shares-celebratory-photos</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/son-wins-football-championship-title-shalini-shares-celebratory-photos#comments</comments><guid isPermaLink="false">50ae6a20-bc0c-412b-982e-575e665ef5f7</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:51:41 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:51:41.757Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கால்பந்து,FootBall,shalini,ஆத்விக்,ஷாலினி,Aathvik</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zy9p4spn/New-Project-2026-08-18T200024.839.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மகன்... கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்த ஷாலினி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zy9p4spn/New-Project-2026-08-18T200024.839.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைத்துறையைத் தாண்டி கார் பந்தயம், துப்பாக்கிச்சூடு என விளையாட்டுத்துறையிலும் கால்பதித்து தனது பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது கார் பந்தயம் தொடர்பான ஆவணப்படமும் உருவாகி வருகிறது.</p><p>இதனிடையே அஜித் மகன் ஆத்விக்கும் கால்பந்து விளையாட்டில் உள்ளது அவரது ரசிகர்கள் பலரும் அறிந்ததே. ஆத்விக் கால்பந்து விளையாடுவது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். </p><p>இந்நிலையில் ஆத்விக்கின் அணி மஹோகனி யூத் லீக் கால்பந்து தொடரில் சாம்பியம் பட்டம் வென்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ஷாலினி அஜித்குமார், விளையாட்டின் முடிவைவிட, அதில் கிடைக்கும் மகிழ்ச்சிதான் முக்கியம் என பதிவிட்டுள்ளார். </p><h2>மஹோகனி யூத் லீக்</h2><p>சென்னையில் உள்ள மஹோகனி கால்பந்து கழகம் நடத்தும் இளையோர் கால்பந்துப் போட்டித் தொடர் மஹோகனி யூத் லீக். சிறுவர்கள் மற்றும் இளையோர் பிரிவினரிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் வாய்ப்பு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-says-engineering-students-to-participate-pwd-tenders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-says-engineering-students-to-participate-pwd-tenders#comments</comments><guid isPermaLink="false">0041543c-4de4-4f1e-875a-637b78e8043a</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:44:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:44:22.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,பொதுப்பணித்துறை,PWD,TN Assembl,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/iw6cwos2/arjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aadav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/iw6cwos2/arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் சலுகையுடன் வாய்ப்பு வழங்குதல்.</p><h2>பொதுப்பணித் துறை</h2><p>தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:</p><p>அனுமதிக்கத்தக்க அதிகபட்ச பிரிமியம் FSI முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு பன்னடுக்கு எழில் மிகு மற்றும் உலகத்தரமான கட்டடங்களை அமைத்தல்.</p><p>இந்த அறிவிப்பின் மூலம் விலைமதிப்பிட முடியாத அரசு நிலங்கள் சேமிக்கப்பட்டு, அவற்றின் உச்சபட்ச பயன்பாடு உறுதி செய்யப்படும்.</p><p>பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் சலுகையுடன் வாய்ப்பு வழங்குதல்.</p><p>ஒரு கோடி ரூபாய்வரை திட்ட மதிப்புள்ள பொதுப்ப்பணித்துறை ஒப்பந்தங்களில் பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தகுதிவாய்ந்த பொறியியல் பட்டதாரிகளுக்கு சலுகையுடன் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.</p><p>ஒரு கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு உள் கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் நிறுவுதல்.</p><p>இந்தக் கழகம் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் உலகத் தரத்துடன் அமைக்கப்படும். இதன்மூலம் பெருநகரங்கள், தொழிற்துறை மையங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் வணிகப் பூங்காக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.</p><p>பணி முன்னேற்றம், தரக் கட்டுப்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் வெளிப்படைத் தன்மைக்காக ஒரு செயலி உருவாக்குதல்.</p><h2>ஒப்பந்ததாரர் பதிவு முறையில் மேலும் எளிமை</h2><p>பொதுப் பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறையை மேலும் எளிமையாக்குதல்.