<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 17 Sep 2026 05:29:38 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 17 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-september-2026#comments</comments><guid isPermaLink="false">188cc8f4-2e10-453b-a877-d080750f3dbf</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:55:51 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:29:10.015Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/wgeqodsr/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/wgeqodsr/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/former-union-minister-sudarsana-natchiappan-has-passed-away">மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்</a></p><p>* காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.</p><p>* 1999ல் மக்களவைக்கு சிவகங்கை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/chinese-president-collapsed-after-suffering-a-stroke-upon-arriving-in-delhi-for-the-brics-summit-news-spreading-like-wildfire">"பிரிக்ஸ் மாநாட்டுக்கு டெல்லி வந்தபோது பக்கவாதம் வந்து மயங்கி விழுந்த சீன அதிபர்?.." தீயாக பரவும் தகவல் <br></a></p><p>*பிரதமர் மோடி ஏற்பாடு செய்த இரவு விருந்தில் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை.</p><p>*ஜி ஜின் பிங்கைப் பார்த்து, "எல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று பிரதமர் மோடி கேட்டதும் விவாதப் பொருளாக இருந்தது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pm-modi-birthday-mk-stalin-anbumani-and-annamalai-wishes">பிரதமர் மோடி பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், அன்புமணி, அண்ணாமலை வாழ்த்து</a></p><p>* பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் </p><p>* பிரதமர் மோடியின் இடைவிடாத உத்வேகம் லட்சக்கணக்கானோருக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-9-2026">GOLD PRICE TODAY: சற்றே சரிந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-pm-modi">பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து</a></p><p>* இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.</p><p>* வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-upgrade-human-resources-and-infrastructure-without-closing-schools">அரசுப் பள்ளிகளின் மூடுவிழா: பள்ளிகளை மூடாமல், மனித வளம் மற்றும் கட்டமைப்பை உயர்த்துக! - அன்புமணி ராமதாஸ்</a></p><p>* அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைவது என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்கதையாகி வருகிறது. </p><p>* அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2024-25ஆம் ஆண்டில் 45.10 லட்சமாக இருந்தது. 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/f-15-brought-down-houthis-shoot-down-saudi-warplane-with-a-missile-in-yemen-video">மண்ணோடு மண்ணான F15.. ஏமனில் சவுதி போர் விமானத்தை ஏவுகணையால் துளைத்த ஹவுதிக்கள்- வீடியோ</a></p><p>*ஹவுதிக்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளது.</p><p>*ஒரே வாரத்தில் சவுதி 450 வானவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஏமன் குற்றம்சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-passes-bill-granting-trump-full-authority-to-impose-100-tariffs-on-india">இந்தியா மீது 100% வரிவிதிக்க டிரம்புக்கு முழு அதிகாரம் வழங்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றம்</a></p><p>*ரஷியாவின் வர்த்தகத்தை மட்டுப்படுத்தும் பல அம்சங்கள் மசோதாவில் உள்ளன.</p><p>*இந்த மசோதாவில் புதிய சட்டபூர்வ வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijays-visit-to-england-has-proven-to-be-a-successful-one">முதலமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது- தமிழ்நாடு அரசு</a></p><p>* தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>* லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் மற்றும் தான் தங்கியிருந்த ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு வழங்கிய தமிழ்ச் சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-periyar">பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணிப்போம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்!</p><p>* வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-mk-stalin-says-revolutionary-salutations-to-sun-of-rationalism-thanthai-periyar">பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.</p><p>* “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.</p> ]]></content:encoded></item><item><title>மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-union-minister-sudarsana-natchiappan-has-passed-away</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-union-minister-sudarsana-natchiappan-has-passed-away#comments</comments><guid isPermaLink="false">5f3348b0-4dcd-4272-9c7d-44a41c68610f</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:26:39 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:26:39.421Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Sudarsana Natchiappan,சுதர்சன நாச்சியப்பன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/745tslzo/sudarshana.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுதர்சன நாச்சியப்பன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுதர்சன நாச்சியப்பன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/745tslzo/sudarshana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுதர்சன நாச்சியப்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 78.</strong></em></p><p>சிவகங்கையில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் சுதர்சன நாச்சியப்பன் காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சுதர்சன நாச்சியப்பன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. </p><h2><strong>சுதர்சன நாச்சியப்பனின் வாழ்க்கை குறிப்பு</strong></h2><p>இ.எம். சுதர்சன நாச்சியப்பனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஏரியூர். எம்.ஏ.,பி.எல்., படித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/காங்கிரஸ்">காங்கிரஸ்</a> பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1999ல் மக்களவைக்கு சிவகங்கை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறைத் தலைவராகவும், 2002-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 2003-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும், 2004-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 2004-ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். மாநிலங்களவை தலைமைக் கொறடாவாக பணியாற்றி, மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெங்களூருவில் பரபரப்பு: காதல் மனைவியை கடத்திய ராஜஸ்தான் குடும்பம்- சினிமா பாணியில் கார் சேஸிங், 6 பேர் படுகாயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/love-marriage-kidnap-drama-in-bengaluru-rajasthan-family-car-chase-ends-in-accident</link><comments>https://www.maalaimalar.com/news/national/love-marriage-kidnap-drama-in-bengaluru-rajasthan-family-car-chase-ends-in-accident#comments</comments><guid isPermaLink="false">83601813-1cee-46a5-9881-0d3b7fed24a3</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:18:14 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:18:14.219Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,bengaluru,Rajasthan,woman rescued,ராஜஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/z28emmdm/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajasthan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/z28emmdm/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெற்றோருக்குத் தெரியாமல் தப்பி வந்த இளம் தம்பதியினர், பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தசராஹள்ளி பகுதியில் வீடு எடுத்து அமைதியாக வசித்து வந்தனர்.</p><p>பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனைத் திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வந்த 21 வயது இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினர் ஆட்களை அனுப்பி கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரர்களின் காரை பொதுமக்கள் விரட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்துகளில் 6 பேர் படுகாயமடைந்தனர்.</p><h2>காதல் திரு<strong>மணம்</strong> </h2><p><a href="https://www.maalaimalar.com/sports/womens-t20-cricket-rankings-indias-srisarani-tops-icc-bowling-charts">ராஜஸ்தான் </a>மாநிலத்தைச் சேர்ந்த பூஜா(21) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ்(23) என்பவரும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பூஜாவின் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பெற்றோருக்குத் தெரியாமல் தப்பி வந்த இளம் தம்பதியினர், பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தசராஹள்ளி பகுதியில் வீடு எடுத்து அமைதியாக வசித்து வந்தனர்.</p><h2>கடத்தல் ச<strong>ம்பவம்</strong></h2><p>இந்நிலையில், நேற்று மாலை பூஜாவின் குடும்பத்தினரால் அனுப்பப்பட்ட நான்கு பேர் கொண்ட கும்பல், தம்பதியினரின் வீட்டிற்குள் புகுந்தது. ஓம் பிரகாஷை மிரட்டிய அக்கும்பல், பூஜாவை பலவந்தமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி கடத்த முயன்றது. பூஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் ்கத்தினர், உடனடியாக காரை மறிக்க முயன்றனர். ஆனால், கடத்தல்காரர்கள் காரை அதிவேகமாக இயக்கித் தப்பியோடினர்.</p><h2>சினி<strong>மா பாணி சே</strong>ஸிங்</h2><p>சுதாரித்துக் கொண்ட பகுதி மக்கள், தங்கள் வாகனங்களில் கடத்தல் காரரை சினிமா பாணியில் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். இதனால் பீதியடைந்த காரை ஓட்டிச் சென்ற நபர், சாலையில் சென்ற பிற வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக மோதினார். இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2><strong>3 பேர் கை</strong>து</h2><p>காரை நிறுத்த முயன்ற பொதுமக்களை கடத்தல்காரர்கள் வெட்டுக்கத்தியால் தாக்க முயன்றதாகவும், கல்வீச்சு தாக்குதலுக்குப் பிறகே கார் நிறுத்தப்பட்டதாகவும் சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இறுதியில் பொதுமக்கள் காரைச் சூழ்ந்து பூஜாவை பத்திரமாக மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து விஜயநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், ராஜஸ்தானைச் சேர்ந்த ராகேஷ் (31), கரண் (25) மற்றும் அயான் (18) ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர். தப்பியோடிய கார் டிரைவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;பிரிக்ஸ் மாநாட்டுக்கு டெல்லி வந்தபோது பக்கவாதம் வந்து மயங்கி விழுந்த சீன அதிபர்?..&quot; தீயாக பரவும் தகவல் </title><link>https://www.maalaimalar.com/news/world/chinese-president-collapsed-after-suffering-a-stroke-upon-arriving-in-delhi-for-the-brics-summit-news-spreading-like-wildfire</link><comments>https://www.maalaimalar.com/news/world/chinese-president-collapsed-after-suffering-a-stroke-upon-arriving-in-delhi-for-the-brics-summit-news-spreading-like-wildfire#comments</comments><guid isPermaLink="false">8bc2af2d-ff58-4c0e-ab24-95d9ae5392f4</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:14:28 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:14:28.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Xi Jinping,ஜி ஜின்பிங்,BRICS Summit,பிரிக்ஸ் உச்சிமாநாடு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/yk0cskah/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாடு]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/yk0cskah/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீன அதிபர் ஜி ஜின் பிங் கடந்த வாரம் டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்தபோது மயங்கி விழுந்ததாகவும், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும் வதந்தி பரவி வருகிறது.</p> <p>கடந்த வார இறுதியில் செப்டம்பர் 12,13 டெல்லியில் 18வது <a href="https://www.maalaimalar.com/news/national/jaishankar-says-brics-summit-a-success">பிரிக்ஸ் உச்சிமாநாடு </a>நடைபெற்று முடிந்தது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். </p><p>மாநாட்டில் கலந்துகொள்ள சனிக்கிழமை இந்தியா வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் அன்றைய தினம் மாலை பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். </p><p>ஆனால் அதன்பின் பிரதமர் மோடி ஏற்பாடு செய்த இரவு விருந்தில் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை. சவுதி இளவரசரும் கலந்துகொள்ளவில்லை. ஞாயிறு, மாநாடு முடிந்த பின் ஜி ஜின்பிங் சீனா திரும்பினார். </p> <h2>பக்கவாதம்?</h2><p>இதனிடையே சீன அதிபர் ஜி ஜின் பங் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டபோது மயங்கி விழுந்ததாகவும், பின்னர் கடுமையான மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாகவும் வதந்திகள் பரவின.</p><p>குறிப்பாக நாடுகடத்தப்பட்டு அமெரிக்காவில் வாழும் சீன எதிர்க்கட்சித் தலைவர் வான் ஜுன் ஷி இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்பியதாக கூறப்படுகிறது.</p><h2>வதந்தி</h2><p>சமூக ஊடகப் பதிவில், வான் ஜுன் ஷி, உச்சி மாநாட்டின் போது உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜின் பிங்கிற்கு தனிப்பட்ட மருத்துவக் குழு அவசர சிகிச்சை அளித்ததாகவும், இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் இந்த விஷயம் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில், அவர் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஒரு சிறப்பு விமானத்தில் சீனாவுக்குத் திரும்ப வேண்டியிருந்தது என்றும் கூறினார்.</p><p>பெய்ஜிங்கில் தரையிறங்கிய உடனேயே, அவர் ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக ஒரு இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு பக்கவாதத்திற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் ஷி தெரிவித்தார்.</p><h2>ஆதாரம் இல்லை</h2><p>இருப்பினும், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சீன வெளியுறவு அமைச்சகம் அட்டவணைப்படி, ஜின் பிங் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். அவர் செப்டம்பர் 12 அன்று டெல்லிக்கு வந்து முதல் அமர்வில் உரையாற்றினார். </p><p>பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 13 ஆம் தேதி இரண்டாவது அமர்வில் கலந்துகொண்டு மதியம் டெல்லியிலிருந்து புறப்பட்டார். இந்திய அதிகாரிகள் விமான நிலையத்தில் அவருக்கு பிரியாவிடை அளித்தனர் என கூறப்பட்டுள்ளது.</p> <p>பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் ஜின் பிங் கலந்துகொள்ளவில்லை என்றாலும், நீண்ட பயணம் மற்றும் தொடர்ச்சியான சந்திப்புகள் காரணமாக அவர் ஓய்வு எடுத்திருந்ததாகவும், அவருக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சர் வாங் யி கலந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும், உச்சிமாநாட்டில் மோடி தனது உரையின் நடுவில் பேச்சை நிறுத்தி, ஜி ஜின் பிங்கைப் பார்த்து, "எல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று பிரதமர் மோடி கேட்டதும் விவாதப் பொருளாக இருந்தது.</p><p>இருப்பினும், இது உடல்நலப் பிரச்சினையால் அல்ல, மொழிபெயர்ப்பு ஹெட்போன்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே நிகழ்ந்தது என்று அறிக்கைகள் கூறுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் சிலைகள் பிரதிஷ்டை: விநாயகர் சதுர்த்தியில் ரூ.59 ஆயிரம் கோடி வர்த்தகம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rs-59000-crore-business-during-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/rs-59000-crore-business-during-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">64a1f469-f48a-440f-81e9-472630d44484</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:05:06 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:05:06.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar statue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/2t4x1vnj/vinayagar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சிலைகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/2t4x1vnj/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியின் போது ரூ.45,000 முதல் 59,000 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளது. இதில் ஐதராபாத்தின் பங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது சுமார் ரூ.10,000 கோடியாக இருக்கலாம் என்று வர்த்தக வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன.</strong></em> </p><h2><strong>விநாயக சதுர்த்தி விழா</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயக சதுர்த்தி</a> விழா நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.  மூலைமுடுக்குகளிலெல்லாம் விநாயகப் பெருமான் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.</p><p>அவரை அலங்கரிப்பதற்கும் வழிபடுவதற்கும் மண்டபங்கள், விளக்குகள், டிஜேக்கள், இசைக்குழுக்கள், கூடாரங்கள், மலர்கள், பழங்கள், பிரசாதங்கள் போன்றவை அவசியமாகின்றன. கணேஷ் ஆகமத்துடன் தொடங்கும் கொண்டாட்டங்கள், விசர்ஜனம் வரை தொடர்கின்றன. </p><p>அவை நகரத்தின் பொருளாதாரத்திற்குப் புத்துணர்வை அளிக்கின்றன. மங்களகரமான நிகழ்வுகள் அல்லது வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமல்லாமல், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கூடாரங்களை நடத்துபவர்களுக்கும் இவை பெரும் பலனை தந்துள்ளன.</p><p>மகாராஷ்டிராவிற்குப் பிறகு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்தான் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாகக் கொண்டாடி உள்ளனர்.</p><h2><strong>வர்த்தகம்</strong></h2><p>சில சந்தை மதிப்பீடுகளின்படி, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியின் போது ரூ.45,000 முதல் 59,000 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளது. இதில் ஐதராபாத்தின் பங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது சுமார் ரூ.10,000 கோடியாக இருக்கலாம் என்று வர்த்தக வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன. </p><p>நாம் பக்தியுடன் விநாயகப் பெருமானுக்குச் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும், அது நமக்கு நேரடியாக மன மகிழ்ச்சியைத் தந்தாலும் சரி, மறைமுகமாக சில லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது என்பது உண்மையே. </p><p>இந்த விநாயகர் சதுர்த்தியின் போது, ​​இரண்டு லட்சம் பேர் நேரடியாகவும், நான்கு லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.</p><p>விநாயகர் சதுர்த்தி என்பது ஒரு பக்திக் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒரு பெரிய வணிக வாய்ப்பும் கூட என்றும் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், அன்புமணி, அண்ணாமலை வாழ்த்து
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pm-modi-birthday-mk-stalin-anbumani-and-annamalai-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pm-modi-birthday-mk-stalin-anbumani-and-annamalai-wishes#comments</comments><guid isPermaLink="false">2484793c-a337-4a9d-911c-5581053e6a72</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:04:44 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:04:44.607Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,அண்ணாமலை,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,pm modi,annamalai,முக ஸ்டாலின்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/vutgb0xl/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin - Anbumani - Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/vutgb0xl/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p> <p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக்குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-pm-modi">முதலமைச்சர் விஜய்</a> மற்றும் பல மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடிக்கு</a> திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,</p><p>மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.</p><p>பிரதமர் மோடி நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.</p> <p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,</p><p>பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளப்பூர்வமான  நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளைப் படைக்கவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.</p> <p>வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,</p><p>மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.</p> <p>நாட்டிற்கான அவரது அயராத சேவை, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் மேம்படுத்துவதற்கான அவரது இடைவிடாத உத்வேகம் ஆகியவை லட்சக்கணக்கானோருக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன. அவரது நல்ல ஆரோக்கியத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எந்த மாற்றமும் இன்றி 2027 கவாசகி Z650RS இந்தியாவில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/2027-kawasaki-z650rs-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/2027-kawasaki-z650rs-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">5effd480-1107-4a5e-829d-0a7dcecabd47</guid><pubDate>Thu, 17 Sep 2026 05:02:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T05:02:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bike,பைக்,Kawasaki,கவாசகி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ui0si72r/2027-Kawasaki-Z650RS.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2027 கவாசகி Z650RS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ui0si72r/2027-Kawasaki-Z650RS.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/kawasaki">கவாசகி</a> நிறுவனம் தனது புதிய Z650RS பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய Z650RS விலை ரூ. 7.83 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>இது இந்த பைக்கின் முந்தைய வெர்ஷன் விலை என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில், அந்நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிளில் வண்ண விருப்பங்கள் உட்பட எதையும் மாற்றவில்லை. </p><p>அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கு '2027' என்ற குறியீடு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, இது இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த <a href="https://www.maalaimalar.com/topic/bike">பைக்</a> விற்பனையில் இருக்கும் என்பதை குறிப்பதாக இருக்கலாம்.</p><h2>என்ஜின் மற்றும் செயல்திறன்:</h2><p>புதிய Z650RS ஆனது எடை குறைந்த டிரெலிஸ் ஃபிரேமை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், இதில் ட்ராக்ஷன் கண்ட்ரோல், டூயல்-சேனல் ஏ.பி.எஸ். மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளில் 649சிசி, பேரலல்-டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.</p><p>இந்த யூனிட் 67bhp பவர் மற்றும் 64Nm டார்க் உற்பத்தி செய்கிறது. மேலும் இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதன் மென்மையான மற்றும் சீரான ஆற்றல் விநியோகத்திற்காக அறியப்படுகிறது, இது அன்றாட சவாரிக்கு எளிதாகவும் அதே சமயம் ஈர்க்கக்கூடியதாகவும் அமைகிறது.</p><h2>ஹார்டுவேர் மற்றும் சிறப்பு அம்சங்கள்:</h2><p>Z650RS-இன் முக்கிய சிறப்பம்சம் அதன் கம்பீரமான நியோ-ரெட்ரோ வடிவமைப்பு ஆகும். வட்ட வடிவ ஹெட்லைட், டூயல்-பாட் கன்சோல், டியர்-டிராப் வடிவ ஃபியூவல் டேன்க் மற்றும் நேர்த்தியான பின்பகுதியில் அமைந்துள்ள ஒற்றை இருக்கை ஆகியவற்றைக் கொண்டு இந்த பைக் மிகவும் அழகாகத் தெரிகிறது. தங்க நிற அலாய் வீல்கள் அதன் தோற்ற அழகை மேலும் மெருகூட்டுகின்றன.</p><p>17-இன்ச் வீல்களை கொண்டுள்ள இந்த பைக்கின் முன்புறத்தில் 41மில்லிமீட்டர் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ப்ரீலோட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு, இதன் டைமண்ட்-டைப் சேசிஸ் முன்புறத்தில் இரட்டை டிஸ்க்குகளையும், பின்புறத்தில் ஒற்றை டிஸ்க்கையும் பயன்படுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் T20 கிரிக்கெட் தரவரிசை: ICC பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்ரீசரனி முதலிடம் பிடித்து சாதனை!</title><link>https://www.maalaimalar.com/sports/womens-t20-cricket-rankings-indias-srisarani-tops-icc-bowling-charts</link><comments>https://www.maalaimalar.com/sports/womens-t20-cricket-rankings-indias-srisarani-tops-icc-bowling-charts#comments</comments><guid isPermaLink="false">ba53e160-26ba-4a89-bbc3-0a9d8e70cb18</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:55:10 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:55:10.604Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ICC,Deepti Sharma,தீப்தி சர்மா,Womens T20 Cricket,Sree charani,ICC bowlers,மகளிர் T20 கிரிக்கெட்,ஸ்ரீசரனி,ICC பந்துவீச்சாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/k68ullly/Sree-charani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sree charani  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/k68ullly/Sree-charani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்ற இந்த இரு வீராங்கனைகளின் பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/womens-premier-league-2027-tournament-dates-and-auction-announcement">சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்</a> (ICC) வெளியிட்டுள்ள மகளிர் T20 போட்டிகளுக்கான புதிய பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியின் நட்சத்திர இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.</p><h2>800 பு<strong>ள்ளிகளை கடந்து மை</strong>ல்கல்</h2><p>துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை தொடரில் வெளிப்படுத்திய அபாரமான பந்துவீச்சு திறமையின் மூலம் ஸ்ரீசரனி 804 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை வலுப்படுத்தியுள்ளார். சர்வதேச மகளிர் T20 கிரிக்கெட் வரலாற்றில் 800 புள்ளிகள் என்ற மைல்கல்லை கடந்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார். அத்துடன், ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட் பெற்றுள்ள 806 புள்ளிகள் என்ற வரலாற்றுச் சாதனைக்கு மிக அருகில் இவர் வந்துள்ளார்.</p><h2>2-வது இடத்திற்<strong>கு முன்னே</strong>றிய தீப்தி சர்மா</h2><p>ஸ்ரீசரனியைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளரான தீப்தி சர்மா 729 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் மகளிர் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களையும் இந்திய வீராங்கனைகளே கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.</p><h2>இந்திய வீரா<strong>ங்கனை</strong>களின் ஆதிக்கம்</h2><p>சமீபத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்ற இந்த இரு வீராங்கனைகளின் பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது. இறுதிப் போட்டியில் ஸ்ரீசரனி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இத்தொடர் முழுவதிலும் தீப்தி சர்மா அதிகபட்சமாக 14 விக்கெட்டுகளையும், ஸ்ரீசரனி 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.</p><p>பந்துவீச்சு மட்டுமின்றி, பேட்டிங் தரவரிசையிலும் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். தொடரில் 236 ரன்கள் குவித்த துவக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா பேட்டிங் தரவரிசையில் 6-வது இடத்திற்கும், ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 15-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அரசுப் பள்ளிகளின் மூடுவிழா: பள்ளிகளை மூடாமல், மனித வளம் மற்றும் கட்டமைப்பை உயர்த்துக! - அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-upgrade-human-resources-and-infrastructure-without-closing-schools</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-upgrade-human-resources-and-infrastructure-without-closing-schools#comments</comments><guid isPermaLink="false">daddf216-d237-452b-b274-5ae46168e268</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:49:13 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:49:13.362Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,govt schools,அரசு பள்ளிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/hw5icfpp/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/hw5icfpp/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அரசு பள்ளிகளுக்கு தேவையான அளவில் ஆசிரியர்களை நியமிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை  உடனடியாக 50 விழுக்காடும், அடுத்த மூன்றாண்டுகளில் 100 விழுக்காடும் உயர்த்த வேண்டும். அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்டுவதை ஒரு சிறப்பு இயக்கமாகவே தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>எச்சரிக்கை மணி</strong></h2><p>தமிழ்நாட்டில் உள்ள 14,829 அரசு தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளிலும் சேர்த்து 30-க்கும் குறைவான மாணவர்கள் தான் பயில்வதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. அரசு பள்ளிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்; இதே நிலை தொடர்ந்தால் இப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டியிருக்கும் என்பதை உணர்த்த அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகவே இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளன.</p><p>தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின்படி, மொத்தமுள்ள 24,349 அரசு தொடக்கப்பள்ளிகளில், 14,829 பள்ளிகளில், அதாவது 60.90 பள்ளிகளில் மொத்தமுள்ள 5 வகுப்புகளிலும் சேர்த்து 30-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். அதிலும் கூட, 6,635 பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்களும், 3,027 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களும் தான் பயின்று வருகின்றனர். 20 முதல் 30 மாணவர்கள் வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 5,167 ஆகும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வேகத்தில் வீழ்ச்சியடைந்து வருவதையே இந்த தரவுகள் காட்டுகின்றன.</p><p>இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 30-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும்  சுமார் 15 ஆயிரம் பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்டவை வட மாவட்டங்களில் தான் உள்ளன என்பதாகும். குறிப்பாக, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், கடலூர், திருவள்ளூர் ஆகிய 5 வட மாவட்டங்களில் 30-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப் பள்ளிகள் 3,062 உள்ளன. இது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 20.65 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி</strong></h2><p>அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைவது என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்கதையாகி வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2024-25ஆம் ஆண்டில் 45.10 லட்சமாக இருந்தது. 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது ஒரே ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 2.07 லட்சம் குறைந்துள்ளது.</p><p>இதற்கு முன் 2022-23 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 42,026 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது 3 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 7.39 லட்சம் குறைந்துள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், 11 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 32 லட்சத்து 49 ஆயிரம் குறைந்திருக்கிறது. அதாவது 11 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 43.02% குறைந்துள்ளது.</p><p>அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது ஏன்? என்பதைக் கண்டறிய ஆய்வுகள் எதுவும் தேவையில்லை. அரசு பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும், அரசு பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் கூட ஏற்படுத்தப்படாததும் தான் இதற்கு காரணம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. 5 வகுப்புகளைக் கொண்ட அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டும் இருந்தால், அவர்களால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் எவ்வாறு பாடம் நடத்த முடியும்? அவ்வாறு பாடமே நடத்தப்படாத பள்ளிகளில் தங்களின் குழந்தைகள் பயில்வதை எந்தப் பெற்றோர் விரும்புவார்கள்? ஆகிய வினாக்களுக்கு விடைகளை கண்டறிந்தாலே அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு தீர்வு காண தமிழக அரசால் முடியும்.