<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 28 Jul 2026 10:37:31 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-july-2026#comments</comments><guid isPermaLink="false">1e79a0a3-1015-4103-952c-60d74fc8dee8</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:26:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:55:50.164Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wjfprp8x/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wjfprp8x/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/china-j20-stealth-jets-massed-at-border-sparking-fresh-ladakh-tensions">எல்லையில் சீனா 'ஸ்டெல்த்' போர் விமானங்கள் குவிப்பு: லடாக்கில் மீண்டும் பதற்றம்!... </a></p><p>*சீனா ஆண்டிற்கு சுமார் 100 முதல் 120 J-20 விமானங்களை உற்பத்தி செய்து வருவதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>*தற்போதைய நிலவரப்படி, சீனாவிடம் சுமார் 300 முதல் 500 வரையிலான J-20 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-free-probe-no-harsh-action-against-minors-in-neet-protest-cases">போராட்டத்தில் கைதான 18 வயதுக்கு உட்பட்டோரை விடுவிக்க வேண்டும்.. போலீஸ் அடக்குமுறை மீது விசாரணை உண்டு - உச்சநீதிமன்றம்</a></p><p>*பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.</p><p>*குற்றப்பின்னணி உடையவர்கள் மீதான நடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi">மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்</a></p><p>* காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. </p><p>* நீதி, கூட்டாட்சி நல்லிணக்கம் மற்றும் நீதித்துறைத் தீர்ப்புகளை உண்மையுடன் செயல்படுத்துதல் ஆகிய பரந்த நலன் கருதி மத்திய அரசு தலையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/jadeja-returns-saransh-jain-earns-callup-for-sri-lanka-tests">இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஜடேஜா ரிடர்ன்ஸ்</a></p><p>* இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>* ம.பி.யைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் முதல் முறை இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/west-indies-126-for-7-wickets-in-third-day-against-pakistan-first-test">பாகிஸ்தான் அசத்தல் பந்துவீச்சு: 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் திணறல்</a></p><p>* பொறுப்புடன் ஆடிய ஷான் மசூத் சதமடித்து அசத்தினார்.</p><p>* வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-central-government-backed-down-on-cauvery-issue-for-karnataka-election-politics">காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியிருப்பது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா? - அண்ணாமலை</a></p><p>* மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. </p><p>* தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-2">தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்- உதயநிதி சாடல்</a></p><p>* இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.</p><p>* மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/man-living-on-engine-oil-for-22-years">22 ஆண்டுகளாக எஞ்சின் ஆயிலை குடித்து வாழும் விசித்திர மனிதர்!</a></p><p>* சாதாரண உணவு செரிக்கவில்லை ஆயில் மட்டுமே உணவு</p><p>* 22 ஆண்டுகளாக பழைய இன்ஜின் ஆயிலை குடிக்கும் குமார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-ministers-selfie-video-blocked-meta-apologises-over-technical-glitch">பிரதமரின் செல்ஃபி வீடியோ முடக்கம்: தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறி மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனம் !... </a></p><p>*தற்போது அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, வீடியோ மீண்டும் பேஸ்புக்கில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>*இது குறித்து நேரில் ஆஜராகி விரிவான விளக்கம் அளிக்குமாறு மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய கொள்கைத் தலைவர்களுக்கு  மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-chaos-house-adjourned-amid-demand-to-debate-exam-scams-and-student-protest-assault">மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்.. அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரைஒத்திவைப்பு</a><br></p><p>*உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர் எதன் பின்னணியில் பதவி விலகினார் என்பதை யோசித்து பாருங்கள்.</p><p>*அந்த செய்தி நாடு முழுவதும் சென்று சேரும் எனக் குறிப்பிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-priority-must-be-given-to-tamil-thai-vazhthu-in-tamil-nadu">தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவதை அனுமதிக்க முடியாது.</p><p>* பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில பாடல்களே முதலில் பாடப்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils">தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது! - மாணிக்கம் தாகூர்</a></p><p>* பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்து அமைச்சர் விஸ்வநாதன், ராபர்ட் புரூஸ் எம்பி சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர்.</p><p>* ஆளுநர் தனது அவமரியாதையான நடைமுறையை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/nda-meet-under-modi-20-dissident-tmc-mps-join-ncpi-and-attend-alliance-meeting">என்.டி.ஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 20 அதிருப்தி எம்.பிக்கள் பங்கேற்பு<br></a></p><p>*கட்சித் தாவல் தடைச் சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக பிராந்திய கட்சியில் இணைந்தனர்.</p><p>*சுவேந்து அதிகாரி தலைமையில் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக அரசு அமைந்தது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event">ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்</a></p><p>* தமிழக ஆளுநர் அர்லேக்கர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-celebration-row-viral-cjap-dance-videos-after-pradhan-resignation-draw-criticism-wangchuk-urges-humble-victory">வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும் - CJP கொண்டாட்டங்களை கண்டித்த சோனம் வாங்சுக்?</a></p><p>*இதுவே ஜென் இசட் தலைமுறையின் குணம்</p><p>*26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-surpasses-rahul-187-million-followers-on-instagram">ராகுலை பின்னுக்கு தள்ளிய முதலமைச்சர் விஜய்... இன்ஸ்டாகிராமில் 1.87 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்</a></p><p>* பிரதமர் மோடி உலக அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை 10.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். </p><p>* தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேரும் பின் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-violence-report-ai-identifies-2873-attackers-989-with-serious-criminal-records-in-student-march">கொலை, கொள்ளை.. ஜூலை 20 பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 989 பேருக்கு குற்றப் பின்னணி - டெல்லி காவல்துறை</a></p><p>*101 பேர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p>*டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-3month-ban-on-transporting-minerals-to-other-states-is-welcome">கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல 3 மாதத் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்</a></p><p>* இப்போது 3  மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக  மாற்ற வேண்டும்.</p><p>* கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses">பயணிகளே கவனம்..! அரசுப் பேருந்துகளில் இனி 'நோ சவுண்ட்'!... </a></p><p>*அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவோ, வீடியோ ரீல்ஸ் பார்க்கவோ தடை விதித்து போக்குவரத்துத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.</p><p>•கட்டாயம் இயர்போன் (Earphones) ஹெட்போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-mechanized-and-traditional-boat-fishermen-are-barred-from-venturing-out-to-sea-today">ராமேசுவரம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை</a></p><p>* ஒரு படகு மற்றொரு படகுடன் மோதி சேதமடையாமல் இருப்பதற்காக நாட்டுப்படகுகள் கரைக்கு இழுத்து வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>* பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. </p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt">சட்டத்தின் பாதையில் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்</a></strong></p><p>* டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது.</p><p>* கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sc-status-cancelled-on-conversion-supreme-court-upholds-ap-hc-ruling-on-reservation-and-certificates">மதம் மாறிய மறு கணமே பட்டியலின அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும் - உச்சநீதிமன்றம்</a></p><p>*பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒரு நபர் மதம் மாறிய மறு கணமே, அவரின் எஸ்சி அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும்</p><p>* இந்து, சீக்கியர் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ்சி அந்தஸ்திற்குத் தகுதியானவர்கள் என்று தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">மீண்டும் போராடுவோம் என எச்சரித்த CJP.. பீகார், அசாம், ராஜஸ்தானில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!</a></p><p>*எந்தவொரு இளைஞரையும் தனித்து விடமாட்டோம்</p><p>*பீகாரில் ஜூலை 25 அன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 694 பேர் உட்பட அனைவர் மீதான வழக்கு ரத்து </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/over-1000-attacks-in-6-months-surge-in-violence-by-israeli-settlers-in-the-west-bank-un">6 மாதத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்.. மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறை அதிகரிப்பு - ஐநா</a></p><p>*மேற்குக் கரை முழுவதும் உள்ள 230க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சமூகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>*இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடத்தினர்.</p><p><a href="https://alaimalar.com/news/world/greta-thunberg-hails-indian-students-protest-victory-over-neet-exam-scam">இந்திய மாணவர்களின் வீரமிக்க போராட்டம் உலகம் முழுமைக்கும் நம்பிக்கை அளித்துள்ளது - கிரேட்டா துன்பெர்க்</a></p><p>*நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் உயிரிழந்த 21 மாணவர்களுக்கு அஞ்சலி.</p><p>* பிரபல இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-election-boycott-empty-polling-stations-protests-and-violence-rock-pok">POK: தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் வன்முறை - பலர் காயம்</a></p><p>*பல பகுதிகளில் மொபைல் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.</p><p>*பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-telugu-character-actress-dies-pavala-shyamala-passes-away-in-hyderabad-after-health-issues-and-viral-kokku-scene-fame">வைரல் தெலுங்கு நடிகை ஸ்யாமலா மறைவு</a></p><p>*போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர்.</p><p>*நள்ளிரவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</a></p><p>* பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார். </p><p>*  முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/tatkal-booking-new-rules-process-coming-august-1st">ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய டோக்கன்- நெரிசலை குறைக்க ரெயில்வே நடவடிக்கை</a></p><p>* ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.</p><p>* ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university">மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும்  53  பேரும்  50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும்  சென்று வேலை தேட முடியாது.</p><p>* தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-famous-model-files-complaint-mumbai-police">CJP PROTEST: போலீஸ் வேனை மறித்த புகழ்பெற்ற மாடல் அழகி மும்பை போலீசில் புகார்!... </a></p><p>*சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகத் தொடர் அவதூறுகளையும் மனரீதியான தாக்குதல்களையும் தொடுக்கத் தொடங்கினர்.</p><p>*"இந்த அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளேன்" </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-28-07-2026">GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக சரிந்த தங்கம் விலை</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august">வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி- அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டம்</a></p><p>*&nbsp;பழைய வைப்பு நிதி கணக்குகளில் இருந்த தரவுகள் புதிய தளத்தில் விடுபட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்</p><p>* அனைத்து முக்கிய தொழில்நுட்ப கோளாறுகளும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே தற்போதைய நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money">மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்; பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை- தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்</a></p><p>* லஞ்சத்திற்கு எதிராக தாசில்தார் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>* தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் பணத்துடன் வருவதை தவிர்த்து, கோரிக்கை மனுக்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: பெரும் சதி வலை பின்னப்படுகிறது! அரசுக்கு எச்சரிக்கைத் தேவை!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-mekedatu-dam-issue-a-big-conspiracy-web-is-being-woven-the-government-needs-a-warning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-mekedatu-dam-issue-a-big-conspiracy-web-is-being-woven-the-government-needs-a-warning#comments</comments><guid isPermaLink="false">e6711096-4b52-41cb-9a21-650a419621c8</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:32:44 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:32:44.282Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jm972awy/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jm972awy/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>காவிரி ஆற்றின் குறுக்கே  எந்த அணையையும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட எந்த பாசன மாநிலங்களின் ஒப்புதலையும் கர்நாடக அரசு பெறத் தேவையில்லை என்றும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடக அரசுக்கு ஆதரவான மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.</p><p>நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பான எனது வினாவுக்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் இராஜ் பூஷன் சவுத்ரி, ‘‘காவிரி சிக்கல் தொடர்பாக 16.02.2026-ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள  தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பிற பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று  எங்கும் கூறப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு சான்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள  காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் ஒரு பத்தியையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பில்  ஏதோ ஒரு பகுதியை மட்டும் காட்டி, காவிரியில் தமிழகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசின் ஆதரவுடன் மிகப்பெரிய சதிவலை பின்னப்படுவதைத் தான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.</p><p>தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடைமடை பாசனப் பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த திட்டங்களையும் முதல் மடை பாசனப் பகுதிகள் செயல்படுத்தக் கூடாது என்பது தான் நடைமுறையாகும். உலக அளவிலான ஒப்பந்தங்களிலும் இந்த நிலைப்பாடு வலியுறுத்தப் பட்டுள்ளது. காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.</p><p>‘‘புதிய பாசன அணை அல்லது சிறிய அணைக்கட்டுகளை கட்ட வேண்டும் என்று மைசூர் அரசு விரும்பும் போது, அதற்கு பொருத்தமான விதிகளின்படி மெட்ராஸ் மாகாண அரசிடமிருந்து முன்கூட்டியே ஒப்புதல்  பெற வேண்டும். புதிய அணை தொடர்பான அனைத்து விவரங்களும் மெட்ராஸ் மாகாண அரசுக்கு முன்கூட்டியே  அனுப்பப்பட்டு, பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பாக ஒப்புதல் பெறப்பட வேண்டும்’’ "When the Mysore Government desires to construct any "New irrigation Reservoir" or any new anicut requiring the previous consent of the Madras Government under the last preceding Rule, the full information regarding the proposed work shall be forwarded to the Madras Government and the consent of that Government shall be obtained previous to the actual commencement of work’’ என்று ஒப்பந்தங்களில் மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p><p>மாநிலங்களவையில் மத்திய அமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 16.02.2026-ஆம் நாளிட்ட தீர்ப்பின் முதல் அம்சமாக, இந்த ஒப்பந்தங்களின் கூறுகள் இப்போதும் செல்லும் என்று கூறப்பட்டிருக்கிறது.‘‘After coming into force of the 1947 Act, the doctrine of paramountcy has no room for application as the Government of India became the full sovereign authority. The two agreements of 1892 and 1924 had neither any political arrangement nor touched any facet of sovereignty of India. Per contra, the agreements cover the areas of larger public interest which do not have any political element and in this backdrop, the agreements are neither inoperative nor completely extinct’’  (1947 ஆம் ஆண்டின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய அரசு முழுமையான இறையாண்மை பெற்ற அதிகார அமைப்பாக மாறியதால், மேலாதிக்கக் கோட்பாடு செயல்படுவதற்கு இனி இடமில்லை. 