</p><p>அரசு மருத்துவமனைகளின் பராமரிப்புப் பணிகளை நவீனப்படுத்தும் நோக்கில் AI தொழில்நுட்பத்துடன் கட்டட மேலாண்மையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரெயில் திட்டம் – ரெயில்வே வாரியம் ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-flying-train-service-to-merge-with-metro-rail-railway-board-nod</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-flying-train-service-to-merge-with-metro-rail-railway-board-nod#comments</comments><guid isPermaLink="false">7251a269-6fd0-4362-9b59-19ca2129a4fd</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:26:36 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:26:36.281Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SouthernRailway,சென்னைமெட்ரோ,ChennaiMetro,MRTSChennai,பறக்கும்ரயில்,CMRLUpdates,MetroMRTSMerge,மெட்ரோஇணைப்பு,தமிழக போக்குவரத்துக் கழகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/k9nwzddb/CMRLUpdates" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMRL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/k9nwzddb/CMRLUpdates?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சென்னை பறக்கும் ரெயில் சேவையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் முழுமையாக இணைப்பதற்கான இறுதி ஒப்புதலை ரெயில்வே வாரியம் வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.</p><h2><strong>அடுத்த 2 ஆண்டுகளில் முழு மாற்றம்!</strong></h2><p>சென்னையில் தற்போது தெற்கு ரெயில்வேயால் இயக்கப்பட்டு வரும் கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரெயில் சேவை, அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முழுமையாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மெட்ரோ ரெயில்</a> நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்படும். </p><p>இந்த ஒப்பந்தத்தின்படி, பறக்கும் ரெயிலின் செயல்பாடுகள், ரெயில்களை இயக்குதல் மற்றும் அனைத்து சொத்துக்களின் பராமரிப்பு உரிமைகளும் மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு மாற்றப்படவுள்ளன.</p><h2><strong>15 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு</strong></h2><p>பறக்கும் ரெயில் திட்டத்தை மெட்ரோவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசு மற்றும் மத்திய ரெயில்வே துறைக்கு இடையே நடைபெற்று வந்தன. </p><p>பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, தற்போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பிற்கு ரெயில்வே வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.</p><h2><strong>புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</strong></h2><p>மெட்ரோ நிறுவனத்துடன் பறக்கும் ரெயில் திட்டத்தை இணைப்பதற்கான அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில்,</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">பறக்கும் ரெயில்</a> நிலையங்கள், தண்டவாளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் சொத்துக்களை மெட்ரோவிடம் ஒப்படைத்தல். எதிர்காலத்தில் ரெயில்களை இயக்குவது மற்றும் பராமரிப்பது தொடர்பான முக்கிய விவரங்கள். ரெயில் நிலையங்களைப் புதுப்பித்து மெட்ரோ தரத்திற்கு உயர்த்துவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.</p><h2>பயணிகளுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன?</h2><p>இந்த இணைப்பின் மூலம் சென்னை மக்களுக்குப் பல்வேறு போக்குவரத்து வசதிகள் மேம்படவுள்ளன.</p><p>பயணிகள் மெட்ரோ மற்றும் பறக்கும் ரெயில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே டிக்கெட் அல்லது ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தும் வசதி கொண்டு வரப்படும்.</p><p>தற்போது போதிய பராமரிப்பின்றி இருக்கும் பறக்கும்ரெயில் நிலையங்கள் அனைத்தும் மெட்ரோ ரெயில் நிலையங்களைப் போலத் தூய்மையாகவும், நவீன வசதிகளுடனும் (லிஃப்ட், எஸ்கலேட்டர், பாதுகாப்பு வசதிகள்) மாற்றப்படும்.</p><p>மெட்ரோ மற்றும் பறக்கும் ரெயில் சேவைகள் ஒன்றோடொன்று தடையின்றி இணைக்கப்படுவதால் பயண நேரம் பெருமளவு குறையும்.