<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 08 Aug 2026 21:51:18 +0000</lastBuildDate><item><title>ஐரோப்பாவில் கேஷியர் வேலை.. ரூ.11 லட்சம் வாங்கிக்கொண்டு 
இந்திய பெண்ணை மதுக்கடை முதலாளியிடம் விற்ற வேலைவாய்ப்பு ஏஜென்சி</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-woman-trafficked-to-portugal-pune-agency-sells-cashier-job-seeker-to-liquor-shop-owner-after-taking-11-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-woman-trafficked-to-portugal-pune-agency-sells-cashier-job-seeker-to-liquor-shop-owner-after-taking-11-lakh#comments</comments><guid isPermaLink="false">bc358f44-2239-4479-a18c-9e5a253221ed</guid><pubDate>Sat, 08 Aug 2026 21:48:41 +0000</pubDate><atom:updated>2026-08-08T21:48:41.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/9ll7g7qu/tn-48.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப் படம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/9ll7g7qu/tn-48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐரோப்பிய நாட்டில் மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பளத்தில் சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலை வாங்கி  தருவதாகக் கூறி இந்திய பெண் ஒருவர் விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p><h2>கடத்தல்</h2><p>மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த அந்த 28 வயது பெண்ணை புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் <a href="https://www.maalaimalar.com/news/national/number-of-unemployed-graduates-increases-by-67-percent-across-the-country">வேலைவாய்ப்பு </a>ஏஜென்சி போர்ச்சுகல் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.</p><p>பெண்ணிடம் ரூ. 11 லட்சத்தை இந்தியாவிலேயே வைத்து அந்த வேலைவாய்ப்பு ஏஜென்சி கட்டணமாக பெற்றுள்ளது. </p><p>போர்த்துகல் சென்றடைந்ததும், அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த கும்பல், அவரை அங்கிருந்த ஒரு பீர் மதுபானக் கடை உரிமையாளரிடம் விற்றுள்ளது. </p> <h2>கட்டாய வேலை</h2><p>அங்கு அப்பெண்ணைப் பலவந்தப்படுத்தி வேலை செய்ய வைத்து, உடலளவிலான மற்றும் மனதளவிலான சித்ரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளனர்.</p><p>தனது பாஸ்போர்ட்டைத் திரும்பக் கேட்டபோது, அக்கும்பல் மேலும் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளது.</p><h2>மிரட்டல்</h2><p>ஒருவழியாக இந்தியா திரும்பிய பிறகும், அக்கும்பல் அப்பெண்ணின் கணவரைத் தொடர்புகொண்டு வேறு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மேலும் ரூ. 3 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது.</p><p>இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், புனே குற்றப்பிரிவுகாவல்துறையை அணுகிப் புகார் அளித்தார்.</p><p>அவரது புகாரின் பேரில், மனிதக் கடத்தல், மோசடி மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புனே மற்றும் போர்ச்சுகலை சேர்ந்த 7 நபர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஜென் Z தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.. எனக்கு பதவி பொருட்டல்ல - தர்மேந்திர பிரதான் மனம் திறப்பு </title><link>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-says-ministerial-post-not-important-after-resignation-amid-student-agitation</link><comments>https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-dharmendra-pradhan-says-ministerial-post-not-important-after-resignation-amid-student-agitation#comments</comments><guid isPermaLink="false">852c7bfa-403e-448d-8a93-b4ff5abc2f8d</guid><pubDate>Sat, 08 Aug 2026 20:58:57 +0000</pubDate><atom:updated>2026-08-08T20:58:57.887Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,நீட் வினாத்தாள் கசிவு,NEET Question Paper Leak,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/yw8m978k/tn-55.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்மேந்திர பிரதான் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/yw8m978k/tn-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போராட்டத்தால் </a>மத்தியக் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், தனது ராஜினாமா குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் ஜூலை 25 அன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், இரு வாரங்களுக்குப் பிறகு நேற்று புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். </p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>அவர் பேசியதாவது,</p><p>"ஜென் Z  நமது குழந்தைகள். ஆனால் நீட் விவகாரத்தின் போது சில சக்திகள் அவர்களைத் தவறாக வழிநடத்த முயன்றன. எனக்கு அப்போது தனிப்பட்ட சுயநலன்கள் எதுவும் இருக்கவில்லை.</p><p>இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்குப் பல கனவுகளும் லட்சியங்களும் உள்ளன. அவர்கள்தான் இந்தியாவை உலகின் வழிகாட்டியாக மாற்றுவார்கள். எனக்கு இந்த அமைச்சர் பதவி முக்கியமில்லை" என்று தெரிவித்தார்.</p><p>விமான நிலையம் அருகே பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் "தர்மேந்திர பிரதான் திரும்பிப் போ" என முழக்கமிட்டு நடத்திய போராட்டத்தைக் குறிப்பிட்ட அவர், "நான் ஒரு விவசாயியின் மகன். நீங்கள் திரும்பிப் போகச் சொன்னாலும், நான் மீண்டும் மீண்டும் வருவேன்" என்றார்.</p><p>பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அணியினர் சுமார் 30 பேரை சம்பல்பூர் காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.</p> <h2>ஜந்தர் மந்தர் போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற முழக்கத்துடன் அபிஜித் தீப்கேவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய 1 மாத கால போராட்டம் கடந்த வாரம் வெற்றி பெற்றது.</p><p>அழுத்தத்தின் பேரில் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதேநேரம், பிரதமர் மோடியும் தனது நீண்ட நெடிய மௌனத்தை களைத்து கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் இதுபற்றி பேசினார்.</p><p>தேர்வு முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் சிறப்பு மசோதா ஆகிய அறிவுப்புகளை அவர் அடுத்தடுத்து வெளியிட்டார்.</p><p>இதனிடையே ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் படையால் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் சர்ச்சையாகி வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சக்ரவியூகத்தில் சிக்கிய இளைஞர்கள்.. பட்டம் பெற்றும் வேலை இல்லை..  கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன - ராகுல்</title><link>https://www.maalaimalar.com/news/national/india-youth-jobs-crisis-rahul-gandhi-warns-on-rising-education-costs-unemployment-and-ai-risks</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-youth-jobs-crisis-rahul-gandhi-warns-on-rising-education-costs-unemployment-and-ai-risks#comments</comments><guid isPermaLink="false">4c8934c7-9dd1-40e1-9159-47f159f38452</guid><pubDate>Sat, 08 Aug 2026 19:58:21 +0000</pubDate><atom:updated>2026-08-08T19:58:21.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Unemployment,Employment,Education,கல்வி,வேலைவாய்ப்பு,வேலையின்மை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/o008moc4/tn-50.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/o008moc4/tn-50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கே.பி. மைதானத்தில் நேற்று நடைபெற்ற ‘சத்ரோன் கி கூஞ்ச்’  என்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மாணவர் </a>கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். </p><h2>கல்வி </h2><p>அப்போது பேசிய அவர், "அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவின் வல்லமையைப் பற்றி உலக அளவில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள சுமார் 40 கோடி இளைஞர்களே நாட்டின் உண்மையான மற்றும் இணையற்ற ஆற்றலாகத் திகழ்கின்றனர்.</p><p>இந்த பிரயாக்ராஜ் முற்காலத்தில் நாட்டின் மிக முக்கியமான கல்வி மையமாகத் திகழ்ந்தது. அலகாபாத் பல்கலைக்கழகம் நாட்டின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.</p><p>ஆனால், தற்போதைய சூழலில் இந்திய இளைஞர்கள் ஒரு சக்ரவியூகத்தில் மாட்டியுள்ளனர்.</p><p>கல்வியின் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.</p><p>ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் தங்களின் வாழ்வில் பல ஆண்டுகளையும், பெற்றோரின் பெருந்தொகையையும் செலவிட்டுப் படிக்கின்றனர். ஆனால் பட்டம் பெற்ற பிறகும் தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில்லை.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/37yva6c2/tn-49.jpg" /></figure><h2>வேலையின்மை</h2><p>இந்தியாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன.</p><p>நாட்டின் உற்பத்தித் துறை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இளைஞர்கள் சுயதொழில் தொடங்கவோ அல்லது வணிகம் செய்யவோ வங்கிகளில் கடன் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.</p><p>அரசுப் பணிகளுக்கான அரசுப் தேர்வு வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது தகுதியான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறது.</p><p>ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இருக்கும் வேலைகளும் பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.</p><p>மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி கொள்கைகள் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சீரழித்துவிட்டன.</p><p>சிறு நிறுவனங்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்த பொதுத்துறை வங்கிகள் தவறிவிட்டன.</p><p>பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியார்மயமாக்குவது வேலைவாய்ப்புகளை மேலும் சுருக்குகிறது.</p><p>முறையான வேலைகள் இல்லாததால் இளைஞர்கள் அதிகளவில் பகுதிநேர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான கிக் வேலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். தனியார் துறையிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் போது இந்த வேலைகளும் குறையக்கூடும்.</p> <h2>இந்தியரின் தரவுகள்</h2><p>செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் அனைத்தும் மக்களின் தரவுகளைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன.</p><p>எனவே இந்தியர்களின் தரவுகள் இந்தியர்களுக்கே சொந்தமான சொத்தாகக் கருதப்பட வேண்டும்.</p><p>நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் திறமையில் மட்டுமல்லாமல், அவர்கள் உருவாக்கும் தரவுகளின் மீதும் சார்ந்துள்ளது.</p><p>தொழில்நுட்ப மாற்றங்களால் உருவாகும் புதிய பொருளாதாரத்தின் நன்மைகள் இளைஞர்களைச் சென்றடையாவிட்டால், அந்தத் தொழில்நுட்பமே அவர்களுக்குப் புதிய வேலைகளைத் தருவதற்குப் பதிலாக இருக்கும் வேலையையும் பறித்துவிடும்.</p> <h2>ஆதிக்கம்</h2><p>நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் ஒருசிலரின் கைகளில் மட்டுமே குவிந்துள்ளது. நாட்டின் பெருநிறுவனங்கள் , அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் மீது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.</p><p>நாட்டின் பொருளாதார வளங்கள், புதிய தொழில்நுட்பம் மூலம் உருவாகும் சொத்துக்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் நாட்டின் இளைஞர்களுக்கும் சமமான பங்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் பிரதமர் மோடி போனில் உரையாடல்.. 4வது குழந்தை பெற்றதற்கு வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/world/modi-jd-vance-call-leaders-discuss-strengthening-india-us-strategic-partnership-amid-fcra-concerns</link><comments>https://www.maalaimalar.com/news/world/modi-jd-vance-call-leaders-discuss-strengthening-india-us-strategic-partnership-amid-fcra-concerns#comments</comments><guid isPermaLink="false">5ad3ffdc-39c8-4e1c-8c6c-3b204e66d79b</guid><pubDate>Sat, 08 Aug 2026 18:52:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T18:52:43.799Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,JD Vance,ஜேடி வான்ஸ்,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/br8d91lj/tn-51.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி, வான்ஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி, வான்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/br8d91lj/tn-51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உடன்  <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி </a>தொலைபேசியில் உரையாடியுள்ளார். </p><p>நேற்று ஜேடி வான்ஸ் அழைப்பை அட்டென்ட் செய்து பேசிய பிரதமர் மோடி, முக்கிய துறைகளில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும்,  ஜே.டி. வேன்ஸ் மற்றும் உஷா வேன்ஸ் தம்பதியருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்ததற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் மோடி தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். </p><p>இத்தம்பதியருக்கு அண்மையில் நான்காவது ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'அலெக் நீல் வேன்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. </p> <h2>FCRA அச்சம்</h2><p>இந்தியாவின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரைலி மூர் கவலை தெரிவித்த சில நாட்களில் இந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது.</p><p>FCRA சட்டத் திருத்தங்கள் மூலம் இந்தியாவில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சமய அறக்கட்டளைகளை இந்திய அரசு கையகப்படுத்த வாய்ப்புள்ளதாகவும், இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அமெரிக்க எம்பி ரைலி மூர் குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>இதற்கு வியாழக்கிழமையன்று பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், "சட்டமன்ற மற்றும் சட்ட விவகாரங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள்" என்றும், அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் வெளிநாட்டு நிதி உதவிகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் அமலில் உள்ளதையும் சுட்டிக்காட்டியது.</p> <h2>100% வரி </h2><p>ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவாயு தொடர்ந்து வாங்கும் நாடுகளுக்கு தடைகள் மற்றும் 100% வரை இறக்குமதி வரிகளைவிதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் முக்கியமான மசோதாவிற்கு அமெரிக்க மேலவை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முன்னணி 5 நாடுகளுக்குக் கடுமையான தடைகள் மற்றும் கூடுதல் வரிகளை விதிக்க இந்த மசோதா அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது.</p><p>இதில் ரஷியாவிடம் பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மும்பை சித்திவிநாயகர் கோவில் நன்கொடையில் முறைகேடு - விரிவான விசாரணைக்கு முதல்வர் பட்நாவிஸ் உத்தரவு </title><link>https://www.maalaimalar.com/news/national/mumbai-siddhivinayak-temple-donation-scam-18-crore-irregularities-alleged-9-staff-arrested-as-maharashtra-cm-orders-audit-of-5-years-trust-finances</link><comments>https://www.maalaimalar.com/news/national/mumbai-siddhivinayak-temple-donation-scam-18-crore-irregularities-alleged-9-staff-arrested-as-maharashtra-cm-orders-audit-of-5-years-trust-finances#comments</comments><guid isPermaLink="false">e3dc798c-532d-494f-aa06-8fbdcf2b375e</guid><pubDate>Sat, 08 Aug 2026 18:03:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T18:03:26.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,சித்திவிநாயகர் கோவில்,அயோத்தி ராமர் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pwz0yg5y/tn-47.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மும்பை சித்திவிநாயர் கோவில், பட்நாவிஸ்  ]]></media:title><media:description type="html"><![CDATA[ மும்பை சித்திவிநாயர் கோவில், பட்நாவிஸ்  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pwz0yg5y/tn-47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகாராஷ்டிரா </a>மாநிலம் மும்பையில் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது.</p><p>செல்வதை அள்ளித்தருவதாக நம்பப்படும் இந்த சித்திவிநாயகர் கோவிலின் நன்கொடைப் பணத்தில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. </p><h2>பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் நன்கொடை திருட்டுகள்</h2><p>உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை படம் பெருமளவு அறக்கட்டளை ஊழியர்களால் திருடப்பட்ட விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மகாராஷ்டிராவிலும் நன்கொடை திருட்டு புகார்கள் வந்துள்ளன.</p><p>பாஜக ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் நன்கொடை திருட்டு புகார்கள் எழுந்த நிலையில் இதுதொடர்பான விசாரணையில் கோவிலின் காவலாளி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.</p> <h2>சித்தி விநாயகர் கோவில் திருட்டு</h2><p>மும்பையிலுள்ள இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் காணிக்கை வருகிறது. இந்த ஆண்டு ரூ. 182 கோடியும் கடந்த ஆண்டு ரூ. 137 கோடியும் வந்துள்ளது.</p><p>சித்திவிநாயகர் கோவில் நன்கொடைத் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.18 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா லைவர் ராஜ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டைக் முன்வைத்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கோவிலின் 9 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நன்கொடை முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.</p><p>கடந்த 5 ஆண்டுகால கோவில் அறக்கட்டளையின்அனைத்து நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்களை விரிவாகத் தணிக்கை செய்யத் தொடர்புடைய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கடந்த வியாழக்கிழமை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸைச் சந்தித்து, 2023 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தின் நன்கொடை விவரங்களைச் சமர்ப்பித்தனர். இந்த விவரங்களை ஆய்வு செய்த பிறகே, கடந்த 5 ஆண்டுகளின் அனைத்து ஆவணங்களையும் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இஸ்லாமிய &apos;நேட்டோ&apos;.. இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக காய் நகர்த்திய பாகிஸ்தான்  - மெக்கா ஒப்பந்தம் என்ன சொல்கிறது?