<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 04 Aug 2026 09:40:51 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது- 04 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-04-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-04-august-2026#comments</comments><guid isPermaLink="false">d97691eb-fde2-4478-81b0-8c01330a1625</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:17:36 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:31:11.538Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l403hg7j/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l403hg7j/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உதயநிதி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்</p><p>இன்றைக்குள் விசாரணையை முடித்து இன்றே உதயநிதியை விடுவிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் </p><p>விசாரணைக்கு பிறகு உதயநிதி விடுவிக்கப்படுவார்- உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல்</p><p>உதயநிதி கைதுக்கு எதிரான மனு- உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது</p><p>விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல்நிலையத்தில் மதிய உணவுக்காக உதயநிதி ஸ்டாலின் அழைத்து செல்லப்பட்டார். </p><p>கைது செய்யப்பட்டவருக்கு வெளி உணவை கொடுக்கக்கூடாது- காவல்துறை</p><h3>உதயநிதி பேச்சு: நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல- திருமாவளவன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,  &#39;இரட்டுற மொழிதல்&#39; என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.<br><br>எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே…</p>&mdash; Thol. Thirumavalavan (@thirumaofficial) <a href="https://x.com/thirumaofficial/status/2084553115643084985?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்- திவ்யா சத்யராஜ்</p><p>பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தவறு- கம்யூனிஸ்டுகள்</p><p>பெண்கள் குறித்து இழிவாக பேசிய உதயநிதி சட்டசபைக்குள் வர தகுதியில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும்- சிபிஎம்</p><p>ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கு எதற்கு? உதயநிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்- கிருஷ்ணசாமி</p><p>காவல்துறைக்கு என்ன புகார் வந்திருக்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மல்குமார்</p><h3>பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! சட்டம் தன் கடமையை செய்யும்! - அமைச்சர் ராஜ்மோகன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! <br><br>மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது! <br><br>அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில்… <a href="https://t.co/xArFYrpZMk">pic.twitter.com/xArFYrpZMk</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2084544751865668025?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>உதயநிதி கைதுக்கு தடை கோரிய வழக்கு- விசாரணை தாமதம்</p><h3>உதயநிதி பேச்சுக்கும், கைதுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய <br>திரு. <a href="https://x.com/Udhaystalin?ref_src=twsrc%5Etfw">@Udhaystalin</a> அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது<br><br>திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக…</p>&mdash; Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&amp;AIADMK (@EPSTamilNadu) <a href="https://x.com/EPSTamilNadu/status/2084544938986148016?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தேனாம்பேட்டை சிக்னலில் திமுகவினர் போராட்டம்</p><p>புதுச்சேரி: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் போராட்டம்</p><p>உதயநிதி ஸ்டாலினை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது- நெல்லை முபாரக்</p><p>தஞ்சையில் காலணிகளை வீசி தி.மு.க. மற்றும் த.வெ.க.வினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.</p><h3>உதயநிதி ஸ்டாலின் கைது, பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் பாடம் - வானதி ஸ்ரீனிவாசன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம்.  சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.<br><br>அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியாகத்…</p>&mdash; Vanathi Srinivasan (@VanathiBJP) <a href="https://x.com/VanathiBJP/status/2084526048126054735?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p><strong>உதயநிதி ஸ்டாலின் கைது..நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட திருக்குறள்</strong></p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்<br>அறங்கூறும் ஆக்கம் தரும்.<br><br>- திருக்குறள் 183</p>&mdash; Nivetha Pethuraj (@Nivetha_Tweets) <a href="https://x.com/Nivetha_Tweets/status/2084510185549418820?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>உதயநிதி ஸ்டாலின் கைது- த.வெ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்</p><h3>உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வரவேற்பு</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I wholeheartedly welcome the arrest of Udayanidhi Stalin today. It is definitely a bold step by the Tamil Nadu police and the <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a>  and I hope this arrest would be lesson to others who is not bothered about the dignity of women.  Now it is for the courts to…</p>&mdash; Narayanan Thirupathy (@narayanantbjp) <a href="https://x.com/narayanantbjp/status/2084521915126091843?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>எதிர்க்கட்சியினர் மீது த.வெ.க. அரசு அடக்குமுறை செய்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை- கே.பி.முனுசாமி</p><h3>சட்டம் தனது கடமையைச் செய்யும்- ஜி.கே.வாசன்</h3><p>தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசக்கூடாது.</p><p>பொதுவாழ்வில் பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்போடு பேசுவதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.</p><p>மகளிர் குறித்து பொது இடத்தில்  பேசும்போது,  அநாகரிகமாகப் பேசக்கூடாது.</p><p>சட்டத்தின் முன் எல்லோரும் சமம்.</p><p>சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசக்கூடாது.<br><br>பொதுவாழ்வில் பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்போடு பேசுவதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.<br><br>மகளிர் குறித்து பொது இடத்தில்  பேசும்போது,  அநாகரிகமாகப் பேசக்கூடாது.<br><br>சட்டத்தின் முன் எல்லோரும் சமம்.<br>சட்டம் தனது கடமையைச் செய்யும்.</p>&mdash; G.K.Vasan (@GK__Vasan) <a href="https://x.com/GK__Vasan/status/2084531754493174137?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>உதயநிதி கைது - தூத்துக்குடியில் கீதாஜீவன் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம் </p><p> நாளை சட்டப்பேரவை கூடவிருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது என்பது  ஜனநாயக விரோத செயல் - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி</p><p>உதயநிதி ஸ்டாலினை அழைத்து சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற தி.மு.க. நிர்வாகிகளின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்த பாசிச த.வெ.க அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்- திமுக</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- பரபரப்பான சூழ்நிலையில் அறிவாலயம் வந்தார் மு.க.ஸ்டாலின்</p><p>சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம் -கனிமொழி</p><p>உதயநிதி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்- தங்கம் தென்னரசு</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- தமிழகம் முழுவதும் சாலை போராட்டத்தில் ஈடுபடும் தி.மு.க.வினர்</p><p>உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை: ஆளுங்கட்சியும்,  எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்!- அன்புமணி</p><p>ஆங்கிலேயரின் வாய்ப்பூட்டு சட்டத்துக்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலுக்கு கண்டனம்- பிரேமலதா</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது</p><p>அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் பேட்டி</p><p>உதயநிதியை கைது செய்து அழைத்துச் செல்லப்படும் வாகனத்தை மறித்து தி.மு.க.வினர் போராட்டம்</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்</p><p>கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல... உதயநிதி </p><p>கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுகிறார். </p><p>விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>பேசாததை ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது- உதயநிதி ஸ்டாலின்</p><p>என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்</p><p>தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீசார் கைது செய்துள்ளனர். </p><p>காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்</p><p>காவல்துறையிடம் தெரிவிக்க அரசு வழக்கறிஞர் மூலம் நீதிபதி அறிவுறுத்தல். </p><p>நண்பகல் 12 மணிவரை உதயநிதியை கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல். </p><p>கைது நடவடிக்கை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை</p><p>உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய நடவடிக்கை- சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வருகை</p><p>தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு அதிர்ச்சியளிக்கிறது - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி</p><p>இது உச்சக்கட்ட அடக்குமுறை, அராஜகம்- உதயநிதியை கைது செய்ய நீலாங்கரை வீட்டில் குவிக்கப்பட்ட போலீசார்:  கே.என். நேரு </p><p>உதயநிதி கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு- இன்று பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி தகவல்</p><p>உதயநிதி ஸ்டாலின் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>உதயநிதி குளித்து முடித்த பிறகு தான் வருவார்- மா.சுப்பிரமணியன்</p><p>காவல்துறைக்கு எதிராக கண்டன தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.</p><p>10 நிமிடம், 10 நிமிடம் என எவ்வளவு நேரம் கூறுவீர்கள்? சட்டப்பூர்வ கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்- இணை ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தல்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-released-from-kabini-dam-reached-hogenakkal">கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது</a></p><p>* கேரளம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.&nbsp;</p><p>* &nbsp;திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-governments-first-budget-to-be-presented-tomorrow">த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிருக்கு ரூ.2,500 அறிவிப்பு வெளியாகுமா?</a></p><p>* அனல்பறக்கும் விவாதங்கள், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thanjavur-police-visit-udhayanidhi-stalin-house-in-nilangarai">உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சை போலீசார் வருகை?- பரபரப்பில் நீலாங்கரை</a></p><p>* சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். </p><p>*  உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-bjp-president-to-be-changed-soon">சட்டசபை தேர்தலில் தோல்வி: தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம்</a></p><p>* புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. </p><p>* 2029-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் நினைவு விழாவினை புறக்கணிக்கும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/film-writers-association-boycotts-the-memorial-event-for-directors-bharathiraja-and-bhagyaraj</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/film-writers-association-boycotts-the-memorial-event-for-directors-bharathiraja-and-bhagyaraj#comments</comments><guid isPermaLink="false">e78239cd-8573-4292-9a8f-73e49ae97cdd</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:35:11 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:35:11.326Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bhagyaraj,பாக்யராஜ்,பாரதிராஜா,BharathiRaja,Commemoration Function,SWAN,நினைவு விழா,தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/brfgw0nm/New-Project-2026-08-04T150426.252.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் நினைவு விழாவினை புறக்கணிக்கும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/brfgw0nm/New-Project-2026-08-04T150426.252.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும்  பாக்யராஜுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 4 சங்கங்கள் சார்பாக நடத்தப்படவுள்ள நினைவு விழாவை புறக்கணிப்பதாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“பாரதிராஜா மற்றும் கே.பாக்யராஜ் இருவருக்கும் உங்கள் சங்கம் உள்பட ஐந்து அமைப்புகள் இணைந்து நடத்தவிருக்கும் விழா குறித்த தகவல் அறிந்ததுமே, அதாவது 26.07.2026 அன்றே இந்த விழாவில் எழுத்தாளர்கள் சங்கமும் பங்கு பெறுவது தானே சரியானதாக, முறையானதாக இருக்கும் என்கிற எங்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் நியாயமான உணர்வை தாய்ச் சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி அவர்களை அழைத்து எங்கள் தலைவர் சேரன் போனில் பேசினார். </p><p>அதற்கு அவர் சொன்ன சமாதானம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாய் இல்லை. திரைத்துறையில் முக்கியமான சங்கம் எழுத்தாளர் சங்கம்தான். எங்கள் சங்கமே அனைத்து சங்கங்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது என்பது அனைவரும் அறிந்த மறுக்க முடியாத உண்மை. </p><p>கடந்த ஐந்து வருடங்களாக பாக்யராஜ் இந்தச் சங்கத்தில் தலைவராக இருந்தார். அவர் இருந்தபோதுதான் சங்கத்தின் மீது வெளிச்சம் விழுந்து திரையுலகம் கடந்து வெளியில் இருக்கும் மக்களும் கதை, எழுத்தாளர்கள் பற்றி பேசும் வண்ணம் சிறப்பாக செயல்பட்டது.</p><p>எதிர்பாராத அவரின் திடீர் மறைவுக்குப் பின் சங்கத்தில் இப்போதுதான் தேர்தல் நடந்தது. எங்கள் உறுப்பினர்கள் சேரனை அதிக வாக்குகள் அளித்து தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர். சுந்தர்ராஜன், சமுத்திரகனி, கவிஞர் சினேகன் என பலரும் புதிய பொறுப்புக்கு வந்தோம்.</p><p>அடுத்தக் கட்டத்திற்கு சங்கம் உயர நிறைய நல்ல திட்டங்களுடன் முழு வேகத்தில் செயல்பட்டு வரும் எங்களுக்கு மன உளைச்சலையும், மிகுந்த வருத்தத்தையும் உண்டாக்கும் ஒரு சம்பவம்தான் இந்த விழாவில் எங்கள் சங்கம் அறமற்ற முறையில் புறக்கணிக்கப் பட்டிருப்பது!</p><p>நாங்களும் இந்த விழாவில் இணைந்து பங்கெடுக்க விரும்புகிறோம் என ராதிகா சரத்குமார், தமிழ்குமரன், திரு.ரத்னகுமார், சித்ரா லட்சுமணன், நாசர் என்று விழாவுடன் தொடர்புகொண்ட இத்தனைப் பேரிடமும் எங்கள் தலைவர் சேரன் போனில் பேசினார். அவர்கள் அத்தனைப் பேருமே எங்கள் உணர்வை மதித்தும், அதுவே சரியானது என்றும்தான் பேசினார்கள்.