<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 16 Sep 2026 05:11:58 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 16 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-september-2026#comments</comments><guid isPermaLink="false">a0811bc2-a555-463b-9aff-906d36ceb0c8</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:17:56 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:09:58.025Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/x1wtm4iq/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/x1wtm4iq/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-financial-assistance-for-tuition-fees-should-also-be-provided-to-students-from-backward-classes-and-most-backward-classes">பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்!- அன்புமணி</a></p><p>* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப்படுவதில்லை. </p><p>* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid">அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்</a></p><p>* மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு.</p><p>* பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh">தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு</a></p><p>* அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>* தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  பதிவு செய்துள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-central-government-should-abandon-the-plan-to-levy-charges-on-upi-transactions">யு.பி.ஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும், கொரோனா காலத்தில் நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கவும் யுபிஐ மூலமான பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டன.</p><p>* ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கும் பொருள் வாங்கும் மக்கள் இந்தக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-thank-you-to-everyone-who-kindly-inquired-about-my-health">மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளேன்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். </p><p>* கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-expansion-scheme-cm-vijay-to-launch-it-on-22nd">காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் - முதலமைச்சர் விஜய் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்</a></p><p>* முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றியது. </p><p>* இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-raid-at-former-minister-anbil-maheshs-residence">முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை </a></p><p>* சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திமுக பிரமுகரான பி.டி. அரசகுமாரை கைது செய்தனர். </p><p>* அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-raid-at-former-minister-anbil-maheshs-residence</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-raid-at-former-minister-anbil-maheshs-residence#comments</comments><guid isPermaLink="false">19441d58-0e7e-49b2-9e22-a224bdf795bb</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:07:35 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:07:35.334Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,anbil mahesh poyyamozhi,Arasakumar,அரசகுமார்,அன்பில் மகேஷ் பொய்யாமொழி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/054nj3m5/anbilmahesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbil Mahesh poyyamozhi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/054nj3m5/anbilmahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை  நடத்தி வருகின்றனர். </p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mlas-filed-breach-of-privilege-complaint-against-minister-nirmal-kumar">திமுக</a> ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">அன்பில் மகேஷ் பொய்யாமொழி</a>.</p><p>தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக புகார் இவர் மீது எழுந்தது. இது தொடர்பான புகாரில் திமுக நிர்வாகி அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.</p> <p>சட்டசபையில் அமைச்சர் மரிய வில்சனும், அன்பில் மகேஷ் மீது லஞ்சப் புகார் கூறியிருந்தார்.</p><p>இந்நிலையில், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.</p> <p>தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி முறைகேட்டில் கைதான அரசகுமாருடன் தொடர்பு என்ற புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.</p><p>முன்னதாக, தமிழகம் முழு​வதும் பல தனி​யார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்​கு மேல் வசூலித்து மோசடி செய்​துள்​ள​தாக அளிக்​கப்​பட்ட புகாரின் பேரில், அரசகுமார் கைது செய்யப்பட்டார். </p> <p>அரசகுமார் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தனக்கு தெரியும் என்று கூறி தனி​யார் பள்​ளி​ நிர்வாகிகளிடம் ரூ. 100 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி​ செய்துள்ளார்.</p><p>இது தொடர்பாக தனியார் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திமுக பிரமுகரான பி.டி. அரசகுமாரை கைது செய்தனர். </p> <p>தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், டி.டி.சி.பி. மற்​றும் சி.எம்.​டி.ஏ. அங்​கீ​காரம் உள்​ளிட்ட பிற சட்​டப்​பூர்வ அனு​ம​தி​களை பெற்​றுத் ​தரு​வ​தாக கூறி, தமிழகம் முழு​வதும் பல தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிடம் இருந்து ரூ.100 கோடிக்​குமேல் வசூலித்து மோசடி செய்​துள்​ள​தாக அளிக்​கப்​பட்ட புகாரின் பேரில், அரசகுமார் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.</p> <p>இந்த மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதன் அடிப்படையில் பி.டி. அரசகுமார் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்பது பற்றிய விசாரணை நடத்தப்பட்டது.</p> <p>இதன் முடிவில் ரூ.100 கோடி மோசடி வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்து இருந்தனர்.</p><p>இந்நிலையில்,  திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-financial-assistance-for-tuition-fees-should-also-be-provided-to-students-from-backward-classes-and-most-backward-classes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-financial-assistance-for-tuition-fees-should-also-be-provided-to-students-from-backward-classes-and-most-backward-classes#comments</comments><guid isPermaLink="false">8ca21bf3-ede2-4982-b678-d298e0bdde55</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:09:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:09:02.875Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/w9ttimyc/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/w9ttimyc/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும்  பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை வழங்க முன்வர வேண்டும். நடப்பு 2026-27ஆம் கல்வியாண்டிலிருந்தே இந்த  உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>சமூக அநீதி</strong></h2><p>தமிழ்நாட்டில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின  மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு கல்விக் கட்டண (Annual Tution Fees) உதவித் தொகையை 4 மடங்கு முதல் 8 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை உயர்வு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கட்டண உதவி மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதியாகும்.</p><p>பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் வகையில், அரசு கலைக் கல்லூரிகளில் பயில இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கட்டணச் சுமையை ஏற்றுக் கொள்ளும் நோக்குடன் ஆண்டு கல்விக் கட்டண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படாத நிலையில், இப்போது பி.எஸ்சி, பி.காம் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவி ரூ.2850-லிருந்து, 295% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.ஏ மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.1350-லிருந்தும், எம்.எஸ்சி, எம்.காம் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2850-லிருந்து ரூ.12,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.</p><p>பி.ஏ. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1350 உதவித் தொகை 733% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக வழங்கப்படும். பி.பி.ஏ மாணவர்களுக்கும் இதே தொகை வழங்கப்படும். இதுதவிர மேலும் 11 இளநிலை பட்டப்படிப்பு மானவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.11,250 வீதமும், 10 முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வீதமும் கல்விக் கட்டண உதவியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதையும், பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டண உதவித் தொகை கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாததையும் கனக்கில் கொண்டு பார்க்கும் போது இந்த உதவித்தொகை உயர்வு நியாயமானதும், தேவையானதும் ஆகும்.</p><p>அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு இத்தகைய கல்விக்கட்டண உதவிகள் வழங்கப்படுவதே இல்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசு கல்லூரிகளில்  அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவதால், அவற்றில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ஒரு பிரச்சனை இல்லை. ஆனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூக மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் கல்விக்கட்டண உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.</p><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப்படுவதில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் 8,083 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுக் கல்லூரிகளில் கல்வித் தரம் சீரழிந்திருப்பதால், பெரும்பான்மையான மாணவர்கள் அவற்றில் இடம் கிடைத்தாலும் தவிர்த்து விட்டு தனியார்  கலைக் கல்லூரிகளில் சேரும் வழக்கம் அதிகரித்து வருகிறது.</p><h2><strong>கல்விக்கட்டண சுமையை அரசு தான் ஏற்க வேண்டும்</strong></h2><p>எடுத்துக்காட்டாக, 2022-23ஆம் ஆண்டில் 170 அரசுக் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில், ஒரு லட்சத்து 8,748 மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் மாணவர் சேர்க்கை 96,000 ஆக குறைந்து விட்டது. அதேநேரத்தில், தனியார் கலை - அறிவியல் கல்லூரிகளில் 2023-24ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 94,306 ஆக இருந்த முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, 2025-26ஆம் ஆண்டில்  2.60 லட்சத்தைக் கடந்திருக்கிறது. தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலையில், அவர்களில் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.</p><p>அவர்களிலும் கணிசமானவர்கள் கல்லூரிக் கல்விக் கட்டணம் செலுத்த வசதியற்றவர்கள். அவர்களில் பெரும்பான்மையினரின் பெற்றோர் கடன் வாங்கித் தான் கட்டணம் செலுத்துகின்றனர். இத்தகைய நிலை  ஏற்பட்டதற்கு மாணவர்களோ, பெற்றோர்களோ காரணமல்ல. தமிழக அரசு தான் இதற்கு காரணம். அரசு கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தும்,  அவற்றில் தகுதியான உதவிப் பேராசிரியர்களை நியமித்தும் தரமானக் கல்வியை வழங்கியிருந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலைமை  ஏற்பட்டிருக்காது. அதனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கட்டண சுமையை அரசு தான் ஏற்க வேண்டும்.</p><p>அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும்  பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை வழங்க முன்வர வேண்டும். நடப்பு 2026-27ஆம் கல்வியாண்டிலிருந்தே இந்த  உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>கிராஷ் டெஸ்டில் மாஸ் காட்டிய மஹிந்திரா XUV 7XO</title><link>https://www.maalaimalar.com/automobilenews/mahindra-xuv-7xo-scores-5-stars-in-bharat-ncap-crash-test</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/mahindra-xuv-7xo-scores-5-stars-in-bharat-ncap-crash-test#comments</comments><guid isPermaLink="false">f0210735-aaa5-4040-a20d-11dc3c200db7</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:04:00 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:04:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,mahindra,மஹிந்திரா,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/bl0zrazr/Mahindra-XUV-7XO-Crash-Test.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mahindra XUV 7XO Crash Test]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/bl0zrazr/Mahindra-XUV-7XO-Crash-Test.png?w=280" width="280"></media:thumbnail><category>ஆட்டோமொபைல் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/mahindra">மஹிந்திரா</a> XUV 7XO, ஜூலை 2026-இல் நடத்தப்பட்ட பாரத் NCAP கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. </p><p>கிராஷ் டெஸ்ட்களில் மஹிந்திரா XUV 7XO <a href="https://www.maalaimalar.com/topic/car">கார்</a> மாடலின், AX7 டீசல் ஏழு இருக்கைகள் கொண்ட ஆட்டோமேட்டிக் மற்றும் AX7L டீசல் 4WD ஏழு இருக்கைகள் கொண்ட ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் சோதனைக்கு உட்படுத்தப்ட்டன. </p><p>இந்த மதிப்பீடு, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் டிரிம்கள் என பரந்த அளவிலான வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.</p><h2>மதிப்பெண்களில் அசத்திய XUV 7XO:</h2><p>வயது வந்தோர் பயணப் பாதுகாப்பில், XUV 7XO 32-க்கு 30.76 மதிப்பெண்களைப் பெற்றது. இதை மேலும் பிரித்து பார்த்தால், இந்த கார் முன்பக்க ஆஃப்செட் நெகிழ்வு தடுப்பு சோதனையில் 16-க்கு 14.76 மதிப்பெண்களையும், பக்கவாட்டு நகரக்கூடிய நெகிழ்வு தடுப்பு சோதனையில் 16-க்கு முழு 16 மதிப்பெண்களையும் பெற்றதுடன், பக்கவாட்டு கம்ப மோதல் சோதனையிலும் தேர்ச்சி பெற்றது.</p><p>குழந்தைகள் பயண பாதுகாப்பை பொறுத்தவரை, XUV 7XO 49-க்கு 44.97 மதிப்பெண்களைப் பெற்றது; இதில் டைனமிக் ஸ்கோர் 24-க்கு 23.97, CRS நிறுவல் ஸ்கோர் 12-க்கு முழு 12, மற்றும் வாகன மதிப்பீட்டு ஸ்கோர் 13-க்கு 9 ஆகும்.</p><h2>XUV 7XO பாதுகாப்பு அம்சங்கள்:</h2><p>அனைத்து வேரியண்ட்களிலும் பொருத்தப்பட்டுள்ள நிலையான பாதுகாப்பு உபகரணங்களில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பக்கவாட்டு ஹெட் கர்டன் ஏர்பேக்குகள், பாதசாரிகள் பாதுகாப்பு மற்றும் அனைத்து இருக்கை நிலைகளுக்குமான சீட் பெல்ட் ரிமைன்டர்கள் ஆகியவை அடங்கும்.</p><p>ஓட்டுநர் மற்றும் முன் பயணிக்கு முன் ஏர்பேக்குகள், பெல்ட் ப்ரீடென்ஷனர்கள் மற்றும் லோட்-லிமிட்டர்கள் நிலையான அம்சங்களாக உள்ளன, அதே சமயம் பின்புற இருக்கைகளில் ISOFIX ஆங்கரேஜ்கள் கிடைக்கின்றன. ஓட்டுநருக்கான முழங்கால் ஏர்பேக், நிலையான அம்சமாக இல்லாமல் ஒரு விருப்ப தேர்வாக வழங்கப்படுகிறது.