</title><link>https://www.maalaimalar.com/news/world/islamic-nato-call-pakistan-urges-strong-alliance-of-muslim-nations-against-india-and-israel</link><comments>https://www.maalaimalar.com/news/world/islamic-nato-call-pakistan-urges-strong-alliance-of-muslim-nations-against-india-and-israel#comments</comments><guid isPermaLink="false">47017dc6-4809-48a4-9745-03b759399ed5</guid><pubDate>Sat, 08 Aug 2026 17:09:30 +0000</pubDate><atom:updated>2026-08-08T17:09:30.019Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா பாகிஸ்தான்,கவாஜா ஆசிப்,Khawaja Asif,நேட்டோ,NATO,India-Pakistan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/35dbidcd/tn-45.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மெக்கா ஒப்பந்தம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மெக்கா ஒப்பந்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/35dbidcd/tn-45.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா மற்றும் இஸ்ரேலை எதிர்கொள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு நேட்டோ போன்ற போன்ற வலுவான கூட்டணி அத்தியாவசியம் என்று <a href="https://www.maalaimalar.com/news/world/direct-rail-route-to-india-via-pakistan-russias-new-land-trade-proposal">பாகிஸ்தான் </a>பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசியுள்ளார்.</p><h2>நேட்டோ </h2><p>பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் நேட்டோ என்ற அமைப்பை கொண்டுள்ளன. இந்த நேட்டோ ராணுவம் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையாக செயல்படுகிறது. </p><p>இந்நிலையில் இஸ்லாமிய நேட்டோவை உருவாக்க ஆசிப் அறிவுறுத்தியுள்ளார். </p> <h2>மெக்கா ஒப்பந்தம்</h2><p>நேற்று, மெக்காவில் சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.</p><p>இந்த ஒப்பந்தத்தின்படி சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல், மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும்.</p><p>இது நேட்டோ அமைப்பின் 'பிரிவு 5' கூட்டுப் பாதுகாப்பு விதியை ஒத்த ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது.</p> <figure><img alt="ஆசிப் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ihro30ho/tn-46.jpg" /><figcaption>ஆசிப் </figcaption></figure><h2>ஆசிப் பேச்சு</h2><p>இதையடுத்து பாகிஸ்தான் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், சவூதி, துருக்கி மற்றும் பாகிஸ்தானுக்குப் பயங்கரவாதம் ஒரு பொதுவான அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டுள்ள கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானிலிருந்து செயல்படும் இந்திய ஆதரவு அமைப்புகளே (தாலிபான்) பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துகின்றன எனக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>இஸ்ரேல் உருவாக்கப்பட்ட விதம் மற்றும் அதன் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணைந்த பதிலை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், இஸ்ரேலுடன் சுமுக உறவை ஏற்படுத்துவதால் முஸ்லிம் நாடுகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p>பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதே இஸ்லாமிய கொள்கையின் அத்தியாவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கு ஆசியாவில் தொடரும் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் ஆகியவை இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு ராஜதந்திரத்தை கையில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இந்தியா - பாகிஸ்தான்</h2><p>இருப்பினும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அரசுப் கொள்கையாகப் பயன்படுத்துவதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.</p><p>2025 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏப்பட்ட மோதல் அமைதி ஒப்பந்தம் மூலம் 2 நாட்களில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026#comments</comments><guid isPermaLink="false">b54f04e3-e267-4cba-9339-bc533284a1e5</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:51:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T17:09:09.886Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk">தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு</a></p><p>* தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p>* மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today">2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா</a></p><p>* அமித்ஷா மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார்.</p><p>* அமித்ஷா திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral" rel="nofollow">உனது தந்தைக்கு அடுத்து நீதான்.. ஜீஷான் சித்திக் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்</a></p><p>*  மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை என்ன? </p><p>* கொலை மிரட்டல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்: நகை வாங்குவோர் கலக்கம்!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur" rel="nofollow">எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர்- மாணிக்கம் தாகூர்</a></p><p>* தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>* சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india">ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி: அமெரிக்க செனட் சபை மசோதா ஒப்புதல்-இந்தியாவிற்குப் பெரும் சவாலா?... </a></p><p>*ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கும் அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>*உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-devotees-carrying-mobile-phones-into-temples">கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை: 1-ந்தேதி முதல் பாதுகாப்பு பெட்டகம் அமைக்க உத்தரவு</a></p><p>* தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.</p><p>* ஒலி பெருக்கி மூலமும் இந்த தகவலை அறிவிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out">தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் வெளியீடு!... </a></p><p>*தமிழ்நாட்டின் தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*இத்திட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue">எம்பிக்கள் கூட்டம்: காவிரி பிரச்சனையை திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம் - கனிமொழி</a></p><p>* தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். </p><p>* த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-all-party-mps-meeting-government-not-send-any-letter-to-dmk-leadership">அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் -  திமுக தலைமைக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என தகவல்</a></p><p>* முதலமைச்சர் விஜய் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. </p><p>* மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/mojtaba-khameneis-health-raises-concerns-in-iran" rel="nofollow">ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி உடல்நிலை கவலைக்கிடம்?</a></p><p>* மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று இஸ்ரேலிய ஊடகம் தகவல்.</p><p>* எந்த நேரத்திலும் அவர் இறக்கக்கூடும் என்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே தகவல்கள் பரவி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-demands-withdrawal-of-fcra-bill-to-protect-minorities" rel="nofollow">சிறுபான்மையினர் நலன் காக்க FCRA மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!- மு.க.ஸ்டாலின்</a></p><p>* நாடாளுமன்ற பருவகாலக் கூட்டத்தொடரில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><p>* நாடாளுமன்ற கூட்டுகுழுவிற்குப் பரிந்துரைக்குமாறு அமைச்சரிடம் வலியுறுத்தல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/land-guideline-value-in-tamil-nadu-hiked-by-up-to-60-percent">தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 60% வரை உயர்வு: அரசு அதிரடி நடவடிக்கை!</a></p><p>* ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பதிவாளர் தலைமையில், மண்டல வாரியாகக் கிராமங்களின் நில விவரங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>* சொத்துப் பதிவு மூலம் கிடைக்கும் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் அதிகரிக்கும் என்பதால், அரசின் வருவாய் கணிசமாக உயரும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/who-will-pay-upi-transaction-fees-nirmala-sitharaman-clarifies">யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்?-குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்மலா சீதாராமன்!... </a></p><p>*மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. </p><p>*சாதாரணக் நுகர்வோர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக மேற்கொள்ளும் நபர்-நபர் மற்றும் வணிகர்களுக்கானக் கட்டணங்கள்  போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-enter-final-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அஷ்மிதா சலிஹா</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* இறுதிப்போட்டியில் அஷ்மிதா சலிஹா, சீன வீராங்கனை உடன் மோதுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-beat-ireland-in-second-odi">2வது ஒருநாள் போட்டி: ரஷித் கான் அசத்தலான பந்துவீச்சில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்</a></p><p>* முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 299 ரன்கள் குவித்தது.</p><p>* 6 விக்கெட் வீழ்த்திய ரஷித் கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-new-judges-may-your-work-excel-in-ensuring-equal-justice-and-social-justice">சமநீதியும், சமூகநீதியும் கிடைக்க செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்! - புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் வாழ்த்து</a></p><p>* சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>* மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-builds-safe-access-on-55-feet-palm-tree-for-palm-industry">55 அடி உயர மரத்தில் ரூ.60,000 செலவில் இரும்புப் படிக்கட்டு அமைத்த தூத்துக்குடி இளைஞர்!</a></p> <p>* தூத்துக்குடி இளைஞர் தினகர் 55 அடி பனை மரத்தில் இரும்பு படிக்கட்டு அமைத்தார்.</p><p>* பாதுகாப்பான பதநீர் இறக்க ரூ.60,000 செலவில் வளைவு படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-math-curriculum-storytelling-rajmohan">கணக்கு பாடங்களின் தலைப்புகள் மாற்றம்: இனி கதைகள் வழியே கணித பாடம்!- அமைச்சர் ராஜ்மோகன்... </a></p><p>*மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், ஆர்வம் தூண்டும் வகையிலும் கணித பாடப்புத்தகங்களிலுள்ள சிக்கலான தலைப்புகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.</p><p>*உலர்வான சூத்திரங்களாக இல்லாமல், கதைகளின் ஊடே கணிதக் கருத்துகளை விவரிக்கும் புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/education-allocation-reduced-to-one-third-in-25-years-anbumani-ramadoss">கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 3-ல் ஒரு பங்காக குறைப்பு: அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? அன்புமணி ராமதாஸ்</a></p><p>* 2000-01-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு பார்த்தால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது. </p><p>* 2000-01 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய இரு அமைச்சகங்களும் ஒன்றாக இருந்தன. அப்போது கல்வித்துறைக்கு ரூ.4,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது அன்றைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.1,26,099 கோடியில் 3.92% ஆகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/sai-sudharsan-has-been-ruled-out-of-the-test-series-against-sri-lanka">இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முன்னணி வீரர் திடீர் விலகல்</a></p><p>* முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலே நகரில் தொடங்குகிறது.</p><p>* ஏற்கனவே காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா விலகினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/land-grab-case-charges-framed-against-former-minister-ma-subramanian">நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு</a></p><p>* மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுசதி, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.</p><p> * மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் மறுப்பதாகவும் இது முற்றிலும் தவறு எனவும் தெரிவித்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rain-continue-in-kerala-orange-alert-for-7-districts"> கேரளத்தில் தொடரும் கனமழை - 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை </a></p><p>* கேரளத்தில் பெய்து வரும் கனமழையினால் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டன.</p><p>*  மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/indian-woman-guinness-record-for-longest-hair">மிக நீண்ட கூந்தலுடன் கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்</a></p><p>* ரேணுவின் கூந்தல் ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக அளவிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>* இந்திய கலாச்சாரத்தில், நீண்ட கூந்தல் என்பது பாரம்பரியத்தின் அடையாளமாகவும், மிகுந்த அழகாகவும் கருதப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/delimitation-issue-meeting-of-mps-from-all-parties-led-by-chief-minister-vijay-has-begun">தொகுதி மறுவரையறை- முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது</a></p><p>* த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். </p><p>* ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-message-to-gen-zs-at-iit-event-have-courage-to-seek-solutions">கேள்வி மட்டும் கேட்காதீர்கள், விடையைக் கண்டறியுங்கள்: ஐ.ஐ.டி. விழாவில் பிரதமர் பேச்சு</a></p><p>* இந்தியாவின் ஸ்டார்ட்அப் (தொடக்கநிலை நிறுவனங்கள்) புரட்சியை வடிவமைத்து, அதற்கு வலுசேர்த்தவர்கள் உங்களைப் போன்ற, இதே தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.</p><p>* சவால்களைப் பார்த்து அஞ்சாமல், அவற்றை வாய்ப்புகளாக மாற்றி, புதிய பாதைகளை உருவாக்குவதே Gen-Z இளைஞர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/from-goat-herder-to-district-collector-vanmathis-inspiring-journey">ஈரோட்டில் ஆடு மேய்த்த பெண்... இன்று மாவட்ட கலெக்டர்!</a></p><p>* ஈரோட்டில் ஆடு மேய்த்து படித்து தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மகாராட்டிராவில் பணியாற்றுகிறார்.</p><p>* வறுமையிலும் பெற்றோர் ஆதரவுடன் கணினி முதுகலை பட்டம் முடித்து 2015 UPSC தேர்வில் அகில இந்திய 152-வது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-new-rules-for-swiggy-zomato-zepto-electric-vehicles-compulsory">ஸ்விகி, சொமேட்டோ, செப்டோ டெலிவரி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு - மின்சார வாகனம் கட்டாயம்!</a></p><p>* மகாராஷ்டிரா டெலிவரி நிறுவனங்களுக்கு மின்சார பைக் பயன்படுத்த கட்டாயமாக்கியது.</p><p>* ஒவ்வொரு ஆர்டரிலும் 2% ஓட்டுநர் நல நிதிக்கு செல்லும், ஜிபிஎஸ் காப்பீடு உரிமம் கட்டாயம் கட்டண உச்சவரம்பு விதிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/womens-team-star-ashleigh-gardners-ex-wife-blasts-cricket-australia-over-cheating-scandal">சக வீராங்கனையுடன் தொடர்பு: ஆஸ்திரேலிய மகளிர் அணி துணை கேப்டன்மீது முன்னாள் மனைவி புகார்</a></p><p>* ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணை கேப்டனாக இருந்து வருபவர் ஆஷ்லே கார்ட்னர்</p><p>* மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணி கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/why-india-opposes-chinas-new-map">சீனா வெளியிட்ட புதிய வரைபடம் – இந்தியா ஏன் எதிர்ப்பு?</a></p><p>* சீனா அருணாச்சலத்தை ஸாங்னான் என பெயரிட்டு வரைபடம் வெளியிட்டது.</p><p>* லாங்ஜூ தக்லா போர் நினைவிடங்கள் வரைபடத்தில் முக்கியமாக சேர்கப்பட்டன</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-custodial-death-in-palani-land-scam-case">காவல்நிலையம், சிறையில் குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது: நயினார் நாகேந்திரன்</a></p><p>* பழனி நிலமோசடி வழக்கில் தொடரும் மர்மங்கள்!</p><p>* அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக்காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mps-meet-oppose-constituency-delimitation">தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக எம்பிக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்: திருமாவளவன் எம்பி பேட்டி!... </a></p><p>*மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை காரணமாகக் கூடுதல் இழப்பைச் சந்திக்க நேரிடும்.</p><p>*கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றித் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒரே குரலில் தொகுதி மறுவரையறையை எதிர்த்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/charlie-chauhan-marries-cricketer-ramandeep-singh">நடிகையை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்</a></p><p>* சார்லி சவுகானும், ரமண் தீப்பும் கடந்த 8 ஆண்டாகக் காதலித்து வந்தனர்.</p><p>* ஐ.பி.எல். கோப்பையை கே.கே.ஆர். வென்றபோது அந்த அணியில் ரமண்தீப் சிங் இடம்பெற்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-minister-vignesh-says-big-lobbies-tried-to-approach-us-in-many-ways">பெரிய பெரிய லாபிகள் பல வழிகளில் எங்ககிட்ட பேச முயற்சி பண்ணாங்க: அமைச்சர் விக்னேஷ்</a></p><p>* கடந்த ஆட்சியில எனது துறையில் ஊழல்கள் நடந்திருக்கு. நான் ஒரு விசயத்தை சொல்லனும்னு நினைத்தேன். இந்த துறையில் சில மாற்றங்கள் இல்ல, பல மாற்றங்கள் கொண்டு வருகிறோம்.</p><p>* இதனால் 1000 கோடி ரூபாய்க்கு மேல் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள், அடிமட்டத்தில் உள்ள சில ஊழியர்கள் என பல பேர் பாதிக்கப்படுகிறார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/iru-vijayabaskar-isakki-subbaiah-maragatham-kumaravelukku-thvekavil-mukkiya-poruppu">எம்.ஆர். மற்றும் சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேலுக்கு த.வெ.க.