</p>]]></content:encoded></item><item><title>வரலாறு காணாத உச்சத்தில் சர்க்கரை விலை – வரியில்லா இறக்குமதிக்கு மத்திய அரசு அதிரடித் திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/sugar-prices-hit-unprecedented-high-centre-plans-duty-free-import</link><comments>https://www.maalaimalar.com/news/national/sugar-prices-hit-unprecedented-high-centre-plans-duty-free-import#comments</comments><guid isPermaLink="false">dde6954c-1fc4-425d-a4b7-9c227ec30bb5</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:21:39 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:21:39.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SugarPriceSpike,சர்க்கரைவிலை உயர்வு,India Sugar Imports,Duty Free Imports,வரியில்லா இறக்குமதி,Government Measures,Sugar Shortage</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4c21yzav/Sugar-Price-Spike" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sugar Price Spike ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4c21yzav/Sugar-Price-Spike?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் வரவிருக்கும் தொடர் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">சர்க்கரை</a>யின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அதன் விலை அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. </p><p>இதனைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விநியோகத்தை அதிகரிக்கவும் "வரியில்லா சர்க்கரை இறக்குமதி" உள்ளிட்ட பல்வேறு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> மத்திய அரசு</a> தீவிரமாக ஆலோசித்து வருகிறது.</p><h2>ஒரே மாதத்தில் 20% விலை உயர்வு!</h2><p>இந்தியாவின் முக்கிய சர்க்கரை வர்த்தக மையங்களில் ஒன்றான மகாராஷ்டிராவின் கோலாப்பூரில், மொத்த விற்பனையில் 100 கிலோ (ஒரு குவிண்டால்) சர்க்கரையின் விலை நடப்பு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 20% வரை உயர்ந்துள்ளது.</p><p>தற்போது சர்க்கரை விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,350 என்ற வரலாற்றுச் சாதனை அளவைத் தொட்டுள்ளது. உள்நாட்டில் சர்க்கரை இருப்பு போதுமான அளவு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், சந்தையில் சர்க்கரைக்கான தட்டுப்பாடு நிலவுவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.</p><h2>பண்டிகைக் கால தட்டுப்பாடே காரணம்</h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால், இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் தயாரிப்பிற்கு சர்க்கரையின் தேவை மிக அதிகமாக இருக்கும். </p><p>இந்த திடீர் தேவையைச் சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்வது மட்டுமே தற்போதைய ஒரே தீர்வு என மும்பை சர்க்கரை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>விலையைக் குறைக்க மத்திய அரசு கையில் எடுக்கும் 4 முக்கிய ஆயுதங்கள்</h2><p>சர்க்கரை விலையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தனி ஒரு நடவடிக்கையை மட்டும் நம்பியிருக்காமல், பல்வேறு உத்திகளைப் பரிசீலித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கான இறக்குமதி வரியைக் குறைத்து, குறைந்த விலையில் சர்க்கரை கிடைக்க வழிவகை செய்தல். </p><p>இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் சர்க்கரையை பெரிய அளவில் இறக்குமதி செய்யாத நிலையில், தற்போது இந்த முடிவை எடுக்க அரசு முன்வந்துள்ளது. பெரிய மொத்த வியாபாரிகள் சர்க்கரையைப் பதுக்கி வைத்துச் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்குவதைத் தடுக்க, அவர்கள் எவ்வளவு சர்க்கரையை இருப்பு வைக்கலாம் என்பதற்கான உச்ச வரம்பைக் குறைப்பது.</p><p>சர்க்கரை ஆலைகள் மாதந்தோறும் உள்நாட்டுச் சந்தைக்கு விடுதலை செய்யும் சர்க்கரையின் அளவை அதிகரிப்பது. அக்டோபர் முதல் தொடங்கவுள்ள புதிய கரும்புப் பருவத்தில், எத்தனால் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் கரும்பின் அளவைக் குறைத்து, அதை முழுமையாகச் சர்க்கரை உற்பத்திக்குத் திருப்புவது. இதன் மூலம் சர்க்கரை உற்பத்தி இந்தியாவில் அதிகரிக்கும்.</p><p>உலகிலேயே சர்க்கரையை மிக அதிகமாகப் பயன்படுத்தும் நாடு இந்தியாதான் என்பதால், <a href="https://www.maalaimalar.com/topic/india">இந்தியா</a>வின் இந்த இறக்குமதி முடிவு சர்வதேச அளவிலும் சர்க்கரை சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் கடனை இன்றே அடைக்க யோசனைக்கூறிய அமைச்சர் சரத்குமார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-proposes-a-plan-to-pay-off-indias-debt-today-itself</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-proposes-a-plan-to-pay-off-indias-debt-today-itself#comments</comments><guid isPermaLink="false">53f6ce25-9375-4881-bfc4-2ccf596d4f28</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:14:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:14:17.924Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Minister Sarathkumar,அமைச்சர் சரத்குமார்,INDIA’S DEBT,இந்தியக் கடன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/3gzutpp2/New-Project-2026-08-18T191757.409.