</p><p>அதன் பிரிவை பொறுத்தவரை, XUV 7XO-வின் 30.76 என்ற AOP மதிப்பெண் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த முடிவாகும். இது மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட SUV பிரிவில் சிறந்த செயல்திறன் கொண்ட வாகனங்களில் ஒன்றாக திகழ்கிறது.</p><p>என்ட்ரி லெவல் மாடல்கள் முதல் உயர்-ரக AWD டீசல் மாடல் வரை, இந்த மதிப்பீடு பரந்த அளவிலான மாடல்களுக்கு பொருந்தும் என்பதால், வாங்குபவர்கள் எந்த வேரியண்ட்டை தேர்ந்தெடுத்தாலும், அவர்களுக்கு ஓரளவு சீரான பாதுகாப்பு கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>ஈரானில் பயங்கரம்: நடுவானில் அதிர்ந்த விமானம், சரிந்து விழுந்த கூரை பாகங்கள்- பயணிகள் கதறல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/terror-in-iran-plane-shakes-midair-cabin-roof-collapses</link><comments>https://www.maalaimalar.com/news/world/terror-in-iran-plane-shakes-midair-cabin-roof-collapses#comments</comments><guid isPermaLink="false">3019d574-20b3-487c-a661-261be23b7a39</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:02:31 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:02:31.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,Sepehran Airlines,Mashhad Airport,மஷாத் விமான நிலையம்,செபெஹ்ரன் ஏர்லைன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hkhwqtv5/air.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sepehran Airlines]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/hkhwqtv5/air.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விமானம் கடும் அதிர்வுகளுக்கு உள்ளானதால், பயணியர் அமர்ந்திருந்த பகுதியின் மேல் கூரை உறை உடைந்து சரிந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/again-and-again-oracle-shocks-employees-with-today-is-your-last-day">ஈரான் </a>நாட்டின் மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் புறப்பட்ட செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம், டேக்-ஆஃப் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தீவிர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.</p><h2><strong>டயர் கழன்று எஞ்சின் சேதம்</strong></h2><p>மாலை சுமார் 5:39 மணியளவில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் லேண்டிங் கியரில் இருந்த சக்கரத்தின் டயர் தடம் கழன்று விழுந்தது. இதனால் விமானத்தின் என்ஜின் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு, விமானம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பயங்கரமாக குலுங்கத் தொடங்கியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானிகள் உடனடியாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி, விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்தை நோக்கித் திருப்பினர்.</p><h2>சரிந்து விழுந்த <strong>கேபின் கூரை பா</strong>கங்கள்</h2><p>விமானம் கடும் அதிர்வுகளுக்கு உள்ளானதால், பயணியர் அமர்ந்திருந்த பகுதியின் மேல் கூரை உறை உடைந்து சரிந்தது. இதன் காரணமாக விமானத்தின் உட்புறக் கட்டமைப்புகள் வெளியே தெரிந்தன. மேலடுக்கு பெட்டிகளில் இருந்த பொருட்களும் கூரை பாகங்களும் பயணிகள் மீது விழுந்ததால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியபடி பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p>விமானிகளின் துரிதமான செயல்பாட்டால், விமானம் மஷாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் யாருக்கும் காயங்களோ பாதிப்போ ஏற்படவில்லை என செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஹசன் ஜாஃபரி தெரிவித்துள்ளார். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, மாற்று விமானம் மூலம் கெர்மான்ஷாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><p>இச்சம்பவத்தை தொடர்ந்து மஷாத் விமான நிலையத்தின் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டு, ஆய்வு செய்யப்பட்ட பின் மீண்டும் திறக்கப்பட்டது. டயர் கழன்றதுதான் என்ஜின் சேதத்திற்கும் கடும் அதிர்வுக்கும் காரணமா, கூரை பாகங்கள் எவ்வாறு தனியாகக் கழன்று விழுந்தன என்பது குறித்து ஈரான் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">2c2e726e-25f1-465e-a82d-805d36729c7d</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:49:10 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:49:10.234Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ஊழல் வழக்கு,anbil mahesh poyyamozhi,அன்பில் மகேஷ் பொய்யாமொழி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/gab61qlr/anbilmaheshpoyyamozhi.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்பில் மகேஷ் பொய்யாமொழி]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்பில் மகேஷ் பொய்யாமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/gab61qlr/anbilmaheshpoyyamozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  பதிவு செய்துள்ளனர்.</strong></em> </p><p>தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">அன்பில் மகேஷ்</a> இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பள்ளி தர உயர்வு அனுமதி பெற்றுத் தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்ததாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததின் பேரில் பி.டி.அரசகுமார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். </p><h2><strong>சோதனை</strong></h2><p>இந்த புகார் தொடர்பாக இன்று திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. </p><p>இதனிடையே, தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  பதிவு செய்துள்ளனர். </p><h2><strong>வங்கி கணக்குகள் முடக்கம்</strong></h2><p>இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்ற பிரிவு போலீஸ் தரப்பில் கூறியதாவது:- வழக்கு தொடர்பாக இதுவரை 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 177 தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி நடந்துள்ளது. மோசடி தொடர்பாக பி.டி.அரசகுமாரின் 20 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதற்கிடையே, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid#comments</comments><guid isPermaLink="false">3dfbf62d-ce8e-49e5-aa3a-9cfec075ed76</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:47:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:47:33.988Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,anbil mahesh poyyamozhi,முக ஸ்டாலின்,அன்பில் மகேஷ் பொய்யாமொழி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cia1r52a/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cia1r52a/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்! என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p> <p>தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-raid-at-former-minister-anbil-maheshs-residence">அன்பில் மகேஷ்</a> பொய்யாமொழியின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு என்று திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-thank-you-to-everyone-who-kindly-inquired-about-my-health">மு.க.ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை</p><p>* தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்</p><p>* பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்</p>  <p>* நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்</p><p>* ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு</p><p>* ராமநாதபுரம் இரட்டைக் கொலை</p> <p>* சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை </p><p>* அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல்</p><p>என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.</p> <p>இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு.</p> <p>இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை<br><br>▶️ தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்<br><br>▶️ பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்<br><br>▶️ நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல்…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2100079595378864300?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-gold-price-in-chennai-16-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-gold-price-in-chennai-16-9-2026#comments</comments><guid isPermaLink="false">d0638284-8439-4f64-ab19-d6692f275047</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:29:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:29:13.305Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/11/26290201-gold-112.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/11/26290201-gold-112.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு  ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. 13-ந்தேதி சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனையானது. 14-ந்தேதி சவரனுக்கு  ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும் விற்பனையானது.</p> <p>நேற்று சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும் விற்பனையானது.</p><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>15-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,320</p><p>14-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,000</p><p>13-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360</p><p>12-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,360</p><p>11-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,240</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>15-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>14-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>13-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>12-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>11-09-2026- ஒரு கிராம் ரூ.250</p> ]]></content:encoded></item><item><title>மேக்னைட் மாடலின் விலையை சத்தமின்றி மாற்றிய நிசான்</title><link>https://www.maalaimalar.com/automobilenews/car/nissan-magnite-prices-hiked</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/car/nissan-magnite-prices-hiked#comments</comments><guid isPermaLink="false">d23772c7-406f-4f5f-b9b3-964886cb40f2</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:22:00 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:22:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Nissan,விலை உயர்வு,price hike,கார்,நிசான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ukisd8ob/Nissan-Magnite.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nissan Magnite]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ukisd8ob/Nissan-Magnite.png?w=280" width="280"></media:thumbnail><category>கார் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய சந்தையில் <a href="https://www.maalaimalar.com/topic/nissan">நிசான்</a> நிறுவனம் தனது மேக்னைட் மாடலின் விலையை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக நிசான் மேக்னைட் விலைகள் ரூ. 1000 முதல் ரூ. 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>இந்த விலை உயர்வு, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) ஆகிய இரண்டு என்ஜின் ஆப்ஷன்களிலும் உள்ள அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும்.</p><p>இருப்பினும், பெரும்பாலான மாடல்களின் விலை ரூ. 3000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டெக்னா பெட்ரோல் MT டூயல்-ஒன் என்ற ஒரு குறிப்பிட்ட மாடலுக்கு மட்டும் ரூ. 6500 என்ற மிக அதிகமான விலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற மாடல்களை விட மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. </p><h2>சில வேரியண்ட்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை:</h2><p>மேலும், இந்த விலை உயர்வில் விசியா, விசியா பிளஸ் மற்றும் அசென்டா CNG மாடல்கள் (MT மற்றும் AMT ஆகிய இரண்டு வகைகளிலும்) சேர்க்கப்படவில்லை.</p><p>மிக நீண்ட காலமாக, வாடிக்கையாளர்களை ஷோரூம்களுக்குக் கொண்டு வருவதில் நிசான நிறுவனத்தின் தனிப்பெரும் சக்தியாக மேக்னைட் விளங்கியது. ஆனால் இப்போது, ​​கிராவைட் எம்.பி.வி., டெக்டான் மற்றும் எக்ஸ்-டிரெயில் எஸ்.யூ.வி. ஆகிய வாகனங்களும் குறைந்த எண்ணிக்கையில் அதனுடன் இணைந்துள்ளன.</p><h2>என்ஜின் ஆப்ஷன் மற்றும் போட்டி மாடல்கள்:</h2><p>இது இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இரண்டுமே மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) பவர்டிரெய்ன்களைக் கொண்டுள்ளன. மேலும், நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் மாடலில் சி.என்.ஜி. ஆப்ஷனும் உள்ளது.</p><p>கைகர் மாடலை போன்றே, நிசான் நிறுவனம் தனது பிரிட்ஜர் சப்-காம்பாக்ட் எஸ்.யூ.வி. மாடலை அறிமுகம் செய்ததும் மேக்னைட் மாடலும் அப்டேட் செய்யப்படும். </p><p>இந்த கார் டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர், மாருதி ஸ்விஃப்ட் , ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் ரெனால்ட் டிரைபர் மற்றும் கிராவைட் எம்.பி.வி. போன்றவற்றுக்கு போட்டியாக மாறும்.</p>]]></content:encoded></item><item><title>போர் பதற்றம் காரணமாக ஆர்டிக் கடல்வழியை பயன்படுத்தும் சீனா.. ரஷியாவுடன் புதிய நட்பு.. </title><link>https://www.maalaimalar.com/news/world/china-uses-arctic-sea-route-amid-war-tensions-new-friendship-with-russia</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-uses-arctic-sea-route-amid-war-tensions-new-friendship-with-russia#comments</comments><guid isPermaLink="false">32b8f753-b824-45de-896d-06af7bef4121</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:58:43 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:58:43.704Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,China,சீனா,Hormuz,Arctic,ரஷியா,ஹார்முஸ்  ஜலசந்தி,ஆர்டிக் பெருங்கடல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/b949zp4x/Your-paragraph-text-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China-Russia Partnership]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/b949zp4x/Your-paragraph-text-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று இங்கிலாந்து நாட்டிற்கு, புதிய கடல்வழித் தடமான ஆர்டிக் கடல்வழி மூலமாக வெறும் 20 நாட்களில் சென்றது. இந்த கப்பல் மத்திய கிழக்கு கடல்வழியாக பயணித்தபோது 36 நாட்களில் இங்கிலாந்துக்கு சென்றிருந்த நிலையில், தற்போது அதைவிட குறுகிய காலத்தில் சென்றுள்ளது.