<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 05 Sep 2026 14:31:59 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 5 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-5-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-5-september-2026#comments</comments><guid isPermaLink="false">a50194c3-ec3d-4c7a-b287-9e0350ac3ac4</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:38:36 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:46:25.621Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1ky145b1/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1ky145b1/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/video-by-actress-leads-to-36-new-sanitary-napkin-dispensers-at-chennai-airport">நடிகையின் வீடியோவால் எதிரொலித்த கோரிக்கை: சென்னை விமான நிலையத்தில் 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் அமைப்பு!... </a></p><p>*பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். </p><p>*பெண்கள் தங்களின் பயணங்களின் போது நாப்கின்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nameboards-mandatory-by-november-1-madras-high-court">நவம்பர் 1-க்குள் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை: சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவு!... </a></p><p>*இந்த உத்தரவைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தவறினால் மற்றும் கடைகளைக் கண்காணிப்பதில் அலட்சியம் காட்டினால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/disaster-flood-in-nepal-60-year-old-woman-rescued-alive-after-11-days">நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 11 நாட்களுக்குப் பின் 60 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு... </a></p><p>* வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். </p><p>*இந்த பேரதிசய மீட்புச் சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றை அளித்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/namal-former-sri-lankan-president-rajapaksas-son-arrested-over-airbus-deal">ஏர்பஸ் விமான ஊழல் வழக்கில் கைது: நமல் ராஜபக்சே சிறையில் அடைப்பு</a></p><p>* 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார்.</p><p>* அவரை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/indian-youth-who-cleaned-polluted-river-gets-job-offer-from-dutch-ceo">நதியை மீட்டெடுத்த இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து சி.இ.ஓ அளித்த வேலை வாய்ப்பு!... </a></p><p>*பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு நெதர்லாந்து நிறுவனத்தின் அழைப்பு மட்டுமன்றி, உள்நாட்டிலும் பலதரப்பட்ட ஆதரவுகள் குவிந்து வருகின்றன. </p><p>*தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இவரின் தூய்மைப் பணியைப் பாராட்டியுள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/tomorrow-duleep-trophy-final-in-chepauk-ground">துலீப் டிராபி: நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தெற்கு-கிழக்கு மண்டலங்கள் மோதல்</a></p><p>* கேப்டன் திலக் வர்மா ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடித்து நல்ல பார்மில் உள்ளார்.</p><p>* நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியை ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/consultative-meeting-of-tvk-alliance-party-leaders">தவெக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்: திருமாவளவனுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு</a></p><p>*கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்றது. </p><p>*இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளிடையேயான அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-veerapandian-says-we-will-support-tvk-from-outside">தவெகவை வெளியில் இருந்தே ஆதரிப்போம்... கூட்டணியில் இடம்பெறவில்லை - வீரபாண்டியன் திட்டவட்டம்</a></p><p>* தவெகவின் நல்லாட்சி, நல்ல திட்டங்களை வரவேற்று ஆதரிப்போம்.</p><p>* அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்கவில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-banned-former-congress-mla-aassan-maulaana-from-contesting-elections-for-3-years">காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை</a></p><p>* கடந்த 2021-ம் ஆண்டு வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் அசன் மவுலானா.</p><p>* அசன் மவுலானா முறையாக கணக்கு காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip">செப்டம்பர் 9-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. ஆலோசனைக் கூட்டம்: கம்யூனிஸ்டு கட்சிகள் புறக்கணிப்பு?</a></p><p>* த.வெ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் சார்பில் எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது</p><p>* சென்னை அண்ணாநகரில் உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-will-never-fear-bjp-govt-actions-says-mp-kanimozhi" rel="nofollow">தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது- கனிமொழி எம்பி</a></p><p>* தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளது.</p><p>* மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-people-in-tn-safeonly-corrupt-are-not">தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது... ஊழல்வாதிகளுக்கு தான் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்ளும்.</p><p>* நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் சட்டசபை நடைபெறுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-caste-wise-census-must-be-conducted-by-incorporating-the-list-of-castes">சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* காகா கலேல்கர் தலைமையிலான முதலாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 2399 சாதிகள் இடம் பெற்றிருந்தன. </p><p>* ஒரு காலத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்த தாசரி, ஜங்கம் போன்ற வகுப்பினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி தான், 1993-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-5-9-2026">GOLD PRICE TODAY: நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day">ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!</p><p>* ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-3">தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.</p><p>* இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-greetings-to-teachers-who-shape-students-into-good-human-beings" rel="nofollow">மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!</p><p>* சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar" rel="nofollow">தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார்..!- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து</a></p><p>* வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>* வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-near-sattur-worker-dies">சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - தொழிலாளி உயிரிழப்பு</a></p><p>* சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னதம்பி பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.</p><p>* அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்பதாலும் வெடித்து சிதறுவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</a></p><p>* அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. </p><p>* மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நடுவானில் ரகளையில் ஈடுபட்ட பயணி: Tape மூலம் இருக்கையோடு கட்டிய ஊழியர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/american-airlines-passenger-taped-to-seat-after-midair-rampage</link><comments>https://www.maalaimalar.com/news/world/american-airlines-passenger-taped-to-seat-after-midair-rampage#comments</comments><guid isPermaLink="false">1f8d4533-c585-4766-a319-01c3268e7c94</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:24:37 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:24:37.418Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,நியூயார்க்,Baltimore,American Airlines,Duct Tape,Dallas-Fort Worth,டாலஸ் ஃபார்ட் வொர்த்,மேரிலாந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/hi4b2zkb/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ American Airlines]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/hi4b2zkb/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் டாலஸ் நகரிலிருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணி ஒருவர் நடுவானில் சக பயணிகளிடம் வம்பிலுத்து, ஊழியர்களைத் தாக்கி அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>டாலஸ் ஃபார்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நியூஜெர்சி நோக்கி AA618 என்ற <a href="https://www.maalaimalar.com/news/world/loud-explosion-near-kharg-island-us-missile-strike-on-iranian-oil-tanker">அமெரிக்கன் ஏர்லைன்ஸ் </a>விமானம் பறந்துகொண்டிருந்தது. பயணத்தின் பாதியில், 67 வயதான ஆர்தர் லண்டீன் என்ற பயணி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த சக பயணியிடம் தகராறில் ஈடுபட்டு அவரது கழுத்தைப் பிடித்துத் தாக்கத் தொடங்கினார். </p><p>நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற பெண் விமானப் பணிப்பெண்ணை, அவர் இனரீதியாகவும் தரக்குறைவாகவும் திட்டி அநாகரிகமாக நடந்துகொண்டார். மேலும், தடுக்க வந்த பிற பயணிகளையும் கடிக்க முயன்று வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>பயணியின் இந்த ஆபத்தான நடவடிக்கையால் விமானத்தில் இருந்த பயணிகள் இடையே பெரும் அச்சமும் பரபரப்பும் நிலவியது. இதையடுத்து, விமானத்தில் இருந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி உள்ளிட்ட சக பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் இணைந்து அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் ஆபத்து ஏதும் ஏற்படாமல் தடுக்க, அவரிடம் இருந்த டேப்பால் மற்றும் பிளாஸ்டிக் கைவிலங்குகளைப்  பயன்படுத்தி, அந்த நபரின் கை, உடல் மற்றும் தலைப் பகுதியை இருக்கையோடு சேர்த்து இறுக்கமாகக் கட்டிப்போட்டனர்.</p><h2><strong>தரையிறக்கப்பட்ட விமானம்</strong></h2><p>பயணியின் அத்துமீறல் அதிகமானதைத் தொடர்ந்து, விமானி உடனடியாக விமானத்தை பால்டிமோர் விமான நிலையத்திற்குத் திருப்பி அவசரமாகத் தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த மேரிலாந்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் எஃப்.பி.ஐ முகவர்கள் விமானத்திற்குள் நுழைந்து, இருக்கையில் கட்டப்பட்டிருந்த நபரை மீட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர்.</p><h2><strong>வழக்குப் பதிவு</strong></h2><p>கைது செய்யப்பட்ட பயணி மீது தாக்குதல் நடத்துதல், விமானப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பொது அமைதிக்குக் பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்குத் தான் தங்களின் முதல் முன்னுரிமை என்றும், விமானத்திற்குள் இதுபோன்ற வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. இருக்கையில் டேப்பால் நபர் கட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்</title><link>https://www.maalaimalar.com/sports/satwik-chirag-pair-enter-final-round-in-china-masters-super-750</link><comments>https://www.maalaimalar.com/sports/satwik-chirag-pair-enter-final-round-in-china-masters-super-750#comments</comments><guid isPermaLink="false">83e9cbce-f2ea-40fd-8226-133bf26af7f3</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:24:28 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:24:28.939Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Satwik Chirag Pair,சாத்விக் சிராக் ஜோடி,China Masters Badminton,சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c997ui9w/sadwik.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ satwik chirag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c997ui9w/sadwik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியது.</strong></em></p><p>சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது. நாளையுடன்  இந்தத் தொடர் முடிவடைகிறது.</p><p>இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் நூர் முகமது-டான் வீ கியாங் ஜோடி உடன் மோதியது.</p><p>இதில் சிறப்பாக ஆடிய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">சாத்விக் சிராக் ஜோடி</a> முதல் செட்டை 21-16 என வென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுதாரித்து ஆடிய மலேசிய ஜோடி 2வது செட்டை 21-18 என கைப்பற்றியது.</p><p>வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-11 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.</p><p>நடப்பு ஆண்டில் இந்த ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 3வது தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றிலும், லக்‌ஷயா சென் முதல் சுற்றிலும் தோல்வி அடைந்தனர். </p><p>இதேபோல், பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா ஆகியோரும் தோல்வி அடைந்து வெளியேறினர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-opt-to-bat-first-against-india-in-womens-asia-cup</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-opt-to-bat-first-against-india-in-womens-asia-cup#comments</comments><guid isPermaLink="false">c94ed294-c843-4217-b1af-2c841a898286</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:09:40 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:09:40.647Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,பாகிஸ்தான்,Pakistan,Womens Asia Cup,பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/hppun2wd/pakis.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pakistan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/hppun2wd/pakis.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.</strong></em></p><p>10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.</p><p>லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.</p><h2>அரையிறுதி</h2><p>ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள 7 முறை சாம்பியனான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தையும், 2-வது ஆட்டத்தில் ஹாங்காங்கையும் வீழ்த்தி அரையிறுதியை எட்டியது.</p><h2>இந்தியா-பாகிஸ்தான்</h2><p>இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் இந்தியாவும். 