<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 11 Sep 2026 15:56:13 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 11 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-september-2026#comments</comments><guid isPermaLink="false">789700bb-cf5a-4554-8f14-89283a96d916</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:00:55 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:52:52.797Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7tgua07i/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7tgua07i/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-morning-dip-evening-surge-current-status" rel="nofollow">GOLD PRICE TODAY: காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை- தற்போதைய நிலவரம்!</a></p><p>* வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது.</p><p>* இன்று காலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120-க்கு விற்பனையானது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/prof-salomon-pappaiya-passes-away-cm-vijay-mourns" rel="nofollow">தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு- முதலமைச்சர் விஜய் இரங்கல்</a></p><p>* சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>*  அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bank-employees-across-country-on-strike-today">வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்: பணம்-காசோலை பரிவர்த்தனை முடங்கியது</a></p><p>* வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><p>* வேலைநிறுத்தத்தால் இன்று மூடப்பட்ட வங்கிகள் தொடர்ந்து மேலும் 3 நாட்கள் மூடப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dipke-urges-maharashtra-govt-to-talk-to-jarange-warns-against-forcible-intervention">மனோஜ் ஜராங்கேவை யாராவது தொட நினைத்தால்., மகாராஷ்டிரா அரசுக்கு அபிஜீத் தீப்கே எச்சரிக்கை</a></p><p>* மாணவர்களுக்குச் சிறந்த பள்ளிகள், தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ஒரு கிராமத்தைக் காட்டுங்கள். </p><p>* இத்தகைய வசதிகளைச் செய்து தருவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது. அதனால்தான் மனோஜ் ஜரங்கே போராடிக்கொண்டிருக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-says-solomon-pappaiah-is-one-who-took-pattimandram-to-common-people">பட்டிமன்றத்தை பாமரர்களிடம் கொண்டு சென்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா - ரஜினிகாந்த்</a></p><p>* படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்றவர் சாலமன் பாப்பையா.</p><p>* மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences">சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார் - வைரமுத்து</a></p><p>* முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?</p><p>* மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது; மனம் கலங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away">பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்</a></p><p>* அறிஞர்கள் இடையே இருந்த பட்டிமன்றத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா.</p><p>* பாரதியின் கவிதை தொடங்கி கம்பனின் காவியம் வரை பாமரத் தமிழனனுக்கு பக்குவமாய் அறிமுகம் செய்தவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/the-911-attacks-were-just-the-beginning-what-was-the-massive-plot-osama-bin-laden-had-devised-to-destabilize-the-united-states-much-like-the-soviet-union">9/11 தாக்குதல் ஆரம்பம் தான்.. சோவியத் யூனியன் போல அமெரிக்காவை சீர்குலைக்க ஒசாமா பின்லேடன் வைத்திருந்த மிகப்பெரும் சதித்திட்டம் என்ன?<br></a></p><p>*9/11 தாக்குதலை ஒரு விளம்பரமாகப் பயன்படுத்தி, உலகளாவிய முஸ்லிம்களைத் தனக்கு ஆதரவாகத் திரட்ட பின்லேடன் முயன்றார்.</p><p>*சவூதி அரேபிய அரச குடும்பம் உட்படத் தனது எதிரி நாடுகளின் ஆட்சியாளர்களை வீழ்த்துவது பின்லேடனின் மற்றொரு இலக்காகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks">சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி</a></p><p>* சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1893, செப்டம்பர் 11-ம் தேதி சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார்.</p><p>* அவரது எழுச்சியூட்டும் வார்த்தைகள் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-mahakavi-bharathiyar-memorial-day">மனதில் உறுதி வேண்டும்: இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்</a></p><p>* கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர என பல பரிமாணங்கள் கொண்டவர்.</p><p>* இந்த நாளை 'மகாகவி நாள்' என கடைப்பிடிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-reached-london-to-attract-industrial-investments">தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தமிழர்கள் உற்சாக வரவேற்பு</a></p><p>* முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.</p><p>* தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-in-number-1-place-in-wta-ranking">டென்னிஸ் தரவரிசை: நம்பர் 1 இடத்தைப் பிடித்த ரிபாகினா</a></p><p>* அரினா சபலென்கா 99 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்து வந்தார்.</p><p>* சிறு வயது கனவு. அதனை அடைந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/foreign-workers-60-day-grace-period-for-h-1b-visa-renewal-cancel-trump-action">இந்திய ஊழியர்களுக்கு ஆப்படித்த டிரம்ப்.. H-1B விசா புதுப்பிப்புக்கு வழங்கப்படும் 60 நாள் கெடு ரத்து?</a><br><br>*ஏற்கெனவே விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டது.</p><p>*புதிய நிறுவனத்தைத் தேடிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/69th-death-anniversary-ministers-pay-homage-at-immanuel-sekaran-memorial">69-வது ஆண்டு நினைவு தினம்: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை</a></p><p>* பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. </p><p>* உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/brics-conference-in-delhi-what-is-the-point-p-chidambarams-question-sasi-tharoors-answer-bjp-is-having-fun">டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு.. என்ன பயன்? என ப.சிதம்பரம் கேள்வி - சசி தரூர் பதில் - காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடு<br></a><br>*சீன அதிபர் ஜி ஜின் பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வருகிறார்.</p><p>*ரஷிய அதிபர் புதின் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-more-parties-will-join-secular-social-justice-victory-alliance">மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - அமைச்சர் செங்கோட்டையன் </a></p><p>* தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்த தளபதி இருக்கும் வரை அவர் தான் நிரந்தர முதலமைச்சர்.</p><p>* பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம் விரைவில் மின் உற்பத்தி அதிகரிக்கும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/fraud-allegations-sheikh-hasinas-daughter-resigns-from-world-health-organization-post">மோசடி குற்றச்சாட்டுகள்.. உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா மகள்!</a><br><br>*பிப்ரவரி 2024 முதல் அவர் அப்பதவியில் இருந்து வந்தார்.</p><p>*குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran">சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை</p><p>* இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released">புதிதாக 30.. ஆகமொத்தம் 190 அணு ஆயுதங்கள் இந்தியா வசம் உள்ளது - வெளியான அறிக்கை </a><br><br>*140 முதல் 225 அணுஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியம் உள்ளது </p><p>*மேலும் 2 புதிய ஏவுதல் அமைப்புகள் இறுதிக்கட்ட உருவாக்கத்தில் உள்ளன</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026">GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi">BRICS: ஒன்றுகூடும் தலைவர்கள்.. உலக நலனை முன்னிறுத்தி விவாதிப்போம் - பிரதமர் மோடி</a></p><p>*மாநாட்டில் ஈரான் போர் விவகாரம், அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* ரஷிய அதிபர் புதின் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/china-25-dead-in-cargo-ship-fire">சீனாவில் சோகம்.. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு</a></p><p>*5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>* கிங்டாவோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/five-earthquakes-struck-india-tibet-and-afghanistan-in-quick-succession">இந்தியா, திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் பதிவு</a></p><p>*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p><p>*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/85-lakh-bank-employees-across-country-on-strike-today">நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்</a></p><p>* அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது</p><p>* வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு</a></p><p>* வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகி விடுகிறது.&nbsp;</p><p>* சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran">தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் - கனிமொழி</a></p><p>* விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார்  நினைவு நாள் இன்று.</p><p>* இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். </p>]]></content:encoded></item><item><title>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away#comments</comments><guid isPermaLink="false">c0aba220-15e6-4e0e-a274-be1a4f1c65bc</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:25:47 +0000</pubDate><atom:updated>2026-09-11T08:25:47.120Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,madurai,பட்டிமன்றம்,Solomon Pappaiah,pattimandram,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/lzh38z9d/SolomonPappaiah.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappaiah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/lzh38z9d/SolomonPappaiah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.</p><h2>சாலமன் பாப்பையா</h2><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சாலமன் பாப்பையா உரை எழுதி இருக்கிறார்.</p> <h2>கலைமாமணி விருது</h2><p>2000-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் அவர் பெற்றுள்ளார். பட்டிமன்றத்திற்காக முதல்முறையாக பத்மஸ்ரீ விருதை பெற்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.</p><p>மத்திய அரசின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2021-ம் ஆண்டு பெற்றார் சாலமன் பாப்பையா.</p> <h2>பட்டிமன்றம்</h2><p>அறிஞர்கள் இடையே இருந்த பட்டிமன்றத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா.</p><p>பாரதியின் கவிதை தொடங்கி கம்பனின் காவியம் வரை பாமரத் தமிழனனுக்கு பக்குவமாய் அறிமுகம் செய்தவர்.</p><p>தனது எளிமையான நகைச்சுவையான அறிவார்ந்த பேச்சால் பட்டிமன்றத்தை உலக அளவில் கொண்டு சேர்த்தவர்.</p> <h2>நகைச்சுவை கதாப்பாத்திரம்</h2><p>பலரும் திரைத்துறையை நோக்கிச் செல்லும் நிலையில் திரைத்துறையினரை பட்டிமன்றம் நோக்கி வரவைத்தவர் பாப்பையா. பட்டிமன்ற நடுவராக மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் சாலமன் பாப்பையா. சிவாஜி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சாலமன் பாப்பையா நடித்துள்ளார்.</p><p>மதுரையில் காலமான சாலமன் பாப்பையாவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>சி.எஸ்.கே. பங்குகளை வாங்க எம்.எஸ். தோனி முயற்சி செய்யவில்லை: மூத்த அதிகாரி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/csk-deny-dhoni-bid-to-buy-a-stake-but-he-owns-some-shares-anyway</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/csk-deny-dhoni-bid-to-buy-a-stake-but-he-owns-some-shares-anyway#comments</comments><guid isPermaLink="false">667901bc-0677-4002-b9e6-6a4414118a89</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:53:55 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:53:55.611Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CSK,சிஎஸ்கே,MS Dhoni,எம்எஸ் தோனி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gvh5erhl/MSDhoni001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எம்.எஸ். தோனி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gvh5erhl/MSDhoni001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐ.பி.எல். தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து எம்.எஸ். தோனி, சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடி வரும் அவர், அந்த அணியின் பங்குகளை தோனி வாங்க முயன்றதாகக் கூறப்படுவதை அணி நிர்வாகம் மறுக்கிறது. இருப்பினும் அவர் ஏற்கனவே சில பங்குகளை வைத்துள்ளார்.</p><p>சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் பங்கு வாங்க மகேந்திர சிங் தோனி விரும்பினாரா? இது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தோனி CSK-வில் பங்கு வாங்க ஆர்வம் காட்டினார். ஆனால் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி முன்வைத்த நிபந்தனைகளை நிர்வாகம் ஏற்கவில்லை எனச் செய்திகள் வெளியாகினது.</p><p>ஆனால், இதுகுறித்து தோனியுடன் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று CSK-வின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எம்.எஸ். (தோனி) இது பற்றி எங்களிடம் ஒருபோதும் கேட்டதில்லை. நாங்கள் இதுகுறித்து விவாதிக்கவும் இல்லை. என். சீனிவாசனிடம் அவர் இது பற்றிப் பேசியது குறித்த எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை" என்று அந்த மூத்த அதிகாரி கூறினார்.</p><p>அதே சமயம், அந்த அணியில் தோனிக்கு எந்த பங்கும் இல்லை என்று அர்த்தமல்ல. பங்குகள் விற்பனைக்கு வந்தபோது அவர் சில பங்குகளை வாங்கியதாக சென்னை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. CSK பங்குகள் பங்குச் சந்தையில் (open market) வர்த்தகம் செய்யப்படுவதில்லை என்றாலும் (நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை), சந்தைக்கு வெளியே நடைபெறும் தனிப்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் அவற்றை வாங்க முடியும்.</p><h2>ஒரு லட்சம் பங்குகள் வைத்திருக்கும் எம்.எஸ். தோனி</h2><p>கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, தோனி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளார். ஆனால், மொத்தப் பங்கு அமைப்பில் இது மிகச்சிறிய பகுதியாகும். பொதுமக்களிடம் 30 கோடிக்கும் அதிகமான பங்குகள் உள்ளன, இது அணியின் மொத்தப் பங்கு மூலதனத்தில் சுமார் 40 சதவீதமாகும். எனவே, தோனியின் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பங்குகள், பொதுமக்களிடம் உள்ள பங்குகளின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே குறிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், சீனிவாசன் குடும்பத்தினர் அணியில் 55 சதவீதத்திற்கும் அதிகமான கட்டுப்பாட்டுப் பங்குகளை (controlling stake) வைத்துள்ளனர்.</p><p>ஐபிஎல் அணியின் தற்போதைய சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் (கடைசியாக ஒரு ஐபிஎல் அணி 16,600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டது), அவரது பங்குகளின் மதிப்பு 2.6 முதல் 3 கோடி ரூபாய் வரை இருக்கலாம். சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் மற்றும் விளம்பரங்கள் மூலம் அவரது 21 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கையில் அவர் ஈட்டிய வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவான தொகையாகும். தோனி உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 1,200 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூர் நெரிசல்: நான் வலியுறுத்தியும் விஜய்மீது வழக்குப் போடாதது ஏன்? - திமுக, தவெகமீது திருமா பாய்ச்சல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-congestion-why-wasnt-a-case-filed-against-vijay-despite-my-insistence-thiruma-lashes-out-at-dmk-and-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-congestion-why-wasnt-a-case-filed-against-vijay-despite-my-insistence-thiruma-lashes-out-at-dmk-and-tvk#comments</comments><guid isPermaLink="false">e9490fc6-00d5-4be7-aefd-b58b67265241</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:53:37 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:53:37.613Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mbjcs4y6/New-Project-2026-09-11T212258.979.