</p><h3><strong>மத்திய கிழக்கு கடல் வழித்தடம்</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனாவை</a> சேர்ந்த 574 அடி நீளமுள்ள சரக்கு கப்பலான ‘துபாய் டவர்’, அந்நாட்டின் கிங்க்டோவில் இருந்து இங்கிலாந்தின் டீஸ்போர்ட் நகருக்கு கடந்த வாரம் மத்திய கிழக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டது.</p><p>அப்போது மத்திய கிழக்கு வழித்தடம் வழியாக பயணிப்பதற்கு, சுமார் 36 நாட்கள் ஆனது. இந்த நிலையில் ஆர்டிக் பெருங்கடல் பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/ரஷியா">ரஷியாவுடன்</a> இணைந்து கடலோர காவல் ரோந்து பணிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது.</p><p>தொழில்நுட்ப திட்டங்களை ஆராய்வது மற்றும் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான பயணங்களில் தூரத்தை குறைக்கக்கூடிய கப்பல் போக்குவரத்துக்கான குறுகிய வழியை சோதிப்பது என ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.</p><h3><strong>ஆர்டிக் வடக்கு கடல் வழித்தடம்</strong></h3><p>ஆர்டிக் பெருங்கடலில் இருந்து சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் சீனா அமைந்துள்ளது.</p><p>இந்த நிலையில் துபாய் டவர் என்ற சீன சரக்கு கப்பல் கடந்த ஆகஸ்ட் 19 அன்று சீனாவில் இருந்து ஆர்டிக் பெருங்கடல் வழியாக இங்கிலாந்துக்கு சென்றது.</p><p>இந்த பயணத்தின்போது 12,000 கிலோமீட்டர் தூரம் குறைக்கப்பட்டு, சுமார் 3 வாரங்களில் இங்கிலாந்து நாட்டிற்கு சீன சரக்கு கப்பல் சென்றடைந்தது.</p><h3><strong>பயணத்தில் சிக்கல்</strong></h3><p>இந்த புதிய வழித்தடம் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தவிர்க்க உதவினாலும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் மட்டுமே ஆர்டிக் பெருங்கடல் வழியாக பயணம் மேற்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆர்டிக் காலநிலையின்போது உருவாகும் பனிப்பாறைகளை உடைப்பது கப்பல்களுக்கு சவாலாக இருக்கும்.</p><p>மேலும் இந்த வழித்தடத்தின் பெரும்பாலான பகுதி ரஷியாவின் வடக்கு கடற்கரையோரமாக அமைந்துள்ளதால், அதை பயன்படுத்தும் நிறுவனங்கள் ரஷியாவிற்கு அதற்கான கட்டணங்களை செலுத்த வேண்டிய சூழல் உள்ளது.</p><h3><strong>சீனா-ரஷியா புதிய நட்பு</strong></h3><p>1990-களில் சீனா தனது ஆர்க்டிக் ஆராய்ச்சி முயற்சிகளை விரிவுபடுத்தி, வட துருவத்திற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டதிலிருந்தே, அது ஆர்க்டிக் பகுதியில் ஆர்வம் காட்டி வருகிறது.</p><p>வடக்கு கடல் வழித்தடத்தின் பெரும்பகுதியை ரஷியா கட்டுப்படுத்தி வருவதால், கடல்வழி சீனப் போக்குவரத்து என்பது கட்டணங்கள் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயுடன், ரஷியாவிற்கு சீனாவுடனான ஓர் உறவையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் - முதலமைச்சர் விஜய் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-expansion-scheme-cm-vijay-to-launch-it-on-22nd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-expansion-scheme-cm-vijay-to-launch-it-on-22nd#comments</comments><guid isPermaLink="false">e39da2f8-3e77-473c-8975-a3f851548bd6</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:49:22 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:49:22.296Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Breakfast Scheme,பெருந்தலைவர் காமராஜர்,காலை உணவு திட்டம்,Perunthalaivar Kamarajar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/29m9pbjj/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/29m9pbjj/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் விஜய் வருகிற 22-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார்.</p> <p>த.வெ.க. தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றியது. </p><p>அதன்படி, 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தை பெரியாரின் பிறந்தநாளான நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியது. இதனை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregularities-in-the-chief-ministers-department-minister-sarathkumar-linked-arappor-iyakkam-alleges">முதலமைச்சர் விஜய்</a> தொடங்கி வைப்பார் என சொல்லப்பட்டது. </p><p>ஆனால் அவர், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ளதால், அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. </p>  <p>இதற்கிடையே முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். </p><p>இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலாளர் பல்லவி பல்தேவ் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும், என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>10,000mAh பேட்டரியுடன் அறிமுகமான ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் - விலை, முழு விவரங்கள்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/redmi-note-17-pro-max-note-17-pro-launched-in-india-with-up-to-10000mah-battery</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/redmi-note-17-pro-max-note-17-pro-launched-in-india-with-up-to-10000mah-battery#comments</comments><guid isPermaLink="false">3718d4d6-d296-457d-81c3-2fc4c8929f60</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:38:00 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:38:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Redmi,ரெட்மி,smartphone,ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ixitd92p/Redmi-Note-17-Pro-Max-Note-17-Pro.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Redmi Note 17 Pro Max, Note 17 Pro]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ixitd92p/Redmi-Note-17-Pro-Max-Note-17-Pro.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் ரெட்மி நோட் 17 ப்ரோ சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரிசையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/redmi">ரெட்மி</a> நோட் 17 மாடலுடன் இணைந்து, நோட் 17 சீரிசின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடல்களாக ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ ஆகியவை அடங்கும். </p><p>புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 10,000mAh பேட்டரியுடன் வருகிறது, அதே சமயம் நோட் 17 ப்ரோ 9,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. </p><p>ரெட்மி நோட் 17 ப்ரோ <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 6 சீரிஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 17 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 6s சீரிஸ் SoC இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது.</p><h2>நோட் 17 ப்ரோ மற்றும் 17 ப்ரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்:</h2><p>ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர்ஓ.எஸ். 3 உடன் வரும் ஒரு டூயல் சிம் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போனுக்கு நான்கு ஆண்டுகள் ஓ.எஸ். அப்டட்களும், ஆறு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்குவதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.83-இன்ச் 1.5K (1,280 x 2,772 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே உள்ளது.</p><p>ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ், குவால்காமின் 4nm ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 12GB வரையிலான LPDDR5x ரேம், ஒரு அட்ரினோ GPU மற்றும் 256GB UFS 4.1 மெமரி இடம்பெற்றுள்ளன. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக இந்த ஸ்மார்ட்போன் IP66 + IP68 + IP69K சான்றுகளுடன் வருகிறது.</p><p>கேமராக்களைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வசதியுடன் கூடிய 50MP பிரைமரி கேமராவும், 8MP அல்ட்ராவைடு கேமராவும் அடங்கும். இத்துடன் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.</p><p>ரெட்மி நோட் 17 ப்ரோ, ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸில் உள்ள அதே OS, மென்பொருள் ஆதரவு, டிஸ்ப்ளே மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெறுகிறது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 4 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ள அதே பின்புற கேமரா யூனிட்டையும் பெறுகிறது.</p><p>எனினும், இந்த மாடலில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. ரெட்மி நோட் 17 ப்ரோ, 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 9,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.</p><h2>ரெட்மி நோட் 17 ப்ரோ, நோட் 17 ப்ரோ மேக்ஸ் விலை விவரங்கள்:</h2><p>இந்தியாவில் ரெட்மி நோட் 17 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி மாடல் ரூ. 36,999-இல் இருந்து தொடங்குகிறது. அதே சமயம், டாப் எண்ட் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39,999 ஆகும்.</p><p>ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49,999-இல் இருந்து தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 55,999 ஆகும்.</p><p>இந்நிறுவனம், எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட் வங்கி கார்டுகள் மூலம் ரூ. 5,000 வரை உடனடி தள்ளுபடி அல்லது எச்.டி.பி. ஃபைனான்சியல் சர்வீசஸ் மூலம் ரூ. 5,000 வரை கேஷ்பேக் வழங்குகிறது.</p><p>புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மற்றும் நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை முறையே செப்டம்பர் 17 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய தேதிகளில் அமேசான் தளத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளன.</p><p>ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ்: மட்சா கிரீன், சீக்ரெட் சன்ரைஸ் மற்றும் ஸ்டெல்த் பிளாக் ஆகிய வண்ணங்களிலும், ரெட்மி நோட் 17 ப்ரோ: கிளவுட் ப்ளூ, பர்பிள் வைப் மற்றும் ஸ்டெல்த் பிளாக் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கும்.</p>]]></content:encoded></item><item><title>யு.பி.ஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-central-government-should-abandon-the-plan-to-levy-charges-on-upi-transactions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-central-government-should-abandon-the-plan-to-levy-charges-on-upi-transactions#comments</comments><guid isPermaLink="false">ab66fc92-8d56-41c1-b4fc-785c72c5b7c2</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:28:49 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:28:49.103Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Central govt,UPI,யுபிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5ayce6ps/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யுபிஐ பண பரிவர்த்தனை- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5ayce6ps/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>மத்திய அரசு</strong></h2><p>இந்தியாவில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்கு பிறகு கூகுள் பே உள்ளிட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">யு.பி.ஐ</a> செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2000-க்கும் கூடுதலான  வணிகப் பயன்பாட்டுக்கான பரிவர்த்தனைகளுக்கு அவற்றின் மொத்த மதிப்பில் 0.40 விழுக்காடும், அதிகபட்சமாக ரூ.300-ம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.</p><p>தனிநபர்கள் இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கும், ரூ.2000-க்கும் குறைவான வணிகப் பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  யு.பி.ஐ மூலம் மாதத்திற்கு ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாக பணம் பெறும் சிறு வணிகர்களுக்கும் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கும் பொருள் வாங்கும் மக்கள் இந்தக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை; மாறாக, இந்தக் கட்டணம் வணிகர்களிடமிருந்தே வசூலிக்கப்படும். இதனால், தனிநபர்களுக்கு எந்த வகையிலும்  நேரடியாக பாதிப்பு இல்லை. மாதம் ரூ.1 லட்சம் வரை யு.பி.ஐ மூலம் வணிகம் செய்யும் சிறு வணிகர்களுக்கும் பாதிப்பு இல்லை.</p><h2><strong>மக்களின் துயரம் அதிகரிக்கும்</strong></h2><p>ஆனால், இந்த முறையில் பொதுமக்கள் தான் மறைமுகமாக பாதிக்கப்படுவார்கள்.  பெரு வணிகர்கள் ஒரு பரிமாற்றத்திற்கு அதிகபட்சமாக ரூ.300 வரை பரிவர்த்தனைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு இலாபம் குறைவதை அனுமதிக்க மாட்டார்கள். மாறாக, பொருள்களின் விலைகளை உயர்த்தி, இந்தக் கட்டணத்தை மறைமுகமாக பொதுமக்கள் மீது தான் சுமத்துவார்கள். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரம் இதனால் மேலும் அதிகரிக்கும்.</p><p>பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும், கொரோனா காலத்தில் நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கவும் <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-bans-charges-on-upi-transactions-up-to-rs-2000">யுபிஐ</a> மூலமான பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டன. இப்போதும் கூட இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு பல இடங்களில் ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறை மூலம் கணிசமான அளவில் கருப்புப் பணம் உருவாவது தடுக்கப்பட்டு, வெளிப்படையான பணப்பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள இலாபத்துடன் ஒப்பிடும் போது, இந்த சேவையை இலவசமாக வழங்குவதால் ஏற்படும்  இழப்பு பெரிதல்ல.</p><p>எனவே, ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். வெளிப்படையான பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போதுள்ள நடைமுறையே  தொடரும் என்று அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளேன்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-thank-you-to-everyone-who-kindly-inquired-about-my-health</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-thank-you-to-everyone-who-kindly-inquired-about-my-health#comments</comments><guid isPermaLink="false">f9a85173-2d0e-46ce-9da9-22a7f40b4b68</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:16:21 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:16:21.528Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/rbnnb6xc/mkstalin006.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/rbnnb6xc/mkstalin006.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</strong></em></p><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>வைரஸ் தொற்று</strong></h2><p>வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. </p><p>கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.</p><h2><strong>நன்றி</strong></h2><p>தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.</p><p>பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>நாளை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (17.09.