<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 22 Jul 2026 05:55:53 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026#comments</comments><guid isPermaLink="false">07faf4ec-9c5b-4385-ab8c-543b6cbe670b</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:45:36 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:49:21.345Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/spirituality/increase-in-pilgrim-arrivals-at-tirupati-distribution-of-time-slot-darshan-tickets-cancelled">திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து</a></p><p>* தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர். </p><p>* நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement" rel="nofollow">பழனி கோவில் நிலம் மோசடி விவகாரம்- அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed">தொடரும் தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - சிபிஐ விசாரணை தேவை!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars">'ஈரான் போரில் 18 பேர் மட்டுமே பலி': முந்தைய போர்களுடன் ஒப்பிட்டு டிரம்ப் பதிவு!... </a></p><p>டிரம்பின் இந்தப் பதிவுக்கு எதிர்க்கட்சியினரும் மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/wildfire-intensifies-in-the-us">அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ: பிளசண்டன் பகுதியில் 950 ஏக்கர் சாம்பல்; மக்கள் வெளியேற்ற உத்தரவு!... </a></p><p>சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-11th-phase-excavation">கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: புதிய தொழிற்கூடம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டுபிடிப்பு!... </a></p><p>நடப்பு அகழாய்வுப் பருவத்தின் முதல் நான்கு மாதங்களிலேயே 1,300-க்கும் மேற்பட்ட அபூர்வத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ben-stokes-century-for-durham">சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் புதிய அத்தியாயம்: டர்ஹாம் அணிக்காக அபார சதமடித்து பென் ஸ்டோக்ஸ் சாதனை!... </a></p><p>ஆட்டத்தின் இடையே தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும், கடைசி வரை களத்தில் நின்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues">டெல்லியில் ராகுல் காந்தி கைது-நீட் தேர்வுப் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு எதிராக தவெக கடும் கண்டனம்!... </a></p><p> "நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை."</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/tax-exemption-for-generic-drugs-in-us-for-2-years-donald-trump-announcement">அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு 2 ஆண்டுகள் வரிவிலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!...</a> </p><p>"அமெரிக்காவிற்குள்ளேயே ஜெனரிக் மருந்துகளின் உற்பத்தியை மீண்டும் கொண்டுவருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid">நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்</a></p><p><em>* கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.</em></p><p><em>* சிறை கைதிகள் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.</em> </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-07-2026">GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?</a></p><p><em>* சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </em></p><p><em>* தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. </em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems">நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும் - மு.க.ஸ்டாலின்</a></p><p><em>* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</em></p><p><em>* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable">தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a></p><p><em>* தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. </em></p><p><em>* மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/the-pain-of-defeat-is-very-intense-messi-melts-on-instagram" rel="nofollow">தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது..!- இன்ஸ்டாவில் மெஸ்சி உருக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet">போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது  - உதயநிதி</a></p><p><em>*  ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி</em></p><p><em>*  மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்.</em></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31">ரெயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: 'ரெயில் ஒன்' செயலி தள்ளுபடி சலுகை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays">வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,635 சிறப்பு பஸ்கள் இயக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31">சென்னையில் நாளை (23.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p>]]></content:encoded></item><item><title>திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து </title><link>https://www.maalaimalar.com/spirituality/increase-in-pilgrim-arrivals-at-tirupati-distribution-of-time-slot-darshan-tickets-cancelled</link><comments>https://www.maalaimalar.com/spirituality/increase-in-pilgrim-arrivals-at-tirupati-distribution-of-time-slot-darshan-tickets-cancelled#comments</comments><guid isPermaLink="false">185e13f8-edb7-46af-8270-ad95aeff3c19</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:46:48 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:46:48.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>devotees,Tirupati temple,திருப்பதி,Tirupati,திருப்பதி கோவில்,பக்தர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9enkhs2q/tirupati.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருப்பதி கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9enkhs2q/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>திருப்பதியில் நேற்று 82,105 பேர் தரிசனம் செய்தனர். 34,484 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.</aside><p><a href="https://www.maalaimalar.com/topic/திருப்பதி-கோவில்">திருப்பதி ஏழுமலையான் கோவிலில்</a> தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதி அடையாமல் இருக்க திருப்பதியில் 3 இடங்களில் நேர ஒதுக்கீடு சர்வ தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. </p><h2><strong>தரிசன டோக்கன் ரத்து</strong></h2><p>வார இறுதி விடுமுறை நாட்களில் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக அனைத்து நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது.</p> <p>இன்றைய தரிசனத்திற்கான 10 ஆயிரம் சர்வ தரிசன டிக்கெட்டுகள் நேற்று அதிகாலை 5 மணிக்கு வழங்கப்பட்டது. சர்வ தரிசன டிக்கெட் 1 மணி நேரத்தில் தீர்ந்து போனதால் தொலைதூரத்தில் இருந்து அதிக செலவு செய்து தாமதமாக வந்த பக்தர்கள் தரிசன டிக்கெட் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.</p><p>இதேபோல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 2 ஆயிரம் தரிசனம் டிக்கெட் வழங்கப்பட்டது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் நாளைய தரிசனத்திற்கு வழங்கப்பட இருந்த சர்வ தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. </p><p>தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர். </p><p>பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தரிசன டிக்கெட் வாங்குவது ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பக்தர்கள் நேரடி இலவச தரிசனம் செய்ய திருப்பதி மலைக்கு புறப்பட்டு சென்றனர்.</p><p>நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். </p><h2><strong>18 மணி நேரம்</strong></h2><p>திருப்பதியில் நேற்று 82,105 பேர் தரிசனம் செய்தனர். 34,484 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.</p><p>4.17 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;காட்ஸில்லா&apos; திரைப்படப் புகழ் இளம் நடிகை கெய்லி ஹாட்டில் கார் விபத்தில் உயிரிழப்பு-திரையுலகம் அதிர்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/godzilla-fame-actress-kaylee-hottle-passes-away</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/godzilla-fame-actress-kaylee-hottle-passes-away#comments</comments><guid isPermaLink="false">bef4ac6e-64ec-444c-83d8-18cce6617456</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:44:39 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:44:39.287Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kaylee Hottle,GodzillavsKong,GodzillaxKong,கெய்லி ஹாட்டில்,காட்ஸில்லா வெர்சஸ் காங்,காட்ஸில்லா x காங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/aegskcsk/heylee.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kaylee Hottle]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/aegskcsk/heylee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹாலிவுட்டின் மெகா பட்ஜெட் திரைப்படங்களான 'காட்ஸில்லா வெர்சஸ் காங்' மற்றும் 'காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பயர்'ஆகியவற்றில் 'ஜியா'  என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் புகழ்பெற்ற மாற்றுத்திறனாளி (செவித்திறன் அற்ற) இளம் நடிகை கெய்லி ஹாட்டில் (வயது 18) அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2><strong>விபத்து எவ்வாறு நிகழ்ந்தது?</strong></h2><p>அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஃபிரடெரிக் கவுண்டி பகுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:50 மணியளவில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. கெய்லி ஹாட்டில் பயணித்த ஹோண்டா அக்கார்ட் கார், எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் இருந்த வடிகால் அமைப்பில் மோதி விபத்துக்குள்ளானது. </p><p>காரை ஓட்டிச்சென்ற 19 வயது இளைஞர் மற்றும் மற்றொரு பயணியும் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், தீவிர காயமடைந்த கெய்லி ஹாட்டில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதிகப்படியான வேகமே இந்த விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><h2><strong>தந்தையின் உருக்கமான வீடியோ பதிவு:</strong></h2><p>கெய்லி ஹாட்டிலின் குடும்பத்தினர் அனைவரும் செவித்திறன் குறைந்தவர்கள் என்பதால், அவரது தந்தை ஜோஷுவா ஹாட்டில் அமெரிக்க சைகை மொழியில் முகநூலில் வெளியிட்ட வீடியோ பதிவில் தன் மகளின் மரணத்தை கண்ணீருடன் உறுதிப்படுத்தினார்.</p><p>"என் மகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது இதயத்துடிப்பு நின்றுவிட்டது. அவளுடன் கழித்த இந்த 18 ஆண்டுகள் எனக்கு மிகவும் பாக்கியமானது. ஆனால், இன்னும் கொஞ்ச காலம் அவர் எங்களுடன் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. </p><p>மகளின் உடலை வாங்குவதற்காக மேரிலாண்ட் சென்று கொண்டிருக்கிறேன்." மேலும் விபத்தை ஏற்படுத்திய டிரைவரைத் தான் மன்னித்துவிட்டதாகவும், இந்தச் சம்பவத்துக்காக அவரது வாழ்க்கை பாழாகிவிடக்கூடாது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>திரையுலகில் ஏற்படுத்திய தாக்கம்:</strong></h2><p> 2021-இல் வெளியான 'காட்ஸில்லா வெர்சஸ் காங்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கெய்லி, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளமாகத் திகழ்ந்தார். இப்படத்தில் மாபெரும் கிங் காங் மிருகத்துடன் சைகை மொழியில் பேசி நட்பை வெளிப்படுத்தும் 'ஜியா' என்ற பழங்குடிச் சிறுமியின் கதாபாத்திரம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தது.</p><h2><strong>சாட்டர்ன் விருதுப் பரிந்துரை:</strong></h2><p>2024-இல் வெளியான இதன் இரண்டாம் பாகத்தில் நடித்ததற்காகச் சிறந்த இளம் நடிகருக்கான 'சாட்டர்ன் விருது' தேர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.</p><h2><strong>ஹாலிவுட் நட்சத்திரங்களின் இரங்கல்:</strong></h2><p>கெய்லியுடன் இணைந்த நடித்த பிரபல நடிகை மில்லி பாபி பிரவுன் , அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் மற்றும் ரெபெக்கா ஹால் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.</p><p>கெய்லி பயின்று வந்த டெக்சாஸ் செவித்திறன் குறைந்தோருக்கான பள்ளியும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. இளம் வயதிலேயே ஹாலிவுட்டில் தனக்கென தனிமுத்திரை பதித்த ஒரு திறமையாளரின் மறைவு சினிமா உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவிற்கு போரினால் இதுவரை ரூ.3700 கோடி செலவு: செனட் சபையில் கடும் விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/world/war-has-cost-the-us-rs-3700-crore-so-far-heated-debate-in-the-senate</link><comments>https://www.maalaimalar.com/news/world/war-has-cost-the-us-rs-3700-crore-so-far-heated-debate-in-the-senate#comments</comments><guid isPermaLink="false">36c84ed6-eaee-4cdc-aef8-d37f4d010c5f</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:42:59 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:42:59.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pete Hegseth,பீட் ஹெக்செத்,US Senate,அமெரிக்க செனட் சபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/cftki6yt/Untitled-design-50.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heated debate in the Senate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/cftki6yt/Untitled-design-50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹார்முஸ் நீரிணை தொடர்பாக ஈரானுக்கு எதிரான போரில் இதுவரை சுமார் 3700 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் செனட் சபையில் தெரிவித்தார்.</p><p>வெள்ளை மாளிகையின் ஆதரவுடன் விவசாயிகளுக்கான உதவி மற்றும் வாக்களிப்பு சட்ட மாற்றங்களுடன் ராணுவ நிதியை உள்ளடக்கிய, குடியரசுக் கட்சியின் முன்மொழியப்பட்ட 95 பில்லியன் டாலர் பட்ஜெட் தொகுப்பின் போது, ஹெக்ஸெத் மீது செனட் சபையினர் குற்றம்சாட்டினர்.</p><p>செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவில் பேசிய அவர், ராணுவ நடவடிக்கைகளைத் தொடர இந்தக் கூடுதல் நிதி அவசியம் என்று கூறி, நிர்வாகத்தின் அவசரகாலப் பாதுகாப்புச் செலவினக் கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தினார்.</p><h3><strong>அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத்:</strong></h3><p>இதுகுறித்து மேலும் கூறிய ஹெக்ஸெத், “இந்தக் கூடுதல் போர் நிதி என்பது அவசரமான, அவசியமான நிதித்தேவையாகும். டிரம்ப் முன்மொழிந்த 1.5 டிரில்லியன் டாலர் பாதுகாப்பு நிதிநிலை அறிக்கை என்பது, ராணுவத்தில் செய்யப்படும் ஒரு தலைமுறைக்கான முதலீட்டைக் குறிக்கிறது.</p><p>இந்த நிதிகள் இல்லாமல், நாங்கள் கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்வோம். </p><p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து பென்டகனின் வளங்களை மீண்டும் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்ட, அதிபர் டிரம்பின் 87.6 பில்லியன் டாலர் கூடுதல் நிதிக் கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று கூறினார்.</p><p>இதையடுத்து, ஜனநாயகக் கட்சியினர் நிதிக் கோரிக்கையின் அளவு மற்றும் நிர்வாகத்தின் பரந்த உத்தி ஆகிய இரண்டின் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். </p><h3>செனட் உறுப்பினர்கள் எதிர்ப்பு:</h3><p>இதுகுறித்து மூத்த செனட் உறுப்பினர் பாட்டி முர்ரே கூறும்போது, அமெரிக்கா மற்றொரு முடிவில்லாப் போரில் நுழையும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்தார்.