<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 18 Aug 2026 09:36:22 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: 4 துறைகள் மீதான மானிய கோரிக்கை - சட்டசபையில் காரசார விவாதம் - 18 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026#comments</comments><guid isPermaLink="false">c27daa42-6f88-4a58-93d9-0737d7f66078</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:29:39.884Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லாக்அப் மரணங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.</p><p>சபரிவர்மன் மட்டுமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, அரசு பணி வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p> <p>மாணவர் படுகொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு போதையே காரணம்.</p><p>இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு என்கவுன்டர் மட்டுமே தீர்வு - பிரேமலதா விஜயகாந்த்</p> <p>சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.</p><p>தமிழ்நாடு முழுவதும் மாணவர் விடுதிகள் சுத்தம் சுகாதாரம் இல்லாத நிலையில் உள்ளன.</p><p>கர்நாடகா, ஆந்திரா, இலங்கை எந தமிழர்கள் அனைத்து இடங்களிலும் தாக்கப்படுகின்றனர் -  பிரேமலதா விஜயகாந்த்</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>பல இடங்களில் அரசு அலுவலகங்கள் மிகவும் மோசமாக உள்ளன.</p><p>விருத்தாசலம் அரசு அச்சகத்தை புனரமைக்க வேண்டும்.</p><p>அரசு கட்டிடங்கள் தனியார் கட்டிடங்கள் போன்று பராமரிக்கப்பட வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p><p>போதையில் இருந்து இளைஞர்களை மீட்க விளையாட்டு அவசியம்.</p><p>இளைஞர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவது விளையாட்டு.</p><p>கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் உரை</h2><p>விளையாட்டின் முக்கியத்துவத்தை ஒரு விளையாட்டு வீராங்கனையாக நான் உணர்ந்துள்ளேன்.</p><p>இளைஞர்களின் எதிர்காலமே நாட்டின் வருங்காலம்.</p><p>தேவைப்படும் பட்சத்தில் கலந்துரையாடி அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>எம்எல்ஏக்களிடம் அதிகாரிகள் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>வண்டல் மண் பிரச்சனைக்காக 4 எம்எல்ஏக்கள் நேரில் சென்றபோது சேலம் ஆட்சியர் அவமதித்து விட்டார்.</p><p>சேலம் ஆட்சியருக்கு 47 முறை தொலைபேசியில் அழைத்தும் அவர் பேசவில்லை - எம்எல்ஏ மணி</p><p>பக்கத்து ஊருக்கு கூட போகாது - அமைச்சர் பிரபு</p><p>வண்டல் மண் பாகிஸ்தானுக்கா செல்கிறது?  - அதிமுக</p><p>விவசாயிகளை மாஃபியாக்கள் எனக்கூறுவதை ஏற்க முடியாது என இபிஎஸ் கூறியதற்கு நான் விவசாயிகளை குறிப்பிடவில்லை என அமைச்சர் பிரபு பதில் அளித்தார்.</p><p>வண்டல் மண்ணை விவசாய நிலத்திற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும் - எடப்பாடி பழனிசாமி </p><p>விவசாயிகள் என்ற பெயரில் வண்டல் மண்ணை அதிகம் அள்ளும் மாஃபியாக்களை விட மாட்டோம்.</p><p>விவசாயிகளுக்கு மட்டுமே வண்டல் மண் என்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது -  அமைச்சர் பிரபு</p><h2>அதிமுக எம்எல்ஏ மணி</h2><p>தமிழ்நாட்டில் சாலை புரட்சியை உருவாக்கியவர் இபிஎஸ்.</p><p>தொலைநோக்குடன் பல மேம்பாலங்களை கொண்டு வந்தவர் இபிஎஸ்.</p><p>கட்டாய விளையாட்டு, உடற்பயிற்சிக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா? - மெய்யநாதன் கேள்வி</p><p>உலக செஸ் போட்டியை முதல் முதலில் தமிழ்நாட்டில் நடத்தியவர் ஜெயலலிதா.</p><p>ரூ.29 கோடியில் செஸ் போட்டியை நடத்தியவர் ஜெயலலிதா - சபாநாயகர்</p><p>விளையாட்டு விடுதியில் ஏசி பொருத்தித் தர வேண்டும்.</p><p>வீரர், வீராங்கனைகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்க வேண்டும்.</p><p>அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் திட்டம் தொடர வேண்டும் - எம்எல்ஏ மெய்யநாதன் </p><h2>ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் உரை</h2><p>விருது பெறும் வீரர்களுக்கான ஊக்கத்தொகை கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்தது.</p><p>திமுக ஆட்சியில் 48 மணி நேரத்தில் உயரிய ஊக்கத்தொகை கிடைத்தது.</p><p>5 ஆண்டு கால ஆட்சியில் 6,689 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.215 கோடி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கி சட்டத்திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசால் நீட்டை நீக்க முடியாதா? - சிவி சண்முகம்</p><p>மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நீட்டை நீக்கி இருக்கலாம்.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட்டை தொடர்வதாக பாஜக கூறுவது எல்லாம் ஏமாற்று வேலை.</p><p>உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த 6 மாதங்களில் கனிமவள சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய பாஜக அரசு  - சிவி சண்முகம்</p> <p>காங்கிரஸ், பாஜக உடலில் இருப்பது ஒரே ஜீன் தான்.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீட் தொடர்வதாக பாஜக உறுப்பினர் கூறுகிறார் - சிவி சண்முகம்</p><p>வைபவ் சூர்யவன்ஷி போல் குழந்தைகள் விளையாட்டில் சாதிக்க வேண்டும்.</p><p>டிஎன்பிஎஸ்சியில் 8 உறுப்பினர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.</p><p>தமிழகத்தில் அளவுக்க அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்.</p><p>மத்திய அரசிடம் பேசி சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ சிவக்குமார்</p><p>8 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோது தூர்வாரும் பணி நடைபெற்றது.</p><p>ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நந்தன் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது - சிவி சண்முகம்</p><h2>மானியக் கோரிக்கை விவாதம் - விக்கிரவாண்டி பாமக எம்எல்ஏ சிவக்குமார் உரை</h2><p>விக்கிரவாண்டியில் தொழிற்பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும்.</p><p>விக்கிரவாண்டியில் சிங்கப்பெண் சிறப்புப் படை காவல் நிலையம் தேவை.</p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும்.</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை</h2><p>நீட் எந்தெந்த மாநிலத்திற்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு கொண்டு வரலாம் என்று தான் சொன்னோம்.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஒவ்வொரு சட்டத்தையும் பில் திருத்தம் என்ற பெயரில் அனைத்து சட்டத்தையும் பாஜக அரசு திருத்திக்கொண்டு இருக்கிறது.</p><p>மக்களுக்கு எது தேவையோ அதை காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்தோம்.</p><p>அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?</p> <p>காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் வந்தது என தாரகை கத்பட் கூறி விட்டார் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><p>கன்னியாகுமரியில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>குளச்சல் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.</p><p>தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தேவை  - தாரகை கத்பட்</p> <p>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அரசு அடக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் வரவேற்பு.</p><p>மீனவர்கள் கைது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் தேவை - தாரகை கத்பட்</p><p>இருமொழிக் கொள்கையை பாதுகாப்பதிலும் காங்கிரஸ் உறுதியாக இருக்கும்.</p><p>IREL அரிய வகை கனிம நிறுவனத்தால் கடல் அரிப்பு, கடற்கரை சுருங்கி விட்டது  - தாரகை கத்பட்</p><p>காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியதற்க நன்றி. </p><p>காங்கிரஸ் திட்டங்களை மாற்றும் பாஜக, நீட் தேர்வை ஏன் மாற்றவில்லை?</p><p>100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக முயற்சி செய்கிறது - தாரகை கத்பட்</p><h2>மானியக்கோரிக்கை விவாதம் - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை</h2><p>எனது வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி.</p><p>ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுத்து, கூட்டணி கட்சிக்கு மரியாதை தந்தவர் விஜய்.</p><p>தவெக பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட்.</p><p>தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>செம்மேடு - தாழம்பட்டு சாலை பெரிய ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர  வேண்டும் -  எம்எல்ஏ ராஜேந்திரன்</p><h2>என்எல்சி தொழிலாளர்கள் நலன் குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உரை</h2><p>சுற்றுவட்டார கிராமங்களின் மேம்பாட்டிற்கு என்எல்சி 3% சிஎஸ்ஆர் நிதி தர வேண்டும்.</p><p>சிஎஸ்ஆர் நிதி தொடர்பாக என்எல்சியை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/0nckklvs/thahira.jpg" /></figure><p>அந்த கவுரம் என்னை சார்ந்தது மட்டும் அல்ல. இஸ்லாமியர்கள் அனைவருக்குமான பெருமை அளிப்பதுபோல் நடத்தினார்.</p><p>அன்றே முடிவு செய்தேன். எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,.</p><p>தளபதியால் நான், தளபதிக்காகவே நான், என்றும் தலைமைக்கும் தளபதிக்கும் விசுவாசத்துடன் நன்றியுடன் நடந்து கொள்வேன் - எம்எல்ஏ தாஹிரா</p> <p>என்னைப்போன்ற பெண்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்து இந்த இடத்தில்  நிற்க வைத்து இருக்கிறார்.</p><p>எந்த அரசியல்வாதிகளும், எந்த அமைப்பில் இருப்பவர்களும் இஸ்லாமிய பெண்களுக்கு முதல் இடம் கொடுத்தது இல்லை.</p><p>எங்கள் தலைவர் கட்சியில் பதவி கொடுத்தபோது அவருடன் பக்கத்தில் அமரவைத்து கவுரவித்தார்.</p> <h2>கட்சி கொடி நிறத்தில் உடை அணிந்திருப்பது  ஏன்? என எம்எல்ஏ தாஹிரா விளக்கம்</h2><p>தலைவருடன் கடந்த 27 ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் முதல் பெண் ரசிகர் மன்றத்தில் நான் அந்த பட்டத்தை வாங்கி இருக்கிறேன்.</p> <p>ராணிப்பேட்டையில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வாலாஜா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் - எம்எல்ஏ தாஹிரா</p><h2>ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்எல்ஏ தாஹிரா உரை</h2><p>வாயால் வடை சுட்ட காலம் போய் சுவையான வடை சுட்டு கையில் கொடுக்கும் காலம்.</p><p>முதலமைச்சரை பேச சொல்லும் கூட்டம், அவர் பேசத் தொடங்கினால் ஓடுகிறது.</p><p>தவெக ஆட்சி ஊழலற்ற உண்மையான மக்கள் ஆட்சி.</p><p>அதிகாரிகள் எந்த திட்டத்தை தீட்டினாலும் அமைச்சரின் கவனத்திற்கு வராமல் வெளியிடப்படாது.</p><p>நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது - ஆதவ்</p><p>தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை.</p><p>முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம்.</p><p>எளிமையை விரும்பும் முதலமைச்சர் விஜய், தன்னை சுற்றி இருப்பவகளை நினைத்துதான் அறையை மாற்றுகிறார் - அமைச்சர் ஆதவ்</p> <p>கலைஞரும், ஜெயலலிதாவும் புதிய தலைமைச்செயலகத்தை கட்ட வேண்டும் என நினைத்தனர் - அமைச்சர் ஆதவ்</p> <p>5 வருடத்தில் நடைபெற்ற டெண்டர் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம்.</p><p>தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி அதனை மக்களுக்கே கொடுப்பது போல் சிரித்துக்கொண்டு பேசியிருக்கிறார் எ.வ.வேலு</p><p>கடந்த 5 வருட பத்திரிகை செய்திக எடுத்து பார்த்தால் பொதுப்பணித்துறையில் ஊழல் மட்டுமே நிறைந்திருக்கும்.</p><p>முதல்வர் அறை மாற்றத்திற்கான டெண்டர் இன்னும் முடியவில்லை.</p><p>தவெக அரசின் வாக்குறுதி புத்தகத்தில் அறம் திட்டத்தின் 25-வது பக்கத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி கூறி உள்ளீர்கள்.</p><p>எந்த ஓய்வூதிய திட்டத்திற்கு தவெக அரசு அனுமதி அளிக்கப்போகிறது, அரசு அதிகாரிகளுக்கு தெளிவான விளக்கம் தேவை.</p><p>முதல்வர் அறையை தயார் செய்ய ரூ.5.54 கோடி மதிப்பிலான பணிக்கு டெண்டர் விடப்படவில்லை என்ற செய்தியை சுட்டிக்காட்டி எ.வ. வேலு பேச்சு</p><p>காலை உணவுத்திட்டத்தின் பெயர் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை தவிர வேறு எந்த பெயரும் பொருத்தமாக இருக்காது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பெயர் மாற்றம் என்பது கலைஞர் ஆட்சியிலும் இருந்தது என்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.</p><p>அந்த மைக், சேர், டேபிள் செய்தது நாங்கள் தான் என்கிறார்கள். இவை அனைத்தும் செய்தது மக்கள் வரிப்பணத்தில் தான்.</p><p>கடந்த திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக் ஆக மாறி உள்ளது.</p><p>பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p> மானியக்கோரிக்கை தொடர்பாக மட்டும் பேசுங்கள் - சபாநாயகர்</p><p>2003-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டது - எ.வ.வேலு</p><p>அரசு அதிகாரிகள் பொதுவானவர்கள்.</p><p>நேற்று எங்களுக்கு சல்யூட்... இன்று உங்களுக்கு சல்யூட் - எ.வ.வேலு </p><h2>எ.வ.வேலு உரை</h2><p>இந்த நிதி ஆண்டுக்கான எதிர்கால திட்டமிடல் குறித்து எதுவும் இல்லை.</p><p>வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து கொள்ளை விளக்க குறிப்பில் இல்லை.</p><p>சட்டசபையை கலைநயமிக்கதாக மாற்றியது திமுக தான்.</p><p>4 வழித்தடம், 2 வழித்தடம் சாலைகள் இந்த நிதி ஆண்டில் எவ்வளவு அமைக்கப்பட்டது? - எ.வ.வேலு</p><p>முதலமைச்சருக்கு அதிக திறமை இருக்கிறது என்பதை ஏற்கிறேன் - எ.வ.வேலு</p><p>டெண்டர் விலையை உயர்த்தி முறைகேடு செய்யத் தெரியாது என முதல்வர் கூறுகிறார் - எ.வ.வேலு</p><p>அமைச்சர் போல் திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியல் போடுகிறீர்கள் - சபாநாயகர்</p><p>மானியக்கோரிக்கையை விட்டுவிட்டு காலை உணவு குறித்து பேசுவது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?</p><p>புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்கிறோம்.</p><p>முதலமைச்சர் என்பது பொதுவான சொற்றொடர் - எ.வ.வேலு</p><p>மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம் - எ.வ.வேலு</p><p>கோவை தந்தை பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும் - எ.வ.வேலு கோரிக்கை</p><p>அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை.</p><p>எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது - ஆதவ் அர்ஜூனா</p><p>3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்? - எ.வ.வேலு</p><p>பெரியார் கொள்கை தலைவர் என தவெக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது - எ.வ.வேலு</p><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்து தந்தோம் - எ.வ.வேலு</p><p>மானியக் கோரிக்கை மீது விவாதம் - எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு உரை</p><p>சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லா ஊரே இல்லை - எ.வ.வேலு</p><p>4 துறைகள் மீதான மானிய கோரிக்கை தொடங்கியது.</p><p>மனிதவள மேலாண்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் சரத்குமார்.</p><p>பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தவெக அரசு அனுமதிக்காது - அமைச்சர் ராஜீவ்</p><p>3 கிணறுகளுக்கு திமுக ஆட்சியிலும், ஒரு கிணறுக்கு அதிமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ராஜீவ்</p><p>ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்தால் புதுவை முதல் கன்னியாகுமரி வரை கடல் வளம் பாதிக்கப்படும் -  சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து</p><h2>எம்எல்ஏ தமிமுன் அன்சாரி உரை</h2><p>சுற்றுச்சூழல் பாதிப்பை கூர்ந்தாய்வு செய்து அரசு நடவடிக்கை என அமைச்சர் கூறி உள்ளார்.</p><p>புதிதாக 4 கிணறு தோண்டினால் மீனவர் நலன் என பல பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம்.</p><p>பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்.</p><h2>கடலூர் பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டமா? அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்தார்.</h2><p>பரங்கிப்பேட்டையில் 4 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் திட்டம்.</p><p>மீனவர்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் முதலமைச்சர் விஜய் அரசு அனுமதிக்காது.</p><p>சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.</p><p>பரங்கிப்பேட்டையில் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோஷன் நிறுவன கிணறுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு என கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசின் மேல் நடவடிக்கை என்ன? </p><p>தமிழர்களை சுட்டுக்கொன்றவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு கோரியுள்ளதா?  - திமுக</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - அமைச்சர் ரஞ்சித்</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படுமா? - எடப்பாடி பழனிசாமி</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடக அரசின் விசாரணையை தமிழ்நாடு அரசு கண்காணிக்கிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>சிபிஐ விசாரணை தேவை என்கிறோம் - தவெக அரசின் நிலைப்பாடு என்ன? - பாமக</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - தவெக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - பாமக</p><p>யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? - அமைச்சர் நிர்மல்குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு</p><p>அமைச்சர் நிர்மல்குமார் இனி தேவையற்றதை பேச அனுமதிக்க மாட்டேன் - சபாநாயகர்</p><p>திமுகவை விமர்சித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியவை அவை குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய் - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்</h2><p>சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்குவது குறித்து கர்நாடகா பரிசீலனை.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறை மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்.</p><h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன்</h2><p>துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். </p><p>பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசும் நிதி வழங்க வேண்டும்.</p><p>தமிழர்கள் நலனுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய வேண்டும்.</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது பொய்யான செய்தி - கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ லதா</p><p>தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது.  சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் - தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - அதிமுக, பாமக, காங்கிரஸ், சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்.</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட்</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் ஏதோ இருக்கிறது என கர்நாடக எம்எல்ஏவே கூறுகிறார். கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ கணேஷ் </p><h2>பாமக எம்எல்ஏ கணேஷ் உரை</h2><p>மேட்டூர் கட்டப்பட்டதால் கர்நாடகாவிற்கு புலம்பெயர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை.</p><p>தங்கள் கால்நடைகளை தேடிச்சென்றவர்களை சுட்டுக்கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது ஏற்புடையது அல்ல.</p><p>மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.</p><p>வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும்  - எடப்பாடி பழனிசாமி</p> <h2>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுககொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிக்சை.</p><p>அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் - மனோஜ்பாண்டியன் </p><h2>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள்  - கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மனோஜ்பாண்டியன் உரை</h2><p>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால்  சுட்டுக்கொலை.