<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 15 Aug 2026 05:40:08 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: 
சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார் முதலமைச்சர் விஜய் - 15 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026#comments</comments><guid isPermaLink="false">c6da5784-7244-49ec-aad8-b0af519a1d11</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:53:31 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:09:29.808Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2gsgacem/vijay01.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2gsgacem/vijay01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆண்களில் 3 பேருக்கும், பெண்களில் இருவருக்கும் வழங்கப்பட்டது.</p><p>திருப்பூர் இம்மானுவேல் நெல்சன், தூத்துக்குடி சரவண குமார், சேலம் நிர்மல் கதிர்வேலு, மயிலாடுதுறை ராஜேஸ்வரி மகாதேவன், மதுரை சிந்தாவுக்கு முதலமைச்சரின் இளைஞர் விருது வழங்கப்பட்டது.</p> <p>காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றவாறு மக்களை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்</p><p>சாலையின் இருபுறமும் உள்ள மக்களை பார்த்து கை அசைத்தவாறு நடந்து சென்றார் முதலமைச்சர் விஜய்</p><p>விருதாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை நீலகிரி ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யாவுக்கு வழங்கினார் முதலமைச்சர்</p><p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிருஷ்டி பவுண்டேஷனுக்கு சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதை வழங்கினார் - முதலமைச்சர் விஜய்</p> <p>உலகின் கடினமான மாரத்தானில் ஒன்றான டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தானை 2 முறை வென்ற நவ்ஷீனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கினார் முதலமைச்சர் விஜய்</p><p>எம்.கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது, நீரிழிவு நோய் நிபுணர் மோகனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய் </p><p>விடுதலை போராட்ட வீரர்கள் ஓய்வூதியம் ரூ.25,000 ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்வு முதலமைச்சர் விஜய்</p><p>முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000-ல்  இருந்து ரூ.50,000ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதுடன் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம்  - முதலமைச்சர் விஜய்</p><p>இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கும் நன்றி - முதலமைச்சர் விஜய்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q8bvaih9/vijay3.jpg" /></figure><p>லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது தவெக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். </p><p>கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் வாழ்த்து - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Chief Minister C Joseph Vijay hoists the tricolour at the state Secretariat in Chennai on the occasion of 80th Independence Day. <a href="https://t.co/QFKUtuvUjl">pic.twitter.com/QFKUtuvUjl</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088466594729214122?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>முதலமைச்சர் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை.</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிடுகிறார் முதலமைச்சர் விஜய்</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை.</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது. கனவு உயர்வாக இருந்தால் திறனும் உயரும் - பிரதமர் மோடி</p><p>40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம். வர்த்தக ஒப்பந்தத்தால் மீனவர்கள், விவசாயிகள் பயன் - பிரதமர் மோடி</p><p>வரும் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>நமது தேவைகளுக்காக பிற நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க முடியாது. நாம் தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>உலகளவில் ஈர்க்கும் வகையில் பொருட்களை தயாரிக்க வேண்டும் - பிரதமர் மோடி</p><p>உற்பத்தி துறையில் மேலும் வளர்வது கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>நாட்டு மக்கள் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி</p><p>கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது  - பிரதமர் மோடி பெருமிதம்</p><p>ஒவ்வொரு இந்தியரும் இணைந்து இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற கனவை 2047-ம் ஆண்டில் நனவாக்குவோம் - பிரதமர் மோடி</p><p>இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. </p><p>மிகப்பெரிய செமி கண்டக்டர் ஆலைகள் வர உள்ளன - பிரதமர் மோடி</p><p>அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர். நமது கனவுகளை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது - பிரதமர் மோடி</p><p>அனைவரது மனதிலும் மூவர்ணம் நிறைந்துள்ளது. நாடெங்கிலும் வந்தே மாதரம் பாடல் எதிரொலிக்கிறது - பிரதமர் மோடி</p><p>நமது நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 12 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: From the ramparts of the Red Fort, Prime Minister Narendra Modi says, &quot;... Over the past 12 years, countless citizens—whether Dalits, the downtrodden, the marginalized, or tribals; whether rural or urban dwellers; the poor or the middle class; youth or the… <a href="https://t.co/YT8btWXU6S">pic.twitter.com/YT8btWXU6S</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088452942542365128?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>இந்தியா தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>2047-ல் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி</p><p>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது.</p><p>நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும் - பிரதமர் மோடி</p><p>நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர் - பிரதமர் மோடி</p><p>உலகம் இன்று நம்மை பார்க்கும் விதம் மாறி உள்ளது - பிரதமர் மோடி</p><p>கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும்.</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது.</p><p>நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.</p><p>நாட்டு மக்கள் அனைவரது இல்லங்களிலும் இன்று மூவர்ண கொடி பறந்து கொண்டிருக்கிறது.</p><p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு நிகழ்வை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது.</p><p>நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி.</p><p>செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: Prime Minister Narendra Modi hoists the National Flag at Red Fort on the 80th Independence Day. <br><br>The hoisting of the National Flag was synchronised with the 21-Gun Salute by the gunners of the 1721 Field Battery (Ceremonial). The ceremonial battery, utilising the… <a href="https://t.co/rbaiIKQpPU">pic.twitter.com/rbaiIKQpPU</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088448119566676389?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஏற்றி வைத்த தேசியக்கொடிக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.</p><p>சுதந்திர தினவிழா கொண்டாட்ட வரலாற்றில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.</p><p>13-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடையே உரையாற்ற  உள்ளார் பிரதமர் மோடி.</p><p>நாட்டின் சுதந்திர தினவிழாவை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் பிரதமர் மோடிக்கு முப்படை, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை </p><p>டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் வரவேற்றார்.</p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி.</p><p>டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Prime Minister Narendra Modi pays floral tributes to the Father of the Nation, Mahatma Gandhi, at Rajghat on the 80th Independence Day<br><br>(Video source: PM Modi/ YouTube) <a href="https://t.co/xIcfLPeDol">pic.twitter.com/xIcfLPeDol</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088441067771494821?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>செல்வ வளத்தை பெருக்கும் நாக சதுர்த்தி வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/naga-chaturthi-worship-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/naga-chaturthi-worship-2#comments</comments><guid isPermaLink="false">ef5b7bde-a736-4964-abed-e22745a188f7</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:39:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:39:13.814Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,நாக சதுர்த்தி,naga chaturthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/c5rwtbva/nagachaturthi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ naga chaturthi worship]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/c5rwtbva/nagachaturthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2></h2><h2>நாக வழிபாடு</h2><p>'பாம்பை கண்டால் படையே நடுங்கும்' என்பார்கள். ஆனால் அந்த பாம்பை தெய்வமாக கருதி வழிபடும் வழக்கம் இந்து சமயத்தில் உள்ளது. நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் 'நாக சதுர்த்தி' ஆகும். ஆடி அல்லது ஆவணி மாதங்களில் வரும் சதுர்த்தி திதியில் நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கருட பஞ்சமிக்கு முந்தைய நாளாக வருகிறது.</p> <h2>நாக சதுர்த்தி</h2><p>நாக சதுர்த்தி குறித்தும், நாக வழிபாடு குறித்தும் பல புராணக் கதைகள் கூறப்படுகின்றன. காசியப முனிவருக்கும், கத்ருவுக்கும் பிறந்தவர்களே நாகர்கள். அவர்களில் ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன் போன்றோர் மிகவும் புகழ்பெற்றவர்கள்.</p> <h2>சர்ப்ப யாகம்</h2><p>ஒரு சமயம் பரீட்சித் என்ற மன்னன், நாகங்களின் தலைவனாக விளங்கிய தட்சகனால் தீண்டப்பட்டு உயிரிழந்தார். இதனால் கோபம் கொண்ட பரீட்சித் மன்னனின் மகனான ஜனமேஜயன், அனைத்து நாகங்களையும் அழிப்பதற்காக 'சர்ப்ப யாகம்' ஒன்றை நடத்தினான். அந்த யாகத் தீயில் விழுந்து பல நாகங்கள் மாண்டன. நாக இனம் அழிவதை அறிந்த ஜரத்காரு முனிவரின் மகனான ஆஸ்தீக முனிவர், யாக சாலைக்கு வந்தார்.</p> <p>அவர், தனது வார்த்தைகளால் ஜனமேஜயனை சமாதானப்படுத்தினார். இதையடுத்து மன்னன் யாகத்தை நிறுத்தினான். இதனால் நாக குலம் காக்கப்பட்டது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையிலேயே நாக சதுர்த்தி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.</p> <h2>ஆதிசேஷன்</h2><p>இந்த நாளில் அஷ்ட நாகங்களாக கருதப்படும் அனந்தன் (ஆதிசேஷன்), வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், பத்மன், மகாபத்மன், சங்கன், குளிகன் ஆகிய நாகங்களை வழிபடுவது சிறந்தது. ஆதிசேஷன், மகாவிஷ்ணுவின் படுக்கையாக பூமியை தாங்கும் பாக்கியம் பெற்றார். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருபாற்கடலை கடைந்தபோது, வாசுகியை கயிறாக பயன்படுத்தினர். மகாபத்மன், வடதிசையின் காவலன். கார்க்கோடகன், ஈசனின் மோதிரமாக திகழ்கிறார். தட்சகன், பரீட்சித்து மன்னரை தீண்டி வைகுண்டம் அனுப்பினார். சங்கன், ஈசனின் சிகரத்தை அலங்கரிக்கும் பாக்கியத்தை பெற்றார்.</p> <h2>புற்று மண் பிரசாதம்</h2><p>இந்த ஆண்டு நாக சதுர்த்தி, 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று, அங்குள்ள நாக புற்று அல்லது நாக சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள், குங்குமம் அணிவித்தும், மலர் சாற்றியும் வழிபட வேண்டும். புற்று மண்ணை பிரசாதமாக அணிந்து கொள்ளலாம்.</p> <h2>பாலாபிஷேகம்</h2><p>கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், நாகர் சிலை இருந்தால் அதை பூஜையறையில் வைத்து பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அம்பாளுடன் நாகர் இருக்கும் படங்களை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கலாம். நாகருக்கு உகந்த உளுந்து, கொள்ளு தானியங்களை கொண்டு நைவேத்தியம் படைக்கலாம். அம்மன் பாடல்களை பாடி, பிரார்த்தனை செய்ய வேண்டும்.</p> <h2>நாக வழிபாடு</h2><p>நாக வழிபாடு செய்வதன் மூலம் குடும்ப நலம் மேம்படும், புத்திர பாக்கியம் கிட்டும், திருமணத் தடை நீங்கும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று, நவக்கிரகங்களை வழிபடலாம். அதில் உள்ள ராகு - கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனை தரும்.</p> <h2>கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும்</h2><p>நாக சதுர்த்தி விரதம் மேற்கொண்டால் தலைமுறை தலைமுறையாக உள்ள தோஷங்கள் விலகும். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு - கேது தோஷம் போன்றவை நீங்கும். கணவன் - மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு விலகி, ஒற்றுமை பலப்படும். நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும்.</p>]]></content:encoded></item><item><title>மாமல்லபுரத்தில் பட்டம் விடும் திருவிழா கோலாகலம்: வானில் மிதந்த வண்ணமயமான பட்டங்களை ரசித்த பொதுமக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mamallapuram-kite-festival-celebration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mamallapuram-kite-festival-celebration#comments</comments><guid isPermaLink="false">92a47d7b-710a-43ee-b1c2-337cf189abb2</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:32:40 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:32:40.843Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mamallapuram,பட்டம் விடும் திருவிழா,மாமல்லபுரம்,Mamallapuram  Kite flying festival,giant kites,Tamil Nadu Tourism Development,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wwxk18y4/mamallapuram.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  Mamallapuram Kite flying festival]]></media:title><media:description type="html"><![CDATA[  Mamallapuram  Kite flying festival]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wwxk18y4/mamallapuram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில், 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா மிகக் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. </p><p>சுதந்திர தின வார இறுதியைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 16 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பட்டம் பறக்கவிடும் வல்லுநர்கள் கலந்துகொண்டு தங்கள் கைவண்ணத்தில் உருவான பல வண்ண பட்டங்களை வானில் பறக்கவிட்டுப் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.</p><h2>திருவி<strong>ழா தொடக்</strong>கம் </h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில் 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், சுற்றுலாத்துறை கமிஷனர் ஜெயசீலன், திருப்போரூர் எம்.எல்.ஏ.பா.விஜயராஜ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பட்டம் பறக்கவிடும் வீரர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.</p><p>இந்த விழாவில் இந்தியா (தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம்) மட்டுமின்றி தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட சர்வதேச பட்டம் பறக்கவிடும் நிபுணர்கள் கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>வானை அல<strong>ங்கரித்த பட்டங்கள்</strong></h2><p>கடற்கரைக் காற்று சாதகமாக வீசியதால், சுமார் 200-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட ராட்சத பட்டங்கள் மாமல்லபுரம் வானில் வண்ணமயமாகப் பறந்தன.</p><h2>கடல்வாழ் <strong>உயிரினங்</strong>கள்</h2><p>ஆக்டோபஸ், டால்பின், ஆமை, டிராகன், சூப்பர்மேன், மிக்கி மவுஸ், லபுபு மற்றும் ராட்சத ஷார்க் போன்ற பல்வேறு வடிவங்களிலான காற்று நிரப்பப்பட்ட பட்டங்கள் பொதுமக்களையும் குழந்தைகளையும் பெரிதும் கவர்ந்தன.