-வில் முக்கிய பொறுப்பு</a></p><p>* Dr. C. விஜய பாஸ்கர் MBBS., முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர்</p><p>* இசக்கி சுப்பையா முன்னாள் அமைச்சர், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர்</p>]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து 4,052 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்: அமைச்சர் சர்பானந்த சோனோவால்</title><link>https://www.maalaimalar.com/news/national/4052-sailors-rescued-safely-from-hormuz-strait-says-minister-sarbananda-sonowal</link><comments>https://www.maalaimalar.com/news/national/4052-sailors-rescued-safely-from-hormuz-strait-says-minister-sarbananda-sonowal#comments</comments><guid isPermaLink="false">f5b037ef-501d-4510-9b45-e0a5cb003e63</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:26:48 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:26:48.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மாலுமிகள்,Sarbananda Sonowal,சர்பானந்த சோனாவால்,Hormuz,ஹார்முஸ் ஜலசந்தி,Indian seafarer</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/rusxbwom/Untitled-design-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வளைகுடா மோதலுக்கு மத்தியில் 4,052 இந்திய மாலுமிகள் தாயகம் திரும்பினர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ Hormuz ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/rusxbwom/Untitled-design-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வளைகுடாப் பகுதியிலிருந்து இதுவரையில் 4,052 மாலுமிகள் தாயகம் திரும்பி அழைத்து வரப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.</p><h3><strong>இந்திய மாலுமிகள் மீட்பு</strong></h3><p>இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “ஆகஸ்ட் 3 நிலவரப்படி, இந்தியாவை நோக்கி வந்த 62 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்துள்ளன. இவற்றில், இந்தியாவை சேர்ந்த 23 கப்பல்களும், வெளிநாட்டை சேர்ந்த 39 கப்பல்களும் அடங்கும்.</p><p>மாறிவரும் கடல்சார் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, கடல்சார் நிர்வாக தலைமை இயக்குநரகம் (DGMA) தனது அறிவுரைகளைத் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.</p><p>இந்திய மாலுமிகளை ஏற்றிச் செல்லும் இந்திய மற்றும் வெளிநாட்டுக் கொடி கொண்ட கப்பல்களுக்கு, கூடுதல் எச்சரிக்கை, பயணத்திற்கேற்ற பாதுகாப்பு மதிப்பீடுகள், பாதுகாப்பு அறிவுரைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல் மற்றும் சம்பவங்களை உடனடியாகத் தெரிவித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி DGMA ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.</p><p>மேலும், பாப்-எல்-மண்டேப் ஜலசந்தி, தெற்கு செங்கடல் மற்றும் அதை ஒட்டிய ஏமன் கடல் பகுதிகளில் இயங்கும் கப்பல்களுக்கு ஓர் அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அதில், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் மாலுமிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், பாதுகாப்பு மற்றும் நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், கூடுதல் இடர் தணிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்புச் சூழல் தொடங்கியதிலிருந்தே, இந்திய மாலுமிகளைப் பாதுகாப்பதற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>இவற்றில், 24x7 செயல்படும் ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறையை நிறுவுதல், நிகழ்நேரக் கப்பல் மற்றும் பணியாளர் தரவுத்தளத்தைப் பராமரித்தல், மற்றும் கப்பல்கள், இந்திய மாலுமிகளின் நடமாட்டம், சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகளைக் கண்காணிக்க ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒரு சூழ்நிலை அறிக்கையை வெளியிடுதல் ஆகியவை அடங்கும்.</p><p>உடனடி அறிக்கை அளிப்பதையும் பதிலளிப்பதையும் உறுதி செய்வதற்காக, கடல்சார் விபத்துகள் குறித்து புகாரளித்தல், நெருக்கடி மேலாண்மை மற்றும் மாலுமிகளின் குறைகளை தீர்த்தல் ஆகியவற்றிற்காக பிரத்யேக 24x7 டிஜிட்டல் தளத்தையும் கடல்சார் மேலாண்மை இயக்குநரகம் உருவாக்கியுள்ளது.</p><p>கடல்சார் தலைமை இயக்குநர், வெளியுறவு அமைச்சகம், இந்திய கடற்படை மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைப் பேணி வருகிறார்.</p><p>இது தவிர, சர்வதேச கடல்சார் அமைப்பு, இங்கிலாந்து கடல்சார் போக்குவரத்து ஆணையம், கடல்சார், கடலோர மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு முகமை மையம் மற்றும் கடலோர நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டு வழிமுறையின் மூலம், சிக்கித் தவிக்கும் மாலுமிகளை மீட்பதற்காக சர்வதேச ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>பாதிக்கப்பட்ட மாலுமிகளின் குடும்பத்தினருடன் நெருங்கிய மற்றும் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதன் மூலம் நலத்திட்டங்களும் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>மேலும், உயிரிழப்பு ஏற்படும் சூழல்களில் இழப்பீடும் அளிக்கப்படுகிறது. மாலுமிகள் நலநிதி சங்கம் மூலம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டும் வருகிறது," என்று அமைச்சர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தனித் தீர்மானம்: தமிழக அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-in-assembly-against-delimitation-tamil-nadu-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-in-assembly-against-delimitation-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">cefb2e53-cc97-4028-8f33-4e01f9a14fb9</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:04:58 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:04:58.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/opxb44cs/TVCMVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/opxb44cs/TVCMVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.</p><p>இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் (57) அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்தக் கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் (11), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (1) மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p><h2>புதிய மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்</h2><p>இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கப்படாமல் காப்பது குறித்தும், தமிழ்நாட்டின் தற்போதைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்ந்து நீடிப்பது குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக இருக்கும்போதே, ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாராளுமன்றத்தில் பேசக் கிடைக்கும் நேரம் குறைவாக உள்ளது எனவும், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தங்களது கருத்துக்களை முழுமையாக எடுத்துக்கூறுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி கூறினர். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மக்கள்தொகைக்கேற்ப அதிகப்படுத்தப்படவில்லை எனவும் கூறினர்.</p><p>தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் இந்த ஒன்றிய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை இப்போதுள்ள எண்ணிக்கையிலேயே நிரந்தரமாக நிலைநிறுத்திடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையினை பாராளுமன்றத்தில் நிலை நிறுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை குறித்த ஒன்றிய அரசின் அரசமைப்பு சட்டத் திருத்தம் மற்றும் புதிய மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.</p><p>மேலும், 2026-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பின் அரசமைப்பு பிரிவு 81(2)(a)-ன் கீழ் தென் மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், சட்ட முன்மொழிவை பாராளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும். சர்வ வல்லமை பெற்றதாக தொகுதி மறுவரையறை ஆணையம் உள்ளது. இந்த அதிகாரத்தை குறித்து பாராளுமன்றத்திற்கே இறுதிசெய்யும் அதிகாரம் இருக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.</p><p>அனைத்து மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 50% வரை உயர்த்தலாம் என்ற கருத்து மக்களை திசைதிருப்பும் ஆசை வார்த்தை (50% increase of existing Lok Sabha seats is an illusion to sweeten the pill) என்ற கருத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்து வைத்தனர்.</p><h2>தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படும்</h2><p>இந்தக் கூட்டத்தின்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை முன்மொழிவு செயல்படுத்தப்பட்டால், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படுமென்பதால், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கை பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், அதற்குத் தேவையான மற்றும் உரிய சட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்கள்.</p><p>மேலும், தற்போது மக்களவை: மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், இதில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்கள்.</p><h2>தனித்தீர்மானம்</h2><p>இதனைத் தொடர்ந்து இறுதியாக தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாகப் பாதுகாத்திட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றிட ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.</p><p>கூட்டத்தின் இறுதியில், தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை கைவிடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையினை நிலைநிறுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுத்தார்கள்.</p><p>இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பீகாரில் மதுவிலக்கிற்கு பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மீண்டும் கொண்டு வரலாம்- NCAER</title><link>https://www.maalaimalar.com/news/national/bihar-liquor-ban-fails-crimes-against-women-up-ncaer-report</link><comments>https://www.maalaimalar.com/news/national/bihar-liquor-ban-fails-crimes-against-women-up-ncaer-report#comments</comments><guid isPermaLink="false">a648d70f-0ce4-46f3-abe8-1cace8801955</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:52:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:52:49.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,alcohol,மதுவிலக்கு,பொருளாதார ஆலோசனைக் குழு,NCAER</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2d9qpeuc/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மதுவிலக்கு தோல்வி, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உயர்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Liquor Ban ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2d9qpeuc/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதில் மதுவிலக்கு தோல்வியடைந்துள்ளதாலும், அது கள்ளச்சாராயம் மற்றும் மாற்று போதைப்பொருட்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாலும், பீகார் தனது மதுவிலக்கை திரும்பப் பெற வேண்டும் என்று தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மன்றம் (NCAER) என்ற பொருளாதார சிந்தனைக் குழுவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>‘பீகாரின் வளர்ச்சி சாதனைகள், முடிக்கப்படாத செயல்திட்டங்கள் மற்றும் முன்னோக்கிய பாதை குறித்த பேரியல் கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கை, மதுபான மீதான கலால் வரி தடையை மீட்டெடுப்பது, மாநிலத்தின் வருவாயை 14 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.</p><p><strong>பீகாரில் மதுவிலக்கு</strong></p><p>பீகாரில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மதுவிலக்கு கொள்கையை, ரத்னா சஹாய் தலைமையிலான பொருளாதார நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.</p><p>இதையடுத்து அந்த நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதில் மதுவிலக்கு தோல்வியடைந்துள்ளது. </p><p>மது அருந்துதல் குடும்ப வன்முறைக்கு கணிசமாக பங்களிக்கிறது என்ற நம்பிக்கையும், குடும்பங்கள் முன்பு மதுவுக்காக செலவழித்த பணத்தை அதிக பயனுள்ள தேவைகளுக்குத் திருப்பிவிடும் என்ற நம்பிக்கையுமே மதுவிலக்கை அறிமுகப்படுத்துவதற்கான முதன்மைக் காரணங்களாக இருந்தது.</p><p>மகளிர் அமைப்புகளும் ஆர்வலர்களும் கூட, மதுவிலக்கு மது தொடர்பான துஷ்பிரயோகத்தைக் குறைக்கும் என்று வாதிட்டு, இந்தத் தடையை வலுவாக ஆதரித்திருந்தனர்.</p><p>இந்தத் தடை பயனுள்ளதாக இருந்ததா என்பதை மதிப்பிடுவதற்கு இப்போது எங்களிடம் போதுமான தரவுகளும் தகவல்களும் உள்ளன. மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பீகாரில் பெண்களுக்கு எதிரான பதிவான குற்றங்கள் குறையவில்லை.</p><h3><strong>பொருளாதார சிந்தனைக் குழு அறிக்கை</strong></h3><p>மாறாக 2016-க்குப் பிந்தைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான மொத்தப் பதிவான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆய்வின்படி, மதுவிலக்குக்கு பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பரவலாகக் குறைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.</p><p>அதே சமயம், சட்டவிரோத மதுபான வர்த்தகம் கணிசமாக அதிகரித்ததால், மது அருந்துதல் அதிகரித்தது. குற்றம் மற்றும் ஊழல் பெருகியது. மேலும் சட்டவிரோத போதைப்பொருட்கள் போன்ற மாற்றுச் சேர்க்கைப் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்தது.</p><p>மதுவிலக்கு மாநில வருவாயையும் பாதித்துள்ளது. மதுவிலக்குப் பிறகு பீகார் குறிப்பிடத்தக்க நிதிப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. தடைக்கு முந்தைய மூன்று ஆண்டுகளில், மதுபானத்தின் மீதான கலால் வரி மாநிலத்தின் சொந்த வருவாயில் சுமார் 14 சதவீதமாக இருந்தது.</p><p>அதே நேரத்தில், கண்காணிப்பு, அமலாக்கம் மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் அதிக செலவினங்களை மேற்கொண்டது. இது நிதி நெருக்கடிகளை மேலும் அதிகரித்தது.</p><p>மதுபான மீதான கலால் வரியை அதன் முந்தைய நிலைகளுக்கு மீண்டும் கொண்டுவந்தால், மாநில வருவாயில் அந்த வரியின் பங்களிப்பை சுமார் 14 சதவீதமாக மீட்டெடுக்க உதவும்” என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டது.</p><h3><strong>பீகாரில் மீண்டும் மதுபான விற்பனை</strong></h3><p>இந்தத் தடை உத்தரவு அதன் நோக்கம் கொண்ட நோக்கங்களை அடையவில்லை என்றும் மாறாக அது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கும், மாநில வருவாய் இழப்பிற்கும், அமலாக்கச் செலவினங்கள் உயர்வதற்கும் வழிவகுத்துள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை முடிவு செய்தது.</p><p>பீகார் மாநிலம் நாட்டின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகவும், அதே சமயம் மிகவும் ஏழ்மையான மாநிலமாகவும் நீடிக்கிறது என்பதையும் குறிப்பிட்டது.</p><p>அந்த ஆய்வறிக்கையின்படி, 2026-ல் பீகாரின் மக்கள் தொகை 13.2 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மக்கள் தொகையில் 9 சதவீதத்திற்கும் அதிகமாகும். மேலும், இறையாண்மை கொண்ட நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் மக்கள் தொகையை விடவும், பீகாரில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது என்றும் அது குறிப்பிட்டது.</p>]]></content:encoded></item><item><title>எம்.ஆர். மற்றும் சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேலுக்கு த.வெ.க.-வில் முக்கிய பொறுப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/iru-vijayabaskar-isakki-subbaiah-maragatham-kumaravelukku-thvekavil-mukkiya-poruppu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/iru-vijayabaskar-isakki-subbaiah-maragatham-kumaravelukku-thvekavil-mukkiya-poruppu#comments</comments><guid isPermaLink="false">4397c0c6-2825-4175-94df-cdb2a96c8957</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:30:22 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:30:22.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,MR Vijayabaskar,எம்ஆர் விஜயபாஸ்கர்,tvk,Isakki Subbaiah,இசக்கி சுப்பையா,சி விஜயபாஸ்கர்,Maragatham Kumaravel,மரகதம் குமரவேல்,C Vijayabaskar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/bssjx391/TVKvijayabaskar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/bssjx391/TVKvijayabaskar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மக்கள் தன்னெழுச்சியாகவும் பெருந்திரளாகவும் தங்களின் ஆதரவை அளித்து வருவதை இந்த நாடே அறியும். தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்காக எப்பொழுதுமே முதலும் முன்னோடியுமாக இயங்கி வருகிறது. இதனால் அதனுடைய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது.</p><p>அந்த வகையில் மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களாக பின்வருபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.</p><h2>மாவட்ட அமைப்புச் செயலாளர்கள்:-</h2><p>1. Dr. C. விஜய பாஸ்கர் MBBS., முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர்</p><p>2. M.R. விஜய பாஸ்கர். முன்னாள் அமைச்சர். கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்</p><p>3. இசக்கி சுப்பையா முன்னாள் அமைச்சர், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர்</p><h2>துணைப் பொதுச் செயலாளர்கள்:-</h2><p>1. K. மரகதம் குமரவேல் ExMLA, மதுராந்தகம்</p><p>2. S. ராஜகோபால். நாங்குநேரி</p><p>3. H. ஜாகீர் உசேன், அம்பாசமுத்திரம்</p><p>4. V. குமார் ITI, பல்லாவரம்</p><p>5. S. யுவராஜ். சிங்காநல்லூர்</p><p>6. C.V. தினகரன், திருப்போரூர்</p><p>7. K. மணிகண்டன். DCS, ஆவடி</p><p>8. R.S. மணிகண்டன், வீரபாண்டி</p><p>9. K. அருள்ராஜ், திருவெறும்பூர்</p><p>10. SDR. சாமுவேல் ராஜ் DCT, தூத்துக்குடி</p><p>புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச் செயலாளர் என்.ஆனந்தின் வழிகாட்டுதலின்படியும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>விளிம்புநிலை மக்களை சமூகத்தில் முதன்மையான இடத்திற்கு கொண்டு வருவது அவசியம்: மோகன் பகவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/bringing-marginalised-communities-to-the-mainstream-is-essential-mohan-bhagwat</link><comments>https://www.maalaimalar.com/news/national/bringing-marginalised-communities-to-the-mainstream-is-essential-mohan-bhagwat#comments</comments><guid isPermaLink="false">5104cf2d-cedf-442e-98af-897d3982d76b</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:20:04 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:20:04.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mohan Bhagwat,RSS,மோகன் பகவத்,ஆர்எஸ்எஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5mjpnqfe/Untitled-design-15.