<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 26 Aug 2026 12:03:03 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 26 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-august-2026#comments</comments><guid isPermaLink="false">5f22d212-4fc0-4d16-87e3-92a3bcb84791</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:27:41 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:10:23.940Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/dpyw45td/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/dpyw45td/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-9">நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச வசூல்: முதலமைச்சரின் முழக்கம் வெறும் சினிமா வசனம் தானா?- தினகரன் கேள்வி</a></p><p>* லஞ்சம் கேட்டு உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகளால், கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.</p><p>* விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/swine-flu-spread-on-tamilnadu">தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது- சுகாதாரத்துறை எச்சரிக்கை</a></p><p>* தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே, எச்1என்1 வகையைச் சேர்ந்த பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. </p><p>* லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அதை சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/opportunities-for-12-newcomers-in-the-union-cabinet">மத்திய மந்திரி சபையில் 12 புதுமுகங்களுக்கு வாய்ப்பு- பிரதமர் மோடி அதிரடி முடிவு</a></p><p>* மந்திரிசபை மாற்றத்தின் போது இளம் மந்திரிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  </p><p>* 2025-ல் மோடி பிரதமராக பதவி ஏற்ற போது 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மந்திரிகள் 51 முதல் 70 வயதை கொண்டவர்களாகவும், 24 சதவீதம் பேர் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahes-criticises-teacher-eligibility-test-exemption-move" rel="nofollow">ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம் கண்துடைப்பு நாடகமாக இருக்கக் கூடாது!- அன்பில் மகேஸ்</a></p><p>* நீதிமன்றத்தில் வாதாடிய அரசின் முகம்தான் உண்மை முகமா? </p><p>* சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அரசின் முகம்தான் உண்மை முகமா?</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-26-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை இன்றைய நிலவரம்!</a></p><p>* தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15,010-க்கு விற்பனையானது.</p><p>* ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கு விற்பனையானது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-should-return-parandur-acquired-lands-to-farmers-cpi" rel="nofollow">பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்..!- சிபிஐ </a></p><p>* சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது.</p><p>* விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-should-investigate-for-3-tamilis-shoot-dead-case">3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்! -அன்புமணி</a></p><p>* பாமகவின்  உண்மை கண்டறியும் குழு தருமபுரியில் செய்தியாளர்களிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை  தான் என்பதை மைசூர் மருத்துவமனை அளித்த உடற்கூறாய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.</p><p>*3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-cm-vijay-wishes">ஓணம் திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்! - முதலமைச்சர் விஜய்</a></p><p>* ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்!</p><p>* அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-mk-stalin-wishes">அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.</p><p>* மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/milad-un-nabi-cm-vijay-wishes">மிலாது நபி நன்னாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்! - முதலமைச்சர் விஜய் </a></p><p>* இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!</p><p>* நபிகள் நாயகம் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!</p> ]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு... பீகாருக்கு எச்சரிக்கை - சிக்கிய 57 தமிழர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/flash-floods-in-nepal-warning-issued-for-bihar-57-tamils-stranded</link><comments>https://www.maalaimalar.com/news/world/flash-floods-in-nepal-warning-issued-for-bihar-57-tamils-stranded#comments</comments><guid isPermaLink="false">20d77919-e61c-426f-8b16-9af374d53cbd</guid><pubDate>Wed, 26 Aug 2026 12:00:40 +0000</pubDate><atom:updated>2026-08-26T12:00:40.012Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,பீகார்,Bihar,வெள்ளம்,Rasuwa,ரசுவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/o3z62sen/New-Project-2026-08-26T171611.269.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு... பீகாருக்கு எச்சரிக்கை - சிக்கிய 57 தமிழர்கள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/o3z62sen/New-Project-2026-08-26T171611.269.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத் எல்லையருகே உள்ள நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றில் சிக்கி காணாமல் போன 384 பேரில் குறைந்தது 105 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 என தகவல் வெளியாகி உள்ளது. திபெத் மற்றும் நேபாளத்திற்கு இடையேயான எல்லையின் இருபுறமும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன, இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><h2>57 தமிழர்கள்</h2><p>இதனிடையே தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்களும் அங்கு சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு பேருந்துகளாக இவர்கள் சுற்றுலா சென்றநிலையில், ஒரு பேருந்தில் சென்ற 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 37 பேரைத் தேடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. </p><p>நேபாளம் பெரு வெள்ளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், அவர்களின் நிலை குறித்து அறிய தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்தியாவுக்கான உதவி எண் - 1800 309 3793</p><p>வெளிநாடு உதவி எண்கள் +91 8069009901, 08069009901</p><p>மிஸ்டு கால் அழைப்புக்கு +91 8069009900 / 8069009900 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2>பீகாருக்கு எச்சரிக்கை</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை ஏரி வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் காரணமாக உருவான பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு இந்திய அரசு 'ஹை அலர்ட்' விடுத்துள்ளது.</p><p>நேபாள ஆறுகளின் நீர்வரத்து இந்தியாவிற்குள் பாயும் கண்டக் மற்றும் கோஷி நதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கை (சுமார் 3 மீட்டர் உயர அலைகள்) ஏற்படுத்தக்கூடும் என்பதால், எல்லையோர இந்திய மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.</p><p>முன்னெச்சரிக்கையாக வால்மீகிநகர் கண்டக் அணைக்கட்டின் 36 மதகுகளும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன. </p><p>பீகார் முதலமைச்சர் சம்ராட் சவுத்ரி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, நிலைமையைக் கண்காணிக்கத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி அடங்கிய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன?</h2><p>நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவுக்கு வடக்கே உள்ள ரசுவாவில், இன்று அதிகாலையில் வெள்ளம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவினால், உருகிய பனி போதே கோஷி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியதே இதற்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>லஞ்சம் கொடுத்த அமைச்சர்-முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!- 
நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-demands-case-against-minister-former-minister-for-giving-bribe</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-demands-case-against-minister-former-minister-for-giving-bribe#comments</comments><guid isPermaLink="false">8cb6ffcf-d613-4a9e-8a48-f781327032ce</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:50:50 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:50:50.184Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,லஞ்சம்,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Bribe</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4hmpmy0b/nainar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4hmpmy0b/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லஞ்சம் கொடுத்த அமைச்சர்-முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.</p><p>இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். இரு தரப்பினர் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>முந்தைய தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு, லஞ்சம் கொடுத்ததை பகிரங்கமாக சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்ட தற்போதைய நிதியமைச்சர்  மரியவில்சன், முன்னாள் கல்வியமைச்சர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.</p><p>லஞ்சம் கேட்டவர் மீது மரிய வில்சன் அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி எவ்வித புகாரும் அளிக்காமல், இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கூறி விளம்பரம் தேடுவதன் அவசியம் என்ன? </p><p>குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கும் வகையில் மரிய வில்சனின் கல்வி நிறுவனத்தில் என்ன சட்டரீதியான குறைபாடுகள் உள்ளன? தனது தனிப்பட்ட நல னுக்காக லஞ்சம் கொடுத்து, தனது காரியத்தை முடித்துக் கொள்ளும் குணநலன் கொண்ட மரிய வில்சனை முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால் அரசு எந்திரம் எப்படி நேர்மை யாக இயங்கும்?</p><p>எனவே, ஒப்பு தல்கள் அல்லது அனுமதிகளைப் பெற ஒரு அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8, ஊழல் செயலுக்குத் துணை போனதற்காக பிரிவு 12, சட்ட நடை முறைகளைத் தவிர்ப்ப தற்காக லஞ்சம் வழங்கி யதற்காக பி.என்.எஸ்.-ன் பிரிவு 61 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து, சமரசமின்றி முறை யாக விசாரிக்க வேண்டும்.</p><p>விசாரணை முடியும் வரை, மரிய வில்சனை அமைச்சர வையில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் நீக்க வேண்டும். </p><p>இவ்வாறு  அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு: 105 இந்தியர்களின் கதி என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/105-indians-missing-in-nepal-flash-flood-16-killed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/105-indians-missing-in-nepal-flash-flood-16-killed#comments</comments><guid isPermaLink="false">c4fcad1c-6529-4fad-9a89-1aab19b7531d</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:47:16 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:47:16.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/xjx4yvwm/NeplaFloods001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளம் வெள்ளப் பெருக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/xjx4yvwm/NeplaFloods001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத் எல்லையில் உள்ள நேபாள மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 16 பேர் உயிரிழந்த நிலையில் 105 இந்தியர்களை காணவில்லை என்று தெரியவந்துள்ளது.</p><p>திபெத் எல்லையில் உள்ள நேபாளத்தில் உள்ள மலைகளுக்கு இடையில் ஓடும் ஆற்றில் எதிர்பார்க்காத வகையில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்தது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.</p><p>இன்று காலை திபெத்தில் இருந்து திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்துள்ளது. இந்த வெள்ளம் போதே கோஷி ஆற்றில் கலக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் தாடிங் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதேபோல் நுவாகோட் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மீட்புப் பணியில் ராணுவம்</h2><p>நேபாள ராணுவம் மீட்பு, தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கிற்கான காரணம் இதுவரை தெரிவிக்கவில்லை.</p><p>குறிப்பாக ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே பகுதியில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சியாஃப்ருபெசி என்ற பகுதியில் உள்ள வாகனங்கள், பொருட்கள் உள்ளிட்ட மக்கள் சொத்துகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. காத்மாண்டில் இருந்து வடகிழக்கில் திபெத் எல்லையில் இருந்து ரசுவா மாவட்டம் அமைந்துள்ளது.</p><p>இந்த வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 16 ஆக உயிர்ந்துள்ளது.</p><p>தற்போது வரை 400 பேர் மாயமாகியுள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இதில் 105 பேர் இந்தியவர்கள் ஆவார்கள் எனக் கூறப்படுகிறது. சேறு சகதியுடன் வெள்ளம் கரைபுரண்டு வாகனங்கள், கட்டுமான திட்டங்கள், பாலங்களை அடித்துச் சென்றுள்ளார் உயிரிழப்பு அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.</p><h2>பனி ஏரி உருகி வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல்</h2><p>இந்த வெள்ளம் கனமழையால் ஏற்படவில்லை என்று நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இது ஒரு புதிய பனிப்பாறை உருவானதாலோ அல்லது பழைய பனிப்பாறை ஒன்று உடைந்ததாலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.</p><p>இதற்கிடையே பனி ஏரி உருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், உறுதி செய்யப்படவில்லை.</p><h2>தமிழர்கள்</h2><p>இந்த வெள்ளப் பெருக்கில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஐசிசி தரவரிசை: பும்ராவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ஸ்டார்க்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/starc-replaces-bumrah-as-top-ranked-test-bowler</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/starc-replaces-bumrah-as-top-ranked-test-bowler#comments</comments><guid isPermaLink="false">a1f8d4cf-c3d3-49a5-a82b-09adfffc044e</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:33:37 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:33:37.966Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மிட்செல் ஸ்டார்க்,ஐசிசி தரவரிசை,Jasprit Bumrah,ICC Ranking,ஜஸ்பிரீத் பும்ரா,Starc</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zmj965po/starc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ starc]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zmj965po/starc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பவுலிங் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பும்ராவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.</p><p>ஐசிசி சார்பில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.</p><h2>ஸ்டார்க் முதலிடம்</h2><p>இந்நிலையில், டெஸ்ட் போட்டியின் பவுலர் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது.</p><p>இதில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ராவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடம் பிடித்துள்ளார்.</p><p>சமீபத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, பும்ராவை விட கூடுதல் புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.</p><h2>டாப் 5 பவுலர்களின் விவரம்</h2><p>மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)- 872 புள்ளி</p><p>ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா) - 862 புள்ளி</p><p>மேட் ஹென்றி (நியூசிலாந்து) - 861 புள்ளி</p><p>பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) - 841 புள்ளி</p><p>மார்கோ யான்சென் (தென் ஆப்பிரிக்கா) - 825 புள்ளி</p>]]></content:encoded></item><item><title>இந்திய ராணுவத்திற்கு புதிய பலம்: &apos;அரவல்லி&apos; என்ஜின் தயாரிக்க HAL - பிரான்ஸ் நிறுவன ஒப்பந்தம் இறுதி!