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>கடலூரில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காலே டெஸ்ட்: இலங்கை வெற்றிபெற 372 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-need-372-runs-to-win-against-india-first-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-need-372-runs-to-win-against-india-first-test#comments</comments><guid isPermaLink="false">41a463a9-6743-452a-aa6d-bb3887dbcc04</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:35:43 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:35:43.752Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rishabh Pant,Devdutt Padikkal,தேவ்தத் படிக்கல்,SLvIND,ரிஷப் பண்ட்,இலங்கை இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/yt8spqof/pant.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rishabh pant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/yt8spqof/pant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 372 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><h2>சதமடித்த படிக்கல்</h2><p>அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 167 ரன்னும், கே.எல்.ராகுல் 82 ரன்னும், துருவ் ஜுரல் 51 ரன்னும் எடுத்தனர்.</p><p>இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், கேஷரா நுவந்தா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>சோனல் தினுஷா சதம்</h2><p>தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சோனல் தினுஷா 100 ரன்னில் அவுட்டானார். நிரோஷன் டிக்வெலா 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>மானவ் சுதர் 4 விக்கெட்</h2><p>இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>ரிஷப் பண்ட் அரை சதம்</h2><p>178 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது. ரிஷப் பண்ட் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் அடித்து 66 ரன்னில் அவுட்டானார். படிக்கல் 44 ரன்னும், கே.எல்.ராகுல் 35 ரன்னும் எடுத்தனர்.</p><p>இறுதியில், இந்திய அணி 2-வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதன்மூலம் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>மரண தண்டனையை விஷ ஊசியால் நிறைவேற்ற உத்தரவிடக்கோரி மனு: &apos;No&apos; சொன்ன உச்சநீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/less-painful-lethal-injection-for-death-penalty-supreme-court-says-no</link><comments>https://www.maalaimalar.com/news/national/less-painful-lethal-injection-for-death-penalty-supreme-court-says-no#comments</comments><guid isPermaLink="false">dae5db6a-c9de-4c15-8abf-0739f37fa61a</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:28:59 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:28:59.018Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,மரண தண்டனை,Death Penalty,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gsbw0c7k/SupremeCourt001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உச்சநீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gsbw0c7k/SupremeCourt001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் கொடூர குற்றத்திற்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பல விதமாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மரண தண்டனை தூக்கு மூலம் நிறைவேற்றப்படுகிறது. இதனால் இந்தியாவில் மரண தண்டனை தூக்குத் தண்டனையாகவே அழைக்கப்படுகிறது.</p><h2>மரண தண்டனையை வேறு வழியில் நிறைவேற்ற வேண்டும்</h2><p>இந்த நிலையில் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தூக்கு மூலம் தண்டனை நிறைவேற்றப்படுவதற்குப் பதிலாக விஷ ஊசி, துப்பாக்கியால் சுட்டு, மின்சாரம் பாய்ச்சு அல்லது வாயு அறை ஆகிய வழிகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட பரிந்துரை செய்யலாம்.</p><p>தூக்கு மூலம் தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் அதிகப்படியான வலி குற்றவாளிக்கு ஏற்படும். இது மனிதாபிமானமற்றது. கொடூரமானது. தூக்கு போட்ட பிறகு, சுமார் 40 நிமிடம் கழித்து அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்படும். இது துப்பாக்கியால் சுட்டு அல்லது விஷ ஊசி செலுத்தி நிறைவேற்றப்பட்டால் 5 நிமிடங்கள் போதுமானது.</p><h2>வலி அதிகமானது தூக்கு</h2><p>மரண தண்டனை விதிக்கப்படும்போது அது மிகக் குறைந்த அளவிலான வேதனையை ஏற்படுத்தும் வகையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும் என ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.</p><p>வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.</p><p>தூக்கிலிடுவதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதன் அரசியலமைப்பு சட்ட செல்லுபடியை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போதைக்கு நாட்டில் தூக்கிலிடப்படும் முறையே தொடரும் எனத் தெரிவித்தனர்.</p><p>அத்துடன் தங்கள் தீர்ப்பே இறுதியானது அல்ல என்றும், மத்திய அரசு விரும்பினால் மாற்று வழிமுறைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>திமுக பாதையில் தவெக அரசும் பயணிக்கிறதா? - அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-tvk-government-following-dmk-path</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-tvk-government-following-dmk-path#comments</comments><guid isPermaLink="false">6f621f4b-84e0-4543-af3c-11e6ee48e225</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:02:27 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:02:27.912Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,அண்ணாமலை,annamalai,தவெக அரசு,tvk government,வீ தி லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gckgrywv/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gckgrywv/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>தமிழக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-says-i-acknowledge-that-chief-minister-vijay-is-aware-of-all-the-details">முதலமைச்சர் விஜய்</a> அவர்களின் கவனத்திற்கு,</p><p>திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.</p> <p>கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.</p> <p>சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.</p> <p>நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழக முதலமைச்சர் திரு <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> அவர்களின் கவனத்திற்கு,<br><br>திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற… <a href="https://t.co/gaAgiDwJcB">pic.twitter.com/gaAgiDwJcB</a></p>&mdash; K.Annamalai (@annamalai_k) <a href="https://x.com/annamalai_k/status/2089610893688758391?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நகர வாழ்க்கையை விட்டு மலை கிராமத்திற்கு சென்ற ஜென் இசட் இளைஞருக்கு கிடைத்த அனுபவங்கள்! </title><link>https://www.maalaimalar.com/news/national/the-experiences-of-a-gen-z-youth-who-left-city-life-for-a-mountain-village</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-experiences-of-a-gen-z-youth-who-left-city-life-for-a-mountain-village#comments</comments><guid isPermaLink="false">2d5d7047-c15a-4dd4-be6f-4c9f4b19605b</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:50:28 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:50:28.722Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜென் இசட்,Gen z,சுற்றுலா,Tourism,வைரல்,viral</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/akm1jt4x/tn-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அஜய் சர்மா]]></media:title><media:description type="html"><![CDATA[ அஜய் சர்மா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/akm1jt4x/tn-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வாழ்க்கை அதிவேகமாக செல்லும் மெட்ரோபோலிடன்களால் களைப்புற்று தொலைதூர பகுதியில் அமைதியான வேலையை தேட பலர்  விரும்புகின்றனர். </p><p>பலர் அப்படி நினைப்பதோடு நிறுத்திக்கொள்ளும் வேலையில் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிய ஜென் இசட் <a href="https://www.maalaimalar.com/topic/viral">கண்டெட் கிரியேட்டரான</a> அஜய் சர்மா, டெல்லியின் பரபரப்பான வாழ்க்கையை உதறிவிட்டு இமாச்சல பிரதேசத்தின் மனாலியில் உள்ள மலை கிராமமான சியால் கிராமத்திற்கு இந்த ஆண்டு மே மாதம் இடம்பெயர்ந்தார்.  </p><p>சரியாக 71 நாட்கள்  அங்கு கழித்து ஆகஸ்ட் 2 இல் டெல்லி திரும்பிய அஜய் சர்மா, அங்கு கழித்த நாட்களில் 55 வீடியோக்கள் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். </p><p>தற்போது மீண்டும் டெல்லி திரும்பியுள்ளது பற்றி அவர் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மனாலியில்  தான் இருந்த நாட்களை குறித்தும் அங்கிருந்த எளிமையான வாழ்க்கை முறை குறித்தும், சேகரித்த நினைவுகள் குறித்தும் அவர் விவரிக்கிறார்.  </p><h2>புதிய வாழ்க்கை</h2><p>யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மனாலிக்கு சென்ற புதிதில் பரீட்சயம் இல்லாத சாலைகளும் பரீட்சயமானதாகின. மலைகள் வீட்டில் இருக்கும் உணர்வை தரத் தொடங்கின. மறக்க முடியாத ஞாபகங்கள் கிடைத்தன. </p><p>ஆனால் மீண்டும் டெல்லி திரும்பியபோது நகர வாழ்க்கைக்கு தகவமைத்து கொள்வது கடினமானதாக ஆகிவிட்டது. இரண்டு மாதங்கள் ஒரு இடத்தில் இருந்துவிட்டு அதை விட்டு வருவது இத்தனை கடினமானது என்று நினைக்கவில்லை என கூறுகிறார் அஜய்.</p><p>ஆனால் தொடங்கப்படும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இரு முடிவு இருக்கிறது. தற்போது தன் வாழ்வின் புதிய கட்டத்தை தொடங்கியது போல் உள்ளது என்றும் ஒப்புக்கொள்கிறார் அவர்.</p> <h2>அன்றாட செலவுகள்</h2><p>மனாலியின் அந்த கிராமத்தில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் மாதம் ரூ.14000 வாடகைக்கு (வை பை - கரண்ட் பில் சேர்த்து) செலவழித்திருக்கிறார்.</p><p>செலவை குறைக்க மாதம் ரூ.3500 க்கு பலசரக்கு வாங்கி வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டிருக்கிறார். சமைக்க தோணாத நாட்களில் வெளியே சாப்பிட வாரம் ரூ.500 மட்டும் ஒதுக்கியிருக்கிறார்.</p><p>உள்ளூரில் உள்ள ஒரு ஜிம்மிலும் அவர் சேர்ந்திருக்கிறார். அதற்கு கட்டணம் ரூ.1800. பேரம் பேசி ரூ.1500 என்று குறைத்திருக்கிறார். எங்கு சென்றாலும் நடந்தே செல்வதால் போக்குவரத்துக்கு பெரிதாக செலவாகவில்லை.</p><p>மொத்தமாக மாதம் அவருக்கு ரூ.21000 தான் செலவாகி உள்ளது.</p> <h2>இடர்பாடுகள்</h2><p>இந்த வாழ்க்கை அவருக்கு முழுவதும் சொர்கமாகவும் இல்லை. மலைக் காட்சி, காலை சூரியோதயம், பச்சைப் பசேல் இடங்களின் ஊடே செல்லும் சாலைகள், உள்ளூர் உணவுகள், நெருப்பை சுற்றி அமர்ந்திருக்கும் புதிய மனிதர்கள் என்பதே அவர் எதிர்பார்ப்பு.</p><p>அதில் பெரும்பாலானவற்றை அவர் பார்த்தபோதும், மலைகளுக்கு சுற்றுலா பயணியாக செல்வது என்பதும் அங்கேயே வாழ்வது என்பதும் முற்றிலும் வேறுபட்டது என்று அவர் உணர்ந்துள்ளார். அதையே அவரை சமூக வலைத்தளத்தில் பின்பற்றிய பலரும் கூறியுள்ளனர்.</p> <p>எந்த நேரத்திலும் இணையம் கிடைக்காமல் போகும். எதிர்பாராத நேரத்தில் மழை பேசியத் தொடங்கும், தானாகவே சமைத்து, அனைத்தையும் நிர்வகிக்க வேண்டும், மழைக்காகதில் சாலைகளின் மோசமான நிலை, சுற்றுலா தலங்களுக்கு நீண்ட மலையேற்றம் செய்ய வேண்டி இருப்பது, நடந்து செல்ல வேண்டியது ஆகியவற்றை அசௌகர்யமாக கருத்தியுள்ளார்.</p><p>டெல்லி திரும்பியதும் ஜூலை 3 அன்று தனது பயணம் குறித்த இந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ள நிலையில் இதற்கு பலவிதமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வலியுறுத்தினோம்- முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-meet-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-meet-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">e44d99a2-a92f-4504-9280-872e15d080f2</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:42:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:42:51.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,vijay,Viduthalai chiruthaigal katchi,tvk,விடுதலை சிறுத்தைகள் கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hh0tmwal/thirumavalavan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hh0tmwal/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும், அதனை வலுவாக முன்னெடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன்.</strong></em> </p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/திருமாவளவன்">தொல்.திருமாவளவன்</a> சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-</p><p>* அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது தொடர்பான தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தேன். </p><p>* விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரிடம் வழங்கினேன். </p><p>* த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு எப்போதும் உண்டு என முதலமைச்சரிடம் கூறினேன். </p><p>* மக்களின் பார்வையில் தான் முடிவு எடுக்கிறோம், கட்சியின் நலனுக்காக முடிவெடுப்பதில்லை. </p><p>* மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும், அதனை வலுவாக முன்னெடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். </p><p>* மேகமலை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். </p><p>* போதைப்பொருள் ஒழிப்பில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. </p><p>* போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப்படையை உருவாக்க முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்தேன். </p><p>* போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினேன். </p><p>* த.வெ.க.வுடன் கைகோர்த்துள்ளோம், கூட்டணி அமைச்சரவையில் இணைத்துக்கொண்டுள்ளார்கள். சட்டமன்ற கூட்டத்துக்குப் பின் த.வெ.க. கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறும். </p><p>* த.வெ.க.வுடன் இணைந்து 100 நாட்கள் தான் ஆகிறது, தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என மாநாட்டில் உறுதி செய்துள்ளோம். </p><p>* அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் விசிகவுக்கும் ஆளுங்கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார். </p>]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கத்தின் இந்த நகரங்கள் ஆகஸ்ட் 18-இல் இந்தியாவுடன் இணைந்த தினத்தை கொண்டாடுவது ஏன்? - 1947இல் நடந்தது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-confusion-nadia-malda-and-dinajpur-mark-delayed-independence-on-august-18-as-bharat-bhukti-diwas</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-pakistan-border-confusion-nadia-malda-and-dinajpur-mark-delayed-independence-on-august-18-as-bharat-bhukti-diwas#comments</comments><guid isPermaLink="false">439d426f-9d7c-41b7-9fbd-c13b79abb185</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:39:40 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:39:40.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேற்கு வங்கம்,இந்தியா பாகிஸ்தான்,Independence Day,சுதந்திர தினம்,west bengal,India-Pakistan,partition,தேசப் பிரிவினை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cb37hw49/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுதந்திர தினம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுதந்திர தினம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cb37hw49/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆகஸ்ட் 14 பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15 இந்தியாவும் தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இரு நாடுகளுக்கும் இது 80வது சுதந்திர தினம். 1947 <a href="https://www.maalaimalar.com/news/national/partition-horrors-remembrance-day-india-pakistan-division-victims-honoured-and-national-unity-stressed">தேசப் பிரிவினையால்</a> இந்தியா - பாகிஸ்தான் பிரிந்ததன் பின்னணியில் இந்த தேதி வித்தியாசம். </p><p>ஆனால் இந்தியாவின் மேற்கு வங்கத்தில்  உள்ள சில நகரங்கள் மட்டும் வருடந்தோறும் தாமதமாகவே சுதந்திர இந்தியாவில் இணைந்ததை கொண்டாடுகின்றன.</p> <h2>ஏன்?</h2><p>சர் சிரில் ராட்கிளிப் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடுகளை வரையறுத்தார்.</p><p>ஒருங்கிணைந்த வங்காளமும் இந்த பிரிவினையால் துண்டாடப்பட்டது. கிழக்கில் இந்தியாவுக்குள் இருக்கும் வங்கம் மேற்கு வாங்கமாகவும், மறுபுறம் பாகிஸ்தானுக்கு சொந்தமானது கிழக்கு பாகிஸ்தானாகவும் பிரிக்கப்பட்டது.</p> <h2>குழப்பம்</h2><p>மேற்கு வங்கத்தின் நாடியா, மால்டா மற்றும் தினாஜ்பூர் (இப்போதைய பெயர்கள்) ஆகிய நகரங்களின் பெரும் பகுதிகள்  தாங்கள் இந்தியாவுக்குள் வருகிறோமா அல்லது கிழக்கு பாகிஸ்தானுக்குள் வருகிறோமா என்பது தெரியாமல் குழம்பின.</p><p>எல்லைக்கோடுகள் எங்கு பிரிக்கப்பட்டுள்ளன என்பது அதிகாரப்பூர்வமாக தெரியாததால், அப்பகுதிகள் கிழக்கு பாகிஸ்தானுடன் இணையக்கூடும் என கருதப்பட்டது. அங்கு 1947 சுதந்திரத்தின்போது பாகிஸ்தான் கொடிகளே ஏற்றப்பட்டன.</p><p>1947, ஆகஸ்ட் 17 மாலை வரை இந்தப் பகுதிகள் எந்த நாட்டிற்கு சொந்தம் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது.</p> <h2>கொடியேற்றம்</h2><p>அன்றைய தினம் இரவு ஆல் இந்தியா ரேடியோவில், சர் சிரில் ராட்கிளிப் தயாரித்த எல்லைப் வரையறை அறிக்கை வாசிக்கப்பட்டபோது தான், அவை இந்தியாவுக்குள் வருவது தெரியவந்தது.</p><p>நாடியாவின் ஆகிய மெஹெர்பூர், சுவாடங்கா, குஷ்டியா3 உட்பிரிவுகள் மட்டுமே கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றன.</p><p>இதனைத் தொடர்ந்து, 1947, ஆகஸ்ட் 18 மதியம், அதாவது இந்தியாவின் பிற பகுதிகள் சுதந்திரம் அடைந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, அப்பகுதிகளில் பறந்த பாகிஸ்தான் கொடிகள் இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.</p><p>இன்றும் இந்த பகுதிகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி, 'பாரத் புக்தி திவாஸ்' (பாரதத்துடன் சேர்ந்த நாள்) என்ற பெயரில் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.</p><h2>கட்டுக்கதை</h2><p>சர் ராட்க்ளிப் தவறுதலாக இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளை கிழக்கு பாகிஸ்தானுக்கு ஒதுக்கி வரைபடம் வரைந்ததாகவும் அதை அறிந்த வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு, உடனடியாக வரைபடத்தை திருத்தி வரைய உத்தரவிட்டதால் தான் அறிவிப்பு தாமதமானதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. ஆனால் அது பொய்யானது என வரலாற்றாய்வாளர்கள் மறுக்கின்றனர்.</p><h2>தாமதம் ஏன்?</h2><p>ராட்கிளிப் தனது எல்லைப் வரையறை அறிக்கையை வைஸ்ராய் மவுண்ட் பேட்டனிடம் ஆகஸ்ட் 12லேயே கையெழுத்திட்டு சமர்ப்பித்துவிட்டார்.</p><p>எல்லைப் பகிர்வை சுதந்திரத்திற்கு முன்பே அறிவித்தால் ஏற்கனவே நடந்து வந்த மதக் கலவரம் தீவிரமடையும் என மவுண்ட் பேட்டன் கருதினார். </p><p>இதனால் ராட்கிளிப் அறிக்கை ஆகஸ்ட் 17 அன்று 'தி கெஸட் ஆப் இந்தியா எக்ஸ்ட்ராஆர்டினரி' இதழில் வெளியிடப்படும் வரை ரகசியமாக வைக்கப்பட்டது.</p><p>எல்லை குறித்த தகவல்கள் இல்லாத அந்த 3 நாட்களில் முஸ்லிம் லீக் தொண்டர்கள் பல இடங்களில் பாகிஸ்தான் கொடிகளை ஏற்றினர்.  