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ RSS சமூக நீதி விளிம்புநிலை மக்களுக்கு முதன்மை: மோகன் பகவத் பர்தி சமூக முன்னேற்றம் வலியுறுத்தல்]]></media:title><media:description type="html"><![CDATA[ Mohan bhagwat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5mjpnqfe/Untitled-design-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டை உண்மையான அர்த்தத்தில் (விஸ்வகுரு) ஆக்குவதற்கு, விளிம்புநிலை மக்களை சமூகத்தில் முதன்மையான இடத்திற்கு கொண்டு வருவது அவசியம் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.</p><p>மகாராஷ்டிராவின் புல்டானா மாவட்டத்தில் பர்தி சமூகத்தினருக்கான பள்ளியில் மூன்று விளையாட்டு மைதானங்களை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் திறந்து வைத்தார். </p><p>அப்போது உரையாற்றிய அவர், “இன்று நாம் ‘அறிவிப்பு நீக்கப்பட்டவர்கள்’(de-notified) அல்லது 'பட்கே-விமுக்த்' என்று அழைக்கும் சமூகம், ஒரு காலத்தில் அறிவு வழங்குபவர்களாக இருந்தனர்.</p><p>அவர்கள் தங்கள் அறிவை தன்னலமின்றி பகிர்ந்துகொள்ள முன்வந்தனர்; ஆனால் காலப்போக்கில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால், ஒட்டுமொத்த பர்தி சமூகமும் ஒரு குற்றப் பழங்குடியினர் என்று முத்திரை குத்தப்பட்டது.</p><p>இது அவர்களை வளர்ச்சியில் வெகுதூரம் பின்தங்கச் செய்தது. இந்திய சமூகம் ஒரு காலத்தில் முழுமையாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது, ஆனால் அது வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களால் அடிமைப்படுத்தப்பட்டதால், பிளவுபட்டது.</p><p>இதன் விளைவாக, சமூகத்தில் விளிம்புநிலை குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அப்படியிருந்தும், இந்த சமூகங்கள் ஒருபோதும் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை; அவர்கள் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடினர்.</p><p>இந்த ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், பர்த்தி சமூகத்தின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறது” என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சிவசேனா (யுபிடி) தலைவர் அம்பாதாஸ் தான்வே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>பெரிய பெரிய லாபிகள் பல வழிகளில் எங்ககிட்ட பேச முயற்சி பண்ணாங்க: அமைச்சர் விக்னேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-minister-vignesh-says-big-lobbies-tried-to-approach-us-in-many-ways</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-minister-vignesh-says-big-lobbies-tried-to-approach-us-in-many-ways#comments</comments><guid isPermaLink="false">b6f9c617-a3af-4499-bb91-d00c857ce31c</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:03:08 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:03:08.962Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tasmac,டாஸ்மாக்,அமைச்சர் விக்னேஷ்,Minister Vignesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1znd8oyy/MinisterVignesh0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1znd8oyy/MinisterVignesh0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மது விலக்கும் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் இன்று கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>கடந்த ஆட்சியில எனது துறைல ஊழல்கள் நடந்திருக்கு. நான் ஒரு விசயத்தை சொல்லனும்னு நினைத்தேன். இந்த துறையில் சில மாற்றங்கள் இல்ல, பல மாற்றங்கள் கொண்டு வருகிறோம். இதனால் 1000 கோடி ரூபாய்க்கு மேல் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள், அடிமட்டத்தில் உள்ள சில ஊழியர்கள் என பல பேர் பாதிக்கப்படுகிறார்கள்.</p><p>எவ்வளவோ வகையில், வழியில் என்னை அப்ரோச் செய்யவும், அணுகவும் முயற்சி செய்தாங்க. இது தமிழக வெற்றிக் கழத்தின் ஆட்சி. தமிழக முதல்வரோட ஆட்சி. இங்கு பணத்தால எந்த விசயமும் செய்ய முடியாது. பணம் கொடுக்கிறோம். எப்படியாவது இருக்கிற செட்டப்ப விடுங்க எனக் கூறுகிறார்கள். அதற்கு நாங்கள் வரல. மக்கள் மாற்றம் வேண்டும் என்று எங்களை தேர்வு செய்துள்ளனர். அதற்காக வந்திருக்கோம்.</p><h2>பெரிய பெரிய லாபிகள்</h2><p>பெரிய பெரிய லாபிகள் என்ன செய்கிறார்கள் என்றால், எங்களை அப்ரோச் செய்ய முடியல. இப்போது எங்களுடைய இமேஜ ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு தெரியும். அவர்களால் இந்த மண்ணில் எதுவும் செய்ய முடியாது. மாற்றம் நடந்தே தீரும். டாஸ்மாக் மட்டும் கிடையாது. சுற்றுச்சூழல் துறையிலும் சரி மாற்றம் நடந்தே தீரும். அதனால் ஆபாசத்திற்கும், அவதூறுக்கும் பயபடுவோம் என்று நினைத்து விடாதீர்கள். அது பெரிய தோல்வியை கொடுக்கும்.</p><p>மதுபான பாட்டில்களில் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு எனப் போடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் உள்ள போர்டுகளில் இந்த வாசகம் இல்லை என்றால் போடப்படும்.</p><p>இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>யஷ் நடித்துள்ள டாக்சிக் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது - போதைப்பொருள் மாஃபியா பின்னணியில் கதைக்களம்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/yash-starrer-toxic-trailer-released-drug-mafia-backdrop</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/yash-starrer-toxic-trailer-released-drug-mafia-backdrop#comments</comments><guid isPermaLink="false">2c5f381f-0f12-41e1-a443-9a0d81bb7917</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:46:13 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:46:13.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Yash,Toxic,டாக்சிக்,யஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/27e9nvp4/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ யஷ் ஆக்ஷன் கம்பேக்: கோவா போதைப்பொருள் மாஃபியா பின்னணியில் கேங்ஸ்டர் காதல் கதை]]></media:title><media:description type="html"><![CDATA[ Yash’s Toxic Trailer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/27e9nvp4/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ திரைப்படத்தின் டிரெய்லரை இன்று தயாரிப்பு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. இயக்குனர் கீது மோகன்தாஸ் உருவாக்கியுள்ள இந்த படம், ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஷன் படங்களில் ஒன்றாக உள்ளது. </p><p>கே.ஜி.எஃப் தொடரின் வெற்றிக்குப் பிறகு, யஷ் நடித்துள்ள டாக்சிக் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. கதை பின்னணியில் அதிரடி ஆக்ஷன், காதல் மற்றும்  கேங்ஸ்டர் பின்னணி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><p>கீது மோகன்தாஸ் இயக்கிய 'டாக்சிக்' திரைப்படத்தில், யஷ் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.</p><h3><strong>டாக்சிக் கதைக்களம்</strong></h3><p>இந்த கேங்ஸ்டர் படம், 1940 மற்றும் 1970க்கு இடைப்பட்ட காலத்தில் கோவாவின் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் மாஃபியா வலைய மைப்புகளின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>கே.ஜி.எஃப் படத்திற்குப் பிறகு யஷ் மற்றொரு ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.</p><p>இந்த டாக்சிக் டிரெய்லரில் காதல் மற்றும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது யஷ்-இன் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சினிமா அனுபவத்தை வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த மாத இறுதியில்(26ஆம் தேதி) டாக்சிக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Toxic?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Toxic</a> : A Fairy Tale for Grown-Ups <br><br>Trailer out now<br><br>Kannada:<a href="https://t.co/YuoYcOfAlv">https://t.co/YuoYcOfAlv</a><br>Hindi:<a href="https://t.co/1RCrndyRsk">https://t.co/1RCrndyRsk</a><br>Tamil:<a href="https://t.co/TsG7zsWo9D">https://t.co/TsG7zsWo9D</a><br>Telugu:<a href="https://t.co/XXEwfTCcky">https://t.co/XXEwfTCcky</a><br>Malayalam:<a href="https://t.co/xUJSup0lle">https://t.co/xUJSup0lle</a><a href="https://x.com/hashtag/ToxicTheMovie?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ToxicTheMovie</a> In Cinemas Worldwide from 26-08-2026.… <a href="https://t.co/oWaxu1HTl5">pic.twitter.com/oWaxu1HTl5</a></p>&mdash; KVN Productions (@KvnProductions) <a href="https://x.com/KvnProductions/status/2086082816861941910?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் 2026: சதுர்வேத் ருத்ரதாண்டவம்- கோவையை வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றது மதுரை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-panthers-beat-kovai-kings-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-panthers-beat-kovai-kings-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">d63ddfe5-6105-4fe4-bf9c-2255085b1855</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:31:16 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:31:16.085Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்,chaturved,சதுர்வேத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/xjkzuxpd/chaturved1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ chaturved]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/xjkzuxpd/chaturved1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டி.என்.பி.எல். தொடரின் 7வது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி இமாலய இலக்கை எட்டி சாதனை படைத்தது. </p><p>டிஎன்பிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் களமிறங்கிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில்  4 விக்கெட்டுக்கு 239 ரன்களைக் குவித்தது.</p><h2>சித்தார்த் அதிரடி</h2><p>ஆண்ட்ரே சித்தார்த் 42 பந்தில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பொறுப்புடன் ஆடிய பாலசுப்ரமணியன் அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 84 ரன்னில் ஆட்டமிழந்தார். லோகேஷ்வர் 38 ரன்னில் அவுட்டானார். </p><p>கடைசி நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தடைபட்டது. </p><p>மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் குர்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டும், சரவணன், பெரியசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மதுரை அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். தொடக்க ஆட்டக்காரர் ராம்குமார் 6 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சித்தார்த் மகாதேவன் 41 ரன்னில் அவுட்டானார்.</p><h2>சதுர்வேத் சரவெடி</h2><p>என்.எஸ்.சதுர்வேத் ஆரம்பத்தில் மெதுவாக ஆடினார். அதன்பின், ருத்ர தாண்டவம் ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.</p><p>அதிரடியாக ஆடிய அவர் 47 பந்துகளில் 7 சிக்சர், 15 பவுண்டரிகளை விளாசி 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p>அடுத்து இறங்கிய கேப்டன் பாலச்சந்தர் அனிருத் 19 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 37 ரன் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.</p><p>இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>எட்டப்பர்கள் யார், முதுகில் குத்தியது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்: கனிமொழி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-are-traitors-and-backstabbers-tamil-people-know-well-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-are-traitors-and-backstabbers-tamil-people-know-well-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">2ca388e5-0855-4a90-b07c-bd6963a071ab</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:05:03 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:05:03.307Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி எம்பி,மேகதாது அணை,Kanimozhi MP,Megadadu Dam,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/fn8owe9t/Untitled-design-13.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi M.P]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/fn8owe9t/Untitled-design-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கும் தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில், திமுக அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.</p><p>இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் மக்களவை எம்.பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-  </p><h3><strong>தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு</strong></h3><p>திராவிட முன்னேற்ற கழகம் மிகத்தெளிவாக, முதன்முதலில் இந்த தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஐந்து மாநில முதல்வர்களை ஒன்றிணைத்து சென்னையில் ஒரு கூட்டத்தை நடத்தினார். </p><p>அந்த கூட்டத்தில் காங்கிரஸ் உட்பட சில முதலமைச்சர்கள் கலந்துகொண்டு, அந்த தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டார்கள். </p><p>அந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை முற்றிலுமாக நாங்கள் எதிர்க்கவில்லை. நியாயமான தொகுதி மறுவரையறை என்பது தான் அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாக இருந்தது.</p><p>இதையடுத்து தேர்தல் நேரத்தில் தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்ட போது, எங்களுக்கு தேர்தல் முக்கியமில்லை, தமிழ்நாட்டின் உரிமைகள் தான் முக்கியம் என திமுக தலைவர் கூறினார்.</p><p>மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எங்களிடம், இந்த மசோதாவிற்கு எதிராக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கூறினார்.</p><p>கடந்த காலத்தில் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது, திமுக-வால் ஏற்றுக்கொள்ள முடியாத சில விஷயங்களை எடுத்து கூறினோம்.</p><p>அப்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த மசோதாவில், எந்த இடத்திலும் தமிழ்நாட்டிற்கான பங்கு எந்த விதத்திலும் மாறாது என்று குறிப்பிடப்படாமல் இருந்தது.</p><p>அதனால் அந்த மசோதாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாங்கள் நிராகரித்தோம்.</p><p>இதுவரையில் ஒன்றிய அரசாங்கம் எங்களை அழைத்து பேசியதாக தகவல் இல்லை. ஒருவேளை ஒருசில நபரிடம் பேசி இருக்கலாம். ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தை அழைத்து, இந்த மசோதா குறித்து கருத்து கேட்கவில்லை.</p><p>தற்பொழுது இந்த மசோதா அறிமுகம் செய்யப்படமாட்டாது என்பது தான் எங்களுக்கு வந்த தகவலாக உள்ளது.</p><p>மேலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இருக்கும் மசோதா குறித்து, எந்தவிதமான தகவலோ அல்லது மசோதாவின் நகலோ எங்களிடம் இல்லை.</p><h3><strong>மேகதாது விவகாரத்தை திசை திருப்ப முயற்சி</strong></h3><p>அப்படி இருக்கும்போது தமிழகத்தில் எதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்.</p><p>ஒரு கூட்டம் நடத்த வேண்டுமென்றால், அரசாங்கம் கட்சி தலைமைக்கு தான் கடிதம் எழுத வேண்டும். ஆனால் தலைமை செயலாளர் தனிப்பட்ட முறையில் எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><p>எங்கள் திமுக தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு, கட்சி தலைமைக்கு தான் கடிதம் எழுதினார். எனவே, இதுவே முறையில்லாத ஒன்றாக உள்ளது.</p><p>மேகதாது மற்றும் விவசாயிகள் பிரச்சனைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், அதை திசை திருப்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட கூடாது என்று தான் நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.</p><h3><strong>யார் எட்டப்பர்கள்</strong></h3><p>யார் எட்டப்பர்கள் என்றும், தேர்தலுக்கு பின்பு யார் முதுகில் குத்தினார்கள் என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.</p><p>திமுகவும், அதிமுகவும் மேகதாது விஷயத்தில் ஒருமித்த கருத்தைதான் கொண்டுள்ளோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பிரபல கால்பந்து வீரர் மெஸ்சியின் தந்தை காலமானார்</title><link>https://www.maalaimalar.com/sports/football/jorge-messi-lionel-messis-father-dies-at-68</link><comments>https://www.maalaimalar.com/sports/football/jorge-messi-lionel-messis-father-dies-at-68#comments</comments><guid isPermaLink="false">e7c54909-c0e1-487f-ab92-cf624f7feaef</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:55:55 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:55:55.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Lionel Messi,jorje messi,லியோனல் மெஸ்சி,ஜோர்ஜ் மெஸ்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/jw9sv1vk/messi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ messi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/jw9sv1vk/messi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கால்பந்து வீரரான மெஸ்சியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்சி இன்று காலமானார்.</p><p>உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினா வீரரான மெஸ்சியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்சி (68).</p><p>உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜோர்ஜ் மெஸ்சி அர்ஜென்டினாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><p>இந்நிலையில், ஜோர்ஜ் மெஸ்சி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>லியோனல் மெஸ்சியின் தந்தை மறைவிற்கு கால்பந்து ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announces-statewide-aiadmk-protest-against-tvk-farm-loan-policy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announces-statewide-aiadmk-protest-against-tvk-farm-loan-policy#comments</comments><guid isPermaLink="false">7c6c4608-dcb2-43e0-8fb2-29eceeee9393</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:27:24 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:27:24.695Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,பயிர்க்கடன்,மேகதாது அணை விவகாரம்,mekedatu dam issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ibvhmre1/EPS00001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ibvhmre1/EPS00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ. 75,000/- வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ. 75,000/-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.</p><h2>மேகதாது அணை விவகாரம்</h2><p>பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, அதிமுக சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.</p><p>த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும், அப்படி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.</p> <p>இந்நிலையில், த.வெ.க. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை. எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு, மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில், வருகின்ற 14.8.2026- வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, ஏனைய வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்; கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள்; கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பொது நிதியில் இருந்து 2192 கோடி ரூபாய் ஒதுக்கீடு: 62% நிறுவனங்களுக்கு தேர்வுக்குழுவுடன் தொடர்பு எனக் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-2192-crore-cleared-62-percent-for-firms-linked-to-government-tech-fund-panel</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-2192-crore-cleared-62-percent-for-firms-linked-to-government-tech-fund-panel#comments</comments><guid isPermaLink="false">bd6b09cc-71b0-40ec-ba52-2e93f1d61a17</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:04:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:04:25.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ccogpui5/Tech0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Deep Tech]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ccogpui5/Tech0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், பொறியியல் புத்தாக்கங்கள் அல்லது ஆராய்ச்சித் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட, தொழில்துறைகள், பொருளாதாரங்கள் மற்றும் வாழ்க்கையை அடியோடு மாற்றியமைக்கும் ஆற்றலைக் கொண்ட, அதிநவீன மற்றும் பெரும்பாலும் புரட்சிகரமான தொழில்நுட்பங்களே ஆழ் தொழில்நுட்பம் (Deep tech) எனப்படுகின்றன.</p><p>இதியாவின் ஆழ் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும் விதமாக தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடன் உதவி வழங்க முடிவு செய்தது. இதன் நோக்கில் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை நிதியின் (RDI Fund) முதல் கட்டத்தில் 22 தனியார் நிறுவனங்களுக்கு ரூ.2,192 கோடி மதிப்பிலான மென்மையான கடன்கள் (Soft Loans) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. விண்வெளி, எரிசக்தி, செமிகண்டக்டர், மருத்துவம் உள்ளிட்ட முன்னேறிய தொழில்நுட்பத் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.</p><h2>12 பேர் கொண்ட குழு</h2><p>இந்த நிறுவனங்களை தேர்வு செய்ய 12 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு 124 விண்ணபங்களை ஆய்வு செய்து, 22 நிறுவனங்களை தேர்வு செய்தது. இந்த 12 நிறுவனங்களுக்கு 2,192 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.</p><p>இந்த நிலையில்தான் நலன் முரண்பாடு (Conflict of Interest) குறித்த கேள்வி எழுந்துள்ளது. 22 நிறுவனங்களைத் தேர்வு செய்த 12 பேர் கொண்ட முதலீட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்த 7 உறுப்பினர்களுடன், நிதிபெற்ற 15 நிறுவனங்களுக்கு முதலீட்டு அல்லது தொழில் ரீதியான தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 15 நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.1,377 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>நிறுவனங்களுடன் குழுவில் உள்ளவர்களுக்கு தொடர்பு</h2><p>குழுவின் தலைவர் சௌரப் ஸ்ரீவாஸ்தவாவுடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் பல தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. அதேபோல், குழுவின் பிற உறுப்பினர்களுக்கும் சில பயனாளி நிறுவனங்களில் பங்குகள் அல்லது முந்தைய தொழில் தொடர்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு பதிலளித்த குழு உறுப்பினர்கள், தங்களுடைய நலன்கள் முன்கூட்டியே அரசிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், தொடர்புடைய நிறுவனங்களின் மதிப்பீடு மற்றும் முடிவெடுப்பு நடவடிக்கைகளில் தாங்கள் விலகியதாகவும் கூறியுள்ளனர். </p><p>அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும், நிறுவனங்கள் தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டதாகவும், நலன் முரண்பாடு கொண்ட உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட முடிவுகளில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><p>இந்த விவகாரம், பொதுநிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை, நலன் முரண்பாடுகளைத் தவிர்த்தல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்தல் ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் சோகம்: தனியாக மலையேற சென்ற இந்திய வம்சாவளி பி.எச்.டி மாணவர் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-origin-phd-student-dies-while-hiking-in-california</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-origin-phd-student-dies-while-hiking-in-california#comments</comments><guid isPermaLink="false">1d551d01-dafd-4d8b-8d1b-a111c66fe4ce</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:49:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:49:25.996Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய மாணவர்,Vikram Mubayi,விக்ரம் முபாயி,UCSB,IndianOriginStudent,soloHiking Accident,BigPineLakes,Inyo National Forest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/n2m7nkvt/Vikram-Mubayi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vikram Mubayi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/n2m7nkvt/Vikram-Mubayi?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் தனியாக மலையேற்றம் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற மாணவர் விக்ரம் முபாயி என்பவரது உடல், அவர் காணாமல் போன இரண்டு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. </p><p>இச்சம்பவம் சக மாணவர்களிடையேயும், அமெரிக்க வாழ் இந்தியர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>என்ன நடந்தது?</h2><p>கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியல் துறையில் பி.எச்.டி படித்து வந்த விக்ரம் முபாயி, கடந்த வார இறுதியில் கலிபோர்னியாவின் புகழ்பெற்ற 'பிக் பைன் லேக்ஸ்' பகுதிக்குத் தனியாக மலையேற்றம் சென்றுள்ளார். </p><p>ஆகஸ்ட் 1-ஆம் தேதி இரவு 8:30 மணியளவில், தான் இருக்கும் இடத்தின் ஜி.பி.எஸ் குறியீடுகளைத் தனது குடும்பத்தினருடன் விக்ரம் பகிர்ந்துள்ளார். </p><p>அதன் பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை; திட்டமிட்டபடி அவர் தங்கும் இடத்திற்கும் திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்குப் புகார் அளித்தனர்.</p><h2>தீவிரத் தேடுதல் வேட்டை மற்றும் உடல் மீட்பு!</h2><p>புகாரைத் தொடர்ந்து 'இன்யோ கவுண்டி' மீட்புக் குழுவினர் மற்றும் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் இணைந்து ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p>தீவிரத் தேடுதலுக்குப் பின், ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாலையில் 'இன்யோ தேசியப் பூங்கா' பகுதியில் விக்ரம் முபாயி உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கான அதிகாரப்பூர்வத் தகவல்களைப் புலனாய்வாளர்கள் இன்னும் வெளியிடவில்லை. </p><p>எனினும், இதில் எவ்வித சதித்திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், இயற்கை சீற்றம் அல்லது விபத்தினால் இது நேர்ந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>யார் இந்த விக்ரம் முபாயி?</h2><p>ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த விக்ரம், ஒரு திறமையான மலையேற்ற வீரர் மற்றும் சைக்கிள் ஓட்டுநர். "அவர் நடக்கக் கற்றுக் கொண்ட காலத்திலிருந்தே அவரது தாய் அவருக்கு மலையேற்றப் பயிற்சியைக் கொடுத்தார்" என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>கடந்த 2022-ஆம் ஆண்டு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த அவர், தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார். </p><p>கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், பிளாஸ்டிக் மற்றும் தாவரக் கழிவுகளை பாக்டீரியாக்கள் மூலம் சிதைத்து, பெட்ரோலியத்திற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய எரிபொருளை உருவாக்கும் மிக முக்கியப் பல்லுயிர் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் பதிவு செய்யும் போலியான துன்புறுத்தல் வழக்குகள் விஷயத்தில் கருத்து கூற முடியாது: தலைமை நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/national/cannot-comment-on-fake-harassment-cases-filed-by-women-chief-justice</link><comments>https://www.maalaimalar.com/news/national/cannot-comment-on-fake-harassment-cases-filed-by-women-chief-justice#comments</comments><guid isPermaLink="false">2c4994be-4286-4c00-9905-6e445a1d998a</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:39:31 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:39:31.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,தலைமை நீதிபதி,Chief Justice of India,Surya Kant,சூர்ய காந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5ag1ca4t/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெண்கள் போலி துன்புறுத்தல் வழக்குகள்: ஒவ்வொரு வழக்கும் தனித்த உண்மை, பொதுவான கருத்து கூற முடியாது]]></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court CJI Surya kant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/5ag1ca4t/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டில் தேங்கி நிலுவையில் இருக்கும் நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல இப்போது இல்லை என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.</p><p>மேலும், வழக்குகளை விரைவாக முடிப்பதற்காக தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மிகச் சிறந்த பலன்களை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த்-இடம், நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். </p><h3><strong>இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த்</strong></h3><p>அப்போது அவர், “தேங்கியிருக்கும் வழக்குகளுக்கு பல காரணங்கள் உள்ளன; அவை படிப்படியாக ஒரு திட்டமிட்ட முறையில் தீர்க்கப்பட்டு வருகின்றன.</p><p>நாட்டில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை, 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல் இப்போது இல்லை. தொழில்நுட்பத்தின் மூலம் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்காக நாங்கள் ஏராளமான திட்டங்களை வகுத்துள்ளோம், அவை மிகவும் நல்ல பலன்களை அளித்துள்ளன” என்று கூறினார்.</p><h3><strong>போலி வழக்குகள்</strong></h3><p>மேலும், “பெண்கள் பதிவு செய்யும் பல துன்புறுத்தல் வழக்குகள் போலியானவை என நிரூபிக்கப்படுவது குறித்த விஷயத்தில் பொதுவான கருத்தைக் கூற முடியாது. ஒவ்வொரு வழக்கும் அதன் குறிப்பிட்ட உண்மைகளைப் பொறுத்தது.</p><p>நீதிபதிகள் நியமனத்திற்காக உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை மத்திய அரசு மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்புவது குறித்து பத்திரிக்கையாளர்கள் இங்கே பேசக்கூடாது.</p><p>இது சட்ட சேவைகள் ஆணையத்தின் ஒரு நிகழ்ச்சி" என்று கூறினார்.</p><p>முன்னதாக, தலைமை நீதிபதி இங்கு நடைபெற்ற தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் மேற்கு மண்டல மாநாட்டில் உரையாற்றினார்.</p><p>மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் கலந்துகொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்தில் மர்ம கிணறு: தானாக தளும்பும் நீர்- வைரலாகும் வீடியோ</title><link>https://www.maalaimalar.com/news/national/video-gujarat-village-haunted-well-starts-moving-on-its-own-again</link><comments>https://www.maalaimalar.com/news/national/video-gujarat-village-haunted-well-starts-moving-on-its-own-again#comments</comments><guid isPermaLink="false">0665aedc-02b8-4dfe-bdb1-395908e585f9</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:24:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:24:49.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3bnx4201/0808Well0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மர்ம கிணறு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3bnx4201/0808Well0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குஜராத் மாநிலம் மொர்பி தாலுகாவில் உள்ள வீரபத்ரா கிராமத்தில் உள்ள மர்மமான கிணறு ஒன்று உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால், கடந்த வியாழக்கிழமை, கடல் நீர் தளும்புவதுபோல் இந்த கிணற்றில் உள்ள தண்ணீரும் தளும்பியதுதான் இதற்கு காரணம்.</p><p>கடந்த வியாழக்கிழமைக்கு முன்னதாக இந்த கிணற்றில் உள்ள நீர் திடீரென தானாகவே தளும்ப ஆரம்பித்தது. பின்னர் இது படிப்படியாக வியாழக்கிழமை காலை சகஜ நிலைக்கு திரும்பியது. பின்னர், மீண்டும் தளும்ப ஆரம்பித்தது. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><p>இந்த தகவலை அருந்த அருகில் உள்ள கிராம மக்களும் அப்பகுதிக்கு விரைந்து வந்து கிணற்றை பார்வையிட்டனர்.</p><h2>நிலநடுக்கத்திற்கான அறிகுறியா? என மக்கள் அச்சம்</h2><p>இந்தச் செயல்பாட்டிற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை. இப்பகுதி நிலநடுக்க அபாயம் கொண்ட தன்மையைக் கொண்டிருப்பதாலும், கடந்த காலங்களில் இங்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாலும், இந்த நிகழ்வு அதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சில குடியிருப்பாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அதிகாரிகள் இதுவரை இது குறித்து அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | A mysterious well in Virparda village of Morbi taluka, Gujarat, has once again shown unusual activity, with its water appearing to move on its own. The phenomenon resumed around 3:00 PM today after a similar disturbance, observed two days ago, had subsided earlier in the… <a href="https://t.co/maNyjKIs0o">pic.twitter.com/maNyjKIs0o</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2085539960548180384?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>மார்பியில் உள்ள ஒரு கிணற்றில் வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் காணப்பட்டதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, காந்திநகரிலிருந்து ஒரு குழு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் தொடர்பான செயல்பாடுகள் ஏதுமிருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று மார்பி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக எம்பிக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்: திருமாவளவன் எம்பி பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mps-meet-oppose-constituency-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mps-meet-oppose-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">b5738a8c-9f5e-426f-a70e-66a984589653</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:12:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:12:29.534Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தொகுதி மறுவரையறை,Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா,MP Thirumavalavan,TamilNadu loksaba,திருமாவளவன் எம்பி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pfiqd78q/mp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MP Thirumavalavan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pfiqd78q/mp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிரான நிலைப் பாட்டை வலியுறுத்தி, தமிழக முதல்வர் விஜய்  தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.</p><h2><strong>மக்களவை எம்பிக்கள் எண்ணிக்கை மாறக்கூடாது</strong></h2><p>மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை காரணமாகக் கூடுதல் இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543 ஆக மட்டுமே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.</p><h2><strong>எம்பிக்களின் ஒற்றைக் குரல்</strong></h2><p>கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றித் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒரே குரலில் தொகுதி மறுவரையறையை எதிர்த்துள்ளனர்.</p><h2><strong>திமுக, அதிமுக நிலைப்பாடு</strong></h2><p> "தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் உரிமையையும் காக்கும் இந்த விவகாரத்தில், பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இதே வலுவான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்" என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.</p><p>மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையவும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் தென் மாநிலங்களுக்கு ஏற்படும் அரசியல் அதிகாரப் பாதிப்பைத் தடுக்கவே இத்தகைய ஆலோசனைக் கூட்டங்கள் கூட்டப்பட்டுத் தொடர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் 2026: சச்சின், சித்தார்த் அதிரடியில் 239 ரன்களைக் குவித்த கோவை கிங்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-need-240-runs-against-kovai-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/madurai-need-240-runs-against-kovai-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">573b7ce5-e2ef-443e-a8a2-9fea9f3fb2a2</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:11:35 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:11:35.831Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,madurai panthers,மதுரை பாந்தர்ஸ்,கோவை கிங்ஸ்,vida kovai kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/t5lfeu4f/sachin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sachin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/t5lfeu4f/sachin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. வரும் 28-ம் தேதி வரை இரு கட்டமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.</p><p>மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17-ம் தேதி ஓய்வு தினமாகும்.</p><p>முதல் கட்ட போட்டிகள் வரும் 15-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடக்கின்றன.