<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 25 Aug 2026 06:54:58 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: பரந்தூரில் விமான நிலையம் வந்தால் சென்னையில் வெள்ளம் ஏற்படும்: அமைச்சர் கீர்த்தனா - 25 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026#comments</comments><guid isPermaLink="false">11be16ef-2d9c-4bff-90aa-9f30801d224f</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:51:32.114Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s5ar4m7s/keerthana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s5ar4m7s/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.</p><p>திமுக கொண்டுவந்த பரந்தூர விமான நிலைய திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது -  சிவி. சண்முகம்</p> <p>அரசியல் நடந்தால் தமிழ்நாட்டிற்கு எந்த நல்ல திட்டமும் வராது. </p><p>எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் நிலையில் இப்படியே போனால் ஒரு டிரில்லியனும் வராது, ஒன்றரை டிரில்லியனும் வராது - சிவி. சண்முகம்</p><p>பரந்தூர் விமான நிலையத்துக்காக கையப்படுத்தப்பட்ட நிலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படுமா? </p><p>மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? - காங்கிரஸ்</p><p>பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் வன்னி அரசு</p><p>திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடினோம் - அமைச்சர் வன்னி அரசு</p><p>பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.</p><p>பரந்தூர் கால்வாயை அழித்தால் கேரளத்தில் ஏர்போர்ட்டுக்குள் வெள்ளம் வந்ததை போன்ற நிலை தான் ஏற்படும்.</p><p>1500 நீர்நிலை, 1000 குடும்பம் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை ஏர்போர்ட்டுக்கு தேர்வு செய்தது தவறு</p><p>மக்கள் பாதிக்காதவாறு 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.</p><p> நிலம் எடுப்பது தொடர்பாக திமுக ஆட்சியில் அமைத்த குழுவின் அறிக்கையை தற்போது வரை வெளியிடாதது ஏன்? - அமைச்சர் கீர்த்தனா</p>  <p>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும். </p><p>வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் தொழில்கள் தொடங்கப்படும். </p><p>மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து - அமைச்சர் கீர்த்தனா</p><p>1000 ஆண்டு கால பொக்கிஷமான கம்பன் கால்வாய் பரந்தூர் பகுதிகளில் ஓடுகிறது-  அமைச்சர் ராஜ்மோகன்</p><p>உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு தற்போது வரை கையகப்படுத்தவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? - எடப்பாடி பழனிசாமி </p><p>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எதிர்ப்பு</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர்  - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கூட வாங்கப்படவில்லை. பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கி குவித்தவர்கள், கறுப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே திட்டத்தை எதிர்க்கின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொகையை மக்களிடம் இருந்து திரும்ப பெற முடியாது, என்ன செய்வீர்கள்? - இபிஎஸ்</p><p>90% நிலம் கையகப்படுத்தப்படவில்லை 48% நிலம் மட்டும் தான் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 1,202 ஏக்கர் நிலம் மட்டுமே கையப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஊழல் இல்லா ஆட்சியை முதல்வர் கொடுப்பதால் அனைத்து நிறுவனங்களும் முதலீடு செய்யும் தொழில்துறை வளரும். திமுக ஈர்த்ததைவிட 10 மடங்கு அதிக தொழில் முதலீடுகளை தவெக அரசு ஈர்க்கும் - அமைச்சர் ஆதவ்</p><p>60 நாட்களுக்குள் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை முதலமைச்சர் விஜய் உருவாக்கி காட்டுவார் - அமைச்சர் ஆதவ்</p> <p>தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கிய காரணமான சிங்கிள் விண்டோ சிஸ்டம் தான். அதை முதல்வர் உருவாக்குவார் - அமைச்சர் ஆதவ்</p><p>பரந்தூர் ஏர்போர்ட்டா அல்லது விவசாயிகள் கண்ணீரா என்றால் முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார் - அமைச்சர் ஆதவ்</p> <p>பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்துள்ளீர், முதலீட்டாளர்களை பாதிக்கும் - ஆஸ்டின் </p><p>நான் குறிப்பிட்ட பத்திரிகை ஒரு பத்திரிகை கூட கிடையாது. அது ஒரு வெப்சைட். பிரைவேட் வெப்சைட். </p><p>அதே பத்திரிகையாளர்கள் தான் தினத்தந்தியில் நம்மை பற்றி, நம்முடைய தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்தார்கள். </p><p>அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து இங்கே பேசி பெருமைப்பட்டு இருந்தால், தமிழ்நாடு முன்னேறுகிறது என்று பேசி இருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>தமிழ்நாட்டில் தொழில் முதலீடு மாநாட்டை முதலில் நடத்தியது ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி</p><p>அமைச்சர் கீர்த்தனா ஒரு சில பத்திரிகைகளை தான் கூறி உள்ளார் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>காசு கொடுத்தால் பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவார்கள் என கூறக்கூடாது - எ.வ.வேலு</p><p>நாகர்கோவில் மிகவும் சிரமப்பட்டு இடம் தேர்வு செய்தோம். அடிக்கல் நாட்டி 6 மாதமாகியும் பணி தொடங்கப்படவில்லை. தொழில்துறை வளர்ச்சி தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சியில் தொழில்துறை முதலிடத்தில் இருந்தது. </p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் முந்தைய காலாண்டை விட 74.48% சரிவு, மற்ற மாநிலங்கள் 200% அதிகரித்துள்ளது - ஆஸ்டின்</p><h2>அமைச்சர் கீர்த்தனா உரை</h2><p>தொழில் முதலீடுகள் குறைந்துள்ளதாக ஆஸ்டின் பேசியது தவறான தகவல்.</p><p>100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். </p><p>காசு கொடுத்தால் எதையும் எழுதும் பத்திரிகை - அமைச்சர் கீர்த்தனா</p> <p>மக்கள் பிரச்சனை கேட்டு நிறைவேற்றவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - அமைச்சர் ஆதவ்</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது - எம்எல்ஏ ஆஸ்டின்</p><p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது - சபாநாயகர்</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? - ஆஸ்டின்</p> <p>எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் - சபாநாயகர்</p><p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது - எடப்பாடி பழனிசாமி</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? - அமைச்சர் செங்கோட்டையன்</p> <p>காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? - இபிஎஸ்</p><p>எம்எல்ஏ இல்லாமல் காலியாக உள்ள தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர் - அமைச்சர் செங்கோட்டையன்</p> <p>எம்எல்ஏக்கள் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள தொகுதிகளில் யார் மக்கள் பணி செய்வது? - எடப்பாடி பழனிசாமி</p><p>விளக்கம் கூற வருகிறார் என நினைத்து தான் தளவாய் சுந்தரம் பேச அனுமதித்தேன் - சபாநாயகர் விளக்கம்</p><p>எம்எல்ஏ ஆஸ்டின் பேசியபோது அமைச்சர் பேசலாம், அவை முன்னவர் பேசலாம் தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார்? - கேஎன். நேரு</p><p>திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பல கட்சிகளில் இருந்தவர் என தளவாய் சுந்தரம் பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளி</p><p>சிறுபான்மை ஆணைய தலைவர் தனிப்பட்ட விவாதம், பொதுமேடையில் பேசவே கூடாது என்றெல்லாம் கிடையாது. கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் அரசியல் விவாதங்களில் பேசி உள்ளனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>சிறுபான்மை ஆணைய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்க கூடாது - எம்எல்ஏ ஆஸ்டின்</p> <p>பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பதை தடுக்க சதி நடந்தது. சதியை முறியடித்து அவையில் வீற்றிருக்கிறார் உதயநிதி - திமுக உறுப்பினர் ஆஸ்டின்</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள். உறுப்பினர்களின் கேள்விகள் &amp; கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள்.</p><p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள்.</p><p>மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் - நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்</p> <p>காவிரி டெல்டா பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது, குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ளது - எம்எல்ஏ மாரிமுத்து</p><p>மேட்டூர் நீர் திறப்பு எப்போது என கூறினார் தான் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய முடியும் - எடப்பாடி பழனிசாமி</p><p>சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் பலியாகி உள்ளார்.</p><p>மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்  - திமுக எம்எல்ஏ சேகர்பாபு</p><p>மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? - திமுக எம்எல்ஏ கோவி செழியன்.</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்.</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு.</p><p>ஆசிரியர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் - எ.வ.வேலு உறுதி</p><p>ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையிலான தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - ராமச்சந்திரன்</p><p>அரசின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு, கல்வியை பொதுப்பட்டியலை இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் - பாமக</p><p>அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசினர் தனித்தீர்மானம்</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.</p><p>3.28 லட்சம் ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி என்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>பழுதான கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை, 50 மாணவிகள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>திண்டுக்கல் ஆயக்குடியில் ரூ.3.70 கோடியில் மாணவியர் விடுதி - அமைச்சர் வன்னி அரசு</p><p>பழனி ஆயக்குடி அரசு மாநில விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் - எம்எல்ஏ ரவி மனோகரன் கோரிக்கை</p><p>அத்தியாவசிய மருந்து பட்டியலில் சேர்க்கப்படாத நிலையிலும் எமிசிஜுமாப் மருந்தை வழங்க வேண்டும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>ஹீமோபிலியா மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எமிசிஜுமாப் மருந்தை விலையின்றி வழங்க வேண்டும் - எம்எல்ஏ ரவி</p><p>3 தமிழர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு செய்ய வேண்டும் - உதயநிதி</p> <p>சட்டத்துறை, வனத்துறை அமைச்சர்கள் இதுதொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளனர் - சபாநாயகர்</p><h2>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் கொலை - உதயநிதி ஸ்டாலின் உரை</h2><p>கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.</p><p>தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?</p><p>3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன?</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். </p> ]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் சரிவு!</title><link>https://www.maalaimalar.com/news/world/15-percent-drop-in-indian-students-aspiring-to-study-in-america</link><comments>https://www.maalaimalar.com/news/world/15-percent-drop-in-indian-students-aspiring-to-study-in-america#comments</comments><guid isPermaLink="false">f75aa660-dea8-4b66-986c-b1b50eee34d4</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:52:33 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:52:33.952Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,indian students,விசா தடை,Trump Administration,டிரம்ப் அரசு,America H1B visa,USVisa,CommonApp</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/muxm30ek/Trump-Administration" width="1500"><media:title type="html"><![CDATA[ Trump Administration ]]></media:title><media:description type="html"><![CDATA[ Trump Administration ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/muxm30ek/Trump-Administration?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்கா</a>வில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் குடியேற்றக் கொள்கைகளில் தீவிர மாற்றங்களையும், கடுமையான விசா கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகிறது. </p><p>இதன் நேரடி விளைவாக, அமெரிக்க கல்லூரிகளில் சேர விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.</p><h2><strong>மாணவர் சேர்க்கையில் கடும் வீழ்ச்சி</strong></h2><p>இதுதொடர்பாக காமன் ஆப் என்ற அமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,</p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-26 கல்வியாண்டில் அமெரிக்காவில் இளங்கலைப் படிப்புகளில் சேர விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. </p><p>வரும் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான சர்வதேச மாணவர்களின் ஒட்டுமொத்த விண்ணப்பங்கள் (மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி) 10 சதவீதம் குறைந்துள்ளது. இது மிக விசித்திரமான மற்றும் மிகப்பெரிய சரிவாகப் பார்க்கப்படுகிறது.</p><p>அமெரிக்காவிற்கு சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை அனுப்பும் நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த 2024-25 கல்வியாண்டில் மட்டும் சுமார் 3.63 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பல்வேறு படிப்புகளில் சேர்ந்திருந்தனர். </p><p>ஆனால், தற்போதைய கடுமையான விசா விதிமுறைகள்,<a href="https://www.maalaimalar.com/topic/h-1b-visa"> எச்-1பி </a>(H-1B) <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE">விசா </a>கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கை ரீதியான நிச்சயமற்ற சூழல் காரணமாக இந்திய மாணவர்கள் அமெரிக்காவைத் தேர்ந்தெடுப்பதைக் குறைத்து வருவதாகக் கல்வி நிபுணர்கள் விளக்குகின்றனர்.</p><h2><strong>2 லட்சம் விசாக்கள் ரத்து</strong></h2><p>மறுபுறம், அமெரிக்கக் குடியேற்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் புதிய அதிரடி நடவடிக்கை ஒன்றை டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.</p><p>வணிக விசா மற்றும் சுற்றுலா <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE">விசா </a>மூலமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து, பின்னர் அங்கு தஞ்சம் கோரிய சுமார் <strong>2 லட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய</strong> டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் விசாக்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p><p>அதிபர் டிரம்பின் இந்த அடுத்தடுத்த கடுமையான நடவடிக்கைகள், உயர்கல்விக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள்: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மலரஞ்சலி மரியாதை</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/captain-vijayakanth-birthday-south-indian-artists-association-tribute</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/captain-vijayakanth-birthday-south-indian-artists-association-tribute#comments</comments><guid isPermaLink="false">84ae3d86-7b7a-4c3c-bbed-1cda5e554f57</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:51:32 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:51:32.277Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நாசர்,Karthi,கார்த்தி,கேப்டன் விஜயகாந்த்,Captain Vijayakanth,தென்னிந்திய நடிகர் சங்கம்,Nasar,South Indian Artistes&apos; Association</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y8z5yxvz/nadaiha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ South Indian Artistes' Association]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y8z5yxvz/nadaiha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த புகழ்பெற்ற திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவருமான 'கேப்டன்' விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளாகத்தில் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சங்க நிர்வாகிகள், மூத்த கலைஞர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.