</p><h2>த<strong>மிழர்களின் பாரம்பரியக் கலை பட்டங்கள்</strong></h2><p>தமிழ்நாட்டின் "ஸ்கைட்டர்ஸ்"  குழுவினர் தங்களின் விருது பெற்ற பொய்க்கால் குதிரை மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வடிவ பட்டங்களை வானில் பறக்கவிட்டு நமது பாரம்பரிய பெருமையை பறைசாற்றினர். மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, ஒளிரும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட சிறப்புப் பட்டங்கள் வானில் ஜொலித்து இரவை மேலும் அழகாக்கின.</p><h2>குடும்பங்களு<strong>க்கான கொண்</strong>டாட்டம்</h2><p>இந்த பட்டம் விடும் திருவிழா முற்றிலும் இலவச அனுமதி கொண்ட ஒரு குடும்பக் திருவிழாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பிரியர்களுக்கான கடற்கரை உணவு அரங்குகள், கைவினைப் பொருட்கள் விற்பனைச் சந்தை, குழந்தைகள் புகைப்படப் பகுதிகள் மற்றும் ஃபார்முலா 1 கார் மாதிரி காட்சிப்படுத்தல் போன்றவை இடம்பெற்றுள்ளன.</p><p>விழாவிற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவதால் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகன நெரிசலைத் தவிர்க்கவும், வாகனங்கள் மெதுவாகச் செல்லவும் சிறப்புத் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான் கைக்கு சென்ற சிந்து, பஞ்சாப் மாகாணம் -  காங்கிரஸை குற்றம்சாட்டிய யோகி ஆதித்யநாத் </title><link>https://www.maalaimalar.com/news/national/pakistan-kaikku-sendra-sindhu-panjab-maganam-kangirasai-kutramsattiya-yogi-adityanath</link><comments>https://www.maalaimalar.com/news/national/pakistan-kaikku-sendra-sindhu-panjab-maganam-kangirasai-kutramsattiya-yogi-adityanath#comments</comments><guid isPermaLink="false">e9e67a81-b576-4516-908a-aa30061caaf9</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:16:47 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:16:47.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Yogi Adityanath,சுதந்திர தினம்,Independance Day,யோகி ஆதித்யநாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/o0se0n7t/Untitled-design-56.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ யோகி ஆதித்யநாத்]]></media:title><media:description type="html"><![CDATA[ Yogi Adityanath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/o0se0n7t/Untitled-design-56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் பிரிவினைக்கு காரணமாக காங்கிரஸ் இருந்தது என்றும், நாடு சுதந்திரம் பெற்ற நேரத்தில் நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால், இந்தியா பிரிவினையை சந்தித்திருக்காது என்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். </p><h3><strong>முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்</strong></h3><p>உத்தரப் பிரதேசத்தில் ‘பிரிவினை கொடுமைகள் நினைவு நாள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், “சுதந்திரத்தின் போது நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், நாட்டிற்கு தீங்கு விளைவிக்க யாரும் துணிந்திருக்க மாட்டார்கள். </p><p>காங்கிரஸ் பிரிவினைய எதிர்த்து துணிந்து போராட தவறியதால், நாடு ஒரு பெரிய விலையை கொடுக்க வேண்டியிருந்தது. பஞ்சாபிலோ அல்லது வங்காளத்திலோ பாகிஸ்தான் ஒருபோதும் கேட்காத நிலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.</p><h3><strong>பாகிஸ்தான் கைக்கு சென்ற இந்திய மாகாணங்கள்</strong></h3><p>பாகிஸ்தான் மாகாணமான சிந்துவில் ஒரு காலத்தில் சிந்துக்களும் இந்துக்களும் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால், அது வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.</p><p>அதேபோல் பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் பஞ்சாபிகளும் வங்காளிகளும் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் அந்த பகுதிகளும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.</p><p>நமது நாடு காங்கிரஸை நம்பியது. ஆனால் காங்கிரஸ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது.</p><p>1947-ல் பிரிவினையின்போது மெளனம் காத்தவர்கள், இன்றும் அதே மனப்பான்மையை கொண்டிருக்கின்றனர்.</p><p>வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மவுனம் காத்து வருகின்றனர்.</p><p>தங்களுக்கு வாக்கு வங்கியை திருப்திபடுத்துவதும், அதிகாரத்தை கைப்பற்றுவதுமே தங்களின் முன்னுரிமை என்பதால், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் எதிர்காலத்திலும் அமைதியாகவே இருக்கும்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-15-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-15-8-2026#comments</comments><guid isPermaLink="false">054caca1-aea0-47ac-9dc5-33ba130fdc38</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:06:05 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:06:05.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-28/bflp3azn/Gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-28/bflp3azn/Gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்திலேயே பயணித்து வந்தது. அதன்படி, கடந்த 5-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரை மட்டும் கிராமுக்கு ரூ.840-ம், சவரனுக்கு ரூ.6 ஆயிரத்து 720-ம் உயர்ந்திருந்தது.</p> <p>கடந்த 9 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று குறைந்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி காலையில், கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 40-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p> <p>இதனையடுத்து மாலையில், ஏற்றம் கண்டது. கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,240-ம் அதிகரித்தது. ஆக நேற்று முன்தினத்தைவிட கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் மட்டுமே குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. </p> <h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>14-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600</p><p>13-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>12-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600</p><p>11-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200</p><p>10-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>14-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>13-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>12-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>11-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>10-08-2026- ஒரு கிராம் ரூ.250</p> ]]></content:encoded></item><item><title>ஜூலை மாதத்தில் இந்தியாவின் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி 50.8% ஆக உயர்ந்து வரலாற்றுச் சாதனை!</title><link>https://www.maalaimalar.com/news/national/indias-russian-crude-oil-imports-hit-record-50-8-percent-in-july</link><comments>https://www.maalaimalar.com/news/national/indias-russian-crude-oil-imports-hit-record-50-8-percent-in-july#comments</comments><guid isPermaLink="false">634004fb-5f5d-44d9-8d27-2dc3df4050b9</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:58:37 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:58:37.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Russia,America,கச்சா எண்ணெய்,Crude oil,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/y77sp7kh/oil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ crude oil  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/y77sp7kh/oil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு கடந்த ஜூலை மாதத்தில் 50.83 சதவீதமாக உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வு மற்றும் இறக்குமதி நாடான இந்தியா, ஜூலை மாதத்தில் மட்டும் ரஷியாவிடமிருந்து நாளொன்றுக்கு சராசரியாக 24.7 லட்சம் பேரல்கள் முதல் 28 லட்சம் பேரல்கள் வரை கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்துள்ளது.</p><p>கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின் கொள்முதலுடன் ஒப்பிடுகையில் இது 62.4 சதவீத வளர்ச்சியாகும். ஒரு குறிப்பிட்ட நாடு இந்தியாவின் ஒரு மாதத்தின் மொத்த எண்ணெய் தேவையில் பாதியை விட அதிகமாக விநியோகிப்பது வர்த்தக வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.</p><h2>மத்திய <strong>கிழக்கு ஆசியப்</strong> போர்</h2><p>நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் சாத்தியமான சுங்கவரிக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலைச் சற்றே குறைத்து வந்தன. இருப்பினும், மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் தீவிரமடைந்த போர்ச் சூழல், ஹார்முஸ் மற்றும் பாப் அல்-மந்தெப் போன்ற முதன்மை கடல்சார் விநியோக வழித்தடங்களில் தடைகளை ஏற்படுத்தியது. </p><p>இதனால் பாரம்பரியமாக எண்ணெய் விநியோகிக்கும் வளைகுடா நாடுகளிடமிருந்து எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் உருவானது. இதனையடுத்து, உள்நாட்டு சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்தியைத் தொய்வின்றித் தொடர, இந்திய நிறுவனங்கள் மீண்டும் ரஷியாவின் மலிவு விலை ‘யூரல்ஸ்’ கச்சா எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்யத் தொடங்கின. </p><p>இதன் காரணமாக, ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் ஈராக் உள்ளிட்ட பாரம்பரிய மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டு வர்த்தகப் பங்கு 43 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><h2>பொரு<strong>ளாதார நெரு</strong>க்கடி</h2><p>இந்தியாவின் இந்த சாதனை அளவிலான எண்ணெய் கொள்முதல் அமெரிக்காவின் அதிருப்தியை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷிய கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நாடுகள் மீது 100% வரை வர்த்தக சுங்கவரி விதிக்க வழிவகுக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு அமெரிக்க மேலவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இந்த மசோதா பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலையும் பெற வேண்டியுள்ள நிலையில், வரவிருக்கும் மாதங்களில் இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் கூடுதல் பொருளாதாரக் கட்டுப்பாடுகளையோ அல்லது தங்களின் கொள்முதல் உத்திகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தையோ சந்திக்கக்கூடும் என சர்வதேச வர்த்தக வல்லுநர்கள் கணிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சுப்மன் கில்.. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/shubman-gill-chooses-batting-after-winning-toss-india-vs-sri-lanka-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/shubman-gill-chooses-batting-after-winning-toss-india-vs-sri-lanka-first-test#comments</comments><guid isPermaLink="false">893d8791-c6e6-4f06-8cbf-d05f60bea67c</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:49:27 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:49:27.114Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுப்மன் கில்,Shubman Gill,Cricket,டெஸ்ட் போட்டி,test match</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/7q0jqww3/Untitled-design-57.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Srilanka test match]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/7q0jqww3/Untitled-design-57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.</p><p>இந்நிலையில் இன்று முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள கல்லே கிரிக்கெட் மைதானத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது.</p><p>அப்போது டாஸ் வென்ற இந்திய கிர்க்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், பேட்டிங்கை தேர்வு செய்தார்.</p><p>அப்போது பேசிய அவர், “நாங்கள் முதலில் பேட் செய்யப் போகிறோம். விக்கெட்டும் வானிலையும் நன்றாக இருப்பதாக தெரிகிறது.</p><p>எனவே இது எங்களுக்கு ஒரு நல்ல கிரிக்கெட் நாளாக அமையும் என்று நம்புகிறோம். கடந்த போட்டியில் விளையாடிய அதே ஆடும் லெவனுடன் களமிறங்கியுள்ளோம். </p><p>எங்களிடம் ஐந்து பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள். நம் நாட்டை வழிநடத்த வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு முறையும் இது எனக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம்.</p><p>இந்த சந்தர்ப்பத்தில் இது இன்னும் சிறப்பு வாய்ந்தது. எங்களுக்கு இது சுதந்திர தினம் மற்றும் 600-வது டெஸ்ட் போட்டி. எனவே, ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.</p><p>டெஸ்ட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடும் இரண்டு அணிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p>இந்தியா (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், ஷுப்மன் கில்(கேட்ச்), ரிஷப் பந்த்(வ), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், மானவ் சுதர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா</p><p>இலங்கை (பிளேயிங் லெவன்): லஹிரு உதாரா, நிஷான் பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேட்ச்), சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா (வ), கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ</p>]]></content:encoded></item><item><title>7000mAh பேட்டரியுடன் அறிமுகமான புது மோட்டோ ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/moto-g-max-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/moto-g-max-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">600f05cf-8535-4765-8317-2a0b60319d38</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:49:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:49:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Motorola,மோட்டோரோலா,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5uuq4kvg/moto-g-max.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Moto G Max]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5uuq4kvg/moto-g-max.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/motorola">மோட்டோரோலா</a> நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் இரண்டாவது மேக்ஸ் சீரிஸ் <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஆகும். </p><p>புதிய மோட்டோ ஜி மேக்ஸ் மாடலில் 6.72 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் நிறுவனத்தின் சிப்செட், அதிகபட்சமாக 7000mAh பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. </p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் 1080x2400 பிக்சல் Full HD+ LCD ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 4 சிப்செட், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, விர்ச்சுவல் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்படுகிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹெல்லோ யுஐ கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட்கள், மூன்று ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக மோட்டோ தெரிவித்துள்ளது.</p><p>புகைப்படங்களை எடுக்க 50MP சோனி பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்.டி.இ., ப்ளூடூத் 5.1, ஜி.பி.எஸ்., 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இத்துடன் IP64 தர டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் MIL-STD-810H தரத்திற்கு உட்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி, 30 வாட் டர்போ பவர் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.</p><h2>விலை விவரங்கள்:</h2><p>புதிய மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேன்டோன் அலாஸ்கன் புளூ, பேன்டோன் மலாகா மற்றம் பேன்டோன் ஸ்டார்கேசர் நிறங்களில் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>உரிமையை பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்..!- திமுக எம்பி கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-kanimozhi-hails-kalaignar-for-winning-flag-hoisting-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-kanimozhi-hails-kalaignar-for-winning-flag-hoisting-rights#comments</comments><guid isPermaLink="false">f7b3787b-30ca-4b1d-b276-aa4748fb6139</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:45:42 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:45:42.446Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி,Kanimozhi MP,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/lemy6kd1/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/lemy6kd1/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:-</p><p>எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.