3-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>நடிகையின் வீடியோவால் எதிரொலித்த கோரிக்கை: சென்னை விமான நிலையத்தில் 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/video-by-actress-leads-to-36-new-sanitary-napkin-dispensers-at-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/video-by-actress-leads-to-36-new-sanitary-napkin-dispensers-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">0119ad7d-000f-44f0-b971-e2d6da679dcb</guid><pubDate>Sat, 05 Sep 2026 13:42:44 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:42:44.047Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,sanitary napkin,chennai airport,Vending machines,Actress Latha Rao,சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள்,லதா ராவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ofquku0q/NAPKIN.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Vending Machines  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ofquku0q/NAPKIN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாப்கின் இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாகவே அவை தற்காலிகமாக நீக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. </p><p>சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் பெண் பயணிகளின் அடிப்படை சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சின்னத்திரை நடிகை லதா ராவ் வெளியிட்ட வீடியோ பதிவைத் தொடர்ந்து, விமான நிலைய நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.</p><h2>பிரபல நடிகை <strong>லதா ராவ் ச</strong>ந்தித்த சங்கடம்</h2><p>பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டது. அவசரத்தில் கைவசம் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nameboards-mandatory-by-november-1-madras-high-court">சானிட்டரி நாப்கின்</a> எடுத்து வரத் தவறியதால், உடனடியாக அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் விசாரித்தபோது, கழிவறைகளில் முன்னர் இருந்த தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முனையத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையில் உள்ள மருந்தகத்திற்கு விரைந்து சென்று நாப்கின் வாங்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. இதனால் அவர் விமானத்தில் ஏறுவதற்கே தாமதமாகும் நிலை உருவானது.</p><p>இந்த அனுபவத்தை வீடியோவாகப் பதிவு செய்து லதா ராவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். பெண்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இடமான பன்னாட்டு விமான நிலையத்தில் இதுபோன்ற அடிப்படை வசதிகள் முடங்கிக் கிடப்பது வேதனையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பெண்கள் தங்களின் பயணங்களின் போது நாப்கின்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியது.</p><h2>தற்கா<strong>லிக ஏற்பாடு</strong></h2><p>நாப்கின் இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாகவே அவை தற்காலிகமாக நீக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, பெண் பயணிகளின் உடனடித் தேவையை பூர்த்தி செய்ய உடனடி தற்காலிக ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பெண்கள் கழிவறைகளில் பிரத்யேக தொலைபேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த எண்ணை அழைத்தால், அடுத்த 2 நிமிடங்களுக்குள் விமான நிலைய பெண் ஊழியர் நேரடியாக வந்து சானிட்டரி நாப்கினை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>36 புதி<strong>ய இயந்திரங்கள் நிறு</strong>வும் பணி</h2><p>இந்த தற்காலிக ஏற்பாட்டைத் தொடர்ந்து, நிரந்தர தீர்வாக சென்னை விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறைகளில் மொத்தம் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை நிறுவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து இயந்திரங்களும் பொருத்தப்பட்டு, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை ஒருவர் துணிச்சலாக எழுப்பிய புகாருக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீனாவில் சுவாரசியம்: வனவிலங்குகளுக்கும் வந்துவிட்டது நர்சரி பள்ளி</title><link>https://www.maalaimalar.com/news/world/wildlife-kindergarten-in-china-lkg-classes-for-lion-and-tiger-cubs</link><comments>https://www.maalaimalar.com/news/world/wildlife-kindergarten-in-china-lkg-classes-for-lion-and-tiger-cubs#comments</comments><guid isPermaLink="false">d624b163-2cbf-4139-9107-c09dee960721</guid><pubDate>Sat, 05 Sep 2026 13:27:09 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:27:09.503Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,wild animal zoo,வனவிலங்கு பூங்கா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nmmwebk9/Untitled-design-21.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China wildlife nursery school]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nmmwebk9/Untitled-design-21.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவின் லெஹே லெடு வனவிலங்கு பூங்காவில், புதிதாக சிங்கம் மற்றும் புலி குட்டிகளுக்கு எல்.கே.ஜி வகுப்புகளை நடத்தும் சோங்கிங் மழலையர் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனாவின்</a> யோங்சுவான் மாவட்டத்தில் 30 லட்சம் sq.km பரப்பளவில் லெஹே லெடு என்ற வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவறும் வகையில் தனித்துவமான பொழுதுபோக்கு அம்சமான டிரக் சஃபாரி நடத்தப்படுகிறது. </p><h3><strong>டிரக் சஃபாரி</strong></h3><p>இந்த டிரக் சஃபாரியின் போது, வாகனத்தை சுற்றிலும் இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட்டு, அதின் உள்ளே சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி பயணம் மேற்கொள்கின்றனர்.     </p><p>அந்த பயணத்தின் போது டிரக்கில் கோழி இறைச்சி அல்லது மற்ற இறைச்சிகள் கட்டி தொடங்க விடப்படுகிறது.</p><p>இதையடுத்து சுற்றுலா பயணிகளுடன் அந்த வாகனம் சிங்கம், புலி மற்றும் கரடி என தனித்தனியாக பிரித்து பராமரிக்கப்படும் இடங்களுக்கு செல்கிறது.</p><p>அப்போது அந்த டிரக்கில் தொங்கவிடப்பட்டுள்ள இறைச்சியை, வனவிலங்குகள் போட்டி போட்டுக் கொண்டு, வாகனத்தின் மேல் தாவி சாப்பிடுகின்றன.</p><p>இதனை வாகனத்தின் உள்ளே உள்ள சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும், மிக அருகில் வனவிலங்குகளை நேராக பார்த்தும் மகிழ்ச்சி அடைகின்றனர்.</p><h3><strong>மழலையர் தொடக்கப்பள்ளி</strong></h3><p>இந்த நிலையில் லெஹே லெடு வனவிலங்கு பூங்காவில் புதிதாக பிறந்துள்ள சிங்கம் மற்றும் புலி குட்டிகளுக்கு, பள்ளிகளை போன்று புதிய பயிற்சி வகுப்புகளை அளிகும் சோங்கிங் மழலையர் தொடக்கப்பள்ளியை ஆரம்பித்துள்ளது.</p><figure><iframe width="936" height="526" src="https://www.youtube.com/embed/Q4_us0HD634" title="Adorable Tiger and Lion Cubs Start ‘School’ at Animal Kindergarten in China | DRM News | AO1G" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></figure><p>இதனடிப்படையில் பூங்கா ஊழியர்கள் நான்கு சிங்க குட்டிகள் மற்றும் ஒரு புலி குட்டியை பயிற்சி வகுப்பிற்காக தேர்ந்தெடுத்துள்ளனர்.</p><p>இந்த குட்டிகளுக்கு காலையில் பால் கொடுப்பது ஆரம்பித்து, விளையாட்டு பயிற்சி வகுப்புகள் வரை என அனைத்து விதமான பயிற்சிகளும் பூங்கா ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகிறது.</p><p>இந்த தனித்துவமான மழலையர் பள்ளியானது, சிங்கம் மற்றும் புலிகள் வளரும்போது, அவற்றின் இயல்பான உள்ளுணர்வையும் உயிர் வாழ்வதற்கான அத்தியாவசிய திறன்களையும் வலுப்படுத்த உதவும் என பூங்கா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நவம்பர் 1-க்குள் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை: சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nameboards-mandatory-by-november-1-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nameboards-mandatory-by-november-1-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">3fc7e160-4a1c-41fc-874e-a9673ce7b6b8</guid><pubDate>Sat, 05 Sep 2026 13:11:16 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:11:16.109Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,தமிழ்நாடு,Tamil nameboards,தமிழ்பெயர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ysp8q9vz/high.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ysp8q9vz/high.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுரேந்தர், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதியை இறுதிச் சட்டப்பூர்வ காலக்கெடுவாக நிர்ணயித்து உத்தரவிட்டார்.</p><p>தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் செயல்படும் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முதன்மை இடம் அளிக்கப்பட வேண்டும் என 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சட்டப்பூர்வ உத்தரவு பிறப்பித்திருந்தது.</p><p>இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை என்றும், இதற்கெதிராகவும் 'இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம்' சார்பில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-festival-train-reservations-begin-tomorrow">சென்னை உயர் நீதிமன்றத்தில் </a>மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய பெயர்ப்பலகைகளின் வடிவமைப்பு, எழுத்துரு மற்றும் வண்ணங்களை மாற்றி அமைப்பதற்கு கணிசமான தொகையும் கூடுதல் அவகாசமும் தேவைப்படுவதாகக் கூறி 3 மாத கால அவகாசம் வழங்கக் கோரினார்.</p><h2>உயர் <strong>நீதிமன்றம்</strong> தீர்ப்பு </h2><p>மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுரேந்தர், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதியை இறுதிச் சட்டப்பூர்வ காலக்கெடுவாக நிர்ணயித்து உத்தரவிட்டார். நிர்ணயிக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைக்கத் தவறினால், சட்டப்படி சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார். மேலும், இந்த உத்தரவைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தவறினால் மற்றும் கடைகளைக் கண்காணிப்பதில் அலட்சியம் காட்டினால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 11 நாட்களுக்குப் பின்  60 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/disaster-flood-in-nepal-60-year-old-woman-rescued-alive-after-11-days</link><comments>https://www.maalaimalar.com/news/world/disaster-flood-in-nepal-60-year-old-woman-rescued-alive-after-11-days#comments</comments><guid isPermaLink="false">28b2b1d2-401c-40cd-9f85-365686c4fa50</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:38:27 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:38:27.478Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal,நேபாள நிலச்சரிவு,நேபாள பெண்,Nepal disaster,Nuwakot,மேல் திரிசூலி,நுவாகோட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vpd0y9ef/nepal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 60-year-old woman rescued ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vpd0y9ef/nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். </p><p>நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அப்பகுதியை பெருமளவில் பாதித்துள்ளது. இந்த இயற்கைப் பேரிடருக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இச்சம்பவம் நடந்து 11 நாட்கள் கடந்துவிட்ட சூழலில், இருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேல் திரிசூலி-1 நீர்மின் திட்டப் பகுதியில்அமைந்திருந்த சுரங்கப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது சீன நாட்டின் ஊழியரான லுஹைடாவ் என்பவர் உள்ளேயே சிக்கிக்கொண்டார். கடந்த 11 நாட்களாக உணவு மற்றும் வெளித்தொடர்பு ஏதுமின்றி அந்த இருள் சூழ்ந்த பகுதியில் தவித்துக் கொண்டிருந்த அவரை, மீட்புக்குழுவினர் மீட்டெடுத்தனர். உயிருடன் மீட்கப்பட்ட அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.</p><h2>இடிபாடு<strong>களுக்குள்</strong> சிக்கிய மூதாட்டி</h2><p>இதேபோன்று மற்றொரு மீட்புச் சம்பவத்தில், <a href="https://www.maalaimalar.com/news/world/i-was-chanting-hare-krishna-for-9-days-worker-rescued-from-tunnel">நுவாகோட்</a> மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இடிந்து விழுந்த தனது வீட்டின் இடிபாடுகளுக்கு இடையே 60 வயதான சந்திகா ஸ்ரேஷ்டா என்ற மூதாட்டி அகப்பட்டுக்கொண்டார். மீட்புப் படையினர் அப்பகுதியில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இடிபாடுகளுக்குள் அவர் உயிருடன் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவரைப் பத்திரமாக வெளியே கொண்டுவந்தனர்.</p><h2><strong>மீட்புப் பணிக</strong>ள்</h2><p>இந்த இரண்டு பேரதிசய மீட்புச் சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றை அளித்துள்ளன. இருப்பினும், வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து நாட்டின் பல்வேறு வெள்ளம் பாதித்த பகுதிகளில் தீவிரமான மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஏர்பஸ் விமான ஊழல் வழக்கில் கைது: நமல் ராஜபக்சே சிறையில் அடைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/namal-former-sri-lankan-president-rajapaksas-son-arrested-over-airbus-deal</link><comments>https://www.maalaimalar.com/news/world/namal-former-sri-lankan-president-rajapaksas-son-arrested-over-airbus-deal#comments</comments><guid isPermaLink="false">5a638158-e13a-4a01-a780-9caf5d58b07d</guid><pubDate>Sat, 05 Sep 2026 12:13:36 +0000</pubDate><atom:updated>2026-09-05T12:13:36.811Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Airbus,ஏர்பஸ்,namal rajapakse,நமல் ராஜபக்சே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/er1i01z3/namal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ namal rajapakse]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/er1i01z3/namal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஏர்பஸ் விமான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகனான நமல் ராஜபக்சே சிறையில் அடைக்கப்பட்டார்.</strong></em></p><p>இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்  முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகனும், எம்.பியுமான நமல் ராஜபக்சேவை இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று கைதுசெய்தது. </p><h2>நமல் ராஜபக்சே கைது</h2><p>கடந்த 2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஏர்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் (சுமார் 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்) லஞ்சமாகப் பெற்றிருக்கிறார் எனும் குற்றச்சாட்டு அவர்மீது எழுந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலானது.</p><p>இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்கவே நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டிருக்கிறார்.</p><h2>5 மணி நேரம் விசாரணை</h2><p>அவரிடம் 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு  கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் அசங்க போதரகம முன் ஆஜர்படுத்தப்பட்டார். நமல் ராஜபக்சேவை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். </p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நதியை மீட்டெடுத்த இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து சி.இ.ஓ அளித்த வேலை வாய்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-youth-who-cleaned-polluted-river-gets-job-offer-from-dutch-ceo</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-youth-who-cleaned-polluted-river-gets-job-offer-from-dutch-ceo#comments</comments><guid isPermaLink="false">06bf141b-6098-4cd8-848b-90a84e3370c8</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:56:38 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:56:38.