<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 24 Aug 2026 05:06:34 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்: முதலமைச்சர் விஜய் - 24 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026#comments</comments><guid isPermaLink="false">bc88f166-bbf3-4480-890b-158b4edebe4c</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:52:26 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:06:13.978Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j8itlasu/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j8itlasu/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் விஸ்வநாதன் பதில் உரை</p><p>பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் ராஜ்மோகன் பதில் உரை</p><p>சட்டசபையில் வனவிலங்குகள் தாக்குதல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><p>எதிர்ப்பு குரல் கொடுப்பதாக இருந்தால் வெளியே சென்று குரல் கொடுங்கள் என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு</p><p>பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம் தொடர்பாக பேரவையில் எழுந்து நின்று முழக்கமிட்ட திமுகவினரை கண்டித்த சபாநாயகர்</p><p>பரந்தூர் விமான நிலையம் குறித்து பேச அனுமதிக்க கோரி திமுக எம்எல்ஏக்கள் அமளி</p><p>திமுக எம்எல்ஏ மீதான அமைச்சரின் புகாருக்க திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று சட்டசபையில் எதிர்ப்பு.</p><p>பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக சட்டசபை உறுப்பினர் முதலமைச்சர், அமைச்சர்களை மரியாதை இன்றி பேசி இருக்கிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது என்று பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.</p><p>திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>மகளிருக்கான  பேருந்து பயணத்திற்கு வருமான உச்சவரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை - முதலமைச்சர் விஜய்</p><p>மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் அக்டோபர் 2-ந்தேதி தொடக்கம்.</p><p>டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.</p><p>சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</p><p>பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைச்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கும்.</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்திற்க ஆண்டுதோறும் தோராயமாக ரூ.4000 ஒதுக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களை முன்னேற்றும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.</p><p>சட்டசபையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.</p> <p>2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாடு சட்டசபை  இன்று கூடியது.</p><p>தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. காலை கூட்டம் கூடியதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>3 இலவச சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்... மகளிருக்கு முத்தான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam#comments</comments><guid isPermaLink="false">8d7d9428-8def-46d4-9ca7-5640b645aa82</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:24:47 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:24:47.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ge8h4t76/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ge8h4t76/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a> கடந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கப்படும். </p><p>* 3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும். </p><p>* ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்திற்கு குறைவாக உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் வழங்கப்படும். </p><p>* மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிவுப்படுத்தப்படுகிறது. </p><p>* மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும். </p><p>* மகளிருக்கான வெற்றிப் பயணத் திட்டத்திற்கு வருமான உச்ச வரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை. </p><p>* திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம். </p><p>* மாவட்டங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ள சாதாரண பேருந்துகளிலும் இலவசம்.</p><p>* மாநகரம், நகரங்களில் இயங்கும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம்.</p><p>* வெற்றி பயணம் திட்டம் டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம். இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும்.</p>]]></content:encoded></item><item><title>ரூ. 39-க்கு 20 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புது ஆஃபர் - முழு விவரம்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/bsnl-data-voucher-which-offers-20gb-under-rs-40</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/bsnl-data-voucher-which-offers-20gb-under-rs-40#comments</comments><guid isPermaLink="false">8b84c9d0-3ac5-4972-974c-090849245e6b</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிஎஸ்என்எல்,recharge,BSNL,சலுகை,Offers,ரீசார்ஜ்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/08/05/1741327-bsnl-logo.jpg" width="615"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BSNL Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2022/08/05/1741327-bsnl-logo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான <a href="https://www.maalaimalar.com/topic/bsnl">பி.எஸ்.என்.எல்.</a> (BSNL), நுகர்வோருக்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் ரூ.40-க்கும் குறைவான விலையில் 20 ஜிபி டேட்டாவை பெற முடியும். பொதுவாக இது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். </p><p>ஒரே நாளில் அதிக பயன்பாட்டிற்கான டேட்டா வவுச்சரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் ஒரு டேட்டா வவுச்சருக்கு மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.39 ஆகும்.</p><h2>டேட்டா வவுச்சர் பலன்கள்:</h2><p>பி.எஸ்.என்.எல். ரூ.39 திட்டத்தில் 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி காலம் ஒரு நாள் மட்டுமே. எனவே, இது போதுமான டேட்டாவை வழங்கினாலும், இதில் ஒரு கூடுதல் செலவும் அடங்கியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டாவை பயன்படுத்திய பிறகு, டேட்டா வேகம் 40 Kbps ஆக குறைந்துவிடும்.</p><p>இது ஒரு டேட்டா வவுச்சர் என்பதால், சேவை செல்லுபடியாகும் காலத்துடன் கூடிய ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தின் மீது மட்டுமே இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும் .</p><p>இதேபோல் ரூ.19 ரீசார்ஜ் திட்டமும் உள்ளது, இதன் மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். பயனர்களுக்கு கிடைக்கும் டேட்டா வவுச்சர்களிலேயே இதுதான் மிகவும் மலிவானது. ரூ.19 திட்டம் 1 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.</p><h2>டேட்டா ஒப்பீடு:</h2><p>இரண்டு திட்டங்களும் 1 நாள் வேலிடிட்டி காலத்தை கொண்டிருந்தாலும், ரூ.39 திட்டம் 20 ஜிபி டேட்டாவையும், ரூ.19 திட்டம் 2 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.</p><p>இந்த இரண்டு டேட்டா வவுச்சர்களும் நாட்டின் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் கிடைக்கின்றன. மேலும், ரூ.58 திட்டமும் உள்ளது, இதன் மூலம் பயனர்கள் 7 நாட்கள் வேலிடிட்டி பெற முடியும். இந்தத் திட்டத்தில் 8 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.</p><p>நீண்ட காலத்திற்கு உங்களுக்கு கூடுதல் டேட்டா தேவை எனில், இந்தத் திட்டம் சிறந்தது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்த பிறகு, டேட்டா வேகம் 40 kbps ஆக குறைந்துவிடும்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அதிரடி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project#comments</comments><guid isPermaLink="false">bbd5e00f-5ed4-45de-8bfd-cc88efd103ab</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:38:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:38:14.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,மீனம்பாக்கம் விமான நிலையம்,Meenambakkam Airport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/xyv9dwml/tn-37.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய், பரந்தூர் விமான நிலையம் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய், பரந்தூர் விமான நிலையம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/xyv9dwml/tn-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூரில் விமான நிலையம்</a> கட்டும் முயற்சியை தனது அரசு கைவிடுவதாக<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam"> முதலமைச்சர் விஜய்</a> அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். </p><p>சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், </p><p>"சென்னையிலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படுகிறது. தற்போது இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. வளர்ந்து வரும் சென்னை மாநகரத்தின் தேவைகளை கருத்தில் கொண்டும் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டும், சரக்கு போக்குவரத்தை அதிகரித்தும் நோக்கத்திலும் புதிய விமான நிலயத்திற்கான தேவை ஏற்பட்டுள்ளது. </p> <p>புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்படும் இடம் பெரிய அளவில் விவசாயிகளை பாதிக்காத வகையிலும் அதிக அளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும். </p><p>ஆனால் முந்தைய அரசு விவசாயிகளை பெரிய அளவில் பாதிக்கும் வகையிலும் குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும் புதிய விமான நிலையம் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது.</p><h2>பரந்தூர் விமான நிலையம் கைவிடல்</h2><p>ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் இந்த விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களை அறிந்து நான் 20.1.2025 அன்று அப்பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டேன்.</p><p>சென்னை பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்.</p><p>நீண்ட நாட்களுக்கு இந்த திட்டத்திற்கு எதிராக போராடிவரும் விவசாயிகளை எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்.</p> <p>விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு. இந்த விவசாய நிலையங்களை பாதுகாக்க இந்த மக்கள் போராடி வருகிறார்கள்.</p><p>விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024 நடந்த பொதுக்கூட்டத்திலேயே பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கு விமான நிலையங்களின் பங்களிப்பு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கு என் முழு ஆதரவும் உண்டு.</p><p>ஆனால் பரந்தூரில் இந்த திட்டம் அமைய கூடாது. இந்த திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்காத வகையில் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று அப்போது நான் வலியுறுத்தியிருந்தேன்.</p> <p>மக்கள் மத்தியிலே நான் அன்றே அறிவித்ததை நிறைவேற்றும்பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும் துறை வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன்.</p><p>ஏற்கனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.</p><p>துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரிடம் கலந்தாலோசித்து விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைக்க பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.</p><p>அவ்விடங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலயத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.</p> <h2>மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம்</h2><p>இதற்கிடையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய டெர்மினல் 5 என்ற புதிய முனையம் அமைக்க ஏர்போர்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து சாலை மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p> <p>சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் டெர்மினல் 3 கட்டுமான பணிகள் முடிவுற்ற பின் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாள கூடியதாக இருக்கும்.</p><p>மேலும் புதிய டெர்மினல் 5 செயலாக்கத்திற்கு பிறகு ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளை கையாள கூடியதாக விமான நிலையம் இருக்கும். இதன் மூலம் சென்னை விமான நிலையம் மேம்படுத்தப்படுவதோடு புதிய விமான நிலையம் அமைக்கப்படும்வரை பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்." எனத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>180 கோவில்களில், ஒரே நாளில் 1,200 திருமணம்- உறவினர்கள் திரண்டதால் பக்தர்கள் திணறல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/1200-weddings-in-180-temples-on-a-single-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/1200-weddings-in-180-temples-on-a-single-day#comments</comments><guid isPermaLink="false">e6612f4f-f56a-4c12-b11c-195457eb5359</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:53:59 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:53:59.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,marriage,ஆவணி மாதம்,Avani Month,சுபமுகூர்த்த நாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/anfczlxi/marriage.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோவிலில் நடைபெற்ற திருமணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோவிலில் நடைபெற்ற திருமணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/anfczlxi/marriage.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான நேற்று 180 கோவில்களில் ஒரே நாளில் 1,200 திருமணங்கள் நடந்தன. உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் திணறினர்.</strong></em></p><h2><strong>ஆவணி மாத முதல் முகூர்த்தம்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/ஆவணி-மாதம்">ஆவணி மாதம்</a> பிறந்து முதல் முகூர்த்த நாள் நேற்று வந்தது. இதனையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடந்தன.</p><p>இதனால் கோவில்களில் மணமக்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் குவிந்ததால் கோவில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.</p><h2><strong>வடபழனி முருகன்</strong></h2><p>சென்னை வடபழனி முருகன் கோவிலில் காலை முதலே மணமக்கள் வருகையும், திருமண சடங்குகளும் நடந்தன. மணமக்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டபங்களில் திருமணம் முடிந்ததும், மூலவர் தரிசனமும் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் மணமக்களின் பெற்றோர். உறவினர்கள், நண்பர்கள் என கூட்டம் நிரம்பி காணப்பட்டது.</p><h2><strong>திருத்தணி-திருப்பரங்குன்றம்</strong></h2><p>முருகனின் 5-வது படை வீடான திருத்தணி கோவிலில் 30 திருமணங்கள் நடந்தன. இதேபோல் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் நேற்று 101 திருமணங்கள் நடந்தது.</p><p>கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஒரே நாளில் 136 திருமணங்கள் நடந்தன.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qy8jn7gf/marriage0.jpg" /></figure><h2><strong>திருச்செந்தூர்</strong></h2><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 50 திருமணங்களும், பழனி திருஆவினன்குடி கோவிலில் 64 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.</p><p>திருச்சி வயலூர் முருகன் கோவிலில் 60 திருமணங்களும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சுமார் 50 திருமணங்களும் நடைபெற்றுள்ளன. சுவாமிமலை முருகன் கோவிலில் நேற்று 35 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.