<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 12 Aug 2026 15:27:08 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 12 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-august-2026#comments</comments><guid isPermaLink="false">2688edc8-8b1b-44e4-a900-ccc79547ce8d</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:59:22 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:04:24.488Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/movxczzi/vinoth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/movxczzi/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகன வசதி செய்து தருமாறு விசிக எம்எல்ஏ ஜோதிமணி கோரிக்கை.</p><p>இதற்கு பதிலளித்த சபாநாயகர்,"கிள்ளி கொடுப்பவர் அல்ல, அள்ளி கொடுப்பவர் முதல்வர்; எம்எல்ஏ கோரிக்கையை முதல்வர் கவனம் கொண்டு செல்கிறேன்" என்றார்.</p><p>சூரியனுக்கே வியர்த்தது என்ற அமைச்சரின் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி</p><p>இதுவரை யாரும் நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார் - ஓ.பன்னீர்செல்வம்</p><p>அனைவருக்கும் சூரியனால் வியர்த்தது. நீங்கள் வந்த பிறகு சூரியனுக்கே வியர்த்தது - அமைச்சர் வினோத்</p><p>கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி - அமைச்சர் வினோத்</p><p>ரூ.134 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. நடப்பாண்டில் 3.98 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்கு காப்பீடு - அமைச்சர் வினோத்</p>  <p>பொது ரகம், சன்ன ரகம் நெல், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>விவசாயிகள் கோரிக்கைக்கேற்ப சிலவற்றை மேம்படுத்தி திட்டங்களின் பெயரை மாற்றி உள்ளோம்.</p><p>தமிழகத்தின் இதயம் விவசாயிகளிடத்தில் உள்ளது - அமைச்சர் வினோத்</p><h2>வேளாண் அமைச்சர் வினோத் உரை</h2><p>திமுக தலைவர் ஸ்டாலின் தவெக வேளாண் பட்ஜெட்டை வெற்று பட்ஜெட் என விமர்சித்திருந்தார்.</p><p>தவெகவின் வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட் அல்ல அது விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட்.</p><p>இவர்களுக்கு என்ன ஆட்சி செய்ய தெரியும் என கேட்டனர். லஞ்சம் இல்லாத ஆட்சியை முதலமைச்சர் விஜய் தந்துள்ளார்.</p><p>வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய கால அவகாசத்தை எதிர்க்கட்சியினர் வழங்க வேண்டும்.</p><p>விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.</p><h2>நிதி அமைச்சர் மரிய வில்சன் பதில்</h2><p>ஆயத்தீர்வு துறை மூலமாக ரூ.1,500 கோடி, மோட்டார் வாகன வரி ரூ.750 கோடி வருவாய் வந்துள்ளது.</p><p>அதிக கடன் வாங்கக்கூடாது என்பதில் முதலமைச்சர்  விஜய் உறுதியாக உள்ளார்.</p><h2>திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு</h2><p>3 மாதத்தில் ரூ.15,000 கோடி வருவாய் என சொன்ன நிலையில் எதன் வழியாக வந்தது என விளக்கம் தருக.</p><p>தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின் ரூ.7,000 கோடிக்கு மேல் வருவாய் பற்றாக்குறை.</p><p>60 நாளில் சொந்த வரி வருவாயை உயர்த்தி இருக்கிறோம் - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>திருத்த பட்ஜெட்டில் வருவாய் அதிகரிக்க வேண்டுமே? </p><p>ரூ.16,000 கோடி அதிக வருவாய் என்றால் பட்ஜெட்டில் ஏன் வித்தியாசம்? - எடப்பாடி பழனிசாமி </p><p>முதல்முறையாக அமைச்சர் பொறுப்பேற்று சிறப்பாக விளக்கம் தந்த நிதியமைச்சர் மரியவில்சனுக்கு பாராட்டு - சபாநாயகர்</p><p>கடந்த ஆட்சியில் மேற்கொண்டுள்ள திட்டங்களை நகல் எடுக்காமல் பலன்களை மட்டும் மேம்படுத்தி உள்ளோம்.</p><p>பொதுமக்களும் பயனளிக்கும் திட்டங்களின் அறிவிப்பால் செலவினம் அதிகரித்துள்ளது.</p><p>திமுக அரசு வழங்கிய டெண்டரில் உள்ள முறைகேடுகளை ஒவ்வொன்றாக ஆராய வேண்டும்.</p><p>விபி ஜிராம்ஜி திட்டம், கடன் தள்ளுபடி, 200 யூனிட் மானியத்துக்கு ரூ.18,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மரிய வில்சன் </p> <p>மாநிலத்தின் நிதிநிலை காரணம் காட்டி 28 மாதங்களுக்கு பின்னரே ஒரு திட்டத்தை நிறைவேற்றியது முந்தைய அரசு.</p><p>திட்டங்கள், அதன் பலன்களை மேம்படுத்தும் நோக்கில் தான் பெயர் மாற்றம், வெற்றி வீடு திட்டத்தில் முந்தைய ஆட்சி விட நிதி உயர்வு - அமைச்சர் மரிய வில்சன் </p><h2>அமைச்சர் மரிய வில்சன் உரை</h2><p>மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.</p><p>வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும்.</p><p>எந்த பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி திட்டமும் நிறுத்தப்படவில்லை.</p><p>நடைமுறை திட்டங்கள் தொடர்வதுடன் தவெக அரசு புதிய திட்டங்களையும் செயல்படுத்தும். தவெக அரசு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.</p><p>சொந்த வரி வருவாய் வளர்ச்சி 12 சதவீதம் தான் சாத்தியம்.</p><p>திட்டம் அனுமதி பெறுவதற்கான ஊழல் தவெக அரசால் தடுக்கப்பட்டுள்ளது. </p> <p>மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.</p><p>வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும் - அமைச்சர் மரிய வில்சன் </p> <h2>வெற்றி பட்ஜெட்</h2><p>இடைத்தரகர்களுக்கு சென்ற வீணான செலவினம் தவெக அரசில் நிறுத்திவைப்பு.</p><p>தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஒரு வெற்றி பட்ஜெட் - அமைச்சர் மரிய வில்சன் </p><p>எங்கள் தவறை திருத்தி உங்களிடம் இருந்து சிலவற்றை கற்றுக்கொண்டு மீண்டும் வலிமையாக நாங்கள் வருவோம்.</p><p>தமிழ் மொழி விவகாரத்தில் அன்று ஆவேசப்பட்டு விட்டேன். முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும் என்னையும் ஒப்பிட்டு பேசினார்கள்.</p><p>நான் பிறந்தது திருவாரூர், வளர்ந்தது புதுச்சேரி, படித்தது சென்னை, தற்போது ஆர்.கே.நகர் தத்தெடுத்துள்ளது - அமைச்சர் மரிய வில்சன் </p><h2>அமைச்சர் மரிய வில்சன் உரை</h2><p>வெற்றி அடைவதற்கு குறுக்கு வழியை அடையாமல் உண்மையுடன் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு முதல்வரே எடுத்துக்காட்டு.</p><p>அன்றும் இன்றும் என்றும் உண்மைக்கு புறம்பாக தவெகவினர் பேசுவதில்லை.</p><p>30 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு முதல்வர் விஜய் மூலம் வாய்ப்பு.</p><p>குறி வைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்க மாட்டேன் என்ற எம்ஜிஆர் வசனத்தை ரீ-டிரெண்ட் செய்து சாதித்தவர் முதல்வர்.</p><p>கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் பாடலுக்கு முதல்வரே உதாரணம்.</p><p>பேரவையில் பட்ஜெட் மீதான பதிலுரையில் குட்டிக்கதை சொல்லி உரை தொடங்கினார் நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>சட்டரீதியான போராட்டம் நடத்தி தேனி மக்களுடன் அரசு உறுதுணையாக இருக்கும்.</p><p>உச்சநீதிமன்ற உத்தரவின்படி தான் வெளியேற்றம் என அறிவிப்பு, முதல்வர் அறிவுறுத்தல்படி சட்டரீதியில் போராடுவோம் - அமைச்சர் ஆதவ்</p><p>மலை கிராம மக்கள் வெளியேற்றம் தொடர்பாகவும் திங்கட்கிழமை விவாதத்திற்கு ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு</p><p>3 தலைமுறையாக அப்பகுதியில் வசிக்கும் மக்களை வனப்பகுதி என கூறி வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்த்து முற்றுகை - திமுக எம்எல்ஏ</p><p>தேனி ஆட்சியர் அலுவலகம் முன் மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம் - அதிமுக கவனஈர்ப்பு</p> <p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை திங்கட்கிழமை எடுத்து கொள்கிறேன் - சபாநாயகர்</p><p>போதைப்பொருள் குறித்து புகார் தந்த மாணவன் குறித்து காவல்துறை தகவலை கசியவிட்டதால் கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு.</p><p>போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் தந்த அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை.</p><p>புகார் தந்தவரின் தகவலை அலட்சியமாக போலீசார் கசியவிட்டது தொடர்பாக விளக்கம் தர வேண்டும் - உதயநிதி</p><p>கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் சக மாணவர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p><p>தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேறியது.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>ரூ.1 தந்தால் நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறார்கள், நாம் உழைத்தாலும் நம்மால் அதிகாரத்தை உருவாக்க முடியா நிலை.</p><p>2026-க்கு பின் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தற்போது வேறு நிலை இருக்கலாம். ஆனால் மாநில சுயாட்சி பிரச்சனை ஒன்று சேருக.</p><p>தமிழ்நாட்டிற்கான பிரச்சனை என்றால் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும்.</p><p>ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். தமிழக எம்பிக்கள் 39 பேரும் அவையில் இருந்த வெளிநடப்பு செய்யாமல், சட்டத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>இன்றைய தீர்மானம் என்பது காங்கிரஸ் பாஜக என்பதல்ல, மாநில சுயாட்சியை நிலைநிறுத்துவதற்கு தீர்மானம்.</p><p>பேரவையில் குறைவான எண்ணிக்கையில் உள்ள பாஜக, காங்கிரசின் நிலை நாளை நாடாளுமன்றத்தில் நமக்கு வரக்கூடாது.</p><p>பாஜக உறுப்பினராக இருந்தாலும் இந்த தீர்மானத்தில் தமிழன் என்ற முறையில் செயல்படுங்கள்.</p><p>தொகுதி மறுவரையறையில் மு.க.ஸ்டாலின் தான் இதற்கு முதலில் குரல் கொடுத்தார் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். தென்னிந்திய விகிதாசாரம் குறைவதை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.</p><p>வடகிழக்கு மாநிலங்களின் நிலை நமக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர்.</p> <p>5, 6 வடமாநிலங்கள் சேர்ந்தாலே ஒரு பிரதமரை உருவாக்கும் நிலையில் உள்ளது, அது மாற்றப்பட வேண்டும்.</p><p>அதிகாரம் குஜராத், உ.பி.க்கு மட்டுமல்ல, நமது குரல் அதிகாரம் பிரதமராக ஒலிக்க வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>உயிருள்ள வரை மாநில சுயாட்சிக்காக இதே பேரவையில் குரல் கொடுத்தவர்கள் முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா.</p><p>உள்ளாட்சி, கட்சியில் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யும்போது நாடாளுமன்றத்தில் ஏன் மாற்றம் கூடாது என கேட்கின்றனர்?</p><p>மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற விகிதாசாரத்தை உருவாக்கவில்லை அமெரிக்கா - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>மாநில சுயாட்சி இல்லாமல் இந்தியாவை உருவாக்க முடியாது என அண்ணா கூறி உள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாதபோது அரசியலமைப்பில் முதல் தீர்மானம் கொண்டு வந்தது தமிழ்நாடு.</p><p>அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்தில் இருந்தாலும் தனித்தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.</p> <p>2026 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். </p><p>ஏப்.16-ல் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்து திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது.</p><p>Delimitation அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்குமாறும் கூறினோம்.  </p><p>33% மகளிர் இடஒதுக்கீட்டை முழுமனமுடன் திமுக ஆதரிக்கிறது வரவேற்கிறது. 7.18 விகிதாசாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி தவெக அரசு கொண்டுவந்த தனித்தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது - உதயநிதி</p> <p>திமுக அமைச்சரவை கூட்டம் நடத்திய பின்னர் கடந்தாண்டு மார்ச்சில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.</p><p>Fair Delimitation தலைப்பில் 5 மாநில முதல்வர்கள், 10 கட்சிகளுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுத்தார் மு.க.ஸ்டாலின் - உதயநிதி</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்தால் என்ன பாதிப்பு என நாட்டுக்கே முதலில் கூறியது திமுக தான்.</p><p>தொகுதி மறுவரையறையின் ஆபத்தை இந்தியாவிற்கே கூறியது திமுகதான்.</p><p>எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம், தமிழகத்தின் விகிதாசாரம் குறையக்கூடாது என திமுக பேரவையில் தீர்மானம் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p> <h2>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை</h2><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் தமிழகம் பாதிக்கப்பட கூடாது என்பதே திமுக நிலைப்பாடு.</p> <p>வாக்கு வங்கி அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது - ராஜேஷ்குமார்</p><h2>தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் ஏன்? - சபாநாயகர் விளக்கம்</h2><p>வரும் முன் காக்க எச்சரிக்கை நடவடிக்கையாகவே தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய் - சபாநாயகர்</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு - ராஜேஷ்குமார்</p><p>2029 தேர்தலிலேயே மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை இருக்கக்கூடாது - மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா</p> <p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மமக ஆதரவு - ஜவாஹிருல்லா</p><h2>தமிமுன் அன்சாரி  உரை</h2><p>தொகுதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது, அதே சூழல் இங்கும் வரும்.</p><p>மகளிர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு தேவை.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு.</p><h2>அமைச்சர் ஷாஜகான் உரை</h2><p>மத்திய பாஜக அரசு கொண்டு வரும் சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்கு விரோதமானதாகவே உள்ளது. பாஜக வெற்றி பெறவே முடியாத தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் வகையில் தொகுதி மறுவரையறை.</p><p>பல ஆண்டுகளை கடந்த அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தொகுதி எம்பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.</p> <p>அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி போன்றோர் நாடாளுமன்றத்திற்குள் பேசுவது வேறு, வெளியே பேசுவது வேறு. பிரதமர மோடியும் அமித்ஷாவும் 2 வித நாடகம் நடத்துவதை வெளிப்படுத்தும் விதமான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>வடமாநிலத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து சமத்துவ நிலையை நீக்கும் வகையில் தொகுதி மறுவரையறை.</p><p>மகளின் இடஒதுக்கீடுக்கு தடை இல்லாத போதும் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்.</p><p>இந்தி பேசும் மாநில எம்பிக்கள் எண்ணிக்கை உயரும். எனவே அவர்கள் மட்டுமே நாட்டை ஆளும் வாய்ப்பை பெறுவர் - அமைச்சர் வன்னிஅரசு</p> <h2>அமைச்சர் வன்னிஅரசு உரை</h2><p>தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள தீர்மானம் தனித்துவமானது, மகத்துவமானது.</p><p>தமிழ்நாட்டின் உரிமையை, தென்னிந்தியாவின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு விசிக ஆதரவு - அமைச்சர் வன்னிஅரசு</p><p>அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில் தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு என்று எடப்பாடி பழனிசாமி தெரித்தார்.</p> <h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>விகிதாசாரம் பாதிக்கப்படாததை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது. </p><p>அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். 7.18 விகிதாசாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.</p><p>தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும்.</p> <p>மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது - எடப்பாடி பழனிசாமி</p> <p>செவி வழி செய்தியை வைத்து தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பாக கொண்டு வந்த தனித்தீர்மானத்தை முதலமைச்சர் திரும்ப பெற வேண்டும் -  பாமக எம்எல்ஏ</p><p>மக்கள்தொகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் பாமக எதிர்க்கும். </p><p>தொகுதி மறுவரையறையை 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி செய்தால் பாமக கடுமையாக எதிர்க்கும் - எம்எல்ஏ கணேஷ்குமார்</p> <p>தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியான தவெகவில் கூட ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வைத்துள்ளது. பெரிய கட்சிகளே நிர்வாக வசதிக்காக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை உயர்த்துகிறார்கள் - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன் உரை</h2><p>சட்டமுன்வடிவு பரிசீலனையில் உள்ளபோது தனித்தீர்மானம் கொண்டுவரும் அவசரம் என்ன?</p><p>மக்களின் தேவை அறிந்து மாற்றம் கொண்டு வருவது அவசியம். மாற்றம் ஒன்றே மாறாதது. அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டே நாடாளுமன்றம் பெரிதாக கட்டப்பட்டுள்ளது.</p><p>பெண்ணுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாஜக என்பதை நாடறியும்.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது.</p> <h2>தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா உரை</h2><p>சட்டமுன்வடிவை கொண்டுவராத நிலையில் எதன் அடிப்படையில் தமிழக அரசு தனித்தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது?</p><p>தொகுதி மறுவரையறை மூலம் 59 எம்பிக்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. அது சிறப்பானது என்பதில் மாற்றில்லை.</p><p>10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. தான் தற்போது உள்ளனர். தொகுதி மறுவரையறை மூலம் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி வருவர்.</p><p>முதல்வருக்கும் அரசியலில் பெண்களை ஊக்கப்படுத்தும் கட்சியினருக்கும் என் வாழ்த்துகள்.</p><p>தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7:2 என்ற வகையிலேயே தொடர வேண்டும். அது மாற்றப்படக்கூடாது.</p> <p>தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவில் மத்திய அரசு சட்டமுன்வடிவு இதுவரை கொண்டுவரப்படவில்லை - பிரேமலதா</p><p>தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதா. நிதிப்பகிர்வில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது -  எம்எல்ஏ ராமச்சந்திரன்</p> <p>தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><h2>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ செல்லசாமி</h2><p>பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.</p><p>மக்கள்தொகையில் குறைவாக உள்ள தமிழகம் போன்ற தென்பகுதி மாநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.</p><p>நாடாளுமன்றத்தில் இப்போது உறுப்பினர்களே எல்லோரும் பேச நேரம் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 800-க்கு மேல் உயர்த்தினால் எப்படி பேச முடியும்?</p><p>பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.</p><p>மக்கள்தொகையில் குறைவாக உள்ள தமிழகம் போன் தென்பகுதி மாநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.</p> <p>மற்ற கட்சிகள் பேசிய பிறகு திமுக  உறுப்பினர்கள் பேசலாம் என அவை முன்னவர் செங்கோட்டையன் பதில்</p><p>முதல்வர் தனித்தீர்மானத்தின் மீது முதலில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவை பேச அனுமதிக்குமாறு எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது - செல்லசாமி</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே தொடர வேண்டும். 543 என்ற அளவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிரந்தரமாக வைக்க வேண்டும். வரும் பொதுத்தேர்தலில் பெண்களுக்கு 3ல் 1 என்ற அளவில் இடமளிக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p> <p>மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. </p><p>தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 என்ற அளவிலேயே தொடர வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p><p>தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனையில் 6 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகு மறுவரையறை குறித்து விவாதித்தோம் - முதலமைச்சர் விஜய்</p><p>அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகு மறுவரையறை குறித்து விவாதித்தோம்.</p><p>நாட்டின் மக்கள்தொகையில் சமஅளவில் பெண்கள் உள்ளதால் அவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.