<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 13 Sep 2026 11:21:06 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 13 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026#comments</comments><guid isPermaLink="false">7d67d6f6-a3ea-4b0e-af90-db4520343c93</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:34:10 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:55:10.252Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-stands-with-people-beyond-polls" rel="nofollow">வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்பது திமுக..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* காதல் திருமணத்தில் நிறைய கஷ்டங்கள், சவால்கள் இருக்கும். </p><p>* வரலாற்றிலேயே முதன்முறையாக டம்மி முதலமைச்சரை பார்க்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/missile-attack-on-iranian-ship-near-strait-of-hormuz-one-killed-three-injured">ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - ஒருவர் பலி - 3 பேர் காயம் <br></a><br>*ஹார்முஸ் வழியே செல்லும் கப்பல்கள் கடும் அச்சறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.</p><p>*ஓமன் மத்தியஸ்தத்தில் ஈரான் மற்றும் பிற அரபு நாடுகள் இடையே நடந்து வருகின்றன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/india-and-china-have-stepped-forward-to-mediate-an-end-to-the-ukraine-russia-war">நாங்க முடிச்சு தர்றோம்.. உக்ரைன் விஷயத்தில் கூடிவந்த இந்தியா, சீனா - ரஷியா சொல்வது என்ன?<br></a></p><p>*அதுவரை புதினிடம் பிரதமர் மோடி கூறியதிலேயே அதுவே சற்று காத்திரமான கருத்தாக இருந்தது.</p><p>*கொண்டு வர பெரு முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இந்த கருத்து வந்துள்ளது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/malaysian-prime-minister-meets-rahul-and-priyanka-congress-releases-video">ராகுல், பிரியங்காவுடன் மலேசிய பிரதமர் சந்திப்பு - வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் </a></p><p><br>*மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார்.</p><p>*மன்மோகன் சிங் தன் குழந்தைகளின் படிப்புக்கு பணம் செலுத்த முன்வந்ததையும் இப்ராஹிம் நினைவு கூர்ந்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram">ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!</a></p><p>*மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.</p><p>*இடதுசாரிகள் ஒண்றிணைந்து இந்த இடைத்தேர்தலை சந்திக்கின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami">முதலமைச்சர் விஜய் லண்டனில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை- எடப்பாடி பழனிசாமி... </a></p><p>*முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என எந்த தகவலும் வரவில்லை என்றார்.</p><p>*மாநிலம் பல லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்</a></p><p>* இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">“பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை” - முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி?</a></p><p>*பிக்பாஸில் விஜய் சேதுபதி பேசியது, முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்புப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister">“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/jersey-color-controversy-hockey-india-director-suspended">ஜெர்சி நிற சர்ச்சை: ஹாக்கி இந்தியா இயக்குநர் பணியிடை நீக்கம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post">ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: "யாகாவா ராயினும் நாகாக்க.." கனிமொழி எம்பியின் எக்ஸ் பதிவு!... </a></p><p>*திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது.</p><p>*ஒருவர் எதை காக்கத் தவறினாலும் தன் நாவை அடக்கிக் காக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/joe-root-breaks-sachin-tendulkar-record-in-test-fifties">சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஜோ ரூட்</a></p><p>* இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.</p><p>* அவர் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-sabalenka-in-us-open-final">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.</p><p>* ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலும் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். </p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் &quot;மோதகம் கொழுக்கட்டை&quot; </title><link>https://www.maalaimalar.com/health/healthyrecipes/vinayagar-chaturthi-special-modhagam-kozhukattai</link><comments>https://www.maalaimalar.com/health/healthyrecipes/vinayagar-chaturthi-special-modhagam-kozhukattai#comments</comments><guid isPermaLink="false">43f6342b-9acc-4d81-aef4-3f6d7b301866</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:20:58 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:20:58.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,கொழுக்கட்டை,Vinayagar Chadurthi,Kozhukattai,மோதகம் கொழுக்கட்டை,Modhagam kozhukattai</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/jt3xvp61/kozhukattai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kozhukattai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/jt3xvp61/kozhukattai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சமையல் (Cooking Recepies)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சுவையான மோதக கொழுக்கட்டை செய்யும் முறை குறித்து  பார்க்கலாம்.</p><p>விநாயகர் சதுர்த்தி என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது மோதகம் கொழுக்கட்டை தான். வெளியே தூய வெள்ளை நிறத்தில் லேசான உவர்ப்புச் சுவையுடன், உள்ளே பொன்னிறத்தில் நாவை ஊற வைக்கும் பூரணத்தை வைத்து செய்யப்படும் மோதக கொழுக்கட்டையிலும் ஒரு தத்துவம் இருக்கிறது.</p><p>அதாவது கொழுக்கட்டையின் மேலே இருக்கும் மாவுப் பொருள் தான் அண்டம். இனிப்பான பூரணம் தான் பிரம்மம். உலக வாழ்க்கை பற்றற்று கடந்து சென்றால் இனிப்பான கடவுளை அடையலாம் என்ற தத்துவத்தை விளக்குவதற்காக இந்த கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தியில் வைக்கப்படுகிறது.</p><p>அந்தவகையில் சுவையான மோதக கொழுக்கட்டை எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்:</h2><p>பச்சரிசி – 200 கிராம்,</p><p>புழுங்கல் அரிசி – 200 கிராம்,</p><p>வெல்லம் – 100 கிராம்,</p><p>ஏலக்காய் – 3 எண்ணம்,</p><p>தேங்காய் – ½ மூடி,</p><p>உப்பு – ¼ டீஸ்பூன்.</p><h2>செய்முறை:</h2><p>முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு உலர்ந்த துணியில் போடவும்.</p><p>10 நிமிடங்கள் கழித்து எடுத்து மிக்சியில் நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். பின் அடிகனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து வறுத்தெடுக்கவும். மாவானது ஈரப்பதம் நீங்கி உலர்ந்தவுடன் வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும். பின்னர் வறுத்த மாவினை சல்லடையில் போட்டு சலிக்கவும். இப்போது கொழுக்கட்டை தயாரிக்க மாவு தயார்.</p><p>பின்னர் தேங்காயை துருவி, வெல்லத்தை பொடியாக தட்டிக் கொள்ளவும். பாசிப்பயிற்றை வேகவைத்து ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவல், வெல்லம், மசித்த பாசிப்பயிறு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒருசேர கலக்கவும். இப்போது பூரணக் கலவை தயார்.</p><p>இப்போது கொழுக்கட்டை மாவில் உப்பினைக் கலந்து சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி, மாவினை சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்ட வேண்டும். </p><p>அதில் இருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உருட்டி கிண்ண வடிவில் செய்யவும். அதில் சிறிதளவு பூரணக் கலவையை இட்டு மூடி உருண்டையாக திரட்டவும். அப்படி இல்லையென்றால் கொழுக்கட்டை அச்சில் மாவு மற்றும் பூரணத்தை வைத்து எடுக்கவும்.</p><p>கொழுக்கட்டைகளை திரட்டும்போது பூரணக் கலவை வெளியே வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். இவ்வாறாக எல்லா மாவினையும் கொழுக்கட்டைகளாக தயார் செய்யவும். </p><p>பின்னர் குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சூடானவுடன் அதில் கொழுகட்டைகளை போட்டு ஆவி வர நன்கு வேக வைக்க வேண்டும். சுவையான விநாயகர் சதுர்த்தி மோதக கொழுக்கட்டை தயார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;சிவாஜி அண்ணன் என்னை எப்போதும் &apos;ராசா&apos; என்றுதான் கூப்பிடுவார்&quot; - &apos;லெனின் பாண்டியன்&apos; பட விழாவில் இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraja-emotional-at-lenin-pandian-audio-launch</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraja-emotional-at-lenin-pandian-audio-launch#comments</comments><guid isPermaLink="false">0622a6d1-8c2d-4cf4-97ce-86f8695770d1</guid><pubDate>Sun, 13 Sep 2026 11:10:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T11:10:00.147Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivaji Ganesan,Ilayaraja,இளையராஜா,Lenin Pandiyan,லெனின் பாண்டியன்,Darshan Ganesan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/huezzrcz/Lenin-Pandiyan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lenin Pandiyan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/huezzrcz/Lenin-Pandiyan?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">லெனின் பாண்டியன்</a>'. இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE">இசைஞானி இளையராஜா</a> இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 25-ந் தேதி உலகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது.</p><p>இதைத் தொடர்ந்து, 'லெனின் பாண்டியன்' திரைப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சியான பதிவை கூறியிருந்தார்.</p><h2><strong>"ராசா நீயுமா லேட்டு?" - சிவாஜி கணேசனுடனான சுவாரசிய நினைவு</strong></h2><p>"நான் எப்பொழுதும் காலை 7 மணிக்கு என்னுடைய ஸ்டுடியோ அறையில் இருப்பேன். ஆனால், ஒரு நாள் எதிர்பாராதவிதமாக 5 நிமிடங்கள் தாமதமாக, அதாவது 7.05 மணிக்குச் சென்றேன். </p><p>அப்போது, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">சிவாஜி</a> அண்ணன் பக்கத்து அறையில் டப்பிங் பணிக்காக வந்திருந்தார். அவர் எப்பொழுதுமே என்னை 'ராஜா' என்று கூப்பிட மாட்டார். மிகவும் அன்போடு <strong>'ராசா'</strong> என்றுதான் கூப்பிடுவார்.</p><p>அன்று நான் தாமதமாக வந்ததைப் பார்த்த அவர், 'ராசா நீயுமா லேட்டு?' என்று ஆச்சரியமாகக் கேட்டார். அதற்கு நான் அவரிடம், 'அண்ணே, நான் 7 மணிக்கு வருபவன், 5 நிமிடம் தாமதமாகிவிட்டது. </p><p>ஆனால் நீங்கள் 25 வருடங்களுக்கு முன்னதாகவே திரைத்துறைக்கு வந்துவிட்டு, இப்போது என்னை லேட் என்று சொல்கிறீர்களா?' என்று பதிலளித்தேன்," என சிவாஜி கணேசனுடனான தனது பழைய நினைவை மேடையில் பகிர்ந்துகொண்டார்.</p><h2><strong>சிவாஜியின் பெயரை தர்ஷன் கணேசன் காப்பாற்றுவார்</strong></h2><p>தொடர்ந்து பேசிய இளையராஜா, இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசனை மனதாரப் பாராட்டினார். "தர்ஷன் கணேசன் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். </p><p>நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரைத் திரையுலகில் காப்பாற்றும் அளவிற்கு அவருடைய நடிப்பு அமைந்துள்ளது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்," என்று கூறினார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/Y33WHR-QXac"></iframe></figure><h2>தம்பி கங்கை அமரனை கலாய்த்த 'ராஜா'</h2><p>மேலும், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தனது தம்பி கங்கை அமரன் குறித்தும் இளையராஜா கலகலப்பாகப் பேசினார். "என் தம்பி கங்கை அமரன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். </p><p>அவர் நிஜ வாழ்க்கையில் என்னிடமே எப்போதும் நடித்துக் கொண்டிருப்பார். அவர் இந்தப் படத்திலும் மிக நன்றாக நடித்திருக்கிறார்," என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.</p><h2><strong>நட்சத்திர பட்டாளம்</strong></h2><p>லெனின் பாண்டியன் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்சன் கணேசன் மற்றும் அறிமுக கதை நாயகியாக ஷ்ரிதா ராவ் இவர்களுடன் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் கங்கை அமரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE">நடிகை ரோஜா</a> மற்றும் பிக்பாஸ் அர்ச்சனை உள்ளிட்ட முன்னணி நட்சத்திரப் பட்டாளம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்பது திமுக..!- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-stands-with-people-beyond-polls</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-stands-with-people-beyond-polls#comments</comments><guid isPermaLink="false">5d3bc319-fcbb-4f31-b12d-c5229e636388</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:52:27 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:52:27.387Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,திமுக,உதயநிதி ஸ்டாலின்,தவெக,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ji0kn7rt/udhay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ji0kn7rt/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்கும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5" rel="nofollow">உதயநிதி ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார்.</p><p>திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-</p><p>காதல் திருமணத்தில் நிறைய கஷ்டங்கள், சவால்கள் இருக்கும். </p><p>வரலாற்றிலேயே முதன்முறையாக டம்மி முதலமைச்சரை பார்க்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு ஏற்படுகிறது, விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது.</p><p>இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொது மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.</p><p>கடந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.</p><p>பொது மக்களின் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்டால் முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை.</p><p>தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து 4 மாதங்களாகியும் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி: கோயம்பேடு மார்க்கெட்டில் களைகட்டிய விற்பனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-market-vinayagar-chaturthi-pooja-items-sales</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-market-vinayagar-chaturthi-pooja-items-sales#comments</comments><guid isPermaLink="false">4bbb7e4d-34f0-4c59-bba9-583b73772de9</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:20:25 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:20:25.657Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கோயம்பேடு மார்க்கெட்,விநாயகர் சதுர்த்தி,sale,விற்பனை,vinayakar chadhurthi,Koyembedu market</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/90ie3cts/market.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Koyembedu Market]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/90ie3cts/market.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி, பண்டிகை நாளை 14-ந் தேதி கொடுக்கிறது. இதையொட்டி பொது மக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம் அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் பல்வேறு வகையான தோற்றம் கொண்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.</p><p>பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விநாயகர் சிலை, குடை, மாவிலை, தோரணம், எருக்கம் பூ மாலை, கரும்பு, வாழை கன்று, அவல், பொரி, ஆப்பிள், சாத்துக்குடி, பேரிக்காய் விளாங்காய், வாழை இலை, தேங்காய், வாழைத்தார் உள்ளிட்ட பூஜை பொருட்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன.</p><p>கடலூர், விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 50-க்கும் லாரிகளில் கரும்பு கட்டுகளும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் விளாங்காய், ஆந்திரா மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து 100 வாகனங்களில் சோளம்.</p> <p>திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் ஆந்திராவில் இருந்து 50 வாகனங்களில் கரும்பு கட்டுகளும், கொடைக் கானல், ஏற்காடு, தேனி ஆகிய பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் பேரிக்காய், விழுப்புரம் மற்றும் கர்நாடகாவில் இருந்து கொய்யா 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் பழங்கள்.</p> <p>கடலூர் மற்றும் ஆந்திராவில் இருந்து ஏறத்தாழ 30 லாரிகளில் மஞ்சள் வாழைத்தார்கள், ஆந்திரா, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாழை கன்றுகள், கர்நாடக மாநிலம் மற்றும் பட்டுக்கோட்டை பொள்ளாச்சி, பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய் மற்றும் ஆந்திராவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் சாத்துக்குடி பழங்கள்.</p><p>திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அவல், பொரி, கடலை வியாபாரிகளும் கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்துள்ளனர்.