<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 01 Aug 2026 09:33:46 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 1 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">6db1f91d-b4f2-4888-b10e-353b9e4cce34</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:01:38 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:28:15.312Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/4ievmxyy/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/4ievmxyy/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-released-tax-share-of-rs-4466-crore-to-tamil-nadu">தமிழ்நாட்டிற்கான  ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்தது மத்திய அரசு</a></p><p>* அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,09,019 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>* பீகாருக்கு ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/el-nino-threat-southwest-monsoon-india-weather-centre-warning">எல் நினோ அச்சுறுத்தல்: இந்தியாவின் தென்மேற்கு பருவமழை மீண்டும் பாதிக்குமா?-வானிலை மையம் எச்சரிக்கை!... </a></p><p>*பசிபிக் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாற்றத்தால் உருவான 'சூப்பர் எல் நினோ' மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.</p><p>*இந்தியாவின் விவசாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு பருவமழையாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-aftermath-cji-event-postponed-at-last-minute">CJP போராட்டம் எதிரொலி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ஒத்திவைப்பு!... </a></p><p>*மும்பையில் உள்ள நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான 'டாட்டா சமூக அறிவியல் கழகத்தின்' (TISS) 86வது பட்டமளிப்பு விழா, பாதுகாப்பு மற்றும் போராட்ட அச்சம் காரணமாகக் கடைசி நிமிடத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>*நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மும்பை வந்து சேர்ந்துவிட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today" rel="nofollow">3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்</a></p><p>* திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. </p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu" rel="nofollow">தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்</a></p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.</p><p>* பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான  எல்-நினோ சூழல் நிலவுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/only-reel-apology-cjp-chief-abhijit-deepke-slams-modi-video">'ரீலில் மட்டும்தானா மன்னிப்பு?'- பிரதமர் மோடியின் வீடியோவுக்கு CJP தலைவர் அபிஜீத் தீப்கே சரமாரி கேள்வி!... </a></p><p>*ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p><p>*போராட்டங்களில் பங்கேற்ற சாதாரண மாணவர்கள் மற்றும் குற்றப்பின்னணி இல்லாத இளைஞர்கள் மீதான வழக்குகளை விடுவிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/russian-missile-drone-attack-on-ukraine-capital">உக்ரைன் தலைநகர் மீது டிரோன் தாக்குதல் - 3 பேர் பலி!</a></p><p>* கீவ் குடியிருப்புகள் சேதம், வணிக கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன </p><p>* இடிபாடுகளில் சிக்கிய பலர் படுகாயம், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-at-thiruvallikeni-police-station-in-dmk-mla-bribery-bargain-case" rel="nofollow">த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜர்</a></p><p>* செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் இருந்து வந்தார்.</p><p>* முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting">அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா முடியாதா? - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>* கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... </p><p>* தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move">காவிரியில் நீர் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழகம் முடிவு: சரியான நடவடிக்கை! - அன்புமணி</a></p><p>* காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார்.&nbsp;</p><p>* கர்நாடகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அம்மாநில முதலமைச்சர்கள் முன்வர மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/new-mega-international-airport-in-andhra-pradesh-opened-by-modi" rel="nofollow">இந்தியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்- ஆந்திராவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்</a></p><p>* பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டு தின்ஷா நடனமாடி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு. </p><p>* பிரதமர் வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-kulgam-attack-on-migrant-workers-two-killed">ஜம்மு-காஷ்மீரில் கொடூரம்: வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு-இருவர் பலி... </a></p><p>*பிழைப்பு தேடி காஷ்மீருக்கு வந்த ஏழைத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>*இத்தாக்குதலில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-independence-day-drone-ban-till-aug-16">சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லியில் ஆகஸ்ட் 16 வரை டிரோன்கள் பறக்கத் தடை-காவல்துறை உத்தரவு!... </a></p><p>*இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*சம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/swaraj-is-my-birthright-father-of-indian-nationalism">சுயராஜ்யம் எனது பிறப்புரிமை: தேசியவாதத்தின் தந்தை லோக்மான்ய திலகரின் நினைவு தினம் இன்று!... </a></p><p>*மக்களிடையே ஒற்றுமையையும் தேசபக்தியையும் உருவாக்க, வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த 'விநாயகர் சதுர்த்தி' வழிபாட்டைப் பொதுமக்களுக்கான விழாவாக மாற்றினார். </p><p>*சிறையில் இருந்த காலத்தில் அவர் எழுதிய 'கீதா ரஹஸ்யம்' என்ற நூல், பகவத் கீதையின் கடமை மற்றும் தியாகக் கருத்துக்களை விளக்கும் ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றளவும் போற்றப்படுகிறது.</p><p>காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்னை வருகை-தொண்டர்கள் உற்சாக வரவேற்பு</p><p>* மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.</p><p>*   நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatasalam-relieved-from-dmk-post" rel="nofollow">திமுக பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு</a></p><p>* தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல்?</p><p>* ஆளுங்கட்சியான தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-former-md-visakan-missing" rel="nofollow">முறைகேடு விவகாரம்: டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குனர் விசாகன் தலைமறைவு?</a></p><p>* சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளுடன், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.</p><p>* டாஸ்மாக் முறைகேடு புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாகனை விசாரிக்கத் திட்டம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-ticket-sale-starts-today">டி.என்.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்</a></p><p>* போட்டி வருகிற 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 2 கட்டமாக நடத்தப்படுகிறது. </p><p>*  கல்லூரி நுழைவுவாயிலில் அமைக்கப்பட்ட கவுண்ட்டரில் இன்று தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-cylinder-price-reduced-by-rs200" rel="nofollow">வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது!</a></p><p>*  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை.</p><p>*  வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/this-is-my-first-and-last-mistake-15-year-old-girl-apologises-for-remarks-against-pm-modi">'இதுவே எனது முதல் மற்றும் கடைசி தவறு': பிரதமர் மோடியை விமர்சித்த 15 வயது சிறுமி பகிரங்க மன்னிப்பு!...</a></p><p>*எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை.</p><p>*சிறுமி நோய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில், தற்போது அந்த வீடு பூட்டப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-1-8-2026">GOLD PRICE TODAY: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நிலவரம் </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rainfall-in-keralam-two-death">கேரளத்தில் மீண்டும் நிலச்சரிவு - 2 பேர் உயிரிழப்பு</a></p><p>* அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். </p><p>* கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வயநாடு எல்லைப்பகுதிகிளில் நிலச்சரிவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced">பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் அறிவிப்பு</a></p><p>* முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.</p><p>* ரவை, சம்பா ரவை தலா 1,000 மெட்ரிக் டன், சேமியா 1,100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது  </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-begin-across-tamil-nadu-today">தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்</a></p><p>* அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன.</p><p>* 1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். </p>]]></content:encoded></item><item><title>எல் நினோ அச்சுறுத்தல்: இந்தியாவின் தென்மேற்கு பருவமழை மீண்டும் பாதிக்குமா?-வானிலை மையம் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/el-nino-threat-southwest-monsoon-india-weather-centre-warning</link><comments>https://www.maalaimalar.com/news/national/el-nino-threat-southwest-monsoon-india-weather-centre-warning#comments</comments><guid isPermaLink="false">2cb9044e-2423-4731-aabc-ff3e8f2d4c70</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:23:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:23:37.863Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southwest Monsoon,தென்மேற்கு பருவமழை,Weather Department,எல் நினோ,இந்திய வானிலை மையம்,El Nino</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/a0v8zwi8/monsoon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ELNINO-MONSOON]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/a0v8zwi8/monsoon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மிக மோசமான மழைப் பற்றாக்குறையுடன் தொடங்கிய நடப்பு தென்மேற்கு பருவமழை, ஜூலை மாதத்தில் ஓரளவு மீண்டெழுந்த நிலையில், தற்போது வலுவடைந்து வரும் 'எல் நினோ' காரணியால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் மழை பொழிவு குறையக்கூடும் என்று உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளன.</p><p>இந்தியாவின் விவசாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு பருவமழையாகும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடக்கத்தில் போதிய மழை பெய்யாமல் நாட்டின் பல பகுதிகளில் வறட்சி நிலை ஏற்பட்டது. இருப்பினும், கடந்த மாதத்தில் பெய்த பரவலான கனமழை இந்த பற்றாக்குறையை ஓரளவிற்குச் சரிசெய்தது. </p><p>இந்நிலையில், பசிபிக் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாற்றத்தால் உருவான 'சூப்பர் எல் நினோ' மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக புதிய சர்வதேச காலநிலை எச்சரிக்கை வெளியாகியுள்ளது.</p><h2><strong>குறைவான மழைப்பொழிவு கணிப்பு:</strong></h2><p>இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆகஸ்ட் மாதத்தில் வழக்கத்தை விடக் குறைவான மழையே பதிவாக வாய்ப்புள்ளது.</p><h2><strong>உலக வானிலை அமைப்பின் எச்சரிக்கை:</strong></h2><p>ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் 'எல் நினோ' காரணி மிகவும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>விவசாயிகள் கவலை:</strong></h2><p>இந்தியாவின் இரண்டாம் கட்ட பருவமழை பலவீனமடைந்தால், நாட்டின் முக்கிய விளைபொருட்களான நெல், கரும்பு மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.</p><h2><strong>அணை நீர்மட்டம்:</strong></h2><p>ஜூலை மாத மழையால் அணைகளின் நீர்மட்டம் ஓரளவிற்கு உயர்ந்திருந்தாலும், ஆகஸ்ட் மாதத்தில் மழை குறைந்தால் குடிநீர் மற்றும் பாசன நீர் தேவையில் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>பருவமழையின் முதல் பாதி ஏற்ற இறக்கங்களுடன் நிறைவடைந்துள்ள நிலையில், 'எல் நினோ'வின் தாக்கத்தால் இரண்டாவது பாதி வறட்சியை நோக்கிச் செல்லுமா என்ற அச்சமும், கேள்வியும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டிற்கான  ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்தது மத்திய அரசு
</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-released-tax-share-of-rs-4466-crore-to-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-released-tax-share-of-rs-4466-crore-to-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">afd310ea-658e-4b7f-b086-a88dbf01f8e8</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:04:20 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:04:20.867Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,TN,central government,தமிழ்நாடு,Tax share,வரிப்பகிர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lg58ajr5/nirmalasitharaman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nirmala Sitharaman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lg58ajr5/nirmalasitharaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டிற்கான  ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு விடுவித்தது.</strong></em></p><p>மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், மேம்பாடு, நலத்திட்டங்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் மாநிலங்களுக்கு வரி பகிர்வை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசு</a> விடுவித்துள்ளது.</p><p>அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,09,019 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>மத்திய அரசு</h2><p>28 மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில் அந்த பட்டியலில் தமிழ்நாட்டின் பெயரும் உள்ளது.</p><h2>தமிழ்நாடு</h2><p>தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.19,208 கோடி, பீகாருக்கு ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>CJP போராட்டம் எதிரொலி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ஒத்திவைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-aftermath-cji-event-postponed-at-last-minute</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-aftermath-cji-event-postponed-at-last-minute#comments</comments><guid isPermaLink="false">ddb4aad4-15e6-4dad-b1cc-584f084af569</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:01:22 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:01:22.089Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Surya Kant,CJP,TISS UniverSity,CJP போராட்டம்,தலைமை நீதிபதி சூர்ய காந்த்&apos;</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/oob1merl/tata.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TISS UNIVERSITY-SURYA KANT]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/oob1merl/tata.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையில் உள்ள நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான 'டாட்டா சமூக அறிவியல் கழகத்தின்' (TISS) 86வது பட்டமளிப்பு விழா, பாதுகாப்பு மற்றும் போராட்ட அச்சம் காரணமாகக் கடைசி நிமிடத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>கல்வி நிறுவனத்தின் 86வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுவதாக இருந்தது. இதில் முதன்மை விருந்தினராக இந்திய தலைமை நீதிபதி 'சூர்ய காந்த்' கலந்துகொண்டு உரையாற்றுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய TISS நிர்வாகம், "எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாகப் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்படுகிறது" என அறிவித்தது.