</p><p>திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 51 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் 100 ஜோடிகளுக்கும், வாழப்பாடி பேளூர் தானதோன்றஸ்வரர் கோவிலில் 64 ஜோடிகளுக்கும், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் 61 ஜோடிகளுக்கும் என சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 279 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 108 திருமணங்களும் நடந்துள்ளன.</p><h2><strong>விடுமுறை நாள்</strong></h2><p>இதேபோல் வடபழனி மற்றும் குன்றத்தூர் போன்ற பிரபல முருகன் கோவில்களில் முகூர்த்த நாட்களில் அதிக அளவிலான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வடபழனி கோவிலில் 61 திருமணங்களும், குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் 60 திருமணங்கள், திருப்போரூர் கந்தசாமி கோவிலில் 75 திருமணங்கள் நடந்தன.</p><h2><strong>1,200 திருமணங்கள்</strong></h2><p>இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் உள்ள 11 மண்டலங்களுக்கு உட்பட்ட 180 முக்கிய கோவில்களில் நேற்று 1,200 திருமணங்கள் நடந்துள்ளன. இதன்மூலம், ரூ.13 லட்சத்து 98 ஆயிரத்து 527 வருவாயாக பெறப்பட்டது' என்றார்.</p><p>கோவில்களில் திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள் களைகட்டின.</p><h2><strong>குருவாயூர் கோவிலில்...</strong></h2><p>கேரளம் மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் ஆவணி மாதத்தில் அதிக ஜோடிகளுக்கு திருமணம் நடப்பது வழக்கம்.</p><p>கடந்த 8.9.2024-ந்தேதி 334 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. ஆவணி மாத முகூர்த்த நாளான நேற்று 437 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரியுடன் வெளியீட்டுக்கு ரெடியாகும் விவோ ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/10000mah-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/10000mah-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">50a21976-fb43-4682-9e50-575fa5d9bfe9</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:32:00 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vivo,smartphone,ஸ்மார்ட்போன்,விவோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/rv22of0x/c.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vivo V80 Lite 5G]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/rv22of0x/c.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/vivo">விவோ</a> நிறுவனம் தனது V சீரிஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறனை பலமடங்கு உயர்த்துகிறது. அந்த வரிசையில் விவோ வருகிற செப்டம்பரில் அறிமுகம் செய்ய இருக்கும் விவோ V80 லைட் ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரியுடன் வரும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> முதற்கட்டமாக மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதுதவிர சர்வதேச சந்தையில் (சீனா தவிர்த்து) 10,000mAh பேட்டரியுடன் அறிமுகமாகும் முதல் விவோ பிரான்டு ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இந்த மாடல் பெறுகிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>தற்போது வரை வெளியாகி இருக்கும் தகவல்களில் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் விவோ  V80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஃபிளாட் ஃபிரேம், ஃபிளாட் ரியர் பேனல் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், கிரீன் மற்றும் பின்க் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.</p><p>இத்துடன் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. முன்னதாக விவோ நிறுவனம் சீன சந்தையில் அறிமுகம் செய்த விவோ Y600 ப்ரோ ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரி கொண்டிருந்தது. எனினும், உலக அளவில் இத்தகைய பேட்டரியுடன் அறிமுகமாகும் முதல் விவோ ஸ்மார்ட்போனாக இந்த மாடல் இருக்கும்.</p><p>இவைதவிர விவோ V80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 6.83 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரேஷ் டிஸ்ப்ளே, 50MP சோனி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. </p><p>மேலும், ஆரா லைட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், IP68/IP69 தர டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>பல விதமான வடிவமைப்புகளுடன் சென்னைக்கு வந்த விநாயகர் சிலைகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-in-various-designs-arrived-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-in-various-designs-arrived-in-chennai#comments</comments><guid isPermaLink="false">cf0b0209-712d-4575-beb2-7954590a6e4a</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:30:23.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar statue,Kosapet,கொசப்பேட்டை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hocpf2jk/vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vinayagar statue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hocpf2jk/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விநாயகர் சதுர்த்தியையொட்டி வித விதமான விநாயகர் சிலைகள் சென்னைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.</strong></em></p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்திக்கு</a> முக்கிய இடம் உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர் 14-ந்தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.</p> <h2>கொசப்பேட்டை</h2><p>கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் தற்போது சென்னைக்கு வர தொடங்கியுள்ளன. சென்னை புரசைவாக்கம் கொசப்பேட்டை பகுதியில் இப்போதே விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.</p><h2>விநாயகர் சிலைகள்</h2><p>3 முதல் 5 அடி வரையிலான விநாயகர் சிலைகள் அந்தப் பகுதி சாலையோரத்தில் தற்போது கம்பீரமாக வீற்றிருக்கின்றன. குழந்தை வடிவ விநாயகர், லட்டுடன் கூடிய விநாயகர் சிலைகள் கண் கவரும் வகையில் இருக்கின்றன.</p> <h2>மாசு கட்டுப்பாட்டு வாரியம்</h2><p>மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி சிலைகள் தயாராகி வந்துள்ளன என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் சில நாட்களில் மேலும் பல விநாயகர் சிலைகள் சென்னைக்கு வர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p>  <p>அணிவகுத்து நிற்கும் விநாயகர் சிலைகளை அந்தப் பகுதிகள் பார்த்து, ரசித்து சென்று வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். மழையில் நனைந்து விடாமல் இருக்க விநாயகர் சிலைகள் பிளாஸ்டிக் கவரால் மூடி வைக்கப்பட்டுள்ளன.</p><p>கோயம்பேடு, மயிலாப்பூர், தியாகராயநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.5 ஆயிரத்தில் ரூ.25 ஆயிரம் வரை விநாயகர் சிலைகள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்னும் 10 பேர் த.வெ.க.வில் இணைய உள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-10-more-admk-mlas-are-set-to-join-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-10-more-admk-mlas-are-set-to-join-tvk#comments</comments><guid isPermaLink="false">4350f5e2-89b5-4dba-9888-f056839ecae4</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:27:50 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:27:50.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,tvk,அமைச்சர்   செங்கோட்டையன்,ministers sengottaiyan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/n7srqe4t/sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/n7srqe4t/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இன்னும் 10 பேர் எங்கள் த.வெ.க. கட்சியில் இணைய உள்ளனர். மீதி உள்ளவர்களும் இன்னும் 6 மாதங்களில் வந்து விடுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.</strong></em> </p><p>ஈரோடு மாவட்டம் கோபியில் த.வெ.க. சார்பில் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வருவாய்த்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்</a> பேசினார். அவர் கூறியதாவது:-</p><h2><strong>சிறப்பான ஆட்சி</strong></h2><p>தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். இதே இடத்தில் தேர்தலின் போது செங்கோட்டையன் நடமாட முடியுமா? என்று ஒருவர் கேட்டார். தற்போது அவர் சட்டமன்றத்தில் எனக்கு எதிர் திசையில் அமர்ந்துள்ளார். தமிழகத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை என்னால் கணிக்க முடியும். அதனால் தான் த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் முன்பு இணைந்தேன். அப்போது என்னை பலர் இவர் இந்த கட்சியில் சேர்ந்துவிட்டாரே என பேசினார்கள், 11 முறை தேர்தலில் தோல்வி கண்டவருக்கு என்ன தெரியும்? விஜய் இருக்கும் வரை அவர்தான் தமிழகத்தில் நிரந்தர முதலமைச்சர்.</p><p>அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் கொடுப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என கூறியுள்ளார். அரசு கொடுக்கின்ற காரில் சென்றால்தான் பொதுமக்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அ.தி.மு.க.வில் 47 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். அதில் இன்னும் 10 பேர் எங்கள் த.வெ.க. கட்சியில் இணைய உள்ளனர். மீதி உள்ளவர்களும் இன்னும் 6 மாதங்களில் வந்து விடுவார்கள். அதன் பின்னர் அ.தி.மு.க. பூஜ்ஜியமாகிவிடும். இதை நான் சொல்லவில்லை. கட்சியில் இருப்பவர்கள் என்னிடம் கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க. வெற்றி பெறாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு</title><link>https://www.maalaimalar.com/spirituality/sabarimala-temple-opens-today-for-onam-festival</link><comments>https://www.maalaimalar.com/spirituality/sabarimala-temple-opens-today-for-onam-festival#comments</comments><guid isPermaLink="false">0fa23a67-b122-4a5a-800d-14bbf41abd14</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:17:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:17:14.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சபரிமலை கோவில்,Sabarimala temple,ஓணம் பண்டிகை,onam festival,onam sadhya,ஓணம் சத்யா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dudujljo/sabarimala.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sabarimala temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dudujljo/sabarimala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-flight-fares-from-chennai-to-kerala-surge-multiple-times">ஓணம் பண்டிகையை</a> முன்னிட்டு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சபரிமலை ஐயப்பன் கோவில்</a> நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார் தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும்.</p> <p>நாளை (செவ்வாய்கிழமை) முதல் 28-ந் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். </p><p>26-ந் தேதி திருவோண தினத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு ஓண சத்யா (விருந்து) வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>12 ஆண்டுகளில் ரூ.547 கோடி.. 2025-26இல் மட்டும் ரூ.92 கோடி - மத்திய அமைச்சர்களின் பங்களாக்கள் பராமரிப்பு செலவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-lutyens-ministers-bungalows-maintenance-cost-rti-reveals-rs-92-crore-spent-in-2025-26</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-lutyens-ministers-bungalows-maintenance-cost-rti-reveals-rs-92-crore-spent-in-2025-26#comments</comments><guid isPermaLink="false">bc5ccff5-0228-465e-87bf-d37685881ee8</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:09:59 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:09:59.534Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Union Minister,ஆர்டிஐ,central government,rti,மத்திய அமைச்சர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fphp8i08/tn-36.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மத்திய அமைச்சர் பங்களா]]></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய அமைச்சர் பங்களா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fphp8i08/tn-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி  லுட்யன்ஸ் பகுதியில் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-govt-campus-outreach-ministers-to-visit-universities-daily-under-one-day-one-university-campaign-to-engage-gen-z-students">மத்திய அமைச்சர்களின் </a>அதிகாரப்பூர்வ பங்களாக்கள் அமைந்துள்ளன. இவ்வாற்றை பராமரிக்கவும், புதுப்பிக்கவும் 2025-26 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. </p><h2>ஆடிஐ</h2><p>தகவல் அறியும் உரிமைச் சட்டமான <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-vacancies-over-823-lakh-posts-lying-vacant-across-ministries-revealed-by-rti-data">ஆடிஐயின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வி</a>க்கு மத்திய பொதுப்பணித் துறை அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இதற்கான தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, பராமரிப்பு, புதுப்பிப்பு, பழுதுபார்க்கும் பணிக்காக 2025-26 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><p>கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் இந்தச் செலவு ரூ.27.47 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது 3 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.</p> <h2>ஒப்பீடு</h2><p>மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த 2014-15 முதல் 2025-26 வரையிலான 12 நிதியாண்டுகளில் இந்த பங்களாக்களின் பராமரிப்பிற்காக மொத்தம் ரூ.547.68 கோடி செலவிடப்பட்டுள்ளது. </p><p>2014 - 2019 நிதியாண்டில் ரூ.26.78 கோடி, 2019 - 2024 நிதியாண்டில் ரூ.50 கோடி, 2024 - 2025 நிதியாண்டில் ரூ. 71.98 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><p>மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சர்களுடன் சேர்த்து சுமார் 70 முதல் 72 அமைச்சர்கள் உள்ளனர்.</p><p>இதன் அடிப்படையில் கணக்கிட்டால், 2025-26 இல் ஒரு அமைச்சரின் பங்களாவிற்குச் சராசரியாக ரூ.1.2 கோடி செலவிடப்பட்டுள்ளது என கணக்கிடலாம்.</p><p>2004 முதல் 2009 வரையிலான 5 ஆண்டுகள் முழுவதும் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் பங்களாக்களுக்கு சேர்த்து மொத்தம் ரூ.93.50 கோடி செலவிடப்பட்டது.</p><p>ஆனால், தற்போது ஒரே ஆண்டில் அமைச்சர்களின் பங்களாக்களுக்கு மட்டும் அந்த அளவிற்கு செலவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.</p><h2>செலவு அதிகரிக்கக் காரணம் என்ன?</h2><p>லுட்யன்ஸ் பகுதியில் உள்ள இந்த கட்டிடங்கள் பலவும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தை சேர்ந்ததாகும்.</p><p>1912 முதல் 1930 காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த பங்களாக்கள் தற்போது 80 முதல் 100 ஆண்டுகள் பழமை நிலைமையை எட்டியுள்ளன.</p><p>நீர் கசிவு, கரையான் அரிப்பு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. பழமையான மின்சார அமைப்புகள் மற்றும் குழாய் அமைப்புகளை பராமக்க வேண்டிய தேவை அடிக்கடி எழுகிறது.</p> <p>சில கட்டிடங்கள் பலவீனமடைந்துள்ளதால் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.</p><p>மின்விசிறிகள், எல்.இ.டி விளக்குகள், குழாய் அமைப்புகளை மாற்றுவது மற்றும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தரையில் பாதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் மாற்றுவது போன்றவற்றிற்கும் தொடர் செலவுகள் ஏற்படுகின்றன.</p><p>தற்போது வழங்கப்பட்டுள்ள ஆர்டிஐ தரவுகளில் அமைச்சர்களாக இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களா பராமரிப்புச் செலவுகள் சேர்க்கப்படவில்லை.