<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 09 Aug 2026 07:43:23 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 9 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-august-2026#comments</comments><guid isPermaLink="false">76352f68-a6e0-4f69-bc17-bafdc013c0fd</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:12:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:26:09.528Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/omtx1at6/TodayNews0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Today News Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/omtx1at6/TodayNews0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ns-chaturved-says-this-is-my-best-game-in-my-life">எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த போட்டி: சதமடித்த மதுரை வீரர் சதுர்வேத் பேட்டி</a></p><p>* மதுரை பாந்தர்ஸ் அணி கோவை அணிக்கு எதிராக 240 ரன் இலக்கை எடுத்து சாதனை வெற்றி பெற்றது.</p><p>* ஆட்ட  நாயகன் விருதை குடும்பத்தினருக்கும், முக்கியமாக எனது  தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/brett-lee-admits-vaibhav-sooryavanshis-age-still-doubted-outside-india-is-he-15">எங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கு: சூர்யவன்ஷி வயது குறித்து பிரெட் லீ</a></p><p>* நடப்பு ஐபிஎல் தொடரில் 776 ரன்களை குவித்த சூர்யவன்ஷி 4 முக்கிய விருதுகளை கைப்பற்றினார்.</p><p>* வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து வெளிநாடுகளில் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-bjp-tries-to-bring-back-delimitation-bill-with-50-percent-hike">50% உயர்வு என ஆசை காட்டி மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர முயற்சி: மாணிக்கம் தாகூர்</a></p><p>* மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி.</p><p>* சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-8-month-delay-in-power-connections-for-60000-farmers" rel="nofollow">தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா?- அன்புமணி </a></p><p>*  தவெக அரசு பதவியேற்ற நிலையில், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும்.</p><p>* 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைபை வழங்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/10-police-officers-faint-at-amit-shah-event-in-puducherry" rel="nofollow">அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்- 10 பேர் மருத்துவமனையில் அனுமதி</a></p><p>* அமைச்சர் அமித்ஷாவுக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.</p><p>* வெளியால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-15-new-judges-sworn-in-today" rel="nofollow">சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு </a></p><p>*  15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.</p><p>* 15 நீதிபதிகள் பதவியேற்கும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்வு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-inside-temples-from-september-1-minister-ramesh">செப்டம்பர் 1 முதல் கோவில்களுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை: அமைச்சர் ரமேஷ்</a></p><p>* திமுக ஆட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் பெயர் மாற்றம் செய்தனர்.</p><p>* செப்டம்பர் 1-க்குள் முதல் நிலை கோவில்கள் அனைத்திலும், மொபைல் கவுண்டர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-pays-tribute-to-quit-india-movement-heroes">வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்: போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி</a></p><p>* ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற செய் அல்லது செத்து மடி என்ற உறுதியை இந்தியர்களுக்கு வழங்கியது.</p><p>* 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கம் 1942-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row">பள்ளி வினாடி வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி: கேரளாவில் வெடித்தது அரசியல் சர்ச்சை</a></p><p>* பொதுக் கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>* சாவர்க்கரின் "உண்மையான வரலாற்றை" மறைத்து அவரைப் பெருமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக பினராயி விஜயன் விமர்சனம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-receives-warm-reception-in-puducherry" rel="nofollow">பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை.. புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு உற்சாக வரவேற்பு!</a></p><p>* புதுச்சேரியில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.</p><p>* விழாவில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை அமித்ஷா வழங்கி கவுரவிக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-makes-new-strait-demands-uae-says-ship-was-targeted">ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நிபந்தனை..!</a></p><p>* அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக்கூடாது.</p><p>* போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு முழுமையான இழப்பீடு" வழங்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-won-the-title-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அஷ்மிதா சலிஹா</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* இந்திய வீராங்கனைகள் பேட்மிண்டன் தொடரில் சிறந்து விளங்குவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/turkiye-says-defence-pact-with-saudi-arabia-and-pak-is-not-aimed-at-iran-or-any-other-country">சவுதி அரேபியா, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஈரானை குறிவைத்தது அல்ல: துருக்கி சொல்கிறது</a></p><p>* பொதுவான அச்சுறுத்தல் என்று வரையறுக்கும் வகையில் நாங்கள் எதையும் எழுதவோ அல்லது அதில் கையெழுத்திடவோ இல்லை. </p><p>* எங்களைத் தாக்காத எந்தவொரு நாடும் எங்களுக்கு இலக்கு அல்ல.</p>]]></content:encoded></item><item><title>கார் வர தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த மத்திய மந்திரி சுரேஷ்கோபி! </title><link>https://www.maalaimalar.com/news/national/suresh-gopi-travels-by-auto-as-official-car-delayed-in-alappuzha-event</link><comments>https://www.maalaimalar.com/news/national/suresh-gopi-travels-by-auto-as-official-car-delayed-in-alappuzha-event#comments</comments><guid isPermaLink="false">43580e86-7864-4f2f-9773-2107fe6c83f6</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:38:29 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:38:29.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alappuzha,Sureshgopi,சுரேஷ்கோபி,Vandebharat,CentralMinister,AutoRide,ஆட்டோபயணம்,TrichurMP</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/nx724bos/Suresh-Gopi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suresh Gopi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/nx724bos/Suresh-Gopi?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலம் திருச்சூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், மத்திய மந்திரியுமான சுரேஷ்கோபி, மிக எளிமையான தனது செயல்பாட்டால் பலரையும் ஈர்த்து வருகிறார். </p><p>அதனை நிரூபிக்கும் வகையில் ஆலப்புழாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><h2><strong>ஆலப்புழா நிகழ்ச்சியில் என்ன நடந்தது?</strong></h2><p>ஆலப்புழாவில் நடைபெற்ற ஒரு தனியார் நிறுவன திறப்பு விழாவில் மத்திய மந்திரி சுரேஷ்கோபி பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர், தனது கார் வராததால் சிறிது நேரம் காத்திருந்தார். இருப்பினும் அவருக்கான அதிகாரபூர்வ வாகனம் வரவில்லை.</p><h2>ஆட்டோவில் பயணம் - பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி:</h2><p>இதனால் சிறிதும் கவலை கொள்ளாத அவர், அந்த வழியாக வந்த ஆட்டோவை அழைத்து அதில் ஏறி பயணம் செய்தார். இதனை கண்ட அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்சி அடைந்தனர். "கார் விரைவில் வந்து விடும்" என அவர்கள் கூறினர். இருப்பினும் மத்திய மந்திரி சுரேஷ்கோபி ஆட்டோவில் தனது பயணத்தை தொடர்ந்தார்.</p><h2><strong>பாதுகாப்பு வாகனங்கள் - டிரைவருக்கு ரூ.1000:</strong></h2><p>இதனை தொடர்ந்து அந்த ஆட்டோவிற்கு பாதுகாப்பு அளித்து பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. இதனை கவனித்த உள்ளூர் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். </p><p>ஆட்டோவில் முன்னாள் எம்.பி. ஆரிப் வீட்டிற்கு சென்ற மத்திய மந்திரி சுரேஷ்கோபி, ஆட்டோவில் இருந்து இறங்கியதும், டிரைவருக்கு ரூ. 1000 கொடுத்துச் சென்றார்.</p><h2><strong>திருவனந்தபுரம் பயணம்:</strong></h2><p>பின்னர் அவர் முன்னாள் எம்.பி.ஆரிப்பை சந்தித்து பேசினார். அப்போது அவரது அதிகாரப்பூர்வ வாகனம் வந்தது. பின்னர் அதில் ஏறி அவர் ஆலப்புழா ரெயில் நிலையம் சென்றார். அங்கிருந்து வந்தேபாரத் ரெயில் மூலம் திருவனந்தபுரம் சென்றார்.</p><h2><strong>இதற்கு முன்பும் இதே போன்ற அனுபவம்:</strong></h2><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோவில் அருகிலும், ஹரிப்பாட்டில் உள்ள மன்னாரசாலை கோவிலில் பங்கு கொண்ட நிகழ்ச்சிகளிலும் மத்திய மந்திரி சுரேஷ்கோபிக்கு இது போன்ற அனுபவம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>போலீசார் விளக்கம்:</strong></h2><p>இதற்கிடையில் மத்திய மந்திரிக்கான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதா? என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை. மராரியில் உள்ள ஓட்டலில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அவர் பயணம் செய்வதற்காக, ஒரு வழிகாட்டி வாகனமும் ஒரு துணையாளரும் வழங்கப்பட்டிருந்தனர். </p><p>ஆனால் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அதிகாரப்பூர்வ கார் ஜவுளிக் கடையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. </p><p>கடையிலிருந்து வெளியே வந்த மத்திய மந்திரி கார் அருகில் இல்லாததால் ஒரு ஆட்டோவில் சென்றார்" என தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சந்தோஷ் நாராயணன் - மன்னர் முத்து கூட்டணியில் உருவான “மன்னாரு” பாடல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mannaru-song-release-by-santhanam-narayanan-and-mannar-muthu</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mannaru-song-release-by-santhanam-narayanan-and-mannar-muthu#comments</comments><guid isPermaLink="false">f10b78e7-cf49-443e-ae25-797135df5c24</guid><pubDate>Sun, 09 Aug 2026 07:30:47 +0000</pubDate><atom:updated>2026-08-09T07:30:47.042Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சந்தோஷ் நாராயணன்,santhosh narayanan,மன்னாரு பாடல்,மன்னர் முத்து,Mannaru,Mannar Muthu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/w9fnxubt/Rakida.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Santhosh Narayanan- Mannar Muthu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/w9fnxubt/Rakida.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் இசை உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், 'ரகிட' என்டர்டெயின்மென்ட் சார்பாக மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடான ‘மன்னாரு’ பாடலை ரசிகர்களுக்கு வழங்குகின்றனர். இந்த பாடல், நேற்று (ஆகஸ்ட் 8) முதல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியானது.</p><p>தனது தனித்துவமான குரலால் மன்னர் முத்து இந்தப் பாடலை பாடியுள்ளார். கென் ராய்சன் இயக்கியுள்ள இந்தப் பாடல், விறுவிறுப்பான காட்சிகளும், உற்சாகமான இசையும் இணைந்த ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது.</p><p>இப்பாடலை பாடலாசிரியர்கள் கே.காட்டியன், கானா பிரான்சிஸ் ஆகியோர் எழுதியுள்ளனர். </p><p>இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மன்னாரு’ பாடல், புதிய இசைப் பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமையும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/cNpa7v88KFE"></iframe></figure>]]></content:encoded></item><item><title>&quot;யஷ் உண்மையிலேயே ஒரு மான்ஸ்டர்!&quot;-&apos;டாக்ஸிக்&apos; பட விழாவில் நயன்தாரா நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nayanthara-praises-yash-as-real-monster-at-toxic-audio-launch</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nayanthara-praises-yash-as-real-monster-at-toxic-audio-launch#comments</comments><guid isPermaLink="false">8264a0b0-0f7d-47e6-9f83-e440039cf167</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:59:03 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:59:03.806Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yash,Toxic,டாக்ஸிக்,நயன்தாரா,Nayanthara,யஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/7yrthoig/Nayanthara.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nayanthara]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/7yrthoig/Nayanthara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்ஸிக். படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹீமாகுரேசி, தாராசுதாரியா உள்பட பலர் நடித்துள்ளனர். </p><p>வருகிற 26-ந் தேதி சர்வதேச அளவில் படம் திரைக்கு வர இருக்கிறது. கே.வி.என். புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று மாலை நடந்தது.</p><p>விழாவில் நயன்தாரா பேசியதாவது:-</p><p>நிறைய நடிகர்-நடிகைகள் நடிக்கும் படங்களை நான் ஏற்றுக் கொள்வதில்லை. அதுபோன்ற படங்களில் நடிப்பதற்கு நான் சற்று தயங்குவேன். கீது மோகன்தாஸ் இந்த படத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்தபோது நான் நடிக்க மறுத்தேன்.</p><p>ஆனால் கீது என்னிடம் 10 மில்லியன் கேள்விகளை கேட்டார். ஒரு வழியாக நான் அவரிடம் "சரி வந்து கதை சொல்" என்றேன். வந்து கதையை சொன்னதும் அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.</p><p>உடனடியாக அந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன். இது ஒரு சாதாரண படம் அல்ல. படங்களின் விளம்பர விழாக்களுக்கு செல்வதும் உரையாற்றுவதும் எனக்கு கடினமாக இருப்பதால் நான் செல்வதில்லை. ஆனால் யஷிக்காக மட்டுமே இங்கு வந்தேன்.</p><p>பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். அவர்கள் அனைவரில் இருந்தும் வேறுபட்டவர் யஷ். அவரைப் போல கடினமாக உழைக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. யஷ் உண்மையிலேயே ஒரு மான்ஸ்டர்.</p><p> இவ்வாறு அவர் கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Nayanthara?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Nayanthara</a> about not Attending Promotions:<br><br>&quot;It&#39;s not that I don&#39;t want to attend Promotional events.. It&#39;s just that I&#39;m not good very good at it.. So I stay away from it.. But this was special because so many reasons.. But i think it&#39;s just Yash.. He just made a call and It…</p>&mdash; Laxmi Kanth (@iammoviebuff007) <a href="https://x.com/iammoviebuff007/status/2086114571685953808?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பணியிடத்தில் மனரீதியாக துன்புறுத்திய மேனேஜர்  - விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/woman-dies-by-suicide-after-workplace-harassment-by-manager</link><comments>https://www.maalaimalar.com/news/national/woman-dies-by-suicide-after-workplace-harassment-by-manager#comments</comments><guid isPermaLink="false">9c5e0152-7834-413f-9d61-cd3dd0931d11</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:41:53 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:41:53.405Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தற்கொலை,suicide,Mysuru,மைசுர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/evbtb7c5/Untitled-design-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மேனேஜர் மனரீதியான துன்புறுத்தல், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட பெண்]]></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka suicide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/evbtb7c5/Untitled-design-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மைசூரில் 45 வயது பெண் ஒருவர், தான் வேலை செய்த இடத்தில் மேற்பார்வையாளர் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.</p><p>கர்நாடகா மாநில மைசூரில் நகேஸ்வரி என்பவர் பல ஆண்டுகளாக ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு மேற்பார்வையாளர் தான் வாராந்திர விடுப்புகள் கேட்டபோது அதை மறுத்துவந்ததாக கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><h3><strong>பணியிடத்தில் மன உளைச்சல்</strong></h3><p>மேலும் ஆரம்பத்தில் இருந்தே தன் மீது தவறுகள் இல்லாதபோதிலும், தவறுகளை ஒப்புக்கொள்ளும்படி வருபுறுத்தியதாகவும், உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு மூன்று நாட்கள் பணிக்கு வராததால், திடீரென தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் நாகேஸ்வரி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.    </p><p>பணியிடத்தில் தனக்கு அளிக்கப்பட்ட மன உளைச்சலால், இந்த விபரீத முடிவை எடுக்க தான் நிர்பந்திக்கப்பட்டதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><h3>கணவர் புகார்</h3><p>முன்னதாக இதுகுறித்து நாகேஸ்வரியின் கணவர் அசோக் கூறுகையில், “நான் மதியம் முழுவதும் அவளிடம் பேச பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அப்போது எந்தவிதமான பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.</p><p>இதனால் நான் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தேன். அப்பொழுது அவள், தரையில் மயங்கிய நிலையில் கிடந்தார். நான் உடனே எனது மனைவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.</p><p>அங்கு என் மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் இறந்துவிட்டதாக கூறினார்கள். இதையடுத்து என் மனைவி வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்” என்று கூறினார்.</p><p>இந்த நிலையில் அசோக் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வலைவிரித்து கோடிகளில் புரண்ட இளம்பெண்</title><link>https://www.maalaimalar.com/news/national/cheating-case-police-inquiry-woman</link><comments>https://www.maalaimalar.com/news/national/cheating-case-police-inquiry-woman#comments</comments><guid isPermaLink="false">eeda8bf9-f65c-46e2-9632-e11834d60f0b</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:30:57 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:30:57.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்கு,மோசடி,money,Case,உல்லாசம்,cheating,பணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2oogxp7q/moeny.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cheating]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2oogxp7q/moeny.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>ஆன்லைன்</strong></h2><p>ஆன்லைன் மூலமாக இன்று அத்தனையையும் பெற்று விட முடிகிறது. இதனால் இளைஞர்களும், இளம் பெண்களும் வேறு விதமாகவும் சிந்திக்கிறார்கள். சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்கள் பல்வேறு தவறான வழிகளிலும் திசைமாறி சென்றுக் கொண்டு இருக்கிறார்கள். </p><h2><strong>கலாசார சீரழிவு</strong></h2><p>ஒரு ஆண்ணும், பெண்ணும் பேசி பழகி தான் வெளியில் செல்ல வேண்டும் என்கிற நிலை எல்லாம் இப்போது இல்லை. வெளியில் ஒன்றாக சுற்றுவதற்கு இளம்பெண்களை ஆன்லைனிலேயே தேர்வு செய்யும் அளவுக்கு கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>உல்லாசம்</strong></h2><p>பல்வேறு செயலிகள் இதற்காக தொடங்கப்பட்டு ஆண்களுக்கும், பெண்களுக்கும் வலைவிரித்து கொண்டுள்ளன. குறிப்பாக செயலிகள் மூலமாக பெண்களை தேர்வு செய்து அவர்களுடன் வெளியில் தங்கி உல்லாசமாக வாழ்வதையும் இளைஞர்கள் வழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.</p><h2><strong>மாநிலம்</strong></h2><p>தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே ஆபாச செயலிகள் மூலமாக பலரும் பணத்தை இழந்து வருகிறார்கள். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வலைவிரித்து கோடிகளில் புரண்டுள்ளார்.</p><h2><strong>சாட்டிங்</strong></h2><p>உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற அந்த இளம்பெண் பல்வேறு பெயர்களில் சமூக வலைதள கணக்குகளை தொடங்கி அதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு உள்ளார். முகம் தெரியாத ஆண்களிடம் ஆரம்பத்தில் சாட்டிங்கில் பேசத் தொடங்கும் இவர் நாளடைவில் ஆபாசமான பேச்சுக்களையும் அள்ளி வீசியுள்ளார்.</p><h2>புகைப்படம்</h2><p>பல்லவி சிங்கின் இந்த மயக்கும் பேச்சில் வாலிபர்கள் பலர் கிறங்கி போய் கிடந்துள்ளனர். அதனை பயன்படுத்தி அவர்களோடு வெளியில் சென்று தனியறையில் தங்கியுள்ள பல்லவி சிங் அரைகுறை ஆடைகளோடு இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.</p><h2><strong>பணம்</strong></h2><p>இதுபோன்ற ஆபாச வீடியோக்களை பயன்படுத்தி இதற்கு முன்னரும் பெண்கள் பலர் மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவங்கள் அரங்கேறியுள்ள போதிலும் பல்லவி சிங் அதன் மூலமாக பல கோடிகளை ரூபாயை பறித்து இருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.</p><h2><strong>வீடியோக்கள்</strong></h2><p>வசதிப் படைத்தவர்கள் வலையில் விழுந்ததும் பல்லவி சிங் தனது வேலையை காட்டத் தொடங்கிவிடுவார். உன்னுடைய ஆபாச வீடியோக்கள் என்னிடம் நிறைய உள்ளது. அதையெல்லாம் வெளியில் விட்டால் மானம் போய்விடும் என்று தன்னிடம் சிக்கும் வாலிபர்களிடம் பேசி அவர்களிடம் இருந்து அதிகளவில் பணத்தை கறப்பதே வாடிக்கையாக வைத்திருந்த பல்லவி சிங் ரூ.6 கோடி வரையில் சுருட்டி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை வீட்டில் ஒரு அறையில் அடுக்கி அதனை மெத்தையாகவும் மாற்றி இருக்கிறார்.</p><h2><strong>துப்பாக்கி</strong></h2><p>பின்னர் அந்த பண மெத்தையில் படுத்து புரளுவது போன்ற வீடியோக்களையும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த படி பல்லவி சிங் எடுத்த புகைப்படமும் அவரது பண மெத்தை வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது மிரட்டலுக்கு பணியாத ஆண்களை பல்லவி சிங் சிறையிலும் தள்ளி இருக்கிறார்.</p><h2><strong>பாலியல் வன்கொடுமை</strong></h2><p>பணம் தர மறுத்து அடம்பிடிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்து உள்ளார். இதுபோன்று 5 பேர் வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றசாட்டுகள் கூறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சிறை</strong></h2><p>பணம் தர மறுத்த பலரிடம் ஒழுங்காக தான் சொல்வதை கேட்காவிட்டால் சிறைக்கு தான் செல்ல வேண்டும். ஏற்கனவே 5 பேரை சிறையில் அடைத்துள்ளேன் என்று மிரட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் பல்லவி சிங்குடன் தொடர்பில் இருந்த பெரிய மனிதர்கள் பலர் எங்கே தங்கள் மானம் போய்விடுமோ என்கிற பயத்தில் கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள்.</p><h2><strong>மோசடி</strong></h2><p>சுவீட்டி திவாரி என்கிற பெயரிலும் தனியாக சமூக வலைதள கணக்கை தொடங்கி அதன் மூலமாகவும் பல வாலிபர்களை பல்லவி சிங் தனது வலையில் வீழ்த்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரது இந்த மோசடிக்கு மேலும் தோழிகள் இருவரும், ஆண் நண்பர்கள் 2 பேரும் பெரிய அளவில் உதவிகளை செய்து வந்துள்ளனர்.</p><h2><strong>கருத்து</strong></h2><p>இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பல்லவி சிங்கின் இந்த செயல் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமுக வலைதளங்களில் அவரது இந்த செயலை பலரும் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர் இப்படி எல்லாம் ஏமாற்ற முடியுமா? வாழ்ந்தா இப்படி வாழனும் என்பது போன்ற கருத்துக்களையும் கிண்டலுடன் பதிவிட்டு உள்ளனர்.</p><h2><strong>போலீசார்</strong></h2><p>இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உத்தரபிரதேச மாநில போலீசார் சமூக வலைதளங்களை பயன் படுத்துபவர்கள் தேவையில்லாமல், அறிமுகமில்லாம் நபர்களோடு பழகினால் இதுபோன்ற ஆபத்துகளில் சிக்க நேரிடும் என்றும் எனவே முன்பின் அறிமுகம் இல்லாதவர்களோடு ஆன்லைன் மூலமாக எந்த தொடர்பும் வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளனர். ஆபாச டேட்டிங் செயலியில் யாருடனாவது தொடர்பில் இருக்கிறீர்களா?... உஷார்.</p>]]></content:encoded></item><item><title>போதை இல்லா தமிழகம்: சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்கிறார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wide-anti-drug-pledge-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wide-anti-drug-pledge-campaign#comments</comments><guid isPermaLink="false">b82a3e9d-10e3-4b2d-bb7f-0aac0b17701f</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:23:44.180Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>college students,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,போதை இல்லா தமிழகம்,மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்பு,Anti drug campaign</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/7j49oz6s/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/7j49oz6s/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கவும், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.</p><h2>உறுதிமொழி</h2><p>அந்த வகையில் போதைப் பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார்.</p><p>தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.</p><p>இதை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.</p><p>சென்னை மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கல்லூரி மாணவ-மாணவியர் ஏராளமானோர் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.</p><p>இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யுடன் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் சிறப்பாக பணியாற்றிய மதுவிலக்கு போலீசாருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார்.</p><p>சென்னையில் நிகழ்ச்சி நடைபெறுவதை போன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.</p><h2>மாரத்தான் ஓட்டம்</h2><p>கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி நடைபெற்ற சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மெரீனாவில் தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் விஜய் அதில் பொதுமக்களுடன் இணைந்து ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கொசோவோ பாராளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டைகளை வீசிய பெண் எம்.பி.</title><link>https://www.maalaimalar.com/news/world/kosovo-opposition-throws-eggs-at-the-prime-minister</link><comments>https://www.maalaimalar.com/news/world/kosovo-opposition-throws-eggs-at-the-prime-minister#comments</comments><guid isPermaLink="false">418bb542-5c9a-40f6-8ee8-0fc300635bbd</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:08:43 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:08:43.682Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Kosovo,கொசோவோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dw0vfkzu/EggsThrow.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முட்டை வீச்சு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dw0vfkzu/EggsThrow.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசோவோ நாட்டில் பிரதமராக அல்பின் குர்தி உள்ளார். இந்த நிலையில் கொசோவோ பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பிரதமர் அல்பின் குர்தி அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி எதிர்க்கட்சி பெண் எம்.பியான டைம் கத்ரிஜாஜ் வந்தார்.</p><p>அவர் திடீரென்று முட்டைகளை பிரதமர் அல்பின் குர்தி மீது சரமாரியாக வீசினார். உடனே பிரதமரை பாதுகாப்பு படையினர் சூழந்து கொண்டனர். கத்ரிஜாஜை பாதுகாப்பு படையினரும், சக எம்.பிக்களும் தடுத்து நிறுத்தினர். இதனால் பாராளுமன்றத்தில் பரபரப்பு நிலவியது.</p><p>ஜூன் மாதம் நடந்த தேர்தலில் அல்பின் குர்தியின் கட்சி 120 இடங்களில் 53 இடங்களைப் பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து இடைக்கால பிரதமராக அல்பின் குர்தி பொறுப்பேற்றார். இதற்கிடையே புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பது குறித்த ஒப்பந்தத்தை எட்ட கூடுதல் அவகாசம் வழங்குமாறு எம்.பி.க்களிடம் அல்பின் குர்தி கோரியபோது இந்த முட்டை வீச்சு சம்பவம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>தாம்பத்தியத்தில் ஈடுபடாத கணவர் மீது வழக்கு தொடர்ந்த மனைவி - உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/marital-discord-cannot-be-treated-as-cruelty-karnataka-hc</link><comments>https://www.maalaimalar.com/news/national/marital-discord-cannot-be-treated-as-cruelty-karnataka-hc#comments</comments><guid isPermaLink="false">0c284109-dc28-48ab-b716-7200b23f8cb7</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:04:32 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:04:32.102Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Karnataka High Court,marriage,கர்நாடகா உயர் நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/j5svnm83/Untitled-design-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாம்பத்தியம் இல்லாதது மட்டும் கொடுமை வழக்காகாது என்று நீதிமன்றம் தெளிவு ]]></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka High Court ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/j5svnm83/Untitled-design-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருமண வாழ்வில் பொருந்தாமை, இல்லறத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாமை ஆகியவற்றை, கொடுமைக்கான வழக்காக மாற்றுவதற்கு குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>கர்நாடகாவில் காவல்துறையில் பணிபுரியும் தம்பதிகளுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது.</p><p>திருமணமாகி நான்கு மாதங்களான நிலையில், அவர்களுக்குள் தாம்பத்தியம் நடைபெறவில்லை என்று கூறி திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து கர்நாடகாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் திருமணமான அந்த பெண் அதிகாரி வழக்கு தொடர்ந்தார்.</p><p>இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 498A, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் பெண்ணின் கணவர் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.</p><h3><strong>உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்</strong></h3><p>இதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட கணவர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது அவர், இந்திய தண்டனை சட்டம் 498A பிரிவின் கீழ், முழுமையடையாத திருமண உறவை ஒருபோதும் கொடுமைக்கான குற்றமாக பார்க்க முடியாது என்று வாதிட்டார்.</p><p>மறுபுறம் கணவர் குறித்து அவரின் மனைவி கூறுகையில், “நாம் நண்பர்களாக மட்டும் இருப்போம் என்று என் கணவர் தொடர்ந்து கூறி வந்தார். மேலும் அவர் மற்றொரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார்” என்று கூறினார்.</p><p>இந்த மனு நீதிபதி எம். நாகபிரசன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொது நீதிபதி, “குறுகிய கால திருமண வாழ்வில் கணவர் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை என்ற ஒரே ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கின் முழு கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>நீதிபதி தீர்ப்பு</strong></h3><p>திருமண பொருத்தமின்மை, திருமண வாழ்வில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாமை ஆகியவற்றை கொடுமைக்கான வழக்காக மாற்றுவதற்கு குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது” என்று தீர்ப்பளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா?- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-8-month-delay-in-power-connections-for-60000-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-8-month-delay-in-power-connections-for-60000-farmers#comments</comments><guid isPermaLink="false">acc28ae9-9878-439f-8935-056718d9abd7</guid><pubDate>Sun, 09 Aug 2026 05:42:31 +0000</pubDate><atom:updated>2026-08-09T05:42:31.174Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>anbumani,அன்புமணி,farmers,விவசாயிகள்,மின் இணைப்பு,Electricity</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aqv6hnfp/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PMK LEADER ANBUMANI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aqv6hnfp/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 8 மாதமாக இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாட்டில் நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்வதற்காக இலவச மின்சார இணைப்புக் கோரி தட்கல் திட்டத்தின்படி விண்ணப்பித்த 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 8 மாதங்களாக மின்இணைப்பு வழங்காமல் மின்வாரியம் தாமதப்படுத்தி வருகிறது.</p><p>வறட்சியால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் உழவர்களிடம் ரூ.1250 கோடிக்கும் கூடுதலாக வசூலித்துக் கொண்டு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.</p><p>இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்றைத் தவிர தமிழ்நாட்டிலேயே தோன்றி தமிழ்நாட்டுக்குள் பாயும் ஆறுகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.</p><p>காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை உள்ளிட்ட ஆறுகள் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு பாசன ஆதாரமாக திகழ்கின்றன என்றாலும், இவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கர்நாடகம் கேரளம் போன்ற அண்டை மாநிலங்களில் இருப்பதால், அந்த மாநிலங்கள் மனம் வைத்தால் தான் இவற்றில் தண்ணீர் வரும்.</p><p>அதுமட்டுமின்றி, கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பெரிய அளவிலான பாசனத் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாததால், மாநிலத்தின் ஒட்டுமொத்த பாசனப் பரப்பில் 55% நிலங்கள் மட்டுமே ஆறுகள் மற்றும் கால்வாய் பாசன ஆதாரங்களை நம்பியுள்ளன. மீதமுள்ள 45% நிலங்களில் நிலத்தடி நீரை நம்பித் தான் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.