<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 06 Aug 2026 08:32:22 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ரூ.17,000 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
 - 6 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-august-2026#comments</comments><guid isPermaLink="false">cea48297-4a0d-4b97-9bab-77c908ac9582</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:39:01 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:32:05.203Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/0lx0tsgt/vinoth3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/0lx0tsgt/vinoth3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-visitors-at-coimbatore-airport-ahead-of-independence-day">சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்குத் தடை!</a></p><p>* சுதந்திர தினம் வரை கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை</p><p>* பாதுகாப்பு அதிகரிப்பு, பயணிகள் முன்னதாகவே விமான நிலையம் வருவதற்கு உத்தரவு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-major-announcements-in-agriculture-budget-says-premalatha" rel="nofollow">வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை- பிரேமலதா</a></p><p>* முதலமைச்சர் விஜய் நினைத்தால் இப்போதே விவசாயிகளுக்கு நன்மை செய்ய முடியும்.</p><p>* செய்தித்தாள் வாசிப்பதைபோல் பட்ஜெட்டை வாசதித்துள்ளார் அமைச்சர் வினோத்.</p><p>சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் முழு விவரம் வருமாறு:</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/jug0dj1h/ministervinoth.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய ஆரம்பித்தபோது முதலமைச்சர் குறித்து பேசிய அமைச்சர் வினோத் இறுதியாகவும் முதலமைச்சர் குறித்து உணர்ச்சிவசப்பட்டார்.</p><p>அமைச்சர் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் மட்டும் நீக்குவதாக சபாநாயகர் உறுதி அளித்தார்.</p><p>கடந்த 2 மணி நேரமாக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்</p><p>பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் - அமைச்சர் வினோத்</p><p>நடப்பாண்டில் கூடுதலாக 2.50 லட்சம் தென்னங்கன்று உற்பத்தி செய்து தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் - அமைச்சர் வினோத்</p> <p>விதை இருப்பை அதிகரிக்கும் வகையில் மேலும் 150 விதை பயிர் தொகுப்பு ரூ.1 கோடியில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் காடுகளை ஊக்குவிக்கும் திட்டத்தில் 5 லட்சம் சந்தன மரம், 50,000 தேக்குமரம் உள்ளிட்ட மரங்களை நடுவதற்கு திட்டம்</p><p>மூலதன கடன் வழங்கும் நடவடிக்கையாக உழவர்களுக்கு குறுகிய கால கடன் தருவதற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு</p><p>500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க 25% மூலதன மானியம் வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>மகளிர் சுய உதவிக்குழு சார்ந்த கால்நடை பராமரிப்புக்கு சிறப்பு நிதியாக ரூ.5000 வழங்குவதற்கு ரூ.2.5 கோடி ஒதுக்கீடு</p><p>மாநிலம் முழுவதும் சிறு பால் பண்ணைகள் அமைக்க 4 சதவீதம் வட்டி மானியம் வழங்க ரூ.4.19 கோடி ஒதுக்கீடு</p><p>வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கால்நடை தீவனம் ஒரு கிலோ ரூ.2 மானிய விலையில் வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மாணவர் களப்பயிற்சிக்காக 6 பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு</p><p>2026-2027 நிதியாண்டில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ரூ.17,000 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><h2>உதகையில் வேளாண் ஆராய்ச்சி பயிற்சி மையம்</h2><p>உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.20 கோடி, 50 உழவர் சந்தைகளில் மின்னணு விலைப்பலகை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு</p><p>வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு</p><p>சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு</p><p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு</p> <p>2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகளை ஏற்படுத்த ரூ.4.8 கோடி ஒதுக்கீடு</p><p>வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்ட 4 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய 2 சிறப்பு வணிக வளாகங்கள் கட்ட, மேம்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>225 ஏக்கர் பரப்பளவு வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் செயல்விளக்கத்திற்காக ரூ.46.37 லட்சம் ஒதுக்கீடு</p><p>மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னையில் 100% மானியத்தில் முழுமையான இயந்திரமயத்தை புகுத்த திட்டம்.</p><p>தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.5.20 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்</p><p>புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கி சமபங்கு நிதியாக உறுப்பினருக்கு தலா ரூ.5000 வழங்க ரூ.12 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் பொறியியல் விரிவாக்க, பயிற்சி மையங்கள் அமைக்க ரூ.4.6 கோடி ஒதுக்கீடு.</p><p>வேளாண்மையில் முழுமையான இயந்திரமயத்தை புகுத்தும் திட்டங்களுக்கான செயல்விளக்கங்ளுக்கு ரூ.46.37 லட்சம் ஒதுக்கீடு</p><h2>வேளாண் இயந்திரங்கள் </h2><p>உழவர்களுக்கு வேளாண் பொருட்களை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை வலுப்படுத்த ரூ.20.31 கோடி ஒதுக்கீடு</p><p>புதிதாக 463 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கொள்முதல் செய்வதற்காக ரூ.20.31 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>1000 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>பயிர் சாகுபடி, மதிப்பு கூட்டுதலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்க ரூ.8.13 கோடி ஒதுக்கீடு</p><p>ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பை உருவாக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு மானியத்தில் ஆழ்துளை மற்றும் குழாய் கிணறு அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு</p><p>பொதுப்பிரிவை சார்ந்த 500 விவசாயிகளுக்கு அதிகபட்ச மானியமாக 60% வரை வழங்குவதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்</p><p>100% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் உருவாக்குதல், 75% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகளை தூர்வார ரூ.8.5 கோடி ஒதுக்கீடு</p><p>பெண்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சிக்காக வான் மகள் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு ரூ.4 கோடி ஒதுக்கீடு</p><p>100 மகளிர் உட்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்க பயிற்சி உரிமம், 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன் வழங்கப்படும்.</p><p>57,000 மெட்ரிக் டன் சேமிக்கும் வகையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்காக ரூ.22 கோடி ஒதுக்கீடு</p><p>24,000 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரம் மற்றும் கருவி வழங்க ரூ.227.2 கோடி ஒதுக்கீடு</p><p>தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்பு திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு </p><p>தென்னை பதப்படுத்தும் கழகம்  ரூ.5.30 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/gi2bnhlf/coconut.jpg" /></figure><p>கரூர் முதலைப்பட்டியில் தென்னை நாற்றுப்பண்ணை ரூ.48 லட்சத்தில் அமைக்கப்படும் என அறிவிப்பு</p><p>தென்னை பதப்படுத்தும் கழகம் ரூ.22 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>அளவு கடந்த ஊட்டச்சத்து உள்ள தமிழ்நாடு தளிர்கீரை திட்டத்திற்கு ரூ.1.20 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளுக்காக ரூ.41 கோடி ஒதுக்கீடு</p><p>தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்பு திட்டத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு</p><p>நன்னெறி சாகுபடி, நஞ்சற்ற உற்பத்தி, உலகளாவிய ஏற்றுமதிக்காக வேளாண் பட்ஜெட்டில் ரூ.8.43 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வீடுகளின் மாடிகளில் தோட்டம் அமைக்க மானியம் வழங்கும் வகையில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம்.</p> <p>8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக நடத்தப்படும் வேளாண் கண்காட்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு </p><p>பனைவிதை, பனங்கன்று விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்தி கூடாரம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு</p><p>விதை சுத்திகரிப்புத்திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.7.1 கோடியில் அமைக்கப்படும்.</p><p>17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியத்திற்கு ரூ.9.36 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.</p><p>மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.</p><p>மாவட்டந்தோறும் வழங்கப்படும் வெற்றி விவசாயி விருதுக்கு ரூ.67.50 லட்சம் ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>அஞ்சலையம்மாள் விருதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.</p><p>5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பை சார்ந்த சிறு குறு விவசாயிகள் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் - அமைச்சர் வினோத்</p><p>மழை, வெயிலில் இருந்து விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.</p> <p>தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு  - அமைச்சர் வினோத்</p><p>நிலத்தடி நீரை பாதிக்கும் சீமை கருவேல மரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அகற்றும் பணிக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு.</p><p>அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்திற்காக ரூ.56.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி ஒதுக்கீடு</p><p>பருத்தி உற்பத்தியை பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27.21 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமையை உறுதிப்படுத்த வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.170.70 கோடி ஒதுக்கீடு</p> <p>அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத்தினை, பாப்பரை, குலசாமை பயிர்களின் செயல்விளக்கத் திடல்களுக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு</p><p>சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்சாகுபடியை இருமடங்காக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கத்திற்கு ரூ.7.61 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.63.81 கோடி - அமைச்சர் வினோத்</p><p>பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகளை வழங்க ஏஐ அடிப்படையிலான செயலிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/phbqf2zv/paddy.jpg" /></figure><p>நெல் விதை உற்பத்தி மானியத்திற்கு சிறப்பு திட்டம் அறிவித்து ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</p><p>நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ogk40j0p/compost.jpg" /></figure><p>இயற்கை உரங்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.4.5 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><p>மத்திய மாநில அரசின் பங்களிப்பில் புதிய வேளாண் இயற்கை தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு -  வேளாண் அமைச்சர்</p><p>மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p> <p>ரூ.4 கோடி மதிப்பீட்டில் 1 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும் - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>உயிர்ம வேளாண் பரவலாக்க சிறப்பு திட்டத்தில் 20,000 ஏக்கருக்கு தலா ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p> <p>5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் - அமைச்சர் வினோத் </p><p>மண்வள பாதுகாப்புக்கான ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் 1 லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும்.</p> <p>பயிர் காப்பீட்டிற்காக பிரதமர் மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 14 தொகுப்புகளில் ரூ.648 கோடி மாநில நிதி விடுவிப்பு.</p><p>இலவச மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கட்டண தொகையாக மின்வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>எல்-நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.</p><p>சூப்பர் எல் நினோவால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது - அமைச்சர் வினோத் </p><p>விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்க முடிவு - அமைச்சர் வினோத்</p> <p>வேளாண்மை துறையில் பழைய திட்டங்களுடன் சில புதிய திட்டங்களும் தொடங்கப்பட உள்ளது. </p><p>நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது.</p><p>டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன என்று அமைச்சர் வினோத் கூறினார்.</p> <p>செயற்கை நுண்ணறிவின் வருகையால் 2021-ம் ஆண்டு முதல் புதிய பரிணாமம் பெற்றது.</p><p>வேளாண்மை, விவசாயிகளை பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது - அமைச்சர் வினோத்</p> <p>வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தொடர முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்   - அமைச்சர் வினோத்</p><p>வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவோம்  - அமைச்சர் வினோத்</p> <p>சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்யுங்கள் என அமைச்சர் வினோத்துககு சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.</p><p>தமிழகத்தின் தலைப்பு செய்தி முதலமைச்சர் பேசுவதாக இருக்கும் அல்லது முதலமைச்சரை பற்றி பேசுவதாக இருக்கும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் வினோத் முதலமைச்சர் குறித்து புகழ்ச்சியாக பேசியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>கோட் சூட் அணிந்த விவசாயி முதலமைச்சர் விஜய் என வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் வினோத் புகழாரம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/8smd7lya/vinoth2.jpg" /></figure><p>சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/baakw511/speaker.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5ady734p/udhayanidhi.jpg" /></figure><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/x2lizk1n/vijay.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ள நிலையில் சட்டசபைக்கு முதலமைச்சர் விஜய் வருகை.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/xpjmrorm/dmk2.jpg" /></figure><p>சட்டசபைக்கு திமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வருகை. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என சாடல்.</p> <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.