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,மத்தியப் பிரதேசம்,Bittu Tabahi,Ajnar River,Surendra Singh Chaudhary,சுரேந்திர சிங் சவுத்ரி,பிட்டு தபாஹி,அஜ்னார் நதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/43b34swv/river.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bittu Tabahi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/43b34swv/river.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பயோரா பகுதியைச் சேர்ந்த 21 வயதான சுரேந்திர சிங் சவுத்ரி, சமூக வலைதளங்களில் 'பிட்டு தபாஹி' என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தனது பகுதியில் கடுமையாக மாசடைந்திருந்த அஜ்னார் நதியைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல் தனியாளாக இறங்கினார். நதியில் தேங்கிக்கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாசிகள் மற்றும் பிற குப்பைகளைத் தொடர்ச்சியாக அப்புறப்படுத்தி, சில மாதங்களிலேயே அந்த நதியை முழுமையாகத் தூய்மைப்படுத்தினார்.</p><p>தனது தூய்மைப் பணிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பிட்டு தபாஹி பகிர்ந்து வந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உலகளவில் கவனம் பெற்றன. இவரின் இந்த அசாதாரண முயற்சியைப் பார்த்த நெதர்லாந்தைச் சேர்ந்த '<a href="https://www.maalaimalar.com/news/national/dont-make-false-promises-to-me-kangana-ranaut-slams-officials">தி ஓஷன் கிளீன்அப்</a>' தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான போயன் ஸ்லாட், சமூக வலைதளப் பதிவு ஒன்றிற்குப் பதிலளிக்கும் விதமாக "எங்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள்" எனப் பகிரங்கமாக வேலை வாய்ப்பு வழங்கி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு நெதர்லாந்து நிறுவனத்தின் அழைப்பு மட்டுமன்றி, உள்நாட்டிலும் பலதரப்பட்ட ஆதரவுகள் குவிந்து வருகின்றன. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இவரின் தூய்மைப் பணியைப் பாராட்டியுள்ளார். மேலும், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பிட்டு தபாஹியைத் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததுடன், 'ஜல் கங்கா சம்வர்தன் அபியான்' என்ற நீர்நிலைகளைப் பாதுகாக்கும் அரசின் திட்டத்திற்கு இவரின் முயற்சி பெரும் ஊக்கமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சுமார் 30,000 ரூபாய் சொந்தப் பணத்தைச் செலவழித்து இந்த நதி மீட்புப் பணியைச் செய்துள்ளதாகக் கூறும் பிட்டு தபாஹி, இத்தகைய விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியான பிறகு பொதுமக்கள் நதியில் குப்பைகளைக் கொட்டுவது கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனி ஒருவனின் விடாமுயற்சி ஒரு நதியை மீட்டெடுத்தது மட்டுமன்றி, சர்வதேச அளவில் அவருக்கு ஒரு புதிய அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என்னிடம் போலி வாக்குறுதிகளைக் கூறாதீர்கள்: அதிகாரிகளை கடுமையாகச் சாடிய கங்கனா ரணாவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/dont-make-false-promises-to-me-kangana-ranaut-slams-officials</link><comments>https://www.maalaimalar.com/news/national/dont-make-false-promises-to-me-kangana-ranaut-slams-officials#comments</comments><guid isPermaLink="false">54265f80-e617-42b7-b53e-d129d696d4fa</guid><pubDate>Sat, 05 Sep 2026 11:07:14 +0000</pubDate><atom:updated>2026-09-05T11:07:14.115Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கங்கனா ரனாவத்,Kangana Ranaut,திஷா,Disha,Mandi constituency,MPLADS,மண்டி தொகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/yiaodli6/kangana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kangana Ranaut]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/yiaodli6/kangana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மண்டி தொகுதிக்கான 11 கோடி ரூபாய் நிதியில் 50 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் செயல்பாட்டு அறிக்கை கோரியுள்ளார். </p><p>இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பாஜக எம்பி கங்கனா ரணாவத், தனது தொகுதிக்கான மேம்பாட்டு நிதி முறையாகப் பயன்படுத்தப்படாதது குறித்து அரசு அதிகாரிகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். மண்டி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.</p><h2>11 கோடியில் <strong>50 லட்சம் ம</strong>ட்டுமே செலவு</h2><p>கூட்டத்தின் போது தொகுதி <a href="https://www.maalaimalar.com/news/national/buy-me-a-bicycle-7-year-old-girl-with-amputated-leg-pleads-to-district-collector">மேம்பாட்டுத் திட்டங்கள் </a>குறித்து ஆய்வு செய்த கங்கனா ரணாவத், தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் 11 கோடி ரூபாய் வரை கைவசம் உள்ளது என்றும், ஆனால் அதில் வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பெரும்பாலான நிதி பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.</p><h2>போலி வாக்கு<strong>றுதிகளுக்குக் கண்</strong>டனம்</h2><p>முந்தைய கூட்டங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் முடிந்துவிட்டதாகவும், எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அதிகாரிகள் தன்னிடம் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக அவர் குற்றம்சாட்டினார். "ஒவ்வொரு திஷா கூட்டத்திலும் என்னிடம் இதுபோன்ற போலி வாக்குறுதிகளை அளிக்காதீர்கள், இனி எனக்கு உண்மையான வேலைகளும் வெளிப்படையான செயல்பாடுகளுமே தேவை" என்று கோபத்துடன் குறிப்பிட்டார்.</p><p>தொகுதி நிதியை விரைவாகப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள வளர்ச்சிப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிதிச் செலவினங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்த முழுமையான செயல்பாட்டு அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்குக் கெடு விதித்துள்ளார். இக்கூட்டத்தில் கங்கனா ரணாவத் அதிகாரிகளைக் கடிந்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளியில் உணவு சாப்பிட்ட 2,000 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி: வேகவைக்கப்படாத இறைச்சி காரணமா? </title><link>https://www.maalaimalar.com/news/world/2000-students-hospitalized-after-school-meals-in-indonesia</link><comments>https://www.maalaimalar.com/news/world/2000-students-hospitalized-after-school-meals-in-indonesia#comments</comments><guid isPermaLink="false">c273330b-a69e-4956-b6d9-2341d364ca01</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:56:18 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:56:18.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>government school,இந்தோனேசியா,food poisoning,indonesia,அரசு பள்ளி,உணவு நஞ்சு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cpduuvyn/Untitled-design-20.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indonesia school food poisoning]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cpduuvyn/Untitled-design-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தோனேசியாவில் உள்ள அரசு பள்ளியில் கடந்த மூன்று நாட்களில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட சுமார் 2,000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாந்தி மற்றும் தலைசுற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்களை பள்ளி நிர்வாகம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">இந்தோனேசியா</a> பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக, ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ பல பில்லியன் டாலர் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.</p><h3><strong>அரசு உயர்நிலைப் பள்ளி</strong></h3><p>மத்திய ஜாவா அடுத்த ரெம்பாங் நகரத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் மக்கான் பெர்கிஸி கிராடிஸ் (Makan Bergizi Gratis) என்ற திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 752 மாணவர்கள் மற்றும் 25 ஆசிரியர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.   </p><p>இதையடுத்து பள்ளி நிர்வாகம் அந்த பள்ளியில் உள்ள 1,200 மாணவர்களையும் 95 பணியாளர்களையும் வீட்டிற்கு அனுப்பியது.</p><p>மேலும் வாந்தி, தலைசுற்று உள்ளிட்ட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h3><strong>பள்ளி தலைமை ஆசிரியர்</strong></h3><p>இந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜுஹார்டுடிக் கூறுகையில், “அவர்களுக்கு வயிற்றுப்போக்கு இருந்ததால், அவர்கள் கழிப்பறையை முறைப்படி பயன்படுத்தினார்கள்.</p><p>ஆனால் மொத்தம் 40 கழிப்பறைகள் தான் பள்ளியில் இருந்ததால், அவர்கள் அனைவருக்கும் இடமளிக்க முடியவில்லை.</p><p>மருத்துவச் செலவுகள் அனைத்தையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும், மேலும் உணவு விநியோகம் செய்த உள்ளூர் உணவு விநியோகஸ்தர்கள் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்” என அவர் கூறினார்.</p><h3><strong>பெற்றோர்கள் குற்றச்சாட்டு</strong></h3><p>இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், முறையற்ற சேமிப்பு மற்றும் சரியாக சமைக்கப்படாத உணவு ஆகியவற்றை சாப்பிட்டதால், மாணவர்களுக்கு உணவு நஞ்சு ஏற்பட்டுள்ளது.</p><p>மேலும் அசுத்தமான கோழிக்கறியின் இறைச்சி, சரியாக வேக வைக்கப்படாத அசைவ உணவுகள் மற்றும் சரியான சுத்தம் செய்யாத மீன்கள், இந்த உணவு ஒவ்வாமைக்கு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>உணவு மாதிரிகள் பரிசோதனை</strong></h3><p>இதையடுத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் இதில் சாத்தியமான கலப்படம் உள்ளதா என்பதைக் கண்டறிய உணவு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதைத்தொடர்ந்து லாசெமில் உள்ள உணவு விநியோகப் பிரிவின் தலைவர் அஹ்மத் ஷோலே ஷரிஃபுதின், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மன்னிப்புக் கோரியதோடு, அவர்கள் குணமடைவதற்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>உலகின் மிகப்பெரிய காற்று மணியை அமைத்த அமெரிக்கர் - 12 கின்னஸ் சாதனைகளை படைத்தார்</title><link>https://www.maalaimalar.com/news/world/us-man-installs-giant-wind-chime-sets-12-guinness-records</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-man-installs-giant-wind-chime-sets-12-guinness-records#comments</comments><guid isPermaLink="false">1353f966-089a-41cf-9d98-387ae367e748</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:53:38 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:53:38.057Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,தொழிலதிபர்,businessman,கின்னஸ் சாதனை,Guinness</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/kecwpiv7/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guinness Record Wind Chime]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/kecwpiv7/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவை சேர்ந்த போலின் என்பவர் கேசி என்ற தனது கிராமத்தில் உலகின் மிகப்பெரிய காற்று மணி ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து 12 கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.</p><h3><strong>ஜிம் போலின்</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவில்</a> இல்லினாய்ஸ் நகரத்தில் உள்ள கேசி என்ற சிறிய கிராமத்தில் ஜிம் போலின் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த கிராமத்தில் 3,000 மக்கள் வாழ்ந்து வந்தனர்.  </p><p>கேசி கிராமத்தில் போதுமான அளவில் மக்கள் வரவு இல்லாமல் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து போலினும் அவரது குடும்பத்தினரும் ஒரு தேநீர் கடையை திறந்தனர். </p><p>ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி, அந்த கிராமத்திற்கு போதுமான அளவில் மக்கள் வந்து செல்லவில்லை. </p><h3><strong>பிரம்மாண்டமான காற்று மணி</strong></h3><p>இதையடுத்து போலின் தனது பாட்டி முன்பு வைத்திருந்த சிறிய அளவிலான காற்று மணியை உதாரணமாக வைத்துக் கொண்டு, 2012-ஆம் அண்டு உலகின் மிகப்பெரிய காற்று மணி ஒன்றை உருவாக்கினார்.</p><p>போலினுக்கு குழாய் அமைக்கும் தொழிலில் ஏற்கனவே முன் அனுபவம் இருந்ததால், பெரிய காற்று மணியை உருவாக்குவதற்கு தேவையான பாகங்கள், அவரிடம் ஏற்கனவே இருந்தன.</p><p>போலின் தான் உருவாக்கிய காற்று மணியை, தனது கேசி நகரத்தில் மக்களின் பார்வைக்காக வைத்தார். இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள், பல பிரம்மாண்டமான பொருட்களை சேர்க்க தொடங்கினர்.</p><p>மேலும் அந்த பகுதி நகர மக்கள், பிரம்மாண்டமான முட்கரண்டி, கோல்ஃப் ஆணி (Golf tee), தபால் பெட்டி, ஆடும் நாற்காலி, கோல்ஃப் பேட், முடி திருத்தும் கம்பம், ஏற்ற இறக்க பலகை மற்றும் பிற பொருட்களை மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக உருவாக்கினர்.</p><h3><strong>சுற்றுலா பயணிகளை ஈர்த்தது</strong></h3><p>அந்த மாதிரியிலான பொருட்கள் வெறும் அலங்கார பொருட்களாக இல்லாமல், அவை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன.</p><p>போலின் உருவாக்கிய காற்று மணியில் காற்று அதன் வழியே உள்ளே செல்லும்போது, அது பிரம்மாண்டமாக ஒலி எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.</p><p>அந்த நகரத்தில் வைக்கப்பட்ட பிரம்மாண்டமான தபால் பெட்டியில், ஒருவர் தபால் போடும்போது அதில் உள்ள கொடி உயர்ந்து மேலே செல்லும்படியும், பின்னர் தாழ்ந்து கீழே இறங்கும்படியும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.</p><p>இதன்மூலம் பார்வையாளர்கள் அந்த நகரத்தில் வைக்கப்பட்ட பொருட்களை பார்த்து ரசிப்பது மட்டுமல்லாமல், அதன் அனுபவத்தை பெற்றனர்.</p><p>இதையடுத்து 2019-ஆம் ஆண்டு, கேசி நகரத்தில் உள்ள 6-க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் உலக சாதனை படைத்தன. இதைத்தொடர்ந்து ஒரு வார இறுதியில் அந்த பகுதிக்கு 1,500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.</p><h3><strong>12 கின்னஸ் சாதனைகள்</strong></h3><p>போலின் 15 ஆண்டுகளில் உருவாக்கிய 21 வெவ்வேறு பொருட்களுக்காக, 12 கின்னஸ் உலக சாதனைகளை படைத்தார். அந்த பட்டியலில் 14.94 மீட்டர் உயரம் கொண்ட மிகப்பெரிய காற்று மணியும், 25.01 மீட்டர் நீளம் கொண்ட ஊஞ்சலும், 17.09 மீட்டர் உயரம் கொண்ட மிகப்பெரிய ஆடும் நாற்காலியும் இடம்பெற்றிருந்தன.</p><p>இந்த கின்னஸ் சாதனை குறித்து போலின் கூறும்போது, உலக சாதனைகள் தங்கள் கிராமத்தை மிகப்பெரிய அளவில் மாற்றிவிட்டதாக தெரிவித்தார்.</p><p>மேலும் இந்த மாற்றங்கள் ஒரே இரவில் நடந்துவிடவில்லை எனவும், இந்த முயற்சியை தொடங்க ஒட்டுமொத்த சமூகத்தின் ஆதரவும் தேவைப்பட்டதாகவும் போலின் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நீதிபதிகளின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/retirement-age-of-judges-raised-to-62</link><comments>https://www.maalaimalar.com/news/national/retirement-age-of-judges-raised-to-62#comments</comments><guid isPermaLink="false">c376eb78-af7a-4d54-8b56-e6e95ed322c9</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:48:32 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:48:32.