</p><p>நிலத்தடி நீரை நம்பியுள்ள பகுதிகளில் பம்ப் செட்டுகளை இயக்குவதற்காக இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான மின் இணைப்பை பெறுவது தான் உலகில் மிகவும் கடினமான செயலாகும்.</p><p>தமிழ்நாட்டில் ஏற்கனவே 23.56 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 லட்சம் பேர் இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். </p><p>இலவச மின் இணைப்பை முன்னுரிமை அடிப்படையில் பெறுவதற்காக தட்கல் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் அவ்வப்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக இணைப்பு வழங்கப்படும்.</p><p>வேளாண் பம்ப் செட்டுகளுக்கான இலவச மின் இணைப்பு பெறுவற்காக தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு திசம்பர் மாதம் திமுக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து திசம்பர் 31&amp;ஆம் தேதி வரை 47,554 விவசாயிகள் விண்ணப்பித்தனர். </p><p>அதுமட்டுமின்றி, இலவச மின்சார இணைப்புக்காக   5 குதிரைத்திறன் வரை ரூ.2.50 லட்சம், 5 முதல் 7.5 குதிரைத்திறன் வரை ரூ.2.75 லட்சம், 7.5 முதல் 10 குதிரைத் திறன் வரை ரூ.3 லட்சம், 10 முதல் 15 குதிரைத்திறன் வரை ரூ.4 லட்சம் வீதம் உழவர்கள் கட்டணம் செலுத்தினர். </p><p>விண்ணப்பித்தவர்களில் முதல்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு 15 நாள்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. ஆனால், 8 மாதங்களாகியும் ஒரே ஒரு இணைப்பு கூட வழங்கப்படவில்லை.</p><p>தட்கல் திட்டத்தின்படி விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் நிலத்தடி நீரைக்கொண்டு குறுவை சாகுபடி செய்திருப்பார்கள். ஆனால், மின்சார இணைப்பு வழங்கப்படாததால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் உழவர்கள் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறார்கள். </p><p>தட்கல் மின் இணைப்புக்காக  47,554 உழவர்களும் சேர்ந்து சுமார் ரூ.1250 கோடி முன்பணமாக செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு முன்பாக கடந்த 2023&amp;ஆம் ஆண்டில் இதே தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 12,566 உழவர்கள் ரூ.250 கோடிக்கும் கூடுதலாக முன்பணம் செலுத்தியுள்ளனர். </p><p>விண்ணப்பித்த விவசாயிகள் எவரும் கோடீஸ்வரர்கள் இல்லை. அவர்களில் பெரும்பான்மையினர் வட்டிக்கு கடன் வாங்கி தான் முன்பணத்தை செலுத்தியுள்ளனர். அதற்காக வாங்கிய கடனுக்கு வட்டியும் செலுத்த முடியாமல், குறுவை சாகுபடி செய்ய முடியாததால் வருவாயும் ஈட்ட முடியாமல் பெரும் துயரத்தில் விவசாயிகள் ஆழ்ந்திருக்கின்றனர். அவர்களின் கடன் சுமை அதிகரித்திருக்கிறது.</p><p>வேளாண் இலவச மின்சாரத்திற்கான இணைப்புக்காக 60,120 உழவர்களிடமிருந்து ரூ.1500 கோடியை வசூலித்திருக்கும் மின்சார வாரியம் மின் இணைப்பை வழங்க மறுப்பது பெரும் அநீதி ஆகும். தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாள்களிலிருந்து 90 நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட  வேண்டும் என்பது விதியாகும். </p><p>ரூ.1000 மின் கட்டணம் செலுத்தத் தவறும் விவசாயிகளின் மின் இணைப்பை  உடனடியாக துண்டிக்கும் மின்சார வாரியம், அவர்களிடமிருந்து ரூ.1500 கோடியை வசூலித்து வைத்துக் கொண்டு 12,566 பேருக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாகவும், மீதமுள்ளவர்களுக்கு 8 மாதங்களாகவும் மின்சார இணைப்பு வழங்க மறுப்பது உழவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். இதை நியாயப்படுத்த முடியாது.</p><p>திமுக ஆட்சியில் தான் இலவச மின் இணைப்புக்காக உழவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றாலும், அடுத்த சில வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தான் மின் இணைப்புகள் வழங்கப் படவில்லை என்று கூறப்படுகிறது.</p><p>தேர்தலுக்குப் பிறகு தவெக அரசு பதவியேற்ற நிலையில், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திமுக அரசுக்கு போட்டியாக தவெக அரசும் மின் இணைப்பு வழங்காமல் துரோகம் செய்திருக்கிறது, இதை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.</p><p>விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது, வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாதது, பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது உள்ளிட்ட காரணங்களால் உழவர்கள் ஏற்கனவே பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். </p><p>அவர்களிடம் ரூ.1500 கோடி வசூலித்துக் கொண்டு மின் இணைப்பு வழங்காமல் அவர்களுக்கு கூடுதல் துயரத்தை அரசு வழங்கக் கூடாது. தட்கல் திட்டப்படி விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைபை வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>50% உயர்வு என ஆசை காட்டி மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர முயற்சி: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-bjp-tries-to-bring-back-delimitation-bill-with-50-percent-hike</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-bjp-tries-to-bring-back-delimitation-bill-with-50-percent-hike#comments</comments><guid isPermaLink="false">b54475cd-e2b9-4964-bef0-d89e388cfe2d</guid><pubDate>Sun, 09 Aug 2026 05:15:15 +0000</pubDate><atom:updated>2026-08-09T05:15:15.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbwf6wy9/Manickam-tgore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbwf6wy9/Manickam-tgore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'இந்தியா' கூட்டணியால் கடந்த ஏப்ரல் 17 அன்று மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை, </p><p>50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><p>காங்கிரஸ் எம்.பி.யும், தமிழக காங்கிரஸ் தலைவருமான மாணிக்கம் தாகூர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>மோடி-லிமிட்டேஷன் (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி!</p><p>கடந்த ஏப்ரல் 17 அன்று 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை, </p><p>50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.</p><h2>ஏன் இந்த மசோதாவை நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்?</h2><p>* மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி!</p><p>* 50% உயர்வு மூலம் உத்தரப் பிரதேசம் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாடு 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும்!</p><p>* எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும்.</p><p>*  கடந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தி, 2001-ல் வாஜ்பாய் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பாஜக துடிக்கிறது.</p><h2>பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது</h2><p>* சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.</p><p>இன்று (ஆகஸ்ட் 9- வெள்ளையனே வெளியேறு நாள்) நடைபெறவுள்ள 'QUIT UNFAIR DELIMITATION MARCH' பேரணி என்பது செயல்முறைகளை விளக்குவதற்கான நிகழ்வு அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நாம் நடத்தும் உரிமைப் போராட்டம்!</p> <p>நமது மாநிலத்தின் சுயமரியாதையையும் அரசியல் உரிமைகளையும் எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லவே இந்தப் நடைபயணம்.</p><p>மேலும், இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 'Unfair Delimitation' பாடலை உருவாக்கிய தம்பி சலாம் மாஸ் அவர்களுக்கும், அவரது தொடர் முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! </p><p>இது நம் அனைவரின் உரிமைக்கானப் போராட்டம்! தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்!</p><p>இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்- 10 பேர் மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/10-police-officers-faint-at-amit-shah-event-in-puducherry</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/10-police-officers-faint-at-amit-shah-event-in-puducherry#comments</comments><guid isPermaLink="false">a28c9762-1946-4f33-bfb6-dcb3b96a2fed</guid><pubDate>Sun, 09 Aug 2026 05:07:44 +0000</pubDate><atom:updated>2026-08-09T05:07:44.859Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி,அமித்ஷா,Amitshah,Pondycherry,காவலர்கள் மயக்கம்,Police faint</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/4vtgdybp/police.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Police faint in Pondycherry]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/4vtgdybp/police.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரியில் காவல்துறை அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உள்ளிட்ட 10 பேர் மயக்கமடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>காவல்துறை அணிவகுப்பின்போது வெளியால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>புதுச்சேரியில் அமித்ஷா</h2><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று புதுச்சேரிக்கு வருகை தந்தார்.</p><p>புதுவை காவல்துறையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழாவில் அமித்ஷா பங்கேற்றுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.</p><p>அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.</p><p>பின்னர், அமைச்சர் அமித்ஷாவுக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.</p><h2>வண்ணக்கொடி விருது</h2><p>புதுச்சேரி கோரிமேட்டில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை அமித்ஷா வழங்கி கவுரவிக்கிறார்.</p><p>புதுவையில் அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அமித்ஷா தேசியக்கொடி பேரணியை தொடங்கி வைக்கிறார்.</p><h2>பாதுகாப்பு</h2><p>மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி புதுச்சேரியில் டிரோன் பறக்கத்தடை, போக்குவரத்தில் மாற்றம், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><h2>மயக்கம்</h2><p>புதுச்சேரியில் காவல்துறை அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உள்ளிட்ட 10 பேர் மயக்கமடைந்தனர்.</p><p>காவல்துறை அணிவகுப்பின்போது வெளியால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-15-new-judges-sworn-in-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-15-new-judges-sworn-in-today#comments</comments><guid isPermaLink="false">f2dafb6b-41e5-4970-83f4-827bfdbdfa8b</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:41:40 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:41:40.766Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt,நீதிபதிகள்,sworn in,நீதிபதிகள் பதவியேற்பு,New justice</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2lw0mr91/chennai-high-court.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2lw0mr91/chennai-high-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர்.</p><p>புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.</p><p>15 நீதிபதிகள் பதவியேற்கும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 9-ஆக குறைந்துள்ளது.</p><p>இதில், மாவட்ட நீதிபதிகளான பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகர், எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன், என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ஆர்.விவேகானந்தன், எஸ். ரவிக்குமார், வழக்கறிஞர்கள் என்.திலீப்குமார், எ.மனோகரன், கே.கோவிந்தராஜன் ஆகியோர் நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.</p><p>அவர்களின் வாழ்க்கை வரலாறு விவரம் வருமாறு:-</p><p>நீதிபதி கே.கோவிந்தராஜன், 1972-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பிறந் தார். 1994-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய் தார். 1999-ம் ஆண்டு வரை குளித்தலை கோர்ட்டிலும், அதன்பின்னர் ஐகோர்ட்டிலும் பணியாற்றினார். ஐகோர்ட்டு மதுரை கிளையில், மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்தார்.</p><h2>ரஜினீஸ் பத்தியால்</h2><p>நீதிபதி ரஜினீஸ் பத்தியால் 1973-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி பிறந்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பி.ஏ., பி.எல். பட்டத்தை 1996-ம் ஆண்டு முடித்தார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். சட்டப்ப டிப்பை முடித்தார்.</p><h2>என்.ரமேஷ்</h2><p>நீதிபதி என்.ரமேஷ், 1973-ம் ஆண்டு வேலூரில் பிறந்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை படித்தார்.</p><p>சிவில் நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றி அந்த பதவியை ராஜி னாமா செய்துவிட்டு, 2009-ம் ஆண்டு மீண்டும் வக்கீலானார். பல் வேறு வழக்குகளில் ஆஜராகி வந்த இவர், மத்திய அமலாக்கத் துறை சிறப்பு குற்றவியல் வக்கீலாக பணியாற்றி வந்தார்.</p><h2>ஜி.கே.முத்துக்குமார்</h2><p>நீதிபதி ஜி.கே.முத்துக்குமார் 1974-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பிறந்தார். பெங்க ளூரு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து, வக்கீலாக பதிவு செய்தார். 2020-2021-ம் ஆண்டுகளில் இவர் தமிழ்நாடு அர சின் சிறப்பு அரசு பிளீடராக பணியாற்றினார்.</p><h2>ஆர்.ராஜேஷ் விவேகானந்தன்</h2><p>நீதிபதி ஆர்.ராஜேஷ் விவேகானந்தன், 1975-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தார். இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள தாண்டவன்காடு ஆகும். ஸ்ரீவைகுண் டம் கே.ஜி.எஸ். பள்ளியிலும், பணிக்க நாடார் குடியிருப்பில் உள்ள ஸ்ரீகணேசர் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார்.</p><p>மதுரை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து, 1998-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். முதலில் தந்தையிடம் ஜூனியராக பணி யாற்றி, பின்னர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.</p><p>மத்திய அரசின், துணை சொலிசிட்டர் ஜெனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவியின் பெயர் ஆர்.முத்துலட்சுமி, மகன் மதுசூ தன் ராமகிருஷ்ணன். நீதிபதியின் தந்தை எஸ்.ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்டத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.</p><h2>எஸ்.ரவிக்குமார்</h2><p>நீதிபதி எஸ்.ரவிக்குமார், 1977-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பிறந் தார். சென்னை ஐகோர்ட்டில், வக்கீலாக பணியாற்றி வந்தார். சிவில், கிரிமினல் என்று ஏராளமான வழக்குகளில் ஆஜராகி திறம் பட வாதிட்டார். இவர் புதுச்சேரி மாநில அரசு பிளீடராக பணியாற்றி வந்தார்.</p><h2>என்.திலீப்குமார்</h2><p>நீதிபதி என்.திலீப்குமார், 1980-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி பிறந் தார். சிவகாசியில் உள்ள எஸ்.எச்.என்.வி. மெட்ரிக்குலேசன் பள்ளி யில் பள்ளிப்படிப்பையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல் லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து 2002-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார்.</p><p>சென்னை, மதுரை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். இவரது தந்தை நாகராஜன், சிவகாசியில் தொழிலதிபராக உள்ளார். தாயார் பெயர் அமுதா. நீதிபதி திலீப்குமாரின் அக்காள் ஜெயந்தி, சிவகாசி யில் ஆசிரியையாகவும், அண்ணன் தர்மர் விருதுநகர் மாவட்டத்தில் வக்கீலாகவும் உள்ளனர்.</p><p>நீதிபதி என்.திலீப்குமாரின் மனைவி ராஜ முருகேஸ்வரி சட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர்களது மகள் நபான்யா மீனாட்சி எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். மகன் பெரிய சாமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.</p><h2>எ.மனோகரன்</h2><p>நீதிபதி எ.மனோகரன், 1978-ம் ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி பிறந் தார். எஸ்.ஆர்.எம். கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. மைக்ரோ பயா லாஜி பட்டப்படிப்பும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி யில் சட்டப்படிப்பையும், சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப்படிப்பையும் முடித்து, 2003-ம் ஆண்டு பார் கவுன்சி லில் நீதிபதி எ.மனோகரன் வக்கீலாக பதிவு செய்தார். 2016-2019-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் கூடுதல் அரசு பிளீடராக பணியாற்றினார்.</p><h2>பி.முருகன்</h2><p>நீதிபதி பி.முருகன் 1974-ம் ஆண்டு மே 20-ந்தேதி பிறந்தார். திரு வண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நீதிபதி பி.முருகன், 1989-ம் ஆண்டு 10-ம் வகுப்பில் பள்ளியில் 3-வது மாணவனாகவும், 1991-ம் ஆண்டு 12-ம் வகுப்பில் முதல் மாணவனாகவும் தேர்ச்சி பெற்றார். திண்டிவனம் ஏ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி., கணிதம் பட்டப்படிப்பை முடித்தார். </p><p>சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னை ஐகோர்ட்டில் வக் கீலாக தனியாக பணியாற்றியபோது, முதுகலை சட்டப்படிப்பை முடித்தார். அதைத்தொடர்ந்து 10 முதுகலை பட்டங்களையும், அரசி யல் அமைப்புச் சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 2011-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட இவர், தமிழ் நாட்டில் பல்வேறு கோர்ட்டுகளில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார்.</p><h2>எஸ்.கார்த்திகேயன்</h2><p>நீதிபதி எஸ்.கார்த்திகேயன், சேலம் மாவட்டம், நங்கவள்ளி கிராமத் தில் பிறந்தார். அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு (1996-2001) சட்டப்படிப்பை முடித்து, பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார்.</p><p>ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.