</p><p>அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்.</p><p>தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்!</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.<br><br>அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர… <a href="https://t.co/cdkC6Psq0x">pic.twitter.com/cdkC6Psq0x</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2088454865311936800?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த 7.7 ரிக்டர் நிலநடுக்கம்: கரையோர பகுதிகள் கடும் பாதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/indonesia-hit-by-powerful-7-7-quake-coastal-regions-suffer-severe-damage</link><comments>https://www.maalaimalar.com/news/world/indonesia-hit-by-powerful-7-7-quake-coastal-regions-suffer-severe-damage#comments</comments><guid isPermaLink="false">9040fe41-b142-45eb-b252-3ecbf0e80f08</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:40:53 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:40:53.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>indonesia,நிலநடுக்கம்,Indonesia  Earthquake,Flores,இந்தோனேசியா,புளோரெஸ் தீவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/4b6pfi8d/INDONESIA.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Indonesia  Earthquake]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/4b6pfi8d/INDONESIA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரெஸ் தீவுப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் நிலப்பரப்புகள் பலமாக அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.</p><h2>நில அதிர்<strong>வு நிலவர</strong>ம்</h2><p>அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி எண்டே நகரத்திற்கு வடமேற்கே 68 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 5.6 மற்றும் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த தொடர் அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.</p><h2>சுனாமி <strong>எச்சரிக்</strong>கை</h2><p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசிய புவியியல் மற்றும் வானிலை ஆய்வு மையம் தெற்கு சுலவேசி மற்றும் கிழக்கு நுசா தெங்காரா ஆகிய கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சில இடங்களில் கடல் அலைகள் 1 மீட்டர் உயரம் வரை உயர்ந்து சீறியதைத் தொடர்ந்து, கரையோர மக்கள் உடனடியாக உயரமான நிலப்பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். பின்னர் அலைகளின் ஆபத்து குறைந்ததால் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.</p><h2>உயி<strong>ர்ச்சேதம்-கட்</strong>டிடங்கள் சேதம்</h2><p>நிலநடுக்கத்தின் தீவிரத்தால் பல மருத்துவமனைகள், வீடுகள், பாலங்கள் மற்றும் வணிகக் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்தன. இதுவரை கிடைத்துள்ள முதற்கட்ட தகவல்களின்படி, கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளும், சுமார் 2,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் கிராமவாசிகளும் உடனடியாகப் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!- மு.க.ஸ்டாலின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-independence-day#comments</comments><guid isPermaLink="false">e103d90e-1e4f-4555-ace3-f6680a88f03e</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:11:16 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:11:16.416Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Independence Day,சுதந்திர தினம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/drpu10xi/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/drpu10xi/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்! என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தினம்</a> இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தையொட்டி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!</p><p>கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!</p><p>நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!</p><p>அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!  என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!<br><br>கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!<br><br>நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம்… <a href="https://t.co/TeA3zZ0SQ9">pic.twitter.com/TeA3zZ0SQ9</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2088464998813319176?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>24 மணி நேர உபவாசம்: காந்திஜி ஆகஸ்ட் 15, 1947 அன்று டெல்லியை விடுத்து கல்கத்தாவில் இருந்தது ஏன்?</title><link>https://www.maalaimalar.com/news/national/24-hour-fast-why-gandhi-stayed-in-calcutta-not-delhi-on-august-15-1947</link><comments>https://www.maalaimalar.com/news/national/24-hour-fast-why-gandhi-stayed-in-calcutta-not-delhi-on-august-15-1947#comments</comments><guid isPermaLink="false">2f49b301-3618-44c4-91cb-9ad9517b1d62</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:10:52 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:10:52.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,கல்கத்தா,calcutta,டெல்லி,Gandhiji,காந்திஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/qlj0ysu8/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gandhiji ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/qlj0ysu8/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் முதல் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, 1947 அன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் அரசமைப்பு பேரவையில் கொண்டாட்டங்கள் கலைகட்டின. லார்ட் மவுண்ட்பேட்டன் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார். </p><p>டெல்லி முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, "மகாத்மா காந்தி வாழ்க" என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. ஆனால், இந்தியாவின் விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அண்ணல் காந்திஜி அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் போது டெல்லியில் இருக்கவில்லை.</p><h2>வன்முறை<strong>யும் பிரிவினை</strong>யும்</h2><p>சுதந்திர தினத்திற்கு இரு வாரங்களுக்கு முன்பாகவே டெல்லியிலிருந்து புறப்பட்ட காந்திஜி, காஷ்மீர் பயணத்திற்குப் பிறகு கல்கத்தா(அப்போதைய பெயர்) நகரத்தை அடைந்தார். அப்பகுதியில் மதக் கலவரங்கள் உக்கிரமாக நடந்து வந்தன. கல்கத்தாவில் தொடங்கி கிராமப்புறங்களுக்கும், பீகார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கும் பரவியிருந்த வன்முறை காரணமாக எண்ணற்ற மக்கள் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து தவித்தனர். </p><p>ஆகஸ்ட் 13 அன்று கல்கத்தாவின் பெலியாகாட்டா பகுதிக்கு வந்தடைந்த காந்திஜி, அங்குள்ள 'ஹைதாரி ஹவுஸ்' என்னும் கட்டிடத்தில் தங்கினார். கல்கத்தாவில் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் மீட்டெடுப்பதே அவரது முதன்மை நோக்கமாகும்.</p><h2>எதிர்ப்பு<strong>களும் காந்தி</strong>ஜியின் உறுதியும்</h2><p>ஆரம்பத்தில் காந்திஜியின் வருகைக்கு அங்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். எனினும், தான் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பினருக்குமே சேவை செய்ய வந்துள்ளதாகக் கூறிய காந்திஜி, வன்முறை மீண்டும் தொடர்ந்தால் தான் உயிருடன் இருக்க மாட்டேன் என எச்சரித்தார். கல்கத்தாவில் மத நல்லிணக்கம் திரும்பினால் மட்டுமே பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளையும் காப்பாற்ற முடியும் என்று அவர் தீர்க்கமாக நம்பினார்.</p><h2>பிரார்த்த<strong>னையும் உப</strong>வாசமும்</h2><p>சுதந்திர தினத்தைக் எவ்வாறு கொண்டாடுவது என்று தன்னிடம் கேட்டவர்களிடம், "சுற்றிலும் மனிதர்கள் பசியாலும் வன்முறையாலும் மடிந்து கொண்டிருக்கும் போது, நாம் எப்படி கொண்டாட்டங்களில் ஈடுபட முடியும்?" என்று காந்திஜி கேள்வி எழுப்பினார். சர்வதேச ஊடகங்கள் அவரிடம் சுதந்திர தினச் செய்தியைக் கேட்டபோது, "என் மனதில் வார்த்தைகள் வற்றிவிட்டன" என்று கூறி, ஜவாஹர்லால் நேருவைப் தொடர்பு கொள்ளுமாறு வழிகாட்டினார்.</p><p>நாடு விடுதலை அடைந்த போதிலும், அது பிரிவினையோடும் பேரழிவோடும் வந்தடைந்ததை எண்ணி காந்திஜி வேதனை அடைந்தார். இதனால், ஆகஸ்ட் 15, 1947 அன்று எந்தவித கொண்டாட்டத்திலும் பங்கேற்காமல் 24 மணி நேர உபவாசம் இருந்தார். அத்துடன் பிரார்த்தனையிலும் கைராட்டையில் நூல் நூற்பதிலும் தன் பொழுதைச் செலவிட்டார்.</p><h2>நம்பிக்<strong>கையளித்த நல்லி</strong>ணக்கத்தின் உதயம்</h2><p>இருப்பினும், சுதந்திர தினத்தின் காலைப் பொழுதில் சில மாற்றங்கள் காந்திஜிக்கு நம்பிக்கையளித்தன. கல்கத்தாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வீதிகளில் "ஜெய் ஹிந்த்" என முழக்கமிட்டபடி ஊர்வலம் சென்றனர். மாலையில் பெலியாகாட்டாவில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய காந்திஜி, மக்களிடையே ஏற்பட்ட இந்த நல்லிணக்கம் தற்காலிகமானதாக இல்லாமல், இதயப்பூர்வமானதாக நீடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presented-the-thagaisal-tamizhar-award-to-senior-congress-leader-krishnasamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presented-the-thagaisal-tamizhar-award-to-senior-congress-leader-krishnasamy#comments</comments><guid isPermaLink="false">b8e4e90b-deb5-43b1-ba54-1b5207e3429c</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:54:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:54:35.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ksplz5wv/vijay0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ksplz5wv/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருவிடைமருதூர், கருங்கல், செட்டிப்பாளையத்துக்கு சிறந்த பேரூராட்சிக்கான விருதும், போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது.</strong></em> </p><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தினத்தையொட்டி</a> சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார். மேலும் விருது பெற்றவர்களின் விவரம்:- </p><p>* மாநில இளைஞருக்கான விருது இம்மானுவேல் நெல்சன், சரவணகுமார், நிர்மல் கதிரவேலுக்கு வழங்கப்பட்டது. </p><p>* மாநில இளைஞருக்கான விருதை பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி மகாதேவன், சிந்தா பெற்றுக்கொண்டனர்.</p><p>* கே.கே. நகர் அரசு மருத்துவனை மருத்துவர் திருநாவுக்கரசுக்கு சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டது. </p><p>* முதலமைச்சரின் நல் ஆளுமை விருது நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீருக்கு வழங்கப்பட்டது. </p><p>* கோவையைச் சேர்ந்த வீராங்கனை நவ்ஷீன் பானுசந்த் என்பவருக்கு கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார். </p><p>* முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை கோவை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலிக்கு வழங்கப்பட்டது. </p><p>* முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சதீஷ் பிரபு மற்றும் குழுவினருக்கு வழங்கப்பட்டது. </p><p>* கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ்குமாருக்கு சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கான விருது. </p><p>* திருவிடைமருதூர், கருங்கல், செட்டிப்பாளையத்துக்கு சிறந்த பேரூராட்சிக்கான விருதும், போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது. </p><p>* விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சிருஷ்டி பவுண்டேஷன் சிறந்த நிறுவனத்துக்கான விருதைப் பெற்றது. </p><p>* திருவண்ணாமலை மாவட்டத்தின் பா.மணிமாறனுக்கு சிறந்த சமூகப் பணியாளருக்கான விருது வழங்கப்பட்டது. </p><p>* அதிகளவில் பணியமரித்திய சிறந்த நிறுவனத்திற்கான விருதை திருப்பூரின் SCM கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. </p><p>* மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார். </p><p>இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு முதலமைச்சர் விஜய் இனிப்புகளை வழங்கினார். இதையடுத்து விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். </p>]]></content:encoded></item><item><title>சுதந்திர போராட்ட வீரர்களுக்கு கவுரவம்..!- ஓய்வூதியம் ரூ.25,000-ஆக உயர்த்தி அறிவித்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-raises-pension-to-rs-25000-in-tribute-to-freedom-fighters</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-raises-pension-to-rs-25000-in-tribute-to-freedom-fighters#comments</comments><guid isPermaLink="false">4dca3263-4a38-49f6-8b2e-f3f8a64b6f8e</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:53:16 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:53:16.301Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pension,Independence Day,சுதந்திர தினம்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,சுதந்திர போராட்ட வீரர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/5e83b1lg/VJ-New.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/5e83b1lg/VJ-New.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>80-வது சுதந்திர தின விழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிவைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், சுதந்திர தின விழா உரையாற்றினார்.</p><p>அப்போது முதலமைச்சர் விஜய் கூறியதாவது:-</p><p>கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் பிரபலமானவர்கள் உள்பட பெயர் தெரியாத ஒவ்வொரு சுதந்திர வீரர்களுக்கும் எனது வீர வணக்கங்கள்.</p><p>அனைவரும் ஒன்று சேரும்போதுதான் சாதி, மதம், மொழி, இனம் என அனைத்தும் உடைந்து நொறுங்கும். ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கு நன்றி</p><p>வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகத்தை நோக்கமாக கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம். தமிழக நலனுக்கு எதிராக மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும்.</p><h2>நிதியுதவி உயர்வு</h2><p>முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000 இருந்து ரூ.50,000- ஆக உயர்வு.</p><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாநில அரசின் ஓய்வூதியம் ரூ.25,000-ஆக உயர்த்தப்படுகிறது.</p><p>மாற்றுத்திறன் கொண்ட முநன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000-ஆக உயர்த்தப்படும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>80-ஆவது சுதந்திர தினம் - ஏராளமான ஆஃபர்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/bsnl-launches-re-1-freedom-20-plan-and-more-for-80th-independence-day</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/bsnl-launches-re-1-freedom-20-plan-and-more-for-80th-independence-day#comments</comments><guid isPermaLink="false">a3d988d7-eae5-4ac7-9eb8-2b1e4da457b2</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:37:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:37:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிஎஸ்என்எல்,BSNL,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/qmq4k0eg/BSNL-Logo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BSNL Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/qmq4k0eg/BSNL-Logo.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் 80-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான <a href="https://www.maalaimalar.com/topic/bsnl">பி.எஸ்.என்.எல்.</a> (BSNL), பல்வேறு சலுகைகள், நெட்வொர்க் மேம்பாடுகள் மற்றும் முக்கிய கூட்டணிகளை அறிவித்துள்ளது. </p><p>இந்த அறிவிப்புகள் மொபைல் நெட்வொர்க் விரிவாக்கம், சிறப்பு சலுகை கட்டணங்கள், வீட்டுப் பயன்பாட்டு பிராட்பேண்ட் திட்டங்கள், டிஜிட்டல் செயலிகள் மற்றும் உள்நாட்டு வன்பொருள் உற்பத்தி கூட்டணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.