<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 22 Aug 2026 11:32:59 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 22 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-august-2026#comments</comments><guid isPermaLink="false">e2a2597d-07a4-4e47-9c79-e9f341ff896c</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:03:13 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:50:32.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7a7fqmxz/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7a7fqmxz/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/russia-double-drone-attack-on-ukraine-mall-kills-16">உக்ரைனின் வணிக வளாகம் மீது தாக்குதல்: ரஷியாவிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!</a></p><p>* ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ் வணிக வளாகம் மீது ரஷ்யா இரட்டை ட்ரோன் தாக்குதல்.</p><p>* இது மனிதாபிமானமற்ற பயங்கரவாதம் என ஜெலன்ஸ்கி கண்டனம், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/japanese-father-leaves-7-year-old-alone-on-mount-fuji">7 வயது மகன் ஃபூஜி மலை ஏறும்போது சோர்வடைந்ததால் தனியாகத்தவிக்கவிட்டுச் சென்ற ஜப்பானியத் தந்தை!</a></p><p>* புஜி மலையில் 2490 மீட்டர் உயரத்தில் சோர்வடைந்த 7 வயது மகனை தந்தை தனியே விட்டுச் சென்றார்.</p><p>* தவறான முடிவுக்கு வருந்துவதாக தந்தை மன்னிப்பு கேட்டார், பாதுகாப்பு விதிகளை போலீசார் வலியுறுத்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-srilanka-in-second-test-for-colombo">நாளை கடைசி டெஸ்ட்: இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்தியா?</a></p><p>* முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.</p><p>* காயமடைந்த தினேஷ் சண்டிமால் இலங்கை அணியில் சேர்க்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/former-cm-pinarayi-vijayan-says-his-hands-clean-denies-hawala-dealings">என் கைகள் சுத்தமானவை..! ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டை மறுத்த பினராயி விஜயன்</a></p><p>* வீணா என்னுடைய மகள் என்பதனால் ஏராளமான விசயங்கள் எழுப்பப்பட்டன.</p><p>* ஏராளமான சொத்துகளுக்கு வீணா உரிமையாளர் கிடையாது. பேசப்படும் பணத்தின் அளவும் பெரியதல்ல.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikhs-protest-outside-rahul-gandhis-residence-against-cong-leaders-calling-sajjan-kumar-hero">ராகுல் காந்தி வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்: காரணம் என்ன?</a></p><p>* சஜ்ஜன் குமாரின் மறைவுக்குப் பிறகு, அவர் தங்கள் நாயகன் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் ஆட்சேபனைக்குரியவை.</p><p>* சஜ்ஜன் குமார் தங்கள் நாயகனா என்பது குறித்து ராகுல் காந்தி இன்று தெளிவுபடுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/australia-165-for-8-wickets-in-first-day-against-bangladesh-second-test">2வது டெஸ்ட்: 64 ரன்னில் சுருண்ட வங்கதேசம்: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 165/8</a></p><p>* ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>* 2வது டெஸ்டின் முதல் நாளில் மொத்தம் 18 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped">வீ த லீடர்ஸ் அமைப்பின் இணைய தளம் மாற்றி அமைப்பு - அண்ணாமலை அறிவிப்பு</a></p><p>* இதுவரை உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்களுடன் இருந்த இந்த பக்கத்தை இப்போது மாற்றி அமைத்துள்ளார்.</p><p>* பொதுமக்கள் அவற்றை பார்த்து பணிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk"> திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் - செயற்குழுவில் தீர்மானம்</a></p><p>* தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பாக அதிரடி முடிவுகள் தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-before-vigilance-and-anti-corruption-police">செந்தில்பாலாஜி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜர் - டாஸ்மாக் முறைகேடு பற்றி விசாரணை</a></p><p>* டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.</p><p>* 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/sports/lausanne-diamond-league-rumesh-pathirage-hattrick">லோசான் டைமண்ட் லீக்: 9 செ.மீ இடைவெளியில் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி ருமேஷ் பத்திரகே ஹாட்ரிக் சாதனை! </a></p><p>*இரண்டாவது சுற்றில் நீரஜ் சோப்ரா அபாரமாகச் செயல்பட்டு 88.05 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தற்காலிகமாகப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். </p><p>*மூன்றாவது சுற்றில், இலங்கை வீரர் ருமேஷ் பத்திரகே 88.14 மீட்டர் தூரம் எறிந்து மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur">டெல்லி ஜந்தர் மந்தர் பாணியில் ஜெய்ப்பூரில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அபிஜீத் திப்கே எச்சரிக்கை!</a></p><p>* மாட்டுத் தொழுவத்தில் இயங்கும் அரசுப்பள்ளியை ஆய்வு செய்ய சென்ற சி.ஜே.பி தொண்டர்கள் மீது தாக்குதல்.</p><p>* தாக்குதலை பா.ஜ.க குண்டர்கள் நடத்தியதாகவும், பெண் தொண்டர் உட்பட பலர் காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-steps-into-387th-year-our-pledge-to-protect-the-foster-mother">387-ல் அடியெடுத்து வைக்கும் நம்ம சென்னை: வளர்ப்பு அன்னையைக் காக்க நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி!... </a></p><p>*வாழ்வு தேடி வந்த கோடிக்கணக்கான மக்களைத் தன் மடியில் ஏந்தி, வாழ்வாதாரம் அளித்து பேணிக்காக்கும் தாயாகத் திகழ்கிறது சென்னை மாநகரம். </p><p>*அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாத்துச் சென்னையின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly">சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்- திருமாவளவன்</a></p><p>* மாநில சுயாட்சி என்ற கோரிக்கை முழக்கத்தை உரக்க பேசவே இந்த மாநாடு நடைபெற்றது. </p><p>* மாநில சுயாட்சி என்பது தி.மு.க.வால் முன் நிறுத்தப்பட்ட ஒரு மகத்தான கோட்பாடு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-teachers-selected-for-national-teachers-award">தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தேசிய நல்லாசிரியர் விருதிற்கு  தேர்வான ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>* தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-day-anbumani-ramadoss-wishes">சென்னையின் வரங்களை பாதுகாக்க சென்னை நாளில் உறுதியேற்போம்! - அன்புமணி</a></p><p>* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான்.</p><p>* ஏரிகளையும் அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கி வருகிறோம். இதை விட மோசமாக இயற்கையை சூறையாட முடியாது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-imposes-charges-on-the-savings-accounts-of-the-poor-and-the-common-people">ஏழை எளிய மக்களின் சேமிப்பு கணக்கிற்கு கட்டணம் விதிக்கும் மோடி அரசு- மாணிக்கம் தாகூர் கண்டனம்</a></p><p>*  ஏழை எளிய மக்களிடம் கட்டண கொள்ளை அடிக்கும் இந்த வங்கிகள் தான் கடந்த 10 ஆண்டுகளில் பெரு முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது.</p><p>* மோடி அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-canada-trade-talks-fail-canada-to-impose-retaliatory-tariffs">அமெரிக்கா-கனடா வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: 50% வரிகளுக்கு பதிலடியாக சமமான வரி விதிக்க கனடா பிரதமர் முடிவு!... </a></p><p>*வாஷிங்டனில் 3 நாட்கள் நீடித்த பேச்சுவார்த்தை முறிந்ததால் நள்ளிரவு முதல் அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்</p><p>*தூதுக்குழுவை உடனடியாக ஒட்டாவாவிற்கு திரும்ப அழைத்தது கனடா.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-8-2026">GOLD PRICE TODAY: நகை பிரியர்களுக்கு ஷாக்... ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-cherish-and-preserve-chennai-history">சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் - கனிமொழி</a></p><p>* எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த  மெட்ராஸ் மாநகரம்</p><p>* இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-flight-fares-from-chennai-to-kerala-surge-multiple-times">ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி... </a></p><p>*ரெயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் ஏற்கனவே முழுமையாக நிரம்பிவிட்டதால், கடைசி நேரப் பயணத்திற்கு மக்கள் பெருமளவில் விமான சேவையை நாடத் தொடங்கியுள்ளனர். </p><p>*இதைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/public-pays-tribute-to-sowcar-janaki-funeral-this-evening">சௌகார் ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி - இன்று மாலை இறுதிச்சடங்கு</a></p><p>* சௌகார் ஜானகியின் வாழ்க்கையில் வானொலிக்கும் முக்கிய இடம் உண்டு.</p><p>* 2020-ம் ஆண்டு வெளியான 'பிஸ்கோத்' திரைப்படம் அவரது 400-வது படமாகக் குறிப்பிடப்படுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-tender-2-famous-jewellery-companies">தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டரை கைப்பற்றிய 2 பிரபல நகை நிறுவனங்கள்</a></p><p>* &nbsp;ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>* ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டதில் 11 நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தன.</p>]]></content:encoded></item><item><title>ஓய்வுபெற்ற காவல் நாய்களை இனிமேல் தத்தெடுக்க அனுமதி கிடையாது: தேவேந்திர பட்னாவிஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/retired-police-dogs-no-longer-allowed-for-adoption-devendra-fadnavis</link><comments>https://www.maalaimalar.com/news/national/retired-police-dogs-no-longer-allowed-for-adoption-devendra-fadnavis#comments</comments><guid isPermaLink="false">c01902b7-9d2d-47b0-9c0d-49c219587c31</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:32:00 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:32:00.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,தேவேந்திர பட்னாவிஸ்,devendra fadnavis,police dog,காவல் நாய்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/c1hy9e6c/Untitled-design-9.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra Police Retired Dogs Adoption Ban]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/c1hy9e6c/Untitled-design-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற காவல் நாய்கள் இனி மூன்றாம் தரப்பினருக்கு தத்தெடுப்புக்காக வழங்கப்படாது என அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று அறிவித்தார்.</p><p>காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள், தங்கள் பணியை நிறைவு செய்த பிறகு பொதுவாக தத்தெடுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த வகையான காவல் நாய்களுக்கு, தங்கள் பராமரிப்பாளர்களிடம் இருந்தும், வழக்கமான பழக்கவழக்கங்களில் இருந்தும் திடீரென பிரிவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது.</p><p>இதன் விளைவாக, பல நாய்கள் மன அதிர்ச்சிக்கு உள்ளாகி, தங்களின் புதிய சூழல்களில் உணவை உண்பதற்கு மறுத்து வந்தன.</p><p>இந்த நிலையில், பணி ஓய்வு பெற்ற காவல் நாய்களின் நலன் குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய அறிவிப்பை பிறப்பித்துள்ளார்.</p><h3><strong>மகாராஷ்டிர முதலமைச்சர்</strong></h3><p>அவர் அந்த அறிவிப்பில், மகாராஷ்டிர காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு நாய், தனது பணி ஓய்வுக்கு பிறகு துன்பப்படக்கூடாது. அத்தகைய விலங்குகள் நன்கு பராமரிக்கப்பட்டு, தங்கள் வாழ்நாளின் எஞ்சிய காலத்தை வசதியாக வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.</p><p>பணி ஓய்வு பெற்ற நாய்கள், தங்களின் நீண்டகால பொறுப்பாளர்களுடன் காவல் துறையிலேயே தொடர்ந்து பணியாற்றும், அவர்களது வாழ்க்கை மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தும் உள்துறை அமைச்சகத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் என்றார்.</p><h3><strong>ஓய்வுபெற்ற காவல் நாய்கள்</strong></h3><p>இதன்படி காவல் நாய்கள் 10 வருட சேவைக்கு பிறகு, செயல்பாட்டு பணிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறும், ஆனால் அவற்றின் எஞ்சிய ஆண்டுகளை கழிப்பதற்காக படையில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.</p><p>பத்தாண்டு கால சேவையின் போது காவல் நாய்களுக்கும் அதன் பயிற்றுவிப்பாளருக்கும் இடையில் உருவான வலுவான பிணைப்பு தடையின்றி நீடிப்பதை இந்த கொள்கை உறுதி செய்கிறது.</p><p>ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை தேவைகள் உள்ளிட்ட ஓய்வுக்கு பிந்தைய அனைத்து செலவுகளுக்கும் மகாராஷ்டிர உள்துறை நேரடியாக நிதியளிக்க உள்ளது.</p><p>பணி ஓய்வு பெற்ற நாய்கள் முழுமையான அரசு ஆதரவுடனான வாழ்நாள் பராமரிப்புக்கு மாறுவதன் மூலம், அந்த நாய்கள் தங்கள் சேவையை நிறைவு செய்தபிறகு, அவற்றுக்கு தேவையான ஆறுதலும் பழக்கமான சூழலும் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஈக்கள், கரப்பான்பூச்சிகள்: மகாராஷ்டிராவில் மெக்டொனால்டு உள்பட 12 முக்கிய உணவகங்களின் லைசென்ஸ் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-fda-suspends-licences-of-mcdonalds-12-others-after-flies-cockroaches-found</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-fda-suspends-licences-of-mcdonalds-12-others-after-flies-cockroaches-found#comments</comments><guid isPermaLink="false">f6d782c5-2eb9-4969-9acd-055e31f3fb2b</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:20:15 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:20:15.085Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>McDonald,மெக்டொனால்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/l8k4ikjz/FDA0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுகாதாரமற்ற உணவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/l8k4ikjz/FDA0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) பல்வேறு இடங்களில் உள்ள முக்கியமான உணவகங்கள், பேக்கரிகள், கிளப்கள் போன்றவற்றில் உணவு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு உணவகங்களில் தூய்மை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>இதனால் தூய்மை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்துமாறு 71 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், 13 கடைகளின் உணவகங்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மறு உத்தரவு வரும் வரை உணவுகள் விநியோகம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>கடந்த 19-ந்தேதி பாம்பே பிரசிடென்சி ரேடியோ கிளப்பில் சோதனை நடத்தப்பட்டது. இதில் விதிமுறையை 47 சதவீதம் வரை கூட கடைபிடிக்கவில்லை என தெரியவந்தது. இதனால் இந்த கிளப் உணவு விநியோகம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ரேடியோ கிளப்</h2><p>சமையலறையில் ஏராளமான ஈக்கள் பறந்து கொண்டிருந்ததாகவும், செத்துப்போன கரப்பான்பூச்சிகள் ஆங்காங்கே காணப்பட்டதாகவும் FDA இன்ஸ்பெக்டர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் உணவு தயாரிக்கும் இடங்களுக்கு மேலே உள்ள கூரையில் வண்ணப்பூச்சு மற்றும் சாந்து உதிர்ந்து இருப்பதையும், உணவுக்கு அருகில் சலவைத்தூள் மற்றும் பிற ரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதையும், உணவுப் பொருட்கள் நேரடியாகத் தரையில் வைக்கப்பட்டிருப்பதையும், அசைவ உணவுகளுக்காக பயன்படுத்தப்பட்ட தூய்மையற்ற குளிர்சாதன பெட்டிகள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p>மேலும் பூச்சிகளும் அசுத்தங்களும் உள்ளே நுழையக்கூடிய வகையில் சமையலறைக் கதவு சரியாக மூடப்படாமல் இருந்ததையும், சமையல் அடுப்புகளுக்கு அருகில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்ததையும், வளாகத்தில் எச்சில் துப்பியதற்கான தடயங்களையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><h2>மெக்டொனால்டு கிளை</h2><p>ஹார்ட்கஸில் ரெஸ்டாரண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Hardcastle Restaurants Pvt Ltd) நிறுவனத்தால் இயக்கப்படும் கொலாபாவில் உள்ள மெட்ரோ ஹவுஸ் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் FSSAI உரிமம் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.</p><p>ஆகஸ்ட் 19-ந்தேதி நடத்தப்பட்ட மறுஆய்வின் போது, ​​முன்னதாக வழங்கப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த 20 குறைபாடுகளில் 18 குறைபாடுகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்று FDA தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஆய்வின்போது, ​​சரியாக அளவீடு செய்யப்படாத குளிரூட்டும் சாதனங்கள், உயிருள்ள கரப்பான் பூச்சிகள், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பொறிகள் இல்லாமை, சமையலறைத் தரையில் அழுகிய உணவுக்கழிவுகள், அழுக்கான துப்புரவுத் துணிகள் மற்றும் பாதுகாப்பு உறைகள் இல்லாத தூசி படிந்த விளக்குகள் ஆகியவை கண்டறியப்பட்டன. மேலும், அழுக்கான காலணிகள் மற்றும் துப்புரவுத் துணிகளைத் தொட்ட பிறகு கைகளைக் கழுவாமல், உடனடியாக உண்ணக்கூடிய உணவை ஊழியர்கள் கையாண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இந்த உணவகம் ஆகஸ்ட் 12 அன்று 148 பக்கங்கள் கொண்ட விதிமுறை இணக்க அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.  இருப்பினும், மறுஆய்வின் போது பெரும்பாலான தீவிரமான குறைபாடுகள் இன்னும் சரிசெய்யப்படாமல் இருந்ததாக FDA கூறியது.</p><p>உண்மையான சீஸ் மற்றும் பனீர் (paneer) பயன்படுத்தப்படுவதாக வாடிக்கையாளர்களிடம் கூறப்பட்டிருந்தாலும், "GO Cheese SAUCE" எனப்படும் பதப்படுத்தப்பட்ட பால் அல்லாத அல்லது அனலாக் (மாற்று) தயாரிப்பு பயன்படுத்தப்பட்டதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p>மெக்டொனால்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், உணவுப் பாதுகாப்பு விவகாரங்களில் நிறுவனம் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' (zero-tolerance) கொள்கையைக் கொண்டிருப்பதாகவும், ஒழுங்குமுறை நடைமுறைகளை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும், உண்மையான சீஸ் மற்றும் பனீர் பயன்பாடு உட்பட உணவுத் தரம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான கடுமையான தரநிலைகளைத் தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>7 வயது மகன் ஃபூஜி மலை ஏறும்போது சோர்வடைந்ததால் தனியாகத்தவிக்கவிட்டுச் சென்ற ஜப்பானியத் தந்தை!</title><link>https://www.maalaimalar.com/news/world/japanese-father-leaves-7-year-old-alone-on-mount-fuji</link><comments>https://www.maalaimalar.com/news/world/japanese-father-leaves-7-year-old-alone-on-mount-fuji#comments</comments><guid isPermaLink="false">3600044a-4a68-4c19-ba76-5673beec87f8</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:38:24 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:38:24.