பிர காஷ், தற்போது ஐகோர்ட்டு நீதிபதியாக உள்ள ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் ஜூனியராக பணியாற்றினார்.</p><p>2014-ம் ஆண்டு மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022-ம் ஆண்டு டிசம்பர் வரை புதுச்சேரி அரசின் சட்டத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.</p><h2>என்.குணசேகரன்</h2><p>நீதிபதி என்.குணசேகரன், 1976-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி கோவையில் பிறந்தார். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.எஸ்சி., படித்த நீதிபதி என்.குணசேகரன், கோவை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து, 2002-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். 2014-ம் ஆண்டு நடந்த மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வில் வெற்றிப் பெற்று நெல்லை மகளிர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட் டார். பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி தற் போது, சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். </p><h2>எஸ்.அல்லி</h2><p>நீதிபதி எஸ்.அல்லி 1966-ம் ஆண்டு ஜூன் 11-ந்தேதி பிறந்தார். 6 சகோதரிகளுடன் பிறந்த நீதிபதி எஸ்.அல்லி, சீர்காழி தாலுகாவில் உள்ள வடரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியிலும், சிதம்பரம் நந்தனார் பெண்கள் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.</p><p>பின்னர் மாஜிஸ்திரேட்டு பத விக்கான தேர்வில் வெற்றி பெற்று கும்பகோணம் மாஜிஸ்திரேட்டாக பதவி ஏற்றார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளராக பணியாற்றி கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார்.</p><p>இவர்களுடன் நீதிபதிகள் எம்.டி.சுமதி, பி.முருகேசன், டி.திருமகள் ஆகியோரும் பதவி ஏற்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 1 முதல் கோவில்களுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை: அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-inside-temples-from-september-1-minister-ramesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-inside-temples-from-september-1-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">98520d9a-1e82-4c59-b84f-64eb0a8f8409</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:40:28 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:40:28.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Ramesh,hindu religious minister</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/bulhh1nv/Untitled-design-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செப்டம்பர் 1 முதல் முதல் நிலை கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல முடியாது ]]></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/bulhh1nv/Untitled-design-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சியில் உள்ள திருவரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-</p><p>நிர்வாக ரீதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டு, கோபுரம் திறப்பு இன்று நடத்தப்பட்டுள்ளது.</p><p>தற்போழுது இருக்கக்கூடிய நிலம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் அறக்கட்டளையின் கீழ் அல்லது அந்த அறக்கட்டளையை நிர்வகிக்கும் நபர்களின் பெயர்களில் இருக்ககூடிய நிலங்களாக உள்ளது.</p><p>அந்த நிலத்தை என்ன பயன்பாட்டிற்காக முன்னோர்கள் அவர்களிடம் கொடுத்தார்கள் என்று பார்க்கும்போது, கோவில்களுக்கு தர்ம காரியங்கள் செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதிக இடங்களில் கோவில் நிலம் கொடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை மறைத்துவிட்டு, அறநிலையத்துறையின் கவனத்திற்கு வராமல் முறைகேடான பத்திரப்பதிவுகளில் சில பேர் ஈடுபடுகின்றனர்.</p><p>இந்த விவகாரங்கள் குறித்து எங்களுக்கு தகவல் தெரிந்தவுடன் நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p><p>எந்தவொரு காலத்திலும் இதுபோன்ற கோவில் சொத்துகளும் மற்றும் அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்ட சொத்துக்களும், அதன் உரிய நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.</p><h3><strong>பழனி கோவில் நில மோசடி</strong></h3><p>பழனியில் எவ்வாறு நீதிமன்றத்தின் ஒரு மறுப்பு ஆணையை வைத்துக்கொண்டு, அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்தார்களோ, அந்த மாதிரியான விஷயங்கள் தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.</p><p>மேலும் பழனி கோவில் குறித்தான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, “ஏற்கனவே இவர்கள் தனி நீதிபதியையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றி, இதுபோன்ற ஒரு ஆணையை பெற்றுள்ளனர்” என்று நீதிமன்றமே கூறியுள்ளது.</p><h3><strong>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி</strong></h3><p>கடந்த கால ஆட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு இடத்தை தனி நபர்கள் பெயர் மாற்றம் செய்தனர்.</p><p>இந்த வழக்கு குறித்து, கடந்த ஐந்து வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இன்று நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், கோவில் மோசடியில் ஈடுபட்ட 19 பேர் மீது காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h3><strong>மொபைல்போன் தடை</strong></h3><p>ஏற்கனவே கோவில்களுக்குள் மொபைல்போன்களை அனுமதிக்க கூடாது என நீதிமன்ற உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் கடைபிடிக்கப்படாமல் இருந்தது.</p><p>எனவே செப்டம்பர் 1-க்குள் முதல் நிலை கோவில்கள் அனைத்திலும், மொபைல் கவுண்டர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் கோவில்களுக்குள் மொபைல் போன்கள் எடுத்து செல்வது தடுத்து நிறுத்தப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜெயிலில் இருக்கும் காதலரை சந்திக்க துப்பாக்கி குண்டுகளுடன் சென்ற மைனர் காதலி: சொன்ன பதில்தான் ஹைலைட்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/10-bullets-in-pocket-up-girl-visits-jail-to-meet-lover-then-this-happens</link><comments>https://www.maalaimalar.com/news/national/10-bullets-in-pocket-up-girl-visits-jail-to-meet-lover-then-this-happens#comments</comments><guid isPermaLink="false">c0708711-71c4-413b-9cc4-ff5d94c785d0</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:29:02 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:29:02.873Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தர பிரதேசம்,jail</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dnkz39se/PoliceStation.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹோண்டா சிறைச்சாலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/dnkz39se/PoliceStation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள சிறையில் வாலிபர் ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஒரு நபரின் துணையோடு மைனர் பெண் ஒருவர் (பள்ளி மாணவி) சந்திக்க சென்றுள்ளார். அப்போது, போலி அடையாள அட்டையை சிறைச்சாலை நுழைவாயில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.</p><p>அப்போது, கட்டாய சோதனை என்ற அடிப்படையில் அந்த சிறுமியிடம் சோதனை நடத்தியுள்ளனர். அப்போதுதான் அவர் போலி அடையாள அட்டையுடன் வந்ததுடன், பாக்கெட்டில் 10 துப்பாக்கி குண்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, என்னுடைய காதலரை சந்திக்க வந்தது என்னுடைய அப்பாவுக்கு தெரியாது. தனது தந்தைக்கு கோபம் அதிகம். சிறையில் உள்ள தன் காதலனை சந்திக்கச் சென்றது தெரிந்தால் அவர் தீவிரமான அல்லது கடுமையான நடவடிக்கையை எடுப்பார். அதனால்தான் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை எடுத்து வந்ததாக தெரிவித்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து அந்த மைனர் பெண்ணை சிறைத்துறை அதிகாரிகள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த பெண்ணின் தந்தை லைசென்ஸ் துப்பாக்கி வைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்: போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-pays-tribute-to-quit-india-movement-heroes</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-pays-tribute-to-quit-india-movement-heroes#comments</comments><guid isPermaLink="false">9a89ee1d-ea00-44f5-b75f-f13ae99ee45c</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:16:54 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:16:54.287Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித்ஷா,pm modi,Quit India Movement Day,PM Modi வெள்ளையனே வெளியேறு நினைவு தினம்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/yzhxl1md/pm-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/yzhxl1md/pm-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கம் 1942-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.</p><p>பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கமான ஆகஸ்ட் புரட்சி என அழைக்கப்படும் இந்தப் போராட்டம் மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினையடுத்து 1942, ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்டது.</p><h2>வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்</h2><p>இதில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9-ம் தேதி 'கிராந்தி திவஸ்' எனும்  பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.</p><p>இந்நிலையில், வெள்ளையனே வெளியேறு போராட்ட தினத்தில் பங்கேற்றவர்கள் குறித்து பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.</p><p>இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><h2>நினைவு கூர்ந்த பிரதமர் மோடி</h2><p>வரலாற்றுச் சிறப்புமிக்க 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைவு கூர்கிறோம். அவர்களின் துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றும் ஓர் உத்வேகமாகத் திகழும்.</p><p>மகாத்மா காந்தியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, 'வெள்ளையனே வெளியேறு' என்ற அந்த முழக்கம் நமது விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியது.</p><p>அத்துடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கான நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் அது வெளிப்படுத்தியது' என பதிவிட்டுள்ளார்.</p><h2>செய் அல்லது செத்து மடி</h2><p>இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று அத்தியாயமாகும், இது நாட்டு மக்களை ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற செய் அல்லது செத்து மடி என்ற உறுதியையும், துணிவையும் அவர்களுக்கு வழங்கியது. தேசத்தின் விடுதலைக்காக இந்த மாபெரும் போராட்டத்தில் அனைத்தையும் தியாகம் செய்த சுதந்திரப் போராளிகள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்</p>]]></content:encoded></item><item><title>பள்ளி வினாடி வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி: கேரளாவில் வெடித்தது அரசியல் சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row#comments</comments><guid isPermaLink="false">66ffb7f0-cc60-4708-a3aa-82286f15e89d</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:46:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:46:58.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாவர்க்கர்,Savarkar,கேரளா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/kidp19h1/Savarkar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாவர்க்கர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/kidp19h1/Savarkar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சியில் இடம்பெற்ற வீர சாவர்க்கர் தொடர்பான கேள்வி, தற்போது மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சாவர்க்கர்</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த வினாடி வினாவில், "ஆங்கிலேயர்களால் மிகக் கடுமையான தண்டனை பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் யார்?" என்ற கேள்வி இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கான பதிலாக வி.டி. சாவர்க்கர் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>இந்தக் கேள்வியின் வரலாற்று அணுகுமுறை குறித்து இடதுசாரி அமைப்புகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் தரப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான கேரள அரசு, சங் பரிவார் திட்டத்தை கல்வித்துறையில் அனுமதிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளன.</p><p>இதையடுத்து, கேரள பொதுக் கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வினாடி வினா அரசின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் நடத்தப்படவில்லை என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கேள்வியைத் தயாரித்தவர்கள் யார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>சமூக அறிவியல் மன்றம் அல்லது பொதுக் கல்வித் துறை ஆகியவற்றின் செயல்பாட்டுத் திட்டத்தில் இந்த வினாடி-வினா நிகழ்ச்சி இடம்பெறவில்லை. மேலும், கேள்விகளைத் தயாரிக்கவோ அல்லது போட்டியைத் தனிப்பட்ட முறையில் நடத்தவோ இவ்விரு அமைப்புகளும் யாரையும் அங்கீகரிக்கவில்லை என்று கல்வித்துறை அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><h2>பினராயி விஜயன்</h2><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் யு.டி.எஃப். (UDF) அரசு "கூட்டுச் சதி" செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும் சாவர்க்கரின் "உண்மையான வரலாற்றை" மறைத்து அவரைப் பெருமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறினார். மேலும், கேரளாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சிகளின் பின்னணியிலும் இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>மாநிலத்தின் பொதுக் கல்வித் துறையை "காவிமயமாக்குவதற்கும்", சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் திரிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாகவே அந்த வினாடி-வினா (quiz) கேள்வி அமைந்திருந்ததாக முன்னாள் பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி குற்றம்சாட்டினார்.</p><p>ஆங்கிலேயர்களிடமிருந்து மிகக் கடுமையான தண்டனையைப் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரராகச் சாவர்க்கரைச் சித்தரிப்பது ஆட்சேபனைக்குரியது என்று கூறிய அவர், அக்கேள்வி தவறான வரலாற்றைப் பரப்பும் முயற்சியாக அமைந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.</p><h2>சிவன்குட்டி</h2><p>விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய அந்தக் கேள்வியையும் அதற்கான பதிலையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சிவன்குட்டி வலியுறுத்தினார்.</p><p>மேலும், பொதுக் கல்வித் துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை.. புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு உற்சாக வரவேற்பு!</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-receives-warm-reception-in-puducherry</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-receives-warm-reception-in-puducherry#comments</comments><guid isPermaLink="false">60980b72-f567-4c66-9e1d-880dbf4cb80a</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:40:41 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:40:41.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி,Pondicherry,மத்திய அமைச்சர் அமித்ஷா,வண்ணக்கொடி விருது,union minister Amitshah</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/n11n6b2o/Amitshah.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Union Minister Amitshah-Pondycherry Rangasamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/n11n6b2o/Amitshah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரியில் இன்று நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.</p><p>புதுவை காவல்துறையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.</p><p>இந்நிலையில், புதுவை காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது விழாவுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.</p><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.</p><p>பின்னர், அமைச்சர் அமித்ஷாவுக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.</p><p>புதுச்சேரி கோரிமேட்டில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை அமித்ஷா வழங்கி கவுரவிக்கிறார்.</p><p>புதுவையில் அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அமித்ஷா தேசியக்கொடி பேரணியை தொடங்கி வைக்கிறார்.</p><p>மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி புதுச்சேரியில் டிரோன் பறக்கத்தடை, போக்குவரத்தில் மாற்றம், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Union Home Minister Amit Shah arrives at the Police Ground in Gorimedu, Puducherry, to participate in the presentation ceremony of the President’s Police Colour to the Puducherry Police <a href="https://t.co/l5SpEpuqrQ">pic.twitter.com/l5SpEpuqrQ</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2086288327205089671?