</p><p>மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை மேலும் தாமதிக்க கூடாது. மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p><p>பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.</p><p>ஒரு பெண் அதிகாரம் பெற்றால் ஒரு குடும்பம் உயர்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம் பெறும்போது நாடே உயர்கிறது - முதலமைச்சர் விஜய்</p> <p>2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில் 2026 சட்டசபையில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக ஓட்டு போட்டுள்ளனர். பெண்களுக்கான முன்னுரிமை வழங்குவதில் இந்தியாவுக்கு தவெக அரசு முன்னுதாரணமாக உள்ளது.</p><p>உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டால் பெண்களின் தலைமை பண்பும் நிரூபிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும்.</p><p>பெண்கள் இடஒதுக்கீடு என்பது சலுகை  அல்ல சமூக நீதி.</p><p>மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ , பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயரி வந்துவிடும் என நினைப்பர் - முதலமைச்சர் விஜய்</p><p>நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது - முதலமைச்சர் விஜய்</p><p>தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வருகிறார்.</p><p>தமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது</p><p>தமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியதுதமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-to-be-tabled-in-assembly-today">தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் - சட்டசபையில் இன்று தாக்கல்</a></p> ]]></content:encoded></item><item><title>முதலிடம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/top-priority-for-tamil-thai-vazhthu-tamil-nadu-government-issues-go</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/top-priority-for-tamil-thai-vazhthu-tamil-nadu-government-issues-go#comments</comments><guid isPermaLink="false">f77b2333-c827-4de8-b010-3053476f8ac2</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:26:21 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:26:21.384Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/rz4nceh3/New-Project-2026-08-12T205554.181.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலிடம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/rz4nceh3/New-Project-2026-08-12T205554.181.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் முதலில் பாடவேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. </p><p>நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேறிய நிலையில், இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. </p><p>தமிழ்மொழி மற்றும் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை முன்னிலைப்படுத்துவதில் அரசு எந்த சமரசமும் செய்யாது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் அடித்துக் கொலை: உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறதா தவெக அரசு? கனிமொழி எம்.பி. கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-beaten-to-death-is-tvk-govt-trying-to-cover-up-asks-mp-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-beaten-to-death-is-tvk-govt-trying-to-cover-up-asks-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">c4809aad-24d9-4b35-933a-b4cdbcea9e49</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:19:36 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:19:36.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,போதைப்பொருள்,Drugs,College student</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-14/k7fmgcjg/kanimozhi-mp.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-14/k7fmgcjg/kanimozhi-mp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>கோவையில் தனியார் கல்லூரியில் படித்து வந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/was-student-amudhan-murdered-for-exposing-drug-sales-heated-debate-in-the-legislative-assembly-what-do-the-parents-say">முதலாம் ஆண்டு மாணவர்</a>, போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததற்காக போதை பழக்கத்தில் ஈடுபட்ட மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், அதை மாணவர்கள் இடையேயான கோஷ்டி மோதல் என்று திசை திருப்பும் வகையில் வழக்கை முடித்து வைக்கப்பார்க்கிறது தவெக அரசு.</p><p>கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் அளித்த பின் பாதுகாக்கத் தவறியதால்தான், அம்மாணவர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் கூறும் நிலையில், பலியான அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு?</p><p>இந்தக் கொலையைச் செய்தவர்கள் மட்டுமின்றி, பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><h2>முன்னதாக,</h2><p>கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து இவர் கல்லூரிக்கு சென்று வந்தார்.</p><h2>அடித்துக்கொலை</h2><p>இந்த நிலையில் விடுதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமுதன் விடுதியில் இருந்து வெளியேறி ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனது நண்பர்களின் அறையில் தங்கியிருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை அமுதன், அவரது நண்பரான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமன் (19) என்பவருடன் மலுமிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது சில மாணவர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர்.</p><p>அவர்கள் நடந்து சென்ற அமுதன் மற்றும் ஸ்ரீமன் ஆகியோரை தங்களுடன் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். பின்னர் எங்கள் அறைக்கு வந்து செல்போன் பறித்து சென்றது நீங்கள் தானே என கேட்டு அவர்கள் அமுதனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அமுதன், வேதனை தாங்க முடியாமல் தனது அறைக்கு சென்று ஓய்வெடுத்துள்ளார். மாலையில் கல்லூரி முடிந்து திரும்பிய நண்பர்கள், அமுதன் காயங்களுடன் அசைவற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அமுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.</p><h2>5 மாணவர்கள் கைது</h2><p>இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சக மாணவர்கள் 5 பேர் அவரை அடித்ததில் அவர் இறந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>அவர்களில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா ஏ.மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆராமுதன் (வயது 20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரையைச் சேர்ந்த அரவிந்த் (21), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சிவரோகித் (20), பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சாத்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மணிபாலு (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><p>அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். அமுதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒரு மாணவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அமுதன் உடல், கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><h2>பெற்றோர்கள் குற்றச்சாட்டு</h2><p>ஆனால், அமுதனின் பெற்றோர், தனது மகன் சக மாணவர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாக புகார் அளித்தார். இதனால் மாணவர்கள் கோபமடைந்து தனது மகனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். கல்லூரியின் பெயரை காப்பாற்ற போலீசார் அவர்களுடன் சேர்ந்து இதை மாணவர்களுக்கு இடையிலான மோதல் என்று சொல்வதாக குற்றம்சாட்டினனர்.</p><h2>சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின்</h2><p>அமுதன் கொலை தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் திமுக சார்பில் கொடுக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது தீர்மானம் துறைக்கு அனுப்பப்பட்டு முறையான விவரங்கள் வழங்கப்படும் என்றார். மேலும், கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!</title><link>https://www.maalaimalar.com/news/world/former-chinese-premier-zhu-rongji-has-passed-away</link><comments>https://www.maalaimalar.com/news/world/former-chinese-premier-zhu-rongji-has-passed-away#comments</comments><guid isPermaLink="false">db8ec00d-468e-42c4-9a31-df3ee66db0f3</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:04:12 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:04:12.231Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,Zhu Rongji,ஜூ ரோங்ஜி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/nzpaqglb/New-Project-2026-08-12T200057.681.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/nzpaqglb/New-Project-2026-08-12T200057.681.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவின் அசாதாரண பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜூ உடல்நலக்குறைவால் இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்தார். </p><p>ஜூவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, தேசிய மக்கள் பேரவையின் நிலைக் குழு, அரச மன்றம் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் குழு ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்.,</p><p>“ஜூ ஒரு சிறந்த கட்சி உறுப்பினர், காலத்தால் சோதிக்கப்பட்ட மற்றும் விசுவாசமான கம்யூனிஸ்ட் போராளி. ஒரு தலைசிறந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர், ராஜதந்திரி, கட்சி மற்றும் நாட்டின் சிறந்த தலைவர் ஆவார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> ஜூ 1998-ல் சீனாவின் பிரதமரானார். இவரது மிகவும் பிரபலமான சீர்திருத்தங்களில், லாபமற்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கான ஒரு பரந்த திட்டம், நகர்ப்புற வீட்டுவசதியைத் தனியார்மயமாக்குதல் மற்றும் சொந்த வீட்டு உரிமையை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>விமான பயணியின் பையில் இருந்த குரங்கு மண்டை ஓடு: பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/national/monkey-skull-found-in-air-passengers-bag-security-officials-launch-probe</link><comments>https://www.maalaimalar.com/news/national/monkey-skull-found-in-air-passengers-bag-security-officials-launch-probe#comments</comments><guid isPermaLink="false">cb543b6c-1e55-4c8d-a45b-cb27740ca9d3</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:00:26 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:00:26.387Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CISF,சிஐஎஸ்எப்,Delhi International Airport,monkey skull,டெல்லி சர்வதேச விமான நிலையம்,குரங்கு மண்டை ஓடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wxei16pj/Untitled-design-39.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பயணியின் பையில் இருந்த குரங்கு மண்டை ஓடு பறிமுதல்]]></media:title><media:description type="html"><![CDATA[ Delhi Airport monkey skull]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wxei16pj/Untitled-design-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள், ஒரு பயணியின் பையில் குரங்கின் மண்டை ஓடு இருப்பதை கண்டறிந்தனர்.</p><h3><strong>டெல்லி சர்வதேச விமான நிலையம்</strong></h3><p>டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் சந்தேகத்திற்கிடமான ஒரு பயணியை சோதனை செய்தனர்.</p><p>அந்த பயணி டெல்லியிலிருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தில் ஏறவிருந்தார். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு,  பாதுகாப்பு அதிகாரிகள் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர்.</p><p>அப்போது, ​​பயணியின் கைப்பையில் சந்தேகத்திற்கிடமான ஒரு மண்டை ஓடு ஒன்று இருந்ததை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் அதனைத் தொடர்ந்து அவர் கொண்டு வந்த கைப்பையை முழுமையாக செய்தனர்.</p><p>இந்த பாதுகாப்பு சோதனையின் போது மீட்கப்பட்ட மண்டை ஓடு ஒரு குரங்கினுடையது என்று அந்த பயணி தெரிவித்ததாக தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h3><strong>குரங்கு மண்டை ஓடு</strong></h3><p>இதையடுத்து அந்த பயணி இறுதியில் உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் மீட்கப்பட்ட மண்டை ஓடு பரிசோதனைக்காகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.</p><p>இது வனவிலங்குகள் சம்பந்தப்பட்டுள்ளதால், 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் விதிகளின் கீழ் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>அந்த பயணிக்கு மண்டை ஓடு எங்கிருந்து கிடைத்தது என்பதையும், அதை டெல்லியிலிருந்து ஐதராபாதுக்கு கொண்டு சென்றதன் நோக்கம் என்ன என்பதையும் கண்டறியும் பணியில் காவல்துறையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்களின் வாழ்க்கையில் இல்லறம் என்பது மன உளைச்சலாக உள்ளது: கிரண் பேடி</title><link>https://www.maalaimalar.com/news/national/household-life-for-women-means-unpaid-labour-kiran-bedi</link><comments>https://www.maalaimalar.com/news/national/household-life-for-women-means-unpaid-labour-kiran-bedi#comments</comments><guid isPermaLink="false">9fe59850-6e8a-4021-a6c3-a6ddf026158a</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:56:14 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:56:14.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kiran Bedi,women life,பெண்கள் வாழ்க்கை,கிரண் பேடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0txu7r6l/Untitled-design-38.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருமணத்தால் பெண்கள் வாழ்க்கையில் ஏற்படும் மனஅழுத்தம் குறித்து கிரண் பேடி கருத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ Women Empowerment - Kiran bedi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0txu7r6l/Untitled-design-38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் திருமணம் என்பது குடும்ப பெயரை மாற்றுவது அல்லது புதிய வீட்டிற்கு குடிபெயர்வதை விட, பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி தெரிவித்தார்.</p><p>திருமணத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் பெற்றொர் வீட்டை விட்டு வெளியேறும்போது, அவர்கள் எவற்றையெல்லாம் கடந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.</p><h3><strong>முன்னாள் ஐ.ஏ.எஸ் கிரண் பேடி</strong></h3><p>கிரண் பேடி ஒரு முன்னாள் டென்னிஸ் வீராங்கனையும் மற்றும் 1972-ல் ஐபிஎஸ்-இல் சேர்ந்த முதல் இந்தியப் பெண் அதிகாரி ஆவார். </p><p>அவர் மே 28, 2016 முதல் பிப்ரவரி 16, 2021 வரை புதுச்சேரியின் 24-வது துணைநிலை ஆளுநராகப் பணியாற்றினார்.</p><p>இந்த நிலையில் இந்திய பெண்களின் திருமண வாழ்க்கை குறித்து ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர் தனியார் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், </p><p>“இந்திய பெண்களுக்கு திருமணம் என்பது ஒரு மன உளைச்சலாக உள்ளது. ஒரு பெண் தனக்கு நன்கு அறிமுகமான மனிதர்கள், அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் உறவுகளை கொண்ட தங்கள் வீட்டை பிரிந்து செல்லும் சூழல் ஏற்படுகின்றது.</p><p>அப்போது அவர்கள் மற்றொரு குடும்பத்தில் விரைவாக இணைந்து, அந்த குடும்பத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பெண்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.</p><h3><strong>பெண்களின் திருமண வாழ்க்கை</strong></h3><p>பெண்கள் தங்களின் திருமணத்திற்கு பிறகு, புதிய உறவுகளை ஆரம்பத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது.</p><p>தனது மாமியாரை அழைப்பது போன்ற ஒரு சிறிய விஷயம் கூட, பெண்களை உணர்ச்சி ரீதியில் மிகவும் பாதிக்கிறது.</p><p>ஒரு பெண் தன் கணவனின் குடும்பம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்களை தன் சொந்த குடும்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவள் மீது எதிர்ப்பார்ப்பு அதிகாக இருக்கிறது.</p><p>அதற்காக அந்த பெண் சில கஷ்டங்களையும் அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள்.</p><p>பெண்களின் வாழ்க்கையில் இல்லறம் என்பது சம்பளமே இல்லாத வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.</p><p>ஒரு திருமணத்தின் போது ஊர்வலம் மிகுந்த ஆடம்பரத்துடனும் கோலாகலத்துடனும் மணமகள் அழகாக இருக்கிறாள். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் தனது பாதுகாப்பான, அன்பான, ஆதரவான வீட்டை விட்டுப் பிரிந்து செல்லும்போது அது ஒரு மன உளைச்சலாக மாறுகிறது.</p><h3><strong>பெண்களின் இல்லற வாழ்க்கை</strong></h3><p>பல வீடுகளில் பெண்கள் உணவு சமைத்தல், பொருட்களை சுத்தம் செய்தல், குடும்பத்திற்கான பொருட்களை வாங்குதல், குழந்தைகளின் தேவைகள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் வீட்டை சீராக இயங்க வைக்கும் அன்றாட நிகழ்வுகளை கவனித்து கொள்பவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.</p><p>ஒரு பெண், திருமணத்திற்குப் பிறகும் தான் தொடர்ந்து வேலை செய்வேன் என்றும், வீட்டு வேலைக்கு ஒருவரை அமர்த்திக்கொள்வேன் என்றும், இருவரும் சேர்ந்து குடும்பத்தை நடத்த முடியும் என்றும் கூற வேண்டும். அப்போதுதான் அப்பெண் தனது வேலையை விட வேண்டிய அவசியம் ஏற்படாது.</p><p>ஆண்கள் தங்கள் வேலையை விட வேண்டியதில்லை, ஆனால் பெண்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும், பல நேரங்களில் அது அவர்களுக்கு நிர்பந்தமாக உள்ளது.</p><p>கணவர்கள் ஆதரவாக இல்லை என்று பெண்கள் உணர்ந்தால், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் பெற்றோருடன் வாழ்வதற்குத் தேவையான தைரியமும் பொருளாதாரச் சுதந்திரமும் அவர்களிடம் இருக்க வேண்டும்.</p><p>திருமணத்திற்குப் பிறகு பெற்றோரைப் பராமரிப்பதற்காக அவர்களுடன் தங்க விரும்பும் ஒரு பெண்ணை தாழ்வாகக் கருதக்கூடாது, மாறாக அது கொண்டாடப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜிம்பாப்வே ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/at-least-44-die-as-ferry-sinks-in-zimbabwes-lake-kariba</link><comments>https://www.maalaimalar.com/news/world/at-least-44-die-as-ferry-sinks-in-zimbabwes-lake-kariba#comments</comments><guid isPermaLink="false">1ad79634-88ae-490f-a871-42882ee88c0d</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:51:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:51:13.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>zimbabwe,ஜிம்பாப்வே,படகு விபத்து,Boat Capsizes in Accident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pvnjatk9/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ boat accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pvnjatk9/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜிம்பாப்வே நாட்டின் கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.</p><h2>கரிபா ஏரி</h2><p>தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி ஜிம்பாப்வே மற்றும் அதன் அண்டை நாடான ஜாம்பியா ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.</p><p>இந்த ஏரி 200 கி.மீ-க்கும் அதிகமான நீளமும், சில இடங்களில் 40 கி.மீ. வரை அகலமும் கொண்டதாக உள்ளது.</p><p>ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்த ஏரியைப் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ எல்லை ஏரியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.</p><p>கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு இன்று கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><p>இந்த விபத்தில் 27 பேர் மாயமாகினர் எனவும், ஏரியில் இருந்து 77 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்தது. விசாரணையில் அந்தப் படகு 90 பேர் பயணிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.