</p><h2>மதுரை-கோவை மோதல்</h2><p>இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 18 ரன் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் அபினவ் 10 ரன்னில் அவுட்டானார். </p><p>2வது விக்கெட்டுக்கு இணைந்த சுரேஷ் லோகேஷ்வர்-பாலசுப்ரமணியன் சச்சின் ஜோடி 66 ரன்கள் எடுத்த நிலையில் லோகேஷ்வர் 38 ரன்னில் அவுட்டானார். </p><h2>சச்சின், சித்தார்த் அரை சதம்</h2><p>பொறுப்புடன் ஆடிய பாலசுப்ரமணியன் அரை சதம் கடந்தார். அதன்பின் அதிரடியாக ஆடிய அவர் 43 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 84 ரன்னில் ஆட்டமிழந்தார். </p><p>இறுதியில், கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 239 ரன்களைக் குவித்தது. ஆண்ட்ரே சித்தார்த் 42 பந்தில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தடைபட்டது. </p><p>மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் குர்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டும், சரவணன், பெரியசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா என்னவென்றே தெரியாமல் கூட்டத்தை கூட்டுவது கேலிக்கூத்து: ஆ. ராசா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-rasa-says-about-tn-cm-all-party-mp-meeting-about-delimitation-bill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-rasa-says-about-tn-cm-all-party-mp-meeting-about-delimitation-bill#comments</comments><guid isPermaLink="false">9b8c0fe1-05fe-49e0-b44b-9328a88b0605</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:04:35 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:04:35.899Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆ ராசா,A Rasa,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/i8n1axvf/Aarasa0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆ ராசா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/i8n1axvf/Aarasa0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வர உள்ள நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்து எம்.பி.களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். திமுக எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.</p><h2>ஆ.ராசா</h2><p>இது தொடர்பாக தி.மு.க. எம்.பி.யும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆ. ராசா, "தொகுதி மறுவரையறை மசோதா என்னவென்றே தெரியாம கூப்பிடுகிறார்களே, நியாயமா இது. இது கேலிக்கூத்தாக இல்ல. சிறப்பாக இல்ல உங்களுக்கு" என்றார்.</p><p>நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியிலும் தொகுதி மறுவரையறையின் போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கூட்டம்</h2><p>இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி இந்த கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையால் தமிழக எம்.பி. தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><h2>திமுக, அதிமுக புறக்கணிப்பு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>அ.தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளது. அதே போன்று பா.ம.க.வும் விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. வழங்கப்பட்டு உள்ளது.</p><p>எல்.கே.சுதீஷ் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இன்று டெல்லியில் இருப்பதாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். அதனால் அவரும் பங்கேற்கவில்லை.</p><h2>காங்கிரஸ், விசிக எம்.பி.க்கள் பங்கேற்பு</h2><p>அதே நேரத்தில் த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதல்-அமைச்சர் விஜய் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><h2>ம.தி.மு.க.</h2><p>ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார்.</p>]]></content:encoded></item><item><title>காங்கோவில் கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா: உலக சுகாதார அமைப்பு கவலை! ஓர் சிறப்புப் பார்வை</title><link>https://www.maalaimalar.com/news/world/ebola-outbreak-in-congo-spirals-who-raises-alarm-special-report</link><comments>https://www.maalaimalar.com/news/world/ebola-outbreak-in-congo-spirals-who-raises-alarm-special-report#comments</comments><guid isPermaLink="false">153a2532-2f76-460d-a963-016e41731a74</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:45:56 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:45:56.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கோ,Ebola,DR Congo,எபோலா,Bandapukyo virus,பண்டாபுக்யோ வைரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3ayvfo4z/ebola.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  DR Congo Ebola ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3ayvfo4z/ebola.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கோ மக்களாட்சிக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா நோய்த்தொற்று, வரலாற்றிலேயே மிகவும் அதிவேகமாகப் பரவும் தொற்றாக உருவெடுத்துள்ளது. மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்தத் தொற்று, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் 1,850-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் கடந்துள்ளது. முந்தைய எபோலா பரவல்களை விட இது மிக வேகமாகப் பரவுவதற்கான முக்கியக் காரணங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.</p><h2>வைரஸின் <strong>அபூர்வ வகை மற்</strong>றும் தடுப்பூசி இன்மை</h2><p>வழக்கமாக பரவும் 'ஜாயர்' வகை எபோலா வைரஸைக் காட்டிலும் இந்த பரவலுக்கு 'பண்டாபுக்யோ' எனும் அபூர்வ வகை வைரஸே காரணமாகும். ஜாயர் வகை வைரஸுக்கு தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், பண்டாபுக்யோ வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ, உறுதியான சிகிச்சைகளோ இல்லை.</p><h2>மாதக்கண<strong>க்கில் பரவிய</strong> தொற்று</h2><p>இந்த நோய் மே மாதத்தில் முறைப்படி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஜனவரி மாதத்திலிருந்தே மகாங்வாலு பகுதியில் பரவத் தொடங்கியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்பகட்ட பாதிப்புகள் 'பெரிட்டோனிடிஸ்' எனக் தவறாகக் கணிக்கப்பட்டதாலும், தவறான வைரஸ் சோதனை கருவிகளைப் பயன்படுத்தியதாலும் நோய் பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியாமல் போனது.</p><h2>கண்கா<strong>ணிப்பு அமைப்பு</strong>களின் முடக்கம்</h2><p>புதிய நோயாளிகளில் சுமார் 80% பேர் ஏற்கனவே கண்டறியப்பட்ட தொடர்புகளுக்கு வெளியே இருந்து வருவதால், வைரஸ் சமூகத்தில் தீவிரமாகப் பரவியுள்ளது. நோயாளிகளின் தொடர்பைக் கண்டறியும் சுகாதாரக் குழுவினர் போதிய வசதிகள் இல்லாமல் திணறி வருகின்றனர்.</p><h2>நி<strong>தி பற்றாக்கு</strong>றை</h2><p>* உலக சுகாதார அமைப்பிற்கு (WHO) தேவையான நிதியில் பாதிகூட இன்னும் கிடைக்கவில்லை.</p><p>* அமெரிக்க உதவி நிறுவனமான USAID உட்பட சர்வதேச அமைப்புகளின் நிதி வெட்டுக்களால், கண்காணிப்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் ஊதியம் பாதிக்கப்பட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p><h2>உள்<strong>நாட்டுப்</strong> போர்</h2><p>* காங்கோவின் கிழக்குப் பகுதியில் பல ஆண்டுகளாகத் தொடரும் ஆயுதமேந்திய ராணுவ மோதல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக, மருத்துவக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.</p><p>* மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களும், மக்கள் மத்தியில் மருத்துவ அமைப்புகள் மீது உள்ள நம்பிக்கையின்மையும் தடுப்பு நடவடிக்கைகளைப் பாதிக்கின்றன.</p><h2>மக்க<strong>ளின் இடப்பெயர்வு</strong> </h2><p>* இட்டூரி மாகாணம் வர்த்தக பாதையில் அமைந்திருப்பதாலும், அகதிகள் முகாம்களில் மக்கள் அடர்த்தியாக வாழ்வதாலும் வைரஸ் எளிதில் பரவுகிறது.</p><p>* பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத உள்ளூர் இறுதிச்சடங்கு முறைகளும் நோய் பரவலை மேலும் அதிகரித்துள்ளன.</p><p>காங்கோவில் ஏற்பட்டுள்ள இந்த தீவிர சூழ்நிலை, உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய பொது சுகாதார எச்சரிக்கையாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நடிகையை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/charlie-chauhan-marries-cricketer-ramandeep-singh</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/charlie-chauhan-marries-cricketer-ramandeep-singh#comments</comments><guid isPermaLink="false">e0b6bda0-e253-4813-ba2f-cfaab7f5aba1</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:25:33 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:25:33.257Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ramandeep singh,charlie chauhan,ரமண் தீப் சிங்,சார்லி சவுகான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/7tjxpq6n/ramandeep.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ramandeep singh, Charlie Chauhan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/7tjxpq6n/ramandeep.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய அணி வீரரான ரமண் தீப் சிங் தனது நீண்டநாள் காதலியான சார்லி சவுகானை திருமணம் செய்தார்.</p><p>இந்திய கிரிக்கெட் அணி வீரரும், ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான ரமண் தீப் சிங், பஞ்சாப் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.</p><h2>இந்திய அணி ஆல்-ரவுண்டர்</h2><p>இந்திய அணிக்காக 2 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரமண் தீப் சிங், அதிரடி பேட்டிங், அபாரமான பீல்டிங்கிற்குப் பெயர் பெற்ற வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்.</p><p>2024 ஐபிஎல் தொடரில் கே.கே.ஆர். அணி கோப்பையை வென்ற போட்டியில் ரமண் தீப் சிங் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்நிலையில், ரமண் தீப் சிங்குக்கும், இவரது நீண்டகால காதலியும், நடிகையுமான சார்லி சவுகானுக்கும் பஞ்சாபில் உள்ள குருத்வாராவில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்.</p><p>இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் வீரர் நமன் தீர், மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அஷ்வினி குமார் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் வீரர் ஜசிந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>சார்லி சவுகானும், ரமண் தீப்பும் கடந்த 8 ஆண்டாகக் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.</p><h2>புதிய இன்னிங்ஸ்</h2><p>புதிய இன்னிங்சை தொடங்கியுள்ள இவர்கள் இருவருக்கும் சுப்மன் கில் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காவல்நிலையம், சிறையில் குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-custodial-death-in-palani-land-scam-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-custodial-death-in-palani-land-scam-case#comments</comments><guid isPermaLink="false">6f9cf4fb-3eb4-4a34-8833-c8e33d6bf1ce</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:22:32 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:22:32.376Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,pazhani,பழனி நில மோசடி,வழக்கறிஞர் அன்வர்தீன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vr4sj5x0/NainarNagendran0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்வர்தீன்- நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vr4sj5x0/NainarNagendran0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பழனி நிலமோசடி வழக்கில் தொடரும் மர்மங்கள்!</p><p>பழனியில் ₹100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் என்பவர் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென உயிரிழந்துவிட்டதாகவும், சார்பதிவாளர் மணிகண்டன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுகின்றன.</p><p>முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில், தவெக அரசின் மிகப்பெரும் ஊழலை அம்பலப்படுத்திய இவ்வழக்கின் குற்றவாளிக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி வரும்? அதிலும் இவ்வழக்கின் முக்கிய சாட்சியங்களாக கருதப்படும் இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி உடல்நலக்குறைவு ஏற்படும்?</p><p>த.வெ.க. தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் இருக்கும் குற்றவாளிகள் எல்லாம் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த மரணத்தை இயற்கையான நிகழ்வு என்று கடந்து போக முடியவில்லை.</p><p>எனவே, அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக்காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும். இம்மரணத்தின் உண்மையான பின்னணி குறித்த முறையான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார்பதிவாளர் மணிகண்டனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி, அவரை அரசு பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மோசடி வழக்கு கடந்து வந்த பாதை</h2><p>பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்</h2><p>அதேநேரம் இந்த வழக்கில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.</p><p>இதனால் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுச்சென்றார்.</p><p>திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதனிடையே ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>அன்வர்தீன் உயிரிழப்பு</h2><p>இந்நிலையில், பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்துள்ளார். சர்க்கரை நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அமித் ஷா வருகை: மதுக்கடைகளை மூட உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-visit-order-to-close-liquor-shops-in-puducherry</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-visit-order-to-close-liquor-shops-in-puducherry#comments</comments><guid isPermaLink="false">5d985bc9-4db6-47ef-8b1d-5f257ba68f32</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:01:04 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:01:04.419Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Puducherry,புதுச்சேரி,Amit Shah,அமித் ஷா,Wine shop</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/4z9qb6ok/Amitshah0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா- மதுபானக்கடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/4z9qb6ok/Amitshah0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் புதுவையில் இன்று (சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி மராட்டிய மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு இன்று மாலை 4.20 மணியளவில் செல்கிறார்.</p><h2>சாமி தரிசனம்</h2><p>ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும் அமித்ஷா காரில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அவர் பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதைத்தொடர்ந்து அமித் ஷா மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுவை வருகிறார்.</p><p>இன்று இரவு 8 மணிக்கு புதுவை கவர்னர் மாளிகைக்கு வரும் அவரை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர் மக்கள் மாளிகையில் அவர் தங்குகிறார். நாளை காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கோரிமேடு போலீஸ் மைதானத்துக்கு 8.10 மணிக்கு வருகிறார். அங்கு போலீஸ்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருது வழங்கி உரையாற்றுகிறார்.</p><h2>சந்திப்பு</h2><p>பின்னர் காலை 10.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 10.25 மணிக்கு ஓட்டல் அக்கார்டு வருகிறார். அங்கு காலை உணவை முடித்து விட்டு, கவர்னர், முதல்-அமைச்சர், பா.ஜனதா மாநில தலை வருடன் உரையாடுகிறார். பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை கட்சியின் முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களை சந்திக்கிறார்.</p><h2>தேசிய கொடி பேரணி</h2><p>பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முருகா திரையரங்கு சந்திப்பில் 1.40 மணிக்கு ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற பேரணியை தொடங்கி வைக்கிறார். மதியம் 2 மணிக்கு அங்கிருந்து கிளம்பி புதுவை விமான நிலையம் சென்று சென்னை புறப்பட்டு செல்கிறார். அவரை கவர்னர், முதல்-அமைச்சர் வழியனுப்பி வைக்கின்றனர்.</p><h2>தீவிர பாதுகாப்பு</h2><p>மத்திய மந்திரி அமித் ஷா வருகையையொட்டி புதுவை நகர பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 8 கம்பெனி ரிசர்வ் பட்டாலியன் படையினர் புதுவைக்கு வந்துள்ளனர். அவர்கள் புதுவை போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>மத்திய மந்திரி தங்கும் கவர்னர் மாளிகை, கடற்கரை சாலை, கோரிமேடு மைதானம், மத்திய மந்திரி செல்லும் வழிகள், ஓட்டல் அக்கார்டு, விமான நிலையம் பகுதி களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><p>போலீசார், ரிசர்வ் பட்டாலியன் படையினர், ஐ.ஆர்.பி.என். உட்பட ஆயிரத்து 500-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில் மத்திய மந்திரி வருகையையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிஜேபி-யின் அடுத்த சீர்திருத்தம் மாநிலங்களில் நடைபெறும் தேர்வு முறைகேடுகள்: அபிஜீத் தீப்கே</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-next-reform-exam-scams-in-states-abhijeet-dipke</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-next-reform-exam-scams-in-states-abhijeet-dipke#comments</comments><guid isPermaLink="false">0960d40d-47a6-4301-84d3-68ec1429f669</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:50:08 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:50:08.256Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>upsc,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,சிஜேபி,CJP,யுபிஎஸ்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/sogurrxs/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாநில அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடு: சிஜேபி கவனம் பொது சேவை ஆணைய ஊழல், இளைஞர் எதிர்ப்பு]]></media:title><media:description type="html"><![CDATA[ Abhijeet dipke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/sogurrxs/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்த பிறகு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, பல்வேறு மாநிலங்களில் பொது சேவை ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் அரசுத் தேர்வு முறைகேடுகள் குறித்து தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது, நீட் முறைகேடுக்கு எதிராக மட்டுமல்ல பலவேறு மாநிலங்களில் நடைபெற்ற பொதுப்பணி ஆணையத் தேர்வுகளில் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்தான் என்று அபிஜீத் கூறினார்.</p><h3><strong>அபிஜீத் தீப்கே பேட்டி</strong></h3><p>மகாராஷ்டிராவில் சிஜேபி நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான அபிஜீத் திப்கே கூறுகையில், “நாங்கள் பீகாருக்குச் செல்வதற்குக் காரணம் என்னவென்றால், ஜந்தர் மந்தரில் கூடியிருந்த கூட்டத்தில் பெரும்பாலானோர் பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதால்தான்.</p><p>இந்த மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் தங்களின் சமூக முன்னேற்றத்திற்காக பொது சேவைகள் என்ற மாநில அரசு தேர்வுகளை சார்ந்துள்ளனர்.