</p><p>ஐந்து அமைப்புகளுக்கும் எங்கள் ஆதங்கத்தையும், கோரிக்கையையும் தெரிவித்து கடிதம் எழுதத் தயார் நிலையில் நாங்கள் இருந்தபோது சித்ரா லட்சுமணன் கடிதம் அனுப்ப வேண்டாம் என்றும், இணக்கமாக முடிவெடுத்துவிடலாம் என்றும் நம்பிக்கை அளித்ததன் காரணமாக அன்று யாருக்கும் கடிதம் அனுப்பவில்லை. (கடிதத்தின் நகலையும் அவருக்கு அனுப்பியிருந்தோம்) </p><p>பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சந்தித்தபோது எங்கள் தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் இது குறித்து நேரிலும் பேசினார்.</p><p>ஆனால் கடந்த ஒரு வாரமாக யாரிடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லாத சூழ்நிலையில் திடீரென்று நேற்று சித்ரா லட்சுமணன் தலைவரை ப்ரஸ் மீட்டில் கலந்துகொள்ளுமாறு அழைத்தார்.</p><p>ஆனால் எங்களது நிர்வாக உறுப்பினர்கள் அந்த அழைப்பில் எந்த முக்கியத்துவமும் இல்லை, விழாவில் நாம் என்ன செய்யப் போகிறோம், நம் பங்களிப்பென்ன என்று எதுவுமே தெரியாமல் கூட்டத்தில் ஒருவராக நாம் அமர்ந்து என்ன சொல்லப் போகிறோம். </p><p>நம் நோக்கம் ப்ரஸ் மீட்டில் அமர்வது அல்ல விழாவில் பங்கெடுத்துச் சிறப்பிப்பது..அதற்குத்தானே அவர்கள் அழைத்துப் பேசியிருக்க வேண்டும்...இப்போது வெறும் பிரஸ் மீட்டிற்கு மட்டும் அழைப்பதில் அர்த்தமில்லை என்பதால் நாம் போக வேண்டாம் என்று முடிவு செய்தனர்.</p><p>பெப்சியுடன் உள்ளடங்கிய இயக்குனர் சங்கத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது எழுத்தாளர் சங்கத்துக்கு கொடுக்க பெப்சி மறுப்பதும் அதை ஏன் குழுவில் இருக்கும் அடுத்த நான்கு சங்கங்களும் கேட்கவில்லை என்பதும் புரியாத புதிராக இருக்கிறது.</p><p>நேற்று இந்த விழா தொடர்பாக நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் எங்களின் குரலாக எழுத்தாளர்கள் சங்கம் ஏன் சேர்க்கப்படவில்லை என்று கேட்ட சரியான கேள்விக்கு, “நாங்கள் அழைத்தோம், அவர்கள்தான் வரவில்லை" என்று அபாண்டமாக பழி போட்டு அப்பட்டமான தவறான பதில் சொல்லப்பட்டிருப்பது எங்களை மேலும் காயப்படுத்துகிறது என்பதையும் பதிவு செய்கிறோம்.</p><p>இயக்குநர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் சிலர் எங்கள் எழுத்தாளர்கள் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் எங்கள் சங்கத்தின் சார்பாக அவர்கள் கலந்து கொள்ளவில்லை.</p><p>ஆனால் பத்திரிகையாளர்களுக்கான அறிக்கையில் ரவிமரியாவை எங்கள் சங்கத்தின் நிர்வாகியாக அடையாளப்படுத்தி இருப்பதையும் நாங்கள் மறுக்கிறோம். நடைபெறவிருக்கும் விழாவிலும் எங்கள் சங்கத்தின் நிர்வாகிகளை எழுத்தாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளாக அறிமுகம் செய்ய வேண்டாம் என்று விழாக் குழுவினரையும் கேட்டுக் கொள்கிறோம்.</p><p>பல வகையில் முறையாக முயற்சிகள் செய்தும், எங்கள் சங்கத்தின் உணர்வுகள் மதிக்கப்படாததால் எங்கள் எழுத்தாளர் சங்கம் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களை மிகுந்த மரியாதையுடன் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒவ்வொரு உறுப்பினரின் கௌரவத்தையும் காப்பாற்ற நாங்கள் எடுக்கும் முடிவாகக் கருதுகிறோம். </p><p>எதிர்காலத்தில் வரும் நிகழ்வுகளில் எங்களுக்கான நியாயமான உரிமைகளைப் புறக்கணிக்காமல் தாய்ச் சங்கம் என்கிற ஸ்தானத்திற்கான நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பெப்சி நிர்வாகிகளையும், உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று மற்ற நான்கு அமைப்புகளின் நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.</p><p>உண்மை நிலையையும், பின்னணியையும் அனைவரும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கடிதத்தின் விபரங்கள் எங்கள் சங்கத்தின் அத்தனை உறுப்பினர்களுக்கும் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எங்கள் அறிக்கையாகவும் அனுப்பப்படுகிறது என்கிற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-must-be-released-today-madras-high-court-orders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-must-be-released-today-madras-high-court-orders#comments</comments><guid isPermaLink="false">365191ab-dbba-4f54-9415-7bf0e5f788b8</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:27:41 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:27:41.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,சென்னை ஐகோர்ட்,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/o6h3zsd2/udhayanidhi4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court - Udhayanidhi Stalin ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/o6h3zsd2/udhayanidhi4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தஞ்சையில் நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">தி.மு.க.</a> ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி  தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p> <h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections">உதயநிதி</a> ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p> <h2>சென்னை உயர்நீதிமன்றம்</h2><p>இந்நிலையில் உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு  சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை தொடங்கியது.</p><p>அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார். உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை. உதயநிதி விசாரணைக்கு பின் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.</p> <p>இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும், காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்: அதிருப்தி எம்.எல்.ஏ.-க்களுக்கு டி.கே. சிவக்குமார் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-cong-mlas-party-is-important-resignations-will-be-accepted</link><comments>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-cong-mlas-party-is-important-resignations-will-be-accepted#comments</comments><guid isPermaLink="false">611a59ae-11f5-420c-8636-b82329fc3c0c</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:26:10 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:26:10.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,கர்நாடகா,Karnataka,DK Shivakumar,டிகே சிவக்குமார்,​​Congress</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காததால் ராஜினாமா செய்வதாக மிரட்டும் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்குக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் கட்சியே முக்கியம், அவர்கள் ராஜினாமா செய்தால் சில நிமிடங்களிலேயே அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.</p><p>டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 19 அமைச்சர்களைச் சேர்த்துத் தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார்.</p><h2>அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா மிரட்டல்</h2><p>நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் இறுதியாக நடந்தேறிய நிலையில், அது ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அமைச்சர் பதவி கிடைக்காத சிலர் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தனர்.</p><p>இண்டி (Indi) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல், திங்களன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.</p> <p>அமைச்சரவையில் இடம்பெற விரும்பும் பலரின் ஆதரவாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். முதலமைச்சர் உட்பட கர்நாடக அமைச்சரவையின் அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 34 ஆகும். திங்களன்று மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, தற்போது அதில் ஒரு அமைச்சர் பதவி காலியாக உள்ளது.</p><h2>அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-</h2><p>நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். அரசியலில் ராஜினாமாக்கள் நிகழ்வது இயல்பு. ராஜினாமா செய்பவர்களை யாரும் தடுக்க முடியாது. கட்சி மற்றும் தங்கள் எதிர்காலம் முக்கியம் என்று கருதினால், கட்சிதான் முதன்மையானது. கட்சி இருந்தால்தான் மற்ற அனைத்தும் சாத்தியம்.</p><p>தரம் சிங் மற்றும் சித்தராமையா ஆகியோர் முதல்வராக இருந்தபோது எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அப்போதே நானும் ராஜினாமா செய்திருக்கலாமே? பரமேஸ்வரா (துணை முதல்வர்) மற்றும் நான் பொறுமை காக்கவில்லையா? வீரேந்திர பாட்டீல் முதல்வராக இருந்தபோது பங்காரப்பா, கார்கே (ஏஐசிசி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே) மற்றும் தரம் சிங் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால், பின்னர் பங்காரப்பா மற்றும் சிங் முதல்வர்களாகவில்லையா? ஒருவருக்குப் பொறுமை அவசியம்.</p><h2>ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்</h2><p>யாராவது ராஜினாமா செய்தால், சில நிமிடங்களிலேயே அதை ஏற்றுக்கொள்வேன். முன்பு வாரியங்கள் மற்றும் கழகங்களின் உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களிடம், அவர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே என்று கூறப்பட்டிருந்தது.</p><p>ஏற்கனவே இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலில் அந்தப் பதவிகளில் இருப்பவர்களை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, புதியவர்களை நியமிப்பேன். அதன் பிறகு எம்.எல்.ஏ-க்களுடன் தனித்தனியாகப் பேசுவேன்.</p><p>இவ்வாறு டி.கே. சிவக்குமார் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>FSSAI அதிரடி: டாபர் நிறுவனத்தின் 100% தூய்மை விளம்பரங்களுக்குத் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/national/fssai-crackdown-ban-on-dabur-100-percent-purity-ads</link><comments>https://www.maalaimalar.com/news/national/fssai-crackdown-ban-on-dabur-100-percent-purity-ads#comments</comments><guid isPermaLink="false">6abac9e7-2574-4d36-b92e-f3a0a82ef725</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:52:17.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Dabur India Limited,டாபர்,DaburHoney,FoodSafety,Misleading Ads,Consumer Rights,Organic Food</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qbph1n8l/FSSAI-Dabur" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FSSAI - Dabur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qbph1n8l/FSSAI-Dabur?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாபர் நிறுவனம் தனது தயாரிப்புகளான தேன், நெய், எண்ணெய் மற்றும் வினிகர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் '100 சதவீதம் தூய்மையானது' என்று விளம்பரம் செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.</p><h2>விவகாரம் என்ன?</h2><p>டாபர் நிறுவனம் தனது இணையதளத்திலும், தயாரிப்பு லேபிள்களிலும் "100% இயற்கை", "100% ஆர்கானிக்", "100% தூய்மைக்கு உத்திரவாதம்" போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி வந்தது. </p><p>இந்த '100%' என்ற வார்த்தை நுகர்வோரை திசைதிருப்பும் வகையிலும், சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும் இருப்பதாக FSSAI தெரிவித்துள்ளது.</p><h2>முக்கியக் காரணங்கள்:</h2><p>எந்தவொரு உணவுப் பொருளையும் '100% தூய்மையானது' என்று முழுமையாக நிரூபிக்க முடியாது என்பதால், இந்த வாசகங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளன. </p><p>டாபரின் ஆர்கானிக் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவற்றில், உரிய அனுமதியின்றி 'ஜெவிக் பாரத்' என்ற ஆர்கானிக் முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. </p><p>கடந்த 2020 மே மாதமே இது போன்ற '100% விளம்பரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒட்டுமொத்த உணவு நிறுவங்களுக்கும் FSSAI எச்சரிக்கை விடுத்திருந்தது. </p><p>டாபர் நிறுவனத்திற்குத் தனியாக நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>தயாரிப்புகள் ஆபத்தானவையா?</h2><p>டாபர் நிறுவனத்தின் இந்த பொருட்கள் தரமற்றவை என்றோ அல்லது சாப்பிடப் பாதுகாப்பற்றவை என்றோ FSSAI கூறவில்லை. </p><p>இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அவர்கள் லேபிளிங் செய்த விதம் மற்றும் தவறான விளம்பர உத்திக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அடுத்தகட்ட நடவடிக்கை:</h2><p>குறிப்பிட்ட அந்த தயாரிப்புகளைச் சந்தையில் விற்பனை செய்வதை டாபர் நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் FSSAI உத்தரவிட்டுள்ளது. </p><p>டாபர் நிறுவனம் இந்த நோட்டீசை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது எதிரொலி - மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-arrested-mk-stalin-consultation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-arrested-mk-stalin-consultation#comments</comments><guid isPermaLink="false">df6b9f60-76a8-4ee1-9cfe-4997af60ad2b</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:47:52 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:47:52.199Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/9vpm1h29/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/9vpm1h29/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.</strong></em></p> <p>தஞ்சையில் நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/dmk">தி.மு.க.</a> ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி  தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections">உதயநிதி ஸ்டாலின்</a> நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p> <p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p> <p>இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் விரைந்து வந்தார். அங்கு பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  உள்ளிட்ட மூத்த  நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.</p> <p>அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், பொய் வழக்கு போட்டு உதயநிதியை கைது செய்துள்ளனர். இதற்காக மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். </p><p>பேசாத ஒன்றைப் பேசியதாக பொய் வழக்கு போட்டு உதயநிதியை கைது செய்துள்ளது ஆணவ அடக்குமுறை. இதற்காக மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். </p><p>பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பயந்து செய்த பாசிச கைது நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சி தலைவரை அச்சுறுத்த முடியாது. உதயநிதி ஸ்டாலின் கைது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது - நடிகை நிவேதா பெத்துராஜின் திடீர் எக்ஸ் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/udayanidhi-arrest-actress-nivedha-pethuraj-surprise-x-post</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/udayanidhi-arrest-actress-nivedha-pethuraj-surprise-x-post#comments</comments><guid isPermaLink="false">f01e5db9-9d21-49cb-b902-9ca879f9168b</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:37:39 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:37:39.054Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிவேதா பெத்துராஜ்,Udhayanidhi,Nivetha Pethuraj,உதயநிதி,உதயநிதி கைது,UdhayanidhiArrested</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/524o4b74/nivetha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nivetha Pethuraj ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/524o4b74/nivetha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சையில் நடந்த காவிரி விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பிரபல நடிகை குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முக்கிய நிர்வாகியுமான உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் இன்று  அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இந்த அரசியல் பரப்பரப்புக்கு இடையே, தமிழ் சினிமா நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு திருக்குறள் பதிவு, தற்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>கைதுக்கான பின்னணி என்ன?