<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 28 Aug 2026 05:17:04 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: IUML அலுவலகத்துக்கு வந்த முதல் முதலமைச்சர் விஜய் தான்- அமைச்சர் ஷாஜகான் - 28 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-august-2026#comments</comments><guid isPermaLink="false">9bc913c5-ed9d-43ae-847f-c4bc775f64fc</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:01:44 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:15:44.283Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/xtakivgb/shajahan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஷாஜகான்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஷாஜகான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/xtakivgb/shajahan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>IUML அலுவலகத்துக்கு வந்த முதல் முதலமைச்சர் விஜய் தான். முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நல்ல திசை நோக்கி செல்கிறது- அமைச்சர் ஷாஜகான்</p><p>ஒரு கையில் குர்ஆனையும் மறு கையில் அரசியலமைப்பை தாங்கிப் பிடியுங்கள் எங்களை வழிநடத்தியவர் காதர் மொய்தீன்- அமைச்சர் ஷாஜகான்</p><p>சட்டமன்ற தேர்தலில் தனது வெற்றிக்கு உழைத்த முக ஸ்டாலின், உதயநிதிக்கு நன்றி- சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான்</p><p>வன்னியருக்கான உள்இடஒதுக்கீடு கேட்டு நீண்ட நாட்களாக வன்னியர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்- எடப்பாடி பழனிசாமி</p><p>வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டதாக சிவி சண்முகம் பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>10.5% ஒதுக்கீட்டை வழங்கக்கூடாது என 2021-ல் நடந்த சபையில் தீர்மானம், ஸ்டாலின் உறவினர் வழக்கு தொடர்ந்தார்-சிவி சண்முகம்</p><p>வன்னியருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சிவி சண்முகம் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும்- எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p>வன்னியர்களுக்கு இடஒதுக்கீடுக்கு முட்டுக்கட்டை என சிவி சண்முகம் நேற்று பேரவையில் பேசியது தவறு- எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p><strong>வன்னியர் இடஒதுக்கீடு- சட்டசபையில் வாக்குவாதம்</strong> </p><p>வன்னியர்களுக்கான 10.5% ஒதுக்கீட்டுக்கு எதிராக ஸ்டாலினின் உறவினர் வழக்கு தொடுத்து முட்டுக்கட்டை போட்டனர்-சிவி சண்முகம்</p><p>விடுதியை ஆய்வு செய்தபோது மாணவர்களுடன் உரையாடிய முதலமைச்சர் எங்களை அழைத்து அறிவுறுத்தினார்- அமைச்சர்</p><p>கனவுகளுடன் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதியும் செய்து கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்- அமைச்சர்</p><p>575 விடுதிகளில் கண்காணிப்பு கேமராமக்கள் பொருத்தப்பட்டுள்ளன- அமைச்சர் சம்பத்குமார்</p><p>மாதந்தோறும் விடுதியில் ஆய்வு நடைபெறுகிறது, மாணவர் விடுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி- அமைச்சர்</p><p>பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர்</p><p>விடுதிகளில் காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை- அமைச்சர் சம்பத்குமார்</p><p>5 லட்சம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்குவதற்கு 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு- அமைச்சர் சம்பத்குமார்</p><p>ஒரு தலைமுறையை மாற்ற வேண்டுமென்றால் அந்த தலைமுறைக்கு கல்வியை கொடுக்க வேண்டும்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை இருக்க கூடாது, வாய்ப்பு கிடைத்தால் எந்த சமூகமும் உயரும்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>விஜய் தமிழ்நாடு முதலமைச்சராவார் என 12 ஆண்டுகளுக்கு மு ன்பே கணித்தவர் அமைச்சர் ஆனந்த்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் அமைச்சர் பாடிய எம்ஜிஆர் பாடலுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை- கே.என்.நேரு</p><p>மக்கள் நலன் என்று கூறி தன் மக்கள் நலனை மட்டும் பார்த்தனர் என எம்ஜிஆர் பாடல் பாடி அமைச்சர் சம்பத்குமார் உரை</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை- அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை அளித்து வருகிறார். </p><p>இந்தாண்டு மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை- சேகர்பாபு</p><p>பருவமழைக்கு முன்னதாக சென்னையில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாருவதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு நிதிவிடுவிக்கவில்லை- சேகர்பாபு</p><p>அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>கடந்த ஆட்சிகளில் நடந்தது போல் ரேஷன் கடை மூலம் மட்டுமல்ல பசுமை அங்காடி மூலமும் பொருட்கள் வழங்க நடவடிக்கை அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>உணவுத்துறை அமைத்து கண்காணித்து வரும் நிலையில் விலை அதிகமாக உள்ள பொருளை அரசு விற்பனை செய்ய நடவடிக்கை- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>வெங்காயம் உள்ளிட்ட 41 பொருட்களுக்கான விலையை தினமும் கவனித்து வருகிறோம்- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>ஈரான் போர், எரிபொருள் விலை உயர்வால் தான் விலைவாசி பொருட்களும் விலை உயர்ந்துள்ளது- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>எரிபொருள் விலை உயரும் நேரத்தில் மளிகை பொருட்கள் பதுக்கல், அதனால் விலை உயர்வு சாதாரணம்- சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி</p><p>பண்டிகை காலம் வருவதால் அத்தியாவசிய பொருட்களும் ரேஷன் கடை மூலம் வழங்க வேண்டும்- சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>பண்டிகை காலங்களில் மளிகை பொருள் தொகுப்பு தருவதை போல் ரேஷனில் தற்போதும் வழங்க வேண்டும்- தாரகை கத்பட்</p><p>அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது- பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>வறட்சி காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வந்த அரிசியின் வரத்தும் குறைந்ததால் விலை உயர்வு- எடப்பாடி பழனிசாமி</p><p>துவரம் பருப்பு, அரிசி, சர்க்கரை, எண்ணெய் விலைவாசி உயர்வால மக்கள் அவதி- உதயநிதி ஸ்டாலின்</p><p>த.வெ.க. அரசு அமைந்தது முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்</p><p>தொடங்கியது சட்டசபை- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை</p><p>சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ் 1 மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் சம்பத் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%82277-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%82277-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">4c7dcc07-2e1e-4169-9671-ade1e629b986</guid><pubDate>Fri, 28 Aug 2026 05:15:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:15:05.147Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/3cjpkkhq/sambathkumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sambathkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/3cjpkkhq/sambathkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பிளஸ் 1 மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை குறித்து அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை அளித்தார்.</p><p>அப்போது, மக்கள் நலன் என்று கூறி தன் மக்கள் நலனை மட்டும் பார்த்தனர் என எம்ஜிஆர் பாடல் பாடி அமைச்சர் சம்பத்குமார் உரையாற்றினார். </p><p>இதற்கு,<a href="http://maalaimalar.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow"> பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை</a>க்கும் அமைச்சர் பாடிய எம்ஜிஆர் பாடலுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை என கே.என்.நேரு விமர்சித்தார். </p><p>தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை வழங்கினார்.</p><p>அப்போது அவர் கூறியதவது:-</p><p>விஜய் தமிழ்நாடு முதலமைச்சராவார் என 12 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர் அமைச்சர் ஆனந்த்.</p><p>திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை இருக்க கூடாது, வாய்ப்பு கிடைத்தால் எந்த சமூகமும் உயரும்.</p><p>பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs" rel="nofollow">நிதி ஒதுக்கீடு</a> செய்யப்பட்டுள்ளது.</p><p>ஒரு தலைமுறையை மாற்ற வேண்டுமென்றால் அந்த தலைமுறைக்கு கல்வியை கொடுக்க வேண்டும்.</p><p>5 லட்சம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்குவதற்கு 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>விடுதிகளில் காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>575 விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாதந்தோறும் விடுதியில் ஆய்வு நடைபெறுகிறது. மாணவர் விடுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>கனவுகளுடன் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதியும் செய்து கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.</p><p>விடுதியை ஆய்வு செய்தபோது மாணவர்களுடன் உரையாடிய முதலமைச்சர், எங்களை அழைத்து அறிவுறுத்தினார்.</p><p>ஆபத்து காலத்தில் காக்கும் 108 ஆம்புலன்ஸ்போல் தமிழக மக்கள் அச்சம் போக்க தவெகவுக்கு 108 எம்எல்ஏக்களை கொடுத்துள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>சக்திவாய்ந்த 200சிசி என்ஜினுடன் அறிமுகமானது யமஹாவின் YZF-R2</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/yamaha-r2-launched-india-price</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/yamaha-r2-launched-india-price#comments</comments><guid isPermaLink="false">e9e03275-122b-4c8c-9fa4-39e3353f5732</guid><pubDate>Fri, 28 Aug 2026 05:08:00 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:08:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>yamaha,யமஹா,Motorcycle,மோட்டார்சைக்கிள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/lzenqjk7/Yamaha-R2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Yamaha R2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/lzenqjk7/Yamaha-R2.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/yamaha">யமஹா</a> நிறுவனம் YZF-R2 பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய யமஹா பைக்கின் விலை இந்தியாவில் ரூ. 2,30,500 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்த புதிய <a href="https://www.maalaimalar.com/topic/bike">பைக்</a> மூன்று வேரியண்ட்கள் மற்றும் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. </p><h2>என்ஜின் மற்றும் செயல்திறன்:</h2><p>புதிய YZF-R2 பைக்கில் 204சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26.1bhp பவர் மற்றும் 19.1 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. </p><p>இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்லிப்-அண்ட்-அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மிட்-ஸ்பெக் மற்றும் M வேரியன்ட்களில், பை-டைரக்ஷனல் குயிக்ஷிஃப்டர் வழங்கப்படுகிறது.</p><h2>ஹார்டுவேர் அம்சங்கள்:</h2><p>யமஹா R15 உடன் ஒப்பிடும் போது, இந்த பைக் மிகவும் ஆக்ரோஷ வடிவமைப்பு மற்றும், கூர்மையான தோற்றம் கொண்ட ஹெட்லைட் பகுதியை கொண்டுள்ளது. இவை இந்த பைக்கிற்கு தனித்துவ தோற்றத்தை அளிக்கின்றன. இது டைமண்ட் ஃபிரேமில் கட்டமைக்கப்பட்டு, இன்வெர்டட் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அமைப்பில் சஸ்பென்ஷன் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த பைக் இரு முனைகளிலும் 17-இன்ச் அலாய் வீல்களில் இயங்குகிறது, மேலும் முன்புறம் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக்குகள் மூலம் பிரேக்கிங் செய்யப்படுகிறது. YZF-R2 M பைக்கில் கூடுதலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற ஃபோர்க், பின்புற ஷாக் அப்சார்பர், கிளட்ச் லீவர் மற்றும் பிரேக் லீவர் ஆகியவை உள்ளன.</p><h2>யமஹா YZF-R2 சிறப்பு அம்சங்கள்:</h2><p>சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்த பைக்கில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் கூடிய TFT கன்சோல் உள்ளது. டாப்-எண்ட் M வேரியண்ட்டில், கீலெஸ் இக்னிஷனுக்காக ஸ்மார்ட் கீ சிஸ்டம் வழங்கப்படுகிறது.</p><p>அனைத்து வேரியண்ட்களிலும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன், ஸ்ட்ரீட், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என மூன்று ரைடிங் மோட்களும் உள்ளன. இதன் மூலம், ஓட்டுநர் தனது விருப்பத்திற்கும் சாலை நிலைமைகளுக்கும் ஏற்ப பைக்கின் செயல்திறனை மாற்றியமைத்து கொள்ளலாம்.</p><p>இந்தியாவில் யமஹா R2 பைக் கே.டி.எம். ஆர்.சி.200 மற்றும் ஹீரோ கரிஸ்மா XMR 210 ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.</p>]]></content:encoded></item><item><title>புதிய அரசின் கீழ் விலைவாசி உயர்வு.. சட்டமன்றத்தில் உதயநிதி, இபிஎஸ் கவன ஈர்ப்பு - அமைச்சர் விளக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rising-prices-under-the-new-government-udhayanidhi-and-eps-raise-the-issue-in-the-assembly-minister-offers-clarification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rising-prices-under-the-new-government-udhayanidhi-and-eps-raise-the-issue-in-the-assembly-minister-offers-clarification#comments</comments><guid isPermaLink="false">3749ef41-0e6f-4f62-9ddb-e3ae56f4a634</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:44:10 +0000</pubDate><atom:updated>2026-08-28T04:44:10.541Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,விலைவாசி உயர்வு,Rising prices,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/rj1a1dac/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டமன்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/rj1a1dac/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விலைவாசி உயர்வு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் கீழ் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-august-2026">சட்டமன்றத்தில் </a>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், "அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. </p><p>அரசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்த பொருளை எடுத்தாலும் கடந்த 6 மாதங்களில் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். </p><p>குறிப்பாக இந்த அரசு அமைந்ததில் இருந்து அத்தியவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.</p><p>மே மாதம் ஒரு கிலோ அரிசி 55 ரூபாய், இன்றைக்கு 75 ரூபாய், மே மாதம் ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய், இன்று கிலோ 80 ரூபாய், மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150, இன்றைக்கு ரூ.180, மே மாதம் ஒரு கிலோ சர்க்கரை ரூ.40, இன்று ரூ.80 ரூபாயாக உயர்ந்துள்ளது. </p><p>மக்கள் இதனால் மிகவும் பாதித்திருக்கிறார்கள். மளிகை கடை பக்கம் செல்வதையே குறைத்து வருகிறார்கள் என செய்தி வருகிறது. </p><p>ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இதை கண்டித்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். </p><p>விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக 2007 ஆம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டது. </p><p>அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர், தமிழ்நாடு மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிறப்பு பொது விநியோக திட்டத்தை அறிவித்தார்.</p><p>அதன் மூலம் பருப்பு, எண்ணெய், ரவா உள்ளிட்ட பொருட்களை சந்தை விலையை விட குறைவான விலையில் வழங்கினார். கடுகு, சீரகம் , வெந்தையம் உள்ளிட்ட 10 மளிகை பொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கினார்கள். கலைஞர் தொடங்கி வைத்த திட்டம் தற்போதுவரை நடந்து வருகிறது.</p><p>தற்போது வழங்கும் அளவை விட கூடுதலாக வழங்க வேண்டும் என இந்த அரசு ஆவன செய்ய வேண்டும். முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு அமைச்சர்கள், அதன் துறை அதிகாரிகள் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தி விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு இந்த அரசு உடனடியாக நல்ல தீர்வு காண வேண்டும்." என கேட்டுக்கொண்டார்.</p><h2>இபிஎஸ்</h2><p>அதிமுக தலைவர் இபிஎஸ் பேசுகையில், "அரசி விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை கிலோ ரூ.48 இல் இருந்து ரூ.72 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் ஒரு கிலோ ரூ.200 இல் ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. மிளகாய் ரூ.200 இல் இருந்து தற்போது ரூ.300க்கு விற்கிறது.</p><p>வெள்ளம் ரூ.58 இல் இருந்து தற்போது ரூ.85 ஆக உயர்ந்துள்ளது. புளி, பருப்பு விலைகளும் அதிகரித்துள்ளது. எண்ணெய் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>நமக்கு வறட்சி நிலவுகிறது. இதனால் ஆந்திராவில் இருந்து வரும் அரிசி வரத்தும் குறைந்துள்ளது. அதிமுக அரசு இருந்தபோது விலை ஏற்றத்தின்போது எந்த பொருள் விலை ஏறுகிறதோ, அந்த பொருள் எந்த மாநிலத்தில் எங்கு குறைவாக உள்ளதோ அங்கிருந்து இறக்குமதி செய்து கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்து விற்கப்பட்டது. </p><p>அதனால் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். எனவே இந்த அரசும் விலைவாசியை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்." என தெரிவித்தார்.</p><h2>விளக்கம்</h2><p>இதற்கு விளக்கம் அளித்த உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன், " ஈரான் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சர்க்கரை நமது மாநிலத்தில் மட்டுமல்ல, அதிக உற்பத்தி செய்யும் மகாராஷ்டிராவிலும் ரூபாய் ஏறியுள்ளது. எல்லா இடங்களிலும் விலை ஏறத்தான் செய்திருக்கிறது.</p><p>நமது முதலமைச்சர் தலைமையிலான கமிட்டியில் வாராவாரம் 41 பொருட்களுக்கு உண்டான விலையை தினமும் கண்கணிக்கிறோம். வெங்காயம், உருளைக்கிழங்கு, அரசி என எல்லா பொருட்களையும் கண்காணிக்கிறோம். </p><p>விலை உயர்வு அதிக உள்ளவற்றை கண்டறிந்து கடந்த காலங்களில் என்ன நடைமுறைப்படுத்தினோமோ அதை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு பாதிப்பில்லாத வண்ணம் விலையை குறைக்க முயன்று வருகிறோம்.</p><p>ரேஷன் கடைகள் மூலமாக மட்டுமல்ல, அங்கன்வாடி பசுமை கடைகள் மூலமாகவும் சென்ற ஆட்சிக்காலங்களை போல இப்போதும் கண்டிப்பாக செய்யப்படும்" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-28-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-28-08-2026#comments</comments><guid isPermaLink="false">64531ed8-cab6-4e55-895a-00d44c71593d</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:36:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T04:36:05.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/y2gwkogj/gold04.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/y2gwkogj/gold04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</strong></em> </p><p>ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் செவ்வாய்கிழமை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. </p><p>இதனை தொடர்ந்து நேற்று தங்கம் இரண்டு முறை குறைந்தது. காலை தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 940-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 520-க்கும் மாலை கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 725-க்கும் சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்தது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>இன்றும் குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800</p><p>26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p> <h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>27-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>26-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>25-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p>]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரி, 100W சார்ஜிங் வசதியுடன் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/redmi-note-17-pro-max-5g-launched-in-with-10000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/redmi-note-17-pro-max-5g-launched-in-with-10000mah-battery#comments</comments><guid isPermaLink="false">9d192394-d7b1-4c3b-84f1-b96d6a4d2879</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:36:00 +0000</pubDate><atom:updated>2026-08-28T04:36:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Redmi,ரெட்மி,smartphone,ஸ்மாரட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/39pstbio/REDMI-Note-17-Pro-Max-5G.