</p><p>பொதுத்தளத்தில் உள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. ஒரே ஒரு ஆண்டில் கூட அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இந்த விவரங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு நன்றாகத்  தெரியும். மத்திய அரசும் இது தொடர்பான புள்ளிவிவரங்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.  அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும் ஒவ்வொரு ஆண்டும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், பிரச்சனைகளை களைந்து பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><p>இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதைத் தடுக்க வேண்டும் என்றால், அரசு பள்ளிகளுக்கு தேவையான அளவில் ஆசிரியர்களை நியமிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை  உடனடியாக 50 விழுக்காடும், அடுத்த மூன்றாண்டுகளில் 100 விழுக்காடும் உயர்த்த வேண்டும். அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்டுவதை ஒரு சிறப்பு இயக்கமாகவே தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>கால்பந்தில் புதிய மைல்கல் சாதனை படைத்த மெஸ்ஸி </title><link>https://www.maalaimalar.com/sports/football/messi-achieves-a-new-milestone-in-football</link><comments>https://www.maalaimalar.com/sports/football/messi-achieves-a-new-milestone-in-football#comments</comments><guid isPermaLink="false">5c0b67a7-bbb4-4dae-a0c3-80a3fa16ce43</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:46:25 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:46:25.473Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மெஸ்ஸி,Messi,கால்பந்து,FootBall,இன்டர் மியாமி,Inter Miami</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/pfb7eiqg/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மெஸ்ஸி ]]></media:title><media:description type="html"><![CDATA[ மெஸ்ஸி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/pfb7eiqg/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.</p> <p>சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி, குரூஸ் அஸுல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. </p><p>இந்தப் போட்டியில் ஒரு கோல் அடித்தும், மற்றொரு கோலுக்கு உதவியும் <a href="https://www.maalaimalar.com/topic/lionel-messi">மெஸ்ஸி </a>அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.  </p> <h2>100வது கோல்</h2><p>ஆட்டத்தின் 24வது நிமிடத்தில், சக வீரர் லூயிஸ் சுவாரஸ் கொடுத்த கிராஸ் பந்தை, அவர் ஒரு அற்புதமான டைவிங் ஹெடர் மூலம் கோலாக மாற்றினார். இது இன்டர் மியாமி அணிக்காக அவர் அடித்த 100வது கோலாகும்.</p><p>வெறும் 115 போட்டிகளிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தியதன் மூலம், 'மேஜர் லீக் சாக்கர்' (MLS) வரலாற்றில் ஒரு கிளப்பிற்காக 100 கோல்களை அடித்த அதிவேக வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.</p><p>மெஸ்ஸி இதுவரை மியாமி அணிக்காக 100 கோல்களை அடித்ததோடு மட்டுமில்லாமல் 55 கோல்களை அடிக்க உதவியும் உள்ளார்.</p><p>கடந்த ஆட்டத்திலும் 81வது நிமிடத்தில், மெஸ்ஸி கொடுத்த கார்னர் கிக்கை காசிமிரோ தலையால் முட்டி கோலாக்கி, அணியின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார்.</p><p>இந்த வெற்றியின் மூலம், இன்டர் மியாமி தனது வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.</p> <h2>சாம்பியன்ஸ் கோப்பை</h2><p>இந்தப் போட்டி, அமெரிக்காவின் MLS கோப்பை வெற்றியாளருக்கும் மெக்சிகோவின் லிகா MX வெற்றியாளருக்கும் இடையே ஆண்டுதோறும் நடத்தப்படுகறது.</p><p>கடந்த மூன்று சீசன்களாக மெக்சிகன் அணிகள் இந்தக் கோப்பையை வென்று வந்த நிலையில், மியாமி அவர்களின் ஆதிக்கத்தை முறியடித்தது.</p> <p>இது புதிய தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ்டியன் கோன்சாலெஸின் முதல் போட்டியாகும். அவர் தனது முதல் போட்டியிலேயே அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்ததள்ளார்.</p><p>2023ல் இன்டர் மியாமியில் இணைந்தார் மெஸ்ஸி. 39 வயதிலும் சிறப்பான பார்மில் இருக்கும் மெஸ்ஸி, தனது வருகைக்குப் பிறகு லீக்ஸ் கோப்பை, சப்போர்ட்டர்ஸ் ஷீல்ட் மற்றும் MLS கோப்பை போன்ற பல பட்டங்களை அணிக்குப் பெற்றுத் தந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: சற்றே சரிந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-9-2026#comments</comments><guid isPermaLink="false">b07e0848-1034-4f07-9cfe-56550133d63d</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:35:09 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:35:09.958Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-20/pbxjnmn2/gold4.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-20/pbxjnmn2/gold4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. 13-ந்தேதி சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனையானது. 14-ந்தேதி சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும் விற்பனையானது. 15-ந்தேதி சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும் விற்பனையானது.</p> <p>நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கும் விற்பனையானது.</p><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>கடந்த 6 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>16-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,520</p><p>15-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,320</p><p>14-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,000</p><p>13-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360</p><p>12-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>16-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>15-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>14-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>13-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>12-09-2026- ஒரு கிராம் ரூ.250</p> ]]></content:encoded></item><item><title>ரீசார்ஜ் செய்தால் கேன்வா சந்தா முற்றிலும் இலவசம் - ஜியோவின் அசத்தல் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-is-offering-canva-pro-subscription-for-free</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-is-offering-canva-pro-subscription-for-free#comments</comments><guid isPermaLink="false">df0b4758-7d5e-4190-99f7-8160dc823706</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:23:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:23:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jio,சலுகை,ஜியோ,Canva Pro</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/g9f1qm6o/Jio-and-Canva.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jio and Canva]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/g9f1qm6o/Jio-and-Canva.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jio">ஜியோ</a> நிறுவனம் கேன்வாவுடன் இணைந்து, தகுதியுள்ள பயனர்களுக்கு 12 மாதங்கள் வரை கேன்வா ப்ரோ அல்லது கேன்வா ப்ரோ லைட் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. </p><p>இந்த தொகுப்பு , தனி சந்தா செலுத்தாமல் காட்சி உள்ளடக்கத்தை உருவாக்க விரும்பும் மாணவர்கள், கிரியேட்டர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறு வணிகங்கள் போன்ற ஜியோ சந்தாதாரர்களுக்கு கேன்வாவின் பிரீமியம் டிசைன் டூல்ஸ் மற்றும் ஏஐ சார்ந்த அம்சங்களை வழங்குகிறது. </p><p>இந்த சலுகை செப்டம்பர் 16, 2026 முதல் படிப்படியாக வழங்கப்படும், மேலும் கேன்வா திட்டம் பயனரின் ஜியோ ரீசார்ஜ் பொறுத்து அமையும். </p><h2>இரு திட்டங்களுடன் கேன்வா சந்தா:</h2><p>இந்த புதிய கூட்டணி மூலம், தகுதியுள்ள ஜியோ பயனர்களுக்கு அவர்களின் தற்போதைய ரீசார்ஜை பொறுத்து, 12 மாதங்களுக்கு கேன்வா பிரீமியம் சேவை எந்த கூடுதல் கட்டணமும் இன்றி வழங்குகிறது. ரூ.399 திட்டத்தில் உள்ள பயனர்கள் கேன்வா ப்ரோவையும், ரூ.349 மற்றும் ரூ.349-க்கு மேல் விலையுள்ள, தகுதியுள்ள 2ஜிபி/நாள் திட்டங்களில் உள்ள பயனர்கள் கேன்வா ப்ரோ லைட் சந்தாவையும் பெறுவார்கள்.</p><p>இந்த இரண்டு திட்டங்களும் கேன்வாவின் பிரீமியம் டெம்ப்ளேட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்துருக்களுடன், பேக்ரவுண்ட் ரிமூவர், மேஜிக் ரீசைஸ், மேஜிக் எரேசர் போன்ற அம்சங்களை வழங்குகின்றன. இதன் மூலம் பயனர்கள் கேன்வாவின் பல பிரீமியம் வடிவமைப்பு அம்சங்களுக்கு தனியாக பணம் செலுத்தாமலேயே சேவையை பெறுகிறார்கள்.</p><h2>கேன்வா சந்தா பலன்கள்:</h2><p>தொடர்ந்து உள்ளடக்கத்தை உருவாக்கும் பயனர்களுக்காக கூடுதல் அம்சங்களை சேர்க்கும் கேன்வா ப்ரோவில்தான் முக்கிய வேறுபாடு உள்ளது. இதில் கன்டன்ட் பிளானர் (Content Planner), கேன்வா ஏஐ (Canva AI), அதிக ஏஐ பயன்பாட்டு வரம்புகள் மற்றும் ஒரு பெரிய பிராண்ட் கிட் (Brand Kit) ஆகியவை அடங்கும்.</p><p>அதேசமயம், ப்ரோ லைட் (Pro Lite) ஆனது வரையறுக்கப்பட்ட ஏஐ அணுகலுடன் (இலவசப் பதிப்பைப் போலவே) முக்கிய வடிவமைப்பு அம்சங்களுக்கு மட்டுமே தன்னை வரப்படுத்திக் கொள்கிறது.</p><p>தகுதியுள்ள பயனர்கள், மைஜியோ செயலி (MyJio app) மூலம் கேன்வா சலுகையை திறந்து அதை செயல்படுத்துவதன் மூலம் இந்த சலுகையை பெறலாம் என்று ஜியோ கூறுகிறது. இந்த 12 மாத பலன் செப்டம்பர் 16, 2026 முதல் வழங்கத் தொடங்கும், மேலும் சலுகை காலத்தில் கேன்வா சந்தாவிற்கு கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-pm-modi#comments</comments><guid isPermaLink="false">8d09d422-0fe9-41e3-892d-60af232f7892</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:15:54 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:15:54.319Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,தவெக,விஜய்,vijay,pm modi,tvk,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ld1qpol9/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ld1qpol9/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தியப் <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-birthday-bjp-seva-sankalp-abhiyan-launch-president-murmu-greetings">பிரதமர் நரேந்திர மோடி</a> இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக்குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, மற்றும் பல மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் பிரதமர் மோடிக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-periyar">முதலமைச்சர் விஜய்</a> பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,</p><p>வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO- பெரியார் பிறந்தநாள்: &apos;Fashion Statement-இல் மட்டும்தான் பெரியார் இருக்காரா?&apos;- டிரெண்டாகும் கனிமொழி எம்பியின் வீடியோ!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-mp-video-periyar-fashion-statement-trend</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-mp-video-periyar-fashion-statement-trend#comments</comments><guid isPermaLink="false">c3b9a2d9-8b32-4198-8864-e590be0efa60</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:13:16 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:13:16.793Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்பி,MP Kanimozhi,பெரியார்,பெரியார் பிறந்தநாள்,Periyars Birthday,fashion statements</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/er2bdftq/kani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Periyars Birthday ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/er2bdftq/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெறும் தோற்றத்திலும், ஆடை வடிவமைப்பு ஸ்டைல்களிலும் மட்டுமே பெரியாரை வெளிப்படுத்துவது போதாது.</p><p>தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு (செப்டம்பர் 17), திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி மற்றும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p>தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள கனிமொழி எம்பி, தற்காலத்தில் பெரியாரின் உருவம் மற்றும் அடையாளங்கள் ஆடை வடிவமைப்புகள் மற்றும் ஃபேஷன் கலாச்சாரத்தில் மட்டுமே சுருக்கப்பட்டு வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பெரியாரைப் படிப்போம்; அவர் விதைத்த சிந்தனைகளை உலகெங்கும் விதைப்போம்; நாளைய உலகை பகுத்தறிவும் சமத்துவமும் நிறைந்த உலகாகப் படைப்போம்!<a href="https://x.com/hashtag/SocialJusticeDay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SocialJusticeDay</a> <a href="https://x.com/hashtag/PeriyarForever?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PeriyarForever</a> <a href="https://t.co/xe6vKHsCxl">pic.twitter.com/xe6vKHsCxl</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2100400617344942407?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>வெறும் தோற்றத்திலும், ஆடை வடிவமைப்பு ஸ்டைல்களிலும் மட்டுமே பெரியாரை வெளிப்படுத்துவது போதாது; அவரது ஆழமான கொள்கைகளையும் சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை அவர் இதில் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>சிந்தனை<strong>களை உ</strong>லகெங்கும் விதைப்போம்</h2><p>பெரியாரின் கோட்பாடுகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், "<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-periyar">பெரியாரை படிப்போம்</a>; அவர் விதைத்த முற்போக்குச் சிந்தனைகளை உலகெங்கும் விதைப்போம்! நாளைய உலகை வெறும் சடங்குகளால் அல்லாமல், பகுத்தறிவும் சமூகச் சமத்துவமும் நிறைந்த ஆரோக்கியமான உலகாகப் படைப்போம்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>பகுத்தறிவு<strong>ப் பாதை</strong></h2><p>சாதியக் கட்டமைப்பு, பெண் அடிமைத்தனம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தந்தை பெரியார் மேற்கொண்ட போராட்டங்களை நினைவு கூர்ந்த கனிமொழி எம்பி, இன்றைய இளைய தலைமுறை பெரியாரின் புத்தகங்களையும் எண்ணங்களையும் ஆழமாகக் கற்றுத் தேர வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். சமத்துவ சமுதாயத்தைக் கட்டமைக்க பெரியாரிய சிந்தனைகளே அடித்தளம் என்பதை இந்த வீடியோ பதிவு மூலம் அவர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது- தமிழ்நாடு அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijays-visit-to-england-has-proven-to-be-a-successful-one</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijays-visit-to-england-has-proven-to-be-a-successful-one#comments</comments><guid isPermaLink="false">d32de2bb-74ea-486c-9f66-3eb64c2519b2</guid><pubDate>Thu, 17 Sep 2026 04:03:38 +0000</pubDate><atom:updated>2026-09-17T04:03:38.412Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,லண்டன் பயணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/rzg1nd4o/vijay0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/rzg1nd4o/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டை உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக நிலைநிறுத்தும் நமது வெற்றிப் பயணம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></em> </p><p>தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டில் நேர்மையான, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகம், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான நலத்திட்டங்கள் என மக்கள் போற்றும் சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதுடன், 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.</p><p>அதன்படி, தமிழ்நாட்டை முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்கிடும் வகையில், எண்ணற்ற தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக 67,452 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.</p><p>இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த 10.9.2026 அன்று இங்கிலாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். </p><h2><strong>இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் சந்திப்பு</strong></h2><p>இலண்டனில் 12.9.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, I.F.S. அவர்கள் சந்தித்து, இந்தியா–பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) பின்னணியில், தமிழ்நாடு மற்றும் பிரிட்டனுக்கு இடையே உருவாகக்கூடிய வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் குறித்துக் கலந்துரையாடினர்.