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Japan,ஜப்பான்,குழந்தை பாதுகாப்பு,Mount Fuji,மவுண்ட் புஜி,Child Abandonment,Mount Fuji Climb,Hiking Safety,Mountain Rescue</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/llqhbgdy/Japan-Mount-Fuji" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Japan - Mount Fuji  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/llqhbgdy/Japan-Mount-Fuji?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'நீ இங்கேயே உட்கார்ந்து காத்திரு' என்று கூறிவிட்டு, தனது மூத்த மகன் மற்றும் நண்பருடன் மலையின் உச்சியை நோக்கித் தொடர்ந்து பயணித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஜப்பானின்</a> புகழ்பெற்ற 'மவுண்ட் புஜி' மலையில் ஏறியபோது சோர்வடைந்த தனது 7 வயது மகனைப் பாதி வழியிலேயே தனியாகத் தவிக்கவிட்டு, மூத்த மகனுடன் தந்தை மலை உச்சிக்குச் சென்ற அதிர்ச்சி சம்பவம் ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட தந்தைக்கு எதிராக உலகளவில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.</p><h2>பாதியில் நிறுத்தப்பட்ட சிறுவன்</h2><p>நகாயா பகுதியைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது இரு மகன்கள் மற்றும் அவரது நண்பர் ஒருவருடன் மவுண்ட் புஜி மலையில் ஏறியுள்ளார். அவர்கள் 'புஜினோமியா' மலைப்பாதை வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, அவரது 7 வயது இளைய மகனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது.</p><p>மலையின் 6-வது முகாம் பகுதியில், சுமார் 2,490 மீட்டர் (8,169 அடி) உயரத்தில் காலை 7:30 மணியளவில் அந்த சிறுவன் தனக்குக் களைப்பாக இருப்பதாகக் கூறியுள்ளான். </p><p>இதைக் கேட்டுப் பயணத்தைப் பாதியில் நிறுத்த விரும்பாத தந்தை, "நீ இங்கேயே உட்கார்ந்து காத்திரு" என்று கூறிவிட்டு, தனது மூத்த மகன் மற்றும் நண்பருடன் மலையின் உச்சியை நோக்கித் தொடர்ந்து பயணித்துள்ளார்.</p><h2>காப்பாற்றிய ஊழியர்</h2><p>அவர்கள் சென்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பலத்த மழையுடன் கூடிய மோசமான வானிலை நிலவியுள்ளது. காலை 7:40 மணியளவில், அங்குள்ள ஒரு மலைக்குடிலின் ஊழியர், பனிப்பொழிவிலும் மழையிலும் அந்த சிறுவன் தனியாக ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.</p><p>உடனடியாகச் சிறுவனை மீட்டு, குடிலுக்குள் அழைத்துச் சென்று தங்குமிடம் கொடுத்த அவர், உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.</p><h2>காவல்துறை எச்சரிக்கையும் தந்தையின் வருத்தமும்</h2><p>தகவலறிந்து வந்த காவல்துறையினர், மலையேற்றத்தில் இருந்த தந்தையைத் தொடர்பு கொண்டு எச்சரித்தனர். </p><p>பனிமலையில் குழந்தைகளைத் தனியாக விடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை எடுத்துரைத்து, அவரைத் திரும்ப வரவழைத்துக் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர்.</p><p>தகாத முடிவை எடுத்ததை ஒப்புக்கொண்ட தந்தை, "நான் மிகவும் அவசரப்பட்டு, தவறான முடிவை எடுத்துவிட்டேன். இதற்காக ஆழமாக வருந்துகிறேன்" என்று அதிகாரிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.</p><h2>முறையான மலையேற்ற விதியைக் கூறல்</h2><p>இச்சம்பவம் குறித்து ஜப்பானியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கையில், "மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது குழுவில் இருக்கும் நபரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே பயணிக்க வேண்டும். </p><p>ஒருவருக்குச் சோர்வு ஏற்பட்டால் ஒட்டுமொத்த குழுவும் பயண வேகத்தைக் குறைக்க வேண்டும் அல்லது பயணத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தானில் 611 அரசுப் பள்ளிகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் இல்லை: பேரவையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/611-government-schools-in-rajasthan-lack-own-buildings-shocking-revelation-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/national/611-government-schools-in-rajasthan-lack-own-buildings-shocking-revelation-in-assembly#comments</comments><guid isPermaLink="false">a6e99a06-bb80-4c3c-8e45-40d93b5c3591</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:36:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:36:03.088Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜெய்ப்பூர்,jaipur,Rajasthan schools,Rajasthan BJP,ராஜஸ்தான்,CJP,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jgxqae5x/raja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajasthan schools ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/jgxqae5x/raja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 611 அரசுப் பள்ளிகள் சொந்தக் கட்டடங்கள் இன்றி இயங்கி வருவதாக அம்மாநில அரசு சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் டீகா ராம் ஜூலி எழுப்பிய கேள்விக்கு, 2025-26ஆம் ஆண்டிற்கான UDISE தரவுகளின் அடிப்படையில் கல்வித் துறை இந்த அதிர்ச்சிப் பதிலளித்துள்ளது.</p><h2>CJ<strong>P ஆய்வு</strong></h2><p>இளைஞர் மற்றும் குடிமக்கள் அமைப்பான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP), "ஸ்கூல் தீக் கரோ" (பள்ளிகளைச் சீரமைப்போம்) என்ற பிரசாரத்தின் கீழ் மாநிலம் தழுவிய கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஜெய்ப்பூர் அருகே பகரூ பகுதியில், பழுதடைந்த பள்ளி கட்டடத்திற்குப் பதிலாக மாணவர்கள் மாட்டுக்கொட்டகையில் அமரவைக்கப்பட்டுப் பாடம் நடத்தப்படுவதாக எழுந்த புகாரை ஆய்வு செய்யச் சென்ற CJP குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>அடிப்படை வச<strong>திகளற்ற பள்ளி</strong>கள்</h2><p> மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் 38 பள்ளிகளும், ஜாலாவார் மாவட்டத்தின் அக்லேரா பகுதியில் அதிகபட்சமாக 23 பள்ளிகளும் கட்டடமின்றி இயங்குகின்றன. சொந்தக் கட்டடம் கொண்ட 64,484 பள்ளிகளில், 2,047 பள்ளிகளில் கழிப்பறைகளும் 1,049 பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும் இல்லை. பான்ஸ்வாரா மாவட்டத்தில் அதிகபட்சமாக 188 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை.</p><h2>எதிர்க்கட்சி <strong>குற்றச்சாட்டு</strong></h2><p>மாநிலத்தில் 3,768 அரசுப் பள்ளிக் கட்டடங்களும் 83,000-க்கும் மேற்பட்ட வகுப்பறைகளும் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதாகக் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அரசிடம் முறையான திட்டமிடல் இல்லை எனக் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்த அரசு, பள்ளிகளைப் பராமரிக்க ரூ.550 கோடியும், புதிய கட்டடங்கள் கட்ட ரூ.450 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு நிதிகள் மூலம் ஆண்டுதோறும் ரூ.2,500 கோடி கல்வி உள்கட்டமைப்பிற்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது.</p>]]></content:encoded></item><item><title>சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கு: TDB முன்னாள் தலைவருக்கு ஜாமின் மறுப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/sabarimala-gold-loss-case-prasanth-denied-bail-former-tdb-member-ajikumar-gets-relief</link><comments>https://www.maalaimalar.com/news/national/sabarimala-gold-loss-case-prasanth-denied-bail-former-tdb-member-ajikumar-gets-relief#comments</comments><guid isPermaLink="false">c7c93e55-a1f6-43cb-85e6-249b09fcbe89</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:22:52 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:22:52.791Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TDB,திருவாங்கூர் தேவசம்போர்டு,ayyappan gold theft,ஐயப்பன் கோவில் நகை திருடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5suzx1o0/Sabarimala.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சபரிமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5suzx1o0/Sabarimala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சபரிமலை கோவில் துவார பாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டதில் தங்கம் மாயமான வழக்கில் கடந்த ஜூலை மாதம் இருவர் கைது செய்யப்பட்டனர்.</p><p>கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது. அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.</p><p>இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சபரிமலை அய்யப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு-வும் கைது செய்யப்பட்டார்.</p><p>TDB முன்னாள் தலைவர்</p><p>இவ்வழக்கு விசாரணை கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 17-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் திருவாங்கூர் தேவஸ்தம் போர்டு முன்னாள் தலைவர் பி.எஸ். பிரசாந்த் ஆவார். 18-வது குற்றவாளியாக அஜித் குமார் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>இருவரும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது TDB-யின் முன்னாள் உறுப்பினர் அஜித்குமாருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால் TDB முன்னாள் தலைவர் வி.பிஎஸ். பிரசாந்திற்கு நீதுிபதி மோகித் ஜாமின் வழங்க மறுத்துவிட்டார். அஜித்குமாருக்க உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கப்படடுள்ளது.</p><p>பிரசாந்த் 2023ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவராக இருந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (மார்க்சிஸ்ட்) இணைவதற்கு முன்பு அவர் ஒரு காங்கிரஸ் தலைவராக இருந்தார்.</p><p>ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைக்கு தகடு பதிக்க கடந்த 2024-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கும் முடிவை எடுத்த குழுவில் பிரசாந்த், அஜித்குமார் மற்றும் ஜி. சுந்தரேசன் ஆகியோர் இருந்தனர். இருவரும் கடந்த மாதம் 23-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>8 ஆண்டுகால காதல் : கோவாவில் ரகசியப் பதிவுத் திருமணம் செய்த அர்ஜுன் ராம்பால் &amp; கேப்ரியெல்லா ஜோடி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/8-years-of-love-arjun-rampal-gabriella-secret-registered-marriage-in-goa</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/8-years-of-love-arjun-rampal-gabriella-secret-registered-marriage-in-goa#comments</comments><guid isPermaLink="false">34c20331-bbf1-470a-871b-c2b17ca7da3a</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:22:27 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:22:27.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arjun Rampal,அர்ஜுன் ராம்பால்,Gabriella Demetriades,கேப்ரியெல்லா,Arjun Gabriella Wedding,8YearsOf Togethernes,MapusaSubRegistrar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/tut09pii/Arjun-Gabriella-Wedding" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arjun Gabriella Wedding ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/tut09pii/Arjun-Gabriella-Wedding?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் அவரது நீண்ட நாள் காதலியும் பிரபல மாடலுமான கேப்ரியெல்லா டெமெட்ரியாடஸ் தங்களது 8 ஆண்டுகால காதல் வாழ்க்கையைத் திருமண பந்தமாக மாற்றியுள்ளனர். நேற்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE">கோவா</a>வில் உள்ள மாபுசா துணைப் பதிவாளர் அலுவலகத்தில் இவர்கள் தங்களது திருமணத்தைப் பதிவு செய்துள்ளனர்.</p> <h2>அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த பதிவாளர்</h2><p>திருமணம் குறித்து இந்த ஜோடி தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவொரு புகைப்படத்தையோ அல்லது அறிவிப்பையோ வெளியிடாத நிலையில், வடகோவா பார்தேஸ் துணைப் பதிவாளர் சூரஜ் வெர்னேகர் இவர்களது திருமணச் செய்தியை செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். </p><p>மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த எளிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">பதிவுத் திருமணம்</a> நடைபெற்று முடிந்துள்ளது.</p> <h2>2018 முதல் தொடங்கும் காதல் பயணம்</h2><p>அர்ஜுன் ராம்பால் மற்றும் கேப்ரியெல்லா இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு பொதுவான நண்பர்கள் மூலமாகச் சந்தித்துக் கொண்டனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. </p><p>இதனைத் தொடர்ந்து, அர்ஜுன் ராம்பால் தனது முதல் மனைவி மெஹ்ர் ஜெசியாவிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தார். இவர்களது விவாகரத்து 2019-ல் முறைப்படி முடிவுக்கு வந்தது.</p><h2>நிறைவடைந்த 4 பேர் கொண்ட குடும்பம்</h2><p>திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த இந்த தம்பதியினருக்கு, ஜூலை 2019-ல் அரிக் என்ற முதல் ஆண் குழந்தையும், ஜூலை 2023-ல் அரிவ் என்ற இரண்டாவது ஆண் குழந்தையும் பிறந்தனர். </p><p>அர்ஜுன் ராம்பாலுக்கு அவரது முதல் திருமணம் மூலம் மஹிகா, மைரா என்ற இரு மகள்கள் ஏற்கனவே உள்ளனர். </p><p>அவர்கள் இருவரும் கேப்ரியெல்லாவுடன் மிகவும் இணக்கமான நட்புறவைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/S4N9vcZcJ6U"></iframe></figure><h2>சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிச்சயதார்த்தம்</h2><p>கடந்த டிசம்பர் 2025-ல், பிரபல நடிகை ரியா சக்ரவர்த்தியின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்த ஜோடி கலந்து கொண்டது. அப்போது கேப்ரியெல்லா, "நாங்கள் இப்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?" எனப் பேசினார்.</p><p>உடனே குறுக்கிட்ட அர்ஜுன் ராம்பால், "நாங்கள் ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம்" என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் ஆச்சரியத்தை அளித்தார்.</p><p>நிச்சயதார்த்தம் முடிந்து சில மாதங்களிலேயே, தற்போது ஆகஸ்டில் தங்களது 8 ஆண்டுகால காதலைத் திருமணத்தின் மூலம் இந்த ஜோடி முறைப்படுத்தியுள்ளது. இது பாலிவுட் வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night-2#comments</comments><guid isPermaLink="false">eb10ac32-134d-467c-9630-d5d81c428fa8</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:06:34 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:06:34.760Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3cjq1x0p/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3cjq1x0p/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>27 மற்றும் 28-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>24-ந்தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>25-ந்தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>27 மற்றும் 28-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைனின் வணிக வளாகம் மீது தாக்குதல்: ரஷியாவிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/russia-double-drone-attack-on-ukraine-mall-kills-16</link><comments>https://www.maalaimalar.com/news/world/russia-double-drone-attack-on-ukraine-mall-kills-16#comments</comments><guid isPermaLink="false">3b43318c-70b2-4b9e-af3a-13452b9e2c4f</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:04:54 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:04:54.146Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Zelenskyy,Russia Ukraine war,drone strike,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,ரஷ்யா உக்ரைன் போர்,DoubleTap Strike,Ukraine Under Attack</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/vlhgyx96/President-of-Ukraine-Volodymyr-Zelenskyy" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ President of Ukraine Volodymyr Zelenskyy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/vlhgyx96/President-of-Ukraine-Volodymyr-Zelenskyy?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D">ரஷியா மற்றும் உக்ரைன் </a>இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷியப் படைகள் உக்ரைனின் பொதுமக்களைக் குறிவைத்து மீண்டும் ஒரு கோரத் தாக்குதலை நடத்தியுள்ளன. </p><p>உக்ரைன் அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">வொலோடிமிர் ஜெலன்ஸ்கி</a>யின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ் நகரில் உள்ள மிகப் பெரிய வணிக வளாகத்தின் மீது நேற்று ரஷியா ட்ரோன் தாக்குதலை நடத்தியது.</p><h2><strong>மீட்புக்குழுவை குறிவைத்த ‘டபுள்-டேப்’ உத்தி</strong></h2><p>மாலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வணிக வளாகத்தின் மீது முதல் ட்ரோன் விழுந்து வெடித்தது. </p><p>இதில் கட்டிடம் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களும், அவசர கால மீட்புக்குழுவினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.</p><p>முதல் தாக்குதல் நடந்து சரியாக அரை மணி நேரம் கழித்து, மீட்புப் பணியில் இருந்தவர்களைக் குறிவைத்து ரஷ்யா இரண்டாவது <a href="https://www.maalaimalar.com/topic/drone">ட்ரோன்</a> தாக்குதலை நடத்தியது. </p><p>இந்த அடுத்தடுத்த தாக்குதல்களால் அப்பகுதியே பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது.</p><h2><strong>பாதிப்பு விவரங்கள்</strong></h2><p>இந்த இரட்டைத்தாக்குதலில் இதுவரை 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 22 குழந்தைகள் உட்பட 130-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 குழந்தைகள் உட்பட 29 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக பிராந்திய ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2><strong>அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம்</strong></h2><p>இந்த கொடூரத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">ஜெலன்ஸ்கி </a>தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,</p><p>"இது முற்றிலும் மனிதாபிமானமற்ற, இழிவான செயல். அவசரக்கால மீட்புப் பணியாளர்களைக் குறிவைத்தே இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த கொடூரம் பயங்கரவாதச் செயலுக்குச் சற்றும் குறைந்ததல்ல. ரஷியாவின் இந்த சர்வதேசப் பயங்கரவாதத்திற்கு உலக நாடுகள் அவற்றுக்குப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். இதற்கு உக்ரைன் படைகள் நிச்சயம் தகுந்த பதிலடி கொடுக்கும்" என்று கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A rescue operation is currently underway in Kryvyi Rih following a strike on a shopping mall. There are many casualties. As of now, 14 people have been reported killed. My condolences to their families and loved ones. More than 100 people have been injured, among them 11… <a href="https://t.co/gX2kL1LZnd">pic.twitter.com/gX2kL1LZnd</a></p>&mdash; Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) <a href="https://x.com/ZelenskyyUa/status/2090869227523838000?