<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 12 Aug 2026 03:52:28 +0000</lastBuildDate><item><title>ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த லாவா</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/lava-smart-4-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/lava-smart-4-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">3248a9fb-f77d-443c-8752-e28a736eb6ba</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:48:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>LAVA,லாவா,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m4vcuim2/Lava-Smart-4.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lava Smart 4]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m4vcuim2/Lava-Smart-4.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/technology">லாவா</a> நிறுவனம் விராட் வி1 மற்றும் விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சில வாரங்களில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வருகிறது. ஸ்மார்ட் 4 என அழைக்கப்படும் புதிய <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> 6.59 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.</p><p>அளவில் சற்றே சிறியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் லாவா ஸ்மார்ட் 4 மாடல் முதல் முறை ஸ்மார்ட்போன் வாங்குவோர் மற்றும் இரண்டாவது ஸ்மார்ட்போனாக பயன்படுத்த விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது குறுந்தகவல் மற்றும் அழைப்புகள் போன்ற அடிப்படை பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p> <h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>லாவா ஸ்மார்ட் 4 மாடலில் 6.59 இன்ச் எல்.சி.டி. பேனல் கொண்ட டிஸ்ப்ளே, qHD ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் SC9863A சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 28 மில்லிமீட்டர் பிராசஸர் யூனிட் ஆகும். இதே பிராசஸர் தான் லாவா விராட் வி1 4ஜி மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது. அழைப்புகள், குறுந்தகவல், பிரவுசிங் என அடிப்படை பயன்பாடுகளுக்கு இந்த சிப்செட் ஏற்றதாக இருக்கும்.</p><p>புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 கோ எடிஷன் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. இது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களில் சீரான அனுபவத்தை வழங்குவதில் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய லாவா ஸ்மார்ட் 4 மாடல் MIL-STD-810H தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றிருக்கிறது. இதில் உள்ள டூயல் சிம் ஸ்லாட் கொண்டு பயனர்கள் ஒரே நேரத்தில் இரு 4ஜி சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும்.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய லாவா ஸ்மார்ட் 4 மாடலின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கொனார்க் கோல்டு மற்றும் அஜந்தா கிரே என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>அருகாமையில் வசிப்பவர்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாமா?- நெடுஞ்சாலை ஆணையம் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/highways-authority-inform-can-nearby-residents-travel-through-toll-plazas-without-paying-a-fee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/highways-authority-inform-can-nearby-residents-travel-through-toll-plazas-without-paying-a-fee#comments</comments><guid isPermaLink="false">f1e92d79-c477-41ce-b5ed-d4aed1d21ded</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:46:20 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:46:20.572Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,National Highways Authority,Toll plaza,சுங்கச்சாவடி,கட்டணம்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/7m0ie7mr/tollgate.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/7m0ie7mr/tollgate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுங்கச்சாவடிகளின் அருகாமையில் உள்ளவர்கள் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி பயணிக்கலாமா? என்பது குறித்து நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.</strong></em></p><h2><strong>சுங்கச்சாவடிகள்</strong></h2><p>தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் பங்களிப்புடன் சாலைகளை சீரமைத்து, அதற்கான கட்டணத்தை வாகன ஒட்டிகளிடம் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/சுங்கச்சாவடி">சுங்கச்சாவடி</a> மூலமாக வசூலித்து வருகிறது.</p><p>நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் கார், ஜீப், ஆட்டோ, பஸ், லாரி, டெம்போ உள்பட பல்வேறு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><h2><strong>கட்டணம் இன்றி...</strong></h2><p>இந்தநிலையில் சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி கடந்து செல்லலாம் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.</p><p>சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த தகவலுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.</p><h2><strong>உள்ளூர் மாதாந்திர பாஸ்</strong></h2><p>அதில் "தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், அடையாள அட்டையை காண்பித்தால் உள்ளூர் வாசிகள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்பது தவறான கருத்து. உள்ளூர்வாசிகளுக்கு கட்டணமில்லா பயணம் கிடையாது.</p><p>ஆனால் சுங்கச்சாவடிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக உள்ளூர் மாதாந்திர பாஸ் முறை நடைமுறையில் உள்ளது.</p><p>சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள். குறிப்பிட்ட அந்த சுங்கச்சாவடிக்கென அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படியே இந்த பாஸ்கள் வழங்கப்படுகின்றன. எனவே, அடையாள அட்டையை காண்பித்து கட்டணமில்லாமல் செல்லலாம் என்று கருத வேண்டாம். சலுகை பெற விரும்புவோர் அந்த சுங்கச்சாவடியின் விதிகளைப் பின்பற்றி முறைப்படி உள்ளூர் மாதாந்திர பாஸை பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தெலங்கானாவில் டேங்கர் லாரி மீது ஆட்டோ மோதி விபத்து- 6 கூலித் தொழிலாளர்கள் பலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/auto-crash-with-tanker-lorry-in-telangana-kills-six-workers</link><comments>https://www.maalaimalar.com/news/national/auto-crash-with-tanker-lorry-in-telangana-kills-six-workers#comments</comments><guid isPermaLink="false">94f59ff9-3428-4af7-ba84-a4c15571a608</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:37:43 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:37:43.728Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death,Telangana,lorry accident,லாரி விபத்து,தெலங்கானா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8fidlrnc/Accident.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8fidlrnc/Accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.</p><p>தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் சத்வார் கிராம பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.</p><p>அப்போது, அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலும் நசுங்கியது. மேலும் ஆட்டோவில் பயணித்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். </p><h2>கூலித் தொழிலாளர்கள்</h2><p>ஆட்டோவில் இருந்தவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் ராஜகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் இதில் உயிரிழந்தவர்களில் ரேகா, ஸ்ரீதேவி, கவிதா, ரேஷ்மா, நிகிதா மற்றும் தேவதாஸ் ஆகியோர் என்பது தெரியவந்தது. </p><p>வேலை முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 5 பெண்கள் உள்ளிட்ட 6 கூலித் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.</p><p>ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியதில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nia-raid-at-9-locations-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nia-raid-at-9-locations-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">051aa7c4-ff19-40c7-8048-391149c7a22d</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:03:56 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:03:56.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,போதைப்பொருள் கடத்தல்,Drug trafficking,NIA Raid,என்ஐஏ சோதனை,தமிழ்நாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/04/22/2097618-nia.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NIA Raid]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/04/22/2097618-nia.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வருகிறது.</strong></em></p><p>சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 9 இடங்களில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">தேசிய புலனாய்வு முகமை</a> அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.</p> <p>2024-ம் ஆண்டு அந்தமானில் போதைப்பொருட்கள் சிக்கிய வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பிடிபட்ட 7 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பர்மாவில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.</p><p>மியான்மரில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் - சட்டசபையில் இன்று தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-to-be-tabled-in-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-to-be-tabled-in-assembly-today#comments</comments><guid isPermaLink="false">e0228e91-0042-4d3e-95fb-e9223bdc030d</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:38:06 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:38:06.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tx5fkhcs/tnassembly.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Assembly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tx5fkhcs/tnassembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-answer-to-eps-speech-in-tn-assembly">தமிழக சட்டசபையில்</a> நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. </p><p>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வெளிநாட்டு நன்கொடை மசோதாவுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் நேற்று 2 தீர்மானங்கள் நிறைவேறின. இந்த மசோதாக்களுக்கு பா.ஜ.க. தவிர அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்தனர்.</p> <p>சட்டசபையில் இன்று இதுதொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.</p><p>நாடாளுமன்ற <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறைக்கு</a> எதிராக கடந்த 8-ந்தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க. புறக்கணித்தது.</p><p>இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.</p> <p>இந்நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிய இருக்கிறார். இதை வழிமொழிந்து எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள். ஏற்கனவே, தி.மு.க., அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த தீர்மானத்தின் மீது கடுமையான விவாதங்கள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா - மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebrations-5-layer-security-for-madurai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebrations-5-layer-security-for-madurai-airport#comments</comments><guid isPermaLink="false">5013d0c3-6eb1-46e4-9c2b-566ec9475475</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:17:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:17:38.674Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>madurai airport,மதுரை விமான நிலையம்,Independence Day,சுதந்திர தினவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/70wi82rw/maduraiairport.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madurai airport]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/70wi82rw/maduraiairport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 20-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.</strong></em></p> <h2>சுதந்திரதின விழா</h2><p>நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழா</a>, கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு <a href="https://www.maalaimalar.com/news/national/modi-urges-people-to-take-developed-india-pledge-on-i-day">மத்திய அரசின்</a> அறிவுறுத்தலின்பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன.</p><h2>மதுரை விமான நிலையம்</h2><p>மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை விமான நிலைய உள்வளாகம், விமான நிலைய ஓடுபாதை, விமான நிலைய சுற்றுப்புற கண்காணிப்பு கோபுரங்கள், விமான நிலைய வெளிவளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p> <h2>சோதனை</h2><p>24 மணி நேரமும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும், மோப்பநாய் படை பிரிவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடைமைகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.