<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 13 Aug 2026 08:42:12 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 13 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-august-2026#comments</comments><guid isPermaLink="false">6b1cd842-7f06-457b-93b8-c38a9bb7ae73</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:13:24 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:31:22.669Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3ajhq5r5/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3ajhq5r5/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/rbi-issues-new-regulations-for-loan-interest-rates-across-india">கடன் வட்டி விகிதங்களில் அதிரடி மாற்றம்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வெளியீடு!</a></p><p>* புதிய விதிகள் ஏப்ரல் 1, 2027 முதல் அமல்: வங்கிகள், NBFC அனைத்திற்கும் தினசரி குறையும் நிலுவை வட்டி கட்டாயம்.</p><p>* பழைய கடன் மாற்றம் 2029 வரை: ஒருமுறை மட்டும் வாய்ப்பு, கூடுதல் கட்டணம் வசூலிக்கவோ வட்டி உயர்த்தவோ கூடாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/telangana-rice-mills-raid-government-recovers-rs-700-crore-paddy-dues">தெலங்கானா அரிசி ஆலைகளில் அதிரடி சோதனை: ரூ.700 கோடி நெல் நிலுவைத் தொகையை மீட்டு அரசு சாதனை!... </a></p><p>*தெலங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நெல் நிலுவையைத் திரும்பச் செலுத்தாத அரிசி ஆலை அதிபர்கள் மீது மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. </p><p>*நேர்மையாகச் செயல்படும் ஆலை அதிபர்களுக்கு அரசு துணையாக இருக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-uproar-kharge-demands-case-over-purification-ritual-after-his-speech">என்னைத் தீண்டத்தகாதவனாக நடத்துகிறீர்கள்.. மாநிலங்களவையில் கொந்தளித்த கார்கே - என்ன நடந்தது?</a></p><p>*என்னைத் தீண்டத்தகாதவராக நடத்தி, மேடையைச் 'சுத்தம்' செய்து அவமானப்படுத்துகிறீர்கள்.</p><p>*கோஷங்கள் எழுப்பப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த சடங்கு நடத்தப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறினர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-10-74-crore-popular-social-media-influencer-held-in-pune">ரூ.10.74 கோடி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: பிரபல சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் புனேயில் கைது!</a></p><p>* ரூ.10.74 கோடி மோசடி: புனே 82 வயது முதியவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என பணம் பறிப்பு.</p><p>* இன்ஃப்ளூயன்ஸர் கைது: ரீல்ஸ் பிரபலம் ரோஹன் ஜாதவ் போலி வங்கி கணக்கு கொடுத்ததாக போலீஸ் கைது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rain-mumbai-landslide-kurla-six-killed">மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: கட்கோபர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 6 பேர் பரிதாப பலி; மீட்புப் பணிகள் தீவிரம்!...</a> </p><p>*7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>*நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மிகவும் குறுகலான பாதைகளைக் கொண்டதாக இருப்பதால், பெரிய இயந்திரங்களை அங்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>தனியார் நிறுவனங்களில் பணி பெற்றோருக்கு நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்.</p><p>வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.</p><p>WOWsemi நிறுவனம் கோவையில் செமிகண்டக்டர் துறை திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டம்.</p><p>அடுத்த 2 ஆண்டில் ரூ.75 கோடி முதலீட்டில் Wafer on Wheels அனுபவ மையம், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளில் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து, 15,000 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.</p> <p>ஜெர்மனி நாட்டை சேர்ந்த டைம்லர் நிறுவனம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.4,000 கோடி முதலீடு செய்கிறது.</p><p>ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான BIZER தமிழகத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>ஆஸி.ன் Avid Group திருவள்ளூர், தூத்துக்குடியில் ரூ.7000 கோடி முதலீட்டில் 12,000 பேருக்கு வேலை தரும் வகையில் ஒப்பந்தம்.</p><p>ஷைலி என்ஜினீயரிங் பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தமிழகத்தில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீடு.</p><p>ஜப்பானின் YKK நிறுவனம் திருவள்ளூரில் ரூ.1651 கோடி முதலீட்டில் 4,316 பேருக்கு வேலை தரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>அமெரிக்காவை சேர்ந்த FORTUNE நிறுவனம் 4,000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.477 கோடி முதலீடு செய்கிறது.</p><p>ரூ.400 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலை தரும் வகையில் தூத்துக்குடியில அக்னிகுல் காஸ்மோஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>செயிண்ட் கோபைன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீடு செய்தவற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>ரூ.1000 கோடியில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>தூத்துக்குடியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது ஸ்கை ரூட்.</p><p>ஜே.கே. டயர்ஸ் ரூ.5,143 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>கேப்லின் குரூப் நிறுவனம் ரூ.925 கோடியில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>மின் வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வைலட் தமிழகத்தில் ரூ.777 கோடி முதலுடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>டைட்டன் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>அக்னி கோல் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.</p><p>முதலமைச்சர் முன்னிலையில் இந்துஜா குரூப் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஓரணியில் உள்ளது - அமைச்சர் கீர்த்தனா</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z3y0ou8m/keerthana.jpg" /></figure><p>தமிழக வெற்றிக்கழகத்தில் 100 நாள் ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்ப்பு - அமைச்சர் கீர்த்தனா</p><p>ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்த கையெழுத்தாகிறது.</p><p>மாநாட்டில் 1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு.</p><p>வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி.</p><p>சென்னையில் நடைபெறும் வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு.</p><p>சென்னை கிண்டியில் 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு' தொடங்கியது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-13-8-2026">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b0aaf1c8-3178-4559-b174-fc3eb50e1661">தந்தை மறைந்த 5வது நாளில் ஆடுகளத்திற்கு திரும்பிய மெஸ்ஸி - ரசிகர்கள் நெகிழ்ச்சி</a></p><p>*நீங்கள் எனது தந்தையும், நண்பனும், பிரதிநிதியும் ஆவீர்கள்</p><p>*கால்பந்தில் தான் தொடர்வது குறித்து உறுதியாக தெரியவில்லை என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/platforms-1-to-5-at-egmore-railway-station-closed">எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடல்</a></p><p>* எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சில தாம்பரம் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. </p><p>* எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 6 முதல் 9 வரை உள்ள நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். மின்சார ரெயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-ல் இருந்து இயக்கப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/haridwar-ganga-pollution-outrage-7000-tonnes-of-plastic-and-urine-bottle-waste-cleared-after-kanwar-yatra">சிறுநீர் நிரம்பிய பாட்டில்கள்.. கன்வர் யாத்திரை நிறைவில் ஹரித்வாரில் 7 ஆயிரம் டன் குப்பைகள்</a></p><p>*கங்கை நதி உற்பத்தியாகும் இமயமலைப் பகுதியான கங்கோத்ரியிலும் இதே போன்ற சூழலே நிலவுகிறது.</p><p>*சுமார் 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் ஹரித்வாருக்கு வருகை தந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/old-modi-congress-leaders-wedding-reception-clip-not-linked-to-revati-sule-event-fact-check-confirms">ஆளே மாறிட்டீங்க.. திருமண விழாவில் மோடியுடன் கார்கே கலகல - வீடியோ உண்மையா?</a></p><p>*கார்கே, "நீங்கள் ஆள் கொஞ்சம் மாறிவிட்டீர்கள்" என கூற, அதற்கு மோடி "ஓ அப்படியா" என கூறுவது பதிவாகியுள்ளது.</p><p>*தற்போதைய நிகழ்வோடு இதற்கு எவ்வித தொடர்பும் இல்லை</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-season-2-protest-cjbp-alleges-hall-cancellations-and-threats-blocking-meetings-in-delhi">'ஜந்தர் மந்தர் சீசன் 2' போராட்டத்தை அறிவித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a></p><p>*தலைகீழாக தொங்கவிடப்படுவீர்கள் என்று மிரட்டியுள்ளனர்.</p><p>*சீசன் 2 போராட்டம் தொடங்கும் என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/afghanistan-girls-denied-secondary-and-higher-education-under-taliban-rule">மூடத்தனத்தால் ஒரு தலைமுறையையே முடக்கிய தாலிபான்.. ஆப்கானிஸ்தானில் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுப்பு</a></p><p>*2030ஆம் ஆண்டிற்குள் உயர்நிலை பள்ளிக் கல்வி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 40 லட்சமாக உயரும்</p><p>*முற்றிலுமாகத் தடை செய்துள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-us-war-to-continue-until-trumps-term-ends-warns-irgc-adviser">டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்போம் - ஈரான் தடாலடி</a></p><p>*அமெரிக்க ராணுவம் நினைத்ததை விட பலவீனமாக இருப்பதை இந்தப் போரின் மூலம் அறிந்துகொண்டதாக தெரிவித்தார்.</p><p>*பெரும் விலை கொடுக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-tamil-nadu-on-16th">2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்</a></p><p>* துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கும் புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்கிறார்.</p><p>* தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/9-rameswaram-fishermen-arrested-sri-lankan-navy-action">ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர்  கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்</a></p><p>* ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர்  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>* மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 9 பேரை படகுகளையும் பறிமுதல் செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>என்னைத் தீண்டத்தகாதவனாக நடத்துகிறீர்கள்.. மாநிலங்களவையில் கொந்தளித்த கார்கே - என்ன நடந்தது?</title><link>https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-uproar-kharge-demands-case-over-purification-ritual-after-his-speech</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-uproar-kharge-demands-case-over-purification-ritual-after-his-speech#comments</comments><guid isPermaLink="false">f3ab0e82-90aa-4d04-8547-2519301bdb89</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:45:55 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:45:55.590Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநிலங்களவை,rajya sabha,மல்லிகார்ஜுன கார்கே,mallikarjun kharge,Untouchability,தீண்டாமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/i989zunm/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நட்டா, கார்கே ]]></media:title><media:description type="html"><![CDATA[ நட்டா, கார்கே ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/i989zunm/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று மழைக்கால கூட்டத்தோரின் கடைசி நாள். மக்களவை தொடங்கியதும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. </p><p>கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றுவது உள்ளிட்ட மசோதாக்கள் மீது இன்று மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. </p><p>இந்நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87">கார்கே</a>, தன்னைப் பற்றிய சர்ச்சை ஒன்றை எழுப்பியதால் அவை பரபரப்படைந்தது. </p> <h2>சம்பவம்</h2><p>ஆகஸ்ட் 8 அன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தவானியில் ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.</p><p>இதில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசினார். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஸ்ரீ ராம் சேனா தர்மார்த் சேவா நியாஸ் சங்கட்டன் என்ற இந்துத்துவா அமைப்பு ஒன்று மேடையில் ஹோமம் ஒன்றை நடத்தியது.</p><p>ராம்லீலா மைதானம் ஆன்மீகப் புனிதம் வாய்ந்தது என்பதால், அதை அரசியல் கூட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கும், அக்கூட்டத்தில் சனாதன தர்மத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த சடங்கு நடத்தப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறினர்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/wso7pbek/tn-11.jpg" /></figure><h2>மாநிலங்களவையில் கார்கே</h2><p>இந்த விவகாரம் குறித்து இன்று மாநிலங்களவையில் பேசிய அவர், "நான் எந்த மதத்தையோ அல்லது சமூகத்தையோ பற்றிப் பேசவில்லை. அரசின் பிரச்சனைகளை மட்டுமே பேசினேன்.</p><p>ஆனால், எனது உரையைத் தொடர்ந்து மேடையை தூய்மைப்படுத்த ஹோமம் நடத்தியுள்ளனர். இதுதான் அரசியலமைப்பை பாதுகாப்பதா? நான் எதிர்க்கட்சித் தலைவர்.</p><p>நான் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக யாரிடமும் இறக்கப்பட்டு எனக்குப் பாதுகாப்புத் தாருங்கள் என்று மன்றாடியதில்லை.</p><p>எனக்குப் போராடும் வலிமை இருக்கிறது, போராடிக் கொண்டும் இருக்கிறேன். ஆனால், என்னைத் தீண்டத்தகாதவராக நடத்தி, மேடையைச் 'சுத்தம்' செய்து அவமானப்படுத்துகிரீர்கள்.  இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்." என வலியறுத்தினார்.</p> <h2>நட்டா விளக்கம்</h2><p>இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, "கார்கே ஜியின் உணர்வுகள் காயப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>பாஜக இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஆதரிக்காது. இச்சம்பவம் குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>TNPSC - டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி - ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/online-coaching-for-group-2-and-2a-exams-starts-on-august-17</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/online-coaching-for-group-2-and-2a-exams-starts-on-august-17#comments</comments><guid isPermaLink="false">be8e6818-f869-426c-a348-57a4f6e76169</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:28:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:28:38.382Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>குரூப் 2 தேர்வு,Group 2 Exam,Aatchi Tamil IAS Academy,ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/er06ikfd/New-Project-2026-08-12T200821.586.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/er06ikfd/New-Project-2026-08-12T200821.586.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் தொடங்குகின்றன. </p><h2>குரூப்-2, 2ஏ தேர்வு</h2><p>சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி, கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. </p><p>இங்கு பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.</p><p>இந்த நிலையில், 2026-ம் ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உதவி ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-II, சிறை அலுவலர் உள்ளிட்ட மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p><figure><img alt="குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி - ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/03034yk4/New-Project-2026-08-12T195542.631.jpg" /></figure><h2>ஆன்லைன் பயிற்சி</h2><p>நவம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ள குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திட்டமிட்ட பயிற்சியை வழங்கும் வகையில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகின்றன.</p><p>மொத்தம் 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். பயிற்சியின் ஒரு பகுதியாக தொடர் மாதிரித் தேர்வுகள் மற்றும் தேர்வு நோக்கிலான பயிற்சிகள் நடத்தப்படும்.</p><p>மேலும், தேர்வுக்குத் தேவையான ஆதார நூல்கள் மற்றும் இ-புத்தகங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படும்.</p><p>வெற்றியை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ.12,500 ஆகும்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zkg6l6zc/New-Project-2026-08-12T200718.052.jpg" /></figure><h2>முன்பதிவு செய்யலாம்</h2><p>இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், ‘TNPSC GROUP II, IIA ONLINE COACHING-2026’ என்று டைப் செய்து, தங்களது பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை 7550151584 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்யலாம்.</p><p>இந்த தகவலை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் ச. வீரபாபு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>புதிய கட்சித் தொடங்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன்!