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளின் இரு ஒப்பந்தங்களும் எந்தவொரு அரசியல் ஏற்பாட்டையும் கொண்டிருக்கவில்லை; மேலும் அவை இந்தியாவின் இறையாண்மையின் எந்தவொரு அம்சத்தையும் பாதிக்கவுமில்லை. மாறாக, இந்த ஒப்பந்தங்கள் எந்தவொரு அரசியல் கூறுகளும் இல்லாத, பரந்த பொது நலன் சார்ந்த விஷயங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளன. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்த ஒப்பந்தங்கள் செயலற்றவை என்றோ அல்லது முற்றிலும் காலாவதியானவை என்றோ ஆகிவிடாது) என்று கூறப்பட்டுள்ளது. கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது என்பது தான் இதன் பொருள் ஆகும். இந்த உண்மையை மறைத்து விட்டு, மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு கூறுவது திசை திருப்பும் செயல்.</p><p>அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் கர்நாடகத்தில் நடைமுறையில் உள்ள பாசனத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டு, வேறு எந்த புதிய பாசனத் திட்டமும் செயல்படுத்தப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணையை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் இராஜ் பூஷன் சவுத்ரி எப்படி கூற முடியும்?</p><p>இந்த அடிப்படையில் தான் சிவசமுத்திரம் அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட போது, அது திருப்பி அனுப்பப்பட்டதாக 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9&amp;ஆம் தேதி அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு முன் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த கஜேந்திர ஷெகாவத் அவர்களை, கடந்த 16.07.2021-ஆம் ஆண்டு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்து மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியது. அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஷெகாவத், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாது அணையை கட்ட முடியாது என்று உறுதியளித்தார். இவற்றுக்கெல்லாம் மாறான நிலைப்பாட்டை இப்போது நீர்வளத்துறை அமைச்சர் சவுத்ரி மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன?</p><p>காவிரி பிரச்சினையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும்  தமிழக நலனுக்கு எதிராக செயல்படுவதையே  வழக்கமாகக் கொண்டுள்ளன. மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய பாரதிய ஜனதா அரசு அனுமதி அளித்ததே தவறு ஆகும். தமிழகத்திற்கு எதிரான இந்த துரோகத்தை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை. அதன்  தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாட்டுக்கு எதிராக இன்னொரு சதிவலையை மத்திய பாரதிய ஜனதா அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் இணைந்து பின்னுகின்றன. இந்த சதிவலை கிழித்தெறியப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும்.</p><p>மாநிலங்களவையில் நான் எழுப்பிய இன்னொரு வினாவுக்கு விடையளித்த மத்திய அமைச்சர் இராஜ் பூஷன்,  கடந்த ஜூலை 16-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 25.31 டி.எம்.சி நீரில் 3.37 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை கர்நாடக அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.</p><p>கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று பிற்பகல் நிலவரப்படி  64  டி.எம்.சி தண்ணீர் உள்ளது. 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. ஆனாலும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது என்றால் அங்குள்ள ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு சட்டத்தை மதிக்காதவர்கள்; மனிதநேயமற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். இப்போதே அரை டி.எம்.சி தண்ணீர் கூட கொடுக்காதவர்கள், மேகதாது அணையை கட்ட அனுமதித்தால் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றாமல் ஓயமாட்டார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது அணை</a> விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள புதிய நிலைப்பாடு நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் இருப்பதற்காக பெரும் சதி நடக்கிறது என்பதும்,  இதில் மத்திய அரசும் பங்குதாரராக உள்ளது என்பதும் தான். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>கட்டுமானப் பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் - விஜய்க்கு கேரள முதலமைச்சர் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-chief-minister-writes-to-vijay-urging-a-review-of-export-restrictions-on-construction-materials</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-chief-minister-writes-to-vijay-urging-a-review-of-export-restrictions-on-construction-materials#comments</comments><guid isPermaLink="false">836a4f48-f32e-411f-9f77-4c02a86ddbed</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:27:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:27:49.312Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>vijay,Construction materials,முதலமைச்சர் விஜய்,Satheesan,கட்டுமானப் பொருட்கள்,கேரள முதலமைச்சர் சதீசன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/soqvx8iu/New-Project-2026-07-28T155126.274.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கட்டுமானப் பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் - விஜய்க்கு கேரள முதலமைச்சர் கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/soqvx8iu/New-Project-2026-07-28T155126.274.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலோகம் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள்மீதான தமிழ்நாடு அரசின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கடிதம் எழுதியுள்ளார். </p><p>தமிழ்நாடு அரசு விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள், தங்களின் நெடுஞ்சாலைப் பணிகளை கடுமையாக பாதித்துள்ளதாக சுதீசன் சுட்டிக் காட்டியுள்ளார். </p><p>தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் நன்மை பயக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் சதீசன் குறிப்பிட்டுள்ளார். </p><h2>எதற்காக இந்தக் கடிதம்? </h2><p>அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு சமீபத்தில் தடை விதித்தது. தமிழ்நாடு அரசின் இந்த திடீர் தடையால், கேரளாவில் நடைபெற்று வரும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும்.</p><p>இதனைத்தொடர்ந்து இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. </p><h2>தமிழ்நாடு மக்கள் கூறுவது என்ன?</h2><p>கேரளாவில் ஏராளமான கனிமவளங்கள் இருக்கும்நிலையில், அங்கு வெட்டி எடுக்காமல், தமிழ்நாட்டின் வளங்களை கேட்பது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-soon-in-india-union-government-approves-rbi-proposal</link><comments>https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-soon-in-india-union-government-approves-rbi-proposal#comments</comments><guid isPermaLink="false">0f49bd8f-83fa-4ef2-98d1-65273144bcbc</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:14:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:14:01.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>reserve bank of india,ரிசர்வ் வங்கி,plastic currency,polymer currency,பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்,பாலிமர் ரூபாய் நோட்டுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3i9li6v/plastic-currecy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Plastic currency  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/z3i9li6v/plastic-currecy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய 'பாலிமர்' எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் புழக்கத்தில் விடுவதற்கான ரிசர்வ் வங்கியின் (RBI) பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் நோட்டுகளைச் சோதனை முறையில் அச்சடித்து வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><h2><strong>ரூ.100 கோடிக்கு பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடிப்பு:</strong></h2><p>சோதனை முயற்சியாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் தலா '100 கோடி' வரை அச்சடிக்கப்பட உள்ளன. இந்தச் சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில், பாலிமர் நோட்டுகள் வழக்கமான பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டுவரப்படும் என நாடாளுமன்ற மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.</p><h2><strong>பழைய காகித நோட்டுகள் செல்லாதா?</strong></h2><p>பழைய காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாகத் தடை செய்யப்பட மாட்டாது. காகித நோட்டுகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் நோட்டுகளும் இணையாகப் புழக்கத்தில் இருக்கும். காகித நோட்டுகளை முழுமையாகத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><h2><strong>பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் நன்மைகள்:</strong></h2><p>•காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் பல மடங்கு கூடுதல் ஆயுட்காலம் கொண்டவை.</p><p>• தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது மற்றும் அழுக்கடையாது.</p><p>•இவற்றில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை எளிதாகச் சேர்க்க முடியும் என்பதால், போலி நோட்டுகளை அச்சடிப்பது மிகவும் கடினம்.</p><p>ரூ.10, ரூ.20 போன்ற குறைந்த மதிப்பு கொண்ட காகித நோட்டுகள் மக்களிடையே அதிகளவில் கைமாறுவதால் விரைவில் சேதமடைந்து பயன்பாட்டிற்கு ஒவ்வாமல் போகின்றன. இதனால் ரிசர்வ் வங்கிக்கு இவற்றை அடிக்கடி புதிதாக அச்சடிக்கும் செலவு அதிகரிக்கிறது. </p><p>இதைக் கட்டுப்படுத்தவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் பண முறையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - ஆளுநர் பட்டம் வழங்கினார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-governor-provided-nellai-manonmaniam-sundaranar-university-convocation-ceremony</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-governor-provided-nellai-manonmaniam-sundaranar-university-convocation-ceremony#comments</comments><guid isPermaLink="false">8149677f-0f95-477e-8137-8e5c4f9a9cee</guid><pubDate>Tue, 28 Jul 2026 09:02:42 +0000</pubDate><atom:updated>2026-07-28T09:02:42.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Governor,பட்டமளிப்பு விழா,தமிழ்நாடு ஆளுநர்,Convocation Ceremony,nellai manonmaniam sundaranar university</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/x4cngl4g/governor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Convocation ceremony]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/x4cngl4g/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33-வது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi">பட்டமளிப்பு விழா</a> இன்று பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்றது. </p><p>விழாவுக்கு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். </p> <h2>பட்டமளிப்பு விழா</h2><p>நிகழ்ச்சியில் கொச்சியில் உள்ள கேரளா மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் மதுசூதன குரூப் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.</p><p>பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை ஆகியோர் செய்து இருந்தனர்.</p> <p>விழாவில் 37 ஆயிரத்து 877 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 12 ஆயிரத்து 932 மாணவர்களும், 24 ஆயிரத்து 945 மாணவிகளும் அடங்குவர். முன்னதாக அந்த மாணவ-மாணவிகளுடன் ஆளுநர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.</p><p>பட்டமளிப்பு விழாவில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை ஆர்.டி.ஓ. பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p> <h2>2 பதக்கங்கள் வென்ற 2 மாணவிகள் </h2><p>இந்த ஆண்டு 2 மாணவிகள் தலா 2 பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். வாசுதேவநல்லூர் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி லலிதா குமாரி இளநிலை பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றதற்காக தினத்தந்தி பொன்விழா பதக்கம், டாக்டர் எஸ். ராமச்சந்திரன் பதக்கம் உள்ளிட்ட 2 பதக்கங்களை பெற்றார். </p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>அதேபோல், பல்கலைக்கழக மாணவி நந்தினி இளநிலை பட்டப்படிப்பில் 2 பல்கலைக்கழகப் பதக்கங்களை பெற்றார்.</p><p>பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பதால் ஏற்கனவே அறிவித்தபடி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-condemns-singing-tamil-thai-vazhthu-third-at-convocation-ceremony">தமிழ்த்தாய் வாழ்த்து</a> 3-வதாக தான் பாடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p> <p>இந்த நிலையில் தமிழக அரசும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதை கண்டிக்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதன் தொடர்ச்சியாக ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எஸ்.முருகன், தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் விழாவை புறக்கணித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>எல்லையில் சீனா &apos;ஸ்டெல்த்&apos; போர் விமானங்கள் குவிப்பு: லடாக்கில் மீண்டும் பதற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/china-j20-stealth-jets-massed-at-border-sparking-fresh-ladakh-tensions</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-j20-stealth-jets-massed-at-border-sparking-fresh-ladakh-tensions#comments</comments><guid isPermaLink="false">12a549e7-eb68-4c62-b84d-b569e304b4ed</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:52:27 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:52:27.985Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ladakh,லடாக்,J-20 Mighty Dragon,Damxung,J-20 மைட்டி டிராகன்,தம்ஷுங் விமானத்தளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zessja8s/china.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ J-20 Mighty Dragon  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/zessja8s/china.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய-சீன எல்லைக் கோட்டுப் பகுதியில் சீனா தனது ஐந்தாம் தலைமுறை 'J-20 மைட்டி டிராகன்' ரக ஸ்டெல்த் போர் விமானங்களை அதிக அளவில் நிலைநிறுத்தியுள்ளதாக செயற்கைக்கோள் படத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சமீபத்திய வணிகரீதியான செயற்கைக்கோள் படங்களின் ஆய்வின்படி, லடாக் எல்லைக்கு அருகிலுள்ள 'ஹோட்டான்' விமானப் படையில் 7 J-20 விமானங்களும், அருணாச்சலப் பிரதேச எல்லைக்கு அருகிலுள்ள தம்ஷுங் விமானப் படையில் 4 J-20 விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>ஹோட்டான் விமானத்தளம்:</strong></h2><p>இது இந்தியாவின் தவுலத் பெக் ஓல்டி தளத்திலிருந்து சுமார் 245 கி.மீ தொலைவிலும், லே பகுதியிலிருந்து 389 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.</p><h2><strong>தம்ஷுங் விமானத்தளம்:</strong></h2><p>அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு வடமேற்கே சுமார் 344 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.</p><h2><strong>வான் பாதுகாப்பு் சவால்:</strong></h2><p>இந்தியாவிடம் தற்போது 5th Gen ஸ்டெல்த் ரக போர் விமானங்கள் எதுவும் இல்லை. இந்திய விமானப்படை ரஃபேல், சுகோய் (Su-30MKI), 'மிராஜ் 2000' மற்றும் 'மிஹ்-29' ஆகிய 4.5 தலைமுறை போர் விமானங்களையே முதன்மையாகச் நம்பியுள்ளது. ரேடாரில் எளிதில் சிக்காத சீனாவின் J-20 விமானங்கள் எல்லைக்கு அருகே நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய வான் பாதுகாப்பு உத்திகளில் பெரிய மாற்றத்தைக் கோருகிறது.</p><h2><strong>தொழில்நுட்ப  சவால்கள்:</strong></h2><p>அதிக உயரமான திபெத் மற்றும் சிஞ்சியாங் பகுதிகளில் காற்று அடர்த்தி குறைவாக இருப்பதால், விமான இன்ஜின்களின் உந்துவிசை குறைய வாய்ப்புள்ளது. எனினும், சீனா இரு வேறு உயர்ந்த தளங்களில் ஒரே நேரத்தில் J-20 விமானங்களை இயக்கிப் பார்ப்பது, அதன் தளவாட மேலாண்மை மற்றும் பராமரிப்புத் திறனைச் சோதித்துப் பார்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.</p><h2><strong>தொழில்துறை வளர்ச்சி:</strong></h2><p>சீனா ஆண்டிற்கு சுமார் 100 முதல் 120 J-20 விமானங்களை உற்பத்தி செய்து வருவதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, சீனாவிடம் சுமார் 300 முதல் 500 வரையிலான J-20 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.</p><h2><strong>ஏவுகணைப் பாதுகாப்பு:</strong></h2><p>எல்லையில் சீனாவின் வான்வழி அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா S-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை மற்றும் பிற மேம்படுத்தப்பட்ட ரேடார் வலையமைப்புகளை எல்லைப் பகுதிகளில் தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தியா தனது சொந்த 5th Gen ஸ்டெல்த் விமானத் திட்டமான 'AMCA (Advanced Medium Combat Aircraft' தயாரிப்பை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான முன்மாதிரி தயாரிப்புகள் வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படுகின்றன.</p><p>சீனாவின் இந்த நடவடிக்கை உடனடிப் போருக்கான அறிகுறி அல்ல என்றாலும், எல்லைப் பகுதியில் தொடர்ச்சியான கண்காணிப்பையும், வான்வழிப் பாதுகாப்பு ஆயத்தங்களையும் இந்தியா பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - கனிமொழி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-condemns-singing-tamil-thai-vazhthu-third-at-convocation-ceremony</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-condemns-singing-tamil-thai-vazhthu-third-at-convocation-ceremony#comments</comments><guid isPermaLink="false">18de5582-9e55-4796-8a5f-71d3eb88daaf</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:47:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:47:49.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanimozhi,கனிமொழி,பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/sqqxp475/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Convocation Ceremony - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/sqqxp475/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பதால் ஏற்கனவே அறிவித்தபடி தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக தான் பாடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p> <h2>உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு</h2><p>இந்த நிலையில் தமிழக அரசும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதை கண்டிக்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதன் தொடர்ச்சியாக ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எஸ்.