ஆகஸ்ட் 17 இந்தியா ரேடியோவில் அறிவிக்கப்பட்ட பின் தெளிவு ஏற்பட்டு ஆகஸ்ட் 18 இந்திய கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. </p>]]></content:encoded></item><item><title>மும்பையில் இன்ஸ்டாகிராம் நண்பனால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை- 17 வயது சிறுவர்கள் இருவர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/atrocity-against-14-year-old-girl-by-instagram-friend-in-mumbai</link><comments>https://www.maalaimalar.com/news/national/atrocity-against-14-year-old-girl-by-instagram-friend-in-mumbai#comments</comments><guid isPermaLink="false">14a37b8c-93a7-4333-8646-7b1c2fbca5f1</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:35:23 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:35:23.290Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sexual assault,போக்சோ சட்டம்,POCSOAct,MumbaiNews,SocialMediaSafety,InstagramWarning,மும்பை செய்திகள்,இன்ஸ்டாகிராம் எச்சரிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mtfuqwic/pocso.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sexual assault of a minor girl]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/mtfuqwic/pocso.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-schools-major-reforms-vocational-education-class-9-third-language-mandatory">மும்பை</a> பெருநகரப் பகுதிக்கு உட்பட்ட பால்கர் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக 17 வயது சிறுவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி, அவசர விஷயமாகப் பேச வேண்டும் எனக் கூறி, அந்தச் சிறுவன் சிறுமியை உள்ளூர் சால் பகுதிக்கு வரவழைத்துள்ளான்.</p><h2>பாலி<strong>யல் அத்துமீறல்</strong></h2><p>சிறுமி அங்கே சென்றபோது, அந்தச் சிறுவனும் அவனது 17 வயது நண்பனும் சேர்ந்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தை அவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். </p><p>இச்சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால், சிறுமியின் சகோதரனைக் கொன்றுவிடுவதாக இரு சிறுவர்களும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த சிறுமி யாரிடமும் இதுபற்றித் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துள்ளார்.</p><h2>வெளிச்ச<strong>த்திற்கு வந்த</strong> கொடூரம் </h2><p>இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி சிறுமியின் தாய்மாமன் இணையதளத்தில் உலாவிக் கொண்டிருந்த, அச்சிறுமி பாதிக்கப்பட்ட வீடியோவை ஆன்லைனில் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து சிறுமியிடம் விசாரிக்கப்பட்டு, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. </p><p>சிறுமியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பால்கர் காவல்துறையினர், பாரதிய நியாய சன்ஹிதா, போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்து, குற்றச் செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவர்கள் இருவரையும் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தஞ்சையில் நடந்தது என்ன? வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் முதலில் தாக்கினாரா?-வைரல் வீடியோவுக்கு போலீஸ் விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-happened-in-thanjavur-did-sub-inspector-attack-youth-first-police-clarifies-viral-video</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-happened-in-thanjavur-did-sub-inspector-attack-youth-first-police-clarifies-viral-video#comments</comments><guid isPermaLink="false">19c5b92f-7e7d-46f9-8059-58bf071efa54</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:16:26.560Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,Thanjavur,தஞ்சாவூர்,ThanjavurPolice,TamilNaduNews,VCKProtest,தமிழ்நாடுசெய்திகள்,விசிக சாலைமறியல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nbhkxj9k/tanjay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thanjavur-VCKProtest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nbhkxj9k/tanjay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர் ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல கருத்துகள் பரவி வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டக் காவல் துறை அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளது.</p><h2>விசிகவி<strong>னர் சாலை ம</strong>றியல்</h2><p>தஞ்சை ரெயில் நிலையம் முன்பாக <a href="https://www.maalaimalar.com/news/topnews/alliance-with-tavega-visika-and-tavega-to-journey-together-in-this-political-arena-thirumavalavan">விடுதலைச் சிறுத்தைகள் </a>கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பேனரை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர். இதைக் கண்டித்து, அகற்றிய பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்கக் கோரி விசிகவைச் சேர்ந்த சுமார் 40 பேர் மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><h2>வாக்குவா<strong>தத்தில் முடிந்த ஹா</strong>ரன் சத்தம்</h2><p>போராட்டம் காரணமாகப் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்த வேளையில், விளார் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்துள்ளார். பணிக்குச் செல்ல தாமதமானதால், அவர் தொடர்ந்து ஹாரன் அடித்து வழி கேட்டுள்ளார். இதனால் ஆகாஷுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் உருவானது.</p><h2>நி<strong>லைமையைக் கட்டுப்படுத்</strong>த முயன்ற காவல் துறை</h2><p>இச்சம்பவம் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாக மாறாமல் தடுக்கும் பொருட்டு, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், ஆகாஷ் காவல்துறையினரை நோக்கித் தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><h2>காவல் துறை அளி<strong>த்த விளக்க</strong> அறிக்கை</h2><p>சூழ்நிலை மேலும் மோசமடைவதைத் தடுக்கச் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஹீம் குறைந்தபட்ச பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தியதாகவும், உடனே ஆவேசமடைந்த ஆகாஷ் அவரது கன்னத்தில் அறைந்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் ஆகாஷைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.</p><p>மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசிய வழக்கு நிலுவையில் இருப்பதை காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. காவல்துறை தேவையின்றி வாலிபரைத் தாக்கியதாக வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை என்றும், சட்ட ஒழுங்கைப் பராமரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது ஆகாஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர், மேகதாது அணை விவகாரம்: முதல்வர் விஜயை சந்தித்துப் பேச கர்நாடக முதல்-மந்திரி சிவக்குமார் திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivkumar-plan-to-meet-tn-cm-vijay-in-chennai-for-south-states-cm-summit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivkumar-plan-to-meet-tn-cm-vijay-in-chennai-for-south-states-cm-summit#comments</comments><guid isPermaLink="false">d1d7ad21-b056-43f4-9d38-08276eb2c371</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:07:46 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:07:46.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DK Shivakumar,டிகே சிவக்குமார்,தமிழக முதல்வர்,tn cm,cm vijay,முதல்வர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8xroe4kn/tn-cm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay, dk shivkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8xroe4kn/tn-cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்னை வரும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேச திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><h2>நீடிக்கும் பிரச்சனை</h2><p>காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் சொன்னபடி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவதில்லை. இதனால் 2 மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை நீடித்து வருகிறது.</p><p>இந்தப் பிரச்சனையை கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் நேரில் சந்தித்துப் பேசி முடிவு காண  முதலமைச்சர் விஜய் திட்டமிட்டார். இந்தச் சந்திப்பு கடந்த 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. </p><p>ஆனால் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. அவரது படத்தின் பேனர்களைக் கிழித்து எறிந்தார்கள். இதனால் பெங்களூரு, மைசூரு உள்பட பல இடங்களில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பயணத்தை தவிர்க்கும்படி கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். இதனால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை.</p> <p>இந்நிலையில், அமித்ஷா தலைமையில்  நடைபெறும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நாளை இரவு சென்னை வருகிறார். அவர் மாநாடு நடைபெறும் கோவளம் நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்குகிறார். மறுநாள் மாநாட்டில் பங்கேற்கிறார். </p><h2>சந்திக்க திட்டம்...</h2><p>இந்தத் தருணத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் காவிரி விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p>காவிரியில் அறிவித்தபடி கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. மேலும், மேகதாது அணை கட்டும் விஷயத்திலும் சிவக்குமார் உறுதியாக இருக்கிறார்.</p><p>ஆனால் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.</p><p>அதேபோல், காவிரி நீர் தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறார்.</p><p>இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருவரும் சந்தித்தால் என்ன மாதிரி பலன் கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.</p><h2>எம்.ஜி.ஆர். முதல்...</h2><p>ஏற்கனவே, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி குண்டுராவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, 1997-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சுப்ரீம் கோர்ட் ஆலோசனையின்படி அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி ஜே.எச்.பாட்டீலைச் சந்தித்துப் பேசினார். அதேபோல், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2012-ம் ஆண்டு அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி ஜெகதீஸ் ஷெட்டரைச் சந்தித்துப் பேசினார். </p><p>இந்தச் சந்திப்புக்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே முதலமைச்சர் விஜய் கர்நாடக முதல்-மந்திரியைச் சந்தித்துப் பேசுவது சரியாக இருக்காது என பல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி பள்ளிகளில் அதிரடி மாற்றம் : 9-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி... 3-வது மொழி கட்டாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-schools-major-reforms-vocational-education-class-9-third-language-mandatory</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-schools-major-reforms-vocational-education-class-9-third-language-mandatory#comments</comments><guid isPermaLink="false">79f89a32-95a0-408f-84ca-b599228627db</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:03:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:03:51.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,vocational education,டெல்லி,delhi EducationReform,Class9 Assessment,தொழிற்கல்வி கட்டாயம்,Third LanguageMandatory,DoECircular,Advanced MathsScience</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9w23ajv2/Delhi-EducationReform" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi EducationReform ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9w23ajv2/Delhi-EducationReform?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/delhi">டெல்லி</a> அரசுப் பள்ளிகளில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மற்றும் தேர்ச்சி முறையில் அதிரடி மாற்றங்களை டெல்லி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 2026-27 கல்வியாண்டு முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளன.</p><p>மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அறிவை வளர்க்கும் நோக்கில் இந்த புதிய பாடத்திட்டமும், தேர்வு முறையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>6 முக்கிய பாடங்கள் கட்டாயம்</h2><p>புதிய கல்வி முறையின்படி, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் இனி 6 முக்கிய பாடங்களை கட்டாயம் படிக்க வேண்டும். மொழிப்பாடம் - 1, மொழிப்பாடம் - 2, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் தொழிற்கல்வி ஆகிய பாடங்களை கட்டாயம் பயில வேண்டும்.</p><p>மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதை இந்த 6 முக்கிய பாடங்களின் மதிப்பெண்களே தீர்மானிக்கும். மாணவர்களுக்கு சிறுவயதிலேயே வேலைவாய்ப்பு மற்றும் திறன் சார்ந்த கல்வியை வழங்க தொழிற்கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><h2>3-வது மொழி கட்டாயம்!</h2><p>8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படித்த அதே மூன்று மொழிகள் கொண்ட கூட்டணியே 9-ஆம் வகுப்பிலும் தொடரும். அதில் ஒரு மொழி 3-வது மொழியாக கருதப்படும்.இந்த 3-வது மொழிக்கான தேர்வு பள்ளி அளவிலேயே நடத்தப்படும். </p><p>மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களுக்குப் பதிலாக 'தகுதி பெற்றார்' அல்லது 'தகுதி பெறவில்லை' என்பது மட்டும் குறிப்பிடப்படும்.</p><p>இதில் முக்கியமாக 9-ஆம் வகுப்பில் இந்த 3-வது மொழியில் தேர்ச்சி பெறாவிட்டாலும், மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்படுவார்கள். </p><p>ஆனால்,10-ஆம் வகுப்பில் படிக்கும்போதே 9-ஆம் வகுப்பின் இந்த மொழித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். 3-வது மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.</p><h2>கணிதம், அறிவியலில் புதிய 'Advanced' தேர்வுகள்</h2><p>தற்போது நடைமுறையில் உள்ள 'Mathematics Basic' மற்றும் 'Mathematics Standard' முறைகள் 2026-27 கல்வியாண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு நீக்கப்படுகின்றன. ஆனால், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பழைய முறை 2026-27-ல் தொடரும்.</p><p>அதற்குப் பதிலாக புதிய முறை அறிமுகமாகிறது. அனைத்து மாணவர்களுக்கும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் பொதுவான தேர்வு நடத்தப்படும். பாடப்புத்தகத்தைத் தாண்டி, கூடுதல் திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் Mathematics Advanced அல்லது Science Advanced (அல்லது இரண்டையும்) தேர்வு செய்து எழுதலாம். இந்த 'Advanced' தேர்வுகள் 25 மதிப்பெண்களுக்கு, 1 மணி நேரம் நடக்கும். </p><p>இதில் சிந்தனைத் திறனை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படும். இதில் பெறும் மதிப்பெண்கள் மாணவர்களின் தேர்ச்சிக்கோ அல்லது மொத்த மதிப்பெண் சதவீதத்திற்கோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. </p><p>ஆனால், இந்த 'Advanced' தேர்வில் 50% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் சாதனை அவர்களது மதிப்பெண் சான்றிதழில் தனியாகப் பதிவு செய்யப்படும்.</p><h2>புதிய பாடங்கள் மற்றும் AI அறிமுகம்</h2><p>'சமூகத்தில் தனிநபர்கள்', கலைக் கல்வி, உடற்கல்வி மற்றும் நல்வாழ்வு ஆகிய துறைகளும் பள்ளி அளவிலான மதிப்பீடுகளுடன் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. </p><p>கணினி சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடங்கள் 2026-27-ல் ஒரு சிறப்புப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 2027-28 கல்வியாண்டு முதல் கட்டாயப் பாடமாக மாற்றப்படும்.</p><h2>தேர்ச்சி பெறுவதற்கான புதிய விதிகள் என்ன?</h2><p>9-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ஆம் வகுப்பிற்குச் செல்ல மாணவர்கள் 6 முக்கிய பாடங்களிலும், அகமதிப்பீடு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகிய இரண்டிலும் தனித்தனியாகக் குறைந்தது 33% மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆண்டு இறுதித் தேர்வில் மட்டும் குறைந்தது 25% மதிப்பெண்கள் எடுத்திருப்பது அவசியமாகும்.</p><h2>தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?</h2><p>6 முக்கிய பாடங்களில் 3 பாடங்கள் வரை தோல்வி அடையும் மாணவர்கள், துணைத் தேர்வு எழுத தகுதியுடையவர்கள் ஆவர். துணைத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது தேர்ச்சி பெற முற்றிலும் தகுதி இல்லாத மாணவர்கள் 'Essential Repeat' (கட்டாய மறுபடி) பிரிவின் கீழ் வைக்கப்பட்டு, மீண்டும் அதே 9-ஆம் வகுப்பிலேயே படிக்க நேரிடும்.</p>]]></content:encoded></item><item><title>மானியக் கோரிக்கையில் எழுந்த நீட் தேர்வு விவகாரம்: காங்., பாஜக உறுப்பினர்கள் சொன்னது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-issue-congress-vs-bjp-members-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-issue-congress-vs-bjp-members-arguments#comments</comments><guid isPermaLink="false">fd7f7e50-6457-47cb-9230-7f888f04064f</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:52:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:52:03.361Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,தமிழக சட்டசபை,நீட் தேர்வு,Neet exam,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6w4e0udr/NEET.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட்- பா.ஜ.க. எம்.எம்.எல்.ஏ. போஜராஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6w4e0udr/NEET.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என கேள்வி எழுப்பினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட் பேசுகையில், </p><p>* எனது வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி.</p><p>* ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுத்து, கூட்டணி கட்சிக்கு மரியாதை தந்தவர் விஜய்.</p><p>* தவெக பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட்.</p><p>* தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>* காலை உணவுத்திட்டத்திற்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajar-name-row-opposition-and-minister-spar-over-renaming-cm-breakfast-scheme-in-tamil-nadu-assembly">காமராஜர்</a> பெயர் சூட்டியதற்கு நன்றி. </p><p>* காங்கிரஸ் திட்டங்களை மாற்றும் பாஜக, நீட் தேர்வை ஏன் மாற்றவில்லை?</p><p>* 100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக முயற்சி செய்கிறது.</p><p>* இருமொழிக் கொள்கையை பாதுகாப்பதிலும் காங்கிரஸ் உறுதியாக இருக்கும்.</p><p>* IREL அரிய வகை கனிம நிறுவனத்தால் கடல் அரிப்பு, கடற்கரை சுருங்கி விட்டது.</p><p>* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். </p><p>* மீனவர்கள் கைது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>* கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் தேவை.</p><p>* பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அரசு அடக்க வேண்டும்.</p><p>* குளச்சல் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.</p><p>* தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தேவை.</p><p>* கன்னியாகுமரியில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்க வேண்டும் என்றார். </p><p>இதனை அடுத்து பேசிய பா.ஜ.க. எம்.எம்.எல்.ஏ. போஜராஜன், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் வந்தது என தாரகை கத்பட் கூறி விட்டார் என்றார். </p><p>அதற்கு  பதில் அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட், </p><p>* நீட் எந்தெந்த மாநிலத்திற்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு கொண்டு வரலாம் என்று தான் சொன்னோம்.</p><p>* காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஒவ்வொரு சட்டத்தையும் பில் திருத்தம் என்ற பெயரில் அனைத்து சட்டத்தையும் பாஜக அரசு திருத்திக்கொண்டு இருக்கிறது.