</p><h2>திரையுல<strong>கின் வழிகாட்டியாகத் திகழ்ந்த கேப்ட</strong>ன்</h2><p>தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth">விஜயகாந்த்</a>, நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களின் பேரன்பைப் பெற்றவர். திரையுலகில் வளரும் நடிகர்களுக்கு வாய்ப்பளித்து வழிகாட்டியாகவும், பசி என்று வந்தவர்களுக்கு உணவளித்து ஆதரவளித்த கொடைவள்ளலாகவும் அவர் திகழ்ந்தார். அவரது இந்த மனிதநேயப் பண்புகளை நினைவு கூர்ந்து திரைத்துறையினர் பெருமிதத்துடன் அஞ்சலி செலுத்தினர்.</p><h2>நடிகர் சங்கக் <strong>கடனை மீட்டுத் தந்த பொ</strong>ற்காலம்</h2><p>தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் பொறுப்பு வகித்த காலம் அதன் பொற்காலமாகக் கருதப்படுகிறது. நடிகர் சங்கம் கடும் நிதி நெருக்கடியிலும் கடனிலும் மூழ்கியிருந்த சூழலில், கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அந்த நிதிச் சுமையை முழுமையாக மீட்டுத் தந்தார். திரைக்கலைஞர்களின் நலனுக்காகவும், நலிவடைந்த நடிகர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் அவர் ஆற்றிய தொண்டுகள் இன்றும் திரையுலகினரால் நன்றியோடு நினைவு கூரப்படுகின்றன.</p><p>அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நடிகர் சங்கத்தின் சார்பில் மலர் அலங்காரம் செய்யப்பட்ட விஜயகாந்தின் உருவப்படத்திற்கு தலைவர் நாசர்,  பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.  திரையுலகப் பிரபலங்கள் மட்டுமல்லாது, எண்ணற்ற ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரிலும் தங்களுடைய நினைவஞ்சலிகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை- லாட்டரி மருமகன்: காரசார விவாதத்தை ஏற்படுத்திய பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-project-cancelled-issue-arguments-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-project-cancelled-issue-arguments-in-assembly#comments</comments><guid isPermaLink="false">24bf06ea-7735-400a-af17-2815def7a06c</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:45:15 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:45:15.629Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/o9dr12q7/Assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- தங்கம் தென்னரசு]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- தங்கம் தென்னரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/o9dr12q7/Assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலையம் ரத்து விவகாரம் பெரும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபை</a> கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசுகையில், நாகர்கோவிலில் மிகவும் சிரமப்பட்டு இடம் தேர்வு செய்தோம், அடிக்கல் நாட்டி 6 மாதமாகியும் பணி தொடங்கவில்லை. த.வெ.க. அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிதாக எத்தனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது?. தொழில்துறை வளர்ச்சி தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சியில் தொழில்துறை முதலிடத்தில் இருந்தது. பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்துள்ளீர், முதலீட்டாளர்களை பாதிக்கும் என பேசினார். </p><p>இதுதொடர்பாக அமைச்சர் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">பரந்தூர்</a> விமான நிலையமா அல்லது விவசாயிகள் கண்ணீரா என்றால் எங்கள் தலைவர், முதலமைச்சர் விஜய் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார். முதலமைச்சர் நேற்று சொன்னார், விமான நிலையத்திற்கான இடம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று. எங்களுடைய தலைவரின் முதல் பிரசாரம், காலடி பட்டது விவசாயிகளின் கண்ணீருக்காக. விவசாயத்திற்காக குரல் கொடுப்போம், டெல்டாவில் பிறந்தவர்கள் நாங்கள் என சொல்லக்கூடியவர்கள் பரந்தூர் விவசாயிகளுக்கு எதிராக, பரந்தூர் மட்டுமல்ல திருவண்ணாமலையில் மேல்மா விவசாயிகளுக்கு எதிராக குண்டர் சட்டம் போட்டது தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள 381 ஏரிகள் குறித்தும், மக்களுடைய குரலுக்கு பேசியது இல்லை. நேற்றே தெளிவா சொல்லியாச்சு, சென்னை விமான நிலையத்தின் இன்றைய பங்கு என்ன? அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து சொல்லியாச்சு. </p><p>ஆனால் நேற்றில் இருந்து தி.மு.க. இந்த விமான நிலையம் இல்லை என்றால் தமிழகத்தின் முதலீடே போய் விடும் என்று சொல்கிறார்கள். தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கிய காரணமாக சிங்கிள் விண்டோ சிஸ்டம் தான், அதை முதலமைச்சர் உருவாக்குவார். தொழில் முதலீடு வருவதற்கு ஊழல் இல்லாத கட்டமைப்பே தேவை. 381 ஏரிகள் மற்றும் விவசாயிகள் பக்கம் நிற்பதற்காக மட்டுமே பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டது. 5 வருடம் கழித்து வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் ரெடி. உங்களோட 10 மடங்கு பொருளாதார இங்கு வந்து இருக்கும். ஏன் என்றால் ஊழல் இல்லாத ஆட்சியே எங்கள் முதலமைச்சர் கொடுப்பார் என்றார். </p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முதலமைச்சர் ரத்து செய்துவிட்டார். அதற்கு எந்தவிதமான மாற்றுகருத்தும் கிடையாது. அதற்காக 5,740 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக கூறி 90 சதவீத நிலம் கையகப்படுத்தி இழப்பீட்டு தொகையும் கொடுத்தாச்சு. கையப்படுத்திய நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? விவசாயிகளுக்கு கொடுக்கப்போறீங்களா? என்பது குறித்து அரசின் விளக்கம் தேவை என்றார். </p><p>அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், </p><p>பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மொத்தமாக 5,846 ஏக்கர் தேவைப்பட்டது. பட்டா நிலங்கள் 3,774. 3 போகம் விளைவிக்கக்கூடிய விவசாய நிலங்கள் 2,681 ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தது. 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. 48 சதவீதம் அதாவது 1,202 ஏக்கர் நிலங்கள் மட்டும் தான் கையகப்பட்டுத்தப்பட்டு உள்ளது.  சுற்றுச்சூழல் அனுமதி வாங்கியதாக தவறான தகவல் சொல்லப்படுகிறது. ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கிக்குவித்தவர்கள், கருப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே திட்டத்தை எதிர்க்கின்றனர் என்றார். </p><p>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>இதனை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு பேசுகையில், ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று சொன்னால், வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் அமைக்க உள்ளீர்கள் என்று நான் கேட்கட்டுமா? என்றார்.</p><p>இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. </p><p>இதையடுத்து பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, பல இடங்களில் ஆய்வு செய்த பிறகே பரந்தூர் பகுதியை தேர்வு செய்தோம். எந்த இடத்தில் அமைத்தாலும் அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும், அப்போது பிரச்சனை ஏற்படும். மக்களை இடமாற்றம் செய்யாமல் நிலத்தை கையகப்படுத்த முடியாது. சென்னை விமான நிலையத்தில் எப்படி 2-வது ரன்வே வரும்? என கேள்வி எழுப்பினார். </p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வைத்து மக்களை பாதிக்காத வகையில் திட்டம் தொடங்கப்படும். மத்திய அரசு அனுமதி அளித்தும் சென்னை விமான நிலையத்தை ஏன் விரிவாக்கம் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். </p><p>இவ்வாறு அவையில் விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>குருக்ராமை மீண்டும் சூழ்ந்த வெள்ளம்: நகரின் உள்கட்டமைப்பு சீர்குலைவுக்கு யார் காரணம்?</title><link>https://www.maalaimalar.com/news/national/flooded-gurugram-again-who-is-to-blame-for-citys-infrastructure-collapse</link><comments>https://www.maalaimalar.com/news/national/flooded-gurugram-again-who-is-to-blame-for-citys-infrastructure-collapse#comments</comments><guid isPermaLink="false">f85763c9-cd77-46fe-abc1-d572cdee2936</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:34:37 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:34:37.276Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gurugram,Gurugram Floods,Gurugram  municipal,குருக்ராம்,குருக்ராம் கனமழை,பேரிடர் மேலாண்மை வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/847rt79s/gurugram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gurugram Floods ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/847rt79s/gurugram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாகத் திகழும் குருக்ராம் நகரில், நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து பிரதான சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நகரம் ஸ்தம்பித்தது.</p><h2>பள்ளிப் பேருந்<strong>துகளில் முடங்கிய குழந்தைக</strong>ள்</h2><p>சுபாஷ் சௌக் மற்றும் சோஹ்னா சாலை ஆகிய பகுதிகளில் நீர் தேங்கியதால், பள்ளிப் பேருந்துகள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகச் செல்ல முடியாமல் முடங்கின. உணவு மற்றும் தண்ணீர் வசதியின்றி வாகனங்களுக்குள்ளேயே குழந்தைகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. பெற்றோர்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், குழந்தைகளை உடனே மீட்க முடியாமல் தவித்தனர்.</p><h2>Work Fr<strong>om Home அறிவுறுத்தல்</strong></h2><p>நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட <a href="https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board">பேரிடர் மேலாண்மை வாரியம்</a> (DDMA) தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு உடனடியாக வீடுகளில் இருந்தே பணிபுரியும் முறையை அமல்படுத்துமாறு அறிவுறுத்தியது. சாலை சீரமைப்பு மற்றும் வடிகால் அடைப்புகளை நீக்கும் பணிகளைச் சீராக மேற்கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>குருக்ராம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும்போது எந்த அமைப்பைக் குற்றம் சாட்டுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. நகரின் உள்கட்டமைப்பு ஒரே ஒரு நகராட்சி அமைப்பின் கீழ் செயல்படாமல், பல அரசு நிறுவனங்களிடையே பிரிக்கப்பட்டுள்ளது.</p><p>GMDA: பிரதான நகரக் உள்கட்டமைப்பு, பெரிய வடிகால்கள் மற்றும் முதன்மைச் சாலைகளைப் பராமரிக்கிறது.</p><p>MCG: குடியிருப்புப் பகுதிகள் மற்றும் உள்ளூர் சாலைப் பராமரிப்புப் பொறுப்புகளைக் கொண்டுள்ளது.</p><p>HSVP &amp; HSIIDC: திட்டமிடப்பட்ட துறைகள் மற்றும் தொழிற்பேட்டைப் பகுதிகளின் உள்கட்டமைப்பை நிர்வகிக்கின்றன.</p><p>NHAI &amp; PWD: தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற முக்கிய இணைப்புச் சாலைகளைப் பராமரிக்கின்றன. </p><h2>ஒருங்கிணை<strong>ப்பு இல்லாததால் ஏற்</strong>படும் பாதிப்புகள்</h2><p>ஒரு சாலை ஒரு அமைப்பின் பராமரிப்பிலும், அதன் அருகிலுள்ள சாக்கடை வடிகால் மற்றொரு அமைப்பின் கட்டுப்பாட்டிலும் இருப்பதால், அவசரக் காலத்தில் துரித நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. ஒரு சில மணி நேர கனமழைக்கே நகரின் ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் செயலிழப்பது, இந்த அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததையே காட்டுகிறது. "மில்லினியம் சிட்டி" என்று அழைக்கப்படும் குருக்ராம், முறையான வடிகால் வசதியும் ஒருங்கிணைந்த நிர்வாக அமைப்பும் இல்லாததால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் நிலைகுலைந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் தினத்தந்தியைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-praises-daily-thanthi-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-praises-daily-thanthi-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">f1eb2d5d-b8f8-4eec-8454-ac8070fc4593</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:32:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:32:39.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Daily Thanthi,TN assembly,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா,தினத்தந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xe11fd6e/keerthana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister keerthana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xe11fd6e/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்த தினத்தந்திக்கு பாராட்டு தெரிவித்தார். </p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், தொழில் முதலீடுகள் குறைந்துள்ளதாக ஆஸ்டின் பேசியது தவறான தகவல். 100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p><p>காசு கொடுத்தால் எதையும் எழுதும் பத்திரிகை என தனியார் பத்திரிகை ஒன்றை குறிப்பிட்டார் அமைச்சர் கீர்த்தனா.</p><p>காசு கொடுத்தால் பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவார்கள் என கூறக்கூடாது என திமுக கொறடா எ.வ.வேலு தெரிவித்தார்.</p><p>அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நிர்மல்குமார், அமைச்சர் கீர்த்தனா ஒரு சில பத்திரிகைகளை தான் கூறி உள்ளார் என்றார்.</p><p>தமிழ்நாட்டில் தொழில் முதலீடு மாநாட்டை முதலில் நடத்தியது ஜெயலலிதா என அதிமுக உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p><p>அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, நான் குறிப்பிட்ட பத்திரிகை ஒரு பத்திரிகைகூட கிடையாது. அது ஒரு வெப்சைட். பிரைவேட் வெப்சைட். அதே பத்திரிகையாளர்கள் தான் தினத்தந்தியில் நம்மை பற்றி, நம்முடைய தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்தார்கள். </p><p>அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து இங்கே பேசி பெருமைப்பட்டு இருந்தால், தமிழ்நாடு முன்னேறுகிறது என்று பேசி இருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversy-in-tn-assembly-for-admk-mlas-resign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversy-in-tn-assembly-for-admk-mlas-resign#comments</comments><guid isPermaLink="false">15360cbe-9298-43cf-9955-91ea9fafef9f</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:57:09 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:57:09.505Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,Sengottaiyan,TN assembly,ADMK mlas resign</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s8h7fesa/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ edappadi palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s8h7fesa/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? என இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது பேசிய  அமைச்சர் செங்கோட்டையன், காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகக் கேட்டார்.</p><p>எடப்பாடி ஆவேசம்</p><p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்தார்.</p><p>அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயக்ர் ஜேசிடி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? என ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது என்றார் சபாநாயகர்.</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது என எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>மக்கள் பிரச்சனைகளைக் கேட்டு நிறைவேற்றவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என  அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே கடும் வாக்குவாதம் உருவானதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தமிழக சட்டசபையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><h2>ஆஸ்டின் கேள்வி</h2><p>இதில் பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில், பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பதை தடுக்க சதி நடந்தது. சதியை முறியடித்து அவையில் வீற்றிருக்கிறார் உதயநிதி. சிறுபான்மை ஆணைய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என தெரிவித்தார்.