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீதிபதிகள்,உச்சநீதிமன்றம்,தலைமை நீதிபதி சூர்யகாந்த்,ஒய்வு பெறும் வயது</media:keywords><media:content height="186" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p37dhm2z/images-1.jfif" width="271"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு உட்பட இந்தியாவின் ஏழு மாநிலங்களின் மாவட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62ஆக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p37dhm2z/images-1.jfif?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஓய்வு பெறும் வயது உயர்வு..</h2><p>மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60இருந்து 62ஆக முறைப்படி உயர்த்த ஏழு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது, நீதித்துறையில் பல ஆண்டுகளாக  சிறப்புடனும், அனுபவத்துடனும் செயல்படும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court">நீதிபதிகள்</a> பணியிலிருந்து விலகுவதை  தடுக்கவும், முறைப்படி விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>மாநிலங்களின் ஒப்புதல் </h2><p>இந்த முன்மொழிவை அந்தந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-directs-centre-state-to-submit-detailed-report-on-rescue-of-missing-indians-in-nepal-floods">மாநில அரசுகள்</a> ஒப்புக்கொண்டத்தை தொடர்ந்து இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த அமர்வானது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் பிறப்பிக்கப்பட்டது.</p> <h2>சட்ட விதிகளை  திருத்த வேண்டும் </h2><p>நீதிபதிகளின் விசாரணை என்பது வெறும் கண்மூடித்தனமான மாயையாக இல்லாமல், நீதி கிடைப்பதை உறுதி செய்யவே என்றும், மேலும் இரண்டு மாதங்களுக்குள் இந்த விதிகளை திருத்த வேண்டும் என்றும் <a href="https://www.maalaimalar.com/news/national/tarun-tejpal-rape-conviction-supreme-court-orders-surrender-within-two-weeks">உச்சநீதிமன்றம்</a> உத்தரவிட்டுள்ளது. </p><p>நீதிபதிகளின் வயதுவரம்பை உய்ர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலங்கள், சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் 60 வயதை எட்டும்போது இந்த உத்தரவை கடைப்பிடித்து ஒய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஓய்வு பெற முடியாது </h2><p>வழக்கானது நிலுவையில் உள்ள காரணத்தினால், இந்த ஏழு மாநிலங்களில் தற்போது 60 வயதை கடந்த அதிகாரிகள் அந்த வயதில் ஓய்வு பெற மாட்டார்கள் என்றும், இந்த உத்தரவு, மார்ச் 31, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும் அவர்கள் வேறு பணியில் சேராத பட்சத்தில், நீதித்துறைப் பணிக்குத் திரும்புவதற்கான விருப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் நீதித்துறை பணிக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முடிவு மறுபரிசீலனை</h2><p>மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது முடிவை இரண்டு வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>மேலும் இத்த உத்தரவு குறித்தான முடிவை மறுபரிசீலனை செய்து, இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஒரு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம்,அசாம், பீகார்,நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், டெல்லி , ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கார்க் தீவு அருகே பலத்த வெடிச் சத்தம்: ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்</title><link>https://www.maalaimalar.com/news/world/loud-explosion-near-kharg-island-us-missile-strike-on-iranian-oil-tanker</link><comments>https://www.maalaimalar.com/news/world/loud-explosion-near-kharg-island-us-missile-strike-on-iranian-oil-tanker#comments</comments><guid isPermaLink="false">41ccd1b5-2cc4-4c83-a368-bc2c979fc431</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:11:11 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:11:11.633Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,ஈரான்,Iran,Strait of Hormuz,Kharg Island,கார்க் தீவு,எண்ணெய் டேங்கர் கப்பல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/z9dda30a/gah.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kharg Island]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/z9dda30a/gah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் இத்தகைய தீவிர நடவடிக்கைகளுக்கு ஈரான் சார்பில் கடுமையான பதிலடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான <a href="https://www.maalaimalar.com/news/world/trump-calls-iran-conflict-small-potatoes">கார்க் தீவுக்கு </a>அருகே பயங்கர வெடி சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலே இதற்குக் காரணம் என ஈரானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>நான்கு ஏவுக<strong>ணைகள் மூலம் தாக்கு</strong>தல்</h2><p>எண்ணெய் டேங்கர் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வந்த தருணத்தில், அதை இலக்கு வைத்து நான்கு ஏவுகணைகள் வீசப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தாக்குதலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வெடிப்புச் சத்தம் கேட்டபோதிலும் கார்க் தீவுப் பகுதியில் புகை எதுவும் எழும்பியதை உடனடியாகக் காண முடியவில்லை என ஈரான் குறிப்பிட்டுள்ளது.</p><h2>தீவி<strong>ரமடையும் மோ</strong>தல்</h2><p>மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கிடையே நிலவி வரும் மோதல் போக்கு கடந்த சில நாட்களாக மேலும் தீவிரமடைந்துள்ளது. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் மையங்கள் மற்றும் சுரங்கம் தோண்டும் திறன்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.</p><p>ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைச் செய்து வரும் கார்க் தீவுப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகத்தைப் பெருமளவில் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் இத்தகைய தீவிர நடவடிக்கைகளுக்கு ஈரான் சார்பில் கடுமையான பதிலடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம்- தீபாவளி பண்டிகை ரெயில் முன்பதிவு நாளை தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-festival-train-reservations-begin-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-festival-train-reservations-begin-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a0f84fa8-bc62-484e-ba86-604466113b3e</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:57:51 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:57:51.739Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Diwali,தீபாவளி,Ticket Booking,டிக்கெட் முன்பதிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pqb59n5z/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pqb59n5z/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தீபாவளி பண்டிகை முன்பதிவு நாளை தொடங்குவதால் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் முக்கிய ரெயில் நிலையங்களில் நேரடியாக டிக்கெட் பெற தயாராக உள்ளனர்.</strong></em> </p><p>சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் <a href="https://www.maalaimalar.com/topic/தீபாவளி">தீபாவளி</a> பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட   செல்வது வழக்கம். </p><h2><strong>முன்பதிவு</strong></h2><p>இந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அதனால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் வகையில் ரெயில்களில் முன்பதிவு தொடங்குகிறது. </p><p>60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யக்கூடிய நிலை தற்போது இருப்பதால் தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை  8 மணிக்கு தொடங்குகிறது.</p><p>சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வந்தே பாரத் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். </p><p>நவம்பர்  5-ந்தேதி பயணம் செய்ய  நாளை முன்பதிவு தொடங்குகிறது.  நவம்பர் 6-ந் தேதி பயணம் செய்வதற்கு 7-ந்தேதி  (திங்கட்கிழமை)யும் 7ந்தேதி பயணத்திற்கு 8-ந்தேதியும் முன்பதிவு  நடைபெற உள்ளது. </p><p>தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை  உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு திரும்ப  வருகிற 10-ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். </p><p>தீபாவளி பண்டிகை முன்பதிவு நாளை தொடங்குவதால் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் முக்கிய ரெயில் நிலையங்களில் நேரடியாக டிக்கெட் பெற தயாராக உள்ளனர். இது தவிர பெரும்பாலானவர்கள் ஏஜென்சிகள் மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் முன்பதிவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர். </p><p>ரெயில்களில் குறைந்த  கட்டணத்தில் பாதுகாப்பாக  குறித்த நேரத்திற்கு செல்ல முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-experience-moderate-rain-today-and-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-experience-moderate-rain-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">c9015e34-62ec-4107-8288-9e1c48d94f20</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:51:10 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:51:10.047Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pbyi5qr7/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pbyi5qr7/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>இன்று சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>6-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>7 மற்றும் 8-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>9 மற்றும் 10-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>11-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே, இன்று முதல் 9-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>தவெக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்: திருமாவளவனுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/consultative-meeting-of-tvk-alliance-party-leaders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/consultative-meeting-of-tvk-alliance-party-leaders#comments</comments><guid isPermaLink="false">5c9f5c82-946b-4c32-b87c-c5491b80ec45</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:47:06 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:47:06.106Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,thirumavalavan,திருமாவளவன்,ஆதவ் அர்ஜுனா,Consultative Meeting,tvk,தவெக கூட்டணி,TVK  Ministers</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c736cmg6/thiruma.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c736cmg6/thiruma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு திருமாவளவனுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p>தமிழகத்தில் கூட்டணி அரசையும் அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் தேர்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-veerapandian-says-we-will-support-tvk-from-outside">தமிழக வெற்றிழகம்</a> (தவெக) ஆதரவுத் தலைவர்களின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பினை, தவெகவைச் சேர்ந்த அமைச்சர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் நேரில் வழங்கி அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p>சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் ஆகியோர் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p>முன்னதாக, கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டணிக்கு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக அக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><h2>இரண்<strong>டாம் கட்டக் கூட்டம்</strong></h2><p>வரவிருக்கும் 9-ஆம் தேதி கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளிடையேயான அடுத்தகட்ட நடவடிக்கைகள், ஒருங்கிணைப்புப் பணிகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>துலீப் டிராபி இறுதிப்போட்டி: தெற்கு-கிழக்கு மண்டலங்கள் நாளை மோதல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tomorrow-duleep-trophy-final-in-chepauk-ground</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tomorrow-duleep-trophy-final-in-chepauk-ground#comments</comments><guid isPermaLink="false">f6943825-7add-46a6-8794-b4d99b884874</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:38:11 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:38:11.148Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இறுதிப்போட்டி,final,துலீப் டிராபி,Duleep Trophy,south zone,East Zone,கிழக்கு மண்டலம்,தெற்கு மண்டலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/avsgre64/duleep.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tilak varma, ishan kishan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/avsgre64/duleep.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாளை நடைபெற உள்ள துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியும், கிழக்கு மண்டல அணியும் மோத உள்ளன.</strong></em></p><p>இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானது துலீப் டிராபி போட்டியாகும்.</p><h2>நாளை இறுதிப்போட்டி</h2><p>இதன் முதல் சீசன் 1961-1962-ல் நடைபெற்றது. தற்போது 63-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம்  மைதானத்தில் நாளை தொடங்குகிறது. 10-ம் தேதி வரை  5 நாட்கள் இந்தப் போட்டி  நடக்கிறது. இதில் தெற்கு மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகள் மோத உள்ளன. </p><h2>திலக் வர்மா</h2><p>தமிழ்நாடு, ஆந்திரா, ஐதராபாத், கர்நாடகா, கேரளம், புதுச்சேரி, கோவா ஆகிய அணிகளின் வீரர்களைக் கொண்டது தெற்கு மண்டலம்.</p><p>இந்த அணிக்கு திலக் வர்மா கேப்டனாக  இருக்கிறார். அவர் ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடித்து நல்ல பார்மில் உள்ளார். சென்னையைச் சேர்ந்த என்.ஜெகதீசன் விக்கெட் கீப்பராக  உள்ளார். தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ் போன்ற இந்திய வீரர்கள் தெற்கு மண்டல அணிக்காக விளையாடுகிறார்கள்.  </p><p>தெற்கு மண்டலம் 13 முறை துலீப் டிராபியை வென்றுள்ளது. 14-வது தடவையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி அரையிறுதியில் வடக்கு மண்டலத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. </p><h2>இஷான் கிஷன் </h2><p>கிழக்கு மண்டல அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக இருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷி,  முகமது ஷமி, முகேஷ் குமார் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் இருக்கிறார்கள்.</p><p>கிழக்கு மண்டலம் அரையிறுதியில் மத்திய மண்டலத்தை 4  விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. கிழக்கு மண்டலம்  2   தடவை துலீப் டிராபியை வென்றுள்ளது. 3-வது முறையாக  சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் உள்ளது.