</p><h2><strong>போராட்ட பயம்:</strong></h2><p> நீட் வினாத்தாள் கசிவு மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வரும் 'காக்ரோச் ஜனதா கட்சி'  அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், தலைமை நீதிபதி சூர்யா காந்த் வருகையின் போது வளாகத்தில் போராட்டம் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை மற்றும் காவல்துறை அச்சமே இந்த ஒத்திவைப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.</p><p>பட்டமளிப்பு விழாவுக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில், நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மும்பை வந்து சேர்ந்துவிட்டனர். கடைசி நிமிடத்தில் விழா ரத்து செய்யப்பட்டதால் அவர்களது பயணச் செலவு மற்றும் விடுதிச் செலவுகள் வீணாகிப் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.</p><h2><strong>நிவாரணம் அளிப்பதாக உறுதி:</strong></h2><p>திடீர் ஒத்திவைப்பால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள் மற்றும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தகுந்த கோரிக்கைகளுக்கு நிதி உதவி/நிவாரணம் வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதாக TISS நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2><strong>மாணவர் அமைப்புகள் கண்டனம்:</strong></h2><p>மாணவர் அமைப்புகள் TISS நிர்வாகத்தின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளன. முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சல் மாணவர்களை அவமதிக்கும் செயல் என்றும், நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. மாணவர் போராட்டங்களுக்கும் அமைதியற்ற சூழலுக்கும் பயந்து தலைமை நீதிபதி பங்கேற்கவிருந்த உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவே ஒத்திவைக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சார்பட்டா 2&apos; படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடக்கம்: நடிகை துஷாரா விஜயன் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sarpatta-2-to-start-shoot-in-august-dushara-vijayan-shares-update</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sarpatta-2-to-start-shoot-in-august-dushara-vijayan-shares-update#comments</comments><guid isPermaLink="false">84b3e228-6f29-4590-b79b-42b6e5562920</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:47:48 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:47:48.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பா ரஞ்சித்,Dushara Vijayan,துஷாரா விஜயன்,ஆர்யா,Arya,PARanjith,Sarpatta2,சார்பட்டா2,SarpattaParambarai</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/xsczwksg/Sarpatta2" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sarpatta2 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/xsczwksg/Sarpatta2?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88">சார்பட்டா பரம்பரை</a>' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது.</p><p>இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை துஷாரா விஜயன், படத்தின் ரிலீஸ் திட்டம் குறித்த மிக முக்கியமான மற்றும் சுவாரசியமான தகவல் ஒன்றை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>தியேட்டர் ரிலீஸ் உறுதி:</strong></h2><p>நேர்காணலில் பேசிய துஷாரா விஜயன், "சார்பட்டா பரம்பரை முதல் பாகம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், 'சார்பட்டா 2' திரைப்படம் கண்டிப்பாக தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகும்" என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும், பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2><strong>முந்தைய பாகத்தின் ஏக்கம்:</strong></h2><p>கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக 'சார்பட்டா பரம்பரை' முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. </p><p>படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றாலும், வடசென்னையின் பாக்ஸிங் உலகத்தை தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்களிடம் நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது இரண்டாம் பாகம் தியேட்டரில் வெளியாகும் என்ற அறிவிப்பு அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது. </p><p>மேலும், இந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><h2><strong>மீண்டும் '</strong>மாரியம்மா<strong>' அராஜகம்:</strong></h2><p>முதல் பாகத்தில் 'மாரியம்மா' என்ற துணிச்சலான பெண்ணாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த துஷாரா, இந்த பாகத்திலும் தனது கதாபாத்திரம் இன்னும் அழுத்தமாகவும், தீவிரமாகவும் இருக்கும் என்பதை உறுதிபடுத்தியுள்ளர். </p><p>ஆர்யாவுடனான அவரது திரைக்கூட்டணி இந்த முறையும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>சார்பட்டா - முதல் பாகம்:</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D">பா ரஞ்சித்</a> இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2021-ல் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், 1970-களின் வடசென்னை குத்துச்சண்டை கலாச்சாரத்தையும், சார்பட்டா - இடியாப்ப பரம்பரைகளுக்கு இடையிலான கௌரவ மோதலையும் மிக எதார்த்தமாகப் பதிவு செய்தது. </p><p>கபிலன் என்ற எளிய இளைஞன் தடைகளைத் தாண்டி எப்படி சாம்பியனாக உயர்கிறான் என்ற விறுவிறுப்பான கதைக்களம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. நடிகர்களின் மிரட்டலான உடல்மொழி, அழுத்தமான வசனங்கள் மற்றும் சந்தோஷ் நாராயணனின் அதிரடி இசையால் இத்திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகிலும் பேசப்பட்டு, மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today#comments</comments><guid isPermaLink="false">cace66cc-5456-43a1-a4ef-5abbb9bc1574</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:30:40 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:30:40.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,orange alert,ஆரஞ்சு அலர்ட்,பருவமழை,monsoon,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/0bjnxl3x/orange-alert.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Orange alert]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/0bjnxl3x/orange-alert.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழகத்தின் எல்லைப் பகுதி மாவட்டங்களில் பலத்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu" rel="nofollow">மழை</a> பதிவாகி வருகிறது.</p><h2>ஆரஞ்சு அலர்ட்</h2><p>தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை தீவிரமடையும்</h2><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>24 மணி நேரத்தில் 11 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">787b88c4-2255-4e08-80e3-7b39979ceaa1</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:05:49 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:05:49.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,chennai Meteorological Centre,August,வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை,கனமழை,ஆகஸ்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l2wyrnyg/Rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l2wyrnyg/Rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 2 மாதமும் தென் மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. 21 சதவீதம் இயல்பை விட குறைவாக மழை பெய்து உள்ளது.</p><p>சென்னை உள்பட 34 மாவட்டங்களில் 35 சதவீதம் மழை இயல்பை விட பற்றாக்குறையாக பதிவாகியுள்ளது. </p><p>இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஆகஸ்டு மாத வானிலை முன்னறிவிப்பை சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் துரை வெளியிட்டுள்ளார். </p><p>அதில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>ஆகஸ்டு  மாதத்தில் வட தமிழ்நாடு பகுதியில் மழை பொழிவு இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தென் கடலோர பகுதியில் இயல்பை விட அதிகமாக இருக்கலாம்.</p><p>வட உள்மாவட்டங்கள், மற்றும் தென் உள்மாவட்டங்களில் மழைப் பொழிவு இயல்பானதாக இருக்கக் கூடும்.</p><h2>வெப்பநிலை </h2><p>ஆகஸ்டு மாதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">வெப்பநிலை</a>  இயல்பான அளவிலோ அல்லது இயல்பைவிட சற்று அதிகமாகவோ இருக்கக்கூடும்.</p><p>அடிக்கடி மழை பெய்யும் பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவையொட்டி இருக்க வாய்ப்புள்ளது. </p><p>குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பான அளவிலோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ இருக்கக்கூடும்.</p><p>ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை வடகடலோர தமிழக பகுதியில் மழைப்பொழிவு இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தென் கடலோர தமிழகத்தில் மழை இயல்பானதாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கக்கூடும்.</p><h2>மழைப்பொழிவு இயல்பை விட குறைவு</h2><p>வட உள்மாவட்டங்கள் தென் உள்மாவட்டங்களில் மழை பொழிவு இயல்பானதாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.</p><p>ஆகஸ்டு, செப்டம்பர் கால கட்டத்தில் நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rain-raises-dam-levels-in-tamil-nadu" rel="nofollow">மழைப்பொழிவு</a> இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்றாலும் தமிழகத்தின் கிழக்கு பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் சாதகமான மழைப் பொழிவு இருக்கும் என்றும் அதே வேளையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழையே பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.</p><p>பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான  எல்-நினோ சூழல் நிலவுகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தின் எஞ்சிய நாட்களில் இது மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;ரீலில் மட்டும்தானா மன்னிப்பு?&apos;- பிரதமர் மோடியின் வீடியோவுக்கு CJP தலைவர் அபிஜீத் தீப்கே சரமாரி கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/national/only-reel-apology-cjp-chief-abhijit-deepke-slams-modi-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/only-reel-apology-cjp-chief-abhijit-deepke-slams-modi-video#comments</comments><guid isPermaLink="false">35215e69-6d79-4c32-a800-ef882d0a8efc</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:40:21 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:40:21.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,அபிஜீத் தீப்கே,CJP Protest,Abhijit Dipke,காக்ரோச் ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/um3zdsf3/abijit.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abhijit Dipke -PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/um3zdsf3/abijit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து CJP சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவின் கீழ் 'காக்ரோச் ஜனதா கட்சி' நிறுவனர் அபிஜீத் தீப்கே பிரதமர் மோடியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.</p><h2><strong>பிரதமர் மோடியின் 'மன்னிப்பு' வீடியோ:</strong></h2><p>ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "அவதூறுகளால் எதுவும் மாறப்போவதில்லை. </p><p>மாணவர்களைத் தண்டிப்பதோ, நீதிமன்ற வழக்குகளில் இழுப்பதோ அல்லது சமூகத்தில் அவர்களைத் துன்புறுத்துவதோ எந்தத் தீர்வையும் தராது. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன்... வழிதவறிய மாணவர்களுக்கு நல்வழி காட்டுவோம்" என்று பிரதமர் கூறினார்.</p><h2><strong>அபிஜீத் தீப்கேவின் கேள்வி:</strong></h2><p>பிரதமரின் இந்த வீடியோ பதிவின் கீழ் கருத்துத் தெரிவித்த CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே, "ரீலில் மட்டும் மன்னிப்பீர்களா அல்லது மாணவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெறுவீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்தம் தொடர்பாகப் பிரதமர் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், "நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் முகப் பொலிவு பிரகாசமாக இருக்கிறது" என்று தீப்கே கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.</p><h2><strong>15 வயது சிறுமி மீதான வழக்கு:</strong></h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, பிரதமருக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக நோய்டாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி மீது 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்' பதிவு செய்யப்பட்டது.  வழக்கு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அச்சிறுமி ஒரு வீடியோ வெளியிட்டு, "இது எனது முதல் மற்றும் கடைசித் தவறு. </p><p>சூழ்நிலை காரணமாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்" என மன்னிப்புக் கோரினார். சிறுமி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பா.ஜ.க தலைவர்கள் மற்றும் ஐ.டி விங் உறுப்பினர்கள் மீது இதுபோன்ற அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படாதது ஏன் என்று CJP கேள்வி எழுப்பியது.</p><h2><strong>வழக்குகள் நிலவரம்:</strong></h2><p>போராட்டங்களில் பங்கேற்ற சாதாரண மாணவர்கள் மற்றும் குற்றப்பின்னணி இல்லாத இளைஞர்கள் மீதான வழக்குகளை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில அரசுகள் சில வழக்குகளைத் திரும்பப் பெற்று வருகின்றன. இருப்பினும், வழக்குகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என CJP வலியுறுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் தலைநகர் மீது டிரோன் தாக்குதல் - 3 பேர் பலி!</title><link>https://www.maalaimalar.com/news/world/russian-missile-drone-attack-on-ukraine-capital</link><comments>https://www.maalaimalar.com/news/world/russian-missile-drone-attack-on-ukraine-capital#comments</comments><guid isPermaLink="false">0c4ce963-832a-4cf2-9aed-12c7650ed4cc</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:38:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:38:44.836Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ukraine,ரஷ்யா,கீவ்,உக்ரைன்,DroneAttack,KyivAttack,RussiaUkraineWar,ஏவுகணைதாக்குதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/vdv1r31h/RussiaUkraineWar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RussiaUkraineWar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/vdv1r31h/RussiaUkraineWar?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">ரஷ்யா </a>மற்றும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D"> உக்ரைன்</a> இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வை குறிவைத்து இன்று அதிகாலை ரஷ்யா மீண்டும் ஒரு பயங்கர ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>நேற்று முன் தினம் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை மீண்டும் இந்த வான்வழித் தாக்குதல் அரங்கேறியுள்ளது. </p><p>இன்று நடந்த தாக்குதலில் உக்ரைன் தலைநகரின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>கீவ் தாக்குதல்</strong></h2><p>இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சொலோமியன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் ஏவுகணை வீச்சில் பலத்த சேதமடைந்துள்ளது. மேலும் அக்கட்டிடத்தின் முன்பகுதியில் பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.</p><p>இது மட்டுமில்லாமல் மற்றொரு குடியிருப்பு கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் இடிந்து விழுந்து முற்றிலும் தரைமட்டமாகின. </p><p>அதேபோல் டார்னிட்ஸ்கி பகுதியில் உள்ள வணிகக் கிடங்கு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவை அனைத்தும் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உயிரிழப்புகள்</strong></h2><p>ரஷ்யாவின் இந்த அடுத்தடுத்த ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் இதுவரை 3 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். </p><p>மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், தீ விபத்துகளில் சிக்கியும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். </p><p>காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு:
செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-at-thiruvallikeni-police-station-in-dmk-mla-bribery-bargain-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-at-thiruvallikeni-police-station-in-dmk-mla-bribery-bargain-case#comments</comments><guid isPermaLink="false">b2fe6ea9-3b9d-48f0-9a76-c7d576223c38</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:26:25 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:26:25.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செந்தில் பாலாஜி,பேரம் வழக்கு,காவல் நிலையத்தில் ஆஜர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lfn09f0d/senthil-balaji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lfn09f0d/senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா விடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் பெற்று திருவல்லிக் கேணி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார்.</p><h2>கையெழுத்து</h2><p>டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் இருந்து வந்தார்.</p><p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார்.</p><p>அதே நேரத்தில் செந்தில் பாலாஜி த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் வருகிற 4-ந்தேதி வரை கையெழுத்து போடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.</p><p>கடந்த 25-ந்தேதி முதல் செந்தில் பாலாஜி தினமும் கையெழுத்து போட்டு வரும் நிலையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p>செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது டாஸ்மாக்கில் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்து உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் அது தொடர்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p>இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்காத நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடி முன்ஜாமீன் பெற்றார். இருப்பினும் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.</p><h2>விரைவில் விசாரணை</h2><p>செந்தில் பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசா்ா விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு நேரில் வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.</p><p>இதற்கிடையே செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இரு வரும் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜி சேர்க்கப்பட்டுள்ளார்.</p><h2>ஆவணங்கள்</h2><p>டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 45 இடங்களில் சோதனை நடத்திய போலீசார் அது தொடர்பான ஆவணங்களை  கைப்பற்றி இருக்கிறார்கள். இதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியின் நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். </p><p>போலீஸ் விசாரணையில் அவர்களிடமும் பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளது. அதனை மையமாக வைத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. </p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rain-raises-dam-levels-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rain-raises-dam-levels-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">c5696618-875f-44d7-80fc-edb0c813c61b</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:15:31 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:15:31.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rainfall,மேற்கு தொடர்ச்சி மலை,western ghats,Tamilnadu Dams,தொடர் மழை,தமிழ்நாடு அணைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/rjaot7qm/servalaaru.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilnadu Dams]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/rjaot7qm/servalaaru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன் விவசாயப் பணிகளும் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2><strong>தென் மாவட்ட அணைகள்:</strong></h2><p>நெல்லை, தென்காசி மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை மற்றும் சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் பல அடிகள் உயர்ந்துள்ளதால், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p><h2><strong>கோவை &amp; பொள்ளாச்சி மண்டலம்:</strong></h2><p>கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதேபோல், ஆழியாறு மற்றும் அமராவதி அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து சீராக வந்து கொண்டிருக்கிறது.</p><h2><strong>கன்னியாகுமரி &amp; தேனி மாவட்ட அணைகள்:</strong></h2><p>பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர் இருப்பு அதிகரித்து காணப்படுகிறது.</p><h2><strong>குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு:</strong></h2><p>கோடைக்காலத்திற்குப் பின் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில், தற்போது பெய்துள்ள மழை நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடிநீர் விநியோகத்தை தடையின்றி வழங்க உதவியாக இருக்கும்.</p><h2><strong>பாசனப் பணிகள் தீவிரமடைதல்:</strong></h2><p>குறுவை / முதல்போக சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் நாற்று நடும் பணிகளையும் நில ஆயத்தப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். வானிலை ஆய்வு மையத் தகவலின்படி., வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்புள்ளது.</p><h2><strong>ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை:</strong></h2><p>அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறும், ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா முடியாதா? - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting#comments</comments><guid isPermaLink="false">e1184a52-e648-4cbf-8817-ecfffffa2430</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:09:01 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:09:01.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,mekedatu dam,மேகதாது அணை,All Party Meeting,அனைத்து கட்சி கூட்டம்,Cauvery Issue,காவிரி விவகாரம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pwz88hyx/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pwz88hyx/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.</p> <p>தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார். </p> <p>தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.</p><h2>காவிரி விவகாரம்</h2><p>இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சனையான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move">காவிரி விவகாரத்தை</a> முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.</p> <h2>அனைத்துக் கட்சிக் கூட்டம்</h2><p>நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-340-crore-allocated-for-drinking-water-and-other-essential-works-chief-minister-vijay-orders">முதலமைச்சர்</a> அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்- ஆந்திராவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்</title><link>https://www.maalaimalar.com/news/national/new-mega-international-airport-in-andhra-pradesh-opened-by-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-mega-international-airport-in-andhra-pradesh-opened-by-modi#comments</comments><guid isPermaLink="false">869c8bd9-c694-47c5-8c03-142baeae96e9</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:00:52 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:00:52.871Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,சர்வதேச விமான நிலையம்,international airport,pm modi,ஆந்திரா,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/1llagm4n/PM-modi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/1llagm4n/PM-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திர மாநிலம், போகபுரத்தில் ரூ.4,750 கோடி மதிப்பில் 223 ஏக்கர் பரப்பளவில் அல்லூரி சீதா ராமராஜூ சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.</p><p>மாநில பிரிவினைக்கு பிறகு திறக்கப்படும் முதல் மற்றும் இந்தியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் இதுவாகும்.</p><h2>உலக தரம் வாய்ந்த வசதிகள் </h2><p>3.8 கிலோ மீட்டர் நீளம் 45 மீட்டர் அகலம் கொண்ட 2 ஓடு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏர்பஸ் மற்றும் போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்கள் கூட எளிதாக தரையிறங்கலாம்.</p><p>5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 25 ஆயிரம் டன் சரக்குகளை கையாளும் முனையும் மற்றும் தளவாட மண்டலங்களில் மருந்து, நீர் வாழ் மற்றும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="nofollow">கடல் சார் பொருட்கள்</a> ஏற்றுமதி மூலம் தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும். உலக தரம் வாய்ந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.</p><p>இந்த விமான நிலையம் மூலம் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் 5.85 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். கடற்கரைக்கு அருகில் உள்ளதால் மீன் வடிவத்தில் விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h2>பிரமதர் மோடி </h2><p>இந்த விமான நிலையத்தை <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-reacts-to-abusive-videos" rel="nofollow">பிரதமர் மோடி</a> இன்று காலை திறந்து வைத்தார். விமான நிலைய திறப்பு விழாவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், அமைச்சர்கள் நாரா லோகேஷ்,உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா மற்றும் அமைச்சர் கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.</p><p>13 ஆயிரத்து 750 பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டு தின்ஷா நடனமாடி பிரத மருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் மோடி 3 லட்சம் பேர் கலந்துகொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட் டத்தில் கலந்து கொண்டு பேசினார்.</p><p>பிரதமர் வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் போலீ சாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Andhra Pradesh: Prime Minister Narendra Modi welcomed on stage in Bhogapuram in Vizianagaram. He will lay the foundation stone, inaugurate and dedicate to the nation multiple development projects worth over Rs 17,900 crores here. A short while ago, he inaugurated the… <a href="https://t.co/xiqAupztmt">pic.twitter.com/xiqAupztmt</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2083435879276929055?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஜம்மு-காஷ்மீரில் கொடூரம்: வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு-இருவர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-kulgam-attack-on-migrant-workers-two-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-kulgam-attack-on-migrant-workers-two-killed#comments</comments><guid isPermaLink="false">10cc0eaf-a082-469a-9528-a160788fb287</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:45:56 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:45:56.199Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜம்மு-காஷ்மீர்,Migrant workers,Jammu-Kashmir,Kashmir violence,வெளிமாநிலத் தொழிலாளர்கள்,குல்காம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/psm138s7/kashmir.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kashmir violence]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/psm138s7/kashmir.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள குல்காம் மாவட்டத்தில், வெளிமாநிலத் தொழிலாளர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இத்தாக்குதலில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. பிழைப்பு தேடி காஷ்மீருக்கு வந்த ஏழைத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>துப்பாக்கிச் சூடு:</strong></h2><p>நேற்று இரவு, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திற்குட்பட்ட 'கேலம்' பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்குள் மறைந்திருந்து புகுந்த ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள், அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களை இலக்கு வைத்து மிக நெருக்கமான தொலைவில் இருந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><h2><strong>இருவர் உயிரிழப்பு:</strong></h2><p>இத்தாக்குதலில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் ராத்ரே மற்றும் பூபேந்தர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில், தீபக் ராத்ரே குண்டுகள் பலமாகத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மேலும், உடலின் பல இடங்களில் குண்டடிபட்டுப் படுகாயமடைந்த பூபேந்தர், உடனடியாக அனந்தநாக் அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள பிரசித்தி பெற்ற SKIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.</p><h2><strong>ராணுவ நடவடிக்கை:</strong></h2><p>தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் இந்திய ராணுவத்தின் கூட்டுப் படையினர் சம்பவ இடத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளைக் கண்டறிவதற்காக கேலம் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குல்காம் மற்றும் அனந்தநாக் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>அரசியல் தலைவர்கள் கண்டனம்:</strong></h2><h3><strong>துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா:</strong></h3><p>"குல்காமில் அப்பாவித் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) நலின் பிரபாத் உடன் பேசப்பட்டு, இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை உடனடியாகக் கண்டறிந்து ஒழிக்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்."</p><h3><strong>அரசியல் கட்சித் தலைவர்கள்:</strong></h3><p>ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இத்தாக்குதலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். உழைத்து வாழ வந்த அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் மனிதநேயமற்ற செயல் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2><strong>காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்:</strong></h2><p>கடந்த சில ஆண்டுகளாகவே ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத் தொழிலாளர்கள், உள்ளூர் சிறுபான்மையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து 'இலக்கு வைக்கப்பட்டத் தாக்குதல்கள்' நடத்தப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்புதான் அனந்தநாக் நகரில் காவல் துறை அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக தற்போது தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களிடையே மீண்டும் பாதுகாப்பற்ற சூழலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரியில் நீர் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழகம் முடிவு: சரியான நடவடிக்கை! - அன்புமணி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move#comments</comments><guid isPermaLink="false">ae05b230-7877-4d30-98ed-2102d52cf24f</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:44:03 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:44:03.240Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Supreme Court,mekedatu dam,மேகதாது அணை,சுப்ரீம் கோர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/bo11tqfa/anbumaniramadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/bo11tqfa/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>காவிரியில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடைபெறவிருந்த இரு தரப்பு பேச்சுகளுக்கான கதவுகளை கர்நாடக அரசு மூடியதற்கு பிறகு மிகவும் தாமதமாகத் தான் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது என்றாலும், காவிரி சிக்கலில் இது தான் சரியான நடவடிக்கையாகும்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>காவிரி நீர்ப் பகிர்வு, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> சிக்கல் ஆகியவை குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை  தமிழக முதலமைச்சர் விஜய் நாளை மறுநாள் பெங்களூருவில் சந்தித்து பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கர்நாடகத்திலும் வெடித்துள்ள போராட்டங்களைக் காரணம் காட்டி, இரு தரப்பு பேச்சுகளுக்கு உகந்த சூழல் நிலவவில்லை என்று கர்நாடக முதலமைச்சர் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு செல்லும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் கைவிட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. </p> <h2>அமைச்சர் நிர்மல்குமார்</h2><p>அதற்கு மாறாக, காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார். ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்குப் பிறகு இந்த வழக்கு தொடரப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>கர்நாடக அரசு</h2><p>தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுக்கும் சிக்கலாக இருந்தாலும், மேகதாது அணையை கட்ட கர்நாடகம் சதி செய்யும் சிக்கலாக இருந்தாலும் அதை சட்டப்படியாக எதிர்கொள்வது தான் சரியானதாக இருக்கும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கு மாறாக இந்த விவகாரத்தில் தவறான பாதையில் பயணித்த தமிழக அரசு, இப்போதாவது சரியான பாதைக்கு திரும்பி இருப்பது மனநிறைவு அளிக்கிறது. இனிவரும் காலத்திலும் கூட <a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-issues-mandya-karnataka-bjp-leader-former-cm-bs-yediyurappa">காவிரி நீர்ப்பகிர்வு</a>, மேகதாது விவகாரம்  ஆகியவற்றில் கர்நாடக அரசுடன் எந்த வகையிலும் பேசுவதில்லை என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.</p> <p>தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியலுக்கு புதிது என்பதால், புதுமையாக எதையாவது செய்து தமிழகத்திற்கு தண்ணீரை பெற வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், கர்நாடகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அம்மாநில முதலமைச்சர்கள் முன்வர மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். </p> <p>காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். 1995-ஆம் ஆண்டில் கடுமையான வறட்சி நிலவிய சூழலில் உச்சநீதிமன்றமே ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் வழங்கவில்லை. அதன்பின் இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகு, அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதலமைச்சர் தேவகவுடா ஆகியோரை அழைத்து பேச்சு நடத்தினார். அதன்பயனாக நடுவர் மன்றம் ஆணையிட்ட 11 டி.எம்.சிக்கு பதிலாக 6 டிஎம்சி நீரை மட்டும் கர்நாடகம் திறந்து விட்டது.</p> <p>அதன்பின், 2002-ஆம் ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு கடுமையான வறட்சி நிலவியது. அப்போது சம்பா பயிர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையம் ஆணையிட்டது. ஆனால், கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்து விட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு  தினமும் 0.8 டி.எம்.சி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. ஆனால், அதையும் மதிக்காத கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தண்ணீர்  திறக்க முடியாது என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழகம் தொடர்ந்தது.</p> <h2>டி.கே.சிவக்குமார்</h2><p>அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடாவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை வழங்கவும் தயங்க மாட்டோம் என்று 26.10.2002-ஆம் நாள் ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து தான் கர்நாடகம் தமிழகத்திற்கு  காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. அதன்பிறகும் எஸ்.எம். கிருஷ்ணா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்காமல் நிலுவையில் வைத்துக் கொண்டே நவம்பர் 15-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. மிதவாதிகள் என்று அறியப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவும்,  எச்.டி.தேவகவுடாவுமே உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முன்வராத நிலையில், காவிரி சிக்கலை தீவிரமாக்கியே அடுத்த தேர்தலிலும் முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் டி.கே.சிவக்குமார் கேட்டவுடன் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவார் என்று எதிர்பார்ப்பது அரசியல் அறியாமையாகவே இருக்கும். இந்த அணுகுமுறையை அரசு கைவிட வேண்டும்.</p> <h2>காவிரி மேலாண்மை ஆணையம்</h2><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடும்படி உச்சநீதிமன்றத்தில் விரைந்து வழக்கு தொடர்ந்து நீரைப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது அணை விவகாரத்திலும் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்யும் கூட்டுச் சதியை உரிய தரவுகளுடன் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்பெயினுக்குள் அத்துமீறி நுழைந்த அகதிகள்: கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/death-toll-hits-57-in-mass-refugee-crossing-to-spain</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-toll-hits-57-in-mass-refugee-crossing-to-spain#comments</comments><guid isPermaLink="false">e6b066e3-b138-48e8-910b-81c345cea47c</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:36:06 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:36:06.055Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அகதிகள்,Spain,ஸ்பெயின்,Refugee,death rate increase,உயிரிழப்பு அதிகரிப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/88czh3fh/spain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Refugee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/88czh3fh/spain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து ஏராளமானோர், அண்டை நாடான ஸ்பெயினில் உள்ள வட ஆப்பிரிக்க பகுதியான சியூட்டா நகருக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிக்கிறார்கள்.</p><h2>நாடு கடத்த முடியாது</h2><p>இதற்கிடையே கடல் வழியாக வரும் அகதிகளை உடனடியாக நாடு கடத்த முடியாது என்று ஸ்பெயின் நாட்டு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது.</p><p>இதையடுத்து மொராக்கோவில் இருந்து ஆயிரகணக்கானோர் கடல் வழியாகவும், தரை வழியாகவும் சியூட்டா நகருக்குள்  நுழைய முயன்றனர். ஒரே நாளில் சுமார் 60 ஆயிரம் பேர் ஸ்பெயினுக்குள் செல்ல முயற்சித்தனர்.</p><p>எல்லையில் உள்ள தடுப்பு வேலியை கடக்க முயன்ற அகதிகளை ஸ்பெயின் ராணுவம் தடுத்தது. இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. மேலும், சீயடாவுக்குள் மக்கள் நுழைவதை தடுக்க மொராக்கோ பாதுகாப்புப் படைகள் தடியடி நடத்தியது. கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது. </p><p>இதில், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ பகுதிகளில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும், கடலில் மூழ்கியும் 34 பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஸ்பெயினுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்து உள்ளது. இதில் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.</p><h2>60 ஆயிரம் பேர்</h2><p>இதற்கிடையே நேற்று முன்தினம் காலை முதல் தரை மற்றும் கடல் வழியாக சுமார் 60 ஆயிரம் பேர் சீயடாவிற்குள் நுழைந்ததாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.</p><p>அவர்களில் சுமார் 48 ஆயிரம் பேர்  மொராக்கோ விற்குத் திரும்பி சென்றுவிட்டதாக ஸ்பெயின் அரசு தெரிவித்து உள்ளது. மீதமுள்ளவர்களை கண்டு பிடித்து திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது.</p><p>அகதிகளை சட்ட விரோதமாக ஸ்பெயினுக்குள் அனுப்பும் கும்பல்களின் வதந்திகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயினுக்கு நுழைய முயற்சித்து உள்ளனர் என்று ஸ்பெயின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி தாயை போற்றும் ஆடிப்பெருக்கு</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-perukku-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-perukku-2#comments</comments><guid isPermaLink="false">790dcae3-5cf2-47b1-b81b-d93d00517137</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:20:55 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:20:55.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,ஆடி மாதம்,aadi perukku,ஆடிப்பெருக்கு,Aadi Month</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/mxlplm6m/adiperukku.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆடிப்பெருக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/mxlplm6m/adiperukku.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆடிப்பெருக்கு, தமிழ் மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆடி மாதத்தில் விவசாயிகள் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால்தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அன்றைய தினம் நதிகளின் கரையோரம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.</p><h2>ஆடி மாதம்</h2><p>அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் விசேஷமானவை. பொதுவாக இந்து சமயத்தில் கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளும் நட்சத்திரம், திதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே வரும். ஆனால் நாளின் அடிப்படையில் கொண்டாடப்படும் விழா தான், ஆடிப்பெருக்கு.</p> <h2>ஆடி 18-ம் பெருக்கு</h2><p>ஆன்மிகத்தில் 18 என்ற எண்ணிற்கு தனிச் சிறப்புண்டு. புராணங்கள் 18, மகாபாரத பர்வங்கள் 18, பகவத்கீதையில் உள்ள பிரிவுகள் 18, பாரதப் போர் நடைபெற்ற நாட்கள் 18, சபரிமலையில் உள்ள படிகள் 18 என 18 என்ற எண்ணிற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. அந்த வகையில், ஆடி மாதத்தில் வரும் 18-வது நாளை 'ஆடிப்பெருக்கு' என்று கொண்டாடுகிறோம். இதை 'ஆடி 18-ம் பெருக்கு' என்றும் சொல்வதுண்டு.</p> <h2>நதியை போற்றும் நாள்</h2><p>ஆடி மாதம் என்பது பருவ மழைகள் பெய்யும் காலமாகும். இதனால் நீர்நிலைகள் நிரம்பி, விவசாயத்திற்கு உயிர்கொடுக்கின்றன. பஞ்சபூதங்களில் மிகவும் முக்கியமானது நீர். அந்த நீரில் இருந்தே உலக உயிர்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. மற்ற நாட்களில் வறண்டு இருக்கும் ஆறுகள், ஆடிப்பெருக்கின் போது பொங்கி பெருகி வரும். இவ்வாறு நீர் வளம் பெருகுவதை கொண்டாடும் நாளாக ஆடிப்பெருக்கு உள்ளது.</p> <h2>காவிரி தாய்</h2><p>ஆடிப்பெருக்கு, தமிழ் மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆடி மாதத்தில் விவசாயிகள் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால்தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அன்றைய தினம் நதிகளின் கரையோரம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.</p> <h2>ஆடிப்பெருக்கு வழிபாடு</h2><p>தீபாவளி தினத்தன்று, எவ்வாறு கங்காதேவி அனைத்து நீர்நிலைகளிலும் நிறைந்திருப்பாரோ, அதே போல் ஆடிப்பெருக்கன்று, காவிரித்தாய் அனைத்து நீர் நிலைகளிலும் வியாபித்திருப்பார். நம் வீட்டின் அருகில் இருக்கும் நீர்நிலைகளிலும் காவிரித்தாய்தான் நிறைந்திருப்பார்.</p> <p>ஆடிப்பெருக்கு அன்று, அதிகாலையில் குளித்து விட்டு வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். பின்னர், ஆற்றங்கரையில் ஓர் இடத்தை தேர்வு செய்து, அதில் இலை விரித்து அகல் விளக்கு ஏற்றி வைக்கிறார்கள். மேலும் வெற்றிலை, எலுமிச்சம் பழம், பழங்கள் படைத்து, கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும்.</p><p>சிலர், வாழை இலையில் தீபம் ஏற்றி, மங்கலப் பொருட்களோடு நதியில் மிதக்கவிட்டு வணங்குவார்கள். அப்போது காவிரித்தாயை மனதில் நினைத்து கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். அதோடு, வீட்டில் இருந்து கலவை சாதம் தயார் செய்து கொண்டுவந்து, ஆற்றங்கரையில் அமர்ந்து குடும்பத்தோடு உண்டு மகிழ்வார்கள். அதில் தயிர்சாதம் முக்கிய இடம் வகிக்கிறது.</p><h2>தாலிச் சரடு மாற்றுதல்</h2><p>புதிதாக திருமணமான பெண்கள், ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிற்றை மாற்றிக்கொள்வர். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றை தங்கள் கணவன் கையால் கட்டிக் கொள்வார்கள். இதன்மூலம் மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பது நம்பிக்கை.</p> <p>கன்னிப் பெண்களும் அம்மனை நினைத்து மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் விரைவில் அவர்களுக்கு நல்ல வரன் அமையும் என்கிறார்கள். சுமங்கலிகள், தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.</p><h2>நல்ல தொடக்கம்</h2><p>பொதுவாக ஆடி மாதத்தில் திருமணம் போன்ற எந்தவித சுபகாரியங்களையும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு ஒதுக்கப்பட்ட மாதம் ஆகும். ஆனால் ஆடிப்பெருக்கு அன்று மட்டும் நல்ல நேரம் பார்த்து, நல்ல காரியங்களை மேற்கொள்ளலாம்.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லியில் ஆகஸ்ட் 16 வரை டிரோன்கள் பறக்கத் தடை-காவல்துறை உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-independence-day-drone-ban-till-aug-16</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-independence-day-drone-ban-till-aug-16#comments</comments><guid isPermaLink="false">80a588cc-4804-4476-980b-9e789533e953</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:14:47 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:14:47.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DRONES,Independence Day,டிரோன்கள்,டெல்லி செங்கோட்டை,Red Fort Delhi,சுதந்திர தின பாதுகாப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/xwfgaojk/delhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Red Fort Delhi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/xwfgaojk/delhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் 78-வது சுதந்திர தினவிழா வரும் 15 அன்று தலைநகர் டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இதன் ஒரு பகுதியாக, தேசிய தலைநகர் பகுதியில் வான்வழி மூலம் நிகழக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை முதல் 16ஆம் தேதி வரை டிரோன்கள் மற்றும் சிறிய ரக வான்வழி சாதனங்களைப் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>காவல்துறை ஆணையர் உத்தரவு:</strong></h2><p>டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார், புதிய குற்றவியல் சட்டமான 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா' (BNSS), 2023 சட்டப் பிரிவு 163-ன் கீழ் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். </p><figure><img alt="Police order ban on drones " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/x38xlx3y/independence.jpg" /></figure><p>இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>தடை செய்யப்பட்ட சாதனங்கள்:</strong></h2><p>* ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள்</p><p>* ட்ரோன் அல்லாத வான்வழி வாகனங்கள்</p><p>* குவாட்காப்டர்கள் </p><p>* பாராகிளைடர்கள் மற்றும் பாரா-மோட்டார்கள்</p><p>* ஹேங் கிளைடர்கள் மற்றும் மைக்ரோலைட் விமானங்கள்</p><p>* ஹாட்டேர் பலூன்கள் </p><p>* பாரசூட் குதித்தல் </p><h2><strong>பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம்:</strong></h2><p>சமூக விரோதிகள் அல்லது தீவிரவாத அமைப்புகள் இதுபோன்ற வான்வழி சாதனங்களைப் பயன்படுத்தி முக்கியத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கியமான அரசு தலைமை அலுவலகங்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>மீறினால் கடுமையான நடவடிக்கை:</strong></h2><p>இந்த தடை உத்தரவை மீறி யாரேனும் டிரோன்கள் அல்லது பிற சாதனங்களைப் பறக்கவிட்டால், அவர்கள் மீது 'பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவு 223-ன் கீழ்' கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுயராஜ்யம் எனது பிறப்புரிமை: தேசியவாதத்தின் தந்தை லோக்மான்ய திலகரின் நினைவு தினம் இன்று!</title><link>https://www.maalaimalar.com/news/national/swaraj-is-my-birthright-father-of-indian-nationalism</link><comments>https://www.maalaimalar.com/news/national/swaraj-is-my-birthright-father-of-indian-nationalism#comments</comments><guid isPermaLink="false">d1751b2f-14c8-48a8-b232-8a1d442aed1e</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:44:04 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:44:04.773Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lokmanya Tilak,Father of the Indian Unrest,Gita Rahasya,இந்திய அமைதியின்மையின் தந்தை,பால் கங்காதர திலகர்,கீதா ரஹஸ்யம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/x4wb0ikb/tilak.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lokmanya Tilak ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/x4wb0ikb/tilak.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சுதந்திரப் போராட்டத்தை சாமானிய மக்களின் பெரும் இயக்கமாக மாற்றிய முன்னணித் தலைவரும், தீவிர தேசியவாதத்தின் தந்தையுமான 'லோக்மான்ய' பால் கங்காதர திலகரின் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 1) அனுசரிக்கப்படுகிறது. இந்திய விடுதலையின் வரலாற்றில் திலகரின் பங்களிப்பு, அவரது இதழியல் பணி, பண்பாட்டு விழிப்புணர்வு மற்றும் வரலாற்றுத் தாக்கம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.