<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 22 Aug 2026 18:23:54 +0000</lastBuildDate><item><title>கடத்தப்பட்ட 2 வணிகக் கப்பல்கள்.. 22 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-sailors-safe-22-indians-on-two-hijacked-merchant-ships-off-yemen-and-somalia-reported-unharmed#comments</comments><guid isPermaLink="false">6c872f7f-a3a5-4e19-bd7b-1d3a223fee11</guid><pubDate>Sat, 22 Aug 2026 18:19:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T18:19:53.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yemen,ஏமன்,கடற்கொள்ளையர்கள்,சோமாலியா,Somalia,Pirates</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/85v512tz/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கப்பல்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கப்பல்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/85v512tz/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் அடுத்தடுத்து <a href="https://www.maalaimalar.com/news/world/indian-crew-hostage-two-merchant-ships-hijacked-off-yemen-and-somalia-22-indians-in-peril">கடற்கொள்ளையர்கள் </a>கடத்திய  2 வணிகக் கப்பல்களில் சிக்கியுள்ள 22 இந்திய மாலுமிகளும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p> <h2>கடத்தல்</h2><p>எரித்திரியா நாட்டுக்கு கொடியுடன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற எம்டி ஷிபு 1 என்ற வணிக கப்பல் 20 பணியாளர்களுடன் ஏமன் கடற்கரைக்கு 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதமேந்திய 6 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கடற்கொள்ளையர்களால் </a>கடத்தப்பட்டுள்ளது. அதிலிருந்த 20 பணியாளர்களில் 16 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>முன்னதாக எம்வி லுடிப் என்ற கேமரூன் கொடியுடன் கூடிய வணிக கப்பல் சோமாலியாவின் பன்ட்லேண்ட் கடற்கரைக்கு அருகே கடந்த திங்களன்று கடத்தப்பட்டுள்ளது.</p> <p>அதில் இருந்த மொத்தம் 10 பணியாளர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர். சோமாலிய அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி அசோசியேட் பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த கப்பலானது பண்ட்லேண்ட்டில் உள்ள Eyl மாவட்டத்தில் உள்ள மராரையாவுக்கு 3.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து வடக்கு சோமாலியாவில் உள்ள Nugaal கடற்கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p> <p>இந்த கப்பல் போலார் மூவ்மென்ட் ஷிப்பிங் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் சோமாலியாவில் உள்ள துருக்கி ராணுவ பயிற்சி மையத்திற்கு ஆயுதங்கள், பயிற்சி உபகரணங்கள், சேட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு சென்று கொண்டிருந்தது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>கப்பலை 8 கடற்கொள்ளையர்கள் சேர்ந்து கடத்தியதாக நம்பப்படுகிறது. இவர்கள் முன்னதாக கடந்த ஏப்ரலில் எம்வி ஸ்வார்ட் என்ற கப்பலை கடத்தியர்வர்கள் என்று அந்த சோமாலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p> <h2>விளக்கம்</h2><p>இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், "கடத்தப்பட்ட கப்பல்களில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் காயங்களின்றி பாதுகாப்பாக உள்ளனர். </p><p>அவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று உறுதியளித்துள்ளார்.</p> <p>சோமாலிய அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து மாலுமிகளை மீட்பதற்கான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நைரோபியில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது.</p><p>கடத்தப்பட்ட கப்பல்களின் நடமாட்டத்தை சர்வதேச கடற்படைக் கப்பல்களும், டிரோன்களும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மியான்மர்: புத்த மடாலயம் மீது ராணுவம்  வான்வழி தாக்குதல் - 14 பொதுமக்கள் பலி, 20 பேர் காயம்</title><link>https://www.maalaimalar.com/news/world/myanmar-military-airstrike-14-civilians-killed-20-injured-in-strike-on-buddhist-monastery</link><comments>https://www.maalaimalar.com/news/world/myanmar-military-airstrike-14-civilians-killed-20-injured-in-strike-on-buddhist-monastery#comments</comments><guid isPermaLink="false">0f97eadb-f7a8-44ba-bf0a-9615751a11c4</guid><pubDate>Sat, 22 Aug 2026 17:43:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:43:53.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Myanmar,Aung San Suu Kyi,civil war,உள்நாட்டுப் போர்,மியான்மர்,ஆங் சான்  சூச்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ljn1vmct/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மியான்மர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மியான்மர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ljn1vmct/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya">மியான்மரில்</a> புத்த மடாலயம் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். 20 பேர் காயமுற்றனர். </p><h2>ராணுவ ஆதிக்கம் </h2><p>பிப்ரவரி 2021இல்<a href="https://www.maalaimalar.com/topic/aung-san-suu-kyi"> ஆங் சான் சூச்சி</a>யின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.</p><p>ராணுவத்துக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் மியான்மரில் செயல்பட்டு வருகின்றன. </p><p>அதில் குறிப்பிடத்தக்கது ஜனநாயக ஆதரவுப் படை. கிளர்ச்சியார்களை குறிவைத்து ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. </p><p>2025-இல் மியான்மரில் தேர்தல் நடத்தப்பட்டு ராணுவ ஆதரவு பெற்ற USDP கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேய்ங் அதிபராகபொறுப்பேற்றுக்கொண்டார். </p><p>இது வெளியுலகிற்கு ராணுவம் நடத்திய கண்துடைப்பு நாடகமாக பார்க்கப்படுகிறது. </p> <h2>தாக்குதல்</h2><p>இந்த நிலையில் தான் மத்திய மியான்மரில் உள்ள மியாவ்ங் பகுதியில் உள்ள ஸ்வெல் லே ஓ என்ற கிராமத்தில் நேற்று ராணுவம் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>ராணுவப் போர் விமானம் ஒன்று 15 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகளை வீசியுள்ளது. இதில் இரண்டாவது குண்டு அருகில் இருந்த வீடு ஒன்றையும் சேதப்படுத்தியது.</p><p>தகவலின்படி, இத்தாக்குதலில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.</p> <h2>வழிபாட்டு நிகழ்வு</h2><p>பௌத்தர்களின் புனித காலத்தை குறிக்கும் வகையில் மடாலயத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வார கால தியானப் பயிற்சியில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>"இது தவறாக இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் அல்ல; அவர்கள் வேண்டுமென்றே பௌத்த விகாரையை இலக்கு வைத்துத் தாக்கியுள்ளனர்" என்று ஜனநாயக ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p> <h2>கண்டனம்</h2><p>மியான்மரில் பொதுமக்களுக்கு எதிராக ராணுவம் திட்டமிட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.</p><p>திருமணங்கள் மற்றும் மத விழாக்களில் பொதுமக்கள் கூடும் இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதை ராணுவம் ஒரு பயங்கரவாத உத்தியாகப் பயன்படுத்தி வருவதாக சர்வதேச மோதல் கண்காணிப்பு அமைப்பான ACLED தெரிவித்துள்ளது.</p> <h2>ராணுவ விளக்கம்</h2><p>எனினும், பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகவே தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு கட்டுப்பாட்டுடன் செயல்படுவதாகவும் மியான்மர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>உள்நாட்டு போர்</h2><p>நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஆயுதமேந்திய உள்நாட்டுப் போருக்குள் தள்ளப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் 1,00,000க்கும் அதிகமானோர் இதில் உயிரிழந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 22 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-august-2026#comments</comments><guid isPermaLink="false">e2a2597d-07a4-4e47-9c79-e9f341ff896c</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:03:13 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:24:52.577Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7a7fqmxz/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7a7fqmxz/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-tender-2-famous-jewellery-companies">தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டரை கைப்பற்றிய 2 பிரபல நகை நிறுவனங்கள்</a></p><p>* &nbsp;ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>* ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டதில் 11 நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/public-pays-tribute-to-sowcar-janaki-funeral-this-evening">சௌகார் ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி - இன்று மாலை இறுதிச்சடங்கு</a></p><p>* சௌகார் ஜானகியின் வாழ்க்கையில் வானொலிக்கும் முக்கிய இடம் உண்டு.</p><p>* 2020-ம் ஆண்டு வெளியான 'பிஸ்கோத்' திரைப்படம் அவரது 400-வது படமாகக் குறிப்பிடப்படுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-flight-fares-from-chennai-to-kerala-surge-multiple-times">ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி... </a></p><p>*ரெயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் ஏற்கனவே முழுமையாக நிரம்பிவிட்டதால், கடைசி நேரப் பயணத்திற்கு மக்கள் பெருமளவில் விமான சேவையை நாடத் தொடங்கியுள்ளனர். </p><p>*இதைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-cherish-and-preserve-chennai-history">சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் - கனிமொழி</a></p><p>* எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த  மெட்ராஸ் மாநகரம்</p><p>* இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-8-2026">GOLD PRICE TODAY: நகை பிரியர்களுக்கு ஷாக்... ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-canada-trade-talks-fail-canada-to-impose-retaliatory-tariffs">அமெரிக்கா-கனடா வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: 50% வரிகளுக்கு பதிலடியாக சமமான வரி விதிக்க கனடா பிரதமர் முடிவு!... </a></p><p>*வாஷிங்டனில் 3 நாட்கள் நீடித்த பேச்சுவார்த்தை முறிந்ததால் நள்ளிரவு முதல் அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்</p><p>*தூதுக்குழுவை உடனடியாக ஒட்டாவாவிற்கு திரும்ப அழைத்தது கனடா.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-imposes-charges-on-the-savings-accounts-of-the-poor-and-the-common-people">ஏழை எளிய மக்களின் சேமிப்பு கணக்கிற்கு கட்டணம் விதிக்கும் மோடி அரசு- மாணிக்கம் தாகூர் கண்டனம்</a></p><p>*  ஏழை எளிய மக்களிடம் கட்டண கொள்ளை அடிக்கும் இந்த வங்கிகள் தான் கடந்த 10 ஆண்டுகளில் பெரு முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது.</p><p>* மோடி அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-day-anbumani-ramadoss-wishes">சென்னையின் வரங்களை பாதுகாக்க சென்னை நாளில் உறுதியேற்போம்! - அன்புமணி</a></p><p>* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான்.</p><p>* ஏரிகளையும் அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கி வருகிறோம். இதை விட மோசமாக இயற்கையை சூறையாட முடியாது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-teachers-selected-for-national-teachers-award">தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தேசிய நல்லாசிரியர் விருதிற்கு  தேர்வான ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>* தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly">சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்- திருமாவளவன்</a></p><p>* மாநில சுயாட்சி என்ற கோரிக்கை முழக்கத்தை உரக்க பேசவே இந்த மாநாடு நடைபெற்றது. </p><p>* மாநில சுயாட்சி என்பது தி.மு.க.வால் முன் நிறுத்தப்பட்ட ஒரு மகத்தான கோட்பாடு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-steps-into-387th-year-our-pledge-to-protect-the-foster-mother">387-ல் அடியெடுத்து வைக்கும் நம்ம சென்னை: வளர்ப்பு அன்னையைக் காக்க நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி!... </a></p><p>*வாழ்வு தேடி வந்த கோடிக்கணக்கான மக்களைத் தன் மடியில் ஏந்தி, வாழ்வாதாரம் அளித்து பேணிக்காக்கும் தாயாகத் திகழ்கிறது சென்னை மாநகரம். </p><p>*அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாத்துச் சென்னையின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur">டெல்லி ஜந்தர் மந்தர் பாணியில் ஜெய்ப்பூரில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அபிஜீத் திப்கே எச்சரிக்கை!</a></p><p>* மாட்டுத் தொழுவத்தில் இயங்கும் அரசுப்பள்ளியை ஆய்வு செய்ய சென்ற சி.ஜே.பி தொண்டர்கள் மீது தாக்குதல்.</p><p>* தாக்குதலை பா.ஜ.க குண்டர்கள் நடத்தியதாகவும், பெண் தொண்டர் உட்பட பலர் காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டு.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/lausanne-diamond-league-rumesh-pathirage-hattrick">லோசான் டைமண்ட் லீக்: 9 செ.மீ இடைவெளியில் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி ருமேஷ் பத்திரகே ஹாட்ரிக் சாதனை! </a></p><p>*இரண்டாவது சுற்றில் நீரஜ் சோப்ரா அபாரமாகச் செயல்பட்டு 88.05 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தற்காலிகமாகப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். </p><p>*மூன்றாவது சுற்றில், இலங்கை வீரர் ருமேஷ் பத்திரகே 88.14 மீட்டர் தூரம் எறிந்து மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-before-vigilance-and-anti-corruption-police">செந்தில்பாலாஜி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜர் - டாஸ்மாக் முறைகேடு பற்றி விசாரணை</a></p><p>* டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.</p><p>* 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk"> திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் - செயற்குழுவில் தீர்மானம்</a></p><p>* தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பாக அதிரடி முடிவுகள் தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped">வீ த லீடர்ஸ் அமைப்பின் இணைய தளம் மாற்றி அமைப்பு - அண்ணாமலை அறிவிப்பு</a></p><p>* இதுவரை உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்களுடன் இருந்த இந்த பக்கத்தை இப்போது மாற்றி அமைத்துள்ளார்.</p><p>* பொதுமக்கள் அவற்றை பார்த்து பணிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/australia-165-for-8-wickets-in-first-day-against-bangladesh-second-test">2வது டெஸ்ட்: 64 ரன்னில் சுருண்ட வங்கதேசம்: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 165/8</a></p><p>* ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>* 2வது டெஸ்டின் முதல் நாளில் மொத்தம் 18 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikhs-protest-outside-rahul-gandhis-residence-against-cong-leaders-calling-sajjan-kumar-hero">ராகுல் காந்தி வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்: காரணம் என்ன?</a></p><p>* சஜ்ஜன் குமாரின் மறைவுக்குப் பிறகு, அவர் தங்கள் நாயகன் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் ஆட்சேபனைக்குரியவை.</p><p>* சஜ்ஜன் குமார் தங்கள் நாயகனா என்பது குறித்து ராகுல் காந்தி இன்று தெளிவுபடுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/former-cm-pinarayi-vijayan-says-his-hands-clean-denies-hawala-dealings">என் கைகள் சுத்தமானவை..! ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டை மறுத்த பினராயி விஜயன்</a></p><p>* வீணா என்னுடைய மகள் என்பதனால் ஏராளமான விசயங்கள் எழுப்பப்பட்டன.</p><p>* ஏராளமான சொத்துகளுக்கு வீணா உரிமையாளர் கிடையாது. பேசப்படும் பணத்தின் அளவும் பெரியதல்ல.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-srilanka-in-second-test-for-colombo">நாளை கடைசி டெஸ்ட்: இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்தியா?</a></p><p>* முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.</p><p>* காயமடைந்த தினேஷ் சண்டிமால் இலங்கை அணியில் சேர்க்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/japanese-father-leaves-7-year-old-alone-on-mount-fuji">7 வயது மகன் ஃபூஜி மலை ஏறும்போது சோர்வடைந்ததால் தனியாகத்தவிக்கவிட்டுச் சென்ற ஜப்பானியத் தந்தை!</a></p><p>* புஜி மலையில் 2490 மீட்டர் உயரத்தில் சோர்வடைந்த 7 வயது மகனை தந்தை தனியே விட்டுச் சென்றார்.</p><p>* தவறான முடிவுக்கு வருந்துவதாக தந்தை மன்னிப்பு கேட்டார், பாதுகாப்பு விதிகளை போலீசார் வலியுறுத்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/russia-double-drone-attack-on-ukraine-mall-kills-16">உக்ரைனின் வணிக வளாகம் மீது தாக்குதல்: ரஷியாவிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!</a></p><p>* ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ் வணிக வளாகம் மீது ரஷ்யா இரட்டை ட்ரோன் தாக்குதல்.</p><p>* இது மனிதாபிமானமற்ற பயங்கரவாதம் என ஜெலன்ஸ்கி கண்டனம், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/indian-pair-get-bronze-in-world-championship-badminton-womens-doubles">உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: வெண்கலம் வென்றது திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி</a></p><p>* இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் 2-வது இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.</p><p>* 2011-ல் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி இந்தத் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/salem-spartans-beat-tirupur-tamizhans-in-tnpl-2026">டிஎன்பிஎல்: திருப்பூரை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது சேலம்</a></p><p>* சேலம் அணி 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 6 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. </p><p>* திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-has-moved-past-dale-steyn-in-the-test-wickets-tally">டெஸ்டில் 441 விக்கெட்: ஸ்டெயின் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்</a></p><p>* டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் 10-வது இடம் பிடித்தார் ஸ்டார்க்.</p><p>* டேல் ஸ்டெயின் 93 டெஸ்டில் விளையாடி 439 விக்கெட் எடுத்து 11-வது இடத்தில் உள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>ம.