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>மைக்கோலைவ் நகரிலும் தாக்குதல்</strong></h2><p>இதற்கிடையே, தெற்கு உக்ரைனின் மைக்கோலைவ் நகரிலும் ரஷியா நடத்திய மற்றொரு ட்ரோன் தாக்குதலில், 3 சிறுவர்கள் உட்பட 4 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஜெயிலர் 2-ன் &apos;அலா பொலேலோ&apos;: &apos;காவாலா&apos; சாதனையை முறியடிக்குமா?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/will-ala-polelo-from-jailer-2-break-kavala-records</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/will-ala-polelo-from-jailer-2-break-kavala-records#comments</comments><guid isPermaLink="false">5141e58b-4425-4b9b-a745-98ea73c3e976</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:46:50 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:46:50.206Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,ரஜினிகாந்த்,Jailer 2,ஜெயிலர் 2,Kaavaalaa,Ala Bolelo,அலா பொலேலோ,காவாலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/vyoi5zo9/jailer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Jailer 2 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/vyoi5zo9/jailer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் முதல் பாடலான '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-jailer-2-has-been-released">அலா பொலேலோ</a>' இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.</p><p>சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜ் வரிகளில் உருவான இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். நிரஞ்சனா ராமன், அபர்ணா ஹரிகுமார் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் கூடுதல் குரல் கொடுத்துள்ளனர்.</p><p>முந்தைய பாகத்தில் தமன்னா ஆடிய 'காவாலா' பாடல் இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல் பரவி டிரெண்டானது. அதேபோல, தற்போது வெளியாகியுள்ள 'அலா பொலேலோ' பாடல் ஓணம் பண்டிகையை முன்னிலைப்படுத்தி, பாரம்பரிய கேரள பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை ஷம்னா காசிம் (பூர்ணா) தனது அதிரடியான நடனத்தால் பாடலைத் தாங்கிப் பிடித்துள்ளார். பாடலின் இறுதியில் ரஜினிகாந்த் மாஸாகத் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.</p><p>'காவாலா' அளவுக்கு இந்த பாடல் டிரெண்ட் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும், ஷம்னா காசிமின் நடனமும் அனிருத்தின் துள்ளலான இசையும் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>என் கைகள் சுத்தமானவை..! ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டை மறுத்த பினராயி விஜயன்</title><link>https://www.maalaimalar.com/news/national/former-cm-pinarayi-vijayan-says-his-hands-clean-denies-hawala-dealings</link><comments>https://www.maalaimalar.com/news/national/former-cm-pinarayi-vijayan-says-his-hands-clean-denies-hawala-dealings#comments</comments><guid isPermaLink="false">76a2ca83-72a4-46fe-b890-76346628c1d4</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:45:37 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:45:37.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வீணா,பினராயி விஜயன்,Pinarayi Vijayan,Enforcement Directorate,Veena,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ulw814xj/PinarayiVijayan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pinarayi Vijayan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ulw814xj/PinarayiVijayan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நான், என்னுடைய மகள் (வீணா) மற்றும் குடும்பத்தினர் எந்தவொரு ஹவாலா டீலிங்கில் (பண பரிவர்த்தனை) ஈடுபடவில்லை என்று கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.</p><h2>எங்கள் கைது தூய்மையானது</h2><p>இதுகுறித்து கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது:-</p><p>நானோ, எனது மகளோ, என்னுடைய குடும்பத்தினரோ எந்தவொரு ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபடவில்லை. இதில் நான் முழுமையாக உறுதியாக இருக்கிறேன். இந்த கைகள் தூய்மையானவை. எப்போதும் தூய்மையாக இருக்கும். </p><p>வீணா என்னுடைய மகள் என்பதனால் ஏராளமான விசயங்கள் எழுப்பப்பட்டன. ஏராளமான சொத்துகளுக்கு வீணா உரிமையாளர் கிடையாது. பேசப்படும் பணத்தின் அளவும் பெரியதல்ல.</p><p>இந்த விவகாரத்தில் ஒரு செய்தி குறிப்பு (press release) வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் எனது பெயர் பி. விஜயன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் முன்னாள் முதலமைச்சர் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அவ்வாறு குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?.</p><p>வீணா பணத்தை முகமது ரியாஸின் கணக்கிற்கு மாற்றினார் என்ற செய்தி எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது? பினராயி விஜயனுக்கு எதிராக இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர்கள் நினைக்கிறார்களா?</p><p>வீணா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார். எதிர்காலத்திலும் அந்த அமைப்பிற்கு தகவல்களை வழங்குவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருக்காது.</p><p>இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.</p><h2>அமலாக்காத்துறை வழக்கு விவரம்</h2><p>அமலாக்கத் துறையின் (ED) இந்த பணமோசடி வழக்கு, கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL) மற்றும் வீணா என்பவரால் தொடங்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் இல்லாத எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தொடர்பானது. எந்தவொரு சேவையையும் பெறாமலேயே, எக்ஸாலஜிக்' நிறுவனத்திற்கு CMRL நிறுவனம் ரூ. 2.78 கோடியை வழங்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.</p><p>துபாய்க்கு மேற்கொள்ளப்பட்ட சில நிதிப் பரிமாற்றங்கள் குறித்த விவரங்கள் அடங்கியதாகக் கூறப்படும் கையெழுத்துப் பிரதிகள், கடந்த மே மாதம் வீணாவின் (Veena) வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை (ED) ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு பனராயி விஜயன் இவ்வாறு தெரிவித்துள்ளார். </p><p>விசாரணையின் ஒரு பகுதியாக, வீணா மற்றும் CMRL வாரிய உறுப்பினர்களிடம் அந்த அமைப்பு அண்மையில் பலமுறை விசாரணை நடத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்: காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/national/sikhs-protest-outside-rahul-gandhis-residence-against-cong-leaders-calling-sajjan-kumar-hero</link><comments>https://www.maalaimalar.com/news/national/sikhs-protest-outside-rahul-gandhis-residence-against-cong-leaders-calling-sajjan-kumar-hero#comments</comments><guid isPermaLink="false">0a38b1b0-9ff1-4e8d-be56-af6ab3bca17d</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:21:00 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:21:00.047Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,Anti Sikh Riots</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uefuzw2q/SikhProtest001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீக்கியர்கள் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/uefuzw2q/SikhProtest001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியின் வீட்டு முன் (வெளியே) இன்று ஏராளமான சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதில் பல சீக்கிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சி தலைவர் சஜ்ஜன் குமார் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். இவர் கடந்த வியாழக்கிழமை காலமானார். இவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஹீரோ மற்றும் ரோல் மாடல் எனக் கூறியுள்ளனர்.</p><p>இது சீக்கியரகளுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சஜ்ஜன் குமாரை ஹீரோ மற்றும் ரோல் மாடல் என அழைத்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுத்தினர்.</p><h2>ராகுல் காந்தி வீட்டுக்கு வெளியே போராட்டம்</h2><p>இது தொடர்பாக இன்று டெல்லியில் உள்ள சீக்கிய குர்த்வாரா நிர்வாக கமிட்டி (DSGMC) தலைவர் ஹர்மீத சிங் கல்கா, பொதுச் செயலாளர் ஜெகதீப் சிங் கலோன் ஆகியோர் தலைமையில் ஏராளமானவர்கள் ராகுல் காந்தி வீட்டை நோக்கி சென்றனர். இதனால் சுனேரி பாக் சாலையில் உள்ள ராகுல் காந்தி வீட்டின் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.</p><p>அவர்கள் தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்கள் முன்னோக்கி செல்லாதவாறு தடுத்து நிறுத்த தயார் நிலையில் இருந்தனர்.</p><p>1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்குகளில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட குமாரை, காங்கிரஸ் கட்சி ஒரு நாயகனாக கருதுகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று DSGMC-யின் தலைவர் தெரிவித்தார்.</p><h2>ராகுல் காந்தி, காங்கிரஸ்காரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்</h2><p>மேலும், சஜ்ஜன் குமாரின் மறைவுக்குப் பிறகு, அவர் தங்கள் நாயகன் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் ஆட்சேபனைக்குரியவை. சஜ்ஜன் குமார் தங்கள் நாயகனா என்பது குறித்து ராகுல் காந்தி இன்று தெளிவுபடுத்த வேண்டும் எனறார்.</p><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ்காரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.</p><p>இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஜார்க்கண்ட் : எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/jharkhand-iron-and-steel-plant-horror-fire-3-killed</link><comments>https://www.maalaimalar.com/news/national/jharkhand-iron-and-steel-plant-horror-fire-3-killed#comments</comments><guid isPermaLink="false">2c510564-eac6-45f6-9772-4a57816d7cc3</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:12:46 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:12:46.343Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,ஜார்கண்ட்,Jharkhand,தீ விபத்து,steel industry,எஃகு தொழிற்சாலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5u90tlr1/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜார்கண்ட் எஃகு தொழிற்சாலை தீ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ Jharkhand Steel Plant Fire]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5u90tlr1/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">ஜார்க்கண்ட்</a> மாநிலத்தில் உள்ள எஃகு தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று ஊழியர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h3><strong>எஃகு தொழிற்சாலையில் தீ விபத்து</strong></h3><p>ஜார்க்கண்ட்டின் ராம்கர் மாவட்டத்தில் உள்ள ஹெலால் பகுதியில் மா சின்னமஸ்திகா இஸ்பாட் எஃகு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இயங்கி வந்த மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவில் தீ விபத்து ஏற்பட்டது.</p><p>இதையடுத்து தொழிற்சாலை ஊழியர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு விரைந்த வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.</p><p>இந்த தீ விபத்தில் இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பல ஊழியர்கள் தொழிற்சாலையின் உள்ளே சிக்கி கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>இந்த விபத்து குறித்து ராம்கர் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார் லுனாயத் கூறுகையில், “இந்த தீ விபத்தில் நான்கு ஊழியர்கள் உடல் முழுவதும் ஏற்பட்ட பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><p>தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்” என்று கூறினார்.</p><h3><strong>மூன்று ஊழியர்கள்</strong></h3><p>எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பர்கானா காவல் நிலைய பொறுப்பாளர் உமா சங்கர் வர்மா கூறுகையில், இறந்தவர்கள் சஞ்சீவ், வினீத் மற்றும் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>ஜார்க்கண்ட் மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலையின் தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் மனிஷ் சின்ஹா கூறும்போது, தொழிற்சாலை ஆய்வாளர் மற்றும் சோட்டாநாக்பூர் துணைத் தலைமை ஆய்வாளர் அடங்கிய இரண்டு பேர் கொண்ட குழு, விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வீ த லீடர்ஸ் அமைப்பின் இணைய தளம் மாற்றி அமைப்பு - அண்ணாமலை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped#comments</comments><guid isPermaLink="false">fc9f570f-93da-4cfa-ac56-5fc6b3571c1c</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:01:57 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:01:57.044Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3yi03or2/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3yi03or2/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">வீ த லீடர்ஸ்</a> அமைப்புக்கு தனி இணைய தள பக்கத்தை அண்ணாமலை உருவாக்கி வெளியிட்டு இருந்தார். இதன் வழியே உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள். இதுவரை 20 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.</p> <p>இதுவரை உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்களுடன் இருந்த இந்த பக்கத்தை இப்போது மாற்றி அமைத்துள்ளார். இப்போது கட்சியின் இந்த மாத பணிகள், ஏற்கனவே நடத்தி முடித்து இருக்கும் பணிகள், அடுத்து திட்டமிட்டுள்ள பணிகள் ஆகியவை முகப்பு பக்கத்திலேயே இடம் பெற்றுள்ளது.</p> <p>பொதுமக்கள் அவற்றை பார்த்து பணிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>எங்கள் இணைய தளம் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.</p><p>புதிய அம்சங்களை அலசி, ஆராய்ந்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்?- அரசுக்கு அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-why-the-reluctance-to-release-the-thirupugazh-committee-report</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-why-the-reluctance-to-release-the-thirupugazh-committee-report#comments</comments><guid isPermaLink="false">ab828108-5118-4fbd-b06b-511225c77f9a</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:00:11 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:00:11.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,chennai flood,திருப்புகழ் குழு அறிக்கை,சென்னை வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/dchextp0/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/dchextp0/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்; மீண்டும் ஒருமுறை சென்னையை வெள்ளத்தில் மிதக்க விடக்கூடாது என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த  பரிந்துரைகள் அடங்கிய திருப்புகழ் குழு அறிக்கை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தவெக அரசு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பேரிடரிலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான மிகவும் முக்கியமான ஓர் ஆவணம் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அரசு பதிலளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக  அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 41 மாதங்களாகியும் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படாததை சுட்டிக்காட்டி, அதை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரினார்.</p><p>அதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்,  ‘‘திருப்புகழ் குழுவின் அறிக்கையை திமுக அரசு வெளியிட்டிருக்க வேண்டும்; ஆனால், ஏன் அவர்கள் வெளியிடவில்லை என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பத்திரிகை செய்திகள் வந்ததை மட்டும் தான் பார்த்தோம். இப்போது வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க வருவாய் நிர்வாக ஆணையர்  முருகானந்தம் தலைமையில் 7 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். மழை &amp;வெள்ளத்திலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான திருப்புகழ் குழு அறிக்கையை திமுக அரசு வெளியிடாதது தவறு; அதை நாங்கள் உடனடியாக வெளியிடுவோம் என்பதாகத் தான் அமைச்சரின்  பதில் இருந்திருக்க வேண்டும். அத்தகைய பதில் அரசிடமிருந்து வராதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.</p><p>2021-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழையும், அதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமும் மறக்க முடியாத கொடுமையான நிகழ்வுகள். அதைத் தொடர்ந்து சென்னையில் எத்தகைய வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழுவை திமுக அரசு அமைத்தது. அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை 2022-ம் ஆண்டு மே மாதத்திலும், இறுதி அறிக்கையை 2023- மார்ச் 14-ம் தேதியும் அரசிடம் தாக்கல் செய்தது.</p><p>நான் அறிந்தவரை திருப்புகழ் குழுவின் அறிக்கையில் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன; அவற்றை செயல்படுத்தியிருந்தாலே சென்னையில் எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும். இத்தகைய  அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போது, அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திருப்புகழ் குழுவை அமைத்த திமுக அரசே, ஏதோ காரணங்களுக்காக திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்தது. அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி பல தருணங்களில் வினா எழுப்பிய போது, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருப்புகழ் குழு அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன; மொத்தமுள்ள 161 பரிந்துரைகளில் 101 செயல்படுத்தப்பட்டு  வருவதாகத் தெரிவித்தார். ஆனால், செயல்படுத்தப்பட்ட 101 பரிந்துரைகளும் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.</p><p>என்னாலும், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்களாலும் புரிந்து கொள்ள முடியாத உண்மை என்னவென்றால், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு, விரிவான ஆய்வுகளின்  அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திருப்புகழ் குழுவை வெளியிட முடியாத அளவுக்கு அதில் என்ன இரகசியம் இருக்கிறது என்பது தான்? மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையை  யாருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு கிடப்பில் போட்டது என்பது தான்?</p> <p>திருப்புகழ் குழுவின் அறிக்கை என்பது கடையில் வாங்கப்பட்ட புத்தகம் அல்ல. 