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-43</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-43#comments</comments><guid isPermaLink="false">b42dee23-a11b-413e-989c-6d3f5f8aa240</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:05:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:05:27.226Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,தமிழக மின்சார வாரியம்,chennai power cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/a5ua2i3e/powercut0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின் தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/a5ua2i3e/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>கோட்டூர்புரம்</strong></h2><p>புதுச்சேரி சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, மண்டபம் சாலை, துலுகாத்தம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, கருணாநிதி தெரு, மணப்பன் தெரு, யாதவள் தெரு, லேக் வியூ தெரு, குருவப்பன் தெரு.</p><h2><strong>திருமுல்லைவாயல்</strong></h2><p>சிட்கோ மகளிர் தொழிற்சாலைகள், மோரை வீராபுரம், கன்னியம்மன் நகர், டிஎஸ்பி முகாம், வாணியசத்திரம், காஞ்சி காமகோடி நகர், ராமாபுரம், கல்லிக்குப்பம், கன்னிகாபுரம், அலமதி, புதுக்குப்பம், சிங்கிள் குப்பம், லட்சுமிநாதபுரம்.</p><h2><strong>கோயம்பேடு மார்கெட்</strong></h2><p>மாதா கோவில் தெரு, அழகம்மாள் நகர் 1 முதல் 8வது தெரு, திருவள்ளுவர் தெரு, நேதாஜி அவென்யூ, கன்னியம்மன் நகர், நாராயணியம்மன் கோவில் தெரு, பாரதியார் தெரு, பெருமாள் கோவில் தெரு.</p><h2><strong>கிண்டி</strong></h2><p>வண்டிக்காரன் சாலை, நேரு நகர் 1 முதல் 4வது தெருக்கள், அன்பழகன் தெரு, பாரதிதாசன் தெரு, ஜீவானந்தம் தெரு, கோவிந்தசாமி தெரு, கேவிகே சாமி தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, சத்தியமூர்த்தி தெரு, ராஜ் பவன் காலனி, டிஎன்எச்பி காலனி.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-16-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-16-september-2026#comments</comments><guid isPermaLink="false">d329d301-c937-4219-a80d-6d755477dc8d</guid><pubDate>Wed, 16 Sep 2026 02:28:40 +0000</pubDate><atom:updated>2026-09-16T02:28:40.608Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wi7y6inv/maalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wi7y6inv/maalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (16.9.2026 - (புதன்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சவுதியை கைவிட்ட பாகிஸ்தான்... அவசரமாக எகிப்துக்கு சென்ற சவுதி இளவரசர்</title><link>https://www.maalaimalar.com/news/world/yemenil-intensifying-houthi-pakistan-saudiy-egypt-saudi-prince</link><comments>https://www.maalaimalar.com/news/world/yemenil-intensifying-houthi-pakistan-saudiy-egypt-saudi-prince#comments</comments><guid isPermaLink="false">dd24b194-9d21-42be-a6dd-3561b61647af</guid><pubDate>Wed, 16 Sep 2026 02:22:42 +0000</pubDate><atom:updated>2026-09-16T02:22:42.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,Egypt,எகிப்து,சவுதி அரேபியா,Houthi,Hormuz,ஹார்முஸ் ஜலசந்தி,ஹவுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/e8n1y0o1/Your-paragraph-text.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Saudi-Egypt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/e8n1y0o1/Your-paragraph-text.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் நாட்டின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள செங்கடலின் பெரும்பகுதியையும் மற்றும் முக்கிய வர்த்தக போக்குவரத்து தளமான பாப் அல்-மண்டே ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் கைப்பற்றியதை தொடர்ந்து, எகிப்தின் உதவியை சவுதி அரேபியா நாடியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">சவுதி அரேபியாவின்</a> கிழக்கு பகுதியில் உள்ள எண்ணெய் உற்பத்தி பகுதிகளில் இருந்து செங்கடல் துறைமுகமான யான்பு வரையில் 1,200 கிலோ மீட்டர் நீளத்தில் எண்ணெய் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.       </p><h3><strong>செங்கடல் வழித்தடம்</strong></h3><p>செங்கடல் வழித்தடமானது சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரைக் கடலை இந்திய பெருங்கடலுடன் இணைக்கிறது. மேலும் ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகிறது.</p><p>ஹார்முஸ் ஜலசந்தியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு சவுதி அரேபியாவுக்கு, பாப்-அல்-மண்டேப் ஜலசந்தி முக்கிய வர்த்தகம் போக்குவரத்து மையமாக விளங்குகிறது.</p><h3><strong>பாப்-அல்-மண்டேப் ஜலசந்தி</strong></h3><p>இதையடுத்து செங்கடல் துறைமுகமான மோக்காவையும், பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளையும், மேலும் மேற்கு ஏமனில் அமைந்துள்ள முக்கிய நகரங்களையும் கடந்த வாரம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.</p><p>சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. </p><p>இந்த திட்டத்தின் மூலம் ஏதாவது ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மற்ற உறுப்பு நாடுகள் பதில் தாக்குதல் நடத்தும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.</p><h3><strong>பாகிஸ்தான் தயக்கம்</strong></h3><p>இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதி அரேபியா, பாகிஸ்தானின் உதவியை நாடியது. அப்போது ஹவுதிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தனது படைகளை அனுப்ப மறுத்துவிட்டது.</p><p>மேலும் வெளிநாட்டு மண்ணில் போர் நடவடிக்கைகளை தவிர்த்து, சவுதி அரேபியா தனது நாட்டை பாதுகாத்து கொள்ள தனது படைகளை பயன்படுத்தலாம் என்று பாகிஸ்தான் கூறியது.</p><p>ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நேரடி தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவின் உதவியை சவுதி அரேபியா நாடியது. இந்த முயற்சியும் பலனளிக்காமல் தோல்வியில் முடிந்தது.</p><h3><strong>சவுதி இளவரசர் எகிப்துக்கு பயணம்</strong></h3><p>இந்த நிலையில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று எகிப்து நாட்டிற்கு பயணம் செய்து, அந்நாட்டின் அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிஸ்ஸியை சந்தித்தார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"> | HRH the Crown Prince arrives in Cairo on a working visit and was welcomed by Egyptian President. <a href="https://t.co/iqFtdWL4rc">pic.twitter.com/iqFtdWL4rc</a></p>&mdash; Foreign Ministry  (@KSAmofaEN) <a href="https://x.com/KSAmofaEN/status/2099847776821526822?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சவுதி இளவரசர், கடல்வழி போக்குவரத்தின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான தங்களின் உறுதியை இருதரப்பினரும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.</p><p>இந்த சந்திப்பு குறித்து எகிப்து அரசாங்க கூறுகையில், சவுதி அரேபியாவுக்கு எகிப்து அசைக்க முடியாத ஆதரவை அளிப்பதாக தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 16.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோக முயற்சி கைகூடும்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-16-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-16-september-2026#comments</comments><guid isPermaLink="false">31558b6f-12aa-49b9-b954-6c6102e7289b</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:56:09 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:56:09.631Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/13/27322352-rasi-3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/13/27322352-rasi-3.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிர்பார்ப்புகள் நடைபெறாமல் போகலாம். விரயங்கள் அதிகரிக்கும். இடமாற்றங்கள் பற்றிச் சிந்திப்பீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>தேவைகள் பூர்த்தியாகும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெற திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.</p> <h2>மிதுனம்</h2><p>முயற்சி கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.</p><h2>கடகம்</h2><p>தள்ளிப்போன காரியங்கள் தானாக முடிவடையும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும். வருமானம் திருப்தி தரும்.</p> <h2>சிம்மம்</h2><p>முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும். நிதி நிலையில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.</p><h2>கன்னி</h2><p>தடைகள் விலகும் நாள். தைரியமாக முடிவெடுப்பீர்கள். சில நேரங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை தேவை.</p> <h2>துலாம்</h2><p>நிதி நிலை உயர்ந்து நிம்மதி கூடும் நாள். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.</p><h2>விருச்சிகம்</h2><p>வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும்.</p> <h2>தனுசு</h2><p>புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். அன்னிய தேசத் தொடர்பு உண்டு.</p><h2>மகரம்</h2><p>நம்பிக்கைகள் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சிக்காகப் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.</p> <h2>கும்பம்</h2><p>வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.</p><h2>மீனம்</h2><p>யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நினைத்தபடி செய்ய இயலாது. எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 செப்டம்பர் 2026: நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-16-september-202</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-16-september-202#comments</comments><guid isPermaLink="false">d8991ff8-054e-41b4-aacc-93314620fee1</guid><pubDate>Wed, 16 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/14/20068734-narasimmar.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Narasimmar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/14/20068734-narasimmar.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-30 (புதன்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   பஞ்சமி காலை 10.32 மணி வரை பிறகு சஷ்டி</p><p>நட்சத்திரம் : விசாகம் இரவு 7.35 மணி வரை பிறகு அனுஷம்</p><p>யோகம் :  சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை  6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம்</h2><p>திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ணவதாரம், சிம்ம வாகனத்தில் புறப்பாடு. மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி வீற்றிருந்த திருக்கோலம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். </p> <p>கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். விருதுநகர் சமீபம் சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் பவனி. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - உழைப்பு</p><p>ரிஷபம் - முயற்சி</p><p>மிதுனம் - வெற்றி</p><p>கடகம் - நட்பு</p><p>சிம்மம் - பயணம்</p><p>கன்னி - கடமை</p> <p>துலாம் - பாராட்டு</p><p>விருச்சிகம் - போட்டி</p><p>தனுசு - உறுதி</p><p>மகரம் - அனுகூலம்</p><p>கும்பம் - புகழ்</p><p>மீனம் - பணிவு</p> ]]></content:encoded></item><item><title>டிரோன் திருட முயன்ற ஈரானிய படகுகள் அழிக்கப்பட்டன - அமெரிக்கா ராணுவம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/us-military-says-it-destroyed-2-small-iranian-boats-trying-to-steal-a-sea-drone</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-military-says-it-destroyed-2-small-iranian-boats-trying-to-steal-a-sea-drone#comments</comments><guid isPermaLink="false">1fa1e094-bf61-46dd-ab93-cad20b157c03</guid><pubDate>Wed, 16 Sep 2026 00:25:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T00:25:02.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,ஈரான்,Iran,us</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/15jzv05d/Strait-of-Hormuz-.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Strait of Hormuz]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/15jzv05d/Strait-of-Hormuz-.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">ஈரான்</a> கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா கப்பல் ஒன்றை திருட முயன்ற ஈரானின் இரண்டு சிறிய படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவற்றை அழித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. நீண்ட காலமாக நீடிக்கும் மோதலில் இது சமீபத்திய தாக்குதல் சம்பவமாகும். </p><p>அமெரிக்க மத்திய கட்டளை பிரிவின் செய்தி தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், ஈரானியப் படகுகள் "சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா கடல்சார் கப்பலை கைப்பற்ற முயன்றன ஆனால் ராணுவம் "வலுவான பதிலடி கொடுத்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது," என்று தெரிவித்தார்.</p><h2>தாக்குதலுக்கு உள்ளான படகுகள்:</h2><p>ஈரானின் தெற்கு கடற்கரையில் உள்ள ஹார்முஸ்கான் மாகாணத்தில் இரண்டு மீன்பிடி படகுகள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், பல மீனவர்கள் காணாமல் போனதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன; மாகாண அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை பெற இரு தரப்பினரும் முயன்று வரும் நிலையில், 6 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த மோதலில் இது சமீபத்திய தாக்குதல் சம்பவமாகும். முக்கியமான எரிசக்தி கப்பல் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் பிடியை தளர்த்துவதில் அமெரிக்கா சமீபத்திய வாரங்களில் வெற்றி பெற்றுள்ளது.</p><h2>எண்ணெய் விலை மிக வேகமாக சரியும்:</h2><p>ஆனால், மக்கள் மத்தியில் ஆதரவற்ற இந்த மோதலால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலைகள் உயர்ந்துள்ளன; இது நவம்பரில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்கால தேர்தலுக்கு முன்னதாக அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடியரசு கட்சிக்கு அரசியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.</p><p>"ஈரானுடனான ராணுவ மோதல் முடிவுக்கு வந்தவுடன் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக சரியும்; அந்த நேரம் வெகு தொலைவில் இல்லை," என்று டிரம்ப் சமூக வலைதள பதிவு ஒன்றில் கூறினார்.</p><p>பதற்றத்தைத் தணிக்கவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் வளைகுடா அரபு நாடான ஓமன் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து விவாதிக்க, அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>நான் இயந்திரம் அல்ல; ரோபோவும் அல்ல: விமர்சனங்கள் குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/samson-opens-up-on-criticism-outside-noise-and-vaibhav</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/samson-opens-up-on-criticism-outside-noise-and-vaibhav#comments</comments><guid isPermaLink="false">76dbe1f6-acae-4fe5-bb09-841f44421170</guid><pubDate>Tue, 15 Sep 2026 23:39:39 +0000</pubDate><atom:updated>2026-09-15T23:39:39.674Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vaibhav Suryavanshi,வைபவ் சூர்யவன்ஷி,Sanju samson,சஞ்சு சாம்சன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/56h90ltu/sanju-samson-3.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sanju Samson