பி. மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ விபத்து.. பிறந்த குழந்தை பலி - இரு குழந்தைகள்  காயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/infant-dies-after-fire-in-madhya-pradesh-govt-hospital-nicu-cradle-warmer-short-circuit-sparks-blaze-dozens-of-babies-evacuated-safely</link><comments>https://www.maalaimalar.com/news/national/infant-dies-after-fire-in-madhya-pradesh-govt-hospital-nicu-cradle-warmer-short-circuit-sparks-blaze-dozens-of-babies-evacuated-safely#comments</comments><guid isPermaLink="false">147ce48f-def8-4eda-9ca3-63957b7a3f22</guid><pubDate>Sat, 22 Aug 2026 17:17:55 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:17:55.501Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,அரசு மருத்துவமனை,Government Hospital,Madhya Pradesh,தீவிபத்து,மத்தியப் பிரதேசம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jt8w8bit/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ம.பி. மருத்துவமனை தீ விபத்து ]]></media:title><media:description type="html"><![CDATA[ ம.பி. மருத்துவமனை தீ விபத்து ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jt8w8bit/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/madhya-pradesh">மத்தியப் பிரதேசத்தில்</a> அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"> தீவிபத்தில் </a>பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது. </p><h2>அரசு மருத்துவமனை</h2><p>மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட அரசு மருத்துவமனையி இன்று அதிகாலை 1:50 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்தது.  </p><p>புதிதாக பிறக்கும் குறைந்த எடையுள்ள மற்றும் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் உடல் வெப்பநிலையைப் பராமரிக்கப் பயன்படும் Cradle Warmer இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தீப்பொறி உருவானதாகக் கூறப்படுகிறது.  </p><h2>தீ பரவல்</h2><p>வார்மர் இயந்திரத்தில் பற்றி எரிந்த தீ, அங்கிருந்த படுக்கை விரிப்புகளுக்கும் பரவியது.</p><p>தீ பரவுவதைக் கண்டவுடன் அங்குப் பணியிலிருந்த ஊழியர்கள், எரியும் வார்மர் இயந்திரத்தை மற்ற குழந்தைகளிடமிருந்து தள்ளி நகர்த்தினர்.</p><p>அதே பிரிவில் சிகிச்சையில் இருந்த 33 குழந்தைகளும், அருகிலுள்ள வெளிப்புறப் பிரிவில் இருந்த 30 குழந்தைகளும் பத்திரமாக வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.</p><p>மேலும், தீ மேல் தளத்திலிருந்த மகப்பேறு வார்டுக்குப் பரவாமலும் தடுக்கப்பட்டது.</p><p>இருப்பினும் தீ விபத்து ஏற்பட்ட பிரிவில் ஆக்சிஜன் உதவியுடன் இருந்த 3 குழந்தைகள் தீக்காயமடைந்துள்ளன.</p> <h2>உயிரிழப்பு</h2><p>காயமடைந்த 3 குழந்தைகளும் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.</p><p>அங்கு சிகிச்சையில் இருந்த ஒரு குழந்தை உயிரிழந்தது. எனினும், குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கையில் அக்குழந்தை தீக்காயங்களால் இறக்கவில்லை என்றும், பிறப்பிலேயே இருந்த தீவிர சுவாசக் கோளாறு பிரச்சனையாலேயே உயிரிழந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>லேசான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மற்ற இரு குழந்தைகள் தற்போது சீரான உடல்நிலையுடன் உள்ளனர்.</p> <h2>விசாரணை</h2><p>இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உமங் சிங்கார், மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடியாக தீவிபத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தணிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உலக கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்தது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/india-stare-at-world-cup-exit-after-loss-to-netherlands</link><comments>https://www.maalaimalar.com/sports/india-stare-at-world-cup-exit-after-loss-to-netherlands#comments</comments><guid isPermaLink="false">2f2447d0-da91-4cd4-a42f-d22852e340c2</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:34:12 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:34:12.898Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உலக கோப்பை ஹாக்கி,World cup Hockey</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/xbq5nqcl/HockeyIndia.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹாக்கி இந்தியா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/xbq5nqcl/HockeyIndia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஸ்டேஜ் 2-ல் E பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-3 என தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>60 நிமிடங்கள் ஆட்டம் 4 பகுதியாக பிரிக்கப்படடு போட்டி நடத்தப்பட்டது. முதல் இரண்டு கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 3-வது கால் பகுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது. 41-வது நிமிடத்தில் டெல்ஜென்காம்ப் அந்த கோலை அடித்தார். கடைசி கால் பகுதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தினர்.</p><p>51-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஹோயிடேமேக்கர்ஸ் கோல் அடித்தார். 52-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் கோல் அடித்தர். என்றாலும் 55-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் மற்றொரு வீரர் திஜ்ஸ் வான் டாம் கோல் அடித்தார்.</p><p>இதனால் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்தார். ஏற்கனவே இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது. கடைசியாக அர்ஜென்டினாவை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் ஒருவேளை அரையிறுதி வாய்ப்பை எதிர்பார்க்கலாம்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் குறித்த மனுஸ்மிருதியின் விதிமுறை வெட்கக்கேடானது- ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/women-are-not-owned-by-husbands-or-sons-rahul-gandhi-on-manusmriti</link><comments>https://www.maalaimalar.com/news/national/women-are-not-owned-by-husbands-or-sons-rahul-gandhi-on-manusmriti#comments</comments><guid isPermaLink="false">7c0749ae-c81e-4872-a3d5-9169de0ca044</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:33:17 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:33:17.692Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,மனுஸ்மிருதி,manusmriti</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kt3x6te8/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi slams Manusmriti’s control over women]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kt3x6te8/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்கள் தங்களுக்கு தாங்களே சொந்தமானவர்கள் என்றும் தங்கள் தந்தைக்கோ, கணவனுக்கோ அல்லது மகன்களுக்கோ சொந்தமானவர்கள் கிடையாது என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி</a> கூறினார். </p><p>மேலும், ஒரு பெண் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆண் உறவினர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டும் என்ற மனுஸ்மிருதியின் விதிமுறை வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் நலத் திட்டமான 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், “இந்தியப் பெண்களின் 70 கோடி தனித்துவமான பயணங்கள், தனித்துவமான கற்பனைத்திறன், தனித்துவமான கனவுகள் தான் இந்தியாவின் மிகப்பெரிய பலமாக உள்ளது.</p><p>குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் தன் தந்தைக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும், இளமைப் பருவத்தில் அவள் தன் கணவனுக்குச் சொந்தமானவள், அவளது கணவன் இறந்த பிறகு, அவள் தன் மகன்களுக்குச் சொந்தமானவள் என்று மனுஸ்மிருதி தெளிவாகக் கூறுகிறது.</p><p>ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது. இந்த வார்த்தைகள் வெட்கக்கேடானவை. இந்த வார்த்தைகள் பேசப்பட்டிருக்கவே கூடாது.</p><p>நீங்கள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் சொந்தமானவர் அல்ல. உங்கள் தந்தை, சகோதரர், கணவர், மகன் ஆகியோருடன் உங்களுக்கு உறவு இருக்கலாம், ஆனால் நீங்கள் அவர்களுக்கு சொந்தமானவர் அல்ல, நீங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவர்.</p><p>நான் சொற்பொழிவாற்றவோ அல்லது அரசியல் விவாதிக்கவோ இங்கு வரவில்லை; மாறாக, இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், கருத்துக்களைக் கலந்துரையாடவும் ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவே வந்துள்ளேன்.</p><p>கூண்டைத் தகர்த்தெறியுங்கள் என்ற கூட்டத்தில் பேச எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெண்களாகிய நீங்கள் தனித்துவமானவர், நீங்கள் சிறப்பானவர், நீங்கள் ஒரு தனிநபர், மேலும் உங்களுக்கென சொந்தக் கனவும் தொலைநோக்குப் பார்வையும் உண்டு.</p><p>பெண்கள் இயல்பாகவே ஆண்களை விட அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், மென்மையானவர்கள், கருணையுள்ளவர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என்பதே எனது வாதம்.</p><p>பெண்கள் பெரும்பாலும் மகள், மனைவி அல்லது தாய் என்ற மூன்று அடையாளங்களுக்குள் முடக்கப்பட்டனர்; இந்த உறவுகளில் தவறொன்றுமில்லை என்றாலும், இவை மட்டுமே அவர்களின் ஒரே அடையாளமாக இருக்க முடியாது.</p><p>பெண்கள் தொழில் வல்லுநர்களாகவும் விளையாட்டு வீராங்கனைகளாகவும் பல்வேறு துறைகளில் தீவிரமாகச் செயல்பட்டாலும், அவர்களின் அடையாளங்கள் பெரும்பாலும் ஆண்களுடனான உறவுகளின் மூலமே வரையறுக்கப்படுகின்றன” என்று ராகுல் காந்தி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>30 நிமிடங்கள் பாடும் கிப்பன் குரங்கு - உலகின் அழிந்து வரும் இனத்தை பாதுகாக்கும் அமெரிக்க ஆர்வலர்</title><link>https://www.maalaimalar.com/news/world/endangered-gibbons-singing-for-30-minutes</link><comments>https://www.maalaimalar.com/news/world/endangered-gibbons-singing-for-30-minutes#comments</comments><guid isPermaLink="false">15c6e63c-b0b9-42f8-8aaf-bf0c3b38b1f4</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:11:27 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:11:27.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Los Angeles,லாஸ் ஏஞ்சல்ஸ்,gibbon,monkey species,கிப்பன்,குரங்கு இனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/8n9h4ds0/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிப்பன் குரங்குகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ Gibbon conservation in US]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/8n9h4ds0/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் உள்ள சாண்டா கிளாரிடா பள்ளத்தாக்கில் குரங்கு இனத்தை சேர்ந்த கிப்பன்கள் ஒவ்வொரு முறையும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை பாடுவதாக கிப்பன் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் காபி ஸ்கோல்லர் கூறினார்.</p><h3><strong>கிப்பன் பாதுகாப்பு மையம்</strong></h3><p>அமெரிக்காவில் உள்ள கிப்பன் பாதுகாப்பு மையத்தில் ஐந்து இனங்களை சேர்ந்த சுமார் 40 கிப்பன் குரங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு மையம் ஆலன் மூட்னிக் என்பவரால் நிறுவப்பட்டது. 2011-இல் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட மூட்னிக் மரணமடைந்தார்.</p><p>இதையடுத்து இந்த கிப்பன் பாதுகாப்பு மையம் தற்போது இயக்குநர் காபி ஸ்கோல்லர் என்பவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்த வகை கிப்பன் குரங்குகள் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் விசித்திரமான பழக்கவழக்கங்கள் நிறைந்தவையாக உள்ளன. பெப்பர் என்ற இளம் வடக்கு வெள்ளைக் கன்னங்கள் கொண்ட கிப்பன், குழுவின் பாடலைத் தொடங்க எப்போதும் தலைமை தாங்குகிறது.</p><p>மேலும் வயலட் என்ற கொண்டை கிப்பன் தனது கூட்டாளியான ட்ரூமனுடன் சேர்ந்து பல்லவியை முடிக்கிறது. மீட்கப்பட்ட கிப்பனான பியருக்கு ஆண்களைப் பிடிக்காது. அந்தச் சிறிய குரங்குகள் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை, ஒவ்வொரு முறையும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை பாடுகின்றன.</p><p>தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் கிப்பன்கள் வழக்கமாகக் காணப்படும் இடங்களில், அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால் பெருகிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.</p><p>வனவிலங்கு வர்த்தகமும் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது; கிப்பன்கள் குட்டிகளாக இருக்கும்போதே அவற்றின் பெற்றோரிடமிருந்து பிடிக்கப்பட்டு செல்லப்பிராணிகளாக விற்கப்படுகின்றன.</p><p>இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மட்டுமே காணப்படும், அழிந்துவரும் இனமான ஜாவா கிப்பன்களை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்த முதல் மையம் இதுவாக உள்ளது.</p><p>மையத்தில் பிறந்த பிறகு ராக்கியின் தாய் அந்த குட்டி கிப்பன் குரங்கை கைவிட்டு சென்றது. கடினமான பிரசவத்தைச் சந்தித்த முதல் முறை சந்திப்பதால் தாய்மார்களுக்கு இதுபோல நிகழ வாய்ப்புள்ளதாக விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>இந்த நிலையில் கிப்பன் குரங்கு இனத்தை குறித்து அவர் கூறுகையில், “ஜாவான்கள், அவை எனக்கு மிகவும் பிடித்த இனம், மேலும் அந்த ஆண் ஜாவான் பாடுவது, எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.</p><p>ஜாவானிய நாட்டுப்புறக் கதைகளில், அவை காடுகளில் வாழும் ஆவிகள் என்று அறியப்படுகின்றன, ஏனென்றால் அவற்றின் குரலை எப்போதுமே கேட்க முடியும்.</p><p>கிப்பன்களுக்குப் பெரிய அடைப்பிடங்களைக் கட்டுவதற்கும், பார்வையாளர்களுக்காக ஒரு கல்வி மையத்தை அமைப்பதற்கும் அதிகப் பணம் திரட்டுவதே எனது நீண்டகால இலக்காக உள்ளது.</p><p>மூட்னிக்கின் மரபைப் போற்றுவதைத் தொடரவும், அவரது பெயரால் அழைக்கப்படும் ஒரு கிப்பன் உட்பட, அவற்றுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணிக்கவும் நான் விரும்புகிறேன்.</p><p>அவர் காலமானபோது, ​​அவர் நம்முடன் இருந்து, இந்த மையத்தைத் தொடர்ந்து நடத்த எங்களுக்கு உதவுகிறார் என்று நான் உணர்ந்தேன்," என்று ஸ்கோல்லர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விதிமுறை மீறல் வழக்கு: அமெரிக்காவுக்கு ரூ.4000 கோடி செலுத்த ஒப்புக்கொண்ட டிக்டாக்</title><link>https://www.maalaimalar.com/news/world/tiktok-agrees-to-pay-rs-4000-crore-fine-to-us</link><comments>https://www.maalaimalar.com/news/world/tiktok-agrees-to-pay-rs-4000-crore-fine-to-us#comments</comments><guid isPermaLink="false">6a7efd7b-8d73-45d4-a60b-02bf9b6bbe73</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:17:27 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:17:27.993Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிக்டாக்,TikTok,musically,byte dance,மியூசிக்கலி,பைட் டான்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jsl1c7tq/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிக்டாக் ]]></media:title><media:description type="html"><![CDATA[ TikTok Fine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jsl1c7tq/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக சேகரித்து விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், டிக்டாக் மற்றும் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் (byte dance) சுமார் 4,000 கோடி ரூபாய் (400 மில்லியன் டாலர்) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.</p><h3><strong>டிக்டாக் நிறுவனம்</strong></h3><p>அமெரிக்காவில் உள்ள குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக சேகரித்ததாகவும், 13 வயதுக்குட்பட்ட பயனர்களிடமிருந்து பெற்றோரின் ஒப்புதலை பெறுவதற்கான விதிமுறைகளை மீறியதாகவும் 2024-ம் ஆண்டு டிக்டாக் மற்றும் பைட்டான்ஸ் மீது நீதித்துறை வழக்குத் தொடர்ந்திருந்தது.</p><p>13 வயதுக்குட்பட்ட பயனர்களுடைய கணக்குகள் என்பது நிறுவனத்திற்கு தெரிந்திருந்தும், குழந்தைகளின் கணக்குகளை நீக்குமாறு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைகளை டிக்டாக் மதிக்கத் தவறியதாகவும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.</p><p>அமெரிக்க நீதித்துறை தனது புகாரைத் தாக்கல் செய்ததிலிருந்து, டிக்டாக்கின் அமெரிக்க உரிமையாளர் அமைப்பு மற்றும் தனியுரிமை நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>டிக்டாக் செயலிக்கு அமெரிக்கா விதித்த தடையை தவிர்ப்பதற்காக, ஆரக்கிள், சில்வர் லேக் மற்றும் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டு நிறுவனமான எம்ஜிஎக்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்களை உள்ளடக்கிய, பெரும்பான்மையாக அமெரிக்கர்களுக்கு சொந்தமான டிக்டாக் அமெரிக்க கூட்டு நிறுவனத்தை நிறுவ பைட்டான்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது.</p><h3><strong>அமெரிக்க நீதிமன்றம்</strong></h3><p>டிக்டாக் அமெரிக்கக் கூட்டு நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “பயனர்கள் தளத்தை அணுகுவதற்கு பயனர்கள் தங்கள் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.</p><p>மேலும், தங்கள் வயதை தவறாகக் குறிப்பிடும் 13 வயதுக்குட்பட்ட பயனர்களைக் கண்டறிய டிக்டாக் வயது சரிபார்ப்பு அமைப்புகளை உருவாக்கியுள்ளது” என்று அது கூறியது.</p><p>இதையடுத்து குழந்தைகள் தனியுரிமைச் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டி அமெரிக்க நீதித்துறை தொடுத்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, டிக்டாக் மற்றும் அதன் சீனத் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், 400 மில்லியன் டாலர் தொகையைச் செலுத்த ஒப்புக்கொண்டது.</p><p>இந்தத் தீர்வு குழந்தைகள் இணைய தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் (கோப்பா) கீழ் பெறப்பட்ட மிகப்பெரிய மீட்புத் தொகைகளில் ஒன்றாகும்.</p><p>இந்த ஒப்பந்தத்தின்படி டிக்டாக் உடனடியாக 300 மில்லியன் டாலரையும், அதன் முன்னோடியான மியூசிக்கலி சம்பந்தப்பட்ட முந்தைய ஒப்புதல் ஆணையை ரத்து செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, மேலும் 100 மில்லியன் டாலரையும் செலுத்தும் என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில் இந்த தீர்வு, அமெரிக்க குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும் என்று அமெரிக்காவின் துணை தலைமை வழக்கறிஞர் ஸ்டான்லி இ. உட்வார்ட் ஜூனியர் கூறினார்.</p><p>மேலும் அவர், “இணையத்தில் குழந்தைகள் பாதுகாக்கப்படுவதையும், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஒப்படைக்கப்பட்ட நிறுவனங்கள் தங்களின் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதையும் உறுதி செய்வதே துறையின் முன்னுரிமையாகும்.