</title><link>https://www.maalaimalar.com/news/national/new-power-for-indian-army-hal-france-finalise-aravalli-engine-deal</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-power-for-indian-army-hal-france-finalise-aravalli-engine-deal#comments</comments><guid isPermaLink="false">08b3dd3a-279f-4cf2-9213-d471d4e9e92a</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:29:50 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:29:50.558Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரான்ஸ் அரசு,HAL,Hindustan Aeronautics,Aravalli,DBMRH,அரவல்லி,இந்திய பாதுகாப்புத் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/85ekl0yh/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hindustan Aeronautics]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/85ekl0yh/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய பாதுகாப்புத் துறையின் விண்வெளி மற்றும் வான்வழிப் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மைல்கல்லாக, இந்தியாவின் முன்னணி பாதுகாப்புப் உற்பத்தி நிறுவனமான ஹெச்.ஏ.எல் மற்றும் பிரான்ஸ் நாட்டின் பிரபல 'சேஃப்ரான் ஹெலிகாப்டர் என்ஜின்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய 'அரவல்லி' ஹெலிகாப்டர் என்ஜினை தயாரிக்க இறுதிக்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள 'சாஃபால் ஹெலிகாப்டர் என்ஜின்ஸ்' நிறுவனம் மூலம் இந்த என்ஜின்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.</p><h2>குதிரைத்திறன் <strong>கொண்ட</strong>  என்ஜின்</h2><p>இந்தியாவின் மிக பழமையான மலைத்தொடரான '<a href="https://www.maalaimalar.com/news/world/japan-volunteers-pull-360-ton-hirosaki-castle-tower-two-meters-with-ropes">அரவல்லி</a>'யின் பெயரைத் தாங்கி உருவாகும் இந்த இஞ்ஜின், 3,500 முதல் 4,000 ‘ஷாஃப்ட் ஹார்ஸ்பவர்’ திறன் கொண்ட அடுத்த தலைமுறை உயர் திறன் கொண்ட எஞ்சினாக வடிவமைக்கப்பட உள்ளது. இந்த என்ஜின்களை உள்நாட்டிலேயே முழுமையாக வடிவமைப்பு செய்தல், தயாரித்தல், விநியோகம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வரை அனைத்துமே இந்த ஒப்பந்தத்தின் கீழ் கையாளப்படும்.</p><p>ஹெச்.ஏ.எல் நிறுவனம் இந்திய முப்படைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கி வரும் 13 டன் எடை கொண்ட இந்திய பன்முக பயன்பாட்டு ஹெலிகாப்டர் (IMRH - Indian Multi-Role Helicopter) மற்றும் கடற்படைக்கான (DBMRH - Deck-Based Multi-Role Helicopter) ரக அதிநவீன ஹெலிகாப்டர்களுக்கு இந்த அரவல்லி இஞ்ஜின் பயன்படுத்தப்படவுள்ளது. பழைய ரஷ்ய தயாரிப்பு மி-17 ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக இவை இந்திய ஆயுதப் படைகளில் இணைக்கப்பட உள்ளன.</p><h2>சிவில் ப<strong>யன்பாடு</strong>கள்</h2><p>பாதுகாப்புத் துறையில் இறக்குமதியைக் குறைத்து 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தை வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் மிக முக்கிய பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது. ராணுவ பயன்பாட்டைத் தாண்டி, எதிர்காலத்தில் இந்த அதிநவீன இஞ்ஜின் தொழில்நுட்பம் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர்கள், நிவாரணப் பணிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் போக்குவரத்துச் சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் திடீரென கரைபுரண்டு ஓடிய வெள்ளம்: அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள்</title><link>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-from-tibet-kills-four-batters-hydropower-and-border-trade-route</link><comments>https://www.maalaimalar.com/news/world/nepal-flood-from-tibet-kills-four-batters-hydropower-and-border-trade-route#comments</comments><guid isPermaLink="false">077a4cd4-f21b-4a13-8718-4fe04cf3a3fc</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:40:30 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:40:30.592Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,nepal,பனிச்சரிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/32vd00zq/NeplaFloods.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளம் வெள்ளப் பெருக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/32vd00zq/NeplaFloods.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத் எல்லையில் உள்ள நேபாள மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>திபெத் எல்லையில் உள்ள நேபாளத்தில் உள்ள மலைகளுக்கு இடையில் ஓடும் ஆற்றில் எதிர்பார்க்காத வகையில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்தது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.</p><p>இன்று காலை திபெத்தில் இருந்து திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்துள்ளது. இந்த வெள்ளம் போதே கோஷி ஆற்றில் கலக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் தாடிங் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல் நுவாகோட் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மீட்புப் பணியில் ராணுவம்</h2><p>நேபாள ராணுவம் மீட்பு, தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கிற்கான காரணம் இதுவரை தெரிவிக்கவில்லை.</p><p>குறிப்பாக ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே பகுதியில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சியாஃப்ருபெசி என்ற பகுதியில் உள்ள வாகனங்கள், பொருட்கள் உள்ளிட்ட மக்கள் சொத்துகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. காத்மாண்டில் இருந்து வடகிழக்கில் திபெத் எல்லையில் இருந்து ரசுவா மாவட்டம் அமைந்துள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">INDIA NEEDS TO WATCH THIS HIMALAYAN FLOOD WAVE! <br><br>A major flood has entered Nepal’s Bhote Koshi from the Tibetan side, triggering alerts across the Trishuli basin.<br><br>Bhote Koshi becomes Trishuli which becomes Narayani/Gandak and if flows into Bihar eventually into the Ganga.… <a href="https://t.co/7R4toMNrS7">pic.twitter.com/7R4toMNrS7</a></p>&mdash; Rahul Shivshankar (@RShivshankar) <a href="https://x.com/RShivshankar/status/2092510532838551891?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>இந்த வெள்ளத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆண்கள், ஒரு பெண் ஆவார்கள். நான்கு பேர் உடல்களும் திரிஷுலி ஆறு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2>பனி ஏரி உருகி வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல்</h2><p>இந்த வெள்ளம் கனமழையால் ஏற்படவில்லை என்று நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இது ஒரு புதிய பனிப்பாறை உருவானதாலோ அல்லது பழைய பனிப்பாறை ஒன்று உடைந்ததாலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">These visuals from the floods in Rasuwa, Nepal are absolutely horrific. The scale of the destruction looks unreal, almost like a scene from a disaster movie.The entire Himalayan belt needs to seriously work on better early warning systems for such flash floods. Prayers for… <a href="https://t.co/7iiupXXIzT">pic.twitter.com/7iiupXXIzT</a></p>&mdash; Nikhil saini (@iNikhilsaini) <a href="https://x.com/iNikhilsaini/status/2092515031279894563?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>இதற்கிடையே பனி ஏரி உருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"> INDIA, BE CAREFUL! <br><br>A major flood wave has entered Nepal’s Bhote Koshi from the Tibetan side, triggering alerts across the Trishuli basin.<br><br>Bhote Koshi → Trishuli → Narayani/Gandak → Bihar → Ganga.<br><br>West Champaran, East Champaran, Gopalganj, Saran &amp; Vaishali should… <a href="https://t.co/5oayN3emjN">pic.twitter.com/5oayN3emjN</a></p>&mdash; Megh Updates ™ (@MeghUpdates) <a href="https://x.com/MeghUpdates/status/2092525537403269261?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>  <p>ஆனால், உறுதி செய்யப்படவில்லை.</p><h2>தமிழர்கள்</h2><p>இந்த வெள்ளப் பெருக்கில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு 18-ந்தேதி மும்பையில் கூடுகிறது</title><link>https://www.maalaimalar.com/sports/the-general-committee-of-the-cricket-board-will-meet-in-mumbai-on-the-18th</link><comments>https://www.maalaimalar.com/sports/the-general-committee-of-the-cricket-board-will-meet-in-mumbai-on-the-18th#comments</comments><guid isPermaLink="false">797b9cb1-0479-4dbe-bad2-72caf2111e5e</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:34:03 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:34:03.677Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பொதுக்குழு கூட்டம்,மும்பை,கிரிக்கெட் வாரியம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/wwj6qum2/BCCI.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BCCI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/wwj6qum2/BCCI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) வருடாந்திர பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந்தேதி மும்பையில் நடைபெறுகிறது. இதை  பி.சி.சி.ஐ.யின் செயலாளர் தேவஜித் சைக்யா தெரிவித்தார்.</p><h2>கிரிக்கெட் வாரிய கூட்டம்</h2><p>இதுதொடர்பாக அவர் கூறும்போது,"பி.சி.சி.ஐ. யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்’ என்றார்.</p><p>அந்தமான், நிக்கோபர் தீவுகளில் இருந்து கிரிக்கெட் சங்கத்திற்கு இணை உறுப்பினர் பொறுப்பு வழங்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.</p><p>பி.சி.சி.ஐ. இணை உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. </p><h2>ஐ.பி.எல். தலைவர் பதவி</h2><p>மேலும், ஐ.பி.எல். தலைவர் பதவி உள்பட ஐ.பி.எல். நிர்வாகக்குழுவின் 2 இடங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தற்போது ஐ.பி.எல். தலைவராக அருண் தூமல் இருக்கிறார்.</p><p>இதற்கான விண்ணப்பங் களை தாக்கல் செய்வ தற்கான கடைசி நாள் வருகிற 31-ந்தேதி ஆகும். </p><p>இந்த 2 பதவிகளுக்கான தேர்தலும் போட்டியின்றி நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஜப்பானில் பிரம்மாண்ட அதிசயம்: 360 டன் எடையுள்ள ஹிரோசாகி கோட்டையை கயிறுகளால் 2 மீட்டர் நகர்த்திய பொதுமக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/japan-volunteers-pull-360-ton-hirosaki-castle-tower-two-meters-with-ropes</link><comments>https://www.maalaimalar.com/news/world/japan-volunteers-pull-360-ton-hirosaki-castle-tower-two-meters-with-ropes#comments</comments><guid isPermaLink="false">f0922cc2-d91b-40da-a938-ae1cd3ead624</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:31:02 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:31:02.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Japan,ஜப்பான்,Hirosaki Castle,Hygieia,Aomori Prefecture,ஹிரோசாகி கோட்டை,அமோரி,ஹிகியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/e68tuvup/hh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Hirosaki Castle  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/e68tuvup/hh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஹிரோசாகி கோட்டையின் முக்கிய பகுதியை மீண்டும் அதன் பழைய அடித்தளத்திற்கே கொண்டு செல்லும் பிரம்மாண்ட பணி நடைபெற்று வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், 360 டன் எடையுள்ள கோட்டை கோபுரத்தை சுமார் 1,800 தன்னார்வலர்கள் கயிறுகளால் இழுத்து 2 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு வெற்றிகரமாக நகர்த்தியுள்ளனர்.</p><h2>பழ<strong>ங்கால கட்டிட நகர்வு</strong> தொழில்நுட்பம் "ஹிகியா"</h2><p>1611-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1810-இல் சீரமைக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னம், ஜப்பானின் தேசிய கலாச்சார பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது. இதனால், கட்டிடத்தை இடிக்காமல் அப்படியே நகர்த்துவதற்காக ஜப்பானிய பாரம்பரிய 'ஹிகியா' என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதன் கீழ், கோட்டையை பிரத்யேக தண்டவாளங்கள் மற்றும் ரோலர்கள் மீது நிறுத்தி நகர்த்துகின்றனர்.</p><h2>நில<strong>நடுக்கம் சீரமைப்பு</strong></h2><p>கடந்த 2015-ஆம் ஆண்டு, கோட்டையின் கற்களால் ஆன அடித்தள சுவர் சேதமடைந்ததால், அதை சீரமைக்க கோட்டை 70 மீட்டருக்கும் அதிகமான தூரம் தற்காலிகமாக நகர்த்தப்பட்டது. சுவரில் இருந்த 2,185 கற்களும் சீரமைக்கப்பட்டு முடிவடைந்த நிலையில், தற்போது கோட்டையை மீண்டும் அதன் பழைய இடத்திற்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட தேர்வில் ஜப்பான் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் சுமார் 8,000 பேர் விண்ணப்பித்த நிலையில், 1,800 பேர் தேர்வு செய்யப்பட்டு 80 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு கயிறு மூலம் நகர்த்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><h2>2033-க்குள் நி<strong>றைவடையும்</strong> பணிகள்</h2><p>ஆகஸ்ட் இறுதிக்குள் பொதுமக்களின் உதவியுடன் கோட்டையை மொத்தம் 5 மீட்டர் வரை நகர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் எஞ்சிய தூரம் இயந்திரங்கள் மூலம் நகர்த்தப்பட்டு, 2026 இறுதிக்குள் பழைய இடத்திற்கு கொண்டு வரப்படும். உள்புற சீரமைப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, 2033-ஆம் ஆண்டில் இந்த வரலாற்று கோட்டை மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக முழுமையாக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.... காங்கிரஸ் அல்லாத புதிய மெகா கூட்டணி? - அபிஜீத் பேச்சின் பின்னணி என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/outstanding-chief-minister-mk-stalin-a-new-non-congress-mega-alliance-what-is-the-backdrop-of-abhijits-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/national/outstanding-chief-minister-mk-stalin-a-new-non-congress-mega-alliance-what-is-the-backdrop-of-abhijits-remarks#comments</comments><guid isPermaLink="false">6fbf3571-0936-482b-a87f-bdf7b0975659</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:28:46 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:28:46.909Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பினராயி விஜயன்,Pinarayi Vijayan,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,மு.க.ஸ்டாலின்,M.k. stalin,அபிஜீத் தீப்கே,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/y0xz8lcy/New-Project-2026-08-26T155801.646.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.... காங்கிரஸ் அல்லாத புதிய மெகா கூட்டணி? - அபிஜீத் பேச்சின் பின்னணி என்ன?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/y0xz8lcy/New-Project-2026-08-26T155801.646.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் என மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே.</p><p>தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் மாநில அளவில் நல்லாட்சி செய்த தலைவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், பினராயி விஜயனின் தலைமையில், கேரளா கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் சிறப்பான மற்றும் முன்மாதிரியான பணிகளை வெளிப்படுத்தியுள்ளது;</p><p>மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மிகச் சிறப்பாக மேம்படுத்தியுள்ளார்; டெல்லியில் பள்ளிகள் மற்றும் சுகாதாரத் துறையின் மேம்பாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார் என மூன்று தலைவர்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். </p><h2>இந்தியாவில் உருவாகும் 3வது கூட்டணி?</h2><p>2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உருவான நிலையில், அதற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவானது. </p><p>திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகள் இதில் அங்கம் வகித்தன.</p><p>ஆனால் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற பெரும் கேள்வி அப்போது எழுந்தது. காரணம் கூட்டணி உருவான சமயத்தில் மு.க.ஸ்டாலின் தலைவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற பேச்சுகள் இந்திய அளவில் அடிப்பட்டன. </p><p>இதுதொடர்பான கேள்வி மு.க.ஸ்டாலினிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், என் தகுதி எனக்குத் தெரியும் என பதிலளித்தார். இதனிடையே ஆம் ஆத்மி, திரிணாமுல் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி தனித்து களம் கண்டன. </p><p>இந்நிலையில் அபிஜீத் தீப்கேவின் இந்தக் கருத்தை தொடர்ந்து காங்கிரஸ் அல்லாத இந்த முக்கிய கட்சிகளை வைத்து ஒரு புதிய கூட்டணி உருவாக உள்ளதா? என்ற கேள்விகள் இணையத்தில் உலா வருகின்றன.</p><h2>இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாத நிலை</h2><p>ஆனால் அபிஜீத் தீப்கே குறிப்பிட்ட மூன்று முக்கியத் தலைவர்களுமே தற்போது ஆட்சியில் இல்லை. 2026-ல் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் கேரளாவில் கம்யூனிஸ்டும், தமிழ்நாட்டில் திமுகவும் ஆட்சியை இழந்தன. கடந்தாண்டு டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தது. </p><p>மூன்று தலைவர்களுமே தங்கள் ஆட்சிகளில் கொண்டுவந்த திட்டங்கள் மக்களுக்கு பெரும் பலனை தரவல்லதாக இருந்தாலும், சில அரசியல் காரணங்களாலும், இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் செய்தவற்றை கவனிக்க தவறியதாலும் ஆட்சியை இழந்ததாக ஒரு முக்கிய கருத்து முன்வைக்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச வசூல்: முதலமைச்சரின் முழக்கம் வெறும் சினிமா வசனம் தானா?- தினகரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-9</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-9#comments</comments><guid isPermaLink="false">4e766677-baba-476c-b7b4-29ca7e3dd925</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:07:31 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:07:31.364Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,லஞ்சம்,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zme5qv1b/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zme5qv1b/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="http://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிகுந்த வேதனை</strong></h2><p>கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லைக் கொள்முதல் செய்ய முடியும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் தங்களது வேதனையையும் ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.</p><p>ஏற்கனவே, தவெக அரசு அறிவித்த முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை நம்பி ஏமாந்து கடனாளிகளாகியுள்ள விவசாயிகள், மேலும் கடன் பெற்று விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்த நிலையில், லஞ்சம் கேட்டு உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகளால், கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.</p><p>விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய அரசு நிர்வாகம், நெல் மூட்டைகளோடு அவர்களின் உழைப்பையும் வீணாக்கிக் கொண்டிருப்பதோடு, விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு விலை நிர்ணயிக்கப்படுவதற்கு முன்பாகவே லஞ்சத்திற்கான தொகையை நிர்ணயிக்கும் நிலையை உருவாக்கியிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.</p><p>இதே கடலூர் மாவட்டத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த மாதம் ஆய்வுக்கு வந்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள், லஞ்ச வசூலில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற லஞ்ச வசூல் தொடர்ந்து நடைபெற்று வருவது, தவெக அரசின் மீதான  விவசாயிகளின் நம்பிக்கையை முற்றிலுமாக இழக்கச் செய்துள்ளது.</p><p>எனவே, கடுமையான கண்காணிப்பும், உடனடி நடவடிக்கைகளுமே ஊழலை ஒழிக்குமே தவிர, மேடைகளில் பேசப்படும் வீர வசனங்களால் ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்பதை இனியாவது உணர்ந்து, விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது- சுகாதாரத்துறை எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/swine-flu-spread-on-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/swine-flu-spread-on-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">2e9f8376-0a87-471e-92b0-203018c918e6</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:49:43 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:49:43.741Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>health department,சுகாதாரத்துறை,swine flu,பன்றிக்காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/jbui4kd6/swineflu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பன்றிக்காய்ச்சல்]]></media:title><media:description type="html"><![CDATA[ பன்றிக்காய்ச்சல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/jbui4kd6/swineflu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அதை சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே, எச்1என்1 வகையைச் சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/பன்றிக்காய்ச்சல்">பன்றிக் காய்ச்சல்</a> நோய் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. </p><h2><strong>சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும்</strong></h2><p>தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளன.</p><p>கடந்த ஜனவரி மாதத்தில் 19 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 339 ஆக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், கடுமையான தலைவலி, உடற்சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை பன்றிக்காய்ச்சலின் முதன்மை அறிகுறிகளாகும். மேலும் சிலருக்கு மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.</p><p>லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அதை சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எந்தவொரு மருந்தகங்களிலும் தானாகச் சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ளும் சுய மருத்துவத்தை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.</p><p>அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் சுகாதார மையங்களை அணுகி, உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளன. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமே இத்தொற்று பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னைக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-appoints-seven-ministers-in-charge-for-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-appoints-seven-ministers-in-charge-for-chennai#comments</comments><guid isPermaLink="false">96b5efdc-79b0-4cdc-96b5-302eac806671</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:36:51 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:36:51.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தமிழ்நாடு அரசு,Chennai,TN Government,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/0zeqg92k/tngovernment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Government]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/0zeqg92k/tngovernment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மண்டல வாரியாக 7 பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழ்நாடு அரசு</a> உத்தரவிட்டுள்ளது.</strong></em></p> <p>சென்னையில் 15 மண்டலங்களை ஒருங்கிணைக்க அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-promises-upgrade-of-government-schools-in-a-year">ஆதவ் அர்ஜூனாவுக்கு</a> பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>ரமேஷ், லோகேஷ் தமிழ்செல்வன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, பிரபு, விஜய் தமிழன் பார்த்திபன், விக்னேஷ் ஆகியோரும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். </p> <p>* திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>* தண்டையார்பேட்டை மற்றும் மாதவரம் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக லோகேஷ் தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p> <p>* ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டல பொறுப்பு அமைச்சராக அருண்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>* அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக விஜய் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p> <p>* கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>* ஆலந்தூர் மற்றும் அடையார் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக விஜய் தமிழன் பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p> <p>* பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>மண்டல வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பேரிடர் கால நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி கொடுப்பதற்கு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-says-consulting-with-legal-experts-on-returning-land-to-parandur-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-says-consulting-with-legal-experts-on-returning-land-to-parandur-farmers#comments</comments><guid isPermaLink="false">65f818fd-bdcc-43ed-81fe-0dba07dbd293</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:28:24 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:28:24.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/fk0dmyzs/rajmohan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/fk0dmyzs/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டுக்கு விவசாயமும் வேண்டும். விமான நிலையமும் வேண்டும். இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்து பேச வேண்டிய உள்ளது என்றார்.</strong></em> </p><p>தமிழ் தென்றல் திரு.வி.கலியாண சுந்தரனார் 143 -வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில்&nbsp; திரு.வி.க படத்திற்கு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.&nbsp;</p><p>முதல்முறையாக இன்றைய தினத்தில் தமிழ்நாடு அரசு விழாக்களில் நாட்டுப்புற கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மயிலாட்டம், கரகாட்டம் மற்றும் இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.&nbsp;</p><p>பின்னர் <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-ராஜ்மோகன்">அமைச்சர் ராஜ்மோகன்</a> நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>விவசாயமும் வேண்டும்... விமான நிலையமும் வேண்டும்...</strong></h2><p>உலகத் தமிழ் மாநாடு நடத்தவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுத்துள்ளார். அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.&nbsp;பரந்தூர் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பிடுங்குவது தாயையும், குழந்தையும் பிரிப்பதற்கு சமம்.&nbsp;</p><p>பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு மீண்டும் அந்த நிலத்தை வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு விவசாயமும் வேண்டும். விமான நிலையமும் வேண்டும். இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்து பேச வேண்டிய உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/nsa-ajit-doval-to-hold-india-china-boundary-talks-with-wang-yi-in-beijing</link><comments>https://www.maalaimalar.com/news/world/nsa-ajit-doval-to-hold-india-china-boundary-talks-with-wang-yi-in-beijing#comments</comments><guid isPermaLink="false">83afaf2c-b911-4d50-b132-48c89381afba</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:14:55 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:14:55.391Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Wang Yi,வாங் யீ,Ajit Doval,China visit,சீனா பயணம்,அஜித் தோவல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ydemkesj/china.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ china]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ydemkesj/china.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனா சென்றுள்ள இந்திய தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் அந்நாட்டு துணை அதிபரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்​டமைப்​புக்கு இந்​தியா தலை​மையேற்றுள்​ளது. அடுத்த மாதம் (செப்​டம்​பர்) 12, 13-ம் தேதி​களில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது.</p><p>ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் அனைத்து நாடு​களின் தலை​வர்​களும் இந்த உச்சி மாநாட்​டில் பங்கேற்​பதை உறுதி செய்​துள்​ளனர்.</p><h2>அஜித் தோவல் - வாங் யீ சந்திப்பு</h2><p>இதற்கிடையே, எல்லை விவ​காரம் தொடர்​பாக இந்​தி​யா- சீனா இடையி​லான 25-வது சுற்று பேச்​சு​வார்த்தை சீன தலைநகர் பீஜிங்​கில் நடை​பெற்​றது.</p><p>இதில் இந்​திய தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல், சீன வெளி​யுறவு மந்திரி வாங் யீ ஆகியோர் பங்​கேற்​றனர். அருணாச்சல பிரதேசம், லடாக் உள்பட இரு நாட்டு எல்​லைப் பிரச்​சனை​கள் தொடர்​பாக கூட்​டத்​தில் விவா​திக்​கப்​பட்​டது.</p><p>இதுதொடர்​பாக பீ​ஜிங்​கில் உள்ள இந்​திய தூதரகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், சீன வெளி​யுறவு மந்திரியை தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் சந்​தித்​துப் பேசி​னார். இச்சந்​திப்​பின்​போது எல்லை​யில் அமை​தியை நிலை​நாட்ட வேண்​டும். இருதரப்பு பொருளா​தார, அரசி​யல் உறவை வலுப்​படுத்த வேண்​டும் என முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்​கப்​பட்டுள்​ளது.</p><p>இந்நிலையில், சீன துணை அதிபர் ஹான் ஜெங்​கை​ இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பீஜிங்கில் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்​பது குறித்து இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். இதையடுத்து, டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்​பார் என தகவல்​ வெளி​யாகியது.</p><h2>இந்தியா வரும் சீன அதிபர்</h2><p>சீன அதிபர் ஜி ஜின்​பிங் கடந்த 2019-ம் ஆண்டு அக்​டோபரில் இந்​தி​யா​வில் சுற்றுப்பயணம் மேற்​கொண்​டார். பிரதமர் மோடி​யும், சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும் தமிழகத்​தின் மாமல்​லபுரத்​தில் சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.</p><p>அதன்பின், 7 ஆண்​டுக்​குப் பிறகு சீன அதிபர் மீண்​டும் இந்​தியா வரு​கிறார். இந்த வருகை முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக இருக்​கும்​ என  இந்​தி​ய வெளி​யுறவுத்​துறை தெரிவித்​துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச அரங்கில் புதிய சாதனை: காமன்வெல்த் பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-simran-meets-and-felicitates-commonwealth-silver-medallist-raja-muthupandi</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actress-simran-meets-and-felicitates-commonwealth-silver-medallist-raja-muthupandi#comments</comments><guid isPermaLink="false">096f2c42-dca0-476a-b3a5-b1f9d92f45b4</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:01:12 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:01:12.538Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த்,Commonwealth,Raja Muthupandi,Actress Simran,முத்துபாண்டி,நடிகை சிம்ரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/01c2v6dz/simran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raja Muthupandi-Actress Simran   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/01c2v6dz/simran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டிக்கு, பிரபல  நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><p>65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று புதிய சாதனைகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியைச் சந்தித்த நடிகை சிம்ரன், அவருக்கு பூங்கொத்து வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சர்வதேச விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டு இளைஞர்கள் படைத்து வரும் சாதனைகள் நாட்டிற்கே பெருமை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.</p><h2>சா<strong>தனைப்</strong> பயணம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான ராஜா முத்துபாண்டி, கடுமையான நிதி நெருக்கடிகளையும் குடும்ப சூழலையும் கடந்து இந்த நிலையை அடைந்துள்ளார். 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிர முழங்கை காயம் மற்றும் அடுத்தடுத்த உடல்நலப் பின்னடைவுகளைத் தொடர்ந்து விளையாட்டிலிருந்து விலக நினைத்த இவர், முறையான பயிற்சி மற்றும் விடாமுயற்சியால் மீண்டும் களம் திரும்பினார். </p><p>சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 126 கிலோவும், ‘க்ளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் 160 கிலோவும் என மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.</p><p>ராஜா முத்துபாண்டியின் இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணமான அவரது விடாமுயற்சியைப் பாராட்டிய நடிகை சிம்ரன், "இது ஒரு தொடக்கம் மட்டுமே. எதிர்காலத்தில் வரவிருக்கும் ஒலிம்பிக் உள்ளிட்ட உலகளாவிய போட்டிகளில் அவர் மேலும் பல தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்" என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.</p><p>சாதனைப் படைத்த இந்த வீராங்கனை மற்றும் வீரரின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விளையாட்டுத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் ராஜா முத்துபாண்டிக்குத் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜெய்ஸ்வாலின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது- முன்னாள் வீரர்கள் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/sports/former-india-players-slam-jaiswal-s-unacceptable-conduct</link><comments>https://www.maalaimalar.com/sports/former-india-players-slam-jaiswal-s-unacceptable-conduct#comments</comments><guid isPermaLink="false">b630a963-2d57-42aa-b814-9d99a06efdc9</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:51:25 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:51:25.804Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,srilanka,jaiswal,ஜெய்ஸ்வால்,இலங்கை அணி,இந்தியா அணி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/q8bjocdh/jaiswal.