</strong></h2><p>தஞ்சாவூரில் திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் நடிகையின் பெயரை முழக்கமிட்டனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. </p><p>இது பெண் வன்கொடுமை மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் செயல் என தவெக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்<br>அறங்கூறும் ஆக்கம் தரும்.<br><br>- திருக்குறள் 183</p>&mdash; Nivetha Pethuraj (@Nivetha_Tweets) <a href="https://x.com/Nivetha_Tweets/status/2084510185549418820?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>நிவேதா பெத்துராஜ் பகிர்ந்த திருக்குறள்:</strong> </h2><p>நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில்,</p><p>'புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் </p><p>அறங்கூற்றும் ஆக்கம் தரும்.' </p> <p>என்ற புறங்கூறாமை அதிகாரத்தில் உள்ள 183-வது திருக்குறளை பதிவிட்டுள்ளார்.</p><h2><strong>இதன் அர்த்தம் என்ன?</strong></h2><p>“பிறர் இல்லாத போது அவரைப் புறங்கூறி, நேரில் முகத்திற்குப் புகழ்ந்து பொய்யாக வாழ்வதை விட இறந்து விடுவது மேல்" என்று பொருளாகும்.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections#comments</comments><guid isPermaLink="false">62ff126f-f8ba-413f-a581-0d6e93cf0846</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:29:44 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:29:44.855Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jslhp5vm/udhayanidhi3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jslhp5vm/udhayanidhi3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </strong></em></p> <p>தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி  தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-arrest-move-welcomed-bjp-spokesperson-narayanan-proud">உதயநிதி ஸ்டாலின்</a> நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p> <p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>இந்நிலையில், தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p> <p>* பி.என்.எஸ். பிரிவு 196 - சமூகங்களுக்கிடையே பகைமை அல்லது வெறுப்பைத் தூண்டும் செயல்கள்.</p><p>* பிரிவு 192 - கலவரம் அல்லது பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தூண்டுதல்.</p><p>* பிரிவு 352 - அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல் அல்லது தூண்டுதல்.</p><p>* பிரிவு 79 - பெண்ணின் மரியாதையை இழிவுபடுத்தும் நோக்கிலான சொல், சைகை அல்லது செயல்.</p><p>* பிரிவு 296(பி) - ஆபாசமான அல்லது ஒழுக்கக்கேடான வார்த்தைகள்/வெளிப்பாடுகளைப் பொதுவெளியில் பயன்படுத்துதல்.</p> <p>* பிரிவு 61 - குற்றம் செய்யத் தூண்டுதல் அல்லது உடந்தையாக இருப்பது.</p><p>* பிரிவு 351(2) - குற்றவியல் மிரட்டல்.</p><p>* பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் - பிரிவு 4 - பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் தொடர்பான குற்றம்.</p><p>* ஐ.டி. ஆக்ட் - பிரிவு 67 - மின்னணு ஊடகங்களில் ஆபாசமான உள்ளடக்கத்தை வெளியிடுதல் அல்லது பரப்புதல்.</p> ]]></content:encoded></item><item><title>Wi-Fi, டிவி, ஓடிடி பலன்களுடன் புது ரீசார்ஜ்களை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-3-in-1-service-packs-combined-wi-fi-tv-and-ott-subscriptions-launched-price-benefits</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-3-in-1-service-packs-combined-wi-fi-tv-and-ott-subscriptions-launched-price-benefits#comments</comments><guid isPermaLink="false">8c39eeef-b8cc-48c8-a2c5-7853cebedeb8</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:28:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:28:40.756Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OTT,Jio,Offers,ஓடிடி,ஜியோ,சலுகைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/05yqzh6b/Jio-Logo-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jio Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/05yqzh6b/Jio-Logo-1.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் <a href="https://www.maalaimalar.com/topic/jio">ஜியோ</a>. அவ்வப்போது பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ்களை அறிவித்து வருகிறது. சந்தையில் மேலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், ஏற்கனவே உள்ள பயனர்கள் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ 3-இன்-1 ரீசார்ஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய 3-இன்-1 ரீசார்ஜ்கள், ஜியோவின் டிவி-மட்டும் மற்றும் வைபை-மட்டும் திட்டங்களின் பலன்களை ஒருங்கிணைப்பதோடு, இந்த இரு ஒருங்கிணைந்த மாதாந்திர செலவை விட குறைவாக வைத்திருக்க உதவுகின்றன. புதிய ஜியோ 3-இன்-1 ரீசார்ஜ், 2+1 மாதங்கள் மற்றும் 3+1 மாதங்கள் என இரண்டு கால அளவுகளில் கிடைக்கின்றன. </p><h2>3-இன்-1 ஆஃபர்:</h2><p>நீண்ட காலத் திட்டத்திற்கு முன்பணச் செலவு அதிகமாகும். இருப்பினும், 2+1 மாத திட்டத்தை விட இதன் மாதாந்திர செலவு குறைவாக உள்ளது. இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியான பலன்களை வழங்குகின்றன, ஆனால் 3-இன்-1 மாத சந்தாவில் பிராட்பேண்ட் வேகம் குறைவாக இருக்கும்.</p><p>புதிய ஜியோ 3-இன்-1 ரீசார்ஜ்கள், டிவி மட்டும் மற்றும் வை-பை மட்டும் சந்தா திட்டங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த 3-இன்-1 ரீசார்ஜ்கள், டிவி மட்டும் மற்றும் வைபை திட்டங்களின் பலன்களை ஒன்றாக இணைக்கின்றன. இதில் இரண்டு திட்டங்கள் கிடைக்கின்றன. 2+1 மாதங்களுக்கான தொகுப்பின் விலை இந்தியாவில் ரூ. 2,122 ஆகும், இதன் மாதாந்திரக் கட்டணம் ரூ. 707 ஆகும்.</p><p>மறுபுறம், 3+1 மாத பேக்கின் விலை ரூ. 2,222 ஆகும், இதற்கு மாதத்திற்கு ரூ. 555 செலவாகும். 2+1 மாத ஜியோ 3-இன்-1 சேவைத் திட்டம், 100 Mbps பிராட்பேண்ட் வேகத்துடன், 1,000-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்கள் மற்றும் 12 OTT தளங்களுக்கான சந்தா வழங்குகிறது. </p><p>மறுபுறம், 3+1 மாத ஆப்ஷன், அதே எண்ணிக்கையிலான OTT செயலிகள் மற்றும் நேரலை டிவி சேனல்களுக்கான அணுகலுடன் 30 Mbps வைபை வேகத்தை வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/tamil-nadu-cm-joseph-vijay-extends-birthday-greetings-to-puducherry-cm-n-rangasamy</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/tamil-nadu-cm-joseph-vijay-extends-birthday-greetings-to-puducherry-cm-n-rangasamy#comments</comments><guid isPermaLink="false">f346fb7a-0d67-4ada-ace5-88fe2ad438b2</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:17:50 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:17:50.136Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Puducherry,புதுச்சேரி,முதல்வர் விஜய்,Chief Minister Vijay,N.Rangasamy,என்.ரங்கசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/tqnx6avg/NR.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay -N.Rangasamy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/tqnx6avg/NR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி முதலமைச்சரும் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் (AINRC) தலைவருமான என்.ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>முதலமைச்சர் ரங்கசாமிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் விஜய், அவர் நல்ல உடல்நலனுடனும், நீண்ட ஆயுளுடனும் புதுச்சேரி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். விஜய்யின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அவருடன் சில நிமிடங்கள் நலம் விசாரித்துப் பேசினார்.</p><h2><strong>தலைவர்கள் வாழ்த்து:</strong></h2><p>புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டுப் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் அவருக்கு நேரில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி முழுவதும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-condemn-udhayanidhi-arrest-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-condemn-udhayanidhi-arrest-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6677e33f-1a68-43a0-85e5-cda25052c637</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:08:19 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:08:19.470Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/t51fff05/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami, Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/t51fff05/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><p>உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதனால் நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இதற்கிடையே, ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.</p><h2>எடப்பாடி பழனிசாமி கண்டனம்</h2><p>இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியதாவது:</p><p>சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது</p><p>உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைதுசெய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்கு உரியது.</p><p>அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அதிகபட்சம் ரூ. 10,000 தள்ளுபடி - மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு  முரட்டு ஆஃபர் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/motorola-smartphone-deals-flipkart-freedom-sale</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/motorola-smartphone-deals-flipkart-freedom-sale#comments</comments><guid isPermaLink="false">271c584c-991c-4a42-b3cf-c2dddb6af3a1</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:54:59 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:54:59.051Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Motorola,மோட்டோரோலா,Flipkart,smartphone,ஸ்மார்ட்போன்,ப்ளிப்கார்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a49j5x5v/MOTOROLA-Edge-70-Fusion.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MOTOROLA Edge 70 Fusion]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a49j5x5v/MOTOROLA-Edge-70-Fusion.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் (flipkart freedom sale) சிறப்பு விற்பனைக்கான தனது <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> மாடல்களுக்கான சலுகைகளை மோட்டோரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த சிறப்பு விற்பனை, தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் அல்லது வீட்டு உபகரணங்களை வாங்குவோரை குறிவைத்து நடத்தப்படுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/motorola">மோட்டோரோலா</a> நிறுவனத்தின் சலுகைகளின் ஒரு பகுதியாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட மோட்டோ எட்ஜ் 70 மேக்ஸ் ரூ. 49,999-க்கும், அதே நேரத்தில் எட்ஜ் 70 ப்ரோ ரூ. 36,999-க்கும் விற்பனை செய்யப்படும்.</p><h2>சலுகை விவரங்கள்:</h2><ul><li><p>மோட்டோ ஜி37 விலை ரூ 15,999-இல் இருந்து ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ 12,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ ஜி77 பவர் விலை ரூ 25,999-இல் இருந்து ரூ. 4,000 குறைக்கப்பட்டு ரூ 21,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 60 ப்ரோ விலை ரூ 29,999-இல் இருந்து ரூ. 1,000 குறைக்கப்பட்டு ரூ 28,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 ஃபியூஷன் விலை ரூ 30,999-இல் இருந்து ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ 27,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 விலை ரூ 29,999-இல் இருந்து ரூ. 2,000 குறைக்கப்பட்டு ரூ 27,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 ப்ரோ விலை ரூ 39,999-இல் இருந்து ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ 36,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 ப்ரோ+ விலை ரூ 47,999-இல் இருந்து ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ 44,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 மேக்ஸ் விலை ரூ 54,999-இல் இருந்து ரூ. 5,000 குறைக்கப்பட்டு ரூ 49,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோரோலா கையொப்பம் விலை ரூ 59,999-இல் இருந்து ரூ. 5,000 குறைக்கப்பட்டு ரூ 54,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு விலை ரூ 1,49,999-இல் இருந்து ரூ. 10,000 குறைக்கப்பட்டு ரூ 1,39,999-க்கு கிடைக்கும்</p></li></ul><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>உயர் ரக மற்றும் பிரீமியம் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களில் தொடங்கி, ரூ. 1,39,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கும் மோட்டோ ரேசர் ஃபோல்டு, ஒரு பெரிய 8.1-இன்ச் உள் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட், மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் கேமரா உள்ளன.</p><p>மோட்டோ எட்ஜ் 70, ரூ. 49,999 என்ற குறைந்த விலையில் விற்பனையாகலாம். இதன் மூலம், ஐகூ 15R-க்கு அடுத்தபடியாக, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இது விளங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>Spider-Man: No Way Home நடிகை உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-no-way-home-actress-mary-rivera-dies-at-82</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-no-way-home-actress-mary-rivera-dies-at-82#comments</comments><guid isPermaLink="false">9de4ab3b-781a-40bd-99df-652d2950e55f</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:27:22 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:27:22.827Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Spider-Man No Way Home,Mary Rivera,ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்,மேரி ரிவெரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qhgcamli/Mary-Rivera.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mary Rivera