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் நெரிசல்: நான் வலியுறுத்தியும் விஜய்மீது வழக்குப் போடாதது ஏன்? - திமுக, தவெகமீது திருமா பாய்ச்சல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mbjcs4y6/New-Project-2026-09-11T212258.979.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் விவகாரத்தில் தான் வலியுறுத்தியும் விஜய்மீது திமுக வழக்குப் பதியவில்லை என்றும், தவெகவை குறைத்து மதிப்பிட்டதே திமுக தோல்விக்கும் காரணம் என விசிக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-did-the-dmk-bring-the-dmdk-into-the-alliance-against-the-wishes-of-its-coalition-partners-thirumavalavan">திருமாவளவன்</a> தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அவர்.,</p><h2>கரூர் சம்பவத்திற்கு விஜய்யின் தாமதமே காரணம்</h2><p>தவெகவை குறைத்து மதிப்பிட்டதற்கு திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறைதான் காரணம். கணித்திருக்க வேண்டுமா? வேண்டாமா? அதற்கேற்ப எதிர்ப்பு அரசியலை செய்திருக்க வேண்டுமா? வேண்டாமா? கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு தொடர வேண்டும் என்று நான் சொன்னேனா, இல்லையா? ஏன் வழக்கு போடவில்லை.</p><p>அவர் மீது வழக்கு போட என்ன தயக்கம். காலம் தாழ்த்தி வந்தார். வேண்டுமென்றே காலம் தாழ்த்தினார். அதனால் தான் கும்பல் கூடியது. நெரிசல் ஏற்பட்டது. நெரிசல் தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்கிறபோது அதற்கு பொறுப்பேற்கக்கூடிய அத்தனைப் பேரையும் வழக்கில் சேர்த்திருக்க வேண்டுமா? வேண்டாமா? இந்த அணுகுமுறை தானே காரணம்.</p><h2>விஜய் அரசியலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்</h2><p>அப்போதே விஜய் அரசியலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டுமா? வேண்டாமா? திமுகவை குறி வைத்து விஜய் பேசும்போது எதிர்ப்பு அரசியலை செய்திருக்க வேண்டாமா? </p><p>ஆனால் நீங்கள் (திமுக) பேசவில்லை, நான் பேசினேன். விஜய் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்தப் பிள்ளை என்று... அன்றைக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. </p><p>இன்றைக்கு எப்படி நம்பிக்கை வந்தது? விஜய் அதிமுக, பாமக, பாஜக ஆதரவைக் கேட்கவில்லை. காங்கிரஸ் ஆதரவைக் கேட்டார். திருமாவளவன் ஆதரவைக் கேட்டார். </p><p>ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை என்று விமர்சித்துவிட்டு விஜய்யுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே? என்று என்னைக் கேட்கிறார்கள். ஏன்? ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று விமர்சித்த திருமாவை கூட்டணிக்குள் சேர்த்தீர்கள் என்று விஜய்யை யாரும் கேட்கவில்லை.</p><h2>விஜய்தான் வந்தார்... நாங்கள் போகவில்லை</h2><p>அவர்தானே எங்களிடம் வந்தார். நாங்கள் அவரிடம் போகவில்லையே. அவருக்குதான் தேவை இருந்தது. எங்களுக்கு தேவையில்லையே. கூட்டணிக்கு பெயர் வைக்கும்போது சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று சொன்னார்கள்.</p><p>வெற்றிக் கூட்டணி… அந்தக் கூட்டணி… இந்தக் கூட்டணி… என என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அதில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் இருக்க வேண்டும் என்ற சொன்னவன் திருமாவளவன்.</p><p>மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி இப்படித்தான் உருவானது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கூட்டணி கட்சிகளின் விருப்பமில்லாமல் தேமுதிகவை, திமுக உள்ளேக் கொண்டு வந்தது ஏன்? - திருமாவளவன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-did-the-dmk-bring-the-dmdk-into-the-alliance-against-the-wishes-of-its-coalition-partners-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-did-the-dmk-bring-the-dmdk-into-the-alliance-against-the-wishes-of-its-coalition-partners-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">dab3e674-7a93-4eee-aeee-b1a7276654f3</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:30:00.282Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,thirumavalavan,திருமாவளவன்,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/kfyfpe4z/New-Project-2026-09-11T205404.551.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கூட்டணி கட்சிகளின் விருப்பமில்லாமல் தேமுதிகவை, திமுக உள்ளேக் கொண்டு வந்தது ஏன்? - திருமாவளவன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/kfyfpe4z/New-Project-2026-09-11T205404.551.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூட்டணியில் இருந்து விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் வெளியேறியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என விசிக தலைவர்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-support-tvk-alliance"> திருமாவளவன்</a> குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இதுதொடர்பாக பேசிய அவர்.,</p><h2>திமுகவின் அணுகுமுறை</h2><p>திமுக கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன் நான். இன்று அவதூளை அள்ளி வீசுபவர்களுக்கு இது தெரியாது. கூட்டணியை காப்பாற்றும் முயற்சியை திமுகவால் எடுக்கமுடியவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.</p><p>காங்கிரஸோடு நல்ல உறவை திமுக பேணியிருந்தால், காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறியிருக்குமா? தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுடனான திமுகவின் அணுகுமுறை எப்படி இருந்தது? </p><h2>திடீரென உள்ளே வந்த தேமுதிக..</h2><p>தேமுதிகவை திடீரென கூட்டணியில் சேர்த்தது மற்ற கூட்டணியினருக்கு மகிழ்ச்சியை அளித்ததா? தோற்றாலும் ஒன்றாக இருக்கலாம் என முடிவெடுக்கும் அளவில் திமுக - விசிக உறவு இல்லை. </p><p>கூட்டணியை விட்டுவிலக அமைச்சர் பதவி காரணம் இல்லை. திமுகவுடன் நல்லுறவு இல்லாததே காரணம். காங்கிரஸ், இடதுசாரிகள் சென்றபின்தான் விசிக சென்றது. </p><p>இடைத்தேர்தலில் நிற்கமாட்டேன், அமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன் என தொடக்கத்தில் இருந்தே மறுதலித்தவன் நான்.</p><h2>தவெக கூட்டணிக்கு வன்னி அரசே காரணம்..</h2><p>பின்னர் ஏன் விலகினேன்? ஒரு எளியக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் அமைச்சராகும் வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பை தவறவிடுவது ஏற்புடையதல்ல. 30 ஆண்டுகள் என்னுடன் விசுவாசமாக பயணித்தவர் வன்னி அரசு. அவருக்காகத்தான் இந்த முடிவு.</p><p>திராவிட இயக்கங்கள் இதை பாராட்ட வேண்டுமா? அவதூறு செய்யவேண்டுமா? திமுக கூட்டணியில் விசிக நீடிக்காத்தற்கு பொறுப்பு திமுகதான். கூட்டணி கட்சிகள் வெளியே சென்றதற்கு திமுகவின் அணுகுமுறை.” </p><p>எனப் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>கைது செய்யப்பட்ட தொண்டர்கள்: காவல் நிலையத்தில் கண்ணீர் விட்ட பாஜக அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/national/up-minister-breaks-down-at-police-station-over-detention-of-bjp-workers</link><comments>https://www.maalaimalar.com/news/national/up-minister-breaks-down-at-police-station-over-detention-of-bjp-workers#comments</comments><guid isPermaLink="false">bf5b8fa6-87a9-4a2b-8c6f-6dc270cd9bcc</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:28:16 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:28:16.521Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,BJP,பாஜக,உத்தர பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m95vwfoc/RakeshRathore001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உ.பி. அமைச்சர் ராகேஷ் ரதோர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m95vwfoc/RakeshRathore001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேச மாநிலம் ரம்பா மஹால் என்ற இடத்தில் ஆக்கிரமிப்பை நீக்குவது தொடர்பாக பாஜக தொண்டர்களுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இருதரப்பிற்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் பாஜக தொண்டர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.</p><p>கைது செய்தவர்களை சந்திப்பதற்காக உத்தர பிரதேச மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராகேஷ் ரதோர் குரு, தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது கண்ணீர் சிந்தினார்.</p><h2>இந்த சம்பவம் தொடர்பாக ராகேஷ் ரதோர் குரு கூறியதாவது:-</h2><p>ஏதேனும் ஒரு விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு வர வேண்டிய நிலை எனக்கு ஏற்படுவது என் வாழ்க்கையில்  இதுவே முதல் முறை. உள்ளூர் ரவுடியாக திகழும் முஜிப் அகமது மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஆனால், அவரது கைது செய்யப்பட்டு, அதிகாரிகளுடன் போட்டோ எடுத்துக் கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டார். ஆனால், பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அமர்வதற்கு இருக்கைகள் கூட வழங்கப்படவில்லை.</p><p>எஸ்.பி. உள்பட அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளுடன் பேசினேன். நீண்ட நேரம் ரிலீஸ் செய்யும்படி கேட்டுக் கொண்டேன். அவர்கள் உத்தரவாதம் தந்தார்கள் தவிர, ரிலீஸ் செய்யவில்லை. வாக்குவாதத்தின்போது ஏதாவது தவறான வார்த்தைகள் பயன்படுத்தினால், அதற்காக நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இளம் வயதினர் சில சமயங்களில் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறலாம்; எனவே, நிர்வாகம் உணர்வுப்பூர்வமாகவும் கனிவுடனும் செயல்பட வேண்டும்.</p><p>எனது தொண்டர்களுக்கு அளிக்கும் மரியாதைக்காகவே நான் இங்கு வந்துள்ளேன். தொண்டர்கள் இல்லையென்றால், பிறகு பாஜக எங்கே இருக்கும்?</p><p>இவ்வாறு அமைச்சர் ராகேஷ் ரதோர் குரு தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பினராயி விஜயன் ஆட்சிக் காலத்தில் அதிக அளவில் தனிப்பட்ட பணியாளர்கள் நியமனம்: வி.டி. சதீசன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/cm-satheesan-stands-by-claim-787-personal-staff-appointed-during-ldf-govt-tenure</link><comments>https://www.maalaimalar.com/news/national/cm-satheesan-stands-by-claim-787-personal-staff-appointed-during-ldf-govt-tenure#comments</comments><guid isPermaLink="false">cee95759-15f4-4649-823b-bc7455092223</guid><pubDate>Fri, 11 Sep 2026 14:51:38 +0000</pubDate><atom:updated>2026-09-11T14:51:38.458Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பினராயி விஜயன்,Pinarayi Vijayan,VD Satheesan,விடி சதீசன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/oicmjt4y/VDSatheesan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பினராயி விஜயன்- விடி சதீசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/oicmjt4y/VDSatheesan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜய் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தனிப்பட்ட பணியாளர் 787 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்று தற்போதை முதலமைச்சர் வி.டி. சதீசன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், பினராயி விஜய் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.</p><p>இந்த நிலையில், நான் சொன்னது உண்மை. இந்த உறுதியாக இருக்கிறேன் என்ற வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் சதீசன் கூறியிருப்பதாவது:-</p><p>பெயர்களை மட்டுமல்ல, தனிப்பட்ட பணியாளர்களின் முகவரி உள்பட அனைத்து விவரங்களையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த நியமனம் 2021-ம் ஆண்டில் இருந்து 2026-ம் ஆண்டு வரை நடைபெற்றுள்ளது.</p><h2>முதலமைச்சர் சமூக வலைத்தளங்களுக்காக 12 பேர்</h2><p>முதலமைச்சர் சமூக வலைத்தளங்களை கையாள்வதாக கூடுதலாக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 22,290 ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மாதத்திற்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேலும், வருடத்திற்கு 84 லட்சம் ரூபாயும் சமூக வலைத்தளங்களை கையாள்வதற்காக மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.</p><p>இதை எல்லாம் செய்தவர்கள் தற்போது எங்களது அரசை இழிவுப்படுத்த முயற்சிக்கிறது. எங்களுடைய அரசு குறிப்பிட்ட வரையறையை மீறவில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான 478 தனிப்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு சதீசன் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ஷான் மசூத்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-3rd-test-shan-masood-missed-century</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/eng-vs-pak-3rd-test-shan-masood-missed-century#comments</comments><guid isPermaLink="false">e59f2bae-e69f-457c-842e-7bf2f23cdae1</guid><pubDate>Fri, 11 Sep 2026 14:30:51 +0000</pubDate><atom:updated>2026-09-11T14:30:51.670Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Shan Masood,ஷான் மசூத்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wiu8cw29/shanMasood001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஷான் மசூத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wiu8cw29/shanMasood001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த 9-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்கியது.</p><h2>133 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்</h2><p>டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 133 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஜோஷ் டாங்க் 4 விக்கெட்டும், ஜாஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>இங்கிலாந்து 453 ரன்கள் குவிப்பு</h2><p>பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 453 ரன்கள் குவித்தது. ஹாரி ப்ரூக் 75 ரன்களும் டான் லாரன்ஸ், ஜேமி ஸ்மித், எமிலியோ கே, ஒல்லி ராபின்சன் ஆகியோர் அரைசதம் அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் ரசயுல்லா 4 விக்கெட்டும், முகமது அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>320 ரன்கள் பின்தங்கியது பாகிஸ்தான்</h2><p>320 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. அசான் அவைஸ் 29 ரன்களுடனும், ஷான் மசூத் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடக்க வீரர் சைம் ஆயுப், 3-வது வீரராக களம் இறங்கிய அப்துல்லா ஷபிக் ஆகியோர் டக் அவுட் ஆகினர்.</p><p>இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது, இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவைஸ் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷான் மசூத் உடன் கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது.</p><h2>சதத்தை தவறவிட்ட ஷான் மசூத்</h2><p>ஷான் மசூத் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 95 ரன்கள் எடுத்த நிலையில் அட்கின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 12 பவுண்டரிகள் அடங்கும். 5-வது விக்கெட்டுக்கு பாபர் அசாம் உடன் சாத் ஷாகீல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தற்போது வரை நிலைத்து நின்று விளையாடி வருகிறது.</p><p>பாபர் அசாம் 54 ரன்களுடனும், ஷகீல் 14 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 70 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு... 40 பேர் காயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/tourist-bus-overturns-in-switzerland-5-dead-40-injured</link><comments>https://www.maalaimalar.com/news/world/tourist-bus-overturns-in-switzerland-5-dead-40-injured#comments</comments><guid isPermaLink="false">ec88db06-b030-487f-b64d-738d0307788a</guid><pubDate>Fri, 11 Sep 2026 14:12:43 +0000</pubDate><atom:updated>2026-09-11T14:12:43.283Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சுவிட்சர்லாந்து,switzerland,Dutch tour bus,Alpine,சுற்றுலாப் பேருந்து,ஆல்ப்ஸ் மலைத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ulz4grt4/New-Project-2026-09-11T194109.604.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு... 40 பேர் காயம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ulz4grt4/New-Project-2026-09-11T194109.604.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிழக்கு <a href="https://www.maalaimalar.com/news/world/iran-us-peace-agreement-to-be-signed-on-june-19-switzerland-announces">சுவிட்சர்லாந்தின்</a> ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். </p><p>விசாரணையில், விபத்தில் சிக்கிய பேருந்து, 48 பேருடன் பயணித்த நெதர்லாந்தின் சுற்றுலாப் பேருந்து என தெரியவந்துள்ளது.</p><p>ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் உள்ள கிராபுண்டன் மாகாணத்தின் சுஷ் மற்றும் ஜெர்னெஸ் கிராமங்களுக்கு இடையே உள்ள சாலையில், நேற்று (செப்.10) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>டச்சு சுற்றுலா நிறுவனமான OAD மூலம் இயக்கப்பட்ட இந்தப் பேருந்து, திடீரென சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதி, பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேறு எந்த வாகனமும் சிக்கவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>3 பேர் கவலைக்கிடம்</h2><p>விபத்துக்குள்ளான பேருந்தில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 48 டச்சு நாட்டவர் பயணம் செய்துள்ளனர். நெதர்லாந்திலிருந்து திங்கட்கிழமை புறப்பட்ட இவர்கள், ஆஸ்திரியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு ஒரு நாள் பயணமாக வந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.