</p><h2><strong>சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டைப் பார்வையிட்டு, 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தல்</strong></h2><p>தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 3.9.2026 அன்று விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) தமிழ்நாட்டில் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு நேரில் சென்று, அங்குள்ள Race Control மற்றும் Race circuit பகுதிகளைப் பார்வையிட்டார். மேலும், சர்வதேச அளவிலான நீண்டதூர கார் பந்தயத்தை நடத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், செயல்பாட்டு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, சில்வர்ஸ்டோன் ரேஸ் மியூசியத்தையும் பார்வையிட்டார்.</p><p>அதனைத் தொடர்ந்து, சில்வர்ஸ்டோன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத் திடலில், முன்னணி நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் அவர்கள் கலந்துகொண்ட 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.</p><h2><strong>தொழில் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</strong></h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், இலண்டனில் 14.09.2026 அன்று, வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், புதிய தொழில் முதலீட்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நோக்கக் கடிதம் என மொத்தம் 15,300 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>❖ சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம், அதன் ஐரோப்பா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி,  ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் சார்ந்த வசதிகளை நிறுவுவதன் மூலம் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.</p><p>❖ தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres-GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குழுமம், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.</p><p>ஏர்ன்ஸ்ட் &amp; யங் நிறுவனம் (Ernst &amp;amp; Young) ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) அமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. ‘கட்டு – இயக்கு – மாற்றியமை - மாற்று’ (Build-Operate-Transform-Transfer -BOTT) ஏற்பாட்டின் கீழ், இந்த மையத்தை நிறுவுவதற்கும், அதன் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கும் ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனம் ஆதரவளிக்கும். பின்னர், அம்மையம் அச்சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த உலகளாவிய திறன் மையம் (GCC) சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மையம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னையில் உள்ள மவுண்ட்- பூந்தமல்லி சாலைப் பகுதியிலுள்ள GCC வழித்தடத்தில் அமையும்.</p><p>❖ திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட திறன்மிக்க மின்மாற்றிகளை தயாரிக்கும் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions) நிறுவனம், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.</p><p>❖ ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்களிடம் தனது விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தது.</p><h2><strong>ஹிந்துஜா குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு</strong></h2><p>அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து, ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற ‘வெற்றி’ (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினர்.</p><p>தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாக, காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இக்குழுவினர் விருப்பம் தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன உற்பத்தித்துறைக்கான ஏற்றுமதி மையமாகத் தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.</p><h2><strong>முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு</strong></h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சந்திப்புகளுடன், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, இரசாயனங்கள், தளவாடங்கள், கட்டுமானம், நிதிச் சேவைகள், சில்லறை வர்த்தகம் மற்றும் சட்ட சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 10 முன்னணி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் நடத்தினர்.</p><p>பிரிட்டன் வர்த்தக நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான மூலப்பொருட்கள் கொள்முதல் ஒப்பந்தங்கள், ஓசூருக்கு இங்கிலாந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் குழு வருகை புரிவதற்கான வாய்ப்பு, அக்டோபர் மாதம் சென்னைக்கு இங்கிலாந்து மேயர் ஆணையத்தின் (NEMSA) பிரதிநிதிகள் குழு வருகை, நிதிச் சேவைத் துறைக்கான திறன் மேம்பாட்டுக் கூட்டாண்மைகள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிப் பயிலரங்கம், பிரிட்டன் - இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காட்டும் அறிக்கை தயாரித்தல் போன்றவை குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை நோக்கி வரும் மேற்கண்ட தொழில் முதலீடுகளை சாத்தியமாக்கவும், தமிழ்நாட்டில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து உதவிகளையும், நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இலண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் மற்றும் தான் தங்கியிருந்த ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு வழங்கிய தமிழ்ச் சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், அங்கு தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க இருந்தபோது இலண்டன் காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சந்திக்க இயலாமல் போனதற்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு, பேராதரவு வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்த்திட மேற்கொண்ட இப்பயணத்தில் இலண்டனில் அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்குப் பேருதவியாக இருந்த இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் அவர்களுக்கும், தூதரக உயர் அலுவலர்களுக்கும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட மற்றும் விருப்பக் கடிதம் வழங்கிய தொழில் நிறுவனங்கள், அதன் கூட்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும், உயர் அலுவலர்களுக்கும், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்கு ஏதுவாக சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துக்கூறிய முன்னணி நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் அவர்களுக்கும் சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் மற்றும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களுக்கும் இங்கிலாந்து பயணத்தின்போது நல்லாதரவு அளித்த அந்நாட்டில் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>தமிழ்நாட்டின் திறன்மிக்க மனிதவளம், வலுவான தொழில்துறை அடித்தளம், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் தொடங்குவதற்கான அமைதியான சூழல் மற்றும் எளிய நடைமுறைகள் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைத்து, புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இங்கிலாந்து வெற்றிப் பயணம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், முதலீட்டு ஈர்ப்புக்கும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.</p><p>தமிழ்நாட்டை உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக நிலைநிறுத்தும் நமது வெற்றிப் பயணம் தொடரும்.</p><p>இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>6,000mAh பேட்டரியுடன் அறிமுகமான சாம்சங் ஸ்மர்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-a08-launched-with-6000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/samsung-galaxy-a08-launched-with-6000mah-battery#comments</comments><guid isPermaLink="false">90ac2c9d-98fa-4b60-8c1f-28c09a3d269d</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:43:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Samsung,சாம்சங்,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/yw7iureg/Samsung-Galaxy-A08.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Samsung Galaxy A08]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/yw7iureg/Samsung-Galaxy-A08.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான <a href="https://www.maalaimalar.com/topic/samsung">சாம்சங்</a> தனது புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன், சாம்சங் கேலக்ஸி A08 மாடலை தேர்ந்தெடுக்கப்பட்ட உலக சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. </p><p>இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது நிறுவனத்தின் இணையதளம் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஒற்றை ரேம் மற்றும் மெமரி ஆப்ஷனில் வழங்கப்படுகிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி A08 மாடல் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமராவுடன் டூயல் லென்ஸ் செட்டப் உள்ளது. இது 6,000mAh பேட்டரியுடன் வருகிறது.</p><h2>சாம்சங் கேலக்ஸி A08 சிறப்பு அம்சங்கள்:</h2><p>சாம்சங் கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒன் யுஐ 8 ஓ.எஸ். உடன் வருகிறது. டூயல் சிம் ஸ்லாட் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 2032 வரை அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் நிறுவனம் உறுதியளிக்கிறது. புதிய கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் HD+ 720x1,600 பிக்சல் PLS LCD டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது.</p><p>சாம்சங் கேலக்ஸி A08 மாடலில் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G99 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 6nm செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது. இத்துடன் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 2 டிபி வரை விரிவாக்க முடியும்.</p><p>கேமராக்களைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி A08 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50MP பிரைமரி கேமரா, 2MP சென்சார், 8MP செல்ஃபி கேமரா உள்ளது.</p><p>சாம்சங் கேலக்ஸி A08, 6,000mAh பேட்டரி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு இந்த மாடலில் 4ஜி எலடிஇLTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், GPS, BeiDou, Galileo மற்றும் OZSS ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதில் உள்ள சென்சார்களின் பட்டியலில், பாதுகாப்பிற்கான கைரேகை ஸ்கேனர், ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும்.</p><h2>சாம்சங் கேலக்ஸி A08 விலை விவரங்கள்:</h2><p>4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்ட் சாம்சங் கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் UAH 10,699 (இந்திய மதிப்பில் ரூ. 23,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது சாம்சங் உக்ரைன் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது.</p><p>புதிய சாம்சங் கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் டார்க் புளூ, கிரீன் மற்றும் சில்வர் என மூன்று வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஜம்மு காஷ்மீர் உதம்பூரில் இரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/national/two-terrorists-killed-in-overnight-gunfight-in-udhampur-jammu-and-kashmir</link><comments>https://www.maalaimalar.com/news/national/two-terrorists-killed-in-overnight-gunfight-in-udhampur-jammu-and-kashmir#comments</comments><guid isPermaLink="false">0129d010-da1b-4029-bbcb-2f80de419547</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:42:49 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:42:49.906Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>terrorists,ஜம்மு காஷ்மீர்,jammu kashmir,பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை,crpf,Udhampur,உதம்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/xgogpnhi/hg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gun battle in Udhampur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/xgogpnhi/hg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று அதிகாலை வரை நீடித்த இந்த கடுமையான துப்பாக்கிச்சூட்டின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். </p><p>ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று இரவு நடந்த கடுமையான மோதலில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.</p><h2>நள்<strong>ளிரவு மோத</strong>ல்</h2><p>உதம்பூர் மாவட்டத்தின் மஜால்தா எல்லைக்குட்பட்ட சோஹன் மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், இந்திய ராணுவம், <a href="https://www.maalaimalar.com/news/national/pakistan-vessel-collides-with-indian-navy-ship-india-summons-diplomat-and-lodges-protest">ஜம்மு காஷ்மீர் </a>காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப் ஆகிய படைகள் இணைந்து அந்தப் பகுதியை முழுமையாக வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கின.</p><p>வளைத்து பிடிக்க முயன்றபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாகப் பதில் தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள், தீவிரவாதிகளின் தப்பிச் செல்லும் முயற்சியை முறியடித்து நள்ளிரவு முழுவதும் தீவிர எதிர்தாக்குதலைத் தொடர்ந்தனர்.</p><h2>தீவிர தே<strong>டுதல் வே</strong>ட்டை</h2><p>இன்று அதிகாலை வரை நீடித்த இந்த கடுமையான துப்பாக்கிச்சூட்டின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதிகள் பயன்படுத்திய நவீன ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களின் துல்லியமான அடையாளங்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p>மேலும் அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் ஒளிந்திருக்கின்றனரா என்பதை உறுதி செய்ய பாதுகாப்புப் படையினர் கூடுதல் வீரர்களை வரவழைத்து, பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணிப்போம்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-periyar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-periyar#comments</comments><guid isPermaLink="false">74da4564-2372-448d-a910-85eb48cc2c4b</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:37:58 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:37:58.725Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Periyar birthday,பெரியார் பிறந்தநாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/n49t6sko/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/n49t6sko/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/பெரியார்-பிறந்தநாள்">தந்தை பெரியாரின்</a> 147-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தந்தை பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். </p><p>இந்த நிலையில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>நினைவுகூர்ந்து வணங்குகிறேன்</strong></h2><p>சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.</p><p>தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!</p><p>தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்! </p><p>வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும்,  மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும்,… <a href="https://t.co/jsUQk2H0ib">pic.twitter.com/jsUQk2H0ib</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2100421656414126507?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-mk-stalin-says-revolutionary-salutations-to-sun-of-rationalism-thanthai-periyar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-mk-stalin-says-revolutionary-salutations-to-sun-of-rationalism-thanthai-periyar#comments</comments><guid isPermaLink="false">4b83f53b-2be7-4a13-833b-9c6652fa6835</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:26:14 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:26:14.047Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Periyar birthday,முக ஸ்டாலின்,பெரியார் பிறந்தநாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/86adn68r/periyar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Periyar - MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/86adn68r/periyar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்! என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><h2>தந்தை பெரியார் பிறந்தநாள்</h2><p>தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17-ந்தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.