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ REDMI Note 17 Pro Max 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/39pstbio/REDMI-Note-17-Pro-Max-5G.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/xiaomi">சியோமி</a> நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தேர்வு செய்யப்பட்ட சர்வதேச சந்தைகளில் தனது ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. </p><p>இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> அளவில் பெரிய பேட்டரி, அதிவேக சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்களுடன் வருகிறது.</p><p>புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்கள் மற்றும் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது.</p><h2>ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்:</h2><p>சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.83 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், HDR10+ மற்றும் டால்பி விஷன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கிரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 மூலம் பாதுகாக்கப்படுகிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 பிராசஸர், அதிகபட்சம் 8ஜிபி LPDDR5X ரேம், 512ஜிபி UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. மென்பொருளை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓ.எஸ். 3 உடன் வருகிறது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்து பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.</p><p>புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் சிம், வைபை 6, ப்ளூடூத் 6 வழங்கப்பட்டுள்ளது. </p><p>புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 100 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 27 வாட் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடல் விலை JPY79,980 இந்திய மதிப்பில் ரூ. 47,900 என்றும் 8ஜிபி ரேம், 512ஜிபி மெமரி மாடல் விலை JPY99,980 இந்திய மதிப்பில் ரூ. 59,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிளவுட் பிரஷ், பர்ப்பிள் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>50MP கேமரா, 45W சார்ஜிங்: சாம்சங் கேலக்ஸி S26 FE ஸ்மார்ட்போன் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-s26-fe-launched</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-s26-fe-launched#comments</comments><guid isPermaLink="false">c97d5155-eef6-4d07-a320-a1a995af97f8</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:38:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/3jpofrgt/Galaxy-S26-FE.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samsung Galaxy S26 FE]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/3jpofrgt/Galaxy-S26-FE.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> நிறுவனத்தின் கேலக்ஸி S26 FE ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் தேர்வு செய்யப்பட்ட உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> அடுத்த மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.</p><p>புதிய கேலக்ஸி S26 FE மாடலில் எக்சைனோஸ் 2000 சீரிஸ் சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த சிப்செட் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4900mAh பேட்டரி, வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளுடன் வருகிறது. </p><h2>கேலக்ஸி S26 FE சிறப்பம்சங்கள்:</h2><p>சாம்சங் கேலக்ஸி S26 FE மாடலில் 6.7 இன்ச் Full HD+ Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட எக்சைனோஸ் 2000 சீரிஸ் சிப்செட் உடன் வருகிறது.</p><p>மெமரியை பொருத்தவரை இந்த மாடலில் 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 512 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, OIS, 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 4900mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி, எல்.டி.இ., வைபை 6E, ப்ளூடூத் 5.4, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய சாம்சங் கேலக்ஸி S26 FE ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 799 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 89,000 என தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை 1,099 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,22,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>புளூபெரி, கிராஃபைட் மற்றும் பிஸ்தாச்சியோ நிறங்களில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி S26 FE ஸ்மார்ட்போன் செப்டம்பர் 4-ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட சர்வதேச சந்தைகளில் சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்| 27 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026#comments</comments><guid isPermaLink="false">fdcac3cc-5277-4752-b476-f0f1c8922a11</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:02:06 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:32:57.974Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zok08jg6/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zok08jg6/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மானிய கோரிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் சட்டசபைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வருகை</p><p>தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். </p><p>வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். </p><p>கீழ்வேளூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பா.ம.க. எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என்று உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p><p>தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார். </p><p>செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் நவீன உபகரணங்கள் வழங்கப்படுமா? என பா.ம.க. எம்எல்ஏ கணேஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு, ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</p><p>கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவமனைக்கு டயாலிசஸ் செய்வதற்கான கருவி கூடுதலாக வழங்க வேண்டும் என எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் டயாலிசஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>சட்டசபை நிகழ்வுக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார். </p><p>H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்த முதியவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை உள்ளதா? என்று உறுப்பினர் லட்சுமணன் எழுப்பிய கேள்விக்கு, H1N1 வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். H1N1 வைரஸ் குறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p>கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை நிலவுவதாக எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>தென்காசியில் உள்ள இருளர், காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு சாதிச்சான்று கிடைக்க நடவடிக்கை தேவை. வீரகுடி வெள்ளாளர் சமுதாயத்தினருக்கு தென்காசியில் வைச பிள்ளை என்றுதான் சாதி சான்று தருகின்றனர் என எம்எல்ஏ ராஜா எழுப்பிய கேள்விக்கு, குறும்பர், நாயக்கர் மலைவாழ் நாயக்கர் என்று சாதி சான்றிதழ் தருவதில் சிக்கல் உள்ளது. சாதிச்சான்றிதழ் கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம், அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். </p><p>சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என எம்எல்ஏ சரவணன் கோரிக்கை விடுத்தார். சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஆய்வு செய்து ஆட்சியர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.</p><p>திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லை என அதிமுக எம்எல்ஏ அரி எழுப்பிய கேள்விக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது. பயனாளிகளை கணக்கில் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார். </p><p>என்னுடைய திருவெறும்பூர் தொகுதியில் மழைக்காலத்தில் நெல் வீணாவதை தடுக்க குடோன்கள் கட்டித் தரப்படுமா?- எம்எல்ஏ நாவல்பட்டு விஜி.</p><p>செப்டம்பரில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். தார்பாய் மூலமாக நெல்மணியை காய வைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். எந்த இடத்தில் பிரச்னை வந்தாலும், கோரிக்கை வந்தாலும் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><p>ராமநாதபுரம் பணங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எப்போது அமைக்கப்படும் என எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் எழுப்பிய கேள்விக்கு, 2026-27 கொள்முதல் பருவத்தில் நடக்கும் சாகுபடிக்கு ஏற்றவாறு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்தார். </p><p>மொடக்குறிச்சியில் நீர்நிலை புறம்போக்கு எனக் கூறி 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா மறுக்கப்படுவதாக தவெக எம்.எல்.ஏ. சண்முகன் கூறியதற்கு, நீர் ஓடக் கூடிய இடமாக இல்லை என்றால் பரிசீலித்து நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார். </p><p>“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்” என தவெக எம்.எல்.ஏ., ஈசிஆர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர்,“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 7 ஊராட்சிகள் செங்கல்பட்டிலும் 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இருப்பதால் இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்று மக்கள் அவதியடையும் சூழ்நிலை உள்ளது” என்றார்.</p><p>கலசப்பாக்கம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படுமா? என்று உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் சாலை வசதி மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?- எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர்</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது குறித்து குழு மூலம் ஆய்வு செய்து ஆட்சியர் மூலம் நடவடிக்கைகள் எடுப்போம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><h2>அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த பாமக எம்எல்ஏ</h2><p>சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறுகையில்," செஞ்சி மருத்துவமனையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மகப்பேறுக்கான தனிக் கட்டடம் கட்டப்பட்டு ஆபரேஷன் தியேட்டர் நடைமுறைக்கு வராமல் இருந்தது அமைச்சர் ஆனந்திடம் ஒரே ஒரு கோரிக்கைதான் வைத்தேன். மறுநொடியே DM-ஐ அழைத்து சொன்னதன் விளைவாக 10 நாட்களுக்கு முன்பாக ஆபரேஷன் தியேட்டர் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.</p><p>சிசேரியன் மிக சிறப்பாக சிசேரியன் நடைபெற்றுள்ளது. நீர்வளத்துறை அமைச்சருக்கும்(ஆனந்த்) சுகாதாரத்துறை அமைச்சருக்கும்(அருண்ராஜ்) நன்றிக்கடனுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.</p><p>கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் உள்ளனர். கூடுதல் நியமனம் அவசியம். Liver Transplantation சிகிச்சை செய்யவும் அரசு முன்வர வேண்டும் என்று அதிமுகவின் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தினார்.</p><p>அதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. முதல் முறையாக 284 உயர்சிறப்பு மருத்துவர் பணியிடம் உருவாக்கி இருக்கிறோம். Liver Transplantation தேவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுப்போம்" என்றார்.</p><p>நேபாள விவகாரம்.. எதிர்கட்சிகள் கோரிக்கை ஏற்பு</p><p>தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியது குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், அவர்கள் விளக்கும் முன்பாக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளிக்க, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அமைச்சருக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் எடுத்துரைக்க சபாநாயகர் வாய்ப்பளித்தார்.</p><p>தமிழ்நாடு சட்டசபை ஒருநாள் விடுமுறைபின் இன்று கூடியது. சபைகூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேபாளத்தில் பெரு வெள்ளம் தொடர்பாக விளக்கம் அளிக்க தொடங்கினார். </p><p>அதற்கு நேபாளம் பெரு வெள்ளம் தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அமைச்சர் விளக்கம் அளிப்பதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்:- </p><p>நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் முன்னால் பேசினால் என்ன, பின்னால் பேசினால் என்ன?. நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் தான் அமைச்சர் பதிலளிக்கிறார் என்பதல்ல. </p><p>அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் அமைச்சர் பதிலளிப்பது தான் முறையாக இருக்கும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>அரசிற்கு கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பே அமைச்சர் பதிலளிப்பதா?. அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் அதன் பின்னர் விளக்கம் அளியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதற்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பேசிய பின் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்றார். </p><p>மேலும், கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில் முதலமைச்சர் பேசிய பின்னர் கேள்வி கேளுங்கள் என நடந்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>இருப்பினும் சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.</p><p>எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.</p><p>தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்- உதயநிதி</p><p>நேபாளம் சென்ற தமிழர்கள் 57 பேர் மாயம், அரசு தரிதமாக செயல்பட்டு அவர்களை தாயகம் மீட்டுவர நடவடிக்கை தேவை.  நேபாளத்திற்கு கோவை ஈஷா மூலம் ஆன்மிக பயணம் சென்றோரின் நிலை என்ன?- இபிஎஸ்.</p><p>திருக்குறுங்குடி நம்பி ஆண்டவர் கோயிலுக்குச் செல்லும் பாதை, காலம் செல்ல செல்ல குறுகிக்கொண்டே செல்கிறது. பொதுமக்களின் வசதிக்காக அதன் பாதையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?- எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன்</p><p>எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணணின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகளிடம் பரிசீலித்து ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்- வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>நேபாள சம்பவம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்,"பேச்சின் இறுதியில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஐடியா ஒன்றை தந்தார்.</p><p>அவர்"காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால், எந்தந்த பகுதிகளில் காலநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் தெரிவித்தால், சுற்றுலா செல்பவர்களுக்கும், மீட்பு பணிகளுக்கும் வசதியாக இருக்கும்" என்றார்.</p><p>நேபாள நாட்டில் கைலாஷ் யாத்திரைக்கு தமிழகத்தை சேர்ந்த 103 பேர் பல குழுக்களாக சென்றுள்ளனர். நேபாள பெருவெள்ளம் ஏற்பட்ட ரஸ்வா மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழகர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 34 பேரின் விவரங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்- சட்டசபையில் நேபாள வெள்ளம் தொடர்பான கவன ஈர்ப்புக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில்.</p><p>அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.</p><p>கேள்வி நேரம் இருக்கும்போது துறையின் செயலாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அதனைக் குறிப்பு எடுக்க வேண்டும். துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும்- உதயநிதி</p><p>டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பரவும் நிலையில், கட்டுப்பாடு நடவடிக்கை என்ன என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது கொசு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. </p><p>டெங்கு காய்ச்சல் தொடர்பாக 2  நாட்களுக்கு முன்னர் அனைத்து இயக்குநர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.</p><p>ஏடிஎஸ் கொசுவால் டெங்கு பாதிப்பு ஏற்படுவதால் வீடுகளை சுற்றி கொசு உற்பத்தியாகாமல் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு.</p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்ட்டில் கூடுதலாக 300 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது என்றாலும் நிலை கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளது.</p><p>தமிழ்நாட்டில் முதலீடு செய்த நிறுவனம் ஆந்திராவிலும் முதலீடு செய்துள்ளது. சுஸ்லாண் நிறுவனம் ஆந்திராவுக்கு சென்றதாக செய்தி பரவும் நிலையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்.</p><p>மேலும் அவர்,"பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து சென்ற நிறுவனம் அரசின் நடவடிக்கையால் தற்போது ரூ.500 கோடியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கோடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.</p><p>சின்னபிள்ளை சுயஉதவி குழு மூலம் மதுரையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு என நான் பேசியது திருத்தி வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.</p><p>கீர்த்தனாவின் திருத்த அறிக்கை.. ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய திமுக..</p><p>விதியின் கீழ் திருத்த அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் கீர்த்தனாவுக்கு உரிமை இருக்கிறது. அதே விதியில், திருத்தக் குறிப்பை பேரவை கூடும் அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் தகவலுக்காக வைக்க வேண்டும். எனவே, இதை ஒழுங்குப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்-  திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின்.</p><p>நிச்சயமாக, வருங்காலங்களில் திருத்த அறிக்கையை அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வர அமைச்சர்கள் முன்வர வேண்டும்- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்.</p><p>சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக நடந்தது. முதன்முறையாக 9:43 மணி நேரம் தொடர்ந்து அவை நடந்தது. இருப்பினும், நேரம் காரணமாக அறிவிப்பவர்களுக்கு, அவையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பதற்றத்தைப் போக்கும் வகையில், இனி அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு அமைச்சர்கள் பேசும் நடைமுறை கொண்டுவரப்படும்- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.</p><p>அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். அது சரியா?- அமைச்சர் தங்கம் தென்னரசு.</p><p>என்னுடைய கருத்து, க்ளைமாக்ஸை மக்கள் பார்க்காமல் போய்விடுவார்களோ என்கிற கவலை- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்</p><p>படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தப் படம் ஓடாது, நன்றாக இருக்காது. எனவே, முன்பே க்ளைமாக்ஸ் போட்டுவிடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><p>படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால், இந்த படம் ஓடாது, நன்றாக இருக்காது, எனவே முன்பே க்ளைமாக்ஸ் போட்டு விடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்கட்சி தலைவர் உதயநிதி.</p><p>இப்போதெல்லாம் படத்திற்கு இரு க்ளைமாக்ஸ் இருக்கிறது. படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் அவை வருகிறது. மாற்றத்தை விரும்ப வேண்டும். நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்புவதில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்புவதில்லை- அமைச்சர் வன்னி அரசு.