</p><h2>நாடு தழுவிய 4G விரிவாக்கம்:</h2><p>நகரங்கள், கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் தனது மொபைல் சேவை விரிவுபடுத்த, பி.எஸ்.என்.எல் கூடுதலாக 26,300-க்கும் மேற்பட்ட 4G 'பேஸ் டிரான்ஸ்ஸீவர் ஸ்டேஷன்' (BTS) தளங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளது.</p><p>தரவு வேகம், அழைப்புத் தரம் மற்றும் ஒட்டுமொத்த சேவையின் சீரான தன்மையை மேம்படுத்தும் நோக்கில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் 5G-க்கு மேம்படுத்தக்கூடிய தொழில்நுட்ப கட்டமைப்பு இதில் பயன்படுத்தப்படுகிறது.</p><h2>சுதந்திர தின முக்கிய அறிவிப்புகள்:</h2><p>1. 'Re. 1 Freedom 2.0' திட்டம்: புதிய மொபைல் சந்தாதாரர்களை ஈர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சோதனை சலுகை தினமும் 1ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் அழைப்புகள் (Voice calls), ரூ. 1-க்கு 24 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.</p><p>ரூ. 2,399 மதிப்பிலான வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் சந்தாதாரர்களுக்கு கூடுதலாக 47 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த சேவை காலம் 365 நாட்களிலிருந்து 412 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.</p><p>2. 'Fibre Freedom' திட்டம் (மாதம் ரூ.1,111): இது ஒரு உயர்தர FTTH பிராட்பேண்ட் திட்டமாகும். இதில் 200 Mbps வரையிலான வேகம், மாதத்திற்கு 5,000ஜிபி டேட்டா மற்றும் 25-க்கும் மேற்பட்ட OTT தளங்களுக்கான அணுகல் ஆகியவை வழங்கப்படுகின்றன.</p><p>பி.எஸ்.என்.எல். இலவச டிவி: 'Tango TV' தொழில்நுட்பத்துடன் இயங்கும் மற்றும் 'Selfcare' செயலி மூலம் அணுகக்கூடிய இந்த அம்சம், சுமார் 500 இலவச நேரலை டிவி சேனல்கள் மற்றும் தேவைக்கேற்ப பார்க்கும் ஆன்-டிமான்ட் கன்டென்ட் (on-demand content) நேரடியாக மொபைல் பயனர்களுக்கு வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-tvk-government-will-oppose-anything-that-poses-a-threat-to-state-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-tvk-government-will-oppose-anything-that-poses-a-threat-to-state-rights#comments</comments><guid isPermaLink="false">c9d109e8-bc7f-4999-aa95-4e2f8bb4f764</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:36:29.381Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/muzqnh9l/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/muzqnh9l/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும் என்று முதலமைச்சர் விஜய் பேசினார்.</strong></em> </p><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தினத்தையொட்டி</a> சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>* தங்களது உயிரை, வாழ்க்கையை இழந்து சுதந்திரம் வாங்கித்தந்த சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எனது தனிப்பட்ட வீர வணக்கங்கள். </p><p>* கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்த மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். </p><p>* அடிமையாக இருப்பதை எதிர்த்து ஒன்றுசேரும்போது சாதி, மதம், இனம் அனைத்தும் உடைத்து நொறுங்கும். மதம், மொழி என அனைத்தும் உடைந்து நொறுங்கும் இடத்தில் கிடைப்பது தான் உண்மையான சுதந்திரம். </p><p>* உடைந்து நொறுங்கும்போதுதான் சுதந்திரம் கிடைக்கும், அதை கெட்டியாகப் பிடித்து முன்னேறுகிறோம். </p><p>* லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது த.வெ.க. அரசு செயல்பட்டு வருகிறது. வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகத்தை நோக்கமாக கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>* தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும். </p><p>* பொது வாழ்வில் சமரம் இருக்கக்கூடாது, மக்கள் நலன் முக்கியம் என்ற அடிப்படையில் த.வெ.க. அரசு செயல்படுகிறது. </p><p>* அம்மா உணவகம் திட்டம், காலை உணவுத் திட்டத்தை இன்னும் மெருகேற்றி விரிவுபடுத்தி செயல்படுத்துகிறோம். </p><p>* தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன, கணினி மயமாக்கப்பட்ட நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளது. </p><p>* விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கு நிதி தரப்பட்டுள்ளது. </p><p>* தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம்.</p><p>* அரசின் வருமானம் தனிநபருக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது, லஞ்சம் லாவண்யம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. </p><p>* தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. </p><p>* தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக, உலகளவில் வளர்ந்த நாட்டுக்கு இணையாக உயர்த்த உறுதியேற்போம். </p><p>* அரசு அலுவலகம் தேடி வரும் மக்களை அலையவிடாமல் அன்பாக கண்ணியமாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். </p>]]></content:encoded></item><item><title>80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-cm-vijay-hoists-tricolour-at-fort-st-george</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-cm-vijay-hoists-tricolour-at-fort-st-george#comments</comments><guid isPermaLink="false">cce06d55-5b1e-46fd-950c-a63c41f901e6</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:22:45 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:22:45.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,தேசியக்கொடி,Indian flag,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/cardncu9/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/cardncu9/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">முதலமைச்சர் விஜய்</a> வருகை தந்தார்.</p><p>முதலமைச்சர் விஜயை வரவேற்ற தலைமைச் செயலாளர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.</p><p>புனித ஜார்ஜ் கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றார்.</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.</p><p>பின்னர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், செயின்ட் <a href="https://www.maalaimalar.com/news/district/tn-legislative-assembly-will-convene--january-5" rel="nofollow">ஜார்ஜ் கோட்டை</a> கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Chief Minister C Joseph Vijay hoists the tricolour at the state Secretariat in Chennai on the occasion of 80th Independence Day. <a href="https://t.co/QFKUtuvUjl">pic.twitter.com/QFKUtuvUjl</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088466594729214122?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 15.08.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு திருமணப் பேச்சுகள் முடிவாகும்</title><link>https://www.maalaimalar.com/astrology/today-rasi-palan-in-tamil-40</link><comments>https://www.maalaimalar.com/astrology/today-rasi-palan-in-tamil-40#comments</comments><guid isPermaLink="false">7ea43d0c-c404-4898-abd6-ba42d55f1a13</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:53:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:53:00.949Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-31/6pltfgvu/New-Project-2026-05-25T070202.454.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ இன்றைய ராசிபலன்]]></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய ராசிபலன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-31/6pltfgvu/New-Project-2026-05-25T070202.454.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ராசிபலன்(Rasipalan)</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>மேஷம்</strong></h2><p>வாழ்த்துச் செய்திகளால் மகிழ்ச்சி கூடும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும். நின்று போன கட்டிடப்பணியை மீதியும் தொடருவீர்கள்.</p><h2><strong>ரிஷபம்</strong></h2><p>யோகமான நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.</p><h2><strong>மிதுனம்</strong> </h2><p>போட்டிகளில் வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். </p><h2><strong>கடகம்</strong></h2><p>உற்சாகம் அதிகரிக்கும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நிறைவேறும்.</p><h2><strong>சிம்மம்</strong></h2><p>விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் நாள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிவர்.</p><h2><strong>கன்னி</strong> </h2><p>சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். கடன்சுமை குறையப் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். பயணங்களால் வியக்கும் செய்தி உண்டு. </p><h2><strong>துலாம்</strong></h2><p>விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். நீங்கள் சந்திக்க நினைத்த ஒருவர் இல்லம் தேடி வருவர்.</p><h2><strong>விருச்சிகம்</strong></h2><p>பாராட்டும், புகழும் கூடும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொகை எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு.</p><h2><strong>தனுசு</strong> </h2><p>பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளில் லாபம் உண்டு. உடல்நலம் கருதிச் செலவிடுவீர்கள். பயணம் பலன் தரும். </p><h2><strong>மகரம்</strong></h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர்கள் சிலர் உங்களிடம் உதவி கேட்டு நச்சரிப்பர். பயணங்களின்போது கவனம் தேவை.</p><h2><strong>கும்பம்</strong></h2><p>உடல்நலத்தில் உபாதைகள் உண்டு. உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.</p><h2><strong>மீனம்</strong> </h2><p>யோகமான நாள். தொழிலில் லாபம் உண்டு. அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். திருமணப் பேச்சுகள் முடிவாகும். </p>]]></content:encoded></item><item><title>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/indians-dreams-must-always-be-big-pm-modi-speech-hoisting-national-flag</link><comments>https://www.maalaimalar.com/news/national/indians-dreams-must-always-be-big-pm-modi-speech-hoisting-national-flag#comments</comments><guid isPermaLink="false">459acb81-2d65-4636-ae07-d66507662bab</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:51:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:51:57.458Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi,national flag,தேசிய கொடி,சுதந்திர தினம்,Independance Day,மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/qh8jhx4n/Untitled-design-55.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/qh8jhx4n/Untitled-design-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p><p>நாட்டின் 80வது சுதந்திர தினத்தையொடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><p>இதையடுத்து பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.</p><p>இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இதையடுத்து தொடர்ச்சியாக 13வது தேசிய கோடியை பிரதமர் மோடி ஏற்றிவைத்தார்.இதையடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். </p><p>அப்போது அவர் கூறுகையில்:-</p><p>இந்தியர்களின் ஒவ்வொருவரின் மனதிலும் வந்தே மாதரம் இன்று எதிரொலித்து கொண்டு வருகிறது.</p><p>இந்தியர்களின் கனவு எப்போதும் பெரிதாக இருக்க வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நாம் நினைவு கூர வேண்டும்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: From the ramparts of the Red Fort, Prime Minister Narendra Modi says, &quot;... Nuclear energy is a major means of energy security. We have paved the way towards a new goal by passing the &#39;Peace Act&#39; in Parliament. By 2047, we are moving forward with the target of 100… <a href="https://t.co/yqkfEASmeP">pic.twitter.com/yqkfEASmeP</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088459446959952198?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure> <p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரது இல்லங்களிலும் இன்று மூவர்ண கொடி பறந்து கொண்டிருக்கிறது.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம். நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.</p><p>கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும். நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது.</p><p>நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகம் இன்று நம்மை பார்க்கும் விதம் மாறி உள்ளது.</p><p>நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது. தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர்.</p><p>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது. </p><p>நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும்.</p><p>இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>கடந்த சில நாட்களாக நிலச் சரிவுகள் மற்றும் பெருமழைகளை எதிர்கொண்டுள்ளோம். </p><p>2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ந்த நாடாக திகழ வேண்டும். செங்கோட்டையில் வந்தே மாதரம் என்பது ஒரு சரித்திர நிகழ்வாக உள்ளது.</p><p>இந்தியாவின் முன்னேற்றத்திற்கு 140 கோடி மக்களும் உழைக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவாக்கம் தேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதாக உள்ளது.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-hoists-national-flag-red-fort-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-hoists-national-flag-red-fort-delhi#comments</comments><guid isPermaLink="false">3099f532-c949-41ba-b091-60d2f863a804</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:23:24 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:23:24.030Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,நரேந்திர மோடி,national flag,தேசிய கொடி,சுதந்திர தினம்,Independance Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/20p4dr6d/Untitled-design-54.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/20p4dr6d/Untitled-design-54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் 80வது சுதந்திர தினத்தையொடி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>இதனை தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.</p><p>இன்று முன்னதாக, 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜ்காட்டில் தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். </p><p>மேலும், அவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்.</p><p>இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், விக்ஸித் பாரதத்தை உருவாக்கும் நோக்கில் நாடு செயல்பட்டு வரும் வேளையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள் தொடர்ந்து நாட்டிற்கு உத்வேகம் அளித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.</p><p>இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் மேலும் வேகமான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.</p><p>2026 ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றன.</p><p>சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், மாணவர்களை இந்தியாவின் எதிர்காலத்தின் சிற்பிகள் என்று குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-pays-tribute-at-gandhi-memorial</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-pays-tribute-at-gandhi-memorial#comments</comments><guid isPermaLink="false">e9f1035a-dca0-44d6-aa07-5004bf735d97</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:02:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:02:57.795Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>narendra modi,நரேந்திர மோடி,சுதந்திர தினம்,independance  day,gandhi memorial,காந்தி நினைவிடம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/dehps4xa/Untitled-design-53.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/dehps4xa/Untitled-design-53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று இறையாண்மை அடைந்து 79 ஆண்டுகள் ஆன நிலையில், தனது 80வது சுதந்திர தினத்தை இன்று (ஆகஸ்ட் 15, 2026) கொண்டாடுகிறது.