<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 19 Sep 2026 12:09:29 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 19 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-september-2026#comments</comments><guid isPermaLink="false">879b7072-039f-46f2-9fb1-c5b930ad6945</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:03:44 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:27:56.572Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/4sus048d/LIVE.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/4sus048d/LIVE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/on-this-day-yuvraj-singh-hits-six-sixes-in-an-over">வரலாற்றில் இன்று: ஓரே ஓவரில் ஆறு சிக்ஸ்ர்கள் அடித்து சாதனை படைத்த யுவராஜ் சிங்.!.</a></p><p> யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த அதிரடியான ஆல் ரவுண்டர்களில் திகழ்ந்தவர்களில் ஒருவர் ஆவார்.</p><p>இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதே தினத்தில் யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை ப்டைத்தார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/new-cat-species-found-in-bolivia-after-100-years">பொலியாவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்..!</a></p><p> பொலிவியாவின் அடர்ந்த யுங்காஸ் மேகமூட்டக் காடுகளில் மறைந்திருந்த புதிய சிறிய காட்டுப்பூனையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p>வீட்டுப் பூனைகளை விடச் சிறியதுமான அந்த காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த விலங்கிற்கு லியோபார்டஸ் டில்காயோ என பெயரிடப்பட்டுள்ளது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/sports/manu-bhaker-pawan-sehrawat-lead-indian-contingent-in-asian-games-opening-ceremony">கோலாகலமாக தொடங்கியது ஆசிய விளையாட்டு: தேசியக்கொடி ஏந்தி வந்த மனு பாக்கர், பவன் ஷெராவத்</a></p><p>* கடந்த ஆசிய போட்டியில் இந்தியா 107 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடம் பிடித்தது.</p><p>* இதில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் அடங்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/incompetent-government-fails-to-stop-murders-in-tamil-nadu">தமிழகத்தில் தொடரும் கொலைகளை தடுக்காமல் இருக்கும் வக்கற்ற அரசு, நீதி கேட்டால் ஒடுக்குவதா? - கனிமொழி கண்டனம்.</a></p><p>ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. </p><p>கொலைகளுக்கு நீதி கேட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வது கண்டனத்திற்குரியது.</p> <p><a href="https://www.maalaimalar.com/technology/techfacts/humanity-could-be-wiped-out-by-ai-technology-by-2030-what-does-nvidia-ceo-jensen-say">"2030-க்குள் ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலமே அழியும்" - NVIDIA சி.இ.ஓ ஜென்சன் சொல்வது என்ன?</a></p><p>*செயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொள்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான முயற்சிகளை, அதன் வளர்ச்சி வேகம் மிஞ்சிவிடக்கூடும் </p><p>*முழுமையாகத் தயாராகாத மற்றும் பாதுகாப்பற்ற ஏஐ மாடல்கள் சந்தைக்குக் கொண்டுவரப்படக்கூடாது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-urges-withdraw-the-government-orders-that-undermine-tamil-nadus-medical-infrastructure">தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக!- சிபிஐ(எம்) வலியுறுத்தல்</a></p><p>* அரசு பணியில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் நிரந்தரம் செய்வோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானதாகும். </p><p>* சாதாரண ஏழை எளிய மக்களின் அரசு மருத்துவமனை பயன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-released">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</a></p><p>* த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>* புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-chief-minister-to-launch-it-in-thiruvanmiyur-on-the-22nd">காலை உணவு திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் திருவான்மியூரில் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்</a></p><p> * காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது.</p><p>* திருவான்மியூரில் உள்ள பள்ளியில் முதலமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைப்பது உறுதி ஆகி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-dmk-office-situated-on-srirangam-temple-land-who-is-behind-this-fraud">திமுக அலுவலகம் ஸ்ரீரங்கம் கோவில் நிலமே... மோசடி பின்னால் இருப்பவர்கள் யார்? - அமைச்சர் ரமேஷ்</a></p><p>* போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளனர்.</p><p>* திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படியொரு மோசடி நடத்தியிருக்க வாய்ப்பில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-awareness-must-be-created-regarding-the-measures-to-be-taken-to-prevent-and-recover-from-dengue">டெங்குவை தடுக்கவும், குணமடையவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!- அன்புமணி</a></p><p>* டெங்கு காய்ச்சல் குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதற்கான சிகிச்சை வசதிகளும், மருந்துகளும்  அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் உள்ளன.  </p><p>* டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தினால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/a-shock-for-mamata-announcement-that-the-second-candidate-is-also-withdrawing-from-the-by-election-and-the-twist-that-followed">சோதனை மேல் சோதனை.. மம்தா அறிவித்த மற்றொரு வேட்பாளரும் வாபஸ் வாங்குவதாக அறிவிப்பு - அடுத்த நடந்த டுவிஸ்ட் </a></p><p>* கிளர்ச்சி அணியின் ரிதர்பா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/a-shock-for-mamata-announcement-that-the-second-candidate-is-also-withdrawing-from-the-by-election-and-the-twist-that-followed"><br></a>*மம்தா தரப்பினர் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மிரட்டப்படுகிறார்கள்</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-tvk-star-speakers-to-campaign">இடைத்தேர்தல் பிரசாரம்: த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 பேருக்கு அனுமதி வழங்கியது தேர்தல் ஆணையம்</a></p><p>*  தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.</p><p>* 2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-accusation-dmk-playing-politics-over-bharathidasan-issue">பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்கிறது திமுக - அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு</a></p><p>* திமுக ஆட்சியில் தலித் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர்.</p><p>* வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-writes-to-prime-minister-regarding-chennai-airport">சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்- வலுக்கும் கண்டனம்</a></p><p>* தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>* மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-governor-arlekar-says-keeping-surroundings-clean-should-be-a-natural-habit">சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது இயல்பான பழக்கமாகவே இருக்க வேண்டும் -  ஆளுநர் அர்லேகர்</a></p><p>* இன்று நாங்கள் அனைவரும் உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் கூடியுள்ளோம். </p><p>* தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-plan-to-set-up-a-garbage-incinerator-must-be-abandoned-immediately">குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன.</p><p>* திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்த தவெக அரசு, இந்த பேரழிவுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தத் துடிப்பது ஏன்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-low-pressure-area-forming-over-andaman-sea">அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு </a></p><p>* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.</p><p>* குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/iit-student-dies-by-suicide-after-using-chatgpt-in-exam">தேர்வில் ChatGPT பயன்படுத்திய IIT மாணவர் தற்கொலை - சக மாணவர்கள் போராட்டம்!</a></p><p>* ஐஐடி பாம்பேயில் ChatGPT பயன்படுத்திய மாணவர் தற்கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>* நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறது, மாணவர்கள் மிரட்டல் தான் காரணம் என போராட்டம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-white-house-ban-on-cnn-denounced-as-assault-on-press-freedom">வெள்ளை மாளிகையில் சில செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்த டிரம்ப்...</a> </p><p>* அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் மூன்று செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளார்.</p><p>* இந்த நிறுவனங்கள் போலி செய்திகளை வெளியிட்டு வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-19-9-2026">GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா? </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சமூகமும் அரசும் முழுமையாக தோற்றுவிட்டது.. டெல்லி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - கொலை குறித்து பிரியங்கா காட்டம் 
</title><link>https://www.maalaimalar.com/news/national/priyanka-expresses-strong-condemnation-regarding-the-gang-rape-and-murder-of-the-delhi-girl</link><comments>https://www.maalaimalar.com/news/national/priyanka-expresses-strong-condemnation-regarding-the-gang-rape-and-murder-of-the-delhi-girl#comments</comments><guid isPermaLink="false">c262a267-ccf1-41ab-9dd4-58af3aeb2faa</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:46:27 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:46:27.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறுமி பாலியல் வன்கொடுமை,டெல்லி,பிரியங்கா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/p7hfaip4/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரியங்கா]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரியங்கா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/p7hfaip4/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் மைனர் சிறுவர்கள் மூவர் மற்றும் அவர்களின் 19 வயது நண்பன் கைது செய்ப்பட்டுள்ளனர்.</p> <p>டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">கூட்டுப் பாலியல் வன்கொடுமை </a>செய்யப்பட்டு 6 முறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் சடலம் 2 நாட்கள் கழித்து ஸ்வரூப் நகரில் Kushak சாலையில் திறந்த வெளியில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. </p><p>சிறுமியின் உடல் அழுகிய நிலையில் நாய்கள் குதறிய நிலையில் இருந்தது.  சிறுமியின் இடது கரத்தில் இருந்த 3 நட்சத்திரம் பொறித்த டாட்டூவை வைத்து போலீசார் சிறுமியை அடையாளம் கண்டனர். </p> <h2>சிறுமிக்கு நேர்ந்த கொடுமை</h2><p>சிறுமி செப்டம்பர் 10 ஆம் தேதியே காணாமல் போயிருந்தபோதும் பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவில்லை. போலீசார் தாமாக முன்வந்து செய்த விசாரணையில் 50 சிசிடிவி கேமராக்கள் ஆராயப்பட்டு சரக்கு வண்டியில் வந்து அந்த இடத்தில் உடல் போடப்படத்தை கண்டறிந்தனர்.</p><p>அந்த வாகனத்தின் நம்பர் பிளேட் ஐ வைத்து அதன் உரிமையாரை அடையாளம் கண்டனர். அந்த நபர் தனது 17 வயது தம்பி தன் வாகனத்தை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார். அந்த சிறுவனை விசாரித்தபோது அவன் உண்மையை ஒப்புக்கொண்டு மற்ற மூவரின் பெயர்களையும் கூறியுள்ளான். நால்வரும் சிறுமிக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் ஆவர்.</p><p>கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் சிறுமி, போலீசில் புகார் அளிக்கப் போவதாக மிரட்டியதால் பயந்து சிறுமியை ஏற்கனவே அவர்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொன்றதாக சிறுவனை வாக்கு மூலம் அளித்துள்ளான். மேலும் சிறுமி தன்னை திருமணம் செய்ய விரும்பியதாகவும் ஆனால் அதற்கு தான் சம்மதிக்கவில்லை என்றும் சிறுவன் கூறியுள்ளான்.</p>  <h2>வழக்கு</h2><p>வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார் 19 வயது இளைஞரை நீதிமன்ற காவலிலும், 16, 17 வயது நிரம்பிய 3 சிறுவர்களை சிறார் கூர்நோக்கு மையத்திலும் அடைத்தனர்.</p><p>இந்த சம்பவத்தில் 3 சிறுவர்களையும் வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்தப்படும் என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. அவர்களின் பள்ளிச் சான்றிதழ் மூலம் மைனர்கள் என வரையறுக்கப்பட்டபோதும் அவர்களின் வயதை நிர்ணயிக்க bone ossification டெஸ்ட் நடந்த போலீஸ் திட்டமிட்டுள்ளது.</p><p>மூவரையும் வயது வந்தவர்களாக கருதி விசாரிக்க, டெல்லி நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் இன்னும் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>பிரியங்கா கண்டன்ம்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,</p><p>"டெல்லியில் 17 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் அனைத்து எல்லைகளும் மீறப்பட்டுள்ளது. சில நாட்கள் முன்னர் தான் மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை. பெண்கள் முன்னேற்றம் பற்றிய வேற்று பேச்சுக்கள் தான் இருக்கிறது.</p><p>நூற்றுக்கணக்கான பெண்கள் தின்தோறும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் குற்றவாளிகள் மீது எந்தவித தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை கூட அவர்களுக்கு ஏற்படவில்லை. எப்ஐஆர்கள் கூட பதியப்படுவதில்லை. சமூகமும் அரசாங்கமும் பெண்களுக்கு பாதுகாப்பு, சுதந்திரம், சமத்துவத்துக்குக்கான உரிமையை வழங்குவதில் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் தொடரும் கொலைகளை தடுக்காமல் இருக்கும் வக்கற்ற அரசு, நீதி கேட்டால் ஒடுக்குவதா? - கனிமொழி கண்டனம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/incompetent-government-fails-to-stop-murders-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/incompetent-government-fails-to-stop-murders-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">f1ac31ed-8530-443d-b128-1e7e5a260723</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:17:58 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:17:58.177Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்பி,Kanimozhi MP,கண்டனம்,Condemn,கொலைகள்</media:keywords><media:content height="898" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/dtf6en8j/bjp-raises-katchatheevu-issue-for-election-not-for-peoples-welfare-dmk-mp-kanimozhi.avif" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/dtf6en8j/bjp-raises-katchatheevu-issue-for-election-not-for-peoples-welfare-dmk-mp-kanimozhi.avif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சட்டம் ஒழுங்கு சீரழிவு</h2><p>கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது. நீதி கேட்டு போராடியவர்களையும் இந்த அரசு ஒடுக்குகிறது என்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-employee-stabbed-tvk-govt-destroying-law-and-order-kanimozhi-mp-criticism">கனிமொழி எம்.பி</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது </p><p>ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டின் Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate -ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.</p><p>தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதலமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?</p><h2>போராடினால் ஒடுக்குவதா?</h2><p>தமிழ்நாட்டில் தினமும் தொடரும் கொலைகளைத் தடுக்க வக்கற்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-condemn-tvk-government">தவெக</a> அரசு, கொலைகளுக்கு நீதி கேட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வது கண்டனத்திற்குரியது.</p><p>நேற்றைய தினம் மதுரையில்  மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு உரிய நீதி கேட்டுப் போராடியவர்களைக் கடுமையாகத் தாக்கிக் கைது செய்துள்ளது. இன்று சிவகங்கையில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/double-murder-in-kotturpuram-764713"> இரட்டைக் கொலை </a>செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டுப் போராடியவர்கள் மீதும் தாக்குதல் நடத்திக் கைது செய்திருக்கிறது.</p><p>குற்றவாளிகளை ஒடுக்கச் சொன்னால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறதா இந்தத் திறனற்ற அரசு?</p><p>என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் தோழியுடன் வெளிநாடு செல்ல முயற்சி: பாஸ்போர்ட்டால் வெளியான தொழில் அதிபரின் திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/pune-man-hides-malaysia-trip-with-woman-friend-from-wife-a-passport-issue-busts-him</link><comments>https://www.maalaimalar.com/news/national/pune-man-hides-malaysia-trip-with-woman-friend-from-wife-a-passport-issue-busts-him#comments</comments><guid isPermaLink="false">e3f0e07f-f548-4487-9499-4f86c3056f37</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:16:09 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:16:09.735Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மகாராஷ்டிரா,புனே,Maharastra</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/faoxgzpo/MumbaiAirport.