</p>  <h2>பார்வையாளர்களுக்கு தடை</h2><p>இதுதவிர விமான நிலையத்தின் வெளிப்பகுதிகளான பெருங்குடி, சின்ன உடைப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமான நிலையத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு வருகிற 20-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையே, மதுரை மாநகர பகுதியில் உள்ள விடுதிகள் சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோல, ரெயில் நிலையம், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கொலம்பியாவை உருக்குலைத்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 250-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/colombia-earthquake-death-toll-rises-to-250</link><comments>https://www.maalaimalar.com/news/world/colombia-earthquake-death-toll-rises-to-250#comments</comments><guid isPermaLink="false">0f9bf790-ff22-4bcf-a695-6ac5357cdcfd</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:04:37 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:04:37.318Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,கொலம்பியா,பலி எண்ணிக்கை உயர்வு,death toll raise,நிலநடுக்கம்,colombia earthquake</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/m0377h7v/colombia.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Colombia Earthquake]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/m0377h7v/colombia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொலம்பியாவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 254-ஆக உயர்ந்துள்ளது.</p><p>மேலும் 2,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 3,900-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>மேற்கு கொலம்பியாவின் சொகோ (Choco) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகருக்கு அருகே பூமிக்கு அடியில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.</p><p>தொடர்ந்து பல நில அதிர்வுகள் பதிவாகின. இந்த அதிர்வுகள் அண்டை நாடுகளான ஈக்வடார், பானமா மற்றும் வெனிசுவேலா வரையிலும் உணரப்பட்டன.</p><h2>கொலம்பியா நிலநடுக்க பாதிப்பு</h2><p>கொலம்பியாவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரமாகப் பெரேரா உருவெடுத்துள்ளது. இங்கு மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.</p><p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 3.900க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாகக் காளி (Cali) மற்றும் பெரேரா (Pereira) நகரங்களில் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். காளி பகுதியில் 95 பேரும், பெரேராவில் 101 பேரும் உயிரிழந்துள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்ட பிராந்தியம் முழுவதும் சுமார் 1600 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அதே நேரத்தில் கிட்டத்தட்ட 5,000 வீடுகள் நிலநடுக்கத்தின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.</p><p>நாட்டின் 5 முக்கியத் நகரங்களுக்கு இன்னமும் ரெட் அலர்ட் அமலில் உள்ளது.</p><h2>அவசர நிலை</h2><p>நிலநடுக்கம் குறித்து பேசிய கொலம்பியா அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரீல்லா கூற்றுப்படி,</p><p>நிலநடுக்கத்தால் 1,577 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அதில் 37 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.</p><p>60க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. 18 மருத்துவ மையங்கள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன. 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>நிலநடுக்கத்தின் பேரழிவைக் கருத்தில் கொண்டு கொலம்பியா அரசு தேசிய பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.</p><p>இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்க ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><p>காளி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் இடிந்து விழுந்துள்ளதால், அங்குப் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p><p>நகரின் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தூசிப் படலம் பரவியது. பயத்தில் மக்கள் வீடுகளின் மாடியிலிருந்து குதித்தும் தப்பிக்க முயன்றனர்.</p><p>பெரேரா நகரில் 4 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.</p><p>மேனிசேல்ஸ் நகரின் புகழ்பெற்ற நவதோதிக் கதீட்ரல் தேவாலயத்தின் பக்கவாட்டுக் கோபுரம் இடிந்து விழுந்தது.</p><h2>உதவி</h2><p>அவசரகால நிதியாக கொலம்பியாவுக்கு சுமார் ரூ.130 கோடி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><p>எல் சால்வடார் அதிபர் நயீப் புக்கேலே, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் மற்றும் சிலி அதிபர் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் ஆகிய லத்தீன் அமெரிக்க நாட்டுத் தலைவர்கள் கொலம்பியாவுக்கு தேவையான மருத்துவக் குழுக்கள், மீட்புப் படைகள் மற்றும் நிவாரணப் பொருட்களை உடனடியாக அனுப்பத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.</p><h2>வெனிசுலாவை தொடர்ந்து..</h2><p>அண்டை நாடான வெனிசுவேலாவில் கடந்த மாதம் ஜூன் 24 அன்று 7.2, 7.5 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி 6,301 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த சூழலில் தற்போது கொலம்பியாவில் 21ஆம் நூற்றாண்டின் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கம் இது. வெனிசுலாவில் 3.8 ரிக்டர் அளவு தற்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 12 ஆகஸ்ட் 2026: ஆடி அமாவாசை
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-12-august-2026-aadi-amavasai</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-12-august-2026-aadi-amavasai#comments</comments><guid isPermaLink="false">4a8a0c1e-ef1b-4eaa-be8a-65b5fa2b00db</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/914no0ei/tharpanam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tharpanam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/914no0ei/tharpanam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-27 (புதன்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  அமாவாசை நள்ளிரவு 12.16 மணி வரை பிறகு பிரதமை</p><p>நட்சத்திரம் :  பூசம் காலை 9.10 வரை பிறகு ஆயில்யம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>ஆடி அமாவாசை</h2><p>ஆடி அமாவாசை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதர்ப்பணபுரி கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்திர நாயகி சிவலிங்க பூஜை செய்தருளல். விருதுநகர் சமீபம் சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் புறப்பாடு. </p>  <p>திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - நலம்</p><p>ரிஷபம் - பொறுப்பு</p><p>மிதுனம் - லாபம்</p><p>கடகம் - போட்டி</p><p>சிம்மம் - நட்பு</p><p>கன்னி - ஆதரவு</p> <p>துலாம் - ஆக்கம்</p><p>விருச்சிகம் - உதவி</p><p>தனுசு - தேர்ச்சி</p><p>மகரம் - நன்மை</p><p>கும்பம் - புகழ்</p><p>மீனம் - முயற்சி</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 12.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கனவுகள் நனவாகும் நாள்...</title><link>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-12-8-2026</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-12-8-2026#comments</comments><guid isPermaLink="false">fdf53f96-9eb3-4c77-a741-04efab78a3a8</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:27:17 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:27:17.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rasipalan,Daily Rasipalan,ராசி பலன்,இன்றைய ராசி பலன்கள்,Todays rasipalan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-06/tfs7454t/astrology.jpg.jpeg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Rasi palan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-06/tfs7454t/astrology.jpg.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>நட்பால் நன்மை ஏற்படும் நாள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் நல்ல காரியம் விரைவாக நடைபெறும்.</p><h2>மிதுனம்</h2><p>எதிரிகள் விலகும் நாள். சுபகாரியப் பேச்சு முடிவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.</p><h2>கடகம்</h2><p>குடும்பச்சுமை கூடும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.</p><h2>சிம்மம்</h2><p>விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. வாகனப் பராமரிப்புச் செலவுகளால் வாட்டம் ஏற்படும்.</p><h2>கன்னி</h2><p>கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக 2 இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.</p><h2>துலாம்</h2><p>தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விட்டு விலகும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும்.</p><h2>விருச்சிகம்</h2><p>கனவுகள் நனவாகும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.</p><h2>தனுசு</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினை ஏற்படும்.</p><h2>மகரம்</h2><p>நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.</p><h2>கும்பம்</h2><p>ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.</p><h2>மீனம்</h2><p>பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் கிட்டும். பூர்வீக சொத்தை விற்றுப் புதிய சொத்தை வாங்குவீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai-2#comments</comments><guid isPermaLink="false">cdda8f51-b7f7-449a-9059-e7eb3d387a7a</guid><pubDate>Wed, 12 Aug 2026 01:04:18 +0000</pubDate><atom:updated>2026-08-12T01:04:18.609Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் டீசல் விலை,Petrol Diesel Price,டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zqvhuwkk/tn-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, diesel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zqvhuwkk/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (12.08.2026 - செய்வ்வாய்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.74-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 89.24 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்-ஐ மணந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ</title><link>https://www.maalaimalar.com/sports/cristiano-ronaldo-marries-georgina-rodriguez-after-years-of-wedding-speculation</link><comments>https://www.maalaimalar.com/sports/cristiano-ronaldo-marries-georgina-rodriguez-after-years-of-wedding-speculation#comments</comments><guid isPermaLink="false">75e2a948-1012-4e65-a619-74ffc0b9bf2e</guid><pubDate>Wed, 12 Aug 2026 00:33:54 +0000</pubDate><atom:updated>2026-08-12T00:33:54.773Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Cristiano Ronaldo,கிறிஸ்டியானோ ரொனால்டோ,georgina Rodriguez,ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/cbs78xy1/Cristiano-Ronaldo-and-Georgina-Rodr%C3%ADguez-married.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cristiano Ronaldo - Georgina Rodriguez]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/cbs78xy1/Cristiano-Ronaldo-and-Georgina-Rodr%C3%ADguez-married.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/cristiano-ronaldo">கிறிஸ்டியானோ ரொனால்டோ</a> மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் போர்ச்சுகலில் நடந்த ஒரு விழாவில் திருமணம் செய்துகொண்டு, தங்களின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உறவை இறுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். போர்ச்சுகல் <a href="https://www.maalaimalar.com/sports/football">கால்பந்து</a> சூப்பர் ஸ்டாரும் அவரது நீண்டகால காதலியும், தங்களின் திருமண மோதிரங்களின் ஒரு எளிய புகைப்படம் மூலம் மட்டுமே இந்தச் செய்தியை பகிர்ந்துகொண்டனர்.</p><p>போர்ச்சுக்கல் மற்றும் அல் நஸ்ர் அணியின் முன்கள வீரரான 41 வயதான ரொனால்டோவும், 32 வயதான ஸ்பெயின் மாடல் ரோட்ரிக்ஸும், ஆகஸ்ட் 11 அன்று காஸ்காய்ஸில் தங்களது ஐந்து பிள்ளைகள் முன்னிலையில் ஒரு விழாவில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், இந்த தம்பதியினர் திருமண மோதிரங்கள் அணிந்த தங்கள் கைகளின் புகைப்படத்தை பகிர்ந்துகொண்டனர்.</p><h2>முற்றுப்புள்ளி:</h2><p>இருவரின் விரல்களிலும் மோதிரங்களைக் கண்ட பிறகு ரசிகர்கள் ஊகித்து வந்ததை அந்தப் பதிவு திறம்பட உறுதி செய்தது. இத்தாலிய கால்பந்து பத்திரிகையாளர் ஃபேப்ரிசியோ ரொமானோவும் இந்த திருமணத்தை உறுதிப்படுத்தினார். இதன் மூலம், அந்த தம்பதியினர் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்பது குறித்த பல மாத கால நிச்சயமற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.</p><p>சுவாரஸ்யமாக, அந்தத் தம்பதியரின் உண்மையான திருமணம், சற்று வேடிக்கையான ஒரு தவறான அறிவிப்புக்குப் பிறகே நடைபெற்றது.</p><h2>எதிர்பார்க்கவில்லை:</h2><p>ரோட்ரிக்ஸின் நெட்ஃபிளிக்ஸ் தொடரான ​​'ஐ ஆம் ஜார்ஜினா'வில், தங்களது உறவு இவ்வளவு தீவிரமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை என ரொனால்டோ ஒப்புக்கொண்டார்.</p><p>இது குறித்து பேசும் போது, "ஆரம்பத்தில் இது இவ்வளவு வலுவாக இருக்கும் என்றோ, நான் அவள் மீது காதல் கொள்வேன் என்றோ நினைக்கவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, அவள்தான் என் வாழ்க்கைத் துணை என்று உணர்ந்தேன்," என்று கூறினார்.