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ jaiswal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/q8bjocdh/jaiswal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 45 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை அசிதா பெர்னாண்டோ கைப்பற்றினார்.</p><h2>ஜெய்ஸ்வால்</h2><p>ஜெய்ஸ்வால் அவுட் ஆன போது அவரை நோக்கி இலங்கை வீரர்கள் ஏதோ வார்த்தையை பயன்படுத்த ஆவேசம் அடைந்த அவர் பெர்னாண்டோவிடம் நெருக்கமாக சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஜெய்ஸ்வாலின் ஹெல்மட் பெர்னாண்டோவின் நெற்றியில் லேசாக இடித்தது.</p><p>இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்தி இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்துபெறும் பணத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்தது. மேலும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது.</p><h2>ஏற்றுக்கொள்ள முடியாது</h2><p>இந்த நிலையில் தலையால் முட்டிய  விவகாரத்தில் ஜெய்ஸ்வால் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் புஜாரா, சபாகரீம் ஆகியோர் கண்ட னம் தெரிவித்துள்ளனர்.</p><p>இது குறித்து புஜாரா கூறியதாவது:-</p><p>இது பார்ப்பதற்கு சரியான ஒரு காட்சியாக தெரியவில்லை. ஒரு வீரராக உங்கள் (ஜெய்ஸ்வால்) உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் கோபம் வருவது இயல்புதான்.</p><p>அவர் ஏமாற்றம் அடைந்த நேரத்திலோ அல்லது சகவீரர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோதோ வெளிப்பட்ட கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.</p><p>ஆனாலும் நிலைமை முற்றி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் நிலைக்கு சென்றபோது உடல்ரீதியான மோதல் ஏற்பட்டது. இது ஆடுகளத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p><h2>சபாகரீம்</h2><p>முன்னாள் விக்கெட் கீப்பர் சபாகரீம் கூறியதாவது:-</p><p>இது உடல்ரீதியான மோதல்கள் நிறைந்த விளையாட்டு அல்ல என்பதை அவர்களுக்கு யாராவது நினைவூட்ட வேண்டும். இது கிரிக்கெட்.</p><p>ஒருவருக்கொருவர் தலையால் முட்டிக் கொள்வது போன்ற செயல்கள் இதில் இருக்கக் கூடாது. இது முதிர்ச்சியற்ற செயல் என்று நான் கருதுகிறேன். கிரிக்கெட் மைதானத்தில் இதுபோன்ற செயல்களுக்கு தேவையே இல்லை.</p><p>வேகப்பந்து வீச்சாளரோ அல்லது வேறு எந்த பந்து வீச்சாளரோ உங்களை சீண்டலாம். ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமலேயே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த முடியும். இது தேவையற்றது. ஏற்றுக் கொள்ள முடியாதது.  </p><p>இத்தகைய வீரர்கள் அனைவரும் இந்த அழகான விளையாட்டில் தூதுவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏராளமான இளைஞர்கள் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை- சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-in-government-jobs-for-those-who-studied-in-the-tamil-medium</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-in-government-jobs-for-those-who-studied-in-the-tamil-medium#comments</comments><guid isPermaLink="false">24ca243c-1caf-4b09-9b81-fb4596e70449</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:48:20.197Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Governor,அரசு பணி,தமிழக கவர்னர்,சட்ட திருத்த மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nety8miy/governor.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கவர்னர் ஆர்.வி.அர்லேகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ கவர்னர் ஆர்.வி.அர்லேகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nety8miy/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான முன்னுரிமை இடஒதுக்கீடு சட்டத் திருத்​த மசோதாவுக்கு தற்போது கவர்னர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்து உள்ளார்.</strong></em></p><p>தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கும் வகையில், கடந்த 2010-ம் ஆண்டு “தமிழ்நாடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமைச் சட்டம்”  கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தமிழ் வழியில் பயின்ற இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில், 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>சட்ட திருத்த மசோதா</strong></h2><p>அரசு ஊழியர்களும், இந்தச் சட்டத்தின்படி டி.என்.பி.எஸ்.சி.மூலம் குரூப்-I போன்ற உயர்பதவிகளுக்கு, இந்த முன்னுரிமையை  பயன்படுத்த முடிகிறது. ஆனால் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் உதவி ஆய்வாளர் பணியிட நியமனங்களுக்கு, காவல்துறையில் ஏற்கனவே 5 ஆண்டுகள் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் 20 சதவீத துறை ஒதுக்கீட்டில், இந்த முன்னுரிமை வழங் கப்படுவதில்லை.</p> <p>இந்தச் சட்ட முரண்பாட்டை நீக்க தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களில், முழுமையாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா கடந்த ஆட்சிக் காலத்தில், 23.1.2026 அன்று, தமிழக அரசு  திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவில், தமிழ் வழியில் படித்த அரசு ஊழியர்களுக்கும், உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் முன்னுரிமை வழங்குவதே அரசின் நோக்கம் என்று பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த முன்னுரிமையை ஒருமுறை பெற்றவர்கள், அதைவிட உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கு அதனை மீண்டும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><h2><strong>ஐகோர்ட் விசாரணை</strong></h2><p>ஆனால், அந்த மசோதா இன்னும் சட்டமாகாத காரணத்தால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கேற்ற தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.</p><p>தமிழக அரசு சட்ட முன்வடிவு மீது உடனடியாக முடிவெடுத்து, தமிழ் வழியில் கல்வி பயின்று, தமிழகக் காவல்துறையில் உண்மையாகப் பணியாற்றும் காவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய முன்னுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை மற்றும் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><h2><strong>கவர்னர் ஒப்புதல்</strong></h2><p>இந்த நிலையில்  தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான முன்னுரிமை இடஒதுக்கீடு சட்டத் திருத்​த மசோதாவுக்கு தற்போது கவர்னர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்து உள்ளார். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.  இனிமேல் புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே இந்த திருத்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>1-ம் வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள்.</p><p>இதர மொழிகளைப் பயிற்று மொழியாக கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.</p><p>1-ம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ்நாட்டில் தங்களது கல்வியினை, சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர். பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் அல்லர்.</p><p>பள்ளிக்குச் சென்று பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள் எழுதி, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வராக தேர்வெழுதி அப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.</p><p>பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம், மிலாடி நபியை முன்னிட்டு இன்று பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை!</title><link>https://www.maalaimalar.com/news/national/onam-milad-un-nabi-bank-holiday-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/onam-milad-un-nabi-bank-holiday-today#comments</comments><guid isPermaLink="false">e8b16d75-eacc-458a-b8e1-713faeecaf49</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:46:35 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:46:35.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>onam,Bank holiday,மிலாடி நபி,வங்கி விடுமுறை,eid mubarak,ஓணம்2026,Bank Close</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/81742dm0/Bank-Holiday" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank Holiday  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/81742dm0/Bank-Holiday?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">ஓணம் </a>மற்றும் மிலாடி நபி பண்டிகை விடுமுறைகளை முன்னிட்டு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுடெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>எந்தெந்த மாநிலங்களில் வங்கிகள் மூடல்?</strong></h2><p>இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ விடுமுறைப் பட்டியலின்படி, இன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், புதுடெல்லி, மணிப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படாது என்றும், அதேசமயம் ஆன்லைன் பேங்கிங் மற்றும் ஏடிஎம் சேவைகள் தடையின்றி வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>பாதிக்கப்படும் வங்கிச் சேவைகள்</strong></h2><p>வங்கிகள் மூடப்பட்டிருக்கும் மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள், நேரடியாக வங்கி கிளைகளுக்குச் சென்று ரொக்கப் பணம் டெபாசிட் செய்தல் மற்றும் எடுத்தல், காசோலை தொடர்பான பணிகள், புதிய கணக்கு தொடங்குதல் மற்றும் பிற நேரடி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>டிஜிட்டல் மற்றும் ஏடிஎம் சேவைகள் வழக்கம் போல் செயல்படும்!</strong></h2><p>வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைகளுக்கான தானியங்கி பணப்பரிவர்த்தனை இயந்திரங்கள், இணைய வங்கி சேவை, மொபைல் பேங்கிங் மற்றும் யுபிஐ கூகுள் பே, ஃபோன்பே போன்ற ஆன்லைன் பணப்பரிமாற்ற டிஜிட்டல் சேவைகள் எவ்வித தடங்கலும் இன்றி வழக்கம் போல் இயங்கும்.</p><p>ஒவ்வொரு மாநிலத்தின் பிராந்திய பண்டிகைகளுக்கு ஏற்ப இந்த விடுமுறைகள் மாறுபடும் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.52 லட்சம்: எங்கு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/world/singapore-has-announced-a-major-expansion-of-family-support-as-its-fertility-rate-fell-to-a-record-low</link><comments>https://www.maalaimalar.com/news/world/singapore-has-announced-a-major-expansion-of-family-support-as-its-fertility-rate-fell-to-a-record-low#comments</comments><guid isPermaLink="false">305de159-67ec-4292-aaca-8fe44478ff5f</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:17:54 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:17:54.954Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிறப்பு விகிதம்,birth rate,சிங்கப்பூர்,singapore</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/uoyucx80/child.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ child]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/uoyucx80/child.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குறைந்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ரூ.52 லட்சம் கொடுக்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்தது.</p><p>சிங்கப்பூரில் மக்கள் தொகை எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p><p>குறைந்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.</p><h2>சிங்கப்பூர் அதிரடி</h2><p>இந்நிலையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ரூ.52 லட்சம் கொடுக்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக, சிங்கப்பூர் அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:</p><p>சிங்கப்பூரில் அழகான குடும்பங்களை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்த வேறு என்னவெல்லாம் செய்ய முடியும் என கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p>கல்வி, அடிப்படை வசதிகள் குறித்த கவலைகளால் இளம் தம்பதிகள் குழந்தைப் பேற்றை தள்ளிப் போட்டு வருகின்றனர்.</p><p>சிலர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை பெற்றுக்கொள்ள பெரும்பாலானோர் விரும்புவதில்லை.</p><p>ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய நாளை முன்னிட்டு பிரதமர் அளித்த பேட்டியில், நாடு குழந்தைப் பேற்றை அதிகரிக்க விரும்புகிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.</p><p>2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமான குழந்தை பிறந்தால் ரொக்கப் பரிசு வழங்குவது தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தற்போது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு ரூ.52 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இது அவர்களது 17 வயது வரை ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திட்ட பலன் யாருக்கு?</h2><p>இந்த ரொக்கப் பரிசு திட்டம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதிக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.</p><p>அதுமட்டுமின்றி, குழந்தைகள் பராமரிப்பு செலவு, கல்விச் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்துமா?- உஷாராக இருக்க வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-the-northeast-monsoon-cause-unprecedented-damage-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-the-northeast-monsoon-cause-unprecedented-damage-in-chennai#comments</comments><guid isPermaLink="false">fc535fc6-2a72-4941-872e-ffb2ccd945ab</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:17:45 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:17:45.251Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,வடகிழக்கு பருவமழை,வானிலை ஆய்வாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/00awxloa/northeastmonsoon.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மழை வெள்ளத்தில் மிதந்து செல்லும் வாகனங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை வெள்ளத்தில் மிதந்து செல்லும் வாகனங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/00awxloa/northeastmonsoon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எப்போதும் நினைவில் நிற்கும் அளவுக்கு மிகவும் தீவிரமான சூப்பர் எல் நினோவின் தாக்கங்களை எதிர்கொள்ள நாம் அனைவரும்  தயாராக வேண்டியது அவசியமாகும்.</strong></em></p><p>சூப்பர் எல்நினோ தாக்கம் காரணமாக தட்ப வெப்ப நிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/வடகிழக்கு-பருவமழை">வானிலை ஆய்வாளர்கள்</a> ஏற்கனவே பல்வேறு எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டு உஷார்படுத்தி உள்ளனர்.</p><p>கடும் வெப்பம், வறட்சி, பெரு வெள்ளம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த நிலையில் தமிழகத்தில் சூப்பர் எல் நினோ இன்னும் 2 மாதங்களில் மழை காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளரான ஹேமச்சந்தர் தெரிவித்து உள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>தீவிர தாக்கம்</strong></h2><p>மிகப்பெரிய சூப்பர் எல் நினோ உருவாகி வருகிறது. வரலாறு காணாத  அளவுக்கு அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நகர்ந்து வருகிறது.</p><p>வெப்ப நிலை மாறுபாடு 29.6 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்து உள்ளது. இது சராசரி அளவை விட  கூடுதலாக 2.75 டிகிரி செல்சியஸ் அதிகம் எனக் கூறப்படுகிறது. வரலாற்றில் முதல்முறையாக, இந்த மாதத்திலேயே ஒரு சூப்பர் எல் நினோ முழுமையாக உருவாகி உள்ளது. இந்த மாத இறுதிக்குள், 2015 மற்றும் 1997 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோ அளவுக்கு இது இருக்கலாம். அல்லது அதைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த மேற்கு நோக்கிய காற்று வெடிப்பு  தொடர் நிகழ்வாக உள்ளது. </p><h2><strong>அலட்சியம் வேண்டாம்</strong></h2><p>இதன் காரணமாக கெல்வின் அலைகள் உருவாகி, கடலுக்குள் இருக்கும் கூடுதல் வெப்பத்தை மேல்நோக்கி கொண்டு சென்று எல் நினோவின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்தும்.</p><p>இதன் விளைவாக, மிகப்பெரிய சூப்பர் எல் நினோ நவம்பர் மாதத்திற்குள் உருவாவது உறுதியாகும் எனக் கூறப்படுகிறது. எல் நினோ பூமியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று எண்ணி அலட்சியமாக இருக்க வேண்டாம். நீங்கள் இப்போதே விழிப்புடன் இருந்து தயாராக வேண்டும். இல்லையென்றால், அதன் விளைவுகள் உங்களை கடுமையாக பாதிக்கும்.