</p><p>* மக்களுக்கு எது தேவையோ அதை காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்தோம்.</p><p>* அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என கேள்வி எழுப்பினார். </p>]]></content:encoded></item><item><title>முற்றிலும் மாறுபட்ட உலகத்தைக் கண்டேன்: இந்தியாவின் கல்வி மற்றும் பண்பாட்டைப் பாராட்டிய ஜிம்பாப்வே இளைஞர்!</title><link>https://www.maalaimalar.com/news/national/i-saw-a-completely-different-world-zimbabwean-youth-praises-indias-education-and-culture</link><comments>https://www.maalaimalar.com/news/national/i-saw-a-completely-different-world-zimbabwean-youth-praises-indias-education-and-culture#comments</comments><guid isPermaLink="false">4ae704c0-eab5-430a-9263-67b5eba003eb</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:49:23 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:49:23.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,ஜிம்பாப்வே,Zimbabwean,India&apos;s medical sector,இந்திய மருத்துவத் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/m2phmwrk/india.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Zimbabwean ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/m2phmwrk/india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கத்திய நாடுகளைத் தாண்டி தரமான கல்வியும், வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகளும் இந்தியாவில் நிறைந்துள்ளன என்பதைத் தனது அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாகக் கூறுகிறார் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த கலும்பா முவாலே.</p><h2>வாய்ப்புகளை க<strong>ண்டு வியப்பு</strong></h2><p>உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா அல்லது ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளையே முதன்மையாகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், <a href="https://www.maalaimalar.com/news/national/aadi-month-over-wife-mother-in-law-surprise">இந்தியா</a>வுக்கு உயர்கல்விக்காக வந்த கலும்பா முவாலே, இங்குள்ள வாய்ப்புகளைக் கண்டு வியப்படைந்துள்ளார். </p><p>தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜிம்பாப்வேவில் பல்கலைக்கழகங்களில் சேருவது மிகவும் கடினமானது மற்றும் கடுமையான போட்டி நிறைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பல்வேறு கட்டண அமைப்புகளில், எண்ணற்ற பாடப் பிரிவுகளுடன் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் செயல்பட்டு வருவதை அவர் பாராட்டியுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் பயின்று வருவதைக் கண்டு தான் ஆச்சரியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>உலகத்த<strong>ரம் வாய்ந்த மருத்</strong>துவம் </h2><p>கல்வியைத் தவிர இந்தியாவின் மருத்துவத் துறை மற்றும் உணவு முறையையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஜிம்பாப்வே நாட்டில் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் பெறுவது கடினம் மற்றும் அதிக செலவு பிடிக்கக்கூடியது என்றும், ஆனால் இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை மிக எளிதாகக் கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>உணவு முறையைப் பொறுத்தவரை, ஜிம்பாப்வேயில் சாட்சா, அரிசி சாதம் மற்றும் காரத்திற்காக மிளகாய் மட்டுமே சேர்க்கப்பட்ட உணவுகள் பிரதானமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் தினமும் ஒரு புதிய சுவையை அனுபவிக்க முடியும் என்றும், சுவைகளின் பிரம்மாண்ட உலகமே இந்தியாவில் உணவில் நிறைந்துள்ளது என்றும் அவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.</p><h2>இணைய<strong>வாசிகளின் வரவே</strong>ற்பு</h2><p>கலும்பா முவாலே பகிர்ந்துள்ள இந்த வீடியோ 53 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ள பல இந்திய இணையவாசிகள், அவருக்கு நெகிழ்ச்சியான வரவேற்பை அளித்து வருகின்றனர். "அன்பும் பரபரப்பும் நிறைந்த இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறோம், உங்கள் இந்திய வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள் என்று நம்புகிறோம்" எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பேஷன் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடிகை கிருத்தி ஷெட்டி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/fashion-is-my-biggest-love-actress-krithi-shetty</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/fashion-is-my-biggest-love-actress-krithi-shetty#comments</comments><guid isPermaLink="false">e0c62b8c-5309-44e8-aa0c-a98761ef4844</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:47:57 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:47:57.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anushka Shetty,krithi shetty,கிருத்தி ஷெட்டி,Actress Sridevi,ஸ்ரீதேவி,KrithiShetty Fashion,தேவசேனா,Baahubali Devasena,ClassicalDance</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/rlvr4cim/Krithi-Shetty" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Krithi Shetty ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/rlvr4cim/Krithi-Shetty?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கிருத்தி ஷெட்டி</a>, தனது பேஷன் ஆர்வம், சினிமா கனவுகள் மற்றும் தனிப்பட்ட ரசனைகள் குறித்து அண்மையில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.</p><h2>சிறுவயது முதலே தொடரும் பேஷன் ஆர்வம்</h2><p>"எனக்கு சிறுவயதிலிருந்தே பேஷன் மீது தனி ஈடுபாடு உண்டு. அதற்கு முக்கிய காரணம் என் அம்மா ஏனென்றால் அவர் ஒரு ஆடை வடிவமைப்பாளர். அதனால் என் வாழ்வில் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷனின் தாக்கம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. </p><p>எனக்கு பாரம்பரிய ஆடைகளான புடவைகள் என்றால் அவ்வளவு விருப்பம். அதை நான் விரும்பி அணிவேன். பல நேரங்களில் என் அம்மாவிடம் ‘உங்களுடைய புடவைகளையும், நகைகளையும் எனக்கு இரவல் தர முடியுமா?’ என்று கேட்டு வாங்கி அணிந்து மகிழ்வேன்" என்று கூறினார்.</p><h2>'தேவசேனா' தான் என் கனவு கதாபாத்திரம்!</h2><p>திரையுலகில் தனது லட்சிய கதாபாத்திரம் குறித்துப் பேசிய அவர், "ஒரு போர்க்கள வீராங்கனை அல்லது இளவரசி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. </p><p>குறிப்பாக, 'பாகுபலி' திரைப்படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">நடிகை அனுஷ்கா ஷெட்டி</a> நடித்த 'தேவசேனா' போன்ற கம்பீரமான கதாபாத்திரம் தான் எப்போதும் என்னுடைய கனவு கதாபாத்திரம்" எனத் தெரிவித்தார்.</p><h2>நடனப் பயிற்சியும், செல்லப் பிராணி பாசமும்</h2><p>படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, "வீட்டில் இருக்கும் போது எனது 4 மாத நாய் குட்டியுடன் தான் பெரும்பாலான நேரத்தை விளையாடிக் கழிப்பேன். </p><p>இது தவிர, எனக்கு நடனம் மற்றும் தற்காப்பு கலைகள் மிகவும் பிடிக்கும். ஏற்கனவே பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி கற்றுக்கொண்டுள்ளேன். தற்போது கூடுதலாக 'கதகளி' நடனமும் கற்று வருகிறேன்" என்றார்.</p><h2>ஸ்ரீதேவிக்கு நிகர் யாருமில்லை!</h2><p>தனக்கு பிடித்தமான நடிகைகள் குறித்துப் பகிர்ந்த கிருத்தி ஷெட்டி, "நான் எப்போதும் மறைந்த புகழ்பெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF">நடிகை ஸ்ரீதேவி</a>யின் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அவர் ஒரு மிக அற்புதமான மற்றும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். </p><p>திரையுலகில் அவருக்கு நிகர் யாருமே இல்லை என்று நான் உண்மையாகவே நினைக்கிறேன். அவரைப் போலவே நான் வியந்து போற்றும் மற்றொரு சிறந்த நடிகை மாதுரி தீட்சித்" என்று தனது பேட்டியை நிறைவு செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;11 குழந்தைகள் பெற ஆசைப்பட்டேன்; ஆனால்...&apos;-மனவேதனையைப் பகிர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anupama-parameswaran-on-wanting-11-children-painful-past-relationship-and-self-respect</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/anupama-parameswaran-on-wanting-11-children-painful-past-relationship-and-self-respect#comments</comments><guid isPermaLink="false">56ecc0e0-1a60-4b74-a109-a10594886eae</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:41:32 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:41:32.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்சினிமா,AnupamaParameswaran,MenstrualAwareness,MentalHealthAwareness,TrendingNews,அனுபமாபரமேஸ்வரன்,மாதவிடாய்விழிப்புணர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nqc5tsbr/anupama.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AnupamaParameswaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nqc5tsbr/anupama.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/anupama-parameswaran-on-narcissistic-abuse-by-anniyan-like-ex-lover">அனுபமா பரமேஸ்வரன்</a>, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, கடந்தகால காதல் அனுபவங்கள் பற்றிப் பகிர்ந்துள்ள கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><h2>தாயாக மாற வி<strong>ரும்பி ஏமா</strong>ற்றம் </h2><p>குடும்பம் மற்றும் குழந்தைகள் மீது தனக்கிருந்த ஈர்ப்பு குறித்துப் பேசிய அனுபமா, "எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு கட்டத்தில் எனக்கு 11 குழந்தைகள் வரை பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், எனது கடந்தகால உறவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், தவறான புரிதல்களும் அந்த எண்ணத்தை மாற்றின" எனக் கூறி வேதனை தெரிவித்தார்.</p><h2>மாதவிடாய் கு<strong>றித்த தவறான</strong> பார்வை</h2><p>பெண்களின் இயல்பான உடலியல் மாற்றமான மாதவிடாய் குறித்து சமூகம் மற்றும் சில நபர்கள் தவறாகப் பேசுவது பற்றி தனது கவலையைப் பதிவு செய்துள்ளார். "மாதவிடாய் நேரங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வலி மற்றும் மன அழுத்தத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைப் பற்றி மட்டமாகவும் தவறாகவும் பேசிய தருணங்கள் என்னை மிகவும் காயப்படுத்தின" என்று உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்துள்ளார்.</p><h2>காத<strong>ல் மு</strong>றிவு </h2><p>தொடர்ந்து பேசிய அவர், தான் கடந்து வந்த 2 ஆண்டு கால காதல் வாழ்க்கை தனக்குக் கொடுத்த மன அழுத்தத்தையும், அதிலிருந்து தான் மீண்டு வந்த கதையையும் வெளிப்படையாகப் பேசினார். தனது முன்னாள் காதலரின் குணாதிசயம் 'அந்நியன்' திரைப்படக் கதாபாத்திரம் போல ஒரு நாளில் அன்பாகவும் (ரெமோ), அடுத்த நாளில் கொடூரமாகவும் (அந்நியன்), பின்னர் மன்னிப்பு கேட்பதாகவும் (அம்பி) மாறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சுயமரியா<strong>தைக்கு முக்கியத்துவம்</strong></h2><p>இந்த மன உளைச்சலால் தனக்குத் தொடர்ந்து பதற்றம், உடல் எடை குறைவு மற்றும் கண் அறுவை சிகிச்சை வரை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் கூறினார். தனக்கு வந்த திருமண நிச்சயதார்த்தத்தை நிராகரித்து, அந்த  உறவிலிருந்து வெளியேறிய பிறகே தனக்கு மன அமைதி கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார். இக்கட்டான காலகட்டங்களைக் கடந்து தற்போது மீண்டும் முழு கவனத்துடன் திரைப்படங்களில் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரனின் இந்த பேச்சு, அவரது ரசிகர்களாலும் திரையுலகினராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஒடிசி, ஸ்பைடர் மேனை ஓரங்கட்டிய ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் உருவான அனிமேஷன் படம்.. காரணம் தான் ஹைலைட் </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/low-budget-chinese-animation-goes-viral-mockery-turns-niu-lai-into-20-crore-box-office-hit</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/low-budget-chinese-animation-goes-viral-mockery-turns-niu-lai-into-20-crore-box-office-hit#comments</comments><guid isPermaLink="false">430a8359-5b20-4ae7-96eb-2b506bfb70d4</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:26:48 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:26:48.943Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அனிமேஷன் படம்,The Odyssey,தி ஒடிசி,ஸ்பைடர் மேன்,Animated movie,Spider-Man</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9jhqbkta/tn-13.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நியூ லாய்
]]></media:title><media:description type="html"><![CDATA[ நியூ லாய்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/9jhqbkta/tn-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்த டிஜிட்டல் யுகத்தில் மக்களின் கவனம் எதன் மீது எப்போது திரும்பும் என்றே கணிக்க முடியாத நிலை தான் உள்ளது. </p><p>மிகவும் சாதராண விஷயம் வைரலாவதும், எதிர்பார்க்கப்பட்ட ஒன்று குப்பைக்கு போவதும் சகஜமாகி வருகிறது.</p><p>7 ஆயிரம் வருட பழமையான மகாகாவியம், உலகையேயே பிரமாண்டத்திற்கு பெயர்போன இயக்குநரால் உருவாக்கப்பட்டபோதும், வெறும் 2 பேர் மட்டும் இணைத்து உருவாக்கிய ஒரு அனிமேஷன் படம் அதிக கவனம் பெற்றுள்ளது சீனாவில். </p><p>அதற்கு அப்படம் கிறிஸ்டோபர் நோலனின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF">ஒடிசியை </a>விட நன்றாக இருப்பதால் இல்லை. எதிர்மாறாக, மிகவும் மோசமாக  இருப்பதால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><h2>நியூ லாய்</h2><p>அண்மையில் வெளியாகிய தி ஒடிசி மற்றும் ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே படங்கள் உலக பாக்ஸ் ஆபீசில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சீனாவில் உருவாக்கப்பட்ட 'நியூ லாய்' ((Niu Lai -  The Cow Is Coming) என்ற படம் தான் இப்போது ஹாட் டாபிக். </p><p>86 நிமிட நீள அனிமேஷன் திரைப்படம், ஒரு கன்றுக்குட்டிக்கும் பறவைக்கும் இடையிலான உறவை  கதைக்களமாகக் கொண்டது.</p><p>சின் யுமெங் மற்றும் சுன் லிபாங் ஆகிய இருவர் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் இந்த முழுப் படத்தையும் எழுதியும், இயக்கியும், தயாரித்தும், குரல் கொடுத்தும் உருவாக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் தாய் மற்றும் மகன் ஆவர். இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சம் இதன் பட்ஜெட். </p> <h2>ஆரம்பகட்ட வசூல்</h2><p>கடந்த ஆகஸ்ட் 5 அன்று சீனாவில் வெளியான இத்திரைப்படம், முதல் 10 நாட்களில் வெறும் 7,700 யுவான் (சுமார் ரூ.1.04 லட்சம்) மட்டுமே வசூலித்தது.</p><p>நாடு முழுவதிலும் 300க்கும் குறைவான மக்களே இப் படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர்.</p> <h2>கேலி கிண்டல் டூ டிரண்ட்</h2><p>இத்திரைப்படத்திற்கு எந்தவொரு விளம்பரமோ ப்ரீ, போஸ்ட் புரொமோஷனோ, ஏன் ஒரு டிரெய்லரோ கூட இல்லை. ஒரு போஸ்டர் மட்டுமே இப் படத்திற்கான ஒரே விளம்பரம்.</p><p>படத்தின் மோசமான கிராபிக்ஸ், கதாபாத்திரங்கள், மோசமான குரல் பதிவு மற்றும் குழப்பமான கதையை பார்வையாளர்கள் கேலி செய்யத் தொடங்கினர்.</p><p>சிலர் இதை ஏஐ உருவாக்கித் தருவதை விட மோசமானது என்றும் 2026 ன் மிக மோசமான திரைப்படம் என்றும் குறிப்பிட்டனர்.</p><p>இதுவே படத்திற்கு சாதகமாக மாறியது. படம் உண்மையிலேயே அவ்வளவு மோசமாகத்தான் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வதற்காக மக்கள் டிக்கெட்டுகளை வாங்கி திரையரங்கிற்குப் படையெடுக்கத் தொடங்கினர்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A newly released animated film called “Niu Lai” (牛来) is going viral for all the wrong reasons in China.<br><br>People are calling the visuals “disaster-level” , the entire production team was basically just two people: the director and the screenwriter. After 9 days in theaters, the… <a href="https://t.co/l7RM9ZER67">pic.twitter.com/l7RM9ZER67</a></p>&mdash; Tong Bingxue 仝冰雪 (@tongbingxue) <a href="https://x.com/tongbingxue/status/2088589642648244338?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>வசூல் சாதனை</h2><p>இத்திரைப்படம் இதுவரை 14.9 மில்லியன் யுவான்களுக்கும் மேல் (சுமார் ரூ.20 கோடி) வசூல் செய்துள்ளது.</p><p>முதல் 10 நாட்களில் சொற்ப அளவில் வசூலித்து, அடுத்த சில நாட்களிலேயே பன்மடங்காக வசூல் பெருகுவது தி ஒடிசி மற்றும் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-box-office-record-india">ஸ்பைடர் மேன்</a> போன்ற பிரமாண்ட படங்களுக்கே சாத்தியமற்றது.</p><p>அரங்கு நிறைந்த காட்சி என்பது பெரிய படங்களுக்கே சாத்தியமாகாதபோது இச்சிறிய படம் அதை முறியடித்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>கட்சி கொடி நிறத்தில் உடை அணிந்திருப்பது  ஏன்? - எம்எல்ஏ தாஹிரா விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-thahira-explain-why-are-you-wearing-an-outfit-in-the-party-flags-colors</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-thahira-explain-why-are-you-wearing-an-outfit-in-the-party-flags-colors#comments</comments><guid isPermaLink="false">f1d18dce-7160-425f-bb50-222d9dbe12c7</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:04:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:04:22.306Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk,தவெக எம்எல்ஏ,TVK MLA</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/qhxmpy17/Thahira.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எம்எல்ஏ தாஹிரா]]></media:title><media:description type="html"><![CDATA[ எம்எல்ஏ தாஹிரா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/qhxmpy17/Thahira.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ராணிப்பேட்டை த.வெ.க. எம்.எல்.ஏ. தாஹிரா பேசுகையில், </p><p><em><strong>‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை</strong></em></p><p><em><strong> ஆரிருள் உய்த்து விடும்’</strong></em> </p><p>சட்டசபையில் கம்பீரத்துடன் அமர்ந்திருக்கும் எங்கள் தளபதி அவருக்கே இத்திருக்குறள் பொருந்தும். </p><p>* வாயால் வடை சுட்ட காலம் போய், சுவையான வடை சுட்டு கையில் கொடுக்கும் காலம்.</p><p>* முதலமைச்சரை பேச சொல்லும் கூட்டம், அவர் பேசத் தொடங்கினால் ஓடுகிறது.</p><p>* தலைவருடன் கடந்த 27 ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன்.</p><p>* தமிழ்நாட்டில் முதல் பெண் ரசிகர் மன்றத்தில் நான் அந்த பட்டத்தை வாங்கி இருக்கிறேன்.</p><p>* என்னைப்போன்ற பெண்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்து இந்த இடத்தில்  நிற்க வைத்து இருக்கிறார்.</p><p>* எந்த அரசியல்வாதிகளும், எந்த அமைப்பில் இருப்பவர்களும் இஸ்லாமிய பெண்களுக்கு முதல் இடம் கொடுத்தது இல்லை.</p><p>* எங்கள் தலைவர் ஆட்சி தொடங்கிய அன்றே எனக்கு கட்சியில் கொள்ளை பரப்பு இணை செயலாளராக பதவி கொடுத்தபோது அவர்களுடன் அமர வைத்து கவுரவித்தார். </p><p>* அந்த கவுரம் என்னை சார்ந்தது மட்டும் அல்ல. இஸ்லாமியர்கள் அனைவருக்குமான பெருமை அளிப்பதுபோல் அன்று நடத்தினார்.</p><p>* அன்றே முடிவு செய்தேன். எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>* தளபதியால் நான்... தளபதிக்காகவே நான்... என்றும் தலைமைக்கும் தளபதிக்கும் விசுவாசத்துடன் என் உயிர் உள்ளவரை நன்றியுடன் நடந்து கொள்வேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி கடத்தல் வழக்கு: 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-rs-1-crore-smuggling-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-rs-1-crore-smuggling-case#comments</comments><guid isPermaLink="false">3ec6c0bc-f350-433e-8be5-d8f55c4d9607</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:54:52 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:54:52.476Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கடத்தல் வழக்கு,delhi,Ghaziabad,டெல்லி,smuggling case,மீரட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cpdac862/smugling.