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>காவல் பணி, பேரிடர் மீட்பு உள்ளிட்ட அரசுப் பணிகளில் ட்ரோன்கள் அறிமுகம்: டெல்லி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-drone-policy-to-enable-use-in-police-work-disaster-management-and-transport</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-drone-policy-to-enable-use-in-police-work-disaster-management-and-transport#comments</comments><guid isPermaLink="false">b2650ad9-b391-48de-8950-3e481e697f36</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:23:12 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:23:12.353Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி,drone policy,ட்ரோன் கொள்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gprma12l/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காவல் பணி, பேரிடர் மீட்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கு ட்ரோன்கள் பயன்பாடு]]></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Drone Policy Jobs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/gprma12l/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் முன்மொழியப்பட்ட ட்ரோன் கொள்கையின்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் தெரிவித்தார்.</p><p>தற்போது உருவாக்கப்பட்டு வரும் இந்தக் கொள்கையானது, ட்ரோன் ஆராய்ச்சி மையங்களை நிறுவுதல், பிரத்யேக விமானப் பரிசோதனை வசதிகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து மேலாண்மைக்கு ட்ரோன்களை பயன்படுத்துதல் மற்றும் ட்ரோன் சூழலமைப்பை மேம்படுத்த மானியங்கள் வழங்குதல் ஆகியவற்றை வலியுறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>டெல்லி ட்ரோன் கொள்கை</strong></h3><p>இதுகுறித்து அமைச்சர் பங்கஜ் சிங் கூறுகையில், “வேலைவாய்ப்புகளுடன், பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட ட்ரோன் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக ஒரு விரிவான ட்ரோன் கொள்கை திட்டமிடப்பட்டு வருகிறது. கொள்கை தயாராக உள்ளது;  </p><p>ஒரு மாதத்தில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இதைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் கொள்கையானது அரசாங்கத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையால் உருவாக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.</p><p>இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “தவறான பயன்பாட்டை தடுப்பதற்காக ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல், கண்காணிப்பு மற்றும் வரைப்படமிடலுக்காக அரசு நிறுவனங்கள் ட்ரோன்களை பயன்படுத்த வழிவகை செய்தல், மற்றும் DGCA-வின் டிஜிட்டல் ஸ்கை தளத்துடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்களாகும்.</p><p>இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும், தேவையான துணை உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் அரசு தனி நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.</p><p>இந்த நிகழ்வுகளின் கீழ் பொது விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம், மக்களைச் சென்றடைதல், மண்டல அடையாளப் பலகைகள், விழிப்புணர்வு பட்டறைகள், பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்புக்கான நிலையான இயக்க நடைமுறைகள் ஆகிய ஐந்து முக்கியப் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்தக் கொள்கை வகுக்கப்படும்.</p><p>டெல்லி ட்ரோன் கொள்கையின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் தலைமையில் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது.</p><h3><strong>அரசுத் துறைகளில் ட்ரோன் பயன்பாடு</strong></h3><p>மேலும், நகருக்குள் காவல் பணி, பேரிடர் மீட்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட அரசாங்கப் பணிகளுக்காகவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.</p><p>ரியல் எஸ்டேட் திட்டங்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டைத் திட்டமிடுவதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>டெல்லியில், பல முக்கிய பிரமுகர்களின் இருப்பிடங்கள் காரணமாக, கிட்டத்தட்ட 60 சதவீதப் பகுதி ட்ரோன் இல்லாக மண்டலமாக உள்ளன.</p><p>எனவே அந்த வரம்புகளை கருத்தில் கொண்டு, இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளிகளில் ட்ரோன் விழிப்புணர்வுப் பட்டறைகள், சிறப்பு மையங்களை உருவாக்குதல், தொலைநிலை விமானி பயிற்சி நிறுவனங்களை அமைத்தல் மற்றும் விமானி பயிற்சித் திட்டங்கள் போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறார் பாதுகாப்புக்காக &apos;ஷீல்டு&apos; மசோதா: மீறினால் ரூ.10 கோடி அபராதம் விதிக்க முன்மொழிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/shield-bill-for-child-safety-rs-10-crore-penalty-proposed-for-violations</link><comments>https://www.maalaimalar.com/news/national/shield-bill-for-child-safety-rs-10-crore-penalty-proposed-for-violations#comments</comments><guid isPermaLink="false">ffece0f6-cd13-4837-9f3f-09372baa2b45</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:16:22 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:16:22.930Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Violations,Child safety,அபராதம்,சிறுவர் பாதுகாப்பு,ஷீல்டு மசோதா,shield bill</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/fnqi8b3p/Baji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/fnqi8b3p/Baji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஆன்லைன் கேமிங் கணக்குகளைத் தொடங்க தடை விதிக்க வகை செய்யும் தனிநபர் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆவதற்கு தயார் செய்யப்பட்டு உள்ளது.</p><h2>'ஷீல்டு' மசோதா</h2><p>சமூக ஊடகங்கள் வயது வித்தியாசமின்றி அனைவரையும் கட்டிப்போடுகின்றன. இதில் சிறுவர்-சிறுமிகள் பலர் அடிமைகளாக உள்ளனர். இதனால் அவர்கள் சில நேரங்களில் ஆபாச படங்களைப் பார்க்க நேரிடுகிறது. அதுபோல ஆன்லைன் கேமிங்கில் பைத்தியம் பிடித்தவர்கள் போல ஆகிவிடுகிறார்கள். இது சமூகத்துக்கு கேடு தரும் செயலாக பார்க்கப்படுகிறது.</p><p>எனவே இதனை தடுப்பதற்காகவும், சிறார் பாதுகாப்புக்காகவும் பா.ஜ.க எம்.பி. பைஜெயந்த் பாண்டா, ஒரு தனிநபர் மசோதாவை தயார் செய்துள்ளார். இளம் டிஜிட்டல் தலைமுறையினருக்கான ஆரோக்கியமான இணையச் சூழல்களைப் பாதுகாத்தல் (ஷீல்டு) மசோதா-2025' என அந்த மசோதாவுக்கு பெயரிடப்பட்டு உள்ளது.</p><h2>கட்டுப்பாடுகள்</h2><p>13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஆன்லைன் கேமிங் கணக்குகள் தொடங்குவதற்கு இந்த மசோதா கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட தளங்கள் வயது சரிபார்ப்பு, பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் மீதான கட்டுப்பாடுகள் போன்றவற்றை விதிக்க வேண்டும் என இந்த மசோதா வலியுறுத்துகிறது.</p><p>சிறுவர்கள் ஆபாசப் படங்கள், சூதாட்டம், பந்தயம், வன்முறை அல்லது பயங்கரவாத உள்ளடக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான உள்ளடக்கங்களை அணுகுவதைத் தடுக்க இந்தத் தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.</p><p>இதில் செய்யப்படும் மீறல்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கவும் முன்மொழியப்பட்டு உள்ளது. மேலும் மீண்டும் மீண்டும் அல்லது வேண்டுமென்றே மீறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ-ன் கீழ் அந்த தளங்களின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் அல்லது தடுக்கப்படலாம் என்பதையும் மசோதா முன்மொழிகிறது.</p><h2>அரிது</h2><p>இந்த மசோதாவை நேற்று முன்தினம் தாக்கல் செய்யலாம் என பைஜெயந்த் பாண்டா நினைத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டதால் அது ஈடேறவில்லை. இதுபோல ஏற்கனவே 2 முறை அவர் முயற்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும், தனிநபர்களின் தத்ரூபமான சாயல்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன் படுத்துவதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் தயார் செய்யப்பட்ட ஒரு தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்ய முடியவில்லை. பொதுவாக தனிநபர் மசோதாக்கள் சட்டமாக இயற்றப்படுவது அரிது.</p><p>சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் 12 தனிநபர் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அஷ்மிதா சலிஹா</title><link>https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-won-the-title-in-korea-mastesr-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-won-the-title-in-korea-mastesr-badminton#comments</comments><guid isPermaLink="false">2d1c5f1e-f747-4453-97db-b7badb6ac9dd</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:09:11 +0000</pubDate><atom:updated>2026-08-09T03:09:11.048Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ashmita chaliha,அஷ்மிதா சலிஹா,korea masters badminton,கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/6yw3ro02/chaliha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ashmita chaliha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/6yw3ro02/chaliha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சலிஹா, சீன வீராங்கனையான ஹான் குயான்சி உடன் மோதினார்.</p><p>தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய அஷ்மிதா சலிஹா முதல் செட்டை 14-21 என இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அஷ்மிதா சலிஹா அதிரடியாக ஆடி 2வது செட்டை 21-14 என கைப்பற்றினார்.</p><h2>சாம்பியன் பட்டம்</h2><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய அஷ்மிதா சலிஹா 21-14 என வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.</p><p>கடந்த வாரம் நடந்த தைபே ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>சமீப காலமாக இந்திய வீராங்கனைகள் பேட்மிண்டன் தொடரில் சிறந்து விளங்கி வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்காதது வருத்தம்- ப.சிதம்பரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-chidambaram-regrets-dmk-aiadmk-absence-from-delimitation-talks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-chidambaram-regrets-dmk-aiadmk-absence-from-delimitation-talks#comments</comments><guid isPermaLink="false">3c2c9714-c6d1-4b59-9a1e-2b2d476541f1</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:44:23 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:44:23.253Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,ADMK,பா.சிதம்பரம்,திமுக அதிமுக,Delimitation Bill,தொகுதி மறுவரையறை கூட்டம்,P Chidhambaram</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/mn8qcd9f/P-Chidambaram.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ P Chidambaram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/mn8qcd9f/P-Chidambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்காதது வருத்தமளிப்பதாக ப.சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும் அவர்,"தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஒவ்வொறு கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும்" என கூறினார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமாக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது.</p><p>தொகுதி மறுவரை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம் .</p><p>2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும். </p><p>தொகுதி மறுவறை மசோதாவைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தன் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.</p><p>கடந்த தி.மு.க. ஆட்சியிலும் தொகுதி மறுவரையறையின்போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன.</p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. </p><p>ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.</p><h2>பங்கேற்பு</h2><p>த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும்  கூட்டத்தில் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் பங்கேற்றனர்.</p><p>ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><h2>தீர்மானம் நிறைவேற்றம்</h2><p>மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை காரணமாகக் கூடுதல் இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543 ஆக மட்டுமே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>கனடா ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/sabalenka-lose-4th-round-in-canada-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/sabalenka-lose-4th-round-in-canada-open-tennis#comments</comments><guid isPermaLink="false">976957b9-054c-44e1-ac9b-e4fed57cf32e</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:35:33 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:35:33.350Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aryna Sabalenka,அரினா சபலென்கா,Canada Open Tennis,கனடா ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/11/19952224-saba.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sabalenka]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/11/19952224-saba.webp?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது</p><p>முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் தற்போது 4-வது சுற்று ஆட்டம் நடந்து வருகிறது.</p><p>இன்று அதிகாலை நடந்த 4-வது சுற்று போட்டியில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்த அரினா சபலென்கா, ரஷியாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.</p><h2>சபலென்கா தோல்வி</h2><p>இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை 7-6 (7-3) என போராடி வென்றார். இதற்கு பதிலடியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 2வது செட்டை 6-4 என வென்றார்.</p><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் முன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><h2>திணறும் சபலென்கா</h2><p>கடந்த மாதம் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரினா சபலென்கா 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.</p><p>நடப்பு ஆண்டில் பிரிஸ்பேன் ஓபன், இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்களில் மட்டுமே சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சவுதி அரேபியா, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஈரானை குறிவைத்தது அல்ல: துருக்கி சொல்கிறது</title><link>https://www.maalaimalar.com/news/world/turkiye-says-defence-pact-with-saudi-arabia-and-pak-is-not-aimed-at-iran-or-any-other-country</link><comments>https://www.maalaimalar.com/news/world/turkiye-says-defence-pact-with-saudi-arabia-and-pak-is-not-aimed-at-iran-or-any-other-country#comments</comments><guid isPermaLink="false">91b9394f-0b76-447b-b906-1df227e32df8</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:31:20 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:31:20.529Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pakistan,Turkey,Saudi Arabia,கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்,Defence Agreement</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/k9pk40vo/Fiden0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துருக்கி அமைச்சர் ஃபிடன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/k9pk40vo/Fiden0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் ஈரான் அல்லது வேறு எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தம் பிராந்திய ஸ்திரத்தன்மையை நோக்கிய ஒரு முக்கியமான படி என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்</h2><p>சவுதியின் புனித நகரமான மெக்காவில் வெள்ளிக்கிழமையன்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கிய அதிபர் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>"மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்" என்பது எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியா, அணுசக்தி நாடான பாகிஸ்தான் மற்றும் நேட்டோ (NATO) அமைப்பில் இரண்டாவது பெரிய ராணுவத்தையும் வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறையையும் கொண்ட துருக்கி ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது.</p><p>பிராந்தியத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் அச்சுறுத்தல்கள் நிறைந்த சூழலில், இந்த ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் தடுப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்துகிறது.</p><h2>இந்த ஒப்பந்தம் குறித்து துருக்கி வெளியுறவு அமைச்சர் ஃபிடன் கூறியதாவது:-</h2><p>தங்களுக்கு எதிராக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வரை, எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் இந்த மூன்று நாடுகளும் எதிரியாகக் கருதவில்லை.</p><p>பொதுவான அச்சுறுத்தல் என்று வரையறுக்கும் வகையில் நாங்கள் எதையும் எழுதவோ அல்லது அதில் கையெழுத்திடவோ இல்லை. எங்களைத் தாக்காத எந்தவொரு நாடும் எங்களுக்கு இலக்கு அல்ல.</p><h2>நேட்டோவின் 5-வது பிரிவு என்ன சொல்கிறது?</h2><p>பரஸ்பர பாதுகாப்பு குறித்த இந்த ஒப்பந்தத்தின் விதிமுறையானது, தொழில்நுட்ப ரீதியாக நேட்டோவின் 5-வது பிரிவைப் (Article 5) போன்றது. அந்தப் பிரிவின்படி, 32 உறுப்பு நாடுகளில் ஒன்றின் மீதான தாக்குதல் அவை அனைத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படுகிறது. </p><p>இந்த நடைமுறையின்படி ​​ஒரு உறுப்பு நாடு முறையாக உதவியைக் கோர வேண்டும். மற்ற இரண்டு நாடுகளின் உதவியானது உளவுத்துறை தகவல்களைப் பகிர்வது முதல் தளவாட ஆதரவு வரை அல்லது அச்சுறுத்தலைப் பொறுத்து ராணுவப் பிரிவுகளை நிலைநிறுத்துவது வரை அமையலாம்.