</p><p>மேலும், இந்தப் போர் இப்போது மீண்டும் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது. ஒரு உடன்பாடு நெருங்கிவிட்டது என்றும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் 40 முறைக்கு மேல் எங்களிடம் கூறியுள்ளார்.</p><p>ஆனால் இப்போது, அவர் கூடுதலாக 70 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கேட்கிறார். மேலும் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும் என்று அவரை நம்பும்படியும் கூறுகிறார்” என்றார்.</p><p>இந்நிலையில் விசாரணைக்கு முன்னதாக, பட்ஜெட் தீர்மானத்தை எந்த மாற்றமும் இன்றி உடனடியாக அங்கீகரிக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தி வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டது.</p><p>இந்த வாரத் தொடக்கத்தில் சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம், வரவுசெலவுத் திட்டத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சியினரை டிரம்ப் வலியுறுத்தினார்.</p><p>செனட் சபை கூட்டத்தின்போது, ஈரானில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் குறித்த பென்டகனின் அறிக்கையை வெளியிடுமாறு ஹெக்ஸெத்தை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.</p><p>மேலும் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படாவிட்டால், அவரது உத்தியோகப்பூர்வ பயணங்களுக்கான நிதி நிறுத்தி வைக்கப்படும் என்றும் செனட் சபை உறுப்பினர்கள் எச்சரித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலம் மோசடி விவகாரம்- அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement#comments</comments><guid isPermaLink="false">19b2501a-a558-449a-bea8-117154d02c1a</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:38:37 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:38:37.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,protest,ஆர்ப்பாட்டம்,பழனி கோவில் நில மோசடி,Pazhani land scam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/a1tuzubu/EPS5.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/a1tuzubu/EPS5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி கோவில் நிலம் முறைகேடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரி அதிமுக சார்பில் 25ம் தேதி கண்டம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மடத்திற்குச் சொந்தமான நிலம் சம்பந்தமாக முந்தைய திமுக ஆட்சியிலிருந்தே பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன.</p><p>சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகத் தெரியவருகிறது.</p><p>தமிழகத்தில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தூய சக்தி அரசு என்று சொல்லிக் கொள்பவர்களின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow">அறநிலையத் துறை</a>யின் பராமரிப்பில் இருந்த இந்த நிலம், தற்போது இரண்டு தனியாருக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.</p><p>இந்த பத்திரப் பதிவை செய்வதற்காகவே பழனி சார் பதிவாளர் விடுமுறையில் அனுப்பப்பட்டு, கொடைக்கானலில் இருக்கும் சார் பதிவாளரை ஒருநாள் கூத்தாக பழனி அலுவலகத்திற்கு நியமித்துள்ளார்கள் என்று செய்திகள் வந்துள்ளன.</p><p>அந்த அதிகாரி உயர்நீதிமன்ற வழக்கைப் பற்றியோ, நீதிபதிகளின் அறிவுறுத்தலையோ கருத்தில் கொள்ளாமல் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.</p><p>இந்த நில மோசடி விற்பனை குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் எழுந்ததும், அதிகார வர்க்கம் தங்களை களங்கத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள CBCID மூலம் ஒரு கண்துடைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. </p><p>விசாரணை செல்லும் கோணத்தைப் பார்த்தால், மோசடி செய்தவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும், தூண்டியவர்களையும் காப்பாற்றும் நோக்கோடு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.</p><p>அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட நிலத்தை பத்திரப் பதிவு செய்து கொடுத்த அதிகாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. </p><p>இந்த நிலத்தை ரூ. 2 கோடிக்கு வாங்கிய இருவர் இன்னும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன.</p><p>தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களின் சொத்துக்களும் இதுபோல் பறிபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடமை.</p><p>இந்தக் கடமையில் எங்களுக்கு உறுதுணையாக அனைத்துத் தரப்பு மக்களும், ஆன்மீகவாதிகளும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். </p><p>இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை காவல் துறையினர் தேடி வருவதாகவும் அரசு தரப்பிலேயே கூறப்படுகிறது. </p><p>எனவே, பழனி, தண்டபாணி சுவாமிகள் மடம் நில விவகாரத்தில், இந்த அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த கண்ணாமூச்சி விளையாட்டு நிறுத்தப்பட வேண்டுமென்றால், நடுநிலையான அமைப்பு ஒன்றின் சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><p>இந்நிலையில், பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project">த.வெ.க</a>. அரசைக் கண்டித்தும்; இவ்வழக்கை உடனடியாக CBI வசம் ஒப்படைக்க பொய்க்கால் குதிரை த.வெ.க. அரசை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.7.2026 சனிக் கிழமை காலை 9.30 மணியளவில், பழனியில் - மயில் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் C. சீனிவாசன் அவர்கள் தலைமையிலும், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான டாக்டர் V.P.B. பரமசிவம், Ex. M.L.A., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. K. ரவிமனோகரன், MLA., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொடரும் தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - சிபிஐ விசாரணை தேவை!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed#comments</comments><guid isPermaLink="false">630172bd-c140-410f-bbd0-8f4dcb0358f6</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:35:50 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:35:50.151Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,கனிமவள கொள்ளை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8z09bo9/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8z09bo9/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கவலை</strong></h2><p>தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து கேரளத்திற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவது தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் வழியாக கனிமங்களைக்  கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், தமிழ்நாட்டையும், கேரளத்தையும் இணைக்கும்  தேசிய நெடுஞ்சாலை 66-இன் வழியாக கனிமங்கள் கடத்தப்படுவது மட்டும் தான் நிறுத்தப்பட்டிருக்கிறதே தவிர,  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு தொடர்ந்து கனிமம் கடத்தப்படுவது கவலையளிக்கிறது.</p><p>இந்தியாவிற்கு இயற்கை கொடுத்த கொடையான மேற்குத் தொடர்ச்சி மலை குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் வழியாக பயணித்து கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு பகுதி வரை நீள்கிறது. போக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய இந்த மலைப்பகுதி தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுகிறது. குறிப்பாக தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் கல்குவாரிகள் அமைக்கப்பட்டு கனிமக் கொள்ளை எல்லையில்லாமல் நடக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் தான் இந்தக் கொள்ளை உச்சத்தை அடைந்தது. நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளத்திற்கு கடத்தப்படுவது குறித்தும், திமுகவைச் சேர்ந்தவர் இந்தக் கடத்தலுக்கு காட்பாதராக திகழ்ந்தது குறித்தும் கடந்த காலங்களில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன். திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு கனிமவளக்கொள்ளையும் காரணமாக இருந்தது.</p><h2><strong>புதிய அரசு</strong></h2><p>முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகாவது கனிமக் கொள்ளைக்கு முடிவு கட்டப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பல மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலோட்டமாகப் பார்க்கும் போது இவை வரவேற்கத்தக்க மாற்றங்களாகத் தோன்றினாலும் களத்தில் இன்று வரை எந்த மாற்றமும் நிகழவில்லை; தென்காசி மாவட்டம் செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமங்கள்  கேரளத்திற்கு கடத்தப்படுவது இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என புகார்கள் எழுந்துள்ளன.</p><h2><strong>ஆய்வு குறைவு</strong></h2><p>கனிமக் கொள்ளையை கட்டுப்படுத்துவதற்காகாக தமிழக அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்த பயனும் விளையவில்லை. அரசு இயந்திரத்தை விட அதிநுட்பமான வலைப்பின்னலைக் கொண்டிருக்கும் கனிமவள மாஃபியா அதிகாரிகள் துணையுடன் அமைச்சரையும், அரசையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை ஆகும். கனிமவளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் அல்லது உயரதிகாரிகள் வருவதாக இருந்தால் அது குறித்து கனிமக் கொள்ளையர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகின்றன. அவர்களும் சுதாரித்துக் கொண்டு கனிமக் கொள்ளை நடக்கவில்லை என்று அமைச்சரை நம்ப வைப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி, கல் குவாரிகளில் அமைச்சர் ஆய்வு நடத்துவதும் அண்மைக்காலமாக குறைந்து விட்டது.</p><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஏற்பட்டிருக்கும் ஒரே மாற்றம் என்னவென்றால், நெடுஞ்சாலைகள் வழியாக இல்லாமல் குறுக்கு வழிகளில் கனிமங்கள் கடத்தப்படுவது தான். கன்னியாகுமரியை மராட்டிய மாநிலம் பன்வேலியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66-இல் களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாகத் தான் கனிமவளங்கள் பெருமளவில் கடத்தப்பட்டு வந்தன. அதை நானே நேரடியாக பார்த்து பல தருணங்களில் ஆட்சியாளர்களுக்கு தெரிவித்தேன். அதுமட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் கனிமம் ஏற்றிச் செல்லும் சரக்குந்துகள் சென்றதால் ஏராளமான விபத்துகளும் ஏற்பட்டன. அதனால், களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக கனிமங்களைக் கடத்திச் செல்வது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.</p><h2><strong>தென்காசி மாவட்டங்களில்</strong></h2><p>அதே நேரத்தில் தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் கனிமங்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில்  தேசிய நெடுஞ்சாலையின் வழியாகத் தான் கனிமவளங்கள் கடத்தப்படவில்லையே தவிர, அம்மாவட்டத்தின் கொல்லங்கோடு, கோழிப்போர் விளை, ஊரம்பு, களியல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக குறுக்கு சாலைகளில் புகுந்து கனிமங்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகள் கேரளத்திற்கு பயணிக்கின்றன. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு கனிமங்கள் கடத்தப்படுவது தடையின்றி தொடர்கிறது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனிமக்கொள்ளையும் அளவுக்கு அதிகமாக நடைபெறுகிறது.</p><p>தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டிலிருந்து கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய தடை இன்று வரை விதிக்கப்படவில்லை. அண்மையில் கூட, தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை.</p><h2><strong>சட்டவிரோத குவாரிகள்</strong></h2><p>தென் மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கனிமக் கொள்ளையை தடுத்து நிறுத்துவது முடியாத காரியமல்ல. அதற்குத் தேவை அரசியல் துணிச்சல் தான். கனிமக் கொள்ளை மாஃபியா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் அழுத்தங்களைப் பற்றி கவலைப்படாமல் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட எந்த மாநிலத்திற்கும் கனிமவளங்களைக் கொண்டு செல்ல தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்.- இரண்டாம் கட்டமாக, தென் மாவட்டங்களில் இருந்து கேரளம் செல்லும் சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்துவதன் மூலம் கனிமவளம் கடத்தப்படுவதை கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் அவரது அலுவலக அறையிலிருந்தே கண்காணிக்க முடியும்; இதன் முலம் கனிமக் கடத்தல் குறையும். அடுத்ததாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செயல்படும் சட்டவிரோத குவாரிகளை கருணை காட்டாமல் மூட வேண்டும்.</p><h2><strong>தடுத்து நிறுத்த வேண்டும்</strong></h2><p>நான்காவதாக,  சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பவர்களுக்கு பெயரளவில் தண்டம் விதிப்பதை  கைவிட வேண்டும்; மாறாக அவர்கள் வெட்டி எடுத்த கனிமத்தின் சந்தை மதிப்பை விட 100 மடங்கு அதிக தண்டம் விதிப்பதுடன், குற்றவாளிகளின் சொத்துகளை முழுமையாக முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவை அனைத்தையும் விட முக்கியமானது கடந்த காலங்களில் கனிமக் கடத்தலில் ஈடுபட்டவர்களையும், அவர்களை ஊக்குவித்தவர்களையும் தண்டிப்பது தான். முந்தைய திமுக ஆட்சியில் அதிகாரம் பெற்றிருந்த காட்பாதர்களும், மாஃபியாக்களும் தான் கனிமக் கடத்தலுக்கு துணையாக இருந்தன. இது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் கனிமவளக் கொள்ளையை அரசு முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தினமும் சாம்பாரா? போலீஸ் நிலையம் வரை சென்ற ‘சாப்பாட்டு சண்டை’ - பதறிப்போன காவலர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/police-complaint-filed-over-daily-serving-of-sambar-police-left-stunned-by-husband-wife-dispute-over-food</link><comments>https://www.maalaimalar.com/news/national/police-complaint-filed-over-daily-serving-of-sambar-police-left-stunned-by-husband-wife-dispute-over-food#comments</comments><guid isPermaLink="false">8a121e1f-6e74-48a8-81b0-a9d76d3dcc40</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:22:49 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:22:49.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>dispute,தகராறு,police station,போலீஸ் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/bk4z9ujt/sambar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/bk4z9ujt/sambar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>குழம்பு சமைக்கப்பட்ட விதம் குறித்து போலீசாரிடம் புகார் அளிப்பது ஒரு அரிதான சம்பவம் என்பதால், இந்த விஷயம் தற்போது உள்ளூரில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.</aside><h2><strong>தினமும் சாம்பார்</strong></h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் படௌன் மாவட்டத்தில் வஜீர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி. இவருக்கு பொறித்த உணவுகள் அதிகம் பிடிக்கும். ஆனால் இவருடைய மனைவி தினமும் சாம்பார் வைத்து உணவு பரிமாறி வந்தார்.</p><p>இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.  </p><h2><strong>தகராறு</strong></h2><p>நேற்று முன்தினம் இரவு சாம்பார் வைத்ததால் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. நள்ளிரவு வரை கடுமையான வாக்குவாதம் செய்தனர்.