</p><p>அதிகாலையில் காய்கறி பழங்கள் பூ மற்றும் பூஜை பொருட்கள் வாங்கி செல்ல ஒரே நேரத்தில் குவிந்த சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தால் பூஜை பொருட்களின் விற்பனை களை கட்டியது இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள “ஏ” மற்றும் “இ” சாலை, கோயம்பேடு- விருகம்பாக்கம் இணைப்பு சாலை, மதுரவாயல் -பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.</p><p>வியாபாரி ஒருவர் கூறும்போது:-</p><p>அங்காடி நிர்வாகம் சார்பில் முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை மேலும் ஒலிபெருக்கி மூலம் கரும்பு உள்ளிட்ட பூஜை பொருட்கள் எங்கெங்கு விற்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியவில்லை இதனால் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை சுற்றி உள்ள சாலைகளில் ஆங்காங்கே ஏராளமான வாகனங்களில் கரும்பு, சோளம், கம்பு வாழை கன்று உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் தேக்கமடைந்த நிலையில் உள்ளது இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றார்.</p><p>கோயம்பேடு சந்தையில் பூஜை பொருட்கள், பழம் மற்றும் பூக்கள் விற்பனை விலை விபரம் வருமாறு :-</p><p>விநாயகர் சிலை 1அடி-ரூ.250முதல் ரூ350வரை, குடை-ரூ.25, எருக்கம் பூ மாலை ஒன்று-ரூ.50, அருகம்புல் கட்டு ஒன்று-ரூ.40, மாவிலை ஒரு கொத்து-ரூ.20, தோரணம் 4 எண்ணிக்கை- ரூ.30, சோளம் ஒரு மூட்டை (90எண்ணிக்கை) - ரூ.600.</p><p>வெற்றிலை ஒரு கவுளி (80எண்ணிக்கை) -ரூ.80, வாழை இலை ஒன்று-ரூ.15, பூசணிக்காய் -ரூ. 100வரை, தேங்காய் ஒன்று -ரூ.50, மஞ்சள் வாழைத்தார் ஒன்று -ரூ.600வரை, வாழை கன்று ஒரு கட்டு (10 எண்ணிக்கை) ரூ.150, கம்பு கட்டு ஒன்று (50எண்ணிக்கை) -ரூ.150, கரும்பு ஒரு கட்டு (20 எண்ணிக்கை) - ரூ.300முதல் -ரூ.500வரை.</p><p>ஆப்பிள் 1கிலோ ரூ.150, சாத்துக்குடி ஒரு கிலோ-ரூ.70, கொய்யா 1கிலோ- ரூ.150, மாதுளை 1கிலோ -ரூ.200வரை, விளாங்காய் 1கிலோ- ரூ.100, பேரிக்காய் 1கிலோ ரூ.150, களாக்காய் ஒரு படி -ரூ.50, கருப்பங்காய் ஒரு படி -ரூ.50.</p><p>நாவல்பழம் ஒரு படி -ரூ.800, அவல் சிறிய பாக்கெட்-ரூ.10, பொரி 1படி -ரூ.30, கடலை சிறிய பாக்கெட்-ரூ.10, நாட்டு சர்க்கரை சிறிய பாக்கெட்-ரூ.10, சாமந்தி பூ 1கிலோ-ரூ.350வரை, பன்னீர் ரோஜா கிலோ- ரூ.250வரை, சாக்லேட் ரோஜா கிலோ- ரூ.300வரை, மல்லி 1கிலோ- ரூ.1500, முல்லை 1கிலோ- ரூ.900, கனகாம்பரம் 1கிலோ- ரூ.1300, அரளி 1கிலோ- ரூ.400, சம்பங்கி 1கிலோ- ரூ.600.</p>]]></content:encoded></item><item><title>தற்காலிக பணி நியமனத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 18-ந்தேதி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/temporary-appointments-protest-tamil-nadu-nurses-september-18</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/temporary-appointments-protest-tamil-nadu-nurses-september-18#comments</comments><guid isPermaLink="false">c2c2f316-3de3-420f-8e88-d9acf99fe2a3</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:12:52 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:12:52.237Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>nurses protest,TN Health Department,மருத்துவத்துறை,செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்,Against Contract Jobs,Permanent Jobs For Nurses,Nurses Agitation,தமிழ்நாடு செவிலியர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kzqp4i47/Nurses-Protest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nurses Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kzqp4i47/Nurses-Protest?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் காலிப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 18-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">செவிலியர்கள் </a>மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநிலத் தலைவர் சசிகலா, பொதுச் செயலாளர் சுபின், பொருளாளர் ஹேமச்சந்திரன் ஆகியோர் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><h2>தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் அறிக்கை:</h2><p>மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் பணியிடங்களில் தற்போது காலியாக உள்ள 4,724 பணியிடங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அரசு நியமிக்க உள்ளது. மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">அரசு மருத்துவமனை</a>களில் கடுமையான செவிலியர் தட்டுப்பாடு ஒரு புறம் இருக்க, சுமார் 4.75 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் தமிழகத்தில் இருக்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள்.</p><p>இந்த தற்காலிக முறையில் பணி அமர்த்தப்படும் செவிலியர்களுக்கு வரும் காலங்களில் பணி நிரந்தரம் பெறும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. </p><p>இந்த தற்காலிக செவிலியர்கள் பொது சுகாதார துறையின் கீழ் கிராமப் புறங்களில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்படும் நிலையில், கிராமப்புறங்களில் வழங்கப்படும் மருத்துவ சேவையின் தரம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.</p><p>மருத்துவத் துறையின் ஊழியர்கள் நிரந்தர தன்மையோடு இருந்தால் மட்டுமே அந்த துறை தொடர்ந்து நிரந்தர தன்மையுடன் இயங்கும் எனவே அரசு, பணியமர்த்தப்படும் ஊழியர்களின் நலனையும் பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை கைவிட வேண்டும். </p><p>அனைத்து பணியாளர்களையும் நிரந்தர தன்மையுடன் பணியமர்த்த வேண்டும். தற்காலிக பணி நிரந்தர ஆணையை திரும்பப் பெறக் கோரி மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தட்டாஞ்சாவடியிலும் போட்டி - இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது நாதக!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/contest-in-thattanchavady-too-ntk-announces-by-election-candidates</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/contest-in-thattanchavady-too-ntk-announces-by-election-candidates#comments</comments><guid isPermaLink="false">96399577-bba9-4927-b248-cda564329b8c</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:11:11 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:11:11.815Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,NTK,நாதக,by election,சீமான்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/knokh2uh/New-Project-2026-09-13T153900.270.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தட்டாஞ்சாவடியிலும் போட்டி - இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது நாதக!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/knokh2uh/New-Project-2026-09-13T153900.270.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. </p><p>இதில் அசாமின் ஒரு நாடாளுமன்ற தொகுதியும், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் 5 சட்டமன்ற தொகுதிகளும் அடங்கும். </p><h2>தமிழ்நாட்டில் 2 தொகுதிகள்</h2><p>அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. </p><h2>3 தொகுதிகளில் போட்டி</h2><p>அந்தவகையில் இத்தேர்தலில் களம் காணும் நாம் தமிழர் கட்சி, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, தாராபுரத்தில் கார்த்திகாவும், மதுராந்தகத்தில் ஜானகிராமன், தட்டாஞ்சாவடியில் கார்த்திக் குமாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். </p><h2>5 முனைப் போட்டி </h2><p>இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் 5 முனை போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாதக, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram">இடதுசாரிகள்</a> என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. </p><p>இடதுசாரிகள் இன்று தாங்கள் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக அறிவித்த நிலையில், நாளை மறுநாள் (செப்.15) வேட்பாளர்களை அறிவிக்கின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - ஒருவர் பலி - 3 பேர் காயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/missile-attack-on-iranian-ship-near-strait-of-hormuz-one-killed-three-injured</link><comments>https://www.maalaimalar.com/news/world/missile-attack-on-iranian-ship-near-strait-of-hormuz-one-killed-three-injured#comments</comments><guid isPermaLink="false">d08a4657-3ca0-4434-95d5-8c110e739bfb</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:09:02 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:09:02.648Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,ஏமன்,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/iuw9t04i/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹார்முஸ் ஜலசந்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹார்முஸ் ஜலசந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/iuw9t04i/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பதற்றம் மிகுந்த ஹார்முஸ் ஜலசந்தியில் இன்று காலை ஈரான் வர்த்தக கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயம் அடைந்தனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/iran-war">அமெரிக்கா - ஈரான்</a> இடையே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ஹார்முஸ் ஜலசந்தி </a>கடல்வழிப்பாதையில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. </p><p>கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. </p><p>மேலும் ஹார்முஸ் வழியே செல்லும் கப்பல்கள் கடும் அச்சறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. </p> <p>இந்த சூழலில், "ஈரான் வர்த்தக கப்பல் ஒன்று இன்று காலை 5 மணியளவில் ஹென்கம் மற்றும் கேஷ்ம் தீவுகளின் கரையையொட்டிய பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ஒரு நபர் கொல்லப்பட்டார். மூன்று பேர் காயமடைந்தனர்" என கேஷ்ம் நகர ஆளுநர் அமீர் தேமௌரி தெரிவித்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.</p><p>ஆனால் இந்த தாக்குதல் எங்கிருந்து யாரால் நடத்தப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை. நேற்று நள்ளிரவில் கேஷ்ம் பகுதியை சுற்றி பல வெடிப்புகள் பதிவாகி உள்ளது. கேஷ்ம், ஹார்முஸ் பகுதியில் உள்ள மிகப்பெரிய தீவு நகரமாகும்.</p>  <p>முன்னதாக ஈரான் - மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதிகள் ஓமனில் ஒன்றுகூடி ஹார்முஸ் பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்திய ஒரு நாளுக்கு பின் இந்த தாக்குதல் வந்துள்ளது. ஹார்முஸ் முடக்கத்தால் சர்வதேச நாடுகளுக்கு எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய கிழக்கு நாடுகள் திணறி வரும் சூழலில், ஹார்முஸ் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க, தற்காலிகமான ஒரு பாதையை உருவாக்கும் முயற்சிகள் ஓமன் மத்தியஸ்தத்தில் ஈரான் மற்றும் பிற அரபு  நாடுகள் இடையே நடந்து வருகின்றன.</p> <h2>ஹார்முஸ் சிக்கல்</h2><p>மறுபுறம், ஹார்முஸை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. ஹார்முஸுக்கு தனது பெயரை சூட்டுவதும், ஹார்முஸில் பயணிக்க அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப்போவதாக அறிவிப்பதும் என அதிபர் டிரம்ப் பல வழிகளில் அந்த பாதையை சொந்தமாக்கிக்கொள்ள முயற்சி எடுத்து வருகிறார்.</p><p>ஆனால் அமெரிக்கா எதிர்பார்த்ததை விட ஈரான் வலுவாக பதிலடி கொடுத்து வருவதால் 6 மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. அதேநேரம் அமெரிக்க ராணுவம் கடும் பின்னடைவையும் இழப்புகளையும் இந்த போரில் சந்தித்துள்ளது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்ற காரணத்திற்காக அமெரிக்கா தொடங்கிய இப்போரின் தற்போதைய பிரதான கவனமாக ஹார்முஸ் மாறியுள்ளது. </p> <p>இந்த ஜலசந்தியில் நடக்கும் மாற்றங்கள் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் எண்ணெய், எரிவாயு நலன்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த மோதல் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.</p><p>மறுபுறம், சவுதி அரேபிய ஆதரவுடன் இயங்கும் ஏமன் அரசு படைகளுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதலில் ஈடுபட்டு மத்திய கிழக்கில் ஹார்முஸுக்கு பிறகு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல் மாண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது நடந்தால் நிலைமை மேலும் மோசமாகும்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-made-to-immerse-vinayagar-idols-at-four-locations-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-made-to-immerse-vinayagar-idols-at-four-locations-in-chennai#comments</comments><guid isPermaLink="false">37690713-77e0-4e09-b385-32aaddd4a6f8</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:56:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:56:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar,விநாயகர்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xeljbesb/Vinayagarr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xeljbesb/Vinayagarr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>சென்னையில் 4 இடங்களில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.</p><p>சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் மற்றும் வழித்தடங்கள் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>சென்னையில் 17 வழித் தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு, அவ்வழியே விநாயகர் சிலைகளை கொண்டு சென்று சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.  சென்னை, நுங்கம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, ஆர்.கே.நகர், புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம் ஆகிய இடங்களில் மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக சென்று, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. </p><p>இதே போல, அடையாறு, திருவான்மியூர் மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர் கடலிலும், வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலிலும் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காதல் கதையில் துருவ் விக்ரம்... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhruv-vikram-in-a-romantic-story-first-look-of-the-new-film-to-be-released-today</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhruv-vikram-in-a-romantic-story-first-look-of-the-new-film-to-be-released-today#comments</comments><guid isPermaLink="false">359e4bbd-20b8-4e23-8677-dc78dc3057ca</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:52:21 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:52:21.017Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Dhruv Vikram,துருவ் விக்ரம்,mythri movie makers,மைத்ரி மூவி மேக்கர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/dlse8jh5/New-Project-2026-09-13T151324.661.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காதல் கதையில் துருவ் விக்ரம்... புதியப் பட அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/dlse8jh5/New-Project-2026-09-13T151324.661.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் துருவ் விக்ரம் புதிய காதல் கதை ஒன்றில் நடிக்கிறார். </p><p>இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் எர்னேனி, ரவி சங்கர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.</p><p>படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.  </p><p>பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு துருவ் எந்தப் படத்திலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. </p><p>பிரம்மன், ஆதித்யா வர்மா படங்களில் உதவி இயக்குநராக இருந்த கரண் அரவிந்த் குமார் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>டிரம்ப்பை விடுங்க.. நாங்க முடிச்சு தர்றோம்..  உக்ரைன் விஷயத்தில் கூடிவந்த இந்தியா, சீனா - ரஷியா சொல்வது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/india-and-china-have-stepped-forward-to-mediate-an-end-to-the-ukraine-russia-war</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-and-china-have-stepped-forward-to-mediate-an-end-to-the-ukraine-russia-war#comments</comments><guid isPermaLink="false">a0a26889-6380-4e1b-b6a0-f8cdc676f137</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:38:11 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:38:11.784Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,புதின்,பிரிக்ஸ் உச்சிமாநாடு,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/onfhc9ai/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதின், மோடி, ஜி ஜின்பிங்    ]]></media:title><media:description type="html"><![CDATA[ புதின், மோடி, ஜி ஜின்பிங்    ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/onfhc9ai/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு மத்தியஸ்தம் செய்ய இந்தியா, சீனா முன்வந்துள்ளது. </p><p>பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும்,<a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi"> பிரிக்ஸ் மாநாட்டின்</a> இடையே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">உக்ரைன் போரை</a> முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக இருக்க முன்வந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது. </p><p>ரஷிய அதிபர் மாளிகை (கிரம்ளின்) செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுகுறித்து கூறுகையில், அதிபர் புதின் மத்தியஸ்தம் செய்வதற்கான அவர்களின் தயார்நிலையை பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.  </p> <p>அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷியா - உக்ரைன் இடையே 2022 முதல் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர பெரு முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இந்த கருத்து வந்துள்ளது.</p><p>மோடி, புதின், ஜி ஜின்பிங் இடையே உள்ள புரிதலை பிரிக்ஸ் மாநாடு எடுத்துக்காட்டுவதாக சில அரசியல் வல்லுநர்கள் அபிப்பிரயப்படுகின்றனர். குறிப்பாக மூன்று தலைவர்களும் சிரித்தபடி கைகோர்த்து நிற்கும் புகைப்படம் ஒரு செய்தியை சொல்கிறது என்பது அவர்கள் கூற்று. </p><p>இந்த மாநாட்டில் மூவரின் சங்கமம் உலக அரசியல் மேடைக்கு குறிப்பாக டிரம்ப்பினால் பிளவுபட்டுக் கிடக்கும் மேற்கத்திய அரசியல் சூழலுக்கு ஒரு செய்தியை வழங்கியுள்ளது.</p> <h2>ஏன் முக்கியம்?</h2><p>ரஷியாவிக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவுவதாக இந்தியா முன்வருவது இது முதல் முறை அல்ல. ஆனால் இந்த கணத்தில் அதை சொல்வது முக்கியமானதாகிறது. </p><p>ஏனெனில் உக்ரைன் போர் தொடங்கியபின் முதல் முறையாக ரஷியாவில் வரும் செப்டம்பர் 18-20 இல் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. புதினின் ஐக்கிய ரஷிய கட்சி நாடாளுமன்றத்தில் மிக வலுவாகவே உள்ளது.</p><p>சில தினங்கள் முன்பு தான், புதினை தொடர்பு கொண்டு டிரம்ப், உக்ரைன் போரை உடனே முடிக்கும் வழியை பார்க்குமாறு வலியுறுத்தியிருந்தார். </p><p>அவ்வாறு செய்தால் ரஷியாவுடனான அமெரிக்காவின் முறிந்த உறவுகளை மீட்டெடுத்துக்கொள்ளலாம் எனவும் ஆஃபர் கொடுத்திருந்தார்.</p> <p>அதைத்தொடர்ந்து அமெரிக்க தூதர்கள் மாஸ்கோ சென்று புதினை சந்தித்து பேசினார். 5 ஆண்டுகளாக போர் இழுத்துக்கொண்டே செல்வது நல்லதல்ல என அவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை எனவே கூறப்படுகிறது.</p><p>இந்த சூழலில் உக்ரைன் - ரஷியா இடையே பிரதான இணைப்பு பாலமாக இந்தியா உருவெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏனெனில் இரு நாடுகள் உடனும் சிறப்பான நட்பை பேணும் சொற்ப நாடுகளில் இந்தியாவும் அடக்கம்.</p><p>"மாஸ்கோ, தெஹ்ரான், மேற்குலகம் என அனைத்துடனும் ஒரே நேரத்தில் பேச முடிகிற அரிதான ஆற்றல் இந்தியாவிடம் உள்ளதாக" இண்டிக் ஆராய்ச்சியார்கள் கூட்டமைப்பு இயக்குநர் ஸ்ரீனிவாச பாலகிருஷ்ணன், அண்மையில் சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.</p> <p>கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, ரஷியாவின் சலுகை விலை எண்ணெய்யை தனது எரிசக்தி தேவைக்கு அதிகம் சார்ந்துள்ளது. எனவே உக்ரைன் போரை முடிக்க ஆரம்பம் முதலே இந்தியா வலியுறுத்தி வருகிறது.</p><p>கடந்த மாதம் பிஸ்கெக்கில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சந்தித்துக்கொண்டபோதும் புதினிடம் மோடி, முடிவற்ற போர் என்ற நிலைப்பாட்டை கைவிடவும், போர் நடக்கும் ஒவ்வொரு தினமும் மனிதத்தை பின்னோக்கி தள்ளும் ஒரு அடி எனவும் கூறியிருந்தார்.</p> <p>அதுவரை புதினிடம் பிரதமர் மோடி கூறியதிலேயே அதுவே சற்று காத்திரமான கருத்தாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி வந்து சேர்ந்த புதினிடம் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியபோதும், ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளத்தையும் புதினிடம் தெரிவித்திருக்கிறார்.</p> <p>"இந்தியாவின் நிலைப்பாடு எங்களுக்கு தெரியும். அது எங்களின் நிலைப்பாட்டுடன் அதிகம் ஒத்துப்போக கூடியதே. ஏனெனில் உக்ரைன் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணும் முயற்சிக்கு ரஷியா என்றும் தயாராகவே உள்ளது" என கிரம்ளின் முன்னமே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.</p><p>இதனிடையே, போர் தொடங்கியதில் இருந்து எப்போது நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதின் - ஜெலன்ஸ்கி சந்திப்பு வரும் டிசம்பரில் ஜி 20 மாநாட்டின் போது சாத்தியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>அமெரிக்காவின் மியாமியில் மாநாடு நடக்கிறது. புதின் அங்கு வருகை தந்தால் தானும் வருவதாக ஜெலன்ஸ்கி ஏற்கனவே தெரிவித்துவிட்டார். புதின் எடுக்கும் முடிவிலேயே அனைத்தும் அடங்கியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நாளை மறுநாள் வேட்பாளர்களை அறிவிக்கும் இடதுசாரிகள் - மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-announce-candidates-day-after-tomorrow-cpm-contests-in-madurantakam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-announce-candidates-day-after-tomorrow-cpm-contests-in-madurantakam#comments</comments><guid isPermaLink="false">c91a6f74-9d0a-4dd5-bf81-715f8a37e434</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:19:45 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:19:45.451Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPIM,by election,இடைத்தேர்தல்,சிபிஎம்,பெ சண்முகம்,P Shanmugam</media:keywords><media:content height="395" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/0dqzjx4q/WhatsApp-Image-2026-09-13-at-2.35.05-PM.jpeg" width="907"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை மறுநாள் வேட்பாளர்களை அறிவிக்கும் இடதுசாரிகள் - மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/0dqzjx4q/WhatsApp-Image-2026-09-13-at-2.35.05-PM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தனித்துப் போட்டி </h2><p>சமீபத்தில் இடைத்தேர்த்ல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சிகளின் மாநில செயலாளர்கள் அறிவித்துள்ளனர். </p><p>அதன்படி தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்.,</p><p>“தவெகவிற்கு ஆதரவு  இல்லை என்பதால் திமுகவிற்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை. இந்த இடைத்தேர்தல் என்பது திணிக்கப்பட்ட தேர்தலாகவே இருக்கிறது. </p><h2>வேட்பாளர் அறிமுகம்</h2><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட உள்ள இடதுசாரி வேட்பாளர்கள் நாளை மறுநாள் (செப்.15) அறிவிக்கப்பட உள்ளனர்.” என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். </p><h2>ஐந்து முனை</h2><p>தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த இடதுசாரி கட்சிகள் இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கவில்லை. கம்யூனிஸ்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதன் மூலம் ஐந்து முனை போட்டியாக தேர்தல் களம் மாறியிருக்கிறது. இடதுசாரிகளின் இந்த அறிவிப்பால் தேர்தல் களம் பரப்பரப்பாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-warning-heavy-rain-thunderstorm-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-warning-heavy-rain-thunderstorm-today#comments</comments><guid isPermaLink="false">b1db0471-771b-4da3-b653-ea6f0b001270</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:02:47 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:02:47.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,வானிலை ஆய்வு மையம்,Meteorological Department,கனமழை எச்சரிக்கை,heavy rain warning</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ienpanq2/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heavy rain warning ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ienpanq2/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தென் தமிழக மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.</p><h2>இடி மின்னல் <strong>மற்றும்</strong> பலத்த காற்று எச்சரிக்கை</h2><p>கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மழை பெய்யும் போது தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இடி மின்னல் நிகழும் போது திறந்தவெளிகளிலோ மரங்களின் அடியிலோ நிற்பதைத் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், கடல் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ராகுல், பிரியங்காவுடன் மலேசிய பிரதமர் சந்திப்பு - வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் </title><link>https://www.maalaimalar.com/news/national/malaysian-prime-minister-meets-rahul-and-priyanka-congress-releases-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/malaysian-prime-minister-meets-rahul-and-priyanka-congress-releases-video#comments</comments><guid isPermaLink="false">e77f064e-55d3-4393-845f-7180e6777606</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:59:29 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:59:29.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,malaysia,மலேசியா,BRICS Summit,Anwar Ibrahim,அன்வர் இப்ராஹிம்,பிரிக்ஸ் உச்சிமாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/8i8i01ag/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல், இப்ராஹிம், பிரியங்கா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல், இப்ராஹிம், பிரியங்கா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/8i8i01ag/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சந்தித்து பேசியுள்ளார்.</p><p>டெல்லியில் நேற்று தொடங்கிய 18வது <a href="https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi">பிரிக்ஸ் மாநாடு</a> இன்றுடன் முடிவடைகிறது. இதில் கலந்துகொள்ள ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், பிரேசில், தென்னாப்பிரிக்கா  ஆகிய உறுப்பு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். </p><p>குறிப்பாக மலேசிய பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D">அன்வர் இப்ராஹிம் </a>பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார். </p><p>இன்று காலை டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை அன்வர் இப்ராஹிம் சந்தித்து பேசியுள்ளார். </p><p>அவர்களுடன் காலை உணவு அறுத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது </p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">LoP Shri <a href="https://x.com/RahulGandhi?ref_src=twsrc%5Etfw">@RahulGandhi</a> and Congress General Secretary Smt. <a href="https://x.com/priyankagandhi?ref_src=twsrc%5Etfw">@priyankagandhi</a> ji met H.E. Dato’ Seri <a href="https://x.com/anwaribrahim?ref_src=twsrc%5Etfw">@anwaribrahim</a>, Prime Minister of Malaysia today.<br><br>New Delhi <a href="https://t.co/EV9PIDizwZ">pic.twitter.com/EV9PIDizwZ</a></p>&mdash; Congress (@INCIndia) <a href="https://x.com/INCIndia/status/2099032104222990816?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை</h2><p>பிரிக்ஸ் மற்றும் ஆசியான் கூட்டமைப்பில் மலேசியா முக்கிய கூட்டாளியாக திகழ்ந்து வருகிறது.</p><p>முன்னதாக பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளான நேற்று, மலேசிய பிரதமர் இப்ராஹிமுடன் பிரதமர் மோடி வர்த்தகம், செமிகண்டக்டர், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.</p>  <h2>மன்மோகன் சிங்கிற்கு பாராட்டு</h2><p>காங்கிரசை சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2024 டிசம்பரில் உயிரிழந்தார். அவருக்கு அப்போது புகழஞ்சலி செலுத்திய இப்ராஹிம் அவரை மதிப்புமிக்க நேசமிகு நண்பர் எனவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கை புகழ்ந்தும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.</p><p>மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வலுவான உலக பொருளாதாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் சென்றார் என கூறியிருந்தார்</p><p>இப்ராஹிம் 1990களில் மலேசியாவின் வர்த்தக அமைச்சராக இருந்தவர். மன்மோகன் சிங் அக்காலத்தில் இந்தியாவின் வர்த்தக அமைச்சராக மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களை பின்பற்றினார் இப்ராஹிம்.</p> <p>அங்கு அரசியல் நெருக்கடி காலத்தில் தான் ஜெயிலில் இருந்தபோது மன்மோகன் சிங் தன் குழந்தைகளின் படிப்புக்கு பணம் செலுத்த முன்வந்ததையும் இப்ராஹிம் முன்னொரு சமயத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.</p><p>ஊழலுக்கு எதிரான மன்மோகன் சிங்கின் போராட்டத்தையும் அவர் புகழ்ந்துள்ளார். மன்மோகன் சிங் ஒரு வினோதமான அரசியல்வாதி என்றாலும் உண்மையானவர் என்றும் அவர் எதிர்கால தலைமுறைக்கு உந்துசக்தியாக இருக்கிறார் எனவும் இப்ராஹிம் புகழ் மாலை சூட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள் - இணையதளத்தை கலக்கும் &apos;Dhik.Dhik..Dhik…&apos; படத்தின் டீசர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/24-hours-2-million-viewers-dhik-dhik-dhik-teaser-rocks-the-internet</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/24-hours-2-million-viewers-dhik-dhik-dhik-teaser-rocks-the-internet#comments</comments><guid isPermaLink="false">2a7f5f7a-8d83-4741-971d-2243bd723053</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:59:22 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:59:22.743Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Venkat prabhu,Chandini Tamilarasan,JSK Satishkumar,Kuttram Kadithal 2,Dhik Dhik Dhik,திக் திக் திக்,JSKFilmCorporation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/veho6435/Dhik-Dhik-Dhik" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhik Dhik Dhik ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/veho6435/Dhik-Dhik-Dhik?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'தங்க மீன்கள்', தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' போன்ற தரமான வாழ்வியல் கதைகளைத் தயாரித்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான JSK Film Corporation, தனது அடுத்த படைப்பாக தயாரித்துள்ள த்ரில்லர் திரைப்படம் 'Dhik.Dhik..Dhik…'. </p><p>இப்படத்தின் அதிரடி டீசர் வெளியாகி, 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையதளங்களில் பெரும் சாதனையைப் படைத்து வருகிறது.</p><h2><strong>முன்னணி பிரபலங்களின் ஆதரவு &amp; தியேட்டர் ரிலீஸ்!</strong></h2><p>இப்படத்தின் டீசர் 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி பலம் சேர்க்கும் வகையில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81">வெங்கட் பிரபு</a>, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆர்யா ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இதனை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.</p><p>டிஜிட்டல் தளங்களில் தடம் பதித்து வரும் இந்த டீசர், தற்போது தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் பெரிய திரையிலும் திரையிடப்பட்டு வருகிறது. </p><p>தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் இப்போதே இந்த டீசரை பெரிய திரையில் பார்த்து வியந்து வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது.</p><figure><img alt="Chandini Tamilarasan" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kfaw0sfm/Chandini-Tamilarasan" /></figure><h2><strong>ஒரே இரவில் நடக்கும் சென்னையின் பரபரப்பு கதை!</strong></h2><p>தயாரிப்பாளர் JSK சதீஷ் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் ஸ்ரீநிவாசன் சிவாஜிராவ் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் ரகு ராஜகோபாலுடன் இணைந்து படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையை எழுதியுள்ளார்.</p><p>சென்னையைப் பின்னணியாகக் கொண்டு, ஒரே இரவில் நடக்கும் அதிரடி சஸ்பென்ஸ் கதையாக இப்படம் செதுக்கப்பட்டுள்ளது. பரபரப்பான த்ரில்லர் பாணியில் இருந்தாலும், இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான மிக முக்கியமான ஒரு சமூகக் கருத்தையும் மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் குழு</strong></h2><p>இப்படத்தில் பாவெல் நவநீதன், ஜேஎஸ்கே சதீஷ் குமார், சாந்தினி தமிழரசன், சாண்ட்ரா ஆமி மற்றும் பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>இப்படத்திற்கு DK இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ரகு ராஜகோபாலும் படத்தொகுப்பை பிரேம் B -யும் கலை இயக்கத்தை SS சுசி தேவராஜ் ஆகியோர் இப்படத்திற்காக பணியற்றி இருக்கிறார்கள்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/O3xEmoRyk2s"></iframe></figure><h2><strong>'குற்றம் கடிதல் 2' விரைவில் ரிலீஸ்!</strong></h2><p>ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் உருவான ‘ஃபையர்’ படத்தைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் <strong>‘குற்றம் கடிதல் 2’</strong> திரைப்படமும் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. </p><p>இத்திரைப்படமும் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தயாரிப்புத் தரப்பில் அறிவித்துள்ளது.</p><p>டீசர் புரமோஷனிலேயே மிரட்டி வரும் 'Dhik.Dhik..Dhik…' படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram#comments</comments><guid isPermaLink="false">59c18f07-edc6-46ae-bc4d-84a093fd6e82</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:46:42 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:46:42.850Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,by election,CPI,dharapuram,தாராபுரம்,இடைத்தேர்தல்,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/3cwnyxeu/New-Project-2026-09-13T141250.695.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/3cwnyxeu/New-Project-2026-09-13T141250.695.