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியாவின் கடனை இன்றே அடைக்க யோசனைக்கூறிய அமைச்சர் சரத்குமார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/3gzutpp2/New-Project-2026-08-18T191757.409.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மொத்தக் கடன் தொகை 2027ம் ஆண்டில் ரூ. 214 லட்சம் கோடியாக இருக்கும் என 2026-27ம் ஆண்டு நிதியாண்டு அறிக்கை தாக்கலில் மத்திய அரசு தெரிவித்தது. </p><p>மார்ச் 2026 வரை மொத்தக் கடன் ரூ.197 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், மொத்த நிலுவைக் கடன்கள் ஓராண்டில் கிட்டத்தட்ட ரூ. 17.6 லட்சம் கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதனிடையே தமிழ்நாடு அரசின் கடனும் சமீப காலமாக பெரும் விவாதப்பொருளாக மாநில அரசியலில் உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் மொத்த கடன்தொகை தற்போதுவரை ரூ.13.18 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில் இந்தியாவின் கடனே இன்றே அடைக்கலாம் என தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஒரு யோசனையை வழங்கியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய அவர்.,</p><p>“முதலமைச்சரின் சேவையை பாராட்டுவோருக்கு சேவை வரி விதித்தால், இந்தியாவின் கடனை இன்றே அடைக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.  </p>]]></content:encoded></item><item><title>‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடல் ஆக.21-ல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-jailer-to-be-released-on-august-21</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-jailer-to-be-released-on-august-21#comments</comments><guid isPermaLink="false">f62f26e5-a8a8-444c-8256-4e3ec37e8eb2</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:45:12 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:45:12.398Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,ரஜினிகாந்த்,Jailer 2,ஜெயிலர் 2,Anirudh Ravichander,அனிருத் ரவிச்சந்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/tehybdi3/New-Project-2026-08-18T191153.482.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடல் ஆக.21-ல் வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/tehybdi3/New-Project-2026-08-18T191153.482.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ல் வெளியாகி வரவேற்பை பெற்றப் படம் ஜெயிலர். ஜெயிலரின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘ஜெயிலர் 2’ உருவாகி வருகிறது. இப்படத்தையும் இயக்குநர் நெல்சனே இயக்குகிறார். </p><p>சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ஆக.21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The Feast is ready! <a href="https://x.com/hashtag/Jailer2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jailer2</a> First Single releasing on August 21 <a href="https://x.com/rajinikanth?ref_src=twsrc%5Etfw">@rajinikanth</a> <a href="https://x.com/Nelsondilpkumar?ref_src=twsrc%5Etfw">@Nelsondilpkumar</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/vijaykartikdop?ref_src=twsrc%5Etfw">@vijaykartikdop</a> <a href="https://x.com/Nirmalcuts?ref_src=twsrc%5Etfw">@Nirmalcuts</a> <a href="https://x.com/ChethanDsouza?ref_src=twsrc%5Etfw">@ChethanDsouza</a> <a href="https://x.com/AlwaysJani?ref_src=twsrc%5Etfw">@AlwaysJani</a> <a href="https://x.com/KiranDrk?ref_src=twsrc%5Etfw">@KiranDrk</a> <a href="https://x.com/hashtag/PallaviSingh?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PallaviSingh</a> <a href="https://x.com/valentino_suren?ref_src=twsrc%5Etfw">@valentino_suren</a> <a href="https://x.com/hashtag/SantoshRaju?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SantoshRaju</a> <a href="https://x.com/kabilanchelliah?ref_src=twsrc%5Etfw">@kabilanchelliah</a> <a href="https://x.com/RIAZtheboss?ref_src=twsrc%5Etfw">@RIAZtheboss</a> <a href="https://x.com/hashtag/Jailer2FromOct15?