</p><h2>மீட்புப் பணிகள்</h2><p>மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என ஜிம்பாப்வே காவல்துறை தெரிவித்திருந்தது.</p><p>இந்நிலையில், கரிபா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.</p><h2>தேசிய பேரிடர்</h2><p>படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் நகாவா, இந்தப் படகு விபத்தை தேசிய பேரிடர் என அறிவித்துள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். </p> ]]></content:encoded></item><item><title>ஜட்ரன், அடல் அசத்தல் சதம்: 4வது ஒருநாள் போட்டியில் 343 ரன்களைக் குவித்த ஆப்கானிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/ireland-need-344-runs-to-win-against-afghanistan-4th-odi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/ireland-need-344-runs-to-win-against-afghanistan-4th-odi#comments</comments><guid isPermaLink="false">3b24ef47-c072-4a14-a4a8-4c71b3db9b13</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:52:45 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:52:45.410Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ibrahim Zadran,IREvAFG,அயர்லாந்து ஆப்கானிஸ்தான் தொடர்,sediqullah atal,இப்ராகிம் ஜட்ரன்,செடிகுல்லா அடல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0wwnct36/afgan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ibrahim zadran, sediqullah Atal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0wwnct36/afgan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயர்லாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 343 ரன்களைக் குவித்துள்ளது.</p><p>ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வென்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் குவித்தது. </p><h2>இப்ராகிம் ஜட்ரன், செடிகுல்லா சதம்</h2><p>தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் மற்றும் செடிகுல்லா அடல் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர்.</p><p>2வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 231 ரன்கள் சேர்த்த நிலையில், இப்ராகிம் ஜட்ரன் 107 ரன்னில் அவுட்டானார். </p><p>சிறப்பாக ஆடிய செடிகுல்லா அடல் 143 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.</p><p>அயர்லாந்து சார்பில் பிரியன் மெக்டொனவ் 3 விக்கெட்டும், மார்க் அடைர், கேவின் ஹோய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 344 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்கு - ஆக.25க்குள் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உத்தரவு! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-perambur-election-victory-chief-minister-vijay-ordered-to-respond-by-august-25</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-perambur-election-victory-chief-minister-vijay-ordered-to-respond-by-august-25#comments</comments><guid isPermaLink="false">410c162a-3f07-4045-9c0b-1b552b1f808f</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:43:08 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:43:08.051Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,தேர்தல் வழக்கு,Election case,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zch9w1e7/New-Project-2026-08-12T191239.317.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்கு - ஆக.25க்குள் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உத்தரவு! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zch9w1e7/New-Project-2026-08-12T191239.317.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்த வழக்கில் ஆக.25ம் தேதிக்குள் பதிலளிக்க முதலமைச்சர் விஜய்க்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட விஜய் பிரமாணப் பத்திரத்தில் சில தகவல்களை மறைத்ததாகவும், இதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். </p><p>கடந்தமுறை இந்த வழக்கு விசாரணையின்போது, இதுதொடர்பாக பதிலளிக்க முதலமைச்சர் விஜய்க்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் ஜி. மசிலாமணி மற்றும் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆகியோர் ஆஜராகி, விஜய் தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி மனுக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.</p><p>மேலும் அந்த மனுக்களைத் தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் கோரி, இந்த வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கக் கோரினர். </p><p>ஆனால் நான்குவார கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, அடுத்த விசாரணைக்கு மனுக்களை தாக்கல் செய்யக்கோரி, வழக்கு விசாரணையை ஆக.25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.</p><p>தொடர்ந்து வில்லிவாக்கம் தொகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கையும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அந்த வழக்கும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: ஜெகதீசன், ஸ்வப்னில் சிங் அதிரடியில் சேலத்தை வீழ்த்தி 2வது வெற்றி பெற்றது சேப்பாக்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-beat-salem-spartans-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-beat-salem-spartans-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">34ec620e-0c49-4e99-b1fd-9440c1d20852</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:21:15 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:21:15.358Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,Salem Spartans,சேலம் ஸ்பர்டன்ஸ்,சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/li7ai4bj/jegaa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ jegadeesan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/li7ai4bj/jegaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</h2><p>இன்று நடைபெற்ற 14வது லீக் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><h2>கடைசி ஓவரில் 4 சிக்சர்</h2><p>அதன்படி, முதலில் களமிறங்கிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரில் 4 சிக்சர்களை விளாசிய ஹரிஷ்குமார் 57 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>ஈஸ்வர் 39 ரன்னும், பூபதி குமார் 30 ரன்னும் எடுத்தனர்.</p><p>7வது விக்கெட்டுக்கு இணைந்த ஹரிஷ்குமார்-ஈஸ்வர் ஜோடி 68 ரன்கள் சேர்த்தது.</p><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் சிலம்பரசன், பிரேம்குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><h2>ஜெகதீசன் 2வது அரை சதம்</h2><p>இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஜெகதீசன் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். நடப்பு தொடரில் 2வது அரை சதத்தை பதிவு செய்தார்.</p><p>ஜெகதீசன் 39 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 78 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.</p><p>கடைசி கட்டத்தில் ஸ்வப்னில் சிங் சிக்சர்களை விளாசினார். அவர் 26 பந்தில் 5 சிக்சர் உள்பட 46 ரன்கள் குவித்து அவுட்டானார்.</p><p>இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டம் தொடர்பாக விவாதம்: அமித் ஷா வைத்த முன்மொழிவு- நிராகரித்த எதிர்க்கட்சிகள்</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-offers-to-hold-debate-on-student-protests-opposition-rejects-proposal</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-offers-to-hold-debate-on-student-protests-opposition-rejects-proposal#comments</comments><guid isPermaLink="false">3346f6b5-8153-4160-a230-e2658ede5bd2</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:14:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:14:38.872Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,நாடாளுமன்றம்,Amit Shah,அமித் ஷா,parliament</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yfm3mrg1/AmitshahRahulGandhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா- ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yfm3mrg1/AmitshahRahulGandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்கள் போராட்டத்தில் அடக்குமுறை மேற்கொண்டது தொடர்பான விவகாரத்திற்கு தான் தயார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வைத்த முன்மொழிவை எதிர்க்கட்சியினர் நிராகரித்தனர்.</p><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது.</p><h2>மாணவர்கள் மீது தடியடி</h2><p>அப்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது மாணவர்கள் தடுப்புகளை தாண்டி நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். அப்போது போலீசாடி தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி அவர்களை கலைத்தனர். அப்போது வெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.</p><h2>விவாத்திற்கு தயார் என அமித் ஷா அறிவிப்பு</h2><p>நாடாளுமன்ற விவகாரத்துறை, அமைச்சர் கிரண் ரிஜிஜு, "அமித் ஷா விவாகத்தில் கலந்து கொள்ள தயாராக உள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அவையில் வெளிநடப்பு செய்யக்கூடாது" என்று வேண்டுகோள் விடுத்தார்.</p><p>இன்று காலை அவை தொடங்குவதற்கு முன்னதா அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்று கூட, அவர்கள் (எதிர்க்கட்சிகள்) 2 மணிக்குள் சபாநாயரிடம் கடிதம் வழங்க வேண்டும். இன்று மதியம் 3 மணியில் இருந்து நாளை மதியம் 3 மணி வரைக்கும் அனைத்து வகையிலான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.</p><p>நாளையுடன் மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைய இருக்கிறது.</p><h2>ராகுல் காந்தி சொல்வது என்ன?</h2><p>அமித் ஷா கூறிய நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அமித் ஷாவின் முன்மொழிவை நிராகரித்துள்ளார். பெல்லட் துப்பாக்கிகள் மூலம் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவு போட்டது யார் என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்றார்.</p><p>நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் கற்பனையான கருத்துகளையும் அவர் வழங்கும் விரிவுரையையும் கேட்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை. மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஷா உத்தரவிட்டிருந்தால் அவர் குற்றவாளி. அவ்வாறு உத்தரவிடவில்லை என்றால் அவர் திறமையற்றவர். எந்தச் சூழலாக இருந்தாலும் அவர் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.</p><p>அதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக சபாநாயகருக்குக் கடிதம் எழுதினார். </p><p>"எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் ஒப்புதலுடனும், விவாதத்திற்குத் தேவையான அளவு நேரத்தை ஒதுக்குங்கள். விவாதத்தின்போது நடைபெறும் முழு விவாதத்திலும் நான் பங்கேற்பேன். அத்துடன் எதிர்க்கட்சியினர் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்," என்று ஷா கூறினார்.</p><p>மேலும், ஜனநாயகத்தில் தீர்வு காண்பதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைகளும் கலந்தாய்வுகளுமே. ஜனநாயகத்தின் மீதும் ஜனநாயக அமைப்புகளின் மீதும் தனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மாணவர் போராட்டங்கள் தொடர்பான முக்கிய விவகாரத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை வெளிப்படுத்த இந்த விவாதம் வழிவகுக்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார்.</p><h2>நாடாளுமன்றம் ஒத்திவைப்பு</h2><p>ஆனால் அவையில் அமளி தொடர்ந்தது. இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு பிற்பகல் 3 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது, ​​எதிர்க்கட்சியினரின் கூச்சல் மற்றும் போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்தன.</p><p>இந்த அமளிக்கு மத்தியிலும், மாணவர் போராட்டம் குறித்த விவாதத்தை உடனடியாகத் தொடங்க அரசு தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஷா ஏற்கனவே சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அவையில் அறிவித்தார்.</p><p>எதிர்க்கட்சியினரின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்துறை அமைச்சர் தயாராக இருக்கும் நிலையில், அவர்கள் விவாதத்திலிருந்து விலகிச் செல்லக்கூடாது என்று அவர் கூறினார். </p><p>ஆனால் அமைச்சரின் வேண்டுகோள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. </p><p>முழக்கங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், அவையை வழி நடத்திய ஜகதம்பிகா பால், விவாதத்திற்கான அரசின் முன்மொழிவை ஏற்றுக் கொள்ளுமாறு எதிர்க்கட்சியினரைத் தொடர்ந்து வலியுறுத்தினார். அவரது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>‘சிக்மா’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-second-song-from-the-movie-sigma-has-been-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-second-song-from-the-movie-sigma-has-been-released#comments</comments><guid isPermaLink="false">805da616-e0aa-46c4-9bd9-adf0f6b524ae</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:03:36 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:03:36.650Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமன்,thaman,சந்தீப் கிஷன்,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma,Sundeep</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/ffrvda1v/New-Project-2026-08-12T182904.969.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சிக்மா’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/ffrvda1v/New-Project-2026-08-12T182904.969.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் விஜய்யின் மகள் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா. இப்படத்தின் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். </p><p>லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.கே.தமிழ்க்குமரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான அய்யய்யோ அம்மாடி இன்று வெளியாகி உள்ளது.</p><p>முதல் பாடலான சிக்மா ஸ்டைல் வெளியாகி வரவேற்பை பெற்றநிலையில் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். </p><p>படம் முன்னதாக ஜூலை.31ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் வெளியாக உள்ளது. புது வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/fhMHHRM6Vtc"></iframe></figure>]]></content:encoded></item><item><title>‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/pyaar-prema-kaadhal-trailer-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/pyaar-prema-kaadhal-trailer-released#comments</comments><guid isPermaLink="false">ece7ff08-b4a0-424b-be7f-b52bdea92cb8</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:45:24 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:45:24.695Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Yuvan Shankar Raja,யுவன் சங்கர் ராஜா,இளன்,elan,Pyaar Prema Kalyanam,பியார் பிரேமா கல்யாணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/9auklt4q/New-Project-2026-08-12T175720.034.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/9auklt4q/New-Project-2026-08-12T175720.034.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பியார் பிரேமா காதல், ஸ்டார் உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குதர் இளன் எழுத்து மற்றும் இயக்கத்தில், அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் புதியப் படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’. இப்படத்தில் இளனுக்கு ஜோடியாக சான்வே மேக்னா நடித்துள்ளார்.</p><p>மேலும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில் மற்றும் மாறன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ஆக.21ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/n65bXlvrHlo"></iframe></figure>]]></content:encoded></item><item><title>போலீசில் சிக்காமல் திருடுவது எப்படி என கற்றுக்கொண்ட இன்ஃபார்மர்: நடிகை வீட்டில் கைவரிசை!</title><link>https://www.maalaimalar.com/news/national/informer-turned-thief-targets-actress-home</link><comments>https://www.maalaimalar.com/news/national/informer-turned-thief-targets-actress-home#comments</comments><guid isPermaLink="false">c5085bef-02ca-47c3-bb61-4b789971e04a</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:43:51 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:43:51.790Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mumbai,மும்பை,police informer,Mumbai Burglary,ChandanMukhiya,BiharPolice Arrest,Santacruz Theft</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z9i5s21f/Mumbai-Burglary" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Burglary ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z9i5s21f/Mumbai-Burglary?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல பாலிவுட் நடிகையும், 2016 அழகிப் போட்டியின் ரன்னர் - அப்புமான லோபாமுத்ரா ராவத் என்பவரின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மும்பை </a>வீட்டில் புகுந்து ரூ. 1 கோடி பாதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த சந்தன் முகியா (26) என்ற வாலிபர் பீகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>பிடிபட்ட நபர், முன்பு போலீசாருக்கு தூது கொடுக்கும் 'இன்ஃபார்மராக' இருந்து கொண்டே, இப்போது திருட்டு தொழிலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.</p><h2>போலீசிடமே 'டியூஷன்' படித்த திருடன்:</h2><p>கைது செய்யப்பட்டுள்ள சந்தன் முகியாவின் கடந்த காலப் பின்னணி போலீசாரையே தலைசுற்ற வைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் மும்பை காம்தேவி பகுதி போலீசார் ஒரு திருட்டு வழக்கை விசாரித்தபோது, அவர்களுக்கு இன்ஃபார்மராக இருந்து சந்தன் முகியா உதவினார். </p><p>இது போன்ற பல சமயங்களில் போலீசாருக்கு உதவி செய்ததால் சந்தனை போலீசார் கூடவே வைத்துக்கொண்டனர். </p><p>அப்போது போலீசாருக்கு நெருக்கமாக இருந்த சந்தன், போலீஸ் எப்படி ஆதாரம் திரட்டுகிறது? சிசிடிவி-யை எப்படி ஆய்வு செய்கிறது? குற்றவாளிகளை எப்படி டிராக் செய்கிறது? போன்ற அத்தனை ரகசியங்களையும் உன்னிப்பாகக் கவனித்து, அப்படியே தனக்கான திருட்டுப் பாடமாகக் கற்றுக்கொண்டுள்ளார்.</p><p>இதன் பிறகு, அதே 2021-ல் தனது முதலாளியான வைர வியாபாரி வீட்டில் ரூ.1.8 கோடியைச் சுருட்டினார். பின்னர் 2025-ல் மற்றொரு திருட்டு வழக்கில் கைதாகி, இந்த ஆண்டு ஜனவரியில் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.</p><h2>நடிகை வீட்டில் ஸ்கெட்ச் போட்டது எப்படி?</h2><p>ஜாமீனில் வந்த பிறகு மும்பை சென்ட்ரல் பகுதியில் தங்கியிருந்தபடி, நகரின் முக்கிய இடங்களை நோட்டமிட்டுள்ளார். </p><p>அப்போது சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள நடிகையின் வீட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் பழுதுபார்க்கும் பணிகளுக்காக மூங்கில் சாரம் கட்டப்பட்டிருப்பதை கவனித்துள்ளார்.</p><p>கடந்த ஜூலை 14 அன்று அதிகாலை 4 முதல் 5 மணிக்குள், அந்த மூங்கில் சாரம் வழியாக ஏறி, 5-வது மாடியில் உள்ள நடிகையின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். </p><p>உள்ளே ஒரு மணி நேரம் நிதானமாகத் தேடி, ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், விலை உயர்ந்த வாட்ச்கள் மற்றும் ரொக்கப் பணத்தை அள்ளிக்கொண்டு தப்பியுள்ளார். சிசிடிவி கேமராவில் ஒரே ஒரு பிரேமில் மட்டுமே முகம் தெரியும்படி மிக சாமர்த்தியமாக தப்பியோடியுள்ளார்.