</p><p>எப்போதும் நினைவில் நிற்கும் அளவுக்கு மிகவும் தீவிரமான சூப்பர் எல் நினோவின் தாக்கங்களை எதிர்கொள்ள நாம் அனைவரும்  தயாராக வேண்டியது அவசியமாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2><strong>பெருவெள்ளம்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரையில் பருவமழை காலங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ள பாதிப்பு அதிகமாகவே இருக்கும். இந்த பாதிப்பு வரலாறு காணாத வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. </p><p>தற்போது சூப்பர் எல் நினோவால் பெரு வெள்ளம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருப்பது பொதுமக்களிடையே  சற்று பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதனை போக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை முன் கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>யானைக்கவுனியில் விஷவாயு தாக்கி தந்தை-மகன் பலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/father-and-son-death-death-gas-attack-near-elephant-gate</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/father-and-son-death-death-gas-attack-near-elephant-gate#comments</comments><guid isPermaLink="false">9bcb5b3a-6c4f-4b4d-bf7b-140e7e1a5d0a</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:17:17 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:17:17.597Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஷவாயு தாக்குதல்,Elephant Gate,gas attack,தந்தை மகன் உயிரிழப்பு,Father Son Death,யானைக்கவுனி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/7020hwrq/death.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Father - Son]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/7020hwrq/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை யானைக்கவுனி ஏலக்கந்தப்பன் தெரு, பொன்னப்பா சந்தில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கிணற்றில் தூர்வாரும் பணி இன்று காலையில் நடந்தது.</p><h2>தந்தை-மகன்</h2><p>சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடத்தைச் சேர்ந்த அய்யனார் (35), அவரது தந்தை ரவி (65) ஆகியோர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். </p> <p>3½ அடி அகலம், 45 அடி ஆழம் உள்ள கிணற்றில் முதலில் அய்யனார் இறங்கினார். அவர் உள்ளே சென்று சிறிது நேரம் ஆகியும் எந்தவித சத்தமும் இல்லாததால் அவரது தந்தை ரவி கிணற்றில் இறங்கினார். இருவரும் கிணற்றில் இறங்கி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. </p><p>இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர் ராஜ்குமார் தலைமையில் 5 பேர் அங்கு விரைந்து வந்தனர்.</p> <h2>பிணமாக கிடந்தனர்</h2><p>அவர்கள் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டபோது அய்யனாரும், ரவியும் விஷவாயு தாக்கி கிணற்றில் பிணமாக இருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து தீயணைப்புப் படை வீரர்கள் அவர்கள் இருவரின் உடலையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைத்தனர். </p><p>வீட்டுக் கிணற்றை தூர்வாரும்போது தந்தையும், மகனும் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. </p><p>இதுகுறித்து யானைக் கவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தொழில்நுட்ப வல்லுநர்கள் வெற்றி பெற &apos;விற்பனை&apos; வித்தையைக் கற்க வேண்டும்: ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை!</title><link>https://www.maalaimalar.com/news/national/tech-professionals-must-learn-sales-to-succeed-sridhar-vembu</link><comments>https://www.maalaimalar.com/news/national/tech-professionals-must-learn-sales-to-succeed-sridhar-vembu#comments</comments><guid isPermaLink="false">600ef821-694e-44d1-ac9c-7555513924b8</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:09:14 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:09:14.618Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,Sridhar Vembu,ஸ்ரீதர் வேம்பு,Zoho founder,Software Industry,ஸோஹோ நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/p1o9p9gr/sridhar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sridhar Vembu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/p1o9p9gr/sridhar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஸோஹோ (Zoho) அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, பொறியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற தொழில்நுட்ப பின்புலம் கொண்ட தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த விற்பனைத் துறையில் நேரடியாகக் களம் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தொழிலில் வெற்றி பெற விரும்புபவர்கள் விற்பனை அழைப்புகளை மேற்கொள்வதோடு, வாடிக்கையாளர்களின் நிராகரிப்புகளையும் எதிர்கொள்ளப் பழக வேண்டும் என்று அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.</p><h2>நிராகரிப்புகளை எ<strong>திர்கொள்வதே உ</strong>ண்மையான பாடம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/porsche-tcs-1-4-billion-mega-deal-mhp-acquisition">தொழில்நுட்பத்</a> திறமையோ அல்லது சிறந்த தரமான பொருளை உருவாக்குவதோ மட்டுமே ஒரு நிறுவனத்தை நடத்துவதற்குப் போதாது என்று ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார். வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தயாரிப்பு ஏன் தேவைப்படுகிறது என்பதைப் புரியவைத்து, அவர்களைப் பணம் செலுத்த வைப்பதே ஒரு நிறுவனத்தின் ஜீவாதாரமாகும்.</p><p>விற்பனை தொடர்பான உரையாடல்களில் ஈடுபடும் போது மட்டுமே தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு எளிதாகப் புரியவைப்பது எவ்வளவு கடினம் என்பது புலப்படும். இது தொழில்முனைவோரின் தொடர்பாடல் திறனை மேம்படுத்துவதுடன், நிறுவனத்தின் விற்பனைக் குழுவினர் சந்திக்கும் சவால்களையும் புரிந்துகொள்ள உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>விற்பனை இல்<strong>லாத தொழில் உல</strong>கத்தில் இல்லை</h2><p>எந்தவொரு தொழில் நிறுவனமும் தப்பிப் பிழைத்து வெற்றிப் பாதையில் நகர வேண்டுமானால், ஏதேனும் ஒன்றை விற்பனை செய்தே தீர வேண்டும். விற்பனை என்ற அம்சம் இல்லாத வணிகம் என எதுவுமே இல்லை என்பதால், புதிய தொழில்முனைவோர்கள் ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரிப்புகளைச் சந்திக்கத் தயங்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இவரது இந்த இணையப் பதிவு சமூக வலைதளங்களில் பல தொழில்முனைவோர்கள் மற்றும் வணிக வல்லுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் தங்களது தொடக்கக் கால அனுபவங்களை இதன் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.</p><h2>மெ<strong>ன்பொருள் துறை மாற்றங்கள்</strong></h2><p>சமீபகாலமாக வணிக உலகம் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் ஸ்ரீதர் வேம்பு பேசியுள்ளார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் தரவு மையங்கள் மற்றும் கணினி நினைவகங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால் மென்பொருள்களை உருவாக்கும் முறையிலும், நிரலாக்க மொழிகளிலும் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>நினைவகம் இலவசமாகக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மென்பொருள்கள் உருவாக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டதாகவும், இனி குறைந்த நினைவகத்தைப் பயன்படுத்தி இயங்கும் சாஃப்ட்வேர் அமைப்புகளை உருவாக்குவதே தற்போதைய அவசியமான ஆராய்ச்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய மந்திரி சபையில் 12 புதுமுகங்களுக்கு வாய்ப்பு- பிரதமர் மோடி அதிரடி முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/opportunities-for-12-newcomers-in-the-union-cabinet</link><comments>https://www.maalaimalar.com/news/national/opportunities-for-12-newcomers-in-the-union-cabinet#comments</comments><guid isPermaLink="false">a5eb064a-cb4d-44b0-a553-fb7d546398e0</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:58:01 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:58:01.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,மத்திய அமைச்சரவை,Central Cabinet,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/hqqa6284/modi.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/hqqa6284/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மந்திரிசபை மாற்றத்தின் போது இளம் மந்திரிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.</strong></em>  </p><p>மத்திய மந்திரி சபையில் தற்போது பிரதமர் மோடி உள்ளிட்ட 69 பேர் இடம் பெற்றுள்ளனர். அரசியலமைப்பு சட்டப்படி அதிகபட்சமாக 81 பேர் வரை மந்திரிகளாக பதவி வகிக்க முடியும். அந்த வகையில் 12 பேரை கூடுதலாக நியமிக்க முடியும். </p><h2><strong>மத்திய மந்திரி சபை மாற்றம்</strong></h2><p>பிரதமர் மோடி கடந்த மே மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.  அவர் இந்தியா திரும்பியவுடன் மத்திய மந்திரி சபை கூட்டத்தை நடத்தினார். </p><p>அப்போதில் இருந்தே <a href="https://www.maalaimalar.com/topic/மத்திய-அமைச்சரவை">மத்திய மந்திரி சபையில்</a> மாற்றம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் உடனடியாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. சமீபத்தில் பா.ஜ.க.வின் கட்சி அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது. புதிய தேசிய நிர்வாக குழு அமைக்கப்பட்டது.</p><p>அதன் அடிப்படையிலும், 2029 பாராளுமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அடிப்படையில் மத்திய மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு தீவிரமாக உள்ளது. </p><h2><strong>12 புதுமுகங்கள்</strong></h2><p>அதன்படி மத்திய மந்திரி சபையில் காலியாக இருக்கும் 12 இடங்களுக்கு புதுமுகங்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிதாக சேர்க்கப்படுபவர்கள் வயது அடிப்படையில் இடம்பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. </p><p>2025-ல் மோடி பிரதமராக பதவி ஏற்ற போது 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மந்திரிகள் 51 முதல் 70 வயதை கொண்டவர்களாகவும், 24 சதவீதம் பேர் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.</p><h2><strong>70 வயது</strong></h2><p>தற்போது 12 மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இந்துஸ்தானி அவாம் மோர்சா கட்சியின் ஜிதன்ராவ் மாஞ்சிக்கு 81 வயதாகிறது. மத்திய மந்திரிகளில் இளையவராக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம்மோகன் நாயுடு உள்ளார். </p><p>மந்திரிசபை மாற்றத்தின் போது இளம் மந்திரிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  </p><h2><strong>கூட்டணி கட்சிகள்</strong></h2><p>மேலும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாச்சல பிரதேசம், கர்நாடகாவை சேர்ந்த எம்.பி.க்கள் மந்திரிகளாக வாய்ப்பு உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களும் இந்த பட்டியலில்  உள்ளதாக தெரிகிறது. </p><p>உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும்  அடுத்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. மந்திரி சபை விரிவாக்கத்தின் போது கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.</p><h2><strong>ஏக்நாத் ஷிண்டேயின் மகன்</strong> </h2><p>மகாராஷ்டிராவில் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் 13 எம்.பி.க்கள் உள்ளனர். சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியில் இருந்து சில எம்.பி.க்கள் இணைந்ததை தொடர்ந்து அதன் பலம் அதிகரித்தது. இதனால் ஏக்நாத் ஷிண்டேயின் மகன் ஸ்ரீகாந்துக்கு மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளது. </p><p>விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாபில் ஷிரோன்மணி அகாலி தளம் கட்சிக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம். அந்த கட்சியுடன் மீண்டும் கூட்டணி உருவானால் ஹர்ஷிம்ரத் கவ் பாதல் மீண்டும் மந்திரியாகலாம். </p><h2><strong>ஆம்ஆத்மி</strong></h2><p>ராகவ் சந்தா தலைமையில் 7 மேல்சபை எம்.பி.க்கள் சமீபத்தில் ஆம்ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால் அவர்களில் சிலருக்கு மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படலாம். இந்த குழுவை சேர்ந்த சந்தீப் பதக் ஏற்கனவே பா.ஜ.க.வில் செயலாளர் பொறுப்பை ஏற்றுள்ளார். </p><p>மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் உள்ளனர். வேறொரு கட்சியில் இணைந்த இவர்களுக்கும் மத்திய மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய தி.மு.க.வும் மத்திய மந்திரி சபையில் இடம்பெறக்கூடும் என பேச்சுக்கள் உள்ளன. </p><p>மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரசும், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து மத்திய மந்திரி சபையில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.</p><h2><strong>பணிச்சுமை</strong></h2><p>அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட 14 மத்திய மந்திரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை கவனித்து வருகின்றனர். மத்திய மந்திரி சபை மாற்றத்தின் போது இந்த பணிச்சுமையை பிரித்து சில துறைகளை புதிய மந்திரிகளுக்கு ஒப்படைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவும் மத்திய மந்திரி சபை விஸ்தரிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். </p><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி மந்திரி பதவியில் இருந்து விலகினார். மேல்சபை பதவி காலம் முடிவடைந்தை தொடர்ந்து சிறுபான்மை விவகாரத்துறை இணை மந்திரி ஜார்ஜ் குரியன் பதவி விலகினார். ரெயில்வே இணை மந்திரி ரவ்நீத் சிங் மேல் சபை பதவி காலமும் முடிவடைந்துள்ளது.</p><h2><strong>நீக்கம்</strong></h2><p>பா.ஜ.க.வில் புதிய பொறுப்புகளை பெற்றுள்ள மத்திய மந்திரிகளும் மந்திரி பதவியில் இருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஹர்ஷ் மல்கோத்ரா, பங்கஜ் சவுத்ரி, புதிய பொறுப்புகளை ஏற்று உள்ளனர். </p><p>பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, சமூக நீதி துறை இணை மந்திரி பி.எல்.வர்மா ஆகியோரின் மேல்சபை எம்.பி. பதவி காலமும் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது. செயல்பாடுகள் காரணமாகவும் சில மந்திரிகள் நீக்கப்படலாம் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. </p><h2><strong>ஒருவருக்கு ஒரு பதவி</strong></h2><p>ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறையை பா.ஜ.க. பின்பற்றுகிறது. அதன்படி மத்திய மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்ட சில தலைவர்களுக்கு அதற்கு பதிலாக கட்சி அமைப்பில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.</p><p>அவர்களில் ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே, சதீஷ் பூனியா, தருண் சுக் ஆகியோர் அடங்குவர். </p><h2><strong>நிதின்கட்கரி</strong></h2><p>மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள மூத்த மந்திரிகளில் ஒருவர் நிதின்கட்கரி. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அவர் இளம் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்து இருந்தார். இதனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என்று கருதப்படுகிறது.  </p><p>புதுமுகங்கள், பெண்கள், கூட்டணி கட்சிகள், தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள், கட்சி பொறுப்பு பெற்ற மந்திரிகளை விடுவித்தல், மந்திரிகளின் பணிச்சுமைகளை குறைத்தல் ஆகியவை மத்திய மந்திரி சபை மாற்றத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன்படி மத்திய மந்திரி சபை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம்