</p><p>ரொனால்டோ - ரோட்ரிக்ஸ் தம்பதியினர், தங்களது திருமணத்திற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, ஆகஸ்ட் 11, 2025 அன்று தங்களது நிச்சயதார்த்தத்தை அறிவித்தனர். ரோட்ரிக்ஸ் தனது நிச்சயதார்த்த மோதிரத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "S, quiero. En esta y en todas mis vidas" என்று குறிப்பிட்டார்.</p><p>ரொனால்டோ மற்றும் ரோட்ரிக்ஸுக்கு அலானா மற்றும் பெல்லா என்ற மகள்கள் உள்ளனர். அதே நேரத்தில், அவர்கள் ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ ஜூனியர் மற்றும் இரட்டையர்களான ஈவா மரியா மற்றும் மேட்டியோ ஆகியோரையும் வளர்த்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கடலை நோக்கி ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா</title><link>https://www.maalaimalar.com/news/world/japan-said-north-korea-fires-suspected-ballistic-missile-towards-sea</link><comments>https://www.maalaimalar.com/news/world/japan-said-north-korea-fires-suspected-ballistic-missile-towards-sea#comments</comments><guid isPermaLink="false">02b00a93-97c3-49a6-821b-a7464185670d</guid><pubDate>Tue, 11 Aug 2026 23:41:44 +0000</pubDate><atom:updated>2026-08-11T23:41:44.253Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,North korea,ballistic missile,வட கொரியா,ஏவுகணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/rtdf7npx/Ballistic-Missile.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ballistic Missile]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/rtdf7npx/Ballistic-Missile.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலை நோக்கி <a href="https://www.maalaimalar.com/news/world">வட கொரியா</a> ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் நிகழும் இரண்டாவது ஆயுத சோதனையாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வட கொரியா புதன்கிழமை கடலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>சந்தேகத்திற்கிடமான ஆயுதம் கடலில் விழுந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் கொரிய ராணுவத்தை மேற்கோள் காட்டி, வட கொரியா தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை சுட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h2>இராணுவ பயிற்சி:</h2><p>வட கொரிய அச்சுறுத்தல்களுக்கு எதிரான தயார்நிலையை வலுப்படுத்துவதற்காக, தென் கொரியாவும் அமெரிக்காவும் அடுத்த வாரம் தங்களின் வருடாந்திர பெரிய அளவிலான இராணுவ பயிற்சிகளை தொடங்கவுள்ளதாக அறிவித்த இரண்டு நாட்களுக்கு பிறகு, இந்த ஏவுகணை சோதனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட் என்று அழைக்கப்படும் இந்தப் பயிற்சிகள், வட கொரியாவிடம் இருந்து கடும் எதிர்ப்பை தூண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், தம்மீது படையெடுப்பதற்கான ஒரு ஒத்திகையாகவே அந்நாடு இந்த பயிற்சியை கருதுகிறது.</p><h2>ஆத்திரமூட்டும் ஆயுத சோதனை:</h2><p>இதற்கு முன்னர், தென்கொரியா-அமெரிக்காவின் முக்கிய இராணுவப் பயிற்சிகளுக்கு, வட கொரியா ஆத்திரமூட்டும் ஆயுத சோதனைகள் மற்றும் கடுமையான சொல்லாடல்கள் மூலம் பதிலளித்துள்ளது.</p><p>கடந்த வாரம், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், வட கொரியா ஏவிய குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை கண்டறிந்தன. இது ஜூன் மாத கடைசிக்கு பிறகு வட கொரியா மேற்கொண்ட முதல் பாலிஸ்டிக் ஆயுத சோதனை நடவடிக்கையாகும். </p><p>வழக்கமாக ஆயுத சோதனைகள் குறித்த விவரங்களை ஒரு நாள் கழித்து வெளியிடும் வட கொரியா, இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகக் கூறப்படுவதை உறுதிப்படுத்தவில்லை.</p>]]></content:encoded></item><item><title>ஜிம்பாப்வேயின் கரிபா ஏரியில் படகு கவிழ்ந்ததில் 15 பேர் பலி; 27 பேர் மாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/at-least-15-dead-27-missing-after-ferry-capsizes-on-zimbabwes-lake-kariba</link><comments>https://www.maalaimalar.com/news/world/at-least-15-dead-27-missing-after-ferry-capsizes-on-zimbabwes-lake-kariba#comments</comments><guid isPermaLink="false">e324bd41-8829-436f-9186-9adaeb59ae9b</guid><pubDate>Tue, 11 Aug 2026 22:51:42 +0000</pubDate><atom:updated>2026-08-11T22:51:42.555Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,zimbabwe,ஜிம்பாப்வே,படகு விபத்து,ferry capsize</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/wonz0309/ferry-capsizes-zimbabwe.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ferry capsizes zimbabwe]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/wonz0309/ferry-capsizes-zimbabwe.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">ஜிம்பாப்வே</a> நாட்டின் கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. <a href="https://www.maalaimalar.com/topic/boat-capsize">படகு</a> கவிழ்ந்த விபத்தில் மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளனர். இதனை அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. ஏரியில் இருந்து 77 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த முகமை கூறியது.</p><p>இருப்பினும், உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு விற்பனையின் அடிப்படையில், 114 பயணிகளும் ஐந்து பணியாளர்களும் மட்டுமே படகில் இருந்ததை உறுதிப்படுத்த முடிவதாக ஜிம்பாப்வேயின் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>பயணச்சீட்டு தேவைப்படாத வயதுடைய குழந்தைகள் எத்தனை பேர் படகில் இருந்தார்கள் என்பது தெரியவில்லை என்றும், அவர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் அது கூறியது. அந்தப் படகு 90 பேர் பயணிக்கும் திறன் கொண்டது என்று முகமை தெரிவித்தது. </p><h2>மீட்பு பணிகள் தீவிரம்:</h2><p>உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரான முட்சா முரோம்பெட்ஸி (Mutsa Murombedzi) ஒரு காணொளியை வெளியிட்டார்; அதில், பழமையானதாகத் தோன்றும் அந்தப் படகு தனது பயணத்தைத் தொடங்கியபோது, ​​கரையில் இருந்தவர்கள் அதற்கு விடை கொடுக்கும் வகையில் கைகளை அசைப்பது பதிவாகியுள்ளது. கிராமப்புற மக்கள் கரிபா நகரத்திற்குச் செல்ல ஏரி வழியாக இந்தப் படகை பயன்படுத்துவதாக அவர் கூறினார்.</p><p>ஏரியில் வீசும் பலமான அலைகளை அந்தப் படகு தாங்குமா என்பது குறித்து கரையில் நின்றிருந்த சிலர் கவலை தெரிவித்ததையும் அந்தக் காணொளி காட்டுகிறது.</p><p>முன்னதாக, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக ஜிம்பாப்வே காவல்துறை கூறியது, ஆனால் வேறு எந்த விவரங்களையும் அளிக்கவில்லை. ஏரியில் தலைகீழாகக் கவிழ்ந்ததாகத் தோன்றும் படகை நோக்கி அதிவேகப் படகுகள் செல்வதையும், ஹெலிகாப்டர் ஒன்று மேலே வட்டமிடுவதையும் காட்டும் காணொளியை ஜிம்பாப்வேயின் அரசு ஒலிபரப்பு நிறுவனமான ZBC வெளியிட்டது.</p><h2>மிகப்பெரிய ஏரி:</h2><p>தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி, ஜிம்பாப்வே மற்றும் அதன் அண்டை நாடான ஜாம்பியா ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.</p><p>நீரின் கொள்ளளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியான இது, 1950-களின் பிற்பகுதியிலும் 1960-களின் முற்பகுதியிலும் ஜாம்பேசி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்டது. இதனால் ஒரு பள்ளத்தாக்கு மெதுவாக நீரால் நிரப்பப்பட்டு மிகப்பெரிய ஏரியாக மாறியது; தற்போது இது 200 கி.மீ-க்கும் அதிகமான நீளமும், சில இடங்களில் 40 கி.மீ வரை அகலமும் கொண்டதாக உள்ளது.</p><p>ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்த ஏரியைப் பகிர்ந்து கொள்கின்றன; அவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ எல்லை ஏரியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>4-ஆவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/no-maternity-leave-for-government-employees-expecting-4th-child-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/no-maternity-leave-for-government-employees-expecting-4th-child-court#comments</comments><guid isPermaLink="false">5b648d28-bba0-44fc-ade8-e50a4709d13f</guid><pubDate>Tue, 11 Aug 2026 22:08:55 +0000</pubDate><atom:updated>2026-08-11T22:08:55.183Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீதிமன்றம்,Maternity leave,Court,Government employee,மகப்பேறு விடுப்பு,அரசு ஊழியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bklako64/allahabad-high-court.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ allahabad high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bklako64/allahabad-high-court.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விதிகளின் படி தனக்கு நான்காவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்த அரசு ஊழியரின் மனுவை <a href="https://www.maalaimalar.com/news/national">அலகாபாத்</a> உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.</p><p>சசி குமாரி தாக்கல் செய்த மனுவின் பேரில், நீதிபதி மஞ்சு ராணி சௌஹான் ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>மேல் முறையீடு:</h2><p>தனது நான்காவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு கோரிக்கையை நிராகரித்து, சம்பல் (பீம் நகர்) வட்டார கல்வி அலுவலர் ஜூன் 19-ஆம் தேதியன்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பெண் மேல்முறையீடு செய்திருந்தார்.</p><p>சட்டத்தின்படி ஆறு மாத மகப்பேறு விடுப்பை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் என குமாரி உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.</p><p>விசாரணையின் போது, ​​விதிகளின்படி மனுதாரர் தனது நான்காவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு பெற உரிமை இல்லை என்ற அடிப்படையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அந்த ரிட் மனுவை எதிர்த்தார்.</p><p>எனவே, எந்தத் தலையீடும் தேவையில்லை என்றும், இந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.</p><h2>சட்டத்தின் பார்வையில் தவறானது:</h2><p>குமாரி தனது மற்ற மூன்று குழந்தைகளின் பிறப்பின்போது எந்த விடுப்பும் எடுக்கவில்லை என்றும், அதனால் அவர் இப்போதுதான் முதல் முறையாக விடுப்பு பெற தகுதியுடையவர் என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார். எனவே, கல்வி அதிகாரியின் உத்தரவு தன்னிச்சையானது மற்றும் சட்டத்தின் பார்வையில் தவறானது.</p><p>ரிட் மனுவில் கூறப்பட்டுள்ள ஒரு கூற்றை வலியுறுத்தி, குமாரி ஏற்கனவே மகப்பேறு விடுப்பு எடுத்துவிட்டார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்தார்.</p><p>அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் கூற்றைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி சௌகான், நீதிமன்றத்தின் தலையீடு தேவையில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு - பீகாரில் சோகம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/nine-killed-in-lightning-strikes-in-3-districts-of-bihar</link><comments>https://www.maalaimalar.com/news/national/nine-killed-in-lightning-strikes-in-3-districts-of-bihar#comments</comments><guid isPermaLink="false">8a21baf1-4538-4084-98cd-fbba95cc2dcf</guid><pubDate>Tue, 11 Aug 2026 20:13:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T20:13:24.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,பீகார்,Bihar,lightning strike,மின்னல்,Death toll</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bhsz5x2s/lightning-strike.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ lightning strike]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bhsz5x2s/lightning-strike.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">பீகார்</a> மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. இந்த உயிரிழப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளன.</p><p>பங்கா மாவட்டத்தில் ஐந்து பேரும், லக்கிசராய் மாவட்டத்தில் மூன்று பேரும், பாட்னா மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக <a href="https://www.maalaimalar.com/topic/chief-minister">முதலமைச்சர்</a> அலுவலகம் (CMO) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>நிதியுதவி:</h2><p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>பங்கா மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த ஐந்து பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களும் அடங்குவர்.</p><p>பங்கா மாவட்டத்தின் பௌசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொராய் கிராமத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த குஷ்மி தேவி (45), ரிங்கு தேவி (35) மற்றும் ரேணு தேவி (38) ஆகியோர் வீட்டின் வெளியே இருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.</p><p>பௌசி வட்டத்தைச் சேர்ந்த சிராய் கிராமவாசியான சுரேஷ் யாதவ், தனது வயலுக்குச் செல்லும் வழியில் குளம் ஒன்றின் அருகே மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><h2>இழப்பீடு:</h2><p>அதே வட்டத்தைச் சேர்ந்த காசி கைரி கிராமத்தில், வயலில் நெல் நடும் தொழிலாளர்களுக்கு காலை உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சுஃபியானா (50) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.</p><p>பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பங்கா கூடுதல் மாவட்ட ஆட்சியர் (ADM) அஜித் குமார் தெரிவித்தார்.