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 2-ம் கட்ட மின்சார பஸ்கள்: முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/phase-2-electric-buses-in-chennai-cm-vijay-to-launch-them-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/phase-2-electric-buses-in-chennai-cm-vijay-to-launch-them-tomorrow#comments</comments><guid isPermaLink="false">cdd1bbe2-68db-439b-8a0c-5cedae606335</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:06:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:06:14.126Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,electric bus,மின்சார பஸ்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jk21mauf/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jk21mauf/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் 2-ம் கட்ட மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்.</p><h2><strong>2-ம் கட்டமாக 750 மின்சார பஸ்கள்</strong></h2><p>சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் (மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்) வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர் மற்றும் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்</strong></h2><p>இதில் முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் 5 மின்சார பஸ்களை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து இதர மின்சார பஸ்கள் ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்படும்.</p><p>இந்த நிலையில், ஆலந்தூர் மின்சாரப் பஸ் பணிமனைக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று நேரில் சென்று மின்சார உள்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, மின்னேற்றிகளின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.</p><p>இந்த ஆய்வின்போது, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் த.மோகன், இணை மேலாண் இயக்குனர் ராம.சுந்தரப்பாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டிபன் பாக்ஸில் வெடிகுண்டு.. சண்டிகரில் பயங்கரவாத தாக்குதல் சதித்திட்டம் முறியடிப்பு - 3 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/chandigarh-terror-plot-foiled-3-bki-linked-youths-held-with-tiffin-box-ied-near-bus-stand</link><comments>https://www.maalaimalar.com/news/national/chandigarh-terror-plot-foiled-3-bki-linked-youths-held-with-tiffin-box-ied-near-bus-stand#comments</comments><guid isPermaLink="false">77fbd4bb-032b-47c6-8ef7-12b1736f4083</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:39:08 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:39:08.478Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>terrorists,காலிஸ்தான்,Khalistan,Conspiracy,சதித்திட்டம்,பயங்கரவாதிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/xf8bd2vp/tn-34.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிபன் பாக்ஸில் வெடிகுண்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ டிபன் பாக்ஸில் வெடிகுண்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/xf8bd2vp/tn-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சண்டிகரில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் <a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-ranks-first-on-global-terrorism-index-as-deaths-surge-to-highest-since-2013">பயங்கரவாத </a>சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. </p><p>பஞ்சாப் மாநிலம் <a href="https://www.maalaimalar.com/news/national/separate-governor-for-chandigarh-punjab-chief-minister-bhagwant-mann-opposes-the-central-governments-plan-798705">சண்டிகரில் </a>செக்டார் 43 பகுதியில் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையத்திற்கு அருகே 3 இளைஞர்களை சண்டிகர் காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.</p><p>அவர்களிடமிருந்து பையில்  டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஇடி வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p> <h2>யார் இவர்கள்?</h2><p>கைது செய்யப்பட்டவர்கள் தார்ன் தரான் பகுதியைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் (19), ஜஷன்பிரீத் சிங் (21) மற்றும் அமிர்தசரஸை சேர்ந்த பிரக்பிரீத் சிங் என்ற பிரப் (19) ஆகிய மூவர் ஆவர்.</p><p>இவர்கள் 'பப்பர் கல்சா இன்டர்நேஷனல்' (BKI) என்ற தனி நாடு கோரும் காலிஸ்தானி பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>அவர்களிடமிருந்து 5 கிலோ ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர், வெடிபொருளை இயக்குவதற்கான பவர் சோர்ஸ் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் 1 துப்பாக்கி, 1 மேகசின் மற்றும் 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>சதித்திட்டம்</h2><p>காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பப்பர் கல்சா அமைப்பின் முக்கியச் செயல்பாட்டாளரான சத்னம் என்ற சத்தா நௌஷேரா என்பவருடன் இந்த இளைஞர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.</p><p>அவரது வழிகாட்டுதலின் பேரில், சண்டிகரில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் இந்த ஐஇடி வெடிகுண்டை வெடிக்கச் செய்ய திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.</p><p>இந்த வெடிபொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன, வேறு யாரெல்லாம் இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து  காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 24 ஆகஸ்ட் 2026: சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/sivan-temple-somavara-abhishekam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/sivan-temple-somavara-abhishekam#comments</comments><guid isPermaLink="false">990e3e93-73c9-4dfa-b3dd-d3ef195f56af</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:05:21 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:05:21.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/24/17610549-sivan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/24/17610549-sivan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-7 (திங்கள்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   துவாதசி (முழுவதும்) </p><p>நட்சத்திரம் : பூராடம் இரவு 10.16 வரை பிறகு உத்திராடம்</p> <p>யோகம் :  சித்த / மரணயோகம்</p><p>ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி</h2><p>மதுரை ஸ்ரீ சோமசுந்தரப் பெருமான் புட்டுத் திருவிழா சுவாமி அம்பாள் விருஷபாரூட தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் திருவீதியுலா. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீபூவண்ணநாதர் பால் அபிஷேகம்.</p> <p>திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - களிப்பு</p><p>ரிஷபம் - ஆக்கம்</p><p>மிதுனம் - கீர்த்தி</p><p>கடகம் - தாமதம்</p><p>சிம்மம் - அனுகூலம்</p><p>கன்னி - மகிழ்ச்சி</p> <p>துலாம் - முயற்சி</p><p>விருச்சிகம் - பயணம்</p><p>தனுசு - நிதானம்</p><p>மகரம் - திறமை</p><p>கும்பம் - நன்மை</p><p>மீனம் - அனுகூலம்</p> ]]></content:encoded></item><item><title>இந்திய ஆண்களுடன் திருமணம்.. ஓராண்டு காத்திருப்புக்கு பின் இந்தியா வந்து சேர்ந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-visa-150-pakistani-sindhi-brides-reach-india-via-third-countries-after-year-long-wait-to-marry-indian-grooms</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-visa-150-pakistani-sindhi-brides-reach-india-via-third-countries-after-year-long-wait-to-marry-indian-grooms#comments</comments><guid isPermaLink="false">46f62306-6003-461d-9678-0e6e2f6e33f2</guid><pubDate>Mon, 24 Aug 2026 01:56:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:56:27.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,திருமணம்,Pakistan,பஹல்காம் தாக்குதல்,Pahalgam attack,wedding</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fjichuwu/tn-33.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மணப்பெண்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மணப்பெண்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fjichuwu/tn-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயயிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட சிந்தி சமூகத்தை சேர்ந்த மணப்பெண்கள் ஓராண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.</p><h2>பின்னணி</h2><p>பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூகக் குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்கள் அல்லது சமூகத்தினருக்கு தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பது வழக்கமான ஒன்று.</p><p>கடந்த 2025 ஏப்ரல் 22 அன்று <a href="https://www.maalaimalar.com/special/recap-2025/26-killed-militants-attack-in-pahalgam-801054">பஹல்காமில் </a>நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியானதை அடுத்து, இந்தியப் படைகள் '<a href="https://www.maalaimalar.com/topic/operation-sindoor">ஆபரேஷன் சிந்தூர்</a>' மூலம் பதிலடித் தாக்குதல் நடத்தின.</p><p>இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானுடனான தூதரக உறவுகளை நிறுத்திய இந்தியா, பஞ்சாபில் உள்ள வாகா-அட்டாரி எல்லைப் பாதையை மூடியதுடன், பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களையும் நிறுத்தி வைத்தது.</p><p>இதனால், நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர், புனே உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள ஆண்களுடன் நிச்சயிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்களின் திருமணங்கள் முடங்கின.</p> <h2>விசா கிடைத்தது எப்படி?</h2><p>மணப்பெண்களின் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையில், சிந்தி சமூக அமைப்புகள் பாகிஸ்தானின் கோட்கியில் உள்ள 'ஷடானி தர்பார்' சிந்தி புனித அமைப்பின் ஆன்மீகத் தலைவர் சாந்த் யுதிஷ்டிர்லால் ஷடானியை அணுகின.</p><p>இந்தியாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பாகிஸ்தான் பெண்களின் விவரப் பட்டியல் தயார் செய்யப்பட்டது.</p><p>இந்தப் பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கி, விசா கோரிக்கை விடுக்கப்பட்டது.</p> <p>கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, "இந்தியாவிற்குள் நுழைபவர்கள் தரைவழியாக வராமல், கட்டாயம் வான்வழியாக மட்டுமே பயணிக்க வேண்டும்" என்ற நிபந்தனையுடன் விசா வழங்க ஒப்புக்கொண்டது.</p><p>ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே வான் சேவைகளும் முடங்கியுள்ள நிலையில் அவர்கள் நேரடியாக இந்தியா வர முடியாத சூழல் எழுந்தது.</p><p>மூன்றாம் நாடுகள் வழியாக பயணம்</p><p>எனவே மணப்பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் துபாய், மஸ்கட், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்றாம் நாடுகளின் வழியாக விமானப் பயணம் மேற்கொண்டு இந்தியாவை வந்தடைந்துள்ளனர்.</p><p>நாக்பூரைச் சேர்ந்த சிந்தி சமூகத் தலைவர் ராஜேஷ் ஜாம்பியா கூறுகையில், "நீண்ட நாட்களாக நீடித்த காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது.</p><p>திருமணம்</p><p>கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 150 மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். நாக்பூரில் மட்டும் 15 திருமணங்கள் நடந்துள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், பாகிஸ்தானில் இதுபோன்று இன்னும் சுமார் 300 பெண்கள் காத்திருப்பதாகவும், அவர்களுக்கும் விசா வழங்கி உதவுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 24.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-24-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-24-august-2026#comments</comments><guid isPermaLink="false">f2078dd7-f944-4db4-847d-8554b71809ad</guid><pubDate>Mon, 24 Aug 2026 01:52:40 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:52:40.973Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-25/vb2s2e0p/rasi-6.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-25/vb2s2e0p/rasi-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p><h2>ரிஷபம்</h2><p>மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். நேற்றைய பிரச்சனை இன்று மீண்டும் தலைதூக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை.</p> <h2>மிதுனம்</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். உத்தியோகத்தில் புதுமைகளைச் செய்து மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.</p><h2>கடகம்</h2><p>மறக்க முடியாத சம்பவம் நடைபெறும் நாள். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். புதிய வேலைக்கு செய்த முயற்சி கைகூடும். வரன்கள் முடிவாகும்.</p><h2>கன்னி</h2><p>அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். வரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும்.</p> <h2>துலாம்</h2><p>முன்னேற்றப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். ஆற்றல்மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.</p> <h2>தனுசு</h2><p>வரவும் செலவும் சமமாகும் நாள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.</p><h2>மகரம்</h2><p>எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.</p> <h2>கும்பம்</h2><p>சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுகச் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.</p><h2>மீனம்</h2><p>வளர்ச்சி கூடும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai-3</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-petrol-and-diesel-price-status-in-chennai-3#comments</comments><guid isPermaLink="false">ae130877-1a99-4fab-bad1-e26ae1dc7789</guid><pubDate>Mon, 24 Aug 2026 01:37:24 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:37:24.138Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Petrol and Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b0k0t00l/tn-32.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b0k0t00l/tn-32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-warns-gulf-countries-against-aiding-america">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (24.08.2026 - திங்கள்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 92.57 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>இந்த வாரம் வானில் நிகழும் அதிசய சந்திர கிரகணம்.. எங்கு பார்க்கலாம்? என்ன சிறப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/world/rare-blood-moon-96-partial-lunar-eclipse-not-visible-from-india-on-august-28</link><comments>https://www.maalaimalar.com/news/world/rare-blood-moon-96-partial-lunar-eclipse-not-visible-from-india-on-august-28#comments</comments><guid isPermaLink="false">14c1564b-46c7-4eca-a467-c83a7b943202</guid><pubDate>Mon, 24 Aug 2026 00:57:13 +0000</pubDate><atom:updated>2026-08-24T00:57:13.639Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சந்திர கிரகணம்,lunar eclipse,ரத்த நிலவு,blood moon,வானியல் நிகழ்வு,astronomical event</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mmqugcko/tn-31.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சந்திர கிரகணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சந்திர கிரகணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mmqugcko/tn-31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய பகுதியளவு <a href="https://www.maalaimalar.com/topic/lunar-eclipse">சந்திர கிரகணம்  </a>நிகழவுள்ளது. </p><p>இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிரகணம் போலக் காட்சியளிக்கும். எனினும் இந்த நிகழ்வை இந்தியாவில் காண முடியாது.