கண்துடைப்பு நாடகமாக இருக்கக் கூடாது!- அன்பில் மகேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahes-criticises-teacher-eligibility-test-exemption-move</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahes-criticises-teacher-eligibility-test-exemption-move#comments</comments><guid isPermaLink="false">946df2f5-80cc-4a8c-8a04-0ba5b9a1caf1</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:50:59 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:50:59.846Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பள்ளிக்கல்வித்துறை,anbil mahesh,TET Exam,Directorate of School Education,அன்பில் மகேஷ்,ஆசிரியர்கள் தகுதித்தேர்வு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/5pimw2rq/anbil-mahesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ex Minister Anbil Mahesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/5pimw2rq/anbil-mahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம், கண்துடைப்பு நாடகமாக மட்டும் இருக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>‘ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம்’ தொடர்பாக த.வெ.க. அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் சங்கங்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.</p><p>இந்த அரசு ஆசிரியர்கள் நலனில் இரட்டைவேடம் போடுகிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. தீர்மானம் நிறைவேற்றியதற்கு முதல்நாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஆசிரியர் தகுதித்தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது!</p><p>அப்படி குறைத்தால் தேர்விற்கான மதிப்பு குறைந்துவிடும்’ என ஆசிரியர்களுக்கு எதிராக வாதாடியுள்ளது த.வெ.க. அரசு. ஆனால் அதற்கு மறுநாள் தீர்மானம் எனும் பெயரில் நாடகம் ஆடியுள்ளதா எனும் கேள்வி ஆசிரியப் பெருமக்களிடம் எழுந்துள்ளது.</p><p>2025 செப்டம்பர் 1 அன்று ‘அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற வேண்டும்’ என மாண்பமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. </p><p>உடனடியாக அதே நாளில் செய்தியாளர்களைச் சந்தித்து ‘இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்’ என திராவிட மாடல் அரசின் அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அறிவித்தோம்.</p><p>அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தோம். </p><p>‘மேல்முறையீடு செய்யப்படும்’ என்ற தலைவர் அவர்களின் அறிவிப்பை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றார்கள். அதற்காக என்னை நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்தார்கள்.</p><p>2025 செம்படம்பர் 11 அன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கழகமும், திராவிட மாடல் அரசும் ஆசிரியர்களின் மனமறிந்து அவர்களை காக்கும் பணிகளில் இறங்கியது.</p><p>சீராய்வு மனு மீதான தீர்ப்பு வெளியான அடுத்த நாளே ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் சந்தித்து ஆசிரியர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தோம். </p><p>இரண்டு முறை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினோம். அதற்கு அடுத்த நாளே 2025 நவம்பர் 22 அன்று அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்களோடு இணைந்து சந்தித்து ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்களை எடுத்துக் கூறினோம். </p><p>ஆசிரியர்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு நவம்பர் 25 அன்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார் அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அக்கடிதத்தில் ‘ஆசிரியர்களை பாதுகாப்பதுடன் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படக்கூடாது என்றால் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார்.</p><p>தொடர்ந்து, அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களோடு நானும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளும் உடனடியாக ஆலோசனை நடத்தினோம். </p><p>மூத்த ஆசிரியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கத் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் அன்றைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரிவான அறிக்கையின் மூலம் தெரிவித்தார்கள்.</p><p>நவம்பர் 29 அன்று கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ‘பணி நியமனம்  பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை ஒன்றிய அரசு பாதுகாத்திடுக’ என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.</p><p>“இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களைப் பாதுகாக்கப் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்த வேண்டும்” என்கிற கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்தினார்கள். </p><p>கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்கள் 2025 டிசம்பர் 12 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த கழகத் தலைவர் அவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து, ஆசிரியர்களுக்காக சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>இதற்கிடையில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று திராவிட மாடல் அரசின் சிறப்பு முயற்சியால் “ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும்” என்று அரசாணை: 231, நாள் 25.10.2025 அன்று வெளியிடப்பட்டது.</p><p>தொடர்ந்து வந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5 சதவீதத் தளர்வும் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.</p><p>2026 ஜனவரி 28 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதி மதிப்பெண்களை குறைத்து அரசாணை வெளியிட்டார் அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். </p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது.</p><p>மாற்றுத்திறன் கொண்ட தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 25 அன்று குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் எனவும் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டது.</p><p>மேலும், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவிடும் வகையில், அதற்கான பயிற்சிக் கட்டகங்கள்(Training Modules) தயாரிக்கும் பணி மற்றும் இணையவழிப் பயிற்சி வழங்கும் பணியானது, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம்(SCERT) ஒப்படைக்கப்பட்டது.</p><p>இச்சூழலில்தான் 2026 மே 29ஆம் தேதி சீராய்வு மனு மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்க மறுத்துவிட்டது’. இதன் பிறகான சட்டப்போராட்டத்தை புதிதாக வந்த த.வெ.க அரசு மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை!</p><p>முந்தைய நமது திராவிட மாடல் அரசு ஆசிரியர்களுக்காக செய்த சிறப்பு செயல்பாடுகளையும் முடக்கும் வேகத்தில்தான் இந்த அரசு செயலாற்றியது. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வர்களுக்காக பயிற்சி கையேடுகள் வழங்குவதிலேயே தாமதம் ஏற்படுத்திய அரசுதான் இவ்வரசு.</p><p>அதோடு நில்லாமல் உயர்நீதிமன்றத்தில் ‘தகுதித்தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது’ என்று ஆணவமாகவும் வாதாடி உள்ளது என்பது மாற்றத்தை அல்லாமல் ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தைதான் கொடுத்துள்ளது.</p><p>இந்த புதிய அரசின் செயல்பாடுகளை என்னவாக விளங்கிக்கொள்ள வேண்டும்? நீதிமன்றத்தில் வாதாடிய அரசின் முகம்தான் உண்மை முகமா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அரசின் முகம்தான் உண்மை முகமா?</p><p>இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக் கூறுவதுடன் கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆசிரியப் பெருமக்களின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானாவில் லாரி மீது பஸ் மோதி விபத்து - 6 பேர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/national/bus-crashes-to-truck-six-killed-near-telangana</link><comments>https://www.maalaimalar.com/news/national/bus-crashes-to-truck-six-killed-near-telangana#comments</comments><guid isPermaLink="false">5b5e6f63-9ef0-44a8-8126-86327a8d82f5</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:49:29 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:49:29.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death,Telangana,accident,விபத்து,தெலுங்கானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4ecn3zyk/bus.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4ecn3zyk/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று நேற்று இரவு ஆந்திர மாநிலம் ஏலூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.</p><p>இன்று அதிகாலை சூர்யா பேட்டை மாவட்டம், கொடடா அடுத்த தோர குண்டா புறநகர் பகுதியில் வந்தபோது சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. </p><p>இந்த விபத்தில் 5 பெண் பயணிகள் உட்பட 6 பேர் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 20 பயணிகள் காயமடைந்தனர். </p><p>விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு கொடடா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திரையுலகில் சோகம்: பிரபல பாலிவுட் இயக்குநர் குகு கோலி மாரடைப்பால் காலமானார்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bollywood-mourns-celebrated-director-gugu-kohli-passes-away-after-heart-attack</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bollywood-mourns-celebrated-director-gugu-kohli-passes-away-after-heart-attack#comments</comments><guid isPermaLink="false">51e3d6d9-3edb-4627-8f44-fa1ce31030b3</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:47:46 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:47:46.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kuku Kohli,Phool Aur Kaante,Actress Aruna Irani,குகு கோலி,அருணா இரானி,அவதார் கோலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/wvf550e2/kholi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kuku Kohli]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/wvf550e2/kholi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநரும், மூத்த நடிகை அருணா இரானியின் கணவருமான குகு கோலி (77) மாரடைப்பு காரணமாக மும்பையில் காலமானார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>மார<strong>டைப்பால் திடீர் மறைவு</strong></h2><p>அவதார் கோலி என்ற இயற்பெயர் கொண்ட குகு கோலிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மும்பையிலுள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சீராகி வந்த நிலையில், மீண்டும் ஏற்பட்ட தீவிர மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/kriti-sanon-defends-raksha-bandhan-ad-outfit-amid-cultural-criticism">பாலிவுட்டின் </a>முன்னணி இயக்குநரான ராஜ் கபூரிடம் உதவி இயக்குநராக தனது திரைவாழ்க்கையைத் தொடங்கிய குகு கோலி, 'போபி', 'பேதாப்', 'அர்ஜுன்' போன்ற படங்களில் பணியாற்றினார்.</p><p>1991-ஆம் ஆண்டு வெளியான 'ஃபூல் அவ்ர் காண்டே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலமே பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கண்ட குகு கோலி, தொடர்ந்து 'சுஹாக்', 'ஹகீகத்', 'கோஹ்ராம்', 'அனாடி நம்பர் 1', 'யே தில் ஆஷிகானா' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். 2004-ஆம் ஆண்டு வெளியான 'வோ தேரா நாம் தா' என்பதே இவர் இயக்கிய கடைசி திரைப்படமாகும்.</p><p>குகு கோலி 1990-ஆம் ஆண்டு பிரபல மூத்த நடிகை அருணா இரானியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முதல் மனைவி ரீட்டா கோலி மூலம் பூஜா, கரிஷ்மா என்ற இரு மகள்கள் உள்ளனர். மும்பை ஓஷிவாரா மயானத்தில் நடைபெறும் இவரது இறுதிச்சடங்கில் ரோஹித் ஷெட்டி, விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், ஜாவேத் அக்தர், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் நேரில் பங்கேற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>குருகிராமில் மழை வெள்ளம்: காங்கிரஸ் ஆட்சியைக் குற்றம்சாட்டும் பாஜக எம்பி!</title><link>https://www.maalaimalar.com/news/national/gurugram-rains-floods-bjp-mp-blames-congress-rule</link><comments>https://www.maalaimalar.com/news/national/gurugram-rains-floods-bjp-mp-blames-congress-rule#comments</comments><guid isPermaLink="false">577d9f7a-e8b0-4d83-947b-494c7f3e6a6c</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:29:47 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:29:47.304Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,Congress,gurugram,Rao Inderjit Singh,Gurugram flood,குருக்கிராம்,ராவ் இந்தர்ஜித் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/sumejfee/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rao Inderjit Singh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/sumejfee/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹரியானாவின் முன்னணி தொழில்நகரமான குருகிராமில் அண்மையில் பெய்த கனமழையால் நகரின் முக்கியச் சாலைகளும், குடியிருப்புப் பகுதிகளும் நீரில் மூழ்கிப் பெரும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், நகரின் தற்போதைய நிலைக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான உள்கட்டமைப்பு திட்டமிடலே காரணம் என குருகிராமின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராவ் இந்தர்ஜித் சிங் கூறியிருப்பது பெரும் காரசாரமான அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p><h2><strong>சுரங்கப்பாதை திட்டம்</strong> </h2><p>நகரின் வெள்ளப் பெருக்கு குறித்துப் பேசிய மத்திய இணை அமைச்சரும் <a href="https://www.maalaimalar.com/news/national/flooded-gurugram-again-who-is-to-blame-for-citys-infrastructure-collapse">குருக்கிராமின்</a> எம்பியுமான ராவ் இந்தர்ஜித் சிங், "தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் அனைத்தும் காயத்திற்கு போடப்படும் சாதாரண பிளாஸ்டர் போன்ற தற்காலிகமான தீர்வே ஆகும். ஆரவல்லி மலையிலிருந்து யமுனை நதிக்குத் தண்ணீரை எடுத்துச் சென்ற பழமையான இயற்கை வடிகால்களை அடைத்து, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களே தற்போதைய வெள்ளப் பெருக்குக்கு முக்கியக் காரணம்." என்று குற்றம்சாட்டினார்.</p><p>இதற்கு நிரந்தரத் தீர்வாக, மெட்ரோ ரெயில் பாதைகளைப் போல பழைய வடிகால் பாதைகளின் வழியே நிலத்தடி சுரங்கப்பாதைகளை (Underground Tunnels) அமைத்து மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்றும், அதற்கான நிதியைத் திரட்டும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>பாஜக எம்பியின் இந்தக் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி உடனடி மற்றும் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளது. குருக்கிராமில் கடந்த சில ஆண்டுகளில் உள்கட்டமைப்பிற்காக ரூ.1,400 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டும் நகரின் கட்டமைப்பு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் சாடியுள்ளது.</p><p>மேலும், 2009-ஆம் ஆண்டு முதல் குரு்கிராமின் நாடாளுமன்ற உறுப்பினராக ராவ் இந்தர்ஜித் சிங் பொறுப்பில் இருந்து வருகிறார். அதுமட்டுமன்றி, அவர் குற்றம்சாட்டும் அதே காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் அவரே எம்பியாகவும், ஹரியானா மற்றும் மத்திய அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார். 2014-ல் பாஜகவிற்கு மாறிய அவர், தொடர்ச்சியாக குருகிராம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவியில் இருந்துவிட்டு முந்தைய ஆட்சியைக் குற்றம்சாட்டுவது தனது சொந்தத் தோல்வியை மறைக்கும் செயலாகும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.</p><h2>முடங்<strong>கிய குருக்கிராம்</strong></h2><p>குருகிராமில் சில நிமிடங்களில் கொட்டித் தீர்த்த 70 மி.மீ முதல் 75 மி.மீ வரையிலான கனமழையால் நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 2 அடிக்கும் மேலாக மழைநீர் தேங்கியதால் பள்ளிக் குழந்தைகள் சென்ற பேருந்துகள் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் மணி கணக்கில் போக்குவரத்தில் சிக்கித் தவித்தன. இதனால் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தின.</p><p>இதற்கிடையே, டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே இஃப்கோ சவுக்கில் பிரதான கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 10 அடி அகலத்திற்குப் பாதாளப் பிளவு ஏற்பட்டு வீதி உள்வாங்கியது. இதனால் போக்குவரத்தும், சில பகுதிகளில் குடிநீர் விநியோகமும் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. பல நூறு கோடி செலவழிக்கப்பட்டும் ஒவ்வொரு மழைக்காலத்திலும் குருக்கிராம் நகரம் தத்தளிப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்  </title><link>https://www.maalaimalar.com/spirituality/best-time-for-girivalam-in-tiruvannamalai</link><comments>https://www.maalaimalar.com/spirituality/best-time-for-girivalam-in-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">e47176bc-f4bd-4d3e-807d-e5f8c0296034</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:28:45 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:28:45.825Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,pournami,Pournami Girivalam,பவுர்ணமி கிரிவலம்,Tiruvannamalai temple,பவுர்ணமி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/khws4xja/tiruvannamalai.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருவண்ணாமலை கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவண்ணாமலை கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/khws4xja/tiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/திருவண்ணாமலை-கோவில்">திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில்</a> ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, ஆவணி மாத பவுர்ணமி திதி நாளை (வியாழக்கிழமை) காலை 9.53 மணிக்குத் தொடங்கி, மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.29 மணிக்கு நிறைவடைகிறது. இந்த இடைப்பட்ட காலமே கிரிவலம் வர உகந்த நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், பக்தர்கள் பகலில் கிரிவலம் செல்வதைத் தவிர்த்து மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>பவுர்ணமியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி, சிறப்புப் பேருந்துகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் தீவிரமாகச் செய்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு
முக்கிய கடல் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும்- ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/un-security-council-india-calls-to-safeguard-major-maritime-routes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/un-security-council-india-calls-to-safeguard-major-maritime-routes#comments</comments><guid isPermaLink="false">825aabb6-112e-41d3-9134-0b69f0fed367</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:23:23 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:23:23.303Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,ஐநா சபை,கப்பல் போக்குவரத்து,united nation,ship transport</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ts5cjj0z/INDIA.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ambassador Harish, Permanent Representative of India to the UN]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ts5cjj0z/INDIA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய கடல் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும் என ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.</em></p><p>மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனால் கச்சா எண்ணை, எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய கடல் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது. </p><p>ஐ.நா. பாதுகாப்பு சபையில் மோதல் சூழலில் உணவு என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் ஹரிஷ் பர்வத்தனேனி பேசியதாவது:-</p><p>ஆயுத மோதல்களின் மிகக் கடுமையான மனிதாபிமான விளைவுகளில் ஒன்றாக உணவுப் பாதுகாப்பின்மை இருந்து வருகிறது. மோதல்கள்  நடைபெறும் இடங்களுக்கு அப்பாலும் பரவலான தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.</p><p>எரிசக்தி சந்தைகள், உர விநியோகம், கடல்சார் போக்குவரத்து, மனிதாபிமான உதவிகள், விவசாய வர்த்தகம் ஆகியவற்றில் ஏற்படும் இடையூறுகள், உலகெங்கிலும் உள்ள உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. </p><p>இதனால் உணவு இறக்குமதி செய்யும் வளரும் நாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, முறையான வர்த்தகம் மற்றும் மனிதாபிமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுதல் ஆகியவை  தடைகள் இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதோடு, முக்கியமான கடல் வழித்தடங்கள் மற்றும் கடல் சார் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். </p><p>மோதல்களால் ஏற்படும் மனிதாபிமான விளைவுகளைக் குறைப்பதே ஐ.நா. பாதுகாப்பு சபையின் உடனடி முன்னுரிமையாக இருக்க வேண்டும்.</p><p>உணவு, உரங்கள், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற போக்குவரத்திற்குப் பாதுகாப்பான மற்றும் கடல்சார் வர்த்தகப் பாதைகள் இன்றியமையாதவை ஆகும். </p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்</title><link>https://www.maalaimalar.com/news/national/air-conditioned-wedding-hall-with-a-rental-fee-of-rs-1</link><comments>https://www.maalaimalar.com/news/national/air-conditioned-wedding-hall-with-a-rental-fee-of-rs-1#comments</comments><guid isPermaLink="false">422ec911-c07e-4ed4-94c2-4260ea12d6e8</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:09:04 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:09:04.338Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமண மண்டபம்,Marriage hall</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/w4pyq0mm/marriagehall.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்]]></media:title><media:description type="html"><![CDATA[ குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/w4pyq0mm/marriagehall.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை நெல்லூர் மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி செலவில் கட்டி முடித்துள்ளனர்.</strong></em></p><p>ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநகராட்சி சார்பில் ஏ.சி. வசதியுடன் கூடிய சொகுசு திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் 24 மணி நேர வாடகை ரூ.1-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது திருமண மண்டபங்களின் வாடகை பல லட்சமாக உள்ளது. இடத்திற்குத் தகுந்தாற்போல் வெறும் 24 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வாடகை மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளது.</p><figure><img alt="குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/9epbid2j/marriagehaal0.jpg" /><figcaption>குளுகுளு ஏசி வசதியுடன் 1 ரூபாய் வாடகை திருமண மண்டபம்</figcaption></figure><p>இதுதவிர மேடை, முகப்பு அலங்காரம், சமையல் பாத்திரங்களுக்கான தனி வாடகை என லட்சக்கணக்கில் செலவாகிறது. இத்தகைய மண்டபங்களில் திருமணம் செய்ய நடுத்தர வர்க்கத்தினரே அஞ்சும் நிலையில், ஏழைகளால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத சூழ்நிலை உள்ளது. </p><p>இதனைக் கருத்தில் கொண்டு, நெல்லூர் மாநகராட்சியினர் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் பிள்ளைகளுக்கான திருமணச் செலவை வெகுவாகக் குறைக்க தீர்மானித்தனர்.</p><p>அதன்படி, நெல்லூரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை நெல்லூர் மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி செலவில் கட்டி முடித்துள்ளனர்.</p><p>திருமண மண்டபத்தில் ஏ.சி. அறைகள், பளிங்குத் தரைகள், பரந்த கார் பார்க்கிங் வசதி, குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இந்த திருமண மண்டபத்திற்கு ஒரு நாள் வாடகையாக வெறும் 1 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபத்தை வருகிற செப்டம்பர் 16-ந்தேதி அமைச்சர் நாராயணா திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விரைவு தரிசனம் செய்ய நடவடிக்கை- அமைச்சர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-inform-measures-taken-for-express-darshan-at-the-tiruvannamalai-arunachaleswarar-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-inform-measures-taken-for-express-darshan-at-the-tiruvannamalai-arunachaleswarar-temple#comments</comments><guid isPermaLink="false">67cf9966-5379-4c7f-a434-b7f059bce6d5</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:45:49 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:45:49.897Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,Tiruvannamalai temple,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/um6dcgsl/ministerramesh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷிடம் பக்தர்கள் விரைவு தரிசனம் குறித்து கோரிக்கை வைத்த காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷிடம் பக்தர்கள் விரைவு தரிசனம் குறித்து கோரிக்கை வைத்த காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/um6dcgsl/ministerramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முழுமையாக கோவில் நடைமுறைகள், தரிசனம் குறித்து ஆய்வு செய்த பிறகு விரைவு தரிசனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்</a> ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது. விடுமுறை தினமான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. </p><h2><strong>அமைச்சர் ஆய்வு</strong></h2><p>இந்த நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-ரமேஷ்">அமைச்சர் ரமேஷ்</a> இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  திடீர் ஆய்வு செய்தார். அப்போது ராஜகோபுரம் முன்பு, கோவிலின் உட்புறம் மற்றும் கோசாலை ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அங்கிருந்த பக்தர்களிடம் கோவிலில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.  </p><p>அப்போது பக்தர்கள் நாங்கள் கிரிவல நாட்களில் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வருகிறோம். அதுபோன்ற நாட்களில் கோவிலில் விரைவு தரிசனம் செய்ய முடியவில்லை. எளிதில் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.</p><p>அதற்கு பதிலளித்த அமைச்சர் முதல் முறையாக ஆய்வுக்காக வந்திருக்கிறேன். முழுமையாக கோவில் நடைமுறைகள், தரிசனம் குறித்து ஆய்வு செய்த பிறகு விரைவு தரிசனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது  இணை ஆணையர் தரணிதரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;சர்தார் 2&apos; படத்தின் First Single  &apos;மயில்வீரா&apos; பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-first-single-mayilveera-song-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-first-single-mayilveera-song-released#comments</comments><guid isPermaLink="false">33d8d9f6-9d17-44e5-b1cd-0b215627dc79</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:41:32 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:41:32.286Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>P.S Mithran,Karthi,கார்த்தி,Sardar 2,சர்தார் 2,Mayil Veera,மயில் வீரா,Sam CS 100,Sardar 2 First Single</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/mvmesyx5/Sardar-2-First-Single" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sardar 2 First Single]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/mvmesyx5/Sardar-2-First-Single?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">கார்த்தி </a>இரட்டை வேடத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'சர்தார்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2">சர்தார் 2</a>' படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p><p>இந்நிலையில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.</p><p>இப்படத்தின் முதல் பாடலான 'மயில்வீரா' தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2><strong>சாம் சி.எஸ்-இன் 100-வது மியூசிகல் மைல்கல்!</strong></h2><p>இப்படத்திற்கு இசையமைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/sam-cs">சாம் சி.எஸ் </a>இசையமைத்துள்ளார். </p><p>அவரது இசைப் பயணத்தில் 'சர்தார் 2' 100-வது திரைப்படம் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை எட்டியிருப்பதால், இப்படத்தின் பாடல்கள் மீது ரசிகர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த முதல் பாடல் அமைந்துள்ளது.</p><h2><strong>'முருகன்' பாடல்!</strong></h2><p>'<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">சர்தார்</a>' முதல் பாகத்தில் இடம்பெற்ற 'ஏறுமயிலேறி' பாடலைப் போல, இந்த இரண்டாம் பாகத்தின் முதல் பாடலும் முருகப் பெருமானை மையமாகக் கொண்ட ஒரு பக்தி மற்றும் ஃபோக் ரக பாடலாக உருவாகியுள்ளது. </p><p>முகேஷ், அஃப்ரோஸ் மற்றும் வஹீசன் ராசையா ஆகியோர் பாடியுள்ள இப்பாடலை, நவீன ஹிப்-ஹாப் பீட்களுடன் கலந்து செம மாஸான ஆன்மீக அலையாக சாம் சி.எஸ் கொடுத்துள்ளார். </p><p>இப்பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் முருகர் பக்தர்கள் அனைவருக்கும் விரும்பும் பாடலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>நட்சத்திர பட்டாளம்</strong></h2><p>பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து <a href="https://www.maalaimalar.com/topic/sj-surya">எஸ்.ஜே.சூர்யா</a> மிரட்டலான வில்லனாக நடிக்கிறார். </p><p>மேலும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/qWeYnS1EpBE"></iframe></figure><p>மேலும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">நடிகர் கார்த்தியின்</a> அதிரடித் திரைப்படமான 'சர்தார் 2' வருகிற செப்டம்பர் 10, அன்று விநாயகர் சதுர்த்தி வாரத்தை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.</p><p>இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய பொருளாதார தடை: ஈரானுடனான எங்கள் வர்த்தகத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது-
சீனா எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/china-warns-us-over-iran-trade-new-economic-sanctions-row</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-warns-us-over-iran-trade-new-economic-sanctions-row#comments</comments><guid isPermaLink="false">054b1706-14df-49ab-9b80-13b4800ccb3d</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:32:54 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:32:54.690Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,அமெரிக்கா,America,ஈரான்,Iran,புதிய பொருளாதார தடை,Economic ban</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ggzbb8tc/li-jian.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chinese Foreign Ministry Spokesperson Lin Jian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ggzbb8tc/li-jian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதிய பொருளாதார தடை விவகாரத்தில் ஈரானுடனான எங்கள் வர்த்தகத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்க போர் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் அந்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்கும் வகையில் புதிய பொருளாதார தடைகளை நேற்று விதித்தது. </p><p>ஈரானின் அனைத்து வருவாய் ஆதாரங்களையும் தடை செய்யும் ஆபரேசன் பொருளாதார புறக்கணிப்பு என்ற நடவடிக்கையை அறிவித்துள்ள அமெரிக்கா, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள், நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தது. மற்ற நாடுகளிடம் இருந்து ஈரானை தனிமைப்படுத்த இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டு உள்ளது.</p><p>இந்த நிலையில் ஈரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ள சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. </p><p>இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது:-</p><p>ஈரானுடனான சீனாவின் ஒத்துழைப்பு சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். சீனாவின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம். அமெரிக்காவின் இந்த தடைகள் சட்டவிரோதமான மற்றும் ஒருதலைப்பட்சமானது. </p><p>இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு சர்வதேச சட்டத்தில் எந்த அடிப்படையோ அல்லது ஐ.நா. பாதுகாப்பு சபையின் அங்கீகாரமோ இல்லை. இந்த தடைகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது. பொருளாதாரப் போர் மற்றும் அதிகபட்ச அழுத்தம் ஆகியவை எந்தத் தீர்வையும் அளிக்காது. </p><p>அவை பதற்றத்தை அதிகரிக்கவும், உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி ஒழுங்கைச் சீர்குலைக்கவும், மற்ற அனைவரின் நலன்க ளையும் பாதிக்கவுமே பயன்படும். எனவே  பேச்சுவார்த்தை மட்டுமே முன்னேறுவதற்கான ஒரே சரியான வழியாக இருக்கும். சீனா-ஈரான் இடையேயான ஒத்துழைப்பு தடை செய்யப்படவோ அல்லது பலவீனப்படுத்தப்படவோ கூடாது. ஈரானுடனான சீனாவின் வர்த்தகத்தில் அமெரிக்கா தலையிட கூடாது. </p><p>அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளுக்கு எதிராகப் பதிலடி நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இதற்கிடையே  ஈரானுடன் வர்த்தகம் செய்த நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதில் 4 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும் 3 இந்தியர்களுக்கும் அமெரிக்கா தடை விதித்து இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>கோவில் பிரசாதங்களில் &apos;பச்சை கற்பூரம்&apos; சேர்ப்பது ஏன் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/spirituality/do-you-know-why-green-camphor-is-added-to-temple-prasadam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/do-you-know-why-green-camphor-is-added-to-temple-prasadam#comments</comments><guid isPermaLink="false">4c9a9ecb-1c39-4467-ad3d-293748a66b83</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:29:59 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:29:59.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,green camphor,பச்சை கற்பூரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/8ns3o3k4/greencamphor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ green camphor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/8ns3o3k4/greencamphor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பிரசாதங்கள்</h2><p>ஆலயங்களில் இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதங்கள் தனித்துவமான சுவையும், நறுமணமும் கொண்டவை. தீர்த்தம், லட்டு, சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்களில் தெய்வீக உணர்வை ஏற்படுத்தும் பச்சை கற்பூரம் சிறிதளவு சேர்க்கப்படுகின்றன. இதற்கு பின்னால் இருக்கும் ஆன்மிக நம்பிக்கையையும், அறிவியலையும் அறிந்து கொள்வோம்.