</p><h3><strong>அரசு பணியாளர் தேர்வு சீர்திருத்தம்</strong></h3><p>இந்த மாணவர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர். நாங்கள் ஏன் நீட் தேர்வைப் பற்றி மட்டும் பேசுகிறோம், அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளைப் பற்றி பேசவில்லை என்று அவர்கள் எங்களிடம் கேட்டார்கள்.</p><p>இது இந்தியா முழுவதும் ஒரு பெரும் கவலையாக உள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் மற்றும் அரசுப் பணியிட நியமனங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்த புகார்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ளது.</p><p>தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கில், சி.ஜே.பி. அமைப்பு ‘க்யா போல்டி பப்ளிக்’ என்ற அகில இந்திய மக்கள் தொடர்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட குடிமக்களின் குறைகளைக் கேட்பதற்காக அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்வார்கள்.</p><p>மக்களின் கருத்துக்களைக் கேட்கும் கலாச்சாரத்திற்குப் புத்துயிர் அளிப்பதே இதன் நோக்கமாக இருக்கும்.</p><p>பொதுப்பணித் தேர்வுகள் தொடர்பான கவலைகளைக் களைவதற்காக, பீகார் மாணவர்கள் தலைமை நீதிபதியைத் தங்கள் மாநிலத்திற்கு அழைத்திருந்தனர்.</p><p>மேலும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) ஆட்சேர்ப்பு விதிமுறைகள் சுமார் 2012-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டதால், அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில மொழிப் பின்னணியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் சேர்க்கப்படுகின்றனர்.</p><p>இது மானுடவியல் மற்றும் வட்டார மொழிக் கல்வி பயின்றவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி மையங்களில் UPSC தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், நகரங்களில் உள்ள மோசமான அறைகளில் தங்க வேண்டியிருப்பதாலும், வீட்டு உரிமையாளர்களிடமிருந்து துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாலும், தங்குமிடச் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.</p><p>சமூகம் மேம்படுவதால், கிக் வேலை என்ற கருத்து மேற்கத்திய நாடுகளுக்கு நல்லது. இந்தியாவில், கிக் வேலை என்பது தொழிலாளர் சுரண்டலைத் தவிர வேறொன்றுமில்லை. அவர்களுக்கு ஒரு பெரிய கொள்கை சீர்திருத்தமும், ஒரு பாதுகாப்பு வலையும் தேவை.</p><p>ஒரு சிறிய ஊக்கத்தொகைக்காக அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். நாங்கள் அரசியல் உரையாடலை மாற்ற விரும்புகிறோம். சமூகத்தில் பரிவும் இரக்கமும் குறைந்து வருகின்றன. நாம் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் மனநோயாளிகளாக மாறத் தொடங்கிவிட்டோம்.</p><p>ஒரு காலத்தில் நமது சமூகம் லட்சியம் நிறைந்ததாக இருந்தது. ஊழலுக்கு எதிரான இந்தியா போன்ற இயக்கங்கள் ஒரு சிறந்த தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.</p><p>அந்த இந்தியா முன்னேற விரும்பியது, ஆனால் இன்றைய இந்தியா, தான் தப்பி பிழைப்பதிலேயே திருப்தி அடைகிறது. இப்போது, குடிமக்களுக்கு அவ்வளவாக லட்சியம் இல்லை. இந்த மனநிலை இந்தியாவைப் பல ஆண்டுகளுக்கு பின்தங்க செய்கிறது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-and-tomorrow-rain-chance-to-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-and-tomorrow-rain-chance-to-chennai#comments</comments><guid isPermaLink="false">57bc842d-8eca-4461-b081-dac377f22058</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:43:27 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:43:27.822Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,Chennai Rain,சென்னை மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/8fknetyg/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/8fknetyg/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">சென்னை வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p>10-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p>11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று மற்றும் நாளை குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>ஸ்விகி, சொமேட்டோ, செப்டோ டெலிவரி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு - மின்சார வாகனம் கட்டாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-new-rules-for-swiggy-zomato-zepto-electric-vehicles-compulsory</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-new-rules-for-swiggy-zomato-zepto-electric-vehicles-compulsory#comments</comments><guid isPermaLink="false">bdbbc1a2-4f25-48a9-91d8-70be0aa6be07</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:43:09 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:43:09.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Swiggy,Zomato,Zepto,ElectricVehicles,மின்சாரவாகனம்,DriverWelfareFund,2PercentContribution</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/05dv2932/Electric-Vehicles" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Electric Vehicles ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/05dv2932/Electric-Vehicles?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆன்லைன் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமாட்டோ மற்றும் செப்டோ போன்ற தளங்களை ஒழுங்குமுறைப்படுத்த மகாராஷ்டிரா அரசு புதிய விதிகளைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. </p><p>மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் தலைமையிலான குழு, இதற்கான 'பைக் டாக்ஸி விதிகள் 2025' திருத்த வரைவைச் சட்டத்துறையின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.</p><p>இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, டெலிவரி நிறுவனங்கள் தங்களது வாகனக் கூட்டமைப்பை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆர்டர் கட்டணத்திலிருந்தும் 2% தொகையை ஓட்டுநர்களின் நல நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்படவுள்ளன.</p><h2>டெலிவரி சேவை வழங்குநர்:</h2><p>இதுவரை ஓலா, உபெர், ராபிடோ போன்ற பயணியர் பைக் டாக்ஸி சேவைகளுக்கு மட்டுமே மகாராஷ்டிராவில் தனி விதிமுறைகள் இருந்தன. </p><p>இனிமேல் பார்சல்கள், உணவுப் பொருட்கள் அல்லது இதர பேக்கேஜ்களை விநியோகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் 'டெலிவரி சேவை வழங்குநர்' என்ற புதிய வரம்பிற்குள் கொண்டு வரப்படும். </p><p>இதன் மூலம் ஸ்விக்கி, பிளின்கிட், செப்டோ போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களை மாநில அரசின் போக்குவரத்துத் துறை நேரடியாகக் கண்காணிக்க வழிவகை ஏற்படும்.</p><h2>புதிய முக்கிய நிபந்தனைகள் என்னென்ன?</h2><p>இந்த வரைவுச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின், டெலிவரி நிறுவனங்கள் சில விதிகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். </p><p>டெலிவரிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பைக்குகளும் மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும். அனைத்து டெலிவரி வாகனங்களிலும் ஜிபிஎஸ் டிராக்கர்கள் பொருத்தப்பட வேண்டும்.</p><p>வாகனங்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் முறையான காப்பீடு இருக்க வேண்டும். பிராந்திய போக்குவரத்து ஆணையம் நிர்ணயிக்கும் கட்டண உச்சவரம்பைப் பின்பற்றியே டெலிவரி கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும். </p><p>ஒவ்வொரு நிறுவனமும் மாநில அரசிடம் பிரத்யேக உரிம அடையாளச் சான்றைப் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.</p><h2>2% ஓட்டுநர் நல நிதி:</h2><p>இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக, ஒவ்வொரு டெலிவரி கட்டணத்திலிருந்தும் 2% பங்களிப்புத் தொகை ஓட்டுநர்களின் நல வாரியத்திற்குச் செல்லும். </p><p>இந்த நிதியானது ஓட்டுநர்களின் ஓய்வூதியம், விபத்துக் காப்பீடு, மின்சார வாகனக் கடன்கள், குழந்தைகளின் கல்வி உதவித்தொகை போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.</p><h2>உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை:</h2><p>அமைச்சர் பிரதாப் சர்நாயக் முன்னதாக சட்டப்பேரவையில் தெரிவித்தபடி, பைக் டாக்ஸி மற்றும் டெலிவரி ஓட்டுநர்கள் அனைவரும் இருப்பிடச் சான்றிதழ் மற்றும் பொது சேவை வாகன பேட்ஜ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும். </p><p>இந்த நடவடிக்கை மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று அரசு நம்புகிறது.</p><p>தற்போது இந்த நிறுவனங்கள் மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு குறியீட்டின் கீழ் மட்டுமே இயங்கி வருவதால், ஏதேனும் புகார்கள் எழும்போது மாநில அரசால் தலையிட முடியாமல் இருந்தது. </p><p>இந்தப் புதிய கொள்கை ஒப்புதல் பெற்றவுடன், 15 கிலோமீட்டர் வரையிலான அனைத்து பைக் டெலிவரி பயணங்களுக்கும் இந்த விதிகள் முழுமையாகப் பொருந்தும்.</p>]]></content:encoded></item><item><title>பிரான்ஸ் தலைமையிலான 6-ஆம் தலைமுறை போர் விமானத் திட்டத்தில் இணைய இந்தியா தீவிர முயற்சி!</title><link>https://www.maalaimalar.com/news/world/india-seeks-role-in-france-led-future-combat-air-system-fcas</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-seeks-role-in-france-led-future-combat-air-system-fcas#comments</comments><guid isPermaLink="false">007c70fe-fa9f-4ebb-ada7-8afcf52d14e1</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:37:33 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:37:33.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,பிரான்ஸ்,Modi,France,President Emmanuel Macron,இம்மானுவேல் மாக்ரான்,மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/63mc10el/france.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Emmanuel Macron - Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/63mc10el/france.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியப் பாதுகாப்புத் துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பிரான்ஸ் அரசு முன்னெடுக்கும் 6-ஆம் தலைமுறை போர் விமானக் கூட்டு உருவாக்கத் திட்டமான 'Future Combat Air System' (FCAS) திட்டத்தில் இணைவதற்கு இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.</p><h2><strong>மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்</strong></h2><p>நாடாளுமன்றப் பாதுகாப்புச் நிலைக்குழுவிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில், பிரான்ஸ் தலைமையிலான 6-ஆம் தலைமுறை போர் விமானத் திட்டத்தில் இணைவதற்கான செயல்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது <a href="https://www.maalaimalar.com/news/world/direct-rail-route-to-india-via-pakistan-russias-new-land-trade-proposal">இந்தியா</a>வில் 4.5 தலைமுறை போர் விமானங்கள் (ரஃபேல், தேஜாஸ் போன்றவை) பயன்பாட்டில் உள்ளன. </p><p>உள்நாட்டிலேயே 5-ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் 'AMCA' திட்டம் தயாரிப்பு நிலையில் உள்ள நிலையில், சர்வதேச நாடுகளுடன் இணைந்து 6-ஆம் தலைமுறை தொழில்நுட்பத்தில் தடம் பதிப்பது நாட்டின் வான்வழிப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்.</p><p>6-ஆம் தலைமுறை போர் விமானங்கள் வெறும் மனிதரால் இயக்கும் விமானமாக மட்டும் இல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI), ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் கிளவுட் தகவல்தொடர்பு பிணையம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படும்.</p><h2>காலக்கெடு <strong>மற்றும் வரை</strong>படம்</h2><p>நவீன போர்மறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்திய விமானப்படை இத்தகைய தொழில்நுட்பங்களில் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக, புதிய 6-ஆம் தலைமுறை போர் விமானங்களை கையகப்படுத்துவதற்கான தெளிவான வரைபடம் மற்றும் காலக்கெடுவை வரையறுக்குமாறு நாடாளுமன்றக் குழு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>சர்வதேச அளவிலான உயர் தொழில்நுட்ப கூட்டுத் திட்டங்களில் பங்கெடுப்பது, 'ஆத்மநிர்பார் பாரத்' கொள்கையின் கீழ் உள்நாட்டு பாதுகாப்பு தயாரிப்புத் திறனையும், தொழில்நுட்பப் பகிர்வையும் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சீனா வெளியிட்ட புதிய வரைபடம் – இந்தியா ஏன் எதிர்ப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/national/why-india-opposes-chinas-new-map</link><comments>https://www.maalaimalar.com/news/national/why-india-opposes-chinas-new-map#comments</comments><guid isPermaLink="false">67b4fe1e-d689-4126-959e-cea235044d7a</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:32:10 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:32:10.087Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>arunachala pradesh,IndiaChinaBorder,இந்தியாசீனா,MapWar,வரைபடப்போர்,SurveyOfIndia,அருணாச்சலபிரதேசம்,இந்தியராணுவம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/l8g75ox6/India-China" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India - China]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/l8g75ox6/India-China?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அருணாச்சலப் பிரதேசத்தின் மீது உரிமை கோரும் வகையில் சீனா தொடர்ந்து இந்தியப் பகுதிகளுக்குச் சொந்தமாகப் பெயரிட்டு வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்களுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டுப் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.</p><p>'இந்திய நில அளவைத் துறை' வெளியிட்டுள்ள இந்த வரைபடத்தில், எல்லையோரப் பகுதிகளின் புவியியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை மக்கள் துல்லியமாக அறியும் வகையில் இந்தப் பெயர்கள் முறையாகப் பதியப்பட்டுள்ளன.</p><p>"அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, சீனாவின் இத்தகைய வீண் முயற்சிகள் கள யதார்த்தத்தை மாற்றிவிட முடியாது" என்று இந்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><h2>எல்லையோரப் போர் நினைவிடங்கள் மற்றும் முக்கிய இடங்கள்:</h2><p>சீனாவுடன் நேரடியாக மோதல் ஏற்பட்ட மற்றும் ராணுவ ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 27 இடங்கள் இந்த வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p>லாங்ஜூ 1962 போருக்கு முன்பாகவே, அதாவது 1959-லேயே இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே முதன்முதலில் மோதல் வெடித்த மிக முக்கியமான எல்லைப் பகுதி மேஜா கிராமம். மேல் சுபன்சிரி மாவட்டத்தில், லாங்ஜூ பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள எல்லையோரக் கிராமம்.</p><p>தக் லா கணவாய் 1962 இந்திய-சீனப் போரின் தொடக்கக் கட்டத்தில் மிகக் கடுமையான போர்கள் நடைபெற்ற உயரமான மலைப் பகுதி. ஜெய்ராம்பூர் சாங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம், இந்தியப் படைகள் கிழக்கு அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மியான்மர் எல்லைக்கு விரைந்து செல்ல உதவும் முக்கிய ராணுவத் தளவாட மையமாகும்.</p><p>ராணுவ வீரர்களின் நினைவிடங்கள் 1962 போரின் நாயகர்களான ஜஸ்வந்த் சிங் ராவத்தை கௌரவிக்கும் 'ஜஸ்வந்த் கர்' மற்றும் த்ரிலோக் சிங் தாப்பாவை கௌரவிக்கும் 'ஷேர்-இ-தாப்பா நினைவிடம்' ஆகியவையும் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.</p><p>வரைபடத்தில் சேர்க்கப்பட்ட மற்ற இடங்களில் உயரமான ஏரியான சம்போ சரோவர், பாரா குண்டுன், சோட்டா குண்டுன், தன் பாரி, பிரித்நகர், டெரிட்நகர், ராம்நகர், சாகர், பத்மா, ஜோதிநகர், பைசாகி, சோட்டா ரோபுக், பரா ரோபுக், சன்புரா, ஷிவாஜி நகர், சன்புரா ஆகியவை அடங்கும்.</p><h2>சீனாவின் 'வரைபட அரசியல்' பின்னணி!</h2><p>அருணாச்சலப் பிரதேசத்தை 'ஸாங்னான்' என்று அழைத்து வரும் சீனா, கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள பகுதிகளுக்குத் தன்னிச்சையாகச் சீனப் பெயர்களைச் சூட்டி வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.</p><p>தரப்படுத்தப்பட்ட ஆறு பெயர்களைக் கொண்ட பட்டியலை 2017-ல் முதன்முதலில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, 2021-ல் 15 இடங்களை உள்ளடக்கிய இரண்டாவது பட்டியலையும். 2023-ல் 11 இடங்களைக் கொண்ட மற்றொரு பட்டியலையும் வெளியிட்டது.</p><h2>இந்தியாவின் எச்சரிக்கை:</h2><p>சீனாவின் இத்தகைய கற்பனையான பெயரிடும் முறைகள் இரு நாடுகளுக்கு இடையேயான சுமுக உறவை மேலும் பாதிக்கும் என்றும், இந்தியாவின் இறையாண்மையை யாராலும் அசைக்க முடியாது என்றும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.</p><p>சீனா, அருணாச்சலப் பிரதேசத்தைக் குறிப்பிட 'ஸாங்னான்' என்ற பெயரைப் பயன்படுத்துகிறது. இந்தக் கூற்றை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தான் வழியே இந்தியாவுக்கு நேரடி ரெயில் பாதை: ரஷிய அரசின் புதிய தரைவழி வர்த்தக முன்மொழிவு!</title><link>https://www.maalaimalar.com/news/world/direct-rail-route-to-india-via-pakistan-russias-new-land-trade-proposal</link><comments>https://www.maalaimalar.com/news/world/direct-rail-route-to-india-via-pakistan-russias-new-land-trade-proposal#comments</comments><guid isPermaLink="false">6ea19d05-3b6b-4a23-a9dc-d44a07134577</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:17:44 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:17:44.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,Russia,Pakistan,Modi,Vladimir Putin,விளாடிமிர் புடின்,ரஷியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/owvom7jt/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vladimir Putin-modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/owvom7jt/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடல்வழி வர்த்தகப் பாதைகளில் அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பில் ஏற்படும் தடைகளுக்கு மாற்றாக, பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியே இந்தியப் பெருங்கடலையும் இந்தியாவையும் இணைக்கும் புதிய ரெயில் பாதையை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை ரஷியா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.