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு, 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 17 மாதங்களுக்கு  பல்வேறு கள ஆய்வுகளையும், அதில் கிடைத்த தரவுகளின் மீதான பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு தான் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதற்காக கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை எந்த வகையிலும் வீணடிக்கப்படக் கூடாது.</p><p>சென்னையில் இனி வரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு திருப்புகழ் குழுவின் அறிக்கையை செயல்படுத்துவது தான். அந்த அறிக்கையை திமுக வெளியிடாமல் இருந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், தவெக அரசுக்கு அத்தகைய காரணங்கள் எதுவும்  இல்லை. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு உரையாற்றிய முதலமைச்சர் விஜய் அவர்கள், எனது அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்று அறிவித்தார். அதை வெளிப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பு  திருப்புகழ் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவது தான்.</p><p>திருப்புகழ் குழு அறிக்கையை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நகராட்சி நிர்வாகத்துறையை  முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் நிர்வகித்து வருகிறார். அதனால், திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுவதற்கான முன்முயற்சிகளை முதலமைச்சர் அவர்களே மேற்கொள்ள வேண்டும். திமுக அரசின் தவறுகளை தமது அரசு  திருத்தி வருவதாகக் கூறி வரும் முதலமைச்சர் அவர்கள், திமுகவின் இந்தத் தவறையும் திருத்த வேண்டும்.</p> <p>தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 50 நாள்களே உள்ளன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்; மீண்டும் ஒருமுறை சென்னையை வெள்ளத்தில் மிதக்க விடக்கூடாது என வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் - செயற்குழுவில் தீர்மானம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk#comments</comments><guid isPermaLink="false">8149cdc4-21e7-4022-8da4-37002b75c1d1</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:49:14 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:49:14.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,திமுக செயற்குழு கூட்டம்,DMK Executive Meeting,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/2x1eupnb/mkstalin2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/2x1eupnb/mkstalin2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் என்று திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</strong></em></p><p>தமிழக சட்டமன்ற தேர்தலில்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95"> தி.மு.க. </a>தோல்வி அடைந்ததை தொடர்ந்து கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பாக அதிரடி முடிவுகள் தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p><p>குறிப்பாக இளைஞர்களுக்கும் கட்சியில் ஆர்வமுடன் பணியாற்றும் அனைவருக்கும் பொறுப்புகள் கிடைக்கும் வகையில் கட்சி பதவிகளுக்கு வயது நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளராக 3 முறை மட்டுமே பதவி வகிக்கும் வகையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p> <p>இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-executive-meeting-mk-stalin-says-we-are-specialists-at-making-a-comeback">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.</p><p>செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-</p><h2>புது ரத்தம்</h2><p>* கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <p>* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><h2>சென்னை</h2><p>* சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <p>* பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <h2>நகர செயலாளர்கள்</h2><p>* நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <h2>மாவட்ட செயலாளர்கள்</h2><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும்போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.</p> <p>* கழகத்தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்க ழகங்கள் பிரிக்கப்பட வேண்டும். </p><p>தலைமைக்கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.</p><p>மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.</p> <h2>திருத்தப்பட்டது</h2><p>தி.மு.க. மாவட்ட செயலாளராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. பின்னர் அது திருத்தம் செய்யப்பட்டு 3 முறை பதவி வகிக்கலாம் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆளை மாற்றுவதைவிட சுய பரிசோதனை முக்கியம்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/focus-on-self-review-not-personnel-change-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/focus-on-self-review-not-personnel-change-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">86b1fb65-8301-454a-a6f6-c67480b443f1</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:47:12 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:47:12.108Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,MKStalin,செயற்குழு கூட்டம்,DMK meeting,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ug1kxz44/mk-stalin.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ug1kxz44/mk-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>நாம் பார்க்காத வெற்றியும் இல்லை.. தோல்வியும் இல்லை. அமைப்பு முறையில் முக்கியமான பெரிய மாற்றங்களை செய்ய உள்ளோம்.</p><p>திமுக வலுமையாக இருக்க காரணம் அமைப்பு முறை தான். நமது தவறுகளை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.</p><p>ஆளை மாற்றுவதைவிட முழுமையான சுய பரிசோதனை முக்கியம்.</p><p>மாற்றம் சிலருக்கு கசப்பாக இருக்கலாம், கசப்பு தான் உடலுக்கு பலம் தரும்.</p><p>ஊருக்கே வெளிச்சம் விளக்கிற்கு அதன் கீழ் இருக்கும் இருட்டு தெரியாது. </p><p>புதுமுகங்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்படும். தனக்கு இணையாக யாரும் இருக்க கூடாது என எண்ணுகிறார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெண் தேடுவதில் 90ஸ் கிட்ஸ் சந்திக்கும் அவலங்கள்: விரைவில் திரைக்கு வரும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/middle-class-maappillai-explores-90s-kids-marriage-struggles</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/middle-class-maappillai-explores-90s-kids-marriage-struggles#comments</comments><guid isPermaLink="false">390971d0-9e7d-4870-bbc8-adc78276db33</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:45:39 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:45:39.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hari Priya,Middle Class Mappillai,மிடில் கிளாஸ் மாப்பிள்ளை,Prabhu Ekambaram,பிரபு ஏகாம்பரம்,90ஸ் கிட்ஸ் திருமணம்,90s Kids Marriage,Rashanth Arwin,ITProfessional To Director</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/6rd39c2r/Prabhu-Ekambaram-Hari-Priya" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Prabhu Ekambaram - Hari Priya  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/6rd39c2r/Prabhu-Ekambaram-Hari-Priya?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீதுள்ள தீராத காதல் காரணமாக, தற்போது ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ எனும் புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார்.</p><h2><strong>கதைக்களம் (90ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்)</strong></h2><p>இன்றைய காலகட்டத்தில் 90ஸ் கிட்ஸ் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று திருமணத்திற்குப் பெண் தேடுவது. </p><p>குறிப்பாக நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண் கிடைப்பதில் சந்திக்கும் சமூக மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை, நகைச்சுவை மற்றும் எதார்த்தமான சுவாரசியங்களுடன் இப்படம் பேசவுள்ளது.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம்</strong></h2><p>ஆன்ஷ்வா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தில், பிரபு ஏகாம்பரத்திற்கு ஜோடியாக ஹரிபிரியா கதாநாயகியாக நடிக்கிறார். </p><p>மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர். இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்திருக்கிறது.</p><h2><strong>இயக்குநர் பிரபு ஏகாம்பரம் பேட்டி</strong></h2><p>படம் குறித்துப் பேசிய இயக்குநர் மற்றும் கதாநாயகன் பிரபு ஏகாம்பரம் கூறியதாவது:</p><p>"இந்த படம் முழுக்க முழுக்க 90ஸ் கிட்ஸ்களின் பரிதாப நிலையை, குறிப்பாக அவர்களுக்குப் பெண் கிடைப்பதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை மையமாகக் கொண்டது. </p><p>ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்வியலையும், அவர்கள் அன்றாடம் கடந்து வரும் சூழலையும் அப்படியே திரையில் பிரதிபலிக்கும் வகையில், மக்கள் எளிதில் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் விதமாகப் படத்தை உருவாக்கியுள்ளோம்" என்று கூறினார்.</p><h2><strong>தொழில்நுட்பக் கலைஞர்கள் </strong></h2><p>இத்திரைப்படத்திற்கு ரஷாந்த் ஆர்வின் இசையமைக்க, அபிஷேக் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. </p><p>அனைத்துப் பணிகளும் முடிந்து படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>லோசான் டைமண்ட் லீக்: 9 செ.மீ இடைவெளியில் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி ருமேஷ் பத்திரகே ஹாட்ரிக் சாதனை! </title><link>https://www.maalaimalar.com/sports/lausanne-diamond-league-rumesh-pathirage-hattrick</link><comments>https://www.maalaimalar.com/sports/lausanne-diamond-league-rumesh-pathirage-hattrick#comments</comments><guid isPermaLink="false">2a2b050d-59c8-416f-a247-c8810bbef173</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:38:30 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:38:30.137Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NeerajChopra,RumeshPathirage,LausanneDL,DiamondLeague,JavelinThrow,நீரஜ்சோப்ரா,ருமேஷ்பத்திரகே,ஈட்டிஎறிதல்,டைமண்ட்லீக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0fv3l5ad/neera.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NeerajChopra-RumeshPathirage]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/0fv3l5ad/neera.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற <a href="https://www.maalaimalar.com/sports/cricket/australia-165-for-8-wickets-in-first-day-against-bangladesh-second-test">டைமண்ட் லீக் </a>தடகள போட்டியில், இந்தியாவின் ஈட்டி எறிதல் நட்சத்திரமும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளருமான நீரஜ் சோப்ரா 88.05 மீட்டர் தூரம் எறிந்து இந்த ஆண்டின் தனது மிகச்சிறந்த செயல்பாட்டைப் பதிவு செய்தார். இருப்பினும், இலங்கையின் வளர்ந்து வரும் 23 வயதான ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் பத்திரகே வெறும் 9 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் நீரஜ் சோப்ராவை பின்னுக்குத் தள்ளி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.</p><p>போட்டியின் முதல் சுற்றில் பத்திரகே 85.99 மீட்டர் வீசி முன்னிலை பெற்றார். ஆனால், இரண்டாவது சுற்றில் நீரஜ் சோப்ரா அபாரமாகச் செயல்பட்டு 88.05 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தற்காலிகமாகப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது சுற்றில், இலங்கை வீரர் ருமேஷ் பத்திரகே 88.14 மீட்டர் தூரம் எறிந்து மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றினார். </p><p>அடுத்தடுத்த சுற்றுகளில் நீரஜ் சோப்ராவால் இந்த இலக்கை முறியடிக்க முடியாமல் போனதால் அவர் இரண்டாவது இடத்துடன் வெள்ளிப் பதக்கத்தை நிறைவு செய்தார். கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.69 மீட்டர் தூரம் வீசி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.</p><p>2026 ஆம் ஆண்டின் இந்த சீசனில் நீரஜ் சோப்ராவை ருமேஷ் பத்திரகே வீழ்த்துவது இது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக தோஹா டைமண்ட் லீக் மற்றும் கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் பத்திரகே நீரஜைத் தோற்கடித்து தங்கம் வென்றிருந்தார். இந்த போட்டியில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டாலும், 88.05 மீட்டர் வீசியதன் மூலம் டைமண்ட் லீக் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பில் நீரஜ் சோப்ரா வலுவான புள்ளிகளைப் பெற்றுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>செந்தில்பாலாஜி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜர் - டாஸ்மாக் முறைகேடு பற்றி விசாரணை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-before-vigilance-and-anti-corruption-police</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-before-vigilance-and-anti-corruption-police#comments</comments><guid isPermaLink="false">3edce0f7-8422-4c0f-b942-50927300d263</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:24:34 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:24:34.190Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac scam,டாஸ்மாக் முறைகேடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/tc5ct60u/New-Project-2026-07-30T213623.378.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/tc5ct60u/New-Project-2026-07-30T213623.378.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜர் ஆனார்.</strong></em></p> <h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81">டாஸ்மாக் முறைகேடு</a> தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிரடி சோதனையும் நடைபெற்றது.</p> <h2>செந்தில்பாலாஜி</h2><p>இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை 11 மணியளவில் ஆஜர் ஆனார்.</p><p>டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன. சென்னையில் ஆழ்வார் பேட்டையில் தங்கியிருந்த செந்தில்பாலாஜியிடமும் அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.</p> <p>டாஸ்மாக் நிறுவனத்தில் பார் உரிமம் வழங்குவதில் மதுபானங்களை கொள்முதல் செய்தல், மதுபானங்களை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தங்களை மேற்கொண்டது ஆகியவற்றின் முறைகேடு நடந்திருப்பதாக கூறியே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.</p><p>இந்த நிலையில் இன்று ஆஜர் ஆன செந்தில்பாலாஜியிடம் அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2வது டெஸ்ட்: 64 ரன்னில் சுருண்ட வங்கதேசம்: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 165/8</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/australia-165-for-8-wickets-in-first-day-against-bangladesh-second-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/australia-165-for-8-wickets-in-first-day-against-bangladesh-second-test#comments</comments><guid isPermaLink="false">2fecd3c5-a4dc-49f8-9130-4182823dd542</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:18:58 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:18:58.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மிட்செல் ஸ்டார்க்,Mitchell Starc,AUSvPAK,Shoriful Islam,ஆஸ்திரேலியா வங்கதேசம் தொடர்,ஷோரிபுல் இஸ்லாம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/8rmetlnt/starc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ starc]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/8rmetlnt/starc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆஸ்திரேலியா வங்கதேசத்துக்கு இடையிலான 2வது டெஸ்டின் முதல் நாளில் 18 விக்கெட்டுகள் வீழ்ந்தன.</p><p>ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.</p><p>டார்வினில் நடந்த முதல் டெஸ்டில் வங்கதேசம் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.</p><h2>ஆஸ்திரேலியா அசத்தல்</h2><p>அதன்படி, முதலில் வங்கதேசம் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்து வீசினர்.</p><p>குறிப்பாக, மிட்செல் ஸ்டார்க் அனல்பறக்க வீசினார். </p><p>21 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><p>கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தைஜுல் இஸ்லாம், ஷோரிபுல் இஸ்லாம் ஜோடி 25 ரன் சேர்த்தது.</p><p>இறுதியில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 34 ஓவரில் 64 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. </p><h2>ஸ்டார்க் 6 விக்கெட்</h2><p>ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணியும் 41 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.</p><p>4வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்டீவ் ஸ்மித்-கேமரூன் கிரீன் ஜோடி 77 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 42 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.</p><h2>கேமரூன் கிரீன் அரைசதம்</h2><p>இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரீன் அரை சதம் கடந்து 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><h2>ஷோரிபுல் இஸ்லாம் 6 விக்கெட்</h2><p>வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>2வது டெஸ்டின் முதல் நாளில் மொத்தம் 18 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>செப்.1-ந்தேதி முதல் புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் இல்லை... என்ன காரணம்..?</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/no-new-tamil-movie-releases-from-september-1st-what-is-the-reason</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/no-new-tamil-movie-releases-from-september-1st-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">3103c5d8-c1a3-4ee0-bc8e-f04fadc7b881</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:11:32 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:11:32.871Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்,தமிழ் படங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/97jw1jnc/theatre.