முருகன், தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் விழாவை புறக்கணித்தனர்.</p> <h2>கனிமொழி கண்டனம்</h2><p>இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம்  தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது. </p><p>வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து எதாவது பேசுவாரா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>போராட்டத்தில் கைதான 18 வயதுக்கு உட்பட்டோரை விடுவிக்க வேண்டும்.. போலீஸ் அடக்குமுறை மீது விசாரணை உண்டு - உச்சநீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-free-probe-no-harsh-action-against-minors-in-neet-protest-cases</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-free-probe-no-harsh-action-against-minors-in-neet-protest-cases#comments</comments><guid isPermaLink="false">4353eac1-ddfe-40ad-ab94-e056bf359036</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:23:57 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:23:57.015Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சூர்யகாந்த்,உச்சநீதிமன்றம்,Surya Kant,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/m1zp1pa7/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ போராட்டம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ போராட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/m1zp1pa7/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">போராட்டத்தின்</a>போது கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட சிறுவர்களை விடுவிக்க  வேண்டும் என மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. </p><h2>விசாரணை </h2><p>ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி சென்ற இளைஞர்கள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் இளைஞர்கள் மீதான போலீஸ் அடக்குமுறை குறித்த மனுக்கள் , பீகாரில் ஏகே 47 துப்பாக்கியால் போராட்டக்காரர்களை சுட்ட காவல் அதிகாரி மீதான ஆர்ஜேடி எம்.பி மனோஜ் ஜா உடைய மனு ஆகியவற்றை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. </p> <h2>நடவடிக்கை கூடாது</h2><p>இதன்போது, டெல்லியின் ஜந்தர் மந்தர் மற்றும் பிற மாநிலங்களில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடந்த போராட்டங்களில் பங்கெடுத்த மாணவர்கள் மீது பதியப்பட்ட எப்ஐஆர்களை வைத்து எந்த கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது. கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட சிறுவர்களை விடுவிக்க வேண்டும். </p><p>அதேநேரம் குற்றப்பின்னணி உடையவர்கள் மீதான நடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p> <h2>போலீஸ் அடக்குமுறை</h2><p>மேலும்,டெல்லியில் மாணவர்கள் மீதான போலீசாரின் மிதமிஞ்சிய பலப்பிரயோகம் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்படலாம் என்ற வகையிலும் உச்சநீதிமன்றம் மறைமுகமாக தெரிவித்துள்ளது. </p><p>தாக்குதலை ஈடுபட்டதாக காவல் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக போராட்டங்கள் அதிகம் ஒடுக்கப்பட்ட, மகாராஷ்டிரா, பீகார், அசாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.</p> <p>தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், " இதில் நிச்சயமாக முற்றிலும் சுதந்திரமான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும். யாரெல்லாம் சட்டத்தை கையில் எடுத்து அத்துமீறி செயல்பட்டார்களோ அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் விசாரணை வீண்" என தெரிவித்தார்.</p><p>இதற்காக, சிசிடிவி காட்சிகள், டிரோன் காட்சிகள், பாடி கேமராவில் பதிவான காட்சிகள், தொலைத்தொடர்பு கருவிகள், போராட்டத்துடன் தொடர்புடைய பிசிஆர் பதிவுகள் உள்ளிட்டவை பாதுகாப்பட வேண்டும் என்றும், காவல்துறை தன்வசம் வைத்துள்ள போராட்டம் நடத்தியவர்கள் குறித்த அடையாளத்தை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>43-வது பிறந்தநாள்: போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் தனுஷ்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-dhanush-43rd-birthday-celebration-with-fans-chennai</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-dhanush-43rd-birthday-celebration-with-fans-chennai#comments</comments><guid isPermaLink="false">158cd36e-785f-400a-ac74-1131e5f4e542</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:23:37 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:23:37.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் தனுஷ்,actor Dhanush,போயஸ் கார்டன்,Poes Garden,Actor Dhanush Birthday,நடிகர் தனுஷ் பிறந்தநாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/eewg1a1e/dhanush.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Dhanush birthday]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/eewg1a1e/dhanush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான <a href="https://www.maalaimalar.com/topic/தனுஷ்">தனுஷ்</a>, தனது 43-வது பிறந்தநாளையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலை முதலே திரண்டனர்.</p><h2><strong>ரசிகர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த தனுஷ்:</strong></h2><p>தனது வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களைச் சந்திக்க நடிகர் தனுஷ் நேரில் வெளியே வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் களிப்புடனும் உற்சாகக் கூச்சலுடனும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்ட தனுஷ், கையசைத்துத் தனது நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p><h2><strong>நற்பணிகளில் தீவிரம் காட்டும் தனுஷ் ரசிகர் மன்றங்கள்:</strong></h2><p>திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடிகர் தனுஷ் பிறந்த நாளையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.</p><p>இதில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.</p><p>சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழாவில்  தனது ரசிகர் மன்றத்திற்கு வெள்ளை - சிகப்பு நிறத்தின் நடுவில் நட்சத்திரம் குறிக்கப்பட்டு, அதன் நடுவே தனது உருவப்படம் இருப்பது போன்று கொடியினை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பேசிய தனுஷ், "நமக்கு இருக்கும் இந்த ஒற்றுமையையும் பலத்தையும் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் மாற்ற வேண்டும்; </p><p>உங்களைச் சுற்றியுள்ள மக்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களில் ஒருவராக இருங்கள்" என்று ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படியே தற்போது தனுஷ் ரசிகர்கள் நற்பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.</p><p>தமிழகம் முழுவதும் விரைவில் மாவட்டம் வாரியாக சென்று ரசிகர்களை சந்தித்து, தனது மன்றங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் மக்களை சந்திப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறார் நடிகர் தனுஷ். எனவே 2031-ம் ஆண்டுக்குள் நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தனுஷிற்கு, இந்த 43-வது பிறந்தநாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நடிப்பு, இயக்கம், தயாரிப்பு எனப் பன்முகத்தன்மையுடன் வலம் வரும் தனுஷிற்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைப் பொழிந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi#comments</comments><guid isPermaLink="false">db7e2cf8-dfbd-408b-a665-cc2fa024de9d</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:18:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:18:26.818Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,mekedatu dam,மேகதாது அணை,pm modi,tvk,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jfxoptsc/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jfxoptsc/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியின் குறுக்கே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாதுவில் அணை</a> கட்டுவோம் என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. </p><h2><strong>மேகதாது அணை</strong></h2><p>ஆனால் மேகதாது அணை தொடர்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து உள்ளது. அதை விரைவில் மத்திய அரசிடம் வழங்க உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாரை தமிழக முதலமைச்சர் விஜய் சந்தித்து பேச உள்ளார்.</p><p>இதற்கிடையே மேகதாது அணை விவகாரம் குறித்து பாராளுமன்ற மேல்-சபையில் பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து மத்திய ஜல்சக்தி துறையின் இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி கூறும்போது, காவிரி பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">தமிழகம்</a>, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. </p><h2><strong>அதிகாரம் உள்ளது</strong></h2><p>அதேபோல் கடந்த 2007-ம் ஆண்டு காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவு சரியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. அதன்படி எந்தவொரு மாநிலமும் தனது எல்லைக்குட்பட்ட காவிரி நீர் பயன்பாட்டை முறையாக அனுபவிக்க உரிமை, அதிகாரம் உள்ளது என கூறப்பட்டுள்ளது என்றார்.</p><p>மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்த கருத்துக்கு தமிழக அரசு பதில் அளித்து உள்ளது.</p><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-</p><p>மேகதாது அணை தொடர்பாக மாநிலங்களவையில் ஜல்சக்தி இணை மந்திரி அளித்த பதில்  ஏமாற்றம் அளிக்கிறது. கீழ்நிலை ஆற்று மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பான தற்போதைய சட்ட நிலை மற்றும் நிலைபெற்ற சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. </p><h2><strong>மத்திய அரசு தலையிட வேண்டும்</strong></h2><p>கர்நாடகா - ஆந்திரா  இடையிலான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தெளிவாக உள்ளது. அதில் கீழ்நிலை ஆற்று மாநிலத்தின் ஒப்புதல் முற்றிலும் அவசியம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  காவேரி நதி வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, அது தென்னிந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் குடிமக்களின் உயிர்நாடியாகவும் விளங்குகிறது. </p><p>மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை நிர்வகிக்கும் அரசியலமைப்புச் சட்ட அமைப்பின் மீது நம்பிக்கையை நிலை நிறுத்துவதற்கு, தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் பாதுகாப்பது இன்றியமையாதது.</p><p>நீதி, கூட்டாட்சி நல்லிணக்கம் மற்றும் நீதித்துறைத் தீர்ப்புகளை உண்மையுடன் செயல்படுத்துதல் ஆகிய பரந்த நலன் கருதி மத்திய அரசு தலையிட வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்- உதயநிதி சாடல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-2#comments</comments><guid isPermaLink="false">3ee397c1-aea0-4967-9690-60c6a9c9dd5a</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:02:20 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:02:20.537Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தவெக,கர்நாடகா,Karnataka,Udhayanidhi Stalin,mekedatu dam,மேகதாது அணை,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hgbq3qq9/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hgbq3qq9/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு, தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி</a> கூறியிருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>கேள்விக்குறி</strong></h2><p>மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.</p><p>டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற  காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.</p><p>இந்த பிரச்சனையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.</p><h2><strong>வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்...</strong></h2><p>கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை. </p><p>இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.</p><p>எனவே, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாதுவில் அணை</a> கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.<br><br>டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற  காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும்,…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2082005391068852234?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>எதை விற்க வேண்டும் என்று யாரும் எனக்கு சொல்ல முடியாது - துருக்கிக்கு எப்-35 விற்பதை எதிர்த்த நேதன்யாவுக்கு டிரம்ப் குட்டு </title><link>https://www.maalaimalar.com/news/world/turkey-f-35-deal-netanyahu-warns-advanced-jets-to-ankara-may-upset-middle-east-power-balance</link><comments>https://www.maalaimalar.com/news/world/turkey-f-35-deal-netanyahu-warns-advanced-jets-to-ankara-may-upset-middle-east-power-balance#comments</comments><guid isPermaLink="false">85f9c197-d826-4d43-adc8-58651a7850b5</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:00:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:00:26.044Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரம்ப்,நேதன்யாகு,துருக்கி,போர் விமானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/eg37qt4c/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேதன்யாவுகு, எப்-35, டிரம்ப் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நேதன்யாவுகு, எப்-35, டிரம்ப் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/eg37qt4c/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை சூப்பர் சோனிக் ஸ்டெல்த் போர் விமானம் எப்-35. லாக்ஹீட் மார்ட்டின் என்ற அமெரிக்க நிறுவனம் இதை தயாரிக்கிறது.</p><p>எப்-35 போர் விமானங்களை பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்து வருகிறது. </p><h2>நேதன்யாகு எதிர்ப்பு</h2><p>அந்த வகையில் துருகிக்கு எப்-35 விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். </p><p>சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நேதன்யாகு, துருக்கி ஆக்கிரமிப்பு எண்ணங்களைக் கொண்டுள்ளது. துருக்கிக்கு அதிநவீன எப்-35 போர் விமானங்களை வழங்குவது மத்திய கிழக்கின் அதிகாரச் சமநிலையை சீர்குலைக்கும்  என எச்சரித்தார். </p><p>தற்போது அவர் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க புறப்பட்டு சென்றுள்ளார்.  ஈரான் விவகாரம் தொடர்பாக அவர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். </p> <h2>டிரம்ப் கருத்து</h2><p>இதனிடையே ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பேட்டி அளித்த <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>இடம், "துருகிக்கு எப்-35 விமானங்களை விற்க நேதன்யாகு எதிர்ப்பு தெரிவிக்கிறாரே?" என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த டிரம்ப், "நாங்கள் எதை விற்க வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்ல முடியாது" என்றார்.</p><p>மேலும், "துருக்கி எனக்கு ஒரு மிகச்சிறந்த நட்பு நாடாக இருந்து வருகிறது. பல துறைகளில் அவர்கள் மிகச் சிறந்த பணியைச் செய்துள்ளனர்" என்று பாராட்டிய அவர், சிரியா விவகாரம் உட்பட பிராந்திய பிரச்சினைகளில் துருக்கியின் பங்களிப்பை புகழ்ந்தார்.</p><p>துருக்கி நாடு, இஸ்ரேலையோ அல்லது நேதன்யாகுவையோ பெரிதாக விரும்புவதில்லை என்பதை ஒப்புக்கொண்ட டிரம்ப், இருப்பினும் அமெரிக்கா - துருக்கி இடையேயான உறவு வலுவாக உள்ளது என்று கூறினார்.</p> <h2>துருக்கி - ரஷியா - அமெரிக்கா</h2><p>ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை துருக்கி வாங்கியதைத் தொடர்ந்து, டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்தின் போது 2019ஆம் ஆண்டில் எப்-35 திட்டத்தில் இருந்து துருக்கி நீக்கப்பட்டது.</p><p>இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது, எஸ்-400 கொள்முதல் காரணமாக அமெரிக்கா விதித்த தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் சூசகமாகத் தெரிவித்தார். மேலும் துருக்கிக்கு எப்-35 போர் விமானங்கள் வழங்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>22 ஆண்டுகளாக எஞ்சின் ஆயிலை குடித்து வாழும் விசித்திர மனிதர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/man-living-on-engine-oil-for-22-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/man-living-on-engine-oil-for-22-years#comments</comments><guid isPermaLink="false">dcfa47f3-6f71-49a4-b5fa-dabdada0b5e2</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:52:25 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:52:25.373Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sabarimala,Hosur,ஓசூர்,OilKumar,ஆயில்குமார்,StrangeIncidents,Drinksengineoil</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rb80s6b8/Drinksengineoil" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Drinksengineoil ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rb80s6b8/Drinksengineoil?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓசூரில் பொதுமக்கள் முன்னிலையில் சபரிமலை பக்தர் ஒருவர், வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பழைய இன்ஜின் ஆயிலை மளமளவெனக் குடித்த விசித்திர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>டீக்கடையில் நடந்த விபரீதம்</strong></h2><p>கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா பகுதியைச் சேர்ந்தவர் குமார் (48). கூலித் தொழிலாளியான இவர், ஆண்டுதோறும் சபரிமலைக்கு மாலை அணிந்து, ஓசூர் வழியாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். </p><p>நேற்று மாலை ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு கடையில் அவர் டீ குடித்தார். அதன் பின், யாரும் எதிர்பாராத விதமாகத் தனது பாக்கெட்டில் இருந்த ஒரு பாட்டில் பழைய இன்ஜின் ஆயிலை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே வேகமாக குடித்தார். </p><p>இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.</p><h2><strong>யார் இந்த "ஆயில் குமார்"?