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மும்பை விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/faoxgzpo/MumbaiAirport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புனேவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், தன்னுடைய மனைவியிடம் மலேசியாவின் கோலாலம்பூருக்கு தொழில் தொடர்பாக சென்று வருவதாக கூறி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால், விமான நிலையத்திற்கு பெண் தோழி ஒருவரை அழைத்து வந்துள்ளார்.</p><h2>பழைய பாஸ்போர்ட்</h2><p>அதிகாரிகள் இருவருடைய பாஸ்போர்ட்டையும் சோதிக்கும்போது, அந்த பெண்ணின் பாஸ்போர்ட் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை பரிசோதிக்கும்போது, அந்த பெண் ஏற்கனவே தன்னுடைய பாஸ்போர்ட் தொலைந்து போய்விட்டது என புகார் அளித்துள்ளார். அந்த பாஸ்போர்ட்டை எடுத்து வந்ததாக தெரியவந்துள்ளது.</p><p>இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த தொழில் அதிபர், அந்த பெண்ணுடன் கோலாலம்பூர் செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்தார். பின்னர், மனைவி கேட்டால் என்ன செய்வது என்று யோசித்த அவர், போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, விமான நிலையத்தில் உள்ள டெலிபோனில் இருந்து மனைவிக்கு போன் செய்து பாஸ்போர்ட் பிரச்சினை. அதனால் செல்போனை வாங்கி வைத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>கடத்தல் புகார் அளித்த மனைவி</h2><p>அதன்பின் இருவரும் ரெயில்வே நிலையம் வந்துள்ளனர். பின்னர் அடுத்த நாள் காலை தனது மனைவிக்கு போன் செய்து அதே வார்த்தையை வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் அவருடைய மனைவியால் கணவரின் போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பெண், தனது கணவரை காணவில்லை. கடத்தப்பட்டிருக்கலாம் என்று புகார் அளித்துள்ளார். இதனைத் தொர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.</p><p>இது குறித்து தகவல் அறிந்ததும், காவல் நிலையத்திற்கு சென்று, தான் பெண் தோழியுடன் வெளிநாடு செல்ல இருந்ததை அதிகாரிளிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்தான் மனைவியை சமாளிக்க இவர் பாஸ்போர்ட் பிரச்சினை என்று பொய்யான ஒரு கதையை உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.</p><p>மனைவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் வெளிநாடு செல்ல இருந்தவரை, அந்த பெண்ணின் பாஸ்போர்ட் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோலாகலமாக தொடங்கியது ஆசிய விளையாட்டு: தேசியக்கொடி ஏந்தி வந்த மனு பாக்கர், பவன் ஷெராவத்</title><link>https://www.maalaimalar.com/sports/manu-bhaker-pawan-sehrawat-lead-indian-contingent-in-asian-games-opening-ceremony</link><comments>https://www.maalaimalar.com/sports/manu-bhaker-pawan-sehrawat-lead-indian-contingent-in-asian-games-opening-ceremony#comments</comments><guid isPermaLink="false">f529db15-2dc1-4550-823f-9ce2bf3b448a</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:01:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:01:11.804Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Manu Bhaker,மனு பாக்கர்,Asian Games,ஆசிய விளையாட்டு,pawan sehrawat,பவன் ஷெராவத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/y3yy0a75/baker.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ manu baker, pawan sherawat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/y3yy0a75/baker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழாவில் இந்தியா சார்பில் மனு பாக்கர், பவன் ஷெராவத் ஆகியோர் தேசிய கொடியேந்தி வந்தனர்.</strong></em></p><p>ஜப்பான் நாட்டில் உள்ள ஐச்சி நகோயாவில் 20-தாவது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று (19.09.2026) தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதியுடன்  நிறைவு பெறுகிறது.</p><p>இந்த போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய தடகள் அணி வீரர்கள், ஜப்பான் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு தங்களின் உடலை பழக்கப்படுத்தும் வகையில், செப்டம்பர் 13 முதல் டோக்கியோவில் உள்ள சுகுபா பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றனர்.</p><p>இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா நகோயாவில் உள்ள மிசுஹோ பார்க் தடகள ஸ்டேடியத்தில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. </p><h2>கண்கவர் கலை நிகழ்ச்சிகள்</h2><p>தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், லேசர் ஜாலங்கள் இடம்பெற்றன. இதில் 45 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் தங்களது தேசிய கொடியுடன் அணிவகுத்து வந்தனர்.</p><h2>தேசிய கொடி ஏந்திய மனு பாக்கர், ஷெராவத்</h2><p>இந்திய அணிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் கபடி வீரர் பவன் ஷெராவத் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.</p><p>ஆசிய போட்டி தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்திச் செல்வது ஒவ்வொரு வீரர்களின் கனவாகும். அந்த கவுரவத்தை எனக்கு வழங்கிய இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நன்றி என தெரிவித்தனர்.</p><p>கடந்த ஆசிய போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சாலை போடவில்லை என்றால் வாக்கு போடமாட்டோம்: எச்சரித்த நபருக்கு மத்திய அமைச்சர் அளித்த பதில்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/man-warns-scindia-with-vote-denial-over-no-road-minister-response-is-viral</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-warns-scindia-with-vote-denial-over-no-road-minister-response-is-viral#comments</comments><guid isPermaLink="false">b8d8b95d-84be-46f2-a8ab-2101901c995d</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:53:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:53:11.255Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>jyotiraditya scindia,ஜோதிராதித்யா சிந்தியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/z00u90sw/Scindia001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜோதிராதித்யா சிந்தியா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/z00u90sw/Scindia001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இதுபோன்ற வார்த்தைகளை ஒருபோதும் என்னிடம் பயன்படுத்தாதீர்கள். புரிந்ததா?. நான் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வந்து கோரிக்கைகளை வையுங்கள் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்.</p><p>மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா. இவர் மத்திய பிரதேசம் குனா மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பாதுகாப்பு வாகனங்களுடன் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தார்.</p><p>அப்போது ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் திடீரென அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களை இடைமறித்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் கிராமத்தில் சாலைகள் சரியான வகையில் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளது. அதை சரி செய்து தர வேண்டும் என்று குரல் எழுப்பினர். அத்துடன் சாலை இல்லை எனில், வாக்கு இல்லை என குரல் எழுப்பினார்.</p><p>இதனால் ஜோதிராதித்யா சிந்தியா, மக்கள் தங்களுடைய வேண்டுகோளை வைப்பதற்குப் பதிலாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசுவதா? அந்த பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதை தான் நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.</p><p>"இதுபோன்ற வார்த்தைகளை ஒருபோதும் என்னிடம் பயன்படுத்தாதீர்கள். புரிந்ததா?. நான் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வந்து கோரிக்கைகளை வையுங்கள். வேலைகளை முடித்து தருவது என்னுடைய பொறுப்பு" என்று அமைச்சர் பதில் அளித்தார்.</p><p>இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிந்தியா "சாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குனா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னலால் ஷக்யாவின் ஒதுக்கீட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றார்.</p><p>மேலும், மழைக்காலம் முடிந்த பிறகு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு சிந்தியா உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;2030-க்குள் ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலமே அழியும்&quot; - NVIDIA சி.இ.ஓ ஜென்சன் சொல்வது என்ன? </title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/humanity-could-be-wiped-out-by-ai-technology-by-2030-what-does-nvidia-ceo-jensen-say</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/humanity-could-be-wiped-out-by-ai-technology-by-2030-what-does-nvidia-ceo-jensen-say#comments</comments><guid isPermaLink="false">c5fcfa4f-d87d-450d-bff5-b190a80ad97f</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:44:15 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:44:15.671Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,AI technology,ஏஐ தொழில்நுட்பம்,Nvidia,என்விடியா,செயற்கை நுண்ணறிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/dcz4mt2n/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜென்சன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜென்சன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/dcz4mt2n/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தொழில்நுட்பம் (Technology)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2030ஆம் ஆண்டுக்குள் ஏஐ காரணமாக மனித குலம் அழியும் என்ற கூற்று குறித்து என்விடியா நிறுவன சிஇஓ ஜென்சன் ஜுவாங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-companies-gather-to-call-for-curbing-the-pace-of-ai-technology-trump-posts-in-a-panic">செயற்கை நுண்ணறிவு</a> குறித்த கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  சக்திவாய்ந்த<a href="https://www.maalaimalar.com/technology/techfacts/openai-flags-concerning-new-ai-behavior-vows-to-track-it-more-closely"> ஏஐ அமைப்புகள் கட்டுப்பாட்டை மீறினால்</a>, அவை மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று அஞ்சப்படுகிறது. </p><p>2030க்குள் ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலமே அழியும் பேராபத்து இருப்பதாக கூறி, கிளாட் ஏஐ செயலியை நிர்வகிக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஆய்வாளர் ஜேக்கப் கோக்சோன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>எனவே 2030ஆம் ஆண்டுக்குள் ஏஐ காரணமாக மனித குலம் அழியும் எனவு  பலர் கூறத்தொடங்கியுள்ளனர். </p><p>ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார். </p> <h2>ஹுவாங் சொல்வது என்ன?</h2><p>சிபிஎஸ் நியூஸ் உடனான சமீபத்திய நேர்காணலில் அத்தகைய பேரழிவு ஏற்படுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்று ஹுவாங் தெரிவித்தார்.</p><p>ஏஐ காரணமாக உலகம் அழியும் என்ற வாதம் அர்த்தமற்றது. சிலர் விடுத்து வரும் எச்சரிக்கைகளுக்குப் பின்னால் அரசியல், வணிக நலன்கள் அல்லது பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கம் இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.</p><p>மாறாக நிறுவனங்கள் ஏஐயின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று ஹுவாங் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>இருப்பினும், பாதுகாப்பின் அடிப்படையில் அவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.</p><p>முழுமையாகத் தயாராகாத மற்றும் பாதுகாப்பற்ற ஏஐ மாடல்கள் சந்தைக்குக் கொண்டுவரப்படக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p> <h2>செயற்கை நுண்ணறிவு விவாதம்</h2><p>ஏஐ வளர்ச்சியின் வேகம் குறைக்கப்பட வேண்டும் என ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மற்றும் ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்த நிலையில் என்விடியா தலைவரின் கருத்து வந்துள்ளது.</p><p>செயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொள்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான முயற்சிகளை, அதன் வளர்ச்சி வேகம் மிஞ்சிவிடக்கூடும் என்று அமோடி எச்சரித்ததை தொடர்ந்து இந்த விவாதம் எழுந்துள்ளது. </p> <p>ஏஐ வளர்ச்சி வேகத்தை குறைத்தால் அது சீனாவுக்கு சாதகமாகிவிடும் எனக் கூறிய டிரம்ப் அமோடியை கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.</p><p>செயற்கை நுண்ணறிவு குறித்து புதிய சட்டங்கள் தேவையில்லை என ஹுவாங் இதற்கு முன்னர் வாதிட்டிருந்தார்.</p><p>பாதுகாப்பானது, தனிப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.</p><p>செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது, மனிதகுலத்திற்குப் பயனளிக்கும் வகையிலும் மனிதக் கட்டுப்பாட்டின் கீழும் செய்யப்பட வேண்டும் என்று மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா சமீபத்தில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிப் படிக்கட்டில் இறங்கும்போது தலைகுப்புற விழுந்து  4ஆம் வகுப்பு 
மாணவி பலி - அதிர்ச்சி வீடியோ  </title><link>https://www.maalaimalar.com/news/national/4th-grade-girl-dies-after-falling-headfirst-while-getting-off-school-bus-shocking-video</link><comments>https://www.maalaimalar.com/news/national/4th-grade-girl-dies-after-falling-headfirst-while-getting-off-school-bus-shocking-video#comments</comments><guid isPermaLink="false">ab5c62bd-3d37-41f2-8132-a1b4c883878d</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:06:32 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:06:32.705Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,தனியார் பள்ளி,private school,Girl,சிறுமி,தெலுங்கானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/y6fsgcpi/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீடியோ]]></media:title><media:description type="html"><![CDATA[ வீடியோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/y6fsgcpi/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானாவில் தனியார் பள்ளியில் படிக்கட்டுகளில் இருந்து இடறி விழுந்து 4ஆம் வகுப்பு சிறுமி உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/telangana">தெலுங்கானா </a>மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. </p><p>அங்குள்ள இந்தியன் ஹைட்ஸ் என்ற தனியார் பள்ளியில் 4 வகுப்பு படித்து வந்த வர்னிகா என்ற 12 வயது சிறுமி பள்ளி படிக்கட்டில் வந்துகொண்டிருந்தபோது கால் இடறி கீழே விழுந்திருக்கிறாள். </p><p>இதில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வர்னிகாவை பள்ளி ஊழியர்களும் தலைமை ஆசிரியரும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். </p><p>அங்கு சிச்சை அளிக்கப்பட்டபோதும் உடல்நிலையில் முன்னேற்றம் இன்றி நேற்று சிறுமி பரிதமாக உயிரிழந்தாள். </p><h2>சிசிடிவி வீடியோ</h2><p>சிறுமி பள்ளிப் படிக்கட்டுகளில் இருந்து இடறி விழுந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. </p><p>அதில் சிறுமி படிக்கட்டுகளில் இறங்கி கீழே வந்துகொண்டிருப்பதும் எதிர்பாராத கணத்தில் கால் இடறி தலைகுப்புற கீழே விழுவதும் அவளுக்கு மற்ற மாணவர்கள் உதவ முனைவதும், அதில் ஒரு மாணவன் ஆசியாரை அழைப்பதும் ஆசிரியர் அங்கு வந்து சிறுமியின் நிலையை சோதிப்பதும் இடம்பெற்றுள்ளது</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tragic incident in Shadnagar, Telangana: A 9-year-old Class 4 girl, Varnika, died after losing balance and falling from school stairs at Indian Public School. The fall was captured on CCTV. She succumbed to injuries during treatment on Friday.<a href="https://x.com/hashtag/Telangana?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Telangana</a> <a href="https://x.com/hashtag/Shadnagar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Shadnagar</a> <a href="https://x.com/hashtag/Tragedy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tragedy</a> <a href="https://t.co/atgvMvXTm5">pic.twitter.com/atgvMvXTm5</a></p>&mdash; Gummalla Lakshmana (@GUMMALLALAKSHM3) <a href="https://x.com/GUMMALLALAKSHM3/status/2100904753740050713?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>விசாரணை</h2><p>சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பவத்தின் தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இந்த சம்பவத்தில் புகார் ஏதும் வழங்கப்படவில்லை.</p><p>சிறுமிக்கு ஏற்கனவே உடல்நலக்கோளாறு இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><p>அதேநேரம் சிறுமி விழுந்தது குறித்து பள்ளி நிர்வாகம் தங்களிடம் சரியான நேரத்தில் தகவல் அளிக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.</p> <p>தகவல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் தான் தங்கள் குழந்தைக்கு உரிய மருத்துவ சிகிச்சையை கிடைக்க செய்ய முடியாமல் போனது என அவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>ஆனால் பள்ளி நிர்வாகம் இதனை மறுத்துள்ளது. உரிய நேரத்தில் சிறுமி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்தாக தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-released</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-released#comments</comments><guid isPermaLink="false">ebebc879-e944-4c6b-b20e-b14521f8efd0</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:54:30 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:54:30.248Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,Madurantakam,இடைத்தேர்தல்,இறுதி வேட்பாளர் பட்டியல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/aldijwc5/election.