</title><link>https://www.maalaimalar.com/news/national/netaji-subhash-chandra-boses-grandson-to-launch-a-new-party</link><comments>https://www.maalaimalar.com/news/national/netaji-subhash-chandra-boses-grandson-to-launch-a-new-party#comments</comments><guid isPermaLink="false">8b173ecd-4875-4649-aa79-b1a83a7252d9</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:29:01 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:29:01.790Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Netaji Subhas Chandra Bose,Chandra Kumar Bose,Azad Hind Party,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்,அசாத் ஹிந்த் கட்சி,சந்திர குமார் போஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/dhv6uaed/New-Project-2026-08-13T133517.052.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ புதிய கட்சித் தொடங்கும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பேரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/dhv6uaed/New-Project-2026-08-13T133517.052.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் சகோதரரின் பேரரான சந்திர குமார் போஸ் இளைஞர்களை மையாக கொண்டு ‘ஆசாத் ஹிந்த் கட்சி’ என்றப் பெயரில் புதியக் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். </p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தைப் பார்த்து அவருக்கு இந்த எண்ணம் வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய அரசியல் சூழலில் இளைஞர்கள் அதிருப்தியில் இருப்பதை உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>ஆசாத் ஹிந்த் கட்சியானது, அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கும் சர்வ தர்ம சமபாவம் என்ற கொள்கையாலும், அரசியலமைப்பின் உண்மையான நெறிமுறைகளை நிலைநிறுத்துவதாலும் வழிநடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>“முற்போக்கு சிந்தனையுள்ள, அனைவரையும் உள்ளடக்கிய, மதச்சார்பற்ற மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், ஆசாத் ஹிந்த் கட்சியை ஆதரிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். நேதாஜி 1943-ல் ஆசாத் ஹிந்த் அரசை அறிவித்த தினமான அக்டோபர் 21 அன்று இக்கட்சி முறைப்படி அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.</p><h2>பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் - சொந்தக் கட்சி</h2><p>2016-ல் பாஜகவில் இணைந்த சந்திர குமார் போஸ் சுமார் 7 வருடங்கள் அக்கட்சியில் இருந்தார். ஆசாத் ஹிந்த் மோர்ச்சா என்ற அமைப்பை உருவாக்குவதாக பாஜக உறுதியளித்ததாலேயே இக்கட்சியில் இணைந்ததாகவும், இல்லையென்றால் இணைந்திருக்க மாட்டேன் எனக்கூறி பின்னர் அதிலிருந்து வெளியேறினார்.</p><p>அதனைத்தொடர்ந்து 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். பின்னர் தனிப்பட்ட காரணங்களைக் கூறி திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகினார். </p><p>இந்நிலையில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5,000 அபராதம் - எங்கே தெரியுமா?
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fine-of-rs-5000-for-unmarried-youths-consuming-alcohol</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fine-of-rs-5000-for-unmarried-youths-consuming-alcohol#comments</comments><guid isPermaLink="false">3174c857-cb28-4891-a333-f208e450aa3d</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:28:02 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:28:02.994Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alcohol,மதுப்பழக்கம்,Nagapattinam,நாகப்பட்டினம்,Youngsters,அபராதம்,இளைஞர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/34xo83wg/youths-.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fine youths consuming alcohol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/34xo83wg/youths-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.</strong></em></p><h2>விழுந்தமாவடி</h2><p>போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>விழிப்புணர்வு பேனர்</h2><p>இந்த நிலையில், மதுப் பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் பேணவும், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்து சார்பில் மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.</p>  <h2>அபராதம்</h2><p>அதில், பொதுமக்கள் கவனத்திற்கு... நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் பொதுசுகாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாதவர்கள் (இளைஞர்கள்) மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p> <h2>குடிபோதை</h2><p>மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நீரூபிக்கப்பட்டால் ரூ.5,000/- அபராதம் வசூலிக்கப்படும். இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சனைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ.5,000/-அபராதம் வசூலிக்கப்படும். “இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”.</p> <h2>மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!</h2><p>இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம்... ‘மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், விழுந்தமாவடி ஊர் மக்களின் இத்தகைய முடிவு மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கடன் வட்டி விகிதங்களில் அதிரடி மாற்றம்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/rbi-issues-new-regulations-for-loan-interest-rates-across-india</link><comments>https://www.maalaimalar.com/news/national/rbi-issues-new-regulations-for-loan-interest-rates-across-india#comments</comments><guid isPermaLink="false">cdbe4fba-7710-4042-8458-0cb186c97a0a</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:26:47 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:26:47.042Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>RBI,reserve bank of india,ஆர்பிஐ,ரிசர்வ்பங்கி,InterestRate Framework,ExternalBenchmark,LoanGuidelines2027,தனிநபர்கடன்,விவசாயக்கடன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/m1e41gnt/ReserveBankOfIndia" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ReserveBankOfIndia ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/m1e41gnt/ReserveBankOfIndia?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்களின் நலனைப் பாதுகாக்கவும், வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் <a href="https://www.maalaimalar.com/topic/rbi">இந்திய ரிசர்வ் வங்கி</a> புதிய வரைவு விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது. </p><p>இந்த புதிய விதிகள் இறுதி செய்யப்பட்டு, வரும் ஏப்ரல் 1, 2027 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன.</p><p>இந்த புதிய விதிகள் பொதுத்துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் NBFC எனப்படும் பொதுத்துறை அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும் என RBI அறிவித்துள்ளது.</p><h2>முக்கிய மாற்றங்கள் என்னென்ன?</h2><h2>வட்டி கணக்கிடும் முறையில் மாற்றம்:</h2><p>இனிமேல் கடன்களுக்கான வட்டி, நடப்பு மாதத்தின் அடிப்படையில், தினசரி குறையும் நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு வசூலிக்கப்பட வேண்டும்.</p><h2>வட்டி விகிதத்தை மாற்ற புதிய கட்டுப்பாடுகள்:</h2><p>அனைத்து வங்கிகளும் தங்களின் மிதக்கும் வட்டி விகிதத் தனிநபர் கடன்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்களை கட்டாயமாக வெளிப்புறக் குறியீட்டுடன் இணைக்க வேண்டும்.</p><p>இதில் RBI-ன் ரெப்போ ரேட் அல்லது அரசிடம் இருக்கும் கருவூலப் பத்திரங்களின் லாப வரம்பு ஆகியவை குறியீடாகப் பயன்படுத்தப்படும்.</p><p>நிர்ணயிக்கப்பட்ட இந்தக் குறியீட்டு அளவுக்குக் குறைவாக எந்த வங்கிக் கடனுக்கும் வட்டி வசூலிக்கக் கூடாது.</p><h2>மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே மாற்றம்:</h2><p>வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைக்கும் கால அளவு 3 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். </p><p>விவசாயக் கடன்களுக்கு மட்டும் பயிர் காலத்தைக் கணக்கில் கொண்டு அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><h2>கூடுதல் கட்டணங்களுக்குக் கடிவாளம் :</h2><p>வங்கிகள் கடனுக்காக வசூலிக்கும் கூடுதல் வட்டி வரம்பு , வாடிக்கையாளரின் கடன் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாற்றியமைக்கப்பட வேண்டும். </p><p>இதர கட்டணங்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வங்கிகள் மாற்றியமைக்க முடியும்.</p><h2>ஏழை மற்றும் சிறு விவசாயிகளுக்குப் பாதுகாப்பு:</h2><p>சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால விவசாயக் கடன்களுக்கான மொத்த வட்டியும், இதர கூடுதல் கட்டணங்களும், அவர்கள் வாங்கிய அசல் தொகையை விட ஒருபோதும் அதிகமாக இருக்கக் கூடாது என RBI நிபந்தனை விதித்துள்ளது.</p><h2>பழைய கடன்களுக்கு என்ன விதிமுறை?</h2><p>தற்போது செயல்பாட்டில் இருக்கும் பழைய கடன்களை புதிய விதிமுறைகளின் கீழ் மாற்றுவதற்கு ஏப்ரல் 1, 2029 வரை ஒருமுறை மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும். </p><p>இதற்கு வாடிக்கையாளர்களின் ஒப்புதல் கட்டாயம். மேலும், பழைய கடனிலிருந்து புதிய முறைக்கு மாறுவதற்கு வாடிக்கையாளர்களிடம் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும், வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடாது என்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது</p>]]></content:encoded></item><item><title>ஹைட்ரஜன் வாகன வரலாற்றில் புதிய சாதனை: மணிக்கு 653 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்ந்து JCB ஹைட்ரோமேக்ஸ் உலக சாதனை!</title><link>https://www.maalaimalar.com/news/world/new-record-in-hydrogen-vehicle-history-jcb-hydromax-hits-653-kmph</link><comments>https://www.maalaimalar.com/news/world/new-record-in-hydrogen-vehicle-history-jcb-hydromax-hits-653-kmph#comments</comments><guid isPermaLink="false">a0c28e08-0256-48a2-9e22-9e19db1d886e</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:22:02 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:22:02.796Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>JCB Hydromax,Dieselmax,Hydrogen vehicles,JCB ஹைட்ரோமேக்ஸ்,ஹைட்ரஜன் வாகனம்,டீசல்மேக்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/skxuliai/jcb.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JCB Hydromax ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/skxuliai/jcb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறையை வியப்பில் ஆழ்த்தும் வகையில், பிரிட்டனின் பிரபல எஞ்சினியரிங் நிறுவனமான JCB உருவாக்கிய 'ஹைட்ரோமேக்ஸ்' ஹைட்ரஜன் வாகனம் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தில் உள்ள போனிவில் உப்பளத்தில் நடைபெற்ற இந்த அதிவேகப் பயண சோதனையில், மணிக்கு 653.9 கி.மீ  வேகத்தை எட்டி புதிய உலக நிலவேக சாதனையை  பதிவு செய்துள்ளது.</p><h2><strong>எஃப்.ஐ.ஏ விதிகளை பூர்த்தி செய்த இர</strong>ட்டை வழிப் பயணம்</h2><p>சர்வதேச மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பான FIA (Federation Internationale de l'Automobile) விதிகளின்படி, உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட ஒரு வாகனம் ஒரு மணி நேரத்திற்குள் எதிர் எதிர் திசைகளில் இரண்டு முறை இயக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி தனது முதல் சுற்றில் மணிக்கு 644 கி.மீ (400.623 மைல்) வேகத்தையும், திரும்பிய இரண்டாவது சுற்றில் மணிக்கு 663 கி.மீ (412.135 மைல்) வேகத்தையும் தொட்டது. இந்த இரண்டு சுற்றுகளின் சராசரி வேகமான 653.9 கி.மீ வேகத்தின் அடிப்படையில் இந்த புதிய உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது.</p><h2>முந்<strong>தைய சாதனைகளை தவிடுபொடியாக்</strong>கிய மைல்கல்</h2><p>இதற்கு முன் 2004-இல் பி.எம்.டபிள்யூ ஹைட்ரஜன் வாகனம் பதிவு செய்த மணிக்கு 298 கி.மீ சாதனையை இந்த ஹைட்ரோமேக்ஸ் மிக எளிதாக முறியடித்துள்ளது. மேலும், 2006-ஆம் ஆண்டு இதே போனிவில் மைதானத்தில் JCB நிறுவனத்தின் டீசல்மேக்ஸ் வாகனம் படைத்த மணிக்கு 563 கி.மீ வேக சாதனையையும் மற்றும் ஹைட்ரஜன் ஃபியூல்-செல் முறையில் எட்டப்பட்ட மணிக்கு 486 கி.மீ வேகத்தையும்  கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.</p><h2>அதி<strong>வேக சாதனை நாயகன் ஆண்டி க்ரீன்</strong></h2><p>1997-ஆம் ஆண்டு 'த்ரஸ்ட் எஸ்.எஸ்.சி' என்ற ஜெட் வாகனத்தில் பயணித்து உலகின் ஒலியின் வேகத்தை நிலத்தில் கடந்து சாதனை படைத்த முன்னாள் விண்வெளிப் படை தளபதி ஆண்டி க்ரீன் இந்த சாதனையின் போதும் வாகனத்தை இயக்கியுள்ளார். 2006-இல் JCB டீசல் வாகனத்தை ஓட்டி சாதனை படைத்ததும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>பசு<strong>மை எதிர்கா</strong>லம்</h2><p>32 அடி நீளம் கொண்ட இந்த ஹைட்ரோமேக்ஸ் வாகனம் ஃபியூல்-செல் மின்சாரத்திற்குப் பதிலாக, நேரடியாக ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் என்ஜின்களைக் கொண்டுள்ளது. இதில் JCB கட்டுமான வாகனங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டு ஹைட்ரஜன் என்ஜின்கள் பொருத்தப்பட்டு, மொத்தமாக 1,600 பி.ஹெச்.பி ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. புகைக் குழாய் வழியே பூஜ்ஜிய கார்பன் உமிழ்வைக் கொண்ட இந்த தொழில்நுட்பம், எதிர்கால போக்குவரத்து துறையில் ஹைட்ரஜன் ஆற்றலின் முக்கியத்துவத்தை உலகிற்கு நிரூபித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு- 35 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/periyar-dam-extra-water-opened-vaigai-dam-level-touches-35-feet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/periyar-dam-extra-water-opened-vaigai-dam-level-touches-35-feet#comments</comments><guid isPermaLink="false">5a02e2ce-fdfd-4eb3-9358-992d4ec804d5</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:13:55 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:13:55.029Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தண்ணீர் திறப்பு,vaigai dam,Periyar dam,வைகை அணை,பெரியாறு ஆணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/622nj05n/dam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vaigai Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/622nj05n/dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.</p><p>மேலும், முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு வனப்பகுதிகளில் பெய்யும் மழை மூலம் வைகையாறு வழியாக வைகை அணையை வந்து சேருகிறது.</p><p>மேலும் முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இந்த ஆண்டு சூப்பர் எல்நினோ தாக்கத்தால் மழை முற்றிலும் இன்றி மூல வைகையாறு வறண்டது. இதனால் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.</p><p>தற்போது கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் முல்லை பெரியாறு அணை நீர்–மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இதனால் வைகை அணையில் தண்ணீர் தேக்குவதற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p><p>இன்று காலை அணையின் நீர்மட்டம் 34.97 அடியாக உள்ளது. 220 கன–அடி நீர் வருகிற நிலையில் குடிநீர் திட்டங்களுக்காக 86 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 604 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.</p><h2>பெரியாறு அணை</h2><p>முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.95 அடியாக உள்ளது. 687 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 800 கனஅடி நீர் திறக்–கப்படுகிறது. அணையில் 3212 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.</p><p>மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 56.58 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. </p><p>சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. பெரியாறு அணை 19, தேக்கடி 3 மி.மீ. மழை–யளவு பதவாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>821 பணியிடங்களை மட்டும் நிரப்புவதா?: இளைஞர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது!- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-filling-only-821-vacancies-the-youth-must-not-be-betrayed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-filling-only-821-vacancies-the-youth-must-not-be-betrayed#comments</comments><guid isPermaLink="false">9950d984-9895-4b2b-b6ca-659f33808f04</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:08:39 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:08:39.172Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,காலி பணியிடங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/czq3nwsz/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/czq3nwsz/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேலையில்லாத இளைஞர்களுக்கு   உதவித் தொகை வழங்குதல், தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு  வழங்கும் சட்டத்தை இயற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்காக 821 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. குறைந்தது 3000 பணிகளுக்கு ஆள்தேர்வு நடைபெறும் என இளைஞர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே காலியிடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.</p><p>தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு &amp;2க்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி  அரசுத் துறைகளிலுள்ள சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகளுக்கு 41 பேரும், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2ஏ பணிகளுக்கு 780 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.</p><p>தமிழ்நாடு அரசுத் துறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  2 மற்றும் 2ஏ பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் மறைக்கப்பட்ட இடங்களையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணியிடங்களை வைத்துக் கொண்டு வெறும் 821 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல.</p><p>இரண்டாம் தொகுதி பணிகளுக்கு வெறும் 41 பேர் காலியிடங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.  அவற்றிலும் கூட 4 பணியிடங்கள் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டு நிரப்பப்படாததால் ஏற்பட்ட பின்னடைவு பணியிடங்கள் ஆகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே இரண்டாம் தொகுதி பணியிடங்கள் இவ்வளவு குறைவாக நிரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு 50 பேர் இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், திமுக அரசின் அந்த வேதனையான சாதனையை இப்போதைய தவெக அரசு முறியடித்திருக்கிறது. இதைவிட மோசமாக இளைஞர்களை ஏமாற்ற முடியாது.</p><p>2011&amp;ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது வரையிலான 16 ஆண்டுகளில் 2021, 2021 ஆகிய ஆண்டுகளைத் தவிர மீதமுள்ள அனைத்து ஆண்டுகளிலும் தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு ஆள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறன்றனர். மிக அதிகமாக 2022&amp;ஆம் ஆண்டில் 6500 பேரும், 2011&amp;ஆம் ஆண்டில் 6241 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள ஆண்டுகளில் 2025&amp;ஆம் ஆண்டைத் தவிர மற்றவற்றில் குறைந்தது 1086 பேர் முதல் 3842 பேர் வரையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது நடப்பாண்டில் மட்டும்  வெறும் 821 பேரை தேர்ந்தெடுப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.</p><p>தொகுதி 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான அடிப்படைக் கல்வித் தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு ஆகும். இந்தப் படிப்பை முடித்து விட்டு, அரசு வேலை கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை மட்டும் 60 லட்சத்திற்கும் அதிகமாகும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 4 முதல் 5 லட்சம் பேர் இந்த எண்ணிக்கையில் இணைந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் அவர்களில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட அரசு வேலைகள் வழங்கப்படாதது அரசின் தோல்வி ஆகும்.</p><p>2026&amp;ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும். அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும். அதற்கான ஆண்டுக்கு 1.50 லட்சம் பேருக்காவது அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும்.</p><p>ஆனால்,  பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 461, பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 839, தொகுதி 1 பணிகள் 26, தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் 821 என 2147 பணியிடங்களுக்கு மட்டும் தான் 4 ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. இவையும் கூட முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை தான். இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக 50,000 பேருக்கு கூட அரசு வேலைகளை வழங்க முடியாது;  அரசுத்துறை காலிப் பணியிடங்களையும் நிரப்ப முடியாது. வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் தவெக தோல்வியடையும்.</p><p>2026&amp;ஆம் ஆண்டில் தவெக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் இளைஞர்கள் தான். அவர்களுக்கு தவெக  அளித்த வாக்குறுதிகளில் முதன்மையானவை அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்; வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித் தொகை வழங்கப்படும்; தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் 75% வேலைகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டம் இயற்றப்படும் என்பன தான். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். அதை செய்யாமல் இருப்பதை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படவுள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்த வேண்டும். இது தவிர, வேலையில்லாத இளைஞர்களுக்கு   உதவித் தொகை வழங்குதல், தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு  வழங்கும் சட்டத்தை இயற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>வங்கதேசம் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/australia-all-out-198-runs-against-bangladesh-in-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/australia-all-out-198-runs-against-bangladesh-in-first-test#comments</comments><guid isPermaLink="false">bbfec5c5-2c38-48f5-b814-4c0c8dd06680</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:07:45 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:07:45.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AUSvBAN,Hasan Mahmud,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்,ஹசன் மகமுது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/t90erb1p/hasan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ hasan mahmud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/t90erb1p/hasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.</p><h2>டார்வின் டெஸ்ட்</h2><p>இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.</p><p>இந்நிலையில், ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.</p><h2>ஸ்மித் அரை சதம்</h2><p>ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 71 ரன்னில் அவுட்டானார்.</p><p>ஜேக் வெதரால்டு 23 ரன்னும், டிராவிஸ் ஹெட் 22 ரன்னும் எடுத்தனர்.</p><p>5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மித்-கேரி ஜோடி 56 ரன்கள் சேர்த்தது.</p><p>இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>தெலங்கானா அரிசி ஆலைகளில் அதிரடி சோதனை: ரூ.700 கோடி நெல் நிலுவைத் தொகையை மீட்டு அரசு சாதனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/telangana-rice-mills-raid-government-recovers-rs-700-crore-paddy-dues</link><comments>https://www.maalaimalar.com/news/national/telangana-rice-mills-raid-government-recovers-rs-700-crore-paddy-dues#comments</comments><guid isPermaLink="false">9e6171e1-4dab-4833-b7da-e6e962ee5aae</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:53:21 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:53:21.009Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Revanth Reddy,Telangana,தெலங்கானா,ரேவந்த் ரெட்டி,Telangana rice mills,தெலங்கானா அரிசி ஆலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z2h9un4m/Telangana-rice-mills.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Telangana rice mills ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z2h9un4m/Telangana-rice-mills.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நெல் நிலுவையைத் திரும்பச் செலுத்தாத அரிசி ஆலை அதிபர்கள் மீது மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக நடத்திய சோதனையில், சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான நெல் இருப்பு மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரசு விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இதுவரை 700 கோடி ரூபாய் வரை நிலுவைத் தொகை மீட்கப்பட்டுள்ளது.</p><h2>முறைகே<strong>டு செய்வோர் மீது கடு</strong>ம் நடவடிக்கை</h2><p>முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், அரசுக்குச் சொந்தமான ஒவ்வொரு தானியத்தின் மதிப்பையும் முழுமையாக மீட்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். நேர்மையாகச் செயல்படும் ஆலை அதிபர்களுக்கு அரசு துணையாக இருக்கும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் ஆலைகள் பறிமுதல் செய்யப்பட்டு, நெல் அரவை செய்யும் பணிகள் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நவீன சேமிப்பு <strong>மையங்கள் </strong></h2><p>எதிர்காலத்தில் தானியச் சேமிப்பில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, அதிக நெல் மகசூல் தரும் நல்கொண்டா, சூரியபேட்டை, நிஜாமாபாத், பெத்தபல்லி மற்றும் காமாரெட்டி ஆகிய மாவட்டங்களில் 'சைலோ' சேமிப்பு மையங்களைக் கட்ட முன்னோடித் திட்டம் தொடங்கப்படவுள்ளது.</p><p>இதற்காகத் தொகுதிக்கு 50 முதல் 100 ஏக்கர் வரை நிலம் ஒதுக்கப்பட்டு, இந்த மையங்களைப் பராமரிக்கும் பொறுப்பு மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் வழங்கப்படும். மேலும், உடனடித் தேவைகளுக்காகத் தனியார் சேமிப்புக் கிடங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் பழைய திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து நெல் சேமிப்பைப் பாதுகாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை நீர்மட்டம் 80 அடியை தாண்டியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-water-level-crossed-80-feet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-water-level-crossed-80-feet#comments</comments><guid isPermaLink="false">5ded8579-50a0-4616-ad46-ecd53638976b</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:41:47 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:41:47.841Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam,Hogenakkal,Southwest Monsoon,தென்மேற்கு பருவமழை,ஒகேனக்கல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/zd9v02bk/metturdam3.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/zd9v02bk/metturdam3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியது.</strong></em></p><h2>தென்மேற்கு பருவமழை</h2><p>கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்தை பொறுத்து தமிழகத்துக்கு காவிரியில் அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. </p> <h2>நீர்மட்டம்</h2><p>இன்று காலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 8448 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே போல் கிருஷ்ண ராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 109.74 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4875 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2310 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>ஒகேனக்கல் பரிசல் இயக்க தடை</h2><p>இதன் காரணமாக ஒகேனக்கல்லில் இன்று காலை வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி இன்று 4-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணைக்கு</a> நேற்று மாலை வினாடிக்கு 8583 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 7833 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.</p> <h2>80 அடியை தாண்டியது</h2><p>அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.31 அடியாக இருந்தது. கர்நாடகாவில் மழையின் தீவிரம் அதிகரித்து உபரிநீர் திறப்பு அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>ரூ.10.74 கோடி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: பிரபல சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் புனேயில் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-10-74-crore-popular-social-media-influencer-held-in-pune</link><comments>https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-10-74-crore-popular-social-media-influencer-held-in-pune#comments</comments><guid isPermaLink="false">908ca415-9154-4d97-90cf-083912fff780</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:29:00 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:29:00.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புனே,Pune,DigitalArrestScam,டிஜிட்டல்அரெஸ்ட்மோசடி,சைபர்போலீஸ்,CyberPolice,OnlineFraud,InfluencerArrested,இன்ஃப்ளூயன்ஸர்கைது,MuleAccountScam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z9i07wyu/Mule-AccountScam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mule AccountScam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z9i07wyu/Mule-AccountScam?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலம் முதியவர் ஒருவரிடம் ரூ.10.74 கோடி சுருட்டிய வழக்கில், 26 வயதான பிரபல சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் ரோஹன் ராஜேஸ்வர் ஜாதவ் என்பவரை <a href="https://www.maalaimalar.com/topic/pune">புனே</a> சைபர் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். </p><p>நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் முறைப்படி கைது செய்யப்பட்டார்.</p><h2>வழக்கின் பின்னணி:</h2><p>புனேயின் டெக்கான் பகுதியைச் சேர்ந்த 82 வயது ஓய்வுபெற்ற தொழிலதிபர் ஒருவரை மிரட்டிய மோசடி கும்பல், அவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியிருப்பதாகக் கூறி 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்துள்ளது. </p><p>இதன் மூலம் அவரிடமிருந்து ரூ.10.74 கோடியைப் பறித்துள்ளனர்.</p><h2>இன்ஃப்ளூயன்ஸரின் பங்கு:</h2><p>இதுகுறித்து சைபர் பிரிவு சீனியர் இன்ஸ்பெக்டர் ஸ்வப்னாலி ஷிண்டே கூறுகையில், "கைது செய்யப்பட்டுள்ள ரோஹன் ஜாதவ், மோசடி கும்பலுக்கு போலி வங்கி கணக்குகளை வழங்கியுள்ளார். </p><p>இந்த கணக்குகள் மூலம் பலரிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது" என்றார். போலீசார் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது இந்த போலி கணக்கு நெட்வொர்க் அம்பலமானது.</p><h2>அடுத்தடுத்த கைதுகள்:</h2><p>இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுபம் தனதோலே(26), அமர் அதராகி(24) உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். </p><p>அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது அடிப்படையிலேயே ரோஹன் ஜதாவும் பிடிபட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ரோஹன் ஜதாவ், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் குறுகிய வீடியோக்களை பதிவிட்டு லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: கட்கோபர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 6 பேர் பரிதாப பலி; மீட்புப் பணிகள் தீவிரம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/heavy-rain-mumbai-landslide-kurla-six-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/heavy-rain-mumbai-landslide-kurla-six-killed#comments</comments><guid isPermaLink="false">74fd4b75-cca2-4636-9df1-0752bea4ee62</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:20:58 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:20:58.545Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,Mumbai landslide,Ghatkopar,மும்பை நிலச்சரிவு,கட்கோபர் பகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/wxa6rpdx/mm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai landslide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/wxa6rpdx/mm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நகரின் கிழக்கு புறநகர் பகுதியான கட்கோபர் சிராக் நகரில் உள்ள கௌசியா சால் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. குன்றின் சரிவிலிருந்து பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில், அங்குள்ள குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><h2>அதிகா<strong>லையில் நிகழ்ந்த விபரீதம்</strong></h2><p>பிருஹன் மும்பை மாநகராட்சி மற்றும் தீயணைப்புத் துறை அளித்த தகவலின்படி, இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை சுமார் 3:48 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மக்கள் ஆழந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில், குன்றின் ஒரு பகுதி திடீரென சரிந்து வீடுகளின் மீது விழுந்தது. தகவல் அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை, மும்பை தீயணைப்புப் படை, காவல்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.</p><h2>கேமரா<strong>க்கள் மூலம் தீ</strong>விர சோதனை</h2><p>நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மிகவும் குறுகலான பாதைகளைக் கொண்டதாக இருப்பதால், பெரிய இயந்திரங்களை அங்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. </p><figure><img alt=" 6 killed in a landslide" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/yq8kdkq0/lands.jpg" /></figure><p>இதனால் மீட்புக் குழுவினர் மனித ஆற்றல் மூலமாகவும், சிறிய வாளிகள் மூலமாகவும் இடிபாடுகளை அகற்றும் சவாலான பணியை மேற்கொண்டனர். </p><p>இடிபாடுகளுக்குள் எவரேனும் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய நவீன இடிபாடுகளுக்குள் தேடும் 'விக்டிம் டிடெக்ஷன் கேமரா' கருவிகள் பயன்படுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் உடனடியாக ராஜாவாடி மற்றும் பாபா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>நிவார<strong>ண உத</strong>வி</h2><p>சம்பவ இடத்தை மும்பை மேயர் ரிது தவாடே மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறிய மேயர், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுக்காக தலா ரூ. 50,000 நிதி உதவியும் அறிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அழகிலும் அழகு.. 27 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணம் - கண்டு ரசித்த மக்கள் </title><link>https://www.maalaimalar.com/news/world/rare-total-solar-eclipse-in-europe-first-full-eclipse-in-27-years-dazzles-skywatchers-across-northern-spain-and-other-regions</link><comments>https://www.maalaimalar.com/news/world/rare-total-solar-eclipse-in-europe-first-full-eclipse-in-27-years-dazzles-skywatchers-across-northern-spain-and-other-regions#comments</comments><guid isPermaLink="false">68c1902e-9ca9-45a6-ba24-548843483398</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:13:01 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:13:01.