</p><p>அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், சிறுபான்மை ஆணைய தலைவர் தனிப்பட்ட விவாதம். பொதுமேடையில் பேசவே கூடாது என்றெல்லாம் கிடையாது. கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் அரசியல் விவாதங்களில் பேசி உள்ளனர் என்றார்.</p><p>அப்போது எழுந்த உறுப்பினர் தளவாய் சுந்தரம், திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பல கட்சிகளில் இருந்தவர் என பேசினார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேசியபோது அமைச்சர் பேசலாம், அவை முன்னவர் பேசலாம் தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார்? என கேஎன். நேரு கேள்வி எழுப்பினார்.</p><p>விளக்கம் கூற வருகிறார் என நினைத்து தான் தளவாய் சுந்தரம் பேச அனுமதித்தேன் என்றார் சபாநாயகர் விளக்கம் அளித்தார்.</p><p>அதிமுக எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி பேசுகையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள தொகுதிகளில் யார் மக்கள் பணி செய்வது? என கேள்வி எழுப்பினார்.</p><h2>செங்கோட்டையன் பதில்</h2><p>அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ. இல்லாமல் காலியாக உள்ள தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர் என்றார்.</p><p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? என இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது பேசிய  அமைச்சர் செங்கோட்டையன், காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகக் கேட்டார்.</p><h2>எடப்பாடி ஆவேசம்</h2><p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்தார்.</p><p>அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயக்ர் ஜேசிடி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? என ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது என்றார் சபாநாயகர்.</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது என எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>மக்கள் பிரச்சனைகளைக் கேட்டு நிறைவேற்றுவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என  அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே கடும் வாக்குவாதம் உருவானதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சராக விஜய்... தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்... நடிகர் யாஷ் பேச்சு </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-yash-hails-vijays-commitment-to-the-people-of-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-yash-hails-vijays-commitment-to-the-people-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">92ab7624-bb9c-4764-9236-3d26d75f7849</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:51:00 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:51:00.666Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Yash,Toxic,டாக்ஸிக்,யாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/730nqu05/yash.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் யாஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் யாஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/730nqu05/yash.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய்யின் பொறுப்புணர்ச்சியை பார்க்கும் போது நமக்கே வியப்பாக இருக்கிறது என நடிகர் யாஷ் கூறியுள்ளார்.</strong></em></p><p>கீது மோகன்தாஸ் இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D">யாஷ்</a> நடிப்பில் நாளை திரைக்கு வர இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹீமாகுரேஷி, ருக்மினி வசந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் யாஷ் பேசியதாவது:-</p><h2><strong>வியப்பு</strong></h2><p>தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் எனக்கு நிறைய அன்பை  கொடுத்து வருகிறார்கள்.  சினிமா என்றால் தமிழ், கன்னடம், தெலுங்கு என்று இல்லை. அது இந்திய சினிமாதான். ‘டாக்ஸிக்’ படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.</p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> எல்லோரையும் கவரக்கூடிய மனிதர். தமிழக மக்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். விஜய் மீது உள்ள பாசத்தை தேர்தல் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். அவரும் மக்கள் மீது உள்ள பாசத்தை முதலமைச்சராக அவர் செய்யும் கடமைகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார். முதலமைச்சர் விஜய்யின் பொறுப்புணர்ச்சியை பார்க்கும் போது நமக்கே வியப்பாக இருக்கிறது.</p><h2><strong>வெளிப்படையான தேர்தல்</strong></h2><p>மக்களுக்கான பணியினை நல்ல முறையில் செய்து கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் முதலமைச்சர் விஜய் காலை முதல் இரவு வரை மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என அடிக்கடி சொல்வார். இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் விஜய் மீது மக்கள் வைத்திருந்த அன்பை நாம் திருப்பி கொடுக்க வேண்டும். விஜய்க்கு அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. விஜய் முதலமைச்சராக கிடைத்ததற்கு நாம் ரொம்ப அதிர்ஷ்டசாலி. எப்பவும் உள்ள அரசியல் இல்லாமல் புதுவிதமான அரசியல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும் போது நமக்கு ரொம்ப மகிழ்ச்சி வருகிறது. </p><p>எல்லோருக்குமே தெரியும் இந்த தேர்தல் வெளிப்படையான தேர்தலாக நடந்தது.</p><p>தமிழக தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்கள் முதலமைச்சர் விஜய்க்கு எவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளனர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. விஜய்க்கும் அதற்குரிய அனைத்து தகுதியும் இருக்கிறது. இந்த அரசியலை பார்த்து உலக அரசியலும் மாற வேண்டும். தமிழக மக்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>பெண்ணின் தலையை சிதைத்து ரெயிலில் இருந்து வீசினார்களா?- தலைமறைவு தம்பதி பற்றி பரபரப்பு தகவல்கள்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">a781be19-9485-445f-8f30-3687059b2d9b</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:46:42 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:46:42.734Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,Murder,கொலை,Guduvancherry Woman Murder,Northstate Couple,கூடுவாஞ்சேரி பெண் கொலை,வடமாநில தம்பதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vmj3n1um/murdercasee.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vmj3n1um/murdercasee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவப்பு நிற சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டி எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.</p><p>இதுபற்றி அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். சென்னையில் இருந்து பெண்ணை கொன்று கொலை செய்து சூட்கேசில் அனுப்பி வைத்த தால் சென்னைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.</p><h2><strong>வீடியோ காட்சிகள்</strong></h2><p>சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாருடன் இணைந்து விசாரித்த ஆக்ரா போலீசார் வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண் கூடுவாஞ்சேரியில் வைத்து துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.</p><p>அவரது பெயர் ஹயாத் நிஷா என்பதும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவரை ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த அசாமை சேர்ந்த ராகுல், ஒடிசாவை சேர்ந்த பகவதி மாஜி ஆகிய இருவரும் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ராகுல்-பகவதி மாஜி தம்பதியை பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2><strong>தப்பி ஓட்டம்</strong></h2><p>இது தொடர்பாக அசாம் மற்றும் ஒடிசாவுக்கு 2 தனிப்படைகள் விரைந்து சென்று உள்ளன. சென்னையில் 2 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். வீடியோ காட்சி வெளியில் வந்ததும் தம்பதி உஷாராகி தங்களது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்கள் இருக்கும் இடத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>இதை தொடர்ந்து தம்பதியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரது செல்போன் எண்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் மூலமாக இருவரையும் பிடிக்க வலைவிரிக்கப்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vlaon5ef/andaa.jpg" /></figure><h2><strong>தலை எங்கே?</strong></h2><p>இதற்கிடையே கொலையுண்ட பெண்ணின் தலை இன்னும் சிக்காமல் உள்ளது. கொலையாளிகள் இருவரும் ஹயாத் நிஷாவை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதுடன் சதை பாகங்கள் பெரிய அண்டாவில் போட்டு சமைத்ததும் போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி பெண்ணின் உடல் பாகங்கள் ஈவு இரக்கமின்றி வெட்டி எடுத்த தம்பதி துண்டிக்கப்பட்ட தலையை எங்கு வீசினார்கள் என்பதும் தெரியவில்லை.</p><h2><strong>சிதைத்தார்களா?</strong></h2><p>உடலை துண்டு துண்டாக வெட்டி எடுத்துவிட்டு தலையை துண்டித்த தம்பதி அதனை அடையாளம் தெரியாத அளவுக்கு சுக்கு நூறாக சிதைத்து தனித்தனியாக வீசி இருக்கலாமா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து சூட்கேசில் பெண்ணின் உடல் பாகங்கள் அடைத்து எடுத்து வந்த போது தலையையும் தனியாக ஒரு பையில் வைத்து எடுத்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அப்போது ரெயிலில் இருந்தபடியே தலை இருந்த பையை மட்டும் தண்டவாளம் மூலமாக வீசி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.</p><h2><strong>3 வாரம் தேடுதல்</strong></h2><p>கடந்த 5-ந்தேதி ஆக்ராவில் பெண்ணின் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் மறுநாளே அங்குள்ள போலீசார் சென்னை வந்து கொலை செய்யப்பட்டவரை அடையாளம் கண்டுவிட்டனர். அன்று முதல் பெண்ணின் தலையை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 3 வாரங்களாக ஹயாத் நிஷாவின் தலையை தேடி அலையும் போலீசார் அதனை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.</p><h2><strong>உயர் போலீஸ் அதிகாரிகள்</strong></h2><p>தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. போலீசுக்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த வழக்கில் எப்படி துப்பு துலக்கி கொலையாளிகளை கண்டுபிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>அசாம் மற்றும் ஒடிசா</strong></h2><p>அசாம் மற்றும் ஒடிசாவில் கொலையாளிகளின் உறவினர்களை பிடித்து விசாரித்து வரும் போலீசார் அவர்கள் மூலமாக தம்பதி பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் மிலாது நபி நாளை அனுசரிப்பு: நபிகளாரின் புகழ்பாடும் ஈத்-ஏ-மீலாத் சிறப்புத் தொகுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/milad-un-nabi-observance-in-india-tomorrow-special-eid-e-milad-feature</link><comments>https://www.maalaimalar.com/news/national/milad-un-nabi-observance-in-india-tomorrow-special-eid-e-milad-feature#comments</comments><guid isPermaLink="false">bb63be1b-1b5f-44e2-905e-ee1658664259</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:41:53 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:41:53.280Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,நபிகள் நாயகம்,மிலாது நபி,MiladunNabi,EideMilad,Muhammad,ஈத்-ஏ-மீலாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/rlmhxn8k/eid.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  EideMilad  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/rlmhxn8k/eid.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மிலாது நபி  (ஈத்-ஏ-மீலாத்) திருநாள், இந்தியாவில் நாளை (ஆகஸ்ட் 26) அன்று அனுசரிக்கப்படுகிறது. இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் நிலவு தென்படுவதன் அடிப்படையில் இந்த புனித நாள் தீர்மானிக்கப்படுகிறது. சுன்னி பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ரபி உல் அவ்வல் மாதத்தின் 12-ஆம் நாளிலும், ஷியா பிரிவினர் 17-ஆம் நாளிலும் இந்நிகழ்வைக் குறிக்கின்றனர்.</p><h2>மிலா<strong>து நபி வரலாறு</strong> </h2><p>கி.பி 570-ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் உள்ள புனித மக்கா நகரில் நபிகள் நாயகம் பிறந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. தொடக்க காலத்தில் இந்நாள் அவரது மறைவை நினைவுகூரும் அமைதியான நாளாகவே கருதப்பட்டது. பின்னர் 10 மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளில் பாத்திமித் ஆட்சியாளர்களின் காலத்தில், நபிகளாரின் வாழ்க்கை வரலாறு, போதனைகள் மற்றும் இறை வழிபாடுகளை முன்னிறுத்தி பொது நிகழ்வாகக் கொண்டாடத் தொடங்கப்பட்டது. காலப்போக்கில் இது உலகெங்கிலும் உள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board">முஸ்லிம்களால்</a> தங்களது ஆன்மீக நெறிமுறைகளைப் புதுப்பிக்கும் சிறப்புமிக்க நாளாக மாறியது.</p><h2>புனித நா<strong>ளின் முக்கியத்து</strong>வம்</h2><p>மிலாது நபி என்பது வெறும் பண்டிகை மட்டுமே அல்லாமல், நபிகள் நாயகம் மனிதகுலத்திற்குப் போதித்த அன்பு, அமைதி, கருணை, நேர்மை மற்றும் சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை மீண்டும் நினைவுகூரும் புனித நாளாகும். ஏழை எளியவர்களுக்கு உதவுதல், பசித்தோருக்கு உணவளித்தல் மற்றும் மனிதநேயப் பணிகளை மேற்கொள்வது இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.</p><h2>இந்தியாவில் <strong>கொண்டாடப்படும் மு</strong>றைகள்</h2><p>இந்நாளில் மசூதிகள் மற்றும் வீடுகள் மின் விளக்குகளாலும் பசுமை நிறக் கொடிகளாலும் அலங்கரிக்கப்படும். இஸ்லாமிய பெருமக்கள் அதிகாலையிலேயே மசூதிகளுக்குச் சென்று சிறப்புத் தொழுகைகளில் ஈடுபடுவர். நபிகளாரின் புகழைப் பாடும் 'நாத்' பாடல்கள் இசைக்கப்படுவதும், அவரது வரலாற்றுப் போதனைகள் (சீரா) குறித்த சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படுவதும் வழக்கம். பல இடங்களில் அமைதிப் பேரணிகள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடத்தப்படும்.</p>]]></content:encoded></item><item><title>2027 பல்சர் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது பஜாஜ் - விலை மற்றும் முழு விவரங்கள்!</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/2027-bajaj-pulsar-150-125-launched</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/2027-bajaj-pulsar-150-125-launched#comments</comments><guid isPermaLink="false">ec5ea085-aa13-47ff-b90d-2961446d6a56</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:32:00 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bike,பைக்,bajaj auto,பஜாஜ் ஆட்டோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b0wv2erf/2027-Bajaj-Pulsar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2027 Bajaj Pulsar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b0wv2erf/2027-Bajaj-Pulsar.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/bajaj-auto">பஜாஜ் ஆட்டோ</a> நிறுவனம் தனது புகழ்பெற்ற இரண்டு மாடல்களான பஜாஜ் பல்சர் 125 மற்றும் பல்சர் 150 சீரிஸ் மாடல்களை மேம்படுத்தியது. புதிய பல்சர் 125 விலை ரூ. 92,990-இல் இருந்தும், பல்சர் 150 விலை ரூ. 1.15 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் ஹார்டுவேர் அப்டேட்களுடன் முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>வடிவமைப்பைப் பொறுத்தவரை, இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டுள்ளன மற்றும் முழுமையான LED அமைப்பை கொண்டுள்ளன. </p><p>இருப்பினும், முக்கிய மாற்றங்கள் ஹார்டுவேர் பிரிவில்தான் உள்ளன. அவை இப்போது பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனையும், புதிய எக்ஸாஸ்ட் அமைப்பையும் பெற்றுள்ளன. மேலும், டைமண்ட் ஃபிரேம் கொண்டுள்ளன.