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/aldijwc5/election.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27-ஆக ஆனது.  தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.</strong></em> </p><h2><strong>மதுராந்தகம் இடைத்தேர்தல்</strong></h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.</p><h2><strong>தாராபுரம்</strong></h2><p>அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கியது. கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன்படி, த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந் தேதி நடந்தது.</p><p>இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது</p><h2><strong>இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</strong></h2><p>இதனை தொடர்ந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27-ஆக ஆனது.  தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். </p><p>புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். </p><p>ஏற்கனவே வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளதால் இனி பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கோவிலுக்கு செல்லும் வழியில் சோகம்.. கரைபுரண்ட ஓடை நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் பலி  </title><link>https://www.maalaimalar.com/news/national/tragedy-on-the-way-to-the-temple-8-killed-as-car-is-swept-away-by-overflowing-canal-waters</link><comments>https://www.maalaimalar.com/news/national/tragedy-on-the-way-to-the-temple-8-killed-as-car-is-swept-away-by-overflowing-canal-waters#comments</comments><guid isPermaLink="false">4c9d84f6-b4fd-48f1-993b-812f8b75c6e0</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:44:37 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:44:37.205Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கார் விபத்து,Car accident,Madhya Pradesh,devotees,பக்தர்கள்,மத்தியப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/swyro0ei/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அடித்துச் செல்லப்பட்ட கார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அடித்துச் செல்லப்பட்ட கார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/swyro0ei/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பிரதிஷ்டத்தில் பக்தர்கள் சென்ற வாகனம் ஓடை நீரில் அடித்துச் உள்ளத்தில் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.</p> <p>ஒடிசாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்<a href="https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-fuel-pumps-to-stop-upi-payments-above-rs-2000-from-october-16"> மத்திய பிரதேசத்துக்கு</a> ஆன்மீக பயணம் வந்துள்ளனர். </p><p>உஜ்ஜைனுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து டாக்சி மூலம் அகார் மால்வா மாவட்டத்தில் உள்ள நால்கேதாவில் உள்ள கோவிலுக்கு இன்று சென்றுகொண்டிருந்தனர். </p> <h2>விபத்து</h2><p>டாக்சி வாகனம் மா பாக்லாமுகி கோவில் அருகே சென்றபோது கரைபுரண்டு ஓடிய ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டு விபத்தில் சிக்கியது.</p><p>இதில் 2 பெண்கள், 2 ஆண்டுகள், 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும், டாக்சி ஓட்டுனரும் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.</p><p>தகவலறிந்து விரைந்த மீட்புப்படையினர் வாகனத்தை ஓடையில் இருந்து வெளியே தூக்கி உள்ளே இருந்தவர்களின் உடல்களை மீட்டனர்.</p><p>அவர்களின் அடையாளத்தை அறியும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது .</p> <h2>மழை</h2><p>மாவட்ட ஆட்சியர் சேர் சிங் மீனா கூறுகையில், இந்த பகுதியில் 37 மிமி அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. </p><p>இது அபாயகரமான மழைப்பொழிவு இல்லை என்றாலும் இதனால் கோவிலின் முன் இருந்த ஓடை நீர் அபாயகரமான அளவில் அதிகரித்து கரைபுரண்டுள்ளது என தெரிவித்தார்.</p><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து கால்வாயை கடக்க பாலமும் அப்பகுதியில் உரிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும் வலியுறுத்தி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>பண்டைய சீனாவில் கால்நடைகளை திருடினால் கொடூர தண்டனை - அதிர்ச்சி தந்த 600 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு!</title><link>https://www.maalaimalar.com/news/world/ancient-china-cattle-theft-nose-amputation-600-year-old-skeleton</link><comments>https://www.maalaimalar.com/news/world/ancient-china-cattle-theft-nose-amputation-600-year-old-skeleton#comments</comments><guid isPermaLink="false">89d700ee-de45-4e41-9774-f2404e595103</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:43:15 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:43:15.964Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,Nose Chopping,Cattle Thieves,Ancient Justice,Prosthetic Nose,Skeleton Discovery</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0gfqy7jz/Nose-Chopping" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nose Chopping   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0gfqy7jz/Nose-Chopping?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பண்டைய <a href="https://www.maalaimalar.com/topic/china">சீனாவில் </a>குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மிகக் கொடூரமான உடலமைப்பைச் சிதைக்கும் தண்டனைக்கான முதல் நேரடி வரலாற்று ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88">கால்நடைகளைத் </a>திருடும் குற்றவாளிகளின் மூக்கை முற்றிலும் அறுத்து எறியும் இந்தத் தண்டனை குறித்து வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், தற்போது முதன்முறையாக அது ஒரு மனித எலும்புக்கூடு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.</p><h2>600 ஆண்டுகள் பழமையான பெண் எலும்புக்கூடு</h2><p>அமெரிக்கா மற்றும் சீனாவைச் சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">ஆராய்ச்சியாளர்கள்</a> குழு, சீனாவின் பண்டைய காலத்து எலும்புக்கூடுகளை ஆய்வு செய்யும் போது ஒரு பெண்ணின் மண்டையோட்டைக் கண்டறிந்தனர். </p><p>கார்பன் டேட்டிங் சோதனையில், அந்தப் பெண் கி.பி. 1298 முதல் 1404 ஆம் ஆண்டிற்குள் வாழ்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.</p><p>அந்தப் பெண்ணின் மண்டையோட்டைத் தீவிரமாக ஆய்வு செய்தபோது, அவரது மூக்குப் பகுதி கூர்மையான ஆயுதத்தால் அடிமட்டத்திலிருந்து மேல்நோக்கி வெட்டி எறியப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>இது ஏதேனும் நோயினாலோ அல்லது விபத்தினாலோ ஏற்பட்ட காயம் அல்ல, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தண்டனை என்று டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகப் பேராசிரியர் சியான் வாங் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2>சீன வரலாற்றின் 'ஐந்து கொடூர தண்டனைகள்'</h2><p>பண்டைய சீனாவின் ஷியா வம்ச காலத்துச் சட்ட புத்தகங்களில் குற்றவாளிகளைத் தண்டிக்க 'ஐந்து கடுமையான உடல் சிதைப்புத் தண்டனைகள்' விவரிக்கப்பட்டுள்ளன.</p><p>அதில் ஒன்றுதான் 'இடி' (Yi) எனப்படும் மூக்கை அறுக்கும் தண்டனை.</p><p>மாடு போன்ற விலைமதிப்பற்ற கால்நடைகளைத் திருடுபவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டு வந்தது. "சின் வம்ச மன்னரின் ஆட்சிக் காலத்தில், வெட்டப்பட்ட மூக்குகள் மலைபோலக் குவிந்து கிடந்தன. </p><p>வெட்டப்பட்ட கால்கள் வண்டிகளை நிரப்பின" என்று கி.மு. 81 ஆம் ஆண்டின் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.</p><h2>தண்டனைக்கு பின்னும் வாழ்ந்த அதிசயம்!</h2><p>அந்தக் காலத்து மோசமான மருத்துவ வசதிகளையும் மீறி, மூக்கு அறுக்கப்பட்ட அந்தப் பெண் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளார். </p><p>அவரது மூக்கு வெட்டப்பட்ட பிறகு, ரத்தப்போக்கை நிறுத்தவும், தொற்று ஏற்படாமல் தடுக்கவும் அன்றைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அவர் தனது 40 முதல் 45 வயது வரை வாழ்ந்து இறந்துள்ளார். </p><p>வடுக்களை மறைப்பதற்காக அவர் ஒருவேளை மரத்தாலோ அல்லது வேறு பொருளாலோ செய்யப்பட்ட செயற்கை மூக்கைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று எலும்புகளின் கூர்மையான மாற்றங்களை வைத்து விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.</p><h2>சமூகப் புறக்கணிப்பும் குப்புறப் புதைக்கப்பட்ட உடலும்</h2><p>அந்தப் பெண் இறந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், சமூகம் அவரை ஒரு குற்றவாளியாகவே பார்த்துள்ளது. அந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மற்ற எலும்புக்கூடுகள் சாதாரணமாகப் புதைக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் பெண்ணின் உடல் மட்டும் முகம் தரையை நோக்கியவாறு குப்புறப் புதைக்கப்பட்டிருந்தது.</p><p>உயிரோடு இருந்தபோது அண்டை வீட்டாரால் புறக்கணிக்கப்பட்ட அந்தப் பெண், இறந்த பிறகும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, ஒரு அவமானத்தின் அடையாளமாகவே புதைக்கப்பட்டுள்ளார் என்பதை இந்த ஆராய்ச்சி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவு திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் திருவான்மியூரில் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-chief-minister-to-launch-it-in-thiruvanmiyur-on-the-22nd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-chief-minister-to-launch-it-in-thiruvanmiyur-on-the-22nd#comments</comments><guid isPermaLink="false">e1f7b900-1a56-48d5-8863-7240573ff141</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:38:33 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:38:33.203Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,காலை உணவு திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/xksxo3i7/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/xksxo3i7/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக அரசு பள்ளிகளில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் இப்போது 8ம் வகுப்பு வரை விரிவாக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா வரும் 22ம் தேதி திருவான்மியூர் காந்தி கிராமம் நடுநிலைப்பள்ளியில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் விஜய் நேரில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.</strong></em></p><p>தமிழக அரசு பள்ளிகளில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/காலை-உணவு-திட்டம்">காலை உணவு திட்டம்</a> 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.</p><h2><strong>காலை உணவு திட்ட விரிவாக்கம்</strong></h2><p>திருவான்மியூர் காந்தி கிராமம் நடுநிலைப்பள்ளியில் அன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் விஜய் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.</p><p>இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது.</p><p>இந்த நிலையில் தான் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் முதலமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைப்பது உறுதி ஆகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திமுக அலுவலகம் ஸ்ரீரங்கம் கோவில் நிலமே... மோசடி பின்னால் இருப்பவர்கள் யார்? - அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-dmk-office-situated-on-srirangam-temple-land-who-is-behind-this-fraud</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-dmk-office-situated-on-srirangam-temple-land-who-is-behind-this-fraud#comments</comments><guid isPermaLink="false">57b8169c-d398-4213-bdc7-019bd938537e</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:32:18 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:32:18.331Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,srirangam temple,ஸ்ரீரங்கம் கோவில்,நிலம் அபகரிப்பு,land issue,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/c54vv4et/ramesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/c54vv4et/ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படியொரு மோசடி நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.</p><p>ஸ்ரீரங்கம் கோவில் நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் ரமேஷ்</a> விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது.</p> <p>* ஸ்ரீரங்கம் கோவில் நிலங்களை மோசடியாக பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.</p><p>* போலி ஆவணங்கள் மூலம் ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் கோவில் நிலத்தை முறைகேடாக அபகரித்துள்ளார்.</p> <p>* கோவில் நிலத்திற்கான மூலப்பத்திரத்தை காணவில்லை என முன்னதாக பதிவு செய்து பின்னர் அந்த இடத்தை அபகரித்துள்ளனர்.</p><p>* போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளனர்.</p><p>* கோவில் நிலத்தை மோசடியாக தனது பெயருக்கு மாற்றிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> நிர்வாகி அந்த இடத்தில் கட்சி அலுவலத்தையும் நடத்தி வருகிறார்.</p> <p>* சாதாரண பகுதி செயலாளரால் ஒரு கோவில் நிலத்தை முறைகேடாக ஆக்கிரமிக்க முடியுமா? இவரின் பின்னால் இருப்பவர்கள் யார்?</p><p>* திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படியொரு மோசடி நடத்தியிருக்க வாய்ப்பில்லை.</p> <p>* கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்தவரின் பின்னால் மிகப்பெரிய புள்ளிகள் சிக்குவர்.</p><p>* யார் சொல்லி யாருடைய ஆதரவில் இப்படியொரு மோசடி நடந்திருக்கிறது என விசாரணையில் கண்டறியப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, அடிபணிந்த டென்மார்க் அரசு</title><link>https://www.maalaimalar.com/news/world/denmark-submits-after-trump-greenland-takeover-plan</link><comments>https://www.maalaimalar.com/news/world/denmark-submits-after-trump-greenland-takeover-plan#comments</comments><guid isPermaLink="false">3f3240fd-179a-4664-9651-c64ca739e87e</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:21:36 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:21:36.809Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,அமெரிக்கா,America,Denmark,டென்மார்க்,டொனால்ட் டிரம்ப்,Greenland,கிரீன்லாந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/lkmd441i/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/lkmd441i/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்தை, அமெரிக்கா கைப்பற்ற போவதாக டிரம்ப் அறிவித்த நிலையில், கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவும் டென்மார்க்கும் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.</p><h3><strong>டிரம்ப் அச்சுறுத்தல்</strong></h3><p>கிரீன்லாந்து பிரதேசம் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளால் எளிதில் தாக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக டிரம்ப் கடந்த காலங்களில் கூறி வந்தார்.</p><p>மேலும் அவர் கனிவளம் நிறைந்த, ஓரளவு தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டில் இணைத்துக்கொள்ள பல மாதங்களாக முயற்சியும் செய்து வந்தார். </p><p>இதையடுத்து டிரம்ப் கிரீன்லாந்தில் ராணுவ நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தியதை அடுத்து, டேனியர்கள் மற்றும் பிற நேட்டோ நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்பு அதிகரித்தது.</p><p>அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D">டொனால்ட் டிரம்ப்</a>, டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை அதன் அமைவிடம் மற்றும் கனிம வளங்களை சுட்டிக்காட்டி கைப்பற்றப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.</p><h3><strong>டென்மார்க் பிரதமர்</strong></h3><p>டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து, கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்தான ஒப்பந்தத்திற்கு தாங்கள் ஒத்துழைப்பதாக டென்மார்க் தெரிவித்துள்ளது.</p><p>மேலும் இந்த ஒப்பந்தம், “ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது” என்று டென்மார்க் பிரதமர் கூறியுள்ளார். </p><p>அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனவும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>இந்த ஒப்பந்தம் ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பகுதிகளில் நமது பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, ராச்சியத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும், கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கிறது.</p><p>இந்த ஒப்பந்தத்திற்கு இன்னும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை என்றும், அது அமலுக்கு வருவதற்குத் தேவையான நாடாளுமன்ற நடைமுறைகளைக் கடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.</p><p>ஆனால் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்த ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து டென்மார்க் பிரதமர் கருத்து எதுவம் தெரிவிக்கவில்லை.</p><h3><strong>ட்ரூத் சோஷியல் தளம்</strong></h3><p>இதையடுத்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு எந்தச் செலவும் இல்லாமல் ஏற்பட்டுள்ளது. கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தற்காப்பதற்கும், மேலும்தேவையானதைச் செய்வதற்கான திறனை அமெரிக்காவிற்கு இது வழங்கும்.