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jailer2FromOct15</a> <a href="https://t.co/PKPNXvONXH">pic.twitter.com/PKPNXvONXH</a></p>&mdash; Sun Pictures (@sunpictures) <a href="https://x.com/sunpictures/status/2089691281601729000?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>‘கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளுங்கட்சிதான்’ - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-being-part-of-the-coalition-government-we-too-are-the-ruling-party-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-being-part-of-the-coalition-government-we-too-are-the-ruling-party-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">8ea53d88-a05b-4243-bb75-ea5af1d114a4</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:28:42 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:28:42.226Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6am3cfmf/New-Project-2026-08-18T185820.306.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதான் மூலம் நாங்களும் ஆளுங்கட்சிதான்’ - திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6am3cfmf/New-Project-2026-08-18T185820.306.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக - விசிக கூட்டணித் தொடர்பாக முதலமைச்சர் விஜய்யை, விசிகத் தலைவர் திருமாவளவன் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசியதாவது;</p><p>“தவெகவோடு நாங்கள் இணைந்து 100 நாட்கள் ஆகின்றன. அவர்களோடு இணைந்து தொடர்ந்து பயணிப்போம் என்பதை நேற்று (ஆக.17) மாநாட்டிலேயே நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.</p><p>ஆளுங்கட்சியோடு பயணத்தோம், இனி ஆளுங்கட்சியாக பரிணமிப்போம் என்கிற முழக்கத்தையும் மாநாட்டில் முன்வைத்தேன். இன்று கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன்மூலம் நாங்களும் ஒரு ஆளுங்கட்சி அடையாளத்தை பெற்றிருக்கிறோம் என்பது ஒரு வளர்ச்சி.</p><p>இதனை தமிழ்நாடு மக்கள் எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி எங்களது அரசின் நிலைப்பாடு இருக்கும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பிலிப்பைன்ஸ் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/two-killed-in-school-shooting-in-southern-philippines</link><comments>https://www.maalaimalar.com/news/world/two-killed-in-school-shooting-in-southern-philippines#comments</comments><guid isPermaLink="false">4de940b5-3ca7-4ff3-9071-5ca4ba914408</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:27:32 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:27:32.295Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,Philippines,பிலிப்பைன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2kqz6ftm/Philippines0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிலிப்பைன்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2kqz6ftm/Philippines0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்குள் நடைபெற்ற 2-வது சம்பவம் இதுவாகும்.</p><p>தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஜம்போங்கா நகரில் உள்ள தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அடெினியோ டி ஜம்போங்கா (Ateneo de Zamboanga) பல்கலைக்கழகத்துடன் இணைந்த பள்ளியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் கைத்துப்பாக்கி மற்றும் ரைஃபிளைப் பள்ளி வளாகத்திற்குள் கொண்டு வந்து, வகுப்பறைக்குள் இருந்த மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் காவல்துறையினர் முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.</p><p>GMA News வெளியிட்ட காணொளியில், பலமுறை துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது மாணவர்கள் பாதுகாப்பிற்காக குனிந்து பதுங்கும் வகையிலான வகுப்பறைக்குள்ளான குழப்பமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.</p><h2>10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு</h2><p>உயிரிழந்தவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் என்று காவல்துறை தெரிவித்தது. துப்பாக்கிச் சூடு நடத்திய 9-ம் வகுப்பு மாணவர், பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை கூறியுள்ளது. மேலும் இருவர் காயமடைந்தனர்.