</p><p>எவ்வளவு சொல்லியும் மனைவி தன் பேச்சைக் கேட்காததால் கோபமடைந்த கணவர், இறுதியாக 112 என்ற அவசர சேவை எண்ணை அழைத்து போலீசாரிடம் புகார் அளித்தார். </p><h2><strong>கணவர் புகார்</strong></h2><p>குடும்பத்தில் சண்டை நடப்பதாகத் தகவல் கிடைத்ததும், போலீசார் பதறியபடி உடனடியாக கிராமத்திற்கு சென்றனர். கிராமத்திற்கு வந்த போலீசார் உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தனக்கு தினமும் பொரித்த குழம்பு வேண்டும் என்றும், ஆனால் தன் மனைவி எப்போதும் சாம்பார் போன்றவற்றை செய்து தன்னைப் புறக்கணிப்பதாகவும் கணவர் கூறினார். </p><p>மறுபுறம், மனைவியும் தனது வாதத்தை விளக்கினார். பின்னர், போலீசார் அவர்கள் இருவரையும் அமர வைத்து அமைதியாகப் பேச வைத்தனர். அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடனும் இது குறித்து விவாதித்து, ஒரு சிறிய விஷயத்தைப் பெரிய சண்டையாக மாற்ற வேண்டாம். </p> <h2><strong>போலீசார் அறிவுரை</strong></h2><p>இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும். நடுராத்திரியில் இப்படி பண்றீங்களேம்மா என்று தலையில் அடித்தபடி அறிவுரை கூறினர். </p><p>கணவன்-மனைவி இருவரும் ஒரு சமரசத்திற்கு வந்த பிறகு, போலீசார் புகாரை முடித்து வைத்தனர். குழம்பு சமைக்கப்பட்ட விதம் குறித்து போலீசாரிடம் புகார் அளிப்பது ஒரு அரிதான சம்பவம் என்பதால், இந்த விஷயம் தற்போது உள்ளூரில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஈரான் போரில் 18 பேர் மட்டுமே பலி&apos;: முந்தைய போர்களுடன் ஒப்பிட்டு டிரம்ப் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars#comments</comments><guid isPermaLink="false">b40cd7aa-7552-4920-933c-404a80531742</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:16:42 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:16:42.814Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,அமெரிக்கா,America,டிரம்ப்,Iran-America war,ஈரான்-அமெரிக்கை போர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/aw4ti80v/donald.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/aw4ti80v/donald.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான ராணுவ மோதலில் பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று தெரிவித்துள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. </p><p>ஈரானுடன் நடைபெற்று வரும் ராணுவ மோதலில் பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை, அமெரிக்கா முன்னெடுத்த முந்தைய வரலாற்றுப் போர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>சமீபத்தில் ஜோர்டான் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் மத்திய கிழக்கில் நடந்த தாக்குதல்களில் மேலும் சில அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலியான அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. அமெரிக்காவில் இதற்குக் கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், டிரம்ப் இந்த விளக்கப் பதிவை வெளியிட்டுள்ளார்.</p><p>வரலாற்றில் அமெரிக்கா சந்தித்த நீண்டகாலப் போர்களுடன் தற்போதைய ஈரான் மோதலை ஒப்பிட்டு டிரம்ப் பதிவிட்டுள்ள புள்ளிவிவரங்கள்:</p><p>*ஆப்கானிஸ்தான் போர் 20 ஆண்டுகள் நீடித்து 2,000 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.</p><p>*ஈராக் போர் 9 ஆண்டுகள் நீடித்து 4,600 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.</p><p>*வியட்நாம் போர் 19 ஆண்டுகள் 5 மாதங்கள் நீடித்து 58,220 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.</p><p>*கொரியப் போர் 3 ஆண்டுகள் 1 மாதம் நீடித்து 36,574 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.</p><p>*வெனிசுலா ராணுவ நடவடிக்கை 1 நாளில் 0 உயிரிழப்புடன் முடிந்தது.</p><p>*தற்போதைய ஈரான் மோதலில் 4 மாதங்களில் 18 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர்.</p><p>அமெரிக்கா வரலாற்று ரீதியாக எதிர்கொண்ட ரத்த களறியான முந்தைய போர்களுடன் ஒப்பிடுகையில், 4 மாதங்களாக நடைபெற்று வரும் ஈரான் உடனான மோதலில் 18 வீரர்கள் மட்டுமே உயிரிழந்திருப்பது மிகக் குறைவான எண்ணிக்கையே என்று டிரம்ப் வாதாடியுள்ளார்.</p><p>ஆனால், போரில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தையும் அவர்களின் குடும்பங்களின் உணர்வுகளையும் வெறும் எண்களாகவும் புள்ளிவிவரங்களாகவும் ஒப்பிட்டுப் பேசுவது கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சியினரும் மனித உரிமை அமைப்புகளும் டிரம்பின் இந்தப் பதிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p> "அமெரிக்க வீரர் ஒருவர் கொல்லப்பட்டாலும் அதற்கு ஈரானிடம் இருந்து பலமடங்கு விலையைப் பெற வைப்போம்" என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இந்தப் புள்ளிவிவரப் ஒப்பீட்டுப் பதிவு வெளியாகியுள்ளது.  </p>]]></content:encoded></item><item><title>தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது..!- இன்ஸ்டாவில் மெஸ்சி உருக்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/the-pain-of-defeat-is-very-intense-messi-melts-on-instagram</link><comments>https://www.maalaimalar.com/sports/the-pain-of-defeat-is-very-intense-messi-melts-on-instagram#comments</comments><guid isPermaLink="false">fd27e14d-fd79-4490-bbaf-49962afdd232</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:14:08 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:14:08.153Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>argentina,அர்ஜென்டினா,மெஸ்சி,Lional Messi,பிபா உலகக்கோப்பை 2018,fifa foodball world cup</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mp3yvdjy/Messi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lionel Messi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mp3yvdjy/Messi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 1962-ம் ஆண்டுக்கு பிறகு பட்டத்தை தக்கவைக்கும் முதல் அணி என்ற சாதனையை படைக்கும் உத்வேகத்துடன் இறுதி சுற்றில் களம் புகுந்த அர்ஜென்டினாவின் முயற்சிக்கு ஸ்பெயின் கூடுதல் நேரத்தில் கோல் போட்டு முட்டுக்கட்டை போட்டது.</p><p>தோல்வி அடைந்து 2-வது இடத்தை பிடித்த அர்ஜென்டினா அணியில் மெஸ்சி உள்ளிட்ட ஒரு சில வீரர்களை தவிர்த்து மற்றவர்களும், பயிற்சி குழுவினரும் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் நேற்று தாயகம் திரும்பினர்.</p><p>வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி பஸ்சில் அந்த நாட்டு கால்பந்து சம்மேளன அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.</p><p>இதற்கிடையே அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உருக்கமான பதிவு வெளியிட்டார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது. இந்த காயம் ஆறுவதற்கு சில காலமாகும். இந்த நேரத்தில் சில நல்ல விஷயங்களை நினைவில் கொள்கிறேன். முழு அர்ப்பணிப்புடன் விளையாடி சரிவில் இருந்து மீண்டெழுந்த அந்த ஆட்டங்கள் என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும்.</p><p>ஒட்டுமொத்த தேசத்தின் ஆதரவுடன் கடின உழைப்பு, தீவிர முயற்சியால் மீண்டும் ஒரு முறை எங்களை உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக வெளிப்படுத்தியுள்ளோம். நாங்கள் படைத்துள்ள சாதனைகளை இப்போது முழுமையாக பாராட்டுவது கடினம் என்றாலும், தொடர்ந்து இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பதை குறிப்பிட வேண்டும்.</p><p>உங்களது ஒவ்வொரு வாழ்த்துக்கும். ஒவ்வொரு செய்திக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாடாக மீண்டும் ஒன்றிணைந்து அர்ஜென்டினராக இருப்பதில் உள்ள அளப்பரிய பெருமையை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டோம்.</p><p>சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கும் எனது வாழ்த்துகள்' என அதில் கூறியுள்ளார்.</p><p>நடப்பு உலகக் கோப்பையில் 8 கோல்கள் அடித்த 39 வயதான லயோனல் மெஸ்சி, சர்வதேச போட்டியில் தனது எதிர்காலம் குறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid#comments</comments><guid isPermaLink="false">14417e43-f0b3-461d-abde-a0ef69ede072</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:13:17 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:13:17.855Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagercoil,நாகர்கோவில்,சிபிசிஐடி,cbcid,custodial death,லாக்கப் மரணம்,sabarivarman murder case,சபரிவர்மன் கொலை வழக்கு</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/4gy2vpbw/sabarivarman.jpg" width="1024"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sabarivarman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/4gy2vpbw/sabarivarman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாகர்கோவில் சிறையில் கைதி மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே ஈத்தங்காடு ஊரை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 34) மாற்று திறனாளியான இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததாக கடந்த 9-ந்தேதி தென்தாமரைகுளம் போலீசார் கைது செய்து, நாகர்கோவிலில் மாவட்ட சிறையில் விசாரணை கைதியாக அடைத்தனர். கடந்த 13-ந்தேதி வார்டன் மற்றும் சிறை கைதிகள் தாக்கியதில் சபரி வர்மன் இறந்தார்.</p> <p>இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், வெரியபெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 கைதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.</p> <p>இந்த வழக்கு தொடர்பாக தடவியல் நிபுணர்கள் சிறையில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் சபரிவர்மனை போலீசார் தாக்கிய அறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.</p><p>சிறைச்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை கொண்டு கைது செய்யப்பட்டு உள்ள சிறை கைதிகள் அரவிந்த், அஜய், ஜெகன் ஆகிய 3 கைதிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக காவல்துறை சார்பில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. போலீசார் கைதிகள் 3 பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.</p> <p>இந்நிலையில் சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த வழக்கை நேசமணிநகர்  போலீசார் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ: பிளசண்டன் பகுதியில் 950 ஏக்கர் சாம்பல்; மக்கள் வெளியேற்ற உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/world/wildfire-intensifies-in-the-us</link><comments>https://www.maalaimalar.com/news/world/wildfire-intensifies-in-the-us#comments</comments><guid isPermaLink="false">a0d5a1b8-2b42-48f6-9781-bb0f692b44fa</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:42:32 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:42:32.929Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,காட்டுத் தீ,wildfire,Pleasanton,Little Fire,பிளசண்டன்,லிட்டில் ஃபயர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/q9btn6op/WILDFIRE.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Wildfire Intensifies in the US]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/q9btn6op/WILDFIRE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அலமேடா கவுண்டி பகுதிக்குட்பட்ட பிளசண்டன் மற்றும் சுனோல்  நகர எல்லைப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் "லிட்டில் ஃபயர்" எனப் பெயரிடப்பட்ட காட்டுத் தீ திடீரெனப் பற்றி எரியத் தொடங்கியது. கடும் வெப்பம், உலர்ந்த புற்பகுதிகள் மற்றும் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக தீ மிக வேகமாகப் பரவி, குறுகிய நேரத்திலேயே 950 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைச் சாம்பலாக்கியுள்ளது.</p><p>லிட்டில் வேலி சாலை மற்றும் ஹப்பார்ட் லேன்  சந்திப்பு பகுதி ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 950 ஏக்கர் எரிந்துள்ள நிலையில், 10% மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>மக்களுக்கு எச்சரிக்கை:</strong></h2><p>ரூபி ஹில் சொகுசு குடியிருப்பு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுனோல் பகுதி மக்களுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>தீயணைப்புப் பணிகள்:</strong></h2><p>தீயணைப்புப் படைகளின் கலிபோர்னியா வனத்துறை, அலமேடா கவுண்டி தீயணைப்புப் படை மற்றும் லிவர்மோர்-பிளசண்டன் தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். </p><p>நிலப்பரப்பில் புல்டோசர்கள் மற்றும் எஞ்சின்கள் மூலமும், வான்வழியாக சிறப்பு ஏர்-டேங்கர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமும் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடர்ந்த புதர் மற்றும் மலைப்பகுதிகள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>நிவாரண முகாம்கள்:</strong></h2><p>பாதிக்கப்பட்ட மற்றும் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்காகப் பிளசண்டன் மூத்த குடிமக்கள் மையத்தில் தற்காலிக நிவாரண மற்றும் உதவி முகாம் அமைக்கப்பட்டு, அவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. </p><p>இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவசர தேவைகளின்றி கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், அரசு அறிவிக்கும் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கலிபோர்னியா அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பலாம்... யு.பி.ஐ.-இல் புது மாற்றம் விரைவில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/offline-upi-payments-with-nfc-support-could-launch-in-india-soon</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/offline-upi-payments-with-nfc-support-could-launch-in-india-soon#comments</comments><guid isPermaLink="false">02b5ad5d-ed38-4ba3-8202-0e4606c62540</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:42:00 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/pph9etq7/upi-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UPI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/pph9etq7/upi-1.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு ஒரு புதிய யு.பி.ஐ. (UPI) அம்சத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் இந்த அம்சம், பயனர்கள் இண்டர்நெட் இல்லாமலேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கும். </p><p>இந்த வரவிருக்கும் அம்சம், தொலைதூர மற்றும் குறைந்த இணைய இணைப்பு உள்ள பகுதிகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை சாத்தியமாக்கும். </p><p>ஆஃப்லைன் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளை ஆதரிப்பதற்கு, வணிகர் விற்பனை முனைய (PoS) நிறுவனங்கள் இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகத்திடம் (NPCI) இருந்து சான்றிதழ் பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.</p><p><strong>ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனை:</strong></p><p>இந்தியாவில் விரைவில் இணைய இணைப்பு இல்லாமலேயே யு.பி.ஐ. பணம் செலுத்தும் வசதி வரலாம். இந்த விவகாரம் குறித்து அறிந்த மூன்று நபர்களை மேற்கோள் காட்டி , வாடிக்கையாளரின் ஸ்மார்ட்போனிலோ அல்லது வணிகரின் PoS டெர்மினலிலோ இணைய இணைப்பு இல்லாமலேயே பணம் செலுத்தும் வசதியை இந்தியா விரைவில் செயல்படுத்தவுள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதற்காக, இணக்கமான PoS டெர்மினல்களுக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் (NPCI) சான்றளிக்க தொடங்கும் என்று கூறப்படுகிறது.</p><p><strong>ஆஃப்லைன் யு.பி.ஐ.:</strong></p><p>ஆஃப்லைன் யு.பி.ஐ. அம்சம் என்.எஃப்.சி. தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் என்று கூறப்படுகிறது. இது பயன்பாட்டிற்கு வந்தவுடன், பயனர்கள் தங்களின் என்.எஃப்.சி. வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கப்படும் கட்டண முனையங்களில் தட்டுவதன் மூலம் ஆஃப்லைன் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தலாம்.</p><p>ஆரம்பத்தில், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 2,000 என ஆஃப்லைன் பரிவர்த்தனைகள் வரம்பிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைதூர பகுதிகள், விமானங்கள் மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோக்களில் பணம் செலுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>ஆஃப்லைன் யு.பி.ஐ. அம்சம், சாதனத்தில் உள்ள யு.பி.