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>அம்சங்களை பொறுத்தவரை, பஜாஜ் பல்சர் 125 மற்றும் 150 மாடல்களில் புதிய 5-இன்ச் TFT கன்சோல், நேவிகேஷன் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. பல்சர் 125 மாடலில் ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் என மூன்று ரைடு மோட்களும், ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டமும் உள்ளன. மேலும், டைப்-சி சார்ஜிங் போர்ட் இதில் இடம்பெற்றுள்ளது.</p><p>பிரேக்கிங் அமைப்பைப் பொறுத்தவரை, பல்சர் 125 மாடலில் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. அதே சமயம், பல்சர் 150 மாடலில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் கூடிய இரட்டை டிஸ்க் பிரேக் அமைப்பு உள்ளது.</p><p>மூன்று வேரியண்ட்டுகளில் வழங்கப்படும், இதில் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டில் ஸ்ப்ளிட்-சீட் அமைப்பு இடம்பெறும். கீழ்நிலை வேரியண்ட்டுகளில் சிங்கிள்-பீஸ் சீட் அமைப்பு தொடரும்.</p><h2>என்ஜின்:</h2><p>பஜாஜ் பல்சர் 125 மாடலிில் 11.6 bhp பவர் மற்றும் 11.4 Nm நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் 124.38cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>புதிய பல்சர் 150 மாடலில் 13.8 bhp பவர் மற்றும் 14.1 Nm நியூட்டன் மீட்டர் டார்க் திறன் வெளிப்படுத்தும், ஃப்யூல் இன்ஜெக்ஷன் மற்றும் ட்வின் ஸ்பார்க் தொழில்நுட்பத்துடன் கூடிய 149.5cc சிங்கிள்-சிலிண்டர், ஃபோர்-ஸ்ட்ரோக், ஆயில்-கூல்டு என்ஜினை பெறுகிறது.</p><p>இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஸ்டார்ட் மற்றும் கியர் ஷிஃப்டுகளை வழங்கும் நோக்கில், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், வெட் மல்டி-பிளேட் கிளட்ச் மற்றும் எலக்ட்ரானிக் இக்னிஷன் சிஸ்டம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.</p><p>இந்திய சந்தையில் பல்சர் 150 ஆனது ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 மற்றும் டி.வி.எஸ். அப்பாச்சி ஆர்.டி.ஆர். 160 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது, அதே சமயம் பல்சர் 125 ஆனது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், டி.வி.எஸ். ரைடர் 125 மற்றும் ஹோண்டா எஸ்.பி. 125 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.</p>]]></content:encoded></item><item><title>புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inaugurated-the-new-ac-electric-bus-service</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inaugurated-the-new-ac-electric-bus-service#comments</comments><guid isPermaLink="false">0fc5818d-4886-4fc7-8525-00bc3767cd09</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:28:54 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:28:54.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,electric bus,மின்சார பஸ்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bvl7c2hu/bus.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bvl7c2hu/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் ஆலந்தூர், பெரம்பூர், ஆவடி, சென்ட்ரல், பாடியநல்லூர், கேகே நகர், அய்யப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது.</strong></em> </p><p>சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் (மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்) வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர் மற்றும் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டது.</p><h2><strong>முதலமைச்சர் தொடங்கி வைத்தார்</strong></h2><p>இதில் முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து  ரூ.234.50 கோடி மதிப்பில் 130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். </p><p>அதன்படி, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சார பஸ்களை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். </p><figure><img alt="ஏ.சி. மின்சாரப் பஸ்கள் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7wxivr7b/bus0.jpg" /><figcaption>ஏ.சி. மின்சாரப் பஸ்கள் </figcaption></figure><p>130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் ஆலந்தூர், பெரம்பூர், ஆவடி, சென்ட்ரல், பாடியநல்லூர், கேகே நகர், அய்யப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது. </p><p>அதனை தொடர்ந்து மின்சார பேருந்தில் ஏறி பார்வையிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பஸ்களின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ரூ.55.58 கோடி மதிப்பில் 120 புதிய பஸ்களையும் முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கிவைத்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/phase-2-electric-buses-in-chennai-cm-vijay-to-launch-them-tomorrow">சென்னை</a> தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலர் சாய்குமார், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். </p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்?: சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-tell-tn-assembly-mettu-dam-when-open</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-tell-tn-assembly-mettu-dam-when-open#comments</comments><guid isPermaLink="false">aa9cd81a-e916-41c4-86e7-4290318ec9ed</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:17:34 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:17:34.225Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam,தமிழக சட்டசபை,TN assembly,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/kye81r44/anand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/kye81r44/anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் அமைச்சர் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? என்ற கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதிலளித்தார்.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி செழியன், மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? என கேள்வி எழுப்பினார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி செழியன் பேசும்போது, டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். அணை எப்போது திறக்கப்படும்? அரசு அறிவிக்க இயலுமா? என அரசின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் என்றார்.</p><h2>விரைவில் நல்ல செய்தி</h2><p>இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் என்.ஆனந்த், மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். </p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்ச ரும் அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>இதுகுறித்து ஏற்கனவே அவையில் கவன ஈர்ப்பு கொடுத்துள்ளோம். ஏற்கனவே குறுவை சாகுபடி தண்ணீர் திறக்கப்படவில்லை. இது சம்பந்தமாக நீர்வளத்துறை அமைச்சர் அணையில் தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை என சபையில் தெரிவித்தார். இப்போது அணை நிரம்பிக் கொண்டிருக்கிறது. தண்ணீரும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.</p><h2>திறக்கப்படுமா?</h2><p>எனவே இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? அது எப்போது திறக்கப்படும்? திறப்பதாக இருந்தால் 15 நாட்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டால்தான் நாற்றங்கால் வைக்கக் கூடிய பணி தொடங்கப்ப டும். எனவே நீர்வளத்துறை அமைச்சர் எப்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்ய தண்ணீர் திறக்கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன் என தெரிவித்தார்.</p><p>மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக பல்வேறு எம்.எல்.ஏ.க்களும் இன்று சட்ட சபையில் பேசினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>நச்சுத்தன்மையுள்ள &apos;ஊமத்தங்காய்&apos; விற்பனை: அமேசான், இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் உணவு உரிமங்கள் தற்காலிக ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/toxic-datura-sales-amazon-instamart-bigbasket-licenses-suspended</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/toxic-datura-sales-amazon-instamart-bigbasket-licenses-suspended#comments</comments><guid isPermaLink="false">052bf9cc-2218-4241-8069-ad4598b281ed</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:15:52 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:15:52.162Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,அமேசான்,Amazon,பிக்பாஸ்கெட்,Bigbasket,இன்ஸ்டாமார்ட்,Datura fruit,Instamart,ஊமத்தங்காய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/e9cwinnw/swiggy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Datura fruit ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/e9cwinnw/swiggy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>இந்தியா (India, National)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மனிதர்கள் உண்பதற்குப் பொருத்தமற்ற, ஆபத்தான 'ஊமத்தங்காய்' மற்றும் அதன் விதைகளை உணவுப் பொருளாகத் தங்களது தளங்களில் காட்சிப்படுத்தி விற்பனை செய்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆபத்தான ஊ<strong>மத்தங்காய்</strong> விற்பனை</h2><p>பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் <a href="https://www.maalaimalar.com/news/national/27-students-fall-ill-after-consuming-mid-day-meal-at-rajasthan-school">உணவு பாதுகாப்புத் துறை</a> அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் மற்றும் விதைகள், FSSAI உணவு பாதுகாப்பு உரிம எண்களுடன் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, இந்த ஆன்லைன் நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. ஊமத்தங்காய் உட்கொள்வது மனித உயிருக்குத் தீவிர ஆபத்தை விளைவிக்கும் என்றும், இது கோமா நிலைக்கு அல்லது உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அமேசான் நிறுவனம் எந்தவொரு முறையான பதிலும் அளிக்கவில்லை. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம் விளக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரியது. பிக்பாஸ்கெட் நிறுவனம், ஊமத்தங்காய் விற்பனையை ஆன்லைனில் உடனடியாக நிறுத்திவிட்டதாகவும், இனிவரும் காலங்களில் 'மனித நுகர்வுக்கு உகந்தது அல்ல' என்ற எச்சரிக்கை லேபிளுடன் மட்டுமே மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தது.</p><p>இருப்பினும், இந்நிறுவனங்களின் பதில்கள் திருப்திகரமாக இல்லை எனக் கூறிய உணவு பாதுகாப்புத் துறை, ஆன்லைன் உணவு வணிக உரிமங்களை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இந்த ஆன்லைன் தளங்களுக்கு ஊமத்தங்காய்களை விநியோகம் செய்த விற்பனையாளர்களின் உரிமங்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் பட்டியல்களைத் தங்களது செயலிகளிலிருந்து உடனடியாக நீக்குமாறு அரசு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-08-2026#comments</comments><guid isPermaLink="false">aa630faa-c3c5-4af7-b8ab-79de69559284</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:05:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:05:44.658Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y37wua91/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y37wua91/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது.</strong></em> </p><p>ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 15-ந்தேதியில் இருந்து நேற்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. </p><h2><strong>சற்று குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>21-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,800</p><p>20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>21-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>20-08-2026- ஒரு கிராம் ரூ.260</p>]]></content:encoded></item><item><title>கேப்டன் புகழ் நீடுவாழ்க!- மு.க.ஸ்டாலின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-praise-vijayakanth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-praise-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">48c6610c-a749-4768-90f6-e7da14f8ba68</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:52:15 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:52:15.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMDK,தேமுதிக,vijayakanth,முக ஸ்டாலின்,விஜயகாந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/737hovcr/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/737hovcr/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விஜயகாந்தின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</strong></em></p><p>நடிகரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான மறைந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">விஜயகாந்தின்</a> 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth">விஜயகாந்த்</a> பிறந்தநாளையொட்டி அவரை அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>புகழ் நீடுவாழ்க!</strong> </h2><p>ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!</p><p>அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி </p><p>பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!<br><br>அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி… <a href="https://t.co/x2epVGxjgC">pic.twitter.com/x2epVGxjgC</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2092102624015495294?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ரூ. 10,000 பட்ஜெட்டில் புது IER ஹெட்போன்அறிமுகம் செய்த சோனி - என்ன ஸ்பெஷல்?</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/sony-ier-m500-wired-in-ear-monitors-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/sony-ier-m500-wired-in-ear-monitors-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">c6dbc43f-178d-42f7-a5ed-947d5f6b96ec</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:46:00 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:46:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sony,சோனி,IEM,இன் இயர் மாணிட்டர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/apu9v9vs/Sony-IER-M500.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sony IER-M500]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/apu9v9vs/Sony-IER-M500.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/sony">சோனி</a> நிறுவனம் இந்திய சந்தையில் IER-M500 பெயரில் புதிய இன்-இயர் மாணிட்டர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் தொழில்முறை ஆடியோ மாணிட்டரிங் மற்றும் லைவ் பெர்ஃபார்மன்ஸ் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த இயர்போன்கள் 5mm டைனமிக் டிரைவர்கள், சீல்டு அகௌஸ்டிக் டிசைன் கொண்டுள்ளன. இது பேசிவ் நாய்ஸ் ஐசோலேஷன் வசதியை வழங்குகிறது. இத்துடன் பல்வேறு இயர் டிப்கள், ஃபிட்டிங் சப்போர்ட்ர்ஸ், கேபிள் க்ளிப் மற்றும் கேஸ் உள்ளிட்டவை இந்த இயர்போனுடன் வழங்கப்படுகிறது.</p><p>புதிய சோனி IER-M500 மாடல் கடந்த ஜூலை மாத வாக்கில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வந்தள்ளது. இந்த இயர்போன் மொத்தத்தில் மூன்றுவித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>சோனி IER-M500 5mm டிரைவர்களை கொண்டிருக்கிறது. இந்த இயர்போன்கள் சீல்டு ஹவுசிங், இன்டர்னல் அகௌஸ்டிக் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இது வெளிப்புற சத்தத்தை குறைக்க செய்கிறது. இத்துடன் நாய்ஸ்-ஐசோலேட்டிங் இயர் டிப்கள் வழங்கப்படுகிறது. இது பேசிவ் நாய்ஸ் ஐசோலேஷன் அனுபவத்தை மேம்படுத்துகிறது.