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qhgcamli/Mary-Rivera.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/spiderman">ஸ்பைடர்-மேன்</a>: நோ வே ஹோம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்ட மேரி ரிவேரா காலமானார். அவருக்கு வயது 82. இதுகுறித்து TMZ வெளியிட்ட தகவலின்படி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மேரி, ஏப்ரல் 15-ஆம் தேதியன்று ஹோனோலுலுவில் காலமானார்.</p><p>அந்தப் பத்திரிகை தெரிவித்தபடி, மேரியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் கூறியதாக ஒரு குடும்ப உறுப்பினர் பகிர்ந்துள்ளார். ஒருவேளை மேரி கோமாவில் இருந்து மீண்டாலும், அவர் குணமடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.</p><h2>உயிரிழப்பு:</h2><p>இந்த மருத்துவ தகவல்களை தொடர்ந்து, குடும்பத்தினர் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த உயிர்காக்கும் கருவிகளை அகற்ற முடிவு செய்தனர். மேரி பின்னர் தகனம் செய்யப்பட்டார் என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.</p><p>ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் திரைப்படத்தில் மேரி ரிவேரா ஒரு சிறிய பாத்திரத்தில் மட்டுமே தோன்றியிருந்தாலும், அது அப்படத்தில் அதிகம் பேசப்பட்ட தருணங்களில் ஒன்றாக அமைந்தது. அவர் நெட் லீட்ஸின் பாட்டியாக நடித்ததோடு, ஆண்ட்ரூ கார்ஃபீல்ட், ஜேக்கப் படலோன் மற்றும் ஜெண்டாயா ஆகியோருடன் இணைந்து நடித்தார். டாம் ஹாலண்டின் ஸ்பைடர்-மேனுக்கு உதவுவதற்காக, ஆண்ட்ரூவின் பீட்டர் பார்க்கர் மல்டிவெர்சில் இருந்து வந்த உடனேயே அவரது காட்சி இடம்பெறுகிறது.</p><h2>ஸ்பைடர்மேன் வாய்ப்பு:</h2><p>நெட்டும் எம்.ஜே.யும் தங்களை சுற்றி நடக்கும் அனைத்தையும் புரிந்துகொள்ள முயற்சித்து கொண்டிருக்கும்போது, ​​மேரியின் கதாபாத்திரம் உள்ளே நுழைந்து அந்த சூழலையே முற்றிலும் மாற்றிவிடுகிறது. நெட் மூலமாக, அவள் ஆண்ட்ரூவின் ஸ்பைடர்மேனிடம் கூரையின் மீது ஏறி ஒரு சிலந்தி வலையை அகற்றுமாறு கேட்கிறாள், இது திரைப்படத்தின் மிகவும் வேடிக்கையான காட்சிகளில் ஒன்றுக்கு வழிவகுக்கிறது.</p><p>அந்த பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் மேரி மிகவும் பெருமைப்பட்டதாக குடும்ப உறுப்பினர் ஒருவர் TMZ-யிடம் தெரிவித்தார். மேலும், அந்த கதாபாத்திரத்திற்காக ஆடிஷன் செய்யுமாறு அவரது குடும்பத்தினர்தான் அவரை ஊக்குவித்ததாகவும், அது பிற்காலத்தில் அவரது நடிப்பு பயணத்தின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்ததாகவும் அவர்கள் வெளிப்படுத்தினர்.</p><h2>இரங்கல் செய்தி:</h2><p>அவரது இரங்கல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அஞ்சலியில், “எனது வழிகாட்டியாகவும் சக ஊழியராகவும் இருந்த டிடா மேரி, நீங்கள் பெரிதும் நினைவுகூரப்படுவீர்கள். இந்த இக்கட்டான நேரத்தில் ரிவேரா குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.</p><p>மேரி ரிவேராவுக்கு அவரது கணவர் அலெஜான்ட்ரோ, பிள்ளைகள், 11 பேரப்பிள்ளைகள் மற்றும் நான்கு கொள்ளுப்பேரக்குழந்தைகள் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை வரவேற்புக்குரியது..!-பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் பெருமிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-arrest-move-welcomed-bjp-spokesperson-narayanan-proud</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-arrest-move-welcomed-bjp-spokesperson-narayanan-proud#comments</comments><guid isPermaLink="false">03b58188-a3eb-4362-9cd8-9e517b2c9e73</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:23:22 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:23:22.817Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Udhayanidhi Stalin,Narayanan,நாராயணன்,உதயநிதி ஸ்டாலின் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gaumb60e/bjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin-Narayanan BJP ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gaumb60e/bjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தமிழக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பாராட்டுப் பதிவு:</strong></h2><p>இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள நாராயணன், காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை "வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது" எனப் புகழ்ந்துள்ளார். தைரியமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கைது நடவடிக்கையானது, இனி தமிழகத்தில் வேறு யாரும் பெண்கள் குறித்துக் கேவலமாகவும், தரக்குறைவாகவும் பேசுவதைத் தடுக்கும் அரணாக அமையும்.</p><h2><strong>பேச்சுரிமையா? பெண்களின் கண்ணியமா?:</strong></h2><p>பேச்சுரிமை என்ற பெயரில் பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது. அரசியல் அந்தஸ்தை வைத்து யாரும் சட்டத்திற்கு மேல் தப்பித்துவிட முடியாது என்பதை இந்த நடவடிக்கை உணர்த்தியுள்ளது என பதிவிட்டுள்ளார்.</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் மாநிலம் தழுவிய அளவில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆளுங்கட்சி மற்றும் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆதரவாகப் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவது தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சித்தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா? - திமுக</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-condemned-udhayanidhi-stalin-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-condemned-udhayanidhi-stalin-arrested#comments</comments><guid isPermaLink="false">0fde85db-e84f-4d0a-8e46-31db22a07727</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:22:23 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:22:23.117Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bzh8mu6b/annaarivalayam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bzh8mu6b/annaarivalayam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது என்று திமுக தெரிவித்துள்ளது.</strong></em></p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p><h2>த.வெ.க அரசு</h2><p>காவிரி பிரச்சனைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க அரசு மீது, எதிர்க்கட்சித்தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/arrest-aimed-at-preventing-assembly-participation-kanimozhi-slams-udayanidhi-stalin-arrest">உதயநிதி</a> முன்வைத்த எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வக்கற்ற த.வெ.க அரசு, பொய்வழக்கு போட்டு தன் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.</p> <h2>ஆபாச எதிர்ப்பு போராளி</h2><p>எதிர்க்கட்சித்தலைவர் யார் பெயரையும் குறிப்பிடாமல் காவிரி பிரச்சனை குறித்து பேசியதை, ’ஆபாசமாகப் பேசினார்’, ’இரட்டை அர்த்தத்தில் பேசினார்’ என்று திரிப்பது யார்?</p><p>’வாயில நல்லா வந்துடும்’, ‘கவர்ச்சி காட்ட நான் என்ன ….வா?’, ஒரு டேஷும் இல்லை’ என்று ஆபாசமாகப் பேசித்தள்ளும் டேஷ் டேஷ் முதலமைச்சர், தன் சொந்த கட்சிக்காரரையே ‘ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடிப்பேன்’ என்று சொல்லும் அமைச்சர் ஜெகதீஸ்வரி, ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தி மகளையும் ஆபாசமாக சித்திரித்த ‘பலகட்சி மாறி’ சி.டி.நிர்மல்குமார், நாள்தோறும் பாலியல் வழக்குகளில் கைதாகும் குற்றவாளிகளின் கூடாரமான த.வெ.க – இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>சோபாமாடல் முதலமைச்சர் விஜய்யின் படங்களிலும் பாடல்களிலும் உள்ள இரட்டை அர்த்த வரிகள், ஆபாசக்காட்சிகளைத் தொகுத்தால் அது மாபெரும் ஆபாச குடோனாக இருக்குமே! அரசியலுக்கு வந்து கடைசிப்படம் என்று அறிவித்த திரைப்படத்திலும் வாய் கூசாமல் கெட்டவார்த்தை பேசிய விஜய்தான் ஒழுக்க காவலரா?</p><p>இதே விஜய்யை நேரடியாக ஒரு நடிகையுடன் இணைத்துப் பேசிய பா.ஜ.க. மாநிலச்செயலாளர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம்கூட தெரிவிக்காத த.வெ.க இப்போது எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.</p> <h2>பாஜக அரசு</h2><p>‘மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை’ என்று சொன்ன பா.ஜ.க அரசின் அமைச்சரைக் கண்டித்து, டெல்லிக்குப் போராடச் சென்ற விவசாயிகளைக் கைது செய்த மகாராஷ்டிரா காவல்துறையைக் கண்டித்து, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி வந்தே மாதரத்தைத் திணிக்கும் ஆளுநர்- ஒன்றிய அரசைக் கண்டித்து எல்லாம் போராடத் துணியாத த.வெ.க, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக மட்டும் போராடுகிறது.</p><p>நேற்று புகார், இன்று எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்ய அவசர முயற்சி!</p> <p>‘குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளைக் காப்பாற்றியவர்’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றம் சாட்டியும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீது நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத பாசிச த.வெ.க. அரசு, அவசர அவசரமாக எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்கிறது.</p><h2>காவிரி பிரச்சனை</h2><p>அரைநூற்றாண்டு உரிமைப்போராட்டத்தை பின்னுக்குத் தள்ளி காவிரி பிரச்சனையில் கையாலாகாத்தனமாக செயல்பட்ட த.வெ.க அரசின் மீது எதிர்க்கட்சித்தலைவர் முன்வைத்த எந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?</p> <p>நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எழுப்பப்போகும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமுடியாது என்ற அச்சத்தில் கைது செய்திருக்கும் பாசிச த.வெ.க அரசே!</p><p>கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது.</p> <p>எத்தனையோ கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள், ஒடுக்குமுறைகளைக் கண்ட இயக்கம் தி.மு.க.</p><p>பாசிச த.வெ.க அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சட்டமன்றத்தில் பங்கேற்பதை தடுக்கவே கைது&apos;-உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை குறித்து கனிமொழி எம்பி சீற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrest-aimed-at-preventing-assembly-participation-kanimozhi-slams-udayanidhi-stalin-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrest-aimed-at-preventing-assembly-participation-kanimozhi-slams-udayanidhi-stalin-arrest#comments</comments><guid isPermaLink="false">d5f520db-efdb-4267-803d-e6415b969cef</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:00:10 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:00:10.109Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,கனிமொழி எம்பி,MP Kanimozhi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/nfzm1bs9/kani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin-MP Kanimozhi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/nfzm1bs9/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, "நாளை தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அவர் பங்கேற்பதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2><strong>பழிவாங்கும் நடவடிக்கை எனில் வழக்கு தொடரட்டும்:</strong></h2><p>கைது நடவடிக்கை குறித்து கனிமொழி எம்பி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது, "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது அரசிற்கு தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் இருந்தால், அவர் மீது வழக்கு தொடரட்டும். நீதிமன்றம் அது குறித்துத் தீர்ப்பு வழங்கட்டும்."</p><h2><strong>அடக்குமுறை அரசியல்:</strong></h2><p>திமுகவை ஓர் எதிர்க்கட்சியாக நேருக்கு நேர் எதிர்கொள்ளத் துணிவில்லாமல், அரசு இது போன்ற அடக்குமுறைக் கையாடல்களில் ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.</p><h2><strong>அச்சத்தின் வெளிப்பாடு:</strong></h2><p>நாளை தொடங்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பதைத் தடுக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஆளுங்கட்சியின் வெளிப்படையான பயத்தையும் கோழைத்தனத்தையுமே காட்டுகிறது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.</p><h2><strong>கொந்தளிப்பில் திமுக தொண்டர்கள்:</strong></h2><p>உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கையைக் கண்டித்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், ஆளுங்கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியலில்  பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது: ஆங்கிலேயர் காலத்தில் இருந்த வாய்ப்பூட்டு சட்டத்திற்கு இணையான நடவடிக்கை - பிரேமலதா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-condemned-udhayanidhi-stalin-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-condemned-udhayanidhi-stalin-arrested#comments</comments><guid isPermaLink="false">dd095868-bf01-4be5-8f45-af12bf3dcf28</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:59:05 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:59:05.117Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/7uptq6jv/premalatha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha Vijayakanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/7uptq6jv/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் சமநிலையான அமலாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.</strong></em></p> <p>தே.மு.தி.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>எதிர்க்கட்சித் தலைவராக உள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arrest-action-as-a-comedy">உதயநிதி ஸ்டாலின்</a> பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காக அவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை ஜனநாயக உரிமையாகும். கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பாகும்; கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல. </p> <p>கருத்துக்களை ஒடுக்குவதற்காக காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. சுதந்திர இந்தியாவில் கருத்து தெரிவித்ததற்காக செய்வது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையையும் உருவாக்கும். </p><p>ஆளுங்கட்சியினர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோர் அரசியல் மேடைகளில் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர். அதேபோல் எதிர்க்கட்சியினருக்கும் தங்களது அரசியல் கருத்துகளை ஜனநாயக முறையில் தெரிவிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை குறைக்கும் வகையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. </p> <p>அண்மையில் ராணிப்பேட்டையில் செய்தியாளர்கள் தவெக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் சமநிலையான அமலாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.</p> <h2>பட்ஜெட் கூட்டத்தொடர்</h2><p>நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள இந்த முக்கியமான நேரத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் பொருந்தாத செயலாகும். </p><p>எனவே, ஜனநாயக மரபுகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்து, அரசியல் கருத்து வேறுபாடுகளை கைது நடவடிக்கைகள் மூலம் கையாளும் போக்கை அரசு கைவிட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கம் , பீகாரின் முன்னாள் ஆளுநர் டி. ஒய். பாட்டீல் காலமானார்</title><link>https://www.maalaimalar.com/news/national/dy-patil-passes-away-educationist-and-former-bihar-governor-dies-in-kolhapur</link><comments>https://www.maalaimalar.com/news/national/dy-patil-passes-away-educationist-and-former-bihar-governor-dies-in-kolhapur#comments</comments><guid isPermaLink="false">bcf36ac0-2dd1-4262-b2b5-3927e70be9aa</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:56:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:56:56.