</p> <h2>ரத்த நிலவு</h2><p>சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.</p><p>அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது. </p><p>இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர்.</p><h2>பகுதி சந்திரகிரகணம்</h2><p>சாதாரண பகுதி சந்திரகிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மூடி மறைக்கப்படும்.</p><p>ஆனால், வெள்ளிக்கிழமை நடக்க உள்ள இந்த கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மூடப்படுகிறது. வெறும் 4% மட்டுமே விளிம்பில் வெளிச்சமாக இருக்கும்.</p><p>வழக்கமாக முழு சந்திரகிரகணத்தின் போது மட்டுமே நிலவு 'பிளட் மூன்' எனப்படும் சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும்.</p><p>ஆனால், இந்த கிரகணத்தில் 96% நிலவு மறைக்கப்படுவதால், இது பகுதி கிரகணமாக இருந்தாலும் முழு சந்திரகிரகணத்தை போலவே  ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் இது சிறப்பு வாய்ந்தது. </p><h2>எங்கு தெரியும்?</h2><p>வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும்.</p><p>சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாக காண வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p><p>ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் இது பகுதி அளவாகத் தெரியும்.</p><p>இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசிபிக் பெருங்கடல் நாடுகளில் இந்த கிரகணம் தெரியாது.</p> <p>இந்திய நேரப்படிஆகஸ்ட் 28 காலையில் இந்த கிரகணம் நிகழ்கிறது. காலை 8:04 மணிக்கு தொடங்கி, உச்சக்கட்டம் காலை 9:43 மணிக்கு உச்சகட்டத்தை எட்டி காலை 11:22 மணிக்கு முடிவடையும்.</p><p>இந்தியாவில் இக்காலகட்டத்தில் பகல் நேரமாக இருப்பதால், இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது.</p>]]></content:encoded></item><item><title>மொத ராத்திரி திரைப்படத்தை பாராட்டி தள்ளிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthik-subbaraj-praise-modha-rathiri-movie</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/karthik-subbaraj-praise-modha-rathiri-movie#comments</comments><guid isPermaLink="false">f51d5b66-463a-402b-a913-909ba14ad54f</guid><pubDate>Mon, 24 Aug 2026 00:22:07 +0000</pubDate><atom:updated>2026-08-24T00:22:07.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthik Subbaraj,கார்த்திக் சுப்பராஜ்,Modha Rathiri,மொத ராத்திரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/42ve396d/Modha-Rathiri-Poster-karthik-Subbaraj.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modha Rathiri Poster - karthik Subbaraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/42ve396d/Modha-Rathiri-Poster-karthik-Subbaraj.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> 'மொத ராத்திரி'. </p><p>இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், மொத ராத்திரி திரைப்படத்திற்கு இயக்குநர் <a href="https://www.maalaimalar.com/topic/karthik-subbaraj">கார்த்திக் சுப்பராஜ்</a> பாராட்டு தெரிவித்துள்ளார். </p><h2>நகைச்சுவை விருந்து:</h2><p>மேலும், இந்தப் திரைப்படம் "நகைச்சுவை விருந்து" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஒரே இரவில் நடக்கும் கதையாக எழுதப்பட்டு இருந்தாலும் பலரிடமும் பாராட்டுகளை பெற்றதுடன் இயக்குநரின் முதல் திரைப்படம் போன்றே தெரியவில்லை என்கிற விமர்சனத்தை இந்தப் படம் பெற்றுள்ளது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "திரையரங்குகளில் அரங்கேறும் இந்த நகைச்சுவை விருந்தை தவறவிடாதீர்கள். நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் சரியான அளவில் நிறைந்து, சிறப்பாக எழுதப்பட்டு இயக்கப்பட்ட ஒரு குடும்ப நாடகம் இது.</p><p>அறிமுக இயக்குநர் ராஜாகருப்பசாமி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். புதிய நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ரிஷிகாந்த் ஒரு அற்புதமான திறமையாளர். நான் பணியாற்றிய நடிகர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர்.</p><p>அவரது 'ஹீரோ' பயணம் ஒரு சிறப்பான தொடக்கத்துடன் தொடங்கி இருப்பதை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல வெற்றிகள் வரவிருக்கின்றன," என்று குறிப்பிட்டுள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Don&#39;t miss this laughter riot in theatres... <a href="https://x.com/hashtag/ModhaRathiri?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ModhaRathiri</a> is a well written and directed family drama that&#39;s filled with comedy and emotions in right mix... Well done debutant director  <a href="https://x.com/hashtag/RajaKaruppasamy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RajaKaruppasamy</a> and whole new crew<br><br>Superbly performed by whole new cast … <a href="https://t.co/OxUanjVjMl">pic.twitter.com/OxUanjVjMl</a></p>&mdash; karthik subbaraj (@karthiksubbaraj) <a href="https://x.com/karthiksubbaraj/status/2091440375613595939?ref_src=twsrc%5Etfw">August 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கினியா தலைநகரில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/landslide-at-landfill-in-capital-of-guinea-kills-30-people-officials-say</link><comments>https://www.maalaimalar.com/news/world/landslide-at-landfill-in-capital-of-guinea-kills-30-people-officials-say#comments</comments><guid isPermaLink="false">3acf4eda-8545-4d18-b1b3-ca05e2474331</guid><pubDate>Sun, 23 Aug 2026 23:14:42 +0000</pubDate><atom:updated>2026-08-23T23:14:42.867Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,landslide,Guinea,கினியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/y1l5bhqk/collapsed-landfill.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ collapsed landfill]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/y1l5bhqk/collapsed-landfill.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கினியாவின் தலைநகரான கோனாக்ரியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில், மலைபோல் குவிந்திருந்த குப்பைகள் சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>அதிகாலை 2 மணி அளவில் பெய்த பலத்த மழையால் 'தார் எஸ் சலாம்' (Dar Es Salam) பகுதியில் உள்ள குப்பைகள் அடித்து செல்லப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் அருகில் இருந்த குடிசைகள் புதையுண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>மீட்பு பணிகள்:</h2><p>உயிர் பிழைத்தவர்களைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்; பல வீடுகள் சேதமடைந்தன.</p><p>நகரின் மிகப்பெரிய திறந்தவெளி குப்பை கிடங்கான இந்த இடத்தை ஞாயிற்றுக்கிழமையன்று மூடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாக, ராணுவ பொறியியல் பிரிவின் சுகாதார அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பால்டே மாமடூ பைலோ தெரிவித்தார்.</p><h2>வெளியேற அறிவிப்பு:</h2><p>குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன; இதனால் பலர் அப்பகுதியை விட்டு வெளியேறியிருந்தாலும், விபத்து நடந்த நேரத்தில் இன்னும் பலர் அங்கேயே இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.</p><p>"மீதமுள்ள குடும்பங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்," என்று அப்பகுதியை நேரில் பார்வையிட்ட பிராந்திய நிர்வாகம் மற்றும் அதிகாரப் பரவலாக்கத் துறை அமைச்சர் டியெனாபூ டூரே தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>வசூலில் புதிய உச்சம் தொட்ட சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vishwanath-and-sons-new-collection-update</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vishwanath-and-sons-new-collection-update#comments</comments><guid isPermaLink="false">58b7e71b-85c0-47a1-bc25-16bea6346750</guid><pubDate>Sun, 23 Aug 2026 21:20:51 +0000</pubDate><atom:updated>2026-08-23T21:20:51.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,Venky Atluri,vishwanath and sons,விஸ்வநாத் அண்ட் சன்ஸ்,வெங்கி அட்லுரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/sc0yvxpb/Vishwanath-and-Sons-Poster.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vishwanath and Sons Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/sc0yvxpb/Vishwanath-and-Sons-Poster.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல் ரூ. 200 கோடியைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.</p><p>இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/suriya">சூர்யா</a> நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 14) திரையரங்குகளில் வெளியானது. நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews">படம்</a> வெளியானது.</p><h2>வசூல் விவரம்:</h2><p>இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. அதன்படி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படத்தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்து இருந்தது.</p><p>இந்த நிலையில், படம் வெளியான நாள் முதல் இதுவரை உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வரும் நாட்களில் இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.</p><h2>100 நாள் கொண்டாட்டம்:</h2><p>முன்னதாக, சூர்யா நடிப்பில் கடந்த மே 15 ஆம் தேதி வெளியான கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் 100 நாளை நிறைவு செய்ததாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இது குறித்து நடிகர் சூர்யா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.</p><p>அந்த பதிவில், "கண்ணுங்களா... செல்லங்களா... சாமிகளா... என் சாமிகளா! கருப்பு திரைப்படத்தை உங்கள் சொந்தப் படமாக ஏற்றுக்கொண்டு கொண்டாடியதற்கு கோடான கோடி நன்றிகள் - இந்த மாபெரும் வெற்றி உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதேபோல் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியும் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில், "ஒரு தேவதை கதை பயணத்தின் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு தலைமுறைகள், ஆனாலும், கருப்பு திரைப்படம் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்து வாழ்கிறது.</p><p>இது ஒரு தலைமுறை பிளாக்பஸ்டர். நன்றி இறைவா..! நன்றி மக்களே.! இதைவிட சிறந்த வரவேற்பையும் அங்கீகாரத்தையும் கேட்க முடியாது.! கருப்பா, என்னுடன் வா" என்று குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: முதலாவது தகுதி சுற்றுப் போட்டி மழை காரணமாக ரத்து</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-qualifier-1-match-abandoned</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-qualifier-1-match-abandoned#comments</comments><guid isPermaLink="false">c1b64876-aba0-4e45-9bbd-5abd643eb96f</guid><pubDate>Sun, 23 Aug 2026 20:29:30 +0000</pubDate><atom:updated>2026-08-23T20:29:30.023Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Trichy Grand Cholas,திருச்சி கிராண்ட் சோழாஸ்,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/7yzi6wa6/TNPL.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/7yzi6wa6/TNPL.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல். </a>தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் நேற்று இரவு மோதின.10-வது டி.என்.பி.எல். டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடரின் இறுதிக்கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகிறது. </p><p>டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்தது. பிளே ஆப் சுற்று புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த மதுரை பாந்தர்ஸ், 10 புள்ளிகளுடன் 2-ஆவது இடம் பிடித்த திருச்சி கிராண்ட் சோழாஸ், 8 புள்ளிகளுடன் 3வது இடம்பிடித்த கோவை கிங்ஸ், 8 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்த திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.</p><h2>டாஸ்:</h2><p>இந்த நிலையில், நேற்று இரவு தொடங்கிய முதலாவது பிளே ஆஃப் சுற்று போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதலாவது பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் களமிறங்கின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.</p><h2>ஆட்டம் ரத்து:</h2><p>இதனால் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரரான ராஜ்குமார் அபாரமாக ஆடினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சுரேஷ் குமார் 1 ரன்ளுக்க தனது விக்கெட்டை பறிக்கடுத்தார். </p><p>பின்னர் களமிறங்கிய ஷியாம் சுந்தர் 3 ரன்கள் எடுத்தார். திருச்சி அணி 4.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்த போது அப்போது மழை குறுக்கிட்டது.</p><p>இடைவிடாமல் மழை பெய்ததால், போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. </p> <h2>எலிமினேட்டர் போட்டி:</h2><p>பிளே ஆஃப் சுற்றில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் திருச்சி அணியை எதிர்கொள்ளும்.</p><p>இரண்டாவது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்ளும். இறுதிப் போட்டி ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நடைபெற இருந்த டாக்ஸிக் பட நிகழ்ச்சி ஒத்திவைப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-movie-chennai-event-postponed</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-movie-chennai-event-postponed#comments</comments><guid isPermaLink="false">21584dc6-223c-478f-b70d-bcad247c9946</guid><pubDate>Sun, 23 Aug 2026 19:46:21 +0000</pubDate><atom:updated>2026-08-23T19:46:21.995Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yash,Toxic,டாக்ஸிக்,நயன்தாரா,Nayanthara,யாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/8zzvbknj/Toxic-Poster.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Toxic Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/8zzvbknj/Toxic-Poster.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும்  "<a href="https://www.maalaimalar.com/topic/toxic">டாக்ஸிக்</a>" திரைப்பட நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் நடைபெற இருந்த பட நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. </p><p>முன்னதாக "டாக்ஸிக்" திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இதில் <a href="https://www.maalaimalar.com/topic/yash">யாஷ்</a>, கியாரா அத்வானி உள்பட படக்குழுவினர் திரளாக கலந்துகொண்டனர்.</p><h2>ஐதராபாத் விபத்து:</h2><p>இந்த நிகழ்ச்சியில் நடிகர் யாஷ் உரையாற்றினார். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர், உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரை தாங்கும் பலகைகள் கொண்ட கட்டுமானத்தின் மீது ஏறினர்.</p><p>அப்போது, ஸ்பீக்கருடன் ஒட்டுமொத்த கட்டுமானமும் கீழே சரிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர்.</p><p>இதில், மாணவர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற மூவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.</p><h2>நிகழ்ச்சி தேதி மாற்றம்:</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக, அந்நிகழ்வை நடத்திய கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்தே சென்னையில் நேற்று நடைபெற இருந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>மேலும், நேற்று நடைபெற இருந்த நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 24) நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.