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இடைத்தேர்தல்</h2><p>அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர்.6ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.</p><p>இத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக போட்டியிடுவதாக அறிவித்து, நாதகவை தவிர மற்ற மூன்று கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.</p><p>தவெக அரசுக்கு ஆதரவு அளித்தாலும், கூட்டணியில் இடம்பெறாததால் இந்த இடைத்தேர்தலில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram">இடதுசாரிகள் </a>யாருக்கும் ஆதரவு அளிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. </p><p>இந்நிலையில் தேர்தலுக்கு யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்தன. </p><p>இந்நிலையில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பது தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.</p><h2>எந்தக் கூட்டணியிலும் இல்லை</h2><p>செய்தியாளர்களிடம் பேசிய அவர்., “இடைத்தேர்தல் தொடர்பாக இரண்டு நாட்கள் சிபிஐ செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நிலவும் அரசியல் சூழலில் எந்தக் கூட்டணியிலும் இடம்பெறுவதில்லை என்ற முடிவை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்.</p><p>ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காகவே சிபிஐ தவெகவிற்கு ஆதரவு அளித்தது. அமைச்சரவையிலும் நாங்கள் பங்கேற்கவில்லை, கூட்டணியிலும் நாங்கள் பங்கேற்கவில்லை.</p><h2>ஐந்துமுனை போட்டி</h2><p>இது ஒரு திணிக்கப்பட்ட இடைத்தேர்தல். இடதுசாரிகள் இந்த தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளோம். சிபிஐ இந்த முடிவை எடுத்தது. மார்க்சிஸ்ட் கட்சி உடன் எங்கள் கருத்தை பகிர்ந்தோம். </p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரத்திலும், மார்க்சிஸ்ட் கட்சி மதுராந்தகத்தில் போட்டியிட வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த செய்தியை பெ.சண்முகமும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.</p><p>இடதுசாரிகள் கூட்டோடு சிபிஐ தாராபுரத்தில் போட்டியிடுகிறது. நாங்கள் 60,70 ஆண்டுகளாக நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காக பெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளது. விழுமியங்களை பற்றி நின்றுள்ளோம். </p><p>உழைக்கும் மக்களின் உரிமைக் குறலாக ஒலித்துள்ளார்கள். எனவே தமிழ் கூறும் நல்லுலகம் இடதுசாரிகளுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் உழைக்கும் மக்களின் குரலை, ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் குரலை, தமிழகம் நலன்சார்ந்த குரலை இடதுசாரிகள் சட்டமன்றத்தில் எழுப்புவோம், முழங்குவோம். </p><p>அதற்காக தமிழ் உலகம் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>இந்தோனேசியாவில் கடலில் திடீரென மாயமான பயணிகள் கப்பல்: 102 பேர் பத்திரமாக மீட்பு- மீதியுள்ளவர்களை தேடும் பணி தீவிரம்</title><link>https://www.maalaimalar.com/news/world/indonesia-sea-passenger-ship-sudden-disappearance-102-rescued</link><comments>https://www.maalaimalar.com/news/world/indonesia-sea-passenger-ship-sudden-disappearance-102-rescued#comments</comments><guid isPermaLink="false">7c518854-0c45-4c1d-8e6b-4cd173fece14</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:43:26 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:43:26.324Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தோனேசியா,passenger ship,indonesia,Virgo Transport 8,Surabaya,சுரபயா,வெர்கோ டிரான்ஸ்போர்ட் 8</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/0kppm0pk/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Virgo Transport 8]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/0kppm0pk/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவில் 241 பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று திடீரென கடல் நடுவே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுரபயா துறைமுகத்தில் இருந்து தெற்கு கலிமந்தன் நோக்கி ‘வெர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டுச் சென்றது. ஜாவா கடல் பகுதியில் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென மோசமான வானிலை காரணமாகக் கடல் சீற்றம் அடைந்தது. இதில் கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டு, கப்பல் மாயமானது.</p><h2>மீ<strong>ட்புப் பணி</strong>கள்</h2><p>தகவல் அறிந்தவுடன் இந்தோனேசியத் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் அதிவிரைவாகச் சம்பவ இடத்திற்கு மீட்புக் கப்பல்கள் மற்றும் படகுகளுடன் விரைந்தனர். தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பலனாக, இதுவரை 102 பயணிகள் கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>மீதமுள்ள 139 பயணிகளைக் கண்டுபிடிப்பதற்காகத் தேடுதல் நடவடிக்கைகள் இரவிலும் இடைவிடாமல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடலோரக் காவல் படை, மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூர் மீனவர்களின் படகுகள் உதவியுடன் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் வான்வழித் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் பெரும் பதற்றத்துடனும் கவலையுடனும் மீட்பு மையங்களில் காத்திருக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செயற்கை நுண்ணறிவை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது- பிரதமர் மோடி பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-warns-against-weaponisation-of-critical-minerals</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-warns-against-weaponisation-of-critical-minerals#comments</comments><guid isPermaLink="false">06d8e21d-ce76-41d4-bfa7-43799fc12395</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:24:18 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:24:18.724Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,pm modi,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/7l2kok2m/BRICS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/7l2kok2m/BRICS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிஜிட்டல் வேளாண்மைக்கான பிரிக்ஸ் வலையமைப்பு விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த முன்முயற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை விவசாயிகளின் தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். வேளாண்மை துறையில் செயற்கை நுண்ணறிவு உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.</p><p>இந்தியா, ரஷியா, சீனா உள்பட 11 உறுப்பு நாடுகள் மற்றும் 10 நட்பு நாடுகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. </p><h2><strong>உலக தலைவர்கள்</strong></h2><p>இதில் பல்வேறு நாட்டுகள் அதிபர்கள், பிரதமர்கள், துணை அதிபர்கள், மந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். உச்சி மாநாட்டில் நேற்று அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகம் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் நடந்த அமர்வில் தலைவர்கள் பங்கேற்று உரையாடினர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.</p><h2><strong>டெல்லி கூட்டு பிரகடனம்</strong></h2><p>மேலும் மாநாட்டின் டெல்லி கூட்டு பிரகடனம் ஒருமனதாக ஏற்று கொள்ளப்பட்டது. 140 அம்சங்களை கொண்ட இந்த பிரகடனத்தில் காசா போர் நிறுத்தம், ஐ.நா.சபையில் சீர்திருத்தங்கள், எல்லை கடந்த பரிவர்த்தனை, எரிசக்தி பாதுகாப்பு, வரி விதிப்புக்கு எதிர்ப்பு, பருவநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம், அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் போர்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் உள்ளிட்டவைகள் இடம்பெற்றன.</p><h2><strong>2-வது நாள் மாநாடு</strong></h2><p>டெல்லி கூட்டு பிரகடனம் ஒருமனதாக ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் 2-வது மற்றும் கடைசி நாள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டு இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள், நட்பு நாடுகளின் தலைவா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் மாநாட்டு நடைபெறும் பாரத் மண்டபத்துக்கு காலை 10 மணி முதல் வரத் தொடங்கினர். அவர்களை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். அதன்பிறகு தலைவா்கள் அதிகாரப்பூா்வமாக குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.</p><h2><strong>மீள்திறன்</strong></h2><p>பின்னர் ‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய வளா்ச்சிக்கான எதிர் காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் அமர்வு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் மீண்டும் ஓன்றுகூடி ஆலோசனை நடத்தினார்கள்.</p><h2><strong>இந்த அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:-</strong></h2><p>இந்தியாவின் தலைமை யின் கீழ் மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்ன்மை ஆகிய 4 முக்கிய அம்சங்களில் எங்கள் முழு கவனத்தையும் செலுத்தி உள்ளோம். உங்கள் ஒத்துழைப்பு-ஆதரவுடன், நமது கூட்டுப் பார்வையை அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு சூழலாக மாற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.</p><p>இன்று உலகில் பதற்றங் கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது சாமானிய மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே பிரிக்ஸ் குழுவிற்குள் மீள்திறனை வலுப்படுத்து வதற்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளித்து உள்ளோம்.</p><h2><strong>பேரிடர் மேலாண்மை</strong></h2><p>இதன் அடிப்படையில், தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் அவற்றை எதிர்கொள்வதற்கும் பிரிக்ஸ் ஒருங்கிணைந்த முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு குறித்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மைக்காக முன்கூட்டியே எச்சரிக்கும் தரவு ஒருங்கி ணைப்பு வழிகாட்டுதல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பிரிக்ஸ் தளவாட விநி யோகச் சங்கிலி ஒத்து ழைப்புக் கட்டமைப்பு என்பது நமது விநியோகச் சங்கிலிகளை மேலும் நம்பகமானதாகவும், மீள்திறன் கொண்டதாகவும் மாற்ற உதவும்.</p><h2><strong>செயற்கை நுண்ணறிவு</strong></h2><p>டிஜிட்டல் வேளாண்மைக்கான பிரிக்ஸ் வலையமைப்பு விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த முன்முயற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை விவசாயிகளின் தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். வேளாண்மை துறையில் செயற்கை நுண்ணறிவு உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.</p><h2><strong>எதிர்மறை விளைவுகளை</strong></h2><p>தொழில்நுட்பம் மற்றும் முக்கிய கனிமங்களை ஆயுதமாக்குவது நமது கூட்டு முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடும். பொது வளர்ச்சிக்கு தடைகளை உருவாக்கும். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) ஆயுதமாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். தொழில்நுட்பத்தின் பலன் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும். போர்களால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.</p><h2><strong>நம்பிக்கை அதிகரிப்பு</strong></h2><p>பிரிக்ஸ் அமைப்பின் மீதான தெற்குலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. தெற்குலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் வலிமை என்பது நமது பன்முகத்தன்மை மற்றும் ஒத்துழைப்பில்தான் உள்ளது. நாம் வெவ்வேறு சூழல்களைச் சார்ந்த வர்களாக இருக்கலாம். ஆனால் ஒத்துழைப்பின் மூலம் ஒன்றிணைந்து உயர்ந்து, மனிதகுலத்திற்காக மலர்கிறோம். பல்வேறு கலாச்சாரங்களை இந்த கூட்டம் ஒருங்கிணைத்து உள்ளது. பிரிக்ஸ் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும்.</p><h2><strong>பிரிக்ஸ்</strong></h2><p>பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்பு என்பது அரசாங்கங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய முயன்று உள்ளோம். இதில் எங்கள் தொழில் முனைவோர்கள், விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்களும் தீவிரப் பங்கேற்பாளர்களாக திகழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.</p><p>இவ்வாறு மோடி பேசினார்.</p><p>இந்த அமர்வு முடிந்த பிறகு டெல்லி கூட்டு பிரகடனம் வெளியிடப்படும். அதனுடன் மாநாடு நிறைவு பெறும்.</p><h2><strong>மோடி பேச்சுவார்த்தை</strong></h2><p>இன்றைய மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி 7 நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில்ரம போசா மற்றும் கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து, புருண்டி, உகாண்டா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>தெற்கு ரயில்வேயில் தொழில் பழகுநர் நியமனம்: தமிழர்களின்  வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை  முறியடிக்க வேண்டும் - அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/apprentice-recruitment-in-southern-railway-the-conspiracy-to-hand-over-opportunities-meant-for-tamils-to-people-from-other-states-must-be-thwarted-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/apprentice-recruitment-in-southern-railway-the-conspiracy-to-hand-over-opportunities-meant-for-tamils-to-people-from-other-states-must-be-thwarted-anbumani#comments</comments><guid isPermaLink="false">5ce1adb9-04db-4d43-8122-8d8b5376c536</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:22:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:22:59.815Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தெற்கு ரயில்வே,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/y62a542b/New-Project-2026-09-13T135149.186.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தெற்கு ரயில்வேயில் தொழில் பழகுநர் நியமனம்: தமிழர்களின்  வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை  முறியடிக்க வேண்டும் - அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/y62a542b/New-Project-2026-09-13T135149.186.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு ரயில்வே பணிமனைகளில் காலியாக உள்ள 6,171 தொழில் பழகுநர் பயிற்சி இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details">அன்புமணி ராமதாஸ்</a> வலியுறுத்தியுள்ளார்.</p><p>மேலும் இதற்காக ரயில்வே வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“தெற்கு ரயில்வேயின்  தமிழ்நாடு எல்லைக்குபட்பட்ட பணிமனைகளில்    தொழில் பழகுநர்கள் பயிற்சிக்காக 6,171 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. </p><p>வழக்கமான விதிகளை புறந்தள்ளிவிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கையின் முலம் தமிழ்நாட்டில் உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க  தெற்கு ரயில்வே  முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.</p><h2>6,171 பயிற்சி இடங்கள்</h2><p>தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்திய பணிமனை, சேலம், பெரம்பூர் கேரஜ் மற்றும் வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை,  கோவை போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை  ஆகிய இடங்களில்  6,171 தொழில் பழகுநர் பயிற்சி இடங்கள் காலியாக உள்ளன.  </p><p>அவற்றை நிரப்புவதற்கு இம்மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கான அறிவிக்கையில் தான்  விதிமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. </p><p>22.07.2002 தேதியிட்ட ரயில்வே வாரிய சுற்றறிக்கை மற்றும் 05.05.1984 - தேதியிட்ட  தொழில் பழகுநர் தேர்வு வழிகாட்டி விதிமுறைகளின்படி பணி இடங்களில் இருந்து 100 கி.மீ சுற்றளவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். </p><p>ஆனால்,  இந்த விதியை மீறி வட இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தெற்கு இரயில்வேயில்  நியமிக்கப்படுவதற்கு  எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என  2019-ஆம் ஆண்டில் விதிகள் மாற்றப்பட்டன.</p><h2>விதிமீறல்</h2><p>ஆனால், இந்த  விதியும் இப்போது மீறப்பட்டுள்ளது. தொழில் பழகுநர் நியமன அறிவிக்கையில், தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.  </p><p>அதுமட்டுமின்றி, தட்சிண கன்னடா பகுதி, ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் பகுதி மற்றும் கேரளாவில் இருப்பவர்களும், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு போன்ற பிற மாநிலங்களில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>வேலைவாய்ப்பு உரிமை</h2><p>இதன் மூலம் தமிழ்நாடு இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் பழகுனர் பணி பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை அனுமதிக்க முடியாது.