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ smuggling case ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/cpdac862/smugling.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற கடத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக காவல்துறையிடம் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த அமித் யாதவ் (57) என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டேராடூனில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.</p><h2>31 ஆண்டுகளு<strong>க்கு முந்தைய</strong> கடத்தல் சம்பவம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-death-penalty-row-muzaffarnagar-fast-track-judge-ravi-kumar-diwakar-awards-death-sentence-to-22-convicts-in-10-cases">டெல்லி </a>படேல் நகரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனான ரிஷி சேத்தி என்பவர், 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று எய்ம்ஸ் இயக்குனர் குடியிருப்பு அருகே தனது காரில் அமர்ந்திருந்தபோது 3 முதல் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் அவரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து, அவரது குடும்பத்தினரிடம் 1 கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்டனர்.</p><h2>பொறி வைத்<strong>து பிடித்த</strong> போலீசார்</h2><p>காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, மீரட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் 10 லட்சம் ரூபாய் பணத்தை வைப்பதாகக் கடத்தல்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 16, 1995 அன்று அப்பணத்தைப் பெற வந்த அமித் யாதவை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், காசியாபாத்தில் உள்ள வீட்டின் சேமிப்பு அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த ரிஷி சேத்தி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.</p><h2>இ<strong>டைக்கால ஜாமீனில் தப்பித்</strong>தல்</h2><p>இந்த வழக்கில் 1999-ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் அமித் யாதவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, 2000-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவருக்கு ஒரு மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் ஜாமீன் காலம் முடிந்ததும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பியோடினார்.</p><h2>பில்<strong>டர் வாழ்</strong>க்கை</h2><p>தலைமறைவான அமித் யாதவ், காசியாபாத் வாடகை வீட்டைக்காலி செய்துவிட்டு, பாக்பத்தில் இருந்த தனது பூர்வீகச் சொத்துகளை விற்றார். டெல்லி காவல்துறையின் பிடியிலிருந்து தப்ப ரிஷிகேஷிற்குச் சென்று அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். பின்னர் 2001-இல் டேராடூனுக்குச் சென்று தனது அடையாளத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டு, புதிய பெயரில் கட்டிட ஒப்பந்ததாரராக உருவெடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.</p><h2>பயோ<strong>மெட்ரிக்</strong> ஆதாரம்</h2><p>சமீபத்திய புகைப்படங்கள் எதுவுமில்லாத நிலையில், 1999-ஆம் ஆண்டு தண்டனையின் போது பதிவு செய்யப்பட்ட பழைய பயோமெட்ரிக் மற்றும் கைரேகை பதிவுகளை குற்றப்பிரிவு போலீசார் மீட்டெடுத்தனர். அதன் மூலம் தீவிர விசாரணை நடத்தி டேராடூனில் அவர் இருக்கும் இடத்தை உறுதிசெய்து, கடந்த 13ம் தேதி அன்று அதிரடி சோதனை நடத்தி அவரைப் பிடித்தனர். தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>4 மாதங்கள்.. 10 வழக்குகள்..  22 பேருக்கு மரண தண்டனை - வைரலாகும் நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-death-penalty-row-muzaffarnagar-fast-track-judge-ravi-kumar-diwakar-awards-death-sentence-to-22-convicts-in-10-cases</link><comments>https://www.maalaimalar.com/news/national/uttar-pradesh-death-penalty-row-muzaffarnagar-fast-track-judge-ravi-kumar-diwakar-awards-death-sentence-to-22-convicts-in-10-cases#comments</comments><guid isPermaLink="false">e0c0af9e-a802-43dc-8a29-289d5c6465a7</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:51:52 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:51:52.432Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,மரண தண்டனை,judge,Death Penalty,உத்தரப் பிரதேசம்,நீதிபதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/yxldx39a/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரவி குமார் திவாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரவி குமார் திவாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/yxldx39a/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">உத்தரப் பிரதேச </a>மாநிலம் முசாபர்நகர் விரைவு நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் கடந்த நான்கு மாதங்களில் 10 வெவ்வேறு வழக்குகளில் 22 குற்றவாளிகளுக்கு ரவி குமார் திவாகர் மரண தண்டனை விதித்துள்ளார். </p>  <h2>மரண தண்டனைகள்</h2><p>ஆகஸ்ட் 13 அன்று, 12 ஆண்டுகளுக்கு முன்பு ஷாம்லி மாவட்டத்தில் நடந்த பவன் குமார் என்பவரது கொலை வழக்கில் ராம்வீர், ராஜீவ், ராகுல், ஹரேந்தர் குமார் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு அபராதத்துடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">மரண தண்டனை</a> விதித்தார்.</p><p>1999ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் பிணை கேட்டு தொழிலதிபர் சலீம் என்பவரை கடத்திக் கழுத்தை அறுத்துக் கொன்ற வழக்கில், முதன்மை குற்றவாளியான ஷாநவாஸு என்பவருக்கு அண்மையில் மரண தண்டனை வழங்கினார்.</p><p>2011இல் நடந்த விவசாயி கொலை வழக்கு, 2010 பஞ்சாயத்து தேர்தல் முன்விரோதக் கொலை வழக்கு, பணியில் இருந்த ஹோம் கார்டு குத்திக் கொல்லப்பட்ட வழக்கு மற்றும் பல இரட்டைக்கலை வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.</p> <p>குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை என ஒரு தரப்பினர் இத்தீர்ப்புகளை ஆதரித்தாலும், குறுகிய காலத்தில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் சட்ட வல்லுநர்களும் கவலைகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p> <h2>ரவி குமார் திவாகர்</h2><p>லக்னோவைச் சேர்ந்த 46 வயதான நீதிபதி ரவி குமார் திவாகர் முதன்முதலில், 2009ஆம் ஆண்டு அசாம்கரில் கூடுதல் சிவில் நீதிபதியாக பொறுப்பேற்றார்.</p><p>தொடர்ந்து சுல்தான்பூர் உட்படப் பல இடங்களில் பணியாற்றிய இவர், 2025 நவம்பர் முதல் முசாபர்நகரில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.</p><p>முன்னதாக, 2022இல் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோகிராபி ஆய்வு நடத்த உத்தரவிட்டதன் மூலமும் இவர் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>நெசவாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-we-must-not-make-promises-to-weavers-and-then-let-them-down</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-we-must-not-make-promises-to-weavers-and-then-let-them-down#comments</comments><guid isPermaLink="false">246de2c8-2842-4e46-824a-6e1bb6b9e536</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:43:33 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:43:33.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vhm9rl7a/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vhm9rl7a/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனையகங்களை  மூடும் முடிவை கைவிட வேண்டும். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் புதிய கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்களைத் திறந்து நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன்  கோ-ஆப்டெக்ஸ்  நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தல்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் கடலூர், சேலம், வேலூர், திருநெல்வேலி  உள்ளிட்ட நகரங்களிலும், ஆந்திரம்,  மகாராஷ்டிரா உள்ளிட்ட நகரங்களிலும் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10 விற்பனையகங்களை மூட அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கைத்தறி நெசவாளர்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும்,  கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்காகவும்  உருவாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.</p><h2><strong>சீரழிக்கப்பட்டதன் விளைவு</strong></h2><p>விற்பனையிலும், வருவாயிலும் ஏற்பட்ட வீழ்ச்சி, ஆள்குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவை தான் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முடிவின்படி சில விற்பனையகங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் சில விற்பனையகங்களில்  விற்பனையும்,  மீதமுள்ளவற்றில் கொள்முதலும் நிறுத்தப்பட்டு விட்டன. அடுத்த சில வாரங்களில் 10 விற்பனையகங்களும் மூடப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.</p><p>கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்கள்  நெசவாளர்களின் வாழ்வாதாரத்துடன் பின்னிப் பிணைந்தவை ஆகும். கோ-ஆப்டெக்ஸ் என்பதே தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் என்பதன் வணிகப் பெயர் தான் . 1935-ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்கள்  ஒரு காலத்தில் அரசு ஊழியர்கள், நெசவாளர்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் விருப்பத்திற்குரிய ஆடையகமாக இருந்தது. ஆனால், தனியார் நிறுவனங்களின் நலனுக்காக கோ-ஆப்டெக்ஸ் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதன் விளைவு தான் இன்றைய அவலம் ஆகும்.</p><p>2025-16ஆம் ஆண்டில்  தமிழ்நாட்டில் 133, வெளிமாநிலங்கள், வளைகுடா நாடுகள், ஐரோப்பா ஆகியவற்றில் 67  என மொத்தம் 200 விற்பனையகங்களுடன்  கோ-ஆப்டெக்ஸ்  செயல்பட்டு வந்தது. அதன்பின் கடந்த 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 150 ஆக குறைந்து விட்டது. நடப்பாண்டில் மேலும் 10 விற்பனையகங்கள் மூடப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் 2035-ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டிய  கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூடுவிழா நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அதனால் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தைக் காக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ’’தமிழ்நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வெற்றித் தறி ஷோரூம்கள் அமைக்கப்படும். தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கு பிரத்தியேகமான இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்” என்று வாக்குறுதி ( எண். அறம் 2 (8) ) அளிக்கப்பட்டிருந்தது. வெற்றித் தறி ஷோரூம்கள் என்ற பெயரில் புதிய விற்பனையகங்களை திறக்கப் போவதாகக் கூறி விட்டு, இருக்கும் விற்பனையகங்களையும் மூடுவது சரியல்ல. தவெகவின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.</p><p>தவெக  ஆட்சிக்கு வந்தால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நெசவாளர்கள் நம்பினார்கள்.  அதனால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதற்கு காரணமாக நெசவாளர்களை ஏமாற்றக் கூடாது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனையகங்களை  மூடும் முடிவை கைவிட வேண்டும். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் புதிய கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்களைத் திறந்து நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன்  கோ-ஆப்டெக்ஸ்  நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு- மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/conference-of-southern-state-chief-ministers-led-by-amit-shah-begins-tomorrow-in-mamallapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/conference-of-southern-state-chief-ministers-led-by-amit-shah-begins-tomorrow-in-mamallapuram#comments</comments><guid isPermaLink="false">cb909c4b-2f9a-4568-9330-2e7d7231a802</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:36:01 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:36:01.734Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,அமித்ஷா,Amitshah,தென்மாநில முதல்வர்கள் மாநாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/l318vib0/amitshah01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அமித்ஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமித்ஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/l318vib0/amitshah01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகிய 5 பேரும் பங்கேற்கிறார்கள்.</strong></em></p><p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் தென் மாநில முதல்- மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை.</p><p>இந்த நிலையில் இந்த ஆண்டு தென் மாநில முதல்வர்கள் மாநாடு நாளை (19-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (20-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் மாமல்லபுரத்தில் நடக்கிறது.</p><h2><strong>அமித்ஷா</strong></h2><p>மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளம் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE">அமித்ஷா</a> தலைமை தாங்குகிறார்.</p><p>மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகிய 5 பேரும் பங்கேற்கிறார்கள்.</p><p>மேலும் அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.</p><h2><strong>ஒத்துழைப்பு-பிரச்சனைகள்</strong></h2><p>இந்த <a href="https://www.maalaimalar.com/news/topnews/conference-of-south-indian-chief-ministers-chaired-by-amit-shah">கூட்டத்தில்</a> மாநிலங்களுக்கு இடையயோன ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லைப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.</p><h2><strong>வரவேற்பு</strong></h2><p>இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா நாளை (19-ந் தேதி) மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கிறார்கள். பின்னர் காரில் கோவளம் செல்கிறார்.</p><p>இரவு 9 மணி முதல் ஆய்வு கூட்டம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து இரவில் அந்த ஓட்டலில் தங்குகிறார்.</p><h2><strong>தென்மாநில முதல்வர்கள் மாநாடு</strong></h2><p>மறுநாள் (20-ந்தேதி) காலை 10.30 மணிக்கு தென்மாநில முதல்-மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. மதியம் 1.30 மணி வரை நடக்கும் இந்த மாநாட்டில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடனும் பல்வேறு விசயங்கள் பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.</p><p>பின்னர் அனைத்து முதல்-மந்திரிகளுடன் அமித்ஷா மதிய  உணவு அருந்துகிறார். மாலை 2.30 மணி முதல் 3 மணி வரை முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார்.</p><p>மாநாட்டை முடித்துக் கொண்டு மாலை 3 மணிக்கு கார் மூலம் சென்னை விமான நிலையம் புறப்படுகிறார். சென்னையில் இருந்து மாலை 3.45 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.</p><h2><strong>பலத்த பாதுகாப்பு</strong></h2><p>மத்திய மந்திரி அமித்ஷா 2 நாட்கள் கோவளம் ஓட்டலில் தங்கி இருப்பதால் ஓட்டல் அமைந்துள்ள பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதியில் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>அமித்ஷா மற்றும் முதல்-மந்திரிகள் பயணிக்கும் கிழக்கு கடற்கரை சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான &apos;சிக்மா&apos; திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/new-release-date-announced-for-the-film-sigma</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/new-release-date-announced-for-the-film-sigma#comments</comments><guid isPermaLink="false">c896d0c1-49aa-43ba-9a46-f97dc7e67471</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:29:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:29:06.851Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jason sanjay,சந்தீப் கிஷன்,Sandeep Kishan,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ejy58db7/dd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sigma  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ejy58db7/dd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் விஜயின் மகனும் இளம் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-second-song-from-the-movie-sigma-has-been-released">சிக்மா</a>’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். </p><p>லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. </p><figure><img alt="Sigma  " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/4idewnor/sigma.jpg" /></figure><p>முன்னதாக இத்திரைப்படம் ஜூலை 31 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு காரணங்களால் இதன் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. </p><p>இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு அசாதாரணமான நாயகன் தனது தனித்துவமான பாதையை உருவாக்கி, பல்வேறு தடைகளைத் தாண்டி எப்படி உயர்கிறான் என்பதை மையமாகக் கொண்டு, நகைச்சுவை மற்றும் திருப்பங்களுடன் கூடிய சாகசப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>ரசிகர்களுக்<strong>கு விருந்து</strong></h2><p>இசையமைப்பாளர் தமன் இசையில், சந்தீப் கிஷன் மற்றும் நடிகை கேத்தரின் தெரசா இணைந்து நடனமாடியுள்ள பாடல் ஒன்று பிரம்மாண்ட அரங்கில் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, சேலம், தலக்கோனா காடுகள் மற்றும் தாய்லாந்தின் அழகிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவையும், பிரவீன் கே.எல் எடிட்டிங் பணியையும், பெஞ்சமின் எம் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.</p><p>தற்போது சந்தீப் கிஷன் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ள நிலையில், படத்தின் பிந்தைய கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விஸ்வநாத் &amp; சன்ஸ் வசூல் வேட்டை: 4 நாட்களில் ரூ.120 கோடியைக் கடந்து சூர்யா திரைப்படம் சாதனை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/viswanath-sons-box-office-spree</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/viswanath-sons-box-office-spree#comments</comments><guid isPermaLink="false">32f46538-4824-4f39-ba0d-311a079801b3</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:15:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:15:22.298Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சூர்யா,suriya,mamitha baiju,மமிதா பைஜூ,Venky Atluri,விஸ்வநாத் &amp; சன்ஸ்,வெங்கி அட்லூரி,Viswanath &amp; Sons</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/61sk20nt/VISWANATH.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Viswanath & Sons  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/61sk20nt/VISWANATH.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெங்கி அட்லூரி இயக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/surya-thanks-for-wishes-for-viswanath-and-sons">நடிகர் சூர்யா</a>, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான 'விஸ்வநாத் &amp; சன்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. முதல் வார இறுதியில் அசுர வசூல் செய்த இத்திரைப்படம், உலகளவில் ரூ. 