</p><p>மத்திய பிலிப்பைன்ஸின் டக்லோபன் (Tacloban) நகரில் உள்ள ஒரு பொது உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜூன் மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. முந்தைய சம்பவத்தில், பள்ளியைச் சேர்ந்த இருவர் வளாகத்திற்குள் துப்பாக்கியால் சுட்டதில் குறைந்தது மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.</p><p>பிலிப்பைன்ஸில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான விதிமுறைகள், பின்னணி சரிபார்ப்பு மற்றும் உளவியல் பரிசோதனை உள்ளிட்டவை கடுமையானவை என்பதால், அங்கு பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரிதாகவே நிகழ்கின்றன. இருப்பினும், சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளன.</p> <h2>அதிபர் உத்தரவு</h2><p>பள்ளிகளில் வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீர்மானிக்கவும், இதுகுறித்து விசாரணை நடத்தவும் சட்ட அமலாக்க முகமைகளுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் உத்தரவிட்டார்.</p><p>"நமது குழந்தைகள் கல்வி கற்கவும், வளரவும், தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவு காணவும் நாம் அவர்களை ஒப்படைக்கும் இடங்கள்தான் நமது பள்ளிகள். அவை நம் நாட்டின் மிக பாதுகாப்பான இடங்களாகவும் இருக்க வேண்டும்," என்று மார்கோஸ்  அறிக்கையில் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காலே டெஸ்ட்: நான்காம் நாள் முடிவில் இலங்கை 84/4 - வெற்றியின் விளிம்பில் இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-need-288-runs-to-win-in-lats-day-against-india-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-need-288-runs-to-win-in-lats-day-against-india-first-test#comments</comments><guid isPermaLink="false">35e1d39d-a4b3-45bc-998b-cb4da38318d7</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:19:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:19:44.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rishabh Pant,SLvIND,ரிஷப் பண்ட்,Manav suthar,மானவ் சுதார்,இலங்கை இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mqsjsjcm/manav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ manav suthar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mqsjsjcm/manav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற கடைசி நாளில் 288 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளன.</p><p>இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>சதமடித்த படிக்கல்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 167 ரன்னும், கே.எல்.ராகுல் 82 ரன்னும், துருவ் ஜுரல் 51 ரன்னும் எடுத்தனர்.</p><p>இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>சோனல் தினுஷா சதம்</h2><p>தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சோனல் தினுஷா 100 ரன்னில் அவுட்டானார். நிரோஷன் டிக்வெலா 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>மானவ் சுதர் 4 விக்கெட்</h2><p>இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>ரிஷப் பண்ட் அரை சதம்</h2><p>178 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் அரை சதமடித்து 66 ரன்னில் அவுட்டானார். படிக்கல் 44 ரன்னும், கே.எல்.ராகுல் 35 ரன்னும் எடுத்தனர்.</p><p>இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>இலங்கைக்கு இலக்கு 372</h2><p>இதன்மூலம் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா 6 ரன்னில் அவுட்டானார். பசிந்து சுரியபந்தாரா டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய கமிந்து மெண்டிஸ் 2 ரன்னில் வெளியேறினார்.</p><p>மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லஹிரு உதாரா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 47 ஆக இருந்தது.</p><p>5வது விக்கெட்டுக்கு கேப்டன் தனஞ்செய டி சில்வா-சோனல் தினுஷா ஜோடி இணைந்து நிதானமாக ஆடியது.</p><p>இறுதியில், நான்காம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. டி சில்வா 31 ரன்னும், சோனல் தினுஷா 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.</p><p>இந்தியா சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>நாளை கடைசி நாள் என்பதால் மேலும் 288 ரன்களை எடுத்தால் இலங்கைக்கும், மேலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணிக்கும் வெற்றி கிடைக்கும். எனவே காலே டெஸ்ட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>