</p><h2><strong>சுயராஜ்யம் எனது பிறப்புரிமை:</strong></h2><p>1856 ஜூலை 23 அன்று மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் பிறந்த பால் கங்காதர திலகர், சிறுவயதிலிருந்தே கூர்மையான கணிதப் புலமையையும், சமூக அக்கறையையும் கொண்டிருந்தார். ஆங்கிலேயர் ஆட்சியை ஒருபோதும் நிரந்தரமான ஒன்றாக அவர் ஏற்றுக்கொண்டதில்லை. சுதந்திரப் போராட்டக் காலத்தில் அவர் முழங்கிய "சுயராஜ்யம் (சுய ஆட்சி) எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்" என்ற புகழ்பெற்ற முழக்கம், நாடு முழுவதும் சுதந்திரத் தீயை மூட்டியது.</p><h2><strong>பத்திரிகைத் துறை மூலம் மக்கள் விழிப்புணர்வு:</strong></h2><p>ஆங்கிலேயர்களின் பொருளாதாரச் சுரண்டலை மக்களுக்கு வெளிப்படுத்தவும், அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திலகர் இரண்டு முக்கியப் பத்திரிகைகளைத் தொடங்கினார். மராத்தி மொழியில் 'கேசரி' என்ற பத்திரிகையும், ஆங்கில மொழியில் 'தி மராட்டா' என்ற பத்திரிகையையும் தொடங்கினார். இப்பத்திரிகைகள் மூலம் பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகளை விமர்சித்து அவர் எழுதிய கட்டுரைகள், இந்தியர்களிடையே அச்சத்தைப் போக்கி வீரியத்தை விதைத்தன.</p><h2><strong>விநாயகர் சதுர்த்தி &amp; சிவாஜி ஜெயந்தி விழாக்கள்:</strong></h2><p>மக்களிடையே ஒற்றுமையையும் தேசபக்தியையும் உருவாக்க, வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த 'விநாயகர் சதுர்த்தி' வழிபாட்டைப் பொதுமக்களுக்கான விழாவாக மாற்றினார். மேலும் 'சத்ரபதி சிவாஜி ஜெயந்தி' விழாவையும் மக்கள் திருவிழாவாக ஒருங்கிணைத்து, அரசியல் கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் களமாகப் பயன்படுத்தினார்.</p><h2><strong>'லால் - பால் - பால்' கூட்டணி &amp; சுதேசி இயக்கம்:</strong></h2><p>லாலா லஜபதி ராய் (பஞ்சாப்), பால் கங்காதர திலகர் (மகாராஷ்டிரா), பிபின் சந்திர பால் (வங்காளம்) ஆகிய மூவரும் இணைந்து 'லால் - பால் - பால்' கூட்டணி உருவாக்கினர். வங்கப் பிரிவினைக்கு எதிராக அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்கும் 'சுதேசி இயக்கத்திற்கு' திலகர் வலுவான தலைமை தாங்கினார்.</p><h2><strong>ஹோம் ரூல் இயக்கம்:</strong></h2><p>1916-இல் அன்னி பெசண்ட் அம்மையாருடன் இணைந்து 'தன்னாட்சி இயக்கத்தை'  திலகர் தொடங்கினார். இது கிராமங்கள் தோறும் தன்னாட்சிக் கருத்தைக் கொண்டு சேர்க்க உதவியது.</p><h2><strong>பிரிட்டிஷாரின் சிறை தண்டனையும் 'கீதா ரஹஸ்யமும்':</strong></h2><p>பிரிட்டிஷ் அரசு திலகருக்கு 'இந்திய அமைதியின்மையின் தந்தை' என்று பெயரிட்டது. புரட்சியாளர்களை ஆதரித்து எழுதியதற்காக அவர் மீதான தேசத்துரோக வழக்குகளின் கீழ், பர்மாவின் (தற்போதைய மியான்மர்) மண்டாலே சிறையில் 6 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த காலத்தில் அவர் எழுதிய 'கீதா ரஹஸ்யம்' என்ற நூல், பகவத் கீதையின் கடமை மற்றும் தியாகக் கருத்துக்களை விளக்கும் ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றளவும் போற்றப்படுகிறது.</p><h2><strong>வரலாற்று முக்கியத்துவம்:</strong></h2><p>1920 ஆகஸ்ட் 1 அன்று மும்பையில் திலகர் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். திலகரின் மறைவுக்குப் பிறகுதான் மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடுத்தகட்டப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். நாட்டின் இளம் தலைமுறையினருக்கு வீரியமிக்க தேசிய உணர்வை விதைத்த திலகரை, பண்டிட் ஜவஹர்லால் நேரு "இந்தியப் புரட்சியின் தந்தை" என்றும், மக்கள் அன்போடு 'லோக்மான்ய' (மக்களால் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்) என்றும் அழைத்து கவுரவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;இதுவே எனது முதல் மற்றும் கடைசி தவறு&apos;: பிரதமர் மோடியை விமர்சித்த 15 வயது சிறுமி பகிரங்க மன்னிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/this-is-my-first-and-last-mistake-15-year-old-girl-apologises-for-remarks-against-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/this-is-my-first-and-last-mistake-15-year-old-girl-apologises-for-remarks-against-pm-modi#comments</comments><guid isPermaLink="false">1105bdcf-16e0-44a1-bf64-20769ff2513d</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:17:56 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:17:56.400Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jantar Mantar,pm modi,பிரதமர் மோடி,டெல்லி,காக்ரோச் ஜனதா கட்சி,CJPProtest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/v37j81fx/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM MODI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/v37j81fx/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியப் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-reacts-to-abusive-videos">பிரதமர் நரேந்திர மோடி</a>க்கு எதிராக அவதூறு கோஷங்களை எழுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது சிறுமி, சமூக வலைதளங்களில் கைகூப்பி மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியிட்டுள்ளார். </p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவதூறாகவும், அசிங்கமான முழக்கங்களையும் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயதுச் சிறுமி, தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியீட்டின் மூலம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.</p><h2><strong>சம்பவம் பின்னணி:</strong></h2><p>கடந்த ஜூலை 23 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேட்டை  'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட நோய்டாவைச் சேர்ந்த ஒரு சிறுமி, பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரைப் பற்றி மிகவும் அவதூறான முறையில் முழக்கங்களை எழுப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நோய்டாவின் எக்ஸ்பிரஸ்வே காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 29 அன்று அந்த சிறுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2><strong>சிறுமிக்கு எதிரான சட்டப் பிரிவுகள்:</strong></h2><p>இந்திய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்படுதல், பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் வதந்தி அல்லது தகவல்களைப் பரப்புதல், அவதூறு வழக்கு போன்ற பிரிவுகளின் கீழ் சிறுமி மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.</p><p>சம்பவம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்ததால், இந்த Zero FIR தற்போது மேலதிக விசாரணைக்காக டெல்லியில் உள்ள பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு  மாற்றப்பட்டுள்ளது.</p><h2><strong>வழக்கு வேண்டாம்-வழிகாட்டுங்கள்:</strong></h2><p>இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியைப் பகிர்ந்திருந்தார்.</p><p>"எனக்கு எதிராகவும், எனது மறைந்த தாயாருக்கு எதிராகவும் எழுப்பப்பட்ட அவதூறு முழக்கங்கள் என்னை ஆழமாகப் காயப்படுத்தின. இருப்பினும், தவறு செய்யும் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தண்டனையைத் தேடாமல், அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அவர்களைச் சரியான பாதையில் வழிகாட்டவும் சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். நான் அந்த மாணவர்களை மன்னிக்கிறேன்,"* எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.</p><h2><strong>கைகளைக் கூப்பி மன்னிப்பு கேட்ட சிறுமி:</strong></h2><p>பிரதமரின் இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, அச்சிறுமியின் மன்னிப்பு வீடியோ இணையத்தில் வைரலானது. கன்னாட் பிளேஸ் பகுதிக்குச் சென்றுவிட்டுத் தனது நண்பர்களுடன் ஜந்தர் மந்தர் போராட்டத்தைப் பார்க்கச் சென்றதாகவும், அங்கு இருந்த சிலரின் தூண்டுதலால் உணர்ச்சிவசப்பட்டுத் தானும் அவ்வாறு முழக்கமிட்டதாகவும் சிறுமி கூறினார்.</p><h2><strong>மனவருத்தம்:</strong></h2><p>"எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை. இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறாக இருக்கும்," என்று கைகளைக் கூப்பியவாறு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.</p><h2><strong>காவல்துறை விசாரணை:</strong></h2><p>சிறுமி நோய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில், தற்போது அந்த வீடு பூட்டப்பட்டுள்ளது. காவல்துறை அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. போராட்டத்தை நடத்திய CJP கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவிக்கையில், "தவறான அல்லது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. </p><p>ஆனால், இதுபோன்ற கருத்துக்களுக்காகக் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது பேச்சு சுதந்திரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்படைந்தவர்கள் சிவில் அவதூறு வழக்கைச் சந்திக்கலாமே தவிர, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது சரியல்ல, எனக் கூறியுள்ளார். இவ்விகாரத்தில் காவல்துறை தனது அடுத்த கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்னை வருகை- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-rahul-gandhi-visits-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-rahul-gandhi-visits-chennai#comments</comments><guid isPermaLink="false">de61fb4b-c7f6-4217-8080-b32071689021</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:15:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:15:44.616Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,சென்னை வருகை,Chennai visit</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/i0orud0n/RG.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/i0orud0n/RG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.</p><p>சென்னை விமான நிலையத்தில் மக்களவை ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><h2>உற்சாக வரவேற்பு</h2><p>தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்க வருகைத் தந்த ராகுல் காந்தியை மாநில காங்கிரஸ் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-mekedatu-dam-issue-let-us-unite-avoid-politicizing-matter" rel="nofollow">மாணிக்கம் தாகூர்</a>, அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><h2>பயிற்சி முகாம்</h2><p>பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.</p><p>இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ராகுல் காந்தி காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance" rel="nofollow">ராகுல் காந்தி</a>க்கு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.</p><p>பின்னர் அங்கிருந்து மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு செல்கிறார். அங்கு, மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றுகிறார்.</p><h2>நிர்வாகிகளுடன் சந்திப்பு</h2><p>பின்னர், மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார். மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.</p><h2>நீட்</h2><p>அதே போன்று, கோவை மற்றும் சேலம் பகுதிகளில் நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. பின்னர் சென்னை வந்து இரவு 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>7,000mAh பேட்டரியுடன் ரூ. 20,000 பட்ஜெட்டில் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/oneplus-n6x-launches-in-india-with-7000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/oneplus-n6x-launches-in-india-with-7000mah-battery#comments</comments><guid isPermaLink="false">18797cef-0e57-4083-9236-8e39730ac2af</guid><pubDate>Sat, 01 Aug 2026 04:47:00 +0000</pubDate><atom:updated>2026-08-01T04:47:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OnePlus,ஒன்பிளஸ்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/mhhqpjng/OnePlus-N6x.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ OnePlus N6x]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/mhhqpjng/OnePlus-N6x.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/oneplus">ஒன்பிளஸ்</a> நிறுவனம், ஒன்பிளஸ் N6x ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் தனது மலிவு விலை ஸ்மார்ட்போன் சீரிசை ஒன்பிளஸ் நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.</p><p>புதிய <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஒன்பிளஸ் N6 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன், பேட்டரி லைஃப் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதோடு, பல ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் இல்லாத 3.5mm ஹெட்போன் ஜாக் அம்சத்தையும் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.</p><h2>அம்சங்கள்:</h2><p>ஒன்பிளஸ் N6x ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் HD+ (1570×720 பிக்சல்கள்) எல்.சிடி. ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டைமென்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.</p><p>ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 16 கொண்டிருக்கும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் IP64 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் MIL STD-810H தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றிருக்கிறது.</p><p>வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் N6x கடந்த ஆண்டு வெளியான ஒன்பிளஸ் நோர்ட் CE5 மாடலில் இருந்து பல அம்சங்களை கடன் வாங்கியுள்ளது. இதன் மேல் இடதுபுற ஓரத்தில் செங்குத்தாக அமைந்துள்ள டேப்லெட் வடிவ பின்புற கேமரா மாட்யூல் இடம்பெற்றுள்ளது.</p><p>அதே சமயம், முன்பக்கத்தில் வாட்டர்டிராப் நாட்ச் மற்றும் ஒப்பீட்டளவில் தடிமனான பெசல்களைக் கொண்ட டிஸ்ப்ளே ஆகியவை, இது ஒரு என்ட்ரி லெவல் மாடல் என்பதை பிரதிபலிக்கின்றன.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>இந்தியாவில் ஒன்பிளஸ் N6x-ன் விலை, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியண்ட்டிற்கு ரூ. 19,999-ல் தொடங்குகிறது. </p><p>இது 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு வேரியண்ட்டிலும் வருகிறது. இந்த கைபேசி பர்கண்டி ரெட் மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.</p><p>ஒன்பிளஸ் N6x-க்கான விற்பனை, ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், அமேசான் இந்தியா மற்றும் பிற தளங்களில் ஆகஸ்ட் 04-ஆம் தேதி மதியம் 12 மணிக்குத் தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>திமுக பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatasalam-relieved-from-dmk-post</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatasalam-relieved-from-dmk-post#comments</comments><guid isPermaLink="false">c9245c2c-874f-4f25-9f69-a6db1eaa4b32</guid><pubDate>Sat, 01 Aug 2026 04:39:19 +0000</pubDate><atom:updated>2026-08-01T04:39:19.568Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,duraimurugan,தோப்பு வெங்கடாசலம்,துறைமுருகன்,Thoppu venkadachalam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/tuuj5jwt/thoppu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thoppu Venkadasalam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/tuuj5jwt/thoppu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து <a href="https://www.maalaimalar.com/news/tamil-news-former-aiadmk-minister-thoppu-venkatachalam" rel="nofollow">தோப்பு வெங்கடாசல</a>ம் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p>அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட பெருந்துறை மற்றும் பவானி தொகுதிகள் முறையே ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் கீழ் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் நிர்வகிப்பார்கள்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அதிமுக டூ திமுக</h2><p>ஈரோட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்.</p><p>அதிமுகவில் இருந்தபோது ஈரோடு மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த முக்கிய பங்காற்றினார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">பெருந்துறை தொகுதி</a>யிலிருந்து  சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அமைச்சராகவும் பணியாற்றினார்.</p><p>இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தோப்பு வெங்கடாச்சலத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து 2021ஆம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.</p><h2>காரணம் என்ன?</h2><p>உட்கட்சி பூசல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனால், கட்சி பணியில் ஈடுபடாமல் தோப்பு வெங்கடாச்சலம் ஒதுங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்டுள்ளார்.</p><h2>தவெக-ல் இணைய முடிவு?</h2><p>அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதனால், திமுகவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஆளுங்கட்சியான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/continuous-changes-under-the-tvk-government-now-the-thayumanavar-scheme-has-been-renamed" rel="nofollow">தவெக</a>வில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நிலவரம் 