</p><p>சட்டமன்றத்தில் கேள்வி, விடை நேரம் நிறைவு பெற்று பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர்-சமூகநீதித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சமூகநீதித்துறையில் புதிய அறிவிப்புகள்</p><p>ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான நல உதவிகளை வழங்க ஏதுவாக சமூக நீதி நல வாரியம் அமைக்கப்படும்.</p><p>பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி, மருத்துவம், திருமண உதவி தொகை வழங்கி பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ திட்டம்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாமாக்கருக்கு ரூ.160 கோடியில் 150 சமூகநீதி விடுதிகள் கட்டப்படும்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி விடுதி ஆண்டு பராமரிப்பு தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதிசெய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை.</p><p>தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும்.</p><p>ஆதி திராவிட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சமுதாய நிகழ்வுகளை நடத்த ஏதுவாக 100 சமுதாய கூடங்கள் கட்டப்படும்- வன்னி அரசு</p><p>மாணாக்கருக்கு பாதுகாப்பு, சுகாதாரமான மற்றுமு் கல்விக்கு உகந்த தகுமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு 'அறிவொளி ஆசிரியர் விருது மற்றும் அறிவொளி காப்பாளர் விருது' வழங்கப்படும்.</p><p>இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான முயற்சிகளைப் பாராட்டி, சிறந்த கற்பித்தல் நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும்- வன்னி அரசு</p><p>ஊடகத் துறையில் இளம் திறமைகளை ஊக்குவிக்க உட்பயிற்சி உதவித்தொகை வழங்கும் “ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்” செயல்படுத்தப்படும் என பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் அமைச்சர் வன்னி அரசு.</p><p>இதன் மூலம் மாணாக்கர் ஊடக நிறுவனங்களில் நடைமுறை பயிற்சி பெற்று, தொழில்முறைத் திறன்களை வளர்த்துக் கொண்டு ஊடகத் துறையில் சிறந்து விளங்க பயிற்சி.</p><p>பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1400ல் இருந்து ரூ.1800 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தி மாதாந்திர உணவு கட்டணம் வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு </p><h2>சென்னையில் பழங்குடியினர் பண்பாட்டு மையம்</h2><p>நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் செயல்படும் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை சென்னை மாநகருக்கும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை நந்தனத்தில் ‘பழங்குடியினர் பண்பாட்டு மையம்' அமைக்கப்படும்- அமைச்சர் வன்னிஅரசு</p><h2>விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம்</h2><p>பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு இலட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பத் தலைவிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 'விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம்' செயல்படுத்தப்படும்- அமைச்சர் வன்னிஅரசு</p><h2>தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு</h2><p>தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க ‘அகம் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டு, 2500 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>சமூகநீதி விடுதிகளுக்கு Fridge</h2><p>சமூக நீதி விடுதிகளில் 20 கல்லூரி விடுதிகளுக்கு Inverter, fridge, Water Purifiers w 940 பள்ளி விடுதிகளுக்கு Inverter, Water Purifiers வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை</h2><p>1,238 சமூகநீதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் உள்ள அனைத்து ஜன்னல்களுக்கும் ரூ.26.85 கோடியில் தரமான கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>பூம்பொழில் தங்கும் வசதிகள்</h2><p>மலைப்பகுதிகளில் பழங்குடியின வாழ்விடத்திற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை வளம், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் வாழ்வியலை கண்டு மகிழும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த 'பூம்பொழில் தங்கும் வசதிகள்' ஏற்படுத்தப்படும். </p><p>உள்ளூர் பழங்குடியின இளைஞர்களுக்கு வழிகாட்டி பயிற்சி வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு.</p><h2>சிறப்பு அங்கன்வாடி மையங்கள்</h2><p>பழங்குடியின குழந்தைகளுக்கு மழலையர் கல்வி வழங்கவும், படித்த பழங்குடியின இளைஞர்களுக்கு வசிப்பிடத்திற்கு அருகே வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 250 இடங்களில் ‘சிறப்பு அங்கன்வாடி மையங்கள்' உருவாக்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு.</p><p>பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு நிதியுதவி தொடர்பாக, சட்டப்பேரவையில் அமைச்சர் சம்பத்குமார் அறிவித்துள்ளார்.</p><p>அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு நவீன சிகைதிருத்தும் அழகு நிலையம் அமைக்க நிதியுதவி வழங்கப்படும்.</p><p>சலூன் கடை அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ.1.50 லட்சம் என 100 பேருக்கு ரூ.1.50 கோடி நிதியுதவி வழங்கப்படும்.</p><p>மதுரை, தேனி, திண்டுக்கல்லில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ரூ.4.50 கோடியில் உட்கட்டமைப்பு பணி மேற்கொள்ளப்படும்</p><p>ரூ.3 கோடியில் மிக பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் புதிதாக உருவாக்கப்படும்</p><p>பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த 5,000 பேருக்கு இஸ்திரி பெட்டி வழங்கப்படும்.</p><p>தலித் மக்களில் 28 சதவீதம் பேர் குடிசைகளில் தான் உள்ளனர். 75 ஆண்டுகளில் தலித் பெண்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை.</p><p>அமைச்சர் ஆதவ் பேசியபோது திமுகவினர் எழுந்துநின்று கோஷம் எழுப்பிய நிலையில் நாங்களும் எழுந்து நிற்போம் என ஆதவ் பேசினார்.</p><p>மேலும் அவர், எத்தனை மாற்று சாதியினர் அர்ச்சகராக தற்போது வரை கோவில்களில் உள்ளனர் என தகவல் எடுத்து நான் கொடுக்கிறேன்.</p><p>திமுக அரசாணை போட்டது, விழா நடத்தியது ஆனால் 32 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. 5 ஆண்டு ஆட்சியில் இருந்தது திமுக, ஆனால் நீதிமன்றத்தில் வழக்கில் வெற்றிபெற முடியவில்லை. அந்த வழக்கை தொடுத்தது யார்?- அமைச்சர் ஆதவ்</p><p>கோவி செழியன்- இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டோருக்காக தீப்பிடித்து எரியாத கான்கிரீட் வீடு கட்டி தந்தது திமுக அரசு தான்.</p><p>5 ஆண்டுகளுக்கு தான் மக்கள் வாக்களித்துள்ளனர், 5 ஆண்டுக்கும் தவெக ஆட்சி இருக்கும் என சபாநாயகர் திட்டவட்டம்.</p><h2>திமுக எம்எல்ஏ சேகர் பாபு </h2><p>அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 32 பேருக்கு அர்ச்சகர் பணிநியமன ஆணை திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.</p><p>சில நல்ல மனம் படைத்தவரகள் நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தினால் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் சிக்கல்.</p><p>அர்ச்சகர் வழக்கில் தனி குழு அமைத்து உச்சநீதிமன்றத்தில சட்ட போராட்டம் நடத்தியது திமுக அரசு.</p><h2>அமைச்சர் ஷாஜகான்</h2><p>சிறுபான்மையினருக்கு 18 அறிவிப்புகளை கொடுத்து சரித்திரம் படைத்துள்ளது தவெக அரசு.</p><p>ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை செய்வது ஒவ்வொரு அரசின் கடமை. திமுக ஏன் இதுவரை ஒரு தலித்தை கூட பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கவில்லை?- அமைச்சர் ராஜ்மோகன்.  </p><p>ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு கொடுத்தது தமிழக வெற்றிக் கழக அரசு. கடந்த தேர்தலில் 4 பேர் விசிக சார்பில் வெற்றி பெற்று வந்திருந்தோம், ஆனால் திமுக அரசு ஒரு அமைச்சர் பதவி கூட கொடுக்கவில்லை- வன்னி அரசு. </p><p>சமூக நீதி பேசக்கூடிய திமுக கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவே இல்லை. மேற்குவங்க், பீகாரில் 3 மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி செயல்படுத்தினார்கள்.</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு கோப்பைகளை எங்கேயோ தூக்கிபோட்டுவிட்டது கடந்த திமுக அரசு.</p><p>தமிழக வெற்றிக் கழக அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறது- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>அண்ணன் சேகர்பாபு, பெரியார் பெயரை உச்சரிக்கவே கூடாது. கடந்த ஆட்சி பெரியார் பெயரை பெயரளவில் சொல்லிவிட்டு, அனைத்து ஜாதியினர் திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள். எல்லாம் பேப்பரில் தான் இருக்கிறது.</p><p>வாளோடு வரும் எதிர்க்கட்சியினரை ஆளும் கட்சி கேடயம் கொண்டு தடுக்க வேண்டுமே தவிர வாள் கொண்டு எதிர்க்கக் கூடாது.</p><p>இணக்கமான சுழ்நிலையை சுமுகமாக நடத்தவேண்டும் என்பது தான் அவையின் நோக்கம்: சபாநாயகர்</p><p>விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி.</p><p>மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தவிர்த்து மற்ற விஷயங்கள் நடந்து வருகின்றன.</p><p>சட்டப்பேரவையில் கடந்த 3 நாளாக சண்டை மட்டுமே நடந்து வருகிறது.</p><p>சட்டமன்றத்தில் சண்டையைப் பார்க்க நாங்கள் வரவில்லை.</p><p>ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சியினர் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வதால் என்ன பயன்?</p><p>சட்டசபையில் நடைபெறும் சண்டையால் மக்களுக்கு என்ன பயன்? - பிரேமலதா</p><p>தமிழக சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை விதிகளை கருத்தில் கொண்டு விரைவில் விடுவிக்க வேண்டுகிறேன்</p><p>புளியங்குடி நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.</p><p>தென்மலையில் நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து தரவேண்டும்.</p><p>பூலித்தேவன் மணிமண்டபத்தை பராமரிக்க வேண்டும்- திமுக எம்.எல்.ஏ. ராஜா</p><p>சென்னையின் பழமையான தொகுதி ராயபுரம் மற்றும் முக்கிய தொகுதிகளில் ஒன்று. நட்சத்திர தொகுதி என்றுக் கூறுவார்கள். ஆனால் அதன் நிலை சொல்வதற்கு இல்லை.</p><p>ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் அங்கு நிறைய இருக்கிறார்கள். அங்கு வீடுகள் இன்று வசிக்கும் 850 குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்று வேண்டுகிறேன். </p><p>காசிமேடு மீன் சந்தையை புதிப்பித்துத் தர வேண்டுகிறேன். மீனவர்களுக்கு தற்போது தரப்படும் நிவாரணத் தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும். </p><p>ராயபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப பூங்கா அமைக்கவேண்டும். இதன்மூலம் வடசென்னை இளைஞர்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும். </p><p>அதிக கொள்ளளவு கொண்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும் - ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு அரசுக்கு வைத்த கோரிக்கைகள்.</p><p>விலையில்லா விருந்தகத்தை பார்த்துதான் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தனர். அதுபோல தாய்மாமன் தங்க மோதிரத் திட்டமும் எப்போதிலிருந்து நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இப்போதுதான் திட்டமாக அறிவித்துள்ளோம். - சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு</p><p>தேர்தலுக்கு முன்னர் என்னைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் சிரிப்பார். ஆனால் முதல் மாநாட்டிற்கு பிறகு அவர் எனக்கு நிறைய இடைஞ்சல்களை கொடுத்தார். - விஜய் தாமு </p><p>அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி</p><p>ஈலுவாத்தியா சமூதாயத்தில் தமிழக முழுவதும் சுமார் 15 லட்சம்பேர் வசிக்கிறாரகள். இவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழ் கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் மட்டுமே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த முறை ஜூலை 2020ல் நானும் சமூதாயத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து அன்னைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பரிந்துரை செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வசிக்கும் ஈலுவாத்தியா சமூதாய மக்களுக்கு பிசி சான்றிதழ் ஆவாணம் செய்யப்பட்டது.</p><p>வங்கி பணிகளில் பணிப்புரிய விரும்புவோருக்கு ஓபிசி சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அது இன்னும் நிலுவையில் உள்ளது.</p><p>இதன் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு  பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.</p> <p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்</p><p>தமிழ்நாடு சட்டம் 45-ன் கீழ் 1994-ன்படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்கள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஒரு சமூகத்தை சேர்த்தல் அல்லது நீக்குதல் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணயைத்தின் பரிந்துரைகளை பெற்று அரசு பரிசீலனை செய்யப்படும் அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>தாஹிராவுக்கு வாய்ப்பு... திமுக எதிர்ப்பு</p><p>திமுக கொறடா எ.வ.வேலு:</p><p>அலுவல் ஆய்வு குழு என்று உள்ளது, அதன் படி தான் அவை நடக்கிறது. அந்த பட்டியலில் இல்லாதவரை பேச அனுமதிப்பது எப்படி? </p><p>இதுக்கு எந்த முன் உதாரணமும் இல்லை. அனுபவம் உள்ள முன்னவர் செங்கோட்டையன், இது பற்றி சொல்ல வேண்டாமா?</p><p>சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை ஏன் நம்பியிருக்க வேண்டும்? என்று சி.வி.சண்முகம் கேள்வி. </p><p>நம்மிடம் உள்ள பட்டியலை வைத்து மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினார்.</p><p>மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ஜனார்த்தனன் கமிட்டி சொன்னதால் அதை பின்பற்றினோம் என்று எ.வ.வேலு கூறினார்.  </p><p>இடம் மாறி அமர்ந்த முதல்வர்</p><p>சட்டப்பேரவையில் தனது இருக்கையிலிருந்து எழுந்துவந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நடுவே அமர்ந்த முதலமைச்சர் விஜய்.</p>]]></content:encoded></item><item><title>பக்தர்களின் வசதிக்காக வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் - போக்குவரத்துக்கழகம் அதிரடி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-buses-to-velankanni-for-the-convenience-of-devotees-transport-corporations-prompt-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-buses-to-velankanni-for-the-convenience-of-devotees-transport-corporations-prompt-announcement#comments</comments><guid isPermaLink="false">86c873f1-15eb-4acf-90fb-96339c0a8196</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:27:45 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:27:45.661Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,special bus,velankanni temple,வேளாங்கண்ணி கோவில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ns4o5iim/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ns4o5iim/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மற்ற நாட்களில் தேவைக்கேற்ப சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.</strong></em></p><p>தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>சிறப்பு பஸ்கள்</strong></h2><p>வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பஸ்கள்</a> நேற்று முதல் வருகிற செப்டம்பர் 10-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.</p><p>வேளாங்கண்ணி மாதா கோவிலில் 29-ந் தேதி (நாளை) கொடியேறுவதை முன்னிட்டு 28-ந் தேதி (இன்று) சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 150 சிறப்பு பேருந்துகளும், 29-ந் தேதி வேளாங்கண்ணியிலிந்து சென்னைக்கு 150 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. </p><p>அதே போல் செப்டம்பர் 8-ந் தேதி கொடி இறங்குவதை முன்னிட்டு சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.</p><p>மற்ற நாட்களில் தேவைக்கேற்ப சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிராண்ட் செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர்.. வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா</title><link>https://www.maalaimalar.com/sports/first-indian-to-win-the-grand-chess-tour-praggnanandhaa-makes-history</link><comments>https://www.maalaimalar.com/sports/first-indian-to-win-the-grand-chess-tour-praggnanandhaa-makes-history#comments</comments><guid isPermaLink="false">a4b56de9-4250-4e6e-98a4-4ac3bf00185e</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:21:20 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:21:20.964Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chess,செஸ்,PragGnanandhaa,பிரக்ஞானந்தா,Grand Chess Tour,கிராண்ட் செஸ் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/7hzz8tfv/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரக்ஞானந்தா]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரக்ஞானந்தா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/7hzz8tfv/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்&nbsp; <a href="https://www.maalaimalar.com/topic/praggnanandhaa">பிரக்ஞானந்தா</a>, கிராண்ட் செஸ் இறுதிப்போட்டியில் வென்று வரலாறு படைத்துள்ளார்.&nbsp;</p><p>அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று&nbsp; நடைபெற்ற 'கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ்' தொடரில்&nbsp; உலகப் புகழ்பெற்ற பேபியானோ கருவானாவை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.&nbsp;</p><h2>ஆட்டம்</h2><p>கிளாசிக்கல்&nbsp; சுற்றுகளின் முடிவில் கருவானா 6 புள்ளிகள் முன்னிலையுடன் இருந்தார்.&nbsp;பிரக்ஞானந்தா 3-9 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தார்</p><p>இருப்பினும், ரேபிட் சுற்றில் விஸ்வரூபம் எடுத்த பிரக்ஞானந்தா, இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆட்டத்தின் போக்கையே முற்றிலும் மாற்றியமைத்தார்.</p> <p>அடுத்து நடைபெற்ற பிளிட்ஸ் சுற்றின் முதல் போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டது. அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.</p><p>ஆனால்&nbsp; பிளிட்ஸ் சுற்றின் அடுத்த 3 போட்டிகளில் சமநிலையை&nbsp; தக்கவைத்துக்கொண்ட பிரக்ஞானந்தா, இறுதியில் 15-13 என்ற புள்ளிக் கணக்கில் தனது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை உறுதி செய்தார்.</p> <h2>சாதனை</h2><p>இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.&nbsp;</p><p>இந்த சாம்பியன் பட்டத்தின் மூலம் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.68 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சீமானுக்கு ஆதரவாக நிற்பேன்- ட்விஸ்ட் வைத்த நடிகை விஜயலட்சுமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/actress-vijayalakshmi-support-to-seeman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/actress-vijayalakshmi-support-to-seeman#comments</comments><guid isPermaLink="false">d2edc1d2-665c-4f18-85a7-297ade517fb6</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:11:45 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:11:45.914Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,Naam Thamizhar katchi,Vijayalakshmi,விஜயலட்சுமி,சீமான்,நாம் தமிழர் கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/2l3w7op7/vijayalakshmi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சீமான்-விஜயலட்சுமி]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்-விஜயலட்சுமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/2l3w7op7/vijayalakshmi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எனது வாழ்க்கை பற்றியும், சீமான் பற்றியும் கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டே இருப்பீர்கள் என்றால், இனி நான் சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் இருதரப்புக்கும் சுப்ரீம் கோர்ட்டில் சமரசம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.</p><p>இந்தநிலையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">விஜயலட்சுமி</a> ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>ஆதரவாக நிற்பேன்...