</p><p>புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் தேசிய நினைவு கூட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார்.</p><p>சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் முதல் முறையாக, அதன் நீடித்த பாரம்பரியத்தின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 'வந்தே மாதரம்' என்ற தேசிய கீதம் செங்கோட்டையில் முறைப்படி பாடப்பட உள்ளது.</p><p>மேலும், "2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதில் 'யுவ சக்தி'யின் ஆற்றல் மற்றும் முக்கிய பங்களிப்பை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்வு அமையவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில் நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார்.</p><p>அதனைத் தொடர்ந்து, அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றுவார்.</p><p>இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் பாரம்பரியமாக மலர்களைத் தூவும் நிகழ்வைத் தொடர்ந்து, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.</p><p>அதன்பின், 2,500 என்.சி.சி. மாணவர்களும் 'மை பாரத்' தொண்டர்களும் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவார்கள். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படும்.</p><p>இந்த கொண்டாட்டங்களை காண, பிரதம மந்திரி முத்ரா யோஜனா தொழில்முனைவோர் மற்றும் பிரதம மந்திரி ஸ்வநிதி தெருவோர வியாபாரிகள் உட்பட சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.</p><h3><strong>காந்தி நினைவிடம்</strong></h3><p>இந்த நிலையில் இன்று காலையில், டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.</p><p>இதனை தொடர்ந்து செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் மோடி ஏற்றுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>ட்ரோன் மூலம் அஞ்சல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட தேசிய கொடி.. இமாச்சலில் ஹர் கர் திரங்கா... </title><link>https://www.maalaimalar.com/news/national/national-flag-delivered-by-drone-to-post-office-har-ghar-tiranga-himachal</link><comments>https://www.maalaimalar.com/news/national/national-flag-delivered-by-drone-to-post-office-har-ghar-tiranga-himachal#comments</comments><guid isPermaLink="false">5636c8c5-b505-4ab7-8a77-811867421865</guid><pubDate>Sat, 15 Aug 2026 02:01:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T02:01:13.164Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சுதந்திர தினம்,Independance Day,Har Ghar Tiranga,ஹர் கர் திரங்கா,india post,இந்திய அஞ்சல் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q44wj7v5/Untitled-design-51.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ட்ரோன் மூலம் தேசிய கொடி விநியோகம், இமாச்சலில் அஞ்சல் துறையின் புதுமை]]></media:title><media:description type="html"><![CDATA[ Har Ghar Tiranga - India post]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q44wj7v5/Untitled-design-51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடும் நிலையில், இமாச்சல பிரதேசத்தின் மண்டி நகரில் இருந்து ரெஹர்தார் பகுதிக்கு ட்ரோன்  மூலம் தேசிய கொடி செல்லப்பட்டது.</p><h3><strong>ஹர் கர் திரங்கா</strong></h3><p>இந்திய அஞ்சல் துறை, ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்திற்கு பங்களிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு தேசிய கொடியை விநியோகம் செய்து வருகிறது.</p><p>இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தேசிய கொடியை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.</p><h3><strong>இந்திய அஞ்சல் துறை</strong></h3><p>இமாச்சல பிரதேச மாநிலத்தில் தேசிய கொடியுடன் மண்டி நகரில் இருந்து புறப்பட்ட ட்ரோன் ஒன்று, ரெஹர்தாரில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகத்தில் தரை இறங்கியது.</p><p>அங்கு, மூவர்ண கொடியை பெற்று கொண்ட அஞ்சல் குழுவினர், அதனை முறைப்படி ஒரு ராணுவ அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.</p><h3><strong>அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா</strong></h3><p>இந்த நிகழ்வை வடகிழக்கு மண்டலத்தின் மத்திய தகவல் தொடர்பு மற்றும் அபிவிருத்தி துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.</p><p>இதுகுறித்து அமைச்சர் சிந்தியா கூறுகையில், “புவியியல் தடைகளை தாண்டி ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய உறுதியுடன் இருக்கும் ஒரு புதிய இந்தியாவின் உணர்வை, இமாச்சல பிரதேசத்தில் ‘திரங்கா’ மேற்கொண்ட பயணம் பிரதிபலிக்கிறது,” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 ஆகஸ்ட் 2026: பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-15-august-2026-perumal-temple-thirumanjana-seva</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-15-august-2026-perumal-temple-thirumanjana-seva#comments</comments><guid isPermaLink="false">4f3faef3-3792-45b6-9be9-058df6b025e8</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-15T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/19/23393797-perumal8.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perumal Sridevi Bhudevi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/19/23393797-perumal8.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-30 (சனிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  திருதியை இரவு 8.35 மணி வரை பிறகு சதுர்த்தி</p><p>நட்சத்திரம் :  பூரம் காலை 7.01 வரை பிறகு உத்திரம்</p> <p>யோகம் :  சித்த / மரணயோகம்</p><p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி</h2><p>திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணகிரிநாதர் திருவிழா. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி தபசுக் காட்சி, சுவாமி வெள்ளி விருஷப சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். </p> <p>திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - பக்தி</p><p>ரிஷபம் - பாசம்</p><p>மிதுனம் - பணிவு</p><p>கடகம் - பண்பு</p><p>சிம்மம் - விவேகம்</p><p>கன்னி - பாராட்டு</p> <p>துலாம் - மகிழ்ச்சி</p><p>விருச்சிகம் - உயர்வு</p><p>தனுசு - இன்சொல்</p><p>மகரம் - வெற்றி</p><p>கும்பம் - நன்மை</p><p>மீனம் - உதவி</p> ]]></content:encoded></item><item><title>விரைவில் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவிப்பேன் - டிரம்ப்</title><link>https://www.maalaimalar.com/news/world/donald-trump-says-will-soon-declare-strait-of-hormuz-us-territory</link><comments>https://www.maalaimalar.com/news/world/donald-trump-says-will-soon-declare-strait-of-hormuz-us-territory#comments</comments><guid isPermaLink="false">de646cdc-2224-4234-97dd-60dcac5b681e</guid><pubDate>Sat, 15 Aug 2026 00:26:53 +0000</pubDate><atom:updated>2026-08-15T00:26:53.199Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,Strait of Hormuz,ஹார்முஸ் நீரிணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/9au9dlzl/trump-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/9au9dlzl/trump-2.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானை தோற்கடித்த பிறகு, ஹார்முஸ் நீரிணை நீர்வழியை விரைவில் அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிப்பேன் என்று அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனல்டு டிரம்ப்</a> தெரிவித்தார்.</p><p>"மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டு வரும் ஈரானை நாம் தோற்கடித்து முடித்த பிறகு, வெகுவிரைவில் நான் <a href="https://www.maalaimalar.com/topic/strait-of-hormuz">ஹார்முஸ்</a> நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேன்," என்று நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஒரு காவல்துறை பயிற்சி பள்ளியில் நடந்த அரசியல் பேரணியின் போது அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.</p><h2>ஈரான் பதிலடி:</h2><p>அதிபர் டிரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து, ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் மக்கள் எழுச்சியை தூண்டுவது ஆகிய அறிவிக்கப்பட்ட நோக்கங்களுடன், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று அந்நாட்டிற்கு எதிராக போரைத் தொடங்கினார்.</p><p>இருப்பினும், உலகளாவிய எரிசக்தி மற்றும் பிற சரக்கு கப்பல் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையின் பெரும்பகுதியின் மீது தன் கட்டுப்பாட்டை நிறுவி ஈரான் பதிலடி கொடுத்தது.</p><h2>துறைமுகங்கள் முற்றுகை:</h2><p>ஹார்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு முட்டுக்கட்டை நிலை நீடிக்கிறது. ஈரான் பெரும்பாலான பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி மறுப்பதுடன், அதன் பொருளாதாரத்தை முடக்கும் முயற்சியில் அமெரிக்க கடற்படை ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது.</p><p>"நாங்கள் முற்றுகையிட்டுள்ளோம். நாங்கள் விரும்பினால் தவிர, எந்த கப்பல்களும் உள்ளே வர முடியாது," என்று ஆரவாரம் செய்த ஆதரவாளர்கள் மற்றும் காவல் துறையினரிடம் டிரம்ப் கூறினார்.</p><h2>விசா கட்டுப்பாடு:</h2><p>முன்னதாக அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் பிறப்புரிமை குடியுரிமை சட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்து உத்தரவிட்டார்.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் டிரம்பின் நிர்வாக உத்தரவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூன் 30-ஆம் தேதி ரத்து செய்தது.</p><p>இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த டிரம்ப் 2 புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இதில் அமெரிக்காவிற்கு வந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நோக்கத்துடன் விசா கோருபவர்களை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>சூரியின் &quot;மண்டாடி&quot; திரைப்படத்தின் 2 ஆவது பாடல் வெளியானது</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/soori-starrer-mandadi-movie-2nd-single-out</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/soori-starrer-mandadi-movie-2nd-single-out#comments</comments><guid isPermaLink="false">6f9ca7b2-dd26-4a9c-ab7e-ad5e595a2949</guid><pubDate>Fri, 14 Aug 2026 23:42:29 +0000</pubDate><atom:updated>2026-08-14T23:42:29.830Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மண்டாடி,Soori,Mandaadi,சூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/71aw4y9g/Mandadi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mandaadi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/71aw4y9g/Mandadi.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்து நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் கதையின் நாயகனாக நடித்து உயர்ந்தவர் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/soori">சூரி</a>. இவர் நடிப்பில் வெளியான விடுதலை, கருடந், மாமன் ஆகிய திரைப்படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றன.</p><p>இந்த நிலையில், நடிகர் சூரி தொடர்ச்சியான வெற்றிப் படங்களைத் தொடர்ந்துநாயகனாக நடித்துள்ள புதிய படம் "<a href="https://www.maalaimalar.com/topic/mandaadi">மண்டாடி</a>". இந்தப் படத்திற்கு, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "மண்டாடி மண்டாடி" பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. </p><p>இந்தப் பாடல் வரிகள் மற்றும் நடிகர் சூரியின் நடனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது. இந்த வரிசையில், மண்டாடி திரைப்படத்தின் 2-ஆவது பாடல் வெளியிடப்பட்டது.</p><h2>உசுரே நீதான் புள்ள:</h2><p>அதன்படி, மண்டாடி திரைப்படத்தின் 2-ஆவது பாடல் "உசுரே நீதான் புள்ள" படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இது மனதை வருடும் காதல் மெலடி பாடல் ஆகும்.</p><p>நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்க்கை மற்றும் படகுப் போட்டிகளை மையமாக கொண்டு உருவாகி வரும் மண்டாடி திரைப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.</p><p>மண்டாடி திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டன்ட் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தலைப்பு தொடங்கி ஒவ்வொரு அப்டேட்டிலும் படம் மீதான எதிர்பார்ப்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தினம்: குடியரசு தலைவரின் உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-praise-speech-of-president-droupadi-murmu-on-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-praise-speech-of-president-droupadi-murmu-on-independence-day#comments</comments><guid isPermaLink="false">ae028ba0-9ca1-41d3-8a40-c2802c5e0292</guid><pubDate>Fri, 14 Aug 2026 23:09:01 +0000</pubDate><atom:updated>2026-08-14T23:09:01.802Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திரவுபதி முர்மு,Independence Day,சுதந்திர தினம்,pm modi,பிரதமர் மோடி,Droupadi Murmu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3bsfnggr/PM-Modi-and-Prez-Droupadi-Murmu.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi and President Droupadi Murmu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3bsfnggr/PM-Modi-and-Prez-Droupadi-Murmu.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> பாராட்டினார்.</p><p>நாட்டின் 80-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/independence-day">சுதந்திர தினம்</a> இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து குடியரசுத் தலைவர் முர்மு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சிறப்புரை ஆற்றினார்.</p><p>நாட்டின் வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம், பொது தேர்வுகளை சீரமைக்கும் நடவடிக்கை, ஆபரேஷன் சிந்தூர், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் முர்மு ஆற்றிய உரை ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கி இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>இதுபகுறித்து பிரதமர் மோடி, வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஊக்கமளிப்பதுடன், ஆழ்ந்த சிந்தனைகளை உள்ளடக்கியதாக இருந்தது.</p><p>அவரது கருத்துகள் நம் நாட்டின் வலிமையையும், ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் வெளிக்காட்டுகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி உறுதியுடன் செயல்பட அவரது செய்திகள் ஊக்கமளிக்கின்றன" எனக் கூறியுள்ளார்.</p><h2>சுதந்திர தின கொண்டாட்டம்:</h2><p>இந்தியாவின் 80-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, ​​முதல் முறையாக 'வந்தே மாதரம்' தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது.</p><p>மாநில தலைநகரங்களிலும், நாடு முழுவதும் உள்ள பிற நகரங்கள் மற்றும் ஊர்களிலும் விழா நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கொடியேற்றம் மற்றும் அதைத் தொடர்ந்த கலாச்சார நிகழ்ச்சிகள் அடங்கும். பிரதான நிகழ்ச்சி செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும், மேலும் பிரதமர் மோடி கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/man-arrested-for-allegedly-threatening-to-kill-jharkhand-cm</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-arrested-for-allegedly-threatening-to-kill-jharkhand-cm#comments</comments><guid isPermaLink="false">b17a1a42-fdce-4a62-8b62-aa3500605e30</guid><pubDate>Fri, 14 Aug 2026 22:39:58 +0000</pubDate><atom:updated>2026-08-14T22:39:58.222Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Jharkhand,ஜார்க்கண்ட்,man</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/cmjk4khw/Hemant-Soren.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/cmjk4khw/Hemant-Soren.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஞ்சியில் நடைபெற்ற பணி நியமன தேர்வு முறைகேடுகள் தொடர்பான போராட்டத்தின்போது, ​​<a href="https://www.maalaimalar.com/topic/hemant-soren">ஜார்க்கண்ட்</a> முதல்வர் ஹேமந்த் சோரனை கொலை செய்வதாக மிரட்டியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>போகாரோ மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வஜீத் குமார் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், கோட்வாலி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர். </p><p>"போராட்டக்காரர்களைத் தூண்டிவிட்டதாகவும், முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது பி.