</p><p>வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>வாகனங்களின் மைலேஜ் குறைவு: E20 பெட்ரோல் பயன்பாட்டிற்கு இந்தியாவில் எழும் எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/reduced-vehicle-mileage-opposition-to-e20-petrol-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/reduced-vehicle-mileage-opposition-to-e20-petrol-in-india#comments</comments><guid isPermaLink="false">5adca0d6-5c62-4981-8200-e727e1a84a50</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:31:44 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:31:44.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Raipur,E20 எத்தனால் பெட்ரோல்,ராய்ப்பூர்,E20 petrol</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nnetviqn/petrol.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ E20 petrol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nnetviqn/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், வாகனங்களின் மைலேஜ் குறைவு, என்ஜின் கோளாறுகள் மற்றும் வாகன பொருந்தாமை காரணமாக வாகன ஓட்டிகள் இடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய ஒரு முக்கிய தீர்ப்பு, இந்த விவகாரத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு:</strong></h2><p>ராய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவர் பிரேம்ராஜ் தேவதா என்பவர் வாங்கிய மாருதி சுசுகி 'கிராண்ட் விட்டாரா' வாகனம், E20 பெட்ரோல் பயன்படுத்தியதால் அடிக்கடி என்ஜின் செயலிழப்பு அடைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><h2><strong>மாற்று வாகனம்:</strong></h2><p>மாருதி சுசுகி நிறுவனம் 45 நாட்களுக்குள் E20 பெட்ரோலுக்கு உகந்த புதிய காரை வழங்க வேண்டும் அல்லது வாகனத்தின் விலை, காப்பீடு மற்றும் பதிவுச் செலவு உட்பட மொத்தம் ரூ.20.50 லட்சத்தைத் திரும்பச் செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்காக ரூ.1 லட்சம் மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.10,000 வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. காரில் கலப்பட எரிபொருள் பயன்படுத்தப்பட்டதே பாதிப்புக்குக் காரணம் என மாருதி சுசுகி கூறியதை நீதிமன்றம் நிராகரித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h2><strong>E20 பெட்ரோல் எதிர்கொள்ளும் பிரதான சவால்கள்:</strong></h2><p>ஏப்ரல் 2023-க்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட பெரும்பாலான வாகனங்களின் பாகங்கள் (எரிபொருள் குழாய், ரப்பர் சீல்கள், இன்ஜெக்டர்கள்) E20 பெட்ரோலின் அரிக்கும் தன்மையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. எத்தனால் பெட்ரோலை விட குறைவான ஆற்றல் அடர்த்தி கொண்டது என்பதால், E20 பெட்ரோல் பயன்படுத்தும் போது வாகனங்களின் மைலேஜ் 5% முதல் 7% வரை குறைவதாகப் பயனர்கள் புகாரளிக்கின்றனர்.</p><p>எத்தனால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும் இயல்புடையது. இதனால் எரிபொருள் தொட்டியில் நீர் படிந்து, என்ஜின் துருப்பிடித்தல் மற்றும் அடைப்பு ஏற்படுகின்றன. பெட்ரோல் பங்குகளில் சாதாரண E10 அல்லது தூய்மையான பெட்ரோல் கிடைக்காமல், E20 மட்டுமே இயல்புநிலை எரிபொருளாக விற்கப்படுவது நுகர்வோரை அதிருப்தியடையச் செய்துள்ளது.</p><p>எரிபொருளில் நீர் அல்லது பிற கலப்படங்கள் கலப்பதே என்ஜின் பழுதுக்குக் காரணம் எனக் கூறி, நுகர்வோர் கோரிக்கைகளை நிராகரிக்கின்றனர். கடுமையான பரிசோதனைகள் மற்றும் GPS கண்காணிப்பு அமைப்புகள் மூலம் தரமான E20 பெட்ரோல் விநியோகிக்கப்படுவதாகக் எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. இரு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு இடையே தங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பிற்கும் என்ஜின் சேதத்திற்கும் யார் பொறுப்பு என்று நுகர்வோர் கேள்வி எழுப்புகின்றனர். </p><p>இந்த ராய்ப்பூர் தீர்ப்பு வருங்காலத்தில் வாகன உற்பத்தியாளர்களுக்கு சட்டரீதியான சவால்களையும், நுகர்வோர் நம்பிக்கையில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்த பெட்ரோல் குழப்பம் நுகர்வோரை மின்சார வாகனங்களை நோக்கி விரைவாக மாறத் தூண்டும் காரணியாகவும் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும்.. மீண்டுமா..!- தவறுதலாக உதயநிதியின் காரில் ஏற முயன்ற இபிஎஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-mistakenly-tries-to-enter-udayanidhi-stalin-vehicle-again</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-mistakenly-tries-to-enter-udayanidhi-stalin-vehicle-again#comments</comments><guid isPermaLink="false">02463d57-5eb2-4faa-9c87-a7b414301fe3</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:30:13 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:30:13.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,எடப்பாடி பழனிசாமி,Car,Edappadi pazhanisamy,கார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/rz4cy4yz/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin- Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/rz4cy4yz/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் சட்டசபைக்கு வெளியே தலைமைச் செயலக வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரும், அதற்கு முன்னால் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p><p>சட்டசபை கூட்டம் முடிவடைந்த போது இருவரும் நிருபர்களுக்கு தனித்தனியாக பேட்டி அளித்தனர். அதன்பிறகு  அவரவர் அலுவலகத்துக்கு சென்று  எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்தனர்.</p><p>இதைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு செல்வதற்காக கார் நிற்கும் இடத்திற்கு வந்தார். அப்போது, அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த  உதயநிதி ஸ்டாலினின் காரை தனது கார் என்று நினைத்து அதில் ஏற முயன்றார்.</p><p>உடனே பாதுகாவலர்கள் நமது கார் முன்னால் நிற்கிறது. இந்த கார் இல்லை என்று தெரிவித்தனர். உடனே சுதாரித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி  அதன்பிறகு தனது காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார்.</p><p>ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போதும் இதே போல் உதயநிதி ஸ்டாலின் காரில்  அப்போது எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்குத் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-visitors-at-coimbatore-airport-ahead-of-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-visitors-at-coimbatore-airport-ahead-of-independence-day#comments</comments><guid isPermaLink="false">9d49b760-d91f-488e-b933-3c04e7188210</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:27:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:27:09.350Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>coimbatore airport,கோவை விமான நிலையம்,IndependenceDay2026,சுதந்திர தினம்2026,Airport Security</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/qwujj51g/Coimbatore-Airport" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Coimbatore Airport ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/qwujj51g/Coimbatore-Airport?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாட்டின் முக்கிய பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து முனையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. </p><p>இதன் ஒரு பகுதியாக, கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு, பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>பார்வையாளர்களுக்குத் தடை:</strong></h2><p>கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா போன்ற வெளிநாடுகளுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். </p><p>கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளும் இந்த விமான நிலையத்தையே நம்பியுள்ளனர்.</p><p>இந்நிலையில் வழக்கமாக பயணிகளை வழிஅனுப்ப வருபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கட்டணம் செலுத்தி, பிரத்யேக 'பார்வையாளர் பாஸ்' பெற்று விமான நிலையத்தின் உள்ளே சென்று வருவது வழக்கம். </p><p>ஆனால், சுதந்திர தின முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் பொருட்டு, இந்த பார்வையாளர் அனுமதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>அதிகாரிகள் விளக்கம்:</strong></h2><p>இது குறித்து கோவை விமான நிலைய உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:</p><p>"சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் உத்தரவுப்படி இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கான நுழைவுச்சீட்டு மற்றும் பிரத்யேக பாஸ்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. பயணிகள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்." என்று தெளிவாக கூறியுள்ளனர்.</p><h2><strong>பாதுகாப்பு அதிகரிப்பு:</strong></h2><p>சுதந்திர தினக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால், கோவை விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மற்றும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><p>விமான நிலைய நுழைவாயில், வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் கொண்டு வரும் உடமைகள் அனைத்தும் நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் வெவ்வேறு நிலைகளில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. </p><p>மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p>பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் வழக்கம் போல் வரும் நேரத்தை விட சற்று முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வன்கொடுமை வழக்கில் மூத்த பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-convicted-of-sexual-assault-bombay-high-court-overturns-2021-acquittal</link><comments>https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-convicted-of-sexual-assault-bombay-high-court-overturns-2021-acquittal#comments</comments><guid isPermaLink="false">4257d50f-c47f-4c22-a0a4-9e5d5905a8b6</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:24:25 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:24:25.134Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Sexual assault,உயர்நீதிமன்றம்,High Court,Journalist,பத்திரிகையாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/z010yyr6/tn-29.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தருண் தேஜ்பால்]]></media:title><media:description type="html"><![CDATA[ தருண் தேஜ்பால்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/z010yyr6/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2013 இல் இளம் பெண் பத்திரிகையாளரை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை</a> செய்த வழக்கில் 'தெஹல்கா' பத்திரிகையின் நிறுவனரும் முன்னாள் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான தருண் தேஜ்பால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p>2013  நவம்பர் 7 அன்று நிகழ்வொன்றின்போது கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் லிப்டில் வைத்து தன்னை தருண் தேஜ்பால் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெஹல்கா பத்திரிகையில் பணியாற்றிய இளம் பெண் பத்திரிகையாளர் புகார் அளித்தார். </p><p>ஆனால் போதிய சான்றுகள் இல்லை எனக் கூறி, சந்தேகத்தின் பலனைத் தருண் தேஜ்பாலுக்கு வழங்கி 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. </p><p>பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.</p> <h2>மேல்முறையீடு</h2><p>இத்தீர்ப்பை எதிர்த்து கோவா காவல் துறையும் அரசுத் தரப்பும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.</p><p>கோவாவுக்கு என்று தனி உயர்நீதிமன்றம் கிடையாது. பம்பாய் உய்ரநீதிமன்றத்தின் கோவா அமர்வு இந்த மேல்முறையீட்டை விசாரித்து வந்தது.</p> <h2>தீர்ப்பு</h2><p>இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் தவறாகக் கையாண்டதாகவும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார்.</p><p>இந்நிலையில் விசாரணை முடிவில் இன்று(ஆகஸ்ட் 6) 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை ரத்து செய்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நீலா கோகலே மற்றும் அமித் ஜாம்சந்தேகர் அடங்கிய கோவா அமர்வு தருண் தேஜ்பால் குற்றவாளி என அதிரடியாக தீர்ப்பளித்தது.</p> <h2>உச்சநீதிமன்றம்</h2><p>தருண் தேஜ்பால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கான தண்டனை விவரங்களை உயர் நீதிமன்றம் விரைவில் அறிவிக்கவுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக தருண் தேஜ்பால் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>முன்னதாக இன்றைய அமர்வில், தனக்கு 61 வயதாகிறது என்றும், ஒரு மனைவி இருப்பதாகவும் தானே இதில் பாதிக்கப்பட்டவன் எனவும் கூறி, தனக்கு கருணை காட்டுமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>தேஜ்பால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, இந்த உத்தரவை எட்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்குறமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>எலான் மஸ்க்கின் &apos;X&apos; நிறுவனத்தில் இருந்து விலகிய  PRODUCT CHIEF நிகிதா பியர்!</title><link>https://www.maalaimalar.com/technology/elon-musks-x-loses-product-chief-nikita-bier</link><comments>https://www.maalaimalar.com/technology/elon-musks-x-loses-product-chief-nikita-bier#comments</comments><guid isPermaLink="false">2cb7dd7a-2a3a-4d03-9ced-d97d7920b7da</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:59:19 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:59:19.898Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Elon Musk,எலான் மஸ்க்,எக்ஸ்,x,Nikita Bier,நிகிதா பியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/9lnr9eo7/elon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Elon Musk-Nikita Bier]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/9lnr9eo7/elon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான பிரபல சமூக வலைதள நிறுவனமான 'X' தயாரிப்புப் பிரிவு தலைவராக பணியாற்றி வந்த தொழிலதிபர் நிகிதா பியர், பொறுப்பேற்ற ஒரு ஆண்டிலேயே தன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p><h2><strong>அதிகாரப்பூர்வ பதிவு:</strong></h2><p>"X சமூகத்திற்குச் சேவை செய்தது எனது வாழ்நாளின் மிகப்பெரிய பாக்கியம். வரலாற்று சிறப்புமிக்க தகவல் தொடர்புத் தொழில்நுட்பமாக X எப்போதும் நிலைத்து நிற்கும். ஆனால் இந்த செயலியை பராமரித்து இயக்குவது 24 மணி நேரமும் இடைவிடாது செய்யவேண்டிய பணியாக உள்ளது. எனவே தற்போது நான் ஒரு சிறிய இடைவெளி எடுக்க வேண்டிய நேரமிது," என அவர் தெரிவித்துள்ளார். முழு நேரத் தயாரிப்புத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினாலும், X நிறுவனத்தின் மூலோபாய ஆலோசகராக அவர் தொடர்ந்து செயல்படுவார்.