</p><p>மோசமான வானிலை நிலவும்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், அத்துடன் பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தில் சீமான்?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/seeman-to-join-sivakarthikeyan-starrer-seyon-star-cast</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/seeman-to-join-sivakarthikeyan-starrer-seyon-star-cast#comments</comments><guid isPermaLink="false">d0ff2f31-7541-4e6b-b77a-c5f48c571bae</guid><pubDate>Tue, 11 Aug 2026 19:01:15 +0000</pubDate><atom:updated>2026-08-11T19:01:15.079Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,sivakarthikeyan,சிவகார்த்திகேயன்,Seyon,சேயோன்,சீமான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/h8pjd87j/Seyon-SK-and-Seeman.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seyon SK and Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/h8pjd87j/Seyon-SK-and-Seeman.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/sivakarthikeyan">சிவகார்த்திகேயன்</a> மற்றும் இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில் நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>மதுரையில் தொடங்கியுள்ள இதன் படப்பிடிப்பில் அவர் விரைவில் பங்கேற்க உள்ளார். முன்னதாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ‘எல்ஐகே’ படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/seeman">சீமான்</a> நடித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.</p><h2>சந்தோஷ் நாராயணன் மேஜிக்:</h2><p>'அமரன்' படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் சேயோன். ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இந்தப் படத்தை இயக்குகிறார்.</p><p>மதுரை மண்ணின் பாரம்பரிய பின்னணியில் கிராமத்து கமர்ஷியல் எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் சேயோன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.</p><h2>2-ஆம் கட்ட படப்பிடிப்பு:</h2><p>கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. கன்னட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில், சேயோன் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டது. </p><p>இதற்காக மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் மிக பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, முக்கிய சண்டை காட்சி மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>'சேயோன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த வாரம் வெளியாகும் துல்கர் சல்மானின் &apos;ஐ ம் கேம்&apos;</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dulquer-salmaan-starrer-i-am-game-release-update</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dulquer-salmaan-starrer-i-am-game-release-update#comments</comments><guid isPermaLink="false">becb6187-49f5-4882-90d2-967857320c21</guid><pubDate>Tue, 11 Aug 2026 18:29:43 +0000</pubDate><atom:updated>2026-08-11T18:29:43.614Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dulquer Salmaan,துல்கர் சல்மான்,iam game,ஐ ம் கேம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/j8kcsi5d/im-game.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ im game]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/j8kcsi5d/im-game.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/dulquer-salmaan">துல்கர் சல்மான்</a> நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஐ ம் கேம்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'அருகே அருகே' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. </p><p>ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள :ஐ அம் கேம்' <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> - ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம்- &nbsp;துல்கரின் திரை பயணத்திலேயே மிக பெரிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>அதிகரித்த எதிர்பார்ப்பு:</h2><p>இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கி இருக்கிறார். வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சஜீல் பாபா - இஸ்மாயில் அபுபக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். வசனங்களை சஜீல் பாபா - ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.</p><p>'அருகே அருகே..' எனத் தொடங்கும் இந்த பாடல் வெளியான உடனேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்பாடல் மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.‌</p><h2>40-ஆவது திரைப்படம்:</h2><p>துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி திரில்லர் திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.</p><p>இப்படத்தின் டிரெய்லர் மற்றும் புதிதாக வெளியான பாடல் ஆகியவை ஜேக்ஸ் பிஜாயின் இசை - ஜிம்ஷி காலீத்தின் ஒளிப்பதிவு மற்றும் அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் - ஆகியவை படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையும் என்பதை உணர்த்துகின்றன.</p><p>மாபெரும் வெற்றி பெற்ற லோகா படத்தை தொடர்ந்து வேஃபரர் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் இதுவாகும். அதே போல் பிளாக் பஸ்டர் ஹிட் படமான 'RDX -ஆர்.டி.எக்ஸ்.' படத்திற்கு பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: கோவை அணிக்கு எதிரான போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி!</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-tt-beat-kk-by-4-wickets</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-tt-beat-kk-by-4-wickets#comments</comments><guid isPermaLink="false">0adb0b51-f234-4aa9-924a-caaf69da2fc0</guid><pubDate>Tue, 11 Aug 2026 17:51:54 +0000</pubDate><atom:updated>2026-08-11T17:51:54.113Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,கோவை கிங்ஸ்,Tiruppur Tamizhans,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/x8oz2niu/TT-Win-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/x8oz2niu/TT-Win-1.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 13-ஆவது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/kovai-kings">கோவை கிங்ஸ்</a> முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>சுமாரான தொடக்கம்:</h2><p>கோவை கிங்ஸ் அணி தொடக்க வீரராக களமிறங்கிய அபினவ் கண்ணன் 5 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய சுரேஷ் லோகேஷ்வர் 12 பந்துகளில் 22 ரன்களையும், இவருடன் ஆடிய பாலசுப்ரமணியம் சச்சின் 20 பந்துகளுக்கு 30 ரன்களையும் அடித்தார்.</p><p>அடுத்து களமிறங்கியவர்களில் ஆன்ட்ரே சித்தார்த் 23 பந்துகளில் 36 ரன்களும், மான் பாஃப்னா 20 ரன்களும், ஆர்.எஸ். ஆம்ப்ரிஷ் மற்றும் மனவ் பராக் தலா 10 ரன்களும், கேப்டன் ஷாருக் கான் 18 ரன்களும் எடுத்தனர். இதனால் கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை மட்டுமே எடுத்தது.</p><p>திருப்பூர் தமிழன்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் மற்றும் ரகுபதி சிலம்பரசன் தலா 2 விக்கெட்டுகளையும், எசக்கிமுத்து, சாய் கிஷோர் மற்றும் மோகன் பிரசாத் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p><h2>அபார தொடக்கம்:</h2><p>எளிய இலக்கை துரத்திய திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய அமித் சாத்விக் 29 பந்துகளில் 66 ரன்கள் (5 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார். அடுத்து வந்தவர்களில் மதிவாணன் அதிகபட்சமாக 26 பந்துகளில் 34 ரன்களும், முகமது அலி 29 ரன்களும் எடுத்தனர்.</p><p>ஒரு பக்கம் தொடக்க வீரரான அமித் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுப்பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே வந்தது. இதனால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றது.</p>]]></content:encoded></item><item><title>ரெஸ்யூம் கொடுங்க, 10,000 பேருக்கு வேலை கொடுக்கிறேன் - நன்றி தெரிவிக்கும் பயணத்தில் பிரசாந்த் கிஷோர் உறுதி!</title><link>https://www.maalaimalar.com/news/national/prashant-kishor-says-will-deliver-10000-jobs-in-3-months</link><comments>https://www.maalaimalar.com/news/national/prashant-kishor-says-will-deliver-10000-jobs-in-3-months#comments</comments><guid isPermaLink="false">5959bd96-56e3-45a5-b871-ad2330fad1da</guid><pubDate>Tue, 11 Aug 2026 17:25:23 +0000</pubDate><atom:updated>2026-08-11T17:25:23.557Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,Jobs,வேலைவாய்ப்பு</media:keywords><media:content height="3480" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ywue2l6h/Prashant-Kishor" width="4800"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Prashant Kishor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ywue2l6h/Prashant-Kishor?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் வியூக நிபுணராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக மாறியிருக்கும் <a href="https://www.maalaimalar.com/topic/prashant-kishor">பிரசாந்த் கிஷோர்</a>, உணவு தானியம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகிய அத்தியாவசிய பிரச்சினைகளை சரிசெய்வதற்காக, தனது <a href="https://www.maalaimalar.com/news/national">பாங்கிபூர்</a> தொகுதியிடம் மூன்று மாத கால அவகாசம் கோரியுள்ளார். </p><p>இன்று தனது "நன்றி தெரிவிக்கும் பயணத்தை" தொடங்கிய கிஷோர், ஒரு பள்ளியில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்தார். ராம் கோவிந்த் சிங் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அவர் மாணவிகளைச் சந்தித்தார். அவருடைய வார்த்தைகள், அவர்களின் பெற்றோரைப் போலவே மாணவிகளுக்கும் பொருந்தின.</p><h2>உறுதியாக நம்பலாம்:</h2><p>"உங்கள் பிள்ளை படித்திருந்தால், அவர்களின் சுயவிவரத் தரவுகளை என் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். இங்கிருந்து குறைந்தபட்சம் 10,000 இளைஞர்களுக்கு நாங்கள் உடனடியாக வேலை வாய்ப்புகளை ஏற்பாடு செய்வோம். பீகாரில் உள்ள எந்தவொரு சட்டமன்ற தொகுதியிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான வேலைகளைப் பெறப்போகிறார்கள் என்றால், அது பாங்கிபூர் பகுதி மக்களாகத்தான் இருப்பார்கள்.</p><p>நான் சொல்வதை குறித்துக் கொள்ளுங்கள் -- நாடு முழுவதும் உள்ள எனது தொடர்பாளர்கள் அனைவரையும் பீகார் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு நான் வலியுறுத்தியுள்ளேன். மேலும், பீகாரில் 'ஜன் சூரஜ்' முறை நிறுவப்பட்டவுடன், உங்கள் பிள்ளைகள் பிழைப்புக்காக வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்," என்று அவர் கூறினார்.</p><h2>வாழ்க்கையை மாற்றியமைக்கும்:</h2><p>30 ஆண்டுகளாக பாஜகவுக்கு வாக்களித்து வந்த பா.ஜ.க. தலைவர் நிதின் நவீனின் தொகுதியில், கிஷோர் வெற்றி பெற்றிருப்பது ஒரு எதிர்பாராத தீர்ப்பாகும். தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடந்த மாபெரும் போராட்டங்களை தொடர்ந்து இளைஞர்கள் அளித்த வாக்குகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.</p><p>பாங்கிபூர் வாக்காளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் 30 வயதுக்குட்பட்டவர்கள், அவர்கள் பெரிய கனவுகளைத் துரத்துகிறார்கள். நீட் மற்றும் யு.ஜி.சி. தலைமையிலான கல்வி நிறுவனங்களில் சேர்வது பலருக்கு வழக்கமான இலக்குகளாக உள்ளன.</p><p>யார்பூர் ராஜ்புதானா கோபால் சரண் சிங் பாதையில் பேசிய கிஷோர், தனது வெற்றி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்று அவர்கள் நம்புவதாகக் குறிப்பிட்டார். அத்தகைய மாற்றம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>‘பி​யார் பிரேமா கல்​யாணம்’ டிரெய்லர் நாளை வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/pyaar-prema-kaadhal-trailer-release-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/pyaar-prema-kaadhal-trailer-release-tomorrow#comments</comments><guid isPermaLink="false">76884b79-cbe8-45f4-9011-d1e6e9b3b991</guid><pubDate>Tue, 11 Aug 2026 16:30:10 +0000</pubDate><atom:updated>2026-08-11T16:30:10.799Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Yuvan Shankar Raja,யுவன் சங்கர் ராஜா,இளன்,elan,Pyaar Prema Kaadhal,பியார் பிரேமா கல்யாணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dhltehgg/New-Project-2026-08-11T215916.305.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பி​யார் பிரேமா கல்​யாணம்’ டிரெய்லர் நாளை வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dhltehgg/New-Project-2026-08-11T215916.305.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பியார் பிரேமா காதல், ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இளன், புதிதாக இயக்கி, கதாநாயகனாக அறிமுகமாகும் படம் பியார் பிரேமா கல்யாணம். இப்படத்தில் இயக்குநர் இளனுக்கு ஜோடியாக சான்வே மேகனா நடித்துள்ளார்.</p><p>இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில் மற்றும் மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம், ஆக.21ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.