ஐ. லைட் வாலட் மூலம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் ஆரம்பத்தில், இணைய இணைப்பு இல்லாமலோ அல்லது யு.பி.ஐ. PIN எண்ணை உள்ளிடாமலோ, ஆதரிக்கப்படும் ஆஃப்லைன் PoS டெர்மினல்களில் பணம் செலுத்துவதற்கு, இணையத்துடன் இணைந்திருக்கும்போது வாலட்டில் பணத்தை ஏற்ற வேண்டியிருக்கும். இந்தப் பரிவர்த்தனை யு.பி.ஐ. லைட் இருப்பைப் பயன்படுத்தும்.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: &apos;ரெயில் ஒன்&apos; செயலி தள்ளுபடி சலுகை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31#comments</comments><guid isPermaLink="false">a069eb8b-809a-4d23-95fa-8043462681b1</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:37:07 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:37:07.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் பயணிகள்,Rail One,Rail One App,ரெயில் ஒன் செயலி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5n3n63dt/railone.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5n3n63dt/railone.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>'ஆர்-வாலட்' மூலம் பணம் செலுத்தி 3 சதவீத கேஷ்பேக் சலுகையானது 2028-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி வரையில் வழங்கப்படுவதாக இந்தியன் ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</aside><h2><strong>ரெயில் ஒன்</strong></h2><p>ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து 'ரெயில் ஒன்' என்ற செயலியை ரெயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். </p><p>மேலும், ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்து பயணிகள் புகார் தெரிவிக்க முடியும். சீசன் டிக்கெட்டையும் இந்த செயலி மூலம் பெற முடியும்.</p><h2><strong>சலுகை</strong></h2><p>ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு கடந்த ஜனவரி 14-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரையில் 6 மாதத்திற்கு 3 சதவீத கட்டண சலுகையை ரெயில்வே அறிவித்துள்ளது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்தல் மற்றும் பயணச்சீட்டுக்காக வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்கும் செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க இந்த சலுகை வழங்கப்பட்டது.</p><h2><strong>3 சதவீத தள்ளுபடி</strong></h2><p>இந்தநிலையில், இந்த சலுகை 2027-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரெயில் ஒன் செயலி மூலம் யு.பி.ஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற எந்தவொரு டிஜிட்டல் கட்டண முறையையும் பயன்படுத்தி முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுத்தால் மொத்த கட்டணத்தில் 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும். </p><p>இதேபோல, 'ஆர்-வாலட்' மூலம் பணம் செலுத்தி 3 சதவீத கேஷ்பேக் சலுகையானது 2028-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி வரையில் வழங்கப்படுவதாக இந்தியன் ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, <a href="https://www.maalaimalar.com/topic/ரெயில்-பயணிகள்">பயணிகள்</a> ரெயில் ஒன் செயலியை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் ஐ.ஓ.எஸ்.ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து இந்த சலுகையைப் பெறலாம்.</p>]]></content:encoded></item><item><title>சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பாலாக மாறிய அதிசயம்- பக்தர்கள் பரவசம்</title><link>https://www.maalaimalar.com/news/national/miracle-where-the-oil-used-for-the-abhishekam-of-the-shiva-lingam-turned-into-milk</link><comments>https://www.maalaimalar.com/news/national/miracle-where-the-oil-used-for-the-abhishekam-of-the-shiva-lingam-turned-into-milk#comments</comments><guid isPermaLink="false">eb3d8c89-07d6-4e15-a66e-60544e2ca174</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:27:59 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:27:59.377Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவலிங்கம்,அபிஷேகம்,பக்தர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/gf7q3ot4/tirupati.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பாலாக மாறிய அதிசயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/gf7q3ot4/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>எண்ணெய் பால்போல் வழிந்த காட்சியை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் கோவிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.</aside><h2><strong>எண்ணெய் அபிஷேகம்</strong></h2><p>ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன வெங்கடாம் பள்ளியில் சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று பூசாரி ஒருவர் சிவலிங்கத்திற்கு எண்ணெய் அபிஷேகம் செய்தார்.</p><h2><strong>பக்தர்கள் பரவசம்</strong></h2><p>சிவலிங்கத்தின் மீது ஊற்றப்பட்ட எண்ணெய் பால் போல் மாறி வழிந்தோடியது. இந்த நிகழ்வு சுற்று வட்டார கிராமங்களில் காட்டுத் தீயாக பரவியது. இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். எண்ணெய் பால்போல் வழிந்த காட்சியை கண்டு பரவசம் அடைந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் கோவிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>இந்த நிகழ்வுக்கான காரணம் குறித்து அறிவியல் பூர்வ விளக்கமோ அல்லது அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.</p><h2><strong>ஆய்வு செய்ய வேண்டும்</strong></h2><p>பக்தர்கள் தெய்வீக அதிசயமாக கருதும் நிலையில் சிலர் இதன் உண்மை நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-07-2026#comments</comments><guid isPermaLink="false">8ed54a9c-a1c4-48b1-946c-b3c3ef9fa483</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:27:49 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:27:49.394Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-30/sevdtnms/Gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-30/sevdtnms/Gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. </p><p>சென்னையில் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 150-க்கும், சவரன் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 220-க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 760-க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை அதிரடி உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>21-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>20-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>18-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>21-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>20-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>19-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>18-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>17-07-2026- ஒரு கிராம் ரூ.235</p> ]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும் - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems#comments</comments><guid isPermaLink="false">131377f1-f50e-47c7-b1eb-6db8532d5444</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:20:07 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:20:07.430Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,நீட் தேர்வு,Neet exam,முக ஸ்டாலின்,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/j7vwg76b/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/j7vwg76b/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><p>'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், '<a href="https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp">நீட்</a>' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.</p> <p>இதற்கிடையே டெல்லியில் 'நீட்' தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet">உதயநிதி</a> கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p> <p>இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>* புதுடெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது.</p><p>* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.</p> <p>* நீட் ஏற்படுத்தும் ஆபத்துகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது திமுக.</p><p>* நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே இந்த போராட்டங்களின் மையப் பொருளாக அமைய வேண்டும்.</p><p>* நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: புதிய தொழிற்கூடம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டுபிடிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-11th-phase-excavation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-11th-phase-excavation#comments</comments><guid isPermaLink="false">b29448bf-412c-4327-819b-c136a44e0629</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:12:49 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:12:49.959Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivaganga,கீழடி அகழாய்வு பணிகள்,Keeladi Excavation,TNSDA,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சிவகங்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9pwg969p/keeladi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Keeladi Excavation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9pwg969p/keeladi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சங்க கால நாகரிகத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றி வரும் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், பண்டைய தமிழர்களின் நுட்பமான நீர் மேலாண்மை முறைகள் மற்றும் ஒரு புதிய சுதந்திரமான தொழிற்கூடத்தின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (TNSDA) மேற்கொண்ட இந்த அகழாய்வில், பல அபூர்வமான தொல்பொருட்களும் ஒரே குழியில் மூன்று விதமான நீர் மேலாண்மை அமைப்புகளும் கண்டெடுக்கப்பட்டது தொல்லியலாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இந்தச் சங்க கால இடத்தில் அகழாய்வுப் பணிகளைப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதன்முறையாக பண்டைய மனிதர்களின் மேம்பட்ட நீர் மேலாண்மைத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் விரிவான செங்கல் சுவர்களுடன் கூடிய ஒரு புதிய பகுதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இந்தியத் தொல்லியல் துறை கண்டுபிடித்த முதன்மைப் பகுதியிலிருந்து தனித்து நிற்கிறது.</p><h2><strong>புதிய தொழிற்கூடத்திற்கான சான்றுகள்:</strong></h2><p>கடந்த 10 கட்ட அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட கட்டிட அமைப்புகளின் தொடர்ச்சி இதில் காணப்பட்டாலும், 11-ஆம் கட்டத்தில் தோண்டப்பட்ட குழிகள் கீழடி மக்களின் ஒரு 'புதிய தொழிற்கூடத்தை' வெளிப்படுத்துகின்றன என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாகத் தொல்லியலாளர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.</p><p>2014 முதல் அகழாய்வு நடைபெற்று வந்த முதன்மைப் பகுதிக்குத் தெற்கே, 2026 மார்ச் மாதம் முதல் 9 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. TNSDA அகழாய்வைக் கைப்பற்றிய 2017-க்குப் பிறகு, தோண்டப்பட்ட அனைத்துக் நான்கு பிரிவுகளிலுமே கட்டிட அமைப்புகளுக்கான சான்றுகள் வெளிப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.</p><h2><strong>அகழாய்வு இயக்குநர் விளக்கம்:</strong></h2><p> "பழைய குழிகளுக்கும் புதிய குழிகளுக்கும் இடையே இடைவெளிகள் காணப்படுகின்றன. இது இதுவொரு சுதந்திரமாக இயங்கிய தொழிற்கூடப் பகுதியாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. கூடுதல் ஆதாரங்கள் கிடைக்க வேண்டியிருந்தாலும், இதுவும் கீழடியின் ஓர் தொழிற்பகுதியே என்று நாம் உறுதியாக முடிவுக்கு வரலாம்" என்று கீழடி அகழாய்வு இயக்குநர் ரமேஷ் மாசேத்துங் கூறியுள்ளார்.</p><p>மேலும் 7 முதல் 9 குழிகளைத் தோண்டுவதற்குப் பணியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதன் மூலம் கூடுதல் தொல்பொருட்களைக் கண்டெடுத்து, பண்டைய மனிதர்களின் விந்தைகளை மேலும் வெளிக்கொணரலாம் என்று தொல்லியலாளர்கள் நம்புகின்றனர்.</p><h2><strong>நீர் மேலாண்மையில் தமிழர்களின் தொழில்நுட்பம்:</strong></h2><p>ஒரே அகழாய்வுக் குழியில் மூன்று விதமான நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது கீழடி அகழாய்வு வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும். மூடப்பட்ட கால்வாய், நேர்த்தியாகப் பொருத்தப்பட்ட சுடுமண் குழாய் மற்றும் சுருள் வடிவிலான குழாய் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. </p><p>தொழிலகத் தேவைகளுக்காகவும், நீர் மேலாண்மைக்காகவும் பண்டைய தமிழர்கள் கையாண்ட இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், அவர்களின் நகரமைப்பையும் பொறியியல் திறனையும் வெளிப்படுத்துகிறது.</p><h2><strong>1,300-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள்:</strong></h2><p>நடப்பு அகழாய்வுப் பருவத்தின் முதல் நான்கு மாதங்களிலேயே 1,300-க்கும் மேற்பட்ட அபூர்வத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இங்கு கண்டெடுக்கப்பட்ட வெள்ளி முத்திரைக் காசுகள், பரந்த செங்கல் அமைப்புகள் மற்றும் குடியிருப்பின் பிரம்மாண்டமான அளவு ஆகியவை தென்னிந்தியாவில் பண்டைய நகர்ப்புற நாகரிகம் இல்லை என்ற கூற்றைப் பொய்யாக்கியுள்ளன. </p><p>சூரியன், பிறை மற்றும் காளை குறியீடுகள் கொண்ட இந்த முத்திரைக் காசுகளும், சூட மணி மற்றும் அகேட் மணிகளும் கீழடி மக்களுக்கும் வட இந்தியாவுக்கும் இடையே இருந்த வர்த்தகத் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.</p><p> "கீழடியில் அடையாளம் காணப்பட்ட 110 ஏக்கர் பரப்பளவில் இதுவரை 2 சதவீதம் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளிப்பட்டுள்ள பகுதி ஒரு தொழிற்பகுதியாகும். இங்கு கைவினைஞர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரிவு மக்களும் வாழ்ந்துள்ளனர். தற்போது குடியிருப்பின் மற்றொரு பகுதி வெளிப்பட்டு வருகிறது, ஆனால் பண்பாட்டு மற்றும் மண்பாண்ட வரிசைகளில் எந்த மாற்றமும் இல்லை." என TNSDA-வின் கல்வி ஆலோசகர் பேராசிரியர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மாருதி சுசுகி கார்கள் விலை மீண்டும் உயர்வு</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/maruti-suzuki-car-prices-hiked-again</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/maruti-suzuki-car-prices-hiked-again#comments</comments><guid isPermaLink="false">0c2b5c5c-5a1a-45f2-bc95-c6914ec2f557</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:58:21 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:58:21.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maruti Suzuki,மாருதி சுசுகி,Maruti Suzuki Car,மாருதி சுசுகி கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/648l9lsv/maruti.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாருதி சுசுகி கார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/648l9lsv/maruti.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF">மாருதி சுசுகி</a> தனது அனைத்து கார் மாடல்களின் விலையையும் அடுத்த மாதம் முதல் உயர்த்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முறை காரின் மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.30,000 வரை விலை உயர்த்தப்பட உள்ளது.