</p><p>கனெக்டிவிட்டிக்கு சோனி IER-M500 மாடலிில் 1.6m வயர்டு Y-டைப் கேபிள் மற்றும் L-வடிவ ஸ்டீரியோ மினி பிளக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போனுடன் ஃபிட்டிங் சப்போர்ட்டர்ஸ், பலவித அளவுகளல் நாய்ஸ்-ஐசோலேட்டிங் இயர் டிப்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கேபிள் க்ளிப் வழங்கப்படுகிறது. கேபிள் தவிர்த்து இந்த இயர்போனின் எடை 6.9 கிராம் ஆகும்.</p><h2>விலை மற்றும் விவரங்கள்:</h2><p>இந்திய சந்தையில் சோனி IER-M500 மாடலின் விலை ரூ. 10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்போன் பிளாக், க்ளியர் மற்றும் ரெட் அண்ட் பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த இயர்போன் அமேசான், ப்ளிப்கார்ட், ரியல் இமேஜ், சவுண்ட் க்ளிட்ஸ், ஹெட்போன் ஜோன் மற்றும் இதர ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-passes-tet-exam-exemption-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-passes-tet-exam-exemption-resolution#comments</comments><guid isPermaLink="false">d0983fd4-5d1d-4ba4-ae08-070229f16a84</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:40:34 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:40:34.997Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெட் தேர்வு,TET Exam,தனித்தீர்மானம்,TN assembly,தமிழக சட்டசபை |,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/10bt3k6y/raj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/10bt3k6y/raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தனித்தீர்மானம்</a> ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசினார். அப்போது அவர், டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.</p><p>3.28 லட்சம் ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி என்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.</p><p>அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.</p><p>இறுதியில், மறுப்போர் இல்லை என்பதால் டெட் தொடர்பான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!- முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">08c3c32a-2a5a-4800-8ba3-9811aac69605</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:39:46 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:39:46.913Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,DMDK,தேமுதிக,vijayakanth,விஜயகாந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mbtovj0b/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜயகாந்த்- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜயகாந்த்- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mbtovj0b/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்! என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>நடிகரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான மறைந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">விஜயகாந்தின்</a> 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அவரை அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-didnt-you-seek-the-blessings-of-vijayakanth-who-helped-you-grow-vijaya-prabhakaran-asks-chief-minister-vijay">விஜய்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>புகழ் வணக்கங்கள்...</strong></h2><p>மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.<br><br>திரைத்துறையில்… <a href="https://t.co/hH9qLSXkbw">pic.twitter.com/hH9qLSXkbw</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2092106246149271783?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் படுகொலை குறித்து தமிழக சட்டசபையில் கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின்  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-speech-in-tn-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-speech-in-tn-assembly-today#comments</comments><guid isPermaLink="false">3341242b-6bdb-4098-9003-023acb360b17</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:17:23 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:17:23.788Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,எதிர்க்கட்சி தலைவர்,TN assembly,opposite leader</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/0we3y0gw/udaya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/0we3y0gw/udaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 3 தமிழர்கள் படுகொலை குறித்து கேள்வி எழுப்பினார்.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.</p><p>அப்போது எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:</p><p>கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.</p><p>தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?</p><p>3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு சபாநாயகர், சட்டத்துறை அமைச்சர் நாளை விளக்கம் அளிப்பார் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>6000mAh பேட்டரி, 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/lava-virat-v1-pro-5g-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/lava-virat-v1-pro-5g-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">9f447df7-7c68-4972-ba81-592d4682f816</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>LAVA,லாவா,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j0ky9zjq/Lava-Virat-V1-Pro-5G.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lava Virat V1 Pro 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j0ky9zjq/Lava-Virat-V1-Pro-5G.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/lava">லாவா</a> நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் லாவா விராட் V1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> விராட் V1 5ஜி மாடலின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் மேம்பட்ட கேமரா, அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>மேலும், இந்த ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்ட யுனிசாக் பிராசஸர், IP64 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>லாவா விராட் V1 ப்ரோ 5ஜி மாடலில் 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T8200 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 128 ஜிபி மெமரி, மெமரியை 1 டிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரேம் பூஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய லாவா விராட் V1 மாடலில் 13MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இரு கேமராக்களிலும் அதிகபட்சம் 2K ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.</p><p>இத்துடன் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 17 அப்டேட், இரு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஹெட்போன் ஜாக், பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஹைப்ரிட் சிம் கார்டு ஸ்லாட் கொண்டிருக்கிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய லாவா விராட் V1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 31-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என ஒற்றை மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் சிக்கிம் மிட்நைட் மற்றும் ஸ்பிட்டி ஃப்ராஸ்ட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 25-8-2026 முதல் 31-8-2026 வரை</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-25-8-2026-to-31-8-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-25-8-2026-to-31-8-2026#comments</comments><guid isPermaLink="false">dde4aa2a-1cdf-477d-b679-101af2de1129</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:02:20 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:02:20.568Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/13/24703153-muruga1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/13/24703153-muruga1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>25-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* பிரதோஷம்.</p><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் விறகு விற்ற திருவிளையாடல்.</p><p>* விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் ரத உற்சவம்.</p><p>* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>26-ந் தேதி (புதன்)</h2><p>* ஓணம் பண்டிகை.</p><p>* சிரவண விரதம்.</p><p>* நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் ரத உற்சவம்.</p><p>* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. </p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>27-ந் தேதி (வியாழன்)</h2><p>* பவுர்ணமி.</p><p>* ஆவணி அவிட்டம்.</p><p>* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீர்த்தவாரி.</p><p>* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>28-ந் தேதி (வெள்ளி)</h2><p>* வரகூர் உறியடி உற்சவம் ஆரம்பம்.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.</p><p>* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.</p><p>* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>29-ந் தேதி (சனி)</h2><p>* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>30-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* நாங்குநேரி உலகநாயகி அம்மன் வருசாபிஷேகம்</p><p>* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.</p><p>* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>31-ந் தேதி (திங்கள்)</h2><p>* முகூர்த்த நாள்.</p><p>* சங்கடகர சதுர்த்தி.</p><p>* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.</p><p>* பெருவயல் முருகப்பெருமான் விழா தொடக்கம். </p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மனுக்கு புஷ்பப் பாவாடை தரிசனம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> ]]></content:encoded></item><item><title>10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-10-districts-until-10-am</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-10-districts-until-10-am#comments</comments><guid isPermaLink="false">62aefb2f-3011-4114-8428-09550e24e848</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:44:08 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:44:08.876Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,Rain,மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/11/24586346-rain.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/11/24586346-rain.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டியும் வருகிறது. நேற்று முன்தினம் இரவில் திடீரென இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் வெப்பம் தணிந்தது.</p><h2>சென்னையில் மழை</h2><p>நேற்று காலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருந்த நிலையில், இரவு 8 மணியளவில் திடீரென மழை வெளுக்கத் தொடங்கியது. </p> <p>சென்ட்ரல், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி, எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. </p><p>இந்நிலையில், தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை வானிலை மையம்</a> தெரிவித்துள்ளது.</p> <p>அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.</p><h2>கனமழை</h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுவதால், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p> <p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். </p><p>தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகள் கவனத்திற்கு.... இன்று முதல் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/night-time-electric-trains-cancelled-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/night-time-electric-trains-cancelled-starting-today#comments</comments><guid isPermaLink="false">0424a501-f209-4d9a-8a0b-afa4d417adf2</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:05:37 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:05:37.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,மின்சார ரெயில்கள்,மின்சார ரெயில்கள் ரத்து,electric train cancelled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/08/24/4165049-beachtrain.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Electric train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/08/24/4165049-beachtrain.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/news/topnews/changes-to-electric-train-services-starting-tomorrow">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p> <p>இன்று முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மின்சார ரெயில்கள்</a> செல்லும் தண்டவாள பகுதியில் பணிகள் நடைபெற உள்ளது. </p><p>எனவே சென்னை கடற்கரையில் இருந்து இன்று முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 10.20 மணி முதல் 11.59 வரை இயக்கப்படும் மின்சார ரெயில்களும், அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. </p> <p>செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. எனவே, பயணிகள் தங்களுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு பயணம் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-today-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-today-in-chennai#comments</comments><guid isPermaLink="false">67342036-9a1d-4a99-ad60-bbe0fa13ea58</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:33:23 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:33:23.015Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல்,Petrol,கச்சா எண்ணெய்,Crude oil,diesel,டீசல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b0k0t00l/tn-32.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b0k0t00l/tn-32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில், இன்றைய (25.08.2026 - செவ்வாய்க்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 ஆகஸ்ட் 2026: முருகன் கோவில்களில் அபிஷேகம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-25-august-2026-murugan-temples-abhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-25-august-2026-murugan-temples-abhishekam#comments</comments><guid isPermaLink="false">8a28d076-afe5-49ca-a644-0f936a30b7dc</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26339678-murugar2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan Abhishekam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26339678-murugar2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-8 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   துவாதசி காலை 7.22 வரை பிறகு திரயோதசி</p><p>நட்சத்திரம் : உத்திராடம் நள்ளிரவு 12.28 வரை பிறகு திருவோணம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>பிரதோஷம்</h2><p>பிரதோஷம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ சுந்தரேசுவரர் விறகு விற்றருளிய காட்சி, ஸ்ரீ அம்பாள் தங்கச் சப்பரத்தில் திருவீதியுலா. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். </p> <p>திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3 ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல் ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உழைப்பு</p><p>ரிஷபம் - செலவு</p><p>மிதுனம் - முயற்சி</p><p>கடகம் - சாதனை</p><p>சிம்மம் - அமைதி</p><p>கன்னி - நாட்டம்</p> <p>துலாம் - மகிழ்ச்சி</p><p>விருச்சிகம் - வரவு</p><p>தனுசு - பரிசு</p><p>மகரம் - நலம்</p><p>கும்பம் - களிப்பு</p><p>மீனம் - மேன்மை</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan | இன்றைய ராசிபலன் 25.8.2026: இவர்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-2582026-in-tamil</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasipalan-2582026-in-tamil#comments</comments><guid isPermaLink="false">2523bce5-2cbb-46e6-be14-3573a65712df</guid><pubDate>Tue, 25 Aug 2026 00:57:16 +0000</pubDate><atom:updated>2026-08-25T00:57:16.503Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-30/e831d3ae/rasi-2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-30/e831d3ae/rasi-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு.</p><h2>ரிஷபம்</h2><p>பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.</p><h2>மிதுனம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அத்தியாவசியச் செலவுகளை முன்னிட்டு கைமாற்று வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். உத்தியோகத்தில் மனக்கலக்கம் அதிகரிக்கும்.</p><h2>கடகம்</h2><p>முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படலாம்.</p><h2>சிம்மம்</h2><p>வருமானம் அதிகரிக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் இனிமையாக வழிவகுத்துக் கொள்வீர்கள்.</p><h2>கன்னி</h2><p>எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.</p><h2>துலாம்</h2><p>தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.</p><h2>விருச்சிகம்</h2><p>நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு. திருமண முயற்சி கைகூடும்.</p><h2>தனுசு</h2><p>உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை தீரும்.</p><h2>மகரம்</h2><p>ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள்.</p><h2>கும்பம்</h2><p>யோகமான நாள். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கரைக்கு ஆதாயம் கிடைக்கும். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தம் வந்துசேரும்.</p><h2>மீனம்</h2><p>நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வீடு கட்டும் பணியைத் தொடர நினைப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.</p>]]></content:encoded></item><item><title>மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - ராஜஸ்தானில் சோகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/27-students-fall-ill-after-consuming-mid-day-meal-at-rajasthan-school</link><comments>https://www.maalaimalar.com/news/national/27-students-fall-ill-after-consuming-mid-day-meal-at-rajasthan-school#comments</comments><guid isPermaLink="false">8c2f36ae-e4f7-4502-aee6-0eef072e52f0</guid><pubDate>Tue, 25 Aug 2026 00:23:28 +0000</pubDate><atom:updated>2026-08-25T00:23:28.166Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,Students,மாணவர்கள்,மதிய உணவு திட்டம்,mid-day meal,ராஜஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/174ka39a/Students-Ill.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Students Ill]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/174ka39a/Students-Ill.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ராஜஸ்தான்</a> மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 27 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். </p><p>அதிகாரிகளின் கூற்றுப்படி, உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தைகளுக்கு தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. சிகிச்சையை மேற்பார்வையிட மருத்துவ கல்லூரிக்கு வந்த மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) ரூப் சிங் மீனா, மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக ஒரு மருத்துவ குழு பள்ளிக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.</p><h2>மருத்துவ குழு அமைப்பு:</h2><p>"சுமார் 27 குழந்தைகள் உடல்நலக்குறைவாகவும், தலைவலியுடனும் இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் 10 முதல் 12 குழந்தைகள் மருத்துவ கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டதை அறிந்ததும், நானும் இங்கு வந்தேன். ஏற்கனவே நான்கு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர், மற்றவர்களை கவனிப்பதற்காக ஒரு மருத்துவ குழு அனுப்பப்பட்டது," என்று மீனா கூறினார்.</p><p>அவர் மேலும் கூறுகையில், "யாருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுவிட்டது, மேலும் அவர்களின் முக்கிய உடல் செயல்பாடுகள் இயல்பாக இருப்பதையும், உடல்நிலை மோசமடையாமல் இருப்பதையும் உறுதிசெய்ய நாங்கள் அவர்களை கண்காணித்து வருகிறோம்," என்றார்.</p><h2>களத்தில் இறங்கிய அமைச்சர்:</h2><p>ராஜஸ்தான் அமைச்சர் மதன் திலாவரும் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திப்பதற்கும் மருத்துவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் மருத்துவமனைக்கு சென்றார். அனைத்து குழந்தைகளும் தற்போது நலமாகவும் அபாயமின்றியும் இருப்பதாக அவர் உறுதியளித்தார்.</p><p>"தற்போது நான் மருத்துவக் கல்லூரியில் இருக்கிறேன். நான் இப்போதுதான் எல்லா குழந்தைகளையும் சந்தித்தேன், அனைவரும் நலமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாந்தியும் தலைசுற்றலும் ஏற்பட்டதாக என்னிடம் கூறினார்கள். இப்போது அனைவரும் நலமாக இருக்கிறார்கள்," என்று மதன் திலாவர் செய்தியாளர்களிடம் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>H-1B விசா விண்ணப்பங்களுக்கு கூடுதலாக 1 லட்சம் டாலர் கட்டணம் - டிரம்ப் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/world/us-proposes-additional-usd-103-lakh-fee-for-h-1b-visa-cap-subject-applications</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-proposes-additional-usd-103-lakh-fee-for-h-1b-visa-cap-subject-applications#comments</comments><guid isPermaLink="false">54d7289a-4aed-4146-95f1-62b7ff3e3784</guid><pubDate>Mon, 24 Aug 2026 23:49:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T23:49:34.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,us,H-1B visa</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/20/18896931-h1bvisa.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ H-1B Visa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/20/18896931-h1bvisa.webp?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் H-1B விசா ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் கூடுதலாக 1,03,265 டாலர் கட்டணம் விதிக்க <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்கா</a> முன்மொழிந்தது. அமெரிக்க நாடாளுமன்றம் தற்போது H-1B விசா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 65,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற வழக்கமான வரம்பை நிர்ணயித்துள்ளது.</p><p>அமெரிக்க கல்வி நிறுவனங்களில் முதுகலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்ற வெளிநாட்டு பணியாளர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் ஒதுக்கப்படுகின்றன. இது பொதுவாக "முதுகலை ஒதுக்கீட்டு வரம்பு" என்று அழைக்கப்படுகிறது. </p><h2>புதிய முன்மொழிவு:</h2><p>H-1B விசா விண்ணப்பங்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டத்தை ரத்து செய்து மாவட்ட நீதிபதியின் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரிய மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, உள்நாட்டு பாதுகாப்பு துறையின் இந்த புது முன்மொழிவு வந்துள்ளது.</p><p>"தற்போதுள்ள H-1B விண்ணப்ப கட்டணத்துடன் இணைப்பதற்கு பதிலாக, 1,03,265 அமெரிக்க டாலர் தொகையை ஒரு தனிப்பட்ட, கூடுதல் H-1B கட்டணமாக செயல்படுத்த உள்நாட்டு பாதுகாப்பு துறை முன்மொழிகிறது" என்று 'ஃபெடரல் ரெஜிஸ்டர்' இதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது.</p><h2>கூடுதல் கட்டணம் பொருந்தாது:</h2><p>அடுத்த 30 நாட்களுக்குள் இந்த முன்மொழிவு குறித்து பொதுமக்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு இத்துறை அழைப்பு விடுத்துள்ளது. கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு இறுதி விதிமுறை வெளியிடப்படும். </p><p>இந்தக் கட்டணம் H-1B ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட மனுக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மனுக்களுக்குப் பொருந்தாது என்றும் அது கூறியது.</p><p>முன்மொழியப்பட்ட விதியின் கீழ், குறிப்பிட்ட லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தாக்கல் செய்யும் மனுக்கள் போன்ற ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்படாத H-1B மனுக்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தாது என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.</p><h2>செய்தி தொடர்பாளர் விளக்கம்:</h2><p>"முன்மொழியப்பட்ட H-1B கட்டணமானது, சட்டப்பூர்வ குடியேற்ற திட்டங்களை ஆய்வு செய்யவும், சரிபார்க்கவும் மற்றும் ஆதரிக்கவும் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுகட்டுவதற்காகவே கொண்டுவரப்படுகிறது. </p><p>இல்லையெனில் இச்செலவுகள் வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கும்" என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் செய்தி தொடர்பாளர் ஜாக் காலர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்?</title><link>https://www.maalaimalar.com/news/world/chinas-xi-likely-to-visit-india-for-first-time-in-seven-years</link><comments>https://www.maalaimalar.com/news/world/chinas-xi-likely-to-visit-india-for-first-time-in-seven-years#comments</comments><guid isPermaLink="false">dae5bbef-6b68-4d64-a9b0-368fff9e0e48</guid><pubDate>Mon, 24 Aug 2026 23:18:15 +0000</pubDate><atom:updated>2026-08-24T23:18:15.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,Xi Jin Ping,ஜி ஜின் பிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/m7q07rkv/pm-modi-and-xi-jinping.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi and xi jinping]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/m7q07rkv/pm-modi-and-xi-jinping.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">சீன</a> அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதற்காக சீன அதிபர் பெரிய தூதுக்குழுவுடன் <a href="https://www.maalaimalar.com/news/national">இந்திய</a> பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணமாக இது அமைவதோடு  இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படுவதற்கான ஒரு புதிய அறிகுறியாகவும் இது அமையும்.</p><h2>இறுதிக்கட்ட ஏற்பாடுகள்:</h2><p>"சீன அதிகாரிகள் தங்கும் விடுதிகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை இறுதி செய்வதில் மும்முரமாக உள்ளனர்," என இதுகுறித்த விவரம் அறிந்த இந்திய வட்டாரங்களில் ஒன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தது.</p><p>கடந்த ஆண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார், ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு படிப்படியாகவே மேம்பட்டுள்ளது. மிக சமீபத்தில், ஒரு புதிய எல்லை தொடர்பான தகராறு இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான ராஜதந்திர பரிமாற்றங்களை தூண்டியது.</p><h2>400 அதிகாரிகள் குழு:</h2><p>2019-ஆம் ஆண்டில் சீன அதிபர் 200-க்கும் குறைவான அதிகாரிகளுடன் வந்திருந்த நிலையில், இந்த முறை ஜி ஜின்பிங்குடன் சுமார் 400 அதிகாரிகள் கொண்ட குழு இந்தியா வர வாய்ப்புள்ளதாக மற்ற இரண்டு இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>எல்லை மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான நீண்டகாலக் கருத்து வேறுபாடுகளை கையாண்டுகொண்டே, ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய இரு நாடுகளின் அதிகாரிகளும் இந்த உச்சிமாநாட்டை பயன்படுத்தி கொள்வார்கள் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.</p><h2>இன்னும் இறுதி செய்யப்படவில்லை:</h2><p>இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற வாய்ப்புள்ள இருதரப்பு சந்திப்புக்கான ஜி ஜின்பிங்கின் இறுதி பயண் திட்டங்களும் நிகழ்ச்சி நிரலும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>"சீனா, பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து அதில் தீவிரமாக பங்கேற்கிறது. மேலும் , இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, தற்போதைய தலைமை பொறுப்பில் உள்ள இந்தியாவை ஆதரிக்கிறது," என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>ஜி ஜின்பிங்கின் பயணம் குறித்து "தற்போது எங்களிடம் வழங்குவதற்கு எந்த தகவலும் இல்லை" என்று அது கூறியது. 2025-இல் பிரேசிலில் நடைபெறவிருந்த கடைசி பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து கருத்தும் தெரிவிக்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தனித்து களம் காணும் பாஜ.க.</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-says-will-contest-all-seats-in-punjab-assembly-polls</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-says-will-contest-all-seats-in-punjab-assembly-polls#comments</comments><guid isPermaLink="false">5e07a772-c040-43c5-b310-114e469fbe84</guid><pubDate>Mon, 24 Aug 2026 21:12:04 +0000</pubDate><atom:updated>2026-08-24T21:12:04.874Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,ஆம் ஆத்மி,AAP,பஞ்சாப் சட்டசபை தேர்தல்,Punjab Assembly Polls</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/h0bc1m1b/BJP.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bjp]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/h0bc1m1b/BJP.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"<a href="https://www.maalaimalar.com/news/national">பஞ்சாப்</a> மாற்றத்திற்கு முழுமையாகத் தயாராக உள்ளது, அதை நனவாக்க பா.ஜ.க.வும் முழுமையாக தயாராக இருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், பஞ்சாபில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளிலும் <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> போட்டியிட்டு, வெற்றி பெற்ற பிறகு மாநிலத்தில் தனது ஆட்சியை அமைக்கும்," என்று பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் கூறினார்.</p><p>பஞ்சாப் மாநிலத்திற்கு அவர் மேற்கொண்ட இரண்டு நாள் அமைப்பு பயணத்தின் முதல் நாளில், பாட்டியாலாவில் நடைபெற்ற முதல் மண்டலக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.</p><p>நேற்று காலை மொஹாலி விமான நிலையத்தில் பி.எல். சந்தோஷை, மாநில பா.ஜ.க. தலைவர் சர்தார் கேவல் சிங் தில்லன் மற்றும் பஞ்சாப் இணை பொறுப்பாளர் சர்தார் நரேந்திர சிங் ரெய்னா ஆகியோர் வரவேற்றனர்.</p><h2>தேர்தல் ஆயத்த பணிகள்:</h2><p>தனது பயணத்தின் போது சந்தோஷ், பஞ்சாபின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அமைப்பு பொறுப்பாளர்களுடன் மண்டல கூட்டங்கள் நடத்தி, அமைப்பின் செயல்பாடுகளையும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளையும் ஆய்வு செய்வார்.</p><p>இந்தக் கூட்டங்கள், வாக்குச்சாவடி நிலை வரை அமைப்பை வலுப்படுத்துவதிலும், கட்சியின் கொள்கைகளையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை பஞ்சாப் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் குறிப்பாக கவனம் செலுத்தும்.</p><p>நேற்று சந்தோஷ் பாட்டியாலா மற்றும் பதிண்டாவில் நடைபெற்ற அமைப்புக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். இன்று (ஆகஸ்ட் 25), லூதியானா, ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸில் மண்டல கூட்டங்கள் நடைபெறும்கின்றன. மாநில பொது செயலாளர்களுடன் தனியாக ஒரு கூட்டமும் அமிர்தசரஸில் நடைபெறும்.</p><h2>வெற்றி பெற முடியாது:</h2><p>"பா.ஜ.க. தனித்து போட்டியிட்டாலும் சரி, யாருடனாவது கூட்டணி அமைத்தாலும் சரி, பஞ்சாபில் அதனால் வெற்றி பெற முடியாது," என மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்தார்.