</p><p>இந்தத் தீர்வு குடும்பங்கள் எதிர்பார்க்கும் மற்றும் தகுதியான பாதுகாப்புகளை வலுப்படுத்துவதோடு கணிசமான இழப்பீட்டையும் உறுதி செய்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>கோப்பா (COPPA) மற்றும் அதன் அமலாக்க விதிமுறைகளுக்கு இணங்குவது தொடர்பான வழக்குகளுக்கு இந்த தீர்வு முற்றுப்புள்ளி வைப்பதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.</p><p>மேலும், இந்த ஒப்பந்தம் நீடித்த வழக்கு நடவடிக்கைகளால் ஏற்படும் தாமதம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை தவிர்க்கும் என்றும் நீதித்துறை கூறியுள்ளது.</p><h3><strong>2019இல் அபராதம் செலுத்திய மியூசிக்கலி</strong></h3><p>இந்தத் தீர்வு முன்னதாக மியூசிக்கலி (Musically) சம்பந்தப்பட்ட 2019 ஆம் ஆண்டின் ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) ஒப்புதல் ஆணை தொடர்பாகவும் அமைந்துள்ளது.</p><p>சிறு குழந்தைகள் இந்த செயலியைப் பயன்படுத்துவதை அந்த தளம் அறிந்திருந்தும், அவர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கு முன்பு பெற்றோரின் ஒப்புதலைப் பெறத் தவறிவிட்டது என்று FTC குற்றம் சாட்டியிருந்தது. இதையடுத்து மியூசிக்கலி அந்த நேரத்தில் 5.7 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட 53 வயது யானைக்கு வந்தாராவில் சிறப்பு சிகிச்சை: விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது</title><link>https://www.maalaimalar.com/news/national/flood-rescued-elephant-joymoti-airlifted-to-vantara-for-specialised-treatment</link><comments>https://www.maalaimalar.com/news/national/flood-rescued-elephant-joymoti-airlifted-to-vantara-for-specialised-treatment#comments</comments><guid isPermaLink="false">17fd6b82-3ba2-454d-8caf-96d74be59be1</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:08:17 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:08:17.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Assam Flood,அசாம் வெள்ளம்,Vantara,வந்தாரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uxiurava/Elephant001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யானை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uxiurava/Elephant001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாகலாந்து மற்றும் அசாமில் கடந்த மாதம் 2-வது வாரத்தில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் 53 வயதான பெண் யானை (ஜோய்மோதி) அடித்துச் செல்லப்பட்டது. நாகலாந்து அதிகாரிகள் உள்ளூர் மக்கள் உதவியுடன் இந்த யானையை மீட்டனர்.</p><h2>காயத்துடன் அவதிப்பட்ட யானை</h2><p>ஆனால் யானையின் உடம்பில் பெரும்பாலான இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. ஒரு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு கண்ணீர் வடிந்த வண்ணம் உள்ளது. உள்ளூர் பகுதியில் கால்நடை மருத்துவர்கள் காயங்களுக்கு மருந்து வைத்து கட்டினார்கள். என்றாலும், நீண்ட நேரம் நிற்க முடியாமல் ஜோய்மோதி அவதிப்பட்டது. மேலும், சரியாக உணவு சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டது.</p><p>இதனால் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வந்தாராவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டால் நீண்ட நேரம் ஆகும் என்பதால் வான்வழியாக வந்தாரா கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><h2>வந்தாரா</h2><p>வந்தாரா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆனந்த் அம்பானி மூலம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தொடங்கப்பட்ட ஒரு பெரிய வனவிலங்கு பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமாகும். காயம்பட்ட, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மற்றும் ஆபத்தில் உள்ள விலங்குகளுக்கு இது அடைக்கலம் அளிக்கிறது.</p><p>வனவிலங்குகளுக்கான அவசர சிகிச்சையில் உள்ளூர் திறனை வலுப்படுத்தும் நோக்கில், அசாமில் மூன்று வனவிலங்கு கால்நடை மருத்துவப் பராமரிப்பு மையங்களை (அதில் ஒன்று யானைகளுக்கென பிரத்யேகமாக அமைக்கப்படவுள்ளது) நிறுவ 'வந்தாரா' (Vantara) முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தின்படி, இந்த மையங்கள் அந்தந்த விலங்கினங்களுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு மற்றும் கால்நடை மருத்துவ வசதிகளைக் கொண்டிருக்கும்; மேலும் இவை அசாம் வனத்துறையால் தன்னாட்சி முறையில் இயக்கப்படும்.</p><p>அசாமில் உள்ள யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு, அவசரநிலை ஏற்படும் இடங்களுக்கு அருகிலேயே சிறப்பு மருத்துவ சிகிச்சையை வழங்குவதே இம்மையங்களை அமைப்பதன் நோக்கமாகும்; இதன் மூலம் விலங்குகளை நீண்ட தூரம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் குறையும்.</p>]]></content:encoded></item><item><title>டெஸ்டில் 441 விக்கெட்: ஸ்டெயின் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-has-moved-past-dale-steyn-in-the-test-wickets-tally</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-has-moved-past-dale-steyn-in-the-test-wickets-tally#comments</comments><guid isPermaLink="false">46fb05dc-6de4-45d4-a41f-cf6c36e3c3a5</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:52:36 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:52:36.101Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mitchel Starc,மிட்செல் ஸ்டார்க்,Dale Steyn,டேல் ஸ்டெயின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/i0n8ys4o/starc1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mitchell starc]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/i0n8ys4o/starc1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேச அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் மெக்காய் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 64 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><h2>ஸ்டார்க் 6 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்களை எடுத்துள்ளது.</p><h2>ஷோரிபுல் இஸ்லாம் 6 விக்கெட்</h2><p>வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 6 விக்கெட் வீழ்த்தினார். </p><h2>டாப் 10-ல் நுழைந்த ஸ்டார்க்</h2><p>இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார். அவர் 107 டெஸ்டுகளில் விளையாடி 441 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் மிட்செல் ஸ்டார்க், ஸ்டெயின் சாதனையை முறியடித்துள்ளார். </p><p>டேல் ஸ்டெயின் 93 டெஸ்டில் விளையாடி 439 விக்கெட் எடுத்து 11-வது இடத்தில் உள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 10-வது இடத்தை ஸ்டார்க் பிடித்துள்ளார்.</p><p>ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் வார்னே 708 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், நாதன் லயன் 567 விக்கெட்டுடன் 2வது இடத்திலும், மெக்ராத் 563 விக்கெட்டுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.</p><p>இந்த வரிசையில் 441 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் 4-வது இடத்தில் உள்ளார். </p><p>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் மிட்செல் ஸ்டார்க் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 56 டெஸ்ட்களில் 230 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கம்யூனிஸ்டுகள் ஆதரவில் தான் தற்போதைய ஆட்சி நடக்கிறது - சிபிஎம் சண்முகம் ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/current-tamil-nadu-government-runs-on-communist-support-says-cpm-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/current-tamil-nadu-government-runs-on-communist-support-says-cpm-shanmugam#comments</comments><guid isPermaLink="false">12707b5b-56fc-4b61-ada6-41c414624a73</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:39:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:39:03.242Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPM,Communist protest,P. Shanmugam,பெ.சண்முகம்,சிபிஎம்,Chief Secretary Saikumar IAS,தலைமை செயலாளர் சாய்குமார்,Saidapet Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/zrttdfqq/CPI-Shanmugam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shanmugam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/zrttdfqq/CPI-Shanmugam?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"தற்போதைய தமிழ்நாடு அரசு அமைவதற்கும், அது தொடர்ந்து நீடிப்பதற்கும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"> மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a> தான் ஆதரவு கொடுத்துள்ளது. இந்த அரசியல் அடிப்படை கூட தெரியாமல் இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு எதிராகச் சுற்றறிக்கை அனுப்பிய தலைமைச் செயலாளர் மற்றும் வட்டாட்சியர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சிபிஎம் மாநிலச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/p-shanmugam">பெ. சண்முகம்</a> ஆவேசமாக முழங்கினார்.</p><p>தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார் ஐஏஎஸ் அவர்களின் சித்தாந்த சாய்மானத்தைக் கண்டித்தும், அவரைப் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வலியுறுத்தியும் சென்னை சைதாப்பேட்டையில் இன்று <a href="https://www.maalaimalar.com/topic/cpim">சிபிஎம் </a>சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><h2>இந்த ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் கூறியிருப்பதாவது:</h2><p>நாங்கள் என்ன தடை செய்யப்பட்ட அமைப்பா?</p><p>ஆர்ப்பாட்டத்தில் பேசிய சண்முகம், "அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாணவர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது, இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்புகளை மட்டும் குறிவைத்து சுற்றறிக்கையில் முடக்க நினைப்பது ஏன்? நாங்கள் ஒன்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான அமைப்போ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்போ அல்ல. </p><p>கம்யூனிஸ்ட் கட்சிகள் சுதந்திரத்திற்கு முன்பும், தற்போதும் பல்வேறு தடைகளைச் சந்தித்த வரலாறு கொண்டது. அதிகாரிகளுக்கு உத்தரவு போடத் தெரியும் என்றால், அதை மதிக்க வேண்டுமா அல்லது மிதிக்க வேண்டுமா என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். </p><p>அதிகாரிகள் முதலில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று எச்சரித்தார்.</p><h2>"மிரட்டுவது காவல்துறை... பொதுநலனுக்காகப் போராடுவது மாணவர்கள்!"</h2><p>ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுவது மாணவர் அமைப்புகள் அல்ல, மாறாகக் காவல்துறையினர்தான் என்று சண்முகம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். "எங்கள் மாணவர்கள் பொதுநலன் கருதி, மாணவர்களின் நலனுக்காக மட்டுமே போராட்டங்களை நடத்துகிறார்கள். </p><p>அதைத் தடுப்பதற்கு அதிகாரிகளுக்கு எந்த உரிமையும், அதிகாரமும் இல்லை. சட்டமன்றத்தில் உண்மைக்கு மாறாக அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது உண்மையா அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் சொல்வது உண்மையா என்பதை அரசு தெளிவுபடுத்தி, பொய் சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.</p><h2>தேர்தல் ஆணையம் நியமித்த சாய்குமாரை உடனே நீக்குங்கள்!</h2><p>தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் ஐஏஎஸ் இந்த அரசால் நேரடியாக இங்கு நியமிக்கப்பட்டவர் அல்ல, அவர் தேர்தல் ஆணையத்தின் மூலம் நியமிக்கப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்டிய சண்முகம், "உயர் கல்வித்துறை ஆணையருக்கு விளக்கம் கேட்டு நேற்று மாலை நோட்டீஸ் அனுப்பிய அரசு, அதேபோல் தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கும் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். </p><p>நீங்கள் யாரை வேண்டுமானாலும் புதிய தலைமைச் செயலாளராகக் கொண்டு வாருங்கள், ஆனால் சாய்குமார் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது மட்டுமே எங்களின் ஒற்றை இலக்கு" என்றார்.</p><h2>முழுமையாகத் திரும்பப் பெறப்படாத பல்கலைக்கழக சுற்றறிக்கை!</h2><p>தவறு செய்த குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரின் வாய்மொழி உத்தரவைக் கேட்டு, உயர் கல்வித்துறை செயலாளர் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிய சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை இன்னும் முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை என்று சண்முகம் குற்றம் சாட்டினார்.</p><p>"காவல்துறை கமிஷனர் போட்ட உத்தரவு மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது; மற்றபடி பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற சுற்றறிக்கைகள் அப்படியேதான் உள்ளன. அரசாங்கம் இதில் முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.</p><h2>யார் கையில் ஆட்சி? முதலமைச்சர் விஜய் பதில் சொல்ல வேண்டும்!</h2><p>மிக முக்கியமான அரசியல் கேள்வியாக, "தற்போது தமிழ்நாட்டில் அரசிடம் அதிகாரிகள் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு இயங்குகிறதா? இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள்தான் உரிய பதிலை அளிக்க வேண்டும்" என்று சண்முகம் வலியுறுத்தினார்.</p><p>மேலும், "இடதுசாரிகளின் ஆதரவோடு தான் இந்த அரசு நீடிக்கிறது. எனவே, இத்தகைய அதிகாரிகளை வைத்துக்கொண்டு நீங்கள் ஆட்சி நடத்தப்போகிறீர்களா அல்லது இடதுசாரிகளை வைத்து ஆட்சியைத் தொடரப்போகிறீர்களா? இந்த நிர்வாகக் குளறுபடிகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.</p><p>மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்குப் பல்வேறு தரப்பிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, காவல்துறை தரப்பில் உத்தரவுகள் வாபஸ் பெறப்பட்டாலும், பல்கலைக்கழக உத்தரவுகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை எனக் கூறி சிபிஎம் தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முனைவர் எம்.சாய்குமாரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டுள்ள நிலையில், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று <a href="https://x.com/hashtag/CPIM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CPIM</a> சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற… <a href="https://t.co/T0VZSUXp99">pic.twitter.com/T0VZSUXp99</a></p>&mdash; Shanmugam P (@Shanmugamcpim) <a href="https://x.com/Shanmugamcpim/status/2091088457808646388?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மார்க்கெட்டில் உலாவும் செயற்கை பனீர்: கர்நாடக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-bans-sale-of-analogue-paneer-marketed-as-paneer-for-one-year</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-bans-sale-of-analogue-paneer-marketed-as-paneer-for-one-year#comments</comments><guid isPermaLink="false">0ec7c8e3-896d-44ef-a1d9-447547e85b99</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:34:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:34:18.968Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Paneer,பனீர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7c08kici/Paneer0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செயற்கை பனீர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7c08kici/Paneer0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பனீரை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பயன்படுத்தில் பால் அல்லாத தாவர எண்ணெய் போன்ற பொருட்களில் இருந்த போலியாக செயற்கை பனீர் சந்தைகளில் உலாவருகின்றன. இது பொதுமக்களில் சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மகாராஷ்டிரா அரசு அனலாக பனீர் என அழைக்கப்படும் செயற்கை பனீருக்கு தடைவிதித்திருந்தது. அந்த வகைியல் தற்போது கர்நாடக அரசு ஒரு வருடம் தடைவிதித்துள்ளது.</p> <p>கர்நாடக அரசு உண்மையான பனீருக்கு மாற்றாக தயாரிக்கப்பட்டு பனீர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் அனலாக் பனீர் அல்லது Non-Dairy Paneer தயாரிப்பு சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு மாநிலம் முழுவதும் ஓராண்டு தடை விதித்துள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட்ட அரசு அறிவிப்பில் இந்தத் தடை குறிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கிங், சேமிப்பு, போக்குவரத்து, மொத்த மற்றும் சில்லறை விற்பனை, விற்பனைக்காகக் காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை பொருந்தும்.</p><h2>போலி பனீர்</h2><p>பாலில் இருந்து தயாரிக்கப்படும் உண்மையான பனீரில் பால் கொழுப்பு மற்றும் பால் திடப்பொருட்கள் முக்கியமானவை. ஆனால், அனலாக் பனீரில் பால் கொழுப்புக்கு பதிலாக தாவர எண்ணெய், தாவர கொழுப்பு, மாவுச்சத்து, எமல்சிபையர்கள் மற்றும் பிற பால் அல்லாத பொருட்கள் பயன்படுத்தப்படலாம்.</p><p>உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின்படி, இத்தகைய தயாரிப்புகளை ‘பனீர்’ என்ற பெயரில் லேபிள் செய்வது (பொருட்கள் மீது விவரம் அடங்கிய அட்டை அல்லது அச்சிடுதல்), விளம்பரப்படுத்துவது அல்லது விற்பனை செய்வது அனுமதிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>எனினும், FSSAI தனித்தனி தரநிலைகளை ஏற்கனவே நிர்ணயித்துள்ள Frozen Dessert, Processed Cheese, Mixed Fat Spread போன்ற தயாரிப்புகளுக்கு இந்தத் தடை பொருந்தாது.</p><p>மேலும், உணவுத் தயாரிப்புகளில் அனலாக் பனீரை மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறாமல் உணவு நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீனாவில் நடைபெற்ற காதலர் தின ‘கிஷி திருவிழா’ - உற்சாகமாக கலந்துகொண்ட புதுமண தம்பதிகள்</title><link>https://www.maalaimalar.com/news/world/qixi-festival-in-china-lively-celebrations-by-newly-married-couples</link><comments>https://www.maalaimalar.com/news/world/qixi-festival-in-china-lively-celebrations-by-newly-married-couples#comments</comments><guid isPermaLink="false">e82bf8d8-cd41-46b3-96d3-b2b00b7afa31</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:27:34 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:27:34.315Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,qixi festival,கிஷி திருவிழா,சீன காதலர் தினம்,china valentines day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kbyyriz1/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சீன காதலர் தின கிஷி திருவிழா]]></media:title><media:description type="html"><![CDATA[ China Qixi Festival]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kbyyriz1/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவின் சந்திர நாட்காட்டியின்படி (Lunar calender) ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஏழாவது மாதத்தின் ஏழாவது நாளில் கிஷி திருவிழா (Qixi festival) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா பெரும்பாலும் சீனாவின் பாரம்பரிய காதலர் தினம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.