</p><p>கால் நூற்றாண்டுக்கும் கூடுதலாகவே  தெற்கு தொடர்வண்டித்துறையில் உள்ள பணிகளை பிற மாநிலத்தவர் பறித்துக் கொள்கின்றனர். </p><p>தொழில் பழகுநர் வாய்ப்புகளும் அதே போல் பறிக்கப்பட்டு வந்த நிலையில் தான், நீண்ட போராட்டத்தின் மூலம் 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாடு இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை மீட்டெடுக்கப்பட்டது. </p><h2>தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும்</h2><p>அந்த உரிமைக்கு தான் இப்போது மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு இளைஞர்களின் தொழில் பழகுநர் வாய்ப்புகளை  பறிக்கும் நோக்கம் கொண்ட அறிவிக்கையை  தெற்கு ரயில்வே உடனடியாக ரத்து செய்ய வேண்டும். </p><p>தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் இந்தப் பொறுப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை சேர்த்து புதிய ஆள்தேர்வு அறிவிக்கையை  தெற்கு ரயில்வே புதிதாக வெளியிட வேண்டும். இதற்காக ரயில்வே வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு அழுத்தம்  தர வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இஷாராணி பரூவா அதிர்ச்சி தோல்வி</title><link>https://www.maalaimalar.com/sports/isharani-baruah-lose-final-in-vietnam-open-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/isharani-baruah-lose-final-in-vietnam-open-badminton#comments</comments><guid isPermaLink="false">78a4517f-63de-4270-9129-26d913c98bf1</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:07:41 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:07:41.647Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>isharani baruah,இஷாராணி பரூவா,vietnam open badminton,வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/40rbjd2n/baruah.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ isharani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/40rbjd2n/baruah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் இஷாராணி பரூவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.</strong></em></p><p>வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.</p><p>இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் இஷாராணி பரூவா, தாய்லாந்தின் சரன்ரக் விதித்சன் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய தாய்லாந்து வீராங்கனை 21-8, 21-15 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.</p><p>இதன்மூலம் இந்தியாவின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE">இஷாராணி பரூவா</a> அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p>ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டைய்ர மற்றும் கலப்பு இரட்டையர் என அனைத்துப் பிரிவிலும் இந்திய அணி ஏமாற்றம் அளித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பாதியில் நின்று மீண்டெழுந்த &apos;தி டார்க் ஹெவன்&apos; திரைப்படம்  - சவால்களை பகிர்ந்த படக்குழுவினர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dark-heaven-team-shares-challenges-before-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/dark-heaven-team-shares-challenges-before-release#comments</comments><guid isPermaLink="false">2d14d39b-5d20-4122-a526-ed4e546ae971</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:05:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:05:44.895Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>the dark heaven,தி டார்க் ஹெவன்,Rithvika,crime thriller movie,Balaji Director,Siddhu,Tharshika</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/uoakgsyf/The-Dark-Heaven" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ The Dark Heaven  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/uoakgsyf/The-Dark-Heaven?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்ற 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழாவில், படம் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் திரையரங்கு அனுபவத்தின் முக்கியத்துவம் குறித்து படக்குழுவினர் தங்களது உணர்வுப்பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். </p><p>இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">பிக்பாஸ் </a>நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த நாட்டார் கதை பின்னணி கொண்ட சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் வரும் செப்டம்பர் 18 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. </p><h2><strong>நட்சத்திர பட்டாளம்</strong></h2><p>'தி டார்க் ஹெவன்' படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE">ரித்விகா </a>ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.</p><p>இப்படத்திற்கு ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளன.</p><p>கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,முக்கூடல்,தென்காசி போன்ற பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.</p><p>இப்படத்தில் தனது அனுபவங்களை இயக்குனர் மற்றும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.</p><figure><img alt="The Dark Heaven  " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ex7w3oe4/The-Dark-Heaven" /></figure><h2><strong>இயக்குனர் - பாலாஜி</strong></h2><p>பாதியில் நின்ற படத்தை மீண்டும் எடுத்து முடிப்பது மனரீதியாக பெரும் அழுத்தம் என்றும், அந்த நெருக்கடியில் சரண், கோபால் மற்றும் படக்குழுவினர் உறுதுணையாக இருந்ததாகவும், கடந்த காலத்தை பற்றி கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட சித்து மீது பெரும் மரியாதை ஏற்பட்டதாகவும் கூறிய இயக்குநர் பாலாஜி, இது நாட்டார் கதையை மையமாக கொண்ட த்ரில்லர் என்றும் ரித்விகாவின் வருகைக்கு பிறகு படத்தின் தரம் உயர்ந்ததாகவும் தெரிவித்தார். </p><p>படத்தைப் பார்த்து விட்டு உங்கள் உங்கள் நேர்மையான விமர்சனங்களைச் சொல்லுங்கள் .நல்லதைக் கேட்டுக்கொள்கிறோம். கேட்டதை மாற்றிக் கொள்கிறோம் என்றும் கூறினார்.</p><h2><strong>நடிகை - ரித்விகா</strong></h2><p>பெரிய படங்களால் தள்ளிப்போன 'தி டார்க் ஹெவன்' செப்.18-ல் உறுதியாக வெளியாகிறது என்றும், ஒரே மாதிரியான த்ரில்லர் படங்களுக்கு மத்தியில் இது வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் என்றும், ஒரு ஷாட்டுக்காக மணிக்கணக்கில் காத்திருந்து இருமடங்கு உழைப்பை படக்குழு கொடுத்துள்ளதாகவும் நடிகை ரித்விகா தெரிவித்தார்.</p><figure><img alt="The Dark Heaven  " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/vjx7g5el/The-Dark-Heaven" /></figure><h2><strong>கதை நாயகன் - சித்து</strong></h2><p>சாலிகிராமத்தில் சின்ன வேடங்களுக்காக அலைந்த தனக்கு இதுவே முதல் படம் என்பதே சாதனை என்றும், முதல் படத்திலேயே கிடைத்தற்கரிய காப் ஸ்டோரி - த்ரில்லர் கதாபாத்திரம் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றும், பழைய கதை பற்றி கவலைப்படாமல் படத்தை மேலே கொண்டு செல்வதில் கவனம் செலுத்தியதாகவும், படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்ததாகவும் நாயகன் சித்து தெரிவித்தார்.</p><h2><strong>இசையமைப்பாளர் - சக்தி பாலாஜி</strong></h2><p>நான் ஏற்கெனவே ’உடன்பால்’, ’ஜாக்கி ’ படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். ஆனால் முதல்முறையாக க்ரைம் த்ரில்லர் படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம் என்றும், இப்படம் பெரிய படத்திற்குரிய திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்பதால் அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.</p><h2><strong>பிக் பாஸ் புகழ் - தர்ஷிகா</strong></h2><p>'தி டார்க் ஹெவன்' தான் தனது முதல் படம் என்றும், த்ரில்லர் படங்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் இப்படம் அனைவரும் விரும்பும் படமாக இருக்கும் என நம்புவதாகவும், படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்துள்ளதால் செப்.18-ல் திரையரங்கில் பார்த்து ஆதரிக்குமாறும் நடிகை தர்ஷிகா கேட்டுக்கொண்டார்.</p><h2><strong>ஒளிப்பதிவாளர் - மணிகண்டன்</strong></h2><p>இயக்குநர் பாலாஜியுடன் 'டி3'க்கு பிறகு இது இரண்டாவது படம் என்றும், க்ரைம் த்ரில்லருக்காக அழகும் மர்மமும் நிறைந்த இடங்களை தேடி கண்டுபிடித்து, வாகனம் செல்ல முடியாத காடு, மலை பகுதிகளுக்கு கருவிகளை சுமந்து சென்று சிரமப்பட்டு படமாக்கியதாகவும், ஆனால் காட்சிகளை பாராட்டும்போது அந்த சிரமம் மறந்து விடுவதாகவும் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொழில்துறை அமைச்சரின்றி தொழிற்பயணம்: யாரை பார்க்கச் சென்றார் என முதலமைச்சர்தான் கூற வேண்டும் - நயினார் நாகேந்திரன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/industrial-tour-without-the-industries-minister-only-the-chief-minister-can-say-whom-he-went-to-meet-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/industrial-tour-without-the-industries-minister-only-the-chief-minister-can-say-whom-he-went-to-meet-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">845555ed-e43d-4e56-8205-947402e27db8</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:58:43 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:58:43.603Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/d8b50pn1/New-Project-2026-09-13T132637.629.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழில்துறை அமைச்சரின்றி தொழிற்பயணம்: யாரை பார்க்கச் சென்றார் என முதலமைச்சர்தான் கூற வேண்டும் - நயினார் நாகேந்திரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/d8b50pn1/New-Project-2026-09-13T132637.629.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,</p><p>“சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. சட்டசபையில் நடந்தவற்றை மக்கள் பார்த்துள்ளனர். பல்வேறு சபாநாயகர்களை இந்த சட்டமன்றம் பார்த்துள்ளது.</p><p>கடந்த காலங்களில் பல இனம், பல மதங்களை சேர்ந்தவர்கள் சபாநாயகர்களாக பணியாற்றிய நிலையில்,  இன்று மதம் சார்ந்த ஒரு சபாநாயகர், மதம் சார்ந்த அமைச்சர்களை சட்டமன்றத்தில் பார்க்க முடிந்தது. இதை நான் சொன்னால் தவறாக முடியும்.</p><p>சட்டமன்ற நிகழ்வை பலர் ரசித்தனர், சிலர் ஆதரித்தனர், நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குதிரை பேரத்தால் சட்டமன்ற தேர்தல் முடிந்த 3 மாதத்திலேயே இடைத்தேர்தல்.</p><p>நமது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami">முதலமைச்சர் விஜய்</a> லண்டன் சென்றுள்ளார். உடன் யார் யாரோ எல்லாம் சென்றுள்ளதாக கூறுகிறார்கள். உண்மையில் முதலீடுகளை ஈர்க்கத்தான் சென்றுள்ளரா? இந்த 3,4 நாட்களில் எத்தனைப் பேரை சந்திக்க முடியும்? இதெல்லாம் ஒரு கேள்விக்குறி.</p><p>சொந்த வேலைக்காக சென்றுள்ளார் என்றால், நாம் எதுவும் கேட்கமுடியாது. ஆனால் முதலீட்டாளர்களை ஈர்க்க சென்றுள்ளார் என்றால், யார் யாரை சந்தித்தார், எத்தனை கோடி முதலீடு வருகிறது? என்பதை எல்லாம் அவர் அறிவிக்க வேண்டும்.</p><p>இடதுசாரிகள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அது சந்தர்ப்பவாத அரசியலாக கருதப்படும். ” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் லண்டனில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை- எடப்பாடி பழனிசாமி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">7fa9907e-8373-460a-8eea-1a87138cf85c</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:51:09 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:51:09.375Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,அதிமுக.,tvk,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/at55x74e/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay-Edappadi Palaniswami ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/at55x74e/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என எந்த தகவலும் வரவில்லை என்றார்.</p><p>திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தின் தற்போதைய நிதியமைப்பைக் கடுமையாக சாடியுள்ளார். அரசு பெரும் கடனில் இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் அமைப்பது போன்ற அவசியமற்ற அறிவிப்புகள் வெளியாவது குறித்து அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.</p><h2>புதிய தலைமை<strong>ச் செயலகம் தே</strong>வையா?</h2><p>மாநிலம் பல லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். "தற்போது இருக்கும் தலைமைச் செயலகக் கட்டமைப்பே போதுமானது. தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீரடைந்த பிறகு இத்தகைய திட்டங்களைக் கையில் எடுக்கலாம்" என்று அவர் கூறினார். மேலும், புதிய தலைமைச் செயலகத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பொருத்தமான இடமல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.</p><h2>முதலமை<strong>ச்சரின் லண்ட</strong>ன் பயணம் </h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/car-race-flagged-off-by-chief-minister-vijay-ajiths-team-impresses-by-securing-3rd-place">முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் </a>குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என்பதற்கு எவ்விதப் போதிய ஆதாரங்களும் அல்லது அதிகாரப்பூர்வத் தகவல்களும் இல்லை என குறிப்பிட்டார். வெளிநாட்டுப் பயணங்களில் தொழில் முதலீடுகளை ஈர்த்ததற்கான எந்தவிதப் புகைப்படங்களோ விளக்கங்களோ வெளியாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>2 தொகுதிகளிலும் <strong>அதிமுக</strong> மகத்தான வெற்றி பெறும்</h2><p>தவெகவில் இணைந்துள்ள முன்னாள் நிர்வாகிகள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் குறித்துப் பேசிய அவர், "கட்சியிலிருந்து ராஜினாமா செய்தவர்களுக்கு அங்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் அவர்களை மக்கள் நிச்சயமாக தோற்கடிப்பார்கள்" என்று தெரிவித்தார். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவே மகத்தான வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னம்பிக்கையுடன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;ரசிகர்கள் இல்லையென்றால் பிரபலங்கள் பூஜ்ஜியம்&quot; - ஆலியா பட்டின் மெய்க்காப்பாளர் செயலால் வெடித்த நெட்டிசன்களின் கோபம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/fans-are-everything-celebrities-are-nothing-alia-bhatts-makeup-artist-sparks-outrage</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/fans-are-everything-celebrities-are-nothing-alia-bhatts-makeup-artist-sparks-outrage#comments</comments><guid isPermaLink="false">f3855968-8788-4359-90ee-763dff96c6a3</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:11:49 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:11:49.889Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,alia bhatt,ஆலியாபட்,Alia Bhatt Bodyguard,Bollywood Controversy,Alia Bhatt Fans</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ka32frqj/Alia-Bhatt" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Alia Bhatt ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ka32frqj/Alia-Bhatt?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகையான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D">ஆலியா பட்</a>, தனது புதிய திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பையில் </a>உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வந்திருந்தார்.</p><p>இந்த விழாவிற்கு அவர் தனது சகோதரி ஷாகின் பட் உடன் வருகை தந்திருந்தார். விழா மிகச் சிறப்பாக முடிவடைந்த நிலையில், அவர் அரங்கில் இருந்து வெளியேறி தனது காரை நோக்கிச் சென்றபோது இந்த சர்ச்சை சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><h2><strong>செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த அவமானம்!</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D">ஆலியா பட்டை</a> நேரில் கண்டதும் உற்சாகமடைந்த ஏராளமான ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முண்டியடித்தனர். அப்போது அங்கு கூடி நின்ற கூட்டத்தில் இருந்த ஒரு தீவிர ரசிகர், ஆலியா பட்டுடன் மிக அருகில் நின்று ஒரு செல்பி எடுக்க முயன்றார்.</p><p>இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஆலியா பட்டின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர் , அந்த ரசிகரை இரண்டு முறை மிகக் கொடூரமாகப் பிடித்து பின்னோக்கித் தள்ளிவிட்டார். </p><p>இந்தத் தள்ளுமுள்ளு சம்பவத்தின் போது நடிகை ஆலியா பட், மெய்க்காப்பாளரைத் தடுக்காமல் அமைதியாகத் தனது காரை நோக்கி நடந்து சென்று ஏறியதாகக் கூறப்படுகிறது.</p><h2><strong>சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!</strong></h2><p>ரசிகர் தள்ளிவிடப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி அங்கிருந்த கேமராக்களில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது. </p><p>இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.</p><h2><strong>நெட்டிசன்களின் காட்டமான விமர்சனங்கள்</strong></h2><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இணையவாசிகள் பிரபலங்களின் பின்னால் ஓடும் ரசிகர்களை நோக்கியும், அந்த மெய்க்காப்பாளரின் அநாகரிகச் செயலைக் கண்டித்தும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.</p><p>"பிரபலங்களுடன் ஒரு புகைப்படம் எடுப்பதற்காக உங்களை நீங்களே ஏன் இப்படிப் பிறர் முன்னிலையில் அவமானப்படுத்திக் கொள்கிறீர்கள்? உங்கள் சுயமரியாதையை இழக்காதீர்கள்" என ரசிகர்கள் சிலருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.</p><p>மேலும் "பிரபலங்களின் புகழுக்கு இந்த ரசிகர்கள்தானே காரணம்? ரசிகர்கள் இல்லையென்றால் இந்த பிரபலங்கள் ஒன்றும் கிடையாது என்பதை அவர்கள் உணர வேண்டும்" எனச் சிலர் காட்டமாக விமர்சித்துள்ளனர்.</p><p>தன் கண் முன்னே ஒரு ரசிகர் தள்ளிவிடப்படும் போது, அதைத் தடுத்து நிறுத்தாமல் மௌனம் காத்த ஆலியா பட்டின் மீதும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p><p>பாலிவுட் வட்டாரத்தில் இந்த 'பாடிகார்டு' சர்ச்சை தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி எச்சரிக்கை: சீன அதிபர் முன்னிலையில் முக்கிய கனிமங்கள் குறித்து பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-summit-modi-warning-on-critical-minerals-in-front-of-xi#comments</comments><guid isPermaLink="false">1c7ac538-1773-4517-ab26-85a6720a19df</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:08:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:08:59.