</p><p>இதில் 30 பேர் லேசான காயங்களுடனும், 7 பேர் கொஞ்சம் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டமாகவும், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, இதுதொடர்பாக விசாரணை நடத்த &nbsp;சுவிஸ் அதிபர் கை பார்மெலின் உத்தரவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தீபிகா படுகோனேவின் கர்ப்ப கால &apos;போட்டோசூட்’</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/deepika-padukone-maternity-photoshoot</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/deepika-padukone-maternity-photoshoot#comments</comments><guid isPermaLink="false">d6d41e69-11dc-4d5b-9f1b-abaa4a0fae43</guid><pubDate>Fri, 11 Sep 2026 13:48:04 +0000</pubDate><atom:updated>2026-09-11T13:48:04.920Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Deepika Padukone,தீபிகா படுகோனே,Photoshoot,போட்டோஷூட்,Maternity,கர்ப்பகாலம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/5or9q92p/deepika.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ranveer singh- Deepika padikone]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/5or9q92p/deepika.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் ரன்வீர்சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட தீபிகா படுகோனேவிற்கு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி துவா என்ற மகள் பிறந்தார். </p><p>இருவரும் தங்களது மகள் துவாவின் 2-வது பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ள தீபிகா படுகோனே தனது கர்ப்பகால படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p>தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"பேபி துவாவும், எங்கள் இதயங்களும் பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. </p><p>உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார். கர்ப்ப கால போட்டோ ஷுட்டின் போது தீபிகா படுகோனே ரூ.48,643 மதிப்புள்ள ஆடையை அணிந்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மிகக் கடுமையான வெப்ப ஆண்டாக 2027 இருக்கும்- ஐரோப்பிய கால நிலை மையம் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/european-climate-agency-warns-2027-hottest-year</link><comments>https://www.maalaimalar.com/news/world/european-climate-agency-warns-2027-hottest-year#comments</comments><guid isPermaLink="false">e4054aaa-b0d7-44d6-b638-e75f01a6ef23</guid><pubDate>Fri, 11 Sep 2026 13:15:29 +0000</pubDate><atom:updated>2026-09-11T13:15:29.148Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>europe,Heat wave,ஐரோப்பியா,வெப்பம்,EL-Nino,கால நிலை மாற்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/s2hk5vct/world.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ El Nino]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/s2hk5vct/world.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம்   வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலேயே மிகக் கடுமையான வெப்பம் நிலவிய மாதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது.</p><h2>எல் நினோ </h2><p>மேலும், வலுவடைந்து வரும் எல் நினோ காரணியால் வரவிருக்கும் நாட்களில் நிலவரம் இன்னும் மோசமடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>நிலம் மற்றும் கடல் பரப்பில் உலகளாவிய வெப்பம் நிலவியதன் உச்சக்கட்டமாக, மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கடுமையான வெப்ப அலைகளும் காட்டு தீயும் ஏற்பட்டன.</p><p>கோப்பர் நிகஸ் காலநிலை மாற்ற சேவை மையத்தின் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தின் சராசரி உலகளாவிய காற்று வெப்பநிலை 62.52 டிகிரியாக இருந்தது.</p><p>இது இதற்கு முன் ஜூலை 2023ல் பதிவான சாதனையை விட 32.01 டிகிரி அதிகமாகும்.</p><h2>ஆகஸ்டில் அதிகபட்ச வெப்பநிலை  </h2><p>இருப்பினும், இந்த இடைவெளி மிகவும் குறைவு என்பதால், ஐரோப்பிய கண்காணிப்பு மையம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 2  மாதங்களையுமே மிக அதிகபட்ச வெப்பநிலை கொண்ட மாதங்களாகக் கருதுகிறது.</p><p>கோப்பர்நிகஸ் மையத்தின் தரவுகள் 1940ம் ஆண்டு முதல் நிலவும் பதிவுகளை கொண்டு கணக்கிடப்பட்டவை என்றாலும், பனிக்கட்டிகள், மர வளையங்கள் மற்றும் பவளப்பாறைகளில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, மனித குலம் இதுவரை கண்டிராத மிக அதிக வெப்பநிலையைத் தற்போது அனுபவித்து வருகிறது.</p><h2>கடல்சார் வெப்ப அலைகள் </h2><p>இந்த விதிவிலக்கான கோடை வெப்பநிலை, தொடர்ச்சியாக 3 மாதங்களாக கடல் மேற்பரப்பு வெப்பநிலையையும் மிக கடுமையான உச்சத்திற்கு தள்ளியுள்ளது.</p><p>சில வெப்பமடைந்த கடல் பகுதிகளில் கடல்சார் வெப்ப அலைகள்  தொடர்ச்சியாக 60 நாட்களுக்கும் மேலாக நீடித்து, இந்தச் சூழ்நிலை எவ்வளவு அசாதாரணமானது மற்றும் தீவிரமானது என்பதை வெளிப் படுத்தியுள்ளது.</p><p>உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஆகஸ்ட் மாதத்தில் ஒரு புதிய உலகளாவிய சாதனையைப் படைத்ததோடு, இதுவரை பதிவான கடல்களின் மிக வெப்பமான மாதமாகவும் இது கருதப்படுகிறது.</p><p>கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் உலகளாவிய வெப்பமயமாதலே இதற்கு முதன்மையான காரணமாகும்.</p><p>அதே நேரத்தில், பசிபிக் பெருங்கடலில் அசாதாரணமான சூடான நீர் திரள்வதனால் உருவாகும் எல் நினோ நிகழ்வும் தீவிரமடைந்து வருகிறது.</p><p>இந்த எல் நினோ, உலக அளவில் மழை மற்றும் காற்றோட்ட அமைப்புகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்கிறது.</p><p>உச்சமடையும் காலநிலை கணிப்பாளர்கள் கணிப்புப்படி, இந்த ஆண்டின் எல் நினோ நிகழ்வு ஆண்டின் இறுதியில் உச்சமடைந்து, நவீன காலத்தில் பார்க்கப்படாத ஒரு புதிய தீவிரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஆரம்பத்தில் 2026ம் ஆண்டே மிக அதிக வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய தரவுகளின்படி 2026-ம் ஆண்டு மட்டுமல்லாமல் 2027-ம் ஆண்டும் சாதனைகளை தகர்க்கும் மிக கடுமையான வெப்பமான ஆண்டாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது.</p><p>எரிபொருள்  காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இணைந்து செயல்படுவதால், அடுத்த 6  மாதங்களில் தொடர்ந்து புதிய சாதனைகள் முறியடிக்கப்படலாம்.</p><p>2003-ம் ஆண்டின் சாதனையை முறியடித்து மேற்கு ஐரோப்பாவும் தனது மிக வெப்பமான கோடை காலத்தைச் சந்தித்துள்ளது.</p><p>நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை எரிப்பதை நாம் நிறுத்தும் வரை, காலநிலை மாற்றம் ஒ வ்வொரு எல் நினோ நிகழ்வையும் இன்னும் வெப்ப மானதாக மாற்றும்.</p><p>இதனால் இது போன்ற சாதனை முறி யடிக்கும் வெப்ப நிலை மாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>மோதல்களை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, ராஜந்திரமுமே வழி: புதினிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/russian-president-putin-pm-modi-reiterated-that-dialogue-and-diplomacy-was-the-way-forward-in-resolving-conflicts</link><comments>https://www.maalaimalar.com/news/national/russian-president-putin-pm-modi-reiterated-that-dialogue-and-diplomacy-was-the-way-forward-in-resolving-conflicts#comments</comments><guid isPermaLink="false">cda22d23-20a5-4742-81e6-2ac690cc72d8</guid><pubDate>Fri, 11 Sep 2026 13:11:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T13:11:34.469Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Putin,புதின்,BRICS,பிரிக்ஸ்,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n5em7ake/ModiPutin0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய பிரதமர் மோடி- ரஷிய அதிபர் புதின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n5em7ake/ModiPutin0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கான ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்துள்ளார். டெல்லி வந்துள்ள புதினை, இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.</p><p>இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து இந்தயி வெளியுறவுத்துறை அமைச்சம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-</p><p>* ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையில், மோதல்களைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே வழி என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.</p><h2>அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயார்</h2><p>* ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையில், உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.</p><p>* அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் திறன் பரிமாற்றம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் விவாதித்தனர்.</p><h2>ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி</h2><p>* 24-வது இந்தியா- ரஷியா மாநாட்டிற்காக ரஷியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். மேலும் மோடி அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்</p><p>* மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் தங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.</p><p>* BRICS உட்பட பலதரப்புத் துறையில் இந்தியா- ரஷியா ஈடுபாடு குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.</p><p>இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா 5 லட்சம் வீரர்களை இழந்துள்ளது: இங்கிலாந்து பாதுகாப்புப்படை தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/world/more-than-500000-russian-troops-killed-in-ukraine-uk-defence-chief-says</link><comments>https://www.maalaimalar.com/news/world/more-than-500000-russian-troops-killed-in-ukraine-uk-defence-chief-says#comments</comments><guid isPermaLink="false">4f3938c2-4f07-449a-9cb3-6abd2b743593</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:44:40 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:44:40.091Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிரோன் தாக்குதல்,drone attack,உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4ewqzrsw/UkraineProtest0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உக்ரைன்- ரஷியா போர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4ewqzrsw/UkraineProtest0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்த் தொடுத்தது. முதலில் உக்ரைன் பின்வாங்கியது. பின்னர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது.</p><p>தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மூலம் ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக நீண்டு தூரம் சென்று தாக்கும் டிரோன்களை ரஷியாவுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. 4 ஆண்டுகளை தாண்டியும் நடைபெறும் இந்த சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு பக்கத்திலும் ஏராளமான உயிரிழப்புகள், பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.</p><h2>5 லட்சம் வீரர்கள்</h2><p>இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிராக போரில் ரஷியாவைச் சேர்ந்த 1.5 மில்லியன் (15 லட்சம் வீரர்கள்) காயம் மற்றும் உயிரிழந்திருக்கலாம். இதில் உயிரிழந்தவர்கள் 5 லட்சம் பேர் என்று இங்கிலாந்தின் பாதுகாப்புப்படை தலைவரான விமானப்படை தலைவர் மார்ஷல் ரிச்சர்ட் நைட்டன் தெரிவித்துள்ளார்.</p><p>உக்ரைன் ராணுவம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. இது ஒத்துப்போகும் வகையிலான தகவலை தற்போது இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இதற்கு ரஷியா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.</p><h2>20 ஆயிரம் வாகனங்கள்</h2><p>வீரர்களுடன் அதிக அளவில் ராணுவ தளவாடங்களையும் இழந்துள்ளது ரஷியா. 10 ஆயிரம் ஆயுதம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள், சுமார் 3,000 வான் பாதுகாப்பு மற்றும் பீரங்கி அமைப்புகள், 370 விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை இழந்துள்ளது என்றும் நைட்டன் தெரிவித்துள்ளார். அதேவேளையில் உக்ரைனின் இழப்பை அவர் வெளிப்படுத்தவில்லை.</p><h2>தொடர்ந்து 2-வது நாட்களாக தாக்குதல் நடத்திய ரஷியா</h2><p>இதற்கிடையே வெள்ளிக்கிமையான இன்று தொடர்ந்த 2-வது நாளாக உக்ரைனின் கீவ் நகரில் உள்ள சாலையோ கியாஸ் நிலையத்தை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இரண்டு கியாஸ் நிலையம் மீது நடத்திய தாக்குதலில் இரணடு பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர்.</p><p>மத்திய உக்ரைனில் உள்ள பவ்லோஹார்டு நகரில் உள்ள ஷாப்பில் மால் மிது ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் ஐந்து பேர் பலியானார்கள்.</p><h2>உக்ரைன் டிரோன் தாக்குதல்</h2><p>ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 777 டிரோன்களை தடுத்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/take-care-of-your-health-he-said-and-left-stalin-on-salomon-papayya</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/take-care-of-your-health-he-said-and-left-stalin-on-salomon-papayya#comments</comments><guid isPermaLink="false">3f8563d7-cd2f-4f95-87c9-64a1e80e86ec</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:35:17 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:35:17.772Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MKStalin,மு.க ஸ்டாலின்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="1210" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xso7kbo5/WhatsApp-Image-2026-09-11-at-6.01.22-PM-1.jpeg" width="1300"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xso7kbo5/WhatsApp-Image-2026-09-11-at-6.01.22-PM-1.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மறைவு </h2><p>பட்டிமன்ற பேச்சால் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை கட்டிப்போட்ட சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று தனது சொந்த ஊரான மதுரையில் காலமானார்.</p> <h2>மு.க .ஸ்டாலின் இரங்கல்</h2><p>இந்நிலையில் இவரின் மறைவிற்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் –<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-helmet-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-tvk-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D"> மதுரை </a>மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.</p><p>திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.</p><h2>பாப்பையாவோடுதான் பண்டிகை தொடங்கும்</h2><p>பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/every-festive-morning-began-with-you-csk-management-condoles-the-passing-of-solomon-pappaiah">பண்டிகை </a>நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். </p><p>பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். </p><p>தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.</p><p>தலைவர் கருணாநிதி மீதும், என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா. திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. </p><p>எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும், வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம். </p><p>கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். </p><p>சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.</p><p>தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும், மதுரை மக்களுக்கும், உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழுக்கான அவரது பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும்..! சாலமன் பாப்பையா மறைவு குறித்து சரத்குமார் உருக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/salomon-pappaiya-s-legacy-to-tamil-will-forever-endure-says-sarathkumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/salomon-pappaiya-s-legacy-to-tamil-will-forever-endure-says-sarathkumar#comments</comments><guid isPermaLink="false">49d797af-6499-4b66-aafd-5cfc42793b67</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:30:59 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:30:59.324Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Sarathkumar,சரத்குமார்,மறைவு,சாலமன் பாப்பையா,soloman paapaiah</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xqly3djg/sarath.