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,DY Patil,டி.ஒய். பாட்டீல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/cvgjk1gq/D-Y-Patil.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ D Y Patil]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/cvgjk1gq/D-Y-Patil.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வியாளரும் முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல், <a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிரா</a> மாநிலத்தின் கோலாப்பூரில் தனது 90வது வயதில் காலமானார்.</p><p>பாட்டீல் 2009 முதல் 2013 வரை திரிபுராவின் ஆளுநராகவும், 2013 முதல் 2014 வரை பீகாரின் ஆளுநராகவும் பணியாற்றினார், மேலும் 2014-இல் சிறிது காலம் மேற்கு வங்க ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.</p><p>1991-இல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், மும்பை, நவி மும்பை, புனே மற்றும் கோலாப்பூர் ஆகிய இடங்களில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் டி.ஒய். பாட்டீல் குழுமத்தின் நிறுவனராகப் பரவலாக அறியப்பட்டார்.</p><h2>அரசியலில் பாட்டீல்:</h2><p>1935 அக்டோபர் 22-ஆம் தேதியன்று கோலாப்பூரில் பிறந்த பாட்டீல், மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி, பின்னர் கல்வி மற்றும் அறப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். </p><p>முன்னதாக காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்த அவர், பின்னர் 2018-ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.</p><h2>இரங்கல்:</h2><p>காங்கிரஸ் தலைவர் டாக்டர் நிதின் ராவத் எகஸ் தள பதிவில், கல்வித்துறை "ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட சிற்பியை" இழந்துவிட்டது என்றும், பாட்டீலின் மரணம் "கல்வி, சமூக சேவை மற்றும் பொது வாழ்க்கைக்கு ஒரு பெரும் இழப்பு" என்றும், அவரது பணிகள் "பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்" என்றும் குறிப்பிட்டார்.</p><p>திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹாவும் பாட்டிலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவரை "ஒரு தலைசிறந்த கல்வியாளர், திரிபுரா மற்றும் பீகாரின் முன்னாள் ஆளுநர்" என்றும், "ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனங்களை உருவாக்கியவர், கொடையாளர் மற்றும் மதிக்கப்படும் பொது ஆளுமை" என்றும், "கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளின் மூலம் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டு</p>]]></content:encoded></item><item><title>ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-ruling-opposition-parties-must-pursue-constructive-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-ruling-opposition-parties-must-pursue-constructive-politics#comments</comments><guid isPermaLink="false">52568da0-3987-4643-971f-f0e4921e946b</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:41:47 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:41:47.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,trisha,திரிஷா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a2a5ecxs/New-Project-2026-08-02T182520.339.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a2a5ecxs/New-Project-2026-08-02T182520.339.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதில் தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இதுபோன்ற செயல்களில் அல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em></p> <p>பாம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2>மேகதாது அணை</h2><p>மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest">உதயநிதி ஸ்டாலின்</a> அவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.</p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>தஞ்சாவூர் போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும். இது கண்டிக்கத்தக்கது. துணை முதலமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.</p> <p>அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலின் அவர்களை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. நண்பகல் 12.00 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி உயர்நீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை, அதுவும் நாளை சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை. தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும் தான்.</p> <p>தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதில் தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் அல்ல. இனியாவது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் - ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஒருபுறம் உதயநிதி கைது.. மறுபுறம் கையெழுத்திட வந்த செந்தில்பாலாஜி!-பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-side-udayanidhi-arrest-other-side-senthil-balaji-signs-amid-political-tension-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-side-udayanidhi-arrest-other-side-senthil-balaji-signs-amid-political-tension-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">3b9ca7a6-09c8-487b-84af-b6c8e99c90b4</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:32:05 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:32:05.728Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,senthil balaji,செந்தில்பாலாஜி,தமிழ்நாடு,Udhayanidhi arrested,உதயநிதி கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jzora273/udhay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi arrested ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jzora273/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் முக்கிய நிகழ்வுகளால் சென்னை மாநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படும் நிலையில், மறுபுறம் நிபந்தனை ஜாமீனில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திடத் தனது சகோதரருடன் வருகை தந்தார்.</p><h2><strong>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை:</strong></h2><p>தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உரையின் அடிப்படையில் எழுந்த சர்ச்சை புகாரைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.</p><p>அவரது வீட்டு வாசலில் திமுக வழக்கறிஞர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதிலும், காவல்துறை அவரைக் கைது செய்து வாகனத்தில் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றது. இதைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2><strong>திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்:</strong></h2><p>இந்த பரபரப்பான நிகழ்வுகள் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க, வழக்கின் நிபந்தனை ஜாமீன் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சகோதரர் அசோக்குமாருடன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். </p><p>வழக்கு நிபந்தனைகளின்படி, தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவே அவர் அங்கு வருகை புரிந்தார். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் காவல் நிலையத்திற்கு வந்து பதிவேட்டில் தங்களது கையொப்பத்தைப் பதிவு செய்துவிட்டுச் சென்றனர்.</p><h2><strong>அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு:</strong></h2><p>திமுகவின் முக்கிய தலைவர்கள் மீதான அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் மற்றும் காவல் நிலைய ஆஜர் நிகழ்வுகள், தமிழக அரசியலிலும் காவல்துறை வட்டாரத்திலும் ஒரே நேரத்தில் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன் -  உதயநிதி 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arrest-action-as-a-comedy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arrest-action-as-a-comedy#comments</comments><guid isPermaLink="false">48b2b7f0-f3bf-4bd1-b2fe-0b4dc74e25e7</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:17:30 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:17:30.532Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/plukywrw/udhayanidhi2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/plukywrw/udhayanidhi2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திமுகவின் கடைசி தொண்டன் கூட இதுபோன்ற கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.</strong></em></p><p>முதலமைச்சர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>சென்னையில் கைது செய்யப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-speech-opposition-leader-udhayanidhi-stalin-arrested">உதயநிதி ஸ்டாலின்</a> தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்படுகிறார். </p> <p>போலீசார் கைது செய்து அழைத்துச்செல்லப்பட்டபோது உதயநிதி கூறியதாவது:</p><p>* என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்.</p><p>* திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.</p><p>* பேசாத ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.</p> <p>* விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது.</p><p>* திமுகவின் கடைசி தொண்டன் கூட இதுபோன்ற கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான்.</p><p>* நீதிமன்றத்தின் முடிவுக்கு தலை வணங்குகிறேன். சட்டப்படி சந்திப்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>உதயநிதியை கைது செய்து அழைத்து செல்லும் வாகனம் முன்பு மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கண்டன முழக்கமிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 87-ஆக உயர்வு, சுமார் 1.3 லட்சம் பேர் பாதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-toll-rises-to-87-with-2-more-deaths</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-toll-rises-to-87-with-2-more-deaths#comments</comments><guid isPermaLink="false">8f0360f6-399c-4aef-b338-a5ce4da0e26b</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:09:51 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:09:51.788Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அசாம்,Assam,அசாம் வெள்ளம்,Assam Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/8y3om06t/Guwahati-Floods-Rescue.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guwahati Floods Rescue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/8y3om06t/Guwahati-Floods-Rescue.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் மேலும் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 87-ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">வெள்ளம்</a> சூழ்ந்த பெரும்பாலான பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து வந்தாலும், இன்னும் சுமார் 1.3 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இருப்பினும், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மிக <a href="https://www.maalaimalar.com/topic/heavy-rain">கனமழை</a> பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது; இது அம்மாநிலங்களின் எல்லையை ஒட்டியுள்ள அசாமின் பல மாவட்டங்களை பாதிக்கக்கூடும்.</p><h2>கனமழை எச்சரிக்கை:</h2><p>"மேகாலயாவின் கிழக்கு காசி மலைகள், மேற்கு ஜெயின்டியா மலைகள் மற்றும் கிழக்கு ஜெயின்டியா மலைகள் ஆகிய பகுதிகள் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பாபும்பரே, குருங் குமே, கிழக்கு காமெங், கிழக்கு சியாங், லோஹித் மற்றும் சாங்லாங் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை (ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கைகள்) பெய்யக்கூடும். இது அசாமின் அண்டை மாவட்டங்களை பாதிக்கலாம்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>நாகாலாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' (கண்காணிப்பு) விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அசாமின் சாரைடியோ, சிவசாகர், ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் மாவட்டங்களை பாதிக்கக்கூடும் என்றும் அது கூறியது.</p><p>நேற்று (திங்கள்கிழமை) இரவு வெளியிடப்பட்ட அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கைப்படி, கடந்த 24 மணி நேரத்தில் சிவசாகர் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுடன், இந்த ஆண்டு வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87-ஐ எட்டியுள்ளது.</p><h2>நீர்மட்டம் குறைவு:</h2><p>"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேல் அசாம் மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் இரவு நேரத்தில் மழை பெய்ததாகத் தகவல்கள் வந்தாலும், வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் கிராம மக்களுக்குச் சற்று நிம்மதி கிடைத்துள்ளது" என்று ASDMA அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>மொத்தம் ஆறு மாவட்டங்களில் 1,28,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவசாகர் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது அதை தொடர்ந்து சாரைடியோ மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்கள் உள்ளன.</p><p>ஐந்து மாவட்டங்களில் 55 நிவாரண முகாம்கள் மற்றும் நிவாரண விநியோக மையங்களை நிர்வாகம் நடத்தி வருவதாகவும், தற்போது 11,250 பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ASDMA தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு வெள்ள நிவாரண பணிகளுக்காக, மருத்துவ மற்றும் கால்நடை மருத்துவ குழுக்கள் உட்பட பல அமைப்புகள் களமிறக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கடும் அமளி: தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mps-stage-uproar-over-udayanidhi-stalin-arrest-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mps-stage-uproar-over-udayanidhi-stalin-arrest-in-parliament#comments</comments><guid isPermaLink="false">ecc0dc87-02dc-412b-801a-ab575ef3b792</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:03:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:03:37.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,DMK,திமுக,tvk,trisha,நடிகை திரிஷா,உதயநிதி ஸ்டாலின் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/j6jides9/GG.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  DMK MPs-Parliament ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/j6jides9/GG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான 'உதயநிதி ஸ்டாலின்' காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 'திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்' திடீர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, முதலமைச்சர் மற்றும் தவெக அரசை விமர்சித்து அவர் பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து, நடிகை திரிஷாவை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி எழுந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நீலாங்கரையில் வைத்து உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்தனர்.