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-1-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-1-8-2026#comments</comments><guid isPermaLink="false">264f5097-b3d4-45bd-bbff-1d4d972d9148</guid><pubDate>Sat, 01 Aug 2026 04:26:01 +0000</pubDate><atom:updated>2026-08-01T04:26:01.470Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/28/13493018-gold3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/28/13493018-gold3.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.</p><p>கடந்த 29-ந்தேதி கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 155-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 240-க்கும் விற்பனையானது. </p><p>30-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,230-க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையானது. </p><p>நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை சரிவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>31-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,040</p><p>30-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840</p><p>29-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,240</p><p>28-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,720</p><p>27-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>31-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>30-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>29-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>28-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>27-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item><item><title>கேரளத்தில் கனமழை - நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/heavy-rainfall-in-keralam-two-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/heavy-rainfall-in-keralam-two-death#comments</comments><guid isPermaLink="false">9bafe00e-eaea-4995-9d20-07a8692bda16</guid><pubDate>Sat, 01 Aug 2026 03:54:55 +0000</pubDate><atom:updated>2026-08-01T03:54:55.701Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,landslide,இடுக்கி நிலச்சரிவு,கேரளம்,Keralam,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/hpzglr9v/kerala.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Idukki  landslide ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/hpzglr9v/kerala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் மண்ணில் புதைந்து இறந்துள்ளனர்.</strong></em> </p><h2>கேரளத்தில் கனமழை</h2><p>தெற்கு குஜராத் கடற்கரையில் இருந்து வடக்கு கேரள கடற்கரை வரை பரவியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக கேரளத்தில் கனமழை பெய்து வருகிறது. 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை இன்றும் நீடித்தது.</p> <p>தொடர் மழை காரணமாக கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் வௌளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்தன. </p><h2>8 மாவட்டங்கள்</h2><p>பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக சாலைகள் மற்றும் வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. </p><p>இதனால் கேரளத்தில் பல பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. 8 மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. </p> <h2>நிலச்சரிவு</h2><p>மேலும் நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்து 3 பேர் பலியாகி விட்டனர். இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கூடயத்தூர் மசிகல்லேல் பகுதியில் ரவி நாராயணன் என்பவர் தனது மனைவி சுமதி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவரது வீடு இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவில் சிக்கியது. இதில் வீட்டில் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். </p><p>இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரவி நாராயணன் மற்றும் அவரது மகன் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனால் சுமதி பரிதாபமாக இறந்தார். </p> <h2>வீடு இடிந்தது</h2><p>வாகமன், கொலஹால மேட்டில் லீலமணி என்பவரது வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டு மண் விழுந்ததில் அங்கிருந்த பிரபாகரன் நாயர் (வயது 72) என்பவர் பரிதாபமாக இறந்தார். பூஞ்சார், தெக்கேக்கரை, பையனித் தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்தது. </p><p>இதில் மணக்கட்டு பகுதியை சேர்ந்த ஜோசபின் ஜானி (24) என்ற வாலிபர் பலியானார். அவரது தாயார் ரெஜினா இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில், காயங்களுடன் மீட்கப்பட்டார். உப்புத்தாரா பகுதியில் போலீஸ் ரோந்து ஜீப் நிலச்சரிவில் சிக்கியது. அதில் இருந்த போலீசார், அவசரமாக கீழே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். </p> <h2>போக்குவரத்து தடை</h2><p>எரட்டுப்பேட்டை - வாகமன் சாலையில் நிலச்சரிவின் காரணமாக வாகன போக்குவரத்து தடைபட்டது. கோட்டயத்தின் கிழக்கு பகுதி, முனிலவில், கொட்டிக்கல் பஞ்சாயத்து கொடுங்காவு, மீனாச்சில் மற்றும் காஞ்சிரப்பள்ளி தாலுகாக்களின் பல்வேறு இடங்களிலும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அரசு பஸ் டிரைவரின் வீடு ஒன்று முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. </p><p>மழை காரணமாக கொட்டிக்கல் நகரம், முண்டக்காயம் இணைப்பு சாலை, எரட்டுப்பேட்டை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. தொடுபுழா சாலையிலும் தண்ணீர் தேங்கியது. மணிமலை ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து, புனலூர் மூவாற்றுப்பேட்டை சாலையில் உள்ள மணிமலை நகரம், மன்னநானி, வழூர் மற்றும் மணிமலை சாலைக்குள் தண்ணீர் புகுந்தது. பல வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கின. காஞ்சிரப்பள்ளி எரட்டுப்பேட்டை சாலையிலும் வெள்ளம் சூழ்ந்தது.</p> <h2>வெள்ளப்பெருக்கு</h2><p>தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும், நீர் தேக்கமும் ஏற்பட்டுள்ளது. இடுக்கியில் ஓடைகள் மற்றும் ஆறுகள் பல இடங்களில் பெருக்கெடுத்து ஓடியதால், சாலைகளையும், குடியிருப்பு பகுதிகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.</p><h2>மஞ்சள் எச்சரிக்கை</h2><p>பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.</p> <h2>வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை</h2><p>கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களின் கடற்கரைகளில் உயரமான அலைகளால் கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கடலோர மக்களும் மீனவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Keralam: Heavy rainfall triggers widespread damage in Idukki district. One person was killed after a landslide struck a house at Vagamon in the district. The deceased has been identified as Prabhakaran Nair, a native of Vaikom. His body has not yet been recovered.<br><br>A… <a href="https://t.co/0TVGJSQjE8">pic.twitter.com/0TVGJSQjE8</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2083386946622284216?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ரூ. 30,000 வரை அதிகமாக இருக்கும்... இணையத்தில் லீக் ஆன ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் விலை விவரங்கள்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/iphone-18-pro-max-launch-date-leaks-as-reports-warn-of-price-hike-up-to-rs-30000</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/iphone-18-pro-max-launch-date-leaks-as-reports-warn-of-price-hike-up-to-rs-30000#comments</comments><guid isPermaLink="false">5b782728-11ce-4e89-b149-4a9898ec986d</guid><pubDate>Sat, 01 Aug 2026 03:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-01T03:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,Iphone,ஐபோன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ocolc4mm/iphone-17-pro.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iPhone]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ocolc4mm/iphone-17-pro.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனம் தனது ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் விலையை குறைந்தபட்சம் ரூ. 20,000-இல் தொடங்கி அதிகபட்சம் ரூ. 30,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது <a href="https://www.maalaimalar.com/topic/iphone">ஐபோன்</a> 17 ப்ரோ மாடல் ரூ. 1,34,999 என்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் விலை ரூ. 1,49,900 விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.</p><p>அமெரிக்க சந்தையில் புதிய ஐபோன்களின் விலை 200 டாலர்கள் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.</p><h2>அதிநவீன கேமரா:</h2><p>விலை உயர்வை தவிர்த்து புதிய ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் அதிநவீன கேமரா அமைப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோனில் முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம் வேரியபில் அபெர்ச்சர் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இந்த அமைப்பு குறைந்த வெளிச்சமுள்ள ஷாட்களில் எவ்வளவு வெளிச்சத்தை அனுமதிக்க முடியும் என்பதை சென்சார் கட்டுப்படுத்தும். இவ்வாறு செய்யும் போது பேக்கிரவுண்ட் பிளர் அதிக இயற்கையாக இருக்கும். இது புகைப்படங்களை இயற்கையிலேயே அதிக தெளிவாக காட்சியளிக்க செய்கிறது.</p><h2>மேம்பட்ட செயல்திறன்:</h2><p>இதுதவிர புதிய ஐபோன் சீரிஸ் ஏ20 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது TSMC-இன் 2 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிப்செட் அதீத செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் இது ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த C2 மோடெம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மோடெம் மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி மற்றும் செயற்கைக்கோள் சார்ந்த 5ஜி அம்சங்களை வழங்கும்.</p><p>புதிய ஐபோன்களின் பேட்டரி திறன் முந்தைய மாடல்களை விட மேம்பட்டு இருக்கும் என்றும், ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடலில் அதிகபட்சமாக 5200mAh பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது. கொடுக்கும் விலைக்கு புதிய ஐபோன் சீரிஸ் மேம்பட்ட செயல்திறன், நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் அதிநவீன கேமரா அம்சங்களுடன் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>புதிய நிறங்கள்:</h2><p>2026 ஐபோன் சீரிஸ் டார்க் செர்ரி ரெட், லைட் புளூ மற்றும் டார்க் கிரே என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்கிரீன் அளவுகளை பொருத்தவரை ப்ரோ மாடல் 6.3 இன்ச் ஆகவும் ப்ரோ மேக்ஸ் மாடல் 6.9 இன்ச் ஆகவும் இருக்கும் என்றும் மேம்பட்ட LTPO+ பேனல்கள் முந்தைய மாடல்களை விட அதி பிரைட்னஸ் வழங்கும் என்று கூறப்படுகிறது.</p><p>பெரிய பேட்டரி என்பதால் ப்ரோ மேக்ஸ் மாடல் சற்றே தடிமனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய ஐபோனின் டைனமிக் ஐலேண்ட் முந்தைய மாடலில் இருப்பதை விட 35% வரை சிறியதாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>வெளியீடு:</h2><p>தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் 12-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன்களுடன் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இந்த முறை ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன்களுடன் ஐபோன் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களை மட்டும் செப்டம்பரில் அறிமுகம் செய்வதாகவும், ஐபோன் 18 ஸ்டான்டர்டு மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced#comments</comments><guid isPermaLink="false">12588aee-a6b6-454c-b487-9bc699333776</guid><pubDate>Sat, 01 Aug 2026 03:22:41 +0000</pubDate><atom:updated>2026-08-01T03:22:41.064Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Breakfast Scheme,பெருந்தலைவர் காமராஜர்,காலை உணவு திட்டம்,தவெக அரசு,tvk government,Perunthalaivar Kamarajar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/8cjo1acu/food.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/8cjo1acu/food.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>காமராஜர்</h2><p>ஏழை மாணவர்களையும் பள்ளிக்கு அழைத்து வரும் வகையில், மதிய உணவு திட்டத்தை, முதலமைச்சராக இருந்த காமராஜர் கொண்டு வந்தார். அந்த திட்டம் மூலம் அதிகமான ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கினர். எனவே அந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.</p> <h2>எம்.ஜி.ஆர்.</h2><p>காமராஜருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த கட்சிகள், அந்த திட்டத்தை பொலிவுபடுத்த தொடங்கின. அந்த வகையில், எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1982-ம் ஆண்டு ஜூலையில், அனைத்து மாணவர்களுக்குமான சத்துணவு திட்டமாக அதை கொண்டு வந்தார். முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சத்துணவோடு முட்டையையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டார். ஜெயலலிதா ஆட்சியில் இந்த திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டது.</p> <h2>மு.க.ஸ்டாலின் </h2><p>மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த கடந்த தி.மு.க. ஆட்சியில் முற்றிலும் புதிய வகையில், மாணவர்களுக்கு காலையில் உணவு வழங்குவதற்காக முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.</p> <p>இந்த திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் அந்த திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது. </p> <h2>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்</h2><p>முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி முதல், காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p> <p>இந்நிலையில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கான உணவு பொருட்களை கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆன்லைன் டெண்டர் </h2><p>காலை உணவு திட்டத்திற்கான உணவு பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்ய புதிய ஆன்லைன் டெண்டர் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் (TNCCF) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ரவை, சம்பா ரவை தலா 1,000 மெட்ரிக் டன், சேமியா 1,100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது  </p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: முன்னாள் மேலாண் இயக்குனர் விசாகன் தலைமறைவு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-former-md-visakan-missing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-former-md-visakan-missing#comments</comments><guid isPermaLink="false">35ccca80-cfd1-4456-a3d6-75badd3ed3f8</guid><pubDate>Sat, 01 Aug 2026 03:22:23 +0000</pubDate><atom:updated>2026-08-01T03:22:23.028Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,லஞ்ச ஒழிப்பு துறை,Tasmac,டாஸ்மாக் முறைகேடு வழக்கு,விசாகன்,visagan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/1l3n0pro/visagan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Visagan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/1l3n0pro/visagan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.</p><h2>செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு</h2><p>முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, புதிய வழக்கு ஒன்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கையொட்டி தமிழகம் முழுவதும் செந்தில் பாலாஜி தொடர்புடைய 45 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையும் மேற்கொண்டனர்.