120 கோடி வசூல் மைல்கல்லை எளிதாக எட்டியுள்ளது.</p><h2>வார இறு<strong>தி நாட்களில்</strong> அசுர வசூல்</h2><p>ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வந்த இத்திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.17.74 கோடி மொத்த வசூலுடன் தனது கணக்கைத் தொடங்கியது. தொடர்ந்து சனிக்கிழமையன்று ரூ.25.72 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.23.75 கோடியும் வசூலித்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் முதல் 3 நாட்களிலேயே இந்திய மொத்த வசூல் ரூ.67 கோடியைக் கடந்து சாதனை படைத்தது.</p><p>வார இறுதி நாட்களைத் தொடர்ந்து முதல் வேலை நாளான திங்கள்கிழமை (4-வது நாள்) திரையரங்குகளில் வழக்கமான சரிவு காணப்பட்டது. திங்களன்று இந்தியாவில் ரூ. 8.66 கோடி மொத்த வசூலை ஈட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் 4 நாட்களில் படத்தின் மொத்த வசூல் ரூ. 75.88 கோடியாகவும் உயர்ந்துள்ளது.</p><h2>உலகளவில் ரூ<strong>.120 கோடி சாத</strong>னை</h2><p>வெளிநாடுகளிலும் சூர்யாவின் திரைப்படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாட்டுச் சந்தையில் இதுவரை ரூ. 45 கோடி மொத்த வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 நாட்கள் முடிவில் உலகளவில் 'விஸ்வநாத் &amp; சன்ஸ்' திரைப்படம் ரூ. 120.88 கோடி மொத்த வசூலை எட்டி தயாரிப்பாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. </p><p>இந்திய அளவில் கர்நாடக மாநிலத்தில் மிக அதிகபட்சமாக ரூ. 30.50 கோடியும், தமிழகத்தில் ரூ.30 கோடியும் வசூலாகியுள்ளது. கேரளாவில் ரூ.8.85 கோடியும், இந்தியாவின் பிற பகுதிகளில் ரூ. 6.53 கோடியும் வசூலித்து படம் வலுவான நிலையில் பயணிக்கிறது.</p><p>துப்பாக்கிச் சுடுதல் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் (சூர்யா) வாழ்க்கையில் அவரது மகனுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவு எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையும், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் வேலை நாட்களிலும் நிலையான வசூலைத் தக்கவைக்கும் பட்சத்தில் இத்திரைப்படம் மேலும் பல வசூல் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>முதல்வர் அறை மாற்றம் ஏன்?- விளக்கம் அளித்த அமைச்சர் ஆதவ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-explain-why-is-the-chief-ministers-room-being-changed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-explain-why-is-the-chief-ministers-room-being-changed#comments</comments><guid isPermaLink="false">8b6b5ab6-af23-44ef-b82a-4b168c804555</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:15:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:15:17.553Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/oh2q0ytv/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/oh2q0ytv/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> மானியக் கோரிகை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு பேசுகையில், தமிழ்நாட்டின் அனைத்து முதல்வர்களும் இருந்த அறையை எதற்காக மாற்ற வேண்டும்?. தமிழ்நாட்டை முன்னேற்றிய திட்டங்கள் அனைத்தும் இந்த அறையில் இருந்ததான் இயற்றப்பட்டன. கலைஞர் கட்டிய நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதல்வர் செல்வதில் எனக்கு மகிழ்ச்சிதான். நாமக்கல் கவிஞர் மாளிகை சென்றால் அரசு அலுவலர்கள் உணவு அருந்துவது உள்ளிட்டவற்றில் சிரமம் ஏற்படும் என்றார். </p><p>இதனை தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், </p><p>* வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி அதனை மக்களுக்கே கொடுப்பது போல் சிரித்துக்கொண்டு பேசியிருக்கிறார் எ.வ.வேலு.</p><p>* கடந்த 5 வருட பத்திரிகை செய்திகளை எடுத்து பார்த்தால் பொதுப்பணித்துறையில் ஊழல் மட்டுமே நிறைந்திருக்கும்.</p><p>* முதல்வர் அறை மாற்றத்திற்கான டெண்டர் இன்னும் முடியவில்லை. முதல்வர் அறையை மாற்றுவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரில் கோளாறு என வெளியான செய்தி தவறு.</p><p>* 200 பேர் வரை அமரக்கூடிய வகையில் அறை இருக்க வேண்டும் என முதலமைச்சர் நினைக்கிறார். </p><p>* கலைஞரும், ஜெயலலிதாவும் புதிய தலைமைச்செயலகத்தை கட்ட வேண்டும் என நினைத்தனர்.</p><p>* முதலமைச்சர் தன்னுடைய வசதிக்காக அறையை மாற்றவில்லை, அனைவருக்காகவும் மாற்றுகிறார். </p><p>* தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை.</p><p>* முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம்.</p><p>* எளிமையை விரும்பும் முதலமைச்சர் விஜய், தன்னை சுற்றி இருப்பவர்களை நினைத்துதான் அறையை மாற்றுகிறார்.</p><p>* முதல்வர் இப்போது இருக்கும் அறையில் முறையான கழிப்பறை வசதி கூட இல்லை என்பதால் மாற்றுகிறோம். </p><p>* அதிகாரிகள் எந்த திட்டத்தை தீட்டினாலும் அமைச்சரின் கவனத்திற்கு வராமல் வெளியிடப்படாது.</p><p>* 5 வருடத்தில் நடைபெற டெண்டர் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம்.</p><p>* நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது என்றார். </p>]]></content:encoded></item><item><title>தென்னகத்து சூரியன் கலைஞர்.. காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் தான் பொருத்தம்  - அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajar-name-row-opposition-and-minister-spar-over-renaming-cm-breakfast-scheme-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajar-name-row-opposition-and-minister-spar-over-renaming-cm-breakfast-scheme-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">f31552ba-6af6-4b3d-b7bb-43bfea8416f0</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:59:32 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:59:32.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,rajmohan,Tamil Nadu Legislative Assembly,ராஜ்மோகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hmf6qc4y/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜ்மோகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hmf6qc4y/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி கொறடா எ.வ. வேலு முந்தைய ஆட்சியின் சாதனைகளை பற்றி விரிவாக பேசினார். </p><p>மேலும் முதல்வரின்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/velu-raises-periyar-library-delay-and-cm-breakfast-scheme-naming-issue-in-assembly"> காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் </a>வைத்தது ஏன்? புதிய திட்டத்தை தொடங்கி அதற்கு காமராஜர் பெயர் வைத்திருந்தால் வரவேற்றிருப்போம் என தெரிவித்தார். </p> <h2>ராஜ்மோகன்</h2><p>இதற்கு பதிலளிக்க எழுந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்,</p><p>"கலைஞரை நாங்கள் மதிக்கிறோம். நேற்று எங்கள் கட்சி உறுப்பினர் அவர் பெயரை சொன்னபோது அதற்கு எழுந்து நின்று வாஞ்சையோடு தாய்மையோடு எழுந்து நின்று வருத்தம் தெரிவித்த முதல்வர் இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார்.</p> <h2>கலைஞர்</h2><p>தென்னநாடு பெர்னாட்ஷா என்றால் அது அறிஞர் அண்ணா தான். தெற்கில் இருந்து உதித்த சூரியன் என்றால் அது கலைஞர் தான். </p><p>ஆனால் இங்கே பேசும்போது அந்த டேபிள் செய்தது நாங்கள் தான், மைக் செய்தது நாங்கள் தான் என பேசிக்கொண்டிருக்கிறார். இது மக்கள் வரிப்பணத்தில் செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.</p><p>பெயர் மாற்றம் பற்றி பலரும் பலமுறை சொல்கிறீர்கள். நான் வரலாற்றை சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன். 96 க்கு பின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி அமையும்போது அவர் பெயர் மாற்றம் பற்றி பேசியிருந்தார்.</p><p>திரைப்பட நகர் ஜேஜே சினி சிட்டி ஆரம்பிக்கப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியும், இந்த பெயரை கலைஞர் ஆட்சி அமைந்த பிறகு ஜேஜே சினி சிட்டியை அதற்கு பொருத்தமான பெயர் மாற்றமாக எம்ஜிஆர் திரைப்பட நகராக மாற்றுகிறேன் என அறிவித்திருக்கிறார்.</p> <p>எனவே பெயர் மாற்றம் காலங்காலமாக நடந்து வருகிறது. அம்மா பசுமை வீடு, கலைஞர் கனவு இல்லமாக மாறுகிறது. அம்மா மருந்தகம் முதல்வர் மருந்தகமாக மாறியிருக்கிறது. அம்மா மினி கிளினிக் முதல்வர் மினி கிளினிக் ஆக மாறியிருக்கிறது.</p><h2>காமராஜர்</h2><p>ஆனால் நான் 10 இடத்திற்கு போயாவது செல்வம் சேர்த்து வருவேன், நீ படிக்கின்ற வேலையை மட்டும் பார் என்ற கொள்கை தலைவர் காமராஜர் பெயர் தான் இந்த காலை உணவுத் திட்டத்திற்கு பொருத்தமானது.</p><p>இந்த திட்டம் ரூ.203 கொடியே 72 லட்சம் செலவில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இரு குறிப்பிட்ட வகுப்பு வரை இருந்த திட்டம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு காமராஜர் பெயரை விட பொருத்தமாக பெயர் இந்த உலகிலேயே இருக்காது.</p> ]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்- எ.வ.வேலு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-says-i-acknowledge-that-chief-minister-vijay-is-aware-of-all-the-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-says-i-acknowledge-that-chief-minister-vijay-is-aware-of-all-the-details#comments</comments><guid isPermaLink="false">64fc62b0-543f-4349-ba4d-ee237d1141f3</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:56:55 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:56:55.848Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/odn4cbfv/evvelu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- எ.வ.வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- எ.வ.வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/odn4cbfv/evvelu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று 3 மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>பொருளாதரத்தை முன்னேற்ற சாலைகள் தேவை, தி.மு.க. ஆட்சியில் 67,000 கி.மீ. தொலைவு சாலைகள் அமைக்கப்பட்டது. டெண்டர் விலை உயர்த்தி முறைகேடு செய்ய தெரியாது என முதலமைச்சர் விஜய் கூறுகிறார். அவரை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்றார். </p><p>உடனே குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், </p><p>முதலமைச்சரை யாரும் வழிநடத்த தேவையில்லை, விரல் நுனியில் தகவல் வைத்துள்ளார் முதலமைச்சர் என்றார். </p><p>இதனை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறினார். </p><p>இதனை தொடந்து பேசிய எ.வ.வேலு, நடப்பு ஆண்டில் எவ்வளவு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, எவ்வளவு நிதி ஒதுக்கீடு என விவரம் இல்லை. ஒரு திட்டம் போட்டால் அதற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு என கொள்கை குறிப்பில் சொல்ல வேண்டும். வெள்ள தடுப்பு பணிகள் குறித்து கொள்கை விளக்க குறிப்பில் இல்லை. </p><p>நேற்று எங்களுக்கு சலாம் போட்டவர் தான் இன்று உங்களுக்கு சலாம் போடுகின்றனர், அரசு அலுவலர்கள் பொதுவானவர்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003-ல் அப்போதைய அரசு ரத்து செய்தது, பல போராட்டங்கள் நடைபெற்றது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலை திமுக அரசின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டது.  அரசு ஊழியர்களுக்காக கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.</p><p>அப்போது குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன், பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சட்டசபையில் பேசிக்கொண்டிருக்கிறார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி: ஒருநாள் உலகக்கோப்பை மீது மட்டுமே முழு கவனம்!</title><link>https://www.maalaimalar.com/sports/virat-kohli-completes-18-years-in-international-cricket</link><comments>https://www.maalaimalar.com/sports/virat-kohli-completes-18-years-in-international-cricket#comments</comments><guid isPermaLink="false">bee82685-1615-4939-8681-e4bfa70990f6</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:44:35 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:44:35.236Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Virat Kohli,விராட் கோலி,world cup,international cricket,சர்வதேச கிரிக்கெட்,உலகக்கோப்பை கிரிக்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/w82rfdm2/virat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Virat Kohli]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/w82rfdm2/virat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்து வெற்றிகரமாக 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான கோலி, உலகக் கிரிக்கெட்டின் முன்னணி பேட்டராக உருவெடுத்துள்ளார். தனது 18 ஜெர்சி எண்ணைப் போலவே, சர்வதேசக் களத்தில் இந்த 18 ஆண்டுகாலப் பயணம் அவரது தொழில்முறை வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.</p><h2>டி20 மற்றும் டெ<strong>ஸ்ட் போட்டிகளில்</strong> இருந்து ஓய்வு</h2><p>இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சாதனைகளைப் படைத்த விராட் கோலி, ஏற்கனவே டி20 பன்னாட்டுப் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். பணிச்சுமையைக் குறைக்கவும் உடற்தகுதியைப் பேணவும் எடுக்கப்பட்ட இந்த முடிவின் மூலம், அவர் தனது <a href="https://www.maalaimalar.com/sports/cricket/virat-kohli-surpasses-rahul-dravid-to-script-historic-odi-milestone">கிரிக்கெட்</a> வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர தீர்மானித்துள்ளார்.</p><h2>2027 ஒருநாள் உல<strong>கக்கோ</strong>ப்பை மீது முழு இலக்கு</h2><p>டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியதன் மூலம், கோலியின் முழு கவனமும் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் மீது மட்டுமே உள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமிபியா நாடுகளில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்குக் கோப்பையை வென்று தருவதே அவரது முதன்மை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தனது உடற்தகுதியையும் ஆட்டத் திறனையும் உச்சகட்டத்தில் வைத்துக்கொள்ள அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.</p><h2>சர்வதேச <strong>கிரிக்கெட்டில் படைத்த</strong> சாதனைகள்</h2><p>தனது 18 ஆண்டுகாலப் பயணத்தில் 28,000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்து, சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கோலி நீடிக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் போட்டிச் சதங்கள் சாதனையை முறியடித்த கோலி, கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டக்காரராகத் திகழ்கிறார். வரும் 2027 உலகக்கோப்பைத் தொடரே இவரது புகழ்பெற்ற கிரிக்கெட் பயணத்தின் உச்சகட்ட இறுதித் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்ததற்கு எ.வ. வேலு எதிர்ப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/velu-raises-periyar-library-delay-and-cm-breakfast-scheme-naming-issue-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/velu-raises-periyar-library-delay-and-cm-breakfast-scheme-naming-issue-in-assembly#comments</comments><guid isPermaLink="false">4ec75a39-f4fa-427d-8f1c-853a64c3aefa</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:36:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:36:21.989Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly,காமராஜர் காலை உணவுத் திட்டம்,எ.வ. வேலு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ylljt2l7/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எ.வ. வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ எ.வ. வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ylljt2l7/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.  </p><p>இதில் எதிர்க்கட்சி திமுகவை சேர்ந்த கொறடா <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81">எ.வ.வேலு </a>பேசுகையில், </p><p>"சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லா ஊரே இல்லை.</p> <h2>பெரியார்</h2><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்து தந்தோம். பெரியார் கொள்கை தலைவர் என தவெக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. 3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்?</p><p>அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை. எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது. கோவை தந்தை பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும்.</p> <h2>காமராஜர்</h2><p>மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம். காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?.</p><p>புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்கிறோம். ஆனால் முதலமைச்சர் என்ற பொதுவான சொற்றொடரை நீக்கிவிட்டு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன? திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டபோது ஏன் இதற்கு மு.க. ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்கக்கூடாது எனக் கேட்டேன்.</p> <h2>மு.க. ஸ்டாலின்</h2><p>அதற்கு அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலின், முதலமைச்சர் என்று வைத்தால் ஒரு தனிப்பட்ட நபரை குறிக்காமல் அடுத்து வரும் அனைத்து முதல்வர்களையும் குறிக்கும், அந்த பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறியதாக எ.வ. வேலு தெரிவித்தார்.</p> <p>உடனே எழுந்த அவை முன்னவர் செங்கோட்டையன், "மானியக்கோரிக்கையை விட்டுவிட்டு காலை உணவு குறித்து பேசுவது ஏன்?" என கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து மானிய கோரிக்கை பற்றி மட்டுமே பேச வேண்டும் என சபாநாயகர் கண்டித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு  அரசு முடிவு கட்ட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-put-an-end-to-the-continuing-deaths-in-police-custody</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-put-an-end-to-the-continuing-deaths-in-police-custody#comments</comments><guid isPermaLink="false">fec904da-0dd9-4c67-8c4d-f322355cc0cb</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:20:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:20:22.276Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,காவல் நிலைய மரணங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/aynl8f9p/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/aynl8f9p/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனிவரும் காலங்களில் காவல் மரணங்கள் நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த  பரமசிவம்  குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட  மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம் என்பவரை, காவல்நிலையத்தில் வைத்து  கொடூரமாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில்  தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார் என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  பூசாரி பரமசிவம் அவர்களை இழந்து வாடும்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>மனித உரிமை மீறல்கள்</strong> </h2><p>காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த பரமசிவம் எந்த தவறும் செய்யவில்லை. அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம்  19-ஆம் தேதி  அழைத்துச் சென்ற  சிந்தாமணி காவல் நிலைய காவலர்கள், அவரை கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அவதிப்பட்ட பரமசிவம்  மதுரை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும் பயனின்றி  உயிரிழந்திருக்கிறார். காவல்துறையினர் தம்மை கொடூரமாகத் தாக்கியது தான் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதற்கு காரணம் என்று இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட காணொலியில் பரமசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குவதும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.  