</p><p>"மார்ச் 2022-க்கு முன்பு, எங்கள் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் ஐந்து வாக்குறுதிகளை அளித்தனர். அந்த ஐந்து வாக்குறுதிகளையும் நாங்கள் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி இருக்கிறோம். </p><p>எனவே, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த அரசியல் கட்சியும் போட்டியிட முடியாது. இது ஒரு நேரடி போட்டி, மேலும் 2022-ல் நாங்கள் அடைந்த செயல்திறனை விட சிறப்பாகச் செயல்படுவோம்," என்று அவர் மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: எலிமினேட்டர் சுற்றுப் போட்டி மழையால் ரத்து... 2-ஆவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது கோவை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-eliminator-match-abandoned</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-eliminator-match-abandoned#comments</comments><guid isPermaLink="false">f9a306b3-7c23-4ed3-8199-6372ddb2ee6f</guid><pubDate>Mon, 24 Aug 2026 20:42:41 +0000</pubDate><atom:updated>2026-08-24T20:42:41.245Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,கோவை கிங்ஸ்,Tiruppur Tamizhans,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/2fdrajfx/TNPL-Eliminator.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL Eliminator]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/2fdrajfx/TNPL-Eliminator.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> 2026 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு கோவை கிங்ஸ் அணி முன்னேறியது.</p><p>8 அணிகள் பங்கேற்ற 10-வது டி.என்.பி.எல். <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தொடரின் தற்போதைய இறுதிக்கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.</p><h2>இறுதிப்போட்டியில் மதுரை:</h2><p>இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள டி.என்.பி.எல். தொடரில், புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. இதில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்று போட்டியில் மதுரை மற்றும் திருச்சி அணிகள் மோதின. இந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் மதுரை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.</p><p>இதைத் தொடர்ந்து நேற்று இரவு எலிமினேட்டர் சுற்று போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 3 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 15 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.</p><h2>மழையால் கைவிடப்பட்டது:</h2><p>இதனால் ஆட்டம் தடைப்பட்டது. இதனை தொடர்ந்து போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர் மழையால் காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எலிமினேட்டர் சுற்று போட்டியும் கைவிடப்பட்டதால், புள்ளிகள் பட்டியல் அடிப்படையில் கோவை கிங்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது.</p><p>இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில், கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி நாளை (ஆகஸ்ட் 26) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.</p>]]></content:encoded></item><item><title>ரஷ்ய அதிபர் புதினுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ச்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/topnews/s-jaishankar-meets-putin-in-moscow</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/s-jaishankar-meets-putin-in-moscow#comments</comments><guid isPermaLink="false">61e4f852-66f1-4760-9e85-97ad439badb3</guid><pubDate>Mon, 24 Aug 2026 19:18:15 +0000</pubDate><atom:updated>2026-08-24T19:18:15.272Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,விளாடிமிர் புதின்,Vladimir Putin,ரஷ்யா,S Jaishankar,ஜெய்சங்கர்</media:keywords><media:content height="454" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mjsh3pj5/S-Jai-shankar-met-Vladimir-Putin" width="680"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ S Jai shankar met Vladimir Putin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mjsh3pj5/S-Jai-shankar-met-Vladimir-Putin?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உலகம் (World)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். வர்த்தகம், எரிசக்தி, உரங்கள் மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பு போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி, இரு தரப்பினரும் பொருளாதார உறவுகள் குறித்து விவாதித்தனர்.</p><p>அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக புதின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோ சென்றடைந்தார்.</p><p>நல்ல அறிக்கை:</p><p>இந்தியாவும் ரஷ்யாவும் தங்களது பொருளாதார ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் முற்படுவதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.</p><p>இரு தரப்பினரும் இன்று காலை அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் கூட்டத்தை நடத்தியதாகவும், தங்களது பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஒரு 'நல்ல அறிக்கை' கிடைத்ததாகவும் ஜெய்சங்கர் கூறினார்.</p><p>"நமது பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், எரிசக்தி, உரங்கள், அணுசக்தி மற்றும் பிற பரிமாணங்கள் குறித்து நான் விரிவாகப் பேச விரும்புகிறேன். ஒட்டுமொத்தமாக, நமது பொருளாதார ஒத்துழைப்பு மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது என்று நான் கருதுகிறேன்," என வெளியுறவு அமைச்சர் கூறினார்.</p><p>விநியோகம் அதிகரிப்பு:</p><p>இந்தியாவுக்கான உர விநியோகத்தை ரஷ்யா அதிகரித்து வருவதாகவும், அதை தொடர தயாராக இருப்பதாகவும் புதின் கூறியதாக அரசுக்கு சொந்தமான டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>"இந்திய விவசாயிகள் மற்றும் விவசாய துறையின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதற்கும், இந்த விநியோகங்களை அதிகரிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம், மேலும் அவ்வாறே தொடர்ந்து செய்ய தயாராக இருக்கிறோம்," என்று புதின் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.</p><p>"இந்த ஆண்டு நமது வர்த்தகம் அதிகரித்திருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு அது சற்று சரிந்திருந்தது, ஆனால் இந்த ஆண்டு வளர்ந்து வருகிறது," என்று புதின் கூறியதாக அந்த செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.</p><p>இந்திய பிரதமர் ஆவல்:</p><p>ரஷ்யாவும் இந்தியாவும் பல தசாப்தங்களாகக் கட்டியெழுப்பிய உறவுகளின் அளவை ஜெய்சங்கரின் பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும், இரு அரசாங்கங்கள், நாடாளுமன்றங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு நடைபெற்று வருகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளையும் ஒரு தனிப்பட்ட செய்தியையும் புதினிடம் தெரிவித்த ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் அவரை சந்திப்பதற்கும், பின்னர் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக இந்தியாவிற்கு அவரை வரவேற்பதற்கும் இந்திய பிரதமர் ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார்.</p><p>"பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் உங்களைச் சந்திப்பதையும், அதைத் தொடர்ந்து பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக உங்களை இந்தியாவிற்கு வரவேற்பதையும், உரிய காலத்தில் உங்கள் இருவரின் பரஸ்பர வசதிக்கேற்ப வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்துவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்," என்று ஜெய்சங்கர் கூறினார்.</p><p>2026-ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை கிர்கிஸ்தானில் நடைபெறுகிறது, அதேசமயம் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும். "எனவே, மாண்புமிகு அவர்களே, ஒத்துழைப்பின் மிகவும் வலுவான ஒரு சித்திரம் நம்மிடம் இருப்பதாக நான் கருதுகிறேன்," என்று இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மூக்குத்தி அம்மன் 2 திரையரங்க வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கும் நயன்தாரா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nayanthara-expects-mookuthi-amman-2-theatrical-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nayanthara-expects-mookuthi-amman-2-theatrical-release#comments</comments><guid isPermaLink="false">7ad88033-51d9-4644-aa83-c554f151ec56</guid><pubDate>Mon, 24 Aug 2026 18:27:26 +0000</pubDate><atom:updated>2026-08-24T18:27:26.965Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயன்தாரா,Nayanthara,Sundar C,சுந்தர் சி,Mookuthi Amman 2,மூக்குத்தி அம்மன் 2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sr6589k9/nayanthara-mookuthi-amman-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ nayanthara mookuthi amman 2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sr6589k9/nayanthara-mookuthi-amman-2.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nayanthara">நயன்தாரா</a> நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் "மூக்குத்தி அம்மன் 2." இயக்குநர் சுந்தர் சி இயக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> முன்னணி ஓ.டி.டி. தளங்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. </p><h2>ஓ.டி.டி. வெளியீடு:</h2><p>மேலும், பல முன்னணி ஓ.டி.டி. நிறுவனங்கள் இந்தப் படத்தை வாங்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் படத்தை சுற்றிய எதிர்பார்ப்புக்கு வலுவான சான்றாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருவதால், திரையரங்க அனுபவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. </p><p>மேலும், இப்படத்தை பெரிய திரையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு மிகுந்த ஆர்வம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.</p><p>நடிகை நயன்தாராவும், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மற்றும் உற்சாகமான மைல்கல்லாக இருக்கும் என்று அவர் எண்ணுவதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>மறக்க முடியாத அனுபவம்:</h2><p>இப்படத்தில் பொழுதுபோக்கு, பிரம்மாண்டம் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால், இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என்றும், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகக்கூடும் என்றும் திரையுலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும், இயக்குநர் சுந்தர் சி, மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்கு, பிரம்மாண்டம் மற்றும் காட்சியமைப்பின் பிரம்மாண்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து உருவாக்கியுள்ளார். </p><p>இந்தப் படத்தை திரையரங்குகளில் கொண்டு வருவதில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும், ஃபேண்டசி, நகைச்சுவை, உணர்வு மற்றும் பிரம்மாண்ட கதைசொல்லல் ஆகியவற்றின் கலவையானது ரசிகர்களிடம் வலுவாக சென்றடையும் என்று அவர் நம்புவதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வக்பு வாரிய விவகாரம்: மணிப்பூரில் வலுக்கும் போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board</link><comments>https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board#comments</comments><guid isPermaLink="false">cdaaf527-b050-4ff2-9e55-eacd65d369cd</guid><pubDate>Mon, 24 Aug 2026 17:28:32 +0000</pubDate><atom:updated>2026-08-24T17:28:32.180Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Waqf Board,போராட்டம்,manipur,மணிப்பூர்,வக்பு வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r8upqi8b/Manipur-Protests.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manipur Protests]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r8upqi8b/Manipur-Protests.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதிதாக அமைக்கப்பட்ட 8-ஆவது <a href="https://www.maalaimalar.com/news/national">மணிப்பூர்</a> வக்பு வாரிய குழுவில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதை கண்டித்து, மணிப்பூர் முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/protest">போராட்டம்</a> தீவிரமடைந்தது. கடந்த மூன்று நாட்களாக சோரா, லிலோங் மற்றும் க்ஷேத்ரிகாவ் ஆகிய இடங்களில் பேரணிகள் நடைபெற்றன.</p><p>இந்த பேரணி, முதலமைச்சர் யும்னம் கேம்சந்த் சிங்கை மெய்தி பங்கல் சமூக பிரதிநிதிகளை சந்தித்து, வக்பு வாரியத்தின் அமைப்பு குறித்த அவர்களின் கவலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்க வலியுறுத்தி நடத்தப்பட்டது.</p><h2>முதல் பேரணி:</h2><p>மணிப்பூரின் 8-ஆவது வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை சேர்ப்பதற்கு எதிரான கூட்டு குழு (JCAINMM-WB), முஸ்லிம் அமைப்புகள், உள்ளூர் மன்றங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களுடன் இணைந்து சமீபத்திய போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. மாநிலம் தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, முதல் பேரணி ஆகஸ்ட் 20 அன்று காக்சிங் மாவட்டத்தின் சோராவில் நடைபெற்றது.</p><p>கூட்டுக் குழு, அஞ்சுமன் நஸ்ருல் இஸ்லாம் சோரா, அனைத்து சோரா கிளப்களின் ஒருங்கிணைப்பு குழு, சோரா, பூண்ட்ரே மற்றும் கீராக் ஆகிய ஜமியத்துல் உலமா கிளைகள் மற்றும் கீராக் மக்கா சமூக நலக் கழகம் ஆகியவை இணைந்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்தன.</p><p>முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் பெருந்திரளான மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.</p><h2>ரத்து செய்ய கோரிக்கை:</h2><p>கூட்டத்தில் உரையாற்றிய ஜமியத்-உல்-உலமா சோரா கிளை தலைவர் எம்.எல். சுல்பிகார் ஆலம் ஷேக், வக்பு வாரியத்தை முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு முக்கியமான நிறுவனம் என்று விவரித்ததோடு, முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை சேர்க்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.</p><p>கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க தவறினால், மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பு தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) புதுப்பிப்பதற்கும் ஷேக் ஆதரவு தெரிவித்தார்.</p><p>கூட்டுக் குழுவின் தலைவர் எம்.வி. அத்தாவுர் ரஹ்மான், முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக முஸ்லிம் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>மும்பை கடத்தலில் மீட்கப்பட்ட 216 ஆமைகள் - வனவிலங்கு காப்பகத்தில் மீள்குடியேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/216-tortoises-rescued-from-mumbai-trafficking-rewilded-in-tadoba</link><comments>https://www.maalaimalar.com/news/national/216-tortoises-rescued-from-mumbai-trafficking-rewilded-in-tadoba#comments</comments><guid isPermaLink="false">ca070cb7-6ab6-425c-909e-4472cef185d4</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:33:22 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:33:22.270Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,ஆமை,tortoise,Star Tortoise,நட்சத்திர ஆமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b90vm5tt/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 216 trafficked star tortoises rescued from Mumbai ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b90vm5tt/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் வனவிலங்கு பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய நடவடிக்கையாக, மும்பை மற்றும் தானே பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்திய நட்சத்திர ஆமைகள் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் (TATR) பத்திரமாக மீள்குடியேற்றப்பட்டன.</p><p>கடத்தப்பட்ட ஊர்வனவற்றை அவற்றின் இயற்கை வாழ்விடங்களுக்கு மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட வனத்துறை மற்றும் RAWW-இன் பிரத்யேக முயற்சியான, 'திட்டம் ஸ்ட்ரைப்ஸ்' (Project STRIPES - Star Tortoise Repatriation Initiative Protecting Endangered Species) அதிகாரப்பூர்வ தொடக்கத்தை ஒட்டி இந்த மாபெரும் மீள்குடியேற்றம் நடைபெற்றது.