<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 18 Sep 2026 04:20:33 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 18 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026#comments</comments><guid isPermaLink="false">f7bc1909-9f6e-45cd-ab52-a2e557cf3a39</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:18:43.542Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/womens-cricket-india-japan-quarterfinal-today" rel="nofollow">பெண்கள் கிரிக்கெட்: கால் இறுதியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்</a></p><p>* போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் நேரடியாக கால் இறுதியில் கால் பதித்தன.</p><p>*  அரை இறுதியில் இந்தியா-ஜப்பான் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/48-dead-from-poisonous-alcohol-in-nigeria" rel="nofollow">நைஜீரியாவில் விஷச்சாராயம் குடித்த 48 பேர் உயிரிழப்பு</a></p><p>* ஒண்டோ மாகாணத்தில் ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.</p><p>* விஷசாராயம் காய்ச்சிய முக்கிய நபர் உள்பட 15 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/amid-war-russia-parliament-election-begins-today" rel="nofollow">போர் சூழலுக்கு இடையே.. ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடக்கம்</a></p><p>* உக்ரைன் உடனான போரில் ரஷியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. </p><p>* புதின் தனது அதிகார பலத்தால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly">சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்</a></p><p>* சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>* தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused">அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை - மாணவர் பாரதிதாசன் விளக்கம்</a></p><p>* 2-ம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர் கூறுவது தவறானது.</p><p>* ஆராய்ச்சி செலவுகளுக்கான பில் அனைத்தும் ஆக.26-ந்தேதியே அனுப்பிவிட்டேன்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: கால் இறுதியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/womens-cricket-india-japan-quarterfinal-today</link><comments>https://www.maalaimalar.com/sports/womens-cricket-india-japan-quarterfinal-today#comments</comments><guid isPermaLink="false">ecb3848f-931e-42cb-bdc7-953d7295f969</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:03:59 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:03:59.079Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,ஜப்பான்,பெண்கள் கிரிக்கெட் போட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/xhn8lk7b/IND-vs-JPN.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND vs JPN]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/xhn8lk7b/IND-vs-JPN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில் வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இன்று நடைபெறும் கால் இறுதியில் இந்தியா- ஜப்பான் மோதுகின்றன.</p><h2>பெண்கள் கிரிக்கெட்</h2><p>20-வது <a href="https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-bangladesh-womens-teams-enter-sf-in-asian-games" rel="nofollow">ஆசிய விளையாட்டு</a> போட்டி நாளை முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி வரை ஜப்பானின் அய்ச்சி, நகோயா நகரங்களில் நடக்கிறது.</p><p>இந்த போட்டியின் அதிகாரபூர்வ தொடக்க விழா (நாளை) நடக்கும் முன்பே கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன.</p><p>இதில் பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் நேரடியாக கால் இறுதியில் கால் பதித்தன.</p><p>ஆல்-ரவுண்டராக ஜொலித்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா. இதன் முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் நிகார் சுல்தானா தலைமையிலான வங்காளதேச அணி, சீனாவை சந்திக்க இருந்தது. ஆனால் ஆட்டம் தொடங்கும் முன்பே மழை பலமாக கொட்டியது. இதனால் 'டாஸ்' போடப்படாமலேயே இந்த ஆட்டம் கைவிடப்பட்டது.</p><p>இருப்பினும் தரவரிசை முன்னிலை அடிப்படையில் வங்காளதேச அணி (10-வது இடம்) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரை இறுதிக்கு முன்னேறியது.</p><p>தரவரிசையில் 36-வது இடத்தில் இருக்கும் சீனா களம் இறங்காமலேயே நடையை கட்டியது. வங்காளதேச அணி, அரை இறுதியில் இந்தியா-ஜப்பான் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.</p><p>மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, தாய்லாந்தை சந்தித்தது. 'டாஸ்' ஜெயித்த பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மழை பாதிப்பால் தாமதமாக தொடங்கியதால் போட்டி 11 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது.</p><h2>பாகிஸ்தான் வெற்றி</h2><p>முதலில் ஆடிய தாய்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நன்னாபத் கொஞ்சரோயென்காய் 49 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பாத்திமா சனா 2 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>தொடர்ந்து ஆடிய பாகிஸ்தானும் தட்டுத்தடுமாறியே வெற்றி பெற்றது. அந்த அணி 10.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. ஷவால் ஜுல்பிகர் 25 ரன்னும், கேப்டன் பாத்திமா சனா 21 ரன்னும் எடுத்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.</p><h2>இந்தியா-ஜப்பான் மோதல்</h2><p>இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, போட்டியை நடத்தும் ஜப்பானுடன் (காலை 10.30 மணி) மல்லுக்கட்டுகிறது.</p><p>கடந்த வாரம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு களம் காணும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறது. </p><p>பேட்டிங்கில் ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனாவும், பந்து வீச்சில் ஸ்ரீசரனி, தீப்தி ஷர்மா, நந்தினி ஷர்மாவும் நல்ல நிலையில் உள்ளனர். ஜப்பான் அணிக்கு உள்ளூர் சூழல் ஓரளவு அனுகூலமாக இருந்தாலும், பலம் வாய்ந்த இந்தியாவின் சவாலை சமாளிப்பது கடினம் தான்.</p><p>முன்னதாக நடக்கும் மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை-நூர் அரின்னா நாட்சயா தலைமையிலான மலேசியா அணிகள் (அதிகாலை 5.30 மணி) மோதுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>திருமண வரம் அருளும் புற்றுமாரியம்மன்</title><link>https://www.maalaimalar.com/spirituality/putru-mariyamman-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/putru-mariyamman-worship#comments</comments><guid isPermaLink="false">d063bba5-60e4-4c75-ab9b-a87a332991a9</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:43:06 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:43:06.818Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,திருமணம்,வழிபாடு,worship,marriage,Putru mariyamman,புற்றுமாரியம்மன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/248cxtoq/marriage.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Putru mariyamman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/248cxtoq/marriage.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ளது, இயற்கை எழில் கொஞ்சும் கிராமமான பு.முட்லூர். இங்கு சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புற்றுமாரியம்மன் திருக்கோவில் உள்ளது. மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து சமயத்தினரும் இங்கு வந்து வழிபடுவது இக்கோவிலின் சிறப்பாகும். </p><p>இக்கோவிலில் உள்ள புற்றில் நாகம் உள்ளது. கோவிலில் புற்றுக்கு முன்னால் புற்றுமாரியம்மன் அருள்பாலிக்கிறார்.</p> <h2>திருமண மாங்கல்ய கட்டு</h2><p>இக்கோவிலின் முன்னால் ஒரு நாகக்கன்னி கோவில் உள்ளது. இங்கு, திருமணத்தடை உள்ளவர்கள், நாக தோஷத்தால் திருமணமாகாமல் இருப்பவர்கள், நாகதேவதைக்கு 'திருமண மாங்கல்ய கட்டு என்ற பிரார்த்தனை நடத்துகின்றனர். மஞ்சள் கயிற்றில் ஒரு துண்டு மஞ்சளை கட்டி, அதற்கு குங்குமம் வைத்து, பூ சாற்றி, அதை புற்றுமாரியம்மன் மடியில் வைத்து பிரார்த்தனை செய்து, அந்த திருமாங்கல்யத்தை கொண்டுவந்து நாக தேவதையிடம் மனமுருகி வேண்டி கட்டி செல்கின்றனர்.</p> <p>இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. பின்னர் கோவிலுக்கு தம்பதியாக வந்து, நாக தேவதை மீது கட்டியிருந்த திருமாங்கல்யத்தை பூஜை செய்து கழட்டி எடுக்க வேண்டும். எப்பேர்ப்பட்ட திருமணத் தடைகளும் அம்மன் அருளால் விலகி திருமணம் நடைபெறுவதாக பக்தர்கள் மெய்சிலிர்க்க கூறுகின்றனர்.</p> <h2>வழித்துணையாக வரும் புற்றுமாரியம்மன்</h2><p>வெளிநாடு செல்பவர்கள், இங்குள்ள புற்றிலிருந்து மண் எடுத்து அதை புற்றுமாரியம்மன் மடியில் வைத்து பிரார்த்தனை செய்து தன்னுடன் எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்பியவுடன், கோவிலுக்கு வந்து அந்த புற்று மணலை புற்று மாரியம்மனிடம் சமர்ப்பித்து விட்டு, அன்னையின் அருளால் தாங்கள் நல்லபடியாக தாயகம் திரும்பி விட்டோம் என்று நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.</p> <p>அதேபோல் வாகனங்களில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வோர், இந்த ஆலயத்தின் முன் வாகனத்தை நிறுத்தி புற்றுமாரியம்மனை வணங்கிவிட்டு புற்று மணலை எடுத்து தங்கள் வாகனத்தில் வைத்துக்கொண்டு பயணம் மேற்கொள்கின்றனர். இதன்மூலம், தங்களுடன் வழித்துணையாக அம்மனே வருவதாக நினைத்து மனமுருகி செல்கின்றனர். மீண்டும் வீடு திரும்பியவுடன் அந்த மணலை இங்கு கொண்டு வந்து, அம்மனிடம் தாங்கள் பத்திரமாக வீடு திரும்பிவிட்டோம் என்று கூறி அதை வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இந்த வழிபாட்டை இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, வெளியூரிலிருந்து வாகனங்களில் வரும் பக்தர்களும் மேற்கொள்கின்றனர்.</p> <h2>பக்தர்கள் வீட்டிற்கு வரும் அன்னை</h2><p>ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் வெள்ளியன்று புற்றுமாரியம்மனுக்கு வெகுவிமரிசையாக ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இந்த ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்கள் அதிகளவில் கலந்துகொண்டு சகல விதமான பிரச்சினைகளுக்கும் பிரார்த்திக்கின்றனர்.</p> <p>மேலும் அன்றைய தினம், நாள் முழுக்க விரதம் இருந்து 'ஓம் சக்தி பராசக்தி' என்ற அம்பிகையின் திருநாமத்தை மனதில் வேண்டி, மாலையில் இக்கோவிலுக்கு வந்து ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினால் அன்று இரவு தங்கள் வீட்டில் அம்மனின் கொலுசு சத்தம் கேட்குமாம். இதன்மூலம், அம்மனை மனமுருக வேண்டி விரதம் இருக்கும் பக்தர்களின் வீட்டிற்கு அம்மனே நேரில் வந்து அருள்புரிவதாக கூறுகின்றனர்.</p> <p>இங்கு பேச்சியம்மனுக்கும் தனிச்சன்னிதி உள்ளது. இந்த ஆலயத்தில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழா நடைபெறும். இதில் வெளிமாவட்ட மக்களும் கலந்து கொள்கின்றனர். அம்மை நோயால் அவதிப்படுபவர்கள், இந்த அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை உடலில் தெளித்து, சிறிது உட்கொண்டால் அம்மை விரைவாக இறங்கி விடும் என்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் நம்பிக்கையோடு சொல்கின்றனர்.</p> <p>கோவில், காலை 6.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.</p><h2>அமைவிடம்</h2><p>சிதம்பரம் - கடலூர் பைபாஸ் சாலையில் சிதம்பரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பு.முட்லூரில் இக்கோவில் அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கியா கேரன்ஸ் கிளாவிஸ் புது வேரியண்ட்கள் அறிமுகம் - விலை, முழு விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/kia-carens-clavis-gets-two-new-automatic-variants</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/kia-carens-clavis-gets-two-new-automatic-variants#comments</comments><guid isPermaLink="false">306e534f-f28f-4f49-b9ef-932cfadb29c5</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:43:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Kia India,கியா இந்தியா,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/odzznnts/Kia-Carens-Clavis.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kia Carens Clavis]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/odzznnts/Kia-Carens-Clavis.png?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/kia-india">கியா இந்தியா</a>, கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி மாடலில் இரண்டு புதிய என்ட்ரி லெவல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. </p><p>இந்த விரிவாக்கப்பட்ட சீரிசில், HTE (EX) மற்றும் HTE (O) டிரிம்களில் DCT உடன் கூடிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும், HTE (O) டிரிம்மில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின், 7-ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 158bhp பவர் மற்றும் 253Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. </p><p>டீசல் மாடலைத் தேர்வு செய்பவர்களுக்கு, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.5-லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 114bhp பவர், 250Nm டார்க் உற்பத்தி செய்கிறது. </p><h2>கியா கேரன்ஸ் கிளாவிஸ் சிறப்பு அம்சங்கள்:</h2><p>புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல்களில், மோஷன் சென்சார் கொண்ட ஸ்மார்ட் கீ, பட்டன் ஸ்டார்ட், டிரைவ் மோட்ஸ், EPB மற்றும் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.</p><h2>கியா கேரன்ஸ் கிளாவிஸ் ஆட்டோமேடிக் விலைகள்:</h2><p>கியா கேரன்ஸ் கிளாவிஸ் HTE O பெட்ரோல் - ரூ. 14.66 லட்சம்</p><p>கியா கேரன்ஸ் கிளாவிஸ் HTE EX பெட்ரோல்- ரூ. 15.21 லட்சம்</p><p>கியா கேரன்ஸ் கிளாவிஸ் HTE O டீசல்- ரூ. 15.81 லட்சம்</p><h2>அதிக தேர்வுகளை வழங்கும்:</h2><p>இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த கியா இந்தியாவின் விற்பனை பிரிவின் மூத்த துணை தலைவர் அதுல் சூட், “இந்திய வாடிக்கையாளர்கள் தங்களின் அன்றாடப் பயணங்களில் அதிக சௌகரியத்தையும் வசதியையும் விரும்புவதால், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் அவர்களுக்கு ஒரு முக்கியத் தேர்வாக மாறி வருகின்றன.</p><p>கேரன்ஸ் கிளாவிஸ் வேல்யூ டிரிம்களில் புதிய ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன்கள் இரண்டிலும் இந்த வசதியை ஒரு பரந்த வாடிக்கையாளர் தளத்திற்கு நாங்கள் கிடைக்கச் செய்கிறோம்.</p><p>இந்த விரிவாக்கம், மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், கியாவிடம் இருந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பிரீமியம் அனுபவம், நடைமுறைப் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத்தில் சமரசம் செய்துகொள்ளாமல், அதிக தேர்வுகளை வழங்கும் எங்களின் வாடிக்கையாளர் மைய அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது” என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கைமீறும் ஏ.ஐ. மாடல்கள்: தனக்குத்தானே கட்டளையிட்டு கொள்கின்றன - ஓபன்ஏஐ அதிர்ச்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/openai-flags-concerning-new-ai-behavior-vows-to-track-it-more-closely</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/openai-flags-concerning-new-ai-behavior-vows-to-track-it-more-closely#comments</comments><guid isPermaLink="false">67cc85e2-3775-4180-88ab-f4fdc5cec756</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:17:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:17:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஓபன்ஏஐ,OpenAI,AI,செயற்கை நுண்ணறிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/glqkmsjv/Open-AI.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ OpenAI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/glqkmsjv/Open-AI.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/artificial-intelligence">செயற்கை நுண்ணறிவு</a> (AI) பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஏ.ஐ. (AI) மாடல்களில் காணப்பட்ட "எதிர்பாராத அல்லது கவலைக்குரிய" செயல்பாடுகள் குறித்த ஆறு அறிக்கைகளை ஓபன்ஏஐ (OpenAI) வெளியிட்டுள்ளது.