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/56h90ltu/sanju-samson-3.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விமர்சனங்களும் வெளியுலக பேச்சுகளும் தன்னை பாதிக்கின்றன என்பதை ஒப்புக்கொண்ட இந்திய தொடக்க ஆட்டக்காரர் <a href="https://www.maalaimalar.com/topic/sanju-samson">சஞ்சு சாம்சன்</a>, அதே சமயம் அவற்றை எப்படிக் கையாள்வது என்பதை அனுபவம் தனக்குக் கற்று கொடுத்திருப்பதாக தெரிவித்தார். </p><p>மேலும், அணியின் நலனை கருத்தில் கொண்டு கடினமான தேர்வு முடிவுகளை எடுக்கும் தலைமைத்துவ குழுவையும் அவர் ஆதரித்தார்.</p><p>இங்கு நடைபெற்ற இரண்டாவது <a href="https://www.maalaimalar.com/sports/cricket">டி20</a> போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் 7 விக்கெட் வெற்றியில், 22 பந்துகளில் அதிரடியாக 57 ரன்களை குவித்த சாம்சன், தனது ஆட்டம் குறித்த விமர்சனங்கள் மற்றும் பேச்சுகளில் இருந்து விலகி இருக்க கற்றுக்கொண்டதாக கூறினார்.</p><h2>நான் இயந்திரம் அல்ல; ரோபோவும் அல்ல:</h2><p>"நான் அந்த 'வை-ஃபை'யை (வெளியுலகத் தொடர்பை) அணைக்க முயற்சிக்கிறேன். ஆனால் சில சமயங்களில் அது தானாகவே ஆன் ஆகிவிடுகிறது, அப்போது சில கருத்துகளை பார்க்க நேரிடுகிறது.</p><p>எனக்கு சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. நான் இயந்திரம் அல்ல; ரோபோவும் அல்ல. அதனால் ஒருவித பாதிப்பு ஏற்படுகிறது. </p><p>ஆனால், பிறகு எனக்கு நானே பேசிக்கொண்டு, நான் யார் என்பதையும், நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எனக்குள் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்," என்று ஆட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.</p><h2>நானும் கடினமான முடிவுகளை எடுத்திருக்கிறேன்:</h2><p>வைபவ் சூர்யவன்ஷி விவகாரம் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், "இந்திய அணியை வழிநடத்துவது எளிதான காரியம் அல்ல. உதாரணமாக, 15 வயதுடைய ஒரு சிறுவன் 700 முதல் 800 ரன்கள் வரை குவித்திருந்தான். </p><p>அந்த தொடருக்கு முன்பே அவன் மிக சிறப்பாக விளையாடி இருந்தான். எனவே, எப்படியாவது அவனை அணியில் கொண்டுவர வேண்டிய சூழல் இருந்தது. அதேவேளையில், நான் ஓரிரு போட்டிகளில் எதிர்பார்த்தபடி சிறப்பாக விளையாடவில்லை என்றும் நினைக்கிறேன்.</p><p>அவன் நல்ல ஃபார்மில் இருந்தான், அந்த தொடரில் வெற்றிகளை பெற்றுத்தர விரும்பினான். ஒரு தலைவராக அந்த முடிவை எடுப்பதற்கான காரணத்தை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. </p><p>நான் முன்பே சொன்னது போல, நானும் இது போன்ற சூழல்களைக் கடந்து வந்திருக்கிறேன். ஒரு கேப்டனாக நானும் பல கடினமான முடிவுகளை எடுத்திருக்கிறேன், அதனால் அந்தச் சூழல் எனக்குப் புரிகிறது. அத்தகைய நேரங்களில் சரியான தகவல் பரிமாற்றம் மிக முக்கியமானது," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>குழந்தை துஷ்பிரயோக விளம்பரங்கள் தொடர்பாக மெட்டா இந்தியா தலைவருக்கு மூன்றாவது முறையாக சம்மன்</title><link>https://www.maalaimalar.com/news/national/meta-india-head-summoned-for-3rd-time-over-child-abuse-advertisements</link><comments>https://www.maalaimalar.com/news/national/meta-india-head-summoned-for-3rd-time-over-child-abuse-advertisements#comments</comments><guid isPermaLink="false">f9cb11e2-0e15-42d8-95b4-7159e528913a</guid><pubDate>Tue, 15 Sep 2026 23:04:20 +0000</pubDate><atom:updated>2026-09-15T23:04:20.887Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Meta,மெட்டா,Child abuse</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zkkl130s/Meta.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Meta]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zkkl130s/Meta.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகள் பாலியல் சீண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கம் (CSEAM) தொடர்பானதாக கூறப்படும் விளம்பரங்கள் குறித்த தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, <a href="https://www.maalaimalar.com/topic/meta">மெட்டா</a> இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜராக கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இந்தியாவில், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருவதாக பிபிசி ஐ மீடியா (BBC Eye Media) அறிக்கை கூறியதை அடுத்து இந்த வழக்கு எழுந்துள்ளது. </p><p>ஜூலை 3-ஆம் தேதியன்று, தேசிய குழந்தை நல ஆணையர் (NCPCR) இந்த வழக்கை தானாக முன்வந்து கவனத்தில் கொண்டு, அந்த தொழில்நுட்ப நிறுவனத்திடம் விளக்கம் அளிக்குமாறு கேட்டது. மெட்டா நிறுவனம் ஒரு வாரம் கழித்து தனது பதிலை சமர்ப்பித்தது.</p><h2>மெட்டா இந்தியா தலைவருக்கு சம்மன்:</h2><p>இந்த வழக்கின் உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கண்டறிய, NCPCR ஒரு முறையான விசாரணையை தொடங்க முடிவு செய்துள்ளது. நடைபெற்று வரும் இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, மெட்டா இந்தியா தலைவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது.</p><p>செப்டம்பர் 9 ஆம் தேதி மூத்த அதிகாரிக்கு சம்மன் அனுப்பிய ஒரு வாரத்திற்கு பிறகு இது நிகழ்ந்துள்ளது. இணையதளங்கள் மூலம் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டும் உள்ளடக்கங்கள் கிடைப்பதாகவும், அவை ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், ஆணையத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.</p><p>சி.எஸ்.இ.ஏ.எம். (CSEAM) விவகாரத்தில் NCPCR தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் விளைவாக, குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை புகாரளிப்பது தொடர்பான தனது கொள்கையை மெட்டா நிறுவனம் திருத்தியமைத்துள்ளது. தற்போது மெட்டா நிறுவனம், இதுபோன்ற வழக்குகளை இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திற்கும் (I4C) புகாரளிக்கத் தொடங்கியுள்ளது.</p><p>கடந்த ஜூலை மாதம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இன்ஸ்டாகிராமில் கட்டண விளம்பரங்களில் வரும் CSEAM தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு கடுமையான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும், அதுபோன்ற அனைத்து விளம்பரங்களையும் முடக்குமாறு இன்ஸ்டாகிராமை கேட்டுக்கொண்டிருந்தது.</p><h2>விளம்பர கொள்கைகளில் தடை:</h2><p>இந்தியாவில் இன்ஸ்டாகிராமில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்கள் இயங்கி வருவதாக பிபிசி ஐ (BBC Eye) புலனாய்வில் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>அந்த விளம்பரங்கள், பயனர்களை டெலிகிராம் அரட்டை செயலிக்கு வழிநடத்துவதற்காக "கற்பழிப்பு வீடியோ" மற்றும் "குழந்தை வீடியோ" போன்ற சொற்களைப் பயன்படுத்தியதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அங்கு, பயனர்கள் அத்தகைய வீடியோக்களை ரூ.99 போன்ற குறைந்த விலையில் வாங்க முடிந்தது.</p><p>மெட்டாவின் விளம்பர கொள்கைகள் நிர்வாணம் மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை வெளிப்படையாக தடை செய்திருந்தபோதிலும், பேஸ்புக்கில் இதுபோன்ற விளம்பரங்கள் தோன்றியதாக பிபிசி விசாரணையில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பாதுகாப்பு காரணங்களால் லண்டனில் நடைபெற இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் நிகழ்ச்சி ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/world/tamil-nadu-cm-vijays-london-event-cancelled-over-safety-concerns</link><comments>https://www.maalaimalar.com/news/world/tamil-nadu-cm-vijays-london-event-cancelled-over-safety-concerns#comments</comments><guid isPermaLink="false">729d36d6-422b-4382-a28a-394e7a637832</guid><pubDate>Tue, 15 Sep 2026 21:58:09 +0000</pubDate><atom:updated>2026-09-15T21:58:09.775Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,லண்டன்,london</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/vsswledc/c-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay Team Member]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/vsswledc/c-1.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> முதலமைச்சர் ஜோசப் விஜய்யை காண லண்டனின் மிக உயரமான கட்டிடமான 'தி ஷார்ட்' (The Shard) முன்பாக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி மெட்ரோபாலிட்டன் காவல்துறை தலையிட்டதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.</p><p>இந்த ரத்து நடவடிக்கை, பல மணிநேரம் வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் பலரையும் ஏமாற்றமடையச் செய்தது. "பொது பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாகவும், பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் அனுமதி இல்லாததாலும் நாங்கள் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம்," என்று முதல்வரின் குழுவை சேர்ந்த ஒருவர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார்.</p><h2>தமிழகத்தில் காணும் கூட்டம் போல் இல்லை:</h2><p>"இது நியாயமானதுதான் என்று நான் நினைக்கிறேன், ஆனால் இவ்வளவு மக்களும் காத்திருந்தார்களே. இது தமிழகத்தில் நாம் காணும் கூட்டத்தை போன்றது அல்ல," என்று நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் தங்கும் விடுதிக்கு வெளியே பல மணிநேரமாக காத்திருந்த ஒரு இளம் ரசிகர் கூறினார்.</p><p>தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், மாநில குழு ஒன்றை வழிநடத்தி முதலமமைச்சர் விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார்.</p><p>முன்னதாக, இந்த வருகையின் போது சுமார் ரூ. 12,300 கோடி மதிப்பிலான முதலீடுகளை உள்ளடக்கிய பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அந்த குழு கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.</p><h2>9,400-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்:</h2><p>ஆசியாவின் முதன்மையான மேம்பட்ட உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மையமாக தமிழகத்தை நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்ட இந்த முதலீட்டு முயற்சியின் மூலம், மாநிலம் முழுவதும் 9,400-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு புதன்கிழமை இந்தியா திரும்பத் திட்டமிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஹவுதிக்கள் தாக்குதல் எதிரொலி: மெக்கா வரலாற்றில் முதல் முறையாக வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/mecca-put-on-air-raid-alert-for-first-time-in-history-as-houthis-target-saudi</link><comments>https://www.maalaimalar.com/news/world/mecca-put-on-air-raid-alert-for-first-time-in-history-as-houthis-target-saudi#comments</comments><guid isPermaLink="false">d7c5a151-4ec3-4bed-ac36-6f67a15d7021</guid><pubDate>Tue, 15 Sep 2026 19:36:29 +0000</pubDate><atom:updated>2026-09-15T19:36:29.658Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>houthis,mecca,ஹவுதி,Air Raid Alert,மெக்கா,வான் எச்சரிக்கை ஒலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/0kgdu3a7/Mecca.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mecca]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/0kgdu3a7/Mecca.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/saudi-arabia">சவுதி</a> குடிமை பாதுகாப்பு அமைப்பு, புனித நகரமான மெக்கா மற்றும் ஜித்தா, தாயிஃப் ஆளுநரகங்கள் உட்பட, நாட்டின் மேற்கு கடற்கரையில் உள்ள பல நகரங்களில் செவ்வாயன்று எச்சரிக்கைகளை விடுத்தது, ஆனால் அவை விரைவாக விலக்கி கொள்ளப்பட்டன. வரலாற்றில் முதல் முறையாக மெக்காவில் வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சமீப நாட்களாக <a href="https://www.maalaimalar.com/news/world">ஈரான்</a> ஆதரவு ஹவுதிக்களால் அந்த இராச்சியம் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னெப்போதும் இல்லாத இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><h2>ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து எச்சரிக்கை:</h2><p>இஸ்ரேலிய செய்தித்தாளான ஹயோமின் அறிக்கையின்படி, மதீனாவில் உள்ள இளவரசர் முகமது பின் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. </p><p>முன்னதாக, சவுதி ஆதரவு பெற்ற, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசாங்கமும் சவுதி படைகளும், ஏமனில் உள்ள தைஸ் நகருக்கு அருகில் உள்ள இலக்குகளை தாக்கியதாக அந்த அறிக்கை தெரிவித்தது.</p><p>ஏமனில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பயன்படுத்தி ஹவுதிக்கள் நடத்திய தாக்குதலில், அந்த இராச்சியத்தில் 13 பேர் காயமடைந்த ஒரு நாள் கழித்து இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.</p><h2>எக்ஸ் தள பதிவில் வலியுறுத்தல்:</h2><p>சவுதி குடிமை பாதுகாப்பு இயக்குநரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், "எச்சரிக்கை: மெக்கா நகரில் ஆபத்து நீங்கிவிட்டது. உங்கள் பாதுகாப்பிற்காக, குடிமை பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுங்கள் மற்றும் ஒன்று கூடுவதையும் படம்பிடிப்பதையும் தவிர்க்கவும். அவசர காலத்தில், (911) என்ற எண்ணை அழைக்கவும்," என்று கூறியுள்ளது.</p><p>சவுதி குடிமை பாதுகாப்பு படை முன்னதாக ஆறு பிராந்தியங்களில் குறுகிய கால வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. ஹவுதிக்கள் இந்த வாரம் சவுதி அரேபியா மீது பல ஆண்டுகளில் இல்லாத மிக கடுமையான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதில், எண்ணெய் தளங்கள் தீக்கிரையாகின மற்றும் 73 பேர் காயமடைந்தனர்.</p><p>திங்களன்று மேற்கு ஏமனில் ஹவுதிக்கள் நடத்திய தாக்குதலில் எட்டு அரசாங்க வீரர்கள் கொல்லப்பட்டதாக இரண்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>மேலும், தெற்கு சவுதி அரேபியாவில் உள்ள கமிஸ் முஷைத்தில் இருக்கும் கிங் காலித் விமானப்படை தளத்தின் மீது "டஜன் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப்" பயன்படுத்தி பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதாகவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புகை எச்சரிக்கை: டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டதால் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-bound-flight-diverted-to-lucknow-airport-after-smoke-warning</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-bound-flight-diverted-to-lucknow-airport-after-smoke-warning#comments</comments><guid isPermaLink="false">99ffd574-1b9b-4f4e-8a4c-d9f96224e708</guid><pubDate>Tue, 15 Sep 2026 18:47:29 +0000</pubDate><atom:updated>2026-09-15T18:47:29.996Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,lucknow airport,லக்னோ விமான நிலையம்,டெல்லி,Flight diverted</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r02iuf2i/Indigo-Flight.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indigo Flight]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r02iuf2i/Indigo-Flight.