</p><h2>நடிகைக்கு அதிர்ச்சி &amp; போலீஸ் ஆபரேஷன்:</h2><p>சொந்த ஊரான நாக்பூருக்குச் சென்றிருந்த நடிகை, ஜூலை 27 அன்று மும்பை திரும்பியபோது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார். கட்டிட ஊழியர் ஒருவர் பால்கனி வழியாக உள்ளே சென்று கதவைத் திறந்தபோது தான் கொள்ளை போனது தெரிந்தது.</p><p>மேற்கு மண்டல டிசிபி மோஹித் கார்க் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி மற்றும் நெட்வொர்க் டிராக்கிங் மூலம் குற்றவாளி சந்தன் முகியா என அடையாளம் காணப்பட்டனர்.</p><p>அவர் கொள்ளையடித்த உடனே ரெயிலில் ஏறி இந்தியா-நேபாள எல்லைக்கு அருகில் உள்ள பீகார் தர்பங்கா கிராமத்திற்கு ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.</p><h2>திருட்டுப் பணத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ்:</h2><p>கைது செய்யப்பட்ட சந்தன் முகியாவிடமிருந்து ரூ.76.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், கொள்ளையடித்த வெறும் 10 நாட்களுக்குள், சந்தன் மற்றும் அவரது மாமா லாலு முகியா ஆகியோர் திருட்டுப் பணத்தில் ரூ.22 லட்சத்தை முதலீடு செய்து, தங்கள் கிராமத்திற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கும் இடம் உட்பட இரண்டு நிலங்களை வாங்கிய அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>போலீஸ் அதிகாரி கூறுகையில், "இவனது ஒட்டுமொத்த குடும்பமுமே வீட்டு வேலைக்குச் சேர்ந்து திருடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. </p><p>பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆட்களை வேலைக்கு வைப்பதற்கு முன்பு அவர்களின் பின்னணியை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும்" என எச்சரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய கடை அடைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-bandh-tomorrow-over-cauvery-mekedatu-issues</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-bandh-tomorrow-over-cauvery-mekedatu-issues#comments</comments><guid isPermaLink="false">57f2d07b-e196-4282-845d-b08085eaa182</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:42:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:42:44.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,bandh,Cauvery,முழு அடைப்பு போராட்டம்,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/l4abssef/Untitled-design-37.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காவிரி, மேகதாது நீர்திட்டங்களை வலியுறுத்தி ஆகஸ்ட் 13 மாநிலம் தழுவிய போராட்டம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ Kaveri Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/l4abssef/Untitled-design-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகா மாநிலத்தில் காவிரி நதிநீர் தொடர்பாக, நாளை (ஆகஸ்ட் 13) மாநிலம் தழுவிய முழு கடை அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>கர்நாடகாவில் முழு அடைப்பு</strong></h3><p>தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மஹதாயி மற்றும் கலச பண்டுரி போன்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கன்னட ஆதரவு அமைப்புகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.</p><p>கர்நாடகா தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.  </p><p>இதன் காரணமாக கர்நாடகாவில் நாளை பள்ளிகள் தொடர்ந்து வழக்கம்போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>கர்நாடகாவில் நாளை நடைபெற இருக்கும் முழு அடைப்பு காரணமாக, எல்லையோர தமிழ்நாடு மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.</p><h3><strong>காவிரி ஒழுங்கு நீர் மேலாண்மை</strong></h3><p>முன்னதாக தமிழ்நாட்டிற்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட டி.எம்.சி அளவில் தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி ஒழுங்கு நீர் மேலாண்மை உத்தரவிட்டிருந்தது.</p><p>ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா அரசு தீவிரமாக செயல்பட வலியுறுத்தியும் நாளை போராட்டம் நடைபெற உள்ளது.</p><p>தமிழகத்திற்கு உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருவதால், முழு அடைப்பு போராட்டத்தில் அமைப்புகள் ஈடுபட வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-delimitation-hurts-tamil-nadu-interest-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-delimitation-hurts-tamil-nadu-interest-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b6fb782a-d841-43f3-8eb8-6a507c756fbb</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:19:25 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:19:25.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,தொகுதி மறுவரையறை,Delimitation,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8mpuo0rp/NainarNagendran001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8mpuo0rp/NainarNagendran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள </p><p>த.வெ.க. அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும்.</p><p>ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் ஒலிக்கும். இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது அல்ல. மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.</p><h2>மத்திய அரசு உறுதி அளித்துள்ளது</h2><p>பிரதமர் தலைமையிலான மத்திய அரசு எந்த மாநிலத்திற்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், த.வெ.க. அரசின் இந்த எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல. கண்மூடித்தனமாக இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்ப்பதைத் தவிர்த்து, முதல்வர் விஜய் அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தன. ஆனால், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவுக்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>என்றபோதிலும் குரல் வாக்கெடுப்பால் இரு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் மாணவர் அமுதன் கொலை? சட்டப்பேரவையில் முற்றிய விவாதம்... பெற்றோர் கூறுவது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/was-student-amudhan-murdered-for-exposing-drug-sales-heated-debate-in-the-legislative-assembly-what-do-the-parents-say</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/was-student-amudhan-murdered-for-exposing-drug-sales-heated-debate-in-the-legislative-assembly-what-do-the-parents-say#comments</comments><guid isPermaLink="false">6b3f7b52-cbe9-4836-90dd-cad4b0ce29c8</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:09:59 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:09:59.283Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,போதைப்பொருள்,Drugs,College student,கல்லூரி மாணவர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/j8ygezto/New-Project-2026-08-12T173914.064.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் மாணவர் அமுதன் கொலை? சட்டப்பேரவையில் முற்றிய விவாதம்... பெற்றோர் கூறுவது என்ன?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/j8ygezto/New-Project-2026-08-12T173914.064.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். </p><p>இந்த நிலையில் விடுதியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அமுதன் விடுதியில் இருந்து வெளியேறி ஒத்தக் கால்மண்டபத்தில் உள்ள தனது நண்பர்களின் அறையில் தங்கியிருந்துள்ளார். </p><p>இச்சூழலில் நேற்று முன்தினம் (ஆக.10) காலை அமுதன், அவரது நண்பரான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமன் (19) என்பவருடன் மலுமிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்று உள்ளார். அப்போது சில மாணவர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். </p><p>அவர்கள் நடந்து சென்ற அமுதன் மற்றும் ஸ்ரீமன் ஆகியோரை தங்களுடன் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.   பின்னர் எங்கள் அறைக்கு வந்து செல்போன் பறித்து சென்றது நீங்கள் தானே எனக்கூறி அமுதனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.   </p><p>இதில் காயம் அடைந்த அமுதன், வேதனை தாங்க முடியாமல் தனது அறைக்கு சென்று ஓய்வெடுத்துள்ளார். மாலையில் கல்லூரி முடிந்து திரும்பிய நண்பர்கள், அமுதன் காயங்களுடன் அசைவற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். </p><p>உடனடியாக அவரை மீட்டு பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அமுதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். </p><h2>5 மாணவர்கள் கைது   </h2><p>இதுகுறித்து செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. </p><p>சக மாணவர்கள் 5 பேர் அவரை அடித்ததில் அவர் இறந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர். </p><p>கைதானவர்கள் திருவள்ளூர், கடலூர், சிவகங்கை, திருவாரூரை சேர்ந்தவர்களாவர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். </p><p>அமுதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒரு மாணவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.  இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அமுதன் உடல், கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. </p><p>கோவையில் கல்லூரி மாணவரை சக மாணவர்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, இது செல்போன் விவகாரம் இல்லை, போதைப்பொருள் விவகாரம் என தகவல் வெளியாகி வருகிறது. </p><h2>போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் கொலையா?</h2><p>மாணவர் அமுதன் போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை நிகழ்ந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அமுதனின் பெற்றோர்.,</p><p>“கல்லூரி விஷமருந்தி என் மகன் இறந்ததாக பொய் சொல்கின்றனர். இந்த கல்லூரிமீது நடவடிக்கை எடுக்கவேண்டும். என் பிள்ளைக்கு நடந்தாவறு எந்தப் பிள்ளைக்கும் நடக்கக்கூடாது. </p><p>என் மகனிடம் கஞ்சா விற்பவர்கள் தொடர்பாக போலீசார் கேட்டனர். நீங்கள் கூறும் தகவல் உங்களுக்கும், எங்களுக்கும் மட்டுமே தெரியும் எனக்கூறிவிட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் போலீசார் தெரிவித்துவிட்டனர். </p><p>அவர்கள் இருபது பேர் சேர்ந்து இரும்பு ராடு மற்றும் கத்தியால் அடித்து துடிதுடிக்க என் பையனை கொன்றுவிட்டனர்.” என கண்ணீர்மல்க கதறுகின்றனர். </p><h2>சட்டப்பேரவையில் அமுதன் கொலை தொடர்பாக விவாதம் </h2><p>மாணவன் அமுதன் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.,</p><p>“கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்த அமுதன் எனும் மாணவர், அவருடன் படித்துவரும் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>இதற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். காரணம், வழக்கு விசாரணைக்காக மாணவர் அமுதனை கோவை செட்டிப்பாளையம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் பற்றி அமுதனிடம் விசாரணை நடத்தி தகவல் பெற்றுள்ளனர். </p><p>இந்தத் தகவலை ரகசியமாக வைத்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறை, போதைப் பொருள் விற்பனை செய்த நபர்களை அழைத்து, புகார் கொடுத்தவர் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளனர். </p><p>அந்த கோபத்தில்தான் மாணவர் அமுதனை அந்தக் கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. காவல்துறை ஏன் இவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்கிறது என அரசு விளக்கம் கொடுக்க வேண்டும். மாணவர் அமுதனின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்.” என தெரிவித்தார். </p><h2>அரசு விளக்கம்</h2><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன் இது ஒரு கோஷ்டி மோதலால் வந்த விளைவு என்று தெரிவித்தார். </p><h2>காவல்துறை கூறுவது என்ன?</h2><p>மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி அளித்த விளக்கத்தின்படி, அமுதன் கல்லூரியில் தங்கியிருந்தபோது விடுதி சமையலாளரை தாக்கியதாகவும், அதனால் அவர் விடுதியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். </p><p>மேலும் சம்பவத்தன்று அதிகாலை விடுதிக்கு சென்ற அமுதன் மற்றும் அவரது நண்பர்கள் முகமூடி அணிந்து மற்றொரு மாணவர் அறைக்குள் புகுந்து செல்போன்களைப் பறித்ததாகவும், அப்போது அமுதன் மட்டும் முகமூடி அணியாததால் எதிர் தரப்பினர் அவரை அடையாளம் கண்டதாகவும்,</p><p>இந்த செல்போன் பறிப்பு சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர் தரப்பு மாணவர்கள் அன்றே அமுதனை வழிமறித்து மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதில் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் உயிரிழந்தார். என காவல்துறை தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/caste-census-anbumani-ramadoss-letter-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/caste-census-anbumani-ramadoss-letter-pm-modi#comments</comments><guid isPermaLink="false">2fba0993-4f1e-41f1-b785-107446522b80</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:58:58 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:58:58.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,pm modi,பிரதமர் மோடி,சாதிவாரி கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yp61saof/PMModiAnbumani0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yp61saof/PMModiAnbumani0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், இந்திய பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>இந்தியாவில் முழுமையான சமூக நீதியை ஏற்படுத்தும் நோக்குடன், 2021-ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2026-27ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று தங்களின் அரசு அறிவித்திருப்பதற்காக எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வந்த கோரிக்கைகளை தாங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். இதன் காரணமாக சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இது இந்தியாவில் சமூக நீதியை பாதுகாப்பதில் நீண்ட காலத்திற்கு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அதேநேரத்தில், இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதில் கடைபிடிக்கப்படும் சில நடைமுறைகளால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுவிடக் கூடும் என்பதால், அது குறித்த எனது கவலைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமான வீட்டுப்பட்டியல் தயாரிப்பு பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.</p><h2>மக்கள் குறிப்பிடும் சாதியின் பெயரை அப்படியே பதிவு செய்யும் முறை</h2><p>அடுத்தக்கட்டமாக, மக்களை எண்ணும் பணிகள் மலைப்பிரதேசங்களில் உள்ள மாநிலங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதலும், மற்ற மாநிலங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதலும் நடைபெறவுள்ளன. இந்த பணியின்போது, சாதி என்ற கேள்விக்கான பதிலை குறிப்பிடும் பகுதியை காலியாக விட்டு விடுவதென்றும், அந்த இடத்தில் மக்கள் குறிப்பிடும் சாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வதென்றும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் இந்தியத் தலைமைப் பதிவாளர் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில்  செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>இந்த முறையில் மக்களின் சாதி விவரம் சேகரிக்கப்பட்டால், நிறைய சிக்கல்கள் ஏற்படும். நாடு முழுவதும் ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் சாதியின் பெயரைக் கடந்து உள்பிரிவுகளால் தங்களை அழைத்துக் கொள்வார்கள். ஆனால், அந்த உட்பிரிவுகளின் பெயர்கள் அரசால் பயன்படுத்தப்படும் சாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. இத்தகைய சூழலில், மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அப்படியே நிரப்பி, அது சாதியின் பெயராக இல்லாமல், உட்பிரிவின் பெயராக இருந்தால், ஒரு அரசின் பட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக சாதிகள் இருப்பதாக கணக்கில் காட்டப்படும். இது சரி செய்ய முடியாத குழப்பத்தை உண்டாக்கி, இந்தக் கணக்கெடுப்பின் தரவுகளை பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கிவிடும்.</p><h2>2011-ல் இது போன்ற நடைமுறைதான் இருந்தது</h2><p>2011-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்பட்டது. அதற்கான வினாக்கள் பட்டியலில் இதே போல்தான் சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் விடப்பட்டு, மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அதில் குறிப்பிடும் முறை பின்பற்றப் பட்டது.</p><p>அதன் விளைவு அந்தக் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 46 லட்சத்து 70 ஆயிரம் சாதிகள் இருப்பதாக தெரியவந்தது. இந்தியாவில் 1931-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் 4147 சாதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், 2011 கணக்கெடுப்பில் 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாகக் கூறப்பட்டது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனால், அந்தக் கணக்கெடுப்பு தரவுகள் சமூக நீதிக்காக பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு விட்டன.</p><p>இந்த சிக்கலுக்கான தீர்வு மிகவும் எளிதானது. இந்தியாவில் என்னென்ன சாதிகள் உள்ளன? என்பது குறித்த பட்டியல் மத்திய அரசிடமும், மாநில அரசுகளிடமும் உள்ளன. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் நிலையில், அந்தப் பட்டியலை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான செயலியின் மென்பொருளில் இணைத்து, அந்தப் பட்டியலில் இருந்து மக்கள் தங்கள் சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்றுவதுதான் சரியான தீர்வாகும்.</p><h2>பீகார் மாநில சாதிவாரி சர்வேயில் துல்லியமான விவரங்கள்</h2><p>கடந்த 2023-ஆம் ஆண்டு பீகார் மாநிலத்திலும், 2024-ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்திலும் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில், அரசின் பட்டியலில் உள்ள சாதிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அதை மக்கள் தேர்ந்தெடுத்து நிரப்பும் முறை கடைபிடிக்கப்பட்டது. அதன் பயனாக பீகார் மாநில சாதிவாரி சர்வேயில் துல்லியமான விவரங்கள் கிடைத்தன. அதனால் அதே முறையை இந்த கணக்கெடுப்பிலும் பின்பற்றலாம்.</p><p>சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள மக்களை எண்ணும் பணியின் போது மத்திய அரசின் சாதிகள் பட்டியலைக் காட்டி, அதிலிருந்து அவர்களின் சாதி மற்றும் எண்ணை பதிவு செய்யும் முறை கடைபிடிக்கும்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்திற்கு தாங்கள் அறிவுறுத்தல்களை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிகளை பதிவு செய்யும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதை அவசர கோரிக்கையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை ஒட்டுமொத்த நாடும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. சமூகநீதியை காப்பதற்காக இதை செய்யும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல்: சேப்பாக் வெற்றி பெற 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேலம்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/csg-needs-183-runs-to-win-against-salem-spartans-in-tnpl-2026</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/csg-needs-183-runs-to-win-against-salem-spartans-in-tnpl-2026#comments</comments><guid isPermaLink="false">582c0298-4912-4b15-b444-e74276df6a7f</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:55:25 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:55:25.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,Chepauk super gillies,Salem Spartans,சேலம் ஸ்பர்டன்ஸ்,சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/e6nkvgja/salem.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ harishkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/e6nkvgja/salem.