</p><h2><strong>உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறியதாகக் குற்றச்சாட்டு:</strong></h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு முன்பாக, "காலை 12 மணி வரை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது" என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்ற வழிகாட்டுதலை மீறி காவல்துறை அவரைக் கைது செய்துள்ளதாக திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><h2><strong>நாடாளுமன்ற வளாகத்தில் கண்டன முழக்கம்:</strong></h2><p>இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, திமுக எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடினர். தொடர்ந்து, "கைது செய்யாதே! கைது செய்யாதே!""எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடு!" என முழக்கங்களை எழுப்பித் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். </p><h2><strong>தமிழகம் முழுவதும் போராட்டம்:</strong></h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்து செல்லப்படுவதை அடுத்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழக அரசியலிலும், டெல்லி நாடாளுமன்ற வட்டாரத்திலும் மிகப்பெரிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சர்ச்சை பேச்சு - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-speech-opposition-leader-udhayanidhi-stalin-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-speech-opposition-leader-udhayanidhi-stalin-arrested#comments</comments><guid isPermaLink="false">fd51c769-b350-4e6a-b94b-1433ceef9bb7</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:49:48 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:49:48.624Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/33e2i31y/udhayanidhi1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/33e2i31y/udhayanidhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீலாங்கரை இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.</strong></em></p><h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p> <h2>தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியதையடுத்து நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.</p><p>இதற்கிடையே, ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>தஞ்சை காவல்துறை உதயநிதியை கைது செய்ய முனைப்பு காட்டிவரும் நிலையில், சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest">உதயநிதி</a> தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.</p><p>அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்று நண்பகல் 12 மணிக்கு விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். மதியம் 12 மணி வரை உதயநிதி விவகாரத்தில் நடவடிக்கை வேண்டாம் எனவும் காவல்துறையிடம் தெரிவிக்க நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். </p> <h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>இந்நிலையில் நீலாங்கரை இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். உதயநிதியை கைது செய்து தஞ்சை மாவட்ட காவல்துறையினர் அழைத்து சென்றனர்.</p><p>முதலமைச்சர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>நண்பகல் 12 மணி வரை கைது செய்ய வேண்டாம் என ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்திய நிலையில் உதயநிதி கைது செய்யப்பட்டார்.</p> ]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest#comments</comments><guid isPermaLink="false">9be2939f-f3cf-460f-bfda-890da3365155</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:29:09 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:29:09.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gr5tikpk/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin - Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gr5tikpk/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><em><strong>ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது தொடரப்பட்ட வழக்கில் 6 பிரிவில் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</strong></em></p><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p> <p>உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதனால் நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இந்நிலையில், ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது  6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>தஞ்சை காவல்துறை உதயநிதியை கைது செய்ய முனைப்பு காட்டிவரும் நிலையில், சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-indictment-udhayanidhi-stalin">உதயநிதி</a> தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்று நண்பகல் 12 மணிக்கு விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.</p><p>மதியம் 12 மணி வரை உதயநிதி விவகாரத்தில் நடவடிக்கை வேண்டாம் என காவல்துறையிடம் தெரிவிக்க நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். </p>  ]]></content:encoded></item><item><title>&quot;சுயமரியாதை தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்&quot; - உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-indictment-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-indictment-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">e5edf0c7-d9e9-441e-ae96-6fa2a7296288</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:19:02.941Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/te5drbxm/Udhaynidhi-Stalin-and-TVK-Ramesh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin and Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/te5drbxm/Udhaynidhi-Stalin-and-TVK-Ramesh.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சர்ச்சை பேச்சு:</h2><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உதயநிதி பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். </p><p>பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” ஆகியவற்றுக்கு முற்றிலும் முரணாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஆபாச பேச்சுகளை பொதுவெளியில் பேசி வருவதாக அமைச்சர் ரமேஷ், சேப்பாக்கம் தொகுதி MLA உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><h2>எக்ஸ் பதிவு:</h2><p>இது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது. பெருமைமிகு பெண்களை கேவலமாக நினைத்து பேசினால், சுயமரியாதை எனும் தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், பெண்களை அவமதிக்கும் எந்தவிதமான கருத்துகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், பொதுவாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புடனும் மரியாதையுடனும் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆரம்பித்த இயக்கத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் கடுகளவு கூட இல்லாமல் ஆபாச பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசி பெண்களை கீழ்த்தரமாக பார்க்கும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்! <br><br>உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது,…</p>&mdash; TVK Ramesh (@RameshOffcl) <a href="https://x.com/RameshOffcl/status/2084363049625162222?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அரியானாவில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை 27 முறை குத்திக் கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/horror-in-haryana-teacher-stabbed-27-times-on-school-campus</link><comments>https://www.maalaimalar.com/news/national/horror-in-haryana-teacher-stabbed-27-times-on-school-campus#comments</comments><guid isPermaLink="false">bcc8f0fc-a32a-4d96-ba62-47ee0647eaa9</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:05:01 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:05:01.194Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,Teacher Murder,ஆசிரியை கொலை,ஹரியானா,Sikrona,பரிதாபாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pgf1mfzi/murder.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Haryana Teacher murder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pgf1mfzi/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது.</p><p>சந்தியா (29) என்ற இளம்பெண் ஃபரிதாபாத்தின் சிக்ரோனா கிராமத்தில் உள்ள சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் காலை 9:30 மணியளவில் ஆசிரியை சந்தியா பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, முகத்தை வெள்ளைத் துணியால் மூடியபடி வந்த ஒரு நபர், அவரைப் பார்க்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.</p><h2><strong>கொலைச் சம்பவம்:</strong></h2><p>பள்ளி ஊழியர்கள் தகவலளித்ததை அடுத்து, ஆசிரியை முதன்மை வாயில் அருகே வந்தபோது, மறைந்திருந்த அந்த நபர் திடீரென அவர் மீது பாய்ந்து, இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இக்கொடூரத் தாக்குதல் முழுவதும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, ஆசிரியையின் முகம், கழுத்து, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் 27 முறை கத்திக் குத்துகள் விழுந்துள்ளதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அமித்(21)  என்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் இக்கொலை பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, அமித் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஆசிரியை சந்தியா காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமித், பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>சம்பவம் நடந்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் குற்றவாளி அமித்தை ஃபரிதாபாத் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் விலையில் சற்று சரிவு! - இன்றைய நிலவரம் 
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-4-8-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-4-8-2026#comments</comments><guid isPermaLink="false">67866de8-1aee-46d8-a0c5-c6b0b1cb5f0c</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:51:11 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:51:11.272Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/05/12503919-gold03.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/05/12503919-gold03.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது.</p> <h2>தங்கம் விலை சரிவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலை கடந்த 28-ந்தேதி முதல் மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>03-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000</p><p>02-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>01-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>31-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,040</p><p>30-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>01-08-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>31-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>30-07-2026- ஒரு கிராம் ரூ.235</p> ]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சை போலீசார் வருகை?- பரபரப்பில் நீலாங்கரை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanjavur-police-visit-udhayanidhi-stalin-house-in-nilangarai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanjavur-police-visit-udhayanidhi-stalin-house-in-nilangarai#comments</comments><guid isPermaLink="false">5dd87837-ad51-48b3-9ae3-52c1e55e3108</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:43:46 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:43:46.228Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/la49wpeg/udhayani.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ள போலீசார்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ள போலீசார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/la49wpeg/udhayani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</aside><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a> பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த நிலையில், த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு காவல் இணை ஆணையர் விஜயகுமார் வருகை தந்தார். அப்போது அவர், உதயநிதி கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார். அதற்கு  முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  உதயநிதி ஒத்துழைப்பு தருவார் என்று கூறியதுடன் அவரது வழக்கறிஞர் வரும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று தெரிவித்தார். </p><p>இதனால் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வருகை தந்துள்ளார்.  இதனால் நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திரிஷா குறித்து விமர்சனம் - உதயநிதியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தவெகவினருக்கு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/criticism-of-cm-vijay-tvk-protest-condemning-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/criticism-of-cm-vijay-tvk-protest-condemning-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">458814c5-1fb2-461c-a539-f772a41206e4</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:36:50 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:36:50.905Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,புஸ்ஸி ஆனந்த்,Bussy Anand,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/r1m33cry/anand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bussy Anand - Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/r1m33cry/anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி முதலமைச்சர் விஜய் குறித்து விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தஞ்சை மாவட்டம் பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>அப்போது அவர், நடிகை திரிஷா பற்றி அவதூறாக சில விஷயங்களை பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. அவருடைய இந்த பேச்சுக்கு தவெக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சரான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-inspection-to-saidapet">புஸ்ஸி ஆனந்த்</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.</p> <p>அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.</p><p>Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.</p> <p>அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?.