</p><p>எங்களின் தெளிவான எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல், எந்தவொரு அமெரிக்க எதிரி நாடும் கிரீன்லாந்தில் ராணுவ இருப்பை நிலைநிறுத்தவோ அல்லது கிரீன்லாந்தில் முக்கிய முதலீடுகளைச் செய்யவோ முடியாது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p><p>அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இதனை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்றும், அமெரிக்காவிற்கும் அமெரிக்க மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கஃபே திறப்பதற்காக ரூ.15 லட்சம் சம்பள வேலையை விட்ட ஜென் Z இளம்பெண் - வியாபாரம் நஷ்டத்தில் போவதாக வேதனை</title><link>https://www.maalaimalar.com/news/national/gen-z-woman-quits-15-lakh-job-opens-cafe-faces-losses</link><comments>https://www.maalaimalar.com/news/national/gen-z-woman-quits-15-lakh-job-opens-cafe-faces-losses#comments</comments><guid isPermaLink="false">1162d143-fe7e-4d47-9ab7-7441c91b1779</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:19:27 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:19:27.238Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gen z,தொழில்முனைவோர்,Cafe,corporate,ஜென் சி,உணவகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/qjfmncmn/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Gen Z quits ₹15 lakh job to open café]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/qjfmncmn/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் சிறுகதை ஆசிரியராக மாதத்திற்கு சுமார் 1 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கி வந்த 21 வயது பெண் ஒருவர், தனது வேலையை விட்டுவிட்டு ஒரு உணவகம் திறந்த நிலையில், தற்போது கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF">டெல்லியில்</a> உள்ள பெண் ஒருவர் 17 வயதில் இருந்தே சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இவர் சிறுகதை ஆசிரியராக ஒப்பந்த அடிப்படையில் (comic freelancer) பணிபுரிந்து வந்துள்ளார்.</p><p>ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் வரை கார்ப்பரேட் நிறுவனத்தில் சம்பளம் வாங்கி வந்துள்ளார். </p><p>இதையடுத்து இவர் தனது சேமிப்பில் இருந்து சொந்தமாக ஒரு தொழிலை தொடங்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து டெல்லி ஹட்சன் லேனில் ஒரு கஃபே கடையை தொடங்கினார்.</p><p>இந்த நிறுவனம் தொடங்கி தற்போது ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில், தனது சேமிப்பு முழுவதுமாக செலவழிந்து, தனது நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும் தனது உணவகத்தில் உணவு தரமாகவும், சுவையாகவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் உணவகத்தில் சில வசதி குறைபாடு உள்ளதால் அது நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதை சரி செய்வதற்கு தற்போது பணம் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.</p><p>இந்த நிலையில் இவர் பதிவிட்ட கருத்து இணையத்தில் பயனர்களிடம் இருந்து பல்வேறு ஆலோசனைகளை பெற்றுள்ளது.</p><p>இந்த பதிவிற்கு பயனர் ஒருவர், “நான் அந்த பகுதியிலிருந்து 2 நிமிடத் தொலைவில் வசிக்கிறேன், அங்குள்ள பெரும்பாலான காபி கடைகளுக்கு சென்று பார்த்திருக்கிறேன்.</p><p>உங்கள் சிறப்பு காபி என்றால், அது பெயரிலோ அல்லது வெளியிலுள்ள தோற்றத்திலோ அவ்வளவாகத் தெரிவதில்லை.</p><p>உள்ளே சென்று எதையாவது முயற்சித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. </p><p>மிகவும் நெரிசலான சந்தையில் மற்றுமொரு கடையாக இருப்பதைத் தவிர, நீங்கள் வேறு என்ன விற்கிறீர்கள் என்பது கூடத் தெளிவாகத் தெரியவில்லை” என்று பதிவிட்டார்.</p><p>இதையடுத்து மற்றொரு நபர், “கஃபேவில் நீங்கள் விற்பனை செய்யும் காபியின் விலை, அதன் தரத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் அது ஹட்சன் லேனில் உள்ள மற்றுமொரு கஃபேவாக மட்டுமே இருக்கும்.</p><p>ஏற்கெனவே ஒரு வருடம் ஆகிவிட்டதால், நீங்கள் அடிப்படைகளைக் கண்டறிந்திருப்பீர்கள் என்று நான் கருதுகிறேன்?” என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டெங்குவை தடுக்கவும், குணமடையவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-awareness-must-be-created-regarding-the-measures-to-be-taken-to-prevent-and-recover-from-dengue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-awareness-must-be-created-regarding-the-measures-to-be-taken-to-prevent-and-recover-from-dengue#comments</comments><guid isPermaLink="false">ba64b2d9-0624-44a6-98e7-8d4ba612d32c</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:18:17 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:18:17.075Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,dengue fever,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/m2c2he3o/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/m2c2he3o/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை முதன்மை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>முதன்மைத் தேவை</strong></h2><p>சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாலும்,  இதுவரை 9  பேர் உயிரிழந்திருப்பதாலும் மக்களிடம் பெரும் அச்சமும், கவலையும் ஏற்பட்டிருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவம் அளிப்பது ஒருபுறம் இருக்க, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன? அவை தென்பட்டால்   என்ன செய்ய  வேண்டும்  என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தான் இன்றைய முதன்மைத் தேவை ஆகும்.</p><p>தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இதுவரை 16,830 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையே இவ்வளவு என்றால் குறைந்தபட்சம் இதை விட 10 மடங்கு பேருக்கு  டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, அது குறித்த புரிதலும்,  விழிப்புணர்வும் இல்லாமல் சாதாரண காய்ச்சலுக்கான மருத்துவத்தை பெற்றுக் கொண்டிருக்கக் கூடும். மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலுக்கான  மருத்துவத்தை பெறாததால் தான்  உயிரிழப்புகள்  அதிகரித்திருக்கின்றன.</p><h2><strong>உயிரிழப்புக்கு காரணம்</strong></h2><p>அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் மூவர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.  அவர்களில் கடைசியாக இறந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் டெங்கு அல்ல... விஷக்காய்ச்சல் என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் அலட்சியமும்,  விழிப்புணர்வு இல்லாமையும் தான்.  மாணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு  2 அல்லது 3 நாள்களில் குணமடையாத  நிலையில், மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால் காய்ச்சலின்  தன்மையைக் கண்டறிந்து  மருத்துவம் அளித்திருக்க முடியும். அதை செய்யுமாறு அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கத் தவறியது தான் உயிரிழப்புக்கு காரணம் ஆகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/டெங்கு-காய்ச்சல்">டெங்கு காய்ச்சல்</a> குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதற்கான சிகிச்சை வசதிகளும், மருந்துகளும்  அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் உள்ளன.  டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தினால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும்.</p><p>பொதுமக்களும்,  அரசு அமைப்புகளும்  இணைந்து நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.</p><p>டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை முதன்மை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சோதனை மேல் சோதனை.. மம்தா அறிவித்த மற்றொரு வேட்பாளரும் வாபஸ் வாங்குவதாக அறிவிப்பு - அடுத்த நடந்த டுவிஸ்ட் </title><link>https://www.maalaimalar.com/news/national/a-shock-for-mamata-announcement-that-the-second-candidate-is-also-withdrawing-from-the-by-election-and-the-twist-that-followed</link><comments>https://www.maalaimalar.com/news/national/a-shock-for-mamata-announcement-that-the-second-candidate-is-also-withdrawing-from-the-by-election-and-the-twist-that-followed#comments</comments><guid isPermaLink="false">07b8b836-41a7-4a46-a5ed-78dfe437f855</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:15:58 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:15:58.132Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,trinamool congress,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/9o90005t/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா ]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/9o90005t/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க ரெஜிநகர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுவதாக அறிவித்து பின் 3 மணி நேரத்தில் யு டர்ன் அடித்துள்ளார்.</p> <p>ஆட்சியை இழந்தததில் இருந்து மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜிக்கு </a>சோதனை மேல் சோதனையாக நடந்து வருகிறது. </p><p>294 இடங்களில் 207 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடித்து <a href="https://www.maalaimalar.com/topic/suvendu-adhikari">சுவேந்து அதிகாரி</a> முதலமைச்சர் ஆனார். அதேநேரம் 80 இடங்களில் மட்டுமே 15 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இருந்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. </p><p>அதிலும் 58-60 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்தனர். அவர்களுக்கே சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. கிளர்ச்சி அணியின் ரிதர்பா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவர் ஆனார். </p> <p>கிளர்ச்சி அணி தாங்களே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என கூறி வருகிறது. அதேநேரம் திரிணாமுல் காங்கிரசின் 28 நாடாளுமன்ற எம்பிகளில் 20 பேர் விலகிச் சென்று பெயருக்கு என்சிபிஐ என்ற பிராந்திய கட்சியில் இணைந்து பாஜகவின் என்டிஏவுக்கு ஆதரவு நல்கினர்.</p><p>இதனிடையே தேர்தல் ஆணையத்தில் மம்தா தரப்பும் கிளர்ச்சி எம்எல்ஏக்கள் தரப்பும் கட்சிக்கு உரிமை கொண்டாட இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. தற்போது மேற்கு வங்கத்தின் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 வாக்குப்பதிவு நடைபெற்று 9 ஆம் தேதி எண்ணப்படும்.</p><p>இந்த சூழலில் இடைத்தேர்தலில் இரு தரப்பும் போட்டியிட முடிவெடுத்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சினத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரு தரப்புக்கும் தற்காலிக பெயர், சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2>இடைத்தேர்தல் இடி</h2><p>இதனிடையே இன்று ரெஜிநகரில் மம்தா தரப்பால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரைபுல் ஆலம் சவுத்ரி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என பின்வாங்கினார். ஆனால் 3 மணி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.</p><p>ஏற்கனவே நந்திகிராம் தொகுதியில் மம்தா தரப்பு அறிவித்த மிலான் பிரதான் சுவேந்து அதிகாரியை சந்தித்த பின் வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தது மம்தாவுக்கு பேரிடியாக அமைந்திருந்த நிலையில் ரெஜிநகர் தொகுதியிலும் தான் நிறுத்திய வேட்பாளர் வாபஸ் பெறுவதாக அறிவித்தது அவருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2>யு டர்ன்</h2><p>எனவே அவர் வாபஸ் பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து மம்தா பானர்ஜி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் பின்னரே சவுத்ரியின் மனமாற்றம் நடந்துள்ளது.</p><p>"சின்னம் புதுசு. மக்கள் சின்னத்தை அடையாளம் கண்டு எனக்கு ஓட்டு போட சிரமப்பாடுவாங்க. அதனால தான் நான் வாபஸ் வாங்க முடிவு பண்ணேன். ஆனா மம்தா பானர்ஜிகிட்ட பேசுனப்போ, அவங்க, 'உங்களால முடிஞ்ச சிறந்ததை கொடுங்க'ங்கு சொன்னாங்க" என தன் மனமாற்றம் குறித்து விவரித்தார் சவுத்ரி.</p><p>மேலும் தன்னை யாரும் மிரட்டியோ, அழுத்தம் கொடுத்தே வாபஸ் பெற வற்புறுத்தவில்லை என தெரிவித்த சவுத்ரி, மம்தா தரப்பினர் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மற்றவர்களால் மிரட்டப்படுகிறார்கள் எனவும் ஆதங்கம் தெரிவித்தார்</p> <p>மனம் மாறி மீண்டும் போட்டியிட முடிவெடுத்த சவுத்ரி வரும் சனிக்கிழமை முதல் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் தொடங்க உள்ளார். </p><p>இருப்பினும் நந்திகிராம் தொகுதியில் மம்தா நிறுத்திய வேட்பாளர் வாபஸ் பெற்றது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது</p><p>இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் பெயர் - சின்னம் முடக்கப்பட்டதை எதிர்த்து மம்தா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற தேர்தலுக்கு குறி... 2027-ல் அரசியல் கட்சி தொடங்கும் அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-to-launch-a-political-party-in-2027</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-to-launch-a-political-party-in-2027#comments</comments><guid isPermaLink="false">6b8a564a-9b8a-456c-b224-3b7ccf4bee7d</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:46:27 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:46:27.123Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,Parliament election,நாடாளுமன்ற தேர்தல்,annamalai,We the Leaders,வி த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/o49wfpim/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/o49wfpim/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அடுத்த ஆண்டில் அண்ணாமலை புதிய கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.</p> <h2>அண்ணாமலை</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modis-thank-you-note-for-birthday-wishes">பா.ஜ.க.வில்</a> இருந்து விலகிய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> ‘வி த லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் மக்கள் சேவையை அடிப்படையாக வைத்து போதையில்லா தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான பிரசாரம், மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களில் மக்களை ஈடுபடுத்தினார்.</p> <p>அடுத்ததாக ஏரி, குளங்கள், கால்வாய்கள் தூர்வாருதல், கடலோரம் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளை முன்னெடுத்தார். இதில் கன்னியாகுமரியில் கடற்கரை தூய்மைப்படுத்துவதிலும், மதுரையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியிலும் அண்ணாமலையே நேரில் கலந்து கொண்டார்.</p> <h2>20 லட்சம் பேர்</h2><p>அக்டோபர் மாதத்தை மகளிர் மாதமாகவும், நவம்பர் மாதத்தை இளைஞர் மாதமாகவும் மையப்படுத்தி பல்வேறு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளார். அண்ணாமலையின் தலைமை ஏற்று ‘வி த லீடர்ஸ்’ அமைப்பில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளார்கள். </p><p>உறுப்பினர்களாக சேரக் கூடியவர்கள் இணைய தளத்தில் உள்நுழைந்து பிறந்த தேதி, மொபைல் எண்ணை கொடுத்து ஓ.டி.பி. பெற்றுதான் உறுப்பினராக சேர முடியும். இது சாதாரண மக்களுக்கு கடினமாக இருப்பதால் ‘மிஸ்டு கால்’ கொடுத்து உறுப்பினராக சேரும் வசதி வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதுபற்றி அண்ணாமலை விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளார். பல்வேறு பணிகள் மூலம் மக்கள் மத்தியில் அமைப்பை கொண்டு சேர்த்து விட்டதால் அடுத்தகட்டமாக அரசியல் கட்சி தொடங்கும் பணிகளை தொடங்கி உள்ளார்.</p> <h2>அரசியல் கட்சி</h2><p>அமைப்பு பொது செயலாளராக கரு.நாகராஜனை நியமித்துள்ளார். மேலும் பல்வேறு பதவிகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.</p> <h2>உள்ளாட்சி தேர்தல்</h2><p>உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அடுத்த ஆண்டில் (2027) புதிய கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. 2029-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தான் தொடங்கும் கட்சியின் பலத்தை காட்டவும் திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதே நேரம் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி அண்ணாமலை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>எல்.ஐ.சி-க்கு ரூ.2,684 கோடி மோசடி - அனில் அம்பானி மீது சி.பி.ஐ வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/national/cbi-files-corruption-case-anil-ambani-lic-loss</link><comments>https://www.maalaimalar.com/news/national/cbi-files-corruption-case-anil-ambani-lic-loss#comments</comments><guid isPermaLink="false">7a8b8761-3707-4aa8-9053-6290e06fd6d6</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:33:19 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:33:19.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>cbi,Anil Ambani,அனில் அம்பானி,reliance group,LIC India,Financial Scam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/i2dctq0h/Anil-Ambani" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anil Ambani ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/i2dctq0h/Anil-Ambani?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல தொழிலதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF">அனில் அம்பானி</a> மற்றும் அவரது ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு சுமார் ரூ.2,684.57 கோடி நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, மத்திய புலனாய்வு அமைப்பு புதிய ஊழல் மற்றும் முறைகேடு வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் இந்திய கார்ப்பரேட் மற்றும் நிதியியல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>எல்.ஐ.