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி  மைதானத்தில் நடந்து வருகிறது.</p><h2>சேப்பாக் சூப்பர் கில்லீஸ்</h2><p>இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, சேலம் ஸ்பர்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. முதலில் இருந்தே சேலம் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்து திணறியது.</p><p>7வது விக்கெட்டுக்கு இணைந்த ஹரிஷ்குமார்-ஈஸ்வர் ஜோடி 68 ரன்கள் சேர்த்தது.</p><h2>கடைசி ஓவரில் 4 சிக்சர்</h2><p>கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஹரிஷ்குமார் அரை சதம் கடந்து அசத்தினார். கடைசி ஓவரில் அவர் 4 சிக்சர்களை விளாசினார்.</p><p>இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்துள்ளது. ஹரிஷ்குமார் 57 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><p>சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் சிலம்பரசன், பிரேம்குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>இந்து சமய அறநிலை, ஊரக வளர்ச்சி மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் நியமனங்களில் நடப்பு நிலையே தொடர வேண்டும்: சி.பி.எம்.</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-hindu-religious-charities-rural-development-health-postings-should-continue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-hindu-religious-charities-rural-development-health-postings-should-continue#comments</comments><guid isPermaLink="false">3276f3f6-6d6e-4752-a907-cee8a7cd8809</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:29:22 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:29:22.648Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPM,சிபிஎம்,பெ சண்முகம்,P Shanmugam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vbl6ccmh/Pshanmugam0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ. சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vbl6ccmh/Pshanmugam0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>இந்து சமய அறநிலையத் துறையில் இதுவரை கிரேடு 1 செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தில் சட்டம் படித்தவர்கள் மட்டுமே தேர்வெழுதி அலுவலர்களாக முடியும் என்ற நிலை இருக்கிறது. கோயில் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளை நிர்வகிக்க சட்ட அறிவு அவசியமானதாக இருக்கிறது என்பதால், துறையின் இணை ஆணையர் பதவிக்கு சட்டம் படித்து இருப்பது அவசியமானதாகும்.</p><p>நீதிபதியாக இருந்து வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டு பூசல்களை தீர்க்கும் இடமாக இணை ஆணையர் பொறுப்பு நீதித்துறை சார்ந்து முக்கியமானதாக இருக்கிறது. இந்நிலையில் சட்டம் பயிலாதவர்களும் நேரடி நியமனத்தின் மூலம் உதவி ஆணையர்களாக, கிரேடு 1 செயல் அலுவலர்களாக நியமிப்பதற்கும், மேலும், அவ்விடங்களை வருவாய்த் துறையினரை வைத்து நிரப்புவதற்கும் தற்போதுள்ள இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் 9-வது சட்டப் பிரிவை திருத்தி பிரிவு 2-ஐ ரத்து செய்ய உள்ளதாக அறிகிறோம்.</p><p>இது பொருத்தமற்றதும், அறநிலையத்துறை செயல்பாடுகளை முடக்குவதுமாகும். எனவே, இந்த சட்டத்திருத்தத்தை அரசு கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><h2>ஊரக வளர்ச்சித் துறை</h2><p>இதேபோன்று, ஊரக வளர்ச்சித் துறையில் இதுவரை திட்ட இயக்குநர் பொறுப்புகள் பதவி உயர்வு மூலமாகவோ அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்டோ நிரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன. தற்போது அந்த பணியிடங்களில் தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட திட்ட இயக்குநர்களாக ஐ.எப்.எஸ். அதிகாரிகளை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த பொறுப்புகளோடு எவ்வித தொடர்பும் இல்லாத அதிகாரிகளை இப்படி நியமிப்பது தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவதற்கு உதவாது. எனவே, இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 2731 நாள் 28.07.2026-ஐ ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p><h2>மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, ஊரக மருத்துவ நலத்துறை</h2><p>இதேபோன்று, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, ஊரக மருத்துவ நலத்துறை மற்றும் பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறை ஆகிய துறைகளின் இயக்குநர் பொறுப்புகளுக்கு தற்போதுவரை பதவி உயர்வின் மூலம் மருத்துவர்களால் நிரப்பப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது, இந்த பொறுப்புகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.</p><p>இது மருத்துவத்துறையை சார்ந்த பணிகளை வேறு துறையில் பயின்றவர்களால் திறம்பட நிர்வகிக்க வாய்ப்பில்லை. எனவே, மேற்கண்ட 3 துறைகளிலும் தற்போதைய நிலையையே தொடர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு பெ. சண்முகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை: முழு வீச்சில் தயாராகிறது பெருநகர சென்னை மாநகராட்சி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-chennai-corporation-prepares</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-chennai-corporation-prepares#comments</comments><guid isPermaLink="false">e310e33f-78d3-4302-b05b-d7dd799b800a</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:52:21 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:52:21.690Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,சென்னை மாநகராட்சி,Flood Damage,வெள்ளப் பாதிப்பு,Greater chennai corporation,வடகிழக்குப் பருவமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/bd4vniu8/chennai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Greater Chennai Corporation ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/bd4vniu8/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளவும், பொதுமக்கள் பாதிப்படைவதைத் தவிர்க்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு முழுத் தயார் நிலையில் இயங்கி வருகிறது. மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத பாதிப்புகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் மாநகராட்சி முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>உபகரணங்கள் <strong>மற்றும் இயந்திர</strong>ங்கள் தயார் நிலை</h2><p>மழைக்காலத்தில் வழக்கமாக ஏற்படும் நீர் தேக்கம் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுதல் போன்ற புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து விதமான கனரக உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் உடனடியாகப் பயன்படுத்தப்படும் ரம்பங்கள், மரம் அறுக்கும் கருவிகள், மின்சாரத் தேவைகளுக்கான ஜெனரேட்டர்கள், கழிவுநீர் மற்றும் மழைநீரை விரைவாக உறிஞ்சி வெளியேற்றும் அதிநவீன மோட்டார் பம்புகள் மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவை பயன்பாட்டிற்குத் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.</p><h2>பாதிப்புகளை உடனுக்குடன் <strong>சரி செய்யத் தி</strong>ட்டம்</h2><p>மழைநீர் தேங்கும் இடங்களில் இருந்து தண்ணீரை உடனடியாக உறிஞ்சி வெளியேற்ற அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் தயார் நிலையில் உள்ளன. சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பலத்த காற்றினால் சாலைகளில் முறிந்து விழும் மரங்களை நொடிப் பொழுதில் அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்க சிறப்பு மீட்புக் குழுக்களும் இயந்திரங்களுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.</p><h2>துறைகள் <strong>ஒருங்கிணைப்பு</strong> மற்றும் கண்காணிப்பு</h2><p>சென்னை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், மின்சார வாரியம் ஆகியவை இணைந்த மீட்பு ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழைக்கால நிவாரணப் பணிகள் மற்றும் அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் பொதுமக்களின் புகார்களை 24 மணி நேரமும் பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய தாழ்வானப் பகுதிகளில் முதல் நிலை மீட்பர்களும் முன்னெச்சரிக்கையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசினர் தீர்மானம் அவசியமற்றது!- டி.டி.வி.தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-government-resolution-is-unnecessary</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-government-resolution-is-unnecessary#comments</comments><guid isPermaLink="false">f44c21b5-f8d2-4c85-836e-b0fa6815afcb</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:33:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:33:13.355Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AMMK,அமமுக,டிடிவி தினகரன்,TTTV Dhinakaran,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wzwnxrae/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wzwnxrae/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு மசோதாவையும்  நாடாளுமன்றத்தில் கொண்டு வராத நிலையில் அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது!</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>நாடாளுமன்ற மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவே இருக்க வேண்டும், மாநிலங்களுக்கான விகிதாச்சார அளவில் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் உள்ளிட்டவை அடங்கிய <a href="https://www.maalaimalar.com/topic/தொகுதி-மறுவரையறை">தொகுதி மறுவரையறை</a> தொடர்பான அரசினர் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் இன்று கொண்டு வந்துள்ளார்.</p><p>மத்திய அரசு, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடாத நிலையில், காவிரி நீர், மேகதாது அணை, விவசாயிகள் பெற்ற முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, மின் கட்டணத்தில் குளறுபடி, போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம்  மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற தமிழகத்தின் தற்போதைய தலையாய பிரச்சனைகளை மறைக்க, தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டியதோடு, தற்போது சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் என்ற மற்றொரு நாடகத்தையும் தவெக அரசு அரங்கேற்றியுள்ளது.</p><p>தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொகுதி மறுவரையறை தொடர்பாக பேசிவிட்டுச் சென்ற அடுத்த வாரமே எம்.பி.க்கள் கூட்டம், அதற்கு அடுத்த வாரமே அரசினர் தீர்மானம் என அவசரகதியில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஆளும் தவெக அரசை காங்கிரஸ் கட்சிதான் இயக்குகிறதோ? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அனைவரும் ஏற்றுக்கொண்ட நிலையில், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உட்பட எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என்பதோடு, நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவிகிதத்திலிருந்து 7.23 சதவிகிதமாக அதிகரிக்கும் என மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்திய பின்பும், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிப்படையும் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை தமிழக மக்கள் மத்தியில் தற்போது தவெக அரசு திட்டமிட்டு பரப்புவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>எனவே, கடந்த மூன்று மாத கால தவெக ஆட்சியில் தினந்தோறும் எழும் மக்கள் பிரச்சனைகளைத் திசைதிருப்பவும், காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தனது இயலாமையை மறைக்கவும், இதுபோன்ற தற்போதைய அவசியமற்ற விஷயங்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து காலத்தை வீணாக்காமல், தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>உத்தரப் பிரதேசத்தில் பசு கோமியம் கொள்முதல் செய்யும் புதிய முன்னோடித் திட்டம் துவக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/new-pilot-scheme-to-purchase-cow-urine-in-uttar-pradesh</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-pilot-scheme-to-purchase-cow-urine-in-uttar-pradesh#comments</comments><guid isPermaLink="false">8f84554b-280c-468d-9567-6491678bc975</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:28:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:28:13.547Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,Cow urine,பசு கோமியம்,உத்தரப் பிரதேசம்,Bulandshahr,புலாந்த்சகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0lsej98z/cow-urine.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cow urine ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/0lsej98z/cow-urine.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்பை கிராமப்புற பொருளாதாரத்துடனும், இயற்கை விவசாயத்துடனும் இணைக்கும் வகையில் பசு கோமியத்தை அரசே கொள்முதல் செய்யும் புதிய முன்னோடித் திட்டத்தை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தொடங்கியுள்ளது. </p><p>இத்திட்டம் முதற்கட்டமாக அம்மாநிலத்தின் புலாந்த்சகர் மாவட்டத்தில் உள்ள சியானா வட்டத்திற்குட்பட்ட நர்சேனா பகுதியில் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் (FPO) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><h2>லிட்டருக்கு <strong>ரூ.10 கொ</strong>ள்முதல் விலை </h2><p>இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்தும் கால்நடை வளர்ப்போரிடமிருந்தும் ஒரு லிட்டர் பசு கோமியம் 10 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது புலாந்த்சகரைச் சுற்றியுள்ள 15 கிராமங்களை உள்ளடக்கி இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. </p><p>விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கோமியத்தை எளிதாக ஒப்படைக்கும் வகையில் கிராமங்களில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறப்புச் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்கள் மூலம் தற்போது நாளொன்றுக்குச் சராசரியாக 500 லிட்டர் கோமியம் சேகரிக்கப்பட்டு வருகிறது.</p><h2>பெண்<strong>கள் அதிகாரம் மற்றும்</strong> வேலைவாய்ப்பு</h2><p>கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கோமியம் சேகரிக்கும் பணியில் கிராமப் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் சுமார் 300 பெண்கள் பங்குதாரர்களாக இணைக்கப்பட்டு, சேகரிக்கப்படும் ஒவ்வொரு லிட்டர் கோமியத்திற்கும் 2 ரூபாய் கமிஷனாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் பால் விற்பனை மட்டுமின்றி, கோமியம் மூலமாகவும் விவசாய குடும்பங்களுக்கும் பெண்களுக்கும் கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்பு உருவாகியுள்ளது.</p><h2>இயற்கை உர<strong>ம் ம</strong>ற்றும் பூச்சிக்கொல்லி தயாரிப்பு</h2><p>சேகரிக்கப்படும் பசு கோமியத்துடன் பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்டு, விவசாய நிலங்களுக்குப் பயன்படும் ரசாயனமற்ற இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் திரவக் கரைசல்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை உள்ளூர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு, ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் வழிவகை செய்கின்றன.</p><h2>மாநில<strong>ம் முழுவதும் விரிவுபடு</strong>த்தத் திட்டம்</h2><p>புலாந்த்சகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றி மற்றும் வரவேற்பைப் பொறுத்து, இத்திட்டம் விரைவில் உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தகட்டமாகப் பசு கோமியத்திற்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 20 ரூபாயாக உயர்த்தவும் அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>உக்ரைன் தொடர்ந்த வழக்கு - டி.ஒய்.சந்திரசூட்டை தனது மத்தியஸ்தராக நியமித்த ரஷ்யா!</title><link>https://www.maalaimalar.com/news/world/case-filed-by-ukraine-russia-appoints-dy-chandrachud-as-its-arbitrator</link><comments>https://www.maalaimalar.com/news/world/case-filed-by-ukraine-russia-appoints-dy-chandrachud-as-its-arbitrator#comments</comments><guid isPermaLink="false">2b829183-26bf-435a-a90b-decd41eb4085</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:17:03 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:17:03.222Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,ரஷ்யா,டி.ஒய்.சந்திரசூட்,உக்ரைன்,D.Y. Chandrachud</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/ialtrshv/New-Project-2026-08-12T154434.127.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உக்ரைன் தொடர்ந்த வழக்கு - டி.ஒய்.சந்திரசூட்டை தனது மத்தியஸ்தராக நியமித்த ரஷ்யா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/ialtrshv/New-Project-2026-08-12T154434.127.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனின் ஓஷாட்பேங்க தொடுத்துள்ள முதலீட்டு ஒப்பந்த வழக்கில், இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டை ரஷ்யா தனது மத்தியஸ்தராக நியமித்துள்ளது.</p><h2>வழக்கு என்ன?</h2><p>கடந்த 2022-ல் உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதலைத் தொடுத்தது. இதனால் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைனின் சில பகுதிகளில் உள்ள பல நூறு மில்லியன் டாலர்கள் மதிப்புடைய தங்களது வங்கிக் கிளைகள், சொத்துக்களை இழந்துள்ளதாகவும், அங்கு எந்தவிதமான வங்கி செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியவில்லை எனவும் ஓஷாட்பேங்க் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>இந்நிலையில் 1998 ஆம் ஆண்டு உக்ரைன் - ரஷ்யா இடையே கையெழுத்தான இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த வழக்கை ஓஷாட்பேங்க் தொடர்ந்துள்ளது.</p><h2>1998ம் ஆண்டு ஒப்பந்தம் கூறுவது என்ன?</h2><p>1998 ஒப்பந்தம் என்பது உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான 'இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்' (Bilateral Investment Treaty - BIT) ஆகும். </p><p>இரு நாடுகளின் முதலீட்டாளர்களும் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் செய்யும் முதலீடுகளைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த ஒப்பந்தத்தில் உள்ள 3 முக்கிய விதிகளை ரஷ்யா மீறியுள்ளதாக உக்ரைனின் ஒஸ்சாட்பேங்க் குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>ரஷ்யா மீறியுள்ளதாக ஓஷாட்பேங்க் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள்</h2><ol><li><p>ஒப்பந்தத்தின்படி ஒரு நாட்டின் அரசு, மற்றொரு நாட்டு முதலீட்டாளரின் சொத்துக்களை முறையான பொதுக் காரணம் மற்றும் சட்ட நடைமுறைகள் இல்லாமல் தன்னிச்சையாகக் கைப்பற்றக் கூடாது. அப்படியே கைப்பற்றினாலும் அதற்குத் தகுந்த இழப்பீடு உடனே தர வேண்டும்.</p> <p>டோனெட்ஸ்க், லுகான்ஸ்க் போன்ற உக்ரைன் பகுதிகளில் இருந்த தங்களது வங்கிக் கிளைகளையும், பணச் சொத்துக்களையும் எந்தவித இழப்பீடும் தராமல் ரஷ்யா சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்துள்ளது.</p></li></ol><p>2. மற்றொரு நாட்டு முதலீட்டாளர்களின் வணிகச் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பான மற்றும் நியாயமான சூழலை இரு நாடுகளும் ஏற்படுத்தித் தர வேண்டும்.</p><p>ரஷ்யா போர் தொடுத்ததோடு மட்டுமல்லாமல், தங்களின் வங்கிச் சேவைகளை முற்றிலும் முடக்கி, நியாயமற்ற முறையில் தங்களது வணிக உரிமைகளைப் பறித்துள்ளது. </p><p>3. போர், கலவரம் அல்லது அவசரநிலைக் காலங்களில் ஏற்படும் சொத்து இழப்புகளுக்குப் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். </p><p>தங்களுக்கு ஏற்பட்ட பல நூறு மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இழப்புகளுக்கு ரஷ்யா எந்தவொரு இழப்பீடும் தர மறுத்து, ஒப்பந்தத்தை மீறியுள்ளது. </p><p>என்ற மூன்று முக்கியக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் முன்வைத்துள்ளது. </p><h2>ரஷ்யா ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் எவை?