</strong></h2><p>அங்கே இருந்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, "நான் கடந்த 22 ஆண்டுகளாகத் தினமும் இந்த பழைய இன்ஜின் ஆயிலைக் குடித்து வருகிறேன். இதனால் அனைவரும் என்னை 'ஆயில் குமார்' என்றே அழைக்கிறார்கள். </p><p>மெக்கானிக் கடைகளுக்குச் சென்று இந்த ஆயிலை வாங்கிக் கொள்வேன். எனக்குச் சாதாரண உணவுகள் எதுவும் செரிப்பதில்லை, உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. </p><p>அதனால் உணவுகளைத் தவிர்த்துவிட்டு, எப்போதாவது ஒருமுறை டீ குடிப்பேன், மற்றபடி இந்த ஆயில் தான் என் உணவு" என்று கூறினார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/gh2M2rVLwJA"></iframe></figure><h2><strong>மருத்துவர்களின் எச்சரிக்கை</strong></h2><p>குமார் 22 ஆண்டுகளாக இப்படிச் செய்வதாகக் கூறினாலும், இது அரியவகை உளவியல் அல்லது உடல்நிலை மாற்றமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. </p><p>வாகன இன்ஜின் ஆயிலில் காரீயம் போன்ற ஆபத்தான நச்சு இரசாயனங்கள் நிறைந்துள்ளதால், இதைப் பின்தொடர்ந்து பொதுமக்கள் யாரும் இத்தகைய உயிருக்கே ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியிருப்பது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா? - அண்ணாமலை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-central-government-backed-down-on-cauvery-issue-for-karnataka-election-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-central-government-backed-down-on-cauvery-issue-for-karnataka-election-politics#comments</comments><guid isPermaLink="false">aacebb18-cb12-4acd-b27d-fd2c122a911c</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:41:35 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:41:35.731Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,mekedatu dam,மேகதாது அணை,annamalai,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/t0qx0y09/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/t0qx0y09/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று  வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</p><p>வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>கடந்த 16.02.2018 அன்று, உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. </p> <p>கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார். </p> <p>இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">மத்திய அரசு</a> தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.  </p><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?</p> <p>தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அஷ்டலட்சுமி அருள் கிடைக்க செய்யும் வெற்றிலை விளக்கு </title><link>https://www.maalaimalar.com/spirituality/vetrilai-vilakku-that-bestows-the-grace-of-ashtalakshmi</link><comments>https://www.maalaimalar.com/spirituality/vetrilai-vilakku-that-bestows-the-grace-of-ashtalakshmi#comments</comments><guid isPermaLink="false">e8e6162b-0b0b-4ce5-97ac-1293588ff635</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:27:55 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:27:55.715Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pournami,ஆடி பவுர்ணமி,Aadi Pournami,பவுர்ணமி,வெற்றிலை விளக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/48njhncy/vetrilaivilakku.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வெற்றிலை விளக்கு ]]></media:title><media:description type="html"><![CDATA[ வெற்றிலை விளக்கு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/48njhncy/vetrilaivilakku.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பவுர்ணமி நாளில் சந்திர வழிபாட்டுடன் வெற்றிலை விளக்கு ஏற்றி வழிபடுவது அஷ்டலட்சுமியின் அருளைப் பெற உதவும் என்கின்றனர் பக்தர்கள்.</aside><h2><strong>வெற்றிலை விளக்கு</strong> </h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF">ஆடி மாத பவுர்ணமியில்</a> சந்திர பகவானை வழிபடுவதோடு, வீட்டின் வாசற்படியில் வெற்றிலை வைத்து விளக்கு ஏற்றி வழிபடுவது சிறந்தது.  இந்த வழிபாட்டை மேற்கொள்ள, பூஜைக்குப் பயன்படுத்தப்படும் பித்தளைத் தட்டில் 2 வெற்றிலைகளை வைத்து, அதன் மீது சிறிதளவு பச்சைக் கற்பூரம் தடவ வேண்டும். பின்னர், விளக்கில் 2 திரிகளை ஒன்றாகச் சேர்த்து வைத்து ஏற்ற வேண்டும்.</p><p>இன்று இரவே <a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-pournami-worship-in-tomorrow">பவுர்ணமி</a> தொடங்குவதால் இன்று இரவு முதல் விளக்கை ஏற்றி வழிபடலாம். இந்த வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சனைகள் நீங்கி, மன அமைதி, குடும்ப ஒற்றுமை, செல்வ வளம் மற்றும் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சொத்து தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், கணவன்-மனைவி இடையே நிலவும் மனக்கசப்புகள் விலகி, நல்ல புரிதலும் குடும்ப ஒற்றுமையும் ஏற்படும் என நம்பப்படுகிறது.</p><p>வீடு, வாசல், வாகனம், தாயார் உள்ளிட்டவற்றைக் குறிக்கும் 4-ம் பாவத்துடன் சந்திரன் தொடர்புடையவர் என்பதால், பவுர்ணமி நாளில் சந்திர வழிபாட்டுடன் வெற்றிலை விளக்கு ஏற்றி வழிபடுவது அஷ்டலட்சுமியின் அருளைப் பெற உதவும் என்கின்றனர் பக்தர்கள்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமரின் செல்ஃபி வீடியோ முடக்கம்: தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறி மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனம் !</title><link>https://www.maalaimalar.com/news/national/prime-ministers-selfie-video-blocked-meta-apologises-over-technical-glitch</link><comments>https://www.maalaimalar.com/news/national/prime-ministers-selfie-video-blocked-meta-apologises-over-technical-glitch#comments</comments><guid isPermaLink="false">a0f37744-603d-4612-be72-a99866a37ba2</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:27:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:27:12.735Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,Meta,மெட்டா நிறுவனம்,இந்திய பிரதமர் நரேந்திர மோடி,Modi selfie video,மோடி செல்ஃபி வீடியோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a1wxjryw/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modi selfie video]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a1wxjryw/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் நரேந்திர மோடி தனது பேஸ்புக் (Facebook) பக்கத்தில் வெளியிட்ட செல்ஃபி வீடியோ ஒன்று, தளத்தில் திடீரெனத் தடை செய்யப்பட்டு முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளித்துள்ள மெட்டா நிறுவனம், "தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தவறுதலாக வீடியோ நீக்கப்பட்டது" எனக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளதுடன், அந்த வீடியோவை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.</p><h2><strong>என்ன நடந்தது?</strong></h2><p>தேர்வுத் தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து, நாட்டின் இளைஞர்கள் மற்றும் Gen-Z தலைமுறையினரை நோக்கி பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி வடிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ குறுகிய நேரத்திலேயே மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்று வைரலானது. </p><p>ஆனால், திடீரென அந்த வீடியோ பேஸ்புக் பக்கத்தில் முடக்கப்பட்டு, "சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் இந்த பதிவு இந்தியாவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்ற அறிவிப்புத் திரையில் தோன்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2><strong>மெட்டா அளித்துள்ள விளக்கம்:</strong></h2><p>இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "இந்த வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டது. தற்போது அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, வீடியோ மீண்டும் பேஸ்புக்கில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது" என்று கூறி அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.</p><h2><strong>ஒன்றிய அரசின் அதிரடி உத்தரவு:</strong></h2><p>ஜனநாயக நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடியோவே தவறுதலாக முடக்கப்பட்ட விவகாரத்தை இந்திய அரசு மிகக் கடுமையான விஷயமாக எடுத்துக்கொண்டுள்ளது. இது குறித்து நேரில் ஆஜராகி விரிவான விளக்கம் அளிக்குமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய கொள்கைத் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>வீடியோவில் பிரதமர் கூறியது என்ன?</strong></h2><p>பேப்பர் லீக் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேசிய பிரதமர், "தேர்வுத் தாள் கசிவு என்பது மிகக் கடுமையானப் பிரச்சனை. இதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தனிச் சட்டமும், விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்படும்" என உறுதியளித்திருந்தார்.</p><p>பிரதமரின் இந்த வீடியோ சட்டப்பூர்வக் கோரிக்கை காரணமாக முடக்கப்பட்டதாகத் திரையில் காட்டியது, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், மெட்டாவின் விளக்கம் மற்றும் அரசின் சம்மன் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்.. அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு 
</title><link>https://www.maalaimalar.com/news/national/parliament-chaos-house-adjourned-amid-demand-to-debate-exam-scams-and-student-protest-assault</link><comments>https://www.maalaimalar.com/news/national/parliament-chaos-house-adjourned-amid-demand-to-debate-exam-scams-and-student-protest-assault#comments</comments><guid isPermaLink="false">dba27ef7-78fa-4bc7-b482-2c512c940650</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:24:47 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:24:47.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்களவை,மழைக்கால கூட்டத்தொடர்,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/3s32l87o/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை ]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்களவை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/3s32l87o/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரண்டாம் கட்ட நாடாளுமன்ற <a href="https://www.maalaimalar.com/news/national/nda-meet-under-modi-20-dissident-tmc-mps-join-ncpi-and-attend-alliance-meeting">மழைக்கால கூட்டத்தொடர் </a>நேற்று தொடங்கியது. நேற்றைய தினமே, பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026-ஐ மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார். </p><p>இன்று அதன் மீதான விவாதம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்றை போலவே இன்றும் இரு அவைகளிலும்,  தேர்வு முறைகேடுகள், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். </p><h2>ஒத்திவைப்பு </h2><p>இதனால் காலை 11 மணிக்கு தொடங்கிய சொற்ப நேரத்திலேயே இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.</p><p>மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், "சபை நடந்தால் தான் விவாதமும் கலந்துரையாடலும் நடைபெறும், அனைவரின் கருத்துக்களையும் வெளிப்படுத்த முடியும். அப்போது தான் அந்த செய்தி நாடு முழுவதும் சென்று சேரும் எனக் குறிப்பிட்டார். </p>  <h2>அவை நடவடிக்கைகள்</h2><p>தொடர் தொடங்கியதில் இருந்து தினமும் ஒத்திவைப்புகள் நடந்து வருவதால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>முதற்கட்டத்தில் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற அமளி நீடித்தது. சிஜேபி தலைமையில் இளைஞர்களின் 1 மாத போராட்டத்தின் பின் அவர் பதவி விலகிய நிலையில், தற்போது மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர்.</p> <h2>வெட்கமாக இல்லையா?</h2><p>இதனிடையே காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பேசுகையில், நேற்று தர்மேந்திர பிரதானுக்கு தலைப்பாகை, சால்வை அணிவித்து என்டிஏ எம்.பிக்கள் வரவேற்றத்தை விமர்சித்தார். </p><p>அவர் கூறியதாவது, " உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர் எதன் பின்னணியில் பதவி விலகினார் என்பதை யோசித்து பாருங்கள். ஆனாலும் அவர் சூப்பர்ஸ்டாரை போல வரவேற்கபடுகிறார். </p><p>இன்றைக்கும் கூட மாணவர்கள் துன்புறுத்தப்பட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்ஸ்ட்டாகிராமில் பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு, அவர்கள் இதைச்  செய்தார்கள், அதைச் செய்தார்கள் என தரக்குறைவாக பேசி வருகிறார்கள். நீங்கள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கும் முன்வரவில்லை, இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்கமும் விரும்பவில்லை.  நீங்கள் மாணவர்களை இப்போதும் கூட அடக்கி ஒடுக்க முயல்கிறீர்கள்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை ஆடிப்பவுர்ணமி: விரதம் இருந்து அம்மன், பெருமாளை வணங்கினால் செல்வ வளம் சேரும்</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-pournami-worship-in-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-pournami-worship-in-tomorrow#comments</comments><guid isPermaLink="false">b0768ff8-f687-4385-a67a-6f6cfc2a8e30</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:21:16 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:21:16.331Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>pournami,ஆடி பவுர்ணமி,Aadi Pournami,பவுர்ணமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/sq4xfbdg/aadi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/sq4xfbdg/aadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஆடிப் பவுர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கவல்லது.</aside><h2><strong>ஆடிப் பவுர்ணமி</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF">ஆடிப் பவுர்ணமி</a> எனப்படும் குரு பூர்ணிமா அம்மன் வழிபாட்டிற்கும், குருவை வணங்குவதற்கும் மிகச்சிறப்பு வாய்ந்த ஆன்மீக நாளாகும். இந்நாளில் கல்வி, ஞானம் மற்றும் குடும்ப வளம் பெருக சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. குரு பூர்ணிமா ஞானக் கடவுளாம் ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் முதன்மைக் குருவான வியாசர் அவதரித்த நாளாகவும் கருதப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/aanmiga-kalanjiyam/hayakreevar-avatharitha-aadi-pournami-730474">ஹயக்ரீவரையும்</a> குருவையும் வணங்கினால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஆடிப் பவுர்ணமியில் அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சாற்றி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால் குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடி கொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.</p><p>பவுர்ணமி அன்று பக்தர்கள் உணவு உண்ணாமல் விரதம் மேற்கொள்கின்றனர். மாலையில் கோவில்களில் அல்லது  வீட்டில் வழிபாடு மேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்யப்படுகிறது.</p><h2><strong>பெருமாளுக்கு உகந்த புதன்...</strong></h2><p>ஆடி மாதத்தில் பவுர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பவுர்ணமி அன்று பெருமாளை விளக்கேற்றி வழிபட பதவி கிடைக்கும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும். அதுவும் ஆடி பவுர்ணமி பெருமாளுக்கு உகந்த புதன்கிழமையில் வருவதால் அவரை வணங்கினால் தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் பெருகும்.  </p><p>ஆடிப் பவுர்ணமியில் பெண்கள், அம்மன் கோவில்களில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி தவழும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம். அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உண வேதும் அருந்தாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையில் அம்பாள் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மேலும், அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பூக்களால் அர்ச்சனை செய்து சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சாற்றி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது.</p><p>ஆடிப் பவுர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கவல்லது. பின்பு நைவேத்தியப் பிரசாதத்தை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். இவ்வாறு வழிபடுவதால் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும். வியாபாரங்களில் எதிர்ப்புகள் நீங்கி லாபங்கள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மாலை நேரத்தில் முழு நிலவு நிறைவு பெறும் நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால் சுபிட்சம் ஏற்படும். மாலையில் அம்பாளுக்கு பூஜை செய்து பால் நைவேத்தியமாக படைத்து, அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பானது. சிவ வழிபாடு செய்வது பல மடங்கு புண்ணியத்தை தரும். மாலையில் சந்திர வழிபாடு செய்வதும் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி, நிம்மதி அடைய செய்யும். பகை, நோய்கள் நீங்கும். கடன் தொல்லை விலகும். வாழ்க்கையில் மாற்றம், ஏற்றம் ஏற்படும்.</p><p>குடும்ப ஒற்றுமை வேண்டுபவர்கள் ஆடி பவுர்ணமியில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். </p><p>ஆடி பவுர்ணமி அன்று முன்னோர்களை நினைத்து ஆற்றங்கரை, குளக்கரைக்களில் வழிபடுவது சிறப்பு. புனித நதிகளுக்கு சென்று நீராடி, விளக்கு விடுவது, கரையில் விளக்கேற்றி வழிபடுவது குடும்பத்தில் சுபிட்சத்தையும், மன அமைதியையும் தரும். இன்று ஒரு விளக்கு சிவன் கோவிலுக்கு சென்று ஏற்றி வழிபட்டால் லட்சம் தீபம் ஏற்றி வழிபட்ட பலன் கிடைக்கும்.</p><p>ஆடிப் பவுர்ணமி நாளில் சிவன் கோவிலுக்கு சென்று திரட்டு பால் அபிஷேகம் செய்து, கருப்பு பட்டை சாற்றி, ஊமத்தம் பூ மாலை சாற்றி, மூங்கில் அரிசி பாயாசம் படைத்து வழிபட்டால் கடன், பகை தீரும். வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்கிறவர்கள் இந்த நாளை தவற விடக்கூடாது.  திரட்டுப்பால் (திரட்டுப் பாயசம் அல்லது திரட்டிப்பால்) என்பது பசும்பாலுடன் வெல்லம் அல்லது சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து சுண்டக் காய்ச்சி கெட்டியாகத் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய இனிப்புப் பிரசாதமாகும்.  கோடை காலத்தின் வெப்பத்தைத் தணித்து, விக்கிரகங்களின் தெய்வீக ஆற்றலைத் தூண்டுவதற்காக இந்த இனிப்பு கலந்த அபிஷேகம் செய்யப்படுகிறது.