</p><h2><strong>ஓராண்டு சாதனைகள்:</strong></h2><p>2025 ஜூலை மாதம் இந்த பொறுப்பை ஏற்ற நிகிதா பியர், தனது ஓராண்டு பதவிக் காலத்தில் அடைந்த முக்கிய இலக்குகளைப் பட்டியலிட்டுள்ளார். தனது தலைமையின்கீழ் சுமார் '30 புதிய தயாரிப்புகள் மற்றும் பயன்பாட்டு அம்சங்கள் X செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>புதிய பயனர்களின் வருகை மற்றும் தளத்தின் பயன்பாட்டு அளவீடுகளில் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், ஆப்பிள் ஆப் ஸ்டோர் தரவரிசையில் X தளம் 70 இடங்கள் முன்னேறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h3><strong>யார் இந்த நிகிதா பியர்?</strong> </h3><p>நிகிதா பியர் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். டீனேஜர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'tbh' மற்றும் 'Gas' ஆகிய சமூக வலைதள செயலிகளை உருவாக்கியவர். இவர் உருவாக்கிய 'tbh' செயலியை 2017-ல் மெட்டா நிறுவனமும், 'Gas' செயலியை 2023-ல் டிஸ்கார்ட் நிறுவனமும் விலைக்கு வாங்கின. பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்த இவர், தற்போது லைட்ச்பீட் நிறுவனத்தில் வென்ச்சர் பார்ட்னராகவும் பணியாற்றி வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>ஹிரோஷிமா.. உலகம் இன்னும் கடந்த போக முடியாத தினம்</title><link>https://www.maalaimalar.com/news/world/responsibility-and-resilience-hiroshima-day-2026-remembering-atomic-bombing-and-call-for-a-peaceful-nuclear-free-world</link><comments>https://www.maalaimalar.com/news/world/responsibility-and-resilience-hiroshima-day-2026-remembering-atomic-bombing-and-call-for-a-peaceful-nuclear-free-world#comments</comments><guid isPermaLink="false">752f733c-615f-426c-b92b-5fb492e837c3</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:57:40 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:57:40.246Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>japan,ஜப்பான்,இரண்டாம் உலகப் போர்,World war II,Atomic bomb,ஹிரோஷிமா தினம்,அணுகுண்டு,Hiroshima Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/h5e2l4wp/tn-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹிரோஷிமா தாக்குதலில் பிழைத்தவர்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹிரோஷிமா தாக்குதலில் பிழைத்தவர்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/h5e2l4wp/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>அது இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். இன்றைப் போன்றதொரு ஆகஸ்ட் 6. ஆண்டு 1945. மனித விழுமியங்கள் அனைத்தையும் மறந்து அமெரிக்கா செய்த காரியம் மனித வரலாற்றிலேயே கரும்புள்ளியாக நாள். </p><p>அச்சு நாடுகளின் கூட்டணியில் அங்கம் வகித்த ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது <a href="https://www.maalaimalar.com/news/world/nuclear-arms-spending-hits-record-high-china-leads-global-expansion">அணுகுண்டு </a>வீசியது நேச நாடான அமெரிக்கா. </p><p>அந்த அணு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மனிதர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுகிறது.</p><p>இன்றுடன் இந்த கோரம் நடந்து 81 ஆம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. </p><p>2026 ஹிரோஷிமா தினத்தின் மையக்கரு, "Remembrance, Responsibility and Resilience" என்பதாகும். </p><p>அதாவது பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அணுஆயுதங்களற்ற அமைதியான உலகை நோக்கி உழைப்பதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.</p><h2>அணுகுண்டு தாக்குதல்</h2><p>1945, ஆகஸ்ட் 6, ஹிரோஷிமாவில் காலை 8.15 மணி: அமெரிக்காவின் Enola Gay என்ற B-29 ரக போர் விமானம்</p><p>'லிட்டில் பாய்' என்ற அணு குண்டை ஹிரோஷிமா நகரின் மீது வீசியது.</p><p>தீக்காயங்கள், வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கதிர்வீச்சுப் பாதிப்புகள் காரணமாக 1945 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மட்டும் 1,40,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.</p><p>இதன் தொடர்ச்சியாக, 3 நாட்களுக்குப் பிறகு , ஆகஸ்ட் 9இல் நாகசாகி மீது Fat Man என்ற இரண்டாவது அணு குண்டு வீசப்பட்டது.</p><p>அடுத்து வந்த சில நாட்களில், ஆகஸ்ட் 15 அன்று ஜப்பான் நிபந்தனையற்ற சரணடைதலை அறிவித்ததன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.</p><h2>ஹிரோஷிமா தினத்தின் முக்கியத்துவம்</h2><p>அணுஆயுதப் போரினால் ஏற்படும் மனிதப் பேரழிவுகளையும், தலைமுறை கடந்து கதிர்வீச்சால் அவதிப்படும் மனிதர்களின் துயரத்தையும் உலகிற்கு நினைவூட்டுகிறது.</p><p>உலகளவில் அணு ஆயுதங்களைக் குறைக்கவும், அமைதி மற்றும் வன்முறையற்ற பாதையை உருவாக்கவும் சர்வதேச சமூகத்தை ஒருங்கிணைக்கும் நாளாக இது அமைகிறது.</p>]]></content:encoded></item><item><title>சர்ச்சைப் பேச்சு வழக்கு: பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponmudi-hate-speech-case-chennai-george-town-court-issues-arrest-warrant</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponmudi-hate-speech-case-chennai-george-town-court-issues-arrest-warrant#comments</comments><guid isPermaLink="false">34f93599-a1f8-4818-800a-668dd4746992</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:42:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:42:32.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ponmudi,பொன்முடி,George Town Court,ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/93dsywx6/george.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ george town]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/93dsywx6/george.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்களைக் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப் பிடிவாரண்ட்  பிறப்பித்துள்ளது.</p><h2><strong>சர்ச்சைப் பேச்சு:</strong></h2><p>சென்னையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.</p><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த புகார் மனு எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.</p><h2><strong>வழக்கை ரத்து செய்ய மனு:</strong></h2><p>தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மூடிய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தொடர்பாக தனி நபர் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்யும் முன் அரசின் அனுமதியை பெறவில்லை என்பதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது" என வாதிட்டார்.</p><h2><strong>மனு தள்ளுபடி:</strong> </h2><p>புகார்தாரரான உமா ஆனந்தன் தரப்பில், தனது பேச்சு ஊடகங்களில் பரவும், பிற மதத்தினர் பார்ப்பார்கள் என்று தெரிந்தே பொன்முடி இந்த வெறுப்பு பேச்சை பேசியுள்ளார். இதே விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், பொன்முடியின் பேச்சால் பொது அமைதிக்கு எந்த குந்தகமும் ஏற்படவில்லை என கூறி, புகார்கள் முடித்து வைக்கப்பட்டன. மேலும், பொன்முடிக்கு எதிரான வழக்கை தொடர அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் வாதிடப்பட்டது.</p><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்ய கோரிய பொன்முடியின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதி  தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p><h3><strong>வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட காரணம்:</strong></h3><p>இந்த நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணைக்கு பொன்முடி தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டது. பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்ட் உத்தரவின்படி, பொன்முடியைக் கைது செய்து செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வே வேளாண் பட்ஜெட் 2026 - மு.க.ஸ்டாலின்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-agriculture-budget-2026-budget-is-merely-another-instance-of-a-name-change</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-agriculture-budget-2026-budget-is-merely-another-instance-of-a-name-change#comments</comments><guid isPermaLink="false">6f6daca4-9301-462b-b529-009425192e29</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:42:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:42:09.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,முக ஸ்டாலின்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5zroo9vk/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5zroo9vk/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative">வேளாண் பட்ஜெட்</a> தாக்கல் செய்தது குறித்து திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் வேளாண் பட்ஜெட் 2026.</p> <p>மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.</p><h2>வெற்றி லேபிள்</h2><p>திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?</p><p>குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.</p> <p>உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் <a href="https://x.com/hashtag/TNAgriBudget2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNAgriBudget2026</a>.<br><br>மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.<a href="https://x.com/hashtag/DravidianModel?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DravidianModel</a> அரசின் திட்டங்களின் மேல் &#39;வெற்றி&#39; என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு… <a href="https://t.co/YlD3WedXB3">pic.twitter.com/YlD3WedXB3</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2085263496539959504?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தொலைநோக்கு பார்வையுடன்கூடிய பட்ஜெட்- முதலமைச்சர் விஜய் பாராட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-hails-visionary-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-hails-visionary-budget#comments</comments><guid isPermaLink="false">183e2962-7175-4b41-8fe1-632b1d6868bf</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:41:23 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:41:23.291Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Budget 2026,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/26cn1ozb/TN-CM.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/26cn1ozb/TN-CM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-2027ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்க செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்துறை அமைச்சர் வினோத்திற்கு முதலமைச்சர் விஜய் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.</p><h2>வேளாண் பட்ஜெட்</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><p>இதில், விவசாயிகளுக்கான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.</p><h2>முதலமைச்சர் விஜய் பாராட்டு</h2><p>இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்துறை அமைச்சர் வினோத் ஆகியோரை முதலமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன் அவர்களுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.</p><p>தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. </p><p>வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான் - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-farmers-most-affected-during-tvk-regime</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-farmers-most-affected-during-tvk-regime#comments</comments><guid isPermaLink="false">ec1c3493-c2d0-4886-81c2-ccbbf8af423e</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:26:44 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:26:44.438Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,vijay,Udhayanidhi Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/f8td3eos/udhayanidhi1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/f8td3eos/udhayanidhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative">வேளாண் பட்ஜெட்டை</a> வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>* தவெக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் எதுவும் புதிதில்லை.</p> <h2>வேளாண் பட்ஜெட்</h2><p>* தவெக ஆட்சியில் காவிரியில் நீர் வரவில்லை, வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு இல்லை.</p><p>* கடந்த 4 மாதமாக விவசாயிகள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்கும் நிலையில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை.</p><p>* தமிழக வேளாண் பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை.</p><p>* திமுக அரசின் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அவர்களின் கட்சி பெயரை சேர்த்து புதியதை போல் அறிவித்துள்ளனர்.</p> <p>* மரபை மீறி பேரவையில் முதலமைச்சருக்கு ஜால்ரா போடுகின்றனர்.</p><p>* கடந்த 4 மாதமாக விவசாயிகள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்கும் நிலையில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை.</p><h2>கருப்பு சட்டை</h2><p>* தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான்.</p><p>* குறுவை சாகுபடி செய்யாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை வெளிப்படுத்தவே கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வந்தோம்.</p> <p>* அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்ற கோரிக்கை குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.</p><p>* விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்த குரலுக்கு முதலமைச்சர் வாய் திறப்பதே இல்லை.</p><h2>காவிரி விவகாரம்</h2><p>* காவிரி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க அனுமதி கோரி சபாநாயகரிடம் திமுக சார்பில் கடிதம் அளித்துள்ளோம்.</p><p>* சட்டசபையில் நாளை முதல் நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் வாய் திறப்பாரா என்று பார்ப்போம்.</p><p>* எங்கள் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிப்பார் என விவசாயிகளுடன் திமுக எம்எல்ஏக்களும் காத்திருக்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை- பிரேமலதா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-major-announcements-in-agriculture-budget-says-premalatha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-major-announcements-in-agriculture-budget-says-premalatha#comments</comments><guid isPermaLink="false">5be938f7-a086-4a88-94f5-379f3a04e281</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:20:30 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:20:30.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/lonxk6lr/premalatha.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/lonxk6lr/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><p>பின்னர், இதுதொடர்பாக தேதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-</p><p>விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லை.