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Soloman pappaihh- Sarathkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xqly3djg/sarath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், நடிகர் சரத்குமார் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-  </p><p>“அன்புப் பெரியோர்களே…</p><p>அருமைத் தாய்மார்களே…</p><p>இனிய குழந்தைகளே…”</p><p>என்ற அன்பான குரலின் வாயிலாக தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நுழைந்து, தனது இனிய பேச்சாலும், நகைச்சுவை கலந்த நயமான தமிழாலும், பட்டிமன்ற மேடைகளைப் பண்பாட்டின் பெருமைமிக்க அரங்குகளாக மாற்றிய பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.</p><p>தமிழ் மொழிக்கும், இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்கும் அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது.  தமிழறிஞரின் மறைவு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு மிகுந்த பேரிழப்பு. </p><p>அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் புகழும், தமிழுக்கான அவரது பங்களிப்பும் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய முடியும்... ஆனால்’ - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!</title><link>https://www.maalaimalar.com/news/national/if-i-wanted-to-i-could-arrest-jagan-mohan-reddy-in-a-minute-but-chief-minister-chandrababu-naidu</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-i-wanted-to-i-could-arrest-jagan-mohan-reddy-in-a-minute-but-chief-minister-chandrababu-naidu#comments</comments><guid isPermaLink="false">a7ef767b-fad8-4bff-8ac7-882a4d458b2e</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:16:54 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:16:54.354Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra,cm chandrababu naidu,ஆந்திரா,YS Jagan Mohan Reddy,முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/s0ml37q6/New-Project-2026-09-11T174015.692.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய முடியும்... ஆனால்’ - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/s0ml37q6/New-Project-2026-09-11T174015.692.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய முடியும் என்றும், ஆனால் அத்தகைய நடவடிக்கை மக்களுக்கு பயனளிக்காது என்றும் ஆந்திர முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/chandrababu-naidu-to-open-rs-900-crore-projects-at-tirupati-seven-hills-temple">சந்திரபாபு நாயுடு</a> தெரிவித்துள்ளார். </p><p>கடந்த ஆட்சியில் அம்மாநில திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை நினைவுக்கூர்ந்த சந்திரபாபு நாயுடு, அது தனது வாழ்வில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய சம்பவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நேற்று கோனசீமா மாவட்டம், அம்பாஜிபேட்டா மண்டலத்திலுள்ள பாண்டுவாரிபேட்டா கிராமத்தில் மக்களிடையே உரையாற்றிய அவர்.,</p><p>“ஜெகன் மோகன் ரெட்டியிடம் நான் மென்மையாக நடந்துகொள்வதாக சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், எனக்கு அதிக பொறுமை உண்டு.  </p><p>நான் செய்யும் எதுவாக இருந்தாலும் அது தெலுங்கு மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும் என்றே எப்போதும் நினைக்கிறேன். </p><p>என் வாழ்நாளில் எனக்கு நடக்கவேக்கூடாது என்று நான் நினைத்த ஒன்று, நான் 53 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவித்தபோது நடந்தது. என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. </p><p>அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் என் மீதான வழக்குகளில் எந்தத் தவறும் இல்லை என்று கண்டறிந்தன. </p><p>ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை முதலமைச்சராக இருந்தபோதே, தனது மகனை பெங்களூருவில் தள்ளி வைத்திருந்தார் என்றும், அவரை ஆந்திரப் பிரதேசத்திற்கு வர அனுமதிக்கவில்லை என்றும் கூறும் உண்மையில் இருந்தே மக்கள் அவருடைய குணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.</p><p>முன்னாள் அமைச்சர் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டபோது, ​​நான் முதலமைச்சராகப் பணியாற்றிய போதிலும், அதற்காக என் மீது பழி சுமத்தப்பட்டது. </p><p>ஜெகன் ரெட்டி சொத்துக்காகத் தன் சொந்தத் தாயையும், சகோதரியையும் கூட ஏமாற்றியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு மனிதருடன் நான் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.</p><p>என்னால் ஜெகன் மோகன் ரெட்டியை ஒரு நிமிடத்தில் கைது செய்ய முடியும். ஆனால், நான் மாநிலத்தில் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. </p><p>உண்மை வென்றுவிட்டது. அன்றைய அந்த இருண்ட நாட்களை நினைவுகூர்கையில்... எனக்கு ஆதரவளித்த தெலுங்கு சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>பழிவாங்கும் அரசியலை விடுத்து அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் ஆந்திராவை இந்தியாவின் முதன்மை மாநிலமாக கொண்டுவர கடுமையாக உழைத்து வருகிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் உலகளவில் தெலுங்கு மக்கள்தான் அதிக தனிநபர் வருமானத்தை பெறுவார்கள் என நான் நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.</p><h2>சந்திரபாபு நாயுடு கைது</h2><p>ஆந்திரப் பிரதேச திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், 2023ம் ஆண்டு செப்.9ம் தேதி ஆந்திராவின் தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசால் கைது செய்யப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் முன்னேற்றத்தை ஜீரணிக்க முடியவில்லை: பிரிக்ஸ் குறித்த காங்கிரஸ் எதிர்மறை எண்ணங்களுக்கு பாஜக பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/national/congress-unable-to-digest-indias-progress-spreading-negativity-over-brics-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/congress-unable-to-digest-indias-progress-spreading-negativity-over-brics-bjp#comments</comments><guid isPermaLink="false">e74dc6f8-869b-42b5-beed-93ed966855f6</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:08:51 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:08:51.386Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,BRICS,பிரிக்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/v9sikf7f/BRICSBJPCongresss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரிக்ஸ் மாநாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/v9sikf7f/BRICSBJPCongresss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. பிரிக்ஸ் மாநாட்டிற்கு உலக நாட்டின் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே இந்த பிரிக்ஸ் மாநாட்டில் என்ன லாபம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.</p><p>இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்தை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால்தான் பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக எதிர்மறையாக கருத்துகளை பரப்பி வருகின்றனர் என்று பாஜக-வின் தேசிய செய்தி தொடர்பான சம்பித் பத்ரா தெரிவித்து்ளளார்.</p><h2>இது தொடர்பாக சம்பித் பத்ரா வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-</h2><p>2011-12 காலகட்டத்தில் BRIC அமைப்பில் உள்ள `I' (இந்தியா) நிலையற்ற தன்மையை எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்தியா BRICS-இன் மிக வலுவான கூட்டாளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இன்று, உலக அரங்கில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது இடத்தைப் பிடித்துள்ளது.</p><h2>BRICS-ல் வலுவான உறுப்பினராக திகழும் இந்தியா</h2><p>நினைவில் கொள்ளுங்கள், BRICS-இல் உள்ள `I' என்பது இந்தியாவைக் குறிக்கிறது. அந்த `I' இந்தியாவின் 140 கோடி மக்களையும் குறிக்கிறது. நானே இந்தியா. BRICS-இன் மிக வலுவான கூட்டாளிகளில் ஒருவனாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இன்று, இந்தியாவின் குடிமகனாகவும், BRICS-இன் மிக வலுவான உறுப்பினராகவும் இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.</p><p>இன்று, காங்கிரஸ் கட்சியும் சில எதிர்க்கட்சிகளும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு குறித்து எதிர்மறை எண்ணங்களைப் பரப்பவும், ஒரு எதிர்மறையான சூழலை உருவாக்கவும் முயற்சிக்கின்றன. அவர்களுக்கு ஒரு கண்ணாடியைக் காட்ட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.</p><p>மதிப்பீட்டு அடிப்படையில் 2012-இல் பிரிக் (BRIC) உறுப்பு நாடுகளில் மிகவும் குறைவான ஈர்ப்பைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது என்பதை கோல்ட்மேன் சாக்ஸ் கட்டுரை தெளிவாகக் கூறுகிறது.</p><p>இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘ஒவ்வொரு பண்டிகை காலையும் உங்களுடன்தான் தொடங்கும்’ - சாலமன் பாப்பையா மறைவிற்கு சிஎஸ்கே நிர்வாகம் இரங்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/every-festive-morning-began-with-you-csk-management-condoles-the-passing-of-solomon-pappaiah</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/every-festive-morning-began-with-you-csk-management-condoles-the-passing-of-solomon-pappaiah#comments</comments><guid isPermaLink="false">7d7a02d0-39ee-4b1f-b98b-16003e676080</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:46:06 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:46:06.308Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai super kings,சென்னை சூப்பர் கிங்ஸ்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/5f5c057f/New-Project-2026-09-11T171326.554.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஒவ்வொரு பண்டிகை காலையும் உங்களுடன்தான் தொடங்கும்’ - சாலமன் பாப்பையா மறைவிற்கு சிஎஸ்கே நிர்வாகம் இரங்கல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/5f5c057f/New-Project-2026-09-11T171326.554.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/salamon-pappaiya-turning-pattimandram-into-tamil-peoples-celebration">சாலமன் பாப்பையா </a>வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மதுரையில் உயிரிழந்தார்.</p><p> அவரின் மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் இரங்கல் தெரிவித்து வருகிறது.</p><p>இந்நிலையில் அவரின் மறைவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது. </p><p>சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளப் பதிவில்.,</p><p>“அன்புத் தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே… இனிய குழந்தைகளே…!”</p><p>தமிழ்நாட்டில் ஒவ்வொரு பண்டிகைக் காலையும் உங்களுடன்தான் தொடங்கும். எங்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் வைத்த நீங்கள், நம் கொண்டாட்டங்களின் மறக்க முடியாத அங்கம்!</p><p>தமிழறிஞராக, உங்கள் தமிழ்மீதான அன்பும், உங்கள் சொற்களும் பல தலைமுறைகளின் நெஞ்சில் நீங்காத தடம் பதித்தன.</p><p>தமிழுக்கும், பட்டிமன்றத்துக்கும் தங்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும், சாலமன் பாப்பையா அய்யா.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-must-abandon-the-move-to-set-up-the-secretariat-at-pattinapakkam-eps-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-must-abandon-the-move-to-set-up-the-secretariat-at-pattinapakkam-eps-urges#comments</comments><guid isPermaLink="false">1e4e1801-d324-4fa4-ac09-98ced395cba2</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:28:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:28:53.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,பட்டினப்பாக்கம்,தலைமைச் செயலகம்,Secretariat,pattinapakkam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/b9moxw0q/New-Project-2026-09-11T165825.082.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/b9moxw0q/New-Project-2026-09-11T165825.082.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசால் முன்மொழியப்பட்ட புதிய தலைமைச் செயலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் இடத்தேர்வை கைவிடவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>நெருக்கடியான பகுதி</h2><p>“புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.</p><p>இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.</p><h2>தற்போதைய சூழலில் அவசியமற்றது</h2><p>விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.</p><p>புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை. தமிழ்நாட்டின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். </p><p>தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை- தற்போதைய நிலவரம்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-morning-dip-evening-surge-current-status</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-morning-dip-evening-surge-current-status#comments</comments><guid isPermaLink="false">bb37b493-5424-4270-83e1-d03ac6bb81cf</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:13:44 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:13:44.408Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gold rate,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,todays gold rate</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/f9jjgg7f/gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/f9jjgg7f/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது.</p><p>சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது.</p><p>அதனை தொடர்ந்து 3-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026" rel="nofollow">தங்கம் விலை</a> குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது.</p><p>அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.14,190-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.</p><p>7-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 130-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 8-ந்தேதி கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. 9-ந்தேதி சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும் விற்பனையானது.</p><p>நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,040-க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும் விற்பனையானது.</p><h2>காலை நிலவரம்</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>மாலை நிலவரம்</h2><p>சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்த நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது.</p><p>சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இன்று காலை தங்கம் கிராமுக்கு ரூ.240 குறைந்திருந்த நிலையில் தற்போது ரூ.140 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனையானது.</p><h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>11-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,120</p><p>10-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,040</p><p>09-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,160</p><p>08-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,160</p><p>07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>11-09-2026- ஒரு கிராம் ரூ.245</p><p>10-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>09-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>08-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>07-09-2026- ஒரு கிராம் ரூ.255</p>]]></content:encoded></item><item><title>இலக்கிய தமிழை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/salamon-pappaiya-turning-pattimandram-into-tamil-peoples-celebration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/salamon-pappaiya-turning-pattimandram-into-tamil-peoples-celebration#comments</comments><guid isPermaLink="false">16e9f6bb-822a-4f1c-b1ff-853efd980147</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:56:22 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:56:22.595Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/dhohhz8t/Solomon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ solomon pappaiah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/dhohhz8t/Solomon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>சாலமன் பாப்பையாவின் இயற்பெயர் சுந்தரம் சாலமன் பாப்பையா. இவர் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா, பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.