என்.எஸ். (BNS) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று கோட்வாலி காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சனோஜ் சவுத்ரி தெரிவித்தார்.</p><p>பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், சோரனுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை அந்த நபர் தெரிவித்ததாக அவர் கூறினார்.</p><h2>போராட்டம்:</h2><p>ஜார்க்கண்ட் மாநிலத்தின் பணி நியமனத் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கோரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று (சனிக்கிழமை) 22-ஆவது நாளை எட்டியது. சுதந்திர தினத்தை ஒட்டி 'தேசிய கொடி பேரணி' நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர்.</p><p>அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இன்று நடைபெறவுள்ள பேரணிக்கான திட்டமிடப்பட்ட வழித்தடம் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தனர். இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமலேயே நிறைவடைந்தன.</p><p>அரசு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக 'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்த மன்றம்' அமைப்பின் தலைவர் ரவீந்திர பாஸ்வான் தெரிவித்தார்.</p><h2>தேசியக் கொடி யாத்திரை:</h2><p>சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15 அன்று 'தேசிய கொடி பேரணி' நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி பணி நியமன தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை வலியுறுத்தும் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.</p><p>மாணவர்கள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் இருந்து ஆல்பர்ட் எக்கா சவுக் வரை பேரணி நடத்தினர்; அப்போது "கல்வி மாஃபியா" மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர்.</p><p>பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பொறுப்பானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற செய்தியை வெளிப்படுத்துவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்று பாஸ்வான் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வங்கதேசத்தில் கப்பல் உடைக்கும் தளத்தில் வாயு கசிவு - 8 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/toxic-gas-leak-kills-8-at-bangladesh-ship-breaking-yard</link><comments>https://www.maalaimalar.com/news/world/toxic-gas-leak-kills-8-at-bangladesh-ship-breaking-yard#comments</comments><guid isPermaLink="false">983b1e2c-3c58-4683-8b7f-c969fc34dba4</guid><pubDate>Fri, 14 Aug 2026 20:31:34 +0000</pubDate><atom:updated>2026-08-14T20:31:34.449Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Bangladesh,வங்கதேசம்,gas leak,எரிவாயு கசிவு,Death toll</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/g8e7xmt5/Ship-Breaking-Yard.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ship Breaking Yard]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/g8e7xmt5/Ship-Breaking-Yard.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்தில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு கலனில் இருந்து நச்சு வாயு கசிந்ததில், குறைந்தது எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் ஐந்து பேரை காணவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>தென்கிழக்கு துறைமுக நகரமான சிட்டகாங்கில் உள்ள வளாகத்திற்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டவர்களில் சிலரை மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.</p><p>எட்டு பேர் உயிரிழந்ததாகவும், காணாமல் போன தொழிலாளர்களை அதிகாரிகள் தேடி வருவதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி அப்துல் குத்தூஸ் சௌத்ரி தெரிவித்தார்.</p><h2>விசாரணை குழு:</h2><p>"இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் கப்பல் உடைக்கும் தளத்தில் தணிக்கை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்," என்று சௌத்ரி ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p>முன்னர் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கப்பலை வாங்கிய ஃபெர்டஸ் ஸ்டீல் கப்பல் உடைப்பு தளம் மற்றும் மறுசுழற்சி தொழிற்சாலை, ஒரு "பசுமை" மற்றும் இணக்கமான தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.</p><p>ஆனால், வெட்டும் பணி தொடங்குவதற்கு முன்பு கலத்தில் எந்த வாயுவும் இருந்திருக்க கூடாது என்பதால், பாதுகாப்பு நடைமுறைகள் மீறப்பட்டதாக தெரிகிறது என தீயணைப்புத் துறை அதிகாரி தவ்ஃபிகுல் இஸ்லாம் புய்யான் கூறினார்.</p><h2>உடல்கள் மீட்பு:</h2><p>"தள அதிகாரிகள் அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை. வாயு தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் உயிரிழந்தனர், அதே சமயம் தொலைவில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்," என்று அவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ஃபெர்டௌஸ் பகிரங்கமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.</p><p>தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்து மூன்று உடல்களை மீட்டதாகவும், மேலும் பல தொழிலாளர்கள் மயக்க நிலையில் இருந்ததை கண்டறிந்து அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் புய்யான் கூறினார்.</p><p>வங்காளதேசத்தின் கப்பல் உடைக்கும் தொழில், வங்காள விரிகுடாவில் உள்ள சிட்டகாங் கடற்கரையின் 25 கிலோமீட்டர் (15 மைல்) நீளப் பகுதியில் பரவியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>80-ஆவது சுதந்திர தினம்: செங்கோட்டையில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-80th-independence-day-pm-modi-to-address-nation-from-red-fort</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-80th-independence-day-pm-modi-to-address-nation-from-red-fort#comments</comments><guid isPermaLink="false">75315852-c7e9-4854-a56f-d6980aeaffd1</guid><pubDate>Fri, 14 Aug 2026 19:49:36 +0000</pubDate><atom:updated>2026-08-14T19:49:36.166Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Independence Day,சுதந்திர தினம்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/kmad8dxw/red-fort.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Red Fort]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/kmad8dxw/red-fort.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் 80-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/independence-day">சுதந்திர தினம்</a> இன்று கொண்டாடப்படுகிறது. தேசபக்தி உணர்வு மற்றும் பல அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில், செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">நரேந்திர மோடி</a> தலைமை தாங்க உள்ளார். செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, ​​முதல் முறையாக 'வந்தே மாதரம்' தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது.</p><p>மாநில தலைநகரங்களிலும், நாடு முழுவதும் உள்ள பிற நகரங்கள் மற்றும் ஊர்களிலும் விழா நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கொடியேற்றம் மற்றும் அதைத் தொடர்ந்த கலாச்சார நிகழ்ச்சிகள் அடங்கும். பிரதான நிகழ்ச்சி செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும், மேலும் பிரதமர் மோடி கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்.</p><h2>வந்தே மாதரம் 150 ஆண்டுகள்:</h2><p>150 ஆண்டுகள் பாம்பரியம் மிக்க 'வந்தே மாதரம்' கீதத்தை நினைவுகூரும் வகையிலும், "2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தை முன்னெடுத்து செல்வதில் 'யுவ சக்தி'யின் ஆற்றல் மற்றும் முக்கிய பங்களிப்பை கொண்டாடும் வகையிலும்" இந்த மாபெரும் விழா நடைபெற உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.</p><p>செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வந்தடையும் போது, ​​அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை அமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்பார்கள். பாதுகாப்பு செயலாளர், டெல்லி பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் சேத்தியை பிரதமருக்கு அறிமுகம் செய்வார்.</p><p>பின்னர், தளபதி பிரதமரை மரியாதை செலுத்தும் தளத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு, முப்படைகள் மற்றும் டெல்லி காவல்துறையின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையினர் பிரதமர் மோடிக்கு பொது மரியாதை செலுத்துவார்கள். அதன்பிறகு, பிரதமர் மரியாதை காவலர்களை ஆய்வு செய்வார் என்று அமைச்சகம் முன்னதாக ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.</p><h2>தேசிய கொடியேற்றம்:</h2><p>மரியாதை அணிவகுப்பை ஆய்வு செய்த பின்னர், பிரதமர் செங்கோட்டையின் கொத்தளங்களுக்குச் செல்வார். தேசியக் கொடியை ஏற்றுவதற்காக, டெல்லி பகுதி தளபதி பிரதமரை கொத்தளங்களில் உள்ள மேடைக்கு அழைத்துச் செல்வார்.</p><p>"தேசியக் கொடியை ஏற்றுவதில் கேப்டன் சோனியா சிங் சௌஹான் பிரதமருக்கு உதவுவார். இது, 1721 ஃபீல்ட் பேட்டரி (செரிமோனியல்) பிரிவின் வீரமிக்க பீரங்கி வீரர்களின் 21 குண்டுகள் முழங்கும் மரியாதையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுவிடும்," என அந்த அறிக்கை தெரிவித்தது.</p><h2>ராஷ்ட்ரிய வணக்கம்:</h2><p>மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட பிறகு, அதற்கு 'ராஷ்ட்ரிய வணக்கம்' செலுத்தப்படும். பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியவுடன், இந்திய விமானப்படையின் இரண்டு எம்.ஐ.17 ஹெலிகாப்டர்கள் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மலர் இதழ்கள் தூவப்படும். அவற்றில் ஒன்று தேசிய கொடியை ஏந்தியபடியும், மற்றொன்று 'வந்தே மாதரம்' சித்தரிக்கப்பட்ட கொடியை ஏந்தியபடியும் செல்லும்.</p><p>அந்த ஹெலிகாப்டர்களின் தலைவர்களாக விங் கமாண்டர் ரஜத் மற்றும் ஸ்குவாட்ரன் லீடர் அங்கித் வர்ஷ்னி ஆகியோர் இருப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மலர் இதழ்கள் தூவிய பிறகு, பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அவரது உரையின் முடிவில், 2,500 தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களும், மை பாரத் தன்னார்வலர்களும் இணைந்து 'வந்தே மாதரம்' என்ற தேசியப் பாடலையும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: ஹரி ராகவேந்திரா போராட்டம் வீண்... மதுரை அணியை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-csg-beat-mp-by-39-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-csg-beat-mp-by-39-runs#comments</comments><guid isPermaLink="false">c169fa3c-bf57-4d66-8e97-5cf0eea639c6</guid><pubDate>Fri, 14 Aug 2026 18:56:05 +0000</pubDate><atom:updated>2026-08-14T18:56:05.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,madurai panthers,மதுரை பேந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/f6b4clug/Hari-Ragavendra.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hari Ragavendra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/f6b4clug/Hari-Ragavendra.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 19-ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்ஸீஸ் மற்றும் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மதுரை பேந்தர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/chepauk-super-gillies">சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</a> அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>அபார தொடக்கம்:</h2><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய மோகித் ஹரிஹரன் மற்றும் கேப்டன் நாராயன் ஜெகதீசன் அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களில் மோகித் 50 பந்துகளில் 108 ரன்கள் (4 பவுண்டரிகள், 10 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் ஆடிய கேப்டன் ஜெகதீசன் 48 பந்துகளில் 79 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.</p><p>அடுத்து களமிறங்கிய ஸ்வப்நில் சிங் 21 பந்துகளில் 42 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது. மதுரை சார்பில் கணேசன் பெரியசாமி மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.</p><h2>மதுரை சொதப்பல்:</h2><p>கடின இலக்கை துரத்திய மதுரை பேந்தர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவராக களமிறங்கிய சித்தார்த் மகாதேவன் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாலாசந்தர் அஷ்வின் மற்றும் தீபேஷ் தேவேந்திரன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் தங்களது விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.</p><p>பின்னர் களமிறங்கிய ஹரி ராகவேந்திரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்க வீரராக களமிறங்கிய ராம் குமார் 12 பந்துகளில் 28 ரன்கள் (2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், மறுப்பக்கம் ஹரி ராகவேந்திரா அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.</p><p>போட்டி முடிவில் மதுரை பேந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை எடுத்தது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மதுரை அணிக்கு அதிகபட்சமாக ஹரி ராகவேந்திரா 55 பந்துகளில் 98 ரன்கள் (9 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.</p><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்வப்நில் சிங் மற்றும் பிரேம் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், அபிஷேக் தன்வார், விக்னேஷ் மற்றும் லோகேஷ் ராஜ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் போராட்டம்: சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி பேரணி மேற்கொள்ள மாணவர்கள் திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protesting-students-to-take-out-tiranga-yatra-on-aug-15</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-protesting-students-to-take-out-tiranga-yatra-on-aug-15#comments</comments><guid isPermaLink="false">780fec16-c83c-467f-9c71-2406ae31728f</guid><pubDate>Fri, 14 Aug 2026 17:54:31 +0000</pubDate><atom:updated>2026-08-14T17:54:31.456Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Students,மாணவர்கள்,Jharkhand protest,ஜார்க்கண்ட் போராட்டம்,Tiranga Yatra</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5eu3inrt/Jharkhand-Protest-.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5eu3inrt/Jharkhand-Protest-.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">ஜார்க்கண்ட்</a> மாநிலத்தின் பணி நியமனத் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கோரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 21-ஆவது நாளை எட்டியது. சுதந்திர தினத்தன்று 'தேசிய கொடி பேரணி' நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர்.</p><p>அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள பேரணிக்கான திட்டமிடப்பட்ட வழித்தடம் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தனர். இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமலேயே நிறைவடைந்தன.</p><p>அரசு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக 'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்த மன்றம்' அமைப்பின் தலைவர் ரவீந்திர பாஸ்வான் தெரிவித்தார். </p><h2>தேசிய கொடி பேரணி:</h2><p>சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15 அன்று 'தேசிய கொடி பேரணி' நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி பணி நியமன தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை வலியுறுத்தும் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.</p><p>மாணவர்கள் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் இருந்து ஆல்பர்ட் எக்கா சவுக் வரை பேரணி நடத்தினர்; அப்போது "கல்வி மாஃபியா" மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர்.</p><p>பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பொறுப்பானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற செய்தியை வெளிப்படுத்துவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்று பாஸ்வான் கூறினார்.