</p><p>வெளியீடு தேதி நெருங்குவதைத் தொடர்ந்து போஸ்டர்கள், பாடல்கள் என படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதை எதிர்த்த வழக்கு - எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-the-dropping-of-disqualification-proceedings-against-aiadmk-mlas-high-court-issues-warning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-the-dropping-of-disqualification-proceedings-against-aiadmk-mlas-high-court-issues-warning#comments</comments><guid isPermaLink="false">c92f3cf4-de11-4604-93a6-d9c5b26d3e74</guid><pubDate>Tue, 11 Aug 2026 16:04:26 +0000</pubDate><atom:updated>2026-08-11T16:04:26.310Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,தகுதி நீக்க நடவடிக்கை,disqualification proceedings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bn4rgc22/New-Project-2026-08-11T213401.942.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதை எதிர்த்த வழக்கு - எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bn4rgc22/New-Project-2026-08-11T213401.942.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம்மீது, கொறடா உத்தரவை மீறி தவெகவிற்கு ஆதரவாக 25 அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.</p><p>இதையடுத்து 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. </p><p>அதே போல, தங்கள் தரப்பு கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.</p><p>இதனிடையே தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏ.க்களில் 21 பேர் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததால், அவர்கள் மீதான தகுதி நீக்க புகாரையும் இபிஎஸ் திரும்பப் பெற்றார். மீதமுள்ள 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.</p><p>அதே போல, 22 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் விஜயபாஸ்கர் அளித்த மனுவையும் திரும்பப் பெறுவதாகக் கூறி கடிதம் அளித்தார். இரு கடிதங்களையும் ஏற்றுக் கொண்ட சபாநாயகர், 43 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக அறிவித்தார்.</p><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர்,&nbsp; சட்டப்படி 15 நாட்களுக்குள் மன்னிப்பளித்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளதால் தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. </p><p>இதனால் மனுதாரர் கட்சி எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது?&nbsp; இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மேலும், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளோம் என்று எச்சரிக்கை செய்தனர்.</p><p>நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை வாபஸ் பெற அனுமதித்து,&nbsp; தள்ளுபடி செய்து&nbsp; உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா போஸ்ட்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trisha-insta-story-everything-you-do-comes-back-to-you</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/trisha-insta-story-everything-you-do-comes-back-to-you#comments</comments><guid isPermaLink="false">7b96ddba-7eb4-4e29-9bb3-f0028bfc452d</guid><pubDate>Tue, 11 Aug 2026 15:52:15 +0000</pubDate><atom:updated>2026-08-11T15:52:15.662Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dlzsxw7n/Trisha0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திரிஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/dlzsxw7n/Trisha0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோலிவிட்டின் முன்னணி நடிகையாக திரிஷா விளங்கி வருகிறார். சமீபத்தில் சூர்யா உடன் இணைந்து நடித்த கருப்பு படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.</p><p>தமிழக அரசியலில் இவரை தொடர்புப்படுத்தி அடிக்கடி விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திரிஷா தனது பாட்டியின் 98-வது பிறந்த நாளை கொண்டாடினார். இது தொடர்பாக திரிஷா தனது பாட்டியுடன் இருக்கும் படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>அத்துடன், "இந்த வயதில் இத்தகைய நாடகத்தனமான விஷயங்கள் சங்கடத்தைத்தான் தரும்... போய் பணம் சம்பாதித்து நிம்மதியாக இருங்கள்" என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார். அத்துடன் புருவங்களை தூக்கி பார்க்கும் வகையில் ஒரு எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.</p><p>2-வது பதிவில் "நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும். நல்லதையே செய்யுங்கள், நல்லவராக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>3-வது பதிவில் "இதுதான் உங்களுக்கான அனைத்தும் இறுதியில் சிறப்பாக அமையும் காலகட்டம்" என்று குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-issues-order-allocating-constituency-funds-for-mlas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-issues-order-allocating-constituency-funds-for-mlas#comments</comments><guid isPermaLink="false">1e9406e3-2556-44e2-abd8-1e51cab020b0</guid><pubDate>Tue, 11 Aug 2026 15:45:35 +0000</pubDate><atom:updated>2026-08-11T15:45:35.791Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,Constituency Fund,தொகுதி நிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/3rnly1ic/New-Project-2026-08-11T211438.452.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/3rnly1ic/New-Project-2026-08-11T211438.452.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.3.54 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. </p><p>234 சட்டமன்ற தொகுதிக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3.54 கோடி வீதம் ரூ.828.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>பொதுமக்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றவும், தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை விரைவுபடுத்தவும் இந்த நிதி விடுவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான 18% ஜிஎஸ்டி வரியை அரசே ஏற்கும் கடந்த திமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுதல், சுகாதாரம், தொகுதிக்கான அடிப்படை வசதிகள், குடிநீர், பொதுக்கட்டடம் தொடர்பான பணிகள் இந்த நிதியின் கீழ் மேற்கொள்ளப்படலாம். </p>]]></content:encoded></item><item><title>குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு அறிவிப்பு... தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/notification-for-the-group-2-and-group-2a-preliminary-examination-candidates-can-apply-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/notification-for-the-group-2-and-group-2a-preliminary-examination-candidates-can-apply-starting-today#comments</comments><guid isPermaLink="false">42c99e75-f494-479e-bcbf-b01db3a01beb</guid><pubDate>Tue, 11 Aug 2026 15:12:03 +0000</pubDate><atom:updated>2026-08-11T15:12:03.860Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,Group 2,குரூப் 2,டிஎன்பிஎஸ்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v2u2awkz/New-Project-2026-08-11T204134.961.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு அறிவிப்பு... தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v2u2awkz/New-Project-2026-08-11T204134.961.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் ΙΙΑ பணிகள்) க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (11.08.2026) வெளியிடப்பட்டுள்ளது.</p><p>தேர்வர்கள் 11.08.2026 முதல் 09.09.2026 பி.ப. வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். </p><p>ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) க்கான முதல் நிலைத் தேர்வு 01.11.2026 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குரூப் 2 மற்றும் குரூப் 2A என்பது தமிழ்நாடு மாநில அரசுப் பணிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தால் நடத்தப்படும் ஒரு ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்புத் தேர்வாகும். </p><p>துணைப் பதிவாளர் மற்றும் நகராட்சி ஆணையர் முதல் வருவாய் அலுவலர் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் வரையிலான பதவிகளுக்கு இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி ஏற்ற வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-urges-people-to-take-developed-india-pledge-on-i-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-urges-people-to-take-developed-india-pledge-on-i-day#comments</comments><guid isPermaLink="false">e4725875-a7c2-4057-9a72-7fa452b2f5f7</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:54:54 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:54:54.443Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>national flag,தேசிய கொடி,Independence Day,சுதந்திர தினம்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ve9dygsy/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ve9dygsy/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திர தினத்தன்று மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றவேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.</p><p>'ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி' எனப்படும் ,' ஹர் கர் திரங்கா' என்ற இயக்கத்தை மத்திய கலாசார அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.</p><p>இதற்கிடையே, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்தியர்கள் தங்களது வீடுகளில் மூவர்ணக் கொடி ஏற்றி Harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் இதனை வலியுறுத்தி இருந்தார்.</p><p>இந்நிலையில், பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.</p><p>அந்த வீடியோவில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>ஹர் கர் திரங்கா இயக்கத்தில் உற்சாகத்துடன் பங்கேற்போம். 'விக்சித் பாரத்'தை உருவாக்குவதில் பங்களிக்க நமது கூட்டு உறுதிப்பாட்டைப் புதுப்பிப்போம். இந்த ஆண்டுக்கான முயற்சிகள் 'வந்தே மாதரம்' பாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதிலும், அதுவும் அப்பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இது அமைந்திருப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்.</p><p>வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையிலும், நாட்டின் பெருமை, ஒற்றுமையைக் கொண்டாடும் வகையிலும் தேசியக் கொடி ஏற்றவேண்டும் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல்? இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/national/state-of-border-will-reflect-state-of-ties-india-warns-china-on-arunachal</link><comments>https://www.maalaimalar.com/news/national/state-of-border-will-reflect-state-of-ties-india-warns-china-on-arunachal#comments</comments><guid isPermaLink="false">ee82dee6-81f7-4030-8af0-b15be204ce4b</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:52:27 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:52:27.026Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அருணாச்சல பிரதேசம்,arunachala pradesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/xoh3iedq/ArunachalaPradesh001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அருணாச்சல பிரதேசம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/xoh3iedq/ArunachalaPradesh001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பர் சுபான்சிரி மாவட்டத்தில் சீனப் படைகள் அத்துமீறி நுழைந்ததாக வெளியான தகவல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, எல்லை விவகாரங்களின் நிலை இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த இருதரப்பு உறவுகளின் தன்மையை பிரதிபலிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) எச்சரித்துள்ளது.</p><h2>சீனப்படைகள் ஊடுருவல்</h2><p>உள்ளூர் மக்களை மேற்கோள் காட்டி வெளியான சமீபத்திய செய்திகளின்படி, சீனப் படைகள் உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (LAC) கடந்து, டாக்ஸிங் (Taksing) வட்டாரத்தில் உள்ள புகார் லா (Pukar La) மற்றும் ஒல்லோ (Ollo) ஆகிய பகுதிகளுக்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>இதுகுறித்து கடந்த வாரம் கேட்கப்பட்டபோது, ​​அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா கண்டு அத்தகவல்களை மறுத்தார். மேலும், உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய ராணுவம் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் பேசுவதாகவும் அவர் கூறினார்.</p><h2>பீமா கண்டு மறுப்பு</h2><p>ராணுவம் எல்லையைத் திறம்படக் காத்து வருவதாலும், இந்தியப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதாலும், அத்தகைய அத்துமீறல் எதுவும் நடைபெறுவதாக தான் கருதவில்லை என்று காண்டு தெரிவித்தார்.</p><p>இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அப்பகுதியில் அமைதியை பேணுவதே மிக முக்கியமானது என்று கூறினார். அத்துடன் எல்லை விவகாரங்கள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றிய விவரங்களையும் அவர் அளித்தார்.</p><p>"இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பகுதிகள் தொடர்பான விவகாரங்களில், இப்பிரச்சனைகளை நாங்கள் மிகவும் தீவிரமானதாகக் கருதுவதாகவும், இப்பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவது மிக முக்கியம் என்றும் சீனத் தரப்புடனான பேச்சுவார்த்தைகளில் நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம்.