</p><p>மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர் சாலமன் பாப்பையா, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் நடுவராக அமர்ந்து நகைச்சுவை உணர்வுடன் ஆழமான கருத்துகளையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியம் கொண்டாடிய நூல்களுக்கு, சாலமன் பாப்பையா உரை எழுதியிருக்கிறார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக 2000-வது ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார். 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்தார்.</p><h2>பேச்சாளர்</h2><p>சாலமன் பாப்பையா பள்ளியில் படிக்கும்போது பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பேசினார். திராவிட இயக்கப் பேச்சாளர்கள் மற்றும் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் போன்றோரது பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் திருவள்ளுவர் கழகத் தலைவராகப் பணியாற்றினார். குன்றக்குடி அடிகளார், இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன் போன்றோரது பேச்சரங்குகளை ஒருங்கிணைத்தார். அதன் மூலமும், சா. கணேசன், குன்றக்குடி அடிகளார் போன்றோரது சொற்பொழிவுகளைக் கேட்டும், தொடர் வாசிப்புப் பயிற்சியாலும், தன்னை ஒரு பேச்சாளராக வளர்த்துக் கொண்டார்.</p><p>வகுப்பறையில் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் கற்பித்த பேராசிரியர், வகுப்பறைக்கு வெளியே அதே இலக்கியத்தை சாதாரண மக்களிடம் எடுத்து செல்லத் தொடங்கினார்.</p><h2>முதல் மேடைப் பேச்சு</h2><p>முதல் மேடைப் பேச்சு 1961-ல் புதுக்கோட்டையில் நிகழ்ந்தது. பாரதி வேதாந்தக் கவிஞனா?, புதுமைக் கவிஞனா? என்ற விவாதத் தலைப்புகளில், புதுமைக் கவிஞனே என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே பட்டிமன்ற நிகழ்வுகள் பலவற்றில் பேச்சாளராகக் கலந்துகொண்டார். பட்டிமன்ற நடுவராக உயர்ந்தார். பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் போன்ற தன் குழுவினருடன் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை எனப் பல வெளிநாடுகளில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். 7000-க்கு மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தினார்.</p><h2>கட்டுரைகள்</h2><p>சாலமன் பாப்பையா பணிகளுக்கு இடையே இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. திருக்குறளுக்கு உரை விளக்கம் எழுதினார். மாநாட்டு மலர்கள் பலவற்றிலும் அமுதசுரபி, ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர், குங்குமம், குமுதம் போன்ற இதழ்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். இவருடைய 'உரைமலர்கள்' நூல் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டது.</p><h2>தமிழாய்வு</h2><p>சாலமன் பாப்பையா புறநாநூறு பாடல்கலை புதிய வரிசைப்படி உரையெழுதி வெளியிட்டார். அகநாநூறு மூன்று தொகுதிகளாக உரை எழுதினார்.</p><h2>பட்டிமன்றங்கள்</h2><p>சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தை கண்டுபிடிக்கவில்லை. அவருக்கு முன்பே தமிழகத்தில் வளமான பட்டிமன்ற மரபு இருந்தது. ஆனால் அந்த வடிவத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருக்குத் தனித்த இடம் இருக்கிறது.</p><p>ஒரு காலத்தில் இலக்கிய விழாக்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள் போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்றம், தொலைக்காட்சி வளர்ச்சிக்குப் பிறகு குடும்ப நிகழ்ச்சியாக மாறியது.</p><p>அந்த மாற்றத்தின் முக்கிய முகமாக சாலமன் பாப்பையா இருந்தார். தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது பட்டிமன்றங்கள் தமிழகக் குடும்பங்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே மாறின.</p><h2>கடினமான தமிழை எளிய தமிழாக்கியவர்</h2><p>சாலமன் பாப்பையாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் அவரது மொழிநடை. தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை இருந்தாலும், மேடையில் அதை வெளிப்படுத்தும்போது மிகக் கடினமான இலக்கிய மொழியை அவர் தேர்வு செய்வதில்லை.</p><p>திருக்குறளையோ, சங்க இலக்கியத்தையோ, கம்பராமாயணத்தையோ எடுத்துக்கொண்டாலும் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு சம்பவத்துடன் இணைத்து விளக்குவார்.</p><p>அதற்குள் மதுரைக்கே உரிய இயல்பான பேச்சுத்தமிழும் நகைச்சுவையும் கலந்து வரும். இதன் காரணமாக இலக்கியம் படிக்காதவர்களும் அவர் சொல்லும் இலக்கியக் கருத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை வகுப்பறைகளுக்குள் இருந்த தமிழை கடைக்கோடி மக்களிடம் அறிமுகப்படுத்தியவர்.</p><h2>குடும்பம்</h2><p>இவரது மனைவி ஜெயபாய், ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கடந்த 2025-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு தியாகமூா்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனா்.</p>]]></content:encoded></item><item><title>விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-rule-for-the-airport-and-another-for-the-chip-plant-the-plan-to-acquire-410-acres-of-agricultural-land-in-the-parandur-area-must-be-abandoned-anbumani-ramadoss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-rule-for-the-airport-and-another-for-the-chip-plant-the-plan-to-acquire-410-acres-of-agricultural-land-in-the-parandur-area-must-be-abandoned-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">42943d8b-8b09-491a-bccd-b379b8b56bc2</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:35:50 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:35:50.129Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,Maduramangalam,SIPCOT Park,மதுரமங்கலம்,சிப்காட் பூங்கா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mhgyju9w/New-Project-2026-09-11T160516.816.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mhgyju9w/New-Project-2026-09-11T160516.816.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists">அன்புமணி ராமதாஸ் </a>வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூருக்கு அருகில் உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் செமிகண்டக்டர் பூங்கா  அமைப்பது உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக 410 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்பதற்காக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட தவெக அரசு, அதன் எல்லையில் அமைந்துள்ள மதுரமங்கலத்தில் நிலங்களை கையகப்படுத்தி நூற்றுக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அநீதியானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும்.</p><h2>கையகப்படுத்துதல் நடவடிக்கை தீவிரம்</h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘அ’, பிரிவு ‘ஆ’ ஆகிய பகுதிகளில் 410.80 ஏக்கர் புன்செய் விளைநிலங்கள், 11.55 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 423.35 ஏக்கர் நிலங்களை புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்கு கையகப்படுத்துவதற்கான அரசாணை கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. </p><p>அதன்படி கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின்  பட்டியல் கடந்த 27.03.2025ஆம் நாள் நாளிதழ்களிலும், 09.03.2026ஆம் நாள் தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப் பட்டிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>இது குறித்து நிலங்களின் உரிமையாளர்களை ஓரகடம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய சிப்காட் வளாகங்களின் விரிவாக்கத்திற்கான நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்திற்கு அழைத்து முந்தைய திமுக அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு நிலங்களை வழங்கும்படி கட்டாயப்படுத்துவதாக இந்த நிலம் எடுப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><h2>புன்செய் நிலங்கள்</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அவை விதி எண் 110இன் கீழ் அறிக்கை அளித்த முதலமைச்சர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் சிப்களை தயாரிப்பதற்கான செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா ரூ.175 கோடியில் அமைக்கப்படும்; இதற்காக ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவித்தார்.</p><p>அந்தப் பூங்கா அமைப்பதற்காக மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘ஆ’ பகுதியில் 14.25 ஹெக்டேர், அதாவது 35.20 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும், அதற்காகவே நிலம் எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>மதுரமங்கலம் பகுதியில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் புன்செய் நிலங்கள் ஆகும். அவற்றில் மா, தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் உள்ளன. அவை தான் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான  உழவர்களுக்கு நீடித்த வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகின்றன. </p><p>அந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால்  அவற்றின்  உரிமையாளர்களான விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, அந்த நிலங்களில் பணியாற்றி வரும் வேளாண் கூலித் தொழிலாளர்களும் வேலை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகும். </p><p>இந்த உண்மைகளை உணர்ந்தும் நிலங்களைப் பறிக்க தவெக அரசு துடிப்பது மனிதாபிமானமற்றது.</p><h2>அரசுக்கு தெரியாமல் இல்லை</h2><p>செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படவுள்ள மதுரமங்கலம் கிராமம், பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படவிருந்த 12 கிராமங்களுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.</p><p>விமான நிலையத்தின் மையப்பகுதியாக கருதப்படும் பரந்தூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், முதலமைச்சர் விஜய் நேரில் சென்ற ஏகனாபுரத்திலிருந்து 5 கி.மீ, விமான நிலையத்தின் கிழக்கு எல்லையான சிங்கிலிப்பாடி  கிராமத்தை ஒட்டியும், வடகிழக்கு எல்லையான குணகரம்பாக்கம் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவிலும்  மதுரமங்கலம் கிராமம் அமைத்திருக்கிறது. </p><p>இந்த உண்மைகள் எதுவும் அரசுக்கு தெரியாமல் இருக்க முடியாது.</p><p>அவ்வாறு இருக்கும் போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று கூறி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்ட முதலமைச்சர் விஜய், </p><p>இப்போது மதுரமங்கலத்தில் மட்டும் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைப்பதற்காக உழவர்களின் நிலங்களை பறித்துக் கொண்டு அவர்களை துரத்தியடிப்பது எந்த வகையில் நியாயம்? </p><h2>விமான நிலையம் மாறும்போது, சிப்காட் பூங்கா மாறாதா?</h2><p>விமான நிலையம் அமைப்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் ஏற்படாதா? 5 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலம் தேவைப்படும் விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியும் போது, </p><p>வெறும் 35 ஏக்கர் நிலம் மட்டுமே தேவைப்படும் செமிகண்டக்டர் பூங்காவையும், 423.35 ஏக்கர் நிலம்  தேவைப்படும் ஒட்டுமொத்த சிப்காட் வளாகத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற முடியாதா? என்று அங்குள்ள மக்கள் எழுப்பும் வினாக்களுக்கு முதலமைச்சர் விஜய் விடையளிக்க வேண்டும்.</p><h2>பரந்தூர் நீதி, மதுராமங்கலத்திற்கும் கிடைக்க வேண்டும்</h2><p>விவசாயிகள் தான் தமிழ்நாட்டின் முதுகெலும்பு. அவர்கள்தான் உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்கள். அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பாதிக்கப்படும் உழவர்களுக்கு நீதி வழங்குவதில் பாகுபாடு காட்டக் கூடாது. </p><p>பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதே நீதி, அதற்கு மிக அருகில் அமைந்துள்ள  மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.</p><p>அதற்காக, மதுரமங்கலம் கிராமத்தில் 410 ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். செமிகண்டக்டர் பூங்கா உள்ளிட்ட சிப்காட் வளாகத்தை ஏற்கனவே அரசால் கையகப் படுத்தப்பட்ட நிலங்களிலோ அல்லது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலோ அமைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஏமன் மீதான சவுதி அரேபியாவின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர ஈரான் அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-seeks-end-to-saudi-blockade-of-yemen-after-tehran-backed-rebels-take-key-port</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-seeks-end-to-saudi-blockade-of-yemen-after-tehran-backed-rebels-take-key-port#comments</comments><guid isPermaLink="false">21f30b10-2416-4bb9-9856-6ec03cbfafae</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:15:58 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:15:58.583Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,ஏமன்,Houthi rebels,செங்கடல்,Red Sea,ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/skp69hid/MokhaYemenIran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஏமனில் உள்ள மோகா துறைமுகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/skp69hid/MokhaYemenIran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செங்கடலின் தெற்குப் பகுதியில் உள்ள பாப் அல்-மாண்டெப் முக்கியமான ஜலசந்தியாகும். ஹார்முஸ் ஜலசந்திக்கு அடுத்தப்படியாக உலகளவில் 12 சதவீதம் எண்ணெய் போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாக நடைபெற்று வருகிறது.</p><p>இந்த ஜலசந்தி ஏமன் நாட்டின் எல்லையில் உள்ளது. இதன் அண்டை நாடு சவுதி அரேபியா ஆகும். எண்ணெய் போக்குவரத்திற்கு சவுதி அரேபியா இந்த ஜலசந்தியை பயன்படுத்தி வருகிறது.</p><h2>ஏமன் உள்நாட்டு போர்</h2><p>கடந்த 2014-ம் ஆண்டு ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் அரசுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டன. தலைநகர் ஹவுதி கிளர்ச்சி குழு கைவசம் உள்ளது. என்றாலும் உலக நாடுகள் ஏமன் அரசு ராணுவத்தை அங்கீகரித்துள்ளன.</p><p>ஏமன் படைக்கு சவுதி அரேபியா உதவி செய்ய முன்வந்தது. சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்ட அரசுடன் இணைந்து சவுதி கூட்டுப்படை ஹவுதி கிளர்ச்சிக்குழுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது. அத்துடன் பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.</p><p>கடந்த 2022-ம் ஆண்டு சண்டை சற்று கட்டுக்குள் வந்தது. இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சிக்குழு தாக்குதல் நடத்த தொடங்கியது. இதனால் செங்கடல் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.</p><h2>மோகா துறைமுகம்</h2><p>இந்த நிலையில்தான் பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் இருக்கும் மோகா என்ற துறைமுகத்தை ஹவுதி கிளர்ச்சிக்குழு கைப்பற்றியுள்ளது.</p><h2>பேச்சுவார்த்தைக்கு உதவ தயார் என்கிறது ஈரான்</h2><p>இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சிக்குழு மோகா துறைமுகத்தை கைப்பற்றியது குறுித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில் "ஏமனின் இறையாண்மைக்கு கட்டாயம் மரியாதை செலுத்த வேண்டும். இந்த பிரச்சினை முற்றுகை அல்லது ராணுவ கூட்டணிகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியாது. பேச்சுவார்த்தைக்கு உதவ நாங்கள் தயாராக இரு்ககிறோம். ஏமன் மீதான சவுதி அரேபியாவின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.</p><p>சவுதி அரேபியா அமெரிக்காவின் கூட்டாளியாகும். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 6 மாதமாக சண்டை நடைபெற்று வரும் நிலையில், சவுதி அரேபியா பேச்சுவார்த்தைக்கு சென்றால் அது ஈரானுக்கு சாதகமாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-the-central-government-to-lower-the-qualifying-marks-for-neet-super-speciality-medical-courses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-the-central-government-to-lower-the-qualifying-marks-for-neet-super-speciality-medical-courses#comments</comments><guid isPermaLink="false">87488c09-4874-41ad-935a-3da97fb86ecc</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:11:13 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:11:13.446Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Centre,மு.க.ஸ்டாலின்,NEET SS,நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/vr7jq5ad/New-Project-2026-09-11T153929.287.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/vr7jq5ad/New-Project-2026-09-11T153929.287.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இதனை மேற்கோள்காட்டி முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் தகுதி மதிப்பெண்ணை  பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights">மு.க.ஸ்டாலின்</a> வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; </p><p>“மத்திய அரசின் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் தகுதிப் புள்ளிக்கான சதவீத வரம்பைக் குறைக்காததால், நாடு முழுவதும் சுமார் 1,857  ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவப் படிப்பு இடங்கள் காலியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. </p><p>இதில் தமிழ்நாட்டில் பணியில் உள்ள மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 40 இடங்களும் அடங்கும்.