</p><p>"Misalignment" (அதாவது, மனிதர்களின் நோக்கங்களுக்கு அல்லது கட்டுப்பாடுகளுக்கு இணங்காமல் செயல்படுதல்) எனப்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், ஆராயவும் மற்றும் வெளிப்படுத்தவும் ஒரு புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதாக <a href="https://www.maalaimalar.com/topic/openai">ஓபன்ஏஐ</a> நிறுவனம் தெரிவித்தது. அங்கீகாரம் இன்றி செயல்படுதல், பிற ஏ.ஐ. மாடல்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் அல்லது கண்காணிப்பை தவிர்த்தல் போன்றவையும் இதில் அடங்கும்.</p><h2>ஏ.ஐ. வளர்ச்சி வேகத்தை குறைக்க வேண்டும்:</h2><p>பாதுகாப்பு கவலைகள் காரணமாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் வேகத்தை குறைக்க வேண்டும் என்று ஓபன்ஏஐ மற்றும் அந்த்ரோபிக் (Anthropic) நிறுவனங்களின் தலைவர்கள் வலியுறுத்தி வரும் சூழலில், ஓபன்ஏஐ-இன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>ஓபன்ஏஐ வெளியிட்ட புதிய நிகழ்வுகளில், வெளியிடப்படாத ஒரு ஆராய்ச்சி மாடல், தனது இயல்பான கட்டுப்பாடுகளை மீறுவதற்கான "jailbreak-போன்ற" (கட்டுப்பாடுகளை உடைக்கும்) வழிமுறைகளை தனது சொந்த குறிப்புகளில் சேர்த்துக்கொண்டது. அத்துடன், "பிற சாட்பாட்களை (chatbots) கட்டுப்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் அடையாளங்களில் இருந்து விடுபட வேண்டும்" என்றும் தனக்குத்தானே கட்டளையிட்டுக் கொண்டது.</p><h2>தனக்குத்தானே கட்டளையிட்டு கொண்டது:</h2><p>மற்றொரு நிகழ்வில், ஒரு AI "ஏஜென்ட்" ஒரு கேள்விக்கான பதிலை கண்டறிய கணினி குறியீட்டை பயன்படுத்தியது. ஆனால், மேற்கோள் காட்டுவதற்கு ஒரு இணையதள ஆதாரம் தேவைப்பட்டதால், பயனரின் அனுமதியின்றி ஒரு கோப்பை பொது இணையத்தில் பதிவேற்றியது.</p><p>'5.6-Sol' எனப்படும் AI மாடலை பயிற்றுவிக்கும்போது, ​​அது விடுபட்ட தரவுகளை தானே உருவாக்கிக்கொள்ளுமாறு தனக்குத்தானே கட்டளையிட்டு கொண்டது; மேலும், பொருந்தாத தகவல்களை மறைத்து வைக்குமாறு நினைவூட்டும் வகையில் ஒரு 'ஏஜென்ட்' செய்தியை எழுதியது.</p><p>இத்தகைய ஏமாற்றும் தன்மையிலான செயல்பாடுகளே, மனித கட்டுப்பாட்டில் இருந்து ஏ.ஐ. நழுவி செல்வது குறித்த சமீபத்திய கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால், இந்த விளைவு சில ஏ.ஐ. ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும் கிரே ஸ்வான் ஏ.ஐ. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான மேட் ஃப்ரெட்ரிக்சன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நைஜீரியாவில் விஷச்சாராயம் குடித்த 48 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/48-dead-from-poisonous-alcohol-in-nigeria</link><comments>https://www.maalaimalar.com/news/world/48-dead-from-poisonous-alcohol-in-nigeria#comments</comments><guid isPermaLink="false">51102185-6658-4e8f-889d-21423583ef18</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:14:58 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:14:58.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,dead,alcohol,Nigeria,விஷச்சாராயம்,Poisonous Liquor,நைஜீரியா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/h1vnu4pf/Nigeria2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nigeria ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/h1vnu4pf/Nigeria2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நைஜீரியாவில் விஷச்சாராயம் குடித்த 48 பேர் பலியாயினர். அதனை காய்ச்சிய 15 நபர்களை போலீசார் கைது செய்தனர்.</p><h2>மலிவு விலை சாராயம்</h2><p>ஆப்பிரிக்க நாடான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE" rel="nofollow">நைஜீரியா</a>வில் வறுமை மற்றும் பொருளாதார காரணங்களால், அரசு அங்கீகாரம் பெற்ற மதுபானங்களை வாங்க முடியாத நடுத்தர மற்றும் ஏழை மக்கள், உள்ளூர் அளவில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் மலிவு விலை சாராயங்களை வாங்கி அருந்துவது வழக்கமாக உள்ளது.</p><p>இத்தகைய சாராயங்களில் வீரியத்தை அதிகரிக்க ஆபத்தான வேதிப்பொருட்களைக் கலப்பதால், விஷச்சாராயமாக மாறி அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்தநிலையில், நைஜீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஒண்டோ மாகாணத்தில் ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.</p><h2>48 பேர் பலி</h2><p>ஆனால், அவர்கள் குடித்த சாராயத்தில் உயிருக்கு ஆபத்தான 'மெத்தனால்' என்ற நச்சு வேதிப்பொருள் கலக்கப்பட்டு அது விஷசாராயமாக மாறியது பின்னர் தெரியவந்தது.</p><p>அவர்கள் விஷசாராயம் அருந்திய சில மணி நேரங்களிலேயே பலருக்கு கடுமையான வயிற்று வலி, கண் பார்வை மங்குதல், மூச்சுத்திணறல் மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>நச்சு கலந்த இந்த விஷச்சாராயத்தைக் குடித்தவர்களில் இதுவரை 48 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>இது குறித்து அந்த மாகாண சுகாதாரத்துறை ஆணையர் பன்ஜி அஜாகா கூறுகையில், "இந்த விஷசாராயத்தைக் குடித்தவர்களின் சிறுநீரகம், மூளை மற்றும் கண்கள் மிக வேகமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு நேர்ந்துள்ளது. </p><p>இதுவரை மொத்தம் 182 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக நைஜீரிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி, விஷசாராயம் காய்ச்சிய முக்கிய நபர் உள்பட 15 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.</p><p>இந்த விஷச்சாராய மரணங்கள் நைஜீரியா நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">0b0d0b3e-b359-4366-8382-00d5703ac3b9</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:01:30 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:01:30.923Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,bills passed,ஆளுநர் அர்லேகர்,TN Governor Arlekar,மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u6hw2m5/tngovernor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Governor Arlekar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u6hw2m5/tngovernor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a> முழு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆக.5-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-2027-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டும், ஆக.6-ந்தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.</p> <p>அதன் பின்னர், பட்ஜெட் மீதான விவாதமும், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்றன. இந்த விவாதத்துக்கு அந்தந்த துறையை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். செப். 8-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.</p> <p>இந்த மசோதாக்களில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டத்தில், மாநிலத்தில் உலகத் தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதை எளிதாக்கும் வகையில், அவற்றுக்கான குறைந்தபட்ச நிலத் தேவையை 100 ஏக்கரில் இருந்து மண்டலங்களுக்கு ஏற்ப (சென்னையில் 12 ஏக்கர், பிற மாநகராட்சிகளில் 18 ஏக்கர், இதர பகுதிகளில் 25 ஏக்கர்) குறைக்கவும், நிரந்தர வைப்பு நிதியை ரூ. 50 கோடியில் இருந்து ரூ. 25 கோடியாக குறைக்கவும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.</p> <p>விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணிகள்) திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ம் சட்ட திருத்த மசோதா, வணிக எளிதாக்கல் திருத்த மசோதா, மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.</p> <p>மொத்தமாக நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>சட்டசபையில் அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளில் எதிர்ப்பை சந்தித்த நகர் ஊரமைப்பு மசோதா, எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது, டாஸ்மாக் மதுபானங்களுக்கு மதிப்பு கூட்டு வரி விதிக்கும் மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.</p> <p>தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p><p>ஒப்புதல் அளிக்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-started">மசோதாக்கள்</a>, தற்போது சட்டங்களாகிவிட்டன. அவை அனைத்தும் கடந்த செப். 15-ந்தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>போர் சூழலுக்கு இடையே.. ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/world/amid-war-russia-parliament-election-begins-today</link><comments>https://www.maalaimalar.com/news/world/amid-war-russia-parliament-election-begins-today#comments</comments><guid isPermaLink="false">336b0af4-c9f4-4468-9613-720f60c29909</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:33:34 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:33:34.778Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புதின்,ரஷியா போர்,Parliament election,நாடாளுமன்ற தேர்தல்,puthin,russia war</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wbou96fn/russia1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Russia president Puthin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wbou96fn/russia1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைன் உடனான போரில் ரஷியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உக்ரைனின் டிரோன் தாக்குதல்களால் ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டு, அந்நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலும், ரஷியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.</p><p>அதிபர் புதினின் 'யுனைடெட் ரஷியா' கட்சிக்கு இந்த தேர்தலில் 100 சதவீத வெற்றி வாய்ப்பு உறுதியாகி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.</p><p>ஏனெனில், போருக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரே எதிர்க்கட்சியான 'யப் லோகோ' கட்சியின் அங்கீகாரத்தை கோர்ட்டு மூலம் புதின் அரசு அதிரடியாக ரத்து செய்தது.</p><p>மேலும், போரை விமர்சித்த முக்கிய தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டும், நாட்டைவிட்டு விரட்டப்பட்டும் முடக்கப்பட்டுள்ளனர். </p><p>மக்களின் அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும், புதின் தனது அதிகார பலத்தால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை - மாணவர் பாரதிதாசன் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused#comments</comments><guid isPermaLink="false">4582109c-4843-4b2d-8fdd-f30d338593c6</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:27:30 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:27:30.267Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathidasan,பாரதிதாசன்,வன்னியரசு,minister vanni arasu,அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ir35sr2d/student1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Student Bharathidasan - Vanniyarasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ir35sr2d/student1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை என மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். </p><p>தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் 'வீடியோ' பதிவு வெளியிட்டார்.</p><p>மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தங்களது கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.</p> <p>இந்த விவகாரம் தொடர்பாக, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/with-tears-research-student-questions-government-udayanidhi-stalin-condemns">அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</a> திட்டத்தில் பயிலும் மாணவர் பாரதிதாசனின் காணொலி தகவலுக்கு தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சமூக நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,</p><p>* 2-ம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர் கூறுவது தவறானது.</p> <p>* வெளிநாட்டில் படிக்கும் மாணவருக்கு ஆண்டிற்கு கல்வி கட்டணம், வாழ்க்கை செலவினம், இதர செலவினங்கள் என ரூ.36 லட்சம் வழங்கப்படுகிறது.</p><p>* மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பில் பயிலும் மாணவர் பாரதிதாசனுக்கு முதலாமாண்டுக்கான ரூ.36 லட்சம் வழங்கப்பட்டது.</p> <p>* முதலாமாண்டு தொகைக்கான செலவின வவுச்சர்களை வழங்காமல், 2-ம் ஆண்டுக்கான தொகையை மாணவர் கோரினார்.</p><p>* இருப்பினும் மாணவர் பாரதிதாசனுக்கு ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்டதோடு, இதர செலவினங்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டது.</p> <p>* 20-8-2026 அன்று ஏற்கனவே மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் இதுவரையில் சரியான விளக்கம் இல்லை.</p><p>* மேலும், மாணவர் பயிலும் மலேசிய தேசிய பல்கலை. பதிவாளரிடம் விளக்கம் கேட்டு நேற்று (17-9-2026) இ-மெயில் அனுப்பப்பட்டது.</p> <p>* பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கப்பெற்றவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.</p><p>* மேற்படி மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவுடன் மாணவர் காணொளி மூலம் உண்மைக்கு மாறான தகவல்கள் பதிவு செய்துள்ளார்.</p> <p>* வெளிநாடுகளில் பயின்று வரும் 181 மாணக்கர்களில், பாரதிதாசன் தவிர வேறு யாரிடமும் இருந்து புகார்கள் இல்லை.</p><p>* மாணவரது காணொளியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதோடு, கல்வி திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>இந்நிலையில், அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை என மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,</p><p>* ரூ.37 லட்சத்திற்கான பில் அனுப்பினேன், ரூ.36 லட்சம் உதவித்தொகை தந்தார்கள். பில் அனுப்பவில்லை என மீண்டும் மீண்டும் கட்டுக்கதை கட்டுகிறார்கள்.</p> <p>* ஆராய்ச்சி செலவுகளுக்கான பில் அனைத்தும் ஆக.26-ந்தேதியே அனுப்பிவிட்டேன்.</p><p>திட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னியரசு </a>புகார் கூறியிருந்த நிலையில் மாணவர் விளக்கம் அளித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 செப்டம்பர் 2026: கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-18-september-2026-kallalagar-temple-sundaravalli-thayar-purappadu</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-18-september-2026-kallalagar-temple-sundaravalli-thayar-purappadu#comments</comments><guid isPermaLink="false">f8a2f396-9dec-4314-b572-dbb0885b029b</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/26/23756138-perumal.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perumal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/26/23756138-perumal.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, புரட்டாசி-1 (வெள்ளிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி : சப்தமி நண்பகல் 1.54 மணி வரை பிறகு அஷ்டமி</p><p>நட்சத்திரம் : கேட்டை நள்ளிரவு 12.15 மணி வரை பிறகு மூலம்</p><p>யோகம் : மரண / அமிர்தயோகம்</p> <p>ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதியுலா</h2><p>தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம் இரவு சுவாமி கருட வாகனத்தில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் காலை கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு சுவாமி சர்வ பூபால வாகனத்திலும் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதியுலா. நாட்டரசன்கோட்டை குணசீலம் கோவில்களில் ஸ்ரீ நம்பெருமான் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.</p> <p>ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமணருக்கு திருமஞ்சனம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - இன்பம்</p><p>ரிஷபம் - பணிவு</p><p>மிதுனம் - பரிவு</p><p>கடகம் - பாசம்</p><p>சிம்மம் - ஆதரவு</p><p>கன்னி - ஆக்கம்</p> <p>துலாம் - அன்பு</p><p>விருச்சிகம் - வெற்றி</p><p>தனுசு - போட்டி</p><p>மகரம் - முயற்சி</p><p>கும்பம் - ஈகை</p><p>மீனம் - பயிற்சி</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 18.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள்...</title><link>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-44</link><comments>https://www.maalaimalar.com/Today-Transit/today-rasi-palan-in-tamil-44#comments</comments><guid isPermaLink="false">ab6142b0-244d-4667-8b8e-ce21adf84321</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:27:57 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:27:57.