</strong></h2><p>நாம் தமிழர் கட்சியினரின் வாயை அடைக்க வேண்டும் என்றால் உடனே ‘விஜயலட்சுமி... விஜயலட்சுமி...' என்று எனது பெயரை கூறி விடுகிறார்கள். ஒரு வாரமாக பார்க்கிறேன். சீமானையும், என்னையும், நாம் தமிழர் கட்சியையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி விமர்சித்து வருகிறார்கள்.</p><p>ஒருவர் தவறை உணர்ந்து <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-quashes-vijayalakshmi-case-791918">மன்னிப்பு</a> கேட்கும்போது, அவர்களை வாழ விடவேண்டும். அதுதான் மனித நேயம். அதைத்தான் நானும் செய்தேன். ஆனால் தொடர்ந்து எனது வாழ்க்கை பற்றியும், சீமான் பற்றியும் கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டே இருப்பீர்கள் என்றால், இனி நான் சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன்.</p><p>நாம் தமிழர் கட்சிக்கு நான் ஆதரவாக பேசுவதால், உடனே ‘ஒரு பெரிய தொகை செட்டில் பண்ணிட்டாங்க போல...' என்று பேசவேண்டாம். ஏனெனில், என்னை பணம் கொடுத்து யாராலும் விலைக்கு வாங்க முடியாது.</p><p>இவ்வாறு அந்த வீடியோவில் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.</p><p>இத்தனை நாட்களாக சீமானுக்கு எதிரான கருத்துக்களுடன் வீடியோ வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, தற்போது அவருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மறைமுகமாக தமிழக வெற்றி கழகத்தினரை தாக்கும் வகையில் இந்த வீடியோவை அவர் வெளியிட்டு இருப்பதாக பேசப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மணிப்பூர்: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் பள்ளி முதல்வர் உட்பட 4 பேர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/national/four-people-including-a-school-principal-killed-in-a-militant-attack-in-manipur</link><comments>https://www.maalaimalar.com/news/national/four-people-including-a-school-principal-killed-in-a-militant-attack-in-manipur#comments</comments><guid isPermaLink="false">7f6296ae-079d-4bf5-bf84-31a6cc48756b</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:45:42 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:45:42.031Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,manipur,கலவரம்,firing,மணிப்பூர்,unrest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/c2d70nfe/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மணிப்பூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மணிப்பூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/c2d70nfe/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/manipur">மணிப்பூரில் </a>கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நாகா சமூகத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். </p><p>காங்போக்பி மாவட்டத்தில் குக்கி  இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் மகுய் அஷாங்  மற்றும் தபாம்பா நாகா  கிராமங்களுக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதியில் நேற்று காலை 8:30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.  </p><p>தனியார் பள்ளி நிறுவனர் மற்றும் முதல்வர் தட்சோங்போ ரிங்காங்மாய், சவாங்கிணிங் கிராம நிர்வாகத் தலைவர் விசோபூ சாரேனமாய், எம். விஜுனமாய், அனில் விஜுனமாய் ஆகியோர் உயிரிழந்தனர். கெய்காமங் ரிங்காங்மாய் என்பவர் காயமடைந்தார். </p><p>பலியான 5 பேரும் 'லியாங்மை நாகா' சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் சடலங்கள் அருகில் உள்ள சேனாபதி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.</p><p>இதில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்வர் ஒய். கேம்சந்த் சிங் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><h2>கிளர்ச்சி</h2><p>மணிப்பூரின் நாகா சமூகத்தின் உச்ச அமைப்பான 'ஐக்கிய நாகா பேரவை' இந்தத் தாக்குதலுக்குக் குக்கி கிளர்ச்சி அமைப்புகளே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>இதனிடையே, மே 3, 2023 அன்று பழங்குடியினர் பேரணிக்குப் பிறகு வெடித்த கலவரத்தின் பின்னணி குறித்து ஆராய அரசு அமைத்த விசாரணை ஆணையத்திற்கு, மத்திய அரசு மேலும் 6 மாத கால அவகாசம் அளித்து நவம்பர் 20 வரை காலநீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.</p> <h2>மணிப்பூர் வன்முறை</h2><p>மே 2023 முதல் பள்ளத்தாக்கில் வாழும் மெய்தி மற்றும் மலைப்பகுதியில் வாழும் குக்கி இனமக்களுக்கு இடையே ஏற்பட்ட இனக்கலவரத்தில் இதுவரை 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 58,800க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.</p><p>தொடர் கலவரம் மற்றும் அப்போதைய முதல்வர் என். பிரேன் சிங் ராஜினாமாவைத் தொடர்ந்து, 2025 பிப்ரவரி 13 முதல் 2026 பிப்ரவரி 4 வரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளம்: வெள்ள நீரில் மிதந்து வந்த சடலத்தில் இருந்து தங்க நகை திருடிய 2 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-two-arrested-for-stealing-gold-jewelry-from-a-body-floating-in-floodwaters</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-two-arrested-for-stealing-gold-jewelry-from-a-body-floating-in-floodwaters#comments</comments><guid isPermaLink="false">9d37238d-8bd9-4547-a236-90ecfd49619e</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:22:13 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:22:13.778Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,floods,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/5mwmxvev/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாளம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/5mwmxvev/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/people-from-more-than-30-countries-are-missing-after-the-flash-floods-in-nepal">நேபாள வெள்ளத்தில்</a> உயிரிழந்தவர் உடலிலிருந்து தங்க நகை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>நேபாளத்தின் போதே கோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 360 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். </p><p>ஆயிரக்கணக்கானோர் காணாமல் போன நிலையில் அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.  </p> <h2>திருட்டு </h2><p>வெள்ளத்தில் மிதந்து வந்த உடலிலிருந்து குச்சியை பயன்படுத்தி தங்கக் தோடை உருவியெடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து வீடியோ காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.</p><p>இதன்படி சித்வான் மாவட்டத்தின் பாரத்பூரில், மதன் குருங் (25), உமேஷ் சௌத்ரி (38) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குற்றவாளிகள் மிகவும் கொடூரமாகவும் மனிதநேயமற்ற முறையிலும் நடந்து கொண்டுள்ளதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர்.</p> <h2>நேபாள வெள்ளம்</h2><p>ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தின் போதே கோஷி நதியில் மிகப்பெரிய அளவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p>பனிச்சரிவு காரணமாக நதியில் நீரோட்டம் தடைபட்டு, பின்னர் திடீரென அணை உடைந்து நீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. இதனால் ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>காணாமல் போனவர்கள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களில் புனித பயணம் சென்ற இந்தியர்கள் உட்பட ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.</p><h2>288 இந்தியர்கள் மாயம்:</h2><p>நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359-ஆக உயர்ந்துள்ளது; 517 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 910 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இதுவரை 50 வெளிநாட்டினர் வான்வழியாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>காணாமல் போனவர்களில் 113 நேபாள சுற்றுலா பயணிகள், ராணுவம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 85 பாதுகாப்பு பணியாளர்கள். இத்துடன் ரசுவா மாவட்டத்தை சேர்ந்த 161 பேர் மற்றும் நுவாகோட் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஆகியோர் அடங்குவர் என்று தேசிய அவசர கால செயல்பாட்டு மையம் தெரிவித்ததாக உள்ளூர் செய்திகள் குறிப்பிடுகின்றன.</p><p>நேபாள வெள்ள பாதிப்புக்கு பிறகு 288 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இவர்களில் மின்சக்தித் திட்டம் ஒன்றில் பணியாற்றி வந்த 73 பேரும் அடங்குவர். இந்துக்களின் புனித தலமான திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக்கு பல இந்தியச் சுற்றுலா பயணிகள் யாத்திரை மேற்கொண்டிருந்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-prices-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-prices-in-chennai#comments</comments><guid isPermaLink="false">3e9fbfb2-23c9-43c8-9123-bb474a8906f1</guid><pubDate>Fri, 28 Aug 2026 01:45:58 +0000</pubDate><atom:updated>2026-08-28T01:45:58.027Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/for3wnkv/maalai-malar2026-08-211xkldom8maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/for3wnkv/maalai-malar2026-08-211xkldom8maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான <a href="https://www.maalaimalar.com/news/world/iran-sets-conditions-for-reopening-strait-of-hormuz">ஹார்முஸ் கடல்வழிப்பாதையில்</a> பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (28.08.2026 - வெள்ளிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 88.22 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 28.8.2026 - இந்த ராசிக்காரர்கள் லாபம் காண்பீர்கள்
</title><link>https://www.maalaimalar.com/astrology/todays-horoscope-2882026-natives-of-these-zodiac-signs-will-see-profits</link><comments>https://www.maalaimalar.com/astrology/todays-horoscope-2882026-natives-of-these-zodiac-signs-will-see-profits#comments</comments><guid isPermaLink="false">cae5655c-bf89-4170-8f1d-4bca7eff59ff</guid><pubDate>Fri, 28 Aug 2026 01:06:00 +0000</pubDate><atom:updated>2026-08-28T01:06:00.919Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-12/8s8oyr31/astrology.jpg.jpeg" width="1500"><media:title type="html"><![CDATA[ Rasipalan]]></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-12/8s8oyr31/astrology.jpg.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>ராசிபலன்(Rasipalan)</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>தனவரவு தாராளமாக வந்துசேரும் நாள் விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வருங்கால நலன் கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.</p><h2>ரிஷபம் </h2><p>பிரச்சினைகள் முடிவிற்கு வரும் நாள். தாமதப்பட்ட காரியம் இன்று முடிவடையும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தொழிலில் ஏற்பட்ட தொல்லை அகலும்.</p><h2>மிதுனம்</h2><p>வரன்கள் வாயில் தேடிவரும் நாள். சகோதர வழி ஒத்து ழைப்பு உண்டு. தொலைந்த பொருள் கைக்கு வந்து சேரும். நாட்டுப்பற்று மிக்கவர் களின் சந்திப்பு உண்டு.</p><h2>கடகம் </h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். ஆரோக்கியப் பிரச்சினை அதிகரிக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>மனக்குழப்பம் ஏற்படும் நாள். சொத்துகளில் பிரச்சினைகள் ஏற்படும். பயணத்தை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. வீடு மாற்றங்களும் உண்டு.</p><h2>கன்னி</h2><p>தனவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். செல்வந்தர்களின் உதவியோடு கடன் சுமை குறைய வழிபிறக்கும்.</p><h2>துலாம்</h2><p>அனுபவ அறிவால் அற்புதமான பலன் காணும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும்.</p><h2>விருச்சிகம்</h2><p>வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். வருமானம் உயரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களின் நல்லாதரவோடு லாபம் காண்பீர்கள்.</p> <h2>தனுசு</h2><p>சாமர்த்தியமாகப் பேசி எதையும் சமாளிக்கும் நாள். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும்.</p><h2>மகரம்</h2><p>நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் செய்வீர்கள். விலகியிருந்த சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.</p><h2>கும்பம்</h2><p>முயற்சிகள் கைகூடும் நாள். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை துரிதமாகச் செய்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். நீண்டதூரப் பயணங்களை பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.</p> ]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க நிபந்தனை பட்டியல் தயாரிக்கும் ஈரான்</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-sets-conditions-for-reopening-strait-of-hormuz</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-sets-conditions-for-reopening-strait-of-hormuz#comments</comments><guid isPermaLink="false">4e406e47-cdd3-42c2-84ad-b1dc5772a801</guid><pubDate>Fri, 28 Aug 2026 00:33:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T00:33:33.665Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Strait of Hormuz,ஹார்முஸ் நீரிணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/m4ivgjj4/Strait-of-Hormuz.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Strait of Hormuz]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/m4ivgjj4/Strait-of-Hormuz.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியஸ்தர்கள் தெஹ்ரானிடம் நிபந்தனைகளை வகுக்குமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/strait-of-hormuz">ஹார்முஸ்</a> நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நிபந்தனைகளின் பட்டியலை ஈரான் தயாரித்து வருவதாகவும், பிராந்திய போரை முடிவுக்கு கொண்டுவருவது அவற்றில் ஒன்று எனவும் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு குழுவின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தெரிவித்தார்.</p><p>அந்த நீர்வழிப்பாதை வழியாக ஒரு கப்பல் போக்குவரத்து வழித்தடம் அமைக்க ஓமனுடன் <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அந்த பாதையின் சில பகுதிகள் ஓமன் கடல் பகுதியிலும், சில பகுதிகள் ஈரான் கடல் பகுதியிலும் அமையும் என்றும் ரெசாயி கூறினார். </p><p>அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், கப்பல்கள் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட ஒரு மைய கால்வாயை பயன்படுத்தும் என்று அல் மனார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மொழிபெயர்ப்பாளர் மூலம் அவர் தெரிவித்தார்.</p><h2>ஒப்பந்த பணிகள் மும்முரம்:</h2><p>புதன்கிழமை அன்று, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்பு படையினர், நீரிணையின் கட்டுப்பாட்டையும் அதன் வருவாயையும் எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பது குறித்து இரு நாடுகளும் உடன்பாடு எட்டியுள்ளதாக கூறியதை தொடர்ந்து, அந்த நீர்வழிப்பாதை தொடர்பான ஒப்பந்தத்தின் விவரங்களை ஈரானும் ஓமனும் இன்னும் இறுதிசெய்து வருவதாக ஒரு மூத்த வட்டாரம் தெரிவித்தது.</p><p>ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா நீக்கி, இழப்பீடு வழங்கி, தடைகளையும் அகற்றினால் ஒழிய, நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்காது என்று பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.</p><h2>பலனளிக்காத போர்நிறுத்தம்:</h2><p>பிப்ரவரியில் போர் தொடங்குவதற்கு முன்பு, இந்த நீர்வழிப்பாதை உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கை கொண்டு சென்றது. அதன் பிறகு, இந்த நீர்வழிப்பாதை வழியாக கப்பல் போக்குவரத்து பெரும்பாலும் நின்றுவிட்டது.</p><p>ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் அமெரிக்காவும், ஈரானும் அறிவித்த போர்நிறுத்த ஒப்பந்தங்கள் கடல்வழி போக்குவரத்தை மீட்டெடுக்கும் நோக்கம் கொண்டவையாக இருந்தன, ஆனால் அவை நிலைக்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்:  359 பேர் பலி... 30 நாடுகளை சேர்ந்த 1,400-க்கும் மேற்பட்டோர் மாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/people-from-more-than-30-countries-are-missing-after-the-flash-floods-in-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/world/people-from-more-than-30-countries-are-missing-after-the-flash-floods-in-nepal#comments</comments><guid isPermaLink="false">c69a120f-5a0f-4b2b-ac96-f4f21237958d</guid><pubDate>Fri, 28 Aug 2026 00:02:42 +0000</pubDate><atom:updated>2026-08-28T00:02:42.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/p4apwr8c/Nepal-Floods.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/p4apwr8c/Nepal-Floods.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனா மற்றும் நேபாள எல்லை பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் <a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">வெள்ளப்பெருக்கு</a> காரணமாக குறைந்தது 359 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் மலையேற்றம், வழிகாட்டப்பட்ட சுற்றுலா அல்லது புனிதமான இந்து தலத்திற்கு யாத்திரை மேற்கொள்ள அங்கு சென்றிருந்த வெளிநாட்டினர் ஆவர்.</p><p>தரவு சேகரிப்பு முறை, தகவல் தெரிவிக்கப்பட்ட நேரம் மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளில் உள்ள வேறுபாடுகள், அத்துடன் தரவு சேகரிப்பவர்களுக்கும் மீட்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு குறைபாடுகள் ஆகியவற்றால், புதன்கிழமை நிகழ்ந்த இந்த பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையில் பல்வேறு அமைப்புகளுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படலாம்.</p><h2>288 இந்தியர்கள் மாயம்:</h2><p>நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359-ஆக உயர்ந்துள்ளது; 517 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 910 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இதுவரை 50 வெளிநாட்டினர் வான்வழியாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>காணாமல் போனவர்களில் 113 நேபாள சுற்றுலா பயணிகள், ராணுவம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 85 பாதுகாப்பு பணியாளர்கள். இத்துடன் ரசுவா மாவட்டத்தை சேர்ந்த 161 பேர் மற்றும் நுவாகோட் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஆகியோர் அடங்குவர் என்று தேசிய அவசர கால செயல்பாட்டு மையம் தெரிவித்ததாக உள்ளூர் செய்திகள் குறிப்பிடுகின்றன.</p><p>நேபாள வெள்ள பாதிப்புக்கு பிறகு 288 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>இவர்களில் மின்சக்தித் திட்டம் ஒன்றில் பணியாற்றி வந்த 73 பேரும் அடங்குவர். இந்துக்களின் புனித தலமான திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக்கு பல இந்தியச் சுற்றுலா பயணிகள் யாத்திரை மேற்கொண்டிருந்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>558 பேர் மாயம்:</h2><p>திபெத்தின் கியிரோங் கவுண்டியில் குறைந்தது மூவர் உயிரிழந்ததாகவும், 558 பேர் காணாமல் போனதாகவும் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காணாமல் போன 558 பேரில் 260 பேர் வெளிநாட்டினர் என்று சீன அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது. இது தவிர, நேபாள பகுதியில் சுமார் 100 சீன குடிமக்கள் காணாமல் போயுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>சீனா மற்றும் நேபாளத்தில் 90 அமெரிக்கர்கள் குறித்த தகவல் ஏதும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. </p><p>மூன்று அமெரிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல் 51 மலேசியர்கள், 55 உக்ரைனியர்கள், 39 ஆஸ்திரேலியர்கள் காணாமல் போயுள்ளதாக அந்த வாரியம் தெரிவித்தது.