</p><p>கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ள திரைப்படம் டாக்ஸிக். 1940-களில் கோவாவை மையமாக கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையம்சத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள "டாக்ஸிக்" திரைப்படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;காணாமல் போன&apos; 5 பள்ளிகளை கண்டுபிடித்தால் ரூ. 1 லட்சம் பரிசு: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/aap-sanjay-singh-announce-rs-1-lakh-to-anyone-who-finds-5-missing-schools-in-up</link><comments>https://www.maalaimalar.com/news/national/aap-sanjay-singh-announce-rs-1-lakh-to-anyone-who-finds-5-missing-schools-in-up#comments</comments><guid isPermaLink="false">56ffb929-c6ff-40ea-9ada-21b7c9cf5db1</guid><pubDate>Sun, 23 Aug 2026 18:16:27 +0000</pubDate><atom:updated>2026-08-23T18:16:27.061Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>UP,உத்தர பிரதேசம்,AAP,ஆம் ஆத்மி கட்சி,சஞ்சய் சிங்,Sanjay Singh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/lmepjy80/Sanjay-Singh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sanjay Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/lmepjy80/Sanjay-Singh.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேச மாநிலத்தின் <a href="https://www.maalaimalar.com/news/national">ஜான்பூர்</a> மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்க பள்ளிகள் U-DISE இணையதளத்தில் செயல்படுவதாக பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவற்றின் கட்டிடங்களையோ அல்லது அவை உண்மையில் இருப்பதற்கான ஆதாரத்தையோ களத்தில் காண முடியவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் (AAP) மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் தெரிவித்தார். </p><p>லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிங், "ஜான்பூர் மாவட்டத்தில் ஐந்து தொடக்க பள்ளிகள் உள்ளன. அவை உண்மையில் களத்தில் இல்லை, ஆனால் அரசுப் பதிவுகளில் (UDISE) 'செயல்படுவதாக' காட்டப்படுகின்றன" என்று கூறினார்.</p><h2>ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு:</h2><p>வெளிப்படையான சவால் ஒன்றை விடுத்த அந்த ஆம் ஆத்மி எம்.பி., காணாமல் போனதாகக் கூறப்படும் இந்த ஐந்து பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை கண்டுபிடிப்பவருக்கு தனது சொந்த ஊதியத்தில் இருந்து ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.</p><p>நகர கல்வி அதிகாரி ஒருவரின் கடிதத்தை மேற்கோள் காட்டி, அந்த ஐந்து பள்ளிகளையும் அவர் அடையாளம் காட்டினார்: தல்கர் டோலா தொடக்க பள்ளி, மிசிர்பூர் பெண்கள் தொடக்கப் பள்ளி, கடான் அர்சானி பள்ளி, உருது பஜார் தொடக்க பள்ளி மற்றும் பாக் ஹாஷிம் தொடக்க பள்ளி ஆகியவை அந்தப் பட்டியலில் அடங்கும். இவை அனைத்தும் அரசு இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன, ஆனால் பட்டியலிடப்பட்ட இடங்களில் அவை தற்போது இல்லை என்று கூறப்படுகிறது.</p><h2>கட்டிடங்களே இல்லை:</h2><p>"யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் கீழ், நன்கொடைகள், நிலம் மற்றும் சர்க்கரை ஆகியவை திருடப்பட்டதை தொடர்ந்து, இப்போது 'பள்ளி திருட்டு' என்ற புதிய முறை உருவாகியுள்ளது. இந்த பள்ளிகள் UDISE இணையதளத்தில் செயல்படுவதாக காட்டப்படுகின்றன. ஆனால் உண்மையில் அங்கு ஆசிரியர்களோ, குழந்தைகளோ அல்லது கட்டிடங்களோ இல்லை" என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p>முன்பு பள்ளி கட்டிடங்கள் இருந்தும் அவை மோசமான நிலையில் இருந்ததையும், உள்ளே குப்பைகள் குவிந்து கிடந்ததையும், சமையலறை மற்றும் கழிப்பறைகள் சிதிலமடைந்த நிலையில் இருந்ததையும் தான் சுட்டிக்காட்டி இருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.</p><p>இந்த விவகாரம் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இருப்பிடமே இல்லாத இந்த ஐந்து பள்ளிகள் ஏன் இன்னும் UDISE இணையதளத்தில் செயல்படுவதாக காட்டப்படுகின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சிங் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>மதுபான ஊழல் வழக்கு: ஆந்திர பிரதேச முன்னாள் அமைச்சர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/ex-andhra-minister-karumuri-nageswara-rao-arrested-in-alleged-liquor-scam</link><comments>https://www.maalaimalar.com/news/national/ex-andhra-minister-karumuri-nageswara-rao-arrested-in-alleged-liquor-scam#comments</comments><guid isPermaLink="false">36cabb47-8162-4eb1-8976-eb0f5497191b</guid><pubDate>Sun, 23 Aug 2026 17:26:16 +0000</pubDate><atom:updated>2026-08-23T17:26:16.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,Liquor scam,மதுபான ஊழல்,Karumuri Nageswara Rao,கருமுரி நாகேஸ்வர ராவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/vr21rnyj/Karumuri-Nageswara-Rao.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karumuri Nageswara Rao]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/vr21rnyj/Karumuri-Nageswara-Rao.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி அரசால் 'அரசியல் பழிவாங்கும் செயல்' எனக் கூறப்படும் <a href="https://www.maalaimalar.com/news/national">ஆந்திர பிரதேச</a> மதுபான போக்குவரத்து ஊழல் வழக்கில், அம்மாநில முன்னாள் அமைச்சர் கருமுரி வெங்கட நாகேஸ்வர ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்றம்</a> தள்ளுபடி செய்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.</p><h2>ஒப்பந்த செயல்முறை முறைகேடு:</h2><p>இந்த வழக்கு, 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஆந்திர பிரதேச மாநில பானங்கள் கழகத்தின் (APSBCL) மதுபான போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி செயல்முறையில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பானது.</p><p>மாநிலத்தின் முன்னாள் அமைச்சர்களான செல்லுபோயின வேணுகோபால கிருஷ்ணா, அனில் குமார் யாதவ் மற்றும் விடதலா ரஜினி ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றில், எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை குறிவைப்பதற்காக ஒரு 'பொய் வழக்கு' புனையப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><h2>மதுக்கடைகள் எண்ணிக்கை குறைப்பு:</h2><p>மூத்த தலைவரான கருமுரி நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர்கள், அவரது மகன் சுனிலும் முன்னதாகவே கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியதோடு, "முழு குடும்பமும் திட்டமிட்டு குறிவைக்கப்படுகிறது" என்றும் தெரிவித்தனர்.</p><p>தங்களது கடிதத்தில், ஒய்.எஸ்.ஆர்.சி.பி. ஆட்சி காலத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை வெளிப்படையாக நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். "கள்ளச்சாராயம் கட்டுப்படுத்தப்பட்டது, மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் அரசாங்கத்தால் இயக்கப்பட்டன. அனுமதி அறைகள் மற்றும் பெல்ட் கடைகளும் ஒழிக்கப்பட்டன," என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கற்காலத்திற்கு திரும்பிய காசா.. இஸ்ரேல் முற்றுகையால் நிம்மதியாக மலம் கழிக்கும் உரிமையையும் இழந்த மக்கள் </title><link>https://www.maalaimalar.com/news/world/gaza-blockade-worsens-sanitation-crisis-as-toilets-become-unaffordable-and-disease-spreads</link><comments>https://www.maalaimalar.com/news/world/gaza-blockade-worsens-sanitation-crisis-as-toilets-become-unaffordable-and-disease-spreads#comments</comments><guid isPermaLink="false">d662960d-aadd-47a7-ae1c-00b8d75eb792</guid><pubDate>Sun, 23 Aug 2026 16:45:43 +0000</pubDate><atom:updated>2026-08-23T16:45:43.922Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காசா,இஸ்ரேல்,gaza,Israel,Toilet,கழிவறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/sggsfdf3/tn-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காசா]]></media:title><media:description type="html"><![CDATA[ காசா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/sggsfdf3/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2023 அக்டோபர் முதல் <a href="https://www.maalaimalar.com/news/world/israeli-minister-calls-for-daily-killings-ben-gvir-urges-expulsion-and-systematic-killing-of-palestinians-in-gaza">காசா </a>மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொண்றுகுவித்தது. கடந்த அக்டோபரில் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. </p><p>அதுமட்டுமின்றி காசாவுக்குள் செல்லும் அத்தியாவசிய பொருட்களை செல்ல விடாமல் எல்லைகளிலேயே சோதனைச் சாவடிகள் அமைத்து இஸ்ரேல் தடுத்து நிறுத்தி வருகிறது. </p><p>உணவின்றி காசாவில் மனிதனால் ஏற்படடுத்தப்பட்ட பெரும் பஞ்சம் இஸ்ரேலால் உருவாக்கப்பட்டுள்ளது. பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. </p><p>மருந்து பொருட்கள் செல்வதும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் சுகாதார நெருக்கடியும் காசாவை பிடித்துள்ளது. </p><p>இவற்றின் உச்சமாக காசாவில் கழிப்பறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. </p> <h2>கழிவறை தட்டுப்பாடு</h2><p>இஸ்ரேலின் தொடர் முற்றுகை காரணமாக காசாவிற்குள் சுகாதாரப் பொருட்கள் மற்றும் கழிப்பறை உபகரணங்களின் வரத்து கடுமையாகக் குறைந்துள்ளது.</p><p>ஒரு சாதாரண கழிப்பறை இருக்கை தற்போது அமெரிக்க மதிப்பில் சுமார் 503 முதல் 671 டாலர் வரை விலை வைத்து விற்கப்படுகிறது.</p><p>அதிக விலை காரணமாக சாதாரண மக்களுக்கு கழிப்பறை இருக்கைகள் எட்டாக்கனியாக மாறியுள்ளது.</p><p>இதனால் முகாம்களில் ஒரு வினோதமான கழிவறை முறை பின்பற்றப்படுகிறது.</p> <h2>கழிவறை</h2><p>நிலத்தில் ஆழமான ஒரு குழி தோண்டப்படுகிறது.</p><p>ஒரு சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியின் நடுவில் துளையிட்டு, அதைத் தோண்டப்பட்ட குழியின் மேல்பகுதியில் வைக்கின்றனர்.</p><p>குழியின் அடிப்பகுதியிலும் ஓரங்களிலும் மெல்லிய அடுக்காக மணல் பரப்பப்படுகிறது.</p><p>திரவக் கழிவுகள் மணல் வழியாக உறிஞ்சப்பட்டு பூமிக்கு அடியில் செல்லும். திடக் கழிவுகள் குழியின் அடியில் தங்கும். மணல் ஒரு இயற்கை வடிகட்டியாகச் செயல்பட்டு துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.</p><p>சுவர்களோ அல்லது முறையான கதவுகளோ இல்லாததால், நாற்காலியை சுற்றித் தற்காலிக மறைப்புகளை ஏற்படுத்தி, கதவுக்குப் பதிலாக ஒரு சாதாரண துணியைத் தொங்கவிட்டுள்ளனர்.</p><p>இது கிட்டத்தட்ட கற்காலத்தில் மக்கள் பயன்படுத்தும் அளவு பழைய முறை ஆகும்.</p><p>இதுபோன்று முகாம்களில் 20 முதல் 25 பேருக்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. மேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வசதிகள் இல்லாததால் பெண்கள் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/wzsxqv03/tn-30.jpg" /></figure><h2>ஈமானின் வேதனை</h2><p>நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது கணவர் மற்றும் 11 வயதிற்குட்பட்ட 5 குழந்தைகளுடன் 33 வயதான ஈமான் மஹ்மூத் ஷாமியா பலமுறை வாழிடங்களை இழந்து, இறுதியாக முகாம் ஒன்றில் தற்காலிக அமைக்கப்பட்ட கூடாரத்தில் வசித்து வருகிறார்.</p><p>முகாமில் உள்ள அடிப்படை வசதியற்ற தற்காலிகக் கழிப்பறையைப் பயன்படுத்துவது பெரும் வேதனையளிப்பதாக அவர் கூறுகிறார்.</p> <h2>நோய்கள் பரவும் அபாயம்</h2><p>ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காசாவில் உள்ள மக்களில் பாதி பேருக்கு மட்டுமே அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்கின்றன.</p><p>காசாவில் கூடாரங்களில் தங்கியுள்ள மக்களில் 60% பேர், அவர்கள் வாழும் இடத்திலிருந்து வெறும் 10 மீட்டர் சுற்றளவிற்குள்ளேயே திறந்தவெளி மனிதக் கழிவுகளுடனும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீருடனும் வாழக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.</p> <p>குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.</p><p>காசாவுக்குள் தேவையான பொருட்களை கொண்டு செல்லும் தங்கள் முயற்சிகள்அனைத்தையும் இஸ்ரேலிய எல்லைச் சாவடிகள் தொடர்ந்து தடுத்து நிறுத்துவதாக வர்த்தக சபை சாடியுள்ளது.</p><p>சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் யுனிசெப் உடனடியாகத் தலையிட்டு காசா மக்களுக்கு இலவசமாகக் கழிப்பறை உபகரணங்களை விநியோகிக்க வேண்டும் என்பதே பாலஸ்தீனியர்களின் கோரிக்கையாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஊழல் வழக்கில் முன்னாள் டிஜிசிஏ இயக்குநர் மற்றும் 4 விமானத்துறை நிறுவனங்கள்மீது சிபிஐ வழக்குப்பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/cbi-registers-case-against-former-dgca-director-and-four-aviation-companies-in-corruption-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/cbi-registers-case-against-former-dgca-director-and-four-aviation-companies-in-corruption-case#comments</comments><guid isPermaLink="false">869b9f9d-c7ef-4f3c-825c-ec1862ef8236</guid><pubDate>Sun, 23 Aug 2026 16:30:28 +0000</pubDate><atom:updated>2026-08-23T16:30:28.484Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,DGCA,டிஜிசிஏ,விமான நிறுவனங்கள்,aviation firms</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/fu4i3pf8/New-Project-2026-08-23T211238.212.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊழல் வழக்கில் முன்னாள் டிஜிசிஏ இயக்குநர் மற்றும் 4 விமானத்துறை நிறுவனங்கள்மீது சிபிஐ வழக்குப்பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/fu4i3pf8/New-Project-2026-08-23T211238.212.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் முன்னாள் பயிற்சி இயக்குநர் அனில் கில் மற்றும் அவருக்கு தொடர்புடைய 4 விமான நிறுவனங்கள்மீது ஊழல், அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின்கீழ் மத்திய சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. </p><p>டிஜிசிஏவில் விமானப் பயிற்சி இயக்குநராக கேப்டன் அனில் கில் பணியாற்றியபோது, தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இயக்குநர்களாகக் கொண்டு போலி (பினாமி/ஷெல்) நிறுவனங்களை உருவாக்கி, </p><p>அதன்மூலம் பயிற்சி விமானங்களை மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்து, பின்னர் அவற்றை  எல்லைப் பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு அதிக விலையில் குத்தகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.</p><p>இந்தக் குற்றச்சாட்டில் புளூத்ரோட் ஏரோ குளோபல் பிரைவேட் லிமிடெட், ரெட்பேர்ட் ஏவியேஷன் அகாடமி பிரைவேட் லிமிடெட், சாப்ரேஸ் கார்ப்பரேட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், சேண்ட்ஹில்ஸ் ஏவியேஷன் ஐஎஃப்எஸ்சி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p>புளூத்ரோட் ஏரோ குளோபல் பிரைவேட் லிமிடெட் இரண்டு செஸ்னா விமானங்களை முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.37.5 லட்சத்திற்கு வாங்கியதாகவும், பின்னர் இந்த விமானங்கள், கில்லின் அதிகாரபூர்வ அனுமதியோடு 'ரெட்பேர்ட் ஏவியேஷன் அகாடமி' என்ற நிறுவனத்திற்கு அதிக விலைக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம் 2021 முதல் 2023 வரை ரூ.2.16 கோடிக்கும் அதிகமாக குத்தகை வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 2022-ல் அனில் கில் ஒரு தேர்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கி, தனது உறவினரான விகாஸ் நைன் என்பவரை துணைத் தலைமை பறக்கும் பயிற்றுவிப்பாளராக நியமித்ததாகவும், அவர் பின்னர் 'ரெட்பேர்ட் ஏவியேஷன் அகாடமி'யில் மாதத்திற்கு சுமார் ரூ.6.5 லட்சம் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p>கடந்தாண்டு ஏப்ரல் 7ம் தேதியன்று பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, நேற்று முன்தினம்தான் இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வேவு பார்ப்பது திமுக-வின் வேலை அல்ல..! அமைச்சர் ரமேஷின் கருத்துக்கு சேகர் பாபு பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-works-for-people-not-spying-sekar-babu-slams-ramesh-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-works-for-people-not-spying-sekar-babu-slams-ramesh-remarks#comments</comments><guid isPermaLink="false">ec39c6f2-bf7c-4238-9c23-6d36c774bfc6</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:37:23 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:37:23.