</p><p>பாலபிஷேகம் மற்றும் சர்க்கரை அபிஷேகத்தின் கூட்டுப் பலன் திரட்டுப்பால் அபிஷேகத்தால் கிடைக்கிறது. சர்க்கரை மற்றும் வெல்லம் கலந்த இந்தத் திரவியத்தால் இறைவனை அபிஷேகம் செய்யும் போது, நம் வாழ்வில் உள்ள கவலைகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகள் விலகும். பால் சார்ந்த அபிஷேகங்கள் வம்ச விருத்தி, நீண்ட ஆயுள் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும். வாழ்வில் வறுமை நீங்கி, செல்வம் மற்றும் தன தானியங்கள் பெருக இந்த அபிஷேகம் வழிவகுக்கும். மன சஞ்சலங்கள் நீங்கி, தெளிவான சிந்தனையும், ஆன்ம தூய்மையும் உண்டாகும். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-priority-must-be-given-to-tamil-thai-vazhthu-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-priority-must-be-given-to-tamil-thai-vazhthu-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">39d1dd9f-6c4b-4e22-87fc-ea4f11c05acc</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:14:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:14:12.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/qc3dsbz7/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/qc3dsbz7/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெறுகிறது. </p> <p>இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils">அர்லேக்கர்</a> பங்கேற்று, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் தங்கப் பதக்கங்களையும் வழங்குகிறார். </p><h2>அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளார். அதேபோல இன்று முனைவர் பட்டம் பெற இருந்த மகேஷ்குமார் அகர்வாலும் விழாவில் பங்கேற்கவில்லை.</p> <h2>அமைச்சர் நிர்மல் குமார்</h2><p>இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படுவது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவதை அனுமதிக்க முடியாது.</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் தரப்பில் பல வழிகாட்டுதல்களை கொடுத்து வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல.</p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்</h2><p>* தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும்.</p><p>* பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில பாடல்களே முதலில் பாடப்படுகிறது.</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவது தவறான விஷயம்.</p><p>* தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: அடி அண்ணாமலை லிங்கமும், சிலிர்க்க வைத்த வைப்ரேஷனும்: கிரிவலம் குறித்து இளையராஜா பகிர்ந்த ரகசியம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraaja-share-secret-of-girivalam</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraaja-share-secret-of-girivalam#comments</comments><guid isPermaLink="false">6e22f7f2-d313-49e6-ac0e-5d573b3f656c</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:04:20 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:04:20.160Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,திருவண்ணாமலை கோவில்,கிரிவலம்,girivalam,ilaiyaraaja,Tiruvannamalai temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/nn69300n/ilaiyaraaja.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இளையராஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ இளையராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/nn69300n/ilaiyaraaja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இளையராஜா எழுதி இசை அமைத்த பள்ளியெழுச்சி பாவை பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் இசை அமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:-</p><h2><strong>1980 முதல் கிரிவலம்</strong></h2><p>நான் 1980-ல் இருந்து பவுர்ணமி அன்று மலை சுற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.</p><p>நான் மலை சுற்றுவதை பார்த்துதான் அந்த மலை சுற்றலே மக்களால் அதிகமாக பின்பற்றப்பட்டது என்று அண்ணாமலையில் இருக்கக் கூடிய அடியார்கள் சொல்வார்கள். ஏனென்றால் நாங்கள் நடக்கும் போது பகவான் ரமணருக்கு சேவை செய்த குஞ்சு சுவாமிகளும், நானும் மட்டும் தான் நடந்து போவோம். அவர்தான் முதல் முதலில் என்னை கிரிவலம் அழைத்து சென்றார்.</p><p>1980-ல் தான் போனேன். காரணம் என்னவென்றால் 1974-ல் நான் மூகாம்பிகை கோவிலுக்கு போகும் போது அந்த மூகாம்பிகை முற்றிலுமாக என்னை ஏற்றுக் கொண்டார். அவர் காட்டிய வழியில் நான் போய் கொண்டிருந்தேன். எல்லாமே அவ கொடுத்ததுதான். கூப்பிட்டாள் உடனே வந்து நிற்பாள்.</p><h2><strong>வருண பகவான்</strong></h2><p>இப்ப நான் கூப்பிட்டேன்னா இங்கே வந்து நிற்பாள். அது சும்மா வெறும் வார்த்தை இல்லை. உங்களுக்கு நிரூபித்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா நான் உண்மையைதான் சொல்வேன். பகவான் பார்க்கறதுக்காக 1980 ஆசிரமத்துக்காக போறேன். போற நேரத்தில் குஞ்சு சுவாமிகள் இருக்காரு. அவரும் நானும் சேர்ந்து வாங்க கிரிபரதசனம் போய்ட்டு வரலாம் என்றார். கூடவே போயிட்டு இருந்தேன். போய் சுத்தி முடிச்சிட்டு வரோம் அந்த முடிக்கிற நேரத்துல மழை.. வருண பகவான் அப்படியே ஷவர் போடுறார். மழை இல்ல.. என்ன நீங்க பெரிய சித்தர் போல இருக்கே அப்படின்னாரு குஞ்சு சுவாமிகள். இல்ல... என்ன சாமி இப்படி சொல்றீங்க என்றேன். ஆமா நீ கிரிப்பிரதட்சணம் வந்த உடனே வருண பகவான் ஆசீர்வாதம் கொடுக்கறார் இல்லையா, நீங்க சித்தர்தான் அப்படின்னார். ஐயயோ அப்படி இல்ல நான். அந்த நேரத்துக்கு மழை வந்துருக்கு அவ்வளவுதான் என்றேன். அதன்பிறகு அடுத்த பவுர்ணமிக்கு போறோம் அப்பவும் மழை வருது.. அதே இடத்துல வருது.. பாத்தீங்களா நான் சொன்னேன் நீங்க சித்தர்தான்னு... இப்படி போய்ட்டே இருக்கற நேரத்துல பவுர்ணமிக்கு போறதை நான் வழக்கமாக கொண்டு விட்டேன். </p><p>நான் திருவண்ணாமலையில் காலடி எடுத்து வைத்து விட்டால் செருப்பு போடுவதில்லை. நான் போற பாதை நார்மலானது கிடையாது. குஞ்சு சுவாமிகளோடு போன இரண்டு முறை மட்டும்தான் நார்மலான வழியில போனேன் 14 கிலோ மீட்டர் அது. அதன்பிறகு பகவான் எந்த வழி போவாங்க இல்ல காட்டு பாதையில நடப்பாங்க  அப்படின்னா பகவான் மூணு வழியில போவாங்க என்றார். சரி பகவான் போகும் நடுப்பாதையை தேர்ந்தெடுத்தேன். நான் நடக்கிற பாதை கண்ணாடி உடைந்தது போல் கற்கள் இருக்கும். காலடி எடுத்து வைத்தால் குத்தும். 80-ல் இருந்து 20 வருடங்கள் நான் விடாமல் கிரிவலம் சென்று வருகிறேன். </p><p>வைப்ரேஷன்</p><p>அடி அண்ணாமலையில போய் உட்கார சுத்தும் போது அடி அண்ணாமலையில் உட்காருவது வழக்கம். அங்கே அந்த நேரத்தில் நான்கு மணிக்கு நாங்கள் கிளம்பினால் நாலரை மணி ஐந்து மணிக்கு அங்க போவோம். அப்ப அந்த கோவில் திறந்திருக்காது. நாங்க போய் உள்ள போனா அந்த குருக்களை கூப்பிட்டுவிட்டு அப்புறம் கோவிலை திறக்க சொல்லி உள்ளே போய் உட்காருவோம். உள்ள போய் உட்கார்ந்தா லிங்கம் இருக்கும். நான் இருப்பேன். என் கூட வந்த ஆட்கள் இருப்பாங்க. அந்த ஆட்கள் வந்து வெளிய போயிடுவாங்க. நானும் இந்த வழியா இதே போல போய்க்கொண்டிருக்கும் போது ஒருநாள் நானும் அந்த லிங்கம் மட்டும் தனியாக இருக்கிறோம். அந்த இடத்துல பயங்கர வைப்ரேஷன் இருக்கும். நீங்க வேணா போய் பாருங்க உங்களுக்கே நல்லா ரொம்ப ஈசியா புலப்படும். </p> <p>அந்த லிங்கத்தை பார்த்துக்கிட்டே இருக்கேன், பார்த்துக்கிட்டே இருக்கேன்,அந்த லிங்கம் ஞானசம்பந்தர் பாடுனத கேட்டிருக்கோம்ல அப்படின்ன உடனே உடம்பெல்லாம் புல்லரிக்குது. அப்போ இந்த கல்லு இந்த தூணு, இந்த பாதைகள், சம்பந்தர் பாடுனத கேட்டு இருக்கோம். அப்பர் பாடுனத கேட்டு இருக்கோம். சுந்தரர் பாடுனத கேட்டு இருக்கோம். மாணிக்க வாசகர் பாடுனத கேட்டு இருக்கோம். அப்ப மாணிக்கவாசகர் அங்க உட்கார்ந்துதான் திருப்பாவையும், திருவம்பாவையும் எழுதினாரு. அப்படின்னு அந்த நந்தியை கும்பிட்டு அப்புறம் குருக்கள் வந்தாரு கற்பூரம் காட்டினாரு கும்பிட்டு வெளியில நடந்து வந்தா நடக்கும்பொழுது என்னுடைய காலடிகள் எடுத்து வைப்பதற்கு அந்த வைப்ரேஷன் வந்து என்னை போட்டு அமுக்குது. அதன்பிறகு மூன்று மாதம் கழித்து திடீர்னு ஒரு நாள் எழுந்து உட்காரும் பொழுதுதான் இந்த பாட கிடைத்த பரம்பொருளை பாடுதற்கு ஒருபரப்பு கிட்டியும் பாடி பயன் காண பல்மொழியால் ஏத்தாது பண்டை வினைதூற்று மூட கிடப்பயோ முத்தே முகில்  மூடா மோன முழுநிலவே மூட மனமுடம் நீக்குவானே முன்மொழியால் பாடேலோர் என்பாவா என்கிற ஒரு வார்த்தை வருது. நான் எழுதுற தமிழா இது. எனக்கு நான் எழுதினதுங்குறீங்களா, நான் யோசிச்சதுங்கறீங்களா... நான் யோசிக்கல. அதுவா வந்தது. அவன் கொடுத்தது. அதை இங்கே வந்து சஞ்சய் சுப்பிரமணியன் பாட கிடைத்த பரம்பொருளை பாடி இங்க ரொம்ப அற்புதமாக அவங்க நடனத்தில வெளிக்கொண்டு வந்தாங்க. நம்ம பார்க்கறதுக்கே ரொம்ப தெய்வீகமா இருந்தது. ரொம்ப தெய்வீக கலை. இசை என்பது தெய்வீக கலை. </p><p>ஏன் என்னை பொறுத்தவரைக்கும்னு ஆன்மிகம்னு கேக்குறீங்க? உங்களுக்கும் சேர்த்துதான். ஏன் என்னை பொறுத்தவரையில் நான் ஒரு ஆளே இல்ல.  ஆன்மீகம் என்று ஒன்னு தனியாக இல்லை. வாழ்க்கையே ஆன்மீகம் தான். நீங்க வாழ்றதும் ஆன்மீகம்தான்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/v4Mm7vYO4V0"></iframe></figure>]]></content:encoded></item><item><title>VIDEO- அவருடன் பிறந்ததே பெருமை! - இளையராஜா பற்றி தம்பி கங்கை அமரன் உருக்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraaja-brother-gangai-amaran-emotional-what-he-still-has-unknown</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ilaiyaraaja-brother-gangai-amaran-emotional-what-he-still-has-unknown#comments</comments><guid isPermaLink="false">2d3e46ff-28c6-4eab-8923-6a26f8d44aa5</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:02:38 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:02:38.266Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ilaiyaraaja,இளையராஜா,கங்கை அமரன்,Gangai Amaran,Palliyezhuchi Paavai Paadalgal,பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/y9mj7ejw/ilayaraja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ilaiyaraaja-Gangai Amaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/y9mj7ejw/ilayaraja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இசைஞானி இளையராஜா இசையமைத்து எழுதிய "பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்" ஆல்பத்தை, பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் பாடியுள்ளார். இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.</p><h2><strong>பாடிக்கிடைத்த பரம்பொருளே:</strong></h2><p>இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “நான் 1980-களில் திருவண்ணாமலையில் மலை சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தேன். அங்கு நான் தனியாக அமர்ந்திருக்கும் போது மாணிக்கவாசகர் பாடிய பாடலை நினைத்து பார்ப்பேன். </p><p>திருவண்ணாமலையில் இருந்து இங்கு வந்து 3 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் வீட்டில் எழுந்து உட்கார்ந்த போது தான், ’பாடிக்கிடைத்த பரம்பொருளே’ என்ற பாடல் எனக்குள் வந்தது. இந்த பாடல் நான் எழுதிய தமிழா என எனக்கே தோன்றியது. அது இறைவன் கொடுத்தது. இசை என்பதே தெய்வீக கலை” என்றார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/davaDvfDLz0"></iframe></figure><h2><strong>தூய்மையான தமிழ் இசை:</strong></h2><p>இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட, இளையராஜாவின் சகோதரரும், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியரான கங்கை அமரன், தனது சகோதரர் குறித்த பல நெகிழ்ச்சி தகவல்களை செய்தியாளர்களிடம்  கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில்,ரசிகர்களாகிய நீங்கள் அவரை பார்த்து எப்படி வியந்தீர்களோ, அதேபோல்தான் நானும் அவருடன் இருப்பதால் இன்னும் பெருமையாக உணர்கிறேன்.</p><p> தன்னுடைய இசை வெளிப்பாட்டை இவ்வாறு பக்தி வழியில் கொண்டுவந்து அனைவரும் பாடும் நிலைக்கு உயர்த்தியுள்ளார். தூய்மையான தமிழில், தமிழ் இசையால், எதிர்காலத் தலைமுறையினருக்கு இந்தப் பாடல்கள் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உருவாக்கியிருப்பது மிகப்பெரிய விஷயமாகும். </p><h2><strong>அவருடன் பிறந்தது பெருமை:</strong></h2><p>எனக்கு அவர் அண்ணனாக, நான் அவருக்குத் தம்பியாக இருந்தபோதிலும், அருகில் இருந்து பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. 'இவருடனா நாம் பிறந்திருக்கிறோம்?' என்று வியக்கும் அளவுக்கு எண்ணத்திலும் இசையிலும் உயர்ந்து நிற்கிறார். அவரைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. வணங்கிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இது போன்ற ஒரு படைப்பு பிரமிக்க வைக்கிறது என்றார்.</p><h2><strong>பிறவியிலேயே அமைந்த இசை:</strong></h2><p>மேலும், அவருக்கு இசை என்பது பிறவியிலேயே அமைந்தது. சாதாரணமாகப் பேசும்போது பாடச் சொன்னால் கூடப் புதிய பாடலைப் பாடுவார். புதிய வரிகளைக் கூறினால் உடனே மெட்டமைப்பார். அப்படிப்பட்ட ஒரு அரிதான மாணிக்கம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அவ்வளவுதான் நான் உணர்ந்தது.</p><p>ஏனெனில், செவ்வியல் இசை எதிர்காலத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் இதைச் செய்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளையில், சொற்களின் பொருள் மாறாமல், அந்த காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதே சொற்றொடர்களையே அவர் பயன்படுத்தியிருப்பது பெரிய விஷயம். </p><p>அதை ஆழமாக உணர்ந்து பார்த்தால்தான் தெரியும். பலர் திருப்புகழ் பாடுகிறார்கள். அந்த மரபிலும் பண்பாட்டிலும் இருந்து விலகாமல் கொண்டு செல்வதற்கான வழியை அவர் அமைத்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.</p><h2><strong>திருவண்ணாமலைக்கும் அவருக்குமான பிணைப்பு:</strong></h2><p>திருவண்ணாமலைக்கும் அவருக்குமான பிணைப்பு பற்றிப் பலமுறை பேசியிருக்கிறார்.  இது போன்ற விஷயங்கள் குறித்து எதுவும் கூற மாட்டார். அவருக்குள் இன்னும் என்ன இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. காட்டிக்கொள்ளவும் மாட்டார். படைப்பாக வெளியே வரும்போதுதான் தெரியவரும். எழுதி முடித்ததும் படித்துக் காட்டுவார், அப்போது நாங்களும் படித்து ரசிப்போம். இலக்கணத் தூய்மையோடு இருப்பதால் படிப்பதற்குச் சற்று கடினமாக இருக்கும்.</p><p>பின்னர் அதைச் சீர்பிரித்துப் பாடிக் காட்டும்போது நமக்கு எளிதாகப் புரியும். முன்னோர்கள் எழுதிய இலக்கியங்கள் அனைத்துமே அப்படித்தானே இருக்கும். அந்தச் சொற்றொடர்களை எந்த இடத்தில் பிரித்துப் பார்த்தால் பொருள் விளங்குமோ, அப்படித்தான் புரிந்து கொள்ள முடியும். </p><p>அதுபோல உயர்ந்த தன்மையில், பழங்கால நயத்தோடு இலக்கணப் பிழையின்றிப் பாடல்களை எழுதியுள்ளார். அதற்கு ஏற்றார்போல் இசையமைத்தும் இருக்கிறார். பிற்கால இளைஞர்களும் ரசிக்கும் வகையில் பின்னணி இசையையும் அவரே அமைத்துள்ளார். இதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.</p><p>நீங்கள் என்ன உணர்ந்தீர்களோ, அதேபோல்தான் நானும் ஒரு ரசிகனாகவே இங்கு வந்திருக்கிறேன். நான் தம்பியாக யோசிக்கவே இல்லை; 'ஐயோ, எங்கள் அண்ணனா இவர்!' என்று பெருமிதம் கொள்ளும் வகையில் இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 20 அதிருப்தி எம்.பிக்கள் பங்கேற்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/nda-meet-under-modi-20-dissident-tmc-mps-join-ncpi-and-attend-alliance-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/national/nda-meet-under-modi-20-dissident-tmc-mps-join-ncpi-and-attend-alliance-meeting#comments</comments><guid isPermaLink="false">02594e5b-7dbb-49ae-a8bc-f15e8d32fb24</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:46:19 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:46:19.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trinamool congress,என்டிஏ கூட்டணி,NDA Alliance,monsoon session,மழைக்கால கூட்டத்தொடர்,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/2wc1kero/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ என்டிஏ எம்பிக்கள் கூட்டம் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ என்டிஏ எம்பிக்கள் கூட்டம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/2wc1kero/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>என்டிஏ கூட்டம் </h2><p>இன்று நாடாளுமன்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">மழைக்கால கூட்டத்தொடர்</a> கூட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி  மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் தலைமையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.  </p><p>இக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, தேசியவாதக் குடிமக்கள் கட்சியில் இணைந்த 20 எம்பிக்களும் முதன்முறையாக அதிகாரப்பூர்வ அழைப்பாளராகப் பங்கேற்றனர்.  </p> <h2>சயோனி கோஷ்</h2><p>கூட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய அதிருப்தி எம்.பி. சயோனி கோஷ், "பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டம் மிகவும் பயனுள்ளதாகவும், புதிய தகவல்களைத் தருவதாகவும் இருந்தது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இதில் விரிவாகவும் நேர்மறையாகவும் விவாதிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.</p><p>மேலும், அன்று பிற்பகலில் விவாதத்திற்கு வரவுள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament">பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026</a>க்கு அனைவரும் கட்சி வேறுபாடின்றி ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>என்டிஏ கூட்டத்தில் பங்கேற்றது குறித்துப் பேசிய NCPI தலைவர் காகோலி கோஷ் தஸ்திதார், "வரலாற்றிலேயே முதன்முறையாக NCPI எம்பிக்களான எங்களுக்கு என்டிஏ-வின் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.</p> <h2>திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி பின்னணி</h2><p>மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. சுவேந்து அதிகாரி தலைமையில் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக அரசு அமைந்தது.</p><p>இதனிடையே தோல்வியால் திரிணாமுல் காங்கிரசில் பலர் அதிருப்தி அடைந்தனர். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற 80 பேரில் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து ரிதர்ப்பா பானர்ஜி தலைமையில் செயல்பட்டு வருகின்றனர். ரிதர்பாவையே அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சபாநாயகர் அங்கீகரித்தார்.