சி-யின் பிரம்மாண்ட முதலீடும் முறைகேடும்</h2><p>கடந்த 2012 முதல் 2018-ஆம் ஆண்டு வரை அனில் அம்பானியின் <a href="https://www.maalaimalar.com/topic/reliance">ரிலையன்ஸ் </a>கேபிட்டல் நிறுவனத்தில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி பல்வேறு கட்டங்களாகச் சுமார் ரூ.3,900 கோடி வரை முதலீடு செய்தது.</p><p>இருப்பினும், இந்த முதலீட்டுத் தொகையை நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், திட்டமிட்டபடி விதிமுறைகளை மீறி முறைகேடான வழிகளில் வேறு சில தனியார் நிறுவனங்களின் கணக்குகளுக்கு ரிலையன்ஸ் கேபிட்டல் நிர்வாகம் மாற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><h2>எல்.ஐ.சி-க்கு ஏற்பட்ட பிரம்மாண்ட இழப்பு</h2><p>நிறுவனத்தின் இந்த நிதி முறைகேடு மற்றும் மோசடி காரணமாக, எல்.ஐ.சி நிறுவனத்திற்கு நேரடியாகச் சுமார் <strong>ரூ.2,684.57 கோடி</strong> அளவுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த நிதியிழப்பு தொடர்பாக எல்.ஐ.சி நிறுவனம் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் தற்போது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">சி.பி.ஐ</a> தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.</p><h2>யார் யார் மீது வழக்குப்பதிவு?</h2><p>சி.பி.ஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம், நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் அம்பானி, முன்னாள் நிர்வாக இயக்குனர் சதிஷ் சேத் மற்றும் இந்த முறைகேட்டிற்குத் துணையாக இருந்த அடையாளம் தெரியாத சில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><h2>அனில் அம்பானி தரப்பு விளக்கம்</h2><p>இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள தொழிலதிபர் அனில் அம்பானி, "இந்த முதலீட்டு விவகாரத்திலோ அல்லது ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தின் செயல்பாடுகளிலோ எந்தவிதமான முறைகேடோ அல்லது சட்ட விரோதப் பணப் பரிமாற்றமோ நடைபெறவில்லை" என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.</p><p>இருப்பினும், எல்.ஐ.சி மற்றும் பொதுமக்களின் வரிப்பணம் சம்பந்தப்பட்ட பெரிய தொகை என்பதால் சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கின் பின்னணியில் உள்ள நிதிப் பரிமாற்றங்களை மிகத் தீவிரமாகத் தணிக்கை செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் பிரசாரம்: த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 பேருக்கு அனுமதி வழங்கியது தேர்தல் ஆணையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-tvk-star-speakers-to-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-tvk-star-speakers-to-campaign#comments</comments><guid isPermaLink="false">93959d93-3110-41b0-b38a-832ab3c74951</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:13:55 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:13:55.016Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,Election Commission,தேர்தல் ஆணையம்,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/5gj6sjty/vijay01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/5gj6sjty/vijay01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி அளித்துள்ளது.</strong></em> </p><h2><strong>அக். 6-ல் இடைத்தேர்தல்</strong></h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடைபெறுகிறது. 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. </p><p>மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். </p><h2><strong>தலைவர்கள் பிரசாரம்</strong></h2><p>2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.  இதை தொடர்ந்து நாளை முதல் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர். </p><p>அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.</p><h2><strong>40 பேருக்கு அனுமதி</strong></h2><p>இந்த நிலையில், இடைத்தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும்,  பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும்  தேர்தல் ஆணையம்  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.</p><p>அந்த வகையில் <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.</a> நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>த.வெ.க. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முதலமைச்சர் விஜய், கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், காதர் மொய்தீன், எம்பிக்கள் ரவிக்குமார், துரை வைகோ, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண்ராஜ், ராஜ்மோகன், ரமேஷ், ஸ்ரீநாத், வன்னிஅரசு  உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.  </p>]]></content:encoded></item><item><title>தேர்வுக்குழு தலைவர் பதவி: அஜித் அகர்கர் எடுத்த அதிரடி முடிவு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/ajit-agarkar-informs-of-decision-to-quit-the-post</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/ajit-agarkar-informs-of-decision-to-quit-the-post#comments</comments><guid isPermaLink="false">0a4c7eb9-ef81-4465-ba1d-b37b89be80f6</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:59:04 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:59:04.690Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,Ajit Agarkar,அஜித் அகர்கர்,பிசிசிஐ,chief selector,தேர்வுக்குழு தலைவர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/cm7srt69/agarkar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ajit agarkar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/cm7srt69/agarkar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக இருக்கும் அஜித் அகர்கர் அப்பதவியில் இருந்து விலக உள்ளதாக பிசிசிஐ  அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவராக பதவி வகித்து வருபவர் அஜித் அகர்கர். ஜூலை 2023-ம் ஆண்டில் பொறுப்பேற்ற அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு காலத்தில், இந்திய அணி 2024 மற்றும் 2026 டி20 உலகக் கோப்பைகளையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது. மேலும், சில தொடர்களையும் வென்றுள்ளது.</p><h2>அடுத்த மாதம் நிறைவு</h2><p>அஜித் அகர்கரின் பதவிக் காலம் அக்டோபர் 4-ம் தேதி உடன் முடிவடைய உள்ளது.</p><p>இதற்கிடையே, பிசிசிஐ நிர்வாகத்திற்கும், தேர்வுக் குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக செய்திகள் வெளியானது.</p><p>அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் 2027 ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், தேர்வுக் குழு தலைவரை மாற்றுவது அணியின் எதிர்கால திட்டமிடலைப் பாதிக்கும். எனவே பிசிசிஐ அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அகர்கரின் ஒப்பந்தம் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது.</p><p>இந்நிலையில், தேர்வுக் குழு தலைவர் பதவியில் தொடரப் போவதில்லை என <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">அஜித் அகர்கர்</a> பிசிசிஐயிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின.</p><p>இதைத் தொடர்ந்து, பிசிசிஐ வேறு ஒரு புதிய தலைமைத் தேர்வாளரைத் தேடும் பணியைத் தொடங்கி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்கிறது திமுக - அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-accusation-dmk-playing-politics-over-bharathidasan-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-accusation-dmk-playing-politics-over-bharathidasan-issue#comments</comments><guid isPermaLink="false">a4aeeebf-e710-413a-9a03-c049df6961a6</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:52:21 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:52:21.546Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Bharathidasan,பாரதிதாசன்,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/2mxm8dg1/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/2mxm8dg1/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரதிதாசன் மீது அக்கறை இருப்பதுபோல் திமுக நாடகமாடுகிறது என்று அமைச்சர் வன்னி அரசு கூறினார்.</p> <p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சமூக நீதித்துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* மாணவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/educational-scholarship-of-rs-23-95-lakh-released-for-student-bharathidasan">பாரதிதாசன்</a> தற்போது வரை பில் அனுப்பாத நிலையிலும் முழு உதவித்தொகையையும் தவெக அரசு அனுப்பி விட்டது.</p> <p>* திமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட வழிமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது.</p><p>* திமுக அரசு கேட்டதைப்போல் தான் தற்போது தவெக அரசும் உதவித்தொகைக்கான பில் உள்ளிட்டவற்றை கேட்கிறது.</p> <p>* திமுக ஆட்சியில் தலித் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர்.</p><p>* திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வித்தொகைக்கு விண்ணப்பித்த 609 பேரில் 601 பேர் தகுதி பெற்றும் 181 பேருக்கு மட்டும் திமுக உதவித்தொகை கொடுத்தது ஏன்?</p> <p>* பாரதிதாசன் மீது அக்கறை இருப்பதுபோல் திமுக நாடகமாடுகிறது.</p><p>* மாணவர் பாரதிதாசனுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.</p><p>* மாணவன் பாரதிதாசன் கல்வி உதவித்தொகை விவகாரத்தில் திமுக தான் அரசியல் செய்கிறது.</p> <p>* திமுக ஆட்சி காலத்தில் நடந்த கவின் படுகொலை உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி அரசியல் செய்வது திமுக தான்.</p><p>* கவின் ஆணவப்படுகொலை விவகாரத்தில் விசிக போராடிய பிறகே சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.</p> <p>* கவின் படுகொலை விவகாரத்தில் விசிக தான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தது.</p><p>* வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே எப்ஐஆர் போட்டது திமுக அரசு. பாதிக்கப்பட்டோர் மீது எப்படி வழக்கு பதிவீர்கள் என ஸ்டாலினை சந்தித்து கேள்வி எழுப்பினோம்.</p><p>* வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்- வலுக்கும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-writes-to-prime-minister-regarding-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-writes-to-prime-minister-regarding-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">e57ce181-dd37-42e8-a704-0ae0c6a9eaa2</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:39:05 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:39:05.876Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,சென்னை விமான நிலையம்,pm modi,chennai airport,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/udll9p8q/chennaiairport.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/udll9p8q/chennaiairport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். பொதுத்துறை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது பயணிகள், ஊழியர்கள் மீது சுமை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-விமான-நிலையம்">சென்னை விமான நிலைய</a> நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p><h2><strong>பிரதமருக்கு கடிதம்</strong></h2><p>இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டில் உள்ள சில குறைபாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக முதலமைச்சர்  விஜய் கடந்த ஆகஸ்டு மாதம் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. </p><h2><strong>கண்டனம்</strong></h2><p>ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். </p><p>சென்னை விமான நிலையம் தனியார்மயமாக்க முதல்வர் விஜய் பிரதமருக்குக் கடிதம் எழுதியதாக வெளியான செய்திக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், மத்திய அரசின் தனியார்மயமாக்கலுக்குத் துணைப்போகக்கூடிய வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதத்தை எழுதி இருந்தால் திரும்பப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில், </p><p>இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.</p><p>பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், லாபமே முதன்மை நோக்கமாக மாறும் என்பதோடு, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.</p><p>எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய பிரதேசம்: அக் -16 முதல் பெட்ரோல் பங்குகளில் ரூ.2,000-க்கு மேல் UPI கிடையாது?</title><link>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-fuel-pumps-to-stop-upi-payments-above-rs-2000-from-october-16</link><comments>https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-fuel-pumps-to-stop-upi-payments-above-rs-2000-from-october-16#comments</comments><guid isPermaLink="false">549cabbf-fa1f-4b89-8ef0-bb46ecf6ed45</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:28:33 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:28:33.589Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய பிரதேசம்,Madhya Pradesh,Petrol Price,digital payment,UPI Tax,Cash Payment</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0bcea2a0/Cash-ayment" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cash Payment ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0bcea2a0/Cash-ayment?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் <a href="https://www.maalaimalar.com/topic/upi">யு.பி.ஐ. பரிவர்த்தனை</a>களுக்குக் கட்டணம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் ஒரு அதிரடியான கூட்டு முடிவை  அறிவித்துள்ளது.</p><h2>புதிய கட்டுப்பாடு</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">மத்திய பிரதேசத்தில்</a> உள்ள பெட்ரோல் பங்குகளில் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. </p><p>இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4,700 பெட்ரோல் பங்குகளிலும் ஒரே நேரத்தில் அமலுக்கு வர உள்ளது.</p><h2>இந்த முடிவுக்கு என்ன காரணம்?</h2><p>சமீபத்தில் குறிப்பிட்ட தொகையைத் தாண்டும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர். கட்டணம் அல்லது சேவை வரி விதிக்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p>இதன் காரணமாக, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">டிஜிட்டல் பரிவர்த்தனைகளை</a> ஏற்கும் போது அவர்களுக்குக் கூடுதல் நிதி இழப்பு மற்றும் லாப வரம்பில் பெரிய பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.</p><h2>வாடிக்கையாளர்களின் கோரிக்கை</h2><p>பெட்ரோல் மற்றும் டீசல் போடும் வாகன ஓட்டிகள் பொதுவாகப் பெரிய தொகையை யு.பி.ஐ. மூலம் செலுத்தி வந்த நிலையில், இந்த புதிய கட்டுப்பாடு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>"மத்திய அரசு இந்த எம்.டி.ஆர். வரி விதிப்பு முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் மத்திய அரசுக்குக் கடுமையான கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>அரசு இந்த முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், அக்டோபர் 16 முதல் வாடிக்கையாளர்கள் ரூ.2,000-க்கு மேல் பெட்ரோல் போட ரொக்கப் பணத்தையோ அல்லது பிற வழிமுறைகளையோ மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>கருட சேவையை தரிசிக்க குவிந்த பக்தர்கள்- திருப்பதி மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு </title><link>https://www.maalaimalar.com/spirituality/restrictions-on-vehicle-movement-on-the-tirupati-hill-road</link><comments>https://www.maalaimalar.com/spirituality/restrictions-on-vehicle-movement-on-the-tirupati-hill-road#comments</comments><guid isPermaLink="false">110a3246-d830-4c4c-b789-cadcb7c646c3</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:03:32 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:03:32.313Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>devotees,Tirupati temple,பிரம்மோற்சவ விழா,திருப்பதி கோவில்,பக்தர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0em978js/tirupati.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் பவனி வந்த காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் பவனி வந்த காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/0em978js/tirupati.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கருட சேவையை காண மதியம் முதலே பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிய தொடங்கினர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் டீ, காபி, பால், மோர் உள்ளிட்டவை தேவஸ்தான தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது. மாட வீதிகளில் கருட சேவையை காண 1.80 லட்சம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/திருப்பதி-கோவில்">திருப்பதி ஏழுமலையான் கோவில்</a> பிரம்மோற்சவ விழாவில் 5-வது நாளான இன்று காலை ஏழுமலையான் மோகினி அவதாரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். </p><h2><strong>கருட சேவை</strong></h2><p>மாலை 6.30 மணிக்கு கருட சேவை உற்சவம் தொடங்குகிறது. தங்க கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.</p><p>பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருப்பதி மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>வாகனங்களுக்கு தடை</strong> </h2><p>போக்குவரத்து நெரிசலை குறைக்க திருப்பதி மலை உள்ளிட்ட சாலைகளில் 10 இடங்களில் சிறப்பு வாகன நிறுத்தங்களை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்து உள்ளது. </p><p>பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி விட்டு பஸ்களில் திருப்பதி மலைக்கு வர வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோல் இன்று காலை முதல் நள்ளிரவு வரை மலை பாதையில் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>கருட சேவையை காண மதியம் முதலே பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிய தொடங்கினர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் டீ, காபி, பால், மோர் உள்ளிட்டவை தேவஸ்தான தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது. மாட வீதிகளில் கருட சேவையை காண 1.80 லட்சம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.