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தியேட்டர்]]></media:title><media:description type="html"><![CDATA[ தியேட்டர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/97jw1jnc/theatre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளது. </strong></em></p><p>சென்னையில் நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/திரைப்பட-தயாரிப்பாளர்-சங்கம்">திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களின்</a> ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p><p>செப்டம்பர் 1-ந்தேதி முதல் வெளியாகும் படங்களை 8 வாரம் கழித்தே ஓடிடியில் வெளியிடுவோம் என கடிதம் கொடுத்தால் தான் தியேட்டரில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்களை விநியோகஸ்தர்கள் நிர்பந்திக்கின்றனர். </p><p>கடிதம் கொடுத்தால் தான் படங்களை திரையிட அனுமதிக்க முடியும் என விநியோகஸ்தர்கள் சங்கம் தன்னிச்சை முடிவு செய்துள்ளது. </p><p>ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற நடைமுறை இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் புதிய நடைமுறையை தன்னிச்சையாக புகுத்துவது கண்டித்தக்கது. </p><p>விநியோகஸ்தர்கள் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு தயாரிப்பாளர்களை அழைத்து ஆலோசித்திருக்க வேண்டும். ஆலோசனையின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவை ஏற்க முடியாது என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது தெரிவித்துள்ளது. </p><p>தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 250 திரைப்படங்கள் வெளியாகும் நிலையில், பெரும்பாலான திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த நிலையில், பாதியளவு கூட வசூலிக்காமல் பெரும் இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும், ஆண்டு தோறும் ரூ.700 கோடிக்கு அதிகமான பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக விநியோகஸ்தர்கள் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு, திரையரங்க உரிமையாளர் சங்க முடிவை ஏற்க முடியாது. இம்முடிவை கண்டித்து செப்.1 முதல் படப்பிடிப்பு, போஸ்ட் புரொக்டஷன் பணிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பிரச்சனையை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் எடுத்துக்கூறி தமிழ்நாடு அரசு மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வளரட்டும் சென்னைப் பெருநகரம்! உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-387th-birthday-cm-vijay-vows-better-quality-of-life</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-387th-birthday-cm-vijay-vows-better-quality-of-life#comments</comments><guid isPermaLink="false">ab466092-cb8f-4a20-b713-6251c6bbf725</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:08:34 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:08:34.401Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,சென்னை தினம்,Chennai Day,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/98aycde3/Vijay1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/98aycde3/Vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மாநகரம் தனது 387வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதைமுன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்”  நல்வாழ்த்துகள்!</p><p>வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.</p><p>சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம்.  அனைவருக்கும் சமவாய்ப்பும்,  பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம். </p><p>வளரட்டும் சென்னைப் பெருநகரம்!</p><p>உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தை​யூ​ரில் காதல் விவகாரத்தில் இளை​ஞர் ஆண​வக் கொலை: நீலம் பண்பாட்டு மையம் கடும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/honour-killing-over-love-affair-in-thayur-neelam-cultural-centre-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/honour-killing-over-love-affair-in-thayur-neelam-cultural-centre-condemns#comments</comments><guid isPermaLink="false">2dca97b4-101e-40f6-8d02-9f7a90832640</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:06:45 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:06:45.683Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலம் பண்பாட்டு மையம்,ThaiyurHonourKilling,PraveenKumar,NeelamCulturalCentre,CasteViolence,ஆண​வக் கொலை,தை​யூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ihvu1okw/neela.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thaiyur HonourKilling]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ihvu1okw/neela.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செங்​கல்​பட்டு மாவட்​டம் தை​யூர் பகு​தி​யைச் சேர்ந்த இளை​ஞர் பிர​வீன் குமார், மாற்​றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒரு​வரைக் காத​லித்து வந்தார். இந்நிலையில், பெண்ணின் வீட்​டா​ரின் கடும் எதிர்ப்​பையும் மீறி தொடர்ந்த காதலால் ஆத்திரமடைந்த கும்பல், பிர​வீன் குமாரை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்​டியது. அப்​பகு​தி வாசிகளால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு​ம​திக்​கப்​பட்ட அவர், சிகிச்சை பல​னின்றி பரி​தாபமாக உயி​ரிழந்தார்.</p><h2>4 பே<strong>ர் கை</strong>து </h2><p>இச்​சம்​பவம் குறித்து வழக்​குப்​ப​திவு செய்த திருப்​போரூர் காவல்​துறை அதிகாரிகள், தை​யூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழு​மலை, மணி​கண்​டன், நந்​தீஸ், கவு​தம் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். மேலும், இந்த படுகொலையில் தொடர்​புடைய தலை​மறைவான மற்ற குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்​படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><h2>OMR சாலை<strong>யில் திடீர்</strong> மறியல்</h2><p>பிர​வீனின் மரணச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டு பழைய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly">மகாபலிபுரம் </a>சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி 500-க்கும் மேற்பட்டோர் நடத்திய சாலை மறியலால் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. காவல் துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகே போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.</p><h2>நீலம் பண்பாட்<strong>டு மையம்</strong> கண்டனம்</h2><p>இயக்​குநர் பா.ரஞ்​சித் தலைமையிலான ‘நீலம் பண்பாட்டு மையம்’ இக்கொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவக் கொலைகள் சமூகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கவலை தெரிவித்துள்ள அம்மையம், சாதி வெறிப் படுகொலைகளைத் தடுக்கத் தமிழக அரசு உடனடியாக ‘ஆணவக் கொலை தடுப்பு தனிச்சட்டம்’ இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் சர்ச்சை: சர்மிளா தாகூரின் கருத்துக்கு கங்கனா ரணாவத் எம்பி கடும் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-controversy-kangana-ranaut-slams-sharmila-tagore</link><comments>https://www.maalaimalar.com/news/national/vande-mataram-controversy-kangana-ranaut-slams-sharmila-tagore#comments</comments><guid isPermaLink="false">e07268e4-00f6-4700-8bb3-016d23297523</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:33:29 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:33:29.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>KanganaRanaut,SharmilaTagore,VandeMataramRow,NationalSong,வந்தேமாதரம்,கங்கனாரணாவத்,சர்மிளாதாகூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/luebw2ij/kangana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KanganaRanaut-SharmilaTagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/luebw2ij/kangana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் குறிப்பிட்ட வரிகளைப் பாடுவது தொடர்பாக பாலிவுட் மூத்த நடிகை சர்மிளா தாகூர் தெரிவித்த கருத்துகளும், அதற்குப் பதிலடியாக நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்துகளும் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.</p><h2>சர்மிளா தாகூ<strong>ரின் கருத்துக</strong>ள்</h2><p>அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய மூத்த நடிகை சர்மிளா தாகூர், 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாடுவதே நாட்டின் பன்முகத்தன்மைக்கு உகந்தது எனக் குறிப்பிட்டார்.<a href="https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur"> இந்தியா</a>வில் ஒரே கடவுளை வழிபடும் ஓரிறைக் கொள்கை கொண்ட பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். </p><p>பாடலின் பிந்தைய சரணங்களில் துர்க்கை, காளி போன்ற இந்து பெண் தெய்வங்களின் பெயர்கள் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், பிற மதத்தினர் அதை முழுமையாகப் பாடுவதில் சிரமம் இருக்கலாம் என்றும், அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்ல முதல் இரண்டு வரிகளே சிறந்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><h2>கங்கனா <strong>ரணாவத்</strong>தின் பதிலடி</h2><p>சர்மிளா தாகூரின் இந்தப் பேச்சுக்குத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்த எம்பி கங்கனா ரணாவத், ஒரு மூத்த கலைஞரின் பார்வை இவ்வளவு குறுகியதாக இருப்பது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகக் கூறினார். பாடல்களிலோ கவிதைகளிலோ பயன்படுத்தப்படும் வார்த்தைகள் உருவகங்களே என்றும், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய இப்பாடல் சுதந்திரப் போராட்டத்தின் ஆன்மாவாகவும் தேசத்தின் உள்ளாற்றலை (சக்தி) விழிப்படையச் செய்யும் படைப்பாகவுமே பார்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.</p><p>"நாம் ஒரே கடவுளை நம்பினாலும், இந்து-முஸ்லிம் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். மருத்துவர்களும் சக்தியை 'சக்தி' என்றுதான் அழைக்கிறார்கள். ஒருவரையொருவர் நம் சொந்தம் போல அரவணைப்போம். நான் உங்களை மனதார நேசிக்கிறேன், நீங்கள் எப்போதும் கொடுப்பது போன்ற ஒரு இறுக்கமான அணைப்பை நான் பொருட்படுத்துவதில்லை," என்று கங்கனா கடுமையாகக் விமர்சித்துள்ளார்.</p><h2>அர<strong>சியல் மோ</strong>தல்</h2><p>இந்த விவாதம் வெறும் கலை சார்ந்த ஒன்றாக இல்லாமல், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பெரிய அரசியல் மோதலாகவும் மாறியுள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தில் 1937-இல் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைப் பின்பற்றி, தங்கள் கட்சியின் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவது என காங்கிரஸ் செயற்குழு அண்மையில் முடிவு செய்தது. ஆனால், மத்திய அரசு பள்ளிகளிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் அனைத்து சரணங்களையும் பாட வலியுறுத்துவதாகவும், காங்கிரஸின் இந்த நடவடிக்கை தேசப்பற்றைக் குறைத்து மதிப்பிடும் செயல் என்றும் பாஜக குற்றம் சாட்டி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>நாளை பெருமாளை வணங்கி அருள் பெறலாம்: குழந்தை வரம் அருளும் புத்ரதா ஏகாதசி வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/tomorrow-ekadashi-worship</link><comments>https://www.maalaimalar.com/spirituality/tomorrow-ekadashi-worship#comments</comments><guid isPermaLink="false">78f7776c-9684-45ec-aa8d-2174883263df</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:13:50 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:13:50.455Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெருமாள்,Ekadasi,ஏகாதசி,Ekadasi Worship,ஏகாதசி வழிபாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/c5q6g5qd/perumal0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெருமாள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/c5q6g5qd/perumal0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ஆன்மிக மரபில் ஒவ்வொரு விரதத்திற்கும் தனித்துவமான தத்துவமும் மகிமையும் உண்டு. அவற்றில் திருமாலுக்கு உகந்ததாகக் கருதப்படும் ஏகாதசி விரதம் மிகச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் வரும் ஒவ்வொரு ஏகாதசியும் தனித்தனி பெயர், வரலாறு மற்றும் ஆன்மிகச் சிறப்புகளுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.</p><p>அந்த வகையில், ஆவணி மாத சுக்லபட்சத்தில் வரும் ஸ்ராவண புத்ரதா ஏகாதசி, குழந்தைப் பேறு வேண்டி இறைவனை நாடும் தம்பதிகளுக்கு மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பவித்ர ஏகாதசி மற்றும் பவித்ரோபண ஏகாதசி என்றும் அழைக்கப்படும் இந்த நாள், பக்தி, நம்பிக்கை, தன்னடக்கம் மற்றும் அறவாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு புனித நாளாகும்.</p><h2><strong>பெயரிலேயே பொதிந்திருக்கும் மகிமை</strong></h2><p>‘புத்ரதா’ என்ற பெயருக்கு குழந்தைப் பேற்றை அருளுபவள் அல்லது அருளும் நாள் என்ற பொருள் வழங்கப்படுகிறது. சமய மரபுகளின்படி, குழந்தை இல்லாத தம்பதிகள் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் இந்த விரதத்தை மேற்கொண்டால், திருமாலின் அருளால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.</p><p>பழங்காலத்தில் ‘புத்திரன்’ என்ற சொல் குடும்பத் தொடர்ச்சி மற்றும் முன்னோருக்கான கடமைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆனால் இன்றைய பார்வையில், இந்த விரதத்தின் கருத்தை ஆண் குழந்தைக்கான விருப்பமாக மட்டுமே பார்க்காமல், சந்தான பாக்கியம் மற்றும் குடும்ப நிறைவு வேண்டி மேற்கொள்ளப்படும் ஆன்மிக வழிபாடு என்ற பரந்த பொருளில் அணுகுவது பொருத்தமானதாகும்.</p><p>ஸ்ராவண புத்ரதா ஏகாதசியைப் போலவே, மார்கழி அல்லது தை மாத காலகட்டத்தில் வரும் பௌஷ புத்ரதா ஏகாதசியும் குழந்தைப் பேறு வேண்டி கடைப்பிடிக்கப்படும் முக்கியமான ஏகாதசிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.</p><h2><strong>மகிஷ்மதி மன்னனின் தீராத கவலை</strong></h2><p>ஸ்ராவண புத்ரதா ஏகாதசியின் சிறப்பை விளக்கும் புராணக் கதை ஒன்று உள்ளது. இதனை ஸ்ரீகிருஷ்ணர் தருமருக்கு எடுத்துரைத்ததாக பவிஷ்ய புராணத்தில் கூறப்படுகிறது.</p><p>முன்னொரு காலத்தில் மகிஷ்மதி என்ற நாட்டை மகிஜித் என்ற மன்னன் ஆண்டு வந்தான். திறமையான அரசனாகவும், நீதிமானாகவும், குடிமக்களின் நலனில் அக்கறை கொண்டவராகவும் அவன் விளங்கினான்.</p><p>தனது நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதையே தனது கடமையாகக் கருதிய மன்னனுக்கு வாழ்க்கையில் ஒரு பெரிய குறை இருந்தது. அவனுக்கு வாரிசு இல்லை. நாடு செழிப்பாக இருந்தது. மக்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். அரசனுக்கு புகழும் செல்வமும் இருந்தன. ஆனால், தனக்குப் பின் தனது குடும்பத்தையும் அரசையும் தொடர ஒரு குழந்தை இல்லாதது அவனை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. இதற்குத் தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தில் மன்னன் நாட்டில் இருந்த முனிவர்கள், பண்டிதர்கள் மற்றும் ஞானிகளிடம் ஆலோசனை கேட்டான். பலரும் பல வழிகளை ஆராய்ந்தும், உடனடியாகத் தீர்வு காண முடியவில்லை.</p><h2><strong>ரோமரிஷி மகரிஷியின் ஞான விளக்கம்</strong></h2><p>மன்னனின் துயரத்தைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், பண்டிதர்களும் சாதுக்களும் பல இடங்களுக்குச் சென்று மகான்களைச் சந்தித்தனர். இறுதியில், மகத்தான ஞானியும் தவ வலிமையும் கொண்ட ரோமரிஷி மகரிஷியை அவர்கள் அடைந்தனர். மன்னன் மகிஜித்தின் நிலையைப் பற்றி கேட்டறிந்த ரோமரிஷி, தனது ஞானத் திருஷ்டியால் அவரது முற்பிறவியை அறிந்து கூறினார். முந்தைய பிறவியில் மகிஜித் ஒரு வணிகராக வாழ்ந்ததாக மகரிஷி தெரிவித்தார்.</p><p>ஒருநாள் நீண்ட பயணத்திற்குப் பிறகு கடுமையான தாகத்தால் அவதிப்பட்ட அந்த வணிகர், வழியில் இருந்த ஒரு குளத்தை அடைந்தார். தண்ணீர் அருந்துவதற்காக அவர் குளத்திற்குச் சென்றபோது, அங்கு ஒரு பசுவும் அதன் கன்றும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன.</p><p>ஆனால், தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் அவசரத்தில், அந்த வணிகர் பசுவையும் கன்றையும் அங்கிருந்து விரட்டிவிட்டார்.</p><p>இந்தச் செயல் ஒரு சாதாரண நிகழ்வாகத் தோன்றினாலும், ஒரு உயிரினத்தின் அடிப்படைத் தேவையைப் பறித்த செயலாக அது கருதப்பட்டது.</p><p>முற்பிறவியில் செய்த நல்வினைகளின் பலனாக அவர் அடுத்த பிறவியில் ஒரு மன்னனாகப் பிறந்தார். ஆனால் பசுவையும் அதன் கன்றையும் தண்ணீர் அருந்த விடாமல் தடுத்த செயலின் விளைவாக, இந்தப் பிறவியில் அவருக்கு குழந்தைப் பேறு இல்லாத நிலை ஏற்பட்டதாக ரோமரிஷி மகரிஷி விளக்கினார்.</p><h2><strong>ஒரு சிறிய செயல் சொல்லும் பெரிய பாடம்</strong></h2><p>இந்தக் கதையின் மையத்தில் குழந்தைப் பேறு பற்றிய நம்பிக்கை இருந்தாலும், அதைவிட ஆழமான ஒரு வாழ்க்கைப் பாடமும் உள்ளது.</p><p>நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. குறிப்பாக, பலவீனமான உயிர்களுக்கு நாம் ஏற்படுத்தும் துன்பம், அறத்தின் பார்வையில் தவறானதாகக் கருதப்படுகிறது.</p><p>தாகத்தால் தவித்த பசுவையும் கன்றையும் தண்ணீர் அருந்த விடாமல் விரட்டிய நிகழ்வு, இன்று மனித சமூகம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்கும் ஒரு உவமையாகக் கொள்ளலாம்.</p><p>நீர், இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் மனிதனுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. ஒவ்வொரு உயிருக்கும் இந்த பூமியில் வாழும் உரிமை உண்டு. அந்த உரிமையை மதிப்பதே உண்மையான அறம் என்பதை இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது. புத்ரதா ஏகாதசி – பரிகாரத்தின் வழி மன்னனின் துயரத்திற்கான காரணத்தை விளக்கிய ரோமரிஷி மகரிஷி, அதற்கான வழியையும் கூறினார். ஸ்ராவண புத்ரதா ஏகாதசி நாளில் மன்னனும் அவரது மனைவியும் பக்தியுடன் விரதம் இருந்து திருமாலை வழிபட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அதுமட்டுமல்லாமல், மன்னனின் நலனை விரும்பும் குடிமக்களும் அன்று விரதம் இருந்து, அந்த விரதத்தின் பலனை மன்னனுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கூறினார்.</p><p>மகரிஷியின் அறிவுரையை மன்னன் முழு நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டான். தனது மனைவியுடன் புத்ரதா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டான். குடிமக்களும் அரசனின் நலனுக்காக பக்தியுடன் விரதம் இருந்தனர்.</p><p>புராணக் கதையின்படி, இந்த விரதத்தின் பலனாக மன்னனுக்கு விரைவில் குழந்தைப் பேறு கிடைத்தது. இதன் பின்னரே, ஸ்ராவண புத்ரதா ஏகாதசி குழந்தைப் பேறு வேண்டி கடைப்பிடிக்கப்படும் சிறப்பான விரதங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டது.</p><p>ஸ்ராவண புத்ரதா ஏகாதசி வடஇந்தியாவின் பல பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் இது பவித்ர ஏகாதசி என்ற பெயரில் வழிபடப்படுகிறது.</p><p>இந்தக் காலகட்டத்தில் நடைபெறும் ஜூலா யாத்திரை விழாவும் பக்தர்களிடையே சிறப்பு பெற்றுள்ளது. ராதா-கிருஷ்ணர் திருவுருவங்களை அழகாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் வைத்து வழிபடுவது இந்த விழாவின் முக்கிய அம்சமாகும்.</p><p>மலர்களாலும் வண்ண அலங்காரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் கிருஷ்ணர் மற்றும் ராதையின் விக்கிரகங்கள் வைக்கப்பட்டு பக்திப் பாடல்களுடன் வழிபாடு நடைபெறும்.