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BRICS Summit,pm modi,Chinese president,பிரிக்ஸ் உச்சிமாநாடு,சீன அதிபர்  ஜின்பிங்,பிரதமர் மோடி,Critical Minerals</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/mmuvyclc/mo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/mmuvyclc/mo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபகாலமாக நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், தொற்றுநோய்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் உலகளவில் விநியோகச் சங்கிலியை எவ்வாறு சீர்குலைத்துள்ளன.</p><p>டெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்திய இந்தியப் <a href="https://www.maalaimalar.com/news/national/will-a-brics-currency-be-created-to-rival-the-dollar-here-is-the-answer">பிரதமர் நரேந்திர மோடி</a>, முக்கியக் கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆயுதமாக்குவது உலகளாவிய பொதுவான பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என்று எச்சரித்துள்ளார்.</p><p>சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி இந்த நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். உலகளவில் முக்கியக் கனிமங்கள் மற்றும் அரிதான மண் வளங்கள் விநியோகத்தில் சீனா பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், பிரதமரின் இந்த உரை சர்வதேச அரங்கில் சீனாவுக்கான நேரடிச் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.</p><h2>வளங்களின் <strong>சமமான ப</strong>யன்பாடு</h2><p>'மீள்தன்மை,  ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை' (Resilience, Innovation, Cooperation, and Sustainability) என்ற தலைப்பிலான பிரிக்ஸ் அமர்வில் பேசிய பிரதமர் மோடி, தொழில்நுட்பங்கள் மற்றும் அத்தியாவசிய கனிம வளங்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒரு சில நாடுகள் மட்டுமே தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கனிம வளங்களை மற்ற நாடுகளுக்கு எதிரான அரசியல் அல்லது பொருளாதார ஆயுதமாகப் பயன்படுத்துவது விநியோகச் சங்கிலியைப் பாதிப்பதுடன், அனைத்து நாடுகளின் கூட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கும் தடையை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>சமீபகாலமாக நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், தொற்றுநோய்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் உலகளவில் விநியோகச் சங்கிலியை எவ்வாறு சீர்குலைத்துள்ளன என்பதைப் பற்றிப் பிரதமர் மோடி விவரித்தார். இன்றைய உலகில் எந்தவொரு பொருளாதார நெருக்கடியும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை என்றும், அது உலகளாவிய அளவில் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, விநியோகச் சங்கிலிகளில் வெளிப்படைத்தன்மையையும் சமநிலையையும் பேணுவது அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும் அவசியம் என்பதை இந்தியத் தரப்பு உறுதியாக எடுத்துரைத்துள்ளது.</p><p>மின்னணு சாதனங்கள், பசுமை ஆற்றல் நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பிற்கு தேவையான முக்கியக் கனிமச் சந்தையில் சீனாவே பெரும் பங்கு வகிக்கிறது. இத்தகைய சூழலில், பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக இந்தியா முன்னெடுக்கும் கொள்கைகள் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப தழுவலில் வெளிப்படைத்தன்மையும், கூட்டுப் பங்களிப்பும் மட்டுமே உலக நாடுகளுக்கு இடையிலான பொருளாதார இடைவெளியைக் குறைக்கும் என்பதில் இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">207ff3eb-e8ca-4b4f-a96d-35a34c4d7bf0</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:03:32 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:03:32.448Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Rail,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2prmt44l/metro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ metro rail]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2prmt44l/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விநாயகர் சதுர்த்தியை அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</strong></em></p><p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.</p><p>காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும என தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;எல்லாம் தெரிஞ்சவன் தலைவன் ஆகுறதெல்லாம் அந்த காலம்: எல்லாருக்கும் தெரிஞ்சவன் தலைவர் ஆகுறதுதான் இந்த காலம்&apos; - ப்ளடி பாலிடிக்ஸ் டீசரின் பரபரப்பு வசனம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/from-all-knowing-leader-to-known-by-all-leader-viral-bloody-politics-teaser-line</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/from-all-knowing-leader-to-known-by-all-leader-viral-bloody-politics-teaser-line#comments</comments><guid isPermaLink="false">625cd4fc-c8fb-45f7-b2e5-7fa4a28573c9</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:42:38 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:42:38.826Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Gautham Karthik,Sam C.S,கௌதம் கார்த்திக்,Bloody Politics,பிளடி பாலிடிக்ஸ்,Selva Raghavan,Dhina Raghavan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/fynra9vk/Bloody-Politics" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Bloody Politics ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/fynra9vk/Bloody-Politics?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சினிமாவில் தற்போதைய ட்ரெண்டிங்காக அரசியல் கதைக் களங்கள் மாறி வரும் நிலையில், நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D">கௌதம் ராம் கார்த்திக்</a> நடிப்பில் முற்றிலும் ஒரு புதிய அரசியல் அதிரடித் திரைப்படமாக உருவாகியுள்ள '<a href="https://www.maalaimalar.com/topic/bloody-politics">ப்ளடி பாலிடிக்ஸ்</a>' படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. </p><p>இந்த மாஸ் டீசரை முன்னணி நடிகர் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நேற்று தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>107 விநாடிகள்... தெறிக்கும் அரசியல் ஆக்ரோஷம்!</strong></h2><p>அறிமுக இயக்குநர் தினா ராகவன் எழுத்து மற்றும் இயக்கத்தில், தென் சென்னையின் அடிமட்ட அரசியல் மற்றும் வார்டு கவுன்சிலர் தேர்தலை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் மிக யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>நேற்று வெளியான 107 விநாடிகள் கொண்ட இந்த டீசர், ஆரம்பம் முதலே விறுவிறுப்பான காட்சிகளால் நிரம்பியுள்ளது. </p><p>எப்போதும் துடிப்பான சாக்லேட் பாயாக வலம் வந்த கௌதம் ராம் கார்த்திக், இதில் '<a href="https://www.maalaimalar.com/topic/bloody-politics">இளையா</a>' என்ற கதாபாத்திரத்தில், அரசியல்வாதியாக துடிக்கும் ஒரு ஆக்ரோஷமான எளிய இளைஞனாக முற்றிலும் மாறுபட்ட புதிய மாஸ் அவதாரத்தில் மிரட்டியுள்ளார்.</p><h2><strong>விவாதப் பொருளாக மாறிய 'ப்ளடி' வசனம்!</strong></h2><p>இந்த டீசரின் ஹைலைட்டாக அமைந்துள்ள ஒரு வசனம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது<em>.</em></p><h2><em>"எல்லாம் தெரிஞ்சவன் தலைவன் ஆகுறதெல்லாம் அந்த காலம்... எல்லாருக்கும் தெரிஞ்சவன் தலைவன் ஆகுறதுதான் இந்த காலம்!" </em></h2><p><em>என்ற </em>பன்ச் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது. இப்படத்திற்கு பிரபல இயக்குனர் ராஜு முருகன் கூர்மையான வசனங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>கவனம் ஈர்க்கும் செல்வராகவன் - பி. வாசு கூட்டணி!</strong></h2><p>இப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான <strong><a href="https://www.maalaimalar.com/topic/selva-raghavan">செல்வராகவன் </a>மற்றும் பி. வாசு</strong> ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>குறிப்பாக, செல்வராகவன் ஒரு இரக்கமற்ற மூத்த அரசியல் தலைவராக டீசரில் காட்டியுள்ள லுக் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இவர்களுடன் அஞ்சனா நேத்ருன், ரோபி, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.</p><h2><strong>சாம் சி.எஸ்.-இன் அதிரடி இசை!</strong></h2><p>பிரபல தயாரிப்பாளர் கணேஷ் கே. பாபு தனது 'Draft by GKB' நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வழங்குகிறார். படத்திற்கு <a href="https://www.maalaimalar.com/topic/sam-cs">சாம் சி.எஸ்</a>. இசையமைத்துள்ளார். டீசரின் பின்னணி இசை படத்தின் தீவிரத் தன்மையை அப்படியே கடத்துவதாக உள்ளதென சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.</p><p>தற்போது யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ள இந்த டீசர், 'ப்ளடி பாலிடிக்ஸ்' ஒரு தரமான அரசியல் த்ரில்லராக இருக்கும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாளை சதுர்த்தி விழா கொண்டாட்டம்- தமிழகம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-vinayagar-chaturthi-worhip</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-vinayagar-chaturthi-worhip#comments</comments><guid isPermaLink="false">a497fa23-4fa6-4e14-b226-322b9d72151b</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:41:41 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:41:41.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar,விநாயகர்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="720" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/utc6h9ty/Vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/utc6h9ty/Vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. </p><p>தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், குடியிருப்போர் நலச் சங்கத்தினரும் தங்களது பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள்.</p><p>ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.</p><h2><strong>ஒரு லட்சம் சிலைகள்</strong></h2><p>சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சேலம், வேலூர், விழுப்புரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் நாளை பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்படுகிறது.</p><h2><strong>போலீஸ் கமிஷனர்</strong></h2><p>சென்னையில் கடந்த ஆண்டு 1,519 சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று இந்த முறையும் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்திருக்கிறார்கள். இதேபோன்று ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட சிலைகளும், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட சிலைகளும் வைக்கப்பட உள்ளன.</p><h2><strong>3 ஆயிரம் சிலைகள்</strong></h2><p>இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் நாளை பூஜைக்காக நிறுவப்பட உள்ளன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும், சிலைகளை அமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும், விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 29 இந்து அமைப்புகளை சேர்ந்த 200 பேர் கலந்து கொண்டனர்.</p><h2><strong>கட்டுப்பாடுகள்</strong></h2><p>விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-</p><p>விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகே விழாவை நடத்துபவர்கள் சிலைகளை நிறுவ வேண்டும்.</p><p>தீயணைப்புத்துறை, மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.</p><h2><strong>10 அடிக்கு மேல்</strong></h2><p>* விநாயகர் சிலைகள் சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களால் செய்திருக்க கூடாது.</p><p>* நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்தில் இருந்து 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.</p><p>* பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.</p><p>* மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.</p><h2><strong>24 மணி நேரமும்</strong></h2><p>* சிலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த 2 தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.</p><p>* நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான விளம்பர பலகைகைள வைக்கக்கூடாது.</p><p>* தீ விபத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் பாதுகாப்புகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>* விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கடலில் கரைக்க வேண்டும்.</p><h2><strong>பட்டாசு வெடிக்க தடை</strong></h2><p>* விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.</p><p>* விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடத்தில் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்.</p><p>இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்துவதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>“பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை” - முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி? </title><link>https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">1e7c9140-72e1-48d0-85fe-ac149b5a49d7</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:39:40 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:39:40.424Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் விஜய் சேதுபதி,Actor vijay Sethupathi,Bigg Boss Tamil,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,பிக்பாஸ் தமிழ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/y1wwzx97/New-Project-2026-09-13T120557.309.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை” - 
முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி? ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/y1wwzx97/New-Project-2026-09-13T120557.309.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><content:encoded><![CDATA[ <p>‘பிக்பாஸ் சீசன் 10’ நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குகிறார்.</p><p>இந்நிலையில் நேற்று (செப்.12) முதல்முறையாக இந்த சீசனில் வந்தவர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடினார். </p><p>இதுதொடர்பான புரோமோக்கள் வெளியாகி உள்ளன. அந்த புரோமோக்களில் இந்த சீசனின் முதல் கேப்டன் ஷாதிகாவிடம் விஜய் சேதுபதி கேள்வி எழுப்புகிறார். </p><h2>யார் தலைவன்?</h2><p>“தலைவர் என்றால் என்னன்னே தெரியாமல், தலைமைத்துவம்னா என்னன்னு புரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும், பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது ஒரு தலைவருக்கான தரம் இல்லை. </p><p>அது ஏமாற்று வேலை.” என்று ஷாதிகாவை சாடுகிறார்.</p><p>விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijays-delayed-arrival-was-the-reason-for-the-loss-of-life-tks-elangovan">முதலமைச்சர் விஜய்</a>யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>வெறும் பேட்டிங் சாதனை மட்டுமல்ல: விராட் கோலியின் டாட்டூக்கள் சொல்லும் சுவாரஸ்ய கதைகள்!</title><link>https://www.maalaimalar.com/sports/not-just-batting-records-virat-kohlis-tattoos-tell-fascinating-stories</link><comments>https://www.maalaimalar.com/sports/not-just-batting-records-virat-kohlis-tattoos-tell-fascinating-stories#comments</comments><guid isPermaLink="false">02aeafe4-ba51-4865-b802-fe4729c41edd</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:29:02 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:29:02.442Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Virat Kohli,விராட் கோலி,Virat Kohli&apos;s tattoos,Tribal Art,விராட் கோலியின் டாட்டூக்கள்,பழங்குடியின கலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/13jt9gyj/kholi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Virat Kohli's tattoos]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/13jt9gyj/kholi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒரு கிரிக்கெட் வீரராக நாட்டின் அடையாளத்தை சுமப்பதைப் பெருமையாகக் கருதும் கோலி, தனது உடம்பில் இரண்டு சிறப்பு எண்களைப் பொறித்துள்ளார். </p><p>இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சர்வதேச அரங்கில் தனது பேட்டிங் திறமையால் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். மைதானத்தில் அவர் வெளிப்படுத்தும் அக்ரசிவ் ஆட்டம், உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டங்கள் மற்றும் துடிப்பான அணுகுமுறை போன்றவை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தவை. இருப்பினும், விளையாட்டுத் திறனையும் தாண்டி, இந்தியக் விளையாட்டு வீரர்களிடையே டாட்டூ கலாச்சாரத்தை ஒரு புதிய அலையாக மாற்றிய பெருமை கோலியையே சேரும். </p><p>அவரது உடலில் வரையப்பட்டுள்ள ஒவ்வொரு டாட்டூவும் வெறும் அழகுக்காக மட்டும் செய்யப்பட்டவை அல்ல; மாறாக, அவரது வாழ்க்கைப் பயணம், ஆன்மீகக் தேடல் மற்றும் தொழில்முறை வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களின் அடையாளங்களாக விளங்குகின்றன.