</p> <h2>கற்பூர மரம்</h2><p>கற்பூர மரத்திலிருந்து பெறப்படும் இந்த பச்சை கற்பூரம், பொதுவாக உணவுப் பயன்பாட்டிற்கான நறுமணப் பொருளாகும். பெருமாளுக்கு உகந்ததாகவும், தூய்மை மற்றும் மங்களத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இது, பண்டைய காலத்திலிருந்தே சில இனிப்பு வகைகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தப்பட்டு, பிரசாதங்களுக்குத் தனித்துவமான மணத்தையும் சுவையையும் தருகிறது. </p> <h2>பச்சை கற்பூரம்</h2><p>இறை வழிபாட்டின்போது, இதன் நறுமணம் மனதிற்குப் புத்துணர்ச்சியை அளித்து, மனதை ஒருமுகப்படுத்தி நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு மகாலட்சுமியின் அருளை ஈர்க்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், பணத்தை ஈர்க்கும் குணம் கொண்டதால், வீட்டில் நடக்கும் அனைத்து சுப காரியங்களிலும் இது முக்கிய இடம் பெறுகிறது.</p> <h2>செரிமான கோளாறு</h2><p>மருத்துவ ரீதியாக, மிகக் குறைந்த அளவில் சேர்க்கப்படும் பச்சை கற்பூரம் சிறந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு பிரசாதம் கெட்டுப்போகாமல் நீண்ட நேரம் பாதுகாக்கிறது. மேலும், இது செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து பசியைத் தூண்டுவதோடு, நெஞ்சுச்சளி, தொண்டைக்கட்டு மற்றும் சுவாசப் பிரச்சினைகளுக்கும் நல்ல நிவாரணம் அளிக்கிறது.</p> <h2>ஆன்மிக பழக்கம்</h2><p>இயற்கை நமக்கு அளித்த அரிய மூலிகையான பச்சை கற்பூரத்தை பிரசாதத்தில் சேர்ப்பது, வெறுமனே சுவைக்காக மட்டுமல்ல; பக்தர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் பேணுவதற்காகத் தான். நமது முன்னோர்களின் இந்த ஆன்மிகப் பழக்கம், அறிவியல் பூர்வமான ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும் சிறந்த வழியாகும்.</p> ]]></content:encoded></item><item><title>விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு திட்டமா? - தினகரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-8</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-8#comments</comments><guid isPermaLink="false">30885360-eded-44e2-a432-6a575820ba87</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:17:07 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:17:07.948Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,இலவச வேட்டி சேலை,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/s7le0edi/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/s7le0edi/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2><strong>கேள்விக்குறி</strong></h2><p>வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்திலேயே வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்காக நெசவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் தருவாயிலும் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், அத்தொழிலையே நம்பியிருக்கும் சுமார் 3 லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>கூடுதல் தரம் கொண்ட புதிய ரக நூலில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் வகையில், கடந்த ஜூலை மாதமே முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான உற்பத்தியைத் தொடங்குவதற்கு நெசவாளர்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2><strong>சந்தேகம்</strong></h2><p>உற்பத்தி, நெசவு, தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோகம் என குறுகிய காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்காமல் அரசு காட்டும் அலட்சியம், பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்திலும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருக்கிறதா? அல்லது ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வெளிமாநில நிறுவனங்களுக்கு வழங்கியதைப் போல, இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் பயனாளிகளைச் சென்றடையும் வகையிலும், சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>நாளை 2-வது டெஸ்ட்  தொடக்கம்: இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா?</title><link>https://www.maalaimalar.com/sports/will-pakistan-strike-back-in-second-test-against-england</link><comments>https://www.maalaimalar.com/sports/will-pakistan-strike-back-in-second-test-against-england#comments</comments><guid isPermaLink="false">dadc1b2f-f9e5-442c-a105-1c69d34f9a0d</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:00:48 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:00:48.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,England Team,இங்கிலாந்து அணி,2nd Test match,2வது டெஸ்ட் போட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/bdufebsl/Eng.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ England Vs Pakistan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/bdufebsl/Eng.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் அணி முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 103 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><h2>2-வது டெஸ்ட்</h2><p>இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (27-ந்தேதி) தொடங்குகிறது. ஜோரூட் தலைமையிலான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%20" rel="nofollow">இங்கிலாந்து அணி </a>இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் வேட்கையில் உள்ளது.</p><p>பாகிஸ்தான் அணி முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்துவிடும். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>பாபர் ஆசம்</h2><p>பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் ஆசம் கைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆடவில்லை. 2-வது டெஸ்டிலும் அவர் ஆடுவது சந்தேகமே. </p><p>இன்றைய வலைப் பயிற்சியின்போது அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பொறுத்து விளையாடுவாரா? என்பது தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/islamabad-hospital-blaze-claims-15-babies</link><comments>https://www.maalaimalar.com/news/world/islamabad-hospital-blaze-claims-15-babies#comments</comments><guid isPermaLink="false">036d6f4c-3b44-469c-9e9c-f143da8aaee8</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:59:44 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:59:44.379Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,islamabad,இஸ்லாமாபாத்,Hospital fire,PIMS Medical College,NewbornsKilled,பச்சிளம் குழந்தைகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/gneq09zf/Hospital-Fire" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hospital Fire]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/gneq09zf/Hospital-Fire?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">பாகிஸ்தான் </a>தலைநகர் இஸ்லாமாபாத்தில் அரசு பொது மருத்துவமனையான 'பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகம்' இயங்கி வருகிறது. </p><p>இந்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள மகப்பேறு பிரிவில் உள்ள நர்சரியில் 16 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்தன.</p><h2><strong>தீ விபத்து</strong></h2><p>இந்த நிலையில், இந்த காலை 7 மணியளவில் மகப்பேறு பிரிவில் திடீரென பயங்கர<a href="https://www.maalaimalar.com/topic/fire-accident"> தீ விபத்து</a> ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ஏ.சி -யின் கம்ப்ரசர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததே இந்த விபத்துக்குக் கரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p> கம்ப்ரசர் வெடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே தீ மளமளவென மகப்பேறு பிரிவு முழுவதும் வேகமாகப் பரவியது.</p><h2><strong>15 </strong>குழந்தைகள் <strong>பலி</strong></h2><p>புகையும் நெருப்பும் சூழந்ததால் வார்டில் இருந்த பச்சிளம் குழந்தைகள் மூச்சுத்திணறி அலறின. இந்த கோர விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. </p><p>நர்சரியில் இருந்த 16 குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டது.</p><h2><strong>விரைந்து வந்த மீட்புக்குழுவினர்</strong></h2><p>தீ விபத்து குறித்து தகவல் அறிந்த உடனே தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.</p><p>6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 ஆம்புலன்ஸ்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தற்போது அந்தப் பகுதியில் வெப்பத்தைத் தணிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.</p><h2><strong>விசாரணைக் குழு </strong></h2><p>இந்த கொடூர விபத்து குறித்து விசாரணை நடத்த கூடுதல் துணை ஆணையர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. </p><p>மருத்துவமனையின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/fire-accident">தீ விபத்து</a> நடந்ததற்கான முழு பின்னணி குறித்து போலீசார் தரப்பில் விசாரணை நடத்தும் என்று மேல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வெங்காயம் விலை கிலோ ரூ.100 வரை அதிகரிக்கும்- வியாபாரிகள் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onion-prices-will-rise-up-to-rs-100-per-kilogram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onion-prices-will-rise-up-to-rs-100-per-kilogram#comments</comments><guid isPermaLink="false">c8f01b67-4b19-4f9a-8e76-17598e674fd5</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:48:37 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:48:37.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Onion,வெங்காயம்,onion price,வெங்காயம் விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/10om71eu/onion.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ வெங்காயம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெங்காயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/10om71eu/onion.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.</strong></em></p><p>சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/வெங்காயம்-விலை">வெங்காயம்</a> விற்பனைக்கு வருகிறது. தினமும் 55-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு குவிந்து வரும் வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாகவே படிப்படியாக குறைந்து வருகிறது.</p><h2><strong>கடும் தட்டுப்பாடு</strong></h2><p>மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் உற்பத்தி பாதிப்பு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.</p><p>வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கையிருப்பில் உள்ள வெங்காயத்தை முதல் கட்டமாக சென்னை, மதுரை, டெல்லி, கவுகாத்தி, எர்ணாகுளம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளது. மேலும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 45 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம், தற்போது கிலோவுக்கு ரூ.20 வரை அதிகரித்து ஒரு கிலோ ரூ55-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><h2><strong>ரூ.100 வரை அதிகரிக்கும்</strong></h2><p>அதேபோல் சின்ன வெங்காயம் விலையும் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.80 வரையிலும், வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.110 வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.</p><p>தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.</p><p>இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-</p><p>சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை 71 சதவீதம் உயர்ந்துள்ளது. எல் நினோ வானிலை, மகாராஷ்டிராவில் பெய்த பருவம் தவறிய மழை மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வினியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு காரணம்.</p><p>பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும், பற்றாக்குறை தொடருவதாலும்,  ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை கூட உயரக் கூடும். வழக்கமாக, பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் மாநில அரசு, தோட்டக்கலை மற்றும் உணவு குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகள் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது. இப்போதும் தமிழக அரசு இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>பிரிவினைவாதத்தை அடிப்படையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வளர்வது கவலை அளிக்கிறது - நியூயார்க் மேயர்</title><link>https://www.maalaimalar.com/news/world/rss-movement-based-on-separatism-growing-is-worrying-new-york-mayor</link><comments>https://www.maalaimalar.com/news/world/rss-movement-based-on-separatism-growing-is-worrying-new-york-mayor#comments</comments><guid isPermaLink="false">0c3b063c-6be0-44e4-8e17-7af41fd7d9ef</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:46:26 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:46:26.848Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mohan Bhagwat,RSS,மோகன் பகவத்,ஆர்.எஸ்.எஸ்,ஜோஹ்ரான் மம்தானி,Zohran Mamdani</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nkiing7c/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mamdani - Mohan Bhagwat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nkiing7c/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மோகன் பகவத்தின் அமெரிக்க நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் மம்தானி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.</p><p>அமெரிக்காவில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D">மோகன் பகவத்</a> கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு, தாம் ஆதரவளிக்கவில்லை என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">நியூயார்க் நகர மேயர்</a> ஜோஹ்ரன் மம்தானி கூறியுள்ளார். </p><p>அதேவேளையில் அந்த தனியார் கூட்டத்தை தடுப்பதற்கு நகர நிர்வாகத்திற்கு சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>நியூயார்க்கில் கூட்டம்</strong></h3><p>நியூயார்க்கில் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) அன்று, புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தை சேர்ந்த சுமார் 5,000 உறுப்பினர்கள் மத்தியில் மோகன் பகவத் உரையாற்ற உள்ளார்.</p><p>அவரது அமெரிக்க பயணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா உலகளாவிய மக்களை தொடர்பு கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற உள்ளது.</p><h3><strong>மம்தானி பூர்வீகம்</strong></h3><p>நியூயார்க் மேயரான ஜோஹ்ரன் மம்தானியின் பெற்றோர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களாக உள்ளனர். மம்தானியின் தந்தையான முகமது மம்தானி மும்பையில் பிறந்தவராகவும், அவரின் தாய் மீரா நாயர் ஒடிசாவில் பிறந்தவராகவும் அறியப்படுகிறார்கள்.</p><p>இந்த நிலையில் மோகன் பகவத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து நியூயார்க் மேயர் மம்தானி கூறுகையில், தான் இந்திய-அமெரிக்கராக மட்டுமல்லாமல், நிறம், இனம், மதம், நம்பிக்கை அல்லது பூர்வீகம் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கு சொந்தமானவர்களாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><h3><strong>எதிர்ப்பு தெரிவித்த மம்தானி</strong></h3><p>இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் பேரணியை ஆதரிக்கவில்லை. ஆனால் ஒரு தனியார் நிகழ்வை ரத்து செய்ய நகருக்கு அதிகாரம் உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.</p><p>நமது நகர வரலாற்றில் முதல் இந்திய-அமெரிக்க மேயராக நான் இங்கு நிற்கிறேன். மேலும் என் தாயாரின் குடும்பத்தினர் அனைவரும் இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.</p><p>எனது குடும்பத்தினர் எனக்கு கற்பித்த இந்தியா பன்முகத்தன்மை கொண்ட சமூகமாகவும், இந்தியாவைச் சேர்ந்த ஒவ்வொரு தனிமனிதரும் தங்களுக்கு இதில் உரிமையுண்டு என்று உணரும் வகையிலான மதச்சார்பற்ற குடியரசாக திகழும் ஒரு நாடாகவே இருந்தன.</p><p>எந்தவொரு நாட்டையும் விலக்கி வைக்கும் அல்லது பிரிவினைவாத கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கம் வளர்ந்து வருவதைக் காண்பது மிகுந்த கவலையளிக்கிறது.</p><p>எனவே, ஒரு இந்திய-அமெரிக்கராக மட்டுமல்லாமல், நிறம், இனம், மதம், நம்பிக்கை அல்லது பூர்வீகம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனும் எனக்கு சொந்தமானவர் என்று ஆழமாக நம்பும் மனிதராக, இந்த இயக்கத்தை நான் மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.</p><h3><strong>அமைப்புகள் கோரிக்கை</strong></h3><p>இந்த நிலையில் அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்ட இந்த நிகழ்வு, பல்வேறு மத நல்லிணக்க மற்றும் குடிமை உரிமைகள் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.</p><p>மனித உரிமைகளுக்கான இந்துக்கள், இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் மற்றும் நியூயார்க்கின் மத நல்லிணக்க மையம் உள்ளிட்ட குழுக்கள், நியூயார்க் நகர மன்றத்திற்கு வெளியே செய்தியாளர் சந்திப்பை நடத்தி அந்த நிகழ்வை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>