</p><p>இந்த விழா இறை பக்தியுடன் மகிழ்ச்சியையும், குடும்ப ஒற்றுமையையும் இணைக்கும் ஒரு அழகிய மரபாக விளங்குகிறது.</p><h2><strong>குழந்தைப் பேற்றைத் தாண்டிய நம்பிக்கை</strong></h2><p>புத்ரதா ஏகாதசியை குழந்தைப் பேறு வேண்டுவோருக்கான விரதமாக மட்டுமே கருதிவிட முடியாது. இந்த நாளின் கதை மனிதர்களுக்கு மூன்று முக்கியமான வாழ்க்கைப் பாடங்களை வழங்குகிறது. முதலாவது – எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது. இரண்டாவது – நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு. மூன்றாவது – மனமாறி இறைவனை நாடி, நல்ல வழியில் வாழ முயற்சிப்பவர்களுக்கு நம்பிக்கை எப்போதும் உண்டு. மகிஜித் மன்னனின் கதையில், முற்பிறவியில் செய்த தவறுக்கு ஒரு விளைவு இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழியும் காட்டப்படுகிறது.</p><p>இதுவே இந்தக் கதையின் மிக முக்கியமான செய்தியாகும்.</p><p>மனிதன் தவறு செய்யலாம். ஆனால் தனது தவறை உணர்ந்து, நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்து, அறநெறியுடன் வாழ முயன்றால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படலாம். நம்பிக்கையும் பொறுப்பும் இணையும் நாள்.</p><p>இன்றைய காலத்தில் குழந்தைப் பேறு தொடர்பான விஷயங்கள் மருத்துவம் மற்றும் உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுடன் தொடர்புடையவை. எனவே, விரதத்தையும் வழிபாட்டையும் ஆன்மிக நம்பிக்கையாகக் கடைப்பிடிப்பதோடு, தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் பெறுவது அவசியம். ஆன்மிகம் நம்பிக்கையை வழங்குகிறது. மருத்துவம் தேவையான அறிவியல் வழிகாட்டுதலை வழங்குகிறது. இரண்டையும் சரியான முறையில் அணுகுவதுதான் வாழ்க்கையை சமநிலையுடன் நடத்த உதவும். புத்ரதா ஏகாதசி, குழந்தைப் பேறு வேண்டுவோருக்கு நம்பிக்கையை அளிப்பதோடு, ஒவ்வொரு உயிரின் தேவையையும் மதிக்க வேண்டும் என்ற அறச் செய்தியையும் வழங்குகிறது.</p><h2><strong>ஏகாதசி சொல்லும் நிரந்தரப் பாடம்</strong></h2><p>விரதம் என்பது வெறும் சடங்கு அல்ல. அது மனிதனைத் தன்னுள் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு ஆன்மிகப் பயணம். ஒரு நாளாவது ஆசைகளைக் கட்டுப்படுத்தி, மனதை இறைச்சிந்தனையில் செலுத்தி, பிறருக்கு உதவி செய்து, அனைத்து உயிர்களிடமும் இரக்கம் காட்டி வாழ வேண்டும் என்பதை ஏகாதசி நமக்கு உணர்த்துகிறது. ஸ்ராவண புத்ரதா ஏகாதசி, குழந்தைப் பேறு வேண்டுவோருக்கு நம்பிக்கையையும், பக்தர்களுக்கு ஆன்மிக நிறைவையும், சமூகத்திற்கு அறவாழ்வின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் புனித நாளாக விளங்குகிறது.</p><p>உயிர்களிடம் இரக்கம், இயற்கைக்கு மரியாதை, பிறரிடம் அன்பு, இறைவனிடம் நம்பிக்கை – இவை அனைத்தும் இணையும் நாளே புத்ரதா ஏகாதசி.</p><p>இந்த புனித நாளில் திருமாலின் திருவருளை வேண்டி, அனைத்து குடும்பங்களிலும் அன்பும் அமைதியும் ஆரோக்கியமும் வளமும் பெருகட்டும். குழந்தைப் பேறு வேண்டுவோரின் நம்பிக்கை நிறைவேறட்டும். எல்லா உயிர்களும் நலமுடன் வாழட்டும். “விரதத்தின் மகிமை உடலைக் கட்டுப்படுத்துவதில் அல்ல; மனதை உயர்த்துவதில்தான் உள்ளது.”</p>]]></content:encoded></item><item><title>டெல்லி ஜந்தர் மந்தர் பாணியில் ஜெய்ப்பூரில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் - அபிஜீத் திப்கே எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur</link><comments>https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur#comments</comments><guid isPermaLink="false">6fdbdc8b-a748-4bc6-be4a-a6585231b6aa</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:13:13 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:13:13.954Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>abhijeet dipke,அபிஜீத் திப்கே,Ashutosh Ranka,Jaipur Protest,BJPvsCJP,Protest In Jaipur,Rajasthan Govt School,மாட்டுத்தொழுவப்பள்ளி,Cowshed school</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/6pg8y66l/Abhijeet-Dipke" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abhijeet Dipke  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/6pg8y66l/Abhijeet-Dipke?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">ஜெய்ப்பூர் </a>அருகே மாட்டுத் தொழுவத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியை ஆய்வு செய்யச் சென்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">காக்ரோச் ஜனதா கட்சி</a> தொண்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>தாக்குதல் நடத்திய பா.ஜ.க குண்டர்களை 48 மணி நேரத்திற்குள் கைது செய்யாவிட்டால், ஜெய்ப்பூரில் மிகப்பெரிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என சி.ஜே.பி நிறுவனத் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87">அபிஜீத் திப்கே</a> எச்சரித்துள்ளார்.</p><h2>தொழுவத்தில் இயங்கும் பள்ளி</h2><p>சி.ஜே.பி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரான்கா தலைமையில், தன்னார்வலர்கள் ஜெய்ப்பூரின் பக்ரு தொகுதிக்குட்பட்ட ராம்பூரா கன்வர்புரா கிராமத்திற்குச் சென்றனர். </p><p>அங்குள்ள அரசு முதன்மைப் பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால், கடந்த சில ஆண்டுகளாக மாட்டுத் தொழுவத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கட்சியின் ‘ஸ்கூல் திக் கரோ’ பள்ளிகளைச் சீரமைப்போம் பிரச்சாரத்தின் கீழ் இப்பள்ளியை ஆய்வு செய்ய அவர்கள் முற்பட்டனர்.</p><h2>கொடூர வன்முறை</h2><p>பள்ளிக்குள் நுழைய முயன்ற சி.ஜே.பி குழுவினரை ஒரு கும்பல் வழிமறித்து கற்களை வீசித் தாக்கியது. "அர்பன் நக்சல்கள், தேசவிரோதிகள், பாகிஸ்தானியர்கள்" என முழக்கமிட்ட அசுதோஷ் ரான்காவின் சட்டை கிழிக்கப்பட்டதுடன், வாகனங்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. </p><p>இந்த வன்முறையில் பெண் தொண்டர் ஒருவர் உட்பட பலர் காயமடைந்தனர், ஒருவருக்குக் கை முறிவு ஏற்பட்டது.</p><p>இதுகுறித்து அசுதோஷ் ரான்கா பேசுகையில், "கிராம மக்கள் அழைப்பின் பேரில் தான் நாங்கள் சென்றோம், ஆனால் கல்வி அமைச்சர் மதன் திலாவரின் தூண்டுதலின் பேரில் பா.ஜ.க குண்டர்கள் திட்டமிட்டு எங்கள் மீது வன்முறையை ஏவியுள்ளனர்"என்று கூறினார்.</p><h2>அபிஜீத் திப்கேவின் அதிரடி எச்சரிக்கை:</h2><p>இச்சம்பவம் குறித்து சி.ஜே.பி தலைவர் அபிஜீத் திப்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "ராஜஸ்தானில் என்ன அராஜகம் நடக்கிறது? பா.ஜ.க குண்டர்கள் எங்கள் தொண்டர்களின் இரத்தத்தை குடிக்க அலைகிறார்கள். </p><p>பள்ளிகள் மாட்டுத் தொழுவத்தில் நடப்பது பற்றி கவலைப்படாத காவல்துறை, அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது" என்று சாடினார்.</p><p>மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டாலும், சம்பந்தப்பட்ட பள்ளியைச் சீரமைக்கும் பணியைத் அரசாங்கம் தொடங்காவிட்டாலும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D">டெல்லி ஜந்தர் மந்தர்</a> பாணியில் ஜெய்ப்பூரில் மிகப்பெரிய தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும், அதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கெடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I will go to Jaipur if the school repair work doesn’t begin and the BJP goons are not arrested within the next 48 hours.<a href="https://x.com/AshutoshRanka?ref_src=twsrc%5Etfw">@AshutoshRanka</a> <a href="https://t.co/jYXRUKKY45">pic.twitter.com/jYXRUKKY45</a></p>&mdash; Abhijeet Dipke (@abhijeet_dipke) <a href="https://x.com/abhijeet_dipke/status/2090752763131281485?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>தீபாவளியை கொண்டாட கலிபோர்னியா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/world/resolution-passed-in-california-legislature-to-celebrate-diwali</link><comments>https://www.maalaimalar.com/news/world/resolution-passed-in-california-legislature-to-celebrate-diwali#comments</comments><guid isPermaLink="false">b0b268be-ed2f-49d7-a432-8a6f9ee44e9c</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:11:29 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:11:29.037Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தீபாவளி,Deepavali,resolution passed,தீர்மானம் நிறைவேற்றம்,கலிபோர்னியா சட்டமன்றம்,California  assembly</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/avrgxurw/diwali.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Diwali- California Assembly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/avrgxurw/diwali.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டமன்றத்தில் நவம்பர் 8-ந்தேதியை தீபாவளி தினமாக அங்கீகரிக்கும் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டு உள்ளது.</p><p>உறுப்பினர்கள் தர்ஷனா படேல், ஆஷ் கல்ரா ஆகியோர் கொண்டு வந்த இந்த  தீர்மானத்தில், "தீபாவளிப் பண்டிகை, உலகின் மிகப் பழமையான பண்டிகைகளில் ஒன்றாகும்.</p><p>இது குடும்பங்கள், நண்பர்கள், சமூகத்தினரை ஒன்றிணைத்து தாராள மனப்பான்மை, ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் அதே வேளையில், சுய சிந்தனைக்கும்  வழிவகுக்கும் ஒரு நிகழ்வாகத் திகழ்கிறது. </p><p>2026-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி நடைபெறவுள்ள தீபாவளிப் பண்டிகையை சட்டமன்றம் அங்கீகரிக்கிறது. </p><p>மகிழ்ச்சி நிறைந்த இக்கொண்டாட்டத்தில் கலிபோர்னியா மக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மகாராஷ்டிராவில் பெரும் துயரம்: ஐபோன் கேட்டு பிடிவாதம் பிடித்த 19 வயது மகனால் மொத்த குடும்பமும் பரிதாபமாக பலி!</title><link>https://www.maalaimalar.com/news/national/maharashtra-iphone-row-ends-in-triple-death-of-19-year-old-and-parents</link><comments>https://www.maalaimalar.com/news/national/maharashtra-iphone-row-ends-in-triple-death-of-19-year-old-and-parents#comments</comments><guid isPermaLink="false">c7f6ed74-b186-47c5-89b0-37fb3296206a</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:05:38 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:05:38.241Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,ஐபோன்,iPhoneTragedy,FamilyTragedy,சம்பாஜிநகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/u2jf8mgf/Untitled-10.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maharashtra]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/u2jf8mgf/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள சால்டா ஃபாடா பகுதியைச் சேர்ந்தவர் முரளிதர் சாந்த்குடே(48). ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவருக்கு குணால் (19) என்ற மகன் இருந்தார். வறுமையான சூழலிலும், குணால் தனது பெற்றோரிடம் புதிதாக ஐபோன் வாங்கித் தருமாறு கேட்டுத் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.</p><p>குடும்பத்தின் நிதி நிலைமை காரணமாகத் தந்தை போனை வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த குணால், நேற்று காலை 10 மணியளவில் அருகில் இருந்த சுமார் 400-500 அடி உயரமுள்ள கவ்டா மலைக்குச் சென்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-police-investigation">தற்கொலை </a>செய்வதாக மிரட்டினார்.</p><h2>மகனைக் கா<strong>ப்பாற்ற முயன்ற</strong> தந்தை பலி</h2><p>தகவலறிந்த தீயணைப்புத் துறையினரும், வாளுஜ் எம்பிசி காவல்துறையினரும், கிராம மக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மலையின் கீழே பாதுகாப்பு வலைகளை அமைத்து குணாலைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், மீட்புக் குழுவினரைக் கண்ட குணால் மலையின் விளிம்பிலேயே தனது இடங்களை மாற்றிக் கொண்டே இருந்தார்.</p><p>சுமார் 3 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின், மதியம் 1 மணியளவில் தந்தை முரளிதர் மகனைச் சமாதானப்படுத்தி மீட்க அருகில் சென்றார். அப்போது குணால் மலையிலிருந்து குதிக்க, அவரைப் பிடிக்க முயன்ற தந்தை முரளிதரும் நிலைதடுமாறி மகனுடன் சேர்த்து மலையிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.</p><h2>தாங்க முடியா<strong>த தாய் உயிரை</strong> மாய்த்துக் கொண்டார்</h2><p>கண்முன்னே கணவனும் மகனும் 500 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலியான கோரக் காட்சியைக் கண்டு கதறிய தாய் சங்கீதா, கடுமையான மன உளைச்சலில் அதே இடத்தில் இருந்து மலையிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். நொடிப் பொழுதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உடல்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! - செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-executive-meeting-mk-stalin-says-we-are-specialists-at-making-a-comeback</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-executive-meeting-mk-stalin-says-we-are-specialists-at-making-a-comeback#comments</comments><guid isPermaLink="false">f65978a4-0615-40a8-925d-659fe3c0a771</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:00:31 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:00:31.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,திமுக செயற்குழு கூட்டம்,DMK Executive Meeting,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bqxetd53/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bqxetd53/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தற்போதைய முதலமைச்சர் சினிமா செட் என நினைத்து சட்டசபையில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார் என்று தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.</strong></em></p><p>தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் கட்சி ரீதியாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><h2>செயற்குழு கூட்டம் </h2><p>இந்த நிலையில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mk-stalin-chennai-387th-birthday-celebration">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், கட்சியை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.</p> <p>தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும், வருங்காலத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. </p><h2>மு.க.ஸ்டாலின்</h2><p>இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக </a>தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:</p><p>* நாம் பார்க்காத வெற்றியும் இல்லை. நாம் பாரக்காத தோல்வியும் இல்லை.</p> <h2>தேர்தல் தோல்வி</h2><p>* தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. </p><p>* இந்த தோல்வியானது எதிர்காலத்தை திட்டமிடுவதற்காக நமக்கு கால அவகாசம் என எடுத்துக் கொள்வோம்.</p><p>* கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது. </p><p>* Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்!</p> <p>* Bore அடிக்கிறது என்பதற்காக நாம் அரசியலுக்க வந்தவர்கள் இல்லை. போராடுவதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் நாம்.</p><p>* திமுகவினர் முதலில் அவர்கள் வீட்டில் அரசியல் பேச வேண்டும். பிள்ளைகள், உறவினர்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.</p><p>* இனமும் மொழியும் நாடும் இருக்கும் வரை கறுப்பு, சிவப்பு கொடி பறக்க வேண்டும் என்று உழைக்க வேண்டும்.</p><p>* தற்போதைய முதல்வர் நாம் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதில் பிஸியாக உள்ளார்.</p> <p>* தற்போதைய முதலமைச்சர் சினிமா செட் என நினைத்து சட்டசபையில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார்.</p><p>* அண்ணா உருவாக்கிய இயக்கத்தை, கலைஞர் வளர்த்த இயக்கத்தை மேலும் வலிமையானதாக வளர்த்தெடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சூட்கேசில் உடல் பாகங்கள்... பிரியாணி அண்டாவில் மைதா மாவு தடவிய சதை! சென்னை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-police-investigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-police-investigation#comments</comments><guid isPermaLink="false">a20ce649-31fd-424e-97d7-e4340688d0cd</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:35:57 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:35:57.982Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,Guduvancherry Woman Murder,Northstate Couple,கூடுவாஞ்சேரி பெண் கொலை,வடமாநில தம்பதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/fjgdvg1p/guduvancherry.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/fjgdvg1p/guduvancherry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையை அடுத்த கூடுவாஞ்ரிசேயில் வெளிமாநில பெண் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>அந்த பெண் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதி இந்த கொடூரக் கொலையை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.</p><h2><strong>ஆக்ராவில்</strong></h2><p>வண்டலூரில் இருந்து பெண்ணின் உடல் பாகங்களை சூட்கேசில் அடைத்து எடுத்துச் சென்று சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆக்ராவுக்கு அவர்கள் அனுப்பி வைத்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>சென்ட்ரல் ரெயில் நிலையம்</strong></h2><p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆக்ராவுக்கு சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 5-ந்தேதி சிகப்பு நிற சூட்கேசை அம்மாநில போலீசார் மீட்டனர்.</p><p>சந்தேகத்தின் பேரில் அதனை திறந்து பார்த்த போது அதில் தலை இல்லாத பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்த உடல் பாகங்களை மீட்டு விசாரணை நடத்திய போலீசார் சென்னைக்கு வந்தும் சென்ட்ரல் ரெயில்வே போலீசார் துணையுடன் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.</p><p>இதில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தெரிய வந்தது. அவரது பெயர் ஹயாத் நிஷா என்பதும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.</p><h2><strong>கூடுவாஞ்சேரி</strong></h2><p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் சூட்கேசை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைத்து விட்டு சென்றது யார்? என்பதை முதலில் கண்டறிந்தனர். ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா ஒன்றில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த சூட்கேசை ஒரு ஆணும், பெண்ணும் எடுத்து வந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைத்துவிட்டு செல்வது அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.</p><h2><strong>பூங்கா ரெயில் நிலையம்</strong></h2><p>அந்த கேமரா காட்சிகளை பதிவு செய்து கொண்ட போலீசார் அதனை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து வைத்து கொண்டு வழக்கு விசாரணையை வேகப்படுத்தினார்கள்.