</p><p>அசாம், பீகார், பெங்கால், ஜார்க்கண்ட், ஒடிசா, திரிபுரா ஆகிய மாநில வீரர்களைக் கொண்டது கிழக்கு மண்டலம். </p><h2>அனுமதி இலவசம்</h2><p>நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியை ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம். காலை 9 மணிக்கு கேட் 4 வழியாக ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஓர் அரிய வகை வாய்ப்பாகக்  கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தவெக கூட்டணியில் இடம் பெறவில்லை - இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் திட்டவட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-veerapandian-says-we-will-support-tvk-from-outside</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-veerapandian-says-we-will-support-tvk-from-outside#comments</comments><guid isPermaLink="false">ce3c9857-72f5-44c7-9e26-f9a530b855c6</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:19:09 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:19:09.935Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சிபிஐ,CPI,tvk,வீரபாண்டியன்,Veerapandian</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nlv1intu/veerapandian.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nlv1intu/veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறி உள்ளார்.</p><p>சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் 9-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip">தவெக</a> கூட்டணி கட்சிகள் கூட்டம் நடக்கிறது.</p><p>த.வெ.க. மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேற்று தங்கள் கூட்டணி கட்சி தலைவர்களையும், நிர்வாகிகளையும் நேரில் சந்தித்தனர்.</p> <p>அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று மாநில செயலாளர்கள் வீரபாண்டியன் மற்றும் சண்முகத்தை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். </p> <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">த.வெ.க. </a>ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்காத நிலையில், 2-வது கூட்டத்தில் பங்கேற்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.</p><p>இந்நிலையில் தி.நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p> <p>* தவெகவின் நல்லாட்சி, நல்ல திட்டங்களை வரவேற்று ஆதரிப்போம்.</p><p>* அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்கவில்லை.</p><p>* மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும்.</p> <p>* தமிழ்நாட்டில் தலைகீழாக உள்ளது, அதிகாரிகள் வழி நடத்துகிறார்கள்.</p><p>* தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை.</p><p>* தவெகவை வெளியில் இருந்தே ஆதரிப்போம், கூட்டணியில் நாங்கள் இடம்பெறவில்லை என மீண்டும் அவர் திட்டவட்டமாக கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>68 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த மதுரை-சென்னை விமான சேவை  அக்.25-ந்தேதி முதல் நிறுத்தம்? </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-to-chennai-flight-service-operational-for-68-years-to-be-suspended-from-october-25</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-to-chennai-flight-service-operational-for-68-years-to-be-suspended-from-october-25#comments</comments><guid isPermaLink="false">e95be653-8fd9-4c30-89b6-fd85aa77b027</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:13:10 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:13:10.070Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,மதுரை,madurai,flight service,விமான சேவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/zx8964ol/flight.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ விமானம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விமானம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/zx8964ol/flight.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை-மதுரை வழித்தடமே லாபகரமாக இல்லை என்றால், மதுரை-பெங்களூரு இடையேயான சேவை மட்டும் எவ்வாறு லாபகரமாக இயங்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</strong></em></p><p>சென்னை-மதுரை-சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் <a href="https://www.maalaimalar.com/topic/விமான-சேவை">விமான சேவை</a> அக்டோபர் 25 முதல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களால் கடந்த 68 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த இந்த விமான சேவை, கட்டணம் குறைவாக இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த சேவை நிறுத்தப்பட்டால், இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 5-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் ‘இண்டிகோ’ மட்டுமே ஒரே விமான சேவை நிறுவனமாக நீடிக்கும் நிலை உருவாகும்.</p><h2><strong>கேள்வி</strong></h2><p>போதிய பயணிகள் வருகை இல்லை என்பது உள்ளிட்ட காரணங்கள் சேவை நிறுத்தத்திற்கு சொல்லப்பட்டாலும், அதனை பயண முகவர்களும் சுற்றுலா அமைப்பாளர்களும் மறுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, வெள்ளிக்கிழமை அன்று கூட சென்னையில் இருந்து மதுரைக்கு 159 பயணிகளும், மதுரையிலிருந்து சென்னைக்கு 70 பயணிகளும் இந்த விமானத்தில் பயணித்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>மேலும், சென்னை-மதுரை வழித்தடமே லாபகரமாக இல்லை என்றால், மதுரை-பெங்களூரு இடையேயான சேவை மட்டும் எவ்வாறு லாபகரமாக இயங்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p><p>இத்தடத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசி, இச்சேவையைத் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயண முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2><strong>அதிருப்தி</strong></h2><p>திருச்சியிலிருந்து ஐதராபாத், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய விமான சேவைகளைத் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று மதுரை, சிவகாசி மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த முகவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.</p><p>அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலாவுக்கான உச்சக்கட்ட காலமாகும். தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகள் வரவுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணிகள் பலர் தென் தமிழகத்திற்கு வரத் திட்டமிட்டு ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருக்கக்கூடும். </p><p>தற்போது இந்த சேவை ரத்து செய்யப்படுவதால் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வருவதைத் தவிர்க்கும் சூழல் உருவாகி, உள்ளூர் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படும் என மதுரை டிராவல்ஸ் நிர்வாகி கவலை தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>4 வயதில் சர்வதேச செஸ் தரவரிசையில் இடம்பிடித்து உலகளவில் இளம் வீராங்கனையாக சாதனை படைத்த ஒடிசா சிறுமி!</title><link>https://www.maalaimalar.com/sports/odisha-girl-4-becomes-youngest-fide-rated-chess-player</link><comments>https://www.maalaimalar.com/sports/odisha-girl-4-becomes-youngest-fide-rated-chess-player#comments</comments><guid isPermaLink="false">e2d21462-a7d8-4bd3-a6a9-9a55835949f7</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:50:20 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:50:20.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Odisha,Chess,FIDE,சர்வதேச செஸ் கூட்டமைப்பு,Elena Mishra,ஒடிசா சிறுமி,எலெனா மிஷ்ரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/74e6j37k/girl.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Elena Mishra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/74e6j37k/girl.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட செப்டம்பர் மாத உலகளாவிய தரவரிசைப் பட்டியலில், ஒடிசாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா மிஷ்ரா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 4 ஆண்டுகள், 6 மாதங்கள், 16 நாட்கள் மட்டுமே வயதான இவர், FIDE சர்வதேச அமைப்பில் அதிகாரப்பூர்வ தரவரிசையைப் பெற்ற மிக இளம் செஸ் வீராங்கனை என்ற பெருமையை அடைந்துள்ளார்.</p><p>புவனேஸ்வரில் அமைந்துள்ள மதர்ஸ் பப்ளிக் பள்ளியில் சமீபத்தில் நடைபெற்ற ‘ஒடிசா மாநில பிளிட்ஸ் FIDE ரேட்டிங் திறந்தவெளி செஸ் சாம்பியன்ஷிப்’ தொடரில் பங்கேற்ற அவர், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 1,432 புள்ளிகளைப் பெற்றார். 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த பெண் வீராங்கனைகளில், தற்போது <a href="https://www.maalaimalar.com/sports/tennis/aclaraz-tsitsipas-enter-the-4th-round-in-us-open-tennis">FIDE </a>சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இளம் வீராங்கனை இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>முன்னதாக, இவர் நடப்பாண்டில் நடைபெற்ற 7 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்று சிறுமிகள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். மிகக் குறைந்த வயதிலேயே அக்ரஸீவ் செஸ் நகர்வுகளைக் கற்றுக்கொண்ட எலெனாவின் இச்சாதனையை ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.</p><p>ஒட்டுமொத்தப் பிரிவில் (ஆண்/பெண்) மிகச் சிறிய வயதில் FIDE தரவரிசை பெற்ற உலக சாதனை மகாராஷ்டிராவைச் சேர்ந்த சர்வாக்யா சிங் குஷ்வாஹா பெயரில் உள்ளது. அவர் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தனது 3 வயது 7 மாதம் 20 நாட்களில் FIDE தரவரிசையைப் பெற்று இச்சாதனையைப் படைத்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-banned-former-congress-mla-aassan-maulaana-from-contesting-elections-for-3-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-banned-former-congress-mla-aassan-maulaana-from-contesting-elections-for-3-years#comments</comments><guid isPermaLink="false">9a4cf26c-2853-4ff6-894e-a57d57629115</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:29:20 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:29:20.623Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Election Commission,தேர்தல் ஆணையம்,Aassan Maulaana,அசன் மவுலானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vwqripl7/AassanMaulaana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aassan Maulaana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vwqripl7/AassanMaulaana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை வேளச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கடந்த 2021-ம் ஆண்டு வேளச்சேரி தொகுதியில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-is-the-pm-candidate-says-manickam-thakur">காங்கிரஸ்</a> சார்பில் போட்டியிட்டு வென்றவர் அசன் மவுலானா. இவர் அந்த தேர்தலில் செய்த செலவு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கணக்கு காட்டினார். அதில் அவர் முறையாக கணக்கு காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது. </p> <p>அதாவது ரூ. 37 லட்சம் தேர்தலுக்கு செலவு செய்த நிலையில் 17.03 லட்சம் மட்டுமே செலவிட்டதாக கணக்கு காட்டினாராம். இதை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தேர்தல் ஆணையம் </a>கண்டுபிடித்துவிட்டது. நாளிதழ்களில் வெளியான விளம்பரச் செலவுகளை காங்கிரஸ் கமிட்டி ஏற்றதாக கூறி கணக்கு காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-is-the-pm-candidate-says-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-is-the-pm-candidate-says-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">30d82500-29f9-470b-9b37-889072c9fc08</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:22:13 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:22:13.449Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Prime Minister,Manickam Tagore,பிரதமர் வேட்பாளர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1xqa91xr/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1xqa91xr/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் முடிந்து போன கதை: பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை.</p><p>பிரதமர் வேட்பாளர் விஜய் என அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><p>தவெக தோழமை கட்சி கூட்டத்துக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்த நிலையில், சென்னையில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது;</p><p>முதலமைச்சர் தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்.</p><p>வரும் 9-ந்தேதி கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் குறித்து முடிவு செய்யப்படும்.</p><p>பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் முடிந்துபோன கதை. முடிந்துபோன விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம். <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">ராகுல்காந்தி</a>தான் பிரதமர் வேட்பாளர் என்பதை தவிர, சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.”</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 9-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. ஆலோசனைக் கூட்டம்: கம்யூனிஸ்டு கட்சிகள் புறக்கணிப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip#comments</comments><guid isPermaLink="false">fdb2fe14-9df5-4379-9139-1870c7e48483</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:18:23 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:18:23.550Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,கூட்டணி கட்சிகள்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/bprcq3tq/allinace.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. நடத்திய முதல் ஆலோசனைக் கூட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. நடத்திய முதல் ஆலோசனைக் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/bprcq3tq/allinace.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் சொன்னதாக அமைச்சர்கள் கூறிய கருத்தையும் அதில் விவாதிப்போம். அப்போதுள்ள சூழலை பத்திரிகை, ஊடகத்தினருக்கு தெரிவிப்போம் என்றார்.</strong></em></p><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தல், தமிழ்நாட்டில் அரசியல் களத்தையே புரட்டி போட்டது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தி.மு.க.வுக்கு ஏமாற்றத்தையும், கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்த <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.</a>வுக்கு இன்ப அதிர்ச்சியையும், அ.தி.மு.க.வுக்கு சற்று பின்னடைவையும் இந்த தேர்தல் கொடுத்தது.</p><h2><strong>கூட்டணி கட்சிகள் ஆதரவுக்கரம்</strong></h2><p>இதுமட்டுமா? தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இருந்த கட்சிகள், தேர்தலுக்கு பிறகு இன்னொரு கூட்டணிக்கு தாவி பயணித்த நிகழ்வும் அரங்கேறின. அந்த வகையில் ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருக்க த.வெ.க.வுடன், தி.மு.க.வில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டின.</p><p>இதை தற்போது அமைந்திருக்கும் ஆட்சிக்கான கூட்டணியாக மட்டுமல்லாமல், அடுத்து வர இருக்கும் தேர்தல்களை சந்திக்க இருக்கும் அரசியல் கூட்டணியாகவும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி த.