</p><h2>தொடக்<strong>க கால பா</strong>தை</h2><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/neal-skupski-christian-harrison-pair-won-the-mens-doubls-title-in-us-open-tennis">கோலி </a>தனது ஆரம்ப காலத்தில் வலது முன்கையில் பழங்குடியின கலை வடிவிலான டாட்டூவை முதன்முதலில் வரைந்துகொண்டார். தொடக்கத்தில் இது ஸ்டைலுக்காகத் தொடங்கப்பட்டாலும், பின்னர் தனது இயல்பான ஆக்ரோஷத்தையும் தனித்துவ அடையாளத்தையும் வெளிப்படுத்தும் குறியீடாக இதை அவர் ஏற்றுக்கொண்டார். இதனுடன், தனது பெற்றோர் சரோஜ் மற்றும் பிரேம் ஆகியோரின் பெயர்களை இந்தியில் தனது கையில் வரைந்துள்ளார். கிரிக்கெட் வீரராக தான் உருவெடுக்க அடித்தளமிட்ட பெற்றோரின் தியாகங்களை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவும், அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த டாட்டூக்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>ஆன்மீக குறியீடுகள்</strong></h2><p>ஒரு கிரிக்கெட் வீரராக நாட்டின் அடையாளத்தை சுமப்பதைப் பெருமையாகக் கருதும் கோலி, தனது உடம்பில் இரண்டு சிறப்பு எண்களைப் பொறித்துள்ளார். 2008-இல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் 175-வது வீரராக அறிமுகமானதைக் குறிக்கும் '175' என்ற எண்ணும், 2011-இல் டெஸ்ட் போட்டிகளில் 269-வது வீரராகக் களம் கண்டதைக் குறிக்கும் '269' என்ற எண்ணும் அவரது கையில் இடம்பெற்றுள்ளன. மேலும், இடது கையில் கைலாச மலையில் தியானத்தில் இருக்கும் சிவபெருமானின் வடிவம், மன அமைதியையும் அகந்தையை அழித்து சுய முன்னேற்றத்தை அடைவதையும் குறிக்கிறது. இதன் அருகில் உள்ள ஆசிரமம் மற்றும் 'ஓம்' குறியீடு ஆகியவை தொடர் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மன அமைதியைப் பேண அவருக்கு உதவுகின்றன.</p><h2>போ<strong>ராளித் தன்மை</strong></h2><p>ஜப்பானிய சாமுராய் வீரரின் டாட்டூ, சாமுராய்களின் 'புஷிடோ' கொள்கைகளான நேர்மை, ஒழுக்கம், மரியாதை மற்றும் தைரியம் ஆகியவற்றை குறிப்பதாக கோலி தெரிவித்துள்ளார். அதேபோல, தோள்பட்டையில் உள்ள 'கடவுளின் கண்' டாட்டூ, தனக்கு மேலே ஒரு உயர்ந்த சக்தி இருப்பதை உணர்த்தி எப்போதும் பணிவோடு இருக்க நினைவூட்டுகிறது. </p><p>அண்மைக்காலத்தில் வரைந்துகொண்ட தாமரை மலர் மற்றும் புனித வடிவியல் டாட்டூக்கள், சவால்களில் இருந்து மீண்டு வரும் மன உறுதியையும், மறுபிறப்பையும், ஆன்மீக முதிர்ச்சியையும் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு, விராட் கோலியின் உடலில் இருக்கும் கலைப் படைப்புகள் அவரது விளையாட்டு வாழ்க்கையின் மைல்கற்களையும், ஒரு மனிதனாக அவர் அடைந்துள்ள மனமாற்றத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சுயசரிதையாகவே அமைந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் &apos;மீசைய முறுக்கு 2&apos;  படத்தின் டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hiphop-aathi-meesaiya-murukku-2-trailer-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/hiphop-aathi-meesaiya-murukku-2-trailer-released#comments</comments><guid isPermaLink="false">1fddbb21-8cba-402f-a777-5cda77628249</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:10:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:10:44.557Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>ஹிப்ஹாப் தமிழா ஆதி,Hiphop Tamizha Adhi,yogibabu,Meesaya Murukku 2,மீசைய முறுக்கு 2,GaanaVsCarnatic</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/lhphz4hj/Meesaya-Murukku-2-Trailer" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Meesaya Murukku 2  Trailer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/lhphz4hj/Meesaya-Murukku-2-Trailer?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இளைஞர்களின் ஃபேவரைட் ஸ்டார் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF">ஹிப்ஹாப் தமிழா ஆதி </a>நடிப்பிலும், இயக்கத்திலும் மற்றும் இசையிலும் உருவாகியுள்ள மாஸ் கமர்ஷியல் எண்டர்டெய்னர் திரைப்படமான 'மீசைய முறுக்கு 2' படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><h2><strong>துள்ளலான இசை, இளமை ததும்பும் எனர்ஜி!</strong></h2><p>கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">மீசைய முறுக்கு</a>' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. </p><p>தந்தை கனவை மகன் நிறைவேற்றும் எமோஷனல் பின்னணி, இரண்டு வெவ்வேறு காலகட்டங்களின் இசைப் பயணம் மற்றும் இன்றைய தலைமுறை இளைஞர்களை தட்டியெழுப்பும் துள்ளலான மாஸ் வசனங்களுடன் இந்த டிரெய்லர் பேக் செய்யப்பட்டுள்ளது.</p><p>ஆதியின் வழக்கமான எனர்ஜி, மெகா பட்ஜெட் பிரம்மாண்டம் மற்றும் ஹிப்ஹாப் மியூசிக் என தியேட்டர் ரசிகர்களுக்கான அத்தனை அம்சங்களும் இதில் நிறைந்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>டிரெய்லர் காட்டும் சுவாரசியக் கதைக்களம்!</strong></h2><p>இந்தத் திரைப்படத்தின் கதையானது வட சென்னைப் பின்னணியில் மூன்று தலைமுறை இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.</p><p> குறிப்பாக, பாரம்பரியமிக்க கர்நாடக இசைக்கும், அடித்தட்டு மக்களின் வாழ்வியலோடு கலந்த சுயாதீன/கானா இசைக்கும் இடையே நடக்கும் ஒரு இசைப் போராட்டமாக இந்தத் திரைப்படம் இருக்கும் என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.</p><p>"மியூசிக்-ன்றது எமோஷன், அதை எப்படி சார் கட்டுப்படுத்த முடியும்?" போன்ற ஆதியின் மாஸ் வசனங்கள் மற்றும் "தோத்தாலும் மீசைய முறுக்கிட்டே தோப்பேன்டா" என்ற எனர்ஜியான குரல் இளைஞர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. </p><p>மேலும், 1980-களின் காலகட்டம் மற்றும் தற்காலம் என இரு வேறு காலக்கட்டங்களில் இந்த கதை நகர்வது கூடுதல் சுவாரசியம்.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் குழு!</strong></h2><p>இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக கிருத்திகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார் மற்றும் ரம்யா ரங்கநாதன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். </p><p>இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில், யோகி பாபு, கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், ஷா ரா மற்றும் ஹர்ஷத் கான். ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.</p><p>அவனி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவையும், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/lU40CPN7Ww0"></iframe></figure><h2><strong>தியேட்டர் திருவிழா!</strong></h2><p>இப்படத்தின் உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் வரும் செப்டம்பர் 25 அன்று வெளியாக இருக்கிறது. </p><p>தியேட்டர்களிலேயே கச்சேரி பார்ப்பது போன்ற ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கப் போவதாக படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர். இப்படம் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“தி.மு.க.வின் அட்டூழியங்களை நேர்மையாக எதிர்கொள்வோம்” - அமைச்சர் நிர்மல் குமார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-boldly-confront-the-dmks-atrocities-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-boldly-confront-the-dmks-atrocities-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">ddd3d8b8-cd5d-419d-b7f3-1ebf30623ed8</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:08:37 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:08:37.321Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar,A. Raja,ஆ. ராசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/fjrqo0lj/New-Project-2026-09-13T113806.056.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “தி.மு.க.வின் அட்டூழியங்களை நேர்மையாக எதிர்கொள்வோம்” - அமைச்சர் நிர்மல் குமார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/fjrqo0lj/New-Project-2026-09-13T113806.056.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மிசாவில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister">அமைச்சர் நிர்மல் குமார் </a>தெரிவித்திருந்த கருத்துகள் சர்ச்சையாகின. </p><p>அமைச்சரின் இந்தப் பேச்சு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற பேச்சை கண்டித்து திமுகவினர் நேற்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, அமைச்சர் நிர்மல்குமார் குறித்து காட்டமாக விமர்சித்திருந்தார். </p><p>இந்நிலையில் ஆ.ராசாவின் பேச்சைக் குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல் குமார் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><p>“மேடைபோட்டு என்னை பற்றியும், எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா மு.க. ஸ்டாலின்?</p><h2>திமுகவின் ஆயுதம்</h2><p>நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழ்நாடு மக்கள், குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள்?</p><p>எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு.</p><h2>மக்களால் கண்காணிக்கப்படுகிறது</h2><p>தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா?</p><p>திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர்.</p><p>அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா ?</p><p>குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.</p><p>நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழ்நாடு அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.</p><h2>திமுகவால் மட்டுமே...</h2><p>புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன். “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister#comments</comments><guid isPermaLink="false">e6924869-ee04-49ef-8adb-8a333f164972</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:51:33 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:51:33.302Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar,A. Raja,ஆ. ராசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/q3o4kxci/New-Project-2026-09-13T112023.850.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/q3o4kxci/New-Project-2026-09-13T112023.850.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இக்கூட்டத்தொடரின்போது காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். </p><p>அப்போது திமுகவை கடுமையாடி சாடிய அவர், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் செய்கை ஒன்றையும் செய்தார்.</p><h2>முதலமைச்சர் விளக்கம்</h2><p>இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இடதுசாரிகள் உள்ளிட்ட தவெகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் விஜய்யின் இந்த செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.</p><p>இதனைத்தொடர்ந்து தன்னுடைய உடல்மொழி எதேச்சையானது என்றும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டது இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்திருந்தார். </p><h2>அமைச்சர் நிர்மல்குமார் ஆதாரமின்றி பேச்சு</h2><p>இதனிடையே மு.க.ஸ்டாலின் ஒன்றும் மிசாவில் கைது செய்யப்படவில்லை, அவர் இந்திரா காந்தியை தவறாக பேசியதால் பெண்வழக்கில் கைது செய்யப்பட்டார், இதற்கு ஒன்றும் திமுக ஆர்ப்பாட்டம் செய்யத் தேவையில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் சட்டமன்றத்தில் பேசியிருந்தார்.</p><p>அமைச்சர் நிர்மல்குமார் வரலாற்றை திரித்துப் பேசுவதாகவும், ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது உண்மை எனவும் அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் மீண்டும் மீண்டும் அமைச்சர் நிர்மல்குமார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தே பேசிவந்தார். </p><h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தவெகவின் இந்தப் பேச்சினை கண்டித்து நேற்று (செப்.12) திமுக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது. அந்த வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசியிருந்தார்.</p><p>இக்கூட்டத்தில் பேசியிருந்த<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post"> எம்.பி. ஆ.ராசா</a>,  அமைச்சர் நிர்மல் குமாரை காட்டமான மொழியில் விமர்சித்திருந்தார். ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையாக தவெக கூட்டணித் தலைவர்கள் மட்டுமின்றி திமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். </p><h2>வருத்தம் தெரிவிப்பு</h2><p>இந்நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ராசா. வருத்தம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;</p><p>“தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின்  ‘அடையாளத்தை’, உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு  உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த  ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’  ‘உண்மையை’  உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;</p><p>என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அனலாசுரனை வென்ற விநாயகரும் அருகம்புல் வழிபாடும்...</title><link>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-arugampul-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-arugampul-worship#comments</comments><guid isPermaLink="false">c260ca44-2514-4b60-8ec3-2b4770164490</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2cmq48bp/vinagar6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/2cmq48bp/vinagar6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒவ்வொரு கடவுள்களுக்கும் ஒவ்வொரு மலர் விசேஷமாக கருதி படைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, அனுமனுக்கு வெற்றிலை, அம்மனுக்கு வேப்பிலை. அதுபோல விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்ததாக அருகம்புல் கருதப்படுகிறது.</p><h2>அனலாசுரன்</h2><p>முன்னொரு காலத்தில் அனலாசுரன் என்ற அசுரன் இருந்தான். அவன், தன் உடலில் இருந்து நெருப்பை கக்கி, தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்தினான். இதனால் கவலை அடைந்த தேவர்கள், விநாயகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர்.</p> <h2>விநாயகப் பெருமான்</h2><p>இதையடுத்து தேவர்களின் வேண்டுகோளை ஏற்று விநாயகர், அனலாசுரனுடன் போரிட்டார். விநாயகர் ஏவிய அனைத்து ஆயுதங்களையும் அனலாசுரன் நெருப்பை பயன்படுத்தி சாம்பலாக்கினான். இதனால் விநாயகப் பெருமான், அனலாசுரனை சிறிய உருவாக மாற்றி அப்படியே விழுங்கிவிட்டார். ஆனால் அனலாசுரனின் வெப்பத்தால் விநாயகரின் வயிறு எரிச்சலடைந்தது. இதனால் விநாயகர் வேதனை அடைந்தார்.</p> <h2>வருண பகவான்</h2><p>இதையடுத்து தேவர்கள் அனைவரும் விநாயகரை குளிர்விக்க முயன்றனர். வருண பகவான், மழை பொழிந்தார். இந்திரன், சந்தனம் பூசினார். அன்னை பார்வதி, பாற்கடலை விநாயகர் பக்கம் திருப்பிவிட்டார். சிவபெருமான் குளிர்ச்சியாக இருக்கும் பாம்பை விநாயகரின் இடுப்பை சுற்றிக் கட்டினார். ஆனால் அவர்கள் அனைவரது முயற்சியும் எந்த பலனும் தரவில்லை.</p> <h2>காஷ்யப முனிவர்</h2><p>இதையடுத்து தேவர்கள், காஷ்யப முனிவரின் உதவியை நாடினர். காஷ்யப முனிவர், 21 அருகம்புல்லை விநாயகரின் தலையில் வைத்தார். உடனேயே விநாயகரின் உடல் வெப்பம் தணிந்தது. விநாயகப் பெருமான் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அன்று முதல் விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பிடித்தது.</p> <h2>யாஷினி தேவி</h2><p>மற்றொரு புராணக்கதைபடி, யாஷினி தேவி என்ற தேவலோக மங்கை, விநாயகரை திருமணம் செய்ய விரும்பி, தவம் இருந்தார். ஆனால் இதற்கு விநாயகர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், யாஷினி தேவியின் அன்பையும், பக்தியையும் மெச்சிய விநாயகர், தனக்கு விருப்பமான பொருளான அருகம்புல்லாக மாறி தன்னுடனே இருக்கும்படி வரம் அளித்ததாக கூறப்படுகிறது.</p> <h2>நந்தி பகவான்</h2><p>ஒரு சமயம் சிவபெருமானும், பார்வதி தேவியும் தாயம் விளையாடியபோது, நடுவராக நந்தி பகவான் இருந்தார். அப்போது நந்தி பகவான், சிவனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பார்வதி நந்திக்கு சாபம் இட்டார். பின்னர் விநாயகர் சதுர்த்தியின்போது, விநாயகருக்கு உகந்த பொருளை சமர்ப்பித்து வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார். பின்னர் நந்தி, விநாயகருக்கு அருகம்புல் படைத்து சாப விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது.</p> <h2>அருகம்புல்</h2><p>உலகிலேயே முதலில் தோன்றிய மூலிகைகளில் ஒன்றாக அருகம்புல் உள்ளதாக கூறப்படுகிறது. அருகம்புல் எல்லா காலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. மழை இல்லாவிட்டாலும், கடுமையான கோடை நிலவினாலும் அருகம்புல் காய்ந்து போகுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தாலும் மீண்டும் துளிர்விடும். பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும், அருகம்புல் அளப்பரிய மருத்துவ குணம் கொண்டது.</p> <p>குளர்ச்சி நிறைந்த அருகம்புல் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. வயிற்றுப் புண், செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது. உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இவ்வாறு எண்ணற்ற பலன்களை தரும் அற்புத மூலிகையாக அருகம்புல் திகழ்கிறது.</p> <p>முழுமுதற் கடவுளான விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று, அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் விநாயகர் அருளையும், பொருளையும் அள்ளித் தருவார். மனக் கவலையை நீக்கி மன மகிழ்ச்சி அருள்வார்.