</p><p>நேற்று, தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வழக்கில், இந்த சதவீத வரம்பைக் குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>எனவே, முந்தைய ஆண்டுகளைப் போலவே, இதற்கான வரம்பை 'பூஜ்ஜிய சதவீதத்திற்கு’ குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.</p><p>மருத்துவ இடங்கள் காலியாக இருக்கும்போது, ​​மாநிலங்கள் தங்கள் பணியில் உள்ள மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டிற்குத் தகுந்தவாறு சதவீத வரம்பைத் தாங்களாகவே குறைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். </p><p>பொது சுகாதாரம் என்பது மாநிலங்களின் அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பாகும்.</p><p>நமது மக்களுக்குக் கூடுதல் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படும் சூழலில், நாட்டின் மதிப்புமிக்க சொத்தான மருத்துவ இடங்கள் எதுவும் வீணாக அனுமதிக்கப்படக் கூடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு- முதலமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/prof-salomon-pappaiya-passes-away-cm-vijay-mourns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/prof-salomon-pappaiya-passes-away-cm-vijay-mourns#comments</comments><guid isPermaLink="false">23a549c7-1249-4c1d-a671-cf73ebbc5813</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:00:51 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:00:51.199Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மறைவு,passed away,cm vijay,முதலமைச்சர் விஜய்,சாலமன் பாப்பையா,saloman paapaiya</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xwuj58jk/salomon.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Soloman pappaiahh- CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xwuj58jk/salomon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away" rel="nofollow">சாலமன் பாப்பையா</a> (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.</p><p>தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.</p><p>அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மனோஜ் ஜராங்கேவை யாராவது தொட நினைத்தால்., மகாராஷ்டிரா அரசுக்கு அபிஜீத் தீப்கே எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/dipke-urges-maharashtra-govt-to-talk-to-jarange-warns-against-forcible-intervention</link><comments>https://www.maalaimalar.com/news/national/dipke-urges-maharashtra-govt-to-talk-to-jarange-warns-against-forcible-intervention#comments</comments><guid isPermaLink="false">1257ecd6-59f2-46b7-b903-fba8f806ef8d</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:33:56 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:33:56.664Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மனோஜ் ஜராங்கே பாட்டீல்,மராத்தா இடஒதுக்கீடு,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,Manoj Jarange</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4u3mvnsv/AbhijeetDipke001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manoj Jarange-  Abhijeet Dipke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4u3mvnsv/AbhijeetDipke001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உண்ணாவிரத போராட்டம் நடத்தும் ஜராங்கே உடன் மகாராஷ்டிரா அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.</p><h2>மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு</h2><p>மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனோஜ் ஜராங்கே கடந்த 14 நாட்களாக ஜால்னா மாவட்டத்தில் உள்ள அந்தவாலி சாரதி என்ற கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே சந்தித்தார்.</p><h2>பின்னர் அபிஜீத் ஜராங்கே கூறியதாவது:-</h2><p>மகாராஷ்டிர அரசு மனோஜ் ஜராங்கே உடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருடைய கோரிக்கையை புரிந்து கொள்ள வேண்டும். அவரை வெளியேற்றும் வகையில் தொடுவதற்கு முயற்சிக்கக் கூடாது. ஏனென்றால், இது மகாராஷ்டிரா. அப்படி தொட்டால் விளைவுகள் ஏற்படும்.</p><p>மகாராஷ்டிரா முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?. அவர்களுடைய குழந்தைகளை படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். ஏனென்றால், இங்குள்ள பள்ளிகள் அந்த அளவிற்கு தரமானதாக இல்லை.</p><h2>ஜராங்கேவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்</h2><p>மனோஜ் ஜராங்கேயை நீண்ட காலம் பட்டினி கிடக்க வைக்க அரசு விரும்புகிறதா? நகைச்சுவை நடிகர்களைச் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு நேரம் இருக்கிறது, ஆனால் ஜராங்கேயிடம் பேச யாரும் வரவில்லை.</p><p>சோனம் வாங்சுக்கிடம் நடந்ததைப் போல, மனோஜ் ஜரங்கேவிடமும் அதைச் செய்ய முயற்சிக்கக் கூடாது. இது மகாராஷ்டிரா. இங்கே அது பலிக்காது. யாராவது மனோஜ் ஜரங்கையைத் தொட்டால், ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் இங்கு (அந்தர்வாலி சரதிக்கு) திரண்டு வரும்.</p><p>மனோஜ் ஜராங்கேவை அவர்கள் சாக விடப்போகிறார்களா? அரசு, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் இங்கு வந்து மனோஜ் ஜராங்கேவிடம் பேசி, அவரது கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.  ஏனெனில், அவர் தனக்காக எதையும் கேட்கவில்லை.</p><h2>சிறந்த பள்ளிகள் உள்ள ஒரு கிராமம் உள்ளதா?</h2><p>பிரதமேஷ் தேஷ்முக்கைப் (மகாராஷ்டிரா அரசு நடத்தும் தேர்வுக்காக படித்த தற்கொலை செய்து கொண்ட இளைஞர்) போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்று அரசு விரும்பினால், MPSC மற்றும் மனோஜ் ஜராங்கே எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு அது ஒரு தீர்வைக் காண வேண்டும். அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க அரசால் இயலாத சூழலில், அவர் இடஒதுக்கீட்டைக் கோருகிறார்.</p><p>மாணவர்களுக்குச் சிறந்த பள்ளிகள், தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ஒரு கிராமத்தைக் காட்டுங்கள். இத்தகைய வசதிகளைச் செய்து தருவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது; அதனால்தான் மனோஜ் ஜரங்கே போராடிக்கொண்டிருக்கிறார்.</p><p>இவ்வாறு அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - எடப்பாடி பழனிசாமி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/irreparable-loss-to-tamil-literary-world-and-debate-field-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/irreparable-loss-to-tamil-literary-world-and-debate-field-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">00905420-5d68-4117-add0-19b1483b8fce</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:32:48 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:32:48.748Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,சாலமன் பாப்பையா,Solomon Pappiah</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pksjtdsn/TNPSC.png" width="1920"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappiah -edappadi palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pksjtdsn/TNPSC.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மறைவு </h2><p> சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும், தமிழறிஞருமான<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away"> சாலமன் பாப்பையா </a>வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். </p><h2>இபிஎஸ் </h2><p>மறைந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா இறப்பிறகு அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/district/tiruvannamalai-news-admk-condemns-electricity-tariff-hike-demonstration-tomorrow-on-behalf-of-490486">எடப்பாடி பழனிசாமி </a>இரங்கல் தெரிவித்துள்ளார்.</p> <p>இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><p>தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த </p><p>தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.</p><p>தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா அவர்கள்.</p> <p>அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.</p><p>அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்: பணம்-காசோலை பரிவர்த்தனை முடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/national/bank-employees-across-country-on-strike-today</link><comments>https://www.maalaimalar.com/news/national/bank-employees-across-country-on-strike-today#comments</comments><guid isPermaLink="false">ffba3462-6f41-49a3-8161-dc671496ec7b</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:29:17 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:29:17.537Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,Bank Employees Strike,வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/f2mh6g6g/bank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bank strike]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/f2mh6g6g/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பணம், காசோலை பரிவர்த்தனை நாடு முழுவதும் இன்று முடங்கியது.</strong></em></p><p>வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><h2>ஸ்டிரைக்</h2><p>வாரத்தில் 5 நாட்கள் வேலை, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும், புதிதாக பணிக்குச் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.</p><p>அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட 7 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.</p><p>இந்தியா முழுவதும் ஒரு லட்சம் வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 8 லட்சம்  ஊழியர்கள், அதிகாரிகள் பணிக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><h2>தமிழகம்</h2><p>தமிழகத்தில் 18,000 கிளைகள் செயல்படுகின்றன. இதில் பணியாற்றும் 60,000 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.</p><p>பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாது தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து  கொண்டதால் வங்கி சேவை  முற்றிலும் முடங்கியது.</p><p>வங்கிக் கிளை மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் பெரும்பாலான கிளைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் வங்கிகளில் பணம், காசோலை டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் முழுவதும் நடைபெறவில்லை. </p><p>இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் தங்களது அன்றாட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டன.</p><h2>காசோலை முடங்கியது</h2><p>சென்னையில் உள்ள வங்கிகளில் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. நுழைவு வாசல்கள் அடைக்கப்பட்டிருந்தன.</p><p>வங்கி ஊழியர்கள் போராட்டத்தால்  இன்று ஒரு நாள் மட்டும் பல லட்சம் கோடி காசோலை, பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டன.  லட்சக்கணக்கான காசோலைகள் தேங்கின.</p><p>சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.</p><p>போராட்டத்தின்போது சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:</p><p>ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அதனை நடைமுறைப் படுத்தவில்லை. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்கள் வேலை நேரத்தில் 40  நிமிடங்கள் அதிகரிக்கும்படி கேட்டுக் கொண்டோம். இதனைச் செயல்படுத்தாததால் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். </p><p>எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக வரும் 28, 29 மற்றும் 30-ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.</p><h2>வங்கி சேவை பாதிப்பு</h2><p>இதற்கிடையில், வேலைநிறுத்தத்தால் இன்று மூடப்பட்ட வங்கிகள் தொடர்ந்து மேலும் 3 நாட்கள் மூடப்படுகிறது. அரசு விடுமுறை  காரணமாக 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும். ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல்படாத நிலை உருவாகிறது.</p>]]></content:encoded></item><item><title>பட்டிமன்றத்தை பாமரர்களிடம் கொண்டு சென்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா - ரஜினிகாந்த்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-says-solomon-pappaiah-is-one-who-took-pattimandram-to-common-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-says-solomon-pappaiah-is-one-who-took-pattimandram-to-common-people#comments</comments><guid isPermaLink="false">3c4de154-9f81-4f1b-a3b8-219a1b91ac99</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:25:10 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:25:10.217Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,ரஜினிகாந்த்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gnqsm0gk/rajinikanth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappaiah - Rajinikanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gnqsm0gk/rajinikanth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார்.</p><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences">சாலமன் பாப்பையா</a> (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் காலமானார். </p><p>அவரது மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கவிஞர் வைரமுத்து, பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தன், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,</p><p>படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையாவின்</a> ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘சேயோன்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/second-schedule-of-seyon-wrapped-up</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/second-schedule-of-seyon-wrapped-up#comments</comments><guid isPermaLink="false">63261391-777c-42d8-afeb-bf881b923b04</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:09:14 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:09:14.552Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sivakarthikeyan,சிவகார்த்திகேயன்,Seyon,சேயோன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/626a0t9u/New-Project-2026-09-11T143524.115.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சேயோன்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/626a0t9u/New-Project-2026-09-11T143524.115.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/success-born-of-sooris-hard-work-sivakarthikeyan-praises-the-movie-mandela">சிவகார்த்திகேயன்</a> நடித்து வரும் ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நிலையில் வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.</p><p>‘தாய் கிழவி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சிவகுமார் முருகேசன் எழுத்து மற்றும் இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சேயோன்’.</p><p>இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், ராஜ் பி ஷெட்டி, சீமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பால சரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். </p><p>படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் தீபாவளி அல்லது அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார் - வைரமுத்து