</p><p>'ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்த மன்றத்தின்' கீழ் போராடும் மாணவர்கள், பணி நியமன தேர்வுகளில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, பல தேர்வுகளை ரத்து செய்தல் மற்றும் சி.பி.ஐ. அல்லது ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவின் மூலம் சுதந்திரமான விசாரணை ஆகியவற்றை வலியுறுத்தி வருகின்றனர்.</p><h2>வழக்குப் பதிவு:</h2><p>ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) குறித்தும் போராட்டக்காரர்கள் ராஞ்சி மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.</p><p>தடை உத்தரவுகளை மீறியது, அரசு சொத்துக்களுக்குசேதம் விளைவித்தது மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், அடையாளம் தெரியாத சுமார் 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>இதுவரை யாரும் கைது செய்யப்படவோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படவோ இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: மதுரை அணிக்கு எதிராக 240 ரன்களை விளாசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-csg-smash-240-against-mp</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-csg-smash-240-against-mp#comments</comments><guid isPermaLink="false">0b6bd626-05dc-45ff-ad63-0377b454f015</guid><pubDate>Fri, 14 Aug 2026 17:18:39 +0000</pubDate><atom:updated>2026-08-14T17:18:39.176Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,madurai panthers,மதுரை பேந்தர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/ra5n9r55/CSG-Score.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CSG Score]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/ra5n9r55/CSG-Score.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது <a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 19-ஆவது லீக் ஆட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/chepauk-super-gillies">சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</a> மற்றும் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மதுரை பேந்தர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>அபார தொடக்கம்:</h2><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய மோகித் ஹரிஹரன் மற்றும் கேப்டன் நாராயன் ஜெகதீசன் அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களில் மோகித் 50 பந்துகளில் 108 ரன்கள் (4 பவுண்டரிகள், 10 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் ஆடிய கேப்டன் ஜெகதீசன் 48 பந்துகளில் 79 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.</p><p>அடுத்து களமிறங்கிய ஸ்வப்நில் சிங் 21 பந்துகளில் 42 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது. மதுரை சார்பில் கணேசன் பெரியசாமி மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.</p><p>முதல் இன்னிங்ஸ் முடிவுற்ற நிலையில், 241 எனும் கடின இலக்கை துரத்தி மதுரை பேந்தர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.</p><h2>திண்டுக்கல் அபார வெற்றி:</h2><p>இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை விளாசியது. </p><p>இதைத் தொடர்ந்து களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி அபாரமாக ஆடிய போதிலும், 15 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு வெறும் 158 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>பிறந்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடிய வாடகை தாய்: நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/american-surrogacy-legal-battle-child-custody</link><comments>https://www.maalaimalar.com/news/world/american-surrogacy-legal-battle-child-custody#comments</comments><guid isPermaLink="false">c83c9a0b-6efb-4c7b-8b11-9e3df845a058</guid><pubDate>Fri, 14 Aug 2026 16:35:26 +0000</pubDate><atom:updated>2026-08-14T16:35:26.286Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வளர்ப்பு தாய்,surrogate,american parents,அமெரிக்க பெற்றோர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5eaj8bnb/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமெரிக்காவில் வளர்ப்புத் தாய் மற்றும் உயிரியல் பெற்றோர் இடையிலான குழந்தை உரிமை விவகாரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ American surrogate ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/5eaj8bnb/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்த பெற்றோர்கள், ஒரு கட்டத்தில் வாடகை தாயிடம் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதை தொடர்ந்து, குழந்தை பெற்றுக்கொண்ட அவர் குழந்தை தனக்கு தான் சொந்தம் என்று கூறி நீதிமன்றத்தை நாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த தம்பதிகளான ஓமர் அகமது மற்றும் நெளஷீன் கில்கர் ஆகியோர், செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற வாடகை தாயை அணுகி, தங்களது குழந்தையை பெற்றுத் தருமாறு கூறியுள்ளனர்.</p><p>அவர்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில், சிசுவில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அந்த சிசுவை கலைப்பதற்கான ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.  </p><p>இதையடுத்து சிசுவின் 20-வது வாரத்தில், அந்த குழந்தைக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>இதன்மூலம் குழந்தையின் இதயம் இடது பக்கத்தில் முழுமையாக வளர்ச்சியடையாமல், போதுமான அளவு செயல்பட தவறும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன.</p><p>மேலும் இதய நோய் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கு, பிறந்த உடனேயே சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.</p><p>இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர்கள், வாடகை தாயிடம் சிசுவை கலைக்க கூறியுள்ளனர். ஆனால் அவரோ, குழந்தையை நானே வைத்துக்கொள்கிறேன் என்று கூறி, டெல்லாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளியூருக்கு தப்பி செல்ல முயன்றுள்ளார்.</p><p>பின்னர் வாடகை தாய் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். பிறந்த அந்த குழந்தைக்கு இதய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>இதையடுத்து பிறந்த குழந்தையுடன் வாடகைத் தாய் டெக்சாஸ் மாகாணத்திற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனால், குழந்தையின் பெற்றோர்கள் டெல்லாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.</p><p>குழந்தையின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில், தாங்கள் கருவை கலைக்க கூறவில்லை என்று வாதிட்டனர். மேலும் இந்த நிகழ்வை ஒரு அரசியல் நாடகாக வாடகைத் தாய் மாற்றிவிட்டதாக கூறினர்.</p><p>இதைத்தொடர்ந்து டெல்லாஸ் நீதிமன்றம், குழந்தையின் வாடகை தாயை மாகாணத்தை விட்டு வெளியேற தடை விதித்து, குழந்தைக்கு தேவையான அனைத்து உயிர் காக்கும் சிகிச்சையை வழங்குமாறு உத்தரவிட்டார்.</p><p>மேலும் பிறந்த குழந்தைக்கு, அதன் உயிரியல் பெற்றொர்களே பொறுப்பானவர்கள் எனக் கூறி, வாடகை தாய்க்கு குழந்தை மீதான அதிகாரத்திற்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இத்தாலியுடன் ஆழமான மற்றும் வலுவான பிணைப்பு: ராகுல் காந்தி கிண்டல் செய்த நிலையில் MEA பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/share-deep-and-strong-ties-with-italy-centre-on-congress-meloni-jibe</link><comments>https://www.maalaimalar.com/news/national/share-deep-and-strong-ties-with-italy-centre-on-congress-meloni-jibe#comments</comments><guid isPermaLink="false">8ec2f7a6-a3f2-48b9-8861-c8a66a3cbf74</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:38:06 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:38:06.803Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/yn112gmz/RahulGandhiPMMOdi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/yn112gmz/RahulGandhiPMMOdi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து காங்கிரஸ் தேசிய மாநாட்டில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.</p><p>அதில் "இத்தாலியுடன் நாங்கள் ஆழமான மற்றும் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளோம். இந்த உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளைப் பொறுத்தவரை, அவை பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் பேணப்படுவது முக்கியமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது.</p><h2>காங்கிரஸ் தேசிய மாநாட்டில் நடந்தது என்ன?</h2><p>பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்நாட்டு தலைவர்களை அடிக்கடி கட்டிப்பிடிப்பதை விமர்சித்த ராகுல் காந்தி, "பிரதமர் மோடிக்கு இந்த யோசனை எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. மனிதர்களின் மண்டைக்குள் விசித்திரமான எண்ணங்கள் வருகின்றன. இதையே அவர் 'வெளியுறவுக் கொள்கை' என்று நினைக்கிறார்" என்கிறார்.</p><p>மேலும் ஒரு படி மேலே சென்று மேடையிலிருந்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்தார். உடனே சந்தீப் தீட்சித் நகைக்சுவையாக, "என்னை மெலோனி (இத்தாலி பிரதமர்) என்று நினைத்து கட்டிப்பிடிக்கவில்லையே?" என்று கேட்க, ராகுல் காந்தி சிரித்தபடியே "நான் இன்னும் அந்த அளவுக்குப் போகவில்லை" என்று பதிலளித்தார்.</p><p>அதே கூட்டத்தில் ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை கோமாளிகள் கூட்டம் என்றும் அவர்கள் அதானி மற்றும் அம்பானி போன்ற பெரிய முதலாளிகளின் கர சேவகர்களாக மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.</p><p>ராகுல் காந்தி தனது உரையின் முடிவில், "பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்யும் வரை நாங்கள் அவர்களைத் தூங்க விடமாட்டோம். வெறுப்போ வன்முறையோ இன்றி, அன்பினாலும் அகிம்சையினாலும் இந்த போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்" என தெரிவித்தார்.</p><h2>பாஜகவின் கண்டனம்</h2><p>ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கள் மிகவும் அருவருப்பான, தரமற்ற ஒன்று என்றும் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு இது அழகல்ல என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா சாடியுள்ளார்.</p><h2>காங்கிரஸ் விளக்கம்</h2><p>இதற்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷமா முகமது பேசுகையில், "ராகுல் காந்தி மெலோனியின் பெயரைப் பயன்படுத்தவே இல்லை. அவர் தனது கட்சியின் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டியணைத்தார், இதில் எந்தத் தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.</p><p>மேலும் பேசிய அவர், "நான் ஒரு வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொண்டவள். பொதுவாக வெளிநாட்டவர்கள் கை குலுக்குவதையே விரும்புவர். எடுத்தவுடனே கட்டிப்பிடிப்பதை விரும்புவதில்லை" என்று பிரதமர் மோடியின் செய்கையை விமர்சித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி உணவகத்தில் சாப்பிட்ட 12-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு: பள்ளி நடத்துநர், நிர்வாகி கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/student-dies-mysteriously-after-eating-school-canteen-food</link><comments>https://www.maalaimalar.com/news/national/student-dies-mysteriously-after-eating-school-canteen-food#comments</comments><guid isPermaLink="false">6b095986-8cd8-4109-a243-d85a41b02d6c</guid><pubDate>Fri, 14 Aug 2026 15:00:29 +0000</pubDate><atom:updated>2026-08-14T15:00:29.374Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Student death,Prince Soni,Jaipur school,பள்ளி மாணவர் உயிரிழப்பு,பிரின்ஸ் சோனி,ஜெய்ப்பூர் பள்ளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/poy6ut15/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜெய்ப்பூர் தனியார் பள்ளி உணவகத்தில் கட்லெட் சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ School Student death]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/poy6ut15/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலம் ஜோத்வாரா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பள்ளி உணவகத்தில் வாங்கிய உணவை சாப்பிட்ட 12-ஆம் வகுப்பு மாணவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, பள்ளி நடத்துநர் மற்றும் நிர்வாகியை விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.</p><p><strong>12ஆம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு</strong></p><p>ஜெய்ப்பூரில் உள்ள மகாராணா பிரதாப்பில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது பிரின்ஸ் சோனி என்ற மாணவர் பயின்று வந்துள்ளார்.</p><p>சம்பவத்தன்று அந்த மாணவர், 11 மணியளவில் மதிய உணவு இடைவெளியின் போது, பள்ளி உணவகத்தில் இருந்து கட்லெட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார்.</p><p>இதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மாணவரின் உடல் நிலை மோசமடைந்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மாணவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்ப்பட்ட நிலையில், மாணவரின் தந்தையான அமித் சோனி பள்ளிக்கு வந்துள்ளார்.</p><p>பின்னர் தனது மகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், மனிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.</p><p>இதைத்தொடர்ந்து மனிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><p><strong>உறவினர்கள் குற்றச்சாட்டு</strong></p><p>இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மாணவரின் உறவினரான ரவிக்குமார் கூறுகையில், “பள்ளி உணவகத்தில் இருந்து கெட்டுப்போன மற்றும் எண்ணெய்ப் பசையுள்ள கட்லெட்டை பிரின்ஸ் சாப்பிட்டபோது, அது அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டுள்ளது.</p><p>எங்கள் குடும்பத்தினர் காலை சுமார் 11:45 மணியளவில் பள்ளிக்கு வந்து, பிரின்ஸ் இன்னும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படவில்லை என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதற்குப் பதிலாக, நிர்வாகம் எங்கள் குடும்பத்தினரை ஒரு நான்கு சக்கர வாகனத்தை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டது.</p><p>சுமார் 100 மீட்டர் தொலைவில் மருத்துவ வசதி இருந்தபோதிலும், பள்ளி நிர்வாகம் பிரின்ஸை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. பள்ளியில் போதுமான முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகளும் இல்லை.</p><p>பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஊழியர்கள் மாணவர் மீது பெரும் அலட்சியமாக இருந்துள்ளனர். பிரின்ஸை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாலோ அல்லது 108 ஆம்புலன்ஸை அழைத்திருந்தாலோ அவரது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்” என்று அவர் கூறினார்.</p><p><strong>பள்ளி நிர்வாகி கைது</strong></p><p>இதையடுத்து பிரின்ஸின் உடலை பிரேத பரிசோதனைக்காக கன்வாடியா மருத்துவமனைக்கு ஜோத்வாரா போலீசார் அனுப்பி வைத்தனர்.</p><p>இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து அப்பகுதியில் போராட்டங்கள் வெடித்து, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.</p><p>இதைத்தொடர்ந்து அலட்சியம் குறித்த குற்றச்சாட்டுகள் பேரில் பள்ளி நடத்துநர் அமித் குமாவத் மற்றும் நிர்வாகி ராஜேந்திர குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: ருத்ர தாண்டவமாடிய பாபா இந்திரஜித்- சேலத்தை வீழ்த்தியது திண்டுக்கல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/dindigul-dragons-beat-salem-spartans-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/dindigul-dragons-beat-salem-spartans-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">5cdc7643-ad8f-454f-ae78-4174780771d2</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:37:17 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:37:17.288Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திண்டுக்கல் டிராகன்ஸ்,Dindigul Dragons,Baba Indrajith,பாபா இந்திரஜித்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/z7b936ia/DD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ dindigul]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/z7b936ia/DD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>திண்டுக்கல் டிராகன்ஸ்</h2><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பர்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 15 ஓவராகக் குறைக்கப்பட்டது.