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 9 பேர் பலி- அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/world/how-russias-new-drones-are-changing-the-air-war</link><comments>https://www.maalaimalar.com/news/world/how-russias-new-drones-are-changing-the-air-war#comments</comments><guid isPermaLink="false">e51e12c6-62c6-4d73-a5c8-4d05d967e24f</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:19:13 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:19:13.517Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிபர் ஜெலன்ஸ்கி,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war,zelensky</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/u666sos4/Zelenskyy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Zelenskyy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/u666sos4/Zelenskyy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைனில் உள்ள குடியிருப்பு பகுதிகள், துறை முகங்கள், உணவு கிடங்குகள் மற்றும் மின்உற்பத்தி நிலையங்களில் குறிவைத்து ரஷிய படைகள் கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.</p><p>உக்ரைன்-ரஷியா இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடந்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் போர்  நீடித்து வருகிறது. ரஷியா நடத்தி வரும்  தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. உக்ரைன் பொது மக்கள் உயிருக்கு பயந்து அகதிகள் முகாமில் தங்கி உள்ளனர்.</p><h2><strong>விடிய விடிய குண்டுமழை</strong></h2><p>இந்த நிலையில் உக்ரைனில் உள்ள குடியிருப்பு பகுதிகள், துறை முகங்கள், உணவு கிடங்குகள் மற்றும் மின்உற்பத்தி நிலையங்களில் குறிவைத்து ரஷிய படைகள் கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. வான்வழி தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரஷியா 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் உக்ரைன் நகரங்கள் மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டது. விடிய விடிய குண்டுமழை பொழிந்த வண்ணம் இருந்தது. இந்த குண்டுவீச்சில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். பச்சிளம் குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து குண்டு சத்தம் கேட்ட வண்ணம் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.</p><h2><strong>அதிபர் கண்டனம்</strong></h2><p>ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>போர்க்களத்தில் வெற்றி பெற முடியாத ரஷியா தனது போரை உக்ரைனின் பொருளாதாரத்தை நோக்கி திருப்பி உள்ளது. ரெயில்கள், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய கிடங்குகளை அழித்து எங்கள் மக்களின் மன உறுதியை உடைக்கப்பார்க்கிறது. ரஷியாவின் இந்த பயங்கர தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனமும், பதிலடியும் தர வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதல் டி20 போட்டி: டெல்லியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-afghanistan-first-odi-in-delhi-today</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-afghanistan-first-odi-in-delhi-today#comments</comments><guid isPermaLink="false">511324e6-15ce-4428-8e15-048a8d7814e0</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:12:50 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:12:50.546Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shreyas Iyer,ஷ்ரேயஸ் அய்யர்,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/3czirzqs/iyer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shreyas iyer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/3czirzqs/iyer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.</strong></em></p><p>இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த 3 போட்டிகளும் டெல்லியிலேயே நடக்கின்றன.</p><p>இந்நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. 2-வது போட்டி 15-ம் தேதியும், 3-வது போட்டி 17-ம் தேதியும் நடக்கின்றன.</p><h2>ஷ்ரேயஸ் அய்யர்</h2><p>ஷ்ரேயஸ் அய்யர் டி20 அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, இந்திய அணி உள்ளூரில் விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.</p><p>ஷ்ரேயஸ் அய்யர் கேப்டனானதும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி கடைசியாக நடந்த ஜிம்பாப்வே தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி வெற்றிப்பாதைக்கு திரும்பியது.</p><p>ஆசிய விளையாட்டு போட்டிக்கு ஆயத்தமாவதற்கு இந்த தொடரை சரியாக பயன்படுத்திக் கொள்ள இரு அணிகளும் ஆர்வம் காட்டும்.</p><p>ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அத்துடன் உள்ளூர் சூழல் அனுகூலமாக இருக்கும்.</p><h2>18 முறை</h2><p>ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தமட்டில், சர்வதேச கிரிக்கெட்டில் 18 முறை இந்தியாவுடன் மோதி இருக்கிறது. அதில் ஒன்றில் கூட வெற்றி பெற்றது கிடையாது. இதுவரை இந்தியாவுக்கு எதிராக 2 டெஸ்டில் ஆடி இரண்டிலும் தோற்றுள்ளது. 7 ஒருநாள் போட்டியில் விளையாடி 6-ல் தோற்று இருக்கிறது. ஒரு ஆட்டம் சமன் ஆனது.</p><p>9 டி20 போட்டிகளில் ஆடி 8-ல் தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இந்த மோசமான சாதனையை மாற்றி முதல் வெற்றியைப் பெற அந்த அணியினர் தீவிரம் காட்டுவார்கள். போட்டித் தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.</p><p>இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5, சோனி மேக்ஸ் ஆகிய சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.</p><p>இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:</p><h2>இந்தியா</h2><p>அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் அல்லது வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.</p><h2>ஆப்கானிஸ்தான்</h2><p>ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), குல்பதின் நைப், செடியுல்லா அடல், டார்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான், முஜுப் உர் ரஹ்மான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி அல்லது நவீன் உல்-ஹக்.</p>]]></content:encoded></item><item><title>ஜெர்சி நிற சர்ச்சை: ஹாக்கி இந்தியா இயக்குநர் பணியிடை நீக்கம்!</title><link>https://www.maalaimalar.com/sports/jersey-color-controversy-hockey-india-director-suspended</link><comments>https://www.maalaimalar.com/sports/jersey-color-controversy-hockey-india-director-suspended#comments</comments><guid isPermaLink="false">f2f5c86d-133a-4534-adb7-996a2a4711cf</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:09:18 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:09:18.446Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Hockey India,ஹாக்கி இந்தியா,Saffron jersey,Srivastava,காவி ஜெர்சி,ஸ்ரீவஸ்தவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/esltuzrl/New-Project-2026-09-13T102557.303.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவி நிறத்திற்கு மாற்றப்பட்ட ஜெர்சி - ஹாக்கி இந்தியா இயக்குநர் பணி நீக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/esltuzrl/New-Project-2026-09-13T102557.303.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஜூலை மாதம் இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நிறம், நீலத்தில் இருந்து காவிக்கு மாற்றப்பட்டது. </p><p>இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழ, ஹாக்கி மைதானங்களும், வீரர்களின் ஜெர்சியும் ஒரேநிறத்தில் இருப்பதால் பந்தை பாஸ் செய்வது, வீரர்களை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாகவும், அதனாலேயே நிறம் மாற்றப்பட்டதாகவும் <a href="https://www.maalaimalar.com/sports/indian-hockey-teams-return-to-traditional-blue-kit-for-asian-games-after-saffron-controversy">ஹாக்கி இந்தியா</a> விளக்கம் அளித்தது. </p><p>இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் மீண்டும் ஜெர்சி நீல நிறத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஹாக்கி இந்தியா அணியின் தலைமை இயக்குநர் ஸ்ரீவஸ்தவா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவரின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், ஸ்ரீவஸ்தவாவிடம் விளக்கம் கேட்டு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே, வழக்கறிஞர் மூலம் ஸ்ரீவஸ்தவாவிற்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், அவர் உடனடியாகப் பணிகளில் இருந்து விலகவும், தனது விளக்கத்தை நோட்டீஸ் கிடைத்த 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.</p><p>ஸ்ரீவஸ்தவா மீது 8 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் சில முக்கிய காரணங்கள்;</p><h2>உலகக் கோப்பை பயணம் </h2><p>ஹாக்கி இந்தியா லீக் மற்றும் பிற பணிகளில் கவனம் செலுத்துவதற்காக அவரை இந்தியாவில் தங்க ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே அறிவுறுத்தியும், அவரது இ-மெயில் உத்தரவை மீறி ஸ்ரீவஸ்தவா அண்மையில் நடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பயணம் மேற்கொண்டது முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.</p><h2>ஜெர்சி சர்ச்சை </h2><p>மேலும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின்போது, முறையான ஆலோசனை மற்றும் அனுமதி பெறாமல் தேசிய அணியின் ஜெர்சி நிறத்தை காவி நிறத்திற்கு மாற்ற தன்னிச்சையாக முடிவெடுத்தது.</p><p>அணியின் சீருடையில் செய்யப்பட்ட மாற்றம், “குடியரசுத் தலைவர் அல்லது செயற்குழுவுடன் முன் கலந்தாலோசிக்காமல் செயல்படுத்தப்பட்டு, பகிரங்கமாக வெளியிடப்பட்டது” என ஸ்ரீவஸ்வதாவிற்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமை </h2><p>தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது சில வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன் ஆகியோர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக வந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியது உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகள் ஸ்ரீவஸ்வதாமீது பட்டியலிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: &quot;யாகாவா ராயினும் நாகாக்க..&quot; கனிமொழி எம்பியின் எக்ஸ் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post#comments</comments><guid isPermaLink="false">2d659edc-f023-44bf-9da8-54befb34360a</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:51:03 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:51:03.936Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கனிமொழி எம்பி,ஆ.ராசா,MP Kanimozhi,ஆ.ராசா பேச்சு,a.raja,Guard the tongue,யாகாவா ராயினும் நாகாக்க</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ycmbeyxs/KANI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MP Kanimozhi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ycmbeyxs/KANI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது.</p><p>தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கூறிய கருத்துகள் மாநில அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் குறித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக கூறி திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர போராட்டங்களை முன்னெடுத்தனர்.</p><h2>ஆ.ராசா சர்<strong>ச்சை பேச்சு</strong></h2><p>சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது. மாற்றுக் கட்சியினரையும் அவர்களின் குடும்பத்தினரையும் தரக்குறைவாகச் சாடி<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leaders-losing-decency-on-political-stages-cpm-state-secretary-p-shanmugam-condemns"> ஆ.ராசா </a>பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தோழமைக்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.</p><h2>கனிமொ<strong>ழி எம்பி எக்ஸ் தள ப</strong>திவு</h2><p>இந்தச் சர்ச்சை தீவிரமடைந்துள்ள சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருக்குறள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p><a href="/individual/yagavarayinum-naa-kaakka-shooting-spot" class="entity-link" entity-id="378804" entity-name="யாகாவாராயினும் நாகாக்க படப்பிடிப்பு தளம்" entity-slug="yagavarayinum-naa-kaakka-shooting-spot" entity-type-id="5367" entity-type-slug="individual">"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"</a></p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்<br>சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2098984905552359487?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>என்ற திருக்குறளை அவர் எவ்விதக் கூடுதல் விளக்கமுமின்றிப் பதிவிட்டுள்ளார். </p><p>ஒருவர் எதைக் காக்கத் தவறினாலும் தன் நாவை அடக்கிக் காக்க வேண்டும், இல்லையெனில் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பப்படுவர் என்பதே இதன் பொருளாகும். திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதே திமுகவின் மூத்த பெண் தலைவரும் எம்பியுமான கனிமொழி இந்தத் திருக்குறளைப் பதிவிட்டிருப்பது அரசியல் கட்சிகளின் கவனத்தை பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விபீஷணனுக்கு காட்சியளித்த விநாயகர்</title><link>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-appearing-before-vibhishana</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vinayagar-appearing-before-vibhishana#comments</comments><guid isPermaLink="false">52397170-05a7-4739-b77e-872830d9920e</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/i4y79mtp/vinayagar4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் - மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/i4y79mtp/vinayagar4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்து சமயத்தில் உள்ள அனைத்து "கடவுள்களுக்கும், அவர்களுக்கேற்ற ஆலயங்களும், வழிபாட்டு முறைகளும் உள்ளன. ஆனால், எல்லா இடங்களிலும் மிகவும் எளிமையாக இருந்து அருள்பாலிப்பவர், விநாயகப் பெருமான் கோவில்கள் மட்டுமின்றி, ஆற்றங்கரை, குளத்தங்கரை, அரச மரத்தடி, சாலையோரம் என எந்த இடத்திலும் விநாயகர் வீற்றிருப்பார்.</p><h2> மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்</h2><p>வினைகள் தீர்க்கும் விநாயகப் பெருமானின் கோவில்களில் மலை உச்சியில் அமைந்த கோவில் என்னும் பெருமை பெற்றது உச்சிப்பிள்ளையார் கோவில்.</p><p>திருச்சி என்றதும் நம் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை தான். இந்தக் கோட்டை 6-ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. சுமார் 273 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை அடைய கிட்டத்தட்ட 400 படிகளுக்கு மேல் ஏறிச் செல்ல வேண்டும்.</p> <p>ராமாயணத்தோடு தொடர்புடையதாக இக்கோவில் கருதப்படுகிறது. விபீஷணரிடம் சிறுவனாக தோன்றி, பின் இங்கு பிள்ளையாராக அருட்காட்சி அளித்தார். மேலும், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோவிலும், மலையின் இடைப்பகுதியில் தாயுமானவர் கோவிலும் அமைந்துள்ளன.</p> <h2>பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் </h2><p>தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற, மிகப் பெரிய குடைவரைக் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில். சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் அருள்பாலிக்கும் கற்பக விநாயகர், 6 அடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை ஏந்திய நிலையில் வலம்புரி விநாயகராக அருள்பாலிக்கிறார். </p> <p>ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளில் விநாயகருக்கு படைக்கப்படும் பிரமாண்ட கொழுக்கட்டை நைவேத்தியம் மிகவும் புகழ் பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற நீல் ஸ்கப்ஸ்கி ஜோடி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/neal-skupski-christian-harrison-pair-won-the-mens-doubls-title-in-us-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/neal-skupski-christian-harrison-pair-won-the-mens-doubls-title-in-us-open-tennis#comments</comments><guid isPermaLink="false">a63ee24d-0ecb-480e-b976-4bc47acceb8b</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:06:09 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:06:09.399Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>US Open Tennis,அமெரிக்க ஓபன் டென்னிஸ்,neal skupski,christian harrison,நீல் ஸ்கப்ஸ்கி,கிறிஸ்டியன் ஹாரிசன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/7kjzwrgz/skupski.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mens doubles]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/7kjzwrgz/skupski.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையரில் பிரிட்டிஷின் நீல் ஸ்கப்ஸ்கி-அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.</strong></em></p><p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.</p><p>இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.</p><p>இதில் பிரிட்டிஷின் நீல் ஸ்கப்ஸ்கி-அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடி, ஜெர்மனியின் டிம் புட்ஸ்-கெவின் கிராவெய்ட்ஸ் ஜோடி உடன் மோதியது.</p><p>இதில் சிறப்பாக ஆடிய நீல் ஸ்கப்ஸ்கி ஜோடி 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.</p><p>இதேபோல், பெண்கள் இரட்டையரில் நம்பர் 1 ஜோடியான செக் குடியரசின் கடெரினா சினியாகோவா-அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item></channel></rss>