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences#comments</comments><guid isPermaLink="false">dbe02827-069a-4c66-a033-8fec594bd458</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:58:37 +0000</pubDate><atom:updated>2026-09-11T08:58:37.832Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vairamuthu,பட்டிமன்றம்,வைரமுத்து,Solomon Pappaiah,pattimandram,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ymvezc0m/vairamuthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappaiah - Vairamuthu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ymvezc0m/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்.</p><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away">சாலமன் பாப்பையா</a> (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>இந்நிலையில் கவிஞர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வைரமுத்து</a> வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,</p> <p>சாலமன் பாப்பையாவின் </p><p>மறைவு</p><p>உள்ளத்தை உடைக்கிறது</p><p>பாரதி மறைந்தநாளில்</p><p>பாப்பையாவும்</p><p>மறைந்திருக்கிறார்</p> <p>செப்டம்பர் 11</p><p>தமிழுக்கு நல்லநாள்</p><p>இல்லை போலும்</p><p>பட்டிமன்றத் தமிழ்</p><p>முடிந்துவிட்டதா?</p><p>பாமரத் தமிழ்</p><p>மூச்சை நிறுத்திக்கொண்டதா?</p> <p>கல்லூரிகளில்</p><p>பயிற்றுவித்த தமிழைக் </p><p>கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர்</p><p>சாலமன் பாப்பையா</p><p>இந்தக் குளத்தில்</p><p>கல்லெறிந்தவர்கள் நூலில்</p><p>அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன்</p> <p>சிரிக்க வைத்துச் </p><p>சிந்திக்கவும் வைத்த</p><p>மேடைக் கலைவாணர்</p><p>மறைந்துவிட்டார்</p><p>அவரது நாற்காலி</p><p>காலியாகவே இருக்கும்;</p><p>நிரப்ப முடியாது</p> <p>மதுரைக்கே</p><p>ஒரு வெறுமை வந்துவிட்டது;</p><p>மனம் கலங்குகிறது</p><p>அவரை இழந்து வாடும்</p><p>குடும்பத்தார்க்கும்</p><p>உலகத் தமிழர்களுக்கும்</p><p>ஆழ்ந்த இரங்கல்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>9/11 தாக்குதல் ஆரம்பம் தான்.. சோவியத் யூனியன் போல அமெரிக்காவை சீர்குலைக்க    ஒசாமா பின்லேடன் வைத்திருந்த மிகப்பெரும் சதித்திட்டம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/the-911-attacks-were-just-the-beginning-what-was-the-massive-plot-osama-bin-laden-had-devised-to-destabilize-the-united-states-much-like-the-soviet-union</link><comments>https://www.maalaimalar.com/news/world/the-911-attacks-were-just-the-beginning-what-was-the-massive-plot-osama-bin-laden-had-devised-to-destabilize-the-united-states-much-like-the-soviet-union#comments</comments><guid isPermaLink="false">73353bba-e176-48b1-9aef-820e7533ed41</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:29:07 +0000</pubDate><atom:updated>2026-09-11T08:29:07.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,அல் கொய்தா,osama bin laden,al-Qaeda,ஒசாமா பின்லேடன்,9/11 தாக்குதல்,9/11 attacks</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/rbomwp6y/tn-17.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/rbomwp6y/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>9/11 தாக்குதல் பின் லேடனின் மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் எனவும் அந்த திட்டம் எப்படி தோல்வி அடைந்தது என்பது குறித்தும் பார்ப்போம்.</p> <p>அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் 25வது ஆண்டு நினைவு தினம் இன்று. </p><h2>9/11 தாக்குதல் </h2><p>2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் ஓசாமா பின் லேடன் தலைமையிலான அல் கொய்தா அமைப்பை சேர்ந்த 19 பயங்கரவாதிகள் 4 பயணிகள் விமானங்களை கடத்தினர். </p><p>இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீதும், மூன்றாவது விமானம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் மோதின. </p><p>நான்காவது விமானத்தை பயங்கரவாதிகளிடம் இருந்து அதிலிருந்த பயணிகள் மீட்க முயன்றபோது விமானம் இலக்கை அடையாமல் பென்சில்வேனியாவில் தரையில் விழுந்து நொறுங்கியது. </p><p>இந்த திட்டமிடப்பட்ட தாக்குதலில் மொத்தம் 2,977 பேர் உயிரிழந்தனர். இது அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான வெளியுறவுக் கொள்கைகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது.</p><p>அல் கொய்தா தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/world/why-did-osama-feel-safe-in-pak-jaishankar-on-islamabads-terror-links-776233">பின் லேடன் </a>2011 மே 2 அன்று பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டது குறிப்பித்தக்கது. </p> <h2>25வது ஆண்டுகள்</h2><p>9/11 தாக்குதலின் 25வது ஆண்டுகள் நிறைவையொட்டி இவ்வாண்டும் அமெரிக்கா முழுவதும் இதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் 9/11 தாக்குதல் பின் லேடனின் மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் எனவும் அந்த திட்டம் எப்படி தோல்வி அடைந்தது என்றும் 'தி கார்டியன்' இதழின் மூத்த பத்திரிகையாளர் ஜேசன் பர்க் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p> <p>அதில்,</p><h2>பின்லேடனின் திட்டம்</h2><p>9/11 தாக்குதல் மூலம் அமெரிக்காவை ஆப்கானிஸ்தான் போருக்குள் இழுத்து, சோவியத் யூனியனுக்கு நேர்ந்தது போல அதன் பொருளாதாரத்தை சீரழிப்பதே பின்லேடனின் திட்டம் எனப் பரவலாகக் கருதப்பட்டது.</p><p>ஆனால், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதை பின்லேடன் எதிர்பார்க்கவில்லை என்றும், ஏவுகணைத் தாக்குதல்களோடு அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என்றே அவர் தவறாகக் கணக்கிட்டிருந்தார் என்றும் சான்றுகள் காட்டுகின்றன.</p><h2>சோவியத் யூனியன் போல</h2><p>அமெரிக்காவைப் பொருளாதார ரீதியாகப் பலவீனப்படுத்தி, மத்திய கிழக்கிலிருந்து அதை வெளியேறச் செய்வதே பின்லேடனின் இலக்காக இருந்தது.</p><p>அமெரிக்காவை பொருளாதார ரீதியாக ரத்தம் சிந்த வைப்பதாக 2004ல் பின்லேடன் சவால் விட்டிருந்தார்.</p><p>ஆனால் சோவியத் யூனியன் போல அமெரிக்கா வீழவில்லை. மத்திய கிழக்கிலிருந்து தனது படைகளையும் அது முழுமையாக விலக்கிக் கொள்ளவில்லை.</p><p>சவூதி அரேபிய அரச குடும்பம் உட்படத் தனது எதிரி நாடுகளின் ஆட்சியாளர்களை வீழ்த்துவது பின்லேடனின் மற்றொரு இலக்காகும்.</p><h2>இழந்த ஆதரவு</h2><p>9/11 தாக்குதலை ஒரு விளம்பரமாகப் பயன்படுத்தி, உலகளாவிய முஸ்லிம்களைத் தனக்கு ஆதரவாகத் திரட்ட பின்லேடன் முயன்றார்.</p><p>ஆனால், அப்பாவி முஸ்லிம்கள் அதிகளவில் கொல்லப்பட்டதால் அல் கொய்தாவிற்கு எதிராக இஸ்லாமிய உலகிலேயே எதிர்ப்புகள் வலுத்தன.</p><p>அமெரிக்கக் கடற்படையால் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு, அல் கொய்தா என்ற பெயரையே மாற்றும் அளவிற்கு அமைப்பின் பெயர் சீரழிந்திருந்தது.</p><h2>முடிந்த சகாப்தம்</h2><p>அல் கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளின் செல்வாக்கு 2019க்குப் பிறகு பெருமளவு சரிந்துவிட்டது.</p><p>தற்போது ஆப்பிரிக்காவின் பலவீனமான மற்றும் அரசு நிர்வாகமற்ற எல்லைப் பகுதிகளிலேயே இவர்களின் செயல்பாடு சுருங்கியுள்ளது.</p><p>அன்றைய அல் கொய்தா அமைப்போடு ஒப்பிடும்போது, தற்போதைய பயங்கரவாத குழுக்களிடம் கரிஸ்மாடிக் தலைவர்கள் எவரும் இல்லை.</p> <p>அமெரிக்காவின் நவீன கண்காணிப்பு மற்றும் தாக்குதல் திறன்களால் அத்தகைய தலைவர்கள் உடனடியாக அழிக்கப்படுவதும் அவர்களின் சகாப்தம் முடிவுக்கு வர முக்கிய காரணமாகும்.</p><p>ஒரு பயங்கரவாத அமைப்பு அழியாமல் உயிர்ப்புடன் இருப்பது மட்டுமே அதன் வெற்றியாகிவிடாது.</p><p>25 ஆண்டுகள் கடந்த நிலையில் அல் கொய்தா இன்னும் இயங்கினாலும், பின்லேடனின் உலகளாவிய கனவுகள் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டன என்பதே நிதர்சனம் என தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks#comments</comments><guid isPermaLink="false">c7cfbb0b-9e72-4b9f-acb1-bb54be5788cf</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:59:39 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:59:39.046Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,Swami Vivekanandar,சுவாமி விவேகானந்தர்,chicago speech,சிகாகோ உரை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qf7si60l/pm-modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pm modi, vivakanandar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qf7si60l/pm-modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுவாமி விவேகானந்தர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய தினம் இன்று என்பதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.</strong></em></p><p>சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பிறந்தவர். இந்து மதத்தை உலகளாவிய மதமாக உயர்த்தியவர் என்று போற்றப்படுகிறார்.</p><p>இந்தியாவின் பாரம்பரியமிக்க வேதாந்த தத்துவங்களையும், யோகாவையும் மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியவர் சுவாமி விவேகானந்தர்.</p><h2>சிகாகோ உரை</h2><p>சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்த ‘சர்வதேச மதங்களின் நாடாளுமன்றம்’ என்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையை, "அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே" என்ற வாக்கியத்துடன் ஆரம்பித்தார்.</p><p>அவரது உரை அங்கிருந்த சுமார் 7 ஆயிரம் பிரதிநிதிகளின் மனதை வென்றதோடு மட்டுமின்றி, இந்து மதத்திற்கான சர்வதேச அடையாளங்களில் ஒன்றாகவும் மாறியது.</p><h2>எழுச்சியூட்டும் விவேகானந்தர் உரை</h2><p>இந்நிலையில், சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினத்தை பிரதமர் மோடி இன்று நினைவு கூர்ந்துள்ளார். </p><p>இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 11 செப்டம்பர் 1893, சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரை, இந்தியாவின் நாகரீக நெறிமுறையைப் படம்பிடித்துக் காட்டியது. அவரது எழுச்சியூட்டும் வார்த்தைகள் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.</p><h2>25வது ஆண்டு நினைவு நாள்</h2><p>2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாளை அமெரிக்கா அனுசரிக்கும் வேளையில், பிரதமர் மோடி விவேகானந்தரின் உரையை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>குண்டு பாய்ந்தாலும் குரல் ஓயவில்லை.. ஓராண்டுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட சார்லி கிர்க் நினைவை போற்றும் வலதுசாரிகள்</title><link>https://www.maalaimalar.com/news/world/even-though-the-bomb-fell-the-voice-did-not-restright-wingers-honor-the-memory-of-charlie-kirk-who-was-murdered-a-year-ago</link><comments>https://www.maalaimalar.com/news/world/even-though-the-bomb-fell-the-voice-did-not-restright-wingers-honor-the-memory-of-charlie-kirk-who-was-murdered-a-year-ago#comments</comments><guid isPermaLink="false">b40d2636-4d82-4851-ada5-6f2102f12edf</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:41:40 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:41:40.889Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,வலதுசாரி,charlie kirk,சார்லி கிர்க்,right wing</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m8x979q7/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  சார்லி கிர்க்]]></media:title><media:description type="html"><![CDATA[  சார்லி கிர்க்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m8x979q7/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நெருக்கமான வலதுசாரி செயல்பாட்டாளர் சார்லி கிர்க் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி டிரம்ப் மற்றும் கிர்க் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.</p> <p>அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அதற்கான குடியரசு கட்சி மாநாடு டல்லாஸில் நேற்று முதல் நடந்து வருகிறது. நேற்று <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>செப்டம்பர் 10 அங்கு உரையாற்றினார். இடைக்கால தேர்தலில் தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் நாட்டில் உள்ள வயது வந்த அனைத்து குடிமக்களுக்கும் ஆளுக்கு 5000 டாலர் தருவதாக அறிவித்தார். </p> <p>இந்நிலையில் மாநாட்டு திடலில் <a href="https://www.maalaimalar.com/topic/charlie-kirk?botrequest=true">சார்லி கிர்க்</a>கிற்கு குடியரசுக் கட்சியினர் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.</p><p>டல்லாஸில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான குடியரசுக் கட்சியினர் "சார்லி, சார்லி" என முழக்கமிட்டனர்.</p><p>தொடர்ந்து சார்லி கிர்க்கின் நினைவாக 5 நிமிட அஞ்சலி வீடியோ திரையிடப்பட்டது.</p> <h2>சார்லி கிர்க்</h2><p>சார்லி கிர்க் டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தவர் ஆவார்.</p><p>கடந்த ஆண்டு செப்டம்பர் 10, உட்டா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிகொண்டிருந்தபோது சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டார்.</p><p>சார்லி கிர்க்கின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி எரிகா கிர்க்டர்னிங் பாயிண்ட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்று, பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.</p> <p>டர்னிங் பாயிண்ட் அமைப்பின் துணைத் தலைவரும் போதகருமான லூகாஸ் மைல்ஸ் குடியரசு கட்சி மாநாட்டின் மேடையில் பேசுகையில், "ஒரு வருடம் கடந்த போதிலும் அவரது குரல் ஓயவில்லை. மாறாக நமது அமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் சமூக வலைதளப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது" என்று கூறினார்.</p> <h2>கொலை வழக்கு</h2><p>சார்லி கிர்க் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 வயதான டைலர் ராபின்சன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான நீதிமன்ற வழக்கு நடந்து வரும் நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><p>கல்லூரி வளாகங்களில் வலதுசாரிச் சிந்தனைகளைப் பரப்புவதில் சார்லி கிர்க் முக்கியப் பங்காற்றினார்.</p><p>இளைஞர்கள் மற்றும் தீவிரக் கிறிஸ்தவப் பழமைவாதிகள் மத்தியில் செல்வாக்குமிக்க தலைவராகவும், டிரம்பின் 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' இயக்கத்தின் முக்கியத் தூணாகவும் அவர் திகழ்ந்தார்.</p><p>கொலை செய்யப்பட்ட அதே உட்டா பல்கலைக்கழக வளாகத்தில், நேற்று மாலை (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) டர்னிங் பாயிண்ட் அமைப்பு சார்பில் சார்லி கிர்க்கிற்கான சிறப்பு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.</p>]]></content:encoded></item><item><title>5 வயதில் உலக சாதனை.. அமெரிக்காவை சேர்ந்த 6 வயது யோகா ஆசிரியர் பற்றி தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/world/a-world-record-at-age-5-do-you-know-about-the-6-year-old-yoga-teacher-from-the-us</link><comments>https://www.maalaimalar.com/news/world/a-world-record-at-age-5-do-you-know-about-the-6-year-old-yoga-teacher-from-the-us#comments</comments><guid isPermaLink="false">0db81ac7-190f-4859-8edf-395395154fe0</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:13:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:13:53.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>young girl,Yoga,கின்னஸ் சாதனை,Guinness record,யோகா,சிறுமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uw1raqst/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uw1raqst/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவை சேர்ந்த பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ் என்ற 6  வயது யோகா ஆசிரியர்  பற்றி தெரியுமா?</p><p>அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். அவருக்கு வெறும் 6 வயது. </p><p>ஆனால் ஓராண்டுக்கு முன்னதாகவே அதாவது, அவரின் 5 வயதில், சரியாக 5 ஆண்டுகள் மற்றும் 337 நாட்களில் அவர் உலக சாதனை ஒன்றை படைத்திருந்தார். </p><h2>சாதனை </h2><p>இந்த வயதில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 200 மணிநேர <a href="https://www.maalaimalar.com/health/fitness/healthy-yoga-practice-777831">யோகா </a>ஆசிரியர் பயிற்சி பாடத்தை (Course) வெற்றிகரமாக முடித்து, இந்த இளம் வயதிலேயே சான்றிதழ் பெற்ற, அதாவது அங்கீகரிக்கப்பட்ட யோகா ஆசிரியரானார். இது உலக சாதனை ஆகும்.</p><p>இந்த சாதனையை<a href="https://www.maalaimalar.com/news/national/indian-man-sets-world-record-with-29-foot-long-fingernails"> கின்னஸ் உலக சாதனை </a>அமைப்பு அங்கீகரித்தது.</p><p>கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அவரின் பெயர் வெளியீட்டின் போது பேசிய அவர், "நான் புதிய விஷயங்களை முயற்சிப்பதையும், கற்றுக்கொள்ளும்போதே மகிழ்ச்சியாக இருப்பதையும் விரும்புகிறேன்.</p> <p>உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் தங்களின் வயது என்னவாக இருந்தாலும், தங்களது கனவுகளைப் பின்தொடர தூண்டுகோலாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.</p><p>இதற்கு முன்பு இந்தியாவின் பிரான்வி குப்தா தனது 7 வயதில் படைத்திருந்த சாதனையை, இந்த ஹூஸ்டன் சிறுமி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தமிழர்கள் உற்சாக வரவேற்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-reached-london-to-attract-industrial-investments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-reached-london-to-attract-industrial-investments#comments</comments><guid isPermaLink="false">cd1c765b-82b3-4ac1-93b0-bb899674569c</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:04:46 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:04:46.400Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,லண்டன்,london,தொழில் முதலீடுகள்,Business Investment</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8l134jbe/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8l134jbe/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொழில் முதலீடுகளை ஈர்க்க நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். </p> <h2>தொழில் முதலீடுகள்</h2><p>முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் விஜய் நள்ளிரவில் துபாயை சென்றடைந்தார். அங்கிருந்து வேறொரு விமானத்தின் மூலம் இன்று பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். </p> <h2>முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு</h2><p>லண்டனில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith">முதலமைச்சர் விஜய்க்கு</a> தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு வசித்து வரும் ஏராளமான தமிழர்கள் விஜயை த.