</p><p>கிஷி என்பது பண்டைய சீனர்கள் நட்சத்திரங்களை உற்றுநோக்கியதில் இருந்து தொடங்கியது. காலப்போக்கில், இந்த விழா கால்நடைகளை பராமரிப்பவர் மற்றும் நெசவுப் பெண்ணின் காதல் கதையுடன் பிணைக்கப்பட்டது.  </p><p>இது, 'திறமைக்காக மன்றாடுதல்' என்று பொருள்படும் ' கிகியாவோ' போன்ற மரபுகளுக்கும் வழிவகுத்தது. முற்காலத்தில், பெண்கள் நிலவின் கீழ் ஊசிகளில் நூல் கோர்ப்பார்கள், கைத்திறனுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள்.</p><p>கியாகுவோ எனப்படும் நேர்த்தியான பலகாரங்களைச் செய்வார்கள், மேலும் நெசவுப் பெண்ணைக் கௌரவிப்பார்கள். இந்தப் பழக்கவழக்கங்களில் சில, இன்றும் சீனாவின் சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.</p><h3><strong>சீன கிஷி திருவிழா</strong></h3><p>இதற்கிடையில், மக்கள் கிஷி பண்டிகையைக் கொண்டாடும் விதம் தொடர்ந்து மாறிவருகிறது. சீனப் பயணத் தளமான டோங்செங் டிராவல் வெளியிட்ட அறிக்கையின்படி, சாதாரண நாட்களுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் 19 அன்று இரவு நேரக் காட்சி இடங்களுக்கான முன்பதிவுகள் 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>படகுப் பயண முன்பதிவுகளும் 47 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும், அதில் வாடிக்கையாளர்களில் 76 சதவீதம் பேர் தம்பதிகளாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.</p><p>பாரம்பரிய சடங்குகள் முதல் மாலை நேர படகு பயணங்கள் மற்றும் ஒளிக்காட்சிகள் வரை, கிஷி பண்டிகையானது பண்டைய பழக்கவழக்கங்களையும் அன்பை கொண்டாடும் நவீன வழிகளையும் ஒன்றிணைக்கிறது.</p><p>2026-இல் சீனா முழுவதும் மக்கள் கிஷி திருவிழாவை கொண்டாடும் விதமாக, ஆகஸ்ட் 19 அன்று சியான் நகரின் யோங்னிங் வாயிலுக்குக் கீழே நடைபெற்ற டாங் பாணி குழுத் திருமண விழாவில் ஐந்து புதுமணத் தம்பதிகள் பங்கேற்றனர்.</p><p>இந்த கிஷி திருவிழாவின் போது, குன்மிங்கின் ஷிலின் யி தன்னாட்சி மாவட்டத்தில் உள்ள கல் வனக் காட்சிப் பகுதியில் புதுமணத் தம்பதிகள் திருமண இனிப்புகளை வழங்கினர். </p><p>'அஷிமா' என்ற சீனத் திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்புத் தளமான இந்த குறிப்பிட்ட இடத்தில் ஐம்பது தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர்.</p><p>கிஷி திருவிழாவிற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 18 அன்று, குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பிராந்தியத்தின், நான்னிங், யோங்னிங் மாவட்டத்திலுள்ள மெங்லியன் கிராமத்தில், ஒரு கிராமவாசி தனது வீட்டிற்கு வெளியே கிஷி பண்டிகையை மையமாகக் கொண்ட அரிசி தானியக் கலைப்படைப்பைக் காட்சிப்படுத்துவது சடங்காக பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: திருப்பூரை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது சேலம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/salem-spartans-beat-tirupur-tamizhans-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/salem-spartans-beat-tirupur-tamizhans-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">f1af0ed4-9b14-4821-b6ca-c14866081fb1</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:58:14 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:58:14.523Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,Salem Spartans,சேலம் ஸ்பர்டன்ஸ்,tirupur tamizhans</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ih7nf297/salem.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ salem spartans]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ih7nf297/salem.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூருக்கு எதிரான போட்டியில் 45 ரன் வித்தியாசத்தில் வென்ற சேலம் அணி நடப்பு தொடரில் ஆறுதல் வெற்றி பெற்றது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது கட்டம் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>திருப்பூர் தமிழன்ஸ்</h2><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. </p><h2>கார்த்திக் மணிகண்டன் அரை சதம்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கார்த்திக் மணிகண்டன் அரை சதமடித்தார். அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பூபதிகுமார் 27 ரன்னிலும், அபிஷேக் 29 ரன்னில் ஆட்டமிழந்தனர்.</p><p>திருப்பூர் அணி சார்பில் மதிவண்ணன் 3 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.</p><h2>துஷார் ரஹேஜா அதிரடி</h2><p>தொடக்க ஆட்டக்காரரான துஷார் ரஹேஜா மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 43 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 75 ரன்கள் குவித்தார்.</p><p>அமித் சாத்விக், முகமது அலி ஆகியோர் இரட்டை இலக்கங்களை எட்டினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><p>இறுதியில், திருப்பூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேலம் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>சேலம் சார்பில் ரஹில் ஷா 3 விக்கெட்டும், பொய்யாமொழி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய சேலம் ஒரு வெற்றி, 6 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. </p><p>திருப்பூர் அணி தான் ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.</p><p>அடுத்து நடைபெறும் கோவை-மதுரை இடையிலான ஆட்டத்தில் மதுரை அணி மோசமாக தோற்றால் திருப்பூர் அணிக்கு பிளே ஆப் சுற்று செல்ல வாய்ப்புள்ளது.</p><p>திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கழிவு பொருட்களையும் கலைநயமாக்கலாம்: 8000 கண்ணாடி பாட்டில்கள் கொண்டு அழகிய வீட்டை உருவாக்கிய தாய்-மகள்</title><link>https://www.maalaimalar.com/news/world/brazilian-mother-and-daughter-began-collecting-discarded-bottles-years-later-more-than-8000-glass-bottles-had-become-the-walls-of-their-seven-bedroom-home</link><comments>https://www.maalaimalar.com/news/world/brazilian-mother-and-daughter-began-collecting-discarded-bottles-years-later-more-than-8000-glass-bottles-had-become-the-walls-of-their-seven-bedroom-home#comments</comments><guid isPermaLink="false">af2647f5-774a-45e5-a9d7-38623eb39702</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:16:15 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:16:15.633Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Brazil,பிரேசில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/imyvhykb/House0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கண்ணாடி பாட்டிலால் கட்டப்பட்ட சுவர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/imyvhykb/House0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுற்றுலா சென்று திரும்பும்போது புகைப்படங்கள், நினைவுப் பொருட்கள் என பலவற்றை வீட்டுக்கு கொண்டு வருகிறோம். ஆனால், நாம் உருவாக்கும் கழிவுகளை முறையாக அகற்றுவது பெரும்பாலும் மறந்து விடுகிறோம். இதன் விளைவாக பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட கழிவுகள் கடற்கரைகள் மற்றும் காடுகளில் நீண்ட காலம் தேங்குகின்றன.</p><p>பிரேசிலின் இட்டமராக்கா தீவில், எட்னா டான்டாஸ் மற்றும் அவரது மகள் மரியா கேப்ரெய்லி டான்டாஸ் இந்தப் பிரச்சினைக்கு வித்தியாசமான தீர்வை கண்டனர்.</p><p>கடந்த 2020-ம் ஆண்டு அவர்கள் கடற்கரையில் குவிந்து கிடந்த கண்ணாடிப் பாட்டில்களை சேகரிக்கத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகள் உழைத்து, மரப்பொருட்கள், பழைய மரப் பலகைகள், பற்பசைக் குழாய்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களுடன் ஒரு வீட்டை உருவாக்கினர்.</p><p>‘Casa de Sal’ அல்லது ‘சால்ட் ஹவுஸ்’ என அழைக்கப்படும் இந்த ஏழு அறைகள் கொண்ட வீட்டின் சுவர்களை பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட சுமார் 8,000 கண்ணாடிப் பாட்டில்கள் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். சூரிய உதயத்தின் போது பாட்டில்கள் வழியாக ஒளி வீட்டுக்குள் ஊடுருவுவதால், அதன் சுவர்கள் அழகாக ஒளிர்கின்றன.</p><p>எட்னா சமூக-சுற்றுச்சூழல் கல்வியாளராகவும், 27 வயதான மரியா நிலைத்தன்மை சார்ந்த ஆடைத் துறையிலும் பணியாற்றுகிறார். பெண்கள் கட்டுமானத் துறையில் எதிர்கொள்ளும் பாலினப் பாகுபாட்டையும் அவர்கள் இதன் மூலம் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>தற்போது சால்ட் ஹவுஸ் தங்குமிடமாகவும், நிலைத்த கட்டுமான முறைகள் குறித்த பயிற்சிகள் நடைபெறும் இடமாகவும் உள்ளது. கழிவாகத் தூக்கி எறியப்பட்ட பொருட்களும் படைப்பாற்றல், உழைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அக்கறையுடன் பயனுள்ள ஒன்றாக மாற முடியும் என்பதை இந்தத் தாய் மற்றும் மகள் ஆகியோர் நிரூபித்து உள்ளனர்.</p><p>இவர்களின் முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. கண்ணாடிப் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், அவை வீணாகக் குப்பைக்குச் செல்வதைத் தடுத்துள்ளனர். மேலும், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு மூலம் புதிய பொருட்களின் தேவையையும் குறைக்க முடியும் என்பதை இந்த வீடு உணர்த்துகிறது.</p><p>தாய் மற்றும் மகளின் பல ஆண்டுகால முயற்சி, படைப்பாற்றலும் விடாமுயற்சியும் இருந்தால் கழிவுப் பொருட்களைக்கூட பயனுள்ள ஒன்றாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்கிறது. அவர்களின் வீடு இன்று ஒரு தனித்துவமான இல்லமாக மட்டுமல்லாமல், நிலைத்தன்மை, மறுபயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் அழகான எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.</p>]]></content:encoded></item><item><title>உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: வெண்கலம் வென்றது திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி</title><link>https://www.maalaimalar.com/sports/indian-pair-get-bronze-in-world-championship-badminton-womens-doubles</link><comments>https://www.maalaimalar.com/sports/indian-pair-get-bronze-in-world-championship-badminton-womens-doubles#comments</comments><guid isPermaLink="false">69977c58-63c5-4349-bf4b-81bc3fa0dfb7</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:16:08 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:16:08.035Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Treesa Jolly,Gayatri Gopichand,காயத்ரி கோபிசந்த்,World Championship badminton,உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்,திரிசா ஜாலி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/wvojxm5c/jolly.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ treesa jolly, gayatri gopichand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/wvojxm5c/jolly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.</p><h2>அரையிறுதியில் இந்தியா</h2><p>இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனாவின் டான் நிங் - லீயு ஷெங்ஷு ஜோடி உடன் மோதியது.</p><p>இதில் சிறப்பாக ஆடிய ஜாலி-கோபிசந்த் ஜோடி 21-18 என முதல் செட்டைக் கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட சீன ஜோடி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-13, 21-8 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.</p><h2>வெண்கலம் வென்ற இந்தியா</h2><p>இந்தியாவின் ஜாலி-கோபிசந்த் ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. ஆனாலும் அரையிறுதியில் தோற்றாலும் அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.</p><h2>சாதனை படைத்த ஜாலி-காயத்ரி ஜோடி</h2><p>இதன்மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் 2-வது இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தது.</p><p>இதற்கு முன் 2011-ம் ஆண்டு ஜுவாலா கட்டா - அஸ்வினி ஜோடி உலக சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>ரஷியாவின் பிரபல கார்ட்டூன் தொடரான ‘மாஷா அண்ட் தி பியர்’ தொடருக்கு உக்ரைன் அரசு தடை!</title><link>https://www.maalaimalar.com/news/world/ukraine-bans-russian-cartoon-series-masha-and-the-bear</link><comments>https://www.maalaimalar.com/news/world/ukraine-bans-russian-cartoon-series-masha-and-the-bear#comments</comments><guid isPermaLink="false">1ce0c79b-4b76-461a-bb8d-71b03903d0f5</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:01:59 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:01:59.372Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Zelenskyy,ஜெலன்ஸ்கி,Russia Ukraine war,ரஷியா உக்ரைன் போர்,Masha And The Bear,மாஷா அண்ட் தி பியர்,Cartoon Sanctions</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/sf6g1bpi/Masha-and-the-Bear" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Masha and the Bear]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/sf6g1bpi/Masha-and-the-Bear?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">ரஷியா</a>வுடன் தொடர் ராணுவ மோதலில் ஈடுபட்டு வரும் உக்ரைன் அரசு, தற்போது ரஷியாவின் உலகப் புகழ்பெற்ற குழந்தைகளுக்கான அனிமேஷன் தொடரான 'மாஷா அண்ட் தி பியர்' மீது அதிகாரப்பூர்வமாக தடையையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.</p><h2>அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் கலாச்சார அமைச்சரின் அதிரடி உத்தரவு</h2><p>இது தொடர்பாக உக்ரைன் கலாச்சார அமைச்சர் டெட்டியானா பெரெஷ்னா தனது சமூக ஊடகப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p>அதில், "'மாஷா அண்ட் தி பியர்' அனிமேஷன் தொடரை தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் ரஷிய நிறுவனங்களுக்கு எதிராக உக்ரைன் தடைகளை விதித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">ஜெலன்ஸ்கி </a>இந்த கார்ட்டூன் தொடரை தயாரிக்கும் 'அனிமக்கார்ட்' ஸ்டுடியோ மற்றும் அதன் விநியோகஸ்தர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.</p><h2>தடைக்கான முக்கிய காரணங்கள்</h2><p>இந்த கார்ட்டூன் தொடர் குழந்தைகள் மத்தியில் தந்திரமான முறையில் ரஷியாவிற்கு ஆதரவான கருத்துக்களைப் பரப்புவதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. </p><p>ரஷியாவின் இத்தகைய மறைமுகப் பிரச்சாரங்கள் உக்ரைனின் தேசிய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த கார்ட்டூனில் சோவியத் யூனியன் காலத்து சின்னங்கள் மற்றும் ரஷிய ராணுவப் பாணியிலான தொப்பிகள் போன்ற கூறுகள் நேர்மறையாகக் காட்டப்படுவதாக உக்ரைனின் நட்பு நாடுகளான பிரிட்டன் மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளும் ஏற்கனவே விமர்சித்துள்ளன.</p><p>"ரஷியாவின் இத்தகைய நச்சுப் பிரச்சாரங்களுக்கு குழந்தைகளின் திரைகளில் இடமில்லை - உக்ரைனிலும் சரி, உலக அளவில் எங்குமே சரி" என்று கலாச்சார அமைச்சர் பெரெஷ்னா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.</p><h2>உக்ரைனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?</h2><p>இந்த அதிகாரப்பூர்வத் தடை மூலம் உக்ரைன் நாட்டில் இந்த கார்ட்டூன் ஒளிபரப்பாவது முற்றிலும் தடுக்கப்படும். மேலும், யூடியூப் உள்ளிட்ட சர்வதேச இணையத் தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த கார்ட்டூன் மூலம் தயாரிப்பு நிறுவனம் பெறும் வருவாயை முடக்கவும், அதன் விநியோகத்தை உலகளவில் கட்டுப்படுத்தவும் உக்ரைன் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p><h2>தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் மறுப்பு</h2><p>கார்ட்டூனைத் தயாரிக்கும் 'அனிமக்கார்ட்' நிறுவனம் இக்குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.</p><p>தாங்கள் ரஷிய அரசிடம் இருந்து எந்தவொரு நிதியுதவியும் பெறுவதில்லை என்றும், முற்றிலும் சுதந்திரமாகச் செயல்படும் ஒரு கலை நிறுவனம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.</p><p>இதற்கிடையே, ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உக்ரைனின் இந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கேலி செய்துள்ளார். "உக்ரைன் தற்போது கார்ட்டூன்களுக்கு எதிராகவும் போரைத் தொடங்கியுள்ளது. </p><p>இது கீவ் ஆட்சியாளர்களின் விகாரமான, அசிங்கமான முகத்தையே காட்டுகிறது" என்று அவர் விமர்சித்துள்ளார்.</p><h2>கார்ட்டூனின் உலகளாவிய ஆதிக்கம்</h2><p>'மாஷா அண்ட் தி பியர்' கார்ட்டூன் உலக அளவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. </p><p>குறிப்பாக இதன் யூடியூப் வீடியோக்கள் மட்டும் உலகளவில் 3,700 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: உறவினரை அழைத்து வந்து கணவரை அடித்துக் கொலை செய்த மனைவி</title><link>https://www.maalaimalar.com/news/national/husband-kills-wife-after-dispute-arrests-made</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-kills-wife-after-dispute-arrests-made#comments</comments><guid isPermaLink="false">dd9facbe-d79a-41d9-b438-9a1d21188031</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:44:40 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:44:40.632Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மனைவி கைது,Wife Arrested,delhi,software engineer,டெல்லி,மென்பொருள் பொறியாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/1bn5boru/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi software engineer murder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/1bn5boru/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவரை தனது மருமகள் வீட்டார் அடித்து கொலை செய்து விட்டதாக, உயிரிழந்த பொறியாளரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மனைவி உள்பட நான்கு பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.</p><h3><strong>பொறியாளர் வினய் குப்தா</strong></h3><p>வினய் நொய்டாவில் உள்ள அடோப் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்று வந்துள்ளார்.</p><p>இவர், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரேகா என்பவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.</p><p>டெல்லியில் உள்ள வீட்டில், வினய்-யும் அவரது மனைவியும் மூன்றாவது மாடியிலும், வினய்யின் பெற்றோர்கள் கீழ்தளத்திலும் வசித்து வந்துள்ளனர்.</p><p>இதையடுத்து இன்று காலை வினய் குப்தாவுக்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் இடையே, தங்கள் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>அப்போது ரேகா வீட்டில் இருந்து வெளியேறி, தனது தந்தை, இரண்டு சகோதரர்கள், மாமா என குடும்ப உறுப்பினர்களை வினய் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.