</p><p>இவை அச்சுறுத்தலின் அளவைப் பொறுத்து மாறுபடும் பல அடுக்கு விஷயங்கள். எங்கள் பணிகளில் இதுவரை நாங்கள் வகுத்துள்ள கண்ணோட்டம் இதுதான்.</p><p>பிற நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இணைவதில் ஆர்வம் காட்டியுள்ளன.</p><p>இவ்வாடி ஃபிடன் தெரிவித்தார்.</p><p>எங்களின் இயற்கையான கூட்டணி நாடான எகிப்து அடுத்த கட்டத்தில் இதில் பங்கேற்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>இந்த ஒப்பந்தத்தின் கீழ், மூன்று நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், அத்துடன் அந்நாடுகளின் ராணுவத் தளபதிகள் ஆகியோர் வழக்கமான குழுக்கூட்டங்களை நடத்துவார்கள். மேலும், சவுதி அரேபியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு செயலகத்தையும் இம்மூன்று நாடுகளும் அமைக்கும் என்று ஃபிடன் தெரிவித்தார்.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரின்போது ஈரான் சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போதைய ஒப்பந்த்தின்படி சவூதி அரேபியா உதவி கேட்டால் துருக்கி செல்ல வேண்டும். இந்த நிலையில்தான் ஈரான் இலக்கு அல்ல எனத் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு: சம்பளம் ரூ.60,000 முதல் 1,80,000 வரை</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-airports-authority-recruitment-salary-rs-60000-to-180000</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-airports-authority-recruitment-salary-rs-60000-to-180000#comments</comments><guid isPermaLink="false">024790ce-deaf-4f1a-b33c-613b266cd2c3</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:26:08 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:26:08.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காலி பணியிடம்,வேலைவாய்ப்பு,airport authority of india,AAI,Job Vacancy,இந்திய விமான நிலைய ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/qg3evdh3/Untitled-design-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Manager and Junior Executive vacancies with salary up to Rs 1.8 lakh]]></media:title><media:description type="html"><![CDATA[ AAI Recruitment 2026]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/qg3evdh3/Untitled-design-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), பல்வேறு துறைகளில் மேலாளர்கள் மற்றும் இளநிலை நிர்வாகிகள் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பத்தாரர்கள் AAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வேலைவாய்ப்பில் சிவில், எலெக்ட்ரிக்கல், நிதி, தகவல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை, சட்டம், தீயணைப்புத் துறை, செயல்பாடுகள் (operations), வணிகம், பெருநிறுவன தொடர்பியல் (corporate communications) மற்றும் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கான ஆள்சேர்ப்பு முறை கணினி வழி தேர்வுகள்  மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>வயது வரம்பு</strong></h3><p>AI ஆட்சேர்ப்புக்கான தகுதி நிபந்தனைகள் வெளியாகியுள்ளது. அதன்படி மேலாளர் பணிக்கு, 2026 செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இளநிலை நிர்வாகி பணிக்கு, 7 செப்டம்பர் 2026 அன்று அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.</p><p>மேலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. இதில் பட்டியல் சாதியினர் (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC - Non-Creamy Layer) 3 ஆண்டுகளும் அடங்கும்.</p><p>அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு பெறலாம்.</p><p>மேலாளர் பதவிகளுக்கு, துறையைப் பொறுத்து, தொடர்புடைய இளங்கலை அல்லது முதுகலைப் பட்டத்துடன் மூன்று வருட பணி அனுபவமும் தேவைப்படுகிறது.</p><h3><strong>துறைகள்</strong></h3><p>நிதி, சட்டம், செயல்பாடுகள், மற்றும் நில அளவை மற்றும் நிலப்படவியல் ஆகிய துறைகளில் உள்ள இளநிலை நிர்வாகி பதவிகளுக்குக் குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் தேவைப்படுகின்றன, அதே சமயம் இந்தப் பதவிகளுக்குப் பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.</p><p>மேலாளர் (நிறுவனத் தொடர்பியல்) பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் மக்கள் தொடர்பியல், இதழியல் அல்லது அது தொடர்பான துறைகளில் இளங்கலைப் பட்டத்துடன், மூன்று வருடங்கள் தொடர்புடைய பணி அனுபவத்தையும் பெற்றிருக்கலாம்.</p><p>விண்ணப்பதாரர்கள், நிர்ணயிக்கப்பட்ட கடைசித் தேதிக்குள், அனைத்து கல்வித் தகுதி மற்றும் அனுபவத் தேவைகளையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h3><strong>சம்பளம்</strong></h3><p>மேலாளர் பதவிகளுக்கான சம்பள விகிதம் ரூ. 60,000-3%-ரூ. 1,80,000 ஆகவும், இளநிலை நிர்வாகி பதவிகளுக்கான சம்பள விகிதம் ரூ. 40,000-3%-ரூ. 1,40,000 ஆகவும் உள்ளது. மேலாளர்களுக்கான தோராயமான ஆண்டு மொத்த சம்பளம் (CTC) ரூ. 21 லட்சமாகவும், இளநிலை நிர்வாகிகளுக்கானது ரூ. 14 லட்சமாகவும் உள்ளது.</p><p>இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேலாளர் மற்றும் இளநிலை நிர்வாகி பதவிகளில் 389 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h3><strong>கடைசி தேதி</strong></h3><p>மொத்தம் 389 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் செப்டம்பர் 7, 2026 வரை தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>காலி பணியிடங்கள்</strong></h3><p>அதில், மேலாளர் (பொறியியல்-சிவில்) / Manager (Engineering-Civil): 145</p><p>மேலாளர் (பொறியியல்-மின்சாரம்)/(Engineering-Electrical): 16</p><p>மேலாளர் (நிதி)/(Finance): 34</p><p>மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்)/(Information Technology): 5</p><p>மேலாளர் (கட்டிடக்கலை)/(Architecture): 4</p><p>மேலாளர் (சட்டம்)/(Law): 2</p><p>மேலாளர் (தீயணைப்பு சேவைகள்)/(Fire Services): 14</p><p>மேலாளர் (செயல்பாடுகள்)/(Operations): 28</p><p>மேலாளர் (வணிகம்)/(Commercial): 9</p><p>மேலாளர் (நிறுவனத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை சேவைகள்)/(Corporate Planning &amp; Management Services): 1</p><p>மேலாளர் (நிறுவனத் தொடர்புகள்)/(Corporate Communications): 2</p><p>இளநிலை நிர்வாகி (நிதி)/(Finance): 36</p><p>இளநிலை நிர்வாகி (சட்டம்)/(Law): 6</p><p>இளநிலை நிர்வாகி (செயல்பாடுகள்)/(Operations): 79</p><p>இளநிலை நிர்வாகி (நில அளவை மற்றும் வரைபடவியல்)/(Survey &amp; Cartography): 8</p><p>தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை கவனமாகப் படித்து, அனைத்து விவரங்களும் ஆவணங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய &apos;சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி&apos;: தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர வாய்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-liquor-prices-to-increase-due-to-environment-and-social-welfare-levy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-liquor-prices-to-increase-due-to-environment-and-social-welfare-levy#comments</comments><guid isPermaLink="false">21a85f48-ac4f-48c1-bf2c-44b2f5681dd9</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:10:20 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:10:20.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுபானம்,Tasmac,மதுபானம் விலை உயர்வு,new tax,புதிய வரி விதிப்பு,Alcohol price increase</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/k82itb1b/TASMAC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TASMAC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/k82itb1b/TASMAC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதிய வரி விதிப்பால் தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயரும்.</p><h2>சுற்றுச்சூழல் வரி</h2><p>தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு மதுபானங்கள் விற்பனை மூலம் வருவாய் அதிகம் கிடைத்து வருகிறது. இந்தநிலையில் த.வெ.க. அரசு மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தவும். </p><p>காலி மதுபாட்டில்களை அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யவும், மதுவிலக்கு மற்றும் மறுவாழ்வு, மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றுக்காக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி்' எனும் புதிய வரி விதிப்பை கொண்டு வந்துள்ளது.</p><h2>ரூ.20 வரை நிர்ணயம்</h2><p>சட்டசபையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம், 2006-ல் திருத்தம் செய்து மசோதாவை தாக்கல் செய்தார். இதில் மதுபானங்களின் விற்பனைக்கு கூடுதலாக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி' விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.</p><p>இந்த வரி, ஒரு மதுப்பாட்டிலுக்கு அதிகபட்சம் ரூ.20 என நிர்ணயிக்கப்படும். இது ஏற்கனவே உள்ள வாட் வரிக்கு மேலாக வசூலிக்கப்படும். மதுபானத்தின் வகை, அளவு மற்றும் கொள்கலனின் அளவைப் பொறுத்து வரி விகிதம் மாறுபடும்.</p><h2>மதுபானம் விலை உயரும்</h2><p>இந்தத் திருத்தத்தின் மூலம், சட்டத்தில் புதிய பிரிவு 3(ஏ) சேர்க்கப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யும் ஒவ்வொரு வணிகர்களும், அரசு அறிவிக்கும் விற்பனை நிலையிலேயே இந்த வரியை செலுத்த வேண்டும். கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசு அறிவிக்கை வெளியிட்டதும் இந்த புதிய வரி அமலுக்கு வரும்.</p><p>இதன் மூலம் மதுபானங்கள் விலை உயரும். அதேநேரத்தில் டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயராது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புதிய வரியால் டாஸ்மாக் மதுபானங்கள் விலை விரைவில் உயரலாம் என்ற நிலை உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நிபந்தனை..!</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-makes-new-strait-demands-uae-says-ship-was-targeted</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-makes-new-strait-demands-uae-says-ship-was-targeted#comments</comments><guid isPermaLink="false">b71b1038-970a-4a41-919a-d84210a1ef24</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:05:29 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:05:29.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>USA,Iran,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz,அமெரிக்கா ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/tgw1p1x9/Hormuz001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹார்முஸ் ஜலசந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/tgw1p1x9/Hormuz001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/iran-conflict-us-strategy-gen-don-kane-urges-washington-to-find-exit-plan-as-airstrikes-alone-may-not-meet-trumps-goals">டொனால்டு டிரம்ப்</a> தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் போர் முடிவுக்கான ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை வணிக கப்பல்கள் எளிதாக கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாகத்தான் தற்போது சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈரான் புதிய நிபந்தனையை விதித்துள்ளது. </p><h2>ஈரான் புதிய நிபந்தனை</h2><p>ஈரானின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான உச்ச தேசிய பாதுகாப்பு மன்றம் அமெரிக்கா தனது நடத்தையைச் சரிசெய்து கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தி அதன் வழித்தடப் போக்குவரத்தையும் நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை உலுக்கக்கூடிய வகையிலான புதிய நிபந்தனைகளையும் அது முன்வைத்துள்ளது.</p><h2>ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் பின்வருமாறு:-</h2><p>அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக்கூடாது. ஈரானுடனும் அப்பிராந்தியத்தில் உள்ள அதன் ஆயுதமேந்திய கூட்டாளிகளுடனும் நடத்தி வரும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்க வேண்டும். அத்துடன் அப்பகுதியிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும். போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு முழுமையான இழப்பீடு" வழங்க வேண்டும். பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு நிபந்தனைகளை விதித்துள்ளது.</p><p>இதற்கு அமெரிக்கா தரப்பில் உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர டிரம்பிற்கு, அமெரிக்க தளபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>அபுதாபி கப்பல் மீது தாக்குதல்</h2><p>அமெரிக்கா- ஈரான் இடையிலான போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற கப்பல் மீது ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>அபுதாபியைச் சேர்ந்த ADNOC என்ற எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து 12-க்கும் அதிகமாக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 ஆகஸ்ட் 2026: சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-9-august-2026-surya-narayanar-tirumanjanam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-9-august-2026-surya-narayanar-tirumanjanam#comments</comments><guid isPermaLink="false">3f9bdde2-0048-4f32-9e00-808604ceba37</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5es726pb/suryanarayanar1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Surya narayanar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5es726pb/suryanarayanar1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-24 (ஞாயிற்றுக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  ஏகாதசி காலை 9.08 மணி வரை பிறகு துவாதசி</p><p>நட்சத்திரம் :  மிருகசீர்ஷம் நண்பகல் 1.38 வரை பிறகு திருவாதிரை</p><p>யோகம் :  சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>கூற்றுவ நாயனார் குரு பூஜை</h2><p>சர்வ ஏகாதசி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் புறப்பாடு. கூற்றுவ நாயனார் குரு பூஜை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஸ்ரீ ரெங்கமன்னார் கோவர்த்தனகிரியிலும் பவனி. திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கிளி வாகனத்தில் பவனி. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை அலங்கார திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் சிறப்பு அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - லாபம்</p><p>ரிஷபம் - சிறப்பு</p><p>மிதுனம் - பாராட்டு</p><p>கடகம் - நன்மை</p><p>சிம்மம் - வெற்றி</p><p>கன்னி - துணிவு</p> <p>துலாம் - பணிவு</p><p>விருச்சிகம் - இரக்கம்</p><p>தனுசு - இன்பம்</p><p>மகரம் - கடமை</p><p>கும்பம் - உண்மை</p><p>மீனம் - கடமை</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-price-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a1beab87-6f0e-4013-b70b-08dbdf35e2a7</guid><pubDate>Sun, 09 Aug 2026 01:10:02 +0000</pubDate><atom:updated>2026-08-09T01:10:02.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,பெட்ரோல் டீசல் விலை,Petrol Diesel Price,diesel,டீசல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/7xia9etr/tn-15.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Petrol, Diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/7xia9etr/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (09.08.2026 - ஞாயிற்றுக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan | இன்றைய ராசிபலன் 9.8.2026: இவர்களுக்கு வரவு திருப்தி தரும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-982026-in-tamil</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-982026-in-tamil#comments</comments><guid isPermaLink="false">94e6a603-fdd8-4112-8bfc-f41cf80eb923</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:59:01 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:59:01.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/22/20441128-rasipalan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/22/20441128-rasipalan.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>பற்றாக்குறை அகலும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.</p><h2>ரிஷபம்</h2><p>வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் அமைதி கூடும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.</p><h2>மிதுனம்</h2><p>எண்ணங்கள் ஈடேறும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிட்டும்.</p><h2>கடகம்</h2><p>கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p><h2>சிம்மம்</h2><p>யோகமான நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். தொழிலில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.</p><h2>கன்னி</h2><p>பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.</p><h2>துலாம்</h2><p>புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.</p><h2>விருச்சிகம்</h2><p>சிந்தித்துச் செயல்பட வேண் டிய நாள். சிக்கனத்தைக் கையாள்வது நல்லது. வரவைவிட செலவு கூடும். மற்றவர்களின் பிரச்சனையில் தலையிட வேண்டாம்.</p><h2>தனுசு</h2><p>முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.</p><h2>மகரம்</h2><p>அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.