</p><p>நெல்லை மூட்டைகளை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்கு தொடர்பாக எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகவில்லை.</p><p>100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சீமை கருவேல மரங்களை அகற்றுவதோடு நிறுத்தாமல் அதனை விளைநிலங்களாக மாற்றுவதையே தேமுதிக விரும்புகிறது.</p><p>ரசாயன உரங்களை விவசாயிகள் அதிகம் பயன்படுத்துவதால் நமது விளைபொருளை வெளிநாட்டில் வாங்க மறுக்கின்றனர்.</p><p>நேற்றும், இன்றும் பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்கள் வைத்து திட்டங்களை அறிவித்துள்ளனர்.</p><p>இந்திய வேளாண் பொருட்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்ல இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்.</p><p>அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் கூறியிருக்கிறார். அது மகிழ்ச்சி தான். ஆனால்,முதலமைச்சர் விஜய் நினைத்தால் இப்போதே விவசாயிகளுக்கு நன்மை செய்ய முடியும், எதற்கு அடுத்த ஜென்மம்.</p><p>கள் இறக்க அனுமதி தர வேண்டும் என்ற விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். </p><p>மாவட்டந்தோறும் நலிவுற்ற பதப்படுத்தும் ஆலைகளை மறுசீரமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.</p><p>செய்தித்தாள் வாசிப்பதைபோல் பட்ஜெட்டை வாசதித்துள்ளார் அமைச்சர் வினோத், இது செயலாக்கம் பெற வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நிலவின் மேல் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 4 டன் ராக்கெட் பகுதி.. தாக்கம் என்ன? </title><link>https://www.maalaimalar.com/news/world/spacex-rocket-impact-4-ton-falcon-9-debris-crashes-into-moon-near-einstein-crater-after-18-months-in-orbit</link><comments>https://www.maalaimalar.com/news/world/spacex-rocket-impact-4-ton-falcon-9-debris-crashes-into-moon-near-einstein-crater-after-18-months-in-orbit#comments</comments><guid isPermaLink="false">fb36cd7b-ac67-4786-9ee9-f09658362ddb</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:02:34 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:02:34.808Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Moon,நிலவு,SpaceX,space,விண்வெளி,ஸ்பேஸ் எக்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/b0hsunmw/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிலவின் மேல் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிலவின் மேல் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/b0hsunmw/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விண்வெளியில் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாகக் கட்டுப்பாடின்றி சுற்றித் வந்த <a href="https://www.maalaimalar.com/topic/spacex">ஸ்பேஸ்எக்ஸ்  </a>நிறுவனத்தின் 4 டன் எடையுள்ள ராக்கெட் பகுதி நிலவின் மேற்பரப்பில் மோதியுள்ளது.</p><p>2025 ஜனவரியில் Firefly Aerospace விண்கலத்தைச் சுமந்து சென்ற ஸ்பேஸ்எக்ஸ்  உடைய Falcon 9 ராக்கெட்டின் பாகமே தற்போது நிலவில் மணிக்கு 8,690 கி.மீ வேகத்தில் மோதியுள்ளது.</p><h2>மோதல்</h2><p>ஒரு பள்ளிப் பேருந்தின் அளவிற்குப் பெரியதான இந்த ராக்கெட் பாகம், விண்வெளிப் பாதையிலிருந்து விலகிச் சுமார் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளிக் கழிவாகச் சுற்றி வந்தது.</p><p>பூமி நேரப்படி நேற்று நண்பகல் வேளையில், நிலவின் மேற்குக் பகுதியில் அமைந்துள்ள Einstein crater பகுதியில் இது மோதியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதிவேக மோதலால் நிலவின் தூசிகள் காற்றில் எழும்பிப் பரவியுள்ளன.</p><p>அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் லூனார் (நிலவு) செயற்கைக்கோள்கள் இந்த மோதல் நடந்த இடத்தை நிழற்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. புகைப்படங்கள் மூலம் சேதங்களை ஆய்வு செய்யச் சில நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.</p> <h2>காரணம்</h2><p>ராக்கெட்டில் எஞ்சியிருந்த எரிபொருள் முழுமையாக வெளியேற்றப்பட்டதால், அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனது. </p><p>சூரிய கதிர்வீச்சு மற்றும் ஈர்ப்பு விசையின் காரணமாகவே இது நிலவை நோக்கிய பாதையில் திரும்பியதாக ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.</p><p>இந்த மோதலால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என்ற போதிலும், விண்வெளிக் கழிவுகளை அகற்றுவதில் இருக்கும் அலட்சியமே இதற்கு வானியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>இதுபோன்ற திட்டமிடப்படாத சம்பவங்களை தடுப்பது குறித்து நாசாவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-promises-made-to-farmers-have-not-been-fulfilled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-promises-made-to-farmers-have-not-been-fulfilled#comments</comments><guid isPermaLink="false">7ddf467d-b479-4184-963c-09fd2575f222</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:54:23 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:54:23.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/muk0bjei/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/muk0bjei/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/drones-for-women-at-a-50-subsidy-vetri-vaan-magal-scheme-announced">வேளாண் பட்ஜெட்</a> தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>* தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது.</p> <h2>திமுக ஆட்சி</h2><p>* சுமார் இரண்டரை மணி நேரம் வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லை.</p><p>* கடந்த கால திமுக ஆட்சியில் 20 துறைகளை இணைத்து வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட் போலத்தான் தவெக பட்ஜெட்டும் உள்ளது.</p><p>* ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கரும்பு டன்னுக்கு ஆதார விலை ரூ.4,500 வழங்கப்படும் என்றார்கள் அந்த அறிவிப்பு என்னவானது?</p> <h2>உழவர் உரிமை அட்டை</h2><p>* சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு விதைப்பு கால நிதியாக ரூ.15,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னவானது?</p><p>* உழவர் உரிமை அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 தரப்படும் என்ற வாக்குறுதி என்னவானது?</p><p>* தொடக்க வேளாண் வங்கிக்கடன்களில் உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு என்னவானது?</p> <h2>தவெக அரசு</h2><p>* தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க பேசிய தவெக தற்போது விவசாயிகளை ஏமாற்றி விட்டது.</p><p>* வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி உள்ளனர். இது விவசாயிகளுக்கு நன்மை தரும் பட்ஜெட் இல்லை.</p><p>* அதிமுக அரசு முன்னதாக அறிவித்த குடிமராமத்து திட்டத்தில் நீர் நிலைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டது.</p> <h2>குடிமராமத்து திட்டம்</h2><p>* மகத்தான குடிமராமத்து திட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.</p><p>* ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அதிமுக அரசு தூர்வாரியதால் தான் மாநிலம் முழுவதும் நீர் நிலைகளில் நீர் உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>அதிமுகவில் மீண்டும் சலசலப்பு -  அமைச்சர் ஆனந்துடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rebel-mlas-meet-water-resources-minister-anand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rebel-mlas-meet-water-resources-minister-anand#comments</comments><guid isPermaLink="false">981be373-b7aa-4945-89bc-3812b3af8afb</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:53:49 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:53:49.594Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,sp velumani,எஸ்பி வேலுமணி,அமைச்சர் ஆனந்த்,Minister Bussy Anand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/y14bp0vz/TN-Sec.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Secretariat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/y14bp0vz/TN-Sec.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><p>இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச் செயலாளருமான ஆனந்த் உடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்தித்தனர்.</p><p>அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோர் அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேசினர்.</p><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த நிலையில் அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>பசுமை தமிழ்நாடு இயக்கம்: மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட திட்டம்!-அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative#comments</comments><guid isPermaLink="false">ae9c4bbe-16d5-4350-86b2-ccfb0ba6c6eb</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:37:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:37:43.401Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/48w5sus4/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/48w5sus4/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கால்நடைப் பராமரிப்பு, பால் உற்பத்தி மற்றும் பசுமைப் போர்வையைப் பெருக்கவும் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>கால்நடை பராமரிப்பு &amp; பால் பண்ணை மேம்பாடு:</strong></h2><h2><strong>நடுத்தர பால் பண்ணைகள்:</strong></h2><p>500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க 25 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்படும்.</p><h2><strong>சிறு பால் பண்ணைகள்:</strong></h2><p>மாநிலம் முழுவதும் சிறு பால் பண்ணைகள் அமைப்பதை ஊக்குவிக்க 4 சதவீத வட்டி மானியமாக ரூ.4.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>மகளிர் சுய உதவிக்குழுக்கள்:</strong></h2><p>மகளிர் சுய உதவிக்குழு சார்ந்த கால்நடை பராமரிப்புக்காகச் சிறப்பு நிதியாகத் தலா ரூ.5,000 வழங்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மானிய விலையில் தீவனம்:</strong></h2><p>வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்குக் கால்நடைத் தீவனம் ஒரு கிலோ ரூ.2 என்ற மானிய விலையில் வழங்கப்படும்.</p><h2><strong>விதை பயிர் தொகுப்பு:</strong></h2><p>மாநிலத்தில் விதை இருப்பை அதிகரிக்கும் நோக்கில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 150 விதை பயிர் தொகுப்புகள் ஏற்படுத்தப்படும்.</p><h2><strong>வேளாண் காடுகள் திட்டம்</strong>:</h2><p>வேளாண் காடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 5 லட்சம் சந்தன மரங்கள் மற்றும் 50,000 தேக்கு மரங்கள் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>பசுமை தமிழ்நாடு இயக்கம்:</strong></h2><p>பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' மூலம் மாநிலத்தின் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணவும் மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் அமைச்சர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>புது ரூட்.. ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்தை மீட்டெடுக்க ஓமனுடன் ஈரான் ஒப்பந்தம்.. முக்கியத்துவம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/hormuz-strait-single-route-deal-iran-oman-to-monitor-commercial-shipping</link><comments>https://www.maalaimalar.com/news/world/hormuz-strait-single-route-deal-iran-oman-to-monitor-commercial-shipping#comments</comments><guid isPermaLink="false">4f858ffd-4bc3-46da-a041-78fefdd3a1ef</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:32:14 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:32:14.375Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஓமன்,Oman,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/jxjmufh2/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹார்முஸ் ஜலசந்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹார்முஸ் ஜலசந்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/jxjmufh2/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய கிழக்கில் அமெரிக்கா ஈரானுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான எரிபொருள் வர்த்தகப் பாதையான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ஹார்முஸ் ஜலசந்தி</a>யில் பதற்றம் நிலவுகிறது. </p><p>உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியேதான் கொண்டு செல்லப்படுகிறது.</p><p>இந்நிலையில் ஹார்முஸ் வழியே சரக்கு கப்பல்களை மீண்டும் இயக்குவது தொடர்பாக ஓமன் மற்றும் ஈரான் இடையே முக்கிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.  </p><p>இத்தகவலை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி  உறுதிப்படுத்தியுள்ளார்.  </p><h2>ஒப்பந்தத்தின் அம்சங்கள்</h2><p>வளைகுடாவிற்குள் செல்ல ஓமன் எல்லையிலும், வெளியேற ஈரான் எல்லையிலும் ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கமாக இரண்டு தனித்தனிப் பாதைகள் பயன்படுத்தப்படும்.</p><p>தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின்படி, இருவழிப் பாதைகளுக்குப் பதிலாக ஈரானிய பிராந்தியக் கடலுக்குள் அமைக்கப்பட்ட ஒரு ஒற்றைப் பாதை மட்டுமே பயன்படுத்தப்படும்.</p><p>2 முதல் 4 மாதங்கள் வரையிலான காலத்திற்கு தற்காலிகமாக  பயன்படுத்தப்படும் இந்தப் பாதையின் துல்லியமான புவியியல் எல்லைகளை இரு நாடுகளும் இறுதி செய்துள்ளன.</p><p>இப்புதிய ஒப்பந்தத்தின் கீழ், பாரசீக வளைகுடாவிற்குள் நுழையும் வர்த்தகக் கப்பல்களைப் பரிசோதிக்கும் மற்றும் கண்காணிக்கும் அதிகாரம் ஈரானுக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது.</p><p>ஓமனுடன் உடன்பாடு எட்டப்பட்டாலும், ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை திரும்பப் பெறப்படாத வரை, இந்த வழியில் கப்பல்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என ஈரான் எச்சரித்துள்ளது.</p><h2>கட்டணம்</h2><p>ஹார்முஸை கடந்து செல்லும் சரக்குக் கப்பல்களின் மதிப்பில் 5% முதல் 7% வரை சேவை மற்றும் பாதுகாப்புக்கான கட்டணமாக வசூலிப்போம் என ஈரான் கூறுகிறது.</p><p>ஓமன் தரப்பில் 3% கட்டணம் விதிக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்கா எந்தவொரு கட்டணமும் விதிக்கப்படக் கூடாது எனத் தெரிவித்து வருகிறது.</p><h2>டிரம்ப்</h2><p>அமெரிக்க அதிபர் டிரம்ப், "ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்பட வேண்டும்; இல்லையெனில் ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்" என எச்சரித்துள்ளார்.</p><p>அதேசமயம், தாங்கள் அமெரிக்காவுடன் நேரடியாக எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும், ஓமனுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.</p><h2>ஓமனுடன் பேச்சுவார்த்தை ஏன்?