</p><p>எல்லை விவகாரங்களின் நிலை, எங்களின் பரந்த இருதரப்பு உறவுகளின் தன்மையை பிரதிபலிக்கும் என்றும் நாங்கள் கூறியுள்ளோம்," என்று ஜெய்ஸ்வால் கூறினார்.</p><p>ஆகஸ்ட் 6, 2026 அன்று நடைபெற்ற இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான பணி அமைப்பின் (WMCC) 36-வது கூட்டத்திலும் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில், இரு தரப்பினரும் வெளிப்படையான விவாதங்களை மேற்கொண்டதுடன், உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) நெடுகிலும் நிலவும் சூழலை ஆய்வு செய்தனர். இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவது அவசியம் என்பதை இந்தியத் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது," என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p>நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் "தவறான புரிதல்கள் மற்றும் தவறான கணிப்புகளைத் தவிர்ப்பதற்கும்", WMCC மற்றும் உள்ளூர் தளபதி அளவிலான கூட்டங்கள் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள தூதரக மற்றும் ராணுவ வழிமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.</p><h2>27 இடங்களின் நிலையான பெயர்களை இந்தியா அறிவித்தது</h2><p>அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்ற சீனா மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில், கடந்த வாரம் இந்தியா அம்மாநிலத்திலுள்ள 27 இடங்கள் மற்றும் அம்சங்களை அதிகாரப்பூர்வ இந்திய வரைபடத்தில் அவற்றின் 'நிலையான பெயர்கள்' (standard names) மூலம் குறிப்பிட்டிருந்தது.</p><p>சீனா இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அருணாச்சலப் பிரதேசத்தை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறியது.</p><p>"சீனா நீண்ட காலமாகப் பயன்படுத்தி வரும் பெயர்களுக்குப் பதிலாக, இந்தியா தனது 'நிலையான பெயர்கள்' என்று கூறப்படுபவற்றை மாற்ற முயற்சிப்பது சட்டவிரோதமானது மற்றும் செல்லுபடியாகாதது," என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறினார்.</p><p>இந்தியா வலுவான மறுப்பைத் தெரிவித்தது. அருணாச்சலப் பிரதேசம் நாட்டின் "பிரிக்க முடியாத பகுதி" என்ற தனது நிலைப்பாட்டை ஜெய்ஸ்வால் மீண்டும் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க.வில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன் த.வெ.க.வில் இணைவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/singai-ramachandran-who-left-the-aiadmk-joins-the-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/singai-ramachandran-who-left-the-aiadmk-joins-the-tvk#comments</comments><guid isPermaLink="false">81a96e2b-5a42-4ece-bd3f-07ba3ce7cc77</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:41:58 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:41:58.087Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,tvk,Singai Ramachandran,சிங்கை ராமச்சந்திரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/c72i1v4z/New-Project-2026-08-11T200005.333.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அ.தி.மு.க.வில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன் த.வெ.க.வில் இணைவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/c72i1v4z/New-Project-2026-08-11T200005.333.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் அவர் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.</p><p>அதிமுகவில் மாநில மாணவரணிச் செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டவர் சிங்கை ராமச்சந்திரன். </p><p>கடந்த மாதம் அதிமுகவின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதிமுக தலைமை மீது ஏற்பட்ட மனவருத்தம் மற்றும் சில உள் கட்சி மாற்றங்கள் காரணமாக விலகுவதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.</p><p>கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டார் இவரது தந்தை சிங்கை கோவிந்தராசும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆவார்.</p>]]></content:encoded></item><item><title>நிலவில் ஆராய்ச்சி மையம்... இஸ்ரோவிற்கு அழைப்பு விடுத்த நாசா!</title><link>https://www.maalaimalar.com/news/national/research-center-on-the-moon-nasa-invites-isro</link><comments>https://www.maalaimalar.com/news/national/research-center-on-the-moon-nasa-invites-isro#comments</comments><guid isPermaLink="false">df9f0911-1c05-456e-ad1e-4c2671e54ac6</guid><pubDate>Tue, 11 Aug 2026 14:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-11T14:15:51.968Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ISRO,இஸ்ரோ,நாசா,nasa,Moon Base program,நிலாவில் ஆராய்ச்சி மையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m8vdon1j/New-Project-2026-08-11T192633.786.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிலவில் ஆராய்ச்சி மையம்... இஸ்ரோவிற்கு அழைப்பு விடுத்த நாசா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/m8vdon1j/New-Project-2026-08-11T192633.786.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிலவில் ஆய்வு தளம் அமைக்கும் தனது பிரம்மாண்ட திட்டத்தில் இணைய இஸ்ரோவிற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா அழைப்பு விடுத்துள்ளது. </p><p>ஆக.5 மற்றும் 6ம் தேதிகளில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் நடைபெற்ற 9-வது இந்தியா - அமெரிக்கா சிவில் விண்வெளி கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. </p><h2>அமெரிக்காவின் மூன் பேஸ் திட்டம்  </h2><p>நாசா, நிலவின் தென் துருவத்தில் மனிதர்கள் தங்கி நீண்ட காலம் ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு நிரந்தர ஆராய்ச்சி மையத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. இது மனிதகுலத்தின் அடுத்த மாபெரும் விண்வெளி பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.</p><h2>ஏன் இஸ்ரோவுக்கு அழைப்பு?</h2><p>நிலவின் தென்துருவத்தில் வெற்றிக்கரமான கால்பதித்த முதல் நாடு இந்தியா. குறைந்த செலவில் துல்லியமாக விண்கலங்களை ஏவும் இஸ்ரோவின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள நாசா விரும்புகிறது. </p><p>இந்தியா ஏற்கனவே 2023-ல் அமெரிக்காவின் 'ஆர்டெமிஸ் ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்த மூன் பேஸ் திட்டத்தின் மூலம் இரு நாடுகளின் விண்வெளி உறவு அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: நெல்லையை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது திருச்சி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/trichy-beat-nellai-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/trichy-beat-nellai-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">e1707d16-6437-4a81-832e-dfbd9c8990bd</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:30:51 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:30:51.262Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோழாஸ்,Nellai Royal Kings,நெல்லை ராயல் கிங்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/54d3kpyo/davidson.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ asirvatham]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/54d3kpyo/davidson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நெல்லை அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வெற்றி பெற்றது.</p><p>டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்தது. </p><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 12-வது லீக் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><h2>182 ரன் குவித்த திருச்சி</h2><p>அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார்.</p><p>7வது விக்கெட்டுக்கு இணைந்த ராஜ்குமார், அந்தோனி தாஸ் ஜோடி அதிரடியாக ஆடி 57 ரன்கள் சேர்த்தனர். ராஜ்குமார் 19 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்தார். </p><p>நெல்லை அணி சார்பில் சச்சின் ராதி 3 விக்கெட்டும், ஹரிஷ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.</p><p>இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நெல்லை அணி களமிறங்கியது. முதல் ஓவரில் 2 விக்கெட்களை இழந்து திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.</p><h2>டேவிட்சன் அதிசயராஜ் அசத்தல்</h2><p>ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் முகிலேஷ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 45 பந்தில் 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><p>இறுதியில், நெல்லை அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>இதன்மூலம் திருச்சி அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் திருச்சி அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.</p><p>திருச்சி அணி சார்பில் டேவிசன் அதிசயராஜ் 4 விக்கெட்டும், ஈஸ்வரன், சஞ்சய் யாதவ், ராஜ்குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை: உத்தரகாண்டில் மேகவெடிப்பால் இரும்புப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது - 16 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/cloudburst-in-uttarakhand-iron-bridge-swept-away-heavy-rain-alert-for-16-states</link><comments>https://www.maalaimalar.com/news/national/cloudburst-in-uttarakhand-iron-bridge-swept-away-heavy-rain-alert-for-16-states#comments</comments><guid isPermaLink="false">a3a65c7a-99c0-4e3a-97fd-18f17a68cac1</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:27:10 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:27:10.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தரகாண்ட்,Madhyapradesh,monsoon,மேகவெடிப்பு,Uttarakhand Flood,NorthIndiaRain,Uttarakhand Cloudburst,MadhyaPradeshFloods,BridgeWashedAway</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ldqhzh2j/Uttarakhand-Cloudburst" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uttarakhand Cloudburst ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/ldqhzh2j/Uttarakhand-Cloudburst?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதோடு, உள்கட்டமைப்புகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளன.</p><h2>உத்தரகாண்டில் மேகவெடிப்பு - பாலம் அடித்துச் செல்லப்பட்டது:</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">உத்தரகாண்ட் </a>மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், இந்தியா - சீனா எல்லை அருகே திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்நிலைகளில் அபாயகரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>அங்குள்ள நிதி பள்ளத்தாக்கில் பாய்ந்து வந்த பெருவெள்ளம், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இரும்புப் பாலத்தை அடித்துச் சென்றது. இந்த விபத்தின்போது அப்பகுதியில் நின்றிருந்த ஒரு நபரும், ஒரு வாகனமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். </p><p>மேலும், தமக் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆப்பிள் மரங்கள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.</p><h2><strong>மத்திய பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை முடக்கம்:</strong></h2><p>மத்திய பிரதேச மாநிலத்திலும் கனமழை நீடித்து வருகிறது. தலைநகர் போபாலில் பெய்த மழையால் நிஷாத்புரா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக 106 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>16 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை:</strong></h2><p>மறுபுறம், பீகாரின் தென்மேற்கு மாவட்டங்களுக்குக் கனமழைக்கான 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்திய வானிலை ஆய்வு மையம், நாடு முழுவதும் மொத்தம் 16 மாநிலங்களில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளதால், மீட்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>டவுசர் பனியனுடன் மக்களின் புகார்களை பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.: வீடியோ வெளியான நிலையில் முதல்வரின் பதில்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/wear-proper-clothes-rekha-gupta-tells-aap-mla-after-video-in-undergarments</link><comments>https://www.maalaimalar.com/news/national/wear-proper-clothes-rekha-gupta-tells-aap-mla-after-video-in-undergarments#comments</comments><guid isPermaLink="false">c1ab8c96-99ae-47a4-a282-89f601068796</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:17:44 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:17:44.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆம் ஆத்மி,ரேகா குப்தா,Rekha Gupta,AAP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/e5lkg1tz/RekhaGupta0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AAP MLA- Rekha Gupta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/e5lkg1tz/RekhaGupta0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடமேற்கு டெல்லியில் உள்ள கிராரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜா வாட்ஸ். அவர் மக்களை சந்தித்து, அவர்கள் கேட்டுக்கொண்டபடி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு வழங்கினார். அப்போது டவுசர் மற்றும் பனியனை அணிந்து கொண்டு ஒரு சேரில் அமர்ந்து கொண்டு மனுக்களை கையெழுத்திட்டு உதவியாளரிடம் வழங்குவார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p>இந்த நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக ரேகா குப்தா கூறியதாவது:-</p><p>ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வின் செயல்பாடு வெட்கக்கேடானது. உங்களிடம் பெண்கள் கையெழுத்திற்காக வரும்போது, நீங்கள் முறையான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Meet Aam Aadmi Party&#39;s MLA : Anil Jha Vats!!