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகர்தலாவில் இருந்து டெல்லிக்கு சென்ற <a href="https://www.maalaimalar.com/topic/indigo-flights">இண்டிகோ விமானம்</a> ஒன்றின் சரக்கு பகுதியில் புகை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த விமானம் லக்னோவின் சௌத்ரி சரண் சிங் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது.</p><p>6E6504 என்ற அந்த விமானம், 103 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் மாலை 6.29 மணிக்கு லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் காரணமாக எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>விமானம், பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, <a href="https://www.maalaimalar.com/news/national">லக்னோ</a> விமான நிலையம் உடனடியாக தனது அவசரகால நெறிமுறைகளை செயல்படுத்தியது. மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு, ஆம்புலன்ஸ் மற்றும் முனைய ஆதரவு பணிகளை மேற்கொண்டது.</p><h2>இதேபோன்று முந்தைய சம்பவங்கள்:</h2><p>புகை கண்டறியும் எச்சரிக்கையை தொடர்ந்து, டெல்லி செல்லும் மற்றொரு விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்ட சில நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>முன்னதாக கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதியன்று, வாரணாசியில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பின்பக்க சரக்கு பகுதியில் புகை கண்டறியும் எச்சரிக்கை ஒலித்ததை தொடர்ந்து, அந்த விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டது.</p><p>155 பயணிகளை ஏற்றிச் சென்ற IX1253 விமானம், அவசரகால மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பாகத் தரையிறங்கியது. முதற்கட்ட சோதனைகளில், விமானத்தில் புகை அல்லது தீ எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. பின்னர், அந்த விமானம் தொழில்நுட்ப ஆய்வுக்காக ஹேங்கருக்கு கொண்டு செல்லப்பட்டது.</p><h2>வானிலை காரணமாக திருப்பி விடப்பட்ட விமானங்கள்:</h2><p>சமீபத்திய வாரங்களில் வானிலை தொடர்பான காரணங்களால் பல விமானங்கள் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.</p><p>செப்டம்பர் 4-ஆம் தேதியன்று, பலத்த மழை காரணமாக டெல்லி செல்லும் நான்கு விமானங்கள் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டன. மோசமான வானிலை மற்றும் குறைந்த பார்வைத்திறன் காரணமாக, செப்டம்பர் 12-ஆம் தேதியன்று டெல்லியில் இருந்து வாரணாசிக்கு சென்ற இண்டிகோ விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டது.</p><p>செப்டம்பர் 13 அன்று, மோசமான வானிலை காரணமாக மும்பையில் இருந்து டேராடூனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்றும் லக்னோவிற்குத் திருப்பி விடப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி உத்தரகண்ட் மாநிலத்தில் தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-us-joint-military-exercise-yudh-abhyas-gets-underway</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-us-joint-military-exercise-yudh-abhyas-gets-underway#comments</comments><guid isPermaLink="false">ae993ef9-016d-45dd-9ed1-0f2721705cd0</guid><pubDate>Tue, 15 Sep 2026 17:59:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T17:59:06.160Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>India US military exercise,இந்தியா அமெரிக்கா ராணுவ பயிற்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/94s1r7f0/Yudh-Abhyas.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India - US military exercise

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/94s1r7f0/Yudh-Abhyas.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரு நாட்டு படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும், அதே வேளையில் இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்தவும் நோக்கமாக கொண்ட இந்தியா மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> ராணுவங்களின் கூட்டு பயிற்சியான 'யூத் அப்யாஸ்', தொடங்கியது.</p><p>இப்பயிற்சியின் 22-ஆவது பதிப்பிற்கான தொடக்க விழா உத்தரகண்ட் மாநிலம் அவுலியில் உள்ள 'அவுலி வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில்' நடைபெற்றது. இப்பயிற்சி அவுலி மற்றும் ராஜஸ்தானில் உள்ள மகாஜன் கள துப்பாக்கி சூடு பயிற்சி மைதானம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதாக <a href="https://www.maalaimalar.com/news/national">இந்திய</a> பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><h2>பயிற்சின் நோக்கம் இதுதான்:</h2><p>"மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் 'ஒருங்கிணைந்த போர் அணிகளை' பயன்படுத்துவதற்கான இரு ராணுவங்களின் கூட்டுத் திறனை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்; இதில் காலாட்படை சார்ந்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வலுப்படுத்துவதுடன், சிறந்த செயல்பாட்டு நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும், கூட்டு திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவும்," என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இரு தரப்பில் இருந்தும் தலா 600 வீரர்கள் பங்கேற்கும் இந்தப் பயிற்சியில், 14-ஆவது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அமரேஷ் குஞ்சன் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் 11-ஆவது வான்வழி பிரிவை சேர்ந்த 1-ஆவது காலாட்படை படைப்பிரிவுத் தளபதி கர்னல் பெஞ்சமின் ஜாக்மேன் ஆகியோர் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினர் என்று அமைச்சகம் தெரிவித்தது.</p><h2>போர் உத்திகள், நுட்பங்கள் &amp; நடைமுறைகள்:</h2><p>தொழில்நுட்ப பயன்பாடு இதில் முக்கிய கவனம் செலுத்தும் பகுதியாக இருக்கும். கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளுக்காக டிரோன்கள் மற்றும் தானியங்கி அமைப்புகளை பயன்படுத்துதல் மற்றும் நவீன ஆயுத அமைப்புகளின் செயல்விளக்கம் ஆகியவை இப்பயிற்சியில் அடங்கும்; இவை மகாஜன் கள துப்பாக்கி சூடு பயிற்சி மைதானத்தில் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>"இரு ராணுவங்களை சேர்ந்த துறைசார் நிபுணர்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பல-தள போர்முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துக்களை பரிமாறி கொள்வார்கள்," என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்த பயிற்சியானது, இரு ராணுவங்களும் தங்கள் போர் உத்திகள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>2-வது டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி, தொடரை கைப்பற்றி அசத்தல்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/afg-vs-ind-2nd-t20-india-beat-afghanistan-wins-series</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/afg-vs-ind-2nd-t20-india-beat-afghanistan-wins-series#comments</comments><guid isPermaLink="false">e8973f9c-cb48-42e7-8ce7-2989bd0f2e01</guid><pubDate>Tue, 15 Sep 2026 17:13:29 +0000</pubDate><atom:updated>2026-09-15T17:13:29.761Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்,AFGvsIND</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/l6wjxg9i/IND-Win-against-AFG.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND Win against AFG]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/l6wjxg9i/IND-Win-against-AFG.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடரில் விளையாடி வருகிறது. டெல்லியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற <a href="https://www.maalaimalar.com/topic/indvafg">இந்திய அணி</a> பந்துவீச்சு தேர்வு செய்தது.</p><h2>ஆப்கானிஸ்தான் பேட்டிங்:</h2><p>அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார். 2-ஆவது விக்கெட்டுக்கு இப்ராகிம் ஜட்ரன், செடிகுல்லா அடல் ஜோடி 51 ரன் சேர்த்த நிலையில் ஜட்ரன் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின், வந்தவர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><p>ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து திணறியது. 7-ஆவது விக்கெட்டுக்கு முகமது நபி, ரஷித் கான் ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடி 28 பந்தில் 48 ரன்களை சேர்த்தது. இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்களை எடுத்தது.</p><p>இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், நிதிஷ்குமார் ரெட்டி விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.</p><h2>இந்தியா வெற்றி:</h2><p>எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 57 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 39 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார்.</p><p>இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் 34 ரன்களை எடுத்தார். 14.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் இஷான் கிஷன் 38 ரன்களும், திலக் வர்மா 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.</p><p>முடிவில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.</p>]]></content:encoded></item><item><title>முதல் ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேவை 59 ரன்களில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/aus-vs-zim-1st-odi-australia-beats-zimbabwe-by-59-runs</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/aus-vs-zim-1st-odi-australia-beats-zimbabwe-by-59-runs#comments</comments><guid isPermaLink="false">51f982dd-4884-4317-8293-2dc470561f07</guid><pubDate>Tue, 15 Sep 2026 16:10:03 +0000</pubDate><atom:updated>2026-09-15T16:10:03.413Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nathan Ellis,நாதன் எல்லிஸ்,Matt Renshaw,மேட் ரென்ஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2rmhto9w/Renshaw001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரென்ஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2rmhto9w/Renshaw001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியா 50 ஓவர் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.</p><h2>ரென்ஷா சதம்</h2><p>ரென்ஷாவின் சதத்தால் (109) ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்தது. கூப்பர் கொனோலி 51 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே அணி சார்பில் நிவ்மேன் நியாம்ஹுரி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.</p><p>பின்னர் 295 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. முதல் நான்கு வீரர்கள் பிரையன் பென்னெட் (25), பென் கர்ரன் (0), இன்னசென்ட் கையா (18), பிரெண்டன் டெய்லர் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.</p><h2>ஜிம்பாப்வே 235 ரன்களில் ஆல்அவுட்</h2><p>அதன்பின் வந்த கிரேக் எர்வின் (59), சிகந்தர் ரசா (57) அரைசதம் அடித்த போதிலும் ஜிம்பாப்வே அணி 45.1 ஓவரில் 235 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் எல்லீஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>சதம் விளாசிய ரென்ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2-வது போட்டி 18-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 20-ந்தேதியும் நடைபெற இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகளில் குளறுபடிகள்: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாயார் பரபரப்பு பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-arrangements-ptr-palanivel-thiagarajan-mother</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-arrangements-ptr-palanivel-thiagarajan-mother#comments</comments><guid isPermaLink="false">951d5a8b-7dd8-4824-a169-882457afe73a</guid><pubDate>Tue, 15 Sep 2026 15:57:23 +0000</pubDate><atom:updated>2026-09-15T15:57:23.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai Meenakshi Amman temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/uk1k6u7e/Madurai0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை மீனாட்சி அம்மன் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/uk1k6u7e/Madurai0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் நிர்மல் குமார் கும்பாபிஷேகம் குறித்த தகவல்களை அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்து வருகிறார்.</p><p>இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவரும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாயாருமான ருக்மணி பழனிவேல் ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேசம் சீரும் சிறப்புமாக நடைபெறும் இந்நேரத்தில் பக்தர்களின் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை தாண்டி அனைவரும் முறையாக தெரிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், எங்களை எந்த செயல்பாட்டிலும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக அரசின் தலையிட்டுடன் கூடிய தற்போதைய கோவில் செயல்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளது.</p><h2>அனுமதி அட்டைகள்</h2><p>அனுமதி அட்டைகள் பொறுத்தவரையில் 9 ஆயிரம், 11 ஆயிரம் என தினமும் ஒரு தகவல் வெளி வருகிறது. மிகவும் மதிக்கத்தக்க வகையில் நன்கொடைதாரர்கள், உபயதாரர்களுக்கு அழைப்புகள் சென்று சேர்ந்துள்ளதா? என்பது எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.</p><p>யார் பெயருடம் விட்டுவிடக்கூடாது என்பதற்கான நாங்கள் பட்டியல் எடுத்து வைத்துள்ளோம். அதை கோவில் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை.</p><p>17-ந்தேதி நடைபெறும் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு ருக்மணி பழனிவேல் ராஜன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>2வது டி20 போட்டி: இந்தியா வெற்றிபெற 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-need-160-runs-to-win-against-afghanistan-second-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-need-160-runs-to-win-against-afghanistan-second-odi#comments</comments><guid isPermaLink="false">2d0fff8e-24f4-4311-946b-4402b0eb850d</guid><pubDate>Tue, 15 Sep 2026 15:35:28 +0000</pubDate><atom:updated>2026-09-15T15:35:28.305Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிதிஷ்குமார் ரெட்டி,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்,nitishkumar reddy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8fsu3mi4/zadran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ zadran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8fsu3mi4/zadran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.</strong></em></p><p>ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. </p><p>டெல்லியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார்.</p><p>2வது விக்கெட்டுக்கு இப்ராகிம் ஜட்ரன், செடிகுல்லா அடல் ஜோடி 51 ரன் சேர்த்த நிலையில் ஜட்ரன் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின், வந்தவர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><p>ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து திணறியது.