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூரிய கிரகணம்,europe,Solar eclipse,ஐரோப்பா,வானியல் நிகழ்வு,astronomical event</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3wzz2lr0/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சூரிய கிரகணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சூரிய கிரகணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3wzz2lr0/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்தில் நேற்று முதல் முழு <a href="https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12">சூரிய கிரகணம்</a> காணப்பட்டது.</p><p>இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டில்தான் ஐரோப்பிய நிலப்பகுதியில் முழு சூரிய கிரகணம் தென்பட்டடிருக்கிறது.  </p> <h2>27 ஆண்டுகளுக்குப் பிறகு</h2><p>ஆகஸ்ட் 12 - நேற்று மாலை வட ஸ்பெயின், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, போர்ச்சுகலில் முழு சூரிய கிரகணம் தென்பட்டது. ரஷியாவின் வட பகுதியிலும் முழு கிரகணம் தெரிந்தது.</p><p>ஐரோப்பாவின் பிற பகுதிகள், வடமேற்கு ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் பகுதியளவு சூரிய கிரகணம் தென்பட்டது.</p><p>இந்த கிரகணத்தின் உச்சக்கட்டத்தின் போது, நிலவு சூரியனை முழுமையாக மறைத்த நிகழ்வு 2 நிமிடங்கள் 18 வினாடிகள் வரை நீடித்தது.</p> <h2>ரசித்த மக்கள்</h2><p>அந்தச் சில நிமிடங்களில் பகல் நேரம் திடீரென மாலை நேர இருளாக மாறியது.</p><p>உலகின் கோடிக்கணக்கான மக்கள் இந்த முழு சூரிய கிரகணத்தை நேரிலும் நேரலையிலும் கண்டு ரசித்தனர். நாசா இந்த நேரலையை ஒளிபரப்பியது. </p><p>ஸ்பெயினில் சூரிய அஸ்தமன நேரத்தில் இந்த கிரகணம் நிகழ்ந்ததால், மற்ற இடங்களை விட மிக பார்க்க அழகாக இருந்தது. </p><p>ஸ்பெயினில் மட்டும் சுமார் 60 லட்சம் மக்கள் இதைக் காண திரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இந்தியாவில் கிரகணம் நிகழ்ந்த நேரத்தில் இரவாக இருந்ததாலும், இந்தியா இந்த கிரகணத்தின் நிழல் பாதையில் அமைந்திருக்கவில்லை என்பதாலும் இங்கிருந்து இந்த சூரிய கிரகணத்தை நம்மால் காண முடியவில்லை.</p>]]></content:encoded></item><item><title>நாளை ஆடிப்பூர தேரோட்டம்: ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆண்டாளுக்கு மங்களப்பொருட்கள் அனுப்பிவைப்பு</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-auspicious-items-sent-to-andal-from-srirangam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-auspicious-items-sent-to-andal-from-srirangam#comments</comments><guid isPermaLink="false">ad64ef6b-f82e-4062-ae6d-ed4ea6438c04</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:12:13 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:12:13.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,Srivilliputhur,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்,ஆடிப்பூரம்,aadi pooram,Andal,திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/0y0wyk2b/srirangam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Srirangam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/0y0wyk2b/srirangam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியினால் அவருக்கு பூமாலையுடன், பாமாலை சூட்டியதோடு அவரிடமே மணமாலையும் சூடிக் கொண்டாள். இதனால் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற சிறப்புப்பெயரும் உண்டு. </p><h2>ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்</h2><p>ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்த உறவும், மங்களப்பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலமாக இருந்து வந்தது. பல்வேறு காரணங்களினால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது.</p> <h2>மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை</h2><p>இந்தநிலையில் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் அவ்வழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல்நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் பரஸ்பரம் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது.</p> <h2>ஆடிப்பூர தேரோட்டம்</h2><p>இந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் <a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-3">ஆடிப்பூர</a> தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், பழங்கள், சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.</p> <h2>ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்</h2><p>இதற்கென ரெங்கநாதர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு செல்லவுள்ள மங்களப்பொருட்கள் கோவில் ரங்க விலாச மண்டபத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின், உள்வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன.</p><p>இந்த மங்களப்பொருட்கள் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ரெங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாளை ஆடிப்பூரம்:  பெண்கள் வாழ்வில் சுப பலன்களை அள்ளித் தரும் ஆண்டாள் வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/tomorrow-aadi-pooram-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/tomorrow-aadi-pooram-worship#comments</comments><guid isPermaLink="false">6f3c934e-6245-452c-ab41-82201380b42b</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:10:44 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:10:44.967Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆடி மாதம்,ஆடிப்பூரம்,aadi pooram,Aadi Month,Andal Worship,ஆண்டாள் வழிபாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/m1s13y1j/aadipooram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/m1s13y1j/aadipooram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கன்னிப்பெண்களை மகிழ்விப்பதும் சுமங்கலிகளை மகிழ்வித்து மங்கலப் பொருட்கள் வழங்குவதும் மிகப்பெரிய புண்ணியம். சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும்.</strong></em></p><p>ஆடி மாத விழாக்களில் முக்கியமான <a href="https://www.maalaimalar.com/topic/ஆடிப்பூரம்">ஆடிப்பூரம்</a> நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் நாளை காலை 7.22 மணிக்கு தொடங்கி, நாளை மறுநாள் காலை 7:01 மணிக்கு நிறைவடைகிறது.</p><p>அனைத்து மாதங்களிலும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்தது ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில்தான்.  </p><p>ஒருசமயம் நாராயணனிடம் பூமிதேவி, ‘இந்த உலகத்தில் உள்ள ஆத்மாக்களில் தாங்கள் யாரிடத்தில் அதிக அன்பு செலுத்துவீர்கள்?’ என்று  கேட்டார். அதற்கு அவர் ‘பூலோகத்தில் வாழ்ந்தும் இக சுகங்களில் பற்று வைக்காமல் என்னிடமே நித்தம் பக்தி செய்து என்னை நினைத்து எனக்குப் பாமாலையும், பூமாலையும்  தொடுத்துச் சாத்துகின்ற பாகவதர்களிடம் நான் அளவு கடந்த அன்பு செலுத்துவேன், என்றார். </p><h2><strong>பெருமாள் மீது பக்தி</strong></h2><p>உடனே பூமிதேவி, தான் அத்தகைய பக்தையாக  பிறவியெடுக்க அருளவேண்டினார். அதன் படியே, நள வருடம் ஆடி மாதம் சுக்ல பட்சம் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய அன்று நந்தவனத்தில் துளசி மாடத்துக்குக் கீழே இப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில் உள்ள நாச்சியார் சந்நிதி உள்ள இடத்தில் பூமாதேவி சிறு குழந்தையாக ஆண்டாளாக அவதரித்தாள்.  </p><p>வடபத்ரசாயி பெருமாளுக்கு மாலை அணிவிக்கும் பொருட்டு பூக்கள் பறிப்பதற்காக விடியற்காலையில் பூக்குடலையுடன் நந்தவனத்திற்குச் சென்ற விஷ்ணு சித்தர் எனும் பெரியாழ்வார் அந்த சிறு குழந்தையைப் பார்த்தார். அந்த குழந்தையை சுரும்பார் குழற்கோதை அல்லது சுருக்கமாக கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.</p><p>இளம் வயதிலேயே சமயம், தமிழ் என தனக்குத் தெரிந்த அனைத்தையுமே பெரியாழ்வார் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராகவும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். </p><p>கன்னிப் பருவம் அடைந்த கோதைக்கு பெரியாழ்வார் உயர்ந்த ஞானத்தைப் போதித்தார். கோதையும் கண்ணனையே சிந்திப்பதும் துதிப்பதும் மற்றும் அந்த கோவிந்தன் நினைவாகவே வளர்ந்து வந்தாள்.  இளமை தொடங்கி பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றிருந்தாள் கோதை.</p><h2><strong>கோதை சூடிக்கொடுத்த  மாலையே நறுமணம்</strong></h2><p>பெரியாழ்வார் தினமும் பூ  கொய்து வந்து அதை மாலையாகக் கட்டி பெருமாளுக்கு சாற்றுவதற்கு பூக்கூடையில் வைப்பது வழக்கம். பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஆழ்வாரால் தொடுக்கப்பட்ட மாலையை, கோதை, ஒவ்வொரு நாளும்  தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று  கண்ணாடியில்  பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. பெருமாளும் அதை விருப்பமுடன் ஏற்றுக்கொண்டார். இது பெரியாழ்வாருக்கு தெரியாது. ஒருநாள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காகக் கட்டி வைத்திருந்த மாலையைச் சூடி  கண்ணாடியில் கோதை, தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்ததை பெரியாழ்வார் கவனித்துவிட்டார். </p><p>மனவருத்தத்தால் பகவானுக்கு அன்று அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார்.  அன்று இரவு ஆழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றி ‘கோதை சூடிக்கொடுத்த  மாலையே நறுமணம் மிக்கதும் எம் உள்ளத்திற்கு விருப்பமானதும் ஆகும்; ஆதலின் அத்தன்மையான மாலையே கொண்டு வருவாய்’ எனச் சொன்னார்.</p><p>தனக்கு  மகளாய் வாய்த்துள்ள கோதை பூமிதேவியின் அவதாரம் என பெரியாழ்வார் தெரிந்துகொண்டார்.  தான் சூடிக் கொடுத்த மாலையை பகவான் ஏற்றுக்கொண்டதால், அன்று முதல் கோதை, ‘சூடிக்கொடுத்த நாச்சியார்’ எனவும், ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் “ஆண்டாள்” என்றும் போற்றப்படுகிறார். அரங்கநாதரின்  பெருமைகளைக் கேட்டு அளவற்ற இன்பம் அடைந்து அரங்கனுக்கே மாலையிடுவதென உறுதி பூண்டாள் ஆண்டாள். ரங்கநாதரும் அவளுடைய பக்திக்கு வசமாகி  கோதையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். </p><p>அரங்கன் ஆழ்வாரின் கனவில் தோன்றி கோதையை ஸ்ரீ ரங்கத்திற்கு அழைத்து வருமாறு ஆணையிட்டார். பாண்டிய நாட்டு மன்னனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வருவாயாக என்றருளினார். மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் வந்து அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான்.</p><p>அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையுடன் பலரும் ஸ்ரீரங்கம் பெரிய கோவிலை அடைந்தனர்.  ஸ்ரீரங்கத்தில் நுழைந்ததும் அரங்கனுக்காகவே அலங்கரித்தால் போல் இருந்த  ஆண்டாள் பல்லக்கிலிருந்து இறங்கி பெரிய பெருமாள், சந்நிதியில் சென்று, மறைந்து பரமபதம் அடைந்தாள்.  </p><p>ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம் முழுவதுமே ஆண்டாளை வழிபடலாம். பிரார்த்தனை செய்து நம்முடைய கோரிக்கைகளை வைக்கலாம். ஒரு அன்னையின் கருணையுடன் நம் குறைகளைக் கேட்டறிவாள் ஆண்டாள். மங்காத செல்வங்களைத் தருகிறாள்.  ஆண்டாளை நினைத்து பூஜைகள் செய்து, ஒரு செவ்வாய்க்கிழமையோ வெள்ளிக்கிழமையோ சுமங்கலிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை-பாக்கு என மங்கலப் பொருட்களுடன் புடவை, ரவிக்கை அல்லது ரவிக்கை மட்டுமோ வைத்து கொடுக்கலாம்.</p><p>இதனால்  இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி தங்கும். இதேபோல், சிறுமியருக்கும் வளையல், பொட்டு, கண்ணாடி, மருதாணி முதலான மங்கலப் பொருட்களை வழங்கலாம். வீட்டில், தடைபட்ட மங்கல காரியங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து நடைபெற அருளுவாள் ஆண்டாள். பெருமாளின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.</p><p>கன்னிப்பெண்களை மகிழ்விப்பதும் சுமங்கலிகளை மகிழ்வித்து மங்கலப் பொருட்கள் வழங்குவதும் மிகப்பெரிய புண்ணியம். சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும். குழந்தை இல்லையே என்று ஏங்குவோருக்கு, விரைவில் சந்தான பாக்கியம் அருளுவாள் ஆண்டாள் அன்னை. பொன் பொருள் சேர்க்கை நிகழும். ஆடை ஆபரணச் சேர்க்கைகளை வழங்குவாள் ஆண்டாள். ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு வீட்டிலிருந்தே பல வழிபாடுகளை செய்யலாம். அம்பாள் ஆராதனையை குடும்பத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் சேர்ந்து செய்யலாம்.  வீட்டை சுத்தம் செய்து, அலங்கரித்து, ஆண்டாளுக்கு உரிய தாமரைப்பூ, சிகப்பு நிற ஆடை, கல்கண்டு சாதம் ஆகியவற்றை படைத்து வழிபட்டு தான தர்மம் செய்தால் ஆண்டாளின் பூரண அருள் கிட்டும் என்பது நம்பிக்கை. </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள்..!- பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வரவேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/historic-resolutions-passed-in-assembly-golden-kodi-armstrong-welcome</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/historic-resolutions-passed-in-assembly-golden-kodi-armstrong-welcome#comments</comments><guid isPermaLink="false">2e5fc61b-2ac4-4bc5-b130-929a2b587760</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:10:18.117Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,தீர்மானங்கள் நிறைவேற்றம்,பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ckb6x8m6/porkodi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Porkodi Armstrong]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ckb6x8m6/porkodi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி பொது செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சட்டமன்றத்தில்  கொண்டுவரப்பட்ட சரித்திர சிறப்புமிக்க  தீர்மானங்களை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் கூறியதாவது:-</p><p>சட்டமன்றத்தில் விளிம்பு நிலை மக்களின் மருத்துவக் கல்வியை கருத்தில் கொண்டும் மருத்துவக்கல்வி கார்ப்பரேட் மயமாவதை தடுத்து நிறுத்தும் பொருட்டும் கொண்டு வரப்பட்ட நீட் ஒழிப்பு தனித்தீர்மானம், சிறுபான்மையினரின் கல்வி  நிறுவனங்கள் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களை முடக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும்  வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சி ஆர்ஏ) திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக் கீட்டை தாமதப்படுத்தாமல் நிறைவேற்ற வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம், தமிழகத்தின் 7.18 சதவீத நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதாசாரத்தை  குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வர முயற்சிக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானம் என தமிழக முதல்வர் தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  அனைத்து தீர்மானங்களையும்  தமிழ்மாநில பகுஜன் சமாஜ் கட்சி  பாராட்டி வரவேற்கிறது.</p><p>மேலும், நம் மாநில  நலன் கருதியும் மக்களின் நலன் கருதியும் இதுபோன்று எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை  தமிழக முதல்வர் முன்னெடுத்தாலும்  தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி அதை வரவேற்பதோடு அரசுக்கு உறுதுணையாகவும் நிற்கும் என்பதையும்  தெரிவித்துக் கொள்கிறது. தொடரட்டும் நல்லவை மட்டும். பாராட்டுகள்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அல் கொய்தா தான் காரணம் - ஐநா பரபரப்பு அறிக்கை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-car-bomb-alert-un-report-links-aqis-al-qaeda-affiliate-to-red-fort-blast-contradicting-indian-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-car-bomb-alert-un-report-links-aqis-al-qaeda-affiliate-to-red-fort-blast-contradicting-indian-probe#comments</comments><guid isPermaLink="false">73daac01-82f2-4583-bb01-3bb16bf08ba9</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:55:44 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:55:44.489Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lashkar-e-Taiba,அல் கொய்தா,al qaeda,லஷ்கர் இ தொய்பா,செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு,Red Fort car bombing</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/52oemgy6/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு ]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/52oemgy6/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி சென்கோட்டை அருகே நடந்த <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-car-bombing-terrorists-used-chatgpt-to-design-rocket-explosives-in-red-fort-attack">கார் குண்டுவெடிப்பில்</a> அல் கொய்தாவின் கை இருப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்காணிப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. </p><h2>அல் கொய்தா </h2><p>கடந்த ஆகஸ்ட் 10 வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், "இந்திய துணை கண்டத்தில் அல் கொய்தாவின் ஒரு துணைப் பிரிவு, பிராந்திய பயங்கரவாத அமைப்பாக வளர்ந்து வருகிறது. அது ஒரு மத்திய தலைமையின் கீழ் இல்லாமல் தனி தனியே ஆங்காங்கே சிறு சிறு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. </p><p>நவம்பர் 2025 இல் செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலை அல் கொய்தாவின் இந்த துணை அமைப்பே மேற்கொண்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.   </p><p>அந்த அமைப்பின் பெயர் "அன்சார் கஸ்வத்உல் ஹிந்த்" (AQIS) என ஐநா கவுன்சில் குழு குறிப்பிட்டுள்ளது. 2014 இல் இந்த துணைப்பிரிவை  அல் கொய்தா தொடங்கியுள்ளது. </p><p>இந்த அமைப்பு தற்போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் (சில பகுதிகள்) உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>எல்லைகளை கடந்து இயங்கி வருவதால் இவ்வமைப்பு ஆபத்தானது என அறிக்கை வகைப்படத்தியுள்ளது. </p><p>என்ஐஏ உள்ளிட்ட இந்திய முகமைகள் நடத்திய விசாரணையில் செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதல் பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு என கூறப்பட்ட நிலையில் ஐநாவின் இந்த மாறுபட்ட அறிக்கை விவாதத்தை தூண்டியுள்ளது. </p><h2>செங்கோட்டை கார் குண்டுவெடிப்பும் என்ஐஏ விசாரணையும்</h2><p>2025, நவம்பர் 10, மாலை 7 மணியளவில் டெல்லி செங்கோட்டை வெளியே ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அப்பகுதியில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்தவனும் உயிரிழந்தான்.