</p><p>இதுதவிர காணாமல் போனவர்களில் 33 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் என்றும் 25 பேர் கனடாவை சேர்ந்தவர்கள் என்று அந்த வாரியம் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல். இறுதிப் போட்டி: மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-finals-kovai-kings-and-madurai-panthers-clash-today</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-finals-kovai-kings-and-madurai-panthers-clash-today#comments</comments><guid isPermaLink="false">30c4026b-772d-4bb8-9995-34a948cd6f6a</guid><pubDate>Thu, 27 Aug 2026 23:29:56 +0000</pubDate><atom:updated>2026-08-27T23:29:56.188Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்,கோவை கிங்ஸ்,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/l3en1ch3/TNPL-Final.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL Final]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/l3en1ch3/TNPL-Final.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டி.என்.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.</p><p>8 அணிகள் பங்கேற்ற 10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. கடந்த 15-ஆம் தேதியுடன் திண்டுக்கலில் போட்டிகள் நிறைவுற்ற நிலையில், 2-ஆம் கட்ட போட்டிகள் சென்னையில் நடக்கின்றன.</p><p>கடந்த 18-ஆம் தேதியில் இருந்து நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியல் அடிப்படையில், மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.</p><h2>மழையால் ஆட்டம் பாதிப்பு:</h2><p>கடந்த 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோத இருந்தன. எனினும், தொடர் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதேபோல், ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடக்க இருந்த கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டமும் மழை காரணமாக கைவிடப்பட்டது.</p><p>இதனால், மதுரை பாந்தர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற கோவை கிங்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் கோவை கிங்ஸ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.</p><h2>டி.என்.பி.எல். இறுதிப் போட்டி:</h2><p>அதன்படி, டி.என்.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி இன்று (ஆகஸ்ட் 28) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.</p><p>இன்றைய இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் நோக்கில் களமிறங்குகிறது. முன்னதாக 2018-ஆம் ஆண்டில் நடந்த டி.என்.பி.எல். தொடரில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கோவை கிங்ஸ் அணி நான்காவது முறையாக டி.என்.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.</p><p>நடப்பு டி.என்.பி.எல். தொடரிலேயே கோவை கிங்ஸ் அணி தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால், இந்த அணியும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் அணிக்கு திரும்புவது பற்றிய கேள்வி: சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/putting-in-all-hard-work-and-hopes-things-fall-in-place-suryakumar-yadav</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/putting-in-all-hard-work-and-hopes-things-fall-in-place-suryakumar-yadav#comments</comments><guid isPermaLink="false">f29d9344-bad0-4a3d-9d78-7bb9fad50d7c</guid><pubDate>Thu, 27 Aug 2026 20:59:09 +0000</pubDate><atom:updated>2026-08-27T20:59:09.461Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Suryakumar Yadav,சூர்யகுமார் யாதவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/68lejr9f/Suryakumar-Yadav.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suryakumar Yadav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/68lejr9f/Suryakumar-Yadav.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய அணியில் தனது இடத்தை இழந்த நிலையில், முன்னாள் இந்திய டி20 அணியின் கேப்டன் <a href="https://www.maalaimalar.com/topic/suryakumar-yadav">சூர்யகுமார் யாதவ்</a>, தான் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருவதாகவும், எதிர்காலத்தில் அனைத்தும் நல்லபடியாக அமையும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். </p><p>இந்தியா தனது மூன்றாவது டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">உலகக் கோப்பை</a> வெல்வதற்கு தலைமை தாங்கிய சில மாதங்களிலேயே, தனது தற்போதைய ஆட்டத்திறன் மற்றும் அடுத்த உலகளாவிய தொடருக்கான இரண்டு ஆண்டு கால சுழற்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 35 வயதான சூர்யகுமார் அணியில் இருந்து நீக்கப்பட்டார். </p><h2>தானாக நல்லது நடக்கும்:</h2><p>பேட்டிங்கில் சூர்யகுமார் தொடர்ந்து தடுமாறியதும் தேர்வாளர்களின் இந்த முடிவுக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். உலகின் முன்னாள் நம்பர் 1 பேட்ஸ்மேனான இவர், இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரிலும் கடினமான சூழலை எதிர்கொண்டதோடு, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் தவறியிருந்தார்.</p><p>தேசிய அணிக்கு திரும்புவதற்கான திட்டங்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​'ப்ரோ கோவிந்தா லீக்' தூதரான சூர்யகுமார் யாதவ் பதிலளித்தார். </p><p>அப்போது பேசிய அவர், "பாருங்கள், நான் முழு முயற்சியுடன் கடுமையாக உழைத்து வருகிறேன், என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். எல்லாம் சரியாக அமைந்தால், அனைத்தும் தானாகவே நல்லபடியாக நடக்கும்," என்றார்.</p><p>மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் முக்கிய அங்கம் வகிக்கும் சூர்யகுமார், கடைசியாக 2023-ஆம் ஆண்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் (ODI) போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடினார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் ஒன்டாரியோ ஏரிக்கு &apos;லேக் அமெரிக்கா&apos; எனப் பெயர் மாற்றும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-signs-order-renaming-lake-ontario-as-lake-america-in-us</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-signs-order-renaming-lake-ontario-as-lake-america-in-us#comments</comments><guid isPermaLink="false">403cf9c4-eac5-49ed-8f35-a1ade70300be</guid><pubDate>Thu, 27 Aug 2026 20:17:19 +0000</pubDate><atom:updated>2026-08-27T20:17:19.704Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,அமெரிக்கா,us,Lake Ontario</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/l2f5sh82/donald-trump.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/l2f5sh82/donald-trump.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவுடனான தனது வர்த்தக போரை தீவிரப்படுத்தும் விதமாக, ஒன்டாரியோ ஏரிக்கு அமெரிக்காவில் 'லேக் அமெரிக்கா' என பெயர் மாற்றப்படுவதாக அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> தெரிவித்தார்.</p><p>குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப், அமெரிக்க புவியியல் பெயரிடும் சேவைக்காக ஏரியின் பெயரை புதுப்பிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இருப்பினும், தான் விரும்பும் பெயரிடும் முறையை பின்பற்றுமாறு <a href="https://www.maalaimalar.com/topic/canada">கனடாவை</a> டிரம்பால் கட்டாயப்படுத்த முடியாது.</p><h2>லேக் அமெரிக்கா:</h2><p>இந்த நடவடிக்கை, கடந்த ஆண்டு மெக்சிகோ வளைகுடாவிற்கு 'கல்ஃப் ஆஃப் அமெரிக்கா' எனப் பெயர் மாற்றிய அவரது நடவடிக்கையை நினைவூட்டுகிறது.</p><p>ஓவல் அலுவலகத்தில் உள்ள 'ரெசொலூட் டெஸ்க்'கில் அமர்ந்திருந்தபோது இந்த உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்பிற்குப் பின்னால், கிரேட் லேக்ஸ் வரைபடத்துடன் கூடிய ஒரு பெரிய பலகை ஒரு ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்தது. ஒன்டாரியோ ஏரிக்கு மேலே, பெரிய சிவப்பு எழுத்துக்களில், அந்த வரைபடத்தில் 'லேக் அமெரிக்கா' என்று எழுதப்பட்டிருந்தது.</p><h2>நாங்கள் அனுமதிக்க முடியாது:</h2><p>வர்த்தக விஷயத்தில் கனடாவுடன் கையாள்வது 'மிகவும் மோசமானது' என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். "அவர்கள் தங்களுக்கு எல்லாம் உரிமையுள்ளது என்று நினைக்கிறார்கள், அதை நாங்கள் அனுமதிக்க முடியாது," என்று அவர் கூறினார்.</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முறிந்ததை தொடர்ந்து, வார இறுதியில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கனடிய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், அதிபர் சமீப நாட்களாக பெயர் மாற்றம் குறித்த யோசனையை முன்வைத்து வருகிறார்.</p><p>கடந்த ஆண்டு வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதில் இருந்து, ஒரு காலத்தில் அமெரிக்காவுடன் நல்லுறவை கொண்டிருந்த அந்த நட்பு நாட்டை, 51-ஆவது மாநிலமாக இணைத்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்து, டிரம்ப் அமெரிக்காவின் வடக்கு அண்டை நாட்டை சீண்டி வருகிறார்.</p><h2>ஒளிரும் நீரின் ஏரி:</h2><p>அமெரிக்காவும் கனடாவும் ஒன்டாரியோ ஏரி உட்பட பல பெரிய ஏரிகளின் ஓரமாக எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன.</p><p>இந்த ஏரியின் பெயர், 'ஒளிரும் நீரின் ஏரி' என்று பொருள்படும் ஹியூரான் பழங்குடி மக்களின் 'ஓனியாடாரி:யோ' என்ற சொல்லில் இருந்து வந்தது. மேலும், இப்பகுதியில் ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன்பே இப்பெயர் இருந்தது. 1867-இல் நிறுவப்பட்ட மாகாணம், இந்த ஏரியின் பெயரையே தனக்கு சூட்டிக்கொண்டது.</p>]]></content:encoded></item><item><title>அசைவ உணவு கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 30 வயது நபர் உயிரிழப்பு: பெற்றோர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/30-year-old-killed-during-heated-argument-over-non-veg-food-parents-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/30-year-old-killed-during-heated-argument-over-non-veg-food-parents-arrested#comments</comments><guid isPermaLink="false">a82ed7bc-161e-495c-a922-e39764c511e7</guid><pubDate>Thu, 27 Aug 2026 19:11:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T19:11:26.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Murder,கொலை,non-veg food,அசைவ உணவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5ra79ne1/arrest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arrest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5ra79ne1/arrest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஷ்ரவண் மாதத்தில் அசைவ உணவு கேட்டதற்காக தனது 30 வயது மகனை தாக்கி உயிரிழக்க செய்ததாக கூறப்படும் சம்பவத்தில், ஒரு நபர் மற்றும் அவரது மனைவி <a href="https://www.maalaimalar.com/topic/arrest">கைது</a> செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>இச்சம்பவம் ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று வார்ஜே பகுதியில் நடைபெற்றது. உயிரிழந்தவர் மகேஷ் பகவத் கெய்க்வாட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல் துணை ஆணையர் சாகர் கவாடே தெரிவித்தார்.</p><h2>பெற்றோருடன் தினமும் சண்டை:</h2><p>தற்காலிகத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த மகேஷ், மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும், தினமும் தனது பெற்றோரான பகவத் கெய்க்வாட் (64) மற்றும் பார்வதி கெய்க்வாட் (60) ஆகியோருடன் சண்டையிட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.</p><p>அவரது சகோதரர் அளித்த புகாரின்படி, ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த மகேஷ், இரவு உணவிற்கு அசைவ உணவு கேட்டுள்ளார். புனிதமான மாதம் நடைபெற்று வருவதை காரணம் காட்டி அவரது தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.</p><h2>தொடர் விசாரணை:</h2><p>அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின்போது, ​​பகவத் தனது மகனின் தலையில் தாக்கியதில் அவன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆதாரங்களை அழிப்பதில் மகேஷின் தாயார் தனது கணவருக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.</p><p>பகவத் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அதிகம்: கிட்டத்தட்ட 10 மணி நேரம் அவை நடைபெற்று சாதனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-for-almost-ten-hours-sets-new-record</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-for-almost-ten-hours-sets-new-record#comments</comments><guid isPermaLink="false">724fee64-988e-4391-afa3-c825dcbcba65</guid><pubDate>Thu, 27 Aug 2026 18:26:40 +0000</pubDate><atom:updated>2026-08-27T18:26:40.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழ்நாடு சட்டசபை,Tamil Nadu assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xtdvqu84/TN-Assembly-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Assembly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xtdvqu84/TN-Assembly-2.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/topic/tn-assembly">சட்டப்பேரவை</a> வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் தொடர்ச்சியாக அவை அலுவல்கள் நடைபெற்றுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 27) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. </p><h2>அமைச்சர்களுடன் அமர்ந்த முதலமைச்சர்:</h2><p>வழக்கம்போல், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, என். ஆனந்த், வெங்கட்ரமணன், நிர்மல்குமார், அ.தி.மு.க. பொது செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p>மாலை வேளையில் சட்டப்பேரவைக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவரும் சிறிது நேரம் கலந்துகொண்டார். சட்டப்பேரவையில் முதல்வருக்கென தனியாக பிரத்யேக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், இன்றைய சட்டப்பேரவையில் முதல்வருக்கான பிரத்யேக இருக்கையை தவிர்த்துவிட்டு, அமைச்சர்களுக்கான முன்வரிசை இருக்கையில் முதல்வர் விஜய் அமர்ந்தார்.</p><h2>சுமார் 10 மணி நேரம்:</h2><p>மானிய கோரிக்கை விவாதத்தை கடந்து, பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவையில் பல்வேறு விவாதங்கள் நடந்ததால், நேற்று முன்தினம் (ஆகஸ்ட். 25) போலவே சட்ட பேரவைக்கூட்டம் இரவு 7 மணியையும் கடந்து தொடர்ந்தது. அதன்பின், அமைச்சர்களின் பதிலுரை ஏதும் இல்லாமலேயே இரவு 7.20 மணியளவில் அவை நிறைவடைந்தது.</p><p>எம்.எல்.ஏ.க்கள் பலரையும் கேள்விகள் கேட்க அனுமதிப்பதை அடுத்து அவை நடைபெறும் நேரம் கடந்த சில நாள்களாக மாலை 6 மணியை தாண்டி நடைபெற்று வந்தது. இன்று மட்டும் அதிகபட்சமாக சட்டப்பேரவை சுமார் 9 மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அறிவித்தது இலங்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/sri-lanka-extends-usd-1-million-in-assistance-to-nepal-after-flash-floods</link><comments>https://www.maalaimalar.com/news/world/sri-lanka-extends-usd-1-million-in-assistance-to-nepal-after-flash-floods#comments</comments><guid isPermaLink="false">b3a1e264-6ab4-4dd9-9660-5d668009495a</guid><pubDate>Thu, 27 Aug 2026 17:13:05 +0000</pubDate><atom:updated>2026-08-27T17:13:05.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இலங்கை,நேபாளம்,nepal,Sri Lanka,Flash Floods,வெள்ள பாதிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tvchn8jq/Nepal-Flash-Floods-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Flash Floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tvchn8jq/Nepal-Flash-Floods-1.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அந்நாட்டிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக <a href="https://www.maalaimalar.com/news/world">இலங்கை</a> அறிவித்தது.</p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">நேபாள</a> மக்களுடன் இலங்கை கொண்டுள்ள ஒற்றுமை உணர்வை இந்த உதவி வெளிப்படுத்துவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2>திடீர் வெள்ளப்பெருக்கு:</h2><p>திபெத்தில் உருவான இந்த திடீர் வெள்ளப்பெருக்கு, புதன்கிழமையன்று மத்திய நேபாளத்தின் வழியாக பாய்ந்து பல நகரங்கள் மற்றும் கிராமங்களை சேதப்படுத்தியது. முக்கிய பாலங்களை அடித்து சென்றதுடன், ஒரு டசனுக்கும் மேற்பட்ட நீர்மின் திட்டங்களையும் முடக்கியது; மேலும் பல மாவட்டங்களையும் பாதித்தது.</p><p>நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அரசாங்கத்திற்கு பணித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.</p><p>"தேவைப்படும் இக்கட்டான நேரத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கிறது" என்று கூறிய அந்த அறிக்கை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கே இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டது.</p>]]></content:encoded></item><item><title>100 மீட்டர் தூரத்தை 8.86 வினாடிகளில் கடந்த அல்ட்ரா ரோபோ - தனது முந்தைய சாதனை முறியடிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/humanoid-robot-breaks-100m-record-with-8-86-seconds</link><comments>https://www.maalaimalar.com/news/world/humanoid-robot-breaks-100m-record-with-8-86-seconds#comments</comments><guid isPermaLink="false">0d311640-561e-4e26-ad97-0332c57549b7</guid><pubDate>Thu, 27 Aug 2026 16:36:37 +0000</pubDate><atom:updated>2026-08-27T16:36:37.914Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,Humanoid Robot,மனித உருவ ரோபோ,Tiangong Ultra,தியாங்காங் அல்ட்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/alxw3fub/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiangong Ultra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/alxw3fub/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனாவில்</a> நடைபெற்ற இரண்டாவது உலக மனித உருவ ரோபோ போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 8.86 வினாடிகளில் கடந்து தனது முந்தைய சாதனையான 9.39 என்ற வினாடியை தியாஙாங் அல்ட்ரா ரோபோ முறியடித்துள்ளது.</p><h3><strong>மனித உருவ ரோபோ போட்டி</strong></h3><p>சீனாவின் பெய்ஜிங் நகரில் கடந்த 22-ஆம் தேதி இரண்டாவது <a href="https://www.maalaimalar.com/topic/ரோபோ-போட்டி">உலக மனித உருவ ரோபோ விளையட்டு போட்டி</a> தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.</p><p>இந்த போட்டி உலகளவில் ரோபோட்டிக்ஸ் துறையில் சீனாவின் விரைவான முன்னேற்றங்களை வெளிக்காட்டும் ஒரு களமாக நடைபெற்றது.</p><h3><strong>புதிய சாதனை</strong></h3><p>இந்த ரோபோ முன்னதாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவை சேர்ந்த தடகள வீரரான உசைன் போல்ட்டின் 9.58 என்ற சாதனையை 9.39 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தது.</p><p>இந்த நிலையில் சீனாவின் பீய்ஜிங் நகரில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெய்ஜிங் மனித உருவ ரோபோட்டிக்ஸ் மையத்தால் உருவாக்கப்பட்ட தியாங்காங் அல்ட்ரா ரோபோ கலந்து கொண்டது.</p><p>இந்த போட்டியில் தனது முந்தைய சாதனையான 9.39 வினாடியை முறியடித்து, 8.86 வினாடிகளில் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.</p><h3><strong>அமெரிக்க பேராசிரியர் பாராட்டு</strong></h3><p>இந்த சாதனை குறித்து லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியல் பேராசிரியர் டென்னிஸ் ஹாங் கூறுகையில், “இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.</p><p>ரோபோ மனிதனை விட வேகமாக ஓடியதால் மட்டுமல்ல, இரண்டு கால்களில் நடக்கும் ஒரு ரோபோவை இந்த வேகத்தில் ஓட வைப்பதற்கு என்னவெல்லாம் தேவைப்படுகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.</p><p>வேகம் அதிகரிக்கும் போது சமநிலை, கட்டுப்பாடு, தாக்கங்கள், செயல்திறன் மற்றும் இயந்திர உறுதித்தன்மை ஆகிய அனைத்தும் மிகவும் சவாலனதாக மாறுகின்றன” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க பொருளாதார தடையை மீறி ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி: இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-rice-exports-to-iran-defy-us-sanctions-association</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-rice-exports-to-iran-defy-us-sanctions-association#comments</comments><guid isPermaLink="false">cdad463e-e5c6-480b-bb44-08479893cdbd</guid><pubDate>Thu, 27 Aug 2026 16:36:25 +0000</pubDate><atom:updated>2026-08-27T16:36:25.