</p><h2><strong>சிறப்பு ரெயில்கள்</strong></h2><p>கருட சேவை காண வரும் பக்தர்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பதியில் இருந்து வேலூர் கன்டோன்ன்மென்ட் வரையும் திருப்பதியில் இருந்து சென்னை கடற்கரை, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.</p><h2><strong>20 மணி நேரம்</strong></h2><p>திருப்பதியில் நேற்று 76,060 பேர் தரிசனம் செய்தனர். 32, 248 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.56 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் கல்வி உதவித்தொகை விடுவிப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/educational-scholarship-of-rs-23-95-lakh-released-for-student-bharathidasan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/educational-scholarship-of-rs-23-95-lakh-released-for-student-bharathidasan#comments</comments><guid isPermaLink="false">00ed0913-d804-48ee-b711-845013a323f6</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:02:40 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:02:40.466Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathidasan,பாரதிதாசன்,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ub1or8vp/student1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Student Bharathidasan - Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ub1or8vp/student1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உத்தரவின்படி, மாணவன் பாரதிதாசனுக்கு அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days">பாரதிதாசன்</a> என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் 'வீடியோ' பதிவு வெளியிட்டு இருந்தார்.</p> <p>இதையடுத்து வெளிநாட்டில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று அமைச்சர் வன்னிஅரசு உறுதி அளித்து இருந்தார்.</p><p>இந்நிலையில், மாணவன் பாரதிதாசனுக்கு அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.12.21 லட்சம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சிய ரூ.23.95 லட்சமும் நேற்று ஒரேநாளில் விடுவிக்கப்பட்டது.</p><p>ஆராய்ச்சி படிப்பிற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.36 லட்சத்தை 2-வது ஆண்டாக முழுமையாக மாணவர் பாரதிதாசன் பெற்றுள்ளார். </p><p>மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவரது படிப்பு எக்காரணம் கொண்டும் தடைபடக் கூடாது என்ற நோக்கத்திலும், சமூக நீதித்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> அவர்களின் உத்தரவின்படியும் எஞ்சிய தொகையான ரூ.23.95 லட்சமும் போர்க்கால அடிப்படையில் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Honeymoon சென்ற புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம் - பார்பிக்யூ சமைத்த போது நேர்ந்த விபரீதம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/honeymoon-tragedy-newlywed-couple-barbecue-accident</link><comments>https://www.maalaimalar.com/news/national/honeymoon-tragedy-newlywed-couple-barbecue-accident#comments</comments><guid isPermaLink="false">7be03907-8c88-4121-b623-92cc015b62a8</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:59:55 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:59:55.841Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,புதுமண தம்பதி,Honey Moon,ஹனிமூன்,தீ விபத்து,Newly married couple</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/oy7o7u26/Fire-Accident" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fire Accident ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/oy7o7u26/Fire-Accident?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">மேற்கு வங்காளத்தில்</a> Hoonymoon கொண்டாடச் சென்ற புதுமணத் தம்பதியின் வாழ்வில் பார்பிக்யூ தீ விபத்து காரணமாகப் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. கணவன் கண்முன்னே தீப்பற்றி எரிந்ததில் இளம்பெண் ஒருவர் 60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2>ஹனிமூன் பயணத்தில் நேர்ந்த விபரீதம்</h2><p>மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த <strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">சவுவிக் தாஸ்</a></strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF"> என்பவருக்கும், </a><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">நிகிதா சாஹா</a></strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF"> </a>என்ற பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. </p><p>இந்த புதுமணத் தம்பதியினர் தங்களது ஹனிமூனை கொண்டாடுவதற்காக டார்ஜிலிங் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சிட்டாங் மலைவாசஸ்தலத்திற்குச் சென்றிருந்தனர்.</p><p>அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது, அங்கிருந்த பார்பிக்யூ சமையல் வசதியைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர். சமையல் நடக்கும் இடத்திற்கு மிக அருகில் இந்த தம்பதியினர் அமர்ந்திருந்தனர்.</p><h2>கண்ணிமைக்கும் நேரத்தில் பற்றிய தீ</h2><p>அங்கு பணிபுரிந்த விடுதி ஊழியர் ஒருவர், பார்பிக்யூ அடுப்பை வேகமாக எரியூட்டுவதற்காக ஒரு பிளாஸ்டிக் கேனில் இருந்த எரியக்கூடிய திரவத்தை அடுப்பில் ஊற்றியுள்ளார். </p><p>அப்போது எதிர்பாராத விதமாகத் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தீ கொளுந்துவிட்டு</a> எரியத் தொடங்கி, அருகில் அமர்ந்திருந்த நிகிதாவின் உடலுக்குப் பரவியது.</p><p>கண்ணிமைக்கும் நேரத்தில் நிகிதாவின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. </p><p>அதிர்ச்சியடைந்த கணவர் சவுவிக் தாஸும், சம்பந்தப்பட்ட ஊழியரும் தங்களது ஆடைகளைக் கழற்றி தீயை அணைக்கப் போராடினர். இருப்பினும் நிகிதாவின் உடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.</p><h2>தற்போதைய நிலை</h2><p>நிகிதாவின் உடலில் <strong>60 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள்</strong> ஏற்பட்டுள்ளதால், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><p>இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சொகுசு விடுதியின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுடனான 101 ஒப்பந்தங்கள் மறுஆய்வு: இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் &apos;Win-Win&apos; கூட்டு முயற்சியே இலக்கு என பங்களாதேஷ் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/review-of-101-agreements-with-india-bangladesh-aims-win-win</link><comments>https://www.maalaimalar.com/news/world/review-of-101-agreements-with-india-bangladesh-aims-win-win#comments</comments><guid isPermaLink="false">370ceba0-d2bc-47b4-902e-cc657437bdac</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:35:18 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:35:18.673Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,Bangladesh,பங்களாதேஷ்,WinWin Agreement,இந்தியவெளியுறவுத்துறை ஒப்பந்தங்கள்மறுஆய்வு,Contract Review</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ihtju7aa/WinWin-Agreement" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WinWin Agreement ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ihtju7aa/WinWin-Agreement?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, முந்தைய அவாமி லீக் அரசாங்கத்தின் காலத்தில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட 101 இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">புரிந்துணர்வு ஒப்பந்தங்களை</a> தற்போதைய பங்களாதேஷ் இடைக்கால அரசு மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.</p><p>இந்த மறுஆய்வு ஒப்பந்தங்கள் ரத்து செய்வதற்காக அல்ல என்றும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் (Win-Win) மாற்றுவதற்காகவே என்றும் பங்களாதேஷ் அரசு விளக்கம் அளித்துள்ளது.</p><h2>மறுஆய்வின் நோக்கம் என்ன? – பங்களாதேஷ் விளக்கம்</h2><p>இது குறித்து பங்களாதேஷ் நாடாளுமன்றத்தின் தலைமை கொறடா நூருல் இஸ்லாம் மோனி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/india">இந்தியாவுடன் </a>பல்வேறு காலகட்டங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களை முழுமையாக ரத்து செய்யும் திட்டம் பங்களாதேஷ் அரசிற்கு இல்லை.</p><p>இந்த ஒப்பந்தங்களில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது பங்காளதேஷின் தேசிய நலனுக்குப் புறம்பான அம்சங்கள் இருக்கிறதா என்பதை மட்டுமே அந்தந்த அமைச்சகங்கள் ஆய்வு செய்து வருகின்றன. </p><p>இதில் ஏதேனும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், அதுகுறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பிற்கும் சாதகமான முறையில் அவை சரிசெய்யப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.</p><h2>எந்தெந்தத் துறைகளின் ஒப்பந்தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன?</h2><p>இந்தியா மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">பங்களாதேஷ் </a>இடையே நீண்டகாலமாகப் பல முக்கியத் துறைகளில் கூட்டுறவு நிலவி வருகிறது. </p><p>தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள முக்கியப் பகுதிகள், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக பங்களாதேஷின் சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகங்களை இந்தியா பயன்படுத்தி வருகிறது.</p><p>இதன் தற்போதைய விதிமுறைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.</p><p>பங்களாதேஷ் தனது மின்சாரத் தேவைக்காக இந்தியாவின் மின்சார இறக்குமதியையும், எல்லை கடந்த எரிபொருள் விநியோகத்தையும் நம்பியுள்ளது.</p><p>பங்களாதேஷில் நிலவும் அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக, மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும் நிதியியல் மறுபேச்சுவார்த்தைகள் இதில் அடங்கும். </p><p>இந்தியா நிதியுதவி அளிக்கும் பல திட்டங்களின் சாத்தியக்கூறுகள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து பங்களாதேஷ் திட்டக்குழு மறுஆய்வு செய்து வருகிறது.</p><p>எல்லையில் கடத்தல், சட்டவிரோத ஊடுருவல் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. </p><p>முந்தைய அரசின் காலத்தில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் பங்களாதேஷ் மண்ணைப் பயன்படுத்தாமல் தடுக்க இரு நாடுகளும் ஒத்துழைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>இந்தியாவின் எதிர்வினை என்ன?</h2><p>பங்களாதேஷ் அரசின் இந்த மறுஆய்வு நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் டகத் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,</p><p>"இது தொடர்பான ஊடகச் செய்திகளை நாங்களும் கவனித்தோம். ஆனால், இதுகுறித்து பங்களாதேஷ் அரசிடமிருந்து இந்தியாவிற்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. </p><p>எவ்வாறாயினும், இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு நிச்சயம் எடுக்கும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த மறுஆய்வின் முடிவுகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பங்களாதேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரு அண்டை நாடுகளின் உறவில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கயாடு லோகரின் Recent Look...</title><link>https://www.maalaimalar.com/ampstories/web-stories/kayadu-logar-latest-photoshoot</link><comments>https://www.maalaimalar.com/ampstories/web-stories/kayadu-logar-latest-photoshoot#comments</comments><guid isPermaLink="false">35774553-2d86-45d7-bde4-bde89ad83513</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:22:15 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:22:15.416Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kayadu Lohar,காயடு லோகர்,Actress Photoshoot,Kayadu Lohar Latest Picture</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/s1ccqgro/Untitled-design-2026-09-19T112815.313.png" width="1080"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kayadu Lokar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/s1ccqgro/Untitled-design-2026-09-19T112815.313.png?w=280" width="280"></media:thumbnail><category>வெப் ஸ்டோரீஸ் (Web stories)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/mscnzk1v/Untitled-design-2026-09-19T112903.580.png" /></figure><p>புனேயில் பிறந்து, மாடலிங் துறையில் தனது திறமையை நிரூபித்தவர் கயாடு லோகர்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/77vzz1cg/Untitled-design-2026-09-19T113036.216.png" /></figure><p>'டைம்ஸ் பிரெஷ் ஃபேஸ்' அழகிப் போட்டியில் வென்று கவனம் ஈர்த்தவர்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/dpo2re9s/Untitled-design-2026-09-19T113002.155.png" /></figure><p>'டிராகன்' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ee9vol23/Untitled-design-2026-09-19T112934.258.png" /></figure><p>சமீபத்தில் வெளியான 'இதயம் முரளி' மற்றும் 'இம்மார்டல்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/jz3o8tym/Untitled-design-2026-09-19T113111.236.png" /></figure><p>திரையுலகில் அடுத்தடுத்த படங்களுக்கு வலுவான என்ட்ரி கொடுக்க, தன்னை முற்றிலும் புதிய லுக்கிற்கு மாற்றியுள்ளார்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/r9s7avmk/Untitled-design-2026-09-19T113145.535.png" /></figure><p>அழகு மற்றும் சிறந்த நடிப்பாலும் தென்னிந்திய திரையுலகின் அடுத்த கனவுக்கன்னியாக வலம் வருகிறார் கயாடு!</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர் தகுதி தேர்வு டெட் வினாத்தாள்களை காலணிக்குள் மறைத்து கடத்திய ஊழியர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/national/teachers-qualification-exam-question-papers-smuggled-in-shoes-16-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/national/teachers-qualification-exam-question-papers-smuggled-in-shoes-16-arrested#comments</comments><guid isPermaLink="false">06ad9cb9-0a98-4f10-bd66-2dac1d5a7463</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:20:36 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:20:36.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆசிரியர் தகுதி தேர்வு,TET Exam,paper leak,Exam Question Paper,வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/vzxavr7s/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra TET exam paper leak]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/vzxavr7s/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள்களை அச்சகத்தில் இருந்து காலணிகளில் கடத்தி, 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்த வழக்கில், மொத்தம் 18 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.</p><h3><strong>மகாராஷ்டிரா டெட் தேர்வு</strong></h3><p>ஆக்ராவில் உள்ள மஹிம் பத்ரன் பிரைவேட் லிமிடெட் என்ற அச்சகத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">ஆசிரியர் தகுதி தேர்வுக்கான</a> வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு வந்தன. </p><p>அப்போது அந்த அச்சகத்தில் வேலை பார்த்துவந்த இரண்டு ஊழியர்கள் வினாத்தாள்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.</p><p>இதையடுத்து அவர்கள் அச்சகத்தில் பாதுகாப்பு சோதனைகள் அதிகமாக இருந்ததால், தங்கள் காலணிகளில் மறைத்து வைத்து வினாத்தாள்களை வெளியே கொண்டு வந்துள்ளனர்.</p><p>தேர்வின் நேர்மையை பாதுகாப்பதற்காக, தேர்வு நாளன்று தேர்வர்கள் தங்கள் வினாத்தாள்களை தேர்ந்தெடுக்கும் வகையில் நான்கு தனித்தனி தொகுப்புகளாக தயாரித்திருந்தனர்.</p><p>ஆனால் அச்சகத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் மற்றும் ஒரு முன்னாள் பணியாளரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி, அந்த நான்கு வினாத்தாள் தொகுப்புகளையும் தங்கள் காலணிகளுக்குள் மடித்து வைத்து திருட்டுத்தனமாக வெளியே கொண்டு வந்துள்ளனர்.</p><p>இதையடுத்து ஊழியர்கள் அந்த வினாத்தாள்களை 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><h3>3 பேர் கைது</h3><p>மகாராஷ்டிராவில் பிவண்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள்களை விற்பனை செய்ய முயன்றபோது, மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.