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,சேகர் பாபு,sekar babu,tvk,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/8nu5cdsc/sekar-babu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh- Sekar babu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/8nu5cdsc/sekar-babu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக மக்கும் குப்பை, தவெக மக்காத குப்பை. மக்கும் குப்பை என்பது பூமிக்கு உரமாகும், நன்மை தரும் என்று முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.</p><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>ஜனநாயகம்</h2><p>சட்டசபையில் ஜனநாயகம் இருப்பதால் அனைவரின் குரல்களுக்கும் இடம் அளித்து வருகிறோம். அதில் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபுதான். ஜனநாயகம் கடந்த ஆட்சியில் இல்லை. அதனால் அது போன்ற வார்த்தைகளை மக்கள் கேட்டிருக்க முடியாது. எங்கள் ஆட்சியில் ஜனநாயகம் இருப்பதால் அதைக் கேட்க முடிகிறது.</p><p>சட்டசபையில் சில முன்னாள் அமைச்சர்கள் தகாத வார்த்தைகள் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா? நாங்கள் எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை.</p><p>எங்கள் அரசின் மீதும் முதல்-அமைச்சரை நோக்கியும் கேள்வி வரும்போது அதற்கு மற்ற அமைச்சர்கள் பதில் கூறுவதில் என்ன தவறு?</p><h2>முன்னாள் அமைச்சருக்கு பயம்</h2><p>முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மீது எந்த தவறும் இல்லை என தொடர்ச்சியாக கூறி வருகிறார். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்பதை அவர் வேவு பார்த்து வருகிறார். அவர் பயத்தின் காரணமாகத்தான் அவ்வாறு செய்கிறார்.</p><p>தவறை கண்டுபிடித்து விடுவார்கள் என்கிற பயத்தின் காரணமாகத்தான் அரசு என்ன செய்கிறது என்பதை வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பயமே எங்கள் ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி.</p><p>கடந்த ஆட்சியில் விளம்பரத்திற்காக இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துவிட்டார்கள். அதில் தொடங்கப்படாத பல பணிகள் உள்ளது. அதை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் பன்னெடுக்கு கார் நிறுத்துமிடம், பக்தர்கள் தங்குவதற்கு சொகுசு விடுதி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார்கள். </p><p>எந்த பக்தர்கள் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள் என தெரியவில்லை. அதனால் அந்த திட்டங்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.</p><h2>சினிமா கிடையாது</h2><p>கோவில்களில் நடைபெறும் தவறுகளை களைவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். 100 நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. தலைகீழாக மாற்றுவதற்கு அரசு ஒன்றும் சினிமா கிடையாது.</p><p>தமிழ்நாட்டில் உள்ள 50 முதுநிலை கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்கிற நடைமுறையை அறிவித்து பின்பற்றி வருகிறோம். கோவில்களுக்கு வெளியே செல்போனை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பணம் வசூலிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். மக்கள் அதனை சரியாக பின்பற்ற வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இந்நிலையில், அமைச்சர் ரமேஷின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியதாவது:-</p><p>வேவு பார்ப்பது திமுக வேலை இல்லை, மக்களுக்கு வேலை பார்ப்பதே திமுகவின் வேலை.</p><p>அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அதிகாரிகளை கடுமையாக மிரட்டுகிறார்.</p><p>திமுகவின் 5 ஆண்டுகள் அதிகாரிகளுடன் அன்புடன் பழகி உள்ளோம். இப்போதைய அமைச்சர் மிரட்டுகிறார்.</p><p>அறநிலையத்துறை அறிவிப்பு குறித்து அனுமானத்தில் கூறினேன், கோவிலில் தணிக்கை செய்வது எப்படி தெரியாமல் இருக்கும்.</p><p>திமுக மக்கும் குப்பை, தவெக மக்காத குப்பை. மக்கும் குப்பை என்பது பூமிக்கு உரமாகும், நன்மை தரும்.</p><p>திமுக எப்போதும் மக்களுக்கு நன்மையே செய்யும். தவெக மக்காத குப்பை போல உள்ளது. இதனால் எப்போதும் ஆபத்து தான்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>“2035-க்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும்” - இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-will-set-up-its-own-space-station-by-2035-isro-chairman-v-narayanan</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-will-set-up-its-own-space-station-by-2035-isro-chairman-v-narayanan#comments</comments><guid isPermaLink="false">5c8e2d8f-1260-48ff-9d59-93e12b8be9b1</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:36:01 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:36:01.251Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,இஸ்ரோ,V Narayanan,Bharatiya Antariksha Station,பாரதிய அந்தரிக்ஷா நிலையம்,வி நாராயணன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/tarixyr3/New-Project-2026-08-23T210342.780.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “2035-க்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும்” - இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/tarixyr3/New-Project-2026-08-23T210342.780.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.</p><p>அகமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது தேசிய விண்வெளி தினக் கொண்டாட்டத்தில் பேசிய நாராயணன், இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தின் முதல் தொகுதிக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.</p><p>கொண்டாட்ட விழாவில் பேசிய அவர்.,</p><p>“இன்று, நாம் மூன்றாவது தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடுகிறோம். இதன் கருப்பொருள் மிகவும் முக்கியமானது: விண்வெளித் துறையில் புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கிய இலட்சியம். </p><p>இந்தியா 64 ஆண்டுகளுக்கு முன்பு தனது விண்வெளித் திட்டத்தைத் தொடங்கியது. இன்று நாம் புவி கண்காணிப்பு, தொலை உணர்வு, தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, தொலைதூரக் கல்வி, பேரிடர் எச்சரிக்கை மற்றும் தணிப்பு, ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பை உறுதி செய்தல், வழிசெலுத்தல், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தடமறிதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துறைகளில் சாமானிய மக்களுக்குச் சேவை செய்து வருகிறோம்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், பல திட்டங்கள் வரிசையில் உள்ளன. நாங்கள் ககன்யான் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். மேலும், நமது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை நிறுவும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.</p><p>முதல்கட்ட பணிகளுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது, 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி நிலையத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஆபரேஷன் சிந்தூரில் தகர்க்கப்பட்ட &apos;ஜெய்ஷ் இ முகமது&apos; தலைமையகம் பாகிஸ்தான் அரசு நிதியுடன் புனரமைப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/world/jaish-headquarters-rebuilt-pakistan-funded-bahawalpur-terror-hub-fully-restored-after-operation-sindhur-strikes</link><comments>https://www.maalaimalar.com/news/world/jaish-headquarters-rebuilt-pakistan-funded-bahawalpur-terror-hub-fully-restored-after-operation-sindhur-strikes#comments</comments><guid isPermaLink="false">8db99984-ce68-4206-913f-f5fc44660b6f</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:29:17 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:29:17.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,ஆபரேஷன் சிந்தூர்,ஜெய்ஷ் இ முகமது,Jaish-e-Mohammed,Operation Sindhur</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/m9w8s2jp/tn-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 'ஜெய்ஷ் இ முகமது' தலைமையகம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ 'ஜெய்ஷ் இ முகமது' தலைமையகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/m9w8s2jp/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். </p><p>இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தான் மீது மே 7 அன்று இந்திய ராணுவம் <a href="https://www.maalaimalar.com/topic/operation-sindoor">ஆபரேஷன் சிந்தூர்</a> என்ற பெயரில் ராணுவ தாக்குதல் நடத்தியது. </p><p>பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கவராத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.</p> <p>பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்த தொடங்கியதை தொடர்ந்து ஏற்பட்ட ராணுவ மோதல் மே 10 அமைதி பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.</p><p>ஆபரேஷன் சிந்தூரில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.</p> <h2>ஜெய்ஷ் இ முகமது தலைமையகம்</h2><p>இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்த பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள <a href="https://www.google.com/search?q=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%87+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+MAALAIMALAR&amp;oq=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%87+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+MAALAIMALAR&amp;gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIICAEQABgWGB4yCAgCEAAYFhgeMgsIAxAAGBYYHhjHAzILCAQQABgWGB4YxwMyCwgFEAAYFhgeGMcDMg0IBhAAGAoYFhgeGMcD0gEIMTkxMWowajmoAgCwAgA&amp;sourceid=chrome&amp;source=chrome.ob&amp;ie=UTF-8">ஜெய்ஷ் இ முகமது</a> பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் முழுமையாக சீரமைக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.</p> <p>ஆபரேஷன் சிந்தூரின்போது பஹவல்பூர் மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஜெய்ஷ் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இந்தியாவில் நடத்தப்பட்ட 2001 நாடாளுமன்ற தாக்குதல், 2016 பத்தான்கோட் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்ட இந்த இடம் பயன்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது.</p> <h2>புனரமைப்பு   </h2><p>தற்போது கிடைத்துள்ள சாட்டிலைட், புகைப்படங்கள் மற்றும் பிற ஆதாரங்களின்படி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த 18 ஏக்கர் வளாகம், புதிய பளிங்கு கற்கள் பாதிக்கப்பட்டு, புதிய பிளாஸ்டரிங் மற்றும் வண்ணப் பூச்சுகள் செய்யப்பட்டுள்ளது.</p> <p>தாக்குதலில் தகர்க்கப்பட்ட குவிமாடங்கள் மீண்டும் கட்டப்பட்டுள்ளன. </p><p>முதன்மை மண்டபத்தில் ஏவுகணை தாக்குதலால் விழுந்த பள்ளங்கள் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் கொண்டு மூடப்பட்டு, தடயமே தெரியாதவாறு முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது</p><p>முதன்மை வளாகத்தை ஒட்டிச் சேதமடைந்திருந்த ஜெய்ஷ் அமைப்பு தளபதிகளின் இருப்பிடங்கள் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><h2>பாகிஸ்தான் அரசின் நிதியுதவி</h2><p>உளவுத்துறை தகவல்களின்படி, இந்த மறுசீரமைப்பு பணிகளுக்காக பாகிஸ்தான் அரசு ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பிற்கு தவணை முறையில் சுமார் பாகிஸ்தான் ரூபாயில் 25 கோடி நிதி வழங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இதில் மத்திய மண்டபத்தைச் சீரமைக்க மட்டுமே பாகிஸ்தான் ரூபாயில் சுமார் 11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது</p>]]></content:encoded></item><item><title>பரஸ்பர சம்மதத்துடன் வயது வந்தோர் இணைந்து வாழும் லிவ்-இன் உறவு திருமணத்திற்கு ஒப்பானது - டெல்லி உயர் நீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/a-live-in-relationship-between-consenting-adults-is-akin-to-marriage-delhi-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-live-in-relationship-between-consenting-adults-is-akin-to-marriage-delhi-high-court#comments</comments><guid isPermaLink="false">c31ffb25-e05e-4a0f-8283-3e78b604dc5f</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:19:02.090Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi High Court,டெல்லி உயர் நீதிமன்றம்,Live-In Relationship,லிவ் இன் உறவுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/86og87a0/New-Project-2026-08-23T204809.876.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரஸ்பர சம்மதத்துடன் வயது வந்தோர் இணைந்து வாழும் லிவ்-இன் உறவு திருமணத்திற்கு ஒப்பானது - டெல்லி உயர் நீதிமன்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/86og87a0/New-Project-2026-08-23T204809.876.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரஸ்பர சம்மதத்துடன் வயது வந்தோர் இருவர் இணைந்து வாழும் லிவ்-இன் உறவு திருமணத்திற்கு ஒப்பானது என்றும், பெற்றோர்களோ, உறவினர்களோ அவர்களின் முடிவில் தலையிடக் கூடாது என்றும், அவர்களுக்கு மிரட்டல் விடுக்கக்கூடாது எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>பெண்ணின் குடும்பத்தினரால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி லிவ்-இன் உறவில் இருக்கும் இளம் ஜோடி பாதுகாப்புக் கோரி   தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கி, வயது வந்தவர்கள் என்ற வகையில் அந்தத் தம்பதியினருக்கு, யாருடைய தலையீடும் இன்றி, தாங்கள் விரும்பும் துணையைத் தேர்ந்தெடுத்து அவருடன் வசிப்பதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு என கூறியுள்ளது.</p><p>“மனுதாரர்கள் தாங்களாகவே விரும்பி, பரஸ்பர சம்மதத்துடன் மற்றும் மிகுந்த பொறுப்புடன் சேர்ந்து வாழத் தேர்ந்தெடுத்துள்ளதால், அவர்களுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என யாருக்கும், அவர்களின் இந்தத் தேர்வுக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தவோ அல்லது அதில் தலையிடவோ உரிமையோ அதிகாரமோ இல்லை. </p><p>அதிலும் குறிப்பாக அவர்களின் உயிருக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ அச்சுறுத்தல் விடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை,” என்று நீதிமன்றம் கூறியது.</p><p>மனுதாரர்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், சட்டப்படி ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ளவில்லை; ஆயினும், சம்மதம் தெரிவித்த வயது வந்தவர்கள் என்பதால், இது திருமணத்தைப் போன்றதே.” எனக் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காதல் விவகாரத்தால் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - பெண்ணின் தந்தை, தம்பி கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/law-college-student-hacked-to-death-over-love-affair</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/law-college-student-hacked-to-death-over-love-affair#comments</comments><guid isPermaLink="false">e049adbe-8790-4339-a9da-f8a6233b12f7</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:48:42 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:48:42.273Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,Murder,போலீஸ் விசாரணை,law student,வெட்டிக்கொலை,சட்டக்கல்லூரி மாணவர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/m4fan9mg/Arrest.