</p><h2>கும்பம்</h2><p>நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். இடமாற்றம், எதிர்பார்த்தபடி அமையும். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும்.</p><h2>மீனம்</h2><p>தடைகள் அகலும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் போரை முடிக்கின்ற வழியைப் பாருங்கள் - டிரம்புக்கு தலைமைத் தளபதி அழுத்தம் </title><link>https://www.maalaimalar.com/news/world/iran-conflict-us-strategy-gen-don-kane-urges-washington-to-find-exit-plan-as-airstrikes-alone-may-not-meet-trumps-goals</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-conflict-us-strategy-gen-don-kane-urges-washington-to-find-exit-plan-as-airstrikes-alone-may-not-meet-trumps-goals#comments</comments><guid isPermaLink="false">88bdb205-90ad-463d-b705-60c3b0922151</guid><pubDate>Sun, 09 Aug 2026 00:19:39 +0000</pubDate><atom:updated>2026-08-09T00:19:39.739Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ua4jxg3d/tn-56.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப், டான் கெய்ன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப், டான் கெய்ன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ua4jxg3d/tn-56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானுடனான போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை வாஷிங்டன் கண்டறிய வேண்டும் என அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் டான் கெய்ன் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  </p><h2>ஜெனரல் டான் கெய்ன்</h2><p>சிஎன்என் ஊடகத்திற்கு கிடைத்த தகவல்களின் படி,  மோதலை தீவிரப்படுத்தும் வகையில் தற்போது பரிசீலிக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும், வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே அதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india">டிரம்பின் </a>இலக்குகளை அடைய உதவாது என்றும் ஜெனரல் டான் கெய்ன் நம்புகிறார்.</p> <h2>இழப்பு</h2><p>ராணுவத்தின் மீதான இழப்புகளையும், கையிருப்பில் ஆயுதங்கள் குறைந்து வருவதையும் கருத்தில் கொண்டு, ராணுவத்தைப் பாதுகாப்பதற்காகவே கெய்ன் மாற்று வழிகளைத் தேடி வருகிறார் என கூறப்படுகிறது.</p><p>ஈரானுக்குள் தரைப்படை வீரர்களை அனுப்பதொடர்ந்து தயக்கம் காட்டி வரும் அதிபர் டிரம்ப், வான்வழி தாக்குதல் மூலமே ஈரானை பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்க முடியும் என நம்புகிறார். ஆனால், அந்த முடிவு வெற்றியடைவது கடினம் என கெய்ன் கருதுகிறார்.</p><p>ஈரானுடனான போர் ஒரு முக்கியமான திருப்புமுனையை எட்டியுள்ளதாகக் கருதும் கெய்ன், இது குறித்துப் பிற முக்கியஸ்தர்களான சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிப், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஆகியோருடன் பேசி வருவதாக சிஎன்என் தகவல் தெரிவிக்கிறது.</p> <h2>டிரம்ப்</h2><p>மோதலைத் தீவிரப்படுத்துவதால் ஏற்படும் பாதகங்களை எச்சரித்த போதிலும், அதிபர் டிரம்புடனான தனது உறவு பாதிக்கப்படக் கூடாது என்பதில் கெய்ன் கவனமாக இருக்கிறார்.</p><p>சமீபத்தில் நடைபெற்ற வெள்ளை மாளிகை கூட்டத்தில், குறைந்து வரும் அமெரிக்க வெடிமருந்து இருப்புகள் குறித்து எச்சரித்த அதே வேளையில், "நீங்கள் இந்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல விரும்பினால், ஈரானை நம்மால் முற்றிலும் நிர்மூலமாக்க முடியும்" என்றும் அவர் டிரம்பிடம் உறுதியளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையரைக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு .. பாஜகவுடன் மீண்டும் மலரும் கூட்டணி?</title><link>https://www.maalaimalar.com/news/national/akali-dal-backs-delimitation-and-womens-quota-bill-after-modi-meet-key-shift-in-punjab-politics</link><comments>https://www.maalaimalar.com/news/national/akali-dal-backs-delimitation-and-womens-quota-bill-after-modi-meet-key-shift-in-punjab-politics#comments</comments><guid isPermaLink="false">da3a6661-c71f-4cfc-8777-9c64ee4ade5a</guid><pubDate>Sat, 08 Aug 2026 23:41:39 +0000</pubDate><atom:updated>2026-08-08T23:41:39.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sukhbir Singh Badal,Shiromani Akali Dal,Delimitation,தொகுதி மறுவரையரை,சிரோமணி அகாலி தளம்,சுக்பீர் சிங் பாதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5uhk3u0x/tn-52.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுக்பீர் சிங் பாதல், மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சுக்பீர் சிங் பாதல், மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5uhk3u0x/tn-52.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஞ்சாபில் முக்கிய மாநில கட்சியாக விளங்கும் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் நேற்று முன் தினம் டெல்லியில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். </p><p>இதன் மறுநாள், அதாவது நேற்று, முக்கிய அரசியல் திருப்பமாகதொகுதி மறுவரையறை  மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமது கட்சி ஆதரவு அளிப்பதாக சுக்பீர் சிங் பாதல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  </p> <h2>ஆதரவு</h2><p>நேற்று சண்டிகரில் நடைபெற்ற கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு, சுக்பீர் சிங் பாதல் வெளியிட்ட அறிக்கையில்,</p><p>"நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைச் செயல்பாடுகளுக்கு அகாலி தளம் முழு ஆதரவு அளிக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் நியாயமான முறையில் இது செயல்படுத்தப்பட வேண்டும்.</p><p>அனைத்து மாநிலங்களுக்கும் சீரான முறையில் 50% நாடாளுமன்றத் தொகுதிகளை உயர்த்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள யோசனையை அகாலி தளம் ஆதரிக்கிறது.</p><p>சீக்கிய குருமார்களின் போதனைகளைப் பின்பற்றி, பெண்களுக்குச் சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் உடனடி இடஒதுக்கீடு வழங்குவதை அகாலி தளம் வலியுறுத்துகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைத் திரட்டி வரும் நிலையில், அகாலி தளத்தின் இந்த ஆதரவு நிலைப்பாடு தேசிய அரசியலிலும், பஞ்சாப் மாநில அரசியலிலும் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. சிரோமணி அகாலி தளம் வசம் 1 எம்.பி உள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>கூட்டணி</h2><p>2020ஆம் ஆண்டு மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அகாலி தளம் வெளியேறியது.</p><p>பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் இரு பழைய தோழமைகளும் மீண்டும் இணைய வேண்டிய சூழல் நிலவுவதாகக் கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.</p><p>பிரதமர் மோடியுடன் சுக்பீர் சிங் பாதல் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் நேர்மறையாக அமைந்ததாகவும், பஞ்சாபின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டணி புதுப்பிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.</p><p>இதன் மூலம் பஞ்சாபில் பாஜக - அகாலி தளம் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தேன் பொறியில் சிக்கிய விமானப்படை விங் கமாண்டர்.. ராணுவ ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கைது </title><link>https://www.maalaimalar.com/news/national/indian-air-force-officer-honey-trapped-and-arrested-in-delhi-for-leaking-military-secrets</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-air-force-officer-honey-trapped-and-arrested-in-delhi-for-leaking-military-secrets#comments</comments><guid isPermaLink="false">dd9a607a-af44-4c63-a680-fd9724747d85</guid><pubDate>Sat, 08 Aug 2026 23:09:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T23:09:29.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானப்படை,Air Force,spy,ஹனி டிராப்,Honey Trap,உளவாளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/w85906na/tn-57.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/w85906na/tn-57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விமானப்படை விங் கமாண்டர் ஒருவர் ஹனி டிராப் எனப்படும் தேன் பொறியில் சிக்கி நாட்டின்  ரகசியங்களை கசியவிட்ட  குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">விமானப்படையின் </a>உளவுப் பிரிவு அளித்த தகவலின் பேரில், டெல்லி காவல்துறை மே மாத இறுதியில் இவரைக் கைது செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின்  கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.</p> <h2>ரகசியங்கள் கசிவு</h2><p>காவல்துறை வட்டாரங்களின் கூற்றுப்படி, சோஷியல் மீடியா வாயிலாக அந்த அதிகாரிக்கு பெண் ஒருவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது.</p><p>ஹனி டிராப் என்பது இவ்வாறு பெண்கள் மூலம் ஒருவரை வலையில் வீழ்த்தி தங்களுக்கு தேவையானதை செய்ய வைப்பதை குறிக்கிறது.</p><p>இதற்கு விதிவிலக்கின்றி அந்த அதிகாரிக்கு ஆன்லைனில் ஏற்பட்ட இந்தப் பழக்கம், நாளடைவில் இந்திய ராணுவத்தின் வகைப்படுத்தப்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை அனுப்பும் அளவிற்குச் சென்றுள்ளது.</p><p>இந்தியாவின் ராணுவ ரகசியங்களைச் சேகரிப்பதற்காக நடத்தப்பட்ட பாகிஸ்தானின் உளவு வேலையின் ஒரு பகுதியே இதுவாகும்.</p> <h2>தொடரும் விசாரணை</h2><p>டெல்லி காவல்துறை ஜூலை தொடக்கத்திலேயே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டது.</p><p>பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் எந்த அளவிற்கு வெளியே கசிந்துள்ளன, இந்த உளவு வலையமைப்பில் இன்னும் யார் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>மதுபோதையில் மலம் கழித்து மாணவர்களை அள்ளச் செய்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் | Madhya Pradesh</title><link>https://www.maalaimalar.com/news/national/drunk-headmaster-forces-students-to-clean-his-faeces-in-mp-government-school</link><comments>https://www.maalaimalar.com/news/national/drunk-headmaster-forces-students-to-clean-his-faeces-in-mp-government-school#comments</comments><guid isPermaLink="false">2833a485-3524-40fb-b379-2a7e1fa9e0ea</guid><pubDate>Sat, 08 Aug 2026 22:38:38 +0000</pubDate><atom:updated>2026-08-08T22:38:38.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்தியப் பிரதேசம்,அரசுப் பள்ளி,பள்ளி ஆசிரியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/b6jo7oey/tn-54.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/b6jo7oey/tn-54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநில அரசு தொடக்கப் பள்ளியில் குடிபோதையில் தலைமையாசிரியர் பள்ளி வளாகத்தில் மலம் கழித்து அதனைப் பள்ளி மாணவர்களைக் கொண்டே சுத்தம் செய்ய வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. </p><h2>அரசுப் பள்ளி </h2><p>மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில்  ஹர்டுவா கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக  பணியாற்றி வருபவர் சமைலால் கோல் (50)</p><p>இவர் தொடர்ந்து பள்ளிக்கு மதுபோதையில் வந்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக, அங்கு பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் நீண்ட நாட்களாகக் புகார் தெரிவித்து வந்தனர்.</p><p>பெற்றோர்களின் புகாரைத் தொடர்ந்து, கிராம பஞ்சாயத்துத் தலைவர் ராமாவதார் கோல் மற்றும் ஊர் பொதுமக்கள் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.</p> <h2>மது, குட்கா, மலம்</h2><p>ஆய்வின் போது, ஆசிரியர் சமைலால் கோல் தினமும் மது அருந்திவிட்டுப் பள்ளிக்கு வருவதை அம்மாணவர்கள் உறுதிப்படுத்தினர்.</p><p>மேலும், ஒருமுறை ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே மலம் கழித்துவிட்டு, அதைத் தங்களை விட்டுச் சுத்தம் செய்ய வைத்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.</p><p>பஞ்சாயத்துத் தலைவர் பார்வையிட்ட போது மலம் அகற்றப்பட்டிருந்த போதிலும், வகுப்பறைச் சுவர்கள் முழுவதும் ஆசிரியர் குட்கா மென்று துப்பிய கறைகளால் பாழாகியிருந்தது கண்டறியப்பட்டது.</p><p>"ஆசிரியர் தினமும் கடுமையான போதையில் இருந்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் தான் அவரைத் தினமும் காலையில் பள்ளியில் கொண்டு வந்து விட்டு, மாலையில் அழைத்துச் செல்கிறார்கள்" என்று பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்.</p> <h2>விசாரணை</h2><p>கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர்.</p><p>விசாரணையைத் தொடர்ந்து சமைலால் கோலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.</p><p>பதில் பெறப்பட்ட பிறகு, அவர் மீது இடைநீக்கம் உள்ளிட்ட அடுத்தகட்டக் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஐரோப்பாவில் கேஷியர் வேலை.. ரூ.11 லட்சம் வாங்கிக்கொண்டு 
இந்திய பெண்ணை மதுக்கடை முதலாளியிடம் விற்ற வேலைவாய்ப்பு ஏஜென்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-woman-trafficked-to-portugal-pune-agency-sells-cashier-job-seeker-to-liquor-shop-owner-after-taking-11-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-woman-trafficked-to-portugal-pune-agency-sells-cashier-job-seeker-to-liquor-shop-owner-after-taking-11-lakh#comments</comments><guid isPermaLink="false">bc358f44-2239-4479-a18c-9e5a253221ed</guid><pubDate>Sat, 08 Aug 2026 21:48:41 +0000</pubDate><atom:updated>2026-08-08T21:48:41.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/9ll7g7qu/tn-48.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/9ll7g7qu/tn-48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய நாட்டில் மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பளத்தில் சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலை வாங்கி  தருவதாகக் கூறி இந்திய பெண் ஒருவர் விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p><h2>கடத்தல்</h2><p>மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த அந்த 28 வயது பெண்ணை புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் <a href="https://www.maalaimalar.com/news/national/number-of-unemployed-graduates-increases-by-67-percent-across-the-country">வேலைவாய்ப்பு </a>ஏஜென்சி போர்ச்சுகல் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.</p><p>பெண்ணிடம் ரூ. 11 லட்சத்தை இந்தியாவிலேயே வைத்து அந்த வேலைவாய்ப்பு ஏஜென்சி கட்டணமாக பெற்றுள்ளது. </p><p>போர்த்துகல் சென்றடைந்ததும், அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த கும்பல், அவரை அங்கிருந்த ஒரு பீர் மதுபானக் கடை உரிமையாளரிடம் விற்றுள்ளது. </p> <h2>கட்டாய வேலை</h2><p>அங்கு அப்பெண்ணைப் பலவந்தப்படுத்தி வேலை செய்ய வைத்து, உடலளவிலான மற்றும் மனதளவிலான சித்ரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளனர்.</p><p>தனது பாஸ்போர்ட்டைத் திரும்பக் கேட்டபோது, அக்கும்பல் மேலும் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளது.</p><h2>மிரட்டல்</h2><p>ஒருவழியாக இந்தியா திரும்பிய பிறகும், அக்கும்பல் அப்பெண்ணின் கணவரைத் தொடர்புகொண்டு வேறு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மேலும் ரூ. 3 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது.</p><p>இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், புனே குற்றப்பிரிவுகாவல்துறையை அணுகிப் புகார் அளித்தார்.</p><p>அவரது புகாரின் பேரில், மனிதக் கடத்தல், மோசடி மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புனே மற்றும் போர்ச்சுகலை சேர்ந்த 7 நபர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஜென் Z தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.. எனக்கு பதவி பொருட்டல்ல - தர்மேந்திர பிரதான் மனம் திறப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-says-ministerial-post-not-important-after-resignation-amid-student-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-says-ministerial-post-not-important-after-resignation-amid-student-agitation#comments</comments><guid isPermaLink="false">852c7bfa-403e-448d-8a93-b4ff5abc2f8d</guid><pubDate>Sat, 08 Aug 2026 20:58:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T20:58:57.887Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/yw8m978k/tn-55.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/yw8m978k/tn-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டத்தால் </a>மத்தியக் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், தனது ராஜினாமா குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் ஜூலை 25 அன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், இரு வாரங்களுக்குப் பிறகு நேற்று புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். </p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>அவர் பேசியதாவது,</p><p>"ஜென் Z  நமது குழந்தைகள். ஆனால் நீட் விவகாரத்தின் போது சில சக்திகள் அவர்களைத் தவறாக வழிநடத்த முயன்றன. எனக்கு அப்போது தனிப்பட்ட சுயநலன்கள் எதுவும் இருக்கவில்லை.</p><p>இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்குப் பல கனவுகளும் லட்சியங்களும் உள்ளன. அவர்கள்தான் இந்தியாவை உலகின் வழிகாட்டியாக மாற்றுவார்கள். எனக்கு இந்த அமைச்சர் பதவி முக்கியமில்லை" என்று தெரிவித்தார்.