</p><p>இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. அதைத் தொடர்ந்து ரேகாவின் குடும்ப உறுப்பினர்கள் வினயை தாக்க தொடங்கியுள்ளனர்.</p><h3><strong>பொறியாளரின் தாய் குற்றச்சாட்டு</strong></h3><p>இன்று நடந்த சம்பவம் குறித்து வினய்யின் தாய் கூறுகையில், ”மருமகளின் குடும்பத்தினருக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி வருவதற்காக வெளியே சென்றேன்.</p><p>நான் திரும்பி வந்தபோது, என் மகனை மருமகளின் வீட்டார் தாக்கிக்கொண்டு இருந்தனர். நான் உடனே தாக்குதலை நிறுத்துமாறு அவர்களிடம் கெஞ்சினேன். ஆனால் என் மகன் மீது தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டது.</p><p>மருமகளின் வீட்டார், எனது மகனின் கழுத்தை நெரித்து, மார்பில் உதைத்து தாக்கினர். இந்த சம்பவத்தை முன்கூட்டியே திட்டம் தீட்டி, எனது வீட்டில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ரேகா அணைத்துவிட்டார்” என்று அவர் கூறினார்.</p><p>தாக்குதல் நடந்த சில நிமிடங்களுக்கு பிறகு, வினய்-யின் பக்கத்து வீட்டுக்காரர் உள்ளே வந்து, அவரை தோளில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வினய் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>மனைவி குடும்பத்தார்கள் கைது</strong></h3><p>இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ரேகா, அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் அண்ணி என நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மாமா- மச்சான் என சட்டமன்றத்தில் பேசக்கூடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dont-say-uncle-cousin-in-assembly-duraimurugan-advice-to-dmk-mlas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dont-say-uncle-cousin-in-assembly-duraimurugan-advice-to-dmk-mlas#comments</comments><guid isPermaLink="false">59b09fb8-5c0a-4780-9669-3dc748682e2f</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:28:47 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:28:47.378Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துரை முருகன்,DMK,திமுக,Durai Murugan</media:keywords><media:content height="1948" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bf6j8kd0/DuraiMurugan.jpg" width="3464"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துரைமுருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bf6j8kd0/DuraiMurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றத்தில் மாமா- மச்சான் என்று பேசக்கூடாது என்று திமுக பொதுச் செயலாளர் அக்கட்சி எம்.எல்.ஏ.-க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>தமிழக சட்டசபை கூட்டத்தொடர்</h2><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லும் காட்சிகள், ரீல்ஸ் ஆக வெளியிடப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.</p><p>மேலும், தவெக- திமுக எம்.எல்.ஏ.-க்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சில சமயங்களில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யக்கூடிய வகையில் சில வார்த்தைகளை உறுப்பினர்கள் பேசி விடுகிறார்கள். இது தொடர்பாக அடிக்கடி சலசலப்பு ஏற்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-reply-to-udhayanidhi-stalin">திமுக </a>சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசும்போது, மாமா என்று கூறினார். இந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக துணை சபாநாயகர் தெரிவித்தார். சில உறுப்பினர்கள் இவ்வாறு உறவு முறை குறித்து பேசுகிறார்கள்.</p><p>இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.</p><p>அப்போது "சட்டப்பேரவையில் மாமா, மச்சான் என்ற உறவு முறை எல்லாம் வைத்து பேசக்கூடாது" என்று திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது. மேலும், சட்டமன்ற செயல்பாடுகளை பார்த்தால் தானும், மு.க. ஸ்டாலினும் தற்போது பேரவைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது என தோன்றுகிறது எனக் கூறியுள்ளார்.</p><h2>இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</h2><p>* கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><p>* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><p>* சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><p>* பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><h2>நகர செயலாளர்கள்</h2><p>* நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><h2>மாவட்ட செயலாளர்கள்</h2><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும்போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.</p><p>* கழகத்தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட வேண்டும்.</p><p>தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.</p><p>தி.மு.க. மாவட்ட செயலாளராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. பின்னர் அது திருத்தம் செய்யப்பட்டு 3 முறை பதவி வகிக்கலாம் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறையில் இருக்கும் ரவுடியுடன் வீடியோ காலில் பேசியபடி ஆடைகளை கழற்றிய இன்ஸ்பெக்டர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/inspector-strips-on-video-call-with-jailed-rowdy</link><comments>https://www.maalaimalar.com/news/national/inspector-strips-on-video-call-with-jailed-rowdy#comments</comments><guid isPermaLink="false">284a5926-5def-470c-b0a6-d1766be09561</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:07:41 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:07:41.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,பெண் இன்ஸ்பெக்டர்,karnataka police,woman inspector,Rowdy Saikumar,Hindalga Jail,ஹிண்டல்கா சிறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0eqwoyqj/Woman-Inspector" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Woman Inspector]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0eqwoyqj/Woman-Inspector?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81">பெங்களூரு</a>வில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானது. அதில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் போனில் பேசிக்கொண்டே தனது ஆடைகளை கழற்றுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. </p><p>இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அந்த பெண் அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பொதுமக்களிடமும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.</p><h2><strong>பெண் இன்ஸ்பெக்டர்</strong></h2><p>இதனைதொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீடியோவில் இருப்பது கர்நாடக மாநில தொழிலல் துறை பாதுகாப்புப் படையை சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">பெண் இன்ஸ்பெக்டர்</a> என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.</p><h2><strong>புகார் விசாரணை</strong></h2><p>பெண் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தனது நண்பரான ரவுடி சாய்குமார் என்பவருடன் வீடியோ காலில் பேசிய போது ஆடைகளை கழற்றியது தெரியவந்தது. இதையடுத்து பெண் இன்ஸ் பெக்டர், சாய்குமார் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.</p><p>இதையடுத்து போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனைகள் பெற்று வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-</p><p>வீடியோவில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் புகார் அளித்து விட்டு தற்போது விடுமுறையில் சென்று விட்டார். இந்த வீடியோ கடந்த 2024-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ரவுடிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெண் இன்ஸ்பெக்டரின் நண்பரான சாய்குமார் துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியை சேர்ந்தவர்.</p><h2><strong>சிறை தொடர்பு அம்பலம்</strong></h2><p>இந்த வீடியோ எடுத்த காலக்கட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா மத்திய சிறையில் பணியில் இருந்தார். அந்த சிறையில் தான் சாய்குமாரும் அடைக்கப்பட்டு இருந்தார். </p><p>அவர்சிறையில் இருந்த போது இன்ஸ்பெக்டர், ரவுடி தொடர்பு கொண்டு ஆபாசமான அழைப்புகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சாய்குமார் அந்த அழைப்பை பதிவு செய்து கொண்டு அதை சமீபத்தில் கசிய விட்டுள்ளார்.</p><h2><strong>ரவுடியின் லஞ்ச புகார்</strong></h2><p>மேலும் ரவுடி சாய்குமாரும், பெண் இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்து உள்ளார். அதில் சிறைக்குள் தன்னிடம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம் </a>பெற்றுக்கொண்டு தொலைபேசிகள், மது பானம் மற்றும் பிற ஆடம்பர பொருட்களை அவர் வழங்கியதாக குற்றம் சாட்டி உள்ளார். அதே கைபேசி தான் வீடியோ அழைப்புகளை பதிவு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>சிறையில் நடக்கும் முறை கேடுகளை அம்பலப்படுத்துபவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படும் என மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><h2><strong>பெண் இன்ஸ்பெக்டர் சர்ச்சை</strong></h2><p>அவரது புகாரின் அடிப்படையில் பெண் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடை பெற்று வருகிறது. இதற்கிடையே சிறை அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளுடன் ஒரு வீடியோ இன்ஸ்டா கிராமில் பகிரப்பட்டது.</p><p>அந்த பதிவை தொடர்ந்து சிறை அதிகாரிகள் பெலகாவி சிஇஎன் போலீசில் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பெண் போலீஸ் வீடியோ வேகமாக பரவி வருவதால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகா</a>வில் பரபரப்பு நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சேலம்-பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா திருப்பூர்?</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-tamizhans-need-170-runs-to-win-against-salem-spartans-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-tamizhans-need-170-runs-to-win-against-salem-spartans-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">5face8e1-d519-4cb8-bcd0-2d94a4f911d1</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:44:45 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:44:45.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,Salem Spartans,சேலம் ஸ்பர்டன்ஸ்,tirupur tamizhans</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/zivcmi2w/mani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ karthik manikandan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/zivcmi2w/mani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் சேலம் அணி 169 ரன்கள் எடுத்துள்ளது.</p><p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது கட்டம் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.</p><p>திருப்பூர் தமிழன்ஸ்</p><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. </p><p>அதன்படி, சேலம் ஸ்பர்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்தில் அபிஷேக், பூபதிகுமார் ஜோடி அதிரடியாக ஆடியது. </p><p>முதல் விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்த நிலையில் பூபதிகுமார் 27 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விவேக் 6 ரன்னில் வெளியேறினார்.</p><p>அபிஷேக் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். சன்னி சந்து 1 ரன்னிலும், ஹரிஷ்குமார் 3 ரன்னில் அவுட்டாகினர்.</p><p>பொறுப்புடன் ஆடிய கார்த்திக் மணிகண்டன் அரை சதமடித்தார். அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p>இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.</p><p>திருப்பூர் அணி சார்பில் மதிவண்ணன் 3 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.</p> ]]></content:encoded></item><item><title>நாக்பூரில்  36 டன் தாய் கெளுத்தி மீன்கள் அழிப்பு: காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/11-ponds-raided-36-tonnes-of-banned-thai-mangur-destroyed-in-nagpur</link><comments>https://www.maalaimalar.com/news/national/11-ponds-raided-36-tonnes-of-banned-thai-mangur-destroyed-in-nagpur#comments</comments><guid isPermaLink="false">ab21c3d0-c9c3-4bea-aff8-c96b7922996e</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:43:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:43:18.635Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மகாராஷ்டிரா,நாக்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0rxwuzsf/CatFish001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கெளுத்தி மீன்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0rxwuzsf/CatFish001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் மீன்வளத்துறை சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்கள் குளங்கள் அமைத்து தாய் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>அப்போது 11 குளங்களில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 36 டன்கள் தாய் கெளுத்தி (தாய் மங்கூர்) மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதை லாரிகள் ஏற்று, சுற்றுச்சூழல் பாதிப்படையாக இடத்தில் பெரிய பள்ளம் தோண்டி, அதில் கொட்டி மூடினர்.</p><p>அதிகாரிகளுக்கு வந்த புகார் அடிப்படையில் பர்ஷிவ்னி தாலுகாவில் உள்ள சிசோலி-மகதுலா பகுதியில் குளங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">11 Ponds Raided, 36 Tonnes Of Banned Thai Mangur Destroyed In Nagpur<a href="https://t.co/uXenI0Aa0G">https://t.co/uXenI0Aa0G</a> <a href="https://t.co/zSGf2zFFCZ">pic.twitter.com/zSGf2zFFCZ</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2090700292941889635?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>உள்ளூரைச் சேர்ந்த 25 மீனவர்கள் உதவியுடன் இந்த மீன்கள் குளத்தில் இருந்து அகற்றப்பட்டன. கடந்த 3 மாதங்களில் 51 டன் மீன்கள் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அழிக்கப்பட்டது மிகப்பெரிய அளவிலானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த வகை தாய் கெளுத்தி மீன்கள் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால், இந்தியாவில் இவற்றை வளர்க்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>387-வது மெட்ராஸ் தினம்: ‘சென்னை டு மெட்ராஸ்’ சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடக்கம்- அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/387th-madras-day-chennai-to-madras-photo-exhibition-opening</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/387th-madras-day-chennai-to-madras-photo-exhibition-opening#comments</comments><guid isPermaLink="false">e6f08638-ba4f-4970-80e7-972827378e35</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:39:27 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:39:27.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மெட்ராஸ் தினம்,அமைச்சர் ராஜ்மோகன்,MadrasDay387,ChennaiToMadras,MadrasHistory,ChennaiTourism,AnnaCentenaryLibrary,சென்னை டு மெட்ராஸ்,அமைச்சர் செ.ராஜேஷ்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/im9a7wqg/aaaa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 387th Madras Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/im9a7wqg/aaaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையின் தொன்மையான வரலாறு, செழுமையான பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் 387-வது மெட்ராஸ் தினக் கொண்டாட்டங்களை தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன. </p><p>இதன் முக்கிய நிகழ்வாக, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், “<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-387th-birthday-cm-vijay-vows-better-quality-of-life">சென்னை முதல் மெட்ராஸ்</a>” என்ற தலைப்பிலான சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் இன்று (22.08.2026) திறந்து வைத்து பார்வையிட்டனர்.</p><h2>கருப்பு-வெள்<strong>ளை புகைப்பட</strong>ங்களின் அரிதான தொகுப்பு</h2><p>சர்வதேசப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் டாக்டர் எல்.ராமச்சந்திரன், கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்த அரிதான கருப்பு-வெள்ளை புகைப்படங்களின் சிறப்புத் தொகுப்பு இக்கண்காட்சியின் முதன்மைச் சிறப்பம்சமாகும். இவை சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடக்கலை, நகரின் தனித்துவமான அடையாளங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகளை கலைநயத்துடன் வெளிப்படுத்துகின்றன. 22.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும் இக்கண்காட்சியைப் பொதுமக்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இலவசமாகப் பார்வையிடலாம்.</p><h2>பாரம்பரிய நடைப்<strong>பயணங்</strong>கள் </h2><p>மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறை சார்பில் ‘மெட்ராஸ் போட்டோ பிளாகர்ஸ்’ இணைந்து நடத்திய புகைப்படப் போட்டி, ‘இன்ஸ்டாகிராம் மெட்ராஸ் தினம் - 2026’ கட்டுரைப் போட்டி, ‘கலைகள் நாம்’ குழுவின் சுவர் ஓவியப் போட்டி ஆகியவை நடைபெற்றன. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bamfnhwf/jjj.jpg" /></figure><p>மேலும், வரலாற்று அறிஞர் வி.ஸ்ரீராம் தொகுத்து வழங்கிய புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று நடைப்பயணம், ‘நம் வீடு, நம் ஊரு, நம் கதை’ குழுவினர் செனட் ஹவுஸ், சேப்பாக்கம் அரண்மனை, விக்டோரியா பொது மண்டபத்தில் ஒருங்கிணைத்த பாரம்பரிய நடைப்பயணங்கள் மற்றும் ‘சைக்ளிங் யோகிஸ்’ குழுவின் சைக்ளிங் பேரணி ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெற்றன.</p><h2>புதுமையான இ<strong>லச்சினை மற்றும்</strong> நூல்கள் வெளியீடு</h2><p>சென்னை விக்டோரியா பொது அரங்கத்தில் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், பாடகி மீனாட்சி இளையராஜா மற்றும் முத்துவின் மண்ணிசைப் பாடல்கள், கரகம், ஒயில் மற்றும் மயிலாட்டம் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. </p><p>சென்னையின் உணவு மற்றும் கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு சேர்க்கும் ‘டேஸ்ட் ஆஃப் சென்னை’ இலச்சினை, காமிக் லைப்ரரி தயாரித்த ‘தி லாஸ்ட் டிராம்’ புத்தகமும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவான காணொளிகளும் வெளியிடப்பட்டன. இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.</p><p>இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் சி.லட்சுமி பிரியா, இணை இயக்குநர் திரு. மு.