<br><br>&gt; MLA from Kirari Assembly <br><br>&gt; Wears Kacha and Baniyan <br><br>&gt; Sits outside his home <br><br>&gt; Signs documents without even reading them<br><br>&gt; Claims to be an MLA from Padhi-Likhi Political Party!! <a href="https://t.co/xYozn5liVH">pic.twitter.com/xYozn5liVH</a></p>&mdash; Rohit (@Iam_Rohit_G) <a href="https://x.com/Iam_Rohit_G/status/2086764846276866394?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இதுபோன்ற நடத்தையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய சட்டசபை உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு ரேகா குப்தா தெரிவித்தார்.</p><p>அதேவேளையில் அந்த எம்.எல்.ஏ. "நான் ஏதேனும் தவறான சைகைகளைச் செய்திருந்தால், அதற்கான காணொளியை அவர் காட்ட வேண்டும். மக்களுடைய பிரச்சனைகளுக்கு அவரிடம் தீர்வுகள் இல்லை. அதனால்தான் அவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்." என்றார்.</p>]]></content:encoded></item><item><title>காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் விலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-price-drops-by-rs-800-per-sovereign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-price-drops-by-rs-800-per-sovereign#comments</comments><guid isPermaLink="false">cd351e4b-c5d2-4d90-82cb-edb259328a59</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:07:41 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:07:41.071Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Price drop,விலைக்குறைவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/hauidql9/New-Project-2026-08-11T183717.401.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் விலை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/hauidql9/New-Project-2026-08-11T183717.401.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,150க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த நிலையில், மதியம் ரூ.800 குறைந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. </p><p>கடந்த சில தினங்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று காலை உயரந்தது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைகள் கண் முன்னே மனைவியை சுட்டுக் கொலை - கணவரின் வெறிச்செயல்! </title><link>https://www.maalaimalar.com/news/national/husband-gun-attack-kills-wife-in-front-of-children</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-gun-attack-kills-wife-in-front-of-children#comments</comments><guid isPermaLink="false">e08a716b-38ec-41d8-b307-2fa5f57f6509</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:04:59 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:04:59.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,பீகார்,Bihar,துப்பாக்கிச்சூடு பலி,DomesticViolence,BiharCrime,HusbandArrest,குடும்பத்தகராறு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0aa5rl1m/Bihar-Crime" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Crime ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0aa5rl1m/Bihar-Crime?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார் </a>மாநிலம் பூர்னியா பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக, பள்ளி ஆசிரியை ஒருவர் அவரது குழந்தைகளின் கண் முன்னாலேயே கணவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>நில முதலீட்டுத் தகராறு:</strong></h2><p>பூர்னியா பகுதியைச் சேர்ந்த ராஜ் குமார் யாதவ் அங்குள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷாலினி (34), அப்பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். </p><p>இவர்கள் இருவரும் இணைந்து கூட்டாக நிலம் ஒன்று வாங்கியுள்ளனர். அந்த நிலத்தில் தான் முதலீடு செய்த பணத்தைத் திருப்பித் தருமாறு ராஜ் குமார் தனது மனைவியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். </p><p>ஆனால், தன்னால் பணம் தர முடியாது என்று ஷாலினி மறுத்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.</p><h2><strong>குழந்தைகள் முன்னே தாக்குதல்:</strong></h2><p>சம்பவத்தன்று மாலை இருவருக்கும் இடையிலான தகராறு முற்றவே, ராஜ் குமார் தனது மகன்களின் கண் முன்னால் ஷாலினியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். </p><p>பின்னர் ஆத்திரத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர், இரவு 8 மணியளவில் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.</p><h2><strong>துப்பாக்கிச் சூடு:</strong></h2><p>இரவு கணவர் வீடு திரும்புகையில், வீட்டில் குழந்தைகள் படித்துக் கொண்டும், மனைவி ஷாலினி சமையல் செய்துகொண்டும் இருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக ராஜ் குமார் தனது துப்பாக்கியை எடுத்து, மகனின் கண் முன்னே ஷாலினியை நோக்கிச் சுட்டார். </p><p>இதில் குண்டு பாய்ந்து ஷாலினி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப் பார்த்த குழந்தைகள் அலறித் துடித்த நிலையில், ராஜ் குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.</p><h2><strong>வீடியோ காலில் மரண வாக்குமூலம்:</strong></h2><p>பயந்துபோன மூத்த மகன், உடனடியாகத் தனது மாமா விக்ரம் ஆனந்திற்கு செல்போனில் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷாலினி, தனது சகோதரனிடம் "இப்போது நாம் என்ன செய்வோம்? அவர் என்னைச் சுட்டுவிட்டார்" என்று முனகியபடியே பேசியுள்ளார்.</p><p>இதனைத் தொடர்ந்து பதறியடித்து வந்த உறவினர்கள், ஷாலினியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். </p><p>எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய ராஜ் குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>VIVO S2:  அசத்தல் அம்சங்களுடன் விவோ அறிமுகப்படுத்திய S2.. என்னென்ன features இருக்கு?</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/vivo-launches-all-new-s2-sales-at-chennai</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/vivo-launches-all-new-s2-sales-at-chennai#comments</comments><guid isPermaLink="false">3eed3d3d-df5e-4b00-87a5-c6fe913a969d</guid><pubDate>Tue, 11 Aug 2026 13:02:57 +0000</pubDate><atom:updated>2026-08-11T13:02:57.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vivo,விவோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/81855ax2/VIVOS2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VIVO S2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/81855ax2/VIVOS2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விவோ செல்போன் நிறுவனம் தனது புதிய வகை S2 மாடல் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் கடந்த 6-ந்தேதி விற்பனைக்காக வெளியிட்டது. இந்த புதிய வகை செல்போன் விற்பனை இன்றுமுதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.</p><p>புதிய வகை S2 ஸ்மார்ட்போன் விவோவின் அதிகாரப்பூர்வ இணைய தளம், பிளிப்கார்ட், அமேசான், பார்ட்னர் சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கலாம்.</p><p>8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 39,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 44,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>சில்க் ஒயிட் (Silk White), ரீகல் பிரான்ஸ் (Regal Bronze) மற்றும் ஷப்பையர் ப்ளூ (Sapphire Blue) ஆகிய மூன்று கலர்களில் கிடைக்கும்.</p><p>MediaTek Dimensity 7360-Turbo processor பவர் கொண்டது. 3D Curved AMOLED display வசதி கொண்டது.</p><p>50 எம்.பி. மெயின் கேமரா9, 2 எம்பி செகண்டரி கேமரா9, 32 எம்பி ஃப்ரண்ட் கேமரா போன்ற வசதிகளை கொண்டுள்ளது.</p><p>ஃப்ரண்ட் மற்றும் பின்புற கேமராக்கள் மூலம் 4K வீடியோக்களை ரெக்கார்டு செய்ய முடியும். டூயல் வியூ வீடியோ, முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்களைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் பதிவுசெய்ய பயனர்களை அனுமதிப்பதால், இது வ்லாக்ஸ், நேர்காணல்கள், பயிற்சிகள் மற்றும் எதிர்வினை வீடியோக்களுக்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது.</p><p>120 HZ ரீபிரஸ் ரேட் உடன் 1.5K அல்ட்ரா கிளீயர் அமோல்டு டிஸ்பிளே (1.5K Ultra Clear AMOLED display) வசதி கொண்டுள்ளது.</p><p>44W பிளாஷ்சார்ஜ் உடன் 7050 mAh பேட்டரியை கொண்டுள்ளது. கேமிங், உள்ளடக்க உருவாக்கம் (Content Creation) மற்றும் அன்றாடப் பயன்பாடு என அனைத்திற்கும் ஏற்றது. எனவே, குறைவான நேரம் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டியிருப்பதால், நாள் முழுவதும் நீங்கள் தொடர்ந்து இணைப்பிலும் உற்பத்தித் திறனுடனும் இருக்க முடியும்.</p><p>கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகச் சூழலில், தூசி மற்றும் நீர் புகாத்தன்மைக்காக vivo S2-க்கு IP68 மற்றும் IP69 தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.</p><p>S2 ஆனது Android 16-ஐ அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய OriginOS 6-இல் இயங்குகிறது; பாதுகாப்பான மற்றும் நவீனமான ஸ்மார்ட்போன் அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், இதற்கு 3 ஆண்டுகளுக்கான Android OS மேம்படுத்தல்களும் 5 ஆண்டுகளுக்கான பாதுகாப்புப் புதுப்பிப்புகளும் வழங்கப்படுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>அர்ச்சனா கல்பாத்தியை நியமித்தது ஏன்? - விளக்கம் கொடுத்த அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-explain-why-archana-kalpathi-appoint-that-post</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-explain-why-archana-kalpathi-appoint-that-post#comments</comments><guid isPermaLink="false">b4484604-4232-4904-be29-88660f8ffc74</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:44:46 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:44:46.532Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>HRCE,Archana Kalpathi,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,அர்ச்சனா கல்பாத்தி,இந்துசமய அறநிலையத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/6vzpwzq7/ramesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister ramesh, archana kalpathi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/6vzpwzq7/ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ச்சனா கல்பாத்தியை நியமித்தது ஏன்? என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>அர்ச்சனா கல்பாத்தி நியமனம்</h2><p>தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான குழு உறுப்பினர்களில் ஒருவராக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மூலம் அமைக்கப்பட்டும் இந்தக் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார். மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் இக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். இந்தத் தேர்வுக் குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.</p><p>இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்  உள்ளிட்டோருக்கு அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்தார்.</p><p>அர்ச்சனா கல்பாத்தியின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்கள் எழுந்தன.</p><p>இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:</p><h2>நியமனம் ஏன்?</h2><p>மாநில அறங்காவலர் குழுவைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப முக்கியமான ஒரு பங்கை ஆற்றுகிறது. பத்து லட்சத்திற்கு மேல் வருவாய் இருக்கக்கூடிய கோயில்களில் அறங்காவலர் குழுக்களை நியமிப்பதில் இக்குழு மிகப்பெரிய பங்காற்றுகிறது.</p><p>இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளுக்கு இந்தக்குழு ஒரு மிகப்பெரிய உறுதுணையாகச் செயல்படப் போகிறது.</p><p>இந்தக் குழுவில் மொத்தம் 7 பேரை நியமித்துள்ளோம்.</p><p>ஆன்மிக ரீதியாக தேவையான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்காக மயிலம் ஆதினம் அவர்களைத் தலைவராகப் போட்டிருக்கிறோம்.</p><p>சட்ட ரீதியான வழிகாட்டுதல்களுக்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை இணைத்துள்ளோம்.</p><p>அர்ச்சனா கல்பாத்தி மேடத்தைப் பொறுத்தவரை, அவரை இந்த உலகம் வெறும் சினிமா தயாரிப்பாளராக மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதால், இது போன்ற விமர்சனங்களை வேண்டுமென்றே எழுப்பி வருகிறார்கள்.</p><p>அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கும் மற்றொரு முகம் உள்ளது. அவர் தமிழ்நாட்டில் 10-க்கு மேற்பட்ட கோவில்களில் தனது சொந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கி பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளார். அவருடைய மாமனார் சீனிவாசன் மிகப்பெரிய தனியார் குழுமத்தின் வாயிலாகத் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு பல 100 கோடிகள் செலவு செய்து நிறைய திருப்பணிகளைச் செய்துள்ளார்.</p><h2>ரூ.100 கோடி செலவில் திருப்பணிகள்</h2><p>அந்தக் குடும்பத்திலிருந்து கோவில்களுக்கு பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாலும், அந்த நல்லெண்ணம் இருப்பதாலும்தான் அவரை இந்தக்குழுவிற்குள் கொண்டு வந்தோம்.