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>US sanctions,rice export,economic d day,பொருளாதார டி தினம்,அரிசி ஏற்றுமதி,அமெரிக்க தடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/l47q6a9l/Untitled-design-22.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India rice exports under US sanctions]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/l47q6a9l/Untitled-design-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் நாட்டின் மீது <a href="https://www.maalaimalar.com/topic/அமெரிக்கா">அமெரிக்கா</a> விதித்துள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">பொருளாதார தடையை</a> மீறி, ஈரானுக்கு வழக்கம்போல அரிசி ஏற்றுமதி செய்யப்படும் என அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் பலோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இருந்து வரும் நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஈரானுக்கு</a> அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம், அமெரிக்கா விதிக்க இருக்கும் பொருளாதார தடையை, இந்தியா தாங்கிக் கொள்ளும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி</strong></h3><p>இந்தியா, ஈரானுக்கான விற்பனையானது கடுமையான அமெரிக்க தடைகளின் அச்சுறுத்தலை தாங்கும் என்றும், விலை உயர்வு மற்றும் பல மாதங்களாக நடந்து வரும் போர்க்கால இடையூறுகள் இருந்தபோதிலும், ஏற்றுமதி சீராக நடைபெற்று வருவதாக அஜய் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியா ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் அரிசியே முதன்மையானதாக உள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஈரானுக்கான இந்தியாவின் 1.25 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அரிசியாக உள்ளதாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.</p><p>பதிலுக்கு, இந்தியாவின் 11.5 பில்லியன் டாலர் உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் சுமார் 7 சதவீதத்தை ஈரான் வாங்கியுள்ளது.</p><h3><strong>அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம்</strong></h3><p>இந்த நிலையில் அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் பலோதியா கூறுகையில், “விலை உயர்வு மற்றும் பல மாதங்களாக நீடித்த போரினால் ஏற்பட்ட வர்த்தக இடையூறுகள் ஒருபுறம் இருந்தபோதிலும், ஈரான் உணவு பாதுகாப்பு காரணங்களுக்காக கொள்முதல் செய்து வருவதால், அந்நாட்டின் தேவை சீராக உள்ளது.</p><p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் திங்களன்று 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு எதிராகத் தடைகளை அறிவித்து, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அச்சுறுத்திய போதிலும், ஈரானுடனான வர்த்தகம் தடையின்றி தொடருகிறது.</p><p>மனிதாபிமான விதிவிலக்கின் கீழ் வரும் இந்த பிரதான உணவின் அத்தியாவசிய தன்மையும், மாற்று விநியோகஸ்தர்கள் குறைவாக இருப்பதும் வர்த்தகத்தைத் தக்கவைக்க உதவும்.</p><h3><strong>கடந்த கால ஏற்றுமதி</strong></h3><p>கடந்த நிதியாண்டில் ஈரான் 10 லட்சம் டன்களுக்கும் அதிகமான அரிசியைக் கொள்முதல் செய்துள்ளது, இது ஓராண்டுக்கு முந்தைய ஏற்றுமதியை விட 17% அதிகம் என அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.</p><p>சமீப காலத்தில் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியையும் பணப் பரிமாற்றங்களையும் தடையின்றித் தொடர்ந்ததை இந்த உயர்வு பிரதிபலிக்கிறது; இது இரு தரப்பினருக்கும் வர்த்தகத்தை பேணுவதற்கான ஒரு ஊக்கத்தை அளிக்கிறது.</p><p>ஈரானிய வங்கிகளுடன் நேரடியாகப் பரிவர்த்தனை செய்வதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, சீனா மற்றும் சமீபத்தில் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள நிதி வழிமுறைகள் மூலம் ஈரானுடனான வர்த்தகத்திற்கான கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கான வழிகளை இந்திய வர்த்தகர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p>அந்த வழிமுறைகள் இதுவரை எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஈரானுக்கான மற்ற முக்கிய இந்திய ஏற்றுமதிகளில் மருந்துகள், தேயிலை, வாழைப்பழங்கள், தானியங்கள், மாட்டு இறைச்சி மற்றும் சில ரசாயனப் பொருட்கள் அடங்கும்.</p><p>மனிதாபிமான விதிவிலக்கு மற்றும் குறைந்த மாற்று வழிகளைக் காரணம் காட்டி, இவற்றின் ஏற்றுமதிக்கும் தடை ஏற்பட வாய்ப்பில்லை.</p><p>இதற்கிடையில், அமெரிக்காவின் விலக்குகளால் இந்த ஆண்டு ஏற்பட்ட ஒரு குறுகிய கால வாய்ப்பை தவிர, இந்தியா 2019 முதல் ஈரானிலிருந்து எந்த கச்சா எண்ணெயையும் இறக்குமதி செய்யவில்லை” என்று அவர் கூறினார்.</p><p>ஈரான் மீதான அமெரிக்க தடைகளுக்கு முன்பு, இந்தியா அந்நாட்டுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டிருந்தது, மேலும் தெஹ்ரான் அதன் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தர்களில் ஒன்றாக இருந்தது.</p><h3><strong>இந்தியா ஏற்றுமதி கூட்டமைப்பு தலைவர்</strong></h3><p>ஈரானுக்கான இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படக்கூடாது என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி. ரல்ஹான் கூறினார்.</p><p>ஈரானுக்கான ஏற்றுமதிகள் கணிசமான அளவில் இல்லை என்றாலும், ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்கான சில ஏற்பாடுகளுடன், மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>‘ஐ எம் கேம்’ படத்தின் ‘லூசர்’ பாடல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-of-the-loser-song-from-the-movie-i-am-game</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/release-of-the-loser-song-from-the-movie-i-am-game#comments</comments><guid isPermaLink="false">46a956e9-de81-43aa-a2bd-5b495a3f1815</guid><pubDate>Thu, 27 Aug 2026 16:11:47 +0000</pubDate><atom:updated>2026-08-27T16:11:47.958Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Dulquer Salmaan,துல்கர் சல்மான்,I&apos;m Game,ஐ எம் கேம்,Loser Song</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/12i1ucng/New-Project-2026-08-27T212610.750.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஐ எம் கேம்’ படத்தின் ‘லூசர்’ பாடல் வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/12i1ucng/New-Project-2026-08-27T212610.750.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆர்டிஎக்ஸ் திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து, அவரே தயாரித்துள்ள ஒரு பிரம்மாண்டமான மலையாள ஆக்ஷன் த்ரில்லர் ‘ஐ எம் கேம்’. </p><p>சூதாட்டம், பந்தயம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில், அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி, அதாவது தனது உயிரைவிட அதிர்ஷ்டமே பெரிது என வாழும் ஒருவனின் கதையை படம் விவரிக்கிறது. </p><p>துல்கர் சல்மானுடன் இணைந்து கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட் மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p>இப்படம் ஆக.20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின் செப்.3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘லூசர்’ வெளியாகி உள்ளது. சுஹைல் கோயா வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை துல்கர் சல்மானும் இணைந்துப் பாடியுள்ளார். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/zuTvon1ugcU"></iframe></figure>]]></content:encoded></item><item><title>16வது திருமண நாள் - அழகிய புகைப்படங்களை பகிர்ந்த ஆர்த்தி சிவகார்த்திகேயன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/16th-wedding-anniversary-aarthi-sivakarthikeyan-shares-beautiful-photos</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/16th-wedding-anniversary-aarthi-sivakarthikeyan-shares-beautiful-photos#comments</comments><guid isPermaLink="false">94c5bf64-4a82-452b-9059-4ea86ea0762a</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:47:54 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:47:54.529Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sivakarthikeyan,Wedding Anniversary,Aarthi Sivakarthikeyan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/9fge2zj8/New-Project-2026-08-27T205647.043.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 16வது திருமண நாள் - அழகிய புகைப்படங்களை பகிர்ந்த ஆர்த்தி சிவகார்த்திகேயன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/9fge2zj8/New-Project-2026-08-27T205647.043.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தம்பதியினர், தங்களது 16-வது திருமண நாளை இன்று கொண்டாடும் நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை ஆர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். </p><p>இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராதனா, குகன், பவண் என ஒரு பெண் குழந்தையும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.</p><h2>சேயோன்</h2><p>சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். கமலஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>1984-இல் விண்வெளிக்கு சென்ற 3,301 தேனீக்கள் : நாசா</title><link>https://www.maalaimalar.com/news/world/3301-bees-sent-to-space-nasas-7-day-mission</link><comments>https://www.maalaimalar.com/news/world/3301-bees-sent-to-space-nasas-7-day-mission#comments</comments><guid isPermaLink="false">0a10eeef-ac4b-413c-8e28-4dc26f1d98b8</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:27:36 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:27:36.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Scientists,நாசா,விஞ்ஞானிகள்,Honeybees,nasa,தேனீக்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/4e6dujw6/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NASA Space Bees Experiment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/4e6dujw6/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் நாசா விண்கலத்தில் ஆயிரக்கணக்கான தேனீக்கள், புவிஈர்ப்பு விசையின் ஈர்ப்பு இல்லாமல் உயிர்வாழ முடியுமா என்பதையும், அவற்றால் தேன்கூட்டை கட்ட முடியுமா என்பதையும் சோதித்து பார்ப்பதற்காக விஞ்ஞானிகள் தேனீக்களை விண்வெளிக்கு கொண்டு சென்றனர்.        </p><h3><strong>விண்வெளிக்கு சென்ற 3,301 தேனீக்கள்</strong></h3><p>அமெரிக்காவில் நாசாவின் டிஸ்கவரி விண்கலம் மூலம் கடந்த 1984-ஆம் ஆண்டு 3,301 தேனீக்கள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டன.</p><p>இந்த தேனீக்கள் STS-41C என்ற திட்டத்தின் மூலம் ஏழு நாள் பயணமாக விஞ்ஞானிகள் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டன.</p><p>இந்த தேனீக்கள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. அந்த தேனீக்கள் புவி ஈர்ப்பு விசை இல்லாமல் எவ்வாறு நடந்து கொள்கின்றன எனவும், அவை எவ்வாறு உயிர் வாழ்கின்றன என்பதை அறியவும் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டன.</p><p>மேலும் விஞ்ஞானிகள், விண்வெளியில் கட்டப்பட்ட தேனடையை, பூமியில் உள்ள தேனீக்களால் உருவாக்கப்பட்ட தேனடையுடன் ஒப்பிடவும் விரும்பினர்.</p><p>இந்த தேனீக்கள் ஒரு ராணி தேனீ மற்றும் அதற்கு தேவையான உணவுகளுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மரச்சட்டங்களில் வைக்கப்பட்டன.</p><p>புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் சாதாரண திரவங்கள் மிதந்து கொண்டு இருக்கும் என்பதனால், தேனீக்களுக்கான உணவாக சர்க்கரை, நீர் மற்றும் அகர் அடங்கிய ஒரு கலவையை விஞ்ஞானிகள் உணவாக கொடுத்தனர்.</p><p>தேனீக்களால் விண்வெளியில் பறப்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ஆரம்பகட்ட ஆய்வுகளில், சில தேனீக்கள் பறக்க முயன்றபோது, தங்கள் மரச்சட்டங்களில் உள்ள சுவர்களில் மோதிக்கொண்டன.</p><p>இதைத்தொடர்ந்து ஏழாவது நாளில், தேனீக்கள் புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் தங்களை தகவமைத்து கொண்டது.</p><p>மேலும் இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், பல தேனீக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு பறந்து கொள்ள பழகிக்கொண்டதாகவும், மேலும் தேன்கூடு ஒன்றை வளர்க்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்தனர்.</p><p>விண்வெளியில் இருந்த அந்த தேனீக்கள் சுமார் 200 சென்டிமீட்டர் நீளத்தில் தேனடையை கட்டியதாகவும், ஆனால் அந்த தேனடை, பூமியில் கட்டப்பட்ட தேனடையை விட சிறிய விட்டங்களையும், தடிமனான சுவர்களை கொண்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.</p><h3><strong>35 முட்டைகள்</strong></h3><p>பெரும்பாலான தேனீக்கள் விண்வெளி பயணத்தில் உயிர் பிழைத்திருந்ததாகவும், ராணி தேனீ சுமார் 35 முட்டைகளை இட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.</p><p>ஆனால் பூமிக்கு திரும்பிய பிறகு அந்த முட்டைகளை ராணி தேனீயால் பொரிக்கமுடியவில்லை என்றும், இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் விண்வெளிக்கு சென்ற விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நிலநடுக்கத்தால் உருவான ராட்சத இயற்கை ஏரி: அடுத்த 3 நாட்களில் மீண்டும் ஒரு பேரழிவு? நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/massive-natural-lake-formed-by-earthquake-another-disaster-in-the-next-3-days-china-warns-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/world/massive-natural-lake-formed-by-earthquake-another-disaster-in-the-next-3-days-china-warns-nepal#comments</comments><guid isPermaLink="false">96865629-c57b-4d0f-8086-432d3d68659d</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:15:28 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:15:28.404Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சீனா,Nepal Floods,நேபாள வெள்ளம்,Chhochen Khola,Purepu Tsangpo,சோசென் கோலா,புரேபு சாங்போ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tinx5vok/New-Project-2026-08-27T204501.757.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிலநடுக்கத்தால் உருவான ராட்சத இயற்கை ஏரி: அடுத்த 3 நாட்களில் மீண்டும் ஒரு பேரழிவு? நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tinx5vok/New-Project-2026-08-27T204501.757.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் நிலச்சரிவு காரணமாக உருவான ஒரு தற்காலிக ஏரி அடுத்த 72 மணி நேரத்திற்குள் உடைந்து மீண்டும் ஒரு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று சீனா, நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் நிலச்சரிவால் தண்ணீர் தடுக்கப்பட்டு, தனி ஏரிபோன்று உருவாகி அதில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. </p><p>இதனை அறிவியலில் நிலச்சரிவு அணை எனக் குறிப்பிடுவர். நீரோட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் நிலநடுக்கத்தால் விழுந்த கற்கள், பாறைகள் நகர்ந்து, அடுத்த மூன்று நாட்களில் அந்த அணை அமைப்பு உடைவதற்கான அதிக அபாயத்தை கொண்டுள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.</p><p>இன்றைய நிலவரப்படி அந்த அணையின் மொத்த கொள்ளளவு 2 மில்லியன் கன மீட்டர் (70 மில்லியன் கன அடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அணை “ஏற்கனவே நிரம்பி வழிகிறது” என சீன நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>“அடுத்த மூன்று நாட்களில் மேலும் 3 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் ஏரிக்குள் பாயும் என எதிர்பார்க்கப்படுவதால், ஏரி உடைவதற்கான அதிக அபாயம் உள்ளது,” என அமைச்சகம் எச்சரித்துள்ளது.</p><p>இந்த இயற்கை அணை உடைந்தால், நேபாளத்தின் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றங்கரைப் பகுதிகளில் மீண்டும் ஒரு பேரழிவு வெள்ளம் ஏற்படும். </p><p>இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவினால் தூண்டப்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சுமார் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சீன மற்றும் நேபாள எல்லையின் இருபுறமும் கிட்டத்தட்ட 900 வெளிநாட்டினர் உட்பட 1,300-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது: சுப்மன் கில்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/test-cricket-won-today-shubman-gill-after-2nd-test-vs-sri-lanka-ends-in-draw</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/test-cricket-won-today-shubman-gill-after-2nd-test-vs-sri-lanka-ends-in-draw#comments</comments><guid isPermaLink="false">f992df07-4293-4f57-9fd5-f6eb57235ce8</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:53:16 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:53:16.104Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்மன் கில்,Shubman Gill,INDvSL,இந்தியா இலங்கை தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/w7rp1ik7/gill.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shubman gill]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/w7rp1ik7/gill.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரிசளிப்புக்கு பின் பேசிய இந்திய கேப்டன் சுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட் வென்றுள்ளது என தெரிவித்தார்.</p><h2>டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா</h2><p>இந்தியா, இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றியது.</p><p>இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றியை இலங்கை வீரர் சோனல் தினுஷா சிறப்பாக விளையாடி தடுத்துவிட்டார்.</p><p>இந்நிலையில், போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய கேப்டன் சுப்மன் கில் பேசியதாவது:</p><p>உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எந்த மாற்றத்தையும் செய்திருந்தால் கூட மூலம் இந்த போட்டியில் நிச்சயம் வென்று இருக்க முடியாது. ஏனென்றால் கடந்த மூன்று நாட்களாக பல ஓவர்களை நாங்கள் வீசி களத்தில் இருந்தோம். எங்களால் செய்ய முடிந்ததை செய்து விட்டோம்.</p><p>இலங்கை வீரர்கள் பிரமாதமாக விளையாடினார்கள். அந்த அணியின் பேட்டர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டினார்கள். கொஞ்சம் அதிர்ஷ்டமும் அவர்களுக்கு உதவியது.</p><p>இந்தத் தொடர் எங்களுக்கு பல நல்ல விஷயங்களை தந்து இருக்கிறது. நாங்கள் இலங்கை அணியிடம் இருந்தும் சில விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றோம்.</p><h2>பாலோ ஆன் நெருக்கடியில் இருந்து மீண்ட இலங்கை</h2><p>பாலோ ஆன் பெற்று கடும் நெருக்கடியில் இருந்து, அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதை பாராட்ட வேண்டும்.</p><p>எங்கள் அணியின் படிக்கல், மானவ் சுதார், ராகுல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர்களும் நன்றாக செயல்பட்டார்கள்.</p><h2>சிறப்பாக பந்து வீசிய மானவ் சுதார்</h2><p>மானவ் சுதார் செயல்பட்ட விதம் என்னைக் கவர்ந்தது. அவர் சிறப்பான முறையில் பந்து வீசி வருகிறார். அவர் பந்தை வீசும் விதமும் அதற்கு அவர் கை மற்றும் மணிக்கட்டை எப்படி பயன்படுத்துகிறார் என்பதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி அவர் எங்களின் மிகவும் முக்கிய ஒரு பவுலராக இருக்கப் போகிறார்.</p><p>அடுத்ததாக நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து செல்ல இருக்கின்றோம். அது எங்களுக்கு ஒரு நல்ல தொடராக இருக்கும் என நினைக்கின்றோம். அதன் பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் தொடர் இருக்கின்றது.</p><p>நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.</p><p>பாலோ ஆன் வழங்கியபோது அதுதான் சிறந்த முடிவாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இலங்கை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். வெற்றி தோல்வி எங்களுக்கு இல்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆணவக் கொலைக்கு எதிராக விரைவில் சிறப்பு சட்டம் இயற்றப்படும் - சட்டமன்றத்தில் அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-law-against-honor-killings-to-be-enacted-soon-minister-vanni-arasu-announces-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-law-against-honor-killings-to-be-enacted-soon-minister-vanni-arasu-announces-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">99784b40-5da4-4375-bb8c-979d501f72fa</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:36:14 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:36:14.441Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Honor Killing,ஆணவப்படுகொலை,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,special law,சிறப்புச் சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/cvx4u29p/New-Project-2026-08-27T200551.413.