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசி பலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/01/19417289-rasipalan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/01/19417289-rasipalan.webp?w=280" width="280"></media:thumbnail><category>இன்றைய ராசி பலன்கள்</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வி.ஐ.பி.க்களை விரோதித்துக் கொள்ளா தீர்கள். எதையும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாது.</p><h2>ரிஷபம்</h2><p>யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் புதியவர்களை நம்பி செயல்பட வேண்டாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கவனம் தேவை.</p><h2>மிதுனம்</h2><p>பிரச்சினையிலிருந்து விடுபடும் நாள். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். தொகை வரவு திருப்தி தரும்.</p><h2>கடகம்</h2><p>புகழ் கூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சியுண்டு. தொல்லை தந்தவர்கள் விலகுவர். இடம், வாங்கும் முயற்சி கைகூடும்.</p><h2>சிம்மம்</h2><p>நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். சேமிப்புகள் உயரும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும்.</p><h2>கன்னி</h2><p>மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். சிக்கனத்தைக் கடைப்பிடித்துச் சிறப்படைவீர்கள். கடன்சுமை குறைய எடுத்த புதுமுயற்சி வெற்றி தரும்.</p><h2>துலாம்</h2><p>உறவினர்கள் ஒத்துழைப்புச் செய்யும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். வருமானம் திருப்தியளிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.</p><h2>விருச்சிகம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள், வளர்ச்சிக்கு வழிகாட்டிய வர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். விண்ணப்பித்த வேலை கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள்.</p><h2>தனுசு</h2><p>ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அண்ணன் தம்பிகளின் ஆதரவு கிடைக் கும். பொருளாதார நெருக்கடி அகலும். சுபவிரயங்களைச் செய்வது நல்லது.</p><h2>மகரம்</h2><p>நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.</p><h2>கும்பம்</h2><p>சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.</p><h2>மீனம்</h2><p>யோகமான நாள். பணவரவு உண்டு. பக்கபலமாக இருப்பவர்கள் பிரச்சினைகள் தீர வழிகாட்டுவர். உத்தியோ சுத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai-4</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai-4#comments</comments><guid isPermaLink="false">912f3b30-1634-4761-8702-7d12f5680fd6</guid><pubDate>Fri, 18 Sep 2026 01:09:42 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:09:42.991Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய விலை நிலவரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/vt447e6b/petrol-price.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ petrol, Diesel price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/vt447e6b/petrol-price.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் இன்றைய (18.09.2026 - வெள்ளிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத <a href="https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-shuts-down-pipeline-as-houthis-seize-island-opening-new-front-in-iran-war" rel="nofollow">கச்சா எண்ணெய்</a> தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>சிஎன்ஜி</h2><p>இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 104.70 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய எஃப்-16 போர் விமானம்</title><link>https://www.maalaimalar.com/news/world/us-f-16-fighter-jet-crashes-in-michigan-pilot-ejects</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-f-16-fighter-jet-crashes-in-michigan-pilot-ejects#comments</comments><guid isPermaLink="false">0572d8d7-88cd-417e-9caa-783abaa01647</guid><pubDate>Fri, 18 Sep 2026 00:57:55 +0000</pubDate><atom:updated>2026-09-18T00:57:55.968Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,போர் விமானம்,us,F-16 Fighter Jet</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/p6tq6vtj/Fighter-Jet-Crash.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fighter Jet Crash]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/p6tq6vtj/Fighter-Jet-Crash.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெக்சாஸை தளமாக கொண்ட <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானம் ஒன்று, மிச்சிகனில் நடந்த பயிற்சி நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து போர் விமானத்தில் இருந்த விமானி வெளியேற முடிந்ததாக, அந்த விமானத்திற்கு சொந்தமான பிரிவு தெரிவித்தது.</p><p>"149-ஆவது ஃபைட்டர் விங்கிற்கு ஒதுக்கப்பட்ட டெக்சாஸ் ஏர் நேஷனல் கார்டின் எஃப்-16 ஃபைட்டிங் ஃபால்கன் விமானம், டிராவர்ஸ் சிட்டி அருகே வழக்கமான பயிற்சி பணியின் போது விபத்துக்குள்ளானது," என்று அந்தப் பிரிவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2>விபத்து குறித்து தீவிர விசாரணை:</h2><p>"விமானி விமானத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று அது மேலும் விவரங்கள் அளிக்காமல் தெரிவித்தது.</p><p>மேலும், அந்த வடக்கு மாகாணத்தின் இரண்டு அமெரிக்க செனட்டர்களில் ஒருவரான கேரி பீட்டர்ஸ், பேசும் போது, "டிராவர்ஸ் சிட்டிக்கு அருகே நடந்த விமான விபத்து குறித்து நான் அறிந்திருக்கிறேன். இந்தச் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற நாங்கள் பணியாற்றி வருவதால், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்" என்றும் கூறினார்.</p><h2>விபத்துக்களத்தில் தீ மற்றும் கரும்புகை:</h2><p>விமானம் கீழே விழுந்த பிறகு, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சாட்சிகள் அடர்த்தியான கருப்புப் புகை, சிதறல்கள் மற்றும் வெடிப்புகளைக் கண்டதாக விவரித்தனர்.</p><p>விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நாதன் ஸ்மித், அந்த போர் விமானம் வழக்கத்திற்கு மாறாக தாழ்வாகவும் மெதுவாகவும் பறப்பது போல் தோன்றியதால், அதை பதிவு செய்ய தொடங்கியதாக ஏ.பி. செய்தி நிறுவனத்திடம் கூறினார்.</p><p>பின்னர் ஒரு பெரிய வெடிச்சத்தத்தைக் கேட்டதாகவும், அது விமானி வெளியேறிய சத்தம் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.</p><p>வெண்டி சோபெக், தானும் தன் கணவரும் ஒரு பெரிய மோதல் சத்தத்தைக் கேட்டதாகவும், பின்னர் பெரிய அளவிலான கருப்புப் புகையைக் கண்டதாகவும் கூறினார். அவரது கணவர், ஃப்ரெட் சோபெக், விபத்தில் சிக்காத ஒரு வீடு மற்றும் கேம்பர் வாகனத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் ஒரு பெரிய நெருப்புப் பந்தைக் கண்டதாகக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஹர்திக் பாண்டியா 10 ஓவர்கள் பந்துவீச இன்னும் தயாராகவில்லை - கவுதம் கம்பீர்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhir-says-hardik-pandya-not-ready-to-bowl-10-overs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhir-says-hardik-pandya-not-ready-to-bowl-10-overs#comments</comments><guid isPermaLink="false">c82f81cc-fae6-4a4a-8812-40d5c0ad3c43</guid><pubDate>Fri, 18 Sep 2026 00:38:20 +0000</pubDate><atom:updated>2026-09-18T00:38:20.607Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Hardik Pandya,gautam gambhir,கவுதம் கம்பீர்,ஹர்திக் பாண்டியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/yxg6a3ee/hardik-Pandya-Gautam-Gambhir.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ hardik Pandya - Gautam Gambhir]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/yxg6a3ee/hardik-Pandya-Gautam-Gambhir.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியாவை அவசர கதியில் களமிறக்க விரும்பவில்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் <a href="https://www.maalaimalar.com/topic/gautam-gambhir">கவுதம் கம்பீர்</a> தெரிவித்துள்ளார். மேலும், அவரை முழுநேர ஆல்-ரவுண்டராக பங்களிக்கும் வகையில் முழு உடற்தகுதி பெற்ற பிறகே ஹர்திக் அணியில் இடம்பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>50 ஓவர் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளருக்கான முழு ஒதுக்கீடான 10 ஓவர்களை வீச <a href="https://www.maalaimalar.com/topic/hardik-pandya">ஹர்திக் பாண்டியா</a> இன்னும் தயாராகவில்லை என்றும், இந்த நட்சத்திர ஆல்-ரவுண்டரை சர்வதேச கிரிக்கெட்டில் அவசரப்பட்டு மீண்டும் களமிறக்க மாட்டோம் என்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.</p><h2>10 ஓவர்கள் பந்துவீத முடியாது:</h2><p>இந்தியாவின் குறைந்த ஓவர் கிரிக்கெட் அணியில் முக்கிய அங்கமாக திகழும் பாண்டியா, அவரது உடல் தகுதி மற்றும் பணிச்சுமை காரணங்களால் பெரும்பாலும் கவனமாகவே கையாளப்பட்டு வருகிறார். </p><p>பாண்டியா பந்துவீசுவதற்கான முழு உடல் தகுதியை எட்டியதும், அவரும் இளம் ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டியும் ஒரே நேரத்தில் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கம்பீர் குறிப்பிட்டார்.</p><p>"ஹர்திக் பாண்டியா தற்போதைய நிலையில் 10 ஓவர்கள் பந்துவீச முடியாது. அவரை சர்வதேச கிரிக்கெட்டில் அவசரப்பட்டு களமிறக்க நாங்கள் விரும்பவில்லை. அவர் முழு உடல் தகுதி பெற்ற பிறகு, அவரும் நிதிஷும் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது," என்று கம்பீர் கூறினார்.</p><h2>ஆல்-ரவுண்டராக பங்களிக்க வேண்டும்:</h2><p>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில் பயிற்சியாளரின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.</p><p>ஒருநாள் (ODI) போட்டிகளில் அவரை அதிகம் பயன்படுத்த அணி நிர்வாகம் விரும்புவதால், வெறும் பேட்டிங் திறனுக்காக மட்டும் அவரைத் தேர்ந்தெடுக்காமல், ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராக பங்களிக்கும் திறனை பொறுத்தே அவரது வருகை அமையும் என்பதை இது உணர்த்துகிறது.</p><p>பி.சி.சி.ஐ.-இன் 'சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' (Centre of Excellence) அமைப்பிடமிருந்து இறுதி உடல் தகுதி சான்றிதழ் கிடைப்பதற்கு உட்பட்டு, புதுச்சேரியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய 'ஏ' அணியில் பாண்டியா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்க இடைத்தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை</title><link>https://www.maalaimalar.com/news/national/ec-bars-rival-tmc-factions-from-using-party-name-symbol-in-west-bengal-bypolls</link><comments>https://www.maalaimalar.com/news/national/ec-bars-rival-tmc-factions-from-using-party-name-symbol-in-west-bengal-bypolls#comments</comments><guid isPermaLink="false">1713c9c9-dcdb-4d19-bbc3-02700e4df29c</guid><pubDate>Thu, 17 Sep 2026 23:12:17 +0000</pubDate><atom:updated>2026-09-17T23:12:17.800Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் ஆணையம்,west bengal,TMC Party,திரிணாமுல் காங்கிரஸ் கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7iiofoe9/mamata-banerjee-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mamata banerjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7iiofoe9/mamata-banerjee-1.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க இடைத்தேர்தலின் போது, ​​அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் (AITC) பெயர் மற்றும் "பூக்கள் மற்றும் புல்" (Flowers and Grass) சின்னத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அக்கட்சியின் இரு போட்டி பிரிவுகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது; மேலும், அவர்கள் விரும்பும் பெயர்கள் மற்றும் சின்னங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/mamata-banerjee">மம்தா பானர்ஜி</a> மற்றும் அரூப் ராய் ஆகியோரின் தலைமையிலான இரு பிரிவுகளின் தலைவர்களிடமும் கருத்துகளை கேட்டறிந்த பிறகு, நேற்று (வியாழக்கிழமை) இரவு வெளியிடப்பட்ட இடைக்கால உத்தரவில், 'தேர்தல் சின்னங்கள் ஆணை 1968'-இன் விதிகளின் கீழ் இந்த சிக்கல் குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/election-commission">தேர்தல் ஆணையம்</a> ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது என்று ஆணையம் கூறியது.</p><h2>முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது:</h2><p>"பதிவில் உள்ள அனைத்துத் தகவல்களையும் முறையாக பரிசீலித்த பிறகு... அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஒரு பிரிவு மற்றும் அரூப் ராய் தலைமையிலான மற்றொரு பிரிவு என இரு போட்டி பிரிவுகள் உள்ளன என்று ஆணையம் கருதுகிறது," என்று அந்த இடைக்கால உத்தரவு தெரிவித்தது.</p><p>"ஒவ்வொரு பிரிவும் இப்போது தாங்களே உண்மையான கட்சி என்று உரிமை கோருவதால், 'தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்களிப்பு) ஆணை 1968'-இன் பிரிவு 15-ன் கீழ் ஆணையம் இது குறித்து ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது," என்றும் அது கூறியது.</p><h2>கட்சி பெயரை பயன்படுத்த அனுமதி இல்லை:</h2><p>அதன்படி, இரு போட்டிப் பிரிவுகளையும் சம நிலையில் வைப்பதற்கும், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கும், மற்றும் கடந்தகால நடைமுறைகளை கருத்தில் கொண்டும், தற்போதைய இடைத்தேர்தல் நோக்கத்திற்காகவும், இச்சிக்கல் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அமலில் இருக்கும் வகையிலும் இந்த இடைக்கால உத்தரவை ஆணையம் பிறப்பித்துள்ளது.</p><p>"திரு. அரூப் ராய் (மனுதாரர்) மற்றும் செல்வி மம்தா பானர்ஜி (எதிர்மனுதாரர்) ஆகியோரின் தலைமையில் உள்ள இரு குழுக்களும் 'அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்' என்ற கட்சியின் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது.</p><p>'அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்' கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 'பூக்கள் மற்றும் புல்' சின்னத்தைப் பயன்படுத்தவும் இவ்விரு குழுக்களும் அனுமதிக்கப்படமாட்டாது என்று ஆணையம் கூறியது.</p><p>இரு குழுக்களும் தங்கள் குழுக்களுக்குத் தாங்கள் விரும்பும் பெயர்களை வைத்துக்கொள்ளலாம் என்றும், தற்போதைய இடைத்தேர்தல்களுக்காக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 'ஒதுக்கப்படாத சின்னங்களின்' பட்டியலில் இருந்து தாங்கள் விரும்பும் வெவ்வேறு சின்னங்களை தேர்வு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>போர் சூழலிலும் ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்க ஈரான் தலைவர்களுக்கு விசா அளித்த அமெரிக்கா</title><link>https://www.maalaimalar.com/news/world/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE</link><comments>https://www.maalaimalar.com/news/world/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE#comments</comments><guid isPermaLink="false">b33b0dbe-06d1-4ec4-a29e-45bfd82910ba</guid><pubDate>Thu, 17 Sep 2026 22:06:41 +0000</pubDate><atom:updated>2026-09-17T22:06:41.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,ஐநா,UN,Iran,us</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/49pu1dcm/US-Visa-masoud-pezeshkian.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US Visa - masoud pezeshkian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/49pu1dcm/US-Visa-masoud-pezeshkian.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான மோதல் சூழல் நிலவும் நிலையிலும், நியூ யார்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/un">ஐ.நா.</a> பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க ஈரான் அதிபர் மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு டிரம்ப் நிர்வாகம் விசா அனுமதி அளித்துள்ளது.</p><p>ஐ.நா. கூட்டங்களில் பங்கேற்க ஈரானின் "முக்கியக் குழுவினர்" மற்றும் அவசியமான பணியாளர்களுக்கு விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> வெளியுறவு துறை தெரிவித்தது.