சேக் மன்சூர் உட்பட உயர் அலுவலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>காவல்துறையில் ஓய்வுபெற்ற நாய்களை இனிமேல் தத்தெடுக்க அனுமதி கிடையாது: தேவேந்திர பட்னாவிஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/retired-police-dogs-no-longer-allowed-for-adoption-devendra-fadnavis</link><comments>https://www.maalaimalar.com/news/national/retired-police-dogs-no-longer-allowed-for-adoption-devendra-fadnavis#comments</comments><guid isPermaLink="false">c01902b7-9d2d-47b0-9c0d-49c219587c31</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:32:00 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:32:00.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,தேவேந்திர பட்னாவிஸ்,devendra fadnavis,police dog,காவல் நாய்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/c1hy9e6c/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra Police Retired Dogs Adoption Ban]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/c1hy9e6c/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற காவல் நாய்கள் இனி மூன்றாம் தரப்பினருக்கு தத்தெடுப்புக்காக வழங்கப்படாது என அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று அறிவித்தார்.</p><p>காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள், தங்கள் பணியை நிறைவு செய்த பிறகு பொதுவாக தத்தெடுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த வகையான காவல் நாய்களுக்கு, தங்கள் பராமரிப்பாளர்களிடம் இருந்தும், வழக்கமான பழக்கவழக்கங்களில் இருந்தும் திடீரென பிரிவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது.</p><p>இதன் விளைவாக, பல நாய்கள் மன அதிர்ச்சிக்கு உள்ளாகி, தங்களின் புதிய சூழல்களில் உணவை உண்பதற்கு மறுத்து வந்தன.</p><p>இந்த நிலையில், பணி ஓய்வு பெற்ற காவல் நாய்களின் நலன் குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய அறிவிப்பை பிறப்பித்துள்ளார்.</p><h3><strong>மகாராஷ்டிர முதலமைச்சர்</strong></h3><p>அவர் அந்த அறிவிப்பில், மகாராஷ்டிர காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு நாய், தனது பணி ஓய்வுக்கு பிறகு துன்பப்படக்கூடாது. அத்தகைய விலங்குகள் நன்கு பராமரிக்கப்பட்டு, தங்கள் வாழ்நாளின் எஞ்சிய காலத்தை வசதியாக வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.</p><p>பணி ஓய்வு பெற்ற நாய்கள், தங்களின் நீண்டகால பொறுப்பாளர்களுடன் காவல் துறையிலேயே தொடர்ந்து பணியாற்றும், அவர்களது வாழ்க்கை மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தும் உள்துறை அமைச்சகத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் என்றார்.</p><h3><strong>ஓய்வுபெற்ற காவல் நாய்கள்</strong></h3><p>இதன்படி காவல் நாய்கள் 10 வருட சேவைக்கு பிறகு, செயல்பாட்டு பணிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறும், ஆனால் அவற்றின் எஞ்சிய ஆண்டுகளை கழிப்பதற்காக படையில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.</p><p>பத்தாண்டு கால சேவையின் போது காவல் நாய்களுக்கும் அதன் பயிற்றுவிப்பாளருக்கும் இடையில் உருவான வலுவான பிணைப்பு தடையின்றி நீடிப்பதை இந்த கொள்கை உறுதி செய்கிறது.</p><p>ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை தேவைகள் உள்ளிட்ட ஓய்வுக்கு பிந்தைய அனைத்து செலவுகளுக்கும் மகாராஷ்டிர உள்துறை நேரடியாக நிதியளிக்க உள்ளது.</p><p>பணி ஓய்வு பெற்ற நாய்கள் முழுமையான அரசு ஆதரவுடனான வாழ்நாள் பராமரிப்புக்கு மாறுவதன் மூலம், அந்த நாய்கள் தங்கள் சேவையை நிறைவு செய்தபிறகு, அவற்றுக்கு தேவையான ஆறுதலும் பழக்கமான சூழலும் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஈக்கள், கரப்பான்பூச்சிகள்: மகாராஷ்டிராவில் மெக்டொனால்டு உள்பட 12 முக்கிய உணவகங்களின் லைசென்ஸ் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-fda-suspends-licences-of-mcdonalds-12-others-after-flies-cockroaches-found</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-fda-suspends-licences-of-mcdonalds-12-others-after-flies-cockroaches-found#comments</comments><guid isPermaLink="false">f6d782c5-2eb9-4969-9acd-055e31f3fb2b</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:20:15 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:20:15.085Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>McDonald,மெக்டொனால்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/l8k4ikjz/FDA0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுகாதாரமற்ற உணவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/l8k4ikjz/FDA0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) பல்வேறு இடங்களில் உள்ள முக்கியமான உணவகங்கள், பேக்கரிகள், கிளப்கள் போன்றவற்றில் உணவு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு உணவகங்களில் தூய்மை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>இதனால் தூய்மை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்துமாறு 71 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், 13 கடைகளின் உணவகங்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மறு உத்தரவு வரும் வரை உணவுகள் விநியோகம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>கடந்த 19-ந்தேதி பாம்பே பிரசிடென்சி ரேடியோ கிளப்பில் சோதனை நடத்தப்பட்டது. இதில் விதிமுறையை 47 சதவீதம் வரை கூட கடைபிடிக்கவில்லை என தெரியவந்தது. இதனால் இந்த கிளப் உணவு விநியோகம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ரேடியோ கிளப்</h2><p>சமையலறையில் ஏராளமான ஈக்கள் பறந்து கொண்டிருந்ததாகவும், செத்துப்போன கரப்பான்பூச்சிகள் ஆங்காங்கே காணப்பட்டதாகவும் FDA இன்ஸ்பெக்டர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் உணவு தயாரிக்கும் இடங்களுக்கு மேலே உள்ள கூரையில் வண்ணப்பூச்சு மற்றும் சாந்து உதிர்ந்து இருப்பதையும், உணவுக்கு அருகில் சலவைத்தூள் மற்றும் பிற ரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதையும், உணவுப் பொருட்கள் நேரடியாகத் தரையில் வைக்கப்பட்டிருப்பதையும், அசைவ உணவுகளுக்காக பயன்படுத்தப்பட்ட தூய்மையற்ற குளிர்சாதன பெட்டிகள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>மேலும் பூச்சிகளும் அசுத்தங்களும் உள்ளே நுழையக்கூடிய வகையில் சமையலறைக் கதவு சரியாக மூடப்படாமல் இருந்ததையும், சமையல் அடுப்புகளுக்கு அருகில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்ததையும், வளாகத்தில் எச்சில் துப்பியதற்கான தடயங்களையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><h2>மெக்டொனால்டு கிளை</h2><p>ஹார்ட்கஸில் ரெஸ்டாரண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Hardcastle Restaurants Pvt Ltd) நிறுவனத்தால் இயக்கப்படும் கொலாபாவில் உள்ள மெட்ரோ ஹவுஸ் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் FSSAI உரிமம் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.</p><p>ஆகஸ்ட் 19-ந்தேதி நடத்தப்பட்ட மறுஆய்வின் போது, ​​முன்னதாக வழங்கப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த 20 குறைபாடுகளில் 18 குறைபாடுகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்று FDA தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஆய்வின்போது, ​​சரியாக அளவீடு செய்யப்படாத குளிரூட்டும் சாதனங்கள், உயிருள்ள கரப்பான் பூச்சிகள், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பொறிகள் இல்லாமை, சமையலறைத் தரையில் அழுகிய உணவுக்கழிவுகள், அழுக்கான துப்புரவுத் துணிகள் மற்றும் பாதுகாப்பு உறைகள் இல்லாத தூசி படிந்த விளக்குகள் ஆகியவை கண்டறியப்பட்டன. மேலும், அழுக்கான காலணிகள் மற்றும் துப்புரவுத் துணிகளைத் தொட்ட பிறகு கைகளைக் கழுவாமல், உடனடியாக உண்ணக்கூடிய உணவை ஊழியர்கள் கையாண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இந்த உணவகம் ஆகஸ்ட் 12 அன்று 148 பக்கங்கள் கொண்ட விதிமுறை இணக்க அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.  இருப்பினும், மறுஆய்வின் போது பெரும்பாலான தீவிரமான குறைபாடுகள் இன்னும் சரிசெய்யப்படாமல் இருந்ததாக FDA கூறியது.</p><p>உண்மையான சீஸ் மற்றும் பனீர் (paneer) பயன்படுத்தப்படுவதாக வாடிக்கையாளர்களிடம் கூறப்பட்டிருந்தாலும், "GO Cheese SAUCE" எனப்படும் பதப்படுத்தப்பட்ட பால் அல்லாத அல்லது அனலாக் (மாற்று) தயாரிப்பு பயன்படுத்தப்பட்டதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p>மெக்டொனால்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், உணவுப் பாதுகாப்பு விவகாரங்களில் நிறுவனம் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' (zero-tolerance) கொள்கையைக் கொண்டிருப்பதாகவும், ஒழுங்குமுறை நடைமுறைகளை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும், உண்மையான சீஸ் மற்றும் பனீர் பயன்பாடு உட்பட உணவுத் தரம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான கடுமையான தரநிலைகளைத் தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>7 வயது மகன் ஃபூஜி மலை ஏறும்போது சோர்வடைந்ததால் தனியாகத்தவிக்கவிட்டுச் சென்ற ஜப்பானியத் தந்தை!</title><link>https://www.maalaimalar.com/news/world/japanese-father-leaves-7-year-old-alone-on-mount-fuji</link><comments>https://www.maalaimalar.com/news/world/japanese-father-leaves-7-year-old-alone-on-mount-fuji#comments</comments><guid isPermaLink="false">3600044a-4a68-4c19-ba76-5673beec87f8</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:38:24 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:38:24.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Japan,ஜப்பான்,குழந்தை பாதுகாப்பு,Mount Fuji,மவுண்ட் புஜி,Child Abandonment,Mount Fuji Climb,Hiking Safety,Mountain Rescue</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/llqhbgdy/Japan-Mount-Fuji" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Japan - Mount Fuji  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/llqhbgdy/Japan-Mount-Fuji?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'நீ இங்கேயே உட்கார்ந்து காத்திரு' என்று கூறிவிட்டு, தனது மூத்த மகன் மற்றும் நண்பருடன் மலையின் உச்சியை நோக்கித் தொடர்ந்து பயணித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஜப்பானின்</a> புகழ்பெற்ற 'மவுண்ட் புஜி' மலையில் ஏறியபோது சோர்வடைந்த தனது 7 வயது மகனைப் பாதி வழியிலேயே தனியாகத் தவிக்கவிட்டு, மூத்த மகனுடன் தந்தை மலை உச்சிக்குச் சென்ற அதிர்ச்சி சம்பவம் ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட தந்தைக்கு எதிராக உலகளவில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.</p><h2>பாதியில் நிறுத்தப்பட்ட சிறுவன்</h2><p>நகாயா பகுதியைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது இரு மகன்கள் மற்றும் அவரது நண்பர் ஒருவருடன் மவுண்ட் புஜி மலையில் ஏறியுள்ளார். அவர்கள் 'புஜினோமியா' மலைப்பாதை வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, அவரது 7 வயது இளைய மகனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது.</p><p>மலையின் 6-வது முகாம் பகுதியில், சுமார் 2,490 மீட்டர் (8,169 அடி) உயரத்தில் காலை 7:30 மணியளவில் அந்த சிறுவன் தனக்குக் களைப்பாக இருப்பதாகக் கூறியுள்ளான். </p><p>இதைக் கேட்டுப் பயணத்தைப் பாதியில் நிறுத்த விரும்பாத தந்தை, "நீ இங்கேயே உட்கார்ந்து காத்திரு" என்று கூறிவிட்டு, தனது மூத்த மகன் மற்றும் நண்பருடன் மலையின் உச்சியை நோக்கித் தொடர்ந்து பயணித்துள்ளார்.</p><h2>காப்பாற்றிய ஊழியர்</h2><p>அவர்கள் சென்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பலத்த மழையுடன் கூடிய மோசமான வானிலை நிலவியுள்ளது. காலை 7:40 மணியளவில், அங்குள்ள ஒரு மலைக்குடிலின் ஊழியர், பனிப்பொழிவிலும் மழையிலும் அந்த சிறுவன் தனியாக ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.</p><p>உடனடியாகச் சிறுவனை மீட்டு, குடிலுக்குள் அழைத்துச் சென்று தங்குமிடம் கொடுத்த அவர், உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.</p><h2>காவல்துறை எச்சரிக்கையும் தந்தையின் வருத்தமும்</h2><p>தகவலறிந்து வந்த காவல்துறையினர், மலையேற்றத்தில் இருந்த தந்தையைத் தொடர்பு கொண்டு எச்சரித்தனர். </p><p>பனிமலையில் குழந்தைகளைத் தனியாக விடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை எடுத்துரைத்து, அவரைத் திரும்ப வரவழைத்துக் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர்.</p><p>தகாத முடிவை எடுத்ததை ஒப்புக்கொண்ட தந்தை, "நான் மிகவும் அவசரப்பட்டு, தவறான முடிவை எடுத்துவிட்டேன். இதற்காக ஆழமாக வருந்துகிறேன்" என்று அதிகாரிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.</p><h2>முறையான மலையேற்ற விதியைக் கூறல்</h2><p>இச்சம்பவம் குறித்து ஜப்பானியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கையில், "மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது குழுவில் இருக்கும் நபரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே பயணிக்க வேண்டும். </p><p>ஒருவருக்குச் சோர்வு ஏற்பட்டால் ஒட்டுமொத்த குழுவும் பயண வேகத்தைக் குறைக்க வேண்டும் அல்லது பயணத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தானில் 611 அரசுப் பள்ளிகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் இல்லை: பேரவையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/611-government-schools-in-rajasthan-lack-own-buildings-shocking-revelation-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/national/611-government-schools-in-rajasthan-lack-own-buildings-shocking-revelation-in-assembly#comments</comments><guid isPermaLink="false">a6e99a06-bb80-4c3c-8e45-40d93b5c3591</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:36:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:36:03.088Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெய்ப்பூர்,jaipur,Rajasthan schools,Rajasthan BJP,ராஜஸ்தான்,CJP,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jgxqae5x/raja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajasthan schools ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jgxqae5x/raja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 611 அரசுப் பள்ளிகள் சொந்தக் கட்டடங்கள் இன்றி இயங்கி வருவதாக அம்மாநில அரசு சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் டீகா ராம் ஜூலி எழுப்பிய கேள்விக்கு, 2025-26ஆம் ஆண்டிற்கான UDISE தரவுகளின் அடிப்படையில் கல்வித் துறை இந்த அதிர்ச்சிப் பதிலளித்துள்ளது.</p><h2>CJ<strong>P ஆய்வு</strong></h2><p>இளைஞர் மற்றும் குடிமக்கள் அமைப்பான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP), "ஸ்கூல் தீக் கரோ" (பள்ளிகளைச் சீரமைப்போம்) என்ற பிரசாரத்தின் கீழ் மாநிலம் தழுவிய கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஜெய்ப்பூர் அருகே பகரூ பகுதியில், பழுதடைந்த பள்ளி கட்டடத்திற்குப் பதிலாக மாணவர்கள் மாட்டுக்கொட்டகையில் அமரவைக்கப்பட்டுப் பாடம் நடத்தப்படுவதாக எழுந்த புகாரை ஆய்வு செய்யச் சென்ற CJP குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>அடிப்படை வச<strong>திகளற்ற பள்ளி</strong>கள்</h2><p> மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் 38 பள்ளிகளும், ஜாலாவார் மாவட்டத்தின் அக்லேரா பகுதியில் அதிகபட்சமாக 23 பள்ளிகளும் கட்டடமின்றி இயங்குகின்றன. சொந்தக் கட்டடம் கொண்ட 64,484 பள்ளிகளில், 2,047 பள்ளிகளில் கழிப்பறைகளும் 1,049 பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும் இல்லை. பான்ஸ்வாரா மாவட்டத்தில் அதிகபட்சமாக 188 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை.</p><h2>எதிர்க்கட்சி <strong>குற்றச்சாட்டு</strong></h2><p>மாநிலத்தில் 3,768 அரசுப் பள்ளிக் கட்டடங்களும் 83,000-க்கும் மேற்பட்ட வகுப்பறைகளும் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதாகக் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அரசிடம் முறையான திட்டமிடல் இல்லை எனக் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்த அரசு, பள்ளிகளைப் பராமரிக்க ரூ.550 கோடியும், புதிய கட்டடங்கள் கட்ட ரூ.450 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு நிதிகள் மூலம் ஆண்டுதோறும் ரூ.2,500 கோடி கல்வி உள்கட்டமைப்பிற்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கு: TDB முன்னாள் தலைவருக்கு ஜாமின் மறுப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/sabarimala-gold-loss-case-prasanth-denied-bail-former-tdb-member-ajikumar-gets-relief</link><comments>https://www.maalaimalar.com/news/national/sabarimala-gold-loss-case-prasanth-denied-bail-former-tdb-member-ajikumar-gets-relief#comments</comments><guid isPermaLink="false">c7c93e55-a1f6-43cb-85e6-249b09fcbe89</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:22:52 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:22:52.791Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TDB,திருவாங்கூர் தேவசம்போர்டு,ayyappan gold theft,ஐயப்பன் கோவில் நகை திருடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5suzx1o0/Sabarimala.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சபரிமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5suzx1o0/Sabarimala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சபரிமலை கோவில் துவார பாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டதில் தங்கம் மாயமான வழக்கில் கடந்த ஜூலை மாதம் இருவர் கைது செய்யப்பட்டனர்.</p><p>கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது. அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.</p><p>இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சபரிமலை அய்யப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு-வும் கைது செய்யப்பட்டார்.</p><p>TDB முன்னாள் தலைவர்</p><p>இவ்வழக்கு விசாரணை கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 17-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் திருவாங்கூர் தேவஸ்தம் போர்டு முன்னாள் தலைவர் பி.எஸ். பிரசாந்த் ஆவார். 18-வது குற்றவாளியாக அஜித் குமார் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>இருவரும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது TDB-யின் முன்னாள் உறுப்பினர் அஜித்குமாருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால் TDB முன்னாள் தலைவர் வி.பிஎஸ். பிரசாந்திற்கு நீதுிபதி மோகித் ஜாமின் வழங்க மறுத்துவிட்டார். அஜித்குமாருக்க உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கப்படடுள்ளது.</p><p>பிரசாந்த் 2023ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவராக இருந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (மார்க்சிஸ்ட்) இணைவதற்கு முன்பு அவர் ஒரு காங்கிரஸ் தலைவராக இருந்தார்.