</p><p>இந்த புதிய வழக்கில், செந்தில் பாலாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 2-வது குற்றவாளியாக டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர், ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் இருக்கிறார். 3-வது மற்றும் 4-வது குற்றவாளிகளாக சீனியர் மேலாளர்கள் ராமதுரைமுருகனும், பன்னீர்செல்வமும் இணைக்கப்பட்டு உள்ளனர்.</p><p>5-வது குற்றவாளியாக செந்தில் பாலாஜியின் தனிப்பட்ட உதவியாளர் பாஸ்கர் உள்ளார். இவர்களை தொடர்ந்து 6-வது மற்றும் 7-வது குற்றவாளிகளாக செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ரத்தேஷ்ராஜ் சண்முகவேல் என்பவரும், கார்த்திக் என்ற மூலநூர் கார்த்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2>2 பேர் கைது</h2><p>ரத்தேஷ் ராஜ் சண்முகவேலும், மூலநூர் கார்த்திக் என்பவரும்தான் 'கரூர் கேங்' என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் மறுக்கப்பட்டது. </p><p>ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளுடன், அவருக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது. முன்ஜாமின் கிடைத்துவிட்டதால், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி விரைவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் விசாரணைக்கு ஆஜராவார்.</p><p>இந்தநிலையில் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக கூறப்படும், கார்த்திக் என்பவரும், ரமேஷ் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.</p><p>கார்த்திக்கின் பெயர் ஏற்கனவே போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், 7-வதாக இடம்பெற்றுள்ளது. கைதான ரமேஷ் என்பவர் புதிதாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக, லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். கைதாகி உள்ள இவர்கள் இருவரும் ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறப்பிடத்தக்கது.</p><h2>விசாகன் தலைமறைவு</h2><p>டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் முன்னாள் மேலாண் இயக்குநர் விசாகன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>டாஸ்மாக் முறைகேடு புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாகனை விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>விசாரணை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அணுகியபோது விசாகனின் செல்ஃபோன் அணைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>டாஸ்மாக் முறைகேட்டில் இரண்டாவது குற்றம்சாட்டப்பட்ட நபராக விசாகன் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>நேற்று முன்தினம் கைதானோர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் விசாகனை விசாரிக்க போலீசார் தேடி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>அப்பா தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்! - ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjay-says-hollywood-opportunity-dad-is-my-first-choice</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjay-says-hollywood-opportunity-dad-is-my-first-choice#comments</comments><guid isPermaLink="false">d2106102-1f14-42d7-b89b-2f1a38ac2576</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:42:07 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:42:07.675Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jason sanjay,விஜய்,vijay,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma movie</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/21rejmfq/WhatsApp-Image-2026-08-01-at-8.08.25-AM.jpeg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay - Jason Sanjay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/21rejmfq/WhatsApp-Image-2026-08-01-at-8.08.25-AM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கோலோச்சிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-340-crore-allocated-for-drinking-water-and-other-essential-works-chief-minister-vijay-orders">விஜய்</a>, தற்போது தமிழக முதலமைச்சராக மாறியுள்ளார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். சந்தீப் கிஷன் நடிப்பில் 'சிக்மா' என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.</p><p>இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. </p> <h2>சிக்மா</h2><p>இதில், "உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், '<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE">சிக்மா</a>' படத்தை பார்த்து விட்டு தம்பி வாங்க ஹாலிவுட்டில் ஒரு படம் பண்ணலாம் என்று கூப்பிடுகிறார். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் இந்தியாவிலிருந்து எந்த ஒரு சிறந்த நடிகரை கூட்டி செல்வீர்கள்? என்று கேட்கப்பட்டது.</p><h2>ஜேசன் சஞ்சய்</h2><p>இதற்கு ஜேசன் சஞ்சய், "எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பா (விஜய்) தான். இருவரும் இணைந்தால் அது அட்டகாசமான கூட்டணியாகவும் இருக்கும். நான் இப்போது தெரிவிக்கும் இந்த கருத்தை நடிகர் ஜேசன் ஸ்டேதம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று பதில் அளித்தார்.</p> <h2>ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி</h2><p>மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் சென்னையில் நடந்த சமயம், விஜய்யின் தோளில் சிறுவனாக அமர்ந்துகொண்டு அந்தப் போட்டியை பார்த்து ரசித்தது உள்ளிட்ட சில அனுபவங்களையும் ஜேசன் சஞ்சய் அப்போது பகிர்ந்து கொண்டார்.</p><p>தனது தந்தை விஜய் பற்றி ஜேசன் சஞ்சய் பெருமையாக கூறிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-ticket-sale-starts-today</link><comments>https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-ticket-sale-starts-today#comments</comments><guid isPermaLink="false">c8c78242-bb99-4424-adaa-57d0c48299ca</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:32:16 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:32:16.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cricket,கிரிக்கெட்,டிக்கெட் விற்பனை,டிஎன்பிஎல்,tnpl,ticket price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/kqufj1aa/TNPL1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/kqufj1aa/TNPL1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>8 அணிகள் பங்கேற்கும் 10-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 2 கட்டமாக நடத்தப்படுகிறது. </p><p>முதல் கட்ட ஆட்டங்கள் (4-15) திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், இறுதிப்போட்டி உள்ளிட்ட 2-வது கட்ட ஆட்டங்கள் (18-28) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடக்கிறது.</p><p>இந்த தொடரின் முதல் கட்ட ஆட்டங்களுக்கான நேரடி டிக்கெட் விற்பனை நத்தம் என்.பி.ஆர். கல்லூரி நுழைவுவாயிலில் அமைக்கப்பட்ட கவுண்ட்டரில் இன்று தொடங்குகிறது.</p><p>தினசரி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும். இந்த போட்டிக்கான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D" rel="nofollow">டிக்கெட்</a> கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>இது தவிர District.in இணையதளம் மற்றும் செயலி வாயிலாகவும் ஆன் லைனில் டிக்கெட்டுகளை பெற்றுகொள்ளலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வெளியிடப்பட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-begin-across-tamil-nadu-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-begin-across-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">9751cc09-cee6-431c-8e07-93163ce1fd5d</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:14:15 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:14:15.764Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,Census,மக்கள்தொகை கணக்கெடுப்பு,Digital Technology,தமிழ்நாடு,டிஜிட்டல் தொழில்நுட்பம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/2k27g8dz/census.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ People]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/2k27g8dz/census.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.</strong></em> </p><p>மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p> <h2>மக்கள்தொகை கணக்கெடுப்பு</h2><p>தமிழ்நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-registered-census-details-in-online">மக்கள்தொகை</a> கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்டு 1-ந் தேதி (இன்று) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 19 ஆயிரம் அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.</p><h2>டிஜிட்டல் தொழில்நுட்பம்</h2><p>அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன. இந்தியாவில் முதல்முறையாக இக்கணக்கெடுப்பில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேக செல்போன் செயலி மூலம் தரவுகள் பதிவு செய்யப்படும். </p> <h2>சுய கணக்கெடுப்பு</h2><p>1948-ம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள்தொகைக் கணக்கெடுப்புச்</a> சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். சுய-கணக்கெடுப்பு செய்தவர்கள் தங்கள் சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை கணக்கெடுப்பாளர்களிடம் காட்ட வேண்டும். இந்த வசதியைப் பயன்படுத்தாத குடும்பங்களும் களப்பணியின் போது கணக்கெடுக்கப்படுவார்கள்.</p> <p>வீட்டுவசதி நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் இந்த தேசியப் பணியில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 1.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு புதிய ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி கிட்டும் நாள்...</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-38</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-38#comments</comments><guid isPermaLink="false">f60fbdae-9c4f-4b75-97b9-5cad633fe94f</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:03:32 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:03:32.788Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Daily Rasipalan,rasi palan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-31/6pltfgvu/New-Project-2026-05-25T070202.454.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய ராசிபலன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-31/6pltfgvu/New-Project-2026-05-25T070202.454.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>வரன்கள் வாயில் தேடி வரும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>வளர்ச்சி கூடும் நாள். உறவினர்களின் வருகையால் செலவுகள் உண்டு. விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி கிட்டும்.</p><h2>மிதுனம்</h2><p>இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர். வாகனப் பராமரிப்பிற்காக செலவிட நேரிடலாம்.</p><h2>கடகம்</h2><p>பணநெருக்கடி ஏற்படும் நாள். பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.</p><h2>சிம்மம்</h2><p>மனக்குழப்பம் அகலும் நாள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று இன்று முடிவிற்கு வரலாம். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p><h2>கன்னி</h2><p>மகிழ்ச்சியான நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பஞ்சாயத்து சாதகமாகும். பயணங்களை மாற்றியமைப்பீர்கள். நண்பர் களின் வழியே விரயம் உண்டு.</p><h2>துலாம்</h2><p>உடன்பிறப்புகளால் கடன்சுமை குறையும் நாள். எதிர்பாராத வரவு உண்டு. திடீர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>வெற்றி செய்தி வீடு வந்து சேரும் நாள். பயணத்தில் பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உத்தியோ கத்தில் சலுகைகள் கிடைக்கும்.</p><h2>தனுசு</h2><p>7 தொழிலில் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர். வீடு, வாங்கும் முயற்சி வெற்றி தரும்.</p><h2>மகரம்</h2><p>பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.</p><h2>கும்பம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பயணத்தால் தொல்லையுண்டு. ஆரோக்கி யத்தில் கொஞ்சம் அக்கறை தேவை. திடீர் செலவுகளால் கையிருப்புக் கரையலாம்.</p><h2>மீனம்</h2><p>வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கியத்திலிருந்த அச்சுறுத்தல்கள் அகலும். உத்தியோக முயற்சி கைகூடும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-1-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-1-august-2026#comments</comments><guid isPermaLink="false">7b9ca346-83ce-46e5-8c45-e3db2061f5d2</guid><pubDate>Sat, 01 Aug 2026 01:43:58 +0000</pubDate><atom:updated>2026-08-01T01:43:58.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol Diesel Price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (1.8.2026 - (சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.87-க்கும் டீசல் ரூ.99.65-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 1 ஆகஸ்ட் 2026: திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-1-august-2026-thirunallar-sani-bhagavan-abhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-1-august-2026-thirunallar-sani-bhagavan-abhishekam#comments</comments><guid isPermaLink="false">cc62f58e-f3b8-4584-9ec3-b6e9a3f33598</guid><pubDate>Sat, 01 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-01T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/49qgv5s0/sanibagavan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சனிபகவான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/49qgv5s0/sanibagavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-16 (சனிக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   திருதியை இரவு 10.37 மணி பிறகு சதுர்த்தி</p><p>நட்சத்திரம் : சதயம் இரவு 8.58 வரை பிறகு பூரட்டாதி</p> <p>யோகம் :  அமிர்த / மரணயோகம்</p><p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை</h2><p>திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பக விமானத்தில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் நயினார் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - வெற்றி</p><p>ரிஷபம் - உயர்வு</p><p>மிதுனம் - ஈகை</p><p>கடகம் - கடமை</p><p>சிம்மம் - முயற்சி</p><p>கன்னி - பயிற்சி</p> <p>துலாம் - கவனம்</p><p>விருச்சிகம் - தெளிவு</p><p>தனுசு - பொறுமை</p><p>மகரம் - நன்மை</p><p>கும்பம் - அமைதி</p><p>மீனம் - பயணம்</p> ]]></content:encoded></item><item><title>வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-cylinder-price-reduced-by-rs200</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-cylinder-price-reduced-by-rs200#comments</comments><guid isPermaLink="false">ee22ae6b-eed1-4d0e-800a-ee49e07fe162</guid><pubDate>Sat, 01 Aug 2026 01:09:29 +0000</pubDate><atom:updated>2026-08-01T01:09:29.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commercial cylinder,வணிக சிலிண்டர்,கச்சா எண்ணெய்,cylinder price,வணிக சிலிண்டர் விலை குறைப்பு,cylinder price low</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/dk34hp9f/cylinder.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Commercial cylinder price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/dk34hp9f/cylinder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த வணிகப் பயன்பாட்டிற்கான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">எரிவாயு சிலிண்டர் விலை</a> கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து வருகிறது.</p><p>சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை மாற்றத்தை அறிவித்துள்ளன.</p><h2>வணிக சிலிண்டர் விலை</h2><p>இந்நிலையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>கடந்த மாதம், 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டு, சென்னையில் ரூ.3,283-ஆக இருந்த வணிக சிலிண்டரின் விலை ரூ.3,106 ஆகக் குறைந்தது.</p><p>மேற்கு ஆசியாவில் நிலவிய உலகளாவிய எரிசக்தி விநியோகத் தட்டுப்பாடு மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் வணிக சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்து ரூ.3,283-ஐ எட்டியிருந்தது. தற்போதைய பதற்ற தணிவுக்குப் பிறகு, இந்த ஆண்டின் முதல் முக்கிய விலை குறைப்பாக இது பார்க்கப்படுகிறது.</p><h2>வீட்டு உபயோக சிலிண்டர்</h2><p>பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, அது ரூ.957.50 என்ற பழைய விலையிலேயே நீடிக்கிறது.