</p><p>முன்னாள் பயிற்சி வகுப்பு ஆசிரியரான குப்தா என்பவரை மாநிலங்களுக்கு இடையேயான மோசடியின் முக்கிய குற்றவாளியாக போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p>அவருக்கு ஒடிசாவில் முன்னதாக நடந்த மற்றொரு தேர்வுத்தாள் கசிவு வழக்கிலும் தொடர்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>குற்றப்பத்திரிகை தாக்கல்</strong></h3><p>இதைத்தொடர்ந்து பிவண்டியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 18 பேர் குற்றவாளிகளாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>இந்த வழக்கில் இதுவரையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான அசோக் சாவ் மற்றும் பிரகாஷ் மிசாலை போலீசார் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது இயல்பான பழக்கமாகவே இருக்க வேண்டும் -  ஆளுநர் அர்லேகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-governor-arlekar-says-keeping-surroundings-clean-should-be-a-natural-habit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-governor-arlekar-says-keeping-surroundings-clean-should-be-a-natural-habit#comments</comments><guid isPermaLink="false">9aa707b3-6eaf-41fb-8004-5bcfae6bee7f</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:09:20 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:09:20.431Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மெரினா கடற்கரை,Chennai Marina Beach,Governor Arlekar,ஆளுநர் அர்லேகர்,International Coastal Cleanup Day,சர்வதேச கடற்கரை தூய்மை தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/pwmnpzr0/governor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marina beach - Governor Arlekar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/pwmnpzr0/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் கூறினார்.</p><p>சர்வதேச கடற்கரை தூய்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச கடற்கரை தூய்மை தினமான இன்று சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு தூய்மைப் பணி நிகழ்ச்சி நடைபெற்றது. </p> <p>இந்த நிகழ்ச்சியில், தமிழக பொறுப்பு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்</a>, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly">ஆளுநர் அர்லேகர்</a> செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>* இன்று நாங்கள் அனைவரும் உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் கூடியுள்ளோம். </p> <p>* <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">மெரினா கடற்கரையை</a> சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.</p><p>* இருப்பினும், உலகம், நாடு மற்றும் மாநிலம் முழுவதும்  ‘கடற்கரை தூய்மைப்படுத்தும் நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படும் இந்நாளில், நாம் மீண்டும் இங்கு கூடியுள்ளோம்.</p><p>* கடற்கரை, சுற்றுப்புறம், வீடுகளை தூய்மையாக வைத்திருப்பது நமது இயல்பான பழக்கமாகவே இருந்திருக்க வேண்டும்.</p>  <p>* தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-plan-to-set-up-a-garbage-incinerator-must-be-abandoned-immediately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-plan-to-set-up-a-garbage-incinerator-must-be-abandoned-immediately#comments</comments><guid isPermaLink="false">195c22fc-676c-4bfc-a7cc-a1cdd253e7f2</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:00:15 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:00:15.377Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/rj73cjv5/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/rj73cjv5/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 92 ஏக்கரில் குப்பை எரிஉலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தமிழக அரசு அறிவித்ததை அன்புமணி ராமதாஸ் கடுமையாக எதிர்க்கிறார். உலகளவில் தோல்வியடைந்த இந்த எரிஉலைகள் டையாக்சின், சல்பர் டையாக்சைடு, பாதரசம் போன்ற நச்சு வாயுக்கள் மூலம் புற்றுநோய், இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களை ஏற்படுத்தும் பேரழிவு திட்டம் என எச்சரிக்கிறார்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>பேரழிவு</strong></h2><p>சேலம் மாநகரம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 92 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரிஉலை அமைத்து குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா, குப்பை எரியுலை உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி சேலம் மாநகர மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி அவை விதி எண் 110-இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடியில் 10 மெகாவாட் திறனுக்கும், நெல்லையில் ரூ.256 கோடியில் 9 மெகாவாட் அளவுக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வெள்ளக்கல்பட்டியில் கொங்கு எஸ்.ஆர்.வி பள்ளிக்கு எதிரில் உள்ள அரசுக்கு சொந்தமான 92.49 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவு குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது சேலம் மாநகரத்திற்கு பேரழிவை ஏற்படுத்திவிடும்.</p><h2><strong>ஆபத்தானவை</strong> </h2><p>குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன. குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும் என்பதால், அதிலிருந்து டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு, ஃபியூரன் உள்ளிட்டவை வெளியாகும். காற்றில் மிதக்கும் PM 2.5, PM 10  நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள்  ஆகியவை வெளியாகும். இவற்றில் பல ரசாயனங்கள் சுற்றுச்சூழலுடன் கலந்து அழியாமல் நிலைத்திருக்கக் கூடிய மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை.</p><p>மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது குப்பை எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு  டையாக்சின், 3 மடங்கு  நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு  சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகின்றன. இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசு மட்டுமல்லாமல், எரிஉலை சாம்பலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் குப்பை எரிஉலைகளால் படிப்படியாக ஏற்படும் ஆபத்து உள்ளது.</p><p>இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்து தான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வடசென்னை கொடுங்கையூர், தென்சென்னை பெருங்குடி, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம், கோவை வெள்ளலூர் ஆகிய இடங்களில் ஆபத்தான குப்பை எரிஉலை திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, அதன் பங்குக்கு சேலம் ஜாகிர் அம்மாபாளையம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் குப்பை எரிஉலை அமைக்கத் துடித்து வருகிறது.</p><p>சேலம் ஜாகிர் அம்மாபாளையம் குப்பை எரிஉலைத் திட்டம் கூட கடந்த ஆட்சியில் கருவாக்கப்பட்ட திட்டம் தான். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது முதல் இடம் அடையாளம் காணப்பட்டு, இறுதி செய்யப்பட்டது வரை அனைத்தும் திமுக ஆட்சியில் தான் இறுதி செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்த தவெக அரசு, இந்த பேரழிவுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தத் துடிப்பது ஏன்?</p><h2><strong>பா.ம.க.வின் வினா</strong></h2><p>சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும், கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சியில் இருந்தும் திடக்கழிவு குப்பைகள் சாலைவழியாக் கொண்டு வரப்பட்டு சேலம் குப்பை எரிஉலையில் எரிக்கப்படும். இவற்றில் 60% வரை ஈரக்கழிவுகள் இருப்பதால், அவை கொண்டு வரப்படும் பாதை நெடுகிலும் துர்நாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, நோய்ப்பரவல் உள்ளிட்ட கேடுகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த ஆலைக்காக தினமும் ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதில் ஒரு பகுதி கழிவுநீரை சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் என்றாலும், பெரும்பகுதி நீர்  நிலத்திலிருந்து தான் எடுக்கப்படும் என்பதால் நிலத்தடி நீர்மட்டத்தின் மீது மிகப்பெரும் அழுத்தம் ஏற்படும்.</p><p>சேலம் ஜாகிர்பாளையத்தில் ஏற்கனவே 119 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிக்கப் ட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.800 கோடியில் அமைக்கப்படும் இந்த ஜவுளி பூங்காவில்  60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கப்படவுள்ளன. அதற்காக ஒருபுறம் நிலத்தடி நீர் பெருமளவில்  உறிஞ்சப்படுவது மட்டுமின்றி, சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் வேதிப்பொருள்களும், நச்சுப் பொருள்களும் கலந்த கழிவுநீர் நிலம், நீர், வாயு ஆகிய மூன்றையும் நஞ்சாக்கி விடும். அதே பகுதியில் தான் இப்போது குப்பை எரிஉலை அமைக்கப்படவுள்ளது என்பதால், அதையொட்டி 30 கி.மீ சுற்றளவில் வாழும் மக்களுக்கு அவர்கள் சுவாசிக்கும் காற்று, குடிநீர் ஆகியவையே புற்றுநோய், இதயநோய் என பட்டியலிட முடியாத எண்ணிக்கையில் நோய்களை ஏற்படுத்தி விடும். இவ்வளவு பேரழிவுகளையும் ரூ.291 கோடி மக்களின் வரிப்பணத்தைக் கொட்டிக் கொடுத்து வாங்க வேண்டுமா? என்பது தான் பா.ம.க.வின் வினா.</p><p>இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஸி படைகளால் பிடிக்கப்பட்ட  யூதர்கள் ஜெர்மனியில் அமைக்கப்பட்டிருந்த கொலை முகாம்களில் அடைக்கப்பட்டு, நச்சுவாயு செலுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். சேலம் ஜாகிர் அம்மாபாளையம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும் குப்பை எரிஉலைகளும் அவற்றுக்கு சற்றும் குறைந்தவை அல்ல. எனவே, சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றம் ஆணையிடவாறு, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து  கழிவுகளை ஈரமான குப்பை, உலர்ந்த குப்பை, சுகாதாரக் கழிவுகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் கழிவுகள் என 4 வகைகளாகப் பிரித்து  சேகரிக்கும் சேகரிக்கப்படும் கழிவுகளை மத்திய அரசின் 2026 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருப்பதி கலப்பட நெய் மோசடி: சுகிருதி ஃபுட்ஸ் உரிமையாளரை கைது செய்த அமலாக்கத்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-96-crore-adulterated-ghee-scam-in-tirupati-ed-arrests-sukruthi-foods-owner</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-96-crore-adulterated-ghee-scam-in-tirupati-ed-arrests-sukruthi-foods-owner#comments</comments><guid isPermaLink="false">ae3b3d6d-0243-46d9-9d2f-d47f6fa88e0d</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:49:57 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:49:57.238Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Enforcement Directorate,திருப்பதி,Tirupati,அமலாக்கத்துறை,Tirumala Devasthanam,திருமலை தேவஸ்தானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/8m78rr9t/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tirupati adulterated ghee scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/8m78rr9t/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படும் செய்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில், சுகிருதி ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்களா என்பவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">திருப்பதி</a> லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், </p><h3><strong>கலப்பட நெய்</strong></h3><p>திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கலப்படம் செய்யப்பட்ட நெய்யானது, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பாம் கெர்னல் ஆயில், பாமோலின் மற்றும் எம்ஜி-90, மோனோகிளிசரைடுகள், மைவாசெட் சாஃப்ட் 400, அசிட்டிக் அமில எஸ்டர் உள்ளிட்ட ரசாயணங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. </p><p>பின்னர் இவை, அக்மார்க் ஸ்பெஷல் கிரேடு பசு நெய் என்ற பெயரில் திமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.</p><h3><strong>96 கோடி மோசடி</strong></h3><p>2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மோசடியாக வழங்கப்பட்ட நெய்யின் மதிப்பு ரூபாய் 230 கோடியாக உள்ளது. அதில் 96 கோடி ரூபாய் மதிப்புள்ள கலப்பட நெய், மங்களாவால் தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வழக்கில் மங்களா என்பவர், கலப்பட பொருட்களை பெற உதவியதோடு தனது தொழிற்சாலை வளாகத்தில் கலப்பட நெய்யையும் தயாரித்துள்ளார்.</p><p>ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி ஸ்பெஷாலிட்டிஸ், மல்கங்கா மில்க் &amp; அக்ரோ ப்ராடக்ட்ஸ் மற்றும் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் உள்ளிட்ட பல்வேறு போலி நிறுவனங்கள் மூலம் கலப்படம் செய்யப்பட்ட நெய் விநியோகத்தையும் மங்களா ஒருங்கிணைத்துள்ளார்.</p><p>மேலும், கலப்படங்களின் உண்மையான பயன்பாட்டை மறைத்து, அசல் பசு நெய்யின் முறையான உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன், நெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான போலிப் பதிவுகளை மங்களா உருவாக்கியுள்ளார் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.</p><h3><strong>சுகிருதி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது</strong></h3><p>இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகளின் பேரில், செப்டம்பர் 17 அன்று ஐதராபாத்தில் உள்ள அலுவலகத்தில் மங்களா காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>பின்னர் அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;கோவிந்தா... கோவிந்தா...&apos; கோஷத்துடன் முழங்கிய புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!</title><link>https://www.maalaimalar.com/spirituality/purattasi-sanikizhamai-devotees-worship-in-perumal-temple</link><comments>https://www.maalaimalar.com/spirituality/purattasi-sanikizhamai-devotees-worship-in-perumal-temple#comments</comments><guid isPermaLink="false">1b7b689e-672a-48b4-8c4e-fa0a307fc5dc</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:42:34 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:42:34.854Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>பெருமாள் வழிபாடு,சனிக்கிழமை பெருமாள் வழிபாடு,perumal worship,புரட்டாசி,purattasi,Purattasi Sanikizhamai</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/u5dse3fa/perumal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/u5dse3fa/perumal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நேற்று பிறந்து. இன்று புரட்டாசி மாதம்  2-ம் நாள் மற்றும் முதல் சனிக்கிழமை என்பதால்  பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/புரட்டாசி">புரட்டாசி</a> மாத முதல் சனிக்கிழமையையொட்டி பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு  அபிஷே, ஆராதனைகள் நடைபெற்றது. </p><p>சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், தி.நகர் வெங்கடநாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். </p><h2><strong>வரதராஜ பெருமாள் கோவில்</strong></h2><p>108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அத்திவரதர் கோவில் என புகழ் பெற்றதுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையொட்டி ஏராளமான பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர்.</p><p>இதைத்தொடர்ந்து உலகளந்த பெருமாள், யதோத்தக்காரி பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், அழகிய சிங்கப்பெருமாள், பச்சை வண்ணப் பெருமாள், பவளவண்ண பெருமாள், நிலா துண்ட பெருமாள், ஆதிகேச பெருமாள், திரிநீரகத்தான் பெருமாள், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள வீரராகவப் பெருமாள், திருமுக்கூடலில் உள்ள  பிரசன்ன வெங்கடேச பெருமாள்,  பழைய சிவரத்தில் உள்ள நரசிம்ம பெருமாள், உத்திரமேரிலுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சுந்தர வரதராஜ பெருமாள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் முதல் புரட்டாசி சனிக்கிழமைஓட்டி பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷே, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.</p><p>அந்தியூர் திருப்பதி  பேட்டை பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று சந்தன காப்பு அலங்காரத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். </p><p>இதை ஒட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். கோவிந்தா... கோவிந்தா என்று கோஷமிட்டு தரிசித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-low-pressure-area-forming-over-andaman-sea</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-low-pressure-area-forming-over-andaman-sea#comments</comments><guid isPermaLink="false">5b65645f-4a39-40c7-919b-596f4fcfbeef</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:21:03 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:21:03.204Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>IMD,இந்திய வானிலை ஆய்வு மையம்,Low pressure,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,அந்தமான்,Andaman sea</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/g9pg6jk5/andaman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ imd satellite image]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/g9pg6jk5/andaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>இந்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-rain-accompanied-by-thunder-and-lightning">வானிலை ஆய்வு மையம் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:</p><p>* வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. </p><p>* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.</p>  <p>* குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும்.</p><p>* தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 3 தினங்களுக்கு நகரக்கூடும்.</p><p>* கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தேர்வில் ChatGPT பயன்படுத்திய IIT மாணவர் தற்கொலை - சக மாணவர்கள் போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/iit-student-dies-by-suicide-after-using-chatgpt-in-exam</link><comments>https://www.maalaimalar.com/news/national/iit-student-dies-by-suicide-after-using-chatgpt-in-exam#comments</comments><guid isPermaLink="false">add3af77-e73b-4e93-a0a8-49f44fe21b7e</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:02:00 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:02:00.982Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>students protest,student suicide,மாணவர் தற்கொலை,IIT Bombay,பாம்பே,BTech Student</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/lnftci1f/IIT-Student-Suicide" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IIT Student Suicide ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/lnftci1f/IIT-Student-Suicide?