</h2><p>டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஷியா ஆகியவை தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. 2022 இல் ரஷ்யா போர் தொடுத்த பிறகு, உக்ரைனின் இந்த 4 முக்கியப் பகுதிகளில் இருந்த தங்களின் பெரும்பாலான வங்கிக் கிளைகள், நிதிச் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை ரஷ்யா சட்டவிரோதமாகக் கைப்பற்றிவிட்டதாக ஓஷாட்பேங்க் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>தங்களுக்கு ஏற்பட்ட அனைத்து இழப்புகளுக்கும் ரஷ்யாவிடம் இருந்து தகுந்த, விரைவான மற்றும் பயனுள்ள நிதி இழப்பீடு வேண்டும் என்று வங்கி கோரியுள்ளது.</p><h2>ரஷ்யாமீதான ஓஷாட்பேங்கின் வழக்கு முதல்முறையல்ல</h2><p>ஓஷாட்பேங்க் ரஷ்யாமீது சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது இது முதல்முறையல்ல. கடந்த 2014ம் ஆண்டும், கிரீமியா பகுதியை ரஷ்யா இணைத்தபோதும், அங்குள்ள சொத்து இழப்புக்காக இந்த வங்கி சர்வதேசத் தீர்ப்பாயத்தை நாடியது.</p><p>ஓஷாட்பேங்க் வங்கி முதலில் 2025 ஜூலையில் ரஷ்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ரஷ்யா பதில் அளிக்காததால், ஏப்ரல் 7ம் தேதி அன்று இந்த சர்வதேச மத்தியஸ்த நடைமுறையை முறைப்படி தொடங்கியது.</p><h2>சர்வதேச நடுவர் குழு</h2><p>இந்த வழக்கிற்காகவே 3 பேர்கொண்ட சர்வதேச நடுவர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில்தான் ரஷ்யாவின் மத்தியஸ்தராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>உக்ரைன் சார்பில், ஸ்டாவ்ரோஸ் பிரெகோலாகிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாவதாக இருநாடுகளும் சேர்ந்து தேர்ந்தெடுத்த கோஸ்டாரிகா நாட்டின் முன்னாள் வர்த்தக அமைச்சர் டியாலா ஜிமினெஸ். இவர் இந்தத் தீர்ப்பாயத்தின் தலைவராகச் செயல்படுவார்.</p><p>முன்னதாக, ஜெர்மனியின் எரிசக்தி நிறுவனம் (Wintershall Dea) மற்றும் உக்ரைனின் மின்சார நிறுவனம் (Ukrenergo) தொடர்பான சர்வதேச வழக்குகளில் ரஷ்யா தனது மத்தியஸ்தராகச் செயல்பட சந்திரசூட்டை அணுகியபோது அவர் அதை நிராகரித்திருந்தார். </p><p>ஆனால், தற்போதைய புதிய வழக்கில் ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று அவர் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2>இந்தியாவின் நிலைப்பாடு</h2><p>இருநாடுகளும் போர்நிறுத்தத்தை உடனே மேற்கொண்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்தியா கூறிவருகிறது. ஆனால் ரஷ்யாவை வெளிப்படையாக கண்டிப்பதை தவிர்ப்பதோடு, மாஸ்கோவை விமர்சிக்கும் பல ஐ.நா. தீர்மானங்கள் மீதும் வாக்களிக்காமல் விலகி வருகிறது. </p><p>2022 செப்டம்பரில் ரஷ்யா, டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஷியா ஆகிய பகுதிகளை இணைப்பதாக அறிவித்த பிறகு, ரஷ்யாவின் இந்த இணைப்பு முயற்சியைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட அமெரிக்க-அல்பேனியத் தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காமல் விலகியது. </p>]]></content:encoded></item><item><title>கோட்டையில் சுதந்திரதின கொண்டாட்டம்: மெரினா காமராஜர் சாலை- அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/traffic-diversion-on-marina-kamarajar-salai-and-anna-salai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/traffic-diversion-on-marina-kamarajar-salai-and-anna-salai#comments</comments><guid isPermaLink="false">e6cbe685-d20f-4950-99d7-b16030aae921</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:16:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:16:44.391Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து மாற்றம்,Independence Day,சுதந்திர தினம்,மெரினா காமராஜர் சாலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/fbdx4jj6/traffic.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ போக்குவரத்து மாற்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து மாற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/fbdx4jj6/traffic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கி கொண்டு வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தினத்தையொட்டி</a> மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றியதை பற்றி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர மற்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை-அண்ணா சாலை- முத்துசாமி பாலம்- முத்துசாமி சாலை- ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.</p><p>பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை -தலைமைச் செயலகம் வழியாக காமராஜா சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாரிஸ் கார்னர்- வடக்கு கோட்டை பக்க சாலை-ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு- முத்துசாமி சாலை- முத்து சாமி பாலம்- அண்ணாசாலை- வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.</p><p>அண்ணாசாலையில் இருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம்- முத்துசாமி சாலை- ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு - வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரி முனையை சென்றடையலாம். முத்துசாமி பாலத்தில் இருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை -வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.</p><p>சிவப்பு மற்றும் பர்ப்பில் வண்ண <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-drone-fly-in-chennai-for-4-days">வாகன</a> அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கி கொண்டு வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும்.</p><p>சிவப்பு மற்றும் பர்ப்பில் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணிக்கு பின்னர் போர் நினைவுச் சின்னம் கொடிமரச்சாலை முத்துசாமி பாலம்- முத்து சாமி ரோடு-வடக்கு கோட்டை பக்க சாலை- பாரிமுனை சந்திப்பு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.</p><p>நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை- போர் நினைவுச்சின்னம் கொடிமரச்சாலை - முத்து சாமி பாலம் -முத்துசாமி சாலை- வடக்கு கோட்டை பக்க சாலை -பாரிமுனை சந்திப்பு ரிசர்வ் வங்கி கரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.</p><p>நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை - உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை - அண்ணா சாலை, முத்து சாமி பாலம் -வடக்கு கோட்டை பக்க சாலை -பாரிமுனை சந்திப்பு- ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.</p><p>அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர் போர்நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக் கொண்டு வாகனங்களை தீவுத்திடலில் உள்ளே நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒரே நாளில் 400 கல்யாணங்களா? குருவாயூரில் ஆகஸ்ட் 23-ல் அமையவிருக்கும் மெகா திருமண திருவிழா!</title><link>https://www.maalaimalar.com/news/national/400-weddings-in-a-day-guruvayur-mega-marriage-festival-august-23</link><comments>https://www.maalaimalar.com/news/national/400-weddings-in-a-day-guruvayur-mega-marriage-festival-august-23#comments</comments><guid isPermaLink="false">b437052c-80f7-4c9a-97d9-26461067cf2c</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:56:57 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:56:57.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Guruvayur,குருவாயூர் கிருஷ்ணசாமி கோவில்,கேரளம்,Keralam,GuruvayurTemple Wedding,ChingamMonth,சிங்கமாதம்,MegaWeddingDay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/s35lo474/GuruvayurTemple-Wedding" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GuruvayurTemple  Wedding]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/s35lo474/GuruvayurTemple-Wedding?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகப் புகழ்பெற்ற கேரளம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">குருவாயூர்</a> ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>முன்பதிவுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால், இந்த எண்ணிக்கை 400-ஐத் தாண்டி புதிய உலக சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>ஒரே நாளில் ஏன் இத்தனை கல்யாணங்கள்?</strong></h2><p>புதிய மலையாள மாதமான சிங்கத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இது கேரளாவின் மிக முக்கியமான சுபமுகூர்த்த நாளாக கருதப்படுகிறது. </p><p>இந்த 'சிங்கம்' மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 23-ஆம் தேதி வருகிறது. இந்நாளில் திருமணம் செய்ய இதுவரை 377-க்கும் மேற்பட்ட திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>இந்த ஆண்டு திருமணங்களுக்கு மிகவும் உகந்த நாளாக இது கருதப்படுவதால், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான தம்பதிகள் குருவாயூரப்பனின் முன்னிலையில் தங்களின் திருமண வாழ்க்கையைத் தொடங்க போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்துள்ளனர். </p><p>இதுமட்டுமின்றி, அடுத்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் ஏற்கனவே 295 திருமணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.</p><h2><strong>அதிகாலை 4 மணிக்கே தொடங்கும் கெட்டிமேளம்:</strong></h2><p>வழக்கத்திற்கு மாறாகக் குவியவிருக்கும் கூட்டத்தைச் சமாளிக்கவும், அனைத்து திருமணங்களையும் சரியான நேரத்தில் நடத்தி முடிக்கவும் குருவாயூர் தேவஸ்வம் போர்டு அசத்தலான அதிரடி ஏற்பாடுகளைச் செய்துள்ளது. </p><p>ஆகஸ்ட் 23 மற்றும் 30 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருமணச் சடங்குகள் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே, அதாவது அதிகாலை 4 மணிக்கே தொடங்கப்படவுள்ளன. </p><p>திருமணங்களை தடையின்றி நடத்த கோவிலில் பிரத்யேகமாக 6 திருமண மண்டபங்கள் அமைக்கப்படவுள்ளன. கூடுதல் கோவில் பணியாளர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் கூடுதல் மங்களவாத்தியக் குழுக்கள் சிறப்புப் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.</p><h2><strong>புகைப்படக் கலைஞர்களுக்குக் கட்டுப்பாடு:</strong></h2><p>கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தேவஸ்வம் போர்டு சில கண்டிப்பான விதிகளையும் விதித்துள்ளது. இதன்படி, திருமண மண்டபத்திற்கு அருகில் மணமகன் மற்றும் மணமகளுடன் சேர்த்து, புகைப்படக் கலைஞர்கள் உட்பட மொத்தம் 24 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>கடந்த கால சாதனை முறியடிப்பு:</strong></h2><p>இதற்கு முன்னதாக, கடந்த செப்டம்பர் 8, 2025 அன்று இக்கோயிலில் ஒரே நாளில் மட்டும் 334 திருமணங்கள் நடைபெற்றது தான் மிகப்பெரிய சாதனையாக இருந்தது. </p><p>ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடக்கவிருக்கும் திருமணங்கள் அந்தப் பழைய சாதனையை முறியடித்துள்ளது.</p><p>கோவில் தரிசனம் மற்றும் திருமணச் சடங்குகளைச் சுமூகமாக நடத்துவதற்குப் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு தேவஸ்வம் போர்டு தலைவர் ஏ.வி. கோபிநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவை உலுக்கும் வெப்ப அலை: புழுதி புயல் கால சாதனைகளை முறியடித்த பருவநிலை மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/america-scorching-heatwave-dust-storm-records-broken-by-climate-change</link><comments>https://www.maalaimalar.com/news/world/america-scorching-heatwave-dust-storm-records-broken-by-climate-change#comments</comments><guid isPermaLink="false">e45eb848-149f-40bb-9ba7-3211e63727b3</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:56:49 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:56:49.869Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,வெப்ப அலை,heatwave,புழுதி புயல்,Dust bowl,எல்நினோ,EL-Nino</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pmqjj11d/dust-bpwl.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dust Bowl]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pmqjj11d/dust-bpwl.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவிலும் உலகப் பெருங்கடல்களிலும் பதிவான வெப்பநிலை முந்தைய சாதனைகளை உடைத்து எறிந்துள்ளது. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் அமெரிக்காவின் சராசரி வெப்பநிலை 76.9 டிகிரி ஃபாரன்ஹீட்டாக (24.9 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது. இது 20 ஆம் நூற்றாண்டின் சராசரியை விட 3.3 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாகும். 132 ஆண்டுகால வரலாற்றுப் பதிவுகளில் இதுவே மிக வெப்பமான ஜூலை மாதமாகக் கருதப்படுகிறது.</p><p>இந்த தீவிர வெப்ப அலைக்கு மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமும், பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள தீவிரமான 'எல் நினோ' நிகழ்வுமே முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. 1930-களில் அமெரிக்காவை உலுக்கிய 'டஸ்ட் போல்' வறட்சி காலத்தின் வெப்பப் பதிவுகளை விட தற்போதைய வெப்பநிலை அதிகரித்துள்ளதாக காலநிலை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><h2>இரவு நேர வெப்ப<strong>நிலை அதிகரி</strong>ப்பு</h2><p>வழக்கத்தை விட இரவு நேரங்களில் பதிவாகும் கடுமையான வெப்பமே இந்த வரலாற்றுச் சாதனைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வெப்பநிலை குறையாமல் இருப்பது மக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. </p><p>ஓரிகான் மாநிலத்தில் 1,40,000 ஏக்கருக்கு மேல் எரிந்து சாம்பலான காட்டுத்தீ, பல நகரங்களில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வறட்சி ஆகியவை இந்த தீவிர காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளாகும்.</p><p>அமெரிக்காவின் மத்திய மற்றும் தென் மாநிலங்களில் ஆகஸ்ட் மாதத்திலும் இந்த வெப்ப அலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 30,000-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நாடு முழுவதும் உருவாகியுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>பெருங்கடல்களில் எல் <strong>நினோ அச்சுறு</strong>த்தல்</h2><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் 'கோபர்நிகஸ்' விண்வெளி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் பெருங்கடல்களின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை ஜூலை மாதத்தில் 69.73 டிகிரி ஃபாரன்ஹீட்டாக (20.96 டிகிரி செல்சியஸ்) உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.</p><p>மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் அதிகளவில் சூடாவதால் 'எல் நினோ' உருவாகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த எல் நினோ நிகழ்வு தன் உச்சக்கட்ட வலிமையை எட்டும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது கடல் நீர்மட்ட உயர்வு, பவளப்பாறைகள் வெளுத்துப்போதல் மற்றும் கடல்சார் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதால் உலகளாவிய ரீதியில் பருவநிலை குறித்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இமாச்சல பிரதேசத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது கைம்பெண்-அனாதை கூடுதல் வரி</title><link>https://www.maalaimalar.com/news/national/himachal-govt-imposes-orphan-widow-tax-on-petrol-diesel</link><comments>https://www.maalaimalar.com/news/national/himachal-govt-imposes-orphan-widow-tax-on-petrol-diesel#comments</comments><guid isPermaLink="false">bae6e563-b865-4d71-8f96-f6fe52674bbd</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:49:09 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:49:09.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Himachal Pradesh,சுக்விந்தர் சிங் சுகு,Sukhvinder Singh Sukhu,இமாச்சல் பிரதேசம்,orphan and widow cess,அனாதை மற்றும் கூடுதல் வரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/fdzgktvc/Untitled-design-35.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இமாச்சலில் விதவை-அனாதை வரி: பெட்ரோல் டீசலுக்கு கூடுதல் வரி மூலம் நல நிதி ]]></media:title><media:description type="html"><![CDATA[ Himachal Fuel Tax]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/fdzgktvc/Untitled-design-35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமாச்சல பிரதேச அரசு கைம்பெண்கள்(விதவைகள்) மற்றும் அனாதை குழந்தைகளுக்கான நலத்திட்டங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டர் ஒன்றுக்கு 60 பைசா கூடுதல் வரி விதித்துள்ளது.</p><p>இந்த திருத்தத்தின்படி, பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.5 வரை கூடுதல் வரி விதிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.</p><h3><strong>கைம்பெண் மற்றும் அனாதை வரி</strong></h3><p>இதுகுறித்து மாநில வரிகள் மற்றும் கலால் துறை வெளியிட்ட அறிவிப்பில், கைம்பெண் மற்றும் விதவை வரி ஆகஸ்ட் 11ஆம் தேதி (நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் அதிவேக (high-speed) டீசல் விற்பனை செய்யப்படும் விற்பனை நிலையத்தில் இந்த கூடுதல் வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>செஸ் வரி மூலம் வசூலிக்கப்படும் பணம், கைம்பெண் மற்றும் விதவைகள் நல நிதியில் வரவு வைக்கப்பட்டு, விதைவைகள் மற்றும் அனாதைகளின் நலனுக்கான பயன்படுத்தப்பட உள்ளது.</p><p>இமாச்சல பிரதேச சட்டமன்றத்தால் மார்ச் மாதம், இந்த மதிப்புக்கூட்டு வரி (திருத்த) மசோதா, 2026 நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.</p><p>சட்டமன்றத்தில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது, பாஜக-வினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.</p><h3><strong>பாஜக வெளிநடப்பு</strong></h3><p>அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாகூர் கூறுகையில், “கைம்பெண்கள் மற்றும் அனாதைகளின் பெயரில் வரி விதிப்பதன் மூலம், வருவாயைத் திரட்ட அரசு முயல்கிறது.</p><p>இந்த எரிபொருள் விலை உயர்வால், அண்டை மாநிலங்களை விட இமாச்சல பிரதேசத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாகி, எல்லை மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் வேறு இடங்களில் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்படும்,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>இமாச்சல் முதலமைச்சர் அறிவிப்பு</strong></h3><p>இந்த மசோதா குறித்து இமாச்சல் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் கூறுகையில், “பொருளாதார ரீதியாக நலிவடைந்த கைம்பெண்கள் மற்றும் அனாதைகளுக்கான நலத்திட்டங்களுக்கு, அரசுக்கு ஒரு நிலையான மற்றும் பிரத்யேகமான வருவாய் ஆதாரம் தேவை.</p><p>ரூ.5 என்பது அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பாக மட்டுமே உள்ளது. மாநில அரசு இதைவிட மிகக் குறைந்த தொகையை நிர்ணயிக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மின்கட்டண உயர்வு புகார்கள் குறித்து சிறப்பு ஆய்வு- தமிழக மின்சார வாரியம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-review-regarding-electricity-tariff-hike-complaints-tamil-nadu-electricity-board-statement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-review-regarding-electricity-tariff-hike-complaints-tamil-nadu-electricity-board-statement#comments</comments><guid isPermaLink="false">2b83246e-b9d6-4738-b63f-9c9e3b0bfb83</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:48:29 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:48:29.606Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,தமிழக மின்சார வாரியம்,மின் கட்டணம் உயர்வு,EB Hike</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8z9wxy01/TNEB.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தமிழக மின்சார வாரியம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக மின்சார வாரியம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8z9wxy01/TNEB.