</p><p>அவன் பெயர் உமர் இ நபி என அடையாளம் காணப்பட்டது. இவனுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பவுடன் தொடர்பிருந்ததாக கூறப்பட்டது.</p><p>இவன் பஞ்சாபில் அல் பலா என்ற பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தவன் எனவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பல்கலைக்கழகமும் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரியவந்தது.</p><p>செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, 11 குற்றவாளிகளுக்கு எதிராக 7,500 குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்திருந்தது. இந்தக் குற்றப்பத்திரிகையை வரும் ஆகஸ்ட் 27 அன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: 20 ஆயிரம் போலீசார் குவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/security-arrangements-for-the-independence-day-celebrations-in-delhi-have-been-intensified</link><comments>https://www.maalaimalar.com/news/national/security-arrangements-for-the-independence-day-celebrations-in-delhi-have-been-intensified#comments</comments><guid isPermaLink="false">beedb655-3272-4e6b-a84a-7e07d616286f</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:48:51 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:48:51.772Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,போலீசார் பாதுகாப்பு,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/05b6o50t/delhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டெல்லியில் சுதந்திர தினவிழா ஒத்திகையில் ‘வந்தே மாதரம்’ எழுத்துக்கள் தெரியும் வகையில் மாணவர்கள் அமர்ந்திருந்த காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லியில் சுதந்திர தினவிழா ஒத்திகையில் ‘வந்தே மாதரம்’ எழுத்துக்கள் தெரியும் வகையில் மாணவர்கள் அமர்ந்திருந்த காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/05b6o50t/delhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்க, டெல்லி போலீசார் ரோந்து பணிகள், வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.</strong></em> </p><h2><strong>80-வது சுதந்திர தின விழா</strong></h2><p>80-வது <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தின விழா</a> நாடு முழுவதும் நாளை மறுநாள் (15-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மேலும் “வந்தே மாதரம்” பாடலின் 150-வது ஆண்டை கொண்டாடும் வகையில் முதல்முறையாக சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. டெல்லி நகரம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்க, டெல்லி போலீசார் ரோந்து பணிகள், வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் கூடுதல் சோதனைச்சாவடிகள் மற்றும் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்ற பின்னணி கொண்டவர்கள் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதிலும் போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.</p><p>இதுகுறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து நிலையில் உள்ள போலீஸ் அதிகாரிகளும் களத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு டெல்லியின் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் வாகனங்களை கண்டறிய சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழா நடைபெறும் பகுதியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெண் போலீசார் உட்பட 1,600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எல்லை பகுதிகள், முக்கிய சந்திப்புகள் மற்றும் பிற இடங்களில் சுமார் 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>சோதனை</strong></h2><p>முக்கிய சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து போலீசார், ரோந்து போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் வாகனங்களை சோதனை செய்வதோடு, வாகன நிறுத்தும் இடங்களிலும் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.</p><p>குற்ற பின்னணி கொண்டவர்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அவர்களை கண்காணித்து வருகிறோம். அதேபோல் ஏராளமான வாகனங்களையும் வாகன நிறுத்தும் இடங்களையும் ஆய்வு செய்கிறோம்.</p><p>மூத்த போலீஸ் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஆய்வு மேற்கொள்கிறார்கள். போலீஸ் நிலையங்களில் உள்ள பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து மற்றும் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். சோதனைச் சாவடிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.</p><p>கிழக்கு டெல்லியில், சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக அனைத்து போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் களத்தில் உள்ளனர். அங்கு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்கள் மற்றும் அதிக நடமாட்டம் கொண்ட பகுதிகளில் வான்வழி கண்காணிப்பை மேற்கொள்ள போலீசார் டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில், தரை வழி கண்காணிப்பு மற்றும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. எல்லை பகுதிகள் மற்றும் நகருக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் முக்கிய பாதைகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் அமைதியாக நடைபெறுவதை உறுதிசெய்ய, தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், வழக்கமான ரோந்து பணிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் மீதான விரைவான நடவடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>‘சிவாஜி’ படப்பிடிப்பில் ரஜினி அளித்த பிரம்மாண்ட வரவேற்பு:  நடிகை ஸ்ரேயா நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/grand-welcome-rajinikanth-sivaji-shoot-shriya-saran-moved</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/grand-welcome-rajinikanth-sivaji-shoot-shriya-saran-moved#comments</comments><guid isPermaLink="false">7eb7aacf-de4b-4a0f-8382-424a2789b41d</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:46:43 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:46:43.435Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,ரஜினி,Shriya Saran,சிவாஜி,Sivaji:The Boss,நடிகை ஸ்ரேயா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/q0d4dqyj/saran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shriya Saran  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/q0d4dqyj/saran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரேயா சரண், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து தனது சமீபத்திய பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். </p><h2>சிவாஜி: <strong>தி பாஸ்</strong></h2><p>நடிகர் ரஜினிகாந்தும் இயக்குநர் ஷங்கரும் முதன்முறையாக இணைந்து 2007-இல் உருவாக்கிய பிரம்மாண்ட படமான 'சிவாஜி: தி பாஸ்' திரைப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஸ்ரேயா சரண் நடித்திருந்தார். இப்படத்தின் நினைவுகளையும், ரஜினிகாந்துடனான தனது முதல் சந்திப்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.</p><h2>அதிர்ச்சியி<strong>ல் உறைந்த</strong> ஸ்ரேயா</h2><p>சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முதன்முதலில் சந்திப்பதற்கு முன்பு தான் மிகவும் பதற்றமாகவும், பயமாகவும் உணர்ந்ததாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தைப் பார்த்தவுடன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோய்விடக் கூடாது என்பதற்காக, அவரோடு சேர்ந்து நடிப்பதற்கான ஒத்திகைக்குச் செல்வதற்கு முன்பாகவே, தன்னை ரஜினிக்கு அறிமுகப்படுத்தி வைக்குமாறு இயக்குநர் ஷங்கரிடம் ஸ்ரேயா கேட்டுக்கொண்டாராம். ஸ்ரேயாவின் இந்த பதற்றமான கோரிக்கையைக் கேட்டு இயக்குநர் ஷங்கர் சிரித்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.</p><p>சென்னைக்கு வந்து 'சிவாஜி' படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டபோதுதான் அந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டமும், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற முன்னணி கலைஞர்களின் பங்கேற்பும் ஸ்ரேயாவுக்குத் தெரியவந்தது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு வரை அந்தப் படத்தின் அறிவிப்பு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். </p><h2>ஸ்<strong>ரேயாவை கவர்ந்த ரஜினி</strong>யின் எளிமை</h2><p>படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தின் எளிய மனிதநேயம் குறித்துப் பேசிய ஸ்ரேயா, ரஜினி மிக எளிமையாகவும், இயல்பாகவும் பழகக்கூடியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். படப்பிடிப்பின் போது தன்னுடன் மிகச் சிறந்த நண்பரை போல பழகி, தன்னை மிகவும் சௌகரியமாக உணருமாறு ரஜினி மாற்றியதாக ஸ்ரேயா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும், ரஜினிகாந்தின் வாழ்க்கைப் பயணம் தனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்ததாகத் தெரிவித்த ஸ்ரேயா, தனது ஆரம்ப காலத்தில் மிகக் குறைந்த பணத்துடன் ஃபிலிம் ஸ்கூலில் சேர்ந்து படங்கள் பார்த்த கதையை ரஜினி தன்னிடம் பகிர்ந்துகொண்டதைக் குறிப்பிட்டார். இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்த பிறகும் ரஜினி காட்டும் அடக்கமும், தனது வேலையின் மீது அவர் கொண்டிருக்கும் காதலும் தன்னை மிகவும் கவர்ந்ததாக ஸ்ரேயா நெகிழ்ந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: அவிட் குரூப் ரூ.7000 கோடி முதலீடு- 12,000 பேருக்கு வேலை வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/avid-group-7000-crore-investment-creates-12000-jobs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/avid-group-7000-crore-investment-creates-12000-jobs#comments</comments><guid isPermaLink="false">216cc896-27f0-4b3a-b2c2-b6e5865f360f</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:39:51 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:39:51.532Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலீட்டாளர்கள் மாநாடு,Memorandum of Understanding,தவெக அரசு,TVK Govt,புரிந்துணர்வு ஒப்பந்தம்,Tamilnadu conference</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3qfavcq3/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3qfavcq3/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது.</p><p>சென்னை கிண்டியில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது.</p><p>அதன்படி, தவெக அரசு ஆட்சியமைத்து முதன்முறையாக நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.</p><h2>97 புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>முதலமைச்சர் முன்னிலையில் ஹிந்துஜா குரூப் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>ஹிந்துஜா குரூப் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</p><p>அக்னி கோல் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.</p><p>டைட்டன் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>மின் வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வைலட் தமிழகத்தில் ரூ.777 கோடி முதலுடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>கேப்லின் குரூப் நிறுவனம் ரூ.925 கோடியில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>ஜே.கே. டயர்ஸ் ரூ.5,143 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>தூத்துக்குடியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது ஸ்கை ரூட்.</p><p>ரூ.1000 கோடியில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>செயிண்ட் கோபைன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீடு செய்தவற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>அவிட் குரூப் ரூ.7000 கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மலம், 12,000 பேருக்கு வேலை வாய்ப்பு.</p><p>ரூ.400 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலை தரும் வகையில் தூத்துக்குடியில அக்னிகுல் காஸ்மோஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>அமெரிக்காவை சேர்ந்த FORTUNE நிறுவனம் 4,000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.477 கோடி முதலீடு செய்கிறது.</p><p>ஜப்பானின் YKK நிறுவனம் திருவள்ளூரில் ரூ.1651 கோடி முதலீட்டில் 4,316 பேருக்கு வேலை தரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>ஷைலி என்ஜினீயரிங் பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தமிழகத்தில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீடு.</p><p>ஆஸி.ன் Avid Group திருவள்ளூர், தூத்துக்குடியில் ரூ.7000 கோடி முதலீட்டில் 12,000 பேருக்கு வேலை தரும் வகையில் ஒப்பந்தம்.</p><p>ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான BIZER தமிழகத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>ஜெர்மனி நாட்டை சேர்ந்த டைம்லர் நிறுவனம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.4,000 கோடி முதலீடு செய்கிறது. </p><p>WOWsemi நிறுவனம் கோவையில் செமிகண்டக்டர் துறை திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டம்.</p><p>அடுத்த 2 ஆண்டில் ரூ.75 கோடி முதலீட்டில் Wafer on Wheels அனுபவ மையம், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளில் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து, 15,000 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.</p><p>ரஷியாவின் முன்னணி வங்கியான SBER BANK தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மன அழுத்தத்தால் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் திடீர் விலகல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/white-house-press-secretary-caroline-levitt-resigns-amid-stress</link><comments>https://www.maalaimalar.com/news/world/white-house-press-secretary-caroline-levitt-resigns-amid-stress#comments</comments><guid isPermaLink="false">a1fc0c1e-c296-4a0c-8420-92e52136b595</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:18:50 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:18:50.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,வெள்ளை மாளிகை,White House,டொனால்ட் டிரம்ப்,Karoline Leavitt,கரோலின் லீவிட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/x82qe70b/karoline.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karoline Leavitt  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/x82qe70b/karoline.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்த கரோலின் லீவிட், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மிகக் குறைந்த வயதில் இந்தப் பொறுப்பை ஏற்ற நபர் என்ற பெருமையைப் பெற்ற இவர், தனது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் கூடுதல் நேரத்தைச் செலவிடுவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். </p><h2>கடு<strong>மையான பணிச்சு</strong>மை</h2><p>இருப்பினும், கடுமையான பணிச்சுமை, தூக்கமின்மை மற்றும் கடுமையான மன அழுத்தம் ஆகியவையே இவரின் இந்தத் திடீர் விலகலுக்கு முக்கியக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டாவது குழந்தை பிறந்த இரண்டே மாதங்களில் மீண்டும் பணிக்குத் திரும்பிய லீவிட், பிரசவ விடுப்பில் இருந்தபோதே பணியிலிருந்து விலகுவது குறித்து யோசித்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>ஆனால், அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அவரைத் தொடர்புகொண்டு பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டதால் அவர் மீண்டும் பணியில் இணைந்தார். ஜூலை மாதம் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பணிக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் இடையே தீவிரப் போராட்டத்தைச் சந்தித்த இவர், கடுமையான பணி அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் விலக முடிவெடுத்தார்.</p><h2>தடுத்<strong>து நிறுத்த முய</strong>ன்ற அதிபர் டொனால்ட் டிரம்ப்</h2><p>டிரம்பிற்கு லீவிட் மீது மிகுந்த நம்பிக்கையும் மதிப்பும் இருந்ததால், அவரைத் பதவியில் தொடருமாறு பலமுறை வலியுறுத்தினார். செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து விலகினாலும், வரவிருக்கும் இடைத்தேர்தல் பணிகளிலும், குடியரசுக் கட்சியின் முக்கிய வெளியுறவு ஆலோசகராகவும் லீவிட் தொடர்வார் என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார். </p><h2><strong>குடியரசுக் கட்சியின் முக்கிய ஆலோசகரா</strong>கப் புதிய பயணம்</h2><p>லீவிட்டின் முடிவை மதிப்பதாகத் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், "கரோலின் வெள்ளை மாளிகையில் ஒரு சிறந்த தலைவராகச் செயல்பட்டு, நீதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் மிகச் சிறப்பாகப் போராடியுள்ளார்" என்று பாராட்டினார். செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து லீவிட் விலகினாலும், வரவிருக்கும் இடைத்தேர்தல் பணிகளிலும், குடியரசுக் கட்சியின் வெளியுறவு மற்றும் ஊடகப் பிரிவின் முதன்மை ஆலோசகராகவும் அவர் தொடர்ந்து செயல்படுவார் என்று டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மழைக்கால கூட்டத்தொடர் கடைசி நாள்: விவாதம் இல்லை.. வந்தே மாதரத்துடன் தொடங்கிய மக்களவை தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-clash-amit-shah-to-address-police-action-on-students-exam-protest-in-lok-sabha</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-clash-amit-shah-to-address-police-action-on-students-exam-protest-in-lok-sabha#comments</comments><guid isPermaLink="false">57b3ff38-f589-4eaa-9d18-3b744e172bd4</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:04:29 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:04:29.