</h2><p>ஹார்முஸ் என்பது சுமார் 21 நாட்டிக்கல் மைல்கள் அகலம் கொண்ட மிகக் குறுகிய கடற்பகுதியாகும்.</p><p>சர்வதேசக் கடல் சட்டங்களின்படி, இதன் ஒரு பகுதி ஈரானிய எல்லைக்குள்ளும், மறுபகுதி ஓமனின் எல்லைக்குள்ளும் வருகின்றன.</p><p>எனவே, ஒரு புதிய கடல்வழிப் பாதையை உருவாக்கவோ அல்லது போக்குவரத்தைச் சீரமைக்கவோ ஈரானுக்கு ஓமனின் ஒத்துழைப்பு அத்தியாவசியம்.</p><p>அரபு நாடுகளிலேயே ஓமன் மட்டுமே எந்தப் பக்கமும் சாராத நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது.</p><p>ஈரான் நேரடியாக அமெரிக்காவுடனோ அல்லது பிற மேற்கத்திய நாடுகளுடனோ பேச விரும்பாத போது, ஓமன் மூலமாகவே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>உதகையில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-agricultural-technology-research-centre-in-udagai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-agricultural-technology-research-centre-in-udagai#comments</comments><guid isPermaLink="false">8efb705f-951c-4fa3-8585-b859f460a2ec</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:26:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:26:09.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/cr3p6o59/vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/cr3p6o59/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>நஞ்சில்லா வேளாண் முறையை ஊக்குவித்து விவசாய விளை பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்க ஆராய்ச்சி மையம். </p><p>தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.</p><p>நீலகிரி மாவட்டம் உதகையில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு. </p><p>கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மாணவர் களப்பயிற்சிக்காக 6 பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கரும்பு விவசாயிகளுக்கு 50% மானியம்- வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/50-subsidy-for-sugarcane-farmers-onion-storage-warehouse-to-be-set-up-minister-vinoth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/50-subsidy-for-sugarcane-farmers-onion-storage-warehouse-to-be-set-up-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">59cf6bfc-b6f3-447a-9120-e1b693845e71</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:09:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:09:32.708Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2au16ubd/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2au16ubd/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், அறுவடைக்குப் பின் தானியங்கள் மற்றும் விளைபொருட்களைப் பாதுகாக்கவும் பல முக்கியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>ரூ.7.10 கோடியில் 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள்:</strong></h2><p>மாநிலத்தில் விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன், 3 முக்கிய இடங்களில் தலா 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.</p><h2><strong>அமைக்கப்படும் இடங்கள்:</strong></h2><p>சேலம் மாவட்டம் (கங்கவல்லி), தூத்துக்குடி மாவட்டம் (கிள்ளிகுளம்) மற்றும் விழுப்புரம் மாவட்டம் (இருவேல்பட்டு).</p><h2><strong>நிதி ஒதுக்கீடு:</strong></h2><p> ரூ. 7 கோடி 10 லட்சம் (மாநில நிதி).</p><h2><strong>சர்க்கரைத் துறை: கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்புச் சலுகைகள்:</strong></h2><p>கரும்பு சாகுபடிச் செலவைக் குறைக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் இரண்டு முக்கிய மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>விதைக்கரும்பு மானியத் திட்டம் (ரூ.9.36 கோடி):</strong></h2><p>இயந்திர அறுவடைக்கு ஏற்ற அகலப்பார் முறையில் உயர் விளைச்சல் மற்றும் உயர் சர்க்கரைச் சத்து கொண்ட கரும்பு ரகங்களைச் சாகுபடி செய்ய முன்வரும் கூட்டுறவு/பொதுத்துறை சர்க்கரை ஆலை விவசாயிகள் பயன்பெறுவர். இவர்களுக்கு 50% மானியத்தில் பருசீவல் நாற்றுகள் மற்றும் ஒரு பரு விதைக்கரணைகள் வழங்கப்படும்.  இத்திட்டம் 17,315 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படும்.</p><h2><strong>கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் (ரூ. 9 கோடி):</strong></h2><p>வல்லுநர் விதைக்கரும்பு, திசு வளர்ப்பு நாற்றுகள், சோகை உரித்தல், நிழல் வலைக்கூடம் அமைத்தல், சோகை தூளாக்குதல் மற்றும் நுண்ணூட்டச் சத்து-உயிர் உரங்கள் வழங்க மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.9 கோடி மானியம் வழங்கப்படும்.</p><h2>எத்தனால் <strong>உற்பத்தி</strong> ஆய்வு (ரூ. 20 லட்சம்):</h2><p>கள்ளக்குறிச்சி-1, கள்ளக்குறிச்சி-2 மற்றும் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பில், நாளொன்றுக்கு 100 கிலோ லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட எத்தனால் வடிப்பாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) மற்றும் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>தோட்டக்கலைத் துறை: ரூ.22 கோடியில் வெங்காய சேமிப்பு கிடங்கு:</strong></h2><p>காய்கறிகள், பழங்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகள் தொடர்ந்து வருமானம் பெறவும் தோட்டக்கலைத் துறை மூலம் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>அறுவடைக்குப் பின் வெங்காயம் அழுகி வீணாவதைத் தடுத்து, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்ய '57,000 மெட்ரிக் டன்' கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்புக் கிடங்குகள் ரூ.22 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>மகளிருக்கு 50% மானியத்தில் டிரோன்கள்.. வெற்றி வான் மகள் திட்டம் அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/drones-for-women-at-a-50-subsidy-vetri-vaan-magal-scheme-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/drones-for-women-at-a-50-subsidy-vetri-vaan-magal-scheme-announced#comments</comments><guid isPermaLink="false">4fb34331-553b-45e5-baba-b490d66a93d0</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:55:18 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:55:18.358Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ofmb94d4/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வெற்றி வான் மகள் திட்டம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ வெற்றி வான் மகள் திட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ofmb94d4/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/news/topnews/from-banana-to-coconut-budget-brings-financial-rain-for-horticulture-farmers">வேளாண் பட்ஜெட்</a>டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டது. இன்றைய வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. </p><h2>வெற்றி வான் மகள் திட்டம்</h2><p>அதில் குறிப்பாக பெண்களை டிரோன்களை இயக்குபவர்களாக மாற்றுவதற்கு ‘வெற்றி வான் மகள் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தகுதியுள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு ட்ரோன் இயக்க பயிற்சி வழங்க ரூ.1.50 கோடியில் வான்மகள் திட்டம் தொடங்கப்படும்.</p><p>இத்திட்டத்தின் கீழ் 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் டிரோன்கள் வழங்கப்படும். பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.2.50 கோடியில் டிரோன்கள் வழங்கப்படும்.</p><p>ரூ.4 கோடியில் டிரோன் இயக்க பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீதம் மானியத்தில் டிரோன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அதேநேரம் கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆழ்துளை மற்றும் குழாய் கிணறுகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-6-crore-for-farmers-irrigation-wells</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-6-crore-for-farmers-irrigation-wells#comments</comments><guid isPermaLink="false">4036f6d6-63c1-43f4-8ebd-0b1492e0ba28</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:52:19 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:52:19.392Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/yao2080f/well.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/yao2080f/well.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பை உருவாக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு மானியத்தில் ஆழ்துளை மற்றும் குழாய் கிணறு அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு.</p><p>பொதுப்பிரிவை சார்ந்த 500 விவசாயிகளுக்கு அதிகபட்ச மானியமாக 60% வரை வழங்குவதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>100% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் உருவாக்குதல், 75% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகளை தூர்வார ரூ.8.5 கோடி ஒதுக்கீடு.</p><p>நீர்ப்பாசன வசதியில்லாத 300 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில், நீர்ப்பாசன ஆதாரமாக ஆழ்துளை அல்லது குழாய்க்கிணறுகள் 100 சதவீத மானியத்தில் மின் மோட்டார் அல்லது சூரிய சக்தி பம்புசெட்டுகளுடன் அமைக்கப்படும். இத்திட்டத்திற்காக 56.72 லட்சம் கோடி ஒதுக்கீடு. </p><p>1000 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு.</p><p>பயிர் சாகுபடி, மதிப்பு கூட்டுதலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்க ரூ.8.13 கோடி ஒதுக்கீடு.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஜாக்பாட்: &apos;அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்&apos; அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/jackpot-for-adidravidar-tribal-farmers-annal-ambedkar-agricultural-assistance-scheme-launched</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/jackpot-for-adidravidar-tribal-farmers-annal-ambedkar-agricultural-assistance-scheme-launched#comments</comments><guid isPermaLink="false">3c7e5558-83c8-4af1-b66f-0cc6f3790783</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:48:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:48:43.850Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2au16ubd/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2au16ubd/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகச் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/wild-boar-damage-prevention-scheme-rs-7-35-crore-allocation">வேளாண் பட்ஜெட்</a>டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அறுவடைக்குப் பின் விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்கவும் பல முக்கியச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்:</strong></h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் திட்டப் பலன்களைச் சிரமமின்றி பெறவும், புதிய நீராதாரங்களை உருவாக்கிக் விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் "அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்" செயல்படுத்தப்படும்.</p><h2><strong>20% கூடுதல் மானியம்:</strong></h2><p>உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயனாளி பங்களிப்புத் தொகையைக் குறைக்கும் வகையில் 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.</p><h2><strong>70% மானியத் திட்டங்கள்:</strong></h2><p>ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில்கள், நிழல் வலைக்குடில்கள், சூரியக்கூடார உலர்த்திகள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் மற்றும் பண்ணை இயந்திரங்களுக்கு 70% மானியம் வழங்கப்படும்.</p><h2><strong>80% மானியத்தில் பம்புசெட்டுகள்:</strong></h2><p>சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க 80% மானியம் தரப்படும்.</p><h2><strong>100% மானியத்தில் பாசன வசதி:</strong></h2><p>பாசன வசதி இல்லாத 300 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில் ஆழ்துளை/குழாய்க்கிணறுகள், மின் மோட்டார் அல்லது சூரிய சக்தி பம்புசெட்டுகளுடன் 100% முழு மானியத்தில் அமைத்துத் தரப்படும்.</p><h2><strong>விளைபொருட்களைப் பாதுகாக்க தார்ப்பாய்கள் வழங்கும் திட்டம்:</strong></h2><p>மழை போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து அறுவடை செய்த விளைபொருட்கள் வீணாகாமல் பாதுகாக்கவும், தானியங்களை எளிதாக உலர்த்துவதற்கும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 2026-27ஆம் நிதியாண்டில் ரூ. 10 கோடி மாநில நிதி ஒதுக்கீட்டில், மொத்தம் 43,500 விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் தார்ப்பாய்கள் வழங்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் ரூ.7.35 கோடி ஒதுக்கீடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/wild-boar-damage-prevention-scheme-rs-7-35-crore-allocation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/wild-boar-damage-prevention-scheme-rs-7-35-crore-allocation#comments</comments><guid isPermaLink="false">ba7f7be0-300e-4808-b6a6-4bdb4b7e0cba</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:34:28 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:34:28.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/m94hsp07/rr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/m94hsp07/rr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகள் மற்றும் வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுத்து, விவசாயிகளின் பொருளாதார இழப்பைக் குறைக்கும் வகையில் 2026-27ஆம் நிதியாண்டில் ரூ.7.35 கோடி நிதியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என <a href="https://www.maalaimalar.com/news/topnews/from-banana-to-coconut-budget-brings-financial-rain-for-horticulture-farmers">வேளாண் பட்ஜெட்</a>டில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>காட்டுப்பன்றி விரட்டி (ரூ.1.35 கோடி):</strong> </h2><p>தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) உருவாக்கியுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவிலான காட்டுப்பன்றி விரட்டி, 14,000 ஏக்கர் பரப்பளவில் பயன்படுத்த விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.</p><h2><strong>சூரிய சக்தி மின்வேலி (ரூ.2 கோடி):</strong></h2><p>காட்டுப்பன்றி, யானை, காட்டெருமை மற்றும் மான் போன்ற வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க, நடப்பாண்டில் 134 விவசாயிகளுக்குச் சூரிய சக்தியால் இயங்கும் மின்வேலிகள் மானியத்தில் அமைக்கப்படும்.