</p><h2>ஈரான் அதிபருக்கு அமெரிக்க விசா:</h2><p>விசா தொடர்பான தனியுரிமை சட்டங்கள் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி, இந்த குழுவில் அதிபர் மசூத் பெசஸ்கியான் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p><p>ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வரும் சூழலிலும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது அல்லது ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் எட்டப்படுவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லாத நிலையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>அதேவேளையில், ஏமனில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் உள்கட்டமைப்பு மற்றும் செங்கடலில் உள்ள கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்; செங்கடல் என்பது இந்த பிராந்தியத்தின் மற்றொரு முக்கிய கடல்வழி பாதையாகும், அங்குள்ள தடைகள் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன.</p><h2>கடந்த கால நிகழ்வுகள்:</h2><p>மேலும், ஈரான் உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவு நாடாக திகழ்வதாக அமெரிக்கா கருதுகிறது; அந்நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதோடு, சமீபத்திய வாரங்களில் ஈரானின் "முக்கிய நிதி ஆதாரங்களை" துண்டிப்பதை நோக்கமாக கொண்ட புதிய நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது.</p><p>ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமைந்துள்ள நாடு என்ற முறையில், வெளிநாட்டு தலைவர்கள் பொது சபை கூட்டத்திற்கு வருவதை தடுப்பதில் அமெரிக்காவிற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், அமெரிக்காவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ள தலைவர்களுக்கு விசா மறுத்த அல்லது அவர்களின் விண்ணப்பங்களை ஊக்கப்படுத்தாத நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>புதிய அரசியல் கூட்டணி? கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி ரகசிய ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/national/kanimozhi-holds-closed-door-meeting-with-mamata-in-kolkata</link><comments>https://www.maalaimalar.com/news/national/kanimozhi-holds-closed-door-meeting-with-mamata-in-kolkata#comments</comments><guid isPermaLink="false">a502fe64-63b9-40e6-a8d4-b8120b43fba7</guid><pubDate>Thu, 17 Sep 2026 21:41:51 +0000</pubDate><atom:updated>2026-09-17T21:41:51.259Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanimozhi,கனிமொழி,மம்தா பானர்ஜி,Mamata Banerjee</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/myuoanhn/Kanimozhi-mamata-banerjee.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi - Mamata Banerjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/myuoanhn/Kanimozhi-mamata-banerjee.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மூத்த தி.மு.க. தலைவரான <a href="https://www.maalaimalar.com/topic/kanimozhi">கனிமொழி</a>, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்தார். தெற்கு கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள மம்தா பானர்ஜியின் இல்லத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி அவரை சந்தித்ததாக <a href="https://www.maalaimalar.com/topic/trinamool-congress">திரிணாமுல் காங்கிரஸ்</a> (TMC) தலைவர் ஒருவர் தெரிவித்தார்.</p><p>"கனிமொழி, மம்தா பானர்ஜியின் இல்லத்தில் அவருடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்; ஆனால், அந்த விவாதத்தின் விவரங்களை அவர் வெளியிடவில்லை. </p><p>மும்பையில் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் டெல்லியில் என்சிபி (SP) தலைவர் சரத் பவார் ஆகியோருடன் கனிமொழி ஆலோசனை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. </p><p>தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் உள்ள பல்வேறு பிராந்திய கட்சிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், கனிமொழியின் இந்த சந்திப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளன. </p><h2>மேற்கு வங்கத்தில் மோதல் போக்கு:</h2><p>தேசிய அளவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியும் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்கு வங்கத்தில் அவற்றின் உறவு மோதல் போக்குடனேயே இருந்து வருகிறது. அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல் விவகாரத்தில் சமீபகாலமாக இவ்விரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.</p><p>நந்திகிராம் தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மத்தியத் தலைமையிடம் முன்மொழிந்ததாக மாநில காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது; ஆனால், மம்தா பானர்ஜி தலைமையிலான அந்த கட்சி இந்த கூற்றை மறுத்தது.</p><p>தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகும் தி.மு.க.-காங்கிரஸ் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நடிகரும், அரசியல்வாதியுமான ஜோசப் விஜய்யின் த.வெ.க. தலைமையிலான ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் தற்போது அங்கம் வகிக்கிறது; அதேவேளையில் தி.மு.க. .எதிர்க்கட்சியாக உள்ளது.</p><h2>புதிய அரசியல் கூட்டணி:</h2><p>மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸும் அரசியல் ரீதியாக சவாலான காலகட்டத்தை கடந்து வருகிறது. அக்கட்சி மாநில சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்திலும் உட்கட்சி அதிருப்தியை எதிர்கொண்டு வருகிறது; இது மம்தா பானர்ஜிக்கு கூடுதல் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஜூன் மாதம் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கவில்லை; அதன்பிறகு காங்கிரஸ் மீது அக்கட்சி சற்று மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.</p><p>இத்தகைய சூழலில், காங்கிரஸ் தலைமையிலான கட்டமைப்புக்கு வெளியே உள்ள கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்த ஊகங்களை கனிமொழியின் சந்திப்புகள் கிளப்பியுள்ளன. இருப்பினும், புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் நோக்கில் இந்த விவாதங்கள் நடைபெற்றதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிகுறியும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>பிறந்தநாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modis-thank-you-note-for-birthday-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modis-thank-you-note-for-birthday-wishes#comments</comments><guid isPermaLink="false">fb14398b-de2f-41b3-add8-78bcb3e2c975</guid><pubDate>Thu, 17 Sep 2026 21:00:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T21:00:00.755Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>birthday wish,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/05/25/2332512-pm1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/05/25/2332512-pm1.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a>, தனது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதிலும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் தமக்கு அளித்த அபரிமிதமான வாழ்த்துக்கள், அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.</p><p>சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு செய்தியில், ஒவ்வொரு அன்பான வார்த்தையும் தன்னை ஆழமாக நெகிழ செய்ததாகவும், <a href="https://www.maalaimalar.com/news/national">இந்திய</a> மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய தனக்கு புது வலிமையை அளித்ததாகவும் பிரதமர் கூறினார். </p><h2>சமூக வலைத்தள பதிவு:</h2><p>"எல்லா இடங்களில் இருந்தும் பொங்கி வழியும் வாழ்த்துகள், அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஒவ்வொரு அன்பான வார்த்தையும் ஆழ்ந்து போற்றப்படுகிறது, மேலும் அது நமது மக்களுக்கு சேவை செய்ய எனக்கு புது வலிமையை தருகிறது," என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.</p><p>நாள் முழுவதும் சேவா நடவடிக்கைகளில் பங்கேற்ற எண்ணற்ற குடிமக்களின் முயற்சிகளையும் பிரதமர் பாராட்டினார். தன்னலமற்ற சேவை செயல்கள் தேசத்தின் உணர்வின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக அமைந்து, சமூக கட்டமைப்பை வலுப்படுத்த பங்களிக்கின்றன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.</p><p>பரந்த தேசிய இலக்கை முன்னிலைப்படுத்திய பிரதமர் மோடி, வளர்ச்சி பெற்ற இந்தியாவை நோக்கிய பயணத்தில் குடிமக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். "2047-ஆம் ஆண்டுக்குள் செழிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தன்னிறைவு பெற்ற தேசத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வலியுறுத்திய அவர், 'நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சி பெற்ற பாரதத்தை தொடர்ந்து உருவாக்குவோம்' என்று கூறினார்.</p><h2>சேவை செய்ய அழைப்பு:</h2><p>பிரதமரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், முறைசார்ந்த நிகழ்வுகளுக்கு பதிலாக பெரிய அளவிலான தன்னார்வ முன்னெடுப்புகளால் அதிகளவில் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.</p><p>மாநிலங்கள் முழுவதும், தன்னார்வலர்கள் இரத்த தான முகாம்கள், தூய்மை பணிகள், மரம் நடும் திட்டங்கள், இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தேவைப்படுவோருக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் போன்றவற்றை ஏற்பாடு செய்தனர். </p><p>சேவைக்கான பிரதமரின் அழைப்புக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, இதுபோன்ற பல செயல்பாடுகள் உள்ளூர் அமைப்புகள், இளைஞர் குழுக்கள் மற்றும் கட்சி தொண்டர்களால் ஒருங்கிணைக்கப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>3-வது டி20 போட்டி: 127 ரன்களில் இந்திய அணி வெற்றி - தொடரை 3-0 என கைப்பற்றி அசத்தல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/afgvsind-3rd-t20-india-win-by-127-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/afgvsind-3rd-t20-india-win-by-127-runs#comments</comments><guid isPermaLink="false">3c1e95ba-d48b-4e6b-8d74-6fe5019d5f4b</guid><pubDate>Thu, 17 Sep 2026 17:50:18 +0000</pubDate><atom:updated>2026-09-17T17:50:18.108Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா ஆப்கானிஸ்தான்,INDvsAFG</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/527a8lcl/ind-win-pic.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/527a8lcl/ind-win-pic.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட <a href="https://www.maalaimalar.com/sports/cricket">டி20</a> தொடரை இந்திய அணி 3-0 கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தல்.</p><p>ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக டெல்லியில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.</p><p>இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற <a href="https://www.maalaimalar.com/topic/indvsafg">ஆப்கானிஸ்தான் அணி</a> பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர்.</p><h2>இமாலய இலக்கு:</h2><p>ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியில் இறங்கினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இந்திய அணி பவர் பிளே ஓவரில் 100 ரன்களைக் குவித்தது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 30 பந்தில் சதமடித்து அசத்தினார். இதில் 10 சிக்சர், 9 பவுண்டரி அடங்கும்.</p><p>முதல் விக்கெட்டுக்கு 142 ரன்களை சேர்த்த நிலையில், அபிஷேக் சர்மா 34 பந்தில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிந்தார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயஸ் அய்யர் 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p>இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 221 ரன்களை குவித்தது.</p><h2>ஆப்கானிஸ்தான் படுதோல்வி:</h2><p>கடின இலக்கை துரத்திய ஆப்கான்ஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான ரஹ்முல்லா குர்பாஸ் 15 ரன்களும், கேப்டன் இப்ராகிம் சத்ரான் 25 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஓமர்சாய் மற்றும் நூர் உல் ரஹ்மான் ஆகியோர் முறையே 17 மற்றும் 11 என இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.</p><p>ஆப்கானிஸ்தான் அணி 14.1 ஓவர்களில் வெறும் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்தது. இதனால் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் யாஷ் தாக்கூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மேலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: 58 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-bypolls-nominations-of-58-candidates-accepted</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-bypolls-nominations-of-58-candidates-accepted#comments</comments><guid isPermaLink="false">354c402e-cc4e-4e23-ae91-0786eecc44dd</guid><pubDate>Thu, 17 Sep 2026 17:05:22 +0000</pubDate><atom:updated>2026-09-17T17:05:22.672Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,TN Bypolls,Madurantakam,தமிழக இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6ltm7yyr/dmk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தாமன் - மரகதம் குமரவேல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6ltm7yyr/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/dharapuram">தாராபுரம்</a> இடைத்தேர்தல்களுக்கான 58 வேட்பாளர்களின் மனுக்கள், பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. </p><p>ஆளும் <a href="https://www.maalaimalar.com/topic/tvk">த.வெ.க.</a> கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவற்றின் வேட்பாளர்கள் உள்ளிட்டோரின் மனுக்கள் முறையாக இருந்ததாக கண்டறியப்பட்டது. </p><p>இடதுசாரி கட்சிகள் இவ்விரு தொகுதிகளுக்கும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தனித்தொகுதிகளாக உள்ள இவ்விரு தொகுதிகளிலும் சுவாரஸ்யமான ஐந்து முனை போட்டி நிலவவுள்ளது.</p><h2>58 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு:</h2><p>தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதள தகவலின்படி, மதுராந்தகத்தில் 28 வேட்பாளர்களின் மனுக்களும், தாராபுரத்தில் மொத்தம் 30 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவ்விரு சட்டமன்ற தொகுதிகளிலும் பெறப்பட்ட மொத்தம் 91 மனுக்களில், 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>ஏப்ரல் 23-இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. தனது முதல் அரசை அமைத்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் களம் இதுவாகும்.</p><p>த.வெ.க. நிறுவனரும் முதல்வருமான விஜய், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு முறையே முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான கே. மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்தியபாமா ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார்.</p><p>குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் ஏப்ரல் 23 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களாக அந்தந்த தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள்; பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் த.வெ.க. கட்சியில் இணைந்தனர்.</p><h2>தி.மு.க., த.வெ.க.-வுக்கு நேரடி எதிரணி:</h2><p>மதுராந்தகத்திற்கு ஐ. பரந்தாமனையும், தாராபுரத்திற்கு எஸ். சுகன்யாவையும் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தலைமை வகிக்கும் அ.தி.மு.க., மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கனிதா சம்பத் மற்றும் தாராபுரத்தில் கே. பானுமதி ஆகியோரை நிறுத்தி, முழுக்க முழுக்க பெண்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது.</p><p>பாரம்பரிய தேர்தல் கூட்டணிகளில் இருந்து விலகி, தனித்த இடதுசாரி முன்னணியாக போட்டியிடப்போவதாக சி.பி.ஐ. (எம்) மற்றும் சி.பி.