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Amit Shah,அமித் ஷா,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/cdn1isfi/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மழைக்கால கூட்டத்தொடர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழைக்கால கூட்டத்தொடர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/cdn1isfi/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">மழைக்கால கூட்டத்தொடரின்</a> கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 13), தொடங்கிய உடனே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் பேரணி வந்த மானவர்கள் மீது போலீசார் மற்றும்  ஆர்ஏஎப் மத்திய படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது. மேலும் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. </p> <h2>விவாதம்</h2><p>இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இன்று அமித் ஷா மக்களவையில் இதுகுறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்பட்டது. </p><p>பிரதமர் மோடி, அமித் ஷா இருவரும் மக்களவைக்கு வருகை தந்தனர். வந்தே மாதரம் பாடலுடன் அவை தொடங்கிய பின்னர் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை உடனே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.</p><p>இதன்மூலம் பிரதமர் மோடி, அமித் ஷா இருவரும் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின்  குரல்களுக்கு செவி சாய்க்கப்படவில்லை என்று ஊர்ஜிதம் ஆகியுள்ளது. </p> <p>மறுபுறம் இன்று மாநிலங்களவை வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. </p><p>முன்னதாக அரசு நிகழ்வுகளில் வந்தே மாதரம் முதலில் இசைக்க வேண்டும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமான நிலையில் இன்று இரு அவைகளிலும் வந்தே மாதரம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>‘அந்நியன்’ போன்ற காதலரால் நார்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்!-அனுபமா பரமேஸ்வரன் பரபரப்பு பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anupama-parameswaran-on-narcissistic-abuse-by-anniyan-like-ex-lover</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anupama-parameswaran-on-narcissistic-abuse-by-anniyan-like-ex-lover#comments</comments><guid isPermaLink="false">af455f69-2379-46e9-8750-63377e5f1f8e</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:54:26 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:54:26.449Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அனுபமா பரமேஸ்வரன்,Anupama Parameswaran,Anniyan,நர்சிசிஸ்டிக்,narcissistic,அந்நியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/u2kfapau/anupama.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anupama Parameswaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/u2kfapau/anupama.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன், தனது சமீபத்திய பேட்டியில் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி குறித்தும், கடந்த 2 ஆண்டுகளாக தான் சந்தித்த கொடுமையான நார்சிசிஸ்டிக் மன அழுத்த அனுபவங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். </p><h2>2 <strong>ஆண்டுகால</strong> வேதனை</h2><p>தான் அனுபவித்த உடல் ரீதியான மற்றும் மன ரீதியான துயரங்களை விவரித்த அனுபமா, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் சந்தித்த மன உளைச்சலே தனது கடந்தகால சமூக வலைத்தளப் பதிவுகளுக்குக் காரணம் என்று கூறினார். தன்னைச் சுற்றியுள்ள குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் என அனைவரும் தனது மாற்றத்தை உணர்ந்ததாகவும், அந்த உறவிலிருந்து விலகுவதே தனக்கு நல்லது என்பதை அனைவரும் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>‘அந்நி<strong>யன்’ போன்ற மாறுபட்</strong>ட குணம்</h2><p>அவர் தனது முன்னாள் காதலரின் நடவடிக்கைகளை நடிகர் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படக் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பேசினார். ஒரு நாள் அவர் 'ரெமோ' போல மிகவும் அன்பாகவும், மறுநாள் இரக்கமற்ற 'அந்நியன்' போலக் கொடூரமாகவும் நடந்துகொள்வார் என்றும், அதன் பிறகு தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார் என்றும் அனுபமா கூறினார். இந்தத் தொடர்ச்சியான மனமாற்றம் தமக்கு மிகப்பெரிய குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியதாகச் சுட்டிக்காட்டினார்.</p><h2>திரை<strong>ப்பட வாழ்க்கையில் ஏற்</strong>பட்ட பாதிப்புகள்</h2><p>இந்த நார்சிசிஸ்டிக் மனநிலையுடைய உறவினால் தனது திரைப்பட வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அவர் ஆதங்கப்பட்டார். தனது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அவர் கட்டுப்படுத்தத் தொடங்கியதால், பல நல்ல பட வாய்ப்புகளைத் தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'டிராகன்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூடத் தன்னால் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு இந்த உறவின் கட்டுப்பாடுகளே காரணம் என்று அனுபமா விளக்கியுள்ளார்.</p><h2><strong>சுயமரியாதையைக்</strong> காப்பாற்ற எடுத்த முடிவு</h2><p>மூன்று மாதங்களுக்குள்ளேயே திருமணப் பேச்சுகளைத் தொடங்கி அவசரப்படுத்தியதாகவும், ஆனால் நிலைமையை உணர்ந்து தான் திருமணத்தை நிராகரித்ததாகவும் அனுபமா கூறினார். இதன் மூலம் தான் ஒரு 'கோல்ட் டிக்கர்' அல்ல என்பதை நிரூபித்துள்ளதாகவும், சரியான நேரத்தில் எடுத்த இந்த முடிவே தன்னை ஒரு மோசமான திருமண வாழ்க்கையிலிருந்து காப்பாற்றியுள்ளது என்றும் அவர் அந்த பேட்டியில் உறுதிபடக் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு- 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/victory-tamil-nadu-investors-conference-97-mous-signed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/victory-tamil-nadu-investors-conference-97-mous-signed#comments</comments><guid isPermaLink="false">c3578f43-c350-48a1-9b70-2f19fbaef8e9</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:54:00 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:54:00.142Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,முதலீட்டாளர்கள் மாநாடு,புரிந்துணர்வு ஒப்பந்தம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9vnhop3k/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keerthana- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9vnhop3k/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது.</p><p>சென்னை கிண்டியில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>அதன்படி, தவெக அரசு ஆட்சியமைத்து முதன்முறையாக நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.</p><p>வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.</p><p>மாநாட்டில் 1,06,998 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.</p><p>ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.</p><p>100 நாட்களுக்குள் தவெக அரசு ஒரு லட்சம் கோடிக்கு மேல் தொழில்துறையில் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமாகிறது.</p><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>தமிழக வெற்றிக்கழகத்தில் 100 நாள் ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்ப்பு.</p><p>முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஓரணியில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து: திட்ட அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/boat-traffic-on-buckingham-canal-metro-rail-corporation-tenders-to-prepare-project-report</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/boat-traffic-on-buckingham-canal-metro-rail-corporation-tenders-to-prepare-project-report#comments</comments><guid isPermaLink="false">72ce0f65-8521-4344-ac81-c5f0b9729fe6</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:52:28 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:52:28.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Train,மெட்ரோ ரெயில்,Water Metro Project,வாட்டர் மெட்ரோ திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/1b6sx24n/Metrowater.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/1b6sx24n/Metrowater.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதற்கட்டமாக முட்டுக்காடு-நேப்பியர் பாலம் வரை 30 கிலோ மீட்டருக்கு வாட்டர் மெட்ரோ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது.</strong></em></p><p>சென்னை பெருநகரை சுற்றி ஓடும் கூவம் ஆறு, அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் போன்றவை பருவமழை காலங்களில் வெள்ளப்பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஒரு காலத்தில் ஆறுகளாக இருந்த இவை தற்போது குறுகி கால்வாயாக சுருங்கி விட்டது. </p><h2><strong>முகம் சுளிக்க வைக்கிறது</strong></h2><p>பெருகிவரும் குடியிருப்புகள், மக்கள் நெருக்கத்தின் காரணமாக கால்வாய்கள் ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டு கழிவு நீர் ஓடையாக மாறி உள்ளது. பெருநகர சென்னை என்ற அந்தஸ்தை சென்னை பெற்றாலும் இந்த கால்வாய்கள் மற்றும் ஆறுகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.  </p><p>ஆங்கிலேயர் காலத்தில் படகு போக்குவரத்து பக்கிங்காம் கால்வாயில் இருந்துள்ளது. காலப்போக்கில் அந்த அடையாளமே தெரியாமல் கூவமாக மாறிவிட்டது.</p><h2><strong>தூய்மைப்படுத்த முயற்சி</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/மெட்ரோ-ரெயில்">சென்னை</a> பெருநகரை அழகுப்படுத்தும் விதமாக பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வரும் மாநகராட்சி பக்கிங்காம் கால்வாய் மற்றும் கூவம் ஆற்றையும் தூய்மைப்படுத்த முயற்சி மேற்கொண்டது. </p><p>இந்த நிலையில் ‘வாட்டர் மெட்ரோ திட்டம்’  என்ற புதிய முயற்சி மூலம் பக்கிங்காம் கால்வாயை புதுப்பித்து அதில் படகு போக்குவரத்து தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>சென்னையில் வாட்டர் மெட்ரோ சேவையை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரையின் அடிப்படையில் அதன் சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. </p><h2><strong>படகு போக்குவரத்து</strong></h2><p>எண்ணூரில் இருந்து நேப்பியர் பாலம் வழியாக மாமல்லபுரம் வரை 53 கி. மீட்டருக்கு இந்த கால்வாயில் படகு போக்குவரத்து தொடங்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். </p><p>சென்னையை அழகுப்படுத்தும் நோக்கு மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மூலம் செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. </p><h2><strong>திட்ட அறிக்கை</strong></h2><p>முதற்கட்டமாக முட்டுக்காடு-நேப்பியர் பாலம் வரை 30 கிலோ மீட்டருக்கு வாட்டர் மெட்ரோ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது. எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை முழுமையாக வாட்டர் மெட்ரோ திட்டம் கொண்டு வர திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்த புள்ளியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. </p><p>இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை கொடுக்கப்படும். அதன் பின்னர் இதனை செயல்படுத்துவது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>லடாக்கில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/ladakh-earthquake-5-5-richter-recorded</link><comments>https://www.maalaimalar.com/news/national/ladakh-earthquake-5-5-richter-recorded#comments</comments><guid isPermaLink="false">a9843535-5247-46e4-befc-4f6b37f39134</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:31:19 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:31:19.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Earthquake,ladakh,லடாக் நிலநடுக்கம்,நிலநடுக்கம்,ரிக்டர அளவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/dc58rzj2/ladakh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ladakh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/dc58rzj2/ladakh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லடாக் பகுதியில் இன்று காலை 6.05 மணிக்கு திடிரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லடாக் பகுதியில் லே நகரில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. </p><p>இது ரிக்டர் அளவுகோலில், 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இந்த நிலநடுக்கத்தால், பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. </p><p>இதன் எதிரொலி, கார்கிலிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கன் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.    </p><p>இதைதொடர்ந்து, லடாக் மாநிலம் லே பகுதியில் இன்று காலை 9.54 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.</p><p>இது, ரிக்டர் அளவு கோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தந்தை மறைந்த 4 நாட்களில் ஆடுகளத்திற்கு திரும்பிய மெஸ்ஸி - ரசிகர்கள் நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/sports/football/lionel-messi-returns-after-fathers-death-inter-miami-appearance-inspires-fans</link><comments>https://www.maalaimalar.com/sports/football/lionel-messi-returns-after-fathers-death-inter-miami-appearance-inspires-fans#comments</comments><guid isPermaLink="false">b0aaf1c8-3178-4559-b174-fc3eb50e1661</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:23:37 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:23:37.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மெஸ்ஸி,Messi,கால்பந்து,FootBall,Father,தந்தை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/em8kvexf/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 
களத்தில் மெஸ்ஸி, தந்தையுடன் மெஸ்ஸி ]]></media:title><media:description type="html"><![CDATA[ களத்தில் மெஸ்ஸி, தந்தையுடன் மெஸ்ஸி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/em8kvexf/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அர்ஜென்டினாவில் ஆஸ்தான வீரர், உலக கால்பந்து கடவுள் என போற்றப்படும் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் <a href="https://www.maalaimalar.com/topic/lionel-messi">மெஸ்ஸி </a>கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தனது 68வது அகவையில் காலமானார். </p><p>இந்நிலையில் தந்தை இறந்த 4 நாட்களுக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி மீண்டும் கால்பந்து களத்திற்கு வந்தது ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது. </p><p>முன்னதாக தந்தை இறப்பின் பின், கால்பந்து விளையாட்டில் தொடர்வேனா என உறுதியாக தெரியவில்லை என்று மெஸ்ஸி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் இந்த மீள்வருகை நிகழ்ந்துள்ளது. </p> <h2>தந்தை மறைவு</h2><p>ஆகஸ்ட் 8 அன்று இயற்கை எய்திய ஜோர்ஜ் மெஸ்ஸியின் நீண்ட கால உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து மேலதிக தகவல் கூறப்படவில்லை. நடந்து முடிந்த பிபா உலகக் கோப்பையில் மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை ஸ்பெயினிடம் நழுவவிட்டது.</p><p>கால்பந்தில் மெஸ்ஸி, தி கோட் ஆக வளம் வர, அவரின் தந்தையின் பக்கபலமும் முக்கிய காரணம்.</p><p>லீக்ஸ் கோப்பை தொடரில் இன்டர் மியாமி சார்பில் விளையாடும் மெஸ்ஸி, தந்தை மறைவை அடுத்து அதிலிருந்து வெளியேறினார்.</p><p>தந்தையின் இறுதிச்சடங்குகளுக்காக அர்ஜென்டினாவில் உள்ள தனது சொந்த ஊரான ரோசரியோவிற்கு சென்றிருந்தார்.</p><p>அதைத்தொடர்ந்தே அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தந்தையின் இறப்பு குறித்த இரங்கல் உரையில், கால்பந்தில் தான் தொடர்வது குறித்து உறுதியாக தெரியவில்லை என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.</p><p>அதில், "நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை. இங்கிருந்து எப்படி தொடர்பது என்று தெரியவில்லை. நான் வாழ்வு முழுக்க கால்பந்து மட்டுமே விளையாடியிருக்கிறேன். ஆனால் அதை இன்னும் எவ்வளவு தூரம் தொடருவேன் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது" என எழுதியுள்ளார்.</p><p>மேலும் தனது தந்தை தன்னை பயிற்சி ஆட்டங்களுக்கு அழைத்துச் செல்வதை நினைவுகூர்ந்த அவர், "நீங்கள் எனது தந்தையும், நண்பனும், பிரதிநிதியும் ஆவீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z9rn14yw/tn-6.jpg" /></figure><h2>மீள்வருகை</h2><p>மெஸ்ஸி கால்பந்தில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று லீக்ஸ் தொடரில் லியோன் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இன்டர் மியாமி சார்பில் மீண்டும் மெஸ்ஸி களமிறங்கினார்.</p><p>லீக்ஸ் கோப்பையில் மாண்டரி அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் இன்டர் மியாமி 2-1 என தோல்வியை தழுவி தடுமாறிய நிலையில் நேற்றைய போட்டியில் லியோன் அணியை தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் இன்டர் மியாமிக்கு இருந்த நிலையில் மெஸ்ஸியின் வருகை நிகழ்ந்துள்ளது.</p><p>நேற்றைய ஆட்டத்தின் 2ஆம் பாதியில் மெஸ்ஸி இன்டர் மியாமி சார்பில் களமிறங்கினார். இருந்தும், லியோன் அணி 3-2 என்ற கணக்கில் இன்டர் மியாமியை வீழ்த்தியது.</p><p>வெற்றி தோல்விகளை தாண்டி, மெஸ்ஸியின் மீள்வருகை ரசிகர்களுக்கு புது தெம்பூட்டியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>உலக உறுப்பு தான தினம்: ஒரே ஒரு &apos;YES&apos; எட்டு பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் உயரிய கொடை!</title><link>https://www.maalaimalar.com/news/world/world-organ-donation-day-one-yes-eight-lives</link><comments>https://www.maalaimalar.com/news/world/world-organ-donation-day-one-yes-eight-lives#comments</comments><guid isPermaLink="false">fd5fa2ca-8b02-4363-bdba-593499ac927d</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:19:02.574Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,உடல் உறுப்பு தானம்,organ donation,உடல்நலம்,World Organ Donation Day,உலக உறுப்பு தான தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/33ssqk9e/organ.