</p><p>இந்த விலை குறைப்பு உணவகங்கள், <a href="https://www.maalaimalar.com/news/national/tea-is-the-soul-of-assam-prime-minister-modi-shares-photos-of-resilience" rel="nofollow">தேநீர் கடை</a>கள் மற்றும் சிறு வணிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. எனினும், இதன் காரணமாக ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை குறையுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் எரிசக்தி மையங்களை குறி வைக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்</title><link>https://www.maalaimalar.com/news/world/us-israel-planning-to-bombard-energy-related-targets-in-iran-report</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-israel-planning-to-bombard-energy-related-targets-in-iran-report#comments</comments><guid isPermaLink="false">b55940a3-b997-4c4e-82cc-b7f21d60262a</guid><pubDate>Sat, 01 Aug 2026 00:27:51 +0000</pubDate><atom:updated>2026-08-01T00:27:51.286Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,இஸ்ரேல்,Israel,ஈரான்,Iran,us</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-06/hcp3ptxh/tehran.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-06/hcp3ptxh/tehran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு இலக்குகள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்த <a href="https://www.maalaimalar.com/topic/US">அமெரிக்கா</a> மற்றும் இஸ்ரேல் இணைந்து திட்டமிட்டுள்ளதாகவும், வார இறுதி முழுவதும் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், சி.பி.எஸ். நியூஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.</p><p>சிபிஎஸ் மேற்கோள் காட்டிய தகவல்களின்படி, அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> இந்த தாக்குதல்களுக்கு இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை.</p><p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போரின் போது, ​​ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிராக இதுவரை நடத்தப்பட்டதிலேயே மிகவும் கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாக இது இருக்கும் என்று சி.பி.எஸ். செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>மேலும், திங்கட்கிழமை நிதி சந்தைகள் திறப்பதற்குள் இந்த தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.</p><h2>ஈரான் திட்டவட்டம்:</h2><p>முன்னதாக அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும், தலையீடுகளும் நீடிக்கும் வரை பன்னாட்டு கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் நீரிணையை திறக்கமுடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்தது.</p><p>“அமெரிக்காவின் மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும், கடல்வழிப் போக்குவரத்தில் அவர்களின் தலையீடும் தொடரும் வரை, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது” என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.</p><h2>பரிந்துரை நிராகரிப்பு:</h2><p>ஹார்மூஸ் நீரிணையை அமைதியான முறையில் இரு நாடுகளும் இணைந்து நிர்வகிக்கலாம் என்ற அண்டை நாடான ஓமனின் சமரச திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்தது. </p><p>மேலும் முன்பு இருந்ததைப்போல, அதாவது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்குவதற்கு முன்பு இருந்ததை போல, அனைவருக்கும் தடையற்ற சுதந்திரமான அணுகல் நிலைக்கு ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திரும்பாது என்று ஈரான் மீண்டும் தெரிவித்து இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>இராணுவ தளத்தில் வெடித்துச் சிதறிய அமெரிக்க போர் விமானம்</title><link>https://www.maalaimalar.com/news/world/us-fighter-jet-crashes-near-california-military-base</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-fighter-jet-crashes-near-california-military-base#comments</comments><guid isPermaLink="false">125134ec-71c0-42c2-a300-ad5bc9fba24a</guid><pubDate>Fri, 31 Jul 2026 23:48:01 +0000</pubDate><atom:updated>2026-07-31T23:48:01.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,Fighter Jet,போர் விமானம்,us</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/7mcunnzg/US-F-35-fighter-jet.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போர் விமானம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/7mcunnzg/US-F-35-fighter-jet.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சான் டியாகோவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு அருகே அமெரிக்காவின் எஃப்-35 ரக <a href="https://www.maalaimalar.com/topic/fighter-jet">போர் விமானம்</a> ஒன்று விபத்துக்குள்ளானது, ஆனால் விமானம் தரையில் மோதுவதற்கு முன்பே விமானி வெளியேறிவிட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>மிராமர் கடற்படை விமான தளத்தின் அருகாமையில், காலை 10:00 மணியளவில் (1700 GMT), கடற்படையை சேர்ந்த F-35B ரக விமானம் விபத்தில் சிக்கியதாக அத்தளத்தின் செய்தி தொடர்பாளர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><h2>பற்றி எரிந்த விமானம்:</h2><p>விமானி வெளியே தூக்கி எறியப்பட்டார்; அவரது உடல் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் விமானி காயமடைந்தாரா அல்லது வேறு யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா என்பதை செய்தித் தொடர்பாளரால் கூற முடியவில்லை. ஆனால், அமெரிக்க இராணுவம் இது குறித்த விவரங்களை பின்னர் வழங்கும் என்று அவர் கூறினார்.</p><p>தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில், விமானத்தில் இருந்து புகை மண்டலம் எழுவதை காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.</p><h2>ஸ்டெல்த் விமானம்:</h2><p>F-35B என்பது மரைன் கார்ப்ஸ், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றால் இயக்கப்படும் அதிநவீன 'ஸ்டெல்த்' ரக போர் விமானத்தின் பல வகைகளில் ஒன்றாகும். இதன் 'B' வகையானது, குறுகிய தூரத்திலேயே வானில் எழும்பி செல்லும் வகையிலும், செங்குத்தாக தரையிறங்கும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரத்தை கொண்டுள்ளது.</p><p>சான் டியாகோ தீயணைப்பு துறையின் செய்தி தொடர்பாளர் கேண்டஸ் ஹேட்லி, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஏற்பட்ட தாவர தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறினார். அவர் இந்த சம்பவம் குறித்த இதர கேள்விகளை மிராமாரிடம் கேட்குமாறு குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>இறுதிச்சுற்று : காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் அசத்தல்</title><link>https://www.maalaimalar.com/sports/1010-for-indian-boxers-in-cwg-2026-semi-finals</link><comments>https://www.maalaimalar.com/sports/1010-for-indian-boxers-in-cwg-2026-semi-finals#comments</comments><guid isPermaLink="false">3d86f608-ef0b-416c-b403-526b6794f8c4</guid><pubDate>Fri, 31 Jul 2026 23:20:48 +0000</pubDate><atom:updated>2026-07-31T23:20:48.540Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/3nfv710w/Preeti-Pawar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Preeti Pawar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/3nfv710w/Preeti-Pawar.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் 10 பிரிவுகளின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.</p><p>மகளிர் 70 கிலோ எடைப் பிரிவு அரையிறுதி போட்டியில், அருந்ததி சௌத்ரி நடப்பு சாம்பியனான வேல்ஸை சேர்ந்த ரோஸி எக்கிள்ஸை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். </p><p>அதே நேரத்தில், உலக சாம்பியனான ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) மற்றும் மேலும் ஆறு இந்திய வீராங்கனைகள், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் குத்துச்சண்டை ஆட்டங்களில் அபார வெற்றிகளை பெற்று தத்தமது இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறினர். </p><p>ஒலிம்பிக் பதக்கம் வென்ற லவ்லினா, துவாலுவை சேர்ந்த தரோனா கானும் பாடி பசோனி தாஃபாகியை ஒருமனதாக 5-0 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி, களத்தில் தனது கச்சிதமான திறமையை வெளிப்படுத்தி, அனைத்து துறைகளிலும் தனது எதிராளியை விஞ்சினார்.</p><h2>வெற்றிகரமான நாள்: </h2><p>ஆட்டத்தின் தொடக்க மணியடித்தது முதலே, இந்திய வீராங்கனை தனது நீண்ட கரங்கள், கூர்மையான காலடி அசைவுகள் மற்றும் கச்சிதமான கூட்டு ஷாட்களை சிறப்பாக பயன்படுத்தி தாஃபாகியை கட்டுப்படுத்தி, ஆட்டத்தின் வேகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.</p><p>ஆடவர் 90+ கிலோ எடை பிரிவில், டிரினிடாட் மற்றும் டொபாகோவின் நைஜல் பாலுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய நரேந்தர், தனது எதிராளியை முழுமையாக வீழ்த்தி நடுவர்களின் ஒருமனதான 5-0 என்ற தீர்ப்பின் மூலம் வெற்றியை பெற்று, குத்துச்சண்டை அரங்கில் இந்தியாவுக்கு மிகவும் வெற்றிகரமான ஒரு நாளை நிறைவு செய்தார்.</p><p>பிரீத்தி பவார் (மகளிர் 54 கிலோ), சாக்ஷி சௌத்ரி (மகளிர் 51 கிலோ), பிரியா கங்காஸ் (மகளிர் 60 கிலோ), அங்குஷ் பங்கல் (ஆடவர் 80 கிலோ) மற்றும் ஜதுமணி சிங் (ஆடவர் 55 கிலோ) ஆகியோரும் தங்கப் பதக்கப் போட்டிகளில் தங்களது இடங்களை உறுதி செய்தனர்.</p><h2>ஸ்டான்டிங் கவுன்ட்:</h2><p>பெண்கள் 70 கிலோ எடை பிரிவுக்கான, குழப்பமான மற்றும் ஆக்ரோஷமான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை அருந்ததி தனது வேல்ஸ் நாட்டு எதிராளியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். முதல் இரண்டு சுற்றுகளில் தனது வலுவான ஆட்டத்தை தொடர்ந்த இந்திய வீராங்கனை, அந்த காலகட்டத்தில் ரோஸியை நின்று எண்ணும்படி கட்டாயப்படுத்தினார்.</p><p>57 கிலோ எடைப் பிரிவு அரையிறுதி போட்டியில் ஜெய்ஸ்மின் மிகவும் ஆதிக்கம் செலுத்தியதால், இரண்டாவது சுற்றின் இறுதி வினாடிகளில் லெசோதோ வீராங்கனையான அவர் மூன்றாவது முறையாக நின்ற நிலையிலிருந்த ஸ்டான்டிங் கவுன்ட் பெற்ற பிறகு, நடுவர் போட்டியை நிறுத்தியதன் (RSC) மூலம் வெற்றி பெற்றார்.</p><p>அரையிறுதி போட்டியில் நமீபியாவின் பி.பி.எம். ஹாவோசெப்பை ஒருமனதான 5-0 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்த பிறகு, ஜடுமானி ஆடவர் 55 கிலோ எடைப் பிரிவு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.</p>]]></content:encoded></item><item><title>நீரஜ் சோப்ரா, யாஷ்வீர் சிங் அபாரம்: ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற இந்தியா!</title><link>https://www.maalaimalar.com/sports/chopra-wins-javelin-throw-silver-in-cwg-bronze-for-yashvir</link><comments>https://www.maalaimalar.com/sports/chopra-wins-javelin-throw-silver-in-cwg-bronze-for-yashvir#comments</comments><guid isPermaLink="false">f5b40fd5-fc7c-4f6a-8c24-f8f5047a9cbd</guid><pubDate>Fri, 31 Jul 2026 21:49:37 +0000</pubDate><atom:updated>2026-07-31T21:49:37.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Neeraj Chopra,நீரஜ் சோப்ரா,காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Yashvir Singh,யாஷ்வீர் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/lj1wk9jw/Neeraj-and-Yashvir.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Neeraj and Yashvir]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/lj1wk9jw/Neeraj-and-Yashvir.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில், சவாலான வானிலை நிலவிய சூழலிலும் இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கத்தை வென்றார்; அதேவேளையில், யஷ்வீர் சிங் தனது கடைசி முயற்சியில் எதிர்பாராத விதமாக வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். </p><p>டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான 28 வயதுடைய <a href="https://www.maalaimalar.com/topic/neeraj-chopra">சோப்ரா</a>, தனது இரண்டாவது முயற்சியில் 85.83 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த சீசனிலேயே தனது சிறந்த செயல்பாட்டைப் பதிவு செய்தார்; இது அவருக்கு இரண்டாவது இடத்தைபெற்று தந்தது.</p><p>ஜூன் 19 அன்று நடைபெற்ற தோஹா டயமண்ட் லீக் போட்டியில் 85.69 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைபிடித்திருந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) அவரது செயல்பாடு அதைவிட சற்று சிறப்பாக அமைந்தது.</p><h2>சிறந்த செயல்பாடு:</h2><p>போட்டிகளில் முதல்முறையாக களமிறங்கிய 24 வயதான யஷ்வீர், தனது ஆறாவது மற்றும் கடைசி முயற்சியில் 85.41 மீட்டர் தூரம் எறிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்; இதன் மூலம் இந்தியர்கள் பதக்க மேடையில் 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்தனர். இதற்கு முன் அவரது சிறந்த தனிப்பட்ட செயல்பாடாக 83.72 மீட்டர் தூரம் இருந்தது.</p><p>எதிர்பார்த்தபடியே, இலங்கை நட்சத்திர வீரர் ரூமேஷ் தரங்க பத்திரகே தனது இரண்டாவது முயற்சியில் 89.75 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.</p><p>குளிர் மற்றும் பலத்த காற்று வீசும் சவாலான சூழலில் வீரர்கள் போட்டியிட்ட நிலையில், அவர் 90 மீட்டருக்கு மிக அருகில் ஈட்டியை எறிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் 90 மீட்டர் தூரத்தை கடந்த ஒரே ஈட்டி எறிதல் வீரர் இவர் ஆவார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டி: டெகத்லானில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் - சாதனை படைத்தார் தேஜஸ்வின் சங்கர்</title><link>https://www.maalaimalar.com/sports/tejaswin-becomes-first-indian-to-win-a-decathlon-medal-in-cwg-with-a-bronze</link><comments>https://www.maalaimalar.com/sports/tejaswin-becomes-first-indian-to-win-a-decathlon-medal-in-cwg-with-a-bronze#comments</comments><guid isPermaLink="false">ce419a1e-86b3-4f6e-bbcd-4b76e32f260a</guid><pubDate>Fri, 31 Jul 2026 21:02:53 +0000</pubDate><atom:updated>2026-07-31T21:02:53.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டிகள்,CWG 2026,Tejaswin Shankar,தேஜஸ்வின் சங்கர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/xng5n5k6/Tejaswin-Shankar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tejaswin Shankar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/xng5n5k6/Tejaswin-Shankar.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 <a href="https://www.maalaimalar.com/topic/cwg-2026">காமன்வெல்த் விளையாட்டு</a> போட்டிகளில் டெகத்லான் (பத்து வகையான தடகளப் போட்டிகள் கொண்ட கூட்டுப் போட்டி) பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை தேஜஸ்வின் சங்கர் படைத்தார்; அவர் இதில் வெண்கல பதக்கத்தை வென்றார். </p><p>இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த சவாலான 10-பிரிவு போட்டியில் தேஜஸ்வின் மொத்தம் 7976 புள்ளிகளை பெற்றார். 'பேட்டெல்லார் டெண்டினிடிஸ்' (patellar tendinitis) எனப்படும் நாள்பட்ட முழங்கால் தசைநார் அழற்சி பாதிப்பு இருந்தபோதிலும் அவர் இந்த போட்டியில் பங்கேற்றார்; இதே பாதிப்பு காரணமாகவே அவர் முன்னதாக கிளாஸ்கோ போட்டிகளில் ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் இருந்து விலக வேண்டியிருந்தது.</p><p>உயரம் தாண்டும் போட்டியில் தனது முதல் முயற்சிக்கு பிறகு, நீண்டகாலமாக இருந்த அந்த பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்ததால் போட்டியில் இருந்து விலக நேரிட்டபோது, ​​தேஜஸ்வின் மிகுந்த மனவேதனையுடன் கண்ணீர் விட்டார்.</p><p>பர்மிங்காமில் நடைபெற்ற 2022 காமன்வெல்த் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற பிறகு, இது அவருக்குக் கிடைத்த இரண்டாவது காமன்வெல்த் பதக்கமாகும். இவரது பெயரில் உள்ள தேசிய சாதனை 8057 புள்ளிகளாகும்.</p><h2>ஆசிய விளையாட்டு போட்டி:</h2><p>27 வயதான இவர், 2023 ஹாங்சூ ஆசிய விளையாட்டு போட்டிகளில் டெகத்லான் பிரிவில் வெள்ளி பதக்கத்தையும் வென்றவர். முதல் நாள் முடிவில் ஐந்து போட்டிகளுக்கு பிறகு, கனடாவின் டேமியன் வார்னருக்கு அடுத்தபடியாக (இரண்டாவது இடத்தில்) இவர் இருந்தார்; வார்னர் இறுதியில் 8036 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தை வென்றார்.</p><p>ஒன்பதாவது போட்டியான ஈட்டி எறிதலுக்கு பிறகு தேஜஸ்வின் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்; கடைசி போட்டியான 1500 மீட்டர் ஓட்டத்தில் ஐந்தாவது இடத்தை பிடித்ததன் மூலம் அந்த இடத்தை தக்கவைத்துக்கொண்டார். கிரெனடாவை சேர்ந்த, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லிண்டன் விக்டர் 8096 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தை வென்றார்.</p>]]></content:encoded></item></channel></rss>