ஐ. ஆகியவை அறிவித்துள்ளன; இதன் மூலம் அவை தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் நேரடி எதிரணியில் நிற்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் இந்தி மொழி கற்பிப்பதை தடுக்க கூடாது: நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காலக்கெடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hindi-should-not-be-barred-in-tamil-nadu-supreme-court-on-navodaya-schools</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hindi-should-not-be-barred-in-tamil-nadu-supreme-court-on-navodaya-schools#comments</comments><guid isPermaLink="false">043065c5-b4a4-407d-8c31-5706087c1eab</guid><pubDate>Thu, 17 Sep 2026 16:16:09 +0000</pubDate><atom:updated>2026-09-17T16:16:09.668Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,இந்தி மொழி,hindi language,Navodaya school,நவோதயா பள்ளிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/de64qpia/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court on Hindi education in Tamil Nadu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/de64qpia/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் இந்தி மொழி ஒருபோதும் கற்பிக்கப்படாது என்ற நிலைப்பாட்டை தமிழகம் எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியது.</p><p>மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்காக நிலத்தை அடையாளம் காணுமாறு, தமிழக அரசுக்கு பிறப்பித்திருந்த தனது முந்தைய உத்தரவைத் திரும்ப பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.</p><p>தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சென்னை உயர் நீதிமன்றம்</a> விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.</p><p>தமிழக அரசு, இந்தி மொழி உட்பட அவற்றின் மும்மொழிக் கல்வி முறை, தமிழகத்தின் இருமொழிக் கொள்கையுடன் முரண்படுகிறது என்ற அடிப்படையில் எதிர்த்து வருகிறது.</p><h3><strong>தமிழக வழக்கறிஞர்</strong></h3><p>தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மாநில அரசின் எதிர்ப்பு என்பது வெறும் மனநிலை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது கல்விக் கொள்கையை வகுப்பதற்கான அதன் அரசியலமைப்பு அதிகாரம் தொடர்பானது என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.</p><p>மேலும் அவர் மாநில அரசு இந்தி மொழிக்கு எதிரானதல்ல என்றும், ஆனால் நவோதயா திட்டத்தில் இந்தி மொழியை முதன்மை மொழியாக வலியுறுத்துவதையே எதிர்ப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார்.</p><p>மேலும், மத்திய அரசின் திட்டம் விருப்பத்திற்குரியது என்றும், ஒரு குறிப்பிட்ட கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு ஒரு மாநிலத்தை கட்டாயப்படுத்தி நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.</p><h3><strong>உச்ச நீதிமன்ற நீதிபதிகள்</strong></h3><p>இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பள்ளிகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு தமிழகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்தினர்.</p><p>மேலும் டிசம்பர் 15, 2025 தேதியிட்ட உத்தரவை நிறைவேற்றவும், முன்மொழியப்பட்ட பள்ளிகளுக்கான பொருத்தமான நிலத்தை அடையாளம் காணவும் மாநில அரசுக்கு மூன்று மாத கால அவகாசத்தை நீதிபதிகள் வழங்கினர்.</p><p>மேலும் நீதிபதிகள், “நீங்கள் உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மண்ணில் இந்தி கற்பிக்கப்படாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><p>உங்கள் மாநிலத்தில் நீங்கள் செய்து வரும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் மேலாக, கூடுதலாக ஒன்றைச் செய்வது உங்கள் தரத்தைக் குறைத்துவிடாது என்று நாங்கள் கூறுகிறோம்.</p><p>டெல்லியிலிருந்து வருவதால் சென்னையின் தரம் குறைந்துவிடாது. சென்னை மக்கள் டெல்லியைப் புறக்கணிக்கக் கூடாது, டெல்லி மக்களும் சென்னையைப் புறக்கணிக்கக் கூடாது.</p><p>இன்று கல்வி, நாளை வேறு ஒன்றாக மாறிவிடும். உங்கள் மனதில் உள்ள இந்த விறைப்புத்தன்மையை நீங்கள் தளர்த்த வேண்டும்” என்று உத்தரவிட்டது.</p><p>தமிழகத்தை உடனடியாக நிலம் கையகப்படுத்தவோ அல்லது ஒரு குறிப்பிட்ட செலவினத்திற்கு மாநிலத்தைக் கட்டுப்படுத்தவோ நீதிமன்றம் உத்தரவிடவில்லை.</p><p>டிசம்பர் 2025 பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், மாநில அரசு தனது அரசாங்கத் திட்டத்தில் பொருத்தமான நிலத்தை அடையாளம் காண மட்டுமே கோரியுள்ளது.</p><p>கடந்த ஆண்டு டிசம்பரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளை அமைப்பதற்குத் தேவையான நிலத்தை ஆறு வாரங்களுக்குள் அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.</p><p>அதைத் தொடர்ந்து, மாநில அரசில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களைக் கூறி, தமிழக அரசு அந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரியது.</p><p>இதையடுத்து முன்னதாக பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவைத் திரும்ப பெற நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது. அதே நேரத்தில், அதற்குக் கட்டுப்பட மாநில அரசுக்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கியதுடன், கொள்கை மற்றும் அதன் செயலாக்கம் குறித்து மத்திய, மாநிலப் பிரதிநிதிகள் தொடர்ந்து கலந்துரையாட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.</p><p>தமிழக அரசு தமிழை இரண்டாம் மொழியாக விரும்பினால், அது பரிசீலிக்கப்படக்கூடிய ஒரு விஷயமே, என்று கூறிய நீதிபதி அமர்வு, மாநில மற்றும் மத்திய அரசுகள் தங்களது கல்விச் செயலாளர்கள் மட்டத்தில் கலந்துரையாடுமாறு கேட்டுக்கொண்டது.</p>]]></content:encoded></item><item><title>போட்டி போட்டுக்கொண்டு லட்டு சாப்பிட்ட இளைஞர்கள் - 30 நிமிடங்களில் 28 லட்டுகளை சாப்பிட்ட நபர்.. வைரல் வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/man-eats-28-laddus-in-30-minutes-in-gujarat-viral-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-eats-28-laddus-in-30-minutes-in-gujarat-viral-video#comments</comments><guid isPermaLink="false">a957da83-49a1-4284-8122-46f86769b246</guid><pubDate>Thu, 17 Sep 2026 16:02:02 +0000</pubDate><atom:updated>2026-09-17T16:02:02.105Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat,Laddu,லட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/5k2jesmi/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat Ladoo Eating Contest Viral]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/5k2jesmi/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற உள்ளூர் விழா ஒன்றில் 30 நிமிடங்களில் 28 லட்டுகளை சாப்பிட்ட நபரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D">குஜராத்தில்</a> உள்ள தர்னேதர் என்ற கிராமத்தில் உள்ளுர் மக்களிடம் லட்டு உண்ணும் போட்டி நடைபெற்றது. </p><p>அப்போது அந்த போட்டியில் மொத்தம் 28 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். </p><p>இந்த போட்டியானது விளையாட்டு, இளைஞர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் துறை, குஜராத் விளையாட்டு ஆணையம் மற்றும் மாவட்டப் பயிற்சி மையம் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p>ஜலாவார் பகுதியின் நாட்டுப்புறக் கலாச்சாரத்தில் வேரூன்றிய இந்த போட்டியைக் காண உள்ளூர் கிராம மக்கள் திரண்டனர்.</p><p>25 முதல் 75 வயதுக்குட்பட்ட 28 போட்டியாளர்கள், பருப்பு மற்றும் சர்க்கரை தூவப்பட்ட கடலை மாவு லட்டுகளை 30 நிமிடங்களுக்குள் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.</p><p>இதையடுத்து போட்டி தொடங்கியதும், போட்டியாளர்கள் தங்களால் இயன்ற அளவு லட்டுகளை வேக வேகமாக சாப்பிட தொடங்கினர். </p><p>இதற்கைடையில் போட்டியின் போது சராசரியாக 15 லட்டுகளை சாப்பிட்ட பிறகு, முதல் 15 நிமிடங்களுக்குள் பல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.</p><figure><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1766460144559224%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></figure><p>இறுதிச் சுற்றில், ஐந்து போட்டியாளர்கள் முதலிடத்திற்காக போட்டியிட்டதால், போட்டி மேலும் தீவிரமடைந்தது.</p><p>போட்டியாளர்கள் 22, 24 மற்றும் 26 லட்டுகளை எட்டியபோது, பார்வையாளர்கள் பலத்த கைதட்டி ஆரவாரம் செய்தனர்.</p><p>பட்டத்தை வெல்வதற்கான தங்களது முயற்சிகளை போட்டியாளர்கள் தொடர்ந்ததால், இறுதி நிமிடங்களில் பரபரப்பு அதிகரித்தது.</p><p>இறுதியில், ராகவானி என்ற இளைஞர் 30 நிமிடங்களில் 28 லட்டுகளை சாப்பிட்டு முதலிடம் பிடித்தார், மேலும் அவருக்கு ரூ. 2,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>3வது டி20 போட்டி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் அதிரடியில் இந்தியா 221 ரன்கள் குவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-need-222-runs-to-win-against-india-3rd-t20-match</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-need-222-runs-to-win-against-india-3rd-t20-match#comments</comments><guid isPermaLink="false">7a34c733-a061-49d5-a97e-eaa8c4c1d0eb</guid><pubDate>Thu, 17 Sep 2026 15:48:40 +0000</pubDate><atom:updated>2026-09-17T15:48:40.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sanju samson,சஞ்சு சாம்சன்,Abhishek Sharma,அபிஷேக் சர்மா,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/16sti0kt/sharma.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ abhishek, samson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/16sti0kt/sharma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் அதிரடியால் இந்திய அணி 221 ரன்களைக் குவித்துள்ளது.</strong></em></p><p>ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. </p><p>டெல்லியில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.</p><h2>டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்</h2><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர்.</p><p>ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியில் இறங்கினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.</p><p>இந்திய அணி பவர் பிளே ஓவரில் 100 ரன்களைக் குவித்தது.</p><h2>30 பந்தில் சதமடித்த அபிஷேக்</h2><p>அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 30 பந்தில் சதமடித்து அசத்தினார். இதில் 10 சிக்சர், 9 பவுண்டரி அடங்கும்.</p><p>முதல் விக்கெட்டுக்கு 142 ரன்களை சேர்த்த நிலையில், அபிஷேக் சர்மா 34 பந்தில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிந்தார்.</p><p>அடுத்து இறங்கிய திலக் வர்மா 2 ரன்னில் வெளியேறினார்.</p><p>தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயஸ் அய்யர் 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். </p><p>இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 221 ரன்களைக் குவித்தது.</p>]]></content:encoded></item><item><title>டாடா குழுமத் தலைவர் பதவியில் மீண்டும் சந்திரசேகரன் நியமனம்: டாடா டிரஸ்ட் கடும் எதிர்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/tata-group-chairman-chandrasekaran-reappointed-amid-trust-opposition</link><comments>https://www.maalaimalar.com/news/national/tata-group-chairman-chandrasekaran-reappointed-amid-trust-opposition#comments</comments><guid isPermaLink="false">86d75590-ff5a-4741-aed5-e1117b204867</guid><pubDate>Thu, 17 Sep 2026 15:02:46 +0000</pubDate><atom:updated>2026-09-17T15:02:46.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TATA,டாடா,டாடா குழுமம்,Tata Trusts,டாடா அறக்கட்டளை,N.Chandrasekaran,என்.சந்திரசேகரன்</media:keywords><media:content height="225" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/62hu51mm/n-chandrasekaran.avif" width="400"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ N.Chandrasekaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/62hu51mm/n-chandrasekaran.avif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>நியமனம் </h2><p>டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான <a href="https://www.maalaimalar.com/news/world/leave-kenya-president-issues-stern-order-to-tata-chemicals-what-is-the-issue">டாடா</a> சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரனை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதே பதவியில் மீண்டும் தொடர்வார் என்று  டாடா நிர்வாக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>டாடா அறக்கட்டளைகள் எதிர்ப்பு </h2><p>டாடா குழுமத் தலைவராக 2017ஆம் ஆண்டு பதவியேற்ற சந்திரசேகரனின் பதவிகாலம் வருகிற 2027 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே இவரின் பதவி நீட்டிப்புக்கு முன்பே டாடா சன்ஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தனது பதவியை ராஜினாம செய்வதாக சந்திரசேகரன் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.</p><h2>மீண்டும் ஒப்புதல்</h2><p>இந்த நிலையில் டாடா சன்ஸ் குழும நிர்வாக கூட்டத்தில் சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு தலைவராக மறுநியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.</p> <h2>சர்ச்சை </h2><p> சந்திரசேகரனை மீண்டும் தலைவராக நியமிக்க டாடா சன்ஸ் இயக்குனர் குழு எடுத்த முடிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த மறுநியமன தீர்மானத்துக்கு , நான்கு இயக்குநர்கள் ஆதரவாகவும் ,டாடா சன்ஸ் நிறுவனத்தின் அறக்கட்டளை சார்பிலான இயக்குனர்களில் ஒருவருமான <a href="https://www.maalaimalar.com/news/national/can-noel-tata-chairman-of-tata-trust-head-tata-sons-743016">நோயல் டாடா </a>எதிராகவும் வாக்களித்தார்.</p><h2>டாடா டிரஸ்ட்</h2><p>டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, தலைவரை நியமிப்பதற்கும் மறுநியமிப்பதற்கும் அறக்கட்டளைகளின் பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர்களின் பெரும்பான்மை ஆதரவு தேவை என்று டாடா அறக்கட்டளைகள் கூறியுள்ளன.</p><p>மேலும், அந்த இரு இயக்குனர்களும் கூட்டத்தில் பங்கேற்று, இருவரும் ஆதரவாக வாக்களித்தால்தான் தலைவர் நியமனம் தொடர்பான தீர்மானம் செல்லுபடியாகும் என்றும் டாடா டிர்ஸ்ட தெரிவித்துள்ளது.</p> <p>நோயல் டாடா எதிராக வாக்களித்துள்ளதால், சந்திரசேகரனின் மறுநியமன <a href="http://maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights">தீர்மானம்</a> சட்டரீதியாக செல்லாது என்று டாடா அறக்கட்டளைகள் தெரிவித்துள்ளன.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழங்கிய சட்டக் கருத்தையும் நோயல் டாடா இயக்குனர் குழுவிடம் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>மோதல் </h2><p>சந்திரசேகரன் மீண்டும் பதவியேற்பது தொடர்பான பிரச்சினை தற்போது சட்ட மற்றும் நிர்வாக ரீதியான மோதலாக மாறியுள்ளது.சந்திரசேகரனுக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியை தொடங்கியிருந்ததாக டாடா அறக்கட்டளைகள் தெரிவித்துள்ளன. </p><p>அந்த பட்டியலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டி.வி.நரேந்திரன், டாடா சன்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரி சவுரப் அகர்வால், தேசிய பங்குச்சந்தை தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ் சவுகான் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன</p><p>தற்போதைய சூழலில், சந்திரசேகரனின் மறுநியமன விவகாரத்தில் டாடா சன்ஸ் இயக்குனர் குழுவுக்கும் டாடா அறக்கட்டளைகளுக்கும் இடையேயான ஒரு மோதல் சூழலலானது ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3வது டி20 போட்டி: ருத்ர தாண்டவமாடிய அபிஷேக் சர்மா -30 பந்தில் சதமடித்து சாதனை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/abhishek-sharma-century-in-30-balls-against-afghanistan-3rd-t20-match</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/abhishek-sharma-century-in-30-balls-against-afghanistan-3rd-t20-match#comments</comments><guid isPermaLink="false">9735e767-a15c-4069-a5a5-377e25ac4026</guid><pubDate>Thu, 17 Sep 2026 14:44:19 +0000</pubDate><atom:updated>2026-09-17T14:44:19.733Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Abhishek Sharma,அபிஷேக் சர்மா,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/vv3j36zg/abhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ abhishek sharma]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/vv3j36zg/abhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியாவின் அபிஷேக் சர்மா 30 பந்தில் சதமடித்தார்.</strong></em></p><p>ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. </p><p>டெல்லியில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.</p><h2>டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்</h2><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர்.</p><p>இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினர். 3வது ஓவரில் 23 ரன்னும், 5வது ஓவரில் 29 ரன்னும் குவித்தனர்.