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ World Organ Donation Day   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/33ssqk9e/organ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக உறுப்பு தான தினம் ஆண்டுதோறும் இன்று (ஆகஸ்ட் 13) அனுசரிக்கப்படுகிறது. ஒரு தனிநபரின் உறுப்பு தான முடிவு, கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதயம், இரண்டு நுரையீரல்கள், கணையம் மற்றும் குடல் என எட்டு பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். இதுமட்டுமின்றி, திசு தானத்தின் மூலம் மேலும் 50-க்கும் மேற்பட்டோருக்குப் புதிய வாழ்க்கையை வழங்க முடியும்.</p><h2>இந்தி<strong>யாவில் உறுப்பு</strong> மாற்ற சிகிச்சையின் வளர்ச்சி</h2><p>இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 2013-ஆம் ஆண்டில் 5,000-க்கும் குறைவாக இருந்த அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 20,000-ஐத் தாண்டியுள்ளது. </p><p>இதன் மூலம் உயிருள்ள கொடையாளர்கள் மூலம் உறுப்பு மாற்று சிகிச்சை அளிப்பதில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாகியுள்ளது. இருப்பினும், உறுப்பு தேவைப்படுபவர்களுக்கும் உறுப்பு தானம் செய்பவர்களுக்கும் இடையேயான இடைவெளி இன்னும் மிகப்பெரிய சவாலாகவே நீடிக்கிறது.</p><h2>மக்களிடையே <strong>நிலவும் தவ</strong>றான எண்ணங்கள்</h2><p>இதற்கு மருத்துவ அமைப்புகளின் குறைபாடுகளை விட, மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கைகளே முதன்மையான காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சர்க்கரை நோய், புற்றுநோய், மூப்பு அல்லது மாரடைப்பு போன்ற மருத்துவ வரலாறுகள் இருந்தால் உறுப்பு தானம் செய்ய முடியாது என்ற தவறான எண்ணம் மக்களிடையே நிலவுகிறது. ஆனால், மருத்துவர்கள் ஒவ்வொரு உறுப்பின் நிலையையும் தனித்தனியாக ஆய்வு செய்தே தானம் பெறத் தகுதியானதா என்பதைத் தீர்மானிக்கின்றனர்.</p><h2>மூளைச்சாவு <strong>பற்றிய தெ</strong>ளிவு அவசியம்</h2><p>மேலும், 'மூளைச்சாவு' மற்றும் 'இதயத் துடிப்பு' குறித்த தவறான புரிதல்களும் தானத்திற்குப் பெரும் தடையாக உள்ளன. மூளைச்சாவு அடைந்த நபரின் உடலை செயற்கை சுவாசம் மூலம் பராமரிக்கும் போது இதயத் துடிப்பு இருந்தாலும், அது மூளைச்சாவு அடைந்த நிலையை மாற்றாது. மருத்துவரீதியாகவும் சட்டரீதியாகவும் மூளைச்சாவே மரணமாகக் கருதப்படுகிறது. அந்த குறுகிய காலத்தில் எடுக்கப்படும் ஒரே ஒரு சரியான முடிவு, பல உயிர்களைக் காக்கும் அமுதமாக மாறுகிறது.</p><h2>குடும்பங்களி<strong>ன் சம்மதமும் ச</strong>மூகப் பொறுப்பும்</h2><p>பொதுமக்கள் உறுப்பு தானத்திற்குப் பதிவு செய்வதுடன், தங்கள் விருப்பத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அவசர காலங்களில் குடும்பத்தினரின் சம்மதமே உறுப்பு தானத்தை சாத்தியமாக்குகிறது. சட்டப்பூர்வமான விழிப்புணர்வும், குடும்பங்களுக்கிடையேயான திறந்த உரையாடலும் அதிகரிக்கும் போதே இந்த உறுப்பு தான இயக்கம் முழுமையான வெற்றியைப் பெறும்.</p>]]></content:encoded></item><item><title>ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-3</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-pooram-3#comments</comments><guid isPermaLink="false">3a768fb0-97a6-4e73-9040-2bf727a43eb6</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:59:54 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:59:54.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,அம்மன் கோவில்,ஆடிப்பூரம்,aadi pooram,Amman temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/zd7e4flc/aadipooram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/zd7e4flc/aadipooram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று, ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை 'ஆடிப்பூரம்' என்று கொண்டாடுகிறோம். உலக நன்மைக்காக ஆடிப்பூர நாளில் உமா தேவி அவதரித்ததாக கூறப்படுகிறது. எனவே, இது தேவிக்குரிய நாளாக போற்றப்படுகிறது.</p> <h2>ஆடிப்பூரம்</h2><p>தாய்மை அடைந்த பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது வழக்கம். அதுபோல உலகை காக்கும் அன்னைக்கு ஆடிப்பூர நாவறு ஆலயங்களில் ஆடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.</p><p>இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும், அன்னைக்கு வண்ண வண்ண வளையல்களால் அலங்காரம் செய்கிறார்கள். பின்னர் அந்த வளையல்கள் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. அந்த வளையல்களை பெற்று, அணிந்துகொண்டால் மனம் போல் வாழ்க்கை அமையும், மங்கலம் நிலைத்திருக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.</p> <h2>திருமணம் கைகூடும்</h2><p>ஆடிப்பூர நாளில் அம்மன் ஆலயங்களுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்தும், மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, புடவை சாற்றியும், நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டால் திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் கைகூடும். ஆடிப்பூர நாளில்தான், சித்தர்களும், முனிவர்களும் தங்கள் தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.</p><p>இந்த ஆண்டு ஆடிப்பூரம், ஆகஸ்டு 14-ந்தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அந்நாளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பாகும். இயலாதவர்கள், வீட்டு பூஜையறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு வளையல், பட்டு புடவை சாற்றியும், நெய் விளக்கேற்றியும் வழிபடலாம்.</p> <h2>ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்</h2><p>பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக போற்றப்படுபவர், ஆண்டாள் நாச்சியார். இவர் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாடல்களை அருளியவர். திருவில்லிபுத்தூரில், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் நந்தவனத்தில் துளசிச் செடியின் கீழ் குழந்தையாக கண்டெடுக்கப்பட்டவர், ஆண்டாள். அவ்வாறு பெரியாழ்வாரின் திருக்கரங்களில் ஆண்டாள் வரப்பெற்ற நாளாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. </p> <h2>பெரியாழ்வார்</h2><p>பெரியாழ்வார் ஆண்டாளை அன்போடும், பண்போடும் வளர்த்தார். ஆண்டாளை வளர கண்ணன் மீது அளவுகடந்த அன்பு கொண்டார். பெரியாழ்வார், தினமும் அதிகாலையில் பூக்களை பறித்து, அதை மாலையாக தொடுத்து பெருமாளுக்கு அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அப்படி பெருமாளுக்கு கொடுத்து அனுப்பும் மாலைகளை, பெருமாளுக்கு சாற்றுவதற்கு முன்பாகவே ஆண்டாள் அணிந்து பார்ப்பார். ஒரு நாள் பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டார்.</p>  <p>இதனால் கோபம் கொண்ட அவர், “இறைவனுக்கு சாற்றும் மாலையை இப்படி அசுத்தம் செய்துவிட்டாயே” என்று ஆண்டாளை கடிந்து கொண்டார். பின்னர் பெரியாழ்வார், இதற்காக இறைவனிடம் மன்னிப்பும் கேட்டார். இதையடுத்து, அன்றிரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், “எனக்கு ஆண்டாள் உமை சூடிக்கொடுத்த மாலையே தர வேண்டும்" என்றார்.</p> <h2>தெய்வக்குழந்தை</h2><p>அப்போதுதான், ஆண்டாள் சாதாரண குழந்தை இல்லை, தெய்வக்குழந்தை என்பது பெரியாழ்வாருக்கு தெரியவந்தது. ஆண்டாள் திருமண வயதை அடைந்ததும், பெருமாளின் கட்டளைப்படி, பெரியாழ்வார் ஆண்டாளை திருவரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ஆண்டாள், அரங்கநாதரிடம் ஒளியாக கலந்துவிட்டார்.</p><h2>சிறப்பு பூஜை</h2><p>இதனால் ஆடிப்பூரத்தன்று, வைணவ தலங்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருமணமாகாத பெண்கள் அதில் கலந்து கொண்டு ஆண்டாளை வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை.</p> ]]></content:encoded></item><item><title>எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/platforms-1-to-5-at-egmore-railway-station-closed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/platforms-1-to-5-at-egmore-railway-station-closed#comments</comments><guid isPermaLink="false">b13b98c2-a7dc-4379-af06-ac5a9086fa0f</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:47:35 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:47:35.588Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/4kbngydy/chennaiegmore.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எழும்பூர் ரெயில் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எழும்பூர் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/4kbngydy/chennaiegmore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மறுசீரமைப்பு பணி காரணமாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடப்பட்டது.</strong></em></p><h2><strong>மறுசீரமைப்பு பணி</strong></h2><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மறுசீரமைப்பு பணியானது புதிய வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், மேம்படுத்தப்பட்ட நிலைய உள்கட்டமைப்பு மற்றும் பிற அதிநவீன வசதிகளை அமைப்பதை உள்ளடக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது வருகை மற்றும் பார்சல் பிரிவுக்கான நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>முதல் கட்டமாக நடைமேடை 1 முதல் 5 வரையில் 18 மீட்டர் அகலம், 120 மீட்டர் நீளத்துக்கு புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சில <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam">தாம்பரம்</a> நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்று முதல் நடைமேடை 1 முதல் 5 வரையில் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, நடைமேடை 4-ல் பள்ளம் தோண்டப்பட்டு பில்லர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2><strong>தண்டவாளங்கள் மூடல்</strong></h2><p>இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'மறுசீரமைப்பு பணி காரணமாக தற்போது நடைமேடை 1 முதல் 5-வரை உள்ள தண்டவாளங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. எனவே, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 6 முதல் 9 வரை உள்ள நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். மின்சார ரெயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-ல் இருந்து இயக்கப்படும். </p><p>தற்போது நடைபெறும் முதல் கட்ட பணிகள் முடிவடைந்ததும், 2-ம் கட்டமாக நடைமேடைகள் 6 முதல் 8 வரையிலான பகுதிகளில் நடைமேம்பாலத்திற்கான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற இருக்கிறது. அப்போது அதற்கேற்ப ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படும். 3-ம் கட்டமாக நடைமேடைகள் 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் 
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-13-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-13-8-2026#comments</comments><guid isPermaLink="false">ee8b1847-9d02-4cfa-b30e-b139a76a1cd3</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:37:28 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:37:28.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/19/23383098-gold.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/19/23383098-gold.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம்-இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 500 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 150-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>நேற்று ரூ.50 அதிகரித்து கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ரூ.400 அதிகரித்து சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600 உயர்ந்துள்ளது.</p> <h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>12-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600</p><p>11-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200</p><p>10-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><p>09-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p><p>08-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>12-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>11-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>10-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>09-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>08-08-2026- ஒரு கிராம் ரூ.250</p> ]]></content:encoded></item><item><title>குறைந்த விலை ரீசார்ஜ்களை சட்டென தட்டித்தூக்கிய ஏர்டெல் - பயனர்கள் அதிர்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/airtel-ends-all-prepaid-mobile-plans-offering-15-gb-data-per-day-with-unlimited-calls</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/airtel-ends-all-prepaid-mobile-plans-offering-15-gb-data-per-day-with-unlimited-calls#comments</comments><guid isPermaLink="false">d859d86c-7e2f-44a6-a31c-015ece2b5e7a</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:36:00 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:36:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prepaid Plan,airtel,ஏர்டெல்,ப்ரீபெயிட் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/003qva87/Airtel-Logo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Airtel Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/003qva87/Airtel-Logo.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/airtel">பாரதி ஏர்டெல்</a> நிறுவனம், தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியை வழங்கி வந்த அனைத்து ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களையும் நிறுத்தியது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிக டேட்டா பயன்பாட்டை கொண்ட, அதிக விலை கொண்ட திட்டங்களையே தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி (app) மூலம் இது தெரியவருகிறது. </p><p>இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 299, ரூ. 319, ரூ. 579, ரூ. 619 மற்றும் ரூ. 649 ஆகிய ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியுள்ளது. இதனால், பிரபலமான ரூ. 299 திட்டத்தை பயன்படுத்தியவர்கள் இனி அதிக விலை கொண்ட திட்டங்களையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டயம் ஏற்பட்டுள்ளது. </p><h2>விலை உயர்வு:</h2><p>தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருவதால், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கட்டண உயர்வை நோக்கிய தவிர்க்க முடியாத ஒரு மாற்றத்தை குறிப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.</p><p>மாற்றியமைக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலில், ஆரம்ப நிலை திட்டங்களான ரூ. 199 மற்றும் ரூ. 219 ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், பிரபலமான ரூ. 299 திட்டத்தை பயன்படுத்தியவர்கள், தினமும் அதிக டேட்டா தேவைப்பட்டால் இனி ரூ. 349 திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்; இது அவர்களுக்கு சுமார் 16 சதவீத விலை உயர்வாக அமைகிறது.</p><h2>அதிகாரப்பூர்வ அறிவிப்பு:</h2><p>ப்ரீபெயிட் திட்டங்கள் நீக்கப்பட்டது குறித்து ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இந்த நடவடிக்கை நிலையான ARPU வளர்ச்சியை நோக்கிய ஏர்டெல் நிறுவனத்தின் முயற்சிகளில் ஒரு பகுதி என்று இந்த மாற்றம் குறித்த விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.</p><p>ரூ. 299 திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டேட்டா அளவை விரைவாக பயன்படுத்திவிட்டு, கூடுதல் டேட்டாவுக்காக 'டாப்-அப்' செய்வதையோ அல்லது மீண்டும் ரீசார்ஜ் செய்வதையோ வழக்கமாக கொண்டிருந்தனர் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். ஒப்பிட்டு பார்க்கையில், ரூ. 349 திட்டம் அன்லிமிட்டெட் 5G டேட்டா வசதியை வழங்குகிறது.</p><p>நிறுத்தப்பட்ட ரூ. 299 திட்டமானது, 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்கியது. அதே சேவைகள் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ரூ. 319 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்தன. ரூ. 579 திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டாவையும், ரூ. 619 திட்டம் 60 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் அதே போன்ற பலன்களையும், ரூ. 649 திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 2 ஜிபி டேட்டாவையும் வழங்கின.</p>]]></content:encoded></item><item><title>டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்போம் - ஈரான் தடாலடி  