</p><p>இதனிடையே எம்எல்ஏ மட்டத்தில் இருந்த அதிருப்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களையும் பீடித்தது. அடுத்தடுத்து பலர் விலகிய நிலையில் 20 திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பிக்கள் கட்சித் தாவல் தடைச் சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக தேசியவாத குடிமக்கள் கட்சியில் (NCPI) என்ற பிராந்திய கட்சி ஒன்றில் சேர்ந்து பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆத்ராவளித்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils#comments</comments><guid isPermaLink="false">0e3a6dbd-fb23-4ff6-854c-1a988ff15ac7</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:38:31 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:38:31.264Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,Convocation Ceremony,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/lb4n43zv/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/lb4n43zv/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் அர்லேக்கர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். </p><p>இந்த விழாவில், முதலில், வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">பட்டமளிப்பு விழா</a> நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்து இருந்தார். </p> <p>இந்நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டது.</p><p>இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தராமல் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது!</p> <p>மனுநீதி சோழன் மண்ணில் தமிழ் மரபை மீறும் ஆளுநருக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. விழாவைப் புறக்கணித்து அமைச்சர் விஸ்வநாதன், ராபர்ட் புரூஸ் எம்பி சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர். ஆளுநர் தனது அவமரியாதையான நடைமுறையை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும் - CJP கொண்டாட்டங்களை கண்டித்த சோனம் வாங்சுக்?</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-celebration-row-viral-cjap-dance-videos-after-pradhan-resignation-draw-criticism-wangchuk-urges-humble-victory</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-celebration-row-viral-cjap-dance-videos-after-pradhan-resignation-draw-criticism-wangchuk-urges-humble-victory#comments</comments><guid isPermaLink="false">b305073f-96be-473a-ba0b-ef748a46d4b8</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:21:34 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:21:34.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரல் வீடியோ,Sonam Wangchuk,viral video,சோனம் வாங்சுக்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uccayyid/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிஜேபி கொண்டாட்டம், சோனம் வாங்சுக் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ சிஜேபி கொண்டாட்டம், சோனம் வாங்சுக் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/uccayyid/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து போராட்டத்தை முடித்துக்கொண்ட <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-violence-report-ai-identifies-2873-attackers-989-with-serious-criminal-records-in-student-march">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> (CJP) முக்கிய நிர்வாகிகள் நடனமாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். </p><h2>வாங்சுக் போராட்டம்</h2><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக், மாணவர் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது மற்றும் உயிரிழந்த நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து ஜூலை 23 அன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.</p><p>நேற்று மருத்துவமனையில் இருந்து டிசார்ச்ஜ் ஆன வாங்சுக், காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.</p> <h2>வாங்சுக் கருத்து </h2><p>இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாங்சுக், "வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும்," எனத் தெரிவித்தார்.  </p><p>மேலும் தனது ஆதரவாளர்கள் அனைவரும் "கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் பொறுப்புணர்வுடன்" தங்களின் வெற்றியைக் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  </p><p>வெற்றி பெறுவதைப் போலவே, மரியாதையையும் அடக்கத்தையும் பேணிப் பாதுகாப்பதும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். </p><h2> </h2><h2>விமர்சனம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவால் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சோகமும், பல மாநிலங்களில் போராட்டக்காரர்கள் கைது நடவடிக்கைகளைச் சந்தித்து வரும் வேளையில், தலைவர்கள் இவ்வாறு கொண்டாடுவது சரியல்ல என இணையத்தில் விமர்சனம் எழுந்தது. </p><p>மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி போன்றோர், போராட்டக் குழுவினர் 5 நட்சத்திர ஹோட்டலில் வெற்றி விழா கொண்டாடுவதாகக் குற்றம் சாட்டினர். </p> <h2>சிஜேபி விளக்கம்</h2><p>விமர்சனங்களுக்குப் பதிலளித்த சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், "நாங்கள் சாலையில் அமர்ந்தும் போராடுவோம்; நடனமாடிக்கொண்டே எதிர்ப்பையும் பதிவு செய்வோம். இதுவே ஜென் இசட் தலைமுறையின் குணம்" என்று தெரிவித்தார். </p><p>மேலும், அது 5 நட்சத்திர ஹோட்டல் அல்ல, சாதாரண 2 அல்லது 3 நட்சத்திர ஹோட்டலின் அடித்தளக்கூடம் மட்டுமே என்றும், நாடு முழுவதும் சென்று போராட்டங்களை நடத்திவிட்டு டெல்லி திரும்பியுள்ள 200-300 தன்னார்வலர்களைக் கௌரவிப்பதற்காகவே அந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event#comments</comments><guid isPermaLink="false">8ef67113-a6bf-46e1-bed8-121cb5a8f6be</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:07:45 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:07:45.715Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,Tamil Thai Vazhthu,DGP Mahesh Kumar Agarwal,ஆளுநர் விழா,டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fna1kru8/dgp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DGP Mahesh Kumar Agarwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fna1kru8/dgp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை என்று டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் அர்லேகர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க இருக்கிறார்.</p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>இந்த விழாவில், முதலில், வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ் தாய்க்கான வாழ்த்துப் பாடல் பாட வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்து இருந்தார். </p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.</p> <h2>அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">அமைச்சர் விஸ்வநாதன்</a> அறிவித்துள்ளார். </p><p>இதேபோல் இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி இருந்தது.</p> <h2>டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்</h2><p>இந்நிலையில், காவல்துறை ஆலோசனைக்கூட்டம் மற்றும் அலுவலக பணி காரணமாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்றும் ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை என்றும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ராகுலை பின்னுக்கு தள்ளிய முதலமைச்சர் விஜய்... இன்ஸ்டாகிராமில் 1.87 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-surpasses-rahul-187-million-followers-on-instagram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-surpasses-rahul-187-million-followers-on-instagram#comments</comments><guid isPermaLink="false">601be04c-23e7-46af-ab93-fbca9fbc4a4e</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:01:36 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:01:36.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,விஜய்,vijay,Instagram,இன்ஸ்டாகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/nsmlifw7/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/nsmlifw7/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>டெல்லியில் சமீபத்தில் இளைஞர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலமாகவே மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார்கள்.</aside><p>தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆன பிறகு இன்ஸ்டாகிராமில் விஜய்யை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் மோகம் அதிகமாகவே இருந்து வருகிறது. அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பலர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.</p><p>இதன் மூலமாக பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி பலர் வருவாயும் ஈட்டி வருகிறார்கள். இதுபோன்று இன்ஸ்டாகிராம் அதிகம் பயன்படுத்தும் இளம் தலைமுறையினர் தங்களுக்கு பிடித்தமான தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களையும் பின் தொடர்கிறார்கள். </p><p>அந்த வகையில் பிரதமர் மோடி உலக அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை 10.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். மத்திய மந்திரிகளில் அமித்ஷாவை 3.22 கோடி பேரும், நிதின் கட்கரியை 66 லட்சம் பேரும் பின் தொடர்கிறார்கள். </p><h2><strong>எண்ணிக்கை உயர்வு</strong></h2><p>எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தியை 1.47 கோடி பேர் பின் தொடர்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவரை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளார். முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்யை</a> பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது. </p><p>மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசியை 1.25 கோடி பேரும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை 40 லட்சம் பேரும் பின் தொடரும் நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேரும் பின் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><h2><strong>பிரசார களம்</strong></h2><p>இன்ஸ்டாகிராமை பொறுத்தவரையில் இன்று அது மிகப்பெரிய பிரசார களமாகவே மாறியுள்ளது என்று கூறலாம். டெல்லியில் சமீபத்தில் இளைஞர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலமாகவே மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார்கள்.</p><p>த.வெ.க.வினர் பலரும் இன்ஸ்டாகிராம் மூலமாக கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் ஆகியவற்றையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். இளைஞர்களின் ஆதரவு சட்டமன்ற தேர்தலில் அதிக அளவு கிடைத்ததால் தான் விஜய் முதலமைச்சராக முடிந்தது. அந்த வரிசையில் தான் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Spider-Man: Brand New Day: ஹாலிவுட்டில் கோலாகலமாகத் தொடங்கிய சிவப்பு கம்பள வரவேற்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-red-carpet-premiere-hollywood</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-red-carpet-premiere-hollywood#comments</comments><guid isPermaLink="false">b110fbbe-a091-43b9-b029-a9671c48a48f</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:49:52 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:49:52.338Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spider man,Tom Holland,Zendaya,Sadie Sink,ஸ்பைடர் மேன்,டாம் ஹாலண்ட்,சாடி சிங்க்,ஜென்டாயா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/bsb1jvzv/spider-man.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Spider-Man: Brand New Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/bsb1jvzv/spider-man.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) பிரம்மாண்ட தயாரிப்பான ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் உலகளாவிய முதல்காட்சி, லாஸ் ஏஞ்சலஸில் உள்ள புகழ்பெற்ற எல் காபிடன் திரையரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.</p><h2><strong>கோலாகலமான சிவப்பு கம்பள நிகழ்வு:</strong></h2><p>ஹாலிவுட் பாலேவார்டு பகுதியில் அமைக்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகன் டாம் ஹாலண்ட் மற்றும் நாயகி ஜென்டாயா ஆகியோர் சிறப்பு ஆடைகளில் வருகை தந்து ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றனர். இவர்களுடன் படத்தில் இணைந்து நடித்துள்ள சாடி சிங்க், ஜேக்கப் பாட்டலான், ஜான் பெர்ன்தால் மற்றும் மார்க் ரஃப்பாலோ உள்ளிட்ட பல நட்சத்திரங்களும், இயக்குநர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டனும் கலந்துகொண்டனர்.</p><h2><strong>கதைக்களம்:</strong></h2><p>Spider-Man: No Way Home படத்தின் சம்பவங்களுக்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் கழித்து நடப்பதாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. உலகமே பீட்டர் பார்க்கரை மறந்த நிலையில், அவர் தனியாக வாழ்ந்துகொண்டு நியூயார்க் நகரத்தைக் காக்கும் முழுநேர ஸ்பைடர் மேனாகச் செயல்படுகிறார். இந்த சூழ்நிலையில், பீட்டர் சந்திக்க நேரிடும் புதிய இயற்பியல் மாற்றங்களும், கண்ணுக்குத் தெரியாத ஒரு மர்மமான புதிய வில்லனின் அச்சுறுத்தலுமே இப்படத்தின் முக்கியக் கதையாகும்.</p><h2><strong>ரெட் கார்பெட்டில் வெளிவந்த சீக்ரெட்:</strong></h2><p>லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற இப்படத்தின் பிரீமியர் ரெட் கார்பெட் நிகழ்வில், படத்திற்குப் பங்களித்த பாடகர் 'ஸ்டீவ் லேசி' அளித்த பேட்டி ஒன்றில் தவறுதலாகப் படத்தின் மிகப்பெரிய ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். நிகழ்ச்சியாளர் அவரிடம், "எந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்க நீங்கள் ஆவலாக இருக்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "எனக்கு ஜீன் கதாபாத்திரத்தைப் பிடிக்கும். அவர்தான் படத்தில் வில்லன். ஆனால் அவர் செய்யும் காரியங்களுக்குப் பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும்' என்று ஸ்டீவ் லேசி வெளிப்படையாகக் கூறிவிட்டார்.</p><h2><strong>ரசிகர்களின் கணிப்பு உண்மைதானா?</strong></h2><p>கடந்த சில மாதங்களாகவே, 'Stranger Things' தொடரின் மூலம் பிரபலமான நடிகை 'சாடி சிங்க்' (Sadie Sink) இப்படத்தில் எக்ஸ்-மென் தொடரின் புகழ்பெற்ற 'ஜீன் கிரே' கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று பல தகவல்கள் பரவி வந்தன. மார்வெல் நிறுவனம் இவரைப் பற்றிய தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருந்த போதிலும், ஸ்டீவ் லேசியின் இந்தத் தற்செயலான பேச்சு ரசிகர்களின் நீண்ட நாள் சந்தேகத்தை உறுதி செய்துள்ளது.</p><p>இத்திரைப்படம் வரும் 31ம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிரம்மாண்டமாகத் திரைக்கு வரவுள்ளது. எல்.ஏ பிரீமியர் திரையிடலைத் தொடர்ந்து, படத்திற்கு உலகளாவிய சினிமா விமர்சகர்களிடையேயும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் நேர்மறையான வரவேற்பும் உருவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கொலை, கொள்ளை.. ஜூலை 20 பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 989 பேருக்கு குற்றப் பின்னணி - டெல்லி காவல்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-violence-report-ai-identifies-2873-attackers-989-with-serious-criminal-records-in-student-march</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-violence-report-ai-identifies-2873-attackers-989-with-serious-criminal-records-in-student-march#comments</comments><guid isPermaLink="false">e6783bf8-1975-49b2-bbd2-ae0701b6b33b</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:45:36 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:45:36.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி காவல்துறை,குற்றப் பின்னணி,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/kkpk03iu/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ July 20 rally violence - Delhi]]></media:title><media:description type="html"><![CDATA[ July 20 rally violence - Delhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/kkpk03iu/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜூலை 20 அன்று டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள்  நடத்திய  <a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">பேரணியின்</a>போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக, டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.   </p><p>அதில், காவல்துறையினரைத் தாக்கியது மற்றும் அரசு வாகனங்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் ஈடுக்கப்பட்டவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர் என கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். </p><h2>ஏஐ தொழில்நுட்பத்தால் ஆய்வு</h2><p>கேமராக்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்த வீடியோக்களை ஏஐ தொழில்நுட்பத்தால் ஆய்வு செய்து போலீசார் மற்றும் வாகனங்களை தாக்கிய 2,873 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் , 989 நபர்கள் கொடூரமான  குற்றப் பின்னணி கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது. </p><h2>குற்றப் பின்னணி</h2><p>அதன்படி, பேரணியில் வன்முறையில் ஈடுபட்ட 101 பேர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 284 பேர் மீது கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன.</p><p>61 பேர் மீது பாலியல் வன்கொடுமை, 25 பேர் மீது பெண்களைத் துன்புறுத்துதல் 6 பேர் பேர் மீது மற்றும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளன.</p><p>229 பேர் ஆயுத சட்டம் வழக்குகளிலும், 135 பேர் செயின் பறிப்பு வழக்குகளிலும், 19 பேர் கடத்தல் வழக்குகளிலும், 67 பேர் போதைப்பொருள் வழக்குகளும் உள்ளன." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பலப்பிரயோகம்</h2><p>மேலும், ஜந்தர் மந்தரில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தடுப்புகளை உடைத்து நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறியதாலும், தொடர்ந்து எச்சரிக்கைகளை மீறியதாலுமே பலப்பிரயோகம் செய்யப்பட்டது.  </p><p>தீவிரக் குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும் என்றும், மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என  என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>ஜூலை 20 தாக்குதல்</h2><p>ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.</p><p>அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.</p><p>ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 118 போலீசாரும் காயமுற்றனர். </p>]]></content:encoded></item><item><title>கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல 3 மாதத் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-3month-ban-on-transporting-minerals-to-other-states-is-welcome</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-3month-ban-on-transporting-minerals-to-other-states-is-welcome#comments</comments><guid isPermaLink="false">658ce874-710f-48e2-a290-2fd6e5b921bf</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:34:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:34:49.