</p><h2>சமூக நீதி நாள்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பெரியாரின்</a> பிறந்தநாளை தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் 'சமூக நீதி' நாளாக கடைபிடித்து வருகிறது. </p><h2>சுயமரியாதை இயக்கம்</h2><p>சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகள், சாதி வெறி மற்றும் சமத்துவமின்மையை எதிர்த்து 1925-ம் ஆண்டு 'சுயமரியாதை இயக்கத்தைத்' தொடங்கினார்.  </p> <h2>வைக்கம் வீரர்</h2><p>கேரளாவில் உள்ள வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலை ஒட்டிய வீதிகளில் நடக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டதால் 'வைக்கம் வீரர்' எனப் போற்றப்பட்டார்.  </p><h2>பெண்கள் கல்வி உரிமை</h2><p>பெண்களின் கல்வி உரிமை, கைம்பெண் மறுமணம், சொத்துரிமை மற்றும் சுயமரியாதைத் திருமணங்களுக்காக வாழ்நாள் முழுவதும் பெரியார் குரல் கொடுத்தார்.  </p> <h2>மு.க.ஸ்டாலின்</h2><p>தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!</p><p>பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.</p><p>ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.</p> <p>பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.</p><p>ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!</p><p>வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.</p> <p>“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.</p><p>பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள்: பாஜகவின் &apos;சேவா சங்கல்ப் அபியான்&apos; தொடக்கம்- குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-birthday-bjp-seva-sankalp-abhiyan-launch-president-murmu-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-birthday-bjp-seva-sankalp-abhiyan-launch-president-murmu-greetings#comments</comments><guid isPermaLink="false">6c57fc06-55a8-4ace-8c79-684c483d928c</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:25:24 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:25:24.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,President Murmu,பிரதமர் மோடி பிறந்தநாள்,குடியரசுத் தலைவர் முர்மு,PM Modi&apos;s Birthday,Seva Sankalp Abhiyan,சேவா சங்கல்ப் அபியான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/hhm5v7da/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi's Birthday  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/hhm5v7da/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியா உலகளவில் முன்னணி பொருளாதார சக்தியாகத் திகழ்கிறது.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவரது 25 ஆண்டுகால பொதுச்சேவையை கொண்டாடும் வகையில் நாடு தழுவிய ஒரு மாத சேவை பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.</p><h2>தலை<strong>வர்கள் வாழ்</strong>த்து</h2><p>இந்தியப் <a href="https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat">பிரதமர் நரேந்திர மோடி</a> இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குஜராத்தின் முதலமைச்சராகவும் பின்னர் நாட்டின் பிரதமராகவும் கடந்த 25 ஆண்டுகளாகப் பிரதமர் மோடி ஆற்றிவரும் இணையற்ற பொதுச்சேவையையும், தேசக் கட்டுமானப் பணிகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். நல்ஆளுமைக்கு அவர் பல புதிய இலக்கணங்களை உருவாக்கியுள்ளதோடு, நாட்டின் பாரம்பரியத்தையும் நவீன வளர்ச்சியையும் சமநிலையில் கொண்டு செல்லும் அவருக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>அதேபோல், துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்தில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியா உலகளவில் முன்னணி பொருளாதார சக்தியாகத் திகழ்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய டிஜிட்டல் புரட்சி, உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா அடைந்துள்ள அபார வளர்ச்சியை அவர் பட்டியலிட்டுப் பாராட்டியுள்ளார்.</p><h2>'சேவா சங்கல்<strong>ப் அபியான்' பி</strong>ரசாரம்</h2><p>பிரதமரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் அவர் முதன்முதலில் குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற அக்டோபர் 7-ஐத் தாண்டி, அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு 'சேவா சங்கல்ப் அபியான்' (சேவை உறுதிமொழிப் பிரசாரம்) என்ற சிறப்பு இயக்கத்தை பாரதிய ஜனதா கட்சி தொடங்கியுள்ளது. இதில், நாடு முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் மற்றும் தூய்மைப் பணிகள் நடத்தப்படும். இன்று மாலை பொதுமக்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. </p><p>ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக சென்றடைவதை உறுதி செய்ய 'சேவை சேது' முகாம்களும், இளைஞர்களை ஒருங்கிணைக்கும் 'சேவை யாத்திரைகளும்' நடத்தப்படவுள்ளன. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பல மாநில முதலமைச்சர்கள் இந்த சேவை இயக்கத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கி வைத்துள்ளனர். மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல முக்கியத் தலைவர்களும் பிரதமருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>லண்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-returned-to-chennai-after-concluding-his-london-tour</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-returned-to-chennai-after-concluding-his-london-tour#comments</comments><guid isPermaLink="false">e3305903-288e-4fc6-a93b-723912f74164</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:21:07 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:21:07.372Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/su1vxde8/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதலமைச்சர் விஜய்யின் கார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/su1vxde8/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய், தனது அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்து லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார். அவர் இன்று காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை வந்த முதலமைச்சர் விஜய்க்கு த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</strong></em> </p><h2><strong>லண்டன் பயணம்</strong></h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a>, அரசு முறை பயணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றார். அங்கு அவருக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>அதனைத்தொடர்ந்து 12-ந்தேதி முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்காக புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு உலகப் புகழ் பெற்ற சில்வர் ஸ்டோன் பந்தயக் களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேசையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><h2><strong>தொழில் முதலீடு</strong></h2><p>அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதலமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.</p><h2><strong>நிகழ்ச்சி ரத்து</strong></h2><p>லண்டன் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று முதலமைச்சர் விஜய் தான் தங்கியுள்ள ஓட்டலின் கீழே லண்டன் வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவதாக தகவல் பரவியது. ஆனால் அங்குள்ள போலீசார் தரப்பில் இது போன்ற எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி தரவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கிருந்தவர்கள் 'த.வெ.க. வளர்க விஜய் வாழ்க' என்று கோஷமிட்டனர். கூட்டமும் சாலையின் இருபுறமும் ஆண்கள், பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும் திரண்டு இருந்தனர். </p><p>எனவே முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தர்மராஜ் மைக் மூலம் பேசினார். அப்போது அவர், 'பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்' என்றார். இதனையடுத்து கலைந்து சென்றனர்.</p><h2><strong>வரவேற்பு</strong></h2><p>இதற்கிடையே நேற்று இரவு விஜய், தனது அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்து லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார். அவர் இன்று காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். </p>]]></content:encoded></item><item><title>மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீச்சு.. பாதுகாப்பு வழங்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு  வீடியோ மெசேஜ் </title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-members-hurl-eggs-at-mahua-moitra-video-message-sent-to-supreme-court-judge-who-refused-to-grant-security</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-members-hurl-eggs-at-mahua-moitra-video-message-sent-to-supreme-court-judge-who-refused-to-grant-security#comments</comments><guid isPermaLink="false">0fe2916e-3d38-4bf0-99f2-80c47943dfab</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:07:31 +0000</pubDate><atom:updated>2026-09-17T03:07:31.334Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,trinamool congress,மஹுவா மொய்த்ரா,Mahua Moitra,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/t4c49oyr/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மஹுவா மொய்த்ரா]]></media:title><media:description type="html"><![CDATA[ மஹுவா மொய்த்ரா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/t4c49oyr/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களை எம்பி மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><h2></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்கத்தின்</a> நாடியா மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியான கிரிஷ்ணராஜ சகாரில் நேற்று நடந்த அரசியல் கூட்டத்திற்கு மஹுவா சென்றுள்ளார். கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த மஹுவாவை அங்கு கூடிய பாஜக தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி  "திரும்பிப் போ" என கோஷம் எழுப்பி அமளி செய்துள்ளனர். </p> <p>அவர்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட கைகலப்பு மூண்டது. இந்த பரபரப்பில் தனது காருக்கே திரும்பிச் சென்று ஏற முயன்ற மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசப்பட்டுள்ளது.</p> <h2>வீடியோ</h2><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து காரில் அமர்ந்தபடியே முட்டை வீசப்பட்ட கோலத்தில் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்ட மொய்த்ரா, இந்த தாக்குதல் நடக்கும் என தனக்கு முன்னரே போலீசார் தகவல் தந்ததாகவும், இந்த தாக்குதலே போலீஸ் உதவியுடன் தான் நடந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.</p><p>முன்னதாக ஏற்கனவே ஒரு முறை அவரது தொகுதியில் வைத்தே அவர் மீது முட்டை வீசப்பட்டது. இதனை தொடர்ந்து தனக்கு பாதுகாப்பு வேண்டி அவர் கல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அங்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காததால் உச்சநீதிமன்றத்தை அணுகிறார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Big shout out to Hon’ble Justice Dipankar Datta ! MiLord - I came to my constituency for a mtng informing <a href="https://x.com/WBPolice?ref_src=twsrc%5Etfw">@WBPolice</a> &amp; BJP workers with their help pelted eggs on me. True to your advice I faced them as a freedom fighter faced bullets. <a href="https://t.co/CxO3ApzjPL">pic.twitter.com/CxO3ApzjPL</a></p>&mdash; Mahua Moitra (@MahuaMoitra) <a href="https://x.com/MahuaMoitra/status/2100176610045640808?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>உச்சநீதிமன்ற நீதிபதி</h2><p>அவர் மனு மீதான விசாரணையில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா, மஹுவாவின் பாதுகாப்பு குறித்து கிண்டலாக, "இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டுக்காக துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டனர், இந்த சின்ன தாக்குதலுக்கு பயந்து பாதுகாப்பு வேண்டி உச்சநீதிமன்றத்தை அணுகுவது சரியல்ல" என கூறினார்.</p><p>இதனை குறிப்பிட்டு தற்போதைய முட்டை வீச்சுக்கு பின் பேசிய வீடியோவில் மஹுவா, "நீதிபதி அவர்களே, உங்கள் அறிவுரைப்படி நான் ஒரு சுதந்திர போராட்ட வீரர் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டது போல நான் என் மீதான தாக்குதலை எதிர்கொண்டேன்" என பகடியாக தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>இந்தியா மீது 100% வரிவிதிக்க டிரம்புக்கு முழு அதிகாரம் வழங்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றம் </title><link>https://www.maalaimalar.com/news/world/us-passes-bill-granting-trump-full-authority-to-impose-100-tariffs-on-india</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-passes-bill-granting-trump-full-authority-to-impose-100-tariffs-on-india#comments</comments><guid isPermaLink="false">a891c758-c52f-4d13-a2ba-5440833beaa6</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:45:53 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:45:53.588Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் போர்,trump,டிரம்ப்,tariffs,Russia-Ukraine war,Iran War,ஈரான் போர்,ரஷியா,வரிவிதிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/c0vvjao1/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/c0vvjao1/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா உட்பட ரஷியா மற்றும் ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது வரிவிதிக்கும் அதிகாரத்தை அதிபர் டிரம்ப்புக்கு வழங்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.</p> <p>டிரம்ப்பின் குடியரசு கட்சியை சேர்ந்த மறைந்த செனட்டர் லின்ட்சே கிரஹாமின் பெயரிடப்பட்ட 'லின்ட்சே கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் தடைவிதிப்புச் சட்டம் 2026' சபையில் கொண்டுவரப்பட்டு  வாக்கெடுப்பில் 262-159 என்ற கணக்கில் நிறைவேறியது. இதில் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>கையெழுத்திட்டால் மசோதா சட்டமாக மாறும். </p><h2>மசோதா </h2><p>இந்த மசோதா <a href="https://www.maalaimalar.com/topic/russia">ரஷிய </a>வங்கிகள், ரஷிய அதிகாரிகள் மற்றும் ரஷிய எரிசக்தி வர்த்தகம் மீது பல தடைகளை விதிக்கிறது. அதேநேரம் இந்தியா உட்பட ரஷியாவுடன் எண்ணெய், எரிவாயு வாங்குகின்ற பிரதான நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிப்பதற்காக ஏகபோக அதிகாரத்தை அதிபர் டிரம்ப்புக்கு வழங்குகிறது. </p><p>ரஷிய எண்ணெய் வாங்குகின்ற பிரதான இரு நாடுகள் இந்தியாவும், சீனாவும். நிறைவேற்றப்பட்ட மசோதா ரஷியாவிடம் எண்ணெய், எரிவாயு வாங்கும் 5 முதன்மை நாடுகள் இவற்றின் மீது அழுத்தத்தை அதிகரிக்க, இந்த மசோதாவில் புதிய சட்டபூர்வ வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  </p> <p>அதேநேரம் ரஷியாவிடம் இருந்து 15 சதவீதத்திற்கும் குறைவான அளவில் இயற்கை எரிவாயு இராக்கிமதி செய்யும் நாடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷியாவின் வர்த்தகத்தை மட்டுப்படுத்தும் பல அம்சங்கள் மசோதாவில் உள்ளன.</p><h2>உக்ரைன் போர்</h2><p>உக்ரைன் நேட்டோ நாடுகளில் இணைவதை எதிர்த்து ரஷியா 2022 இல் தொடுத்த போர் முடிவின்றி நீண்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கர் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ரஷியா மீது பல பொருளாதார தடைகளை விதித்தன. </p><p>இருப்பினும் ஆசியாவில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தனது எண்ணெய், எரிவாயுவை ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷியா தனது ஏற்றுமதி பொருளாதரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. </p><p>இதனை கட்டுப்படுத்த அமெரிக்கா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த மசோதா பார்க்கப்படுகிறது.</p> <h2>டெல்லி</h2><p>டெல்லியில் நடந்த பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் கலந்துகொண்டு பல விஷயங்களை பேசிய நிலையில் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான நிலைபாட்டை இந்தியா எடுத்துள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின் நோக்கங்கள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.</p><p>இந்த மசோதா நேரடியாக இந்திய பொருட்கள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கவில்லை. மாறான அவ்வாறு வரிவிதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழங்கியுள்ளது. </p><p>முன்னதாக அதிபர் டிரம்ப் விதித்த பல வரிகள் அமெரிக்க நீதிமன்றங்களால் இடைக்கால தடைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இந்த மசோதா ஒரு மாற்றுப் பாதையாக பார்க்கப்படுகிறது.