வெ.க. ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்தனர்.</p><h2><strong>கூட்டணிக்கு பெயர்</strong></h2><p>சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்த இந்த கூட்டத்தில், முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முதல் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்கவில்லை.</p><p>அந்த கூட்டத்தில், கூட்டணிக்கு ஒரு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. </p><p>இந்த சூழ்நிலையில் த.வெ.க. மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேற்று தங்கள் கூட்டணி கட்சி தலைவர்களையும், நிர்வாகிகளையும் நேரில் சந்தித்தனர்.</p><p>அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று மாநில செயலாளர்கள் வீரபாண்டியன் மற்றும் சண்முகத்தை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். அப்போது நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.</p><p>அதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணாநகரில் உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.</p><h2><strong>2-வது ஆலோசனை கூட்டம்</strong></h2><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளரை சந்தித்து விட்டு வெளியே வந்த அமைச்சர் நிர்மல்குமார், "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு " என்றும், வைகோவை சந்தித்துவிட்டு வெளியே வந்த போது, "முதலமைச்சருக்கு உற்ற துணையாக இருக்கும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். 9-ந்தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சரும் பங்கேற்கிறார்" என்றும் கூறினார்.</p><p>இதனைத்தொடர்ந்து "த.வெ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் சார்பில் எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவசியம் பங்கேற்போம்" என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 9-ந் தேதி நடைபெறும் த.வெ.க. ஆதரவு கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்த பெயர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.</p><p>கூட்டம் புறக்கணிப்பா?</p><p>த.வெ.க. ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்காத நிலையில், 2-வது கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதா? என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-</p><p>இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் குழு நாளை (இன்று) கூடுகிறது. அதன் பிறகு எங்கள் நிர்வாக, செயல், மாநிலக்குழு கூட இருக்கிறது. முதலமைச்சர் சொன்னதாக அமைச்சர்கள் கூறிய கருத்தையும் அதில் விவாதிப்போம். அப்போதுள்ள சூழலை பத்திரிகை, ஊடகத்தினருக்கு தெரிவிப்போம்.</p><p>இடதுசாரிகள் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளித்து த.வெ.க.வை ஆதரித்தோம். அதேபோல் மக்கள் அதிகாரத்தில் கவர்னர் அமர்ந்துவிடக்கூடாது என்பதற்காக த.வெ.க.வை வெளியில் இருந்து ஆதரித்தோம். கூட்டணி, அமைச்சரவையில் இல்லை. வெளியில் இருந்து ஆதரிப்பதால், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்காக சமரசம் இல்லாமல் குரல் எழுப்புகிறோம்.</p><p>அரசு நல்ல திட்டங்கள், அரசியல் திசையில் நகரும்போது ஆதரிப்போம். முதல் கூட்டம் விருந்து. கூட்டணி குறித்து அதில் பேசுவது உடன்பாடு அல்ல. நாங்கள் சென்றால் அந்த கூட்டணியில் பங்கேற்க இயலாது. விருந்தின் தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதால் முதலமைச்சரிடம் அதுபற்றி தெரிவித்து பங்கேற்கவில்லை. இப்போது கூட்டணி தொடர்பான அழைப்பு வந்திருக்கிறது. அதுபற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது. கட்சிதான் முடிவு செய்யும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>VIDEO- &apos;TN07 CM&apos; கணிப்பு நிஜமானது-விஜய் ரசிகர்களை நெகிழ வைத்த வெங்கட் பிரபு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/video-tn07-cm-prediction-comes-true-venkat-prabhu-moves-vijay-fans</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/video-tn07-cm-prediction-comes-true-venkat-prabhu-moves-vijay-fans#comments</comments><guid isPermaLink="false">482a502f-2184-4af1-9ad0-982d9c89c7d7</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:16:07 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:16:07.601Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெங்கட் பிரபு,Venkat Prabhu,goat,தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்,CMVIJAY,முதலமைச்சர் விஜய்,TN07 CM</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/wfbrysrj/VJ.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMVijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/wfbrysrj/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விஜய் முதலமைச்சராவதை முன்கூட்டியே சரியாகக் கணித்தது போல் அமைந்ததாக வெங்கட் பிரபு பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். </p><p>இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை முன்னிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு சிறப்பு வீடியோவை பகிர்ந்துள்ளார். விஜய் திரையுலகில் பெற்ற மகத்தான வெற்றியையும், அவரது தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் அரசியல் பயணத்தையும் ஒரே நேர்கோட்டில் இணைத்துக் காட்டும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Thanks for the memories which we will cherish for a lifetime <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a> na❤️❤️❤️<a href="https://x.com/hashtag/2YearsOfTheGOAT?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#2YearsOfTheGOAT</a> <a href="https://x.com/hashtag/TheGreatestOfAllTime?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TheGreatestOfAllTime</a> <a href="https://x.com/archanakalpathi?ref_src=twsrc%5Etfw">@archanakalpathi</a> <a href="https://x.com/aishkalpathi?ref_src=twsrc%5Etfw">@aishkalpathi</a> <a href="https://x.com/thisisysr?ref_src=twsrc%5Etfw">@thisisysr</a> <a href="https://x.com/Jagadishbliss?ref_src=twsrc%5Etfw">@Jagadishbliss</a> <a href="https://t.co/AxZYtqbnhe">pic.twitter.com/AxZYtqbnhe</a></p>&mdash; venkat prabhu (@vp_offl) <a href="https://x.com/vp_offl/status/2095945503909552627?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>வெளியாகியுள்ள அந்த நினைவலை வீடியோ, 'கோட்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் திரையரங்குகளில் எழுப்பிய அதிரடி ஆரவாரத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, படத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/sundeep-kishan-sharing-inform-for-from-director-to-lead-actor-jason-sanjay">விஜய்</a> நடித்த முக்கியக் காட்சிகளையும், நிஜ வாழ்க்கையில் அவர் முதலமைச்சராகப் பதவியேற்றுப் பொறுப்புகளை வகிக்கும் காட்சிகளையும் அருகருகே ஒப்பீடு செய்து நெகிழ்ச்சியாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.</p><h2>திரையி<strong>ல் கணித்த நிஜ அரசியல்</strong> வெற்றி</h2><p>இந்த வீடியோவில் மிகவும் சுவாரஸ்யமான அம்சமாக, 'கோட்' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட "TN07 CM 2026" என்ற புகழ்பெற்ற வாகனப் பெயர் பலகை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெற்ற இந்தக் காட்சி, விஜய் முதலமைச்சராவதை முன்கூட்டியே சரியாகக் கணித்தது போல் அமைந்ததாக வெங்கட் பிரபு பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், வீடியோவின் இறுதியில் படத்தில் வரும் இளைய விஜய் கதாபாத்திரம் பேசும் "என்னை தடுத்து நிறுத்திட முடியும்னு நினைக்கிறியா?" என்ற மாஸ் வசனத்தைத் தொடர்ந்து, விஜய் முதலமைச்சராக இருக்கும் நிஜக் காட்சிகள் வருவது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.</p><p>2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று திரைக்கு வந்த 'கோட்' திரைப்படம், விஜய்யின் முழு நேர அரசியல் வருகைக்கு முந்தைய முக்கிய திரைப்படமாக அமைந்தது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் உலகளவில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனையைப் படைத்தது. "வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத இனிய நினைவுகளுக்கு நன்றி விஜய் அண்ணா" என்ற உருக்கமான வரிகளுடன் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது- கனிமொழி எம்பி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-will-never-fear-bjp-govt-actions-says-mp-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-will-never-fear-bjp-govt-actions-says-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">989e47d5-2a3d-41f3-a737-96c46aa32235</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:44:31 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:44:31.448Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi MP,தவெக அரசு,TVK Govt,கனிமெழி எம்பி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/98d2wm6g/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/98d2wm6g/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனைக்கு தி.மு.க. எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2>காழ்ப்புணர்ச்சி</h2><p>சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேரு அவர்களைப் பழிவாங்கப் பார்க்கிறது. </p><h2>ஜனநாயக விரோதம்</h2><p>மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சாது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நைஜீரியாவில் கச்சா எண்ணெய் குழாயில் திருட முயற்சி: விஷவாயு தாக்கி 37 பேர் மூச்சுத்திணறி பரிதாப பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/nigeria-illegal-crude-oil-theft-toxic-gas-kills-37</link><comments>https://www.maalaimalar.com/news/world/nigeria-illegal-crude-oil-theft-toxic-gas-kills-37#comments</comments><guid isPermaLink="false">8be4ccd1-ab16-4312-809f-6ed30ad1e1af</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:39:32 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:39:32.353Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஷவாயு,கச்சா எண்ணெய்,Crude oil,Nigeria,Toxic Gas,நைஜீரியா,Okrika</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/s6wvr2qn/nygeria.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  crude oil from pipeline in Nigeria]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/s6wvr2qn/nygeria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழாயில் இருந்து மிக அதிக அழுத்தத்துடன் எரிபொருள் பாயும்போது "இண்டோராமா கெமிக்கல்" என்ற நச்சு வாயு காற்றில் பலமாக பரவியது.</p><p>நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க ரிவர்ஸ் மாநிலத்தில் உள்ள ஒக்ரிகா பகுதிக்கு உட்பட்ட ஒகாரி ஜெட்டி அருகே, சட்டவிரோதமாக எரிபொருள் திருடும் முயற்சியின் போது ஏற்பட்ட நச்சு வாயு கசிவால் 37 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.</p><h2>நள்ளி<strong>ரவில் நடந்த திருட்டு முயற்சி</strong></h2><p>நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறிய படகுகளில் ஒகாரி ஜெட்டி பகுதியில் ஒன்று திரண்டனர். இந்திரமா எலமே <a href="https://www.maalaimalar.com/news/world/russia-strike-on-who-medical-warehouse-in-ukraine">பெட்ரோ கெமிக்கல் </a>நிறுவனத்திலிருந்து போர்ட் ஹார்கோர்ட் சுத்திகரிப்பு நிலையம் வழியாக ஏற்றுமதிக்கு கொண்டு செல்லப்படும் பிரதான எரிபொருள் குழாயில் சட்டவிரோதமாக துளையிட்டு எரிபொருளை திருட முயன்றுள்ளனர்.</p><p>குழாயில் இருந்து மிக அதிக அழுத்தத்துடன் எரிபொருள் பாயும்போது "இண்டோராமா கெமிக்கல்" என்ற நச்சு வாயு காற்றில் பலமாக பரவியது. இதனால் அங்கிருந்த இளைஞர்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.</p><h2>ஆற்றில் <strong>மூழ்கிய உடல்கள்</strong></h2><p>மயக்கமடைந்த பல இளைஞர்கள் போனி நதியில் விழுந்தனர். இதுவரை 37 பேரின் உடல்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பலரின் உடல்கள் ஆற்றில் மிதந்து கொண்டு இருப்பதாகவும், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் குறித்து ரிவர்ஸ் மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நைஜீரியாவில் நிலவும் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக இது போன்ற சட்டவிரோத எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது... ஊழல்வாதிகளுக்கு தான் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-people-in-tn-safeonly-corrupt-are-not</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-people-in-tn-safeonly-corrupt-are-not#comments</comments><guid isPermaLink="false">7063b894-9df5-40ab-865a-bfdb1050395f</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:38:15 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:38:15.775Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>kn nehru,கேஎன் நேரு,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/sth8p819/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/sth8p819/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடும் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p> <p>திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் மதுரையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல்குமார்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p>  <p>திமுக முன்னாள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">அமைச்சர் கே.என்.நேரு</a> வீட்டில் ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை, ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது.</p><p>பெண்களை பற்றி அவதூறாக பொதுமேடையில் பேசியதற்காக தான் உதயநிதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.</p><p>திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்ளும்.</p>  <p>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடும்.</p><p>பிரதமர் வேட்பாளர் குறித்த பேசுவதற்கு காலம் உள்ளது.</p><p>தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது, ஊழல்வாதிகளுக்கு தான் பாதுகாப்பில்லை.</p><p>நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் சட்டசபை நடைபெறுகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு தடுப்பு நடவடிக்கை: பள்ளி மாணவிகள் பாவாடைக்கு பதிலாக சுடிதார் அணிய மேற்கு வங்க அரசு பரிந்துரை!</title><link>https://www.maalaimalar.com/news/national/dengue-prevention-west-bengal-govt-urges-salwar-kameez</link><comments>https://www.maalaimalar.com/news/national/dengue-prevention-west-bengal-govt-urges-salwar-kameez#comments</comments><guid isPermaLink="false">dcbb3a1e-fc11-4923-8cd6-7dffcdb23532</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:17:14 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:17:14.266Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,Dengue,West Bengal Government,டெங்கு,Sarathwat Mukherjee,மேற்கு வங்க அரசு,சரத்வத் முகர்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/73a8g8v6/benga.