வெ.க. கொடியுடன் வரவேற்றனர்.</p><h2>100 நாட்கள்</h2><p>தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.</p> <h2>தவெக அரசு</h2><p>இதன்படி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-on-vetri-kazhagam-recognition-and-whistle-symbol-approval">த.வெ.க. </a>அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p> <h2>ஐரோப்பிய நாடுகள்</h2><p>பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்து உள்ளதுடன், அவற்றின் மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.</p> <h2>ஏற்றுமதி</h2><p>நடைமுறைக்கு வந்த இந்தியா–பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் வாயிலாக, இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.</p> <h2>முக்கிய நோக்கம்</h2><p>பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளையும், உலகளாவிய திறன் மையங்களையும் நிறுவி செயல்பட்டு வருகின்றன. </p> <p>இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறை களில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் முதலமைச்சர் தற்போது மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.</p><p>மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த ஒரு ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ மாநிலத்தில் அமைக்கப்படும் என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற ‘சில்வர்ஸ் டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. </p> <h2>வாய்ப்புகள்</h2><p>இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</h2><p>லண்டன் சென்றுள்ள குழுவில் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், மற்றும் அரசு அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.</p> <h2>வெளிநாட்டு பயணம்</h2><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவருடன் சென்று உள்ள குழுவினர் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 17-ந்தேதி சென்னை திரும்புகிறார்.</p>]]></content:encoded></item><item><title>மனதில் உறுதி வேண்டும்: இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-mahakavi-bharathiyar-memorial-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-mahakavi-bharathiyar-memorial-day#comments</comments><guid isPermaLink="false">8e12a7da-f586-4664-9992-912ad02d0918</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:56:52 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:56:52.320Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathiyar,நினைவு தினம்,மகாகவி பாரதியார்,Memorial Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/d81kifoe/bharathi.jpg.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bharathiyar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/d81kifoe/bharathi.jpg.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விடுதலை போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.</strong></em></p><p>சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.</p><p>தனது பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். இவர் கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.</p><h2>நினைவு நாள்</h2><p>இவர் தனது 39-ம் வயதில் 1921-ம் வருடம் செப்டம்பர் மாதம் 11-ம் நாள் மறைந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்  11-ம் தேதி பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாரதியாரின் சிலைகள் மற்றும் உருவப் படங்களுக்கு பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p><h2>மகாகவி நாள்</h2><p>இந்த நாளை 'மகாகவி நாள்' என கடைப்பிடிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>செங்கடலில் பரபரப்பு: துறைமுக நகரை கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் - உச்சகட்ட அபாயத்தில் பாப் அல் மாண்டெப் ஜலசந்தி!</title><link>https://www.maalaimalar.com/news/world/tension-in-the-red-sea-houthi-rebels-capture-port-city-bab-el-mandeb-strait-at-extreme-risk</link><comments>https://www.maalaimalar.com/news/world/tension-in-the-red-sea-houthi-rebels-capture-port-city-bab-el-mandeb-strait-at-extreme-risk#comments</comments><guid isPermaLink="false">2a202ac4-1030-404c-9b0c-c088ef186c3c</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:49:41 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:49:41.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,ஏமன்,Houthi rebels,செங்கடல்,Red Sea,ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/e0gdyo8v/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஹவுதி ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஹவுதி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/e0gdyo8v/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் நாட்டில் சவுதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளிடமிருந்து முக்கிய செங்கடல் துறைமுக நகரமான மொகாவை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/yemen">ஏமனில் </a>தலைநகர் சனா உள்ளிட்ட பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். </p><p>சவுதி அரேபிய ஆதரவு பெற்ற சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசு தனது கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள உள்ள பகுதிகளை தற்காத்துக்கொள்ள போராடி வருகிறது. </p> <p>கடந்த வாரம் முதல் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு படைகளுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற <a href="https://www.maalaimalar.com/news/world/no-need-to-answer-brick-with-stone-pakistan-warns-houthis">ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்</a> இடையே கடும் மோதல் மூண்டுள்ளது.</p><p>ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் உலகின் மிக முக்கியமான கடல்வழிப்பாதைகளுள் ஒன்றான பாப் அல் மாண்டெப் ஜலசந்தியை கைப்பற்ற ஹவுதிக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.</p> <h2>இலக்கை நெருங்கிய ஹவுதிக்கள்?</h2><p>இந்த நிலையில் தான் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு வசம் இருந்த முக்கிய செங்கடல் துறைமுக நகரமான ஏமனின் மொகா (Mokha) நகரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாகி தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இதன்மூலம் பாப் அல்  மாண்டெப் ஜலசந்தியிலிருந்து வெறும் 75 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஹவுதி படைகள் முன்னேறியுள்ளன.</p><p>மொகா நகரைக் கைப்பற்ற நள்ளிரவில் நடந்த கடுமையான தாக்குதல்களால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.</p><p>வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், யேமன் சர்வதேச அரசின் தலைமையகமான ஏடன் நகரை நோக்கி தப்பிச் சென்று கொண்டிருக்கின்றனர்.</p> <p>மொகா நகரை மட்டுமின்றி, செங்கடலில் உள்ள முக்கியத் தீவான 'ஜுகார்' (Zuqar) தீவையும் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.</p><p>பதிலடியாக, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தாயிஸ், ஹுதைதா, மாரிப் உள்ளிட்ட பகுதிகளில் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் 64 க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.</p><p>இதனிடையே, நேற்று ஹவுதிகள் சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள காமிஸ் முஷைத், அப்ஹா மற்றும் ஜாசான் ஆகிய நகரங்கள் மீது நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைகளை தாக்குதலில் 73 பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் சேதமடைந்துள்ளன.</p><p>கடந்த ஒரு வாரத்தில் நடந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், சாலைகளில் காயமடைந்தவர்கள் உதவியின்றி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p> <h2>பாப் அல் மாண்டெப் </h2><p>அமெரிக்கா - ஈரான் போர் காரணமாகப் பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ளது.</p><p>இதனால் சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு செங்கடல் பாதையையே முழுமையாக நம்பியிருந்தது.</p><p>சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு தடையில்லை என்று ஹவுதி அமைப்பு கூறினாலும், சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.</p><p>இந்த திடீர் மோதல் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p>இதனிடையே ஏமன் பகுதிகளைப் பாதுகாக்க அந்நாட்டு அரசு, அரபு மற்றும் சர்வதேச நாடுகளுடன் கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாடு எதிரொலி: இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டி அட்டவணையில் மாற்றமா? </title><link>https://www.maalaimalar.com/sports/cricket/confusion-over-first-afg-ind-t20i-after-delhi-police-request-ddca-statement</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/confusion-over-first-afg-ind-t20i-after-delhi-police-request-ddca-statement#comments</comments><guid isPermaLink="false">efaef6f2-d23b-4178-8065-a398b0f23bb3</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:17:03 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:17:03.337Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முதல் ஒருநாள் போட்டி,BRICS Summit,பிரிக்ஸ் உச்சி மாநாடு,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்,1st ODI</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wz6uwyda/afghan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ afghanistan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wz6uwyda/afghan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் போட்டி அட்டவணையில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் டெல்லியில் வரும் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. </p><h2>அட்டவணையில் மாற்றமா?</h2><p>இந்நிலையில் பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் நாளை  முதல் 2 நாட்கள் நடைபெறுவதால் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியது. </p><h2>பிரிக்ஸ் மாநாடு</h2><p>உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகிறார்கள். மேலும், கிரிக்கெட் போட்டியைப் பார்க்க 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.  </p><p>எனவே, 13-ம் தேதி நடைபெற உள்ள முதல் டி20 ஆட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு டெல்லி போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் அட்டவணையில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது. </p><p>ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளோ போட்டி அட்டவணையில் மாற்றம் இல்லை. திட்டமிட்டபடி போட்டி நடைபெறும்  என தெரிவித்துள்ளனர்.</p><p>இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.)  நிர்வாகி ஒருவர் போட்டியை தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். </p><p>இதுதொடர்பாக அவர் கூறுகையில், போட்டிக்கான தேதியை மாற்றுவதற்கான வாய்ப்பு இன்னும் முழுமையாக நிராகரிக்கப்படவில்லை. நிலைமை சரியாக அமையாவிட்டால் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் ஆட்டம் திங்கட்கிழமைக்கு (14-ம் தேதி) மாற்றப்படலாம் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய ஊழியர்களுக்கு ஆப்படித்த டிரம்ப்..  H-1B விசா புதுப்பிப்புக்கு வழங்கப்படும் 60 நாள் சலுகை காலம் ரத்து?</title><link>https://www.maalaimalar.com/news/world/foreign-workers-60-day-grace-period-for-h-1b-visa-renewal-cancel-trump-action</link><comments>https://www.maalaimalar.com/news/world/foreign-workers-60-day-grace-period-for-h-1b-visa-renewal-cancel-trump-action#comments</comments><guid isPermaLink="false">51450216-34d8-4e66-b53b-843fa0492735</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:11:29 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:11:29.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,அமெரிக்கா,USA,டிரம்ப்,எச்1பி விசா,H-1B visa</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4ydd28gg/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/4ydd28gg/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் வெளிநாட்டு பாண்டியர்களின் எச்1பி விசா புதுப்பிப்பு சலுகை காலத்தை ரத்து செய்யும் முடிவை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது. </p><p>அமெரிக்காவில் கடந்த 2025 இல் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.</p><p>சட்டவிரோத குடியேற்றங்களை முழுவதுமாக தடுக்கும் அதே வேளையில்  சட்டப்பூர்வக் குடியேற்றங்களை மேலும் கட்டுப்படுத்தும் கொள்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். </p> <p>அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற தனது கொள்கையின்படி அவரது நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அங்கு பணிபுரியும், பயிலும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டவர்களுக்கு கஷ்டகாலமாக மாறி வருகிறது.</p><p>நிறுவனங்களில் காலியாகும் பணியிடங்களுக்கு அமெரிக்கக் குடிமக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவரது நிர்வானம் நிறுவனங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. </p><p>வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கமர்த்த விரும்பும் நிறுவனங்கள், அதற்கு இணையான தகுதிவாய்ந்த அமெரிக்க விண்ணப்பதாரர்களை நியமிக்க வேண்டும் என கெடுபிடி காட்டப்படுகிறது. </p><p>ஏற்கெனவே <a href="https://www.maalaimalar.com/news/world/us-proposes-additional-usd-103-lakh-fee-for-h-1b-visa-cap-subject-applications">விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டதுடன்</a>, தற்காலிகமாக இமிக்ரண்ட் விசா நேர்காணல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.</p><h2>H-1B சலுகைக் காலம் ரத்து?</h2><p>இந்நிலையில் வேலை இழக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களின் H-1B விசாவில் இதுவரை வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகைக் காலத்தை (Grace period) ரத்து செய்யும் திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.</p><p>அமெரிக்காவின் பெடரல் பதிவேட்டில் (அரசிதழ்) வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய முன்மொழிவின்படி, H-1B மற்றும் அது தொடர்பான பணி விசா வைத்திருப்பவர்கள் தங்களது வேலையை இழக்கும் பட்சத்தில், உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.</p><p>கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த இந்த 60 நாட்கள் சலுகைக் காலத்தின் மூலம், ஊழியர்கள் தங்களுக்குப் புதிய நிறுவனத்தைத் தேடிக் கொள்ளவோ அல்லது தங்களது குடும்பத்தினருடன் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைசெய்யவோ அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. </p><p>புதிய முன்மொழிவு செயல்பாட்டுக்கு வந்தால் இனி அந்த அவகாசம் கிடைக்காது.</p> <h2>இந்தியர்களுக்குப் பின்னடைவு</h2><p>அமெரிக்கத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளில் H-1B விசாவைப் பயன்படுத்திப் பணிபுரியும் ஊழியர்களில் இந்தியர்களே அதிகளவில் உள்ளனர்.</p><p>டிசிஎஸ், இன்போசிஸ், எச்சிஎல் டெக், எல்டிஐ மைண்ட்டீரி போன்ற இந்திய ஐடி நிறுவனங்களும், டெலாய்ட் , இடபிள்யூசி, எர்ன்ஸ்ட் அண்ட் யங் போன்ற நிறுவனங்களும் இந்த விசாவை அதிகளவில் பயன்படுத்துகின்றன.</p><p>வேலை இழக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதால், அமெரிக்காவில் உள்ள இந்தியப் வல்லுநர்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் இடையே இந்த நடவடிக்கை பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.</p><h2>அடுத்தது என்ன?</h2><p>அமெரிக்காவின் சட்டத்தின்படி ஒரு புதிய விதியை  அமல்படுத்தும்போது அது முதலில் மக்கள் மற்றும் சம்பந்தபட்டவர்கள் கருத்துக்கு 60 நாட்கள் விடப்படும்.</p><p>60 நாட்கள் அவகாசம் முடிந்ததும், பெறப்பட்ட கருத்துகளை உள்துறை பாதுகாப்பு துறை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>இதன் அடிப்படையில் முன்மொழியப்பட்ட விதியில் சிறு மாற்றங்களையோ அல்லது தளர்வுகளையோ கொண்டு வர அரசு தீர்மானிக்கலாம்.</p><p>பரிசீலனைக்குப் பிறகு, இறுதி விதி தயாரிக்கப்பட்டு மீண்டும் பெடரல் பதிவேடு அலுவலகம் அதனை வெளியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்.</p><p>ஆனால் இதை எதிர்த்து பாதிக்கப்புக்குள்ளாவோர் பெடரல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம். அதை விசாரித்து நீதிமன்றம், அந்த விதிக்கு இடைக்கால தடை விதிக்கலாம்.</p> ]]></content:encoded></item></channel></rss>