</p> <h2>ஈரான் மீது தடை நீட்டிப்பு</h2><p>ரஷியாவுடன் வர்த்தக உறவு கொண்டுள்ள நாடுகள் தவிர்த்து இந்த மசோதா ஈரான் மீது ஏற்கனவே உள்ள தடைகளை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறது.</p><p>ஈரான் உடன் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக போரிட்டு வரும் அமெரிக்கா, ராணுவ ரீதியாக பல இழப்புகளை சந்தித்து போரை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. </p><p>ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க கூடாது என்று தொடங்கிய போர், தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்துவது என்பதோடு சுருங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளால் பெருமை ஏற்படும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-17-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-17-september-2026#comments</comments><guid isPermaLink="false">bd5acde8-b9df-42b2-b1ed-68ee220b5083</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:32:52 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:32:52.732Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/09/27268095-rasi-1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/09/27268095-rasi-1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்காது. சில நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம்.</p><h2>ரிஷபம்</h2><p>அதிகாலையிலேயே நல்ல தகவல் வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய முடிவெடுப்பீர்கள். இடம், பூமி சேர்க்கை உண்டு கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.</p> <h2>மிதுனம்</h2><p>தொகை எதிர்பார்த்தபடி வந்து தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். சேரும். தொழில் முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.</p><h2>கடகம்</h2><p>தடைகள் அகலும் நாள். ஆரோக்கியப் பாதிப்புகளைத் தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. தொழிலில் பங்குதாரர்களால் நன்மை ஏற்படும்.</p> <h2>சிம்மம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடும்.</p><h2>கன்னி</h2><p>போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர். வருமானம் திருப்தி தரும்.</p> <h2>துலாம்</h2><p>சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். திருமணப் பேச்சுகள் முடிவாகும்.</p><h2>விருச்சிகம்</h2><p>வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.</p> <h2>தனுசு</h2><p>மகிழ்ச்சி கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.</p><h2>மகரம்</h2><p>நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வாகன மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். சுபச்செய்திகள் வந்து சேரும்.</p> <h2>கும்பம்</h2><p>யோகமான நாள். வரவு திருப்தி தரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.</p><h2>மீனம்</h2><p>காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. உத்தி யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.</p> ]]></content:encoded></item><item><title>கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பு</title><link>https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-2#comments</comments><guid isPermaLink="false">c3c5dadb-5a27-42ba-a176-68ab9b09b518</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:18:49 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:18:49.456Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,கும்பாபிஷேகம்,Kumbhabhishekam,meenakshi amman temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/fs8f9ps3/madurai4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/fs8f9ps3/madurai4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது.</p> <p>17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.</p><h2>யாகசாலை பூஜைகள்</h2><p>இதை முன்னிட்டு கோவிலில் பல மாதங்களாக திருப்பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் நடந்தன. யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கலசங்களில் நிரப்பி யாகசாலையில் வைத்து தினமும் பூஜைகள் நடந்தது.</p> <h2>பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்</h2><p>நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் 10-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அந்த வழிபாடு நிறைவு பெற்ற பிறகு பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் தொடங்கியது.</p><p>மேளதாளங்கள் முழங்க யானை, டங்கா மாடு அணிவகுத்து செல்ல யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி கோவிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டன. காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல்குமாரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ngskdris/ParivaraMoorthy1.jpg" /></figure><p>மூலவர் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர், தங்க விமானங்கள், சன்னதி விமானங்கள், 12 கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு நேற்று மாலை 11-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.</p><h2>மகா கும்பாபிஷேகம்</h2><p>விழாவின் சிகரமாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் மகா கும்பாபிஷேக விழா இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதனால் மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டு காணும் இடமெல்லாம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தது.</p><p>திருப்பரங்குன்றம் கோவிலில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியசுவாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை காண எழுந்தருளினார்.</p> <p>முன்னதாக இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாக பூஜை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு 5.45 மணிக்கு நடைபெற்றது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள், தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றபிறகு சரியாக 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.  கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. </p><p>கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/t8747ykq/madurai3.jpg" /></figure><p>பின்பு மூலவர் மீனாட்சி அம்மனுக்கு காலை 8.10 மணிக்கும், சுந்தரேசுவரருக்கு 8.50 மணிக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்பின்னர் அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும்.</p><p>காலை 10 மணி முதல் இரவு வரை நடைசாத்தப்படாமல் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இன்றிரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி, சுந்தரேசுவரர் வீதி உலா வந்து காட்சி அளிக்கிறார்கள்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/lei9u4q2/madurai5.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>மண்ணோடு மண்ணான F15.. ஏமனில் சவுதி போர் விமானத்தை ஏவுகணையால் துளைத்த ஹவுதிக்கள்- வீடியோ 
</title><link>https://www.maalaimalar.com/news/world/f-15-brought-down-houthis-shoot-down-saudi-warplane-with-a-missile-in-yemen-video</link><comments>https://www.maalaimalar.com/news/world/f-15-brought-down-houthis-shoot-down-saudi-warplane-with-a-missile-in-yemen-video#comments</comments><guid isPermaLink="false">e0e9b735-1d01-40c3-9056-e861a339fc69</guid><pubDate>Thu, 17 Sep 2026 02:01:17 +0000</pubDate><atom:updated>2026-09-17T02:01:17.396Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Fighter Jet,போர் விமானம்,Yemen,ஏமன்,Houthi rebels,ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/8zrr4syu/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ F15]]></media:title><media:description type="html"><![CDATA[ F15]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/8zrr4syu/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் வான்பரப்பில் சவுதி ராணுவத்தின் எப்15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.</p> <p>ஏமனில் <a href="https://www.maalaimalar.com/news/world/tension-in-the-red-sea-houthi-rebels-capture-port-city-bab-el-mandeb-strait-at-extreme-risk">ஹவுதி </a>கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரச படைகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. ஹவுதிக்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளது. </p> <h2>எப்15</h2><p>இந்நிலையில் ஏமனின் மாரிப் மாகாணத்தில் சவுதியின் எப்15 போர் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதிக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>சுட்டு வீழ்த்தப்பட்ட சவதி விமானம் மாரிப் பகுதியில் ராணுவ நடவ்டிக்கையில் ஈடுபட்டிருந்ததாக ஹவுதிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>ஹவுதி ராணுவ பிரிவு செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மாரிப் மாகாணத்தின் வான்வெளியில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த சவுதி F15 ரக போர் விமானம் ஒன்றை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வான்விட்டு வான்  பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தி வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தின." என தெரிவித்துள்ளார்.</p> <p>சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாலைவனத்தில் விழுந்து கிடந்த போர் விமானம் முற்றிலும் உருக்குலைந்துள்ளது காணப்படுகிறது.</p><p>மேலும் சவுதியின் டிரோன் ஒன்றையும் மாரிபில் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதிக்கள் தெரிவித்துள்ளனர்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The wreckage of a Saudi F-15 fighter jet in Marib, Yemen, after the Houthis claimed they shot down the aircraft on September 16.<br><br>The Houthi claim remains unverified, and Saudi authorities have not confirmed the loss. <a href="https://t.co/nkphzdmM54">pic.twitter.com/nkphzdmM54</a></p>&mdash; Ebrahim Zolfaghari (@IranTimes72) <a href="https://x.com/IranTimes72/status/2100271070813323537?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>தாக்குதல்</h2><p>ஏற்கனவே சவுதி விமானங்கள் ஏமனில் தங்கள் ஆளுகைக்கு உட்பட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை தாக்கியதாக ஹவுதிக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.</p><p>ஒரே வாரத்தில் சவுதி 450 வானவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹவுதி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. </p><p>தைஸ், லாஜ், அல் ஜாவப், மாரிப், சதா, அல் பைடா மாகாணங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர் என்றும் பலர் காயம்பட்டனர் என்றும் ஹவுதி தரப்பு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-7</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-7#comments</comments><guid isPermaLink="false">6f7a3c61-ea0a-4361-a91d-e838b238bda1</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:46:59 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:46:59.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய பெட்ரோல் விலை,Todays petrol price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>இன்றைய (17.09.2026 - வியாழக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-says-it-destroyed-2-small-iranian-boats-trying-to-steal-a-sea-drone">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 105.75 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள் - 17 செப்டம்பர் 2026: ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-17-september-2026-raghavendra-swamy-guruvara-thirumanjanam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-17-september-2026-raghavendra-swamy-guruvara-thirumanjanam#comments</comments><guid isPermaLink="false">d7d0b227-a710-420b-b842-b882e2283a06</guid><pubDate>Thu, 17 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-17T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/18/26670527-ragavendrar.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Raaghavendar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/18/26670527-ragavendrar.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-31 (வியாழக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :    சஷ்டி நண்பகல் 12.06 மணி வரை பிறகு சப்தமி</p><p>நட்சத்திரம் : அனுஷம் இரவு 9.51 மணி வரை பிறகு கேட்டை</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை</p><p>சூலம் : தெற்கு</p><p>நல்ல நேரம் : காலை  9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு</h2><p>வளர்பிறை சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - அனுகூலம்</p><p>ரிஷபம் - நன்மை</p><p>மிதுனம் - புகழ்</p><p>கடகம் - நட்பு</p><p>சிம்மம் - பாராட்டு</p><p>கன்னி - பொறுமை</p> <p>துலாம் - பெருமை</p><p>விருச்சிகம் - அன்பு</p><p>தனுசு - திறமை</p><p>மகரம் - தனம்</p><p>கும்பம் - தாமதழ்</p><p>மீனம் - நற்செய்தி</p> ]]></content:encoded></item><item><title>இந்திய கடற்படை கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல் - தூதரக அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/pakistan-vessel-collides-with-indian-navy-ship-india-summons-diplomat-and-lodges-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/pakistan-vessel-collides-with-indian-navy-ship-india-summons-diplomat-and-lodges-protest#comments</comments><guid isPermaLink="false">2ad3c9f4-c055-4a42-8399-7802cca714c8</guid><pubDate>Thu, 17 Sep 2026 00:50:31 +0000</pubDate><atom:updated>2026-09-17T00:50:31.286Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Ministry of External Affairs,INDIAN ARMY,இந்திய ராணுவம்,வெளியுறவு அமைச்சகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mj65gtur/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கப்பல் ]]></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mj65gtur/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் கடற்படையை சேர்ந்த கப்பல் இந்திய கடற்படை கப்பலை மோதிய சம்பவத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.</p> <p>கடந்த செப்டம்பர் 15, அரபிக் கடலின் வடக்கே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88">இந்​தி​ய கடற்​படை​யின்</a> போர்க் கப்​பல்  கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. </p><p>சா்வதேச நீா்பரப்பில் இந்​தி​ய கடற்​படை​ போர்க் கப்​பலை நோக்கி பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் அதிக வேகத்​தில் மோதி​யது. இதில் பெரிய சேதம் ஏற்படவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் முன்னதாக தெரிவித்திருந்தது. </p> <h2>கண்டனம்</h2><p>ஆயினும் பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் மோதி​யது தொடர்​பாக, இந்​தி​யா​வுக்​கான பாகிஸ்​தான் தூதரக பொறுப்பு அதி​காரி சாத் வார்​ரைச்-ஐ, வெளி​யுறவுத்​துறை அமைச்​சகதுக்கு நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடலில் பாகிஸ்​தான் கடற்​படை செய்தது ஏற்​றுக்​கொள்ள முடி​யாத ​ தொழில்​முறையற்ற நடவடிக்கை ஆகும்.</p> <p>இது, 1991 ஏப்​ரல் மாதம் இந்​தி​யா-​பாகிஸ்​தான் இடையே போடப்பட்ட ராணுவ நடவடிக்​கைகள் மற்​றும் படை நகர்​வு​கள் குறித்த முன்​கூட்​டிய தகவல் அளிக்​கும் ஒப்​பந்​தத்​தின் 10வது பிரிவுக்கு முரணானது என்று வெளி​யுறவு அமைச்​சகம் அவரிடம் தெரி​வித்​தது.</p><p>இது​போன்ற சம்​பவங்​கள் மீண்​டும் நடை​பெறாமல் தடுக்​கும் வகை​யில், இருநாட்டு ஒப்​பந்​த விதி​களை மதித்து, உரிய கவனத்​துடன் செயல்பட ​​பாகிஸ்​தான் அதி​காரி​களிடம் தெரிவிக்​கு​மாறு அந்​நாட்டு பொறுப்பு அதி​காரி​யிடம் இந்​தியா அறி​வுறுத்​தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;என்னை அச்சுறுத்தும் நோக்கில் ரஷ்யா எனது விமானத்தை இருமுறை தாக்க முயன்றது&apos; - அதிபர் ஜெலென்ஸ்கி பரபரப்பு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/zelensky-says-russia-tried-to-attack-his-plane-twice-to-intimidate-him</link><comments>https://www.maalaimalar.com/news/world/zelensky-says-russia-tried-to-attack-his-plane-twice-to-intimidate-him#comments</comments><guid isPermaLink="false">7567c504-6177-4b66-a2fb-4985d80aacc1</guid><pubDate>Thu, 17 Sep 2026 00:28:43 +0000</pubDate><atom:updated>2026-09-17T00:28:43.125Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,ரஷ்யா,வோலோடிமிர் ஜெலன்ஸ்கி,Volodymr Zelensky</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/acurlaqu/volodymyr-zelensky.