</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-us-war-to-continue-until-trumps-term-ends-warns-irgc-adviser</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-us-war-to-continue-until-trumps-term-ends-warns-irgc-adviser#comments</comments><guid isPermaLink="false">42455167-254e-429d-b9e9-e08fa6fdce18</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:12:14 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:12:14.952Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/85od2k6w/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப் - மொஜ்தபா காமேனி]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப் - மொஜ்தபா காமேனி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/85od2k6w/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரும் 2029 உடன் அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/iran-missile-threat-trump-secretly-escapes-air-force-one">டிரம்ப்பின் </a>பதவிக்காலம் முடிகிறது. அதுவரை அமெரிக்காவுடனான போரை நீட்டிக்க உள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகரான முகமது ரேசா நக்தி தெரிவித்துள்ளார்.</p> <h2>பேட்டி</h2><p>பிபிஎஸ் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் "எதிரி மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அஞ்சும் நிலையை உருவாக்குவதே எங்களின் முதன்மை இலக்கு</p><p>இதற்கான ஒரு வழி, இந்தப் போரை டிரம்ப்பின் அதிபர் பதவிக்காலம் முடியும் வரை நீட்டித்து, அவர்களுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்துவதாகும்.</p><p>இதன் மூலம் எதிர்காலத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்த நினைக்கும் எவரும் அதற்குப் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.</p> <h2>ஏவுகணைகள் இருப்பு</h2><p>அமெரிக்க ராணுவம் தாங்கள் முன்பு நினைத்ததை விட பலவீனமாக இருப்பதை இந்தப் போரின் மூலம் ஈரான் அறிந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.</p><p>ஈரான் அதிக எண்ணிக்கையில் ஏவுகணைகளை உற்பத்தி செய்து வருவதாகவும் "ஒருவேளை ஈரானிடம் ஏவுகணைகள் தீர்ந்துபோகும் நிலை வந்தாலும், அன்றைய தினம் அமெரிக்காவுக்கு நாங்கள் இன்னும் ஆபத்தானவர்களாக மாறுவோம்.</p><p>ஏனெனில், உலகம் முழுவதும் அமெரிக்காவிற்கு ஆயிரக்கணக்கில் பொருளாதார நலன்கள் உள்ளன. அவை அனைத்தையும் எளிதில் அழிக்க முடியும்" என எச்சரித்தார்.</p> <h2>புதிய புயல்</h2><p>அமெரிக்க படைகள் சந்தித்து வரும் இழப்புகளாலும், உள்நாட்டில் குறைந்து வரும் செல்வாக்காலும் போரை விரைந்து முடிக்க டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.</p><p>அணுசக்தி ஒப்பந்தம் கூட வேண்டாம், ஹார்முஸ் பிரச்சனையில் உடன்பாடு ஏற்பட்டால் போதும் என அவர் இறங்கி வந்ததாக அண்மையில் ரிப்போர்ட் ஒன்று வெளியானது.</p><p>ஆனால் டிரம்ப் பதவிக்காலம் முடியும்வரை போரை தொடர உள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது புதிய புயலை உருவாகியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கழுத்தில் அறுவை சிகிச்சை... செல்போனால் ஷகீலாவுக்கு நேர்ந்த கதி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/shakeela-neck-surgery-mobile-gaming</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/shakeela-neck-surgery-mobile-gaming#comments</comments><guid isPermaLink="false">a8cabca5-30bf-40be-91d4-4149664a6cb1</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:02:28 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:02:28.190Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shakeela,ஷகீலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/c42pu1tv/Shakeela.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷகீலா]]></media:title><media:description type="html"><![CDATA[ கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷகீலா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/c42pu1tv/Shakeela.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கட்டிலில் ஒருபுறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு நீண்ட நேரம் மொபைல் போனில் கேம் விளையாடியதால், அவரது கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர் ரூ. 3 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியதாயிற்று.</strong></em> </p><p>நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B7%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE">ஷகீலா</a> உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கு அதிகளவில் மொபைல் போன் பயன்படுத்தியதே காரணம் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் தனது நிலைமை மற்றும் அனுபவங்களை அவரே விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p>அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் கழுத்துப்பட்டை (neck collar) அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே அவர் வெளியிட்ட அந்த வீடியோவில் கழுத்துப்பட்டை அணிந்திருந்துள்ளார். மேலும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சில காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. </p><h2><strong>ரூ.3 லட்சம் செலவில்</strong></h2><p>கட்டிலில் ஒருபுறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு நீண்ட நேரம் மொபைல் போனில் கேம் விளையாடியதால், அவரது கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர் ரூ. 3 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியதாயிற்று. மொபைல் போன்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், குழந்தைகளுக்கு போன்களை கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>தான் வெளியிட்ட வீடியோவில் தன்னைத்தானே சுய கிண்டல் செய்து பேசிய <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/vanitha-gave-me-a-very-big-family-shakeela-at-the-mrs-mr-film-festival-774240">ஷகீலா</a>, படுக்கையிலிருந்து எழுந்திருப்பது, சாப்பிடுவது போன்ற அடிப்படை விஷயங்களுக்குக் கூட தற்போது பராமரிப்பாளர்களின் உதவி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். "நான் சமீபத்தில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். போன் மிகவும் பயனுள்ள ஒரு பொருள், ஆனால் அதை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள்" என்று அவர் கூறியுள்ளார். </p><p>தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான காரணத்தை கூறும் ஷகீலா, "நான் கட்டிலில் ஒருபுறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை போனில் கேம் விளையாடுவேன். டீ அல்லது காபி குடிப்பதற்காக மட்டுமே எழுந்திருப்பேன். டீ குடித்த பிறகு மீண்டும் வந்து அதே கேமைத் தொடர்வேன். அதன்பிறகு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல மணிநேரம் ரீல்ஸ்  பார்ப்பேன். தவறான உடல் நிலைப்பாடு மற்றும் அதிகப்படியான போன் பயன்பாடு காரணமாக எனது கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் பாதிக்கப்பட்டு, இறுதியில் அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்றுவிட்டது" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக்சல் 11 சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்திய கூகுள்!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/google-pixel-11-series-unveiled-with-new-chip-check-price</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/google-pixel-11-series-unveiled-with-new-chip-check-price#comments</comments><guid isPermaLink="false">542015fb-1487-41ca-92c9-9a333b331d24</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:38:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Google,smartphone,கூகுள்,ஸ்மார்ட்போன்,Pixel 11,பிக்சல் 11</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/6o3s6b9o/Pixel-11-Series.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pixel 11 Series]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/6o3s6b9o/Pixel-11-Series.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/google">கூகுள்</a> தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் ஸ்மார்ட்போன் சீரிசை வெளியிட்டது. இதில் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ XL மற்றும் மடிக்கக்கூடிய பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் ஆகிய மாடல்கள் அடங்கும். இந்த சமீபத்திய சீரிசில், மென்மையான பயன்பாட்டிற்கு உதவும் வகையில் மெல்லிய கேமராக்கள், மேம்பட்ட ஜூம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. </p><p>"இன்று நாங்கள் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ மற்றும் பிக்சல் 11 ப்ரோ XL ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தினோம். இவை முக்கிய கேமரா அப்டேட்கள், மேம்படுத்தப்பட்ட பேட்டரி மற்றும் சமீபத்திய ஜெமினி நானோ மாடலில் இயங்கும் எங்களின் அதிவேகமான, மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் கூகுள் டென்சர் ஜி6 உடன் வருகின்றன. </p><p>இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> சாதனங்கள், நேரத்தை சேமிக்கும் தனிப்பட்ட உதவியை வழங்குவதற்காக ஜெமினி இன்டெலிஜென்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், உங்களின் தனித்துவமான பாணியில் அந்த தருணத்தை நீங்கள் சிறப்பாக படம்பிடிக்க உதவும் புதிய கேமரா அனுபவங்களையும் இவை கொண்டுள்ளன," என்று கூகுளின் வலைப்பதிவு ஒன்று தெரிவித்தது. </p><h2>ஜெமினி ஏஐ:</h2><p>புதிய பிக்சல் சீரிசில் உள்ள நான்கு ஸ்மார்ட்போன்களும் கூகுளின் புதிய டென்சர் ஜி6 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. மேலும், இவை IP68 தரப் பாதுகாப்பு, மேம்படுத்தப்பட்ட 5x டெலிஃபோட்டோ கேமராக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஜெமினி ஏஐ திறன்களை கொண்டுள்ளன.</p><p>ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் அளவுக்கு பிரபலமாக இல்லாத பட்சத்திலும், கூகுள் நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் தொடர்ச்சியாக ஏஐ சார்ந்த அம்சங்களை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.</p><h2>கேமரா அம்சங்கள்:</h2><p>பிக்சல் 10-ஐ விட 40 சதவீதம் மெல்லிய கேமராவுடன், பிக்சல் 11 மாடல்கள் மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சம் கொண்டிருக்கிறது. இதன் பின்புறத்தில் 48MP வைடு கேமரா, 13MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 10.8MP 5x டெலிஃபோட்டோ கேமராவும், முன்புறத்தில் 10.5MP செல்ஃபி கேமராவும் உள்ளன.</p><p>ஷட்டர் பட்டனை ஒரே ஒரு முறை தட்டுவதன் மூலம் தானாகவே தொடர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கும் 'மேஜிக் கேப்சர்' எனப்படும் புதிய அம்சம் ஒரு மேம்பாடாக வருகிறது. கூகுளின் கூற்றுப்படி, 'இன்ஸ்டன்ட் நைட் சைட்' அம்சம் இருண்ட சூழல்களில் காட்சிகளை வேகமாகப் படம்பிடிக்கிறது, இதனால் பயனர்கள் வெளிச்சத்திற்காக காத்திருக்கும்போது தங்கள் தொலைபேசியை அசைக்காமல் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.</p><p>புதிய பிக்சல் 11 ஸ்மார்ட்போன் பிஸ்தா, ஹைபிஸ்கஸ், ஃப்ராஸ்ட் மற்றும் அப்சிடியன் ஆகிய வண்ணங்களிலும், பிக்சல் 11 ப்ரோ மற்றும் பிக்சல் 11 ப்ரோ XL ஆகியவை கேன்யன், ஃபாக், ஆலிவ் மற்றும் ஃபுல் மேட் அப்சிடியன் வண்ணத்திலும் கிடைக்கின்றன.</p><h2>இந்திய விலை விவரங்கள்:</h2><p>இந்தியாவில் பிக்சல் 11 சீரிஸ் பேஸ் மாடலின் விலை ரூ. 89,999-இல் இருந்து தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப் வேரியண்ட் விலை ரூ. 1,04,999 ஆகும்.</p><p>இதேபோல் பிக்சல் 11 ப்ரோ பேஸ் மாடலின் விலை ரூ. 1,19,999-இல் இருந்து தொடங்குகிறது, அதே சமயம் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 1,34,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>பிக்சல் 11 ப்ரோ XL பேஸ் மாடலின் விலை ரூ. 1,34,999 ஆகவும், டாப்-எண்ட் மாடலின் விலை ரூ. 1,49,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/2120-special-buses-operated-across-tamil-nadu-for-the-weekend</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/2120-special-buses-operated-across-tamil-nadu-for-the-weekend#comments</comments><guid isPermaLink="false">401765eb-4351-43b6-9f18-aa8771f20002</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:30:16 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:30:16.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Special buses,சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,வார விடுமுறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/93vrv0zd/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/93vrv0zd/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.</strong></em> </p><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகச் சென்னையில் உள்ள முக்கியப் பேருந்து முனையங்கள் மற்றும் பிற நகரங்களில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்புப் பேருந்துகளை</a> இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:-</p><h2><strong>கிளாம்பாக்கம் பேருந்து முனையம்</strong></h2><p>கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 505 சிறப்புப் பேருந்துகள், 15-ந் தேதி (சனிக்கிழமை) 570 சிறப்புப் பேருந்துகள்.</p><h2><strong>கோயம்பேடு பேருந்து முனையம்</strong></h2><p>கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள்,  15-ந் தேதி (சனிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள்.</p><h2><strong>மாதவரம் பேருந்து முனையம்</strong></h2><p>மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு  14 மற்றும் 15-ந் தேதிகளில் நாள் ஒன்றுக்கு தலா 80 சிறப்புப் பேருந்துகள்.</p><h2><strong>பிற மாவட்டங்கள் &amp; சென்னை திரும்பும் பேருந்துகள்</strong></h2><p>வெளி மாவட்டங்கள் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. </p><h2><strong>சென்னை/பெங்களூரு திரும்பும் வசதி</strong></h2><p>வார விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பயணிகள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேவைகேற்ப பல்வேறு இடங்களில் இருந்து 465 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-tamil-nadu-on-16th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-tamil-nadu-on-16th#comments</comments><guid isPermaLink="false">69e290e0-9203-4e37-a49e-9521cbe22b26</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:25:47 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:25:47.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,சிபி ராதாகிருஷ்ணன்,CP Radhakrishnan,தமிழ்நாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/22/26891876-cpradhakrishnan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CP Radhakrishnan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/22/26891876-cpradhakrishnan.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துணை ஜனாதிபதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D">சி.பி.ராதாகிருஷ்ணன்</a> செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க என 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து வருகிற 16-ந்தேதி காலை தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார். </p> <h2>பட்டமளிப்பு விழா</h2><p>அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவிலும், அதன்பின்னர் தியாகராயநகரில் உள்ள வாணி மகாலில் நடைபெறும் நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியிலும், தொடர்ந்து டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கும் புத்தக வெளியிட்டு விழாவிலும் பங்கேற்கிறார்.</p> <p>அதன்பின்னர் 17-ந்தேதியன்று சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செல்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.</p> <p>இதையடுத்து தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஜந்தர் மந்தர் சீசன் 2&apos; போராட்டத்தை அறிவித்த  கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-season-2-protest-cjbp-alleges-hall-cancellations-and-threats-blocking-meetings-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-season-2-protest-cjbp-alleges-hall-cancellations-and-threats-blocking-meetings-in-delhi#comments</comments><guid isPermaLink="false">57ddd1e3-388b-4cf7-be7e-cb329040694f</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:22:33 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:22:33.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிஜேபி,CJP Protest,CJP,அபிஜித் தீப்கே,சிஜேபி போராட்டம்,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/rrojjmgw/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/rrojjmgw/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் 'சீசன் 2', அதாவது இரண்டாம்கட்ட போராட்டம் தொடங்கப்படும் என கரப்பான்பூச்சி ஜனதாக கட்சியின்  நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். </p><p>இருப்பினும் எதன் காரணமாக இப்போராட்டம் என அவர் விளக்கவில்லை. </p> <h2>ஜந்தர் மந்தர் சீசன் 2</h2><p>"ஜந்தர் மந்தரில் சீசன் 2 போராட்டம் எப்போது தொடங்கும் என இன்ஸ்டாகிராமில் பலரும் கேட்டு வருகின்றனர். மிக விரைவில் ஜந்தர் மந்தரில் சீசன் 2 போராட்டம் தொடங்கும் என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.</p><p>சிஜேபி முதன்மை செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறுகையில், சுதந்திர தினம் முதல் கல்விப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து நாடு தழுவிய அளவில் மக்களின் கருத்துக்களைக் கேட்கும் பிரச்சாரம் மற்றும் லிசனிங் டூர் தொடங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பிரச்சனை</h2><p>இதனிடையே டெல்லியில் சிஜேபி கூட்டங்களை நடத்தவிடாமல் சதி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>டெல்லியின் நாராயணா பகுதியில் சிஜேபி தன்னார்வலர்கள் கூட்டத்திற்காக அரங்கம் ஒன்று முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p>ஆனால், கூட்டம் நடைபெறவிருந்த நாளன்று கடைசி நேரத்தில் அரங்கின் உரிமையாளர் முன்பதிவை ரத்து செய்து, உள்ளே நுழைய அனுமதி மறுத்துவிட்டார்.</p><p>ஆளும் பாஜகவின் அழுத்தத்தின் காரணமாகவே இது நடந்துள்ளதாக அபிஜித் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>டெல்லியில் வேறு இடங்களைத் தேடியபோதும் யாருமே அரங்கை வாடகைக்குத் தர முன்வரவில்லை என்றும், மேலிடத்து அழுத்தம் உள்ளது என அனைவரும் கூறியதாகவும் தீப்கே தெரிவித்தார்.</p><p>"இறுதியாக ஒரு இடத்தை முடிவு செய்தோம். ஆனால், கூட்டத்தின் அன்றைய நாள் காலையில் அந்த அரங்கின் உரிமையாளருக்கு கடுமையான மிரட்டல் வந்தது.</p><p>சிஜேபி கூட்டத்திற்கு அனுமதி அளித்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், தலைகீழாகத் தொங்கவிடப்படுவீர்கள் என்றும் மிரட்டியுள்ளனர்" என தீப்கே பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். </p><p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை எதிர்த்து  டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் சிஜேபி நடத்திய போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item></channel></rss>