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆணவக் கொலைக்கு எதிராக விரைவில் சிறப்பு சட்டம் இயற்றப்படும் - சட்டமன்றத்தில் அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/cvx4u29p/New-Project-2026-08-27T200551.413.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகக் தனிச்சட்டம் இயற்றப்படும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். </p><p>ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணவப்படுகொலை தடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் உடன் ஆலோசித்து நிச்சயம் சட்டம் இயற்றப்பட்டு, நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் வன்னி அரசு.,</p><p>“வன்கொடுமைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், சமத்துவம் மற்றும் சமூகநீதியை நிலைநாட்டி, அனைவரிடையேயும் இணக்கமான சூழலை உருவாக்க அரசு முயன்றுவருகிறது. </p><p>இருப்பினும் தங்கள் சொந்தப் பிள்ளைகளையே ஆணவக்கொலை செய்யும் சம்பவல்கள் சமூகத்தில் அரங்கேறி வருகின்றன. </p><p>சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் ஆணவப்படுகொலை சம்பவங்களை தடுப்பதற்கு, சிறப்பு சட்டம் இயற்றுவதற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. </p><p>இக்குழு அரசு அலுவலர்களுடனும் கலந்து ஆலோசித்து கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து கருத்துகளைப் பெற்று அறிக்கை தயார் செய்யவேண்டிய நிலை உள்ளதால், பாஷா குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தக் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்ட உடன், ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்று திறந்த மனதோடு அறிவிக்கிறேன்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஐடி வேலையை உதறிய இந்தியர் - மாதம் ரூ.60 கோடி லாபத்தில் விவசாயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-quits-us-it-job-earns-60-crore-a-month-from-farming</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-quits-us-it-job-earns-60-crore-a-month-from-farming#comments</comments><guid isPermaLink="false">992cbb03-dbdb-4946-a22f-adec3ad9daa5</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:15:37 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:15:37.812Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐடி ஊழியர்,IT employee,Akshayakalpa,அக்‌ஷயகல்பா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/mi59pm1w/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ American IT employee Sasi kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/mi59pm1w/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வந்த ஒருவர், தனது வசதியான வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு அதன்மூலம் ரூபாய் 600 கோடி மதிப்பிலான தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார். </p><p>இதுகுறித்து விகாஷ் என்பவர் பகிர்ந்த எக்ஸ் பதிவில், ஐடி ஊழியரின் கடின உழைப்புக்கு பலனாக தொழில் முனைவோராக உருவெடுத்து, அவரது விவசாய நிறுவனம் மாதம் ரூ.60 கோடி லாபம் ஈட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.</p><h3><strong>அமெரிக்க ஐடி ஊழியர்</strong></h3><p>பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சசி குமார் என்பவர் பி.டெக் பட்டம் பெற்ற பிறகு, 12 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில், ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.</p><p>பின்னர் அவர் அக்‌ஷயகல்பா என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவில் தனது வேலையை விட்டு விலகினார்.</p><p>இதையடுத்து இவர் ஆரம்பித்த விவசாய தொழில், முதல் 9 ஆண்டுகளில் ஆறு முறை திவால் நிலையின் விளிம்பிற்கு சென்றது.</p><p>அப்போது அவரது மனைவியின் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேமிப்புத் தொகையின் உதவியால், அவர் ஆரம்பித்த விவசாய தொழில் கடினமான காலங்களில் இருந்து மீண்டு வந்தது.</p><h3><strong>விவசாய தொழில்</strong></h3><p>இந்த நிலையில் ஐடி ஊழியரின் விவசாய தொழில் சாம்ராஜ்ஜியம் குறித்து விகாஷ் என்பவர் பகிர்ந்த எக்ஸ் பதிவில், அக்‌ஷயகல்பா அமைப்பில் தற்போது 2,800 விவசாயிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விவசாய நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1.28 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாகவும், இதன் வருடாந்தர செலுத்துதல் தொகை ரூ.480 கோடியாக உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும் இந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் லாபம் ஈடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>பயனர்கள் வரவேற்பு</strong></h3><p>விகாஷ் என்பவர் பகிர்ந்த இந்த பதிவிற்கு பயனர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். </p><p>ஒருவர் அந்த பதிவிற்கு, தான் அந்த விவசாய நிறுவனத்தினுடைய சாச் (மோர்) பானத்தை சுவைத்திருக்கிறதாகவும், அது மிகவும் சுவையுள்ளதாக இருப்பதாகவும் பதிவிட்டார்.</p><p>மேலும் அது சந்தையில் கிடைக்கும் மற்ற பிராண்டின் விலையை விட சற்று அதிகமாக இருப்பதாகவும், இருந்தாலும் அது அதன் விலைக்கு ஏற்ப தகுதியான தரத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 350-ஐ தாண்டியது</title><link>https://www.maalaimalar.com/news/world/death-toll-in-nepal-flash-flood-rises-to-356</link><comments>https://www.maalaimalar.com/news/world/death-toll-in-nepal-flash-flood-rises-to-356#comments</comments><guid isPermaLink="false">54080dd4-5480-4c90-acc9-4769f2ff99f8</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:51:10 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:51:10.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,வெள்ளம்,flood,Death toll,பலி எண்ணிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/a77svjmr/flood.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ flood]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/a77svjmr/flood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது.</p><p>வடக்கு நேபாளத்தில் ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக எல்லை நதி ஒன்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. </p><h2>கடும் சேதம்</h2><p>திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளம், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை கடுமையாக சேதப்படுத்தியது.</p><p>வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்வதற்கும் அமைச்சரவையின் முக்கிய அவசரக் கூட்டத்தினை நேபாள பிரதமர் பாலன் ஷா கூட்டினார்.</p><h2>ஹெலிகாப்டரில் மீட்புப்பணி</h2><p>வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்ததால் பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து செல்லுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தினர். </p><h2>356 பேர் பலி</h2><p>இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது. </p><p>மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென தெரியவில்லை. </p><p>நேபாளம் மற்றும் திபெத் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.</p><p>நேபாள அரசுடன் சேர்ந்து இந்திய விமானப்படையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மோசமான வானிலை மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொறுப்பான கார் உரிமையில் நிதித் திட்டமிடல் வகிக்கும் பங்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-does-used-car-maintainance-cost-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-does-used-car-maintainance-cost-in-india#comments</comments><guid isPermaLink="false">5b355145-0b89-4b4d-8653-908e2eb43cb4</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:33:12 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:33:12.775Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,கார்,கார் பராமரிப்பு,car maintainance</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1bpese07/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ car]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1bpese07/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரும்பாலான மக்கள் ஒரு காரை வாங்குவதற்கு முன் பல வாரங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில் செலவிடுகிறார்கள். ஆனால் அந்தக் காரை வைத்திருப்பதற்கு உண்மையில் எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றி சிந்திக்க அதே அளவு நேரம் செலவிடுபவர்கள் மிகச் சிலரே.</p><p>வாங்குதல் என்பது வெறும் தொடக்கம் மட்டுமே. எரிபொருள், சர்வீஸிங், இன்சூரன்ஸ், பழுதுபார்ப்பு, தேய்மானம் ஆகியவை ஒவ்வொரு மாதமும் அமைதியாக, தொடர்ச்சியாக பின்தொடர்கின்றன. ஒரு திட்டமில்லாமல், இவை ஒருபோதும் அத்தகைய செலவுகளைத் தாங்குவதற்கு உருவாக்கப்படாத ஒரு குடும்ப பட்ஜெட்டின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.</p><h2>ஒரு காரை வாங்குவது ஒருமுறை மட்டும் செய்யும் செலவு அல்ல ஏன்?</h2><p>ஆன்-ரோடு விலையும் EMI-யும் தான் பெரும்பாலான வாங்குபவர்கள் கவனம் செலுத்தும் எண்கள். ஆனால் இரண்டுமே முழு கதையையும் சொல்வதில்லை. உரிமையின் இரண்டாம் ஆண்டு முதல், ஒரு காரை ஓட்டுவதற்கான செலவில் எரிபொருள், இன்சூரன்ஸ், சர்வீஸிங், பார்க்கிங், டோல், அவ்வப்போது தேவைப்படும் பழுதுபார்ப்பு ஆகியவை அடங்கும். இந்த செலவுகள் EMI-க்கு அப்பால் மொத்த மாதாந்திர கடமையைக் கணிசமாக அதிகரிக்கக்கூடும்.</p><p>அந்த இடைவெளியில்தான் உரிமை பட்ஜெட்டுகள் அமைதியாக சிதைந்துவிடுகின்றன. பெரும்பாலான இந்திய குடும்பங்கள் ஒரு காரை ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை வைத்திருக்கின்றன. நிதி கடமை கடன் காலத்தில் மட்டுமல்ல, முழு காலத்திலும் தொடர்கிறது. எதையும் கையெழுத்திடுவதற்கு முன் இதைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெறுவது தான் கார் உரிமையை மன அழுத்தமாக இல்லாமல் நிர்வகிக்கக் கூடியதாக ஆக்குகிறது.</p><h2>காரை வாங்கிய விலைக்கு அப்பால் அதை வைத்திருப்பதற்கான உண்மையான செலவுகள் என்ன?</h2><p>பெரும்பாலான கார் உரிமையாளர்களுக்கு வாங்குதல் முடிந்த பின்னரும் ஒட்டுச் செலவுகள் தொடர்கின்றன. எரிபொருள், சர்வீஸிங், இன்சூரன்ஸ் புதுப்பித்தல்கள், பார்க்கிங் கட்டணங்கள், டோல், எதிர்பாராத பழுதுபார்ப்புகள் ஆகிய அனைத்தும் மொத்த உரிமை செலவில் பங்களிக்கின்றன. இந்த செலவுகளில் அடங்குவன: </p><p><strong>எரிபொருள்:</strong> இது எந்த விதிவிலக்கும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் செலவு. காரை எவ்வளவு தூரம் ஓட்டுகிறோம், என்ன பாதைகளில் செல்கிறோம், இன்ஜின் எவ்வளவு திறமையாக இயங்குகிறது என்பதைப் பொறுத்து இது மாறுபடும்.</p><p><strong>இன்சூரன்ஸ் புதுப்பித்தல்:</strong> முதல் ஆண்டில் ஆன்-ரோடு விலையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் ஆண்டு முதல் இது ஒரு தனி வருடாந்திர செலவாக மாறும். இதற்கு பல வாங்குபவர்கள் பட்ஜெட் ஒதுக்கியிருக்க மாட்டார்கள்.</p><p><strong>சர்வீஸிங்:</strong> உரிமையாளர் திட்டமிடட்டும் இல்லையோ, காருக்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் கவனிப்பு தேவை. ஒரு சர்வீஸை தவிர்ப்பது சேமிப்பாகத் தோன்றலாம். ஆனால் பின்னர் அதை சரிசெய்ய அதிக செலவாகும்.</p><p><strong>டயர்களும் பிரேக்குகளும்:</strong> இவை பயன்பாட்டால் தேய்ந்து, அவ்வப்போது மாற்றப்பட வேண்டும். வருடத்திற்கு சுமார் 15,000 கி.மீ. ஓடும் ஒரு கார், பொதுவாக மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை டயர் செட் மாற்றப்பட வேண்டியிருக்கும்.</p><p><strong>பேட்டரி:</strong> பெரும்பாலான கார் பேட்டரிகள் 4-5 ஆண்டுகள் நீடிக்கும். மாற்றுவது ஒருமுறை மட்டுமே ஏற்படும், ஆனால் தவிர்க்க முடியாத செலவு.</p><p><strong>பார்க்கிங்கும் டோலும்:</strong> தினசரி செலவுகள், இவை படிப்படியாக ஒரு காரை வைத்திருப்பதன் மற்றும் பயன்படுத்துவதன் மொத்த செலவை அதிகரிக்கக் கூடும்.</p><p><strong>தேய்மானம்:</strong> எரிபொருள் அல்லது சர்வீஸிங் போலல்லாமல் இது நேரடி செலவு அல்ல. ஆனால் காலப்போக்கில் வாகனத்தின் மறுவிற்பனை மதிப்பை பாதிக்கிறது.</p><p><strong>திட்டமிடப்படாத பழுதுபார்ப்புகள்:</strong> வாரண்டி முடிந்தவுடன் ஒவ்வொரு பழுதுபார்ப்பும் உரிமையாளரின் சொந்த பணத்தில் இருந்து தான். எதிர்பாராத பழுதுபார்ப்புகளுக்கு ஒரு அவசர நிதியை ஒதுக்கி வைப்பது, பராமரிப்பு தேவைகள் ஏற்படும்போது திடீர் நிதி நெருக்கடியைத் தவிர்க்க உதவும்.</p><h2>ஒரு நிலையான கார் உரிமை பட்ஜெட்டை உருவாக்க நிதி திட்டமிடல் எவ்வாறு உதவுகிறது?</h2><p>எந்தவொரு கார் உரிமை பட்ஜெட்டின் தொடக்க புள்ளியும், வெறும் EMI அல்ல, மாதாந்திர முழு எண்ணிக்கை. அனைத்தும் மீண்டும் நிகழும் மற்றும் அவ்வப்போது ஏற்படும் உரிமை செலவுகளும், பின்னர் எதிர்பாராத செலவுகளாக கருதப்படுவதற்குப் பதிலாக, ஆரம்பத்திலிருந்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.</p><p>கார் தொடர்பான செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பது, சர்வீஸிங், டயர் மாற்றங்கள், சிறிய பழுதுபார்ப்புகள் ஆகியவற்றை மற்ற நிதி இலக்குகளை பாதிக்காமல் ஈடுகட்ட உதவும்.</p><h2>ஒவ்வொரு கார் உரிமையாளரின் நிதி திட்டத்திலும் இன்சூரன்ஸ் ஏன் சேர்க்கப்பட வேண்டும்?</h2><p>இன்சூரன்ஸ் தான் புதுப்பித்தல் மாதம் வரும் வரை பெரும்பாலான வாங்குபவர்கள் குறைத்து மதிப்பிடும் செலவு. முதல் ஆண்டு இன்சூரன்ஸ் ஆன்-ரோடு விலையில் அமைதியாக இணைக்கப்பட்டிருக்கும். 13வது மாதம் அதை மாற்றிவிடும். ₹18,000 புதுப்பித்தல் அறிவிப்பு வந்திறங்குகிறது, ஆனால் பட்ஜெட்டில் அதற்காக எதுவும் ஒதுக்கப்படவில்லை.</p><p>பிரீமியத்தைத் தாண்டி, சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கார் இன்சூரன்ஸ் பாலிசி தான், முன்கூட்டியே கணிக்க முடியாதவற்றை உள்வாங்கும் நிதி வழிமுறையாக செயல்படுகிறது. ஒரு விபத்து, ஒரு திருட்டு, ஒரு வெள்ளம், ஒரு மூன்றாம் தரப்பு பொறுப்புக் கோரிக்கை. உரிமையின் முதல் மாதத்திலிருந்தே வருடாந்திர புதுப்பித்தலுக்காக பட்ஜெட் ஒதுக்குவது, 13வது மாதத்தில் தொகையைத் தேடி அலைவதற்குப் பதிலாக, கார் உரிமையில் மிகவும் பொதுவான நிதி அதிர்ச்சிகளில் ஒன்றை நீக்கும் ஒரு எளிய பழக்கமாகும்.</p><h2>சாலையில் எதிர்பாராத நிதி அபாயங்களுக்கு கார் உரிமையாளர்கள் எவ்வாறு தயாராகலாம்?</h2><p>எதிர்பாராத நிதி அபாயங்களுக்குத் தயாராவது, அந்த அபாயங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் தொடங்குகிறது. பெரும்பாலான கார் உரிமையாளர்களுக்கு, இவை பொதுவாக மூன்று வகைகளில் அடங்கும்: வாகனத்திற்கு ஏற்படும் சேதம், மற்றொருவருக்கு ஏற்படும் பொறுப்பு, மற்றும் வாகனம் பழுதுபார்க்கப்படும்போது ஏற்படும் தற்காலிக இடையூறு.</p><p>வாகனத்திற்கு ஏற்படும் சேதம்தான் மிகவும் தெரியும் ஒன்று. எலக்ட்ரானிக்ஸ் நிறைந்த நவீன காரின் பழுதுபார்ப்பு பில், மிதமான சேதத்திற்குக் கூட லட்சக்கணக்கில் செல்லலாம். திருட்டு அல்லது முழுமையான இழப்பு, கடன் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே வாகனத்தையே முழுமையாக அகற்றிவிடும்.</p><p>மூன்றாம் தரப்பு பொறுப்பு என்பது குறைவாகத் தெரியக்கூடிய, ஆனால் பெரியதாக இருக்கக்கூடிய அபாயம். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், மற்றொருவருக்கு ஏற்படும் மரணம் அல்லது நிரந்தர ஊனத்திற்கான இழப்பீட்டிற்கு மேல் வரம்பு இல்லை. போதுமான இன்சூரன்ஸ் இல்லாத பட்சத்தில், அந்தப் பொறுப்பு நேரடியாக வாகன உரிமையாளர் மீது விழும்.</p><p>மூன்றுக்கும் தயாராவது ஒரே சில படிகளில் தொடங்குகிறது. காரின் இன்றைய உண்மையான மதிப்பை பிரதிபலிக்கும் ஒரு பாலிசியைத் தேர்ந்தெடுக்கவும். இடைவெளியில்லாமல் அதை செயலில் வைத்திருக்கவும். இன்சூரன்ஸ் தீர்க்கும் தொகைக்கும் உண்மையான பழுதுபார்ப்பு செலவுக்கும் இடையே விழும் தொகைகளுக்கு சில பணத்தை ஒதுக்கி வைக்கவும். இவை சிக்கலான படிகள் அல்ல, ஆனால் இவை அனைத்தும் சேர்ந்துதான், ஒரு சம்பவம் ஒரு நீடித்த நிதிப் பிரச்சினையாக மாறுவதைத் தடுக்கின்றன.</p><h2>நீண்டகால உரிமை செலவுகளை நிர்வகிப்பதில் காம்ப்ரிஹென்சிவ் பாதுகாப்பு என்ன பங்கு வகிக்கிறது?</h2><p>அடிப்படை மூன்றாம் தரப்பு பாலிசி மற்றவர்கள் மீதான பொறுப்பை மட்டுமே உள்வாங்குகிறது. இது காரையே முற்றிலும் பாதுகாப்பின்றி விட்டுவிடுகிறது. காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் விபத்துகள், திருட்டு, தீ, இயற்கை பேரிடர்கள் ஆகியவற்றால் ஏற்படும் சொந்த-வாகன சேதத்தை, மூன்றாம் தரப்பு பொறுப்புடன் சேர்த்து உள்வாங்குகிறது.</p><p>இங்கு ஆட்-ஆன்கள் முக்கியமானவை. ஜீரோ டெப்ரிசியேஷன் கவர் என்பது பாகங்கள் தேய்மான மதிப்பில் அல்ல, முழு மாற்று செலவில் தீர்க்கப்படுவதைக் குறிக்கிறது. இது ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கார்களுக்கு உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. என்ஜின் பாதுகாப்பு, நீர் உட்புகுதல் அல்லது எண்ணெய் கசிவால் ஏற்படும் சேதத்தை உள்வாங்குகிறது, இது நிலையான பாலிசிகளில் விலக்கப்பட்டுள்ளது. ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கவர், முழுமையான இழப்பு தீர்வு, தேய்மானத்திற்குப் பின் காரின் மதிப்பை அல்ல, அசல் வாங்கிய விலையை பிரதிபலிக்கிறது என்பதை உறுதி செய்கிறது.</p><p>இந்த ஆட்-ஆன்கள் ஒவ்வொன்றும், அவை உள்வாங்குவதன் ஒரு சிறு பகுதியே செலவாகும். உரிமைக் காலம் முழுவதும், இவை பழுதுபார்ப்பு மற்றும் கோரிக்கைகளின் சொந்த பண செலவை கணிசமாகக் குறைக்கின்றன. இதுதான் இன்சூரன்ஸ் வெறும் ஒரு சட்ட முறைமையாக இல்லாமல் ஒரு நிதி திட்டத்தின் பகுதியாக மாறும் விதம்.</p><h2>ஸ்மார்ட் நிதி முடிவுகள் ஒரு காரின் ஆயுள் மற்றும் மதிப்பை எவ்வாறு நீட்டிக்க முடியும்?</h2><p>நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு கார் ஓட்ட செலவு குறைவாக இருக்கும். இறுதியில் விற்கும்போது அதன் மதிப்பையும் சிறப்பாக தக்க வைத்திருக்கும். ஒழுங்குபடுத்தப்பட்ட பராமரிப்பின் நிதி பலன் இரண்டு முனைகளிலும் தெரியும், அதாவது உரிமைக் காலத்தில் குறைந்த ஓட்ட செலவுகள் மற்றும் முடிவில் சிறந்த மறுவிற்பனை விலை.</p><p>உற்பத்தியாளரின் சர்வீஸ் அட்டவணையைப் பின்பற்றுவது, சிறிய பிரச்சினைகள் விலையுயர்ந்தவையாக மாறுவதைத் தடுக்கிறது. சர்வீஸ் பதிவுகளை முழுமையாக வைத்திருப்பது மறுவிற்பனையின் போது உண்மையான மதிப்பைச் சேர்க்கிறது. வாங்குபவர்கள் ஒரு முழுமையான ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றைப் பார்க்கும்போது தொடர்ந்து அதிக விலை கொடுக்கிறார்கள். ஏனெனில் இது தாங்கள் வாங்குவது என்ன என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கிறது.</p><p>நோ கிளைம் போனஸை (NCB) புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதும் உரிமை செலவுகளைக் குறைக்க முடியும். காலப்போக்கில், அதிக NCB இன்சூரன்ஸ் புதுப்பித்தல் பிரீமியங்களில் கணிசமான சேமிப்பை ஏற்படுத்தலாம்.</p><h2>ஒரு நிதிரீதியாக பொறுப்புள்ள கார் உரிமையாளரை வரையறுக்கும் பழக்கங்கள் என்ன?</h2><p>ஒரு நிதிரீதியாக பொறுப்புள்ள கார் உரிமையாளர், வாகனத்தை ஒருமுறை மட்டும் எடுக்கும் முடிவாக அல்லாமல், தொடர்ந்து சுறுசுறுப்பான மேலாண்மை தேவைப்படும் ஒன்றாகக் கருதுகிறார்.</p><p>நடைமுறையில் இதன் பொருள், முதல் நாளிலிருந்தே முழு மாதாந்திர உரிமை செலவிற்காக பட்ஜெட் ஒதுக்குவது. காப்பீட்டை சரியான நேரத்தில் புதுப்பித்து, புதுப்பிக்கும்போது கவரேஜை மறுஆய்வு செய்வது, சாம் இன்சூர்டு இன்னும் காரின் மதிப்பையும் உரிமையாளரின் உண்மையான ஆபத்தையும் பிரதிபலிக்கிறதா என்பதை சரிபார்ப்பது. பதிவு, இன்சூரன்ஸ், PUC ஆவணங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது, ஏனெனில் காலாவதி ஆவது சட்ட மற்றும் நிதி ரீதியான ஆபத்தை ஒரே நேரத்தில் உருவாக்குகிறது.