</p><p>7வது விக்கெட்டுக்கு முகமது நபி, ரஷித் கான் ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடி 28 பந்தில் 48 ரன்களை சேர்த்தது.</p><p>இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்களை எடுத்துள்ளது.</p><p>இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், நிதிஷ்குமார் ரெட்டி விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் விஜய் சேதுபதி மீது வசைபாடுபவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும் - சீமான் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-condemn-tvk-fans-attack-vijay-sethupathy-in-bigg-boss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-condemn-tvk-fans-attack-vijay-sethupathy-in-bigg-boss#comments</comments><guid isPermaLink="false">8ebc1f4e-4f69-403d-bdb7-9c5e930851f6</guid><pubDate>Tue, 15 Sep 2026 15:15:12 +0000</pubDate><atom:updated>2026-09-15T15:15:12.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,விஜய் சேதுபதி,Vijay sethupathy,சீமான்,bigg boss 10,பிக்பாஸ் 10</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/p1a2ptdd/seeman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/p1a2ptdd/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விஜய் சேதுபதியின் கருத்தை தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் சட்டசபையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக ஜனநாயக அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் ஆளும் அணி ஒரு பிரிவாகவும், எதிர் அணி மற்றொரு பிரிவாகவும் செயல்படுகிறது.</p><p>ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும். போட்டியின் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் நிகழ்ச்சி இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களிடையே உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார்.</p><p>ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை</p><p>தலைமைத்துவம் குறித்து அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சனைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை என பேசியிருந்தார்.</p><p>விஜய் சேதுபதி மீது குற்றச்சாட்டு</p><p>தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இவர் முதலமைச்சர் விஜய்யைதான் தாக்கி பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.</p><p>இதைப் பார்த்து கடுப்பான தவெக தொண்டர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.</p><p>சீமான் அறிக்கை</p><p>இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:</p><p>பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. எந்த அரசியல் கட்சியையும் கட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்? மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்? தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா? இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா? இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா? இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?</p><p>ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல, கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம், எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல. அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆகவேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல. விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.</p><p>எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்! ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்! கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்! வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: நெல்லை- மதுரை கூடல் நகர் இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-nellai-to-madurai-koodal-nagar-special-train</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-nellai-to-madurai-koodal-nagar-special-train#comments</comments><guid isPermaLink="false">09d0af11-e48f-46e6-a904-1f609cc6ccd7</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:52:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:52:31.457Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>special train,சிறப்பு ரெயில்,Madurai Meenakshi Amman temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xqryp6j6/MaduraiTrain0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை மீனாட்சி அம்மன் கோவில்- சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xqryp6j6/MaduraiTrain0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண மதுரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. நாளையில் இருந்து மக்கள் குவிய வாய்ப்புள்ளது.</p><p>இந்த நிலையில் நாளை நெல்லையில் இருந்து மதுரை கூடல் நகருக்கும், நாளை மறுதினம் மதுரை கூடல் நகரில் இருந்து நெல்லைக்கும் முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனத் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.</p><h2>நாளை நெல்லையில் இருந்து கூடல் நகர்</h2><p>நெல்லையில் இருந்து நாளை (16-ந்தேதி) மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் (06001), மதுரைக்கு மாலை 5.35 மணிக்கு வந்து பின்னர் இரவு 6.30 மணிக்கு கூடல் நகர் சென்றடையும்.</p><h2>17-ந்தேதி கூடல் நகரில் இருந்து நெல்லை</h2><p>மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17-ந்தேதி கூடல் நகரில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரெயில் (06002), மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து மாலை 5.50 மணிக்கு நெல்லை சென்றடையும்.</p><p>சிறப்பு ரெயில் சேரன்மாதேவி, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இனிமேல் UPI வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers</link><comments>https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers#comments</comments><guid isPermaLink="false">39e33159-7226-4dad-86e0-9a3ea303a7dc</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:25:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:25:18.020Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,மத்திய நிதி அமைச்சகம்,Finance Ministry,digital money transactions,டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/qt2wk10u/UPI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UPI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/qt2wk10u/UPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வர்த்தக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் UPI கட்டணம் செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.</strong></em></p><p>ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>உத்தரவு</h2><p>மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:</p><p>ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p>குறிப்பிட்ட முறைகள் மூலம் பணம் செலுத்தும் அல்லது பெறும் ஒரு நபரிடம், எந்தவொரு வங்கியும் அல்லது பணம் செலுத்தும் முறைமை வழங்குநரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என தெரிவித்தது.</p><p>2007ன் பிரிவு 10 ஏவில் திருத்தும் செய்து கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026'வின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>ரூ.2000-க்கு மேல் உள்ள பரிவர்த்தனை</h2><p>புதிய விதியின்படி, ரூ. 2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே பற்று அட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது.</p><p>இந்நிலையில், வணிக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் UPI கட்டணம் செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் எனவும், இந்த நடைமுறை அக்டோபர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><h2>0.4 சதவீதம் கட்டணம்</h2><p>UPI வணிக பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் கட்டணம் மூலம் ரூ. 5000-க்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.75,000-க்கு மேல் UPI பரிவர்த்தனை செய்தால் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.</p><p>ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும். </p><p>தனி நபர்களுக்கு இடையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டெண்டர் முறைகேடு புகார்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregulation-issues-tambaram-corporation-commissioner-transfer-to-waiting-list</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregulation-issues-tambaram-corporation-commissioner-transfer-to-waiting-list#comments</comments><guid isPermaLink="false">4a6d3b4f-3834-4658-8d91-2462f643f3b4</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:12:00 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:12:00.033Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெண்டர் முறைகேடு,தாம்பரம் மாநகராட்சி,arappor iyakkam,அறப்போர் இயக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/horn77k9/Tambaram001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/horn77k9/Tambaram001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாம்பரம் மாநகராட்சி சார்பில் இரண்டு திட்டங்களுக்காக வெளியிடப்பட்டிருந்த இரண்டு டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது. பணிகள் முடிவடைந்த பின்னர், டெண்டர் விடப்பட்டது தொடர்பாக ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.</p><p>இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் விஜய், தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனுவை அளித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக பாலசந்தர் ஐ.ஏ.எஸ். காத்திருப்புார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையர் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பை கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>டெண்டர் முறைகேடு புகார் என்ன?</h2><p>தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.</p><h2>முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள்:</h2><p>முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/habcfuxx/Tender0001.jpg" /></figure> <p>இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.</p> <h2>ஒப்பந்தம் 1- பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2):</h2><p>இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன. </p><h2>ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1):</h2><p>தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது.</p><h2>அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு:</h2><p>இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.</p><p>மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது.</p><h2>அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்:</h2><p>இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.</p><p>1. உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்</p> <p>2.துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை</p><p>3.DVAC கிரிமினல் வழக்கு.</p><p>4. பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment)</p><p>5. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting)</p><p>6. டெண்டரில் வெளிப்படைத்தன்மை</p>]]></content:encoded></item><item><title>2வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-opt-to-bowl-first-against-afghanistan-second-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-opt-to-bowl-first-against-afghanistan-second-odi#comments</comments><guid isPermaLink="false">780cb106-6f32-4fa2-8a14-62fdb561687a</guid><pubDate>Tue, 15 Sep 2026 13:41:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T13:41:18.735Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shreyas Iyer,ஷ்ரேயஸ் அய்யர்,INDvAFG,இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w2kcjmhw/bishnoi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ravi bishnoi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w2kcjmhw/bishnoi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.</strong></em></p><p>ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. </p><p>டெல்லியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது.</p><p>டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>காயம் காரணமாக விலகிய வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக ரவி பிஷ்னோய் அணியில் இணைந்துள்ளார்.</p><p>அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>விண்வெளியில் ஆயுதங்களை குவித்துள்ள அமெரிக்கா..!</title><link>https://www.maalaimalar.com/news/world/us-confirms-it-has-deployed-first-ever-on-orbit-weapon-in-space</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-confirms-it-has-deployed-first-ever-on-orbit-weapon-in-space#comments</comments><guid isPermaLink="false">4e5cf5be-d6f8-4f64-bea1-e99a5311f8b5</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:41:40 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:41:40.181Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,விண்வெளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8mcxp2ak/Space001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விண்வெளி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/8mcxp2ak/Space001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விண்வெளியில் ஆயுதங்களை நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க விண்வெளிப் படை (US Space Force) தெரிவித்துள்ளது. முதன்முறையாக இதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.</p><h2>அமெரிக்காவுக்கு அவசியம்</h2><p>விரோதப் போக்குடைய எதிரிகளிடமிருந்து அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்க விண்வெளிப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட (on-orbit) ஆயுதம் அவசியம் என்று அமெரிக்க விமானப்படைச் செயலாளர் ட்ராய் மெய்ங்க் கூறினார். சீனா மற்றும் ரஷியாவிற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுக்கும் வகையில் அமெரிக்கா ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.</p><p>மேரிலேண்டில் உள்ள நேஷனல் ஹார்பரில் நடைபெற்ற வருடாந்திர வான், விண்வெளி மற்றும் இணைய மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்ட மெய்ங்க், விண்வெளியில் உள்ள அமெரிக்க ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக விண்வெளிக் கட்டுப்பாட்டிற்காக அது பயன்படுத்தப்படும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.</p><p>ஏவுகணைகள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காக, டிரம்ப் நிர்வாகம் தனது கோல்டன் டோம் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புக்கு விண்வெளித் திறன்களை அவசரமாக உருவாக்கி வரும் வேளையில் மெய்ங்கின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.