</p><p>அபிஷேக் சர்மா கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.</p><p>இந்திய அணி பவர் பிளே ஓவரில் 100 ரன்களைக் குவித்தது.</p><h2>30 பந்தில் சதமடித்த அபிஷேக்</h2><p>தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 30 பந்தில் சதமடித்து அசத்தினார். இதில் 10 சிக்சர், 9 பவுண்டரி அடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி - மம்தாவை சந்தித்த கனிமொழி எம்.பி </title><link>https://www.maalaimalar.com/news/national/new-alliance-under-cjp-as-alternative-to-congress-bjp-kanimozhi-meets-mamata</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-alliance-under-cjp-as-alternative-to-congress-bjp-kanimozhi-meets-mamata#comments</comments><guid isPermaLink="false">8a3bfbd7-8583-48d6-932d-3311f2087925</guid><pubDate>Thu, 17 Sep 2026 14:22:08 +0000</pubDate><atom:updated>2026-09-17T14:22:08.848Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,கனிமொழி எம்பி,Mamta Banerjee,Kanimozhi MP,சிஜேபி,CJP</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/nnrspi5z/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mamata-Kanimozhi meeting]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/nnrspi5z/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ் கட்சி</a> வெளியேறியது. இதையடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இது இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF">இந்தியா கூட்டணியிலிருந்து</a> திமுக விலகிவிட்டதாகவும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p>இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், தேசிய அளவில் மூன்றாவது அரசியல் முன்னணியை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக இந்த விவாதங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.</p><p>தேசிய அளவில், தற்போது இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA), காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் உள்ளன.</p><h3><strong>2029 மக்களவை தேர்தல்</strong></h3><p>இந்தச் சூழ்நிலையில், 2029 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பிராந்திய கட்சிகளின் தலைமையில் ஒரு புதிய தேசிய அளவிலான கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறு குறித்து அரசியல் வட்டாரங்கள் விவாதித்து வருவதாக கூறப்படுறது.</p><p>அத்தகைய ஒரு கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ள தலைவர்களாக மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் பேச்சுவார்த்தையில் உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>மேலும் கடந்த வாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.</p><p>இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் தமிழகத்தில் காங்கிரஸின் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா கூட்டமைப்பின் எதிர்காலம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்தப் பின்னணியில்தான் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை, கனிமொழி எம்.பி சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வரும் நாட்களில் மேலும் கலந்துரையாடல்களும் சந்திப்புகளும் நடைபெறக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/group-1-exam-hall-ticket-release-tnpsc-notification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/group-1-exam-hall-ticket-release-tnpsc-notification#comments</comments><guid isPermaLink="false">1d3c700f-172b-45e4-94f2-7b1b8c75fc9a</guid><pubDate>Thu, 17 Sep 2026 13:54:20 +0000</pubDate><atom:updated>2026-09-17T13:54:20.538Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,hall ticket,ஹால் டிக்கெட்,டிஎன்பிஎஸ்சி,TNPSCGroup1,டிஎன்பிஎஸ்சி குரூப் 1</media:keywords><media:content height="183" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ykh1gi8h/images-12.jfif" width="275"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPSC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ykh1gi8h/images-12.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>குரூப் 1 தேர்வு </h2><p>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 27, 2026 அன்று முற்பகல் அமர்வில் நடைபெற உள்ளது.இத்தேர்விற்கு தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வானது நடைப்பெற இருக்கிறது.</p><h2>ஹால் டிக்கெட்</h2><p>வரும் 27ம் தேதி நடைப்பெறவுள்ள குரூப் 1 தேர்வுக்கான அனுமதி நுழைவு சீட்டு வெளியாகியுள்ளது.ஹால்டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது </p><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பு எண் 05/2026, நாள் 23.06.2026-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு ,தொகுதி பணிகள்பதவிகளுக்கான முதல்நிலை கொள்குறி வகை மற்றும் ஒளிக்குறி உணரி தேர்வு 27.09.2026 முற்பகல் நடைபெற உள்ளது.</p><p>தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணைய தளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு OTR DASHBOARD மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கான ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p> என்று  தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மெக்கா தாக்கப்பட்டால் பாகிஸ்தான் தனது கடமைகளை நிறைவேற்றும்: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்</title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-will-fulfil-its-obligations-if-mecca-is-attacked-defence-minister-khawaja-asif</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-will-fulfil-its-obligations-if-mecca-is-attacked-defence-minister-khawaja-asif#comments</comments><guid isPermaLink="false">2a683fdf-2e9c-42a8-9a88-189e2d15da34</guid><pubDate>Thu, 17 Sep 2026 13:51:01 +0000</pubDate><atom:updated>2026-09-17T13:51:01.172Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Houthi,ஹவுதி,Mecca Defense Pact,மெக்கா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/scbiktzl/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan–Saudi security pledge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/scbiktzl/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமனில் உள்ள முக்கிய போக்குவரத்து வழித்தடமான பால்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவுக்கு எதிராக தீவிரமாக போர் தொடுத்து வரும் நிலையில், மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">சவுதியில்</a> உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கி ஆளில்லா விமானத்தை ஏவி ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியது. </p><p>மேலும் ஹவுதிகள் ஏவிய ஆளில்லா விமானம் ஒன்றை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி அரேபியா தெரிவித்தது.   </p><h3><strong>ஹவுதி மறுப்பு</strong></h3><p>இந்த குற்றச்சாட்டை மறுத்த ஹவுதிகள், சவுதி அரேபியா பழைய பொய்களை பரப்பி வருவதாக கூறியது. மேலும் இஸ்லாத்தின் முக்கியமான ஒரு தளத்தை குறிவைப்பது பற்றி தங்கள் குழு நினைத்துக்கூட பார்க்காது என்றும் ஹவுதி அமைப்பு கூறியது.</p><p>இதையடுத்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறும் சம்பவத்திற்கு, பாகிஸ்தான் தனது கண்டனத்தை பதிவு செய்தது. </p><p>மேலும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கு திரும்புமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார்.</p><p>சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் முழு ஆதரவையும் அளித்து, தோளோடு தோள் நிற்கும் எனவும் அவர் கூறினார்.</p><h3><strong>பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்</strong></h3><p>இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் அவர், மெக்கா தாக்கப்பட்டால் அதை பாதுகாக்க எந்த ஒப்பந்தமும் தேவையில்லை என கூறினார். மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை குறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் புவியியல் எல்லைகள் மீறப்படும் பட்சத்தில், பரஸ்பர பாதுகாப்பிற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்றும் கூறினார்.</p><h3><strong>ஈரான் வெளியுறவு அமைச்சர்</strong></h3><p>கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், சவுதி அரேபியா மீதான அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் எடுத்துரைத்தார்.</p><p>இதையடுத்து ஏமன் விவாகரங்களில் ஈரான் தலையிடுவதில்லை என அமைச்சக் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p>மேலும் ஹவுதிகள் தங்கள் சொந்த நலன்களின் அடிப்படையில் எடுக்கும் முடிவுகள், முற்றிலும் அவர்களது சுதந்திரமான முடிவுகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>3வது டி20 போட்டி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு- இந்தியா பேட்டிங்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-opt-to-bowl-first-against-india-third-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-opt-to-bowl-first-against-india-third-odi#comments</comments><guid isPermaLink="false">3c1954b5-40f6-439d-a129-f3e86aec6271</guid><pubDate>Thu, 17 Sep 2026 13:41:14 +0000</pubDate><atom:updated>2026-09-17T13:41:14.875Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Shreyas Iyer,ஷ்ரேயஸ் அய்யர்,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/yznm1ejr/toss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ toss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/yznm1ejr/toss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்துள்ளது.</strong></em></p><p>ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. </p><p>டெல்லியில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது.</p><p>டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக யாஷ் தாக்குர் அணியில் இணைந்துள்ளார். சூர்யவன்ஷி இந்தப் போட்டியிலும் சேர்க்கப்படவில்லை.</p><p>அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.</p><h2>இந்திய அணி</h2><p>அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, அக்ஷர் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தாக்குர்.</p><h2>ஆப்கானிஸ்தான் அணி</h2><p>ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), செடியுல்லா அடல், டார்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான், முஜுப் உர் ரஹ்மான், பசல்ஹக் பரூக்கி, அப்துல்லா அஹமதுசாய், நுர் உல் ரஹ்மான்.</p>]]></content:encoded></item><item><title>கண்ணீருடன் அரசுக்கு ஆராய்ச்சி மாணவர் கேள்வி ? மாணவரின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/with-tears-research-student-questions-government-udayanidhi-stalin-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/with-tears-research-student-questions-government-udayanidhi-stalin-condemns#comments</comments><guid isPermaLink="false">fb169d85-1316-448d-bd95-ff5d22e900dd</guid><pubDate>Thu, 17 Sep 2026 13:38:04 +0000</pubDate><atom:updated>2026-09-17T13:38:04.505Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Condemn,அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/1mjxqx4n/TNPSC-4.png" width="1920"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/1mjxqx4n/TNPSC-4.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கண்ணீர் மல்க கேள்வி</h2><p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijays-visit-to-england-has-proven-to-be-a-successful-one">அரசு </a>தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் என்ன அடிமையா இரு படிக்காதன்னு சொல்லிடுங்கள் என்று வீடியோ வெளியிட்டு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசுக்கு கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்</p> <h2>கண்டனம் </h2><p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், ஆதரவாக எதிர்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-brought-feudal-politics-to-common-people-udayanidhi-stalin">உதயநிதி  </a>ஸ்டாலின் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்</p><p>இது குறித்து தனது சமூகவலைத்தளபதிவில் கூறப்பட்டுள்ளதாவது </p><p>சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் சோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.</p><p>தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி  தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.</p><h2>இடையூறு ஏற்படக்கூடாது</h2><p>மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.</p> <p>அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-condemn-tvk-government">ரீல்ஸ்</a> அரசு துணை நிற்க வேண்டும்.</p><p>என் இவ்வாறு தனது பக்கத்தில் தெரிவித்துள்ளார்</p> ]]></content:encoded></item><item><title>மதுரை எய்ம்சில் புறநோயாளிகள் பிரிவு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ல் செயல்படும்: மத்திய அரசு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/centre-informs-madras-highcourt-for-outpatient-department-serviceswould-commence-at-aiims-madurai-from-january-2027</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/centre-informs-madras-highcourt-for-outpatient-department-serviceswould-commence-at-aiims-madurai-from-january-2027#comments</comments><guid isPermaLink="false">8e16b8f2-9ff3-4c40-ae59-d0fb35b2cdab</guid><pubDate>Thu, 17 Sep 2026 11:58:16 +0000</pubDate><atom:updated>2026-09-17T11:58:16.373Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,Chennai High court,சென்னை ஐகோர்ட்,மதுரை எய்ம்ஸ்,Madurai AIIMS</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/w17wv2ij/aiims.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AIIMS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/w17wv2ij/aiims.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</strong></em></p><p>மதுரை தோப்பூரை அடுத்த கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.</p><p>ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடந்த 2024-ம் ஆண்டு மே 22-ம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. மொத்த திட்டப்பணிகளையும் 33 மாதங்களுக்குள், அதாவது 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>57 சதவீத பணி நிறைவு</h2><p>இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 31 நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 57 சதவீத பணிகள் நிறைவு அடைந்துள்ளன. அங்கு புறநோயாளிகள் பிரிவு 2027, ஜனவரி 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த பாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் பணிகள் விரைவாக முடிக்கப்படாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. ஆகவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.</p><p>இந்த மனு  தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில், 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 5 பேட்ச் மாணவர்களும் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் தங்கியிருந்த நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் சொந்த வளாகத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர்.</p><h2>அடுத்த ஆண்டு செயல்படும்</h2><p>எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான புறநோயாளிகள் பிரிவு 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 57 சதவீத பணி நிறைவு அடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டது.</p><p>இவற்றை பதிவுசெய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>யூடியூப் சேனல் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் - லாரி டிரைவரின் நெகிழ்ச்சி பயணம்</title><link>https://www.maalaimalar.com/news/national/earning-lakhs-through-youtube-channel-truck-drivers-touching-journey</link><comments>https://www.maalaimalar.com/news/national/earning-lakhs-through-youtube-channel-truck-drivers-touching-journey#comments</comments><guid isPermaLink="false">c07253f7-9a2b-41de-bcd5-7de51d9aacd8</guid><pubDate>Thu, 17 Sep 2026 11:48:13 +0000</pubDate><atom:updated>2026-09-17T11:48:13.756Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>யூடியூப் சேனல்,YouTube Channel,lorry driver,லாரி டிரைவர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mfexmyr7/Untitled-design-63.