</p><h2><strong>விலை உயர்வு</strong></h2><p>கார்களை தயாரிப்பதற்கான உதிரிபாகங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாததால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது. </p><h2><strong>கவலை</strong></h2><p>ஆட்டோமொபைல் துறையில் இந்த அறிவிப்பு கார் வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், மாருதி நிறுவனம் கடந்த <a href="https://www.maalaimalar.com/automobilenews/car/maruti-suzuki-to-hike-prices-across-models-from-june">ஜூன்</a> மாதத்தில்தான் இதேபோல தங்களது கார்களின் விலையை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வெறும் இரண்டு மாத இடைவெளிக்குள் மீண்டும் ஒருமுறை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், நடுத்தர வர்க்கக் கார் வாங்குபவர்கள் கவலையடைந்துள்ளனர்.  </p><h2><strong>முன்பதிவு</strong></h2><p>ஒவ்வொரு குறிப்பிட்ட மாடலுக்கும் எவ்வளவு ரூபாய் உயரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான புதிய விலைப்பட்டியல் அடுத்த மாதம் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதிய மாருதி கார் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள், இந்த மாத இறுதிக்குள் முன்பதிவு செய்வது ஓரளவு பணத்தைச் சேமிக்க உதவும்.</p>]]></content:encoded></item><item><title>தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable#comments</comments><guid isPermaLink="false">e304f00c-5c9d-4469-99ff-20689993bb60</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:47:54 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:47:54.782Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Aadhav Arjuna,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-25/l38tsaej/AadhavArjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-25/l38tsaej/AadhavArjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று  அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜூனா</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>'நீட் தேர்வு' என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. </p><p>தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அறப் போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.</p> <p>அந்த மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் ஒன்றிய அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. </p><p>அதேபோல், டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் <a href="https://www.maalaimalar.com/news/national/rahul-priyanka-released-from-detention-as-congress-staged-protest-at-lok-kalyan-marg">பிரியங்கா காந்தி</a> அவர்களும் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்; வன்மையான கண்டனத்திற்குரிய செயல். </p> <p>மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து, எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.</p><p>அதுபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். </p> <p>நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்கள் நலனுக்கும், மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் புதிய அத்தியாயம்: டர்ஹாம் அணிக்காக அபார சதமடித்து பென் ஸ்டோக்ஸ் சாதனை!</title><link>https://www.maalaimalar.com/sports/ben-stokes-century-for-durham</link><comments>https://www.maalaimalar.com/sports/ben-stokes-century-for-durham#comments</comments><guid isPermaLink="false">d8fccff6-2848-4a27-ac79-14e931fe982c</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:40:04 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:40:04.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ben Stokes,பென் ஸ்டோக்ஸ்,Durham,Derbyshire,டர்ஹாம்,டெர்பிஷைர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/htuchq5c/ben.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ben Stokes]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/htuchq5c/ben.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த சில நாட்களிலேயே, இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் உள்நாட்டுப் போட்டியில் களமிறங்கி தன்னுள் இன்னும் ஆட்டம் மீதமுள்ளது என்பதை நிரூபித்துள்ளார்.</p><p>இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டின் 'ஒன்-டே கப்' தொடரில் டெர்பி  நகரில் நடைபெற்ற போட்டியில், டர்ஹாம் மற்றும் டெர்பிஷைர் அணிகள் மோதின. சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது முதல் போட்டியில் களமிறங்கிய ஸ்டோக்ஸ், ஆட்டமிழக்காமல் '108 ரன்கள்' குவித்து டர்ஹாம் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.</p><h2><strong>12 ஆண்டுகளுக்குப் பிறகு:</strong></h2><p>டர்ஹாம் அணிக்காக 50-ஓவர் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடிய முதல் போட்டி இதுவாகும். பேட்டிங்கிற்கு முன் பந்துவீச்சிலும் அசத்திய ஸ்டோக்ஸ், 9 ஓவர்கள் வீசி 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனமாக பந்துவீசினார் (0/38). 257 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டர்ஹாம் அணி, 98 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. </p><p>அப்போது களமிறங்கிய ஸ்டோக்ஸ் அணியை பொறுப்புடன் வழிநடத்தினார். ஆட்டத்தின் இடையே தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும், கடைசி வரை களத்தில் நின்று 123 பந்துகளில் 108 ரன்கள் (10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.</p><h2><strong>போட்டி முடிவு:</strong></h2><p>முதலில் பேட்டிங் செய்த டெர்பிஷைர் அணி 50 ஓவர்களில் 256/9 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய டர்ஹாம் அணி 49.1 ஓவர்களில் 257/5 ரன்கள் எடுத்து, 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் அபார வெற்றி பெற்றது.</p><h2><strong>சர்வதேச ஓய்வும் உருக்கமான விடைபெறலும்:</strong></h2><p>நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டோக்ஸ் அறிவித்திருந்தார். தனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தைக் குறித்து அவர், "இது ஒரு மறக்க முடியாத 15 ஆண்டு கால பயணம். உச்சக்கட்ட மகிழ்ச்சி, ஏற்ற இறக்கங்கள் என அனைத்தையும் கண்டேன். </p><p>என் மீதும், இங்கிலாந்து அணி மீதும் அன்பு செலுத்திய அனைத்து ரசிகர்களுக்கும், உடன் விளையாடிய வீரர்களுக்கும் என் நன்றிகள்." என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.</p><h2><strong>பென் ஸ்டோக்ஸின் சர்வதேச சாதனைகள்:</strong></h2><h3><strong>டெஸ்ட் போட்டிகள்:</strong></h3><p> 122 போட்டிகள் (44 போட்டிகளில் கேப்டன்), 7,000+ ரன்கள் மற்றும் 200+ விக்கெட்டுகள்.</p><h3><strong>ஒருநாள் &amp; டி20:</strong></h3><p> 114 ஒருநாள் போட்டிகள் மற்றும் 43 T20I போட்டிகளில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.</p><p>தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தாலும், கவுண்டி போட்டிகளில் தனது முத்திரையைப் பதித்து ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளார் ஸ்டோக்ஸ்!</p> ]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும்  புது ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-a7-pro-max-is-tipped-to-feature-a-10000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/oppo-a7-pro-max-is-tipped-to-feature-a-10000mah-battery#comments</comments><guid isPermaLink="false">eabf7b6b-855f-4773-bc7c-8728ed95f2d6</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:37:00 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:37:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OPPO,ஒப்போ,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/eyva74xj/oppo-phn.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ OPPO Smartphone]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/eyva74xj/oppo-phn.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒப்போ நிறுவனத்தின் முற்றிலும் புதிய A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. பிரபல டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதில் அதிகபட்சம் 10,000mAh பேட்டரி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். </p><p>இது உண்மையாகும் பட்சத்தில் இத்தனை பெரிய கேமரா சென்சார் கொண்ட முதல் ஒப்போ ஸ்மார்ட்போனாக இது இருக்கும். முன்னதாக கடந்த ஜூன் மாத வாக்கில் வெளியான தகவல்களிலும், ஒப்போ நிறுவனம் 10,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது.</p><p><strong>அம்சங்கள்:</strong></p><p>தற்போது லீக் ஆகி இருக்கும் தகவல்களின் படி ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.78 இன்ச் ஃபிளாட் AMOLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.</p><p>இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரி, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அளவில் பெரிய பேட்டரி வழங்கப்படும் போதிலும், இந்த ஸ்மார்ட்போன் 8.47mm தடிமனாக இருக்கும் என்றும் இதன் எடை 226 கிராம்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒப்பிட்டளவில் இது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலை விட மெல்லியதாக இருக்கும்.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஒப்போ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மூலம் ஃபிளாக்ஷிப் தர கேமரா அனுபவத்திற்கு மாற்றாக நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது.</p><p>முதற்கட்டமாக ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் வெளியாவது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,635 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays#comments</comments><guid isPermaLink="false">17db2fd0-85e3-44f9-bfc2-bb776d17dd23</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:29:15 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:29:15.790Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,special bus</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8a8j7wp/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8a8j7wp/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு தடையின்றி பயணம் செய்ய வசதியாக, சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பேருந்துகள்</a> இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்) ஜெரோலின் லிஸ்பன் சிங் தெரிவித்துள்ளார்.</p><p>பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வரும் 24 (வெள்ளிக்கிழமை) மற்றும் 25 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகளின் விவரம் பின்வருமாறு:-</p><h2><strong>கிளாம்பாக்கம்</strong></h2><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 395 பஸ்களும், 25-ந் தேதி (சனிக்கிழமை) 330 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>கோயம்பேடு</strong></h2><p>சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24-ந் தேதி வெள்ளிக்கிழமை 120 பஸ்களும், 25-ந் தேதி சனிக்கிழமை 120 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>மாதவரம்</strong></h2><p>மாதாவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 24 மற்றும் 25-ந் தேதிகளில் தலா 25 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 420 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>அறிவுறுத்தல்</strong></h2><p>வார இறுதி நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் தங்களது பயணங்களை முன்னரே திட்டமிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (23.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31#comments</comments><guid isPermaLink="false">bb0fe696-1890-43f3-b29f-4ae83e0d7d9e</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:14:38 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:14:38.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mxc8pspa/powercut0.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mxc8pspa/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>அயப்பாக்கம்</strong></h2><p>ஐ.சி.எப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டி.என்.எச்.பி. கட்டம் I முதல் III வரை, திருவேற்காடு பிரதான சாலை, அம்பத்தூர், வானகரம் சாலை, அத்திப்பட்டு, பாரதி மேடு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர். நகர், வி.ஜி.என். சாந்தி நகர், மதுரவாயல், செட்டியார் தெரு, விஜயா நகர், பச்சையப்பா நகர், சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யூ, கொன்ராஜ் குப்பம், அக்கிரஹாரம், தேவி நகர், சின்ன கோலடி, ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>சாஸ்திரி நகர், எல்.பி. சாலை, கலாஷேத்ரா சாலை, ஆர்.கே.நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யூ, சிவசுந்தர் அவென்யூ.</p><h2><strong>பாரிவாக்கம்</strong></h2><p>அணைகட்டுசேரி, காவல்சேரி, சோரன்சேரி, சித்துகாடு, திருமணம், அமுதுர்மேடு, வயலானல்லூர், திருகோவில்பத்து.</p><h2><strong>பள்ளிக்கரணை</strong></h2><p>200 அடி ரேடியல் சாலை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம், நாராயணபுரம், வி.ஜி.பி. ராஜேஷ் நகர், கணேஷ் அவென்யூ, வி.எம். சாலை, ஜெயின் அபார்ட்மெண்ட், ரமணியம் ஓஷன் டியூ அபார்ட்மெண்ட், சர்வம் அபார்ட்மெண்ட்.</p><h2><strong>சித்தாலப்பாக்கம்</strong></h2><p>மாம்பாக்கம் பிரதான சாலை, பாபு நகர், நீலா நகர், விமலா நகர், பிரின்ஸ் கல்லூரி சாலை, சிவகாமி நகர், நல்லதம்பி நகர், அண்ணா சாலை, நெசவாளர் நகர், பச்சையம்மன் கோவில் தெரு, பத்மாவதி நகர், மகேஸ்வரி தெரு.</p><h2><strong>கவுரிவாக்கம்</strong></h2><p>சாந்தி நகர், சிவகாமி நகர், பழனியப்பா நகர், சந்தானம்மாள் நகர், வேளச்சேரி பிரதான சாலை, எஸ்.ஐ.வி.டி. கல்லூரி.</p><h2><strong>கே.கே. நகர்</strong></h2><p>கன்னிகாபுரம் 1-வது முதல் 3-வது தெரு வரை, விஜயராகவபுரம் 1-வது முதல் 5-வது தெரு வரை மற்றும் குறுக்குத் தெரு, பீரான்சாஹிப் தெரு, ஆற்காடு சாலை, ராஜமன்னார் சாலை, சத்யா கார்டன், சாஸ்த்ரா கல்லூரி, ஏ.வி.எம். அஸ்டா, ஏ.வி.எம். ஸ்டுடியோ, கபெல்லா, குமரன் காலனி பிரதான சாலை, சாலிகிராமம், 80 அடி சாலை, ராணி அண்ணா நகர், பி.டி. ராஜன் சாலை, 14-வது மற்றும் 15-வது செக்டர், கே.கே. நகர் 94-வது முதல் 104-வது தெரு வரை, எஸ்.எஸ்.பி. நகர், எஸ்.வி. லிங்கம் சாலை, அழகர்பெருமாள் கோவில் தெரு, விஜயா தெரு, ஒட்டகப்பாளையம்.</p><h2><strong>செம்பரம்பாக்கம்</strong></h2><p>பெங்களூர் நெடுஞ்சாலை, நசரத்பேட்டை சந்திப்பிலிருந்து ஓட்டல் நெடுஞ்சாலை வரை.</p><h2><strong>குமணன்சாவடி</strong></h2><p>பூந்தமல்லி புற வழிச்சாலை, அம்பாள் நகர், ஆவடி சாலை, சென்னீர்குப்பம், மேட்டு தெரு.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>சி.டி.ஓ. காலனி, சசிவரதன் நகர், எப்.சி.ஐ. நகர், காசா கிராண்ட், குட்வில் நகர், மூகாம்பிகை நகர், பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர், சிட்லபாக்கம் ராமகிருஷ்ணா நகர் 1-வது முதல் 6-வது தெருக்கள் வரை, பாம்பன் சாமிகள் சாலை, ஐ.சி.ஐ.சி.ஐ., வைத்தியலிங்கம் சாலை, எம்.எம்.டி.ஏ. நகர், சர்மா நகர், முனியாத்தி தெரு, பிரதாப் அவென்யூ, ஆபிரகாம் லிங்கன் தெரு, நசீப் அவென்யூ, மருதுபாண்டியர் தெரு, பாபு தெரு.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>திருமலைவாசன் நகர், அசோக் நகர், பூம்பொழில் நகர், கன்னடபாளையம், பாரதி நகர், திருமுல்லைவாயல் சாலை, ராமகிருஷ்ணா நகர்.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>ராஜாஜி நகர், சக்தி நகர், சஞ்சய் காந்தி நகர், நார்த் செயின்ட் மேரிஸ் சாலை, பி.வி. ஆச்சாரியா தெரு, சரோஜினி தெரு, ஜவாது உசேன் தெரு, சுந்தரேசன் தெரு, எத்திராஜ் தெரு, சாலமன் தெரு.</p>]]></content:encoded></item><item><title>போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது  - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet#comments</comments><guid isPermaLink="false">91442214-ee55-44a5-8277-59db325e174b</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:01:07 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:01:07.