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பையில் </a>உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வந்த மாணவர் ஒருவர், தேர்வின் போது மொபைல் போனில் ChatGPT செயலியைப் பயன்படுத்தியதாகப் பிடிபட்டதைத் தொடர்ந்து, தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். </p><p>இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஐஐடி பவாய் வளாகத்தில் நேற்று இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு விடிய விடிய தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>தேர்வில் முறைகேடு புகார் - என்ன நடந்தது?</strong></h2><p>ஐஐடி பாம்பேயில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாமாண்டு பி.டெக் படித்து வந்த மாணவர் சாஹில் வாகோடே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருவத் தேர்வின் போது , சாஹில் தனது மொபைல் போனைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் தேர்வுத்தாளினைக் புகைப்படம் எடுத்து <a href="https://www.maalaimalar.com/topic/chatgpt">ChatGPT </a>தளத்தில் பதிவேற்றி, அதற்கான விடைகளைத் தேடியதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்வு அறைக் கண்காணிப்பாளர் அவரிடமிருந்த மொபைல் போனைப் பறிமுதல் செய்துள்ளார்.</p><h2><strong>கல்லூரி நிர்வாகத்தின் விளக்கம்</strong></h2><p>இந்த விவகாரம் தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/iit">ஐஐடி </a>பாம்பே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>மாணவர் மீது உடனடி ஒழுங்குமுறை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.</p><p>தேர்வு முடிந்ததும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் மாணவரை அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளனர்.</p><p>இந்தச் சம்பவத்தால் அவருடைய கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று கூறி அவரைத் தேற்றி அனுப்பியுள்ளனர்.</p><p>அதன் பின்னர் தனது விடுதி அறைக்குத் திரும்பிய மாணவர், மாலை நேரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/student-protest">கொந்தளித்த மாணவர்கள் - வளாகத்தில் போராட்டம்</a></strong></h2><p>மாணவர் சாஹிலின் மரணச் செய்தி வெளியானதும், ஐஐடி வளாகத்தில் இருந்த மாணவர்கள் நள்ளிரவில் திரண்டு நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தனர்.</p><h2><strong>மாணவர்களின் குற்றச்சாட்டு</strong></h2><p>கல்லூரி நிர்வாகம் உண்மையை மறைப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>சாஹிலுக்கு ஒரு வருடக் கல்வி இடைநீக்கம் வழங்கப்படும் என்றும், அவர் விடுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அதிகாரிகள் மிரட்டியதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.</p><p>இத்தகைய நடவடிக்கையால் நான்கு ஆண்டு பொறியியல் படிப்பு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்ற பயமும், கடுமையான மன அழுத்தமுமே மாணவரை இந்த எல்லைக்குத் தள்ளியிருக்கலாம் என்று சக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>தேர்வுகள் ஒத்திவைப்பு:</strong></h2><p>மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, ஐஐடி பாம்பே இயக்குனர் பேராசிரியர் சிரீஷ் கேதாரே மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><p>நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது நடந்து வரும் அனைத்து பருவத் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>6 மாதங்களில் 3-வது தற்கொலை</strong></h2><p>ஐஐடி பாம்பே வளாகத்தில் கடந்த 6 மாதங்களில் நடக்கும் 3-வது தற்கொலைச் சம்பவம் இதுவாகும் (இந்த ஆண்டில் 4-வது சம்பவம்). கடந்த பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களிலும் இரண்டு மாணவர்கள் இதேபோல் தற்கொலை செய்து கொண்டனர். </p><p>தொடர்ந்து மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஐஐடி நிறுவனங்களில் நிலவும் கல்வி அழுத்தங்கள் மற்றும் மாணவர்களின் மனநலம் குறித்த பல்வேறு விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.</p><p>இச்சம்பவம் குறித்து பவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா? </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-19-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-19-9-2026#comments</comments><guid isPermaLink="false">426b7661-33c2-4fac-8cd7-156d2e2f6034</guid><pubDate>Sat, 19 Sep 2026 04:22:36 +0000</pubDate><atom:updated>2026-09-19T04:22:36.632Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-24/u4idje3h/gold.png" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-24/u4idje3h/gold.png?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. 13-ந்தேதி சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனையானது. 14-ந்தேதி சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும் விற்பனையானது. 15-ந்தேதி சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும் விற்பனையானது.</p> <p>16-ந்தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கும் விற்பனையானது. 17-ந்தேதி சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கும் விற்பனையானது. செய்யப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240-க்கும் கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை அதிரடி உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <h2>உயர்ந்து வரும் வெள்ளி விலை</h2><p>வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>18-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,240</p><p>17-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,080</p><p>16-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,520</p><p>15-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,320</p><p>14-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,000</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>18-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>17-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>16-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>15-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>14-09-2026- ஒரு கிராம் ரூ.250</p> ]]></content:encoded></item><item><title>AI- யின் தவறான அறிக்கை: ஈரான் போரின் போது அமெரிக்கா - சீனா இடையே நூலிழையில் தவிர்க்கப்பட்ட போர் ஆபத்து!</title><link>https://www.maalaimalar.com/news/world/misreported-ai-intel-averted-us-china-war-risk</link><comments>https://www.maalaimalar.com/news/world/misreported-ai-intel-averted-us-china-war-risk#comments</comments><guid isPermaLink="false">1c2ba9c1-8511-482a-b732-091af9605f66</guid><pubDate>Sat, 19 Sep 2026 04:15:08 +0000</pubDate><atom:updated>2026-09-19T04:15:08.703Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா சீனா மோதல்,செயற்கை நுண்ணறிவு,AI Report,AI Chatbot,Military Tech</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/xatn6u1j/Military-Tech" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Military Tech]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/xatn6u1j/Military-Tech?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராணுவ நடவடிக்கைகளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">செயற்கை நுண்ணறிவு </a>தொழில்நுட்பத்தை முழுமையாக நம்புவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்கா </a>- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றம் நிலவிய காலகட்டத்தில், AI வழங்கிய தவறான தகவலால் சீனக் கப்பல் ஒன்றை அமெரிக்க ராணுவம் தாக்க முற்பட்டதும், இறுதி நேரத்தில் அது தடுக்கப்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.</p><h2><strong>தவறான AI அறிக்கையும், போர்த் தயாரிப்பும்</strong></h2><p>மத்திய கிழக்கு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சீனக் கப்பல் ஒன்றில் அணு ஆயுதத் தயாரிப்பிற்குப் பயன்படும் பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவத்திற்கு ஒரு புலனாய்வு அறிக்கை கிடைத்தது. </p><p>இந்தத் தகவல் கிடைத்தவுடன் அமெரிக்க ராணுவம் மிக வேகமாகச் செயல்பட்டது.</p><p>சீனக் கப்பலை வழிமறித்துக் கைப்பற்ற திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆயுதம் ஏந்திய அமெரிக்க வீரர்கள் கப்பலுக்குள் நுழையத் தயாராகினர்.</p><p>ராணுவ விமானங்களும் உடனடியாக விண்ணில் பறக்க விடப்பட்டன. </p><p>ஆனால், தாக்குதல் நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அந்தப் புலனாய்வு அறிக்கையை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தபோதுதான், அது ஒரு <strong>AI Chatbot</strong> மூலம் உருவாக்கப்பட்ட "முற்றிலும் தவறான அறிக்கை" என்பது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2><strong>Chatbot செய்த குளறுபடி என்ன?</strong></h2><p>ஹவாயைத் தளமாகக் கொண்ட அமெரிக்காவின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த இளம் புலனாய்வு ஆய்வாளர் ஒருவர், சம்பந்தப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனக்</a> கப்பலின் சரக்கு விவரங்கள் குறித்து ஒரு AI சாட்பாட்டிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>அந்த AI சாட்பாட், இணையத்தில் இருந்த பொதுவான தகவல்களையும், அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களையும் ஒன்றிணைத்து ஆய்வு செய்து, கப்பலில் இருந்த பொருட்களை தவறாகப் புரிந்துகொண்டு, அவை அணு ஆயுதப் பொருட்கள் என அறிக்கை அளித்துள்ளது. அந்த ஆய்வாளர், AI கொடுத்த தகவல்களை அப்படியே ஒரு முறையான ராணுவப் புலனாய்வு அறிக்கையாக மாற்றி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். </p><p>இந்த தவறான புரிதலால், இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே உலகப் போரே மூளும் அபாயம் ஏற்பட்டது.</p><h2><strong>ராணுவத்தில் AI பயன்பாடும் கட்டுப்பாடற்ற நிலையும்</strong></h2><p>தற்போது அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை, இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறியவும், திட்டமிடல்களுக்கும், விநியோகச் சங்கிலி மேலாண்மைக்கும் AI தொழில்நுட்பத்தை மிக வேகமாகப் பரவலாக்கி வருகிறது.</p><p>இருப்பினும், இந்தச் சம்பவம் பல முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது.</p><p>அமெரிக்க ராணுவத்தின் வெவ்வேறு பிரிவுகள் வெவ்வேறு AI அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.</p><p>இதனால், AI தரும் தகவல்களைச் சரிபார்க்க முறையான பொதுவான விதிகள் எதுவும் இல்லை."AI தொழில்நுட்பம் உங்களை ஒரு மோசமான முடிவுக்கு மிக வேகமாக அழைத்துச் செல்லும்" என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். </p><p>AI கருவிகளைப் பயன்படுத்தும் இளம் ஆய்வாளர்கள், அதன் முடிவுகளைச் சரிபார்க்காமல் அப்படியே நம்பும் போக்கு அதிகரித்து வருகிறது.</p><h2><strong>AI ஆபத்து</strong></h2><p>சீனக் கப்பல் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், அது வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையே கட்டுப்படுத்த முடியாத பெரும் போராக வெடித்திருக்கும். </p><p>தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்தான் என்றாலும், மனிதர்களின் இறுதி முடிவு மற்றும் சரிபார்ப்பு இல்லாமல் ராணுவ இலக்குகளை AI-இடம் ஒப்படைப்பது உலகிற்கே ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேசிய கொடியை ஏந்தி செல்ல தாமதம் - கபடி வீரர் பவன் செஹ்ராவத்தை நியமித்த இந்திய ஒலிம்பிக் சங்கம்</title><link>https://www.maalaimalar.com/sports/pawan-sehrawat-replaces-shot-putter-as-indias-flag-bearer</link><comments>https://www.maalaimalar.com/sports/pawan-sehrawat-replaces-shot-putter-as-indias-flag-bearer#comments</comments><guid isPermaLink="false">910412f3-b93a-46f7-b3bf-b94253ce4cff</guid><pubDate>Sat, 19 Sep 2026 04:14:09 +0000</pubDate><atom:updated>2026-09-19T04:14:09.396Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கபடி,Kabaddi,Indian olympic association,இந்திய ஒலிம்பிக் சங்கம்,ஆசிய விளையாட்டு போட்டிகள்,Asian Games 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/skg1gw5h/Untitled-design-13.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tajinderpal Singh Toor -Pawan Sehrawat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/skg1gw5h/Untitled-design-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழாவில், இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்ல குண்டு எறிதல் வீரரான தஜிந்தர்பால் சிங் தூர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிட தாமதத்தால் அவருக்கு பதிலாக இந்திய குழுவை வழிநடத்த கபடி வீரரான பவர் செஹ்ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>ஜப்பான் நாட்டில் உள்ள ஐச்சி நகோயாவில் 20-தாவது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">ஆசிய விளையாட்டு போட்டிகள்</a> இன்று (19.09.2026) தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. </p><p>இந்த போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய தடகள் அணி வீரர்கள், ஜப்பான் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு தங்களின் உடலை பழக்கப்படுத்தும் வகையில், செப்டம்பர் 13 முதல் டோக்கியோவில் உள்ள சுகுபா பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.</p><h3>விளையாட்டு உபகரணங்கள் தாமதம்</h3><p>இந்த நிலையில் 2026 ஆசிய போட்டிகளுக்கான இந்தியா கொடியேற்றும் விழா இன்று நடைபெற உள்ளது. இந்திய அணியை வழிநடத்த குண்டு எறிதல் வீரரான தஜிந்தர்பால் சிங் தூர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.</p><p>இதையடுத்து சிங்கின் விளையாட்டு உபகரணங்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு நகோயா விமான நிலையத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக, தனது உபகரணங்களை வாங்கிக் கொண்டு, தொடக்க விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல குறைந்த நேரமே இருப்பதால், அவரால் அந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><h3><strong>கபடி வீரர் பவன் செஹ்ராவத்</strong></h3><p>இதையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கம், குண்டு எறிதல் வீரருக்கு பதிலாக 30 வயதான கபடி வீரரான பவன் செஹ்ராவத், துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மானு பாகர் உடன் இணைந்து இந்திய அணியின் சார்பில் தேசிய கொடியை ஏந்தி செல்வார்கள் என அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலையோடு 7 பவுன் நகையை தவறவிட்ட மூதாட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/elderly-woman-loses-gold-jewelry-along-with-vinayagar-idol</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/elderly-woman-loses-gold-jewelry-along-with-vinayagar-idol#comments</comments><guid isPermaLink="false">9ecb0fc9-cca4-4de1-83e1-1b505eb8daf2</guid><pubDate>Sat, 19 Sep 2026 03:36:02 +0000</pubDate><atom:updated>2026-09-19T03:36:02.195Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலை,Vinayagar idol,jewel recovery,நகை மீட்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/3b33b8ga/gold.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ police handover woman gold jewel ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/3b33b8ga/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்கள் உதவியுடன் குப்பை மற்றும் ஏரியில் இறங்கி தேடிய போலீசார் ஏரியில் கிடந்த 7 பவுன் தங்க நெக்லசை மீட்டு மூதாட்டி கோகிலாவிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். </p> <p>சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்தவர் கோகிலா (வயது 65). <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி</a>யையொட்டி தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து வழிபட்டார். அந்த விநாயகர் சிலைக்கு 7 பவுன் தங்க நெக்லஸ் அணிவித்து பூஜை செய்தார். பூஜை முடிந்ததும் அந்த விநாயகர் சிலையை, அருகில் வைக்கப்பட்டிருந்த பெரிய <a href="https://www.maalaimalar.com/news/national/vinayagar-chaturthi-special-golden-modak-worth-rs-27000-per-kg-in-maharashtra">விநாயகர் சிலை</a> அருகே வைத்துவிட்டு கோகிலா வீட்டுக்கு வந்துவிட்டார்.</p> <p>சிறிது நேரத்துக்கு பிறகுதான் விநாயகர் சிலைக்கு அணிவித்திருந்த 7 பவுன் தங்க நெக்லஸ் அவரது நினைவுக்கு வந்தது. பதறியடித்து அங்கு சென்று பார்த்தபோது, தனது விநாயகர் சிலை மற்றும் நகையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். </p> <p>இது குறித்து பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ், அங்கு பெரிய விநாயகர் சிலை வைத்திருந்த பலராமனிடம் கேட்டபோது, அங்கிருந்த சிறிய சிலைகளை பள்ளிக்கரணை ஏரியில் கரைத்து விட்டதாகவும், பூக்களை அருகில் உள்ள குப்பையில் கொட்டியதாகவும் தெரிவித்தார்.</p> <p>இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலரின் உதவியுடன் குப்பை மற்றும் ஏரியில் இறங்கி போலீசார் தேடினர். அப்போது ஏரியில் கிடந்த 7 பவுன் தங்க நெக்லசை மீட்டு மூதாட்டி கோகிலாவிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.  நகையை மீட்ட போலீசாருக்கு கோகிலா கண்ணீல் மல்க நன்றி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>