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ youth murder- police investigation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/m4fan9mg/Arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை மாவட்டம் சின்ன புதுக்கோட்டை கிராமத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உறவுக்கார பெண்ணின் தந்தை முருகேசன், சகோதரர் அருண்ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>படுகொலை</h2><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன்(வயது 35).</p><p>மானாமதுரை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் முருகேசன் (வயது 50) என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார்.</p><p>ஒரே ஊர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினருக்கு காதல் விவகாரம் தெரியவந்து, இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>ஆனால் இருவரும் காதலை கைவிடவில்லை. மேலும் பெண்ணின் தம்பி அருண்ராஜா(19) இவர்கள் காதலுக்கு எதிராக இருந்து வந்ததாக தெரிகிறது.</p><p>இதனால் ஆத்திரமடைந்த சிவபாலன் பெண்ணின் தம்பியை கொலை செய்வதற்காக சென்றுள்ளார் . இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சிவபாலனை வழிமறித்து கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த சிவபாலன் ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில், கொலையில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை மற்றும் தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சிவபாலன் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3 நாடுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய எனக்கே இந்த நிலைமை என்றால்.. SIR செயல்பாடு குறித்து முன்னாள் தூதர் வேதனை</title><link>https://www.maalaimalar.com/news/national/ex-envoy-citizenship-row-navdeep-suri-faces-hurdles-proving-indian-nationality-in-punjab-sir-process</link><comments>https://www.maalaimalar.com/news/national/ex-envoy-citizenship-row-navdeep-suri-faces-hurdles-proving-indian-nationality-in-punjab-sir-process#comments</comments><guid isPermaLink="false">65453b23-f484-4231-b299-b36f03c394ad</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:43:29 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:43:29.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Election Commission,Sir,தேர்தல் ஆணையம்,எஸ்ஐஆர்,வாக்காளர் பட்டியல் திருத்தம்,Voter List Revision</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/vxzmsq1e/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நவ்தீப் சூரி]]></media:title><media:description type="html"><![CDATA[ நவ்தீப் சூரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/vxzmsq1e/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/election-commission-sir-phase-3-40-crore-voters-under-review-518-crore-names-deleted-sparking-controversy">3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்</a> (SIR) பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. </p><p>இந்நிலையில் பஞ்சாபில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் தனது இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதில் தனக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இந்தியாவின் முன்னாள் தூதரான நவ்தீப் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.  </p><h2>பதிவு</h2><p>இதுகுறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவு இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>அவரது பதிவில், " பஞ்சாபில் எஸ்ஐஆர் செயல்முறையில் வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் எனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை சமர்ப்பித்தேன்.</p><p>அப்போது அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது.</p><p>பின்னர், தன்னார்வலர் ஒருவரிடமிருந்து வந்த தகவலில், அவரது விவரங்கள் 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் பதிவுகளுடன் பொருந்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் பேசிய போது, இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறினர்.</p> <p>2003 ஆம் ஆண்டில் பணி நிமித்தமாக இந்தியாவில் இல்லை எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, குடியுரிமைக்கான சான்றாகக் கடவுச்சீட்டை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டனர்.</p><p>வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதாரைத் தவிர வேறு ஆவணங்கள் என்னிடம் உள்ளன.</p><p>ஆனால் ஒன்றை மட்டும் கேட்கத் தோன்றுகிறது. </p><p>மூன்று நாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிறகும், எனது குடியுரிமையை நிரூபிக்க நான் போராட வேண்டி இருந்தால், நாட்டின் சாதாரணக் குடிமகனின் நிலை என்னவாகும்? இதுதான் 'வாழ்வை எளிதாக்கும்' முறையா?" என்று பதிவிட்டுள்ளார்.</p> <h2>விதி</h2><p>எஸ்ஐஆர் விதிகளின்படி, 2002 அல்லது 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் இல்லாத வாக்காளர்கள், அப்போதைய பழைய பதிவுகளுடன் தங்களை இணைத்துக் காட்டும் ஆவணங்களை வழங்க வேண்டும்.</p><p>முன்னதாக தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை மட்டுமே அனுமதித்த நிலையில், உச்ச நீதிமன்ற கெடுபிடிக்கு பின்னர் ஆதார் அட்டையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>நிஜவாழ்க்கையின் ‘பேட்மேன்..!- ராகுல்காந்தியை புகழ்ந்து இளைஞர் காங்கிரசார் போஸ்டர் </title><link>https://www.maalaimalar.com/news/national/real-life-batman-youth-congress-praises-rahul-gandhi-poster</link><comments>https://www.maalaimalar.com/news/national/real-life-batman-youth-congress-praises-rahul-gandhi-poster#comments</comments><guid isPermaLink="false">8ebe1bb7-b448-4a89-9523-2c04eddc798a</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:12:22 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:12:22.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,Batman,பேட்மேன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/h7x3rqyi/Rahul.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Congress MP Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/h7x3rqyi/Rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் எம்எபி ராகுல் காந்தியை பாராட்டி இளைஞர் காங்கிரசார் நிஜ வாழ்க்கையின் ‘பேட்மேன்’ என்று அவரை புகழ்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு போஸ்டர் ஒட்டியுள்ளது.</p><p>டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். </p><h2>ராகுல்காந்தி</h2><p>இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் சாஹில் லோச்சவ் வக்கீலுடன் சென்று புகார் அளித்தும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி டெல்லி பாராளுமன்ற வீதியில் உள்ள துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு பாதிக்கப்பட்ட இளைஞருடன் சென்று எப்.ஐ.ஆர். பதிவு செய்து அந்த நகலை அளிக்குமாறு வலியுறுத்தினார். </p><p>அவரது கோரிக்கை ஏற்கப்படாததை தொடர்ந்து துணை கமிஷனர் அலுவலகம் முன்பு ராகுல் காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். </p><h2>பாராட்டி போஸ்டர்</h2><p>இந்தநிலையில் ராகுல்காந்தியை பாராட்டி இளைஞர் காங்கிரசார் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர். நிஜ வாழ்க்கையின் ‘பேட்மேன்’ என்று அவரை புகழ்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.</p><p>ராகுல்காந்தியின் படமும், ‘பேட்மேன்’ படமும் அதில் இடம் பெற்றுள்ளது. அமைதியான பாதுகாவலர், டெல்லியின் பாதுகாவலன் என்ற வாசகம் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. ராகுலின் செயலை பாராட்டி இந்த போஸ்டரை அச்ச டித்து வெளியிட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அலுவலகங்களில் அபிஜித் தீப்கேவின் படத்தை வையுங்கள் - ஜென் இசட்களை கவரும் பாஜகவின் முயற்சி குறித்து சஞ்சய் ராவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjps-gen-z-outreach-sanjay-raut-mocks-fadnavis-credits-abhijit-deepkewal-for-partys-gen-z-focus</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjps-gen-z-outreach-sanjay-raut-mocks-fadnavis-credits-abhijit-deepkewal-for-partys-gen-z-focus#comments</comments><guid isPermaLink="false">3d0c7899-428f-455c-918d-84d1624cb27d</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:06:59 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:06:59.063Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜென் இசட்,Gen z,சஞ்சய் ராவத்,Sanjay Raut,அபிஜித் தீப்கே,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/cxn4pwea/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே, சஞ்சய் ராவத்]]></media:title><media:description type="html"><![CDATA[ அபிஜித் தீப்கே, சஞ்சய் ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/cxn4pwea/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் <a href="https://www.maalaimalar.com/news/national/bjp-launches-gen-z-outreach-new-high-level-team-formed-under-modi-and-nitin-naveen-to-woo-youth">ஜென் இசட் </a>தலைமுறையினரைக் கவர எடுத்து வரும்  பகிரத பிரயர்த்தனத்தை உத்தவ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேலி செய்துள்ளார். </p><p>இந்தியாவில் ஜென் இசட் என்ற ஒரு இளம் தலைமுறை இருப்பதே கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் <a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school">அபிஜீத் தீப்கே</a>வால்தான் பாஜகவுக்கு தெரியவந்தது என்றும் அதற்கு அவர்கள் அவருக்குத்தான் நன்றி கடன் பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>நாக்பூரில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 'மந்தன் 4 யுவா' என்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னணியில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத்,</p><p>"பாஜக தலைவர்கள் தங்கள் அலுவலகங்களில் அபிஜீத் தீப்கேயின் புகைப்படத்தைத் தொங்கவிட வேண்டும். ஏனென்றால், அவரால்தான் 'ஜென் இசட்' என்றொரு பிரிவு நாட்டிலிருப்பதே அவர்களுக்கு நினைவுக்கு வந்துள்ளது" என தெரிவித்தார்.</p><h2>தேவேந்திர பட்னாவிஸ்</h2><p>முன்னதாக நாக்பூர் இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்தியின் நிகழ்ச்சிகள் வெறும் திட்டமிடப்பட்ட ஈவென்ட் மட்டுமே எனக் விமர்சித்துள்ளார்.</p><p>"எங்கள் நிகழ்வுக்கு வந்த இளைஞர்கள் அனைவரும் எந்தப் பலனுமின்றி தன்னிச்சையாக, இயல்பாக வந்தவர்கள். ஆனால் ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு காசு கொடுத்து ஆட்களைக் கூட்டியதாகத் தகவல்கள் வருகின்றன</p><p>ராகுல் காந்தி மேடைகளில் பெண்கள் அதிகாரம் பெறுவது பற்றிப் பேசினாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தவர்" என்று பட்னாவிஸ் சாடினார்.</p> <p>இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், "ராகுல் காந்தியின் மாணவர் கூட்டம் காசு கொடுத்து கூட்டப்பட்டது என்றால், மகாராஷ்டிர சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 'முக்கியமந்திரி லட்கி பாகின்' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்பட்டதை என்னவென்று சொல்வது?" எனக் கேள்வி எழுப்பினார்.</p><p>புனேவில் அண்மையில் ராகுல் காந்தி மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்ஸில் இந்தியா 300 ரன்கள் குவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/sports/2nd-test-against-sri-lanka-india-piles-up-300-runs-in-the-first-innings</link><comments>https://www.maalaimalar.com/sports/2nd-test-against-sri-lanka-india-piles-up-300-runs-in-the-first-innings#comments</comments><guid isPermaLink="false">4b323725-7903-472a-b4c6-7ff3c3a72d0e</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:02:45 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:02:45.413Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,இலங்கை,டெஸ்ட் தொடர்,test match,IND vs SL</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/n33p38do/New-Project-2026-08-23T192958.831.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்ஸில் இந்தியா 300 ரன்கள் குவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/n33p38do/New-Project-2026-08-23T192958.831.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 300 ரன்களை குவித்துள்ளது. </p><p>இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.</p><p>இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே. எல். ராகுல் களம் இறங்கினர். தொடக்க ஜோடி மெதுவாக ஆட்டத்தை தொடங்க, தேவ்தத் படிக்கல் அதிரடியாகவும், நேர்த்தியாகவும் விளையாடி 117 ரன்கள் விளாசி சதம் அடித்து அசத்தினார். </p><p>இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 2-வது சதமாகும். கேப்டன் பொறுப்புடன் விளையாடி 50 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். ஜடேஜா 43 எடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே ரிஷப் பந்த் காயத்தால் ரிட்டைட் அவுட் ஆகி வெளியேறினார்.</p><p>முதல் நாள் ஆட்ட முடிவில் துருவ் ஜுரெல் 7 ரன்களுடனும், இந்த டெஸ்ட் போட்டியில் புதிதாக அறிமுகமாகியுள்ள ஆல்-ரவுண்டர் சாரன்ஷ் ஜெயின் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். </p><p>இலங்கை தரப்பில் அசிதா பெர்னான்டோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். லகிரு குமாரா, கேஷரா நுவந்தா தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.</p><p>இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஏற்கனவே முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சரின் எம்.எல்.ஏ. அலுவலகத்தை  முற்றுகையிட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் குண்டுகட்டாக கைது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-forcibly-arrested-while-attempting-to-lay-siege-to-the-chief-ministers-mla-office</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-forcibly-arrested-while-attempting-to-lay-siege-to-the-chief-ministers-mla-office#comments</comments><guid isPermaLink="false">cfd603a3-91ea-43d8-8b1d-b69cd5b20c6e</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:35:39 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:35:39.910Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,காவல்துறை,police,Sanitation workers,தூய்மைப் பணியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/p7ejlmgy/New-Project-2026-08-23T190510.487.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சரின் எம்.எல்.ஏ. அலுவலகத்தை  முற்றுகையிட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் குண்டுகட்டாக கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/p7ejlmgy/New-Project-2026-08-23T190510.487.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பணி நிரந்தரம், தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட இதர கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டலம் 4,7,8, ஆகியவற்றைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில் இன்று முதலமைச்சரின் பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் பெரம்பூர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். </p><p>இதனால் தண்டையார்பேட்டை மண்டலத்தை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு விரைந்த போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.