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/idg85s8p/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/idg85s8p/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p><h2>நீட் தேர்வில் குளறுபடி</h2><p>'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், 'நீட்' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.</p><h2>தர்ணா போராட்டம்</h2><p>இதற்கிடையே டெல்லியில் 'நீட்' தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <p>இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 25 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.</p><p>இதைபோல நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி. நகர் தபால் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p> <h2>உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</h2><p>இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>#<a href="https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp">CJP</a> முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.</p> <p>ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள  வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>டெல்லியில் ராகுல் காந்தி கைது-நீட் தேர்வுப் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு எதிராக தவெக கடும் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues#comments</comments><guid isPermaLink="false">9c7c11b0-75f9-4bb7-9a9c-6c44aa6801bd</guid><pubDate>Wed, 22 Jul 2026 02:53:45 +0000</pubDate><atom:updated>2026-07-22T02:53:45.696Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,NeetExam,நீட் ஊழல்,tvk,முதலமைச்சர் விஜய்,சிஜேபி,CJPProtest,தமிழக வெற்றிக்கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/z6srb0ba/tvk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief minister vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/z6srb0ba/tvk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் பலவந்தமாக கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கும், நீட் தேர்வால் மாணவர்கள் சந்தித்து வரும் பாதிப்புகளுக்கும் 'தமிழக வெற்றிக்கழகம்' தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p>இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தலைமையிலான அக்கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.</p><h2><strong>ஜனநாயக உரிமை மீதான அப்பட்டமானத் தாக்குதல்:</strong></h2><p>நாட்டின் தலைநகரில் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள தவெக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் தரதரவென இழுத்துச்செல்லப்பட்டு குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்ட செயல் ஜனநாயக அமைப்பின் மீதான நேரடித் தாக்குதல் என்று குற்றம் சாட்டியுள்ளது.</p><p>மேலும், "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ராகுல் காந்தி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும், குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதும் ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும்." என தமிழக வெற்றிக்கழகம் வன்மையாக கண்டித்துள்ளது.</p><h2><strong>நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை:</strong></h2><p>அறிக்கையின் மற்றொரு முக்கிய பகுதியாக, நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நீட் தேர்வு நடைமுறை குறித்தும் தவெக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><h2><strong>ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை:</strong></h2><p>நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே, அத்தேர்வின் மீதான பொதுமக்களின் மற்றும் மாணவர்களின் நம்பகத்தன்மை தொடர்ந்து குறைந்து வருகிறது.தேர்வு தொடர்பான குளறுபடிகளால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அவர்களின் எதிர்காலக் கனவுகளும் கேள்விக் குறியாக மாறியுள்ளன.</p><p>நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே, ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் திட்டவட்டமாகக் வலியுறுத்தியுள்ளது.</p><h2><strong>அரசியல் களத்தில் எதிரொலி:</strong></h2><p>நீட் தேர்வு விவகாரம் மற்றும் டெல்லிப் போராட்டம் தொடர்பாகத் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் இந்த திடீர் மற்றும் காட்டமான அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை உயர்வு  </title><link>https://www.maalaimalar.com/news/world/us-attacks-iran-oil-ships-hormuz-after-secret-pakistan-talks</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-attacks-iran-oil-ships-hormuz-after-secret-pakistan-talks#comments</comments><guid isPermaLink="false">5315f217-15b8-4227-92f3-3237b91972ec</guid><pubDate>Wed, 22 Jul 2026 02:35:11 +0000</pubDate><atom:updated>2026-07-22T02:35:11.114Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Hormuz,ஹார்முஸ்  ஜலசந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/r0c37pvd/Untitled-design-47.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hormuz oil tanker attack pushes crude and fuel prices up]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/r0c37pvd/Untitled-design-47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் உடனான மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈரான் ஈடுபட்டு வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது.</p><p>இதன்மூலம் ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தொடர்ந்து 11-வது நாளாக வான்வழி தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது.</p><p>ஈரானில் நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலுக்கு முன்னதாக, இப்போரில் முக்கிய மத்தியஸ்தராக விளங்கும் ஈரானிய உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமெனி, போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்கும் நோக்கில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். </p><p>அப்போது அவர் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரை சந்தித்தார். இதைத்தொடர்ந்து மொமேனி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபையும் சந்தித்தார்.</p><p>இதையடுத்து பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனக் கூறி, ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று தாக்குதல்கள் நடத்தியது.</p><p>இந்த சம்பவத்தில் ஈரான் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள எச்சரிக்கை ஒலிப்பான்கள் எச்சரிக்கப்பட்டன.</p><p>இதன் விளைவாக எரிசக்தி விலைகள் அதிகரித்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 91 டாலருக்கும், அமெரிக்காவில் பெட்ரோலின் விலை ஒரு கேலனுக்கு சராசரியாக 4 டாலராகவும் உயர்ந்தது.</p><p>இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய டிரம்ப், யுரேனியத்தைச் செறிவூட்டும் ஈரானின் முக்கியத் தளங்களில் ஒன்றிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை அமெரிக்கப் படைகள் விரைவில் குறி வைக்கக்கூடும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், ஈரான் உடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வராததை தொடர்ந்து, எரிசக்தி மீதான இந்த விலை உயர்வு அமெரிக்க மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு 2 ஆண்டுகள் வரிவிலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/tax-exemption-for-generic-drugs-in-us-for-2-years-donald-trump-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/world/tax-exemption-for-generic-drugs-in-us-for-2-years-donald-trump-announcement#comments</comments><guid isPermaLink="false">dd01f8f9-cece-4d87-8557-a1759e4fdb53</guid><pubDate>Wed, 22 Jul 2026 02:31:53 +0000</pubDate><atom:updated>2026-07-22T02:31:53.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,அமெரிக்கா,America,டொனால்ட் டிரம்ப்,Generic Drugs,ஜெனரிக் மருந்துகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/wqhzcwq9/trump.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ donald trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/wqhzcwq9/trump.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் 'ஜெனரிக் ரக மருந்துகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு எவ்வித சுங்க வரியும் விதிக்கப்படாது  என்றும், அதன் பிறகு வரி விகிதங்கள் '100% மற்றும் 200% ஆக உயர்த்தப்படும்' என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.</p><h2><strong>0% வரி:</strong></h2><p>வரவிருக்கும் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும் இந்த விலக்கின் மூலம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜெனரிக் மருந்துகளுக்கும் முதல் 2 ஆண்டுகளுக்குச் சுங்க வரி எதுவும் கிடையாது.</p><h2><strong>100% வரி:</strong></h2><p>இரண்டு ஆண்டு கால அவகாசம் முடிந்த பிறகு, அடுத்த ஒரு ஆண்டிற்கு இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு 100% வரி விதிக்கப்படும்.</p><h2><strong>200% வரி :</strong></h2><p>அதன்பிறகு, அனைத்து வெளிநாட்டு ஜெனரிக் மருந்துகளுக்கும் 200% சுங்க வரி நடைமுறைக்கு வரும்.</p><p> "அமெரிக்காவிற்குள்ளேயே ஜெனரிக் மருந்துகளின் உற்பத்தியை மீண்டும் கொண்டுவருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் அமெரிக்காவில் தொழிற்சாலைகளையும் உபகரணங்களையும் நிறுவத் தவறும் companies-க்கு இது அபராதமாக அமையும்."</p><h2><strong>அமெரிக்க சந்தையின் நிலை:</strong></h2><p>அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் தரவுகளின்படி, அமெரிக்காவில் விற்பனையாகும் மருந்துகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை ஜெனரிக் ரக மருந்துகளாகும். காப்புரிமை பெற்ற பிராண்டட் மருந்துகளுக்கான தற்போதைய இறக்குமதி கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கடந்த ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவில் உற்பத்தி செய்ய ஒப்புக்கொள்ளாத பிராண்டட் மருந்துகளுக்கு 100% வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>சர்வதேச மருந்து நிறுவனங்களின் மீதான தாக்கம்:</strong></h2><p>இந்திய நிறுவனங்கள் உட்பட உலகளாவிய மருந்து உற்பத்தியாளர்கள் அமெரிக்காவிற்கு அதிகளவில் ஜெனரிக் மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த 2 ஆண்டு கால அவகாசம், மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே தங்களது புதிய உற்பத்தி ஆலைகளைத் தொடங்குவதற்கோ அல்லது தங்களது வணிக உத்திகளை மாற்றி அமைப்பதற்கோ வழங்கப்பட்டுள்ள வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-22nd-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-22nd-july-2026#comments</comments><guid isPermaLink="false">034e9e22-4a64-4c01-a644-f73dfe277948</guid><pubDate>Wed, 22 Jul 2026 02:15:12 +0000</pubDate><atom:updated>2026-07-22T02:15:12.105Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol Diesel Price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-10/cf7voyax/Petrol-diesel-price.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-10/cf7voyax/Petrol-diesel-price.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p> கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (22.07.2026 - புதன்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 22.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு சொத்துகள் வாங்கும் யோகமுண்டு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-22-july-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-22-july-2026#comments</comments><guid isPermaLink="false">86ed5323-570e-4a4f-8aca-97f92c53f6b1</guid><pubDate>Wed, 22 Jul 2026 01:53:19 +0000</pubDate><atom:updated>2026-07-22T01:53:19.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Daily Rasipalan,ராசிபலன்,Raspalan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/30/20839250-rasipalan2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/30/20839250-rasipalan2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>வருமானம் திருப்தி தரும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.</p><h2>மிதுனம்</h2><p>ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.</p><h2>கடகம்</h2><p>அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் ஆலோசனை கைகொடுக்கும் நாள். குடும்பச்செலவுகள் கூடும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.</p> <h2>சிம்மம்</h2><p>பொருளாதார முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலை தருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.</p><h2>கன்னி</h2><p>மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனக்கசப்புகள் மாறும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்னிய தேசத்திலிருந்து ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும்.</p><h2>துலாம்</h2><p>உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். உடல் நலம் சீராகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.</p><h2>விருச்சிகம்</h2><p>பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். தொழிலில் லாபம் உண்டு. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். சொத்துகள் வாங்கும் யோகமுண்டு.</p> <h2>தனுசு</h2><p>செலவுகள் கூடும் நாள். சேமிப்பு கரைகின்றதே என்று கவலைப்படுவீர்கள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு உங்களிடமே வரலாம்.</p><h2>மகரம்</h2><p>குடும்பச்சுமை கூடும் நாள். உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யும் சூழ்நிலை உண்டு. வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர்.</p><h2>கும்பம்</h2><p>வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள்.</p><h2>மீனம்</h2><p>எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. அத்தியாவசிப் பொருட்களை வாங்க அதிகம் செலவிட நேரிடலாம்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 22 ஜூலை 2026:  கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-22-july-2026-gomathi-amman-rishaba-vahanam-bhavani</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-22-july-2026-gomathi-amman-rishaba-vahanam-bhavani#comments</comments><guid isPermaLink="false">288111b7-f4ff-42d3-9cd8-558e462690bd</guid><pubDate>Wed, 22 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-22T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7xvpjfsk/gomathiamman.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gomathi amman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7xvpjfsk/gomathiamman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-6 (புதன்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   அஷ்டமி காலை 9.23 வரை பிறகு நவமி</p><p>நட்சத்திரம் : சுவாதி பின்னிரவு 3 மணி வரை பிறகு விசாகம்</p><p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்</h2><p>ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. சேரமான் பெருமான் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராமர் ரதோற்சவம் வடமதுரை ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் அன்ன வாகனத்தில் திருவீதியுலா. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கிருஷ்ணாவதாரம் சிம்ம வாகனத்தில் பவனி. வேலூர் கோட்டை ஸ்ரீ துர்கையம்மன், பட்டீஸ்வரன் ஸ்ரீ துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். </p><p>திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உயர்வு</p><p>ரிஷபம் - நன்மை</p><p>மிதுனம் - நலம்</p><p>கடகம் - உதவி</p><p>சிம்மம் - நட்பு</p><p>கன்னி - பணிவு</p><p>துலாம் - லாபம்</p><p>விருச்சிகம் - தெளிவு</p><p>தனுசு - பண்பு</p><p>மகரம் - ஈகை</p><p>கும்பம் - முயற்சி</p><p>மீனம் - வெற்றி</p> ]]></content:encoded></item><item><title>சிக்கிம் சுரங்கப்பாதை நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/20-workers-die-in-sikkim-tunnel-collapse</link><comments>https://www.maalaimalar.com/news/national/20-workers-die-in-sikkim-tunnel-collapse#comments</comments><guid isPermaLink="false">750561a4-b0bc-4a40-8d25-ef9899efe8d0</guid><pubDate>Wed, 22 Jul 2026 00:26:54 +0000</pubDate><atom:updated>2026-07-22T00:26:54.870Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிக்கிம்,sikkim,Tunnel collapse,நிலச்சரிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/bo3ffcw8/sikkim-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/bo3ffcw8/sikkim-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிக்கிமின் நாம்ச்சி மாவட்டத்தில், மீத்தேன் வாயு கசிவு என சந்தேகிக்கப்படும் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் 24 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளே சிக்கியிருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.</p><p>NHPC சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்தினருக்கும் ரூ.4 லட்சமும், காயமடைந்த ஒவ்வொருவருக்கும் ரூ.50,000-மும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் அறிவித்தார்.</p><p><strong>கருணைத் தொகை:</strong></p><p>பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசி நிலைமையை ஆய்வு செய்ததோடு, மத்திய அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவருக்கு உறுதியளித்தார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் கருணைத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.</p><p>திங்கள்கிழமை மதியம் 1 மணிக்கு சற்று பின்னர், சமர்துங்கில் உள்ள NHPC டீஸ்டா ஆறாம் கட்ட நீர்மின் திட்டத்தின் இடிந்து விழுந்த சுரங்கப்பாதைக்குள், சில திட்ட அதிகாரிகள் உட்பட சுமார் 25 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.</p><p>"சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 25 பேரில், 20 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது," என நாம்ச்சி காவல் கண்காணிப்பாளர் (SP) சோனம் டி பூட்டியா தெரிவித்தார்.</p><p><strong>சிறப்புக் குழு:</strong></p><p>பல்வேறு முகமைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இதுவரை ஏழு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மீதமுள்ள உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>NHPC அறிக்கையின்படி, பாறைகளுக்குள் சிக்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் மீத்தேன் வாயு திடீரென வெளியேறியதால், அடர்த்தியான புகையும் நச்சு வாயுக்களும் உருவாகி இந்த வெடிப்பு ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுவதற்கு காரணமான மீத்தேன் வாயு வெடிப்புக்கான காரணத்தை கண்டறிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.</p><p>முன்னதாக ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் நிலைமையை ஆய்வு செய்வதற்காக சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அவர்கள் களத்தில் இருந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி, காயமடைந்த தொழிலாளர்களுக்கு சிறந்த மருத்துவ பராமரிப்பும் ஆதரவும் கிடைப்பதை உறுதிசெய்ய, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினர்.</p><p>பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு விரைவில் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு, என்.எச்.பி.சி தலைவரும் நிர்வாக இயக்குனருமான பூபேந்தர் குப்தாவிற்கு அவர்கள் உத்தரவிட்டனர்.</p><p><strong>மௌன அஞ்சலி:</strong></p><p>இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக ரங்போவில் ஒரு பிரத்யேக அமைப்பை நிறுவுமாறும், இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குறிப்பாக பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் ஆளுநரும் முதலமைச்சரும் நாம்ச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.</p><p>சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சிக்கிம் சட்டமன்றம் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இச்சம்பவம் தொடர்பாக தன்னிடம் பேசியதாக முதலமைச்சர் அவையில் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>குருகிராம் மருத்துவமனையில் வாங்சுக்கை சந்தித்தனர் நட்டா மற்றும் ஜிதேந்திர சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/jp-nadda-jitendra-singh-meet-wangchuk-at-gurugram-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/national/jp-nadda-jitendra-singh-meet-wangchuk-at-gurugram-hospital#comments</comments><guid isPermaLink="false">1786256a-b0d6-4aad-87b3-e7c83d7605b7</guid><pubDate>Tue, 21 Jul 2026 23:44:59 +0000</pubDate><atom:updated>2026-07-21T23:44:59.832Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜேபி நட்டா,JP Nadda,ஜிதேந்திர சிங்,Jitendra Singh,Wangchuk,வாங்சக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/km9iquij/jp-n-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜே.பி. நட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/km9iquij/jp-n-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனையில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மேல் சிகிச்சைக்காக சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனைக்கு வாங்சுக் மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>"மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கை சந்தித்தனர்," என்று ஒரு வட்டாரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.</p><p><strong>தீவிர சிகிச்சை:</strong></p><p>பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் மூலம் வாங்சுக் மேடான்டா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் உள் மருத்துவ நிபுணரான டாக்டர் சுஷீலா கட்டாரியாவின் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேடான்டா மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>முன்னதாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து நேற்று (ஜூலை 21) மாலை அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.</p><p><strong>தனியார் மருத்துவமனை:</strong></p><p>டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், குருகிராமில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து மேதந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.</p><p>இது தொடர்பாக சப்தர்ஜங் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "டெல்லி ஐகோர்ட் உத்தரவுப்படி, சோனம் வாங்சுக், இன்று மாலை 6:40 மணியளவில் மேல் சிகிச்சைக்காக மேதந்தா மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது மருத்துவ ஆவணங்கள், பரிசோதனை விவரங்கள், சிகிச்சை ஆவணங்கள் அனைத்தும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது," என கூறப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>5-ஆவது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 269 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/nz-set-269-runs-as-target-for-wi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/nz-set-269-runs-as-target-for-wi#comments</comments><guid isPermaLink="false">e01c7c6c-23d5-4903-a60b-f39a9070ffd4</guid><pubDate>Tue, 21 Jul 2026 23:02:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T23:02:54.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நியூசிலாந்து,வெஸ்ட் இண்டீஸ்,WIvsNZ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rtxh0h4t/NZ-bat.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Will Young & Nick Kelly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rtxh0h4t/NZ-bat.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. </p><p>இந்தத் தொடரின் முதல் நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. தொடரின் முதல் போட்டியில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற, மற்ற மூன்று போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.</p><p>இந்த நிலையில், 5-ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 268 ரன்களை குவித்துள்ளது.</p><p>நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஹென்றி நிகிகோல்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் களமிறங்கிய வில் யங், 3-ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய நிக் கெல்லியுடன் இணைந்து அபாரமாக ஆடினார்.</p><p>இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. மேலும், இருவரும் அரைசதம் கடந்தனர். வில் யங் (56), நிக் கெல்லி (64) எடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>அடுத்து களமிறங்கியவர்களில் டாம் லேதம் (69) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை குவத்துள்ளது.</p><p>வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய விடெல் லாவ்ஸ் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபோர்ட், ஜேடென் சீல்ஸ் மற்றும் குடகேஷ் மோத்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு, 5.64 லட்சம் பேர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/21-killed-in-a-day-as-flood-situation-worsens-in-assam</link><comments>https://www.maalaimalar.com/news/national/21-killed-in-a-day-as-flood-situation-worsens-in-assam#comments</comments><guid isPermaLink="false">eb41f8de-4bc8-4161-afc3-ccbffb58bcb9</guid><pubDate>Tue, 21 Jul 2026 22:29:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T22:29:04.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death,அசாம் வெள்ளம்,Assam Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vrl9mtmj/asm-flds.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Assam Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vrl9mtmj/asm-flds.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாமில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்தது; இதில் மேலும் 21 பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 மாவட்டங்களில் 5.64 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">அசாம்</a> மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மிக மோசமாக பாதிக்கப்பட்ட சிவசாகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன; அதைத் தொடர்ந்து சாரைடியோவில் 5 பேரும், கோலாகாட்டில் 2 பேரும், ஜோர்ஹட்டில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.</p><p><strong>சமூக வலைதள பதிவு:</strong></p><p>இந்த உயிரிழப்புகளுடன் சேர்த்து, மாநிலத்தில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக, மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட இருப்பதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.</p><p>"ஆற்றுப் படுகையின் மேல் பகுதிகளில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக உருவான சமீபத்திய அசாம் வெள்ளம் எங்கள் மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவாரண பணிகளை ஆய்வு செய்வதற்காக, சாரைடியோ, நசிரா, சிவசாகர், சோனாரி, ஜோர்ஹட் மற்றும் டியோக் ஆகிய இடங்களில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை நான் பார்வையிடவுள்ளேன்" என்று அவர் சமூக வலைதள பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p><p><strong>5.64 லட்சம் பேர் பாதிப்பு:</strong></p><p>கோலாகாட், காம்ரூப், ஹோஜாய், திப்ருகார், பிஸ்வநாத், தேமாஜி, சோனித்பூர், உதல்குரி, நாகான், சாரைடியோ, காம்ரூப் (மெட்ரோ), ஜோர்ஹட், டின்சுகியா, கார்பி ஆங்லாங், லக்கிம்பூர் மற்றும் சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 5,64,600-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்களன்று 15 மாவட்டங்களில் 3.63 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.</p><p>44 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 872 கிராமங்கள் தொடர்ந்து வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>சிவசாகரில் மொத்தம் 3,59,535 பேரும், அதைத் தொடர்ந்து ஜோர்ஹட்டில் 87,662 பேரும், சாரைடியோவில் 72,646 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><strong>மீட்பு பணிகள்:</strong></p><p>இடம்பெயர்ந்த 12,284 பேர் தங்கியுள்ள 71 நிவாரண முகாம்களும், 202 நிவாரண பொருட்கள் விநியோக மையங்களும் தற்போது செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>ரெயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் கட்சி மாணவர்களை அரசியல் கருவிகளாக பயன்படுத்துகிறது  - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்</title><link>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-said-congress-exploiting-students-as-political-tools</link><comments>https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-said-congress-exploiting-students-as-political-tools#comments</comments><guid isPermaLink="false">558b8c31-23d4-49be-9c40-769aae673e02</guid><pubDate>Tue, 21 Jul 2026 20:11:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T20:11:04.416Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gu8lou0m/D-P-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் தர்மேந்திர பிரதான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gu8lou0m/D-P-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் (NEET) தேர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், இளைஞர்களின் நியாயமான கவலைகள் ஒவ்வொன்றையும் நாடாளுமன்றத்தில் தீர்த்து வைக்கவும் அரசு உறுதியுடன் உள்ளது என்று மத்திய அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/dharmendra-pradhan">தர்மேந்திர பிரதான்</a> வலியுறுத்தினார்.</p><p>மேலும், பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சாடிய பிரதான், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இடையூறுகளை 'உருவாக்குவதற்காக' மாணவர்களை 'அரசியல் கருவிகளாக' பயன்படுத்துவதாக அவர் மீது குற்றம் சாட்டினார்.</p><p><strong>எக்ஸ் தள பதிவு:</strong></p><p>முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததை கண்டித்து, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பல மூத்த தலைவர்கள் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்; அப்போது அவர்கள் பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.</p><p>"எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இடையூறுகளை உருவாக்க மாணவர்களை வெட்கமின்றி அரசியல் கருவிகளாக பயன்படுத்துவதைத் தொடர்கின்றனர். அவர்கள் மாண்புமிகு பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா நடத்தத் தேர்ந்தெடுத்ததன் மூலம், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததுடன், நிறுவப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளையும் புறக்கணித்தனர்," என்று பிரதான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>"விரிவான விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்த பின்னரும், காங்கிரஸ் ஜனநாயக ரீதியான விவாதத்தை விடுத்து அரசியல் நாடகத்தையே தேர்ந்தெடுத்தது. மாணவர்களுக்கான தீர்வுகளை காண்பது அவர்களின் நோக்கமாக இருக்கவில்லை; மாறாக, அரசியல் ரீதியான தலைப்பு செய்திகளை பெறுவதற்காக இடையூறுகளை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.