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மின் நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுக்கு மின்னகம் 9498794987 என்ற எண்ணிலோ  அல்லது எக்ஸ் வலைத்தளத்தின் மூலமாகவோ தெரிவித்தால் உடனடியாக சிறப்பு ஆய்வு செய்யப்படும்.</strong></em></p><p>மின்நுகர்வோர்களுக்கு கூடுதலாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">மின் கட்டணம்</a> வந்திருப்பதாக பொது மக்கள் பரவலாக குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டு உள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>மின் வாரியம் மாநிலம் முழுவதும் உள்ள 3.74 லட்சம் மின் இணைப்புகளை சிறப்பு ஆய்வு  செய்ய எடுத்துக்கொண்டது. இதில் நேற்று வரை 3.43 லட்சம் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses">மின் இணைப்புகள்</a> ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 0.75 சதவீதம் மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளன. </p><p>மின் நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுக்கு மின்னகம் 9498794987 என்ற எண்ணிலோ  அல்லது எக்ஸ் வலைத்தளத்தின் மூலமாகவோ தெரிவித்தால் உடனடியாக சிறப்பு ஆய்வு செய்யப்படும்.</p><p>200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1  கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்து உள்ளனர். இந்தத் திட்டத்தினால் ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். </p><p> மின் கட்டணத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மின் கட்டணம்  குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த வருடம் ஜூலை மாதம் வரை தொடர்ந்த கோடை வெயிலினால் மின் பயன்பாடு அதிகரித்ததே பெரும்பாலோருக்கு மின் கட்டணம் உயர்ந்ததற்கு மூல காரணமாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலைக்கண்ணீர் - ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் தொடர்பாக ராகுல் காந்தியை சாடிய தர்மேந்திர பிரதான்!</title><link>https://www.maalaimalar.com/news/national/crocodile-tears-dharmendra-pradhan-slams-rahul-gandhi-over-the-jharkhand-student-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/crocodile-tears-dharmendra-pradhan-slams-rahul-gandhi-over-the-jharkhand-student-protest#comments</comments><guid isPermaLink="false">96e2a347-6b9a-48bd-a9fc-a899dbd05b6a</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:14:14 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:14:14.919Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Jharkhand protests,ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/hgut96fd/New-Project-2026-08-12T144344.441.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலைக்கண்ணீர் - ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் தொடர்பாக ராகுல் காந்தியை சாடிய தர்மேந்திர பிரதான்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/hgut96fd/New-Project-2026-08-12T144344.441.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்தில் ராகுல் காந்தி முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும் முன்னாள் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>காங்கிரஸ் மாணவர்களின் நலன்கள் குறித்துத் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது. ராகுல் காந்தியிடம் உண்மைகள் இல்லை. வழக்கமாகப் பொய்களை மட்டுமேப் பேசும் எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்றத்திற்கு வரவோ அல்லது பதில்களைக் கேட்கவோ விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் பொய்களைப் பரப்பவும், முதலைக்கண்ணீர் வடிக்கவும் மட்டுமே விரும்புகிறார்கள்.</p><p>உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மீது ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் அரசியல் விரக்தியையே வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.</p><p>ஆனால் காங்கிரஸோ ஜனநாயகத்தின் கோயிலான 'நாடாளுமன்றத்தை' முடக்கி, நாட்டின் மற்றும் இளைஞர்களின் நலன்களைச் சிதைத்து வருகிறது. ஏனெனில், நாட்டின் நலனை விடத் தங்கள் சொந்த நலன்களுக்கே அவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள். </p><p>அவையில் விவாதம் நடைபெறும்போதெல்லாம் இவர்கள் வெளியே கூச்சலையும் குழப்பத்தையும் உருவாக்குகிறார்கள். ஏனெனில், அவையில் அளிக்கப்படும் பதில்களைக் கேட்கும் திறன் அவர்களுக்கு இல்லை.</p><p>காங்கிரஸின் ஜனநாயகமும் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' ஒன்றே. அவர்கள் ஆட்சியில் உள்ள இடங்களில் இளைஞர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் ரீதியாகத் தங்களை முன்னிலைப்படுத்த விரும்பும் இடங்களில் பொய்கள் மற்றும் அமளி. </p><p>ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரத்தை நாடே பார்த்தது. ஆனால் கேள்வி என்னவென்றால், ஒவ்வொரு விவகாரத்திலும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தும் ராகுல் காந்தி, இன்று ஏன் மௌனம் காக்கிறார்? </p><p>காங்கிரஸின் இந்த இரட்டை வேடத் தன்மையை நாட்டின் இளைஞர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்திற்கு இடமில்லை; அவசரநிலைக் கால மனப்பான்மையுடன் செயல்படும் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்</h2><p>ஜார்க்கண்டில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலப் போட்டித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்து மாணவர்கள் பெரிய அளவில் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><h2>ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாடு?</h2><p>போராட்டம் நடத்திய மாணவர்கள்மீது அம்மாநில காவல்துறை தடியடி போன்ற அடக்குமுறைகளை மேற்கொண்டது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மாணவர்கள்மீது தடியடி நடத்தப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தில் அவர் மௌனம் காப்பதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டினர். </p><p>இதனிடையே மாணவர்கள்மீதான தடியடி கண்டிக்கத்தக்கது என ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் பெரிதாக அப்போராட்டம் பற்றிப் பேசவில்லை. </p><p>இச்சூழலில் நாடாளுமன்றத்தில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மாணவர் பிரச்சனைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வேறு சில விவகாரங்களையும் இதனுடன் இணைத்து விவாதிக்க வேண்டும் என பிடிவாதம் பிடிப்பதால் அவையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. </p><p>இந்நிலையில் இதனைக் குறிப்பிட்டே தர்மேந்திர பிரதான் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-people-will-not-forgive-the-political-parties-of-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-people-will-not-forgive-the-political-parties-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">18ab3b65-7154-4568-8320-6968824b10a7</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:05:28 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:05:28.717Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vwowdak3/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vwowdak3/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் அநீதி, துரோகம். எனவே, அப்படிப்பட்ட கட்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள்.</strong></em></p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>வரவேற்கிறேன்</strong></h2><p>மக்களவை உறுப்பினர்களின் தற்போதுள்ள எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும். இந்த தொகுதிகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, முதலமைச்சர் கொண்டு வந்துள்ள, அரசின் தனித்தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்.</p><p>கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட ‘<a href="https://www.maalaimalar.com/topic/தொகுதி-மறுவரையறை">தொகுதி மறுவரையறை</a> மசோதா”வை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் கொண்டு வர ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு வருகிறது.</p><h2><strong>அநீதி</strong></h2><p>ஒட்டுமொத்தத்தில், தொகுதி மறுவரையறை சட்ட மசோதா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்து விடும். மாநில சுயாட்சி, ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய நம் இந்திய அரசியலமைப்பின் உயரிய நோக்கங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடும்.</p><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் அநீதி, துரோகம். எனவே, அப்படிப்பட்ட கட்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள்.</p><p>தமிழ்நாட்டின் உரிமைகளையும், இந்திய அரசியலமைப்பையும் அடகுவைத்து பா.ஜ.க. அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும் எவரும் வரலாற்றுப் பிழையிலிருந்து தப்பிக்கவே முடியாது. தமிழ்நாட்டின் குரலாய், மக்களாட்சியின் காவலனாய் நாம் இறுதிவரை களத்தில் நிற்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை: ராமேஸ்வரம், பாபநாசத்தில் குவிந்த பக்தர்கள்
</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-amavasai-devotees-worship-rameswaram-and-papanasam</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-amavasai-devotees-worship-rameswaram-and-papanasam#comments</comments><guid isPermaLink="false">6730cf60-d6d6-4804-9bde-386e82f74ec7</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:04:26 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:04:26.721Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,rameshwaram temple,aadi amavasai,ஆடி அமாவாசை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/19kzqesh/aadiamavasai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadi amavasai - Rameshwaram temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/19kzqesh/aadiamavasai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கமாக, பித்ருக்கள் பூலோகத்திற்கு வருவதாக நம்பப்படும் முன்னோர் வழிபாட்டின் மிகப் புனித நாளாக ஆடி அமாவாசை விளங்குகிறது.</p><h2>முன்னோருக்கு தர்ப்பணம்</h2><p>அமாவாசை திதியானது இன்று அதிகாலை 1.52 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 11.06 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இன்று நீர்நிலை மற்றும் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். </p> <h2>அன்னதானம்</h2><p>புனித நீர்நிலைகளில் இன்று அதிகாலையிலேயே தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் நீர் நிலைகளில் புனித நீராடி கரையில் அமர்ந்து அவர்கள் முன்னோரை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்து பித்ரு கடன்களை நிறைவேற்றினர்.</p><p>முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து வழிபட்ட மக்கள் அதனை நீர் நிலைகளில் கரைத்தனர். மேலும் காகத்துக்கு உணவளித்து ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.</p> <h2>ராமேஸ்வரம்</h2><p>தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று மாலையில் இருந்தே பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் திரண்ட அவர்கள் இன்று அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடினர். </p><p>பின்னர் அவர்கள் மறைந்த தங்களுடைய தந்தை, தாயார், தாத்தா, பாட்டி, பாட்டனார், முப்பாட்டனார் உள்ளிட்டோரின் பெயர், கோத்திரங்களை கூறியும், நினைவில் இருந்த முன்னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டனர். </p> <h2>அக்னி தீர்த்த கடற்கரை</h2><p>முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது. 5 முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்தார். காலை 11 மணிக்கு ராமர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்தார். இங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. </p> <h2>ஆடி அமாவாசை</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88">ஆடி அமாவாசை</a>யை முன்னிட்டு இன்று நாள் முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடவும் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் இன்றி தீர்த்த நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலில் சாமி மற்றும் அம்பாள் சன்னதி பிரகாரம், 2, 3-ம் பிரகாரம், கோவில் ரத வீதி களிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. </p><h2>ராமநாதபுரம்</h2><p>தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் ராமேசுவரம் கடலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காவிரி, பவானி உள்ளிட்ட 3 ஆறுகள் சேரும் பவானி கூடுதுறையில் திரண்ட மக்கள் அங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்து அங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் வழிபட்டனர். </p> <h2>தாமிரபணி, காவிரிக்கரை</h2><p>நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாபநாசத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரளானோர் ஆற்றில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பாபநாச சுவாமி கோவிலிலும் வழிபாடு செய்தனர். </p><p>திருச்சி காவிரிக்கரையில் அம்மா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட ஏராளமானோர் தர்ப்பணம் கொடுக்க திரண்டதால் கூட்டத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். வேதாரண்யம், திருவையாறு போன்ற இடங்களிலும் ஏராளமான மக்கள் கூடினர். குற்றாலம் அருவிக்கரையிலும் பலர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தார்கள்.</p> <h2>சென்னையில்</h2><p>சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் மற்றும் காசிமேடு கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகளில் திரளான மக்கள் கூடினர். அவர்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.</p><p>மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல முக்கிய கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடந்தன. சைதாப்​பேட்டை காரணீஸ்​வரர், திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ர​தி, வியாசர்​பாடி ரவீஸ்​வரர் கோவில் உள்​ளிட்ட பல்​வேறு கோவில்​களின் தெப்​பக்​குள கரைகளி​லும் காலை முதலே ஏராள​மானோர் நீண்ட வரிசையில் காத்​திருந்​து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். </p> <p>செங்குன்றம் புழல் ஏரிக்கரை பகுதியிலும் ஏராளமானோர் தர்ப்பண சடங்குகளை நிறைவேற்றி, முன்னோரை வணங்கினர். பலரும் குடும்​பத்​துடன் கோவில்களுக்கு சென்று பிரார்த்​தனை செய்​தனர். </p><p>வீடு​களில் முன்​னோரின் படங்​களுக்கு முன்பு படையலிட்டு வழி​பாடு செய்தனர். மேலும் பலர் ஆதர​வற்​றவர்​களுக்​கு உணவு, ஆடை உள்​ளிட்டவற்றை வழங்கினர்.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச இளைஞர் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-international-youth-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-international-youth-day#comments</comments><guid isPermaLink="false">8b05ffc1-4737-4e40-abea-8626c764a0fd</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:45:12 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:45:12.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,International Youth Day,சர்வதேச இளைஞர் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tkq80gax/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tkq80gax/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்! என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.</strong></em> </p><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சர்வதேச இளைஞர் தினம்</a> கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த <a href="https://www.maalaimalar.com/news/world/today-is-international-youth-day-best-wishes-to-the-young-community">சர்வதேச இளைஞர் நாள்</a> வாழ்த்துகள்!</p><p>புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால்  உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்!</p><p>உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்! </p><p>கனவுகள் நனவாகட்டும்! </p><p>சாதனைகள் தொடரட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்!<br><br>புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால்  உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள்…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2087454361274470521?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் ராஜினாமா: மீண்டும் தலைவராக தொடர விரும்பவில்லை என அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/tata-sons-chairman-n-chandrasekaran-resigns</link><comments>https://www.maalaimalar.com/news/national/tata-sons-chairman-n-chandrasekaran-resigns#comments</comments><guid isPermaLink="false">c8edb95f-1544-4287-8fb8-56cfa42846d1</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:38:03 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:38:03.118Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tata Group,டாடா குழுமம்,டாடா சன்ஸ்,N.Chandrasekaran,Tata Sons Chairman,என்.சந்திரசேகரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/r18qyc3d/tata.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ N.Chandrasekaran ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/r18qyc3d/tata.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாடா குழுமத்தின் முதன்மை நிறுவனமான டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், தனது பதவிக் காலம் முடிவடைந்த பிறகு மீண்டும் அப்பதவியில் தொடர விரும்பவில்லை எனத் தெரிவித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். ஆகஸ்ட் 18 அன்று நடைபெறவிருக்கும் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்த முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.</p><p>சார் டோரப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவை சந்திரசேகரனின் பதவிக் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாக பரிந்துரை செய்தன. ஆனால், கடந்த பிப்ரவரி 24 அன்று டாடா சன்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த தீர்மானத்திற்கு, குழுவின் உறுப்பினர் ஒருவர் (நோயல் டாடா என அறிக்கைகள் தெரிவிக்கின்றன) எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. &nbsp; </p><p>நிர்வாகக் குழுவில் முழுமையான ஆதரவு இல்லாத காரணத்தால், இந்த முடிவை சந்திரசேகரன் ஒத்திவைத்தார். கடந்த ஆறு மாதங்களாக இதில் எவ்வித தெளிவான முடிவும் எட்டப்படாத நிலையிலும், பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அவர் இந்தப் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.</p><h2>சந்திர<strong>சேகரனின் அதிகாரப்பூர்வ</strong> அறிக்கை</h2><p>தனது விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள என்.சந்திரசேகரன், டாடா குழுமத்தில் தனது 40 ஆண்டுகால தொழில்முறை பயணத்தை நிறைவு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். "டாடா குழுமத்தில் பணியாற்றியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. இருப்பினும், 2027 பிப்ரவரி 20 அன்று எனது தற்போதைய பதவிக் காலம் முடிவவடையும் போது, மீண்டும் தலைவர் பதவிக்கு என்னைப் பரிசீலிக்க வேண்டாம் என்று டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவிடம் தெரிவித்துவிட்டேன். நிறுவனப் பணிகளில் தடங்கலின்றி சுமூகமான மாற்றத்தை உறுதி செய்ய, புதிய தலைவரை நிர்வாகக் குழு விரைவில் தேர்வு செய்ய வேண்டும்" எனக் கோரியுள்ளார். &nbsp; </p><h2>சந்தையி<strong>ல் ஏற்பட்ட தாக்</strong>கம்</h2><p>இந்த எதிர்பாராத ராஜினாமா செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தையில் டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் கணிசமான சரிவைச் சந்தித்தன. குறிப்பாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்கு விலை சுமார் 4 சதவீதம் வரை சரிந்தது. மேலும் டாடா மோட்டார்ஸ், டாடா பவர் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவற்றின் பங்குகளும் சரிவைக் கண்டன.