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ volodymyr zelensky]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/acurlaqu/volodymyr-zelensky.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தன்னையும் மற்ற வெளிநாட்டு தலைவர்களையும் அச்சுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த சம்பவங்கள் நடந்தன என்றும், கடந்த சில வாரங்களில் <a href="https://www.maalaimalar.com/news/world">ரஷ்யா</a> தனது விமானத்தை இரண்டு முறை குறிவைத்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>செவ்வாயன்று சி.பி.எஸ். நியூஸிடம் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/volodymr-zelensky">ஜெலன்ஸ்கி</a>, முதல் சம்பவம் நடந்தபோது தனது விமானம் மால்டோவாவில் இருந்ததாக கூறினார். அவர் அந்த நாடு வழியாக திரும்பி பயணித்தபோதும் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக கூறினார்.</p><h2>அடுத்தடுத்து தாக்குதல்கள்:</h2><p>"மால்டோவாவில் எனது விமானம் இருந்தது, அதனால்தான் அவர்கள் மால்டோவாவை தாக்கினார்கள். நாங்கள் மீண்டும் சிசினாவ் வழியாக தாயகம் திரும்பியபோதும், அவர்கள் அதையே செய்தார்கள்," என்று அவர் கூறினார்.</p><p>சில நாட்களுக்குப் பிறகு உக்ரைனுக்குத் திரும்பும் பயணத்தின்போது, ​​ஒன்று அல்லது இரண்டு டிரோன்கள் மால்டோவாவின் வான்வெளிக்குள் நுழைந்ததாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.</p><p>அதிபர் தூதுக்குழுவினருடன் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர். அந்த நேரத்தில், டிரோன் செயல்பாடு வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.</p><h2>எச்சரிக்கை விடுப்பதே நோக்கம்:</h2><p>இருப்பினும், தனக்கும் மற்ற சர்வதேச தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதை நோக்கமாக கொண்ட ஒரு பரந்த ரஷ்ய உத்தியின் ஒரு பகுதியே இந்த சம்பவங்கள் என தாம் நம்புவதாக ஜெலன்ஸ்கி கூறினார். உக்ரைனுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகள் சம்பந்தப்பட்ட மற்றொரு டிரோன் சம்பவத்திற்கு மத்தியில், உக்ரைன் அதிபரின் இந்த குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.</p><p>ஞாயிற்றுக்கிழமையன்று, உக்ரைனில் பயணம் செய்துகொண்டிருந்த வெளிநாட்டு பிரமுகர்கள் அடங்கிய தூதுக்குழுவை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியது. அக்குழுவில் மூத்த ஐரோப்பிய அதிகாரிகளும், சி.ஐ.ஏ.-வின் முன்னாள் இயக்குநர் டேவிட் பெட்ரேயஸும் இடம்பெற்றிருந்தனர்.</p><p>வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, போலந்து எல்லைக்கு அருகே பயணிகள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p><p>அந்த ரயிலில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் இருந்தனர் என்பது ரஷ்யத் தரப்புக்குத் தெரிந்திருந்ததா என்பது தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும், ஆனால் அது தற்செயலாக நடந்ததாகத் தாம் நம்பவில்லை என்றும் ஜெலன்ஸ்கி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>செஸ் ஒலிம்பியாட்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி</title><link>https://www.maalaimalar.com/sports/chess-olympiad-indian-men-beat-thailand-3-1</link><comments>https://www.maalaimalar.com/sports/chess-olympiad-indian-men-beat-thailand-3-1#comments</comments><guid isPermaLink="false">5c068c50-8d98-44f6-9752-9ebb67eca20e</guid><pubDate>Wed, 16 Sep 2026 23:52:20 +0000</pubDate><atom:updated>2026-09-16T23:52:20.726Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒலிவியர் மெகாடன்,Chess Olympiad</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/kguko7zt/Chess-Olympiad.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chess Olympiad]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/kguko7zt/Chess-Olympiad.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்கி 27-ந்தேதி வரை நடக்கிறது. </p><p>இதில் சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் கலந்து கொள்கின்றன. அதாவது ஏறக்குறைய 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் களம் காண்கிறார்கள்.</p><h2>வெற்றியுடன் தொடங்கிய இந்தியா:</h2><p>உலக சாம்பியன் டி. குகேஷ், நிஹால் சரின் மற்றும் விதித் குஜ்ராத்தி ஆகியோர் உறுதியான வெற்றிகளைப் பதிவுசெய்தபோதிலும், அர்ஜுன் எரிகைசியின் கடைசி நேர சரிவு, இந்தியா முழு வெற்றி பெறும் வாய்ப்பை இழக்க செய்தது. இதன்மூலம், 46-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆண்கள் அணி, தாய்லாந்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி தனது பயணத்தைத் தொடங்கியது.</p><p>தனடோன் குல்ப்ருதானோனை வீழ்த்தி, நிஹால் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் ஆனார். அதனைத் தொடர்ந்து, குகேஷ் தனது சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபாரிஸ் ரஷீத் அல்ரியாமியை வீழ்த்தினார்.</p><p>பின்னர், விதித், துப்ஃபா கும்நோர்கேவை எளிதாக வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தார். இருப்பினும், ஆட்டத்தின் பெரும்பகுதி நேரம் வலுவான நிலையில் இருந்த அர்ஜுன், பிரின் லோஹாவிரபாப்பிடம் தோல்வியடைந்தார்.</p><h2>இந்திய மகளிர் அணி அபாரம்:</h2><p>இதற்கிடையில், இந்திய மகளிர் அணி, டொமினிகன் குடியரசு அணிக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தனது பயணத்தை தொடங்கியது.</p><p>தரவரிசையில் முன்னணியில் உள்ள இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி, வெள்ளை காய்களுடன் பிரான்செஸ்கா ரமிரெஸ் லூசோனை வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கினார். அதே சமயம், ஆர். வைஷாலி, மிகுலினா டி லா ரோசா மார்டினெஸுக்கு எதிராக எளிதாக வெற்றி பெற்றார்.</p><p>மேரி லோலி கொன்சாலஸ் பெகுவேரோவுக்கு எதிரான தனது வெற்றிக்காக வந்திகா அகர்வால் கடுமையாக போராட வேண்டியிருந்தது. இந்திய வீராங்கனை ஆட்டத்தை சமன் செய்யும் நிலையை நோக்கி செல்வது போல் தோன்றியபோது, ​​அவரது எதிராளி செய்த ஒரு தவறால், கோட்டை மற்றும் சிறு காய்களைக் கொண்ட இறுதி ஆட்டம் ஏற்பட்டது. அதில் வந்திகாவின் முன்னேறிய சிப்பாய் தீர்க்கமானதாக அமைந்தது.</p>]]></content:encoded></item><item><title>சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 82-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/sudan-gold-mine-collapse-kills-at-least-82-people-with-many-more-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/sudan-gold-mine-collapse-kills-at-least-82-people-with-many-more-missing#comments</comments><guid isPermaLink="false">e8c90807-c41a-4957-b63d-9f9f0093c68f</guid><pubDate>Wed, 16 Sep 2026 20:50:51 +0000</pubDate><atom:updated>2026-09-16T20:50:51.168Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sudan,சூடான்,gold mine collapse,தங்க சுரங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6cacgzmy/sudan-gold-mine-collapse.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sudan gold mine collapse]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6cacgzmy/sudan-gold-mine-collapse.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சூடானின் தொலைதூர பகுதியில் உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/gold-mine">தங்க சுரங்கம்</a> ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82-ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளும் ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். </p><p>அதேவேளையில், மீட்பு குழுவினர் போதிய உபகரணங்கள் இல்லாத நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் சிரமங்களை எதிர்கொண்டனர். கடுமையான போரில் சிக்கி தவிக்கும் ஒரு நாட்டில் நிகழ்ந்துள்ள மிக சமீபத்திய துயர சம்பவம் இதுவாகும்.</p><p>மேற்கு கோர்டோஃபான் மாகாணத்தில் உள்ள நுஹுத் நகரில் அமைந்துள்ள 'அல்-சாரா' தங்க சுரங்கத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். இப்பகுதி, சூடான் ராணுவத்திற்கு எதிராக மூன்றாண்டுகளுக்கும் மேலாக போரிட்டு வரும் துணை ராணுவ படையான 'ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ்' (RSF) கட்டுப்பாட்டில் உள்ளது.</p><h2>82 உடல்கள் மீட்பு:</h2><p>'எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் ரூம்ஸ்' அமைப்பின் உறுப்பினரான சுலைமான் அபு ஹமீதா, புதன்கிழமை மதியத்திற்குள் மீட்பு குழுவினர் 82 உடல்களை மீட்டதாக கூறினார். "ஆனால் இன்னும் பலரைப்பற்றிய தகவல் இல்லை," என்று அபு ஹமீதா 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p>'எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் ரூம்ஸ்' என்பது மோதல்களை கண்காணிக்கவும், போரினால் பாதிக்கப்பட்ட சூடான் முழுவதும் உள்ள சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும் செயல்படும் ஒரு அடித்தள அளவிலான அமைப்பாகும். உள்ளூர் நிர்வாக அதிகாரி ஒருவரும் 82 உடல்கள் மீட்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.</p><p>ஞாயிற்றுக்கிழமையன்று சுரங்கத்தின் ஒரு பகுதியில் சரிவு தொடங்கி, அதனுடன் இணைக்கப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக அந்த அதிகாரி தெரிவித்தார். மீட்புப் பணிகளுக்கு தனியார் உரிமையிலுள்ள ஒரே ஒரு ஃபோர்க்லிஃப்ட் (forklift) மட்டுமே கிடைத்துள்ளதாகவும், இது உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியை சிக்கலாக்குவதாகவும் அவர் கூறினார்.</p><h2>தேடுவதற்கான இயந்திரங்கள் இல்லை:</h2><p>"இந்த சரிவு மிகப்பெரியது மற்றும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 30 மீட்டருக்கும் (98 அடி) அதிகமான ஆழத்தில் மண் மற்றும் கற்களை அகற்றி, உயிர் பிழைத்தவர்களை தேடுவதற்கான இயந்திரங்கள் எங்களிடம் இல்லை," என்று உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான கைரல்-சையத் கபாரா தொலைபேசி வாயிலாக ஏ.பி.-இடம் கூறினார்.</p><p>'அல்-சாரா' தங்கச் சுரங்கமானது சூடான் முழுவதும் பரவியுள்ள ஆயிரக்கணக்கான சிறிய அளவிலான மற்றும் முறைசாரா சுரங்கங்களில் ஒன்றாகும். சூடான் நாடு போரினால் சூழப்பட்டுள்ளது; இந்த மோதல்கள் நாட்டின் சில பகுதிகளை பஞ்சத்தின் விளிம்புக்கே தள்ளியுள்ளன. சூடான் ஒரு முக்கிய தங்க உற்பத்தி நாடாக இருந்தாலும், அங்கு பாதுகாப்பு விதிமுறைகள் பரவலாகப் பின்பற்றப்படாததால், சுரங்கங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவது அரிதான நிகழ்வு அல்ல. 2023-இல் நிகழ்ந்த விபத்தில் 14 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 2021-இல் நடந்த விபத்தில் 38 பேர் பலியாகினர்.</p><p>விபத்தில் இருந்து உயிர் பிழைத்த மற்றொருவரான அல்-அமின் சுலைமான், புதன்கிழமை காலை நிலவரப்படி 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். "இன்னும் சிலர் உள்ளே சிக்கியுள்ளனர்," என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>113 சலான்கள், ரூ. 10.68 லட்சம் அபராதம் நிலுவையில் இருந்த இருசக்கர வாகனம் பறிமுதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/gurugram-traffic-police-impounds-bike-with-113-pending-challans-worth-rs-1068-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/national/gurugram-traffic-police-impounds-bike-with-113-pending-challans-worth-rs-1068-lakh#comments</comments><guid isPermaLink="false">87ceb66d-ecf7-40f4-8e32-60e762835230</guid><pubDate>Wed, 16 Sep 2026 20:04:14 +0000</pubDate><atom:updated>2026-09-16T20:04:14.639Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Traffic Police,போக்குவரத்து காவல் துறை,gurugram,குருகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/96fnvd39/gurugram-traffic-police.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic: குருகிராம்போக்குவரத்து காவல் துறை

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/96fnvd39/gurugram-traffic-police.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/gurugram">குருகிராம்</a> போக்குவரத்து காவல்  துறையினர் எம்.டி.ஐ. சௌக் (MDI Chowk) பகுதியில் நடத்திய வாகன சோதனையின்போது, ​​மொத்தம் ரூ. 10.68 லட்சம் மதிப்பிலான 113 நிலுவை சலான்களை (போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்) கொண்ட ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.</p><p>90 நாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தாத வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். </p><h2>ஆவணங்கள் இல்லை:</h2><p>எம்.டி.ஐ. சௌக் பகுதியில் பணியில் இருந்த மண்டல அதிகாரியான ASI பிரவீன் குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​அவரது குழுவினர் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது வாகன ஓட்டி அதற்கான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தவறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>"சரிபார்த்ததில், அந்த இருசக்கர வாகனத்தின் மீது 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 113 சலான்கள் நிலுவையில் இருப்பதும், அதற்கான மொத்த அபராத தொகை சுமார் ரூ. 10.68 லட்சம் இருப்பதும் தெரியவந்தது.</p><h2>இருசக்கர வாகனம் பறிமுதல்:</h2><p>"தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் மற்றும் காப்பீடு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக இந்த சலான்கள் பெரும்பாலும் விதிக்கப்பட்டிருந்தன. போலீஸார் அந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்," என்று மூத்த போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.</p><p>போக்குவரத்து விதிகளை பின்பற்றவும், வாகனத்திற்கான அத்தியாவசிய ஆவணங்களை புதுப்பித்து வைத்திருக்கவும், நிலுவையில் உள்ள அபராத தொகையை உரிய நேரத்தில் செலுத்தவும் அனைத்து வாகன ஓட்டிகளையும் குருகிராம் போக்குவரத்து காவல் துறை செய்தி தொடர்பாளர் கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்: இந்திய அணியில் நமன் திர், ஆகிப் நபிக்கு முதல்முறையாக வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/hardik-pant-ignored-as-dhir-nabi-get-maiden-call-ups</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/hardik-pant-ignored-as-dhir-nabi-get-maiden-call-ups#comments</comments><guid isPermaLink="false">2174d022-7761-4307-8256-f4853b28224f</guid><pubDate>Wed, 16 Sep 2026 19:02:31 +0000</pubDate><atom:updated>2026-09-16T19:02:31.432Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hardik Pandya,ஹர்திக் பாண்டியா,Rishabh Pant,இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடர்,INDvsWI,ரிஷப் பண்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cimmjwoo/bcci.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BCCI Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cimmjwoo/bcci.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் (ODI) தொடருக்கான <a href="https://www.maalaimalar.com/sports/cricket">இந்திய அணியில்</a>, பஞ்சாப் அணியின் இளம் ஆல்-ரவுண்டர் நமன் திர் மற்றும் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி ஆகியோர் முதல்முறையாக அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில், அனுபவ வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/rishabh-pant">ரிஷப் பண்ட்</a> ஆகியோர் வெவ்வேறு காரணங்களுக்காக அணியில் சேர்க்கப்படவில்லை.</p><p>திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கும் இத்தொடரில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. டி20 அணியானது பெரும்பாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியையே கொண்டிருக்கும்; எனினும், யாஷ் தாக்கூர் மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோருக்கு பதிலாக மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2>தேசிய தேர்வு குழு திட்டம்:</h2><p>பாண்டியா செப்டம்பர் 20-ஆம் தே<em>தி</em> உடல் தகுதி பெற்றவராக அறிவிக்கப்பட இருந்தாலும், 'இந்தியா ஏ' அணிக்காக 10 ஓவர்கள் வீசும் அளவுக்கு தகுதியுடையவர் என்பதை நிரூபித்தால் மட்டுமே தேசிய தேர்வு குழு அவரை தேர்ந்தெடுக்கும்.</p><p>வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் அணியில் சேர்ப்பதற்காக, நிதிஷ் குமார் ரெட்டியை ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இருந்து தேசிய தேர்வு குழு விடுவித்துள்ளது. அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><h2>ஒருநாள் அணியில் முதல்முறையாக வாய்ப்பு:</h2><p>பஞ்சாப் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐ.பி.எல். (IPL) தொடரிலும் நமன் திர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே (Surrey) அணிக்காக சிறப்பாக செயல்பட்டதற்காக ஆகிப் நபிக்கு தேசிய ஒருநாள் அணியில் முதல்முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.