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sarathwat Mukherjee]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/73a8g8v6/benga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலத்தில் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது.</p><p>மேற்கு வங்க மாநிலத்தில் <a href="https://www.maalaimalar.com/news/national/2-crore-children-face-online-sexual-abuse-in-a-year">டெங்கு காய்ச்சல் </a>பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சீருடை பாவாடைக்கு பதிலாக உடலை முழுமையாக மூடும் சல்வார் கமீஸ் அல்லது சுடிதார் ஆடைகளை அணிய அனுமதிக்குமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2>கொசுக்க<strong>டியைத் தவிர்க்க புதிய</strong> நடவடிக்கை</h2><p>மாநிலத்தில் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், ஸ்வஸ்த்ய பவன் தலைமையகத்தில் உயர்நில ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி, கொசுக்கடியிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டார்.</p><p>அடுத்த மூன்று மாதங்களுக்கு பள்ளி மாணவர்கள் அனைவரும் முழுக்கை சட்டைகள் மற்றும் முழு நீள பேண்ட் அணிய பள்ளிகள் அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வழக்கமாக பாவாடை (ஸ்கர்ட்) சீருடை அணியும் மாணவிகள், தங்கள் கால்களை முழுமையாக மூடும் வகையில் சல்வார் சூட்களுக்கு மாற தற்காலிகமாக விலக்கு அளிக்குமாறு பள்ளி நிர்வாகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><h2>பள்ளிகளுக்கு விடுக்கப்<strong>பட்ட வேண்டு</strong>கோள்</h2><p>டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் பகல் நேரத்திலேயே அதிகளவில் கடிக்கும் தன்மையுடையவை என்பதால், பள்ளி நேரங்களில் மாணவர்களின் கை மற்றும் கால்கள் மூடப்பட்டிருப்பது நோய்த்தொற்று அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். எனவே, அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் இந்தத் தற்காலிக மாற்றத்தை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;செக்கிழுத்த செம்மல்&quot; வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்!- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pays-tribute-to-vo-chidambaranar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pays-tribute-to-vo-chidambaranar#comments</comments><guid isPermaLink="false">fd6ed02a-18f7-49c6-9a86-37d61bd488fb</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:02:30 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:02:30.293Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,பிறந்தநாள் வாழ்த்து,Birthday,வ.உ.சிதம்பரனார்,VO Chidambaram,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/4gvruaw7/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VOC-TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/4gvruaw7/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரத்துடனும், தியாக உணர்வுடனும் போராடி, மக்கள் மனங்களில் சுதேசி உணர்வை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை மட்டுமின்றி, பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள்.</p><p>தாய்நாட்டின் விடுதலை, சுதேசி உணர்வு, உழைப்பாளர்களின் உரிமை ஆகியவற்றிற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த “செக்கிழுத்த செம்மல்”வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-caste-wise-census-must-be-conducted-by-incorporating-the-list-of-castes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-caste-wise-census-must-be-conducted-by-incorporating-the-list-of-castes#comments</comments><guid isPermaLink="false">bdbc6512-251f-4a09-b208-447ddba06edb</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:02:06 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:02:06.081Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Central govt,சாதிவாரி கணக்கெடுப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ttmjjsoj/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ttmjjsoj/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு, பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, அதற்கு பதிலாக கணக்கெடுப்புக்கான செயலியில் ஓபிசி சாதிகளின்  பட்டியலை இணைத்து அதிலிருந்து சாதியின் பெயரையும் எண்ணையும் தேர்வு செய்யும் முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தேசிய அளவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஓபிசி எனப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாதி மக்களின் எண்ணிக்கையை கணக்கிட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் கடைபிடிக்கப்படும் ஓபிசி சாதிகள் பட்டியலை இணைத்து பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டதாகவும்,  ஆனால், அந்தப் பட்டியலில் இருப்பவை வகுப்புகள் தானே தவிர, சாதிகள் இல்லை என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மத்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கான கூறப்படும் பலவீனமான காரணம் தானே தவிர ஏற்றுக்கொள்ளத்தக்க வாதம் அல்ல.</p><h2><strong>பிப்ரவரியில் பணி தொடக்கம்</strong></h2><p>இந்தியாவில் கடைசியாக 1931-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட சமூகநீதி அமைப்புகளின் வலியுறுத்தல் காரணமாக 95 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக நாடு முழுவதும் வீட்டுப் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் சாதி விவரத்துடன் மக்கள்தொகையை கணக்கெடுக்கும் பணி கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் வரும் பிப்ரவரி மாதத்தில் இப்பணி தொடங்கவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்</a> போது, சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் ஒதுக்கப்பட்டு,  அதில் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை எழுதும் முறை பின்பற்றப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த முறைக்கு பதிலாக சாதிவாரி கணக்கெடுப்புக்காக பயன்படுத்தப்படும் செயலியில், மத்திய அல்லது மாநில அரசுகளின் சாதிகளை பட்டியலை இணைத்து, அதிலிருந்து மக்களை அவர்களின் சாதியை தேர்ந்தெடுக்கச் செய்து, பதிவு செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் கடிதமும் எழுதினேன். அதைத் தொடர்ந்து காங்கிரசும் இப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது.</p><h2><strong>ஏற்க முடியாதது</strong></h2><p>இந்த சர்ச்சை தொடர்பாக பதிலளித்திருக்கும் மத்திய அரசு அதிகாரிகள்,‘‘சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடங்குவதற்கு முன்பாக, சாதிகள் பட்டியலில் இருந்து சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தான் மத்திய அரசின் ஓபிசி பட்டியலில் இருப்பவை சாதிகள் அல்ல... வகுப்புகள் எனத் தெரியவந்தது. பிச்சை எடுப்பவர்கள், உள்ளூரில் பிறந்தவர்கள் என்பன உள்ளிட்ட பிரிவுகள் ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவை சாதிகள் அல்ல, வகுப்புகள். இதனால் எந்த குழப்பமும் வந்து விடக் கூடாது என்பதால் தான் பட்டியலை இணைப்பதற்கு பதிலாக, சாதியின் பெயரை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கேட்டு எழுதும் முறை பின்பற்றப்படுகிறது’’ என்று தெரிவித்ததாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகளின் இந்த வாதம் ஏற்க முடியாதது.</p><p>இந்தியாவின் முதல் ஓபிசி பட்டியல் 1995-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. காகா கலேல்கர் தலைமையிலான முதலாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 2399 சாதிகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் 837 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்டவையாக  வகைப்படுத்தப்பட்டிருந்தன. காகா கலேல்கர் உருவாக்கிய பட்டியலில் முழுக்க முழுக்க சமூகங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. அதன்பின் 1980-ஆம் ஆண்டு திசம்பர் 31-ஆம் தேதி மண்டல் தலைமையிலான இரண்டாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஓபிசி பட்டியலில் இந்த எண்ணிக்கை முறையே 3743, 1937 என உயர்த்தப்பட்டிருந்தது. அதற்கு காரணம், சாதியின் அடிப்படையில் மட்டுமின்றி சில தொழில் பிரிவினரையும், நாடோடிக் குழுக்களையும் அவர்களின் சமூக பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஓபிசி பட்டியலில் மண்டல் ஆணையம் இணைத்தது தான்.</p><p>ஒரு காலத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்த தாசரி, ஜங்கம் போன்ற வகுப்பினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி தான், 1993-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மத்திய அரசால் சுட்டிக்காட்டப்பட்ட உள்ளூரில் பிறந்தவர்கள் என்ற வகுப்பினர் அந்தமான் தீவுகளுக்கான ஓபிசி பட்டியலில் 2011-ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டனர்.  தமிழ்நாட்டிலும் இதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டு. திருநங்கையர் என்பது சாதியின் பெயர் அல்ல. அது மூன்றாம் பாலினம் ஆகும். ஆனால், அவர்களின் சமூக, பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதால்  அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று 2012ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>வலிமை சேர்க்காது</strong></h2><p>இந்த நடவடிக்கைகளின் நோக்கம் சாதிகளைக் கடந்தும் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு சமூகநீதி வழங்குவது தான். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கமும் சமூகநீதி வழங்குவது தான். அவ்வாறு இருக்கும் போது, சில வகுப்புகளை சாதிகளாக  பட்டியலிட்டு பதிவு செய்வதால் எந்த குழப்பமும் ஏற்பட்டு விடாது. அந்த வகுப்புகள் ஓபிசி பட்டியலில் சேர்க்கப் பட்டதன் நோக்கம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி பயன்களை வழங்குவதற்காகத் தான் என்பதால், அவர்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள அவர்களை சாதிகளாகவே பதிவு செய்வதில் தவறு இல்லை. அவ்வாறு செய்வதால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கம் சிதைந்து விடாது.</p><p>அதே நேரத்தில் சில வகுப்புகளை சாதிகளாக பதிவு செய்யக் கூடாது என்பதற்காக, சாதியின் பெயரை மக்களிடமே கேட்டு பதிவு செய்யும் முறை பின்பற்றப்பட்டால், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 4147 சாதிகள் மட்டுமே உள்ள நிலையில், 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவரும். இது தான் சாதிவாரி மக்கள்தொகையின் நோக்கத்தையே சிதைத்து விடும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதாக அமைந்து விடும். இது சமூகநீதிக்கு வலிமை சேர்க்காது.</p><p>எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு, பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, அதற்கு பதிலாக கணக்கெடுப்புக்கான செயலியில் ஓபிசி சாதிகளின்  பட்டியலை இணைத்து அதிலிருந்து சாதியின் பெயரையும் எண்ணையும் தேர்வு செய்யும் முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்; இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 14&amp;ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ ஆணை S.O. 4505(E) -ஐ ரத்து செய்து விட்டு, புதிய ஆணையை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-5-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-5-9-2026#comments</comments><guid isPermaLink="false">f1e8c56f-4eeb-4425-9589-89ed5af23aaa</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:55:48 +0000</pubDate><atom:updated>2026-09-05T06:55:48.389Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/05/25935896-gold.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/05/25935896-gold.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p> <p>தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்டு) தொடக்கத்தில் குறைந்து இருந்து, பின்னர் 'கிடுகிடு'வென அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது.</p><p>பிறகு கடந்த மாதம் 27-ந்தேதியில் இருந்து குறையத் தொடங்கிய நிலையில், இப்போது ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 1, 2-ந்தேதிகளில் விலை குறைந்து, நேற்று முன்தினம் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் விலை அதிகரித்து இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 240-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.120-ம், பவுனுக்கு ரூ.960-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 360-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை சரிவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.1,360 குறைந்து ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>04-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880</p><p>03-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,920</p><p>02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><p>01-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,400</p><p>31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>04-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>01-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>31-08-2026- ஒரு கிராம் ரூ.260</p> ]]></content:encoded></item><item><title>தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்- மு.க.ஸ்டாலின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-3#comments</comments><guid isPermaLink="false">1b1128df-bb56-4c9f-a87a-d93a224d56a2</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:46:04 +0000</pubDate><atom:updated>2026-09-05T06:46:04.787Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,தவெக,kn nehru,கேஎன் நேரு,tvk,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/fty8o0me/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/fty8o0me/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கே.என்.நேருவும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்! என்று கூறியுள்ளார்.</strong></em></p><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்...</strong></h2><p>உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.</p><p>இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81">கே.என். நேரு</a> மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.</p><p>ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர். </p><p>இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">கே.என்.நேரு</a> அவர்களும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்! என்று கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.<br><br>இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.<br><br>ஆட்சி அமைக்க…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2096100963321065902?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஜிடிஏ 6 வெளியீட்டை ஒட்டி பிரத்யேக டூயல்சென்ஸ் பி.எஸ். 5 கண்ட்ரோலர்கள் அறிமுகம் - என்ன ஸ்பெஷல்?</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/gta-6-gets-special-dualsense-ps5-controllers-from-sony</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/gta-6-gets-special-dualsense-ps5-controllers-from-sony#comments</comments><guid isPermaLink="false">86cfc5bb-42df-4117-acdd-998dcc1c64a9</guid><pubDate>Sat, 05 Sep 2026 04:34:00 +0000</pubDate><atom:updated>2026-09-05T04:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sony,சோனி,GTA 6,ஜிடிஏ 6</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/zx7jhp4h/GTA-VI-Limited-Edition-DualSense-Wireless-Controllers.