</p>]]></content:encoded></item><item><title>அரிசி கொட்டும் ஏடிஎம்:  சத்தீஸ்கரில் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/news/national/chhattisgarh-launches-24x7-ration-atm-for-beneficiaries</link><comments>https://www.maalaimalar.com/news/national/chhattisgarh-launches-24x7-ration-atm-for-beneficiaries#comments</comments><guid isPermaLink="false">37b3f0d0-6b36-414a-8f9c-0ce883e2d3c6</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:33:51 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:33:51.087Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சத்தீஸ்கர்,chattisgarh,Rice ATM,ரேஷன் ஏடிஎம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o29wp7h8/ATM.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ATM]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o29wp7h8/ATM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்​கு​வதற்கு வசதி​யாக ரேஷன் ஏடிஎம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.</p><h2>அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்</h2><p>சத்தீஸ்கர் மாநிலத்​தில் பொது​மக்​கள் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்​கு​வதற்கு வசதி​யாக வங்கி ஏடிஎம் போல செயல்​படும் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்​ளது.</p><p>‘அன்னபூர்த்தி கிரெயின் ஏடிஎம்’ என பெயரிடப்​பட்​டுள்ள இத்திட்டம் தலைநகர் ராய்ப்​பூரின் பிர்​கான் பகு​தி​யில் தொடங்கப்பட்டது. இதன்​மூலம் பயனாளி​கள் 24 மணி நேரமும் தங்​களுக்​கான மாதாந்​திர ரேஷன் அரிசி​யைப் பெற்​றுக்​கொள்ள முடி​யும்.</p><p>ரேஷன் கார்டு எடுத்துச்சென்றால் ஸ்கேன் செய்யவேண்டும். ஸ்கேன் செய்த உடன் ரேஷனில் உள்ள மிஷினில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைக் காட்டும். அதில் உங்கள் பெயரை செலக்ட் செய்து கைரேகை வைக்கவேண்டும்.</p><p>கைரேகை வைத்த உடன் இயந்திரமே அதனை சரிபார்த்துவிடும். சரிபார்ப்பிற்குப் பின், அரிசி மற்றும் உணவுப்பொருட்களை தேர்வு செய்தால் துல்லியமாக அளந்து உணவுப்பொருட்களை உங்களுக்கு விநியோகித்து விடும். </p><p>இந்த ரேஷனில் எடையைக் குறைத்து அளப்பது உள்ளிட்ட மனிதத் தவறுகளுக்கு சாத்தியமே இல்லை.</p><h2>ஏடிஎம் செயல்​படு​வது எப்​படி?</h2><p>பயனாளி​கள் தங்​களது ரேஷன் அட்டை விவரங்​களை உள்​ளிட்​டு, கைரேகை​யைப் பதிவு செய்​ததும், அவர்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட அளவு அரிசி இயந்​திரத்​திலிருந்து வெளியே வரும். இந்த இயந்திரம் சுமார் 2,500 கிலோ அரிசியை சேமித்து வைக்​கும் திறன் கொண்டது.</p><p>அரிசியை இயந்​திரத்​தில் நிரப்​புவதும், பயனாளி​களுக்கு விநியோகிப்​பதும் தானி​யங்கி முறை​யில் நடை​பெறும். இந்​தத் திட்​டத்​துக்கு உலக உணவுத் திட்​டம் ஆதரவு அளித்து வரு​கிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை- மாநகராட்சி கமிஷனர் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/corporation-commissioner-clarifies-property-tax-has-not-been-hiked-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/corporation-commissioner-clarifies-property-tax-has-not-been-hiked-in-chennai#comments</comments><guid isPermaLink="false">b2d1c566-6507-4fba-bc1f-2e07e7dfbbc8</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:32:05 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:32:05.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சொத்து வரி,property tax</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o0136tll/chennaicorporation.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o0136tll/chennaicorporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மாநகராட்சியில் பொதுவான சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்றும், உண்மைக்கு மாறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.</strong></em></p><p><a href="https://www.maalaimlar.com/topic/சென்னை-மாநகராட்சி">சென்னை மாநகராட்சி</a> கமிஷனர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- </p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில், ஏற்கனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சொத்துவரி செலுத்தி வருபவர்களுக்கு உரிய தரவுகளின் அடிப்படையில், திருத்திய மதிப்பீடு செய்து அறிவிப்பு வழங்கப்பட்டவர்கள் இதன் மீது ஆட்சேபனை இருப்பின் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையருக்கு மேல்முறையீடு செய்திட வாய்ப்பளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.</p><p>எனவே சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வரப்பெரும் உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தர்மரின் நேர்மையை மதித்து தலைவணங்கிய புருஷாமிருகம் </title><link>https://www.maalaimalar.com/spirituality/purusha-mirugam-respect-of-dharmar-integrity</link><comments>https://www.maalaimalar.com/spirituality/purusha-mirugam-respect-of-dharmar-integrity#comments</comments><guid isPermaLink="false">d9bfcf4a-6b7d-43f5-a3b8-3ed196de5f00</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:14:14 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:14:14.563Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,வழிபாடு,worship,Dharmar,Purusha mirugam,தர்மர்,புருஷாமிருகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/t5ayec86/purushamirugam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bhima - Purusha mirugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/t5ayec86/purushamirugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மகாபாரதம்</h2><p>மகாபாரதத்தில் நீதி நெறிக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர், பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தர்மர். இவரது ஆட்சி காலத்தில் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர். தர்மரின் நேர்மை, தர்ம நெறியை சோதிக்க பல நிகழ்வுகள் நடந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளன.</p><h2>புருஷாமிருகம்</h2><p>ஒரு காட்டில் ஓர் அதிசய உயிரினம் வாழ்ந்து வந்தது. அதன் மேல்பகுதி மனித வடிவமாகவும், கீழ்பகுதி சிங்க வடிவமாகவும் இருந்தது. அதன் பெயர் 'புருஷாமிருகம்'. தீவிர சிவ பக்தரான புருஷாமிருகம், அந்த காட்டையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.</p> <h2>ராஜசூய யாகம்</h2><p>ஒரு சமயம் நாரதரின் அறிவுரைபடி, தர்மர் ராஜசூய யாகம் நடத்த திட்டமிட்டார். அந்த காலத்தில் யாக சாலையில் புருஷாமிருகத்தை உலா வர செய்வார்கள். இதன் காரணமாக தர்மர், பீமனிடம் புருஷாமிருகத்தை அழைத்துவர கட்டளை இட்டார். பீமனும் காட்டிற்குள் சென்று, புருஷாமிருகத்தை அழைத்தான். அதற்கு புருஷாமிருகம் ஒரு நிபந்தனை விதித்தது. “நீ எனக்கு முன்பாக செல்ல வேண்டும். உன்னை தொடர்ந்து நான் வருகிறேன். ஆனால் உன்னை நான் நெருங்கிவிட்டால் உன்னை சாப்பிட்டு விடுவேன்” என்றது.</p> <h2>பீமன் - புருஷாமிருகம்</h2><p>பீமனும் அதற்கு ஒப்புக்கொண்டு, முன்னால் வேகமாக ஓடினான். புருஷாமிருகமும் வேகமாக பீமனை பின்தொடர்ந்தது. புருஷாமிருகம் சிறந்த சிவபக்தன் என்பதால், எங்கு சிவலிங்கத்தை பார்த்தாலும் உடனே சிவபூஜை செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த பீமன், தன்னை நெருங்கி வரும் வேளையில் ஒரு சிவ லிங்கத்தை வைத்துவிட்டு ஓடினான். புருஷாமிருகம் சிவலிங்கத்தை பார்த்ததும், சிவ பூஜை செய்துவிட்டு பின்னர் பீமனை துரத்தியது.</p> <h2>புருஷாமிருகம் சிவபூஜை</h2><p>இவ்வாறு புருஷாமிருகம் பீமனை நெருங்கியதும், பீமன் சிவலிங்கத்தை வைப்பதும், புருஷாமிருகம் அதற்கு சிவபூஜை செய்துவிட்டு துரத்துவதுமாக இருந்தது. ஆனால் பீமன் அரண்மனையை நெருங்கியதும், அவனது ஒரு காலை புருஷாமிருகம் பிடித்து விட்டது. அப்போது, பீமனின் ஒரு கால் காட்டிற்குள்ளேயும், மறு கால் வெளியேயும் இருந்தது.</p><p>புருஷாமிருகம், “நான் உன்னை பிடித்துவிட்டேன். இனி உன்னை உணவாக சாப்பிடப் போகிறேன்” என்றது. அதற்கு பீமன், “நான் ஒரு காலை காட்டிற்கு வெளியே வைத்துவிட்டேன்” என்று மறுத்து வாதாடினான். இறுதியில் இருவரும், தர்ம நெறி தவறாத தர்மரிடம் நியாயம் கேட்க முடிவு செய்தனர். அதன்படி தர்மரிடம் சென்று, நடந்தவற்றை கூறினர்.</p> <p>பொறுமையாக கேட்ட தர்மர், "பீமா! உன்னுடைய ஒரு கால், புருஷாமிருகத்தின் எல்லைக்குள் இருக்கும் போதே, அது உன்னை பிடித்துவிட்டதால், உன் உடலின் பாதியை புருஷாமிருகத்திடம் கொடுத்துவிட வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார். சொந்த தம்பியாக இருந்தாலும், ஒரு பக்கமாக தீர்ப்பு வழங்காமல் தர்ம நெறிபடி நடந்துகொண்டதை பார்த்து புருஷாமிருகம் தர்மரை பாராட்டியது.</p> <p>அப்போது சாஸ்திரங்களில் சிறந்தவனான சகா தேவன், “அண்ணா! நீதி தவறாமல் தீர்ப்பு அளித்தீர்கள். ஆனால் இதை எவ்வாறு நிறைவேற்ற முடியும்” என்று கேட்டான். அதற்கு தர்மர், “இந்த தீர்ப்பை எப்படி நிறைவேற்றுவது என்று சகல கலைகளிலும் வல்லவனான உனக்கு தெரியும் அல்லவா. அதனால் நீயே சொல்” என்றார். சகாதேவன், "பீமனின் ஒரு பாதியை புருஷாமிருகம் உண்ணும்போது, மறுபாதியில் எந்த ரணமோ, வலியோ ஏற்படக்கூடாது. அந்த வகையில் புருஷாமிருகம் பீமனின் ஒரு பாதியை உண்ணட்டும்” என்றான்.</p> <p>உடனே புருஷாமிருகம் தர்மரை நோக்கி, “அரசே! நான் அறக்கடவுள். உங்களின் அற நீதியை சோதிப்பதற்காகவே இப்படி ஒரு நிகழ்வை நடத்தினேன். இந்த சோதனையில் வெற்றி பெற்றுவிட்டீர்” என்றது. மேலும், பீமன், தன் வலிமையால் என்ன கொல்ல முயன்றிருக்கலாம். ஆனால் அறத்துக்கு கட்டுப்பட்டு தண்டனை பெற முன்வந்தான். சகாதேவன், தான் கற்ற கலைத்திறனால் அற நுணுக்கத்தை உணர்த்தினான் என்று பாராட்டிவிட்டு சென்றது.</p> <p>இந்த நிகழ்வின் மூலம் நாம் கற்றுகொள்வது என்னவென்றால் எந்த சூழ்நிலையிலும் உண்மையையும், நீதியையும் கைவிடக்கூடாது. தர்மர், தன் சொந்த சகோதரர் என்றும் பாராமல் நியாயமான தீர்ப்பு வழங்கினார். அதனால் புருஷாமிருகம், தர்மரின் நேர்மையை மதித்து தலைவணங்கியது. நீதியும், நேர்மையும் இருந்தால் இறுதியில் வெற்றி நிச்சயம். அவையே மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.</p>]]></content:encoded></item><item><title>முத்தையா இயக்கத்தில் அருண் விஜய்: &apos;AV38&apos; படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/arun-vijays-38th-film-directed-by-muthaiya-title-and-first-look-out-this-evening</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/arun-vijays-38th-film-directed-by-muthaiya-title-and-first-look-out-this-evening#comments</comments><guid isPermaLink="false">ca6c66f5-d5c8-4245-a71c-e9418fa77187</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:13:54 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:13:54.076Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முத்தையா,Arun-Vijay,Muthaiah,அருண் விஜய்,AV38,ஏவி 38</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/ivsg7isz/av.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[   AV38]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/ivsg7isz/av.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் முன்னணி அதிரடி கதாநாயகர்களில் ஒருவரான அருண் விஜய் நடிக்கும் 38-வது திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்து பின்னணியிலான குடும்ப உணர்வுகள் மற்றும் ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்குவதில் புகழ்பெற்ற இயக்குநர் முத்தையாவுடன் அருண் விஜய் முதன்முறையாக இணைகிறார்.</p><p>தற்காலிகமாக 'ஏவி 38' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><h2>நட்சத்திர<strong>ப் பட்டாளம்</strong></h2><p>நேதாஜி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சண்முகவேல் பாண்டியன் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 'கொம்பன்', 'மருது', 'விருமன்' போன்ற கிராமத்து ஆக்‌ஷன் ஹிட் படங்களை கொடுத்த முத்தையா, அருண் விஜய்யை புதிய தோற்றத்தில் களமிறக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக மிருணாளினி ரவி அல்லது மிர்னா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.</p><h2>பட<strong>ப்பிடிப்பு விவரங்கள்</strong></h2><p>தென்காசி மற்றும் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தன் கதாபாத்திரத்திற்காக அருண் விஜய் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வித்தியாசமான தோற்றத்திற்கு மாறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வெளியாகவுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த சுவாரஸ்யமான குறிப்புகளைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை: போலீசார் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-drone-fly-in-chennai-for-4-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-drone-fly-in-chennai-for-4-days#comments</comments><guid isPermaLink="false">7a33dfdc-e1d3-47c3-aa0f-e29b2ba64766</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:57:20 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:57:20.987Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DRONES,Independence Day,சுதந்திர தினம்,டிரோன்கள் பறக்க தடை,டிரோன்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/p9h8fmzo/dron.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிரோன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரோன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/p9h8fmzo/dron.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>4 நாட்களும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.</strong></em> </p><p>நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தின விழா </a>கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2><strong>தமிழகத்தில்</strong></h2><p>தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் முதல் முறையாக  தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார்.</p><p>சென்னை மாநகரில் பி.என்.எஸ். பிரிவு 14 (2)படி டிரோன்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேங் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள்  ஆகியவை பறப்பதற்கு கடந்த ஜூன் 19-ந்தேதி முதல் வருகிற 17-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கும் நிலையில் சுதந்திர தின பாதுகாப்பை கருத்தில் கொண்டு வருகிற 14 மற்றும் 15 ஆகிய 2 நாட்களும் (அரசு ஏற்பாடுகள் தவிர ) தலைமைச் செயலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் முதலமைச்சர் விஜய்  தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வரை உள்ள வழித்தடங்களில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் அனைத்தும்  சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>4 நாட்கள்</strong></h2><p>இந்த நிலையில் வருகிற 16 மற்றும் 17 ஆகிய 2 நாட்கள் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-5-layer-security-at-chennai-airport">சென்னைக்கு</a> வருகை தர உள்ளார். இதையொட்டி அந்த நாட்களிலும் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருகிற 14-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னை மாநகர பகுதிகளில் டிரோன்களை பறக்க விடக்கூடாது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.</p><p>பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி,  தி.நகர், அரும்பாக்கம் ஆகிய பகுதிகள் மற்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக  அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட இடங்களில் டிரோன் கேமராக்களுடன் ஆளில்லா வான்வழிகருவிகள் பறப்பதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த 4 நாட்களும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  வாகன சோதனையையும் தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;சூரியன்&apos; குறித்து கருத்து சொன்ன அமைச்சர்- பதிலடி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-replay-to-minister-vinod</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-replay-to-minister-vinod#comments</comments><guid isPermaLink="false">162f5472-1b11-41ae-b7a7-42bc715a0ffe</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:51:47 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:51:47.045Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,TN assembly,அமைச்சர் வினோத்,Minister Vinodh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vgh2zblx/OPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vgh2zblx/OPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தும் அங்கே ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானம் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அரசின் பதிலுரை தொடங்கியது. இதில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர் வினோத் பதில் அளித்து பேசியதாவது:-</p><h2><strong>தொலைநோக்கு திட்டங்கள்</strong></h2><p>தி.மு.க. தலைவர் ஸ்டாலின் த.வெ.க. வேளாண் பட்ஜெட்டை வெற்று பட்ஜெட் என விமர்சித்திருந்தார். த.வெ.க.வின் வேளாண் பட்ஜெட் வெற்ற பட்ஜெட் அல்ல அது விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட். இவர்களுக்கு என்ன ஆட்சி செய்ய தெரியும் என கேட்டனர். லஞ்சம் இல்லாத ஆட்சியை முதலமைச்சர் விஜய் தந்துள்ளார். தமிழகத்தின் இதயம் விவசாயிகளிடத்தில் உள்ளது.  ஓரிரு நாட்களில் தீர்க்க முடியும் என்றால் கடந்த ஆட்சி காலங்களில் ஏன் செய்யவில்லை? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய கால அவகாசத்தை எதிர்க்கட்சியினர் வழங்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க தொலைநோக்கு திட்டங்கள் தேவை. </p><p>கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.  பொது ரகம், சன்ன ரகம் நெல், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தியுள்ளார் முதலமைச்சர் விஜய். எங்கள் திட்டங்களை எதிர்க்கட்சிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. </p><p>விவசாயிகள் கோரிக்கைக்கேற்ப சிலவற்றை மேம்படுத்தி திட்டங்களின் பெயரை மாற்றியுள்ளோம். திட்டங்களின் பலனை மேம்படுத்தும் நோக்கில் பெயர் மாற்றம், வெற்றி வீடு திட்டத்தில் முந்தைய ஆட்சியை விட கூடுதல் நிதி. அனைத்து மாவட்டங்களிலும் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்ட பரப்பளவை கண்டறியுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். இதுவரை ஆய்வு செய்ததில் 23,399 ஹெக்டேர் பரப்பளவில் 33 சதவீதம் மேல் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு முடித்த பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p><p>அனைவருக்கும் சூரியனால் வேர்த்தது. நீங்கள் வந்தபிறகு சூரியனுக்கே வேர்த்தது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய முதலமைச்சருக்கும், பேரவை தலைவருக்கும் நன்றி. </p><p>இவ்வாறு அமைச்சர் வினோத் உரையை நிறைவு செய்தார். </p><p>அமைச்சர் வினோத் கூறியதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், வேளாண்துறை அமைச்சர் நீண்ட நெடிய விளக்கத்தை அளித்தார்கள். அதனை நாங்கள் எல்லோரும் கூர்மையாக கேட்டுக்கொண்டு இருந்தோம். அவருடைய பதிலுரை முடிவில் சூரியனுக்கே வேர்த்தது என்ற கருத்தை கூறியுள்ளார். இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார். எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தும் அங்கே ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார். </p>]]></content:encoded></item></channel></rss>