</p><p>ராகுல் காந்தியை பொறுத்தவரை, இது மாணவர்களை பற்றியது அல்ல; விவாதத்திற்கான அனைத்து நியாயமான வழிகளும் திறக்கப்பட்ட பிறகும் மோதலை உருவாக்குவதை பற்றியதே இது</p><p>நீட் தேர்வு குறித்து விவாதிக்கவும், நாடாளுமன்றத்தில் நமது இளைஞர்களின் நியாயமான கவலைகள் ஒவ்வொன்றையும் தீர்க்கவும் எங்கள் அரசு 100 சதவீதம் உறுதியுடன் உள்ளது. அரசியல் பிரச்சாரத்திற்கான வெறும் கருவிகளாக நடத்தப்படுவதை விட மிக சிறந்ததையே இந்தியாவின் மாணவர்கள் பெற தகுதியானவர்கள். குழப்பத்திற்கு பதிலாக தெளிவையும், முழக்கங்களுக்கு பதிலாகத் தீர்வுகளையும், இடையூறுகளுக்கு பதிலாக பொறுப்புணர்வையும் அவர்கள் பெற தகுதியானவர்கள்.</p><p>மாணவர்களுக்கு வெறும் கோபத்தை மட்டும் வெளிப்படுத்துவது போதாது; அவர்களுக்கு பதில்களையும், சீர்திருத்தங்களையும், பொறுப்புக்கூறலையும் வழங்குவதே நமது கடமை. அதைத்தான் எங்கள் அரசாங்கம் தொடர்ந்து நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளது," என்று பிரதான் கூறினார்.</p><p><strong>பேச்சுவார்த்தை:</strong></p><p>பிரதமர் அலுவலகத்தின் (PMO) இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோர் காந்தியை சந்தித்து, அவர் மேற்கொண்டு வரும் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.</p><p>நீட் (NEET) தேர்வு மற்றும் அது தொடர்பான இயக்கம் குறித்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக தான் காந்தியிடம் கூறியதாகவும், ஆனால் காங்கிரஸ் தலைவர் தனது நிலைப்பாட்டை மாற்றி, பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக சிங் தெரிவித்தார்.</p><p>பின்னர், எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்பகுதியிலிருந்து காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு பின்னப் விடுவிகப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் தொடக்க விழா: இந்திய அணி பயணப் பெட்டிகள் காணாமல் போனதால் குத்துச்சண்டை வீரர்கள் தவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/missing-luggage-leave-indian-boxers-scrambling-before-cwg-opening-ceremony</link><comments>https://www.maalaimalar.com/sports/missing-luggage-leave-indian-boxers-scrambling-before-cwg-opening-ceremony#comments</comments><guid isPermaLink="false">358c162f-05d7-46c8-b636-79020d8e34ce</guid><pubDate>Tue, 21 Jul 2026 19:15:06 +0000</pubDate><atom:updated>2026-07-21T19:15:06.953Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,Indian Boxing Team,இந்திய குத்துச்சண்டை அணி,காமன்வெல்த் போட்டிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/h7pkygsd/boxing.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Boxing Gloves]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/h7pkygsd/boxing.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய குத்துச்சண்டை அணியின் பயண பெட்டிகளில் கிட்டத்தட்ட பாதி பெல்ஃபாஸ்டில் விடப்பட்டதால், அணிக்கு சிரமமான தொடக்கம் ஏற்பட்டது.</p><p>22 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி, பெல்ஃபாஸ்டில் நடந்த ஆயத்த பயிற்சி முகாமுக்கு பிறகு கிளாஸ்கோ வந்தடைந்தது. </p><p><strong>பைகள் மாயம்:</strong></p><p>ஆனால், சாக்ஷி சௌத்ரி (51 கிலோ), உலக சாம்பியன் ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ), பர்வீன் ஹூடா (65 கிலோ), ஜதுமணி சிங் (55 கிலோ), கபில் பொக்காரியா (90 கிலோ) மற்றும் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சி. குட்டப்பா உள்ளிட்டோரின் பைகள் அவர்களுடன் வந்து சேரவில்லை.</p><p>குறுகிய பெல்ஃபாஸ்ட்-கிளாஸ்கோ வழித்தடத்தில் இயக்கப்பட்ட விமானம் சிறியது என்று அணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். காணாமல் போன பயண பெட்டிகளில், பயிற்சி உபகரணங்களும், வியாழக்கிழமை நடைபெறும் தொடக்க விழாவில் குத்துச்சண்டை வீரர்கள் அணியவிருந்த உடைகளும் இருந்தன.</p><p><strong>தொடர்கதை:</strong></p><p>இந்த மாத தொடக்கத்தில், குத்துச்சண்டை வீரர்கள் தோஹாவில் இருந்து பெல்ஃபாஸ்டுக்கு விமானத்தில் சென்றபோதும் இதே போன்ற சம்பவங்கள் நடந்திருந்தன.</p><p>குத்துச்சண்டை போட்டி வெள்ளிக்கிழமை தொடங்குவதால், இறுதி தயாரிப்புகள் வேகம் பிடிப்பதற்குள் பயண பெட்டிகள் கிளாஸ்கோவை சென்றடையும் என்று குழுவினர் நம்புகின்றனர்.</p><p>மேலும், மகளிர் பயிற்சியாளர் மந்தகானி சானுவுக்கு, குத்துச்சண்டை வீரர்கள் தங்கியிருக்கும் அதே ஹோட்டலில் தங்குமிடம் வழங்கப்படவில்லை. குத்துச்சண்டை நிகழ்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி விடுவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-priyanka-released-from-detention-as-congress-staged-protest-at-lok-kalyan-marg</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-priyanka-released-from-detention-as-congress-staged-protest-at-lok-kalyan-marg#comments</comments><guid isPermaLink="false">72200364-b6a5-4254-a952-5ece11f881f7</guid><pubDate>Tue, 21 Jul 2026 18:31:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T18:31:05.096Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,காங்கிரஸ் போராட்டம்,congress protest,Priyanka gandhi,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ri9aky9q/p-g.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரியங்கா காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ri9aky9q/p-g.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி 'லோக் கல்யாண் மார்க்' பகுதியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின்போது, ​​டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த <a href="https://www.maalaimalar.com/topic/rahul-gandhi">ராகுல் காந்தி</a>, பிரியங்கா காந்தி மற்றும் பல கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.</p><p>காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சத்ராசல் மைதானத்தில் இருந்து ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். பிரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி தலைவர் சோனியா காந்தி சென்றார்.</p><p><strong>கங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு:</strong></p><p>காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி. வேணுகோபால் மற்றும் பவன் கேரா ஆகியோர் லோக் கல்யாண் மார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>கேரள முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (NDA) இணையக்கூடும் என்ற வதந்திகள் பரவியிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலேவும் காங்கிரஸின் போராட்டத்தில் பங்கேற்றார்.</p><p><strong>எக்ஸ் தள பதிவு:</strong></p><p>நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்ப தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர்கள், 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) நடத்திய 'சான்சத் சலோ' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகே போராட்டம் நடத்தினர்.</p><p>இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, "அரசு எந்த பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை; அதேவேளையில் நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவும் விரும்பவில்லை. இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பீகார் தலைமை செயலகம், முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/bomb-threat-emails-trigger-security-alert-in-patna-gayaji</link><comments>https://www.maalaimalar.com/news/national/bomb-threat-emails-trigger-security-alert-in-patna-gayaji#comments</comments><guid isPermaLink="false">107dd69c-7976-4022-ba07-9e2a0ad9e79c</guid><pubDate>Tue, 21 Jul 2026 17:40:49 +0000</pubDate><atom:updated>2026-07-21T17:40:49.288Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bomb threat,வெடிகுண்டு மிரட்டல்,Patna,பாட்னா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gwc8z436/patna.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/gwc8z436/patna.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகார் தலைமைச் செயலகம், முதலமைச்சர் இல்லம், பள்ளிகள் மற்றும் பஸ்போர்ட் அலுவலகங்களை குறிவைத்து அனுப்பப்பட்ட தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள், பாட்னா மற்றும் கயாஜியில் பாதுகாப்பு எச்சரிக்கையை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>உள்துறை ஆணையர் மற்றும் மாநில தலைமை செயலகம் உள்ளிட்ட பல அதிகாரப்பூர்வ அரசு மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் மிரட்டல் மின்னஞ்சல், பாட்னாவில் உள்ள முக்கிய அரசு நிறுவனங்களில் குண்டுவெடிப்புகள் நிகழும் என எச்சரித்ததாக அவர்கள் கூறினர்.</p><p><strong>பாதுகாப்பு அதிகரிப்பு:</strong></p><p>முக்கிய அரசு நிறுவனங்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று பெறப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் (பாட்னா - மத்திய) மம்தா கல்யாணி கூறினார். "காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. நகருக்கு உள்ளேயும் அதை சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று அவர் கூறினார்.</p><p>அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, அந்த மின்னஞ்சலை அனுப்பியவர் காலிஸ்தான் ஆதரவு அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறிக்கொண்டார். மேலும், 2023 ஜூன் மாதம் கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.</p><p><strong>மனித வெடிகுண்டு தாக்குதல்:</strong></p><p>அந்த மின்னஞ்சலில், நிஜ்ஜாரின் கொலைக்கு அப்போதைய கனடாவுக்கான இந்திய உயர் ஆணையரே காரணம் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டிருந்தது. மேலும், பீகார் அரசு அவருக்கு பாட்னாவில் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் அவரை குறிவைப்பதாகவும் அது மேலும் அச்சுறுத்தியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>பாட்னாவின் தானாபூர் பகுதியில் உள்ள நான்கு பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்திருந்தன.</p><p><strong>தீவிர சோதனை:</strong></p><p>வெடிகுண்டு அகற்றும் குழு மற்றும் மோப்ப நாய் படைகள் பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தினர், ஆனால் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில், பாட்னாவில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் குறித்து அதன் கிளைகளை எச்சரித்ததை தொடர்ந்து, கயாஜியில் உள்ள பொது அஞ்சல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திலும் பாதுகாப்பு படையினர் சோதனைகளை நடத்தினர்.</p><p>சிவில் லைன்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் ஷாமின் அகமது கூறுகையில், வெடிகுண்டு அகற்றும் மற்றும் மோப்ப நாய் படைகள் வளாகத்தை ஆய்வு செய்து, அந்த மிரட்டல் ஒரு பொய் என அறிவித்தன.</p><p>மூத்த அஞ்சல் அதிகாரி பிரணவ் குமார் ஜா கூறுகையில், பாட்னாவில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அந்த மிரட்டல் மின்னஞ்சல் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cong-sfi-stage-protest-in-chennai-condemning-police-action-on-students-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cong-sfi-stage-protest-in-chennai-condemning-police-action-on-students-in-delhi#comments</comments><guid isPermaLink="false">26ea6114-53be-4a5c-b164-006fe547a473</guid><pubDate>Tue, 21 Jul 2026 17:13:49 +0000</pubDate><atom:updated>2026-07-21T17:13:49.606Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,protest,போராட்டம்,SFI,இந்திய மாணவர் சங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/z715nknk/sfi-protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SFI Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/z715nknk/sfi-protest.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நீட் (NEET) தேர்வு விவகாரம் தொடர்பாக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையை கண்டித்து <a href="https://www.maalaimalar.com/topic/sfi">இந்திய மாணவர் சங்கம்</a> மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><strong>போராட்டம்:</strong></p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது டெல்லி காவல்துறை மேற்கொண்ட "தன்னிச்சையான" கைது நடவடிக்கைகளை கண்டித்தும், இந்த தேசிய தகுதி தேர்வை ரத்து செய்ய கோரியும் இந்திய மாணவர் சங்க (SFI) உறுப்பினர்கள் <a href="https://www.maalaimalar.com/topic/protest">போராட்டம்</a> நடத்தினர்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் ராஜினாமாவை வலியுறுத்தி அவரது இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதை கண்டித்து, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் மற்றும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.</p><p><strong>தங்கபாலு கண்டனம்:</strong></p><p>மத்திய அரசின் சர்வாதிகார போக்கு மற்றும் ஜனநாயக குரல்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் என கூறப்படுபவற்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு கண்டித்தார்.</p><p>டெல்லியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என்று அவர் விமர்சித்தார். மேலும், இந்த தேசிய பிரச்சினையை கையாண்ட விதம் குறித்து மத்திய அரசு மற்றும் காவல்துறையை அவர் குறை கூறினார்.</p><p>குறிப்பாக, நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் அநீதி மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவது குறித்தும் அவர் குறிப்பிட்டார். மோடி அரசின் கொள்கைகளுக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், லோக் பவனை முற்றுகையிடும் போராட்ட பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்தும் என்று தங்கபாலு அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>போராட்டத்தால் கைது... மகளை காண காவல் நிலையம் சென்ற சோனியா காந்தி!</title><link>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhi-visited-the-police-station-to-see-her-daughter</link><comments>https://www.maalaimalar.com/news/national/sonia-gandhi-visited-the-police-station-to-see-her-daughter#comments</comments><guid isPermaLink="false">7352a508-a4ec-4227-8c5b-897ea321e6d6</guid><pubDate>Tue, 21 Jul 2026 16:19:31 +0000</pubDate><atom:updated>2026-07-21T16:19:31.017Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,sonia gandhi,Priyanka gandhi,சோனியா காந்தி,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0d51wzxg/New-Project-2026-07-21T214322.532.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மகளை காண காவல் நிலையம் சென்ற சோனியா காந்தி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0d51wzxg/New-Project-2026-07-21T214322.532.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கைதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு விரைந்துள்ளார்.</p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிரான போலீசாரின் அராஜகப் போக்கை கண்டித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என பிரதமர் இல்லம் முன்பு காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தொடர்ந்து பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்ற போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p>பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதின்போது ராகுல் காந்தியின் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. </p><p>தலைவர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையறிந்த சோனியா காந்தி, மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அடைக்கப்பட்ட பிரியங்கா காந்தியை சென்று பார்த்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>