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/xj4dsft9/anbumaniramadoss.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/xj4dsft9/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இப்போது 3 மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வரவேற்பு</strong></h2><p>தமிழ்நாட்டிலிருந்து  கருங்கல் பாறைகள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்  வகையில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தற்காலிகமானதாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது.</p><p>தமிழ்நாட்டின்  நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு மிகப்பெரிய அளவில் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. முந்தைய திமுக ஆட்சியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதரின் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் உச்சக்கட்டத்தை அடைந்தது.  இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று தவெக அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே  வலியுறுத்தியிருந்தேன். அதைத்  தொடர்ந்து சில குவாரிகளுக்கு  கனிமவளத்துறை அமைச்சரே நேரில் சென்று ஆய்வு நடத்தினாலும்  கனிமக் கொள்ளையும், கடத்தலும் குறையவில்லை.</p><p>தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்கு செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் காரணமாக அந்த சாலையில் கனிம வளங்களை கொண்டு செல்லத் தடை விதித்த போதிலும் கடத்தல் குறையவில்லை. மாறாக மாற்றுப்பாதையில் கடத்தல் தொடர்ந்தது. அதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை; அதனால் உடனடியாக கனிமக் கடத்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன்.</p><h2><strong>சிபிஐ விசாரணை</strong></h2><p>அதன் தொடர்ச்சியாகத் தான் வெளி மாநிலங்களுக்கு கனிமங்களைக் கடத்திச் செல்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தத் தடை முழு அளவில் செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தி கனிமவளங்கள் கடத்தப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.</p><p>அதுமட்டுமின்றி, இப்போது 3  மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக  மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பயணிகளே கவனம்..! அரசுப் பேருந்துகளில் இனி &apos;நோ சவுண்ட்&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses#comments</comments><guid isPermaLink="false">73f8a45a-6f0b-4ed2-9e36-2e8cb2d6fdcd</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:25:56 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:25:56.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,government buses,Tamilnadu Government,tnstc,போக்குவரத்து கழகம்,அரசுப் பேருந்துகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hqh9kncr/tnstc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Government Buses ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hqh9kncr/tnstc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் பலர் செல்போனில் பாட்டு கேட்பது, வீடியோ படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் சிலர் ஹெட்போன், இயர்போன் மூலம் இசை கேட்பார்கள். ஆனால் ஒரு சிலர் செல்போனில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பது அல்லது படம் பார்ப்பது உண்டு. செல்போனில் பேசும் போது கூட மிகவும் சத்தமாக பேசுவதை காண முடியும். இது சக பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். சில சமயங்களில் அரு கருகே இருக்கும் பயணிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுவிடும்.</p><p>இதுபோன்ற தகராறுகள் பஸ்களில் நடைபெறாமல் இருக்க பஸ்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக செயலாளர் நிர்மல்ராஜ், சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>சத்தமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்</strong>:</h2><p>பொதுப் போக்குவரத்து வாகனங்களில்  பயணிகள் பயணிக்கும்போது,  மோட்டார் வாகன (ஓட்டுதல்) ஒழுங்குமுறை 2017-ன் விதி 5(10)-ன் படி, வாகனத்தில் உரத்த ஒலியில் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் 1989 விதி 228-ன் படி, சக பயணி களுக்கு இடையூறு அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் முறைகேடாகக் கருதப்படும். </p><p>இதில் கைபேசியில் பயணம் முழுவதும் உரத்த குரலில் பேசிக்கொண்டே தொடர்ந்து பயணித்தல் மற்றும் கைபேசியில் ஸ்பீக்கர் பயன்படுத்துதல், இயர்போன், ஹெட்போன் இல்லாமல் இசை கேட்பது மற்றும் காணொலியில் வீடியோ படம் பார்த்தல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.</p><h2><strong>இயர்போன், ஹெட்போன் மூலம் பாடல்:</strong></h2><p>‘புளூடூத்’ அல்லது இயர்போன், ஹெட்போன் பயன்படுத்தி சக பயணிகளுக்கு இடையூறு இல்லாமலும், பயணிகளின் கைபேசி உபயோகம் மற்றவர்களின் அமைதி நிலையை கெடுக்காமலும் இருக்க வேண்டும்.மேற்காணும் கட்டுப்பாடுகளை அனைத்துப் போக்கு வரத்துக் கழகங்களிலும் பயணம் செய்யும் பயணிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். </p><h2><strong>விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்:</strong></h2><p>பேருந்தினுள் பயணிகள் எளிதில் பார்க்கும் வகையில் 'கைபேசியில் 'ஸ்பீக்கர் ஒலி' வேண்டாம் - அமைதியான பயணம், பாதுகாப்பான பயணம்" என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களைப் பேருந்துகளில் ஒட்டுமாறு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><h2><strong>ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான அறிவுறுத்தல்:</strong></h2><p>பேருந்தைக் கிளப்பும் முன்பும், பயணத்தின்போதும் பயணிகள் இந்த நடைமுறையைக் கண்டிப்புடன் பின்பற்றுவதை ஓட்டுநர்களும் நடத்துநர்களும் உறுதி செய்து அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சமீபகாலமாக பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் பலர், தங்கள் கைபேசியில் சத்தமாக ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பதும், உரத்த குரலில் பேசுவதும் அதிகரித்துள்ளதாகக் கடலூர், சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து போக்குவரத்துத் துறைக்குத் தொடர் புகார்கள் வந்தன. அமைதியான மற்றும் அசவுகரியமில்லாத பயண அனுபவத்தை உறுதிசெய்யும் பொருட்டு போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போராடிய மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்த கபில் சிபல்</title><link>https://www.maalaimalar.com/news/national/neet-protest-legal-aid-kapil-sibal-pledges-1-crore-to-cjp-fund-for-students-facing-cases</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-protest-legal-aid-kapil-sibal-pledges-1-crore-to-cjp-fund-for-students-facing-cases#comments</comments><guid isPermaLink="false">fd513a3d-0b28-47cc-9d9a-1bb0e0e8b49c</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:20:17 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:20:17.877Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வழக்கு,Case,கபில் சிபில்,Kapil Sibal,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/t7bnwzxr/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கபில் சிபல், சௌரவ் தாஸ்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ கபில் சிபல், சௌரவ் தாஸ்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/t7bnwzxr/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ரூ. 1 கோடி</h2><p> கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி)  அமைத்துள்ள மாணவர் சட்ட உதவி நிதியத்திற்குத் தனது பங்களிப்பாக ரூ.1 கோடி வழங்குவதாக மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் அறிவித்துள்ளார்.</p><p>போராட்டங்களில் பங்கேற்று சட்டரீதியான வழக்குகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவ சிஜேபி, இந்த நிதியத்தை உருவாக்கியுள்ளது.</p><p>நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இந்த நிதியத்திற்குப் பங்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p> <h2>சட்ட உதவிக்கு சிறப்பு இணையதளம்</h2><p>டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிஜேபி தலைவர்கள் அசுதோஷ் ரான்கா, சௌரவ் தாஸ் மற்றும் வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p>அதில், பீகார், அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா என அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவ உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் இணைந்து ஒரு சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">எப்.ஐ.ஆர் </a>பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் தங்கள் வழக்கு விவரங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில்புதிய போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது.</p><p>இலவசமாகச் சேவை செய்ய விரும்பும் வழக்கறிஞர்களும் இந்த இணையதளம் மூலம் இணையலாம் என தெரிவிக்கப்பட்டது.</p> <h2>மீண்டும் போராட்டம்</h2><p>மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்படாமலும், காவல்துறை நடவடிக்கைகள் நிறுத்தப்படாமலும் இருந்தால் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவோம் என சிஜேபி எச்சரித்துள்ளது.</p><p>அரசு தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டதாகவும், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சௌரவ் தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>அதேவேளையில், ஜூலை 26 மாலை 6 மணிக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பீகார் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p> <h2>சிஜேபி போராட்டம் </h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி.) சார்பில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டம் நாடு முழுக்க பல மாநிலங்கள் வரை மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.</p><p>அந்த வரிசையில் பீகார் மாநிலத்திலும் மாணவர்கள், மாணவர் அமைப்புகள் சார்பில் போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மாநிலம் முழுக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டத்தின் பாதையில் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">df8285ae-a575-486a-81f8-c4959b161654</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:10:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:10:12.838Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,RB Udhayakumar,ஆர்பி உதயகுமார்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/0s4fu4e1/RBUdhayakumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆர்.பி.உதயகுமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.பி.உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/0s4fu4e1/RBUdhayakumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.</aside><p>முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ஆர்.பி.உதயகுமார் </a>இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>டெல்டா பகுதி வறட்சி பகுதியாக நாம் பார்க்கிற போது நம் நெஞ்சம் பதறுகிறது. கர்நாடகா தண்ணீரை திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஜூன், ஜூலை மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கொடுக்காமல் பயிர்கள் காய்வதை பார்த்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நாம் பெற வேண்டிய உரிமை பறிபோய் கொண்டே இருக்கிறது. மேல்முறையீடு செய்ய த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா? மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்ற அதிரடி பதிலை மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்து இருப்பதால் அதிர்ச்சியிலே உறைந்து போய் இருக்கிறது தமிழகம்.</p><h2><strong>நீதியரசர்களின் தீர்ப்பே சாட்சி</strong></h2><p>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled">சென்னை ஐகோர்ட் மதுரை கிளை</a> அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. தன்னை பார்க்க வந்தவர்கள் இறந்து போனார்கள் என்பதற்காக அரசு நிர்வாகத்தை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், என்கிற கோமாளித்தனத்தை தலையில் கொட்டு வைத்து, சட்டத்தை புரிய வைத்து, சட்டத்தின் ஆட்சிதான் என்றைக்கும் மேலோங்கி இருக்கும் என்பதை நீதியரசர்கள் இந்த நாட்டிற்கு உணர்த்தியுள்ளார்கள்.</p><p>கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால், கோட்டையிலே ஓட்டை விழுந்து விடுகிறது என்பதற்கு தான் இன்றைக்கு ஐகோர்ட் தீர்ப்பு உச்சந்தலையில் ஆணி அடித்தது போல, மக்களின் பக்கம், சட்டத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம், தர்மத்தின் பக்கம் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டுமே தவிர, த.வெ‌.க. கட்சியை வளர்ப்பதற்கு அரசு எந்திரத்தை பயன்படுத்தினால் இப்படித்தான் சம்பட்டி அடி கிடைக்கும் என்பதற்கு இந்த நீதியரசர்களின் தீர்ப்பே சாட்சியாக இருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மிருணாள் தாகூர்-யஷஸ்வி ஜெய்ஸ்வால் காதல் வதந்தி: மும்பை கஃபே வீடியோவால் இணையத்தில் பரபரப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mrunal-thakur-yashasvi-jaiswal-relationship-bandra-buji-cafe-viral</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mrunal-thakur-yashasvi-jaiswal-relationship-bandra-buji-cafe-viral#comments</comments><guid isPermaLink="false">2046815b-e7da-4437-a820-d8ac2052ec2e</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:04:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:04:01.515Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yashasvi Jaiswal,யஷஸ்வி ஜெய்ஸ்வால்,mrunal thakur,நடிகர் தனுஷ்,actor Dhanush,மிருணாள் தாகூர்,Yashasvi Jaisval</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/1wgcz129/MUR.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mrunal Thakur-Yashasvi Jaiswal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/1wgcz129/MUR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் (33), இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் (24) காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் புதிய வதந்தி ஒன்று காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மும்பை பாந்த்ரா மேற் பகுதியில் உள்ள 'பூஜி கஃபே'  உணவகத்தில் இருவரும் இருந்த வீடியோ இணையத்தில் வைரலானதே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.</p><h2><strong>வைரல் வீடியோ:</strong></h2><p>சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புன்னகையுடன் கஃபேவை விட்டுவெளியேறி தனது காரை நோக்கிச் செல்கிறார். அதே வேளையில் நடிகை மிருணாள் தாகூர் அந்த கஃபேவின் உள்ளேயே அமர்ந்திருக்கிறார்.</p><p>ஆனால், வீடியோவில் இருவரும் ஒன்றாகப் பேசுவதோ அல்லது நெருக்கமாக அமர்ந்திருப்பதோ போன்ற எந்தவொரு காட்சியும் இடம் பெறவில்லை. இருப்பினும், இரு பிரபலங்களும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் காணப்பட்டதால், 'இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்களா?' என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளனர்.</p><p>மிருணாள் தாகூரோ அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வாலோ இந்த வீடியோ அல்லது காதல் வதந்திகள் குறித்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இரு ரசிகர் பட்டாளங்களைச் சேர்ந்த சிலர், இது ஏதேனும் ஒரு விளம்பரப் படப்பிடிப்புக்காக அல்லது தொழில்முறை சந்திப்புக்காக நடந்த சந்திப்பாக இருக்கலாம் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>மிருணாள் தாகூருக்கு 33 வயதும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 24 வயதும் ஆகிறது. இவர்களுக்கு இடையே உள்ள 9 ஆண்டுகள் வயது வித்தியாசம் குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.</p><h2><strong>ரசிகர்களின் ஆதரவு:</strong></h2><p>மிருணாள் தாகூரின் ரசிகர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். "சில நாட்களுக்கு முன் தனுஷுடன் இணைத்துப் பேசினார்கள், பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இப்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் என யாராவது ஒருவருடன் மிருணாளைத் தேவையின்றி இணைத்துப் பேசுவதை நிறுத்துங்கள்" என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.</p><p>தற்போது, மிருணாள் தாகூர் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணி விளையாடவுள்ள அடுத்தடுத்த தொடர்களுக்குத் தயாராகி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>வைரல் தெலுங்கு நடிகை ஸ்யாமலா மறைவு </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-telugu-character-actress-dies-pavala-shyamala-passes-away-in-hyderabad-after-health-issues-and-viral-kokku-scene-fame</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-telugu-character-actress-dies-pavala-shyamala-passes-away-in-hyderabad-after-health-issues-and-viral-kokku-scene-fame#comments</comments><guid isPermaLink="false">32081606-f261-4919-9ef2-be9e231f71b2</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:02:01 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:02:01.790Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Actress,dil raju,தில் ராஜு,தெலுங்கு நடிகை,நடிகை மறைவு,Telugu actress</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/39orq3nf/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஸ்யாமலா ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்யாமலா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/39orq3nf/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மூத்த <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/s-janakis-body-cremated-with-state-honors-amid-30-gunshots">தெலுங்கு </a>குணச்சித்திர நடிகை பாவாலா ஷியாமலா (75) காலமானார். </p><p>கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனையில் நள்ளிரவில் மாரடைப்பால்  உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். </p><p>முன்னதாக அவரிடம் போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர். பின்னர் போலீசார் அவரை மீட்டனர். ஸ்யாமலா சாலையில் ஆதரவின்றி கிடந்த வீடியோ வைரலாகி பின்னர் தயாரிப்பாளர் தில் ராஜு முன்வந்து அவரின் மருத்துவ செலவுக்கு உதவினார். </p><h2>ஷியாமலா</h2><p>ஷியாமலா, 1951ல் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம், அமராவதியில் பிறந்தார். நடிப்பில் ஆர்வம் கொண்ட அவர், முதலில் மேடை நடிகையாகவும் வானொலிக் கலைஞராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.