</p><p>ஜடேஜாவின் வருகையுடன், அனுபவ வீரர்களுடன் புதிய வீரர்களின் திறனையும் மதிப்பிடுவதற்கான வாய்ப்பை இத்தொடர் தேர்வாளர்களுக்கு வழங்கும்.</p><h2>இந்திய ஒருநாள் அணி:</h2><p>ஷுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், முகமது சிராஜ், ஆகிப் நபி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நமன் திர்</p><h2>இந்திய டி20 அணி:</h2><p>ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா [துணை கேப்டன்], ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், நிதிஷ் குமார், நிதீஷ் குமார் ரெட்டி.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி பிறந்தநாள்: குஜராத்தில் 88 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் ஏற்ற சிறப்பு ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/more-than-88-lakh-lamps-to-be-lit-on-modis-birthday-in-gujarat#comments</comments><guid isPermaLink="false">c3a1a907-457e-40ba-8c8e-6db25dcbc5f9</guid><pubDate>Wed, 16 Sep 2026 18:05:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T18:05:04.389Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/39vszacu/PM-Modi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/39vszacu/PM-Modi.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் முழுவதும் 18,500 இடங்களில் 88 லட்சத்திற்கும் அதிகமான மண் அகல் விளக்குகளை ஏற்றுதல், வத் நகரில் இருந்து வாரணாசிக்கு இருசக்கர வாகன பேரணி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆரத்திகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன், நாளை (செப்டம்பர் 17) பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> பிறந்தநாளும், அவரது 25 ஆண்டுகால பொதுவாழ்வு பணியும் கொண்டாடப்பட உள்ளன.</p><p>மாலை 7 மணிக்கு மாவட்டங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என மாநிலம் முழுவதும் 'ஆசீர்வாத் நோ திவ்டோ' (ஆசீர்வாதத்தின் விளக்கு) நிகழ்ச்சி நடைபெறும். <a href="https://www.maalaimalar.com/news/national">குஜராத்</a> அரசு மற்றும் பா.ஜ.க. வெளியிட்ட தகவல்களின்படி, மாலை 6 மணி முதல் பக்தி இசை, சத்சங்கம் (ஆன்மீகச் சொற்பொழிவுகள்) மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் தொடங்கும். </p><h2>88 லட்சம் அகல் விளக்குகள்:</h2><p>"பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நீண்ட ஆயுளுடனும் நாட்டிற்கு தொடர்ந்து சேவையாற்றவும் வேண்டி, 18,500-க்கும் மேற்பட்ட இடங்களில் 88 லட்சத்திற்கும் அதிகமான மண் அகல் விளக்குகள் ஏற்றப்படும்," என்று மாநில அரசு செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ஜிது வகானி தெரிவித்தார்.</p><p>மோடி பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7 வரை மாநிலம் தழுவிய 'சேவா சங்கல்ப் அபியான்' (சேவை உறுதிமொழி இயக்கம்) என்ற நிகழ்ச்சியை பா.ஜ.க. முன்னெடுக்கவுள்ளது.</p><h2>இருசக்கர வாகன பேரணி:</h2><p>பா.ஜ.க.வின் 'சேவா சங்கல்ப் அபியான்' இயக்கத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி பிறந்த ஊரான வத் நகரில் இருந்து வாரணாசிக்கு இருசக்கர வாகன பேரணி வியாழக்கிழமை காலை தொடங்கவுள்ளது; இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்.</p><p>மோடி 2001 அக்டோபர் 7 முதல் 2014 மே 22 வரை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றினார். அவர் தற்போது வாரணாசி மக்களவை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.</p><p>இந்நிகழ்ச்சிகளில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மாநில பா.ஜ.க. தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் போட்டியிட 60 வேட்பாளர்கள் மனு தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/60-candidates-file-nominations-for-madurantakam-dharapuram-bypolls</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/60-candidates-file-nominations-for-madurantakam-dharapuram-bypolls#comments</comments><guid isPermaLink="false">58cc1820-2b39-4a6c-8da5-8bb3e71c4a65</guid><pubDate>Wed, 16 Sep 2026 17:15:48 +0000</pubDate><atom:updated>2026-09-16T17:15:48.131Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,bypolls,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தனி தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைந்தது. இதில் ஆளும் த.வெ.க. (TVK) மற்றும் எதிர்க்கட்சியான <a href="https://www.maalaimalar.com/topic/dmk">தி.மு.க.</a> உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மொத்தம் 60 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். </p><p>இடதுசாரி கட்சிகள் இத்தொகுதிகளுக்கான தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழகத்தில்</a> நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல்கள் சுவாரஸ்யமான ஐந்து முனை போட்டிக்கு களமாக அமையவுள்ளன.</p><h2>60 பேர் வேட்புமனு தாக்கல்:</h2><p>தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதள தகவலின்படி, மதுராந்தகத்தில் 40 பேரும் (28 ஆண்கள், 12 பெண்கள்), தாராபுரத்தில் 20 பேரும் (10 ஆண்கள், 10 பெண்கள்) வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.</p><p>இருப்பினும், நாளை (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கும் என்றும், அதன்பிறகே களத்தில் உள்ள வேட்பாளர்களின் இறுதி எண்ணிக்கை தெரியவரும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. (TVK) தனது முதல் அரசை அமைத்த பிறகு மாநிலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.</p><p>த.வெ.க. நிறுவனரும் முதலமைச்சருமான விஜய், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு முறையே முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான கே. மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்தியபாமா ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார்.</p><p>குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் ஏப்ரல் 23 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களாக அந்தந்த தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள்; பின்னர் அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் த.வெ.க. கட்சியில் இணைந்தனர்.</p><h2>தி.மு.க., த.வெ.க. கட்சிகளுக்கு எதிரணி:</h2><p>மதுராந்தகத்திற்கு ஐ. பரந்தாமனையும், தாராபுரத்திற்கு எஸ். சுகன்யாவையும் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.</p><p>தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) தலைமை தாங்கும் அ.தி.மு.க., மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கனிதா சம்பத் மற்றும் தாராபுரத்தில் கே. பானுமதி ஆகியோரை நிறுத்தி, முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது.</p><p>பாரம்பரியத் தேர்தல் கூட்டணிகளில் இருந்து விலகி தனி இடதுசாரி அணியாக போட்டியிட போவதாக சி.பி.ஐ. (எம்) மற்றும் சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன; இதன் மூலம் அவை தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் நேரடி எதிரணியாக களமிறங்குகின்றன.</p>]]></content:encoded></item><item><title>“தேர்தலில் போட்டியென இடதுசாரிகள் முன்பே அறிவித்திருந்தால் அவர்களை ஆதரித்திருப்போம்” - சீமான்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-the-left-parties-had-announced-earlier-that-they-were-contesting-the-election-we-would-have-supported-them-seeman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-the-left-parties-had-announced-earlier-that-they-were-contesting-the-election-we-would-have-supported-them-seeman#comments</comments><guid isPermaLink="false">a4543cd0-2362-4dbf-919c-f4692bf7a108</guid><pubDate>Wed, 16 Sep 2026 16:28:03 +0000</pubDate><atom:updated>2026-09-16T16:28:03.353Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,by election,communists,சீமான்,இடைத்தேர்தல்,கம்யூனிஸ்டுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6kjvb5t4/New-Project-2026-09-16T215708.113.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “தேர்தலில் போட்டியென இடதுசாரிகள் முன்பே அறிவித்திருந்தால் அவர்களை ஆதரித்திருப்போம்” - சீமான்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6kjvb5t4/New-Project-2026-09-16T215708.113.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எதிர்பாராத ராஜிநாமாவால் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. அக்.6ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்களுக்கு இன்றுதான் கடைசி நாள். முடிவுகள் அக்.9ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.</p><h2>ஐந்துமுனைப் போட்டி</h2><p>இந்த இடைத்தேர்தலில் ஆளும் தரப்பான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாதக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் வெளியிலிருந்து ஆதரவு தந்தநிலையில் இத்தேர்தலிலும் தவெகவிற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p>ஆனால் தவெக ஆட்சியின்மீதான அதிருப்தியாலும், தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கிலும் தனித்து களம் காண்கிறது. </p><p>ஆறு கட்சிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. </p><p>இந்நிலையில் இன்று தேர்தல் குறித்து செய்தியாளர்களிடையே பேசியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இடதுசாரிகள் முன்னரே போட்டி என அறிவித்திருந்தால் இந்த இடைத்தேர்தலில் இருந்து நாங்கள் விலகி இருப்போம் என தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர் கூறியதாவது;</p><p>“இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரிகளின் இந்த முடிவை பாராட்டுகிறேன். எனினும், இந்த முடிவை இடதுசாரிகள் காலம் தாழ்த்தி எடுத்துவிட்டனர் என்பதில் எனக்கு வருத்தம். நாட்டில் நிலவிய தீய ஆட்சிக்கு இடதுசாரிகள் நெடுங்காலம் துணை நின்று விட்டார்கள். இது வருந்தத்தக்கது.</p><p>எங்களுக்கு புரட்சிக்கர சிந்தனை, போராட்டக் குணத்தை விதைத்து வளர்த்ததே கம்யூனிஸ்ட் இயக்கங்கள்தான். </p><p>இந்த முடிவை முன்னரே அறிவித்திருந்தால் நாங்கள் போட்டியிடாமல், அவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களை ஆதரித்திருப்போம். அவர்கள் கொஞ்சம் காலம் தாழ்த்திவிட்டனர். எங்கள் அரசியலில் நாங்கள் உறுதியாக இருப்பதால் தனித்து போட்டியிடுகிறோம்.” என தெரிவித்தார்.  </p>]]></content:encoded></item><item><title>‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/daredevil-filming-begins-in-november</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/daredevil-filming-begins-in-november#comments</comments><guid isPermaLink="false">ffbf26e6-41a1-4417-b5f5-bce1327c95ea</guid><pubDate>Wed, 16 Sep 2026 16:12:00 +0000</pubDate><atom:updated>2026-09-16T16:12:00.678Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Ajith Kumar,ஆதிக் ரவிச்சந்திரன்,adhik ravichandran,நடிகர் அஜித்குமார்,Dare Devil,டேர் டெவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hn6s2jth/New-Project-2026-09-16T205817.914.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hn6s2jth/New-Project-2026-09-16T205817.914.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/motorsports-city-actor-ajith-kumar-thanked-chief-minister-vijay">நடிகர் அஜித்குமார்</a> - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மீண்டும் உருவாக உள்ள ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு நவ.2ம் தேதி தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. </p><p>பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் பதாகையின்கீழ் இப்படத்தை நடிகை ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். இதுவே ஷாலினி தயாரிக்கும் முதல் படமாகும். விடாமுயற்சி படத்திற்கு பிறகு அனிருத் ரவிச்சந்தர் அஜித்தின் படத்திற்கு இசையமைக்கிறார்.</p><p>கடந்த ஒரு வருடமாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், இதன்மூலம் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்புகிறார்.</p><h2>குட் பேட் அக்லி</h2><p>ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அஜித்குமார் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. </p><p>இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்நிலையில் டேர் டெவில் படத்தில் ஆதிக் - அஜித் கூட்டணி மீண்டும் இணைகிறது. </p>]]></content:encoded></item><item><title>தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளம் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-expresses-deep-emotion-regarding-the-consecration-ceremony-of-the-madurai-meenakshi-amman-templea-magnificent-symbol-of-tamil-culture</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-expresses-deep-emotion-regarding-the-consecration-ceremony-of-the-madurai-meenakshi-amman-templea-magnificent-symbol-of-tamil-culture#comments</comments><guid isPermaLink="false">db10ce7d-bb92-4b98-9916-352904db8a27</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:17:25 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:17:25.683Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai Meenakshi Amman temple,Consecration Ceremony,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l63p5g3e/New-Project-2026-09-16T204642.559.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளம் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l63p5g3e/New-Project-2026-09-16T204642.559.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை<a href="https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-specials"> மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா </a>நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவால் இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது;</p><p>“தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். </p><p>தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்! </p><p>நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் மறுப்பு- முன்வைக்கும் இரண்டு கோரிக்கைகள்..!</title><link>https://www.maalaimalar.com/sports/asian-champions-trophy-pakistan-hockey-refuses-to-play-in-india-seeks-neutral-venue</link><comments>https://www.maalaimalar.com/sports/asian-champions-trophy-pakistan-hockey-refuses-to-play-in-india-seeks-neutral-venue#comments</comments><guid isPermaLink="false">f3f842b6-b03b-49b8-942c-b8df97ee6684</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:11:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:11:27.516Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hockey India,ஹாக்கி இந்தியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/1h9dz2hp/PakistanHockey001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/1h9dz2hp/PakistanHockey001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் மொகாலியில் வருகிற அக்டோபர் 27-ந்தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதில் பாகிஸ்தான் பங்கேற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக ஆசிய ஹாக்கி பெடரேசனிடம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும். அல்லது தாங்கள் விளையாடும் போட்டிகளை பொதுவான ஒரு இடத்தில் (இந்தியாவுக்கு வெளியில்) நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.</p><h2>பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் வேண்டுகோள்</h2><p>இது தொடர்பாக பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் தலைவர் மொகியுதீன் அகமது வானி கூறுகையில் "ஆசிய ஹாக்கி பெடரேசனை பாகிஸ்தான் ஹாக்கி பெட்ரேசன் அணுகியது. அப்போது தொடரை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும். இல்லையெனில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான உணர்ச்சிபூர்வமாக தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்களின் பாதுகாப்பு சூழ்நிலைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், "பாகிஸ்தானின் தடையற்ற மற்றும் முழுமையான பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில், நடுநிலையான ஒரு மைதானத்தைத் தேர்வு செய்வது குறித்த எங்களின் கண்ணியமான முன்மொழிவை ஆசிய ஹாக்கி சம்மேளனம் சாதகமாகப் பரிசீலிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார்.</p><p>பாகிஸ்தான் அணி அக்டோபர் 27-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஜலந்தர் மற்றும் மொகாலியில் விளையாடும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>