</p><p>சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெளியில் வந்து சம்பந்தப்பட்ட பெண்ணும், ஆணும் எந்தப்பக்கமாக சென்றுள்ளார்கள் என்பதை அறிவதற்காக ரெயில் நிலையம் முன்பு உள்ள சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை போட்டுப்பார்த்தனர். இதில் இருவரும் பூங்கா ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து மின்சார ரெயிலில் கூடுவாஞ்சேரிக்கு சென்றதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் இளம்தம்பதி என்பதும் தெரிய வந்தது.</p><h2><strong>ஒரே வீட்டில்</strong></h2><p>கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கிய இந்த தம்பதி அங்கிருந்து கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றதையும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக கண்டுபிடித்த போலீசார் தாங்கள் வைத்திருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை அக்கம் பக்கத்தில் காட்டி விசாரித்தனர்.</p><p>இதில் போலீசார் அடையாளம் கண்ட தம்பதி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களுடன் பெண் ஒருவரும் தங்கி இருந்துள்ளார். அவர் தான் கொலை செய்யப்ப்டட ஹயாத் நிஷா என்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.</p> <h2><strong>கொடூர கொலை</strong></h2><p>ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹயாத் நிஷா திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார். இவரது 19 வயது மகன் ஏ.சி. மெக்கானிக்காக தாம்பரத்தில் பணியாற்றி வருகிறார். ஹயாத் நிஷா மட்டும் இளம் தம்பதியோடு ஒரே வீட்டில் வசித்து வந்தபோது தான் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார்.</p><p>இதை தொடர்ந்து போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு பிரியாணி தயாரிக்கும் பெரிய அண்டாவில், ஹயாத் நிஷாவின் துண்டிக்கப்பட்ட உடலின் சதை பாகங்கள் போட்டு வைக்கப்பட்டு இருந்தது.</p><figure><img alt="கொலையுண்ட பெண்ணின் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்த பிரியாணி பாத்திரத்தை போலீசார் மீட்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றபோது எடுத்த படம்." src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5pqg0dgn/guduvan.jpg" /><figcaption>கொலையுண்ட பெண்ணின் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்த பிரியாணி பாத்திரத்தை போலீசார் மீட்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றபோது எடுத்த படம்.</figcaption></figure><h2><strong>மைதா மாவு</strong></h2><p>அந்த சதைகள் மீது மைதா மாவையும் தடவி வைத்திருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.  வீடு முழுவதும் ரத்த கறை படிந்து இருந்த நிலையில் அண்டாவில் போட்டு வைக்கப்பட்டிருந்த சதை பாகங்களுடன், காய்கறிகளும் காணப்பட்டது. சதை மற்றும் காய்கறிகள் வேக வைத்தது  போன்று இருந்தது. இதுவும் போலீசாரை மிகுந்த அதிர்ச்சி அடைய செய்தது.  </p><p>இதனால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அண்டாவில் போட்டு தம்பதி சமைத்து இருக்கலாம் என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. </p><p>சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து உடல் பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தாலும் கொலை செய்யப்பட்ட இடம் கூடுவாஞ்சேரி என்பதால் இந்த வழக்கு விசாரணையை கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.</p><h2><strong>தேடுதல் வேட்டை</strong></h2><p>கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை உறுதி செய்துள்ள போலீசார் கொலையாளிகளான தம்பதியை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>கடந்த 5-ந்தேதி சூட்கேசில் உடல் மீட்கப்பட்ட நிலையில் கொலை நடந்து தற்போது 2 வாரங்களுக்கு மேல் ஆகி விட்டதால் கொலையாளிகள் தப்பிச் சென்று எங்காவது பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.</p><h2><strong>செல்போன் எண்கள்</strong></h2><p> இதை தொடர்ந்து இளம் தம்பதி பயன்படுத்திய  செல்போன் எண்கள் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். கொலையாளிகள் சிக்கினால் மட்டுமே அவர்கள் தலையை எங்கு வீசினார்கள் என்பது தெரிய வரும் என்பதால் அவர்களை தேடி கண்டு பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.</p><h2><strong>அழுகி இருக்கும்</strong></h2><p>இது தொடர்பாக போலீசார் கூறும்போது, பெண் கொலை செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் கொலையாளிகள் தலையை வெளியில் எங்காவது வீசி இருந்தால் இந்நேரம் அது அழுகிப் போயிருக்கவும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தலையை தேடி கண்டுபிடிக்கும் பணியையும் தீவிரப்படுத்தி உள்ளோம்.</p><h2><strong>மின்சார ரெயில்</strong></h2><p>கூடுவாஞ்சேரியில் இருந்து பெண்ணின் உடலை சூட்கேசில் அடைத்து மின்சார ரெயிலில் தான் எடுத்துச் சென்று உள்ளனர். பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் இறங்கி பின்னர் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு நடந்து சென்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சூட்கேசை வைத்து விட்டு சத்தமில்லாமல் ரெயில் நிலையத்தை விட்டு இருவரும் வெளியேறி இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக உதவி கமிஷனர் சேகர்பாபு தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.</p><p>கூடுவாஞ்சேரி மசூதி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>387-ல் அடியெடுத்து வைக்கும் நம்ம  சென்னை: வளர்ப்பு அன்னையைக் காக்க நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-steps-into-387th-year-our-pledge-to-protect-the-foster-mother</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-steps-into-387th-year-our-pledge-to-protect-the-foster-mother#comments</comments><guid isPermaLink="false">313e9ee0-e4d1-49ac-bed8-53510b5b32bf</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:19:52 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:19:52.237Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai387,MadrasDay,NammaChennai,ProtectChennai,ChennaiHeritage,சென்னை387,மெட்ராஸ்டே,நம்மசென்னை,சென்னையைக்காப்போம்,சென்னைதினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/96fa5c85/chennai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai day 387]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/96fa5c85/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் தலைநகரமும், தென்னிந்தியாவின் முதன்மைப் பெருநகரமுமான சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையிலேயே ஆண்டுதோறும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. </p><p>கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர் மற்றும் பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களிடம் இருந்து நிலத்தை வாங்கி நகரை உருவாக்க அடித்தளமிட்டார். இச்சகோதரர்களின் தந்தையான சென்னப்ப நாயக்கரின் நினைவாகவே இம்மாநகரம் '<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-day-celebration-in-chennai">சென்னை</a>' என்று பெயரிடப்பட்டது.</p><h2>தோற்றமும் <strong>வளர்ச்சியும்</strong></h2><p>முன்னணிப் பத்திரிகையாளர்களான சசி நாயர், வின்சண்ட் டி சொஸா மற்றும் முத்தையா ஆகிய மூவரின் சிந்தனையில் உதித்து, 2004 ஆம் ஆண்டு முதல் இந்நாள் சிறப்பாக நினைவுகூரப்பட்டு வருகிறது. </p><figure><img alt="chennai central" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/etg8ir7u/centrel.jpg" /></figure><p>தொடக்கத்தில் சில கருப்பு-வெள்ளைப் புகைப்படக் கண்காட்சிகளுடன் எளிய முறையில் தொடங்கப்பட்ட இக்கொண்டாட்டம், இன்று புகைப்படக் கண்காட்சிகள், பிரம்மாண்ட உணவுத் திருவிழாக்கள், பாரம்பரிய நடைப்பயணங்கள் மற்றும் மாரத்தான் ஓட்டங்கள் எனப் பல பரிமாணங்களில் நகரின் மூலைமுடுக்கெல்லாம் விமரிசையாகக் கொண்டாடப்படும் மக்கள் திருவிழாவாக உருவெடுத்துள்ளது.</p><h2>நம்ம சென்னை<strong>யின் பெருமை</strong>மிக்க வரலாறு</h2><p>வாழ்வு தேடி வந்த கோடிக்கணக்கான மக்களைத் தன் மடியில் ஏந்தி, வாழ்வாதாரம் அளித்து பேணிக்காக்கும் தாயாகத் திகழ்கிறது சென்னை மாநகரம். இந்தியாவின் நான்கு முக்கிய பெருநகரங்களில் ஒன்றான சென்னை, இன்று தனது 387-வது பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடுகிறது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/rarjf9wr/uu.jpg" /></figure><p>மதராசப்பட்டணம், மெட்ராஸ் எனக் காலப்போக்கில் உருமாறி இன்று அதிநவீன தொழிற்கேந்திரமாக வளர்ந்து நிற்கும் இம்மாநகரம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற பழமையான வரலாற்றுப் பண்பாட்டு அடையாளங்களையும், அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஒருங்கே கொண்டு கம்பீரமாக விளங்குகிறது.</p><h2>நகரக் <strong>கட்டமைப்</strong>பு</h2><p>வானுயர்ந்த கட்டிடங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், முன்னணி கல்வி நிறுவனங்கள் எனச் சென்னை அடைந்துள்ள வளர்ச்சி பிரம்மாண்டமானது. இருப்பினும், நகரக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாகப் பல கடுமையான நெருக்கடிகளை இம்மாநகரம் எதிர்கொண்டு வருகிறது. ஒரு மாநகரத்தின் செழுமையைக் குறிக்கும் முக்கிய அடையாளங்களான நீர்வழித்தடங்களும் நிலவழித்தடங்களும் இன்று பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. </p><p>1935-ஆம் ஆண்டு வரை கண்ணாடி போலத் தெளிந்த நீரைக் கொண்டிருந்த கூவம், அடையாறு ஆறுகளும் பக்கிங்காம் கால்வாயும் இன்று கழிவுநீர் செல்லும் வழிகளாக மாறிப்போயின. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/gdheai9h/yoga.jpg" /></figure><p>மற்றொரு புறம், நகரின் பல பகுதிகளில் முறையற்ற ஆக்கிரமிப்புகளால் சாலைகள் சுருங்கி, வாகனப் பெருக்கத்தின் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் அன்றாடப் பிரச்சனையாக மாறியுள்ளது. மழைக்காலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்வதும், கோடையில் குடிநீருக்கு லாரிகளை நம்பி நிற்கும் அவலமும் தொடர்கிறது.</p><h2>எதிர்கா<strong>லத் தேவைகள்</strong></h2><p>சென்னை மாநகரத்தை வாழத் தகுதியுள்ள உயிர்ப்பான நகரமாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல உடனடியாகப் பல கட்டமைப்பு மாற்றங்கள் தேவையாகின்றன. ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளையும் நீர்வழிப்பாதைகளையும் மீட்டெடுத்து, கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதே முதன்மைப் பணியாகும். நகரின் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு உடனடி நிவாரணம் காண முடியும். </p><p>அத்துடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் பசுமைப் போர்வையை அதிகரிப்பது அவசியமாகிறது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/q38u61dp/merina.jpg" /></figure><p>அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தாலும், மக்களின் பங்களிப்பும் விழிப்புணர்வும் இன்றி முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.</p><h2>பிறந்த நா<strong>ளில் நாம் அனைவ</strong>ரும் ஏற்க வேண்டிய உறுதிமொழி</h2><p>பெற்றெடுத்த தாயைப் போற்றிப் பாதுகாப்பதைப் போல, நமக்கு வாழ்வளித்த வளர்ப்பு அன்னையான சென்னை மாநகரையும் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் முதன்மையான கடமையாகும். இந்த 387-வது பிறந்தநாளில் கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், கீழ்க்கண்ட உறுதிமொழிகளை நாம் அனைவரும் மனதார ஏற்போம்:</p><p>* நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளையோ நெகிழிப் பொருட்களையோ எறியாமல் நகரைத் தூய்மையாக வைப்போம்.</p><p>* இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், வெள்ள அபாயங்களைத் தடுக்கவும் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க மாட்டோம்.</p><p>* சாலை விதிகளைச் சரியாகப் பின்பற்றி, ஆக்கிரமிப்புகளைத் தவிர்த்துப் போக்குவரத்து சீராக இயங்க ஒத்துழைப்போம்.</p><p>* அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாத்துச் சிங்காரச் சென்னையின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா கூட்டணியில் தவெக இணையும்..!- அமைச்சர் ஷாஜகான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-join-india-alliance-says-minister-shajahan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-join-india-alliance-says-minister-shajahan#comments</comments><guid isPermaLink="false">5e60b5a2-9063-4860-88c1-787ebb79770c</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:16:41 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:16:41.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,இந்தியா கூட்டணி,India alliance,tvk,அமைச்சர் ஷாஜகான்,minister shajahan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ive1eu8i/shajahan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MInister Shajahan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ive1eu8i/shajahan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா கூட்டணியில் இணைந்து வரும் 2029ம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை தவெக சந்திக்கும் என அமைச்சர் ஷாஜகான் திட்டவட்டமாக கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து நெல்லையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்தியா கூட்டணியில் இணைந்து வரும் 2029ம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை தவெக சந்திக்கும்.</p><p>திமுகவை இத்தனை ஆண்டுகாலம் பல்லக்கில் தூக்கி சுமந்த கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.</p><p>திமுகவுடன் நீண்ட கால அரசியல் பயணம் செய்தோம், தற்போது ஏற்பட்ட அரசியல் சூழல் அடிப்படையில் தவெக அமைச்சரவையில் உள்ளோம்.</p><p>தவெக அரசில் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் பங்கேற்றுள்ளதை திமுகாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.</p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் முடிவு என்பது மக்கள் நலனை அடிப்படையாக கொண்டது.</p><p>தவெக இந்தியா கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.</p><p>திமுகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்- திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">a0c797bc-87a6-4c3b-b192-c919d5b1bf3a</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:12:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:12:03.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,தமிழக சட்டசபை,Viduthalai chiruthaigal katchi,TN assembly,விடுதலை சிறுத்தைகள் கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/x54yr3wk/thirumavalavan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/x54yr3wk/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பது வி.சி.க.வின் நிலைப்பாடு. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை வி.சி.க. வரவேற்கிறது என்றார்.</strong></em></p><p>திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்‌ <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">தொல். திருமாவளவன்</a> அளித்த பேட்டியில் கூறியதாவது:- </p><p>தமிழ்தேசிய எழுச்சி மாநாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநாட்டிற்கு வந்திருந்த லட்சக்கணக்கான வி.சி.க.வினருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>தேர்தலுக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கரைந்துவிட்டது என சிலர் வதந்திகளை பரப்பினர். வதந்திகளை பொய்யாக்கும் வகையில் ஜென்சி தலைமுறையினர் இந்த மாநாட்டில் லட்சக்கணக்கில் கலந்து கொண்டனர். </p><p>மாநாட்டில் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது, உயிர் சேதம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் தான் எனது உரையை 2 நிமிடத்தில் முடித்துக்கொண்டேன். வி.சி.க.வினர் ஒழுங்கீனமானவர்கள் என சமூக ஊடகங்களில் சித்தரிக்க தொடங்கினர்.தமிழக அரசியல் களத்தில் ஒழுக்கம் நிறைந்த இளைஞர்களை கொண்ட கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. மாநாடு வெற்றி பெற வாழ்த்து செய்தியை அனுப்பிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது இந்த மாநாடு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது என பாராட்டினார். வருகிற 29-ந் தேதி மாநாட்டு மலர் சென்னையில் வெளியிடப்படும். </p><h2><strong>மாநில சுயாட்சி</strong></h2><p>மாநில சுயாட்சி என்ற கோரிக்கை முழக்கத்தை உரக்க பேசவே இந்த மாநாடு நடைபெற்றது. மாநில சுயாட்சி என்பது தி.மு.க.வால் முன் நிறுத்தப்பட்ட ஒரு மகத்தான கோட்பாடு. இதை வி.சி.க. உரக்க பேசி வருகிறது. மாநில சுயாட்சி கோரிக்கை அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. </p><p>சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பது வி.சி.க.வின் நிலைப்பாடு. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை வி.சி.க. வரவேற்கிறது.</p><h2><strong>அ.தி.மு.க.</strong></h2><p>தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க.விடம் தனித்து நில்லுங்கள், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டாம். தனித்து நின்றாலே உங்கள் செல்வாக்கு நிலைத்து நிற்கும் என கூறினேன். அந்த நேரத்தில் எங்களுக்கு புத்திமதி சொல்ல நீங்கள் யார் என்ற கேள்வியை எழுப்பினார்கள். த.வெ.க.வின் 100 நாள் ஆட்சியை வி.சி.க. பாராட்டுகிறது. இந்த 100 நாள் என்பது த.வெ.க.விற்கு கற்று கொள்ளும் காலம். 100 நாள் த.வெ.க. ஆட்சியில் எந்த துறையிலும் லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை என்ற பெயரை சம்பாதித்து சாதித்துள்ளார்கள். பலர் மனம் திறந்து இந்த நிலைப்பாட்டை பாராட்டுகிறார்கள். இதே நிலை நீடிக்க வேண்டும், ஊழல் இல்லாத அரசாக 5 ஆண்டுகள் செயல்பட்டு த.வெ.க. சாதனை படைக்க வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/சௌகார்-ஜானகி">சௌகார் ஜானகி</a> மறைவு எனக்கு துயரம் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-teachers-selected-for-national-teachers-award</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-teachers-selected-for-national-teachers-award#comments</comments><guid isPermaLink="false">811cdc0e-3c77-45b2-bff8-004fde612411</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:57:39 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:57:39.674Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,teachers day,ஆசிரியர் தினம்,தேசிய நல்லாசிரியர் விருது,National Teachers Awards</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/lf64y07h/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/lf64y07h/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/will-chief-minister-open-files-only-if-astrologer-says-udhaynidhi-asks">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ஆசிரியர் தினத்தை</a> முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <p>மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.