</p><p>கலைந்து போக மறுத்து, சாலையிலேயே அமர்ந்து போராடிய பெண் பணியாளர்கள் உள்ளிட்ட பலரைக் காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>முதலீடுகளை ஈர்க்க பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்</title><link>https://www.maalaimalar.com/news/national/piyush-goyal-japan-visit-to-attract-investments</link><comments>https://www.maalaimalar.com/news/national/piyush-goyal-japan-visit-to-attract-investments#comments</comments><guid isPermaLink="false">5465b8cb-0311-48dc-bb5a-1add2bad6b80</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:28:25 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:28:25.262Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பியூஷ் கோயல்,piyush goyal,japan,Investment,முதலீடுகள்,ஜப்பான் பயணம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/axluddid/Piyush.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Piyush Goal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/axluddid/Piyush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் செல்கிறார். ஆகஸ்டு 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நான்கு நாட்களில் ஜப்பானின் டோக்கியோ, நகோயா, ஒசாகா நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.</p><p>ஜப்பான் தொழில்துறை அமைச்சர், முன்னணி தொழிலதிபர்கள், ஜப்பான் வணிக கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பியூஷ் ஆலோசிக்க உள்ளார்.</p><p>உற்பத்தி, குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்), தூய்மையான எரிசக்தி, எஃகு, வாகனத் துறை, நிதிச் சேவைகள், சுகாதாரம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான வர்த்தகப் பிரதிநிதிகள் கொண்ட குழு அவருடன் ஜப்பான் செல்கிறது.</p><p>அத்துடன், 1,500-க்கும் மேற்பட்ட முன்னணி ஜப்பானிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச அமைப்பான கெய்டன்ரென்(ஜப்பான் வர்த்தகக் கூட்டமைப்பு) சார்பில் நடத்தப்படும் வட்டமேசை மாநாட்டில் பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார்.</p><p>ஜப்பான் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அகசாவா ரியோசேவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் பியூஷ் கோயல், ஜப்பானிய அரசு, நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களையும் சந்திக்கிறார். மேலும், ஜப்பானில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாடுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவிகளுடன் குளித்த வீடியோ வைரல்.. அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் </title><link>https://www.maalaimalar.com/news/national/video-of-bathing-with-female-students-goes-viral-govt-school-teacher-suspended</link><comments>https://www.maalaimalar.com/news/national/video-of-bathing-with-female-students-goes-viral-govt-school-teacher-suspended#comments</comments><guid isPermaLink="false">5d363a18-d5fb-4760-add5-19d7c97374c4</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:28:04 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:28:04.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajasthan,government school,தலைமை ஆசிரியர்,Headmaster,ராஜஸ்தான்,அரசுப்பள்ளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/6qcoluxy/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சஸ்பெண்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ சஸ்பெண்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/6qcoluxy/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தானில் மாணவிகளுடன் அணையில் ஆடையின்றி குளித்த விவகாரத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-school-fir-cjp-founder-booked-for-unauthorized-entry-and-questioning-students-in-government-school">அரசு பள்ளி</a> தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>அரசுப் பள்ளி </h2><p>ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் தானாகாசி பகுதியில் ரவுபாவி படக் சப்ளி அரசு மேல்நிலைப் பள்ளி  அமைந்துள்ளது. இதன் தலைமை ஆசிரியராக  லால் சந்த் மீனா உள்ளார். </p><p>கடந்த ஆகஸ்ட் ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 200 மாணவ மாணவிகளை 2 கி.மீ தொலைவில் உள்ள படாஜ் அணைக்கு காட்டுப்பாதை வழியாக தலைமை ஆசிரியர் அழைத்துச் சென்றுள்ளார்.  </p> <h2>சுற்றுலா என்ற பெயரில்</h2><p>சுற்றுலா என்ற பெயரில் மாணவ மாணவிகளை அவர் கூட்டிச் சென்ற நிலையில் இதன்போது மாணவிகளுடன் பாதுகாப்புக்கு எந்த ஒரு பெண் ஆசிரியரும் உடன் செல்லவில்லை.</p><p>அணையில் 11 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்த நிலையில், தலைமை ஆசிரியர் மேலாடையின்றி மாணவிகளுடன் நீரில் குளித்துள்ளார். </p><p>மேலும் நீச்சல் கற்றுத்தருவதாகக் கூறி சில மாணவிகளின் கைகளை தூக்கியதாகவும் கூறப்படுகிறது.</p><p>மாணவர்கள் சிலர் இந்த காட்சிகளை தங்கள் மொபைலில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது காட்டுத்தீ போல் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.</p><h2>மக்கள் கொந்தளிப்பு</h2><p>வீடியோ வைரலானதை அடுத்து, கிராம மக்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுத் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.</p><p>படாஜ் அணையின் கரை வெறும் 5 முதல் 6 அடி மட்டுமே அகலமுடையது என்றும், ஆபத்தான பகுதி என்பதால் கடந்த நான்கு ஆண்டுகளாக அங்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும், அப்பகுதியில் புலிகள் நடமாட்டமும் உள்ள நிலையில், முறையான பாதுகாப்பு உடைகளோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளோ இன்றி, நீச்சல் தெரியாத மாணவர்களை அங்கு அழைத்துச் சென்றது ஏன் என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p> <h2>நடவ்டிக்கை</h2><p>சம்பவம் தொடர்பாகத் தானாகாசி காவல்துறையினர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, தலைமை ஆசிரியரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.</p><p>வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் சூழ்நிலைகள் குறித்துப் பொலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.</p> <p>இதனிடையே, தலைமை ஆசிரியர் லால் சந்த் மீனாவின் இந்த செயல் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது எனக் கூறி, கல்வி இயக்குனரகம் அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.</p><p>மேலும் அவர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காணாமல் போகவில்லை - கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி ஞானேந்திர குமார் விவகாரத்தில் அமைச்சர் பிரியங்க் கார்கே விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-ias-officer-gnanendra-kumar-not-missing-priyank-kharge-explains-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-ias-officer-gnanendra-kumar-not-missing-priyank-kharge-explains-controversy#comments</comments><guid isPermaLink="false">3ff39c4f-e3f4-41be-b8c5-ea1d56cf3ac3</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:59:45 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:59:45.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Priyank Kharge,பிரியங்க் கார்கே,Gyanendra Kumar Gangwar,ஞானேந்திர குமார் காங்வார்,Karnataka IAS Officer,KPSC ED Raid,FakeNews Busted</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/xu1na94a/Gyanendra-Kumar-Gangwar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gyanendra Kumar Gangwar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/xu1na94a/Gyanendra-Kumar-Gangwar?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்புகொள்ள முடியாமல் 'காணாமல் போய்விட்டார்' என்று ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட கர்நாடக கேடர் <a href="https://www.maalaimalar.com/topic/ias-officer">ஐஏஎஸ் அதிகாரி</a> ஞானேந்திரகுமார் காங்வார், தனது தந்தையின் அவசர மருத்துவக் காரணங்களுக்காக உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளதாக கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>கிளம்பிய வதந்திகள்</strong></h2><p>2016-ஆம் ஆண்டு பேட்ச் <a href="https://www.maalaimalar.com/topic/ias-officer">ஐஏஎஸ் அதிகாரி</a>யான ஞானேந்திர குமார், தற்போது <a href="https://www.maalaimalar.com/topic/karnataka">கர்நாடக</a> தொழில் மற்றும் வர்த்தகத் துரையின் MSME இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். </p><p>கடந்த வியாழக்கிழமை முதல் இவரது அதிகாரபூர்வ அரசு தொலைபேசி எண் செயலில் இல்லை அதனால் இவரை தொடர்புகொள்ள முடியவில்லை.</p><p>பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வரை அவர் சென்றதும், அங்கிருந்து டெல்லிக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. </p><p>அவர் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுக்கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியவர் என்பதால், அங்கு நடந்த ED சோதனைகளுக்குப் பயந்து அவர் தலைமறைவாகிவிட்டார் என செய்திகள் பரவின.</p><h2><strong>அமைச்சர் விளக்கம்</strong></h2><p>இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரியங்க் கார்கே, "அதிகாரி <a href="https://www.maalaimalar.com/topic/ias-officer">ஞானேந்திர குமார்</a> எங்கும் செல்லவில்லை. இது வெறும் தகவல் தொடர்பு இடைவெளியால் ஏற்பட்ட குழப்பம். அவரது தந்தை ஒரு இதய நோயாளி. </p><p>திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அதிகாரி உடனடியாகச் சொந்த ஊருக்குக் கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்றார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">There have been reports that an IAS officer in Karnataka has gone missing.<br><br>The officer concerned has since communicated with the Government and clarified that, due to a family emergency, he had sought leave and had to travel urgently to his hometown.<br><br>During this period, he was…</p>&mdash; Priyank Kharge / ಪ್ರಿಯಾಂಕ್ ಖರ್ಗೆ (@PriyankKharge) <a href="https://x.com/PriyankKharge/status/2091124522309341691?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>விடுப்பு கடிதம்</strong></h2><p>அதிகாரி ஞானேந்திர குமார் அவசரமாகக் கிளம்புவதற்கு முன், தனது தவிர்க்க முடியாத சூழ்நிலையைக் குறிப்பிட்டு ஒரு வார கால விடுப்பு வேண்டி கையால் எழுதப்பட்ட கடிதத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார். </p><p>ஆனால், அதற்கு முந்தைய நாள் அரசு விடுமுறை என்பதால், அரசு அலுவலகங்கள் முழுமையாகச் செயல்படவில்லை. இதனால் அந்த விடுப்புக் கடிதம் உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><h2><strong>நான் காணாமல் போகவில்லை</strong></h2><p>அமைச்சர் பிரியங்க் கார்கே அந்த அதிகாரியைத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது <a href="https://www.maalaimalar.com/topic/ias-officer">அதிகாரி ஞானேந்திர குமார்</a>, "தந்தையின் இக்கட்டான சூழ்நிலை மற்றும் பயணத்தில் இருந்ததால் என்னைத் தொடர்புகொள்ள முடியவில்லை. </p><p>இன்னும் சில நாட்களில் பெங்களூரு திரும்பி விடுப்புக்கான அரசு நடைமுறைகளை முடிப்பேன். என் மீது தற்போது எந்தப் புகாரும் இல்லை. அப்படியே ஏதேனும் முகமைகள் விசாரணை நடத்த உத்தரவிட்டால், அதைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p>இதன் மூலம் கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி திடீரென காணாமல் போனதாக எழுந்த அத்தனை சர்ச்சைகளுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>8.23 லட்சம்  மத்திய அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.. RTI-யில் அம்பலம்</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-vacancies-over-823-lakh-posts-lying-vacant-across-ministries-revealed-by-rti-data</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-vacancies-over-823-lakh-posts-lying-vacant-across-ministries-revealed-by-rti-data#comments</comments><guid isPermaLink="false">35d1aaa0-b566-4e52-bf1e-3f7d1686eae7</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:50:25 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:50:25.343Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Unemployment,அரசு வேலை,government job,ஆர்டிஐ,rti,வேலையின்மை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/b7jgiwqg/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ RTI]]></media:title><media:description type="html"><![CDATA[ RTI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/b7jgiwqg/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/news/national/india-youth-jobs-crisis-rahul-gandhi-warns-on-rising-education-costs-unemployment-and-ai-risks">வேலையில்லாத் திண்டாட்டம்</a> நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசின்  8.23 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஆர்டிஐ மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p><p>தகவல் அறியும் உரிமைச் சட்டமான ஆர்டிஐயின் கீழ் சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சம் தந்துள்ள பதிலில் இதன் தரவுகள் இடம்பெற்றுள்ளன. </p> <h2>தரவுகள்</h2><p>தரவுகளின்படி, நாடு முழுவதும் வெவ்வேறு துறைகளை சேர்த்து மத்திய அரசின் கீழ் 39 லட்சத்து 23 ஆயிரத்து 212 உள்ளன. ஆனால் மார்ச் 1, 2024 நிலவரப்படி 30 லட்சத்துக்கு 99 ஆயிரத்து 556 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.</p><p>இதன் மூலம் 8 லட்சத்துக்கு 23 ஆயிரத்து 656 பணியிடங்கள், அதாவது சுமார் 21 சதவீதம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.</p><p>ஒவ்வொரு 5 பணியிடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.</p> <h2>பாதுகாப்பு, ரெயில்வே, உள்துறை</h2><p>நாட்டின் மிகப்பெரிய துறையான பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ வீரர்கள் அல்லாத சிவிலியன் பணியிடங்களில் 5,56,248 இடங்களில் 2,42,243 இடங்கள் (43.5%) காலியாக உள்ளன.</p><p>அதேபோல, இந்திய ரெயில்வேயில் 14,79,701 பணியிடங்களில் 2,40,125 இடங்கள் காலியாகக் கிடக்கின்றன.</p><p>இது நாட்டின் மொத்த காலியிடங்களில் 30 சதவீதமாகும். பாதுகாப்பு மற்றும் ரெயில்வே ஆகிய இவ்விரு துறைகளில் மட்டுமே 4.82 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.</p><p>மத்திய உள்துறை அமைச்சகத்தில், 11,18,233 அனுமதிக்கப்பட்ட இடங்களில் 1,10,885 பணியிடங்கள் காலியாக உள்ளன.</p><p>பாதுகாப்புத் துறை, ரெயில்வே மற்றும் உள்துறை ஆகிய மூன்றிலும் மட்டுமே சேர்த்து 5.93 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.</p><h2>பிற துறைகள்</h2><p>வருவாய்த் துறையில் 1,79,374 இடங்களில் 69,662 இடங்கள் (38.8 சதவீதம் ) காலியாக உள்ளன. அஞ்சல் துறையில் 2,53,124 இடங்களில் 61,546 இடங்கள் (24.3 சதவீதம்) காலியாக உள்ளன.</p><p>அணுசக்தித் துறையில் 37,250 இடங்களில் 10,234 இடங்கள் (27.47 சதவீதம்) காலியாக உள்ளன. விண்வெளித் துறையான இஸ்ரோவில் 19,200 இடங்களில் 4,126 இடங்கள் (21.48 சதவீதம்) காலியாக உள்ளன.</p><p>இதுபோல வெவ்வேறு துறைகளுக்கான தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் காலியிடங்கள் சேர்க்கப்படவில்லை.</p> <h2>கவலை</h2><p>இந்த ஆர்டிஐ தகவலைப் பெற்ற சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் கூறுகையில், "வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலில், இத்தனை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பது கவலையளிக்கிறது.</p><p>அரசு வேலை என்பது இளைஞர்களின் உரிமை. மத்திய அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.</p><p>இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, அரசுத் துறைகளின் செயல்பாட்டுத் திறனையும் அதிகரிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>