</p><h2><strong>சீமைக் கருவேல மரங்கள் அகற்றம் (ரூ.4 கோடி):</strong> </h2><p>காட்டுப்பன்றிகள் தங்குமிடமாகப் பயன்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அரசு மற்றும் தனியார் நிலங்களிலிருந்து அகற்றி, மண் வளத்தையும் சுற்றுச்சூழைலையும் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.5.30 கோடியில் தென்னை பதப்படுத்தும் கழகம்- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/coconut-processing-corporation-worth-rs-5-30-crore-minister-vinoth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/coconut-processing-corporation-worth-rs-5-30-crore-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">09bd4b36-937c-417d-87e2-5c7c0fc7c39b</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:28:27.053Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ooid37rw/Minister-Vinoth2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ooid37rw/Minister-Vinoth2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>விதை சுத்திகரிப்புத்திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.7.1 கோடியில் அமைக்கப்படும்.</p><p>17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியத்திற்கு ரூ.9.36 கோடி ஒதுக்கீடு.</p><p>8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடியில் அமைக்கப்படும்.</p><p>தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக நடத்தப்படும் வேளாண் கண்காட்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு. </p><p>பனைவிதை, பனங்கன்று விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்தி கூடாரம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு</p><p>வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.</p><p>வீடுகளின் மாடிகளில் தோட்டம் அமைக்க மானியம் வழங்கும் வகையில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் என்ற புதிய திட்டம்.</p><p>தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்புத்திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு.</p><p>தென்னை டானிக், பூச்சி நோய்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவைக்காக தென்னை சிறப்பு திட்டம் அமைக்கப்படும்.</p><p>கரூர் முதலைப்பட்டியில் தென்னை நாற்றுப்பண்ணை ரூ.48 லட்சத்தில் அமைக்கப்படும். </p><p>நன்னெறி சாகுபடி, நஞ்சற்ற உற்பத்தி, உலகளாவிய ஏற்றுமதிக்காக வேளாண் பட்ஜெட்டில் ரூ.8.43 கோடி ஒதுக்கீடு.</p><p>தென்னை பதப்படுத்தும் கழகம் ரூ.5.30 கோடியில் அமைக்கப்படும்.</p><p>தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தென்னை சாகுபடி ஊக்குவிக்க ரூ.16 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>சிறந்த விவசாயிகளுக்கு வெற்றி விவசாயி, அஞ்சலை அம்மாள், நம்மாழ்வார் விருதுகள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vetri-vivasayi-anjalai-ammal-and-nammalvar-awards-announced-for-outstanding-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vetri-vivasayi-anjalai-ammal-and-nammalvar-awards-announced-for-outstanding-farmers#comments</comments><guid isPermaLink="false">a20384fc-858b-4c35-8358-93db8ce717f0</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:21:17 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:21:17.825Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/6wd60h7a/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வேளாண் பட்ஜெட்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேளாண் பட்ஜெட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/6wd60h7a/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/12-districts-likely-to-face-severe-impact-due-to-super-el-ni%C3%B1o-agriculture-minister">வேளாண் பட்ஜெட்</a>டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள விவசாயிகளுக்கான விருதுகள்  பின்வருமாறு:-</p><h2>வெற்றி விவசாயி விருது</h2><p>நெல், சோளம், கம்ப், மக்காசோளம் துவரை, உளுந்து, பச்சைப்பயிறு நிலக்கடலை விவசாயத்தில் மாவட்ட அளவில் ஆண்டுதோறும் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.</p><p>மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.</p><p>மாவட்டந்தோறும் வழங்கப்படும் வெற்றி விவசாயி விருதுக்கு ரூ.67.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  </p> <h2>அஞ்சலை அம்மாள் விருது</h2><p>மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும்.</p><p>அஞ்சலையம்மாள் விருதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.</p><p>சிறு, குறு விவசாயிகள் கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை குறைந்தது 2 ஏக்கரில் சாகுபடி செய்வதும், தினை, சாமை, குதிரைவாலி மற்றும் எள் குறைந்தது 1 ஏக்கரில் சாகுபடி செய்திருக்க வேண்டும் என்பது பரிசுகளுக்கான தகுதி அளவாகும்.</p><h2>நம்மாழ்வார் விருது</h2><p>5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>வாழை முதல் தென்னை வரை: தோட்டக்கலை விவசாயிகளுக்கு நிதி மழை பொழிந்த பட்ஜெட்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/from-banana-to-coconut-budget-brings-financial-rain-for-horticulture-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/from-banana-to-coconut-budget-brings-financial-rain-for-horticulture-farmers#comments</comments><guid isPermaLink="false">e79fa81c-0047-4c3d-8aac-64f699de4369</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:16:35 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:16:35.251Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/umrqzobx/rrrr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/umrqzobx/rrrr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/one-lakh-green-manure-to-protect-soil-fertility-minister-vinoth"> அமைச்சர் வினோத்</a> உரையாற்றினார்.</p><p>விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், தோட்டக்கலை மற்றும் பயிர்ப் பாதுகாப்பை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய நிதி ஒதுக்கீடுகள்:</p><h2><strong>சாமந்தி சாகுபடிக்கு LED விளக்குகள்:</strong></h2><p>சாமந்தி மலர் சாகுபடியை ஊக்குவிக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் LED விளக்குகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>சீமை கருவேல மரங்கள் அகற்றம்:</strong></h2><p>நிலத்தடி நீரைக் குடிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றி, நிலங்களை விளைநிலங்களாக மாற்ற ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>வாழைக்கு முட்டுக்கொடுக்கும் திட்டம்:</strong></h2><p>காற்று மற்றும் இயற்கைச் சீற்றங்களால் வாழை மரங்கள் சேதமடைவதைத் தடுக்க, வாழைக் கன்றுகளுக்கு முட்டுக்கொடுக்கும் சிறப்புத் திட்டத்திற்கு ரூ.6.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>தென்னை மேம்பாட்டுச் சிறப்புத் திட்டம்:</strong></h2><p> தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தென்னை சாகுபடி ஊக்குவிக்க ரூ.16 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>AI தொழில்நுட்பத்தில் உழவர் செயலி- ரூ.2 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-2-crore-for-ai-farmer-app</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-2-crore-for-ai-farmer-app#comments</comments><guid isPermaLink="false">5320a74c-d087-41d9-bf95-b53c38f8a3c7</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:08:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:08:32.008Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="616" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/j2dtgujq/Minister-Vinoth1.jpg" width="1090"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/j2dtgujq/Minister-Vinoth1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி ஒதுக்கீடு.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">வானிலை</a>, பாசனம், சந்தை விலை நிலவரம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் செல்போனில் அறிந்து கொள்ளும் வகையில் ஏஐ உழவர் செயலி.</p><p>ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகளை வழங்க ஏஐ அடிப்படையிலான செயலிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு.</p><p>சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.63.81 கோடி.</p><p>அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத்தினை, பாப்பரை, குலசாமை பயிர்களின் செயல்விளக்கத் திடல்களுக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.</p><p>சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்சாகுபடியை இருமடங்காக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கத்திற்கு ரூ.7.61 கோடி ஒதுக்கீடு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-revokes-announcement-abolishing-separate-fee-for-seat-selection-on-flights" rel="nofollow">பருத்தி உற்பத்தி</a>யை பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27.21 கோடி ஒதுக்கீடு.</p><p>விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமையை உறுதிப்படுத்த வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.170.70 கோடி ஒதுக்கீடு.</p><p>மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி ஒதுக்கீடு.</p><p>காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி ஒதுக்கீடு.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சூப்பர் எல் நினோவால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு - வேளாண் அமைச்சர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/12-districts-likely-to-face-severe-impact-due-to-super-el-ni%C3%B1o-agriculture-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/12-districts-likely-to-face-severe-impact-due-to-super-el-ni%C3%B1o-agriculture-minister#comments</comments><guid isPermaLink="false">27692622-34ea-4c55-b677-54e8a44236d2</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:00:31 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:00:31.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/hh7mc2g4/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/hh7mc2g4/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">வேளாண் பட்ஜெட்</a>டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>பட்ஜெட்டில் எல் நினோ மற்றும் பயிர் சாகுபடி குறித்து அமைச்சர் பேசியவை பின்வருமாறு பின்வருமாறு, </p><p>பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக ரூ.648 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8.26 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. </p><h2>எல் நினோ</h2><p>விவசாயிகளை வாழ வைப்பது மழை தரும் வானம் தான் என்றாலும், அவர்களை வருந்துவதும் அதே வானமாக தான் உள்ளது. </p><p>இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள சூப்பர் எல் நினோ நிகழ்வினால் நாடு முழுவதும் பெரும் தாக்கம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. </p><p>எனவே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டு திட்டம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு  அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>மாம்பழத்திற்கு, குறிப்பாக பெங்ளூரா ரக மாம்பழத்திற்கு கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் போதிய விலை கிடைக்காத சூழல் கடந்த ஆண்டு இருந்தது. எனவே அந்த வகை மாம்பழத்திற்கு ஒன்றிய அரசின் சந்தை இடையீட்டு திட்டத்தில் விலை வித்தியாசத் தொகையை வழங்க ஒன்றிய அரசுக்கு உரிய கருத்துரை அனுப்பி முதல் முறையாக ஒப்புதல் பெறப்பட்டது. </p><p>6 மெட்ரிக் தன் மட்டுமே மேலும் இதற்கு உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருங்காலங்களில் இத்தகு சூழலை எதிர்கொள்ள அரசு முற்றிலும் தயாராக உள்ளது. </p><h2>உற்பத்தி</h2><p>மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 5 ஆண்டுகளில் 131 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ள நிலையில் 2026-27 ஆம் ஆண்டிற்கு 125 லட்சம் மெட்ரிக் டன் ஆக இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது. </p><p>இதுதவிர ஊட்டச்சத்து வழங்கும் பயிர்கள், காய்கறிகள் உணவு வகைகளிலும் உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவை எட்டி ஊட்டச்சத்து பாதுகாப்பு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை எட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். </p><p>முன்னதாக நேற்று 2026-2027 பொது பட்ஜெட்டில், வரவிருக்கும் 'சூப்பர் எல் நினோ' மற்றும் வறட்சிச் சூழலின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>நெல் விதை உற்பத்தி மானியத்திற்கு சிறப்பு திட்டம்- ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-scheme-for-paddy-seed-production-subsidy-rs-34-72-crore-allocation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-scheme-for-paddy-seed-production-subsidy-rs-34-72-crore-allocation#comments</comments><guid isPermaLink="false">02e09bb1-2efd-441c-a5ad-b0a73c0e4978</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:53:33 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:53:33.574Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ile6qs0y/MInister-Vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ile6qs0y/MInister-Vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>ரூ.4 கோடி மதிப்பீட்டில் 1 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும்.</p><p>உயிர்ம வேளாண் பரவலாக்க சிறப்பு திட்டத்தில் 20,000 ஏக்கருக்கு தலா ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p><p>இயற்கை உரங்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.4.5 கோடி ஒதுக்கீடு.</p><p>மத்திய மாநில அரசின் பங்களிப்பில் புதிய வேளாண் இயற்கை தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு.</p><p>மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் 1 லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும்- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-lakh-green-manure-to-protect-soil-fertility-minister-vinoth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-lakh-green-manure-to-protect-soil-fertility-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">5e1d36b5-470f-41bc-ab83-ac0e990012c0</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:53:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:53:09.123Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/100-percent-crop-insurance-for-agri-produce-vinod">அமைச்சர் வினோத் </a>உரை நிகழ்த்தினார். மண்வளப் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்:</p><h2><strong>1 லட்சம் பசுந்தாள் உரம்:</strong></h2><p>மண் வளத்தை மேம்படுத்தி, இயற்கை முறையில் விவசாயத்தைச் செழுமைப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு 1 லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும்.