</p><h2><strong>துணை பிரதமர் அறிவிப்பு</strong></h2><p>ரஷிய துணை பிரதமர் மராத் குஸ்னுலின் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கடல்வழி போக்குவரத்து ஸ்தம்பிக்கும் சூழலை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலை அடையும் புதிய தரைவழி பாதைகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><h2>திட்ட<strong>மிடப்பட்டுள்</strong>ள பாதைகள்</h2><p>பாஸ்பரஸ் ஜலசந்தி மற்றும் உலகின் மிக முக்கியமான எரிபொருள் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றங்கள், கடல்சார் போக்குவரத்து அச்சுறுத்தல்கள் காரணமாக தரைவழி மாற்றுப் பாதைகளின் தேவையை விரைவுபடுத்தியுள்ளன. துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வழியாக இந்த ரெயில் இணைப்பைச் சாத்தியமாக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்கு நேரடி அணுகலை வழங்கும் எந்தவொரு பாதையையும் ரஷிய அரசு ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வர்த்தக <strong>வரம்பு</strong> &amp; இலக்கு</h2><p>ரஷியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் பெருமளவில் அதிகரித்து வரும் நிலையில், 2030-ஆம் ஆண்டிற்குள் $100 பில்லியன் இலக்கை எட்ட இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. அதற்கு பாதுகாப்பான, தடையில்லாத சரக்கு போக்குவரத்து மிகவும் அத்தியாவசியமாகும்.</p><h2>அரசியல் <strong>சவால்கள்</strong></h2><p>இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சுமுகமற்ற உறவுகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல்கள் இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதில் முக்கிய முட்டுக்கட்டைகளாகக் கருதப்படுகின்றன. முன்னாள் சோவியத் நாடுகள் மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கு இடையே உள்ள தண்டவாள அகலப் பிரமாணங்களின் வேறுபாடு சரக்கு பரிமாற்றத்தின் போது கூடுதல் நேரத்தை எடுக்கக்கூடும். சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து மண்டலத்தை விரிவுபடுத்தி, கடல்சார் அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் நோக்கிலேயே இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சக வீராங்கனையுடன் தொடர்பு: ஆஸ்திரேலிய மகளிர் அணி துணை கேப்டன்மீது முன்னாள் மனைவி புகார்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-team-star-ashleigh-gardners-ex-wife-blasts-cricket-australia-over-cheating-scandal</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-team-star-ashleigh-gardners-ex-wife-blasts-cricket-australia-over-cheating-scandal#comments</comments><guid isPermaLink="false">f4122548-ee01-4aef-9b6d-8491b3ccf12b</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:16:36.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ashleigh gardner,monica wright,georgia voll,ஆஷ்லே கார்ட்னர்,மோனிகா ரைட்,ஜார்ஜியா வோல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/0gj4fon5/monica.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ashleigh Gardner, Monica Wright]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/0gj4fon5/monica.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணை கேப்டனான ஆஷ்லே கார்ட்னர், தனது சக வீராங்கனையுடன் தவறான தொடர்பு வைத்திருந்தார் என அவரது மனைவி மோனிகா ரைட் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருந்து வருபவர் ஆஷ்லே கார்ட்னர். இவரும், இவரது தோழியான மோனிகா ரைட்டும் காதலித்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2025, ஏப்ரல் மாதம் இருவரும் முறைப்படி தன்பாலின திருமணம் செய்து கொண்டனர்.</p><p>திருமணம் நடந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகத் தகவல்கள் வெளியானது.</p><p>இந்நிலையில், ஆஷ்லே கார்ட்னர் தன்னை ஏமாற்றிவிட்டு சக வீராங்கனையான ஜார்ஜியா வோல் உடன் தொடர்பு வைத்துள்ளார் என மோனிகா ரைட் குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2>சக வீராங்கனையுடன் தொடர்பு</h2><p>இதுகுறித்து மோனிகா ரைட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜார்ஜியா வோலின் புகைப்படத்தை பகிர்ந்து, என் மனைவி என்னை ஏமாற்றிவிட்டு இவருடன்தான் தொடர்பு வைத்திருந்தார் என பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:</p><p>ஒருவர் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் முன்மாதிரியாகத் திகழும் சிறப்பைப் பெற்றிருக்கும்போது, ​​உயர்ந்த தார்மீக நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது என நான் கருதுகிறேன்.</p><p>கிரிக்கெட் ஆஸ்திரேலியா இது குறித்து ஏன் பொதுவெளியில் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதுதான் எனக்குப் புரியவில்லை.</p><h2>கிரிக்கெட் ஆஸ்திரேலியா மவுனம் ஏன்?</h2><p>அவர்களின் இந்த மவுனம் ஆஷ்லே மற்றும் ஜார்ஜியா ஆகியோரின் செயல்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறதா? </p><p>குறிப்பாக அதிகார ஏற்றத்தாழ்வு நிலவும் சூழலில், ஒரு ஜூனியர் ஊழியருடன் முறையற்ற உறவு வைத்துக்கொண்டு, அதே சமயம் தலைமைப் பொறுப்பிலும் தொடர்ந்து நீடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>அணி கேப்டன்கள் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இத்தகைய நடத்தை அந்த எதிர்பார்ப்பிலிருந்து வெகுவாகக் கீழே உள்ளது என காட்டமாகத் தெரிவித்தார்.</p><p>கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 2025 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின்போதே இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.</p><p>ஆஷ்லே கார்ட்னர் மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோட்டில் ஆடு மேய்த்த பெண்... இன்று மாவட்ட கலெக்டர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-goat-herder-to-district-collector-vanmathis-inspiring-journey</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-goat-herder-to-district-collector-vanmathis-inspiring-journey#comments</comments><guid isPermaLink="false">01c82450-180a-4021-a2e3-4ef5298bdd0f</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:12:05 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:12:05.048Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>women empowerment,VanmathiIAS,வான்மதிஐஏஎஸ்,Wardha Collector,UPSC SuccessStory,ஈரோடு சாதனைப்பெண்,Inspirational Story</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2rj5220y/Vanmathi-IAS" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanmathi IAS ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2rj5220y/Vanmathi-IAS?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வறுமை மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறு வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டே படித்து, இன்று தனது கடுமையான உழைப்பால் மகாராஷ்டிர மாநிலத்தின் மாவட்ட ஆட்சியராக உயர்ந்து சாதனை படைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி வான்மதி ஐ.ஏ.எஸ். </p><p>வறுமையைக் காரணம் காட்டிப் படிப்பைப் பாதியில் கைவிடும் பலருக்கு, இவரது இந்தச் சாதனைப் பயணம் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.</p><h2>ஆடு மேய்த்துக் கொண்டே தொடர்ந்த பள்ளிப் படிப்பு!</h2><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வான்மதியின் தந்தை ஒரு சாதாரண ஓட்டுநர். அவர்களது குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக, வான்மதிக்குச் சிறு வயதிலேயே கூடுதல் பொறுப்புகள் சேர்ந்தன. </p><p>தினமும் காலையில் பள்ளிக்குச் சென்று நன்றாகப் படிக்கும் வான்மதி, மாலை பள்ளி முடிந்ததும் மற்ற குழந்தைகளைப் போல விளையாடச் செல்ல மாட்டார். மாறாக, தனது குடும்பத்தின் ஆடு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிடுவார். </p><p>அந்தப் பகுதியிலேயே ஆடுகளை மேய்த்துக் கொண்டே, கையில் புத்தகத்தை வைத்துத் தனது பள்ளிப் படிப்பைத் தீவிரமாகப் படித்து முடித்தார்.</p><h2>திருமணப் பேச்சுகளுக்கு நடுவே முதுகலை பட்டம்!</h2><p>பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வான்மதியின் குடும்பத்தினர் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். </p><p>ஆனால், தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற வான்மதியின் ஆசையை உணர்ந்த அவரது பெற்றோர், அவருக்கு உறுதுணையாக நின்றனர். </p><p>இவ்வளவு வறுமைக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியால் கணினி பயன்பாட்டியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று அசத்தினார்.</p><h2>தோல்விகளைத் தாண்டிய UPSC சாதனை!</h2><p>முதுகலை பட்டம் பெற்ற பிறகும் வான்மதியின் கனவு ஓயவில்லை. உயரிய பதவியான மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற இலக்கோடு யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார்.</p><p>பல மணிநேர உழைப்பு, ஆரம்பக்கட்ட தோல்விகள் எதற்கும் அவர் தொய்வடையவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில், வான்மதி அகில இந்திய அளவில் 152-ஆவது இடத்தைப் பிடித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தேர்வானார்.</p><h2>மகாராஷ்டிராவில் மாவட்ட கலெக்டர்!</h2><p>தேர்ச்சி பெற்ற பின் மகாராஷ்டிர மாநிலப் பிரிவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அவர், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தின் வர்தா மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுச் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றி வருகிறார்.</p><p>சாதாரண கிராமத்தில் ஆடு மேய்த்த சிறுமி, இன்று நாட்டின் மிக உயரிய பதவியில் அமர்ந்திருக்கும் வான்மதியின் இந்த வெற்றிக் கதை, தடைகளை உடைத்துச் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகச்சிறந்த வழிகாட்டியாகும்.</p>]]></content:encoded></item><item><title>அதிக அளவில் சீனி சேர்ப்பு: உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ரூ.38 கோடி அபராதம்..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/excess-sugar-mixing-udangudi-karupatti-traders-fined-rs-38-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/excess-sugar-mixing-udangudi-karupatti-traders-fined-rs-38-crore#comments</comments><guid isPermaLink="false">173753bf-7da9-4f95-b98e-0c2ec9e3cad9</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:01:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:01:19.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udangudi Karupatti,உடன்குடி கருப்பட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/a4b32by2/Karupatti.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உடன்குடி கருப்பட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/a4b32by2/Karupatti.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"கற்பகத்தரு" என்று அழைக்கப்படும் பனையில் இருந்து கிடைக்கப்பெறும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கின்றனர். பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் உடன்குடி பகுதியில் பலரும் பனைத்தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு கருப்பட்டி தயாரித்து விற்கின்றனர்.</p><p>பனை தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்துள்ளது. எனினும் அவற்றை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.</p><h2>சீனி மூட்டைகள் விற்பனை அதிகம்</h2><p>ஆனால் பதநீரில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக சீனி கலந்து கருப்பட்டி, கற்கண்டு போன்றவை தயாரித்தால், அவற்றுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பனை பொருட்களை சில்லறையில் விற்பனை செய்தால் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் சீனி மூட்டைகளை வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்ததாக நெல்லை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் உடன்குடி பகுதியில் ஆய்வு செய்தனர்.</p><h2>ஜி.எஸ்.டி. மோசடி</h2><p>இதில், உடன்குடி பகுதியில் கடந்த சில வாரங்களில் ரூ.5 கோடிக்கு சீனி மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்ததும், பதநீரில் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி என்று கூறி ரூ.6 கோடி வரை விற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.</p><p>மேலும் சீனி கலந்து தயாரித்த கருப்பட்டிகளை அசல் கருப்பட்டி என்று கூறி கடைகளில் விற்றதால் 5 சதவீத ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள், பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரையிலும் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து விற்றுள்ளனர். இதன் மூலம் சீனி கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படாமல், 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளது.</p><h2>ரூ.38 கோடி அபராதம்</h2><p>இவ்வாறு கடந்த 6 ஆண்டுகளில் கருப்பட்டி வியாபாரிகள் சிலர் பல்வேறு முறைகேடுகள் செய்தது கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக உடன்குடி பகுதியைச் சேர்ந்த 5 கருப்பட்டி வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கேள்வி மட்டும் கேட்காதீர்கள், விடையைக் கண்டறியுங்கள்: ஐ.ஐ.டி. விழாவில் பிரதமர் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-message-to-gen-zs-at-iit-event-have-courage-to-seek-solutions</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-message-to-gen-zs-at-iit-event-have-courage-to-seek-solutions#comments</comments><guid isPermaLink="false">b9a2ce6a-c5c7-4228-9b48-4905ad44e3c2</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:44:14 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:44:14.428Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gen z,pm modi,IIT Delhi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/r1zqvvtd/PMModi0808.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/r1zqvvtd/PMModi0808.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி IIT-யின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>இன்றைய இளைஞர்கள் சவால்களைக் கண்டு பின்வாங்காமல், அவற்றுக்கான தீர்வுகளைத் தேடும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும் இளைஞர்களின் புதுமையான சிந்தனையும் தொழில்நுட்ப அறிவும் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானவை.</p><h2>இளைஞர்கள் கேள்விகளை எழுப்ப வேண்டும்</h2><p>சிக்கல்கள் வரும்போது, இது முடியாது என்று கூறுவதற்குப் பதிலாக, இதை எப்படிச் செய்ய முடியும்? என்ற கேள்வியை இளைஞர்கள் எழுப்ப வேண்டும். தோல்வி குறித்த பயத்தைத் தாண்டி புதிய முயற்சிகளை மேற்கொள்வதும், தேவையான இடங்களில் ஆபத்தை ஏற்றுக்கொள்வதும் வெற்றிக்கான முக்கியப் பாதைகள் என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>இன்றைய Gen-Z தலைமுறை செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, செமிகண்டக்டர், பசுமை எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும். குறிப்பாக, சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பம் மற்றும் புதுமை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் வளர்க்க வேண்டும்.</p><h2>Gen Z இளைஞர்கள் சவால்களைப் பார்த்து அஞ்சக்கூடாது</h2><p>கல்வி என்பது வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான கருவியாக மட்டும் இருக்கக் கூடாது. புதிய சிந்தனைகளை உருவாக்கி, நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனை வளர்க்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். இந்தியாவின் இளம் தலைமுறையிடம் நம்பிக்கை இருப்பதாகக் கூறிய பிரதமர், அவர்களின் துணிச்சல், நம்பிக்கை மற்றும் புதுமை ஆகியவை நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p>எனவே, சவால்களைப் பார்த்து அஞ்சாமல், அவற்றை வாய்ப்புகளாக மாற்றி, புதிய பாதைகளை உருவாக்குவதே Gen-Z இளைஞர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.</p><p>கேள்வி மட்டும் கேட்காதீர்கள், விடையைக் கண்டறியுங்கள். இந்தியாவின் ஸ்டார்ட்அப் (தொடக்கநிலை நிறுவனங்கள்) புரட்சியை வடிவமைத்து, அதற்கு வலுசேர்த்தவர்கள் உங்களைப் போன்ற, இதே தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.</p><h2>சிப்கள் முதல் கப்பல்கள் வரை</h2><p>ஒரு தனி நிறுவனமே இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடியுமென்றால், நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வரும் அந்த மாபெரும் சக்தியைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள்.</p><p>சிப்புகள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் உங்கள் கைகளால் இங்கேயே தயாரிக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><p>இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை- முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/delimitation-issue-meeting-of-mps-from-all-parties-led-by-chief-minister-vijay-has-begun</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/delimitation-issue-meeting-of-mps-from-all-parties-led-by-chief-minister-vijay-has-begun#comments</comments><guid isPermaLink="false">02f9f9eb-dbe4-40ff-bd6b-75cf2a72d199</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:40:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:40:25.378Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தொகுதி மறுவரையறை,Delimitation,MPs Meeting,எம்பிக்கள் கூட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c82yj883/Vijay06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c82yj883/Vijay06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மதியம் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.</strong></em></p><p>நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியிலும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out">தொகுதி மறுவரையறையின்</a> போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன.</p><h2><strong>முதலமைச்சர் விஜய் தலைமையில்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்பது பற்றி நேற்று சட்டமன்றத்தில் த.வெ.க. அமைச்சர்களும் கேள்வி எழுப்பினார்கள். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/q94c6j9k/vijay.jpg" /></figure><h2><strong>புறக்கணிப்பு</strong></h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. </p><h2><strong>கூட்டம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மதியம் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது</p><h2><strong>பங்கேற்பு</strong></h2><p>த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து  கொண்டனர்.</p><h2><strong>ம.தி.மு.க.</strong></h2><p>ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் மூலம் த.வெ.க. ஆதரவு எம்.பி.க்கள் 20 பேர் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.</p><p>தமிழகத்தில் மொத்தம் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளையும் சேர்த்து 57 பேர் உள்ளனர்.  இவர்களில் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.</p><p>தி.மு.க.வில் 8 மேல் சபை எம்.பி.க்களும், 20 மக்களவை எம்.பி.க்களும் உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 4 மேல் சபை எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item></channel></rss>