</p><p>40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வரும் பாவாலா ஷியாமலா, 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.</p><p>தனது இயல்பான நடிப்பு மற்றும் நகைச்சுவை உணர்வுக்கு பெயர் போனவர் ஸ்யாமளா. </p><p>குறிப்பாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கோபிசந்த் (ஜெயம் பட வில்லன்) நாயகனாக நடித்து 2010 இல் வெளியான கோலிமார் படத்தில் ஸ்யாமளா இடம்பெற்ற நகைச்சுவை காட்சி தெலுங்கு சினிமா ரசிகர்கள் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரசித்தம்.</p> <figure><img alt="ஸ்யாமலா " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/eb6wa7fn/tn-8.jpg" /><figcaption>ஸ்யாமலா </figcaption></figure><h2>கொக்கு - வைரல் காட்சி</h2><p>தமிழ் டப்பிங்கில் 'கொக்கு' என்ற பெயரில் வெளியான இப்படத்தில் கோபிசந்த் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக இருப்பார். பிரியாமணி அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். வெளிநாட்டில் உள்ள வில்லன், ஒரு காட்சியில் தனக்கு பணம் தர வேண்டும் என ஐதராபாத்தில் ஒரு பெரும் புள்ளியை மிரட்டுவதற்காக போன் செய்வார்.</p><p>வீட்டில் அவரின் வேலைக்காரி அந்த போன் காலை எடுப்பார். இது தான் ஸ்யாமலா நடித்த பாத்திரம். வில்லன் மிடுக்குடன் மிரட்டலாக பேச, வேலைக்காரியாக நடித்த ஸ்யாமலா, எதிர்புறம் பேசுவது பெரிய டான் எனத் தெரியாமல் பல எதிர்கேள்விகளை அடுக்கிக்கொண்டே போவார். ஒரு கட்டத்தில் வில்லன் கடுப்பாகி, தன் மீது யாருக்கும் பயம் இல்லை என உணர்ந்து, அந்த பெரும் புள்ளியையும், வேலைக்காரியையும், ஆள் அனுப்பி கொல்ல சொல்வார்.</p><p>பெரும் புள்ளி சுட்டுக்கொல்லப்பட, வேலைக்காரி ஸ்யாமளா தப்பித்துக்கொள்வார். நாயகன் கோபிசந்த் கொலை நடந்த வீட்டுக்கு வந்து, விசாரிக்க, தான் போனில் பேசிய விஷயத்தை ஸ்யாமளா கூற, "உன்னால தான் உன் முதலாளி செத்துட்டான்" என கூறுவார். இந்த சீன் பின்னாட்களில் சமூக ஊடகங்களில் அதிகம் உலா வந்த ஒன்று. அவரின் தற்போதைய மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய டோக்கன்- நெரிசலை குறைக்க ரெயில்வே நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/tatkal-booking-new-rules-process-coming-august-1st</link><comments>https://www.maalaimalar.com/news/national/tatkal-booking-new-rules-process-coming-august-1st#comments</comments><guid isPermaLink="false">b994f996-dad7-4b66-b206-f7ca61bea8ad</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:57:33 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:57:33.692Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Indian Railway,இந்திய ரெயில்வே,Tatkal,தட்கல்,தட்கல் ரெயில் டிக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rl2qzk4i/tatkal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rl2qzk4i/tatkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் முன்பதிவு மையத்திற்குச் சென்றால், ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.</aside><p>ரெயில் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு மையங்களில் எளிதாகவும், நெரிசலின்றியும் பெறுவதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/இந்திய-ரெயில்வே">இந்திய ரெயில்வே</a> ஒரு புதிய டோக்கன் முறையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மேற்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய நடைமுறை, வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.</p><h2><strong>கூட்ட நெரிசல்</strong></h2><p>வழக்கமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நேரங்களில், ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வரும் பயணிகளுக்கு முதலில் ஒரு டோக்கன் வழங்கப்படும். பின்னர், அந்த டோக்கன் வரிசை எண்களின் அடிப்படையில் அவர்களின் முறை ஒதுக்கப்பட்டு, பயணச்சீட்டுகள் தடையின்றி முன்பதிவு செய்யப்படும்.</p><p>இதனால், கவுண்டரில் ஏற்படும் தள்ளுமுள்ளு மற்றும் நீண்ட வரிசைகளால் ஏற்படும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>ஆவணங்கள்</strong></h2><p>தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் முன்பதிவு மையத்திற்குச் சென்றால், ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். </p><p>மேலும், பயணிகளின் பெயர்கள், வயதுகள் மற்றும் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும். இது டிக்கெட் முன்பதிவு செயல்முறையை விரைவுபடுத்த உதவும்.</p><p>புதிய நடைமுறை வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event#comments</comments><guid isPermaLink="false">0ceb1613-c7e5-4002-9b5c-53c3f3ae5d55</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:52:04 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:52:04.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,Convocation Ceremony,அமைச்சர் விஸ்வநாதன்,minister viswanathan,nellai manonmaniam sundaranar university</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/klrv4ivc/univeersity.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/klrv4ivc/univeersity.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.</p><h2>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார். </p> <h2>அமைச்சர் விஸ்வநாதன்</h2><p>இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">பட்டமளிப்பு விழா</a>வை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து அவர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார்.</p> <h2>டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்</h2><p>மதுரையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தற்போது வரை நெல்லைக்கு புறப்படவில்லை. இன்று முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதாக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக நெல்லை தவெக எம்எல்ஏ முருகன் அறிவித்துள்ளார். பட்டமளிப்பு விழாவில் இன்று நடைபெறும் நிலையில் ஆளுநரை கண்டித்து புறக்கணிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.</p><p>பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் அறிவித்த நிலையில் நெல்லை எம்எல்ஏ முருகனும் அறிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மேக்புக் மாடல்களுக்கு ரூ. 15,000 கேஷ்பேக் வழங்கும் ஆப்பிள்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-offering-up-to-rs-15000-cashback-on-macbook-pro-macbook-air</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/apple-offering-up-to-rs-15000-cashback-on-macbook-pro-macbook-air#comments</comments><guid isPermaLink="false">cd61f62f-6cdf-40d8-97c7-c64002bc7b1a</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:42:00 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,சலுகை,Offers</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/0bwji739/Macbook-Pro.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Macbook Pro]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/0bwji739/Macbook-Pro.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்திய விலை உயர்வால் அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது மேக்புக் ப்ரோ (MacBook Pro) மற்றும் மேக்புக் ஏர் (MacBook Air) மாடல்களுக்கு வங்கி சார்ந்த தள்ளுபடி சலுகைகளை வழங்க தொடங்கியுள்ளது. </p><p>நேரடி விலை குறைப்புக்கு பதிலாக, குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும் என்பதால், இவை பயனுள்ளவையாக இருந்தாலும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாக இல்லை.</p><p>சலுகை விவரங்கள்:</p><p>M5 சிப் கொண்ட 14-இன்ச் மேக்புக் ப்ரோ மாடலுக்கு ரூ. 15,000 வரையிலும், M5 சிப் கொண்ட 13-இன்ச் மேக்புக் ஏர் மாடலுக்கு ரூ. 9,000 வரையிலும் குறிப்பிட்ட வங்கி கார்டுகள் மூலம் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.</p><p>மேலும், மேக்புக் ஏர் மாடலுக்கு 'கல்விக்கான சிறப்பு விலை' சலுகையையும் ஆப்பிள் நீட்டித்துள்ளது; இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இதன் விலை இன்னும் சற்று குறைகிறது.</p><p>விலையை உயர்வாகவே வைத்துக்கொண்டு, பின்னர் வங்கி கார்டு சார்ந்த சலுகைகள் மூலம் அந்த சுமையைக் குறைப்பது என்பது ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கமான உத்தியாகும். இதில் தள்ளுபடிகள் வழங்கப்பட்டாலும், அடிப்படை விலைகள் மிக அதிகமாக இருப்பதால், இந்த சலுகைகள் ஒரு சிறந்த லாபகரமான ஒப்பந்தமாக தெரிவதை விட, விலை உயர்வால் ஏற்பட்ட அதிருப்தியை சரிசெய்யும் முயற்சியாகவே தோன்றுகின்றன.</p><h2>இந்திய விலை:</h2><p>M5 சிப்செட் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் 13-இன்ச் மாடலின் விலை ரூ. 1,37,900 என்றும் 15-இன்ச் மாடலின் விலை ரூ. 1,67,900 முதல் துவங்குகிறது.</p><p>இதேபோல் M5 ப்ரோ சிப்செட் கொண்ட 14-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் ரூ. 2,27,900 என்றும் M5 ப்ரோ சிப்செட் கொண்ட 16-இன்ச் மேக்புக் ப்ரோ விலை ரூ. 3,35,900 முதல் தொடங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university#comments</comments><guid isPermaLink="false">3ddf92d1-7dde-4bed-a8bb-a3ea89fbab72</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:41:00.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Manonmaniam Sundaranar University,நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/icxnmrh1/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/icxnmrh1/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அறமும், மனிதநேயமும் மீறல்</strong></h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தினக்கூலி பணியாளர்களாகவும், தொகுப்பூதிய பணியாளர்களாகவும் பணியாற்றி வரும்  53  தொழிலாளர்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிலைப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பதாக  குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன. அறத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பல்கலைக்கழகத்திலேயே அறமும், மனிதநேயமும் மீறப்படுவது கண்டிக்கத்தக்கது.</p><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தூய்மைப் பணியாளர்கள், இரவுக் காவலர்கள், பாதுகாவலர்கள், மின்னியலாளர்கள்,  அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளில்  தொகுப்பூதிய பணியாளர்களாக 53 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அதே பல்கலைக்கழகத்தில்  17 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை  பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணிச் செயல்பாடுகள் குறித்து  எந்தப் புகாரும் இதுவரை  எழவில்லை.</p><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விதிகளின்படி தினக்கூலி பணியாளராக சேரும் ஒருவர் ஐந்தாண்டுகள் பணி செய்த பின்னர் தொகுப்பூதிய பணியாளராக மாற்றப்படுவார். அடுத்த பத்தாண்டுகள்  தொகுப்பூதிய பணியாளராக பணி செய்த பின்னர் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த 53 பணியாளர்கள் விஷயத்தில் மட்டும் இந்த விதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் கடைபிடிக்க மறுக்கிறது.</p><h2><strong>பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்</strong></h2><p>தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும்  53  பேரும்  50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும்  சென்று வேலை தேட முடியாது. பணி நிலைப்பு என்பது அவர்களின் உரிமை. இந்த உரிமையை பெறுவதற்காக தகுதியை அவர்கள்  2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெற்று விட்டனர். அதனடிப்படையில் பணி நிலைப்பு வழங்குங்கள் என முந்தைய துணை வேந்தரிடம் 3 முறையும், இப்போதைய துணை வேந்தரிடம் இரு முறையும் மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் நீதி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுக்கிறது.</p><p>பணி நிலைப்பு கிடைக்காத மன உளைச்சலில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்;  ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பணி செய்ய முடியாத அளவுக்கு படுக்கையில் வீழ்ந்துள்ளார்.  இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதே நிலை பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது.</p><p>தொகுப்பூதிய பணியாளர்களின் தேவைகளும், மனித உரிமைகளும்  மதிக்கப்பட வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 17 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும்  தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி நிலைப்பு  வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும். தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>CJP PROTEST: போலீஸ் வேனை மறித்த புகழ்பெற்ற மாடல் அழகி மும்பை போலீசில் புகார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-famous-model-files-complaint-mumbai-police</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-famous-model-files-complaint-mumbai-police#comments</comments><guid isPermaLink="false">463bdfea-8d1a-458e-879b-ac5fdee5c8da</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:27:19 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:27:19.190Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட் ஊழல்,CJP Protest,காக்ரோச் ஜனதா கட்சி,Rhiya Yadav,ரியா யாதவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/urgf3nlq/rhiya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rhiya Yadav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/urgf3nlq/rhiya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மும்பையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏற்றிச் சென்ற காவல் துறை வாகனத்தை மறித்து சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்த 27 வயதான மாடல் அழகி 'ரியா யாதவ்', தனக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இணையவழி அவதூறு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக மும்பை எம்பிடிசி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.</p><h2><strong>சம்பவத்தின் பின்புலம்:</strong></h2><p>கடந்த ஜூலை 22 அன்று, மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நீட் தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட இளைஞர்களை ஏற்றிச் சென்ற போலிஸ் வேனை ரியா யாதவ் தனது கைகளை விரித்து நின்று மறித்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அவருக்குப் பரவலான ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது.</p><h2><strong>இணையவழித் தாக்குதல்:</strong></h2><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகத் தொடர் அவதூறுகளையும் மனரீதியான தாக்குதல்களையும் தொடுக்கத் தொடங்கினர். அதில், ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ஆபாச உள்ளடக்கங்களை விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகச் சிலர் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டனர்.</p><p>மேலும், அவரது புகைப்படங்களை மங்கலாக்கி வீடியோக்களாக வெளியிட்டு, தவறானத் தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது பெற்றோர் இதனால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இந்த அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதற்காகவும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.</p><h2><strong>காவல் துறை நடவடிக்கை:</strong></h2><p>கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிரா சைபர் செல்லில் ஆன்லைன் மூலம் புகார் அளித்த ரியா, நேற்று MIDC காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சாட்சியங்களைச் சமர்ப்பித்தார். காவல் நிலையத்தில் திரையிடப்பட்ட வீடியோ ஆதாரங்கள், டிஜிட்டல் சான்றுகள் மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங்குகளை அதிகாரிகளிடம் வழங்கினார். </p><p>இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "காவல் துறையினர் மிகவும் ஒத்துழைப்புடனும் விரைவாகவும் செயல்பட்டனர். நடைமுறைகளை அவர்கள் துரிதப்படுத்தியதால், திட்டமிட்டபடி மூத்த சைபர் செல் அதிகாரியைச் சந்திக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை" எனக் குறிப்பிட்டார்.</p><p>இப்புகார் தொடர்பாக ரியா யாதவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்த பின் விரைவில் FIR பதிவு செய்யப்படும் என்றும் MIDC காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக சரிந்த தங்கம் விலை</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-28-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-28-07-2026#comments</comments><guid isPermaLink="false">2d7182dd-77e1-4996-9d3e-aa66c7847008</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:21:55 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:21:55.298Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-01/nglnbkdf/gold.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-01/nglnbkdf/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.13,300-க்கும், சவரன் ரூ.1,06,400-க்கும் விற்கப்பட்டது. நேற்று ரூ.70 உயர்ந்து கிராம் ரூ.13,370-க்கும், ரூ.560 அதிகரித்து சவரன் ரூ.1,06,960-க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை குறைவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு  ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>27-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960</p><p>26-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><p>25-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><p>24-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840</p><p>23-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,000</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>27-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>26-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>25-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>24-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>23-07-2026- ஒரு கிராம் ரூ.245</p> ]]></content:encoded></item></channel></rss>