</p><p>இதன்மூலம், கோவில்களுக்கு தங்களது சொந்த நிதியிலிருந்து நன்கொடைகள் வழங்கி திருப்பணிகள் செய்ய விரும்புபவர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு சிறந்த முன்னெடுப்பாக இது இருக்கும்.</p><p>இந்தக் குழுவின் செயல்பாடுகள் எதிர்வரும் காலங்களில் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘ராம் இன் லீலா’ டிரெய்லர் நாளை வெளியாகிறது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ram-leela-trailer-releases-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ram-leela-trailer-releases-tomorrow#comments</comments><guid isPermaLink="false">4e4ccd8b-a2b2-485d-b1a3-c9f6f19bc62c</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:28:48 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:28:48.838Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ரியோ ராஜ்,rio raj,Ram In Leela,ராம் இன் லீலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/4cz418a4/New-Project-2026-08-11T175827.325.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ராம் இன் லீலா’ டிரெய்லர் நாளை வெளியாகிறது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/4cz418a4/New-Project-2026-08-11T175827.325.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமச்சந்திரன் கண்ணன் எழுத்து மற்றும் இயக்கத்தில் ரியோ ராஜ், வர்த்திகா ஜெயின் நடிப்பில் உருவாகி உள்ள காதல் திரைப்படம் ராம் இன் லீலா. </p><p>இப்படத்தில் மாளவிகா அவினாஷ், சேத்தன், மாகாபா ஆனந்த், முனிஷ்காந்த், தீபா வெங்கட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ், ஒய்வா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.</p><p>இப்படம் ஆக.21ம் தேதி மொத ராத்திரி படத்துடன் மோதுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அப்ளாஸ்டிக் அனீமியா: எலும்பு மஜ்ஜை செயலிழக்கும்போது ஏற்படும் ஆபத்தான ரத்த நோய்!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/aplastic-anemia-dangerous-blood-disease-when-bone-marrow-fails</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/aplastic-anemia-dangerous-blood-disease-when-bone-marrow-fails#comments</comments><guid isPermaLink="false">16c6dd2d-d100-494b-b186-da2a14fc279b</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:06:49 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:06:49.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,Aplastic Anaemia,iron-deficiency,அப்ளாஸ்டிக் அனீமியா,இரும்புச்சத்து குறைபாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lo4ky6ur/jj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aplastic Anaemia]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lo4ky6ur/jj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நமது உடலில் ரத்த அணுக்களை உருவாக்குவதில் எலும்பு மஜ்ஜை முக்கியப் பங்கு வகிக்கிறது. சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் ஆகியவை எலும்பு மஜ்ஜையில்தான் உருவாகின்றன. இந்த எலும்பு மஜ்ஜை போதுமான அளவில் புதிய ரத்த அணுக்களை உருவாக்க முடியாத நிலையே Aplastic Anaemia எனப்படும். </p><p>தமிழில் இதை அப்ளாஸ்டிக் அனீமியா அல்லது எலும்பு மஜ்ஜை செயலிழப்பு காரணமான ரத்தசோகை என்று குறிப்பிடலாம். இது அரிதானதாக இருந்தாலும், தீவிரமான ரத்தக் கோளாறாக மாறக்கூடியது.</p><h2>அப்ளாஸ்டிக் <strong>அனீமியா எ</strong>ன்றால் என்ன?</h2><p>அப்ளாஸ்டிக் அனீமியா ஏற்படும்போது ரத்த அணுக்களை உருவாக்கும் stem cells பாதிக்கப்படுகின்றன. பல நோயாளிகளிடம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தவறுதலாக இந்த செல்களைத் தாக்குவதால் நோய் உருவாகலாம். சிலரிடம் நோய்க்கான காரணத்தைத் தெளிவாகக் கண்டறிய முடியாது. சில மருந்துகள், chemotherapy மற்றும் radiation சிகிச்சை, குறிப்பிட்ட நச்சு வேதிப்பொருட்களுடன் தொடர்பு, சில வைரஸ் தொற்றுகள் மற்றும் அரிதான மரபியல் காரணிகளும் இந்த நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.</p><h2>ரத்த  சிவப்<strong>பு அணுக்கள்</strong> குறைவு </h2><p>இந்த நோயின் முக்கியமான தன்மை என்னவென்றால், சிவப்பு ரத்த அணுக்கள் மட்டுமல்லாமல் வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் குறையக்கூடும். </p><figure><img alt="red blood cells" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/r256tzgm/apl.jpg" /></figure><p>இதனால் Pancytopenia எனப்படும் நிலை ஏற்படலாம். சிவப்பு ரத்த அணுக்கள் குறைவதால் உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜன் செல்வது குறைந்து, அதிக சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல், வெளிறிய தோல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.</p><h2>அ<strong>றிகுறிக</strong>ள் </h2><p>வெள்ளை ரத்த அணுக்கள் குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்வது ஆபத்தானதாக இருக்கலாம். பிளேட்லெட்டுகள் குறைந்தால் ரத்தம் உறையும் திறன் பாதிக்கப்படும். இதனால் காரணமின்றி உடலில் நீலக்காயங்கள் தோன்றுதல், மூக்கில் அல்லது ஈறுகளில் ரத்தக்கசிவு, தோலில் சிறிய சிவப்பு அல்லது ஊதா நிறப் புள்ளிகள் போன்றவை ஏற்படலாம்.</p><h2>சிகி<strong>ச்சைகள்</strong></h2><p>அப்ளாஸ்டிக் அனீமியாவை கண்டறிய முதலில் Complete Blood Count (CBC) போன்ற ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது கண்டறியப்பட்டால், காரணத்தை அறிய Bone Marrow Aspiration மற்றும் Biopsy போன்ற பரிசோதனைகள் செய்யப்படலாம். நோயின் தீவிரம் மற்றும் காரணத்தைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும்.</p><p>சில நோயாளிகளுக்கு ரத்தம் அல்லது பிளேட்லெட் transfusion மூலம் தற்காலிகமாக ரத்த அணுக்களின் அளவை உயர்த்தலாம். நோய் எதிர்ப்பு அமைப்பு எலும்பு மஜ்ஜையைத் தாக்கும் நிலையில், immunosuppressive therapy பயன்படுத்தப்படலாம். தகுதியான சில நோயாளிகளுக்கு Blood and Bone Marrow Stem Cell Transplantation முக்கியமான சிகிச்சை வாய்ப்பாக இருக்கலாம். பொருத்தமான donor கிடைத்தால், இந்த சிகிச்சை சிலருக்கு நோயிலிருந்து நீண்டகால மீட்சிக்கான வாய்ப்பை வழங்கக்கூடும்.</p><h2>ஆ<strong>பத்தான நி</strong>லை</h2><p>அப்ளாஸ்டிக் அனீமியா சிகிச்சையின்றி தீவிரமடைந்தால் கடுமையான தொற்று, அதிகமான ரத்தக்கசிவு மற்றும் பிற உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் ஏற்படலாம். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/z3qban4q/symptoms.jpg" /></figure><p>எனவே தொடர்ந்து சோர்வு, அடிக்கடி தொற்று, காரணமின்றி ரத்தக்கசிவு அல்லது உடலில் அதிகமாக நீலக்காயங்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.</p><p>மொத்தத்தில், அப்ளாஸ்டிக் அனீமியா என்பது சாதாரண இரும்புச்சத்து குறைபாடு ரத்தசோகையிலிருந்து வேறுபட்ட ஒரு தீவிரமான நோயாகும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து ரத்தநோய் நிபுணரின் கண்காணிப்பில் உரிய சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம். சரியான நேரத்தில் சிகிச்சை தொடங்குவது நோயின் சிக்கல்களைத் தவிர்க்கவும், நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.</p>]]></content:encoded></item><item><title>‘சிக்மா’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/second-song-from-sigma-releases-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/second-song-from-sigma-releases-tomorrow#comments</comments><guid isPermaLink="false">3930cb64-4569-4318-990e-259d45fe6b7e</guid><pubDate>Tue, 11 Aug 2026 12:06:33 +0000</pubDate><atom:updated>2026-08-11T12:06:33.106Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>jason sanjay,Sundeep Kishan,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma,சுந்தீப் கிஷன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/69ah5k7h/New-Project-2026-08-11T173545.523.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சிக்மா’ இரண்டாவது பாடல் நாளை வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/69ah5k7h/New-Project-2026-08-11T173545.523.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் விஜய்யின் மகனானா ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட், சம்பத் ராஜ், ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் சிக்மா. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.கே.தமிழ்க்குமரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். </p><p>இப்படத்தின் டீசர், போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றநிலையில், சமீபத்தில் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான அய்யய்யோ அம்மாடி நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p><p>முதலில் இப்படம் ஜூலை.31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் 2026: நெல்லை அணி வெற்றி பெற 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/nellai-need-183-runs-to-win-against-trichy-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/nellai-need-183-runs-to-win-against-trichy-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">12d94e37-6a2a-46c3-9bdc-76c6ef354c53</guid><pubDate>Tue, 11 Aug 2026 11:47:29 +0000</pubDate><atom:updated>2026-08-11T11:47:29.195Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோழாஸ்,Nellai Royal Kings,நெல்லை ராயல் கிங்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/s9uhr2zl/suresh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sureshkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/s9uhr2zl/suresh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நெல்லைக்கு எதிரான போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 182 ரன்கள் எடுத்துள்ளது.</p><p>டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. </p><p>திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.</p><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 12-வது லீக் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார்.</p><p>7வது விக்கெட்டுக்கு இணைந்த ராஜ்குமார், அந்தோனி தாஸ் ஜோடி அதிரடியாக ஆடி 57 ரன்கள் சேர்த்தனர். ராஜ்குமார் 19 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்தார். </p><p>நெல்லை அணி சார்பில் சச்சின் ராதி 3 விக்கெட்டும், ஹரிஷ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.</p><p>இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நெல்லை அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.13 லட்சம் வேலையைத் துறந்து ஏ.ஐ படிப்பு; அமெரிக்காவில் ரூ.1.5 கோடி சம்பளத்தில் சாதனை படைத்த ஐ.ஐ.டி பட்டதாரி!</title><link>https://www.maalaimalar.com/news/national/quit-13-lakh-job-for-ai-studies-iit-grad-earns-1-5-crore-in-us</link><comments>https://www.maalaimalar.com/news/national/quit-13-lakh-job-for-ai-studies-iit-grad-earns-1-5-crore-in-us#comments</comments><guid isPermaLink="false">797d56e8-5e20-431f-9d01-38285d36ea49</guid><pubDate>Tue, 11 Aug 2026 11:40:38 +0000</pubDate><atom:updated>2026-08-11T11:40:38.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>software engineer,AI,aditya,University at Buffalo,மென்பொறியார்,யுனிவர்சிட்டி அட் பஃப்பலோ,ஆதித்யா அரேபல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0vbgdcuu/aditya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Software Engineer  Aditya 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0vbgdcuu/aditya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐ.ஐ.டி-யில் பட்டம் பெற்ற சாய் வெங்கட ஆதித்யா அரேபல்லி, அமெரிக்காவில் உள்ள அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளத்தில் மென்பொறியாளராகப் (Software Engineer) பணியில் சேர்ந்து அசத்தியுள்ளார்.</p><h2>தொட<strong>க்கக் கல்வி</strong> </h2><p>2022-இல் ஐ.ஐ.டி தார்வாடில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.டெக் முடித்த ஆதித்யா, பெங்களூரில் உள்ள 'ரிவர்பெட் டெக்னாலஜி' நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தார்.</p><h2>ஏ.<strong>ஐ துறையை</strong> நோக்கிய மாற்றம்</h2><p>செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சியைக் கண்டு, தனது நிலையான வேலையைத் துறந்து அமெரிக்காவிலுள்ள 'யுனிவர்சிட்டி அட் பஃப்பலோ' பல்கலைக்கழகத்தில் AI பாடப்பிரிவில் எம்.எஸ் பட்டம் பயின்றார்.</p><h2>பயிற்சியும் <strong>வெற்</strong>றியும்</h2><p>மேல்படிப்பின் போது கோடிங், தயாரிப்புகள் உருவாக்கம் மற்றும் சான்றிதழ் பயிற்சிகளில் கவனம் செலுத்திய இவர், படிப்பை முடித்ததும் சீட்டிலில் உள்ள அமேசான் AWS கிளையில் ரூ.1.5 கோடி பேக்கேஜில் வேலை வாய்ப்பைப் பெற்றார்.</p><h2>குடும்பப் <strong>பின்ன</strong>ணி</h2><p>ஒரு புகைப்படக் கலைஞரின் மகனான ஆதித்யாவின் இந்த மகத்தான வெற்றி குறித்து அவரது தந்தை நெகிழ்ச்சியுடன் கூறுகையில், "ஒரு புகைப்படக் கலைஞராக எனது மகனுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்; இன்று என் மகன் என் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டான்" எனக் கூறியுள்ளார். துணிச்சலாக வேலையை விட்டுவிட்டு புதிய தொழில்நுட்பத்தைக் கற்ற ஆதித்யாவின் இந்த சாதனை பயணம் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>