</p><p>ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைக்கு தகடு பதிக்க கடந்த 2024-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கும் முடிவை எடுத்த குழுவில் பிரசாந்த், அஜித்குமார் மற்றும் ஜி. சுந்தரேசன் ஆகியோர் இருந்தனர். இருவரும் கடந்த மாதம் 23-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>8 ஆண்டுகால காதல் : கோவாவில் ரகசியப் பதிவுத் திருமணம் செய்த அர்ஜுன் ராம்பால் &amp; கேப்ரியெல்லா ஜோடி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/8-years-of-love-arjun-rampal-gabriella-secret-registered-marriage-in-goa</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/8-years-of-love-arjun-rampal-gabriella-secret-registered-marriage-in-goa#comments</comments><guid isPermaLink="false">34c20331-bbf1-470a-871b-c2b17ca7da3a</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:22:27 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:22:27.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arjun Rampal,அர்ஜுன் ராம்பால்,Gabriella Demetriades,கேப்ரியெல்லா,Arjun Gabriella Wedding,8YearsOf Togethernes,MapusaSubRegistrar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/tut09pii/Arjun-Gabriella-Wedding" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arjun Gabriella Wedding ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/tut09pii/Arjun-Gabriella-Wedding?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் அவரது நீண்ட நாள் காதலியும் பிரபல மாடலுமான கேப்ரியெல்லா டெமெட்ரியாடஸ் தங்களது 8 ஆண்டுகால காதல் வாழ்க்கையைத் திருமண பந்தமாக மாற்றியுள்ளனர். நேற்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE">கோவா</a>வில் உள்ள மாபுசா துணைப் பதிவாளர் அலுவலகத்தில் இவர்கள் தங்களது திருமணத்தைப் பதிவு செய்துள்ளனர்.</p> <h2>அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த பதிவாளர்</h2><p>திருமணம் குறித்து இந்த ஜோடி தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவொரு புகைப்படத்தையோ அல்லது அறிவிப்பையோ வெளியிடாத நிலையில், வடகோவா பார்தேஸ் துணைப் பதிவாளர் சூரஜ் வெர்னேகர் இவர்களது திருமணச் செய்தியை செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். </p><p>மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த எளிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">பதிவுத் திருமணம்</a> நடைபெற்று முடிந்துள்ளது.</p> <h2>2018 முதல் தொடங்கும் காதல் பயணம்</h2><p>அர்ஜுன் ராம்பால் மற்றும் கேப்ரியெல்லா இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு பொதுவான நண்பர்கள் மூலமாகச் சந்தித்துக் கொண்டனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. </p><p>இதனைத் தொடர்ந்து, அர்ஜுன் ராம்பால் தனது முதல் மனைவி மெஹ்ர் ஜெசியாவிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தார். இவர்களது விவாகரத்து 2019-ல் முறைப்படி முடிவுக்கு வந்தது.</p><h2>நிறைவடைந்த 4 பேர் கொண்ட குடும்பம்</h2><p>திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த இந்த தம்பதியினருக்கு, ஜூலை 2019-ல் அரிக் என்ற முதல் ஆண் குழந்தையும், ஜூலை 2023-ல் அரிவ் என்ற இரண்டாவது ஆண் குழந்தையும் பிறந்தனர். </p><p>அர்ஜுன் ராம்பாலுக்கு அவரது முதல் திருமணம் மூலம் மஹிகா, மைரா என்ற இரு மகள்கள் ஏற்கனவே உள்ளனர். </p><p>அவர்கள் இருவரும் கேப்ரியெல்லாவுடன் மிகவும் இணக்கமான நட்புறவைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/S4N9vcZcJ6U"></iframe></figure><h2>சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிச்சயதார்த்தம்</h2><p>கடந்த டிசம்பர் 2025-ல், பிரபல நடிகை ரியா சக்ரவர்த்தியின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்த ஜோடி கலந்து கொண்டது. அப்போது கேப்ரியெல்லா, "நாங்கள் இப்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?" எனப் பேசினார்.</p><p>உடனே குறுக்கிட்ட அர்ஜுன் ராம்பால், "நாங்கள் ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம்" என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் ஆச்சரியத்தை அளித்தார்.</p><p>நிச்சயதார்த்தம் முடிந்து சில மாதங்களிலேயே, தற்போது ஆகஸ்டில் தங்களது 8 ஆண்டுகால காதலைத் திருமணத்தின் மூலம் இந்த ஜோடி முறைப்படுத்தியுள்ளது. இது பாலிவுட் வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night-2#comments</comments><guid isPermaLink="false">eb10ac32-134d-467c-9630-d5d81c428fa8</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:06:34 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:06:34.760Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3cjq1x0p/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3cjq1x0p/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>27 மற்றும் 28-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>24-ந்தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>25-ந்தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>27 மற்றும் 28-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைனின் வணிக வளாகம் மீது தாக்குதல்: ரஷியாவிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/russia-double-drone-attack-on-ukraine-mall-kills-16</link><comments>https://www.maalaimalar.com/news/world/russia-double-drone-attack-on-ukraine-mall-kills-16#comments</comments><guid isPermaLink="false">3b43318c-70b2-4b9e-af3a-13452b9e2c4f</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:04:54 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:04:54.146Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Zelenskyy,Russia Ukraine war,drone strike,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,ரஷ்யா உக்ரைன் போர்,DoubleTap Strike,Ukraine Under Attack</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/vlhgyx96/President-of-Ukraine-Volodymyr-Zelenskyy" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ President of Ukraine Volodymyr Zelenskyy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/vlhgyx96/President-of-Ukraine-Volodymyr-Zelenskyy?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">ரஷியா மற்றும் உக்ரைன் </a>இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷியப் படைகள் உக்ரைனின் பொதுமக்களைக் குறிவைத்து மீண்டும் ஒரு கோரத் தாக்குதலை நடத்தியுள்ளன. </p><p>உக்ரைன் அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">வொலோடிமிர் ஜெலன்ஸ்கி</a>யின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ் நகரில் உள்ள மிகப் பெரிய வணிக வளாகத்தின் மீது நேற்று ரஷியா ட்ரோன் தாக்குதலை நடத்தியது.</p><h2><strong>மீட்புக்குழுவை குறிவைத்த ‘டபுள்-டேப்’ உத்தி</strong></h2><p>மாலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வணிக வளாகத்தின் மீது முதல் ட்ரோன் விழுந்து வெடித்தது. </p><p>இதில் கட்டிடம் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களும், அவசர கால மீட்புக்குழுவினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.</p><p>முதல் தாக்குதல் நடந்து சரியாக அரை மணி நேரம் கழித்து, மீட்புப் பணியில் இருந்தவர்களைக் குறிவைத்து ரஷ்யா இரண்டாவது <a href="https://www.maalaimalar.com/topic/drone">ட்ரோன்</a> தாக்குதலை நடத்தியது. </p><p>இந்த அடுத்தடுத்த தாக்குதல்களால் அப்பகுதியே பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது.</p><h2><strong>பாதிப்பு விவரங்கள்</strong></h2><p>இந்த இரட்டைத்தாக்குதலில் இதுவரை 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 22 குழந்தைகள் உட்பட 130-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 குழந்தைகள் உட்பட 29 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக பிராந்திய ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2><strong>அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம்</strong></h2><p>இந்த கொடூரத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">ஜெலன்ஸ்கி </a>தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,</p><p>"இது முற்றிலும் மனிதாபிமானமற்ற, இழிவான செயல். அவசரக்கால மீட்புப் பணியாளர்களைக் குறிவைத்தே இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த கொடூரம் பயங்கரவாதச் செயலுக்குச் சற்றும் குறைந்ததல்ல. ரஷியாவின் இந்த சர்வதேசப் பயங்கரவாதத்திற்கு உலக நாடுகள் அவற்றுக்குப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். இதற்கு உக்ரைன் படைகள் நிச்சயம் தகுந்த பதிலடி கொடுக்கும்" என்று கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A rescue operation is currently underway in Kryvyi Rih following a strike on a shopping mall. There are many casualties. As of now, 14 people have been reported killed. My condolences to their families and loved ones. More than 100 people have been injured, among them 11… <a href="https://t.co/gX2kL1LZnd">pic.twitter.com/gX2kL1LZnd</a></p>&mdash; Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) <a href="https://x.com/ZelenskyyUa/status/2090869227523838000?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>மைக்கோலைவ் நகரிலும் தாக்குதல்</strong></h2><p>இதற்கிடையே, தெற்கு உக்ரைனின் மைக்கோலைவ் நகரிலும் ரஷியா நடத்திய மற்றொரு ட்ரோன் தாக்குதலில், 3 சிறுவர்கள் உட்பட 4 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஜெயிலர் 2-ன் &apos;அலா பொலேலோ&apos;: &apos;காவாலா&apos; சாதனையை முறியடிக்குமா?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/will-ala-polelo-from-jailer-2-break-kavala-records</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/will-ala-polelo-from-jailer-2-break-kavala-records#comments</comments><guid isPermaLink="false">5141e58b-4425-4b9b-a745-98ea73c3e976</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:46:50 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:46:50.206Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,ரஜினிகாந்த்,Jailer 2,ஜெயிலர் 2,Kaavaalaa,Ala Bolelo,அலா பொலேலோ,காவாலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/vyoi5zo9/jailer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Jailer 2 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/vyoi5zo9/jailer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் முதல் பாடலான '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-jailer-2-has-been-released">அலா பொலேலோ</a>' இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><p>சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜ் வரிகளில் உருவான இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். நிரஞ்சனா ராமன், அபர்ணா ஹரிகுமார் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் கூடுதல் குரல் கொடுத்துள்ளனர்.</p><p>முந்தைய பாகத்தில் தமன்னா ஆடிய 'காவாலா' பாடல் இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல் பரவி டிரெண்டானது. அதேபோல, தற்போது வெளியாகியுள்ள 'அலா பொலேலோ' பாடல் ஓணம் பண்டிகையை முன்னிலைப்படுத்தி, பாரம்பரிய கேரள பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை ஷம்னா காசிம் (பூர்ணா) தனது அதிரடியான நடனத்தால் பாடலைத் தாங்கிப் பிடித்துள்ளார். பாடலின் இறுதியில் ரஜினிகாந்த் மாஸாகத் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.</p><p>'காவாலா' அளவுக்கு இந்த பாடல் டிரெண்ட் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும், ஷம்னா காசிமின் நடனமும் அனிருத்தின் துள்ளலான இசையும் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>என் கைகள் சுத்தமானவை..! ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டை மறுத்த பினராயி விஜயன்</title><link>https://www.maalaimalar.com/news/national/former-cm-pinarayi-vijayan-says-his-hands-clean-denies-hawala-dealings</link><comments>https://www.maalaimalar.com/news/national/former-cm-pinarayi-vijayan-says-his-hands-clean-denies-hawala-dealings#comments</comments><guid isPermaLink="false">76a2ca83-72a4-46fe-b890-76346628c1d4</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:45:37 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:45:37.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வீணா,பினராயி விஜயன்,Pinarayi Vijayan,Enforcement Directorate,Veena,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ulw814xj/PinarayiVijayan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pinarayi Vijayan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ulw814xj/PinarayiVijayan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நான், என்னுடைய மகள் (வீணா) மற்றும் குடும்பத்தினர் எந்தவொரு ஹவாலா டீலிங்கில் (பண பரிவர்த்தனை) ஈடுபடவில்லை என்று கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.</p><h2>எங்கள் கைது தூய்மையானது</h2><p>இதுகுறித்து கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது:-</p><p>நானோ, எனது மகளோ, என்னுடைய குடும்பத்தினரோ எந்தவொரு ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபடவில்லை. இதில் நான் முழுமையாக உறுதியாக இருக்கிறேன். இந்த கைகள் தூய்மையானவை. எப்போதும் தூய்மையாக இருக்கும். </p><p>வீணா என்னுடைய மகள் என்பதனால் ஏராளமான விசயங்கள் எழுப்பப்பட்டன. ஏராளமான சொத்துகளுக்கு வீணா உரிமையாளர் கிடையாது. பேசப்படும் பணத்தின் அளவும் பெரியதல்ல.</p><p>இந்த விவகாரத்தில் ஒரு செய்தி குறிப்பு (press release) வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் எனது பெயர் பி. விஜயன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் முன்னாள் முதலமைச்சர் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அவ்வாறு குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?.</p><p>வீணா பணத்தை முகமது ரியாஸின் கணக்கிற்கு மாற்றினார் என்ற செய்தி எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது? பினராயி விஜயனுக்கு எதிராக இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர்கள் நினைக்கிறார்களா?</p><p>வீணா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார். எதிர்காலத்திலும் அந்த அமைப்பிற்கு தகவல்களை வழங்குவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருக்காது.</p><p>இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.</p><h2>அமலாக்காத்துறை வழக்கு விவரம்</h2><p>அமலாக்கத் துறையின் (ED) இந்த பணமோசடி வழக்கு, கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL) மற்றும் வீணா என்பவரால் தொடங்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் இல்லாத எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தொடர்பானது. எந்தவொரு சேவையையும் பெறாமலேயே, எக்ஸாலஜிக்' நிறுவனத்திற்கு CMRL நிறுவனம் ரூ. 2.78 கோடியை வழங்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.</p><p>துபாய்க்கு மேற்கொள்ளப்பட்ட சில நிதிப் பரிமாற்றங்கள் குறித்த விவரங்கள் அடங்கியதாகக் கூறப்படும் கையெழுத்துப் பிரதிகள், கடந்த மே மாதம் வீணாவின் (Veena) வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை (ED) ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு பனராயி விஜயன் இவ்வாறு தெரிவித்துள்ளார். </p><p>விசாரணையின் ஒரு பகுதியாக, வீணா மற்றும் CMRL வாரிய உறுப்பினர்களிடம் அந்த அமைப்பு அண்மையில் பலமுறை விசாரணை நடத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்: காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/sikhs-protest-outside-rahul-gandhis-residence-against-cong-leaders-calling-sajjan-kumar-hero</link><comments>https://www.maalaimalar.com/news/national/sikhs-protest-outside-rahul-gandhis-residence-against-cong-leaders-calling-sajjan-kumar-hero#comments</comments><guid isPermaLink="false">0a38b1b0-9ff1-4e8d-be56-af6ab3bca17d</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:21:00 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:21:00.047Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,Anti Sikh Riots</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uefuzw2q/SikhProtest001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீக்கியர்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uefuzw2q/SikhProtest001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியின் வீட்டு முன் (வெளியே) இன்று ஏராளமான சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதில் பல சீக்கிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சி தலைவர் சஜ்ஜன் குமார் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். இவர் கடந்த வியாழக்கிழமை காலமானார். இவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஹீரோ மற்றும் ரோல் மாடல் எனக் கூறியுள்ளனர்.</p><p>இது சீக்கியரகளுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சஜ்ஜன் குமாரை ஹீரோ மற்றும் ரோல் மாடல் என அழைத்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுத்தினர்.</p><h2>ராகுல் காந்தி வீட்டுக்கு வெளியே போராட்டம்</h2><p>இது தொடர்பாக இன்று டெல்லியில் உள்ள சீக்கிய குர்த்வாரா நிர்வாக கமிட்டி (DSGMC) தலைவர் ஹர்மீத சிங் கல்கா, பொதுச் செயலாளர் ஜெகதீப் சிங் கலோன் ஆகியோர் தலைமையில் ஏராளமானவர்கள் ராகுல் காந்தி வீட்டை நோக்கி சென்றனர். இதனால் சுனேரி பாக் சாலையில் உள்ள ராகுல் காந்தி வீட்டின் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.</p><p>அவர்கள் தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்கள் முன்னோக்கி செல்லாதவாறு தடுத்து நிறுத்த தயார் நிலையில் இருந்தனர்.</p><p>1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்குகளில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட குமாரை, காங்கிரஸ் கட்சி ஒரு நாயகனாக கருதுகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று DSGMC-யின் தலைவர் தெரிவித்தார்.</p><h2>ராகுல் காந்தி, காங்கிரஸ்காரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்</h2><p>மேலும், சஜ்ஜன் குமாரின் மறைவுக்குப் பிறகு, அவர் தங்கள் நாயகன் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் ஆட்சேபனைக்குரியவை. சஜ்ஜன் குமார் தங்கள் நாயகனா என்பது குறித்து ராகுல் காந்தி இன்று தெளிவுபடுத்த வேண்டும் எனறார்.</p><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ்காரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.