</p><h2>பாபா இந்திரஜித் அரை சதம்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில்  6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் பாபா இந்திரஜித் ருத்ர தாண்டவமாடினார். அவர் 25 பந்தில் 8 சிக்சர், 3 பவுண்டரியுடன் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.</p><p>வி.கே.வினீத் 20 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷிவம் சிங் 15 பந்தில் 38 ரன் குவித்து அவுட்டானார்.</p><p>சேலம் அணி சார்பில் ராஜேந்திரன் விவேக் 3 விக்கெட் வீழ்த்தினார்.</p><h2>அபார பந்துவீச்சு</h2><p>இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. கேப்டன் அபிஷேக் மட்டும் அதிரடியாக ஆடி 18 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.</p><p>மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><p>இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 15 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் திண்டுக்கல் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது.</p><p>சேலம் அணி தான் ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் இருந்து தத்தெடுக்கப்பட்டு நெதர்லாந்தில் தோழிகள் வளர்ந்த நிலையில், சகோதரிகள் என தெரிய வந்ததால் நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/world/adopted-from-india-and-raised-in-netherlands-2-childhood-friends-discover-they-are-sisters</link><comments>https://www.maalaimalar.com/news/world/adopted-from-india-and-raised-in-netherlands-2-childhood-friends-discover-they-are-sisters#comments</comments><guid isPermaLink="false">c399b84d-6859-46fb-9b0b-5a1d331f15b3</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:34:52 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:34:52.070Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நெதர்லாந்து,Netharland</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/j3v60src/Sisters.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சகோதரிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/j3v60src/Sisters.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் இருந்து கடந்த 40 வருடங்களுக்கு முன்பாக இரண்டு குழந்தைகளை நெதர்லாந்தைச் சேர்ந்து இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் தத்தெடுத்துள்ளனர்.</p><p>இருவரும் நெதர்லாந்தில் வளர்ந்து வந்துள்ளனர். சுமார் 160 கி.மீ. இடைவெளி தூரம் கொண்ட இடத்தில் வசித்து வந்தனர். 1996-ம் ஆண்டு தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அந்த நகிழ்ச்சியில் மீனா கெல்டிங் என்பவரும், மினல் திஜ்சென் என்பவரும் கலந்து கொண்டனர்.</p><p>இருவரும் அந்த நிகழ்ச்சியில் சந்தித்த உடன் இருவருக்கும் இடையில் சிறந்த பிணைப்பு ஏற்பட்டது. அத்துடன் இருவரும் ஒரே மாதிரியாக இருந்ததாக அவர்களுடன் நண்பர்கள் கண்டனர். இருவரும் மாறிமாறி தங்களை சகோதரிகள் என்று அழைத்துக் கொண்டு முகவரியை பரிமாற்றிக் கொண்டனர்.</p><h2>டிஎன்ஏ சோதனை</h2><p>கடந்த 15 வருடத்திற்கு முன்னதாக இருவருக்கும் இடையிலான தொடர்பு தடைபட்டது. இதில் 44 வயதாகும் மினால் திஜ்சென் பிரான்ஸ் நாட்டில் தனது கணவனர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மீனாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மைஹெரிடேஜ் டிஎன்ஏ (MyHeritage DNA) பரிசோதனைக்கான முடிவு கிடைத்தது. தனது மூதாதையர்களை கண்டறிவதற்கான சோதனைக்கு மைஹெரிடேஜ் டிஎன்ஏ டெஸ்ட் எனப் பெயர்.</p><p>இவருடைய டி.என்.ஏ. டெஸ்ட் மீனா கெல்டிங் உடன் 100 சதவீதம் பொருத்தமாக இருந்துள்ளது. தனது டி.என்.ஏ. சோதனை 100 சதவீதம் பொருந்தியது. ஏற்கனவே இளம் வயதில் சந்தித்த பெண் தோழி என்பதை மினால் அறியவில்லை.</p><p>இறுதியில் அவள் சமூக ஊடகங்களில் மீனாவைக் கண்டுபிடித்து, பழைய புகைப்படங்களை வைத்து அவளை அடையாளம் கண்டுகொண்டாள். என்னால் அதை நம்பவே முடியவில்லை மினால் கூறினார்.</p><h2>நெதர்லாந்தில் சகோதரிகளாக சந்திப்பு</h2><p>இரு பெண்களும் அன்பான வளர்ப்பு குடும்பங்களில் வளர்ந்திருந்தாலும், தங்கள் உயிரியல் அடையாளங்கள் குறித்து கேள்விகளையும், ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வையும் கொண்டிருந்ததாகக் கூறினர். டிஎன்ஏ முடிவுகளுக்குப் பிறகு நெதர்லாந்தில் அவர்கள் மீண்டும் இணைந்தபோது, ​​அந்தச் சகோதரிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, சிரித்து, ஒன்றாக அழுதனர். சகோதரிகளாகத் தங்களின் முதல் செல்ஃபியையும் எடுத்துக் கொண்டனர்.</p><p>"உன்னைப் பார்க்கும்போது, ​​நான் என் வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக என் இதயத்தில் ஒரு வெற்றிடம் இருந்ததை நான் உணர்ந்தேன். அது, காணாமல் போன ஒரு புதிர் விளையாட்டுத் துண்டு (puzzle piece) கிடைத்துவிட்டது போன்றது," என்று மீனா கூறினார்.</p><p>"நாங்கள் சகோதரிகளாக மாறுவதற்கு முன்பே தோழிகளாக இருந்தோம். உண்மையில் நாங்கள் எப்போதும் சகோதரிகளாகவே இருந்தோம், ஆனால் அது எங்களுக்குத் தெரியவில்லை," என்று மினல் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானை சார்ந்ததா?: தமிழக அரசை சாடிய சென்னை ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-ask-questions-to-police-department-about-flag-parade-permission-issue-in-kovai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-ask-questions-to-police-department-about-flag-parade-permission-issue-in-kovai#comments</comments><guid isPermaLink="false">8e7d0d1d-2842-416f-b7b5-fe1d721241b1</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:11:39 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:11:39.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,கோவை,Chennai High court,சென்னை ஐகோர்ட்,kovai,Flag Parade,police dept,தேசிய கொடி பேரணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/02k5263g/court.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/02k5263g/court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பேரணி நடத்த தி.க., பா.ஜ.க.விற்கு அனுமதியில்லை, த.வெ.க.விற்கு மட்டும் அனுமதியா? என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.</p><h2>அவசர வழக்கு</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்த திட்டமிடப்பட்ட தேசியக் கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.</p><p>இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது என பா.ஜ.க.வின் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் தெரிவித்திருந்தார்.</p><h2>த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</h2><p>இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது தமிழக அரசுக்கு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.</p><p>அதில், பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி இல்லை, பா.ஜ.க.வுக்கு அனுமதி இல்லை, த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</p><p>சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடியை பிடித்து உயிர் நீத்தார். அப்படிப்பட்ட நாட்டில் தேசியக் கொடி பிடித்துச் செல்ல தடை விதிப்பது ஏன்? தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்ல காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்? </p><p>அமைதியாக கொடி பிடித்துச் செல்லவே அனுமதி கேட்கிறார்கள். அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சனை உள்ளது?</p><p>அவர்களும் இந்தியாவில் தான் உள்ளார்கள். தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்வது என்ன பாவச் செயலா? பேரணிக்கு அனுமதி கேட்டுள்ள கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்ததா?</p><p>தி.க. ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை. பா.ஜ.க. ஊர்வலம் செல்லக்கூடாது. த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</p><p>பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்களா? மற்றவர்கள் கலந்துகொள்ள மாட்டார்களா?</p><p>ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைமுறையில் மாவட்ட ஆட்சியர் செயல்படக் கூடாது என கூறிய நீதிபதி, தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.</p><p>முன்னதாக, பா.ஜ.க. கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசியக் கொடியேற்றி கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை அனைத்து இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தேசியக் கொடி பேரணி</h2><p>சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக் கொடி பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. கடந்த 6-ஆம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாக பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், 4 நாளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது.</p><p>அதன்பிறகு சிவானந்தா காலனி முதல் பவர்ஹவுஸ் வரை மற்றும் தெப்பக்குளம் மைதானம் முதல் காமராஜர்புரம் வரை என இரு மாற்று வழிகளைப் பரிந்துரைத்தோம்.</p><p>அதிகாரிகளுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வழித்தடத்துக்கு அனுமதி தருவதாகக் கூறிய நிலையில், மாலையில் திடீரென எந்த வழித்தடத்துக்கும் அனுமதி இல்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது.</p><p>காந்திபுரத்தில் அண்மையில் ஆளுங்கட்சியின் கூட்டணி அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கு தடையின்றி அனுமதி வழங்கிய மாநகர காவல் ஆணையர், தேசியக் கொடி பேரணிக்கு மட்டும் அனுமதி மறுத்து ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.</p><p>காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>மிக இளம் வயதில் மாவட்ட கலெக்டர்: மணிப்பூரில் தமிழ் பெண் சாதனை</title><link>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-woman-angeline-renita-history-manipur-young-collector</link><comments>https://www.maalaimalar.com/news/national/tamil-nadu-woman-angeline-renita-history-manipur-young-collector#comments</comments><guid isPermaLink="false">06a032ee-a753-4048-a6d1-80211deefb52</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:26:57 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:26:57.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh6txglx/AngelineRenita0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏஞ்சலின் ரெனிட்டா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh6txglx/AngelineRenita0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்ட கலெக்டராக (துணைக் கமிஷனர்) தமிழ்நாட்டை சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏஞ்சலின் ரெனிட்டா பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தின் மிக இளம் வயது மாவட்ட கலெக்டர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>தமிழ் வழியில் படித்து சாதனை</h2><p>தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆர். ஏஞ்சலின் ரெனிட்டா (வயது 28). இவர் தனது பள்ளி படிப்பை தமிழ் வழி கல்வியில் பயின்றார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பிரிவில் படித்து தங்க பதக்கம் வென்று அசத்தினார்.</p><h2>முதலாவது முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ்.</h2><p>சிறு வயது முதலே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த ஏஞ்சலின் ரெனிட்டா, இதற்காக கடுமையாக உழைத்து படித்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் தேர்வில், தனது முதலாவது முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 338-வது இடம் பிடித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். இதையடுத்து அவர் மணிப்பூர் மாநில கேடருக்கு தேர்வு செய்யப்பட்டு அங்கு தனது பணியை தொடங்கினார்.</p><h2>குவியும் வாழ்த்து</h2><p>மணிப்பூரில் உள்நாட்டு துறை இணை செயலாளர், லம்பேல் துணைப் பிரிவு அதிகாரி மற்றும் மணிப்பூர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளில் ஏஞ்சலின் ரெனிட்டா திறம்பட பணியாற்றினார். அவரது சிறப்பான நிர்வாக திறமையை பாராட்டி, மணிப்பூர் அரசு தற்போது அவரை காக்சிங் மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழ் வழியில் படித்து, மிக இளம் வயதிலேயே மணிப்பூரின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மண் பெற்றெடுத்த இந்த 'தமிழச்சிக்கு' சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஜனாதிபதி மாளிகையில் பூந்தோட்டம் திறப்பு - ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை இலவச அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/national/presidents-house-amrit-udyan-free-visit-aug-16-to-sept-15</link><comments>https://www.maalaimalar.com/news/national/presidents-house-amrit-udyan-free-visit-aug-16-to-sept-15#comments</comments><guid isPermaLink="false">f6181650-2348-49a5-9dcd-fff0d71e8d0a</guid><pubDate>Fri, 14 Aug 2026 13:18:30 +0000</pubDate><atom:updated>2026-08-14T13:18:30.080Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rashtrapati Bhavan,Draupadi Murmu,திரெளபதி முர்மு,amrit udyan,அம்ரித் உத்யான்,ராஷ்டிரபதி பவன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3aw50gf1/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அம்ரித் உத்யான் திட்டத்தின் கீழ் குடியரசுத் தலைவர் இல்ல தோட்டம் பொதுமக்களுக்கு திறப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ Rashtrapathi bhavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/3aw50gf1/%D7%99%D7%A6%D7%99%D7%90%D7%AA-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற புகழ்பெற்ற அமிர்த உத்யானத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு, கண்கவர் வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை பார்வையிட்டார்.</p><p><strong>அம்ரித் உத்யான்</strong></p><p>அம்ரித் உத்யான் என்பது டெல்லியில் உள்ள இந்திய குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் (ராஷ்டிரபதி பவன்) வளாகத்திற்குள் அமைந்திருக்கும் ஒரு அழகான தோட்டமாகும்.</p><p>பால்சம்/குல்-மெஹந்தி, அபராஜிதா, ருக்மிணி, பர்ஷா பூல், லால் சாக் மற்றும் நாக்பானா உள்ளிட்ட பூர்வீகத் தாவரங்கள் அடங்கிய இந்த தோட்டம், இந்தியாவின் வளமான மலர் பாரம்பரியத்தை வெளிக்காட்டுவதோடு, தோட்டங்களின் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் மேம்படுத்துகிறது. </p><p><strong>அனுமதி காலம்</strong></p><p>வருடந்தோறும் மலர்த்தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படும. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இங்கு வரும் பொதுமக்களுக்கு கடைசி பதிவு மாலை 5 மணிக்கு பின்பு நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தோட்ட பராமரிப்பு பணிகளுக்காக வார விடுமுறையாக ஒவ்வொரு திங்களட்கிழமையும், இந்த தோட்டம் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p><strong>முன்பதிவு</strong></p><p>ராஷ்டிரபதி பவனுக்கு வரும் பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் முற்றிலும் இலவசம் என்றும், இதற்கான முன்பதிவு அதிகாரப்பூர்வ இணையதளமான visit.rashtrapatibhavan.gov.in மூலமாக ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்களின் கண்கவர் வண்ணங்களுக்கும் சூழலியல் முக்கியத்துவத்திற்கும் பெயர் பெற்ற, பூர்வீக மற்றும் உள்ளூர் பூக்கும் தாவரங்களே இந்த முறை உத்யானத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைய உள்ளது.</p><p><strong>பிரத்யேக அனுமதி</strong></p><p>ராஷ்டிரபதி பவனுக்கு வரும், விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29-ஆம் தேதியும், ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்றும், அம்ரித் உத்யானில் பிரத்யேக அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில், மத்திய செயலக மெட்ரோ நிலையத்திலிருந்து அம்ரித் உத்யானத்தின் நுழைவாயில் வரை ‘அம்ரித் உத்யானத்திற்கான பேருந்து சேவை’ என்ற பேனருடன் கூடிய இரண்டு இடத்திற்கும் இடையிலான இணைப்பு பேருந்து சேவையும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>குடியரசுத் தலைவர் பதிவு</strong></p><p>இந்த நிகழ்வு குறித்து குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற அம்ரித் உத்யான் சம்மர் ஆனுவல்ஸ் 2026 தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு சிறப்பித்தார்,” என்று பதிவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>