</p><p>அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம். ஆனால், ஆபாசநிதிகளை?. </p><p>மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி முதலமைச்சர் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <p>இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த தவெக அழைப்பு விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பாடங்களை சேர்க்கும் மகாராஷ்டிரா - முதலமைச்சர் பட்னாவிஸ் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/fadnavis-orders-anti-drug-lessons-in-maharashtra-school-curriculum</link><comments>https://www.maalaimalar.com/news/national/fadnavis-orders-anti-drug-lessons-in-maharashtra-school-curriculum#comments</comments><guid isPermaLink="false">c75c96b4-9c89-4632-942d-cfd7e5c00b35</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:21:39 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:21:39.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,தேவேந்திர பட்னாவிஸ்,devendra fadnavis,school curriculum,பள்ளி பாடத்திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kfksu7w3/devendra-fadnavis.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Devendra Fadnavis]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kfksu7w3/devendra-fadnavis.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் போதை மீட்பு தொடர்பான பாடங்களை சேர்க்க அம்மாநில முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/devendra-fadnavis">தேவேந்திர பட்னாவிஸ்</a> அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>பள்ளிக் கல்வியில் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக <a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிரா</a> தொடர்ந்து திகழ்கிறது என்றும், கல்வித் தரம், மராத்தி மொழியை ஊக்குவித்தல், வரலாற்றை பாதுகாத்தல் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை பேணுவதன் மூலம் மாணவர்-மையக் கல்வி முறையை மாநிலம் வலுப்படுத்தி வருகிறது என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார்.</p><p>பள்ளிக் கல்வித் துறையின் ஆய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர், போதைப்பொருள் தடுப்பு மற்றும் மீட்பு தொடர்பான பாடங்களை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்கும் செயல்முறையை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.</p><h2>போதை இல்லா பள்ளி:</h2><p>பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கான குழுக்களை அமைக்கவும், "போதைப்பொருள் இல்லாத பள்ளி" (Drug-Free School) என்ற பிரச்சாரத்தை தொடங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.</p><p>பள்ளி பாதுகாப்பை வலுப்படுத்தவும், மாணவர்களிடையே இணையவழி மோசடிகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.</p><p>மாநில அரசின் முயற்சிகளை தொடர்ந்து, என்.சி.இ.ஆர்.டி. (NCERT) பாடப்புத்தகங்களில் 17-ஆம் நூற்றாண்டின் வீர மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் வரலாறுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று பட்னாவிஸ் சுட்டிக்காட்டினார். புகழ்பெற்ற மராட்டிய மன்னரின் வரலாற்றையும் சாதனைகளையும் பரவலாக உள்ளடக்கும் வகையில் பாடத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.</p><h2>புதுமையான முன்னெடுப்புகள்:</h2><p>மாநிலம் முழுவதும் உள்ள எஸ்.எஸ்.சி. (SSC), சி.பி.எஸ்.இ. (CBSE), ஐ.சி.எஸ்.இ. (ICSE) மற்றும் ஐ.பி. (IB) வாரியங்களின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழியை கற்பிப்பதும், அம்மொழியிலேயே தேர்வுகள் நடத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர்.</p><p>பள்ளிக் கல்விக்கான தேசிய செயல்திறன் தரவரிசை குறியீட்டில் (PGI 2.0) மகாராஷ்டிராா தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது என்று கூறிய பட்னாவிஸ், 'பி.எம். ஸ்ரீ' (PM SHRI) பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் புதுமையான முன்னெடுப்புகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.</p><p>பள்ளி மாணவர்களின் ஆதார் சரிபார்ப்பு, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 35 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் சலுகைகள், 'பவித்ரா' (Pavitra) ஆசிரியர் பணி நியமன இணையதளம் மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.</p><h2>அதிகாரிகள் விளக்கம்:</h2><p>கூட்டத்தில் அளிக்கப்பட்ட விளக்கக் காட்சியின்படி, நாட்டின் மொத்த பள்ளிகளில் 9.34 சதவீதமும், ஆசிரியர்களில் 8.84 சதவீதமும், மாணவர்களில் 7.69 சதவீதமும் மகாராஷ்டிராவில் உள்ளனர். இம்மாநிலத்தில் 1,08,065 பள்ளிகள் உள்ளன; இவற்றில் 2,20,48,443 மாணவர்கள் பயில்கின்றனர், மேலும் மாணவர்-ஆசிரியர் விகிதம் 28:1 ஆகப் பராமரிக்கப்படுகிறது.</p><p>இப்பள்ளிகளில் 64,341 அரசு பள்ளிகள் மற்றும் 29,486 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன; மீதமுள்ளவை சுயநிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு பள்ளிகளாகும்.</p><p>பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்காக 'நிபுண் மகாராஷ்டிரா இயக்கம்' (Nipun Maharashtra Mission), 'ராஷ்ட்ரிய பிரதம்' (Rashtriya Pratham) பிரச்சாரம், "மாஜி ஷாலா சுந்தர் ஷாலா" (எனது பள்ளி, அழகான பள்ளி) திட்டம் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-released-from-kabini-dam-reached-hogenakkal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-released-from-kabini-dam-reached-hogenakkal#comments</comments><guid isPermaLink="false">6690ffa7-7b23-46f1-8eb3-a69986deac37</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:49:00 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:49:00.801Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,Kabini Dam,கபினி அணை,காவிரி நீர்,Cauvery water,ஒகேனக்கல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/yjfvypld/kabinidam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளேகால் வந்தடைந்தது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/yjfvypld/kabinidam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் ஒகேனக்கல்லுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது.</strong></em></p><h2>காவிரி நீர்</h2><p>கேரளம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">கபினி அணை</a>யும் ஏறக்குறைய நிரம்பி விட்டது என்றே சொல்லலாம். நேற்று காலை நிலவரப்படி அந்த அணையின் நீர்மட்டம் 2,282.59 அடியாக இருந்தது. அதாவது இந்த அணையில் 19.52 டி.எம்.சி. நீர் தேக்கி வைக்க முடியும்.</p> <p>நேற்று காலை நிலவரப்படி அணையில் 18.61 டி.எம்.சி. நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரத்து 746 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி நீர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-to-reach-tamil-nadu-tonight">காவிரியில்</a> திறக்கப்பட்டு உள்ளது. அதாவது 3-வது நாளாக தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>கபினி அணை</h2><p>கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர் திருமகூடலுவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்தது.</p> <h2>ஒகேனக்கல்</h2><p>இந்த தண்ணீர் நேற்று கொள்ளேகால் வந்தடைந்தது. அங்கிருந்து கரைபுரண்டு ஓடி வந்த தண்ணீர் இன்று அதிகாலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இந்த தண்ணீர் இன்று மாலை அல்லது இரவுக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபை தேர்தலில் தோல்வி: தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-bjp-president-to-be-changed-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-bjp-president-to-be-changed-soon#comments</comments><guid isPermaLink="false">e13cd54a-bcfb-4ae3-a1b3-1fd829699eaa</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:44:46 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:44:46.932Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,தமிழக சட்டசபை தேர்தல்,TN Assembly election</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bgbq325g/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bgbq325g/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.</aside><h2><strong>பா.ஜ.க. தோல்வி</strong></h2><p>சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட <a href="https://www.maalaimalar.com/topic/பாஜக">பா.ஜ.க.</a> ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற இடங்களில் கடும் தோல்வியை சந்தித்தது. வாக்கு சதவீதமும் 3 சதவீதத்திற்கு கீழ் வந்தது. இது பா.ஜ.க. தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதைத்தொடர்ந்து தோல்விக்கான காரணத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, மத்திய பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பினர். அதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p>இதற்கிடையே, முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையும் கட்சியில் இருந்து விலகி, 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக மாநில துணைத்தலைவராக இருந்த கரு.நாகராஜன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் பலரும் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறினர்.</p><h2><strong>தலைவர் பட்டியலில் யார், யார்?</strong></h2><p>இந்த நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தவும், இளைஞர்களை ஈர்க்கவும் கட்சியில் புதிய மாற்றத்தை கொண்டு வரவும் விரைவில் புதிய தலைவரை நியமிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் மாநில தலைவராக பதவியேற்றிருந்தார். அவரது தலைமையில் ஒரே ஒரு தேர்தலை மட்டும் சந்தித்த நிலையில் இந்த மாற்றம் நிகழ இருக்கிறது.</p><p>புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. 2029-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. புதிய தலைவர் பட்டியலில் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் எச்.ராஜா, சரத்குமார், மாநிலச் செயலாளர்கள் அஸ்வத்தாமன், வினோஜ் பி.செல்வம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.</p><p>மேலும், மத்திய மந்திரியாக இருக்கும் நிர்மலா சீதாராமனையும் தமிழக அரசியலுக்கு கொண்டு வரலாமா? என்பது குறித்தும் மத்திய பா.ஜ.க. தலைமை யோசித்து வருகிறது. விரைவில் தமிழக பா.ஜ.க. புதிய தலைவர்</p><p>யார்? என்பது தெரிந்து விடும். </p>]]></content:encoded></item><item><title>ஆப் ஸ்டோரில் இருந்து மாயமான டெலிகிராம் ஆப் - பயனர்கள் குமுறல்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/telegram-removed-from-apples-ios-app-store-worldwide-say-reports</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/telegram-removed-from-apples-ios-app-store-worldwide-say-reports#comments</comments><guid isPermaLink="false">637707b7-cbf6-42ff-8995-27e47b5c3218</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:14:55 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:14:55.350Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,Telegram,App Store,டெலிகிராம்,ஆப் ஸ்டோர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bt5mwufo/Teleram-App-Logo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Teleram App Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bt5mwufo/Teleram-App-Logo.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உலகம் (World)</category><content:encoded><![CDATA[ <p>உலகம் முழுவதும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தேடல் முடிவுகளில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/telegram">டெலிகிராம்</a> மறைந்துவிட்டது. இதனால், பயனர்கள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இந்த குறுந்தகவல் செயலியை தேடவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ முடியாமல் உள்ளனர். இந்த நீக்கத்தின் விளைவாக, டெலிகிராமின் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர் பட்டியலில் "பக்கம் காணப்படவில்லை" (Page Not Found) என்ற பிழை ஏற்படுகின்றன.</p><p>தற்போதைய நிலவரப்படி, செயலி காணாமல் போனது குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனமோ அல்லது டெலிகிராம் தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை, மேலும் டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவும் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.</p><p>தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவா அல்லது கொள்கை தொடர்பான நடவடிக்கை காரணமாக இந்த செயலி நீக்கப்பட்டதா என்பது குறித்தும் இதுவரை தெளிவாக தெரியவில்லை.</p><h2>மீண்டும் நீக்கம்:</h2><p>ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் நீக்கப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக பிப்ரவரி 2018-இல், பொது சேனல்கள் வழியாக பரவிவரும் பொருத்தமற்ற மற்றும் சட்டவிரோத உள்ளடக்கத்தை கண்டறிந்த பிறகு, ஆப்பிள் நிறுவனம் டெலிகிராம் மற்றும் அதன் சோதனை முயற்சியான டெலிகிராம் எக்ஸ் செயலி ஆகிய இரண்டையும் தற்காலிகமாக நீக்கியது.</p><p>பிட்பினாஸ் வெளியிட்டுள்ள தகவல்படி, 24 மணி நேரத்திற்குள் இரு செயலிகளையும் மீட்டெடுப்பதற்கு முன்பு, டெலிகிராம் தனது உள்ளடக்க கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும், விதிமீறும் கணக்குகளை நிரந்தரமாக தடை செய்யவும், கொள்கை மீறல்களை சரிசெய்யவும் ஆப்பிள் நிறுவனம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.</p><h2>பதிவிறக்கம் செய்ய முடியாது:</h2><p>தற்போதைய நீக்கம் ஏற்கனவே உள்ள டெலிகிராம் கணக்குகளை பாதிக்காது, ஆனால் இது ஆப்பிள் பயனர்களுக்கு பல வரம்புகளை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே டெலிகிராம் செயலியை இன்ஸ்டால் செய்துள்ள பயனர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம், ஆனால் அதை அன்-இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் பிட்பினாஸ் தகவலின்படி, தற்போது அதை ஆப் ஸ்டோரில் இருந்து மீண்டும் பதிவிறக்கம் செய்ய முடியாது.</p><p>புதிய ஐபோன் அல்லது ஐபேட் செட்-அப் செய்யும் பயனர்களாலும் அதிகாரப்பூர்வ டெலிகிராம் செயலியை இன்ஸ்டால் செய்ய முடியாது. மேலும், இந்த பிரச்சனை மீண்டும் சரிசெய்யப்படும் வரை, ஐ.ஓ.எஸ் அப்டேட்கள், பிழைத் திருத்தங்கள், செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்கள் தற்காலிகமாக கிடைக்காது.</p><h2>இணைய பதிப்பு:</h2><p>இருப்பினும், டெலிகிராமின் இணைய பதிப்பு, விண்டோஸ் மற்றும் மேக்ஓ.எஸ். டெஸ்க்டாப் செயலிகள் மற்றும் ஆண்ட்ராய்டு செயலி ஆகியவை வழக்கம் போல் இயங்கி வருகின்றன.</p><p>இதற்கிடையில், ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் திடீரென மறைந்தது குறித்து பயனர்கள் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்து, ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து, தங்கள் குழப்பத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p>டெலிகிராம் என்பது அதன் வேகம், பாதுகாப்பு மற்றும் பல சாதனங்களில் ஒரே நேரத்தில் இயங்கும் தன்மைக்காக அறியப்படும் ஒரு கிளவுட் அடிப்படையிலான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமாகும். 