</p><p>இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் : எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-iron-and-steel-plant-horror-fire-3-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-iron-and-steel-plant-horror-fire-3-killed#comments</comments><guid isPermaLink="false">2c510564-eac6-45f6-9772-4a57816d7cc3</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:12:46 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:12:46.343Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,ஜார்கண்ட்,Jharkhand,தீ விபத்து,steel industry,எஃகு தொழிற்சாலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5u90tlr1/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜார்கண்ட் எஃகு தொழிற்சாலை தீ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Steel Plant Fire]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5u90tlr1/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">ஜார்க்கண்ட்</a> மாநிலத்தில் உள்ள எஃகு தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று ஊழியர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h3><strong>எஃகு தொழிற்சாலையில் தீ விபத்து</strong></h3><p>ஜார்க்கண்ட்டின் ராம்கர் மாவட்டத்தில் உள்ள ஹெலால் பகுதியில் மா சின்னமஸ்திகா இஸ்பாட் எஃகு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இயங்கி வந்த மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவில் தீ விபத்து ஏற்பட்டது.</p><p>இதையடுத்து தொழிற்சாலை ஊழியர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு விரைந்த வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.</p><p>இந்த தீ விபத்தில் இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பல ஊழியர்கள் தொழிற்சாலையின் உள்ளே சிக்கி கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>இந்த விபத்து குறித்து ராம்கர் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார் லுனாயத் கூறுகையில், “இந்த தீ விபத்தில் நான்கு ஊழியர்கள் உடல் முழுவதும் ஏற்பட்ட பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><p>தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்” என்று கூறினார்.</p><h3><strong>மூன்று ஊழியர்கள்</strong></h3><p>எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பர்கானா காவல் நிலைய பொறுப்பாளர் உமா சங்கர் வர்மா கூறுகையில், இறந்தவர்கள் சஞ்சீவ், வினீத் மற்றும் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>ஜார்க்கண்ட் மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலையின் தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் மனிஷ் சின்ஹா கூறும்போது, தொழிற்சாலை ஆய்வாளர் மற்றும் சோட்டாநாக்பூர் துணைத் தலைமை ஆய்வாளர் அடங்கிய இரண்டு பேர் கொண்ட குழு, விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வீ த லீடர்ஸ் அமைப்பின் இணைய தளம் மாற்றி அமைப்பு - அண்ணாமலை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped#comments</comments><guid isPermaLink="false">fc9f570f-93da-4cfa-ac56-5fc6b3571c1c</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:01:57 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:01:57.044Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3yi03or2/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3yi03or2/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">வீ த லீடர்ஸ்</a> அமைப்புக்கு தனி இணைய தள பக்கத்தை அண்ணாமலை உருவாக்கி வெளியிட்டு இருந்தார். இதன் வழியே உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள். இதுவரை 20 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.</p> <p>இதுவரை உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்களுடன் இருந்த இந்த பக்கத்தை இப்போது மாற்றி அமைத்துள்ளார். இப்போது கட்சியின் இந்த மாத பணிகள், ஏற்கனவே நடத்தி முடித்து இருக்கும் பணிகள், அடுத்து திட்டமிட்டுள்ள பணிகள் ஆகியவை முகப்பு பக்கத்திலேயே இடம் பெற்றுள்ளது.</p> <p>பொதுமக்கள் அவற்றை பார்த்து பணிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>எங்கள் இணைய தளம் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.</p><p>புதிய அம்சங்களை அலசி, ஆராய்ந்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்?- அரசுக்கு அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-why-the-reluctance-to-release-the-thirupugazh-committee-report</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-why-the-reluctance-to-release-the-thirupugazh-committee-report#comments</comments><guid isPermaLink="false">ab828108-5118-4fbd-b06b-511225c77f9a</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:00:11 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:00:11.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,chennai flood,திருப்புகழ் குழு அறிக்கை,சென்னை வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/dchextp0/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/dchextp0/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்; மீண்டும் ஒருமுறை சென்னையை வெள்ளத்தில் மிதக்க விடக்கூடாது என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த  பரிந்துரைகள் அடங்கிய திருப்புகழ் குழு அறிக்கை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தவெக அரசு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பேரிடரிலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான மிகவும் முக்கியமான ஓர் ஆவணம் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அரசு பதிலளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக  அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 41 மாதங்களாகியும் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படாததை சுட்டிக்காட்டி, அதை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரினார்.</p><p>அதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்,  ‘‘திருப்புகழ் குழுவின் அறிக்கையை திமுக அரசு வெளியிட்டிருக்க வேண்டும்; ஆனால், ஏன் அவர்கள் வெளியிடவில்லை என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பத்திரிகை செய்திகள் வந்ததை மட்டும் தான் பார்த்தோம். இப்போது வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க வருவாய் நிர்வாக ஆணையர்  முருகானந்தம் தலைமையில் 7 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். மழை &amp;வெள்ளத்திலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான திருப்புகழ் குழு அறிக்கையை திமுக அரசு வெளியிடாதது தவறு; அதை நாங்கள் உடனடியாக வெளியிடுவோம் என்பதாகத் தான் அமைச்சரின்  பதில் இருந்திருக்க வேண்டும். அத்தகைய பதில் அரசிடமிருந்து வராதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.</p><p>2021-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழையும், அதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமும் மறக்க முடியாத கொடுமையான நிகழ்வுகள். அதைத் தொடர்ந்து சென்னையில் எத்தகைய வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழுவை திமுக அரசு அமைத்தது. அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை 2022-ம் ஆண்டு மே மாதத்திலும், இறுதி அறிக்கையை 2023- மார்ச் 14-ம் தேதியும் அரசிடம் தாக்கல் செய்தது.</p><p>நான் அறிந்தவரை திருப்புகழ் குழுவின் அறிக்கையில் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன; அவற்றை செயல்படுத்தியிருந்தாலே சென்னையில் எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும். இத்தகைய  அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போது, அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திருப்புகழ் குழுவை அமைத்த திமுக அரசே, ஏதோ காரணங்களுக்காக திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்தது. அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி பல தருணங்களில் வினா எழுப்பிய போது, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருப்புகழ் குழு அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன; மொத்தமுள்ள 161 பரிந்துரைகளில் 101 செயல்படுத்தப்பட்டு  வருவதாகத் தெரிவித்தார். ஆனால், செயல்படுத்தப்பட்ட 101 பரிந்துரைகளும் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.</p><p>என்னாலும், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்களாலும் புரிந்து கொள்ள முடியாத உண்மை என்னவென்றால், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு, விரிவான ஆய்வுகளின்  அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திருப்புகழ் குழுவை வெளியிட முடியாத அளவுக்கு அதில் என்ன இரகசியம் இருக்கிறது என்பது தான்? மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையை  யாருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு கிடப்பில் போட்டது என்பது தான்?</p> <p>திருப்புகழ் குழுவின் அறிக்கை என்பது கடையில் வாங்கப்பட்ட புத்தகம் அல்ல. 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு, 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 17 மாதங்களுக்கு  பல்வேறு கள ஆய்வுகளையும், அதில் கிடைத்த தரவுகளின் மீதான பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு தான் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதற்காக கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை எந்த வகையிலும் வீணடிக்கப்படக் கூடாது.</p><p>சென்னையில் இனி வரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு திருப்புகழ் குழுவின் அறிக்கையை செயல்படுத்துவது தான். அந்த அறிக்கையை திமுக வெளியிடாமல் இருந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், தவெக அரசுக்கு அத்தகைய காரணங்கள் எதுவும்  இல்லை. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு உரையாற்றிய முதலமைச்சர் விஜய் அவர்கள், எனது அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்று அறிவித்தார். அதை வெளிப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பு  திருப்புகழ் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவது தான்.</p><p>திருப்புகழ் குழு அறிக்கையை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நகராட்சி நிர்வாகத்துறையை  முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் நிர்வகித்து வருகிறார். அதனால், திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுவதற்கான முன்முயற்சிகளை முதலமைச்சர் அவர்களே மேற்கொள்ள வேண்டும். திமுக அரசின் தவறுகளை தமது அரசு  திருத்தி வருவதாகக் கூறி வரும் முதலமைச்சர் அவர்கள், திமுகவின் இந்தத் தவறையும் திருத்த வேண்டும்.</p> <p>தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 50 நாள்களே உள்ளன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்; மீண்டும் ஒருமுறை சென்னையை வெள்ளத்தில் மிதக்க விடக்கூடாது என வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் - செயற்குழுவில் தீர்மானம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk#comments</comments><guid isPermaLink="false">8149cdc4-21e7-4022-8da4-37002b75c1d1</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:49:14 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:49:14.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,திமுக செயற்குழு கூட்டம்,DMK Executive Meeting,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/2x1eupnb/mkstalin2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/2x1eupnb/mkstalin2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் என்று திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</strong></em></p><p>தமிழக சட்டமன்ற தேர்தலில்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95"> தி.மு.க. </a>தோல்வி அடைந்ததை தொடர்ந்து கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பாக அதிரடி முடிவுகள் தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p><p>குறிப்பாக இளைஞர்களுக்கும் கட்சியில் ஆர்வமுடன் பணியாற்றும் அனைவருக்கும் பொறுப்புகள் கிடைக்கும் வகையில் கட்சி பதவிகளுக்கு வயது நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளராக 3 முறை மட்டுமே பதவி வகிக்கும் வகையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p> <p>இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-executive-meeting-mk-stalin-says-we-are-specialists-at-making-a-comeback">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.</p><p>செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-</p><h2>புது ரத்தம்</h2><p>* கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <p>* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><h2>சென்னை</h2><p>* சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <p>* பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <h2>நகர செயலாளர்கள்</h2><p>* நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <h2>மாவட்ட செயலாளர்கள்</h2><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும்போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.</p> <p>* கழகத்தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்க ழகங்கள் பிரிக்கப்பட வேண்டும். </p><p>தலைமைக்கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.</p><p>மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.</p> <h2>திருத்தப்பட்டது</h2><p>தி.மு.க. மாவட்ட செயலாளராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. பின்னர் அது திருத்தம் செய்யப்பட்டு 3 முறை பதவி வகிக்கலாம் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆளை மாற்றுவதைவிட சுய பரிசோதனை முக்கியம்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/focus-on-self-review-not-personnel-change-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/focus-on-self-review-not-personnel-change-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">86b1fb65-8301-454a-a6f6-c67480b443f1</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:47:12 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:47:12.108Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,MKStalin,செயற்குழு கூட்டம்,DMK meeting,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ug1kxz44/mk-stalin.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ug1kxz44/mk-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>நாம் பார்க்காத வெற்றியும் இல்லை.. தோல்வியும் இல்லை. அமைப்பு முறையில் முக்கியமான பெரிய மாற்றங்களை செய்ய உள்ளோம்.</p><p>திமுக வலுமையாக இருக்க காரணம் அமைப்பு முறை தான். நமது தவறுகளை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.</p><p>ஆளை மாற்றுவதைவிட முழுமையான சுய பரிசோதனை முக்கியம்.</p><p>மாற்றம் சிலருக்கு கசப்பாக இருக்கலாம், கசப்பு தான் உடலுக்கு பலம் தரும்.</p><p>ஊருக்கே வெளிச்சம் விளக்கிற்கு அதன் கீழ் இருக்கும் இருட்டு தெரியாது. </p><p>புதுமுகங்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்படும். தனக்கு இணையாக யாரும் இருக்க கூடாது என எண்ணுகிறார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் தேடுவதில் 90ஸ் கிட்ஸ் சந்திக்கும் அவலங்கள்: விரைவில் திரைக்கு வரும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/middle-class-maappillai-explores-90s-kids-marriage-struggles</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/middle-class-maappillai-explores-90s-kids-marriage-struggles#comments</comments><guid isPermaLink="false">390971d0-9e7d-4870-bbc8-adc78276db33</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:45:39 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:45:39.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hari Priya,Middle Class Mappillai,மிடில் கிளாஸ் மாப்பிள்ளை,Prabhu Ekambaram,பிரபு ஏகாம்பரம்,90ஸ் கிட்ஸ் திருமணம்,90s Kids Marriage,Rashanth Arwin,ITProfessional To Director</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/6rd39c2r/Prabhu-Ekambaram-Hari-Priya" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Prabhu Ekambaram - Hari Priya  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/6rd39c2r/Prabhu-Ekambaram-Hari-Priya?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீதுள்ள தீராத காதல் காரணமாக, தற்போது ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ எனும் புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார்.</p><h2><strong>கதைக்களம் (90ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்)</strong></h2><p>இன்றைய காலகட்டத்தில் 90ஸ் கிட்ஸ் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று திருமணத்திற்குப் பெண் தேடுவது. </p><p>குறிப்பாக நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண் கிடைப்பதில் சந்திக்கும் சமூக மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை, நகைச்சுவை மற்றும் எதார்த்தமான சுவாரசியங்களுடன் இப்படம் பேசவுள்ளது.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம்</strong></h2><p>ஆன்ஷ்வா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தில், பிரபு ஏகாம்பரத்திற்கு ஜோடியாக ஹரிபிரியா கதாநாயகியாக நடிக்கிறார். </p><p>மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர். இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்திருக்கிறது.</p><h2><strong>இயக்குநர் பிரபு ஏகாம்பரம் பேட்டி</strong></h2><p>படம் குறித்துப் பேசிய இயக்குநர் மற்றும் கதாநாயகன் பிரபு ஏகாம்பரம் கூறியதாவது:</p><p>"இந்த படம் முழுக்க முழுக்க 90ஸ் கிட்ஸ்களின் பரிதாப நிலையை, குறிப்பாக அவர்களுக்குப் பெண் கிடைப்பதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை மையமாகக் கொண்டது. </p><p>ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்வியலையும், அவர்கள் அன்றாடம் கடந்து வரும் சூழலையும் அப்படியே திரையில் பிரதிபலிக்கும் வகையில், மக்கள் எளிதில் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் விதமாகப் படத்தை உருவாக்கியுள்ளோம்" என்று கூறினார்.</p><h2><strong>தொழில்நுட்பக் கலைஞர்கள் </strong></h2><p>இத்திரைப்படத்திற்கு ரஷாந்த் ஆர்வின் இசையமைக்க, அபிஷேக் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. </p><p>அனைத்துப் பணிகளும் முடிந்து படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.</p>]]></content:encoded></item></channel></rss>