</p><p>சில முடிவுகள் அவ்வப்போது வரும். காரை எங்கு சர்வீஸ் செய்வது, ஒரு பழுதுபார்ப்புக்கு கோரிக்கை வைப்பது நல்லதா அல்லது நேரடியாக செலுத்துவது நல்லதா, மற்றும் ஒரு கட்டத்தில், காரை தொடர்ந்து ஓட்டுவது இன்னும் நிதி ரீதியாக அர்த்தமுள்ளதா அல்லது புதிதாக ஒன்றுக்கு மாறுவது புத்திசாலித்தனமான நகர்வா என்பது. இவை எதுவும் சிக்கலானவை அல்ல. இவை வெறுமனே இயல்பாக இல்லாமல் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட வேண்டும்.</p><h2>முடிவுரை</h2><p>பொறுப்புள்ள கார் உரிமை என்பது சரியான வாகனத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தாண்டியது. வருடங்களாக அதைப் பயன்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வரும் செலவுகளுக்கு திட்டமிடுவதும் இதில் அடங்கும். சர்வீஸிங், இன்சூரன்ஸ் புதுப்பித்தல்கள், பழுதுபார்ப்புகள், தேய்மானம் போன்ற செலவுகள் முன்கூட்டியே எதிர்பார்க்கப்படும்போது, கார் உரிமை மேலும் கணிக்கக்கூடியதாகவும் நிதி ரீதியாக நிலையானதாகவும் மாறுகிறது. ஒரு கவனமான நிதி திட்டம், உரிமையாளர்கள் தங்கள் நீண்டகால நிதி நிலைமையின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தாமல் தங்கள் வாகனத்தின் பலன்களை அனுபவிக்க உதவுகிறது.</p><h2>Reference Links:</h2><p>https://fintoolbaba.com/blog/hidden-cost-owning-car-india</p><p>https://fintoolbaba.com/blog/used-car-maintenance-cost-india</p><p>https://tukkbook.in/car-ownership-cost-calculator/</p><p>https://www.godigit.com/motor-insurance/car-insurance/ncb-in-car-insurance </p>]]></content:encoded></item><item><title>சட்ட மன்றமா? சண்டை மன்றமா? ஆதவ் அர்ஜூனா பேசாதவரை அவை சுமூகமாக செல்கிறது - பிரேமலதா ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/things-proceed-smoothly-as-long-as-aadhav-arjuna-doesnt-speak-is-this-a-legislative-assembly-or-an-arena-for-brawls-premalatha-fumes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/things-proceed-smoothly-as-long-as-aadhav-arjuna-doesnt-speak-is-this-a-legislative-assembly-or-an-arena-for-brawls-premalatha-fumes#comments</comments><guid isPermaLink="false">c2cf0b6e-6936-4d71-b7a0-e233cf80c78a</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:20:57 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:20:57.807Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Aadhav Arjuna,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,தமிழ்நாடு சட்டப்பேரவை,Tamil Nadu  Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ygjzyjqn/New-Project-2026-08-27T184358.336.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா பேசாதவரை அவை அமைதியாக செல்கிறது... இது சட்ட மன்றமா? சண்டை மன்றமா? - பிரேமலதா ஆவேசம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ygjzyjqn/New-Project-2026-08-27T184358.336.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், நாளுக்கு நாள் தவெக - திமுக வார்த்தை போர் அதிகரித்து வருகிறது. </p><p>இந்நிலையில் இன்று இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த்.,</p><p>“மக்கள் பிரச்னைகளை பேசுவதற்குதான் சட்டசபை. கருத்துகளை ஒரு 5 நிமிடம் பகிரலாம். ஆனால் மாலை 6.30 மணிவரை ஒருவரை ஒருவர் குறை சொல்வது, சண்டை போடுவதுதான் நடக்கிறது. இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னப் பலன்?</p><p>இதுவரை ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளும் காலக்கட்டத்திற்கு ஏற்ப ஆட்சியை சிறப்பாகத்தான் செய்துள்ளனர். உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மக்களும், நாங்களும் துணைநிற்போம்.</p><p>இரவு முழுவதும் பேசவேண்டியவற்றை தயார் செய்துவருகிறோம். ஆனால் எங்களுக்கு பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. எப்போது பார்த்தாலும் சட்டமன்றத்தில் சண்டை, சண்டை, சண்டை. மக்களுக்கு இதனால் என்னப் பயன்? </p><p>இங்கு மக்களுக்காக பேசவேண்டும். அவர்களுக்காகத்தான் இந்த சட்டமன்றம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நேற்று முன்தினம் 2 மானியக் கோரிக்கை குறித்துக்கூட பேசமுடியவில்லை. </p><p>பேசியவர்களேதான் பேசுகிறார்கள். இது சட்டமன்றம், சண்டை மன்றம் அல்ல. ஆதவ் அர்ஜூனா பேசாதவரை அமைதியாக செல்கிறது. அவர் பேச ஆரம்பித்தால் சண்டை ஆரம்பித்துவிடுகிறது. அதற்கு நீங்கள் அனுமதி அளிக்கக்கூடாது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பேச அனுமதி அளிக்கவேண்டும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோவுக்கு புதிய இயக்குநர் நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-director-appointed-for-chennai-metro</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-director-appointed-for-chennai-metro#comments</comments><guid isPermaLink="false">e664474e-912f-431c-aaf0-eff34953eaa9</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:43:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:43:13.054Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai metro,சென்னை மெட்ரோ,IAS Ashish Chatterjee,cadre Tamil Nadu,ஐஏஎஸ் ஆஷிஷ் சாட்டர்ஜி,தமிழ்நாடு கேடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ozyek7qg/New-Project-2026-08-27T180843.371.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மெட்ரோவுக்கு புதிய இயக்குநர் நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ozyek7qg/New-Project-2026-08-27T180843.371.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் சாட்டர்ஜி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்த எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் புதிய நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டார். </p><p>இந்நிலையில் எம்.ஏ. சித்திக்குக்குப் பதிலாக, புதிய நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் சாட்டர்ஜி பொறுப்பேற்றுள்ளார்.</p><p>1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஆஷிஷ் சாட்டர்ஜி, சமீபத்தில் மத்திய அரசின் எஃகு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் பொறுப்பில் இருந்து, தமிழ்நாடு அரசுப்பணிக்கு மீண்டும் மாற்றப்பட்டார். இந்நிலையில் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு முன்பு இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.</p>]]></content:encoded></item><item><title>அமைதியாய் தாக்கும் சிறுநீரக புற்றுநோய்: கவனிக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கைகள்!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/silent-attack-kidney-cancer-key-warning-signs-to-watch</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/silent-attack-kidney-cancer-key-warning-signs-to-watch#comments</comments><guid isPermaLink="false">b514b222-e4ea-4d29-a1ef-27288e8ff906</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:26:14 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:26:14.610Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,Health Tips,ஆரோக்கியம்,உடல்நலம்,Kidney Cancer,Wilms&apos; Tumor,சிறுநீரக புற்றுநோய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/guc83j28/GGGG.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kidney Cancer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/guc83j28/GGGG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனித உடலில் ரத்தத்தில் உள்ள கழிவுகளையும் தேவையற்ற திரவங்களையும் வடிகட்டி சிறுநீராக வெளியேற்றும் மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகமாகும். இந்த சிறுநீரக திசுக்களில் அசாதாரண செல்கள் கட்டுப்பாடன்றிப் பெருகி கட்டியாக உருவெடுப்பதே சிறுநீரக புற்றுநோய் ஆகும்.</p><p>சிறுநீரகப் புற்றுநோயில் பல வகைகள் இருப்பினும், பெரியவர்களுக்குக் கண்டறியப்படும் 80 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் 'ரீனல் செல் கார்சினோமா' வகையைச் சேர்ந்தவையாகும். இது சிறுநீரகத்தின் வெளிப்பகுதியான 'ரீனல் கார்டெக்ஸ்' என்ற அமைப்பில் உள்ள சிறிய குழாய்களில் தொடங்குகிறது. இதுதவிர சிறுநீரகப் பாதையைப் பாதிக்கும் 'அப்பர் யூரினரி ட்ராக்ட் யூரோதெலியல் கேன்சர்' மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் 'வில்ம்ஸ் டியூமர்' போன்ற அரிய வகை புற்றுநோய்களும் காணப்படுகின்றன.</p><h2>அறிகுறிகளும் <strong>அபாயக் கா</strong>ரணிகளும்</h2><p>ஆரம்ப கட்டத்தில் எந்தவொரு வலியோ அல்லது தெளிவான அறிகுறிகளோ தென்படுவதில்லை. ஆனால் நோய் தீவிரமடையும் போது சில முக்கிய எச்சரிக்கை சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன:</p><p>* சிறுநீரில் ரத்தம் கலந்து போதல் (சிவப்பு அல்லது டீ நிறத்தில் மாறுவது).</p><p>* முதுகு அல்லது விலா எலும்புகளுக்குக் கீழே ஒரு பக்கத்தில் தொடர்ச்சியாக ஏற்படும் வலி.</p><p>* இடுப்பு அல்லது வயிற்றின் பக்கவாட்டில் தென்படும் கட்டி போன்ற வீக்கம்.</p><p>* காரணமின்றி உடல் எடை குறைதல், கடுமையான சோர்வு மற்றும் அடிக்கடி வரும் காய்ச்சல்.</p><p>சிகரெட் மற்றும் புகையிலைப் பயன்பாடு, உடல் பருமன், தொடர்ச்சியான உயர் ரத்த அழுத்தம், நீண்டகால டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் குடும்ப மரபியல் வரலாறு ஆகியவை இந்நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கின்றன.</p><h2>மேம்பட்<strong>ட சிகிச்சை</strong>கள்</h2><p>ரத்த மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் மூலம் நோயின் முதற்கட்ட அறிகுறிகள் ஆராயப்படுகின்றன. பின்னர் அல்ட்ராசவுண்ட், சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ போன்ற துல்லியமான இமேஜிங் சோதனைகள் மற்றும் பயாப்ஸி மூலம் புற்றுநோயின் நிலை உறுதி செய்யப்படுகிறது.</p><p>கட்டியின் அளவு மற்றும் பரவலைப் பொறுத்துச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பாதிப்படைந்த சிறுநீரகப் பகுதியை மட்டும் அல்லது முழு சிறுநீரகத்தையும் அகற்றும் 'நெஃப்ரெக்டமி' அறுவை சிகிச்சை முதன்மையான தீர்வாகும்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/kd41gpo6/jj.jpg" /></figure><p> இதுதவிர, புற்றுநோய் செல்களை மட்டும் இலக்கு வைத்து அழிக்கும் 'டார்கெட்டட் தெரபி' , உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டும் 'இம்யூனோதெரபி' மற்றும் வெப்பம் அல்லது குளிரூட்டல் மூலம் கட்டியை அழிக்கும் 'அப்லேஷன்' முறைகளும் தற்போது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது முழுமையான குணமடைதலுக்கு வழிவகுக்கும்.</p>]]></content:encoded></item><item><title>எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தினேன்: பாஜக எம்பி-யின் கருத்துக்கு காங்கிரஸ் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/i_cut_a_lemon_to_stop_the_rain_bjp_mps_comment_draws_congress_response</link><comments>https://www.maalaimalar.com/news/national/i_cut_a_lemon_to_stop_the_rain_bjp_mps_comment_draws_congress_response#comments</comments><guid isPermaLink="false">45131e7d-63a1-4c7b-a1e1-a92f16014dae</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:12:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:12:04.970Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சத்தீஸ்கர்,BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,chattisgarh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zombj0nn/Untitled-design-23.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP MP’s lemon rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zombj0nn/Untitled-design-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சத்தீஸ்கர்</a> மாநிலத்தின் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மழை குறுக்கிட்டதால் ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை தடுத்து நிறுத்தியதாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">பாரதிய ஜனதா கட்சியின்</a> எம்.பி. போஜ்ராஜ் நாக் கூறிய கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தெளண்டி லோஹாரா பகுதியில் மஹ்தாரி வந்தன் என்ற ஒரு திட்ட நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கலந்து கொண்டார்.   </p><h3><strong>பா.ஜ.க எம்.பி</strong></h3><p>அப்போது அந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு வானிலை மோசமாக இருந்ததாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முதலமைச்சரின் மருத்துவ குழு நள்ளிரவு நேரத்தில் வந்ததாக பாஜக எம்.பி. போஜ்ராஜ் நாக் கூறினார்.</p><p>இதுகுறித்து பாஜக எம்.பி நாக் கூறுகையில், நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறுவதற்காக மழையை நிறுத்தும்படி புத்ததேவர் மற்றும் மகாதேவரிடம் பிரார்த்தனை செய்து, ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டியதாக கூறினார்.</p><p>இதையடுத்து தான் ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தியதாக பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் போக்ராஜ் நாக் கூறினார்.</p><p>மேலும், தற்போது இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது, மழை பெய்ய வேண்டுமென்றால் பெய்யட்டும் என்றும் பாஜக எம்.பி. கூறினார்.</p><h3><strong>சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்</strong></h3><p>இந்த நிலையில் சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ், பாஜக எம்.பி.யின் கருத்து குறித்து விமர்சனம் செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து தீபக் பைஜ் கூறுகையில், “ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டினால் மழையை நிறுத்த முடியும் என்றால், சர்க்கரை விலையையும் பணவீக்கத்தையும் குறைப்பதற்கு, பாஜக எம்.பி ஒரு எலுமிச்சை பழத்தை வெட்ட வேண்டும்” என்று கூறினார்.</p><p>இதையடுத்து பாஜக எம்.பி.யின் இந்த கருத்து, மூட நம்பிக்கையையும் தவறான தகவல்களையும் பரப்புவதாகவும், இதே முறையை பயன்படுத்தி மின்சார கட்டணங்கள், எரிபொருள் விலைகள் மற்றும் வீட்டு செலவுகளை குறைக்க முடியுமா என்று சமூக ஊடகங்களில் பயனர்கள் கேள்வி எழுப்பினர்.</p>]]></content:encoded></item><item><title>2வது போட்டி டிரா: இலங்கை உடனான டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/match-drawn-in-india-srilanka-second-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/match-drawn-in-india-srilanka-second-test#comments</comments><guid isPermaLink="false">cdb581cf-72fd-4b22-86fa-0cd3b8a53d25</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:09:08 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:09:08.203Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDvSL,Devdutt Padikkal,தேவ்தத் படிக்கல்,இந்தியா இலங்கை தொடர்,sonal dinusha,சோனல் தினுஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/9de1dkxf/ind.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ team india]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/9de1dkxf/ind.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சோனல் தினுஷாவின் சிறப்பான சதத்தால் இந்தியா, இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.</p><p>இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 15-ம் தேதி நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.</p><p>இந்நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>இந்திய அணி ரன் குவிப்பு</h2><p>அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்து 117 ரன்னில் வெளியேறினார். துருவ் ஜூரல் அபாரமாக ஆடி சதமடித்து 115 ரன்னில் வெளியேறினார்.</p><p>இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா, கேஷரா நுவாந்தா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>சோனல் தினுஷா சதம்</h2><p>தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சோனல் தினுஷா சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார். பசிந்து சூர்யபந்தாரா அரைசதம் கடந்து 80 ரன்னில் வெளியேறினார்.</p><p>இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் தலா 3 விக்கெட்டும், சரண்ஷ் ஜெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இலங்கை அணி பாலோ ஆன் பெற்றது.</p><p>தொடர்ந்து, ஆடிய இலங்கை அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.</p><p>பசிந்து சூர்யபந்தாரா 92 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 52 ரன்னும் எடுத்தனர். 4-ம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 16 ரன்கள் முன்னிலை பெற்றது.</p><h2>சோதித்த சோனல் தினுஷா</h2><p>இந்தியா எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இலங்கை வீரர் சோனல் தினுஷா தூணாக நின்றார். அவர் காலை முதலே பொறுப்புடன் ஆடி சதமடித்து இலங்கையை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.</p><p>7-வது விக்கெட்டுக்கு இணைந்த சோனல் தினுஷா-கேஷரா நுவந்தா ஜோடி 112 ரன் சேர்த்தது. கேஷரா நுவந்தா 45 ரன்னில் அவுட்டானார். இதேபோல், 9வது விக்கெட்டுக்கு இணைந்த சோனல் தினுஷா-லஹிரு குமாரா ஜோடி நிதானமாக ஆடி 47 ரன் எடுத்தது.</p><p>இறுதியில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 429 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. சோனல் தினுஷா 133 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.</p><p>இந்திய அணி சார்பில் மானவ் சுதார், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>கான்பூரில் விமான விபத்து - விமானி உள்பட இருவர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/training-aircraft-crash-in-kanpur-flight-instructor-and-trainee-pilot-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/training-aircraft-crash-in-kanpur-flight-instructor-and-trainee-pilot-killed#comments</comments><guid isPermaLink="false">705788c3-9f9f-4d6a-b270-fd67cd2f3d33</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:07:54 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:07:54.877Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமானி,Pilot,plane crash,விமான விபத்து,flight instructor,விமான பயிற்றுநர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/84ytt10d/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanpur Training Aircraft Crash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/84ytt10d/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச</a> மாநிலம் கான்பூர் நகரத்தில் நான்கு இருக்கைகள் கொண்ட இரட்டை என்ஜின் பயிற்சி விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக சிக்கிய விபத்தில், விமானத்தில் பயணித்த பயிற்றுநர் மற்றும் பயிற்சி விமானி என இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த விமான பயிற்றுநரான சச்சின் பாட்டியா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பயிற்சி விமானி அபிஷேக் பூஜாரி உயிரிழந்துள்ளதாக கான்பூர் காவல் ஆணையர் ரகுவீர் லால் தெரிவித்தார்.</p><h3><strong>காவல் ஆணையர் ரகுவீர் லால்</strong></h3><p>இந்த விபத்து குறித்து காவல் ஆணையர் ரகுவீர் லால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த டெக்னாம் விமானம் 2023-ஆம் ஆண்டில் பயிற்சிக்காக இங்கு கொண்டுவரப்பட்டது. விபத்தில் விமானத்தின் பயிற்றுநர் மற்றும் பயிற்சி விமானி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சி விமானி இருவரும் இங்குள்ள கார்க் விமானப் பயிற்சி மையத்திலிருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட்டனர். அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, காலை 11:50 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>அந்த விமானம் நான்கு இருக்கைகள் கொண்ட, இரட்டை என்ஜின் டெக்னாம் விமானமாக இருந்தது. விமானத்தின் ஓட்டுநர் பாட்டியாவுக்கு 3,000 மணிநேரம் மட்டுமே ஓட்டுநர் அனுபவம் இருந்தது.</p><p>இந்த விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் குழு இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தும்.</p><p>விபத்து ஏற்பட்ட பகுதியை பாதுகாப்பதற்காக காவல்துறையினர் முழுப் பகுதியையும் சுற்றி வளைத்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து உடல்கள் அகற்றப்பட்டுள்ளன,” என்றும் லால் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>