1 பில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களுடன், இது உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட டாப் 5 குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக திகழ்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-night-time-electric-trains-between-chennai-beach-and-tambaram-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-night-time-electric-trains-between-chennai-beach-and-tambaram-cancelled#comments</comments><guid isPermaLink="false">3773c46c-a8d7-4c91-8ccb-ed7f7577efe3</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:56:09 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:56:09.340Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,Electric Trains,மின்சார ரெயில்கள்,மின்சார ரெயில்கள் ரத்து,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/iy0spvjw/electrictrain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார ரெயில்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/iy0spvjw/electrictrain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வருகிற 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.</aside><h2><strong>நடைமேம்பால பணி</strong></h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, நடைமேடை 1 முதல் 5 வரையில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக நடைமேடைகள் 6 முதல் 8 வரையிலான பகுதிகளில் நடைமேம்பாலத்திற்கான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற இருக்கிறது. இந்த பணி காரணமாக, வருகிற 5-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையில் 9 எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டும், 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர மாற்றம் செய்யப்பட்டும் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த 30-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த பணியின்போது மின்சார ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.</p><h2><strong>மின்சார ரெயில் சேவைகள் ரத்து</strong></h2><p>இதனைதொடர்ந்து, 3-ம் கட்டமாக நடைமேடைகள் 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்கள்-ரத்து">மின்சார ரெயில் </a>வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரெயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. அதன்படி, எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி வருகிற 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் நடைபெற உள்ளது. இதனால் ரத்து மற்றும் மாற்றம் செய்யப்படும் மின்சார ரெயில் சேவைகளின் விவரங்கள் வருமாறு:-</p><h2><strong>வாரநாட்களில்...</strong></h2><p>*சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 22, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் (வார நாட்களில்) இரவு 11:20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே பகுதிநேர ரத்து செய்யப்படுகிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><h2><strong>ஞாயிற்றுக்கிழமை</strong></h2><p>இதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11.20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.</p><p>* மேலும், சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23. 30 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிருக்கு ரூ.2,500 அறிவிப்பு வெளியாகுமா?
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-governments-first-budget-to-be-presented-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-governments-first-budget-to-be-presented-tomorrow#comments</comments><guid isPermaLink="false">9308bd0d-1d99-4bfb-82cb-a6ca58413490</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:51:04 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:51:04.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dwyogk3f/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay -  Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dwyogk3f/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. </strong></em></p><h2>த.வெ.க. அரசின் பட்ஜெட்</h2><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகு நடந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">த.வெ.க. அரசின்</a> முதல் பட்ஜெட், சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கடந்த மாதம் 21-ந்தேதி அறிவித்தார்.</p> <h2>நிதி அமைச்சர் மரிய வில்சன்</h2><p>அதன்படி சட்டசபை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது 2026-2027-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.</p><h2>எத்தனை நாள் நடைபெறும்?</h2><p>நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது உள்பட முக்கிய முடிவுகள், அந்த கூட்டத்தில் எடுக்கப்படும்.</p> <p>பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதங்கள் 10-ந் தேதி தொடங்கும். அதன் நிறைவில் நிதி அமைச்சர் பதிலளித்து பேசுவார். அதன் பின்னர் இடைவெளி இல்லாமல் அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளும் தாக்கலாகி, விவாதத்துக்கு விடப்படும் என்றும், எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 2-ம் வாரம் வரை நீடிக்கலாம் என்றும் தெரிகிறது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>த.வெ.க. அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால், அனைத்துத்துறை அமைச்சர்கள், செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் துறைவாரியாக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session">விஜய்</a> ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2>மகளிர் திட்டம்</h2><p>த.வெ.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளான ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்டவற்றில் எவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் திட்டங்களாக அறிவிக்கப்பட உள்ளது? என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.</p> <h2>மேகதாது அணை பிரச்சனை</h2><p>அதே நேரம் காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை, மேகதாது அணை பிரச்சனை, மின்வெட்டு, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் என பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே அனல்பறக்கும் விவாதங்கள், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>மேலும், முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள், அரசினர் தீர்மானங்கள், அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள் போன்றவற்றையும் இந்த கூட்டத்தொடரில் எதிர்பார்க்கலாம். கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் தனது கையை வீசி செய்கை செய்ததில் எந்த தவறும் இல்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ள நிலையில், அதுவும் இந்த தொடரில் எதிரொலிக்கலாம் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-4-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-4-august-2026#comments</comments><guid isPermaLink="false">77788370-d702-43a2-8163-2bca84375cc0</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:30:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:30:37.090Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n15pib15/petrol.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (4.8.2026 - (செவ்வாய்க்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>அமெரிக்க தாக்குதல்கள் தீவிரமடைவதை தவிர்க்க ஈரானுக்கு கடைசி வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-said-new-talks-last-chance-for-iran-to-avoid-escalation-of-us-strikes</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-said-new-talks-last-chance-for-iran-to-avoid-escalation-of-us-strikes#comments</comments><guid isPermaLink="false">0fc48103-5c33-4fff-906f-4a18a66f2232</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:11:10 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:11:10.812Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஈரான்,Iran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/rizfrafp/DT.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டொனால்டு டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/rizfrafp/DT.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐந்து மாதங்களாக நீடிக்கும் ஈரான் தொடர்பான மோதலில் அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> இத்தகைய அணுகுமுறையை கையாள்வது இது முதல் முறையல்ல; ஆனால் இம்முறை நிலைமை மாறுபட்டது என்று அவர் வலியுறுத்துகிறார்.</p><p>வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான புதிய பேச்சுவார்த்தைகள், <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும், அந்நாட்டின் மீது அமெரிக்க தாக்குதல்கள் தீவிரமடைவதை தவிர்க்கவும் ஒரு "கடைசி வாய்ப்பு" என்று அதிபர் டிரம்ப் கூறினார். </p><h2>கவலைகளுக்கு தீர்வு:</h2><p>ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த அமெரிக்காவின் கவலைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழியை உருவாக்குவது ஆகியவற்றில் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்த தகவல்கள் "இன்றோ அல்லது நாளையோ" தெரியவரும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p>"முதல் கட்டம் நீரிணையை திறப்பதாகும். இரண்டாவது கட்டம் அணு ஆயுத ஒழிப்பாக இருக்கும். அதற்கு சிறிது காலம் எடுக்கும்," என்று அதிபர் டிரம்ப் கூறினார்.</p><h2>தாக்குதல் ஒத்திவைப்பு:</h2><p>வளைகுடா நாடுகளான கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் வேண்டுகோளின் பேரில், ஈரானுக்கு எதிராக புதிய பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த அமெரிக்க படைகளுக்கு உத்தரவிடுவதை தள்ளிவைக்க முடிவு செய்ததாக டிரம்ப் கூறினார்.</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று "இரண்டாம் உலக போருக்கு பிறகு மிகப்பெரிய தாக்குதலை" அமெரிக்கப் படைகள் நடத்துவதற்கான திட்டம் தயாராக இருந்ததாக அவர் கூறினார். ஆனால் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய வளைகுடா தலைவர்களின் கருத்துக்களை கேட்ட பிறகும், பெயரிடப்படாத ஈரான் அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரிலும், அந்த திட்டத்தை கைவிட்டு, இராஜதந்திர முயற்சிகளுக்கு அதிக நேரம் கொடுக்க முடிவு செய்ததாக தெரிவித்தார். இருப்பினும், ஈரான் மீதான தனது பொறுமை குறைந்து வருவதாக டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.</p><h2>உண்மையான பேச்சுவார்த்தை:</h2><p>"ஈரான் அதை ஒப்புக்கொள்ள விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுப்பது குறித்து நாங்கள் உண்மையில் பேசிக்கொண்டிருக்கிறோம்," என்று டிரம்ப் கூறினார்.</p><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து, ஈரான் மீதான தாக்குதல்களை அதிகரிப்பதாக டிரம்ப் பலமுறை அச்சுறுத்தினார். பின்னர் தனது அச்சுறுத்தல்களில் இருந்து பின்வாங்கியுள்ளார்.</p><p>தெஹ்ரான் மீது மீண்டும் மீண்டும் கடுமையான அச்சுறுத்தல்களை விடுத்துப் பின்னர் பின்வாங்குவதை அமெரிக்கர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, ஈரானியர்களின் உயிர்கள் மீதான அக்கறையின் காரணமாகவே தான் பொறுமையை கடைப்பிடிப்பதாக டிரம்ப் பதிலளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 ஆகஸ்ட் 2026: தேய்பிறை சஷ்டி விரதம்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-4-august-2026-theipirai-sashti-viratham</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-4-august-2026-theipirai-sashti-viratham#comments</comments><guid isPermaLink="false">9676f201-11c3-4d92-8fce-20aca587c31b</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:59:21 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:59:21.530Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-16/gsqcg08o/muruga7.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-16/gsqcg08o/muruga7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-19 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  சஷ்டி இரவு 7.52 மணி வரை பிறகு சப்தமி</p><p>நட்சத்திரம் :  ரேவதி இரவு 8.29 வரை பிறகு அசுவினி</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி</h2><p>தேய்பிறை சஷ்டி விரதம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சக்தியழைப்பு விழா, உருள் தாண்டவக் காட்சி. தேவக்கோட்டை ஸ்ரீ அரங்கநாதர் புறப்பாடு. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம். </p> <p>திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி. குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உயர்வு</p><p>ரிஷபம் - போட்டி</p><p>மிதுனம் - புகழ்</p><p>கடகம் - நட்பு</p><p>சிம்மம் - அனுகூலம்</p><p>கன்னி - சிறப்பு</p> <p>துலாம் - திடம்</p><p>விருச்சிகம் - கடமை</p><p>தனுசு - மகிழ்ச்சி</p><p>மகரம் - லாபம்</p><p>கும்பம் - அமைதி</p><p>மீனம் - பயணம்</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 4.8.2026 - இந்த ராசிக்காரர்கள் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-4-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-4-august-2026#comments</comments><guid isPermaLink="false">c921710e-728c-4f19-9a1b-b17111fe062a</guid><pubDate>Tue, 04 Aug 2026 01:46:03 +0000</pubDate><atom:updated>2026-08-04T01:46:03.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/vygdy4hu/New-Project-2026-05-25T070202.454.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/vygdy4hu/New-Project-2026-05-25T070202.454.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>ராசிபலன்(Rasipalan)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். இல்லத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>வரவு திருப்தி தரும் நாள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. எதிர்பார்த்த தகவல் அலைபேசி மூலம் வந்து சேரும்.</p> <h2>மிதுனம்</h2><p>எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நிதி நிலை உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் செயல்பாட்டைக் கண்டு வியப்பர்.</p><h2>கடகம்</h2><p>உற்சாகத்துடன் செயல்படும் நாள். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பயணங்கள் பலன்தருவதாக அமையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். காரியத்தடை ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நட்பு பகையாகும்.</p><h2>கன்னி</h2><p>முயற்சி கைகூடும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.</p> <h2>துலாம்</h2><p>ஆரோக்கியம் சீராகும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.</p><h2>விருச்சிகம்</h2><p>யோகமான நாள். எதிபாராத வரவு உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நடைபெற்று மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.</p> <h2>தனுசு</h2><p>பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு உண்டு.</p><h2>மகரம்</h2><p>உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் பணியைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.</p> <h2>கும்பம்</h2><p>சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் சம்பந்தமாக அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.</p><h2>மீனம்</h2><p>தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.</p> ]]></content:encoded></item></channel></rss>