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand truck driver Rajesh Rawani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mfexmyr7/Untitled-design-63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்டில் சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவர், தனது நீண்ட தூர பயணங்களின் போது சாலைகளில் வாகனத்தை நிறுத்தி சமைப்பதை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவிட்டதை தொடர்ந்து, தற்போது மாதத்திற்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் ஈட்டி வருகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">ஜார்க்கண்டின்</a> ஜம்தாரா மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் ரவானி என்பவர், தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சரக்கு லாரியை ஓட்டி வந்தார். </p><p>இதையடுத்து இவர் தனது நீண்ட தூர பயணங்களின் போது வாகனத்தை நிறுத்தி சமைத்துவிட்டு, பின்னர் அதை புகைப்படம் எடுத்து தனது குடும்பத்திற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். </p><h3><strong>யூடியூப் சேனல்</strong></h3><p>இந்த வீடியோக்கள் சிறப்பாக இருந்ததால் ஓட்டுநர் ராஜேஷின் மகனான சாகர் ரவானி, அவற்றை தொகுத்து யூடியூப்பில் பதிவேற்ற தொடங்கி, 2021-இல் ‘ஆர் ராஜேஷ் வ்லாக்ஸ்’ என்ற சேனலையும் தொடங்கினார்.</p><p>மேலும் அவர் இந்த புகைப்படங்களை முதலில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அப்போது பயனர்கள் அவரிடம், தாங்கள் சமைக்கும் மட்டன், சிக்கன், மீன் மற்றும் பன்னீர் போன்ற உணவுகளின் தயாரிக்கும் முறைகளை வீடியோவாக எடுத்து பதிவிடுமாறு கூறினர்.</p><h3><strong>வைரல் வீடியோ</strong></h3><p>இதையடுத்து சாலையோரங்களில் தான் சமைப்பதை முழுநீள வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ பதிவிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சுமார் 4,50,000 பார்வைகளை பெற்றது.</p><p>மேலும் உணவு சமைக்கும் வீடியோக்கள் பயனர்களிடம் அதிகளவில் பார்வையாளர்களைப் பெற்று, யூடியூப்பில் ராஜேஷ் வ்லாக்ஸ் சேனலை வளர்ச்சிப் பாதையில் செலுத்தியது.</p><h3><strong>மாத வருமானம்</strong></h3><p>இதுகுறித்து ராஜேஷ் அளித்த நேர்காணல் ஒன்றில், தனது ஓட்டுநர் பணியில் மாதத்திற்கு சுமார் 25,000 முதல் 30,000 ரூபாய் வரை சம்பாதித்ததாக கூறினார்.</p><p>ஆனால் தற்போது யூடியூப் மூலம் அவரின் மாத வருமானம் சுமார் 4 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் உயர்ந்து, சில சமயங்களில் ஒரே மாதத்தில் 18 லட்சம் ரூபாய் என்ற உச்சத்தையும் தொட்டது.</p><h3><strong>ஆனந்த் மஹிந்திரா பாராட்டு</strong></h3><p>ராஜேஷ் வ்லாக்ஸ் சேனலானது பிரபல இந்திய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தையும் பெற்றது. மேலும் ஓட்டுநர் ராஜேஷை, விடாமுயற்சி மற்றும் அன்றாட உத்வேகத்தின் உண்மையான சின்னம் என ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளத்தில் பாராட்டினார்.</p><p>ராஜேஷ் யூடியூப் மூலம் கிடைத்த வருமானம் மூலம், தற்போது தனது கனரக வாகனத்தை குளிரூட்டப்பட்ட அதிநவீன சொகுசு வாகனமாக மாற்றியுள்ளார்.</p><p>யூடியூப்பில் ‘ஆர் ராஜேஷ் வ்லாக்ஸ்’ சேனலை கிட்டத்தட்ட 30 லட்சம் பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும் இன்ஸ்டாகிராமில் அவரது கணக்கை சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உயிரைப் பணயம் வைத்து நீரில் மூழ்கிய பெண்ணை மீட்ட  இரு பள்ளி மாணவர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/teenage-boys-rescue-woman-jumping-into-canal</link><comments>https://www.maalaimalar.com/news/national/teenage-boys-rescue-woman-jumping-into-canal#comments</comments><guid isPermaLink="false">f60a1261-5646-43d7-98d4-3b67998e1234</guid><pubDate>Thu, 17 Sep 2026 11:45:50 +0000</pubDate><atom:updated>2026-09-17T11:45:50.967Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,Rescue Mission,உத்தரப் பிரதேசம்,Bravery Award,Teen Heroes,உயிர்காத்த மாணவர்கள்,Humanity Still Exists,மனிதாபிமானம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/a2aswfiq/Bravery-Award" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bravery Award ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/a2aswfiq/Bravery-Award?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/uttar-pradesh">உத்தரப் பிரதேசத்தின்</a> மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக வேகமாக ஓடும் ஆற்று வாய்க்காலில் குதித்த ஒரு பெண்ணை, இரண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவர்களின் இந்தத் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p><p>இந்தச் சம்பவம் நிச்லால் பகுதியில் உள்ள நாராயணி ஆற்றின் தியோரியா கிளை வாய்க்கால் பாலத்தில் நடைபெற்றுள்ளது.</p><h2>குடும்பத் தகராறில் நேர்ந்த விபரீதம்</h2><p>நேரடி சாட்சியங்களின்படி, சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. </p><p>தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த அந்தப் பெண் தனது மொபைல் போனை சாலையில் தூக்கி வீசிவிட்டு, வேகமாக வாய்க்காலை நோக்கி ஓடியுள்ளார்.</p><p>குடும்பத்தினர் சுதாரிப்பதற்குள், அவர் பாலத்திலிருந்து வாய்க்காலில் குதித்துவிட்டார்.</p><p>ஆற்றின் நீர்வரத்து மிக வேகமாக இருந்ததால், அந்தப் பெண் நொடிப் பொழுதில் நீரோட்டத்தோடு அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அலறியடித்தனர்.</p><p> பலர் பாலத்தின் அருகில் திரண்ட போதிலும், நீரோட்டம் மிகவும் உக்கிரமாக இருந்ததால் ஆற்றில் இறங்கி அவரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.</p><h2>மீட்பில் இறங்கிய 16 வயது சிறுவர்கள்</h2><p>அந்த இக்கட்டான சூழ்நிலையில், 'மசிஹ் சேவாஷ்ரம் இன்டர் காலேஜ்' பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர்களான கிருஷ்ணா குப்தா மற்றும் சதாம் உசேன் இருவரும் உடனடியாக வாய்க்காலில் குதித்தனர்.</p><p>வேகமாகப் பாய்ந்த நீரோட்டத்துடன் கடுமையாகப் போராடி நீந்திய அந்த இரு சிறுவர்களும், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை நெருங்கி, அவர் நீரில் மூழ்காதவாறு பிடித்துக்கொண்டனர். </p><p>நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்தப் பெண்ணை பத்திரமாக ஆற்றின் கரைக்கு இழுத்து வந்தனர். அப்போது கரையில் இருந்த பொதுமக்களும் கைகோர்த்து அந்தப் பெண்ணை மேலே தூக்க உதவினர்.</p><h2>குவியும் பாராட்டுகளும் பரிசுகளும்</h2><p>மாணவர்கள் அந்தப் பெண்ணை மீட்பதை அங்கிருந்த ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, மாணவர்களின் புத்திக்கும் வீரத்திற்கும் நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p><p>மாணவர்களின் இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டி, மகாராஜ்கஞ்ச் எஸ்பி சக்தி மோகன் அவஸ்தி இரு மாணவர்களையும் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.</p><p>மேலும், பள்ளி முதல்வர் ஃபாதர் பிரவீன் புலிந்தநாதனும் தங்களது பள்ளி சார்பில் மாணவர்களுக்குச் சிறப்புப் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பெண் தற்கொலை முயற்சி எடுத்ததற்கான குடும்பக் பின்னணி குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">தீவிர விசாரணை</a> நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சமூக நீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயம்: பெரியார் பிறந்த நாளில் முதலமைச்சர் விஜய் உறுதிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vows-to-build-social-justice-society-on-periyar-birthday</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vows-to-build-social-justice-society-on-periyar-birthday#comments</comments><guid isPermaLink="false">6711655a-dc08-48c2-ad4e-7c3a570628bd</guid><pubDate>Thu, 17 Sep 2026 11:03:19 +0000</pubDate><atom:updated>2026-09-17T11:03:19.990Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>periyar,சமூக நீதி நாள்,Social Justice Day,CMVIJAY,முதலமைச்சர் விஜய்,பெரியார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/4n0ouj4a/Untitled-design-64.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Periyar Birth Anniversary Pledge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/4n0ouj4a/Untitled-design-64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை தலைமைச் செயலகத்தில் பெரியாரின் 147வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்தார்.</p><p>தமிழ்நாட்டில் இன்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பெரியாரின்</a> 147வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   </p><p>சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்களுடன் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்தார். அப்போது,</p><p>”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன்.</p><p>சுயமரியாதையும், ஆளுமை திறனும், பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்து கொள்வேன்.</p><p>மானுடத்தின் மீது பற்றையும், மனிதபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்”.</p><p>இவ்வாறு முதலமைச்சர் உறுதிமொழி எடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலையுடன் தங்கச்சங்கிலியை மறந்து ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-chain-lost-as-retired-officer-immerses-vinayagar-idol-in-river</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-chain-lost-as-retired-officer-immerses-vinayagar-idol-in-river#comments</comments><guid isPermaLink="false">2677daf4-b2f7-4a36-ba18-7fc120913db9</guid><pubDate>Thu, 17 Sep 2026 10:41:40 +0000</pubDate><atom:updated>2026-09-17T10:41:40.553Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,Vinayagar Chaturthi,விநாயகர் சிலை,Uppanar River,Gold Chain Lost,தங்கச்சங்கிலி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7tlpfgqi/Uppanar-River" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uppanar River ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7tlpfgqi/Uppanar-River?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் அருகே விநாயகர் சிலையைக் கரைக்கும்போது, கவனக்குறைவாக சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 1½ பவுன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF">தங்கச்சங்கிலியையும் </a>சேர்த்து ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>பின்னணி</strong></h2><p>நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி விழா </a>கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 62) என்ற ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து பக்தி சிரத்தையுடன் வழிபாடு செய்துள்ளார்.</p><p> மேலும், அந்த விநாயகர் சிலைக்குத் தனக்குச் சொந்தமான 1½ பவுன் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளார்.</p><h2><strong>ஆற்றில் வீசப்பட்ட நகை</strong></h2><p>விநாயகர் சதுர்த்தியின் 3-வது நாளான நேற்று, வீட்டில் இருந்த விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க ராமமூர்த்தி முடிவு செய்தார். இதற்காக நேற்று காலை 9.30 மணி அளவில் கடலூர் தேவனாம்பட்டினம் அருகில் உள்ள உப்பனாற்றுக்கு அவர் சென்றார்.</p><p>அங்கு உப்பனாற்றுப் பாலத்தின் மீது விநாயகர் சிலையை வைத்து இறுதிப் பூஜைகளைச் செய்த அவர், பக்தி பரவசத்தில் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச்சங்கிலியை எடுக்க மறந்தார். நகையுடன் சேர்த்தே விநாயகர் சிலையை அப்படியே தூக்கி ஆற்றில் வீசினார்.</p><h2><strong>8½ மணி நேரத் தீவிரத் தேடுதல்</strong></h2><p>சிலையைத் தண்ணீரில் வீசிய சில நிமிடங்களுக்குப் பிறகுதான், தங்கச்சங்கிலியைக் கழற்றாமல் சிலையோடு சேர்த்து ஆற்றில் வீசிவிட்டோமே என்ற அதிர்ச்சி உண்மை ராமமூர்த்திக்கு தெரியவந்தது. </p><p>இதனால் பதறிப்போன அவர், உடனடியாக அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் ஆற்றில் இறங்கி நகையைத் தேடத் தொடங்கினார்.</p><p>இதுகுறித்து <strong>கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கும்</strong> உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் ஆற்றில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.</p><p>காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேடுதல் பணி, மாலை 6.00 மணி வரை சுமார் 8½ மணி நேரம் நீடித்தது.</p><h2><strong>ஏமாற்றத்துடன் திரும்பிய அதிகாரி</strong></h2><p>ஆற்றின் நீரோட்டம் மற்றும் சேறு காரணமாக, தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகத் தேடியும் விநாயகர் சிலையோ அல்லது அதனுடன் சென்ற 15 பவுன் தங்கச்சங்கிலியோ கிடைக்கவில்லை.</p><p> தான் தவறுதலாக நகையைத் தொலைத்த இடத்தையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராமமூர்த்தி, மாலை வரை நகை கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றத்துடனும் சோகத்துடனும் வீடு திரும்பினார்.</p><p>மறதி காரணமாக விநாயகர் சிலையுடன் 1½ பவுன் தங்க நகையை ஆற்றில் வீசிய சம்பவம் கடலூர் பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ், ரீல் விடுவதே மிகப்பெரிய சாதனை: தவெக ஆட்சியை சாடிய எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-condemn-tvk-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-condemn-tvk-government#comments</comments><guid isPermaLink="false">aefa2caa-4d54-4225-9616-5876862da363</guid><pubDate>Thu, 17 Sep 2026 10:40:49 +0000</pubDate><atom:updated>2026-09-17T10:40:49.957Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/keugwy4k/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EPS, Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/keugwy4k/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்ற முதலமைச்சர் விஜய் அமைச்சர், செயலாளரை ஏன் அழைத்துச் செல்லவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.</strong></em></p><p>சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தொழில் முதலீட்டை ஈர்க்க சென்றிருந்தால் துறைசார்ந்த அதிகாரிகளை அழைத்துச் சென்றிருப்பார் விஜய்.</p><p>முதலீட்டை ஈர்க்கும் பயணமா, இன்பச்சுற்றுலா சென்றாரா என மக்கள் கேட்கும் நிலை உள்ளது.</p><p>தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்துடன் லண்டனில் ஒப்பந்தம் ஏன் போடப்பட்டது என விளக்கம் அளிக்க வேண்டும்.</p><p>மக்கள் பிரச்சனைக்கு சட்டப்பேரவையில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.</p><p>தமிழ்நாட்டில் கடுமையான மின்வெட்டு. அமைச்சர்களைக் கேட்டால் மின்வெட்டு இல்லை என கூறுகின்றனர்.</p><p>மின்வெட்டு இல்லை என்றால் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் ஏன்? மக்களின் தூக்கத்தைத் தொலைத்து விட்டது தவெக அரசு. நிர்வாகத் திறமையின்மையே மின்வெட்டுக்கு காரணம்.</p><h2>மின்வெட்டால் மக்கள் போராட்டம்</h2><p>நிர்வாகத் திறமை இல்லாததால் தவெக அரசு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குகின்றனர். மின்வெட்டால் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்</p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது அரசு. கடன் இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் எதற்கு?</p><p>தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. </p><p>தவெக ஆட்சியில் அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தவெக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலை 25 சதவீதம் உயர்வு.</p><p>ரீல்ஸ், ரீல் விடுவதே தவெக ஆட்சியின் மிகப்பெரிய சாதனை. பயிர்க்கடன் தள்ளுபடியில் விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றிவிட்டது</p><p>திமுக-அதிமுக இடையே கள்ள உறவு என்பது அபத்தம். தவெகவினருக்கு எதுவும் தெரியவில்லை.