நாகர்கோவில் கிளைச்சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளியும், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞரும் முறையே சிறைத்துறையினர், காவல்துறையினர்  தாக்கியதில் உயிரிழந்ததால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே  மதுரை கோயில் பூசாரி பரமசிவம் உயிரிழந்தது மனித உரிமை மீறல்கள் குறித்த கவலையை  அதிகரித்துள்ளது.</p><p>ஆட்சிக்கு வந்தால் காவல் மரணங்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் என்று கடந்த தேர்தலின் போது தவெக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 6 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  இனிவரும் காலங்களில் காவல் மரணங்கள் நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த  பரமசிவம்  குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் வெள்ளைக் கொடி தூக்க வேண்டும்.. ஹார்முஸில் ஓமன் தலையிட்டால் தாக்குவோம் - டிரம்ப் </title><link>https://www.maalaimalar.com/news/world/usiran-tensions-trump-warns-unconditional-surrender-and-tougher-sanctions</link><comments>https://www.maalaimalar.com/news/world/usiran-tensions-trump-warns-unconditional-surrender-and-tougher-sanctions#comments</comments><guid isPermaLink="false">d5ac39bb-b122-4fa4-bcab-6f7d2aa04343</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:15:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:15:03.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trump,டிரம்ப்,Iran War,ஈரான் போர்,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/oc1903s6/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டிரம்ப்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரம்ப்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/oc1903s6/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் Fox News தொலைக்காட்சிக்கு அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டிரம்ப் </a>சிறப்பு பேட்டி அளித்துள்ளார். </p><h2>ஈரான் போர்</h2><p>அதில் <a href="https://www.maalaimalar.com/news/world/iran-nuclear-strike-talks-trump-administration-accused-of-risking-global-war-over-iran-attack-plans">ஈரானுடனான போர்</a> குறித்து பேசிய அவர்,</p><p>"ஈரான் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகச் சரணடைய வேண்டும். அவர்கள் சரணடைவதற்கான வெள்ளைக் கொடியை உயர்த்த வேண்டும்.</p><p>இதில் எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. இதற்கென எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.</p><p>எங்களது கடற்படை முற்றுகையால் ஈரான் தினமும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இழந்து வருகிறது.</p><p>இந்த வாரத்தில் அவர்கள் மீது இன்னும் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.</p><p>ஈரானின் ஆட்சியாளர்கள் நல்ல ராஜதந்திரிகள், ஆனால் அவர்களின் பொருளாதாரம் தற்போது முற்றிலும் குலைந்துவிட்டது." என்று தெரிவித்தார்.</p> <h2>ஹார்முஸ்</h2><p>ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு தற்காலிக புதிய போக்குவரத்து பாதையை உருவாக்க ஈரானுடன் ஓமன் ஒப்பந்தம் எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், "ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஒருவேளை ஓமன் குறுக்கே நின்றால், அவர்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்துவோம்." என்றார்.</p><p>முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், அதை அமெரிக்காவின் பகுதியாக அறிவிக்கப்போவதாகவும் டிரம்ப் கூறியதன் பின்னனியில் இவ்வாறு பேசியுள்ளார்.</p><p>Fox News பேட்டியில் தொடர்ந்து பேசிய அவர், ஈரான் அணுஆயுத வல்லரசாக மாறுவதைத் தடுப்பதே எங்களது முதன்மை இலக்கு. இதுவரை நாங்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மிகச் சிறியவை.</p><p>பைடன் ஆட்சியில் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளும் எங்களிடம் தயார் நிலையில் உள்ளன." என தெரிவித்தார்.</p> <h2>காசா</h2><p>காசா - இஸ்ரேல் விவகாரம் குறித்து பேசிய அவர், "ஹமாஸ் அமைப்பினர் தங்களிடமுள்ள ஆயுதங்களைக் கைவிட்டு வருகிறார்கள். </p><p>எனவே, காசா மீது இஸ்ரேல் இனி தொடர்ந்து தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியமில்லை" எனத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>செயற்கை சுவையூட்டிகளுக்கு தடை: ராயல் சேலஞ்ச், மெக்டவல்ஸ் மதுபானங்களின் பார்முலா மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-authority-forces-formula-change-for-royal-challenge-mcdowells-spirits</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-food-safety-authority-forces-formula-change-for-royal-challenge-mcdowells-spirits#comments</comments><guid isPermaLink="false">74611483-60c4-4af3-a1e7-69648b0a7366</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:08:41 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:08:41.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Royal Challenge,McDowell&apos;s,Antiquity Blue,ராயல் சேலஞ்ச்,மெக்டவல்ஸ்,ஆண்டிகுவிட்டி ப்ளூ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/359w3z4c/drug.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ royal challange
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/359w3z4c/drug.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுபானங்களின் தயாரிப்பு முறையில் மாற்றம் செய்ய டியாஜியோ ஒப்புக் கொண்டுள்ளது. ராயல் சேலஞ்ச், ஆண்டிகுவிட்டி ப்ளூ மற்றும் மெக்டவல்ஸ் எண் 1 ஆகிய பிரபல மதுபானங்களின் தயாரிப்பு முறைகளை மாற்றப் போவதாக அந்த நிறுவனம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (FSSAI) உறுதி அளித்துள்ளது.</p><p>உணவுப் பாதுகாப்பு அமைப்பின் அதிரடி நடவடிக்கை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac">மதுபானங்களில் </a>செயற்கை சுவையூட்டிகளைச் சேர்ப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாக சில மாநிலங்களில் இந்த பானங்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது தயாரிப்பு முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><h2>தடைக்<strong>கான காரணம்</strong></h2><p>இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் மதுபான தயாரிப்பில் உள்ள சில விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>* விஸ்கி பானத்தில் பிரத்யேக விஸ்கி சுவையையோ அல்லது ரம் பானத்தில் செயற்கையான ரம் சுவையையோ தனியாகச் சேர்ப்பது சர்வதேச உற்பத்தி நடைமுறைகளுக்கு எதிரானது என ஆணையம் தெரிவித்தது.</p><p>* பழைய மரப் பீப்பாய்களில் முறைப்படி சேமித்து வைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, நடுநிலையான தானிய மதுபானத்துடன் செயற்கை சுவையூட்டிகளைச் சேர்த்துத் தயாரிப்பது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயலாகும் என எச்சரிக்கப்பட்டது.</p><p>* ராயல் சேலஞ்ச் மற்றும் ஆண்டிகுவிட்டி ப்ளூ ஆகியவை மத்தியப் பிரதேசத்திலும், மெக்டவல்ஸ் எண் 1 ரம் மகாராஷ்டிராவிலும் உள்ள உற்பத்தி மையங்களில் விதிகளுக்குப் புறம்பாகச் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.</p><h2>டியா<strong>ஜியோ நிறுவனத்தின் புதிய மு</strong>டிவுகள்</h2><p>கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கையை அடுத்து, டியாஜியோ நிறுவனம் இந்தியா முழுவதற்கும் பொருந்தக்கூடிய சில முக்கிய மாற்றங்களைச் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.</p><p>* தனது பிரபல மதுபானங்களில் தனியாகச் சேர்க்கப்பட்டு வந்த விஸ்கி மற்றும் ரம் சுவையூட்டிகளை முற்றிலுமாக நிறுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.</p><p>* அடுத்த 3 மாத கால அவகாசத்திற்குள் அனைத்துப் பிராண்டுகளின் தயாரிப்பு விதிகளையும் மாற்றி அமைக்க டியாஜியோ திட்டமிட்டுள்ளது.</p><p>* புதிய தயாரிப்பு முறை நடைமுறைக்கு வரும் வரை, பாட்டில்களின் முன்பகுதியில் என்ன சுவையூட்டி சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நுகர்வோர் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் லேபிளிங் செய்யப்படும்.</p><h2>விற்பனைத் <strong>தடை விலக்கப்படுமா</strong></h2><p>நிறுவனம் தயாரிப்பு முறையை மாற்றுவதற்கும், பாட்டில்களில் சரியான விவரங்களைக் குறிப்பிடுவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளதால், விதிக்கப்பட்ட தடையை வாபஸ் பெற உணவுப் பாதுகாப்பு ஆணையம் பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு லட்சக்கணக்கான கேஸ்கள் விற்பனையாகும் இந்த முக்கிய பிராண்டுகளின் தயாரிப்பு மாற்றம், நாட்டின் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள மதுபான சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் த.வெ.க. அரசு அனுமதிக்காது- அமைச்சர் ராஜீவ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeev-says-tvk-government-will-not-permit-any-project-that-harms-fisheries-or-the-environment</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeev-says-tvk-government-will-not-permit-any-project-that-harms-fisheries-or-the-environment#comments</comments><guid isPermaLink="false">c5bc84b0-446f-4a1f-8da8-19937d314e20</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:04:42 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:04:42.253Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6r806m9g/rajeev.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜீவ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜீவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6r806m9g/rajeev.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இன்றி த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று  கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். இதைதொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். </p><p>அதனை தொடர்ந்து, கடலூரில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேச்சைத் தொடர்ந்து அமைச்சர் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>மஜக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி</strong></h2><p>சுற்றுச்சூழல் பாதிப்பை கூர்ந்தாய்வு செய்து அரசு நடவடிக்கை என அமைச்சர் கூறியுள்ளார். புதிதாக 4 கிணறு தோண்டினால் மீனவர் நலன் என பல பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். </p><h2><strong>சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து</strong> </h2><p>ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்தால் புதுவை முதல் கன்னியாகுமரி வரை கடல் வளம் பாதிக்கப்படும் என்றார். </p><h2><strong>அமைச்சர் ராஜீவ்</strong></h2><p>3 கிணறுகளுக்கு திமுக ஆட்சியிலும், ஒரு கிணறுக்கு அதிமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ல் HOEC நிறுவனம் மேலும் கிணறு அமைக்கும் விண்ணப்பத்தை கடலோர மண்டல மேலாண்மை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மீன்வளம் சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் த.வெ.க. அரசு அனுமதிக்காது. சுற்றுச்சூழலுக்கு எதிரான, மீனவர்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் இந்த அரசு அனுமதிக்காது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இன்றி த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். </p><h2><strong>தமிமுன் அன்சாரி</strong> </h2><p>சுற்றுச்சூழுல் விழிப்புணர்வு ஏற்படும் முந்தைய காலத்தில் முந்தைய ஆட்சியாளர்கள் அனுமதி வழங்கியிருக்கலாம்.  மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கிணறு அமைக்க அனுமதி தரவில்லை. எந்த அரசு செய்தது என்ற வாதத்திற்கு செல்லாமல், மண் வளத்தை காக்கும் வகையில் தான் பேரவையில் இதுகுறித்து பேசுகிறோம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் கொலையில் சிபிஐ விசாரணை வேண்டும் - சட்டசபையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-demands-justice-parties-seek-higher-compensation-and-cbi-probe-into-killing-of-3-tamils-in-karnataka-forest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-demands-justice-parties-seek-higher-compensation-and-cbi-probe-into-killing-of-3-tamils-in-karnataka-forest#comments</comments><guid isPermaLink="false">d5b47a8d-4fd1-4052-b9fa-b8282c097b4b</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:41:00.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழர்கள் சுட்டுக்கொலை,Karnataka Forest Department,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7tw3jsfb/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7tw3jsfb/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">கர்நாடகாவில் </a>சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் சட்டசபையில் கொண்டு வந்தார். </p><h2></h2><h2>காங்கிரஸ்</h2><p>இதன் மீதான விவாதத்தில் பேசிய குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமரை தீட்சித்,</p><p>"கர்நாடகா சாம்ராஜ் மாவட்ட வனப்பகுதியில் தமிழர்களை சுட்டுத் தள்ளியுள்ளார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.</p><p>மனித உயிருக்கு இன்று விலை இல்லாமல் போய்விட்டது என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். எப்பொழுதும் எந்த பிரச்சனை என்றாலும் தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்ட சூழ்நிலை உள்ளது.</p><p>இதை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-condemns-killing-of-three-tamils-in-karnataka">முதலமைச்சர் கண்டித்துள்ளார்</a>. கர்நாடக அரசு கொடுத்துள்ள இழப்பீடு நியாயமானது அல்ல. </p><p>எனவே இதற்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதோடு இதற்கு தகுந்த சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.</p> <p>அதைப்போல இன்றைக்கு மகிமி தாஸ் என்பவர் அங்கே உயிருக்கு போராடிக்கொண்டிருக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. </p><p>அதற்கும் கர்நாடக அரசு அவருவடைய சிகிச்சைக்கான செலவுகளை முழுமையாக ஏற்க வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் நிலைப்பாடு.</p><p>இறந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கில் ஆணித்தனமான சிபிஐ விசாரணை வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூற விழைகிறேன். "என்றார்.</p><h2>கம்யூனிஸ்ட்</h2><p>தொடர்ந்து தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பேசுகையில், "தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது. </p><p>சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசுக்கு தமிழக அரசும் நம் முதலமைச்சரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றார்.</p> <p>கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ லதா பேசுகையில், " மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது பொய்யான செய்தி. </p><p>துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.</p><p>பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசும் நிதி வழங்க வேண்டும். </p><p>இந்த விஷயத்தில் தமிழர்கள் நலனுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய வேண்டும்." என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: அமைச்சரின் விளக்கமும்... தி.மு.க. எதிர்ப்பும்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-explain-three-tamils-shot-dead-in-karnataka-incident</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-explain-three-tamils-shot-dead-in-karnataka-incident#comments</comments><guid isPermaLink="false">22c0f8f5-0642-4d42-b9df-b3330da4d3e9</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:38:41 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:38:41.160Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தமிழர்கள் சுட்டுக்கொலை,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ii6i0mp6/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ii6i0mp6/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று  கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். இதைதொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 3 பேர் வனத்துறையால் சுட்டுக்கொலை, ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். </p><p>* ஆக.12-ல் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்தது. </p><p>* உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. </p><p>* இடைக்கால நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கிய கர்நாடக அரசு விசாரணைக்கு பின் கூடுதல் நிவாரணம் தருவதாக கூறியுள்ளது. </p><p>* கர்நாடக வனத்துறை நடத்தியது படுகொலை என குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்தார். </p><p>* 3 தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல, விசாரணை தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார். </p><p>*ஒரு சிலருக்கு திடீரென தமிழ் பாசம் தமிழர் பாசம் இருக்கும் என்றார். </p><p>அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், யாருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக அமைச்சர் இதுபோன்று பேசுகிறார் எனத் தெரியவில்லை. கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான அமைச்சரின் பதில் மட்டுமே அவைக்குறிப்பில் இருக்கும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>விரைவில் வெளியீடு - ஒரே நாளில் ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் அறிமுகம் செய்யும் ஐகூ</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/iqoo-buds-are-launching-in-india-on-this-date</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/iqoo-buds-are-launching-in-india-on-this-date#comments</comments><guid isPermaLink="false">96ead538-031f-4091-9d14-aa5449536073</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:34:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:34:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>iQOO,Earbuds,ஐகூ,இயர்பட்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/700yc9ao/iQOO-TWS.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iQOO TWS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/700yc9ao/iQOO-TWS.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/vivo">விவோ</a> நிறுவனத்தின் துணை பிராண்டான ஐகூ (iQOO) விரைவில் இந்தியாவில் புதிய ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இவை ஐகூ பட்ஸ் என்று அழைக்கப்படும், மேலும் தற்போது இந்தியாவிற்கான இதன் வெளியீட்டுத் தேதியை அந்த பிராண்ட் உறுதி செய்துள்ளது. </p><p>புதிய <a href="https://www.maalaimalar.com/topic/earbuds">இயர்பட்ஸ்</a> மாடலுடன் ஐகூ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ Z11 5ஜி என அழைக்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மற்றும் இயர்போன் என இரண்டு சாதனங்களும் ஒரே நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.</p><h2>வெளியீட்டு தேதி:</h2><p>புதிய ஐகூ பட்ஸ், 2026 ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இத்துடன் ஐகூ Z11 5ஜி உடன் சேர்ந்து நடைபெறும். ஐகூ Z11 வடிவமைப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. </p><p>இது சந்தையில் உள்ள மற்ற இயர்போன்களை போல தோற்றமளிக்கிறது. ஐகூ பட்ஸ், அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டீசரில், இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் இருப்பதை காணலாம்.