</p><p>விமான நிலையம் அருகே பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் "தர்மேந்திர பிரதான் திரும்பிப் போ" என முழக்கமிட்டு நடத்திய போராட்டத்தைக் குறிப்பிட்ட அவர், "நான் ஒரு விவசாயியின் மகன். நீங்கள் திரும்பிப் போகச் சொன்னாலும், நான் மீண்டும் மீண்டும் வருவேன்" என்றார்.</p><p>பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அணியினர் சுமார் 30 பேரை சம்பல்பூர் காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.</p> <h2>ஜந்தர் மந்தர் போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற முழக்கத்துடன் அபிஜித் தீப்கேவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய 1 மாத கால போராட்டம் கடந்த வாரம் வெற்றி பெற்றது.</p><p>அழுத்தத்தின் பேரில் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதேநேரம், பிரதமர் மோடியும் தனது நீண்ட நெடிய மௌனத்தை களைத்து கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் இதுபற்றி பேசினார்.</p><p>தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் சிறப்பு மசோதா ஆகிய அறிவுப்புகளை அவர் அடுத்தடுத்து வெளியிட்டார்.</p><p>இதனிடையே ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் படையால் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் சர்ச்சையாகி வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சக்ரவியூகத்தில் சிக்கிய இளைஞர்கள்.. பட்டம் பெற்றும் வேலை இல்லை..  கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன - ராகுல்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-youth-jobs-crisis-rahul-gandhi-warns-on-rising-education-costs-unemployment-and-ai-risks</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-youth-jobs-crisis-rahul-gandhi-warns-on-rising-education-costs-unemployment-and-ai-risks#comments</comments><guid isPermaLink="false">4c8934c7-9dd1-40e1-9159-47f159f38452</guid><pubDate>Sat, 08 Aug 2026 19:58:21 +0000</pubDate><atom:updated>2026-08-08T19:58:21.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Unemployment,Employment,Education,கல்வி,வேலைவாய்ப்பு,வேலையின்மை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/o008moc4/tn-50.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/o008moc4/tn-50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கே.பி. மைதானத்தில் நேற்று நடைபெற்ற ‘சத்ரோன் கி கூஞ்ச்’  என்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர் </a>கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். </p><h2>கல்வி </h2><p>அப்போது பேசிய அவர், "அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவின் வல்லமையைப் பற்றி உலக அளவில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள சுமார் 40 கோடி இளைஞர்களே நாட்டின் உண்மையான மற்றும் இணையற்ற ஆற்றலாகத் திகழ்கின்றனர்.</p><p>இந்த பிரயாக்ராஜ் முற்காலத்தில் நாட்டின் மிக முக்கியமான கல்வி மையமாகத் திகழ்ந்தது. அலகாபாத் பல்கலைக்கழகம் நாட்டின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.</p><p>ஆனால், தற்போதைய சூழலில் இந்திய இளைஞர்கள் ஒரு சக்ரவியூகத்தில் மாட்டியுள்ளனர்.</p><p>கல்வியின் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.</p><p>ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் தங்களின் வாழ்வில் பல ஆண்டுகளையும், பெற்றோரின் பெருந்தொகையையும் செலவிட்டுப் படிக்கின்றனர். ஆனால் பட்டம் பெற்ற பிறகும் தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில்லை.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/37yva6c2/tn-49.jpg" /></figure><h2>வேலையின்மை</h2><p>இந்தியாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன.</p><p>நாட்டின் உற்பத்தித் துறை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இளைஞர்கள் சுயதொழில் தொடங்கவோ அல்லது வணிகம் செய்யவோ வங்கிகளில் கடன் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.</p><p>அரசுப் பணிகளுக்கான அரசுப் தேர்வு வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது தகுதியான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறது.</p><p>ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இருக்கும் வேலைகளும் பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.</p><p>மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி கொள்கைகள் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சீரழித்துவிட்டன.</p><p>சிறு நிறுவனங்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்த பொதுத்துறை வங்கிகள் தவறிவிட்டன.</p><p>பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியார்மயமாக்குவது வேலைவாய்ப்புகளை மேலும் சுருக்குகிறது.</p><p>முறையான வேலைகள் இல்லாததால் இளைஞர்கள் அதிகளவில் பகுதிநேர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான கிக் வேலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். தனியார் துறையிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் போது இந்த வேலைகளும் குறையக்கூடும்.</p> <h2>இந்தியரின் தரவுகள்</h2><p>செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் அனைத்தும் மக்களின் தரவுகளைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன.</p><p>எனவே இந்தியர்களின் தரவுகள் இந்தியர்களுக்கே சொந்தமான சொத்தாகக் கருதப்பட வேண்டும்.</p><p>நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் திறமையில் மட்டுமல்லாமல், அவர்கள் உருவாக்கும் தரவுகளின் மீதும் சார்ந்துள்ளது.</p><p>தொழில்நுட்ப மாற்றங்களால் உருவாகும் புதிய பொருளாதாரத்தின் நன்மைகள் இளைஞர்களைச் சென்றடையாவிட்டால், அந்தத் தொழில்நுட்பமே அவர்களுக்குப் புதிய வேலைகளைத் தருவதற்குப் பதிலாக இருக்கும் வேலையையும் பறித்துவிடும்.</p> <h2>ஆதிக்கம்</h2><p>நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் ஒருசிலரின் கைகளில் மட்டுமே குவிந்துள்ளது. நாட்டின் பெருநிறுவனங்கள் , அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் மீது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.</p><p>நாட்டின் பொருளாதார வளங்கள், புதிய தொழில்நுட்பம் மூலம் உருவாகும் சொத்துக்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் நாட்டின் இளைஞர்களுக்கும் சமமான பங்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் பிரதமர் மோடி போனில் உரையாடல்.. 4வது குழந்தை பெற்றதற்கு வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/world/modi-jd-vance-call-leaders-discuss-strengthening-india-us-strategic-partnership-amid-fcra-concerns</link><comments>https://www.maalaimalar.com/news/world/modi-jd-vance-call-leaders-discuss-strengthening-india-us-strategic-partnership-amid-fcra-concerns#comments</comments><guid isPermaLink="false">5ad3ffdc-39c8-4e1c-8c6c-3b204e66d79b</guid><pubDate>Sat, 08 Aug 2026 18:52:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T18:52:43.799Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,JD Vance,ஜேடி வான்ஸ்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/br8d91lj/tn-51.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி, வான்ஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி, வான்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/br8d91lj/tn-51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உடன்  <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி </a>தொலைபேசியில் உரையாடியுள்ளார். </p><p>நேற்று ஜேடி வான்ஸ் அழைப்பை அட்டென்ட் செய்து பேசிய பிரதமர் மோடி, முக்கிய துறைகளில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும்,  ஜே.டி. வேன்ஸ் மற்றும் உஷா வேன்ஸ் தம்பதியருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்ததற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் மோடி தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். </p><p>இத்தம்பதியருக்கு அண்மையில் நான்காவது ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'அலெக் நீல் வேன்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. </p> <h2>FCRA அச்சம்</h2><p>இந்தியாவின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரைலி மூர் கவலை தெரிவித்த சில நாட்களில் இந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது.</p><p>FCRA சட்டத் திருத்தங்கள் மூலம் இந்தியாவில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சமய அறக்கட்டளைகளை இந்திய அரசு கையகப்படுத்த வாய்ப்புள்ளதாகவும், இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அமெரிக்க எம்பி ரைலி மூர் குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>இதற்கு வியாழக்கிழமையன்று பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், "சட்டமன்ற மற்றும் சட்ட விவகாரங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள்" என்றும், அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் வெளிநாட்டு நிதி உதவிகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் அமலில் உள்ளதையும் சுட்டிக்காட்டியது.</p> <h2>100% வரி </h2><p>ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவாயு தொடர்ந்து வாங்கும் நாடுகளுக்கு தடைகள் மற்றும் 100% வரை இறக்குமதி வரிகளைவிதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் முக்கியமான மசோதாவிற்கு அமெரிக்க மேலவை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முன்னணி 5 நாடுகளுக்குக் கடுமையான தடைகள் மற்றும் கூடுதல் வரிகளை விதிக்க இந்த மசோதா அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது.</p><p>இதில் ரஷியாவிடம் பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மும்பை சித்திவிநாயகர் கோவில் நன்கொடையில் முறைகேடு - விரிவான விசாரணைக்கு முதல்வர் பட்நாவிஸ் உத்தரவு </title><link>https://www.maalaimalar.com/news/national/mumbai-siddhivinayak-temple-donation-scam-18-crore-irregularities-alleged-9-staff-arrested-as-maharashtra-cm-orders-audit-of-5-years-trust-finances</link><comments>https://www.maalaimalar.com/news/national/mumbai-siddhivinayak-temple-donation-scam-18-crore-irregularities-alleged-9-staff-arrested-as-maharashtra-cm-orders-audit-of-5-years-trust-finances#comments</comments><guid isPermaLink="false">e3dc798c-532d-494f-aa06-8fbdcf2b375e</guid><pubDate>Sat, 08 Aug 2026 18:03:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T18:03:26.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சித்திவிநாயகர் கோவில்,அயோத்தி ராமர் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pwz0yg5y/tn-47.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மும்பை சித்திவிநாயர் கோவில், பட்நாவிஸ்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ மும்பை சித்திவிநாயர் கோவில், பட்நாவிஸ்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pwz0yg5y/tn-47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகாராஷ்டிரா </a>மாநிலம் மும்பையில் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது.</p><p>செல்வத்தை அள்ளித்தருவதாக நம்பப்படும் இந்த சித்திவிநாயகர் கோவிலின் நன்கொடைப் பணத்தில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. </p><h2>பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் நன்கொடை திருட்டுகள்</h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை படம் பெருமளவு அறக்கட்டளை ஊழியர்களால் திருடப்பட்ட விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மகாராஷ்டிராவிலும் நன்கொடை திருட்டு புகார்கள் வந்துள்ளன.</p><p>பாஜக ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் நன்கொடை திருட்டு புகார்கள் எழுந்த நிலையில் இதுதொடர்பான விசாரணையில் கோவிலின் காவலாளி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.</p> <h2>சித்தி விநாயகர் கோவில் திருட்டு</h2><p>மும்பையிலுள்ள இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் காணிக்கை வருகிறது. இந்த ஆண்டு ரூ. 182 கோடியும் கடந்த ஆண்டு ரூ. 137 கோடியும் வந்துள்ளது.</p><p>சித்திவிநாயகர் கோவில் நன்கொடைத் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.18 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா லைவர் ராஜ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டைக் முன்வைத்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கோவிலின் 9 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நன்கொடை முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.</p><p>கடந்த 5 ஆண்டுகால கோவில் அறக்கட்டளையின்அனைத்து நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்களை விரிவாகத் தணிக்கை செய்யத் தொடர்புடைய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கடந்த வியாழக்கிழமை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸைச் சந்தித்து, 2023 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தின் நன்கொடை விவரங்களைச் சமர்ப்பித்தனர். இந்த விவரங்களை ஆய்வு செய்த பிறகே, கடந்த 5 ஆண்டுகளின் அனைத்து ஆவணங்களையும் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இஸ்லாமிய &apos;நேட்டோ&apos;.. இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக காய் நகர்த்திய பாகிஸ்தான்  - மெக்கா ஒப்பந்தம் என்ன சொல்கிறது?</title><link>https://www.maalaimalar.com/news/world/islamic-nato-call-pakistan-urges-strong-alliance-of-muslim-nations-against-india-and-israel</link><comments>https://www.maalaimalar.com/news/world/islamic-nato-call-pakistan-urges-strong-alliance-of-muslim-nations-against-india-and-israel#comments</comments><guid isPermaLink="false">47017dc6-4809-48a4-9745-03b759399ed5</guid><pubDate>Sat, 08 Aug 2026 17:09:30 +0000</pubDate><atom:updated>2026-08-08T17:09:30.019Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா பாகிஸ்தான்,கவாஜா ஆசிப்,Khawaja Asif,நேட்டோ,NATO,India-Pakistan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/35dbidcd/tn-45.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மெக்கா ஒப்பந்தம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மெக்கா ஒப்பந்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/35dbidcd/tn-45.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா மற்றும் இஸ்ரேலை எதிர்கொள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு நேட்டோ போன்ற போன்ற வலுவான கூட்டணி அத்தியாவசியம் என்று <a href="https://www.maalaimalar.com/news/world/direct-rail-route-to-india-via-pakistan-russias-new-land-trade-proposal">பாகிஸ்தான் </a>பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசியுள்ளார்.</p><h2>நேட்டோ </h2><p>பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் நேட்டோ என்ற அமைப்பை கொண்டுள்ளன. இந்த நேட்டோ ராணுவம் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையாக செயல்படுகிறது. </p><p>இந்நிலையில் இஸ்லாமிய நேட்டோவை உருவாக்க ஆசிப் அறிவுறுத்தியுள்ளார். </p> <h2>மெக்கா ஒப்பந்தம்</h2><p>நேற்று, மெக்காவில் சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.</p><p>இந்த ஒப்பந்தத்தின்படி சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல், மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும்.</p><p>இது நேட்டோ அமைப்பின் 'பிரிவு 5' கூட்டுப் பாதுகாப்பு விதியை ஒத்த ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது.</p> <figure><img alt="ஆசிப் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ihro30ho/tn-46.jpg" /><figcaption>ஆசிப் </figcaption></figure><h2>ஆசிப் பேச்சு</h2><p>இதையடுத்து பாகிஸ்தான் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், சவூதி, துருக்கி மற்றும் பாகிஸ்தானுக்குப் பயங்கரவாதம் ஒரு பொதுவான அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டுள்ள கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானிலிருந்து செயல்படும் இந்திய ஆதரவு அமைப்புகளே (தாலிபான்) பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துகின்றன எனக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>இஸ்ரேல் உருவாக்கப்பட்ட விதம் மற்றும் அதன் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணைந்த பதிலை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், இஸ்ரேலுடன் சுமுக உறவை ஏற்படுத்துவதால் முஸ்லிம் நாடுகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p>பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதே இஸ்லாமிய கொள்கையின் அத்தியாவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கு ஆசியாவில் தொடரும் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் ஆகியவை இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு ராஜதந்திரத்தை கையில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இந்தியா - பாகிஸ்தான்</h2><p>இருப்பினும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அரசுப் கொள்கையாகப் பயன்படுத்துவதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.</p><p>2025 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏப்பட்ட மோதல் அமைதி ஒப்பந்தம் மூலம் 2 நாட்களில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item></channel></rss>