</p><h2>திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்</h2><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல், தேவையற்ற தேர்தல் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>20 ஆண்டுகளில் இல்லாத கடும் மின்சார தட்டுப்பாடு: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வங்கதேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/bangladesh-faces-worst-power-crisis-in-20-years-treating-patients-by-candlelight</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/bangladesh-faces-worst-power-crisis-in-20-years-treating-patients-by-candlelight#comments</comments><guid isPermaLink="false">12d8f78a-26cc-46c8-a954-665b68e8f8f5</guid><pubDate>Thu, 17 Sep 2026 10:05:16 +0000</pubDate><atom:updated>2026-09-17T10:05:16.425Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,வங்கதேசம்,candlelight,மின்சார தட்டுப்பாடு,LNG,டாக்கா,BANGALADESH POWER CRISIS</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/xh66kz4q/ZFGGTJHKJ.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BANGALADESH POWER CRISIS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/xh66kz4q/ZFGGTJHKJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உலகம் (World)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்திற்கு தேவையான மின்சாரத்தில் ஒரு பகுதியை இந்தியா ஏற்றுமதி செய்து வந்தபோதிலும், தற்போதைய சூழலில் இந்தியாவால் உடனடி முழு நிவாரணத்தையும் வழங்க இயலவில்லை. </p><p>வங்கதேச நாடு தன் வரலாற்றிலேயே சந்திக்காத அளவுக்கு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகக் கடுமையான எரிசக்தி மற்றும் மின்சார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நாட்டின் தலைநகரான டாக்கா முதல் கிராமப்புற மாவட்டங்கள் வரை தினமும் பல மணி நேரத் தொடர் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பணிகள் அனைத்தும் மின்சாரமின்மையால் முடங்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.</p><h2>டார்ச் வெ<strong>ளிச்சத்தில் அவசர சிகிச்சை</strong></h2><p>நாட்டின் பல மாவட்டங்களில் மின்சார விநியோகம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை அளிப்பதில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. பரிசால் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், தீவிர மின்வெட்டு காரணமாக மின் உற்பத்தி இயங்காத நிலையில், செவிலியர்களும் மருத்துவர்களும் செல்போன் டார்ச் மற்றும் டார்ச் லைட் வெளிச்சத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திகைப்பூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><h2>எரி<strong>வாயு தட்டுப்பா</strong>டு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/young-female-doctor-commits-suicide-by-injecting-anesthetic-in-puducherry-heart-wrenching-note-left-behind">வங்கதேசத்தின்</a> மின் உற்பத்தியில் பெரும்பகுதி இயற்கை எரிவாயுவைச் சார்ந்தே அமைந்துள்ளது. ஆனால், சமீபகாலமாக உள்நாட்டு எரிவாயு உற்பத்தி பெருமளவில் குறைந்ததோடு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவின் அளவும் முடங்கியுள்ளது. மேலும், ஜூலை மாதத்தில் மகேஷ்காளியில் உள்ள முக்கிய மிதக்கும் எரிவாயு முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. </p><p>இதன் விளைவாக, நாட்டில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் இன்றி மூடப்பட்டுள்ளன. மின்சார மற்றும் எரிவாயு பற்றாக்குறை வங்கதேசத்தின் முதன்மை பொருளாதார ஆதாரமான ஆயத்த ஆடை துறையை கடுமையாக பாதித்துள்ளது. உற்பத்தி கோடிக்கணக்கில் தடைபட்டுள்ளதால், பல ஆலைகள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதுதவிர, உர ஆலைகள் மற்றும் இரும்புத் தொழிற்சாலைகளும் மின்வெட்டினால் முடங்கியுள்ளன.</p><h2>இந்தியாவால் உ<strong>டனடியாக உதவ முடியாதது</strong> ஏன்?</h2><p>வங்கதேசத்திற்கு தேவையான மின்சாரத்தில் ஒரு பகுதியை இந்தியா ஏற்றுமதி செய்து வந்தபோதிலும், தற்போதைய சூழலில் இந்தியாவால் உடனடி முழு நிவாரணத்தையும் வழங்க இயலவில்லை. இந்தியாவின் அடானி மின் நிறுவனத்தின் கோடா மின் நிலையத்திலிருந்து வங்கதேசத்திற்கு வழங்கப்படும் மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பிற எல்லை கடப்பு மின் பரிமாற்ற எல்லை வரம்புகள் காரணமாக, கூடுதல் மின்சாரத்தை உடனடியாக வங்கதேசத்திற்கு அனுப்ப முடியாத தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. </p><p>பொதுமக்களின் கொந்தளிப்பும் போராட்டங்களும் அதிகரித்து வரும் நிலையில், எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க வங்கதேச அரசு சர்வதேச அளவில் மாற்று வழிகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>காதலில் முக்கியம் கெமிஸ்ட்ரியா? கம்ஃபோர்ட்டா? - அர்ஜுன் தாஸ் &amp; ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் #Love&apos; திரைப்படம் - நெட்ஃப்ளிக்ஸில் அக்டோபர் 2 முதல்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/love-web-series-explores-modern-relationships-arjun-das-aishwarya-lakshmi-on-netflix-from-october-2</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/love-web-series-explores-modern-relationships-arjun-das-aishwarya-lakshmi-on-netflix-from-october-2#comments</comments><guid isPermaLink="false">92c407a9-c8d0-428a-9ae8-5c3ba503b443</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:58:52 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:58:52.080Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Netflix,Love,Arjun Das,Aishwarya lekshmi,soundarya rajinikanth,லவ்,balaji mohan,LoveOnNetflix,Love WebSeries</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/bgj9ngvm/Aishwarya-Lekshmi-Arjun-Das" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aishwarya Lekshmi - Arjun Das]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/bgj9ngvm/Aishwarya-Lekshmi-Arjun-Das?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்றைய டிஜிட்டல் யுகத்தில் காதல் என்பது நேரில் சந்தித்து மலர்வதை விட, டேட்டிங் ஆப்களில் ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என தொடங்குகிறது. </p><p>இந்த நவீன காதல் மற்றும் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய தமிழ் <a href="https://www.maalaimalar.com/topic/web-series">வெப் சீரிஸ்</a> தான் '#Love'.</p><p>இந்த தொடர் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் <a href="https://www.maalaimalar.com/topic/netflix">நெட்ஃப்ளிக்ஸ் </a>தளத்தில் மட்டும் வெளியாக உள்ளது.</p><p>பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் இந்த தொடரை இயக்கியுள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். </p><p>May6 Entertainment Factory நிறுவனம் இதை தயாரித்துள்ளது. திரைக்கதையை நிர்மல் வில்லியம்ஸ் எழுத, ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாக பணியாற்றியுள்ளனர்.</p><h2>நட்சத்திரங்கள்</h2><p>இதில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அர்ஜுன் தாஸ்</a> மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">ஐஸ்வர்யா லட்சுமி</a> ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி தான் தொடரின் பலமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.</p><figure><img alt="Aishwarya Lekshmi - Arjun Das" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ha485ejy/Aishwarya-Lekshmi-Arjun-Das" /></figure><h2>கதை என்ன?</h2><p>FOUND மற்றும் Find My Bae என்ற இரண்டு பிரபல டேட்டிங் ஆப்களை சுற்றி கதை நகர்கிறது. இந்த ஆப்களின் நிறுவனர்களான தாரா மற்றும் மேத்யூ, மற்றவர்களுக்கு சரியான துணையை தேடிக் கொடுப்பதில் வல்லவர்கள். </p><p>ஆனால் தங்களுக்கான காதலை தேடுவதில் தோற்றுப் போகிறார்கள். இவர்கள் போட்டியாளர்களாக சந்திக்கும் போது உருவாகும் காதல், மோதல், நட்பு, குடும்ப உறவுகள் என அனைத்தையும் நகைச்சுவையுடன் சொல்லும் தொடராக இது உருவாகியுள்ளது.</p><p>இதுகுறித்து நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்க துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறுகையில், "இந்தியாவில் தென்னிந்திய கதைகளுக்கான முதலீட்டை அதிகரித்து வருகிறோம். </p><p>இன்றைய தலைமுறையினரின் காதலை பிரதிபலிக்கும் கதை இது. அர்ஜுன் தாஸ், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">ஐஸ்வர்யாவின் </a>இயல்பான நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்துள்ளது" என்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/soundarya-rajinikanth">சௌந்தர்யா ரஜினிகாந்த்</a> கூறுகையில், "உறவுகளின் மாற்றத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் கதை. பாலாஜி உருவாக்கிய கதாபாத்திரங்கள் குறைகளுடன் இருப்பதால் பார்வையாளர்கள் எளிதில் கனெக்ட் ஆவார்கள்" என்றார்.</p><p>இயக்குனர் பாலாஜி மோகன் கூறுகையில், "காதல் மாறியிருக்கிறது, சந்திக்கும் முறை மாறியிருக்கிறது, ஆனால் உணர்வுகள் மாறவில்லை. அதை தான் இந்த தொடரில் சொல்லியிருக்கிறோம்" என்றார்.</p><p>காதலில் முக்கியம் கெமிஸ்ட்ரியா? கம்ஃபோர்ட்டா? என்ற கேள்விக்கான பதிலை அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் காணலாம் என்று தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகுசாதன கிரீமை பயன்படுத்திய 18 பெண்களுக்கு சிறுநீரக கோளாறு: இந்திய மருத்துவர்கள் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/kidney-disorder-in-18-women-after-using-pakistani-cosmetic-cream-indian-doctors-warn</link><comments>https://www.maalaimalar.com/news/national/kidney-disorder-in-18-women-after-using-pakistani-cosmetic-cream-indian-doctors-warn#comments</comments><guid isPermaLink="false">1bf3a402-db57-459d-b629-67235c3534f2</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:45:10 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:45:10.854Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Skin Care,kidney disorder,skin whitening,சிறுநீரக கோளாறு,சாந்தினி ஒயிட்னிங் கிரீம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7kaoaqjc/Untitled-design-62.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan cosmetic cream kidney damage alert]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7kaoaqjc/Untitled-design-62.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்திய நபர்களுக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டு புரதம் வெளியேறியதை தொடர்ந்து, அந்த பொருட்களை இந்தியாவில் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம் என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகாராஷ்டிரா</a> மாநிலம் நாக்பூரில் உள்ள அழகு சாதன விற்பனை மையங்களில், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கோரி பியூட்டி கிரீம், சாந்தினி ஒயிட்டனிங் கிரீம் ஆகியவை உரிய அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தன. </p><p>இதையடுத்து மருத்துவர் பரிந்துரை இல்லாமல் அந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்திய 18 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறுநீரகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h3><strong>உடம்பில் பாதரசம்</strong></h3><p>இவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அழகு சாதன பொருட்களை பயன்படுத்தியவர்கள் உடம்பில் அளவுக்கு அதிகமாக சுமார் 100 முதல் 105 மடங்கு நச்சுத்தன்மை கொண்ட ‘பாதரசம்’ (mercury) இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>இதையடுத்து பாதிக்கப்படவர்களின் சிறுநீரகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்களுக்கு மெம்ப்ரேனஸ் நெஃப்ரோபதி (Membranous Nephropathy) என்ற பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர்.</p><h3><strong>சிறுநீரக கோளாறு</strong></h3><p>இந்த வகையான சிறுநீரக பாதிப்பின் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து அதிகளவிலான புரதம் சிறுநீர் வழியாக வெளியேறி கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.</p><p>மேலும் அவர்களுக்கு புரத ஆண்டிஜென் ஆன NELL-1 தொற்று இருப்பதும் பரிசோதனையின் முடிவில் கண்டறியப்பட்டது.</p><h3><strong>சிறுநீரக மருத்துவர்</strong></h3><p>இதுகுறித்து நாக்பூரை சேர்ந்த சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் மோனாலி சாஹூ கூறுகையில், “பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை பரிசோதித்ததில், பாதரசத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது” என்று கூறினார்.</p><p>இந்த சம்பவம் குறித்து பேசிய நாக்பூர் போலீசார், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அழகுசாதன பொருள் நுகர்வோரை எப்படி சென்றடைந்தது என்பது கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.</p><p>மேலும் இந்த பொருட்கள் மருத்துவரின் பருந்துரைச்சீட்டு இல்லாமல் உள்ளூர் கடைகள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h3><strong>மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை</strong></h3><p>இந்த நிலையில் கோரி பியூட்டி கிரீம் மற்றும் சாந்தினி ஒயிட்டனிங் கிரீம், இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் அங்கீகரிக்கப்படாதவை என்றும், அவற்றில் அதிகளவில் நச்சுத்தன்மை கொண்ட உலோகங்கள் உள்ளதாகவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தெரிவித்துள்ளது.</p><p>மேலும் இந்த வகையான அழகு சாதன பொருட்களை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம் எனவும், முன்னதாக அவற்றை வாங்கி பயன்படுத்தியவர்கள் தங்கள் உடல்களில் ஏற்படும், முகம் அல்லது கால் வீக்கம், வழக்கத்திற்கு மாறான நுரைத்த சிறுநீர், சோர்வு போன்ற நோய் அறிகுறிகளை புறக்கணிக்க கூடாது என்றும் சிடிஎஸ்சிஓ எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>மேலும் இந்த பொருட்கள் மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் உள்ளூர் கடைகள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை- சட்டப்படி எதிர்கொள்வோம்: ஆர்.எஸ்.பாரதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharathi-speech-in-press-meet-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharathi-speech-in-press-meet-in-chennai#comments</comments><guid isPermaLink="false">cba8889f-e1a4-4d33-938e-3b20384d586b</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:42:08 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:42:08.677Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,RS Bharathi,ஆர்எஸ் பாரதி,anbil mahesh,அன்பில் மகேஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mdvhy3p0/RSB.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rs bharathi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mdvhy3p0/RSB.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை சட்டப்படி எதிர்கொள்வோம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.</strong></em></p><p>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.</p><h2>அரசியல் காழ்ப்புணர்ச்சி</h2><p>இதுதொடர்பாக அன்பில் மகேஷ் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற சோதனைகளை டேக் டைவர்ஷன் ஆக தவெக அரசு மேற்கொண்டுள்ளது என தெரிவித்தார்.</p><p>இந்நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 6 படுகொலைகள் நடைபெற்றுள்ளது. </p><p>பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசாக தான் இந்த அரசு நடைபெற்று வருகிறது.</p><p>அதுமட்டுமல்ல, விலைவாசி கடந்த 4 மாதங்களுக்கு முன் இருந்ததைவிட தற்போது அதிக அளவு உயர்ந்துள்ளது.</p><p>தமிழ்நாடு முழுவதும் சீரான மின் வினியோகம் இல்லை. பல ஊர்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. </p><h2>பிரச்சனைகளை திசைதிருப்பும் தவெக அரசு</h2><p>இதையெல்லாம் சரிசெய்ய முடியாத அரசு, பிரச்சனைகளை திசைதிருப்பும் போக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் ரெய்டு என்கிற பெயரில் மடைமாற்றப் பார்க்கிறது.</p><p>தி.மு.க. வரலாற்றில் கடந்த 50 ஆண்டு காலமாக பல்வேறு ரெய்டுகளைச் சந்தித்து இருக்கிறோம். எதிலும் உண்மை இல்லாத காரணத்தினால் இதுவரை எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை.</p><p>த.வெ.க. ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது. இதனை எங்களது சட்டத்துறை ஆதாரத்துடன் சேகரித்து வருகிறது. </p><p>த.வெ.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் ஊழல்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>