</p><p>இதுகுறித்து ரெஸ்கிங்க் வனவிலங்கு நலச் சங்கத்தின் (RAWW) நிறுவனரும், மாநில வனத்துறையின் கௌரவ வனவிலங்கு காப்பாளருமான பவன் சர்மா கூறுகையில், “மும்பை மற்றும் எம்.எம்.ஆர் பகுதிகளில் தொடர்ந்து மீட்கப்பட்டு, கைப்பற்றப்படும் நட்சத்திர ஆமைகளின் தொடர்ச்சியான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>இதன் மூலம், அவற்றை ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் அறிவியல் பூர்வமாக நிர்வகிக்கப்படும் கட்டமைப்பின் கீழ், குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுவாழ்வு பயிற்சிக்காக அவற்றின் இயற்கை வாழ்விடத்தில் மீண்டும் அறிமுகப்படுத்த முடியும்.</p><p>வனவிலங்கு நிபுணர்கள் மற்றும் மகாராஷ்டிர வனத்துறையின் மும்பை சரகம் மற்றும் RAWW-ஐச் சேர்ந்த பணியாளர்களை உள்ளடக்கிய, 10 பேர் கொண்ட கூட்டுக்குழுவால் இந்த வெற்றிகரமான நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது.</p><p>இந்த முழுப் பணியும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (PCCF) மற்றும் தலைமை வனவிலங்கு பாதுகாவலர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.</p><p>மேலும், தானே நகரத்தை சேர்ந்த துணை வனப் பாதுகாவலர், தானே உதவி வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறையின் பிராந்தியப் பிரிவின் சரக வன அதிகாரி (மும்பை) ஆகியோர் முன்னிலையில் இது மேற்பார்வையிடப்பட்டது.</p><p>சட்டவிரோத வனவிலங்கு கடத்தலுக்கு எதிரான பல்வேறு சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் போதும், மும்பை மற்றும் தானே பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி மீட்பு நடவடிக்கைகளின் போதும் இந்த 216 ஆமைகள் முன்னதாகப் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>இவற்றில் 150 நட்சத்திர ஆமைகள் RAWW-இன் மறுவாழ்வு மற்றும் பராமரிப்பில் இருந்தன. மீதமுள்ளவை, வனத்துறையின் தானே TTC (இடைநிலை சிகிச்சை மையம்), TCPCA, PAWS மற்றும் WWA ஆகியவற்றின் வசம் இருந்தன.</p><p>அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அந்த ஊர்வன RAWW-இன் சிறப்பு வனவிலங்கு ஆம்புலன்ஸ் மூலம் 800 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.</p><p>மெத்தைகள் வைக்கப்பட்ட, காற்றோட்ட வசதியுள்ள வண்டிகளில் அவைகள் கொண்டு செல்லப்பட்டன; அப்போது, அவர்களின் உடல்நலம் மற்றும் நீரேற்ற அளவுகளை கண்காணிப்பதற்காக, போக்குவரத்து குழுவினர் திட்டமிட்டபடி சீரான இடைவெளியில் நிறுத்தங்களை மேற்கொண்டனர்.</p><p>தடோபா காப்பகத்திற்கு வந்தடைந்ததும், அந்த ஆமைகளுக்கு ஒரு விரிவான மருத்துவ மறுபரிசோதனையும், ஓர் இரவு ஓய்வும் அளிக்கப்பட்டது.</p><p>கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அவற்றின் நீண்டகால இனப்பெருக்க நிலைத்தன்மையை ஆதரிக்கும் வகையில், அறிவியல் பூர்வமாக கணக்கிடப்பட்ட ஆண்-பெண் விகிதத்துடன், அவை தொகுதி தொகுதியாக நியமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் விடுவிக்கப்பட்டன.</p><p>இந்த வெற்றிகரமான மறுவாழ்வு, வனவிலங்கு குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும், சட்டவிரோத செல்லப்பிராணி வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெற்றிகரமாக மீண்டும் காட்டுக்குள் மீள்குடியேற்றப்படுவதை உறுதி செய்வதிலும் மாநில வனத்துறையின் தீவிரமான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மைதானத்தில் மோதிக் கொண்ட ஜெய்ஸ்வால்- பெர்னாண்டோ: அபராதம் விதித்தது ஐசிசி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/jaiswal-fernando-slapped-with-fines-after-on-field-altercation</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/jaiswal-fernando-slapped-with-fines-after-on-field-altercation#comments</comments><guid isPermaLink="false">f6871bc9-ed08-4af0-b0a3-6ea6906e38fb</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:27:56 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:27:56.288Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>jaiswal,ஜெய்ஸ்வால்,ICC,Colombo Test,கொழும்பு டெஸ்ட்,IND vs SL</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7rcu8yjf/INDvsSL.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜெய்ஸ்வால்- அசிதா பெர்னாண்டோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7rcu8yjf/INDvsSL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொழும்பில் நடைபெற்ற போட்டியில் ஜெய்ஸ்வால் 45 ரன்களில் ஆட்டமிழக்கும்போது சண்டை ஏற்பட்டது.</p><p>இந்தியா- இலங்கை இடையில் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால், அசிதா பெரனாண்டஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததும், பெர்னாண்டோ சக வீரரகளுடன் வெறுப்பேற்றும் வகையில் விக்கெட் வீழந்ததை கொண்டாடினார். இதனால் ஜெய்ஸ்வால்ஸ் பெர்னாண்டோவை நோக்கி சண்டையிடுவது போல் சென்று மோதிக் கொண்டார்.</p><p>இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சக வீரர்கள் பெர்னாண்டோவை சமாதானம் செய்தனர். இது தொடர்பாக ஐசிசி விசாரணை மேற்கொண்டு இருவருக்கும் போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்தது. பின்னர், போட்டிக்கு தடைவிதிப்பதற்கான புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-sardar-2-releases-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-sardar-2-releases-tomorrow#comments</comments><guid isPermaLink="false">55ea5129-2ba6-4858-9909-b3e115300206</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:25:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:25:34.663Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthi,கார்த்தி,Sam CS,Sardar 2,சர்தார் 2,சாம் சிஎஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r527pn3m/New-Project-2026-08-24T215044.019.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r527pn3m/New-Project-2026-08-24T215044.019.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடலான ‘மயில்வீரா’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p><p>2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், அதன் இரண்டாம் பாகம் ‘சர்தார் 2’ உருவாகி உள்ளது. இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் பி.எஸ்.மித்ரனே இயக்கியுள்ளார். </p><p>எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், வி.டி.வி கணேஷ் ஆகியோ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் படத்தை தயாரித்துள்ளன. </p><p>சாம் சி.எஸ். படத்திற்கு இசையமைத்துள்ளார். இது சாம் சி.எஸ். இசையமைக்கும் 100வது படம் எனக்கூறப்படுகிறது. படம் செப்.10ம் தேதி வெளியாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>குப்பை கிடங்கை சீர்படுத்தும் பயோ மைனிங் திட்டத்திற்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/partial-clearance-for-15000-mt-theonar-legacy-waste-biomining-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/partial-clearance-for-15000-mt-theonar-legacy-waste-biomining-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">52b2cc11-b277-4676-9920-151d74fe0653</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:04:51 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:04:51.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,waste management,திடக்கழிவு மேலாண்மை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jcgcr2a9/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Waste Management]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jcgcr2a9/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தியோனார் பழைய கழிவு உயிரிச் சுரங்கத் திட்டம் செயல்படுவதற்கான பகுதி அனுமதியை வழங்கியுள்ளது.</p><p>இந்த ஒப்புதலானது ஒரு நாளைக்கு 15,000 மெட்ரிக் டன்கள் என்ற அனுமதிக்கப்பட்ட கொள்ளளவிலான உயிரிச் சுரங்கச் செயல்பாடுகளை உள்ளடக்கியது. </p><p>மேலும் இது, தியோனாரில் ஏறத்தாழ 110 ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்கும் பெரும் நோக்கத்துடன், சுமார் 185 லட்சம் டன்கள் அளவிலான கழிவுகளை அறிவியல் ரீதியாக சுத்திகரிக்க உள்ளது.</p><p>மும்பையில் தினந்தோறும் சுமார் 7,000 மெட்ரிக் டன்கள் திடக்கழிவுகள் உருவாகின்றன. உயிரிச் சுரங்க செயல்முறையின் மூலம் தேங்கியுள்ள கழிவுகள் பல்வேறு பயனுள்ள மற்றும் எஞ்சிய கூறுகளாகப் பிரிக்கப்படும்.</p><p>இவற்றில் கழிவுவழி எரி பொருள் (RDF), பதப்படுத்தப்பட்ட உரம், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் ஆகியவை அடங்கும்.</p><p>மீட்கப்பட்ட பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகங்கள், கந்தல் துணிகள் மற்றும் துணி போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சிக்கு அனுப்பப்படும்.</p><p>அதே சமயம் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை சாலைகள் அமைத்தல் பணிகளுக்கும், RDF அலகுகள் அல்லது சிமெண்ட் ஆலைகளுக்கு பணிகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.</p><p>மண் போன்ற துகள்கள் மற்றும் மண் சார்ந்த கூறுகள் நில வடிவமைப்பு, தோட்டக்கலை, சாலை நடுப்பகுதிகள் மற்றும் பசுமைப் பகுதிகளை மேம்படுத்துவதற்கும் இந்த கழிவுகள் பயன்படுத்தப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>32 ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய ஜெர்மன் புறா: தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/german-war-pigeon-kaiser-32-years-of-us-military-service</link><comments>https://www.maalaimalar.com/news/world/german-war-pigeon-kaiser-32-years-of-us-military-service#comments</comments><guid isPermaLink="false">954befaf-99e0-4773-a9c0-198ff0d5f598</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:58:30 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:58:30.273Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>புறா,Pigeon,kaiser,german pigeon,கைசர்,அமெரிக்க புறா,ஜெர்மானிய புறா,american pigeon</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ryx2d97j/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Military Pigeon Kaiser Honored]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ryx2d97j/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் உள்ள ஒரு தேசிய அருங்காட்சியகத்தில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது அமெரிக்க ராணுவத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் நாட்டை சேர்ந்த புறாவின் எச்சங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. </p><p>முதலாம் உலகப் போருக்கு முன்பு 1917-ஆம் ஆண்டு கைசர் என்ற குஞ்சு புறா ஒன்று ஜெர்மனியில் பொறிக்கப்பட்டது.</p><p>பிறந்து ஐந்து நாட்களே ஆன அந்த புறாவின் இடது காலில் ஒரு அலுமினிய அடையாள வளையம் பொருத்தப்பட்டது. அந்த சிறிய வளையத்தில் ஜெர்மானியப் பேரரசின் மகுடமும், 17-0350-47 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் இரண்டு இலக்கங்கள் அது பிறந்த ஆண்டைக் குறித்தன.</p><p>இதையடுத்து சுமார் ஆறு வாரமான கைசர் புறா, ஜெர்மானிய பேரரசின் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>முதலாம் உலகப் போரின் போது, ராணுவத் தகவல் தொடர்புகளில் புறாக்கள் ஒரு முக்கிய அங்கமாக மாறியிருந்தன. குறிப்பாக பீரங்கித் தாக்குதலால் சாதாரண தகவல் தொடர்பு முறைகள் செயலிழக்கச் செய்யப்படக்கூடிய இடங்களில் இது முக்கியத்துவம் பெற்றது.</p><p>பயிற்சி பெற்ற கைசர் புறா சாலை, கம்பி மற்றும் போர்க்களத்தின் வழியே பாதை இல்லாத பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஒரு சிறிய செய்தியை திரும்பக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. இந்த பணிக்காக கைசர் பயிற்சி பெற்று, இறுதியில் வடக்கு பிரான்சில் உள்ள ஜெர்மானிய நிலைகளுக்கு இடையே தூது பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.</p><p>1917 ஏப்ரலில் அமெரிக்கா போர் செய்த போது, அமெரிக்க ராணுவம் தனது சொந்த புறா சேவையை உருவாக்கத் தொடங்கியது.</p><p>1918 செப்டம்பரில் நடந்த மியூஸ்-ஆர்கோன் தாக்குதலின்போது, நூற்றுக்கணக்கான அமெரிக்க ராணுவப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன.</p><p>சண்டை நடக்கும் இடங்களுக்கு அருகில் இயங்கிய படைப்பிரிவுகளிடமிருந்து செய்திகளை இந்தப் புறாக்கள் கொண்டு சென்றன. வழக்கமான தகவல் தொடர்பு முறைகள் தோல்வி அடைந்தபோது, இவை தளபதிகளுக்கு மற்றொரு தகவல் தொடர்பு வழியை வழங்கின.</p><p>28-வது காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த அமெரிக்க வீரர்கள் ஆர்கோன் காட்டில் இருந்த ஒரு ஜெர்மானிய புதைக் கிடங்கை கைப்பற்றினர். அங்கு கைவிடப்பட்டிருந்த உபகரணங்களில், 10 ஜெர்மானியப் புறாக்கள் இருந்த ஒரு கூடையில் கைசர் புறாவும் இருந்தது.</p><p>1918 நவம்பர் 11 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, கைசர் புறாவை அமெரிக்க ராணுவம் தாயகம் கொண்டு வந்தது. 1919-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி, மேலும் 21 ஜெர்மானியப் புறாக்கள் போக்குவரத்துக் கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு வந்தடைந்தது.</p><p>கைசர் புறா இறுதியில் நியூ ஜெர்சியில் உள்ள சிக்னல் கார்ப்ஸ் புறா மையத்திற்கு மாற்றப்பட்டு, அமெரிக்க ராணுவத்திற்காகப் புறாக்களை இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது.</p><p>1930-களில் முதலாம் உலகப் போரிலிருந்து அமெரிக்க ராணுவத்திடம் எஞ்சியிருந்த கடைசி ஜெர்மானியப் புறாவாக கைசர் இருந்தது. பின்னர் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நுழைந்தபோது, கைசரின் வம்சாவளியைச் சேர்ந்த புறாக்கள் ஐரோப்பாவிலும் பசிபிக்கிலும் ராணுவ சேவைக்கு அனுப்பப்பட்டன.</p><p>கைசர் புறா ராணுவ பணிகளுக்கு பயன்படுத்தப்பட முடியாமல் மிகவும் வயதானைதை தொடர்ந்து, அது மிசோரியில் உள்ள கேம்ப் க்ரௌடருக்கு மாற்றப்பட்டது. அங்கு ராணுவம் தனது புறா இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி மையத்தை இயக்கியது.</p><p>1945-ஆம் ஆண்டிற்குள், கைசர் புறா ராணுவத்திற்காக 75-க்கும் மேற்பட்ட பறவைகளை உருவாக்கியிருந்தது.</p><p>கைசர் 31-வது வயதின் போது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஃபோர்ட் மாகாணத்திற்கு திருப்பி அனுப்பபட்டது.</p><p>அந்த ஆண்டின் பிற்பகுதியில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்கன் லீஜியன் குழு, கைசர் ஆற்றிய சேவைக்காக கெளரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டது.</p><p>கைசர் புறாவுக்காக ஒரு சிறப்பு கால்பட்டை உருவாக்கப்பட்டு, அதில் அதனது பெயரும் அந்தப் பிரிவின் 667 என்ற குறியீடும் பொறிக்கப்பட்டன.</p><p>ஜெர்மானிய ராணுவ அடையாள எண்ணைத் தாங்கி தன் வாழ்வைத் தொடங்கிய ஒரு புறாவுக்கு, அது ஓர் அசாதாரணமான இரண்டாவது அடையாளமாக இருந்தது.</p><p>1949 ஜனவரி 20 அன்று ஜனாதிபதி ஹாரி ட்ரூமனின் பதவியேற்பு விழாவிற்காக அது வாஷிங்டனுக்கு பயணம் செய்தது. அங்கு ஜி.ஐ. ஜோ மற்றும் ஜங்கிள் ஜோ என்ற மற்ற இரண்டு புகழ்பெற்ற ராணுவப் புறாக்களுடன், சிக்னல் கார்ப்ஸ் கண்காட்சியின் ஒரு பகுதியாக கைசர் தோன்றியது.</p><p>அதே ஆண்டு ஹாலோவீன் இரவில் ஃபோர்ட் மான்மவுத்தில் கைசர் புறா 32 வயதில் இறந்தது. அதன் பெயருக்குக் காரணமான ஜெர்மானியப் பேரரசரை விடவும், முதலாம் உலகப் போரில் பணியாற்றியதாக அறியப்பட்ட மற்ற அனைத்து புறாக்களை விடவும் கைசர் புறா அதிக காலம் வாழ்ந்திருந்தது.</p><p>அதன் ராணுவ சேவையானது, செய்திகளைக் கொண்டு செல்வதிலிருந்து அடுத்த தலைமுறை ராணுவப் புறாக்களை உருவாக்குவதற்கு அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது.</p><p>1957-ல் அமெரிக்க ராணுவம் தனது புறா சேவையை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, கைசரின் வழித்தோன்றல்களான பறவைகள் பொதுமக்களுக்கு விற்கப்பட்டன.</p><p>ராணுவத்தின் புறா திட்டம் மூடப்பட்டதால் கைசரின் குடும்ப வம்சம் அழிந்துவிடவில்லை. பந்தயத்திற்காக வளர்க்கப்பட்ட பறவைகள் உட்பட, அதன் வழித்தோன்றல்கள் தனியார் புறாக்கூடுகளில் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item></channel></rss>