</p><h2><strong>மண்வளப் பாதுகாப்புக்கு ரூ.600 கோடி:</strong> </h2><p>மண்வளப் பாதுகாப்பிற்காகச் சிறப்பு ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்பட்டு, அதற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்க முடிவு - அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-100-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-100-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">49626a4c-7e14-441b-b53c-cf160d880241</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:50:12 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:50:12.138Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை <a href="https://www.maalaimalar.com/news/topnews/let-us-build-a-vetri-tamilnadu-with-successful-farmers-minister-vinoth">அமைச்சர் வினோத்</a> உரையாற்றினார்.</p><p>வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதே முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டு, அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:</p><h2><strong>வேளாண் வளர்ச்சி &amp; பாதுகாப்பு:</strong></h2><p>"நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்தத் துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது" என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், பழைய திட்டங்களுடன் விவசாயிகளுக்கான சில புதிய திட்டங்களும் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.</p><h2>ப<strong>யிர் காப்பீடு:</strong></h2><p>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 14 தொகுப்புகளுக்கு மாநில அரசின் நிதியாக ரூ.648 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உணவு உற்பத்தி &amp; மண்வளம்:</strong></h2><p>அடுத்த 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்வளப் பாதுகாப்புக்கான ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>இலவச மின்சாரம்:</strong></h2><p>விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத் திட்டக் கட்டணத் தொகையாக மின்சார வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும்.</p><h2><strong>குறுவை தொகுப்பு &amp; தூர்வாரும் பணிகள்:</strong> </h2><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்க முடிவு - அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/100-percent-crop-insurance-for-agri-produce-vinod</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/100-percent-crop-insurance-for-agri-produce-vinod#comments</comments><guid isPermaLink="false">947145af-4751-4d88-8637-4688c354c774</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:42:01 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:42:01.224Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை <a href="https://www.maalaimalar.com/news/topnews/let-us-build-a-vetri-tamilnadu-with-successful-farmers-minister-vinoth">அமைச்சர் வினோத்</a> உரையாற்றினார்.</p><p>வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதே முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டு, அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:</p><h2><strong>வேளாண் வளர்ச்சி &amp; பாதுகாப்பு:</strong></h2><p>"நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்தத் துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது" என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், பழைய திட்டங்களுடன் விவசாயிகளுக்கான சில புதிய திட்டங்களும் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.</p><h2>ப<strong>யிர் காப்பீடு:</strong></h2><p>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 14 தொகுப்புகளுக்கு மாநில அரசின் நிதியாக ரூ.648 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உணவு உற்பத்தி &amp; மண்வளம்:</strong></h2><p>அடுத்த 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்வளப் பாதுகாப்புக்கான ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>இலவச மின்சாரம்:</strong></h2><p>விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத் திட்டக் கட்டணத் தொகையாக மின்சார வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும்.</p><h2><strong>குறுவை தொகுப்பு &amp; தூர்வாரும் பணிகள்:</strong> </h2><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>குறைந்த விலை ரீசார்ஜ்-ஐ திடீரென நீக்கிய ஏர்டெல்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/airtel-discontinues-rs-299-prepaid-recharge-pack-nearly-one-year-after-price-hike</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/airtel-discontinues-rs-299-prepaid-recharge-pack-nearly-one-year-after-price-hike#comments</comments><guid isPermaLink="false">7849a442-d28f-4733-b70b-70cfefe5e105</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>airtel,ஏர்டெல்,Prepaid  Offers,பிரீபெயிட் சலுகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/003qva87/Airtel-Logo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Airtel Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/003qva87/Airtel-Logo.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/airtel">ஏர்டெல்</a> கடந்த ஆண்டு, அதிவேக இணையம், அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் பலவற்றை வழங்கிய தனது மிகவும் மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியது. இந்த குறிப்பிடத்தக்க விலை உயர்வுக்கு ஒரு வருடம் கழித்து, ஏர்டெல் நிறுவனம் இப்போது தனது ரூ. 299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தனது இணையதளம் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் இருந்து நீக்கியுள்ளது. </p><p>ரூ. 299 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்திற்கு பதிலாக, இப்போது ரூ. 349 ரீசார்ஜ் நிறுவனத்தின் மிகவும் மலிவான ரீசார்ஜாக மாறியள்ளது. இது முந்தைய திட்டங்களைப் போன்ற பலன்களுடன் சில கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது. இதற்கிடையில், நிறுவனம் தனது ரூ. 579 மற்றும் ரூ. 619 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களையும் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.</p><h2>ரீசார்ஜ் நீக்கம்:</h2><p>பிரபல தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான ஏர்டெல், தனது ரூ. 299 பிரீபெய்ட் ரீசார்ஜ் ஆஃபரை நீக்குவதற்கும் நிறுத்துவதற்கும் தனது இணையதளத்தை புதுப்பித்துள்ளது . </p><p>இந்த ரீசார்ஜ், 28 நாட்கள் வேலிடிட்டியுடன், அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா, மற்றும் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வழங்கி வந்தது. மேலும், இது ஒரு நாளைக்கு 100 SMS, இலவச காலர் ட்யூன்கள், மற்றும் ஒரு பெர்பிளக்சிட்டி ப்ரோ AI சந்தா ஆகியவற்றையும் வழங்கியது.</p><p>இதன் மூலம், ரூ. 349 ரீசார்ஜ் திட்டம் இப்போது நாட்டில் ஏர்டெல் வழங்கும் மலிவு விலை ரீசார்ஜ் பேக் ஆகும். இந்த திட்டம் அன்லிமிட்டெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 SMS ஆகிய பலன்களை வழங்குகிறது.</p><p>மேலும், இது 28 நாட்கள் வேலடிட்டி கொண்டுள்ளது. சந்தாதாரர்கள் ஆறு மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் சந்தாவையும், இலவச ஏர்டெல் ஹலோடியூன்ஸ் மற்றும் 12 மாதங்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் ஆகியவற்றையும் இலவசமாக பெறலாம்.</p><p>இது தவிர, பயனர்கள் இதே பலன்களை வழங்கும் ரூ. 399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக் தேர்வு செய்யலாம். இதில் தினசரி அதிவேக இணைய டேட்டா அளவு 2.5 ஜிபி-ஆக உள்ளது.</p><p>கூடுதலாக, இது ஆப்பிள் மியூசிக் சந்தாவிற்கு பதிலாக 28 நாள் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்குகிறது. முன்பு குறிப்பிட்டபடி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நிறுவனம் ரூ. 249 ரீசார்ஜ் பேக்கின் விலையை ரூ. 299 ஆக உயர்த்தியது.</p>]]></content:encoded></item><item><title>வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவோம் -அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/let-us-build-a-vetri-tamilnadu-with-successful-farmers-minister-vinoth</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/let-us-build-a-vetri-tamilnadu-with-successful-farmers-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">4ebf182d-a371-4993-baff-a273ac326d13</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:30:31 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:30:31.665Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/3y42ddpb/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/3y42ddpb/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை <a href="https://www.maalaimalar.com/news/topnews/you-are-a-farmer-in-a-suit-agriculture-minister-heaps-praise-on-chief-minister-vijay-opposition-parties-object-samayanayagars-action">அமைச்சர் வினோத்</a> இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு..</p><h2><strong>வெற்றி தமிழ்நாடு இலக்கு:</strong></h2><p>"வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது அரசின் முதன்மை இலக்கு" என அமைச்சர் வினோத் தனது உரையில் குறிப்பிட்டார்.</p><h2><strong>தனி பட்ஜெட் நடைமுறை:</strong></h2><p>விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையைத் தொடர்ந்து முன்னெடுக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.</p><h2><strong>நவீன தொழில்நுட்பம் &amp; AI</strong></h2><p>செயற்கை நுண்ணறிவின் (AI) வருகையால் 2021-ம் ஆண்டு முதல் விவசாயத் துறை புதிய பரிணாமத்தையும் வளர்ச்சியையும் பெற்றுள்ளது.</p><h2><strong>பாதுகாப்பு &amp; உறுதிப்பாடு:</strong></h2><p>தமிழகத்தில் வேளாண்மையையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு முழு உறுதியுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>கோட் சூட் போட்ட விவசாயி நீங்கள்.. முதல்வர் விஜய்க்கு புகழுரை வாசித்த வேளாண் அமைச்சர் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு - சபாநாயகர் செய்த செயல்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/you-are-a-farmer-in-a-suit-agriculture-minister-heaps-praise-on-chief-minister-vijay-opposition-parties-object-samayanayagars-action</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/you-are-a-farmer-in-a-suit-agriculture-minister-heaps-praise-on-chief-minister-vijay-opposition-parties-object-samayanayagars-action#comments</comments><guid isPermaLink="false">104efff9-0acb-4cbb-9101-af98b934aa2e</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:29:29 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:29:29.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/4ivse0jh/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வேளாண் அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேளாண் அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/4ivse0jh/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D"> வேளாண் பட்ஜெட்டை </a>வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>பேச்சை தொடங்கிய வேளாண் அமைச்சர் ரமேஷ், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை பேரவைக்கு அளிக்கிறேன். </p><p>வெற்றி தமிழ்நாட்டை மிளிர செய்வதை நோக்கமாக கொண்டுள்ள மாண்புமிகு முதல்வருக்கும் வெற்றிப் பாதையில் உள்ள முற்களை மலர்களாக்கி காய்களை கனிகளாக்கி முன்னே அழைத்துச் செல்லும் விவசாயிகளுக்கு வணக்கம். </p><p>பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயக முதல்வர் நீங்கள் (என இருமுறை கூறி) திரைமன்றங்களில் மட்டுமல்ல சட்டமன்றத்திலும் நாயகன் நீங்கள்தான் (இருமுறை). </p><p>உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி ஊழல் ஒவ்வொன்றையும் கலையெடுத்து சமத்துவம் எனும் செடி வளர்த்து மக்களாட்சி எனும் பெரும் மரத்தை பிடித்து நிற்கும் கோட் சூட் அணிந்த விவசாயி நீங்கள்.</p><p>விசில் என்பது ஒலி அல்ல, அது பாமரர்களின் மொழி. அதுவும் உலகின் பொது மொழி. விசில், காற்று இசைத்த முதல் ராகம். விசில், மனிதன் பயன்படுத்திய முதல் தொலைபேசி. விசில் தனியாக ஒலித்தாலும் கம்பீரம் குறையாது. </p> <p>அணியோடு சேரும்போது அகம்பாவம் இருக்காது. ஊரெல்லாம் நாற்றமெடுத்த ஊழலை ஒழிக்க உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை. ஒற்றுமையோடு சாதி சமயம் மறந்து நாங்கள் கொண்டாட உங்களை போல் ஒரு வரம் இல்லை. </p><p>இனிமேல் தமிழ்நாட்டின் தலைப்பு செய்தி ஒன்று நீங்கள் பேசுவதாக இருக்கும். இல்லை நீங்கள் பேசப்படுவதால் இருக்கும். ஆழிப்பேரலையாய் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெருங்கடலை....</p><p>என பேசிக்கொண்டிருக்க எதிர்கட்சிகள், வேளாண் படஜெட்டை தாக்கல் செய்யாமல் சொந்த கட்சி மற்றும் தலைவர் துதி பாடுவதாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த எம்எல்ஏக்கள் கூச்சல் எழுப்பினர். </p><p>அவர்கள் எதிர்ப்பை தொடர்ந்து அவர்களை அமைதியுடன் இருக்க வலியுறுத்திய சபாநாயகர் பிரபாகர், வேளாண் பட்ஜெட்டை மட்டும் வாசிக்கும்படி அமைச்சருக்கு அறிவுறுத்தினார். அதான் நானே சொல்லிட்டேனே, அமைதியா இருங்க என எதிர்கட்சியினரை இருக்கைகளில் அமர சொல்லி பிரபாகர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>பாஜகவுக்கு ஷாக்.. திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பும் 3 அதிருப்தி எம்.பிக்கள்?</title><link>https://www.maalaimalar.com/news/national/west-bengal-ncpi-mps-shift-three-muslim-mps-likely-to-return-to-mamatas-trinamool-congress</link><comments>https://www.maalaimalar.com/news/national/west-bengal-ncpi-mps-shift-three-muslim-mps-likely-to-return-to-mamatas-trinamool-congress#comments</comments><guid isPermaLink="false">a787a731-049a-454c-877d-cdcddb4f3ef6</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:51:37 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:51:37.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,திரிணாமுல் காங்கிரஸ்,எம்.பி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/c88oo1nq/tn-21.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/c88oo1nq/tn-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தாவின் திரிணமுல் ணாமுல் காங்கிரஸ் பாஜகவிடம் தோற்று ஆட்சியை இழந்தது. வெற்றி பெற்ற 80 திரிணாமுல் எம்எல்ஏக்களில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்களையே எதிர்க்கட்சியாக சபாநாயகர் அங்கீகரித்துள்ளார். </p><p>இதனிடையே அதிருப்தியால் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த 20 எம்.பி.க்கள், பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் வகையில் 'தேசியவாதக் குடிமக்கள் கட்சி' (NCPI) என்ற பிராந்திய கட்சியில் இணைந்தனர் </p><p>இந்த 20 எம்.பி.களில்  உள்ள 3 முஸ்லிம் எம்பிக்கள் மீண்டும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜியின்</a> திரிணமுல் காங்கிரஸ் பக்கமே திரும்பக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. </p><h2>புறக்கணித்த எம்.