</p><h2>விண்வெளி ஒப்பந்தம்</h2><p>விண்வெளியை ராணுவமயமாக்குவது என்பது விண்வெளிப் பந்தயத்தைப் போலவே பழமையானது. 1957-ல் ஸ்புட்னிக் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட உடனேயே, வாஷிங்டனும் மாஸ்கோவும் செயற்கைக்கோள்களுக்கு ஆயுதம் வழங்குவதற்கும் அவற்றை அழிப்பதற்குமான வழிகளை ஆராயத் தொடங்கின.</p><p>ஒரு காலத்தில், விண்வெளியில் உள்ள அணு ஆயுதங்களைப் பற்றியதே மிகப்பெரிய கவலையாக இருந்தது. ஆனால் வல்லரசுகளும் பிற நாடுகளும் 1967-ல் புற விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, சுற்றுப்பாதையில் பேரழிவு ஆயுதங்களைத் தடை செய்தன.</p><p>அப்போதிருந்து அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ராணுவத் தகவல் தொடர்பு, கண்காணிப்பு மற்றும் வழிசெலுத்தலுக்கு முக்கியமாக விளங்கும் போட்டியாளர்களின் செயற்கைக்கோள்களைக் குறிவைக்கும் வழிகள் போன்ற, ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்ட திறன்களை உருவாக்க முயற்சித்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் தயாரிப்பு என போலி விளம்பரம்: பாகிஸ்தான் அழகுசாதன பொருட்களுக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/fake-made-in-india-ads-india-warns-on-pakistan-cosmetics</link><comments>https://www.maalaimalar.com/news/national/fake-made-in-india-ads-india-warns-on-pakistan-cosmetics#comments</comments><guid isPermaLink="false">db9fc1bb-1f23-4bd7-adfc-a3111f71d4d3</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:27:04 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:27:04.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Made in India,Pakistani cosmetics,Goree Beauty Cream,Chandni Whitening Cream,மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்,கோரி பியூட்டி கிரீம்,சாந்தினி ஒயிட்னிங் கிரீம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/csmztym0/face.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistani cosmetics]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/csmztym0/face.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆய்வகச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் ஆபத்தான கன உலோகங்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>இணையவழி வர்த்தக தளங்களில் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என கூறி விற்கப்பட்டு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பிரபல அழகுசாதனக் கிரீம்களைப் பொதுமக்கள் வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பொருட்களில் நச்சுத்தன்மை கொண்ட கன உலோகங்கள் அதிகளவில் இருப்பதும், அவசியமான இறக்குமதி உரிமம் இன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>ச<strong>ட்டவிரோத இறக்குமதி</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/again-and-again-oracle-shocks-employees-with-today-is-your-last-day">மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு </a>வெளியிட்டுள்ள பொது சுகாதார அறிவிப்பின்படி, கோரி பியூட்டி கிரீம் மற்றும் சாந்தினி ஒயிட்னிங் கிரீம் ஆகிய இரு தயாரிப்புகளும் தகுதியான அதிகாரிகளிடம் எந்தவொரு இறக்குமதி பதிவுச் சான்றிதழும் பெறாமல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. .</p><p>மேலும், ஆய்வகச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் ஆபத்தான கன உலோகங்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கிரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது தோல் நோய்கள் மட்டுமன்றி, உடலில் பல்வேறு தீவிர நச்சு விளைவுகளையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்</p><p>இந்த இரண்டு அழகுசாதனப் பொருட்களையும் வாடிக்கையாளர்கள் உடனடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஏற்கனவே வாங்கி வைத்திருப்பவர்கள் அவற்றை தூக்கி எறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, வணிக நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மின்-வர்த்தக அமைப்புகள் இந்த ஆபத்தான கிரீம்களை விற்கவோ, விநியோகிக்கவோ அல்லது விளம்பரம் செய்யவோ கூடாது என்று CDSCO கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. </p><p>அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய பொருட்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதை தீவிரமாகக் கண்காணித்து உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: இடதுசாரிகளின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-madurantakam-byelection-left-candidates-official</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-madurantakam-byelection-left-candidates-official#comments</comments><guid isPermaLink="false">f656b603-d908-4720-b3f8-6be8e772a036</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:10:03 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:10:03.307Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,Left-wing candidates,CPI CPM</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w7kyavkr/gg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Left-wing candidates]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w7kyavkr/gg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) சார்பில் சுகந்தி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். </p><p>தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.</p><h2><strong>இடதுசாரிகளின் நிலைப்பாடு</strong></h2><p>நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் தவித்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு வழங்கி ஆட்சி அமைக்க உதவின. இதில் மற்ற கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு வகித்த நிலையில், இடதுசாரி கட்சிகள் மட்டும் அமைச்சரவையில் பங்கேற்காமல், ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டன. இந்நிலையில், காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கான<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-by-election-dmk-and-tvk-candidates-file-nomination"> இடைத்தேர்தலில்</a> இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.</p><h2>தாராபு<strong>ரம் தொகுதி கம்யூனிஸ்ட்</strong> வேட்பாளர்</h2><p>தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) சார்பில் தாலுகா செயலாளராகப் பணியாற்றி வரும் லட்சுமணன் களமிறக்கப்பட்டுள்ளார். 12-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள இவர், தொழில்முறையில் கட்டிட கான்ட்ராக்டராகச் செயல்பட்டு வருகிறார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து, மக்கள் பணிகளிலும் சமூகப் போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.</p><h2>மதுராந்தகம் தொகுதி மா<strong>ர்க்சிஸ்ட் வேட்பா</strong>ளர்</h2><p>அதேபோல, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) சார்பில் சுகந்தி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தொகுதியில் உள்ள நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் சுகந்தி, இடதுசாரி அமைப்புகளின் மூலம் பல்வேறு களப்போராட்டங்களை முன்னெடுத்துள்ள முதன்மை நிர்வாகியாவார். இடதுசாரி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை விரைவாக அறிவித்துள்ளதால், இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் களப்பணிகள் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தீவிரமடைந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>பா.ஜ.க. தலைவர்களின் மார்பை பிளந்து பார்த்தாலும்.., டி.கே. சிவக்குமார் ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-attacks-if-you-cut-open-the-chests-of-bjp-leaders</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-attacks-if-you-cut-open-the-chests-of-bjp-leaders#comments</comments><guid isPermaLink="false">6dd94f37-f5c7-4650-9629-13537ad8bc42</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:47:19 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:47:19.699Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,Congress,DK Shivakumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rr521v5p/DKShivakumar001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rr521v5p/DKShivakumar001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் நேற்று கொண்ாடப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள டி நரசிபுரா டவுன் காவல் நிலை இன்ஸ்பெக்டர், மசூதிக்கு முன் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். விநாயர் சிலை ஊர்வலத்தின்போது, பட்டாசு வெடிக்கக் கூடாது என்பதா? என பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பேராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர்களுக்கு மாநிலத்தின் நலன்கள் மீது அக்கறை இல்லை என்று கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-</h2><p>பாஜக தலைவர்களின் மார்பை பிளந்து பார்த்தால், அதில் மாநிலத்தின் நலனைக் காக்கும் அம்சம் எதுவும் இருக்காது. மாநில நலன் சார்ந்த விஷயங்களைப் பற்றி விவாதித்துவிட்டு, அதன்பிறகு அரசியல் செய்யுமாறு அவர்களிடம் கூறினாலும், அவர்களைத் திருத்த முடியாது. நீங்கள் என்ன செய்தாலும், அவர்கள் எல்லாவற்றிலும் குறைதான் காண்பார்கள்.</p><h2>எவ்வித அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது</h2><p>காவல்துறையை பற்றிய ஒருவித அச்சமும் இருக்கத்தான் வேண்டும். அந்த காவலர் என்ன தவறு சொன்னார்? எவ்வித அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன், காவல்துறைக்கே உரிய பாணியில் அவர் ஒரு எச்சரிக்கையைத்தான் விடுத்தார். ஆனால், பாஜக இந்த விவகாரத்தை வீதிக்குக் கொண்டு வந்துவிட்டது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் இங்கிருந்து (பெங்களூருவிலிருந்து) அங்கு சென்று, மகாராஜாவையும் (மைசூரு அரச குடும்பத்தின் வாரிசும் பாஜக எம்.பி.யுமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜா உடையாரைக் குறிப்பிட்டு) தெருவுக்கு அழைத்து வந்து காவல் நிலையத்திற்கு முன் போராட்டம் நடத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அரசியலமைப்பு ரீதியான பதவியை வகிக்கிறார். அவரிடமிருந்து கண்ணியமான அணுகுமுறையை நான் எதிர்பார்க்கிறேன்.</p><h2>செய்யக்கூடாத எதையும் செய்யவில்லை</h2><p>அவர் (காவல் ஆய்வாளர்) செய்யக்கூடாத எதையும் செய்யவில்லை. நான் அவர்களைக் கைவிடமாட்டேன். ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால், நிச்சயமாக நாங்கள் அதை எடுப்போம். சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பது யாருடைய பொறுப்பு? அவர்கள் (பாஜக) மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் அதை நிறுத்த வேண்டும். எப்படியாவது மாநிலத்தில் அமைதியின்மையை உருவாக்கவே பாஜக விரும்புகிறது.</p><p>மாநிலத்தின் நற்பெயர் நாட்டின் பிம்பத்துடன் தொடர்புடையது என்பதையும், அது இந்தியாவையே பாதிக்கும் என்பதையும் பாஜக தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள பாஜக தலைவர்கள், நாட்டின் மீதான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>அரசியல் செய்யுங்கள், போராட்டங்களை நடத்துங்கள். ஆனால் அமைதியின்மையை உருவாக்கவோ அல்லது மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தவோ வேண்டாம் என்று பாஜக-விடம் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மகன் படத்தின் ரிலீஸை முன்னிட்டு விலகிய அப்பா படம்:  முதலமைச்சர் விஜயின் &apos;திருப்பாச்சி&apos; ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/father-film-postponed-for-son-sigma-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/father-film-postponed-for-son-sigma-release#comments</comments><guid isPermaLink="false">348a7e13-14df-40da-b14d-3541ad2edeb6</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:41:13 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:41:13.098Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Trisha,jason sanjay,விஜய்,vijay,திரிஷா,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma,Thirupaachi,திருப்பாச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/203p0ueq/ggs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirupaachi-Sigma  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/203p0ueq/ggs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அப்பா-மகன் படங்கள் ஒரே நேரத்தில் மோதிக்கொள்வதை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">முதலமைச்சர் விஜயின்</a> மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டை முன்னிட்டு, விஜய் மற்றும் திரிஷா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'திருப்பாச்சி'யின் ரீ-ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 1-ஆம் தேதி 'திருப்பாச்சி' திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விநியோகஸ்தர்களான திருப்பதி ஃபிலிம்ஸ் இந்த புதிய முடிவை அறிவித்துள்ளனர்.</p><h2><strong>மகனின் புதிய முயற்</strong>சி</h2><p>முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்கியுள்ள 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரைக்கு வருகிறது. புதிய இயக்குநர்களின் படைப்புகளையும், புதிய திரைப்படங்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் 'திருப்பாச்சி' ரீ-ரிலீஸை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக விநியோகஸ்தர் தரப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்துடன் 'சிக்மா' மோதுவதை் தவிர்க்கவே அப்படத்தின் ரிலீஸ் அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>இயக்குநர் பேரரசுவின் அறிமுக இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது 'திருப்பாச்சி'. விஜய், திரிஷா, பாசமுடன் கூடிய தங்கை பாசம், ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் கலவையான திரைக்கதையால் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தெலுங்கில் 'அன்னவரம்' என்றும், கன்னடத்தின் 'தங்கிகாகி' என்றும் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வசூல் சாதனை படைத்தது.</p><h2>திரையரங்கு<strong>களில் மீண்டும்</strong> எதிர்பார்ப்பு</h2><p>வெளிநாடுகளில் திட்டமிட்டபடி அக்டோபர் 2 அன்று ரீ-ரிலீஸ் செய்யப்படும் என செய்திகள் பரவி வந்தாலும், தமிழகத்தில் விரைவில் இதற்கான புதிய அதிகாரப்பூர்வ ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பா-மகன் படங்கள் ஒரே நேரத்தில் மோதிக்கொள்வதைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>அக்டோபர் 1-ஆம் தேதி ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள ‘பத்தா’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. மேலும், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும் ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படமும் அன்றைய தினமே திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item></channel></rss>