</p> <p>இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!  </p><p>நல்வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நள்ளிரவில் மெட்ரோ ரெயிலில் மெட்ராஸ் தின கொண்டாட்டம்: கேக் வெட்டி இசை நிகழ்ச்சியுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-day-celebration-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-day-celebration-in-chennai#comments</comments><guid isPermaLink="false">5a74636a-a1f7-4db6-b8f7-6c9ca383764c</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:55:33 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:55:33.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras Day,மெட்ராஸ் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/qnvgozkq/madrasday01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மெட்ரோ சின்ன வேடத்துடன் வந்தவர் கேக் வெட்டிய காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ மெட்ரோ சின்ன வேடத்துடன் வந்தவர் கேக் வெட்டிய காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/qnvgozkq/madrasday01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாரம்பரியத்தையும், நவீனத்தையும் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்கும் சென்னை மெட்ரோவின் இந்த முயற்சி இந்த ஆண்டின் மெட்ராஸ் டே கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய சிறப்பம்சமாக மாறியுள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/மெட்ராஸ்-தினம்">சென்னைக்கு</a> வயது 387.</p><p>அன்றைய சென்னை முதல் இன்றைய சென்னை வரை இந்த நகரத்தின் தோற்றத்தையும், மாற்றத்தையும் நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவெடுத்து வரும் மாற்றங்கள் ஆஹா... நம்ம சென்னை என்று கர்வப்பட வைக்கிறது.</p><p>வரலாற்று சிறப்புமிக்க சென்னையின் வயது ஆங்கிலேயர்கள் 1639-ம் ஜார்ஜ் கோட்டை கட்ட இடம் வாங்கிய காலத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. சென்ன பட்டணம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நமது நகரம் 1996-ல் சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.</p><p>சென்னையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் போல் கொண்டாடி மகிழ்கிறார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.</p><h2><strong>கொண்டாட்டம்</strong></h2><p>இந்த ஆண்டு புதுமையாக மெட்ரோ ரெயிலையே இசை கச்சேரி அரங்கமாக மாற்றி  கொண்டாட திட்டமிட்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை செய்த தனியார் நிறுவனம் சமூக வலைதளத்தில் அறிவிப்பை வெளியிட்ட 30 நிமிடங்களிலேயே முன்பதிவும் முடிந்தது.</p><p>இரவு 11 மணிக்கு வழக்கமான மெட்ரோ ரெயில் சேவை முடிந்ததும் கொண்டாட்டத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் திரண்டார்கள்.</p><figure><img alt="கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் கேக் வெட்டிய போது எடுத்தபடம்." src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/2ubejr0a/Madrasday.jpg" /><figcaption>கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் கேக் வெட்டிய போது எடுத்தபடம்.</figcaption></figure><p>நள்ளிரவு 12 மணிக்கு ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் அடையாள சின்னத்துடன் வந்தவர் பிறந்தநாள் கேக்கை வெட்டினார். அப்போது ‘ஹேப்பி பர்த்டே டூ சென்னை’ என்று உற்சாகமாக பாடினார்கள்.</p><p>அதன் பிறகு அனைவரும் மெட்ரோ ரெயிலில் ஏறினார்கள். அந்த ரெயில் நகரும் அரங்கமாக மாற்றப்பட்டு இருந்தது. கானா இசைக் குழுவினர் ரெயிலுக்குள் கச்சேரியை தொடங்கியதும் ரெயில் புறப்பட்டது.</p><p>விமான நிலையம் வரை சென்று விட்டு மீண்டும் கோயம்பேட்டுக்கு திரும்பியது. சுமார் 2 மணி நேரம் ரெயிலில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது ஆட்டம் பாட்டத்துடன் சென்னையின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்த பயணத்தில் பொதுமக்கள் ஈடுபாடு அதிகமாக இருந்தது.</p><p>வித்தியாசமாக நடந்த இந்த நிகழ்ச்சி இந்தியாவிலேயே முன்மாதிரி நிகழ்ச்சியாக அமைந்ததாக கூறினார்கள். இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மறக்க முடியாத அனுபவம் என்று கூறினார்கள்.</p><p>வழக்கமாக அமைதியான பயணத்திற்கு பெயர் பெற்ற மெட்ரோ ரெயில் இன்று சென்னைவாசிகளின் உற்சாகக் குரல்களாலும் கானா பாடல்களாலும் விழா கோலம் பூண்டது. இந்தியாவில் முதல் முறையாக ஓடும் ரெயிலிலேயே இப்படி ஒரு கொண்டாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது பயணிகள் மத்தியிலும் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. </p><p>பாரம்பரியத்தையும், நவீனத்தையும் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்கும் சென்னை மெட்ரோவின் இந்த முயற்சி இந்த ஆண்டின் மெட்ராஸ் டே கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய சிறப்பம்சமாக மாறியுள்ளது.</p><p>‘மெட்ராஸ் டே’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பேட்டி வருமாறு:-</p><h2><strong>வேதாந்தன் - வேளச்சேரி</strong></h2><p>மெட்ரோ ரெயிலில் நடந்த சென்னை தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது நேரம் போனதே தெரியவில்லை. கானா பாடல்கள் உட்பட பழைய காலத்துப் பாடல்கள் முதல் தற்போதைய டிரெண்டிங் பாடல்கள் வரை அனைத்தும் அருமையாகப் பாடப்பட்டன. இந்த நிகழ்ச்சி மனதிற்குப் பெரு மகிழ்ச்சியளித்தது. அடுத்தமுறை விமானத்தில் இதுபோன்று சென்னை தினத்தைக் கொண்டாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.</p><h2><strong>அரவிந்தன் - கோயம்பேடு</strong></h2><p>சூப்பர் சென்னை இணையதளத்தின் மூலம் மெட்ரோ ரெயிலில் கொண்டாட்டம் நடக்கவிருப்பதை அறிந்து நண்பர்களுடன் வந்தேன். மெட்ரோவில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நான் முதன் முறையாகப் பார்க்கிறேன். என்றும் மறக்க முடியாத இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அடுத்த முறை இதைவிடப் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும். மேலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்  மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளைக் கொண்டாடியது சென்னை வாசிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்தது’ என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ரஷிய எண்ணெய்க் கப்பல் விவகாரத்தில் இந்திய கேப்டன் கைது: &quot;என் கணவரைப் பலிகடா ஆக்கிவிட்டார்கள்&quot; என மனைவி கண்ணீர் </title><link>https://www.maalaimalar.com/news/national/wife-says-husband-made-scapegoat-in-russian-oil-tanker-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/wife-says-husband-made-scapegoat-in-russian-oil-tanker-case#comments</comments><guid isPermaLink="false">2e726460-8be2-4a65-8c8e-5f4a0455f4d4</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:44:01 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:44:01.304Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரஷியா,IndianNavy,RussianOil,Ajay Pant,Smyrtos,இந்தியகேப்டன்,அஜய் பாந்த்,ஸ்மிர்டோஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/864y6kqc/navy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajay Pant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/864y6kqc/navy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷியா மீது மேலைநாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறி கச்சா எண்ணெய் கடத்தியதாகக் கூறி, பிரிட்டிஷ் கடற்படை கமாண்டோக்களால் கைது செய்யப்பட்டுள்ள இந்தியக் கப்பல் கேப்டன் அஜய் பாந்த்(38) பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக அவருடைய மனைவி ரிது பாந்த் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கேப்டன் அஜய் பாந்த் மீது இங்கிலாந்து அரசு தடைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.</p><h2>ஆங்கி<strong>லக் கால்வாயில் அரங்கே</strong>றிய ஆபரேஷன்</h2><p>கடந்த ஜூன் 14 அன்று, ரஷ்யாவின் உஸ்ட்-லுகா துறைமுகத்திலிருந்து சுமார் 98,000 டன் கச்சா எண்ணெயுடன் எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்த '<a href="https://www.maalaimalar.com/news/world/us-canada-trade-talks-fail-canada-to-impose-retaliatory-tariffs">ஸ்மிர்டோஸ்</a>' என்ற எண்ணெய் தாங்கி கப்பலை பிரிட்டிஷ் கடற்படை கமாண்டோக்கள் ஹெலிகாப்டர் மூலம் வழிமறித்து அதிரடியாகக் கைப்பற்றினர். ரஷியாவின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க இயங்கும் 'நிழல் கப்பல் படை' நெட்வொர்க்கில் இந்தச் சரக்குக் கப்பல் செயல்பட்டு வந்ததாக இங்கிலாந்து குற்றம் சாட்டுகிறது.</p><h2>தவறான நேரத்<strong>தில் தவறான இடத்</strong>தில் இருந்தார்</h2><p>ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் ரிது பாந்த், "எனது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கறையற்ற முறையில் கப்பல் துறையில் பணியாற்றி வருகிறார். அவர் கப்பலின் உரிமையாளர் மற்றும் நிறுவனத்தின் உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்தினார். சரக்குகளின் சட்டப்பூர்வ பின்னணி அல்லது தடைகள் குறித்து ஒரு கேப்டனுக்கு எந்த அதிகார அதிகாரமும் இருக்காது. அவர் தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்ததால் இப்போது பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.</p><h2>10 ஆண்<strong>டுகள் சிறை தண்டனை</strong> அபாயம்</h2><p>கப்பலில் இருந்த 24 மாலுமிகளில் கேப்டன் அஜய் பாந்த் மட்டுமே தனிப்பட்ட முறையில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், வழக்கு விசாரணை வரவிருக்கும் டிசம்பர் 15 அன்று தொடங்கவுள்ளது.</p><h2>சர்வதேச <strong>மாலுமிகளுக்கு எழுந்துள்</strong>ள அச்சம்</h2><p>ஒரு கப்பலின் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பணியில் இருக்கும் இந்திய கேப்டன் மீது இங்கிலாந்து அரசு குற்றவியல் நடவடிக்கை எடுத்திருப்பது சர்வதேச கடல்சார் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் 3,20,000-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகளின் பாதுகாப்பிற்கு இந்தச் சம்பவம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கடல்சார் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் லண்டனில் உள்ள தூதரகம் மூலம் அஜய் பாந்திற்குத் தேவையான தூதரக உதவிகளைச் செய்து வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தை சிறப்பாக நடத்துகிறார் ஜே.சி.டி பிரபாகர்..! மு.க.ஸ்டாலின் பாராட்டியதை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/jcd-prabhakar-hailed-by-stalin-says-vairamuthu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/jcd-prabhakar-hailed-by-stalin-says-vairamuthu#comments</comments><guid isPermaLink="false">24a0af8e-e7fe-4321-85b3-21b9acb33a4e</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:35:06 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:35:06.143Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Vairamuthu,கவிஞர் வைரமுத்து,முக ஸ்டாலின்,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kfdxzph2/JCD.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JCD Prabhakar- Vairamuthu-MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kfdxzph2/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>முன்னாள் முதலமைச்சர்</p><p>மு.க.ஸ்டாலின் அவர்களை</p><p>நட்பின் நிமித்தமாய்</p><p>நலம்கேட்கச் சென்றேன்;</p><p>பொன்னாடை அணிவித்தேன்</p><p>ஞானபீடத்தின் பெருமையறிந்து</p><p>வீட்டுக்கே வந்து வாழ்த்திய</p><p>அந்நாள் முதலமைச்சர்,</p><p>பெற்றுவந்த விருதுக்காக</p><p>மீண்டுமொரு</p><p>பொன்னாடை அணிவித்தார்</p><p>பொன்னாடைக்குப்</p><p>பொன்னாடை</p><p>“எதைக் கொடுக்கிறாயோ</p><p>அதையே பெறுவாய்”</p><p>என்ற முதுமொழி</p><p>என் மூளைக்குள் ஓடியது</p><p>ஒருவரை ஒருவர் </p><p>கொண்டாடிக் கொண்டோம்</p><p>சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை</p><p>முக்கால் மணிநேரம் </p><p>இருவரும் கண்டுகொண்டிருந்தோம்</p><p>"ஜே.சி.டி பிரபாகர்</p><p>சிறப்பாக நடத்துகிறார்</p><p>சட்டமன்றத்தை" என்றார்</p><p>தி.மு.க தலைவர்</p><p>"சட்டமன்றத்தின்</p><p>ஆட்ட நாயகன்" என்று</p><p>சமூக ஊடகங்கள் </p><p>சபாநாயகரைப் பேசுகின்றன</p><p>என்றேன்</p><p>"அப்படியா" என்றார்</p><p>ஓர் அழகான காஃபி </p><p>குடித்து முடித்து</p><p>வாழ்த்தி விடைகொண்டேன்</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஏழை எளிய மக்களின் சேமிப்பு கணக்கிற்கு கட்டணம் விதிக்கும் மோடி அரசு- மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-imposes-charges-on-the-savings-accounts-of-the-poor-and-the-common-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-imposes-charges-on-the-savings-accounts-of-the-poor-and-the-common-people#comments</comments><guid isPermaLink="false">82df1885-1389-427c-97a4-c2d919721c7b</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:25:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:25:53.450Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/yjytc7t4/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/yjytc7t4/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மோடி அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</strong></em></p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>வங்கித் துறையில் ஏழை எளிய மக்களுக்காக 2005 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் உருவாக்கப்பட்டது தான் அடிப்படை வங்கி கணக்கு. நோ பிரில்ஸ் அக்கவுண்ட் அதாவது அலங்காரம் இல்லாத வங்கி கணக்கு என்ற பெயரில் ஏழை மக்களுக்காகவே இந்த கணக்கு துவங்கப்பட்டது. பின்னாளில் இந்த கணக்கிற்கு பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா என்று பாஜக அரசாங்கம் பெயரிட்டது. 56 கோடி அத்தகைய கணக்குகளில் 53 கோடி கணக்குகள் அரசு வங்கிகளால் திறக்கப்பட்டன. அத்தகைய கணக்குகளுக்கு அபராதம் விதிக்க வங்கிகள் முடிவெடுத்துள்ளன.</p><h2><strong>ஏழை மக்களை வதைக்கிறது</strong></h2><p>மாதம் நான்கு முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து நேரடியாகவோ அல்லது ஏடிஎம் மூலமாகவோ பணம் எடுக்கப்பட்டால், ஒவ்வொரு முறையும் 15 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; இதற்கு ஜிஎஸ்டி 18 சதவீதம் வரி வசூலிக்கப்படும். ஆக ஒவ்வொரு முறையும் 17 ரூபாய் 70 பைசா அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இது அக்டோபர் மாதம் முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளதாக தெரிகிறது.</p><p>எனவே ஸ்டேட் வங்கியை தொடர்ந்து மற்ற வங்கிகளும் ஏழை மக்களுக்கு கட்டணம் வசூலிக்கும் என்று தெரிகிறது. ஒருபுறம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இந்த அரசு கடந்த பாராளுமன்ற தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதனால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் பண பரிவர்த்தனைக்கு மீண்டும் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அவ்வாறு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் மக்களுக்கும் அபராதம் என்று விதித்து எல்லா வகையிலும் ஏழை மக்களை வதைக்கிறது இந்த அரசு.</p><p>2016 ஆம் ஆண்டு பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பெரும்பாலான மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனை நோக்கி இந்த அரசு தள்ளியது. இருப்பினும் 2017 ஜனவரி மாதம் இருந்த பணப்புழக்கமான 9 லட்சம் கோடியில் இருந்து இன்று 43 லட்சம் கோடி அளவிற்கு</p><p>பணப்புழக்கம் உயர்ந்துள்ளது. அதாவது இன்றளவிலும் கணிசமான பகுதி மக்கள் இன்டர்நெட் வசதி இல்லாமல் மின்சார வசதி இல்லாமல் பனப்பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற உண்மை நிலையை தான் இது பிரதிபலிக்கிறது. இந்த மக்களை கட்டணம் என்ற பெயரில் தண்டிக்க மோடி அரசு முயற்சிக்கிறது.</p><p>ஏழை எளிய மக்களிடம் கட்டண கொள்ளை அடிக்கும் இந்த வங்கிகள் தான் கடந்த 10 ஆண்டுகளில் பெரு முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது.</p><p>எனவே, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickamtagore-says-anbumani-ramadoss-goes-to-silent-mode-mention-bjp">மோடி</a> அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் வரங்களை  பாதுகாக்க சென்னை நாளில் உறுதியேற்போம்! - அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-day-anbumani-ramadoss-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-day-anbumani-ramadoss-wishes#comments</comments><guid isPermaLink="false">747f592f-c3af-432f-9765-b36b6175fa64</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:19:47 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:19:47.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,சென்னை தினம்,Chennai Day</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/22/17522338-pmk.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/22/17522338-pmk.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையின் வரங்களான பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆறுகள் ஆகியவற்றை மீட்டெடுப்பது தான் சென்னை மாநகர மக்களின் இன்றைய தலையாயக் கடமையாகும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இதுதொடர்பாக பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் தலைநகராக வளர்ந்து நிற்கும் சென்னை மாநகரம் அதன் 387-ஆம் உருவாக்க நாளைக் கொண்டாடும் நிலையில், சென்னை மாநகர மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>சென்னை மாநகரமாக பிறக்கவில்லை. பாட்டாளிகள் மற்றும் பூர்வகுடி மக்களின் கிராமங்கள் இணைக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு தான் இன்றைய சென்னையை உருவாக்கியிருக்கிறது. சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான்.</p> <p>ஆனால், சென்னையின் வரமாக கிடைத்தவற்றையெல்லாம் பாதுகாக்காமல் சாபமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இயற்கையின் கொடையான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அதன் பரப்பளவை பத்தில் ஒன்றாக குறைத்து விட்டார்கள். ஆங்கிலேயர்கள் படகு சவாரி சென்ற அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவற்றை சாக்கடைகளாக மாற்றி விட்டோம். ஏரிகளையும் அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கி வருகிறோம். இதை விட மோசமாக இயற்கையை சூறையாட முடியாது.</p> <p>இந்த நிலையை மாற்றி சென்னையின் வரங்களான பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆறுகள் ஆகியவற்றை மீட்டெடுப்பது தான் சென்னை மாநகர மக்களின் இன்றைய தலையாயக் கடமையாகும். இந்தப் பணியை நிறைவேற்றி முடிப்பதற்காக கடுமையாக உழைக்க <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mk-stalin-chennai-387th-birthday-celebration">சென்னை நாளில்</a> நாம் அனைவரும் உறுதியேற்போம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>