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GTA VI Limited-Edition DualSense Wireless Controllers]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/zx7jhp4h/GTA-VI-Limited-Edition-DualSense-Wireless-Controllers.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/sony">சோனி</a> நிறுவனம், பிளே ஸ்டேஷன் 5 (PS5)-க்கான GTA 6 கேமின் பிரத்யேக டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்களை அறிவித்துள்ளது. ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் GTA 6-க்கான முன்பதிவுகளை அறிவித்துள்ளது. </p><p>சமீபத்திய ஸ்டேட் ஆஃப் பிளே நிகழ்வில், சோனி பல விளையாட்டுகளை அறிவித்துள்ளது. இத்துடன், GTA 6 விளையாட்டின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்களும் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>இதில் கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வகைகள் இருக்கும். இந்த இரண்டு டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்களும் நவம்பர் 19, 2026 முதல் கிடைக்கும். இவற்றின் விலை 12,480 யென் (இந்திய மதிப்பில் ரூ. 7547) என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் PS5-க்கான கூடுதல் பொத்தான்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.</p><h2>குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும்:</h2><p>இந்த புதிய டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்கள் சேகரிப்பாளர்களை இலக்காக கொண்டவை, மேலும் இவை குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கக்கூடும்.</p><p>புதிய சோனி டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்கள் செப்டம்பர் 10, 2026 முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. இது பிளே ஸ்டேஷன் டைரக்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கும், ஆனால் இதன் ஸ்டாக் குறைவாகவே இருக்கும். இரண்டு கன்ட்ரோலர்களும் வண்ண வடிவமைப்பில் மிகவும் அழகாக தெரிகின்றன. இதன் அடிப்பகுதியில் ஊதா நிற சாயல்களும், ரிமோட்டின் மேற்புறத்தில் VI பிராண்டிங்கும் இடம்பெற்றுள்ளன.</p><h2>வருவாயை அதிகரிக்கும் வாய்ப்பு:</h2><p>இந்த வடிவமைப்பு வைஸ் சிட்டியை பெரிதும் தழுவி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. GTA VI விளையாட்டில் DualSense-இன் அடாப்டிவ் ட்ரிக்கர்களும் ஹேப்டிக் ஃபீட்பேக்கும் முக்கிய பங்கு வகிக்கும் என்று சோனி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சுடுதலாக, வாகனம் ஓட்டுதல் போன்ற அனுபவங்களில் இந்த அம்சங்கள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.</p><p>இந்த விளையாட்டை சுற்றியுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க, சோனி மற்றும் ராக்ஸ்டார் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன என்பதை இது காட்டுகிறது. </p><p>மேலும், இது சோனிக்கு அதிக PS5 கன்சோல்களையும், DualSense கன்ட்ரோலர்களையும் விற்பனை செய்து, அதன் வருவாயை அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-near-sattur-worker-dies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-near-sattur-worker-dies#comments</comments><guid isPermaLink="false">62959912-832b-4bbd-91d9-a28a22d1dbe6</guid><pubDate>Sat, 05 Sep 2026 04:06:56 +0000</pubDate><atom:updated>2026-09-05T04:06:56.976Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>worker death,பட்டாசு ஆலை வெடிவிபத்து,தொழிலாளி உயிரிழப்பு,Firecracker Factory Explosion,சாத்தூர்,Sattur</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/9ra6ixd1/fireworks.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Firecracker factory explosion]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/9ra6ixd1/fireworks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.</p> <p>விருதுநகர் மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">சாத்தூர்</a> அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னதம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பட்டாசு ஆலை</a>யில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.</p> <p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்பதாலும் வெடித்து சிதறுவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p> <p>இந்த வெடிவிபத்தில் தொழிலாளி மாடசாமி என்பவர் உயிரிழந்தார்.</p><p>கடந்த 3-ந்தேதி பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லெவல் 2 ADAS, இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் கியா சொரென்டோ இந்தியாவில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/kia-sorento-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/kia-sorento-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">c9cc1228-86b3-46f2-878e-25291a8002d9</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:57:00 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:57:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Kia India,கியா இந்தியா,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ggemkdcm/Kia-Sorento.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kia Sorento]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ggemkdcm/Kia-Sorento.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/kia-india">கியா இந்தியா</a> நிறுவனம் கேரன்ஸ் கிளாவிஸ் மாடலின் மேல் ஒரு பெரிய ஏழு இருக்கைகள் கொண்ட புதிய எஸ்.யூ.வி. மாடல்- கியா சொரென்டோவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கியா சொரென்டோ மாடல் ரூ. 27.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>புதிய சோரென்டோ <a href="https://www.maalaimalar.com/topic/car">கார்</a> 4.8 மீட்டருக்கும் அதிகமான நீளத்தையும், 2.8 மீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. மேலும், இது 19-இன்ச் அலாய் வீல்கள், செங்குத்தாக அடுக்கப்பட்ட LED DRL-கள் மற்றும் டெயில் லேம்ப்கள், மற்றும் ஹிடென் வைப்பர் கொண்ட பின்புற ஸ்பாய்லர் ஆகியவற்றை கொண்டுள்ளது. </p><h2>சோரென்டோ சிறப்பு அம்சங்கள்:</h2><p>கியா வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்ச பட்டியல் சொரெண்டோவில் வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு உட்புற தீம் ஆப்ஷன்கள் மற்றும் லம்பார் சப்போர்ட் உடன் கூடிய பவர் டிரைவர் இருக்கை ஆகியவை அடங்கும். 12-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் இந்த தொகுப்பின் ஒரு பகுதியாகும்.</p><p>அதே நேரத்தில், ஒரு ஹெட்-அப் டிஸ்ப்ளே, வளைந்த இரட்டைத் திரை அமைப்பில் 12.3-இன்ச் தொடுதிரை மற்றும் 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இரண்டாவது வரிசையில், ஸ்லைடு மற்றும் சாய்வு வசதியுடன் கூடிய வென்டிலேட்டெட் கேப்டன் இருக்கைகள் உள்ளன. மூன்றாவது வரிசையை ரிமோட் மூலம் மடக்கும் வசதி உள்ளது.</p><p>பாதுகாப்பை பொறுத்தவரை, சோரென்டோவில் 10 ஏர்பேக்குகள், லெவல் 2 ADAS, ஹில் டிசென்ட் கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா மற்றும் டிஜிட்டல் ரியர்வியூ மிரர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.</p><h2>என்ஜின் விவரங்கள்:</h2><p>பவர்டிரெய்ன் தேர்வுகளில், 177 ஹெச்.பி. பவர் மற்றும் 265 நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்யும் 1.6-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினுடன், 64 ஹெச்.பி. பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்ட ஒரு ஹைப்ரிட் சிஸ்டம் உள்ளது.</p><p>டீசலை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, 8-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 2.2-லிட்டர் டீசல் என்ஜின் உள்ளது. இந்த இரண்டு பவர்டிரெய்ன்களும் 3 டிரைவ் மற்றும் டெரெய்ன் மோட்களின் தேர்வுகளுடன் வருகின்றன.</p><p>ஏழு இருக்கைகள் கொண்ட எஸ்.யூ.வி. பிரிவில், கியா சொரெண்டோ எம்.ஜி. ஹெக்டார் டோமஹாக் , டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் மஹிந்திரா XUV 7XO ஆகியவற்றுடன் போட்டியிடும்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-greetings-to-teachers-who-shape-students-into-good-human-beings</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-greetings-to-teachers-who-shape-students-into-good-human-beings#comments</comments><guid isPermaLink="false">b899d9ba-f415-4a3a-a365-fa9f25bb7048</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:32:03 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:32:03.503Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,teachers day,ஆசிரியர் தினம்,Doctor Radhakrishnan,டாக்டர் ராதாகிருஷ்ணன்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c9pr1o58/MKS1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c9pr1o58/MKS1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.</p><p>இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இந்நாளில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">ஆசிரியர் தினம்</a> கொண்டாடப்படுகிறது.</p><p>சமுதாயத்திற்கு வழிகாட்டும் ஆசிரியர்களின் சேவையைப் போற்றும் வகையில் இந்நாள் அமைகிறது.</p><p>இந்நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துப் பதிவை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!</p><p>நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் AI காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!</p><p>அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க ஆசிரியர் தினத்தில் உறுதிகொள்வோம்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day#comments</comments><guid isPermaLink="false">b245a60e-783f-48c0-af5e-7d6f853a099f</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:10:03 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:10:03.757Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,teachers day,ஆசிரியர் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cmhttp0z/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cmhttp0z/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/ஆசிரியர்-தினம்">ஆசிரியர் தினம்</a> கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில், இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். </p><p>இதுதொடர்பாக, முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தன்னலமற்ற அர்ப்பணிப்பு</strong></h2><p>இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/7uuoslsr/vijay0.jpg" /></figure><p>மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்!</p><p>ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது… <a href="https://t.co/Gvx0TCnzPg">pic.twitter.com/Gvx0TCnzPg</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2096067257973780903?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru#comments</comments><guid isPermaLink="false">ca35662d-58f7-43da-9ef5-b8eb94a59b15</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:05:53 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:05:53.193Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,kn nehru,கேஎன் நேரு,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-05/mf5kmsvt/KN-Nehru.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KN Nehru]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-05/mf5kmsvt/KN-Nehru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p> <p>தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar">தி.மு.க.</a> ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><h2>கே.என். நேரு வீட்டில் சோதனை </h2><p>அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தொட ர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சென்னை, திருச்சி வீடுகள் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.</p> <h2>சென்னையில்</h2><p>சென்னை மைலாப்பூர் மற்றும் திருச்சி தில்லைநகர் ஆகிய இடங்களில் உள்ள கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் வீடுகளுக்கு இன்று காலை 7 மணி அளவில் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். திருவான்மியூர், அடையாறு, அண்ணா நகர், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. </p> <p>ராஜா அண்ணாமலை புரத்தில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81">கே.என். நேருவின்</a> தம்பி ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதேபோன்று திருச்சி, கோவை என மொத்தம் 19 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. கே.என். நேரு, தி.மு.க. ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அந்த துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. </p> <p>இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் தான் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>திருச்சி </h2><p>திருச்சி தில்லைநகர் 5-வது கிராசில் உள்ள கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை 7-30 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு வருகின்றனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்கின்றனர். </p> <p> இதுபற்றி தகவல் அறிந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் தில்லைநகரில் உள்ள கே.என்.நேரு வீட்டின் முன்பு திரண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>கோவை</h2><p>கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடை பகுதியில் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. அதேபோன்று கோவை, மசக்காளி பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. இந்த வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு இன்று காலை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜேஷ் தலை மையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் காலை 7 மணிக்கு அதிரடியாக நுழைந்தனர். </p> <p>ஒவ்வொரு பகுதிக்கும் தலா 4 லஞ்ச ஒழிப்பு போலீசார் வீதம் சென்று அங்கு வீடு மற்றும் அலுவலகத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்தனர். அப்போது அவர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்கள் பணம் பெற்றதற்கான தகவல்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைக்கிறதா என லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.</p> <h2>தடை</h2><p>இந்த சோதனை நடைபெற்றபோது வீட்டில் இருந்து ஆட்களை வெளியில் செல்வதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதேபோன்று வெளியில் இருந்து ஆட்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.</p><p>அப்போது வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ளதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சில ஆவணங்கள் குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>சோதனையின் முடிவில் கிடைத்த தகவல்கள் குறித்து வெளியிடப்படும் என போலீசார் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.</p>]]></content:encoded></item></channel></rss>