</p><p>ஐகூ பட்ஸ், காதுக்குள் பொருந்தும் வடிவமைப்பை கொண்டிருக்கும், மேலும் அதன் சார்ஜிங் கேஸின் அடிப்பகுதியில் ஒரு எல்.இ.டி. இண்டிகேட்டர் உள்ளது. புதிய ஐகூ Z11 ஸ்மார்ட்போன் தற்போது இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.</p><h2>அம்சங்கள்:</h2><p>புதிய ஐகூ Z11 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7500 SoC வழங்கப்படுகிறது. மேலும் இதில் AI சார்ந்த பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 1.5K ரெசல்யூஷனுடன் 6.8-இன்ச் கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000nits பிரைட்னஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது.</p><p>இந்த ஸ்மார்ட்போன் 7050mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 40,000-க்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது அரோரா கிரீன் மற்றும் செலஸ்டியல் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேச்சு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamils-shot-dead-in-karnataka-mlas-speak-during-special-calling-attention-motion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamils-shot-dead-in-karnataka-mlas-speak-during-special-calling-attention-motion#comments</comments><guid isPermaLink="false">b639043d-19a7-40aa-b12d-be5475fb64ec</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:21:16 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:21:16.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தமிழர்கள் சுட்டுக்கொலை,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ooatftz3/assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மனோஜ் பாண்டியன்- எடப்பாடி பழனிசாமி-கணேஷ் குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ மனோஜ் பாண்டியன்- எடப்பாடி பழனிசாமி-கணேஷ் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ooatftz3/assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் போலி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதானம் நடைபெறுகிறது.  </p><p>முதலில், கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் முதலில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் போலி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலையும் நிவாரணமும் வழங்க வேண்டும் என்றார். </p><h2><strong>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி</strong></h2><p>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுக்கொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை. 2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்களக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும். </p><h2><strong>பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார்</strong></h2><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தற்காப்புக்காக கொலை, இதில் உரிமை மீறல் எதுவுமில்லை என கர்நாடக வனத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழர்களுக்கான நியாயம், நிவாரணம், நீதி கிடைக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காசாவில் தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் - இஸ்ரேல் அமைச்சர் பென் க்விர்  </title><link>https://www.maalaimalar.com/news/world/israeli-minister-calls-for-daily-killings-ben-gvir-urges-expulsion-and-systematic-killing-of-palestinians-in-gaza</link><comments>https://www.maalaimalar.com/news/world/israeli-minister-calls-for-daily-killings-ben-gvir-urges-expulsion-and-systematic-killing-of-palestinians-in-gaza#comments</comments><guid isPermaLink="false">1b2a3faa-7a6c-4281-8bc0-2f70a0e0f2ce</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:16:47 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:16:47.554Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>palestine,காசா,இஸ்ரேல்,gaza,Israel,இனப்படுகொலை,Genocide,பாலஸ்தீனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/994kv0ub/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பென் க்விர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பென் க்விர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/994kv0ub/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-envoy-meets-netanyahu-over-gaza-plan-day-after-talks-with-hamas">காசாவில் </a>தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D">இஸ்ரேல் </a>தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் இலக்கு நிர்ணயித்துள்ளார். </p><p>தினமும் இரவில் 30 முதல் 40 பாலஸ்தீனர்களை கொல்ல வேண்டும் என்றும், அச்சுறுத்தலாக இல்லாத நபர்களையும் இலக்கு வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>2023 அக்டோபர் 7 அன்று நோவா இசை நிகழ்வில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ரோம் பிராஸ்லாவ்ஸ்கி என்பவருடனான பாட்காஸ்ட் உரையாடலில் பென் க்விர் இக்கருத்தை தெரிவித்துள்ளார். </p> <h2>தினமும் இரவு கொலை செய்ய வேண்டும்</h2><p>அவர் பேசியதாவது, "எனக்கும் பிரதமருக்கும் கருத்து வேறுபாடு இருப்பது இரகசியமல்ல. </p><p>காசாவில் தினமும் இரவில் 30 முதல் 40 பேரைக் கொல்வதற்கு இலக்கு நிர்ணயித்து நாம் தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.</p><p>அந்த நேரத்தில் நமக்கு உடனடி ஆபத்தாக இருப்பவர்களை மட்டும் இலக்கு வைக்கக் கூடாது. அங்கு வாழத் தகுதியற்ற பலர் இருக்கிறார்கள். அவர்கள் வாழவேக் கூடாது. அவர்கள் மனிதர்களே அல்ல.</p><p>அதைச் செய்ய நான் உலகத்தையே தலைகீழாக மாற்றுவேன். அது நடக்கும் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன்.</p> <h2>காசா நமக்கே சொந்தம்</h2><p>முழு காசாவையும் நான் நமக்கே சொந்தமானதாகப் பார்க்கிறேன். காசா முழுவதிலும் யூதக் குடியேற்றங்களை அமைக்க வேண்டும்.</p><p>முடிந்தவரை பாலஸ்தீனர்களை இங்கிருந்து வெளியேற்றி அவர்களின் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும். </p><p>தீவிரவாதிகளுக்கு வெளியேற்றமெல்லாம் இல்லை, அவர்களை ஒவ்வொன்றாகக் கொன்றழிக்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p>மேலும் பயணக்கைதியாக பிடித்துச்செல்லப்பட்டதற்கு பழிதீர்க்க, ரோம் பிராஸ்லாவ்ஸ்கியே நேரடியாக இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதி அளிப்பதாகவும் பென் க்விர் வாக்குறுதி அளித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>என்னை நிம்மதியாக சாக விடுங்கள்.. த்விஷா சர்மா தற்கொலைக்கு கணவர் - மாமியாரே காரணம் - சிபிஐ குற்றப்பத்திரிகை  </title><link>https://www.maalaimalar.com/news/national/twisha-sharma-suicide-case-husband-and-mother-in-laws-harassment-drove-model-actress-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/national/twisha-sharma-suicide-case-husband-and-mother-in-laws-harassment-drove-model-actress-to-death#comments</comments><guid isPermaLink="false">91194dc3-72ba-4885-b493-b89515d507bf</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:55:06 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:55:06.743Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வரதட்சணை கொடுமை,மாமியார்,Dowry harassment,mother-in-law,த்விஷா சர்மா,tiwsha sharma</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/39henela/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ த்விஷா சர்மா, கணவர் - மாமியார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ த்விஷா சர்மா, கணவர் - மாமியார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/39henela/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/twisha-sharma">த்விஷா ஷர்மா </a>மாடல் அழகியாகவும் நடிகையாகவும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.</p><p>கடந்த மே 13 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் கட்டாரா மலைப்பகுதியில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் த்விஷா ஷர்மாவின் உடல் மீட்கப்பட்டது.</p> <h2>குற்றச்சாட்டு</h2><p>தனது மகளை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">வரதட்சணை </a>தொடர்பாக துன்புறுத்தி கொன்றுவிட்டதாகவும், அவர் வசித்து வந்த வீட்டின் கேமரா காட்சிகளில் முரண்பாடு உள்ளதாகவும் பெண்ணின் தந்தை நவ்நீதி ஷர்மா குற்றம்சாட்டியிருந்தார்.</p><p>இதையடுத்து தலைமறைவான பெண்ணின் கணவர் சமர்த் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான சமர்த்தின் தாயார் கிரிபலா சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p> <h2>சிபிஐ குற்றப்பத்திரிகை</h2><p>இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ போபால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p><p>அதில், கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் அளித்த தொடர் மன உளைச்சல் மற்றும் கொடுமைகள் காரணமாக த்விஷா சர்மா தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லாமல் போயுள்ளது என்று சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது</p><p>த்விஷா சர்மா பெற்ற மனநல ஆலோசனை குறித்த ஆவணங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவை இதற்கு முக்கிய ஆதாரங்களாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.</p> <h2>மன உளைச்சல்</h2><p>குற்றப்பத்திரிக்கையின்படி, திருமணத்திற்குப் பிறகு த்விஷா சர்மா தொடர்ந்து மன ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கணவர் சமர்த் சிங் அவரைப் பலமுறை அவமானப்படுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.</p><p>மகனின் இந்த தவறான நடவடிக்கைகளுக்கு தாய் கிரிபாலா சிங் முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தியுள்ளார். கணவர் மீது த்விஷா புகார் கூறும்போதெல்லாம் , கிரிபாலா தன் மகனுக்கு ஆதரவாக நின்று அவரைப் பாதுகாத்துள்ளார்.</p><p>த்விஷாவிற்கு நீண்டகாலம் மன உளைச்சலை ஏற்படுத்துவதே இருவரின் முதன்மை நோக்கமாகவும் திட்டமாகவும் இருந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>கர்ப்பம்</h2><p>2026 ஏப்ரல் மாதத்தில் த்விஷா கர்ப்பமானார். ஆனால், குடும்பத்தில் நிலவிய தொடர் கசப்பான சூழல், திருமண வாழ்க்கையின் மீது ஏற்பட்ட விரக்தி மற்றும் விரிசல் காரணமாக, கர்ப்பத்தை தொடர்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவர் இருந்துள்ளார்</p><p>இறுதியாக தனது கர்ப்பத்தைக் கலைக்க த்விஷா முடிவெடுத்தார். இந்த முடிவால் த்விஷா, அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோருக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்தது. தொடர் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.</p> <h2>நிம்மதியாக சாக விடுங்கள்</h2><p>மே 12, இரவு 9:36 மணியளவில் த்விஷா தற்கொலை செய்துகொள்வதற்குச் சற்று முன்பு தனது நாத்தனார் ராஷி அப்ரோலுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் குறுஞ்செய்தியில், "உன் அண்ணனிடம் (சமர்த்) அவரது மனைவியின் எஞ்சிய உடலை வந்து எடுத்துக்கொள்ளச் சொல். </p><p>ஆனால் நாளைக்கு வந்து எடுக்கச் சொல். இப்போது என்னை நிம்மதியாக சாக விடுங்கள்" என்று மெசேஜ் செய்திருக்கிறார்.</p> <p>இந்த வாட்ஸ்அப் குறுஞ்செய்திதான், த்விஷா தீவிர மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கான மிக முக்கிய ஆதாரமாக சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வழக்கின் விசாரணை இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. த்விஷாவின் ஐபோன், சிசிடிவி மற்றும் குரல் மாதிரிகளின் தடயவியல் பரிசோதனை முடிவுகளுக்காக சிபிஐ காத்திருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>குற்ற வழக்குகளை சந்திக்கும் 14 முதலமைச்சர்கள், 326 எம்.பி.க்கள் - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/national/14-cm-and-326-mps-facing-criminal-cases-information-revealed-in-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/14-cm-and-326-mps-facing-criminal-cases-information-revealed-in-supreme-court#comments</comments><guid isPermaLink="false">b1442748-58f1-452b-8c67-a5b34878e24e</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:46:20 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:46:20.698Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,சுப்ரீம் கோர்ட்,CM,எம்பிக்கள்,MPs,criminal cases,குற்ற வழக்குகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7jjepzho/supremecourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7jjepzho/supremecourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாட்டில் 14 முதல்-மந்திரிகள், 326 எம்.பி.க்கள் ஆகியோர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.</strong></em></p> <h2>சுப்ரீம் கோர்ட்</h2><p>எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி வக்கீல் அஸ்வினி உபாத்யாயா <a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-to-release-cauvery-water-state-assures-12000-cusecs-per-day-to-tamil-nadu-in-supreme-court">சுப்ரீம் கோர்ட்டில்</a> ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.</p><p>அந்த வழக்கில், கோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த வக்கீல் விஜய் ஹன்சாரியா நியமிக்கப்பட்டார். அவர் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.</p> <p>அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p><h2>ரேவந்த் ரெட்டி</h2><p>நாட்டில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில், 14 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு எதிராக அதிகபட்சமாக 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p> <h2>குற்றவியல் வழக்குகள்</h2><p>மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது 19 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.</p><p>முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 4 ஆயிரத்து 192 குற்றவியல் வழக்குகள் இருக்கின்றன. மொத்தம் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களில், 251 பேர் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர். அவற்றில் 170 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்கவை ஆகும்.</p> <p>மொத்தம் உள்ள 233 மாநிலங்களவை எம்.பி.க்களில் 75 பேர் (33 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவற்றில் 40 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்கவை ஆகும்.</p><h2>கேரளம், தமிழ்நாடு</h2><p>மாநிலவாரியாக பார்த்தால், கேரளாவின் மொத்த எம்.பி.க்கள் 20 பேரில் 19 பேர் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர். அவர்களில் 11 பேர் மீது கடுமையான வழக்குகள் உள்ளன.</p> <h2>உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா</h2><p>17 தெலுங்கானா எம்.பி.க்களில் 14 பேர் மீதும், 21 ஒடிசா எம்.பி.க்களில் 16 பேர் மீதும், 14 ஜார்கண்ட் எம்.பி.க்களில் 10 பேர் மீதும், 39 தமிழக எம்.பி.க்களில் 26 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன. </p><p>உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகா, ஆந்திரா ஆகிய பெரிய மாநிலங்களின் சுமார் 50 சதவீத எம்.பி.க்கள் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.</p><p>கடந்த ஆண்டு, 1.243 குற்றவியல் வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. அதே ஆண்டில் 1,050 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p>  <p>எம்.பி.. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க அவற்றை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சுப்ரீம் கோர்ட்டு</a> கண்காணிக்க வேண்டும். அந்த வழக்குகளின் விசாரணையை முடித்த பிறகுதான் மற்ற வழக்குகளை தனிக்கோர்ட்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.</p> <p>எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் முடிந்த பிறகுதான் மற்ற வழக்குகளை தனிக்கோர்ட்டுக்கு மாவட்ட நீதிபதிகள் ஒதுக்க வேண்டும். அந்த வழக்குகளின் முன்னேற்றத்தை ஐகோர்ட்டுகள் மாதந்தோ றும் கண்காணிக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் விசாரணை முடிவடைய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் மீண்டும் ஜியோ பிரைம் திட்டத்தை கொண்டுவந்த ரிலையன்ஸ் ஜியோ</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-prime-membership-relaunched-in-india</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-prime-membership-relaunched-in-india#comments</comments><guid isPermaLink="false">d2cf26af-caee-4e91-a0d5-0db747093ce9</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jio,Jio Prime,ஜியோ பிரைம்,ஜியோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/kiysr9ja/Jio-Logo-.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jio Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/kiysr9ja/Jio-Logo-.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jio">ஜியோ</a> பிரைம் திட்டம் இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் அறிவித்தது. இந்த திட்டம், ஜியோ சந்தாதாரர்களுக்கு விலை உறுதித்தன்மையை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் தொலைத்தொடர்பு திட்டங்களின் விலையை ஓராண்டுக்கு நிர்ணயித்துக்கொள்ள முடியும். </p><p>எனவே, ஜியோ தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தினால், பயனர்கள் தங்களின் தற்போதைய திட்டத்தை பழைய விலையிலேயே வாங்க முடியும். விலை நிர்ணயத்தைத் தவிர, ஜியோ பிரைம் சந்தா மற்ற பலன்களையும் வழங்குகிறது. </p><p>பிரைம் சந்தாதார்களுக்கு முன்னுரிமை ஆதரவையும், புதிய ஜியோ தயாரிப்புகளை முன்கூட்டியே அணுகும் வாய்ப்பையும் நிறுவனம் உறுதியளிக்கிறது. பிரைம் உறுப்பினர்கள் கூடுதல் கேஷ்பேக் சலுகைகளையும் பெற முடியும்.</p><h2>ஜியோ பிரைம் நன்மைகள்:</h2><p>வாடிக்கையாளர்கள் ரூ. 300 ஒருமுறை செலுத்தி ஜியோ பிரைம் சந்தாவை பெறலாம். தற்போதுள்ள அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இந்த பிரைம் சந்தா கிடைக்கிறது.</p><p>தற்போது வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரின் வாடிக்கையாளர்களாக இருக்கும் பயனர்கள், ஜியோ பிரைம் உறுப்பினராக ஆவதற்கு ஜியோவிற்கு மாறலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நன்மைகளில், ஜியோ பிரைம் விலை உறுதித்தன்மை, கேஷ்பேக் மற்றும் பிற பிரத்யேக பலன்களை வழங்குகிறது.</p><p>ஜியோ பிரைம் திட்டம், வாடிக்கையாளரின் தற்போதைய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை, செப்டம்பர் 5, 2027 வரை, ஒரு வருடத்திற்கு நிலையாக வைத்திருக்கும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.</p><h2>கேஷ்பேக் வவுச்சர்:</h2><p>எதிர்கால விலை உயர்வுகள் மற்றும் பிற மாற்றங்களை பொருட்படுத்தாமல், சந்தாதாரர்கள் தாங்கள் முன்பு செலுத்திய அதே விலையில் போஸ்ட்பெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யவும் பணம் செலுத்தவும் முடியும்.</p><p>இது தவிர, பிரைம் சந்தா ரூ. 300 மதிப்புள்ள கேஷ்பேக் வவுச்சரை வழங்கும், இதை ஒரு புதிய ஜியோஹோம் அல்லது ஜியோபிசி இணைப்புக்கு பணம் செலுத்தும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.</p><p>மேலும், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்காக ஒரு புதிய ஜியோ சிம் இணைப்பை சேர்ப்பதன் மூலம், ஜியோ பிரைம் சந்தா ரூ. 300 மதிப்புள்ள மற்றொரு கேஷ்பேக் வவுச்சரை வழங்கும்.</p><p>ஜியோ நிறுவனம், பிரைம் சந்தாதாரர்களுக்கு புதிய ஜியோ தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சோதனைகளுக்கான முன்கூட்டிய அணுகலையும் வழங்கும், இதன் மூலம் அவர்கள் மற்றவர்களுக்கு முன்பாக அவற்றை சோதித்து பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>