பி.க்கள்</h2><p>முர்ஷிதாபாத் தொகுதி எம்பி அபூ தாஹிர் கான், ஜங்கிபூர் தொகுதி எம்பி கலிலூர் ரஹ்மான், பஹரம்பூர் தொகுதி எம்பி யூசுப் பதான் ஆகியோரே அந்த மூவர் ஆவர்.</p><p>பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற என்டிஏ எம்பிக்களின் கூட்டத்திற்கு NCPI அணியின் 17 எம்பிக்கள் மட்டுமே சென்றிருந்த நிலையில், இந்த 3 எம்பிக்களும் இரண்டாவது முறையும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.</p> <h2>முஸ்லிம் நலன்  </h2><p>இதனிடையே நாடாளுமன்றத்தில் குடிமக்கள் அவர்களில் ஒருவரான அபூ தாஹிர் கான், "முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு மசோதாவையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். நாங்கள் பாஜகவில் இணையவோ, என்டிஏ கூட்டணியில் தொடரவோ மாட்டோம்" என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். </p><p>திரிணமுல் காங்கிரஸின் மூத்த எம்பியான சௌகதா ராய் மற்றும் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர்களுடன் இந்த 3 எம்பிக்களும் தொடர்ந்து பேசி வருவதாகவும், அவர்கள் மீண்டும் மம்தா பானர்ஜி தலைமைக்கே திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p> <h2>பலம்</h2><p>திரிணமுல் காங்கிரஸிலிருந்து பிரிந்த 20 எம்பிக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயாமல் இருக்க, மூன்றில் இரண்டு பங்கு (குறைந்தது 19 எம்பிக்கள்) எண்ணிக்கை பலம் தேவையாக உள்ளது. </p><p>இந்த 3 எம்பிக்களும் விலகி விட்டால் NCPI அணியின் எண்ணிக்கை 17 ஆகக் குறையும். இதனால் அவர்களின் எம்பி பதவிக்குச் சட்டரீதியான சிக்கல் எழக்கூடும்.</p><p>எனவே பாஜக மற்றும் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஆகியோர் மற்ற எம்பிக்களைத் தக்கவைக்கவும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஸ்பாட்டிஃபை பிரீமியம் சந்தா முற்றிலும் இலவசம் - எப்படி தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/spotify-premium-available-free-for-users-with-select-boat-devices-vi-prepaid-plans</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/spotify-premium-available-free-for-users-with-select-boat-devices-vi-prepaid-plans#comments</comments><guid isPermaLink="false">3d1a2114-e541-465a-9f67-20164cec5903</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:41:00 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:41:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வோடபோன் ஐடியா,boat,Vi,Spotify,ஸ்பாடிஃபை,போட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/11n7zjf8/Spotify-Logo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Spotify Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/11n7zjf8/Spotify-Logo.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பிராண்டுகள் பயன்படுத்தும் சமீபத்திய மதிப்புக்கூட்டு சேவையாக ஸ்பாட்டிஃபை பிரீமியம் உருவெடுத்துள்ளது. ஆடியோ பிராண்டான போட் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா ஆகியவை தனித்தனியாக ஸ்பாட்டிஃபை பிரீமியத்துடன் கூட்டாண்மைகளை அறிவித்துள்ளன. </p><p>பயனர்களுக்கு மேலும் முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதற்காக, இந்த மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையை தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இணைத்து வழங்குகின்றன.</p><h2>பிரீமியம் இலவசம்:</h2><p>போட் நிறுவனம் தனது ஆடியோ ஹார்டுவேரை ஸ்பாடிஃபை பிரீமியம் (Spotify Premium) சந்தாக்களுடன் இணைத்து வரும் வேளையில், வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் இந்த ஸ்ட்ரீமிங் சேவையை, ஏற்கனவே உள்ள தனது டேட்டா மற்றும் பொழுதுபோக்கு பலன்களுடன் சேர்த்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீபெய்ட் ரீசார்ஜ்களிலும் ஒருங்கிணைத்து வழங்குகிறது.</p><p>ஸ்பாட்டிஃபை பிரீமியத்துடன் ஒரு கூட்டாணியை போட் நிறுவனம் அறிவித்துள்ளது . இதன் கீழ், தகுதியான ஆடியோ தயாரிப்புகளுடன் நான்கு மாத ஸ்பாட்டிஃபை பிரீமியம் சந்தா வழங்கப்படும். இந்த சந்தா முதல் 12 வாரங்களுக்கு இலவசம். மேலும், இது பயனர்களுக்கு விளம்பரமில்லா இசையை கேட்கவும், ஆஃப்லைன் பதிவிறக்கம் மற்றும் உயர்தர ஆடியோ ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கிறது.</p><h2>நீண்டகால மதிப்பு:</h2><p>ஆடியோ பிராண்டுகள், தங்கள் தயாரிப்புகளை வேறுபடுத்தி காட்டுவதற்காக, அம்சங்கள் தவிர்த்து ஒருங்கிணைந்த சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் நன்மைகள் மூலம் அதிகளவில் கவனம் செலுத்துகின்றன. புதிய சாதனங்களை வாங்கும் போது ஸ்ட்ரீமிங் சந்தா, கிளவுட் ஸ்டோரேஜ் அல்லது கேமிங் சலுகைகளை வழங்கும் ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் இதே போன்ற உத்திகளை கையாண்டுள்ளன.</p><p>தனித்தனியாக, வோடபோன் ஐடியா நிறுவனம் கூடுதல் கட்டணம் இல்லாமல் ஸ்பாட்டிஃபை பிரீமியத்தை உள்ளடக்கிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முதன்மை திட்டமான ரூ. 435 நான்-ஸ்டாப் ஹீரோ பிளான், அன்லிமிட்டெட் 4G/5G டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்., ஜியோஹாட்ஸ்டார் (மொபைல்) மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய ஸ்பாட்டிஃபை பிரீமியம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.</p><p>இதற்கிடையில், ரூ.230 ஆட்-ஆன் பேக்கில் 30ஜிபி அதிவேக டேட்டா, ஸ்பாட்டிஃபை பிரீமியம் மற்றும் ஜியோஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ், லயன்ஸ்கேட் ப்ளே மற்றும் ஃபேன்கோட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட OTT தளங்களுக்கான சேவையும் அடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேர் கைது 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-tamil-nadu-fishermen-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-tamil-nadu-fishermen-arrested#comments</comments><guid isPermaLink="false">0868fc3b-916c-40d6-a8f9-cc8df87125f6</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:23:15 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:23:15.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Srilankan Navy,TN fishermen,தமிழக மீனவர்கள்,மீனவர்கள் கைது,இலங்கை கடற்படை,Fishermen Arrested</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/09/23/4821493-fisherman.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fishermen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/09/23/4821493-fisherman.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எல்லைதாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.</strong></em></p><p>எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">தமிழக மீனவர்கள்</a> இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.</p> <p>இந்நிலையில், எல்லைதாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.</p><p>கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. </p> ]]></content:encoded></item><item><title>வங்கதேசத்தில் பாகிஸ்தான் ISI-யின் ஆதிக்கம்.. பயங்கரவாதிகள் சுதந்திரமாக திரிகின்றனர் -  ஷேக் ஹசீனா மகன்</title><link>https://www.maalaimalar.com/news/world/bangladesh-security-alert-sajib-joy-alleges-isi-free-operation-and-extremist-release-in-bangladesh</link><comments>https://www.maalaimalar.com/news/world/bangladesh-security-alert-sajib-joy-alleges-isi-free-operation-and-extremist-release-in-bangladesh#comments</comments><guid isPermaLink="false">658a5dca-a9b3-4f5d-938d-c9fe75b1e88b</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:06:25 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:06:25.826Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,terrorists,Sheikh Hasina,பயங்கரவாதிகள்,ஷேக் ஹசீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/znyihuyz/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சஜீப் வாஜித் ஜாய், ஷேக் ஹசீனா]]></media:title><media:description type="html"><![CDATA[ சஜீப் வாஜித் ஜாய், ஷேக் ஹசீனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/znyihuyz/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>வங்கதேசத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தடையில்லாமல் சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதாக  ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாய் எச்சரித்துள்ளார். </p><p>மாணவர் போராட்டத்தால் ஆட்சியை இழந்து இந்தியா தப்பி வந்ததன் 2 ஆண்டுகள் நிறைவை ஒட்டி வங்கதேச முன்னாள் பிரதமரும் அவாமி லீக் தலைவருமான <a href="https://www.maalaimalar.com/news/world/whatever-fate-awaits-me-i-will-return-to-my-people-sheikh-hasina">ஷேக் ஹசீனா</a> நேற்று டெல்லியில் இணைய வழியில், முகத்தை காட்டாமல் குரல் வழி செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். </p><p>2 ஆண்டுகள் பின் அவர் இந்தியாவில் பங்கேற்கும் முதல் நிகழ்வு இது. இதில் அவரின் மகன்  சஜீப் வாஜித் ஜாயும் கலந்துகொண்டார்.</p> <h2>சஜீப் வாஜித் ஜாய்</h2><p>அங்கு ஜாய் பேசியதாவது, இந்தியாவின் மேற்கு எல்லையில் பாகிஸ்தான் இருப்பது போல், தற்போது கிழக்கிலும் மற்றொரு பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு இங்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>அவாமி லீக் ஆட்சியின் போது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை தற்போதைய நிர்வாகம் விடுதலை செய்துள்ளது.</p><p>தடைசெய்யப்பட்ட 'ஹிஸ்புத் தகரீர்' அமைப்பு வீதிகளில் பகிரங்கமாக அணிவகுப்பு நடத்துகிறது. அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.</p><p>இந்த நிலையை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் சர்வதேச அளவில் உருவாகும் அடுத்தகட்ட பயங்கரவாதிகள் வங்கதேசத்தில் இருந்தே வருவார்கள்.</p><p>வங்கதேசத்தில் நடக்கும் இந்த மாற்றங்கள் இந்தியாவிற்கும் உலக நாடுகளுக்கும் நல்லதல்ல.</p><p>சர்வதேச நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் மிக வேகமாக மாறக்கூடியவை. அமெரிக்கா கூட சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானைப் புறக்கணித்துவிட்டு தற்போது நெருக்கம் காட்டுவது இதற்குச் சான்று</p><p>உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஊடகங்கள், வங்கதேசத்தில் நடக்கும் இந்த ஆபத்தான நிலவரங்களை தொடர்ந்து உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்" என்றார்.</p> <h2>ஷேக் ஹசீனா பேசியது என்ன?</h2><p>இதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷேக் ஹசீனா,மிகுந்த துன்பங்களை அனுபவித்ததாலும் அதை இனியும் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாததாலும் வங்கதேசத்திற்கு திரும்பி செல்ல முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p>"அவர்கள் என்னை சிறையில் அடைக்கலாம் அல்லது கொன்றுவிடலாம் என்பது எனக்கு தெரியும். நான் என் மக்களுடன் இருப்பதற்காக என் வீட்டிற்குத் திரும்பிச் செல்வேன்," என்று கூறினார்.</p><p>"டிசம்பர் எங்கள் வெற்றி மாதம். அதனால், நான் டிசம்பர் மாதத்தில் திரும்பி செல்ல விரும்புகிறேன். நான் எதையும் எதிர்கொள்ள நேரிடலாம் என்று எனக்கு தெரியும்.</p> <p>தற்போதைய நெருக்கடி குறித்துப் பேசுவதற்கு முன்பு, தேசத்தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கும், முக்கிய தேசிய தலைவர்களுக்கும், நமது விடுதலைப் போரின் முப்பது லட்சம் தியாகிகளுக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.</p><p>மேலும், 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நான் இழந்த எனது சொந்த குடும்ப உறுப்பினர்களையும் ஆழ்ந்த துயரத்துடன் நினைவுகூர்கிறேன்," என்று அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா
</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-krithigai-festival-at-thiruttani-murugan-temple</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-krithigai-festival-at-thiruttani-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">d6678ed5-12c3-457d-bb34-4ac994175d2e</guid><pubDate>Thu, 06 Aug 2026 02:53:52 +0000</pubDate><atom:updated>2026-08-06T02:53:52.121Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,வழிபாடு,worship,aadi krithigai,Tiruttani Murugan Temple,திருத்தணி முருகன் கோவில்,ஆடிக்கிருத்திகை,ஆன்மீகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/r5jrzr04/muruga8.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan Valli Deivanai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/r5jrzr04/muruga8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று நடக்கிறது.</p><h2>திருத்தணி முருகன் கோவில்</h2><p>முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபத்மனுடன் செய்த பெரும் போரும் வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுகோபமும் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால் இதற்கு தணிகை என்று பெயரமைந்தது. இது முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழ்கிறது.</p> <h2>முருகன் கையில் வஜ்ரவேல்</h2><p>வருடத்தில் 365 நாட்களை குறிக்கும் வகையில் 365 படிகள் கொண்டதாக இந்த கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள உற்சவர் சன்னதி ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபமாக உள்ளது. இந்திரன் தனது ஐராவத யானையை தெய்வானைக்கு கல்யாண பரிசாக தந்த தலம் இது. வழக்கமான வேலுக்கு பதிலாக இங்கு வஜ்ரவேல் மற்றும் மயில் வாகனத்துக்கு பதிலாக யானை வாகனம் மூலவருக்கு சிறப்பு தருகிறது.</p> <h2>சரவணப்பொய்கை</h2><p>முருகப்பெருமான் சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கார்த்திகை பெண்களுக்கு குழந்தையாக அவதரித்த திருக்குளம், திருத்தணிகை சரவணப்பொய்கை தீர்த்தத்தில் நீராடுவோர் தங்களது உடல் உபாதைகள், பாவங்கள் களையப்படுவதாக ஐதீகம். சரவணப்பொய்கையில் நீராடிய பின்பே படிக்கட்டுகள் வழியாக மலைக்கோவிலை சென்றடைகின்றனர். ஆடிகிருத்திகை திருவிழாவின்போது மலைக்கோவிலில் உற்சவர் அலங்காரத்துடன் பவனி வந்து தெப்பக்குளத்தில் தெப்பத்தில் சுற்றி வருவது கண்கொள்ளா காட்சியாகும்.</p> <h2>ஆடிக்கிருத்திகை விசேஷம்</h2><p><a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-krithigai-vratham">ஆடிக்கிருத்திகை</a> என்பது சூரனை அழிக்க முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக அவதரித்தார். அந்த குழந்தைகளை 6 கார்த்திகை பெண்கள் பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். 'சரவணபவ' என்ற 6 எழுத்து மந்திரம், ஆறு முகம், ஆறு கரங்கள் உள்ளிட்ட பல சிறப்புகளையும், சூரனை அழித்து தேவர்களை காத்த ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.</p> <h2>மலர்க்காவடி</h2><p>முருகப்பெருமானை இந்திரன், ஆடிக்கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்கு சூட்டி வழிபட்ட தலமென்பதால் இங்கு அதிக அளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>